எண்ணத்தால் உருவாக்கப்பட்ட… “உடலுக்குள் நடக்கும் இராமாயணம்”

எண்ணத்தால் உருவாக்கப்பட்ட… “உடலுக்குள் நடக்கும் இராமாயணம்”

 

ஒவ்வொரு நாளும் எந்தெந்த குணங்களை நாம் நுகர்கின்றோமோ உயிருடன் ஒன்றிய சக்தியாக அது மாற்றுகின்றது
1.நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் அதற்குண்டான சக்தியாக மாற்றுகின்றது.
2.அப்படி இணைந்த நிலைகளில் அது அது… தன் தன் இனத்தைப் பெருக்கத்தான் முயற்சிக்கும்.

இராமனுடைய தாயோ சாந்தமானது. அவளுக்குப் பிறந்தது சாந்தமான குணம் கொண்ட இராமன். அவன் தான் இந்த சாம்ராஜ்யத்தை ஆளக்கூடியவன்… இந்த உடலை… அனைவரையும் அரவணைத்து தனக்குள் வாழும் நிலை பெற்றவன் என்ற உணர்வைத் தாய் எண்ணுகின்றது.

இராமனின் தாய் அப்படி எண்ணினாலும்
1.ஆசையால் நுகர்ந்த உணர்வு… அதே ஆசையின் நிலை கொண்டு…
2.அதாவது பரதனுடைய தாயோ தன் மகனுக்குத் தான் பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறது.

நல்லவனுக்கு… தலைமகனுக்கு… இந்த பட்டத்தைச் சூட்டினால் இந்த சாம்ராஜ்யத்திற்கு நன்றாக இருக்கும் என்ற ஆசை கொண்டு வளர்த்தாலும்
1.சகோதர ஒற்றுமை கொண்ட இவன் அண்ணனே சிறந்தவன் என்று பரதன் சொல்கின்றான்.
2.இதை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.
3.(அண்ணன் என்று செயலாற்றினாலும்… அவன் வரும் வரையிலும் அவன் காத்திருந்தான் என்று உணர்த்துகின்றார்கள்).

ஆகவே இராமனுடன் சேர்ந்தால் அவருடன் இணைந்து அவன் போக்குக்குச் சென்று விடுவான் என்று பரதனுடைய தாய் எண்ணுகின்றது. அப்போதுதான் இராமனைக் காட்டுக்கு அனுப்புகின்றது.

காட்டிற்குள் 12 வருடம் வனவாசம் சென்றால் “அந்த ஒரு மண்டலத்திற்குள்” பரதன் சிறப்பான நிலைகள் அடைந்து விடுவான். இவனின் ஆட்சி வந்தால் இராமன் வெறுத்து விடுவான் என்று சூழ்ச்சி செய்கின்றது.

இதற்கென்று சூதின் நிலைகளை உபதேசிக்கக் கூடியவர்களின் (கூனி) உணர்வுகளை அந்தத் தாய் செவிகளில் கேட்கின்றது.
1.ஒவ்வொரு உணர்ச்சியும் ஆசை என்ற நிலையில் வரும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி மாற்றுகின்றது…? என்பதை…
2.ஒருவர் வாழ்வதைப் பார்த்தபின் “அந்த வாழ்க்கை வாழ வேண்டும்…” என்று தன் மகனையே காக்கின்றது.

நமக்குள் எடுத்துக் கொண்ட குணம் எந்தச் சக்தியோ அந்தந்த இனத்தைப் பெருக்கத்தான் நம்முடைய குணங்கள் அது வரும் என்பதனைத் தெளிவாக்குகின்றனர்.

உயிர்… தான் நுகர்ந்ததை எல்லாம் தன் சக்தியாக ஆக்கினாலும் அது மீண்டும் தன் இனத்தையே பெருக்கும் என்ற நிலையை அங்கே தெளிவாகக் கூறுகின்றார் வான்மீகி.

நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் இயக்கும் சக்தியாக இருப்பினும் நுகர்ந்த உணர்வுகள் உடலாகிறது… அதன் வழி கொண்டு உருப்புகளாகின்றது அந்த உறுப்புகளின் வளர்ச்சியைக் கொண்டுதான் இராவணன்…! அதாவது
1.அவன் சகலகலா வல்லமை பெற்றவன் எல்லா இசைகளிலும் அவன் வல்லவன் சர்வ வல்லமை கொண்டவன் என்று
2.புழுவிலிருந்து மனிதன் வரையிலும் அதனுடைய உணர்வுக்கொப்ப இசைகள் வளர்ந்தது.
3.அதன் இசைகளுக்கொப்ப மனித உருவைக் கொடுத்தது
4.இசைகளிலே வல்லவன்… இவன் சிவனை வணங்குகின்றான்… “உடல் மீது பற்று கொள்கின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

ஆதே சமயத்தில்… தசரதன் என்றால் பத்தாவது நிலையை அடையக்கூடிய உயிர்… தான் பல உணர்வுகளை எடுத்தாலும் “சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது…” தன்னுடன் இணைத்துக் கொண்ட சக்தி (கைகேயி) தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று
1.நல்லவன் ஆட்சி புரிய வேண்டுமென்று ஆசை வளரப்படும் பொழுது
2.அப்பொழுது எந்த நிலை…? என்று காட்டுகின்றார்கள்.

சிவன் என்ற உடல் வரப்படும் பொழுது இராவணன் தன்னுடன் இணைந்து செயல்படும் சகோதரி சூர்ப்பணகை “மற்றொன்றின்” அழகைக் கண்டு இராமனை அவள் விரும்புகின்றார்.

இராமனைத் தனக்குள் கவர வேண்டும் என்று விரும்பினாலும்… அவன் மனைவி அழகாக இருக்கின்றாள்… அவளை ஒதுக்கினால் தானே இங்கே வருவான். ஆகவே அவனுடைய மனைவியை மற்றவருடன்கு சேர்த்து விட்டால் அதற்குண்டான நிலையில் தனக்குக் கிடைக்கும் என்று அவளுடைய அழகைப் பற்றி இராவணனிடம் வர்ணிக்கின்றாள்.

அவள் அழகாக இருந்ததால் “என்னை இராமன் அவமதித்தான்…” என்று குறை கூறி இந்த உணர்வை இராவணனிடம் ஊட்டுகின்றாள். இதை உற்றுப் பார்க்கும் போது இராவணன் சீதாவை அடைய ஆசைப்படுகின்றான்.

இந்த உணர்வு அவனுக்குள் வரும் பொழுது
1.அவன் சகல வல்லமை பெற்றிருந்தாலும் பத்தாவது நிலையை அடையும் இந்த உணர்வுகள்
2.அதனால் பகைமை உணர்வுகள் உடலுக்குள் எப்படித் தோற்றுவிக்கின்றது…? என்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் அவனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் தூங்குகின்றது… கும்பகர்ணன்…! என்றுமே அந்த நல்ல குணங்கள் தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அவன் மிக மிக நல்லவன்…! (தீமையின் நிலை அதிகரிக்கும் போது நல்ல குணங்கள் செயலிழந்திருப்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்).

தான் நுகரும் உணர்வுகளால் எது உருவாகின்றதோ…
1.வெறுக்கும் உணர்வுகளும் ஆசையின் உணர்வுகளும் வரப்படும் பொழுது
2.இவனுள் விளையும் உணர்வே இவனுக்கு எதிரியாகின்றது.
3.இராவணனை அவன் மகனே எதிர்க்கும் நிலை வருகின்றது.

இயற்கையின் சக்தி நல்லவன் என்று வரப்படும் பொழுது… தீமை என்ற உணர்வு வந்தால் அதை வெறுக்கும் தன்மை வருகின்றது.

இவனுக்குள் விஷத்தின் தன்மை கலந்தபின் இவனுடைய செயலாக்கங்கள் அனைத்தும் எந்த இசைகளைக் கண்டானோ… அனைத்தும் “சோக இசைகளாக மாறுகிறது…!”

தன் உணர்வின் தன்மை… இராமனுக்கு யார் காவலனாக தூதுவனாக இருக்கின்றார்…? ஆஞ்சநேயர்.
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… “இராமா லட்சுமணா” என்றாலும்
2.ஒரு சுவையின் சத்தை… தனக்குள் எதை எடுத்துக் கொள்கின்றதோ (சீதாலட்சுமி) அந்த குணத்தைக் காக்க
3.அந்த உணர்வின் தன்மை ஊடுருவி அதைக் காக்கும் செயலாகச் செயல்படும்.
4.இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் செயல்படுத்துவான்.

அதாவது வேதனை என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்… அந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலையாக… மற்றதை (நல்லதை) அது அடக்கும்.

எந்த உணர்வின் தன்மை…? அந்த எண்ணங்கள் தான்…!

ஆக எதைக் கவர்ந்ததோ அதன் உணர்வின் தன்மை “சீதா…” என்ற சுவையைக் காக்கும் உணர்ச்சிகளையே அங்கே தூண்டுகிறது. இதைக் காட்டுவதற்கு ஆஞ்சநேயர்… தாவிச் செல்லும் உணர்வுகள்…! என்று காட்டுகின்றார்கள்.
1.ஒரு உணர்வின் உணர்ச்சி எவ்வாறு செயல்படுகிறது…?
2.மற்றவர்களை அது எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையும்
3.எண்ணங்கள் எப்படி உணர்வுகள் ஆகின்றது…?
4.உணர்வுகள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது…?
5.உணர்வுகள் எப்படி உடலாகின்றது…?
6.உணர்வுகள் எப்படி அதனதன் உணர்ச்சியின் தன்மையைத் தூண்டுகிறது…? என்ற நிலையை
7.அன்று வான்மீகி மூடனாக இருந்தாலும் தெளிவாக உணர்த்துகின்றார்.

சித்தன் போக்கு சிவன் போக்கு

சித்தன் போக்கு சிவன் போக்கு

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

நஞ்சுக்குள் மூழ்கிடாது நாம் விழித்திருக்க வேண்டும்… நீலகண்டா…!

நஞ்சுக்குள் மூழ்கிடாது நாம் விழித்திருக்க வேண்டும்… நீலகண்டா…!

 

பிற மண்டலங்களிலிருந்து வருவதை… 27 நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களாக அமைத்திருப்பது போன்று
1.நம்முடைய எண்ணத்தால் அருள் ஞானிகள் உணர்வை நம் முன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.நமக்குள் தீமைகள் வராதபடி அந்தத் தீமைகளை விழுங்கி
3.தெளிந்த நிலையாக மாற்றி… ஒளியாக மாற்றுவதே உத்தராயணம்… பங்குனி உற்சவம்.
4.முருகனுக்கு உகந்த நாள் என்று அதைக் காட்டியிருப்பார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

ஞானிகள் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி விண்வெளியில் எவ்வாறு சுழன்று கொண்டுள்ளார்களோ அவர்களுடன் நாம் இணைய வேண்டும்… உத்தராயணம்.

ஆனால் அப்படி இணையவில்லை என்றால் தட்சிணாயணம். மனிதருக்கு மனிதர் சாபம் இடும் போது அதைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாப வினைகள் நமக்குள் சேர்ந்து தீயவினைகளாக மாறிவிடுகின்றது.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் அதை உற்றுப் பார்த்தால் தீய வினைகளாக நமக்குள் சேர்ந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்று ஒருவன் பாவம் செய்கின்றான் பாவம் விடுகின்றான் என்றால் அந்தப் பாவ வினைகள் நமக்குள் சேர்ந்து பாவம் செய்வோராக நாமும் மாறி விடுகின்றோம். அப்படி மாறி விட்டால்
1.தீமைகளையே (நஞ்சினை) உணவாக உட்கொண்டு மற்றதைக் கொன்று புசித்து ரசித்து வாழும் உயிரினங்களாக
2.“தட்சிணாயணம்” மீண்டும் திரும்பி கீழே வந்து விடுகின்றோம்.

அவ்வாறு ஆகாதபடி நாம் திரும்ப வேண்டும் அது தான் உத்தராயணம்…!

துருவப் பகுதியின் வழியாக விண்ணிலிருந்து வருவதை ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எவ்வாறு நிலை கொண்டு உள்ளானோ அதைப்போல நாமும் ஆக முடியும்.

நமது குருநாதர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை உங்களுக்குள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிவு செய்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து தீமைகளை அகற்றிடும் நிலையாக உங்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு விளையச் செய்து கொண்ட பின் உடலை விட்டு எப்போது அகன்றாலும்… என்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லலாம்.

ஆனால்
1.சாப வினைகளுக்குள்ளும் பாவ வினைகளிலும் சிக்கி விட்டால்
2.தட்சிணாயணம் தான்… மீண்டும் உடல் பெறும் நிலை தான்.

பரிணாம வளர்ச்சியில் மனித உடல் பெற்ற நிலையான மகா சிவன் ராத்திரி… சர்வத்தையும் அறிந்திடும் ஆற்றல் ஆறாவது அறிவு நமக்குள் இருக்கிறது என்றாலும் “சிவன் இராத்திரி நீ விழித்திரு…” என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

சிவனான இந்த உடலுக்குள் என்றும் விழித்திருக்க வேண்டும்… நஞ்சுக்குள் மூழ்கிடாது விழித்திருக்க வேண்டும்…
1.நீலகண்டா…! என்று சிவனின் தத்துவமாக நஞ்சினைத் தனக்குள் அடக்கி இருப்பது போன்று
2.நஞ்சு உள் செல்லாது என்றும் விழித்திருந்து… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை ஒடுக்கி
3.வைரம் எவ்வாறு ஒளி வீசுகிறதோ… பாம்பினம் தனக்குள் எடுத்த நஞ்சினை நாகரத்தினமாக ஒளிச் சுடராக எப்படி மாற்றுகின்றதோ…
4.அதைப் போன்று ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “நாம் மாற்றிடும் விழிப்பு நிலையைக் காட்டுவதற்காக”
5.மகா சிவன் ராத்திரி என்று “ஆறாவது அறிவு கொண்டு நாம் விண் செல்ல முடியும்” என்று ஞானிகள் இதை எல்லாம் நமக்குக் காட்டினார்கள்.

காவியங்களில் தெளிவாக இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது… இருந்தாலும் மகரிஷிகள் காட்டியது காலத்தால் மறைந்து விட்டது. ஆனால் குரு நமக்கு இன்று அதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

விஞ்ஞான உலகில் தன்னையே மறந்துவிடும் நிலை இருக்கும் பொழுது அதிலிருந்து மீண்டு சிந்திக்கும் ஆற்றல் பெற… மனிதன் என்ற முழுமை பெற… குருநாதர் நமக்கு வழி காட்டுகிறார்.

நாம் “சுத்த சைவமாக” இருக்க வேண்டும்…!

நாம் “சுத்த சைவமாக” இருக்க வேண்டும்…!

 

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை…!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

இராவணன் + ஈஸ்வரன்… “இராவணேஸ்வரன்” என்பதன் உட்பொருள்

இராவணன் + ஈஸ்வரன்… “இராவணேஸ்வரன்” என்பதன் உட்பொருள்

 

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது
1.உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தையும் காட்டி
2.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
3.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்று தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள் பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல…!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.
3.ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

காமாட்சி

காமாட்சி

 

காமத்தின் அடியாகப் பிறக்கும் “மோகம்…” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளை தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.

1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் தொட்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் வழியமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட
5.சபலம் (மோகம்) தானே தன் வழி செல்லா நிலையில் மறைந்து விடும்.

குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் சபலத்தின் வழியில் சிக்காதபடி பயிற்சி வழி முறைகளைக் காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குண செயல்பாட்டையும் போதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் காவியம் இராமாயணத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்…!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்…!” என்றும் காட்டுகிறார்கள்.

அதனின் உட் கருத்து
1.ரிஷித் தன்மை பெற வழி காட்டும் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி
2.ரிஷி பத்தினி சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.

விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.

ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்…” அதையே “காமாட்சி…” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமுமே.

ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்…?

அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.

அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைச் “சாப நீக்குப் படலம்…” என்று செயல்படுத்தி ரிஷி பத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.

கௌதம முனிவருக்குத் தன் நிலை உயர்த்த ரிஷி பத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனதால்
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்…! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!”

சபல குணம் என்று உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.

சபல குண வலையில் விழுந்ததால்… தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்… இந்திரனால்… “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்…” என்பது மோக குணத்தால் தான்…!

1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை…!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!

ரிஷி பத்தினி என்ற சிறப்பை
1.அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுது தான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்பதையும்
2.சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வான இயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி
3.உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.

இதே தொடர்பை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.

அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியூட்டித் தானும் அந்த முனிவனின் சக்தியுடன் ஒன்றுதல் என்பதே
1.பால்வெளி சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் தான் ரிஷி பத்தினிச் சக்தியாகக் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும் என்று காட்டுகின்றார்.

இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே… பலர் “சபல குணத்தை இந்திரன்…” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.

இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன…?

அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.ஜெபம் என்ற வழி முறையை… அந்த உயர்வைப் பெறும் வழியை…
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.

சைவ சித்தாந்தம்… வேதாந்தம்

சைவ சித்தாந்தம்… வேதாந்தம்

 

இயற்கையின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைச் சைவ சித்தாந்தங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஒவ்வொரு உணர்வும் அது இணைந்து கொண்ட பின்
1.உணர்ச்சியின் வேகங்கள் எவ்வாறு சூரியனால் மாற்றப்படுகின்றது…?
2.நுகர்ந்த உணர்வின் ஆற்றலை எவ்வாறு மாற்றுகின்றது…? என்ற நிலையை
3.தாவர இனச்சத்தைக் கவர்ந்த சூரியனின் காந்தப்புலன்கள் தாவர இனங்களுக்கு இரையானாலும்
4.அதே உணர்வுகளை உயிரணு நுகரப்படும் போது – “சைவ சித்தாந்தமாக இருந்து… வேதாந்தமாக” அது மாறுகின்றது.

உணர்வின் ஒலியின் தன்மை கொண்டு உணர்வின் ஒலிகளை எழுப்பி அந்த உணர்வுக்கொப்ப உடல் மாறி… சைவம் அசைவமாக எவ்வாறு மாறுகின்றது…? அசைவத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது உணர்வின் அணுக்கள் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்பதைச் சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.

“சைவ சித்தாந்தம்” – தாவர இனங்களில் மாற்றம்… செடி கொடிகள் அது உருமாறுவதும் அதனுடைய உணர்ச்சிகளைக் கூட்டுவது.

“வேதாந்தம்” – உயிர் அணுக்கள் உருவான பிற்பாடு அதனின் உணர்ச்சியின் தன்மை கொண்டு இயக்கச் சக்தி என்று “உடல் பெற்ற அசைவம்” என்ற நிலை தான்.

ஆனால் சைவ சித்தாந்தம் படித்தவர்கள் வேதாந்தத்தைக் கண்டபின் அவர்கள்ள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்வார்கள். நீ பெரிதா…? நான் பெரிதா…? நீ படித்தது இவ்வளவுதான்… நான் படித்தது இவ்வளவு…! என்று வாதித்துக் கொண்டு கற்றுக் கொண்ட உணர்வுகளை முழுமையைத் தெரிவதில்லை.

ஒருவருக்கொருவர் “நான் தெரிந்து கொண்டேன்… என்னால் அனைத்தும் முடியும்…!” என்று அகம் கொண்டு செயல்படுவார்கள்.

உதாரணமாக மிளகாயை எடுத்துக் கொண்டால் காற்றிலிருந்து காரத்தின் சத்தை எடுத்துத் தான் அந்த கார குணம் கொண்ட மிளகாயாக வளரும்.

இதைப் போன்று… “படித்துணர்ந்தவர்கள்” எதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டனரோ அதனின் இயக்கமாக… அதனின் நிலையிலேயே… மற்ற உண்மைகளை அறியாதபடி… எதன் வலிமை பெற்றார்களோ அதன் நிலைகளிலே சென்று அடைகின்றார்.

சைவ சித்தாந்தத்தின் உண்மை இன்று தலை கீழாக மாறிவிட்டது.

காரணம் அரசர்கள் போர் முறை கொண்டு வரப்படும் பொழுது இந்த உண்மையின் இயக்கங்களை அறியாது… காலத்தால் மாற்று அரசர்கள் வரும் பொழுது…
1.அன்று தத்துவஞானிகள் கொடுத்ததைத் தனக்குச் சொந்தம் என்று
2.தனக்குகந்த சட்டங்களாக இயற்றப்பட்டுக் காவியமாகப் படைக்கப்பட்டு
3.அதைத் தன் மக்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது “இதுவே அவர்களுக்குள் கடவுளாகிறது…”

கடவுளுக்கு இன்னென்ன சாங்கியங்களைச் செய்தால் போதும்… அதன் உணர்வின் செயல்கள் இப்படி இருக்கும்…! என்று இவ்வாறு அரசர்களால் உருமாற்றப்பட்டு “அசைவம்…” (என்றால் என்ன…?) என்ற நிலைகளை அறிய முடியாத நிலைகளாகக் காலத்தால் மறைந்து விட்டது.

இப்படி ஒவ்வொரு அரசனும் தான் கண்டறிந்தது மாற்று அரசர்கள் கண்டால் உண்மையின் இயக்கங்கள் அது போய்விடும்… மற்றவர்களுக்கு அது தெரியக் கூடாது என்று மறைத்து விட்டார்கள்.
1.அப்படி மறைக்கப்பட்ட உண்மைகளைத் தான் இன்று இதுவா… அதுவா…? என்று ஊசலாடிக் கொண்டு
2.கடவுளை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்…!

வேதாந்தங்கள் என்பது வேதங்களாக மாற்றப்பட்டு விட்டது தமிழ் மொழியின் இசை (ஒலி) வேதங்களில் உண்டு. சில ஒலிகள் அதனுடைய இசை தான் மாற்றப்பட்டுள்ளது.

தமிழில் இருந்து தான் வேதங்கள் உருவானதா…? வேதத்திலிருந்து தமிழ் உருவானதா…? என்றும் போர் முறை கொண்டு உண்மைகளை அலசி ஆராய்ந்து… தேடிக் கொண்டுள்ளோம்.

இதுதான் உண்மை… அது பொய்…! என்று போர் முறை கொண்டு மொழி அடிப்படையில் ஒருவருக்கொருவர் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளத்தான் முடிகின்றது.

உண்மையின் இயக்கங்களை நாம் அறிய முடியாதபடி
1.குறுகிய கால வாழ்க்கையில் நம்மை அறியாதபடி குறைகளை வளர்த்துக் கொள்வதும்
2.நிறைவு பெறும் நிலைகளை இழந்து நற்செயல்கள் இழக்கப்பட்டு
3.மனிதனல்லாத உருவை உருவாக்கும் உணர்வையே மனிதர்கள் இன்று வளர்த்திடும் நிலையாக வந்து விட்டது.

அறுபது வயதை “முதுமை” என்று ஏன் சொல்கிறோம்…?

அறுபது வயதை “முதுமை” என்று ஏன் சொல்கிறோம்…?

 

நமது உயிர் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை நுகர்ந்து உடல் பெறுகின்றது. அவ்வாறு உடல் பெற்ற நாள் தான் “சிவன்ராத்திரி…” உயிரோ ஈசனாகின்றது… உணர்வு இயக்கும் சக்தியாகின்றது நுகர்ந்த உணர்வு சத்தாக உயிருடன் ஒன்றப்படும்பொழுது உடலாகின்றது… சிவம் ஆகின்றது.

நமது உயிர் வான் வீதியில்…
1.அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் உயிராக உருப்பெற்ற நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்று
2.இந்த ஆறுபது ஆண்டுகளில் நமது உயிர் உருப்பெற்ற நாளாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

பொதுவாக உயிரணுக்கள் வான்வீதியில் உருப் பெற்ற நாளை நினைவுபடுத்தும் நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்பது. உயிரின் இயக்கச் சக்தியை ஈசன் (ஈஸ்வரன்) என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

சூரியனோ… மற்ற தாவர இனங்களின் சத்துக்களை எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

தாவர இனத்தில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் போடும்போது… நிலத்தின் ஈர்ப்புத் தன்மை கொண்டு தன் தாய்ச் செடி உணர்வின் சத்தை நுகர்ந்து அந்த இனத்தின் செடியாக அது உருப்பெறுகின்றது.

ஆனால் உயிரோ… எந்தச் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கியதோ இதற்குப் பெயர் “ஈசன்…” இந்த உணர்வின் சத்து நம் பூமிக்குள் வந்து இந்த உணர்வின் சத்து உயிருடன் ஒன்றி உடலாக்கப்படும் பொழுது “சிவம்…”
1.ஈசனான உயிர் இல்லை என்றால் உடலான சிவம் சவம் தான்.
2.ஆகவே “அவனின்றி அணுவும் அசையாது” என்று சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஈஸ்வர ஆண்டு என்று ஆரம்பித்து… இதனுடைய சுழற்சி அறுபது ஆண்டுகள் முடிவடையும் தருணம்… மீண்டும் ஈஸ்வர ஆண்டு என்று வரும்.

இது எல்லாம்… மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் அறுபது ஆண்டு நிறைவடையப்படும் பொழுது அந்த அறுபது ஆண்டுக்குள் பெற்ற சக்திகள் வேறு. அடுத்த அறுபது என்பது வேறு…!

அந்த அறுபதைக் கடந்து செல்லப்படும் பொழுது
1.மறுபடியும் பிரபஞ்சத்தில் சூரியனின் காந்தப் புலனறிவு மற்ற கோள்களின் திசை மாற்றங்கள் வரும்
2.இந்த அறுபது ஆண்டில் மற்ற கோள்கள் திசை மாறும் பொழுது நட்சத்திரங்களின் இயல்புகளும் மாறுகின்றது.

அவ்வாறு மாற்றி வரப்படும் பொழுது அறுபது வருடத்திற்குள் இருந்த நிலை வேறு… அதற்குப்பின் உருமாற்றங்கள் வேறு…!
1.முதுமை அடைகின்றது… உணர்வுகள் சோர்வடைகின்றது.
2.சோர்வின் பால் “மற்ற உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது” உணர்வின் தன்மை உடலைக் குறையச் செய்கின்றது.

அடுத்த அறுபதுக்குள் இந்த உடலில் விளைய வைத்த உணர்வினை இதே உயிர் இந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலாக உருமாற்றி அதனின் செயலாக்கத்திற்குக் கொண்டு வருகிறது.

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

 

அன்றைய காலங்களில் இஸ்ரேல் நாட்டில் கிழக்கே பார்த்து வணங்கும் நிலை தான் உண்டு… நமது நாட்டிலும் கிழக்கே பார்த்து வணங்கும் நிலைகள் உண்டு.

ஆனாலும் அன்று நபிகள் நாயகம் மேற்கே பிறைச் சந்திரனைப் பார்க்கின்றார். அது தேய்ந்து வளர்வதையும் பார்க்கின்றார்.

அதாவது சந்திரன் தேய்ந்த நிலைகள் கொண்டு அமாவாசைக்குப் பின் கண்ணுற்றுப் பார்க்கப்படும் போது
1.சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது படும்பொழுது எப்படி அது வளர்கின்றதோ
2.இதைப் போல மனிதனுடைய எண்ணத்தில் தீமைகள் அகற்றிடும் தன்மை வளர வேண்டும் என்று
3.பிறைச் சந்திரனைக் காட்டி… ஆரம்பத்தில் அது வளர்வது போன்று
4.ஒளி கண்டு இருள் மறைவது போன்று “மனிதன் தனக்குள் எவ்வாறு தெளிந்த நிலைகள் பெற வேண்டும்…?” என்று
5.உபதேசக் கருத்துக்களை அங்கே மதீனாவில் பரப்பினார்.

அதன் வழியில் அக்காலங்களில் கிழக்கே பார்த்து வணங்குவதற்குப் பதில் மேற்கே பார்த்து வணங்கும்படி செய்தார்.

ஆரம்பத்தில் மக்காவில் நடந்த அதர்மங்களையும் தெய்வீகப் போர்வையில் தவறான நிலைகள் பல செய்ததையும்… தடுக்கத் தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துப் போர் முரசு கொண்டு நபிகள் செயல்படுத்தினார்.

காரணம்… ரோமானியர்கள் (கவர்னரின்) ஆட்சிக்கு கீழ் இருந்தாலும் அங்கே தீமை கொண்ட கொள்ளையர்கள் பெரும் சொத்துகளைச் சேர்த்து… மற்றவர்களை அடக்கி ஆண்டு… ஆங்காங்கு இருக்கும் நிலைகள் கொண்டு போர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

1.சட்டங்கள் இருப்பினும் மதத்தின் கீழ் கடைபிடிப்பதில்லை. அந்த மதங்களின் மீது ஏதும் கை வைப்பதில்லை.
1.அவர்களுக்குக் கப்பம் கட்டுவதும் தன்னை எதிர்க்காத நிலைகள் இருந்தால் போதும் என்ற நிலைகள் இருந்ததனால்
2.இனப்போர்களும் மற்ற போர்களும் வந்தது.

இப்படி… மதத்தின் கீழ் தெய்வீகப் போர்வையில் அங்கே கொள்ளை அடிப்பதும் கொலைகள் செய்வதும் பல தவறுகள் செய்யும் அந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நபிகள் நாயகம் போர் செய்து அந்த மக்காவைக் கைப்பற்றினார்.

அவருக்குள் செயல்பட்ட மகானின் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு அங்கே மக்காவில் இருக்கும் நிலைகளைச் சீராக்கினார்.

அங்கே 4000 ஆண்டுகளுக்கு முன்…
1.போகரால் உருவாக்கப்பட்ட முருகனும்
2.மனித உணர்வின் நிலைகள்… பல குணங்களின் சிறப்பு கொண்ட விநாயகர் தத்துவமும் “சிலைகளாக” மக்காவில் உண்டு.
3.அதிலே இருக்கும் விநாயகர் சிலையைத் தான் இன்றைய நிலைகள் திருப்பி வைத்து (போகருடைய நிலைகள் கொண்டு) முத்தமிடுகின்றார்கள்.
4.அங்கே யானை மீது லிங்கமும் உண்டு.

இது குருநாதரால் காட்டப்பட்ட நிலைகள். ஏனென்றால் இந்த உலகில் நடக்கும் இரகசிய நிலைகளை குருநாதர் தெளிவாக்கினார்… உலக மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் என்ற நோக்கத்தில்…!

உணர்வின் எண்ணங்கள் கொண்டு உடல் எப்படி இயங்குகின்றது என்பதையும்… உயிரின் இயக்கங்களையும் உணர்வின் செயலாக்கங்களையும் இப்போது யாம் சொல்வது போன்று தான் அக்காலங்களில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதே சமயத்தில் மனிதனுக்கு மனிதன் எவ்வாறு உதவ வேண்டும்…? என்றும் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்… குடி போதையோ மற்ற தவறான நிலையில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

1.மனிதனை உருவாக்கிய உயிரைக் கடவுளாக மதித்து
2.உடலுக்குள் தீங்கு விளைவிக்காது காத்திட வேண்டும் என்று உணர்த்தினார்.

அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு தான் அங்கே மற்ற பழைய சிற்பங்களையும் சிலைகளையும் நீக்கிவிட்டு “உண்மையின் பொருளை மக்கள் பெற வேண்டும்” என்று செயல்படுத்தினார்.

தைப்பூசம்

தைப்பூசம்

 

தைப்பூசம் என்றால் முருகனுக்கு நன்னாள். அதாவது நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையெல்லாம் நமக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று உணர்த்தும் நாள் அது.

முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது “காவடிகளை” எடுத்து ஆடுகின்றோம் காவடியில் “மயில் தோகைகளை” வைத்துள்ளார்கள்… முருகனுக்கு உகந்தது அந்த மயில் என்று வைத்திருக்கின்றோம்.

அதனின் உட்பொருள் என்ன…?
1.மயில் தன்னுடைய வாழ்க்கையில் விஷ ஜந்துகளை உணவாக உட்கொண்டாலும் அது மகிழ்ச்சியாகத் தோகை விரித்து ஆடுகின்றது
2.அதே சமயம் அந்த நஞ்சினையும் உள் அடக்குகின்றது.

இதைப் போன்று தான் ஆறாவது அறிவு கொண்ட நாமும் நஞ்சினை அடக்கும் சக்தி பெற்றவர்கள்.

கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் அதை வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை நீக்குகின்றோம் தொக்கி உள்ள நஞ்சினை நீக்கப் புளி காரம் உப்பு இவைகளை வைத்து அடக்குகின்றோம்.

அதாவது
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு முதலில் கருணைக்கிழங்கில் நஞ்சு இருக்கிறது என்றும் அறிந்து கொள்கின்றோம்
2.அதை நீரிலே இட்டு வேக வைத்துக் கொதிகலனாக்குகிறோம்
3.அந்த நீரின் சத்து விஷமான கிழங்குக்குள் ஊடுருவி அதனுடன் இரண்டறக் கலந்து இருக்கும் விஷத்தன்மைகள் ஆவியாக மாற்றுகின்றது.
4.புளியை இணைத்தபின் தொக்கி உள்ள விஷத்தன்மையை அடக்குகின்றது.
5.மிளகாய் சீரகம் உப்பு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது சுவை மிக்கதாக உருவாகின்றது.

அதைத்தான் ச ர ஹ ண ப வா… குகா… என்று சரணம் அடையச் செய்யும் சக்தியாக மனித உடலான குகைக்குள் இருக்கின்றது. நாம் சுவையாக உணவை உட்கொண்டாலும் அதில் மறைந்திருக்கும் நஞ்சின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வினை உடலாக மாற்றுகின்றது.

இது தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா. உடலில் இருந்து வரக்கூடிய ஆறாவது அறிவை இப்படித் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

இந்த உடலான குகைக்குள் நின்று வருவதை அணைத்து தீமையான நிலைகளை நீக்கிவிட்டு சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக

இந்த உடலான குகைக்குள் நின்று… கந்தா வருவதனைத்தையும்… கடம்பா உருவாக்கி… கார்த்திகேயா…! நாம் அந்தக் கருணைக்கிழங்கு குழம்பைச் சுவையாக வைத்து எப்படி மகிழ்ச்சியாக உட்கொள்கின்றோமோ அதைப்போன்று தீமையான உணர்வுகளை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வுகளை உடலாக மாற்றுகின்றது.

இவ்வாறு நல்ல உடலாக மாற்றிய இந்த உணர்வின் சக்தியைத்தான் கார்த்திகேயா தெரிந்திடும் நிலை.

கருணைக்கிழங்கில் இருக்கும் நஞ்சினை அறிந்து… அந்த நஞ்சினை நீக்க அதை வேக வைத்து மற்ற நிலைகளை இணைத்துச் சுவையாக்குவது போன்று.. வாழ்க்கையிலும் அந்த நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
1.அது தான் முருகு மாற்றி அமைக்கும் சக்தி
2.முருகா அழகு படுத்தும் மகிழச் செய்யும் நிலையாக “மகிழ்வாகனா…” என்று
3.மயிலை வாகனமாக வைத்து அதன் கீழ் பாம்பினை வைத்துக் காட்டி உள்ளார்கள்.

இதை நினைவுபடுத்தும் நாளாகத் தைப்பூசம் அன்று காவடி எடுத்து “மயில் தோகைகளை அதில் வைத்து” ஆனந்தக் கூத்தாடி நாம் மகிழ்கின்றோம். அந்த மயில் எவ்வாறு நஞ்சினை நீக்கியதோ இதைப் போன்று
1.நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும்… எத்தனை பேருடன் நாம் பழகினாலும்
2.சந்தர்ப்ப பேதத்தால் அறியாது வரக்கூடிய அந்த நஞ்சின் தன்மைகளை நீக்க
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ் நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்ப்பித்து
4.அந்த நஞ்சினை அடக்கி மகிழச் செய்யக்கூடிய சக்தியாக நாம் உருவாக்க முடியும்.

அப்படி உருவாக்கும் சக்தியை நினைவுபடுத்தி… எல்லோரும் அதைப் பெறக்கூடிய நன்னாள்தான் தைப்பூசம். அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாள் தைப்பூசம். நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தும் நாள் தைப்பூசம்.