பகலிற்கு மேல் “இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது” என்பதனை உணர்ந்திருக்கின்றோமா…?

பகலிற்கு மேல் “இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது” என்பதனை உணர்ந்திருக்கின்றோமா…?

 

நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம்தான் இந்நிலையில் இருந்து நம் எண்ணத்தை அவ் ஓ…ம் என்ற ஜெபத்துடனே சுழல விட்டு நம் ஆத்மாவையே அவ் ஓ…ம் என்ற ஜெபத்துடன் சுழல விட வேண்டும்.

காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல…
1.பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்
2.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
3.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்ணத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி
6.அதன் எண்ணக் கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில்தான் நமக்கு ஏற்படும் கனவுகளில்
7.நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல் நிலைகள் எல்லாம் நாம் நம் கனவில் காணுகின்றோம்.

உடலை விட்ட ஆத்மாக்களுக்குத் தான் உணவுமில்லை… உறக்கமும் இல்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில் அதனுடைய எண்ண நிலைக்கேற்ப ஆத்மாக்களை இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து நம் எண்ணத்தைத் தூண்டுகிறது.

இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு நம் நினைவில் வருவதை வைத்து அதே எண்ண ஓட்டத்தில்
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே… கனவு பலித்திடும்…! என்று செப்புகின்றனரே என்ற எண்ணத்தில் மோதவிட்டு
2.அதே நினைவுத் தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து
3.அதன் தொடர்ச்சியில் நம் செயல்நிலை இழுக்கப்படுகின்றது.

நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்நிலையே. கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர்பு கொள்கின்றன.
1.பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை
2.பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது என்பதனை உணர்ந்தீரா…?

நாம் உறங்குவதற்கு முன் ஒரு நிமிடம் நம்மையே அஜ்ஜெபமுடன் கலக்கும் நிலைப்படுத்தி
1.நம் தாய் தந்தையரை வணங்கி நம் இஷ்ட தெய்வமான எத்தெய்வமாய் இருந்தாலும் சரி
2.அவ் ஓம் என்ற நாதத்துடன் ஓம் ஈஸ்வரா ஓம் இயேசுவே ஓம் முகமது நபியே என்று ஒரே எண்ணத்தில்
3.அவரவர்கள் பக்தி கொண்டு பூஜிக்கும் அவ்வாண்டவனின் ஜெபத்தையே உறங்கும் முன் ஜெபித்துக் கொண்டே உறங்கிடல் வேண்டும்.

அப்படிப்பட்ட உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ் ஓ…ம் என்ற ஆண்டவனின் ஜெபமே சுழன்று கொண்டே இருக்கும்.
1.அந்நிலையில் நம் எண்ணமும்… நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும்… அதன் தொடரில் நாம் காணும் கற்பனை எண்ணங்களும்…
2.இஜ் ஜெப நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதும் இல்லை… பல கனவுகள் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.

நம் உயிராத்மாவும் நாம் உறங்கும் நிலையிலும் அமைதி கொண்டு “நம்மைக் காக்கும் இவ்வெண்ணத்தினால்தான்” ஒவ்வோர் உயிராத்மாவின் செயல் நிலை செயல்படுகின்றது.

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்

 

காட்சி: பாட்டிலில் புனல் வைத்து திரவத்தை ஊற்றும் நிலை காட்டல்.

1.முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது.
2.“எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…”

குப்பியில் புனல் வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டாய். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது. புனல் இல்லாவிட்டால் எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும் அத்திரவம் சிந்தி விடுகின்றது.

இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.
1.புனலைப்போல். நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம்
2.இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.

இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமிலத்தைத் தான் ஈர்க்கும்.

மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச்சத்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில் தான் அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும்… செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.

இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில் தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.

இம்மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால்
1.அவ்வெண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.அவ்வெண்ண சக்தியின் தொடர்நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்
3.எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தின் அலையுடன்
4.நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.

நம் விழியை மூடிக்கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து நமக்கு எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே நாம் காணலாம்.

இக்காற்றில் உள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி வருகிறது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.

இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல் எம் மண்டலத்தில் இருந்தாலும்… “நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக்காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும்… பல பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தியும்… பிற கருவியின் உதவி கொண்டு அங்குள்ள நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.

ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்புச் சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.

1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்… அச் சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
2.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.

இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால் தான் அந்நிலை பெறல் முடியும்.

சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு. இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.

இம் மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் “இச்சக்தி நிலையுண்டு” என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்காகச் செப்பவில்லை.

இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத் தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.

இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.

1.பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள்
2.பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளை எல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயே தான் வாழ்ந்தார்கள்.

இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்.
1.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றி
2.நமக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்தென்ன பயன்..?

ஒரு நிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா

ஒரு நிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா

 

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம். எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.

உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும்.
1.அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது
2.எல்லா உயிரணுக்களும் ஒருநிலைப்பட்டுத் “தியானத்தில் உள்ள நிலையில்” இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.

அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டுவிடுகின்றது. ஒரு நிலைகொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை, அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எவ் அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.

அவ்வுடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்.. அமரலாம்.. உறங்கலாம், நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம். அவ்வுடலில் பின்னப்படாவண்ணம் எச்செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.

இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.அவ்வுயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.அவ்வுயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது.
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான்… நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.

எம் மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும். நம்மை எதிர்நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.

தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின் இல்லத்தையும்… அவர்களின் உடலையும்… அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும்… எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய்ச் செயல் கொண்டிடும்.

எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால் நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.

அன்பு தியானத்தை ஒரு நிலையுடன் வழி பெற்று இன்றைய காலநிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ் உலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்தவும் ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி இன்றைய அரசியலும் சரி ஆலயங்களும் சரி… பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது.

இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில்… இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன்… அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவைச் செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி… இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது அவ்வாத்மா.

தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த‌ மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.

இன்னும் நமது நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி…
1.அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து
2.“உண்மை வழி” என்ற போர்வையில் வாழுகின்றனர்.

இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலை தொட்டே இவ் ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டுதான் பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து… ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டையிட்டுப் போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.

அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு… வழி வழியாய் எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.

எவ்வுயிரணுவும் தான் அழிவதில்லையே..! இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலை கொண்ட ஜெப சக்தியில் சலிப்பு, கோபம், குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
2.நமது ஆத்மாவை ஒருநிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா.

தியானமும் ஞானமும் நாம் பெறுவது “நமது ஆத்மாவிற்குத்தான்…”

தியானமும் ஞானமும் நாம் பெறுவது “நமது ஆத்மாவிற்குத்தான்…”

 

இவ்வுலகமே வேடிக்கையான உலகம்தான். உலகம் என்பது இவ்வுலகின் ஜீவ ஆத்மாக்கள் தான். இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை உணர்த்திட முடியும்.

சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று மண்டலம்) அம் மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.

நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டுள்ள அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் அதன் அமிலக் காற்று மண்டலமுண்டு.

நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொண்டுள்ள கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமும் உண்டு. அனைத்திற்கும் பொதுவான சூனிய மண்டலம் என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று… அதன் தன்மை வேறு.

மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு. இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப்பொருள் வளர அதற்கு மூலப்பொருளாய் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப்பொருள்கள் வளர முடியும்.

இவ் இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் சிங்கத்திற்கும், நாய், நரி, பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.

இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப் பொருளையே செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையில் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின் சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன் ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியிலிருந்து எடுக்காமலும் பணம் தந்து வாங்காமலும் செய்விக்க முடியும்.

தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள் இப்பேராசையில் சிக்கிடாமல் தன் ஆத்மாவையே தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.
1.நம்முள்ளையே அனைத்துப் புதையலும் உள்ளன.
2.அழியாச் செல்வ புதையல் இச்சக்தியை உணர்ந்து நம் சக்தியை வளர விடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா.

தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ நிலைப்படுத்தி செயல் கொண்டு “தியானமும், ஞானமும் நாம் பெறுவது நமது ஆத்மாவிற்குத்தான்…”

1.நம் எண்ணம் செயல் எல்லாமே நமக்குச் சாதகமாக
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.
3.நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம்
4.மற்றவர்களுக்கு அந்நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந் ‘நான்’ என்ற நிலை வந்து விடுகிறது.

நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம் என்ற நிலையில் நாம் இருந்தாலும்
1.நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன்
2.நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.

துருவ தியானம்

துருவ தியானம்

 

தியானம் இருப்பவர் அனைவரும் காலையில் நான்கிலிருந்து ஆறரைக்குள் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோம் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள ஜீவ அணுக்களில் அதைப் பெறச் செய்யும் போது… ஏற்கனவே நமக்குள் சங்கடமான சலிப்பான வெறுப்பான வேதனையான பகைமையான எத்தனையோ வகையான கொடிய நோய்களை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் “நம் சுவாசத்தின் வழி உள்ளே செல்லாதபடி” அந்தத் தீமையான உணர்வுகளை தடுத்துக் கொள்ள முடிகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இவ்வாறு வலுப்படுத்தும் போது
1.காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் வெளிப்படும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகள் ஒடுங்கி சூரியனின் ஈர்ப்பு வட்டதிற்குள் சென்றுவிடும்.
3.சூரியன் அதைக் கவர்ந்து தன் அருகில் கொண்டு சென்று அந்தத் தீமையான உணர்வுகளை அங்கே கருக்கி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு நம் மூதாதையர்களான முன்னோர்களின் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்தால்… உடலில் பெற்ற நஞ்சால் ஏற்பட்ட நோயை உருவாக்கும் நிலைகளை அங்கே கரைக்கச் செய்து விடுகின்றது.

உயிருடன் ஒன்றிய நல்ல உணர்வுகளை துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடையச் செய்கின்றது.

அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற உணவினை அடிக்கடி எண்ணினோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்
2.சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும் நம் உடலில் அவை எளிதில் பெறப்பட்டு
3.பரம்பரை நோய் பரம்பரைக் குணம் இது போன்ற தீமைகள் வராது தடுக்க முடிகின்றது.

அருள் மகரிஷிகள் உணர்வினை நமக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடையும் முழுமை அடைய இது உதவும்.

ஆகவே ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தை அனுதினமும் செயல்படுத்துங்கள். இந்த வாழ்க்கையில் பாக்கி எந்த நேரம் வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் நம் உடலில் இரத்தத்தில் கலக்கச் செய்து தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ சங்கடமோ கோபமோ வேதனையோ, பயமோ இது போன்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கி நம் ஆன்மாவை வலுப்படுத்தி
1.பயத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் போக்கி சிந்தித்துச் செயல்படும் மன வலிமை பெற்று
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளலாம்.
3.மன பலத்துடன் வாழலாம் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்.

இவ்வாறு செய்து வந்தால் தொழிலையும் சீராகப் பார்க்க முடியும் உடலையும் குடும்பத்தையும் பண்புடன் பார்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் நிம்மதியும் இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலையும் இன்னொரு உடல் பெறாத நிலையும் அடைய முடியும்.

நம் உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் சரியான முறை

நம் உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் சரியான முறை

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அதனின்றி வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அதை ஈர்க்கும் சக்தி பெறும் பொழுது “கருமணிகளில் கனமான உணர்வுகள்” வரும்.

இப்பொழுது உங்களுக்குள் புருவ மத்தியில் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும்
1.“உயிரை எண்ணி” அங்கே கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்… கண்களை மூடுங்கள்.
2.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் பொழுது
1.உயிரின் இயக்கம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெறும் போது உங்களில் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் புருவ மத்தியில் மோதும் பொழுது உணர்ச்சிகள் அழுத்தமும் ஒளிக் கற்றைகளும் தெரிய வரும் “வெளிச்சமாக…”

இவ்வாறு ஏங்கித் தியானித்தால் நம் உடலில் தீமை விளைவிக்கும் அணுக்களுக்குத் தீய உணர்வுகள் உள் புகாது தடைப்படுத்துகின்றோம். உடலுக்குள் தீய உணர்வுகள் சென்று தீய அணுக்களாக வளராது தடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது கண்களால் இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.இரத்தங்களில் உள்ள கருமுட்டைகளோ தீய அணுக்களோ எது இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது “நல்ல அணுக்களாக” மாறும் சக்தி பெறுகின்றது நம் இரத்தத்தில்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவரும்படி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெறும் பொழுது உங்கள் உடல் முழுவதற்கும் “ஒரு புது நல்ல உணர்ச்சிகள் ஏற்படும்… இதை நீங்கள் உணரலாம்…”
1.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களில்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் இப்பொழுது உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்

இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரத்தத்தின் வழி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில்… படிப்படியாக எல்லா உறுப்புகளிலும் தசை மண்டலம் தோல் மண்டலம் வரை பெறச் செய்யும்போது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான சக்தி காற்று மண்டலத்தில் படர்ந்துள்ளதைக் கவர்ந்து… “நம் ஆன்மா வலுப்பெறுவதற்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறுவதற்கும்” இது ஏதுவாக இருக்கும்.

காலையில் ஒரு ஆறு மணிக்குள் “ஒரு அரை மணி நேரமாவது” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலில் உள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியைக் காலையில் எடுத்துப் பழகுங்கள்.
1.“அந்த வலுவின் துணை கொண்டு” அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் போக்கிக் கொள்ள முடியும்
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றிக் கொள்ள முடியும்.

பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

“ஞானிகள் காட்டிய தத்துவப்படி” அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்

“ஞானிகள் காட்டிய தத்துவப்படி” அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்து அதைக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிப் பழகுதல் வேண்டும். இது மனிதன் ஒருவனால் தான் முடியும்.
1.அதிகாலையில் நாம் படுக்கையிலிருந்து அதை எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.குளித்துவிட்டு நான் பூஜை அறையில் போய் உட்கார்ந்து என்னமோ எடுக்கப் போகிறேன் என்று எல்லாம் நினைக்க வேண்டியது இல்லை.
3.கண் விழித்தவுடனே தியானத்தைச் செய்யுங்கள்.

முடிந்த பிற்பாடு… அப்புறம் வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் பூஜை அறையில் உட்கார்ந்து பழகுங்கள். அங்கே நல்ல நல்ல படங்களை வைத்திருப்போம். அந்தக் குணத்தின் சிறப்புகளை எண்ணிப் பாருங்கள்.

1.இலட்சுமி என்றால் எல்லாவற்றையும் வளர்க்கக்கூடிய நிலைகள்
2.காளி என்றால் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றது
3.சரஸ்வதி என்றால் சர்வ ஞானத்தையும் பெருக்கக்கூடியது,
4.முருகன் என்றால் தீமையை அகற்றி மெய்ப்பொருளை காணும் வல்லமை பெற்றது.

இந்த மாதிரி நற்குணங்களை எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஆனால் பூஜை செய்து சூட தீப ஆராதனை எல்லாம் காட்டிவிட்டு… நான் உனக்குத் தினமும் சூட தீபாராதனை காட்டுகின்றேன்… என்னை ஏன் நீ இப்படி சோதிக்கின்றாய்…? என்று உங்கள் கஷ்டத்தை எல்லாம் சொன்னால் எது உருவாகும்…?

சாமி படங்கள் எதற்காக வீட்டில் வைத்திருக்கின்றோம்…?
1.அந்த தெய்வ குணங்களின் உணர்வை நாம் நுகர்வதற்குத் தான்.
2.அங்கு போய் சூட தீப ஆராதனையைக் காட்டி விட்டு இப்படி எல்லாம் இருக்கின்றது என்று வேதனைப்படுவதற்கல்ல.

அதே சமயத்தில் சிறு குறைகள் வந்துவிட்டால் போதும் கர்ப்பிணிகளுக்கு. அந்த படத்தை பார்த்து இதே போல் அரும்பெரும் சக்தி என் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பதற்கு மாறாக… நான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து என் குழந்தை என்னை இப்படிப் பேசுகின்றான்… எங்கள் மாமியார் இப்படி பேசுகின்றார்… என் கணவர் இப்படி பேசுகின்றார்… இப்படி எல்லாம் தொல்லையாக இருக்கின்றதே…! என்று அழுது கொண்டு இருப்பார்கள் படத்தைப் பார்த்து.

அப்பொழுது அந்த கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு எப்படி இருக்கும்…? படம் எதற்காக வேண்டி வைக்கின்றீர்கள்…?

ஆக மறைமுகமாக இயக்கும் குணங்களின் சிறப்புகளைக் காவியமாகப் படைத்து சரஸ்வதியின் நிலை இப்படி… இலட்சுமியின் நிலை இப்படி… முருகனின் நிலை இப்படி… கணபதியின் நிலை இப்படி… சிவனின் நிலை இப்படி…! என்று கதைகளாக எழுதி வைத்துள்ளார்கள்.

அதையெல்லாம் படித்துவிட்டு நீங்கள் அங்கே போய் அழுது வரம் கேட்டால் என்ன செய்யும்…?
1.அழுகும் உணர்வே இங்கே வரும்…
2.எல்லோரையும் அழுக வைத்துக் கொண்டுதான் இருப்பீர்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உயிர் உருவாக்கும். ஆகவே நாம் எதை செய்ய வேண்டும்…?

நமது ஞானிகள் கொடுத்த தத்துவத்தின் முறைப்படி நாம் நுகர்ந்தால் அத்தகைய உணர்வின் அணுக்களாகி நமக்குள் தெளிவான நிலையும் அடுத்து… பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

இந்த நம்பிக்கைகள் வரவேண்டும்.

இன்றைய பழக்கத்தில் நாம் எதற்கெடுத்தாலும் சாமியாரைப் பார்க்க ஓடுகின்றோம், ஜோசியம் பார்க்க ஓடுகின்றோம்… ஜாதகத்தைப் பார்க்க ஓடுகின்றோம்.

ஜாதகமும் ஜோசியமும் மனிதருக்கு அல்ல.

ஆகவே
1.மதி கொண்டு விதியை மாற்றி அமைக்க வேண்டும்
2.நாம் வேதனை வேதனை என்று பார்த்துக் கொண்டு அதை விதியாக மாற்றிடாதபடி,…
3.அருள் ஞானியின் உணர்வைக் கொண்டு அந்த மதி கொண்டு விதியை மாற்றி அமைக்கலாம்.

எல்லோரும் அருள் ஞானம் பெற்று “ஒற்றுமையுடன் வாழ்வார்கள்” என்ற உணர்வினை நாம் நமக்குள் வளர்த்துப் பழக வேண்டுமே தவிர தீமைகளை வளர்த்துவிடக் கூடாது.

தியானம் எடுக்க வேண்டிய முறை

தியானம் எடுக்க வேண்டிய முறை

 

நமது கண் ஒரு ஆண்டனா…! ஏரியல்…! அதைப் பயன்படுத்தித் தியானத்தில் வெளியிலிருந்து எடுக்கின்றோம்…
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது அந்த அலைகள்.
2.உங்களிடம் இந்நேரம் வரையிலும் அதைப் பதிவு செய்துள்ளேன் (ஞானகுரு)
3.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் பொழுது கண்ணான ஆண்டனா மூலமாக உங்கள் உடலுக்குள் அதைச் சேர்த்துப் பதிவாக்குகின்றது.

மீண்டும் இதே மாதிரி இந்த எண்ணத்தை எண்ணி வரப்படும் பொழுது அந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து நமது கண் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

இந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உமிழ் நீராக மாறி நம் உடலில் இந்தச் சத்தைச் சேர்க்க வேண்டும்.
1.இப்படி ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்குத்
2.தனித்து இயக்கச் செய்வது தான் இப்பொழுது நம்முடைய வழி.

ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் விஷத்தன்மையான உலகில் சீக்கிரம் இதைக் பெற்றுக் கொண்டீர்கள் என்றால்… உங்கள் உடலும் நன்றாக இருக்கும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்… உலகமும் நலம் பெறும்.

உலகமே என்றால்… அந்த உணர்வுகள் எல்லாமே நம் உடலுக்குள் அடங்கி இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை…!
1.அந்த உலக இயல்பு நமக்குள் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால்
2.அதை மாற்றுவதற்காக என் குருநாதர் எப்படி எனக்குச் செய்தாரோ அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.

உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை. நீங்கள் எல்லாம் தெளிவாக வேண்டும் என்று தான் கொண்டு வருகின்றோம். அதை நீங்கள் நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும்.

நல்ல வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி இனி பிறவியில்லா நிலையை அடையலாம்.

ஆனால் ஆசையை எங்கேயோ வைத்து என் தொழில் இப்படி இருக்க வேண்டும் நான் இப்படி இருக்க வேண்டும் நான் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் அந்த ஆசை எங்கேயோ போய்விடும்…!
1.அது ஒன்றிலேயே போகும்… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.
2.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆவாய் சொன்னது போன்று
3.எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதன் வழியில் “படுபாதாளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்…”

ஆகவே… நமது ஆசையினுடைய உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு சென்றால் அங்கே இணைந்து இருளை நீக்கி ஒளியின் உணர்வாக மாற்றிவிடும்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி வருகின்றேன்.

முதலில் உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள். அம்மா அப்பாவின் அருளால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் பெற வேண்டும்” என்று அடுத்து ஏங்குங்கள். (என் குரு தான் எனக்கு இந்த வழியைக் காட்டினார்).

அன்னை தந்தை என் உடலை உருவாக்கியது… எனக்கு ஒரு நல்ல வழியையும் உணர்த்தியது… அது குருவாகவும் இருக்கின்றது. அதனால் அவர்களை முதலில் எண்ண வேண்டும்.

அதே சமயத்தில்
1.இந்த மனித உடலுக்குப் பின் எங்கே என்ற நிலையில் இருளை நீக்கி ஒளி பெறும் உணர்வுகளை உபதேசித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
2.அந்த உணர்வை அவர் சொன்ன வழியில் நாம் பின்பற்றினோம்.
3.அவர் நுகரச் சொன்னதை நுகர்ந்தேன்… அந்த உணர்வு என் உடலில் என்ன செய்தது…? என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த உணர்வுகள் என்ன செய்யும்…? என்று உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமையை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பன்றி எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்ததோ அதைப் போல் சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானியின் உணர்வை நீங்கள் சுவாசித்து “உயிரை ஒளிமயமான நிலைகள் பெற முடியும்….”

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியும் நீங்கள் தெய்வீகப் பண்பும் தெய்வீக அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும். உங்கள் சொல்லிலே வைரத்தைப் போன்று ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ அதை போன்று மனது மங்காத நிலைகளை நாம் கொண்டு வர வேண்டும். மலர் எப்படி நன்றாக நறுமணங்கள் கொடுக்கின்றதோ உங்கள் சொல் மற்றவரை நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

அந்தச் சக்தி பெறுவதற்குத் தான் இப்பொழுது நாம் இதைச் செய்கின்றோம். ஆகையினால் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருங்கள். இது பேராசையும் கூட…!

1.உங்கள் உடலில் உள்ள எல்லாவற்றிற்கும் பெற வேண்டும்…
2.எல்லோருக்கும் இந்த மாதிரிச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பேராசையாக மாறுகின்றது.
3.நானும் பெறுகின்றேன்… நீங்களும் பெறுவீர்கள்.
4.எல்லோரும் பெற வேண்டும் என்ற பொழுது இந்தப் அந்தப் பேராசை நமக்குள் வளரும்.

ஆனால் நான் சொல்லிவிட்டு உங்களை ஏமாற்றினேன் என்றால் அது பேயாசை‌. சாமி பெயரைச் சொல்லி அடுத்தவரை ஏமாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் அது பேயாசை. அவர்களையும் கெடுத்து நீங்களும் கெட்டு மற்றவர் பெறக்கூடிய நல்ல உணர்வைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.

ஏனென்றால் ஒவ்வொரு உடலில் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு.

1.அந்தத் தீமைக்கு நாம் சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும்.
2.நாம் செல்லும் நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
3.முதலில் தெரியாது… பின் சிக்கலான பிற்பாடு… அந்த வேதனை வந்த பின் தான் நாம் உணர முடியும்.

இதைப் போன்ற தீமைகள் சந்தர்ப்பத்தால் எத்தனையோ வகையில் உருவாகின்றது. அதிலிருந்து நாம் தப்புவதற்காக வேண்டி மீண்டும் மீண்டும் இதை “எச்சரிக்கை செய்கின்றேன்…”

உங்கள் உணர்வனைத்தையும் உங்கள் அம்மா அப்பாவின் மேல் செலுத்துங்கள். அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.
1.குருதேவர் அறிந்துணர்ந்த சக்தியான துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று
2.உங்கள் ஏக்கத்தைக் கண்ணான கருமணியில் செலுத்துங்கள்.

ஏனென்றால் எதுவாக இருந்தாலும் கருமணியில் தான் படமாகின்றது. அந்த உணர்வு தான் நரம்பு வழி எல்லாவற்றிற்கும் உணர்த்துகின்றது.

ஆகையினால் இதைக் கருமணியில் எடுத்து கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றினால்
1.இந்த உணர்வுகள் உயிர் வழி இழுக்கச் செய்து அந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப முடியும்.
2.கொஞ்ச நாட்கள் இப்படிப் பழகி விட்டால் எல்லா அணுக்களுக்கும் இந்த வீரிய சக்தியை ஊட்டும் பொழுது நமக்குள் தீய சக்தி குறையும்.

மனித வாழ்க்கையில் தீயவர்களைப் பார்த்து அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல சக்திகள் தணிந்து தீய சக்தியே நமக்குள் விளைகின்றது.
1.அந்தத் தீய சக்தியை நீக்கி அதைக் குறைத்து நல்ல சக்தியை வளர்ப்பது தான் நம் தியானத்தின் நோக்கம்.
2.ஆக உங்களுடைய மனதை இதைப் போல் தெளிவாக்கித் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்.

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”

 

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் காலையில் எடுத்து
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்காகச் சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்… அதாவது பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும்.

ஒரு இன்ஜினை முதலில் ஓட்ட வேண்டும் என்றால் என்ன செய்கின்றார்கள் என்று தெரியுமா…?

மோட்டாரில் பேட்டரியை வைத்துள்ளார்கள் அதை வைத்து “எர்த்” ஐக் கொடுத்த உடனே ஓட ஆரம்பிகிறது. அடுத்து இஞ்சின் பெட்ரோலை எடுத்து ஆவியாக மாற்றித் தன்னிச்சையாக ஓடுகிறது.

இதே மாதிரிக் காலையில் எழுந்தவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் போட்டுச் சார்ஜ் செய்து
2.அந்த நல்ல உயர்ந்த உணர்வுகளை எடுத்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று யாம் (ஞானகுரு) சொன்ன பிரகாரம் நன்றாகச் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்‌.

அதற்குப் பின் இந்த்த் தினசரி வாழ்க்கை நடப்பில்… ஒருவன் அந்தத் தவறு செய்கின்றான் இந்தத் தவறு செய்கின்றான் என்று நாம் இதை எல்லாம் கேட்க நேர்கின்றது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவு மங்கிக் கொண்டே வருகின்றது.

அப்போது அதை மங்காமல் தடுப்பதற்கு…
1.காலையில் சார்ஜ் செய்த அந்தச் சக்தியின் துனை கொண்டு
2.அந்தந்த நிமிடத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று “சுருக்கமாக எண்ணி முடித்து விட்டால்” அப்படியே ஒடுங்கிவிடும்.
5.அவர்களுடைய கஷ்டமோ துன்பமோ தீமைகளோ நமக்குள் வராது.

அதற்குப் பின்… அவர்கள் சிந்தித்துச் செயல்படும் அந்த திறன் பெற வேண்டும்… அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… அவர்கள் நோய் நீங்க வேண்டும்… அவர்கள் பிள்ளை நல்லவனாக இருக்க வேண்டும் என்று “இதைத்தான்” நாம் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லிவிட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

நாம் சொல்கின்றோம் அவர்கள் காதுகளில் கேட்கின்றது. நாம் வெளியிட்ட உணர்வு அவர்கள் கண்கள் பதிவாக்குகின்றது. திருப்பி எண்ணினார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இல்லையென்றால்… அவர்கள் சொன்ன அந்தக் கஷ்டம் நமக்குள் வராமல் துடைத்துக் கொள்ளலாம்.

மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது நீங்கள் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்காமல்… கஷ்டத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னால்..
1.என்ன…! பெரிய இவர் மாதிரி நடக்கின்றார்…! என்று நம்மைக் குற்றமாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.
2.ரொம்ப அகராதி பிடித்தவர்… ஏதோ சாமியார் சொன்னாராம்… எதையும் கேட்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று
3.என்னையும் சேர்த்து இரண்டு திட்டு இழுத்து விட்டுப் போய் விடுவார்கள். இதுதான் நடக்கும்.

அதனால் அதைக் கேட்டு உணர்ந்து நல்ல வழி சொல்ல வேண்டும்…!

நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் தொழில் நன்றாக இருக்கும். மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள் ஒன்றுபட்டு வாழ்வீர்கள் என்று “நம் சொல்” அங்கே சென்று அவர்களை நல்லதாக்க வேண்டும்.

இப்படிச் செய்யவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வரும் பொழுது நம்மை இயக்கி விடுகின்றது. அது உமிழ் நீராக மாறுகின்றது நல்ல குணங்களை மயங்கச் செய்கின்றது… நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கின்றது.

ஆகவே அது ஒரு சந்தர்ப்பம்…!

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் தான் மனிதனாக வரும் வரையிலும் தீமையை நீக்கும் உணர்வு கொண்டு பன்றியாகப் பிறந்து சுத்தமாக தீமையை நீக்கி நல்ல அணுக்களை உருவாக்கி வந்தது.

பன்றியின் உடலில் இருந்து தான் நாம் மனித உடலைப் பெற்றோம்.

இந்த மனித உடலில் நாம் நஞ்சினை மலமாக மாற்றி நல்லதை உடலாக மாற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய அறிவாக நமது ஆறாவது அறிவு உள்ளது.

அதைச் சீராகப் பயன்படுத்தி… ஞானியர் கண்ட அந்த உண்மையை நமக்குள் செலுத்தி இந்த உடலுக்கு பின் நாம் பிறவில்லா நிலை அடைய வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் உடலுக்குள் செலுத்திப் பாதுகாக்க முடியும்.

எப்படித்தான் இருந்தாலும் தேடிய செல்வம் நம்முடன் வருகின்றதா…?

இத்தனை ஞானத்தை பேசும் ஞானிகள் உயிரோடு இருக்கின்றார்களா…?
1.ஆனால் உயிரோடு இருக்கின்றார்கள் “ஒளியின் உடலாக” இருக்கின்றார்கள்
2.அதாவது உயிரோடு சேர்ந்து ஒளியாக விண்ணிலே நிலையாக இருக்கின்றார்கள்.

இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால்… அடுத்து என்ன ஆகும்…?

இங்கே இப்பொழுது நமக்குள் எடுத்துக் கொண்ட வேதனை, வெறுப்பு, சங்கடம், எந்தெந்தக் குணங்களோ அதற்குத் தகுந்த மாதிரி நமது உயிர் உடலை அமைத்து மாற்றிக் கொள்கின்றது.

அப்புறம்… வலுவானது தாக்கும் போது அதைக் காட்டிலும் வலுவான உணர்வைக் கொண்டு தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகிப் பரிணாம வளர்ச்சி அடையும்.

இருந்தாலும்
1.இதற்கு முதலில் எப்படி நாம் வேதனைபட்டோமோ அந்த வேதனைப் பட்டு மனிதனாக மீண்டும் வருவதற்குக் காலம் இல்லை
2.அதற்குள் நம் பூமி எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது… அந்த அளவிற்குப் பூமியினுடைய மாற்றங்கள் போய்க் கொண்டுள்ளது.

“நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று தினமும் நாம் தியானிக்க வேண்டும்

“நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று தினமும் நாம் தியானிக்க வேண்டும்

 

இப்பொழுது நாம் “மழை இல்லை… மழை இல்லை…” என்று தான் சொல்லிப் பழகுகின்றோம். காரணம்… பூமிக்கு அடியில் உள்ள நீர் எல்லாம் போய்விட்டது. உறிஞ்சி எடுத்து எடுத்து எல்லாம் போய்விட்டது… “சில பகுதிகளில்…”

ஆயிரம் அடி ஆழத்திற்குப் போர் போட்டாலும் கூட தண்ணீர் காணாமல் போகின்றது. அந்த அளவிற்கு வந்து விட்டது.. இனி இருக்கக்கூடிய காலமோ அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாது போகலாம். அதுவும் இன்னும் கொஞ்சம் இரண்டு மூன்று மாதங்கள் போனால் எப்படியோ தெரியவில்லை.

மாடு கன்றுகளுக்குக் கூட சில இடங்களில் தண்ணீர் இல்லை. நமக்கே தண்ணீர் இல்லை. ஆகவே
1.எது எப்படி இருந்தாலும் மனதை நன்றாக வலுப்படுத்தித் தியானிப்போம்.
2.இதற்காக இரவு படுக்கும் பொழுது ஒரு பத்து நிமிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் நாடு செழிக்க வேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் கலந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் கண்ணின் நினைவை இதே மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் மேகங்கள் கூடி நல்ல மழை பெய்யக்கூடிய அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நினைவனைத்தும் அந்த மேகத்தில் செலுத்துங்கள்
2.இந்த மாதிரி செலுத்தும் பொழுது உங்கள் உடலில் “ஒரு குளிர்ந்த காற்று வரும்…” வந்தது என்றால் ரொம்ப நல்லது.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் நினைவெல்லாம் வான் வீதியில் செலுத்தி…
1.மேகக் கூட்டங்கள் கூட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
2.அதிலே அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இந்த மாதிரி நாம் வெளியிடக்கூடிய உணர்வுகள் எல்லாமே ரேடியோக்களில் எப்படி ஒலி அலைகளைப் பரப்புகின்றார்களோ இதே மாதிரி நாம் வெளியிடும் அலைகளைச் சூரியன் கவர்கின்றது.

இதே உணர்வு கூடக் கூட எதிலே செலுத்துகின்றோமோ… அதிலே பதிவாகிவிடும். மழை நீரில் இருந்து தான் எல்லாம் விளைகின்றது.
1.அதனால் இதை அங்கே தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
2.நாம் இந்த மூச்சுலைகளை விடப்படும் பொழுது நாம் எதை நினைத்தோமோ அந்த அலைகள் கூடி
3.மழை பெய்யும் பொழுது தாவர இனங்களில் பட்டு நல்ல தாவர இனங்களாக விளைகின்றது.

நம்முடைய உணர்வுகள் மோதி நாம் எந்த இடத்தில் எடுத்துச் செயல்படுத்துகின்றோமோ அங்கே மழை வரும். இதே மாதிரி உங்களுடைய மூச்சும் பேச்சும் நாடு செழிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

சும்மா இதைக் கேட்டு விட்டுப் போனது என்று இல்லாமல்… “இரவு படுக்கும் போது” ஒரு ஐந்து நிமிடமாவது இதே மாதிரி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வானில் பரவி மேகங்கள் கூட வேண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று எண்ணுங்கள்.

முந்திக் காலத்தில் எல்லாம் காடுகளுக்குச் செல்வார்கள். தண்ணீரைக் குட்த்தில் கொண்டு போய் ஊற்றிவிட்டுத் திரும்ப வரும்பொழுது மழையைக் கூட்டிக் கொண்டு வருவார்கள்.
1.முன்னாடி வந்து கொண்டிருப்பார்கள் மழை பெய்யும்.
2.இந்த மாதிரி ஒரு தெய்வீகப் பண்பு கொண்ட நமது நாடு தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,

அந்தக் காலம் எல்லாம் கடந்து போய்விட்டது.

வரக்கூடிய விஷக்காலங்களில் இனியாவது நாம்
1.நமது வீடு நன்றாக இருக்க நமது ஊர் நன்றாக இருக்க நமது உலகம் நன்றாக இருக்க
2.தினம்தோறும் சிறிது நேரம் பிராத்தனை செய்தால் மிகவும் நல்லது.

வீடும் ஊரும் உலகமும் எல்லாம் நமக்குள் இருக்கின்றது. எல்லாருடைய உணர்வும் நமக்குள் இருக்கின்றது. ஊரில் இருக்கக்கூடிய மக்களின் உணர்வு அனைத்தும் நம் உடலுக்குள் இருக்கின்றது… யாரும் பிரிந்து செல்லவில்லை.

ஆகவே எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக மழைக்காக தியானமிருங்கள். இந்த நாடு நலமாக இருக்க வேண்டும் என்று அ;லைகளைப் பாய்ச்சுங்கள். உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
1.அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
2.அகஸ்தியன் கண்ட வழியில் நாம் உலகைத் தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்வோம்
3.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்.