நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?

நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் நல்லவர் கெட்டவராவதும் கெட்டவர் நல்லவராவதும் “சந்தர்ப்பங்களில் தான்…” கெட்டவர் நல்லவர் என்றாலும்…
1.”அந்தக் கெட்டவர்” நல்லவரின் நல்ல போதனைகளைக் கேட்கப்படும் பொழுது கெட்டதின் பலனைச் சிந்திக்கின்றார்.
2.நாம் கெடுதல் செய்தோம் நாம் அதிலிருந்து இப்பொழுது மகிழ்ச்சி என்ற நிலைகள் வரப்படும் பொழுது சிந்திக்கத் தொடங்குகின்றார்.
3.நல்லவரின் உபதேசத்தை ஏற்றுக் கொண்ட பின் தன்னை அறிந்து எப்படிப் பக்குவமாக நடந்து கொள்வது…? என்று அவருக்குள் சிந்தனை தோன்றுகின்றது.
4.சிந்தனை தோன்றும்போது அதன் வழி தனக்குள் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளும் (தீமையால் பட்ட அனுபவத்தால்)
5.பிறருக்குத் தீமை செய்து அவர்கள் தொல்லைப்பட்ட உணர்வுகள் நுகர்தறிந்ததால் ஞானங்களும் அங்கே அவருக்கு வருகின்றது.

இதைப் போன்று அவன் வாழ்க்கையில் நல்லவன் செயலை அதிகமாகக் கூர்மையாகக் கவனித்தால் அந்த உணர்வின் வளர்ச்சியாகி தன் வாழ்க்கையில் வியாபாரத்தை எப்படிப் பெருக்க வேண்டும்…? உயர்ந்த ஞானங்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்ற உணர்வுகள் அங்கே விளைகின்றது. “அவன் வாழ்க்கையிலே செல்வந்தன் ஆகின்றான்…”

அதே சமயத்தில் நல்லதைச் செய்து அதனால் எதிர்பார்த்த நிலைகள் வரும் பொழுது இரக்கம் ஈகை கொண்ட உணர்வுகளை நுகர்ந்து… நல்லவர் பிறர்படும் கஷ்டத்தினை நுகர்ந்து விட்டால்… அந்த உணர்வுகள் அவருக்குள் வலிமை பெற்ற பின் “பதட்டமும் பயமும்” வந்து விடுகின்றது.

ஏனென்றால் பிறிதொரு உணர்வின் தன்மை அச்சுறுத்தும் உணர்வுகளை இவர் பார்த்தாலும்
1.பரிவு மனம் கொண்டு இதனை நுகரப்படும் பொழுது
2.தன் உடலில் உள்ள நல்ல குணங்களில் இது பட்டபின் உணர்வுகள் எதிர்நிலையாகின்றது.

எவ்வாறு…?

நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலில் உள்ள நிலையும் அந்த அணுக்கள் இணைந்து “புது விதமான அணுக்களாக மாறுகின்றது…” அவ்வாறு உருமாறி விட்டால் அதனால் அடிக்கடி பயப்படுவதும்… சிந்திக்கும் திறன் இழப்பதும்… கவனக் குறைவுகள் ஆவதும்… பயத்தின் உணர்வு கொண்டு தன் வாழ்க்கையைச் சீராகப் பயன்படுத்த முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகவே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளால்
1.நல்லவர் கெட்டவராவதும் சந்தர்ப்பத்தால் கடும் நோயாக ஆவதும்
2.இதைப்போல பண்பும் அன்பும் கொண்டோர் உணர்வுகள் இவ்வாறு இயங்குகின்றது.

கண் கொண்டு பிறருடைய துயர்களை உற்றுப் பார்த்துக் கேட்டறிந்த பின் “ஓ…ம் நமச்சிவாய…” என்று இந்த உடலுக்குள் அணுக்களாக உருப்பெற்று விடுகின்றது.

இப்படி இருக்கும் இந்த நிலையில் நல்லவரை காக்க வேண்டும் அல்லவா. காரணம்… இந்த விஞ்ஞான உலகில் அனைத்தையுமே நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

மனிதன் கல்வியில் கற்றுக் கொண்ட உணர்வு கொண்டு “இதன் இதன் உணர்வுகள் இவ்வாறு இயக்கும்” என்று பதிவு செய்து கொண்டால் பதிவினை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது சிக்கலை நீக்கும் தன்மை வருகின்றது… வாழ்க்கையின் சிக்கலை நீக்க உதவுகின்றது.

ஆனால் வாழ்க்கையில் சிக்கல் கொஞ்சம் கடினமாகி விட்டால் வேதனையாகி அந்த வேதனை வளர்ந்து விட்டால்… சிக்கலை நிவர்த்திக்கும் உணர்வுகள் வந்தாலும்
1.வேதனைப்பட்டபின் தன்னையே சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அப்போது சோர்வடைகின்றது… அந்தச் சோர்வடைந்த நிலையில் ஒருவர் நல்லதைச் சொன்னால்
3.அந்த உணர்வுகள் தாங்காது கோபம் வருகின்றது… உணர்ச்சிவசப்படுகின்றார்.

இவ்வாறு நம் உடலுக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் “ஒவ்வொரு நொடிகளிலும் உணர்வு மாறிக் கொண்டே உள்ளது…!”

இன்றைய நிலை நாளை இல்லை…!

அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாகக் கூறுகின்றார்கள். அதே சமயத்தில் விநாயகருக்கு முன் எலியைப் போட்டு மூஷிகவாகனா என்று காட்டுகின்றார்கள்.

1.நாம் நல்லவர்களைப் பார்த்து அந்த உணர்வை அதிகமாக நேசித்தால்
2.நமக்குள் இருக்கும் கெட்ட குணங்களை அந்த நல்லது அடக்குகின்றது. அது தான் மூஷிகவாகனா…!

சுவாசித்த உணர்வுகள் இயக்கினாலும் வேதனையும் துன்பமும் படும் உணர்வினை ஒரு நல்லவர் பண்புள்ளவர் அந்த நல்ல சொல்லைக் கேட்டு நடந்தால் (சாதாரண நிலைகளில்) அதை நுகரப்படும் பொழுது கேட்டறியும் தன்மை வந்தால் இது பெருகுகின்றது ஓம் நமச்சிவாய என்று…!

கெட்ட குணங்களுக்குள் அந்த நல்ல உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது குறைகின்றது. ஆகவே
1.இயற்கையின் நியதிகளை… சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்தது…
2.அந்தந்த உணர்வின் இயக்கங்களாக நம்மை எப்படித் திசை மாற்றுகிறது…? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து தெளிந்து ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை… அந்த ஒளியான உணர்வுகளை நமக்குள் சேமித்து… இருள் சூழச் செய்யும் நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். நம் நல்ல குணங்களைக் காக்க வேண்டும்.

ஞானிகள் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்.

ஊண் உடம்பு ஆலயம்

ஊண் உடம்பு ஆலயம்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருமே துன்பத்தை அனுபவித்து “எனக்கு இப்படி வந்து விட்ட்தே…” என்று சொல்லி எல்லாத் தெய்வங்களையும் வணங்குகின்றோம். நான் உன்னை வணங்கினேனே எனக்கு இப்படித் துன்பம் வருகிறதே… தெய்வமே…!

எந்தெந்தத் தெய்வத்தை வணங்கினோமோ
1.அந்தத் தெய்வ குணத்தை… நல்ல குணத்தை எண்ணாதபடி நாம் வேதனைப்படுகின்றோம்
2.நல்ல பாலிலே விஷத்தை ஊற்றிக் குடித்தது போன்று…!

அதே சமயம் ஆத்திரம் வந்து விட்டால் “உன்னைத்தான் நான் வணங்கி வந்தேன் என்னைப் பரிசோதிக்கின்றாயே…” என்ற ஆத்திரம்…! அந்த நல்ல குணத்தில் காரத்தைக் கலந்து நாம் குடித்தது போல் ஆகின்றது.

ஆனால் ஆலயத்தில் காட்டப்பட்டது என்ன…?

நாம் நல்ல குணங்களைச் செயல்படுத்தினோம் என்றால் அவை நமக்குள் மறைந்திருக்கின்றது. “ஊண் உடம்பு ஆலயம்…!” நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஊணாக மாறி உடலாக மாறி இது ஆலயமாக மாறும்.

1.நான் எந்தக் குணத்தின் தன்மையை எடுத்தேனோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாக இருக்கின்றது.
2.நான் நல்லதை எண்ணி நினைவுபடுத்தும் பொழுது அதைப்போல நான் சுவாசித்து உயிரான ஈசனிடம் படும்பொழுது
3.அந்த மகரிஷிகள் எண்ண ஒலிகளைப் பரப்பி நான் நல்லதைச் செய்வேன் என்ற எண்ணம் வருகின்றது.
4.அத்தகைய குணம் எனக்குள் நல்லதை உருவாக்கும் பக்குவமாக
5.அந்த எண்ண அலைகள் உணர்வுகள் எனக்குள் வளர்ந்து தெய்வமாக இருக்கின்றது மனிதனுக்குள்.

நாம் சாப்பிடும் ஆகாரத்திற்குள் விஷம் மறைந்திருந்தாலும் அந்த விஷத்தை மாற்றி விட்டு உடலை நல்லதாக்கி… எனக்குள் வரும் மணத்தின் தன்மை சுவாசித்து… நல்லதைச் செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலாக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கும் “அந்த நல்ல குணங்களைத் தான்”
1.ஒவ்வொன்றையும் தனித்துத் தனித்து இன்னென்ன குணங்கள் இன்னென்னது செய்யும் என்று
2.1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 ஆலயங்களாகப் பிரிக்கப்பட்டது.

நான் நல்லதைச் செய்ய வேண்டும் என்று என் பையனை எண்ணுகின்றேன். அந்த நல்ல உணர்வுடன் போகும் பொழுது சம்பந்தமில்லாதபடி ஒரு குழந்தை உருண்டு கீழே விழுந்து விடுகின்றான்.

கீழே விழுந்தவுடனே அவன் அலறுகின்றான். தாய்ப் பாசம் கொண்டு நாம் “ஐயோ இப்படி ஆகிவிட்டதே” என்ற வேதனை கொண்டு நல்ல உணர்வுடன் எண்ணும் பொழுது நான் எந்தக் குணத்தை எண்ணினேனோ அந்த உணர்வின் சுவாசம் (நினைவு) அந்த எண்ண அலைகள் சுவாசிக்கப்பட்டுச் செயல்படும் ஆற்றலாக இங்கே வருகின்றது.

அவன் கீழே விழுந்த பின் அவன் சுவாசித்த வேதனையின் உணர்வலைகளை
1.நான் சுவாசிக்கும் போது என் உயிரிலே பட்டு எனக்கு அந்த வேதனை தெரிகின்றது.
2.அவன் வலி எனக்கு வந்ததாகக் கருதி அவனைக் காப்பாற்றுகின்றேன்.

அவனைக் காப்பாற்றி விட்டேன் ஆனால் அந்த நல்ல குணத்திற்குள் வேதனைகள் கலந்து வரும் பொழுது “யார் பெத்த பிள்ளையோ…? இப்படி ஆகிவிட்டதே…! என்ற வேதனையும் அவன் வேதனையில் பட்ட துடிப்பு நிலையும் என் நல்ல குணத்துடன் கலந்து விடுகின்றது.

இதை இப்படியே விட்டு விட்டால் என்ன செய்யும்…?

இன்று இதைச் செய்து விட்டோம். இதைப் போன்று ஏதாவது ஒரு உணர்ச்சிகள் நாம் போகும் பாதையில் ஒரு பையன் ஒரு சாமானைத் தூக்கிப் போடுகிறான் என்றால் பயத்தால் இந்த உணர்ச்சியின் வேகங்கள் எனக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.

பய உணர்வுகள் தோன்றி
1.அதைத் தடுக்கும் நிலைகளில் இருந்து கீழே விழுந்து விடுமோ விழுந்து விடுமோ என்று எண்ண எண்ண அந்தப் பொருள் கீழே விழுந்து விடும்.
2.சரியான நிலைகள் பக்குவப்படுத்த முடியாதபடி உணர்வின் இயக்க நிலைகள் மாறி விடுகின்றது.
3.நான் நல்லதை நினைத்தேன்… நல்லதைச் செய்தேன்…! :எதைத் தொட்டாலும் என் காரியம் விளங்க மாட்டேன் என்கிறது…”

நல்லதை நினைத்தேன் ஏன்று வேதனையான நிலைகளை எடுத்துக் கொண்டு அந்த உணர்வலைகள் அதிகமாகும் பொழுது என் வட்டமாகின்றது.

உதாரணமாக ஒரு குழம்பை வைக்கப்படும் பொழுது எல்லாம் சமமாக இருந்தால் ருசியாக இருக்கும். காரம் அதிகமாகி விட்டால் உசு உசு என்று எரிச்சல் ஆகின்றது அதே சமயம் காரல் அதிகமாகி விட்டால் அதற்குத் தக்க சுவை மாறுகின்றது. உப்பு அதிகமாகிவிட்டால் கரிக்கின்றது.

இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மணம் அதிகமாக எடுக்கப்படும் பொழுது அது முன்னணியில் வந்து விடுகின்றது. அப்பொழுது ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு நான் போகிறேன் என்றால்
1.நான் வாயை திறந்து பேசினாலே போதும்
2.சங்கடமான அலைகள் முன்னாடி இருக்கும் பொழுது
3.என் சொல் மற்றவர்கள் செவிகளிலே படும் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னைப் பார்க்கின்றார்கள்.
4.எனக்கு முன் இருக்கும் இந்தச் சங்கட அலைகள் அவருடைய ஈர்ப்புக்குள் போகும்.
5.அதைச் சுவாசித்த உடனே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லாது வெறுப்படைவார்கள்.
6.நான் எவ்வளவு நல்லது செய்கிறேன் ஆனால் என்னைப் பார்த்து வெறுக்கின்றார்களே என்று நாம் சொல்வோம்.

ஆனால் தவறு செய்யவில்லை. அப்பொழுது இதை யார் துடைப்பது…? இதற்குத்தான் ஆலயத்தைக் கட்டி வைத்துள்ளார்கள்.

நல்ல குணத்தை எதனால் நீ போர்த்திக் கொள்ள வேண்டும்…? அந்த மலரை வைத்து நல்ல வாசனை கொண்ட பூக்களைப் போட்டு.
1.வாசனையான சந்தனத்தை சாமி மீது ஊற்றுகின்றார்கள்.
2.ஏனென்றால் நம்மிடம் இருக்கும் குணத்திலே அதை ஊற்றினால் தான் அந்தத் தீமையான வாசனை போகும்.

என் நல்ல குணத்துடன் கீழே விழுந்தவனைப் பார்த்தேன். அவன் வேதனைப்பட்ட உணர்வை எடுத்த உடனே இதை மூடிவிட்டது அதிலிருந்து
1.பாலில் விஷம் பட்டால் குடித்தால் நம்மையும் எப்படி வேதனைப்படச் செய்யுமோ
2.நல்லது எண்ணும் போதெல்லாம் வேதனை வந்து கொண்டே இருக்கின்றது.

அதைத் துடைப்பதற்குக் கோவிலைக் கட்டி வைத்து அந்தத் தெய்வ குணத்தைப் பெறும்படி செய்தார்கள்.

இருட்டறைக்குள் சாமியை வைத்திருக்கின்றார்கள் திரையை நீக்கியபின் எதைக் கொண்டு அங்கே பார்க்கின்றோம் தீபத்தைக் காட்டும் போது வெளிச்சத்தால் இருட்டுக்குள் மறைந்த அனைத்தும் தெரிய வருகின்றது.

பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஈசனிடம் கேட்கின்றோம். அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரிலே படுகின்றது.

கீழே விழுந்தான்… கீழே விழுந்ததைச் சுவாசித்த பின் உயிரிலே பட்டு “ஆ” என்று பயமாகி அந்த வேதனைப்பட்டு அவனைக் காக்கச் செய்கின்றது. ஈசனுக்குள் படும் பொழுது தான் இது வரும்.

அதே உணர்வு உமிழ் நீராக மாறி அந்த வேதனை என் உடலுக்குள் போகும்போது என் நல்ல குணங்கள் எல்லாம் பதறுகின்றது. அந்த நல்ல குணங்களை எல்லாம் சேர்த்துத் தாங்கி உடலாக இருக்கும் சிவம் இப்படிச் செய்கின்றதே என்று பதட்டமாகின்றது. இந்த உடல் முழுவதும் பதட்டமாகின்றது நல்ல குணங்களுக்கும் பதட்டமாகின்றது. ஆனால் ஈசனுக்கோ வேதனையாகின்றது.

அதைத் துடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? கோவிலில் அங்கே சென்று அங்கிருக்கும் சிலைக்கு அபிஷேகம் செய்தால் இங்கு சரி ஆகுமா…?

அபிஷேகம் எதைச் செய்ய வேண்டும்…? எங்கே செய்ய வேண்டும்…?

அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நான் பெற வேண்டும் என் பேச்சிலும் மூச்சிலும் நல்ல இனிமையான உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா என்று
1.இங்கே நம் உயிருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
2.இதை அங்கே புறத்திலே சிலைக்கு ஊற்றிக் காண்பிக்கின்றார்கள். ஆனால் இப்படி யாரும் நினைப்பது இல்லை.

அங்கே சந்தனத்தை ஊற்றுவார்கள். அப்போது “பையன் சொன்னபடி கேட்கவில்லையே” என்று இங்கே வருத்தமாக இருக்கும். ஆக இங்கே வருத்தத்தைச் சுவாசித்து இங்கிருக்கும் ஆண்டவனுக்குக் கவலையை அபிஷேகம் செய்கின்றோம்.

நல்ல மணத்தை எடுத்து உனக்குள் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு அதைக் கொடு என்று ஆலயத்திலே காண்பித்தால் யாரும் அவ்வாறு கும்பிடுவதில்லை.

சரணாகதித் தத்துவமாக உன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அழுது சொல்லு. அவன் பார்த்துக் கொள்வான் போ…! தேங்காய் பழம் பலகாரத்தைச் செய்து கொடுத்து…
1.உனக்கு நல்லதை எல்லாம் கொடுத்து இருக்கின்றேன் என்னை எப்படி எல்லாம் துன்பப்படுத்துகின்றார்கள்
2.நல்லதைச் செய்கின்றேன் என்னை இப்படிப் பேசுகின்றார்கள் நல்லதைச் செய்தேன் ஏமாற்றுகின்றார்கள்
3.நீயே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! ஏன் நீ அவர்களுக்குச் சொல்லக் கூடாதா…? என்று சரணாகதித் தத்துவமாக அழுது அங்கு புலம்புகின்றோம்.

வேதனையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் எதைச் சம்பாதித்து வருகின்றோம்…?

எதை நீக்குவதற்காகக் கோவிலை வைத்தார்களோ
1.அந்தக் கோவிலுக்குச் சென்று சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக அசுத்தப்படுத்துகின்றோமே தவிர
2.கோயிலின் மரியாதையையே நாம் கெடுத்து விடுகின்றோம்.

இந்த உடலான கோவிலைச் சுத்தப்படுத்துவதற்கு நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக அவன் பட்ட வேதனையைத் தான் எண்ணுகிறோம். காரணம் என் நல்ல குணங்களை அது மூடிவிட்டது. அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.

ஆனால் நல்ல குணங்களைக் காப்பாற்றிய ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக அங்கே இருக்கின்றார்கள். அதனால் தான் பௌர்ணமி அன்று விண்ணை நோக்கி உற்றுப் பார்க்கும்படி சொல்வதும் காலையில் சூரியனைப் பார்க்க வேண்டும் என்றும் அன்று ஞானிகள் சொன்னார்கள்.
1.ஞானிகள் உணர்வை எண்ணி எடுப்பதை காயத்ரி என்பார்கள்.
2.இந்த காற்றிற்குள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட ஞானிகள் பேசிய உயர்ந்த சக்திகள் இருக்கின்றது.
3.அதை எண்ணி எடுத்து அந்த ஞானியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் சேமிக்க வேண்டும்.

அது பரமாத்மா பூமியில் இருப்பது. அதை எண்ணி எடுக்கப்படும் பொழுது உடலுக்குள் அணைப்பாக வருகின்றது. இரண்டாவது என் ஆத்மா. அதிலிருந்து சுவாசித்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது ஜீவாத்மா. இது எல்லாம் நல்ல குணங்களை விளைய வைத்துச் சுத்தப்படுத்தி உயிருடன் சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வாக வரப்படும் பொழுது நான்காவது உயிராத்மா. “இதற்குப் பெயர் காயத்ரி…”

அந்த உயர்ந்த உணர்வுகளை நமக்குள் எடுத்து விளைய வைத்தால் உண்மையான முழு சக்தியாக அங்கே பெறுகின்றது. இதை ஆண்கள் தான் செய்ய வேண்டும் பெண்கள் செய்யலாமா… வேண்டாமா…? என்று இப்படி ஒரு கேள்வி கேட்பார்கள்.

முதலில் தாய்மை…!
1.சக்தி தான் முதலில் சிவமாகின்றது. சிவத்தில் இருந்து தான் சக்தியும் வளர்ச்சி பெறுகின்றது
2.சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
3.சக்தியை முதலில் வைத்துத்தான் சிவமாகும் என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள்.

ஆனால் இன்று இருக்கக்கூடிய சாஸ்திர சட்டங்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா கூடாதா என்று சொன்னால் இது என்ன கேள்வி…? பெரும்பகுதியானவர்கள் “பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக் கூடாது… சொன்னால் தப்பு” என்கிறார்கள்… இவர்கள் சொல்லிக் கொள்ளும் காயத்ரி மந்திரம்.

மந்திரம் என்றால் என்ன…? அந்த இயற்கையின் சக்தி ஞானிகளுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஈர்க்கப்படும் பொழுது நமது ஆத்மாவாகி சிறுகச் சிறுகச் சேர்ந்து ஜீவாத்மாவாக நமக்குள் விளைந்து அதில் விளைந்த நிலைகள் உயிராத்மாவாகச் சேருகின்றது.

கோவிலிலே பார்க்கப்படும் பொழுது எந்தக் குணத்தைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அந்தக் குணமான சக்தி எனக்குள் இருக்கின்றது. அந்தக் குணத்தை நான் எண்ணும் பொழுது தான் அவனைக் காப்பாற்றினேன் (கீழே விழுந்தவனை). ஆனால் அதே உணர்வு எனக்குள் கலந்து விடுகின்றது.

அந்த குணத்திற்குள் கலந்ததை நான் துடைக்க வேண்டும். அதற்குத் தான் அங்கே காட்டியுள்ளார்கள்.
1.அவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த உணர்வின் சத்து எனக்குள் பட்டுவிட்டது.
2.அந்த வேதனையை அகற்றிவிட்டு நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால்
3.கோவிலில் காட்டப்பட்டுள்ள அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
4.இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா. வானை நோக்கி நாம் எண்ண வேண்டும்.
5.இந்தத் தெய்வ குணத்தை அவர்களுக்குள் விளைய வைத்து இது தான் உண்மை என்று அறிந்து சொன்ன வாக்கினை நாம் எடுக்க வேண்டும்.

தெய்வத்தைச் சொல்லி அந்தத் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால் நல்லது என்று சொன்ன சாதாரண மனிதன் இங்கே இருக்கின்றான். நல்லதைச் சொல்லிச் செய்பவன் எல்லாம் விண்ணிலே இருக்கின்றான். ஆனால் சாமியை நீ சொல் என்று மந்திரத்தைச் சொல்லி நீ இதைச் செய்தால் நல்லதாகும் என்று சொல்கின்றான்.

அதே மந்திரத்தைச் சொல்லி தெய்வத்தை ஜெபித்து வணங்கப்படும் போது நாம் இறந்த பின் இன்னொரு மனிதன் அதே மந்திரத்தைச் சொல்வான் என்றால் அவனுக்குள் ஆட்டிப்படைக்கும் பொம்மையாக ஆவோம்.

1.எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உடலில் சேர்த்துக் கொண்டோமோ இறந்த பிற்பாடு
2.அதே மந்திரத்தை இன்னொரு மனிதன் சொன்னால் அந்த மந்திரத்திற்குள் சிக்கப்பட்டு
3.அவன் என்னென்ன வேலை செய்கின்றானோ அதற்கு அடிமையாவோம் இவர்கள் சொல்லும் மந்திரத்தில் சென்றால்…!

ஞானிகள் சொன்ன வழிப்படி.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் அந்த மகரிஷிகள் உணர்த்திய அருள் சக்தியான தெய்வ நிலைகள் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி என் உடலுக்குள் அதைச் செலுத்தி மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் இந்த வாசனை என் உடலுக்குள் பெற்று அந்த நறுமணமான நிலைகள் பெற வேண்டும். என் சொல்லுக்குள் அந்த நறுமணம் வரவேண்டும். நான் சொல்வதெல்லாம் மற்றவர்களுக்கு இனிமையாக இருத்தல் வேண்டும் என்று எண்ண வேண்டும்.

கனியைப் பார்க்கின்றோம். அதை உட்கொண்டால் எப்படி இனிமையாக இருக்கின்றதோ அது போன்று என் சொல்லுக்குள் அந்த இனிமை கலந்து பிறருடைய செவிகளிலே படும் பொழுது அங்கே நல்லதாக அமைய வேண்டும்.

ஆனால் கீழே விழுந்தவனைப் பார்த்தவுடனே ஆ…! என்று எனக்குள் அலறல் ஆகின்றது. பிறருடைய மகிழ்ச்சியான சொல்களைக் கேட்கப்படும் பொழுது எனக்குள் ஆனந்தத்தைத் தூண்டுகின்றது.
1.இதைப் போல அந்த மகிழ்ச்சியான உணர்வின் தன்மை நான் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எனக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்தால்
3.இந்த உணர்வின் தன்மை கீழே விழுந்தவனைக் காப்பாற்றிய “அந்த விஷத்தை நீக்கிட” அந்த ஞானியின் அருள் வித்து உதவுகின்றது.
4.இவனைக் காப்பாற்றினேன்… அதே உணர்வின் தன்மை எனக்குள் அந்த நல்ல குணத்தை நிலை நிறுத்த முடிகின்றது.

இப்படித்தான் ஆலயத்தின் பண்புகளை நமக்குச் சொன்னார்களே தவிர சரணாகதித் தத்துவமாக துன்பத்தை எல்லாம் சொல்லி எல்லா பதார்த்தங்களையும் அங்கே வைத்துவிட்டு நான் எல்லாமே உனக்குச் செய்தேன் என் பிள்ளை மக்காக இருக்கின்றானே…! உன்னைத்தானே நான் வேண்டினேன் என்று வேதனையைத் தான் சொல்கின்றோம். எல்லோருக்கும் நான் தர்மத்தைத் தானே செய்தேன். எல்லோரும் ஏமாற்றுகின்றார்களே…!

அப்பொழுது எதை வணங்குகின்றோம்…?

ஆக நமக்குள் வந்த தீமையைத் தான் அந்தக் கோவிலுக்குள்ளும் சென்று அங்கேயும் அதே தீமையை வளர்க்கின்றோம். நாம் விடும் மூச்சுகள் நமக்குக் கெட்ட்தாவதோடு மட்டுமல்லாதபடி மற்றவர்களுக்கும் அது அங்கே கெடுதல் ஆகின்றது.

ஆலயம் நம்மைப் புனிதப்படுத்தும் நிலைக்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆகையினால் இனி எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் ஈஸ்வரா. இதையெல்லாம் அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மலரைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும். என் மூச்சாலும் பேச்சாலும் நல்ல மணங்கள் வெளிப்பட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

பிறரை மகிழ வைக்க வேண்டும். கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும். என் சொல்லால் பிறர் மகிழ வேண்டும் என் செயலால் பிறர் ஆனந்தப்பட வேண்டும்.
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எனக்குள் அது விளைய வேண்டும் ஈஸ்வரா.
2.அந்தக் கோவிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.என் சொல்லும் செயலும் இங்கு வருவோர் அனைவரையும் மகிழ வைக்கும் எண்ண அலைகளாகப் படர வேண்டும் ஈஸ்வரா என்று
4.இப்படி எல்லாம் செய்யும் போது நாம் தெய்வமாகின்றோம்.

இது தான் கோவிலின் தத்துவம்.

அணுவின் இயக்கம்… உணர்வின் இயக்கம்…!

அணுவின் இயக்கம்… உணர்வின் இயக்கம்…!

 

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வரும் கசப்பான சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. கவரப்படும் பொழுது வேப்ப இலை எந்த உருவமாக இருக்கின்றதோ அதனின் மணத்தை வெப்ப காந்தம் கவர்ந்த உடனே அந்த இலையைப் போலவே அந்த அனல் வீசும்.

1.மணத்தின் நிலைகள் இலையைப் போலவே ரூபம் இருக்கும்.
2.அந்த இலை எப்படி இருக்கின்றதோ அதைப் போன்று அந்தப் பொறிகளை வீசி இலையின் ரூபமாக இருக்கும்.

ஒரு இலுப்ப மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனுடைய இலைகள் வட்ட வடிவமாக இருக்கும். அதிலிருந்து வரக்கூடியது துவர்ப்பான சத்து.
1.அதைச் சூரியனுடைய வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால்
2.அந்த அணுவைப் பார்த்தால் வட்ட வடிவமாக இருக்கும்.

இலுப்ப மரத்தின் துவர்ப்பான சக்தி அதிகமான ஆற்றல் இருப்பதால் அதற்குப் பக்கத்தில் ஒரு ரோஜாச் செடி இருந்தாலும் இது அதைக் கவர்வதில்லை. அதனுடைய ஆற்றல் இருக்கும் பொழுது நல்ல மணத்தை ஒதுக்கி விடுகின்றது.

அதே போன்று வேப்ப மரத்திற்கு அருகில் நல்ல மணங்கள் வந்தாலும் இந்தக் கசப்பின் ஆற்றல் இருக்கப்படும் பொழுது அதனுடைய வலுக் கொண்டு அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

கசப்பான சத்து இருந்தாலும் ரோஜாப்பூ தன் நல்ல நறுமணத்தைத் தான் அது எடுத்துக் கொள்கின்றது.. கசப்பை உள்ளே விடுவதில்லை.

ஏனென்றால் ஒவ்வொன்றின் ஆற்றலும் அத்தகைய தன்மை வாய்ந்தது.

ஆக வலுவான சக்தியாக இருப்பதால்
1.காற்றுக்குள் இருக்கும் நுண்ணிய அலைகளைச் சிற்றலைகளாக வரும் பொழுது
2.தன் இனமான சக்தி சிறுத்திருக்கின்றது… அந்தச் சக்திகளை அது எளிதில் கவர்ந்து கொள்கின்றது.

காற்றுக்குள் இருக்கும் தன் இனமான சக்திகளைத் தன் வலுவின் ஆற்றல் கொண்டு கசப்பான சத்தைக் கவர்ந்து வேப்பமரம் வளர்கின்றது. அது வெளிவிடும் நிலையை காற்றுக்குள் எவ்வளவு இது கலந்து இருந்தாலும் அடுத்த வேப்பமரம் இந்தச் சத்தை எடுத்து அது வளர்கின்றது… தன் இனத்தை வளர்க்கின்றது.

ஆனால் இயற்கையின் மாற்றங்கள்… அணுக்களின் தன்மை தனித்துத் தனித்து வேப்ப மரத்தின் கசப்பான சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் அதே போன்று இலுப்ப மரத்தின் சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து தனித்தனியாக அலை அலையாகச் செல்லும் பொழுது
1.அதில் எந்த உணர்ச்சியின் தன்மை வேகமாக இருக்கின்றதோ
2.அதற்குத் தக்கவாறு அந்த அணுவின் நகர்ந்து செல்லும் ஆற்றலும் இருக்கும்… வேகமாக இருக்கும்.

மனிதனைத் தேள் கொட்டி விட்டால் கடு…கடு… என்று அந்த விஷத்தின் தன்மை ஏறுகின்றதல்லவா. இதைப் போலத் தான் ஒவ்வொரு நிலையிலும் ஆற்றல்மிக்க அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறு விஷத்தின் ஆற்றல் கலந்துள்ளது. அது தான் ஆவி.

அந்த இயக்கத்தின் தன்மையில் எந்தெந்தத் தாவர இனத்தின் விஷம் அதிகமாகக் கலந்திருக்கின்றதோ கலந்த நிலைகளுக்கொப்ப அந்த உணர்வின் சக்தி பொறிகளாகக் கிளப்பக் கூடிய ஆற்றலும் அதிகமாக உண்டு.

இந்த அணுக்களின் தன்மை இரண்டும் தனித்தனியாகப் போகும் போது வேகத்தின் துடிப்பு படர்ந்து சென்றாலும் இதிலே கலந்திருக்கக்கூடிய நிலைகளுக்கொப்பத்தான் இதனுடைய இயக்கச் சக்தி.

இந்த அணுக்கள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதியுடனே வெப்பமும் காந்தமும் ஒன்றாக இணைந்து கொள்கின்றது. இரண்டு வெப்ப காந்த அணுக்கள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஆற்றல் அதிகமாகும். ஆனாலும் அந்த வேப்ப மரத்தின் கசப்பின் சத்தும் இலுப்ப மரத்தின் துவர்ப்பின் சத்தும் இதுவும் இரண்டறக் கலந்து விடுகின்றது.

வேப்ப மரத்தின் ஆற்றல் விஷம் ஜாஸ்தி அது உமட்டல்… இயக்கச் சக்தி அதிகமாக இருக்கிறது. இலுப்ப மரத்தினுடைய திகட்டல் கம்மி… உள்ளடங்கி வட்ட வடிவமான நிலைகளில் இருக்கும் பொழுது அதை வெளிப்படுத்தும் நிலைகள் கொண்டு
1.வேப்ப மரத்தின் இலை ரம்பம் போன்று இருப்பது
2.அடுத்து இலுப்ப மரத்தின் இலை வட்டமாக இருக்கும் இரண்டும் சேர்த்து புது விதமான இலையாக உருவாகின்றது

இது உணர்வின் இயக்கம்.

நாம் ஒரு காரத்தை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்.. ஆனால் கசப்பை வாயிலே போடும்போது உமட்டலாக “ஓய்…” என்று வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது.

இதே மாதிரி இயற்கையின் உணர்வின் அணுக்கள் அது சேர்க்கையாகும் பொழுது இந்த அணுவின் தன்மைகள் ரூபங்கள் மாறும்.

இப்படிப் பல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று அடக்கி இயக்கமாகி காந்தத்தின் ஆற்றல் அதிகமாகி இப்படி நூறு அணுக்கள் நூறு விதமான தாவர இனத்தைக் கவர்ந்து கொண்டு வந்தால் அதனுடைய கலவைக்குத் தக்கவாறு உணர்வின் நிலைகள் உருமாறி இந்த உணர்வின் சத்துக்கொப்ப இயக்கச் சக்தியாக மாறி அந்த அணுவின் ஈர்ப்பு காந்தமும் வெப்பமும் அதிகமாகி எடை கூடி புவியின் ஈர்ப்பிற்குள் அமைந்து விடுகிறது.

பூமிக்குள் அமைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பு காந்தத்தின் துணை கொண்டு வெளியில் இருந்து வரக்கூடிய வெப்பத்தின் தன்மையை ஈர்க்கும் தன்மை பெறுகிறது.
1.மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் ஒரு மின்னல் தாக்கப்படும் பொழுது
2.இந்த அணுவிற்குள் பட்ட உடனே அது துடித்து எழுந்து இயங்கத் தொடங்குகிறது.

அப்படி இயங்கும் பொழுது தனக்குள் எந்த உணர்வின் சக்தியை இது பெற்றுக் கொண்டதோ… காற்றிலே மிதந்து வரும் தன் இனமான சக்திகளை எத்தனை வகையான உணர்வுகளைத் தனக்குள் அது ஈர்த்ததோ… அதைப் போன்று நுண்ணிய அலைகளைப் பிரித்து இணைக்கச் செய்து… அது ஒரு புதுச் செடியாக மரமாக புது இலைகளாக உருப்பெறுகின்றது.

புது விதமான செடியாக வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனை வகையான நிலைகள் இதிலே சேர்த்து இருந்ததோ அந்தச் சத்துக்குத்தக்கவாறு மரம் வளர்கின்றது.

மரமாக வளர்ந்து அந்த நூறு விதமான நுண்ணிய அலைகளைத் தனக்குள் பிரித்துச் சேர்த்து அதற்குள் விளைந்து பூவாகி காயாகி கனியாகி வித்தை உருவாக்குகின்றது.

முதலிலே கவர்ந்த அணுவின் தன்மை அது செடியாகி மரமாகி அந்த உணர்வின் சக்தியை மீண்டும் வளர்த்து வித்தாக உருப்பெறுகின்றது.
1.வித்தின் பரிணாமம் பெரிது.
2.ஆனால் முதலில் அணுவின் சக்தி சிறிது.

இதனின்று வளர்ந்த இந்த நிலைகள் பரிணாம வளர்ச்சியில் வருவது போல ஒரு உயிரணு புழுவில் இருந்து மனிதனாக வரும் போது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து வளர்ச்சிக்கு வருகின்றது.

1.ஒவ்வொரு உணர்வின் சத்தாகச் சேர்க்கப்பட்டு தான் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பாகி… ரூபங்களாகப் பரிணாம வளர்ச்சியாகி
2.எத்தனை கோடித் தாவர இனங்களை… உயிரினங்களாக இருக்கும் பொழுது உட்கொண்டதோ
3.இந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தின் நிலையும்
4.அதனதன் உணர்வுக்கொப்பத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளைச் சுவாசித்து… தன்னை தற்காத்துக் கொள்ளும் வினைகளைச் சேர்த்து
4.அது கலந்து சேர்த்துக் கொண்ட உணர்வின் அணுவின் தன்மை அதற்குள் விளைந்தது
5.ஒவ்வொரு உயிரினமும் அதைத் தன் உயிரான்மாவாக வடித்துச் சேர்த்துக் கொள்கின்றது.

எனக்குக் கிடைத்த பூர்வ புண்ணியம்

எனக்குக் கிடைத்த பூர்வ புண்ணியம்

 

குரு அருளால் என் (ஞானகுரு) குடும்பம் ஓரளவுக்கு எல்லோருக்கும் சேவை செய்யக்கூடிய நிலைகள் வந்து சேர்ந்திருக்கின்றது.

காரணம் என்னுடைய தாய் கர்ப்பமாக அந்தக் கருவில் நான் இருக்கப்படும் பொழுது என்னுடைய பாட்டி… இன்னொரு தம்பி மகளை என்னுடைய அப்பாவுக்கு இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தது.

“என் அம்மாவிற்கு ரொம்பவும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது…” என் அண்ணனுக்குப் பின் இருவர் பிறந்தார்கள்.
1.அந்த மாதிரி நேரத்தில் நான் கருவில் இருக்கும் பொழுது என்னுடைய அம்மா சொல்லியது (பின்னாட்களில்).
2.உன்னுடைய பாட்டி… அப்பாவுக்கு எப்படியாவது இரண்டாம் தாரம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டுள்ளது.
3.இதை நிறுத்த வேண்டும் என்பதற்காக நான் வேண்டாத தெய்வங்கள் இல்லை.
4.கோயில் குளமெல்லாம் சுற்றி வந்தேன். மூதாதையர்கள் குலதெய்வங்கள் எல்லோரையும் வேண்டினேன்.
5.எங்களுடைய பாட்டனுடைய பாட்டன் மந்திர சக்தி எல்லாம் கொஞ்சம் கற்றுக் கொண்டவர்கள்.
6.அவர்களையெல்லாம் எண்ணி இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.
7.நீ கர்ப்பத்தில் இருக்கும் பொழுது. அதே துயரத்தில் நான் இருந்து கொண்டிருந்தேன்
8.அதனால்தானப்பா…! உனக்கு இந்த ஞானமெல்லாம் கிடைத்தது என்று என்னிடம் தாய் சொன்னது.
9.நம்முடைய குலதெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நமக்குத் துணையாக நின்றது.

என்னுடைய அண்ணன் எங்கள் பாட்டியைத் தான் அம்மா என்று கூப்பிடுவார். தன்னுடைய அம்மாவை மதிக்க மாட்டார். இது நடந்த நிகழ்ச்சி.

என்னுடைய அத்தைக்குப் பிள்ளை இல்லை. சொத்தை என் அண்ணனுக்கு எழுதி வைத்து விடலாம் என்று ஏற்பாடு செய்தார்கள். அந்தச் சொத்தை இந்தப் பிள்ளைக்கு எழுதி வைத்து நம் வீட்டில் இருந்த 25 ஏக்கர் நிலமும் நகையும் கொடுத்துக் கட்டி வைக்கலாம் என்று திட்டம் போட்டார்கள். என் அம்மா மீது வெறுப்பு.

இது எல்லாம் நீங்கள் கவனமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் எமக்குக் குருநாதர் காட்டிய உண்மையின் உணர்வுகள்.

1.உன் குடும்பத்தில் எப்படி இப்படி நடந்தது…?
2.இது போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை சிக்கல்கள் வருகிறது பார்…! என்று எல்லாம் அணுபவபூர்வமாகக் குருநாதர் காட்டினார்.

நான் பிறந்த பிற்பாடு என்னுடைய பாட்டி என்னுடைய தாயைத் திட்டுவது கொஞ்சநஞ்சம் அல்ல. நான் சிறு பிள்ளையாக இருந்து வளர்ச்சியாக… என் தாய்க்கு உதவி செய்தேன். எனக்குப் பின்னாடி இருவர் பிறந்து இறந்து விட்டார்கள் எனக்கு முன்னாடி பிறந்த இருவரும் இறந்து விட்டார்கள்.

அடுத்து தம்பி பிறந்து இருக்கிறார் என்று என்னுடைய பாட்டி என் கழுத்தில் சூடு போட்டது இன்னும் எனக்கு அது நினைவிருக்கிறது. ஏனென்றால் சூடு போட்டால்… அடுத்து நோய்கள் வராது என்று அந்தக் காலத்தில் ஒரு மூடநம்பிக்கை.

தெற்கத்தி நோய் என்று வலிப்பு மாதிரி வரும் காக்கா வலிப்பு நோய் என்று சொல்வார்கள். என்னுடைய பெரியப்பா வீட்டில் பிள்ளைகளுக்கு இது போன்று வந்ததால் அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக இந்த மாதிரி சூடு போடுகின்றார்கள்.

எனக்குத் தம்பி பிறந்த அன்று “சாமி கும்பிடு” என்று சொல்லி சூடு போட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது.

ராஜபாளையத்தில் என்னுடைய தங்கை திருமணம் ஆகிக் கர்ப்பமாக இருந்த அந்த நேரத்திலே என்னுடைய பாட்டி திட்டி விட்டது என்று சொல்லிக் கோபித்துக் கொண்டு “என் அம்மா கிணற்றில் விழுந்து விட்டது…”

ஆனால் அந்த ஊர் வழக்கப்படி குழந்தைகள் இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே அருகில் இருக்கும் குளங்களில் நீச்சல் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.

அம்மா கிணற்றில் விழுந்தவுடன் நான் ஓடிப் போய்க் காக்க முயற்சி செய்தேன். ஏனென்றால் அங்கே ஒருவரும் இல்லை… எனக்கு லீவு வேறு. எனக்கு அப்போது வயது ஏழு அல்லது எட்டு இருக்கும்.

கிணற்றில் நான் குதித்து.. என் அம்மா என்னைப் பிடித்துவிடும் என்று சொல்லி அவருடைய தலை முடியைப் பிடித்து அப்படியே இழுத்துக் கொண்டே வந்தேன்.

படி மேல் ஏற்றிவிட்டு “நீ மேலே ஏறி வருகின்றாயா இல்லையா…?” என்று சொல்லி என் தாயைக் காப்பாற்றினேன்.
1.அதிலிருந்து என் அம்மா கூடவே எப்பொழுதும் இருப்பேன்.
2.என்னுடைய அம்மாவின் “அந்த ஆசி தான்” எனக்குக் குரு அருள் கிடைத்தது
3.தாய் எடுத்துக் கொண்ட கருவில் எனக்குள் விளைந்த பூர்வ புண்ணியம்
4.அவர்கள் வேண்டிக் கொண்ட அந்த உணர்வு தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது.
5.என்னுடைய அண்ணனுக்கோ தம்பிக்கோ தங்கச்சிக்கோ ஒருத்தருக்கும் இது கிடைக்கவில்லை.

அனுபவபூர்வமாக குருநாதர் இந்த உணர்வுகளை எனக்கு நினைவுபடுத்தி நீ எப்படி வளர்ந்து வந்தாய்…? உன் குடும்பப் பாரம்பரியம் எப்படி வந்தது…? என்ற நிலையும் உணரச் செய்தார்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் தவறு இல்லாமலேயே சங்கடங்களும் சந்தர்ப்பத்தால் பாசத்தால் நுகர்ந்த நிலையில் எத்தனையோ தொல்லைகளும் வேதனைகளும் எப்படி வருகின்றது…?

இதைப் போன்ற உண்மையின் நிலைகளை விளக்கி… மனிதன் என்ற பண்பை வளரச் செய்து…
1.அன்று அகஸ்தியன் பெற்ற உணர்வுகளைப் பெறச் செய்து
2.தன்னை எது இயக்குகின்றது…? என்பதை குருநாதர் உணர்த்தினார்.

தவறு செய்கின்றீர்கள் என்றால் நீங்களா…? இல்லை…! பிறருடைய உணர்வுகள் உங்களுக்குள் இயக்கப்படும் பொழுது நல்ல குணம் தாங்காது அது போன்று இருளான நிலைகளுக்குச் சென்று விடுகின்றோம்.

அதையெல்லாம் மாற்றிப் பழகுதல் வேண்டும். அதற்குத் தான் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம்.

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

 

ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”

உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!

முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.

காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.

பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.

உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.

பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.

மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.

உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.

பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி – அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் – காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் – அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”

அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.

சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.

ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்

ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்

 

மனிதன் பெற்றிட வேண்டியது… சிந்தனைத் தெளிவு… பௌருஷம்… மனோதிடம்… உயர்வைக் கூட்டிக் கொண்டிடும் சித்தன் நிலை ஆகும்.

நன்மை பெறத்தக்க காரியங்களில் வெற்றி… அறிவின் சாதுரியம்… அனைத்தும் கொண்டு,
1.”ஆத்ம பலவான் என்ற ஆஞ்சநேயன்” பெற்று வளர்த்துக் காட்டிய அனுபவ சாரங்களை
2.கொள்கின்றவன் (கடைப்பிடிப்பவன்) ஜெபமாக உணர்ந்து கொண்டிட
3.வாயு புத்திரன் துணை கொண்டு இராமன் “சூடாமணி பெற்றான்” என்றே மாமகரிஷி மறைபொருள் காட்டியவற்றுள்
4.மனித ஞானம் உயர் ஞான வளர்ப்பின் ஆக்கத்தில்
5.மெய்ஞான விழிப்பால்… மெய் அறிவாம் வாலறிவன் (தெய்வ சக்தி) தன்மையாகச் சுடர்தல் எனும் ஜோதித்துவ பூரணமாக
6.தன்னைத்தான் வளர்த்துக் கொள்ளுதல் தன் அனுபவ ஞான வளர்ப்பால்… மெய்யின் முழுமை பெற்றிட
7.சூட்சுமப் பொருள்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

வெட்டன மறத்தல் (உடனுக்குடன் மாற்ற வேண்டியது) கோபத்தின் குணங்களே. மீண்டும் மீண்டும் புவி ஈர்ப்பின் பிடிப்பில் உழன்றிடவே மனிதன் தனக்குத்தானே விரித்துக் கொள்கின்ற “மாய வலையப்பா” அது.

விண் ஏகும் செயல் சூட்சுமம் காட்டிய வான்மீகி மாமகரிஷி… வாயு புத்திரனாகத் தன்னையே காவியப் படைப்பாக்கி… ஆஞ்சநேயன் கொண்டிட்ட வலு வீரியச் செயலை விளக்குவதே… ககன வழி மார்க்கம் உடல் கொண்டு பிறந்த நிலை.

1.இராமனாகிய உய(யி)ர் சக்தி அளித்திட்டதோ கணையாழியாகக் காட்டப்படும்
2.சூரிய ஜோதியாகத் துலங்கும் ககனமணி (விண்ணில் ஒளிச் சுடராக மிதக்கும் தன்மை).

இக்கலியின் மனிதன் கொண்ட பேராவல் நிலையினால் மெய்யைப் பொருள் உரைப்பதிலும் தாமதம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் வழியாக…
1.உயிர் சக்தி வலுக்கூட்டும் செயலில்
2.விண் ஏகும் சூட்சுமம் உள்ளடக்கி
3.ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்.

ஸ்ரீராம ஜெயம் உரைக்கும் இடமமெங்கும் உயர்வைக் கொண்டு உயர்வைக் காட்டும் வான்மீகியாரின் பதிவு செயல் நிலை… “சப்த நாதங்களாக ஈர்ப்பின் வலுக் கூட்டிடுமப்பா…”

ஆஞ்சநேயர் கொண்ட விஸ்வரூபத்தில் ஜெபத்தின் அளவீடு காட்டிட முடிந்திடுமோ…? எண்ணத்தின் அளவீடு கொண்டு உணர்ந்திடப்பார்.

உணர்வுகள் மாற்றிக் கொண்டிட்டே… அந்த வினையின் வழி ஏகல் என்பதில்…
1.இராம காவியத்தில் நாம் கொடியது என உரைத்திடாவிட்டாலும்
2.விளக்கத்தின் பொருள் மோகமும்… கோபமும் குலத்தின் நாசம் (இராவணன்) என்று போதனையை அறிந்து கொண்டிடல் வேண்டும்.

தெய்வ நிலை பெற்றிடும் மனித(னி)ன் நிலை நின்று கொள்ளும் (தெய்வம் நின்று கொள்ளும்)

தெய்வ நிலை பெற்றிடும் மனித(னி)ன் நிலை நின்று கொள்ளும் (தெய்வம் நின்று கொள்ளும்)

 

மூலத்தில் கலந்து இலயிக்கும் ஆனந்தப் பெருநிலை… மூலப் பிரகிருதி சகலமும் சகலமாகக் கலந்து முகிழ்தலின் செயல் நிலை… சூரியனின் சக்தியே வெப்ப ஒளிக் கதிர்களாக… சிவலிங்க அணுக்களாக… சமைத்திடும் நிலைகள் “பரவெளியில் வீசிப் படர்ந்து செயல்படும் சக்திகள்…”

அதை எல்லாம் பூமி தன் ஈர்ப்பின் சமைப்பில் பெற்று… வளர்த்து… வளர்ந்து வரும் பரிணாம வளர்ச்சி என்னும் செயல் நிகழ்வுகளை எல்லாம் “பிண்டத்தைக் கொண்டு” அன்றே மாமகரிஷிகள் உணர்ந்தனர்.

முத்தொழில் உணர்ந்திடும் உயர்வு கொண்டு… சரீர முச்செயல்களால் தங்கள் மெய்ஞானத்தைக் கூட்டி அறிந்து… அதன் வளர்ப்பாக ஞான விழிப்பார்வை கொண்டு அண்டத்தை அறிந்து கொண்டிடும் ஞான திருஷ்டியின் வழியாக… தெய்வீக நிலை பெற்றிடும் மனிதனின் உயர்வைக் கோளங்களின் செயல்பாட்டில் சூரியனை முதன்மையாகக் காட்டி… பூமியின் ஈர்ப்பில் காலைப் பொழுது நண்பகற் பொழுது இராக்காலப் பொழுது என்றே இவ்வண்டத்தில் நடைபெற்றிடும் சூட்சும இரகசியங்களை… நல்லெண்ண நற்சுவாசம் கொண்டே தியானத்தின் வழியாகப் பெற்று உயர்ந்திட நற்போதனைகளாகக் காட்டியவற்றுள்… மாமகரிஷிகள் வழிகாட்டி உயர்ந்ததைப் போல் இக்கலியின் வேகத்திலும் உண்மை உணரும் ஞானச் செல்வங்கள் “பிறவா நிலை எனும் அதனினும் சிறப்புற்ற பேரானந்தப் பெரு நிலையை எய்திட முடியுமப்பா…”

இராம காவியம் காட்டிய ரிஷி உணர்த்தும் வான் தொடர்பில்…. “மகாலட்சுமி உலவிடும் வேளை…” என்று வாய்மொழிச் சொற்கள் போதிக்கப்பட்டதே… சிருஷ்டியின் முதல் இரகசிய காத்தல் தொழில் எனும் சூரிய சமைப்பு நிலைகள் பூமி பெற்றிடும் காலத்தே… உணர்வலைகள் குணங்களாக ஆத்மா என்றிட்ட பதிவு நிலை பெற்றிடும் தெய்வீக உயர்வைக் கூட்டிக் கொண்டிட… இந்த மனித குலம் பெற்றிடவே “போதனைப்படுத்தப்பட்ட உண்மைகள்…”

1.படைப்பின் படைப்பு செயலுருவே பிரம்மனின் ஹேம அணுக்களாக உலவி ஓடிடும் சிவ சதா மண்டலமும்…
2.சூரியன் சமைப்பில் புலனாக வீசிடும் சிவலிங்க அணுக்களாகக் கலந்து…
3.பூமியின் தொடர்பில் மனிதன் தன் உயர் ஞானத்தால் பெற்றிட…
4.அறிவைத் தூண்டுகின்ற சக்தியாகப் பிரணவ ஆகாச வாணி என்னும் ஒலி சக்தியாக (சரஸ்வதியாக)…
5.தியானத்தில் பெற்றிடும் உண்மைகள் அதி வெப்ப சக்தியால் படைப்பின் ஜீவ ஆதாரம் செயல் கொண்டிடும் சமைப்பு வெப்ப அலைகளால் சமைத்திட்ட சமைப்பு…
6.செயலுறும் மாலை தொடங்கிய இரவின் பொழுதையே சிருஷ்டியின் சமைப்பே ருத்திரனாகவும்
7.அதன் உத்வேக ஊட்டம் அளித்திடும் துர்க்கை என்றே பெயர் நாமமிட்டு அழைத்து…
8.விண்ணின் சக்திகளை இம்மண்ணிலே ஜீவிதம் பெற்றிடும் உயிராத்மாக்கள் பெற்றிடவே…
9.உயிரின் குரு சூரியன் என்றே முதன்மைப்படுத்திட்டு…
10.மாமகான்கள் மெய்யறிவை அறியும் ஞானம் சுடர்ந்திடும் விளக்கைத் தூண்டிடும் தூண்டுகோல் என்றே அளித்த வழி வகைகள்…
11.இந்தக் கலியில் மனிதன் கொண்டிட்ட அறிவின் மெத்தனப் போக்கால்… பாகுபாடு கண்ட செயல்களால்…
12.சிருஷ்டியின் இரகசியங்கள் மாமகான்களால் மறைபொருள் படுத்தப்பட்டன.

“அரசு அன்று கொள்ளும்” என்ற சித்தன் சொல் இம்மனிதனால் “அரசு அன்று கொல்லும்” என்று மாற்றிட்ட சொல் வழக்கு போல் “தெய்வம் நின்று கொள்ளும்…? என்பதில்
1.எது அறிவைத் தூண்டுகின்றதோ
2.எது நின்று நிலை பெற்ற ஒளிப்பொருளோ அப்பொருளை வணங்குதல் மாத்திரம் அன்று
3.அந்த மெய்ப்பொருளாகத் தன்னை வளர்த்து… ஒளி எனும் ஜோதித்துவ நிலை பெற்றிட…
4.எண்ணம் கொள்ளல்… எது பேரருள் ஒளிச்செல்வமோ… அதனைச் சிந்திக்கத் தலைப்படும் எண்ணத்தின் உயர்வால்
5.நற்சுவாச ஒளி நுண்காந்த அலைகள் ஈர்த்திடும் பக்குவத்தால்
6.சிந்தனையில் கொள்ளும் பொருள் எதுவோ… “அதுவாக இவன் ஆதல்…” என்பது
7.”தெய்வ நிலை பெற்றிடும் மனிதன் நிலை நின்று கொள்ளும்…” பாங்கு அதுவே.

தேகம் கொண்ட பின் ஆனந்த இலயம் கெட்டது… தன்னை உணர்ந்தபோது பேரானந்த இலயம் ஆட்கொண்டது

தேகம் கொண்ட பின் ஆனந்த இலயம் கெட்டது… தன்னை உணர்ந்தபோது பேரானந்த இலயம் ஆட்கொண்டது

 

வரலாற்றின் தொடர்பு தொடர்ந்து வந்தாலும் அதனுள் காட்டப்படும் சூட்சுமப் பொருட்கள்… “காரண காரிய விளக்கங்கள்” அதனின் ஆய்வில் சிந்தனை செயல் கொண்டிடல் வேண்டும்.

ஏனென்றால் “அனைத்துமே” பால்வெளி எனும் ஆகாய சம்பந்தம் கொண்டது…!

ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் தொடர்பில்
1.பூமியின் ஈர்ப்புப் பிடிப்புக்குள் அகப்பட்டுவிடும் ஜீவன்
2.தேகம் கொண்ட செயலாக ஆனந்த இலயத்தை மாயை மறைக்கின்றது.

வித்து வித்துக்களாக விளைந்திடும் நிலையில்
1.அவ்வானந்த இலயத்தை நாட்டம் கொண்டிடும் மனது
2.”ஆகாய சம்பந்தம்” கொள்கின்றது.

வித்துக்கள் பூமியில் ஊன்றப் பெற்று முளைத்து தழைத்து… பின் கிளைத்து உயர்ந்தோங்கல் எனும் மரமாக வளர்ந்துற்றாலும்… ஊன்றப்பட்ட அதே வித்தே கனிகளாகத் தோன்றி வித்துக்கள் அதன் அடக்கம் கொண்டு தோன்றிட்டாலும்… “மரத்தின் கனியில் உண்டாக்கிய வித்துக்கள் ஆகாய சம்பந்தம் கொண்டது…”

அந்த வித்துக்கள் மரத்துடன் ஒன்றிக் கனிந்து முதிர்ந்த நிலை பெற்றவுடன் அந்த மரத்திலிருந்து வேறுபட்டு பூமிக்கு வருகின்றது. காரணம் மரத்தின் தொடர்புடன் ஆகாய சம்பந்தம் கொண்டது.

அந்த மரமானது புவி ஈர்ப்பின் சக்திக்குள் அடக்கம் பெற்றிட்டதால்… கிளைதனில் விளைந்த “ஆகாய சம்பந்த வித்து…” ஈர்ப்பின் செயலில் வித்தாக வருகின்றது.

1.சரீரம் பெற்ற மனிதன் இதே சூட்சுமத் தத்துவங்களில் தான் பிறப்பின் நிலை கொள்கின்றான்
2.தேகம் கொண்ட பின்… ஆனந்த இலயம் கெட்டது
3.தன்னை உணர்ந்த பொழுது… அப்பேரானந்த இலயம் ஆட்கொண்டது.

வளர்ச்சி கொண்டிட்ட செயல் அனைத்தும் ஜீவனின் வளர்ப்பு தான்.

1.ஞானக்கண் விழிப்பால் பிடரிக் கண் தெளிந்த பொழுது
2.கவனம்… மூலாதார அக்கினியில் இலயிக்கின்றது.

இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.

மூலாதாரத்தின் சிவலிங்க அணுக்கள்… நீர் சக்தி எனும் விந்து ஒளி கொண்டு மேல் எழுகின்ற செயல் “மூலாதாரத்தில் இலயித்த கவனம்” மேல் எழும்புகின்ற ஊர்த்துவ சக்தியின்.. “உந்துகின்ற எண்ணம் அதுவும் கவனம்…”

மூலமும்… ஆண் பெண் குறி ஸ்தானங்கள் கொண்ட இடமும்… மூல ஆதாரம் எனும் இடமாகத் தோன்றிடும்… தோன்றி நிலை கொண்டிடும் ஜோதி சொரூப சக்தி… மேல் எழுந்திட சிரசின் நெற்றிப் பகுதி என உரைத்திடும் சதாசிவ மண்டலம்… அந்த மண்டலத்தின் ஈர்ப்பிற்கே ஊர்த்துவமாகச் செல்கிறது.

1.நாபியில் நிலை பெற்றுப் பின் இதயத்தில் நிலை கொள்கின்றது
2.பின்னும் மேல் எழுந்து கண்டத்தில் கடைவாய்ப் பற்கள் அமைவு கொண்ட இடத்தில் மறைமுகச் சக்தியில் கலந்து “தேஜோமயமாக” விளங்குகின்றது.
3.அச்சக்தியே அறுகோணச் சக்கரத்தில் நடித்திடும் சிவத்துள் விளக்கம் தோன்றிட
4.முதலில் கண்ட சக்தியுள் கலந்து எழும் சக்தியே நாவின் அடிப்பாகத்தில் ஓ…ம் எனும் பிரணவத்துள் கலந்து
5.ஓமின் அந்த ஒலி நாதத்தை மேலெழும் சக்தியாக… நெற்றிப் பொட்டின் அறுகோணத்துள் அமைவுறச் செய்திடல் வேண்டும்.

ஓ…ம் என்னும் ஒலி நாதம் நாவினுள் கிளர்ந்திடும் பொழுது… உதடுகள் அசைவதும் அன்றி பிரிந்திடவோ செயல் கொள்ளல் தகாது.

1.நெற்றிப் பொட்டில் ஆரோகணிக்கும் அச்சிவசக்தி தியானத்தின் வலு வீரியம் பெற்றிடுங்கால்
2.சரீரத்தில் இருக்கும் கோடான கோடி உயிரணுக்கள் உயிராத்ம சக்தியின் வசப்பட்ட எண்ணத்தின் செயலுக்கொப்ப
3.இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் சக்தி எவ்விடத்திலும் சென்று மீண்டிடும் “சூட்சும சித்து” இதனால் அடக்கம்.

தெளிவாக விளங்கிட இதற்கு ஒரு சித்திரம் காட்டிடல் வேண்டும். நிறைகுடம் தளும்பாது.

கடைபிடிக்கப்படும் காரியங்களில்…
1.எண்ணத்தின் சிதறல் ஊசி முனை அளவாக இருந்தாலும்
2.அந்தச் சிறு துவாரம் வழியாக… பெற்றிடும் சக்தியின் உயர்வைக் குறைத்து விடும்.

அதே போல்…
1.சிதறுகின்ற எண்ணங்களின் அந்தச் சிறு வழியை அடைத்து விட்டால் நிறை குடமாக ஆகும்
2.வாழ்வின் எந்த நிலையிலும்… எத்தனை சந்தர்ப்பங்கள் வசமாயினும் நிறை குடம் தளும்பிடாது.

சின் முத்திரை விளக்கம்

சின் முத்திரை விளக்கம்

 

வேதாந்த நாதன் வேதாள மகரிஷிடம் கற்றுக் கொண்டது மௌனமாக அமர்ந்திருக்கும் ஓர் நிலை. அஃது அன்றி அறிந்திடாத வேதாந்த நாதன் மடந்தையின் (விசாலவதி தேவி) முன் நின்றிட்ட பொழுது “அவனைச் செயல்படத் தூண்டிய சக்தியாக அகப்பொருள் காத்திட நின்றது வேதாள மகரிஷியின் அருள் சக்தி…”

மடந்தை வேதாந்த நாதனிடம் உரைத்த வினா… ஒரு கை ஓசையும்… ஒரு விரல் அறிவும்… நான் என்பதுடன் கூடி நிலை பெற்றால்… “நீ என்பது என்ன…?”

1.அபரிதமான சிந்தனை உடையவள் அந்த மடந்தை கொண்ட அறிவு…!
2.ஆனால் “அவளின் அகங்காரமின்றேல்” அவள் அம்மன் சக்தியாய் செயல் கொண்டிருக்க முடிந்திடும்.

கூர்ந்த மதி கொண்ட வேதாந்த நாதன் பெற வேண்டிய உயர்வின் தன்மைக்கு… பெறுகின்ற அனுபவ நிலைகள் “கவிகாளிதாசன்” என்றிட்ட சொல் நாமத்திற்கு… வித்தின் நிலை போல் செயல் கொண்ட விதம் வேதாள மகரிஷியினுடையது.

1.ஆலமரத்தின் வித்து சிறியது தான் என்றாலும் அதன் திறத்தை அறிந்து கொண்டிட முடிவது
2.அந்த வித்து முளைத்து கிளைத்து அறியதாகிய வளர்ப்பாக ஈர்த்து வளர்ந்த பின்
3.அந்நிலையில் அதனை நாம் முழுமையாக உணர்கின்றோம்.

தெளிந்த மனம் கொள்கின்ற பாங்கு செயல் உருவாக வளர்ச்சியின் விதம் காண்பிக்கப்படுவதாக… சிறப்பரிய ஆலின் வித்து போல் உயர் ஞானத்தின் வளர்ச்சி… “ஆலின் வித்து தழைப்பதைப் போல் ஞானத்தின் பாங்காக வளர்ச்சி நிலை பெறுதலும் உண்மை…”

1.வேதாந்த நாதன் மடந்தையின் முன் நின்று அவள் வினவிய பொருள் தன்மை உணர்ந்திடாத நிலையிலும்
2.அவன் உள்ளத்தை ஆட்கொண்டது வேதாள மகரிஷி காட்டும் “சின் முத்திரை…”
3.அதுவே மன மண்டலத்தில் வியாபிக்க… அந்த முத்திரை கூட்டித் தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.

மடந்தையின் வினாவிற்கு வேதாந்த நாதனின் இந்நிலை கண்ட அவள்… சொல்லாமல் சொல்வித்த பதில்… அவள் கரம் கூப்பிக் கண்களில் ஆனந்த நீர் சொரிய சிரம் தாழ்த்தித் தொழுதாள்.

கூடி இருந்த புலவர் பெருமக்கள்… அம்மணி…! வேதாந்த நாதன் பதில் உரைத்திடா வண்ணம் தியானத்தில் அமர்ந்து விட்டான். வினா தொடங்கிய நீயே இதற்குரிய பதிலும் அளித்திட சூழ்நிலையை அவரே உருவாக்கி விட்டார். பதில் உரைத்திடல் வேண்டும் என்று கேட்டனர்.

மடந்தையோ… கல்வியின் செருக்கு என் மனக்கண்ணை மூடி அகங்காரம் கொண்டுவிட்டேன்… கல்வியின் சிறப்பை அவமதித்துவிட்டேன். இவர் ஒருவர் பதில் உரைத்து என் அகக்கண் திறந்து… ஆட்கொண்டிட்டார்.

1.ஒரு கை ஓசையே – பிருகிருதியின் நாதக்தம் (இயற்கையின் நெறி)
2.அதனைச் சுட்டிக்காட்டும் மாமகான்கள் – “பரப்பிரம்ம பெருநிலை அறிவு என்பர்…”
3.“நான்” – என்றிட்ட தன்மையைத் தெளிந்து
4.பிருகிருதியின் சூட்சுமத் தன்மைகள் தன்னில் கலந்தே – “தானும் அதுவாகி”
5.சிவமென்று அழைக்கப் பெற்றிட சுட்டும் அறிவும் தன்னுள் தெளிந்த “நான்” என்னும் நிலை தெளிவுபடுத்தவே
6.சுட்டு விரலும் கட்டை விரலும் இணைந்து… அந்தப் பொருளை முத்திரையாக… சிவ ஜீவ ஐக்கியமாக மறைபொருள் காட்டுகின்றனர்.

என் செருக்கு நீங்கிடப் பெற்றேன்…! என்று உரைத்தாள் அந்த மடந்தை (விசாலவதி).

“புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி

“புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி

 

அருந்துகின்ற நன்னீர் உடைய அழகிய ஒரு பொய்கை உள்ளது. அருமருந்து போல் தித்திக்கின்ற சிறப்புடைய அந்தக் குளத்தின் நீரை… அந்நீரின் தூய்மை கெடாத வண்ணம் பாதுகாத்தலே சிறப்பாகும்.

அந்த நன்னீர் பொய்கையைக் கண்டவுடன் அந்த நீரில் நமது ஆடைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறப்புடையது என்ற எண்ணம் கொண்டிட்டால்… ஆடை தூய்மை பெறும்.
1.ஆனால் குளத்தின் நீர் தன்மை மாறு கொண்டுவிடும்.
2.அதன் தூய்மை கெட்டு அருமருந்தை விருந்தாக்கிடும் செயலும் அற்றுப்போகும்.

நீண்ட நெடும் அறிவின் தர்க்கத்திற்கே… “தர்க்கம் என்பது வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்ற நல்ல வாய்ப்பு…” என்றால் மிகையன்று.

சிறப்புடைய ஓர் காலகட்டத்தின் மன அசைவு நிலை… பாடத்தின் தன்மை கருத்தோவியமாக விளங்குதலினால்… காட்சிப்புலன் உலகோதய நடைமுறை ஆத்ம ஞானம் கூட்டிடும் சிறப்பு என்று சுருங்கக் கூறினாலும்… விளங்கிக் கொள்கின்ற தன்மையாக அதன் தொடரை இதில் உரைப்போம்.

நன்னீர் பொய்கை என்று உரைத்திட வந்ததே…
1.உயிராத்மா வலு வேண்டி உயர் ஞான முகிழ்விப்பில்
2.தன் உயிராத்மா சக்தியின் முலாமை வளர்த்துக் கொண்டிட வேண்டும் என்ற உத்வேக உந்துதல் தான்.

அந்த முயற்சியின் வித்து… அஷ்ட பேதங்கள் கூட்டிடும் “சிருஷ்டியின் உதயத்திலும்” அதே செயல் தன்மை “உயர் ஞான வளர்ப்பிலும்” உண்டு.

நெருப்பாகவும் நீராகவும் காற்றாகவும் நிலமாகவும் ஆகாயமாகவும் அமில குணத்தன்மைகளாகப் பால்வெளியில் படர்ந்து விளங்கிட்ட சக்தியின் சக்தியையே பஞ்சபூதங்களாகக் காட்டிட்ட அத்தன்மைகள்…
1.ஒன்று கலந்த உயிரணுவாக பரிணமித்திடச் செய்வது “அகங்காரம்” என்ற பேதம்.
2.இந்நிலையின் கூட்டுச் சுழல் தன்மையால் மனம் “எண்ணம்” என்ற பேதத்தைக் காட்டுகின்றது.
3.இதனினும் சூட்சும பேதமே “அறிவேனும் புத்தி”
4.ஆக ஓர் சிருஷ்டியின் அஷ்ட பேத குணங்களின் சங்கமத்தின் மூலம் தான் ஆத்ம நிலை ஐக்கிய ஜீவன் பெறுகின்றது.

இத்தன்மைகளின் மூலத்தையே பிரகிருதி (இயற்கையின் நியதி) என்பார் வியாச பகவான்.

“எத்தனை பேதங்கள் ஒன்றுபட்டு” அற்புதமான இந்த மனிதச் சரீரம் வாய்க்கப் பெறுகின்றது…? காலத்தின் தன்மையைத் தவறவிட்டால் அது தகுமா…?

இயற்கையின் சிருஷ்டியே பேதங்களாகப் பாகுபடுத்திக் காட்டிட வீரியத் தன்மைகள் கிடைத்தற்கரிய பாக்கியம் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் சக்தி பெற்றிடும் வழி அறிந்தும்…
1.பஞ்சபூதங்கள் எனும் பரந்த பேரருள் செல்வத்தை மனிதன் தேடியே அலைந்து
2.அதைக் கூவி அழைத்தாலும் அது பருப்பொருளாகக் (கண்ணுக்குப் புலப்பட்டதாகக் கையில்) கிடைக்குமா…!

பஞ்சபூதங்களை இவனில் ஐக்கியப்படுத்திவிட்டு… ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்றே பின்னிப் பிணைந்திட்டு… சுவாசத்தின் தன்மையாகச் சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள சக்தியைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டு வளர்வதில்… “தான் எத்தகைய பேதமும் உரைத்திட முடிந்திடாது…”

மகா ஞானியாக இருந்தாலும் இச்சுவாச அலை ஈர்ப்பில்… தன் ஆத்ம சக்தியைப் “பிறரைப் போற்றி அடிமை கொண்டிடும் பொழுது… பஞ்சபூதங்களே பேதங்கள் காட்டும்…”

இனி உயர் ஞான வளர்ப்பில் சிந்திக்கலுறும் மனித ஜீவன்… அஷ்ட பேதங்களை ஒன்றுபடுத்திடும் உயர்வான ஜெப அலையை ஈர்த்திடும் பொழுது… சரீரம் கொண்டிட்ட உணர்வுகள் பஞ்சேந்திரியங்களாகச் செயல்படும் காலத்தில்… அதி நுட்ப உணர்வுகள் கிளைத்தெழும் தன்மையை வளர்த்துவிடும் “காந்தப்புலம்…”
1.இங்கு தான் மனத்தின் பேதம்
2.புத்தி எனும் அறிவின் பேதத்தை நாடுகின்றதா…?

அன்று பஞ்சேந்திரியங்கள் கட்டவிழ்த்து ஓடும் ஓர் பிடிப்பின் தன்மைக்கு… அறிவின் ஆற்றலையே உண்டுவிடும் ஈர்ப்பில் அது செயல் கொள்கின்றதா…? என்ற வினாவிற்குப் “புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி.

பரிவு எனும் பேதம் கொண்டது நன்னீர் பொய்கை. ஆடை என்பது உலகோதயப் பிடிப்பு எனும் அதி ஆசை நிலை.

அந்த ஜெபநீரைப் பெற்றிடவே… பேரருள் செல்வமாக விளங்கிடும் அந்தப் பேரானந்தப் பெருநிலையை… அறிவு என்னும் தீட்சண்யம் கொண்டு விளங்கிச் சுடர்ந்திடும் அத்தன்மையை… மனிதன் உலகோதயப் பிடிப்பில் செயல் கொண்டு வாழ்ந்திடும் செயலின் நிலையே – நன்னீர் பொய்கையும்… அதிலே ஆடை சுத்தி செயல் தன்மையும்…!

தனக்குள் கட்டுக்குள் அடங்கி நிற்கின்ற பேத குணத்தன்மைகள் அது கட்டவிழ்ந்து ஓடும் செயல் நிகழ்வு புலன்கள் காத்திடாத் தன்மையாக உள்ளதே மௌடீக (மூடத்தனம்) நிலை.

கற்பு என்றிட்டால் சிற்றின்ப நிலை அடக்கும் தன்மையையே இன்றைய மனித மனம் உரைத்திடும். அது அல்ல…!

பஞ்சபூதங்கள் தன்னுள் செயல் கொண்டு… பஞ்சேந்திரியங்களான…
1.மனம் புத்தி அகங்காரம் என்ற சூட்சுமத் தன்மைகளைத் தன்னுள் தெளிவுபடுத்திக் கொண்டு
2.இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனுக்கு பேரின்ப நாட்டமன்றோ சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கிடும்.

இதையே கற்பு என்பர் மகரிஷிகள்.