January உபதேசம் – 2026

உயிர் உணர்வு உடல் – இயக்கம்

 

ஒரு மரம் பட்டு அதனுடைய சத்தெல்லாம் இழந்தாலும்… அதில் விளைந்த சத்தினைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.சேமித்த உணர்வின் தன்மை பூமியின் பரத்தில் பரமாத்மாவில் அலைகளாகத் தொடர்கின்றது… பரமாத்மாவாக இருக்கின்றது.
2.மண்ணிலே ஊன்றப்பட்ட வித்து தன் தாய் மரத்தின் உணர்வை நுகர்ந்து மரமாக விளைந்து மீண்டும் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.

இதைப் போல தான் சூரியனால் உருவான இந்த உணர்வுகள் அதனுடைய அலை வரிசைகள் தொடர்ந்து எதன் எதன் வழிகளில் அது கவர்ந்ததோ அந்த இன வித்துக்கள் மாறுவதும்… மரம் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது மரத்தின் இனங்கள் மாறுவதும்… தாவர இனங்களும் மாறுகின்றது.

இதைப் போன்று… நம் உடலுக்குள் இருக்கும் உயிர் “நாம் எண்ணியது எதுவோ… அதை ஜீவ அணுக்களாக மாற்றி…” அந்த உணர்வின் மலமாக உடலாக மாற்றி அமைக்கின்றது.

சூரியனைப் போல உயிர் மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.இந்தப் பூமியில் காற்றுடன் கலந்துள்ளது
2.ஆனால் நம் உடலில் ரத்தத்துடன் கலக்கின்றது.

நாம் எண்ணியது எதுவோ அது அனைத்தும் ஜீவ அணுக்களாக ரத்தங்களிலே உருப் பெறுகின்றது.

பல கோடி வித்துக்களாக உருப்பெற்றாலும் அந்தந்த மரம் காற்றிலே மிதந்து வரும் தன் இனத்தின் சத்தை எடுத்து விளைவது போல நமக்குள்ளும் விளைகின்றது.

ஒருவன் தீமையாகப் பேசுகின்றான்…! அவனிடமிருந்து சொல்லாக வருகின்றது… அவனில் விளைந்த வித்தாக அது வெளிப்படுகின்றது. நாம் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாக நமக்குள் பதிவாகின்றது. வினை தான் வித்து என்பது.

ஒரு வித்து தன் சத்தைக் காற்றிலிருந்து எவ்வாறு கவர்கின்றதோ அதைப் போல்
1.நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்த ஊழ்வினை மீண்டும் தன் உணர்வின் சத்தை ஆன்மாவாக மாற்றுகிறது.
2.மாற்றிய பின் சுவாசித்து உயிரிலே பட்டு அது தான் எண்ணமாக மாறுகின்றது.
3.அது உடலுக்குள் செயல்படும்போது அந்த உணர்வின் உந்து விசையால் நம் உடல் அங்கங்கள் அதற்குத்தக்க அசைகிறது.

நாதத்தின் சுருதி கொண்டு வாத்தியங்களை இசைக்கிறார்கள். அதைக் கேட்டு… அந்த இனிமை கலந்த உணர்வுகளை ஒரு தரம் பதிவாக்கி விட்டால் அந்த ராக இணைப்பிற்கு அந்த இசையின் வாசிப்பிற்கு நம்முடைய அங்கங்கள் இசைந்து இயக்குகின்றது.

வாசிக்கத் தெரியவில்லை என்றால்… சீராகப் பதிவு செய்யவில்லை என்றால் என்னதான் வாத்தியம் வாசித்தாலும் அது வராது.

இனிமை கொண்ட வாத்தியத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பதிவு செய்யும் பொழுது அது பதிந்த பின் தன்னிச்சையாக அவருடைய அங்கங்களை அசைப்பதும் மீண்டும் ரசனையை அவர்கள் கூட்டும் பொழுது அதற்கு தகுந்தாற் போல் அந்த வாத்தியங்கள் மிகவும் நயமாகவும் பிறரை மகிழ்விக்கும் நிலையும் ஆட்டிப்படைக்கும் நிலைகளும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.ஒரு மனிதன் கோபித்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்து கொண்டால்
2.அந்த உணர்வின் நாதங்கள் நமக்குள் கோப உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உணர்வுக்கொப்ப நம் அங்கங்களை இயக்குவதும்
3.அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மற்றவரை அழித்திடும் நிலையோ… இம்சிக்கும் நிலையாகவோ அது நமக்குள் தோன்றும்.

அவ்வாறு தோன்றிய உணர்வுகள் நம் உடலுக்குள் இம்சைப்படும் உணர்வுகளாகவே உருப்பெறுகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக உருவான இந்த உடல் நலியும் தருணம் வருகின்றது.

பிரபஞ்சத்தில் சூரியன் இயக்குவது போல
1.நாம் எண்ணிய உணர்வுகள் எவையோ அவை அனைத்தையும்
2.உயிர் உடலுக்குள் அணுக்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் மற்றொருவரை வேதனைப்படுத்துகிறார் என்று உற்றுப் பார்க்கின்றோம். “பாவிப்பயல்…! இப்படி வேதனைப்படுத்துகின்றானே…!” என்று எண்ணுகின்றோம்.

பிறரை வேதனைப்படுத்தும் போது அதை நாம் கூர்மையாகப் பார்க்கும் போது அந்த மனிதனை நம் கண்ணின் கரு விழி ருக்மணி படமாக்கி எலும்புக்குள் ஊனாகப் ப்திவாக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் அந்த மனித உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது. இதைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி இந்தக் காற்றிலே வைத்துக் கொள்கின்றது.

ஒரு செடியிலிருந்து வெளிப்படும் மணத்தை (அதாவது அதனின் சத்தை) சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதே சமயம் அந்தச் செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றும் போது சூரியனால் ஏற்கனவே கவரப்பட்ட அந்தச் சத்தினை இந்த வித்து தனக்குள் கவர்ந்து அதே செடியைப் போன்று விளைகின்றது.

இதைப் போன்று தான்… வேதனைப்படும் உணர்வுகள் ஒரு மனிதனுக்குள் விளைந்து அது சொல்லாக வெளிப்படும் போது நாம் அவனைக் கூர்மையாக பார்த்து அவன் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நமக்குள்ளும் அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.
1.வேதனைபடுபவனைப் பார்த்து நாம் அனுசரிப்போம். அவன் வேதனையால் அழுவான்.
2.அதை வைத்து வேதனைப்படுத்துபவனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்கிறாய்…?” என்று நாம் கேட்கத் தொடங்குகின்றோம்.
3.அப்பொழுது வேதனைப்படுத்தும் உணர்வும் வேதனைப்படும் உணர்வும் நம் உயிருக்குள் படுகிறது.
4.இந்த இரண்டு உணர்வும் கலந்த பின் இது பிரம்மமாக (சிருஷ்டி) உருவாகிறது.

வேதனைப்படுபவன் வேதனைப்படுத்துவனை எண்ணி அந்த வேதனை ஒன்றைத்தான் நினைக்கின்றான். அதனால் வேதனைப்படும் உணர்ச்சி அவனுக்குள் தூண்டுகின்றது.

வேதனைப்படுத்துபவனோ வேதனைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றான். அந்த உணர்ச்சிகளை அவனுக்குள் தூண்டுகிறது.

ஆனால்…
1.அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இந்த இரண்டையும் நுகர்ந்து சிந்திக்கும் பொழுது
2.நமக்குள் இது புது குணமாக… புது அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.

வேதனயால் வாடுபவனை அங்கே காக்க எண்ணுகின்றோம். அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் உருவாகின்றது. அந்த நேரத்தில் நியாயத்தையும் பேசுவோம். ஆனால் நாம் வேதனைப்படவும் செய்வோம்.

வாழ்க்கையிலே நான் நியாயத்தைப் பேசுகிறேன்…! என்று சொல்லலாம். அதே மாதிரி அயோக்கியத்தனம் செய்கின்றான்…! என்றும் சொல்லலாம்.

அயோக்கியத்தனம் செய்பவனையும் அதனால் வேதனைப்படுபவனையும் இந்த இரண்டையும் சேர்த்து நாம் நுகர்கின்றோம். இந்த இரண்டையும் சேர்த்துத் தான் நாம் நியாயத்தை வாதிக்கின்றோம். இந்த வலு நம்மிடம் வந்து விடுகிறது.

அடுத்து நாம் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது எப்படிப் பேசுவோம்…? நம்மை அறியாமல் இந்த இரண்டு உணர்வையுமே சொல்வோம்.
1.வேதனை உணர்வையும் சொல்வோம்…
2.வேதனைப்படுத்துவது நியாயமா…? என்று அதையும் அதிகமாகச் சொல்வோம்.

இரண்டும் இப்படிக் கலந்து வந்த பின் நம் உடலுக்குள் அணுவாக விளைந்து விட்டால் அதற்கு உணவு தேவை.

உதாரணமாக… ஒரு செடிக்குள் மற்ற செடியின் ஜீன்களை (GENE) இணைத்து விட்டால் இது இரண்டும் கலந்து எந்த ஜீன் அதிகமாக வளர்ந்துள்ளதோ அதற்கொப்ப அந்த மலரின் தன்மையும் அதிலே விளையும் காயின் சுவைகளும் மாறுகின்றது.

இதைப் போல உயிரினங்களில் எடுத்துக் கொண்டாலும் ஒரு உயிரினத்திலிருக்கும் அணுக்களின் சிசுக்களை எடுத்து இன்னொரு உயிரினத்தில் இணைக்கப்படும் போது இரண்டு சிசுக்களும் ஒன்றாகி
1.புதுவிதமான உடலின் அமைப்பைப் பெறுகின்றது….
2.குணத்தின் தன்மைகளும் மாறுகின்றது…!

விஞ்ஞான அறிவில் பார்க்கலாம்… கொடூர குணம் கொண்ட மிருகங்களைச் சாந்தமான மிருகமாக மாற்றுகின்றார்கள். பரிணாம வளர்ச்சியில் இப்படி வருகிறது…!

இதைப் போல நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுக்கின்றோமோ அத்தனையும் நமக்குள் கலந்து…கலந்து கலவையாகிப் புதிய குணங்களாக அணுக்கள் உருவாகிறது. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாறாது காக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் ஞானிகள் உணர்வை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்.

வீட்டிற்குள் தூசி வந்தால் மீண்டும் மீண்டும் அதைத் தூய்மையாக்கிக் கொண்டே இருப்பது போல்
1.அன்றாட வாழ்க்கையில் நமக்குள் நாம் நுகர நேரும் எல்லாக் குணங்களுக்குள்ளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

அவ்வாறு இணைத்தால் உடலில் உள்ள பல கோடி உணர்வுகளையும் ஒன்றாக்கிப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து பேரொளியாக நாம் மாற முடியும். அழியாத ஒளியின் சரீரம் பெறலாம்.

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

 

நாம் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்… ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.

ஒருவன் குற்றம் செய்கிறான் என்றால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. குற்றம் செய்தவர்களால் நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனைப்படுவதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

1.அதையெல்லாம் அறிவால் அறிகின்றோம். அறிந்த உணர்வு நமக்குள் பதிவாகின்றது.
2.எத்தகைய உணர்வுகளைப் பார்த்தாலும் அறிந்து தெரிந்து கொண்டாலும்
3.கார்த்திகேயா என்று தெரிந்திடும் அறிவு இருந்தாலும் “அதை நீக்கிடும் அறிவு வேண்டும்…”

நம் உடல் ண்ஹாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வினை உடலாகச் சேர்க்கின்றது. அந்த நல்ல உணர்வால் நாம் இடும் மணத்தால் நல்ல எண்ணங்கள் கொண்டு தீமையை அகற்றிடும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும்.

1.நல்லவைகள் எதுவாக இருப்பினும்
2.தீமைகளைப் பற்றித் தெரிந்திடும் அறிவு இருந்தாலும்
3.தெரிந்த பின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் அல்லவா.

வேலை செய்கின்றோம்… கை அழுக்காகின்றது. அதை நாம் கழுவாதபடி அடுத்து உணவை உட்கொள்வோமா…? அப்படி உட்கொண்டால் அழுக்கின் சுவையே தான் வரும்… உணவு சுவையற்றதாக மாறி உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.

இதைப் போன்று தான் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்கள் கஷ்டத்தைக் கேட்டறிந்தாலும்… அதைத் தெரிந்து கொள்ளும் அறிவு இருந்தாலும்…
1.அவருடைய தீங்கு நம் நல்ல அறிவுடன் இணையும் பொழுது
2.அதைத் துடைக்கவில்லை என்றால் அவரின் தீமையின் உணர்வே நமக்குள் விளையும்.

துடைக்கா விட்டால் உடலில் நோயின் தன்மையாகிவிடும். மீண்டும் நல்ல உணர்வை எடுக்க முடியாதபடி தவிக்கும். அப்பொழுது சிந்தனைகள் சிதறும். சிதறும் பொழுது உடலில் நடுக்கமும் நடுக்கத்தால் வரும் கோபமும் சிந்தனையற்ற செயல்களாக நம்மை இயக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

ஆகவே… சந்தர்ப்பத்தால் எத்தகைய தீமைகள் புகுந்தாலும் அந்தத் தீய வினைகளை உடனுக்குடன் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தி பயிற்சியும் கொடுக்கின்றோம்.

எந்த நேரம் ஆனாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.உடனுக்குடன் தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் அகற்றிட முடியும்.
3.உங்கள் நல்ல எண்ணங்களை உணர்வுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தையும் நாம் நமக்குள் வளர்த்து இந்த வாழ்க்கையில் என்றுமே பொருளறிந்து செயல்படும் திறனாக அருள் வழியில் வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தாவர இனங்கள் மேல் ஒரு சில பூச்சிகள் பட்டாலே மடிந்துவிடும். அதே சமயத்தில் சில உயிரினங்களை நுகர்ந்து அதனால் உருவான செடிகளின் மீது குருவியோ மற்றொன்று ஏதாவது உட்கார்ந்தால் அப்படியே “பட்…!” என்று மூடி விடும்.

மின்சாரம் பாய்ந்தால் எப்படி இழுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அதில் உள்ள காந்தப் புலன் அறிவு எடுத்துக் கொள்ளும். அதற்கு அந்தச் சக்தி உண்டு.
1.காந்தத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்தக் குருவி மடிந்து விடுகின்றது.
2.காந்தத்துடன் கலந்த இரத்தத்தையும் எடுத்து விடுகின்றது.

ஆனால் இந்த மாதிரி அதிசயத்தை எல்லாம் நீங்கள் பார்க்க முற்பட்டு விடாதீர்கள். காடு மேடெல்லாம் நான் (ஞானகுரு) கஷ்டப்பட்டுப் பார்த்தேன். இதை உங்களிடம் வந்து சொல்கிறேன்.

இமயமலை அஸ்ஸாம் பகுதி வங்காளம் இந்தப் பக்கம் எல்லாம் அத்தகைய செடிகள் உண்டு. அஸ்ஸாம் காட்டுப் பகுதியில் அதிகமாக உண்டு. அக்காலங்களில் இத்தகைய தாவர இனங்கள் நிறைய உண்டு.

பச்சைப் பாம்பை எடுத்து விளக்கெண்ணெய் வித்தோடு சேர்த்து இந்த இரண்டு நிலைகளை ஊற வைத்து அதற்குப் பின் இந்த வித்தை முளைக்க வைத்து அதிலிருந்து வரும் வித்தை ஆட்டி எண்ணெயைக் கொடுத்தீர்கள் என்றால் எங்கே பார்த்தாலும் பச்சைப் பாம்பாகத் தெரியும்.

இதே மாதிரி பல பல கலவைகளைச் சேர்த்து அதிசயப்படுகிற மாதிரி எத்தனையோ செய்து காட்டலாம். அப்புறம் சாமி (ஞானகுரு) பெரிய சக்தி வாய்ந்தவராக மாறி விடுவார். அதிசயத்தையும் காட்டுகிறார் அற்புதங்களையும் காட்டுகிறார் என்று எல்லாம் போற்ற முடியும்.

ஏனென்றால்
1.சில வித்துக்களில் சில உயிரினங்களின் செல்களை எடுத்து அதை இணைத்து அதனுடைய வளர்ச்சிக்குத் தக்கவாறு செய்தோம் என்றால்
2.இதன் மணத்தை நுகர்ந்தாலே மடியும் தன்மை வருகின்றது.
3.மயக்கப்படும் நிலையும் வருகின்றது.
4.அந்த உருவமும் வருகிறது.
5.இது எல்லாம் தாவர இனங்களில் உள்ள வீரிய சக்தியின் நிலைகள்.

அத்தகைய சக்திகளைத்தான் ஒரு உயிரணு நுகர்ந்து அது வளர்ச்சி பெற்ற அணுவாக மாறுகின்றது. அந்த விஷச் செடியை அது உணவாக உட்கொண்டு விஷத்தையே தான் ஆட்கொள்ளும் சக்தியாக அது வளர்கின்றது.

இப்படி அந்த உயிரணு எதை நுகர்ந்து தன்னுடைய நிலைகளை வளர்த்ததோ அதன் வரிசையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் தான்
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தையே பல காலம் பல வருடம் கழித்து
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக உங்களிடம் சொல்லுவது.

அது தான் ஓ..ம் நமச்சிவாய…. சிவாய நம ஓ..ம்..!

யாம் உபதேசிப்பதை எல்லாம் நீங்கள் கேட்டால் “ஓ..ம் நமச்சிவாய…!” அந்த உணர்வின் தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டால் சிவாய நம ஓ…ம்.
1.இந்த உண்மையின் உணர்வை நீங்கள் அறியலாம்.
2.பிறருடைய தீமையை போக்கவும் உங்களால் முடியும்.
3.நான் (ஞானகுரு) மட்டும் கெட்டிக்காரர் அல்ல.

குருநாதர் கொடுத்தார். அந்த உணர்வை வளர்த்தோம். அதே உணர்வை உங்களுக்குள்ளும் வளர்க்கச் சொல்றோம். வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செய்யலாம்.

ஏனென்றால்
1.பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை நீங்கள் வளர்த்தால்
2.உங்களுக்குள் தீமையை நீக்கிடும் சக்தி வளர்கின்றது.

பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் நல்ல அணுக்களை கொல்கின்றது. அப்பொழுது அந்தத் தீமை செய்யும் உணர்வே நமக்குள் விளையும்.

தீமை செய்பவனை வேடிக்கையாகப் பார்த்து அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்தாலே அந்தத் தீமை செய்யும் அணுவின் தன்மை விளைகின்றது.

ஆக வேடிக்கையாகப் பார்த்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் நமக்குள் வரும் போது அதற்கு ஆகாரம் தேவை. அந்த உணர்வை நுகரும் போது உயிரிலே பட்டு அந்த எண்ணங்கள் வந்து அதே செயலைத்தான் நாமும் செய்வோம்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்

 

ஒருவருடைய செயலைப் பார்த்து “மோசமானவர்…” என்று அவரை நினைக்கின்றோம் அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்த பின் நாமும் அதை போன்ற செயலைச் செய்ய தொடங்கி விடுகின்றோம்.

நம்மை அறியாமலே அது இயக்கும்…!
1.நாம் தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம்.
2.ஆனால் “தவறு செய்கின்றான்…” என்று எண்ணியவுடன் அந்தத் தவறின் இயக்கம் நம்மை இயக்கி விடுகின்றது.

அதை மாற்றும் சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகி விடுகிறது.

அந்தத் தவறிலிருந்து விடுபடும் முறைக்கே உங்களுக்குள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றோம். எண்ணியவுடனே அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.

நாம் பல விதமான உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். அதிலே வேதனைப்படும் சொல்களைக் கேட்டவுடன் அந்த உணர்வுகள் உந்திய பின் அதைச் சுவாசித்து நம் உடல் சோர்வடைந்து விடுகின்றது. வேதனையான அணுக்கள் வளர்ந்து விடுகின்றது.
1.இரண்டு நாளைக்கு இந்த உணர்வுகள் சேர்த்தால்
2.இரத்த நாளங்களில் இது கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.

நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது. காற்று மண்டலத்தில் எப்படிக் கலக்கின்றதோ இதைப் போன்று தான் இரத்தத்தில் கலக்கப்படுகிறது.

இரத்தம் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணவை எடுத்துச் செல்கின்றது. அதில் இருக்கும் உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.

நாம் நுகர்ந்தது உயிரிலே ஆவியின் தன்மை அடைந்த பின் நம் உடலில் ரத்தத்தில் கலந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு செயலாகிறது.

நாம் உணவாக உட்கொள்ளும் போது அதிலே நீரைப் பிரித்து விட்டு அதில் இருக்கக்கூடிய சத்தை இரத்தமாக மாற்றுகின்றது நம் உடல் உறுப்புக்கள்.

இரத்தத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது அணுக்களின் ஆகாரம் அதன் வழியில் பெறப்படுகிறது. நல்ல உணவைப் படைத்துச் சாப்பிட்டாலும் நல்ல உணர்வை எண்ணினால் நல்ல அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கிறது.

அதே சமயத்தில் நல்ல உணவை உட்கொண்டாலும்
1.வேதனையான உணர்வைச் சுவாசித்தால் இந்த உணர்வின் தன்மை இதற்குள் ஆன பின்
2.வேதனை உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது நல்ல உணவையே உட்கொள்ள முடியாதபடி ஒதுக்கிவிடும்.

ஏனென்றால்
1.நாம் எண்ணும் உணர்வுகளை உயிர் அதை அணுக்களாக மாற்றுவதும்
2.உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி இருவருமே தியானிக்க வேண்டும். ஏனென்றால் நம் உயிரும் சிவ சக்தியாகத் தான் வாழ்கின்றது.

கணவன் தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும். அதே போல் மனைவி தான் பெற்ற சக்தியைக் கணவனுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
1.ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்று இரண்டு பேருமே இவ்வாறு எண்ண வேண்டும்.
2.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இரண்டு பேருமே ஏங்கி எடுக்கும் உணர்வுகள் கருவாகின்றது.

இன்றும் பார்க்கலாம்…! சாதாரணமாக மந்திரவாதிகள் – குடுகுடுப்புக்காரர்கள் இருப்பார்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து தான் இந்த மந்திரத்தின் நிலைகளில் செயல்படுத்துவார்கள்.

மந்திரத்தால் கணவனுக்கு ஏதாவது ஆனாலும் உடனே மனைவி அதை எடுத்து அதைச் சரி செய்யும். அதாவது… ஏவல் பில்லி சூனியங்களால் கணவன் தாக்கப்பட்டால் உடனே மனைவி எடுத்துச் சரி செய்வார்கள்.

இரண்டு பேரும் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கே ஒன்றும் வேலை ஆகாது. தன் மாமன் மச்சானிடம் கொடுக்க மாட்டார்கள். இது மந்திரத்தின் செயல்கள்.

இதைப் போன்று தான் அக்காலத்தில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் பூமியின் துருவத்தை உற்று நோக்கி (வானிலே) துருவத்தின் வழியாக வரும் உணர்வின் தன்மை இருவருமே தனக்குள் பெற்று வானவியலின் உணர்வையே மேற்கொண்டு பார்க்கும் நிலைகள் வருகின்றது.

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் தன்மையைத் தனக்குள் கவருகின்றார்கள்.
2.அந்த உணர்வின் வலிமையைப் பெறுகின்றார்கள்.
3.அது மற்ற கோள்களுடன் கலந்து வருவதையும் அதைச் சூரியன் பெறுவதையும் கணவன் மனைவி இரண்டு பேருமே நுகர்கின்றார்கள்.

அப்படிப் பெற்ற உணர்வுகள் தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிந்து அதைத் தனக்குள் பெருக்கி வளர்த்து கொண்டார்கள்.

இரண்டு உயிர்களும் இரண்டு உடல்களும் இரண்டு பேருமே ஒன்றாகச் சேர்க்கப்படும் போது தான் வசிஷ்டரும் அருந்ததியுமாக அவர்கள் வளர்ந்தனர். நளாயினியைப் போல ஒருவரை ஒருவர் மதித்து நடந்தனர்.

கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்து நடப்பதும்
1.இந்த இரு உணர்வும் வந்தவுடனே “சத்தியவான் சாவித்திரி…!”
2.இந்த உயிர் சத்தியமாகின்றது
3.தன்னுள் இணைந்து கொண்ட சக்தி அது உண்மையின் உணர்வாக ஒளியாக மாறுகின்றது.
4.அதைத் தான் சத்தியவான் சாவித்திரி என்று சாவித்திரி எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள் என்று காட்டப்பட்டது.

(இன்று ரொம்பப் பேர் வீட்டிலே பார்க்கலாம். சத்தியவான் சாவித்திரி நிறையப் பேர் இருப்பார்கள். ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டு நீயா…? நானா…? என்ற வகையில். இன்று இதைத் தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது. அகஸ்தியனும் அவன் மனைவியும் பெற்ற நிலைகள் இல்லை)

அகஸ்தியனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைத்து இன்னொரு உடலுக்குள் சேராதபடி உணர்வுகளை ஒன்றாக இணைந்து எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகர்ந்தார்களோ அந்த உணர்வின் தன்மை வலிமை கொண்டு இந்த உடலை விட்டுச் சென்ற பின் அந்த எல்லையை அடைந்தார்கள்.

நம் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிக் கதிராகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள். இது ஒரு குடும்பம். அகஸ்தியனுடைய தாய் தந்தை அவர் உடலிலே இருந்தார்கள். அவர்களும் அதே ஒளியின் சரீரமாக அவனுடன் இருக்கின்றார்கள்.

அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். அன்னை தந்தை அரவணைப்பில் ஒளியாகச் சென்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போரும் பல உண்டு.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். அவர்கள் உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்
1.அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில்
2.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் அழியா ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதைப் பார்க்கலாம்…! அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் நம் கண்ணுக்கு புலப்படாத எண்ணிலடங்காத ஒளியான நிலைகள் நிறைய உண்டு.

1.டெலஸ்கோப் (TELESCOPE) வைத்து நீங்கள் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய அலைகள்… அந்தக் காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் அவன் பின் சென்றவர்களும் பல உண்டு.

சப்தரிஷி மண்டலமே மனிதன் அடைய வேண்டிய கடைசி எல்லை..!

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

 

நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் நடக்கின்றது. நான் போனேன்… போகும் போது “அந்த இடத்தில் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

உடனே ஆ…! என்று அதிர்ச்சியோடு நாம் கேட்போம். இந்த உணர்வுகள் நமக்குள் படப்பட்டு
1.“அவர் எந்த வகையில் அந்த விபத்து ஏற்பட்டது…” என்று சொன்னாரோ
2.அதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம்மை அறியாமல் அது இயக்கும்.
3.ரோட்டில் நடந்து சென்றால் அறியாமலே நம்மை நடுரோட்டிற்கு அழைத்துச் சென்று விடும் ஓரத்தில் ஒதுங்கிச் சென்றாலும் கூட…!

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாதபடியே இவ்வாறு அழைத்துச் சென்று விடும்.

இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து “அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் பெற வேண்டும்…” என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் நாம் பார்க்கும் பொழுது தான்… பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் இனி எப்படி வாழ்வது…? என்ற நிலைகளில் பல திசைகளுக்கு நம்மை ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் உடனடியாக நாம் ஆத்ம சுத்தி செய்தோம் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொண்டே இருக்கின்றோம்.
2.அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால்… அத்தகைய அணுக்கள் நமக்குள் வளர்ந்து விட்டால் நம்மை அறியாமலே “அந்தத் துருவ நட்சத்திரத்தின் சொல் வரும்…”

உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டே இருக்கின்றோம். அது ஆழமாகப் பதிவாகி விட்டால் பாடல் தொடர்ச்சியாக சரியாக வரும்.

ஆனால் பாடிக் கொண்டிருந்தாலும் இடைமறித்து அதிலே ஒன்றை தனியாகச் சொல்ல வேண்டும் என்று குறுக்காட்டினால் இரண்டாவது தடவை அது சரியாக நினைவுக்கு வராது.

மீண்டும் முதலில் இருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால்
1.வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது அதனுடைய தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கிவிட்டால் அந்த நினைவு நமக்குள் வராது.
3.காரணம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அடுத்தடுத்து அந்த அடுக்குகளிலேயே அது வருகின்றது.

இதனால்தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. சந்தர்ப்பத்தால் நாம் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி விழித்திருந்து பழகுதல் வேண்டும்.

இதைத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பிறருடைய கஷ்டங்களும் நஷ்டங்களும் எப்பொழுது பார்த்தாலும்
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.நம் நல்ல குணங்களை வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை அகஸ்தியனுக்குப் பின் அதிகம் வெளிப்படுத்தியவர் வியாசகர்.

அவருக்குக் கல்வி அறிவு இல்லை எனும் பொழுது அவர் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகளை “பிருகு.. அத்திரி…” என்று ஏழு பேர் பாட நூல்களாக எழுதுகின்றார்கள்.

பிருகு… நட்சத்திரத்தின் ஒளிக் கதிரை எடுக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை அவர் நுகர்ந்து அதைப் பற்றும் நிலைக்கு அவர் செல்கின்றார்.

அத்திரியோ ஆலம் விருட்சம் போன்று மற்ற நிலைகளைக் கூட்டி தன் அரசை எப்படி நடத்துவது…? என்று அவர் திட்டம் போடுகின்றார். தன் அரசைக் காக்கும் வழிகளும் மந்திர ஒலிகளை வைத்து எதைப் பெற வேண்டும்…? என்று இப்படித் தான் செயல்படுத்தினார்கள் பிருகும் அத்திரியும்.

வியாசகர் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதை ஒவ்வொருவரும் தங்கள் உடலின் இச்சைக்காக மாற்றி அதன் வழியில் அமைக்கப்பட்ட நிலைகள் கொண்டு தான் இன்று அரசுகளாக வந்தது.

மனிதனின் உடலில் ஆசைப்படும் உணர்வுகள் எப்படி எல்லாம் வந்தது…? என்றால்
1,மந்திரங்கள் தந்திரங்களை மனிதனுக்குள் பாய்ச்சுவதும்
2.அவர்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றுவதும் கைவல்யப்படுத்துவதும் என்ற நிலைகள் கொண்டு
3.தங்கள் அரசாட்சிகளை நடத்தும் நிலைகளுக்குக் கொண்டு சென்றனர்.

அவர்கள் செய்த நிலை தான் இன்று உலகம் முழுவதற்கும் மதங்களாக உருவாக்கப்பட்டதும் மதங்களுக்குள் இனங்களாக உருவாக்கப்பட்டதும்,

1.ஆதியிலே அன்று அகஸ்தியரால் தோற்றுவித்த உணர்வுகளை மற்றவர்கள் கவர
2.அந்த உணர்வின் தன்மை அவர்கள் சொல்ல இவர்கள் தனக்குகந்த சாதக நிலையைக் கொண்டு வர
3.அதன் பின் இந்த மூலத்தைத் தேட வேண்டும் என்று இன்று தேடிக் கொண்டும்
4.சாதுக்களாகக் குடும்பத்தைத் துறந்து வருவதும் மதங்களுக்கு மத குருவாக வருவதும் மதத்தைக் காக்கும் சாமியார்களாக வருவதும்
5.இதைப் போன்ற நிலைகளையே பெரும் பகுதி உருவாக்கப்பட்டு
6.ஆட்சி செய்த அரசனை நிலை நாட்ட விழுதுகளாகப் பாய்ச்சப்பட்டு
7.பெரும்பகுதியான நிலைகள் இன்று உலக நாடுகள் அனைத்தும் சிதைவுண்டும்
8.மனிதன் மீண்டும் தேய்பிறையான நிலைகள் செல்லும் கலியின் தன்மையில் உள்ளோம்.

“கலி…” என்றால் அவரவர்கள் உருவாக்கும் தன்மைகள். அவரவர் உருவாக்கிய நிலைகள் கொண்டு நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்…! என்ற நிலைகளில்
1.”நான்” என்ற அகங்கள் உருவாக்கப்பட்டு
2.தான் செய்தது தான் நல்லது… தான் செய்வது தான் சரி.. மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு…! என்ற நிலைகளில்
3.இப்படி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்கும் நிலைகளே நரசிம்மா…! என்பது.

“தாயை வேதனைப்படுத்தினால்…” அந்த அலைகள் நம்மைக் கடுமையாகச் சாடும்

 

இது என்னுடைய இளம் வயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சி. பக்கத்து வீட்டில் நானும் என் நண்பனும் விளையாடுவோம். எனக்கும் அவருக்கும் 6 மாதம் தான் வயது வித்தியாசம்.

ஆனால் படிப்பிலே நான் மட்டம். அன்று அவர் எஸ்எஸ்எல்சி வரைக்கும் படித்தார். நான் சரியாகப் படிக்காததனால் அவருடைய அப்பா என்னுடன் சேரக்கூடாது என்று அவரிடம் சொல்வார். நான் அந்த வீட்டிற்குள் சென்றால் “நீ உள்ளே வரக்கூடாது ஓடு…!” என்பார் அவருடைய அப்பா.

இவர் அமீனாவில் வேலை செய்தார். இளம் வயதில் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டுக்குத் தான் நான் செல்வேன். ஆனால் அவருடைய அப்பா என்னைத் துரத்தி விடுவார்.

நண்பர் படிப்பிலே நன்றாகத் தேறி சர்வேயர் ஆகித் தமிழ் நாட்டு அளவில் உயர்ந்த சர்வேயராகக் கடைசியில் வளர்ச்சி பெற்று ரிட்டயர் ஆனார். அவருக்குப் பெண் குழந்தைகள் ஆறேழு பேர்.

அந்த பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுக்க வைத்திருந்த பணத்தைச் செலவழித்தார். பையன்கள் இருவர்…
1.ஆனால் அவர்களுக்குப் புத்தி கொடுக்கவில்லை.
2.அவர்கள் செலவழித்துக் கடனை உருவாக்கி விட்டார்கள்.

அவருக்குப் பென்ஷன் வருமானம் 5000 ரூபாய் வருகின்றது. ஆனாலும் பையன்கள் இப்படிக் கடனாளியாக ஆக்கிவிட்டார்களே…! என்று என்ற எண்ணங்கள் வந்துவிட்டது.

அவர்கள் வாங்கிய கடன் ஒரு லட்சத்திற்கு மேல் சென்று விட்டது. தான் குடியிருக்கும் வீட்டையாவது சமாளித்து விற்று விட்டுக் கடனை அடைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றார்.

ஆனால் “தாய் தந்தையர் சம்பாதித்த இந்தச் சொத்து இப்படி ஆகிவிட்டதே…” என்று எண்ணுகின்றார்… வேதனைப்படுகின்றனர்…
1.அதையே வளர்த்துக் கொள்கிறார்.
2.வீட்டை விற்ற பின் எண்ணங்கள் சுருங்குகின்றது. நான்கு மாதத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார்.

காரணம் ஏழு எட்டு பெண்கள் இவருக்குக் குழந்தைகளாக இருக்கப்படும் பொழுது இவருடைய தாயை இவர் சரியாகக் கவனிக்கவில்லை.

நான் அவரிடம் செல்லும் பொழுது அந்த அம்மா என்னிடம் சொல்லும்.
1.அவனை நன்றாகப் படிக்க வைத்தேன் எல்லாம் செய்தேன் ஆனால் என்னைத் தெருவிலே விட்டுவிட்டானே…!
2.அதனால் தான் அவனுக்குப் பெண் பிள்ளைகளாகக் கிடைத்தது…
3.அவன் செலவழித்துப் பார்த்தால் தெரியும்… அவன் அனுபவிக்கின்றான் என்று சொல்கிறது.

காரணம் தன்னுடைய தாய்க்குச் செலவுக்குச் சிறிதளவு கூடப் பணம் கொடுக்கவில்லை. வீடு இருக்கின்றது எல்லாம் இருக்கின்றது. ஆனால் ஆப்பம் சுட்டு அதை விற்று வாழுகின்றது. அதை வைத்துத் தான் அது ஜீவனம் நடத்துகின்றது.
1.தாயினுடைய அந்த மனக்குமுறல் இங்கே விளைகின்றது.
2.ஏனென்றால் பையன் ஒரே பையன் தான்… வேற யாரும் இல்லை.

“இந்த அலைகள் இங்கே வரும் பொழுது…” தொடர்ந்து அதே உணர்வைத் தான் அவருடைய பையன்களும் அவருக்குச் செய்கின்றார்கள்.

பென்ஷன் வந்தது… இருந்தாலும் கடனாகி “வீட்டை விற்று விட்டோம்… பையன்கள் இப்படி செலவழித்து விட்டார்கள்…” என்ற உணர்வுகள் விளைந்து சீக்கிரம் ஆளை முடித்துவிட்டது.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.உலக மக்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற
2.இந்தச் சக்தியை நாம் முதலில் பெற வேண்டும்.

குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் ஆத்ம சுத்தியை அவசியம் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கணவன் மனைவியை நினைக்க வேண்டும். அதே போல் மனைவி கணவனை நினைக்க வேண்டும்.

இந்த உணர்வின் நிலைகள் இருவருடைய நிலைகள் ஒரு நிலை கொண்டு சரியான முறையில் யாம் சொல்லும் தியானத்தைச் செய்து வந்தால் இதில் நீங்கள் சொர்க்க பூமியைக் காணலாம்.

ஒரு குடும்பத்திற்குள் கணவன் மனைவி இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருந்தால்தான் அது சொர்க்கலோகம். ஆகவே கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமை என்ற நிலைகளை இங்கே உருவாக்க வேண்டும்.

குழந்தைகளிடம் சில குறைபாடுகள் இருப்பினும் அவர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்ட வேண்டும். நம்முடைய நினைவு அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

1.குழந்தைகள் கல்வியில் சிறந்த திறன் இல்லை என்றாலும்
2.மகரிஷிகளின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும்
3.கல்வியில் சிறந்தவனாக அவன் வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற உணர்வை அவன் மேல் கூர்மையாகப் பாய்ச்சி
4.அதைப் போல் அந்தக் குழந்தைகளையும் எண்ணி ஏங்கும்படிச் செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… நாங்கள் கல்வியில் சிறந்த நிலைகள் பெற வேண்டும் என்று குழந்தைகளை எண்ணச் செய்து அந்த உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.

அப்படி இணைக்கக் கற்றுக் கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் கல்வியில் சிறந்த ஞானமாக வளரும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெறுவார்கள். ஆகவே குழந்தைகள் மீது இப்படித்தான் நாம் பாசம் வைக்க வேண்டும்.

காரணம் இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவிலே சிக்குண்ட நாம் ரேடியோ டி.வி. இதைப் போன்ற நிலைகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
1.குறிப்பாகக் கர்ப்பமுற்றிருக்கும் காலங்களில்
2.பகைமை உணர்வுகளையும் குரோத உணர்வுகளையும் மற்ற தீமையின் உணர்வுகளையும் அதிகமாகப் பார்க்க நேர்ந்தால்
3.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் பதிவாக்கி விட்டால்
4.பிறக்கக்கூடிய குழந்தைகள் நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய (டி,வி.மூலம்) நிலைகளைத்தான் செய்யும்.

ஆகவே ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்றால் கர்ப்ப காலங்களில் டி.வி. பார்ப்பது போன்ற நிலைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகள் எல்லாம் என் கருவிலிருக்கும் குழந்தையிடம் வளர வேண்டும்
3.வியாசகர் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டாரோ அந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைய வேண்டும்
4.இதை எல்லாம் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு வான இயல் புவி இயல் உயிரியலை அறிந்தானோ அந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைய வேண்டும் என்று அதிகாலை துருவ தியான நேரத்தில் விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். கர்ப்பத்தில் இருக்கும் கருவுக்குள்ளும் இதை ஊட்டுங்கள்.
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.அந்த உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அது பாயும்.
3.நம் உடலில் வளர்ச்சியாகும் அணுக்களும் இந்தச் சக்தியைப் பெறும்.

நம் கண்ணின் பார்வைக்கு அந்த வீரிய ஆற்றல் (ANTENNA POWER) உண்டு. அது தான் பரமாத்மா என்பது.
1.நம்முடைய நினைவை இந்தப் பிரபஞ்சத்திற்குள் எங்கே செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்ணுக்கு உண்டு.
3.அத்தகைய ஈர்க்கும் சக்தியைத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்
4.ஆகவே உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) அதைக் கொடுத்ததால்தான் அந்த வலிமை கொண்டு அதைப் பெறும் சக்தியும் அதை அறிந்திடும் உணர்வையும் அதை வளர்த்திடும் உணர்வையும் பெற்றேன்.

அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும்…! என்ற “முழு நம்பிக்கையுடன்…” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆகவே
1.நாம் அந்த மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற்று
2.நம்மைச் சார்ந்தோரின் பகைமை உணர்வுகளையும் தீமை உணர்வுகளையும் அகற்றும் சக்திகளைப் பெறுவோம்
3.பேரானந்தப் பெரு நிலை பெறுவோம்.

உயிர் – மெய் – மெய்ப்பொருள்

 

சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள மெய்ப்பொருளை நாம் உணர்வோம். “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி முழக்கம் இடுகின்றோம். இந்த முழக்கத்தின் உட்பொருளைப் புதிதாக வந்தவர்களும் ஏற்கனவே உள்ளவர்களும் தெளிந்து கொள்ள… தெரிந்து கொள்வதே நல்லது… நலமும் கூட…!

உயிர் நமக்குள் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ
1.அந்தக் குணங்கள் அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக்கி ஜீவணுக்களை இயக்கிக் கொண்டே உள்ளது நம் உயிர்.
3.அதனால் தான் ஓ…ம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.

நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக நம் உடலுக்குள் உறையச் செய்து கொண்டே உள்ளது.

நாம் எண்ணியது அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ உயிரின் இயக்கத்தால் அந்த உணர்வினைப் பிளந்து அதனின் அறிவின் இயக்கத்தையும் நம்மை அறியச் செய்கின்றது… மெய்ப்பொருளாக…!

கோபப்படுகிறோம் என்றால் அந்தக் கோபத்திற்குண்டான உணர்வின் செயலை அதன் உணர்வின் உண்மையை உணர்த்துகின்றது நமது உயிர்.

அதே போல்
1.மெய்ப்பொருளை… எத்தகைய பேரண்டத்தின் இயக்கமாக இருப்பினும்
2.நமது உயிர் அதனின் உள்பொருளையும் அகப்பொருளையும் மூலப் பொருளையும் பிரித்து
3.நமக்குள் அறிவின் இயக்கமாக இயக்கி நம்மை அறியச் செய்கின்றது… உணரச் செய்கின்றது… இயக்கச் செய்கின்றது…
4.உடலாக்கிக் கொண்டே உள்ளது… மெய் நமது உயிர்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

அதே சமயத்தில் அன்னை தந்தையரை எண்னி முதல் தெய்வமாக வணங்கிட வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் முதலில் நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள். நமக்கு அறிவும் தெளிவும் ஊட்டியது நம் அன்னை தந்தையே. நமக்கு குருவாக இயக்கிக் கொண்டிருப்பதும் அன்னை தந்தையரே.

1.அன்னையின் உயிரே மெய்ப்பொருளாகி அதனின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து மனிதனாக உருவாக்கி
2.அந்த மனிதன் நிலையில் தனக்குள் “தன் இனம் வளர வேண்டும்…” என்ற ஏக்க உணர்வின் உண்மைப் பொருளை உணர்த்தி
3.அதன் வழியில் நம்மை மனிதனாக உருவாக்கியது நமது தாய் தந்தை.

உயிர் கடவுள் என்றும் உணர்வால் அறிந்துணர்ந்த தன்மை கொண்டு தன் இனம் என்ற நிலைகள் தன் மக்கள்… உயிர் என்று அறிவுறுத்தப்பட்டு நம்மைக் காத்து நல்வழி காட்டி நல் உணர்வுகளை ஊட்டி நமது வாழ்க்கையை உயர்த்துவதற்கும்… மகிழ்ந்திடவும்… மனிதன் என்ற உண்மையை உணர்த்துவதற்கும்… நம் தாய் தந்தையே உயிர் கடவுளாக இருந்து… தெய்வமாக இருந்து நமக்கு நல்வழி புகட்டியது… அவர்கள் தான் முதல் குரு

ஆகவே நாம் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று முழக்கமிட்ட நிலைகளில் அவரவர்கள் தாய் தந்தையரை எண்ணி “அவருடைய அருள் பெற வேண்டும்…” என்று ஏங்குதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அமெரிக்காவில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை “கணக்கு ரொம்பத் தெளிவாகப் போடுகிறது…!” என்று சொல்வார்கள்.

கணக்கின் தன்மை போட்ட ஒரு நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அந்த ஆன்மா சந்தர்ப்பவசத்தால் ஒரு குழந்தையின் உடலுக்குள் சென்று விட்டால்
1.கணக்குகளைத் தன்னாலே ஒன்றுமே பார்க்காது
2.மள…மள… என்று போட்டுக் கொண்டே இருக்கும்.

இதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்…? போன பிறவியில் இந்த மாதிரி இருந்தது. அதனால் இந்தப் பிறவியில் இப்படிக் கணக்குப் போடுகின்றது…! என்பார்கள்.

ஆனால் ஒரு ஆன்மா இந்த உடலுக்குள் சென்ற பின் தான் இது எல்லாம் நடக்கும். இன்னொரு ஆவி உடலுக்குள் போய்விட்டால் அது கற்றுணர்ந்த உணர்வுகளை அந்த உடலிலே செயல்படுத்திக் காட்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் இதைப் பார்க்கலாம். பள்ளியில் படிக்கும் போது மாணவர்கள் இரண்டு பேர் சந்தோசமாகப் பழகுகிறார்கள்.

சந்தோசமாக இருந்த மாணவர்களுக்குள் ஒரு மாணவன் தன் குடும்பத்தில் ஏதோ காரணத்தால் குறையாகி மனது வேதனைப்பட்டு அதனால் விஷத்தை உணவாக உட்கொண்டு இறந்து விடுகின்றான்.

அதைக் கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் பாசத்தால் “போய்விட்டாயே நண்பா…!” என்று எண்ணினால் விஷம் குடித்து இறந்த ஆன்மா இவன் உடலுக்குள் புகுந்துவிடும்.

ஆக அவன் எப்படித் தன் குடும்பத்தில் வெறுப்பின் தன்மை அடைந்து விஷத்தை குடிக்கச் சென்றானோ இந்த உணர்வுகள் எல்லாம் நண்பனுக்குத் தோன்றும்.
1.அவனும் தாய் தகப்பனை வெறுக்க ஆரம்பிப்பான்.
2.விஷத்தைக் குடிக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றும்
3.இப்படி மாணவ மாணவிகள் நிறையப் பேர் உண்டு.

அதே போல ஒரு தீய மாணவனுடைய உணர்வுகள் உடலிலே புகுந்து விட்டால் அவன் என்னென்ன குற்றச் செயல்களைச் செய்தானோ அதே குற்றத்தை இயக்கும் அணுக்கள் புகுந்த உடலுக்குள் இங்கேயும் விளைந்துவிடும்.

அவன் விடும் சுவாசத்தை இவனும் வளர்ப்பான். ஏன் என்றால் பாசத்தால் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் இதை வளர்க்கும். இது எல்லாம் இயற்கையின் நியதிகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோம்.

விஞ்ஞானிகள் கண்டறியும் வழியும் மெய் ஞானிகள் கண்டறியும் வழியும்

 

விஞ்ஞான அறிவில் இன்று எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருகிறது. கற்றறிந்த உணர்வுகள் பதிவாக்கப்படும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்தறிந்து அந்தந்த உணர்வுக்குத்தக்க “எத்தனையோ நுண்ணிய நிலைகளில் செயல்படுத்தித் தான் புதிதாகக் கண்டு பிடிக்கின்றார்கள்…”

இதைப் போன்று தான்
1.ஒவ்வொரு நிலைகளிலும் மனிதன் எப்படி இயங்குகின்றான்…?
2.ஆதியிலே காட்டு விலங்குகளுடன் மனிதன் எப்படி வாழ்ந்தான்…?
3.அவன் விண்ணின் ஆற்றலை எப்படி எடுத்தான்…?
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலைப் பெற்றான்…?
5.அவனுடைய வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…?

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையில் பரவும் நிலைகள் கொண்டு நாம் அந்தப் பேராற்றல்களை நுகர்ந்தால் அந்த உணர்வினை உயிர் அணுவாக மாற்றுகின்றது.

கருத்தன்மை அடைந்து அணுத் தன்மை அடைந்தால் அந்த அணுவாக உருப்பெற்ற பின் அது உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
1.எந்த உயிரால் உணர்வுகள் நுகர்ந்து இந்த அணுவின் தன்மை பெற்றதோ
2.இந்த உணர்வின் எல்லை கடந்து அங்கே விண்ணுக்கே செல்கின்றது.

உயிருடன் ஒன்றிய பின் எந்தக் கண்களால் கவர்ந்து தன் உடலுக்குள் கவரும் சக்தி பெற்றதோ அதே கண்ணுக்கு மீண்டும் ஆணை இடும் பொழுது கண்ணின் காந்தப் புலனறிவு இந்த பூமியில் படர்ந்திருக்கும் சக்திகளை பரவி இருப்பதை நமக்கு முன் குவித்து ஆன்மாவாக்குகிறது.

அதிலிருந்து சுவாசித்து உயிரிலிருக்கும் காந்தப் புலனில் பட்டபின் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு உணவைக் கொடுத்து… அந்த உணர்வினை வளர்க்கவும்… அதை இயக்கவும் செய்கின்றது.

இயற்கை இவ்வாறு தான் இயக்குகின்றது.

இதைத்தான் குருநாதர்
1.உன்னை நீ அறிந்து பார்…! நீ இயக்குகின்றாயா…? நுகர்ந்த உணர்வு உன்னை இயக்குகின்றதா…?
2.எதை எண்ணி நீ நுகர்கின்றாயோ அதன் உணர்வு தான் உன்னை இயக்குகின்றது.
3.ஆகவே நீ எதை நுகர வேண்டும்…?

சந்தர்ப்பத்திலே பகைமையான உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் தாக்குகின்றது. உடலிலிருக்கும் நல்ல அணுக்களைச் சரியாக இயக்க விடுவதில்லை.

தீமையான அணுக்கள் உருவாகி விட்டால் இதனுடைய பெருக்கம் அதிகமாகும் பொழுது நல்ல அணுக்கள் சுருக்கம் அடைகின்றது. நல்ல அணுக்கள் குறையப்படும் பொழுது தீய அணுக்கள் வலிமை பெறுகின்றது.

அது வலிமை பெற்றால் அதனுடைய செயலாக்கங்கள் எதுவோ அதனுடைய அமிலங்கள் உடலில் படரப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட தசையின் பாகங்களைக் கரைத்து விடுகின்றது.

அப்படிக் கரைந்து விட்டால் அதனால் உடல் உறுப்புகள் எப்படிக் குறைகின்றது…? அந்த உணர்ச்சிகள் வரும் பொழுது
1.வேதனை என்ற சோக ஒலிகளைக் அலைகளை கேட்டால்
2.அந்த அதிர்வே நமக்குள்ளாகி… அதன் உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

அந்த அணுக்களை அதிகமாக வளர்த்து விட்டால் நல்ல அணுக்களுக்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்தி விடுகிறது. மனிதனைச் சீர்குலையைச் செய்து உடலுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.

அத்தகைய தீமைகளை மாற்றுவதற்குத் தான் உன்னை நான் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்தேன். இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள…!

அதிலிருந்து மீள எண்ணியவர்கள் எத்தனையோ பேர். அதிலே தோல்வி அடைந்தவரும் பலர்.

1.ஆனாலும் அதிலே முழுமை பெற்று விண் சென்ற துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்கே உனக்குள் இந்த உண்மைகளை உணர்த்துகின்றேன்
2.எல்லாரையும் நீ அதைப் பெறச் செய்…! என்றார் குருநாதர்.

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து சொல்வதற்கும் உண்டான வித்தியாசம்

 

தியானத்தில் வீற்றிருக்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் சேர்ந்து சொல்கின்றோம். ஒருவருக்கொருவர் பண்பட்ட நிலைகளில்
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்
2.அதே போல நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
3.உங்கள் உடல் நோய் நீங்க வேண்டும் என்று நான் சொல்கின்றேன்.
4.அதே போல என் உடல் நோய் நீங்க வேண்டும் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்.

இதை அனைவரும் சொல்லப்படும் பொழுது
1.செவி வழி இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு…
2.கண்ணிலே ஈர்க்கப்பட்டு ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கச் செய்து
3.ஒன்றுபட்ட உணர்வின் தன்மை உடலுக்குள் கருவாக மாற்றும்.

கூட்டுத் தியானங்களில் இதைப் போல் எடுத்தோம் என்றால் வலிமை கூடுகிறது. தீமைகளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கின்றது. கூட்டமைப்பாகச் சொல்லும் பொழுது இருளைப் போக்கும்.

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்று
1.ஏகோபித்த வலு கொண்டு சொல்லும் பொழுது கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளை உடலுக்குள் ஊட்டுகிறது… இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது
3.உடலுக்குள் அந்த அணுவின் தன்மை கருவாக மாற்றுகின்றது.

ஒவ்வொரு குடும்பதிற்கும் நாம் சென்று கூட்டுத் தியானங்களை அமைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் தொழில் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்.

நமக்குள் அந்த வலிமை பெருகுகிறது. அந்தக் குடும்பத்திலும் இந்த உணர்வலைகள் அங்கே பதிவாகும் போது அவர்களுக்கு அது நன்மையாகின்றது.

ஒருவரால் தூக்க முடியாத பொருளை நான்கு பேர் சேர்ந்து அதைத் தூக்குகின்றோம் அல்லவா…! அதே போன்று அந்த அருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்த வலுவைக் கூட்டி
1.எல்லோரும் சேர்ந்து மகரிஷிகளின் ஒலிகளை வீட்டிற்குள் பரவச் செய்தோம் என்றால்
2.அந்த வீட்டிற்குள் ஏற்கனவே பதிவாகியுள்ள சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் அது ஒடுங்கும்.

இந்த உடலுக்குள் மட்டுமல்ல…! எந்த வீட்டில் நாம் வாழுகின்றோமோ நமக்குள் விளைந்த உணர்வுகள் (எல்லா விதமான உணர்வுகள்) வீட்டிற்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

அந்தப் பதிவை நாம் மாற்ற வேண்டும்.
1.அதை மாற்றுவதற்குத் தான் கூட்டுத் தியானங்களை இல்லம் தோறும் வைக்க வேண்டும் என்று சொல்வது.
2.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

தபோவனத்திலும் இது போன்று தான் கூட்டுத் தியானம் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகள் அங்கே ஒன்று குவிக்கப்பட்டு எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லிப் பதிவாக்குகின்றோம்.

அந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது, எல்லோரும் வெளிவிட்ட அந்த மூச்சலைகள் அங்கே படர்ந்திருக்கப்படும் பொழுது
1.அதை எப்பொழுது எண்ணினாலும் அந்த உணர்வலைகள் நமக்கு உடனே கிடைக்கிறது
2.அதை நுகர்ந்து உடலுக்குள் இயக்க சக்தியாக மாற்றும் போது தீமையிலிருந்து நம்மை அது விடுபடச் செய்யும்.

அந்தக் கூட்டமைப்பை அவசியம் உருவாக்க வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து இந்த உணர்வின் தன்மை நமக்குள் விளைய வைத்து நம் உடலுக்குள் கலக்கப்படும் பொழுது அனைத்தும் ஒன்றாகச் சேர்கிறது.
1.ஒன்றுபட்ட இயக்கமும் தெளிவான நிலைகள் பெறுவதற்கும் உதவுகிறது
2.தீமையை அகற்றிடும் சக்தியும் நமக்குக் கிடைக்கிறது.

குரு பூஜை அன்றும் பௌர்ணமி நாட்களிலும் மற்ற கூட்டுத் தியானம் இருக்கும் போதெல்லாம் துன்பங்களைப் போக்குவதற்கும்… பேரின்பம் பெறும் அந்த உணர்வை வளர்ப்பதற்கும்… அந்த அணுக்களைப் பெருக்குவதற்கும்… தீமையான அணுக்களைக் குறைப்பதற்கும் அது உதவும்.

தீமையான உணர்வுகள் ஒரு பத்து அணுக்கள் இருக்கிறது என்றால்
1.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்து அதைக் கூட்டிப் பெருக்க வேண்டும்.
2.இதனின் வலு கூடும் பொழுது அது குறையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் நான் (ஞானகுரு) மங்களுரில் இருக்கும் போது ஒரு நண்பர் வீட்டுக்குப் போனேன்.
1.அவருடைய சம்சாரம் எப்பொழுது பாத்தாலும் அவரைப் பறண்டிக் கொண்டே இருக்கும்.
2.அது எதற்கெடுத்தாலும் சும்மா நய்…நய்… என்று அழுது கொண்டே இருக்கும்.

அவர்கள் எங்கே போனாலும் ஒன்றும் செயல்படுத்த முடியாது. அவர்கள் வீட்டில் எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டமாகிக் கொண்டே இருக்கும்.

எனக்குத் தோசை வாங்கிட்டு வாடா.. அது வாங்கிக் கொண்டு வாடா.. இதை வாங்கிக் கொண்டு வாடா..! என்று சொல்கிறது. எத்தனை மணியாக இருந்தாலும் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அது வரை இங்கே உட்கார விடுவதில்லை…! உன்னை நான் கெடுத்தே போடுவேன். நீ எந்தத் தொழில் செய்தாலும் உன்னால் முடியாதுடா…! என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

இப்படி இருக்கும் போது இந்தப் பேயை ஒட்ட வேண்டும் என்று பல முயற்சி எடுத்தார்கள். முனியப்பன் கோவில் அந்தக் கோவில் இந்தக் கோவில் என்று பல கோவில்களுக்குச் சென்று பல ஆடுகளை எல்லாம் பலி கொடுத்தால் இதை நிறுத்தி விடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை.

கடைசியில் என்ன ஆனது..? ஒரு மந்திரவாதியிடம் போன உடனே அவர் நான்கு கோழியை வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். அதில் மூன்று கோழியை அடுப்பாக வைத்தார்.

ஒரு கோழியை அறுத்து அதன் மீது வைத்துச் சமைத்தார்கள். நெருப்பை வைத்து எரிக்கிறார்கள். மேலே வைத்தது வேகுகிறது. வெந்த பின்பு அதை எடுத்து அப்படியே வீசினால் அந்த பேய் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு அப்படியே போய்விடுமாம்…!

நிலைமை என்ன ஆனது…? பத்தாயிரம் செலவழித்தது தான் மிச்சம். இது போக… இராஐஸ்தானுக்குப் போய் அங்கேயும் என்னென்னமோ செய்து பார்த்திருக்கின்றார்கள். ஆனால் ஒன்றும் ஆகவில்லை.

கடைசியில் நான் (ஞானகுரு) சித்தாகி அங்கே போயிருக்கும் போது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு வந்தது.

இந்த எட்டிச் செடி… அது… இது… எல்லாம் போட்டால் சரியாகப் போகும் என்று “மந்திரவாதிகள் சொல்கிறார்கள்…!” என்றார்கள். அது எல்லாம் முடியாது…! என்று சொன்னேன்.

காய்ந்த மிளகாயைப் பொடி செய்து எடுத்துக் கொண்டு வாருங்கள்…! என்று சொன்னேன். நெருப்பைக் கொண்டு வாருங்கள்…! என்று சொன்னேன். அந்த நெருப்பிலே இந்த மிளகாயைப் போட்டு அந்த நெடிக்கு நேராக அந்த அம்மாவின் முகத்தை வைக்கச் சொன்னேன்.

மிளகாய்க்கு மேலே நேராக முகத்தை வையம்மா…! என்று சொன்னேன்.

எனக்கு எல்லாம் தெரியும்… நீ வை பார்க்கலாம்…! என்று என்னிடம் சொல்கிறது.

இந்த மிளகாயைப் பொடி செய்து போட்டோம் அல்லவா..! அந்த நெடி தாங்காமல் எங்கே இருந்த எல்லோரும் ஓடுகிறார்கள். பக்கத்தில் இருந்தவர்களும் விலகி ஓடுகிறார்கள். என்ன இந்த மாதிரிப் போடுகிறீர்கள்…? என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் அந்த அம்மா அதற்கே நேரே முகத்தைக் காட்டிக் கொண்டு “இன்னும் போடு…! எல்லாம் ஓடட்டும்..!” என்று சொல்கிறது.

அப்புறம் அவர்களுக்கு விளக்கத்தைச் சொன்னேன். ஒரு ஆவியின் உணர்வு உடலுக்குள் சென்று விட்டால் அதை உங்களால் அப்புறப்படுத்த முடியாது என்றேன்.

உன் மனைவி உடலில் இருப்பது “உன் அண்ணனின் ஆன்மா தான்…!” என்று சொன்னேன். உன் அண்ணனை நீ எந்தந்த அளவுக்கு இம்சித்தாயோ பழி தீர்க்கும் உணர்வோடு உன் சம்சாரத்துக்குள் இருக்கிறது என்று விபரத்தைச் சொன்னேன்.

1.இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு (அண்ணனின் உயிரான்மா) அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரமாகப் பெற வேண்டும்.
3.இந்த உடலிலேயே நீ உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அந்த உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று
4.இந்தப் பெண்ணை நீ இந்த உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று தியானியுங்கள்..! என்று சொல்லி இந்த உணர்வைப் பதிவு செய்தேன்.

நான் பதிவு செய்தபடி அவர் அதைச் செய்த பின் அந்த அம்மாவிற்கு எல்லாம் நல்லதாக ஆனது. நிறைய உதவிகள் வந்தது. அந்த ஆளுக்கு ஜே..ஜே..! என்று எல்லாம் வந்தது.

அந்த வளர்ச்சிகள் வளரப்படும் போது அந்த ஆளுக்குப் புத்தி என்ன ஆனது…! பணம் வர ஆரம்பித்ததும் தவறுகள் நிறையச் செய்ய ஆரம்பித்தார். “நானே தான் ராஜா…!” என்று சொல்ல ஆரம்பித்தார்,

அண்ணணாவது… கத்திரிக்காயாவது..! அவன் தான் என்னைக்கோ இறந்து போய்விட்டானே… நீ என்ன பெரிய இது…? என்றார். அவ்வளவு தான் மறுபடியும் வந்துவிட்டது.

1.உடலுக்குள் ஆன்மா இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைச் செருகேற்றி அதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் அடைய வேண்டும் என்ற உணர்வைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் அதைச் செய்யாதபடி அதனின் உணர்வுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தவுடன் என்ன ஆனது…? மறுபடியும் அது பிடித்துக் கொண்டது.

எது எது எல்லாம் நல்ல வழியில் வளர்ச்சிக்கு வந்ததோ மறுபடியும் அதை எல்லாம் வடிகட்ட ஆரம்பித்து விட்டது. எல்லாச் செல்வங்களும் கரைய ஆரம்பித்தது.

ஆக ஒரு ஆவி உடலுக்குள் வந்தால் அதனின் இயக்கங்கள் இப்படித்தான் இருக்கும்…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை நாம் கேட்டறிந்து நுகர்கின்றோம். நமது சிரசின் பாகம் உயிர் இருக்கும் இடம் ஈஸ்வரலோகமாகின்றது. நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) அனைத்தும் அங்கே தான் ஜீவன் பெறுகிறது.

நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கருவாகப்படும் போது இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது.

ஏனென்றால் எந்த உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தோமோ அதன் உணர்வின் தன்மை கருவாக்கி அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அந்த வாழ்க்கை வாழச் செய்கிறது.

காரணம்… நோய்வாய்ப்பட்டவரைப் பார்த்து நாம் பரிவுடன் கேட்டறிந்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம். அவரைப் பற்றி எண்ணி மீண்டும் மீண்டும் அதை நாம் நுகரப்படும் போது அதனின் கருக்கள் நம் உடல்களிலே இந்திரலோகமாக உருப் பெறுகின்றது.

அந்த நோயாளியின் உடலில் எந்த நோயின் அணுக்கள் உருவாகி அவர் துயரப்பட அது காரணமானதோ அதே உணர்வு கொண்டு நம் உடலிலும் அத்தகைய நோயின் அணுக்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

நாம் இப்படிப் பலருடைய நோய்களின் உணர்வுகளைக் கவர நேர்ந்தால் அதன் வழி கொண்டு நமக்குள் அந்த அணுக்கள் பெருக்கம் அடைந்து விடுகின்றது.
1.அது பிரம்மலோகமாக மாறிவிடுகின்றது.
2.தீமைகளை உருவாக்கும் அணுவின் தன்மையை நமக்குள் பெருக்கும் தன்மை வந்து விடுகின்றது.

இவ்வாறு தீமைகளை உருவாக்கும் தன்மை அதிகரிக்கும் போது ஒரு சிலரைப் பார்க்கலாம்… சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும். இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும். ஆஸ்த்மா நோய் இருக்கும். T.B. இருக்கும்.

1.ஆஸ்த்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்புக்கு உண்டான மருந்தைச் சாப்பிட்டால் அது ஒத்துக் கொள்ளாது.
2.அதே சமயத்தில் ஆஸ்த்மா நோய்க்குண்டான மருந்தைச் சாப்பிட்டால் இரத்தக் கொதிப்புக்கு ஒத்துக் கொள்ளாது.
3.ஆனால் சர்க்கரைச் சத்திற்குண்டான மருந்தைச் சாப்பிட்டால் அந்த இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது.

இப்படித் தனித்தனித் தன்மை ஆகி நம் உடலுக்குள் பல விதமான போர் முறைகளை ஆரம்பித்து விடுகிறது. எத்தகைய மருந்துக்கும் அது கட்டுபடாத நிலையாகின்றது.

அந்த மூன்றுக்கும் சேர்த்து மருந்துகளைக் கொடுக்கும்போது நமது கிட்னி – சிறுநீரகங்கள் என்ன ஆகின்றது…?

விஷம் கலந்த கடுமையான மருந்துகளை நாம் சாப்பிடும்போது கிட்னி இந்த விஷத்தையைப் பிரிக்கும் தன்மை இழந்து உப்புச் சத்தாக மாறி விடுகிறது.

உப்புச் சத்தும் சரக்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் இதே போன்ற பல நிலைகள் வரப்படும்போது மனிதனுடைய உறுப்புகள் சீராக இயங்காது மனித உறுப்புகள் அனைத்தையும் நலிவடையச் செய்துவிடுகின்றது.

1.மனித உடலில் சீராகச் செயல்படும் உறுப்புகளை இயக்கும் அந்த அணுக்கள் பழுதடையும் போது
2.அதில் விளைந்த நுண் அணுக்களின் தன்மை விஷம் கொண்டதாக உயிராத்மாவில் சேர்கின்றது.

ஆகவே இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர முடியாத தன்மை ஏற்படுகின்றது. அப்படி வரப்படும்போது தான் உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது. மீண்டும் மனிதனாகப் பிறக்கும் தகுதியை இழக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் வாழ்க்கையில் எந்த நோயாளியைச் சந்தித்தாலும் அவர்களைப் பற்றி அறிய நேர்ந்தாலும் அதை உடனடியாக மாற்றிப் பழக வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி நோயாளிகளைப் பற்றி நுகர்ந்திருந்தாலும் அவர்கள் துன்பப்பட்ட துயரப்பட்ட வேதனையான உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து…
1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.

கிட்னி தொந்திரவு உள்ளவர்கள் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் “ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை கிட்னிக்குள் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி பெறும்.
1.நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும் ஆற்றல் பெறும்.
2.உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் அதை உருவாக்கிய அணுக்களும் சீராக இயங்கத் தொடங்கும்.

சலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது
3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

இதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குரு வழியில்… மகிழ்ச்சியான உலகை நாம் உருவாக்குவோம்

 

விஷத்தை வென்றிட்ட துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்று நமக்குள் வளர்த்து
1.இனி வரக்கூடிய ஆண்டுகளை மகிழ்ச்சி பெறும் ஆண்டுகளாக குரு வழியில் நாம் உருவாக்குவோம்
2.உடலில் பேரின்பத்தைப் பெருக்கும் அணுக்களாக உருவாக்குவோம்
3.பெருக்கி உலக மக்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதியாக வளரச் செய்வோம்… வளர்ப்போம்.
5..உலக மக்கள் தெளிந்து வாழ வாழ்த்துவோம்… தியானிப்போம்… தவமிருப்போம்
6.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அனைவரையும் பெறச் செய்வோம்
7.மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ச்சி பெறும் நிலையினை அனைவருக்குள்ளும் உருப்பெறச் செய்வோம்
8.இந்த உலகம் முழுவதும் அதைப் பரவச் செய்து எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்து
9.அவர்களிடம் இருந்து வெளிப்படக்கூடிய அந்த உணர்வுகளை இந்த பூமி முழுவதும் பரவச் செய்வோம்.
10.அதன் மூலம் இந்தக் காற்று மண்டலத்தை பரிசுத்தப்படுத்துவோம்… அந்த பரிசுத்தமான உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்
11.ஒன்றி வாழும் நிலையும் சகோதர தத்துவமும் சமத்துவமும் .மக்களுக்குள் வளர அருள் ஞானத்தைப் பெருக்குவோம்.

ஒன்றுபட்டு வாழ்வோம் தீமையை அகற்றுவோம் உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்ப்போம்.

உலக மக்கள் என்று சொன்னாலும் “அது உயிரான ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் தான்…”

“ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்…” என்று நாம் அன்பு கொண்டு செய்தால்… மனிதன் என்ற பகைமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ்ந்திடும் உணர்வினை வளர்த்திட… அரும்பெரும் சக்தியாக நமக்குள் அது வளரும்.

இதற்கு வலிமை சேர்க்க… கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானத்தில் வலுப்பெற்றால் அது அனைத்தும் கூடி வரும். பகைமை வராது தடுக்கலாம். உலக இருளை நீக்கும். நஞ்சினை மாற்றிடும் அருள் ஞான உணர்வுகள் உருப்பெறும்.

அருள் ஞானத்தைப் பெருக்கிடும் அந்த அருள் சக்தியை நாம் பெறுகின்றோம். அருள் சக்தி பெற மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தியானிப்போம்.

1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைப்போம்
2.அவர்கள் உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலையைச் செயல்படுத்துவோம்.

அவர்கள் ஒளியான உணர்வுகளை நாமும் நுகர்வோம். நமக்குள் பேரருளைப் பெருக்குவோம். அறியாது சேர்ந்து இருளை மாற்றுவோம். ஒளியான உணர்வை உருவாக்குவோம். பிறவி இல்லாத நிலை அடைவோம். பேரருளை நமக்குள் ஏங்கிப் பெறுவோம்.

நம் உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெருக்கி
1.நம் உயிரான ஈசனுக்கு அந்த மகிழ்ச்சியை ஊட்டுவோம்.
2.அவன் அருளை நாம் பெற்று…
3.அவனுடன் என்றும் பிரகாசமாக… என்றும் ஏகாந்தமாக… ஏகோபித்த நிலையாக உயிருடன் ஒன்றி
4.அவன் எவ்வாறோ… அவன் வழியே… நாமும் உடல் பெறும் உணர்வுகள் ஒளியாக மாறி
5.ஏகாந்த நிலையை… ஏகாதசி என்ற நிலையை… பத்தாவது நிலையை… அந்த முழுமையை நாம் அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பன்றி தன்னுடைய உடலில் தீமைகளை வென்றிடும் நல்ல உணர்வின் தன்மைகளை தன் வாழ் நாள் முழுவதும் சுவாசிக்கின்றது. சேர்த்துக் கொண்ட நல்ல உணர்வுக்கொப்ப… பன்றியை விட்டு வெளி வந்த உயிரான்மா பரிணாம வளர்ச்சியாகி மனிதனாகப் பிறக்கின்றது.

இதைப் போல நம்முடைய மனித வாழ்க்கையில் துயர் என்ற நிலைகள் வரப்படும் போது
1.அந்தத் துன்பங்களையும் தீமைகளையும் அகற்றி
2.அதையெல்லாம் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்து தீமைகளை உருவாக்கும் அணுக்களை அடக்கி அதை மடியச் செய்யப்படும் போது எந்தத் தீமை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அதிகமாக அதிகமாக…
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர…
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைவோம்.

அங்கே சென்றால் இந்த உடலில் பெற்ற நஞ்சினை நீக்கி விட்டு உணர்வினை ஒளியாக மாற்றி அழியா ஒளியின் சரீரம் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சத்திலும் சரி… அகண்ட அண்டத்திலும் சரி… அங்கிருந்து வரும் கடுமையான விஷத் தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது தான் அந்தத் “துருவ நட்சத்திரம்….!”

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சூரியனோ மற்றவைகளைக் கவர்ந்து பிரபஞ்சத்தை இயக்க உதவினாலும்
1.அந்தச் சூரியனே ஒரு காலம் மடிய நேரும்.
2.அதே போல் பல தீமையின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் நுகர நேர்ந்தால்
3.பிற மண்டலங்களில் இருந்து இதுவும் மடிந்து விடுகின்றது.

ஆனால் இதிலே உயிர் உருவாகி உணர்வின் தன்மையில் வளர்ச்சி பெற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலிருந்து தீமைகளை அகற்றத் தவறினால் தேய்பிறை என்ற நிலை வருகின்றது.

ஆரம்பத்தில் சூரியன்… தான் வளர்ச்சி அடையப் பல தீமைகளை ஒளி நிலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

சூரியன் ஒளிக்கதிராக மாற்றியது போன்று இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய ஒரு உயிரணு (நாம்) பல விதமான உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வினை ஒளியாக மாற்றும் தகுதியான மனிதச் சரீரம் பெறுகின்றது.

மனிதனான நிலையில் அறிந்து… உணர்ந்து… தெளிந்து… தெளிவாக வாழ்ந்திடும் அந்த உணர்வின் தன்மை பெற்ற பின்…
1.சந்தர்ப்பத்தால் நுகரும் தீமைகளை (முதலிலே கூறியபடி) நாம் நுகர நேர்ந்தால்
2.தீமையின் உணர்வுகளுக்கு அழைத்துச் சென்று மனிதனைத் தேய்பிறையாக ஆக்கிவிடுகிறது.

ஆனால் நாம் அந்த அருள் என்ற உணர்வினை நமக்குள் வளர்த்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உடலுக்குள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி
1.இந்த உடலைப் பிளந்து விட்டு
2.உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வினை உணவாக எடுத்து ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

சூரியன் அழியலாம்… ஆனால் உயிரணுவாகத் தோன்றி உலகின் உணர்வை அறிந்து தனக்குள் ஒளியின் உணர்வாக உருவாக்கி விட்டால் அந்த ஒளியை எவையும் அழிக்க முடியாது.

1.ஆகவே நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்ற இந்த உயிர்
2.இந்த உடலையே ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு
3.அந்த ஒளியின் தன்மையையே உணவாக உட்கொண்டு
4.பேரொளியை வெளிப்படுத்தும் நிலை அடைகின்றது.

அந்த நிலையை மனிதனாகத் தோன்றிய நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

எமது உபதேசங்களை நீங்கள் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ள வேண்டிய சரியான முறை

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வெறும் சொல்லாகச் சொல்வதல்ல.
1.ஓ…ம் என்பது நமது உயிர்… உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது…
2.ஓ…! நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சக்தி ம்…! என்று நம் உடலுடன் ஐக்கியம் ஆகிறது.

அதே போல நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை உடலுக்குள் இருக்கும் எலும்பு – மேக்னட் அதற்குள் இருக்கும் ஊன் அது ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் “ஜீவன் பெறச் செய்கின்றது…” அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா.

குருதேவா… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்த குணங்களும் நம் உடலில் இயக்கப்பட்டு அதை ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருந்தது நமது உயிர். ஆகவே “குருவாக இருப்பதும்…” நமது உயிரே.

அதைத்தான்…
1.ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும்
2.அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி
3.அந்த ஏக்க உணர்வுடன் தான் அனைவரும் சொல்ல (எண்ண) வேண்டும்.

ஒரு மைக் நாம் பேசுவதை… நாடாக்களில் உள்ள முலாமும் முலாமுக்குள் மறைந்துள்ள காந்தமும் அதைக் கவர்ந்து எப்படிப் பதிவு செய்து கொள்கின்றதோ அதைப் போல நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளில் இருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயம் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் கிளர்ந்து எழுகின்றது. காற்றிலிருந்து அந்த உணர்வினை நம் உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது,

1.தனது ஆன்மாவாக ஆக்க வேண்டும் என்றால் நாம் எண்ணும் எண்ணம் ஊழ் வினையாகப் பதிவாக வேண்டும்.
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊழாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்.
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டி வரும்.
5.நாம் எண்ணிய உணர்வின் தன்மையைச் சுவாசித்து அந்த உணர்வுக்கொப்ப நம் உயிரின் தன்மை இயங்குகின்றது.

ஆகவே… ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் அந்த உயிருடன் ஒன்றி எண்ண வேண்டும்.

இப்பொழுது யாம் எதை உபதேசிக்கின்றோமோ அதைக் கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ் வினையாக எலும்புக்குள் பதிவாகிறது. அப்படிப் பதிவாகும் பொழுது நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வலைகளை
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நான் எண்ணி… அதை நான் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாகப் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கூர்ந்து விண்ணின் ஆற்றலைப் பெருக்கி சுவாசித்து
3.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக இப்போது வெளிப்படுவதை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள் என்றால்
4.அந்த உணர்வின் சத்து உங்களுக்குள் ஊழ் வினையாகப் பதிவாகிறது.

உங்களுக்குள் அப்படிப் பதிவாகும் பொழுது மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் எந்த ஞானியின் அருளாற்றல் உங்களுக்குள் பதிவாகின்றதோ அதை நீங்கள் பெற முடியும்.

உங்களுக்குள் அப்படிப் பதிவாகும் பொழுது மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் எந்த ஞானியின் அருளாற்றல் உங்களுக்குள் பதிவாகின்றதோ அதை நீங்கள் பெற முடியும்.

ஞானிகள் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் தங்களை அறியாது வந்த தீய வினைகளை அவர்கள் மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி இருளை நீக்கி ஒளியின் தன்மையாக வாழ்ந்தார்களோ
2.அதே உணர்வின் ஆற்றலை நாமும் பெற முடியும்… அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வயல்களில் நாம் விளைய வைத்த நல்ல பயிர்களை அறுவடை செய்து முடிந்த பின் அந்த வித்துக்கள் அடியோடு மாய்ந்து விடுகின்றது. திருப்பி அதுவாக முளைத்து வருவதில்லை.

ஆனால் மற்ற புல் பூண்டு தாவர இனங்களின் செடிகள் பூமிக்குள் வெகு ஆழத்தில் பதிந்து இருக்கின்றது. பூமியின் வெப்பத்தால் அந்த விதைகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றது.

1.மழை பெய்தால் போதும்…
2.நீர் சக்தியை நுகர்ந்து அந்தச் செடி (களைகள்) பூமியை விட்டு வெளியே வருகின்றது.
3.மழை பெய்த இரண்டு நாளுக்குள் புல் பூண்டுகள் கருவுற்று முளைத்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் தீமை என்ற நிலைகள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிந்துள்ளது. நாம் நன்மை என்ற நிலைகளில் வளர்த்திருந்தாலும் அது எளிதில் கரைந்து விடுகின்றது. அது ஆழமாக இருப்பதில்லை.

வேதனை கோபம் போன்ற உணர்வுகள் வலுவான நிலைகள் கொண்டு நமக்குள் அந்த ஆழமாக ஊடுருவியிருப்பதனால் நமது வாழ்கையில் சந்தர்ப்பத்தால் வேறொருவரின் உணர்வுகளைக் கேட்கவோ அல்லது பார்த்து நுகர நேர்ந்தால் போதும். அது மறுபடியும் ஜீவன் பெற்றுவிடும்.

உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று “தந்தை இறந்து விட்டார்…!” என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை எண்ணி
1.அப்பா இருந்தார்… ஆனால் இப்படிப் போய்விட்டார்…! என்றோ
2.அவர் இப்பொழுது இருந்தால் கஷ்டமெல்லாம் இருக்காது… ஆனால் அவர் இல்லையே..! என்று
3.ஏக்கமாக மீண்டும் மீண்டும் அவரை எண்ணினால் போதும்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எப்படித் துயரங்கள் பட்டாரோ அதே உணர்வின் துயரங்களை நமக்குள்ளும் இயக்கத் தொடங்கி விடுகின்றது.
1.அவர் கடைசிக் காலத்தில் நோயால் மிகவும் அவதிப்பட்டிருந்தால்
2.அந்த நோயும் நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

ஏனென்றால் நாம் அவரைப் பற்றி நினைக்கும் போது “காற்றுக்குள் படர்ந்துள்ள அவரின் உணர்வுகள் கவரப்பட்டு…” அந்த உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

(1.ஏனென்றால் நமக்குள் அவரைப் பற்றிய பதிவு இருக்கிறது.
2.அவதிப்பட்ட உணர்வும் இருக்கிறது.
3.எண்ணியவுடனே அந்த வித்துக்கள் ஜீவன் பெற்று இயக்கி அது வளரத் தொடங்குகிறது)

இதை போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்த தந்தையின் உயிரான்மாவை “உந்தித் தள்ளி…” அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணைக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதிகாலையில் துருவ தியானத்தில் எடுக்கப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகப் பரவத் தொடங்குகின்றது.

அந்த வலிமை பெற்ற பின் அந்தத் தீமை என்ற உணர்வுகளைத் தள்ளி விடுகிறது.

உதாரணமாக… நெல்லை நாம் வயலில் பயிரிட்டாலும் அதனுடன் சேர்ந்து புல் பூண்டு எல்லாம் வருகின்றது. வயலிலே “தண்ணீர் அதிகமாகக் கட்டியிருந்தால்…” அந்தப் புல் பூண்டுகள் வளர்வதில்லை. ஏனென்றால்
1.நீரில்லாது காய்ந்து வறட்சியாக இருந்தால் புல் பூண்டுகள் வளர்ச்சி பெறுகின்றது.
2.தண்ணீரை அதிகரிக்கப்படும் போது வளர்ந்து வரும் தழைகள் அழுகி விடுகின்றது… களைகள் வளர்வதில்லை.

தண்ணீரை நிறுத்திய பின் நெல் வயலைப் பார்த்தால் ஏராளமாகப் பல களைகள் முளைத்து விடுகின்றது. பார்க்கலாம் நீங்கள்…!

இதைப் போன்று தான் நம் உடலிலும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால்
1.நம் ஆன்மாவில் அதை அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
2.எத்தகைய தீமையான வித்துக்களையும் வளர விடாது
3.ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

வயல்களைப் பண்படுத்தி அந்த நெல் மணிகளை எப்படி நாம் எடுக்கின்றோமோ இதை போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பேரருள் பேரொளியாக நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் “ஏற்கனவே பதிவானது அழிவதில்லை…” பேரருள் உணர்வினை நமக்குள் பெருக்கிய பின் மற்ற தீமைகளைச் சிறுத்து இந்த உணர்வினை ஒளியாக மாற்றினால்
1.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
2.தங்கத்திலே திரவகத்தைச் சேர்த்துச் செம்பையும் வெள்ளியையும் கரைப்பது போன்று தொக்கிய நஞ்சுகளைக் கரைத்து விடலாம்
3.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே பேரானந்த நிலையில் ஒளியாக வாழ முடியும்.

ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்

 

நமது உயிர் நட்சத்திரத்தின் தன்மை பெற்றது தான். ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் அதனுடைய தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதி “அதிக அழுத்தமாகும் பொழுது” உயிரணுவாக உருவாகிறது.

அதே போல மின்னல்கள் ஒலிக்கற்றைகளாக வீசப்படும் பொழுது பலவாறு கல் மண் இவைகளில் அது கலந்து விடுகின்றது. அவ்வாறு கலந்து விட்டால் மண்ணிலிருந்து விளையும் தாவர இனங்களிலும் அது கலக்கின்றது.

1.நட்சத்திரங்களின் இயக்கம் எப்படி இந்த உயிரணுவிற்குள் ஒன்றுடன் ஒன்று கலவையாகித் துடிக்கின்றதோ இது போல
2.இரண்டு நட்சத்திரங்களின் துடிப்பின் உணர்வலைகள் படரப்படும் பொழுது
3.தாவர இனங்களில் எதனின் உணர்வு… எதனின் உணர்ச்சி கொண்டு அதிகரிக்கின்றதோ அதன் வலு கொண்டு தான் தாவரங்கள் விளைகின்றது.
4.கல் மண்ணும் இப்படித்தான் விளைகின்றது.

இதை நமது உயிர் இந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து உணவாக உட்கொள்ளும் பொழுது உயிரின் துடிப்பு கொண்டு “மூன்று…” என்ற நிலை வரும்.

இரண்டு நட்சத்திரத்தின் உணர்வலைகள் எதிர்நிலையாகும் பொழுது துடிப்பின் இயக்கச் சக்தி பெறுகின்றது
1.அந்தத் தாவர இனத்தை நுகரப்படும் போது உயிரிலே படும் போது தசைகள் உடலாகின்றது.
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எண்ணம் ஆகின்றது.
3.எண்ணத்தின் உணர்வுகள் அணுத்தன்மையாக நம்மை இயக்கத் தொடங்குகிறது.

இப்படித்தான் இயற்கையின் இயக்கங்கள்… மாற்றங்கள் வருகின்றது.

1.கடவுள் என்ற தன்மை எதுவும் ஒன்று இல்லை…!
2.அதாவது ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்.

அதாவது… மூன்று நிலைகள் கொண்ட உணர்வின் சத்தாகும் பொழுது அது எந்தச் சத்தைக் கவர்ந்ததோ அதனை… அதே உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

இப்படிப் பல உணர்வுகள் சேர்த்துத் தனக்குள் வருவதை அகஸ்தியன் தன் வாழ்நாளில் அந்த நட்சத்திரங்களின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
1.உயிர் எப்படி உருவானதோ அதே போல
2.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வினைத் தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுக ஏற்றி
3.மின்னல்கள் வெளிப்படும்போது அதை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து உடலில் மாற்றினான்.

உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி அமைத்துத் தான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதற்கு உணவு எது…?

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதைத் தான் உணவாக எடுத்துக் கொள்கிறது. அதன் வழியில் தான் இன்றைக்கும் நஞ்சினை மாற்றி ஒளிச் சுடராக வீசிக் கொண்டுள்ளது.

சூரியனோ தனக்குள் இருக்கும் பாதரசத்தால் நஞ்சினை மோதிப் பிரித்து விடுகின்றது. மனித உடலோ உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது.

1.நஞ்சினை நீக்கிவிட்டால் நல் உணர்ச்சிகளை ஊட்டும் ஒளியின் உணர்வுகள் நமக்குள் மிஞ்சுகின்றது.
2.சர்வத்தையும் அறிந்து கொள்ளும் சக்தி பெறுகின்றது… அது தான் கார்த்திகேயா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகத்தில் எந்த நாடு விஞ்ஞானத்தில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதோ “அந்த நாடு” மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும்…! என்ற உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்காக அணு குண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் நியூட்ரான் என்ற சில விஷத் தன்மையான குண்டுகளையும் விஷக் கிருமிகளைப் பரப்பக்கூடிய குண்டுகளையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

1.தங்களுடைய நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியாக அதை எல்லாம் ஒரு நாடு செய்தாலும்
2.மற்ற நாடுகளும் அதே போல ஆயுதங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று
3.உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அந்த ஆயுதங்களைத் தயார் செய்து கொண்டுள்ளார்கள்.

அப்படி எல்லா நாடுகளிலும் அணு ஆயுதங்களை உருவாக்கப்படும் போது அதனால் வெளி வரும் விஷத் தன்மைகளை எல்லாம் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து பூமி முழுவதும் அலைகளாகப் பரவச் செய்து கொண்டுள்ளது.

அப்படிப் பரவும் ஒரு விஷத் தன்மைக்கும் மறொரு விஷத் தன்மைக்கும் எதிர் நிலை ஆகும் போது பெரும் கொண்ட “சூறாவளியாக மாறுகின்றது…!”

அதனால் ஆயிரம் மைல் வேகத்தில் அது சுழலும் தன்மை பெற்றுக் கட்டிடங்களையும் மரங்களையும் அனைத்தையும் “தூசி போல பறக்கச் செய்ய கூடிய நிலைகள்” உலகெங்கிலும் உருவாகிக் கொண்டு உள்ளது.

அதே சமயம்
1.ஒவ்வொரு நாட்டிலேயும் “அரசாங்க நிர்வாகம் சரி இல்லை…” என்ற நிலை கொண்டு
2.மதங்களின் அடிப்படையில் அல்லது அரசியல் கட்சியின் அடிப்படையில் தீவிரவாதம் என்ற நிலைகள் உருவாகிக் கொண்டுள்ளது.

அப்படி உருவாகும் தீவிரவாதங்களால் அமைதி கொண்டு வாழும் மக்களிடையே மீளாத் துயர்படும் நிலையும் மக்களுடைய வாழ்க்கையில் எந்த நிமிடம் எப்போது மடிவோம்…! என்ற நிலையில் அச்சம் ஏற்படும் நிலையும் உருவாகிக் கொண்டு வருகின்றது.

ஏனென்றால்… புலன் அடங்கித் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராத அதிர்வுகளை ஏற்படுவத்துவதும் கட்டிடங்களை நொறுக்குவதும் கூட்டம் நெரிசல் இருக்கும் இடங்களில் கார் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்து மக்களைக் கொலை செய்வதும் போன்ற இரக்கமற்ற நிலைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் முதலில் சொன்ன அந்த விஷத் தன்மைகள் உலகம் முழுவதற்கும் பரவியது தான். இத்தகைய சூழ்நிலை எல்லா இடத்திலும் உருவாகிக் கொண்டு உள்ளது.

இதைப் போன்ற விஷத் தன்மைகள் பரவும் இந்த நேரத்தில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் பெருக்கி
2.எந்த விஷத் தன்மைகளும் நம்மைத் தாக்கிடாது பாதுகாத்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையை நாம் பெறுகின்றோம்.

நம் உயிரான்மா இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து “அழியா ஒளிச் சரீரமாக வாழத் தொடங்கும்…”

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

 

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…! இந்த நிலையில்லா உலகத்தில் “எதை நீ சதம் என்று எண்ணுகின்றாய்…?” என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் வைத்து குருநாதர் எம்மைக் கேட்கின்றார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் போகும் இடங்களில்… துயரமான நிலைகளைச் சந்திக்கும் போதெல்லாம் இத்தகைய உணர்வை எனக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.

ஆகவே நினைவு கொள்ளுங்கள்…! இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நமக்கு நிலையானதா…? இந்த உடல் நமக்கு நிலையானதா…? உடலில் இருக்கும் பொழுது எதைப் பற்ற வேண்டும்…?

1.என்றும் ஏகாந்த நிலை பெற்ற அருள் மகரிஷியின் ஒளியை நான் பெற வேண்டும்
2.என் மனைவி அதைப் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும்
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் பார்வை இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

துன்பங்களைச் சந்திக்கும் நேரத்தில் உன் மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். ஆகவே மனைவிக்கு எது வேண்டும்…?

1.மனைவிக்கு அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என்னுடன் இணைந்த நிலையில் அருள் வழியில் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… அருள் ஒளி பெறும் தகுதி பெற வேண்டும்
4.மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் அருள் சக்தியாக வளர வேண்டும்.
5.அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலை தான் வர வேண்டும்.

அதற்குப் பதிலாகத் துன்ப்ப்படும் நேரத்தில் வேதனையான உணர்வை நுகர்ந்து மனைவி மக்களை நினைத்தால் வேதனைப்படும் உணர்வே வளருகின்றது
1.உன் சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது
2.உயிர் வெளி சென்று விட்டால் உடல் இல்லை. அப்போது நீ எதை நினைக்கப் போகின்றாய்…?

உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வு கொண்டு பாசத்தால் உன் பையனை நீ எண்ணினால் அவன் உடலிலேதான் புக முடியும். வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது “விஷம் என்ற உணர்வுகள்…” உனக்குள்ளும் அந்த உடலிலிருந்து அவனால் நீ மீண்டும் பெறுகின்றாய்.

உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால் நீ அவனுள் செல்கின்றாய்… இந்த உணர்வின் தன்மை அவனை அழிக்கிறது.

அதாவது… உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு அவனையும் காக்க முடியாத நிலையில் நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும். இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.

அவனை விட்டு வந்தபின் நீ எந்த வேதனைப்பட்டாயோ வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது… எமலோகம் செல்கின்றாய்.

மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட பாம்பாகவோ தேளாகவோ புலியாகவோ நீ பிறக்கப் போகின்றாயா…? உனக்கு எது தேவை…? என்ற நிலையில்
1.அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
2.எதை…?
3.“துன்பத்திலும் இன்பம்” எவ்வாறு காண வேண்டும்…? என்று.

ஆகவே… அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு, துன்பம் என்ற நிலைகள் மறைந்து பேரின்பம் என்ற நிலை பெற்ற அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.

நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.

1.அப்போது ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம்” அதாவது அழியா ஒளிச் சரீரம் நீ பெறுவாய்.
2.அருள் ஒளி பெறுவாய்… அருள் ஆனந்தம் பெறுவாய்… அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கு.

அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.

உனக்குள் இருக்கும் அணுக்களில் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கும் போது அதுவும் ஒளி பெறுகிறது. பகைமையற்ற நிலை வருகிறது.

இந்திரலோகத்தில் வரும் போது ஏகாந்த நிலை என்ற எதுவுமே வெறுப்பில்லாத நிலையில் சொர்க்கலோகத்தை நீ உருவாக்குகின்றாய். பரலோகத்திலிருந்து இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி இந்திரலோகமாக இருந்து சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

ஆனால் வேதனை வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய்.
1.மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா…?
2.அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா…?

பேரொளி பெற்றுப் பேரானந்தம் பெற்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே… “அந்த ஏகாந்த நிலையை நீ பெறுகிறாயா…?” என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெற வேண்டும். உன் குடும்பம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால் நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

1.அந்த அருள் ஒளி பெறுவாய் பேரின்பம் பெறுவாய் பெருவாழ்வு வாழ்வாய்
2.பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும் பெரு வாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய்” என்று
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.

நமது குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்றுப் பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்றிச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் அனைவரும் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காரமான பொருள்களைத் தனியாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சி தான் முன்னிலையில் நிக்கும். காரம்… காரம்… என்று தான் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

ஆனால் இந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும்…
1.மற்ற காரம் இல்லாத பொருள்களை இதனுடன் இணைக்கப்படும் போது
2.காரத்தின் தன்மை குறைந்து சுவை மிக்க நிலைகளாக உருவாகின்றது.

நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அவை எல்லாம் உருவாக்கப்படுகின்றது.

ஏனென்றால்… பிறருடைய துயரங்களையும் துன்பங்களையும் கேட்டறிந்து
1.அவர்களுக்கு உதவிகள் செய்தாலும்
2.கேட்டறிந்த அந்த உணர்வுகளை நாமும் நுகர நேர்கின்றது.
3.அந்தத் துயரப்படும் உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம்மையும் துன்பப்படச் செய்கிறது
4.அப்பொழுது நாம் நுகர்ந்த அந்தத் துன்பமான உணர்வுகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கேட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரி தனிக் காரத்தை அடக்கப் பல நல்ல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போன்று
1.நாம் கேட்டறிந்த துன்பமான துயரமான உணர்வின் தன்மையை அடக்க
2.வலுவான அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கூட்டி விட்டால்
3.நாம் நுகர்ந்த தீமைகளைத் தணியச் செய்து நல்ல உணர்வின் அணுக்களாக மாற்றும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனைப்படும் உணர்வின் தன்மை அதிகரித்து நல்ல குணத்தின் வலிமையை அது குறைந்து விடுகின்றது.

ஆகவே நம்முடைய நல்ல குணத்தின் தன்மையை நாம் அதிகமாக வலு பெறச் செய்ய வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவசியம் நாம் நுகர வேண்டும்.

அப்பொழுது உயிரான ஈஸ்வராலோகத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உருவாகத் தொடங்குகிறது.

“பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…!” என்ற நிலையில் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உருவாகாதபடி அருள் உணர்வுகளை உருவாக்கிடல் வேண்டும்.

தீமை என்ற உணர்வுகளைக் குறைத்துத் தீமைகளை அகற்றிடும் வலிமை கொண்ட உணர்வின் அணுக்களாக எடுக்கும் போது
1.ஈஸ்வரலோகத்தில் அந்த உணர்வுகள் உருவாக்கப்பட்டு
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது அது இந்திரலோகத்தில் கருத்தன்மை பெற்று
3.தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக… நல்லதைச் சிருஷ்டிக்கும் பிரம்மலோகமாக (உடலாக) மாறுகின்றது.

இத்தகைய நிலைகளை நம் உடலுக்குள் உருவாக்கினால் தீமையை அகற்றிடும் வலிமை பெற்று இந்த உடலை விட்டுச் சென்ற பின் நமது உயிரான்மா ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்கிறது.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்…!

எதையுமே சீர்படுத்த “துருவ நட்சத்திர தியானம் மிகவும் அவசியம்…”

 

இன்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவ ரீதியில் மனிதனுக்கு வரக்கூடிய நோய்களை மருந்தைக் கொடுத்துக் குணப்படுத்துகின்றார்கள்.

இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதில் என்னென்ன நிலை இருக்கின்றது…? என்று கண்டுபிடித்து அதற்குத் தக்க மருந்துகளைக் கொடுக்கின்றார்கள்.
1.உடலுக்குள் இரத்தத்தின் வழி மருந்து சென்று
2.அந்த நோய்க்குக் காரணமான கிருமிகளை வலு இழக்கச் செய்கின்றது… கொல்கிறது.

ரத்தத்திலே அல்லது உறுப்புகளில் அந்தக் கிருமிகள்… வைரஸ் எவ்வாறு உருவாகின்றது…? எந்த மருந்தினைக் கொடுத்தால் அந்த வைரஸ் செயலிழக்கும்…? என்று அவர்கள் கண்டறிந்து அந்த மருந்தைக் கொடுக்கின்றார்கள்… உடலைச் சரி செய்கின்றார்கள்.

மருத்துவர்கள் நாடி பிடித்துப் பார்த்து… இதைச் சாப்பிட்டால் சரியாக வரும் என்று இப்படி எல்லாமே கொடுக்கின்றார்கள். ஆனால் இதில் சிறிதளவு எதிர்மறை ஆகிவிட்டால் வேறு நோய் வந்து விடுகின்றது.

அதாவது… மருந்தைச் சாப்பிட்டேன் என் வாய் எல்லாம் புண்ணாகி விட்ட்து. உடலில் சில இடங்களில் கொப்புளித்து விட்டது என்றெல்லாம் சொல்வார்கள்.

வீரிய மருந்தைக் கொடுத்துக் கேன்சரை நீக்குகிறேன் என்பார்கள். ஆனால்
1.அந்த மருந்து உடலுக்குள் சென்ற பின் கேன்சர் அணுக்களைக் கொல்வதைக் காட்டிலும்
2.உடலில் இருக்கக்கூடிய மற்ற நல்ல அணுக்களை எல்லாம் கொன்று விடுகின்றது,

காரணம்… நோய் கடுமையான பின் அதனின் நாடித் துடிப்பு பற்றிச் சரியாகத் தெரியாதபடி மருந்தைக் கொடுக்கப்படும் பொழுது என்ன ஆகிறது…?
1.எந்த நோய் முதலில் உண்டானதோ அதைக் குணமாக்கும்.
2.ஆனால் மற்ற நல்ல அணுக்களுக்கு ரியாக்ஷன்… எதிர் நிலையாகி அதை மாற்றி விடுகின்றது.

ஆக… எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் ஒரு நூல் தவறினால் மறு பக்கம் தீமைகளை உண்டாக்கி விடுகின்றது. உடல் நலம் பெறச் செய்ய இது போன்று நாம் செயல்பட்டாலும் கூட அதைச் சமப்படுத்த வேண்டும்.

அதைச் சமப்படுத்துவதற்கு
1.யாம் சொல்லும் தியானத்தை எடுத்துக் கொண்டு
2.ஆத்ம சுத்தியைச் சரியான முறையில் வலு சேர்த்துக் கொண்டால் சீராக்க முடியும்.
3.எதிர்மறையான நிலைகளையும் தடுத்து நிறுத்த முடியும்.

அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

மனிதனாக இருந்து அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்… துருவனானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றினான். ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வரும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.துருவ நட்சத்திரம் பூமியின் துருவத்தின் நேர் பகுதியில் இருப்பதால்
2.முதல் பங்காக இங்கே கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகிறது.
3.அதைத் தான் உங்களை நுகரும்படி அடிக்கடி சொல்கிறோம்.

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்தால்… அது நமக்குள் வந்து விடுகிறது. இருவர் சண்டையிடுகிறார் என்று உற்றுப் பார்த்தால் அதை நுகர்ந்தால் நமக்குள் அது வந்து விடுகின்றது.

ஒரு தடவை வந்து விட்டால் மீண்டும் எண்ணமாகி நினைவாகி அது வரத் தொடங்குகிறது. இப்படி மனிதனுக்கு மனிதன் உற்றுப் பார்த்த உணர்வுகள் கவரப்பட்டு இப்படி நமக்குள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. தீமை செய்யும் அணுக்களாக உடலுக்குள் உருவாகின்றது.

ஆனால் இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்… ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம் ஆன்மா மட்டுமல்ல… நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

1.இந்தக் காற்று மண்டலம் விஷத்தன்மை அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள் தீமை புகாது… நோய் வராது… தடுக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வானத்தில் வால் நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். அதே போல் எரிகற்களையும் பார்க்கின்றோம். இது எல்லாம் எங்கிருந்து வருகிறது…?

மற்ற பிரபஞ்சங்களிலிருந்து வரும் கழிவுகள் எதிலேயுமே பிடிப்பில்லாத நிலையில் அப்படி வருகிறது. அத்தகைய நிலைகளைத் தான் நமது சூரியன் இழுக்கின்றது.

சூரியனுக்குப் போகும் பாதையில் நமது பூமி இடைமறிக்கும் பொழுது துருவப் பகுதியின் வழியாக நமது பூமி கவர்ந்து கொண்டபின் காற்று மண்டலம் அழுத்தத்திற்குள் வந்தவுடன் சூடேறிக் கரைந்து விடுகின்றன

அப்படி அது கரையவில்லை என்றால்… அத்தனையும் பூமிக்குள் அப்படியே விழுந்தால்… நாம் யாரும் இங்கே வாழ முடியாது…!
1.நம் பூமியில் தினமும் எரிகற்கள் விழுந்து கொண்டுதான் உள்ளது.
2.நமது பூமியின் காற்றழுத்தத்திற்குள் வரும் போது கரைத்து விடுகின்றது
3.கரைக்கத் தவறிய ஒரு சில பெரிய பாறைகளும் பூமியில் விழத்தான் செய்கின்றது.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை அதை நமக்குள் ஈர்க்கும் சக்தி அனைத்தும் நீக்கி விட்டால்
1.நமக்கு முன்னாடி வரும் அந்தத் தீமையின் உணர்வுகளை
2.எந்தப் பிடிப்பும் இல்லை எனும் பொழுது
3.காலையில் சூரியன் அதை அழைத்துச் சென்று விடுகின்றது

அதனால்தான் அதிகாலையில் முக்கியமாகத் துருவ தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ளச் சொல்கிறோம்.

துயரமோ சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ இதைப் போன்ற நிலைகள் வரப்படும்போதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரான அந்த ஈஸ்வரலோகத்தை எண்ணுங்கள்.

அந்தத் துருவ நடசத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று அவனிடமே கேட்டு ஏங்குங்கள். அப்போது இந்த உணர்வுகள் அதிகரித்து தீமையின் உணர்வுகளை மாற்றி அதை அடக்கும் சக்தியாக வரும்.

ஒரு குழம்பில் காரம் புளி உப்பு மற்ற எல்லாப் பொருள்களையும் போட்டபின் சுவையாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல சுவைமிக்க உணர்வுகளாக ஒளியான அணுக் கருக்கள் நம் இரத்தத்தில் இந்திரலோகமாக மாறுகிறது

இவ்வாறு மாற்றப்படும் போது தீமை என்ற உணர்வின் தன்மையை ஈர்க்கத் தவறுவதால் தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி தவறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாக இழுத்துக் கொண்டால் தீமையான அணுக்கள் உணவு இல்லாதபடி அது சோர்வடைகின்றது. அது மட்டுமல்லாது தீய அணுக்கள் உடலுக்குள் உருவாகாதபடி தடுக்கப்படுகின்றது.

மண்ணிற்குள் மறைந்துள்ள விஷ வித்துக்கள் மழை பெய்த பின் உடனே எப்படி முளைத்து வருகின்றதோ இதைப் போல
1.நம் உடலில் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவான தீமையான அணுக்கள்
2.இந்த உடல் இருக்கும் வரை அதனுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்யும்.

ஆனால் அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கி விட்டால் அது விளைந்து அதற்குத் தகுந்த உடலுக்குள் உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும்.

ஆகவே அத்தகைய ஊழ்வினை என்ற நிலைகளை உருவாக்காதபடி உணர்வின் ஒளிக் கற்றைகளாக மாற்றிடல் வேண்டும். இந்த உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து தொக்கிய உணர்வுகளைக் கரைத்து விடலாம்.
2.கரைத்த விஷத் தன்மைகளை எல்லாம் சூரியன் கவர்ந்து என்று விடுகின்றது
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவு அங்கே துருவ நட்சதிரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் விளைகின்றது
4.துருவ நட்சத்திரம் விளைய வைக்கும் அந்த விஷமற்ற உணர்வை உணவாக உட்கொண்டு அதன் தன்மை கொண்டு நாம் வளர்ச்சி அடைவோம்.
5.இதுவே ஒளியான ஓர் பிரபஞ்சம்…!

நாம் சூரியக் குடும்பம் எப்படி இருக்கின்றதோ இதே போல அதன் அமைப்பிலே நாம் சேர்க்கப்படும்போது துருவ நட்சத்திரமும் வலு அடைகின்றது. அதனின் ஈர்ப்பு வட்டமும் “ஒளி மயமாகின்றது…!”

உலகில் இது பரவப்படும்போது இருள் சூழும் நிலைகளில் இருந்து விடுபட்டு ஒளி மயமாக மாற்றும் சக்தி பெறப்படுகின்றது

ஆகவே நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய வழிகளில்… இன்னொரு பிறவிக்குச் செல்ல நீங்கள் விரும்பாதீர்கள். இந்த உடலில் பற்றை வைக்காதீர்கள்.

எத்தகைய குறைகளைக் காணினும் அதை அகற்ற முயற்சி எடுங்கள். குறை என்ற உணர்வு தோன்றிய பின் அது நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா என்று அந்த உணர்வை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதன் உணர்வை உடலான இந்திரலோகத்தில் பெருக்கச் செய்யுங்கள். அதன் உணர்வு பெருகினால் நமக்குள் தீய அணுக்கள் சிறுக்கும். நமக்குள் மன பலமும் மன வலிமையும் வரும்.

கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… ரத்தங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் அடிக்கடி கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அதாவது மற்ற உணர்வுகள் நம் உடலுக்குள் அணுவாக உருவாகாதபடி முந்தி இதைச் செய்ய வேண்டும்.
1.காரணம் உடலுக்குள் உருவான அணுக்கள் அனைத்துமே கண்கள் பதிவானது தான்…
2.கண்கள் வழி நுகர்ந்து தான் உடலில் அணுக்கள் உருவானது.

அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரத்தங்களிலே இணைக்கப்படும் பொழுது அது வலுவாகின்றது.
1.கண்கள் மூலம் எளிதில் அந்த அணுக்களுக்கு அந்த ஆற்றலைப் பாய்ச்ச முடியும்.
2.ரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வட்டமாக வலுவாக அமைத்து விடுகின்றது.

ஞானிகள் கண்ட உண்மைகள் இது.

பின்… தீமையான உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்களும் ஈர்க்க மறுத்தால் தீமைகள் அனாதையாகி விடுகின்றது. அனாதையாகி விட்டால் சூரியன் கவர்ந்து செல்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களில் “ஒதுங்கிய தூசி மண்டலம்” வால் நட்சத்திரமாக ஆவது போன்று நம் உடலில் இந்த மண்டலங்கள் ஏற்பட்டு ஒதுங்குகின்றது… அதைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து கொண்டு சென்று விடுகின்றது.

நம் ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது… ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பரிசுத்தம் அடைகின்றது. ஜீவான்மாக்கள் பரிசுத்தமானால் பரிசுத்தமான ஜீவணுக்களாக உருவாகி உயிரான்மா ஒளியாக ஆகிறது.

உயிருடன் ஒளியான உணர்வுகள் ஆன்மாவாகும் பொழுது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஒளியான அணுக்களாக ஆன்மாவாக மாறியதோ
2.உயிர் வெளியே சென்றால் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பெருக்கினோமோ அது பெருகி
3.துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது நம் உயிர்.

அங்கே சென்றபின் தொக்கியுள்ள விஷத்தைக் கரைக்கின்றது… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலை கொள்ளச் செய்கின்றது.

பிரபஞ்சத்திலும் சரி பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய நிலைகளும் சரி… பூமியின் துருவத்திற்கு நேராக வரும் அவைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளிமயமாக மாற்றி விடுகிறது. உயிரைப் போன்றே ஜீவணுக்களை உருவாக்கி ஒளியாக மாற்றி விடுகின்றது.

மனிதன் ஒருவன் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க முடியும்.

1.குருநாதர் எனக்குள் இதைப் பதிவு செய்தார்.
2.எனக்குள் எடுக்கப் பழக்கச் செய்தார்… எடுத்து எனக்குள் வளர்க்கச் செய்தார்
3.அதன் உணர்வைத் தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவாக்குகின்றேன்.

அந்தப் பதிவை நினைவாக்கி உங்களுக்குள் வளர்த்து அந்தப் பேரருள் பேரொளியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”

 

சில பண்பற்ற குடும்பங்களை நாம் பார்க்க நேர்ந்தால் “என்ன இப்படிச் சண்டை போடுகிறார்கள்…?” என்று எண்ணுவோம்… அதைக் கவர்ந்து விடுவோம். ஆக… சந்தர்ப்பத்தால் நாம் எதை இப்படி உற்று நோக்குகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.

இதை இராமாயணத்தில் வசிஷ்டர்… பிரம்ம குரு என்று காட்டுவார்கள்.
1.நாம் எதை அறிந்து கொள்ள விரும்புகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.
2.உயிரிலே பட்டால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் பிரம்மமாகிறது… அது அணுவாக மாறுகிறது.
3.அணுவாகிவிட்டால் அது எந்தக் குணமோ அந்த உணர்வின் சக்தியாகத் தான் அது இயக்கும்… அது தான் அருந்ததி.
4.திருப்பி எண்ணும் பொழுது அவர்கள் எதைச் செய்தார்களோ அந்த உணர்வைத் திருப்பிச் செயல்படுத்தும் குரு தான் அது.

அதைத்தான் வசிஷ்டர் பிரம்மகுரு அவரின் மனைவி அருந்ததி என்று சொல்வது.

அதாவது… யார் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் சக்தியை மீண்டும் எண்ணும் போது அதனுடைய இனத்தைப் பெருக்கும் பிரம்மமாகிறது. அந்த அசுத்தத்தை வளர்க்கும் சக்தியாகவே பெறுகின்றது.

ஆகவே… நாம் எதை ஆசைப்படுகின்றோமோ அதுவே வளர்கின்றது. ஆனால் நாம் ஆசைப்பட வேண்டியது எது…?

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதை விடுத்து விட்டு
1.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற ஆசைப்பட்டால்
2.அது நமக்குள் பிரம்மாகி அதன் வளர்ச்சியில் நாம் அதுவாக மாறுகின்றோம்.

அதற்குத் தான் அடிக்கடி யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம் உங்களுக்குள் அதை நினைவுபடுத்துகின்றோம். எந்த அளவுக்கு இதை உற்று நோக்கிக் கவனிக்கின்றீர்களோ
1.உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் இது பதிவாகின்றது… ரெக்கார்ட் செய்கின்றது.
2.முதுகு பக்கம் இருக்கும் எலும்பின் நிலை வேறு… முன்பக்கம் உள்ள எலும்புகளின் இருப்பது வேறு
3.விலா எலும்புகளில் முன்னாடி தான்… அதில் அனைத்தையும் ரெக்கார்ட் செய்கின்றது.
4.அதிலே உள்ள பவர் அதிகமானது… எதைப் பதிவாக்குகின்றதோ அதைக் கவரும் சக்தி பெற்றது.
5.ஆகையினால் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே பதிவாக்குகின்றேன்.
6.அதை நினைவு கூர்ந்து கவரும்… அந்த வலிமை பெறும் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் பெறுவோம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அதைப் பாய்ச்சுவோம்… அந்த ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவோம்.

அதைச் சுத்தப்படுத்தும் போது நம் ஆன்மா தூய்மை அடைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களின் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவோம்.

இப்படித் தூய்மைப்படுத்திக் கொண்டே வந்தால் வாழ்க்கையில் எந்த நேரம் எது வந்தாலும் “உடனடியாக… ஈஸ்வரா என்று உயிரின்பால் நினைவைச் செலுத்தி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களை அறியாது சேர்ந்த பகைமைகள் அகல வேண்டும் என்று நாம் இதை எண்ணி எடுக்க முடியும்.
1.நமக்குள் பகைமை வராது தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.
2.என்றென்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் சேர்ந்து அவர் உயிராத்மாவை அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து ஒளியின் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஆனால் தனித்து அவரை மட்டும் எண்ணக் கூடாது….!

1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்தல் வேண்டும் என்ற
4.இந்த வலுவைக் கூட்டிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் பொழுது அவர்கள் ரிஷியின் தன்மை அடைந்து விடுகின்றனர். சப்தரிஷிகளுடன் சப்தரிஷியாகி விடுகின்றார்கள். மனித உணர்வின் ஆசைகள் கொண்டு அங்கே செலுத்திடல் வேண்டாம்.

“அவர்கள் அங்கே ஒளியின் சரீரமாக இருக்கும் நிலையில்…” ஒவ்வொரு நாளும் அவர் அருள் நமக்குள் வளர வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று இதனைக் கவர்ந்து இந்த வாழ்க்கையில் இருளை அகற்றும் தன்மையை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

குடும்பத்தைச் சார்ந்தோர் அடிக்கடி அவர் ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று அவருடைய நினைவு வரும் பொழுதெல்லாம் இவ்வாறு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் உணர்வு உங்களுக்குள் உண்டு. இந்த உணர்வினை மாற்றியமைத்தல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் ஏகாந்த நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அவர்கள் என்றுமே பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்தல் வேண்டும் என்ற “இந்த உணர்வினைத்தான் கூட்டுதல் வேண்டும்…!”

இந்த உணர்வுகள் நமக்குள் வளர வளர அவர்களுடைய உணர்வைப் பெற்ற அணுக்கள் நம் உடலிலே இருந்தால் அதைச் சிறுத்துப் பேரின்பம் என்ற உணர்வின் அணுக்களாக நமக்குள் மாற்றிக் கொள்ள முடியும்.

1.அதே சமயத்தில் குடும்பப் பாரம்பரியத்தில் அணு செல்கள் சென்று
2.உடலை விட்டுப் பிரிந்தவர்கள் உடலில் வந்த நோய்களை
3.மற்ற தனது சந்ததிகளுக்கு உருவாக்காதபடி மாற்றியமைக்கவும் உதவும்.

ஏனென்றால் அவருடைய இன விருத்தியில் வந்த அந்தக் கருக்களில் இத்தகைய நிலைகள் கலந்து விட்டால் பின் வரும் நிலைகளில் அது தொடர்ந்து விடுகின்றது.

அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும்…! எல்லோரும் அருள் வழி வாழ்ந்து அழியாத பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக பாலில் விஷம் பட்ட பின் அதை நாம் குடித்தால் மயக்கம் தான் வரும். சிந்திக்க முடியுமா…? அதே மாதிரி பாலில் காரம் பட்டு விட்டது என்றால் அதிலே இனிப்புப் போட்டிருந்தாலும் குடித்தால் ருசி வருமா…? வராது.

இதைப் போல் தான் நாம் நல்ல மனதுடன் இருந்தாலும் பிறருடைய தீமையான செயல்களைப் பார்க்கப்படும் பொழுது அது நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் நாம் அமைதி இழக்கின்றோம்.

அந்தத் தீமையின் இயக்கத்திலிருந்து காத்துக் கொள்வற்குத்தான் இந்த அதிகாலைத் துருவ தியானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் இந்தத் தீமைகள் நடக்கிறது என்றால் அது நடக்காமல் தடுத்து நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

அதைச் சேர்க்கப்படும் பொழுது பிறிதொரு தீமை நம்மை இயக்காதபடி அதை அடக்கிச் சிந்திக்கும் தன்மை வரும்.

அப்பொழுது…
1.தீமை செய்பவர்களுக்கு எப்படி நல்லதைச் சொல்ல வேண்டும்…? என்ற ஞானமும் கிடைக்கும்.
2.அவர்கள் எற்றுக் கொள்ளும்படியான சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பருவமும் நமக்குள் வரும்.

உதாரணமாக நாம் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது சரியாக வேகாமல் தாளித்தால் எப்படி இருக்கும்…? சரியான முறையில் வெந்து இறக்கப்படும் பொழுது அதைச் செய்தால் அது ருசியாக வரும்.

காய்கள் வேகப்படும் பொழுது வேகுவதற்கு முன்னாடி அதிகமான உப்பைச் சேர்த்து விட்டால் சில காய்களும் அதனுடன் இணையும் தன்மையைப் பிரித்துவிடும். உப்பு அதிகமாகிவிடும். குழம்பின் ருசி மாறிவிடும். இந்த மாதிரிச் சிலர் குழம்பு வைத்தார்கள் என்றால் ருசியே மாறிவிடும்.

1.பருவம் தெரியாதபடி உப்பைக் கலப்பதனால் குழம்பின் ருசி மாறிவிடும்.
2.அந்தப் பருவம் இதனுடன் இணைந்திடும் சந்தர்ப்பம் வரும் பொழுது உப்பை நாம் கலக்கலாம்.

சில மசால்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கப்படும் பொழுது அந்தச் சூட்டிலே சமமாகப் போய்ச் சேரும். ஆனால் இந்த உப்பென்ற நிலைகள் வரும் பொழுது முன்னணியில் இருந்து தடுத்துவிடும்.

அது தடுத்து விட்டால் அந்தக் காய்கறிகள் ருசி இருக்காது. உப்பு தான் முன்னாடி இருக்கும். குழம்பின் நிலைகள் மாறிவிடும். இவைகள் எல்லாம்
1.அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் செய்யக்கூடிய உணர்வுகள் எதுவோ
2.அது கலப்பதற்குத் தகுந்த மாதிரித்தான் அந்த ருசி வரும்.

ஆகவே ஒருவர் தவறு செய்கிறார்… என்று எண்ணும் பொழுது “அவர்களை அறியாமல் அது இயக்குகிறது…!” என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதற்காகத் தான்
1.நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
2.உடலைக் கோவில் என மதிப்போம்
3.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம் என்று சொல்வது.

ஈசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் அந்த உடல். அவர்களை அறியாமலே அந்தச் செயல்களும் அந்தச் சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.

எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்

 

ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு சக்தி உண்டு. அதைக் காட்டுவதற்குத் தான் காளி மாரி சாமுண்டீஸ்வரி சண்டாளேஸ்வரி என்றார்கள். கொடிய தீமைகளை உருவாக்கும் குணங்களை “சண்டாளேஸ்வரி…” என்று கூட அதற்குக் காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

அதன் இனத்தைப் பெருக்கும் சக்தியைப் பெறுகிறது என்று சிவனுக்குள் சக்தியாக உருவாக்குகின்றது. அதாவது… உடலான சிவத்திற்குள் அணுக்களின் தன்மைகள் கொடூர உணர்வுகளைக் கொடூரம் என்று உணர்ந்து நுகர்ந்தாலும்… நல்ல உணர்வுகள் விலகிச் செல்லக் காட்டினாலும்… அந்த உணர்வு இயக்கி உணர்ச்சியைத் தூண்டி “நம்மை மாற்றும் நிலைக்கு…” உருவாக்கி விடுகிறது.

இப்படி நுகர்ந்த உணர்வுகள் கடினமாக்கப்படும் பொழுது
1.இந்த உடலான சிவத்தையும் நுகர்ந்த அந்தச் சண்டாள உணர்வுகள்… சக்தி சிவனை வீழ்த்தி விடுகின்றது.
2.இதைத்தான் சிவனைத் திரிசூலத்தால் தாக்கிக் கீழே காலில் மிதித்து வைத்திருக்கிறார் என்று கூறுவார்கள்.

நாம் நுகர்ந்த உணர்வே சிவமாகின்றது என்ற நிலையும் செயலற்ற நிலையில் நாம் அதன் கீழ் அடங்கி விடுகின்றோம். அதன் வழி கொண்டு நாம் செயல்பட முடியாதபடி ஒடுங்கப்படும் பொழுது எதன் உணர்வின் தன்மையோ அதனை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஞானிகள் காவியங்களைப் படைத்தாலும் ஒவ்வொரு குணத்திற்கும் உருவத்தைக் கொடுத்து அதற்குண்டான நிறத்தைக் கொடுத்து அதனுடைய செயலாகங்களைக் காவியமாக படைத்து… அதனை உற்று நோக்கப்படும் பொழுது ஒவ்வொன்றையும் நாம் அறியும் வண்ணமாகக் காட்டி உள்ளார்கள்.

1.நம்மை அறியாது நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் விளைந்து விட்டால் என்ன செய்யும்…?
2.அதனுடைய ரூபங்கள் எப்படி மாறும்…?
3.நுகர்ந்த நிறங்கள் எப்படி மாறும்…? என்று அவர்கள் காட்டிய வழிகளில் நாம் நுகர்கின்றோமா…?

பல பல நிறங்கள் சிவப்பு கருப்பு நீலம் மஞ்சள் என்று வந்தாலும் அவைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது அதனுடைய நிறங்கள் மாறுகின்றது. அதிலே உருவாகும் உணர்ச்சிகள் மாறுகின்றது.

வித்தியாசமான நிற ஆடையை அணிந்தால் உடனே சோர்வாகும். நீலக் கலரைப் பார்த்தால் இருட்டடையும் நிலை வருகின்றது. மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் பளிச் என்று இருக்கும் இளம் மஞ்சளைப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சம் ஆகின்றது. அது ஒளியாகக் காட்டும் போது தெளிவாகின்றது மனம்.

வெள்ளைத்துணி அணிந்து இருப்பவரைப் பார்த்தால் பளிச்சென்று தெளிவாகும். இளம் மஞ்சளைப் போட்டிருந்தால் மகிழ்ச்சியூட்டும் நிலைகள் வரும்.

பளிச் என்று வெள்ளை நிறம் வந்தாலும் கண் கூசும் நிலையும் வருகின்றது.

ஆடையில் கருப்பும் சிவப்பும் வெள்ளையும் கலந்து இருந்தால் உற்றுப் பாருங்கள். அவர் முகத்தையும் பாருங்கள்… இருண்ட நிலை இருக்கும் நுகரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது.

கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்ட பின் திரும்பிப் பார்த்தால் சிந்திக்கும் திறன் இழந்து அந்த உணர்வின் நிலை கொண்டே நம் எண்ணங்களும் செயல்படுவதைப் பார்க்கலாம்.

ஆடைகளின் நிறத்திற்குள் இவைகள் எல்லாம் அடங்கியுள்ளது.

இதைத்தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.கறுப்பு நிறத்தைப் பார்த்தபின் நம் மனதை இருளடையச் செய்யும் நிலை வருகின்றது. சிந்திக்கும் திறனை இழக்க செய்கின்றது.
2.நுகர்ந்ததை இருள் சூழும் உணர்வின் அணுவின் கருவாக உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

அணுவின் இயக்கம்… அதனின் வளர்ச்சி எவ்வாறு…? என்று ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள். இதை எல்லாம் உங்களிடம் இப்போது சொல்கிறேன் என்றால் “எனது பாக்கியம்… குருநாதரால் நான் அறிய முடிந்தது…”
1.அவர் உணர்த்தியதை உங்களிடம் வெளிப்படுத்தும் போது
2.உங்களுக்குள் இயக்கும் உணர்ச்சியின் நிலைகள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதை உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.

ஆகவே… ஆறாவது அறிவின் துணை கொண்டு இதையெல்லாம் தெளிவாக்கப்படும் பொழுது “இதைப் பெற வேண்டும்…” என்ற ஏக்கம் கொள்வோருக்குள் இது பதிவாகின்றது.

மீண்டும் நினைவு கொண்டால் அதனுடைய ஞானத்தை உங்களுக்குள் பெருக்க முடிகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் (ஞானகுரு) பெரியப்பாவின் தங்கைக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அது முதல் மனைவியாகப் போய் இருந்தது. அவர்களுக்குள் ஏதோ கருவாகி உள்ளது. திருமணமாகி அந்தக் கருவாக இருக்கும்போது (பெரியப்பாவுடைய) தங்கையின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஏனென்றால் அந்தக் காலத்தில் இரண்டு கல்யாணம் மூன்று கல்யாணம் பண்ணிக் கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது. திடீரென்று சொந்தத்தில் பெண் என்ற நிலை வரும் போது அவர் இரண்டாவது கல்யாணத்தைச் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் போது “இப்படி இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டாரே…!” என்று அவர்கள் சொன்னார்கள்.

இப்பொழுது உள்ள சட்டம் எல்லாம் அன்றைக்குக் கிடையாது.

நான் பிரியபட்டேன்…. நான் கல்யாணம் செயது கொண்டேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்…? வேண்டாம்… என்றால் நீங்கள் விலகிப் போகலாம் என்று அவர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டினார்.

ஊர் நாட்டாமைகள் எல்லாம் சேர்த்து பஞ்சாயத்துச் செய்யும் பொழுது அந்த அம்மா தன் கர்ப்ப காலங்களில் கடும் வேதனையும் சங்கடமும் பட்டது.

எந்த அளவுக்குக் கடும் வேதனையும் சங்கடமும் பட்டதோ அந்த உணர்வுகள் எல்லாம் கருவிலே இணைந்து அது பெண் குழந்தையாகப் பிறக்கிறது.

1.பிறந்த பின் அந்தக் குழந்தைக்கு எந்தச் சிந்தனையும் இல்லை.
2.வாய் பேச வரவில்லை… வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
3.மூளை வளர்ச்சி இல்லாதபடி அதுபாட்டிற்கு இருந்தது.
4.அது வயதுக்கு வந்து பருவம் ஆகும் வரையில் கூட அப்படியே தான் இருந்தது.

இந்த மாதிரி ஆனதால் அந்த அம்மா தன் சொத்தைப் பிரித்துக் கொண்டு வந்து விட்டார்கள், இருந்தாலும் என் வாழ்க்கையை நீங்கள் எல்லோரும் சேர்ந்து நாசமாக்கி விட்டீர்களே…! என்று தன் அண்ணனைப் (என் பெரியப்பாவை) பிடித்துப் பேசும்.

நீங்கள் எல்லாம் சேர்ந்து தானே இந்தக் கல்யாணத்தை அனுமதித்தீர்கள் என்று…!

ஆக… அந்த அம்மா பேசிய சாப அலைகள் பெரியப்பா குடும்பத்தில் சாடியது. அவருக்கு ஒரு பையன் மூன்று பெண் பிள்ளைகள்.

கர்ப்பம் என்று சொல்லப்படும் போது தன் பிள்ளைக்கு எப்படி ஆனதோ அதே போல் அவருடைய குழந்தைகளுக்கும் ஜன்னி மாதிரி வந்தது. காக்காய் வலிப்பும் வந்தது… மூளை வளர்ச்சி இல்லாது போனது.

ஒரு பையனுக்குக் கால் வராமல் இருக்கிறது. பெண்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்து அந்த குழந்தையோட அது அவஸ்தைப்படுகிறது.
1.அந்தச் சந்தர்ப்பத்தால் குடும்பமே இத்தகைய நிலைகள் உருவாக்கப்பட்டு இந்த நிலை ஆகிவிட்டது.
2.இதை எல்லாம் நடைமுறையில் குருநாதர் அனுபவரீதியாக எமக்குக் காட்டுகின்றார்.

அதே மாதிரி என் மனைவி வழியில் எடுத்துக் கொண்டாலும் என் மனைவியின் சின்னம்மா (அதுவும் இரண்டாம் தாரமாக வந்தது தான்). அது எங்கள் சிறிய பாட்டி மகள்.

அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் வாய்த் துடுக்கு…! யாரும் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வரவில்லை என்று. தன் தம்பி மகனுக்கே இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். அது கண்டபடி சாபம் இடும்.

எங்கள் பாட்டி என்ன செய்தது…? (என் மனைவியை) எங்கள் குடும்பத்திலேயே கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தது.

அதனாலே என் அண்ணன் கட்டிக் கொள்ள வேண்டியதை என்னைக் கட்ட வைத்துவிட்டார்கள்… வாரிசு என்று, என் மனைவியின் சின்னம்மா அவர்கள் அப்பாவைப் பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்டபடி பேசும். இவ்வளவு தான் என்று இல்லை.

என் மனைவி குடும்பத்தில் இந்த அம்மாளின் சாபத்தால் பிறந்த ஆண் வாரிசும் இறந்து விட்டார் (என் மனைவியின் சகோதரன்). ஆனால் என் மனைவி மீது அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் பிரியம்.

அதே சமயத்தில் என் மனைவியின் அப்பாவை (என் மாமனாரை) ரோட்டிலே போய் உட்கார்ந்த கொண்டு கேவலப்படுத்தும்.

நான் (ஞானகுரு) கல்யாணம் முடித்து வந்த புதிதில் இந்த அம்மா இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தது. வாசல் படி மேல் உட்கார்ந்து கண்டபடி பேசிக் கொண்டிருந்தது.

நான் என்ன செய்தேன்…?

பெரிய அம்மிக் கல்லைத் தூக்கிக் கொண்டு போய் உன்னை இந்த மட்டோட குளோஸ் (CLOSE) செய்கிறேன் என்று சொல்லித் தலைக்கு மேலே தூக்கி “டபால்…” என்று அந்த அம்மாவின் பின்னாடி போட்டேன்.

அய்யய்யோ… என்னைக் கொல்ல வந்து விட்டானே… எங்கள் அண்ணன் பையன்…! என்று சப்தம் போட்டது. அன்றிலிருந்து பேசுவதை விட்டு விட்டது. அதற்கப்புறம் அது இறக்கிற வரையில் என்னிடம் பேசவில்லை.

ஆனால் என்ன செய்தது…? பார்…! என்னைச் சீரழித்தாய் அல்லவா…! உன் குடும்பத்தையே எப்படி ஆட்டி படைக்கிறேன்…? என்று சொன்னது.

நடந்த நிகழ்ச்சி இது.

அது இறந்த உடனே என் மனைவி உடலுக்குள் வந்து படுத்தின பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்டபடி ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. நான் சித்தான பிற்பாடு ஒரு சமயம் வந்து கேட்கிறது.

என்னுடைய சிறிய வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் என் மனைவிக்குத் தெரியாது. ஆனால் இந்த உடலில் அந்த அம்மா இருந்து கொண்டு “போடா எங்க அண்ணன் மகனே.. எனக்கு எல்லாம் தெரியுமுடா…!” என்று சொல்கிறது.

போடா என் அண்ணன் மகனே… எனக்கு என்ன தெரியாதா…! போய் வெத்திலை வாங்கிக் கொண்டு வாடா…! பாக்கு வாங்கிக் கொண்டு வாடா…! என்று “என் மனைவி உடலிலிருந்து கேட்கிறது…”

அந்த அமமாளுக்கு வெத்திலை போடும் பழக்கம் இருந்ததால் அப்படிக் கேட்கிறது. போடா… வாடா…! என்று பேச ஆரம்பித்து விட்டது. “நான் தானடா உன்னைத் தூக்கி வளர்த்தேன்…!” என்று பேச ஆரம்பித்தது.

ஒரு சமயம் என்னுடைய சிறிய வயதில் எனக்கு அம்மை வார்த்து இருக்கும் போது இட்லி சாப்பிட வேண்டும் என்று கேட்டு அழுகிறேன். இந்த அம்மா என்ன செய்தது…? உடனே அரிசியை நல்ல சாதமாக ஆக்கி இட்லி மாதிரிச் செய்து கொண்டு என்னிடம் கொடுத்தது.

அப்படிக் கொடுத்தவுடனே அந்த இட்லியை எடுத்து அந்த அம்மா மேலேயே அடிச்சிட்டேன். இது இட்லி இல்லை என்று சொல்லி…!

அதை என் மனைவி உடலிலிருந்து நினைவுபடுத்திச் சொல்கிறது. என் மனைவிக்கு இது தெரியாது. ஆனால் அந்த உணர்வுகள் உடலிலிருந்து பேசுகிறது

இதை எல்லாம் மிகவும் தெளிவாக அனுபவரீதியாக எனக்குக் காட்டினார் குருநாதர்.
1.”ஒரு உடலில் விளைந்த உணர்வுகள் என்ன எல்லாம் செய்யும்…?” என்று உங்களுக்குத் தெரியாது.
2.இப்பொழுது அதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

தியானத்தில் சக்தி கூட்ட வேண்டிய சரியான முறை

 

குருவின் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை பெற எண்ணி ஏங்கித் தியானிப்போம். உணர்வுடன் எண்ணி ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியைத் தாண்டித்தான் உயிருக்குள் மோத நேரும்.
1.காலையிலிருந்து நாம் எடுத்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் இதெல்லாம் முன்னாடி இருக்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் புருவ மத்தியில் இணைத்து விட்டால் இது முகப்பிலே வந்து விடுகிறது.
3.நம் உடலுக்குள் அந்த்த் தீமைகள் புக விடாதபடி நாம் தடுத்துக் கொள்கிறோம்.

புருவ மத்தியில் இவ்வாறு தடுத்துப் பழகிய பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று உணர்வை வேகமாக உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

நாம் புருவ மத்தியில் தடுத்து உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்து வலுவாக்கப்படும் பொழுது…
1.அவன் இப்படிச் செய்தான் இவன் இப்படிப் பண்ணுகின்றான் தொழிலில் இப்படி ஆனது குடும்பத்தில் இப்படியானது என்ற
2.இந்த உணர்வுகள் எல்லாமே அனாதை ஆகி விடுகிறது.
3.அனாதையான பின் சூரியனுடைய காந்த சக்தி அவைகளை இழுத்துக் கொள்கின்றது. நம் ஆன்மா சுத்தமாகிறது…!
4.ஆன்மாவைச் சுத்தமாக்கும் முறை தான் இது… இப்படித் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி என் பையன் நோயாக இருக்கின்றான் உடல் நலம் பெற வேண்டும் என்ற “இந்த ராகம் பாடினால்…” நோய் தான் அங்கேயும் வளரும் இங்கேயும் வரும். இதை நீக்க முடியாது.

சில பேர் இப்படித்தான்… என் பையன் நோய் நீங்க வேண்டும்… நோய் நீங்க வேண்டும்…! என்று தான் தியானித்தேன் என்பார்கள். ஏனென்றால் இந்த உணர்வை எண்ணும் பொழுது அந்த வேதனை தான் இங்கேயும் வரும். அதை மாற்ற முடியாது.

அவன் படிக்கவில்லை… படிக்கவில்லை என்று சொல்லிவிட்டு… படிக்காமல் இருக்கின்றானே… படிக்காமல் இருக்கின்றானே…! என்று இதைத்தான் தியானம் செய்வார்கள்.
1.அப்பொழுது அவன் மீது வெறுப்பு தான் வருகின்றது… அந்த வெறுப்பு தான் இங்கு தியானம் ஆகின்றது.
2.இது எல்லாம் முறையற்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும். அவன் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் இப்படித்தான் எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யாதபடி அந்தப் பையனுடைய உணர்வுகள் இப்படி இருக்கின்றானே என்று குறுக்கே வந்தால் தியானத்தில் நெளித்துப் பார்ப்பார்கள். ஒன்றும் முடியாது. அந்தப் பையனின் உணர்வு தான் முன்னாடி வரும். தியானத்தில் அருள் உணர்வை எடுக்க முடியாது.

அப்பொழுது அந்த மாதிரி நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

உடனே கண்களைத் திறந்து… “நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்துற்குக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி விட்டுக் கண்களை மூட வேண்டும். உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

இப்படி நமக்குத் தொல்லை கொடுக்கும் வெறுப்பு வேதனை போன்ற பிற உணர்வுகள் வந்தால்
1.கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி கண் வழி கவர்ந்து
2.பின் கண்களை மூடி உயிர் வழி உள்ளுக்கே செலுத்துங்கள்… இந்த உணர்வை வலுவாக்குங்கள்.
3.இதைச் செய்து பாருங்கள்… தியானத்தில் நிச்சயம் சக்தி உங்களுக்குள் கூடும்.

இந்த முறைப்படி செய்ய வேண்டும்.

உங்களுக்குள் அழுக்கு அதிகமாக இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு நாம் இந்த முறையைக் கையாள வேண்டும். உங்களால் முடியும்.

சிறிது நாள் முயற்சி எடுத்துச் செய்தால் அந்தப் பழைய உணர்வுகள் எல்லாம் மாறும். “ஒரு புதுமையான சக்தி கிடைக்கும்…”

நல்ல நிலைகள் கொண்டு நல்ல செயல்களைச் செயல்படுத்தும் போது பிறருடைய தீமையான உணர்வுகளைக் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் புகுந்து நோயாக எப்படி உருவாகின்றதோ அதே போல
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்க எடுக்க
2.அது நமக்குள் புகுந்த தீமைகளை மாற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தாய் வயிற்றில் நான் (ஞானகுரு) கருவாக இருக்கும்போது என்னுடைய பாட்டி என்ன் செய்தது…? என் அப்பாவுக்கு இரண்டாவது கல்யாணம் செய்ய முயற்சி செய்தது.

எனக்கு முன்னாடி மூன்று பேர் பிறந்திருக்கின்றார்கள். இருந்தாலும் என் அப்பாவிற்கு இரண்டாவது கல்யாணம் செய்ய வேண்டும் என்று என் பாட்டி என் அம்மாவை மிகவும் துன்புறுத்தியது.

நான் பிறந்த பிற்பாடு என் அம்மா என்னிடம் சொன்னது:
எப்படியாவது இரண்டாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பாட்டி (என் அம்மாவின் மாமியார்) நிர்பந்தம் செய்தது.

அப்பொழுது நான் வேண்டாத தெய்வம் இல்லை. என் கணவருக்கு இரண்டாம் கல்யாணம் செய்யக் கூடாது…! என்று கோயில் குளம் எல்லாம் போய்ச் சுற்றி வந்தேன். என் குலதெய்வம்… மூதாதையர்களை எல்லாம் வேண்டினேன். (மூதாதையர்கள் – ஞானகுருவின் பாட்டனுடைய பாட்டன் கொஞ்சம் மந்திர சக்தி கற்றுக் கொண்டவர்கள்)

இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். “நீ கர்ப்பத்தில் இருக்கும்போது தான் இதை எல்லாம் வேண்டினேன்…”
1.அதுதானப்பா உனக்கு (ஞானகுரு) இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது.
2.நம் குலதெய்வங்கள் எல்லாம் பக்கபலமாகச் சேர்ந்து நின்றது என்று அம்மா சொல்லியது.

என் அண்ணன் என்னுடைய அப்பா பெற்ற பாட்டியைத்தான் அம்மா என்று கூப்பிடுவார். என் அம்மாவை அம்மா…! என்று கூப்பிட மாட்டார். என் அம்மாவை மதிக்கவே மாட்டார்.

இது எல்லாம் நடந்த நிகழ்ச்சி.

என் அத்தைக்குப் பிள்ளை இல்லை. அதனால் அந்தச் சொத்தை என் அண்ணனுக்கு எழுதி வைக்கலாம் என்று ஏற்பாடு செய்தார்கள். சொத்து போய்விடக் கூடாது என்று இதை எல்லாம் செய்தார்கள்.

ஆனால் என் அம்மாவின் மீது எங்கள் பாட்டிக்கு வெறுப்பு. இதை எல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றார். அனுபவத்திலே குருநாதர் கொடுத்த உண்மையின் உணர்வுகள் தான் இது.
1.ஆகவே உன் குடும்பத்திலே எப்படி இருக்கிறது…?
2.இப்படி ஒவ்வொரு குடும்பங்களிலும் எப்படி இருக்கும் பார்…! என்று காண்பித்தார்.

நான் பிறந்த பிற்பாடு என் பாட்டி எங்கம்மாவைத் திட்டியதோ கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதற்கு பின் இரண்டு பையன்கள் பிறந்து இறந்து போனார்கள்.

அதற்காக வேண்டி என் பாட்டி என்னைச் சாமி கும்பிடச் சொல்லிக் கழுத்திலே சூடு போட்டது. எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் தெக்கத்தி நோய் (காக்காய் வலிப்பு போல் ஒரு நோய்) என்று சொல்வார்கள். அதற்கு இந்த மாதிரிப் போட்டோம் என்றால் “அடுத்து அந்த நோய் வராது…” என்று அந்தக் காலத்தில் ஒரு மூட நம்பிக்கை.

ஏனென்றால் நான் முன்னாடி சொன்ன மாதிரி என் பெரியப்பா வீட்டில் அந்தப் பிள்ளைக்கு வந்தது போல் இங்கே அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக எனக்குத் தம்பி பிறந்த அன்று என் பாட்டி சூடு போட்டது.

தம்பி பிறந்திருக்கின்றான்… சாமியைக் கும்பிடுடா…! என்று சொல்லியது. அந்தக் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது.

என் பாட்டி அடிக்கடி திட்டிக் கொண்டிருந்ததால்… ஒரு சமயம் என் அம்மா கிணற்றில் போய் விழுந்து விட்டது.

அங்கே எல்லாம் சிறிய வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுத்துவிடுவார்கள். எனக்கு ஏழு வயது இருக்கும். அன்றைய தினம் லீவு வேறு. வீட்டிலும் யாரும் இல்லை.

கிணற்றில் குதித்து என் அம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினேன். அதிலே இருந்து அம்மாவுடனே நான் எப்பொழுதும் இருப்பேன்.
1.என் அம்மாவின் ஆசிதான் எனக்கு இந்தக் குரு அருள் கிடைத்தது.
2..என் அம்மா அது எடுத்துக் கொண்ட உணர்வு
3..அவர்கள் தெய்வத்தை வேண்டிய அருள் உணர்வுகள்
4.கருவில் விளைந்த அந்தப் பூர்வ புண்ணியம் தான் எனக்கு இந்த அளவுக்குச் சக்தி கிடைத்தது.
5..குரு அருளால் ஓரளவுக்கு எல்லோருக்கும் சேவை செய்யக்கூடிய நிலை எனக்கு (ஞானகுரு) வந்திருக்கிறது.
6.என் அண்ணனுக்கோ என் தம்பிக்கோ என் தங்கைக்கோ ஒருவருக்கும் இந்த ஞானம் கிடைக்கவில்லை.

ஏனென்றால் அனுபவபூர்வமாகக் குருநாதர் இந்த உணர்வுகளை எல்லாம் எனக்கு நினைவுபடுத்தி “நீ எப்படி ஞானம் பெற்றாய்…? என்றும் உன் குடும்பப் பாரம்பரியம் எப்படி வந்தது…?” என்ற நிலையும் உணரச் செய்தார்

ஒவ்வொரு குடும்பங்களிலும் தவறுகள் இல்லாமலேயே சந்தர்ப்பத்தால் பாசத்தால் நுகர்ந்த நிலைகளில் தொல்லைகளும் சங்கடங்களும் எப்படி வருகிறது…? என்று இப்படி நிதர்சனமாகக் காட்டினார்.

இதைப் போல உண்மையின் நிலைகளை விளக்கச் செய்து மனிதன் என்ற பண்பை வளரச் செய்ய வேண்டும் என்றால்
1.அந்த அகஸ்தியன் பெற்ற அருள் உணர்வுகளைப் பெற்று
2.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருளை அகற்ற வேண்டும் என்று குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த அருள் உணர்வுகளைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்

 

பொங்கல் நாளில் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.

இருளை நீக்கிடும் அருள் நாளாக அது அமைந்து அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலில் சேர்த்து அருள் உணர்வுகளை பொங்கச் செய்து இருளை அகற்றி… நம் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாகவும்… நமது குடும்பங்களில் அருள் உணர்வுகளைப் பொங்கி அருள் வழி வாழ்ந்து… மகிழ்ந்து வாழும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்ப்போம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இருளை நீக்கிடும் நிலையாக எப்படி வளர்க்கின்றதோ இதைப் போல்
1.நம் உடலுக்குள் இருக்கும் எத்தனையோ கோடி உணர்வுகளையும் (அணுக்களில்)
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு நமக்குள் சுவைமிக்க உணர்வின் ஞானத்தைப் பொங்கும்படி செய்து
3.அருள் வழி வாழும் பிறவி இல்லா நிலை அடையும் அருள் உணர்வுகளை நாம் பொங்குவோம்.

இன்றிலிருந்து…
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்
2.அருள் வழியில் வாழ்வோம்
3.இருளை அகற்றுவோம்
4.மெய்ப்பொருளைக் காண்போம் மெய் வழி வாழ்வோம்
5.அனைவரையும் அரவணைத்து வாழ்வோம்
6.அன்புடன் வாழ்வோம்… பண்புடன் வாழ்வோம்
7.பரிவுடன் வாழ்வோம் என்ற இந்த உணர்வுடன் நம் மனதை நிறைவுபடுத்தி அருள் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.

இந்த நாளை அருள் ஞான நாளாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துப் பொங்கும் மங்களமாக… என்றும் நமக்குள் அது வளர்ந்து அருள் மணம் தவழும் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.

நம் பேச்சும் மூச்சும் கேட்போரை மகிழ்ந்து வாழச் செய்வோம்.
1.நமது குரு அருள் நமக்குள் பரவி
2.அந்த உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்.

உலக மக்கள் அருள் ஞான வழியில் அருள் வழியில் வாழ்ந்திடும்… மலரைப் போன்ற மன மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தியை நாமும் பெறுவோம்.

நம் உடலில் அதை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரையும் அதைப் பெறச் செய்வோம். அவர்களை மகிழச் செய்வோம் உலக மக்களை மகிழ்ந்து வாழச் செய்வோம் என்று உறுதிப்படுத்துவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்குவோம்… பொங்கச் செய்வோம்.
1.எல்லோருக்குள்ளும் அதைப் பொங்கச் செய்வோம்
2.அந்த அருள் மணத்தை எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்வோம்.

நாம் இதையே தியானிப்போம் தவமிருப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியனுக்காக வேண்டிப் பொங்கல் வைக்கிறோம், வீட்டில் வேப்பிலையும் பூளைப்பூவும் வைத்து நாம் எல்லோரும் சாமியை வரவேற்கிறோம்.
1.அதாவது வேப்பிலையும் பூளைப்பூவும் வைத்தால் தீமைகள் வராது…
2.வேப்பிலையை வைத்தால் கசந்த வாழ்க்கை வராதபடி “மாரியாத்தா வந்து காப்பாற்றுவாள்…” என்று சொல்கிறோம்.

மாரியம்மன் கோவிலில் வேப்பிலை இருக்கும். ஆகையால் மாரியாத்தா வந்து நம்மைக் காப்பாற்றுவாள். வேப்பிலையை வைத்துத் தீமைகள் வராது “காப்புக் கட்டிக் கொள்கிறோம்…!” என்கிறார்கள்.

அடுத்த நாள் என்ன செய்வது…? பொங்கலை வைக்கிறோம். அதற்கு அடுத்த நாள் என்ன செய்வது…? ஆடு மாடு எல்லாவற்றையும் வெட்டிச் சாப்பிட வேண்டியது…!

அதாவது…
1.ஆடு மாடுகளுக்கெல்லாம் பொங்கலை உணவாகக் கொடுத்து விட்டு…
2.அதற்குப் பின் அதையே வெட்டிச் சாப்பிடுவது..!

அப்பொழுது நம்முடைய சாஸ்திரங்கள் எப்படி இருக்கும்….?

இதோடு மட்டும் அல்ல. மாட்டு பொங்கல் முடிந்து அடுத்த நாள் ஜல்லிக்கட்டு. ஒவ்வொருவரும் தன்னுடைய வீர தீரங்களைக் காட்டுவதும் அதை வேடிக்கை பார்த்து ரசிப்பதும் என்ற நிலையில்
1.ஒருவர் குடலைக் குத்தித் தூக்கி எறிந்த பின்
2.ஆகா…! அந்த மாடு நல்ல மாடு…! என்றும்
3.அந்த மாட்டுக்குச் சொந்தக்காரரைப் பார்த்து “நல்ல உயர்ந்த ரக மாடு வைத்திருக்கிறார்…!” என்று போற்றி துதிப்பதும்
4.இப்படிப்பட்ட வீரிய விளையாட்டுகள் தான் வருகிறது.

ஆனால்
1.வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றினான்
2.அருள் ஒளியைத் தனக்குள் பெருக்கினான்
3.எல்லோரையும் அரவணைத்து வாழும் உணர்வை வலுப்படுத்தினான்.
4.வாழ்வில் வந்த இருளை அகற்றினான்.
5.மெய் பொருளைக் கண்டுணர்ந்தான்.
6.இனி பிறவி இல்லா நிலையை அடையும் அந்தச் சக்தியைப் பெற்றான் என்று
7.ஏதாவது ஒரு சொல்லைப் பார்க்க முடிகிறதா…? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்…!
8.யாரிடமிருந்தும் “அந்தச் சொல் மட்டும் வராது…”
9.ஜல்லிக்கட்டு வீரியத்தைத் தான் “பத்திரிக்கையிலும் டி.வி.யிலும் காட்டச் சொல்லும்…”

ஆகவே இதன் வழிகளில்
1.என் தெய்வத்தைக் காக்க அதிலே தீவிரவாதம்.
2.எங்கள் கடவுளைக் காக்கத் தீவிரவாதம்.
3.எங்கள் இனத்தைக் காக்கத் தீவிரவாதம்.
4.என் மதத்தைக் காக்கத் தீவிரவாதம்.
5.என் மொழியைக் காக்கத் தீவிரவாதம்.
6.எங்கள் தெருவைக் காக்கத் தீவிரவாதம்
7.எங்கள் ஊரைக் காக்கத் தீவிரவாதம்.

இப்படித் தான் தீவிரவாதம் என்ற நிலைகளில் விவாதங்களுக்குச் சென்று என் தெருவைக் காக்க வேண்டும் என்றாலும் அடுத்தவனைக் கொல்லும் நிலை தான்…! என் தெய்வத்தைக் காக்க வேண்டும் என்றால் அடுத்தவனைக் கொல்லுவது தான். என் மதத்தைக் காக்க வேண்டும் என்றால் அடுத்த மதத்தைக் கொல்வது தான்.

இத்தகைய தீவிரவாதங்கள் அதிகரித்து இன்று மனிதனின் உணர்வுகள் முழுமையாகவே மறைந்து போகும் நிலைகள் உருவாகிவிட்டது.

ஆனால் ஞானிகள் நமக்குச் சொன்னது என்ன…?

1.நாம் அனைவரும் ஒரே மகிழ்ச்சி கொண்டு…
2.ஒவ்வொரு உள்ளங்களில் அறியாது சேர்ந்த அழுக்குகள் நீங்கி
3.மெய்ப் பொருள் காணும் உணர்வுகள் வளர வேண்டும் என்று எல்லோரும் எண்ணினால்
4.இதே சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அது பரவுகின்றது.

நாம் அனைவரும் இத்தகைய உணர்வலைகளை நமக்குள் சமைத்து நாம் வெளியிடும் மூச்சலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது வீட்டிற்குள்ளும் தெருவிற்குள்ளும் நாடு முழுவதும் படரச் செய்கின்றது. நமது உடலுக்குள்ளும் படர விடுகின்றது.

“மகரிஷிகள் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்று நாம் விடும் மூச்சலைகள் அந்த உணர்வை அனைவரும் கூட்டாக எடுக்கும்போது
1.பகைமைகள் அனைத்துமே மறைகின்றது… ஒன்றி வாழும் உணர்வுகள் வளர்கிறது…!
2.ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட வேதனையான நிலைகள் மறைகின்றன.

ஆகவே வாழ்க்கையில் வந்த நஞ்சினை நீக்கி நம்மைச் செயலற்றதாக்கச் செய்யும் எத்தகைய தீய உணர்வுகளையும் மாற்றி அமைப்பதற்குத்தான் “மெய் ஞானிகள் வருடத்திற்கு ஒரு நாளாக இதைத் தேர்ந்து எடுத்து… நாம் எண்ண வேண்டிய நல் உணர்வை உணர்த்தினார்கள்….”

சதுர்த்தி

 

சதுர்த்தி என்றால் “நிறுத்துதல்…” என்று பொருள். ஒரு தவறு நடக்கின்றது என்று பார்த்து என்ன… ஏது…? என்று அதை நுகர்கிறோம் என்றால் உடலுக்குள் அணுவாக உருவாகதபடி அதை நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களில் கலக்க வேண்டும் என்று உள்ளே செலுத்தி விட வேண்டும்.

1.இந்த ரத்தம் தான் உடலில் உள்ள எல்லா உறுப்புகள் முழுவதும் சுற்றி வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் முன்னக்கூடியே செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு அணுவின் முகப்பிலும் அந்தக் காந்தப்புலன் இருக்கும். இதன் துணை கொண்டு அங்கே எண்ணப்படும் பொழுது ரத்தத்தில் இந்தச் சக்தி கலக்கின்றது.

உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் ரத்தத்தின் வழி தான் உணவை எடுத்து வாழ்கிறது.
1.காற்றில் இருக்கும் தன் இனமான சத்தைச் செடி கொடிகள் எப்படி எடுத்துக் கொள்கிறதோ
2.அதே மாதிரி உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் இரத்தத்தின் வழி தன் உணவை எடுத்துக் கொள்கின்றது.

இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் முன்னக்கூடியே அந்த அணுக்களுக்குச் செலுத்தி விடுகின்றோம்.

நாம் முதலில் நுகர்ந்த தீமை சிறிதளவு தான் உள்ளே சென்றிருக்கும். அதே சமயத்தில்
1.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லும் பொழுது…
2.முதலில் புருவ மத்தியில் தடுத்தது போல உள்ளேயும் நாம் தடுத்துக் கொள்கின்றோம்.

அதற்குப்பின் கண் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கருமணி தான் நாம் பார்ப்பதையெல்லாம் படமாகப் பதிவாக்குகின்றது.

அதனுடன் இணைந்த நிலையில் தான் நரம்பு மண்டலம் உள்ளது அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வின் செய்திகள் கண் கருமணி வழி… அதனுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் வழி தான் எல்லா அணுக்களுக்கும் செல்கின்றது.

1.அந்தக் கண் கருமணியுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் முழுவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி இணைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியை எல்லோரும் நீங்கள் எடுக்க முடியும். ஒன்றும் சிரமம் இல்லை. ஒருவன் திட்டினான் என்றால் அவனைத் திரும்ப எண்ணுகின்றோம் அதே போல இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் தீமை நமக்குள் வராது தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து… அதை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதை நீங்கள் செய்து பழகுங்கள்… தீமைகள் வராதபடி நாம் தடுக்கின்றோம்… அது தான் விநாயகர் சதுர்த்தி.

ஒவ்வொரு நிம்டமும் நாம் நுகர்வது உடலுக்குள் வினையாகின்றது. ஆனால் தீயவினை உருவாக்காதபடி அதை நாம் நிறுத்திப் பழக வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. அறியாமல் தான் அத்தகைய உணர்வுகள் தீயவினைகள் நம் உடலுக்குள் நுழைந்து எத்தனையோ கலாட்டா செய்கின்றது.

அதை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. சுண்ணாம்புச் சத்தை எல்லாம் எடுத்து எலும்பாக மாற்றிக் கொள்கின்றது. அதற்குள் இருக்கக்கூடிய அணுக்கள் ஆகாரமாக எடுக்கிறது.

ஆனால் வேதனை அதிகமானால் அந்த விஷம் எலும்பை உருவாக்கிய அணுக்களை உணவாக எடுக்கத் தொடங்குகிறது. டி.பி. என்று சொல்வார்கள்.

அந்த விஷமான உணர்வுகள் எலும்புகளைத் தாக்கி விடாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு இணைத்து விட வேண்டும்.

இவ்வாறு…
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களிலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைச் சேர்த்து
2.தீமைகள் புகாத வண்ணம் ஒரு அடைப்பாக… அணைப்பாக… நாம் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் நண்பர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஆகிச் சண்டை இட்டுக் கொண்டார்கள் என்றால் என்ன ஆகின்றது..?

ஒருவரின் செயலைப் பார்த்து “நீ இப்படிச் செய்து விட்டாயே…!” என்று பழிச் சொல்லாக மாறுகிறது. அதைக் கேட்ட பின் பதிலுக்கு அவரும் “நீ மட்டும் ரொம்ப யோக்கியமா…?” என்று சொல்வார்.

இராமன் அம்பை எய்தான்…! என்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். ஆகவே அப்பொழுது அந்த இரண்டு நண்பர்களுக்குள் “தவறு செய்தவர் யார்…?” என்ற முடிவு தெரியாது. ஆனால் சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் ஊட்டப்படும் போது இருவருக்குள்ளும் பழிச் சொல்லாக மாறுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் நம்மை எது இயக்குகின்றது…?

இரண்டு பேரில் யார் தவறு செய்தார்கள் என்று அந்த இருவருக்குமே தெரியாது. கோபப்பட்டுச் சண்டை போட்டார்கள் என்றால்
1.நான் ஒன்றும் செய்யவில்லை.. அவர் தான் செய்தார்…! என்பார்
2.இரண்டமாவர் நான் ஒன்றும் செய்யவில்லை அவர் தான் அப்படிப் பேசுகிறார்…! என்பார்
3.ஆக இதிலே அந்த முடிவையே காண முடியாது… காண முடிகின்றதா…?

அதே சமயத்தில் இதைக் கேட்டு நியாயம் பேசுவதற்காக ஒருவர் வருவார். இரண்டு பேருக்கும் சார்பாக வந்து
1.சரி போங்கள்…! என்று உண்மையை எடுத்துச் சொன்னால்
2.உடனே அவர்கள் மேலேயும் பகைமை ஆகும்.
3.எப்படியும் “ஒருவரிடம் பகைமை ஆகிவிடும்…”

இரண்டு பேரும் சமாதானமாகப் போங்கள்… என்று மத்தியஸ்தம் சொனால் “அவருக்கு என்ன…? அவருக்கு வேண்டியர் போல இருக்கிறது. அதற்காக இப்படிப் பேசிவிட்டுப் போகிறார்…!” என்பார்கள்.

அதாவது…
1.ஒர் உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் போது “அந்த மாறுபட்ட உணர்வு…”
2.நம் நல்ல குணங்களை அது சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.

எது…?

நீங்கள் காரத்தை எடுத்து அதை எதிலே கொண்டு போய்க் கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும். ஆனால் மற்ற “சப்…” என்று இருக்கும் பொருளிலே அந்தக் காரத்தைச் சேர்த்தால் உணர்ச்சியைத் தூண்டி அந்தச் சுவையின் உணர்வுகளை நமக்குள் உணரச் செய்கின்றது.

இதைப் போல தான் வாழ்க்கையில் அறியாது வரக்கூடிய தீமைகளிலிருந்து நமது சொல்லின் நிலைகளைப் பக்குவப்படுத்தும் அந்த நிலைகளைப் பெறுதல் வேண்டும்.

அந்தப் பக்குவ நிலை பெறச் செய்வதற்காக வேண்டித்தான் பகைமைகளை அகற்றி ஏகாந்தமாக வாழும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களைப் பெறச் செய்கின்றோம்

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் சென்றால்
1.எது நம்மை இயக்கியது…?
2.தவறான சொல்கள் எப்படி வருகிறது…?
3.பகைமை எதனால் வருகிறது…?
4.பகைமைகளை அகற்றி எப்படி ஒன்றி வாழ வேண்டும் என்ற உண்மைகளை உணர்த்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

“பதிவின் இயக்கம்…” என்பது சாதாரணமானதல்ல…!

 

யாம் தெரியாமல் எதையும் உபதேசிக்கவில்லை.

உடலுக்குள் சூட்சமமாக என்னென்ன நடக்கின்றது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தான் குருநாதர் பல இடங்களுக்கு எம்மை அனுப்பினார்.

கூடுமான வரையிலும்… குருநாதர் எம்மைப் பல வகைகளிலும் கஷ்டப்படுத்தித் தான் உண்மைகளை எல்லாம் தெரிய வைத்தார்.

ஆனால் நீங்கள் கேட்கலாம்… குருநாதர் ஏன் என்னைக் கஷ்டப்படுத்தினார் என்று…?

1.என் உடலுக்குள் எத்தனை தீமைகள் என்னைக் கஷ்டப்படுத்துகின்றதோ அந்தத் தீமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்.
2.அது போல் ஒவ்வொரு மனித உடலிலும் விளைந்த உணர்வுகள் கஷ்டத்தை எப்படித் தூண்டுகின்றது…? சந்தர்ப்பத்தால் ஏற்படுத்துகின்றது…?
3.அதிலிருந்து அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்குத் தான் அதைச் செய்தார் குருநாதர்.

நான் சிறு வயதில் இருக்கும் பொழுது அறியாத நிலைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கின்றேன். அது பதிவாக்காமல் நினைவு இல்லை.

வளர வளர செய்த தவறுகளை மறந்து மறந்து வருகின்றேன். மறந்து வந்தாலும் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே அதனின் வேலையைத் தான் செய்யும்.

சிறு வயதில் கோலி விளையாண்டிருந்தால் வயதான பின்பும்… இங்கே பையன்கள் கோலி விளையாண்டு கொண்டிருந்தால் “ஏய்… நானும் கோலி விளையாடுகிறேன்…” என்று இந்த உணர்வுகள் தோன்றி அங்கே செல்வோம்.
1.பெரிய மந்திரியாக இருந்தாலும்…
2.பார்த்தால் அது இழுத்துக் கொண்டுதான் போகும்.

பம்பரத்தைச் சுற்றுகிறார்கள் என்று பார்த்தால் என்ன செய்வோம்…?

நானும் சிறு வயதில் பம்பரத்தைச் சுற்றி விளையாண்டேன் என்று அந்த ஆசை தூண்டப்பட்டு… “என்னிடம் கொடு… நானும் சுற்றுகிறேன்…!” என்று இந்த உணர்வுகள் இயக்கத் தான் செய்யும்… நம்மைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.

எது பதிவோ… அந்த நிலை நிச்சயம் வந்தே தான் தீரும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும்…? எதைப் பதிவாக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கூர்மையாக விண்ணிலே செலுத்த வேண்டும்.

1.அகஸ்தியன் ஒளிச் சுடரான உணர்வு உங்களுக்குத் தெரிய வரும்.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கற்றைகள் வந்து கொண்டிருக்கின்றது… இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
3.அதை நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

விஷத்தை ஒடுக்கிய பின் அத்தகைய நீல ஒளியாகத் தான் அது காட்டும். கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்று தான் ஒளி வீசும்.

ஆகையினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும். அதைக் கூர்மையாக எண்ணி எடுக்க வேண்டும்.

1.அதை அதிகமாக எடுத்தால் உயிர் அதன் அவதாரமாக நம்மை ஒளியாக மாற்றும்.
2.இதிலே ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“மௌன விரதம் இருக்கிறோம்…” என்று சொன்னால்
1.எப்போதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் படர வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
3.அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ வேண்டும் என்ற
4.இந்த உணர்வோடு தான் தியானம் இருக்கிறேன் (ஞானகுரு).

ஏனென்றால் என்னை நினைப்பவர்கள் எல்லோரும் “அந்தக் கஷ்டம்… இந்தக் கஷ்டம்…! என்று தான் சொல்கிறார்கள். அந்த மாதிரி இல்லாதபடி நான் எப்படி உங்களுக்குச் சொல்கிறேனோ அதே போல் நீங்களும் செயல்படுத்த வேண்டும்.

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். நாங்கள் பார்த்த குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று இப்படி நீங்களும் எண்ண வேண்டும்.

உடலில் நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை விடுத்து விட்டு அருள் மகரிஷியின் உணர்வுகள் எங்கள் உடலிலே படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும். நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானம் செய்தாலே போதும்.

நீங்கள் நலம் பெற வேண்டும் என்று யாம் உங்களுக்குக் கொடுக்கும் இந்த வாக்கின் உணர்வுகளை நுகர்ந்தால் தொடர்ந்து உங்கள் சர்க்கரைச் சத்து குறையும். சர்க்கரைச் சத்தை மாற்றும் வலிமையும் உங்களுக்குக் கிடைக்கின்றது.

1.மருந்தால் இல்லை…!
2.ஏனென்றால் நீங்கள் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் முதலில் அந்த நோய்கள் வந்தது.
3.ஆகவே எண்ணத்தால் தான் இதை மாற்றும் வல்லமையையும் நீங்கள் பெறவேண்டும்
4.விஞ்ஞானத்தில் இனி வரும் விஷமான தன்மைகளிலிருந்து உங்களை மாற்றிக் கொள்வதற்கும் இது உதவும்.

என்னுடைய தியானமே… என்னுடைய தவமே.. நீங்கள் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். நஞ்சான நிலைகளை அடக்கி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும். உலகுக்கு நல்ல வழி காட்டிகளாக வர வேண்டும் என்பது தான்.

இவ்வாறு யாம் கொடுக்கும் இந்த வாக்கைப் பதிவு செய்து கொண்டு “விழித்திரு..!” என்ற நிலையில் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் செலுத்திச் சீராகத் தியானித்து அந்த அருளை வளர்த்துக் கொண்டால்
1.உங்கள் பிணிகளைப் போக்க முடியும்
2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ள முடியும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

 

இயற்கையின் நிலைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… மனிதனாக உருப்பெற்ற பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்து நமக்குள் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்… நாம் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்வினை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு துருவ தியானம் இருந்து பழகுதல் வேண்டும்.

கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்போது பார்த்துணர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று இதைக் கலந்து… கேட்டறிந்த தீமை வலுப் பெறாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை வைத்துத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால்
1.பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.அதன் வழியில் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடலிலிருந்து வெளிப்படும் மணம் கார்த்திகேயா என்றும்… தீமை என்று தெரிந்த பின் அந்தத் தீமை புகாது தடுக்கும் நிலை தான் சேனாதிபதி ஆறாவது அறிவு என்றும்… முருகன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவது “நஞ்சினை வென்றிடும் சக்தி…? என்று அதை அறிகின்றோம் கார்த்திகேயா. அதை நமக்குள் நுகர்ந்து உருவாக்கினால் தீமை புகாது அதனை அடக்கி… “ஒளியின் சிகரமாக மாற்றும் சக்தி வரும்…”

மனிதனான பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து அதன் அறிவாக அறிந்திடும் அறிவைச் சேர்த்துச் சேர்த்து இன்று நாம் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறோம்.
1.அந்த ஆறாவது அறிவைத் தான் கார்த்திகேயா என்றும்
2.சேனாதிபதி என்றும் தீமைகள் புகாது பாதுகாக்கும் நிலை என்றும்
3.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டியுள்ளார்கள்.

இத்தகைய நிலைகள் வளர்ச்சி பெற்று அதிலே முழுமை அடைந்தவன் தான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளார். அதனின்றி வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அதை உங்களுக்குள் பதிவாக்கி நீங்கள் அதை எடுக்கும் நிலைக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.
1.அதன் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று ஊழ்வினை என்ற வித்தாக வைத்து
2.அதை மீண்டும் நினைவு கொண்டு அருள் ஒளி என்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

அது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றதே தவிர… யாரோ வந்து அந்தப் பிறவி இல்லாத நிலை நம்மை அடையச் செய்வார் என்று எண்ணுதல் வேண்டாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எடுத்துக் கொண்டால் விஷத் தன்மையால் பெரும் சூறாவளிகள் கிளறப்பட்டுக் கட்டிடங்கள் எல்லாம் தூசிகளைப் போலப் பறக்கும் நிலையும்… அதே சூறாவளி கடலில் தாக்கப்படும் பொழுது அது நீர் நிலைகள் அனைத்தும் ஊருக்குள் கொண்டு வருவதும்… இப்படிப் பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது.

எந்த விஞ்ஞானத்தைச் செயல்படுத்தினார்களோ அந்த விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத்தின் தன்மைகள் அடர்த்தி அடைந்து அது வலுவாகிய நிலையில் அதை எல்லாம் சூரியன் கவர்வதனால்
1.ஒன்றுக்கொன்று எதிர்நிலை கொண்டு மோதி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையும்
2.நாம் தேடிய செல்வங்களும் இந்த உடல்களும் எப்பொழுது எந்த நிமிடத்தில் அழியும் என்ற நிலைகளை
3.நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலைகள் கொண்டு… உலகையே அழிக்கும் நிலைக்கு வந்து விட்டது.

இதற்குள் நம் உணர்வின் தன்மை எதிலும் அழியாத உணர்வு கொண்ட ஒளியின் உணர்வாக ஒளியாக மாற்றச் செய்வதே இந்தத் துருவ தியானத்தின் நோக்கம்.

1.இந்த உலகில் வரும் விஷத் தன்மைகள் நம்மைப் பாதிக்காது…
2.“விஷத்தின் தன்மை தாக்குதலால் ஏற்பட்ட உயிர் ஒளியாக மாறுவது போல்…”
3.எத்தகைய விஷத் தன்மை தாக்கினாலும்… அந்த உணர்வுகள் ஒளியாக மாறி
4.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த விஷத்தை அடக்கி ஆட்சி புரியும் தன்மைக்கு வர வேண்டும்.

நமது உடலில் நஞ்சு கலந்த உணர்வுகள் இருப்பினும் உடல் அதை மலமாக மாற்றுகின்றது. ஆனால் அதிகமான நஞ்சுகள் உடலில் கலந்தால் அது மனிதனையே வீழ்த்துகின்றது.

சூரியனோ இத்தகைய விஷத் தன்மை கொண்ட எல்லாவற்றையும் மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகின்றது. அதைப் போல நஞ்சான உணர்வு வருவதைப் பிரித்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் இதைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

இல்லை என்றால் நம் வாழ் நாளில் மீண்டும் கீழான உடலுக்குள் தான் போக வேண்டியதிருக்கும.
1.இந்தப் பூமி இருக்கத்தான் செய்யும்… ஆனால் மாற்றங்கள் இருக்கும்…!
2.இந்த மனித உடலில் உணர்வுகள் மாறும் பொழுது மனித உடல்கள் மாறும்.
3.இன்று மனித உடலாக இருந்தாலும் அடுத்து மனித உடல் அல்லாத நிலைகள் தான் உருவாக்க முடியும்.
4.வேதனை என்ற உணர்வுகளிலிருந்து மீள முடியாத துயர் நிலையே தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த மனித உடலில் “கோடிக்கரை…” என்ற நிலைகளில் கடைசி நிலையில் நாம் இருக்கின்றோம். இந்த உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை என்ற முழுமையைப் பெற நாம் முயற்சிப்போம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.சதா அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வருவோம்.

நமது வாழ்க்கையில் எதிர் வரும் தீமைகளை
1.நமக்குள் சாராது
2.நமக்குள் அதை வளர்ந்திடாது
3.நமக்குள் அதைப் பெருக்கிடாது தடுத்துப் பழகுவோம்.

இந்த உடலான கோடிக்கரையிலிருந்து “தனுஷ்கோடி…!” எல்லாவற்றையும் அடக்கிடும் அந்த ஒளியின் தன்மையை நாம் பெறுதல் வேண்டும்.

நம்மால் நிச்சயம் முடியும்…!

நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்

 

ஒருவன் என்னைப் பழித்துப் பேசி விட்டான் என்றால்… பதிலுக்கு “அவனை நான் அழித்து விடுவேன்…” என்ற அசுர உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.

ஆனால் அவனை அழித்து விடுவேன் என்று எண்ணும் போது
1.உயிரான நிலைகளில் இங்கே பழித்து… அழிக்கும் சக்தியை நமக்குள் வளர்த்து
2.அவனை நாம் “நீ தொலைந்து போவாய்…” என்று சொல்லும் பொழுது
3.முதலில் அந்தத் தொலையக்கூடிய உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது.
4.இந்த உணர்வை அவன் கேட்டறிந்த பின் அவனையும் தொலைக்கிறது.

அதற்குப் பின்… இப்படிச் சொன்னானே இப்படிச் சொன்னானே என்று எண்ணும் பொழுது அது நம் உடலுக்குள் நோயாக மாறுகிறது. அதே போல் இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? என்று அங்கேயும் விளைகிறது. அந்த வித்தாக ஊன்றப்படுகின்றது.

இதைத் தடைப்படுத்துவது தான் நரசிம்மா…! நரசிம்ம அவதாரம். நரசிம்மன் என்ன செய்கின்றான்…? வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான். நாராயணன் நரசிம்ம ரூபம் எடுத்து வாசல்படியில் வைத்துப் பிளக்கின்றான்.

1.நமக்கு வாசல்படி எது…? மூஷிகவாகனா… நாம் சுவாசிக்கும் வழி.
2.ஒரு கெட்டதைப் பார்த்தால் அது தனக்குள் வராதபடி அதைத் தடைப்படுத்துவதற்குப் பழக வேண்டும்.
3.அந்தத் திறன் நமக்குள் பிறக்க வேண்டும்.

அந்த திறன் பிறக்க வேண்டுமென்றால் அதற்கு எது வேண்டும்…?

அந்த மகரிஷிகள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளிலும்… அதை உருவாக்கிய அணுக்களிலும்… அந்தச் சக்தியை இணைக்க வேண்டும்.

இந்த உணர்வின் “மணம்…” வரப்படும் பொழுது கெட்டது வந்தால் பிளக்கும்.

பன்றி எப்படிச் சாக்கடையைப் பிளந்து அதற்குள் நல்லதை எடுக்கின்றதோ அதைப் போன்று நரசிம்ம அவதாரம்…!
1.நம் சுவாசத்திற்குள் வரக்கூடிய எதுவாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.மெய் ஒளியின் தன்மை நமக்குள் சேர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியாகச் செல்வதுதான் கடைசி கல்கி…”

இயற்கையில்… ஒரு பொருளின் தன்மை தனக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் பிரம்மா… சிருஷ்டி. உலகிலேயே மனிதனின் ஆறாவது அறிவுக்குள் சிருஷ்டிக்கும் எண்ணங்கள் உண்டு. ஒவ்வொன்றையும் படைக்கும் சக்தி பெற்றவன் தான் மனிதன்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை ஜோதிடம் இல்லை…! நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தின் நமக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் பாதையிலேயே தான் நாம் நடக்கின்றோம்.

அந்த ஞானிகள் சொன்ன மெய் உணர்வை நமக்குள் எடுத்து அதைச் சிருஷ்டிக்க வேண்டும் ரிஷி. ஆறாவது அறிவின் தன்மை… “ஏழாவது சப்தரிஷி…”

நாதங்கள் கொண்டு உணர்வின் தன்மை பாய்ச்சப்படும் பொழுது அந்த உணர்வுகள் அங்கே இயக்குகின்றது. அது தான் சப்தரிஷி என்பது. ஏழாவது அறிவு கொண்டு உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் விண்ணில் இருக்கக்கூடிய நிலைகளைத் தான் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

1,மனிதனுக்குள் விளைந்த உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றி
2.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் நிலை தான் அது.
3.அந்த ரிஷியின் தன்மையை நாம் பெற வேண்டும்
4.அதைப் பெறுவதற்கு நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஏங்கித் தியானித்து வருகின்றோம்.

கண்ணின் நினைவைப் பூமியின் வடதுருவத்தின் வழியாக விண்ணிலே செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் விண்ணிலிருந்து நுகர்வோம் என்றால் அதை உயிர் “ஓ…ம் நமச்சிவாய…!” என்று நம் உடலாக மாற்றுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகப் பெருக
1.நம் உடலில் அறியாது சேர்ந்த இருளை அது மாற்றுகின்றது
2.நம்மைத் தெளிந்த மனம் பெறச் செய்கின்றது
3.தெளிவான வாழ்க்கை வாழ முடிகின்றது
4.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் திறன் பெறுகின்றோம்
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற முடிகின்றது.
6.இந்த வழியில் பேரின்ப நிலை பெறும் தகுதி பெற்று இந்த உடலில் என்றும் பேரின்ப நிலையை அடைய முடிகின்றது.
7.இந்தப் பிறவியிலேயே துருவத்தின் ஆற்றலை நாம் நுகர முடிகின்றது.
8.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்க முடிகின்றது.
9.இந்த உடலில் அந்த உணர்வின் சத்தைப் பெறச் செய்தால் ஓ..ம் நமச்சிவாய… என்று ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
10.இப்புவியின் பற்றை அகற்றுகின்றது.
11.இப்புவியில் நஞ்சைப் பற்றற்றதாக மாற்றுகின்றது.
12.பேரருளைப் பெற்று “என்றும் பேரொளி…” என்ற நிலைகளை நாம் அடைய முடிகின்றது.
13.என்றும் ஏகாந்த நிலை அடைய முடிகின்றது.
14.ஏகாந்த வாழ்க்கை என்றும்… ஏகாதசி என்றும்… என்றும் பத்தாவது நிலையாக கல்கி என்று நிலை கொள்ள முடிகின்றது.
15.எந்தத் தீமையும் நம்மை அணுகாது
16.பேரொளி உணர்வுகள் என்றுமே நம்மை அணுகி வருகின்றது… ஒளியின் சரீரமாகப் பெற முடிகின்றது.
.
ஆகவே அந்த நிலையைப் பெற நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை நாமும் நுகர்வோம்.
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை உருவாக்குவோம்.
2.நம்மை அறியாது வந்த இருளை அகற்ற நாம் தியானித்து அரும் பெரும் சக்திகளை நாம் சுவாசிப்போம்.
3.நம் உடலில் அறியாது வந்த இருளை அகற்றுவோம்.
4.என்றும் ஏகாந்த நிலை பெறும் சக்தியை நாம் சதா தியானிப்போம்.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

தியானத்தில் நம் நினைவுகள் திசை மாறினால் என்ன செய்ய வேண்டும்…?

 

நாம் தியானம் எடுக்கும் பொழுது சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட அந்த எண்ணங்கள் திசை மாறிப் போகும். இது எதனால் ஏற்படுகின்றது…?

நம் உடலில் இதற்கு முந்தி நாம் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது “அதற்கு அந்த உணவு தேவை…”

நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தால்
1.தனக்காக வேண்டி அந்த எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வை நுகரப்படும் பொழுது
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.
3.வெறுப்போ வேதனையோ சலிப்போ சங்கடமோ பிறர் மேல் ஆத்திரமோ அந்த உணர்வுகள் தான் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய அணுக்கள் உணவை எடுத்து வளரும்.

அதைத் தடுப்பதற்கு “உடனடியாக கண்களைத் திறந்து…” துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் அதை எண்ணி எங்கள் உடலுக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சிறிது நேரம் ஆன பின் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதன் வழி உணவை எடுக்காதபடி
2.கண்ணின் நினைவை உயிரில் செலுத்தி அங்கே புருவ மத்தியிலே அடைத்து… விண்ணிலே நினைவைச் செலுத்தி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

காரணம்… எத்தனையோ விதமான தீய அணுக்கள் உடலுக்குள் இருப்பதால் அதனுடைய உணவுக்கு “அதனுடைய வலுவை அது காட்டத்தான் செய்யும்…”

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் கலக்கச் செய்யும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது “அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது…”

உதாரணமாக ஒரு தவறு செய்பவரைக் கண்ணிலே நினைத்தபின் எப்படி அந்த உணர்வின் நிழல் படம் தெரிகின்றதோ அந்த நேரத்திலே நம்முடைய உணர்ச்சிகள் பல விதமாக வெறுப்பாகத் தோன்றுகின்றது. கண் வழி நுகர்ந்து தான் ஏற்கனவே அது அணுவின் தன்மையாக அடைந்தது.

அதே கண் வழியாக உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்து
2.ஏற்கனவே உருப்பெற்ற அணுக்கள் இரத்தத்தின் வழி நுகர்வதை மாற்றி
3.துருவ நட்சத்திரத்திச் சக்தியை ஈர்க்கும் சக்தி பெற்று நல்ல அணுக்களாக அதை மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது.

தியானம் இருந்தேன்… என் நினைவுகள் எங்கேயோ இழுத்துக் கொண்டு போகிறது…! என்று அப்படிச் சொல்லி விட்டு விடாதீர்கள்.

யாம் சொன்ன முறைப்படி அதை மாற்றி மாற்றி… உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.
1.இரத்தங்களிலே அதைப் பெருக்கி பழகுங்கள்.
2.இப்படி… இந்த வலிமையைத் தான் நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் சுவாசித்த உணர்வின்படி நமக்குள் வெறுப்போ சலிப்போ இதற்கு முன் உடலுக்குள் நுழைந்த அந்த உணர்வுகளின் தன்மையால் நோயாக உருவாக்கப்பட்டு அதனால் வேதனைப்படுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அந்த அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் வலுவாக்கும் போது அந்த நோயையும் அதனால் வரும் வேதனையின் வளர்ச்சியையும் குறைக்கலாம்.. வளராது தடுக்கலாம்….!

நோய்க்குக் காரணமான அந்த ஊழ்வினை என்ற வித்துக்கள் உடலுக்குள் அதிகமாக இருக்கும் போது
1.அது தன் இனத்தை விருத்தி செய்யாதபடி அருள் என்ற உணர்வை நமக்குள் சேர்த்து
2.இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றித் தெளிந்த மனதை நாம் உருவாக்க முடியும்.

வாழ்க்கையில் மனக் கவலையோ மனச் சோர்வோ மற்ற நிலைகளோ நமக்குள் தோன்றும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்துக் கொண்டால் அந்தத் தீமைகள் வளராது தடுக்கப்படுகிறது.

நாம் நுகராது விட்ட அந்தத் தீமையான உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து சென்றுவிடும். நம் ஈர்ப்பிலிருந்து விலக்கிச் சென்றுவிடும். நம் ஆன்மா சுத்தமாகும். அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமையான உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படும்.

இவ்வாறு நமது வாழ்கையில் தொடர்ந்து இப்பணிகளைச் செய்தல் வேண்டும்.
1.இந்த உடலை விட்டுச் செல்லும் வரையிலும்
2.அருள் ஒளி என்ற உணர்வினை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டு எப்படியும் இந்த உயிர் சென்றே தான் ஆகும். ஆனால் எதன் உணர்வின் தன்மையை முடிவாகத் தனக்குள் வளர்த்து கொண்டதோ அதற்குத்தக்க உணர்வு கொண்ட அடுத்த உடலை எடுக்கும்.
1.ஆகவே ஒளி என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கும் போது
2.ஒளி என்ற உடலினை உருவாக்குகிறது.

இருள் சூழ்ந்த ஒரு உடலுக்குள் (மனிதனுக்குள்) அறிவு என்ற நிலைகளில் இருந்தாலும் உடலினின்றே இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை தான் இது.

ஆனால் ஒளியாக வாழும் சப்தரிஷி மண்டலத்தில்… அங்கே அப்படி அல்ல.
1.அது அனைத்து உணர்வினையும் ஒளியாக மாற்றும் நிலை பெற்றது. (அறிந்து அறிவின் தன்மையாக இயக்குவது அல்ல)
2.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நம் உணர்வினை ஒளியாக மாற்றும்.
3.அதை நுகர்வோருடைய இருளை எல்லாம் அகற்றி அறிவென்ற நிலையில் தெளிவாக்கும் தன்மை பெறும்.

முழுமுதற் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையாக உருவாக்கும் சக்தி பெற்றது

1.இப்படிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கினால்
2.அந்த ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமையை அகற்றி
3.”ஒளி என்ற உணர்வை உருவாக்கும் கடவுளாக…” நாம் ஆக முடியும்.
4.இதன் தொடர் வரிசையில் தீமைகளை அகற்றிப் பகைமையை மாற்றி நல் உணர்வை இயக்கி
5.ஒவ்வொரு மனிதனையும் நல் வழிபடுத்தும் நிலையாக நமக்குள் வரும்.

தீமைகள் வரும் நேரத்தில் அதை நன்மை பயக்கும் செயலாக மாற்றும் வழி முறை

 

நல்ல உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தால்… பிறருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல அணுக்களில் அது திரை போட்டு விட்டால் என்ன ஆகின்றது…?
1.நம் சிந்திக்கும் நிலைகளுக்கு அதுவே தடையாக வந்து சேர்ந்து விடுகின்றது.
2.இதைத் துடைக்க வேண்டும்.

அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

என் பார்வை அவர் இருளைப் போக்கும் அருள் சக்தியாக மாற வேண்டும். என் சொல் அவருக்குள் உண்மையை உணர்த்தும் சொல்லாக வரவேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உணர்வின் ஒலிகள் படப்பப்படும் பொழுது நம்மை அவர் எண்ணும் பொழுது “இந்த உணர்வு அவருக்குள் ஊடுருவும்…”
2.எந்த காரணத்தைக் கொண்டு நாம் அந்த நல்லதைச் சொன்னோமோ
3.அவருடைய தீமையான உணர்வுகளுக்குள் இது சேரும் போது அங்கே இது முன்னாடி இருக்கும்.

அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னணியில் இருக்கும். அருள் உணர்வுகளை எடுத்து அதையே நாம் சொல்லப்படும் பொழுது
1.நாம் சொல்லும் உணர்வுகள் அவனைத் திருத்தும்
2.இல்லை என்றால் நமக்கு முன்னணியில் இருக்கும் “அவர் உணர்வு” நம்மை மயக்கிவிடும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உண்மையைச் சொல்கின்றோம். அவர் தீமையைச் சுட்டிக் காட்டுகின்றோம். தீமையான உணர்வுகள் முன்னிலையில் வருகின்றது அவருக்கு. இந்த உணர்வுகள் முன்னணியில் இருக்கப்படும் பொழுது அவர் அதை மறுக்கின்றார். அவருக்கு அது எதிர் நிலை.

அதாவது
1.தீமையின் உணர்வுக்கு நாம் சொன்ன நன்மையின் உணர்வு அங்கே மறைத்திருக்கின்றது.
2.அவரிடமிருந்து உருவான தீமையான சொல்களை நாம் கேட்டவுடன் நல்ல உணர்வுக்கு இங்கே திரைமறைவாகின்றது.
3.இருவருக்குமே மறைக்கிறது… அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தத் தீமையைத் துடைத்து விட்டு அந்த மகரிஷிகளின் நினைவலைகள் கொண்டு சொல்லாகச் சொல்லப்படும் பொழுது தன்னிச்சையாக அங்கே அவருக்குள் அது ஈர்க்கப்படும்.

பெரிய மனிதர் மாதிரி சொல்ல வந்து விட்டார் என்று முதலில் நினைப்பார்.
1. பின் நாம் வெளிப்படுத்திய அந்த மகரிஷிகளின் உணர்வு சிறுகச் சிறுக அவருக்குள் போகும்.
2.இந்த உணர்வுகள் அங்கே புகுந்து அங்கே ஒரு இக்கட்டான நிலை வரும்.
3.அப்பொழுது பதில் சொல்ல முடியாது திணறுவார்.
4.அன்று அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று திருப்பத்திற்கு வரும் பொழுது நம்மைத் தேடி வருவார்கள்.

இந்த உணர்வின் தன்மை அங்கே இப்படி முடக்கப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை நிச்சயம் வரும்.

செய்து பாருங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியான வழியினைக் கடைப்பிடிப்பவர்கள் யாராவது கொஞ்சம் குறையைச் செய்தாலும் உடனே அவருக்குக் கோபம் வரும். சாமி (ஞானகுரு) சொன்ன முறைக்கு மாறாக யாராவது குற்றங்கள் செய்ய ஆரம்பித்தாலும் உடனே அந்தக் குற்றத்தை உணர்த்தி… அதைச் செய்யக் கூடாது…! என்பார்.

1.நாம் எதற்காக இந்தத் தியான வழிக்கு வந்தோம்…?
2.நாம் எப்படி இருக்க வேண்டும்..?
3.குருநாதர் (ஞானகுரு) சொன்ன நிலைகள் என்ன…? என்பதை உறுதிபட எடுத்துச் சொல்வார்.

பிறருடைய குறைகளை வளர விடாதபடி… குறையைக் கண்டாலே உடனே அவருக்குக் கோபம் வந்திடும். கோபம் வந்தது என்றால் உடனே என்னிடம் (ஞானகுரு) வருவார்.

சாமி…! அவர்கள் தவறு செய்கிறார்கள். அதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்து விட்டது.
1.ஆனால் எனக்கு அந்தக் கோபம் வரக்கூடாது
2.குரு அருள் எனக்கு வேண்டும்.
3.குரு அருளால் எனக்கு அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்.
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் எப்பொழுதும் பெற வேண்டும்.
5.என்னுடைய கோபம் குறைய வேண்டும் என்பார்.
(என்னுடைய உபதேசத்தை அடிக்கடி கேட்டுக் கொள்வார்.)

குழம்பு வைக்கும் போது காரத்தை எந்த அளவுக்குச் சமப்படுத்தி அளவாகப் போடுகிறோமோ அந்த அளவுக்கு ருசியாக இருக்கிறது. அதே மாதிரி எனக்குக் கோபம் வந்தாலும்… அதை நல்ல வழியில் செயல்படுத்தக் கூடிய நிலை வர வேண்டும்…! என்று என்னிடம் கேட்பார்.

அவருடைய மனைவி மீது கூட அடிக்கடி கோபித்து கொள்வார். அதே சமயத்தில் குழந்தைகளிடமும் கூட திடீரென்று எதிர்பாராத நிலைகளில் கோபமாகப் பேசுவார்.

உணர்ச்சிவசப்பட்டு அந்தக் கோபம் அவருக்கு வருவதன் காரணம்… அவர் ஆரம்ப நிலைகளில் பலவீனமான நிலைகள் கொண்டு எத்தனையோ விதமாக பயமான உணர்வுகளை எடுத்து வளர்த்துள்ளார்.

பயத்திலிருந்து ஓரளவுக்குத் தப்பி வந்தாலும் “குற்றம்…” என்று பார்த்ததும் அதனால் மேலும் தவறுகள் ஏற்பட்டு விடுமோ…! என்று அந்தப் பய அலைகளை எடுத்துவிடுகின்றார்.

அந்தப் பயங்கள் வரும்போது அவர் சிந்திக்கும் தன்மை இழக்கின்றார். சிந்திக்கும் தன்மை இழக்கும் போது கோபம் என்ற நிலை வருகிறது. அவர் உடலிலே அதிகமான நிலைகளில் பயம் அலைகளையும் கோப அலைகளையும் பதிவு செய்ததனால் அதை உடனடியாக அவரால் குறைக்க முடியவில்லை

இந்தத் தியான வழிக்கு வந்த பின் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகக் குறைத்து ஓரளவுக்கு அமைதி என்ற நிலைக்கு வந்து சேர்ந்தார். தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்… நம் தபோவனத்திற்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்றார்.

தன்னுடைய வாழ் நாளில் அவர் குரு அருளைத் தன்னுடைய சேவையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். “அந்த மகரிஷிகள் பெற்ற உயர்ந்த சக்திகள் எல்லோரும் பெற வேண்டும்…” என்ற ஆர்வமும் அவரிடம் அதிகமாக இருந்தது.

இருந்தாலும் அவர் உடலில் சேர்த்துக் கொண்ட பழைய உணர்வுகள் தூண்டப்பட்டு பிறிதொருவர் தவறு செய்யும் பொழுது அதை நுகர்ந்து தன் ஆன்மாவில் சேர்க்கப்படும் போது சில நேரங்களில் அவருக்கு அந்த கோபம் வந்துவிடுகின்றது.

ஆனால் கோபம் வந்தால் முதலில் பயப்படுவார். அதே சமயத்தில் அந்தக் கோபம் என்ற நிலை வரப்படும்போது வீரியம் என்ற வலுவும் வருகிறது. பயம் வரும் போது சிந்திக்கும் தன்மை இழக்கின்றது. ஒரு குற்றத்தைக் கண்டபின் கோபம் அதிகமாக வரப்படும்போது இதுவும் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
1.ஆனால் அந்தப் பயம் என்ற நிலைகள் மாறுகின்றது.
2.பயம் என்ற நிலை மாறும்போது “எனக்கு ஏன் கோபம் வந்தது…?” என்ற நிலைகளில் திருப்பி அவர் சிந்திக்கும் போது
3.“தன்னை அறியாமலே கோபம் வருகின்றது…! அதை எப்படி மாற்றுவது…? என்ற எண்ணத்தில் உடனே என்னிடம் (ஞானகுரு) வந்துவிடுவார்.

நான் வெளியூரில் இருந்தாலும் சரி… என்னிடம் சொல்லி அதைக் கேட்டு “சாமி நான் திருந்த வேண்டும்…!” என்பார். எனக்கு ஏன் கோபம் மீண்டும் மீண்டும் வருகிறது..? அந்த உணர்வுகள் மறுபடியும் எப்படி இயக்குகிறது…? என்ற விளக்கங்கள் கேட்பார்.

அதற்குண்டான விளக்கங்களை எடுத்துச் சொல்லி உணர்ச்சிவசப்படும் அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் ஒளியை எப்படி எடுக்க வேண்டும்…? அந்தக் கோபத்தின் வலுவைக் குறைத்துச் சிந்திக்கும் வலுவை எப்படிக் கூட்ட வேண்டும் என்றும் தெளிவாக்குவேன்.

அதன் வழியில் அதைக் கடைப்பிடித்து அந்தக் கோபத்தை மேலும் மேலும் குறைத்து வந்தார்.

நம் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் இருக்க வேண்டும்…?

 

இனபேதத்தினால் வரக்கூடிய உணர்வுகள் மனிதனிலிருந்து அது விளைந்தது தான். உற்றுப் பார்த்து அந்த உணர்வுகள் பதிவானது. பதிவு மீண்டும் நினைவாகும் பொழுது எது வலுவோ அது தான் நம்மை இயக்கும்… நம்மையும் அந்தப் பேத உணர்வு இயக்கும்.

சந்தர்ப்பத்தால் வரும் இது போன்ற ஒரு தீமைகளை மாற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். குருநாதர் எனக்குக் கொடுத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

அதனை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.இந்தக் காற்று மண்டலத்திலே யார் எந்த வகையில் நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்திருந்தாலும்
2.நமது குரு அருளின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்க முடியும்.
3.அவ்வாறு உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை அடைய முடியும்.
4.அது தான் கல்கி ஒளி உடலாக மாற்ற முடியும்… இதிலே சிரமம் ஒன்றுமில்லை.

உங்களுக்குள் பதிவு செய்ததை மீண்டும் எண்ணத்தால் எண்ணி எடுத்தால் இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு டிவி.யை இன்னென்ன அலைவரிசையில் என்று அதை வைக்கப்படும் பொழுது ஒவ்வொரு ஊரிலிருந்து வெளிப்படுத்துவதை அது கவர்ந்து நமக்குக் காட்டுகின்றது.

ஆங்காங்கு ஒளிபரப்பு செய்வதை அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்து எடுத்துக் கொள்கின்றோம்.

இதைப் போலத்தான்
1.மக்கள் பேசிய தவறான உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு.
2.அவர்களை எண்ணினால் அந்த அலைவரிசையில் நமக்குக் கோபம் வரும் வெறுப்பு வரும் சங்கடம் வரும் இத்தனையும் வரும்.

ஆனால் அது அத்தனையும் நீக்கியது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குரு துணை கொண்டு கவர்ந்து நமக்குள் எடுத்துக் கொண்டால்
1.”அந்த அலைவரிசை…”
2.தீமைகளை நீக்கும்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வரும்… நம் வாழ்க்கையை உயர்த்தும்.

இந்த உயர்ந்த உணவுகள் வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை என்ற நிலையை நாம் அடைய முடியும். அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும். அத்தகைய ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்.

1.உங்கள் பார்வையால் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும்
2.உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும்
3.உங்கள் பார்வை அனைவரையும் ஞானிகளாக ஆக்க வேண்டும்.
4.இத்தகைய கூட்டம் அமைய வேண்டும்.
5.இத்தகைய கூட்டங்கள் அமைந்தால் தான் மனிதனுக்குள் இருக்கும் பேதங்களை மாற்ற முடியும்.

குரு அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்கள்.

இதைப் படிப்போர்… இதைக் கேட்போர் அனைவரும் இதன்படி செயல்பட்டால் பல ஆயிரம் பேராக மாற்றலாம். அந்த ஆயிரம் பேர் “பல லட்சக்கணக்கான பேராக மாற்ற முடியும்…” இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.

வேம்பின் கசப்பான உணர்வுகள் வரும் பொழுது மற்ற உணர்வலைகள் எப்படி அது விலகி ஓடுகின்றதோ இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை காலை துருவ தியான நேரத்தில் நமக்குள் சேர்க்கப்படும் பொழுது… தீமை செய்யும் உணர்வலைகளை “விலகி ஓடச் செய்யலாம் அல்லது அது இயங்காதபடி தடைப்படுத்தலாம்…”

சாதாரணமாக… நம் உடலுக்குள் பல வகைகளிலும் பலருடைய உணர்வுகள் பதிவாகி இருப்பதனால் அதை இழுக்கக்கூடிய திறன் வருகின்றது. உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணம் ஆகின்றது.

துருவ தியானத்திலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமை உள்புகாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுத்தால் காலை ஆறு மணிக்குச் சூரியன் உதயமாகும் பொழுது நாம் இழுக்கத் தவறும் அந்த உணர்வுகளை அது மேலே அழைத்துச் சென்று மாற்றி அமைக்கின்றது. நமது ஆன்மா சுத்தமாகின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்திலே தொல்லை என்று அடிக்கடி வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வலு சேர்த்து தீமை உள்புகாது தடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் ஆத்ம சக்தி என்று உங்களுக்குத் தெளிவாகக் கொடுக்கின்றோம். நம் குரு எப்படி அருள் வழியில் செயல்பட்டாரோ அது போன்று நாமும் செயல்பட முடியும்.
1.அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுடன் குருநாதர் செயல்பட்டார்.
2.ஒவ்வொரு உயிரையும் ஈசன் என்று மதித்தார்.
3.அதற்குத் தான் போஸ்டிலே கல்லைக் கொண்டு தட்டுகின்றேன்.
4.எல்லோருக்கும் அந்த ஞானம் வரட்டும் அந்த உயர்ந்த உணர்வுகள் பெருகட்டும் என்று சொன்னார்.

ஆகவே நாம் அனைவரும் நம் குரு காட்டிய அருள் வழியில் செல்வோம். விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை விடுபடச் செய்வோம்.

அந்த அஞ்ஞான வாழ்க்கையின் உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மை இயங்கிடாதபடி “மெய் ஞான உலகை நமக்குள் சிருஷ்டிப்போம்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்கையில் இந்த உடலின் இச்சையின் வாழ்கையில் நுகர்ந்த உணர்வெல்லாம் அந்தந்த உணர்வின் எண்ணங்களாக நமக்குள் பாய்கின்றது.

ஒருவனைக் கெடுக்க வேண்டும் என்றால் இது உடலில் இருந்து ஏற்பட்ட அந்த எண்ணத்தின் உணர்வுகள் நினைவாக்கப்படும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இதற்குப் பெயர் சிவ தனுசு. அந்த உணர்ச்சியின் இயக்கமாக மற்ற ஒருவனைத் தாக்கும் நிலை வருகின்றது.

ஆக சிவ தனுசு என்றால்… இந்த உடலைப் பாதுகாக்கும் நிலைகள் பரசுராம். எந்தக் குணத்தின் உணர்வைப் பெருக்கினோமோ இந்த உடலின் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தைத் தேடவும் அதே சமயத்தில் தீமைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அத்தகைய உணர்வுகள் வரப்படும் போது அது நமக்குள் செயலாக்கி அந்தச் சொல்லையும் அந்தச் செயலையும் செயல்படுத்தச் செய்து சிவ தனுசாக மாறுகின்றது.

1.சிவம் என்றால் நமது உடல் என்றும்
2.எதை எண்ணுகின்றோமோ “அந்த உணர்ச்சிகள் நமக்குள் பாய்ந்தும்…”
3.அது இயக்கச் செய்யும் பொழுது “தனுசு” என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

தன்னைக் காத்துக் கொள்ள மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் அவர்களை நம்மிடம் அணுகாத நிலைகள் செயல்படுத்துவது தான் சிவ தனுசு என்றும் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கபட்டுள்ளது.

இதைப்போல அன்று அரசர்கள் தனுர் வேதத்தைப் பயன்படுத்தினார்கள். தனுர் வேதம் என்றால் இன்னொரு மனித உடலில் இருந்து அந்த உணர்வுகளைப் பிரித்து அந்த உணர்வின் தன்மையைத் தான் நுகர்ந்து மற்றவர்கள் மீது பாய்ச்சுவது தான்.

1.யாக வேள்விகளை நடத்தி அதர்வண வேத அடிப்படையில் மந்திரங்களைச் சொல்லி ஏவுவதும்
2.மந்திர ஏவலால் மற்றவர்களைச் செயல் இழக்கச் செய்வதும்
3.மற்றவர்களைச் செயலற்றவராக மாற்றுவதும் போன்ற நிலைகளைச் செயல்படுத்தி வந்தார்கள் அரசர்கள்.

அந்தத் தனுர் வேதம் இல்லாதவர்கள் எந்தப் போர் முறைகளையும் வெற்றி பெற முடியாது என்ற நிலை தான் அக்காலங்களில்.

கொடூர நிலைகளும் கொதித்து எழும் உணர்வுகளும் பிறரை இரக்கமற்றுத் தாக்கும் உணர்வுகளை மனிதனின் வாழ்க்கையில் இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் போது இது சிவ தனுசாக மாறுகின்றது. அதாவது
1.உடலில் இருந்து எழும் உணர்ச்சிகள் அந்த உடலை வீரியமாக இயக்கச் செய்து
2.அந்த வீரிய உணர்வு கொண்டு ஒரு மனிதரைத் தாக்குவதும் அவனை மடியச் செய்வதும்
3.அல்லது அவனைக் காணாமல் போகச் செய்வதும் அவர் சொத்துக்களை விரயமாக்குவதும் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும்
4.தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை தான் அது…!

உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்கா தன் ஆயுத நிலைகள் கொண்டு மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்றும் அவர்களைப் பலவீனப்படுத்தினால் தான் “தன் நாடு காக்கப்பட முடியும்…!” என்று இன்று செயல்படுகிறது.

இதைப் போன்று சீனாவும் அதனைக் காட்டிலும் வல்லமை கொண்டது என்றும் அதே போன்று ரஷ்யாவும் அடுத்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் ஒன்றைப் பார்த்து ஒன்று
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
2.பிறரை வலிமை இழக்கச் செய்ய வேண்டும்..! என்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய உணர்வுடன் மனிதன் இயங்கி கொண்டு இருக்கும் நிலையில் விஞ்ஞான அறிவு கொண்டு கடும் விஷத் தன்மைகளை எப்படிப் பரப்புவது…? ஒவ்வொரு நாட்டையும் எப்படி அழிப்பது…? மக்களை எப்படிச் செயலற்றவர்களாக மாற்றுவது…? என்று இன்று வந்து விட்டார்கள்.

ஒரு மனித உடலுக்குள் இருக்கும் உணர்வினை எடுத்து அதை மந்திரங்களாகச் சொல்லிப் பாய்ச்சி ஏவுதல் அழித்தல் கொலை செய்தல் என்று இத்தகைய நிலைகளை வைத்துத் தான் அன்றைய அரசுகள் செய்து வந்தனர்.

இன்று அந்த அரசுகள் எல்லாம் மடிந்து விட்டது. ஜனநாயகம் என்ற மக்கள் ஆட்சி வந்து விட்டது.

அரசர்கள் வீழ்ந்து மக்கள் ஆட்சி என்று வரப்படும் போது ஆட்சி பீடத்திற்குத் தான் வந்த பின்
1.அந்த ஆட்சியில் தனக்கு அடிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2.தான் தான் எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும்
3.உலக நிலைகளிலேயே நாம் புகழ் பெற வேண்டும் என்று போற்றித் துதிக்கும் உணர்ச்சிகள் அங்கே தூண்டப்பட்டு
4.நாட்டு மக்களைச் சீர்படுத்தும் நிலைகள் அற்று அவர்களைச் சீர் கெடச் செய்து அதற்குக் கீழ் அவர்களை வலு இழக்க செய்து
5.அதன் வழியில் அவர்கள் ஆட்சிகள் புரியும் காலமாக வந்து விட்டது…!

இது சிவ தனுசாக உருவாகும் இந்த நிலை.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் “விஷ்ணு தனுசைப் பயன்படுத்த வேண்டும்…”

நமது உயிர் விஷ்ணு. விஷ்ணு என்ற நிலையில் இந்த உயிரின் தன்மை கொண்டு உயிரைப் போன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரத்திரமாக இருக்கும் அதனின்று வரும் உணர்வுகள் சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பிரபஞ்சத்தில் பரவுகிறது.

அப்படிப் பரவி வரும் அந்த அலைகளை நான்கு மணியில் இருந்து நமது பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமது பூமிக்குள் பரவச் செய்கின்றது.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணத்தால் ஏங்கும் போது அந்த உணர்வுகள் நம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் தான் விஷ்ணு தனுசு.

1.துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டது… நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றது.
2.இந்த உணர்வினை நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதன் வீரிய உணர்வுகள்
3.நம் உடலுக்குள் தீமை செய்யும் உணர்ச்சிகளை அடக்கவும் தீமையான செயல்களைத் தடைபடுத்தவும்
4.அருள் ஒளியைப் பெருக்கச் செய்யவும் என்று அந்த அருள் வழியில் அது வருகின்றது.

பரசுராமன் சீதாராமன் இருவருக்கும் போர் நடந்தது என்றும் பரசுராமன் உடலைச் சமப்படுத்தும் சிவ தனுசை எடுத்தான் என்றும் இராமன் உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் விஷ்ணு தனுசை எடுத்ததால் இராமன் வென்றான் என்றும் காட்டினார்கள்.

வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை மாற்றி ஒளி என்ற ஒரே நிலையில் மாற்றுவது தான் விஷ்ணு தனுசு. ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது தான் நமது உயிர்.

நமது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் உருவாக்கி உடலுக்குள் அதைப் பெருக்கினால் இது விஷ்ணு தனுசு.

பூமிக்குள் பரவி வரும் விஷத் தன்மைகளை நமக்குள் வராது தடுத்து நமது உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போல ஒளியின் தன்மையைப் பெறச் செய்து
1.ஒரு கூட்டமைப்பாகத் துருவ நட்சத்திரத்திம் ஒளிர்வது போல
2.நாமும் இந்த உடலுக்கு பின் ஒளிரும் நிலை பெறுதல் வேண்டும்.

“தியானமே எனக்கு வரவில்லை…” என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை

 

இயற்கையின் நிலைகளாக… மெய் ஞானிகள் கூறிய “உயிருடன் ஒன்றி ஒளியாகும் உணர்வினை…” யாரும் பின்பற்றவில்லை. இப்பொழுது சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வோர் குறைவாகத்தான் உள்ளார்கள்.

தெய்வத்திற்குக் காசைக் கொடுத்தால் தெய்வம் நமக்கு வரம் தரும்… எல்லாம் சரியாகப் போய்விடும்…! என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.

நாம் உணவாக உட்கொண்ட நிலைகள் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட நிலைக்கொப்பத்தான் சத்து ஏற்படும். அதைப் போன்று தான் உயர்ந்த உணர்வுகளை நாம் கவர்ந்து வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற வேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் பதிவாகும்.

திட்டியவனை எண்ணும் பொழுது சோர்வும் சஞ்சலம் எப்படி நமக்குள் வந்து
1.தவறான வழிகளில் நம்மை அழைத்துச் செல்கின்றதோ அதே போன்று
2.அருள் உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அது “ஞானிகள் வழியில்” நம்மை அழைத்துச் செல்லும்.

வாழ்க்கையில் எண்ணங்கள் தடுமாறி… கோபமோ வெறுப்போ வேதனையோ சலிப்பு சஞ்சலமோ வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற வேண்டும்.

1.அப்போது சஞ்சலங்களை அது மாற்றும். சிந்திக்கும் தன்மை வரும்… முகமும் அழகாகும்.
2.வேதனைப்படும் பொழுது இந்தத் தியானத்தை எடுத்துப் பாருங்கள்.
3.முகத்தில் ஒரு விதமான மலர்ச்சி ஏற்படும்… சிந்திக்கும் ஆற்றல் வரும்… தெளிவான வாழ்க்கையும் வாழ முடியும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி அருள் உணர்வைப் பெறுங்கள்.

சிறிது காலம் இவ்வாறு எண்ணினால் போதுமானது. பின் தன்னிச்சையாக வரும்.

“தியானமே எனக்கு வரவில்லை…” என்று சொல்ல வேண்டியதில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்களைத் திறந்தபடியே நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் அந்த சக்திகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்.

இப்படிப் பயிற்சி எடுத்துக் கொண்டால் நாளடைவில் உணர்வின் தன்மை வலிமையான பின் எந்தத் தீமையும் உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

சிலர் பிராணயாமம் என்று சொல்வார்கள். மந்திரங்களைச் சொல்லி பிற உணர்வுகளை நுகர்ந்த பின் “கம்…” என்று இருண்ட நிலை ஆகிவிடும். விடுபட்டால் அந்த உணர்வின் விஷத்தன்மையே இயக்கும்.

மந்திர ஒலிகள் கொண்டு தெய்வங்களை எண்ணி ஜெபிக்கப்படும் போது அது நமக்குள் பதிவாகி இறந்த பின்… அதன் உணர்வை வேறு எவர் எடுக்கின்றனரோ அதே வழிகளில் (அந்த மனிதன் சென்ற வழி) அவரையும் அழைத்துச் செல்லும்.

ஆனால் இயற்கையின் உண்மை நிலைகள்
1.ஒளியின் உணர்வைப் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றுப் பழகினால்
2.இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும்.

ஏனென்றால் “வேண்டிய சக்திகள்…” நமக்கு முன் இந்தப் பூமியிலே பரவி உள்ளது. அதைப் பதிவாக்கி அதை எடுத்து உங்கள் இருளை நீக்கி உயிருடன் ஒன்றி உயிருடன் ஒன்றி வாழும் உணர்வைப் பெறச் செய்ய வேண்டும். அதை நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

1.குருநாதர் எனக்கு அப்படித்தான் கொடுத்தார்… பல அனுபவங்களைக் கொடுத்தார்.
2.அருள் உணர்வுகளை எடுக்கும் முறைகளைக் கொடுத்தார்… அதை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
3.உங்கள் எண்ணத்தால் கவரலாம்… தீமைகளை அகற்றலாம்… பிறவியில்லா நிலை அடையலாம்.
4.குடும்பத்தில் வரும் கலக்கங்களை மாற்றலாம்… ஒன்றுபட்டு வாழ முடியும்.

கணவன் மனைவி எப்பொழுதுமே ஒன்றி நிலைகள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற வேண்டும் என்று கணவனும் கணவன் பெற வேண்டும் என மனைவியும்
1.எவரொருவர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி வளர்க்கின்றார்களோ
2.நிச்சயம் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள்… அரும்பெரும் சக்திகளையும் பெறுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) உபதேசித்ததைக் கேட்டுணர்ந்த நீங்கள் அடுத்து என்னைப் பார்க்கும் பொழுது
1.நான் நன்றாக இருக்கின்றேன்
2.நீங்கள் சொன்னபடி நான் எடுத்தேன்… என் உடலில் இருக்கும் நோய்கள் அகன்றது நன்றாக இருந்தது என்று
3.இந்தச் சொல்லை கேட்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.

உங்களைத்தான் சதா நான் பிரார்த்தனை செய்கிறேன்…! நீங்கள் எத்தனையோ கோவிலுக்குப் போவீர்கள். ஆனால் உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உடலைக் கோவிலாக எண்ணி… உங்கள் உடலில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக எண்ணி…
1.அந்தக் கோவிலில் அனைத்தும் மகிழ்ச்சியாகச் செயல்பட வேண்டும்.
2.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று உங்களைத் தான்
3.நான் பார்த்த கோவில் அத்தனையும் “ஒவ்வொருத்தராக…” நான் தியானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதிகாலை 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கிறேன். இதைக் கேட்டு பதிவு செய்தவர்களுக்கெல்லாம் அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்.

அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த உணர்வுகள் நமக்கு நல்லது செய்யும் ஆற்றலாகப் பெற முடியும். அதைப் பெறச் செய்யும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆகையினால் முழு நம்பிக்கையாக உங்களை நம்புங்கள்…!

ஏனென்றால்
1.உங்களிடம் அவ்வளவு சக்தி இருக்கின்றது… உங்களுக்கு முன்னாடி உயர்ந்த சக்திகள் இருக்கின்றது
2.அதை நினைத்தீர்கள் என்றால் உங்களுக்குள் கூடும்… நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளி காண முடியும்
3.மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை… ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

சாமி சொன்னார் என்று சொல்லி சாமி சொன்ன சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். “சாமி செய்து கொடுப்பார்…” என்று எண்ண வேண்டாம்.

நான் உங்களை எல்லாம் பிரார்த்தனை செய்கின்றேன். அந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று உங்களுடன் உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகின்றது… பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் முடியும். பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படர்கின்றது போகும் பாதையில் தான் ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்

இதைப் போன்று தான் நீங்கள் எல்லோரும் ஞானிகள் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று யாம் எண்ணுகின்றோம். அந்த அருள் ஒளியை “நீங்கள் ஈர்த்துக் கொண்டால் தான்…” செயல்படுத்த முடியும்.

அதன் வழி நீங்கள் செயல்பட்டு நான் நன்றாக இருக்கின்றேன்; எல்லாம் நன்றாக இருக்கின்றது; என் உடல் நன்றாக இருக்கின்றது; காற்றிலிருந்து நல்ல சக்திகளை என்னால் பெற முடிகின்றது…! என்று
1.ஒவ்வொருவரும் அந்தச் சந்தோஷமான செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்
2.அதை நான் கேட்க விரும்புகின்றேன்…!

ஏகாந்த வாழ்க்கை

 

உலக வழக்கில் நாம் என்ன செய்கிறோம்…?

கண்களால் பார்க்கப்படும் போது… ஆணா பெண்ணா…? நல்லவரா கெட்டவரா…? வேண்டியவரா வேண்டாதவரா…? இங்கே நடப்பது எல்லாவற்றையும் பார்த்து விட்டு நான் சும்மா எப்படி இருப்பது…? என்று
1.பிறர் உணர்வை மட்டுமே நுகர்கிறோம்
2.அவர்கள் உணர்வு தான் நம்மை இயக்குகிறது
3.ஈஸ்வரபட்டரின் உணர்வு அல்லது ஞானிகள் உணர்வு நம்மை இயக்குவதில்லை.

ஞானிகள் காட்டியது,..!
ஏகாதசி:-
1.எதுவுமே எதிர்ப்பு இல்லாத நிலை
2.நாம் ஏகாந்தமான நிலைகளில் இருப்பது

வைகுண்ட ஏகாதசி:-
1.பிறருடைய தீமைகளை எண்ணாதபடி
2.நமக்குள் சந்தோசமான நிலையிலேயே இருப்பது.

ஞானகுரு நமக்குக் கொடுப்பது:-
எத்தனையோ கோடிச் சரீரங்களில் இன்னலைக் கடந்து இந்த இன்னலை நீக்கக் கூடிய வலிமையான மனித உடலைப் பெற்றுள்ளோம். ஆறாவது அறிவையும் பெற்றுள்ளோம்.

அப்படிப் பெற்ற நிலையில்
1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.இந்த உயிரணு எதைப் பெற வேண்டும்…?
3.ஆறாவது அறிவை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்று
4.ஞானிகள் உணர்த்திய உண்மைகளைத்தான் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஈஸ்வரபட்டரின் ஏகாந்த வாழ்க்கை நிலை:-
1.யார் தவறு செய்கின்றார்கள்…? என்று நான் பார்ப்பதில்லை
2.எப்படிச் செய்கின்றார்கள்…? என்பதை நான் சிந்திப்பதில்லை.
3.நான் அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

காரணம்… உலக மக்கள் பித்துப் பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன்…!

நாம் செய்ய வேண்டியது:-
நாம் ஈஸ்வரபட்டரைப் போன்று ஏகாந்த நிலை பெற வேண்டும் என்றால் அடுத்தவர்கள் யார்…? அவர்கள் என்ன செய்கிறார்கள்…? ஏன் இப்படிச் செய்கிறார்கள்…? என்று
1.பிறர் உணர்வுகள் எதையுமே நுகராதபடி
2.சாமி (ஞானகுரு) சொன்னதை மட்டும் நாம் செய்ய வேண்டும்.
3.நான் செய்கிறேன்… அடுத்தவர்கள் செய்யவில்லையே…! என்று மீண்டும் அப்படி எண்ண வேண்டியதில்லை.

“உங்களுக்குத் தெரியாமலே…” தீமை நீக்கும் சக்தி கொடுக்கின்றேன்

 

கையில் வைத்திருக்கும் செல்ஃபோனில் நமக்குத் தேவையான எத்தனையோவற்றைப் பதிவு செய்கின்றோம். யார் பேசியது…? என்று தெரிந்து கொள்கின்றோம். பின் நாம் அதைப் பதிவாக்கி அந்த நம்பர் வந்தவுடன் இன்னார் தான்…! என்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

அதாவது யார் பேசுகின்றார்கள்…? யாரிடம் பேச வேண்டும்…? என்று எல்லாவற்றையும் நாம் அறிந்து அதைப் பயன்படுத்துகின்றோம்.

இதைப் போன்று தான்… “நமது கண்” அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கிறது,
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று திரும்ப எண்ணினால் அந்த வேதனை நமக்கு வருகின்றது.
2.அவர்கள் என்னென்ன செய்தார்களோ அந்த நினைவுகள் வருகின்றது.
3.எனக்கு இடைஞ்சல் செய்தானே… அது எல்லாம் நியாயமா…? என்ற எண்ண ஓட்டங்கள் வருகின்றது.

நியாயத்தைப் பேசுவோம்…! ஆனால் இடைஞ்சல் செய்கின்றார்…! என்று சொல்வோம். அப்பொழுது நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் ரத்தத்தில் கலந்து அணுவாக வளர்ச்சி பெற்றுப் பெருகத் தொடங்குகிறது.

இரத்தத்தில் வேதனை என்ற அணுக்கள் பெருகி விட்டால் அது செல்லும் பாதைகளில் உள்ள… நல்ல அணுக்களுடன் எல்லாம் போர் செய்யத் தொடங்கும்.

தலை வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது வயிறு வலிக்கின்றது கால் வலிக்கின்றது என்றெல்லாம் சொல்வோம். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. அந்த அணுக்கள் பெருகுகிறது.

1.ஒரு நான்கு நாள் வேதனைப்பட்டுப் பாருங்கள்.
2.இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தால் அந்த விஷமான அணுக்கள் இருக்கிறது என்று காட்டுவார்கள்.

அது அதிகமாகி விட்டால் மூச்சுத் திணறல் கூட வந்துவிடும். நுரையீரலில் வலி கல்லீரலில் வலி கிட்னியில் ஒரு விதமான வலி இருதயத்தில் வலி என்று வரும்.

ஏனென்றால் இரத்தம் போகும் பாதையில் எந்தெந்த உறுப்புகளுக்குள் எல்லாம் செல்கின்றதோ… அங்கெல்லாம் வலி வரத் தொடங்குகிறது.

மருத்துவர்கள் அந்த இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்து விஞ்ஞான அறிவுப்படி அந்த விஷமான அணுக்கள் எதிலே மடிகிறது…? என்று அதற்குத்தக்க மருந்து கொடுக்கின்றார்கள்.

முன்பிருந்த மருத்துவம் வேறு… ஸ்கேன் வைத்துப் பார்த்துப் பொதுவான மருந்து கொடுப்பார்கள். இப்பொழுது
1.அந்த இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதில் எத்தகைய ரூபமான அணுக்கள் இருக்கின்றது…?
2.அதற்கு இந்த மருந்தைக் கொடுத்தால் எப்படி மயக்கமடைகிறது…?
3.அல்லது அது முட்டையிடாமல் எப்படித் தடுப்பது…? அதை மலடாக்குவது எப்படி…?

ஒரு அணு சென்று விட்டது… அதை மலடாக்க வேண்டும். அப்போது அது தன் இனத்தைப் பெருக்காது.
1.இனத்தைப் பெருக்கவில்லை என்றால் இங்கே கெடுதல் வராது.
2.இப்படி ஆராய்ச்சி செய்து செயல்படுத்துகின்றனர்.

ரொம்பக் கடுமையாகி விட்டது என்று அதைக் கொல்ல மருந்து கொடுத்தால் நல்ல அணுக்களும் விஷத்தன்மையாகி அது கெட்டுப் போய் விடுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…? அந்தக் கெட்டது உருவாகாதபடி இரத்தத்தில் அந்த அணுக்களை மலடாக்கி அது முட்டையிடாதபடி தடுக்கின்றார்கள்.

ஏனென்றால் நமக்குள் நடக்கும் இயக்கத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் ஈஸ்வரன்… அதற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி… விஷ்ணுவின் மறு அவதாரம் சீதா ராமன். நாம் சந்தோஷமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி நம் உடலில் அணுக்களாக மாறுகிறது.

உயிரைப் போன்றே அணு உண்டாகிறது… சுவைக்கொப்ப உணர்ச்சிகள் தோன்றுகிறது… அந்த எண்ணங்கள் வருகின்றது. சந்தோஷமானது நான் சீதா. அதிலிருந்து வரக்கூடிய உணர்ச்சி தான் எண்ணங்கள்.
1.அது தான் சீதா ராமா…! ராமா சீதா என்று வராது.
2.உயிர் அந்த உணர்வின் தன்மை ஆகும் போது அந்த எண்ணங்கள் வருகிறது.

அகஸ்தியன் உலகை அறிந்து கொண்டான்… உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துத் தீமைகளை நீக்க வேண்டும்.

உங்கள் நினைவை அங்கே கொண்டு செல்லும் போது அந்த உணர்வு உங்களுக்குள் உமிழ் நீராக மாறி அந்தச் சத்து உங்கள் உடலில் ஒளியான அணுக்களாக விளையும். நீங்கள் ஒளியாக வேண்டும் என்பதற்குத்தான் இதை ஞாபகப்படுத்துகின்றேன்.

கூர்ந்து கவனிக்கும் பொழுது யாம் சொல்லக்கூடிய உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

1.உங்களுக்குத் தெரியாமல் தான் தீமைகள் வருகின்றது.
2.அதே போல் உங்களுக்குத் தெரியாமலே தீமை நீக்கக்கூடிய சக்தியை உபதேசத்தின் வாயிலாகக் கொடுக்கின்றேன்.

ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள காவியத்தின் “மூலக் கருத்து”

 

கேள்வி:-

வான்மீகி மாமகரிஷி உணர்த்திய ராமாயணத்தில், தசரத சக்கரவர்த்தி, கைகேயியின் குறுகிய எண்ணங்களால், இராமன் காட்டிற்கு சென்ற நிலையும், இந்த பிரிவின் நிலையைத் தாங்காது, தசரத சக்கரவர்த்தி இறந்த நிலையை காண்பிக்கின்றார்.

நமது ஞானகுரு உணர்த்திய அருள் வழியில், பத்தாவது நிலையை அடையக்கூடிய இந்த உடலை ஆளும் இந்த உயிரின் நிலை “தசரத சக்கரவர்த்தி” பத்தாவது நிலையை அடையக்கூடியது.

இந்த உடலுக்குள், எண்ணத்தின் நிலைகளை பிரதானமாக வைத்து வான்மீகி மகரிஷி உணர்த்தி, இந்த மனித உடலின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என அருளியுள்ளார்.

இதில் தசரத சக்கரவர்த்தியின் செயலாக்கங்கள் இறந்த நிலையாகக் காண்பிக்கின்றார்கள். இதற்கு விளக்கம் வேண்டும்.

பதில்:-

எந்த ஒரு ஞானியாக இருந்தாலும் அவரவர்கள் கண்ட பேருண்மைகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைக்கொப்பத் தான் வெளிப்படுத்துவார்கள். வான்மீகியும் அப்படித்தான் “உயிரை அரசனாக வைத்துக் காட்டியுள்ளார்…”

நமது ஞானகுரு அதை நமக்கு வெளிப்படுத்திய விதம்
1.இன்றைய காலகட்டத்திற்கொப்ப… அதே சமயத்தில் எல்லாவற்றையும் சேர்த்து
2.எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும்படியான விளக்கத்தைத் தான் கொடுத்துள்ளார்கள்.

தசரதன் இறக்கின்றான் என்றால் இங்கே உயிர் இறக்கவில்லை. அதாவது
1.உயிரில் இருள் சூழ்கிறது… நஞ்சு சூழ்கிறது…
2.”உயிரான்மா நஞ்சாகிறது…” என்று தான் பொருள்.

சிறுகச் சிறுகப் பரிணாம வளர்ச்சி அடைந்து நஞ்சைக் குறைத்து மனிதனாக உருவாக்கிய நிலையில்… மனித சிந்தனை இழப்பதைத் தான் அவ்வாறு காட்டப்பட்டது.

மகாபாரத்திற்கும் இராமாயணத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

அங்கே “சகுனி” சூழ்ச்சி செய்கிறான்… பஞ்ச பாண்டவர்களும் (கடைசியில் திரௌபதையும் – உயிரின் உணர்ச்சிகள் நஞ்சாகிறது) அதிலே சிக்கி விடுகிறார்கள்.

இங்கே “கூனி” சூழ்ச்சி செய்து கைகேயி மூலமாக உயிரின் உணர்வுகள் நஞ்சாகிறது.

அங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள்… பின் போர் நடக்கிறது.

இங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள். பின் போர் நடக்கிறது.

1.இந்த உடல் தான் காடு.
2.உயிரான்மாவை நஞ்சிலிருந்து மீட்கும் நிலை தான் போர்.

போர் முடிந்து வந்தாலும் ராமனும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. சீதாவைப் பிரிகின்றான்.

அங்கே மகாபாரதத்தில் பாணடவர் பிள்ளைகள் அனைத்தும் மடிகின்றனர். கடைசியில்… தர்மன் மட்டும் எஞ்சியதாகக் காட்டி…
1.சுவாசத்திற்கு மோட்சம் கேட்டு (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி)
2.அதன் பின் விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.

இங்கே சீதா (உடல்) மண்ணுக்குள் செல்கிறது, ஆனால் அதிலே உருவானதை
1.லவா குசா என்று (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி) அதைக் காட்டி…
2.அவர்கள் மூலமாக உயிருடன் ஒன்றி விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.

இரண்டிலுமே… மனித வாழ்க்கையில் வந்த “நஞ்சை வென்று உணர்வை ஒளியாக்கும் சூட்சமம் தான்…” காட்டப்பட்டுள்ளது.

இன்னும் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குளவியால் தாக்கப்படும் புழு… “(புழுவின் உயிர்)”
1.அடைபட்ட இடத்திலிருந்தே (உடல் – காடு) குளவியின் உணர்வைச் சுவாசித்து (நஞ்சாகி)
2.புழுவின் உயிரான்மா குளவியின் உயிரான்மாவாக “வளர்ச்சி” அடைகிறது.

அதே போல் மனித வாழ்க்கையில் பிறரை வீழ்த்த வேண்டும் (கைகேயி) என்று வீழ்த்திய அந்த உணர்வு தன்னை வீழ்த்திடும் நஞ்சாக மாறுகிறது.

அதிலிருந்து உயிரான்மாவை மீட்ட “ஒளியான உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்…” என்பது தான் காவியத் தொகுப்பின் உள் கருத்து.

1.தசரதன் இறக்கிறான் என்றால் உயிரான்மா நஞ்சாகிறது – அமாவாசை (மீண்டும் பூமிக்குள் உடல் பெறும் நிலை)
2.அதுவே… ஒளியான உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் போது – அது பௌர்ணமி (பிறவா நிலை)

அதாவது… சீதா (ஒளியான உணர்வுகள் – நாம் தியானத்தின் மூலம் இப்பொழுது எடுப்பது) விஷ்ணுவுடன் (உயிர்) இணைந்து ஒளிச் சரீரம் பெறுவது.

விண்ணிலே உதித்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்று… மனித உடலில் முழுமை பெற்று முதிர்ச்சி பெறுவது தான் “படைப்பின் வளர்ச்சி…”

1.அதனுடைய பருவங்களைத் தான் கதாபாத்திரங்களாகக் காட்டப்பட்டு… நிகழ்ச்சிகளாக விவரித்து
2.பின் வளர்ச்சி அடைய வேண்டிய “சரியான பாதையைக் காட்டி…” தான் அந்த வழியில் பயணம் செய்து
3.பிறவா நிலை என்ற எல்லையை அடைவதாக… முழுமை பெறுவதைக் காட்டினார்கள் ஞானிகள்.

கேள்விக்குண்டான பதிலின் மொத்தச் சுருக்கம்:-

1.புழுவாகிய நான் வீழ்கிறது – குளவியான நான் வளர்கிறது… அது போல்
2.மனிதனான நான் (தசரதன்) வீழ்கிறது – ஒளியான நான் வளர்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனை என்றாலே விஷம் தான்…!

ஆக இந்த மனித வாழ்க்கையில் “வேதனை… வேதனை…” என்று எதை எடுத்தாலும் துயரப்படும் நிலைகள் கொண்டோர் உணர்வுகளில்
1.அதாவது அத்தகைய விஷத்தின் தன்மை கொண்டோர் அனைவருமே
2.பெரும் பகுதி “அமாவாசைப் பக்கம்” தான் ஜாஸ்தி இறப்பார்கள்.
3.அந்த விஷ அலைகள் பரவும் நேரங்கள் தான் அந்த ஆன்மா வெளியிலே செல்லும்.

இந்த உடலை விட்டு அப்படி வந்தது என்றால் பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அந்த விஷமும் இங்கே இந்த உடலில் சேர்த்துக் கொண்ட விஷமும் ஒத்த நிலைகளாகின்றது.

1.அதன் வழி கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கி
2.விஷத்தின் தன்மை கொண்ட உணர்வின் அணுக்களாகப் படும் இந்த உயிர்
3.அந்த பாம்பின் ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று நம்மை பாம்பாகச் செயல்படுத்தும்.

அதே சமயத்தில் ஆடு மாடு மற்ற இவைகள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கி அதாவது தான் உணவாக உட்கொண்ட நிலைகளில் இருக்கும் நஞ்சை உடலாக்கிக் கொண்டு அதனுடைய சாணத்தை நல்லதாக மாற்றுகிறது.

இத்தகைய தன்மையில் இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அதன் வலிமையின் தன்மை கொண்டு மாடு ஆடாகவோ பிறக்கச் செய்யும்.

ஆனால் மிகவும் அதிக விஷமானால் விஷத்தை பாய்ச்சும் வலுக் கொண்ட பாம்பாகும் நிலை வருகிறது.
1.ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து மற்றொருவர் ரசித்துச் சந்தோஷப்பட்டால்
2.நிச்சயம் அவர்கள் அடுத்துப் பாம்பாகத் தான் பிறப்பார்கள்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால் அடுத்த கணமே அந்த வேதனையை மறக்க “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ண வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று வேதனைகளை அடக்கிய நஞ்சை வென்று ஒளியாக மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.

அதே போல் வேதனைப்படுவோர் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

வேதனைப்படும் சமயங்களில் எல்லாம் இத்தகைய உணர்வின் வலுவை எடுத்து வலுவாக்கிக் கொண்டால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நமக்குள் வலு கூடி
2.நம் உயிரான்மாவில் அது பெருகி
3.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கிறோம்.
4.அழியாத ஒளி உடல் பெறுகின்றோம்.

நாம் விண்ணிலே செலுத்திய உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணந்ததை எப்படி உறுதிப்படுத்துவது…?

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும். வலு ஏற்றிக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண்ணிலே உந்திச் செலுத்த வேண்டும். அவருடைய உணர்வு தான் நம் உடல்.

அங்கே சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின் நஞ்சைக் கரைத்த உணர்வுகளில் இந்த ஆன்மாக்கள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
1.உயிரும் உணர்வும்… நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வின் தன்மை கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.

இருந்தாலும்… இதற்கு முன் நாம் செய்யத் தவறி விட்டோம். இன்னொரு உடலுக்குள் அவர்கள் புகுந்திருக்கலாம்.

காலை துருவ தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இந்த உணர்வுகளைக் கூட்ட கூட்ட
1.அவர்கள் எந்த உடலில் இருந்தாலும் நாம் செலுத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் சேர்க்கப்பட்டு
2.துரித நிலைகள் கொண்டு அவர்களுக்கு நலம் பெறும்.

ஏனென்றால்… இவர் உடலை விட்டுப் பிரியும் போது எந்த நோயின் தன்மை பெற்றாரோ இந்த உணர்வின் இயக்கமாகத் தான் புகுந்த உடலிலே செயல்படுத்தும்.

சார்புடையவர்கள் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அவர் உணர்வு இங்கே இருப்பதால் வேறு உடலில் இருந்தாலும் இந்த உணர்வுகள் கலக்கப்பட்டுக் கொண்டே வரும்.

நாளடைவில் வெளிவந்த பின்… துருவ தியானத்தில் நாம் எண்ணி உந்திச் செலுத்தப்படும் பொழுது “எளிதில் அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்…”

இதிலே அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்தியது… அதற்குண்டான உணர்வுகள் வரும்.
1.அங்கே சொர்க்கம் அடைந்த உணர்வினை உங்களுக்குத் தெளிவாக உணர்த்துவார்கள்.
2.”நான் சொர்க்கத்தில் இருக்கின்றேன்…” என்ற உணர்வினை கனாக்களில் வந்து சொல்வார்கள்… சிலருக்கு அது தெரியும்.

சொர்க்கம் அடையவில்லை என்றால் உடலை விட்டு வந்தபின் என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்று உங்களுக்குள் அந்த உணர்வினை ஊட்டி நினைவுபடுத்தும்.

ஏனென்றால் உடலின் உணர்வுக்குள் ஆசை என்ற உணர்வின் உணர்ச்சியால் நமக்குள் அறியச் செய்யும் உணர்வின் தன்மையும் உண்டு.

அதே போல்… உங்கள் முன்னோர்கள் யாராவது சப்தரிஷி மண்டலம் சென்று விட்டால் அவர் உணர்வு உங்களுக்குள் இருந்தால்
1.இன்னொரு உடலை விட்டு ஆன்மா வெளி வந்தபின்
2.என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்ற உணர்ச்சி உங்களுக்குள் இயக்கப்பட்டு
3.நினைவு கூர்ந்து அவர்களையும் விண்ணுக்குச் செலுத்த முடியும்

ஆனால் இதற்கு முன்னாடி நாம் அவர்களை எல்லாம் பேயாகத்தான் மாற்றி வைத்திருக்கின்றோமே தவிர நல்ல வழியில் செயல்படுத்தவில்லை.

இப்போது நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மறைந்த நிலைகளைக் காட்டி… விண் செலுத்தும் மார்க்கத்தினைத் தான் உங்களைச் செயல்படுத்தச் சொல்கிறோம்.

இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து

 

அருள் ஞானச் சக்கரத்தை யாம் கொடுத்தால் சிலர் அதிலிருந்து விபூதி வருமா…? மருந்துகள் வருமா…? என்று கேட்கின்றார்கள். எதன் மீது ஆசை போகிறது…?
1.துருவ நட்சத்திரத்தின் அருள் வரும்
2.இருளைப் போக்கும் அருள் சக்தி கிடைக்கும் உண்மைகளை அறியலாம் என்று நான் சொன்னால்
3.விபூதி வராதா…? மருந்து வராதா…! என்று கேட்கின்றார்கள்.

ஏனென்றால் பழைய அன்பர்களுக்கு ஆரம்பத்தில் அப்படிக் கொடுத்த நிலையினை எண்ணிக் கொண்டு அந்த ஆசையிலே கேட்கின்றார்கள்.

அருளைப் பெற வேண்டும் என்று தான் வர வேண்டும். இருளை நாடக்கூடாது.
1.ஆசை என்று வரும் பொழுது இருள் தான்.
2.ஆசையிலே பொருள் வந்தால் மற்றதைச் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது.
3.இருளுக்குள் தான் செல்கிறோம்.

அந்த அருளைப் பெற வேண்டும்… தெரிந்து கொள்ளும் அறிவைப் பெற வேண்டும் என்றால் ஒளிக்குச் செல்கின்றோம்.

ஆகவே… ஆயுள் கால மெம்பர்களாக இருக்கக்கூடிய நமக்கு எது தேவை…? இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து.

அந்தக் கோடிக்கணக்கான உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை. ஏகாதசி… வைகுண்ட ஏகாதசி…!
1,எதுவுமே நம்மை அழித்துவிட முடியாது
2.என்றுமே நிலையானது அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுவது தான்.
3.மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை தான்.

அதைத்தான் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள். கடைசியில் சீதா எங்கே போகின்றது…? நாம் சாப்பிட்டது எல்லாம் சேர்த்து இந்த உடல் பூமிக்குள்… மண்ணுக்குள் தான் போகின்றது.

“மண்ணுக்குப் போகும் உடலுக்காக…” ஏன் இந்த மாதிரி அவஸ்தைப்பட வேண்டும்…? என்று இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

உணர்வின் தன்மை சீதா…!
1.ஒளியின் அறிவாகவும் இருளுக்குள் சிக்காத தன்மை கொண்டு விஷ்ணுவுடன் இணைந்தது.
2.அப்பொழுது அங்கே சொர்க்கம் அடைகின்றது… இது தான் அங்கே காட்டப்பட்டுள்ளது.

இதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களிடம் எதைச் சொல்லி நிரூபிப்பது…? சீதா அவஸ்தைப்படுகிறது… இராமன் சந்தேகப்பட்டான்…! என்று சந்தேக உணர்வைத் தான் கொடுக்கின்றார்கள். ஆனால் அதற்குள் எத்தகைய மூலம் இருக்கிறது…? என்பதை அறிய முடியவில்லை.

ஆகையினால் ஆயுள் கால மெம்பர் ஆக வேண்டும் என்றால் பேருக்கு அல்ல… இயற்கையிலே ஆயுள் மெம்பராக வேண்டும். துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்.

உங்கள் குடும்ப வாழ்க்கையிலோ நண்பருடைய குடும்ப வாழ்க்கையிலோ… எல்லோரும் அருளைப் பெற்று இருளைப் போக்க கூடியவர்களாக மாற வேண்டும்.

1.உங்கள் சொல் பிறருடைய தீமைகளை நீக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
2.உங்கள் சொல்லின் தன்மை சிந்திக்கும் தன்மையை ஊட்டி அவர்களைச் சிக்கலிலிருந்து மீட்டக் கூடிய சக்தியாக மாற வேண்டும்.
3.ஒவ்வொருவரும் அந்த வளர்ச்சிக்கு வர வேண்டும்… அது தான் ஆயுள் கால மெம்பர் என்று சொல்வது.

பிறிதொரு தீமை நமக்குள் புகாதபடி அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் சக்தி வர வேண்டும்.

ஆகவே நீங்கள் மன உறுதி கொண்டு அருள் சக்தியைப் பெறுங்கள். இருளை நீக்குங்கள் உயர்ந்த ஞானத்தைப் பேசி ஒவ்வொரு குடும்பத்தையும் பரிபக்குவ நிலை பெறச் செய்யக்கூடிய சக்திகளாக நீங்கள் மாற வேண்டும்.

அவர்களைப் பக்குவப்படுத்தும் பொழுது அவர்கள் உணர்வு நமக்குள் வராது.

பாசத்தால் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தால் அந்த வேதனை நிச்சயம் நமக்குள் வரும்.
1.ஆனால் வேதனையை நீக்கக்கூடிய சக்திகளாகத்தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர அதை வளர்க்கும் நிலை வந்து விடக்கூடாது.
2.அருளைப் பெருக்குங்கள்… இருளைப் போக்குங்கள்.

அந்த வழியில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பயமும் கோபமும் நுகரப்படும் பொழுது அந்தப் பயத்தினால் சிந்திக்கும் தன்மை இழந்து அதனால் வேதனை என்ற உணர்வாகின்றது.

அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வுகளுடன் கோபம் என்ற உணர்வு அதிகமாகப்படும் பொழுது உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்காதபடி திணறல் வரும் பொழுது தான் அது “ஆஸ்த்மா…” நோயாக வருகின்றது.

ஏனென்றால் அவர் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் அதே போல் உணர்வை எடுத்திருக்கும்.
1.வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் கோபம் என்ற உணர்வுகளை அந்தத் தாய் சுவாசித்து
2.சுவாசித்த உணர்வுகள் தாய் உடலில் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது
3.அங்கே ஒரு குணத்திற்கும் மற்றொரு குணத்திற்கும் ஒத்துக் கொள்ளாது போர் முறைகள் வரப்படும் பொழுது
4.கருவில் இருக்கக்கூடிய அந்தக் குழந்தைக்கும் இத்தகைய ஆஸ்த்மா நோய் வரக் காரணமாகின்றது.

அந்த நோய் அந்தத் தாய் உடலில் ஒரு தடவை வளர ஆரம்பித்தாலும் அடுத்த குழந்தை அந்தத் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது
1.வேறு வலுவான நல்ல உணர்வை அந்தத் தாய் எடுத்திருந்தால்
2.அந்த வலுவான உணர்வுகளைக் அந்தக் குழந்தையும் பெற்றிருந்தால்
3.அந்தக் குழந்தையின் குடும்பத்தில் இந்தப் பாரம்பரிய ஆஸ்த்மா நோய் வராது.

ஆக அந்தக் குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் ஒருவர் தாய் கருவில் இருக்கும் பொழுது வலிமை பெற்று அந்த ஆஸ்த்மா நோய் வராதபடி வலிமையான நிலைகள் பெற்றாலும் அவன் வளர்ந்து வரப்படும் பொழுது இந்தக் குடும்பத்தின் பாரம்பரிய நிலைகள் கொண்டு அவனுடைய எண்ணம் அந்தக் கலந்த உணர்வு கொண்டு அடுத்து அது திருமணமானால் அங்கே கருவில் வரக்கூடிய அநக் குழந்தைக்கு ஆஸ்த்மா வரும்.

அது எப்படி…?

ஏனென்றால் அடிக்கடி குடும்பத்தில் வந்த அந்த ஆஸ்த்மா நோயைப் பற்றிப் பேசத் தொடங்கினால் போதும்…!
1.நான் அவரைப் பார்த்தேன் இப்படி இருந்தார்கள்…. இவரைப் பார்த்தேன் இப்படி இருந்தார்கள்…! என்றும்
2.எங்கள் பாட்டிக்கு ஆஸ்த்மா இருந்தது எங்கள் தாத்தாவிற்கு இப்படி இருந்தது என்றும்
3.அந்த நோய்களைப் பற்றி எண்ண ஆரம்பித்தால் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால்
4.அந்தப் பாரம்பரிய நோய் அவர்களின் குழந்தைக்கு நிச்சயம் வந்துவிடும்.
5.அதாவது அவருடைய தாய்க்கு ஆஸ்த்மா நோய் இருக்கும் இவருக்கு அந்த நோய் இருக்காது ஆனால் அவருடைய குழந்தைக்கு அந்த நோய் வரும்.

சொல்வது அரத்தமாகிறதல்லவா…!

இதைப் போலத் தான் நாம் நுகரும் உணர்வுகளுக்கொப்ப நம்முடைய உடல்கள் மாற்றம்… குணங்கள் மாற்றம்… இதைப் போன்ற நிலைகள் எல்லாம் அதிகரித்து விடுகின்றது.

தாய் கருவில் பெற்ற உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை இயக்குகிறது என்பதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய மெய் வழியை உங்களுக்கு உணர்த்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறும்படி செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படர வேண்டும் என்று அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து வந்தால் அத்தகைய நோய்களையும் தீமைகளையும் அகற்ற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்து “இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதை நுகர்ந்தறிந்து அவருக்கு உதவி செய்தாலும் அவன் உடலில் வந்த நோயின் விளைவுகள் இங்கே காற்றிலே உண்டு. நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

மீண்டும் அவனை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நமக்கும் நோயாகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

நோயாளியைப் பார்த்து உதவி செய்தோம். மற்றவர்கள் வேதனைப்படுகின்றார்கள் என்று பார்த்து அதை அறிந்து கொள்கின்றோம். அப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு எல்லம் நாம் உதவி செய்து கொண்டே தான் இருக்கின்றோம். (அந்த வேதனைகளை நாம் துடைப்பதில்லை)

1.ஆனால் அவர்கள் உடலிலுள்ள வேதனைகளைத் தெரிந்து கொண்ட பின்
2.இப்படி ஒரு பத்துப் பேருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் அறிந்து உதவி செய்தால்
3.உதவி செய்தவருக்கே அந்த நோய் வருகிறது.

உதவி செய்தவருக்கு நோய் வந்த நிலையில் கடைசியில் என்ன சொல்வார்.
1.நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்
2.என்னை ஆண்டவன் சோதிக்கின்றார்..! என்பார்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. நாம் எண்ணியதை எல்லாம் உடலாக்குகின்றது. அதைத்தான் நம் உயிர் ஆண்டவனாக இருந்து ஆள்கின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

1.ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான்…! என்ற நிலையில் சாங்கியங்களைச் செய்து… அர்ச்சனை செய்து…
2.அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்…! என்றால் அது அல்ல அர்ச்சனை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.உயிரிலே படுகின்றது… அபிஷேகம் நடக்கின்றது.
2.அந்த உணர்ச்சியின் ஒலி அலைகள் உடலிலே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்த உணர்வுகள் அந்த உணர்ச்சியின் அலைகளாக நமக்குள் சேர்கின்றது.
4.இது தான் உண்மையான அர்ச்சனை.

மனிதனின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்று ஞானிகள் கற்பித்த இந்த உணர்வுகளை நாம் எப்படிப் பழகுதல் வேண்டும்…?

நம் பூமியின் வடதுருவப் பகுதியில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளி வரும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப்புலன் கவர்கின்றது. அலைகளாக மாற்றி வருவதை நம் பூமி துருவத்தின் வழி கவர்கின்றது. நமக்கு முன்னாடி இங்கே வருகின்றது.

அவ்வாறு வரும் அந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்து நம் உடலிலே சேர்க்க வேண்டும். ஆகவே அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.. எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்தி அதை பல முறை தியானிக்க வேண்டும்.

அப்பொழுது அந்த அகஸ்தியன் எதைக் கண்டானோ அதை எல்லாம் நாம் நுகர்கின்றோம். இப்படி அந்த அருள் சக்திகளை அதிகாலையில் பெற்றுப் பழகிக் கொண்டால்
1.அதற்குப் பின் எப்பொழுது வேண்டும் என்றாலும்
2.அதை எடுத்து நல்லதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

நமது இலட்சியம்

 

என்னுடைய முழுமையான தியானமே… பிறரின் தீமைகளைப் போக்கும் சக்தி பெற்ற மகான்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும். அதைக் கண்டு தான் எனக்குச் சந்தோஷம்.

இந்த உடல் இச்சைக்காக யாரும் அதை மாற்றி விடக்கூடாது.

யாம் கொடுக்கும் சக்தியைப் பெற்ற நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைகளில் மக்களுக்கு வழி காட்டியாக வரவேண்டும்.

எம்முடைய உபதேசத்தின் உட்கருத்துக்களை நீங்கள் உணர்ந்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களுக்கு…
1.அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…?
2.அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற உபாயத்தைக் கூறிப் பதிவு செய்து
3.அந்த பதிவின் மூலம் அவர்கள் எண்ணத்தால் தீமையிலிருந்து விடுபடுவதும்
4.அதே போல் தீமை செய்வோர் தீமைகளை நிறுத்திக் கொள்வதும்
5.ஆக… நன்மை செய்யும் உணர்வுள்ள மக்களாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

இன்றைய உலகில் கடுமையான விஷத்தன்மைகள் சுழலப்படும் பொழுது தேடிய செல்வங்கள் இருந்தாலும் அதைக் காக்கும் திறன் நமக்கு இல்லை.

உடலைக் காக்கும் திறன் முதலில் வரவேண்டும். உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைய வேண்டும் அந்த முழுமையின் தன்மை நாம் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!

இந்த லட்சியத்துடன் நாம் சென்றால் செல்வத்தை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை… அது தன்னாலே வந்து சேரும். ஆனால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அந்த ஆசையின் நிலையில் உடல் பற்று தான் வரும்.

1.எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சப்படும் பொழுது அவர்களை நல்லவராக மாற்ற முடியும்.
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க முடியும்.

சந்தர்ப்பத்தில்… நம் காதுகளில் படும் படியாகக் கூட சிலர் நிறைய குறை பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல மனம் வர வேண்டும்… நல்ல நிலை பெறட்டும்…! என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்கின்றார்கள்… பதிலுக்கு ஏதாவது செய்து பார்க்கலாமா…? நம்மைத் திட்டுகின்றார்களே…! பதிலுக்கு நாம் கஷ்டத்தை அவர்களுக்கு உண்டாக்கலாமா…? என்று எதையும் செய்யக் கூடாது.

அவர்கள் திருந்தி வாழத்தான் நல் உணர்வைப் பாய்ச்ச வேண்டுமே தவிர கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது.
1.அவர் எடுக்கக்கூடிய உணர்வுகள் அதைத் திரும்பிப் பார்க்கப்படும் பொழுது
2.”அவர்களாகத்தான் திருந்தி வர வேண்டுமே தவிர…” அவர்களுக்கு நாம் கஷ்டத்தை உண்டாக்கவே கூடாது.

காரணம்… அந்தத் தவறுகள் நமக்கும் துன்பத்தைக் கொடுத்துவிடும். அவர்கள் நல் வழியில் திருந்தி வர வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் வளர்க்க வேண்டும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அந்த உணர்வின் தன்மை ஆகின்றாய். நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அரங்கநாதன். ஆகவே எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வைக் கொண்டு நம்மை ஆளுகின்றது.
1.நம் சொல்லைக் கொண்டு பிறர் தீமைகளைப் போக்கும் ஆட்சியாக வர வேண்டும்.
2.நம் சொல் பிறரின் தீமைகளைப் போக்கி… உண்மைகளை அவர்கள் அறியும் நிலையாக அது வர வேண்டும்.

ஆனால்… கேட்கவில்லை என்றால் அந்த உடலில் இருக்கக்கூடிய தீமைகள் நன்மையைப் பெற விடாது தடுக்கின்றது என்று பொருள்.

இருந்தாலும்… எப்படியும் அவர்களுக்குள் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற நிலையும் அவர் உடலை அறியாது சேர்ந்து அசுத்தங்கள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் செயல்படுத்த வேண்டும்.

இருபது வருடம் நான் பட்ட அவஸ்தைகள் இன்னது தான் என்று சொல்ல முடியாது. காரணம் மனிதர்கள் ஒவ்வொருவரும் எத்தனையோ வேதனைப்படுகிறார்கள். குடும்பத்தில் எத்தனையோ அவஸ்தைப்படுகிறார்கள்… அவர்களுக்கு வழி காட்டுவது யார்…? என்று குருநாதர் என்னை உணரும்படிச் செய்கிறார்.

ஆக… இந்த உயிரே மனித உடலை உருவாக்கியது. அறியாத நிலைகளில் தீமைகள் உடலில் புகுந்து விடுகின்றது… தெளிவான நிலையில் செயல்பட விடாதபடி தடுக்கிறது.

1.அவர்களுக்கு உயர்ந்த நிலைகளை ஊட்டிக் காத்திடும் செயலாகச் செயல்படும் பொழுது அந்தக் காத்திடும் உணர்வு நமக்குள் வருகின்றது.
2.அதன் மூலம் இந்தப் பூமியான பரமாத்மாவிலும் நல்ல நிலைகள் பரவுகின்றது.

அது பரவும் பொழுது… தீமையை மாற்றிடும் சக்தியாக ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெற்று அதே உணர்வுகள் ஒவ்வொருவரிடம் இருந்து வெளிப்படும் பொழுது “இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது…”

நம் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் நல்ல உணர்வுகள் இந்தப் பூமியைச் சொர்க்கபூமியாக மாற்றி அமைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு அன்பர் ஞானத்தின் வழியில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தனக்குள் தீமையின் பலன்கள் அதிகமாகப் பெருகுகிறதே…! என்ற நிலையில்
1.அதிலிருந்து நாம் எப்படியாவது விடுபட வேண்டும்
2.இனி நாம் பிறவி இல்லா நிலை தான் அடைய வேண்டும். என்ற ஏக்கத்தில்
3.தன் உயிரை ஈசனாகத் துணிவுடன் மதிக்கத் தொடங்கினார்.

இந்த உயிரான ஈசன் வெளியே சென்று விட்டால் தன் உடலான சிவம் இது சவம் தான்…! பின் எந்த விதமான மதிப்பும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

இந்த உயிரின் நிலைகளில் தான் நுகர்ந்த உணர்வு கொண்டுதான் இந்த உடலை அமைத்தது. தன் உடலுக்குள் வேதனை பயம் சஞ்சலம் சலிப்பு போன்ற பல உணர்வுகள் வரப்படும் போதுதான் இந்த உடலான சிவத்தில் (தன் உடலில்) கடுமையான நோய்களும் பல இன்னல்களும் வந்தது என்பதை அவரே உணர்ந்தார்.

1.நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்…! உயிரை நாம் எப்படி மதித்தல் வேண்டும் என்றும்
2.தீமை என்ற நிலைகளை எப்படி அகற்ற வேண்டும் என்றும்
3.தன் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும்
4.யாம் (ஞானகுரு) கூறிய வழிப்படி தியானம் இருந்தார்… தன் உயிரை மதித்தார்.

ஆகவே இந்த உடலில்… அதாவது சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர நேர்ந்தால் அதனால் தன் உடலில் எப்படி நோயின் தன்மை வலிமை பெறுகின்றது என்பதை நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… உணர…உணர… தனது வயதின் நிலைமையையும் உணர்ந்து தன்னுடைய குழந்தைகளை அவர் எண்ணிப் பார்க்கவும் செய்தார்.

அப்போது என்னைத் தேடி வந்து உபதேசம் கேட்பார்…! அதற்கு நான் அவரிடம் சொன்னது..

நான் (ஞானகுரு) இருக்கிறேன் என்றால் ஈஸ்வரபட்டரை நான் சந்திப்பதற்கு முன்னாடி… இந்தத் தியானத்தை நான் செய்வதற்கு முன்னாடி… “என் உடலில் எத்தனையோ விதமான உணர்வுகள் உண்டு…!”

என்னை எத்தனையோ பேர் சந்தித்து அவர்கள் கஷ்டம்… நஷ்டம்… துன்பம்.. வேதனை.. சங்கடம்.. என்று எல்லாவற்றையும் சொல்கிறார்கள். அதை எல்லாம் காதில் கேட்ட உடனே அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

உடலில் உள்ள அந்த வெறுப்பான அணுக்களும் தீய அணுக்களும் அதனால் ஏற்பட்ட உணர்வுகள் அது உணவாக எடுத்து அது பெருகத் தொடங்கிவிடும்.

அந்த மாதிரி ஆகாதபடி
1.ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்த வழிப்படி உடனக்குடன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஆத்ம சுத்தி செய்து அதை எப்படி குறைக்க வேண்டும்..,.? என்று தெரிந்து கொண்டேன்.

அப்படிக் குறைத்து நல்லதாக்கிய என்னுடைய அனுபவத்தை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அதே வழியினை நீங்களும் கடைப்பிடியுங்கள்…! என்று சொன்னேன்.

அதன் வழியினை அவரும் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் குரு அருளும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்கை வாழ வேண்டும் என்பார்
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குரு காட்டிய அருள் வழியில் நடந்து அந்த நெறியைத் தவறாது பின்பற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் கேட்பார்.

தன் வாழ்கையில் வந்த கடுமையான நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை அனைவரும் பெற வேண்டும்… பெற வேண்டும் என்றும்
1.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் அவருக்குள் விளைகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் அவருக்குள் பெருகுகின்றது.
3.இந்த உடலில் பற்று வராது அருள் உணர்வுகளை அவர் பற்றுடன் பற்றினார்.

சில நேரங்களில் அவருக்குக் கோபம் வரும்… வெறுப்பான உணர்வு வரும்… வீட்டில் சண்டை வரும்..! ஏதாவது தவறாகச் சொல்லி விட்டால் உடனே கோபம் வரும்.

அப்பொழுது அந்தக் கோபம் வந்துவிட்டதே…! என்று என்னிடம் வந்து “சாமி… எனக்கு இந்த உடல் பற்று வருகிறது…! அதை மாற்ற வேண்டும்…!” என்று கேட்பார்.

வெளியிலே யாராவது ஏதாவது தவறுகள் செய்தாலும் உடனே அவருக்குக் கோபம் வரும். உடனே என்னிடம் வந்து சொல்வார்.
1.அந்தக் கோபம் என்னை இயக்குகிறது… அதிலிருந்து நான் தப்பிக்க வேண்டும்.
2.அதற்கு குருநாதரின் அருள் சக்தி “எனக்கு அதிகமாக வேண்டும்…”
3.குரு அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் அதிகமாகப் பெற்று
4.எனக்குள் இருக்கும் அந்த இருள் எல்லாம் நீங்க வேண்டும்.
5.நான் ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

இது தான் அவர் என்னிடம் பேசும் பேச்சு…!

இந்த உடல் பற்று இருக்கும் போது அதை மாற்றச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு அரை மணி நேரமாவது தியானம் செய்து… அதைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சி எடுப்பார்.

சாதாரணமாக நம் கையில் ஒரு அழுக்குப் பட்டால் உடனே அதை நாம் துடைக்கின்றோம் அல்லவா…! இதைப் போலத் தான் அவர் வாழ்கையில் ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் அதீதமான நிலைகள் இருந்தாலும் அதைத் தடைபடுத்தி நல்லதாக்கும் முயற்சிகளை அவர் எடுப்பார்.

1.தன் உடலில் முதலில் உருவான தீமை செய்யும் அணுக்கள் தன் உணவுக்காக உணர்ச்சிகள் உந்தப்படும் போது
2.அந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் இவருடைய நல்ல சிந்தனைகள் குறைவதும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாத நிலை வருவதும்
4.அதை உணர்ந்து கொண்ட நிலையில் அதை எப்படித் தெளிவாக்கி நல்லதாக்கிக் கொள்ள வேண்டும் என்று உடனே என்னிடம் நேரடியாக வருவார்.
5.இப்பொழுது எனக்குள் என்ன நடக்கிறது…? இதை நல்லதாக மாற்ற உடனே நான் என்ன செய்ய வேண்டும்…? என்று கேட்பார்.

நீங்கள் அங்கே இருந்த இடத்திலிருந்தே இந்த அருள் சக்தியை எடுக்கலாம் என்று நான் சொன்னேன்.

இருந்த இடத்திலிருந்து எடுக்கிறேன். ஆனாலும் குருவிடம் (ஞானகுரு) நல்ல வாக்கைக் கேட்டோம் என்றால் எனக்கு அந்த வலிமை கிடைக்கும். “அதற்குத் தான் நான் வந்தேன்…!” என்பார்.

கோபம் வரும்போதெல்லாம் நீங்கள் சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்பேன். அந்த அருள் சக்தி என் உடலில் படர வேண்டும் என்று வலுவேற்றிக் கொண்டு எனக்குள் வரக்கூடிய கோபத்தையோ சலிப்பையோ சஞ்சலத்தையோ நான் குறைப்பேன் என்பார்.

நடந்த நிகழ்ச்சி இது.

“விதி…” உண்டு…! என்றால் அது எப்படி…?

 

தாய் கருவிலே சிசு வளரப்படும்போது தாய் எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வினைப் பதிவாக்குகின்றதோ அதுவே அந்தக் குழந்தைக்குப் பூர்வ புண்ணியம் ஆகிறது.
1.அந்த உணர்வே விதியாகி வளர்ச்சியாகிக் கொண்டிருக்கும்.
2.அந்தத் தருணம் வரப்படும் பொழுது அதன் பயனாக இயக்கிவிடும்.

உதாரணமாக… ஒரு தாய் நோயாளியை உற்றுப் பார்க்கிறது… அந்த உணர்வுகள் பதிவானது. நோயாளியின் உணர்வுகள் தாய் இரத்தத்தின் மூலமாகக் கருவிலே வளர்ச்சியடைந்து குழந்தையாகப் பிறக்கப்படும் பொழுது அந்த விதிப்படி அவனுக்கு நோய் வந்தே தான் தீரும்.

அதை மாற்ற ஜோதிடம் பார்த்தேன் அதைச் செய்தேன் மருத்துவரிடம் சென்றேன் என்றாலும் விதிப்படி நடக்கத் தான் செய்யும்.

மருத்துவர் கொடுக்கக்கூடிய மருந்துகள் ஒட்டாது. அந்தத் தருணம் வந்தபின் அந்த மருத்துவர் கொடுத்த மருந்தில் உள்ள நஞ்சைத் தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும் பெருகி அவனை வீழ்த்திய தீரும்.
1.சிறிது நாளைக்கு வலியிலிருந்து வேண்டுமென்றால் தப்பலாம்.
2.அந்த விஷத்தைத் தனக்குள் எடுத்து… மற்ற உறுப்புகளை வீழ்த்தி விதிப்படி அவன் மடிந்தே தீருவான் – விதி…!

விதி என்ற ரூபம் இப்படித்தான் வருகிறது.

பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது…! தாய் கருவிலே வளர்க்கப்படும் பொழுது அது எதை எதையெல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ “இந்த விதியின் பலனே நடக்கும்…”

தாய் கருவுற்றிருக்கும் போது ஒரு தத்துவத்தைப் பேசி உயர்ந்த ஞானத்தைப் பேசி அதன் வழி “இந்த மகான் உயர்ந்தார்…” என்ற ஏக்கத்துடன் ஏங்கி இருக்கலாம்.

சந்தர்ப்பத்தில்… குடும்பத்திலே சிக்கல்கள் அதிகமாகும் பொழுது
1.தாய் மகான்களை எண்ணி அந்த மகானின் உணர்வு தன் குடும்பத்தில் படர வேண்டும் என்று
2.அந்த எண்ணத்தைத் தாய் ஓங்கிச் செயல்படுத்தி இருந்தால் அந்த உணர்வுடன் இருக்கும் நிலையில்
3.யாரோ ஒரு சாது அன்று அந்த வீட்டிற்கு வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெற வேண்டும் என்று எண்ணும் நிலையில்
4.அவருக்குச் சக்தி இருக்கின்றதோ இல்லையோ…
5.அவரை மகானாக எண்ணி அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது “அந்த உயர்ந்த உணர்வு…” பதிவாகி விடுகிறது.

யாசகத்திற்கு இந்த தாய் அவருக்கு உணவு கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். “நீ நன்றாக இரம்மா… உன் குடும்பம் நன்றாக இருக்கும்…” என்று அவர் சொல்லி அதை இவர் பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வின் தன்மை கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு “அது விதியாகின்றது…”
2.அந்த விதிப்படி அதனின் வளர்ச்சிகள் அவன் வளர வளர எதிர்பார்க்காதபடி குடும்பத்தில் காரியங்கள் சித்தியாகும்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவன் செல்வங்களைத் தொலைத்துக் கொண்டிருப்பான். ஒருவன் வளர்த்துக் கொண்டிருப்பான்.

குடும்பம் தரித்திரமான நிலையில் இருக்கும். தாய் கருவுற்றிருக்கும் போது நோயாளியைப் பரிவுடன் பார்த்து.. அவர் உணர்வை எடுத்துக் கொண்ட பின் குழந்தை பிறந்த பின் நலிந்து கொண்டேயிருப்பான்.

அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டு கொண்டிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால்…
1.மகானின் உணர்வு பதிவாகி வளர்ச்சி பெற்ற குழந்தை தீமைகளை வென்றிடும் சக்தியாக அவன் வருவான்
2.இது எல்லாம் விதிப்படி நடப்பது என்று சொல்வது.

அதனால் தான் மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒரு தீமையைப் பார்க்கின்றோம் அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக உருவாகிறது. அந்த வித்து முளைக்காதபடி தடுப்பது மதி.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மதி கொண்டு அதைத் தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராதபடி “முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றது…”

புளியங்கொட்டையை நாம் தூக்கிப் போட்டாலும் அது குப்பையில் தான் விளையும். பின்… அது வளர்ச்சி அடைந்து வீட்டின் அருகில் வந்து விட்டால் விழுதுகளைப் பரப்பிப் அது பெரும் விருட்சமாக மாறுகின்றது.

வளர்ந்த பின் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றால்… வெட்டுவதற்கு நிறைய பந்தோபஸ்து செய்ய வேண்டும் பெரிய கோடாலி எல்லாம் வேண்டும்.

வெட்டும் பொழுது தெரியாமல் வீட்டிலே சாய்ந்து விட்டால் கட்டிடத்தை நொறுக்கிவிடும். ஆகவே அதைச் சிறுகச் சிறுக வெட்ட வேண்டும். அதாவது… நாம் மதி கொண்டு வீடு இடியாமல் நாம் வெட்ட வேண்டும்.

மதி கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.
1.அதை நீங்கள் எந்த நேரமும் எண்ணி எடுத்து
2.அவ்வப்போது தீமைகள் உங்களுக்குள் புகாது… அது உடலில் விதியாக வளர்ந்திடாது மாற்றிட முடியும்.

விதியை மதியால் மாற்ற முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கேள்வி:-
தியானத்தின் மூலம் என் தந்தையை விண் செலுத்தினேன். அதனுடைய பலன் என் சகோதரர்களுக்குக் கிடைக்குமா…? ஆனால் அவர்கள் என்னைப் போன்று இந்தத் தியானத்தைச் செய்யவில்லை… அதிலே ஈடுபடவும் இல்லை

பதில்:-
இந்தத் தியான வழியினை நீங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்… அந்தச் சக்தி உங்களுக்குள் கூடிக் கொண்டிருக்கிறது
1.உங்கள் தந்தையின் உணர்வுகள் தான் உங்கள் உடல்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையின் உயிரான்மாவைத் தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றீர்கள்.
3.அவர் உடல் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்படுகின்றது
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக தந்தையின் உயிரான்மா சுற்றிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தாய் இங்கே உடலுடன் இருக்கின்றார்கள். அவர்கள் பிரியும் போது இதே முறை கொண்டு தாயின் உயிரான்மாவையும் விண் செலுத்தினால் இரண்டு பேரும் ஒன்று சேர்த்து ஒரு உணர்வின் கருவாக உருவாகி… என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலங்களில் வெளிப்படுத்திய சில இருளான தன்மைகள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது அந்தச் சக்தி எளிதில் கிடைக்கின்றது.

அதாவது…
1.தீமைகளை நீக்கக்கூடிய சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
2.எனக்குக் கிடைக்கின்றது… குடும்பத்தில் என்னுடன் பிறந்த சகோதரர்களுக்கு அது ஏன் கிடைக்காமல் போகும்…? என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களுடைய உணர்வு இதன் மேல் பற்று இல்லை.

உதாரணமாக… ரேடியோ டிவி அலைகளை ஒலி… ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ… அதைத்தான் அது இழுத்துக் கொண்டு வரும். அதைத்தான் நாம் பார்க்க அல்லது கேட்க முடியும்.

ஏனென்றால் இந்தக் காற்றிலே எல்லாமே இருக்கின்றது.

அது போல் தந்தையை நீங்கள் தியானத்தின் வழியில் விண் செலுத்தும் போது… “விண் செலுத்திய வலுவான உணர்வு” உங்களுக்குள் இருக்கின்றது அப்பொழுது எளிதில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று உங்களுக்குள் வரக்கூடிய சிரமங்களைப் போக்கிக் கொள்ள முடிகிறது.

போக்கிக் கொண்ட பிற்பாடு உங்களுடன் பிறந்த சகோதரர்கள்… அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அந்த திறன் பெற வேண்டும்… என்று “பிரார்த்திக்க வேண்டியது உங்களுடைய கடமை…!”

ஆனால்…
1.தியானிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறோம்… சகோதரர்கள் கேட்கவில்லை என்று வேதனைப்பட்டால்
2.நீங்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சக்தியையும் இழக்க நேரும்.

ஏனென்றால் விஷத்தின் தன்மை வரப்படும் போது சிந்திக்கும் தன்மை இங்கே இழக்கப்படுகின்றது. உங்களை அறியாமல் அவர்கள் நிலைக்குத் தான் செல்கிறீர்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…!

அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… இந்த அருள் வழியில் வாழ வேண்டும் என்ற ஆசையை ஊட்டலாம் சகோதரர்களுக்கு…!
1.ஆனால் அவர்கள் பெறவில்லை… கடைப்பிடிக்கவில்லையே… என்று வருத்தப்பட வேண்டியதில்லை
2.அவர்கள் அதை பெற்று வளர வேண்டும் என்று நமக்குள் ஆசையைக் கூட்டுவதால் தவறில்லை.

இதைச் செய்யவில்லை என்கிற போது உங்கள் தந்தைக்கு எந்த நோய் வந்ததோ அது அவர்களுக்கு வரும். அது மட்டுமல்ல… அவர்கள் குழந்தைகளுக்கும் வரும்… பரம்பரை நோய் என்று…!

ஆனால் “நீங்கள் செய்யக்கூடிய தியானம்…” உங்களுக்கும் சரி… உங்கள் சார்புடையவர்களுக்கும் சரி… அந்தப் பரம்பரை நோய் வராதபடி தடுக்கும்.

முறைப்படி உங்கள் தாய் தந்தையரை விண் செலுத்தும் போது சப்தரிஷி மண்டலங்களின் சக்தி எளிதில் கிடைத்து அதன் மூலம்
1.சிந்திக்கக் கூடிய சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
2.தீமை என்றால் அதை முன் கூட்டியே உணர முடியும்.
3.தீமைகள் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய அந்த ஞானமும் உங்களுக்குள் வளரும்.

தாய் தந்தையரை விண் செலுத்தி அதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் உங்களுக்குள் வளரப்படும் பொழுது நாளடைவில்
1.உங்கள் குலதெய்வங்கள்… உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் இருந்தாலும்
2.தொடர்ந்து விண் செலுத்தும் உணர்வுடன் நீங்கள் செயல்படும் போது
3.அதனுடன் ஈர்க்கப்பட்டு… “என்னையும் நீ விண் செலுத்து…” என்று கேட்கும் உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்… பார்க்கலாம்.
4.அவர்கள் விண் சென்றதையும் நீங்கள் உணரலாம்… அதைக் காட்சியாகவும் கூடக் காண முடியும்.

சென்று விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் தனித்துப் பார்க்க வேண்டியது இல்லை. தொடர்ந்து இந்த உணர்வுகளைச் செயல்படுத்தி வந்தால் “நான் விண்ணிலே இருக்கின்றேன்…! என்று உங்களுக்குக் கனாக்களில் உணர்த்துவார்கள்…”

ஆகவே இத்தகைய விண் செலுத்தும் மார்க்கம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது உங்களுடைய கடமை…! அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். மற்றவர்கள் செய்யவில்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தேவையில்லை.

முன்னோர்களைக் கனியாக்கி… நாமும் கனியாகி… சந்ததியினரையும் கனியாக்கும் (ஒளியாக்கும்) முறை

 

உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…!

சொந்த பந்தமாக இருந்தாலும்… தன் குடும்பத்தாராக இருந்தாலும்… அவர்கள் உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்… அடுத்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி
2.அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துங்கள்.

பின்…
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெருநிலை என்ற நிலை அடைதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் இதை வலுப்படுத்தி இந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை… சூட்சம சரீரத்தை விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால்…
1.நாம் மேல் நோக்கி விண் செலுத்திய அந்த உணர்வின் தன்மையை… நாம் மீண்டும் நுகரப்படும் பொழுது
2.இங்கே அந்த (முன்னோர்ளைப் பற்றிய) ஈர்ப்பின் சக்தியை… அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது
3.அவ்வாறு அது கவர்வதனால்… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா நமக்குள் உட்புகாது தடுத்து நிறுத்துகின்றது.

ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருக்கும் நிலையில்
1.நாம் விண் செலுத்தத் தவறினால்… நம் ஆன்மாவில் வந்து விட்டால் “நம் சுவாசத்தின் வழி…” உடலுக்குள் நிச்சயம் சென்றுவிடும்.
2.ஆகவே இதன் வழி அடைத்துவிட்டு உணர்வினை ஒளியாக்குதல் வேண்டும்.

மாறாக… மேலே சொன்னபடி விண்ணுக்கு அனுப்பினால் அந்த உணர்வுகளைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு… அதை அங்கே தனக்குள் கவர்ந்து சென்றுவிடும்.

இந்த உடலிலே பெற்ற நோயின் உணர்வை… அந்த உணர்ச்சிகளை அங்கே கரைத்து விடும்.

ஆகவே உயிருடன் ஒன்றிய நிலைகளில்
1.”தான் வாழ வேண்டும்…” என்ற உணர்வின் தன்மை அங்கே ஒளியாகின்றது.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை “அது உணவாக எடுத்து…” அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்த கோள்கள் எப்படி அதனைச் சுழன்று வாழ்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வலுவாக்கி விட்டால்… அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் அடுத்து நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் அங்கே செல்கின்றது.

அதே போல… நண்பன் என்று நாம் பழகிய நிலைகள் அவர் சந்தர்ப்பத்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் (இறந்தவர் யாராக இருந்தாலும்… நாம் கேள்விப்பட்டால்) அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைய வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்டு
2.”இத்தகைய அடைப்பாக நாம் அமைத்துக் கொண்டு…” அந்த ஆன்மாக்கள் நமக்குள் புகாதபடி இங்கே தடுக்க வேண்டும்.

இதைத்தான் இராமாயணத்தில் வாலியை… இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று சொல்வது. அதாவது… துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து நமக்குள் அடைத்து விட்டால் “எந்த ஆன்மாவும் உள்ளே செல்லாது…”

இவ்வாறு நம் முன்னோர்களை விண் செலுத்தி விட்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும் நாம் எளிதில் பெற அது உதவுகின்றது.

அவர்கள் முதலிலே மனிதனாளர்கள்… அடுத்து நம்மை அவர்கள் தான் மனிதனாக உருவாக்கினார்கள்.

உதாரணமாக…
1.ஒரு விழுதின் தன்மை மரமாக வளரப்படும்போது… விழுது எப்படி அதைக் கனியாக்குகின்றதோ
2.இதைப் போன்று நாம் முன்னோர்களைக் கனியாக்க வேண்டும்
3.ஏனென்றால் கனியாக உருவாக்குவது அதன் விழுதுகளே…!
4.(மரம் – முன்னோர்கள்… விழுது – நாம்)
5.ஆகவே… நாம் இதை முறைப்படுத்திச் செய்தால் அவர்கள் கனியாகின்றார்கள்.

கனி என்பது… உயிர் ஒளி. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த உயிருடன் ஒன்றும் “அனைத்தும் ஒளியாக்கப்படும் பொழுது…” கனியாகின்றது…!

கனியின் தன்மை அடைந்த பின்… அதாவது விழுதுகளான நாம் அதை உருவாக்கப்படும் பொழுது
1.அந்தக் கனியின் தன்மையை நாம் விழுங்கும் பொழுது…
2.அது எப்படிக் கனியானதோ… அதை (அதே) முறைப்படுத்தி நாமும்…
3.நம் உணர்வுகள் (உயிருடன் ஒன்றுவது) கனியாகி… பிறவி இல்லா என்ற நிலை அடைகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதன் நோயால் மிகவும் வாடுகின்றான். அவன் வேதனைப்படுகின்றான். ஆக நல்ல உடலாக ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் சந்தர்ப்பத்தால் குடும்பத்திலோ அல்லது மற்ற வகைகளிலோ எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்து அதனால் வேதனை என்ற விஷங்கள் அதிகரித்து விட்டால்
1.நல்ல உடல் அதனுடைய வலுவை இழக்கின்றது.
2.உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சுருங்கத் தொடங்குகின்றது.

காரணம் விஷத்தின் ஆற்றல் உடலில் அதிகரித்து விட்டால் நல்ல உணர்வின் சத்தைக் கவர்ந்த உறுப்புகள் அனைத்தும் நலியத் தொடங்குகின்றது.

அந்த நோயாளி மீது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அதிகப் பற்று வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நோயை எண்ணி நுகர்ந்தறியும் பொழுது இரத்தங்களில் அந்த விஷத் தன்மைகள் கலந்து நோயாளியின் உடலில் வந்த அதே நோய்.. “பற்று கொண்டவர் உடலிலும் வரத் தொடங்குகின்றது…”

உதாரணமாக ஒரு நூறு பேர் அந்த நோயாளியைப் பார்க்கிறார்கள். “அவர் நல்லவர்… ஆனால் இப்படி ஆகிவிட்டார்…!” என்ற உணர்வை நுகர்ந்து அறிந்து அவருக்கு உதவிகளும் செய்கின்றனர்.

ஆனாலும் அந்த நூறு பேரில் ஒருவர் அவர் மேல் அக்கறை அதிகரித்து அவருக்கு வேண்டிய உபகாரத்தைச் செய்து கொண்டிருந்தால் நோயாளியின் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மா எங்கே செல்லும்..?

குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்…? நாற்பத்தெட்டு நாள்களுக்கு (ஒரு மண்டலம்) அல்லது சிறிது நாளைக்காவது இறந்தவர் விரும்பிச் சாப்பிட்ட உணவை எல்லாம் படைத்து அவரை நினைத்து அழுவார்கள்.
1.ஏனென்றால் அவர் நம்முடன் வாழ்ந்தார்
2.அவருக்கு நாம் கொடுக்க வேண்டும் என்று அப்படிச் செய்வார்கள்.

அவர் உடலுடன் இருக்கும் பொழுது உட்கொண்ட அதே நினைவு கொண்டு மற்றவர்களும் பந்துக்களும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தப் பதார்த்தங்களை வைத்து இறந்தவரின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றார்கள்.
1.எங்களுடன் இருந்தீர்கள்…! ஆனால் இன்று போய்விட்டீர்கள்…!
2.அதனால் நான் உங்களுக்கு இதை எல்லாம் (படையல்) செய்கின்றேன் என்று எண்ணுவார்கள்.

இதெல்லாம் எந்தக் காலத்தில் செய்வார்கள்…? அமாவாசைக் காலங்களில் தான் பெரும்பகுதி செய்வார்கள். அந்த நாளில் சூரியனின் கதிரியக்கங்கள் அதிகமாக வராது.

சூரியனின் கதிரியக்கங்கள் அவருடைய உடலில் விளைந்த நோயின் உணர்வைக் கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் பரவச் செய்து வைத்துள்ளது.

ஒரு மான் தன்னைத் தாக்க வரும் புலியின் உணர்வை அதிகமாக நுகர்ந்த பின் அந்த மானின் உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்று புலிக் குட்டியாக மாறுகின்றது.

அதைப் போன்று அந்த நோயாளியின் வேதனையான உணர்வுகள் வலுவானது. அவருடைய குடும்பத்தைச் சார்ந்தோர்களோ அல்லது நண்பர்களோ
1.அவர் மேல் அதிகப் பற்று கொண்டு அவரின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்திருந்தால்
2.அவர் இறந்த நாற்பத்து எட்டு நாளுக்குள் அவரை நினைத்துக் கும்பிடுகின்றேன்…! என்ற நிலையில்
3.அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.
4.ஆனால் முதலில் தெரியாது… அது சிறுகச் சிறுக விளையும்.

அந்த நோயாளி இறக்கப்படும் பொழுது எந்தத் தெய்வத்தை அதிகமாக நேசித்து வந்தாரோ… அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் செய்தாரோ அந்த உணர்வுகள் எல்லாம் அவர் உடலில் இருக்கின்றது.

கடைசி நிமிடத்தில் அவர் இறக்கப்படும் பொழுது அவர் எந்தெந்த தெய்வத்தை நேசித்தாரோ அந்தத் தெய்வத்தின் உணர்வுடனே அந்த உயிர் வெளியே செல்லும்.

அப்பொழுது அந்தத் தெய்வத்தின் பேரைச் சொல்லி “இன்னார்…!” எனக்குத் தக்க நேரத்தில் நல்ல உதவிகளைச் செய்தார் என்ற உணர்வுடன் கடைசி நிமிடம் அந்த ஆன்மா வெளியிலே வந்தால் யார் அதிகமாக அவரை நேசித்தாரோ அந்த உடலுக்குள் வந்துவிடும்.

அப்படி வந்த பின் அவர் உடலில் வந்த நோயெல்லாம் இங்கேயும் உருவாக்கி அவர் தெய்வ பக்தி கொண்டது போல் இவர்களையும் பக்தி கொள்ளச் செய்து அதே நோயை விளைவித்து இவர் மீண்டும் இறந்து விட்டால் இந்த உயிரான்மா இவரைச் சார்புடையோர் உடல்களுக்குள் போகின்றது.

இப்படி ஒவ்வொரு உடலிலும் சேர்க்கும் விஷங்கள் அதிகரித்த பின் அடுத்து மனிதனாக வராது. பாம்பு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் உண்டு. புலிக்கு ஒரு விஷம் மாட்டுக்கு ஒரு விஷம் மானுக்கு ஒரு விஷம் யானைக்கு ஒரு விஷம் என்ற அந்த உணர்வின் கலவைகள் கொண்டு அதற்குத்தக்க உடலைப் பெறுகின்றது.

1.அதாவது மனித உடலை விட்டு வெளியே வரும் அந்த உயிரான்மா
2.தான் சேர்த்துக் கொண்ட வேதனைக்கொப்ப (விஷத்திற்கொப்ப)
3.எந்த உடலில் அந்த விஷம் இருக்கிறதோ அந்த உடலுக்குள் சென்று
4.அந்த உணர்வைக் கருவாக்கி பாம்பு என்றால் பாம்பினம். புலி என்றால் புலி இனமாக மாறிவிடும்.

இதை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒரு ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தாலே அந்த நாற்பத்தி எட்டு நாளைக்குள் அந்தக் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறோம்.

அவரும் ஒளி நிலை அடைகின்றார். அவருக்குப் பின்னாடி நாமும் அந்த ஒளி நிலை அடையலாம். மெய் ஞானிகள் காட்டிய வழியே இது தான்.

December உபதேசம் 2025

விண்ணுலகில் “ஒளிச் சரீரமாக வாழும் நிலை” எப்படிப்பட்டது…?

 

நமது பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் உண்டு. ரேவதி நட்சத்திரத்திலிருந்தும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்தும் துகள்கள் வரப்படும் பொழுது சூரியன் தன் உணவுக்காக அவைகளை எடுத்துக் கொள்கிறது. இடைமறித்து மற்ற கோள்கள் கவர்ந்து அதனின் மாற்றங்கள் ஆகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிக வலிமை பெற்றது… ஆண்பால். ஆணைக் கண்டு பெண் எப்படி ஒதுங்கிச் செல்கின்றதோ அதைப்போல ஒதுங்கிச் செல்லும் நிலைகள் பெற்றது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள்.

இருப்பினும்… இதன் உணர்வின் அழுத்தம் அதிகமான பின் ரேவதி நட்சத்திரத்தின் உணர்வலைகள் விலகிச் செல்கிறது. விலகிச் செல்லும் மார்க்கத்தில் வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய ஆவியின் தன்மை ஊடுருவி விட்டால் சுழற்சியாகி… வேகம் அதிகமாகின்றது.

சுழற்சியின் வேகம் அதிகமாகும் பொழுது இதன் அருகிலே வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து இரண்டும் மோதி விடுகின்றது.

இப்படி மோதி விட்டால்
1.ஆண் பெண் என்ற உணர்வுகளில் ரேவதி நட்சத்திரத்தின் உண்ர்வுகள் அதிகமானால் பெண்பாலை உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமானால் ஆண்பாலை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஆகவே… ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் உயிரிலே இயக்குகின்றது.

அதைப் போல் இந்த அருள் வழியில் கணவன் மனைவி இருவரும் ஒத்த உணர்வு கொண்டு இயக்கினால் “எதனையும் வெல்லக்கூடிய சக்தி பெறுகின்றது…”
1.இங்கிருந்து நாம் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொன்று தான்…!

இதிலே தெளிவாக்கி உணர்வின் தன்மை இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி மனித உடலில் பெற்ற பின் ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாக மாறுகின்றது. அது தான் சிருஷ்டித்துக் கொண்டது என்று சொல்வது.

தீமைகளை… பகைமைகளை… நஞ்சினைத் தனக்குள் வராதபடி மாற்றியமைக்கும் திறன் மனித உடலில் பெற்றதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்கின்றோம்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் இணைப்புடன் வாழ்ந்தால்
2.பூமியில் நண்பர்கள்… உறவினர்கள்… என்று இருந்தாலும் அதை அறிந்து கொள்ளும் நிலை இல்லை.
3.ஆனால் ஒன்று சேர்ந்து வாழும் இயக்கச் சக்தியாக மாறும்.
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து துருவ நட்சத்திரத்தில் உணர்வைக் கவர்ந்து வாழும் தன்மை வருகிறது.

நமது பிரபஞ்சம் பிற நிலைகளிலிருந்து எடுத்தாலும் சூரியன் எப்படி வளர்கின்றதோ இதைப் போலத் தான் சப்தரிஷி மண்டலங்களில் நாம் இருக்கப்படும் பொழுது “மனிதனுக்கு மனிதன்…” அறிந்திடும் நிலை வராது.

இருளை அகற்றிடும் வலிமை பெறும்… ஏழாவது ஒளி நிலை பெறும். அதை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் பகைமைகளை அகற்றிச் சிந்திக்கும் தன்மை பெறச் செய்யும்.

அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது. தான் சிருஷ்டித்து கொண்டது தான் ரிஷி.

கணவனும் மனைவியும் இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதைப் பின்பற்றிய அனைவரும் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி… சப்தரிஷிகள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்…! என்று பொருள்… உணர்வின் ஒளி அலைகள் கொண்டு.

வேப்ப மரத்தின் கசப்பை நாம் நுகர்ந்தால் ஓய்… வெளியே வருகின்றது. ரோஜாப் பூவின் மணத்தை நுகர்ந்தால் ஆகா..கா… என்று இணைந்து செயல்படும் உணர்வுகள் வருகின்றது.

அதைப் போல் நாம் ஒளிச் சரீரம் பெற்று விண்ணிலே வாழும் நிலைகளில்
1.அதற்கு மாறான உணர்வுகள் அங்கே சென்றால் இந்த உணர்வைப் பிரித்து விட்டுத் தன் உணர்வினை ஒளி என்று தான் உருவாக்கும்.
2.அங்கே பண்பும் அன்பும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்.
3.துருவ நட்சத்திரத்துடன் இணைத்து வாழும் உணர்வுகள் வரும் போது அதைப் பங்கிட்டு ஒளியின் தன்மை பெறும்.
4.விண் சென்ற பின் தன் நண்பன் என்று அறியாது.

ஆக அப்படி அறியக்கூடிய பருவம் வந்தால் மனித நிலைக்குத்தான் வரவேண்டும்.

விண் சென்ற நிலையில்… என்றுமே இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை ஊட்டி ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும். ஒளிக்குள் ஒளியாகும் பொழுது அகத்தின் ஒளியாகும் பொழுது இருளை வெல்லும் தன்மையும் நஞ்சை வெல்லும் தன்மையும் பெறுமே தவிர “அதற்குப் பின் இங்கே (பூமிக்குள்) வர முடியாது…”

என்றும் ஏகாந்த நிலையாக… எதுவுமே பகைமை இல்லாத நிலையும் பகைமையை மாற்றி அமைக்கும் சக்தியை இந்த மனித உடலில் பெற்றுத்தான் நாம் அங்கே செல்ல முடியும். இது தான் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி சப்தரிஷி – சிருஷ்டித்துக் கொண்டது.

கணவன் உயிராக இருந்தாலும் அதற்குள்ளும் பெண்பால் உணர்வுகள் உண்டு. மனைவி என்ற நிலையில் இருந்தாலும் அந்த உயிரில் ஆண்பால் என்ற உணர்வு உண்டு.

செடி கொடி கல்லானாலும் மலையானாலும் இதைப் போன்று நட்சத்திரத்தின் உணர்வுகள் எது கலவையானதோ அதற்குத்தக்க வளர்ச்சி இருக்கும்.

பெண்பால் உணர்வுகள் அதிகமானால் மலைகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதும் ஆண்பால் உணர்வுகள் இருந்தால் வளர்ச்சி கம்மியாக இருப்பதும் உண்டு.

வெறும் ஆண்பால் என்ற உணர்வு வரப்படும் போது தன் இனத்தை விருத்தி செய்து வளர்க்க முடியாது.

அதே போல் பப்பாளி மரத்தில் ஆண்பால் என்ற உணர்வுகள் செல்லும் பொழுது தான் பெண் பப்பாளி தன் இனத்தை விருத்தி செய்யும் வித்துக்களை உருவாக்குகின்றது. ஆண்பால் என்ற அந்த பப்பாளி மரம் இல்லை என்றால் அந்த அமிலம் படவில்லை என்றால் பப்பாளி மரத்தின் வளர்ச்சி குன்றும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதன் உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது நம் உயிர் அங்கே பகைமை என்ற நிலை இல்லாது ஒருக்கிணைந்த நிலைகளில் வாழ முடியும்.

1.பகைமையற்ற நிலைகள் கொண்டு என்றும் ஒளியாக வாழ…
2.ஒன்று சேர்த்த இயக்கத்தை நமக்குள் உயிர் என்ற நிலை இருக்கும் போது
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது தனுசுகோடி.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கி நீக்கி வந்தது… கோடிக்கரை. ஆகவே அந்த உடல் பெறும் உணர்வுகள் சிவ தனுசு.

ஆனால் அதே சமயத்தில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்த உணர்வினை நமக்குள் பெருக்கி விட்டால் தனுசுகோடி. தீமைகளை வென்று உணர்வின் தன்மை ஒன்றாக்கி
1.உயிரைப் போன்ற உணர்வு ஒன்றாக்கப்படும் பொழுது
2.”ஒன்றென்ற நிலைகள் இயக்குவது தான்… தனுசுகோடி…” என்று கூறப்படுகின்றது.

பகைமைகளை அகற்றி அருள் உணர்வைக் கூட்டி உயிருடன் ஒன்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது… கணவன் மனைவியாக அதை உருவாக்கப்படும் போது சப்தரிஷி.

இருளை அகற்றி நல்ல உணர்வினைச் சேர்க்கும் தன்மை… அதாவது “விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது…” என்பதனை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தில்… ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?

 

மற்றவர்கள் செயலை நேருக்கு நேர் பார்த்து “நீ தவறு செய்கின்றாய்…” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? கேட்க மாட்டார்கள்…!
1.சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியாது.
2.மனதிற்குள் வைத்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட்டி…
3.”நீங்கள் பார்த்துச் செய்யுங்கள்…” என்று கூறினால் சரியாகும்.

டேய் என்னடா செய்கின்றாய்…? இப்படியே நீ தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லும் போது அதனின் அர்த்தம் என்ன ஆகிறது…?இத்தனை பேர் இருக்கின்றார்கள்… இப்படியே செய்து கொண்டிருக்கிறீர்கள்… சாமி என்ன சொல்கின்றார்…? என்று இதையும் கலந்து கொண்டே தான் வருவோம்.

இதனால் என்ன ஆகின்றது…? நன்மை விளைவதில்லை.

அறியாத நிலைகள் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.நாம் அருளைப் பாய்ச்சி அவர்கள் அறியும் தன்மை வரவேண்டும் என்ற இந்த உயர்ந்த உணர்வை நாம் எடுத்துச் செயல்பட வேண்டும்.
2.நிச்சயம் உணர்வார்கள்… வருவார்கள்… என்று இந்த எண்ணத்துடன் தியானித்துப் பாருங்கள். தேடி வருவார்கள்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இதைத்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர… நாம் சொல்லும் “நல்லதைக் கேட்க யாரும் வரவில்லை…” என்ற எண்ணத்திற்கு நாம் செல்ல வேண்டியதில்லை.

ஆனால் இத்தனை பேர் இந்தத் தியான வழியில் வந்தார்கள் ஆனால் இப்பொழுது போய்விட்டார்களே…! என்று வேதனையோடு சொல்லப்படும் பொழுது… உங்கள் மேல் “இவர் என்ன…? சும்மா எப்பொழுது பார்த்தாலும் நச் நச் என்று நச்சுப் பிடித்துவராக இருக்கின்றார் என்று வரும்…!

பாலிலே விஷத்தைப் போட்டு அதைச் சாப்பிட்டால் மயக்கம் தான் வரும். இதைக் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்…? சிந்தனை அங்கே சரியாக வராது.

இதைப் போன்று நாம் எடுக்கும் உணர்வுகள் விஷத்தன்மை ஆகும்பொழுது நம்மை அறியாமலே வேதனைப்படும் நிலையும் நாம் செல்ல வேண்டிய மார்க்கத்தைத் தவற விட்டு மற்றவர்களையும் பெற விடாதபடி தடைப்படுத்தும் நிலையாகத் தான் வரும்.

இவர் என்ன எப்பொழுது பார்த்தாலும் சும்மா வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று உங்கள் மீது குறை கூறும் உணர்வுகள் வந்துவிடும்.

ஆனால் உயர்ந்த பண்புகளுடன் வேதனை உணர்வு கலந்து சொல்லும் பொழுது உடலும் பலவீனமாகும். உயர்ந்த மார்க்கமாக இருக்கின்றது… இப்படி இருக்கின்றார்களே அல்லது இப்படிச் செய்கின்றார்களே…! என்று வந்துவிடும்

கண்ணாடி நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் அழுக்குப் படிந்து விட்டால் முகம் தெரியுமா துடைக்க வேண்டும் அல்லவா.

ஆன்மீகம் என்பது
1.வலிமை கொண்ட உணர்வைப் பாய்ச்சி…
2.மற்றவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று எண்ணினால் நிச்சயம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும்.

ஆகவே அருள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எடுத்தால் அது சீராக வரும்.

அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

 

பாலில் பாதாமைப் போட்டால் சத்துள்ளது தான். ஆனால் அறியாதபடி ஒரு துளி விஷம் அதிலே பட்டு விட்டால் பாலுக்குச் சக்தி இல்லை.

இதைப் போல்தான் நாம் உயர்ந்த உணர்வு கொண்டு இருந்தாலும்
1.பிறர் செய்யும் தவறுகளையும் பிறர்படும் வேதனைகளையும் இப்படிச் செய்கின்றார்களே என்று அறிந்து கொண்டாலும்
2.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் தெய்வ ஆணை ஆகி அந்த உணர்ச்சிகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு
3.நம் சொல்லும் செயலும் அதன் வழி அமைந்து “அந்த உணர்வு அமிலமாகி” உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவுகள் பாழ்படுகிறது.
4.நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பகைமை உணர்வு கொண்டு எதிர்நிலையால் தாக்கப்படும் பொழுது சீராக உணவு உட்கொள்ள முடிவதில்லை. ஆனால் பசி எடுக்கும்… உணவை உட்கொள்ள முடியாது.

பசியின் தன்மையால் “பித்தம் அதிகமானால்” உமட்டல் அதிகரிக்கும்.

மனிதனின் சகஜ வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளையோ குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில வேதனையான நிலைகளாலோ வேதனை அதிகமானால் உடலுக்குள் அஜீரணக் கோளாறு ஆகிவிடும்.

வயிறு உப்புசமாகும்… வாயு அதிகமாக உருவாகும்… ஜீரண சக்தி குறையும்…! அதனால் புளிப்பின் தன்மை ஏற்படும் போது ஜீரண உறுப்புகளில் பாதுகாப்பாக இருக்கும் அமிலங்களைச் செயலற்றதாக ஆக்கி அதனால் எரிச்சலாகி உணவை உட்கொள்ள மறுக்கச் செய்வதும் இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

தவறு செய்கிறார்கள் என்று மற்றவர்கள் உணர்வுகளை எப்படி நுகர்கின்றோமோ அதைப் போல் அதை நீக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். அதை அவ்வப்பொழுது நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுங்கள். அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை அவன் வென்றவன். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவன் அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

1.மாமமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அகஸ்தியன் இருளை அகற்றி நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.சிறிது நேரம் இந்தச் சக்தியை உடலுக்குள் கூட்டினால் அந்த உணர்வுகள் நமக்குள் வலுப்பெறுகின்றது.

துணியில் பட்ட அழுக்கை நாம் சோப்பைப் போட்டு நுரையேற்றி அந்த அழுக்கினை எப்படி நீக்குகின்றமோ இதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அதிகரித்து அதை வலுவாக்கி
1.தீமை என்ற உணர்வுகள் சுவாசத்திற்குள் நுழையாதபடி
2.முன் பகுதியில் நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டால்
3.நாம் எடுக்கக்கூடிய உயர்ந்த உணர்வுகளால் சிந்திக்கும் தன்மையும்
4.உடலுக்குள் தொக்கி உள்ள விஷத்தின் தன்மையைத் தணித்து உடல் நலம் பெறச் செய்யும்.

அதற்குத்தான் உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறச் செய்கின்றோம். எப்போதெல்லாம் குறைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சிறிது நேரம் அதைச் சுவாசியுங்கள். அந்தத் தீமைகளை அகற்றிடும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டி இதை நீங்கள் பெருக்கிப் பாருங்கள்.
1.உங்களுக்குள் அமைதி கிடைக்கும்… சிந்திக்கும் தன்மை வரும்
2.கோபத்தைக்த் தணிக்கும்… படபடப்பை நீக்கும்.
3.அருள் உணர்வுகள் பெருகும் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

ஆகவே… இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு கருடன் தன் இரைக்காகப் பாம்பை எடுத்துத் தூக்கிச் செல்கின்றது. ஏற்கனவே அது விஷம். இருந்தாலும் இந்தக் கருடன் அந்தப் பாம்பைத் தூக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேதனைப்படும்படி செய்து அதை உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது.

ஆனால் பாம்போ கூர்மையாக அந்தத் கருடனையே உற்றுப் பார்த்து வேதனை உணர்வைக் கவர்ந்து தன் உடலில் உள்ள அணுக்களுக்குள் அதிகமாகச் சேர்கின்றது.
1.மரணம் அடையும்போது இந்தப் பாம்பின் உயிரான்மா கருடனுக்குள் சென்று
2.அதன் உணர்வைக் கவர்ந்து அதற்குத் தக்கவாறு கருடனாக மாறுகிறது.

அதனால் தான் இந்த மாதிரி விஷத் தன்மையான உணர்வுகளைக் கருடன் சாப்பிட்டாலும்
1.இந்தக் கருடனாக உடல் மாறும் பொழுது
2.விஷம் கொண்ட பாம்புகள் அதைத் தீண்டினாலும் கருடன் மடிவதில்லை.

அதே சமயத்தில் அது உடலில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் உதாரணமாக… ஒரு பாம்பு கீழே போகிறது என்றால் கருடன் பறக்கும் போது அதனுடைய இறக்கையின் காற்றலைகள் பட்டாலே அந்தப் பாம்பிற்கு ஒரு மாதிரி மயக்கம் வரும். இதைக் குருநாதர் காட்டியுள்ளார்.

இதைப் போன்று தான் நம் உடலில் எத்தனையோ பல உணர்வுகள் உண்டு. அதிலே வேதனையான உணர்வுகளை உடலில் உள்ள அணுக்கள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு இருக்கும் போது அடுத்து நாம் நல்ல உணர்வின் தன்மை பெற்றாலும் கூட நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதாவது ஒருவர் மிகவும் வேதனைப்படுகிறார்… சங்கடப்படுகிறார் சலிப்பான நிலைகளில் இருக்கிறார்…! என்றால் அவர்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு நிச்சயம் மயக்கம் வரும்.
1.ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அது வாயுவாக மாறுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது.

அது பரவப்படும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகும் போது விஷத்தின் இயக்கமாக இருப்பினும் அதிகமான விஷத்தின் தன்மை வரப்படும் போது நல்ல அணுக்கள் மயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆக கருடனுடைய உணர்வுகள் பரவப்படும் போது பாம்பினம் கீழே செல்லப்படும் போது அதனுடைய காற்றலைகள் பட்டவுடன் பாம்புக்கு மயக்கம் வருவது போல நமக்கும் அந்த நிலைகள் ஏற்படுகின்றது.

நம் உடலில் உள்ள உணர்வுகள் வேதனைப்படுவோரைக் கூர்மையாகப் பார்த்து அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்த பின்
1.அது நம் உடலில் முட்டையாகின்றது… வேதனை என்ற உணர்வுகள் அந்தக் கருத்தன்மை வளர ஆரம்பிக்கிறது.
2.வேதனைப்படும் உணர்வுகளை அதிகமான ஆகாரமாக அந்தக் கருக்கள் எடுக்கும் பொழுது
3.அது வேதனையான அணுக்களின் பெருக்கங்களாக ஏற்படுகிறது.

அதைக் குறைப்பதற்காக வேண்டித்தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியை உடலுக்குள் சேர்த்துச் சிறுகச் சிறுகக் கலக்கும்படி செய்கின்றோம்.

உதாரணமாக வர்ணங்கள் கொடுக்கும் இடங்களில் ஒரு கலருடன் பல விதமான கலரைச் சேர்க்கின்றோம். அதிலே எந்தக் கலரை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கலரின் ரூபங்களாக மாற்றுகின்றது.

நீலமும் மஞ்சளும் சேர்க்கப்படும் போது அது ஒரு விதமான பச்சைக் கலராக வரும். நீலமும் ஆரஞ்சும் சேர்த்தால் காப்பிக் கலராக வரும். அதனுடன் வெள்ளையைச் சேர்க்கும் பொழுது வித்தியாசமாக வரும்.
1.இதைப் போன்று தான் நமது சுவாசங்களில் கலர்களின் ஓட்டங்கள்
2.வித்தியாசமாகக் கலந்து பல பல நிலைகள் மாறும்.

அப்படிக் கலக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையான மாற்றமாகி
1.நம் அணுக்களும் வித்தியாசமாக மாறும்.
2.நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

எந்தெந்த குணங்கள் அதிகமாகின்றதோ அதெல்லாம் நம் ஆன்மாவில் சேர்ந்து விடுகின்றது. மொத்தமாகச் சேர்த்துச் சுவாசிக்கும் பொழுது எதன் வலு அதிகமாக இருக்கிறதோ அதன் வழி நம் உடல்களில் வித்தியாசங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்பொழுது நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

இதையெல்லாம் மாற்றுவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும்.
1.உபதேச வாயிலாகக் கொடுத்த சக்தியை வைத்து
2.அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் சேர்த்துச் சேர்த்து
3.உடலுக்குள் வரும் உணர்வுகளை மாற்றப்படும் போது
4.தீமையான அணுக்களை அதிகமாக வளர விடாது தடுக்க முடியும்.

நம் குணங்களும் எண்ணங்களும் மாறாது எப்பொழுதும் நல்ல உணர்வாக ஒரே நிலையாகக் கொண்டு செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளிமயமாக ஆக்குகின்றது சூரியன்.

அதே போல இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது…? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
2.விஷத்தின் தன்மையை முறித்தவன்,
3.உணர்வின் தன்மையை ஒளியாக்கி ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனவன் அகஸ்தியன்.

மனிதனாகப் பிறந்த ஞானிகள் அகஸ்தியன் வழியில் இருபத்தியேழு நட்சத்திரங்களின் கதிரியக்கங்களைத் தங்கள் உடலிலே சேர்த்துக் கொண்டனர். ஒளி உடல் பெற்றனர்.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் உறுதுணை கொண்டது வியாழன் கோள். அதே இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்திகளையும் முழுமையாகப் பெற்றது சூரியன்.

இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தி பெற்று அதனின் உணர்வை இணைத்துத் தான் நம் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழச் செய்யும் சக்தி பெற்றது.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான் இதே உயிர் பல விதமான உணர்வுகளை எடுத்து மனிதனாகும் பொழுது அது முழுமை அடையும் பருவத்திற்கு வருகின்றது.

ஆனால் மனிதனின் நிலைகள் வேதனை என்ற விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் மனித நிலையிலிருந்து இழி நிலையான சரீரமாக உயிர் மாற்றிவிடும்.

ஆகவே அதைப் போன்று ஆகாதபடி
1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
2.ஒளியின் உடலாக இருக்கும் அதனை நாம் சிறுகச் சிறுக நுகர்ந்து
3.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
4.அவ்வாறு செய்தால் ஒளியின் உடலாக உயிரின் துணை கொண்டு உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
5.மகரிஷிகளைப் போன்று நாமும் ஒளி உடல் பெற முடியும்.

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

 

நான் சம்பாதித்தேன்… பிள்ளையை வளர்த்தேன்… நாளை அவன் என்ன செய்வானோ…! இப்பொழுதே என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்…! என்று உணர்வுகளைச் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த “ஏமாற்றும் உணர்வுகள்…” இந்த உடலிலே நோயாக மாறும்.

நோய் முற்றி இறந்த பின் பிள்ளையின் உடலுக்குள் தான் செல்வோம். ஆக… மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி வருகின்றது. விண் செல்லும் உணர்வை இழந்து விடுகின்றோம்.

அது போன்று ஆகாதபடி
1.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பாருங்கள்.
2.அதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
3.எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்.
4.அருளைப் பெறுவேன் இருளை நீக்குவேன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவேன் என் இரத்த நாளங்களிலே அதைக் கலக்கச் செய்வேன்.
5.உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வேன் என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல பல விஷத்தன்மைகளை முறித்து வலுப்பெற்றவன். அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்தச் சக்திகள் நமக்கு முன் பரவி உள்ளது. உங்களுக்குள் அதைத்தான் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.

அதை உங்கள் எண்ணத்தால் மீண்டும் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற “மூலிகை மணங்களையும் அவன் பெற்ற நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் சக்தியும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்தே ஏங்குங்கள்.

உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். அந்த ஏக்கத்துடன் கண்களை மூடுங்கள்.
1.அப்படி மூடும் பொழுது அந்த அகஸ்தியன் பெற்ற மூலிகைகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகச் சுரப்பதைக் காணலாம்.
2.உடலுக்குள் செல்லப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
3.விஷத்தன்மைகளை மாற்றும் சக்திகளை நீங்களே பெறுகின்றீர்கள். காற்றிலே உண்டு… நீங்கள் அதை நுகர்கின்றீர்கள்.

ஒருவன் வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் நமக்குள் வந்து இரத்தங்களிலே கலந்து விஷத்தன்மை ஆகி நம் நல்ல அணுக்கள் செயலிழக்கின்றது. அப்பொழுது வெறுப்பும் வேதனையும் வருகின்றது.

இதைப் போலத் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
1.இதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசித்தால் போதுமானது.
2.எத்தகைய தீமையையும் நீங்கள் நீக்க முடியும்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்.
3.தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்…!

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷமான சக்திகளைத் தனக்கு உணவாக எடுத்து அதை மாற்றி அமைத்துத் துகள்களாக அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர்மறையானால் பூமிக்குள் வரும் போது மின்னல்களாகப் பாய்கின்றது.

கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது. அதே விஷத்தின் தன்மை மற்ற தாவரங்களில் எதிர்நிலையாகும் பொழுது அது கருகுகின்றது. இதன் உணர்வுகள் பூமியின் ஈர்ப்புக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது. பின் நிலநடுக்கம் ஆகின்றது. இது எல்லாம் மின்னலால் ஏற்படக்கூடிய நிலைகள்.

1.ஆனால் இத்தகைய நஞ்சையும் தாய் கருவிலே பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்திகளால் அடக்கியவன் அகஸ்தியன்.
2.அவன் கண்ட உண்மையின் உணர்வின் தன்மை மின்னல்களில் இருந்து வரக்கூடிய ஆற்றல்கள் அவனுக்குள் தணிகின்றது.

மின்னல்கள் பிரபஞ்சத்தில் பாயும் பொழுது அதை வெள்ளிக் கோள் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் நுகர்ந்து உடலுக்குள் பெருக்கி
2.உயிரைப் போன்றே உணர்வின் அறிவை வளர்த்துக் கொள்கின்றான்.

மின்னல் கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகிறது. ஆனாலும் அந்த மின்னலின் வீரிய உணர்வுகள் பாயும் பொழுது… சந்தர்ப்பம் மீன்கள் அதன் அருகில் சென்றால் அந்த ஒளிக்கற்றைகள் அதற்குள் பாயப்பட்டு அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

மின்னல் தாக்கும் பொழுது எப்படி ஒளிக்கற்றைகள் பரவுகின்றதோ மீன் இனங்களுக்குள் இது பட்டபின் அது நீருக்குள் உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் இப்படி மாறுவது போல
2.அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாம் நுகர்ந்தால் “நாமும் ஒளியாக முடியும்…”

அவன் துருவனானான். பின் பதினாறாவது வயதில் திருமணம் ஆகின்றது. தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். மனைவியும் அதையெல்லாம் தனக்குள் பதிவாக்குகின்றது.

பதிவான நிலைகள் கணவன் மேலும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அகஸ்தியன் தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவி பெற வேண்டும் என்று… இப்படி அந்த இரண்டு பேருமே இந்த உணர்வை வளர்த்து ஒரே உணர்வாக எண்ணப்படும் பொழுது ரிஷித்தன்மை பெறுகின்றார்கள்… துருவ மகரிஷியாகின்றார்கள்.

அந்த ரிஷி என்ற நிலை வரவேண்டும் என்றால் “கணவன் மனைவியாக இருந்தால் தான் முடியும்…”

செடி கொடிகளில் ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் தன் இன வித்துக்களை உருவாக்க முடியும். உயிரினங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் இனத்தின் தன்மை விருத்தி செய்ய முடியும்.

தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் எப்படித் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானானோ கணவன் மனைவி ஒன்றி ஒளி நிலை பெற்றார்களோ அதிலிருந்து வெளிப்படும் சக்திகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

உங்களுக்குள் அதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை எண்ணி நீங்கள் பெற்று உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண்களை மூடிப் புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் “மின் அணுக்கள் உருவாகும்…”
3.நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலுக்குள்ளும் ஒளியான உணர்வுகள் தோன்றும்.
4.உடலிலிருந்து வெளிச்சங்கள் வெளி வரும்… சிலருக்கு இது தெரியும்.
5.சிலருக்கு மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு வந்துவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் பாம்பை அடித்தால்
2.பாம்பின் உயிர் அடித்தவர் உடலுக்குள் வந்து மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் வருகின்றது,

அதே சமயத்தில் பாம்பு மனிதனைத் தீண்டிவிட்டால் அந்தச் சந்தர்ப்பம் விஷம் உடல் முழுவதற்கும் பரவி விடுகின்றது. எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று மனிதனாக வந்த நிலையில் பாம்பின் விஷத் தன்மை மனிதனுக்குள் கலந்து விடுகின்றது.

உடல் முழுவதற்கும் விஷம் படர்ந்த பின் இந்தச் சந்தர்ப்பம் மனித நினைவே இழந்து பாம்பின் நினைவே ஆக்கிரமிக்கின்றது.
1.மனித உடலை உருவாக்கிய இந்த உயிரில் விஷம் கலந்ததனால் நினைவு இழந்து
2.பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று மனிதன் பாம்பாகப் பிறக்கும் சந்தர்ப்பமாக வருகின்றது.

இதே போல மனிதனின் வாழ்க்கையில் கடும் வேதனையால் ஒருவருக்குக் கேன்சர் நோய் வந்துவிடுகின்றது. மற்றவர்கள் அவருடன் நெருங்கிப் பழகப்படும் பொழுது அந்தச் சந்தர்ப்பம் வேதனை என்ற விஷங்கள் அது தொடர்ந்து இந்த உடலில் படரப்படும் பொழுது நாளடைவில் இந்தக் குடும்பத்திலும் பரம்பரை என்ற நிலையில் கேன்சர் நோய் வளரத் தொடங்குகின்றது.

ஒரு இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவரின் உணர்வுகளை அதிகமாக உற்றுப் பார்த்துக் கவர நேர்ந்தால் அந்தப் பரம்பரை என்ற இரத்தக் கொதிப்பு வந்து விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் வந்தால் அது தொடர்ந்து வரப்படும் பொழுது பரம்பரை என்ற நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோய் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து அதிகமானால் இது பரம்பரையாக வந்து அந்தக் குடும்பத்தில் சர்க்கரைச் சத்துகள் தொடர்ந்து விடுகின்றது.
1.இதுகள் எல்லாம் தொடர் வரிசைகளில்…
2.இப்படி வருவது எல்லாமே சந்தர்ப்பம் தான்.

காரணம்… நமது சந்தர்ப்பம் சொந்த பந்தம்… நண்பர்கள்.. மற்ற பந்துக்கள் என்ற நிலையில் பழகப்படும் பொழுது பாசத்தால் அவர்கள் சிரமப்படும் உணர்வை நாம் நுகர்கின்றோம்… உதவியும் செய்கின்றோம். ஆனால் இத்தகைய உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

பந்துக்களானாலும் சரி… நண்பர்களானாலும் சரி.. சந்தர்ப்பம் சந்திக்கும் பொழுது இதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து விட்டால் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கும் அது காரணமாகின்றது.

ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை நம் குருநாதர் காட்டிய தியான வழியின் முறைப்படி விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் எல்லோரும் ஒளி உடல் பெறுகின்றார்கள்.

எப்படித் தான் இருந்தாலும் பழக்க தோஷத்தில் நாம் எல்லோருடனும் நாம் பழகித் தான் ஆகின்றோம். உடலை விட்டுப் பிரிந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோரும் அவருடன் பழகியிருப்பவர்களும் முறைப்படி தியானித்து அந்த அருள் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பொழுது தீமைகள் வராதபடி பாதுகாத்துக் கொள்ள முடியும். பரம்பரை நோயிலிருந்து விடுபட முடியும்.

1.அதே சமயத்தில் நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் உடலாக இருப்பதனால்
2.அங்கிருந்து வரும் உணர்வை நமக்குள்ளும் பெருக்கி உயிருடன் ஒன்றிடும் நிலையாக
3.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாறும் திறனாக மாற்றும் இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
4.இதன் வழி குடும்பத்தில் அனைவரும் சென்றால் அந்த அகஸ்தியனைப் போன்று
5.என்றுமே ஏகாந்தமாக ஒளியாக வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனை கோபம் ஆத்திரம் என்ற அணுக்கள் நம் உடலுக்குள் அதிகமான வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்கள் வரும்.

தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
1.உங்கள் உடலில் அந்தக் கடைசி நிமிடம் எது உணர்வோ
2.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலை அதாவது கீழான பிறவியாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வளர்த்து வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைவதே நம்முடைய கடைசி எல்லையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ எண்ணி வளர்க்கக் கூடாது.
1.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ
2.தொழிலில் சிறிது குறைபாடுகள் இருந்தாலோ
3.குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதிருந்தாலோ
4.அதைப் போன்ற மற்ற உணர்வுகளை நுகர நேர்ந்தாலோ உடனே அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

எதை வைத்து…? – நம் ஆறாவது அறிவை வைத்து.

ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” என்றாலும் அது சேனாதிபதி. இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர வேண்டும்.
1.புருவ மத்தியில் உயிரின் நிலைகளில்
2.அதை இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளைக் கண் வழி கவர்ந்தாலும்
1.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
2.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் திறன் வரப்படும் பொழுது
3.மூக்கு வழி செல்லும் (சுவாசத்தின் மூலம்) தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது.

பின் நம்முடைய நினைவாற்றலை உடலுக்குள் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களுக்கும் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப் பெற்றுவிடுகின்றது.
1.நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள விஷத் தன்மைகளைத் தூர ஒதுங்கிச் செல்லும்படித் தள்ளிவிடுகின்றது.
2.நம் ஆன்மா தூய்மையாகி விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றுக்கும்
1.ஒரு ஆன்மா உண்டு.
2.ஒரு வட்டம் உண்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வால் அப்பொழுது அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
4.அந்த அணுக்கள் எல்லாம் உயிரைப் போலவே ஒளியின் அறிவாக ஒளியான அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.
5.அப்பொழுது அந்த உணர்வுகள் முழுவதும் ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து பேரொளியாக மாறுகின்றது.

இப்படி நம் உடலில் இருக்கும் எள்லா அணுக்களையும் சிறுகச் சிறுக மாற்றி இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.

நாம் எந்தத் துருவத்தின் வழி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமோ அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்லும் நம் உயிர்.

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

 

சில மலைப் பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று “அக்காலங்களில் அகஸ்தியன் அமர்ந்த பாறைகளை…”
1.பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற இடங்களையும்
2.தலைக்காவிரியில் அகஸ்தியன் சுழற்சி வட்டம் ஜாஸ்தி… அந்த இடங்களையும்
3.இமயமலையில் அவன் சுழன்ற இடங்களையும் அகஸ்தியன் வந்து சென்ற இடங்களையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகளாக அவன் வெளிப்படுத்தியது இன்றும் அங்கே உண்டு.

ஆனால் சாகாக்கலை என்று மந்திர ஒலிகளால் செயல்பட்டவர்கள் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்திருந்தாலும் அது எல்லாம் அழிந்து விடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலையில் விஷத்தன்மையே படர்கின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

வேகாநிலை அடைந்த மகரிஷிகள்… உயிர் ஒளியின் துடிப்பாக எப்படி இருக்கின்றதோ…? அதைப் போல தன் உணர்வினை உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக… நஞ்சினை அடக்கி ஒளியாக்குகின்றார்கள்.

வைரம் நஞ்சினை அடக்கி ஒளிச்சுடராக இருப்பது போன்று
1.உடலில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும்
2.வாழ்க்கையில் வரும் நஞ்சான உணவுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
3.அந்த ஞானி விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் “அடுக்கடுக்காகப் பரப்பி…” நஞ்சினை ஒடுக்கி
4.இந்த உணர்வின் தன்மையை மேலோங்கச் செய்து இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
5.துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
6.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி… அதனின் துணை கொண்டு ஒளியின் சிகரமாகி
7.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… அந்தத் துருவத்தில் வரும் உணர்வையே ஒளியாக மாற்றி
8.எந்த துருவத்தின் வழியில் ஈர்ப்பாகச் சக்திகளை எடுத்தானோ பூமிக்குள் வரும்… அந்த நஞ்சினை மற்றது விளையாது
9.அதையே தனக்குள் ஒளியின் சிகரமாக மாற்றி அமைத்து இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றான்…
10.அகஸ்தியன் துருவ மகரிஷியாக… துருவ நட்சத்திரமாக என்று…! இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அவனைப் பின்பற்றிவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கிறார்கள்…? என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனின் நிலைகளில் முழுமை பெற்று “உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரமாக எவ்வாறு அங்கே சென்றடைந்தார்கள்…?” என்று உணர்த்திவிட்டு அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும் என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் “நமக்கு இப்படியெல்லாம் ஒருவன் துரோகம் செய்தான்… அவனை விடுவதா…?” என்று இறுக்கப் பிடித்துக் கொண்டால் இந்த உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்வோம்.
1.அந்த உடலுக்குள் சென்று நோயைத்தான் உருவாக்குவோம்.
2.பின் அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலை நம் உயிர் உருவாக்கிவிடும்.

அதே போல் நம் பையன் மேல் அதிகப் பற்றும் பாசமாக இருந்தால் அவன் வழியில் அவன் உடலுக்குள் சென்றுவிடும். ஏனென்றால் தன்னுடைய குழந்தைகளின் மீது மிகுந்த ஆசையாக இருக்கும் பொழுது சந்தர்பப்பத்தால் ஏற்பட்ட இன்னல்களால் “தன்னால் முடியவில்லை” என்ற நிலையில்… தாங்காதபடி தற்கொலை செய்து கொண்டால்…” அந்த நிலை ஆகிவிடும்.

எந்தக் குழந்தை மீது பாசமாக இருக்கின்றதோ அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று தற்கொலை செய்யும் பொழுது “எத்தனை வேதனை இருந்ததோ” அதை எல்லாம் அந்தக் குழந்தை உடலிலும் உருவாக்கும்.
1.குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று உருவான அந்த நல்ல உணர்வுகள்
2.கடைசியில் குழந்தையைக் காக்க முடியாது போய்விடுகின்றது.
3.இதை எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இன்று தீவிரவாதம் என்ற நிலையில் உலகம் முழுமைக்குமே விஷத் தன்மை பரவியிருக்கும் நேரத்தில் வெறித் தன்மையாகப் பிறரைத் தாக்கிக் கொல்லும் உணர்ச்சிகளே அதிகமாகின்றது.

அந்தக் கொல்லும் உணர்ச்சிகள் உடலிலே சேர்க்கப்படும் பொழுது மனித நிலையையே இழக்க நேர்கின்றது. மிருகங்கள் மற்றதை அசுரத்தனமாகத் தாக்கிக் கொல்வது போல் இந்த அசுர உணர்வுகளை உடலில் சேர்த்தவுடனே அசுர உணர்வின் அணுக்கள் நமக்குள் அதிகரித்துவிடுகின்றது.
1.மனிதனுடைய சிந்தனை இழக்கப்பட்டு
2.மனிதனும் மிருகச் செயல்களைச் செயல்படும் தன்மைக்கே இன்று மாறிவிட்டான்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தும் அதே சமயத்தில் மதம் இனம் மொழி என்ற நிலைகளால் தீவிரவாதம் என்று ஏற்பட்ட விளைவுகளாலும் உடலுக்குப் பின் நாம் மிருகங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.
1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் மனிதனின் உணர்வுகள் இழக்கப்பட்டு
2.மிருகத்தின் உணர்வுகளாக மனிதன் இப்பொழுது இயக்கும் காலமாக மாறி விட்டது.

இதைப் போன்ற நிலைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கிலிருந்து ஆறு மணி வரையிலும் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை முறைப்படி துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து வாழ்க்கையில் அவ்வப்பொழுது வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் அது நமக்குள் உட்புகாது தடுத்துப் பழக வேண்டும். அதுவே துருவ தியானத்தின் நோக்கம்.

ஆகையினால் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் கஷ்டங்களைக் கேட்டறிந்தால் அறிந்தபின் உடனே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் செலுத்திவிட்டு
2.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்கி ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்தித் தியானித்தால்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் மற்றவர் சொல்லும் கஷ்டமான உணர்வுகளை நம் உடலில் சேராது அது நீக்கிவிடும்… சுத்தப்படுத்திவிடும்…!

அதற்குப் பின் யார் கஷ்டம் என்று சொன்னார்களோ அவர் உடலிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாய்ந்து அவர் உடலில் உள்ள கஷ்டங்கள் நீங்கி அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் குடும்பம் நலமாக வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும்.

1.இதை நாம் வைராக்கியமாகச் செயல்படுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகின்றது.
3.அதே சமயத்தில் நமக்கும் நல்லதாகின்றது.
4.நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்து விடுகின்றது.
5.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நிலை பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு கல்யாணம் செய்து கொள்கிறார் என்றும் கங்கணமே கழட்டவில்லை என்றும் காவியத்தில் சொல்வார்கள். அதாவது
1.விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தியைத் தனக்குள் கவர்ந்து
3.தன்னுடன் சேர்த்துக் கொண்டே உள்ளது என்பதை அவ்வாறு காட்டுகின்றார்கள்.

தசரதச் சக்கரவர்த்தி என்றால் நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி மனிதன் ஆனபின் “பத்தாவது நிலை (கல்கி – ஒளி நிலை) அடையக்கூடிய பருவம் பெற்றவர்…” என்று பொருள்.

நாம் எண்ணக்கூடியது அனைத்தையும் நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அந்தச் சக்தியைத் தன்னுடன் இணைத்து தன்னுடன் இயங்கச் செய்கின்றது.

அதனால் தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தருணத்தில் அவர் என்ன ஆனார் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
1.ஏனென்றால் அவருக்குள் எத்தனையோ விதமான குணங்கள் இருக்கின்றது
2.அது எல்லாம் அவருடன் சேர்ந்து இயக்கும் சக்தி (மனைவி) என்று பொருள்.

இராமனின் தாயோ எல்லாவற்றையும் அது பரிவுடன் பண்புடன் அரவணைக்கும் சக்தி கொண்டது. அதனால் அந்தச் சக்தியின் துணை கொண்டு அதனின்று உருவாகும் இந்த உணர்வின் அணுக்கள் மற்றவர்களை அரவணைக்கும் சக்தி கொண்டது என்று உணர்த்துவதற்காக
1.இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
2.அவனிடம் இந்தச் சாம்ராஜ்யத்தை ஒப்படைக்கலாம்…! என்பது தசரதச் சக்கரவர்த்தியின் எண்ணம்.

தனக்குள் எடுக்கும் நல்ல குணம் கொண்டு அந்த நல்ல குணத்தைக் கொண்டே இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றார் தசரதன்.

அந்த நல்ல குணங்கள் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணுகின்றார். இருப்பினும்
1.பரதனின் தாயாரோ தனக்குள் ஆசை கொண்டது.
2.தன் பையனுக்கே பட்டத்தைச் சூட்ட வேண்டும் என்று அது பிடிவாதம் பிடிக்கின்றது.

(உயிர் – தசரதன்; உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் – மனைவியாக இணைகிறது; அதனால் தான் தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவிகள் என்று சொல்வது.)

அப்படிப்பட்ட அந்த உயிரின் இயக்கத்தில்
1.எந்த உணர்வின் தன்மை வலிமை பெறுகின்றதோ
2.அந்தக் குணத்தின் தன்மை – தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகின்றது.
3.அதனால் உடலுக்குள் உருவான மற்ற நல்ல அணுக்களுக்கெல்லாம் கலக்கங்கள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றனர்.

இருந்தாலும் உடலுக்குள் சகோதரத்துவமாக வளர்ந்த பரதனோ அண்ணனே (இராமனே) ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்பினாலும் “தன் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டும்…” என்ற இந்தப் பிடிவாத குணங்கள் அங்கே கைகேயிக்கு எப்படி உருவாகின்றது என்பதைக் காட்டுகின்றார்கள்.

நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலுக்குள் வந்த பின் அது விளைந்து
1.அதனுடைய பருவ காலம் வந்த பின்
2.நல்லதையே இயக்கவிடாது எப்படித் தடுக்கிறது…? என்பதையே அங்கே தெளிவாக்குகின்றார் வான்மீகி.

தீமை என்று அறிந்த கணமே அதை நமக்குள் சேராது அது நம் உடலுக்குள் விளையாது தடுக்க வேண்டும். அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உடலுக்குள் இப்படிச் செலுத்தினால் இதற்குப் பெயர் ஆத்ம சுத்தி.

நஞ்சை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலுக்குள் சென்று அது அணுவாக விளைந்து அதிலிருந்து வெளிப்படும் மணம் தீமைகளை வேக வைத்து அதை ஒளியாக மாற்றிவிடும். தீமைகள் அனைத்தும் செயலற்றதாகின்றது.

தெய்வீக அன்பைத் தான் நாம் வளர்க்க வேண்டும்

 

பாசத்தால் நாம் அதிகமாக வேதனையைத் தான் நுகர்கின்றோம்… எதை…? விஷத்தை…!
1.எவர் மேல் பாசம் அதிகம் ஆகின்றதோ
2.அப்போது வேதனை என்ற நஞ்சையும் அதனுடன் இணைத்துக் கூடவே சாப்பிடும்.

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் அவன் சேர்ந்து சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் நமக்குள் கலந்துவிடும்.

அவனை எண்ணி எண்ணி இந்த உடலே கரைந்து விடும். விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ இந்த உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அந்த நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

1.இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்
2.உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் ஒரு உடலுக்குள் பேயாகப் போய் நோயாகவே உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.உங்கள் உயிருடன் எப்பொழுதெல்லாம் ஒன்றுகின்றீர்களோ
3.அந்தச் சக்தியை அப்பொழுது நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
4.அதற்குத்தான் இந்த உபதேச வாயிலாக ஆழமாக ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

விரயமில்லாதபடி எந்த நிமிடமும் நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கலாம்.

யாம் கொடுக்கக்கூடிய சக்தியை நீங்கள் அனைவரும் பெற்று நீங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில்
1.உங்கள் பார்வை உங்கள் சொல் உங்கள் மூச்சு காற்றலையில் பரவினாலும்
2.யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக வேதனைப்படும் ஒருவரைப் பார்த்தால் அந்த உணர்வு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அந்த விஷத்தின் வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

பின் நம் உடலில் உள்ள உணர்வுகள் எந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் வெளி வந்ததோ அதை அனைத்தையும் நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

அப்படி மோதச் செய்யும் பொழுது அந்த வேதனையான உணர்ச்சியின் இயக்கமாக… எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளில் நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது. எப்படி…?

சிறு குடல் பெரும் குடல்:-
1.அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறும் பொழுது
2.சிறுகுடல் பெரும் குடலில் உள்ள அணுக்களை மயக்கமடையச் செய்கின்றது
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் நஞ்சாகக் கலந்து அங்கே நஞ்சான அமிலங்களாக மாறி விடுகின்றது.
4.அப்பொழுது நமக்குக் குடல் உபாதைகள் எல்லாம் வந்துவிடுகின்றது.

கணையங்கள்:-
இதைக் கடந்து இந்த அமிலங்கள் அடுத்த உறுப்புக்குள் சென்றால் நம் கணையங்களை உருவாக்கிய அணுக்களில் அங்கேயும் சிறு வேதனை வரும்.

கல்லீரல் மண்ணீரல்:-
கணையங்களைச் சீர்படுத்தும் நிலை இல்லை என்கிற பொழுது அந்த அமிலங்கள் நம் கல்லீரலிலும் மண்ணீரலிலும் கலக்கின்றது. அப்பொழுது அங்கிருக்கும் அணுக்களும் இந்த விஷத்தால் சரியாக இயங்காதபடி வரும். கல்லீரலிலும் மண்ணீரலிலும் வேதனைகள் வரும்.

நுரையீரல்:-
நுரையீரலில் இது கலந்தால் அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் அனைத்தும் இதைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் சளி உருவாகின்றது.

நெஞ்சுச் சளி போன்ற நிலைகளும் ஆஸ்த்மா போன்ற நோய்களும் வேதனை அதிகமானால் டி.பி. போன்ற நோய்களும் உருவாகிவிடுகின்றது.

கிட்னி – சிறுநீரகங்கள்:-
1.அந்த வேதனை என்ற அமிலம் கலந்த உணர்வுகள் கிட்னிக்கு வந்தால்
2.அது இரத்தத்திலிருக்கும் நீரைப் பிரிக்கும் சக்தி இழந்து
3.இரத்தத்துடன் நீர் கலந்து சென்று உடல் முழுவதும் புஸ்… என்று உப்பிப் போகும்.
4.நாம் உடல் உப்பி இருக்கிறோம் என்று நினைப்போம்.
5.ஆனால் நமக்குள் சென்ற பின் இரத்தத்தில் கலந்து ஓர் நீர் சத்துள்ள இரத்தமாக மாற்றிவிடும்.
6.அதனால் பல உபாதைகளும் வருகின்றது… சோக நீர் போன்று ஆகி சோக நோய் உடலில் உருவாகிவிடுகின்றது.
7.சர்க்கரை உப்பு போன்றவற்றைச் சரியாகப் பிரிக்க முடியாதபடி அந்த குறைபாடுகளும் ஆகின்றது.

இருதயம்:-
அடுத்து அந்த உணர்வுகள் நம் இருதயத்தில் கலக்கப்படும் பொழுது இருதயம் பலவீனமாகி விடுகின்றது. நம் எண்ணம் சொல் செயலைச் சீராக இயக்காதபடி ஆகிவிடுகின்றது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த நிகழ்ச்சிகள் நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை எல்லாம் பாழாக்குகின்றது.

கண்களின் கருமணிகள்:-
அதே சமயத்தில் நம் கண்ணில் கவர்ந்த விஷத் தன்மை கருமணிகளில் தோய்ந்து விடுகின்றது.

வேதனப்படுவோரைப் பார்த்துவிட்டு
1.ஒரு நல்ல கணக்கை எழுத வேண்டும் என்றாலும்
2.ஒரு நல்ல தொழிலைச் செய்ய வேண்டும் என்றாலும்
3.அந்த கருமணிக்குள் வேதனை என்ற விஷம் கலந்த பின்
4.அந்த நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது… சிந்தனையும் குறைகின்றது.

நரம்பு மண்டலம்:-
கண்களின் வழி அந்த வேதனை என்ற விஷம் நரம்பு மண்டலங்களில் அதிகரிக்கும் பொழுது விஷத் தன்மை தோய்ந்து கை கால் குடைச்சல் என்ற நிலை வருகின்றது.

எலும்பு மண்டலம்:-
அதே உணர்வுகள் எலும்பு மண்டலங்களில் இது படரப்படும் பொழுது அந்த எழும்புகளுக்குள்ளும் இனம் தெரியாது வேதனைகள் வருகின்றது. எலும்புகள் தேய்மானம் போன்ற நிலை ஏற்படக் காரணம் ஆகின்றது.

தசை மண்டலம் தோல் மண்டலம்:-
அதே சமயத்தில் நம் தசை மண்டலங்களிலும் விஷத் தன்மை ஆகி தசை வலிகள் வருகின்றது. தோல் மண்டலங்களில் வரும் பொழுது இனம் புரியாத அரிப்புகளும் தோல் வியாதிகள் போன்ற நிலையும் வந்துவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் கூர்ந்து கவனித்த உணர்வுகள்
1.நம் நெஞ்சு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகிவிட்டால்
2.எந்தக் கண்ணால் வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அவர்களைப் பார்க்கும் பொழுது நினைவும்
3.அந்த நினைவானால் காற்றிலிருந்து சுவாசித்து நம் இரத்தங்களில் மாசுபடும் உணர்வே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்குத்தான் இந்தத் தியானம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தத் தியானத்தின் மூலம் உருவாக்குகின்றோம்.

1.நாம் கண் வழி எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.கண்ணிலிருந்து நரம்பு மண்டலம் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பால்
3.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய முடியும்.
4.மாசுபடும் இரத்தங்களை மாற்றிப் பரிசுத்தமாக்கி ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயக்க முடியும்.
5.நோய் வராதபடியும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் நிச்சயம் பெற முடியும்.

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?

 

குருக்ஷேத்திரப் போர்…! ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள் அது உடலுக்கு குரு. ஓ…ம் என்பது பிரணவம்…. அதாவது நாம் எண்ணுவது ஜீவன் பெறுகின்றது.

ஆகவே… உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.குருக்ஷேத்திரத்தில்… உயிரிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருங்கள்.

நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாகப் பெற்று யாம் உபதேசித்த ஆற்றல்மிக்க சக்தியை… “நீங்கள் எண்ணிய போது… எண்ணிய நிலைகள் கொண்டு…” உங்களுக்குள் கிடைக்கச் செய்கின்றேன்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்தத் துன்ப உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தான் பணியச் செய்வதே எமது ஆசி.

ஆகவே அந்த உணர்வுடன் நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி விண்ணிலே நினைவைச் செலுத்தி உயிரிடம் வேண்டுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயல் புனிதம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் பார்ப்போர் அனைவரும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இதை மட்டும் எண்ணி ஆசி பெறுங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சக்திகள் அனைத்தும் தாள் பணிந்து…
1.உங்களுக்குள் ஒத்துழைத்து உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு வழிகாட்டியாக அது அமையட்டும்.
2.எது…?
3.எதுவும் கெட்டது அல்ல…! உங்களுக்குள் வலுவூட்டவும் வழிகாட்டியாகவும் அது இருக்கும்.

கெட்டது என்று அது தான் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் நீக்கிவிட்டுச் செல்ல விரும்புகின்றோம். கெட்டது என்று அது வழி காட்டினாலும் அந்த உணர்வு எனக்குள் சேர்ந்து விடுகின்றது.
1.ஆனால் வழிகாட்டிய நிலைகளும் எனக்குள் அது பணிந்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
2.ஆக… வழிகாட்டிய அந்த விஷமே என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.
3.ஆகையினால் தான் அத்தகைய நிலைகளை “ஆசீர்வாதம்…” என்பது
4.உயர்ந்த சக்தியாக… ஞானத்துடன் கூடிய… “மெய் வழி பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்…” என்று ஆசி கொடுக்கிறேன்.

அந்த வழியில் ஆசி வாங்கிப் பழகுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே.. அண்டமே… அகண்ட நிலைகள் கொண்டிருப்பினும் அது “இருண்ட நிலைகள் கொண்டது தான்…!”

1.ஒரு வீட்டைத் தொடர்ந்து சில நாள்கள் அடைத்து வைத்திருந்தால்
2.அதற்குள் தன்னிச்சையாக வெப்பமாகி அதில் ஓர் ஆவி போல் உருவாகும்.
3.அந்த ஆவி நாளடைவில் ஒரு நெடி கலந்த… “விஷத் தன்மை” அடைகின்றது.

இதைப் போல் தான் பேரண்டம் அகண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் தணலால் அது ஆவியாக மாறி “அடர்த்தி ஆகி விஷத்தின் தன்மை” அடைகின்றது.

அடுத்தடுத்து இந்த விஷத்தின் தன்மை ஆகி அதனால் ஆவியின் தன்மைகள் வரப்படும் பொழுது
1.இந்த விஷத்தின் தன்மை மீண்டும் தாக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது.
2.வெப்பத்தின் தன்மை அடையும் பொழுது நகர்ந்து ஓடுகின்றது.
3.ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தம் என்ற நிலை வருகின்றது.

முதலில் வெப்பம்… பின் ஆவியின் நிலை நாளடைவில் விஷமாகி… மீண்டும் சாந்த நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இது அணுக்களாகப் பிரிந்து சென்ற பின்
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற இந்த மூன்று நிலை பெறுகின்றது.
2.இதைத் தான் மும்மலம் என்று சொல்வது.
3.ஆதிபராசக்தி என்பது வெப்பம்… ஆதிலட்சுமி என்பது காந்தம்… ஆதிசக்தி என்பது விஷம்.
4.விஷத்தின் தன்மை கொண்டு இப்படி மூன்று சக்திகளாக இயங்குகின்றது.

இருப்பினும் அணுத் தன்மை பெற்ற பின் இதைப் போன்று ஒரு உணர்வின் சத்து உருவாகிறது என்றால் காந்தம் தன்னுடன் அதை இழுத்த பின் மோதுகின்றது.

மோதிய நிலைகள் கொண்டு அது தன்னுடன் இணைத்த பின் அந்தச் சத்தின் தன்மை இரண்டறக் கலந்து விடுகின்றது.
1.அந்தச் சத்திற்குப் பெயர் சீதா என்றும்
2.அந்த மணத்திற்குப் பெயர் ஞானம் என்றும்
3,.இந்தச் சத்து தன்னுடன் இணைத்து இரண்டறக் கலந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்
4.”பிரம்மா உருவாக்குகின்றான்…!” என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் சத்து ஞானம் என்று இப்படி ஐந்து நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது. எந்த மணத்தை இதனுடன் இணைத்ததோ “புலனறிவு ஐந்து…!” என்று ஆகின்றது.

எதற்குள் சென்றாலும் அதன் வலு கொண்டு தனக்குள் இருக்கும் அந்த மணத்தை இயக்கும் என்று பொருள்படும்படியாக நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. இப்படி உருவானது தான்… எல்லாமே…!

ஏனென்றால் கடவுள் எப்படி இருக்கிறான்…? என்ற நிலையில் நாம் தெரிந்து கொள்வதற்குத்தான்…
1.கடவுள் எங்கேயோ இருக்கின்றார்…
2.அவரே தான் நம்மைக் காக்கின்றார்…! என்ற நம்பிக்கை தான் மனிதர்களிடத்தில் இருக்கின்றது.

ஆனால்
1.உணர்வின் தன்மை ஒன்றுக்குள் ஒன்று “உள் நின்று இயக்கும்” நிலை தான் கடவுள் என்றும்
2.ஒன்றினுள் ஒன்று இணைக்கப்படும் பொழுது உருவாவது ஈசன் என்றும்
3.ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் பொருள் பரப்பிரம்மம் என்றும்
4.இப்படி இயற்கையின் நிலைகள் எப்படி உருவாகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்கியது ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தான்.
5.அந்த அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் இப்பொழுது அதை நான் (ஞானகுரு) பேசுகிறேன்.

அகஸ்தியன் தனக்குள் கண்டறிந்து அவனுக்குள் விளைந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இங்கே படர்ந்திருக்கின்றது.

அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. நீங்களும் அதை நுகரலாம்.
1.இந்த உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து
2.அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது பெற முடியும்.
3.அதைத்தான் “தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…? என்று சொல்வது.
4.தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லோராலும் பெற முடியும் என்பதே அதனின் தத்துவம்.

இப்பொழுது ஒருவர் திட்டிவிட்டார் என்றால் “என்னைத் திட்டுகிறான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்துவிட்டால் மீண்டும் என்ன செய்கிறீர்கள்…?

என்னைத் திட்டினான்.. திட்டினான்… திட்டினான்…! என்றால் அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி அவன் மேல் வெறுப்பாகி நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்குள்ளும் வெறுப்பின் தன்மை கலந்து இரத்தக் கொதிப்பு போன்ற பலவிதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

ஆகவே ஒரு திட்டியவனின் உணர்வைக் கவர்ந்து பதிவாக்கி அதை நினைவாக்கும் பொழுது நோயாக உருவாவது போல்
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.இயற்கை எப்படி விளைகின்றது…? என்ற உண்மைகளையும் பதிவாக்கிக் கொண்டு
3.மீண்டும் அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.நாமும் அந்த அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும்.

அதற்காக வேண்டித்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

 

கௌரவர்கள் 100 பேர் என்று மகாபாரதத்தில் காட்டுவார்கள். 100 விதமான கௌரவர்கள் நமக்குள் உண்டு. ஒன்றுடன் ஒன்று என்ன செய்யும்…?
1.நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதைத்தான் அது இயக்கும்… கௌரவர்கள்.
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வு… தனக்குள் ஏற்கனவே இருப்பதற்கு மாறாக வந்தால் அது விடாது.

மந்திரத்தைக் கற்றுக் கொண்டவர்களிடம் நல்லதைச் சொன்னால் மந்திரக்காரன் ஏற்றுக் கொள்வானா…? கௌரவம் என்ற நிலை வருகின்றது.

நல்ல சத்தின் தன்மை எடுத்துக் கொண்டால் நல்லது என்று வராதபடி கௌரவர்கள் அதனதன் வளர்ச்சிக்குத் தான் இயக்கும்.

இப்படி ஒரு மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அவனில் அந்த உடலில் எப்படி 100 குணங்கள் எப்படி இயக்குகின்றது…?

கோவில்களில் நாமாவளி சொல்வார்கள். கடவுளின் அவதாரம் 10 என்றால் தெய்வத்தின் அவதாரம் 10 என்ற நிலை வருகிறது. அது எதனதன் நிலைகள் வளர்ந்தது என்று நிலையும் வரும்.

அன்ன வாகனம் யானை வாகனம் சர்ப்ப வாகனம் மயில்வாகனம் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் வைப்பார்கள் 10 வாகனங்களை. அந்த வாகனங்கள் எதற்கு…?

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொள்கின்றது. மயிலும் தனக்குள் மற்றதை உட்கொண்டு விஷத்தை மாற்றுகின்றது. இப்படி
1.பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று கொன்று ஒன்றை ஒன்று தின்று
2.பத்தும் சேர்த்து ஒன்றாக ஒரு குணமாக மாறுகின்றது.

அதனால் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்களை வைத்து எதனதன் நிலையில் வளர்ச்சி அடைந்தது…? என்று ஒவ்வொரு சாமிக்கும் இவ்வாறு வைத்திருப்பார்கள்.

இப்படி நூறு விதமான குணங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் பத்து. இந்த நூறும் சேர்த்தால் ஆயிரம் ஆகும். அஷ்டதிக்கும் அறியும் உணர்வு வரப்படும் போது எட்டு…! அதாவது
1.ஆயிரெத்தெட்டு என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள்… அதே போல நூற்றியெட்டு…
2.எதன் உணர்வின் தன்மையோ இதன் உணர்வுக்கொப்ப அஷ்டதிக்கும் அது உணர்வின் தன்மை எப்படி எடுக்கிறது…? என்று
3.இந்த உணர்வின் குணங்கள் மாறுவது எப்படி…? இந்த உணர்ச்சியின் செயல்கள் எப்படி மாறுகின்றது…?
4.இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றோமா… உதாரணமாக சர்க்கரைச் சத்து என்ற குணத்தை வைத்துக் கொண்டு சர்க்கரையைச் சாப்பிட்டால் எதிர்நிலையாகின்றது.

சர்க்கரை அதிகமாகி விட்டால் அனைத்தையும் வெள்ளணுக்களாக மாற்றி விடுகின்றது. கோப உணர்வு அதிகமாகி கார உணர்வானால் அந்த உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது… பின்னாடி இரத்தக் கொதிப்பால் வாத நோயாகி கை கால்களைச் சுண்டி விடுகிறது.

1.இப்படி ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு எதிர் நிலையாகும் பொழுது உடலுக்குள் எப்படிப் போர்கள் நடக்கின்றது…?
2.மனிதனுடைய நிலை எப்படி இருக்கின்றது…? எதன் வழியில் அது வருகிறது…? என்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் கோயில்களில் யாகங்கள் செய்வதைப் பார்ப்போம். தெய்வத்திற்கு யாகங்கள் செய்து கும்பாபிஷேகம் செய்து சக்தி ஊட்டுவார்கள்.

1.அங்கே சொல்லும் மந்திரம்… வாசிக்கும் இசை…
2.நெருப்பில் போடும் புகை… அதில் என்னென்ன மணங்கள் வருகிறதோ…
3.அதை எல்லாம் யாகத்தில் உட்கார்ந்து இருப்போர் நுகர நேர்கிறது.

கோயில்களில் இருக்கும் இந்தத் தெய்வத்திற்கு இன்ன சக்தி இருக்கின்றது என்று இப்படி மக்கள் மத்தியிலே அதன் உணர்வுகளை உருவாக்குகின்றனர்.

அடுத்து அந்தத் தெய்வத்திற்கு இன்னென்ன அர்ச்சனைகள் செய்தால் நம்முடைய குறைகளை எல்லாம் நீக்கி நலமாக இருப்போம் என்று அதையும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். அந்த உணர்வுகளை அங்கே ஊட்டுவார்கள்.

ஆனால் அத்தகைய யாகத்தில் உட்கார்ந்து நாம் கேட்டு நமக்குள் அங்கே செய்வதை எல்லாம் பதிவாக்கினால் இதற்குப் பெயர் “வசியம்…” சில கோயில்களில் பனிரண்டு வருடம் ஆகிவிட்டால் மீண்டும் இத்தகைய யாகத்தைச் செய்து மனித உடலிலே பதிவு செய்து அந்தக் கோயிலுக்குக் கூட்டமாக வருவார்கள்.

அக்காலங்களில் இதைப் போன்ற நிலைகள் நிறைய உண்டு.

ஏனென்றால் அந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்து பக்தி கொண்ட நிலையில் தெய்வத்தை எண்ணி வாழ்ந்து இறந்தபின் அரசர்கள் இந்த மாதிரி ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கவர்ந்து கொள்வார்கள்.

1.ஆக மொத்தம் உடலுடன் இருக்கும்போது அரசனுக்குச் சேவை செய்கின்றோம்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் அவன் செய்யும் வேலைகளுக்குப் பயன்படுவோம்.

ஆலயத்தில் அரசன் வழிப்படுத்திய முறைப்படி மந்திரங்களை நாம் பதிவு செய்து கொள்கின்றோம். (பெரும் பகுதி இன்று மந்திரம் சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்)

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்ட ஆன்மாக்களை வசியம் செய்து அடுத்து அவர்கள் இறக்கப்படும் போது இந்தக் குறிப்பை எடுத்துக் கொள்வார்கள். அதற்குத்தான் குடுகுடுப்புக்காரன் வருகின்றான்.

இவர்கள் எல்லாம் அக்காலங்களில் அரசருக்கு “ஐந்தாம்படை…” என்று சொல்வார்கள். காடு ஆறு மாதம் நாடு ஆறு மாதம் என்று தனித் தனிக் கூட்டமாக (BATCH) வருவார்கள்.

ஒரு கூட்டம் இந்த வருடம் காடுகளில் வளர்ந்து மந்திரங்களை செய்வதும் அடுத்து அதே மந்திரத்தைக் கொண்டு வந்து நாட்டுக்குள் வந்து இரவிலே வீடு வீடாக வந்து நல்ல நேரம் வருகின்றது.. கெட்ட நேரம் வருகின்றது… அது வருகிறது… இது நடக்கப் போகிறது…! என்று சொல்வார்கள்.

அப்படி வரும் பொழுது நம் வீட்டு வாசல் படியில் இருக்கின்ற மண்ணை எடுத்துக் கொள்வான். ஏதாவது ஜோசியத்தைச் சொல்லி துணி மணிகள் கொடுங்கள்…! என்று கேட்பான்.

அந்தக் குடுகுடுப்புக்காரன் கேட்டவுடனே புதுத் துணியை எடுத்துக் கொடுப்பீர்கள்.

அவன்… வேண்டாங்க..! பழைய துணி கொடுங்கள்…! என்பான். அப்புறம் ஏதாவது சொல்லி நம்முடைய தலைமுடியை எடுத்துக் கொள்வான். கேட்டால்… தோஷத்தை நீக்க வேண்டும் என்பான்.

இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் அதற்கென்ற அரசனிடம் ஒப்படைப்பான். இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு இந்த நிலைகளில் இறந்தார்கள்…! என்று எல்லாவற்றையும் கூறுவான்.

அந்த அதர்வண வேதத்தைக் கற்றுணரந்தவர்கள் இதை அடிப்படை ஆதாரமாக வைத்து மந்திரங்களை ஜெபித்து இந்த ஆன்மாவை எல்லாம் அங்கே கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக உடலோடு இருக்கும் போதும் அரசனுக்கு அடிமை. உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் அந்த ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி அடிமையாக்கி… அடுத்த நாட்டின் மேல் ஏவல் செய்வார்கள்.
1.ஒவ்வொரு அரசனும் அவனுக்கு வேண்டிய குலதெய்வம் என்ற நிலையை உருவாக்கி
2.அவன் நாட்டு மக்களுக்குள் இதை பதிவு செய்வான்.

நம்மை ஆட்சிப் புரிந்து வந்த கடந்த கால அரசர்கள் குலதெய்வம் என்று வைத்து அதன் வழியில் குடிமக்கள் இப்படிச் செய்வார்கள்…! என்று பதிவாக்கிக் காலம் காலமாக வைத்துள்ளார்கள்.

குலதெய்வம் என்ற நிலைகள் கொண்டு அந்த மக்கள் இறந்த பின் அந்த ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். எதிரிகள் போர் முறை என்று வரப்படும்போது கைவல்யப்படுத்திய ஆன்மாக்களைப் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளுக்கு எதிரிகளை வீழ்த்திடவும் அவர்களைப் புத்தி பேதமாக்கவும் பயன்படுத்துவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞான அறிவை எடுத்துக் கொண்டாலும் கூட
1.ஒரு நாட்டில் உளவாளிகளாக (SPY) வைத்து
2.அங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்..? என்ற நிலையை
3.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் அறிந்து இயக்கி
4.அதை வைத்து உலகம் முழுவதற்கும் பல வகைகளிலும் தீமைகளைப் பரப்புகின்றனர்

அதே சமயத்தில் விஞ்ஞானத்தில் முதிர்ந்திருந்தாலும் கர்த்தர் தான் தன் கடவுள் என்று சொல்பவர்களும் அந்த அதர்வண வேதத்தைக் கற்றிருப்பார்கள்.

மற்ற மதத்தில் உள்ளவர்களும் அங்கிருக்கும் உணர்வுகளை அந்த ஆன்மாக்களைச் சேர்த்துப் பக்தி கொண்ட நிலையில் மற்றவர்களை இயக்குவார்கள்.

அத்தகைய ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்துத் “தன் மதம் தான் பெரிது…!” என்று இயக்குவார்கள். உலகம் முழுவதுமே இன்று பார்க்கலாம். இனப்போர் மொழிப்போர் மதப்போர் என்று இரக்கமற்றுத் தாக்கும் நிலை வருகின்றது.

இதுகள் எல்லாம்
1.மனித உடலில் ஒரு ஆவி புகுந்து கொண்டால் அதன் நிலையையே செயல்படுத்துகின்றது.
2.அந்த ஆவி எந்தெந்த நிலைகளில் அந்த உடலில் இருக்கும் போது இடைஞ்சல் செய்ததோ
3.இன்னொரு உடலுக்குள் புகுந்தாலும் அதே தீயவினைகளைச் செய்கின்றது
4.அதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும் எந்த வேலையும் ஆவதில்லை.

ஆனால் மந்திரங்களைச் செய்து… யாகங்கள் செய்து… சக்கரங்கள் வைத்து நீக்கி விடுவோம்…! என்ற நிலையில் செய்கின்றனர். அது நீங்காது.

1.அந்த உடல் இறக்கும் பொழுது தான் “அந்த ஆன்மாக்களும் வெளியில் வரும்…”
2.வந்த பின் அடுத்து மனிதனல்லாத மிருக உடலோ ஊர்ந்து செல்லும் உயிரினமாகவோ தான் அது பிறக்கும்.
3.அல்லது இன்னொரு மனிதன் பற்று கொண்டான் என்றால் மீண்டும் அங்கே செல்லும்.

ஆக எப்படிப் பார்த்தாலும் அமாவாசை அன்று சாங்கியங்களையும் யாகங்களையும் செய்து மறுபடியும் மனிதனில்லாத பிறப்பிற்குதான் நாம் கொண்டு வருகின்றோம்.

1.இந்த உடலைச் விட்டு சென்ற பின்
2.”பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்கள்…”
3.இன்று.. இது வரையிலும்… மத அடிப்படையில் இல்லை.

கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

மனிதர்களாக வாழக்கூடிய நாம்…
1.பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடலை வளர்த்த உணர்வுகள்
2.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு மேலே சொன்ன உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் போது இது அனைத்திலும் கலந்து
3.எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டோமோ அதற்குள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து சர்வ தீமைகளையும் அகற்ற உதவும்.

தீமைகள் வரப்படும் பொழுது… அது எப்படி நமக்குள் கலக்கின்றதோ… அந்தத் தீமை எப்படி இயக்குகின்றதோ… இதைப் போன்றே
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது
2.மழை மேகங்களுக்குள் அருள் சக்திகளைப் பரப்பப்படும் போது அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றன.

அதே சமயத்தில் ஆங்காங்கு கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன…?

ஒருவர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் தியானமிருப்போர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து… அவரை அறியாது தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்கி… அவர் உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்று “பல முறை சொல்லுங்கள்…”

1.இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வு எல்லோருடைய செவிகளிலும் பட்டு…
2.இந்த உணர்வை அவரும் நுகரப்படும் பொழுது அவர் நோயின் கடுமை குறைவதைப் பார்க்கலாம்.

இதை மீண்டும் மீண்டும் அவர் எண்ணத் தொடங்கினால்… அனைவரும் சேர்ந்து அவர் உடல் நலம் பெற செய்ய வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருக்குள் ஓங்கி வளர்ந்து அந்த கடுமையான நோயைத் தணிக்க இது உதவும்.

இதையெல்லாம் நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும்.

தியானம் செய்து கொண்டிருந்தாலும்… ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ சாப அலைகள் உண்டு. நாம் தியானத்திற்குச் செல்லும் போது
1.அங்குள்ள சாப அலைகள் நீங்கி தீய வினைகள் நீங்கி அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்க வேண்டும்.
2.நாம் இப்படி வலுவான நிலைகள் கொண்டு பதிவாக்கும் இந்த உணர்வலைகளை வீடுகளில் உள்ள காந்தப்புலனறிவு கவர்ந்து கொள்ளும்.
3.இந்த உணர்வுகள் அந்த வீட்டில் உள்ளோருக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்….
4.தீமை அகற்றும் எண்ணங்கள் அங்கே தோன்றுகின்றது.

அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது “ஒவ்வொரு நிமிடத்திலும் நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது…”

ஒரு குடும்பத்தில் அதிகமான சிரமம் என்று கேள்விப்பட்டால் தியானம் செய்யும் இருபது பேர் அங்கே சென்று அமர்ந்து தியானித்து மகரிஷிகளின் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

அப்போது அவர்கள் தொழில் வளம் பெறவும் கடும் பிணிகளில் இருந்து மீளவும் அருள் ஞானம் பெருகவும் ஞானத்தின் வழியில் அவர்கள் வழி நடக்கவும் இது உதவும்.

அந்த வலிமையான உணர்வுகளை நாம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். “குடும்பம் நலம் பெற வேண்டும்…” என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு ஆங்காங்கு கூட்டமைப்பாகச் செயல்படுத்துங்கள்… நன்மை பயக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செயல்படுத்தி… அவர்கள் மகிழ்ந்து வாழ்வதைக் கண்டு “மகிழ்ச்சியான உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்…”

1.இதை அனைவரும் செயல்படுத்துங்கள்
2.அருள் ஞானம் பெறுங்கள்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள்.
3.அருள் வழிகளிலே இந்த வாழ்க்கையை வழிநடத்துங்கள்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்
5.அருள் ஞான உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து அந்த மகரிஷிகள் சென்ற அந்த இடத்திற்கு நாமும் செல்வோம்.

அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்

 

வீட்டை அழகாகக் கட்டுகின்றோம்… தூசி பட்டால் தூய்மைப்படுத்துகின்றோம். ஆடைகளை அழகாக அணிகின்றோம்… அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம். நம் உடலில் அழுக்குப்பட்டாலும் குளித்து விடுகின்றோம்.

அப்போது நம் ஆன்மாவில் அழுக்குப்பட்டால் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…! அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். உபதேசத்தைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம் உபகாரமும் செய்கின்றோம் அவர் வேதனைப்படுவதை நம் கண்கள் பதிவாக்குகின்றது மீண்டும் நினைவாக்கும் பொழுது கண் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

ரேடியோ டிவி இவைகளுக்கு ஏரியல் ஆண்டன்னா இருப்பது போன்று
1.நமது கண்கள் இந்த உடலுக்கு ஆண்டென்னாவாகச் செயல்படுகின்றது.
2.பதிவு செய்ததை மீண்டும் எண்ணும் பொழுது காற்றிலிருந்து கவருகின்றது.
3.அதனால் தான் அதைப் பரமாத்மா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
4.கண்களைக் கண்ணன் என்று பெயர் வைத்தாலும் “கண்ணன் – திருடன்…” என்று விளக்க உரை கொடுக்கின்றார்கள்.

ஒருவன் நல்லதைச் செய்கின்றான். நாம் உற்றுப் பார்த்தால் நல்லது செய்யும் உணர்வினைக் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அவன் உடலிலிருந்து வெளிப்படும் அந்த நல்ல உணர்வை நுகர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது.

மோதிய உணர்வுகள் அந்த நல்லது நம் ரத்தத்தில் கலக்கின்றது. நல்லது செய்யும் உணர்வுகளை இதே கண்கள் தான் கவர்கின்றது… திருடுகின்றது. அதே உணர்ச்சிகள் மீண்டும் இயக்கப்பட்டு “நல்லது செய்ய வேண்டும்…” என்று எண்ணம் வருகின்றது.

ஒருவன் கோபமாகப் பேசுகின்றான். கருவிழி ருக்மணி அந்த கோபக்காரனைப் பதிவாகிய பின் அந்தக் கோபத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இதே கண்கள் தான் அந்த காரமான உணர்வினைத் திருடுகின்றது.

அதனால் தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகிறான் என்று காட்டுகின்றார்கள். இப்படிப் பிறருடைய தீமைகளை எடுக்கப்படும் பொழுது அதை கவர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.

நாம் எத்தகைய மனிதனாக இருப்பினும் கண் கொண்டு ஒருவரை உற்றுப் பார்த்தால்
1.அந்த உயர்ந்த குணங்கள் வரும் பொழுது உணர்வின் தன்மை பதிவாக்கி நாமும் உயர வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றது.
2.ஆனால் தவறு செய்கிறான் என்ற உணர்வினை நுகர்ந்து கொண்ட பின் அதே உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

அந்த வெண்ணையைத் திருடிய பின் அதன் உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இது எல்லாம் கண்களுக்குள் நடக்கக்கூடிய இயக்கங்கள்.

அது தான் பரமாத்மா…!
1.நமக்கு முன் பரவிக் கிடக்கக்கூடிய நிலையினைக் கண்கள் இழுத்துக் கவர்ந்து
2.நமக்குள் ஒவ்வொன்றையும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கண்களுக்குக் காரணப் பெயர் வைத்துத் தெளிவாக்கி உள்ளார்கள்.

அடிக்கடி வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் என்ன ஆகும்…? வேதனை என்ற அந்த விஷத்தின் தன்மையால் நரம்புகள் வழி கூடி நல்லதைச் சிந்திக்கும் தன்மைகள் இழக்கப்பட்டு கண்கள் இருண்டு விடுகின்றது… குருடாகி விடுகின்றது.

வேதனைகளை அதிகமாகச் சுவாசித்தால் உயிரிலே பட்டு நம் ரத்தத்தில் கலந்து உடலில் விஷத்தின் தன்மை பாய்ந்து விடுகின்றது. இது தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று இதே உணர்வுகள் வரப்படும் பொழுது அதற்குத் தக்க இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

கண்கள் இருண்டு விட்டால் நாம் எதைப் பார்க்க முடியும்…? பார்க்க முடியாது. இது எல்லாம் எதனால் வருவது…? நாம் சுவாசித்ததனால் வருவது. சுவாசித்ததை உயிர் தான் உருவாக்குகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடல் நஞ்சை எப்படி மலமாக மாற்றியதோ… ஆறாவது அறிவு வாழ்க்கையில் வந்த நஞ்சினைப் பிரிக்கும் சக்தி பெற்றது.
1.விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சையும் வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது. துருவத்தின் வழி பூமி கவருகின்றது.

அதைப் பெறச் செய்வதற்கு தான் இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம். அதை ஆழமாகப் பதிவு செய்த பின் நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யக்கூடிய பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும். எத்தகைய வேதனையாக இருந்தாலும் தீமையான உணர்வாக இருந்தாலும் அதை ஒடுக்கி தீமை புகாது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான உலகில் தான் இருக்கின்றோம். விஞ்ஞானத்தின் மூலம் அண்டத்தையும் கம்ப்யூட்டர் என்ற சாதனைத்தின் மூலம் அளந்தறிகின்றனர்.
1.உலக இயக்கத்தையும் அறிகின்றனர்.
2.எங்கேயோ (COSMOS) காணாத இடத்திலிருப்பதையும் அந்த உணர்வுகளை நுகர்கின்றார்கள்.
3.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்குகின்றார்கள்
4.அந்தக் கோள் எங்கே இருக்கின்றதோ அதே உணர்வை இங்கே பதிவாக்கி உந்து விசையால் இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை ஏவுகின்றனர்
5.விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது அதிலே பதிவான உணர்வு… தன் இனத்தைக் கண்டதும் செயற்கைக் கோளை அதன் வழி அழைத்துச் செல்கிறது.
6.அங்கே இருக்கக்கூடிய நிலைகளை எல்லாம் தரையிலே இங்கே அறிய முடிகின்றது.

இதைப் போன்ற நிலையில் விஞ்ஞான அறிவு இன்று இருக்கும் இக்காலத்தில் நாம் பக்தி மார்க்கத்தில் எப்படி இருக்கின்றோம்…?

யாரோ செய்வார்… சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்… வேள்விகள் செய்யும்…! என்ற நிலைகளில் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய பேருண்மை என்ன…?

தீமை என்ற நிலைகள் நமக்குள் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிர் அதை “ஓ…” என்ற ஜீவ அணுவாக உருவாக்கி “ம்…” என்று நம் உடலாக மாற்றும்.

அதே வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
1.அது நமக்குள் நன்மை பயக்கும்..
2.நம் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்…
3.நம் சொல் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதைத்.தெளிவாகக் கூறியிருப்பினும்
4.அதை நாம் யாரும் இது வரை பின்பற்றவில்லை.

சாமி (ஞானகுரு) வந்தார் என்றால் அவரிடம் பெரிய சக்தி இருக்கின்றது… “அவர் தான் நமக்குச் செய்வார்…!” என்ற இந்த ஆசை தான் வருகின்றது.

சாமி உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த அருள் உணர்வின் சக்தியை நமக்குள் பதிவு செய்து மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.அந்த உயர்ந்த குணத்தை நாமும் பெற முடியும்
2.நமக்குள் தாழ்மைப்படுத்தும் உணர்வை.. தீமை செய்யும் உணர்வை மாற்ற முடியும்
3.நாம் சொல்லாகச் சொல்லி வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறரைப் புனிதமாக்கவும் உதவும்
5.நமக்குள்ளும் புனிதமாக்கும் உணர்வுகள் விளையும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை வருதல் வேண்டும்.

இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கு அடுத்த அந்தத் தெய்வ நிலையை அடையும் மார்க்கங்களைத் தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்திலும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்தல் வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சமயம் நான் (ஞானகுரு) பத்ரிநாத் போய் விட்டு வந்து கொண்டிருந்தேன்.

எனது நண்பர் என்ன செய்தார்…! சென்னைக்குப் போகலாம்…! என்று சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு போகிறார். என் கையில் பணம் இல்லை.

டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். விமானம் டெல்லியை விட்டுப் புறப்பட்டு மேலே பறந்து சென்று சிறிது நேரம் தான் இருக்கும்.

அந்த விமானிக்கும் தெரியவில்லை. அந்த நேரத்தில் எப்படி… என்ன ஆனது…? என்று தெரியாதபடி “கிர்…ர்ர்…” என்று எவ்வளவு உயரத்தில் மேலே போனதோ அதே வேகத்தில் “கிர்…ர்ர்…” என்று விமானம் கீழே இறங்குகிறது.

அப்பொழுது குருநாதர் அங்கே அதனுடைய இயக்கங்களைச் சொல்கிறார். இயற்கையின் நியதிகளில் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த இருபத்தியே ஏழு நட்சத்திரங்களும் இருபத்தியேழு விதமான உணர்வுகளை எடுத்துக் கொள்கிறது.

ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் துகளும் இன்னொரு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் அது பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியே மோதினால் அது ஆவிகளாக மாறப்படும்போது எந்தெந்தக் கோள் அந்தப் பாதையில் வருகின்றதோ அதனின் சத்தை அது எடுத்துக் கொள்கின்றது

ஆனால் எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் வரப்படும்போது அது ஒன்றோடு ஒன்று மோதினால் என்ன ஆகின்றது…?

நம் பூமியில சூறாவளி என்று சொல்கிறோம் அல்லவா…! இதே போல் நம் பிரபஞ்சத்திற்குள்ளும் சூறாவளி உண்டு. அதைத்தான் அங்கே காட்சியாக உணர்த்துகின்றார் குருநாதர்.

பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் மேலே செல்லப்படும் பொழுது அங்கே அனுபவரீதியிலே காட்டுகின்றார்.
1.அங்கே எதிர்மறையான நட்சத்திரங்களின் உணர்வலைகள் அதிகமாகப் பரவி இருக்கும்போது
2.ஈர்க்கும் காந்தம் அங்கே குவிந்திருக்கின்றது.
3.விமானம் அந்த இடத்தின் அருகிலே சென்றதும் குவிந்த நட்சத்திரத்தின் அலைகள் கிர்…ர்ர்..! என்று கீழே இழுத்துக் கொண்டு போகிறது. (அந்த நேரத்தில் காட்டுகின்றார் குருநாதர்)

அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அத்தனை பேரும் அப்படியே கதிகலங்கிப் போனார்கள்.
1.எல்லோரும் சத்தம் போட்டார்கள்…!
2.நான் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன்.

ஏதாவது அசம்பாவிதங்கள் ஆனால் விமானத்தை ஓட்டுகிறவர்கள் பயணிகளுக்குத் தைரியத்தைச் சொல்வார்கள். ஆனால் திடீரென்று இப்படி ஆனவுடனே விமானி (PILOT) முதல் எல்லோரும் கதிகலங்கிப் போனார்கள்.

வானியலை முன் கூட்டியே அறிந்து தான் விமானத்தை ஓட்டுகின்றனர். ஆனாலும்
1.சில பகுதிகளில் மற்ற நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகரித்து
2.அதாவது… எதிர்மறையான நட்சத்திரத்தின் துகள்கள் நம் பூமியின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டால்
3.அது மின் கதிர்களாக மாற்றப்படும் போது இது எதிர் நிலை ஆகிச் சுழல் காற்றாக மாறுகின்றது.
4.அப்படிப்பட்ட சுழல் காற்றுக்குள் நேராக விமானம் போகும் போது
5.ஒரு நொடியில் கீழே இறக்குகின்றது…! என்பதை அனுபவமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நம் குருநாதர் சாதாரணமானவர் அல்ல…!
1.பைத்தியக்கான் தான்…!
2.கிழிந்த வேஷ்டியைத் தான் கட்டி இருந்தார்.
3.ஒவ்வொரு நொடியிலும் இந்த நிலையைக் காட்சி கொடுத்து உபதேசித்துக் கொண்டே வந்தார்
4.அந்தச் சந்தர்ப்பம் நான் தெளிவாகிக் கொண்டேன்… அதனால் சிரித்துக் கொண்டே இருந்தேன்.

கடைசியில் விமானம் வர வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக வந்து இறங்கியது. அங்கே இறங்கியவுடன் எல்லாரும் சேர்ந்து என்னிடம் வந்து
1.நீங்கள் ஏன் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்…? என்று கேட்டனர்.
2.நீங்கள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்ததைப் பார்த்தால்
3.நீங்கள் எங்கள் கூட வந்ததால் தான் நாங்கள் தப்பித்தோம்…! என்றனர்.

விமானத்தில் வந்த எல்லோரும் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். விமானத்திலிருந்து நான் கீழே இறங்கி வர முடியவில்லை.

ஐயா…! எனக்கு ஒன்றும் தெரியாது…! என்று நான் சொன்னேன்.

இல்லை இல்லை…! விமானம் கிர்… என்று கீழே இறங்குகிறது. நீங்கள் மட்டும் சிரிக்கிறீர்கள்.. உங்களிடம் ஏதோ சக்தி இருக்கிறது…! என்று என்னைப் பிடித்து கொண்டார்கள்

ஆனால் எனக்குத் தெரியாமல் குருநாதர் என்னை அப்படி அங்கே இயக்கினார். அனுபவரீதியில இதை அந்தச் சந்தர்ப்பத்தில் உணர்த்திக் காட்டினார்.

விமானத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு நுட்பமாகச் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தில் இதைப் போன்ற விபத்துக்கள் நிறைய ஏற்பட்டு விடுகிறது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டால்
2.”நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள்…” நம்மை நிச்சயம் காக்கும்…!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இந்த அனுபவத்தை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இன்றும் ஒளியின் சரீரமாகவே இருக்கின்றான். அவன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்ட உணர்வு எது…?

அகஸ்தியனின் தாய்
1.கொடூர மிருகங்களிடம் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி
2.பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றார்கள்.

அன்று வீடு வாசல் கிடையாது… குகைகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். யானைகள் போன்ற கொடூர மிருகங்கள் வந்து விடும்… தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் குகைகளில் படுத்துத் தூங்கியவர்கள்.

இப்பொழுதும் நாம் காணுகின்றோம் பாம்பாட்டி கையிலே ஒரு வேரை வைத்துக் கொள்கின்றான். படமெடுக்கும் பாம்பு அப்படியே நின்று விடுகின்றது.

தேனை எடுத்துப் பழகியவர்கள் கையிலே ஒரு பச்சிலையைத் தடவிக் கொண்டு செல்கின்றார்கள். சும்மா கையை விட்டுத் தாராளமாகத் தேனை எடுக்கின்றார்கள்.

ஆனால் நாம் கையை வைத்தால் “கொட்டு… கொட்டு…” என்று கொட்டி நம்மைக் கொன்றுவிடும்.

அந்தப் பச்சிலை மணம் கண்ட பின் தேனீக்கள் ஒடுங்குகின்றது. தேனை லேசாக எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தப் பச்சிலைகளுக்குச் சில கடுமையான விஷங்கள் ஒடுங்குகின்றது.

யானை மிரட்டி என்று ஒரு பச்சிலை இருக்கின்றது. அதைக் கையிலே தேய்த்துக் கொண்டு நாம் சென்றால் இந்த மணத்தை கண்டால் யானை பிளிறிக் கொண்டு ஓடும்.

காடுகளில் புலையர்கள் பச்சிலையின் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் கையிலே கசக்கிக் கொண்டு யானைக் கூட்டத்திற்குள் செல்வார்கள். இவர்களைக் கண்டாலே அது ஒதுங்கிவிடும்… அருகில் வராது.

புலி போன்ற மிருகங்களுக்கும் அதற்கென்று பச்சிலைகளை உபயோகித்தார்கள் என்றால் அதுவும் ஒன்றும் செய்வதில்லை… விலகிச் சென்று விடுகின்றது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் காலங்களில் கர்ப்பமுறுகின்றார்கள்.
1.விஷத்தை முறிக்கும் மணங்களை இவர்கள் உடலில் பூசியது குகைகளில் பரப்பியது இவர்கள் சுவாசத்திலே நுகரப்பட்டு
2.கருவிலிருக்கக்கூடிய அகஸ்தியனுக்குள்ளும் இது பதிவாகின்றது.
3.விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி அந்தக் குழந்தைக்குத் தாய் கருவிலே வளரும் பொழுதே கிடைக்கின்றது.
4.அந்தப் பச்சிலைகளின் சக்தி அதற்குக் கிடைக்கின்றது.

அந்தச் சக்திகள் எல்லாம் விளைந்து தான் அகஸ்தியன் குழந்தையாகப் பிறக்கின்றான். அவன் பிறந்த பின் ஈயோ கொசுவோ தேளோ பாம்போ புலியோ நரியோ யானையோ இவன் மணத்தைக் கண்டால் அப்படியே பதும்பி விடுகின்றது. ஒன்றும் செய்வதில்லை.

இன்று விஞ்ஞான அறிவில் கூட சில நிலைகளைச் செயல்படுத்துகிறார்கள். காட்டு விலங்குகளுக்கு எதிர்மறையான இன்ஜெக்ஷனைத் தன் உடலில் போட்டுக் கொள்கின்றார்கள். போட்டுக் கொண்டு இவர்கள் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றார்கள்.

புலியோ யானையோ இவர்கள் அருகில் வருவதில்லை. ஏனென்றால் அதற்கு எதிர்மறையான மருந்தை உடலில் செலுத்திக் கொள்கின்றார்கள்.

சிலர் இது போன்ற அதிசயமான செயல்களைச் செய்வதாக டிவியில் காண்பிப்பார்கள். காட்டிற்குள் சென்று விஷப் பாம்புகளைக் கையில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காண்பிப்பார்கள்.
1.நமக்குப் பார்த்தால் பயமாக இருக்கும்.
2.ஆனால் அந்த இன்ஜெக்ஷனைப் போட்டுக் கொண்டுதான் அதைக் கையில் எடுக்கின்றார்கள்.
3.இந்த வாசனையைக் கண்டு அது ஒன்றும் செய்வதில்லை.

விஞ்ஞான அறிவில் இன்று இதைச் செயல்படுத்துகின்றார்கள்.

நல்ல பாம்பு அல்லது அதைக் காட்டிலும் கடுமையான விஷம் கொண்ட பாம்புகளைக் கூடப் பிடித்து அதனுடைய விஷங்களைச் சேமித்து எடுக்கின்றார்கள்.

ஒரு விஷத்திற்கு ஒரு விஷம் ஆகாது அதை எடுத்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றார்.

பாம்புகளிலேயே ஒரு பாம்புக்கு இன்னொரு பாம்புக்கும் ஆகாது… ஒன்று மற்றொன்று விழுங்கி விடும். ஆனால் இந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் நல்ல பாம்பு தன் உடலில் தானே கொத்திக் கொண்டால் விஷம் பாய்ந்து அது மரணம் அடைந்து விடும். உடலின் உணர்வுகள் வேறு… உடலில் இருக்கக்கூடிய விஷங்கள் வேறு.

பாம்பினுடைய பற்களிலே இருக்கக்கூடிய விஷம் தனித் தன்மையாகி எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது விரும்புகிறதோ அந்த உயிரினத்தில் இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது.
1.அதைச் சாப்பிட்ட பின் அதற்குச் சீக்கிரம் ஜீரணம் ஆகின்றது.
2.அந்த விஷமே அதற்குப் பாதுகாப்பாகின்றது.
3.ஆனால் அந்தப் பாம்பு தன் உடலில் தானே கடித்துக் கொண்டால் மரணம் அடைந்து விடும்.

உடலுக்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை… உற்பத்தியாகும் விஷத்தை உணவாக உட்கொண்டால் ஒன்றும் செய்வதில்லை.

பாம்பின் விஷத்தை மனிதர்கள் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பின் யாரையாவது நகத்தால் கிள்ளினால் போதும். இந்த விஷம் அங்கே பாய்ந்து அவர் இறந்து விடுவார்.

பாம்பு விஷத்தைக் குடிக்கும் பொழுது உடலுக்குள் புண் இருக்குமானால் நாமும் இறந்து விடுவோம். ஏனென்றால்
1.ஜீரணிக்கக் கூடிய பாதையில் செல்லும் நிலைகள் வேறு…
2.நேரடியாக ரத்தத்தில் கலக்கும் நிலைகள் வேறு…!

நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் டக்… என்று வாயிலே உறிஞ்சுவார்கள். உடலுக்குள் மேலே ஏறாதபடி உறிஞ்சித் துப்பி விடுவார்கள். ஆனால் வாயிலே அவர்களுக்குப் புண் இருந்தால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள்.

ஆனால் விஷத்தை விழுங்கினாலும் ஒன்றும் செய்யாது. அதை ஜீரணிக்கக் கூடிய நிலையாக வந்து விடும். இயற்கையின் நிலைகள் இப்படி எத்தனையோ வித்தியாசமான நிலைகள் வருகின்றது.

1.இதை எல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால்
2.கருவிலேயே விஷத்தை முறித்திடும் சக்தியாக வந்தவன் தான் அந்த அகஸ்தியன்.

ஒரு தாய் இங்கே வந்திருந்தார். அந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அவர் குடும்பத்திலே யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாது. ஆனால் அவரின் சொந்தக்காரருக்குச் சர்க்கரை நோய் இருந்தது,

இரண்டாவது குழந்தை அதன் கருவில் இருக்கப்படும் பொழுது அந்தச் சர்க்கரை நோயாளிக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அந்தத் தாய் செய்கின்றது.
1.பரிதாபப்பட்டு அந்த நோயாளியின் உணர்வுகளை இது நுகர்கின்றது.
2.நுகர்ந்த பின்… கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த உணர்வுகள் இணைந்து
3.பிறந்த பின்பு பார்த்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது.

மூன்று வயதிலேயே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகின்றது. இரண்டு நேரம் இன்சுலின் ஊசி போட வேண்டும். போடவில்லை என்றால் ஒன்றும் ஆவதில்லை. திடீரென்று அந்தக் குழந்தைக்குப் பசி எடுக்கும்.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை. சர்க்கரைச் சத்து உள்ள நோயாளியைத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தது. கருவிலே பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அது சேர்கின்றது.

தாய்க்கு ஊழ்வினை என்ற பதிவாகிறது. என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே இப்படி ஆகிவிட்டதே என்று அது வேதனைப்படுகின்றது. பின் அதற்கும் அந்தச் சர்க்கரை நோய் வரும்.

தாய்க்கு முதலில் வரவில்லை… குழந்தைக்குத் தான் வந்தது. ஆனால் நாளடைவில் பையனுக்கு இப்படி இருக்கிறது என்று தனக்குள் எண்ணி அது வளர்ச்சியாகும் போது தாய்க்கும் அந்த நோய் வருகிறது.

சில குடும்பங்களில் இயற்கையில் இப்படி நடக்கும் பொழுது இது “பரம்பரை நோய்…” என்று சொல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதே எண்ணினால் எல்லோருக்கும் சாடத் தொடங்கி விடுகிறது.

இங்கே யார் தவறு செய்தது…?

1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“எலெக்ட்ரானிக்…” என்ற நிலைகள் சீராக இயங்கிக் கொண்டிருந்தாலும்
1.அதற்குள் மாறுபட்ட உணர்வுகள் (அழுத்தம்) கலந்து விட்டால்
2.அந்த எலெக்ட்ரானிக் கருவியே முழுவதும் செயலிழந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் இன்றைய நிலைகளில் சூரியனின் மாற்றம் எலெக்ட்ரிக்கை அதிகமாக உருவாகும் சக்தியாக வளர்ந்து விட்டது.

காரணம்… மனிதன் அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி வான் வீதியில் பரீட்சித்துப் பார்த்த இந்த உணர்வுகள் மற்ற கோள்களுக்குள்ளும் சென்று அதிலிருந்து உமிழ்த்தியது சூரியனுக்கு அருகே வரும் நிலைகள் வந்துவிட்டது.

அதிலே மோதல் ஏற்பட்டால் என்ன ஆகும்…?

உதாரணமாக மின்சாரம் இரு மடங்காக வந்தால் பல்புகள் ஃப்யூசாகிவிடும் (FUSE)… மோட்டார்கள் எல்லாம் எரிந்துவிடும். அதைப் போல சூரியனுள் உருவாகும் அதீத மின்சாரம் இரு மடங்காகப்படும் பொழுது (SUN FLARE EMISSION)
1.நம் உயிரின் தன்மை துடிப்பு அதிகமாகும்.
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அதே நிலையாகும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர் நிலையின் மோதல்கல் ஆகும் போது கம்ப்யூட்டர் செயல் இழந்துவிடும்… கன்ட்ரோல் (CONTROL) இல்லாது போகும்.

அப்படிப்பட்ட நிலையானால் விஞ்ஞானத்தால் உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பரவும் நிலை இருக்கின்றது. விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கண்டுபிடித்த உணர்வுகள் உடலுக்கு நல்லது என்றாலும்
1.அடுத்த நாட்டை அழிக்க விஷத் தன்மைகளை உருவாக்கித் தன்னைப் பாதுகாக்கச் செய்த நிலையில் பரவச் செய்த அலைகள்
2.சூரியனால் அந்த விஷத் தன்மைகள் பூமிக்குள் பரவிப் பிரபஞ்சத்திலும் பரவி
3.மீண்டும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லப்படும் பொழுது “இரு மடங்கு மின்சாரம்…” அதிகமாக உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது.

அப்பொழுது காடுகளில் இருக்கும் விலங்குகள் போல் மனிதனின் சிந்தனைகள் தவறிவிடும்.
1.உயிரின் துடிப்பு அதிகமாகும் பொழுது ஈர்க்கும் சக்தி அதிகமாகி
2.நரம்பு மண்டலங்கள் எல்லாம் இயக்கங்கள் மாறி
3.பித்துப் பிடித்தவன் போல்… சிந்திக்கும் தன்மை இல்லாது பைத்தியம் பிடிக்கும்.

இதைப் போன்ற இந்த உணர்வின் வலுவாகி விட்டால் மனிதனுக்கு மனிதன் தாக்கும் நிலைகளும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.

பூமிக்குள் வங்கிட்டுக் குடி கொண்டுள்ள மற்ற உயிரினங்கள் நில நடுக்கம் வரும் பொழுது அதை அறிந்து கொள்கிறது. உடனே வெளியேறுகின்றது. (மனிதனுக்கு அது தெரிவதில்லை).

இதைப் போன்ற இயற்கையின் உண்மைகளை அறிந்து இயக்கம் பரிணாம வளர்ச்சியில் வருவதை உணர்வின் அதிர்வுகளைக் கண்டு மற்ற உயிரினங்கள் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்கின்றது.
1.மனிதனுக்கு அப்படி இல்லை…!
2.வந்து தாக்கும் பொழுது தான் தெரிந்து கொள்கின்றான்.

இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்றால் 2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் சென்றால் மிகக் கடினமான காலங்களாக வருகின்றது.

இப்பொழுது பத்திரிக்கை டி.வி.யில் பார்க்கின்றோம். மதம் இனம் என்று மனிதனுக்கு மனிதன் வெறி கொண்டு தாக்குவதைப் பார்க்கின்றோம். இவன் அவனைத் தாக்க… அவன் இவனைத் தாக்க… என்ற இந்த நிலைகள் தான் வருகின்றது.

மனித இனமே அழித்திடும் உணர்வுகளாக இன்று விளைந்து அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
1.மதத்தின் அடிப்படையிலும் சரி
2.இனத்தின் அடிப்படையிலும் சரி
3.தெய்வ பக்தியின் அடிப்படையாக இருந்தாலும் சரி
4.விஞ்ஞான அறிவிலும் சரி
5.இதுகள் எல்லாம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
6.மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் நிலைகளாக விஷத் தன்மைகள் கூடி
7.அதற்குள்ளேயே நாம் வாழும் தருணமாக இன்று வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் தெளிவாகக் கூறி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
1.அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்
3.”உங்கள் எண்ணம் நிச்சயம் உங்களைக் காக்கும்…!”

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

 

ஒரு வித்து முளைத்து அதனுடைய நுனி வெளி வந்தபின் அதன் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து வளரும். ஆனால் முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து விட்டால் அதனுடைய சத்தையும் எடுக்காது… தொடரையும் எடுக்காது.

இதைப் போன்று தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக வளர்ந்து விட்டால் தீமையின் இயக்கமாக இயக்கிவிடும். ஆனால் அவ்வாறு உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன்பே அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்
1.வாழ்க்கையில் இடைமறித்து நல்ல உணர்வுகளைத் தடைப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக ஆக்கும்
2.அது போன்ற நிலைகளை வராதபடி தடைப்படுத்த வேண்டும்.
3.அதாவது… தீமை என்று வந்தால் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் ஃபிட்டர்களை (FITTER) வைத்திருப்பார்கள்.

தொழிற்சாலையில் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால் அந்த இயந்திரங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் ஃபிட்டர் வந்து அதை சரி செய்து தருவார்… இயந்திரத்தை உற்பத்தி செய்பவரிடம் நாம் செல்வதில்லை…!

அதைப் போன்று தான் அந்த ஃபிட்டரை நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும்.
2.அதற்குண்டான உபாயத்தை அது சொல்லும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.

நம்மை உருவாக்கக்கூடிய சக்தியாக உயிர் இருந்தாலும் அவனிடம் நாம் போவதில்லை. தீமைகளை மாற்றி அமைத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது அதற்குண்டான உபாயங்கள் வரும்.

தொழிற்சாலைகளில் ஓடும் இயந்திரங்களை உற்பத்தி செய்தவன் எங்கேயோ இருப்பான். ஆனால் அந்த இயந்திரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் அதைச் சரி செய்பவன் இங்கேயே இருப்பான். உற்பத்தி செய்பவரைத் தேடிச் செல்வதில்லை.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன். நமக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது

குறைகள் என்று வந்துவிட்டால்
1.“சாமி சொன்னாரே…!” என்று எண்ணி இதை எடுத்தால் அதைச் சீர்படுத்தும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
2.அதற்குத்தான் மணிக் கணக்கிலே உபதேசங்களைக் கொடுப்பது… நினைவுபடுத்துவது… நினைவின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்வது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைச் சீர்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த ஞானிகள் உணர்வுகள் அதைச் சீர்படுத்தும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயந்திரம் கோளாறாகிய பின் ஃபிட்டரைத் தேடவில்லை என்றால் என்ன ஆகும்…? நாமாக அதைச் சரி செய்ய முடியாது. நாம் எதையாவது செய்யப் போனால் இன்னும் கொஞ்சம் ரிப்பேராகிவிடும். ஆனால் ஃபிட்டரைக் கூப்பிட்டால் உடனே அதைச் சரி செய்து விடுவார்.

ஆகவே உங்களுக்குள் அந்தச் சீர்படுத்தும் உணர்வு கொண்ட அந்த அறிவை பதிவாக்குகின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமையை நீக்கும்.
1.அந்த உணர்வு உங்களுக்குள் ஞானமாக இயக்கும் ஞானத்தைப் பெறும் தகுதியும் வரும்.
2.உங்களை அறியாது வரும் இருளைப் போக்க வழி வகுக்கும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது. நமக்கு முன் எல்லா உயர்ந்த சக்திகளும் உண்டு. அதை நாம் நுகர்ந்தறிய வேண்டும்.

அது தான் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம்…! ஒன்றைப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது. அதனுடைய வலிமை அதிகமாகும் பொழுது வராகன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கூர்மையாகப் பதிவு செய்து விட்டால்
2.தீமையை அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் அது வளர்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணுவாகத் தோன்றி பல உடல்கள் பெற்று மனித உடல் பெறுவதை முதல் காண்டமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த பின் அடுத்துப் பல உணர்வுகள் எடுத்து அறுபது வயது ஆகும் பொழுது அது இரண்டாவது காண்டம்.

1.இரண்டாவது காண்டத்திற்குள் நாம் எடுத்து நுகர்ந்து கொண்ட உணர்வுகள் மாற்றம்…!
2.ஆக இரண்டு காண்டங்கள் கவர்வதே மனிதனுக்கு மிகவும் சிரமம்.
3.இடைப்பட்ட நேரங்களில் (அறுபது வருடத்தில்) நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு மாறுகிறது..? என்ற இந்த நிலையைக் காவியங்களில் உணர்த்துகின்றனர்.

இராமாயணத்தில் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்ற தசரதன்
1.தனக்குள் எடுத்துக் கொண்ட ஆசை தன் மகனுக்குக் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும்
2.அந்த நல்லவனுக்குச் (இராமனுக்கு) செயல்படுத்த முடியவில்லை என்று வேதனை உணர்வுகள் ஆன பின் அவன் மடிகின்றான்.

இதை எல்லாம் மனிதன் தெளிந்து… அறிந்துணர்ந்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காகத்தான் காவியப் படைப்புகளை இப்படிக் கொடுத்துள்ளார்கள்.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் மாற்றங்கள் ஏற்படும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரண்டறக் கலந்து மனதைக் குவித்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றென இணைந்து (இராமலிங்கமாக) அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

நம் சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாது வாழும் சக்தி பெறுகின்றது

இயற்கையின் உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உணர்ந்து… தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

அதாவது மூன்றாவது காண்டமாக…
1.அந்த அருள் மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து
2.உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அடுத்துப் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்று
3.ஞானிகள் தெளிவாக மூன்று காண்டங்களையும் காண்பித்துள்ளார்கள்.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?

 

போகன் கண்டறிந்த தத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பழனியில்… மலை மீது நாம் ஏறுகின்றோம். ஏறும் போது மேல் நோக்கி எப்படி எண்ண வேண்டும் என்ற நிலையை சற்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

1.படியின் கீழ் இருந்து நாம் மேல் நோக்கிச் செல்லும் நிலையில்
2.அந்த போக மாமகரிஷியை எண்ணி “அவன் அருளைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள்… மேல் நோக்கி வருகின்றது…”

கீழிருந்து மேலே முருகனைப் பார்க்கின்றோம். ஏனென்றால் குன்று தோறும் அமர்ந்திருக்கும் முருகா…! என்று நாம் பாடலைப் பாடுகின்றோம். உயரமான குன்றில் சிலையை வைத்த நிலையில்… அவன் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோம்.
1.சூரியனின் காந்த சக்தி ஞானிகள் உணர்வைப் புவியில் (தரையில்) படரச் செய்யாது மேலே மிதக்கச் செய்கின்றது.
2.நாம் மேல் நோக்கி எண்ணும் பொழுது அந்த மலை முகட்டில் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு
3.நம் உயிருடன் ஒன்றி இயக்கத் தொடங்கி விடுகின்றது.
4.இந்த உணர்வுகள் மூன்றும் சேர்த்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
5.தன்னிச்சையாகவே அந்த உணர்வை (நாம் எதை எண்ணுகின்றோமோ) உயிரின் வழி உள்ளுக்கே நுகரும் தன்மை வருகின்றது.

சாதாரண மனிதனும் எளிதில் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறும்படி வைத்துள்ளார்கள்.

நினைவை நாம் மேல் நோக்கி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டப்படும் பொழுது அந்த வலிமை பெற்ற உணர்வுகள் நமக்குள் இணைந்து “நம் உடலில் நோய் இருந்தாலும்… அதை மறக்கச் செய்கின்றது…”

மலை மீது ஏறும் போது இந்த உணர்வின் வலிமை எல்லாம் அதற்குள் சென்று விடுகின்றது. நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி அதனின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகச் சேர்க்கும் போது
1.உடலில் இருக்கும் எதிர்ப்புணர்வுகள்… அதாவது பகைமை கொண்ட உணர்வின் அணுக்களுக்கு
2.ஞானிகளின் உணர்வை ஈர்க்கப்படும் பொழுது பகைமை உணர்வுகள் தணிகின்றது.

அந்த அணுக்களின் வீரிய சக்தி ஒடுக்கப்படும் பொழுது இங்கே வலுக்கூட்டி மலை மீது ஏறும் தன்மை வருகின்றது.

சில பேர் தரையில் கூட நடக்க முடியாமல் இருப்பார்கள். ஆனால் மலை மீது போகும் பொழுது முருகா…! என்று அவன் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வுகள் உள்ளே புகுந்த பின் நான்கு அடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கும்.

இந்த உணர்வுகள் உள்ளே சென்ற பின் மனித உடலில் பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைத் தணியச் செய்கின்றது. பின் தாராளமாக ஏற முடியும். இதைப் பார்க்கலாம்.

1.ஏறும் போது மேலே நோக்கி மட்டும் எண்ணிப் பாருங்கள்.
2.மூட்டு வலி… என்னால் ஏற முடியவில்லை என்பதெல்லாம் மாறும்.

இதே மாதிரி அங்கு மட்டுமல்ல…! உங்கள் வீட்டின் மாடிப்படிகளிலோ மற்ற உயரமான இடங்களில் ஏற முடியவில்லை என்றாலும் ஈஸ்வரா…! என்று மேல் நோக்கி ஞானிகளை எண்ணி அந்த உணர்வை எடுத்தால் இரண்டு படி ஏறுவது சிரமமாக இருக்கும் மூணாவது படி நாலாவது படி தாராளமாக ஏற வரும்.

விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்று மனிதன் உயர்ந்த நிலை அடைவதற்குத் தான் இத்தனை நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த விண்ணினுடைய ஆற்றல்
2.நம் உடல் உறுப்புகளில் சேர்ந்து அதைச் சீராக இயங்கும்படி செய்கின்றது.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அடிக்கடி ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தோம் என்றால் அதே குறையான செயல்களைச் செயல்படும் நிலையாக (குறையானவர்களாக) நாமும் மாறுகின்றோம்.

ஒருவர் மற்றொருவரை அடிக்கடி வேதனைப்படும்படி சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால் அவரின் வேதனைப்படும் உணர்வுகள் வேதனைப்படுத்தியவரின் உடலுக்குள் விளைந்து “ஜயோ எனக்கு மேல் வலிக்கிறதே…! கால் வலிக்கிறதே…!” என்பார்

ஆனால் அவர் என்ன நினைப்பார்…? எல்லோருக்கும் நான் நல்லது செய்தேன். அவன் தப்பு செய்தான்… அதைத் தானே நான் சொன்னேன்…! என்பார்.

அதாவது தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படியாகப் புண்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வார். அந்த உணர்வின் தன்மை இவர் உடலுக்குள் விளைந்த பின்
1.ஐயோ… மேல் வலிக்கிறதே கை வலிக்கிறதே…!
2.நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… ஆண்டவன் என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றான்…? என்று தெரியவில்லையே…! என்பார்.

ஆனால் தெய்வத்திற்குப் பூ மாலைகளைச் சூட்டுவதும் அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் இப்படி எல்லாமே செய்தாலும் பெரும் பகுதி இப்படிப் பிறரைக் குறை கூறிப் பேசும் உணர்வுகள் கொண்டு
1.(முதலிலே) தன்னைத் தான் எண்ணாது
2.அவர் தவறுகளைச் செய்து கொண்டே இருப்பார்.

ஏனென்றால் நுகர்ந்தது எதுவோ அதை உயிர் அணுவாக மாற்றி… அதை உடலாக மாற்றி.. அந்த உணர்வின் சக்தியாகத்தான் “நமக்குள் இயக்கும்….!’ என்பதை மறந்து விட்டனர்.

ஆகவே இதை எதற்குச் சொல்கிறோம் என்றால்
1.இயற்கை எப்படி விளைந்தது…?
2.கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்பதைத் தெரிந்து கொள்ளத்தான்..!

தனித்து ஒருவன் கடவுள் இல்லை. ஐந்து நிலைகள் சேர்த்துத் தான் கடவுள் ஆகின்றது. வெப்பம்.. காந்தம்.. விஷம்… மணம்… அந்த சத்து… என்ற இந்த ஐந்தும் சேர்ந்த இயக்கத்தின் நிலைகளில் உருவாக்குகின்றது.

கடவுள் ஒருவன் (ஒன்று தான்) என்றால் அது எப்படி நியாயமாகும்…? ஒரு செடியானாலும் கல்லானாலும் உயிரினங்களாக ஆனாலும் அதே தான்.

ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலைகளில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவது தான் கடவுள் என்றும்
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்த பின் அதை உருவாக்குவது ஈசன் என்றும்
3.உருவான பிறகு பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா உருவாக்குகிறான் என்றும் ஞானிகள் தெளிவாக்குகின்றனர்.

உயிரின் துடிப்பு ஈசன் என்றாலும்… இயக்கத்திற்குள் இயக்கும் வெப்பம் விஷணு என்றும்… இதற்குள் இணைந்து நுகர்ந்ததை அணுவாக மாற்றுவதை விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும் காரணப் பெயர் வைத்து இயற்கையின் உண்மையின் இயக்கங்களை உணர்த்துகின்றனர்.

நாம் எந்த குணத்தை நுகர்கின்றோமோ அந்த குணத்தின் சக்தியாக உருபெறும் நிலை ஆகி அதே குணத்தின் சக்தியாக அது இயக்கும். அது தன் உடலாக மாறும் போது பார்வதி…!
1.நம் பார்வையில் எதைப் பார்த்தோமோ அதன் உணர்வுகள் எல்லாம் உடலாக இணைந்து கொள்கின்றது.
2.சிவனின் மனைவி பார்வதி – நம் பார்வையில் பார்த்து நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி
3.தன்னுடன் (உடலுடன்) இணைத்துக் கொள்ளும் என்பதற்கு “பார்வதி” என்று காரணப் பெயர் வைத்து
4.நம்மை அறிந்து செயல்படும் சக்தியாக நாம் செயல்பட வேண்டும் என்று நமது காவியங்கள் தெளிவாக்குகின்றது.

தில்லை அம்பலத்தாண்டவா

 

அன்று திருமூலர் பதஞ்சலியாக இருந்து கூடு விட்டுக் கூடு பாய்ந்து மாடு மேய்ப்பவன் உடல் மூலமாக அவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது
1.அவன் மனைவி கணவனை எப்படி வரவேற்கிறது…?
2.மரியாதை கொடுத்து எப்படிஉபசரிக்கிறது…! என்பதைப் பார்த்த பின் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

ஆனால் பதஞ்சலியாக… அரசனாக இருக்கப்படும் பொழுது
1.தன்னுடைய சேனாதிபதிக்குப் பயப்பட வேண்டும்
2.தன்னுடைய மனைவி இன்னொரு நாட்டு அரசனுடைய மகள் அவளுக்குப் பயப்பட வேண்டும்
3.தான் சட்டங்களை இயற்றினாலும் மக்களுக்குப் பயப்பட வேண்டும்
4.பின் எதிரிகளுக்குப் பயப்பட வேண்டும் என்று
5.இப்படிப் பயந்த உணர்வுகளே கொண்டு வாழும் நிலைகளே தனக்குள் வந்தது.

இதிலிருந்து தப்பிக்க உயர்ந்த சக்திகள் கொண்டு கூடுவிட்டுக் கூடு பாயும் சக்திகள் பெற்றிருந்தாலும்… அப்படிச் சென்ற பின் தன் உடலை வீழ்த்தி விட்டால் தான் எவ்வாறு மீள்வது…? வழியில்லையே…!

பாம்பினத்திற்குள் சென்ற பின் அங்கங்கள் கொண்டு செயல்படும் வழியில்லை… அப்பொழுது தான் எப்படிச் செயல்படுத்துவது…? என்று இந்த உணர்வின் நினைவு வருகின்றது.

பாம்புக் கூட்டுக்குள் இருந்து விஷத்தைப் பாய்ச்சி இன்னொரு உடலுக்குள் போகும் திறன் தான் உண்டு. எந்த உடலைத் தேர்ந்தெடுக்கின்றோமோ மனித உடலாக இருந்தால் அறிவின் தன்மை இயக்க முடியும்.

இதை உணர்ந்த அந்தப் பதஞ்சலி
1.தான் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு அந்த மாடு மேய்ப்பவன் உடலைத் தீண்டி அதற்குள் புகுந்து
2.அறிவு வளர்ச்சி இல்லாததாக இருந்தாலும்… “இவன் உணர்வால்” அங்கே வலிமை பெற்று அந்த உடலை இயக்குகின்றான்.

தில்லை நடராஜா…! இந்தப் பூமி அதனுடைய இயக்கத்தில் நிற்காமல் ஓடுகின்றது. அது எவ்வாறு இயக்குகிறது…? என்றும் அதிலே விளைந்தது தில்லை அம்பலதாண்டவா.
1.இந்த உடலான எல்லையில் உயிராக நின்று
2.என்னை ஆண்டு கொண்டு இருக்கும் நிலைகள் தில்லை அம்பலத்தண்டவா…!
3.நான் சுவாசிக்கும் உணர்வு எதுவோ அதை நீ ஆளுகின்றாய்.
4.நான் எதன் உணர்வை எடுக்கின்றேனோ அந்த உணர்வுக்குத் தக்க என்னைக் குறுக்குகின்றாய்
5.என்னை ஆட வைக்கின்றாய்… ஆட்டங்களை ஆட வைக்கிறாய்…!
6.அந்த உணர்வின் இசைக்கொப்ப என்னை இயக்குகின்றாய் என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

அது தான் தில்லை நடராஜா…! என்று நடனக் கலையிலே சிறந்தவன் என்று கூறுவார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை சக்தியாகி உணர்வின் தன்மை உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இன்று ஆடுகின்றோம்…! (நம் செயல்கள்)

இந்த உணர்வை வளர்த்த பின் அதற்குத் தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது என்ற நிலையை… உணர்வின் இயக்கங்கள் தன் உடலில் வரப்படும் பொழுது எவ்வாறு என்று நடனக் கலையாகக் காட்டினார் அன்று திருமூலர்.

தில்லை நடராஜா என்று நிற்காமல் ஓடும் பூமியின் செயலும்… அதற்குள் உராயும் உணர்வுகள் தனக்குள் விளையும் அணுக்களின் மாற்றங்களும்… எதனின் உணர்வு மாறுகின்றதோ அதன் உணர்வின் செயலாகத் தாவர இனங்களும்…
1.நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் எண்ணங்களாக எப்படி ஆகின்றது…?
2.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உருவங்கள் எப்படிப் பெறுகின்றது…?
3.அதனுடைய கலைகள் எப்படி இருக்கின்றது…? என்று தெளிவாக “அவர் பாடல்கள் மூலமாக…” உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளர்.

தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…!
1.நான் எண்ணும் உணர்வின் தன்மையை
2.அதாவது… என்னை நீ (உயிரான ஈசன்) எப்படி இயக்குகின்றாய்…? என்ற நிலையை அவன் உணர்த்தினாலும்
3.பின் வந்தவர்கள் “திருமூல மந்திரம்…” என்று திரித்து விட்டார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஆமையை ஒரு நரி விழுங்க வருகின்றது. அப்பொழுது ஆமையின் கருவிழி ருக்மணி அந்த நரியை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது.

அதே சமயத்தில் இந்த ஆமையை நரி விழுங்க எண்ணும் உணர்வுகள் நரியிடமிருந்து வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி அதை கவர்ந்து எடுத்து வைத்துக் கொள்கிறது. இது சீதா – சுவை.

ஆமை நரியை உற்றுப் பார்க்கும் பொழுது கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா… சூரியன் எடுத்து வைத்துக் கொண்ட அந்த நரியின் உணர்வை நுகரும் பொழுது ஆமையின் உயிரிலே உராயச் செய்கின்றது. உயிரிலே பட்ட பின் “நரி உன்னை விழுங்கப் போகின்றது…” என்ற உண்மையை (சத்தியத்தை) உணர்த்துகின்றது.

ஏனென்றால்
1.உயிரிலே உராயும் பொழுது சீதா…! அந்த உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.
2.ஹரி கிருஷ்ணா…! ஹரி இராமா…! ஹரி என்றால் சூரியன்.
3.நமக்குள் பதிவாக்கும் உணர்வு “ஹரி ராமா” – அந்தச் சூரியனின் நிலைகள் கொண்டு எண்ணங்களாக அது எப்படித் தோன்றுகிறது…? என்ற
4.உண்மையின் நிலையைத் தெளிவாகக் கூறுகிறது நமது சாஸ்திரங்கள்.
5.இதில் எதுவும் தப்பில்லை.

ஆமை கூர்மையாக நரியை உற்றுப் பார்த்த பின் நரியின் உணர்வைத் தனக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அதை இழுத்து
1.“நரி உன்னை விழுங்க எண்ணுகிறது…!” என்ற நிலையை உணர்த்திய பின்
2.அந்த உணர்வைக் கண்ட பின் பார்த்தசாரதி…! ஆமை அங்கிருந்து நகர்ந்து செல்கிறது.
3.,நரியிடம் சிக்காதபடி ஆமை தன் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது.

இருந்தாலும் நரி… இது தன் இரைக்கு உகந்தது…! என்று பார்க்கின்றது. “பார்த்தசாரதி…! ஆமையை விடுவேனா என்று துரத்துகிறது… நரியின் கண்கள்.

இது உன் உணவுக்கு உகந்தது… என்று காட்டுகின்றது நரியின் கண்களின் காந்தப் புலன் சத்தியபாமா. ஆக கருவிழி பதிவாக்கிய பின் அதன் செயலாக்கங்களாக இயங்குகின்றது. இது பார்த்தசாரதி.

இவ்வாறு இயக்கினாலும் அதன் வரிசையில் எப்படி இயங்குகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நரி போய்விட்டதா இல்லையா…! என்று அடிக்கடி ஆமை அந்த நரியைப் பார்த்துப் பார்த்து எண்ணங்களை எடுக்கும் போது… தன் உடலுக்குள் அந்த நரியின் உணர்வுகள் வலுவாகின்றது.

அப்பொழுது அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றான்.

நரியைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள் ஆமைக்குள் வரும் பொழுது அதனின்று தப்பிக்கும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

இந்த உணர்வுகள் அதற்குள் வளர வளர சிரசை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் ஆமை தான் இரை தேடப் போக முடியாத நிலை ஆகின்றது. ஆமைக்கு உணவு இல்லை.

அப்பொழுது அந்த நரியையே எண்ணி இது மரணமடையப்படும் பொழுது
1.எதைக் கூர்மையாகப் பார்த்ததோ அந்த உணர்வின் தன்மை வந்த பின்
2.ஆமையின் உயிரும் அதனுடன் சேர்த்த அணுக்களும் எந்த நரியின் உணர்வை இதற்குள் சேர்த்ததோ இந்த உடலின் தன்மை வலு பெறுகின்றது
3.நரியின் உடலுக்குள் ஆமையின் உயிரான்மா செல்கிறது.

அது தான் அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் சென்றான்…!

இந்தக் கண் எதைக் கூர்மையாகப் பார்த்ததோ இந்தக் கண்ணின் தன்மை கொண்டு அது பதிவானது. அந்த உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் செல்கிறது.

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். அதனின் உணர்வை வலுவாக்கப்படும் பொழுது அதன் நிலைக்கே அது அழைத்துச் செல்கிறது என்பதனைக் காட்டி எதைக் கூர்மையாகப் பார்த்ததோ அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…! என்று உணர்த்துகின்றனர்.

அப்பொழுது கண்ணன் சொல்கிறான்.
1.அந்த வியூகத்தைத் தகர்த்து (நரியின் வியூகம்) அதனுள் சென்று நீ அதுவாகு
2.ஆக இந்த உடலை (ஆமையின் உடல்) இழக்கின்றாய். அதன் உணர்வை இதற்குள் வளர்க்கின்றாய்.
3.அதனுள் (நரிக்குள்) சென்று நீ அதுவாகும் பொழுது அது உன்னை அரவணைக்கும்.
4.ஆகவே ஒளியும் இடத்தைக் கண்ணன் இப்படிக் காட்டுகின்றான்…! என்று மிக மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

காரணம்… கண்ணன் துகிலை உறிகின்றான்…! கண்ணனின் செயலாக்கங்களை உயிரிலே கண்ட பின் நன்மை தீமை என்ற உணர்வுகளைப் பிளந்து காட்டுகின்றது நமக்குள்.

அதனால் தான் கண்ணன் துகிலை உறிகின்றான்…! என்று இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்துத் தெளிவாக்குகின்றார்கள் ஞானியர்கள்.

நாம் என்ன நினைக்கின்றோம்…! கண்ணன் பெண்கள் குளிக்கும் பொழுது அவர்கள் உடைகளைத் தூக்கிக் கொண்டு சென்றான்…! வேடிக்கை பார்த்தான்…! என்று இப்படித்தான் சொல்கிறோம்.

ஏனென்றால் இதெல்லாம் ஒரு உணர்வுக்குள் மறைந்த உட்பொருளைப் பிளந்து
1.அந்த உணர்வின் சக்தி எதுவாக இயக்குகிறது…? என்றும்
2.தான் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின்
3.அந்த இரண்டு உணர்வுகளையும் சேர்ந்த பின் உண்மையின் இயக்கத்தை அது எப்படிப் பிரித்துக் காட்டுகிறது…? என்று
4.காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர் சாஸ்திரங்களில்…!

ஆமையின் உயிர் நரியின் உடலுக்குள் சென்று நரியின் ரூபமாக மாறுகின்றது. கண் கூர்மையாகப் பார்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலை மாற்றுகின்றது. அது தான் கூர்மை அவதாரம்…! என்பது.

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்

 

நாம் எந்தத் தவறும் செய்ய வேண்டியதில்லை. ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்து விட்டால் பாசத்தாலே அதை உற்றுப் பார்க்கின்றோம். அவன் அடிபட்டு வேதனைப்பட்டு வெளிப்படுத்தும் மூச்சலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அந்த உணர்வுகளை நம் சுவாசத்தின் வழி இழுத்துக் கொள்ள நேர்கின்றது.
2.அவன் பட்ட வேதனை நமக்குள் வந்தபின் அவன் அடிபட்ட உணர்ச்சி நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.

காரணம் அவன் வெளிப்படுத்தும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நினைவு கொண்டு அதைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வு எனக்குள் ஊடுருவி வேதனையைத் தூண்டச் செய்து அதைக் காட்டி அவனைக் காக்கும்படிச் செய்கின்றது.

அதே சமயத்தில் அங்கே ஒரு போக்கிரி வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்… அவன் அசுர குணங்கள் கொண்டு இந்தக் குழந்தை அடிபட்டதைப் பார்த்தபின் மகிழ்ச்சி அடைகின்றான். இவனுக்கு இப்படித்தான் வேண்டும் என்று சொல்கின்றான். நல்லதைக் காக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

ஆனால் அதைப் போல எண்ணம் கொண்டவன் ரோட்டிலே நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராது திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது. இவனை மோதி விடும் என்ற நிலை வரும் பொழுது
1.இவனுக்குள் இருக்கும் அசுர சக்தி என்ன செய்கின்றது…?
2.அவன் என்னை ஏற்றி விடுவானா…? என்று முரட்டுத்தனமாகப் பார்ப்பான்.
3.ஆனால் அந்த பஸ் இவன் மீது மோதி அடித்த பிற்பாடு தான் இவன் உணர்வான்.
4.ஏனென்றால் எதிர்த்து நிற்கும் சக்தி தான் இது… தன்னைக் காக்கும் சக்தி அங்கே இருக்காது.

முரட்டு குணத்தின் தன்மை கொண்டு இரக்கமற்ற நிலைகளைச் செய்யும் பொழுது “அந்த இரக்கமற்ற உணர்வு… இவனைக் காக்க அவன் எண்ணமே உதவாது…!”

ஆனால் பாசத்தால் குழந்தையில் பால் இரக்கப்பட்டு அவன் வேதனையைச் சுவாசித்து உதவி செய்தாலோ… வேதனையான சத்து இங்கே உடலுக்குள் வந்து விடுகின்றது.

இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தை மலமாக மாற்றுகின்றது. கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்றது தான் ஆறாவது அறிவு.

அதைச் செம்மையான நிலைகள் பயன்படுத்துவதற்குத் தான் யாம் சொல்லும் இந்தத் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அதை உடலுக்குள் கண்ணின் நினைவு கொண்டு நாம் செலுத்தக்கூடிய நிலைதான் ஆத்ம சுத்தி என்பது.

தியானம் என்பது ஒரு நாளைக்கு பத்து நிமிடம் இருந்தால் கூடப் போதுமானது. ஆனால்
1.எப்பொழுது துன்பம் நேருகின்றதோ அந்தத் துன்பம் உடலுக்குள் புகாதபடி
2.அதை நாம் இந்த வாழ் நாள் முழுவதும் சுத்தி செய்து மகரிஷிகள் உணர்வு கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும்

நரசிம்ம அவதாரம் என்பது இதுதான்.

துன்பம் வரும் பொழுது அந்தச் சுவாசம் உடலுக்குள் சென்று அது உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதை உங்களுக்கு வாக்குடன் கூடித்தான் ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எத்தகைய துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அதை நீங்கள் சுவாசிக்க நேர்கின்றது.

சுவாசிக்க நேரும் பொழுது சங்கடமான எண்ணம் உடலுக்குள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதை இது ஊடுருவி அதை அமிழ்த்துகின்றது.

அதற்கு இந்த ஆத்ம சுத்தி அவசியம் தேவை.

செடி கொடிகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்திகளை எடுத்துக் கொள்கின்றது. பாக்கி நாள் முழுவதும் காற்றில் இருக்கக்கூடிய தன் இனமான சக்திகளை எடுத்துத் தன் இனமாகப் பெருக்கிக் கொள்கின்றது.

இதைப் போல் தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்கு நமக்கு அந்த ஆற்றல் தேவை
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமனைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…. விஷ்ணுவைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…! என்று சிவ தத்துவத்தில் சொல்வதும் சிவனைக் கும்பிட்டால் உனக்குச் சோறு கிடைக்காது..! என்று பதிலுக்கு விஷ்ணு தத்துவத்தைச் சார்ந்தவர்கள் சொல்வதும் இப்படி நமக்குள் இயற்கையின் நிலைகளைத் திருத்தித் தான் வாழ்கின்றோமே தவிர உண்மையின் தன்மையை அறிந்து வாழவில்லை.

ஏனென்றால் காசுக்காக வேண்டிப் பக்தி என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு
1.இந்தத் தெய்வத்தை வணங்கினால்தான் உனக்கு எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு
2.தூதுவனாக இருந்து காசு வாங்கி அவன் அவன் பிழைப்பதற்குத்தான் ஆகின்றது.
3.ஆண்டவனிடமிருந்து இவன் வரம் வாங்கித் தரப் போகின்றான்…! என்று தவறான பாதையில் சென்று
4.உண்மையின் இயற்கையின் உணர்வுகளை நாம் அறியவிடாது தடைபடுத்தி விட்டனர்… இன்றும் தடைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மதங்கள் என்ற போர்வையில் மதத்தின் நிலைகளில் அரசன் என்றும் அரசனுக்குக் கீழ் பக்தி என்றும் பக்தி என்ற நிலைகளில் அவன் உருவாக்கியதை நாம் உடலுக்குள் சேர்த்து விட்டால் “அதுவே தெய்வம்” என்றும் உருவாக்கப்பட்டு விட்டது.

1.அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அந்த உணர்வின் தன்மையை நாம் மீண்டும் எண்ணும் போது “தெய்வம் காக்கின்றது” என்றும்
2.ஆனால் அவர்கள் காட்டிய உணர்வுக்கு மாறாக எடுத்தால் “தெய்வ தண்டனை கிடைக்கும்….!” என்று இப்படி மக்களை அச்சுறுத்திவிட்டனர்.
3.மக்களுக்கு உண்மை தெரியாது… அறியவிடாது… அன்றைய அரசர்கள் செய்த பிழை இது.

இப்படி மதம் என்ற நிலையில் போர் என்ற நிலைகள் வரப்பட்டு உலகம் முழுவதற்குமே மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் நிலை தான் வந்தது.

என் மதத்தை காக்க… என் மதத்தைக் காக்க…! என்று போர் முறைகள் தான் வருகிறது. இன்றும் பார்க்கிறோம்.
1.மதத்தின் அடிப்படையில் மக்களை அழிக்கும் உணர்வுகள் தான் விளைகின்றதே தவிர
2.மக்களைக் காக்கும் மதம் எதுவும் இல்லை…!

விஷ்ணு மதம் சிவ மதம் இராமன் மதம் முருகன் மதம் ஜயப்பன் என்று பக்தியின் நிலைகள் வரப்படும் போது ஜயப்பன் கோவிலுக்குப் போகிறவர்களும் முருகன் கோவிலுக்குப் போகிறவர்களும் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
1.பக்தி என்ற நிலையில் நாம் அஞ்ஞான வாழ்கை வாழ்கின்றோம்.
2.மெய் ஞான உணர்வை நாம் பெறவில்லை.

இதைப் போல ஒரு சாமியைக் கும்பிடுகிறவர்களும் இது என் சாமி.. இது உன் சாமி…! என்று இனங்களை வைத்து கோயிலில் இருக்கக்கூடிய மாரியம்மனைக் கும்பிட்டாலும் என்னுடைய இடத்தின் பக்கம் அந்தச் சாமி வந்துவிடுமா… பார்க்கலாம்…! என்ற நிலையில் ஒருவருக்கொருவர் தாக்குவதும்
1.அந்த நல்ல உணர்வுகளை எடுக்க முடியாது தடைப்பட்டு
2.மனிதனுக்கு மனிதன் மடியும் நிலையே வருகின்றது.
3.தெய்வம் நம்மைக் காக்கின்றதா… தெய்வத்தை நாம் காக்கின்றோமோ…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மை அது உணர்ச்சியாகச் செயலாக்கப்படும் போது தெய்வம். அந்த உணர்வின் சக்தி நமக்குள் எடுக்கும் போது அது வித்து… “வினை…”

அந்த உணர்வின் சக்தி நமக்குள் வரும் போது உணர்ச்சிகளாக எண்ணமாகத் தோன்றுகிறது. எந்தச் சுவையின் தன்மை வருகிறதோ – சீதா ராமா…!

1.அந்தந்தச் சுவைக்கு ஒப்ப நம் எண்ணத்தின் உணர்ச்சிகள் இயக்குகிறது என்றும்…
2.இயற்கை நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையையும்…
3.தன்னை அறிந்து கொள்வதற்குத் தான் அத்தனை தத்துவங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்தார்கள்.

இன்று மனிதன் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கிறார்கள் அல்லவா…! மோட்டாருக்கு ஒரு பெயர்.. T.V.க்கு ஒரு பெயர்.. கம்ப்யூட்டருக்கு ஒரு பெயர்.. பின் அதனுடைய உபபொருட்களுக்கு என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரை வைத்து அதை எல்லாம் இணைத்தால் அது இணங்கி இயக்கும்…! என்று தெளிவாக்குகின்றார்கள் அல்லவா…!

இதைப் போன்று மனிதனின் வாழ்கையில் எதை எப்படி இணைக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து மனித உடலுக்குப் பின்… விண் செல்லும் மார்க்கங்களைக் காட்டினார்கள்…! அன்றைய மகரிஷிகள்.

விண் சென்ற ஞானிகள் மூச்சலைகளை நாம் நுகர்ந்து இனி வரும் சந்ததியினருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்

 

இந்த மனித உடல் நமக்கு நிலையானது அல்ல. நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை. நீங்கள் இந்த உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இந்த நச்சுத்தன்மையான உலகத்தில் இருந்து விடுபட வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில்… மனிதன் சீர்குலைந்த நிலையில் செயல்படக்கூடிய நிலைகளும் மனித உருவையே குறைக்கக் கூடிய நிலைகளாகவும் விஷத்தன்மைகள் பரவிக் கொண்டு வருகின்றது.

இனி எந்த நேரம் எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது. அதற்குள் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நிலையான ஒளிச் சரீரமாகப் பெற வேண்டும்.

1.மெய் ஒளியினைப் பெருக்கி அந்த மெய் ஆற்றல்களை உங்களுக்குள் விளைய வைத்து
2.நீங்கள் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு விஞ்ஞானத்தால் வரக்கூடிய விஷத்தினை அது மாய்த்து
3.நல்லதை எண்ணி ஏங்கி வருவோர் உள்ளங்களுக்குள்ளும் ஞானத்தின் உணர்வுகளை விதைத்து
4.அடுத்து வரும் சந்ததியினர் மெய் ஒளியின் தன்மை கொண்டு நிலையான சக்திகளைப் பெறச் செய்வதற்கு உங்கள் மூச்சலைகளே உதவும்.

அதாவது… மெய் ஞானிகள் இட்ட மூச்சலைகள் இன்று நமக்கு எப்படி உதவுகின்றதோ அதே போல வரும் சந்ததியினருக்கு அதைக் கிடைக்கச் செய்ய முடியும்.

ஏனென்றால் இந்த உலகம் மாறப் போவது நிச்சயம். அதாவது மனித உலகம் நினைவிழக்கப் போகின்றது.

ஆதிகாலத்தில் காட்டுமிராண்டிகளாக மனிதன் எப்படி வாழ்ந்தானோ அதைப் போன்று உருப்பெறும் நிலைகளாகி… மனிதனுக்கு மனிதன் தர்மம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு… ஆனால் மற்றவரை வீழ்த்தும் நிலையே வளர்ந்து கொண்டிருக்கின்றது.

அதனால் நச்சுத்தன்மைகள் அதிகமாகி விஷத்தன்மைகளாகப் பரவிக் கொண்டுள்ளது. அணுகுண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் எல்லாம் சாதாரணமாகப் போய்விட்டது… அவை மற்றவர்களைச் சுட்டுப் பொசுக்கும்.

ஆனால் அதைக் காட்டிலும்
1.தாவர இனங்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போட்டு
2.அந்தப் பூச்சிகளைக் கொன்று விட்டு நாம் வாழ வேண்டும் என்று எப்படி விரும்பினோமோ இதைப் போல
3.இந்த உலகத்தில் உள்ள கோடான கோடி நிலைகளையும் மாய்த்துக் கொல்லக்கூடிய
4.விஷமான சக்திகளை ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

ஆக… பூச்சிகளைக் கொன்று தாவர இனங்களை வளர்த்து நாம் வாழ்வதற்காக என்று அதைச் செய்திருந்தாலும்
1.இன்று அதை எல்லாவற்றையுமே போர் ஆயுதங்களாக உருவாக்கி விட்டார்கள்.
2.எந்த நிமிடத்திலும் அத்தகைய ஆயுதங்கள் வெடிக்கலாம்.

அப்படி வெடித்தால் மனிதனுடைய உணர்வுகள் நஞ்சின் தன்மை ஆகி மனிதனுடைய நினைவலைகள் பூரணமாக அழிகின்றது. மனித உரு இருக்கும். ஆனால் மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு புத்தி இல்லாத நிலைகளாகத் தான் செயல்பட வேண்டி வரும்.

குரங்குகளுக்கு மனிதனைப் போன்ற அங்கங்கள் கை கால் உண்டு. மனிதனைக் காட்டிலும் எங்கும் எதிலும் தாவிச் சென்று ஏறக்கூடிய வலிமை இருந்தாலும் மனிதனை ஒத்த… சொல்களைச் சொல்லி மற்றவர்களுக்குப் புரியக்கூடிய நிலையில்… அதை வைத்துத் தன் நிலைகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலைகள் கிடையாது.

மனிதனோ சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற்றவன். ஆக மனிதனை ஒத்த குரங்குக்கே அந்த நிலை இல்லை. ஆக மற்ற உயிரினங்கள் எப்படி…? என்று பார்த்துக் கொள்ளலாம்.

மிருகங்கள் எப்படிக் காட்டுமிராண்டித்தனமாகச் செயல்படுகின்றதோ அது போன்று மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழித்திடும் நிலையாகச் சென்று கொண்டு இருக்கின்றது.

குரங்கிற்கு ஒரு ஆகாரத்தைப் போட்டாலும்… தன் வாய் நிறைய அதை வைத்திருந்தாலும்… மற்ற குரங்குகளை அது அடித்து விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

அதைப் போன்று மனிதர்களுக்குள்ளும் மற்றவர்கள் எதையும் பெற விடாதபடி தானே அனுபவிக்க வேண்டும் என்று ஈவு இரக்கமற்றுச் செயல்படும் நிலைகளாக வந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே இது போன்ற நிலைகளை உணர்ந்து மெய் வழியைப் பெறும் தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.இப்பொழுது நாம் சொல்வது உங்களுக்கு லேசாகத் தெரியலாம்.
2.போகப் போகத்தான் யாம் சொல்லக்கூடிய உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

எப்படிச் செடி கொடிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு உரத்தைப் போட்டவுடன் மரத்திற்குள் அது ஐக்கியமாகி… காற்றிலிருந்து தன் இனமான சக்திகளை எடுத்து அது நல்ல மணிமுத்துகளைக் கொடுக்கின்றது.

அது போல்… அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை உரத்தைப் போன்று நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். உங்கள் நல்ல குணங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அதற்கு யாம் சொன்ன முறைப்படி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் தியானித்துப் பழகிக் கொள்ளுங்கள்.

பழகிய பின்…
1.அடுத்து எப்பொழுது கஷ்டம் வருகின்றதோ அந்தக் கஷ்டம் நிலைத்திருக்காதபடி
2.துன்பமான விஷமான குணங்களை எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு பொசுக்கி விடலாம்.

ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அந்த சக்தி எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று இப்படி ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரேடியோ டிவியில் ஸ்விட்சைப் போட்டவுடன் அந்த அலைவரிசையை எடுத்து அதைச் செயல்படுகின்றதோ அதே போல ஞானிகள் அருளாற்றல் மிக்க அருள் சக்தியை நீங்கள் பெறக்கூடிய தகுதிக்கே இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.அதற்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவவது தியானிக்க வேண்டும்.
2.தியானமிருந்தால் தான் அந்தச் சக்தியைக் கூட்ட முடியும்… உங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று இருக்கக்கூடிய உலகம் விஷ உலகமாக இருக்கின்றது. அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்கு
1.ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்ற மாதிரி மெய் ஞானிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் காற்றிலிருந்து அந்த அரும்பெரும் சக்திகளை எடுக்கலாம்.
3.உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்கும்.
4.சாமி (ஞானகுரு) வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எண்ணினால் இதெல்லலாம் தவறு.

ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

ஏனென்றால் உயிர் எண்ணியதைத்தான் உருவாக்குகின்றது. எண்ணிய சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்காகத்தான் ஞானிகளின் உணர்வை உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவானால் என்ன நடக்கின்றது…?

உதாரணமாக பள்ளிக்குச் சென்று படிக்கின்றோம் என்றால் ஆசிரியர் இது இன்னது… இன்னது தான்…! என்று சொல்கிறார். அவர் சொன்னபடி நாம் எடுத்துக் கொண்டால்
1.அந்தக் கணக்குப் பிரகாரம் இயந்திரத்தைச் செய்யலாம்… இயக்கலாம்
2.கணக்கீடுகளைச் (CALCULATION) செய்யலாம்
3.இந்தந்தப் பொருள் இப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதற்குப் பதில் ஆசிரியரே வந்து எனக்கு எல்லாம் செய்து கொடுப்பார் என்றால்… எப்படி…? நீங்கள் வீட்டுக்குப் போன பின் ஆசிரியர் வந்து எப்படிச் சொல்லிக் கொடுப்பார்…?

சொல்லிக் கொடுப்பார்… எழுதிக் கொடுத்து அதையும் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தால் ஆசிரியர் வேலை அன்ன ஆவது…?

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்…? என்றால் சாமியார் செய்து தருவார்… சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்…! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2,“நம் உயிர் தான்…!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை…!

காரணம்… ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கி விடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது… விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது… இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறிய விடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்

 

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றார். அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி
1.அதனுடன் சுழன்று உங்கள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள் அது பெறும் உணர்ச்சியின் நிலையை
3.அணுவாக மாற்றும் நிலையாக உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.
4.உங்களால் நினைத்த நேரத்தில் அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காண முடியும்.
5.அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பகைமை உணர்வு வராது “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள் குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னைப் பக்குவப்படுத்தியது போல் உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில் எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும்… அடுத்து என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும் இது உதவுகின்றது.

1.குறுகிய காலமே இருக்கும் இந்த உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்
2.உயிருக்கு அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.

இது தான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஆறாவது அறிவின் துணை கொண்டு “நம் அணுக்களை ஒளியின் உணர்வாக உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான்” பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது… அதே சமயத்தில்
1.அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுவாகும் பொழுது
2.உயிரைப் போன்றே ஆக்கப்படும் பொழுது நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.
3.இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது தவறு இது கெட்டது என்று உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

1.அவனே நம்மை உருவாக்கினான்… ஈசனாக இருந்து உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
2.கடவுள் என்ற நிலையில் நாம் எதனை நுகர்ந்தோமோ அவை நம்முள் நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது.
3.அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை… அவன் தான் உருவாக்குகின்றான்.
4.ஆகவே அமைதி கொண்டிருக்கும் நேரத்தில் உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குருநாதர் என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து
1.உங்கள் கண்ணின் நினைவை என்னிடத்தில் செலுத்தினாலும் நீங்களும் அண்டத்தில் மிதக்கின்றீர்கள்.
2.அதனின் உணர்வை நினைவை கொள்ளும் பொழுது அதன் அருளை நீங்களும் பெற முடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன்.

அவன் துருவனாகி துருவ நட்சத்திரமானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றுகின்றான். அதன் உணர்வின் தன்மை இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

நீங்கள் சிறிதளவே இருப்பினும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்தப் பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு… ஏழாவது ஒளி. இதைத்தான் சூரிய பகவான் வருகின்றான் என்று வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது.

அந்த ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால் நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும். ஆகவே
1.மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும் போது ஏழாவது ஒளியின் நிலைகள் அடைதல் வேண்டும்.
2.இதுதான் “ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்” என்பது.
3.அவன் தனி உலகமாக ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன் ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து ஒளியாக மாற்றுவது ஏழு.

காவியங்களில் ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன் என்று சொல்கின்றனர். மனிதனுக்குள் உணர்வுக்குள் இந்த ஏழு லோகத்திற்குள் தேடி நாம் காணுதல் வேண்டும். மேலே ஏழு என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு. ஆக நமக்குள் தேடினால் உண்டு.

அகண்ட அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்தில் உண்டு. ஆகவே நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று உயிர் என்ற நிலை பெற்று உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும் இருள் சூழும் நிலைகளிலிருந்து மீள்தல் வேண்டும்.

ஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள் ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது அந்த வர்ணத்தைத்தான் காட்டுகின்றது.
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ அந்த வர்ணத்தின் செயலாகத்தான்
2.இருள் சூழ்வதும் சிந்திப்பதும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.
3.ஆகவே பேரருள் என்ற உணர்வினை எடுத்து நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை உங்களில் உருவாக்கத்தான் இந்த நிலை.

யாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது நமக்குள் விளையாது அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு இருளை நீக்கப் பழக வேண்டும்.

இதற்குத்தான்
1.அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நீங்கள் நுகர்ந்து
2.இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வைப் பெற வேண்டும் என்று தியான நிலைகளிலேயே உபதேசத்தைக் கொடுத்து
3.உங்களை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இமயமலையில் வைத்து எனக்கு (ஞானகுரு) அனுபவங்களைக் கொடுத்தார். பனிப்பாறைகளுக்கு மத்தியில் நடந்து செல்லும் பொழுது நான் வந்த பாதையில் உள்ள பாறைகள் திடீரென்று இடிந்து விழுந்தது.

இடிந்ததும் நான் எப்படித் திரும்பப் போவது…? என்ற பயம் வந்து விட்டது. என் மனைவி குழந்தைகளின் மீது எண்ணம் வந்து விட்டது.

அப்பொழுது குருநாதர் சொல்கிறார். இன்று நீ பத்ரிநாத் கேதார்நாத் எல்லாம் போய்விட்டு வந்தாய். பல நிலைகளை அங்கே நீ தெரிந்து கொண்டாய்.

ஆனால் அந்தத் தெரிந்த உணர்வு கொண்டு வந்தாலும் இங்கே இந்தப் பாறையை கடந்து செல்லப்படும் பொழுது பனிப் பாறைகள் நொறுங்கி விழுந்துவிட்டது.

1.நொறுங்கிய பின் நீ எப்படித் திரும்பப் போவது என்று பயப்படுகின்றாய்.
2.அதனால் உனக்குள் ஒரு புயலே வந்துவிட்டது.
3.தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
4.உன் மனைவியையும் உன் மக்களையும் நீ எண்ணத் தொடங்கி விட்டாய்.
5.பாசத்தால் அப்படி எண்ணும் போது இந்தக் குளிரிலிருந்து உன்னால் தப்ப முடியவில்லை.
6.(ஏனென்றால் குருநாதர் அந்தக் குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக நட்சத்திர உணர்வுகளை என்ன எண்ணச் சொல்லியிருந்தார். அதனால் குளிர் பாதிக்கவில்லை – பாச உணர்வால் மனைவி மக்களை எண்ணியதும் குரு சொன்னதை நான் எண்ண முடியவில்லை)
7.நீயே தப்ப முடியவில்லை என்றால் நீ போய் யாரைக் காப்பாற்றப் போகிறாய் என்று கேட்டார்…!

ஆகவே
“மனமே இனியாகிலும் மயங்காதே…
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…
நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ
நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? என்ற பாடலைப் பாடினார்.

நீ இந்த உடல் ஆசையை வைக்காதே. எது நடக்க வேண்டுமோ… அது நடக்கும். ஆனால் தீமைகள் நடக்காது தடுப்பதற்கு… உனக்கு நான் கொடுத்த சக்தி… “அந்தத் துருவ நட்சத்திரத்தை பற்றிச் சொல்லி உள்ளேன்…”

ஒரு சந்தர்ப்பம் நீ விமானத்தில் செல்லப்படும் போது அந்த விமானம் கவிழும் தருணத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அப்பொழுது ஒரு நொடிக்குள் அங்கே நீ செலுத்தினாய்.
1.நீ விமானத்தில் உள்ளோரையும் காத்தாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்.
2.இது உனக்குள் இருக்கக்கூடிய எண்ண வலு…!

அதே சமயத்தில் எல்லோருமே ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்வோர் தான். அதிலிருந்து யாரும் தப்புவது இல்லை.

1.நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி…
2.பெரிய மகான் என்று மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டு இருந்தாலும் சரி…
3.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்… ஏனென்றால் எதனுடைய அழுத்தம் அதிகமாகிறதோ அப்பொழுது உயிர் இந்த உடலை விட்டுப் பிரியத் தான் செய்யும்.

இந்த உடல் இச்சையை நீ பட்டு “என் மனைவி… என் குழந்தை…!” என்று நீ எண்ணினால் இந்த உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய். இப்பொழுது உன் உயிரான்மா பிரிந்தால்
1.உன் குழந்தையின் ஈர்ப்புக்குள் போவாய்… அல்லது உன் மனைவியின் ஈர்ப்புக்குள் தான் போக முடியும்.
2.அங்கே சென்ற பின் அந்த குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க விடுவாயா..?

நீ இங்கு இறந்து விடுகின்றாய் என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையோடு இருக்கப்படும் போது இதே உணர்வுகள் அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக ஆக்கி அவர்களையும் நோயாக்கி விடுகின்றாய்.

உன்னை நம்பிய அனைவருக்கும் இதே வேதனைகள் உருவாக்கபட்டு அவர்களையும் துரித நிலையில் மடியும் தன்மையை உருவாக்குகின்றாய். ஆகவே…
1.அந்த வேதனையைத் தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும்.
2.நீ அவர்களைக் காக்க முடியாது.
3.பாசத்தால் நீ எண்ணிய உணர்வுகள் கொண்டு அந்த உணர்வுடன் மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய்
4.அவர்களையும் அழித்து விடுகின்றாய்…!

உடலுக்குப் பின் எந்த வேதனையையும் துயரத்தையும் நீ பட்டாயோ உன் உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும்.
1.இன்று நீ மனிதனாய் இருக்கின்றாய்.
2.அடுத்து நீ எங்கே போகின்றாய் தெரியுமா..? என்று கேட்கின்றார் குருநாதர்.

உன் உடலில் எந்த வேதனைகளை அதிகமாக எடுத்தாயோ அந்த விஷம் (வேதனை என்றாலே விஷம்) என்ற நிலையைத் தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் உன்னை உன் உயிர் அழைத்துச் செல்லும்.

பாம்பாகவோ மற்ற விஷமான ஜெந்துக்களாகவோ உன்னை அதற்குத் அங்கே உருவாக்கி விடும் என்று இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்சியாகவே தருகின்றார் குருநாதர்.

ஆனால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகரித்து விட்டால்
2.இந்த மனித உடல் என்ற இச்சையில் இருந்து விடுபட்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலே ஒளியான அணுக்ககளாக விளைந்து
4.உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது.
5.உடலை விட்டு எந்த நேரம் உயிர் பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் அழைத்துச் சென்று
6.உன்னைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும்… நீ அழியா ஒளியின் சரீரம் பெறலாம்…! என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார்.

விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

 

அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படித்தான் இருந்தாலும் பிறருடைய துன்பங்களைப் பார்க்கவோ கேட்கவோ நேர்கின்றது. சுவாசத்தின் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வந்து விடுகிறது. அதை நீக்குவது யார்…?

1.எதிலே எடுத்துக் கொண்டாலும் “விஷம்…” எல்லாவற்றிலுமே ஊடுருவி இயக்கும்.
2.நல்ல குணங்களாக இருந்தாலும் ராமா லட்சுமணா என்று தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.லட்சுமணா…! என்றால் விஷத்தின் இயக்கச் சக்தி.

மனித உடலுக்குள் விஷத்தை நீக்கி விட்டு இந்த உணர்வின் சத்தான நிலைகள் சீதா ராமனாக நல்ல குணங்கள் இங்கே படைத்திருந்தாலும் அதே குணத்தைச் சுவாசிக்கும் பொழுது காற்றிற்குள் இருக்கக்கூடிய
1.அதாவது இந்த விஷம் கலந்திருந்தால்தான்
2.நாம் சுவாசித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாக வருகின்றது.

வேதனை என்ற உணர்வு லட்சுமணா என்ற இயக்கமாக வருகின்றது. இதைப் போல நமக்குள் அது இருக்கின்றது.

பேரண்டம் பெரும் நிலைகள் கொண்டு உருவானாலும்
1.இந்த அசுர சக்திகளால் தான் மற்றொன்றை இயக்க முடிகிறது.
2.பூமிக்குள் இருக்கக்கூடிய விஷத்தினுடைய ஆற்றல் தான் இந்தப் பூமியையே சுழலச் செய்கின்றது.

அதே போல சூரியன் இவ்வளவு பிரகாசமாக ஆக வேண்டுமென்றால்
1.விஷத்தின் தாக்குதல் கொண்டு தான் சூரியன் வேகமாக இயங்கி
2.ஒளிப் பிளம்பாக மற்றொன்றை “ஊடுருவிச் செல்லும்…” அதாவது அந்த வேகம் துடித்து எழுகின்றது.
3.ஆகவே இந்த விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

அதற்குத்தான் அன்று ஒரு சிறு கதையை எழுதிக் காட்டினார்கள் அசுரன் என்பவன் ஈரேழு பதினாலு லோகத்திலும் “எனக்கு யாரிடத்திலும் இறப்பு வரக்கூடாது…” என்று வரம் கேட்கின்றார்.

ஈரேழு பதினாலு லோகம் என்றால் சூரியனிலிருந்து வரக்கூடிய ஆற்றல் ஏழு… மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் நிலைகள் ஏழு.

ஈரேழு பதினாலு லோகம் சூரியனால் உற்பத்தியாகும் எந்த நிலைகளிலிருந்தும் எனக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. மனிதனுக்குள் வரக்கூடிய விஷத்தின் தன்மை எதுவும் என்னை அழித்துவிடக் கூடாது என்று வரத்தைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றான்.

விஷ்ணுவும் சரி என்று கொடுத்து விடுகின்றார்.

மிருகத்தாலும் மனிதனாலும் பரந்த வெளியிலும் பேரண்டத்தில் எது இருந்தாலும் இந்த ஈரேழு பதினாலு லோகத்தில் எங்கேயுமே எனக்கு இறப்பு வரக்கூடாது என்ற வரத்தை வாங்குகிறான்.

1.நாம் சுவாசிக்கும் சுவாசத்திற்குள்ளும் இந்த அரக்க குணம் உண்டு.
2.அந்த உணர்வின் வேகம் இல்லை என்றால் துடிப்பு இல்லை.
3.எந்த இடத்திலும் விஷத்தின் தன்மை படரவில்லை என்றால் இயக்க முடியாது.
4.அப்படிப்பட்ட ஆட்சி புரியக்கூடிய நிலைகள் தான் அது.

நரசிம்ம அவதாரம்… என்று வாசல்படியில் வைத்து அசுரனைக் கொல்வதாகக் காட்டுகின்றார்கள். சிங்க முகத்தையும் மனித உடலையும் வைத்து நரசிம்ம அவதாரம் என்று காட்டுகின்றார்கள்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கின்றனர்… என்னைத் திட்டுகின்றார். அதை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது…?

என் உடலுக்குள் அந்த அசுர சக்திகள் சேர்ந்து… அந்த வேகத்தைக் கூட்டி… அவருடைய கெட்ட குணத்தை எனக்குள் உண்டாக்கி.. என்னை அதன் வழிக்கு இழுத்துச் செல்கிறது.

இதைத் தடுப்பதற்கு…
1.ஈஸ்வரா என்று உயிர் வழியாக மெய் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது வாசல்படி ஆகிறது.
2.முன்னாடி இருக்கும் அந்தக் கெட்ட சக்தி உள்ளே புகாதபடி தடுக்கும் ஆற்றல் வருகிறது.

இதைத்தான் நரசிம்ம அவதாரம் என்பது.

வராகன் கெட்டதை எண்ணாது நல்லதை எப்படி எடுத்துக் கொண்டதோ அதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை உருவாக்க வேண்டும்.

கெட்டது தனக்குள் வராதபடி எவர் ஒருவர் இப்படித் தடுக்கின்றார்களோ அது நரசிம்ம அவதாரம். கேட்டது அழிக்கப்பட வேண்டும் என்று வாசல்படியில் வைத்து அழித்து விடுகின்றார்கள்.

பிறர் யார் எப்படித் திட்டினாலும் கேவலமாகப் பேசினாலும் அந்த உணர்வு அப்படியே இயக்கினால் “இனி என்ன வாழ்க்கை…!” என்று நம்மை அது அழித்து விடுகிறது. அந்த அசுரனிடம் சிக்கிவிடுகின்றோம்.

அதே சமயத்தில் திட்டுகிறார் என்று கோபம் நமக்கு வந்தால் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று அவரை அங்கே அழிக்கச் செல்வோம். ஆனால் அழிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நல்ல குணங்களை அழித்து உடலில் நோயாக மாற்றுகின்றது.

ஆகவே…
1.அந்த அசுர சக்தி இப்படித் தான் எல்லா வகைகளிலும் ஊடுருவும் என்று
2.அவன் எங்கேயும் எனக்கு சாவு வரக்கூடாது என்ற வரத்தை வாங்கி அந்த அசுர சக்தி மற்றதைக் கொல்வதாகச் சாஸ்திரம் காட்டுகின்றது.

ஆனால்
1.நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அசுர சக்திகள் செயலிழக்கப்படுகின்றது.

நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காப்பதற்குத் தான் நரசிம்ம அவதாரத்தை அன்று காட்டினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் தன் பாதரசத்தால் தான் கவர்ந்தாலும் மற்ற உணர்வலைகள் வரப்படும்போது மோதி இது நெருப்பாகி கவர்ந்தவற்றில் உள்ள விஷத்தைப் பிரித்து விடுகின்றது. அதனுடைய சந்தர்ப்பத்தால் அது செயல்படுத்துகின்றது

அதே போல் நம்முடைய சந்தர்ப்பம் தீமை என்ற உணர்வுகளை கண்ணால் கவர்ந்து அந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்துதான் இந்த மனித வாழ்க்கையை நடத்துகின்றோம். அப்படி வரக்கூடிய தீமையான உணர்வுகளை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி
2.எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்ற உணர்வை
3.உள்முகமாக உடல் முழுவதற்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்த வேண்டும்,

அப்படி எடுத்துக் கொண்டால் நம்மைப் பயமுறுத்தும்… அச்சுறுத்தும்… கோப்படுத்தும்… வேதனைபடுத்தும்… இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் நமக்குள் புகாது தடுத்துக் கொள்ளலாம்…! என்று அனுபவபூர்வமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.

எங்கே வைத்து..?

டெல்லியிலிருந்து விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது விமானம் கவிழும் சந்தர்ப்பத்தில் இந்த உபதேசத்தைக் கொடுக்கின்றார்.

“கவிழப் போகிறது…!” என்ற நிலை ஆன பின் விமானத்தில் உள்ள பிரயாணிகள் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நீ ஏன் பயப்படவில்லை..?
1.நீ இந்த உடலின் இச்சைப்படவில்லை
2.நீ உயிரின் இச்சைப்பட்டாய்…!
3.ஏனென்றால் உயிர் ஒளியானது… அறியும் தன்மை ஆனது…!
4.அதே அறியும் தன்மையை நீ அச்சம் இல்லாமல் எடுப்பதனால் உனது காக்கும் சக்தியும் அதிலே சேரலாம்…! என்று சொன்னார்.

அத்தனை பேர் பயந்தாலும் “நீ ஒருவன் இந்த உயர்ந்த உணர்வுடன் வலிமையாக இருந்ததால்… விமானம் கவிழாது காக்கப்பட்டது..!” என்று காட்டுகின்றார்.

ஆக இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று அங்கு காட்டுகின்றார்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் எப்படி இயங்குகின்றது…? என்பதை குருநாதர் இப்படி எமக்குப் பல வழிகளிலும் காட்டினார்.
1.எல்லாவற்றிலும் தப்பும் உணர்வுகள் மனிதனுக்கு உண்டு.
2.எல்லாவற்றிலும் தப்பிய மனிதன்தான் அகத்தியன்.

அவன் துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்… துருவ நட்சத்திரமானான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் அதிகமாக்கினால்… நம் ஆன்மாவில் பெருக்கிக் கொண்டால்… “தீமையான உணர்வுகள் எது வந்தாலும் அதை விலக்கித் தள்ளிவிடும்…!”

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ள முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி

 

சூரியனிலிருந்து தோன்றிய அதீத வெப்பத்தை உண்டாக்கும் ஒரு அணுவும் நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய கதிரியக்கமும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
1.இயற்கையின் நிலைகள் ஒன்றாக இணைந்து உயிரின் துடிப்பாகும் பொழுது ஈஸ்வரா.
2.அந்த இயக்கத்திற்குள் இருக்கக்கூடிய வெப்பம் விஷ்ணு.
3.நாராயணன் விண்ணிலே சர்வேஸ்வரனாக உருப்பெறும் பொழுது ஒற்றைப்படையில் இங்கே ஈஸ்வரா என்று உருவாகின்றார்.

அதாவது நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகத் தோன்றுகின்றது.

பிரபஞ்சத்திற்குள் தோன்றிய இந்த உயிரணு தான் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை இது சுவாசிக்கின்றது.

உயிரான ஒளி இதுவும் சக்தி தான்… ஆனால் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி…! தாவர இனச் சத்தை இழுத்த உடனே அது உறைந்து சிவமாகிறது… “சிவசக்தி” ஆகிறது.

இந்த உயிர் தாவர இனச்சத்தைச் சேர்த்து புழுவாகும் பொழுது அந்தப் புழுவிற்குள் அந்த உணர்வின் சக்தியாக வினையாகச் சேருகிறது. வினையாகச் சேர்த்த நிலையில் தான் எடுத்துக் கொண்ட வினைக்கு நாயகனாகப் புழுவாகத் தோன்றுகின்றது… “விநாயகா…”

தாவர இனத்தைத் தனக்குள் சேர்க்கும் பொழுது சக்தி சிவம் ஆகின்றது… சிவத்திற்குள் சக்தி இயங்குகின்றது.

உதாரணமாக வேப்ப மரத்தின் சத்து இதற்குள் இணைந்து புழுவாகும் பொழுது சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த உடல் பெறுகிறது.

வினைக்கு நாயகனாக உடல் பெற்றாலும் வேப்ப மரத்தின் தன்மை கசப்பு. இந்த உயிரின் தன்மை தான் ஈர்த்து எடுத்துக் கொண்ட இந்தச் சக்தியோ லட்சுமி.

காந்தம்… “லட்சுமி நாராயணா” என்று அங்கே சூரியனை வளர்த்தது. உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த இயக்கம் ஈஸ்வரன். இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஈர்ப்பு சக்தி லட்சுமி.

ஒரு பொருளின் தன்மை இதனுடன் இணைந்து உருப்பெறப்படும் பொழுது “பராசக்தி…” எந்த மணத்தை அதனுடன் இணைக்கின்றதோ அந்த மணத்தை வெளிப்படுத்தும் போது ஞானம் “சரஸ்வதி…”

இணையக்கூடிய சந்தர்ப்பம் “பிரம்மா…” ஆனால் அந்த மணம் பிரணவம் ஜீவன்…! அந்தக் குணத்திற்குத் தக்கவாறு இயக்கம். இந்த உணர்வின் தன்மை ஊட்டுவதற்கு அந்த உயிர் தனக்குள் சேர்த்து உருப் பெறும் சக்தியாக மாறுகின்றது.

உயிரில் இருக்கக்கூடிய காந்தம் தாவர இனச் சத்தை இழுக்கின்றது. லட்சுமி. இந்த வெப்பத்திற்குள் ஆனபின் உடலாக உருப் பெறச் செய்கின்றது பராசக்தி.

ஆனால் வேப்ப மரத்தின் கசப்பான சத்து வரப்படும் பொழுது மணம் ஞானம். இது பிரணவம். அந்த மணத்தின் நிலை கொண்டு இது ஜீவன் பெறுகின்றது.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் பிரணவம் என்கிற பொழுது ஓ…
2.அந்த வாசனையை எடுத்து ம்… என்று தனக்குள் சேர்க்கப்படும் பொழுது “சிவம்… ஓம் நமச்சிவாய…!”

அந்த உயிர் தனக்குள் அதனுடைய சக்தியாச் சேர்க்கின்றது. ஆனாலும் இதில் இருக்கக்கூடிய இந்த காந்தம் வேப்ப மரத்தின் சத்தை இழுத்து தனக்குள் இணைந்து வளர செய்யக்கூடிய சக்திக்குப் பெயர் “சீதா ராமா…”

சீதா என்பது சுவை. லட்சுமிதான் தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த சுவையின் சத்தைத் தனக்குள் சேர்த்த வினையாக அந்த உடலுக்குள் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமன் ஆகின்றது.

நாராயணன் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றி நான் ராமனாகப் பிறக்கப் போகின்றேன் என்ற நிலை வரப்படும் பொழுது இந்த ராமன் யார்…? சீதா ராமா.

தான் கவர்ந்து கொண்ட இந்தச் சக்தி… தன் உடலாகி உடலுக்குள் விளைந்து அந்த உணர்வின் சத்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமா. அந்தச் சுவையால் எடுத்துக் கொண்டு விளைந்த அந்த வித்து.

அத்வைதம் துவைதம் காயத்ரி என்று சொல்வார்கள். காயத்ரி என்றால் என்ன…?

இந்த பூமியான பரத்திற்குள் சகல சக்திகளும் இருக்கின்றது. ஒரு வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்த அலைகள் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

கவர்ந்து கொண்ட இந்த சக்தியை இதே வேப்ப மரத்திலிருந்து எடுத்துக் கொண்ட அந்தப் புழு இதைச் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை மோதி.. தான் அறியும் சக்தியாகப் பெறுகின்றது. புழுவிற்கு அது ஞானம்.

1.வேப்ப மரத்தின் கசப்பு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமியின் பரத்திலே பரவச் செய்கிறது… இது “பரமாத்மா…”
2.அதை இந்தப் புழு இழுத்துத் தன் உடலுக்கு அருகில் வரும் பொழுது அதனின் “ஆத்மா…”
3.பரமாத்மாவிலிருந்து சுவாசித்து அதனின் ஆன்மாவாக்கி உடலுக்குள் சென்ற உடனே “ஜீவாத்மா…”
4.உடலுடன் சேர்த்து விளைந்தது உயிருடன் இணையும் போது “உயிரான்மா…!”
5.பிரம்மாவிற்கு நான்கு தலையைப் போட்டிருப்பார்கள்… நான்காக உருப்பெறச் செய்வது.
6.எடுத்துக் கொண்ட சக்தி அது முழுமையாகின்றது – காயத்ரி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மிளகாய் காரமாக இருக்கின்றது. ஆனால் குழம்பு வைக்கிறோம் என்றால் அந்தக் காரத்தைச் சேர்த்தவுடன் ருசியாக இருக்கிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. அதைக் குழம்பில் அளவோடு சேர்க்கப்படும் போது ருசியாக இருக்கிறது.

விஷமோ மனிதனைக் கொன்று விடுகிறது, ஆனால் எந்த வைத்தியமாக இருந்தாலும் சரி
1.நல்ல மருந்துடன் அந்த அளவு கோல்படி விஷத்தைச் சேர்த்த பின்
2.அது அந்த மருந்துக்கே வீரிய சக்தியாகின்றது.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தால் மனிதனைக் கொல்கின்றது. ஆனால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விட்டால் விஷம் தணிந்து அந்தப் பாலுக்கே அது வீரிய சக்தி கொடுக்கின்றது.

இதே போல் தான் நல்ல மருந்துக்குள் விஷத்தைக் கலந்தால் வேகமாக ஊடுருவிச் செல்லும். அந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் அந்த மருந்தும் வலுவாகிறது.

மருந்தை நாம் உட்கொண்டால் நம் உடலில் விஷத்தன்மை கொண்ட அணுக்களுக்கு இது எதிர்மறையாகி மறைவிடமாகும்போது அதற்கு உணவு போகாதபடி தடுக்கின்றது.

கெட்ட அணுக்களுக்குச் சிறிது காலம் உணவு கிடைக்கவில்லை என்றால் அது ஆகாரம் இல்லாமல் மடிகின்றது. இதைப் போன்ற நிலையில் மனிதன் தனக்குள் உண்மையின் உணர்வை அறிந்து செயல்டும் ஆற்றல் பெற்றவன்.

சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் விஷத்தின் தன்மைகளை மாற்ற அருள் ஞானியின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது விஷத்தை அடக்கி தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

நாகப்பாம்பு போன்ற பாம்பினங்கள் தன் உடலிலே இருக்கக்கூடிய விஷத்தை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சுகின்றது. அதையே உணவாக எடுக்கின்றது. இருந்தாலும் தன் உடலில் விஷத்தின் தன்மையைச் சேமிப்பாக்குகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு உடலிலும் விஷத் தன்மை உண்டு.
1.பாம்பு அதனைத் தனக்குள் ஜீரணித்து
2.அந்த உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் போது “நாகரத்தினமாக…!” மாறுகின்றது.

அத்தகைய பாம்பினங்கள் சுமார் நூறு வருடம் வாழ்ந்தால் அதன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெறுகிறது. ஒளித் தன்மை அடைகின்றது. ஆனாலும் அதற்கு வளர்ச்சி இல்லை.

ஆனால் மனிதனாகத் தோன்றிய நிலையில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மைகள் மோதலாகும்போது
2.ஜீவணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது துருவ நட்சத்திரம்
3.நம் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி நுகரப்படும் போது
4.அதனைக் கவர்ந்து ஒளியாக மாற்றுகின்றார் துருவ மகரிஷி துருவ நட்சதிரத்திரமாக…!

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பலராம்… பலருடைய எண்ணங்கள் இருந்தாலும் கோபப்படுவதோ வேதனைப்படுவதோ சலிப்பு அடைவதோ இது எல்லாம் வாலி. அதை எல்லாம் எடுத்துக் கொண்டால் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

1.இருளாக இருக்கும் நிலையில் அங்கே என்ன சாமான் இருக்கின்றது…? அறியாதபடி தத்தளிக்கின்றோம்
2.ஆனால் வெளிச்சத்தைக் கண்டபின் இன்ன பொருள் அங்கே இருக்கின்றது என்று அறிகின்றோம்
3.ஆக நமக்குள் மகிழ்ச்சி பெறச் செய்வதும் ஒரு பொருளை அறியச் செய்வதும் ஒளி (வெளிச்சம்).

அந்தத் துருவ மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து “ஈஸ்வரா…” என்று அவனிடம் வேண்டி… அது எங்கள் உடல் முழுதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்தும் போது இதன் உணர்வின் வலிமை பெறுகிறது. ஒளியாக மாற்றுகின்றது.

அப்பொழுது மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற உணர்வை உணர்ந்தாலும் நமக்குள் அந்த நினைவு வருவதில்லை.

இதைத்தான் கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது “நரசிம்ம அவதாரம்…” என்று காட்டப்படுகின்றது.
1.இந்த மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைத் தனக்குள் புகாது எவர் தடுக்கின்றனரோ
2.அவரே உயிருடன் ஒன்றி கல்கியின் தன்மை பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்

 

சாப்பாடு போடுகிறார்கள்… நன்றாகத் தான் இருக்கிறது என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா…?
1.அந்தச் சுவையான உணவை உட்கொண்டால் தானே நல்லது.
2.ஆகவே போடக்கூடிய உணவை நல்ல முறையில் சாப்பிட வேண்டும்.
3.அப்பொழுது அந்த ருசியின் தன்மை தெரியும்.

இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருக்கின்றது…!” என்று சொல்கிறார். எப்படி இருந்தது…? நன்றாக இருந்தது…!

நன்றாக இருந்தது என்றே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்கிறது…? என்று சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்.

ஏனென்றால் யாம் அடிக்கடி உபதேசித்த உணர்வுகளில் உள்ள உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக உடலிலே ஒரு புண் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். வேதனையாக இருந்தாலும் மருந்தைப் போடுகின்றோம். முதலில் மருந்தைப் போட்டாலும் சிறிது வேதனையாகத் தான் இருக்கும்.

புண் ஆற வேண்டும் என்று ஆசையுடன் அந்த மருந்தைப் போடுகின்றோம்.
1.ஆனால் மருந்தைப் போட்ட பின் கடுகடுப்பாகிவிட்டால் என்ன இப்படி வேதனை வருகின்றது…? என்று
2.மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமோ…?

அது போல் தான் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ விதமான வேதனைகள் தோற்றுவிக்கின்றது. அது எத்தனை தோன்றினாலும் அதை மாற்றி அமைத்த அருள் ஞானிகள் உணர்வுகளை அடிக்கடி எடுத்து நுகர்தல் வேண்டும். அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.

நான் “என்ன தான் இப்பொழுது உங்களுக்குச் சக்தியை கொடுத்தாலும்…”
1.அதை நீங்கள் “எடுத்துக் கொள்ளக்கூடிய முறைகளில் தான் இருக்கிறதே தவிர…”
2.நான் கொடுத்தவுடனே நீங்கள் அதைப் பெறுவது என்பது அல்ல.
3.ஆனால் எவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஆனால் அந்தச் சக்தியைப் பற்றி… அதன் வலிமையைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் கொடுத்த நிலைகள் இப்படித்தான் ஆகிவிட்டது.
1.எனக்கே சக்தி இருக்கின்றது… சாமியினுடைய தயவு என்ன வேண்டி இருக்கின்றது…? என்று
2.பெரும்பகுதியானவர்கள் பிய்த்துக் கொண்டு சென்று விட்டார்கள்.

எல்லோருக்கும் இதைத் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அற்புதங்களை எல்லாம் அவர்களைச் செய்யும்படி செயல்படுத்தினேன்… அது உலகுக்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…! என்று நினைத்தேன்.

கடைசியில் எல்லோரும் ஆசையை வளர்க்கும் நிலையாகவே சென்று விட்டது. ஆக மொத்தம்…
1.ஒருவருக்குப் புரியக்கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அதை அடுத்தவர்கள் புரிந்துவிடக் கூடாது என்று மடக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் பவானியில் இப்படித்தான் ஒரு அம்மாவிற்குக் காட்சிகளை எல்லாம் காண்பித்தேன். பெற வேண்டும் என்ற ஆசை அந்த அம்மாவிடம் இருந்தது.

அந்த அம்மா மூலமாகவே மற்றொருவருக்கு நோய்களைப் போக்கும்படிச் செயல்படுத்தியது. அங்கு ஆசையை ஏற்படுத்தியது. ஆசை ஏற்பட்ட பின் அதன் வழி தியானத்திற்கு வருகின்றது.

தோஷங்களை எப்படி நீக்குவது…? என்று தான் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்தது. அடுத்து என்னைக் கேட்காமலே பல வேலைகளைச் செய்யத் தொடங்குகிறது.
ஆனால் கடைசியில் தன்னிச்சையாக அதைச் செயல்படுத்திய பின் அணிந்திருக்கும் சேலை எல்லாம் ஓட்டை ஓட்டையாக விழுந்து விட்டது… உடலில் காயமாகவில்லை.

அதற்குப் பின் அந்த அம்மாவிடம் சொன்னேன். ஆரம்பத்தில் உனக்கு எல்லாம் தெரிய வைத்தேன். அதை வைத்துத் தோஷங்களை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாய்.
1.ஆனால் அது எப்படி உன் வழியில் திரும்ப வருகின்றது பார்…
2.அதிலிருந்தெல்லாம் காக்கக்கூடிய குருவினுடைய சக்தி உனக்கு வேண்டும் அல்லவா என்று தெளிவாக்கினேன்.

உதாரணமாக… ஒருவருடைய நோயைப் பற்றிக் கேட்டு விசாரிக்கின்றோம். நமக்குள் பதிவாகி விட்டால் நம்மையும் அந்த நோயின் உணர்வு இயக்குகின்றது.

அதே போன்று
1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய பின் அதைப் பெறும் தகுதி உங்களுக்கு தகுதி வருகிறது.
2.அந்த தகுதி உங்களுக்கு வரவேண்டும் என்பதற்குத் தான் உபதேசிப்பது.

எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது எனக்குள் மகிழ்ச்சி வளர்கின்றது. அதே போன்று நீங்களும் செய்தீர்கள் என்றால் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் தோன்றும்.

கடும் தவமிருந்த அந்த மகா ஞானிகளுடைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற வேண்டும்… பேரின்பத்தைப் பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன். அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

1.ஒன்று பதிவு
2.மீண்டும் நினைவு…!
3.அந்த நினைவு கொண்டு நீங்கள் அதை வளர்க்க முடியும்.
4.ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்.

ஆக வாழ்க்கையில் எது வந்தாலும் அதை நான் சீர்படுத்துவேன் என்று வலுப் பெறுங்கள்… அதைச் செம்மைப்படுத்த முடியும். ஆசை ஒரு பக்கம் எண்ணம் ஒரு பக்கமாக சென்று கொண்டிருந்தால் முழுமை பெறுவது கஷ்டம்.

ஆகவே கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் நிலைக்கு… அந்த வளர்ச்சிக்கு நீங்கள் கொண்டு வர வேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெருக்க வேண்டும்.
1.அந்த அருள் வழியிலேயே வாழ வேண்டும் என்று
2.நாம் என்றைக்குச் செயல்படுத்துகின்றோமோ… அதை நிச்சயம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் சக்திகள் (துகள்கள்) சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதினால் “மின்னலாக” மாறுகின்றது.

அந்த மின்னல் புவியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது ஒரு மரத்தில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம். எந்த நட்சத்திரமோ அதனைச் சேர்ந்த இனமாக அந்த மரம் இருந்தால் விழுந்தால் இந்த மரத்தை அப்படியே பொசுக்கிவிடும். ஆனால் பக்கத்தில் இருக்கும் மரத்தை (வேறு இனம்) ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவுகின்றது. அது பூமிக்குள் சென்ற பின் வெப்பங்கள் அதிகமாகி அது கொதிகலனாகிறது.

நாளடைவில் சேமித்துச் சேமித்து உஷ்ணம் அதிகமான பின் நிலநடுக்கமாகி ஆவித் தன்மை (GAS) உண்டாகி அந்த வாயுக்கள் அனைத்தும் அப்படியே வெடிக்கின்றது.

வெடித்த பகுதி அப்படியே கீழே இறங்குகிறது. அந்தப் பகுதியில் மட்டும் தான் நிலநடுக்கம் வருகின்றது. உள்ளே சென்ற பின் அடங்கி விடுகின்றது.

ஆனால் நட்சத்திரத்தின் மின்னணுக்களின் நிலைகள் அதாவது மின்னல் கடலில் படும் பொழுது என்ன ஆகின்றது…?
1.அது உப்பு நீர்…!
2.மின்னல் பூமிக்குள் ஊடுருவாதபடி கடலில் பட்டபின் மணலாக மாறுகின்றது
3.நட்சத்திரங்களின் உணர்வின் சக்தி பட்ட பின் அது யுரேனியமாக மாறுகின்றது.

எந்தெந்தப் பகுதி எந்தெந்த நட்சத்திரங்களின் சக்திகள் படர்கின்றதோ அதனின் வலுவிற்குத் தகுந்த மாதிரி யுரேனியங்கள் எத்தனையோ விதமான நிலைகள் உருவாகின்றது. விஞ்ஞானத்தில் அதற்குப் பல பெயர்களை வைத்து அழைக்கின்றார்கள்.

அப்படி மாறியதை விஞ்ஞானி பிரித்து எடுத்து என்ன செய்கின்றான்…? அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.
1.கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனின் துணை கொண்டு
2.அதனின் அழுத்தத்தைக் கொண்டு வெடிக்காதபடி பாதுகாக்கின்றான்.

ஹைட்ரஜன் என்று இருந்தாலும் அதனின் அடர்த்தியின் தன்மைகள் ஒளிக் கதிர்களைச் சேர்த்து மீண்டும் அந்த ஹைட்ரஜனை வெடிக்கச் செய்வார்கள்.

ஏனென்றால் சனிக்கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் ஒவ்வொரு அணுக்களிலும் (எல்லாவற்றிலும்) கலந்திருக்கும். அதே சனிக் கோளிலிருந்து தான் வடிக்கப்பட்டுக் கடலாக (நீராக) மாறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை கொண்டு ஹைட்ரஜன் வரப்படும் பொழுது இதனின் நிலைகள் வான்வீதியில் வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கிறது.

இங்கே வரும் மற்ற தாவர இனச் சக்திகளுக்குச் செல்வதும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறிகளும் வெகு தொலைவில் பரவப்பட்டு அந்த ஜீவ சக்தியையே எடுக்கச் செய்வது அந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதை எல்லாம் கண்டு கொண்டுள்ளார்கள்.
1.நான் (ஞானகுரு) மூன்றாம் வகுப்பு முழுமையாகப் படிக்காதவன் இதைச் சொல்கிறேன்.
2.இதை நீங்களும் பார்க்க முடியும்… தன்னம்பிக்கை வேண்டும்.

இந்த இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலமாக மனிதன் (விஞ்ஞானி) தனக்குள் கண்டுணர்ந்து பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கண்டு அதனின் இயக்கப் பொறிகளைப் படமாக வரைகின்றான் – அந்த உருவத்தையே…!

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பாயப்படும் பொழுது
2.உணர்வுகள் எப்படி இயங்குகிறது..? என்ற நிலையைத் தெளிவாகக் காணுகின்றான் விஞ்ஞானி.

அதைப் போல் தான் அன்று மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்கத்தின் தன்மையை அணுவின் ஆற்றலைப் பிளந்து அதனின் தூண்டுதலைப் பார்த்தான்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையை அவனால் கண்டுணர்ந்தது தான் வான இயல் புவியியல் உயிரியல் எல்லாமே…!

1.அவனுக்குப் பின் வான்மீகி கண்டான்.. பின் வியாசகன் கண்டான்.
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகளை அந்த உண்மையின் உண்ர்வை எடுத்து அவர்கள் வளர்த்துக் கொண்டனர்.
3.இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளைத் தான்
4.இப்பொழுது உங்களுக்குள் சிறுகச் சிறுக ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

 

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?

1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.

மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.

அதனால் தான் கண்களை… அதாவது “கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.

அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.

உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து “அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்… அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி… தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.

1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் கழிவாகப் பிரித்து விட்டு நல்லதை…
1.நறுமணம் கொண்ட உணர்வாகவும்
2.நறுமணத்தை அறியும் அறிவாகவும்
3.நறுமணத்தை நுகரும் தன்மையாகவும்
4.நறுமணத்தின் உணர்வு கொண்டு நற்செயலைச் செயல்படுத்தும் உணர்வாகவும் உடல் மாற்றுகின்றது.
5.உடலின் மணங்கள் இவ்வாறு இயக்குகின்றது

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு தன் உடலில் வலிமை பெறுகின்றது நல்ல உணர்வின் தன்மைகளை நஞ்சாக (கழிவாக) மாற்றுகின்றது.

உடல் வலிமை கொண்டு சிந்திக்கும் செயல் இழந்து ஒன்றோடு ஒன்று போர் முறை கொண்டு அது மற்றொன்றைத் தாக்கி மற்றவைகளின் உணவைப் பரிமாறிக் கொள்கின்றது.
1.இது மிருக உணர்வுகளின் இயக்கங்கள்.
2.ஆக நஞ்சின் வலிமை கொண்டு வரும் பொழுது சிந்திக்கும் தன்மை அவைகளுக்கு இல்லை.

ஆனால் மனிதனோ சிந்தித்துச் செயல்படும் தன்மை பெற்றவன். அந்த நஞ்சினை அடக்கும் உணர்வு கொள்ளும் பொழுது
1.அண்டத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் உணர்வின் தன்மையையும் எட்டிப் பிடித்து
2.அகண்ட அண்டத்தில் அந்த அருள் ஒளியின் சுடராக அறியும் வல்லமை பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு…”

அகண்ட அண்டத்தின் உணர்வுகளை நம் பிரபஞ்சம் கவர்ந்து சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகிறது. அதைப் போல
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரம் பெறும் அறிவின் தன்மையைத்தான் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.கார்த்தி என்றால் வெளிச்சம்.

அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மையும்… அண்டத்தில் உருவான நம் பிண்டத்திற்கு (உடலுக்கு) உண்டு. அகண்ட அண்டத்தின் ஆற்றலை நமக்குள் பெறும் தகுதியும் உண்டு.

ஆகவே எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதை வென்றிடும் உணர்வு பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து என்றுமே நமக்குள் பேரின்பம் என்ற நிலையை உருவாக்கிடல் வேண்டும்.

அத்தகைய அருள் ஞானத்தை கணவன் மனைவி இருவருமே பெற்றுப் பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் இரு மனமும் ஒன்றாகி இரண்டறக் கலந்து உணர்வின் ஒளியாக மாற்ற வேண்டும்.

கணவனும் மனைவியும் அருள் ஞான சக்தி பெற்று… நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி… வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெற வேண்டும். உலக ஞானம் பெற்று இந்த உலகைக் காத்திட வேண்டும்.

உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம் உடலுக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. ஆகவே அந்த உலக உணர்வைப் பகைமையற்ற நிலையாக்கிப் நம்மிடம் பகைமை வளராது தடுக்க வேண்டும்.

ஒளியின் சுடரான அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்தால்
1.உலக ஞானம் பெறலாம்… பகைமைகளை அகற்றிடலாம்.
2.அருள் ஒளியின் சுடராகப் பேரருள் வாழ்க்கை வாழ்ந்து
3.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று
4.நம் பேச்சும் மூச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாக வளரும்.
5.இந்த உடலுக்குப் பின் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத வாழ்க்கை வாழலாம்.

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு

 

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாகி ஒளிக் கற்றைகளாக வரும் பொழுது வியாழன் கோள் அதைக் கவர்கின்றது.

சூரியன் எப்படி 27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டதோ அதே போல…
1.வியாழன் கோளும் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை எடுத்து எடுத்து எடுத்து வளர்ச்சி அதிகமாகி
2.தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்களை வளர்த்துக் கொள்கின்றது. வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு.
3.அதை வைத்து 27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாகச் சமைத்து ஆவியாக மாற்றி உறைபனியாக தனக்குள் மாற்றுகின்றது.

அது கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரப்படும் பொழுது…
1.வியாழனின் சுழற்சி வேகம் அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் தனக்குள் இணைத்து
2.புது விதமான அணுக்களாக… “இணைத்துக் கொள்ளும் பாலமாக…” அமைகின்றது.

நமது உயிர் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருந்தாலும் எந்த உணர்வின் தன்மை நுகர்கின்றோமோ… (உதாரணமாக) வேதனை என்று வந்தால் அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது… அது வலுவானால் அதன் வழி இங்கே வேதனையின் இயக்கமாக மாற்றுகின்றது.

ஆகவே… இந்த உடலான கோளுக்கு… “உயிர்” குருவாக இருக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் பிரபஞ்சத்திற்குச் சூரியன் இயக்கச் சக்தியாக ஆனாலும் வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்கு குருவாக இருக்கின்றது. அதனால் தான் வியாழனை “குரு…” என்று அழைப்பார்கள்.

வரும் சக்திகளைத் தனக்குள் இணைக்கப்பட்டு மோதப்படும் பொழுது இரண்டும் இணைந்து புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் ஊடுருவும் மின்னலின் கதிர்கள் ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கப்படும் பொழுது அத்தகைய அணுக்கள் வளர்ச்சி அடைகின்றது.

வளர்ச்சியடைந்து செல்வதைத் தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது. கவரும் பாதையில் மற்ற கோள்கள் கவர்ந்து தனக்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

27 நட்சத்திரத்தின் சக்தியை வியாழன் தனக்குள் எடுத்துத் தனது சுழற்சி வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பகுதியில் பாறையாக உறையும் தன்மை வருகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஐஸ் பெட்டியாகவும் (FRIDGE) உருவாக்குகின்றோம் அதே மின்சாரத்தை உபயோகித்து சூடாகவும் (HEATER) உருவாக்கிக் கொள்கின்றோம் அல்லவா…!

இதைப் போன்று தான் வியாழன் கோள்…
1.பல விதமான உணர்வின் தன்மை கொண்டு அமைதிப்படுத்தி
2.போர்முறை இல்லாதபடி அந்த உணர்வின் தன்மை வேக வைத்து
3.அமைதித் தன்மையாக எதிர்ப்பு இல்லாத நிலையாக உருவாக்குகின்றது.

27 நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது இது ஜாதகங்களில் எல்லாம் வரும் ஆனால் இந்த உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.

கோள்களைப் பிரித்து எழுதிக் கொள்ள முடியும். சூரியனுக்கு நேராக வரும் பொழுது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் பொழுது அதைத் தான் தனித்தனியாகப் பிரித்துக் காட்ட முடியும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளைச் சொல்ல முடியாது…!

இவர்களுக்குகந்த நிலையில் மனிதனுக்கு ஜாதகக் குறிப்புகளை… “மதத்திற்குத் தக்கவாறு குறித்து…” இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்று சொல்லி… ஆண்டவன் தான் இதை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்பார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் அவரவர்களுக்குத் தக்கவாறு ஜாதகத்தை எடுத்துச் சொல்லப்படும் போது
1.எது ஆழமாகப் பதிவாகிறதோ அந்தப் பதிவு தான் மனிதனை இயக்குகிறது.
2.ஆக… கோள்களின் இயக்கத்தில் மனிதன் இல்லை.

கோள்கள் இயக்கத்தால் காற்றலைகள் வரப்படும் பொழுது அது தாவர இனங்களுக்கு அந்தச் சக்திகள் தேவை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பூமிக்குள்ளும் வெளியிலும் அணுகுண்டை வெடித்ததால் வெளிப்பட்ட கதிர்வீச்சுகள் வான்வீதியிலே சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களில் இணைக்கப்பட்டு சூரியனுக்குள்ளும் சென்று விட்டது.

அணுகுண்டை வெடித்த பின் கதிரியக்கங்கள் பரவி எல்லாவற்றையும் புகை மண்டலங்களாக மாற்றி அதன் இனத்தைப் பிரித்து விடுகின்றது. அந்தக் கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து வைத்துள்ளது.

1.எல்லாக் கோள்களிலும் கலந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது
2.சூரியனிலே இது மோதலானால் எலெக்ட்ரிக் உற்பத்தி செய்வதை இரு மடங்காக உருவாக்கிவிடும்.
(3.மின்சாரம் வரும் வயர்களை ஒன்றாக இணைத்தால் மின் ஆற்றல் அதிகமாகி எல்லாவற்றையும் கருக்குவது போன்று சூரியனிலே உண்டாகும்)

ஆக இரு மடங்காக அந்த எலெக்ட்ரிக்கின் தன்மை உருவாக்கப்படும் பொழுது அதனின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

சாதாரண நிலைகளில் கம்ப்யூட்டரோ மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களோ இயக்கப்படும் பொழுது அதில் உள்ள எலெக்ட்ரிக் ஒரு சம நிலையில் இருக்கின்றது.

நம் உயிரின் துடிப்பும் மின் இயக்கம் கொண்டது. மின் ஆற்றல் கொண்டு தான் இயக்கி உடலை உருவாக்குகின்றது. அந்த உணர்வுக்கொப்பதான் உணர்ச்சியின் வேகத் துடிப்பும்… மற்ற நம் உடலை இயக்குவதும் எல்லாமே…!

ஆனால் அங்கே சூரியனுக்குள் மோதல் ஏற்பட்டு இரு மடங்கு காந்தப் புலன் அதிகமாக்கப்படும் பொழுது
1.நம் உயிரின் துடிப்பும் அதிகமாகும்
2.உணர்வின் துடிப்பும் அதிமாகும்.
3.மற்ற உயிரினங்களின் உயிரின் துடிப்பும் அதிகமாக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகளும் மாறுகின்றது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த நிலை “ஹைட்ரஜன்” அதிகமாக விரிவாக்கப்படும் பொழுது அதனுடைய உணர்வின் தன்மையை அது இழக்கச் செய்கின்றது.

ஆகவே இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் மாறப் போகின்றது…!

கம்ப்யூட்டரின் துணை கொண்டு தான் இராகெட்டுகளும் செயற்கைக் கோள்களும் மற்றவைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய அந்தக் கம்ப்யூட்டர்களும் செயல் இழக்கப் போகின்றது,

அதே போல் விஷத் தன்மையை இயக்கும் இயந்திரங்களையும் இரசாயணங்களையும் அந்தக் கம்ப்யூட்டரின் துணை கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.

மின் உற்பத்தி இரு மடங்காக ஆக்கப்படும் பொழுது கம்ப்யூட்டர்கள் தாறுமாறாக இயங்கிப் பாதுகாப்பு இழந்து அது அது வெடிக்கப் போகின்றது. காற்று மண்டலம் முழுவதுமே நச்சுத் தன்மையாகின்றது.
1.நம் சொத்தெல்லாம் நிலைக்குமா…?
2.ஆக மொத்தம் இந்த உடலே இருக்கப் போவதில்லை.

விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழும் மனிதனின் ரூபத்தை அழித்திடும் இந்தக் காலத்தில் தொழில்… அது… இது…! என்று இருந்தாலும் நமக்குள் எதைச் சேர்க்க வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தொழில் வளம் பெற வேண்டும் என்றாலும் அந்த அருள் ஞானம் தேவை. அந்த அருள் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நஞ்சின் தன்மையை நீக்கிவிடும்.

கடவுளின் அவதாரத்தில் எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கி விட்டு நல்ல உணர்வின் தன்மையை அது எடுத்ததோ அதைப் போல்
1.இந்தக் காற்று மண்டலமே நஞ்சாக மாறினாலும்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும்
3.அடிக்கடி எண்ணி எடுத்து உங்கள் உடலில் பெருக்கிக் கொண்டே வந்தால்
4.விஷத் தன்மைகள் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்கள் உங்களுக்குள் வரும்.

ஆகவே அனைவருமே ஏகோபித்த நிலைகளில் “துரித நிலைகள் கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துப் பெருக்கிக் கொள்ளுங்கள். அப்படிப் பெருக்கினால் உங்களை காத்துக் கொள்ளலாம்.

பாதுகாத்தாலும்… எந்த அருள் ஒளியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை அடையலாம்.

சூனிய மண்டலம் – சூனியக் காலம்

 

அண்ட சராசரங்களைக் கடவுள் எப்படி உருவாக்கினார்…? கடவுள் யார்…? என்ற இந்த உண்மைகளை எல்லாம் பல முறை சொல்லி உள்ளேன். எதன் வழி உலகம் உருவாகின்றது…? என்று வேத நூல்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதனை அறிந்து கொள்ளும் பொழுது
1.நாம் யார்…? எப்படி மனிதனானோம்…?
2.மனிதரான பின் உயிரின் உணர்வுகள் எப்படி ஒளியாகின்றது…? என்ற உண்மையையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒளியாகும் தன்மை பெற்றது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால்… நாம் அறிந்து கொள்ளும் உணர்வுகளில் அடுத்து இந்த உடலுக்குப் பின் உயிரைப் போன்றே உணர்வின் அணுக்கள் ஒன்றாகின்றது.

இவை அனைத்தும்… அகஸ்தியனால் கூறப்பட்டு அவனுக்குப் பின் வந்த வரிசைத் தொடரில் ஞானிகளால் வெளியிடப்பட்ட பல உண்மைகள் இந்த உலகெங்கிலும் பரவி உள்ளது.

அகண்ட அண்டம் என்பது சூனியம் நிலைகள் கொண்டது. இது சூனியக்காலம் என்று சொல்வார்கள். குண்டலினி யோகா ராஜ யோகம் செய்பவர்கள்
1.சூனியக் காலத்திற்குப் போகிறோம் என்பார்கள்.
2.சூனியக்காலம் என்பது இருண்ட உலகம்.
3.இருண்ட உலகில் தான் சிவன் இருக்கின்றார் என்று அவர்கள் உணர்வைச் செலுத்துகின்றார்கள்.

சூனியக் காலம் என்றால் என்ன…? என்பதைப் பற்றி அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.

இப்பொழுது நாம் காணும் அனைத்து நிலைகளும் “சூனியத்திலிருந்து உருவானது…” அது இருண்ட நிலைகள் பெற்றது.
1.நாளடைவில் அது ஆவித்தன்மை அடைந்து அந்த ஆவித் தன்மை அடைவதற்கே முதலில் வெப்பம் என்ற நிலை வருகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் பொழுது அசையும் நிலை அதாவது இயக்கும் தன்மை வருகின்றது.
3.வெப்பத்தன்மை வருவதற்கே சூனியம் தான் காரணம்… சூனியம் உருவாவதற்கு விஷம் தான் காரணம்.

அகண்ட அண்டம் இருண்ட உலகமாக இருந்ததால் அதைச் சூனிய உலகம் என்று சொல்வார்கள். வேதங்களில் இதைத்தான் சூனிய உலகம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… அது விஷமாக மாறி
1.விஷம் அடர்த்தி அடையப் படும்பொழுது விஷமற்றதைத் தாக்கி மோதலாகி வெப்பம் உருவாகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் போது… வெப்பமான பின் விரிந்து ஓடும் சக்தி பெறுகின்றது.
3.விரிந்து ஓடும் சக்தி வரும் பொழுது அதிலே ஈர்க்கும் காந்தமே வருகின்றது.

இதை உங்களிடம் பதிவு செய்கிறேன். பதிவு செய்ததை அடுத்து எண்ணி நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகள் எல்லாம் வான்வீதியில் அகண்ட காலத்திற்கு சூனியக் காலத்திற்குச் சென்று
2.சூனியம் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் அறிதல் வேண்டும்.

சூனியத்திலிருந்து எப்படி வெப்பமானது…? வெப்பத்திலிருந்து அணுக்கள் எப்படி சுக்கு நூறாகச் சிதறி ஓடுவதும் அதிலே ஈர்க்கும் காந்தம் எப்படி உருவானது என்ற நிலையை நீங்கள் அறியலாம்.

குருநாதர் எமக்குக் கொடுத்த உண்மையின் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி அந்த நினைவினை நீங்கள் கூட்டிச் செல்லும் பொழுது இந்த முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

ஏனென்றால்
1.ஆதி… அந்த ஆரம்ப நிலையை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.
2.உலக இயக்கத்தின் உண்மைகளை நீங்கள் அறியும் சந்தர்ப்பம் வருகின்றது.
3.அதே சமயத்தில் அந்தச் சூனியம் எப்படி ஒளிமயமாகின்றது…? என்பதையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும்.

இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

காரணம் வாழ்க்கையின் நிலைகளை மட்டும் தான் அடிக்கடி பேசுகின்றோம்.

சூனியத்தைப் பற்றிப் பேசினாலும் அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை…! என்னமோ சாமி சொல்கின்றார்…! என்று சிலர் எண்ணத்தால் இதை மறுக்கின்றார்கள். மனத்தால் மறுத்து… சீக்கிரம் எதாவது சொன்னால் நாம் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பெறலாம் என்று தான் மனதை ஓட்டுகின்றார்கள்.

ஆகவே… சூனியத்திலிருந்து தோன்றப்பட்டது தான் “இயற்கையின் சக்திகள் அனைத்துமே…” என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் நல்ல நிலையில் இருக்கின்றோம். நல்ல உணவைத்தான் உட்கொள்கின்றோம். ஆனாலும் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை உற்றுப் பார்த்து அடிக்கடி அவன் உணர்வை எடுத்தால் அது விஷமான அணுக்களை நம் உடலுக்குள் உருவாக்கும் நிலை வந்து விடுகின்றது.

நமக்குள் இருக்கும் எலும்புகள் மேக்னட் (காந்த சக்தி கொண்டது). அதே சமயத்தில் எலும்புக்குள் இருப்பது ஊண். வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது
1.நம் கண்ணில் உள்ள கரு விழி
2.எலும்புக்குள் உள்ள ஊணில் முதலில் அதைப் பதிவாக்கி விடுகின்றது.

அந்த வேதனப்படும் உணர்வை நம் ஆன்மாவாக (நம்முடைய ஈர்ப்பு வட்டம்) மாற்றுகின்றது. அதிலிருந்து நாம் இழுத்துச் சுவாசித்த உடனே இந்த உணர்வை எலும்பில் ஒட்ட வைக்கின்றது.

வேதனை உணர்வு எங்கே எப்படி அணுவாக ஆனதோ நமக்குள் உருவாக்கி மனித உடலில் எலும்பை உருவாக்கியது அல்லவா… அதை அது சாப்பிடத் தொடங்கும். அதாவது அந்த அசைவத்தை அது சாப்பிடும்.

ஏனென்றால் அது வளரும் தன்மை வளர்ச்சி பெற்றது. எலும்பை உருவாக்கிய அணுக்கள் அது மடிகிறது. அப்பொழுது எலும்புகள் எல்லாம் வளர்ச்சி குன்றத் தொடங்கும். அதை டி.பி. என்று சொல்கிறோம்.

அதை மாற்ற மருத்துவத்தில் என்ன செய்கிறார்கள்…?
1.விஞ்ஞான அறிவு கொண்டு கிருமிப் போர் என்ற நிலையில் மருந்தை இஞ்செக்சன் (INJECTION) செய்கிறார்கள்.
2.எதிர்மறையான அணுக்களை உடலுக்குள் உருவாக்குகின்றார்கள்.
3.அந்த உருவை உருவாக்கப்படும் பொழுது அது டி.பி. அணுக்களை உணவாக உட்கொண்டாலும்
4.அதிகமாகச் சாப்பாடு கொடுத்து நல்ல அணுக்களை உருவாக்கி
5.டி.பி. அணுக்களைக் கொன்று டி,பி. நோயையும் இன்று சுலபத்தில் குணப்படுத்துகின்றார்கள்.

ஆனால் கேன்சர் நோய் வந்தது என்றால் அதை மாற்றுவது அவ்வளவு சுலபமானது அல்ல…! வேதனை… வேதனை… என்ற உணர்வு ஆன பின் நம் உடலில் விஷத் தன்மையான அணுக்களின் பெருக்கமாகின்றது.

இந்த விஷமான அணுக்களானால்
1.“மரத்தில் விழுதுகள் பாய்ச்சுவது போல்…” கேன்சரை உருவாக்கும் அந்த அணு
2.உடல் முழுவதும் அதனின் விழுதுகளைப் பாய்ச்சும்.
3.மற்ற நல்ல அணுக்களை இயக்கும் விஷத் தன்மைகளை எல்லாம் அது எடுத்துக் கொண்டு ஒரு பக்கம் குவியும்.
4.கேன்சர் அணுக்களைக் கொல்வதற்கு மருந்து கொடுத்தாலும் கூட நல்ல அணுக்களும் மடிந்திடும்.
5.ஆகவே கேன்சருக்கு மருந்து கொடுத்து அதைக் கொல்வது என்பது சாதாரணமாக முடியாது.

அதனால் தான் விஞ்ஞான அறிவில் என்ன செய்கிறார்கள்…? கேன்சர் உருவான அந்தப் பாகத்தில் எலெக்ட்ரிக் (மின்சாரத்தை) வைத்துக் கருக்குகின்றார்கள்.

கருக்கினாலும் கூட அது நொந்து போனால் அழுகிய உணர்வு கொண்ட அணுக்கள் டி.பி. போன்று உருவாகும். மீண்டும் நல்ல அணுக்களை உணவாக உட்கொள்ளும் நிலைகள் வரும். அந்தப் பாகம் அவஸ்தைப்பட்டது தான் மிச்சம்.

ஆக கேன்சர் நோயை நீக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.

ஆனால் அதை தியானத்தால் போக்க முடியும். எப்படி…?
1.மஞ்சள் விஷத் தன்மையை அடக்கக்கூடியது.
2.வேப்பிலையையும் மஞ்சளையும் இரண்டையும் சமமாக வைத்து அரைத்துத் தண்ணீர் போல் கரைத்துக் கொடுக்க வேண்டும்.

கேன்சர் என்று தெரிந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஒரு நாளைக்கு “ஐம்பது முறையாவது…” எண்ணி வலுவாகத் தியானிக்க வேண்டும்.

தியானித்த பின் மனைவியும் இதே உணர்வை எடுத்து
1.“என் கணவனுக்கு உடல் நலம் சரியாக வேண்டும்” என்று எண்ணத்தில்
2.அந்த மருந்தைக் (மஞ்சள் வேப்பிலை) கொடுத்தால் இந்தக் கேன்சர் நோயை நீக்க முடியும்.

உங்களுக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது. இந்த முறைப்படி தியானம் எடுத்துக் கொண்டவர்கள் உங்கள் எண்ணத்தினால் கேன்சர் நோயைப் போக்க முடியும்.

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்

 

தும்கூர் அருகே ஒரு மலைக் காடு இருக்கின்றது… கரடி இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் உலக அனுபவம் பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் சுற்றிக் கொண்டு வந்த இடத்தை எல்லாம் காட்டி
1.இந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த உணர்வை நுகந்தால் நீங்களும் எப்படி உலகை அறிய முடியும்…? என்ற காட்சிகளைக் கொடுத்தேன்.

ஆரம்பத்தில் குரு வழியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு (சத்தியத்தின் சக்தி நிலை) அதைக் காட்டித்தான் செயல்படுத்தியது. அதே போன்று
1.ஐவர் மலையில் பழைய காலக் குகைகள் எப்படி இருக்கின்றது…?
2.அங்கிருக்கக்கூடிய சில உண்மைகளையும் பிரார்த்தனை பண்ணித் தெரியும்படி செய்தேன்.
3.அந்த இடத்தில் மின்கதிர்கள் பாயப்படும் பொழுது அது எப்படி…? என்றும்
4.மின் ஒளிகள் எப்படியெல்லாம் அங்கே வருகின்றது…? என்றும்
5.அங்கே ஒளி வட்டங்களை எல்லாம் சுற்றும்படி செய்தேன்.

இத்தனை வேலைகளையும் செய்தேன். ஆரம்பத்தில் இதை எல்லாம் செய்து காட்டினாலும்… ஒன்றுக்கும் பயனில்லாது போய்விட்டது. இதெல்லாம் மனித உடல் இச்சைக்குத்தான் சென்றது.

பல அற்புதங்களைக் காட்டினாலும் உடல் ஆசை வந்து விடுகின்றது. “நான் தெரிந்து கொண்டேன்…!” என்ற நிலை வந்து விடுகின்றது,

அதை எல்லாம் விடுத்து விட்டு இப்பொழுது உங்களை அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்கின்றேன்.
1.சிறிது பேராவது நீங்கள் தயாராகி விட்டால்
2.கோடிக்கணக்கான மக்களை நல் வழியில் நீங்கள் வளர்க்க முடியும்.

அருள் உணர்வு கொண்டு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஞாபகப்படுத்துகின்றேன். காரணம் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம் இந்த உடலுக்குப் பின் நாம் எந்த நிலை அடையப் போகின்றோம்…? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். அந்த நிலை அனைவரும் பெற வேண்டும்.

செல்வம் எவ்வளவு தேடி வைத்திருந்தாலும் அதைத் தட்டிப் பறிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. கடைசியில் தேடிய சொத்தெல்லாம் போய்விட்டதே என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… பேரருளை எப்படியும் நாம் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் தயாராகி விட்டால் எனக்கு கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கும். இல்லையென்றால் நான் இன்னும் சிரமம்தான் பட வேண்டி வரும்.

அந்தச் சிரமத்திலிருந்து நான் மீள்வதற்கு
1.ஒவ்வொருவரும் உங்கள் பார்வையில் சர்வ பிணிகளும் போக வேண்டும்
2.உங்கள் பேச்சு மூச்சும் பிறருக்கு நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.
3.மற்றவர் குடும்பத்திலே சிக்கலை நீக்கக் கூடிய சக்தியாக வளர்ச்சிக்கு வர வேண்டும்.

மற்றவர்களால் முடியவில்லை என்கிற பொழுது… தியானம் செய்யக்கூடியவர்கள் செயல்படுத்தி உங்கள் பார்வையால் மூச்சால் எல்லா வகைகளிலும் மற்றவருக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.

அந்த நிலையத்தான் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்…!

இதில் “நான் பெரிது… நீ பெரிது…” என்ற நிலை இல்லாதபடி
1.எல்லோரையும் பெரியவராக்க வேண்டும் என்று உணர்வுக்கு வரவேண்டும்… அதன்படி நாமும் அந்த உயர் நிலை பெற முடியும்.
2.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் நாமும் உயர்கின்றோம்.

இதிலே சிறு குறை கூட வராதபடி குரு காட்டிய அருள் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டும். அதைத்தான் நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

பல அற்புதங்களையும் நிகழ்ச்சிகளையும் காட்டத் தொடங்கினால் இந்த ஞானத்தையே கடைசியில் பேச முடியாதபடி அது தடையாகிவிடும்.

எமது அருள் உபதேசங்கள் ஒலி நாடாக்களில் வெளி வருகின்றது.
1.கூடுமான வரையிலும் ஒவ்வொருவரும் அதை எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
2.இந்த உணர்வின் ஞானம் உங்களுக்குள் வரட்டும்.
3.உணர்வின் தன்மை ஆழமாகப் பதிவாகும்… உங்களுக்குள் மெய் ஞானம் வளரும்.

காலங்கள் மிகக் குறுகியதாக இருக்கின்றது அதற்குள் நாம் அனைவரும் வளர்த்து தயாராக வேண்டும். அழியாச் செல்வமான ஒளிச் சரீரம் பெறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் போது பம்பாயில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தாயின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அவர் தாயாவது… கத்தரிக்காயாவது…? என் தாய் எனக்குத் துரோகம் செய்கிறது.. அது செய்கிறது… இது செய்கிறது…! என்று சொன்னார். இன்ஜினியரிங் படித்திருக்கின்றார். ஆனால் நான் சொல்வதை எதிர்த்து அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தன் மனைவியின் சொல்லை ஓங்கி வளர்த்துக் கொண்டார். அவருடைய அம்மா தன் மனைவிக்கு மிகவும் தொல்லை கொடுத்தது என்று சொன்னார். ஆகையினால் நான் சொல்வதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

பெரிய வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அன்றைக்கே (சுமார் 40-45) ஆண்டுகளுக்கு முன்) முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவருடைய மனைவியும் குழந்தைகளும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவரிடம் சொல்லி விட்டு நான் கல்கத்தா பக்கம் சென்றுவிட்டேன். அவருடைய சந்தர்ப்பம் ஒரு நாள் காட்டுக்குள் போய்க் கொண்டிருந்தார். தன் மனைவியையும் பிள்ளைகளையும் கூட அழைத்துச் சென்றிருந்தார்.

கேமரா வைத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதிலேயே கவனமாக இருந்து முன்னாடி பார்த்துக் கொண்டிருந்ததில் பின்னாடி யானை வந்ததைக் கவனிக்கவில்லை.

யானை அவரை “லபக்…” என்று தூக்கி விட்டது. தூக்கிய உடனே அதைப் பார்த்த அவருடைய குழந்தையும் அவர் மனைவியும் “அம்மா…….!” என்று சப்தம் போட்டார்கள்.

தன் மனைவியும் குழந்தையும் அம்மா…! என்று சப்தமிட்டதைக் கேட்டு இவரும் “அம்மா…” என்று சப்தம் போட்டிருக்கின்றார். அந்தச் சப்தங்களைக் கேட்டதும் யானை அவரை அப்படியே வைத்திருக்கிறது.

கொஞ்ச நேரம் வைத்திருந்துவிட்டு அப்படியே அவரைக் கீழே இறக்கிவிட்டுச் சென்று விட்டது. அவரை அடிக்கவில்லை. “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…!” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்,

இந்தச் சக்தியின் உண்மையின் நிலையை அவர் உணர்ந்த பிற்பாடு அவர் என்னைத் தேடி வந்தார். காசியில் நான் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் என்னைத் தேடி வந்து… என் தாய்க்குண்டான சக்தியை யானையிடமிருந்து தப்பிய அன்றைக்குத் தான் உணர்ந்தேன்… என்று சொன்னார்.
1.இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்…? என்றால்
2.இந்த மனித வாழ்க்கையில் “தாயை மறந்தால் மனிதன் இல்லை…!”

ஒரு நாய் நம்மைக் கடிக்க வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அம்மா……! என்று சப்தம் போடுங்கள். அப்படியே அந்த நாய் நிற்கும். உங்களைக் கடிக்காது.

ஆனால் அடி…! என்று சொன்னாலும் கடிக்கும்… முருகா…! என்றாலும் கடிக்கும். அப்பொழுது தாய்க்கு எவ்வளவு சக்தி இருக்கிறது…! என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் தாயை நாம் எத்தனை பேர் மதிக்கிறோம்…? தாயை மதிப்பது இல்லை.
1.அதே சமயத்தில் நம் பிள்ளையும் தாயை மதிப்பதில்லை தந்தையையும் மதிப்பதில்லை.
2.இப்படித்தான் நம் பிள்ளைகளையும் வளர்த்துள்ளோம்…!

நாம் சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது பல சேட்டை செய்கின்றோம். குறும்புத்தனம் எல்லாமே செய்கின்றோம். தாய் என்ன செய்கிறது..?

நம்மைத் வெளியிலே தூக்கி போட்டுவிடுகிறதா… இல்லையே…!” எதையோ சொல்லி அரவணைத்துப் பிள்ளை எத்தனை சேட்டை செய்தாலும் “இந்தாடா கண்ணு… அதைச் சாப்பிடுடா இதைச் சாப்பிடுடா… ஏன்டா இப்படி இருக்கிறாய்…? என்று தான் கெஞ்சிக் கேட்கும்.

ஆனால் வளர்ந்த பின் தாய் ஒரு சொல்லைச் சொன்னது என்றால் “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகிறாய்…!” என்று தாயைப் பேசுகிறவர்கள் தான் நாம் இருக்கிறோம். தாயை மறுக்கும் நிலையே வருகிறது.

ஒரு பித்துப் பிடித்த தாயாக இருந்தாலும் சரி… உன் குழந்தையை அடித்துவிட்டார்கள்..! என்று யாராவது சொல்லட்டும். பிள்ளை மேல் கவனம் இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்றால் உடனே பதறி அழும்.

ஆனால் அதே பித்துப் பிடித்த தாயை இன்னொருவர் அடித்தார் என்றால் “கிரகம்…! அதற்கு அப்படித்தான் வேண்டும்…” என்று பிள்ளையின் உணர்வுகள் அந்த வழிக்குத்தான் செல்கின்றது. தாயை இணைக்கும் நிலை இல்லை.

1.தாயை இணைக்கும் நிலை வந்து
2.அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில் தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
3.அந்த உணர்வின் தன்மை என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்

தாயின் உணர்வே நம் உடல். நாம் அம்மா…. என்று எண்ணி ஏங்கினால் நம்மை அந்தத் தாயின் உணர்வுகள் பாதுகாக்கும். ஒரு காரியம் நடக்கவில்லை என்றால்
1.“அம்மா…!” என்று சொல்லி அம்மாவின் அருளைப் பெறுங்கள்
2.மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்
3.உடனடியாக அது நடக்கும்… இதைச் செயல்படுத்திப் பழகுங்கள்

விநாயகரைக் காட்டும் பொழுது ஞானிகள் அதைத்தான் காட்டுகின்றார்கள். தன் தாய் தந்தையை நினைவுபடுத்தி அங்கே வணங்கும்படிச் செய்கின்றார்கள்…?
1.நீ இதை உனக்குள் வினையாக்க வேண்டும்
2.அருள் ஒளியைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…! என்று தெளிவாக்குகின்றார்கள்.

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!

 

விஞ்ஞான உலகத்தால் வரக்கூடிய பேரழிவும்… மனிதன் ஆசையின் நிலைகள் கொண்டு வரும் பொழுது ஒன்றைக் காக்க என்று தீவிரவாதமும் மதத்திற்குள் மதம் தீவிரவாதமும்… இனத்திற்குள் இனம் தீவிரவாதம்… வீட்டிற்குள்ளேயே தீவிரவாதம்… தெருவிற்குள்ளும் தீவிரவாதம்… வளர்ந்து விட்டது.

என்னமோ பெரிய இவன் மாதிரிப் பேசுகின்றான் என்று இது போன்ற தீவிரவாத உணர்வுகள் எல்லோருக்குள்ளும் பெருகி வரப்படும் பொழுது
1.நல்லதைக் காப்பது யார்…? நல்லதை காக்கும் ஆள் இல்லை…!
2.ஆக… இந்த உலகமே சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான் இது போன்ற சந்தர்ப்பங்களில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!
3.நம் குருநாதர் கொடுத்த அருள் உணர்வு கொண்டு ஒவ்வொரு திசையிலும் மகான்களை நாம் தோற்றுவிக்க வேண்டும்.

ஒரு சமயம் நபிகள் நாயகம் தோன்றினார் அரக்க உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தோன்றினார்.

இங்கே தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது அதை மாற்ற வியாசகர் வந்தார்… அதே போல் வான்மீகி மகரிஷி வந்தார். மகாத்மா காந்தி வந்தார். தீமையிலிருந்து விடுபட இராமலிங்க அடிகளும் தோன்றினார்.

இராமகிருஷ்ண பரமகம்சரும்… பக்தி மார்க்கங்களில் எத்தனை அதர்மங்கள் நடக்கின்றது…? அதிலிருந்து மக்கள் மீள வேண்டும்…! என்று அவர் உணர்த்திச் சென்றார்.

1.இப்படிப்பட்ட மகான்கள் தோன்றி வளர்ச்சி பெற்றாலும் அது நிலைத்திருக்கிறதா…?
2.அது தோன்றி உருப்பெற்ற இடங்களில் இன்று பார்த்தால் “நான் பெரியவன்… நீ பெரியவனா…?” என்று தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
3.இராமகிருஷ்ணருக்குச் சீடராக வந்த விவேகானந்தருடைய தத்துவங்களையும் மாற்றி விட்டார்கள்.

கடவுளைக் காட்டுகின்றாயா…? என்று விவேகானந்தர் கேட்கின்றார். கடவுளைக் காட்ட முடியாது… ஆனால் உணர முடியும் என்று இராமகிருஷ்ணர் உணர்த்துகின்றனர்.

உனக்குள் உள் நின்று இயக்கும் உணர்வு எதுவோ… எதை நீ நுகர்கின்றாயோ அந்த உணர்வின் இயக்கமாக உடல் இயங்குகின்றது.
1.உள் நின்று இயக்குவதே கடவுளாகின்றது.
2.எதன் உணர்வு வலுவோ அதுவே உன் உடலில் இருந்து இயக்குகின்றது என்று தெளிவாக்குகின்றார் இராமகிருஷ்ணர்.

இதைத்தான் ஒவ்வொரு மனிதனும் எப்படி இயக்க வேண்டும் என்று… ஒரு மனிதனை நல்லவனாக்க வேண்டும் என்றால் “அந்த நல்ல உணர்வை நுகரப்படும் போது என்னை நல்லதாக்குகின்றது…” ஒவ்வொரு மனிதனுடைய எண்ணங்களையும் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது அது எந்த வகையில் ஒன்று சேர்த்து இணைகின்றது என்று விவேகானந்தர் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.தாவர இனம் சைவம்.
2.நாம் உணவாக உண்பது அணுவாக ஆவது அசைவம்.
3.செடி இருந்த இடத்தில் இருந்து தன் சக்தியை எடுத்துக் கவர்வது சைவம்.
4.ஆனால் அந்தச் செடியின் சத்தை நுகர்ந்து அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து சென்று அதை உணவாக எடுத்து செல்லும் உயிரினங்கள் அசைவம்
5.இருந்த இடத்தில் உணவாக உட்கொண்டால் சைவம்.
6.நகர்ந்து சென்று அதை உணவாக உட்கொண்டால் அசைவம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் நம் உணவுக்காக மற்ற அசைவத்தைச் சாப்பிடுகிறோம். ஆட்டைச் சாப்பிடுகிறோம். ஆடு விஷத்தின் தன்மை கொண்டு உடலாக ஆனது.

அதை நாம் சாப்பிட்டு உடலில் சேர்ந்தால் என்ன செய்யும்…? என்று நினைக்கிறீர்கள்…! அந்த அணுக்கள் எல்லாம் நம் உடலாக உருவாகிறது. அப்போது ஆட்டுக் கறியையே தான் மீண்டும் கேட்கத் தோன்றும்.

அந்த ஆட்டுக் கறி மேல் ஞாபகம் அதிகமான பின் அதனின் விஷத் தன்மை நமக்குள் கூடி மனித உணர்வுகள் இங்கே குறைய ஆரம்பிக்கின்றது.
1.குறைந்த பின் சாகப் போகும் போது ஆட்டுக் கறி மீது தான் ஞாபகம் வரும்.
2.ஆக எதை விரும்பிச் சாப்பிட்டோமோ அந்த ஞாபகம் வரும்.

உயிர் பிரியச் சிரமப்படுகிறது என்றால் பெரியவர்கள் என்ன சொல்வார்கள்…? கறியை நிறையச் சாப்பிட்டிருக்கின்றார். இரண்டை வேக வைத்துக் கொடுங்கள். சீக்கிரமே உயிர் போகும்…! என்று சொல்வார்கள்.

அந்த நினைவுடன் உயிர் வெளியில் போனால் அப்புறம் நேராக ஆட்டின் உடலுக்குள் தான் போகும். அந்த உடலுக்குள் போய் நம்மை ஆடாகப் பிறக்கச் செய்யும்.

இன்றைக்கு மனிதனாக இருந்து ஆட்டை ருசித்துச் சாப்பிட்டால் நாளைக்கு ஆடாகி மே…மே…! என்று கத்த வேண்டியது தான்.

ஆனால் உங்களை நான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் உயிர் உங்களை இப்படித் தான் மாற்றும். ஒன்றை விழுங்கி வருவது தான் அசைவம்.

1.ஆக மொத்தம் நமக்குள் சைவமாக இருக்கக்கூடியதை
2.நாம் உணவாக அணுவாக உருவாக்குதல் வேண்டும்.
3.சைவத்துக்கு போய்விடுவோமா… செடி கொடிக்குப் போவோம் என்று நினைக்காதீர்கள். அப்படிப் போக முடியாது.

சில சாமியார்கள் என்ன சொல்வார்கள். நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன். நான் செடிகளில் விளைந்ததையும் காய் கனிகளையும் பச்சையாகத்தான் சாப்பிடுகிறேன்.

இந்த நிலைகளில் நான் பரிசுத்தமாக இருக்கின்றேன்…! என்று பச்சையாகச் சாப்பிட்டால் என்ன செய்யும்…? அந்தச் செடி கொடியில் இருக்கின்ற மணமே (வாசனை) இவர்கள் உடலிலும் ஆன்மாவிலும் உயிரிலும் சேரும்.

அதில் உள்ள உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உயிர் வெளியிலே சென்ற பின் அந்தச் செடி கொடிகளுக்குத் தான் செல்லும்.
1.நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால்
2.செடி கொடிகளுக்குள் சென்று புழுவாகவோ பூச்சியாகவோ தான் பிறக்க வேண்டும்.

மாமிசத்தை வேக வைத்து எடுத்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகும் போது அசைவத்தை உணவாக உட்கொள்ளும். மீண்டும் மிருக இனங்களுக்குள் தான் செல்வோம்.

ஆகையால் இத்தகைய நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும். மனிதனான பின் வேக வைத்து மாற்றி அருள் ஒளியை நீங்கள் கூட்டிக் கொண்டால் வேகா நிலை பெறலாம்.

அருள் ஒளியின் உணர்வாகச் சுடராக நமக்குள் மாற்றப்படும் போது நாம் வேகா நிலை பெறுகின்றோம்.
1.அதாவது போகாப்புனல்
2.இன்னொரு சரீரத்திற்குள் போவதில்லை…!

கருவுற்ற காலத்தில்… சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வால் நடக்கும் சில விசித்திர நிகழ்வுகள்

 

உயிரினங்களில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையும் கர்ப்பமாக இருக்கும் உயிரினங்களில் மற்ற உயிரினம் துரத்தி வரப்படும் பொழுது அந்த உணர்வினை நுகரும் பொழுது
1.கருவுக்குள் இருக்கும் அந்தச் சிசுவுக்குள் இந்த உயிரினத்தின் உணர்வுகள் ஒட்டிய பின்
2.கருவிலேயே எப்படி எல்லாம் மாற்றமாகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

குரங்கை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ மாற்றங்கள் உண்டு, மற்ற மிருக இனங்கள் இதைத் துரத்தி வரும் நிலையில் உற்றுப் பார்க்கும் பொழுது கர்ப்ப நிலைகளில் அந்த உணர்வுகள் படப்பட்டுப் பரிணாம வளர்ச்சியிலும் அதனுடைய வளர்ச்சி தொடர்கள் எவ்வாறு வருகிறது…? என்று உருமாற்றங்கள் எப்படி ஆகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

மனிதர்களாக நாம் வாழுகின்றோம். கர்ப்பமாக இருக்கும் தாய் ஒரு ஊனமுற்ற குழந்தையை உற்றுக் கூர்மையாகப் பார்த்து அதனுடைய க்ஷேமத்தை விசாரித்து…
1.பரிவு கொண்டு அந்த குழந்தையைப் பற்றி அறியும் நிலையில் ஊனமுற்ற உணர்வினை நுகர்ந்து விட்டால்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் ஊனமான குழந்தையாக மாறும்.

இதைப் போலக் கருவிலே வளரும் உயிரினம் தன் தாய் கவரும் உணர்வுகள் கொண்டு எவ்வாறு விளைகிறது…? என்று கீதையிலே தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!

கண்கள் மற்ற உணர்வினை நுகர்ந்து அந்தத் தாய்க்கு இந்த உணர்வைக் கொண்டு இயக்கினாலும் கருவில் வளரக்கூடிய சிசுவிற்கும் இந்த உணர்வுகள் பதிவாகி அந்த உணர்வு பதிவான பின்
1.கண்ணால் பதிந்த நிலைகள்… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது
2.அந்த அறிவின் தன்மை அங்கே வருகிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்கு
3.வியாசகர் கண்ணின் இயக்க நிலைகளை அப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்.

பல கோடிச் சரீரங்களில் உயிர் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நிலைகளையும்… அதிலே வளர்ச்சி பெற்று வந்த மனித நிலைகளையும்… ஊனமுற்ற குழந்தைகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்ற நிலையையும் குருநாதர் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டில் ஒரு புலி கர்ப்பமாக இருக்கின்றது. ஆனால் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக ஒரு மானை அந்தப் புலி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் அடிபட்டு நகர முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கின்றது. தன் இரைக்காக எண்ணிப் பார்க்கின்றது.

அந்த மானையே எண்ணி எண்ணிக் கண்களால் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் அந்தப் புலியின் கருவிலே விளையத் தொடங்குகிறது.

அந்தப் புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் இருந்தாலும்…. அந்தப் புலி ஏக்கத்தால் மானையே எண்ணி ஏங்குகின்றது.
1.இந்த உணர்வின் சத்து கருவில் இருக்கக்கூடிய உயிரணுக்களில் இது இணைக்கப்பட்டு
2.அதற்குள் எவ்வாறு விளைகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

இதை உங்களிடம் லேசாகச் சொல்கிறேன். ஆனால் என்னைக் குருநாதர் பட்டினியாக இருந்து அதைக் காணும்படி செய்தார். எந்தப் பக்கமும் நகர விடவில்லை.

உயிரினங்களில் தான் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… கண்ணால் பார்த்து உணர்வை நுகர்ந்த உயிர் தனக்குள் உணர்வாக அமையப் பெற்று அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு உடலுக்குள் உணர்வுகள் பதிந்த பின் “கருவில் வளரும் சிசுக்களுக்கு எவ்வாறு அது ஒட்டுண்ணி போன்று உணர்வுகள் இயக்கப்படுகிறது…?” என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இரைக்காகத் தேடினாலும் புலியின் உணர்வுக்குள் மானையே எண்ணி ஏங்குகிறது. ஏனென்றால் உடலில் அடிபட்டிருப்பதால் தன் இரையைப் பிடிக்க முடியவில்லை.

கண் கொண்டு மானையே பார்த்து ஏக்கத்தின் உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய புலிக் குட்டிக்குள் இது படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய ரூபம் எப்படி மாறுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலி குட்டி போடும் வரையிலும் இந்த இடத்தை விட்டு நகர விடவில்லை. அதனின் உணர்வும் வளர்ச்சியும் அறிவதற்காக அங்கேயே அமர்ந்து தியானிக்கும்படி செய்தார்.

ஜோசியம் பார்ப்பவர்கள் மற்றொருவர் உணர்வினை நுகர்ந்து “அவர்கள் என்னென்ன நினைத்தார்கள்…?” என்று சொல்கின்றார்கள் அல்லவா…!

இதைப் போலத் தான் அந்த உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள் எவ்வாறு தொடர்ந்திருக்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படி இந்த உணர்வின் அறிவை எனக்கு ஊட்டினார்.

அந்தக் கருவிலிருக்கக்கூடிய குட்டிக்கு மானின் உணர்வுகள் அதிகமாகப் பட்டபின்… மானின் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகள் இந்த புலி உடலுக்குள் எப்படி அடைகின்றது…?

அதைப் புலி சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்து வரும் பொழுது
1.கருவிலே விளையக்கூடிய சிசு புலியின் ரூபம் மாறி மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
2.இரண்டும் கெட்டானாக அது விளைகின்றது… இதை நேரடியாகவே தெரியப்படுத்துகின்றார் குருநாதர்.

நீங்கள் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். உலகத்தில் சில இடங்களில் ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது. ஆனால் மனித உடல் இருந்தது… மனிதனின் தலையும் மிருக உடலும் இருந்தது என்றால்லாம் பார்த்திருப்பீர்கள்.

காரணம்… ஏக்க உணர்வு கொண்டு பிறிதொன்றை உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது கருவுக்குள் அப்படி எல்லாம் மாறி விளைகின்றது.

ஆகவே… விஞ்ஞான அறிவால் இன்று எத்தனையோ உண்மைகளை நாம் அறிகின்றோம். ஆனால் மெய் ஞானிகள் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் கண்டுணர்ந்து புலனறிவாலேயே தனக்குள் விண்ணின் ஆற்றலைப் பருகி அவர்கள் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை குருநாதர் காட்டினார்.
1.என் கண் புலனறிவிற்கு அந்த ஊட்டச்சத்தை ஊட்டி அந்தப் புலனின் நிலையைக் கொண்டு உற்றுப் பார்த்து
2.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று அறியம்படிச் செய்தார்.

அந்த அனுபவத்தைத் தான் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் கல்வியறிவு அற்றவன். குருநாதர் உணர்வின் வலுப் பெற்று அந்த உணர்வின் துணையால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.நீங்கள் அனைவரும் இதை அறிந்து கொண்டால்
2.நமது சாஸ்திரம் எத்தகைய நிலைகள் மெய் உணர்வை நமக்கு உணர்த்தி உள்ளது…? என்று அறியலாம்.

மகாபாரதமோ இராமாயணமோ கந்த புராணமோ சிவபுராணமோ இவை அனைத்திலும்… அதிலே கொடுக்கப்பட்ட உண்மைகள் சாஸ்திரப்படி மெய்.

இந்த உண்மைகளை மனிதன் உணர்ந்தால் அந்த ஞானிகள் சென்ற பாதையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை பெறுவது திண்ணம். நாம் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதை குருநாதர் தெளிவாக்கினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“பிரதோஷம்…” என்பது
1.பிறருடைய உணர்வுகள் வராதபடி
2.பிறருடைய சங்கடங்கள் வராதபடி
3.பிறருடைய ஆவிகள் வராதபடி
4.பிறருடைய பற்று வராதபடி இருப்பது தான் பிரதோஷம்….!

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் ஏதாவது சாங்கியங்களைச் செய்தால் பிரதோஷம் நீங்கிவிடும் என்று செய்வார்கள். இதனால் பலன் ஏதும் இல்லை.

1.பிறருடைய உணர்வுகள் நமக்குச் சாராதபடி இருக்க வேண்டும் என்று சொன்னால்
2.”அவர்களுடைய உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பிரதோஷம் ஆக்குகின்றோம்…”

பிரதோஷம் அன்றைக்குப் பழங்கள் எல்லாம் வைத்துச் சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தோஷம் வராமல் தடுக்க வேண்டும் என்றால் இது முடியாது.

ஆக மொத்தம் பிறருடைய உணர்வுகளை நமக்குள் இயக்கவிடாது “பிறருடைய அந்தத் தோஷத்தைத் தடுக்க வேண்டும்…!” என்ற எண்ணமே வருவதில்லை. பிரதோஷம் என்றால் அன்றைக்கு மந்திரங்களைச் சொல்லி இன்னொரு தோஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால்
1.எந்த மந்திரத்தைச் சொல்லிப் பதிவு செய்து உள்ளீர்களோ
2.பிரதோஷம் அன்றைக்கு எவ்வளவு மந்திரத்தைக் காதில் கேட்டீர்களோ
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வந்தபின் கடைசியில் இறந்தபின்
4.அதே மந்திரத்தைச் சொன்னால் நம் ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் செய்து கொள்வதற்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு நோயைப் போக்குவதற்காக என்று சொல்லி அந்த மந்திரத்தைப் பதிவு செய்து கொண்டு போனால் அதே உணர்வை எடுக்கும் போது
1.இறந்த பின் இந்த ஆன்மாவைக் கைவல்யம் செய்து கொண்டு
2.இன்னொரு உடலுக்குள் நோய் தீருவதற்காக
3.இந்த ஆவியை ஏவல் செய்வார்கள்… அதற்குத் தான் பயன்படும்.

மனிதன் உடலுக்குள் விளைவதை இத்தனை மந்திர ஜாலம் செய்து பல வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது தான் எத்தனையோ உணர்வுகள். அதைத்தான் கரையான் மந்திரம் என்பது.

கரையான் என்ன செய்கிறது…? கட்டைக்குள் கரையான் சென்ற பின் அதிலே அதன் மலம் பட்டபின் கட்டையே மண்ணாகப் போய்விடும். அந்த மாதிரி கட்டையைச் சீக்கிரம் நம்மால் கரைக்க முடியுமா..! என்றால் முடியாது.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் போது வேதங்களில் (அதர்வண) மூலத்தின் மூல நிலைகள் உண்டு.
1.இந்த உணர்வின் தன்மை இரண்டும் உராயப்படும் போது
2.இறந்தபின் அதைப் பிரித்து இன்னொரு மனிதனுக்குள் பாய்ச்சிச் செலுத்தியபின்
3.அந்த உடலுக்குள் இருக்க வேண்டும் என்றால் இந்த உணர்வைக் கரைத்துவிடும்.
4.பின் ஆவியுடன் (காற்றுடன்) கலக்கும்.

மீண்டும் அதற்குண்டான எதிர்மறையான நிலை ஆனபின் பொருளாக வந்துவிடும். ஒரு டப்பாவுக்குள் சிறு துவாரம் (ஊசி அளவு) வைத்தால் அதன் வழியாக அதற்குள் வந்துவிடும். மீண்டும் மாற்றினால் அது ஆவியின் நிலையாக மாறும்.

இது எல்லாம் மனிதனுக்குள் உருவான நிலைகள்…!

இதே போல பல உயிரினங்களும் உண்டு. மந்திரங்களை எடுத்து அந்த உயிரினங்களைக் கேட்க வைத்துப் பின் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தபின் அதை வைத்துப பல தீமைகளைச் செய்பவரும் உண்டு.

“ஒடியர்கள்…!” என்று இருக்கின்றார்கள். இந்த அசுர உணர்வு கொண்டு பறந்து போகும் காக்காயை அவர்களின் ஒடிய மொழியில் சொன்னால் அதனின் இறக்கை பிய்ந்து துண்டாக விழும்.
1.அந்த ஒலி அதிர்வுகள் (ஒடியன் மந்திரம் என்பது) அங்கே அவ்வாறு மாற்றும்
2.எப்படி ஒரு மின்னல் தாக்குகின்றதோ அதைப் போல உணர்வின் இயக்கங்கள் கொண்டு செய்வார்கள்… இது எல்லாம் உண்டு…!
3.செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை தான்..!
4.ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அதிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால்… “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால்
2.எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது
3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து என்ன செய்யலாம்…?

யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும்.
2.“உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால்
3.உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

லேசர் இயக்கம்

 

கண்ணின் நினைவுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்…? வெகு தொலைவில் இருப்பான் எதிரி. அவனைக் கோபமாக நினைத்தவுடன் என்ன நடக்கின்றது…?

இந்தத் தீமையின் உணர்வுகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவன் செயலற்றவனாக ஆகின்றான், அவன் உணர்வு நமக்குள் இருப்பதால் கண் வழி நம் உணர்வைச் செலுத்தும் பொழுது இந்த லேசர் இயக்க ஒளிகள் அங்கே தாக்குகின்றது.

அன்று ஈராக்கில் யுத்த நேரத்தில் பாதாளத்தில் அவர்கள் மறைந்திருந்து பல வேலைகளைச் செய்தார்கள். ஆனாலும் அதைக் கண்டு கொள்வதற்காக லேசரைச் செயல்படுத்தினார்கள்.

மின் கதிர்களால் இயக்கப்பட்டது தான் சில நிலைகள். கதிரியக்கப் பொறிகளை அந்த இடத்திலே பாய்ச்சப்படும் பொழுது அங்கே உள்ளே இருக்கக்கூடிய நிலைகளைப் படங்களாக எடுத்துக் காட்டுகின்றது.
1.எக்ஸ்ரே எப்படி உடலுக்குள் ஊடுருவி படமாகக் காட்டுகின்றதோ இதே போன்று
2.லேசர் இயக்கங்களை பயன்படுத்தி அங்கே ஈராக்கில் மறைந்திருந்த நிலைகளைக் காணுகின்றார்கள்.

குண்டுகளைப் போட்டாலும் எதிர்த்துத் தாக்கும் தன்மையும் அதைத் தாங்கக்கூடிய கான்கிரீட்டுகளாகவும் அவர்கள் போட்டு வைத்திருந்தார்கள்.

எதிர்நிலை எக்கோ… பதிவு செய்யக்கூடிய நிலை இருந்தாலும் அதையும் அறிந்து லேசர் மூலம் வலுவாக இயக்குகின்றார்கள். அந்த லேசரைப் பாய்ச்சி அதன் துணை கொண்டு ஊடுருவி… கதிரியக்கங்களை உள்ளே பாய்ச்சி… அந்த கம்பிகளை உருவாக்கும் சக்தி கொண்டு வருகின்றான்.
1.பின்பு தான் குண்டுகளைப் போட்டு பாதாளத்தில் இருக்கும் அந்தச் சுரங்கங்களைக் கண்டறிகின்றார்கள்
2.ஏனென்றால் இப்படித்தான் அன்று யுத்தம் செய்தார்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் யாம் கண்டது தான், தெரிந்து கொண்டோம் என்றால் உங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டுமல்லவா…!

எத்தனையோ அடுக்குகளை வைத்துத் தான் எதிலும் நொறுங்கிவிடாதபடி அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். அதற்காக வேண்டி ஒவ்வொரு அடுக்கிலும் எதிர்ப்புணர்வை வைத்திருந்தார்கள்.

லேசர்… எதிர் நிலையை மாற்றி அந்த தாக்குதலை நிறுத்தக்கூடிய நிலைகளையும் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார்கள். ஆனால் லேசர் மூலம் ஒளி அலைகளைப் பாய்ச்சி அங்கிருக்கும் படத்தைப் பதிவாக்குகின்றார்கள்.

பூமிக்கு அடியில் இருப்பதை எப்படிக் காணுகின்றார்கள்…?

1.மேலே விமானத்தில் பறந்து கொண்டே உணர்வலைகளைப் பாய்ச்சி மோதப்படும் பொழுது
2.அது அப்படியே கோடு போட்டுக் கொண்டே செல்கின்றது.

அதை வைத்து இந்த இடத்தில் நீர் இருக்கின்றது இன்ன இடத்தில் எண்ணெய் இருக்கின்றது இன்ன இடத்தில் பழைய காலத்து உலோகங்கள் இருக்கின்றது இங்கே பல மிருகங்கள் இருக்கின்றது என்பதை விமானத்தில் பறந்து செல்லும் பொழுதே எதிர் நிலைகளை வைத்து லேசர் இயக்கத்தின் மூலம் தான் கண்டுபிடிக்கின்றார்கள்.

விஞ்ஞானி இப்படித்தான் கண்டு கொள்கிறான். ஆனால் மெய்ஞானி “தன் எண்ணத்தால்… அகண்ட அண்டத்தையும் அளந்தறிந்தான்…”

நாம் இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம் ஆனால் இதைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்றால் ராக்கெட்டில் எவ்வளவு காலம் பிடிக்கிறது…?

நம் குருநாதர் என்ன செய்தார்…?
1.எண்ணத்தின் மனோநிலை ஆனாலும் நாம் எண்ணும்போது உடனடியாக அங்கே டச் ஆகின்றது (இணைக்கின்றது).
2.2000 சூரியக் குடும்பத்திற்கும் மனதைப் பாய்ச்சும்படிச் செய்கின்றார்.
3.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கிறது…? அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழ்கின்றது…? என்பதை எல்லாம் குருநாதர் காட்டுகின்றார்.

மரம் செடி கொடியாக இருந்தாலும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் “அதைத் தொடர்ந்த தாவர இனங்கள் மடிந்தால்…” இதற்குச் சத்து குறையும் இதுவும் வீழ்ச்சி அடையும்.

சில தாவர இனங்கள் கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகி இருக்கும். ஆனால் கலந்த செடிகள் மடிந்து விட்டால் சிறிது நாளைக்குத் தான் இந்தப் புதியதாக உருவான செடிகள் வளரும். கடைசியில் அதுவும் மடிந்துவிடும்.

இது எல்லாம் குருநாதர் தெளிவாக எமக்குக் காட்டிய நிலைகள்.
1.காடுகளுக்கு மேடுகளுக்கும் எம்மை அனுப்பி இந்த உண்மைகளை உணரும்படிச் செய்து
2.ஞானிகள் காட்டிய வழியில் மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்ற வழியைக் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தால் நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியது இல்லை. விநாயகர் தத்துவத்தில் சொல்லப்பட்டது போல
1.நாம் எதை வினையாக்க வேண்டும்…?
2.நாம் எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…? என்பதை
3.அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் வரும் தீமைகளிலிருந்து மீளலாம்.

வாஸ்து என்றால் என்ன செய்கிறார்கள்…? வீட்டில் ஏதாவது கஷ்டங்கள் வந்துவிட்டது என்றால் வீட்டில் உள்ள சில நிலைகளை (வாசலையோ சுவரையோ) மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் முதலில் அதே வீட்டில் நன்றாகத் தான் வாழ்ந்திருக்கின்றார்கள். இப்பொழுது தான் கஷ்டம் வந்திருக்கிறது.

வீட்டில் இருக்கும் பழைய வாசல்படியை எடுத்து விட்டு அதை வேறு பக்கம் வைத்தால் அந்த வாஸ்து சாஸ்திரப்படி உனக்கு நல்லதாகும்…! என்று இப்படிக் கொண்டு போகின்றார்கள்.

“வாஸ்து சாஸ்திரம் என்பது உண்மை…!” என்ற நினைவில் அதை ஆழமாகப் பதிவாக்கிய பின்… “வீட்டு வாசலை மாற்றி விட்டால் நமக்கு நல்ல காலம் வரும்..!” என்ற இந்த உணர்வைப் பதிவு செய்கிறார்கள்.

அதன்படி வாசலை மாற்றி வைக்கின்றோம்.

அப்படி வளர்ந்து வரப்படும் போது சந்தர்ப்பத்தில் தன் பையன் வெளியிலே ஏதாவது சேட்டை செய்கிறான் அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நமக்கோ மற்றவர்களுக்கோ ஏதாவது தொல்லை கொடுக்கிறான் என்று வைத்து கொள்வோம்

அதை உற்றுப் பார்த்து… கேட்டு அந்த உணர்வின் தன்மைகளை எடுத்துக் கொண்ட பின்
1.நமக்குத் தொந்தரவு கொடுக்கிறான்…
2.இன்னொருத்தருக்கும் தொல்லை கொடுக்கிறான்…
3.பாவி இப்படிச் செய்கின்றானே.. இப்படி இருக்கின்றானே..! என்ற உணர்வை எடுத்துக் கொள்வோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
1.நம் உடலிலும் பட்டு… “நம் வீட்டிலும்” பதிவாகி விடுகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அதே நினைவாகி அதைக் மீண்டும் மீண்டும் கூட்டிக் கொள்கிறோம்.
3.ஒருத்தருக்கு ஒருத்தர் அந்தப் பகைமை உணர்வுகள் வளரத் தொடங்குகிறது.

வாஸ்து சாஸ்திரப்படி வாசலை மாற்றினாலும் கொஞ்ச நாள் நன்றாக இருக்கும். அப்புறம் நாம் எடுக்கும் உணர்வுகள் மாறும் போது அந்தச் சாஸ்திரம் செல்லுமா…?

வாஸ்து சாஸ்திரத்திப்படி வீட்டையோ வாசலையோ சுவரையோ மாற்றி வைக்கின்றார்கள் அல்லவா…! அந்தக் குடும்பங்கள் எல்லாம் பின்னாடி என்ன ஆகிறது என்று பாருங்கள். பணத்தைச் செலவழித்தது தான் மிச்சம்…!

ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டு அதைப் பதிவாக்கி அதன் வழி இயக்குவது.

ஆனால் வேதங்கள் கூறியது ரிக்… சாம… அதர்வண… யஜூர்.. மீண்டும் சாம. உடல் ரிக். அதிலிருந்து வரக்கூடிய உணர்வு சாம.

ஆகவே அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கஷ்டம் என்ற நிலை போய்…
2.இவர் ஏதோ உயர்ந்ததைச் சொல்கிறார்… என்ற நிலையில்
3.அந்தக் கஷ்டமான உணர்வின் தன்மையை அடக்குகின்றது அதர்வண
4.அப்பொழுது அந்த உணர்வின் எண்ணம் கொண்டு கொஞ்சம் துயரத்தை மறக்கின்றார். அவர் சொல்லும் உணர்வு யஜூர் (யஜூர் என்றால் வித்து) ஆகிறது.
5.பின் மீண்டும் சாம…! அதாவது வாஸ்து சாஸ்திரப்படி சரி செய்து விட்டோம்…! என்று அவரை எண்ணும் போதெல்லாம் சிறிது நாளைக்கு நல்லது வருகிறது.

ஆனால் முதலில் சொன்ன மாதிரி பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை கொடுக்கின்றான்… பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… என்ற உணர்வுகளை எடுத்து வேதனைப்பட்டால் அந்த வேதனை என்ன செய்கிறது…?

மீண்டும் இந்த நல்லதை அடக்குகிறது அதர்வண.. பின் மீண்டும் யஜூர்…! கஷ்டப்படும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது. மீண்டும் தீமைதான் நடக்கும்.

ஆகவே அத்தகைய தீமைகள் நடக்காது நிலைகள் வரவேண்டும் என்றால்
1.அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் கோவிலுக்குச் சென்று
2.அங்கே உணர்த்தப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தையும் அதை அருளிய மகரிஷிகளின் அருள் உணர்வுகளையும் எடுத்து
3.எந்தப் பகைமை உணர்வுகளும் நமக்குள் உட்புகாது தடுத்துக் கொண்டால் அதற்குப் பெயர் கல்யாண ராமா…!
4.தீமைகள் நம்மை இயக்காது மகிழ்ச்சி (சீதா) என்ற உணர்வை அரவணைக்கும் தன்மையாக நமக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் எடுத்தால் வேகா நிலை. இந்த உலகில் துருவ நட்சத்திரத்தை எதுவுமே வேக வைக்க முடியாது.

நீங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெற்று வேகா நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புதிதாகத் திருமணமான கணவன் மனைவி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

திருமண நாளில் உங்களுக்கு ஆசீர்வதித்தார்கள் அல்லவா…!
1.அந்த அனைவரின் ஆசீர்வாதமும் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு
2.கணவனுக்கோ மனைவிக்கோ இந்தக் குறைபாடுகள் வந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாதபடி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்… நாங்கள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று மனைவி பால் உள்ள குறைகளை கணவன் இப்படி எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கணவன் பால் இத்தகைய குறைகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கணவன் பொருளறிந்து செயல்படும் சக்தியும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

என்னை அரவணைக்கும் அந்த அருள் ஞானம் என் கணவர் பெற வேண்டும்… அந்த அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதன் என்ற வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் சிறு குறைகள் வரத்தான் செய்யும்
2.அந்தக் குறைகளை உடனடியாக நீக்கிப் பழக வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே எந்தக் குறைகளைக் கண்டாலும் முதலில் தன் தாய் தந்தையரை எண்ணி “உங்கள் திருமண நாளை எண்ணி…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கணவர்/மனைவி பொருளறிந்து செயல்படும் அருள் சக்தியும் மலரைப் போல் மணம் பெறும் சக்தி பெற்று அருள் ஞானம் பெறும் அந்த அருளாசி எனக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… “எங்கள் காரியங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும்…” என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

கணவன் வெளியிலே எங்கே சென்றாலும் மனைவியிடம் சொல்லி
1.உன்னுடைய அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
2.எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
3.அந்த அருள் சக்தி உன்னிடம் தான் இருக்கின்றது…
4.எனக்கு அந்த அருளாசி கொடு…! என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும்.

அதே போல மனைவியும் கணவனை எண்ணி என் அன்னை தந்தையரின் அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவர் பெற வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் அவர் பார்ப்போருக்கெல்லாம் நல்ல நிலை கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் பொழுதும் மனைவி தன் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் அவர் பார்வையில் அந்தப் பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் அந்தச் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

எங்கே வெளியில் சென்றாலும் கணவன் மனைவியிடம் சொல்லி
1.என் காரியம் சித்தியாக வேண்டும்
2.உன் அருள் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுச் செல்ல வேண்டும்.
3.ஏனென்றால் இருவரும் வேறல்ல… சக்தி இல்லையேல் சிவமில்லை… சிவம் இல்லையேல் சக்தியில்லை….!

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்பொழுதுமே அன்னை தந்தையரின் அருளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றுமே பேரின்பம் கிடைக்கும்.

1.சாதாரணமாக… “மனைவி தான்” என்று எண்ணிவிடக் கூடாது.
2.”அருள் தெய்வம்…!” என்ற எண்ணத்திலேயே நாம் வருதல் வேண்டும்.
3.மகாலட்சுமி…! என்று கூட நீங்கள் எண்ணலாம் – சர்வத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.

பெண்களுடைய வாக்கை என்றுமே ஆண்கள் தொடர்ந்தால் எதை வாழ்த்தி அனுப்புகின்றார்களோ அந்த வாக்கின் பிரகாரம் அந்தக் காரியங்கள் நல்லதாகும்.

கணவன் மனைவி திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாக ஆனது போல
1.என்றுமே இந்த வாழ்க்கையில் எண்ணினால்
2.என்றுமே பிரியாத நிலைகள் கொண்டு உங்களுக்கு இனிப் பிறப்பே இல்லை.

இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இந்த வாழ்க்கையில் எப்பொழுது நீங்கள் பேரின்பம் பெறுகின்றீர்களோ அந்த அருள் வாழ்வு என்றுமே இருக்கும். அடுத்து உடல் இல்லை. இதே உடலின் உணர்வுகள் ஒளியாகிப் பேரின்பமாக வாழ முடியும்.

உடலை வளர்க்க… கௌரவத்தை வளர்க்க… தன்னையே தான் மெச்சிக் கொள்ள… யாம் சக்தி கொடுக்கவில்லை

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் இணைத்து விட்டால்
1.அது இந்த மனித வாழ்க்கையின் நிலைகளைத் தணித்து
2.அருள் உணர்வு என்ற நிலையை நமக்குள் பெருக்குகின்றது.

அது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

நான் இதையெல்லாம் உங்களிடம் சும்மா கொடுக்கவில்லை.
1.ஈஸ்வரபட்டர் எனக்குச் சும்மா கொடுக்கவில்லை.
2.அவர் உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
3.அந்த நினைவின் தன்மை தான் நாம் எடுக்கின்றோம்.

இந்த உடலில் இச்சைக்காக வாழ கற்றுக் கொண்டோம் என்றால்
1.உடலை வளர்க்கவும்… அதிலே கௌரவத்தை வளர்க்கவும்
1அதை வைத்து என்னை மெச்சிக் கொள்ளவும் என்று நான் இருந்தேன் என்றால் “உடலின் இச்சைக்குத் தான் வாழ முடியும்…”

உடலுக்குப் பின் குருநாதர் கொடுத்த சக்தி பயனற்றதாகப் போய்விடுகின்றது.

ஆகவே உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் “உடலின் இச்சைக்கு என்று இல்லாதபடி…” எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.

நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை நான் பெறுகின்றேன். உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நான் அதைப் பெறுகின்றேன்.

இதைத்தான் குருநாதர் எனக்குள் உருவாக்கினார்.

ஆகவே இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி அந்தப் பதிவை நீங்கள் வளர்ப்பதற்குத் தான் “தொடர்ந்து உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு வருகின்றேன்…”

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையே தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்வது அதுதான்.

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”

 

ஆண்டவனின் நாமத்தையே மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டிருந்தால் “இறைவனை அடையலாம்…” என்று பலர் அக்காலத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.

சிவ தத்துவத்தில் எடுத்துக் கொண்டால் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று தொடர்ந்து அந்த ஒலிகளை எழுப்புகின்றார்கள். இந்த உணர்வின் இயக்கத்தின் தொடர் கொண்டு
1.தன் உடலில் உள்ள அணுக்களை தன்னுடன் இணைந்து இயங்கக் கற்றுக் கொள்கின்றார்கள்.
2.அந்த உணர்வின் ஒளி கற்றைகளாக ஆன நிலையில் சரீரத்தை மூடிவிட்டாலும்
3.அதே உணர்வுகள் நுகரப்பட்டு வெப்பத்தின் துணை கொண்டு உடலில் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.
4.அந்த உணர்வுகள் கடைசி நிமிடத்தில் எதுவோ எல்லாவற்றிலும் இந்த உயிரைப் போலவே இந்த உணர்வுகள் அடங்கி விடுகின்றது.
5.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற இந்த ஒலி மீண்டும் அது வந்து கொண்டே இருக்கும்… அதன் இயக்கமாக அது மாற்றி விடுகின்றது.
6.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் தன் உடலில் உள்ள அணுக்களுக்கு ஆன பின்
7.உடல் இருக்கும் ரசங்கள் குன்றும்… உடல் நலியும்… உயிர் உள்ளேயே இருக்கும்.

இதை நேரடியாக எனக்குக் காட்டுவதற்காக இமயமலைச் சாரலில் இரண்டு மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

முதலிலேயே ஹரித்வார் அருகில் மரத்துக்கடியிலே ஜெபித்துக் கொண்டிருந்தவரைக் காட்டினார். பெரிய வெள்ளத்தை வரவழைத்து கரைக்கச் செய்தார். கரைந்த பின் ஓ…ம் நமச்சிவாய…! என்று அங்கே சப்தம் வருகின்றது

அதை ஜெபித்தாலும் இந்த உடலுக்குள் தான் சிறைப்பிடித்து இருக்கின்றார். அதற்கு மேல் அவர் விண் செல்லவில்லை. உடலின் உணர்வுக்கே செல்கின்றார்.

ஆனால் கரைத்த பின் வேறு வழி இல்லை அடைப்பட்ட நிலையில் இருந்து எதிரொலி… உணர்வின் ஒலி வரப்பப்படும் பொழுது அவருக்கு மிகக் கஷ்டமாகி விட்டது.

அப்பொழுது குருநாதர் நேரடியாக நீ அவரைப் பார்க்கக் கூடாது என்றார். ஏனென்றால் அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நீ அவரை எண்ணி அந்த சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்தாய் என்றால் இது அவருக்குள் சேரும் என்றார்

காலை நான்கு மணிக்கு “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர் பெற வேண்டும்…” என்று இந்த உணர்வின் ஒலிகளை அங்கே பரப்பப்படும் பொழுது
1.அதன் ஈர்ப்பால் அந்த ஆன்மா வெளி வருகின்றது.
2.ஒளியின் சரீரமாக இருளுக்குள் அடைப்பட்டிருந்த நிலை ஒளியாக மாறி விண் செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
3.அதன்படி அந்த ஆன்மாவை நீ விண் செலுத்து என்றார் குருநாதர்.

இதே மாதிரி இன்னொரு இடத்திலே ஜோஸ்மெட்டுக்கு மேலே ஒருவர் புதையுண்டு இருக்கின்றார். அங்கே இராணுவப் பாதுகாப்பு இருக்கின்றது.

ஒரு பெரிய ஓடை வருகின்றது. அந்த ஓடைக்குள் திட்டுகள் இருக்கின்றது. மழை பெய்தால் தண்ணீராக வரும். ஆனால் கரையின் ஓரத்தில் திட்டுக்குள் அடங்கி இருக்கின்றார்.

ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதாவது ஹரி ஓம் நமோ நாராயணா என்றால் “சூரியனின் இயக்க நிலை…”

அந்த உணர்வின் தன்மையை எடுத்து ஒளியின் உணர்வாக அவரும் இந்த உடலுக்குள் தான் அடங்கி இருக்கின்றார்.

அதை எல்லாம் நேரடியாகவே எமக்குக் காட்டுகின்றார். உடலுக்குள் அடங்கியிருக்கின்றது… செவி கொண்டு அந்தச் சப்தத்தை நீ கேள் என்றார் குருநாதர்.

இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் வந்து என்ன செய்கின்றீர்கள்…? என்ன பார்க்கின்றீர்கள்…? என்று கேட்கின்றார்.

அங்கே நான் காதை வைத்து அந்தச் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் அல்லவா. ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம் என்று குருநாதர் சொல்லி விட்டார்.

நான் ஊரைச் சுற்றி பார்க்க வந்தேன். இங்கே மலைப்பிரதேசமாக இருக்கின்றது நிலநடுக்கம் ஏதும் வருகின்றதா…? என்று சும்மா பார்க்கின்றேன் என்று சொன்னேன்.

அதிலே தமிழர் ஒருவர் இருந்தார். அப்படிங்களா…! என்றார்.

ஆனால் அங்கே குளிர் அதிகமாக இருக்கின்றது அவர்களெல்லாம் சட்டை போட்டிருக்கிறார்கள். நான் வெறும் கோவணத் துணியைத் தான் கட்டி இருக்கின்றேன்.

என்னுடைய நிலையைப் பார்த்து அந்த மிலிட்டரிக்காரர்கள் எல்லாம் ஆசீர்வாதம் கேட்கின்றார்கள். என்னிடம் விபூதி எதுவும் இல்லை. அங்கிருக்கும் மண்ணை எடுத்துப் பிரார்த்தனை செய்து அதைத் தான் அவர்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்… உங்களுக்குத் தக்க உபாயமாகும் என்று சொன்னேன்.

ஏனென்றால் பேரீச்சம் பழம் பிஸ்கட் மட்டும்தான் அங்கு கொண்டு சென்றேன். விபூதியைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் நான் கொடுத்ததை அவர்கள் சந்தோஷமாக வாங்கிச் செல்கின்றார்கள்.

அங்கே ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள் சூரியனுடைய இயக்கமாக இருந்தாலும் கூட்டை விட்டு வெளியே வந்தால் இதே சூரியனால் கவரப்பட்டுத் தான் சுழல முடியும்.

அப்படிக் கவரப்படும் போது அவர் எந்த ஒலியினைத் தனக்குள் ஓங்கி வளர்த்தாரோ எப்படி இங்கே கூட்டுக்குள் ஒடுங்கினாரோ இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அவரையும் இது போன்றுதான் உட்கார வைக்கும்.

நாராயணன் செயல் என்ன…? என்று அங்கே தியானமிருக்கும்படி சொன்னார் குருநாதர்.
1.அதன்பின் சில உணர்வின் ஒலிகளை எடுத்து அங்கே பரப்பும்படி செய்தார் குருநாதர்.
2.அந்த உணர்வுகளை அவர்கள் எடுத்தார்கள் என்றால் அதைச் சுவாசித்து அவர்களும் விண் செல்ல உதவும் என்று
3.உணர்வின் எக்கோவாக (ECHO) அங்கே அதைப் பரப்பச் சொன்னார்.
4.அவர் சொன்ன முறைப்படி செயல்படுத்தினேன்.

ஏனென்றால் அந்த இமயமலைச் சாரலில் இது போன்று ஏராளமானோர் உண்டு. இன்னும் அந்தக் கூட்டுக்குள் தான் இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரணமாக நாம் எல்லோருமே மந்திரங்களைச் சொல்லி பழக்கப்பட்டவர்கள் தான். இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…? சுட்ட சாம்பலை எடுத்துப் பாவத்தைப் போக்குவதற்காகக் வேண்டிக் கொண்டு போகிறோம்.

எங்கே…?

கங்கையில் கொண்டு பாவத்தைக் கரைத்து விட்டால் போய்விடும் என்று கரைப்போம். அடுத்து அந்த மந்திரத்தைச் சொல்லி மோட்சத்துக்கு அனுப்பிவிட்டதாக அங்கே சொல்வார்கள்.

வீட்டுக்கு வந்தவுடனே நாம் என்ன செய்கிறோம்…? எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகி அப்புறம் புத்தாடைகளை உடுத்தி விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தீபாரதனை காட்டுவோம். அப்படிக் காட்டினால் மோட்ச தீபம்.

அங்கே அப்படிச் செய்த பின் அமாவாசை அன்றைக்கு என்ன செய்கிறோம்…? அம்மா அப்பா உணர்வுகள் எல்லாம் நம் உடலில் இருக்கும். அவர்களை நாம் எண்ணுவோம். எப்படி…?

அவர்கள் பிரியமாகச் சாப்பிட்ட உணவுகளை எல்லாம் வைத்து நாம் கூப்பிடுவோம். எங்களுடன் இருந்தீர்கள். இதை எல்லாம் சாப்பிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த துணிமணிகளை எலலம் வைத்திருக்கின்றோம் என்று சொல்லுவோம்.

இந்தச் சாப்பாடு வைத்த உடனே அவர்கள் உணர்வு நம்மிடம் இருப்பதால் இந்த உணர்வு ஆன்மா (மணம்) ஆனபின்.. அது இங்கே வரும். நாம் இங்கே இதைச் செய்வோம்.

ஆனால் குடுகுடுப்புக்காரன் என்ன செய்வான்…?

நம் வீட்டு வாசல் படியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு போவான். தலை முடியையும் எடுத்துக் கொள்வான்.

நமக்கு ஆகியவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தத் தெய்வத்தை எண்ணி மந்திரங்கள எல்லாம் சொன்னோமோ அதை எடுத்துக் கொள்வான்.

இது எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். எந்த இடத்தில் அவர்களைப் (நம் முன்னோர்களை) புதைத்தார்களோ அல்லது எரித்தார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு போவார்கள்.

நம் பாதம் பட்ட மண்… தலை முடி… துணி… (இதில் எல்லாம் நம் உணர்வின் எண்ணங்கள் உண்டு) இந்த மூன்றையும் வைத்து அந்த இடத்தில் சில மந்திரத்தைச் சொல்வார்கள்.

மந்திரங்களை ஜெபித்த பின் அந்த மண்ணை எடுத்துக் கெடுதலான நிலைகளுக்கு அதைத் தூவி விடுவார்கள். ஆனால் நமக்குத் தெரியாது. மண்ணிலே பாதம் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எந்த ஆவியோ அது இங்கே வந்து குவியும்.

அடுத்தாற்போல் என்ன செய்வான்…? நல்ல காலம் வருகிறது…! என்று குடுகுடுப்புக்காரன் சொல்லுவான்.
1.இந்த உணர்வின் ஒலி/ஒளி கொண்டு நம் உணர்வின் அறிவை எடுத்து
2.நம் குடும்பத்திலே உள்ள நிலைகள் எல்லாம் எப்படி எப்படி இருக்கிறது…? என்று கட…கட… என்று சொல்லிக் கொண்டே வருவான்.
3.இது ஒரு வகை.

இது எல்லாம் அன்றைய அரசர்களுக்குத் தூது சென்ற நிலைகள். ஒரு குடும்பத்திலே இன்னென்ன நடக்கிறது என்ற உணர்வின் செயலாக்கங்களை இருந்த இடத்தில் இருந்து அரசனுக்குத் தூது செல்லும் முறை. அரசனால் உருவாக்கபட்ட “ஐந்தாம்படை” என்று அக்காலங்களில் வந்த நிலை.

நாடி சாஸ்திரமும் இதே நிலை தான். ஒரு அரசன் ஆன பின் மந்திரங்களை உருவாக்கித் தன் குடிமக்களுக்குத் தெய்வ பக்தி என்ற நிலையில் பதிவாக்கி விடுவார்கள்.

அத்தகைய மந்திரங்களை மக்கள் தங்களுக்குள் கவர நேர்கின்றது. இப்படிப் பல மந்திரங்களைத் தனக்குள் சேர்த்த பின் அந்தக் குடிமகன் அரச பக்தி என்ற நிலையில் இருப்பான்.

அரசன் சாகாக்கலையாக நாடி சாஸ்திரம் என்ற பெயரில் செயல்பட்டு மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அவனுக்குள் போகும். குடிமகனுக்குச் சொன்ன நிலையெல்லாம் சொல்லும். உருவாக்கும் சக்தியை எல்லாம் சொல்லும்.

அந்த நாடி சாஸ்திரத்தை வாசித்த பின் இவன் இன்னொரு கூட்டுக்குள் போவான். ஆசைப் பட்டு விடுவான் என்று அந்த நாடியில் எழுதி இருக்கும்.

இந்த உணர்வின் தொடர்பு கொண்டவன் இதை எத்தனை காலம் வைத்திருக்கலாம் என்ற இந்த நிலை எல்லாம் அதிலே வரும். அடுத்து இன்னாரிடம் கொடுத்து விடு…! என்று போட்டிருக்கும். ஆனால் அந்த மாதிரிக் கொடுக்க இன்று யாரும் இல்லை.

எனக்கு… அது தெரியும் இது தெரியும்..! என்று குடும்பச் சொத்தாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இவனுடைய ஆசை நிலை கலக்கப்படும் பொழுது அந்த அரசனும் வீழ்ச்சி அடைகின்றான்.

கூடு விட்டுக் கூடு பாயும் தன்மை இவனுக்குள் எடுத்துக் கடும் பேயாக மாறுகின்றான். ஆக மொத்தம் இந்த நாடி நாஸ்திரம் பார்த்த குடும்பம் எல்லாம் பாருங்கள். தொலைந்து போய்விடும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.அந்த அரசனுடைய நிலையில் அவன் சொன்ன மாதிரி மந்திர ஒலிகளைச் செலுத்தப்படும் போது
2.அரசனுக்கு வந்த ஆசைகள் எல்லாம் நம் உடலுக்குள்ளும் வரும்.. தப்ப முடியாது…!

ஆகவே இது சாகாக்கலை.

ஆனால் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டால் அது வேகா நிலை. இந்த அண்டத்தில் உள்ள எதுவுமே நம்மை வேக வைக்க முடியாது.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கு தான் துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் சப்தரிஷி மண்டலங்களைப் பற்றியும் அந்த மாமகரிஷிகளைப் பற்றியும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.
1.எந்தக் காரணம் கொண்டு நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியதே இல்லை.
2.இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

November 2025 உபதேசம்

கண்கள் தோன்றிய விதம்

 

உடல் என்பது திரேதா தான். திரேதா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்.
1.வாசுதேவன் – சுவாசித்ததை உருவாக்கக் கூடியவன்.
2.தேவகி – பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள்.

சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வு மோதினால் அதிர்ச்சி என்ற நிலை வருகின்றது. அதிர்ச்சி என்ற நிலை வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

எந்தச் செடியின் சத்தை அது (கண்ணில்லாத புழு) எடுத்து வளர்த்ததோ அதன் உணர்வின் தன்மை இழக்கப்படுகின்றது. விஷமான செடியின் சத்தை நுகர்ந்த பின் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.

ஆனால் மோதிய பின் அதன் வழியாகத் தெரியப்படுத்துகின்றது. எதை…?

1.”அறிய வேண்டும் என்ற உணர்வுகள்…”
2.துவாரகா இந்த உடலுக்குள் அதைச் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.ஒளிக்கற்றைகள் சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி… அணுக்களாகி அது அறியச் செய்யக்கூடிய கற்களாக மாறுகின்றது.
4.உறையும் தன்மை வரும் பொழுது கருவிழி என்ற உணர்வுகள் அணுத் தன்மை அடைந்து
5.நரம்பு மண்டலங்கள் இழுப்பதை ஒளிப் படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.

இந்த ஒளிப் பிளம்புகள் கரு விழியிலே மறைந்து விட்டால்… ஒளிப் படலங்கள் அதாவது கண் பார்வை தெரியாது.

கண்ணில்லாத புழு “பார்க்க வேண்டும்…” என்று தான் எண்ணிய உணர்வு கொண்டு கற்களாக கருவிழியாக கண்கள் எப்படி உருவானது…?
1.சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர் அதனால் தான் வாசுதேவன்.
2.தேவகி… பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது (கண்களாக) வருகின்றது.

இந்த மனித உடலுக்குள் நாளை என்ன செய்வோம் என்று கற்பனை செய்கின்றோம்…? அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். வடிவமைத்தது தனக்குள் பதிவாகின்றது.

துவாரகா… புறத்தால் கண்களானாலும்
1.அகத்திற்குள் முதலிலே அதைப் படமாக்குகிறது.
2.படமாக்கிய பின் புறத்திலே எழுதுகின்றோம். உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எழுதவே முடியாது.

உணர்வின் தன்மை பதிவாகும் பொழுது பதிவின் நினைவுகளை நினைவாக்குகின்றோம். துவாரகா இந்த உடலுக்குள் சிந்தனைகள் எடுத்துத் தான் மனிதன் தன் செயல்களைச் செயல்படுத்த வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு தான் இதையெல்லாம் உங்களுக்கு உணர்த்துவது.

பதிவைத் தான் மீண்டும் எழுத்தில் கொண்டு வருகின்றோம். புறத்தால் நாம் எழுதினாலும் அதில் குறைகள் வந்தால் திருத்துகின்றோம்.

இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது… கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)

ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்… பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.

தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.

அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.

அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.

ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.

1.தீமை செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து வாழ வேண்டும்
3.தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன் உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே தீபாராதனை காட்டும் பொழுது அங்கிருக்கும் பொருள்கள் அனைத்தும் தெளிவாகத் தெரிகின்றது.

ஆகவே ஒரு விளக்கைக் காட்டினால் அங்கு பல பொருள்கள் தெரிகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்..?
1.பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணிச் சுவாசிக்க வேண்டும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும், வியாபார நிமித்தம் எங்களிடம் தொழில் செய்வோரும் அவர்களது குடும்பமும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் ஒரு அவசரம் நிமித்தமாகக் கொஞ்ச நேரம் கால தாமதமாகி விட்டது என்றால் நாம் என்ன செய்கிறோம்..?

உடனே கோபிக்கின்றோம். ஏன்டா இவ்வளவு நேரம்…? என்று குழந்தைகளை அதட்டுகின்றோம்… மிரட்டுகின்றோம்..!

அடுத்தாற்போல் ஏதாவது ஒரு காரியத்திற்காக உட்கார்ந்து இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உட்கார்ந்து வெகு நேரம் ஆனால் உடனே நம்மையறியாமல் வேதனைப்படுகின்றோம்… கோபப்படுகின்றோம்…!

யாரை நினைத்து இந்த வேதனை உணர்வை நுகர்கின்றோமோ அவரை எண்ணும் போதெல்லாம் வெறுப்பும் குறைபாடுகளும் வந்து விடுகின்றது. நம்மை அறியாமலே இப்படி வந்து விடுகின்றது

அப்படி வராமல் தடுப்பதற்குத் தான் ஆலயங்களில் விளக்கைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.. தீப ஆராதனையும் காட்டுகின்றார்கள்.

அதாவது
1.“என்ன நிமித்தமோ…! அதனால் நேரம் ஆகிவிட்டது…
2.சரி பரவாயில்லை… அவர்கள் சீக்கிரம் வரவேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்
3.நமக்கு யார் மீதும் வேதனையும் வராது… வெறுப்பான உணர்வுகளும் வராது.
4.ஒன்றுபட்டு வாழும் தன்மையும் சங்கடங்கள் வளராத நிலைகளும் நமக்குள் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவியாக வாழும் நீங்கள் வாழ்க்கையில் சில குறைபாடுகள் வந்தாலும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

குழந்தைகளினாலோ உறவினர்களினாலோ அல்லது நண்பர்களினாலோ சிறு குறைகள் வந்தாலும் அது எது சந்தர்ப்பமோ..
1.அவர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.வாழ்க்கையில் தெளிந்து நடக்க வேண்டும்
3.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.

இப்படி இருந்தால் இல்லற வாழ்க்கையில் என்றுமே தெளிந்த மனம் கொண்டு வாழலாம்… மகிழ்ந்து வாழ்ந்திடவும் இது உதவும்.

“உங்கள் கண்களை…” மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுகிறோம்

 

இன்று சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களை வைத்து வெகு தொலைவிலிருந்து ஒளிபரப்பு செய்வதையும் வீட்டிலே டிவி மூலம் நேரடியாக… மிகவும் தெளிவாக அதை நாம் காணும்படி செய்கிறார்கள்.

அதைப் போல விண்ணிலிருந்து ஒலிபரப்பாகும் மகரிஷிகள் ஞானிகள் உணர்வுகளை அந்த விண்ணினுடைய ஆற்றல் வெளியிலே படர்ந்தாலும் அங்கிருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர முடியும். நீங்கள் அதைப் பெறுவதற்குத் தான் உணர்த்துகின்றோம்.
1.இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை எந்த அளவுக்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கேட்கின்றீர்களோ
2.அதை உணரச் செய்யும் கண் ஈர்ப்பு நிலைகள் உங்கள் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்கிறது
3.அதன் மூலம் கவர முடியும்.

அதாவது… மெய் ஞானிகள் ஆற்றலைக் கவரும் விதமாக… “உங்கள் கண்களை மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுவதற்குத் தான்…” இதை உபதேசிப்பது.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் போது
1.எவ்வாறு அவர் சொல்லும் உணர்வைக் கூர்ந்து கவனித்தேன்
2.என் நினைவை அவர்பால் செலுத்தி அந்த ஆற்றலை நான் நுகர்ந்தேன்
3.அதனின் நிலைகள் கொண்டு கண் புலனறிவு ஆற்றல் மிக்கதாக மாறியது
4.அவர் உபதேசித்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் பதிவானது

அதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுதெல்லம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு ஏற்படுத்தினார்.

நீங்களும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம். உபதேசிக்கும் போது யாரெல்லாம் நினைவு கொண்டு கூர்ந்து கேட்கின்றீர்களோ
1.அந்தச் சக்திகள் உங்கள் கண்களுக்கு உரமாக ஏறி
2.ஆற்றல்மிக்க சக்தியாக “ஆண்டென்னா பவர்” கூடுகின்றது.

சாதாரண ஆண்டனாவை டிவியில் இணைக்கப்படும் பொழுது அருகில் இருக்கக்கூடிய ஸ்டேஷன்களை அது கவர்ந்து ஒளிபரப்பு செய்கின்றது. அதே சமயம் சக்தி வாய்ந்த ஆண்டனாவைப் பொருத்தப்படும் பொழுது வெகு தொலைவில் இருக்கக்கூடியதைக் கவர்ந்து டிவியில் அதைக் காட்டுகின்றது.

இராக்கெட்டுகளை ஏவிப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய கோள்களைப் பற்றி அறிந்தாலும்… அந்த உணர்வின் தன்மையைக் கீழே தரையில் வைத்திருக்கக் கூடிய ஆண்டென்னா கவர்ந்து தெளிவாகக் காட்டுகின்றது.

அதே போல் மகரிஷிகள் காட்டிய உணர்வினை “இந்த உபதேசத்தின் மூலம் கேட்டறியப்படும் பொழுது…”
1.விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான
2.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிவரும் உணர்வினை நீங்கள் நுகர்ந்து எடுக்கும் ஆற்றலை
3.உங்கள் கண்களுக்கு ஆற்றல்மிக்க ஈர்ப்பு சக்தியாக அதைப் பெற முடியும்.

இந்த உபதேசத்தினை எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

அதைப் பெருக்கி நம் எண்ணத்தை விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் சக்திகளை…
1.நாம் எண்ணும் பொழுதெல்லாம் சுவாசித்து உடலுக்குள் வினையாகச் சேர்த்து
2.நம்மை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்து விடலாம்.வ்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நண்பர்களாக உள்ள நாம் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் பொழுது நண்பன் அப்பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் அவனுக்கு விக்கலாகின்றது.

ஆனால் நண்பர்களுக்குள் பழகி ஒருவருக்கொருவர் மன வருத்தமாகி வேற்றுமையாகிக் கோபத்துடன் ஏசிப் பேசிக் கடுமையான சொற்களால் அந்த இருவரின் உணர்வுகளும் பட்டுவிட்டால் என்ன ஆகிறது..?

ஒரு சமயம் அதை நினைவுபடுத்தி
1.நமக்குத் துரோகம் செய்தான் பாவி… அவன் எல்லாம் உருப்படுவானா…?” என்று சொல்லும் பொழுது
2.அங்கே அமெரிக்காவில் இருந்தாலும் அவனுக்குப் புரை ஓடுகின்றது.

அப்படி வெறுப்படையும் பொழுது நமக்கும் அந்தத் தீமை என்ற உணர்வாகின்றது. நண்பனுக்கும் அந்த நிலை ஆகின்றது. உதாரணமாக அந்தச் சமயத்தில் ஒரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார் என்றால்
1.வெறுப்படையும் நிலைகள் கொண்டு பேசினால் சிந்தனை சிதறும்.
2.தன்னை அறியாமல் விபத்துக்களும் உண்டாக்கும்.
3.நீரிலே குளித்துக் கொண்டிருந்தால்… பாவி இப்படித் தொந்தரவு செய்தான் என்று எண்ணினால் புரையோடி நீருக்குள் மூழ்கிவிடுவான்.
4.எவ்வளவு திறமை வாய்ந்த நீச்சல்காரராக இருந்தாலும் இப்படி உருவாக்கிவிடுகின்றது.

நம் தாய் தன் பிள்ளையைப் பேரன்புடன் வளர்த்திருக்கின்றது. என் மகன் ரொம்ப தூரம் போயிருக்கின்றான். எப்படி இருக்கின்றானோ…! எதுவாக இருக்கின்றானோ…? என்று இந்தத் தாய் தன் மகன் மீது சோர்வடைந்த உணர்வுடன் எண்ணினால்
1.அங்கே ஒரு இயந்திரத்தில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும்
2.அந்தத் தொழிலில் சிந்தனை குறைந்து விபத்துக்குள்ளாகும்.
3.இது அன்பினால் வரக்கூடிய தொல்லைகள்.

இதே மாதிரிக் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது என் பையன் இப்பொழுது என்ன செய்கிறானோ…? என்ற இந்த வேதனையுடன் எண்ணினால் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும். இது பாசத்தால் உருவாகி விடுகின்றது.

ஆகவே பேரன்பு கொண்டு வளர்க்கும் இந்தத் தாய்மார்கள் தன் பிள்ளைகளைப் பற்றி எண்ணும் பொழுது
1.அவன் உயர்வான நிலைகள் பெற வேண்டும்.
2.அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்
3.சிந்திக்கும் ஆற்றல் பெற்றுத் தெளிவான நிலையில் வாழ வேண்டும்
4.அவன் மகிழ்ந்த உணர்வுடன் வாழ வேண்டும் என்று எண்ணினால்
5.உங்கள் எண்ணம் அந்தக் குழந்தைகளுக்கு நல்லவைகளை ஊட்டும்.

ஏனென்றால் இவை எல்லாம் “நம்மை அறியாமலே” இயக்கக்கூடிய நிலைகள்.

பொதுவாக தாய் எப்பொழுதுமே தன் பிள்ளைகள் நலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்று எண்ணுகிறது. பிள்ளைகள் தாய்க்குத் தொல்லைகள் கொடுத்தாலும் என் பையன் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அந்தத் தாய் எண்ணுகின்றது.

கருவிலே பத்து மாதமும் தாய் தூக்கிச் சுமந்து பத்து மாதம் கழித்து
1.குழந்தை பிறக்கும் பொழுதும் வேதனைப்படுகின்றது.
2.குழந்தையை வளர்க்கும் பொழுதும் வேதனைப்படுகின்றது.

இப்படிப் பலவிதமான இன்னல்கள் பட்டாலும் தன் மக்களை அன்புடன் அரவணைத்து அவர்கள் பண்புடன் வளர வேண்டும் என்று பேரன்பைத்தான் தாய் ஊட்டுகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் தாய் ஊட்டிய அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவுகளாக உண்டு. அதை எண்ணி எடுத்தால் அது நம்மைக் காக்கும்.

1.ஆகவே மனிதர்கள் நாம் அனைவரும் நம் தாயைக் கடவுளாக மதிக்க வேண்டும்.
2.அவர்களைத் தெய்வமாக மதித்தல் வேண்டும். குருவாக மதித்தல் வேண்டும்.

எந்தக் காரியங்களுக்குச் சென்றாலும் அன்னை தந்தையரை எண்ணி
1.அவர்கள் அருளால் என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
2.என் சொல் நல்லதாக இருக்க வேண்டும்.
3.என் செயல் அனைத்தும் போற்றும் தன்மைக்கு வளர வேண்டும்
4.என் தாயின் அருள் உணர்வு என்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்று இபப்டி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

அதே சமயத்தில் தாய் உடலில் சேர்ந்த எங்களுக்காகப் பட்ட வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்கி என் தாய் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட சக்தி

 

மனித வாழ்க்கையில் அதிகமாக சண்டையிடுவரையோ கலவரம் நடக்கும் சில செயல்களையோ நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம் ஆன்மாவில் பால்வெளி மண்டலமாக ஆகிவிடுகிறது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் பதிவானாலும்
1.பதிவான உணர்வுகளை அப்போதே நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.ஓ…! என்று ஜீவ அணுவாக மாற்றும் கருத்தன்மையாக ஒரு இயக்கச் சக்தியின் அணுவாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
3.அப்படிப் பெற்ற அந்த உணர்வுகள் நம் ரத்தத்தில் கலந்தவுடனே அது கருத்தன்மை அடையும் தன்மை வருகின்றது

செடியில் இருந்து வரும் சத்தினைச் சூரியன் கவர்ந்து பரமாத்மாவிலே பரவச் செய்தால் அது மற்ற தாவர இனத்தை ஜீவன் ஊட்டும் சக்தியாக மாறுகின்றது.

இதே போலத் தான் நம் உடலில் பதிவான உணர்வுகள் பதிவான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்ட பின் நம் ஆன்மாவாக மாற்றி… எதன் பசி அதிகமோ அதன் வலு அதிகமாக இயக்கப்படும் பொழுது… அதன் குணத்தின் தன்மை கொண்டு தான் நாம் இயக்குகின்றோம்.

நாம் நினைக்கின்றோம்…! இவன் கோபக்காரன்… அவர்கள் இப்படி… இவர்கள் இப்படி என்று…! ஆனால் சந்தர்ப்பத்தில் பதிவான இந்த உணர்வு தான்… அது எதன் வலுவோ அதைக் கொண்டு இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ உள் நின்று இயக்குவது அதன் தன்மை. அதனால் தான் இராமாயணத்திலே தசரதச் சக்கரவர்த்திக்கு “வசிஷ்டர் பிரம்மகுரு…” என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால் “என்ன…?” என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்தினால் அதைக் கவர்கிறோம் என்று பொருள். அது தான் வசிஷ்டர் என்பது.
1.நாம் எதை உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை கவர்கின்றோமோ
2.அப்படிக் கவர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மம் ஆகி விடுகிறது… அதனால் தான் வசிஷ்டர்.

நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பதைத்தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று காட்டுகின்றார்கள்.

நாம் தீமைகளைச் சந்தர்ப்பத்தில் பார்க்க நேர்ந்தால்…
1.என்ன செய்கின்றான்…? ஏது செய்கின்றான்…? தவறு செய்கின்ரானா…?
2.குற்றங்கள் செய்கின்றானா…? ரொம்பவும் பிழை செய்கின்றானா…?
3.வேதனைப்படுத்துகின்றானா…? என்ற எண்ணங்கள் கொண்டு அந்த மனிதனை உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டு இயங்கத் தொடங்குகிறது
5.ஆகவே கவர்ந்து கொண்ட அந்த சக்தி வசிஷ்டர்…!

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… காந்தம் விஷத்தைக் கவர்ந்து கொண்ட பின் வசிஷ்டர். கவர்ந்து கொண்ட அதே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர். ஆண்பாலாக மாறுகின்றது ஆண்பாலுக்குப் பிரம்மம் என்று பெயர்.

பிரம்மாவின் மனைவி அங்கே சரஸ்வதி. எந்தச் சத்தின் தன்மை கொண்டு இயக்குகின்றதோ அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…! என்று பொருள்.

இன்று உலகம் எப்படி இருக்கிறது…? என்பதை நாம் தெரிந்து கொண்டோம். ஆனால்
1.இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது…? எதன் வழி நாம் செல்கின்றோம்…?
2.நாம் குற்றவாளியா… அல்லது குற்றமற்றவர்களா…?
3.குற்றமற்றவராக இருப்பது குற்றமான செயல்களைச் செய்வது எப்படி…?
4.குற்றத்தை முன்னிலைப்படுத்தி இயக்குவது எது…? என்று
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான உணர்வுகளை எடுத்துத்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

ஒரு முயல் என்ன செய்கிறது…? நாயிடமிருந்து தப்ப எண்ணுகிறது. அதே சமயத்தில் அந்த நாய் நரியிடமிருந்து தப்ப எண்ணுகிறது.
1.அப்பொழுது “தப்ப வேண்டும்…” என்ற அந்த எண்ணங்களைச் சுவாசித்து
2.அந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் பெருக்கிக் கொள்கிறது.
3.இப்படித்தான் எல்லா உயிரினங்களும் வளர்ச்சி அடைந்து வந்தது.

ஒரு மான் சாந்தமானது. புலியோ கொடூரமானது. அந்தப் புலியிடமிருந்து மான் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கின்றது.

இப்படிச் சிறுகச் சிறுக எண்ணி அந்த உணர்வு பெற்ற பின் கடைசியில் என்ன நடக்கின்றது…? அதாவது பல கோடி உடல்களை எடுத்துப் பல தீமைகளிலிருந்து நீக்கிடும் அருள் சக்தி பெற்ற இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

அதைத்தான் தீமைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தை உருவாக்கி வந்ததை “இராமேஸ்வரம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இராமன் என்றால் எந்தச் சுவையை எடுக்கின்றோமோ அந்த எண்ணங்கள் வரும். அது தான் சீதாராமா என்பது. எதன் சுவையோ அதன் அந்த உணர்ச்சிகளின் எண்ணங்கள் வருகிறது,

ஆகவே இதைப் போல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வுகள் எடுத்துக் “கோடிக்கரை” என்ற நிலையில் இருக்கின்றோம்.
1.அதாவது நாம் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று
2.இன்று நாம் கடைசி உடலாக இருக்கின்றோம்.

கோடிக்கரை என்ற கடைசி உடலில் இருக்கப்படும் பொழுது இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும்..?

தனுசு கோடி…! அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி மனித வாழ்க்கையில் வந்த இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கியவன். நாம் அகஸ்தியன் அடைந்த நிலையை அடைய வேண்டும்.

கோபப்படுவோரைப் பார்த்தவுடன் “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுத்தப்படுத்தி முடிந்தவுடனே என்ன செய்ய வேண்டும்…?

கோபமாகப் பேசிவர்களுக்குள் சாந்தமும் ஞானமும் விவேகமும் வர வேண்டும். நல்லது செய்யக்கூடிய அந்த உணர்வுகள் வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி நாம் எண்ணினால் அவன் கோபித்த உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.நமக்குள் நாம் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

ஒரு குழம்பை வைக்கும் பொழுது அதை எப்படி ருசியாக மாற்றுகின்றோமோ நம் உடலில் அந்தத் தீமைகள் புகாது… தீமைகள் வளர்ந்திடாது தடுத்துக் கொள்கிறோம்.

இல்லை என்றால் அந்தக் கோபப்படுவோரின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் அடுத்தாற்போல் வரப்படும் பொழுது… அவனைப் பார்த்தாலே “அவன் மோசமானவன்…” என்று நம்மைச் சொல்ல வைக்கும்.

யாராவது அவனைப் பற்றிச் சொன்னார்கள் என்றால் அல்லது அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் இதே நிலை வரும். அந்த நேரத்தில் எல்லாம் நமக்குள் பல கெடுதலான நிலைகள் வந்துவிடுகின்றது.

பின் நோயாகின்றது… பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலை வீழ்த்தி விட்டுத் தேய் பிறையாகிக் கீழே செல்ல வைக்கின்றது.

அதைத் தடுப்பதற்காகத்தான் இதை எல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கிறோம்.

யாம் (ஞானகுரு) உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எப்பொழுது எண்ணினாலும் அந்தச் சக்தி கிடைக்கும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது
1.உங்கள் உடலில் உள்ள பல கோடி உணர்வுகளுக்குள்ளும் அது ஒன்றாகித் தனுசு கோடி ஆகின்றது.
2.அழியா ஒளிச் சரீரம் பெற ஏதுவாகின்றது.

மற்றவர்களைக் காக்கும் நிலை வந்தால் தான் நம்மைக் காக்கும் நிலை வரும்

 

1.மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் சில குறிப்புகளை எழுத வேண்டும்.
2.இருள் நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சிறிது நேரமாவது நோட்டில் எழுதுங்கள்.
3.தொழில் வளமாக இருக்க வேண்டும்… நண்பர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள்.
4.நாம் எழுதினோம்… இப்பொழுது அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலை உங்கள் அனுபவத்தில் வரும்.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

குடும்பத்தில் ஏதாவது கேள்விப்பட்டால் நான்கு பேர் ஒன்று சேர வேண்டும். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்கு 100 பேரைக் கூப்பிட வேண்டியதில்லை.

இந்த நான்கு பேரும் சேர்ந்து…
1.முடிந்த மட்டும் மகரிஷிகளின் எண்ண அலைகளை அங்கே பரப்புங்கள்.
2.அந்தக் குடும்பம் ஓரளவுக்கு சீரானால் அவர்களும் திரும்பிப் பார்ப்பார்கள்.

அந்த வீட்டில் நல்ல அலைகளைப் பரப்புகின்றோம். அதன் மூலம் எல்லோரும் நலமாக வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொழுது அது நல்ல வளர்ச்சிக்கு வரும்.

ஒருவரால் கனமான பொருளைத் தூக்க முடியவில்லை என்கிற பொழுது நான்கு பேர் சேர்ந்து தூக்கினால் எளிதாகத் தூக்க முடிகின்றது.

நண்பர்களுக்குள் மிகவும் அவஸ்தைப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக எடுத்து அங்கிருக்கும் எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

அந்தக் குடும்பத்தில் அந்த அருள் சக்தி படர வேண்டும் மகிழ்ச்சி பெறும் நிலைகள் அங்கே உருப் பெற வேண்டும் தொழில் வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்த மாதிரிச் செய்தால் தான் நாம் அதைப் பெற முடியும்… வளர்க்க முடியும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கச் சக்திகளை எடுத்தாலும் சூரியன் அதை எடுக்கும் பாதையில் மற்றவைகளுக்கும் அதை உணவாகக் கொடுத்து அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்து அதிலே வந்த நஞ்சைப் பிரித்து ஒளியின் சுடராக மாற்றுகின்றது.

இதைப் போலத் தான்
1.பிறிதொருவருவர் எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது ஞானிகள் எண்ண உணர்வை நமக்குள் வலுப்பெறச் செய்து
2.தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வை வளர்த்து ஒளியாக மாறும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்.

உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம். இது நம் குருநாதர் காட்டிய வழி இது. இதை நிச்சயம் நாம் அனைவரும் பெற முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் செல்வதற்குத் தியானமும் தவமும் தேவை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற அந்தத் தவம் இல்லை என்றால் நாம் தியானத்தில் எடுக்கும் சக்திக்கு வேலை இல்லை. தவமிருந்தால் தான் உங்களுக்கும் அது கிடைக்கும். இந்தப் பண்புகளை நாம் வளர்க்க வேண்டும்.

உலகம் முழுவதும் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எத்தனையோ அரசியல்வாதிகள் வந்தாலும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எல்லோரும் அந்த நன்மை பெறும் சக்தி பெற வேண்டும் என்று இதை ஓங்கி வளர்க்க வேண்டும்.
1.உலகம் நன்றாக இருக்க வேண்டும்… காற்று மண்டலம் நன்றாக இருக்க வேண்டும்.
2.நாம் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைக் காட்டிலும் முக்கியமானது ஒன்று உண்டு…!

வீட்டிலே திருமணம் ஆகிப் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டால்… முதல் அந்த மூன்று மாதத்திற்குள் அவர்களை அணுகி எமது உபதேச நூல்களைக் கொடுத்து அதைப் படித்துக் கேட்கும்படிச் செய்து அதை எல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் உள்ளோர் தியானமிருந்து கருவிலிருக்கும் சிசு அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியைப் பெற்று “ஞானக் குழந்தையாக வளர வேண்டும்…” என்று தவம் இருங்கள்.
1.அந்தத் தவம் உங்களைக் காக்கும்.
2.அருள் ஞானி பிறக்கும் அது உலகத்தைக் காக்கும்
3.அப்படிக் காக்கக்கூடிய நிலைகள் உருவாக வேண்டும் என்று தவத்தை நாம் இருக்க வேண்டும்.
4.இந்த உணர்வை வளர்த்தோம் என்றால் தான் இந்த உலகை நாம் மீட்க முடியும்… உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக நாம் பெற முடியும்.
5.இந்த உடலான உலகத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
6.மீண்டும் உடல் பெறும் நிலைகளிலிருந்து நாம் மீள முடியும்.

இதைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுவோம். குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்றது தான் இந்த மனித உடல். நம் உடலில் எத்தனையோ நல்லவைகள் இருப்பினும் கோபம் வெறுப்பு சலிப்பு வேதனை சஞ்சலம் சங்கடம் இவை எல்லாம் நம் உடலில் அரக்க குணங்களாக இருக்கிறது,

அதைக் காட்டுவதற்காகத்தான் இராமாயணத்தில் பத்துத் தலை இராவணன் என்று காட்டுகின்றார்கள். இராவணன் என்ன செய்கிறான்…? சீதாவைச் சிறை பிடிக்கின்றான்.

ஆக ஒருவர் செய்யும் தவறைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வருகிறது. கோபம் வரும் பொழுது…
1.நம் உடலில் நல்ல குணங்கள் இருந்தாலும் அந்தக் குணத்தைச் செயலற்றதாக மாற்றி
2.தவறு செய்பவனை உதைக்க வேண்டும்…! என்ற எண்ணங்கள் தான் வரும்.

அதே மாதிரி ஒருவனை வேதனைப்படுத்துகிறான் என்றால் அவனை நினைக்கும் போது…
1.அந்த வேதனைப்படுத்தும் உணர்வு காற்றிலே இருக்கிறது.
2.நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதே உணர்வு நம்மையும் வேதனைப்படுத்தும் செயலைச் செயல்படுத்துகின்றது.

ரேடியோ TV அலைகளை எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றனரோ அந்தந்தச் சுவிட்சைப் போட்டவுடன் அதே நிலை வருகின்றது.

அதே போல் தான்…
1.மனித வாழ்கையிலும் ஒவ்வொரு ஸ்டேசனாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
2.திட்டியவர்கள்… வெறுப்புடன் போனவர்கள்… சண்டை போட்டவர்கள்… என்று
3.அவர்களை நாம் நினைக்கும் போதெல்லாம் காற்றிலிருந்து இழுத்து நமக்கு அந்தந்த உணர்வுகள் தான் வருகின்றது.

நாம் இதே வழியில் போனால் அதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா.. அதற்குச் சக்தி வேண்டுமல்லவா…! ஏனென்றால் இத்தகைய தீமையின் நிலைகளை எல்லாம் நீக்கிப் பழகியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி உணர்வுகளைத் தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

பின் பதிவான அந்தச் சக்தியை தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய திறனையும் உங்களுக்கு உண்டாக்குகிறோம்.

காலை துருவ தியானம்… மதியம்… இரவு நேரம் தியானம்…! செய்வதன் மூலம் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கி வைத்துக் கொண்டால் தீமைகள் வரும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு கோபப்படுபவனை நாம் பார்த்தால் நம் உயிரிலே அந்தக் கோப உணர்ச்சிகள் பட்ட பின் நமக்கும் கோபம் வரும். அப்பொழுது
1.அந்த நேரத்தில் நாம் கோபிக்கின்றோமா…
2.நாம் நுகர்ந்த அந்த உணர்வு நம்மைக் கோபிக்கச் செய்கிறதா…? என்று சிந்தித்துப் பாருங்கள்…!

நாம் கோபப்படவில்லை.. நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகிறது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆனால் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்தக் கோபப்படும் உணர்வுகள் உமிழ் நீராக மாறி அது நம் சாப்பாடுடன் சேர்த்து இரத்தமாக மாறும் போது அதிலே கார உணர்ச்சியைத் தூண்டும் கருத்தன்மை அடைகிறது.

ஒரு தடவை கோபப்பட்ட பின் அடிக்கடி அதே மாதிரிக் கோபமாக எண்ணினால் அந்த அணுக்கள் நம் உடலிலே பெருகத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பு வந்துவிடும்.

அந்த இரத்தக் கொதிப்பை மாற்றுவது யார்…?

1.டாக்டரிடம் சென்று மருந்தைச் சாப்பிட்டுச் சௌகரியம் செய்யலாம்.
2.ஆனால் அந்த கோபக்காரனைக் கண்ணால் பார்த்த உணர்வு நம் உடலின் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக இருக்கிறது.
3.அதிலிருந்து அது மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கும்.

அதை எப்படி மாற்றுவது…?

அந்த மாதிரி வராதபடி அப்போதைக்கு அப்பொழுது நாம துடைக்க வேண்டும் என்றால் உடனே ஈஸ்வரா…! என்று சொல்லிப் புருவ மத்தியில் உயிரை எண்ணித் தடுக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அனுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அந்த உணர்வைச் செலுத்தி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால் அந்தக் கோபமான வித்திற்குப் பக்கத்திலேயே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகும். இது வலுவான பின் கோப உணர்வின் வித்துக்கு உணவில்லாதபடி அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.
1.இப்படிச் செய்தால் தான்
2.எந்த ஒரு தீமையான வினையிலிருந்தும் நாம் விடுபட முடியும்…!

ஞானம் எதிலே தோன்றியது…? அதை எல்லோருக்கும் எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் குருநாதர் காட்டினார்

 

ஞானிகள் உணர்வைப் பெறுகின்றோம்… அதை நமக்குள் வளர்க்கின்றோம். நம்மைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் உயிர் கடவுளாக இருக்கின்றது
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்திலே சந்தர்ப்பத்திலே தீமைகள் புகுந்து வாட்டுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று…
3.மகரிஷிகளின் அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி எல்லோரும் பெற வேண்டும் என்று நாம் தவம் இருக்க வேண்டும்.

அப்பொழுது உயிரான ஈசனிடத்திலிருந்து மகிழ்ந்திடும் உணர்வுகள் விளைந்து வருகின்றது. அந்தத் தவத்தின் பலனை நாம் பெற முடியும்.

இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவன் எங்கோ இருக்கின்றான் என்ற நிலை இல்லாதபடி நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் அந்த ஈசன். அதைத் தியானித்து எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த தவத்தின் பயனாக நல்ல விளைவினை நுகர்ந்து அந்த உணர்வை நாம் பெறுகின்றோம்.

மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகள் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணம் அனைவரும் பெற வேண்டும் என்று எடுத்தால் தவம்.

1.மற்ற எத்தனையோ பேர் ஞான மார்க்கங்களைக் காட்டுகின்றார்கள்… ஆனால் அதிலேயே நின்று விடுகின்றார்கள்.
2.ஞானம் எதிலே தோன்றியது…? ஞானத்தை எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் நமது குருநாதர் காட்டினார்.

ஆகையினால் எல்லோருடனும் ஒன்றி இந்த உணர்வை வளர்க்கச் செய்வதற்கும் நாம் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதைத்தான் செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

புகழ் தேட வேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்… புகழ் வரும்.
1.ஆனால் மெய் ஞானக் கருத்துக்களை யாரும் அறிய முடியாது.
2.நமக்குள் அதை விளைய வைக்கவும் முடியாது.

இந்த உடலில் இச்சைக்காக எதை வேண்டும் என்றாலும் பெறலாம்… நொடியில் பெற முடியும். ஆனால்
1.என்றைக்கும் நிலைத்திருக்கும் அழியாத நிலையான
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமென்றால் அதற்குக் கொஞ்சம் பொறுப்பும் பொறுமையும் தேவை.

இந்த உடலுடன் யாரும் இருந்ததில்லை மகரிஷிகளும் சரி ஞானிகளும் சரி. ஆகவே… இந்த உடலிலிருந்து அடுத்து இன்னொரு பிறவிக்கு நாம் வரக்கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குழம்பு வைக்கும் பொழுது ஒரு மிளகாய் அதிகமாகப் போய்விட்டது என்றால் நம்மால் சாப்பிட முடிவதில்லை. காரம்…காரம்…! என்று தான் சொல்வோம்.

உதாரணமாக ஒரு கோபக்காரனைப் பார்த்துவிட்டுப் பெண்கள் வந்து குழம்பு வைத்தால் அதிலே இரண்டு மிளகாயை அதிகமாகப் போட்டுத் தான் ஆவார்கள்.

அதே சமயத்தில ஆண்கள் அந்தக் கோபப்படுவோரை வேடிக்கை பார்த்து விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தால் உணவை வாயிலே வைத்ததும் ஒரு எரிச்சல் உண்டாகும். எரிச்சலானதும் நமக்கும் உடனே அதே கோபப்படக்கூடிய உணர்வைத் தூண்டும்.

மிளகாயை அதிகமாகப் போடச் செய்வதும் எரிச்சலடையச் செய்வதும்
1.இதை எல்லாம் யார் செய்வது….? நாம் கோபப்படுகிறோமா…?
3.அந்தச் சந்தர்ப்பத்தில் பார்த்த அந்த உணர்வுதான் நம்மை அப்படிச் செயல்படுத்துகிறது.

அதே போலத்தான் ஒரு வேதனைப்படுவோரைப் பார்க்கிறோம். நம்முடைய சந்தர்ப்பம் அடிக்கடி அந்த வேதனைப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால் அதை நுகர நுகர… வேதனையை உருவாக்கும் விஷத் தன்மைகள் நம் இரத்தத்தில் கலக்கும்.

பின் அதனால் வாத நோய்… சரவாங்கி நோய்… மூட்டு வாதம் வந்து விடுகின்றது. வாத நோய்களில் எத்தனையோ வகையான நிலைகள் உண்டு.

ஆனால் நாம் தப்பு செய்யவில்லை…!

ஆகவே இந்த மாதிரிப் பிறருடைய கஷ்டத்தையோ பிறர் படும் வேதனையோ பிறர் கோபத்துடன் சண்டையிடுவதையோ நாம் நுகர நேர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.அடுத்த நிமிடமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்க வேண்டும்
4.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
5.கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் உள் முகமாகச் செலுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.

பின் எந்தக் கோபப்படுவோரைப் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்தோமோ அவர்களுக்குள் சாந்தமும் ஞானமும் விவேகமும் வர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் வழியில் வாழக்கூடிய சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

அதே போல் வேதனைப்படுவோரைப் பார்த்திருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி வேதனையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும்.

விஷமான கருணைக் கிழங்கை வேக வைத்து அதிலே காரத்தைச் சேர்த்துப் புளியைக் கரைத்து மற்ற பொருள்களை எல்லாம் சேர்த்து அதை ருசியான குழம்பாக மாற்றுவது போல் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் மீது வந்து மோதும் மற்ற உணர்வுகளை நல்லதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அப்படி மாற்றினால்…
1.நாம் நுகரும் இத்தகைய உணர்ச்சிகள் நம் உணவுடன் சேர்த்து நல்ல இரத்தங்களாக மாறிவிடுகிறது
2.நோய்கள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

“மகரிஷிகளின் அருள் சக்தி” எங்கும்… எதிலும்… பரவ வேண்டும் என்பதை நாம் சொந்தமாக்க வேண்டும்

 

சாமி நன்றாகப் பேசுகின்றார்… உபதேசிக்கிறார்…! என்று கேட்டு விட்டு இதை அப்படியே நீங்கள் விட்டு விடாதீர்கள். அப்படி ஆகிவிடக்கூடாது.
1.காரணம் எல்லோரும் நீங்கள் தயாராக வேண்டும்.
2.அவரவர்கள் இதைப் பெற முயற்சி எடுங்கள்.
3.இந்தக் கருத்துக்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்… அதை நீங்கள் எழுத வேண்டும்.

யாம் சொல்லும் போது பல நிலைகள் தெரிய வரும்.
1.அந்தக் கருத்துக்களை எழுதிப் பதிவு செய்யும் பொழுது ரெக்கார்டு ஆகும்.
2.எதை நீக்க வேண்டும்…? எதைச் செயல்படுத்த வேண்டும்…? என்று எண்ணும் போது அந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
3.இந்த உணர்வின் வளர்ச்சி நம்மைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டே வரும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நோக்கத்தில் தான் இதை எல்லாமே பதிவு செய்கின்றேன். அதை நீங்கள் வளர்த்துப் பழக வேண்டும். இது உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தரும்.

இங்கே கேட்டுவிட்டு… அடுத்தாற்போல் வெளியிலே சென்றால் புற உணர்வுகள் இதை மறைக்கும். அப்படி மறைத்ததை மீண்டும் தெளிவாக்க நேரமாகிறது. “நம்மால் முடியவில்லையே…” என்று ஒரு பலவீனமான… விரக்தியான எண்ணங்கள் வந்துவிடும்.

தலையில் அதிகமான சுமையை ஏற்றி விட்டால் தூக்க முடியாமல் போகிறது அல்லவா. அது போன்று வருவதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே நீங்கள் அருள் உணர்வுகளை வளர்த்து உங்களுக்குள் அதைப் பெருக்கி உயர்ந்த உணவுகளை எடுத்துச் சொல்லி உங்களை அணுகி வருபவரையும் தயார் செய்ய வேண்டும்.

1.எத்தகைய தீமைகள் வந்தாலும் “அதை மாற்றுவதற்குண்டான வழி எதுவோ…”
2.அதை நாம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…! “இதை நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டே வரவேண்டும்…”

வெறுமனே தியானம் மட்டும் செய்தால் பத்தாது. நாம் தொழில் செய்யும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான சிக்கல்களிலிருந்தும் விடுபட்டுப் பழக வேண்டும்.

காரணம்… ஆர்வத்தில் இங்கே வருவார்கள் குறைகளைக் கண்ட பின் எம்முடைய உபதேசத்தை (தியானத்தை) விட்டு விடுவார்கள். குறைகளை வளர்த்து விடுவார்கள்.

தொடர்ந்து தியானிக்கும் போது “நீங்கள் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவ்வப்பொழுது அதைச் சுட்டிக்காட்டி…” அந்தக் குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும்…? என்ற உணர்வை அது மாற்றிக் கொடுக்கும்.

அதை உருவாக்கினால் தான் அந்த உணர்வின் அனுபவம் உங்களுக்கு எழுத்து வடிவம் கொண்டுவர ஏதுவாக இருக்கும். உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விளைய வைக்கவும் முடியும்.

விவசாயப் பண்ணைகளில் பல சத்துகளை ஒன்றாக இணைத்து வீரிய செடியாக உருவாக்கினார்களோ மாற்றியமைத்தார்களோ இதைப் போன்று நாம் ஞானிகள் உணர்வை இணைத்து வீரிய சக்தியாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு உடலிலும் வந்த உணர்வுகளை மாற்றி அதற்கொப்ப பரிணாம வளர்ச்சியில் எப்படி உடல்கள் பெற்று வந்தோமோ… நம் உயிர் மாற்றியதோ இதைப் போலத்தான் நம் தொழில் செய்தாலும் வேலை செய்தாலும் அதன் மூலமாக
1.ஒவ்வொரு நொடியிலும் அதற்குள் அருள் உணர்வைப் பெருக்கி அதை மாற்றி அமைத்து
2.வாழ்க்கையே தியானம் என்ற நிலைகளுக்கு நாம் வளர்ச்சியின் பாதையில் கொண்டு வர வேண்டும்.

உடல் வாழ்க்கைக்கு நாம் தொழில் செய்ய வேண்டி இருக்கின்றது. ஆனாலும் தொழிலில் வரக்கூடிய சிக்கல்கள் நாம் போகும் பாதையை அது தடைப்படுத்தி விடக்கூடாது.

ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிடும் நிலையாக நம்முடைய வளர்ச்சி என்றுமே அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் ஞாபகப்படுத்துவது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணு தோன்றி இப்பொழுது நாம் பரசுராமனிலிருந்து நவமி… ஒன்பதாவது நிலைகளில் இருக்கிறோம். எது…? அதாவது பத்தாவது நிலையை அடையக்கூடிய மனித உடலில் நாம் இருக்கிறோம். அதுதான் தசரதச் சக்கரவர்த்தி என்பது.

மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம். அல்லது ஒரு கோபப்படுபவனைப் பார்க்கிறோம். பார்த்தவுடனே என்ன… ஏது…? என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

அதுதான் வசிஷ்டர்… (வசிஷ்டர் என்றால் கவர்ந்து கொண்ட சக்தி)
1.தசரத சக்கரவர்த்திக்குத் தான் தெரிந்து கொள்ள விரும்பிய உணர்வுகள்
2.அது கவர்ந்து கொண்ட சக்தியாக – வசிஷ்டர்
3.உயிரிலே பட்டு உணரும் தன்மை ஆகும்போது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு.

கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலே பிரம்மமாகி அவன் எதைப் பேசினானோ
1.அவன் கோபமாப் பேசினால் நாமும் கோபமாகப் பேசும் சக்தி வருகிறது
2.அவன் வேதனைப்பட்டால் அந்த வேதனை உணர்வைத் திருப்பிச் சொல்வோம்.
(அது தான் வசிஷ்டர் பிரம்மகுரு)

பிரம்மகுருவின் மனைவி யார்…?
1.வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட உணர்வுகள் அணுவாக உருவானால் அதன் சக்தியாக அருந்ததி…!
2.கோபமாப் பேசிய உணர்வு இருந்தால் அதனுடன் இணைந்து
3.அந்தக் கார உணர்வுகளை நம் உடலிலே உருவாக்கும் என்பதைத் தான் இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

அதனால் தான் தசரதச் சக்கரவர்த்தி என்கிற போது ஒவ்வொரு தீமையிலிருந்தும் நாம் இச்சைப்பட்டுத் தப்ப வேண்டும்… அதாவது
1.இச்சைப்பட்டு அந்த உணர்வைச் சேர்த்து இயங்கும் நிலைகள் என்பதை
2.”இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவன் தசரதச் சக்கரவர்த்தி…” என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

நம் சாஸ்திரங்களில் எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று புரிந்து கொண்டால் போதும். மனிதன் உயர்ந்த நிலை பெற இராமாயணத்தில் எவ்வளவு பெரிய உண்மைகள் உள்ளது என்பதையும் உணரலாம்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரும் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று இச்சைப்பட்டு அப்படித் தப்பி வந்தது தான் இந்த உயிர்… “பத்தாவது நிலை அடையக்கூடியது…!”

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே கடவுள் யார்…? நம் உயிர் தான் கடவுள்…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ உள் நின்று அதை இயக்குகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகர்கின்றோம். அந்த உணர்வுகள் நம்மையும் வேதனைப் படச்செய்கிறது.

1.இருந்தாலும் நாம் எல்லோரையும் காப்பாற்றிவிடுகிறோம்.
2.காப்பாற்றிய பின் அவர்களுக்கு வந்த நோய் நமக்கு வந்தவுடனே என்ன நடக்கின்றது…?
3.ஐயோ… அவர்களை எல்லாம் காப்பாற்றினோமே…! எனக்கு இப்படி நோய் வந்து விட்டதே…! என்று புலம்புகிறோம்.

அப்படி வேதனைப்படும் சமயங்களில் யாராவது சந்தோசமாச் சிரித்து பேசினால் நீங்கள் பொறுத்து இருப்பீர்களா…? நான் இருக்கும் நிலையைப் பார்த்து உனக்குக் கிண்டலாக இருக்கிறதா என்போம்…! இதே நிலைமை உங்களுக்கும் வந்தால் தான் தெரியும்…! என்று சொல்வோம்.

அதே மாதிரி ஒருவர் திட்டினார்… வேண்டாத பேச்சுகளைப் பேசினார் என்று சொன்ன பிற்பாடு “அட… திட்டி விட்டுப் போகிறார்… விடுங்கள்…!” என்று சொன்னால் நமக்குக் கோபம் வருகிறதா இல்லையா…?

அப்பொழுது என்ன செய்கிறீர்கள்…? உங்களிடம் சந்தோஷத்தை ஊட்டக் கூடிய நிலையை எதையாவது பாரக்க முடிகிறதா…? ஆக மொத்தம் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் ஆகும்போது என்ன நடக்கிறது…?

1.நம் உயிர் பத்தாவது நிலையை அடையக்கூடியது.
2.இந்த மனித உடல் தசப்பிரியன்.
3.சீதா என்பது உடலுக்குள் சந்தோஷத்தை ஊட்டக் கூடிய நிலைகள்.

நீங்கள் கோபமாக இருக்கும் போது மற்றவர்கள் சிரித்துப் பேசினால் சந்தோஷம் வருமா…? கிண்டல் செய்கிறீர்களா…? என்று சொல்லி அவர்களை உதைக்கத் தான் செல்வீர்கள்.

அதே மாதிரி நீங்கள் வேதனைப்படும்போது யாராவது சிரித்தால் என்ன ஆகும்…? நாம் படுவதைப் பார்த்தால் அவர்களுக்குச் சிரிப்பு வருகிறது…! என்று பொறுமுவோம்.

உங்கள் பையனே குறும்புத்தனம் செய்தாலும் அவன் நல்லவனாக வரவேண்டும் என்று சொல்லி மற்றவர்கள் சிரித்துக் கொண்டு இருந்தால் “அங்கே பார்…! அவன் சேட்டை செய்வதைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்… அறிவு இருக்கிறதா…? என்று கேட்போம்…!
1.அந்த நேரத்தில் சந்தோஷம் என்பதே வரவில்லை.
2.அதைக் காட்டுவதற்காகத்தான் பத்துத் தலை இராவணனைத் தசைப்பிரியன் என்று காட்டுகின்றார்கள்.

நாம் எத்தனையோ கோடி உடல்களில் வந்த தீமைகளை எல்லாவற்றையும் நீக்கி மனிதனாக வந்திருக்கின்றோம். ஆனால் இப்பொழுது நம்முடைய சந்தர்ப்பம்
1.நம் பார்வையில் படும் உணர்வுகள் உடலுக்குள் வந்தவுடன்
2.அந்த அரக்க உணர்வுகள் இந்த மனித உடலையே அழித்துக் கொன்று தின்கிறது என்று காட்டுகிறார்கள்

மற்ற உயிரினங்கள் எப்படி ஒன்றை ஒன்று கொன்று தின்றதோ அதே மாதிரி நம் உடலுக்குள்ளும் பல பல குணங்களின் உணர்வுகள் வந்து மனித உடலை உருவாக்கிய அணுக்களைக் கொன்று தின்கிறது.

உதாரணமாக கோபம் என்ற அந்தக் காரமான உணர்ச்சி வந்தால் நமக்குள் உள்ள நல்ல சாந்தமான அணுக்களைக் கொன்று திங்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது சரியானதைக் கேட்க வேண்டும் என்றால் கேட்க முடியாது.

அதே சமயத்தில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் அந்த விஷத் தன்மை உடலுக்குள் பரவும் பரவிய பின் கை கால் வலிக்கும். அந்த நேரத்தில் உங்களிடம் சந்தோஷம் வருமா…?

ஆக சந்தோஷப்படும் அந்தச் சீதாவை (மகிழ்ச்சியை) இராவணன் இலங்கையில் (உடலுக்குள்) சிறைப்பிடித்து வைத்து விடுகிறான்…! என்று எவ்வளவு அழகாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

உயிரணு தோன்றிய பின் பல உணர்வின் தன்மைகளை எடுத்துக் கடவுள் அவதாரம் “வராகன்” என்று வந்த பின் தீமையை நீக்கி தீமையை நீக்கக்கூடிய உடலாகப் பெறுவது “பரசுராம்…” (மனித உடல்)

மனிதனான பின் வரும் தீமைகளைச் சமப்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும் அதைச் சீராகப் பயன்படுத்தாதபடி பலருடைய உணர்வுகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பி நுகர்கிறோம் “பலராம்” (பல எண்ணங்கள் – பலராமன்).

பல எண்ணங்களை எடுத்துத் தீமை என்ற உணர்வு ஆனபின் அதைத் தடுக்க வேண்டுமல்லவா…! அது தான் நரசிம்மா…!
1.அந்தத் தீமைகளை உடலுக்குள் உருவாக விடாதபடி
2.மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் அந்த இரண்யனைப் பிளந்தான்
3.ஆகவே அந்த ஒன்பதாவது நிலைகளில் தீமை புகாது தடுத்தால் தான் நாம் இங்கிருந்து தப்ப முடியும்
4.பத்தாவது கல்கி என்ற அழியாத ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகத்தை அடைய முடியும்.

ஞானிகளால் படைக்கப்பட்ட காவியங்களில் உள்ள உட்பொருளை அறிந்து கொண்டால் நாம் விண் செல்வது சுலபம்.

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

 

விநாயகர் சதுர்த்தி அன்று அருள் மகரிஷிகள் உணர்வுகளை நாம் அனைவருமே நமக்குள் எடுத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆனால்
1.ஏற்கனவே எண்ணத்தால் நுகர்ந்த பிற தீமையான உணர்வுகள் அணுக்களாக இருக்கின்றது.
2.அதைத் தடைப்படுத்தி விட்டால் ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அது பாட்டுக்கே விலகிப் போய்க் கொண்டே இருக்கும்.

இந்தப் பூமியின் சுழற்சியின் தன்மையில் கடலின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கடல் பக்கத்திலே இருந்து பாருங்கள்.
1.அருகில் சென்றோம் என்றால் நம்மை உள்ளே இழுக்கும்.
2.அலைகள் மாறி மாறி வரும் பொழுது மோதி… மறுபடியும் உள்ளே தனக்குள் இழுக்கும்.

இதைப் போன்று இந்த உணர்வின் தன்மை எந்தெந்த மனிதர் பால் எண்ணி எடுத்து வைத்திருக்கின்றோமோ அது வளர்ந்த பின் “அந்த உணர்வுகள்”
1.எதிலும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கும் பக்கம் செல்லாது.
2.அங்கே சென்றால் செவுட்டில் அடித்த மாதிரி அடித்து விலக்கித் தள்ளிவிடும்.

மரம் செடி கொடி அவைகள் வெளிப்படுத்தும் உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாகத் தோன்றி வளர்ந்து வந்தது. ஆனால் தீமையான உணர்வுகள் கலந்து மனிதனுக்குள் விளைந்தது.

ஆகையினால் மனிதனால் உருவாக்கிய தீமையான அலைகள் தாவரங்கள் அருகே அங்கே போகாது போக முடியாது.

விண்ணிலே சூரிய குடும்பத்தில் உருவான கோள்கள் சூரியனின் பிடிப்பில் இல்லை என்றால் திசை மாறிச் சென்று எங்கே போய் மடிகின்றது என்று சொல்ல முடியாது. பெரிய சுழல் இருக்கும்… அதிலே கரைந்து விடும்.

இதைப் போன்று தான் சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் பெரிய கடல்… அது பூமியில் முதலிலே உருவானது. அதிலே கரைந்து தனக்குள் கரைத்து மீண்டும் வெளிப்படுத்தும்.

இதே போல தான் “மனிதர்கள் ஈர்க்காத உணர்வுகள்…” கடலின் ஈர்ப்புக்குள் சென்று மூழ்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத் தான் சதுர்த்தி என்று உருவாக்கப்பட்டு… தீமை செய்யும் உணர்வுகளை இப்படித்தான் கரைக்க வேண்டும் என்று சிலையைப் புறத்தில் காட்டி
1.மக்களுக்குள் விளைந்த தீமையான வினைகளைp பிறர் பால் பற்று கொண்டு எண்ணி எடுத்த உணர்வுகளைத் தனக்குள் பதிவாக்காதபடி
2.அவர்களை நலமாக்க வேண்டும் என்ற உணர்வினை எடுத்துப் பகைமை உணர்வுகள் இங்கே நிற்காது அப்புறப்படுத்த வேண்டும்.

இங்கே யாரும் எடுக்கவில்லை… நாமும் எடுக்கவில்லை… அவர்களும் எடுக்கவில்லை என்றால் நாம் வாழும் இடத்திலே அது நிற்காது.

விநாயகர் சதுர்த்தி அன்று உலக மக்கள் அனைவருமே
1.இது போன்று அருள் உணர்வுகளை ஏகோபித்த நிலையில் எடுத்துப் பகைமை உணர்வுகளை இழுக்கவில்லை என்றால்
2.இது எல்லாம் ஒதுங்கி கடலுக்குள் சென்று அமிழ்ந்துவிடும்.

அதாவது ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்ளவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு இங்கே இடமில்லை. அப்பொழுது அந்த உணர்வுகள் அது பாட்டுக்கே நகர்ந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கிவிடும்.

1.விநாயகர் சதுர்த்தி என்றால் தீமைகளை நிறுத்து…!
2.உனக்குள் தீமையின் வளர்ச்சியைத் தடைபடுத்து…
3.அதைக் கரைத்து விடு…! சாஸ்திரப்படி இது உண்மை.

உயிராத்மாவைக் காக்கும் வலிமைமிக்க சக்தியே வள்ளி

 

கேள்வி:-

ஓம் ஈஸ்வரா குருதேவா… 🙏

நமது உயிரணு நம் புவியின் ஈர்ப்புக்குள் வந்து, பல பல தாவர இனங்களை நுகர்ந்து, உடல் பெற்றாலும்…. சந்தர்ப்பத்தால் ஓர் விஷச்செடியின் மணத்தை நுகர்ந்து விட்டால், அந்த மணத்தின் தன்மை அந்த உடலுக்குள்… எதிர் நிலையாகி, தான் நுகர்ந்து கொண்ட விஷத்தின் ஆற்றல், அந்த உடலுக்குள் வங்கிட்டு அதன் வளர்ச்சியின் கதியில் அடுத்த சரீரம்…. மற்ற உயிரினங்களை உட்கொள்ளும் உயிரினங்களாக உருப்பெறுகின்றது.
ஆனால், பரிணாம வளர்ச்சியில் தன்னைக் காட்டிலும் வலுவான உயிரினங்களிடமிருந்து தன்னை அவற்றிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலை பெற்றாலும்… அதன் உடலிலிருந்து வெளிப்படும் ” வலிமையான உணர்வை ” நுகர்ந்தோ அல்லது அதன் உடலுக்குள் சென்று “அதன் உணர்வைக் கவர்ந்தோ” வலிமையான உடல் பெறுகின்றது.

அதாவது நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும், வலிமையான சக்தியை நோக்கி சென்று, அதை நுகர்ந்து, வலிமையான உடல் கொண்ட உயிரினங்களாக உருவாக்குகின்றது.

இதில், தான் நுகர்ந்து கொண்ட “வலிமையான சக்திதான்” ஒவ்வொரு சரீரத்திலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைகள் பெற்றது.

இதில்
1) ராமாயணத்தில் உணர்த்தப்பட்ட வலிமையான சக்தி, கைகேயி… மனிதனான பின் இந்த வலிமையின் சக்தியின் செயலாக்கங்கள் ராமனை அதாவது நல்ல எண்ணங்களை ஒதுக்கிடும் நிலைகளை உருவாக்குகின்றது.
2) கந்த புராணத்தில் வலிமையான சக்தியைக் காட்டி அதை ஆறாவது அறிவான முருகன் காதலிக்கின்றான் என்று உணர்த்தப்பட்டுள்ளது.

அதற்கும் இதற்கும் உண்டான வித்தியாசம் என்ன சாமிகளே…?

நாம் மனிதனான பின் நமது உயிரான ஈசனுக்கு, இந்த பிரபஞ்சத்திலேயே… வலிமையான சக்தியான “துருவ நட்சத்திரத்தின் உணர்வை” நமது உயிருடன் ஒன்றி… நமது உயிர் வழியாகக் கவர்ந்து, நமது உயிரால் உருவாக்கப்பட்ட அணுக்களையும் பெறச் செய்யும் தியானத்தை நமது ஞானகுருவும், சற்குருவும் அருளியுள்ளார்கள்.

நமது ஞானகுரு ஓர் உபதேசத்தில் “நான் துருவ நட்சத்திரத்தை காதலிக்கிறேன்” என்று உரைத்துள்ளார்.

ஆகவே ராமாயணத்தில் காட்டப்பட்டுள்ள வலிமையான சக்திக்கும், கந்த புராணத்தில் காட்டப்பட்டுள்ள வலிமையான சக்திக்கும் உள்ள வேறுபாடு என்ன..?

பதில்:-

நமது குருநாதர் (ஞானகுரு) பரிணாம வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும் பொழுது மனிதனுக்கு என்று சில வழிமுறைகளை தனியாகக் காட்டியுள்ளார்.

ஏனென்றால் மற்ற உயிரினங்கள் அனைத்துமே மனிதனைக் காட்டிலும் அறிவின் வளர்ச்சி குறைவு. அவைகள் தன்னைக் காட்டிலும் வலிமையான சக்தியை நுகரப்படும் பொழுது பரிணாம வளர்ச்சியாகின்றது.

ஆனால் மனிதனுக்கோ வலிமை எது…? என்று சாஸ்திரங்கள் கூறியிருந்தாலும் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் மறைக்கப்பட்டு விட்டது.
1.ஆகையினால் வலிமை என்று எண்ணினாலே மனிதன் தன்னுடைய உடல் வலிமை தான் என்றும்
2.அதனுடன் இணைந்த எத்தனையோ மற்ற செயல்களோடு இணைத்து அதைத்தான் வலிமை என்று எடுத்துக் கொள்கின்றான்
3.அதனால் தான் ராமாயணத்திலே அந்த வலிமையைக் காட்டுவதற்கு கைகேயி என்று பெயர் வைக்கின்றார்கள்
4.கை+கேயி – மனிதனுடைய கை மிக மிக சக்தி வாய்ந்தது… அதனால் செய்யக்கூடிய வேலைகளும் எண்ணில் அடங்காது
5.கைகேயி என்று சொல்லும் பொழுது கையால் செய்யக்கூடிய செயல்கள் தான் (மற்ற உயிரின்ங்களுக்குக் கையே இல்லை)
6.குருநாதர் காட்டிய வழியிலே பார்க்கப்படும் பொழுது மற்றொன்றை வீழ்த்திடும் உணர்வாக
7.மூன்று உலகத்தையும் “அடக்கிடும் சக்தியாக” அது வருகின்றது.

இங்கே மூன்று உலகம் என்று சொல்வது உருவாக்குதல் காத்தல் அழித்தல் என்ற நிலையில் அனைத்தையுமே தனக்குக் கீழ் கொண்டு வரும்… அதை அடிமைப்படுத்தும் அத்தகைய செயலைத்தான் “அதாவது கையிலே சாதிக்கக்கூடிய இந்த வல்லமையைத் தான் கைகேயி” என்று பிரித்துக் காட்டுகின்றார்.

ஆனால் கந்த புராணத்தில் காட்டப்பட்ட வள்ளி வலிமை என்பது பரிணாம வளர்ச்சியினுடைய “முக்கிய மூலக்கூறான வலிமை…”
1.அதாவது தன்னைக் காட்டிலும் வலிமை எது என்பதை அது உற்றுப் பார்த்து
2.அதை நுகர நேர்ந்து வலிமைமிக்க அந்த உணர்வைச் சேர்த்துச் சேர்த்து தன்னைக் காத்திடும் உணர்வாக வளர்ச்சிக்கு வருகின்றது.

கைகேயி என்ற வலிமையோ… தன்னைக் காக்க என்று சொல்லிக் கொண்டு மற்றதை வீழ்த்துகின்றது.

ஆனால் வள்ளி என்ற வலிமைமிக்க சக்தி
1.தன்னைக் காத்திடும் நிலையாக வளர்ச்சியின் பாதையிலே
2.வளர்ச்சிக்கு உகந்த உணர்வை நுகர்கின்றது.

மனிதனுடைய அறிவு இன்று தேய்பிறையாகி பரிணாம வளர்ச்சி என்ற வழிகளில் செல்லாதபடி அரசன் காட்டிய வழியில் மற்றதை வீழ்த்திடும் உணர்வாக அது சென்று கொண்டிருக்கின்றது என்பதைத் தான் (முதலில் சொன்ன்படி) குருநாதர் அடிக்கடி பிரித்துக் காட்டுவார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்
1.நம்மை காக்கும் சக்தி தான் வள்ளி
2.நம்மை வீழ்த்திடும் சக்திதான் கைகேயி

பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்பது தெய்வ நிலை பெறுவது தான். ஆனால் தெய்வத்தையும் மனிதனையும் பிரித்து அரசர்கள் சரணாகதி தத்துவமாகக் காட்டியதால் “மனிதனுக்கு அடுத்த வளர்ச்சியே எது…?” என்ற அந்த ஞானமே மறைந்து போய்விட்டது.

மறைந்து போனதைத் தான் குருநாதர் காவியங்களில் உள்ள சூட்சுமங்களை நமக்குத் தெளிவாக எடுத்துப் பிரித்துக் காட்டுகின்றனர்

மனிதனாகப் பிறந்து நாம் எதையும் அடக்கி ஆட்சி புரிய வரவில்லை.
1.நமக்குள் ஆட்சி புரியும் உயிருடன் ஒன்றி ஒளியின் சுடராக
2.பிறவியில்லா நிலை பெறுவது தான் பரிணாம வளர்ச்சி.

உயிரைப் பற்றிய அறியாத உயிரினங்கள் வலிமையானதை நுகர்ந்து வளர்ச்சிக்கு வருகிறது. ஆனால் மனிதனோ தான் வலிமையானவன் என்று எண்ணிக் கொண்டு மற்றதை வீழ்த்தினால்தான்… தான் வாழ முடியும் என்று அரசன் வழிகளிலே (சத்ரிய தர்மம் என்ற பெயரில்) சென்று விட்டான். ஞானிகள் காட்டிய நிலைகள் மாறிவிட்டது.

1.தனக்குள் ஆட்சி புரியும் உயிரைப் பற்றிய உண்மையை அறியக்கூடிய தகுதி மனிதனுக்கு மட்டும்தான் உண்டு
2.அப்படி அறிந்தவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக அழியாத நிலையில் வாழுகின்றான்.

அதனால் தான் குருநாதர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை… அந்த வலிமையான சக்தியை… மனிதனுடைய ஆறாவது அறிவு என்று சொல்லுகின்றோமே… முருகன் அதைக் காதலிப்பதாக “கந்த புராணத்தில் உள்ள உண்மையை” துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் காதலிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகின்றார்கள்.

ஆகவே… கைகேயி என்பது பாதுகாக்கும் சக்தி அல்ல. தன்னைக் காக்க மற்றதை வீழ்த்தும் சக்தி. அது மனித உருபெற்ற எண்ணத்தையே ஆட்சிக்கு வராது செய்கிறது என்று இராமனைக் காட்டிற்கு அனுப்பச் சொல்கிறது.

1.ஆனால் வள்ளி என்பது பாதுகாக்கும் சக்தி… எதை…?
2.மனிதனுடைய நிலையில் உயிரான்மாவைக் காக்கும் சக்தி.

மற்ற உயிரினங்கள் உடலைக் காக்கும் சக்தியில் பரிணாம வளர்ச்சி அடைகின்றது. மனிதன் ஆறாவது அறிவு கொண்டு உடலை உருவாக்கிய உயிரை உணரக்கூடிய சக்தி பெற்றவன்.

இந்தப் பாதையைத்தான் குருநாதர் நமக்குக் காட்டி உயிரான்மாவைக் காக்கும் சக்தியாகக் கார்த்திகேயா என்று காட்டி அந்த வலிமையான சக்தியை “வள்ளியை அவன் காதலித்தான்…” என்று காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமாயணத்தைக் கற்றுக் கொண்ட இராகவேந்திர சுவாமிகள் இராம நாம ஜெபத்தைப் பாடிக் கொண்டே “நான் சொர்க்கம் அடைய வேண்டும்” என்ற நிலை பெற்றவர்.

இராமனுடைய பாடல்களை… இராம ஜென்ம பூமி என்ற நிலைகளில் இராமாயணக் காவியங்களைப் பாடிக் கொண்டவர்.

சங்கர பீடங்களில் இராம நாம ஜெபத்தைத் தினமும் ஆயிரம் முறை எழுதிக் கொண்டிருந்தால் “உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்…!” என்று இன்றும் சொல்வார்கள். இராமன் யார் என்றே அறிய முடியாதபடி அந்த நிலைகள் அவ்வாறு இருக்கிறது.

இராகவேந்திரரின் மனைவி என்ன செய்கிறது…?

நீ இராமனையே பாடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றாய்…! எனக்குச் சாப்பாட்டுக்கு இல்லையே…! என்று கேட்கிறது.

நீ என் கூட வந்தால் பிசாசு…! நீ வரக்கூடாது என்கிறார். நான் இராமனையே பாடிச் சொர்க்கம் அடையப் போகிறேன்…! என்று உலகிற்குச் சொல்கிறார்.

தன் மனைவியைக் கூட வரவிடாதபடி துரத்திவிடுகின்றார். ஆனால் உலகிற்கு இராம நாம ஜெபத்தைப் பாடுகின்றார்.

மனைவியோ இராம நாமத்தைப் பற்றிச் சொல்ல முடியாதபடி அவர் உணவுக்கு வழி இல்லை.

ஆக மொத்தம் திருமணமாகிக் கணவனும் மனைவியும் ஆன பிற்பாடு இங்கே அனாதையாக விட்டுவிட்டு… “நான் போகின்றேன்…!” என்றால் என்ன ஆகிறது…?

அப்பொழுது மனைவி பின்னாடியே வருகின்றது. எனக்கு எப்படியும் உணவைக் கொடு… இல்லை என்றால் உன் கூடவே நானும் பாடுகிறேன்…! என்று சொல்கிறது.

1.நீ (மனைவி) வந்துவிட்டால் எனக்கு உன் மீது ஆசை வந்துவிடும்.
2.அதனால் நரகத்திற்குத்தான் போவேன்…! என்று இப்படிப்பட்ட நம்பிக்கையில் அவர் சொல்கிறார்.

அவரை இன்று கடவுளாகத் துதிக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியைத் துறந்துவிட்டு இப்படிப் போகிறார். அவருடைய மனைவியும் பின்னாடியே துரத்திக் கொண்டே போகின்றது.

நான் இராமனைப் பாடுகிறேன். நீ பிசாசு… வரக்கூடாது…! என்றே சொல்கிறார்.

நான் பிசாசாகி உன்னிடமே வருவேன்…! என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறது. வெளி வந்த அந்த ஆன்மா அங்கே அவருக்குள் போகிறது.

அதற்குப் பின் அவரால் பாடல்கள் பாட முடியவில்லை. அப்பொழுது என்ன செய்கிறார்…? அந்தக் காலத்தில் “ஜீவ சமாதி” என்பார்கள்.

இனி என்னால் முடியாது என்று சொல்லிக் குழியைத் தோண்டச் சொல்லி அந்த இராமனைப் பாடிக் கொண்டே ஜீவ சமாதிக்குள் சென்று அதற்குள் ஐக்கியமாகின்றார்.

ஆனால் மனைவியின் ஆன்மா அவர் உடலுக்குள் தான் போனது. போய் இந்த நிலை (ஜீவ சமாதி) ஆன பிற்பாடு உயிர் எங்கே போகிறது…? விண் செல்லவில்லை.

சோறு மேல் தான் ஆசை வந்தது…! இராகவேந்திரர் சாமிகள் கும்பிடுபவர்களை எல்லாம் பெரும்பகுதி பாடல்களைப் பாடி விட்டு சாப்பாடு போட்டார்கள்… சாப்பாடு போட்டார்கள்…! என்று தான் சொல்வார்கள்.

அதனின் உணர்வின் ஆசை இருக்கும் பொழுது அதிலே சிக்கிக் கொண்டு செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொத்து வேண்டும்…! என்று தான் போவார்கள்.

அர்ச்சனை என்று எல்லாக் காசுகளும் போட்டு இந்த ஆசைகளில் தான் கும்பிடுகின்றார்கள். “மோட்சம் அடைய வேண்டும்” என்ற எண்ணம் இல்லை.

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
3.ஆனால் தன்னை அணுகி உள்ளவரை (மனைவியை) மறந்துவிட்டார்.

இராகவேந்திரரின் ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

அவருடைய உடலில் இராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெற முடிந்தது.

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ
1.முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.

“உயிர் வழியாக (புருவ மத்தி) எடுத்துத் தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்

 

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கிருக்கக்கூடிய தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து “அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்…” என்று ஞானிகள் காட்டிய வழியில் எண்ணினால் நாம் தெய்வமாகின்றோம்.

ஆனால் அப்படி நாம் நுகர்வதில்லை. யாரும் நமக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கவும் இல்லை.

தெய்வத்திற்குச் சந்தனத்தை அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் “அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெற வேண்டும்” என்று நினைக்கின்றோமா…? என்றால் இல்லை.

சாமி மேல் பல விதமான மலர்களைப் போட்டிருக்கின்றார்கள். அப்பொழுது “மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?” என்றால் இல்லை.

சாமிக்கு மலரைப் போட்டு அலங்கரித்து அர்ச்சனை செய்யும் பொழுது நமக்குள் இருக்கும் “கஷ்டங்கள் எல்லாம் கிளர்ந்து எழுகின்றது…”

உதாரணமாக ரோஜாப்பூ நறுமணமாக இருக்கப்படும் பொழுது மற்ற தீமையான மணங்களை அதன் அருகிலே விடுவதில்லை. அதே போல தீமையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே பெருகி இருக்கப்படும் பொழுது நல்ல மணங்களைக் கண்டால் அருகே விடுவதில்லை. கண்களிலே தண்ணீர் தான் வருகின்றது.

சாமி மேல் போட்டிருக்கும் ரோஜாப் பூவைப் பார்த்தாலும் சரி மற்ற அர்ச்சனை அபிஷேகங்களைப் பார்த்தாலும் சரி பார்த்தவுடனே கண்ணிலே தண்ணீர் தான் வருகின்றது.

ஏனென்றால்
1.எதிர்மறையான உணர்வுகள் மோதியவுடன்
2.இப்படி எல்லாம் எனக்குக் கஷ்டம் வந்துவிட்டதே…! என்று தன்னை அறியாமலே கண்ணில் நீர் பெருகும்.

அங்கே தெய்வச் சிலையை பார்க்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வு வருவதில்லை. நமக்கு இடைஞ்சல் செய்தவர்கள் உணர்வுகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

காரணம் இந்த ஆன்மாவிலே நாம் சுவாசித்த உணர்வுகள் இருக்கப்படும் பொழுது இதுவே கண்களிலும் வருகின்றது.
1.ஆன்மாவிலே பட்டதை நுகரப்படும் போது உயிரிலே பட்டு உணர்வுகள் புலனறிவில்…
2.உடலுக்கும் சரி
2.கண்ணுக்கும் சரி
3.சொல்லுக்கும் சரி
4.வாசனைக்கும் சரி
5.நல்ல வாசனையை அது எடுக்க விடாது.

தெய்வ குணம் பெற வேண்டும்… தெய்வமாக நாம் ஆக வேண்டும்…! என்று ஞானிகள் காட்டிய முறைப்படி ஆலயத்தில் யாரும் நினைப்பதில்லை.

உயர்ந்த சக்திகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எப்படி எப்படியோ ஞானிகள் நமக்கு வழிபடுத்தி உள்ளார்கள்.
1.அந்த ஞானிகள் உணர்வை நமக்குள் பதிவு செய்யப்படும் பொழுது
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காற்றிலிருந்து அந்த அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்.
3.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
4.புருவ மத்தி வழியாக எண்ணி உடலுக்குள் கொண்டு சென்று தீமைகளைப் பிளத்தல் வேண்டும்.

அப்படிப் பிளந்தால் தான் தீமைகள் அகலும்.

தீமைகளை அகற்றிடும் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கும் முறை என்பதே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி
2.அதன் வழி கூடி உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்தி எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடல் நமக்கு நீடித்த நாள் இருப்பதில்லை. ஆனால் இந்த உடலை வைத்துத்தான் பிறவியில்லா நிலையை அடையும் சக்திகளைப் பெற முடியும்.

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்த துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்… இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் அவைகள் அழியாது.

அகண்ட உலகில் வருவதைத் தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்று அவர்கள் வளர்ந்து கொண்டே உள்ளார்கள். அதைத்தான் “மரணமில்லாப் பெரு வாழ்வு” என்பது.

1.இதைப் போல் மனிதனாகி அதிலே உயர்வு பெற்று
2.ஒளி நிலை பெற்ற தன்மைகள் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உண்டு.
3.இவை அனைத்தும் ஐக்கிய உணர்வாக அங்கே வளரும் தன்மை பெற்று வளர்ந்து கொண்டே உள்ளது.

வான மண்டலத்தில் பார்த்தால் சில பகுதிகளில் ஒளிக் கதிர்களாக மின்னுகின்றது. பல பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது.

அகண்ட (அண்டத்தின்) பாதையில் சுழற்சியின் வேகத்தால் வரும் ஒளி அலைகள் தான் இவையே தவிர இதைப் போன்ற வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது ஒளியின் கதிராக அது வாழும்… வளரும்… அந்த நிலைகளில் சக்தி பெறுகின்றது.

ஆகவே அத்தகைய நிலையை இந்த மனித உடலில் நாம் நினைவிருக்கும் பொழுதே பெறுதல் வேண்டும். நினைவு இழந்து விட்டால் எதனைக் கொண்டு நினைவிழக்கச் செய்கின்றதோ அதன் வழியில் சென்றுவிடும்.

மனிதனின் வாழ்க்கையில் எது அவனை நினைவிழக்கச் செய்கின்றதோ அதை மாற்றிட அருள் சக்திகளைப் பெற்று அருள் வழியில் சிந்தித்தால் அவனும் ஒளியின் தன்மை பெறுவான்.
1.நம் உடல் சதமானது அல்ல…! உயிர் தான் என்றும் சதமானது…!
2.இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நாம் நெருப்பில் விழுந்து விட்டால் இந்த உடல் கருகி விடுகின்றது. கருகிய நிலையில் வேதனையுடன் இந்த உடலை விட்டு உயிர் பிரியும் போது இந்தத் தசைகளும் உடலில் உள்ள அணுக்களும் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் மட்டும் கருகுவதில்லை.

கருகிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. இந்த உடலில் வாழும் காலத்தில்
1.யார் மேல் பற்று கொண்டு வாழ்ந்ததோ
2.அந்த நட்பான நிலைகளில் அவர்களும் இதைப் பதிவு செய்திருந்தால்
3.அந்த உடலுக்குள் எரிந்தவனின் ஆன்மா சென்று அங்கேயும் எரிகிறதே… எரியுதே..! என்று கத்தும்.. கதறும்…!
4.அவன் மடிந்த நிலைகள் அதே நினைவாற்றல் கொண்டு அங்கேயும் மடியச் செய்யும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற எத்தனையோ நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதைப் பெற வேண்டும்..? எவ்வாறு நாம் வாழ்க்கை வழி நடத்த வேண்டும்..? என்று எண்ணுதல் வேண்டும்.

வீடு அழகாகக் கட்டுகின்றோம். தூசி படர்கின்றது. பெருக்கிச் சுத்தப்படுத்துகின்றோம். வீட்டைக் கூட்டிப் பெருக்கவில்லை என்றால் நாம் எவ்வளவு ஆடைகள் அலங்காரமாகப் போட்டிருந்தாலும் தூசி நம் மீது ஒட்டத்தான் செய்யும்.

ஆகவே வீட்டில் அவ்வப்பொழுது வரும் தூசிகளைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்திக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான்…
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு
2.அந்த அசுத்தங்களைத் துடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
3.அருள் ஒளியை நமக்குள் பெருக்கி உடலில் உள்ள தீமைகளைத் தூய்மையாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இந்த உணர்வின் வளர்ச்சி பெறும் பொழுது தான் நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியும். இது முக்கியமானது…!

தொட்டுக் காட்டுதல்

 

யாம் உபதேசிக்கும்போது கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள்.
1.இந்த உணர்வைக் கண்ணின் கரு விழி உங்களுக்குள் படமாக்குகின்றது… பதிவாக்குகின்றது.
2.சொல்லக்கூடியதைக் காந்தப்புலன் அறிவுகள் உள்ளே இழுக்கின்றது.

அன்று நான் குருநாதரைச் சந்தித்துப் பெற்ற உணர்வுகளை எடுத்து உங்களுக்குச் சொல்லும் பொழுது “கண் வழியாகவும் சொல்வழி கூடியும்…” வெளிப்படுகின்றது. “மூலக்கூறுகளை…” குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

இங்கே வந்து எம்மைச் சந்தித்தவர்களுக்கு மட்டுமல்ல…! இதைக் கேட்டுணர்ந்தோர்… படித்துணர்ந்தோர்… பல பாகங்களில் மற்றவருடன் பழகப்படும் பொழுது
1.சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லம் எங்கே எந்தக் குறைகளை நீங்கள் கண்டாலும்
2.நம் குரு அருளின் தன்மை அங்கே குறைகளை நிவர்த்திக்கும் உணர்வலைகளாகப் பாயும்.
3.குறைகளை அணுக விடாது… உங்களுக்குள் அருள் உணர்வுகளைப் பெறச் செய்யும்.

அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

உதாரணமாக ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள். அந்த உணர்வு நமக்குள் பதிவாகி விட்டால் அவர்கள் உணர்வை மீண்டும் நமக்குள் கவரத் தொடங்கும். அப்பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

அந்தத் தடைகளை விதிப்பதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று நம்முடைய எண்ணம் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராதபடி அதைத் தணிக்க வேண்டும்.

1.அதற்காகத்தான் இயக்கத்தின் உண்மை நிலைகளை விரிவாக்கப்பட்டு உங்கள் நினைவாற்றலுடன் இதைப் பதியச் செய்வது.
2.இது தான் தொட்டுக் காட்டுதல் என்பது.

பொட்டிலே தொட்டுக் காட்டுதல் என்று மற்றவர்கள் சொல்லும் பொழுது “அவர்கள் தொட்டுக் காட்டுகின்றார்கள்…! அங்கே பதிவாகின்றது…” ஆனால் தொட்டுக் காட்டிய “மனிதனுடைய நினைவு தான்” அங்கே வரும்.

ஆனால் நாமோ குருநாதர் கொடுத்த அந்த உணர்வின் சக்தியை
1.மகரிஷிகள் ஞானிகள் எதைப் பெற்றார்களோ அதை ஒவ்வொரு உணர்வுகளிலும் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைப் பதிவு செய்கின்றோம்.
2.நமக்குள் எத்தனையோ கோடி குணங்கள் உண்டு… அதில் எத்தனையோ வகைகள் உண்டு.
3.அதற்குள் ஞானிகள் உணர்வை இணைக்க வேண்டும்
4.அப்படி இணைத்தால் உங்களுக்குள் அது கருவுற்று ஞானிகள் உணர்வோடு வளர்வதற்கு இது உதவும்.

ஏனென்றால் பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தால் உடனே மனம் மாறுகிறது. பக்கத்து வீட்டுக்காரருடைய செயலைப் பார்த்தால் மனம் மாறுகின்றது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம் அவர்கள் வீட்டிற்குள் சென்றால்… வீட்டிலே வேறு விதமாக இருப்பார்கள். எல்லோரும் அங்கே ஒன்று சேர்ந்திருப்பார்களா…? யாரோ ஒருத்தர் எதிர்மறையாக இருப்பார்.

தியானத்திற்குப் போகின்றாராம்… ஏதோ அள்ளிக் கொட்டுகின்றாராம்…! என்று நாம் அங்கே போய் உட்கார்ந்திருக்கும் பொழுது பேசுவார்கள்.

என்னடா…! இப்படிப் பேசுகின்றார்கள்…? என்ற உணர்வுகள் வந்து விட்டால் நாம் எதன் மீது பற்றாக இருக்கின்றோமா… அதைக் குறை கூறும் பொழுது இந்தக் குறைகள் அதிகமாக வளர்ந்து விடுகிறது.

நம்முடைய வளர்ச்சிக்கு அதுவே தடையாகின்றது. இப்படியும் நமக்குள் வருகின்றது.

ஆகவே இந்தத் தீமையின் விளைவுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் செலுத்தி இதை வலுப்பெறச் செய்து
2.அவர்கள் எப்படியும் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த நினைவாற்றல் நமக்குள் உருவாக வேண்டும்.
3.அப்பொழுது நம் நினைவலைகள் அங்கே படரும்… நம்மையும் பாதுகாக்கும்
4.அவர்கள் நம்மை எண்ணினால் அங்கே ஊடுருவி அவர்களை மாற்றும் நிலைக்கும் வரும்.
5.அவ்வாறு மாற்றும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நல்ல சக்தியாக பூமியிலே பரப்பவும் செய்யும்.

மற்றவர்களுக்கும் அது நல்ல உணர்வை ஊட்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சீதாவை இராவணன் சிறைப்பிடித்துச் சென்று “எத்தனையோ கொடுமைப்படுத்தினான்..!” என்று வேதனைப்படுகின்றோம். ஏன் இராமனே கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் கொண்டு போய் விட்டான்..! என்று வேதனைப்படுகிறோம்.

இராமன் நான் மக்களுக்காக வேண்டி இதைச் செய்கிறேன்…! மக்கள் என்னைக் குறையாகச் சொல்கிறார்கள் நீ போ….! என்று கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் தள்ளி விட்டால் அது என்ன செய்யும்…?

இராமாயணக் காவியத்தைப் படித்துப் பாருங்கள். ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் சீதாராமா. அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் நமக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். நாம் தூண்டுகின்றோமா…?

1.கண்ணிலே பார்ப்பது துவைதம்
2.நுகர்ந்து (சுவாசித்து) அறிவது அத்வைதம்
3.சுவாசித்தது நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்.

தூய்மையான உணர்வை உன் உடல் ஆக ஆக்கு. இது தான் கோவிலின் தத்துவம். ஆனால்
1.கோவிலுக்குப் போய் எத்தனை பேர் அழுகாமல் வருகின்றார்கள்..?
2.அங்கே குறைகளைச் சொல்லாதவர்கள் யார்…?

“சரணாகதித் தத்துவம்” என்று ஒன்றை மட்டும் பழகி வைத்திருக்கின்றோம். காசைக் கொடுத்து அபிஷேகம் எல்லாம் செய்து பழம் மற்ற பொருள்களை எல்லாம் கொடுத்து அங்கே குறைகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

கோவிலை மதிக்கின்றோமா…? நம் உடலைக் கோவிலாக மதிக்கின்றோமா…? உயிரை ஈசனாக மதிக்கின்றோமா…? ஆக கோவிலுக்குச் சென்று எதை அபிஷேகம் செய்கிறோம்…?

குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி உயிரால் உருவாக்கப்பட்ட உடலான ஆலயத்தை அசுத்தப்படுத்துகின்றோம். நன்மை ஏதாவது செய்கிறோமா…!

சில குடும்பங்களில் அண்ணன் தம்பிக்குள் ஒற்றுமை இல்லாது போய்விடுகிறது. எத்தனையோ பேர் பஞ்சாயத்துப் பண்ணினாலும் ஒன்றும் அது முடியவே முடியாது

ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன் தம்பிக்குள் வீராப்பு செய்து கொண்டு கடைசியில்…
1.தன் உடலில் நோய்களைத் தான் உருவாக்கிக் கொள்கிறார்களே தவிர
2.இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே போக வேண்டும்…? என்பதை மறந்து விட்டார்கள்.

ஆனால் நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் படைத்தே தீரும். அதை நாம் அனுபவித்தே தான் தீர வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை எல்லாம் நம் உயிர் இயக்கிக் காட்டுகிறது. அப்பொழுது நம் ஆறாவது அறிவை வைத்து வரும் தீமைகளைத் துடைக்க வேண்டுமா… இல்லையா,..?

1.தீமைகளைத் துடைப்பதற்கு.. நம் ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத்தான்
2.ஆலயங்களிலும் காவியங்களிலும் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிடும் ஆறாவது அறிவைச் சரியான நிலையில் பயன்படுத்துவதற்காக உருவம் அமைத்து தெய்வச் சிலைகளுக்குப் பாலபிஷேகம் சந்தனம் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்து அதைக் காட்டுகின்றனர்.

அதைப் (துவைதம்) பார்த்ததும்…
1.எங்கள் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் ஒரு ஆனந்த நிலை பெற வேண்டும்
3.எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் ஆனந்த நிலை பெற வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அந்தப் பாலை போல மனம் பெற வேண்டும்
5.ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தியும் பண்புடன் வாழும் அருள் சக்தியும் எல்லோரும் பெற வேண்டும் என்று
6.சாமிக்கு அந்த அபிஷேகம் செய்யும் பொழுது இப்படி எல்லாம் எண்ணினால் (அத்வைதம்) ஒன்றுபட்டு வருமா வராதா…?

அந்த உயர்ந்த உணர்வுகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விளையும் (விசிஷ்டாத்வைதம்). இதைத் தூண்டுவதற்குத் தான் ஞானிகள் சிலையை வைத்தார்களே தவிர
1.அங்கே போய் கஷ்டத்தை எல்லாம் சொல்லி
2.நான் அந்த அத்தனை நேரம் உனக்கு விரதம் இருந்தேன்… என்னை ஏன் இன்னும் சோதிக்கின்றாய்…? என்று அழுது புலம்புவதற்காக அல்ல…!

ஆகவே நம்மைச் சுத்தப்படுத்துவதற்காக ஞானிகள் கட்டிய கோவிலை நாம் அசுத்தப்படுத்தலாமா…?

என் பையனுக்கு அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அருள் ஞானம் பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ண வைப்பதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள்.

அரசர்கள் நமக்குள் உருவாக்கி வைத்துள்ள கலாச்சாரத்திலிருந்து நாம் மாற வேண்டும்

 

காலம் காலமாக… கலாச்சார அடிப்படையில் இயக்கிய உணர்வுகள் நமக்குள் (உடலுக்குள்) செல்கள் ஏராளமாக விளைந்திருக்கின்றது. நம் தாய் தந்தையரிடமிருந்து… மூதாதையர்களிடமிருந்து… வளர்த்துக் கொண்ட அணு செல்கள் கலாச்சாரத்தில் மாறி உள்ளது.

கலாச்சார அடிப்படையில் மதங்களை உருவாக்கினாலும்
1.மதங்கள் மாறிய கலாச்சாரத்தில் பாருங்கள்… அதுவும் தொன்று தொட்டு ஊடே வந்து கொண்டேயிருக்கும்.
2.இந்தக் கலாச்சாரமும் ஊடே ஊடுருவியே இருக்கும்… இதை “மதங்களுக்குள் இனங்கள்…” என்று சொல்லலாம்.

கராச்சியை (பாகிஸ்தான்) எடுத்துக் கொண்டால்… முஸ்லிம் மதமாக இருந்தாலும் கலாச்சார நிலைகள் அங்கே வலுப்பெறும் போது எதிரியாகின்றது.
1.போர் முறையினால் அங்கே கலாச்சாரமே தன்னையும் வளர்க்க முடியவில்லை… பெருக்கிக் கொள்ளவும் முடியவில்லை.
2.தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மற்றவரை எதிரியாகக் கருதி வீழ்த்தத் தான் செய்கின்றது. ஒன்றுக்கொன்று
3.இன்றும் அங்கே போர் செய்வதால் தன்னையும் அது வீழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது.

அதே கலாச்சாரம் தான் மதம் இனம் என்ற நிலையில் தன்னை வளர்ப்பதற்காக வேண்டிப் போர் முறைகளாகி… மனிதன் அன்றைய அரசன் வழிகளில் தேய்பிறையாகவே உலகமெங்கும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து மீள்வதற்குத் தான் மகரிஷிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை…! அந்தப் பழமொழிக்கொப்ப மகரிஷிகள் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டார்கள். வளர்த்துக் கொண்டது “அறிவின் ஒளியாக…” மாறிக் கொண்டே போகின்றது.

ஆனால் காட்சிகளாக எத்தனையோ பார்க்கின்றோம், தியான ஆரம்பத்தில் நிறைய பேருக்குக் காட்சியும் யாம் கொடுத்துக் கொண்டு வந்தோம். அந்தக் காட்சியின் பெருமையைத் தான் அவர்களால் காண முடிகின்றதே தவிர காட்சிகளுக்குண்டான உண்மையைப் பார்க்க முடியவில்லை.
1.நம்முடைய உணர்வின் கிளர்ச்சிகள் எந்த அளவுக்கு இருக்கின்றதோ
2.”அதே தொடர்பு கொண்ட அலைவரிசையில்…” மனிதனில் விளைய வைத்த அலைகளை அது இழுக்கும்.

குளவி தன் உணர்வைப் புழுவின் மீது பாய்ச்சும் போது அந்தக் குளவியின் உணர்வலைகள் வரும் அதே அலைவரிசையில் தான் காட்சியாக அது இழுத்துப் புழுவின் உடலில் விளைகின்றது… குளவியைப் பற்றிய காட்சிகளைப் புழு எடுத்துத்தான் அதுவும் குளவியாக மாறுகிறது.

ஏனென்றால் சில பேர் “தியானத்தில்… காட்சி…காட்சி…” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியை… எதன் அடிப்படையில் நாம் பார்க்கின்றோமோ அதன் நினைவாக அது வரும்.

நாம் எந்தெந்தப் பக்தியில் தெய்வத்தின்பால் பற்று கொண்டுள்ளோமோ இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

அதாவது… எந்தெந்த ஒலிகளை நமக்குள் பரப்பி இருக்கின்றார்களோ நாதங்கள் சுருதிகள் வாத்திய இசை மலர்களின் மணங்கள் சோம பானம் இது போன்ற உணர்வு எல்லாம் கலந்து தான் அந்த ஒரு இசையாக அமைத்து அந்த உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர் “கடவுளாக…!”

எல்லா மதங்களிலும் இப்படித்தான் செய்கின்றார்கள். வெறும் சொல்லாக இருக்கலாம். உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பலாம் அதனுடைய நிலைக்கு அது காட்சியாக வரும்.

ஆனால் யாம் இப்பொழுது
1.உங்கள் அணுக்களில் குருநாதருடைய உணர்வுகளையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளையும் இணைத்து
2.அந்த உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
3.இதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் நல்ல வளர்ச்சி அடைவதற்குச் சரியாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய உலகில் நாம் தவறே செய்ய வேண்டாம்…! நாம் தவறு செய்யாமலே அந்தத் தவறுக்கு நாம் ஆளாகும் சந்தர்ப்பங்கள் வந்து விடுகின்றது.

அதற்கு மூலம் எது..? நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!

அந்த உணர்வை இயக்குவது யார்…? நம் உயிர் தான்…!

நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் இயக்கப்படும் போது மனிதனை உருவாக்கிய அணுக்கள் எத்தனை பாடுபடுகின்றது..? எத்தனை வேதனைப்படுகின்றது…? இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா…?

மனிதன் வாழ்வது கொஞ்சம் நாள் தான். நூறு வருடம் அல்லது நூற்று இருபது வருடம் அதற்கு மேல் யாரும் வாழ்கிறார்களா…? எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டுப் போய்த் தான் ஆக வேண்டும்…!

அப்பொழுது யாருடன் செல்ல வேண்டும்..? நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிருடன் தான் நாம் இப்பொழுது செல்கின்றோம்.

ஆனால்
1.வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி
2.நுகர்ந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக்கி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் தான் நாம் சென்றாக வேண்டும்

ஏனென்றால் அன்று ஆண்ட அரசர்களால் இந்த உலகம் அழியும் தருணத்திற்கு வந்துவிட்டது. இன்றும் அதிக மோசமான நிலைகளில் போய்க் கொண்டு இருக்கின்றது

பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு வந்தாலும் அது வீடு வரைக்கும் வந்து சேருமா…? கையில் பணம் கொண்டு வருவது தெரிந்தாலே தட்டிப் பறிக்க எத்தனையோ வழிகளில் இன்று இருக்கின்றார்கள்.

சேர்த்த பணத்தை வீட்டில் மறைத்து வைத்து விட்டுப் போனால் தப்ப முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. சரி… பாங்க் லாக்கரில் வைத்தால் தப்ப முடிகிறதா..? என்றால் அதுவும் இன்று கேள்விக் குறி தான்…!

அந்த அளவுக்கு நிலைமை மோசமாக ஆகிவிட்டது

ஆக எல்லா ஆசைகளும் இருந்தாலும் செல்வத்தைப் பாதுகாத்து வைப்பதற்குள் போதும்…போதும்..! என்று ஆகி நிம்மதி இல்லாது வேதனைப்பட்டு நமக்குள் நோயாகவே வருகின்றது. இதிலிருந்து தப்ப முடியாத நிலைகள் தான் இன்று இருக்கின்றது.

1.ஆகையினால் செல்வத்தைக் காக்க என்று யாரை எண்ணி ஏங்குகின்றோமோ மீண்டும் பிறவிக்கே இங்கே வந்துவிடுன்றோம்.
2.பிறரைக் காக்க வேதனைகளை எடுத்தாலும் மீண்டும் பிறவிக்குத் தான் வருகின்றோம்.

ஆனால் விஷத்தை எல்லாம் வென்று ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் ஓங்கி வளர்த்தோம் என்றால் “உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது…!”

அப்பொழுது உயிர் அதை இயக்கி நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும். நாம் அழியாத ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

ஏனென்றால் நமக்குள் எத்தனையோ “ஊழ்வினை” என்ற வித்துக்கள் உண்டு. முந்தி தெரியாது… இப்பொழுது அது எல்லாம் தெரிய வரும். அந்த வித்துக்களை எல்லாம் நாம் ஒளியாக மாற்றிக் கொண்டே வருதல் வேண்டும்.

குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்

 

ஒரு குளவி ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து அதைத் தன் இனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.

இன விருத்திக்கான உமிழ் நீரைச் சுரக்கும் பொழுது அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப் பிசையும் பொழுது ஒரு நிறம் இருக்கிறதென்றால் தனக்குகந்த மண்ணை எடுத்துச் சுண்ணாம்பினால் அதைக் கலந்து எடுத்துக் கொண்டு வருகின்றது.

அதிலே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவிலே தன் உமிழ் நீரைப் பாய்ச்சுகின்றது. பாய்ச்சி உருண்டையை எடுத்து வந்து கூடாகக் கட்டுகின்றது. அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைக்கிறது.

1.தன் இனவிருத்தியின் உணர்வின் நோக்கம் கொண்டு புழுவைத் தாக்குகின்றது.
2.தாக்கியவுடன் புழுவின் உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி அது மறைத்து விடுகின்றது.
3.முதலில் கவசமாகக் கட்டி விடுகின்றது…. அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின் தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது.

அதற்கு அந்தச் சக்தி இருக்கின்றது.

அப்பொழுது புழுவின் உடலை உருவாக்கிய உயிரும்… உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட, உடலுக்குண்டான அணுக்களிலும்… இந்த விஷத்தின் தன்மை பாய்ந்து விஷமாக ஆகின்றது.
1.விஷத்தன்மை பாய்ந்த நிலையில்
2.புழுவிற்கு அந்தக் குளவியின் நினைவாற்றல் தான் அதிகமாக வருகின்றது.
3.அந்த நினைவாற்றல் அதிகரிக்கப்படும் பொழுது உடல் சருகாகுகிறது.

மீண்டும் அந்தக் கூட்டின் மேலிருந்து குளவி “ரீங்கார ஒலிகளை” எழுப்புகின்றது.

அந்த உணர்வின் இயக்கமானபின்…
1.இதே நினைவலையில் அந்த உணர்வின் செல்கள் மாறி விடுகின்றது.
2.இந்தக் கூட்டின் வழியாக அந்த உமிழ் நீரைச் சேர்த்தபின்… அந்த ஒலி அலைகளைப் புழு எடுக்கின்றது.

உதாரணமாக… நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கங்கள் பூமிக்குள் ஊடுருவி… அந்தக் காந்தப் புலனறிவு இயக்கும் காந்தம் அதிகமாகும் பொழுது… பூமியின் நடுவிட்டம் வரை ஊடுருவிச் செல்லும்.

ஊடுருவிச் செல்லும் பொழுது மரங்கள் மேல் தாக்கப்பட்டால் மரங்கள் கருகி விடுகின்றது. அப்படி ஊடுருவிப் பூமிக்குள் சென்றவுடனே, வெல்டிங் (welding) வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ அதே போல பாறைகளில் ஊடுருவி “அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது…”

அது தனக்குள் சேர்த்து…
1.மொத்தத்தில் வடித்துக் கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது
2.அதன் வழி பூமிக்குள் பல மாற்றங்களைக் கொடுக்கின்றது.

பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத் தன்மையை நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி… அது உமிழ்த்தும் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டபின் அந்த அலைகளின் வீரியம் வருவதும்
1.நம் பூமியின் ஈர்ப்புக்குள் நுழைந்து கொண்டபின்
2.அது ஈர்த்து நடுமையத்தில் கொண்டு சேமித்துக் கொள்கின்றது.

அதைப் போல் நாம் சுவாசிக்கும் நிலைகள்… எந்தந்த உணர்வுகளை உடலுக்குள் பாய்ச்சினாலும்
1.உடலில் விளைந்த அந்த உணர்வுகள் எல்லாவற்றையும்
2.உயிரிடமே கொண்டு வந்து உயிராத்மாவாகச் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

உயிரின் இயக்கங்களில் ஊடுருவி…
1.உணர்வின் அணுக்களைப் பெருக்கித் தன் நினைவுடன் இயக்கச் செய்து
2.தன்னுடன் ஒன்றச் செய்து ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.

இதற்கும் அதற்கும் (பூமிக்கும் உயிருக்கும்) உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.
எனக்குப் படிப்பறிவு இல்லாததால் “நேர்முகமாகவே…” இதையெல்லாம் காட்டுகின்றார். இந்த உணர்வின் இயக்கங்கள் பூமியின் நடுமையும் அடைவதை காட்டுகின்றார்.

ஆனால் நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஊடுருவும் பொழுது ஒவ்வொன்றையும் எப்படி இடைமறித்துக் கருக்கச் செய்கின்றது…? வெல்டிங் அடிக்கும் போது ஓட்டை விழுவது போன்று எப்படி ஆகின்றது…? என்று காட்டுகின்றார்.

மின்னல் தாக்கிய பின் மரங்கள் கருகின்றது. மின்னல் ஊடுருவி பூமிக்குள் செல்கின்றது. இப்படி… 27 நட்சத்திரங்கள் நிலைகள் அங்கே பூமிக்கடியில் ஒன்று சேர்த்துக் கொதிக்கலனாக மாறுகின்றது. அதிலிருந்து… கலவைகள் ஆவியாக மாறி தனது நிலைக்குப் பூமி மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.குளவியின் விஷத்தன்மை கூட்டிற்குள் அடைபட்ட புழுவின் உடலுக்குள் பாய்ந்து
2.அது தன்னுடைய வேகங்களை எடுத்து அணுக்களில் பட்ட பின்
3.புழுவின் உயிர் குளவியை எண்ணியே அதனின் உணர்வலைகளை எடுத்து
4.உடலின் செல்களை மாற்றிப் “புழு குளவியின் ரூபமாகின்றது…”

இது பரிணாம வளர்ச்சி.

அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே… “பேரருள் பேரொளி”

 

(1) முடிவே இல்லாதது…!
1.ஒன்றுடன் ஒன்று மோதி 2.ஒன்றுடன் ஒன்று கலவையாகி உருவாகி
உருமாற்றமாகிக் கடைசியில் ஆவியாகி 3.மீண்டும் திடமாகி
மீண்டும் அதே சுழற்சி 1,2,3.. 1,2,3

(2) என்றுமே அழிவில்லாதது
1.விண்ணிலே தோன்றும் உயிர்
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய மகரிஷிகள்

(3) நிலையானது…! (4) சத்தியமானது…!
ஆதிசக்தியின் இயக்கம்…! வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சேர்ந்து எதைக் கவர்கிறதோ அதனின் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

5) ஒளிர் ஞான தத்துவ அடக்கமே…! பேரருள் என்பது.
ஆதிசக்தியின் இயக்கத்தின் நோக்கமே அனைத்தையும் ஒளியாக ஒளிரச் செய்வது… ஒளியின் வளர்ப்பாக முதிர்வடையச் செய்வது தான். அது தான் பேரருள்.
அப்படிப் பேரருளாக முதிர்ந்து ஒளியாக ஒளிரச் செய்து ஒளியின் வளர்ப்பை வளர்க்கும் போது பேரொளியாகிறது. அவர்கள் தான் மகரிஷிகள். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் போன்றவைகள்.

மேலே சொன்ன ஐந்தையும் உள்ளடக்கிய தத்துவம்

ஆதிசக்தியின் படைப்பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆன பின் ஞானத்தின் வழித்தொடரைத் தனக்குள் விளைய வைத்து உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தனை தீமையின் நிலைகள் நஞ்சாக இருப்பினும் தன்னை அணுகாது
2.அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான், இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள், சப்தரிஷிகள்.
1.ஆக ஒவ்வொரு பூமியின் தொடர் கொண்டும் வாழுகின்றார்கள்
2.அந்தந்த பிரபஞ்சம் இறந்தாலும், இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு
3.தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து
3.பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.

இந்த அகண்ட பேரண்டத்தில், இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு. ஆக, மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
1.மனிதர்களாகிய நாம் அனைவரும்
2.அதிலே இணைந்தால்தான் நல்லது.

முழுமையான விரிவாக்கம்

பேரண்டம், முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது,
1.ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து
2.அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து, உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து
1.உணர்வின் தன்மை உடல் பெற்று
2.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
3.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.

இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்,
1.இந்த உயிருடன் ஒன்றி
2.ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள் தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலைக் காண அதைப் பெறும் பாக்கியத்தை இன்று நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எதிர்பாராத விதமாக சில சிக்கல்களில் மாட்டுபவர்கள் கடைசி நேரம் அபயக் குரலை எழுப்புகிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்…! என்கிறார்கள்.

நாம் நல்ல எண்ணத்தில் இருக்கின்றோம். அவர்களைக் காக்கவும் முயற்சி செய்கின்றோம். அந்த விபத்திலிருந்து கூடுமானவரை தப்பிக்க வைத்து விடுகின்றோம்.
1.அந்த உடலை அந்த நேரத்தில் காக்கின்றோம்.
2.ஆனாலும் அந்த விதி வேலை செய்யும்.

“விதி வேலை செய்கிறது…” என்று மீண்டும் அதை எடுத்துக் கொண்டால் அதனுடைய “எதிர் அலைகள்” ஏராளமாக வரும். அப்பொழுது இந்த உடல் பற்று தான் வரும்.

விதிப்படி நாம் மீண்டும் பிறப்பிற்கு வருகின்றோம். பல துன்பங்களை அனுபவிக்கின்றோம்.
1.அந்த உணர்வின் தன்மை அதிகமாக வளர்த்து விட்டால்
2.இதே போல பல இம்சைகள் உருவாகக்கூடிய ஒரு உயிரணுவாகத்தான் மாற்றும்.

இப்படி நம் உடலில் எத்தனையோ விதிகள் உண்டு…!
1.அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
2.நாம் செய்த நிலைகளுக்கு இது “கழிகிறது…!” (இது மிகவும் முக்கியம்)

சரி…! இனிமேல் நாம் அந்த அருள் ஒளியை அதிகமாகக் கூட்ட வேண்டும் என்ற நிலைகளில் எடுத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் எதுவாக இருந்தாலும் தெரிந்தோ… அல்லது தெரியாமலோ அது பட்டிருந்தாலும்… நம் உயிர் அதை இயக்கத்தான் செய்யும்.

சமையல் செய்யும் பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைக்கின்றீர்கள். நான் தானே சமையல் செய்தேன். நான் அதிலே போடாமல் அது எப்படி அதற்குள் ஒரு பூச்சி வரும்…! என்று கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

1.நாம் போடவில்லை…!
2.காற்றிலே பறந்து வந்த ஒரு விஷப் பூச்சி சமையல் பாத்திரத்திலே விழுந்து விடுகின்றது.
3.நான் போடவில்லையே..! என்று சொல்லிக் கொண்டு
4.நான் போட்டால் தானே அப்படி வரும்…! என்று சொன்னால் அது எப்படி…?

நெருப்பைக் கூட்டிப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அதிலே எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு வேக வைக்கும்.
1.இதைப் போன்று தான் இந்த உயிருடைய வேலை நெருப்புக்குச் சமம்
2.எந்த உணர்வை நுகர்ந்தோமோ… சுவாசித்தோமோ… அதை அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிவிடும்
3.எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஒரு விதியாக உருப்பெற்று விடுகிறது
4.உயிருடைய வேலை அது தான்…!

அப்படியானால் தெரிந்தோ தெரியாமலோ உயிரிலே படும் தீமைகளை எல்லாம் மாற்றியமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கிறது..,?

நம் ஆறாவது அறிவுக்குத் தான் இருக்கின்றது. ஆறாவது அறிவு கொண்டு மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்தால் உயிர் அதனின் இயக்கமாக நம்மை மாற்றும். விதியை மதி கொண்டு நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் விதியின் வழியாகச் சென்று மீண்டும் தேய்பிறையாகக் கீழான பிறவிகளுக்குப் போய்விடுவோம்.

சாகாக்கலை பெரிதல்ல

 

ஒரு சில வைத்தியர்கள்… ரசமணி போன்று செய்யக்கூடியவர்கள் என்னிடம் வந்து “சாகாக்கலை…” உங்களுக்குத் தெரியுமா…? என்று கேட்டார்கள்.

தெரியவில்லையே என்று சொன்னேன்…!

என்னங்க… நீங்கள் பெரிய சாமி ஆகி விட்டீர்கள்…? என்னென்னமோ சொல்கின்றீர்கள்…! எதை எதையோ சொல்கின்றீர்கள்…! சாகாமல் இருப்பதற்கு வழி உண்டா…? சாகாக்கலை உங்களுக்குத் தெரியுமா…?

பயங்கரமாக அவர் அடித்துப் பேசுகின்றார். பல பல மருந்துகளைப் பற்றிப் பேசுகிறார்.

பின்பு கடைசியில் அவரிடம் நான் சாகாக்கலை என்றால் உங்களுக்கு என்ன தெரியும்…? என்று கேட்டேன்.

என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்…! உங்களுக்கு இந்த விவரமே தெரியவில்லை…! எனக்கு விவரம் தெரியவில்லை என்று அவர் பேசுகின்றார்.

மனித வாழ்க்கையில் எதை எதை எல்லாம் நீங்கள் உடலில் விளைய வைக்கின்றீர்களோ அது சாவதில்லை. இந்தக் கலைப்படி
1.ஒருவனைக் கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
2.அந்தக் கொல்லும் உணர்வு உங்களைக் கொல்லும்… இது சாகாக்கலையாக மாறும்.
3.அடுத்தாற்போல் மற்றதைக் கொன்று சாப்பிடக்கூடிய சாகாக்கலையாக மாறி
4.மற்றதை இம்சைப்படுத்திய உணவாக உட்கொள்ளும் உயிரினமாக உருவாக்கிவிடும்.

இதற்குப் பெயர் தான் சாகாக்கலை என்று சொன்னேன்.

அவர் உடனே என்னங்க…! இப்படி சொல்கின்றீர்கள்…! என்றார்.

வேகாநிலை…! மனிதனைத் தூக்கித் தீயிலே போட்டால் உயிர் வேகின்றதா…? வேகுவது இல்லை.

ஆனால்… இந்த உடலிலே எவ்வளவு காலம் வளர்த்துக் கொண்டது இருக்கின்றதோ அது அனைத்தும் “ஐய்யயோ… அம்மம்மா…!” என்று அலறுகின்றது. அந்த நேரத்தில் தன்னுடைய தாயை நினைத்தால் இந்த உயிரான்மா தாயின் உடலுக்குள் செல்கின்றது.

ஐயோ… அண்ணே…! என்று அந்த இட்த்தில் எதிரிலே கண்ணிலே படும் நண்பர்களையோ மற்றவர்களையோ எண்ணினால் இந்த உணர்வுகள் பதிவாகி “உடலெல்லாம் எரிகின்றதே… எரிகின்றதே… என்னைக் காப்பாற்றுங்கள்…” என்ற ஓலத்தை எழுப்பி
1.கண்ணில் இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகி விட்டால்
2.உடலை விட்டுச் சென்ற பின் சாகாக்கலையாக அவர் உடலுக்குள் சென்று இயக்கத் தொடங்கும்.

உயிர் வேகுவது இல்லை. ஆனால் உடலும் உணர்வுகளும் கருகுகின்றது. இந்தக் கருகிய உணர்வுடன் இங்கே உருவாக்கிய நிலையை அந்த உடலுக்குள்ளும் சென்று
1.அடுத்து “அம்மம்மா… ஐயோ எரிகின்றதே… எரிகின்றதே…” என்று அவரும் சொல்லத் தொடங்குவார்.
2.சீக்கிரம் எதையாவது மேலே போட்டு அல்லது ஊற்றி அவரும் தீயை வைத்துத் தன்னை எரித்துக் கொள்வார். இதைப் பார்க்கலாம்.

ஆக எந்தெந்த உணர்வு கொண்டு இறக்கின்றார்களோ இன்னொரு உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.

ஒருவர் ஹார்ட் அட்டாக்கினால் வேதனைப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உதவி செய்த நண்பர்கள் யாரையாவது அவர் நினைவில் அதிகமாக வளர்த்திருந்தால்… இவர் இறந்தால் இது சாகக்கலையாக மாறி அந்த உடலுக்குள் சென்று விடும்.

அங்கே சென்ற சிறிது காலத்தில்
1.“நண்பர் இவ்வாறு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்…” என்று கேள்விப்பட்டபின் இதே உணர்வுகள் இயக்கி
2.அவருக்கும் இதே நோய் வந்து அதனால் இறந்து விடுவார்… இதற்குப் பெயர் சாகாக்கலை.

எதன் எதன் அடிப்படையில் வருகின்றதோ இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் “சாங்கிய சாஸ்திரம்…” என்று இதையெல்லாம் மூடி மறைத்து விட்டார்கள்… மறைக்கப்பட்டு விட்டது.

ஆகையினால்… இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பையும் வேதனையையும் வளர்த்தால் இது சாகாக்கலை. சாகாமல் அது வளர்ச்சியாகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் வேகா நிலை என்றால் என்ன…?

1.மகரிஷிகள் அனைவரும் வேகா நிலை அடைந்தவர்கள்
2.இந்த உலகிலே… பேரண்டத்திலே எத்தகைய நிலைகள் வந்தாலும் அவர்களை அது சுட்டுப் பொசுக்க முடியாது.
3.எதிலேயும் அவர்களை வேக வைக்க முடியாது… ஒளியின் சுடராகவே இருக்கும்.. அது தான் வேகாநிலை என்பது.

இந்தப் பேருண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். என்றுமே நாம் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் நாமும் அந்த நிலை பெற முடியும்.

அந்த நிலையை அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்றும் வராக அவதாரம் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு உடலையும் உற்றுப் பார்த்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
1.தீமைகளிலிருந்து விடுபட… எந்த உடலைக் கூர்மையாக உற்று பார்த்ததோ
2.அதனின் உணர்வை வளர்த்து அடுத்து அதே உடலாக உருவம் பெறுகின்றது அந்த உடலுக்குள் சென்று…!

இப்படித்தான் தீமையில் இருந்து விடுபடும் உடலின் வலிமை பெற்று வளர்ந்த நிலைகள் கொண்டு வராகனாக உடல் பெறுகின்றது. வராகனாக உடல் பெற்ற பின் என்ன செய்கிறது…?

தன் வலிமையான உணர்வைப் பாய்ச்சித் தீமையைப் பிளந்து சாக்கடைக்குள் மறைந்துள்ள (நறுமணத்தை) நல்ல உணர்வை நுகர்ந்து உணவாக உட்கொள்கிறது.

நாற்றத்தைப் பிளந்து நல் உணர்வை நுகரும் தன்மையைத் தன் வாழ் நாள் முழுவதும் பெருக்கி இந்தத் தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வுகள் விளைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.

மனிதனான பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள தீமை விளைவிக்கும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நஞ்சை மாற்றிடும் சக்தியாக “ஆறாவது அறிவு வருகின்றது…!”

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் இந்தக் காற்றுக்குள் மறைந்துள்ள அருள் மகரிஷியின் உணர்வை வலுப் பெறச் செய்து எண்ணத்தால் அதனை நுகர்ந்தறிந்தால் வாழ்க்கையில் இருள் சூழச் செய்யும் நிலைகளை எல்லாம் ஒளியாக மாற்றிட முடியும்.

1.இதனை எவர் ஒருவர் சீராகச் செயல்படுத்துகின்றாரோ அவரே அடுத்து பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுவர்.
2.அந்த மகரிஷிகளின் அருளாற்றலை உங்கள் குடும்பங்களிலும் பரவச் செய்து மரணமில்லாப் பெரு வாழ்வாக வாழ முடியும்.

ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கோணத்தில் உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு). அந்தப் பதிவின் நினைவாற்றலை நீங்கள் கொண்டு வந்து தீமையை அகற்றிடும் சக்தியாக விளைய வேண்டும்.

இன்று காற்று மண்டலங்களில் கடுமையான நச்சுத் தன்மைகள் பரவினாலும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி நீங்கள் இடும் மூச்சலைகள் இந்த உலகம் முழுவதும் பரவி தீமைகள் புகாத நிலையில் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த உபதேசம்.

1.ஆக… நான் ஒருவன் (ஞானகுரு) இருந்து இதை ஒன்றும் செய்ய முடியாது.
2.நான் செய்வேன்..! என்று சொன்னால் அது நானாக அகந்தையாகப் பேசிக் கொள்ளலாமே தவிர
3.நான் செய்வேன் என்றால் இது அகந்தைக்குரியது தான்…!
4.நானாக ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு நெல் என்றுமே ஒருவருக்குப் பசியைத் தீர்த்தது இல்லை. அதை விதைத்துப் நெல் குவியலாக உருவாக்கிய பின் அளவுகோல் அளந்து அதற்குத் தக்கவாறு ஒவ்வொருவரது பசியையும் போக்கவும் முடியும்.

ஆகவே அதைப் போல நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு அந்த அருள் மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி அழுத்தமான நிலைகள் கொண்டு அந்த மூச்சலைகளை இந்தக் காற்று மண்டலத்திலே பெருக்க வேண்டும்.

நம்மையும் காத்து மக்களையும் காக்கும் சக்தியாக வளர வேண்டும்.

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

 

உதாரணமாக இரயிலிலே நாம் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள். அங்கே பயணம் செய்பவர்களில் ஒருவர் கடுமையாக வேதனைப்படுகிறார் என்று பார்க்கிறோம்.

அவரை நமக்குத் தெரியாது… அவர்களிடம் நாம் வேறு உணர்வு கொண்டும் பழகவில்லை. பிரயாணம் செய்யும் பொழுது தான் பழக்கம். அவர் சிரமப்படுவதை… இரக்க மனம் கொண்டு என்ன… ஏது…? என்று பார்க்கின்றோம்.

ஆனால் அவருடன் வந்தவர்களோ சலிப்பாகச் சஞ்சலமாகவே அவரிடம் பேசுவார்கள். ஏனென்றால் அடிக்கடி அவரிடம் கவலைப்பட்டுப் பழகியவர்கள் அல்லவா. இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாய்…? என்று அடிக்கடி பேசுவார்கள்.

ஆனால் நாமோ…
1.ஏன் இப்படி…? என்று இரக்கத்தோடு இந்த செயலைக் கவனிக்கின்றோம் ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே பழகுகிறோம்.
2.ஆகையினால் ஏன் இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! உங்களுக்கு என்னம்மா வேண்டும்…? ஏதம்மா வேண்டும்…? என்று இப்படிப் பதிவு செய்கிறோம்.

இப்படிப் பண்போடு சொல்லப்படும் பொழுது அவர்களுக்கு வேதனை கொஞ்சம் தணிகிறது. “இந்த உணர்வு…” அந்த வேதனைப்படுவர் உடலிலே ஆழமாகப் பதிவாகி வலுப் பெற்று விடுகின்றது.

நாம் என்ன நினைக்கின்றோம்…! இந்தப் பெண்மணி இவ்வளவு கஷ்டப்படுகின்றது… ஆனால் இரக்கமில்லாதபடி சமுதாயம் பேசுகிறது பார்…! என்று “அவர்கள் உணர்வை…” நமக்குள் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அவர் ஊருக்குப் போய்ச் சேருகின்றார். அவரைச் சார்ந்தவர்கள் உணர்வு வரும் பொழுது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது…
1.பார்… எத்தனை நல்லது செய்தோம்…? எத்தனை வசதி கொடுத்தோம்…? நம்மை இப்படித் தான் பேசுகிறார்கள்.
2.ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது “அந்த மகராசி… என்ன உபச்சாரம்…!” என்ற இந்த உணர்வு அங்கே வலுப்பெறுகின்றது.

ஆனால் நாமோ அவர்கள் வேதனையைப் பதிவு செய்கின்றோம். அதாவது
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…!
2.நம்முடைய உடலிலே பதிவான உணர்வுகள் அங்கே…!
3.அதே சமயத்தில் அங்கே வேதனைப்படுவருடைய வீட்டிலோ அவருக்கு வெறுப்பு.

உடலை விட்டுப்பிரியும் போது அவரின் உணர்வுகள் “இரயிலில் தனக்கு ஆதரவாகப் பேசியவர் மேல் நினைவு வருகின்றது…!” விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்.

உயிர் பிரியும் பொழுது அந்த ஆன்மா எந்த உணர்வைக் (எண்ணங்களை) கடைசியிலே வலுவாக எடுத்துக் கொண்டதோ…
1.நாம் இங்கே இருந்தாலும் நம் மீது அந்த நினைவுகள் வந்து உடலுக்குள் புகுந்துவிடுகிறது.
2.நம் உடலில் அந்த ஆன்மா புகுந்தது நமக்கே தெரியாது.

ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களை எண்ணும் போது… பாவிகள் என்று பதிவு செய்து அந்த எண்ண அலைகளை அங்கே பரப்புகின்றது. இவ்வாறு பதிந்த எண்ணங்கள் கொண்டு இதிலே மடிந்து விடுகின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்தைச் சாடுகிறது. இறந்த உடலில் விளைந்தது அனைத்துமே அந்தக் குடும்பத்திற்குப் பாய்கின்றது.

ஆனால் இங்கே பற்று கொண்ட நிலையில் மகராசி எனக்கு ஆதரவாகப் பேசியது என்ற அந்த எண்ணத்துடன் அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.

விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்கும்…? அந்த மாதிரி
1.அவர் வேதனைப்பட்ட உணர்வுக்குள் இந்த உணர்வின் தன்மை கலந்து இங்கே இயக்கச் சக்தியாக மாறுகிறது.
2.அந்த உடல் எவ்வாறெல்லாம் வேதனைப்பட்டதோ… தன் குடும்பத்தாரை வெறுப்புடன் எப்படிப் பேசியதோ…
3.இங்கே வந்தபின்… தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெறுப்பாகப் பேச வைக்கும்.

பார்க்கலாம்… சில குடும்பங்களில் நேற்று வரை அவருடைய பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே… நல்லதாக உதவி செய்வதாக இருக்கும். ஆனால் இந்த ஆன்மா புகுந்த பின் பார்த்தால் எல்லோரையும் வெறுத்துப் பேசும்.

நேற்று வரை எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்தார் ஆனால் இப்பொழுது இப்படிப் பேசுகின்றாரே…! என்னமோ தெரியவில்லை…! என்பார்கள்.
1.அந்த உடலிலே விளைந்த உணர்வின் செல்கள் நோயாக மாற்றிவிடும்.
2.பெரும்பகுதி இப்படித்தான் மனிதன் வாழ்க்கையில் தேய்பிறையாகச் சென்று கொண்டிருக்கின்றான்.

ஆனால் இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது 95. அப்பொழுது எனக்கு (ஞானகுரு) ஏழு வயது இருக்கும்.

எங்கள் வயலுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் ஒரு சுடுகாட்டைத் தாண்டித் தான் போக வேண்டும். குளம் எல்லாம் இருப்பதால் நான் அங்கே எங்கள் வயலுக்குத் தினமும் போய் வருவேன். அப்படி ஒரு பழக்கம் அந்த வயதில் எனக்கு இருந்தது.

என் சொந்தக்காரர் அந்தப் பெரியவர் 95 வயது என்ன செய்தார் தெரியுமா…? எல்லாச் சொந்தக்காரர்களுக்கும் தகவல் சொல்லிக் கூப்பிடுகின்றார்.
1.எனக்காக வேண்டி இனி என்ன செய்யப் போகிறீர்கள்…?
2.நான் சாவதற்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கிறது…! என்று சொல்கிறார். அப்படியே சொல்கிறார்…!

வந்தவர்களிடம் எல்லாம் நான் பத்து நாளில் போய்விடுவேன் டேய்… நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கடா..!

ஒரு நாள் போய் விட்டது… இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. நீங்கள் என்னென்ன ருசியாக வேண்டுமோ சாப்பிடுங்கள். எல்லோருக்கும் சாப்பிடக் கொடுங்கள்…!

ஒவ்வொரு நாளும் இப்படியே சொல்லிக் கொண்டே இருந்தார்.

பத்தாவது நாளும் வந்தது.
1.இனி ஒரு மணி நேரம் இருக்கிறது…. அரை மணி நேரம் இருக்கிறது
2.கால் மணி நேரம் இருக்கிறது… பத்து நிமிடம் இருக்கிறது
3.இன்னும் ஒரு நிமிடம் இருக்கின்றது… சொல்லிக் கொண்டே போகிறது.
4.சொல்லிக் கொண்டே இருந்தார்… அப்படியே உயிர் பிரிந்தது…!

அவர் எந்த வழியில் எப்படி இருந்திருப்பார் பாருங்கள்…!

கடைசியில் அவரைச் சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்கின்றார்கள் நான் அன்றைக்குத்தான் சுடுகாட்டில் எரிப்பதைப் பார்க்கின்றேன். அங்கே அவருடைய உடல் எரிந்து கொண்டிருக்கின்றது.

எரிந்து கொண்டிருந்த உடல் என்ன செய்தது…?
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வினுடைய வேக நினைவுகள் எவ்வளவு வலுவாக இருந்ததோ
2.அந்தச் சரீரம் அப்படியே எழுந்து உட்கார்கிறது…!

தொப்….தொப்..! என்று போட்டு அடித்து மறுபடியும் கட்டையைப் போட்டு எரிக்கின்றார்கள். இதைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனது…?

சுடுகாட்டில் அன்றைக்குத் தான் பேயைப் பார்த்த உணர்வு போல் பயந்து போய் விழுந்தடித்து ஓடத் தொடங்கினேன். ஏழு வயதில் எனக்கு அந்தப் பயம் வருகிறது. நடந்த நிகழ்ச்சி நேரிலேயே இதைப் பார்த்தது. ஆனால் செத்தது அவர்.

இந்த உணர்வுகள் அதை எல்லாம் நீக்கினாலும் கூட அந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அந்த மாதிரி இயக்குகிறது. பார்த்த உண்மை நிலை இது…!

பக்தியின் நிலைகள் அன்று காட்டியிருந்தாலும்…
1.தாய் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள் மெய் ஒளியைப் பெற்று அங்கே அழைத்துச் செல்லும்.
2.அவர்களுக்குத்தான் இந்த மாதிரியான நினைவுகள் வரும்…!

உங்கள் ஒவ்வொருவருக்கும் (இன்னார் இன்னாருக்கு) இதெல்லாம் நான் செய்தேன். நீங்கள் இப்படிச் செய்து கொள்ளுங்கள்…! நான் உடலை விட்டுப் போகிறேன்…! என்று சொல்லிவிட்டே போகிறார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

 

குழந்தைகளை நாம் வளர்க்கின்றோம், நாம் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது…?
1.நம் பையன் தான்… ஆனால் வெறுப்பின் உணர்வைப் பதிவு செய்து விட்டால்
2.இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருப்பான்…! என்று இந்த உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.

ஒரு தரம் பதிவாக்கி விட்டால் பல காலம் நான் நாம் அவன் மீது பேரன்பு வைத்திருந்தாலும் ஒரு தடவை எடுத்த இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விடுகின்றது.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பின் எண்ணங்களே வரும். அது வளர்ச்சியாகும். அவனை நல்லதாக மாற்றும் நிலைகளே நமக்குள் மாறி விடுகின்றது. அவன் மீது நாம் வைத்திருக்கும் பற்றைத் தான் மாற்றுகிறது.
1.அவன் மீது பற்று கொண்டு…
2.தீமையிலிருந்து அவனை நல்வழிப்படுத்தும் உணர்வு நமக்குள் வராது.
3.காரணம்… உணர்வின் இயக்கங்களில் தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…!

ஆகவே… இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுதெல்லாம் இது போன்ற உணர்வுகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்தாலும் கூட
1.தூங்கச் செல்லும் பொழுது குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது நம் நினைவைத் துருவ மகரிஷியுடன் ஒன்றச் செய்து
2.அடுத்து சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து… சப்தரிஷிகளுடன் நாம் இணையச் செய்ய வேண்டும்.

ஒருவர் மட்டும் நாம் குறி வைத்து எண்ணுவதல்ல. பலரும் சேர்ந்துதான் அது ஒன்றாக ஆனது. இது தான் அடிப்படைக்குறி என்றால் ஒன்றை மட்டும் எடுத்து ஒன்றாக எதுவும் இணைந்ததில்லை.

துருவத்தை முதலில் நுகர்ந்து விண்ணிலே ஒளியாகச் சென்றது துருவ மகரிஷி. அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

ஆனால் அவர்கள் அனைத்தும் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள் மகரிஷிகள். மனிதனாக இருக்கும் பொழுது சிருஷ்டித்துக் கொண்டது.
1.இந்த உணர்வை நாம் பருக வேண்டும்.
2.இதையெல்லாம் வலுப்படுத்தி அவர்கள் ஆன நிலையை எடுத்துத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.
(சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டல உணர்வை முதலில் எடுத்துத் தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திர உணர்வை வலுவாக்க வேண்டும்)

அதைப் பெறச் செய்வதற்குத் தான் பௌர்ணமியன்று கூட்டுத் தியானங்களில் எல்லோரும் சேர்ந்து “சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுவாக்கச் சொல்வது…”

அந்த வலுவை நமக்குள் கூட்டி இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆன்மாவைச் சிறிது நேரமாவது தூய்மைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக… சமைப்பதற்காக வேண்டி பாத்திரத்தை நாம் உபயோகப்படுத்துகின்றோம்… பின் தூய்மைப்படுத்துகின்றோம் ஆனால் அதிலே ஒன்றிய நிலைகள் சில இடங்களிலே அழுக்கு அதிகமாகப் படிந்துவிடும்.

அதை நாம் நீக்க முயற்சித்தால் தேய்க்கத் தேய்க்க பாத்திரமே ஓட்டையாகி விடுகிறது. ஒரு பக்கம் மேடாகி ஒரு பக்கம் தேய்மானமாகி மேடு பள்ளம் ஆகி சமமில்லாத நிலையாகி விடுகிறது.

இதைப் போன்று தான் அவ்வப்போது (அன்றன்று) தூங்கச் செல்லும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்துத் தூய்மைப்படுத்துகின்றோம்.

அதில் சில தொக்குகள் இருந்தாலும்
1.இரவிலே மீண்டும் முழிப்பு வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
2.மறுபடியும் அந்த எண்ணத்தைக் கூட்டித் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் ஆன்மாவிலே அந்த அணுக்களுக்குக் கிடைக்கக் கூடியதைத் தடைப்படுத்தும் போது தன்னாலே மாறிவிடும்.

ஆகவே இரவிலே எப்படி இருந்தாலும் “படுக்கைக்குச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்

 

நீங்கள் தர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும், ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது என்ன நடக்கின்றது…/

நீங்கள் அவரைப் பார்க்கும் பொழுது…
1.உங்கள் புலனறிவால் கோப உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன்
2.உடல் காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால் உங்கள் சுவாசத்துடன் கலந்து உயிரில் உராய்வதனால்
3.ஆத்திர உணர்வின் எண்ணம் உங்களை அறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ கேட்கவோ தூண்டுகின்றது.

அச்சமயம் உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால் குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், சுவை குன்றியே இருக்கும்.

அதனால் ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது.
1.கோப ஆத்திர உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால்
2.இரவில் உறங்கும் பொழுது “இரத்தம் தசைகளாக மாறும் சமயம்…”
3.உடலில் ஒருவித எரிச்சலும் தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.

உதாரணமாக… நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து அதிலே நெல் முளைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். காற்றில் மிதந்து வந்த, வேண்டாத வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து விட்டால் நெல்லிற்கு இட்ட உரத்தைக் அந்தக் களைகள் எடுத்துக் கொண்டு களைகள் பெருகுகின்றன.

களைகளை நீக்கவில்லையென்றால் நெல் பயிர் வளர்ச்சி குன்றி நெல்லின் தரம் குறைந்து விடும்.

இதைப் போன்று
1.நீங்கள் சுவாசித்த கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள் உங்கள் இரத்தத்தில் பெருகி
2.தசைகளாக மாறும் பொழுது தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி மேல் வலி, தலை வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதும்
3.அதனால் உடல் சோர்ந்து “எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன…”

நீங்கள் உலக நிலைகளை அறிந்து கொள்ளும் வண்ணம் பத்திரிக்கையைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே “இரவு 8.00 மணியளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்திப் போட்டுவிட்டு வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று படிப்பீர்கள்.

அப்பொழுது உங்களையறியாது, பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால் அவை உங்கள் இரத்தத்தில் கலந்து விடுகின்றன.

அன்று இரவு… நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும், வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும் எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்…” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன், உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு உடல் சிலிர்த்து, பய உணர்வலைகளை சுவாசித்து, மேலும் மேலும், பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன.

இது போன்று அடிக்கடி நேர்ந்தால் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும் நிலை ஏற்படுகின்றது,

நீங்கள் வேலையின் நிமித்தம், தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெருவின் முனை அருகில் செல்லும் சமயம் ஒரு கார் திடீரென்று திரும்புகையில் உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால்…
1.கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால் உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாகச் சுவாசித்து
2.துரிதமாக இயங்கி, உடல் நடுக்கமாகி உங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று
3.விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

அதே சமயத்தில் அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு, ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேருவதால் பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால் புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டு “ஆத்திரத்துடன் பேசுவதும்… அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன…”

நீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள் உங்களைப் பார்த்து “நீங்கள் செய்த தர்மத்தால் உங்களைத் தெய்வம் காப்பாற்றியது…” என்று ஆறுதல் கூறுவார்கள்.

ஆனால் நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள் “இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுகின்றன…”

வயல்களைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்துப் பயிராக முளைத்து வரும் நிலையில் எங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள் வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்து விடுகின்றது.

நீங்கள் எதிர்பாராது அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால்
1.அவைகள் இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும்
2.தசைகளில், பய உணர்வுகளின் அணு திசுக்களும் ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று
3.அதன் இயக்கத்தால், தசைகளில் அமிலங்கள் சுரந்து
4.இந்த அமிலங்கள் உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு
5.நரம்புகள் இயங்குவதால் நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு
6.எலும்பினுள் “ஊனாக” வடித்துக் கொள்கின்றன
7.இந்த ஊனைத்”தான் ஞானிகள் “ஊழ்வினை” என்று பெயர் வைத்தார்கள்.

எடுத்துக்காட்டாக வேப்ப மரத்தை எடுத்துக் கொள்வோம்.

வேம்பின் வித்து எத்தனை வகையான உணர்வின் சத்தில் வித்தானதோ அது நிலத்தில் முளைத்து வரும் பொழுது அதன் உணர்வுகளின் சத்தில் கலந்துள்ள ஈர்ப்பு காந்த சக்தியால் நிலத்தில் உள்ள நீரையும், காற்றில் இருந்து வரும் தன் இனமான உணர்வுகளின் சத்தையும் ஈர்த்துக் கொண்டு… ஈர்த்துக் கொண்ட வெப்பத்தினால் நீரில் கலந்துள்ள உணர்வின் சத்துகள் அனைத்தும் உறைந்து விடுவதால் வெப்பத்தின் இயக்கத்தினால் நீரில் வேப்ப மரமாக வளர்கின்றது.

இதைப் போன்று…
1.அதீத பய குணத்தின் சத்தையும் ஆத்திர குணத்தின் சத்தையும் எலும்புக்குள் ஊனாக வடித்து வைத்துவிடுகிறது.
2.அவ்வாறு வடித்து வைப்பதனால் உயிரின் இயக்கத்தால் எலும்பின் காந்த ஈர்ப்பினால்
3.உடல், காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும் ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.

வேப்ப மரம் தன் உணர்வான கசப்பான சத்தை ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வளர்த்துக் கொண்ட கசப்பான உணர்வுகளின் மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் அதன் கசப்பான உணர்வலைகள் உங்கள் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றன.

அதைப் போன்றே… உங்கள் உடல் ஈர்க்கும், பய குணத்தின் உணர்வுகளையும் ஆத்திர குணத்தின் உணர்வுகளையும் நீங்கள் சுவாசிக்கும் பொழுது “முகம் கடுகடுப்பு அடைகின்றது…”

வேம்பின் இலைகளைச் சாப்பிட்டால் கசப்பின் உணர்வுகள் குடலில் இயங்கி, குமட்டல் ஏற்படும் பொழுது, வாந்தி வந்து விடும் என்ற பயம் கலந்த எண்ணம் தோன்றுகின்றது.

இதைப் போன்று, உங்கள் உடல் ஈர்க்கும் பய குணத்தின் உணர்வுகளையும், ஆத்திர குணத்தின் உணர்வுகளையும், நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால் இரத்தம் வடித்துக் கொண்டதால்
1.பய ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று
2.இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் வரக் காரணமாகின்றது.

மேலும், அதனால் அதிர்ச்சியான பேச்சைக் காதில் கேட்டால் பயமான எண்ணம் தோன்றுவதும்… அச்சமயத்தில், பயத்தினால் சிந்திக்கும் திறன் இழந்து கோபப்படுவதும்…
1.ஏதாவது ஒரு பொருள், கீழே விழும் ஓசையைக் காதில் கேட்டால்
2.உங்களை அறியாது உடல் சிலிர்ப்பதும் அதனால் பயமான எண்ணங்கள் தோன்றுகின்றது.

இதைப் போன்று, எச்செயலை நீங்கள் செய்ய முற்பட்டாலும், உங்களை அறியாது அவசர ஆத்திர உணர்வுடன் செயல்படத் தூண்டுகின்றது. ஆனால் சிறிது தடைப்பட்டாலோ கோபமான எண்ணம் உருப்பெற்று விடுகின்றது.

இரத்தம் தசைகளாக உடல் உறுப்புகளாக மாறும் பொழுது அதில் பய, ஆத்திர குணங்களின் அணு திசுக்களாக வளர்ச்சி பெற்றுத் தசைகளிலும், உடல் உறுப்புகளிலும் தசைவாதம் குடல்வாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது.

அதே போல் தசைகளில் உருவான அமிலங்களை உடல் உறுப்புகளை இயக்கும் நரம்புகள் ஈர்த்துக் கொள்வதால் அதனால் கீல்வாதம் மூட்டுவாதம் முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.

இப்படி… நாம் நமது வாழ்க்கையில் நல்ல குணங்களின் உணர்வுடன் சுவாசித்து உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தாலும் எதிர்பாராது பய குணங்களின் உணர்வையோ, கோப குணங்களின் உணர்வையோ, வேதனையின் குணங்களின் உணர்வையோ, ஆத்திர குணங்களின் உணர்வையோ, குரோதமான குணங்களின் உணர்வையோ, சோர்வான குணங்களின் உணர்வையோ, சஞ்சலமான குணங்களின் உணர்வையோ, சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்க நேர்ந்தால்…
1.நல்ல குணங்கள் பலவீனமாகி தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் நோய்கள் உருப்பெற்று
2.அதில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
3.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும்
4.உயிராத்மா வளர்ச்சி குன்றி உடலை விட்டு உயிராத்மா பிரிந்து செல்கின்றது.
5.இவ்வாறு பிரிந்த உயிராத்மா மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.

இவ்வாறே, சாதாரண மனிதர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஒப்ப சந்தர்ப்பவசத்தால் கண்களால் காதுகளின் புலனறிவால் ஈர்க்கப்பட்ட, கோபம், குரோதம், ஆத்திரம், அதீத பயம் போன்ற குணங்களின் உணர்வலைகளைச் சுவாசித்து உடல்களில் பதிவாகி நோய்கள் உருப்பெறுகிறது. அதை இன்றைய மருத்துவம் குணப்படுத்துகிறது.

ஆனால் நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
1.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும்
2.அந்த “உணர்வுகளின் அணுசிசுக்களை” மாற்ற விஞ்ஞானிகளால் முடியாது.

விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர… அவர்களின் உடலை இயக்கும் “உயிராத்மாவை ஒளி நிலையாக மாற்றும் ஆற்றல்…” விஞ்ஞானிகளுக்கு இல்லை.

ஞானிகள், மகரிஷிகள் தங்கள் தபோவலிமைகளினாலும் தியானங்களினாலும் பேரண்டத்தில் பரவிக் கிடக்கும், பேராற்றல்களின் உண்மை நிலைகளைக் கண்டறிந்து தங்களின் புலனறிவால் அதை உடலில் சேர்த்து வளர்த்துக் கொண்டதால்
1.சந்தர்ப்பவசத்தால் தீய கோப குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளைச்
2.தங்களுக்குள் சுவாசிக்க நேர்ந்தால் அவைகளை மாய்த்து விடுகின்றனர்.

அவ்வாறு தங்களின் உடல்களில் பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு உயிராத்மாவை ஒளியாக மாற்றித் தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பேராற்றல்கள், ஒளியலைகளாகக் காற்றில் பரவிக் கொண்டிருக்கிறது.

உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டு உடலை விட்டு விண்ணைச் சென்றடைந்து இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி, ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள் பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.

மேற்கூறிய நிலைகளை…
1.எம் குருநாதர் காட்சியாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும், உணர்த்தி உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
2.மெய்ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்து அருளிய ஒளியான உணர்வுகளையும்
3.சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் ஒலி ஒளியான ஆற்றல் மிக்க உணர்வுகளையும்
4.நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று
5.உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி வழி காட்டாமல் இருக்க முடியுமா…? அதே போல் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம் என்றால் அந்த வேதனை நமக்குள் உணர்த்தப்படும் பொழுது தான் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

ஆனால் ஒரு சிலருக்கு அவர் ஆகாதவராகப் போய்விட்டால் “அவனுக்கு அப்படித் தான் வேண்டும்…!” என்று சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்குள் அந்த உணர்வு விளைகிறது.

ஆனால் அவரைக் காக்க வேண்டும் என்று நாம் பாசத்துடன் எண்ணினால் இங்கே உடலில் அவருடைய வேதனை வந்துவிடுகிறது.

1.ஆகாதவன் எந்த ரூபத்திலாவது அந்த நோயாளிக்கு அப்படித்தான் வர வேண்டும் என்று ரசிக்கின்றான்.
2.பண்பு கொண்ட மனிதனோ தன் உடலில் பாசத்தால் இழுத்துக் கொள்கிறான்.

காரணம்… நாம் உதவி செய்கிறோம். அந்த உணர்வுகள் இங்கே விளைகிறது. மகராசன்…! “எனக்கு நன்மை செய்தான்…!” என்று நோயாளி எண்ணுகிறான். இந்த இரண்டும் கலக்கிறது. அதிலிருந்து தப்பிக்க முடிகிறதா..? என்றால் இல்லை.

அந்த உணர்வை விளைய வைத்தால் அவர் (நோயாளி) உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது. எந்த உடலில் அந்த வலு இருக்கிறதோ அந்த உடலுக்குள் வந்துவிடுகிறது.

1.உதவி செய்தாலும் உயிர் இந்த மாதிரி இயக்கி நம்மை இந்த நிலைக்கு ஆக்குகிறது
2.இதற்கு என்ன செய்வது…?

உணவு நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில் சாப்பிடுகிறோம். ஆனாலும் அந்தச் சாப்பாடு “அளவுக்கு மேலே அதிகமாகிப் போனால்” என்ன செய்யும்…? அதிகான அளவில் சாப்பிட்டால் உடல் ஏற்றுக் கொள்கிறதா…?

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். ஆகவே அப்பொழுது அதை ஜீரணிக்கும் சக்தி நமக்கு வேண்டும்.

ஜீரணிக்க வேண்டும் என்றால் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். அந்தச் சக்தியைப் பெற்றால் அது ஞானம் என்ற ஒரு வித்தாகிறது. மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

எப்படி ஒரு சோப்பைப் போட்டவுடன் எண்ணைச் சத்தை நீக்கி விடுகிறதோ இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகள் கலந்த பின் அவர்கள் எப்படி ஒளியாக மாற்றினார்களோ அதே போல் நமக்குள்ளேயும் ஒளியாக மாற்றும்.

நமக்குள் வலுவான பின்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.அவர் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்.
3.விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
4.அப்பொழுது அவன் அந்த உணர்வை எடுத்துக் கொண்டால் அவனும் நல்லவனாகின்றான்.

இதற்கு மாறாக ஒரு தடவை நாம் வெறுத்து விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வருகிறது, அவன் நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பாகி இரண்டு பேருக்குள்ளும் பகைமையாகிவிடும்.

ஆகவே அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அவன் நல்லவனாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது
1.உங்களைப் பார்க்கும் பொழுது முதலில் முறைத்துக் கொண்டிருந்தவன்
2.அவன் மனம் மாற வேண்டும்… மாற வேண்டும்…! என்று எண்ணும் பொழுது
3.இந்த உணர்வு அவனுக்குள் இது சென்று அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.

ஆகவே இந்த மாதிரியான கஷ்டமோ பகைமையையோ துன்பமோ வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அவர்களால் நீங்கள் நலம் பெறுகின்றீர்கள்… உயர்ந்த ஞானிகளின் சக்தியும் பெறுகின்றீர்கள்.

அதற்காகத்தான் “ஆத்ம சுத்தி…” என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியையும் இந்த உபதேச வாயிலாகவே கொடுக்கின்றோம்.

நீங்கள் இதை எண்ணினால் உங்கள் உயிர் அதை எல்லாம் உங்களுக்குள் உருவாக்கும்.

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்

 

நாம் சும்மா இருக்கின்றோம்… அப்போது ஒருவரைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பார்த்தவுடனே…
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நமக்குள் நினைவோட்டங்கள் திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.
2.ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கிருக்கும் பொருள்கள் எப்படித் தெரிய வருகின்றதோ இது போன்று
3.இந்த உணர்வின் ஓட்டங்கள் வரும்… இன்னது தான் என்று…!
4.காரணம் ஞானிகள் உணர்வு நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை உணர முடியும்.

நாம் இங்கே தொழிலில் இருப்போம்… ஆனால் இது இரண்டையும் பிரித்துக் காட்டும் பொழுது நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்ட உடனே எழுத்து வடிவிற்கு வேண்டிய நிலையில் நமக்கு வேண்டிய அந்த பாஷை இந்தியோ… தமிழோ… ஆங்கிலமோ… பிரித்துக் கொடுக்கின்றார்கள்.

அந்த அழுத்த உணர்வுக்குச் (COMMAND) சென்றவுடன் அதனதன் நிலைகளில் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று தான்… நமது உயிர் சூரியன் காந்த சக்தி கவர்ந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக) மாற்றுகின்றது.
1.மாற்றியவுடன் அதனுடைய பிரிவு… அளவுகோல் எதுவோ
2.அதற்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்கும்.

நம்முடைய உயிரின் வேலை காந்தத்தை இழுக்கின்றது. அதிலே வந்த அந்த உணர்வு நம் அழுத்தம் எதுவாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்தாற் போல் எலக்ட்ரானிக்காக மாற்றும்.

மாற்றிய அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது
1.அதனுடைய இன இயக்கங்கள் அந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்கிக் காட்டும்.
2.அதற்குத் தகுந்த சிந்தனையும் அதற்குண்டான செயல்களையும் நமக்குள் இயக்கும்.

கம்ப்யூட்டரில் மின்சாரத்தை மையமாக வைத்து உணர்வின் செல்களுக்கு எலக்ட்ரானிக்காக… இந்த மாற்ற உணர்வுகளைக் கொடுக்கின்றார்கள். கடிகாரத்தில் பார்க்கலாம் அந்தந்தக் கால பருவம் வந்தபின் அதை நமக்கு (அலாரம்) அறிவுறுத்துகின்றது.

அதில் இருக்கக்கூடிய பேட்டரி செல்கள் இந்த வேலையைச் செய்கின்றது அதில் எதை ஆணையிட்டு வைத்திருக்கின்றோமோ அதன் உணர்வின் கருக்களை மாற்றி மாற்றி அளவுகோல் பிரகாரம் இயக்கும்.

ஆனால் சிறிதளவு அதிலே நீர் பட்டு விட்டால் அளவுகள் மாறிவிடும்… அதனின் இயக்கமே மாற்றமாகிவிடும். நீரில் உள்ள காந்தப்புலன் அதை அழிக்கும் திறன் கொண்டது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் வலு செல்கள் எப்படி இருக்கின்றதோ அதன் இயக்கமாக உடலை இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரானிக் இயந்திரத்தை இயக்குகின்றது. இயக்கிய நிலையோடு விஞ்ஞானம் சரி. அதில் வளர்ச்சி பெற முடியாது தேய்வு தான் உண்டு. ஆனால்… மெய்ஞான அறிவுப்படி
1.உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் இயக்கப்படி நம்மை இயக்கும்.
2.இயற்கையின் நிலைகள் கொண்டு இந்த உணர்வின் அணுக்களை வளர்ச்சி பெறும் தன்மை பெற்றது
3.இதில் எந்தெந்தத் தன்மையோ அதனதன் அளவுகோல் கூடக் கூட அணுக்களின் உணர்வுக்கொப்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே வரும்.

அதனுடைய முடிவு எதை எடுத்து உருவாக்கியதோ அந்த உணர்வுக்கொப்ப செல்களை மாற்றி உருவத்தையே உயிர் மாற்றிவிடும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் அருளை “உயிரில் அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்

 

நம் உயிரான ஈசனை வணங்கி… தாய் தந்தையரை வணங்கி… ஞானகுரு சற்குரு சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி
1.ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கிச் செலுத்தி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்…”

அவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் “ஊடுருவிச் செலுத்தி…”
1.நமது கண்களின் காந்தப் புலனறிவால்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
3.”உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்.

“இப்பதிவின் துணை கொண்டு…” மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில் அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என எண்ணி
1.நம் உடலுக்குள் “அலை அலையாகப் படரச் செய்ய வேண்டும்…”
2.இதுவே துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் கொண்டு வரச் செய்யும் தியானம்… மற்றும் ஆத்ம சுத்தி.

“உயிரை…” நாம் இறுகப் பிடித்துக் கொள்வோம்

 

எமன் என்பது என்ன…? எமன் என்பது நமது எண்ணம்தான், அதாவது வேதனையான உணர்வை நாம் தொடர்ந்து சுவாசித்தோமானால் அது நமக்குள் பாசக்கயிறாக மாறுகின்றது.

எருமை எவ்வாறு அறிவில்லாமல் இருக்கின்றதோ அதனின் அறிவில்லாத செயலைப் போன்று
1.நாம் எடுக்கும் வேதனையான உணர்வால் நமது எண்ணங்கள் சிந்தித்துச் செயல்படும் திறனை இழந்து விடுகின்றன.
2.நாம் சிந்திக்கும் திறனை இழந்து அறியாமையால் உழலப்படும் பொழுது நமது எண்ணங்கள் வலுவிழந்து
3.நம் வாழ்வில் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொள்கின்றன.

அதாவது… எருமை எனும் அறியாமையை வாகனமாகக் கொண்டு எமன் எனும் எண்ணம் நமக்குத் தண்டனை கொடுக்கின்றது என்பதை நமக்கு உணர்த்தவே… அன்று மகரிஷிகள் எமனுக்கு எருமையை வாகனமாக வைத்து எமன் சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் மனிதருக்குத் தண்டனை வழங்குகின்றான் என்று காண்பித்தருளினார்கள்.

அருள் ஞானிகளுடைய உணர்வுகளை நாம் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் சித்திரபுத்திரனாக இயக்கம் பெறுகின்றது.

இந்தச் சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் நம்முடைய எண்ணம் இருளைப் போக்கும் எமனாக நின்று தீமையை அகற்றிடும் செயலாக அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் மலர்கின்றது. நாம் உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது அவைகள் நமக்குள் சித்திரபுத்திரனாகின்றன.

1.கண்களால் நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ அவை நமக்குள் புகுந்து புத்திரனாக (அணுக்களாக) விளைகின்றன.
2.நாம் ஈர்க்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்மிடத்தில் உள்ள
3.இருள் சூழ்ந்த அசுரத்தனமான நிலைகளைக் கொல்கின்றன… தீமையை அகற்றுகின்றன.
4.தீமையில்லாத உலகத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது
5.என்றும் ஒளிச்சுடராக நிலைத்திருக்கும் “பெருவீடு பெருநிலை” என்ற நிலையை அடையச் செய்கின்றது.

ஆக… நாம் “பிறவா நிலை” அடைகின்றோம்.

“மார்க்கண்டேயனை…” நோக்கி எமன் பாசக்கயிறை வீசுகின்றபோது மார்க்கண்டேயன் “சிவலிங்கத்தை” அணைத்துக் கொள்கின்றான். இதில் “லிங்கம்” என்பது உயிர்… ஆவுடை என்பது உடல்.

அங்கே மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடித்துக் கொள்ளாது லிங்கத்தை இறுகப் பிடித்துக் கொள்கின்றான். அதாவது “உயிரை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்…”

ஆகவே நமக்கு இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும்
1.நாம் எண்ணியது அனைத்தையும் இந்த உயிர்தான் இயக்குகின்றது என்றும்
2.நாம் எண்ண வேண்டியது எது…? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒளியாக நின்று நாம் எண்ணியது அனைத்தையும் அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டி, அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணரச் செய்வதும்… இயக்குவதும்… அதை நமக்குள் அடையச் செய்வதுமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது உயிரில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணி நம் கண்ணின் நினைவு கொண்டு பார்த்து அதை ஏங்கி எடுத்தோமென்றால் அது சித்திரபுத்திரனாகச் செயல்படுகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்கின்ற பொழுது, அருள் ஞானிகள் அவர்களுக்குள் இருந்த தீமையை அகற்றிய அதே உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும்…” என்ற நினைவை உங்கள் உடலுடன் இணைக்கப்படும் பொழுது “என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தை நீங்கள் அடைய முடியும்.

வாழ்வில் சஞ்சலம், சலிப்பு, வெறுப்பு, கோபம், போன்ற உணர்வுகள் உங்களிடத்தில் தோன்றும் பொழுது உங்கள் உயிரை எண்ணி ஆத்ம சுத்தி செய்து தீமைகள் அருகில் வராது உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

1.மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடிக்கவில்லை
2.லிங்கத்தை… அதாவது “உயிரை இறுகப் பிடித்துக் கொண்டான்…”

அது போன்றே நீங்கள் அனைவரும் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா’ என்று உயிரை எண்ணி ஒளியின் சரீரமான அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக ஒளியின் சுடராக விளைகின்றது.

இத்தகைய நிலைகள் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக எமது அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
1.நீங்கள் எந்த அளவிற்கு இந்த உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
2.அந்த அளவுக்கு ஆழமாக யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகின்றன.

யாம் கொடுக்கும் உபதேசங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி ஏங்கும்போது அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து உங்களிடத்தில் தீமைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

இந்த உபதேசத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளும் அனபர்கள் அனைவரும்…
1.இருள் சூழ்ந்த இவ்வுலகில் நஞ்சினை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து
3.மார்க்கண்டேயனைப் போன்று “என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டும் என்று நெஞ்சில் அவா கொண்டு
4.நம் குருநாதர் காட்டிய மெய்வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும்
5.“எமது அருளாற்றலைப் பூரணமாக வழங்குகின்றோம்…!” (ஞானகுரு)

மனித ரூபம் உருப்பெறும் தகுதியும்… அது இழக்கப்படும் சந்தர்ப்பமும்

 

கொசு நம்மைக் கடிக்கின்றது… நம் இரத்தத்தை உணவாக உட்கொள்கிறது. மனிதனின் உணர்வுகள் கொசுவின் உடலில் பரவுகின்றது. ஆனால் அது மனிதனைப் போன்ற ரூபம் ஆவதில்லை.

இரத்தம் அதற்கு உணவாகின்றது. மனித இரத்தத்தில் உள்ள உணர்வுகள்
1.மனிதனுக்குண்டான சிந்தனைகள் எதுவோ அது அனைத்தும் அந்தக் கொசுவுக்கு வருகிறது.
2.அதாவது… மனிதனின் நினைவே அதற்குள் வருகின்றது.

அந்த இரத்தத்தின் உணர்வுகள் கொண்டு அது சிறிது காலமே வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரியும் அதனுடைய உயிரான்மா மனிதன் ஈர்ப்பிற்குள்ளே வருகின்றது.

பரிணாம வளர்ச்சியில் ஒரு மான் புலியை உற்றுப் பார்த்து அதனுடைய கொடூர உணர்வினை நுகரப்படும் பொழுது புலியின் உணர்வுகள் மானுக்குள் அதிகமாகின்றது… மான் இறந்தால் புலியின் ஈர்ப்புக்குள் சென்று மான் புலியாக மாறுகிறது.

கொசு மனிதனின் இரத்தத்தைக் குடிக்கின்றது. மனிதனின் உணர்வு அதிகமாகிறது. ஆனால் நினைவு மனிதன் மேல் வரும் பொழுது
1.அந்தக் கொசு மனிதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கப்பட்டு நம் சுவாசத்தின் வழி உள்ளே சென்று
2.மனித உணர்வை மீண்டும் தனக்குள் எடுத்துக் கருவாகி முட்டை மாதிரி ஆகி விடுகிறது.

அதே போல் ஒரு எறும்பை நசுக்குகிறோம் என்றால் நம்முடைய நினைவு கொண்டு அந்த உயிர் நமக்குள் வந்துவிடும். ஒரு ஆட்டை இம்சித்துக் கொல்கிறோம் என்றால் அது வேதனைப்படும் நினைவுகள் கொண்டு மனிதனுடைய ஈர்ப்பிற்குள் அந்த உயிரான்மா வந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது. மனிதன் உணர்வுகள் அதிகமாக இருப்பதால் அந்த உயிரணுக்கள் மனிதனில் உருப்பெறும் “அணு திசுக்களாக..” விளையத் தொடங்கி விடுகின்றது.

எந்த மனிதருக்குள் அந்த உயிரான்மா வந்தாலும் அந்த கால நிலைகளுக்கொப்ப உடலை விட்டு உயிர் வெளியேறி விட்டால் அந்த உயிரான்மா அதாவது எறும்பு ஆடோ அதனுடைய உயிரணுக்கள்
1.வாழ்ந்தவர்… யாருடன் நட்பாக அல்லது உறவு கொண்டு அதிகமாகப் பழகினாரோ
2.அந்த எண்ணம் கொண்டு இந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள்ளே திரும்பச் சென்றுவிடும்.
3.இப்படி ஏழு மனித உடல்களிலே இது மாறி மாறி வந்து மனிதனின் நிலைகளில் முழுமை பெறும் அணுக்களாக விளையப்பட்டு
4.ஏழாவது மனிதனுக்குள் வரும் பொழுது மனிதனாக முழுமை பெறும் வளர்ச்சிக்கு வருகின்றது.

அப்படிப்பட்ட நிலைக்கு வந்தாலும் அதில் பெண்பால் ஆண்பால் என்ற கரு முட்டைகளும் யார் யாருக்குள் இது கலக்கின்றதோ அவைகளுக்கு ஒப்ப மனிதனாக உருப்பெறுகின்றது.

பெண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது… ஆண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது. ஆனால் இரண்டும் சேர்த்து இணைந்த நிலைகள் மோதும் பொழுது தான்… கரைந்து… ஒன்றை விழுங்குகின்றது அதற்குள் இணைகின்றது. கரு வளர்ச்சிக்கு வரும் தன்மை அடைகின்றது.

எத்தனையோ கோடி உயிரணுக்கள் உடலுக்குள் இருந்தாலும் அங்கே கருவுக்குள் சென்று மனிதனாகப் பிறக்கும் தன்மை உயிரணுக்களுக்குத் தோன்றுகின்றது.

இருந்தாலும் ஒரு உடலிலே மனிதனாகப் பிறந்து மனிதன் இறந்த பின் “அவன் வளர்ச்சி இல்லாத நிலைகளில்…” இன்னொரு உடலுக்குள் இந்த ஆன்மா சென்று விட்டால் இது…
1.பல மனிதச் சரீரங்களில் புகுந்த உயிரான்மாக்கள் இந்த உடலுக்குள் புகுந்தால்
2.அங்கே மனித உருப் பெறாதபடி தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால்… மனிதனான பின் அதில் வளர்ச்சியற்று விபத்திலேயோ… அல்லது வெறுப்பான நிலைகள் கொண்டு தற்கொலையோ… வளர்ச்சி பெறும் தன்மையைத் தன் எண்ணத்தால் குறைத்து விட்டால்
1.அந்த ஆன்மா எந்த மனித உடலுக்குள் சென்றாலும் அங்கே கருக்களை வளர விடாதபடி தடுக்கும்.
2.உயிரணுக்கள் மனிதனாகப் பிறக்கும் தகுதி அங்கே இழக்கப்படுகிறது.
3.அதாவது “குழந்தை உருவாகும்… குழந்தையை உருவாக்கும் ஆற்றல்” அங்கே தடுக்கப்படுகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணின் கருவிழிக்குள் இருக்கும் கருமணிகள் தான் நாம் பார்ப்பதை எல்லாம் நமக்குப் படமாக்கிக் கொடுக்கிறது. கண் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களிலும் பொருதி இருக்கிறது.

வேதனை… வேதனை… என்ற உணர்வை அதிகமாக எடுத்துக் கொண்டால் கருவிழியில் அது பட்டு நாளடைவில் மாசுபட்டு விடுகின்றது. வேதனை என்பது விஷம்.
1.அது முன்னணியில் இருந்தால் நம் கருமணி விஷத் தன்மை அடைந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே விஷத் தன்மைகள் நம் உடலுக்குள் பரவப்பட்டு நம் உடலிலே கடும் நோயையும் உருவாக்குகிறது.

கண்ணின் கருவிழிக்குப் பின் இருக்கும் அந்த நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை கவர்ந்து கொண்டபின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமானமாகி நம் கண்களே மங்கி விடுகின்றது அல்லது கண் பார்வை தெரியாமலே போய்விடுகிறது

ஆனால் பரிணாம வளர்ச்சியில் நாம் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து… “தான் பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…!” என்ற வலுவான உணர்வு கொண்டு தான் கண்களே உருவானது.

நம் கண்களைத் தூயமைப்படுத்திக் கொண்டால் கண்கள் மாசுபடும் தன்மையை மாற்றலாம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் இணைத்துப் பழக வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

ஆனால்… கஷ்டத்தையும் நஷ்டத்தையும் எண்ணக் கூடாது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொன்னபடி
1.எதுவாக இருந்தாலும் அந்த எண்ணம் கண்ணுக்குத் தான் வரும்.
2.அந்தக் கருவிழி அதைத் தான் கவரும்

நல்லதை எண்ணினாலும் வேதனை கோபம் வெறுப்பு போன்ற உணர்வுகள் வலிமை ஆகிவிட்டால் கண்கள் மாசுபட்டு விடுகிறது.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்புவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள். இதைத் தியானப் பயிற்சியாகவே கொடுக்கிறோம்.

கண்களுக்குப் பாதிப்பாக ஆனது போல் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை பரவி விட்டால் சரவாங்கி நோய்… வாத நோய்… போன்ற நோய்கள் வந்து விடுகின்றது.

நரம்புகளை உருவாக்கிய அணுக்கள் அதனின் செயலாக்கங்கள் மடிந்து விட்டால் நரம்பு மண்டலம் சீராக இயங்காது.

அதே சமயத்தில் எலும்பு மண்டலங்களிலும் நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வு எடுக்க எடுக்க நம் எலும்பை உருவாக்கிய அணுக்களும் பலவீனமாகிவிடும்.

சில நேரங்களில் என்ன ஆகிப் போகும்…?

ஒன்றுமே செய்ய வேண்டாம். வெறுமனே எங்கேயாவது கையை ஊன்றினால் போதும்… கை ஒடிந்து விட்டது…! என்று சொல்வார்கள். நடந்து தான் போனேன்… என் கால் ஒடிந்து போனது என்பார்கள்…!

எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குள் வேதனை வேதனை என்ற உணர்வால் அதனின் வலிமை இழக்கப்படும் பொழுது எலும்புகளின் பலம் குறைந்து விடுகிறது.

எல்லாவற்றிற்கும் மூலம் நம் எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் தான்.

நிலத்திற்குள் மண் வளம் மறைந்து உள்ளது. அதற்குக் கீழ் ஆழத்தில் நீரும் இருக்கின்றது.
1.குறைந்த காலம் வாழும் தாவர இனங்கள் (சில செடி கொடி புல் பூண்டுகள்)
2.நிலத்தில் பரவி இருக்கும் நிலங்களிலிருந்து நீரை எடுக்கிறது.
3.நிலத்தின் ஆழப் பகுதியில் ஓடும் நீரை எடுப்பதில்லை.

ஏனென்றால் நிலத்திற்கு அடியில் பாறைகளும் உண்டு கல்களும் உண்டு. சிறிது காலமே வாழும் தாவர இனங்களுக்கு அந்தச் சக்தி இல்லை. அதனால் நிலத்தின் மீது நீர் இல்லை என்கிற பொழுது உடனே வாடிவிடுகிறது. ஆனால்
1.மரமாக வளரும் பட்சத்தில் அந்த மரம் தன் விழுதுகளைப் பாய்ச்சி
2.அந்த நீரை எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தி அதற்கு இருக்கின்றது.

அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் அருளாற்றல்களை நம் எழும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக்கி
1.என்றுமே… எங்கிருந்தும்… எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தியாக
2.நாம் நமக்குள் பதிவாக்க வேண்டும்

அப்படிப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சதிரத்தின் உணர்வுகளை அதிகமாகக் கவர முடியும்.

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்தால் நம் கண்ணில் உள்ள கருவிழி நம் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்குகிறது அது பதிவானால் தான் நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறிய முடிகின்றது.

நம் உடலோடு இணைத்துக் கொள்ளும் நிலையாகப் பதிவு (RECORD) செய்வது தான் கண்ணின் கருவிழியின் வேலை. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எது பதிவானதோ அதனின் உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.

ஆன்மாவிலிருந்து நாம் சுவாசிக்கும் பொழுது உயிரின் காந்தப்புலன் கவர்ந்து அது உயிரான்மாவாக மாற்றுகின்றது. ஆகவே இதில் எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் “சேர்க்கை…!”
1.இப்படி எத்தனையோ வருடங்கள் சேர்த்து வைத்த உணர்வுகள் அனைத்தும்
2.ஊழ்வினை என்ற வித்தாக உடலிலே இருக்கிறது.

கோபம் வேதனை வெறுப்பு பயம் போன்ற வித்துக்கள் ஊழ்வினையாக உடலிலே இருந்தால் நமக்குள் தீமையான உணர்வுகளையே தூண்டி அதையே சுவாசிக்கச் செய்து தீமையின் விளைவாகவே ஊழ்வினைப் பயனாகிவிடும்.

ஒரு நிலம் கெட்டுப் போனால் அதிலே நல்ல பயிர்களை நாம் வளர்க்க முடியாது. ஆனால் அந்த நிலத்தைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்தால் நல்ல பயிர் இனங்களை அதில் வளர்க்க முடியும்.

அதைப் போல நம் உடல் என்ற நிலத்தைப் பண்படுத்த
1.துருவ நட்சதிரத்தின் உணர்வை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி அதைப் பண்படுத்தி
2.நல்ல உணர்வுகளைப் பதிவாக்கும் நிலைகளுக்கு நாம் ஊழ்வினையை மாற்ற வேண்டும் (இது முக்கியம்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் (ஞானகுரு) வாழ்க்கையில் சிறிய பிள்ளையாக நான் இருந்ததிலிருந்து செய்த தவறுகளை எல்லாம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டுகின்றார்.

ஒடக்கானைப் பிடித்து அது கண்களில் மிளகாய் பொடியைப் போட்டு “அது ஆடுகிறதைப் பார்த்து நீ ரசித்திருக்கின்றாய்…!” எத்தனை தடவை இந்த மாதிரிச் செய்தாய்…?

அதே மாதிரி குருவியை உயிருடன் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தீயை வைத்து எரித்து வாட்டியிருக்கின்றாய். கிணற்றில் குஞ்சு பொரித்த மைனாக் குஞ்சுகளின் கால்களில் கயிறைக் கட்டி இழுத்து அதன் கால்களை உடைத்திருக்கின்றாய்…! என்று இதை எல்லாம் சொல்கிறார் குருநாதர்.

நான் (ஞானகுரு) கல்யாணம் பண்ணிய புதிதில் ஒரு இடத்தில் நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது அப்படியே கிறு…கிறு… என்று தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டேன்.

அதை ஞாபகப்படுத்தி நிதானம் இல்லாமல் இன்ன இடத்தில் விழுந்தாய்…! என்று சொல்கிறார்.

அப்புறம் கல்யாணம் ஆன புதிதில் நானும் என் மனைவியும் போகும் பாதையில் ஒரு சிறிய பாலத்தில் ஒரு ரயில்வே தண்டவாளப் பகுதியைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் இரயில் வந்து கொண்டிருக்கின்றது. அதைப் பார்த்ததும்.. ஒதுங்கி ஓரத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக வேண்டி என் மனைவியிடம் “இந்தப் பக்கம் வாம்மா…!” என்றேன்.

கீழே குனிந்து பார்த்தால் ஒரே அசூசையாக அசிங்கமாக இருந்தது. ஐய்யய்யோ..! என்று சொன்னதும் என் மனைவி என்னைப் பிடித்து மீண்டும் இரயில் தண்டவாளத்திற்கே இழுத்தது.

ஆனால் வண்டியோ மிகவும் பக்கத்தில் வந்துவிட்டது. ஒதுங்க வேறு இடம் இல்லை. அப்புறம் அப்படியே தள்ளி விட்டபடி நானும் கீழே விழுந்தேன். இரயில் போய் விட்டது. நாங்கள் இரண்டு பேரும் எதை அசிங்கம் என்று சொன்னோமோ அதிலேயே விழுந்தோம்.

அதையும் குருநாதர் சொல்கிறார். அத்தகைய உணர்வின் இயக்கங்கள் அந்தச் சத்து உனக்குள் இருக்கப்படும் பொழுது அது “விதியாக” உனக்குள் அமைகிறது.

“டேய்…! அன்றைக்கு நான் தான்டா உன்னைக் காப்பாற்றினேன்..” என்று சொல்கிறார் குருநாதர்.

1.முன்னொரு சமயம் ஒரு பிறவியில் இருக்கும் போது நீ எனக்கு உதவி செய்திருக்கின்றாயடா…!
2.இப்பொழுது நான் இந்த அருள் சக்தியைப் பெற்றிருக்கிறேன்.
3,இப்பொழுது உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்கிறார் குருநாதர்

இதை எல்லாம் வரிசைப்படுத்தி மறைந்த உணர்வுகளை எல்லாம் குருநாதர் காட்டுகிறார்.

எனக்கு இரண்டு வயதில் அம்மை நோய் வந்திருந்தது. நான் இட்லி வேண்டும்..! என்று கேட்டு அழுகின்றேன். என் மனைவியுடைய சின்னம்மா (அப்பொழுதே சொந்தக்காரர்கள் தான்) வந்து என்ன செய்கிறது…? சோற்றைப் பிசைந்து இட்லி மாதிரி செய்து கொண்டு வருகிறது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தான் இட்லி எல்லாம் செய்வார்கள். இல்லை என்றால் வேறு எந்த வீட்டிலாவது செய்து வைத்திருந்தால் சிறிய பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பார்கள்.

சோற்றைப் பிசைந்து இட்லி மாதிரி செய்து கொடுத்தவுடன் நான் அந்த அம்மா மீதே “அதை வீசிவிட்டேன்…!” அதையும் குருநாதர் என்னிடம் சொல்கிறார்.

இந்த மாதிரி ஒவ்வொரு நிகழ்வையும் சுட்டிக் காட்டுகிறார். என் வாழ்க்கையில் என்னென்ன…? எப்படி நடந்தது… என்னென்ன நிலைகள் இருந்தது…? என்று சொல்கிறார்.

நீ இளமையில் உன்னை அறியாது செய்த தவறுகள்
1.நீ எண்ணியதை எல்லாம் உன் உயிர் அதை ஜீவ அணுவாக மாற்றியது.
2.அதன் வழிப்படி ஒவ்வொரு தவறையும் நீ செய்யச் செய்ய அது பெருகிக் கொண்டே வருகிறது.
3.அந்த உணர்வுகள் பெருகிய பின் உடலில் உள்ள அந்தத் தவறான உணர்ச்சிகள்
4.உன்னை எப்படிக் கொண்டு போகும் தெரியுமா…? என்று கேட்கிறார்…?

இன்றும் சில சிறிய குழந்தைகள் பூச்சிகளைப் பார்த்தாலே அதை அடித்துக் கொன்று கொண்டே இருக்கும். பார்க்கலாம் நீங்கள்…! ஆக அறியாமல் செய்தாலும் நாம் எதைச் செய்கிறோமோ உயிர் அதை நுகர்ந்து நம் உடலுக்குள் தான் சேர்க்கிறது.

இதை எல்லாம் அறிந்து கொண்ட நிலையில் மனிதனின் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்..? என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

குருநாதர் காட்டிய வழியில் அதைத் தான் உங்களிடமும் அதைப் பின்பற்றச் சொல்கிறோம். ஏனென்றால் எது இருந்தாலும் அப்போதைக்கு அப்போது இது கழியும். (விதியின் விளைவுகள்)

நான் (ஞானகுரு) எல்லாருக்கும் நன்மை தானே செய்திருக்கின்றேன். எவ்வளவோ உயர்ந்த சக்திகளை எல்லாம் பெற்றிருக்கின்றேன்.
1.எனக்கு ஏன் கையில் எலும்பு முறிகிறது…?
2.என்னை ஏன் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இப்படி எல்லாம் சோதிக்கிறார்..? என்று சொன்னால் என்ன ஆகும்…!
3.நான் செய்த பாவத்தின் நிலைகளை அனுபவித்துத் தான் தீரனும்.

ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலை பெறும் போது மேலே பட்ட தூசிகளைத் தட்டி விட்டுத் துடைப்பது போல் துடைத்துக் கொண்டே தான் போக வேண்டும்.

1.அதாவது இந்த உடல் பற்று இல்லாதபடி
2.அந்த அருள் பற்றுடன் போனால் இந்தப் பற்று வராது.
(இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.)

ஒரு சமயம் நான் குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும்போது ஒரு அம்மா வந்தது. அது உடலில் ஒரு தீயில் எரிந்த ஆவி இருந்தது. அதனால் ஐய்யய்யோ…! எரியுதே…எரியுதே… என்று குதிக்கும். அந்த அம்மாவின் வயது 45 இருக்கும்.

மேல சேலையைப் போட்டாலே குதிக்கும். ஐய்யய்யோ… எரியுதே என்னைக் கொல்கின்றீர்களே கொல்கின்றீர்களே..! என்று போட்ட துணியை வீசிவிட்டு ஒடும். ஏனென்றால் அந்த அம்மாவினால் அந்த எரிச்சலைத் தாங்க முடியவில்லை.

அங்கே சுற்றுப்பயணத்தில் வரப்படும் போது நம்மிடம் கூட்டி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் துணியைப் போடமுடியவில்லை. அப்புறம் நான் சொன்னேன்.

அந்த அம்மாவைச் சுற்றித் துணியைக் கட்டி மறைத்துக் கொண்டு வாருங்கள். திரைக்கு பக்கம் அந்தப் பக்கம் பின்னாடி போகச் சொல்லுங்கள். துணியைப் போடாதீர்கள் என்று சொன்னேன்.

அதன்படி கூட்டிக் கொண்டு வந்தார்கள். அங்கே கூட்டுத் தியானம் இருக்கும்படி சொன்னேன். பின் அந்த நேரத்தில் அந்த அம்மாவுக்காக நான் பாய்ச்சும் அலைகள் எப்படி அங்கே பாய்கிறது…? என்று குழந்தைகளை வைத்துப் பார்க்கச் சொன்னேன்.

அப்படிப் பார்க்கும் பொழுது அந்த அம்மா உடலில் இருந்த தீ பிடித்த ஆன்மா (ஆவி) வெளியில் போகிறது. உடனே அந்த அம்மா எழுந்து உட்கார்ந்தது. துணியைக் கொடுத்துப் போடச் சொன்னார்கள்.

மறுபடியும் அந்த ஆன்மா வந்தவுடன்… “ஐய்யய்யோ எரியுதே… எரியுதே…!” என்று பல நிகழ்ச்சிகள் ஆகி அப்புறம் கடைசியில் அந்த அம்மா நன்றாக ஆனது. அந்த ஆவியின் செயல்கள் ஒடுங்கிவிட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அங்கே அந்த அம்மாவுக்கு எரிச்சல் எப்படி அது உடலில் எரிகிறது…? என்று நீ பாருடா…! என்றார்.

பார்த்ததும் எனக்கு அப்படியே கப..கப.. என்று எரிகிறது.

ஆக அந்த உடலில் இருந்த ஆவியின் தன்மையை அடக்கினாலும் அந்த எரிச்சலான உணர்வலைகளை நான் கவரப்படும் போது நான் நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகிறது.

அது உடலிலிருந்து எரிந்த அந்த ஆவியின் உணர்வலைகள் வந்ததை நான் சுவாசிக்கப் போகும் போது எனக்குள் கொஞ்ச நேரத்தில எரிய ஆரம்பிக்கின்றது.

இப்படி எரிகிறது என்றால் எரியக் காரணம் என்ன..? என்ற நிலையில் உடலிலே விளைந்தால் இது மாதிரித் தான் எரியும்…! என்று சொல்லிவிட்டு இன்னொன்றும் சொன்னார்..!

1.டேய்…. உன் சிறு வயதில் நீ குருவிகளை எப்படியடா சாப்பிட்டாய்…?
2.எத்தனை குருவிகளை உயிருடன் கம்பியில் கட்டித் தீயில் சுட்டுத் தின்றாய்…?

இங்கே இந்த அம்மா உயிருடன் இருக்கும் போது எரிகிறதே என்று நன்மை செய்யப் போனாய். தீயில் வெந்த ஆவி அந்த உடலில் இருக்கிறது. ஆனால் நீ அதை அடக்க வேண்டும் என்கிற போது அந்த வேதனை உணர்வைச் சூரியனின் காந்தப்புலனறிவு இழுத்துக் கொண்டு வருகிறது

நீ கவரும் பொழுது அந்த உணர்வுகள் உனக்குள் வந்துவிட்டது.
1.காரணம் அந்தக் குருவிகள் எப்படித் தீயில் எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில் இருக்கிறது.
2.அதற்கு அது சாப்பாடு தேவை.
3.அதை எடுப்பதால் உனக்கு எரிச்சல் தெரிகிறது என்று விளக்கமாகச் சொன்னார் குருநாதர்.

நடந்த நிழச்சி இது. அனுபவித்துத் தான் உங்களிடம் சொல்கிறேன்.

நான் என் சிறிய வயதில் செய்த தப்பு அது ஒரு விதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் அந்த அம்மாவைப் பார்த்தால் எரிச்சல் ஆகிறது. ஆனால் அவர்களைக் காப்பாற்றுகிறேன். எனக்குள் கொஞ்சம் மறைகிறது.

இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு இதை எல்லாம் மாற்ற வேண்டும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.நான் தினம் தியானம் செய்கிறேன்…?
2.எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது..? எனக்கு ஏன் நோய் வருகிறது என்று சொன்னால்
3.நாம் இந்தப் பூமிக்குள் தான் இருப்போம். விண் செல்ல முடியாது.

ஆகையினால் தான் உங்கள் வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்தோம் என்றால் நாம் அங்கே போகலாம்.

சில பேர் என்ன சொல்வார்கள் என்றால் என்னை எல்லோரும் சேர்ந்து எப்படி எல்லாம் பேசினார்கள்…! பாவிகள்… அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…! என்று சொல்வார்கள்.

இப்படிப்பட்ட உணர்வுடன் இந்த உடலை விட்டுப் போனால் யாரை நினைத்தோமோ அதனால் நோயாகி அந்த உடலுக்குள் போய்ச் சேர்ந்து மீண்டும் பிறவி நிலைக்குத் தான் வரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்…!

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று வெறும் சொல்லாகச் சொல்லக் கூடாது

 

நமது உயிரை “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று ஞானிகள் அழைத்தார்கள். “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் சொல்லும் பொழுதெல்லாம் அது வெறும் சொல்லாக இல்லாமல் “புருவ மத்தியில்” நினைவைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அவ்வாறு பழகிக் கொண்டால்
1.நமது உயிரை குருவாகவும் நாம் எண்ணியதை ஈசனாக உருவாக்கக் கூடிய நிலையை நாம் உணர முடியும்.
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அது உடலுக்குள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.

நம் உடலில் ஜீவ அணுக்களை இயக்கும் “உயிர்…” நம் நெற்றியின் புருவ மத்தியில் உட்புறமாக இருந்து கொண்டு உடலை இயக்கும் மூலக்கருவாக… குருவாக இருக்கின்றது.

உடலில் விளைந்த அனைத்து குணங்களின் உணர்வலைகளையும் உயிர் தன் ஈர்ப்பில் அணைத்துக் கொண்டு “மறு உடல் உருப்பெறச் செய்யும்…” கருவினையாகச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றது.

நமது கண்கள் ஒன்றைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலிருக்கும் உணர்வுகளைக் கண்கள் கவர்ந்து, நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. மூக்கு வழியாகச் சுவாசித்த பின் உயிரில் பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லுகின்ற போதெல்லாம் புருவ மத்தியில் உயிரை எண்ணி அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோமென்றால் நாம் அதன் வழி (உயிர் வழியாக) உணர்வுகளை உடலுக்குள் செலுத்தலாம்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது மூக்கு வழி சுவாசித்து, உணர்வுகளை உடலுக்குள் செலுத்துவது. இதை அறிந்து கொண்டாலும்…
1.தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் செல்லாதபடி
2.அடுத்த நிமிடம் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.

ஏனென்றால்… நம்முடன் எவ்வளவு நல்லவர்கள் பேசினாலும் அந்த உணர்வில் அவர்கள் குடும்பக் கஷ்டம் உடல் நோய்கள் போன்ற உணர்வுகள் கலந்து சொல்லாக வரும்.

அவர்களைக் கண்ணால் பார்க்கும் பொழுது, நமது ஆன்மாவில் கலந்துவிடும். அவர்கள் பேசும் பொழுது, இந்த உணர்வுகள் கலந்தே வரும். இருந்தாலும்
1.அந்த நிலையிலும் “ஈஸ்வரா…” என்று சொல்லி உணர்வை இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.அவ்வாறு “ஈஸ்வரா…” என்று சொல்லும் நிலைகள் வலுப் பெறும் பொழுது தீமையை அது மாற்றும்.

அதே சமயத்தில் அவர் பலவீனமான நிலைகளைச் சொல்லும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும், என்று நாம் எண்ண வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சமைத்து அதை எடுத்துப் போட்டால் தான் அது ருசியாக இருக்கும்.

கஷ்டம் என்று ஒருவர் சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்குக் கஷ்டமாகப் போய்விட்டதா…?” என்று நாமும் சொன்னோம் என்றால் அதையே தான் சமைத்து மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம் என்று பொருள்.

அதனால் இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலோனோர் “ஏதோ ஒரு தெய்வம்தான் நமக்கு அனைத்தையும் செய்கின்றது…” என்று கருதுகின்றனர். ஆனால் நம் செயல்கள் நிகழ்வது அனைத்தும் நம் உயிரான கடவுளால் தான் என்பதை அறிய வேண்டும்.

“மகரிஷிகளின் அருள சக்தி நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று தியானித்திடும் பொழுதும் சரி… அல்லது “ஐயோ…! என் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா…? எனது கஷ்டங்கள் தீராதா…?” என்று வேதனைப்பட்டாலும் சரி
1.அங்கே சாதனைகளையும் அல்லது சோதனைகளையும் உண்டாக்கிக் கொடுக்கின்ற குருவாக இருப்பது
2.நமது உயிர் தான்…! என்று அறிய வேண்டும்.

எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாகி விடக்கூடாது…”

 

எந்த மரத்திலிருந்து வித்தாக உருவானதோ அந்த வித்தைப் பூமிக்குள் பதியச் செய்யும் போது அதன் அறிவின் தன்மையாக அதே மரமாக அதை வளர்க்கச் சூரியன் உதவுகிறது.

இதைப் போல் தான் நமது உயிர்
1.உடலுக்குள் எது அணுவின் தன்மையாக உருவானதோ
2.அதற்கு இந்தக் காற்றிலிருந்து அதே இனமான சத்தைக் கவரும்படி செய்து உணவாகக் கொடுத்து வளர்க்கின்றது.

எந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கூட்டப்படும் பொழுது “அந்த உணர்வின் அலையாக நமக்குள் மாறுகின்றது…”

1.யார் வேதனைப்படும்படியான சொல்லை நம்மிடம் சொல்கின்றார்களோ நம் ஆன்மாவாக அது மாறும் பொழுது
2.மறைந்திருந்து இந்த மகரிஷியின் உணர்வு அதைத் தாக்குகின்றது.

வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை… மறைந்திருந்தே தாக்குகின்றார்.

ஒருவன் வேதனைப்படும் சொல்களைச் சொல்லப்படும் போது அவனை நேரடியாக நீங்கள் பார்த்தால் என்ன ஆகும்…?
1.வேதனை என்பது வலிமையானது
2.நல்ல குணங்களை எல்லாம் வலு இழக்கச் செய்துவிட்டு அந்த உணர்வின் இயக்கத்திற்கே நம்மைக் கொண்டு செல்லும்.

பாவிப் பயல் இப்படிச் சொல்கிறான் பார்…! நான் ஒன்றுமே சொல்லவில்லை… இவன் இப்படிச் செய்கின்றானே…! என்று என்ன தான் சொன்னாலும் “அது எப்படி நீங்கள் ஒன்றுமே சொல்லாமல் அவர் உங்களைச் சொல்வார்…?” என்று அடுத்தவர்கள் கேட்பார்கள்.

சும்மா இருக்கும் போது யாராவது சொல்வார்களா…? என்று இதே சொல் வரும். இராமன் அம்பை எய்தானென்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான்.

நாம் எதனைக் கலந்து சொல்லாகச் சொல்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே கலந்து அதன் வினாவாக மீண்டும் எழும்பும்.

எவ்வளவு தான் “நான் தவறே செய்யவில்லை…” என்று சொன்னாலும் தவறு செய்யாமல் யாராவது உங்களைச் சொல்வார்களா…? என்பார்கள். எதனை உருவாக்கி எந்தச் சொல் அம்பாகப் பாய்கின்றதோ அந்த சொல்லின் நிலைகள் இப்படித்தான் வரும்.

ஒரு கம்ப்யூட்டரில் எதை ஆணையிட்டு அதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்கும்படிச் செய்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பதிவாக்கப்படும் பொழுது
1.மீண்டும் அது எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் வலுக் கொண்டு “மற்றதைத் தனக்குள் பிரித்துக் காட்டும்…”
2.அதைப் போன்று தான் உயிர் நாம் சுவாசித்த உணர்வின் சொல்லை எலக்ட்ரானிக்காக மாற்றி விட்டது என்றால்
3.அதே இடம் வரும் பொழுது அது மாற்றும்.

அதாவது… ஒரு மனிதனின் எண்ண வலு நமக்குள் அதிகமாகி விட்டால் அது வாலியாக மாறி விடுகின்றது. நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழக்கப்படுகிறது.

இதைத்தான் வாலியை எவரொருவர் நேரடியாகப் பார்க்கின்றார்களோ அந்த வலுவிலே சரி பகுதி அவனுக்குச் சென்று விடும் என்று “இவ்வளவு காரண காரியத்தோடு…” சாஸ்திரங்களை நமக்குக் காட்டி உள்ளார்கள் ஞானிகள்.

ஒருவன் வேதனைப்படும்படி சொல்லைச் சொன்னால் நம் நல்ல குணங்கள் வலு இழந்து விடுகின்றது அல்லவா…!

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த உணர்வினைத் தனக்குள் ஏற்றி அந்த வேதனை நம்மைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று உங்கள் கையிலே அதை ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாக ஆகிவிடக்கூடாது…”

உயிரால் வளர்க்கப்பட்ட மனிதன் நீ. எனவே அவனிடமே வேண்டி அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த மெய்ஞானியின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
2.அதுவாகவே ஆகின்றோம்… நாம் ஞானியாகின்றோம்.

நாரதன் கொடுக்கும் ஞானக்கனியின் விளக்கம்

 

ஒரு மாங்கனி அது இனிப்பாக இருக்கும்பொழுது, அந்தச் சுவையின் மணத்தையே வெளிப்படுத்தும். காயாக இருக்கும் பொழுது புளிப்பின் உணர்ச்சியைத் தூண்டும்.

இதைப் போல மனிதனாக இருக்கும் நாம் காயின் பருவத்தில் இருக்கும் பொழுது கனியாகும் உணர்வின் தன்மையை நாம் கவர்ந்தால் கனியும் தன்மையை அடைகின்றோம்.

ஆனால் கனியாவதற்கு முன் வெப்பத்தின் தணல் அதிகமாக இருந்தால் வெம்பி மரத்திலிருந்து விழுந்து விடும். வெம்பிய நிலைகள் கொண்டு வித்து உருவாகாது… அதனுடைய சத்தும் நமக்குள் நல்லது ஆகாது.

ஆகவே “வெம்பாத நிலைகள் கொண்டு…”
1.கனியின் தன்மையை அடைந்த கனியைப் போல
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய்ஞானியின் உணர்வைத் தனக்குள் வளர்த்து
3.உணர்வுகள் அனைத்தும் கனியாகி உயிருடன் ஒன்றிய கனியின் தத்துவமாக
4.ஏழாவது நிலையாக ஒளிச் சரீரம் பெற வேண்டும்..

இதைத்தான் கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

நாரதன் கனியைக் கொண்டு வந்து, சிவனிடம் கொடுக்கின்றான். சிவன் யார்…? நமது சரீரமே.

நாரதன் கனியைச் சிவன் கையில் கொடுத்து உலகை எவர் ஒருவர் முதலில் வலம் வந்து விடுகின்றாரோ அவருக்கு இந்தக் கனியைக் கொடுத்துவிடு என்று சொல்கின்றான்.

அப்பொழுது… ஆறாவது அறிவின் தன்மை உலகை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு…
1.எண்ணத்தில் விரிவடைந்து புற உலகத்தை எண்ணுவோமேயானால்
2.”உலகைச் சுற்றத்தான்…” அந்த உணர்வு செல்லும்.

இந்த ஆறாவது அறிவு “தெரிந்து கொண்டேன்…” என்ற நிலை வரப்பபடும் பொழுது “எனக்கு வசதி இருக்கிறது…” என்று எண்ணத்தால் எண்ணினாலும் ஒன்றை மறந்து விடுகின்றான்.

எவ்வாறு மறந்து விடுகின்றான்…? ஞானம் இருந்தும், தான் உணர முடியாத நிலைகள் எவ்வாறு ஆகுகின்றது…? என்று காட்டுகிறார்கள்.
1.‘நான் ஒரு நொடியில் உலகை வலம் வந்து விடுகின்றேன்’ என்று
2.எண்ணத்தால் வேகமாகச் சென்று விடுகின்றான் முருகன் (ஆறாவது அறிவு).

அதே சமயம்… சிவன் அருகில் விநாயகன் இருக்கும் பொழுது
1.பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தைதான்.
2.பேரண்டம் சுழல்வதற்கும்… அந்தப் பேரண்டத்தின் ஆற்றல் உன் அன்னை தந்தைக்குள் இருக்கின்றது.
3.இது தான் உனக்கு உலகம்.
4.அவர்களைச் சுற்றி… நீ இந்த வினையாகச் சுற்றி… நிலைக்கு வந்து சேர்.
5.அந்தக் கனியின் தன்மையை நீ பருகலாம்…! என்று நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

கனி – நாரதன் என்று உணர்த்தப்படுவது என்ன…?

ரிஷியின் மகன் நாரதன். மனிதனின் உயர்வின் தன்மை கனியாக்கியவன் அந்த மகரிஷி. அந்தக் கனியின் தன்மை அங்கிருந்து வரப்படும் பொழுதுதான்… “நாரதனைக் கனியாக்கி”
1.கனியினைச் சிவனிடம் கொடுக்கப்படும் பொழுது பேரண்டமும் பேருலகமும் அன்னை தந்தை
2.அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நீ அந்தக் கனியைப் பெறு.
3.அதனைக் கொண்டு நீ கனியாகு.

உன் ஆறாவது அறிவு கொண்டு… “எங்கே இருக்கும்…?” என்றும் “எங்கோ இருக்கும்…!” என்றும் கடவுளைத் தேடாதே…!

உனக்குள், உயிரான நிலைகள் அன்னையாகவும் தந்தையாகவும்… அதனின் உணர்வின் சத்து உனக்குள் தாயாகவும் சிவசக்தியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உடலை மறவாதே…!

சிவனையும் நமக்குள் இருக்கும் சக்தியையும் நமக்கு எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்…? எதை வினையாகச் சேர்க்க வேண்டும்…? விநாயகன் யார்…?
1.அந்த ஞானியின் உணர்வை உனக்குள் வினையாக்கி அதை நீ கனியாக்கு
2.கனியானவன் அவன்…! என்று தெளிவாக எடுத்துரைத்தான் அந்த மகாஞானி.

நாம் இங்கே என்ன செய்கின்றோம்…? அந்த உட்பொருளைக் காணாதவாறு, கதையைக் கதையாகத்தான் காணுகின்றோமே தவிர… மெய்ப்பொருளைக் கண்டுணரும் ஆறாவது அறிவைத் தனக்குள் செலுத்தி… உட்பொருளைக் கண்டுணரும் நிலைகள் இல்லை.

மெய்ப்பொருளைக் கண்டுணர வேண்டும் என்று கவிப்புலமை கொண்டு, உணர்வின் வேட்கை கொண்டு நாதங்களின் சுருதியாக அதற்குள் பிரித்தாலும்… கவிப்புலமைகள் பல வந்தாலும்… புலமை பெற்றவருக்கே தெரியும்.

அருணகிரிநாதர்… “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…” என்று பாடினார்.
1.உடலுக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுத்தோமோ நமது உயிருக்குள் சேர்க்கப்படும் பொழுது அது ஆவியாகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நமது உடலாகும் பொழுது “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…!”

நாம் எதையெல்லாம் எடுக்கின்றோமோ எந்த குணத்தை எடுக்கின்றோமோ
1.அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது, “ஆதி…”
2.உடலாகச் சேர்க்கும் பொழுது “நமோ நமோ…”

பாடலின் உட்பொருள் தெரியாமல் பாடிக் கொண்டு போய் விடுகின்றோம். இவையெல்லாம் நமது ஞானிகள் கண்ட பேருண்மைகள். நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மதுரை வெங்கட்ராமன் வீட்டிற்கு நான் (ஞானகுரு) வரப்போகும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. அவர்கள் வீட்டிற்கு அருகிலே அவர்கள் சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள்.

அதிலே ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தை இல்லை என்று எம்மைச் சந்தித்து ஆசீர்வாதம் செய்த பின் அவர்களுக்குக் குழந்தை கிடைத்தது.

அந்தக் குழந்தைக்குப் பேர் வைக்க வேண்டும் என்ற நிலையில் மீண்டும் நான் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்த சமயம் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அங்கே வருகின்றனர்.

அவர்களுக்கும் குழந்தை இல்லை. அது மட்டுமல்ல..! “குழந்தை பாக்கியமே இல்லை..” என்ற ஏக்கம்…! விபரம் கேட்கும் பொழுது
1.குழந்தை இல்லை என்று ஏற்கனவே நாங்கள் சாமியைச் சந்தித்தோம்
2.அவர் ஆசியால் எங்களுக்குக் குழந்தை கிடைத்தது.
3.சாமியிடம் சென்று இன்றைக்குத்தான் குழந்தைக்குப் பேர் வைக்கப் போகிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அதைக் கேட்டதும் அல்லி நகரத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஆசை.

சாமியிடம் போனால் உங்களுக்கும் குழந்தை கிடைக்கும் என்றார்கள். அப்பொழுது இவர்கள் தன் குழந்தைக்குப் பேர் வைக்கும் பொழுது அல்லி நகரத்தைச் சேர்ந்தவர்களும் கூட வருகின்றார்கள் எம்மைச் சந்திக்க…!

1.இந்த உணர்வு வேகம் அலைகள் எப்படி வருகின்றது…! என்று சொல்கிறேன்.
2.அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.அதைக் கேட்டதும்… இந்தத் தம்பதியருக்குத் தங்களுக்கும் குழந்தை வேண்டும் என்ற அந்த உணர்ச்சிகள் வருகின்றது.

அந்த உணர்வைச் சுவாசித்ததும் என்ன நடக்கிறது…?
1.குழந்தை இல்லை என்று இவர்களுக்குக் கிடைத்தது.
2.”குழந்தை கிடைத்த அந்த உணர்வை…” வாக்காலே சொல்லப்படும் பொழுது
3.அந்த ஒலி அலைகள் பட்டவுடன் “உற்றுப் பார்த்து அந்த உணர்வுகளைச் சுவாசிக்கின்றனர்…”
4.அந்தக் கரு உருவாகும் பருவம் அப்பொழுது உருப்பெறுகின்றது.

இது நடந்த நிகழ்ச்சி…!

சாமி எங்களுக்கு எல்லாம் இருக்கிறது… நிறைய மருத்துவர்களையும் பார்த்து விட்டோம்.
1.எங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டும்…! என்று
2.அவர்கள் சொல்லிக் கொடுத்த மாதிரியே “வேண்டும்…” என்று எம்மிடம் கேட்கிறார்கள்.
3.”இல்லை…!” என்ற அந்தக் குறையான சொல்லே அவர்கள் வாயிலிருந்து வரவில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் மனைவி இருவரும் பெறுவீர்கள்…! என்று ஆசீர்வாதம் கொடுத்தேன். பேர் வைக்கக் குழந்தையை எடுத்து வாருங்கள்..! என்று சொல்லி அனுப்பினேன்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து எண்ணுங்கள்..! என்று சொன்னேன்.

ஒரு ஒன்றரை வருடம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் வந்தேன். அந்தக் கணவன் மனைவிக்குக் குழந்தைப் பாக்கியமே இல்லை என்று பரிசோதித்த டாக்டரும் அங்கே வந்திருந்தார்.

அந்த டாக்டர் என்னிடம் சில விபரங்கள் கேட்க வேண்டும் என்று வந்தார்,
1.குழந்தை கிடைக்கும்..! என்று நீங்கள் ஆசீர்வாதம் கொடுத்தவர்களுக்குக் குழந்தை கிடைத்திருக்கின்றது.
2.இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..? என்று எனக்குத் தெரிய வேண்டும்.
3.மருத்துவத் துறையில் நாங்கள் நிறையப் படித்திருக்கின்றோம்.
4.இவர்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்திருக்கின்றார்கள்.
5.குழந்தைக்கு வாய்ப்பு இல்லாத ஒரு சூழ்நிலையில் இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..?
6.வழக்கமாகக் கர்ப்பப் பையில் தான் குழந்தை உருவாகியிருக்கும்.
7.ஆனால் இவர்களுக்குக் கர்ப்பப் பைக்கு வெளியே குழந்தை எப்படி உருவானது,..?
8.கர்ப்பப் பை சிறுத்திருக்கின்றது… ஒன்றும் செய்ய முடியாது… என்று நாங்கள் சொன்னோம்.
9.ஆனால் நீங்கள் மருந்தும் கொடுக்கவில்லை. ஒன்றும் செய்யவில்லை…! எப்படிக் குழந்தை உருவானது…?

“குழந்தையைப் பேர் வைக்க எடுத்துக் கொண்டு வாருங்கள்…” என்று தான் சொன்னீர்கள்…! என்னால் இது நம்ப முடியவில்லை. யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்…! நான் நேரடியாகப் பார்த்த அனுபவம்.

இவர்களுக்குப் பிரசவமும் நானே தான் பார்த்தேன். ஆபரேஷன் செய்து தான் குழந்தையை வெளியில் எடுத்தோம். ஆனால் குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியில் இருக்கின்றது. இது எப்படிச் சாத்தியமாகும்…? என்று அந்த டாக்டர் என்னிடம் (ஞானகுரு) கேள்வியைக் கேட்டார்.

அப்பொழுது நான் சொன்னேன்…! அவர்கள் எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்ட உணர்வின் இந்த அணு செல்கள் வெளியில் வரப்படும் பொழுது
1.கர்ப்பப்பைக்கு அருகிலேயே அதனுடைய ஜீவ அணுக்கள் துடிப்புக்குக் கொண்டு வரும்.
2.அப்பொழுது புதுக் கருப்பை அதிலிருந்து உருவாகிறது. அதற்குள் குழந்தை உருவானது.

ஆனால் பிறக்கும் பாதை வழியாக வர முடியாது ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும். ஒரே குழந்தைதான், அதற்குப் பிறகு வராது என்று முழு விபரத்தையும் டாக்டரிடம் சொன்னேன்.

இது அல்லி நகரத்தில் நடந்த நிகழ்ச்சி இது. ஏனென்றால் “தியானம் என்றால் என்ன…?” என்ற நிலையில் அந்த மகரிஷிகளைப் பற்றிய எண்ணங்களை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

மந்திர நிலைகளை விடுத்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்

 

கோவிலில் இந்தத் தெய்வத்திற்கு இந்த மந்திரம் என்று சிருஷ்டித்துக் கொண்டால் அடுத்து இதே மந்திரத்தைத் திரும்பத் திரும்ப மற்றவர்கள் ஜெபித்தால் அங்கே முருகனாகக் காட்சி தருவேன்.

நான் நல்லது செய்ய வேண்டும் என்று எதையெல்லாம் எண்ணினேனோ அந்த உணர்வுடன் சுவாசிக்கப்படும் பொழுது மந்திரத்தைச் சொன்னவுடன் உடலுக்குள் போய் இரண்டு மடங்காகச் சேர்ந்து கொள்ளும்
1.மற்றவர் உடலில் இருக்கக்கூடிய நோய்களைக் கவரும்.
2.ஆனால் மற்றவர்களுக்கு நோய் தீரும்.

காரணம் அவருடைய வலு கொண்டு தான் மந்திரம் சொல்லி இறந்த ஆன்மா அங்கே சென்றது. மந்திரத்தைச் சொல்லி நோயை இழுத்துக் கொள்வார் உள்ளே சென்ற பின் அந்த நோயெல்லாம் அங்கு இயக்க ஆரம்பிக்கும்.

முருகனின் அருள் பெறப் போகின்றேன் என்று தவமிருந்தேன்
1.அதற்காக மந்திரத்தைச் சொன்னேன் என்ற நிலையில்
2.அடுத்த உடலுக்குள் சென்று அவரையும் வளர விடாதபடி… தானும் வளராதபடி ஆகிவிடும்.

அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றுத் தான் இருளை நீக்க வேண்டும்.

ஒளி கொண்டு உணர்வின் தன்மை இருளை நீக்கினான் நரசிம்மா…! தீமைகள் நீக்கி ஒளியைத் தனக்குள் பெற்றான்… “சப்தரிஷி…!”

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தனக்குள் செலுத்திடல் வேண்டும்.

சந்தர்ப்பத்தில் “ஒரு இருளான நிலையைப் பார்க்கின்றோம்… அறிகின்றோம்…” அதை அறிந்த பின் அதற்குண்டான காரியங்களை நாம் செய்கின்றோம்.

ஆனால் நாம் பார்த்த அந்த இருளை மாற்றுவதற்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது எடுத்து உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்க வேண்டும்.
1.ஏனென்றால் பிறிதொரு ஆன்மா அறியாது உடலுக்குள் வந்து இயக்கினாலும் இயக்கிவிடும்.
2.அதை நாம் தடைப்படுத்த வேண்டும்.

நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் நாங்கள் வியாபாரம் செய்யும் இடத்திலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

எங்கள் குழந்தைகள் கல்வியிலே சிறந்த ஞானம் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று நல்ல ஞாபக சக்தி பெற வேண்டும். அவர்கள் எதிர்காலம் நலமாக இருக்க வேண்டும்.

குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். “புத்திர பாக்கியம் பெறக்கூடிய சக்தி வேண்டும்…” என்று இப்படித்தான் நாம் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலே சொன்னபடி…
1.அந்தச் சக்தி பெற வேண்டும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி வளர்த்துக் கொண்டால்
2.அதுவே ஜெபம் ஆகின்றது… எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியே நமக்குள் வருகின்றது.

சந்தர்ப்பத்தில் குறையான உணர்வுகளை நாம் எடுத்து விட்டால் அந்தக் குறையே இங்கே வளர்ந்து விடுகின்றது. கணங்களுக்கு அதிபதி கணபதியாக அது மாறி விடுகின்றது.

ஏனென்றால் இந்த உடலிலே எதை அதிகமாகச் சேர்க்கின்றமோ அதுவே அதிபதியாக ஆகின்றது…!

இன்றைய செயல் நாளைய சரீரம். இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று கேள்விக்குறியைப் போட்டு முச்சந்தியில் வைத்து நம்மைச் சிந்திக்கும்படிச் செய்கின்றார்கள்.
1.விநாயகர் தத்துவமே “நான் யார் தான் யார்…?” என்பது தான்.
2.உயிரின் தன்மை கொண்டு எண்ணி இயக்கப்படும் பொழுது நான் ஆகின்றது
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் செல்லும் பொழுது தானாகின்றது… உயிரும் உடலும் தானாகின்றது.
4.உடலில் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது எண்ணமாக வரும் பொழுது நானாகின்றது.
5.அந்த நானின் தன்மை அடையப்படும் பொழுது எதன் உணர்வோ அதுவாகின்றது.

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆக கண்களிலே எதைக் கூர்மையாக உற்று நோக்கி எண்ணி எடுக்கின்றோமோ அதையே பெறுகின்றோம்.

ஆகையினால் இந்த உடலில் வரக்கூடிய வினைகள் “நாம் செய்தது அல்ல…”

நல்ல எண்ணங்கள் கொண்டு நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் பிறர் துன்பப்படும் உணர்வுகள் நமக்குள் அது கவரப்பட்டு தீய வினைகளாக விளைந்து நம் நல்ல குணங்களை அது அமிழ்த்திவிடுகிறது.

அதை நீக்குவதற்குத் தான் நரசிம்ம அவதாரம்… தியானம் என்பது. யாம் உபதேசித்த உணவின் துணை கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவணுக்கள் பெற வேண்டும்
4.நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குழந்தை பாக்கியம் இல்லை என்று எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு… குழந்தை கிடைத்த பின் பெருமையும் பட்டு.. அதன் பின் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா…?

எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூப்பிட்டார்கள். கலசம் வைக்க வேண்டும் என்றார்கள். வைத்துக் கொடுத்தேன். அதற்கப்புறம் வாருங்கள் என்று சொன்னேன்.

ஒரு நாள் ஒரு பொழுது கூட இந்தப் பக்கம் வரவே இல்லை. அப்பொழுது எம்முடைய உபதேசம் எல்லாம் என்ன ஆகிறது…?

உங்கள் எண்ணங்கள்… உங்களுக்குள் அந்த உணர்வுகள்… எதை… எப்படிப் பதிவாக்குகிறது..? பதிவின் நிலைகள் எப்படி உங்களை இயக்குகிறது…? அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் இந்த நிலைகள் “நான் செய்தேன்…!” என்று நீங்கள் எண்ண வேண்டாம்…!”
1.சாமி செய்தார்… என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கிறது…?
2.உங்கள் எண்ணத்தால் தான் அது உருவானது
3.உங்கள் எண்ணத்தின் உணர்வு கொண்டு உங்கள் உயிர் என்ன செய்கிறது..? என்று சொல்கிறோம்.
4.அதற்குண்டான ஒரு நல்ல கருவை… ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
5.அந்த ஞானத்தின் தொடர் கொண்டு நீங்கள் வளர்ந்து அதே வரிசையில் வரவேண்டும் அல்லவா…?

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது
2.நமக்குள் அந்த இணக்கங்கள் வந்து நல்வழியை உயர்த்தும்.

இதைத்தான் குருநாதர் “ஈஸ்வரபட்டர்” எமக்குச் சொன்னார்.

நீங்கள் எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்…! என்று நான் நினைத்தேன் என்றால்
1.தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும்.
2.நல்லவைகள் மறைந்து கொண்டு தான் இருக்கும்.

ஆகவே அனுபவரீதியில் இதைக் கொண்டு வருவதற்குத்தான் இதை எல்லாம் தெளிவாகவே சொல்லிக் கொண்டு வருகின்றோம். சிறிது பேராவது இதை உணர்ந்து கொண்டால் தெளிவாகும்.

நம் குடும்பத்தில் ஒருவருக்கு நோயாகின்றது. அவரைப் பாசத்துடன் உற்றுப் பார்க்கின்றோம். அவரிடமிருந்து வேதனைப்படும் சொல்கள் வெளி வருகின்றது.

வேதனையான சொல்களைக் கேட்டு அவர்கள் கஷ்டங்களை நாம் நுகர்ந்தால் அந்த நோய் நமக்கும் வந்துவிடுகிறது. அந்தச் சொல்கள் ஒன்று தான்,

அதே போல் நீங்கள் அருள் ஒளி பெற்று உங்களால் நன்றாக ஆகும் பொழுது
1.நல்லதாக ஆனது…! என்ற இதே சொல்லை நீங்கள் சொன்னீர்கள் என்றால்
2.உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் தீமைகள் நீங்கும்.

ஞானிகள் கொடுத்த அரும்பெரும் சக்திகளை நான் விளம்பரம் செய்யாததன் நோக்கங்களே அது தான்..! ஏனென்றால்
1.ஆசையை ஊட்டிவிட்டோம்.. என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதைக் குறிக்கோளாக எண்ணி ஆசைப்பட்டு வருகின்றார்களோ அதுவே நிலைக்கின்றது.
3.அதன் நிலைக்கே வந்தவுடனே… அது கிடைத்த பின் தன்னைப் பாதுகாக்கும் சக்தி இழக்கின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதா…? ஆசைப்பட்டுத் தேடி வந்தது கிடைத்ததும் தங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் அருள் ஞானிகளின் அருள் சக்திகளை வளர்ப்பதில்லை.
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதும் இல்லை.

ஆரம்பத்திலிருந்து எத்தனையோ பேரை யாம் (ஞானகுரு) சந்தித்திருக்கின்றோம். அவர்களின் ஆசையின் உணர்வுகள் எப்படிப் போனது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் திரும்பவும் உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

நான் (ஞானகுரு) அந்த அருள் ஞானிகள் பெற்ற அழியாச் சொத்தைத்தான் எனக்குள் தேடி வைத்திருக்கின்றேன். அதிலிருந்து ஞானத்தின் உணர்வுகளைத்தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்களுக்குக் கோடிப் பணம் வாங்கித் தருகிறேன்.. உங்கள் நோயை எல்லாம் நீக்கித் தருவேன்… உங்கள் குறைகளை எல்லாம் நான் நீக்குவேன்…! என்று சொல்ல வரவில்லை.

1.அருள் ஞானத்தைப் பெற்றால்
2.உங்களைத் தேடி எல்லாமே வரும்.
உடலுக்குப் பின் ஒளியின் சரீரமாகி அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் நீங்கள் ஐக்கியமாகலாம்…!

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் “ஈஸ்வரபட்டர் எனக்குச் சொன்ன உபாயங்கள்”

 

உடலை விட்டு குருநாதர் வெளியிலே செல்லும் பொழுது பல உண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்.

1.என்னை (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ பேர் அணுகினார்கள்.
2.பல அற்புதங்களை நான் காட்டினேன். அதற்கு மயங்கி இருந்தோர் பலர் உண்டு..
2.எனக்குச் சொத்து வேண்டும் சுகம் வேண்டும் உடல் நலம் வேண்டும் என்று தான் கேட்டார்கள்.

வருவோர் அனைவரும் எனக்கு அந்த அருள் வேண்டும் இந்த அருள் வேண்டும் என்று தான் கேட்டார்களே தவிர
1.மெய்ப்பொருள் காணும் திறன் வேண்டும்… உலகம் நலமாக இருக்க வேண்டும்
2.என் பார்வையில் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று
4.இதை எண்ணிக் கேட்பார் எவரும் என்னிடம் வரவில்லை.

இப்படி தனக்குத்தான் என்னிடம் கேட்டார்கள் தவிர எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற கேள்வியே அவர்களிடம் எழவில்லை.

இந்த உலகில் உள்ள எல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணினேன்… அதைப் பெற்றேன் அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால்
1.நீ எதை எண்ணப் போகின்றாய்…? எதை நீ பெறப் போகின்றாய்…?
2.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…? நீ அதை எப்படிப் பெறுவது…?
3.உடலை விட்டுச் சென்ற பின் என்னுடன் இணைந்து நீ வர வேண்டும் என்றால் நீ எதை எண்ண வேண்டும்…? என்று
4.வைகுண்ட ஏகாதசி வருவதற்கு ஒரு மாதம் முன்பு என்னிடம் இந்த கேள்விகளைத் தான் குருநாதர் எழுப்பினார்.

அதைத் தெளிவாக்கவும் செய்தார்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி என் குருநாதர் பெற வேண்டும்… அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… அருள் வழியில் அவர் செல்ல வேண்டும்… அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… அந்த அருள் ஒளி என் குரு பெற வேண்டும் என்று “இப்படி நீ எண்ணினால் அந்த குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்…!”

உங்களுக்குச் சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…! இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…!

1.நான் சொன்ன முறைப்படி எண்ணும் பொழுது தான்…
2.”நீ எதை எண்ணுகின்றாயா நீ அதுவாகின்றாய்…” என்று இப்படித்தான் சொன்னார் குருநாதர்.

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறும் நிலையும் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் நிலையும்… அதைப் பெற்று குருவை எப்படி விண் செலுத்த வேண்டும்…? எதை நீ குருவாக்க வேண்டும்…? என்ற பேருண்மைகளை எல்லாம் உணர்த்தி விட்டுத் தான் “வைகுண்ட ஏகாதசி என்று ஈஸ்வரபட்டரின் ஆன்மா பிரிகின்றது…”

உடலை விட்டுச் சென்ற பின் குருவின் நினைவும் இங்கே அந்த உணர்வின் விளைவும்…
1.சப்தரிஷி மண்டல உணர்வையும் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் கொண்டு வரப்படும் பொழுது
2.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழியில் அங்கே சென்று ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்.

ஆக அவர் சென்ற அந்த வழியில் அந்த வரிசை ஒன்றை வைத்துத் தான் ஒன்று செல்ல முடியும்.
1.அந்த வழியை நீ பெறு… மற்றவருக்கு வழிகாட்டும் பொழுதும் இந்த நிலையை உணர்த்து.
2.அதை அவர்கள் பெற வேண்டும் என்று ஏங்கு… அந்தத் தகுதியை அவர்களையும் பெறும்படி செய்.
3.நீ அதன் வழி செல்லும் பொழுது அடுத்தவர்கள் எண்ணும் பொழுது நீயும் எளிதில் விண் செல்கின்றாய்,
4.உன் சொல்லைக் கேட்பவர்களும் அந்த வழியினைப் பெறுகின்றார்கள்.

ஆகையினால் இதனை நீ வழிப்படுத்து…! என்று விண் செல்லக்கூடிய மார்க்கங்களை ஈஸ்வரபட்டர் எமக்குத் தெளிவாக உணர்த்தி மற்றவர்களுக்கும் இதைக் காட்டும்படி சொன்னார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்தக் காலத்தில் தன்னுடன் வாழ்ந்த சகாக்களின் நோயை நீக்கப் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் தாவரங்களின் விழுதுகளையும் அகஸ்திய மாமகரிஷி கண்டுணர்ந்து அதை வைத்து நோய்களை நீக்கியுள்ளார்.

அன்றைக்கும் கேன்ஸர் நோய் வந்துள்ளது. அந்தக் கேன்ஸருக்கு நேரடியாக விழுதைக் கொடுத்தவுடன் அல்லது கட்டி இருக்கும் இடத்தில் அந்தத் திரவத்தை வைத்தவுடனே சர்ர்ர்ர்… என்று கரைத்துக் கொண்டு போகும். விஷ நீர்களை எடுத்து விட்டு அந்தக் கேன்சரைக் குறைக்கும்.

அதே மாதிரி இன்னொரு பச்சிலை இருக்கிறது. இப்பொழுது எப்படி கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்து பின்பு அதை எப்படி மூடுகிறார்களோ பச்சிலையை அரைத்துத் தேய்த்தால் அந்தத் தோல் அப்படியே மூடிவிடும். அக்காலத்தில் செய்த வைத்திய முறை.

இது எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரால் எமக்கு (ஞானகுரு) உணர்த்தப்பட்ட நிலைகள்.

ஒரு சமயம் நான் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. ஒருவருக்குக் காலில் ஆணி இருந்தது. அவரால் நடக்க முடியவில்லை. அந்தக் காலில் உள்ள ஆணியை எடுப்பதற்காக வேண்டி “காலை நீட்டுங்கள்…!” என்றார்கள்.

அந்தப் பச்சிலையை வைத்துத் தேய்க்கிறார்கள். தேய்த்தவுடன் அந்த ஆணி அப்படியே ஆழமாக இருப்பதை எடுக்கிறார். அந்த வலி தெரியவில்லை. இப்பொழுது நடங்கள் பார்க்கலாம்… என்கிறார். ஆணியை எடுத்தவுடனே அவர் தாங்கித் தாங்கி நடக்க ஆரம்பித்தார்.

அப்பொழுது நான் சொன்னேன் வலியை மறக்கச் செய்து எடுக்கின்றீர்கள். இன்னும் கொஞ்ச நேரம் போனால் அவருக்குக் கடுமையான வலி வரும். வலி வந்தது என்றால் தாங்க முடியாது என்று சொன்னேன்.

கேட்டு விட்டு அப்படியே போய் விட்டார். ஏனென்றால் ஆணியை எடுக்க இவர் பணம் குறைவாக வாங்கினார்.

எழுந்திரிக்க முடியாதவர் நல்லதாக ஆனவுடன் இவன் சொன்னதைக் கேட்டு அவர் ஒரு கொலையைச் செய்கிறார். அந்த மாதிரி ஆனவுடன்… “பிறரைக் கொல்வதற்கு நீ வருவாய்…!” என்றேன்.

அவனை அறியாமலேயே இவனுக்குள் செய்கிறான் அவனைக் கொல்லவும் செய்கிறான்… இவன் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லவும் செய்கின்றான்.

ஆக இவனால் விளைந்த உணர்வுகள் அணுக்களாக மாற்றப்படும் போது எத்தனை பேர் உடலுக்குள் இது உருவாகிறது…? இந்த உணர்வுகள் எல்லாம் இங்கே மனிதனுக்குள் படர்கிறது. “இதை நீ கரைப்பது எப்பொழுது…?” என்று கேட்டேன்…!

ஏனென்றால் சித்தான புதிதில் முதலில் இதெல்லாம் யாம் (ஞானகுரு) செய்தோம். அதிலே எத்தனை பேர் இங்கே வந்திருக்கிறார்கள்…? தனக்கு நன்றாகி விட்டால் அதற்கு அப்புறம் எங்கேயோ போகிறார்கள்…? யாம் சொல்லும் அருள் வழியைச் சிந்தித்துப் பார்ப்போர் இல்லை.

ஆக மேலே சொன்ன மாதிரி எத்தனையோ எதிர்பார்ப்பிலே வருகின்றார்கள். யாம் உபதேசிக்கும் அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் எல்லாவற்றையுமே நல்லதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் எண்ணியபடி நல்லதாக ஆகவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…? வேறு ஒருவரைப் பார்க்கலாம்…! கடைசியில் இந்தச் சாமிக்கு சக்தி இல்லை…! என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

ஆக இவர்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள். அதற்கெல்லாம் நான் உடந்தையாக இருந்து கொண்டே இருக்க வேண்டும்….! அது எப்படி என்னால் (ஞானகுரு) முடியும்…?

1.உங்களுக்குள் ஒரு தவறாகிறது….
2.அந்தத் தீமைகளிலிருந்து அருள் சக்தியை எடுத்து மாற்றிக் கொள்ளுங்கள்…! என்று நாம் விவரமாகச் சொல்கிறோம்
3.நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் அல்லவா..!

அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் தவறு செய்வதற்கு மறைமுகமாக யாம் ஒரு பெரிய குற்றவாளி ஆகிக் கொண்டே இருக்க வேண்டும்.

1.உங்கள் குற்றத்தை இயக்கும் நிலைகளிலிருந்து மீட்டிட மறைமுகமாக நல் உணர்வுகளைச் செலுத்துவது நல்லதா…?
2.என் புகழுக்காக வேண்டி… ஆகா கடவுள் நீயே தான்…! என்று நீங்கள் என்னைப் போற்றித் துதித்ததும் உடனே உங்களை நான் உயர்த்துவதா..?
3.ஏனென்றால் என்னை நீங்கள் போற்றினீர்கள் என்றால் அந்தப் போற்றுதலின் மறைவில் என்ன ஆகிறது…?
4.உங்களையும் கெடுக்கின்றேன்… நானும் கெட்டேன்… அடுத்தவர்களையும் கெடுக்கச் செய்யும்
5.ஞானிகள்… மகரிஷிகள்… கொடுக்கும் சக்தியை எப்படி விரயமாக்குவது…?

சிலர் நினைக்கலாம் இந்தச் சாமி என்ன என்று..?
1.நீங்கள் சாமிக்கு என்ன பெரிய சக்தி இருக்கிறது…? என்று கேட்டவுடன்
2.நான் ரோசப்பட்டு ஏதாவது செய்வதா…?

இயற்கையின் உண்மை நிலைகளை உணர்த்தி அந்த உணர்வால் தான் எத்தகைய நிலையாக இருந்தாலும் மாற்றப்பட வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் அதைத் தான் இன்றும் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகளின் ஞான வித்துக்களை உங்களுக்குள் அழுத்தம் திருத்தமாகப் பதிவாக்குகின்றோம். அதை நீங்கள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை வளர்த்தால் உங்களை அது மெய் ஞானியாக நிச்சயம் உயர்த்தும்…!

இன்றைய உலக நடப்பு

 

மனிதன் எவ்வளவு சிந்தனை கொண்டு விஞ்ஞானத்தின் அறிவினால் இன்று எலக்ட்ரானிக் கருவிகளைக் கண்டுபிடித்துச் செயல்பட்டாலும் இது எல்லாம் இன்று எதற்கு உதவுகின்றது…? தன் நாட்டைப் போற்றிடும் நிலையாக மற்றவனை அழித்திடத் தான் உதவுகின்றது.

எலக்ட்ரானிக் வளர்ச்சியையும் அதன் பயன்பாடுகளைப் பற்றியும் நாம் ஆச்சரியப்படலாம். உலக நடப்புகளை அடுத்த கணமே தெரிந்து கொள்ளலாம்.
1.அறிந்துணர்ந்து அதை இயக்கப்படும் பொழுது அழித்திடும் சக்திகள் தான் வளர்கின்றது
2.அழித்திடும் எண்ணங்கள் தான் ஓங்கி வளர்கின்றது.

அதை வளர்த்து விட்டால் பின் எங்கே செல்வோம்…? என்று சற்று சிந்தியுங்கள்.

நாம் வளர்த்த அந்த அழித்திடும் உணர்வுகள் அனைத்துமே சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு நமக்கு முன்பு தான் பரவிக் கொண்டுள்ளது.
1.திடீரென்று உணர்ச்சிவசப்பட்டால் அந்த உணர்வு இயக்கி… மீண்டும் தன் எதிரிகளை அழித்திடும் எண்ணங்களே நமக்குள் தோன்றி
2.அந்த சிந்தனைகளே ஓங்கி வளர்த்து… நம்மை அழித்திடும் நோயாக மாறி “வைத்தியமே இல்லாத நிலையாகிவிடுகிறது…”

அது மட்டுமல்ல…! இதைக் கேட்போர் உணர்வுகளிலும் இயக்கப்பட்டு அவர்களையும் அழித்திடும் நிலையாகவே வளர்ந்து கொண்டே வருகின்றது.

இன்று குழந்தைகளைக் காணோம் முதியவர்களைக் காணோம் என்றெல்லாம் செய்திகள் வருகின்றது. அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் விற்றுக் கண்களைப் பிடுங்கி… உடல் உறுப்புகளைப் பிடுங்கி… வியாபாரம் செய்கின்றார்கள்.

காசே இல்லை என்றாலும் ஒன்றும் கவலை இல்லை. குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் அதற்கென்று கூட்டங்களில் ஒப்படைத்து விட்டு விட்டால் இவனுக்குக் காசு கிடைக்கின்றது.

இவன் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றால்… அவன் உடல் உறுப்புகளைப் பல லட்சக்கணக்கில் விற்று வியாபாரம் செய்கின்ற அந்த அளவிற்கு விஞ்ஞானமும் சரி… பக்தி என்ற நிலையிலும் சரி… மதத்தின் சார்புடைய நிலைகளும் சரி… இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

தன் மதத்தாரைப் பிடிக்க மாட்டார்கள். அடுத்த மதத்தாரைக் கடத்திக் கொண்டு வந்தால் அது பாவம் இல்லை. இப்படித் திருடிக் கொண்டு போய் மிருக நிலைகள் கொண்டு அரக்கத்தனமான செயலாகப் போய்க் கொண்டுள்ளது.

ஆனால் இதனுடைய முடிவு எப்படி எங்கே சென்றடையும்…? என்பது சிலருக்குத் தெரியாது.

உடலில் இருக்கும் பொழுது உணர முடிகின்றது. இந்த உடலில் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் ஒலிகள் “உயிருடன் சேர்க்கப்படும் பொழுது…”
1.அந்த அணு செல்கள் ஒவ்வொரு நொடியிலும் வேதனையுடனே தான் துடித்துக் கொண்டிருக்கும்.
2.இதை மாற்றுவதற்கு எவராலும் முடியாது.

ஏனென்றால் மனிதனாக உருப்பெற்ற பின் அது வளர்ச்சி பெற்றது. உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இந்தத் துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும். யாரும் காப்பாற்ற முடியாது…!

இந்த மனித உடலில் இருக்கும் போது தான் துன்பத்தை நீக்க முடியும். அதை நீக்குவதற்குண்டான எண்ணங்களை எடுத்துச் செயல்படுத்தவும் முடியும்.

ஆனால் மனித உடலை விட்டுச் சென்றால் இந்த உடலில் எந்தத் தீய வினைகளைச் சேர்த்தோமோ அது இன்னொரு உடலுக்குள் சென்று “இதே உணர்வைத் தான்…” அங்கேயும் செயல்படுத்தும்.

உதாரணமாக ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தால் இன்னொரு உடலுக்குள் சென்று அங்கே குழந்தையாக அது பிறப்பதில்லை. மனிதன் இறந்தாலும் இன்னொரு உடலுக்குள் சென்று தான் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

ஆனால் ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தால் அடுத்த உடலுக்குள் சென்ற பின் இதே உணர்ச்சியைத் தூண்டி அங்கேயும் அதே நோயை உருவாக்கி அதையும் சீக்கிரம் கொல்லத்தான் செய்யும்.

பின் எப்படி அங்கே குழந்தையாகப் பிறப்பது…?

பக்தியின் நிலைகளில் வாழ்ந்தாலும் கடைசியில் வேதனைப்பட்டு ஏங்கிக் கொண்டிருந்தால் எந்தெந்த மதத்தின் அடிப்படையில் பக்தி கொண்டு வந்தாலும் இறந்து விட்டால் அதே பக்தி கொண்ட ஒரு மனிதன் ஈர்ப்பு இருந்தால் அங்கே சென்று இந்த வியாதியைத்தான் அங்கே உருவாக்க முடியும்.

அங்கேயும் குழந்தையாகப் பிறப்பதில்லை. அதையும் நசுக்கச் செய்கின்றது.

தற்கொலை செய்து கொண்டாலும் இதே போன்று தான். அடுத்த உடலுக்குள் சென்று அதையும் வீழ்த்தத்தான் செய்யும்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகளைச் சொல்கின்றோம்…! “இதிலிருந்து மீள வேண்டும்…” என்பதற்குச் சொல்கின்றோம். காலங்கள் மிகவும் குறுகியிருக்கின்றது.

விஷத்தின் தன்மைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆக இந்தப் பூமிக்குள் நமக்கு முன் சாக்கடையாகத்தான் அது இருக்கின்றது. இங்கே தான் வாழுகின்றோம்.

1.ஆனால் இதே காற்று மண்டலத்தில் தான் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் உணர்வுகளும் மறைந்துள்ளது.
2.நம் குருநாதர் காட்டிய வழியில் அதை நாம் நுகர்ந்து எடுத்து நமக்குள் வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
3.நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து அப்பொழுது நாம் விடுபட முடியும்.
4.இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய முடியும்… அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று சொல்லி ஏங்கிக் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தநாளங்களில் செலுத்தித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்கள் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தது ஜீவ அணுவாக இரத்தத்தில் உருவாகின்றது. ஜீவான்மா என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் அவர் இறந்த பின் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்தால் நம் இரத்தத்தில் தான் தங்கியிருக்கும்.

ஏனென்றால் நண்பனை உற்றுப் பார்த்து பாசத்துடன் பழகியிருந்தால் அவன் இறக்கும் போது கேள்விப்பட்டதும் “நண்பா போய்விட்டாயா…!” என்று ஏக்கத்துடன் கண்ணால் நுகரப்படும் பொழுது அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் வந்து குடிகொள்ளும்.

அந்த இரத்தத்தின் மூலமாக உணவை எடுத்துத் தான் அது அந்த அணுவாக வளரும். அந்த ஜீவான்மா நம் உயிர் பாகம் செல்லும் போது அதனுடைய உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும். நமக்குத் தீமையை விளைவிக்கும்.

1.ஆக அதன் உணர்வுகளைத் தான் அது செயல்படுத்த முற்படும்.
2.அதை மாற்ற அந்த ஆன்மாவால் முடியாது.

ஆகையினால் அத்தகைய ஆன்மாக்களால் முடியாததை நம் இரத்தங்களில் ஜீவான்மாக்கள் எது இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் அது பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது அந்த ஜீவான்மாக்கள் ஒளியின் உணர்வாகப் பெறும். நல்ல ஜீவ ஆன்மாவாக நாம் ஆக்க முடியும்.

அதே சமயத்தில் ஜீவ அணுக்கள் என்றால் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது அது எல்லாம் ஜீவ அணுக்களாகத்தான் நம் இரத்தங்களில் உருவாகின்றது.

உதாரணமாக ஒரு பட்டாம்பூச்சி ஒரு பூவிலே தன் முட்டையை இட்டால் அந்தப் பூவின் உணர்வை நுகர்ந்து அந்தப் பூவின் நிறத்திற்குத் தக்க பட்டாம்பூச்சியாக மாறி அதன் கலரிலே வருகின்றது.

அதைப் போல் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது அது கருத்தன்மையாகி முட்டையாகின்றது. மீண்டும் அதற்கு வளர்ச்சி கொடுத்தால் விளைந்து விடுகிறது.

இதைப் போல மற்ற வேதனைப்பட்டோரின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து இருந்தாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தங்களில் சேர்த்து
2.அருள் ஒளி என்ற உணர்வாக ஊட்டி
3.ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நாம் கண்ணால் செலுத்தப்படும் பொழுது இரத்தத்தில் நல்ல கருவாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.மிகச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
2.உங்கள் உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்வது போன்று உணர்ச்சிகள் வரும்.
3.அப்பொழுது அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
4.சிலருக்கு அந்தத் தீமை என்று உணர்வுகள் இரத்தத்திலே இருந்தால் அது அடங்கப்படும் பொழுது அது கொஞ்சம் சோர்வடையும்.

தியானிக்கும் பொழுது இதை உணர முடியும்.

நாம் இன்று கடைப்பிடிக்கும் சாஸ்திர விதிகள் எப்படி வந்தது…?

 

மதங்களின் அடிப்படையில் எடுத்துக் கொண்டால்… ஒவ்வொருவரும் எதை அடிப்படையாக வைத்து
1.இதுதான் கடவுள் என்ற நிலைகளில் சட்டங்களை வகுத்துப் பதிவு செய்து கொள்ளும் பொழுது
2.அந்த எண்ணத்திற்கு மாறி நடந்தால் “அது தெய்வ நிந்தனை…” என்ற நிலைகளில் கொண்டு போய் விடுகின்றார்கள்.

மதங்கள் தனக்குள் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த நிலைகளைச் செய்தார்கள். அன்றைய அரசர்கள் தான் வாழ்வதற்காகச் செய்து கொண்ட முறைகள் தான் இவை.

அரச காலங்களிலே ஒவ்வொரு கூட்டமும் பிரிவாக அது வளரும். இன்று போக்குவரத்து வசதிகள் மிகவும் சுலபமாக இருக்கின்றது. ஆனால் அன்று இந்த வசதிகள் கிடையாது.

அரசன் “ஒரு குலதெய்வத்தை ஏற்படுத்தி” அதன்படி சட்ட நியதிகளை ஏற்படுத்தி இருந்தால் அரசனுக்குக் கீழ் மக்கள் கட்டுப்பட்டு அதை ஏற்றுக் கொள்கின்றோம்.

சந்தர்ப்பத்தால் அரசர்களுக்குள் போர் முறை வரும் பொழுது அங்கே போர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்கள்.

போர் வெகு தொலைவில் நடக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கே சென்ற பின் அதிலே “நமது இனம் நமது குலம்…” என்று காட்டிக் கொள்வதற்காக உள் பிரிவுகளில் சிலதுகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்… ஒரு சாஸ்திர விதி…!

முதலில் போருக்குச் செல்லும் போது குடும்பத்தில் தன் குழந்தை சிறிதாக இருக்கின்றது. ஆனால் வெகு நாட்கள் ஆனபின் தனது பையன் தானா என்று நமக்கே அடையாளம் தெரியாமல் போய்விடும். அப்பொழுது அதற்கு வேண்டிய நிலைகளைச் சொல்ல வேண்டி வரும்.

போர் நடக்கும் இடங்களில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.
1.நம் இனம் நம் குலம் என்று அதைத் தெரிந்து கொள்வதற்காக வேண்டி உணவாக உட்கொள்ளும் உணவுகளில்
2.காய்கறிகளில் ஏதாவது ஒன்றை… மறைமுகமாக இது நமக்கு ஆகாது என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
3.அந்தக் காயைச் சாப்பிட்டால் வயிற்றுக்கு அஜீரணமாகும்… வயிற்றால் போய்விடும் என்று சொல்லிவிடுவார்கள்.
4.அதனால் அதைச் சாப்பிட மாட்டார்கள்…. ஒதுக்கி விடுவார்கள்.

இது மாதிரிப் பழக்கங்களை ஏற்படுத்திவிடுகின்றார்கள்.

வெகு தூரத்துக்குச் சென்று போரில் ஈடுபடும் போது அது முடிந்து தன் நாடு திரும்புவதற்குக் காலமாகின்றது. தன் குழந்தைகள் வளர்ச்சி ஆகிவிடுகின்றது.

நாடு திரும்பும் பொழுது தன் இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அத்தகைய சாஸ்திர விதியை உருவாக்கினார்கள்.

உதாரணமாக வெண்டைக்காயை ஒதுக்கி வைக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். எங்கேயாவது விருந்து வைக்கப்படும் பொழுது அந்த விருந்திலே இந்தக் காயை அவர்கள் ஒதுக்குவார்கள்.

அந்தக் காயை ஒதுக்கும் போது தான்… ஓஹோ…! நம் இனம் என்று தெரிந்து துப்பு விசாரிப்பார்கள். அவர்களுக்குள் சாஸ்திர விதிப்படி என்னென்ன செய்வீர்கள்…? என்று கேட்பார்கள்.

நாங்கள் இன்னென்ன முறைப்படி செய்வோம் என்று சொன்ன பின் அதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின் “இது நம் ஆள்…” என்று கண்டு கொள்வார்கள்.

இதற்காக வேண்டித்தான் சாஸ்திர விதிகளை அன்றைய அரசர்கள் உருவாக்கினார்கள்.

அதாவது அரசனுடைய ஆணைப்படி குலதெய்வம் என்று ஒன்றை அடிப்படையாக வைத்து… அந்த வழிகளில் சென்று ஒருவருக்கொருவர் இனம் கொண்டுள்ளக் கூடிய நிலைக்கு வைத்தார்கள்.
1.என் குலத்திற்கு இன்ன காய்… கத்திரிக்காயோ வெண்டைக்காயோ ஆகாது
2.எங்கள் குலதெய்வத்திற்கு இது ஆகாது என்றும் சொல்லிவிடுவார்கள்.

ஏனென்றால் அப்படி இந்தக் காய்கள் ஆகாது என்று தெரியப்படும் பொழுது தன் இனம் என்பதைக் கண்டு கொள்வதற்காகச் சில வித்தியாசமான நிலைகளை செய்து உருவாக்கி வைத்துக் கொள்கின்றார்கள்.

1.அன்றைய அரசர்கள் வகுத்த வழிப்படித் தான் இன்றும் நாம் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடித்துக் கொண்டுள்ளோம்.
2.ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லவில்லை.

ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் குருநாதர் உணர்த்தியதால் உங்களுக்கும் இதை இப்பொழுது தெரியப்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன்,

ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.

இப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…!

1.பார்…! சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…?
2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்..! என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…!
3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.
4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ தியானம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.

சண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கி விடுகின்றோம். தவறு செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றி விடுகின்றது.

இங்கே உபதேசத்தைக் கேட்கின்றீர்கள்.
1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..!
3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுக்குள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது).

கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.

நாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை…! என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.

1.எத்தனையோ கொலை செய்கின்றான்… அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..!
2.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…?

ஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…?

மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ…? தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா…? என்றால் இல்லை..! அந்த உணர்வுகளே வருவதில்லை.

அதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலை துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று எண்ணி
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

தூப ஸ்தூபி

 

மாரியம்மன் கோயிலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் திரும்பும் பக்கமெல்லாம் ஊருக்குள் வைத்திருப்பார்கள்.

நாம் நல்லதைத்தான் ஒவ்வொரு நிலையிலும் நினைக்கின்றோம். ஆனால் நம்மை அறியாமலே வேதனைகள் புகுந்து விடுகின்றது. அந்த விஷமான உணர்வுகள் வந்து நோயாகி விடுகின்றது.

அதை நீக்குவதற்காக வேண்டி… மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று மாரியம்மனைப் பார்த்து அதை எடுக்கும்படி சொல்கின்றார்கள். அதாவது…
1.பேரண்டத்தின் பேருண்மையைக் காட்டிய…
2.தீயதைச் சுட்டெரித்து ஒளியின் சுடராகச் சுழன்று கொண்டிருக்கும்
3.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும் என்று நினைவுபடுத்தினார்கள்.

நமக்கு யாரும் இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது யாம் சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இல்லை

மாரியம்மனுக்கு ஆட்டைக் கொடுத்து கோழியைக் கொடுத்து கருவாட்டுக் கறியை வைத்து வணங்குபவர் உண்டு. எந்தெந்த அசிங்கமான பொருளைச் சாப்பிடக் கூடாதோ ஒரு சில இடங்களில் இதையும் செய்கின்றார்கள்

கெட்டுப் போன பொருளை உபயோகப்படுத்தினால் என்ன செய்யும்…?

அது நம்மைக் கருவாடாக வாட்டிவிடும்… கெட்ட நாற்றங்களை நமக்குள் உருவாக்குகின்றது. கெட்ட பேச்சுகளைப் பேச வைக்கிறது… கெட்ட உணர்வுகளை நமக்குள் தூண்டுகின்றது. நம்மை அறியாமலே அந்த தீமைகள் நம் நல்லவைகளை அழித்து விடுகின்றது.

அதைச் சுட்டுப் பொசுக்க… மெய் ஞானிகள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று
1.அங்கே தூப ஸ்தூபியை வைத்துக் கவட்டையை வைத்து அக்கினிச் சட்டியைக் காண்பித்து
2.திறந்த வெளியிலே விண்ணை நோக்கி ஏங்கி அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

யாராவது அப்படிச் செய்கின்றார்களா…?

காரணம்… அந்த நல்ல வினையை நாம் சேர்க்க வேண்டும். அதாவது தனக்குள் வரும் தீமையான வினைகளைச் சுட்டுப் பொசுக்கும் அந்த நல்ல வினைகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

இனி எதிர்காலத்திற்காக வேண்டி இதை நீங்கள் செயல்படுத்துங்கள். ஆலயம் என்பது நம்மைப் பண்படுத்தும் இடம் அது.

அங்கே அர்ச்சனை செய்து நல்ல பலகாரங்களை வைத்து யாகத் தீயில் பல பொருள்களைப் போட்டு புகையைப் போட்டு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் குறைகளையும் சொல்வதற்குண்டான இடம் அது அல்ல.

1.நமது உயிர் ஒரு நெருப்பு நமது உடல் ஒரு குண்டம்.
2.இந்தக் குண்டத்திற்குள்… மெய்ப் பொருளைத் தனக்குள் போட்டு
3.அதன் வழி இந்த உடலுக்குள் வரக்கூடிய மணத்தைப் பார்வையாலும் சொல்லாலும் செயலாலும்
4.உலகம் முழுவதற்கும் தன் உணர்வின் சக்தி கொண்டு மக்களை மகிழ்விக்கும் செயலை உருவாக்குவது தான் இந்த யாகக் குண்டம்.

ஆகவே… அந்த ஞானி காட்டிய வழியில் அக்கினியை மூட்டுங்கள். அந்த அக்கினியை மூட்டிக் கொண்டிருப்பது “ஓங்காரம்…”

கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே உயிரிலே செருகப்பட்டு “ஓ…..ம் என்ற உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வுகளைத் தடுத்து விட்டு…” மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்வதற்கும் வாழ்க்கையில் அறியாது தத்தளித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் “நல்ல உணர்வுகளை மீண்டும் செம்மையான நிலைகள் செயல்படுத்துவதற்கே…” இந்த உபதேசம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும்…
2.பிரபஞ்சத்திற்குள் உருபெற்ற சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் எண்ண அலைகளையும் உங்களுக்குள் கலவையாகச் சேர்த்து
3.சப்தரிஷிகள் அருள் ஒளி இங்கே படர்ந்து கொண்டிருப்பதை
4/நீங்கள் நினைத்தவுடன் எடுக்கும் நிலைகளுக்குத் தான் உபதேசிக்கின்றோம்.

சாதாரண மனிதருடன் நாம் கலந்து உறவாடும் போது… பத்து வருடத்திற்கு முன் ஒருவன் துன்பம் செய்தான் என்று இருந்தாலும் திடீரென்று அதை இப்பொழுது நாம் எண்ணினால் நம் மனதை அது துடிக்கச் செய்கின்றது.

அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய காரியங்களைத் தடைப்படுத்துகின்றது. உணவையும் அஜீரணமாக்கி நஞ்சாக ஆக்குகின்றது.

அதைப் போல ஒவ்வொரு நிமிடமும் துன்பங்கள் நேரும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.துன்பத்தை விளைய வைக்கும் தீமைகளை அது கருக்கிவிட்டு
2.நல்ல உணர்வின் தன்மையை ஊட்டுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.
3.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப இணையச் செய்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக சிலர் சங்கடமாகப் பேசுகிறார்கள்… அல்லது அவசியமில்லாததைப் பேசுகிறார்கள்… இதை எல்லாம் சந்தர்ப்பத்தால் பார்க்க நேருகின்றது,

அப்பொழுது உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் சாக்கடை நீர் போகின்றது. கல்லைக் கொண்டு எவனோ எறிகின்றான். சாக்கடையில் விழுந்து நம் மீது அது பட்டு விடுகிறது.

அல்லது ஒரு பன்றி சாக்கடைக்குள் இருந்து எழுந்து போகிறது. வாலை வீசிக் கொண்டு போகிறது. நம் மீது அந்த அழுக்கு பட்டுவிடுகிறது…?

நல்ல சட்டை போட்டுச் சுத்தமாகப் போனேனே… இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி விட்டு
1.அடுத்து என்ன செய்கின்றோம்…?
2.அதைத் துடைக்கத்தானே முயற்சிக்கின்றோம்…!

ஐய்யய்யோ.. இப்படிப் பட்டு விட்டதே…! ஐய்யய்யோ…! இப்படிப் பட்டு விட்டதே…!” சொல்லிக் கொண்டே மட்டும் இருக்கின்றோமா…? இல்லை. புறத்தில் அழுக்குப் பட்டால் உடனே அதைத் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா…!

அதே போல அகத்திற்குள் வரும் அழுக்குகளைத் துடைக்க வேண்டும் என்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் கண் கொண்டு பார்த்த தீமையான உணர்வு நம் ஆன்மாவிற்குள் (நம் நெஞ்சுப் பகுதிக்கு முன்பாக) வருகின்றது. ஆன்மாவிலிருந்து மூக்கு வழி சுவாசிக்கும் பொழுது உயிரிலே படுகின்றது. உயிரிலே பட்டதும் உணர்ச்சிகளாகி இந்த உணர்வுகள் தான் அறியச் செய்கிறது. உடல் முழுவதும் பரப்பச் செய்கிறது.

அப்பொழுது உங்கள் நினைவை எங்கே கொண்டு வரச் சொல்கிறேன்…?
1.யாம் உபதேசித்து உங்களிடம் பதிவாக்கிய உணர்வுகள் இங்கே இருக்கின்றது
2.ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவை உயிரிடம் ஒன்றிப் புருவ மத்தியில் நினைக்க வேண்டும்
3.கண்ணின் நினைவை உயிருடன் சேர்த்தால் “அகக்கண்…!”
4.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த இடத்தில் அடைக்கப்படும் பொழுது
5.தீமைகள் எதுவுமே புகாதபடி தடுக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று மேலே சொன்ன மாதிரி இடைமறித்து இப்படி உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்வதில்லை. ஆனால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நம்மைக் குற்றவாளியாக ஆக்குகின்றது. இது நிச்சயம்…!

உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைத் துடைத்துவிட்டு
1.யாரை நாம் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இதைக் கலந்து
3.இந்த அருள் உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்
4.நமக்குள் வருவது இப்படி மாற்றம் அடைந்து விடுகிறது.
5.இதை நாம் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வருகின்றோம் நமக்கு முன் உள்ள ஆன்மாவில்…! (இது முக்கியம்)

ஏனென்றால் அவன் நினைவு வந்ததும் எடுத்துக் கொடுப்பது ஆன்மாவாக இருந்தாலும் நாம் இப்படி மாற்றிப் பழகியவுடன்
1.அவன் நினைவை நமக்கு\ள் இழுக்காதபடி
2.துருவ நட்சத்திரத்தின் நினைவு வந்து நமக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

இது அரும் பெரும் சக்தி… நாம் அதை எடுத்து…எடுத்து…எடுத்து…! இதைக் கூட்டிப் பழக வேண்டும். நாம் எல்லோருமே இதைப் பழக வேண்டியது மிகவும் அவசியம். (பெரும்பகுதியானவர்கள் புருவ மத்தியை நினைப்பதில்லை – அதை மாற்ற வேண்டும்).

“உங்கள் துன்பங்கள் அகல வேண்டும்…” என்பதே என்னுடைய பிரார்த்தனை

 

உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களிடம் பேசும் பொழுது சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் இது போன்ற உணர்வுகள் வளர்ந்து உங்கள் நல்ல குணங்கள் அடைபட்டு விடுகின்றது.

அடைபட்டுக் கிடந்த அந்த நல்ல குணங்களை மீட்டத் தான் யாம் உபதேசித்தது. உபதேசித்த அந்த உணர்வுக்கு வலுக் கூட்ட உங்களுக்குள் காந்த சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் எல்லா குணங்களிலும் சப்தரிஷி மண்டல உணர்வுகளையும் நட்சத்திரங்களுடைய உணர்வுகளையும் தூண்டி
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து
3.எல்லோருடைய உள்ளங்களிலும் அதைப் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால்… எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் வந்திருப்பீர்கள்.

ஒருவருக்கு வீட்டிலே கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்குத் தன் பிள்ளை சொன்னபடி கேட்காதபடி இருக்கும்… ஒருவருக்கு நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்கு உதவி செய்து அதனால் தொழிலில் தொல்லைகள் அனுபவித்து அதனால் கஷ்டமாக இருக்கும்… ஒருவாருக்கு வியாபாரத்தில் மந்தமாக இருந்திருக்கும்… எதை எடுத்தாலும் எனக்குத் தொல்லையாகவே இருக்கிறது…! என்றும் இப்படி எத்தனையோ பேர் வந்திருப்பீர்கள்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்குள் உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசத்தைக் கொடுத்து
3.மகரிஷிகளின் அருள் சக்தியை அந்த இடத்தில் அடைத்து வைத்து உங்களுக்குள் சக்தி கூடும்படிச் செய்கின்றோம்.

குழம்பிலே புளிப்பு காரம் கசப்பு துவர்ப்பு உப்பு இவையெல்லாம் போட்டு அதை எப்படி ருசியாகக் கொண்டு வருகின்றோமோ இதைப் போன்று
1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகளை நுகரும்படிச் செய்து
2.அதைப் பெறுவதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டும்படிச் செய்து
3.இந்த உணர்வினை ஒலிகளாக எழுப்பும்படி செய்து அதைச் சூரியனுடைய காந்த சக்திகள் கவரும்படிச் செய்து
4.கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளிலே ஊடுருவச் செய்து
5.ஊடுருவிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் இருக்கும் 1008 குணங்களிலும் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் அந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.

எனது குருநாதர் எனக்கு எப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ அதே போலத்தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டும்படிச் செய்து… அதைத் தட்டி எழுப்பி துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் உடலிலிருந்து நீங்க வேண்டும் என்று… மகரிஷியின் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி… தீமைகள் அகன்று நன்மையை உருவாக்கச் செய்கிறோம்.

உங்கள் அனைவரையும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பும்படி செய்து அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் நிரப்பி அந்த அடிப்படையில் நீங்கள் தியானம் எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உங்கள் உடலில் வந்த துன்பங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

எனக்குத் துன்பத்தைக் கொடுத்துத் தான் குருநாதர் எல்லாமே தெரிய வைத்தார். ஆனால்
1.உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது இந்த முறைகளைக் கையாண்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்றுத் தீமையிலிருந்து மீண்டு உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்தேன் என் துன்பம் நீங்கியது நான் நன்றாக ஆனேன் என்று நீங்கள் சொல்ல முடியும்.
1.கஷ்டம் இல்லாது நீங்கள் பெறுகிறீர்கள்.
2.ஆகையினால் நான் லேசாகச் சொல்கிறேன் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
3.வாக்குடன் கூடி உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்… அந்த வாக்கை நீங்கள் மீண்டும் எண்ணினால் சீக்கிரம் நல்லதாகும்.

எனக்குத் தொல்லை கொடுத்தாய்… “நீ உருப்படுவாயா…?” என்ற அடுத்தவர் சொல்லை வாங்கிக் கொண்டோம் என்றால் அது பதிவான பின் வியாபாரத்தில் மந்தம் உடலில் கை கால் குடைச்சல் என்று உங்கள் உடலை எப்படி அது கீழே கொண்டு போகின்றதோ இதே மாதிரி அந்தத் துன்பத்தைத் துடைப்பதற்கு
1.சாமி சொன்னார்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைத்து
2.அதை எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்தச் சக்தி உங்களுக்கு உதவி செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணும் பொழுது கல்யாணராமா…! (மகிழ்ச்சியைப் பெருக்கச் செய்யும் நிலைகள்)
2.அந்த மகிழ்ச்சியை உருவாக்குவதற்குத் தான் கோவில்களில் தெளிவாகக் காட்டுகிறார்கள்.

அரசன் மதத்தின் அடிப்படையில் அரசு ஆட்சி புரிவதற்கு மக்களை ஒன்று திரட்டினாலும் மக்கள் மத்தியிலே அதே மதத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து செய்யும் நிலையில் வருகிறார்கள்.

அரசன் தன் ஆசையின் நிலை கொண்டு இதை எல்லாம் செய்தாலும் அந்த அரசனுக்குக் கீழ் தான் மக்கள் இருக்கிறார்கள். அரசனால் உருவாக்கப்பட்ட மதமாக இருந்தாலும்…
1.ஞானிகளோ சாதாரண மக்களும் அவர்கள் தத்துவத்தைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தினார்கள்.
2.அப்படி உருவாக்கப்பட்டது தான் ஆலயத்தின் சாஸ்திரங்கள்.

எல்லோருடைய பகைமைகளையும் அந்த ஆலயத்தில் மறக்கச் செய்கின்றார்கள். ஒற்றுமை ஏற்படும்படிச் செய்கிறார்கள்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக ஆனது. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நம் பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன்னாடி பரவச் செய்கிறது. அதிகாலை 4.30லிருந்து 6.00 மணி வரை நம் புவிக்குள் பரவச் செய்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருந்தால் காலையில் 4 மணிக்கு எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் பரவ வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலையில் அவ்வாறு எண்ணினால் மனிதர்கள் ஈர்க்க மறுத்த… மனிதர்கள் பிடிப்பில்லாத மற்ற தீமையான உணர்வுகளை எல்லாம்.. காலை 6 மணிக்குச் சூரியனின் ஒளிக்கதிர்கள் கவர்ந்து மேலே கொண்டு சென்று பின் கடலுக்கடியில் அமிழ்த்தி விடுகின்றது
1.நம் ஆன்மா தூய்மை அடைகின்றது.
2.நமக்கு முன்னாடி இருக்கும் இந்தக் காற்று மண்டலம் (பரமாத்மா) தூய்மை அடைகின்றது.

அதற்குத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்த்து அதிகாலையில் வணங்கும்படிச் செய்கிறார்கள்.

அங்கே இருக்கும் ஆற்றிலே உடல் அழுக்கையும் போட்டிருக்கும் உடைகளின் அழுக்கையும் போக்குகின்றோம். அப்படியும் போகவில்லை என்றால் சோப்போ மற்றதையோ போட்டுத் தூய்மையாக்குகின்றோம்.

தூய்மையாக்கிய பின் அந்தப் பிரம்ம முகூர்த்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்கும்படிச் செய்கிறார்கள்.
1.நாம் அந்த அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்துக் (திருமணம்) கலந்து கொண்டால்
2.அந்தச் சக்தி நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையாகின்றது
3.அந்த ஒளியின் கதிராக தனக்குக் கீழ் அதை மற்றதை இயக்கும் சக்தியாகப் பெறும்.

அந்த ஆற்றலை வைத்து பூமியில் உள்ள ஓசோன் திரை கிழிந்ததையும் அடைக்க முடியும். எப்படி…?

ஓசோன் திரை கிழிந்து அதனுடைய விளைவுகள் என்னென்ன செய்கிறது…? விண்வெளியிலிருந்து வரும் விஷத்தன்மைகள் அதன் வழி கூடி நம் பூமிக்குள் பரவிக் கொண்டே உள்ளது.

ஆனால் அது எல்லா இடத்திலும் நிற்காது. அதாவது விஷத்தன்மையாகப் பூமியில் பரவினாலும்…
1.தன் இனத்தை எடுத்து அங்கங்கே ஒரு குவியலாக வரும்.
2.குறிப்பிட்ட பகுதியில் இருக்கும். எல்லா இடத்திற்கும் போகாது.

நாம் வசிக்கும் தெருவையும் ஊரையும் காக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோரும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இந்த அலைகளைப் பரப்பினால்
2.இந்த அலைகள் அடர்த்தியாக வந்தவுடன்
3.அந்த விஷத் தன்மைகளை விலக்கி விட்டுவிடும்.
4..இந்த ஒரு பகுதியாகவது கொஞ்சம் காக்கப்படும்
5.அப்படிக் காக்கப்பட வேண்டும் என்பதற்கு தான் இதைச் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.

நுரையீரல்:-
கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் அங்கே பெறச் செய்தால் அதில் உள்ள ஆஸ்த்மா டி.பி. போன்ற அணுக்களை மாற்ற உதவும்.

ஜீரண உறுப்புகள்:-
கண்ணின் நினைவை இப்பொழுது உங்கள் குடல்களில் செலுத்துங்கள்.

குடல்களில் வேதனை என்ற விஷத்தன்மைகள் இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குடல்களில் உள்ள அணுக்கள் வீரியமாகின்றது… உற்சாகம் அடைகின்றது.

அப்பொழுது அந்த விஷத்தின் தன்மையை அடக்கி குடல் உறுப்புகளைச் சீராக இயக்கக்கூடிய அணுக்களாக மாறுகின்றது.

கல்லீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் கல்லீரல் பெற வேண்டும் என்று எண்ணினால் அதில் உள்ள விஷத்தன்மை குறைந்து சீராக வடிகட்டும் தன்மையும் நம் உடலில் ஆரோக்கியமான நிலையையும் உருவாக்கும். நம் உடலில் உள்ள மண்ணீரலுக்கும் இதைப் போன்று செயல்படுத்துங்கள்.

மண்ணீரல் (பித்த சுரப்பிகள்):-
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் நுகர்ந்து மண்ணீரலுக்குள் செலுத்தப்படும் பொழுது அந்தப் பித்த சுரப்பிகளில் விஷத்தைத் தணித்திடும் அருள் சக்தி அங்கே பெற முடியும்.

எப்படி ஒரு நாகம் விஷத்தைப் பாய்ச்சி தன் உணர்வை எடுத்து நாகரத்தினமாக மாற்றுகின்றதோ இதைப் போல்
1.நம் உடலில் விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தியும் இல்லை.
2.அளவுக்கு அதிகமாக ஆனாலும் நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் விஷத் தன்மையாக மாறுகின்றது,

ஆகவே விஷத்தை மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் பித்த சுரப்பிகளில் சேர்க்கப்படும் பொழுது
1.அது சம அளவாக மாறி சாந்தம் கொண்ட அணுக்களாகி
2.நல்ல ஜீரணிக்கும் சக்தியாக உருவாகின்றது,

இதைப் போல் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் செலுத்திக் கொண்டு வாருங்கள்.

கிட்னி (சிறுநீரகங்கள்):-
அடுத்து உடலில் உள்ள கிட்னிக்கு (சிறுநீரகங்கள்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பரவச் செய்யுங்கள்.

கிட்னியில் விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டால் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் பலவீனமடைந்து விடுகின்றது. அது பலவீனமடைந்து விட்டால் விஷத் தன்மைகளை வடிகட்டும் தன்மை இழந்துவிடும்.

1.வடிகட்டாத அந்த விஷத் தன்மைகள் இரத்தத்தில் கலந்து விட்டால்
2.அது விஷம் தோய்ந்த இரத்தமாகி எல்லா உறுப்புகளையும் சீராக இயக்காதபடி
3.உப்புச் சத்து… சர்க்கரைச் சத்து… போன்ற நிலைகள் அதிகரித்து விடும்… சமப்படுத்தும் தன்மையையும் இழந்துவிடும்.

அதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை கிட்னியை உருவாக்கிய அணுக்களில் பாய்ச்சி அதை வீரியமாக்கி விஷத்தை வடிகட்டும் சக்தி வாய்ந்த கிட்னியாக உருவாக்குங்கள்… உங்களால் முடியும்…!

இருதயம்:-
கண்ணின் நினைவை இருதயத்தில் செலுத்தி அந்த நரம்புகள் பலவீனம் அடைந்திருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கப்படும் பொழுது இருதயத்தை இயக்கும் அந்த நரம்புகளுக்கு வலு சேரும்.

1.அதிலே அடைப்புகள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே அதிகரிக்கப்படும் பொழுது
2.இரத்தத்தின் அழுத்தம் அதிகமாகி அதை எல்லாம் கரைத்துவிடும் சக்தி கிடைக்கின்றது.
3.கரைத்துவிடும்… அல்லது அந்த அடைப்புகள் அகன்றுவிடும்.

ஆகையினால் இதைப் போல் நீங்கள் எண்ணி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை பெறச் செய்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் வலுப் பெறச் செய்யுங்கள்.

1.நோய்கள் வராது தடுக்க முடியும்
2.ஒளியான அணுக்களை உடலில் உருவாக்க முடியும்.
3.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.

திருச்சிற்றம்பலம்

 

பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.

எப்போது…?

ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.

மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!

நடராஜா என்று திருமூலர் தான் பெயர் வைக்கின்றார். நடராஜா என்றால் எது…? நமக்குத் தெரியாது.
1.இங்கே உருவம் கிடையாது நடராஜாவை வைத்திருக்கின்றார்கள்.
2.நம் பூமி நிற்காமல் அது ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.
3.அதாவது அதற்குள் தோன்றிய நடனங்கள் பல.

பூமி நிற்காமல் ஓடுகின்றது அதற்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் தன்மையும்… அது மோதும் நிலைகள் கொண்டு ஒவ்வொரு அணுக்களின் செயல்கள் எப்படி இருக்கின்றது…?

ஒலி ஒளி…! என்ற நிலைக்கு இந்தப் பூமியின் தன்மை மாறிய பின் பல ஆயிரம் உடல்களாக எடுத்து ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்குகிறது.
1.புலிக்குக் கோபம்
2.மானுக்குச் சாந்தம்
3.எருமை மாட்டிற்கு அசுர குணங்கள் என்று
4.தனக்குள் வளர்த்துக் கொண்ட அது அனைத்தையும் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு
4.1008 நடனங்களைக் காட்டுகின்றார் – சிவ நடனம்.

நடராஜா இந்த பூமி ஓங்கார நர்த்தனம்…! அது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் ஓங்காரக் காளி… தீய சக்திகள் அனைத்தையும் அழிப்பதை… அசுரனைக் காலிலே போட்டு மிதிப்பதாகக் காட்டுகின்றார்கள்.

உருவத்தைக் காட்டும் போது… பூமி சுழலும் பொழுது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி தனக்குள் வருவதை அது நசுக்கி தீயதை மிதிகும் நிலைகளுக்குக் காட்டப்பட்டுள்ளது. அசுரனைக் காலிலே மிதிப்பதாகக் காட்டுகிறார்கள்.

அதைப் போல மனிதனுக்குக் கோபம் வரும் பொழுது சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எரிச்சலாகின்றது. அதே சமயம் அந்த உணர்வின் சக்தி நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் பட்டு எரிச்சலான உடனே
1.உடலான சிவம் ஓங்கார நடனமாகி…
2.இரு… நான் உன்னை அழித்து விடுகின்றேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.

சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் இந்த உணர்வின் சக்தியான நிலைகள் “ஒலி ஒளி…”

அதாவது… தாவர இனங்களுடைய மணம் – அதனுடைய குணம்…! அதனுடைய உணர்வு – இயக்கம்.

மிளகாயை வாயிலே போட்டால் காரமான அந்த உணர்ச்சி “ஆ…” என்று அலறச் செய்கின்றது. கசப்பை வாயிலே போட்டால் உமட்டலாகி… “ஓய்…” என்று சப்தம் வருகின்றது.

இதைப் போன்று தான் பூமி நடராஜா என்று நிற்காமல் சுழல்வதனால்
1.அதிலே ஜீவன் கொண்ட நாம் எப்படி இயங்குகிறோம் என்பதே இந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.
2.சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.

தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.

தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்

அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

1.நடராஜா என்கிற பொழுது நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை இங்கே இயக்குகின்றது.
2.விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா… நீ எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றாயோ அது இந்த உடலை அந்த நிலைகளுக்கு ஆளாக்குகின்றது.
3.கீதையினுடைய தத்துவமோ நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!

உடலான பிரபஞ்சத்தை “ஒளிப் பிரபஞ்சமாக உருவாக்குங்கள்…”

 

நாம் எப்படி வந்தோம்…? நாம் இனி எங்கே போக வேண்டும்…? என்று கண்டு கொண்ட ஞானிகள் விண்ணிலே உள்ளார்கள். அவன் உணர்ந்த ஒளி அலைகளை இங்கே பூமிக்குள் அனுப்புகின்றான். அந்த அலைகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தான் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.
1.உங்களை அறியாது இயக்கக்கூடிய விஷமான நிலைகளுக்குள் அதை இணைப்பதற்கு
2.உங்கள் நல்ல எண்ணங்கள் எதுவோ அதற்குள் இதை பதியச் செய்ய வேண்டும்.
3.நீங்கள் நல்லதை எண்ணும் பொழுது அதற்கு வலுவூட்டவே இதை உபதேசிக்கின்றோம்.

சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வுகளைக் கண்டுணரும் பொழுது அதை அறிகின்றீர்கள். அப்படி அறிந்து மற்றவர்களைக் காப்பாற்றினாலும் நுகர்ந்த அந்த வேதனை நல்ல குணத்திற்குள் சுழன்று கொண்டு மீண்டும் அந்த நல்லதை எழாத வண்ணம் செய்து விடுகின்றது.

ஆகவே அதிலிருந்து மீள அந்த மெய் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கச் செய்து… புலனறிவுக்குள் நுகரும்படி செய்து… நல்ல உணர்வுகளுக்கு வலு சேர்ப்பதற்கே இப்பொழுது உபதேசிப்பது. அதாவது உங்களுக்குள் செல்களாக அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிடும் சக்தி பெற்ற நிலையில்
1.வாழ்க்கையில் தன்னை அறியாமல் சேரும் நஞ்சான உணர்வுகளை நீக்குவதற்கு
2.அந்த மெய் ஞானிகள் உணர்வை வினையாகச் சேர்த்து தனக்குள் வரும் தீய வினையை நீக்கி
3.தன் நிலை அடைந்து ஒளியின் சரீரமாகப் பெறச் செய்வது தான் அது.

சூரியன் கோள்களின் ஆற்றலை எடுத்து அந்த விஷத்தை மாற்றி ஒளியின் சுடராக இந்த பிரபஞ்சத்தை எப்படி உருவாக்குகின்றதோ இதைப் போன்றே
1.உயிரின் நிலைகள் கொண்டு இந்த உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையைப் பல நட்சத்திரத்தின் நிலைகள் இருந்தாலும்
2.மெய் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து இந்த உடலான பிரபஞ்சத்தை ஒளியான சரீரமாக்கி… ஒளிப் பிரபஞ்சமாகி
3.விண்ணிலிருந்து வரும் உணர்வினை எடுத்து ஒளிச் சரீரமாக மாற்றும் நிலை தான் மனிதனின் கடைசி நிலை.

அப்படி மாற்றிய நிலைகள் தான் என்றும் 16 என்ற நிலையான ஒளிச் சரீரம் பெற்று பெரு வீடு பெரும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலம்.

அங்கிருந்து உமிழ்த்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மை மனிதனாக வாழ்ந்த காலங்களில் அவர் உடலில் விளைய வைத்து வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியிலே படரச் செய்துள்ளது.
1.அதைக் கவர அதை ஒத்த மணம் நமக்குத் தேவை. அந்த ஆற்றல் நமக்குத் தேவை.
2.அதைப் பெறுவதற்குத் தான் மெய் ஞானிகளின் அருள் வாக்கை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

நஞ்சை முறித்து விண் சென்ற ஞானியின் ஆற்றல்மிக்க எண்ண அலைகள் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சக்தியை உங்கள் சுவாசத்திற்குள் செலுத்தச் செய்கின்றோம்.

உங்களைச் சூழ்ந்து துன்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்… நல்லதைச் சிந்திக்க விடாது தடைப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மையை… அந்த நஞ்சினை விலக்கி “உணர்வை ஒளியாக மாற்றும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்…” என்று தான் உபதேசிப்பது.

சந்தர்ப்பத்தால் நீங்கள் சுவாசித்த குணக் கேடான உணர்வுகள் அனைத்தையும் வலுவிழக்கச் செய்ய “நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பி…” மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறச் செய்யும் பக்குவ நிலை ஏற்படுத்துவதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் எனக்குள் மெய் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கி… நல்ல குணங்களைத் தட்டி எழுப்பி… “ஒவ்வொரு உணர்விற்குள்ளும் ஞானிகள் உணர்வை எப்படிப் பதிவு செய்தாரோ…” அதை நான் நினைவு கொண்டு கூர்ந்து எண்ணத்தைச் செலுத்தி… காற்றிலே பரவியுள்ள மெய் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து என்னைப் பக்குவப்படுத்தினேனோ… அதே நிலைகளைத் தான் உங்களுக்கும் ஊட்டுகின்றேன்.

1.உங்களை அறியாது தீய நிலைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்
2.நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினைக் கொடுக்கப்படும் பொழுது
3.அதை ஏற்றுக் கொண்டோர் உள்ளங்களில் ஊடுருவி அது உங்கள் துன்பத்தை விலக்க உதவுகின்றது.

“தீமை உங்களுக்குள் என்றுமே வராதபடி…” நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பி உங்களை வாழ வழி வகுக்கச் செய்கின்றோம்.

ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் நாம் உபதேசித்து வந்தாலும் சிலர்… கோவிலுக்குச் செல்ல வேண்டாம் சாமியே கும்பிட வேண்டாம் என்று “சாமி சொல்கிறார்…” என்று இப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கின்றார்கள்.

நம் உடல் ஒரு கோவில்…! நம் உடலில் இருக்கக்கூடிய ஆந்த நல்ல குணங்களைத்தான் ஆலயத்திலே காண்பிக்கப்பட்டுள்ளது. அதை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று தான் அன்று ஞானிகள் சொன்னார்கள். அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து அதைச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

திருமூலர் சொன்ன திருமூல மந்திரத்தின் நிலைகளை “வெறும் மந்திரமாகத்தான்…” மாற்றிக் கொண்டார்கள்.
1.திருமூலம் – திரு என்பது உயிர்… மூலம் என்பது உயிர்
2.மூலத்திற்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒலி ஒளியாக எப்படி இயங்குகின்றது…? என்று தான் அவர் உணர்த்திச் சென்றார்.

பதஞ்சலியாகப் பாம்பின் உடலிலிருந்து மீண்டு இன்னொரு மனித உடலுக்குள் சென்ற பின் மெய் உணர்வின் தன்மையை உணர்கின்றார்.
1.அந்த ஏழ்மையான சரீரத்திற்குள் வந்த பின்பு தான் உயர்வையும் தாழ்மையையும் இரண்டும் இணைக்கின்றது.
2.அப்படி இணைத்துப் பார்க்கப்படும் பொழுது பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்துணர்ந்து
3.அந்தப் பக்குவ நிலையைத் திருமூலர் காட்டுகின்றார்.

அவர் உணர்த்திய மெய் உணர்வுகளை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தினசரி வாழ்க்கையில் குறைகளைக் காணும் பொழுது தான் விலகிச் செல்கின்றோம். குறையை உணர முடியவில்லை என்றால் அதிலேயே வீழ்ந்து மடிவோம்.

மற்ற உயிரினங்கள் எல்லாம் வருகின்றது, ஒரு விளக்கு (தீ) எரிவதைக் கண்டு வருகிறது. வேகமாக வந்தவுடனே கருகுகின்றது. அதற்குத் தெரியாது. ஆனால் மனிதர்கள் நாம் தெரிந்தவர்கள்.

இதைப் போல் நம்முடைய தூய்மைப்படுத்தும் எண்ணங்களும் உணர்வுகளும் நஞ்சால் கருக்கப்படுகின்றது. எப்படி…?

மற்றொரு மனிதனின் வேதனையை நுகரப்படும் பொழுது உணர்வின் வேகத்தால்… ஆசையின் நிலையாலே…
1.நாம் சரியாக இல்லை என்றால்
2.நம்முடைய நல்ல உணர்வுகளை அது கருக்கிவிடுகின்றது.

விஷம் தாக்கப்பட்டுத் தான் வெப்பம் உருவாகின்றது. அதே விஷத்தின் தன்மை நம்மைத் தாக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை ஆவியாக மாற்றிவிடுகின்றது.

இந்த விஷம் நெருப்பாக மாறுகின்றது. ஆக விஷத்தால் கவரப்படும் பொழுது என்ன செய்கிறது…? எதிலே பட்டாலும் அந்த விஷம் அதைக் கெடுக்கின்றது.
1.அந்த மாதிரி ஆகாதபடி தடுப்பதற்குத்தான்…
2.உங்களுக்கு இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

நாம் இந்த உடலிலே எவ்வளவு நாள் இருக்கின்றோம்…? கோடிப் பணம் பெற்றாலும் இங்கே சரியான மனம் இல்லை என்றால் என்ன செய்யும்…? அந்தச் சொத்தையே பாதுகாக்க முடியாது…! சிதறிப் போகும்.

உங்கள் சொத்தைக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் உழட்டிக் கொண்டிருந்தால் அதைத் திருப்ப முடிகின்றதா…? பெரியவர்களால் சம்பாரிக்கப்பட்டது தான்…! இருந்தாலும் அதை இவர்களால் பாதுகாக்க முடிகின்றதா…?

அவர்களை எண்ணி நீங்கள் என்ன செய்கின்றீர்கள்..? படித்திருக்கின்றீர்கள்…! ஆனாலும் இந்தத் தியான மார்க்கத்தில் வரும் பொழுது
1.இப்படி இருக்கின்றதே..! என்று நீங்களும் உங்களுக்குள் வேதனையைக் கலக்கின்றீர்கள்.
2.அப்பொழுது அந்தச் செல்வம் நமக்கு வேதனைக்குரியதாக ஆகின்றது.

ஒரு நகரையே ஆட்சி புரியும் அந்தக் கால ஜமீந்தாராக இருந்தாலும் அது சிற்றரசருக்குச் சமம். அதனின் விளைவுகள் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது இது பகைமை உணர்ச்சியைத்தான் ஊட்டும். பகையை வளர்க்க முடிகிறது. நல்லதை வளர்க்க முடியவில்லை.

அதற்குத்தான் காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை சேர்த்துப் பழக வேண்டும்.

இதை எடுத்துப் பழகுவதோடு மட்டுமல்லாதபடி அந்தத் துருவ தியானத்தில் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும் வலு கூட்டிப் பழக வேண்டும். அந்தச் சக்தி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நாம் பாட்டன் பூட்டன் முன்னோர்கள் மூதாதையர்கள் உடலை விட்டுப் போயிருந்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைய வேண்டும் என்று அங்கே கரைக்க வேண்டும்.

அவர்களை அங்கே இணைத்து நம்முடைய தூதுவர்களாக ஆக்கிய பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியை எளிதில் பெற முடியும்.
1.அவர்கள் முதலில் ஒளிச் சரீரம் பெற்றுச் சப்தரிஷிகளாக ஆகின்றார்கள்.
2.அவர்களைத் தொடர்ந்து நாமும் அந்த எல்லையை அடைய முடியும்.

இதற்கு முன் பழக்கமில்லை. இப்பொழுது அதை நாம் செய்து வாழ்க்கையில் வந்த தீமைகளிலிருந்து விடுபட்டுப் “பிறவியில்லா நிலையை…” அடைதல் வேண்டும்.

உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று காட்டியது “சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்…”

 

“கண்ணன் கீதா உபதேசம் செய்தான்…” என்றால் நாம் ரோட்டில் செல்லும் பொழுது இங்கே பள்ளம்… இங்கே மேடு… இது தீமையானது… இது கெட்டது…! என்று கண்கள் தான் நமக்கு வழி காட்டுகின்றது.

இதனால் தான் கீதையிலே கண்ணன் அர்ஜுனனுக்கு வழி காட்டிச் செல்கின்றான் என்று சொன்னது. கண் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றான்…?

இங்கே மாடு வருகிறது… இங்கே மனிதன் வருகின்றான்… அவன் தகாத செயலைச் செய்கின்றான்.

நாம் காரை ஓட்டிச் செல்லும் பொழுது எத்தனையோ சந்தர்ப்பங்களைப் பார்க்கின்றோம். ஒருவன் குறுக்கே வருகின்றான்… அவன் மேல் மோதிவிடுவோம் என்று இந்தக் கண் தான் நமக்கு உபதேசிக்கின்றது. ஆகையினால் வண்டியை நீ இப்படி ஓட்டு…! அந்த உணர்வின் இயக்கமாக அங்கங்களை இயக்குகிறது.

நம்முடைய கண் பார்க்கின்றது அந்த உணர்வை இழுக்கின்றது சுவாசிக்கச் செய்கின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் இயங்குகிறது. நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது இயங்கினாலும் இந்த உணர்வுகள் இங்கே வடிகட்டப்படுகின்றது.

இதைப் போல அவன் கொடுக்கும் உபதேசத்தின் தன்மையை
1.தன்னைக் காக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.
2.ஆனால் ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கும்போது அவனைத் தாக்கும் நிலைகளுக்கே என்னை அழைத்துச் செல்கின்றது.
3.அந்த நேரத்தில் அழிக்கும் நிலையாக நல்லதைச் சிந்திக்க முடியாதபடி அந்த வேதனையால் என் நல்ல குணங்களையும் அது அழித்து விடுகின்றது.

ஆகையினால் கீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். விநாயகர் தத்துவத்தில் நீ அதைச் சுவாசிக்கின்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவாகின்றாய்.

இது தான் ருத்ரதாண்டவம்…!

தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இங்கே எப்படி அங்கங்கள் துடிக்கின்றதோ இதைப் போல
1.நீ எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அங்கங்கள் எப்படிப் பாசமாக அணைக்கின்றதோ…
2.நீ எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படி…? என்ற நிலையும்…
3.நடனத்தைப் பற்றி… அபிநயம் – தான் எடுத்துக் கொண்ட இனிமையின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
4.நரம்பியல்கள் – நாதத்தின் தன்மை கொண்டு எப்படி இயங்குகின்றது…? என்பது தான்.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலையும்… ஒரு தாவர இனத்திற்குள் தான் எடுத்துக் கொண்ட மணமும்… அந்த உணர்வின் தன்மை மோதும் பொழுது இலையின் ரூபங்களும்… நாதத்தைப் பற்றி… நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் காட்டி இருக்கின்றார் என்றால் “ஒலி ஒளி என்பதற்குள் உட்பொருள் எவ்வளவோ அடங்கியுள்ளது…”

ஒலியைப் பற்றிப் பல வியாக்கியானங்கள் செய்யலாம் இந்த உணர்வுகள் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்ற மெய் ஒளியைக் காட்டியது “சிதம்பரம் என்ற இந்த ஸ்தலத்தில் தான்…”

1.விண்ணிலே தோன்றிய உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது
2.அங்கே ஓங்காரமாகிப் பல நிலைகளாகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்கினாலும்
3.தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்டவுடன் இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்
4.அதைச் சுவாசிக்கும் உயிரணுக்களுடைய இயக்கமும் அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
5.இந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருவமும் உருமாற்றமும் அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்
6.அந்த உணர்வின் ஒலி கொண்டு ஒளியாக நீ எவ்வாறு ஆக வேண்டும்…? என்று
7.திருமூலர் பாடிய இந்த ஸ்தலத்தின் உண்மைப் பொருளை நாம் இன்றும் காண முடியாத நிலையில் இருக்கின்றோம்.

நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் ஒரு நெருப்பு. அதிலே அருள் உணர்வைச் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகள் உடலில் பரவுகிறது. நம் மூச்சு வழி… சொல் வழிக் கூடி அந்த நல்ல உணர்வலைகள் வெளிப்படுகின்றது. கேட்போர் உணர்வுகளை இது மகிழச் செய்கின்றது.

ஆனால் யாகத் தீயில் நீங்கள் நல்ல சரக்கைப் போட்டால் அங்கே புகை மண்டலமாக வருகின்றது. அந்தப் புகை கண்ணிலே பட்டால் எரிச்சலாகி சுவாசித்தால் நெடியாக வருகிறது.

ஆக யாக மண்டலத்தில் என்ன இருக்கிறது…?
1.புற நிலையைக் காட்டி அதனுடைய நிலைகளை
2.அக நிலைக்கு ஊட்ட முடியாது.

கண்கள் புறக் கண். நம் உயிரோ அகக் கண். புறக் கண்ணால் பார்ப்பதும் உயிரிலே அது வரப்படும் பொழுது அகக்கண்ணாக இருந்து உள் நின்று நம்மை இயக்குகிறது… என்ற நிலையை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது இது துவைதம்.
1.அதாவது உருவம்…
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்…!
3.அந்த அருவம் என்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி..,!

அந்த உணர்ச்சி என்று இயக்கும் பொழுது தான் துவைதம்… அத்வைதம்… விசிஷ்டாத்வைதம்…! தனக்குள் மறைந்து இயக்கும்… இங்கே உணர்ச்சி.

உதாரணமாகக் கண்ணில் பார்த்ததும் என்ன செய்கின்றோம்…? ஒரு பாம்பைப் பார்த்ததும் அந்த உணர்ச்சி தூண்டி “ஐயோ… பாம்பு…!” என்று குதிக்கின்றோம். அதே சமயத்தில் ஒரு அழகான பொருளைப் பார்த்தவுடனே ஆஹா…! என்று நினைக்கின்றோம்.

1.அப்பொழுது அது துவைதம்… உருவம்.
2.அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம்.
3.உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சி.
4.எந்த உணர்வின் தன்மையோ அதனின் உணர்ச்சியை ஊட்டும் நம் உயிர்
5.அதை உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது.
6.கோவிலில் காட்டப்பட்டது உருவம். ஆகவே அந்த நல்ல… உயர்ந்த… தெய்வீகக் குணங்களை உன் உருவமாக்கு…!
7.இது தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

ஒரு வேதனைப்படுபவரை நுகர்ந்து நமக்குள் அதை உருவாக்கப்படும் பொழுது நம் உடல் நலிந்து போகின்றது. சரீரத்திற்குள் மாற்றமாகின்றது.

இது சித்தாந்தம் என்று உடலுக்குள் ஆகும் நிலைகளை சாதாரண மக்களும் உணர்ந்து கொள்ளும் நிலைக்காக அதன் வழியில் தான் ஆலயங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டது.

சாமி மேல் இருக்கும் வைரக் கிரீடத்தைக் கண்களில் பார்த்ததும் நாம் எதை எண்ண வேண்டும்…? அந்த வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல்லை மற்றவர் கேட்கும் பொழுது அவர்களுக்கு அந்த ஜொலிப்பு வர வேண்டும்… சந்தோஷம் வரவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.

சாமிக்குப் போட்டிருக்கும் தங்க நகைகள் எப்படி மங்காதிருக்கின்றதோ அதைப் போல் என் மனது எப்பொழுதுமே மங்காது நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எல்லோருடைய மனதும் தங்கத்தைப் போல் மங்காது இருக்க வேண்டும் என்று உங்களை நான் உயர்த்துகின்றேன். நானும் உயருகின்றேன்.

இதே போல் அந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் எண்ணினால் எப்படி இருக்கும்…? நாம் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று உணர்த்துவதே ஆலயத்தின் பண்புகள்.

யாம் பாய்ச்சும் சக்திகள் உங்களைப் பின் தொடர்ந்து… உறுதுணையாக இருந்து… உங்களைக் காக்கும்

 

1.எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
3.நாம் முதலிலே நலமாக இருக்கின்றோம்.

அந்த மெய் ஒளி நமக்குள் வளர்ந்து சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது. நம் சொல்லைக் கேட்போர் உள்ளங்களையும் மகிழச் செய்கின்றது.

1.அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர்கள் பக்குவமாக என்னுடன் இணைந்து செயல்படும் தன்மையும்
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதும்
3.தடையின்றி வியாபாரம் நடப்பதும்… தடையின்றி மகிழ்ச்சி பெறுவதும்… தடையற்ற நிலையாக நமக்குள் உருவாகின்றது.

ஆகையினால் இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். நாங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயலெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படி வியாபாரத்திற்கோ மற்ற எங்கே சென்றாலும் இதைச் செயல்படுத்துங்கள்.

1.யாம் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகள் எப்பொழுதும் உங்களைப் பின் தொடர்ந்து உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
2.உங்களுக்குள் உயர்வை ஊட்டும்… மெய் ஒளியின் தன்மை எட்டச் செய்யும்.

அதை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆகையினால் நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து எம்மைப் பார்க்கும் பொழுது… சாமி…! நீங்கள் சொன்னபடி நாங்கள் எடுத்தோம்… நாங்கள் நன்றாக இருக்கின்றோம் எங்கள் உடல் நலமானது என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அதிலே தான் எனக்கு மகிழ்ச்சி…!

காரணம் சதா உங்களைத்தான் நான் பிரார்த்தனை செய்கின்றேன். உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உடலைக் கோவிலாக எண்ணி உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணி
1.அந்தக் கோவிலில் மகிழ்ச்சியான நிலைகள் உருவாக வேண்டும்.
2.அந்தக் கோவிலில் இருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று
3. உங்களைத் தான் – நான் பார்த்த கோவில்களை “ஒவ்வொருத்தராக நான் தியானம் செய்கின்றேன்…”

அதிகாலையில் 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கின்றேன். அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

அதைப் பெறும் போது உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே உங்களுக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகள் மாறி… அது நல்லது செய்யும் ஆற்றலாக வரும்.

1.அதைப் பெறச் செய்வதற்கு உங்களுக்கு அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.ஆகையினால் முழு நம்பிக்கையுடன் உங்களை நம்பி நீங்கள் செயல்படுங்கள்.

சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள் ஆனால் “உங்களிடம் அத்தனை சக்தியும் இருக்கின்றது…”

“உங்களுக்கு முன்னாடியே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது…” அதை எண்ணினால் உங்களுக்குள் அது கூடும். நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளியைக் காண முடியும்.

மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை.

ஆகவே… உங்களை நம்பி இதைச் செயல்படுத்துங்கள்.
1.சாமி சொன்னார் என்று சொல்லி…
2.சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமி செய்து கொடுப்பார் என்று எண்ண வேண்டியதில்லை.

உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சுகின்றேன். அது கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனிலிருந்து காந்த அலைகள் வெளி வருகின்றது. பூமி அதை எடுத்துக் கொண்டால் தான் வளர முடியும். பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படருகின்றது. போகும் பாதையில் அதை ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்.

இதைப் போன்று தான் மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
2.அதன் மூலம் நீங்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்
3.காற்றிலிருந்து அந்த மகரிஷிலளின் அருள் சக்தியை நீங்கள் கவர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் அவர்கள் பார்வையில் தீமைகளை எப்படி அகற்றினரோ… எப்படி மகிழ்ச்சி பெறச் செய்தனரோ.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அந்த உணர்வை ஒவ்வொருவரும் தனக்குள் சேர்த்துக் கொள்வதற்கே ஆலயம்.

மகரிஷிகள் அல்லாது நல்லதைக் காக்க முடியாது.

ஏனென்றால் அவர்கள் அத்தகைய பேராற்றல்களைத் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள். அதை நமக்குள் இணை சேர்க்கவில்லை என்றால் கோவிலில் நல்ல சக்திகளைப் பெற முடியாது.

அதற்காக வேண்டி ஒவ்வொரு கோவிலிலும் இன்ன ரிஷி செயல்படுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த ரிஷியைப் பற்றிச் சொல்கிறார்களா…? என்றால் இல்லை.

அன்று ஆண்ட அரசர்கள் மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையை எடுத்து ஆலயம் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

பழனியிலே “முருகா…!” என்று சொன்னால் அந்த ஆறாவது அறிவின் தன்மை தான் அது. ஆக உருவாக்கத் தெரிந்து கொண்டவன் போகன். அவனைப் பற்றி யாராவது நினைக்கின்றீர்களா…?

ஏதோ போய்ச் சாமியைப் பார்த்தோம் என்று வேடிக்கை பார்த்து வரும் நிலை தான். அங்கே பத்தோ ஐம்பதோ கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்தால் போதும்.

போகர் இங்கே தான் இருந்தார். அந்தக் காலத்தில் செப்புத் தகடில் எழுதி வைத்திருந்தார் என்பார்கள். ஆனால் போகன் வாழ்ந்த காலத்தில் எழுத்தே கிடையாது. ஆனால் இவர்கள் எழுதி வைத்திருப்பார்கள்.

1.ஏனென்றால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி எழுத்து கிடையாது.
2.அந்த எழுத்து எழுத வேண்டும் என்றால் கிரந்தம்.
3.கிரந்தம் என்றால் ஒரு செடி என்றால் அந்தச் செடியின் ரூபம்.

அந்தந்தச் செடியின் வடிவத்தைக் காட்டப்படும் பொழுது அதனதன் உணர்வை எடுத்து அதன் வழியே தான் இந்த உணர்வின் மணம்… எண்ணம் இதனுடைய குணம்… என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.

இதைத்தான் கிரந்தம் என்ற நிலையை அந்தக் காலத்தில் காட்டினார்கள்.
1.எதைக் கிரகித்ததோ அதனுடைய அந்தம்.
2.அதனின் இயக்கம் தான் கிரந்தம்.
3.அது தான் அதனுடைய முடிவு.

அந்தக் கிரந்தத்திற்கு இப்பொழுது வேறு வேறு வடிவம் (வட மொழி) கொடுப்பார்கள். கிரந்தம் என்று சொல்வதற்கு ஒரு செடியின் சத்து எங்கே எப்படி இருக்கிறது…? ஆக அதனின் மணம் குணம் தான் எண்ணம்.

1.மிளகாயைச் சாப்பிட்டால் ஆ…! என்ற சொல்லைச் சொல்கிறோம்.
2.அப்பொழுது அந்த எண்ணம் தான் வருகின்றது.
3.அந்தக் கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது
4.அதைச் சொன்னவுடன் அந்த எண்ணம் வருகின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…! கிரந்தம் என்றால் கிரகித்ததைப் பற்றி அன்று ஞானிகள் சொல்லியிருந்தால் இன்று அதை ஒரு மொழி என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

இப்படித்தான் ஞானிகள் கொடுத்த பேருண்மைகள் எல்லாம் காலத்தால் மாற்றப்பட்டு விட்டது. ஆக
1.ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணாது
2.உருவத்திற்குள் அவர்கள் காட்டிய அருவத்தின் சக்தியைப் பெற முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மறைந்த அந்த உண்மைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”

 

உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது உள் புகுந்த விஷமான சக்திகளை… அதனுடைய வலுவை இழக்கச் செய்வதற்குத் தான் கூட்டு தியானங்களில் யாம் உங்கள் எல்லோர் குரல்களையும் எழுப்பச் சொல்லியது.

அவ்வாறு வெளிப்படும் அந்த குரலின் தன்மைகளைக் காந்த புலன்கள் கவர்ந்தாலும்
1.வீட்டிற்குள் புவியின் ஈர்ப்புக்குள் அந்தக் காந்தப் புலன்கள் சங்கடம் சலிப்பு வேதனை இவைகள் பதிந்திருப்பதை
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு கூட்டு தியானத்தில் எல்லோரும் குரல்களை எழுப்பப்படும் பொழுது
3.அந்தத் துன்ப அலைகளை இது வீழ்த்தி நல்ல உணர்வுகளைப் படரச் செய்வதும்
4.நாம் எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த உணர்வுகள் வீட்டுச் சுவர்களில் இருக்கும் காந்தப் புலன்கள் கவர்ந்து
5.வீட்டிற்குள் எப்பொழுதும் உங்களை மகிழ்ச்சியூட்டும் உணர்வாகப் பெறச் செய்யும்.

அதற்குத்தான் வீடுகள் தோறும் கூட்டுக் குடும்பத் தியானங்களைச் செயல்படுத்தும் படிச் சொல்வது.

சூரியன் எப்படிப் பிரபஞ்சத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒளியின் தன்மையாகத் தனக்குள் எடுத்துச் செயல்படுத்துகின்றதோ அதைப் போல நாம் ஒருங்கிணைந்த நிலையில் செயல்படுத்துவதற்கு அன்றைய ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி குரலை எழுப்பிக் கூட்டுத் தியானத்தைச் செயல்படுத்தும் படிச் சொல்கின்றோம்.

காரணம்
1.தனி ஒரு மனிதன் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது.
2.பல அலைகளை உணரும்படி செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு தான்
3.நாம் கூட்டுத் தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் மூலமாக ஒலிகளைப் பரப்பச் செய்து
4.வரக்கூடிய விஞ்ஞான நச்சுத்தன்மைகள் நம்மை அணுகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

பூமிக்குள் பிற விஷத்தின் தன்மைகள் உள்ளே புகாது ஓசோன் திரை எப்படி அமைகின்றதோ அதைப் போன்று
1.எத்தகைய நிலைகள் வந்தாலும் உங்களுக்குள்ளும் உங்கள் குடும்பத்திற்குள்ளும் அந்தத் தீமை புகாது பாதுகாப்புக் கவசமாக
2.ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்கள் ஆன்மாவிலே பெருக்கச் செய்வதற்கே இதைச் செய்கின்றோம்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ சாதாரணமாக இது கிடைக்கின்றது சாதாரணமாக விளக்கம் சொல்கின்றார் சாதாரண நிலைகள் பெறுகிறோம் என்று சாதாரணமாக எண்ணி விட்டு விடாதீர்கள்.

ஏனென்றால் எவ்வளவோ பணத்தைச் செலவழித்துப் பெற முடியாத சக்தியை இவர் சாதாரணமாகச் சொல்கின்றார் நாம் அப்படிப் பெற்றுவிட முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் இதைக் கொண்டு வருகின்றேன். ஆகவே கூட்டுக் குடும்பத் தியானத்தினுடைய அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாகத் தியானியுங்கள்.

நாள் முழுவதற்கும் உழைக்கின்றோம்.
1.ஒரு பத்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துப் பெருக்கி உங்கள் வீடுகளிலும் பெருக்கி
2.எல்லோரும் அதே போல் கூட்டமைப்பாகப் பெருக்கப்படும் பொழுது மிக உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
3.உங்களைக் காக்கின்றீர்கள்… குடும்பத்தைக் காக்கின்றீர்கள்

இப்படி ஒவ்வொரு குடும்பமும் தங்களைக் காத்துக் கொள்ளும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது அதைச் சொன்னதும் நமக்கும் அந்தக் கோபமான எண்ணம் வருகின்றது. அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது. அது சமயம்…
1.ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொன்னோம் என்றால் ஒன்றுமில்லை.
2.ஏய்…ய்..! ஏண்டா இப்படிச் செய்கிறாய்…? என்றால் வெறுப்பு தன்னாலே வருகின்றது.
3.காரத்தின் தன்மை அதிகமாகின்றது.
4.ஆகவே சூடாகச் சொல்லும் பொழுது வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொல்லும் பொழுது அந்த உணர்ச்சி “ஏதோ தவறு செய்து விட்டோம்… போலிருக்கிறது…!” என்று வருகிறது.

சாதாரணமாகச் சொல்லும் பொழுது அரவணைக்கும் தன்மையாக வருகின்றது.
1.ஆக இந்தக் கோபம் சுவையை ஊட்டுகின்றது.
2.தன்னைத் திருந்தச் செய்கிறது.

இதைத்தான் நம்முடைய உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதைத் தெளிவாக்கப்படுகின்றது. ஆலயங்களில். இந்த உடல் ஒரு ஆலயம். அதிலே எத்தனையோ குணங்கள் நமக்குள் இருக்கின்றது.

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை நாம் பார்த்தால் அந்த உணர்வு நமக்குள் வந்து பதிவாகி விடுகின்றது. உள்ளுக்குள் புகுந்து விடுகின்றது.

ஒருவன் கோபத்துடன் செயல்பட்டு மற்றவரை வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வைப் பார்த்ததும் அதே உணர்வு கோபத்துடன் அடுத்தாற்போல் வேதனைப்படும் சொல்லாகவும் வேதனைப்படும் செயலாகவே நமக்குள்ளும் மாறுகின்றது.

அங்கே சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல…! இங்கே நம் உடலிலேயும் வேதனையை உருவாக்கும் அணுவாகி உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லும் அணுவாக மாறுகின்றது.

எப்படிக் காடுகளில் புலி கரடி பாம்பு போன்ற பிராணிகள் மற்றவைகளைக் கொன்று சாப்பிடுகின்றதோ அது போல் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமை செய்யும் அணு மற்றதைக் கொல்கிறது.

ஏனென்றால் நம் உடல் ஒரு பெரிய காடு. எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை வளர்த்ததோ அதனின் மணம் அந்தக் குணம் அந்த அணுவின் தன்மையாகி ஒன்றுக்கொன்று போர் முறையாகி விட்டால்
1.ஐயோ… பளீர்.. என்று இங்கே (ஊசி குத்துவது போல்) மின்னுகிறதே
2.இங்கே உடலில் வலிக்கின்றதே… வயிறு வலிக்கிறதே… இது எல்லாம் வரும்.

போர் முறை வரப்படும் பொழுது அதைச் சீராக ஜீரணிக்கும் சக்தி இல்லாது போய்விடுகின்றது. உடல் உறுப்புகளின் இயக்கங்கள் தடைப்படுகின்றது.

ஒரு அரசன் ஒரு கிராமத்திற்குப் போகும் பொழுது அதை அடக்கி அங்கே தன் நிலைகளை எப்படிச் செயல்படுத்துகின்றானோ இதே மாதிரி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலுக்குள் அது போகும் பாதைகளில் அங்கே இருப்பதை எல்லாம் துரத்திக் கொண்டே செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதுகள் எல்லாம் எதிலிருந்து வந்தது..? என்று ஞானிகள் தெளிவாக்கியிருக்கின்றார்கள்.

எந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருகின்றதோ அது சீதாலட்சுமி… (சீதா என்றால் சுவை) அந்தச் சுவையை வளர்க்கும் சக்தியாக வளருகின்றது.

அதாவது கோப குணத்தை வெளிப்படுத்தினால் அது சீதா..! சூரியனின் காந்த சக்தி கோபத்தை எடுத்து வைத்துக் கொண்டு சீதாலட்சுமியாக மாறுகின்றது.
1.கோபிப்பவரைப் பார்த்ததும் சீதாராமா…
2.அந்தக் கோபத்தின் உணர்ச்சியின் வேகமாக அதே எண்ணங்கள் நமக்குள்ளும் வருகின்றது.

ஒருவன் கசப்பான செயலைச் செய்கின்றான். அந்த உணர்வுகள் சீதா லட்சுமியாக மாறுகின்றது. சுவாசித்ததும் சீதாராமனாக அதே கசப்பான வெறுப்பின் எண்ணங்கள் வருகின்றது. இது தனித் தன்மை.

அதே போல் பண்பு கொண்ட தெய்வீக உணர்வுகளை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்தால் சீதா…! அந்தத் தெய்வ குணங்களை… அந்தச் சுவையை எண்ணுகின்றோம். அப்பொழுது சீதாராமனாக நமக்குள் வருகின்றது.

அது எப்படி வருகிறது..?
1.இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.ஆலயத்தில் காட்டிய தெய்வ குணத்தை எல்லோரும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இத்தகைய உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது அதே உணர்வலைகளை எடுத்து எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதைக் கலவையாக்கி நீங்களும் இதே மாதிரிச் சொல்கிறீர்கள்.

அப்பொழுது இந்த உணர்வலைகள் அந்த ஆலயம் முழுவதும் படர்கிறது. கோவிலுக்குள் இந்த உணர்வுடன் சென்றால் மகிழ்ச்சி ஊட்டும் உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.

ஆலயங்களை உருவாக்கியதன் நோக்கமே அது தான்.

October 2025 உபதேசம்

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம். ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு கோவிலிலும் ஓ..ம் போட்டு வைத்திருக்கின்றார்கள்… அங்கே பிரசாதம் வைத்திருக்கின்றார்கள். மற்ற எத்தனையோ நிலைகளைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

கூடுமான வரையிலும் அங்கே சென்று தெய்வத்தை வணங்குகின்றோம். ஏன் வணங்குகின்றோம்…? எதற்காக வணங்குகின்றோம்…? எப்படி வணங்குகின்றோம்…? அப்படி வணங்குவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கிறது…? என்பதை யாரும் சொல்லித் தரவில்லை.
1.உனக்குக் கஷ்டம் வந்தால் தெய்வத்திடம் உன் குறையை எல்லாம்… முழுவதையும் சொல்லிவிடு.
2.அதைச் சொல்லி மனம் உருகி அழுகும் பொழுது அந்தத் தெய்வம் உதவி செய்யும் என்று தான் சொல்லி வைத்திருக்கின்றனர்.
3.எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் என்றால் எங்கேயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். எங்கேயோ இருந்து நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்கின்றதே தவிர அந்த ஈஸ்வரன் யார்…? என்று அறியவில்லை.

ஓம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… அது தான் ஜீவன்… “ஜீவன் உள்ளது…” என்று எல்லோரும் வாதிடுகிறார்கள்.

உதாரணமாக… ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். நான் பாசமாக இருக்கின்றேன் என்னிடம் இருக்கும் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது அவன் படக்கூடிய துன்பத்தைக் கண் பார்க்கின்றது
1.அதே சமயத்தில் அவன் வேதனைப்பட்டு வெளிப்படுத்துவதை என் கண் இழுக்கின்றது.
2.அதைச் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எனக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… உடலில் வேதனையாகின்றது. அவன் வேதனை தாங்காது வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய காந்த சக்திகள் அதைத் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

அந்தப் பையனை எண்ணி… “அவன் வேதனைப்படுகின்றானே…” என்று கண்ணிலே பார்த்தவுடனே அந்தக் கண் அதே உணர்வலைகளை எனக்குள் இழுக்கின்றது.

நான் இப்பொழுது பேசுகிறேன் என்றால்… “இந்த மைக்..” நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுக்கின்றது. அதே போல் அந்தப் பையன் இடக்கூடிய சப்தத்தை என் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கின்றது… அந்த உணர்வின் ஒலியைத் தட்டுகிறது.

கண் பார்க்கின்றது… கரு விழி பார்த்தாலும் அந்த அலைகளை இழுக்கின்றது. கரு விழியில் படம் தெரிகின்றது கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த அலைகளை இழுக்கின்றது. அதை இழுத்த உடனே நான் சுவாசிக்கிறேன்.

நல்ல குணம் கொண்டு நான் போகும் பொழுது இந்தப் பையன் கீழே விழுகின்றான். பார்த்தவுடனே அவன் வேதனைப்படுவது எனக்குத் தெரிகின்றது. வேதனையால் வெளிப்படுத்தும் ஒலியைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து எனக்குள் கொண்டு வந்து வைக்கின்றது.

ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்புச் செய்கின்றார்கள் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்கின்றது. இங்கே நாம் வீட்டிலே அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அங்கே வெளிப்படுத்தக்கூடிய ஒலி அலைகளை… பாடல்களை இங்கே ரேடியோவில் பாடுகின்றது… நாம் கேட்கின்றோம்.

இது விஞ்ஞானம்… செயற்கையில் செய்தது. அதற்கு ஜீவன் இல்லை… ஒலி அலைகளை மட்டும் எடுத்துக் கொள்கின்றது.

1.ஆனால் நான் பார்த்த… அந்த வேதனையான உணர்வலைகள் உயிரிலே படுகின்றது.
2.சுவாசித்து இழுத்து உயிரிலே பட்ட பின் அவனிடமிருந்து வெளிப்பட்ட
3.வேதனையான உணர்வின் சக்தி என் உயிரிலே பட்ட பின் “ஜீவன்…” பெறுகின்றது.
4.அதற்குப் பெயர் தான் ஓ… என்று சொல்வது.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பை மூட்டி வைத்தால் தண்ணீர் சூடாகிக் கொதித்து “தத… புதா…” என்று சத்தம் போட ஆரம்பிக்கின்றது.

காரணம் அது கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியிலே படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் அதிலே பட்ட பின் இழுத்து அந்தச் சப்தத்தைக் கொண்டு வருகின்றது. இது இயற்கை…!

தண்ணீர் தான்… ஆனால் “தத… புதா…” என்று சத்தம் போடுகின்றது. அப்படிக் கொதிக்கும் நேரத்தில் நாம் எந்தப் பொருளை (பலசரக்கை) அதனுடன் இணைக்கின்றோமோ அந்த வாசனை வெளி வருகின்றது.

ஏனென்றால்
1.கொதிக்கும் பொழுது கலந்து ஆவியாக வெளியே அனுப்பும்போது அதைச் சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து கொண்டு வருகின்றது.
2.என் கண்ணிலே பார்த்தவுடனே… சத்தியபாமா உண்மையை எடுத்து இழுத்து எனக்குள் உணர்த்துகின்றது.
3.என் உயிருக்குள் பட்ட உடனே அது பிரணவம்… ஜீவன் பெறுகின்றது.
4.ஆக… உயிர் அங்கே எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உயிர் நெருப்பு.

விஞ்ஞானம் எப்படி இருக்கிறது…? மெய் ஞானம் எப்படி இருக்கின்றது…? இயற்கை எப்படி விளைகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜனகச் சக்கரவர்த்தி அவர் உழுகும் பொழுது அதிலிருந்து ஒரு பெண் குழந்தை கிடைக்கின்றது. அதைத் தத்துக்கு எடுத்துத் தன் குழந்தையாக அவர் வளர்க்கின்றார்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால் சூரியன். மற்ற உணர்வுகள் விஷத் தன்மையைப் பெற்ற பின் அந்தத் தீமைகளை அகற்றி நல் உணர்வைச் சமைக்கும் தன்மை பெற்றது.

நாம் என்ன செய்கின்றோம்…? உழுது பயிரிட்டு நமக்கென்று நல்ல சத்துள்ள பொருள்களை விளைய வைக்கின்றோம்.

அதனால் தான் உழுகும் பொழுது கிடைத்தது குழந்தை என்று சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் இராமாயணத்தில் அக்காலத்தில் இதைத் தெரியப்படுத்துகின்றனர்.
1.உழுது பயிரிட்டால் தானே நல்ல பயிரினங்களை விளைய வைக்க முடியும்.
2.உழுகவில்லை என்றால் தன்னிச்சையாக என்னென்னமோ விளைந்து விடுகின்றது அல்லவா…!

மனிதனை வளர்க்க ஜனக சக்கரவர்த்தி உழுது பயிரிடும் நிலையிலிருந்து அந்தச் சத்தை எடுத்து வைத்திருக்கின்றது… சூரியனின் காந்த சக்திகள்.
1.இந்த உயிர் வாழும் மக்களை உயர்த்த எண்ணுகிறது
2.மனிதனைக் காக்க எண்ணுகிறது என்ற இந்த உண்மையைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.தீமையற்ற நிலை அது.

காவியப்படி அந்தக் குழந்தை வளர்ந்த பின் அதற்குத் திருமணம் வைப்பதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார்கள். அங்கே அவரவர் திறமைகளைக் காட்டுகின்றார்கள்.

தன்ன்னுடைய வில்வித்தைகளை எல்லாம் காட்டுகின்றார்கள். வில்லை எடுத்து நாணை ஏற்றி அம்பால் குறி வைத்துத் தாக்குகின்றார்கள். குறி வைத்துத் தாக்கும் பொழுது அவரவர் திறமைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

1.ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?
2.அவனுடைய வல்லமையை எப்படிக் கொண்டு வருகின்றான்..?
3.பிறருக்குத் தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்.

வில்லில் நாணை ஏற்றி அம்பைப் பாய்ச்சினால் தானே பிறரைத் தாக்க முடியும். அந்த வில்லையே ஒடித்து விட்டால் எதிலே அம்பை எப்படி ஏற்ற முடியும்..? அதை எப்படிப் பாய்ச்ச முடியும்..? அப்பொழுது அது பிறருக்குத் தீங்கு செய்யாது.

தீமை செய்யும் அந்த வில்லையே இராமன் முறித்துவிடுகின்றான்.
1.அதனுடைய உட்பொருள் என்ன என்றால்
2.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்களைத் தனக்குள் நீக்குகின்றான்.

கோவிலில் என்ன செய்கிறோம்…?

பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் தனக்குள் இருப்பதை ஒடித்துவிட்டு அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறார்கள். “எல்லோரும் அப்படி எண்ண வேண்டும்…” என்று உணர்த்துகின்றார்கள்.

1.தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்துவிட்டால் எல்லோரையும் அரவணைக்கும் சக்தியாக வருகின்றது. அது தான் கல்யாணராமா.
2.எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்த எண்ணங்கள் நமக்குள் வர வேண்டும்.
3.கோவிலுக்குள் சென்றால் நாம் இப்படித்தான் எண்ணி எடுக்க வேண்டும்.

நம் ஞானிகள் கொடுத்த காவியங்களுக்குள் அத்தனை பேருண்மைகள் உள்ளது.

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

 

மரத்திற்கு வேண்டிய உரத்தைப் போடுகின்றோம். அதை ஏற்றுக் கொண்டு நல்ல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில் சில நச்சுத்தன்மைகள் அந்த மரத்தினுடைய வேரிலே பட்டு அது ஊடுருவி விட்டால் அந்த விழுதிலே நஞ்சு கலந்து மரம் கெட்டு விடுகிறது.

இதைப் போல
1.நம்மை அறியாமல் இருளான உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது
2.அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இட்ட அந்த உணர்வின் சத்தான நிலைகள் உண்டு.
3.அந்தச் சத்தைத்தான் உங்கள் உணர்வுகளுக்குள் ஏற்றிக் கொடுக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எது எல்லாம் உங்களுக்குள் தேய்மானம் ஆகிச் சிந்திக்க முடியாமல் இருந்ததோ சிந்தித்துச் செயல்பட முடியாமல் இருந்ததோ
1.அதை மாற்றியமைக்க மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
2.செவிப்புலன் கொண்டு கேட்கச் செய்கின்றோம்.

எனக்கு என் குருநாதர் எப்படி உண்மைகளைக் காட்டினாரோ அதைப் போன்று தான் உங்களுக்கும் சொல்கிறோம்.

எந்தெந்த நல்ல மனதுடன் எல்லோருக்கும் நன்மைகளைச் செய்தீர்களோ… பிறருடைய துன்பத்தை இழுத்து உங்கள் நல்ல குணத்தைச் செயல்பட முடியாதபடி உங்கள் உடலுக்குள் தொல்லையும் துன்பமும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ…
1.அந்தத் துன்பத்தை நீக்க நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி உங்களை இந்த அருள் உணர்வைக் கேட்கும்படி செய்து
2.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற உணர்ச்சியின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.அந்த உணர்வாலே சுழன்று கொண்டிருந்த விஷத்தின் தன்மை நீங்கி
4.மெய் ஒளியின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து நீங்கள் இழுத்துச் சுவாசித்து
5.அந்தச் சத்தான நிலைகள் பெற்று உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றி
6.குருநாதர் எப்படி ஒளியின் சரீரமாகச் சென்று விஷம் தனக்குள் எதுவும் அணுகாத நிலை பெற்றாரோ
7.எனக்கு குருநாதர் காட்டிய அந்த நிலையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்து கொள்கின்றோமோ… நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் நாம் அறியாதபடி அந்த உணர்வுக்குள் விஷம் பட்டு விஷத்திலிருந்து எழ முடியாத நிலைகள் வந்து விடுகின்றது.

அந்த விஷத்தை நீக்கும் ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆவலில் தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்வதற்குத் தியானத்தின் முறையை குருநாதர் எனக்கு எப்படி வழி காட்டினாரோ அதே வழியில் நீங்களும் தியானத்தைச் செய்து கொண்டால் இந்த காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும்.

மரத்திற்கு உரமான சத்தைக் காட்டிய பின் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றில் மறைந்திருக்கும் தன் சத்தினை எடுத்துத் தான் எப்படி வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றே
1.உங்கள் நல்ல உணர்வின் தன்மையைக் காக்க மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நீங்கள் சுவாசித்து
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காத்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் மூச்சுக்குள் உடலுக்குள் நலமும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும் நிலையும் ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெறும் நிலையும்
4.இந்த உடலிலிருந்தே உயிரின் தன்மை உணர்வுகள் ஒளியாக மாறி
5.என்றும் பதினாறு என்ற ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை நீங்களும் பெற முடியும்.

அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு விண் சென்றார்களோ அதே போன்று நீங்களும் அந்த மெய் ஒளியின் சுடரின் நிலைகள் கொண்டு அந்த மெய் வழியில் செல்லக்கூடிய தகுதியைப் பெறுவீர்கள்.

குருநாதர் காட்டிய வழியில் தான் யாம் உங்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு அழுக்குத் தண்ணீரில் நந்நீரை விட்டது போல் உங்கள் கண்ணின் நினைவினை எல்லா உறுப்புகளிலும் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்யுங்கள்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.சிறுகச் சிறுக உடல் உறுப்புகள் அனைத்திற்கும் உணவாகக் கொடுக்கும் அந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் எலும்புக்குள் இருக்கும் எலும்பை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எங்கிச் செலுத்துங்கள்.
1.இப்பொழுது எலும்புகளில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் வரும்.
2.கூச்சப்படுவது போன்ற உணர்ச்சிகள் தோன்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர்ந்து ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் உணர்வினைச் செலுத்துங்கள்.

எக்ஸ்ரே கருவிகளில் அனுப்பப்படும் பொழுது எப்படி அது ஊடுருவி எலும்புக்குள் இருக்கக்கூடிய நிலைகளைப் பிளந்து கொடுக்கின்றதோ இதைப் போல எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி கொண்ட அணுக்களாகப் பதிவாக்குங்கள்.

1.செல்ஃபோன்களில் நமக்கு வேண்டியதைப் பதிவாக்கிக் கொண்டு
2.எப்படி அவ்வப்பொழுது அதை எடுக்கின்றோமோ
3.அதைப் போல நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் செல்களைப் பதிவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்படிப் பதிவாக்கிக் கொண்டால் அந்த நினைவுகள் நமக்குள் ஆகி
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நம்மை நுகரச் செய்து
2.அந்த ஞானத்தின் வழி நாம் செயல்படுத்த இந்தத் தியானம் உதவும்.

உடலில் எடுக்கக்கூடிய “மெய் ஒளியைத் தான் நான் சிந்தித்தேன்…” என்றார் குருநாதர்

 

வைகுண்ட ஏகாதசி அன்றுதான் என் குருநாதர் உடலை விட்டு வெளியே சென்று ஒளியாகப் போனார். குருநாதர் எனக்குக் காட்டி உணர்த்தியது…
1.இந்த உடலிலே நான் எப்படி ஒளியாக மாறி வெளியே செல்கின்றேன்…?
2.வெளியில் சென்றபின் மற்ற மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி எல்லாம் கவருகின்றது…?
3.அப்படிக் கவரும் பொழுது உயிரான்மா அதனுடைய சுழற்சியின் நிலைகள் என்ன செய்கின்றது…?
4.தன்னை அணுக விடாதபடி சுழற்சியின் நிலைகள் கொண்டு விலகுகின்றது…!

விஷத்தைக் கழித்து விட்டு நல்ல உடலாக மாற்றிக் கெட்டதை நீக்கக்கூடிய எண்ணத்தின் நிலைகள் சிருஷ்டிக்கும் தன்மை கொடுத்த இந்த மனித உடலில் அதைப் பெறுவதற்கு குருநாதர் காட்டிய நிலைகள் இது.

குருநாதர் அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் வெறும் துண்டைத்தான் கட்டியிருப்பார். “டிச்சியின்…” அருகில் தான் படுத்திருப்பார்.

குளிர்காலம் என்று நல்ல வேஷ்டியை கொடுத்துக் கட்டச் சொன்னால் அதை எல்லாம் கிழித்து கையிலும் காலிலும் கட்டிக்கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டுச் சென்றான்…! என்பார்.

என்ன சாமி…? இப்படிச் சொல்கிறீர்கள்…! என்றால் கிழித்து விட்டுச் சென்றான் நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன்… அவன் கிழித்து விட்டுச் சென்றான் என்பார்.

1.அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை.
2.இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் அவர் சிந்தித்தார்.

பைத்தியக்காரர் போன்ற நிலையில் நான் அவரை பார்க்கும் பொழுதெல்லாம்… “அய்யய்யோ பெரிய தொல்லையாக இருக்கின்றது… இவரிடம் சிக்கிவிட்டோமே…!” என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஏனென்றால் அவருடைய செயல்களைப் பார்க்கும் பொழுது அப்படித்தான் என்னால் எண்ண முடிந்தது.

ஆனால் உடலை விட்டுச் செல்லும் போது… குருநாதர்… நான் எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது பளீர்.ர்ர்… பளீர்.ர்… என்று மற்ற எல்லாவற்றையும் தள்ளி விட்டு விண்ணுக்கு எப்படிப் போகின்றது…? அப்படிச் சென்றாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் அந்த உயிரான்மா என்ன செய்கின்றது…? பார்…!

அதற்கு முன்பே எனக்கு அதைச் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

உயிராத்மா இங்கேயிருந்தாலும் அன்று வாழ்ந்த மகரிஷிகள் ஞானிகள் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியிலே போனாலும் பிறிதொரு ஈர்ப்புக்கு வராது தடுத்தாலும்
1.இந்த உணர்வுக்கு ஒத்த விழுது இந்தப் பூமியிலிருந்து உந்தி ஆன்மாவை மேலே தள்ள வேண்டும்.
2.அதனால் தான் எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனிடத்தில் வருகின்றார்கள்.
3.அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு உடலுக்குள் மகிழ்ச்சியை ஊட்டி
4.அவனிடமிருந்து வரக்கூடிய மூச்சைத் தன் உடலுக்குள் சேர்த்து அந்தச் சந்தோசமான உணர்வை நுகர்ந்து தான் விண் சென்றார்கள்.

குருநாதர் அதை எல்லாம் காட்டும் பொழுது
1.உயிராத்மா வெளியிலே சென்ற பின் எவ்வாறு…? எதன் நிலை கொண்டு என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் அதிலே வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று காட்டினார்.
அவர் காட்டிய உண்மையைத் தான் உங்களுக்குச் சொல்லி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற இந்த உணர்வினை உங்களுக்குள் “செல்களாகப் பதிவு செய்கின்றேன்…”

மெய் ஒளியின் தன்மை… இயற்கையில் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் இயக்கமாக மாறி மனிதன் வரை ஏப்படி வந்தது…? என்று எனது குருநாதர் காட்டினார்.

மனிதனிலிருந்து அவன் ஒளியின் சரீரமாகப் பெற்றுச் சப்தரிஷி… சிருஷ்டிக்கும் தன்மையாகப்
1.பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷம் வந்தாலும் அதை தனக்குள் ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை மகிழ்ச்சியாக நின்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் நமது சாஸ்திர விதிகள் “அம்மி மிதித்து… அருந்ததியைப் பார்..!” என்று கல்யாணக் காலங்களில் சொல்லிக் காட்டுகின்றார்கள். ஆனால் எதற்காகப் பார்க்கச் சொன்னார்கள்..,? ஏன் பார்க்கச் சொல்கின்றார்கள்…? என்று தெரியாது.

கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த நிலையில் தனக்குள் எடுத்துக் கொண்டதை உருவாக்கச் செய்யும்.

கணவன் மனைவி என்பதே…
1.உயிர் கணவன் ஆகின்றது
2.தான் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மை தான் அது மனைவியாகின்றது.

எந்தச் சக்தியின் தன்மை கொண்டு இந்த உயிர் தாவர இனச் சத்தைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை அணுத் திசுக்களாக மாற்றி அந்தச் சத்திற்குள் இருந்த உயிரின் துடிப்பு… அந்த உணர்வின் மலமாகித் தான் அது உடல் பெறுகின்றது.

அதைப் போல கடந்த கால ஞானிகள் சொன்ன முறைப்படி கணவன் மனைவி இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு
1.ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் மெய் ஒளியை எடுத்துக் கொண்டால்
2.அந்த இரு சக்தியும் ஒன்று சேர்ந்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக அது உருப் பெறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் காண நேர்ந்தால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அதிலே மோதி அதே உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் படர்கிறது.

அந்த மனிதன் மேல் நாம் இரக்கமாக இருந்தால் அவன் படும் அதே வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் தோற்றுவிக்கிறது.

அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி விடுகின்றது. ஏனென்றால் ஓ.. என்று அது பிரணவமாகி ம்.. என்று உடலாக அடங்குகிறது.

ஒரு செடியின் சத்தை வேக வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.வேக வைக்கும் பொழுது ஆவியாக வெளி வருகின்றது
2.மேலே பச்சை (குளிர்ந்த) நீரை ஊற்றி விட்டோம் என்றால் அந்த ஆவியை… செடியின் சத்தை “ரசமாக…” இறக்கிவிடும்.

இதே போல் தான் நம் உயிரிலே மோதும் உணர்ச்சிகள் அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக எல்லாவற்றிலும் மோதி இயக்கச் செய்கிறது. அதற்குத்தக்க நம் எண்ணம்… சொல்… செயல்… என்ற நிலைகளில் இயக்குகின்றது.

அதே சமயத்தில் சுவாசித்த (வேதனை) உணர்வுகள் (ரசமாகி) உமிழ் நீராக மாறி நம் உடலிலே சேர்த்து நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

நாம் வயிறு நிரம்ப சத்துள்ள ஆகாரத்தைச் சாப்பிட்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.இந்த வேதனை என்ற விஷம் நம் குடலில் ஜீரணிக்கக்கூடிய அணுக்களில் பட்டவுடனே
2.அது மயக்கம் அடைந்து சரியாகச் ஜீரணிப்பதில்லை.
3.சிறிது நேரம் ஆனவுடன் புளித்து விடுகிறது… அப்பொழுது எதிர்த்துத் தாக்க ஆரம்பித்து விடுகின்றது.
4.அதனால் குடலுக்குள் ஒருவிதமான எரிச்சல் வருகின்றது.

இப்படி ஆனதும் நம் ஆகாரத்தை நல்ல சத்துள்ளவைகளாக மாற்றுவதற்கு மாறாக… ஒரு பழம் அழுகி விட்டால் எப்படி அதனின் ருசி கெட்டுப் போகுமோ… அதே மாதிரிச் சுவைத்துச் சாப்பிட்ட அந்த ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாகச் “சுவை கெட்ட இரத்தமாக” மாறுகின்றது.

அப்படி இரத்தமாக மாறிய பின் அந்த மனிதன் உடலில் எந்த உணர்ச்சிகள் இயக்கியதோ அதே உணர்ச்சி நம் இரத்தத்தில் பட்டவுடன் அது கருவாகி விடுகின்றது.

அந்த மனிதன் உடலில் எந்த நோய் விளைந்ததோ அதே நோய் இங்கேயும் விளையக் கூடிய சக்தி பெறுகின்றது. நமக்குள் அந்த ஊழ்வினை என்ற வித்தாக இருப்பதனால்
1.அதைக் கண் கருவிழி பதிவாக்கிய நிலையில்
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி
3.உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் அவன் வேதனைப்படுகின்றான் என்று உணர்த்துகின்றது.

அவன் (உடலில்) எப்படி… வேதனைப்படுகின்றான்…? எதனால் வேதனைப்படுகின்றான்…? என்று உற்றுப் பார்க்கின்றோம். உயிரிலே மோதும் பொழுது உணர்வால் அறிகின்றோம். அந்த உணர்ச்சியாக இயங்குகின்றோம்.

நம் கண்கள் புறக் கண்… உயிரோ அகக் கண்.
1.என்ன தான் கண்ணில் பார்த்தாலும்
2,அந்த உணர்ச்சிகள் உயிரிலே இயக்கவில்லை என்றால் அது என்ன…? ஏது…? என்றே தெரியாது (இது முக்கியமானது)
3.உங்களுக்கு முன்னாடியே (கை நீட்டி) அவனை அடித்தாலும் கூட உங்களுக்குத் தெரியாது.
4.அடி வாங்கியவன் வேதனைப்பட்டால் கூட உங்களால் அறிய முடியாது.
5.ஆனால் அந்த உணர்வுகள் உயிர் பாகம் போகப்படும் பொழுது தான்… உயிரிலே மோதினால் தான்… அந்த உணர்ச்சிகளையே ஊட்டும்.
6.வேதனையோ கோபமோ ஆத்திரமோ அதை அப்பொழுது தான் உணர முடியும்.

இப்படிக் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அத்தனை உணர்வுகள் இயக்கினாலும் அந்த வினை இயக்கமாக நம் இரத்தத்தில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

ஒருவன் வேதனைப்படுகின்றான்.. ஒருவன் கோபப்படுகின்றான்… ஒருவன் குரோதப்படுகின்றான்… என்றாலும் அது அது தனித் தனிப் பிரிவாக நம் இரத்தத்திற்குள் வேலை செய்யும்.

காட்டிலே எத்தனை இலட்சம் மரங்கள் இருக்கின்றது…? அதிலிருந்து வரக்கூடிய சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் எந்த மரத்தின் சத்து அதிகமாகின்றதோ அந்த மரத்தின் வாசனை அதிகமாக வரும்.

இதே மாதிரி நாம் ஒரு நிலத்தில் ஊன்றுவது போல் நம் உடலில் கோபமோ வேதனையோ வெறுப்போ பயமோ எல்லாமே ஊழ்வினை என்ற வித்துக்களாக உருவாகிவிடுகின்றது.

அவர் உடலில் பட்ட உணர்வுகள் அனைத்தும் அது தீய வினைகள். அவர் வேதனைப்பட்ட உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது தீய வினைகள். இதே மாதிரி கோபப்படுவோரைப் பார்க்கின்றோம். அதுவும் தீய வினைகள்.

சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற எத்தனையோ வகை உணர்வுகளை உற்றுப் பார்த்தோம் என்றால் அவைகள் எல்லாம் நம் எலும்புக்குள் பதிவாகி அந்தத் தீய வினைகள் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

நம் உடலில் வினைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. இதை எல்லாம் அன்றாடம் நீக்குகின்றோமா என்றால் இல்லை…! அதை எல்லாம் நீக்கி நல்ல வினைகளாகச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து உடலிலே சேர்த்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் ஒளியின் அணுக்களாக மாறும்.

இந்த உடலுக்குப் பின் நாம் அழியாத நிலை பெறலாம்.

மனிதனைப் போன்று உருவாக்கப்பட்ட சிலையின் மகத்துவம்

 

போகன் எதைக் கருத்தில் கொண்டு முருகன் சிலையைச் செய்தானோ மக்கள் யாரும் அதை நினைவில் கூடக் கொண்டு வரவில்லை.

பிரபஞ்சம் எவ்வாறு சூரியனால் உருப்பெறுகின்றது…? அது ஒவ்வொன்றிலும் கருவாகி எப்படி உருவாகின்றது…? நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் தன் ஒளிக் கதிர்களை வீசி அது எவ்வாறு நட்சத்திரத்தின் தன்மை பெறுகின்றது…?

அது அது சுழலும் பாதையில் ஒவ்வொரு கோளும் அதற்குண்டான பாஷாணங்களை விஷத்தன்மைகளைத் தனக்குள் எப்படிச் சேமிக்கின்றது…? என்ற உண்மையை உணர்ந்தவன் போகன்.

அது உமிழ்த்தி வருவதைச் சூரியன் கவர்ந்து பிரிக்கின்றது… பாதரசமாக மாற்றுகின்றது. அதிலிருந்து தூவும் உணர்வுகள் தான் விந்து என்றும் அது எதைக் கவர்கின்றதோ அதன் வழி கொண்டு மற்றது உருவாகிறது என்று தெரிந்து… மற்ற எத்தனையோ நிலைகள் ஆகி மனிதனாக இது உருவாக்கி இருக்கிறது என்ற நிலையைக் காட்டித்தான் முருகன் சிலையை வடிக்கின்றான்.

1.பாதரசத்தையும் நவக் கோள்களில் விளைந்த பாஷாணத்தையும்
2.நட்சத்திரங்களின் வைரக் கல்களையும் அது விளையும் பருவம் கொண்டு வெடிக்காது பிஞ்சின் தன்மை அடைந்த வைரங்களை இதனுடன் இணைத்து
3.தாவர இனத்தின் தன்மையும் பாதரசத்தையும் அவன் இடும் புடத்தால் இரண்டறக் கலந்து முருகன் சிலையை உருவாக்கினான்.

மனிதன் எந்தெந்த உணர்வை உட்கொண்டானோ தீமைகளை அகற்றினானோ அதை… அந்தத் தாவர இனங்களைச் சாரணையாக சிலைக்குள் கொடுத்தான். மனிதனைப் போன்று தண்டாயுதபாணி என்று உருவாக்கி வைத்தான்.

அக்காலங்களில் அந்தச் சிலை மீது பாத்திரத்தை வைத்து நீரை ஊற்றி வைத்திருப்பார்கள்.
1.சிலை மீது அந்த நீர் பட்டவுடன் அதிலே ஒரு விதமான வெப்பங்கள் வரும்
2.வியர்வை வரும்… அதிலிருந்து ஆவிகள் வரும்…!

ஒரு மனிதன் கோபமாகப் பார்க்கும் பொழுது அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்களை நுகரும் போது நமக்கு நோயாக மாறுகின்றது.

அதே போன்று… மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளை எடுத்திருந்தாலும் “அதை அகற்றிடும் சக்தியைப் பெற…”
1.இங்கே முருகன் சிலையைப் பார்த்து “அதிலிருந்து வரும் மணங்களைச் சுவாசிக்க..”
2.விண்ணை நோக்கி (மலை மீது ஏறி) ஏகும்படிச் செய்கின்றான். ஏனென்றால் மலை மீது முருகன் ஆலயம் இருக்கின்றது.

போகன் காட்டிய அந்த நெறிகளையும் அவன் வகுத்துக் கொண்ட நிலைகளை எண்ணத்தில் எண்ணி “அந்த மகா மகரிஷி காட்டிய அருள் வழியில் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தைத் தனக்குள் எடுத்து நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி ஏகும் பொழுது கதிரவனின் காந்த ஒளியலைகள் அங்கே பரவுவதும்… அந்த நினைவுடன் விண்ணை நோக்கி எண்ணி எடுக்கும் பொழுது அது வருவதும்… இந்த நினைவாற்றல் அந்த ஆற்றலைப் பருகுகின்றது.

1.அப்போது தன் உடலில் வந்த தீமைகளை மறக்கின்றான்.
2.விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளை உந்தும்படிச் செய்கின்றான்.
3.ஆறாவது அறிவின் உண்மையை உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்திகளை ஈஸ்வரா என்று ஏங்கி நுகரும்படிச் செய்கின்றான்.

சோர்வையோ அதனால் உடலில் வந்த வலிமைக் குறைவையோ அதை மாற்றி… அந்த மெய் ஞானிகளுடைய உணர்வுகளைச் செருகேற்றி அதை நுகரும்படிச் செய்து… படி மீது ஏறி மேலே செல்லும்படிச் செய்கின்றான். மேலே ஏறி அங்கே கிரிவலம் வரும் பொழுது மகரிஷிகளை எண்ணத்தால் நாம் எண்ணி அதை நுகரும்படிச் செய்தான்.
அங்கே ஒரு தூப ஸ்தூபியும் உண்டு. அதிலே அக்கினியைப் போட்டு வைத்திருப்பார்கள்.

ஒளியின் சுடராக அங்கே வைத்து அந்த ஞானியின் ஒளிச் சுடரைப் பெறுவதற்காக விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வினை ஏங்கிப் பருகும்படி செய்து…
1.எந்த ஞானி காட்டினானோ இந்த உணர்வினைத் தனக்குள் செருகேற்றி
2.நினைவாற்றலை விண்ணிலே சேர்த்து அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று காந்தப் புலனறிவைக் கூட்டும்படிச் செய்தான்.

அதே ஏக்க உணர்வுடன் நாம் உள்ளே செல்லும் பொழுது அந்தச் சிலை மீது நீர் படுவதை உற்றுப் பார்த்தால்
1.எந்த நல்லதை எண்ணி ஏங்கி வந்தோமோ அந்த உணர்வுடன் அதை நுகரப்படும் பொழுது
2.நம் உடலுக்குள் அந்த மணம் சென்று நம்மை அறியாத வந்த தீமைகளை அது பொசுக்குகின்றது.

ஆனால் அதை நாம் நுகர (சுவாசிக்க) வேண்டும்…!

அவன் சொன்ன முறைப்படி நுகர்ந்து நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்ற இந்த ஏக்க உணர்வுடன் பார்த்து நாம் சுவாசித்தால் உடலில் வந்த கடுமையான பிணிகளும் நீங்குகின்றது.

போகன் அதைத் தனக்குள் நேசித்தான். இந்த உணர்வின் சக்தியைப் பருகினான். தன்னில் தன்னைத் தான் அறிந்தான். விண்ணின் நிலையை உணர்ந்தான்… விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகினான்.

இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கிய உணர்வின் தன்மை கொண்டு மனிதன் உருவான நிலையை உணர்ந்தான். மனிதனுக்குள் அறியாத வந்த தீமைகளை எப்படி நீக்குவது…? என்று என்ற உபாயத்தை உணர்ந்தான். அதைச் சிலையாக வடித்து வைத்தான்.
1.அந்த அருள் ஞானம் பெறும் நிலையும் நமக்குள் மறைத்திருக்கும் நஞ்சினை கொல்லும் உணர்வினைச் சுவாசித்து
2.தீய அணுக்களைக் கொல்லும் மார்க்கங்களைக் கொடுத்தான்.

நாம் எப்படி வாழவேண்டும்…? தன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி அகற்ற வேண்டும் என்று நம் உடலைக் கோவிலாக மதித்தான் போகன். உயிரைக் கடவுளாக மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று எண்ணினான். அதற்குள் மனிதனாக உருவாகிய குணங்களை அரும்பெரும் சக்திகள் என்று எண்ணினான்.

அந்த மனிதன் மகிழ்ந்தான் என்றால் அந்த மகிழ்ச்சியைத் தான் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நான் கண்டறிந்த நிலையை உருவாக்கினான்.
1.இதைக் கண்டு எத்தனை பேர் மகிழ்கின்றார்களோ அந்த மகிழ்ச்சியின் தன்மையை ஏங்கி
2.மனிதனுக்குள் உருவான உணர்வின் சத்தை அன்று உணர்வாகப் பெறுகின்றான் போகன்.

அதைப் பெறுவதற்கு… தாவர இனச் சத்தை இந்த உடலிலேயே மாற்றிக் காயகல்பாகப் பெறும் பாக்கியம் வரையிலும் இன்னொரு உடலுக்குள் புகாது இந்த உடலிலிருந்தே செயல்பட்டான்.

அவன் காட்டிய உணர்வின் சத்தை மற்ற மக்கள் எடுக்கும் உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி… அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் ஒளியாக்கி… அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உடலை விட்டு “விண் செல்லும் மார்க்கத்தைக் கண்டு கொண்டான்…”

இது தான் போகன் செய்த நிலைகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் நல்ல குணத்துடன் தான் இருக்கின்றீர்கள். ஆனால் சந்தர்ப்பத்தில் பகைமையாகி அதனால் வேதனையான உணர்வை நுகர்ந்த பின் உங்கள் மனதிற்குள் என்ன நடக்கிறது…?

உள்ளுக்குள் மனப் போராட்டமாகி (மனதிற்குள்) சண்டை போட்டுக் கொண்டு மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… என்று சொல்வீர்கள்.

அப்பொழுது உங்களுக்குச் சரியான சிந்தனை இல்லை. ஒரு வேலையின் நிமித்தமாக உங்கள் பையனைக் கூப்பிடுகின்றீர்கள். கூப்பிட்டதும் அவன் வரவில்லை என்றால் “கூப்பிடுகிறேன் பார்… உடனே வர மாட்டேன் என்கிறானே…!” என்ற இந்த உணர்வு தான் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும் இடத்தில் முதலில் சொன்ன மாதிரி மனதில் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் என்ன நடக்கிறது…?

கடைப் பையனைக் கூப்பிட்டு இந்தச் சரக்கை எடுத்து வா என்று சொன்னாலும் அவன் வரவில்லை என்றால் “நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்… உனக்கு என்ன காது கேட்கவில்லையா…?” என்று இப்படிக் கேட்டு இந்த வம்புக்குப் போவோம்.

அந்த உணர்வுகள்… அங்கே தாங்கவில்லை என்றால் “நாம் சொன்ன சரக்கை அவன் எடுத்துக் கொண்டு வரட்டும்…!” என்று பொறுமையாக இருக்க முடியாது. “தான் சொன்னதை ஏன் அவன் செய்யவில்லை…?” என்ற வேகம் தான் வரும்.

நாம் சொன்ன நேரத்தில் அவன் வேறு ஒரு சரக்கைக் கட்டிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்ததும் ஏம்பா…! நான் சொல்வதைக் கேட்கவில்லையா…? என்று அழுத்தமான சொல் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை அறிந்து ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதை எப்படிச் செய்ய வேண்டும்..? என்று தெளிவாக உணர்தல் வேண்டும்.

1.மாறுபட்ட எண்ணங்கள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் அதைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்தால் “அவன் ரிஷியின் மகன் நாரதனாகின்றான்…!”

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அவன் உருவாக்கிக் கொண்டவன். அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். (சூரியன் என்றால் நாராயணன்)

அவன் (சூரியன்) எப்படி உலகை இரட்சிக்கின்றானோ அதே போல் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் மகரிஷிகளின் உணர்வின் தன்மையைக் கவர்ந்தால்
1.இரட்சிக்கும் அலைகளாக அந்த உணர்வின் இசைகள் நம்மை நல் வழிக்கு மாற்றும்.
2.அதனால் தான் நாரதன் கையில் இசைக் கருவி இருக்கும்.
3.அது சுழன்று சீராகினால் இங்கே மகிழ்ச்சியின் தன்மை வந்து அறியாது வந்த இருளைப் போக்குகின்றது.

சரஸ்வதி கையில் என்ன இருக்கிறது…? வீணை. ஒவ்வொரு உணர்வின் மணமும் அந்த இசையை ஊட்டுகின்றது. எதனின் குணமோ அதனின் ஞானமாக அது இயக்கும். அந்த உணர்வினை ஒளியாக அது இயக்கும். உணர்வை அது ஊட்டும்… உணர்வை அது வளர்க்கும்…!

1.அதைத் தான் இங்கேயும் சுருதி ஏழு…. அங்கேயும் சுருதி ஏழு…! என்று போட்டுக் காட்டியிருப்பார்கள்.
2.ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுவது.
3.ஆக ஞானத்தின் தன்மை ஏழாவது நிலை அடைந்தவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்…!

இதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்து விட்டு சாமி (ஞானகுரு) நன்றாகச் சொன்னார் என்று விட்டுவிடாதீர்கள்…! சொன்ன முறைப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருளைப் பெருக்கி இருளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்விலும் அவர்கள் இருள் நீங்க வேண்டும்.

அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் தன்மையை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

இரத்தம் போகும் பாதையில் அடைப்புகளை அகற்றும் எளிய பயிற்சி

 

நம்முடைய சுவாச நாளங்களில் இரத்தம் போகும் பாதைகளில் அடைப்புகள் இருக்கலாம் சந்தர்ப்பத்தில் நாம் சுவாசிக்கும் போது புகையிலை… அதாவது
1.சில புகை பிடிப்பவருடைய அந்தப் புகையை நாம் சுவாசித்து இருந்தாலும்
2.நாம் புகை பிடிக்கவில்லை என்றாலும் கூட அவர்கள் பிடிக்கின்றார்கள் என்று எண்ணினால் போதும்
3.சுவாசத்தின் வழி கூடி சுவாசப் பையிற்குள் சென்று இரத்தம் போகும்… அந்த நாளங்களிலே உறைந்து விடும்.

இப்படி உறைந்து விட்டால் அந்தப் பக்கம் இரத்தம் போகவில்லை என்றால் இன்னொரு பக்கம் போகும். அங்கேயும் அடைபட்டால் அடுத்த பக்கம் போகும்.

இப்படி மூன்று பாகமும் அடைபட்டால் நிரையீரலுக்கோ மற்ற உறுப்புகளுக்கோ இரத்தம் போகாதபடி இருதய வலி வருகின்றது நெஞ்சு வலி அதிகமாகின்றது மடியக் கூடச் செய்து விடுகின்றது.

ஆகவே… இருதய வலி இருந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது நேரம் பின்னுக்குச் சாய்ந்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவாற்றலுடன் மூச்சை எடுத்து… அடக்கி… மீண்டும் அந்த மூச்சை விடுங்கள்.
2.மூச்சை இழுங்கள் ஒரு நொடி நிறுத்துங்கள்
3.பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சை வெளியில் விடுங்கள் “மெதுவாக..”

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று சுவாசத்தை எடுத்து உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும். இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அதை நீக்கிவிடும்.

அதிகமான தொல்லையாக இருந்தால் ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் தியானம் செய்யக்கூடியவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். விபூதியையோ நீரையோ முன்னாடி வைத்துத் தியானித்து
1.அவருக்கு இருதய வலி நீங்கி இருதயம் சீராக இயங்கி அவர் நலம் பெற வேண்டும் என்று அதைக் கொடுங்கள்.
2.அதை அவர் குடிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
3.அவர் இருதயம் சீராக இயங்க வேண்டும் அவர் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும். ஏனென்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அது நல்லதாகும்.

இந்தப் பயிற்சிகளை ஒரு ஐந்து நிமிடம் செய்யலாம். பயிற்சி முடித்த பின் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண அலைகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்த வேண்டும்.

நம் உடல் அப்பொழுது தூய்மையாகும். பற்று மகரிஷிகள் பால் செல்கின்றது. உடல் நலம் பெறுவதற்கு இந்த முறைப்படி செய்து கொண்டோம் என்றால் அது நல்லதாகும். கூட்டுத் தியான்ங்களில் இதைச் செயல்படுத்துங்கள்; (ஆனால் கர்ப்பமாக இருப்பவர்… ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.)

குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தால் அருள் ஞான நூல்களை எடுத்து அதிலுள்ள கருத்துக்களைப் படியுங்கள். மகரிஷிகள் அருள் சக்தி கருவில் வளரும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் தந்தையரும் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களும் தியானம் செய்துவிட்டு
1.அந்தக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று ஆசி கொடுத்தால்
2.அந்த மகரிஷியின் உணர்வுகள் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.
3.குடும்பத்திலே அந்த அருள் ஞானி உருவாவான். இதை நாம் செயல்படுத்துவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தலை வலி.. மேல் வலியுடன் வருவார்கள்.. காசுக்காக வேண்டி கட்டிட வேலைக்கு வருவார்கள். அவர்கள் வீட்டில் அங்கே அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கலில் சண்டை இருக்கும்.

இங்கே கட்டிட வேலைக்கு வந்தவுடன் தன் வேலைக்காக ஒரு அரைச் செங்கலை எடுத்துக் கட்ட வேண்டும் என்றால் அது தனியாக இருந்தாலும் அதை எடுக்க மாட்டான். ஒரு முழுச் செங்கலை எடுத்து உடைப்பான்.

சில கொத்தனார்களைப் பார்த்தால் அவர்கள் அந்த வெறுப்பான நிலையில் இருந்தார்கள் என்றால் இப்படித்தான் செய்வார்கள். கீழே கிடைக்கும் அரைச் செங்கலை எடுக்கச் சொல்ல மாட்டான். முழுதாக இருப்பதையே எடுத்து உடைப்பான்.

அட.. ஏம்பா…? என்று நாம் கேட்டால் நம்மை முறைத்துப் பார்ப்பான். இயற்கை…! அந்த உணர்வுகள் எதைச் செய்யும் என்றால் இப்படித் தான்.

இப்படிக் கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் நாம் உட்கார்ந்தால் அதிலே மேக்னட் உண்டு. அந்தக் காந்தப் புலன் தான் ஈர்க்கும். பார்த்தது.. பேசியது… எண்ணியது… சண்டையிட்டது… எல்லாவற்றையும் இழுத்து அதற்குள் பதிவாக்கி இருக்கும். இதிலே எந்த உணர்வு கொண்டு வந்தாலும் தாங்க முடியாது.

ஆனால் அந்தக் காந்தம் இல்லை என்றால்
1.நீங்கள் கட்டிடத்திற்குத் தண்ணீர் விட்டால் உள்ளுக்குள் போகாது.
2.அந்தக் காந்தம் இல்லை என்றால் இந்தக் கலவையின் தன்மை இரண்டையும் சேர்த்து ஒட்டாது.
3.இதிலேயும் காந்தப் புலன் உண்டு… அதிலேயும் காந்தப் புலன் உண்டு.
4.நீருக்குள் காந்த நிலை இல்லை என்றால் ஒன்றுக்குள் இணைந்து வேலை செய்யாது.

நமக்குள் காந்தப் புலன் ஒற்றுமை இல்லை என்றால் உணர்வின் தன்மை ஒன்றி வராது. ஆக ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகப்படும் பொழுது தான் அது விரிவடையும் தன்மை வந்து உடலையே குறைக்கிறது… உடலைச் சிறுக்கச் செய்கிறது… கரைக்கிறது…!

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் அவர்கள் சிரமப்பட்டுத் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்வது தொழில்.
1.இருந்தாலும் அந்தத் தொழில் செய்யும் இடத்தில்
2.பல குறை உணர்வுகள் பதிவாகும் பொழுது அது சாக்கடையாகின்றது.

குடும்பத்திலோ தொழில் செய்யும் இடத்திலேயோ நண்பர்களிடமோ காசு கொடுத்தது சரியானபடி திரும்ப வரவில்லை என்றால் என்ன செய்வோம்..? அந்தக் கோபத்தில் தான் இருப்போம்.

இங்கே கட்டிட வேலைக்குச் சிமெண்ட் வேண்டும். ஆனால் இல்லை என்கிற பொழுது அது வருவதற்குக் கொஞ்சம் காலதாமதமாகி விட்டால் வேலை பார்ப்பவர்களிடத்தில் வந்து சாடுவோம்.

சிமெண்டைச் சிந்தினாலே உடனே நமக்குக் கோபம் வரும். சீக்கிரம் கட்டி முடிக்கலாம் என்று சொன்னால் சிமெண்ட் கிடைக்கவில்லை என்பான். அதே மாதிரி ஜல்லி வேண்டும் என்று சொல்லியிருப்போம். அன்று அந்த ஜல்லி வரவில்லை…! என்றால் மனம் ஒடுங்கிவிடுகிறது.

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது வெறுத்துச் சொல்வோம். இந்த உணர்வு எல்லாம் கலந்து தான் அவன் கட்டிடம் கட்டுவான்.

இந்த மாதிரிக் கட்டிய சில வீட்டுகளில் பாருங்கள். வீட்டுக்குள் போனால் நிச்சயம் சண்டை இருக்கும். இதைப் போன்ற நிலைகளை எல்லாம் யார் தூய்மைப்படுத்துவது…?

சிறு துளிகளாக மழை பெய்தாலும் ஒன்று சேர்ந்து அது பெரும் வெள்ளமாக வரும் பொழுது சாக்கடையை எல்லாம் அடித்துச் சென்று விடுகின்றது.
1.அதாவது அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை
2.நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து
3.இந்தப் புது மனைக்குள் பாய்ச்சப்படும் பொழுது அது தூய்மைப்படுத்தப்படுகின்றது.
4.எங்கள் புதுமனை முழுவதும் தரையிலும் சுவரிலும் மகரிஷிகள் அருள் சக்தி படரவேண்டும்.
5.இந்த வீட்டில் படர்ந்துள்ள தீமையான எண்ணங்கள் நீங்க வேண்டும்.
6.இந்த வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படவேண்டும்,

இந்த வீட்டில் குடியிருப்பவர்களும் இந்த வீட்டிற்கு வருகை புரிபவர்கள் எல்லோரும் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும். என்று இப்படி அவசியம் கூட்டுத் தியானம் செய்யவேண்டும்.

ஆனால் நாம் வழக்கமாக கிரகப்பிரவேசம் அன்று எல்லோரையும் வரச் சொல்கிறோம். யாகத்தை வளர்த்து அதில் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுகிறோம். நெய்யை ஊற்றுகிறோம். பஸ்பத்தைப் போடுகிறோம். சில குச்சிகளைப் போடுகிறோம். இதைத்தான் செய்கிறோம்.

நீங்கள் கூட்டுத் தியானம் செய்து உயர்ந்த குணங்கள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து சுவாசித்து அந்த அலைகளை நீங்கள் எல்லோரும் சேர்ந்து வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.
1.இது உங்களுக்கு உயர்வைக் கொடுக்கும்.
2.இதை நீங்கள் செய்து உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாகங்கள் செய்த வீடெல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். “நன்றாக இருக்க வேண்டும்..!” என்று தானே புதுமனை புகும் பொழுது யாகத்தைச் செய்கிறோம்.

அதே மாதிரி ஜாதகம் பார்த்த பின் தானே கல்யாணம் செய்கின்றோம். அவர்களும் நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்து நாம் பார்க்கப்படும் பொழுது கணவன் மனைவி நன்றாகத் தானே இருக்க வேண்டும்.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்தாலும்… அதற்குப் பின் எத்தனை பேர் எத்தனை குடும்பங்கள் பிரிந்திருக்கின்றது…?

திருமணமானாலும் முழுமையாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்று தானே ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்கிறார்கள். இடைவெளியில் ஏன் மடிந்துவிடுகின்றார்கள்…? இதற்கு எங்கே போவது…?

மனச் சாந்திக்கு வேண்டுமானால் பார்க்கலாம். அவன் சொன்ன உணர்வை எடுத்து நாம் என்ன செய்வோம்…? ஐயோ.. ஜாதகம் பார்க்கவில்லை என்றால் தப்பு வந்துவிடும்..! என்ற பய உணர்வு வந்துவிடும்.

அப்படி எண்ணவில்லை என்றாலும்
1.ஜாதகப்படி எடுத்துக் கொண்டால் இரண்டு எதிர்ப்பு நிலையும் ஒன்றாகும்.
2.அப்பொழுது எதிர்மறை இரண்டும் ஒன்றாகும் பொழுது
3.எதிரியின் நிலையாக ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருந்தால் இரண்டும் ஒத்துப் போகும்.
4.ஆனால் ஒருவர் சாந்தமாக இருப்பார்.. ஜாதகப்படி சாந்தம் என்றும் இருக்கும். இவரோ கோபக்காரராக இருப்பார். இது இரண்டும் ஒத்து வராது என்பான்.
5.அடிக்கடி வேதனைப்படுத்தக்கூடியவர் அதே மாதிரி இன்னொருவர் வேதனைப்படுபவர் இவர்கள் இரண்டும் வந்தால் ஜாதகப்படி பொருந்தும் என்பான்.
6.கல்யாணம் செய்த பின் அங்கே வேதனைப்படுத்தும் நிலைகள் தான் மிஞ்சும்.

ஆக ஜாதகப் பொருத்தம் எதிலே இருக்கிறது…?
1.இந்த உணர்வின் நினைவு வரப்படும் பொழுது அதுவும் விஷத் தன்மை இதுவும் விஷத் தன்மை.
2.இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளும்… இப்படித் தான் பொருத்தம் பார்ப்பது இருக்கிறது.

பொருத்தம் பார்த்துச் செய்த வீடுகளில் எல்லாம் எப்படி இருக்கிறது…?

அதுவும் அங்கே திருமணம் செய்யும் பொழுது இத்தனை மணிக்கு.. இந்த நிமிடத்திற்குள் செய்ய வேண்டும்…! என்று சொல்லிவிடுவான்.

இங்கே அலங்காரம் செய்து உட்கார்ந்து யாகம் எல்லாம் முடிக்கும் பொழுது தாலி கட்டும் முன்னாடி இன்னும் இரண்டு நிமிடம் தான் இருக்கின்றது… ஒரு நிமிடம் தான் இருக்கின்றது…! என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

நேரமாகி விட்டது என்ற இந்த நினைவுடனே தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டிலும் பெண் வீட்டிலும் பாருங்கள்… அலங்காரம் செய்து வருவதற்கு முன்னாடி… அந்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…?

ஒரு நிமிடம் தான் இருக்கிறது.. அதற்குள் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றார்களே…! என்ற வேகத்தில் கொட்டு மேளம் வாசிப்பவர்களைப் பார்த்துக் “கொட்டுய்யா… கொட்டுய்யா…! மேளத்தைத் தட்டுய்யா.. தட்டு…!” என்று சப்தம் போடுவார்கள்.

அங்கே அந்த மந்திரம் சொல்வது முழுமையாகச் சொனனர்களா…? இல்லை. அந்தப் பரபரப்பு தான் வருகிறது. தாலி எடுத்துக் கொடுத்துக் கட்டச் சொல்லும் பொழுது என்ன செய்கிறார்கள்…?

இங்கே பணம் எவ்வளவு கொடுப்பார்கள் என்று நினைப்பான். ஏழ்மையான வீட்டில் இப்படி நினைப்பான். பணக்கார வீட்டில் நிறையக் கொடுப்பார்கள் என்பதால் அதைப் பற்றி எண்ணுவதில்லை.

தாலி எடுத்துக் கொடுக்கும் முன் அவனுக்கு ஒரு நூறு ரூபாய்த் தாளைக் கொடுங்கள். உடனே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி வரும். அதற்காக வேண்டித் தான் தாலியை மற்றவர்கள் எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் இவனே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பான்.

அதே சமயத்தில் கட்டும் பொழுது அந்த உணர்வுகள் ஒலியாகப் பாய்ச்சப்பட்டு அவன் கையில் தான் கொடுக்கின்றோம். இந்த மந்திர ஒலியைப் பாய்ச்சிய பின் இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் கைவல்யப்படுத்திக் கொள்ளத் தான் இந்த மந்திரம் உதவும்.

நல்லதானாலும் சரி கெட்டதுக்குப் பயன்படுத்தினாலும் சரி. இந்த உணர்வுகளைப் பதியச் செய்து இந்த நிலை ஆக்கப்படுகின்றது.
1.ஆனால் இதைத் தானே நம்புகிறோம்
2.ஜாதகம் பார்த்து மந்திரம் சொல்லிக் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று தானே விரும்புகிறோம்.
3.அதன் வழி இப்படித்தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கம் இந்த எண்ணங்களைப் பற்றி சீதாராமா…! எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? எண்ணத்தின் உணர்வுகள் எப்படி ஆகிறது…? எந்தக் குணமோ அந்தச் சக்தி எப்படி இயக்குகின்றது…?

இராமனைப் பற்றியும் ஒற்றுமையைப் பற்றியும் கல்யாணராமனையும் எங்கே பார்ப்பது…? அதற்கு மாறான எண்ணங்களைத் தான் அங்கே (யாகத்திலும் சரி ஜாதகக் குறிப்பிலும் சரி) உருவாக்குகின்றான்.

தாலி கட்டும் முன் ஒவ்வொருவரும் பரபரப்பாகப் பார்ப்பார்கள். நேரம் ஆகிவிட்டது… ஆகிவிட்டது…! என்றே எண்ணுவார்கள்.

ஏனென்றால் இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும். இருந்தாலும் அவருடைய சொல்லின் நிலைகளே இங்கே மாற்றம் ஏற்படும்.
1.இதிலேயும் பகைமை…
2.நல்ல உணர்வுகளைச் சேர்த்து இன்னொரு உணர்வையும் சேர்த்தவுடன் இப்படிப் போராட்டம்.

இந்தப் பகைமை உணர்வுகள் தனக்குள் வந்த பின் இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…! என்று இதற்குள் கச..கச…கச..கச….! என்று அந்த உணர்ச்சிகள் மாறிவிடும்.

ஒரு நான்கு பேர் அந்தப் பற்றுடன் எண்ணினால் போதும். அந்தக் கசகசப்பு வரும். அப்படியானால் திருப்பூட்டும் பொழுது எந்த உணர்வை ஊட்டுகிறோம்…?

ஆனால் திருப்பூட்டும் பொழுது எப்படி இருக்க வேண்டும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருடைய உணர்வுகளையும் ஏகோபித்த நிலைகள் கொண்டு வரச் செய்து
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வைக்க வேண்டும்.

பின் இந்த இரு மனமும் ஒரு மனதாகும் இந்தத் தம்பதியர்கள்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் மணமக்கள் ஒன்றி வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
5.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
6.அவர்கள் அன்னை தந்தையரின் அரவணைப்பில் அவர்கள் இருவரும் வாழ வேண்டும்
7.அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்… மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இருவருக்குள்ளும் விளைய வேண்டும்
9.இருவரது எண்ணமும் இரண்டற ஒன்றி அவர்கள் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
10.இந்த உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும்
11.அந்தப் பண்பு கொண்ட அருள் ஞானக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும் என்று
12.திருமணத்திற்கு வந்த உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோருடைய வாக்கையும் இப்படிப் பதியச் செய்ய வேண்டும்.

இப்படி நடக்கும் இந்தத் திருமண நாளை அந்தத் தம்பதிகள் எண்ணினாலே முப்பத்தி முக்கோடி தேவாதி தேவர்கள் வாழ்த்தினார்கள்…! என்ற நிலைக்கு வரும்…! எப்படி…?

நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் என்ன செய்கிறது..? இதற்குள் ஒடுங்கிவிடுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் எல்லோருடைய வாழ்த்தும் அங்கே சேர்க்கப்படும் பொழுது அந்த வாழ்த்தின் தன்மை அங்கே பதிவாகி அந்த மகிழ்ச்சியின் தன்மை அங்கே உருவாகின்றது.

இந்த மாதிரி வாழ்த்துகளின் உணர்வு பதிவான பின் அங்கே “குழந்தை இல்லை…” என்ற சொல்லே வராது…!

இதே மாதிரித் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இதைப் போன்று தியானவழி நண்பர்களைக் கூப்பிட்டு சிறிது நேரம் தியானம் இருக்கச் செய்யுங்கள்.

தியானம் இருந்தபிறகு அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போல இந்த மணமக்கள் வாழ வேண்டும். அன்னை தந்தையரோடு அரவணைத்து வாழ வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

தொழில் வளம் பெருக வேண்டும். அவர்கள் மற்றவரை மதித்து நடக்கும் அந்தச் சக்தி மணமக்களுக்குக் கிடைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் இருவரும் பெற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் இந்தெந்த வழிகளில் நடக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு பத்து பேர் சேர்ந்து அந்த இடத்தில் தியானமிருங்கள்.

நீங்கள் அக்னி குண்டம் வளர்த்து வேள்வி நடத்தித் திருமணம் செய்கிறீர்கள் அல்லவா. நீங்கள் ஒரு பத்துப் பேர் சேர்ந்து இந்த தியான முறைப்படி சொல்லி வாழ்த்துக் கூறுங்கள்.
1.தாய் தந்தையரிடம் தாலியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள்.
2.அந்த மணமக்களை (உங்கள் குழந்தைகளை) வாழ்த்துங்கள்.

பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் மற்றவர்களும் இணைந்து நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி வாழ்ந்தோம்.
1.எதிர்காலத்தில் மணமக்கள் நீங்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் குறைகளை நீக்கி வாழுங்கள். தெரிந்துணர்ந்து வாழுங்கள்.
3,உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று இத்தகைய உயர்ந்த எண்ணத்தைச் செலுத்தித் திருப்பூட்டச் செய்யுங்கள்.

அதே நேரத்தில் தியானமிருந்தவர்கள் அனைவரும் யாகம் வளர்ப்பதற்குச் சமம். யாகம் வளர்க்க வேண்டும் என்றால் புற நிலை. ஆனால் நீங்கள் இதை அகத்திற்குள் இருந்து உயர்ந்த அலைகளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போல மணமக்கள் வாழ வேண்டும். அவர்கள் இருவரும் என்றென்றும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அவர்கள் குழந்தைகள் ஞானக் குழந்தையாக எதிர்காலத்தில் வளர வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அந்த அலைகள் அங்கே படரும்.

இது தான் ஞானிகள் காட்டிய திருப்பூட்டும் முறை…!

சிதம்பரத்தைச் சாதாரணமாக நினைக்கின்றோம்…!

 

தில்லையம்பதி என்ற நிலையில்… சிதம்பரத்தில் ஆலயம் அமைத்திருக்கும் இடத்தைப் பற்றிய “உண்மையை (சரித்திரத்தை)” நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை உணர்த்தியவர் யார்…? திருமூலர்.

1.”மூலத்தின் உண்மைகளை…” ஒவ்வொரு அணுவின் இயக்கத்தின் உண்மைகளை அறிந்தவன் என்பதற்குத்தான் திருமூலர் என்று பெயர் வந்தது.
2.அண்டத்தின் இயக்கம் பிண்டத்தில் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்று அவர் கூறியுள்ளார்.

அது இந்த ஸ்தலத்திலே… தில்லையம்பதியிலே காட்டப்பட்டது.

பதஞ்சலியாக அரசாட்சி பரிந்து கொண்டிருக்கும் பொழுது யாகங்களையும் கேள்விகளையும் பல மந்திர நிலைகளையும் செய்து வரும் போது “கூடுவிட்டு கூடுபாயும்…” உணர்வுகளைக் கற்றுக் கொண்டவன் அவன்.

பதஞ்சலி அரசனானக ஆட்சி செய்து வந்தாலும் அந்த உடலை மற்ற அரசர்கள் இறக்கும்படி செய்தால்… அதிலிருந்து தப்பி இன்னொரு உடலுக்குள் தாவிச் செல்லும் வித்தையை கற்றுக் கொண்டவன் அவன்.

“தன்னுடைய சுகத்தை எதிலேயுமே மறையாது…” பல உடல்களில் தாவி மகிழ்ந்து வாழ முடியும்…! என்று பதஞ்சலி அதைச் செயலாக்கி அதன் வழி அவன் அரசாட்சி செய்து வந்தான்.

1.அவனுடைய மனைவி இன்னொரு அரசனுடைய மகள்தான்… அவளுக்கு அஞ்ச வேண்டும்
2.நாட்டைக் காக்கும் சேனாதிபதிகள் பலர் இருந்தாலும் அவன் உதவியை நாட வேண்டும்.
3.அரசன் இட்ட சட்டத்தை மக்களுக்குப் புகுத்தினாலும் போர் முறை வரும் பொழுது
4.சேனாதிபதி எதிராகத் திரும்பி விட்டால் அவனுக்கு அஞ்சி அவளிடம் நயந்தே செயல்பட வேண்டும்.
5.தான் சட்டத்திற்கு மாறாக நடந்தால் மக்கள் கொதித்து எழுவார்கள்… ஆக மக்களைக் காக்கும் எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படிப் பல நிலைகளிலிருந்து தன்னைக் காத்திடும் நிலைக்காகக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினான்.

அதிலே இரு வகை உண்டு.

உருவாக்கிக் கொண்ட மந்திர ஒலிகளை ஒருவர் சொல்வார் என்றால்… உடலுக்குள் அவன் சொன்ன நிலையில் எடுக்கப்படும் பொழுது இந்த ஆன்மா அந்த உடலுக்குள் சென்று அந்த உடலைச் செயல்படுத்தும்… இது ஒரு முறை.

அதே சமயம் யாருடைய தயவும் இல்லாதபடி நஞ்சு கொண்ட பாம்பின் உடலுக்குள் புகுந்து… நகர்ந்து சென்று வேறு ஒரு உடலின் மீது இந்த விஷத்தைப் பாய்ச்சி அந்த உடலைச் சுருங்கச் செய்து… அதன் வழி கொண்டு அந்த உடலை ஆட்சி புரியும் நிலை… இது ஒரு முறை.

இப்படித்தான் பதஞ்சலி செய்து கொண்டான்.

எதிரிகள் வரும் பொழுது எதிரிகளிடமிருந்து மீள்வதற்காகப் பதஞ்சலி தன் சேனாதிபதியிடம் விவரத்தைச் சொல்கின்றான்.

போர்ப்பயிற்சியாக நான் செல்கிறேன்… என்னுடைய சரீரத்தை ஒளித்து வைத்துவிடு. இந்த உடலை விட்டு நான் பாம்பின் உடலுக்குள் ஏவி வெளியில் செல்கின்றேன்.

இந்த உடலை நீ பாதுகாத்து வைத்திருப்பாய் என்றால் நான் மீண்டும் இந்த உடலுக்குள் வர உதவும். இன்னென்ன பக்குவத்தில் நீ வைத்துக் கொள்…! என்று சேனாதிபதியிடம் பதஞ்சலி சொல்கின்றான்.

சரி… என்று சொன்னவுடன்… பதஞ்சலி அந்த உடலை விட்டு வெளிவந்து பாம்பின் உடலுக்குள் செல்கிறான். ஆனால் அவ்வாறு சென்ற பின் சேனாதிபதி அரசனின் உடலைப் பொசுக்கி விடுகின்றான்.

இப்படி… பதஞ்சலி மீண்டும் தன் உடலுக்குள் வர முடியாத நிலை ஆன பின்பு தான் நாடு முழுவதும் அவன் சுழன்று வந்து “தில்லையம்பதியில்… சிதம்பரத்தில் வந்து சேர்கின்றான்…!

இங்கிருக்கக்கூடிய ஆலயத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அந்த ஆலயத்திற்குள் அங்கே பாம்பின் உடல் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தான்.

இப்பகுதியில் அக்காலத்தில் நந்தவனம் என்றும் உண்டு. பதஞ்சலி அவைகளைச் சுற்றி வருவதும் காடு மேடுகளில் அலைவதும் மற்றவர் கண்களுக்குச் சிக்காது அலைந்து கொண்டிருந்தது.

எப்படியும் மனித ரூபம் பெற வேண்டும் என்று அதற்குண்டான சந்தர்ப்பத்தை எடுத்து… ஒரு மாடு மேய்ப்பவனைத் தீண்டி இந்த விஷத்தின் துணை கொண்டு அந்த உடலுக்குள் புகுகின்றது.

அப்பொழுது மாடு மேய்ப்பவனுடைய உணர்வுகள் பலவீனம் அடைகின்றது இவனுடைய உணர்வு அந்த உடலை ஆட்சி புரியத் தொடங்குகிறது.

ஆட்சி புரிந்தாலும் இதன் நிலையில் கொண்டு மாடு மேய்ப்பவனுடைய வீட்டுக்குச் சென்ற பின்… அவனுடைய மனைவி இவனுக்கு வேண்டிய உபகாரங்களையும்… சுடு தண்ணீர் வைத்துப் பணிவிடைகளையும் செய்கின்றது.

அதைப் பார்க்கும் பொழுது தான் அவன் திகைக்கின்றான்…!

அரசு வாழ்க்கையில் தான் அரசனாக இருக்கும் பொழுது அரசிக்கு அஞ்சியும் சேனாதிபதிக்கு அஞ்சியும் தான் இட்ட சட்டத்திற்கு மக்களுக்காக வேண்டி அஞ்சியும் எதிரியான அரசனிடமிருந்து தப்ப அஞ்சி வாழ வேண்டிய சூழ்நிலைகளே வந்தது.

1.ஞானிகள் காட்டிய விண்ணுலக ஆற்றலை தன் சுயநலங்களுக்காக மாற்றிய உணர்வுகள் எவ்வாறு ஆனது…? என்று
2.இங்கே மாடு மேய்ப்பவனின் உடலிலிருக்கும் போது… அவன் மனைவி பணிவிடை செய்யும் பொழுது இவனுக்கு அந்தச் சிந்தனைகள் வருகிறது.

அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை தில்லை நடராஜா…! தில்லை என்பது நமது பூமி. அது நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது.

இந்தப் பூமியின் செயலாக்கங்களில் அந்தச் சுழற்சியின் வேகத்தினால் இங்கே மற்ற உயிரினங்களும் தாவர இனங்களும் எவ்வாறு விளைந்தது…? என்று கற்றுணர்ந்தது தான் தில்லை நடராஜா.

தில்லையம்பலத்தாண்டவா…!
1.இந்த உடலான தில்லையை ஆண்டு கொண்டிருப்பவன் உயிர் என்றும்
2.தில்லை அம்பலம் என்ற இந்த உடலின் தன்மையை உணர்வின் குணங்களால் இயக்கும் நிலைகளும்
3.குணங்களுக்கொப்ப உடலின் இயக்கம் நடனம்… என்று இந்த நடனக் கலையைக் காட்டியவன் திருமூலர்
4.உணர்வுக்கொப்ப உடலின் இசையும் இசைக்கொப்ப உடலின் இயக்கம் என்றும் தெளிவாகத் தெரிந்து மக்களுக்கு வெளிப்படுத்தினார் திருமூலர்.

அவன் சொன்ன தத்துவம்… நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது என்பது.

ஆதியிலே… பேரண்டத்தில் விஷத்தின் தாக்குதல் விஷமற்றதைத் தாக்கப்படும்போது வெப்பமாகின்றது. வெப்பம் தாங்காது அணுக்களாகச் சிதறுண்டு ஓடுகின்றது. அந்த ஓடும் நிலைகள் ஈர்க்கும் நிலையில் தான் காந்தம் வருகின்றது.

இது தான் திருமூலம் ஆதியிலே உருப் பெற்ற உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றான்.

இந்த இடம்… தில்லையைப் பற்றிச் சாதாரணமாக நினைக்கின்றோம்…! ஆனால் எவ்வளவு பெரிய சரித்திரத்தைப் படைத்த இடம்…! என்று உணர்ந்தால் சிதம்பரத்தில் இந்த ஆலயத்தில் வணங்கும் முறைகளை நாம் பார்க்கலாம்.
1.தன்னை உணர்தல் என்றும்
2.தான் எடுக்கும் (சுவாசிக்கும்) உணர்வின் இயக்கம் என்றும்
3.வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? என்றும் காட்டிய நிலைகள் தான்
4.தில்லை நடராஜா என்றும் தில்லை அம்பலத்தாண்டவா என்றும் காட்டினார்.

பேரண்டத்தில் இத்தகைய நிலைகள் வரும் பொழுது ஆதி சக்தி என்பது விஷம்… அதனால் தாக்குண்டு வெப்பமாக உருவாகும் பொழுது ஆதி பராசக்தி… வெப்பத்தின் தணலால் தான் நகர்ந்து செல்லும் பொழுது ஈர்க்கும் காந்தமாக விளையும் நிலை ஆதிலட்சுமி…!

திருமூலர் காட்டிய இந்த நிலைகளை…
1.காரணப் பெயரும் காரணத்துடன் இயற்றப்பட்டதையும் நாம் உணர்ந்தால்
2.அந்த மகா ஞானி அமர்ந்த இந்த இடத்திலிருந்து அவருடைய ஆற்றல்களைப் பெற முடியும்.

தன் வாழ்க்கையில் அரசனாக இருக்கும் பொழுது ஆசையுடன் வாழ்ந்த நிலைகளை உணரப்படும் போது… எவ்வாறு அது இழக்கப்பட்டது…? என்றும் நாம் அந்த மெய்யை எதனால் இழந்தோம்…? அதை மீண்டும் எப்படிப் பெற வேண்டும்…? என்று தன்னில் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வைத் தான் அவன் அங்கே வெளிப்படுத்துகின்றான்..

மெய்ப்பொருளைக் கண்டறிந்த அந்தத் திருமூல மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் எடுத்தால் “வாழ்க்கையில் வரும் தீமைகளை…” நீக்க முடியும்.

அதே சமயத்தில்…
1.அந்த மகரிஷியின் உணர்வுகளை அனைவரும் பெற வேண்டும்… பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
3.சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது இந்த முறைப்படி தியானியுங்கள்.
4.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தவம் இருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.

வெறுமனே ஆண்டவனை அடையப் போகின்றேன் அவன் அருளைப் பெறப் போகின்றேன் என்று அவனையே எண்ணுவதற்குப் பெயர் தவமல்ல…!

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருப்பது உயிர். ஆண்டவனாக இயக்கிக் கொண்டிருப்பதும் எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டிருப்பதும் உணர்வின் சக்தியை அணுவாக உடலாகச் சிவமாக மாற்றிக் கொண்டிருப்பதும் சிவத்திற்குள் சக்தியாக இயக்கிக் கொண்டிருப்பதும் “உயிரே…”

இந்த உடலை ஆள்பவன் யார்…? ஆண்டவன் (உயிர்).
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ந்திடும் உணர்வை நாம் ஊட்டி
2.மகிழச் செய்யும் பொழுது அந்த ஆண்டவன் அருளை நாம் பெற முடியும்.
3.அதன் வழியில் அனைவரும் மகிழ வேண்டும் என்று நாம் எண்ணினால் அது தவம்.
4.அந்த மகிழ்ச்சி நமக்குள் போற்றும் நிலையாக வந்தால் அந்தத் தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம்.

ஆலயத்தில் இந்த முறைப்படி நீங்கள் செயல்படுத்துங்கள். ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம். காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவோம்.

நமக்குள் உள்ள அறியாது புகுந்த நஞ்சின் தன்மையை வளராது தடுப்போம்… உலக மக்களைக் காப்போம்…!

1.அடுத்து வரும் சந்ததியினரின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அருள் ஞானிகள் உணர்வைப் போதிப்போம்.
2.அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்… பிறந்த பின் உலகைக் காக்கும் ஞானிகளாக வளர்ப்போம்.

இதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். அதே போல நாம் பார்ப்பவருக்கெல்லாம் அதைப் பெற வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு இதைச் செயலாக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முதலிலே மூதாதையர்கள் மனிதனாகப் பிறந்தார்கள். தாய் தந்தையரை உருவாக்கினார்கள். தாய் தந்தையர் நம்மை உருவாக்கினார்கள். அந்தக் குல வழியில் தான் நாம் இன்று வந்துள்ளோம்.

நம் உயிர் ஒளியாக ஆனது. நுகரும் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற மனித உடலைப் பெற்ற நாம் நம் மூன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தச் சூட்சமச் சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். இது தலையாயக் கடமை…!

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள். ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல அருள் ஒளியுடன் ஒன்றி வாழச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்திட நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருந்திடல் வேண்டும்.

உதாரணமாகச் சிலர் எண்ணலாம். இது எப்படிச் சாத்தியப்படும் என்று…!

இன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டரில் அதில் உள்ள நாடாக்களில் எதெனெதன் உணர்வைப் பதிவு செய்கின்றோமோ அதை எல்லாம் சீராக இயக்கிக் காட்டுகின்றது. மற்ற இயந்திரங்களையும் இயக்கும் ஆணைகளையும் அது இடுகிறது. இதை ஒரு இராக்கெட்டில் உள்ள செயற்கைக் கோளுடன் பொருத்திவிடுகின்றனர்.

உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் அல்லது நட்சத்திரம் இருக்கிறது என்றால் எதன் திசைப் பக்கம் இந்தச் செயற்கைக் கோள் அது செல்ல வேண்டுமோ அந்த நாடாக்களில் இங்கே பதிவு செய்துவிடுகின்றனர்.

அந்த நாடாக்களில் பதிவு செய்து இயந்திரத்தில் போட்ட பின் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.எத்திசையின் தன்மை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ
2.அந்தத் திசையில் உள்ள கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகள் இதற்குள் பட்ட பின்
3.அதன் பாதையிலே அது அமைத்து அந்தக் கோளைச் சென்றடைகின்றது இவர்கள் இராக்கெட் மூலம் அனுப்பும் செயற்கைக் கோள்.

அங்கே வட்டமிட்டு அந்தக் கோளின் உணர்வுகளை நுகர்ந்தறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் அந்த நாடாவின் மூலமாக
1.தரையிலிருப்போர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து இங்கே பதியச் செய்து
2.அதனின் பாதையைச் சீராக அமைத்து உருவாக்குகின்றார்கள்.
3.இப்படித்தான் விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்களைச் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களுக்கும் அனுப்புகிறார்கள்.

இதைப் போன்று தான் நம் மூதாதையர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதனின் துணை கொண்டு அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

அந்த அருள் ஞானியின் சக்திகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “உந்தித் தள்ளி…!” இணையச் செய்ய வேண்டும்.

அங்கே சென்ற பின் இந்த உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. வழி காட்டிடும் அறிவின் ஒளியாக நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.

1.அதன் வழி கொண்டு அதன் வழியில் நம் முன்னோர்கள் அங்கே வளர
2.அவர்களின் உணர்வுகளை நமக்குள் பெருக்க
3.அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க நமக்கு உதவுவார்கள்.

இதற்கு முன் நாம் செய்யத் தவறிய நிலைகள் இருந்தாலும் பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் அந்த உயிரான்மாக்கள் புகுந்து இருப்பினும் அதனை நாம் இந்த வழியில்..
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.நமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அது கிடைக்கின்றது.
4.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளிச் சுடராக நம்மையும் வாழச் செய்யும்.
5.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு கொண்டு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.நாமும் அந்த வழியிலேயே சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் தருணம் பெறுகின்றோம்.

இதிலே சொன்ன முறைப்படி செய்வோர் நிச்சயம் இதனை உணரும் பருவம் பெறுவார்கள்.

“நம் குருநாதர் காட்டிய கலாச்சாரத்தை” நாம் உருவாக்க வேண்டும்

 

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் எத்தனையோ பேரைப் பார்க்க நேருகின்றது… சந்திக்க நேர்கிறது. “அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று நாம் தவம் இருக்க வேண்டும்.

“என்னைப் பார்ப்போருக்கெல்லாம்… நான் பார்ப்போருக்கெல்லாம்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

என் பையன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில்
1.கஷ்டத்தை நினைத்துச் சொன்னீர்கள் என்றால் முதலில் இந்தக் கஷ்டம் வரும்.
2.இது கலந்த உடனே மீண்டும் அந்த நினைவைத் தான் தூண்டும்.

ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார் என்றால்…
1.அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.விஷத்துடன் கலந்து மீண்டும் அவன் செய்தது தான் நினைவுக்கு வரும்.

ஆகவே அதை நாம் மறக்க…
1.மகரிஷிகள் அருள் சக்திகளை முதலிலே எண்ணி எடுத்து
2.நாம் பார்ப்போருக்கெல்லாம் என்னைப் பார்ப்போருக்கெல்லாம்
3.நான் நினைப்பவர்களுக்கெல்லாம் என்னை நினைப்பவர்களுக்கெல்லாம்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

எனக்கு எந்தெந்த சக்திகளைக் குருநாதர் எப்படிக் கொடுத்தாரோ அந்த முறைப்படித் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

முன்பெல்லாம் சிறுகச் சிறுகச் சொல்லி நினைவாற்றலை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது
1.அது அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒருமித்த நிலைகளாக நினைவாற்றல் கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் குரு அருளால் மகரிஷியின் அருள் ஒளியைப் பெற்று இருளைப் போக்கி
3.மெய்ப்பொருள் காணும் நிலைகளாக அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆலயத்திற்குச் சென்றாலும் அல்லது மற்ற குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அங்கே நாம் களைத்துப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போய் அமர்ந்த உடனே அந்தக் களைப்பால் “உஸ்ஸ்ஸ்… அப்பா…!” என்ற பெருமூச்சாகச் சோர்வின் தன்மையை வெளிவிடுகின்றோம்.

அப்பொழுது அந்த நேரத்தில் அந்த இடத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து
2.இந்த இடம் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்.
3.இந்தக் குடும்பங்கள் முழுவதும் மகிழ்ச்சி படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எந்த நோயாளியைப் பார்க்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுதும் மற்ற அலுவல்களுக்குச் செல்லும் பொழுதும் தொழில் செய்யும் பொழுதும் இரவு படுக்கப் போகும் முன்பும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அங்கே மகிழ்ந்த நிலை உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள். எந்தத் தொழில் செய்தாலும் இதைப் போல் நினைவில் கொள்ளுங்கள்.

1.உணவு உட்கொள்ளும் பொழுதும் அந்த உணவுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி படர்ந்து
2.அந்த உணவு எனக்குள் “உடல் நலம் பெறும் சக்தியாகப் பெருக வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கேட்க நேர்ந்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.நம்மை யார் துன்புறுத்தினாலும் அவர்களுடைய உணர்வு நமக்குள் பதிவாகாதபடி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு
3.என்னைப் பார்ப்பவருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்
4.என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்
5.எல்லோரும் போற்றும் நிலையாக அவர் வளர வேண்டும் என்று எண்ணத்தைப் பரப்புங்கள்.

உடலில் உபாதைகள் எது இருந்தாலும் அந்த உபாதைகளை எல்லாம் மறந்து விடுங்கள்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.புருவ மத்தியில் எண்ணி உணர்வுகளை உடலுக்குள் கொண்டு போங்கள்.
2.உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

நம் இன்னொன்றையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து குடும்பத்தில் கர்ப்பமற்றிருக்கும் காலங்களில் தத்துவங்களைப் போதித்தும்
1.விண்ணுலக ஆற்றலை… அந்த அகஸ்தியன் கண்டறிந்த உணர்வைச் சிலரும்
2.வியாசகர் காட்டிய தன்மையைச் சிலரும் “கருவிலே வளரும் குழந்தையிடத்தில் உருவாக்கினார்கள்…”

பண்டைய காலத்தில் இவ்வாறு வளர்ந்தவர்கள் அனைவரும் “தவயோகிகளாகவும் பெரும் ரிஷிகளாகவும் உருவாக்கப்பட்டு…” அந்தக் குழந்தைகள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அதை வளர்த்த தாய் தந்தையர் பிறவா நிலை அடையவும் அதுவே காரணமாக அமைந்தது.

தன்னால் முடியவில்லை என்றாலும் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட சக்தியை அன்று உருவாக்கினார்கள்.

1.இதைப் போன்ற கலாச்சாரத்தை நாமும் நம் குடும்பத்தில் கொண்டு வந்து
2.அருள் ஞானிகளை உருவாக்கி அவர்கள் துணையால் நாமும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
3.இனி வரக்கூடிய எதிர்கால சந்ததியினரும் அந்த வழியிலேயே வளரும்படி நாம் செய்தல் வேண்டும்.

ஆகவே
1.நம் குரு காட்டிய வழிகளில் அவர் ஆற்றலை நமக்குள் பெற்று
2.எல்லோருக்கும் மகிழ்ந்திடும் நிலைகள் பெற நாம் தியானிப்போம்
3.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தவமிருப்போம்.

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படிப் பெற்றான்…?

 

ஆதியிலே அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் விஷ ஜந்துக்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷ முறிவு வேர்களையும் அரைத்து உடலில் பூசுகின்றார்கள்.

சந்தர்ப்பத்தால் கருவுறும் பொழுது அந்த விஷ முறிவு வேர்களின் மணங்கள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகச் சேர்கின்றது.

பிறந்த பின் அவனுடைய வளர்ச்சி வர வர இவனைக் கண்டாலே மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகிறது.

அதே சமயத்தில் கடும் விஷத்தன்மை கொண்ட தாவர இனங்களை அவன் தாய் தந்தையர் நுகரும் பொழுது அந்த அதிகமான விஷம் கலந்து உடல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் மடிகின்றனர்.

1.கருவிலே வளரும் சிசுவிற்கு இந்த உணர்வின் தன்மை கலந்த நிலைகள் வளர்ச்சியின் தன்மை பெறுகின்றது.
2.ஆனால் தாய் தந்தையருக்கோ… மனிதனாக உருப்பெற்ற முழுமையான நிலைகள் விஷத்தன்மை ஆன பின் செல்கள் குறைகின்றது… மடிகிறது.
3.அகஸ்தியனுக்கு ஐந்து வயதாகும் போது அவர்கள் இருவருமே இறந்து விடுகின்றார்கள்.

தாய் தந்தையரை அகஸ்தியன் ஏக்கத்துடன் எண்ணுகின்றான். அவர்களோ இப்படி ஆகிவிட்டது… குழந்தை தனித்து இருப்பானே…! என்ற எண்ணத்தில் அந்த இரண்டு ஆன்மாக்களும் இவன் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

ஏக காலத்தில் இறந்து இரண்டு ஆன்மாக்களும் பிள்ளை மீது இருக்கும் பற்றால் காத்திடும் உணர்வு கொண்டு இங்கே வந்து விடுகின்றது. அதன் வழி தான் அகஸ்தியன் விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கின்றான்.

உதாரணமாக…
1.மிளகாய்த்தூளை (நெடி) சில பேய் பிடித்தவர்களுக்கு முன் போட்டு… உற்றுப் பார்க்கச் சொல்லுங்கள்… அது தும்மாது.
2.அதே போல் விஷமான பொருள்களை நுகரச் செய்தாலும் அதற்கு ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் அது விஷத்தைக் குடித்து அதனால் இறந்து இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தால் “இந்த விஷத்தைக் காண்பித்தால் அதற்கு ஆனந்தமாக இருக்கும்…”

இதைப் போன்று தான்
1.அகஸ்தியன் உடலில் இந்த இரு ஆன்மாக்கள் இருக்கப்படும் பொழுது தான் விண்ணின் ஆற்றலை அவன் பருகுகின்றான்.
2.சூரியனைப் பார்க்கும்போது அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு டேப்பிலே பதிவு ஆவது போன்று அவனுக்குள் பதிவாகின்றது.

அதிலிருந்து பரவும் நிலைகளையும்… அதன் தொடர் வரிசை நிலைகளில்… இந்தப் பிரஞ்சத்தையே உற்றுப் பார்க்கும் உணர்வின் ஆற்றல் முதல் மனிதன் அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது.

அதனால் தான் “அணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன்…” என்று சொல்வது. அவன் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அனைத்துமே இந்தப் பூமியிலே பரவி உள்ளது

அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிகின்றான்.
1.விண்ணை நோக்கி ஏகும் பொழுது நம் பூமி விண்ணிலிருந்து துருவத்தின் வழி கவரும் சக்தியைப் பூமியிலிருந்து உற்றுப் பார்க்கின்றான்.
2.அது கவரப்பட்டுப் பூமிக்குள் பரவுவதையும் காண்கின்றான்… ஆனால் அதை இவன் நுகர்கின்றான்.
3.அதன் உணர்வை அறிவாக அறிகின்றான்… அந்த உணர்வின் அணுக்கள் அவனிலே விளைகிறது.

அத்தகைய விண்ணின் ஆற்றல் வலுப்பெற்ற பின் அதே உணர்வுகள் இவனை அறியாமலேயே “நஞ்சின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாறும் நிலை வருகின்றது…”

காரணம்… தாயின் கருவிலேயே நஞ்சினை தன்மை அடக்கும் தன்மை வந்ததால் அந்த உணர்வு வரப்படும் பொழுது தாய் தந்தையரே இவனுக்குக் கடவுள் ஆகின்றார்கள்.

இதன் வழி கொண்டு தான் அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்று இவன் துருவ மகரிஷியாகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெற்று… இந்த உயிரான்மா அது வலுப் பெற்ற பின் அங்கே போகின்றது.

அகஸ்தியன் தாய் தந்தையரோ குழந்தை மீது பாசமாக வரும் பொழுது குழந்தையின் உடலுக்குள் வருகின்றது.
1.பின் இவன் விண்ணுக்குச் செல்லப்படும் பொழுது தன் தாய் தந்தையை விண்ணுக்கே அழைத்துச் செல்கின்றான்.
2.இது இயற்கையின் இயக்கம் என்று குருநாதர் காட்டினார்.

ஆகவே… மனிதர்களாக இருக்கும் நாம் இப்பொழுது எதைச் செய்ய வேண்டும்…? என்பது தான் முக்கியம்.

பக்தி கொண்டு நல்லவர்களாக இருப்பினும் பிறருடைய கஷ்டங்களை அதிகமாகக் கேட்டுணர்ந்தால் நம் நல்லது மறைகின்றது. கஷ்டம் அதிகமாக வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் மாற்றமாகின்றது.

இப்படி… சந்தர்ப்பத்தால் தீமைகள் நம் உடலுக்குள் புகுந்து அது விளைந்து நோயாக எப்படி மாறுகின்றதோ இதைப் போன்று ஒரு அழுக்குத் தண்ணீரில் நன்னீரை விடும் பொழுது அழுக்கு நீர் குறைகின்றது.

பல காலம் நம் வாழ்க்கையில் பலருடைய கஷ்டங்களைக் கேட்டு வந்த நாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் அந்தத் தீமை சிறுகச் சிறுகக் குறையும்.
2.பின் அது வலுப்பெற தீமையை நீக்கிடும் ஆற்றலே நமக்குள் பெருகுகின்றது.

வராகன் சாக்கடையைப் பிளந்து தன் வாழ்க்கையில் நல்லதை நுகர்ந்து நுகர்ந்து… தீமையைப் பிளந்திடும் உடலாக மனிதனாக வளர்ச்சி பெற்றது.

இதைப் போல… தீமைகளைப் பிளந்த அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அதை எல்லையாக வைத்து அங்கே துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அதனைப் பின்பற்றியவர்கள் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

அதனைப் பின்பற்றினால் அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நாமும் செல்கின்றோம். உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.

ஏனென்றால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலிலே நீடித்த நாள் நாம் இருக்கப் போவதில்லை. ஆகவே… எது நிலையானது…? அந்த மகரிஷிகளின் அருள் ஒளி தான்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எப்படியும் பெற வேண்டும். அவர்களைப் பின்பற்றி நீங்கள் செல்ல வேண்டும்.

காரணம்…
1.வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படியெல்லாம் மாற்றுகின்றது…?
2.உயர்ந்த நிலைகள் பெறுவதை எப்படி அது மாற்றியமைக்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் அந்த அருள் வழியில் என்றும் வாழ வேண்டும் என்பதற்கே தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு பக்கம் காற்று மண்டலத்தில் ஒரு விஷம் கலந்த பொருளை விஞ்ஞானத்தால் உருவாக்குகின்றனர்.

ஒரு பேட்டரி செல் தனக்குள் காந்தத்தை உருவாக்கும் சக்தி பெற்றது. அதை எலெக்ட்ரான் (மின்சாரம்) ஆக மாற்றக்கூடிய சக்தி பெற்றது. அதிலே கலந்த இந்த விஷத் தன்மை கொண்ட பொருளை நீக்குவதற்காக நெருப்பிலே இட்டுப் புகையாக மாற்றுகின்றார்கள்.

இந்தப் புகையின் தன்மை வெளி வரும் பொழுது சூரியனின் காந்தப் புலன் அறிவு அதைக் கவர்கின்றது.
1.அது எந்தத் திசை நோக்கிச் செல்கிறதோ அந்தத் திசையில் நாம் செல்வோம் என்றால்
2.அந்த உணர்வை நாம் சுவாசிக்கப்படும் பொழுது நம் சுவாசப் பைக்குள் சென்று
3.அந்தக் கெமிக்கல் நமக்குள் இருக்கும் உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது.
4.அப்படி மடிந்து விட்டால் அந்த உறுப்புகளின் திறன் இழக்கப்படுகின்றது.

இது நம்மை அறியாமலேயே சுவாசத்தின் வழி வரக்கூடிய தீமைகள்.

நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் நமக்குள் மூச்சுத் திணறலும் கடும் நோய்களும் உருவாகின்றது.

ஆனால் நாம் சுவாசித்த கெமிக்கலின் உணர்வுகள் இரத்த நாளங்களுக்குள் சென்று இரத்தத்தில் கலந்து விட்டால்
1.இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னிக்குள் இந்த இரத்தம் புகுந்து வடிகட்டப்படும் பொழுது
2.அதிலிருந்து வெளியே வரும் பொழுது அந்த வடிகட்டும் திறன் இழந்து கிட்னியைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது
3.நாம் சந்தர்ப்பத்தால் சுவாசித்த கெமிக்கல்.

இப்படி இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை தவறி விட்டால் நம் இரத்த நாளங்களில் தெளிவாக்கும் நிலைகள் இழந்து விடுகின்றது. இதைப் போல் நம் உடலில் நம்மை அறியாமலே வாழ்க்கையில் நுகரும் சக்திகளால் தீமைகள் உருவாகின்றது.

நமக்குள் உருவான இந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது இது நம் சிறு மூளை பாகம் வரையிலும் சுழன்று கொண்டேயிருக்கும்.

இதனின் உணர்வின் தன்மை வளர்ச்சி அடைந்த பின் இந்த வளர்ச்சி நம் உடல்களிலே ஒவ்வொரு நிமிடமும் தன் பசிக்காக ஏங்கும்.. எப்படி ஒரு கோழி கருவுற்ற பின் கேறுகின்றதோ இதைப் போல தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

ஒரு மனிதன் தனக்கு வேண்டிய காரியம் நடக்கவில்லை என்றால் திரும்பத் திரும்ப அந்த வேதனை உணர்வுகளை நுகர்கின்றார். இந்த உணர்வின் தன்மை 48 நாள் ஆகிவிட்டால்
1.கோழி கருவுற்று தனக்குள் முட்டையாக மாறுவது போல்
2.நாம் நுகர்ந்த உணர்வு கருவுற்று அதனின் முட்டையாக உடலுக்குள் மாறுகின்றது.

முட்டையாக ஆன பின் அதனின் செயலாக்கங்கள் அது உள்ளுக்கே அடைபட்டிருக்கின்றது. நம் இரத்த நாளங்களிலே அது சுழலப்படும் பொழுது அது சிறுகச் சிறுக நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஊடுருவி இரத்தத்தின் வழியாக எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கும் நிலை பெறுகின்றது.

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அது இரத்த நாளங்களில் செல்லும் பொழுது நல்ல அணுக்கள் இதை ஏற்க மறுக்கின்றது. அதனின் வட்டத்தில் சென்ற பின் நல்ல அணுக்களும் சோர்வடைகின்றது.
1.அவ்வாறு சோர்வடையத் தொடங்கிவிட்டால்
2.நம் உடலும் சோர்வடைகின்றது… நம் எண்ண வலுவும் குறைந்து விடுகின்றது.

எதனைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அந்த உணர்வை நுகர முடியாது சென்று விட்டால்… உடலுக்குள் நல்ல உணர்வுகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

சோர்வடைந்தால் மீண்டும் அது நலிவடைந்து கொண்டேயிருக்கும்.

சிலரை நீங்கள் பார்க்கலாம். சாப்பாடு நிறையச் சாப்பிடுவார்கள். இருந்தாலும் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது உறுப்புகளில் அஜீரணச் சக்தி ஏற்படும்.
1.இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உடல் நலியும் தன்மையே வரும்.
2.ஏனென்றால் நல்ல அணு செல்கள் அது வாடும் தன்மை வருகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள்.

ஆகவே இதைப் போன்று நாம் எடுக்கும் இந்த உணர்வுகள் அது வந்த பின் இது இடைமறித்துச் செல்லும் பொழுது நம் இருதய வாயில்களில் இது ஊடுருவுகிறது.

நம் இருதயமோ மற்ற இடங்களுக்கெல்லாம் அழுத்தம் கொடுத்து எல்லா உறுப்புகளுக்கும் இரத்தங்களை அனுப்புகின்றது.

1.வெறுப்படையும் உணர்வைக் கொண்ட ஒரு அணுக் கரு
2.அந்த இருதயத் துடிப்பிற்குள் சென்று அதனின் நுழைவாயிலில் அது புகுந்து விட்டால் போதும்.
3.அணுவாக மாறிய நிலையில் வெறுப்பான உணர்ச்சிகளை அதன் வழி கொண்டு பரப்பிக் கொண்டேயிருக்கும்.

இப்படிப் பரப்பும் பொழுது
1.சிறுமூளைக்குள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.தூண்டும் பொழுது (அந்த உணர்ச்சி) உயிரான காந்தப் புலன்களுக்குள் அந்த அறிவின் தன்மையை இயக்குகின்றது.
3.பின் கண்… காது… மூக்கு… உடல்.. என்ற நிலைகளில் இந்த உணர்ச்சிகளை நம் உயிர் ஒலி அலைகளாக மாற்றுகின்றது.

அதன் வழிக் கொண்டு நாம் இதை மூச்சாக வெளியிட்ட சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அதே இனமான சக்திகளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

ஆன்மாவாக மாற்றிய நிலைகளிலிருந்து எப்படி ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சுகளாக வந்த பின் அதற்குக் கூவி இரையை எடுக்கும்படிக் கற்றுக் கொடுக்கின்றதோ அதே போல்
1.நமக்குள் உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது
2.நம் உயிர் அதற்கு உணவை ஊட்டிச் சாந்தப்படுத்துகின்றது.

உதாரணமாக நாம் வேதனை கொண்ட உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்ட பின் நீங்கள் “இதெல்லாம் வேண்டாம்… மகிழ்ச்சி கொண்ட நிலைகள் பெறவேண்டும்…! என்று எண்ணினாலும் அதன் உணர்வின் தன்மை வேகத் துடிப்பு கூடும்.
1.அந்த வேதனை உணர்வின் வேகம் அதிகரிக்கும்.
2.எந்தப் பாகத்தில் அந்த உறுப்புகளுக்குள் அது தேங்குகின்றதோ
3.அந்த உறுப்புகளில் வேதனையான ஒலிகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.
4.அதனால் நாம் சிந்தனையும் இழந்துவிடுவோம்.
5.அங்கங்களை இயக்கக்கூடிய சக்தியும் குறைந்து விடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நாம் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து சுவாசிக்கும் உணர்வுகள் இப்படிப் பல நிலைகளையும் நோய்களையும் உருவாக்கிவிடுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டுமா இல்லையா…?

வள்ளி திருமணத்தில் உள்ள முக்கியமான தத்துவம்

 

சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகச் சாஸ்திரங்களிலே “வள்ளி திருமணத்தைக் காட்டுகிறார்கள்…”

வள்ளி திணைக் காட்டினைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாள். தான் விளைய வைத்த பொருளை பறவைகள் கொத்தித் திங்காதபடி பாதுகாப்புக்காகக் காவல் புரிகின்றாள்.

அவள் யார்…? வேடுவனின் மகள்.
1.நாம் பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி… அதில் விளைந்த சக்தி தான் மனித உடலிலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி வள்ளி
2.வல்லவன்… வல்லவி – வல்லி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள் வள்ளி என்று.

அதைத் தனித்துப் பிரித்துக் காட்டி வள்ளி திருமணம் என்ற காவியமாகப் படைத்து “எது தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்…?” என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் நினைப்பது அது காவியம் என்று…! ஆனால் சாதாரண மக்களுக்கும் புரியும் தன்மைக்குத் தான் அதைக் காட்டுகின்றார்கள்.

வேடுவன் என்றால் பல கோடிச் சரீரங்களில் நாம் வேட்டையாடி அதிலே விளைந்த சக்தி தான் உடலில் உருப் பெற்ற ஆறாவது அறிவு. அது தான் வள்ளி.

திணைக்காட்டிலே காவல் இருக்கின்றது. தான் விளைய வைத்த பொருளை மற்ற உயிரினங்கள் எடுத்துச் செல்லாது பாதுகாக்கின்றது. வெகு தூரத்திலிருந்து கவண் கொண்டு வீசுகின்றது.

நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாக்கும் நிலை வள்ளி.
1.அந்த வள்ளியை முருகன் காதலிக்கின்றான்…
2.அதாவது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வலிமைமிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகு. நாம் மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள். அதைத் தான் முருகன் என்றும்
1.தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.
2.தன்னைப் பாதுகாக்கும் உணர்வை நேசித்தோம் என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

திணைக்காட்டில் குருவியை விட்டு விட்டோம் என்றால் அதிலே விளைவதைத் தின்றுவிடும். அது போல் நம்மை ஏசுவோரையோ மற்றவர்களையோ நாம் எண்ணுகிறோம் என்றால் அந்த உணர்வுகள் நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.

நாம் வேதனைப்படும்படியான சொல்லை ஒருவன் சொல்லிவிட்டால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து… நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.

வேதனை என்று எடுத்துக் கொண்டால் உடலில் டி.பி.நோய் வருகின்றது நல்ல அணுக்களை அது தின்று விடுகிறது.

அதனால் தான் வள்ளி…!
1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை நாம் நேசித்தால் உடலுக்குள் சென்ற பின்… உயிர் அதைத் தெய்வ ஆணையாக
2.நமக்குள் அந்தக் காத்திடும் உணர்வின் செயலாக இந்த உடலை இயக்குகின்றது… அது தான் தெய்வானை.

இச்சா சக்தி…! தன்னைப் பாதுகாக்கும் நிலைகளை இச்சைப்படும் பொழுது இந்த உணர்வு நம் உடலுக்குள் சென்று கிரியை. எதன் எண்ணத்தால் நாம் இச்சைப்படுகின்றோமோ அதன் ஞானமாக இந்த உடலை இயக்கும்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று தெளிவாக நமக்குச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

என்னை இப்படிப் பேசி விட்டானே என்னைக் கேவலப்படுத்துகின்றானே என்ற நிலையில் அதை நாம் இச்சை பட்டால் அவனை விடுவேனா என்ற நிலைகள் அதைக் கூட்டும் பொழுது உடலுக்குள் இது தெய்வ ஆணையாகச் சென்று விடுகின்றது.

அவன் எந்தெந்தக் கெடுதல் செய்தானோ அது நமக்குள் புகுந்து அதன் வழி நம்மை இயக்குகின்றது அதன் ஞானமாக நம் செயலும் உணர்வும் அணுக்களும் உடல் உறுப்புகளும் விளைகின்றது.

நாம் வள்ளி திருமணத்தைச் சாதாரணமாகப் பார்த்துச் சிரிப்பதிலும் கைதட்டுவதிலும் தான் இருக்கின்றோமே தவிர சாதாரண மக்களும் உள்பொருளைப் புரிந்து வாழ்க்கையில் நீ எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உண்மையைக் காட்டக்கூடிய காவியத் தொகுப்பு தான் அது.

ஆகவே நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

1.ஆறாவது அறிவின் வலிமையால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இச்சை அது மேலே பட வேண்டும்.
2.அந்த உணர்வின் சக்தி நமக்குள் இருக்கும் பொழுது தெய்வ ஆணையாக நமக்குள் செயல்படும் சக்தியாக வரும்
3.அதன் ஞானமாக அந்த உணர்வுகள் இந்த உடலில் இயக்கப்பட்டு அந்தப் பண்பு கொண்ட நம்மை அந்த வழியிலே அது அழைத்துச் செல்லும்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி…! சொல் அது மூன்று தான் ஆனால் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அதன் செயலாகக் கிரியை ஆகி அதன் ஞானமாக நம்மை வளர்க்கும் என்ற பொதுச் சொல்லாகக் காட்டினார்கள்.

ஆகவே… எதிலேயும்… நாம் எதை இச்சைப்பட வேண்டும்…? என்ற தத்துவம் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தன்னைக் காக்கும் வழிமுறை எது…? என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.

ஆலயத்திற்கு சென்று நம் குறைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் அங்கே சொல்லி அதை வளர்க்கக்கூடாது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு… இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்… அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நாம் யாரையோ குறை கூறுகின்றோம்
2.எவரையோ குறை கூறுகின்றோம் என்று இருக்கலாம்.
3.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவாக அந்தக் குறையான உணர்வுகளை நம் உடலில் உயிர் உருவாக்கிவிடும்.

யாரைக் குறையாக எண்ணினோமோ அந்தக் குறை உணர்வின் அணுக்களாக மாறுகின்றது. அது நாளடைவில் நம் இரத்தத்தில் கருவின் முட்டையாக மாறுகின்றது.

அது முட்டையாக மாறி…
1.எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
2.அதனின்றே உணர்வின் தன்மை இது இருப்பிடமாக வைத்து
3.அதன் துணை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி இந்த இரத்தநாளங்களின் வழியாக உயிருக்கு அனுப்புகின்றது.

உயிருக்குள் தூவப்படும் பொழுது நாம் யாரைக் குறையாக எண்ணினோமோ அவை அனைத்தையும் உணவாகக் கொடுத்து இந்த உடலின் உறுப்புகளைக் குறையாக மாற்றி நம்மை வேதனைப்படச் செய்யும்.

பின் அந்த வேதனையிலிருந்து நாம் தப்புவதே மிகவும் கடினம். ஆகவே தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஒருவரைப் பற்றி அந்தக் குறையின் உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையிலேயும் ஒரு தொழில் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நிலைகளிலோ மேல் வலி… நோய்… மற்ற குறை… எல்லாமே இருக்கும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது.

அவரைக் குறையாக எண்ணிக் கொண்டிருந்தால் அந்தக் குறையைத்தான் இதிலிருந்து நாம் நுகர முடியும். அவர் முதலில் நம்முடன் அன்பு கொண்டு பாசம் கொண்டு பழகியிருந்தால் அந்தக் குறைகளை வேகமாக இழுத்துவிடும்.

ரேடியோ டி.வி.க்களில் ஒலி, ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது அதிலே எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்த ஸ்டேசனைத் தான் எடுக்கும்.

அதைப் போல் தான் ஒருவருடன் நாம் பழகப்படும் பொழுது அந்தப் பதிவின் துணை கொண்டு நமக்குள் அவருடைய உணர்வுகள் எளிதாக வந்துவிடும்.

சுவை மிக்க பாலாக இருந்தாலும் அதற்குள் விஷத்தைக் கலந்து விட்டால் குடித்தால் அந்தப் பாலுக்கு வலு ஏது…? அந்த விஷத்தின் தன்மை போல் தான் உணர்வின் எண்ணங்கள் தூவப்பட்டு அங்கே விஷத் தன்மையை வளர்த்துவிடும்.

இன்றைய செயல் நாளைய சரீரமாகிவிடும். அதைத் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாக்குகின்றார்கள்.

நாம் எடுக்கும் உணர்வுகள் அணுவின் தன்மை அடைந்து விட்டால் தன் உணவின் தன்மையை அது எடுத்துத் தன் இனத்தின் தன்மையைப் பெருக்கப்படும் பொழுது அதன் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் அதிகரித்து நமக்குள் உருப்பெறும் உணர்வுகளை அது உருவாக்கி
1.நாம் எதை எண்ணினோமோ
2.அந்த எண்ணத்தின் வழியாகவே… அடுத்த சரீரத்தைப் பெறச் செய்யும்.

ஆகையினால் பிறரைப் பற்றிக் நாம் குறை கூறும் நிலையோ பிறருடைய நிலைகளை எடுத்து கொண்டால் “தான் உயர்ந்தவன்…!” (நல்லவன்) என்ற நிலைகள் இருப்பினும் அதை மாற்றிவிடும். அதாவது
1.பாதாம் உயர்ந்ததாக இருப்பினும்
2.அதை விஷத்தில் துவட்டி உணவாக உட்கொண்டால்
3.நம்மை மடியச் செய்துவிடும்… பாதாமிற்குச் சக்தியில்லை.
4.ஏனென்றால் விஷத்தின் தன்மையே ஆற்றல் கொண்டது.
5.ஒரு விஷத்தின் இயக்கமே உலகத்தின் இயக்கம்.

சூரியன் விஷத்தின் நிலையால் சுழற்சியின் வேகம் கூடினாலும் அதிலே உருவாகும் உணர்வுகள் நஞ்சினைப் பிரித்திடும் நிலை வருகின்றது.

சூரியன் தன் சுழற்சியால் ஏற்படும் உணர்வுகள் கொண்டு அந்த நஞ்சின் மேல் மோதப்பட்டு வெப்பத்தின் தணல் கூடப்படும் பொழுது விஷத்தைப் பிரித்து விடுகின்றது. (சூரியன் என்றால் நாராயணன்)

விஷத்தைப் பிரித்த பின் அது சிதறி ஓடினாலும் இந்த வெப்பத்தால் உருவான நிலைகள் “ஈர்க்கும் காந்தம்…” என்ற நிலைகள் வருகின்றது. அந்தக் காந்தத்திற்குப் பெயர் லட்சுமி.

காந்தமாகப்படும் பொழுது நகர்ந்து சென்று கோள்களின் விஷத் தன்மையைத் தனக்குள் (லட்சுமி) கவர்ந்து கொண்டாலும் விஷத்தை இந்தக் காந்தம் கவர்ந்து கொண்டால் அது “இலட்சுமணா…”. அது தான் ஒரு அணுவிற்குள் இருக்கும் இயக்கச் சக்தி…!

காந்தத்தால் கவர்ந்து கொண்ட நிலையாக இவ்வாறு ஒரு அணுவின் இயக்கமாகச் சூரியனிலிருந்து வெளிப்படுவதை (நாராயணன்) இந்த உலகத்தில் தன் ஒளியை அனுப்பிக் கொண்டேயிருக்கின்றது.

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்றால் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் சீதாலட்சுமியாக மாறுகின்றது. விஷம் அந்தச் சத்தின் (நாம் பேசியதை) மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அது ஞானமாகின்றது. அந்த ஞானத்தின் வழி கொண்டு தான் அந்த அணுவின் இயக்கம் இருக்கும்.

எதன் வழி கொண்டு எதனில் உருவானதோ அதன் வழி கொண்ட ஈர்ப்புக்குள் சென்று அதை வளர்க்கும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் போல் தான் நாம் எண்ணும் எண்ணங்கள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.வேதனை என்ற உணர்வுகளோ
2.ஒருவரை வேதனைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு தன்னை மறந்து அதைச் சொன்னோம் என்றால்
3.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி இரத்த நாளங்களில் சுழலச் செய்கின்றது.

அதே போல்..
1.பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணங்களோ
2.பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களோ
3.பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணங்களை எவர் எடுத்தாலும் சரி
4.நானே பெரிய சக்தி பெற்றவனாக இருந்தாலும் அந்த விஷத்தை உருவாக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது
5.எனக்குள் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும் நிலைகளே வரும்.

நல்லவைகள் எதைச் செய்தாலும் விஷத்தின் ஈர்ப்புக்குள் சென்று அந்த அணுக்களும் (விஷத்தை) உட்கொள்ளா நிலைகள் மறுத்து அந்த அணுக்கள் சோர்வடையத் தொடங்கிவிடும்.

அது சோர்வடைந்து விஷத்தின் தன்மை ஆட்கொண்டால் அனைத்தும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. விஷத் தன்மையாக மாறிய பின் நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் விஷமான உயிரினங்களாகத் தான் பிறக்க நேரும்.

அதைப் போன்ற நிலைகள் ஆகாது தடுக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.விஷத்தை ஒடுக்கிய… நஞ்சினை வென்ற…
2.அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.உங்களுக்குள் மீண்டும்… மீண்டும்… மீண்டும்… மீண்டும்… ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி எடுத்து உங்களுக்குள் சேர்த்து உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.
1.இது ஒன்றும் கஷ்டமில்லை.
2.சிறிது நாள் பழகி விட்டால் பின் தன்னாலேயே இது வரும்.

அகஸ்தியன் உணர்வுகள் மீண்டும் இந்தத் தென்னாட்டிலே தழைக்கின்றது

 

மனிதருக்குள் பதிவான அசுரத் தன்மைகளை மாற்றுவதற்குக் குருநாதர் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும்… நமது நாட்டில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தான். உணர்வின் தன்மை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.
1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றும் அவன் வாழ்வது போன்று நம் தென்னாட்டிலே மீண்டும் இது தழைக்கின்றது.
2.மற்ற நாடுகளில் இல்லை… தென்னாட்டில் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கலந்த இந்தக் கலாச்சாரங்கள் விளைகின்றது.
3.அதன் அடிப்படையில் தான் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அந்த அகஸ்தியன் உணர்வை உணர்த்துவதும்… உணரச் செய்வதும்.
4.அவர்கள் வளர்ந்தால் அந்த மெய்ப் பொருளின் நிலைகளில் அவருடைய வளர்ச்சியில் நாமும் பெறலாம்.
5.அந்த உணர்வுகளை இங்கே படரச் செய்யவும் முடியும்…. ஆகவே அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்தில் தொடர்பு கொண்டாலும் அங்கே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவில் உருவாகும் அந்தக் குழந்தைகள் “அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

அழகான சாமி படங்கள் எத்தனையோ இருக்கின்றது. அது போன்ற அழகான குழந்தையாக வளர வேண்டும். மகாலட்சுமி போன்று… மகா சரஸ்வதி போன்று சர்வ ஞானம் பெற வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மை பெற்ற நிலையில் இருளைப் போக்கும் மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லி அந்த ஞானிகள் காட்டிய வழியினைச் சொல்லுங்கள்.

குடும்பத்தில் மகரிஷிகள் உணர்வுகள் படர வேண்டும். குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவில் வளரும் இந்தக் குழந்தை பெற வேண்டும். உலகில் ஒன்றி வாழும் இந்த உணர்வின் சக்தி அந்த குழந்தையின் கருவிலே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

1.அந்தக் குழந்தை வளர வளர வளர தென்னாட்டில் வளரும் அத்தகைய குழந்தைகள் எந்நாட்டவரையும் காக்கும் சக்தியாக வரும்.
2.அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தது போல எந்நாட்டவரும் அந்த ஆற்றலைப் பெறும் தன்மையும்
3.அதன் வழியில் மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
4.நாம் முன் செல்கிறோம்… பின் வருவோரின் நிலைகளூம் அதே வழியில் செல்லும்.
5.ஏனென்றால் இனம் இனத்தைத் தான் வளர்க்கும்.

எதிலே எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கின்றது. தன் இனத்தின் சத்தை தன் வித்திற்கே உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போல தான் தீமைகள் மனிதனுக்குள் விளைந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதையே உணவாக ஊட்டி தீமையின் விளைவாகவே இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எல்லோரையும் மீட்க வேண்டும். பன் மடங்கு ஞானிகளை உருவாக்க வேண்டும். உங்கள் சொல்லால் செயலால் இதை வழிப்படுத்துங்கள்.

இரவிலே தூங்கும் போது ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு
1.முடிந்த மட்டும் இந்த உலகம் அந்த அகஸ்தியன் சென்ற அருள் வழியில் இப்படித்தான் வரவேண்டும் என்று தியானியுங்கள்.
2.தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று யாம் சொன்ன இந்த உபதேசத்தின் உணர்வைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அந்த நினைவினை எண்ணி வளர்த்துக் கொள்ளுங்கள். இது எல்லோராலும் சாத்தியமானது தான்.
1.சிறிது நாளைக்குச் சொல்லிப் பாருங்கள் தன்னாலே வந்துவிடும்.
2.அப்பொழுது உங்கள் உணர்வுகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் உலாவலாம்.

“இந்த அற்புதங்களை…” மற்றவர்களுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்டு மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.

1.சாமி மட்டும் பார்த்தேன் என்ற நிலைகளை…
2.சாமி பார்த்ததை எங்களாலும் பார்க்க முடியும்.
3.சாமி பார்வையால் தீமைகள் போகும்… “சாமி சொன்ன வழியில் என் பார்வையால் தீமைகள் போகும்…” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

அந்த வளர்ச்சியை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

உங்கள் மூச்சு சாதாரணமானதல்ல…! அந்த உணர்வுகள் இந்த உலகில் படரும்.
1.நீங்கள் ஒவ்வொருவரும் தவக்கோலம் பூண்டு உலக மக்கள் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இதைப் பதிவு செய்யுங்கள்.
2.அவர்களுக்குள்ளும் அது விளைகின்றது… அவர்களுக்குள் விளைய வேண்டும் என்ற எண்ண அலைகள் இங்கே பரவும்.
3.இதனுடைய பெருக்கம் கூடக் கூட உலகில் எதிர்காலத்தில் வரும் தீமைகள் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து விலகும்.

நமக்குள் முந்திய உணர்வின் தன்மை ஒடுங்கும்… எது நமக்குள் சேர்ந்திருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கும்.

இதை எல்லாம் நிச்சயம் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் நீங்கள் செய்ய வேண்டும். குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆடு மாடு மற்றவைகள் எல்லாம் தனக்குள் உருவாகும் விஷத்தின் தன்மை கொண்டு கடினமான தட்டைகளை (தாவர இனங்களை) தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மை அதை அடிமைப்படுத்தி பிஸ்கெட் போலக் கரைத்து உணவாக்கிக் கொள்கின்றது.

கரைத்துத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் கலந்த உணர்வின் சத்தையும் தனக்குள் எடுத்து
1.வலுவான உடலாகத் தன் உடலை மாற்றுகின்றது.
2.ஆனால் அதே சமயத்தில் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாணம் நல்லவைகளாக இருக்கின்றது.

பல பல விஷ மூலிகைகளையும் ஆடு உணவாக உட்கொள்கின்றது. பின் அந்தச் சாணத்தை அது வெளியிடும் பொழுது எடுத்து நாம் நுகர்ந்து பார்த்தால் நமக்குள் இருக்கும் நஞ்சுகளை அது முறித்து அதை அடக்கிடும் அந்தச் சக்தி பெறுகின்றது.

1.அந்தச் சாணத்தில் வெளிப்படும் மணத்தை நாம் நுகரப்படும் பொழுது
2.நம் இரத்தங்களிலே இது கலக்கப்பட்டு
3.நம்முடைய சுவாசப்பைகளிலேயோ மற்ற உறுப்புகளிலேயோ இருக்கும் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

இதை நீங்கள் பார்க்கலாம்.

அதே சமயத்தில் அந்தச் சாணத்தை வைத்து நம் வீட்டை மெழுகும் பொழுது புவியின் வெக்கையால் அலைகள் வெளிப்படும். அதன் மீது நடந்தால்
1.வீட்டில் இருக்கும் துன்பமான உணர்வுகளை
2.நம் பாதத்தால் கவரப்படும் இந்த உணர்வுகளை அடக்கும் சக்தி பெறுகின்றது.
3.அதனுடைய மணங்களுக்குத் தீமைகளை அடக்கும் சக்தி வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் மனித உடலிலோ நாம் சுவைமிக்க உணவை உணவாக உட்கொண்டாலும் நம் உடலுக்குள் சென்ற பின் நம் உடலின் தன்மையோ நஞ்சைப் பிரித்துவிட்டு நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

அப்படி நல்ல அணுக்களாக மாற்றப்படும் பொழுது தான் நாம் எதனையும் நிதானித்து தெரிந்து கொள்ளும் தன்மையை அடைகின்றோம்.

ஒரு விளக்கு அது எரியப்படும் பொழுது வெளிச்சமாக இருக்கின்றது. அதன் மீது ஒரு கருப்பான பொருளை ஒட்டிவிட்டால் கருப்பின் நிறமே வருகிறது. சிவப்பான பொருளை ஒட்டிவிட்டால் சிவப்பின் நிறமே வருகின்றது.

இதைப் போல் தான் நம் கண்களின் வழியாக வேதனை என்ற உணர்வின் தன்மையைக் கவர்ந்து விட்டால் இந்தக் கண்கள் அந்த வேதனையைத் தான் கவரும் திறன் பெறுகின்றது. அதன் உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அது வருகின்றது.

வேதனை என்ற நிலைகளை நீக்க விஷத்தை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிருடன் வேண்டி அந்த உணர்வை ஏங்கப்படும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஒளியின் அறிவாக நமக்குள் கண்கள் காட்டுகின்றது.

அந்தக் கண்ணின் நிலைகளில் கொண்டு நாம் எந்தத் தீமையை வென்ற உணர்வை எண்ணுகின்றோமோ இந்தக் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் நஞ்சினை மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை ஒளியாக மாற்றும் அந்தப் பருவம் பெறுதல் வேண்டும்.

இனி வரக்கூடிய காலங்களில் “எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வை…” நமக்குள் வளர்க்க வேண்டும்

 

ஒவ்வொரு குடும்பத்திலும்
1.அவர்களுடைய கஷ்டங்களைப் பார்த்தால் தியானிக்க வேண்டும்…
2.அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தவம் இருக்க வேண்டும்.
3.நலமாக வேண்டும் நலமாக வேண்டும் என்ற இந்தத் தவம் அது நமக்குள் நல்லதாக்குகின்றது.

ஆகவே சரியாக்க வேண்டும் என்று தான் நாம் எண்ணுகின்றோம். கெட்டுப் போய்விட்டது கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல வேண்டியதில்லை

வியாபாரம் குறைவாக இருந்தாலும் எப்படியும் அதைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தி அதன் மேல் நாட்டத்தைச் செலுத்தினால் அதைச் சீர்படுத்த முடியும்.

உடலிலே நோய் வந்து விட்டால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற வகையில் எண்ண வேண்டும்.
2.”நோயைப் பற்றி எண்ணக்கூடாது…”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

வியாபாரத்தில் பணம் வரவில்லை என்றால் மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தொழில் வருமானம் வர வேண்டும்… நமக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இதை நாம் பெருக்கிக் கொண்டு வர வேண்டும்.

பணம் வரவில்லையே…! என்று எண்ணினால் அந்த உணர்வு என்ன செய்யும்…? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
1.இந்த எண்ணத்தை அங்கே பாய்ச்சினால்
2.ரிமோட் கண்ட்ரோல் போன்று பணம் வரவு வருவதைத் தடுத்துவிடும்.

நண்பர்களுக்குள் நன்மை என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் புரையோடுகின்றது. பாசத்திலே பையனை எண்ணி அவனுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்று எண்ணினால் அதே உணர்ச்சிகள் தூண்டி அவன் முன்னாடி பாதை தெரியாதபடி பள்ளத்திலே காலை வைத்து அடிபடுகின்ரான்.
1.பாசத்தாலும் இயக்குகின்றது… வெறுப்பாலும் இயக்குகின்றது.
2.இந்த மாதிரி நாம் வெகு தூரத்தில் இருந்தாலும் நம்முடைய உணர்வுகள் இப்படி எல்லாம் இயக்கத் தான் செய்கின்றது.

பணம் ஒருவர் தரவில்லை என்றால் அவர் தரவில்லை என்று சொல்லாதீர்கள். அவருக்கு வரவு வர வேண்டும் நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த உணர்வுகளை உந்திப் பாருங்கள் நாளடைவில் அவருக்கும் வருமானம் வரும்… நமக்குப் பணத்தையும் திரும்பக் கொடுப்பார்கள்.

ஆகவே
1.சந்தர்ப்பத்தால் ஏற்படும் குறைகளை நிவர்த்திக்கும் நிலைக்குத் தான் நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டு வர வேண்டுமே தவிர
2.”கஷ்டம்…” என்று எண்ணி… “அதை மீண்டும் உருவாக்கக் கூடாது…”

எங்கள் தொழில் வளர வேண்டும்… வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஒரு கெட்டவனே நம்மிடம் வந்து வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் திருடனாக இருக்கின்றான் என்றால் “அவன் திருடன்… திருடன்…” என்று சொல்ல வேண்டியதில்லை.

நீ எங்கேயாவது சென்று நல்லவனாய் இரு… நல்லது செய்…! என்று அவனைப் போகச் சொல்லி விட வேண்டும்.

அவன் திருடுவதைப் பார்த்து விட்டோம்.
1.பின் அந்த உணர்வே வளர்ந்து கொண்டிருக்கும்.
2.அடுத்தவரிடம் நாம் இவன் மோசமானவன் என்று சொல்வோம்.
3.இவன் செய்ததை பின் அவனும் செய்யத் தொடங்குவான்.

ஆகவே… நாம் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.

நீ செய்வது தவறு என்று தெரிகின்றது… தவறைத் திருத்திக் கொள்…! நல்லபடி நடந்து கொள்… எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நல்வழியைக் காட்டிச் செயல்படுத்துங்கள்.

1.அதிலே அவன் திருந்தவில்லை என்றால்
2.நீ எங்கேயாவது சென்று நல்லவனாக இரு…! என்று அவனை அனுப்பி வைத்து விட வேண்டும்.

கட்டுச் சோற்றுக்குள் எலியைக் கட்டி வைத்தால் என்ன செய்யும்…? அந்தச் சோறையெல்லாம் அது தின்றுவிடும்.

அது போல் அவனைத் திருடன் திருடன் என்று சொல்லும் போதெல்லாம் நம் நல்ல குணங்களை எல்லாம் அது தின்று கொண்டே இருக்கும். நம்முடைய செயலும் அதுவாக மாறிவிடும்.

இந்த வாழ்க்கையில் ஒருவருக்கு நோய் என்று வந்தாலும் அல்லது தெரிந்தாலும்
1.நோய் போக வேண்டும் என்று நினைக்காதீர்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இது வளர அது போகும்.

நல்ல தண்ணீரை ஊற்றினோம் என்றால் அங்கிருக்கும் அழுக்கு அகலத்தான் செய்யும். ஆகவே ஞானியின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது தீமையின் நிலைகள் அகலுகின்றது.

இந்தப் பழக்கத்திற்கு நாம் வந்து விட வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் குருநாதர் எனக்கு எப்படி ஞானத்தைப் போதித்தாரோ அதை உங்களுக்கும் போதிக்கின்றோம்… அந்த மகரிஷிகள் உணர்வு கலந்து.

வாழ்க்கையில் அந்த மாதிரி நேரங்களில் இதுவே நல்ல வழியைக் காட்டும். அருள் ஞானத்தைப் பெறச் செய்யும். இருளைப் பிளக்கச் செய்யும் பொருளைக் காணச் செய்யும்.

ஒரு தவறு நடந்தது என்றால் அதில் உள்ள பொருளை நாம் காண முடியும். அந்த இருளைப் பிளந்து விடும். அந்த உணர்வுகளை நாம் அறிய முடிகின்றது.

நம் ஆன்மாவில் மறைத்துக் கொண்டிருக்கும் தீமைகளை இது பிளந்து விடும். பொருளைக் காணும் திறன் நான் பெறுகின்றோம். வாழ்க்கையில் சிறிது காலம் இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.

காற்று மண்டலம் நச்சுத்தன்மையாக இருக்கின்றது என்று அதைப் போன்ற நிலைகளைப் பதிவு செய்துவிட்டால் அதைச் சீக்கிரம் இழுக்கும்.
1.ஐயோ நச்சுத் தன்மையாக இருக்கின்றதே என்று பதிவு செய்துவிட்டால்
2.அடுத்து நச்சுத்தன்மைகள் நம் உடலுக்குள் வந்து சேரும்.

அப்படி எண்ணாது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்
2.எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று
3.அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்று இதை எண்ணி இந்தக் காற்று மண்டலத்தில் பரப்புங்கள்.

நச்சுத்தன்மை என்று எண்ணினால் அந்த உணர்வை இழுக்கின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது. நம்மை அது மாற்றுகின்றது. இது போன்ற நிலையிலிருந்து விடுபட்டு “மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு…” நீங்கள் வரவேண்டும்.

குரு அருளை உங்களுக்குள் திரு அருளாக மாற்றும் நிலைக்கே இதை யாம் உபதேசித்தது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் வாழ்க்கைக்காகத் தொழில் செய்கின்றேன்… அதிலே எனக்கு இலாபம் இல்லை… நஷ்டமாகிறது…! என்ற வேதனையை எடுத்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை நஷ்டப்படச் செய்து இந்த உடல் உறுப்புகளும் நலிகின்றது.
1.வேதனை என்ற இருள் சூழும் பொழுது நம் சிந்திக்கும் திறனும் குறைகின்றது.
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுக்கும் தன்மை வருகின்றது.
3.தற்கொலை செய்யும் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
4.இந்த உடலை உருவாக்கிய உயிரை மதிக்காது உடலை அழித்துவிடும் எண்ணங்கள் வருகின்றது.

எதன் பால் இந்த உணர்வின் தன்மை பற்றாகியதோ தன்னால் முடியவில்லையே…! என்று எண்ணத்திலேயே வேதனையுடன் இறந்தால்
1.அவருடன் பழகியவர்கள் “அடடா…! நன்றாக இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணினால்
2.எண்ணியவர் உடலுக்குள் அவர் ஆன்மா சென்று பேயாக ஆட்டிப் படைத்து
3.நன்றாக இருப்பவரையும் மடியச் செய்யும். அதற்குத்தான் இது உதவும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மாறுதல் வேண்டும். நமக்கு எந்த ஆசை வேண்டும்…? பேய் மனம் இல்லாது அருள் மணம் நமக்குள் வர வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளை உணர்துவதற்குத்தான் அன்று பல்லாங்குழி விளையாடுவார்கள். அந்த விளையாட்டை அமைத்ததின் நோக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

1.தனக்குள் கூட்டிப் பெருக்கும் உணர்வு கொண்டு
2.தன் வாழ்க்கையில் எப்படி வளர வேண்டும்…? என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான் அந்த விளையாட்டை உருவாக்கினார்கள்.

அதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தனக்குள் இலாபத்தை ஏற்றிக் கொள்ளும் நிலை வருகின்றது.

வாழ்க்கையின் நிலையில்…
1.சந்தர்ப்பத்தால் ஒருவர் “நான் தோற்றுவிட்டேன்…” என்ற நிலைகள் வரும் பொழுது
2.”உன்னைத் தோற்கச் செய்கிறேன் பார்…!” என்ற நிலைகள் இருக்கக் கூடாது.

அதாவது அவனும் வளர வேண்டும்… அவன் சிந்தனையும் வளர வேண்டும்…! என்ற நல்ல எண்ணத்தில் பல்லாங்குழி விளையாண்டால் அந்தக் குழந்தை நன்றாக இருக்கும்.

ஆனால் பல்லாங்குழி விளையாடும் பொழுது நான் ஜெயித்து விட்டேன் என்று சொன்னவுடனே அடுத்தவர் தோற்றுவிட்டால் “நம்மைக் கேவலமாக நினைப்பார்களே…!” என்று முகம் வாடும்.

குழந்தையாக இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை அந்த விளையும் பருவத்தில் வரப்படும் பொழுது தோல்வியைச் சந்தித்த பின் வெறுப்பின் தன்மை வரும்.

1.ஆனால் ஞானிகள்… மனோதத்துவரீதியில்
2.மனிதன் தன்னைத் தான் எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்று தான் இதைக் கொண்டு வந்தார்கள்.

நாம் தொழிலைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் உணர்வுகளை வலிமையாக எடுத்துக் கொண்டு
1.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
2.நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்டோர் நலம் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது. மாறாக எண்ணங்களை மாற்றி விடுகின்றனர்.

ஆனால் நாம் நுகர்ந்ததை எல்லாம் நம் உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது. அதை மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது உருவான அந்த அணுவின் தன்மை தன் இனத்தைப் பெருக்கி விடுகின்றது.
1.இது தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…
2.மூஷிகவாகனா…! நாம் சுவாசித்தது எதுவோ (நம் மூச்சு) அதன்படித் தான் இந்த வாழ்க்கையில் நடக்கின்றது.

ஒருவரை நாம் அடிக்கடி வேதனைப்படும்படிச் செய்து அதைப் பார்த்து ரசித்தால்… நமக்குள் அந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி… நமக்கும் அதே வேதனையை உருவாக்கிவிடும். தப்ப முடியாது.

நாம் நினைக்கின்றோம் தப்பிவிட்டோம் என்று. இந்த உடலில் கடும் நோய்களாகும் பொழுது அது முன் சேர்த்துக் கொண்ட வினை…!

அந்த வினைகள் இருப்பினும் நாம் அதைக் கடந்து அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இருளை மாற்றும் திறனைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைக் கூட்டினால் பழைய தீய வினைகள் அனைத்தும் அகன்று அது சுத்தமாகின்றது.

கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்

 

திடீர் சாமிகள் (தெய்வங்கள்) இன்று உருவாவதைப் பார்க்கலாம்.

தனக்குப் பணம் வேண்டும் என்று சொன்னால் எதையாவது ஒரு சிலையை அவர் ஆற்றுக்குள் புதைத்து வைத்து விடுவார். பின்பு… இரவு கனவிலே வந்து ஆண்டவன் கோவில் கட்டச் சொன்னார் என்று ஒரு நாலைந்து பேரிடம் சொல்வார்கள். இதைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உருவாக்கிய பின் “என்னால் இம்சை தாள முடியவில்லைங்க…!” என்று இவர் சொல்வார்.

நாலைந்து பேருக்குச் சொன்ன நிலைகள் பின் ஊரில் உள்ளவருக்கெல்லாம் சொல்லி
1.எப்படியோ பார்க்க வேண்டும் என்று சொல்லி… “தெரியாத மாதிரி… அலைகிற மாதிரியே…” செய்து கொண்டே இருப்பார்.
2.அப்புறம் கண்டுபிடித்துப் போகிற மாதிரி இந்த இடத்தில் இருக்கின்றது அந்த இடத்தில் இருக்கின்றது சொல்வார்கள்.
3.அப்படிச் செய்யும் போது ஆஹா… வந்தாயிற்று…! கனவில் சொன்ன மாதிரியே சிலை கிடைத்து விட்டது…!

இந்தச் சிலையை எடுத்துக் கோவிலைக் கட்டி அங்கே பிரதிஷ்டை செய்தால் செய்தால் உனக்கு இன்னென்னது கிடைக்கும் என்று இவர் எதைச் சொல்கின்றாரோ அது நடக்கும்.

இவர் சொன்ன ஆசைகளை வைத்து அந்த முருகனுக்குக் கோலாகலமாக விசேஷங்கள் நடக்கும். அப்போது யார் இதைச் சொன்னார்களோ அவர்களுக்குப் பணம் கிடைக்கும்.
1.எண்ணிய ஆசைகள் இங்கே வளரும்.
2.பின் சிறிது நாள் சென்று விட்டால் அந்தச் சாமியும் போய்விடும்.

இது நடந்த நிகழ்ச்சி. சில இடங்களில் இப்படியும் நடக்கிறது.

இதே மாதிரி எந்த ஆசையை உருவாக்கிப் பிறரிடத்தில் பதிவு செய்கின்றோமோ அந்த உணர்வு தான் வருகின்றது.

ஒரு இடத்திலே… “கற்பூரத்தைக் கொளுத்தி ஆயிரம் ஆடுகளை வெட்டுகிறார்கள்…!” என்று சொன்னவுடன் அங்கே கூட்டம் போய்க்கொண்டே இருக்கின்றது.

மனிதனுடைய ஆசை எப்படி இருக்கின்றது…?

எனக்கு என் காரியம் ஜெயித்தது…! அவன் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கின்றான். அவனை மடக்க ஆயிரம் ஆடுகளை நான் வெட்டுகின்றேன் என்று இப்படிச் செய்கின்றார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பின் வேடிக்கை பார்க்க அங்கே கூட்டம் அதிகமாகின்றது.
1.காரியமில்லாமலா அங்கு செல்கின்றார்கள்…! என்று இந்த உணர்வு பதிவான பின்
2.நான்கு ஆண்டு மூன்று ஆடு அவரவர்கள் வசதிக்குத் தக்கவாறு அங்கே வெட்டுகின்றார்கள்.

மனிதன் தனக்குள் உருவாக்கக்கூடிய உணர்வுகள் இப்படி வந்த பின் இது எல்லாமே நடக்கின்றது.

அதே சமயத்தில் அந்த இடத்திலே அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் யார் கடை வைத்தது வியாபாரம் செய்தாலும் அவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டும்.

கற்பூரம் இந்த இடத்தில் தான் வாங்க வேண்டும் என்பார்கள். இவர்கள் வாங்கி அதைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி அதற்கு மேல் வைத்து விற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த இடத்தில் இல்லாதபடி சிறு தூரத்தில் கடை இருந்தாலும் கூட அவர்களுக்கு நன்றாக வியாபாரம் நடந்தால் எங்களுக்கு நீங்கள் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள்.

1.ஏனென்றால் நான் வைத்திருக்கும் சாமியைப் பார்க்கத்தான் இந்தக் கூட்டம் வருகின்றது
2.அந்தக் கூட்டத்தால் தானே உனக்கு வியாபாரம் ஆகிறது.
3.ஆகையினால் எனக்குப் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றார்.
4.இப்படித் தெய்வங்களை உருவாக்குபவர்கள் ஏராளம்.
5.மனிதனுடைய ஆசைகள் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி கடவுளை உருவாக்கி
6.கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்.

ஆகையால் இது போன்ற இடங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும்.

இரவு கனவிலே வந்தார்… விநாயகர் சிலையை இங்கே வைக்கச் சொன்னார். இன்ன இடத்தில் இருக்கிறது என்று காட்டினார்.

நான் திருடிக் கொண்டு வந்து வைத்தேன். அதற்கு மாலை எல்லாம் போட்டுப் பூஜை செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னார். இதே போன்று அதை வணங்குபவர்களுக்கு இன்னதெல்லாம் கிடைக்கும் என்று சொன்னார் என்று இப்படிப் பதிவு செய்து விடுகின்றார்கள்

இந்த அடிப்படையில் தான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று நாம் பக்தியில் வணங்கிக் கொண்டுள்ளோம்.

“இந்தச் சாமியினால்…” தனக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா…? என்ற இந்த நிலைகளுக்கு வந்து விட்டார்கள்.
1.நம்மால் பிறருக்கு நன்மை கிடைக்குமா…? என்ற
2.நல்ல சிந்தனைகள் அனைத்தும் காலத்தால் அறவே மறைந்து விட்டது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் செய்து முடிந்த பிற்பாடு “நாம் தான் தியானம் செய்துவிட்டோம் அல்லவா…!” என்று இருக்கக் கூடாது.

வாழ்க்கையில் எந்த நேரமாக இருந்தாலும் சரி…
1.சங்கடமோ சலிப்போ கோபமோ வெறுப்போ தொழிலில் சோர்வோ இதைப் போல் வந்தால்
2.அது நம்மை இயக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் (இது மிகவும் முக்கியமானது).

அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை நினைத்து ஒரு நிமிடம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களில் ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்த வேண்டும்.

இப்படி எடுத்துக் கொண்டால் பிறருடைய சங்கடமோ கோபமோ வெறுப்போ பிறருடைய நோயோ நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
1.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று எண்ணி வந்தாலே போதும்.

இது தான் ஆத்ம சுத்தி…!

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த “நீங்கள் எண்ணியவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கும்…!”

எப்படி…?

1.ஒருவன் நம்மைத் திட்டினான் என்று நமக்குள் பதிவாக்கிய பின்
2.அவனை நினைக்கும் பொழுதெல்லாம் அந்தத் திட்டிய உணர்வுகள் வருகிறது அல்லவா…!
3.பாவி எனக்குத் துரோகம் செய்தான்..! என்று எண்ணிக் கொண்டிருந்தால் அன்றையக் காரியங்கள் கெடுகிறது.
4.நமக்கும் கெடுகிறது… அவனுக்கும் கெடுகிறது…!

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் சிந்தித்து நீங்கள் தெளிந்து அந்த அருளைப் பெற்றிடும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.

1.பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து
2.இப்படிச் செய்கிறார்களே…! என்று எப்பொழுதும் எண்ணவே வேண்டாம்…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்தங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மாறாக “இப்படிச் செய்கிறார்களே…!” என்று எண்ணினால் அந்தத் தீமைகள் நமக்குள் வந்துவிடும். “நம் வாழ்க்கையும் அது கெடுக்கும்…!” (இது முக்கியம்)

அது நமக்குள் வராதபடி இந்த மாதிரித் தடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்.. பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது.

சண்டை போடுகிறார்கள் என்று பார்க்கின்றீர்களா…! உடனே இந்த மாதிரி சுத்தப்படுத்திவிட்டு அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும்.. இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…! என்று எண்ணிவிட்டு வந்துவிடுங்கள்.

1.ஏன் இப்படிச் செய்கிறார்கள்…? என்று அதையே அழுத்தமாக எண்ணினால்
2.அவர்கள் உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போடும் உணர்வுகளே விளையும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏனென்றால் இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்துவிடுகிறது. அதை மாற்றுவதற்கு இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானம்…!

கையில் அழுக்குப் பட்டால் உடனே கழுவி விடுகின்றோம் அல்லவா…! உடுத்தியிருக்கும் துணியில் ஏதாவது கொஞ்சம் அசிங்கமானால் உடனே கழுவுகிறோம் அல்லவா…!

இதே மாதிரி அவ்வப்பொழுது தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஜோதிடம் தேவையில்லை.. ஜாதகம் தேவையில்லை… மந்திரமோ மாயமோ எதுவுமே தேவையில்லை..! எல்லாமே உங்களால் மாற்றியமைக்க முடியும்.

எந்தத் தொழில் செய்தாலும் அல்லது வியாபாரம் செய்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.சரக்கு வாங்குபவர்களுக்கு இந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.இங்கே நம் குடும்பத்திற்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிப் பாருங்கள்.

உங்கள் தொழிலும் வியாபாரமும் பெருகும்… குடும்பத்தில் மகிழ்ச்சி என்றுமே இருக்கும்.

அரச உணர்வு நம்மை இயக்கக் கூடாது… ஞானிகள் உணர்வே நம்மை இயக்க வேண்டும்

 

அரசர்களைத் தழுவிய நிலைகள் தான் காவியப் படைப்புகள் வந்தது. அதன் வழியில் தான் உலக மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்திருக்கின்றோம்.
1.மகரிஷிகள் ஞானிகள் கொடுத்த தத்துவங்களை
2.அரசன் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டான்.

இன்று உலகிலே எந்த அரச சபைக்குச் சென்றாலும் அரசனைப் புகழ் பாடும் புலவர்களுக்குத் தான் மதிப்பு. அரசன் செயலைச் சிறிது குறை கூறினாலும் அவன் சிரசு இல்லை.

தர்மத்தையும் நியாயத்தையும் அந்த அரசனைத் தழுவிய நிலைகள் கொண்டுதான் புலமைகள் பாடிப் பொருள்களைத் தேடினார்கள். புலமை அவனுக்கு உதவியதே தவிர அரசனைக் காக்க உதவியதே தவிர மக்களுக்கு அது உதவவில்லை.

இந்த அடிப்படையிலே தான் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்ற நிலையில் காவியங்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை.

சோழ மன்னனை எடுத்துக் கொண்டால் “நீதிப்படி அவன் நடந்தான்…” என்று காட்டுவார்கள். தன் மகனே என்றாலும் தன் சொல்லுக்குக் கட்டுப்படவில்லை என்றால் “தன் புகழுக்காக”
1.அவன் தவறு செய்தானா…? இல்லையா…? என்று சிந்திப்பதற்கு இல்லாதபடி
2.தன் மகனையே தேரை ஓட்டிக் கொன்றான் என்று நீதிகள் சொல்லப்படுகின்றது.

அரசனுடைய மகன் தேரை ஓட்டிச் செல்கின்றான். ஒரு கன்று தவறிப் போய் ஊடே வந்து விடுகின்றது… அடிபட்டு இறந்தது. மனிதனாக இருக்கின்றாய்… மற்ற உயிரினத்தை நீ கொன்றாய் என்று நீதி சொல்லப்படும் பொழுது அவனைக் கொன்று விடுகின்றான்.

ஆனால் பாதையில் புழுவோ பூச்சியோ மற்றவைகளோ வந்தால் அதன் மீது தேர் போகாதா…?

அரசன் என்ற நிலையில் இருந்தாலும் தன் மகனையே அதே போன்று தேரை ஓட்டச் செய்து அவனைக் கொன்று நீதியை நிலை நாட்டினான் என்று பெருமை பேசுகிறார்கள்.

இதே நீதி கொண்டவர்கள் மாற்று அரசனிடம் என்ன செய்கிறார்கள்…?

இவர்கள் செல்லும் பொழுது அவருடைய மகளையோ அவன் விரும்பிய இடத்தையோ கேட்டு அனுப்புகின்றான். இவனை மதித்து அதைத் தருகிறேன் என்று சொன்னால் அவனை மெச்சி மகிழ்கின்றான்.

இல்லையென்றால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
1.இரு நான் உன்னை அழிக்கிறேன்… என்ற நீதிகள் தான் அங்கே பேசுகின்றது. ஆக… அரசினுடைய நீதி எது…?
2.நான் யாரிடம் எதைக் கேட்டாலும் மதிக்க வேண்டும்… மதிக்கவில்லை என்றால் போரிட்டு உன்னை அடக்கி மதிக்கும்படிச் செய்வேன்.

இது தான் அன்றைய அரசு நீதி…!

இந்தப் போர் முறைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அமெரிக்கா என்ன செய்கின்றது…?

அவன் அணு குண்டுகளைச் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் அவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் உன்னை அழித்து விடுவேன் என்று அவன் மிரட்டுவான்.

இன்று ஜனநாயகம் என்று இருந்தாலும் அதிலே தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளும் அதே அரசு நீதியைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். எந்த அரசு இதைக் கடைப்பிடித்ததோ அதன் வழியாகத் தான் ஆட்சி செய்கின்றார்கள்.
1.ஆக அரசர்களுடைய நீதி அவனைக் காக்கத் தான் வருகின்றதே தவிர
2.மக்களைக் காக்க என்று அல்ல.

அவனுடைய செயல் மாறிவிட்டால் தன் மக்களை.. தன்னை விசுவாசிப்பவர்களை ஏவல் செய்து பலிகடாக்களாக ஆக்குகின்றார்கள்… தன் கௌரவத்தைக் காக்க.

மேலை நாடுகளில் எடுத்துக் கொண்டாலும் ஒருவனுக்கு எத்தனையோ மனைவி என்று வைத்துக் கொள்கின்றார்கள். அதில் எந்த மனைவியின் பக்கம் தன் சார்பு உள்ளதோ அந்த மைந்தன் சொல்வது தான் நியாயம் என்று சொல்வார்கள்.

அதில் பிடிக்காத மனைவியின் மகன் என்று ஆகிவிட்டால் அவனைக் குற்றவாளியாக்கி அரச நீதியில் பொதுமக்கள் மத்தியில் அவன் சிரசை வாங்குகின்றார்கள் முஸ்லீம் நாடுகளில்.

இது என்னுடைய நீதி…!
1.எனது மகனாக இருந்தாலும் தன் மதத்திற்கும் கடவுளுக்கும் அவன் துரோகம் செய்தான்.
2.எனது பிள்ளையாக இருந்தாலும் இந்தத் தவறை எவரும் செய்யக்கூடாது என்று மக்களுக்கு உணர்த்தவே
3.மக்களுக்கு மத்தியில் நீதியை இப்படி நிலைநாட்டுகிறோம் என்பார்கள்.
4.கடவுளின் ஆணைப்படித் தான் இதைச் செய்கிறேன் என்று அரசு நீதி இதைச் செய்கின்றது.

அரசனுக்குக் கீழ் குடிமக்கள் கட்டுப்பட வேண்டும். மாற்று அரசர்களும் இவனை மதிக்க வேண்டும். மதிக்கவில்லை என்றால் அவனை அடக்க வேண்டும்… என்ற அதே நீதி தான் இன்று “மக்கள் மத்தியிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது…”

ஓரளவுக்கு வலுகொண்டவனாக இருக்கின்றேன். நான் கேட்ட உடனே நீ உதவி செய்ய வேண்டும். உதவி செய்யவில்லை என்றால் என்ன தொல்லை கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுப்பேன்.

வழி வழியாக இவ்வாறு தான்… மனிதன் தன் உடல் இச்சைக்குத் தான் அரசர் வழிகளில் வந்து கொண்டிருக்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய வழி செல்லவில்லை.

ஏனென்றால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் பார்த்தோம் என்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே அவ்வாறு இயக்குகிறது.

அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள்…
1.எதிர்பாராதது சந்தர்ப்பத்தால் ஒரு தவறினை நாம் நுகர்ந்து விட்டால்
2.அதனால் உடலில் உருப்பெறும் தீமையான அணுக்களின் தன்மையை தனக்குள் எதிரியாக்காதபடி
3.அந்தத் தவறு எனக்குள் இயக்காதபடி தவறை அழித்த ஞானியின் உணர்வைத் தனக்குள் புகுத்தி
4.தவறின் செயலாக்கங்களை நீக்குதல் வேண்டும் என்பதுதான் விநாயகர் தத்துவம்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவன் மகரிஷி. ஆறாவது நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றவன் சப்தரிஷி.

அந்த நிலையைத் தான் நாம் அனைவரும் அடைய வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் ஆரம்பிக்கும் பொழுது முதலில் தாய் தந்தையரின் அருளையும் குருவின் அருளையும் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் அம்மா அப்பா தான் நமக்குக் கடவுள். நாம் நன்றாக இருக்க வேண்டும்…! என்ற நிலையில் குருவாக இருந்து நம்மைத் தெய்வமாகக் காத்தவர்கள் அவர்கள் தான்..!

தியானத்திற்கு மட்டுமல்ல…! எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். ஏனென்றால் அவருடைய துணை கொண்டு தான் விண்ணுலக ஆற்றலை நாம் பெற முடியும்.

குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1). உயிர் வழி சுவாசம்
“ஈஸ்வரா..!” என்று சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்த வேண்டும்.

தியானத்தின் மூலம் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்..! என்ற ஏக்கத்தை
1.உங்கள் கண்ணின் கருமணிக்குக் கொண்டு வாருங்கள்
2,உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.இப்பொழுது உங்கள் கண்கள் ஒருவிதமான கனமாக இருக்கும்.
4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்… பின் உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி உங்கள் நினைவனைத்தையும் “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து இழுக்கும்.
2.புருவ மத்தியில் கொஞ்சம் கனமாக இருக்கும்… இழுக்கும் பொழுது…!
3.துருவ நட்சத்திர அலைகள் உயிரில் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கும் போது உங்கள் உயிரிலே அந்த அருள் சக்திகள் மோதும். அப்பொழுது அந்த உணர்வுகள் வலுவாகின்றது.

இப்பொழுது சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் போன்ற எத்தனையோவிதமான குணங்கள் உடலுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.

இப்படி எண்ணும் பொழுது தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது. இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் உயிரிலே வலுப் பெறுகின்றது.

2). இரத்த நாளங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்துங்கள்.

ஏனென்றால் நாம் கேட்டது பார்த்தது இது அத்தனையும் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. வேதனைப்பட்ட உணர்வுகள் யாராவது ஜாஸ்தி பட்டிருந்தால் அவர்கள் மீது நாம் பாசமாக எண்ணியிருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும். அப்படி வந்து விட்டால் அந்த ஜீவ ஆன்மா அதனால் மாற்ற முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்தத்தில் கலக்கச் செய்து அந்த ஜீவ ஆன்மாக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்கள் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் இரத்தத்தில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் பாயும். உங்களால் அதை உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் படர்ந்து எங்கள் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் உடல் முழுவதற்கும் இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

உங்கள் உடல் முழுவதற்கும் ஒருவிதமான புது உணர்ச்சிகள் ஏற்படும்.

3). சிறு குடல் பெரும் குடல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை குடலுக்குள் பாய்ச்சுங்கள்.

1.இப்பொழுது உங்கள் குடலில் ஒரு வித்தியாசமான உணர்வுகள் தூண்டுவதை நீங்கள் உணரலாம்.
2.ஏனென்றால் அந்த அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றுகின்றோம்.
3.இந்த மாதிரிச் செய்தால் உங்கள் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

4). கணையங்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

நாம் உட்கொண்ட உணவிலிருந்து ஆவியாக வருவதை அது இரசாயணமாகப் பிரித்து எடுக்கும். அந்தக் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் நல்ல சக்தியாக இப்பொழுது பெறும்.

அப்படிப் பெறவேண்டும் என்பது தான் இதன் நோக்கம். எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

5). கல்லீரல் மண்ணீரல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரலை மணணீரலை உருவாக்கிய அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். கண்ணின் நினைவைக் கல்லீரலிலும் மண்ணீரலிலும் செலுத்துங்கள்.

கல்லீரலைப் பார்க்கவில்லை என்றாலும் இப்பொழுது அந்த உணர்வுகள் பாயும் பொழுது அந்த உணர்ச்சிகளை ஊட்டுவதை உணரலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்வதை நீங்கள் உணரலாம்.

6). நுரையீரல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுரையீரலில் ஆஸ்த்மா சளி டி.பி. போன்ற நோய்கள் இருந்தால் அது குறையும். மூச்சுத் திணறல் இருந்தால் அதுவும் குறையும். அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் அந்த நுரையீரல் நல்ல வீரியமடைந்து மன வலிமையையும் கொடுக்கும்.

7). சிறுநீரகங்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.சிறுநீரகத்தில் வரும் விஷத்தைப் பிரித்து நீராக மாற்றிவிட்டு
2.நல்ல இரத்தமாக மாற்றும் திறன் கொண்டது அந்த உறுப்பு.

8). இருதயம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணின் நினைவை இருதயத்தில் செலுத்துங்கள்.

இருதயத்தில் இப்பொழுது வலி இருந்தாலும் இருதயத்தில் அசுத்தமான நிலை இருந்தாலும் அது மாறி நல்ல உற்சாகமான இருதயமாக மாறும்.

9). கண்ணின் கருமணிகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் கண்ணிலே பாய்ச்சுங்கள்.

கருமணியில் படர்ந்துள்ள வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற விஷத் தன்மைகள் இப்பொழுது அகலும். கருமணியில் இப்பொழுது நல்ல வெளிச்சங்கள் வரும். கருமணி தூய்மையாகும்.
1.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
2.அந்தப் பேரருளும் பேரொளியும் உங்கள் கருமணியில் பட்டு அந்த உணர்வுகள் உங்கள் நரம்பு மண்டலங்கள் வழி செலுத்தி
3.உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் அந்தத் தூய்மையின் உணர்வை உணர்த்தும்.

10). நரம்பு மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

11). எலும்பு மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை எலும்பு மண்டலத்தில் சேர்த்து ஏங்கித் தியானியுங்கள்.

12). நெஞ்சின் பாகம் உள்ள ஊன்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சு எலும்புக்குள் ஊனாக உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை நெஞ்சுக்குள் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நெஞ்சின் பாகம் முன்னாடி அந்த வெளிச்சம் வரும்.
2.ஏனென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குவிக்கப்படும் பொழுது அந்த வெளிச்சமான உணர்வுகள் தெரிய வரும்.

13). தசை மண்டலம்.. தோல் மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தசை மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தோல் மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி இந்தத் தோல் மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகப் பதிவாக்கி விட்டால்
1.காற்றிலிருந்து வரும் கெட்டதை நம் உடலுக்குள் ஈர்க்காது தடைப்படுத்த இது உதவும்.
2.காற்றிலிருந்து வரும் தீமையான உணர்வுகளை அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

14). தவம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

தாய் தந்தையரின் உணர்வு தான் நம் உடல். தாய் தந்தையரின் உணர்வால் தான் இந்த உடல் வளர்க்கப்பட்டது. தாய் தந்தையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது.

தாய் தந்தையர் நம்மை வளர்ப்பதற்காக எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் இருப்பினும் அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இவ்வாறு தியானிப்பதால்
1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.
2.அதே சமயத்தில் அவர்கள் உடலில் உள்ள தீய வினைகளும் அகலும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று… அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து… தெரிந்து… வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.

15). குலதெய்வங்கள்
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

16). மழை வேண்டித் தியானம்
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

விண்ணிலே தோன்றிய நாம்… மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்

 

ஞானிகள் காட்டியது போல தீப ஒளித் திருநாள் அன்று தனக்குள் வரும் இருளை நீக்கி ஒளி பெறுவோம் என்று நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

உயிர் விண்ணிலே தோன்றியது ஒளியின் சுடராக…! அந்தத் தீப வழிப்படி நாம் விண் செல்லும் நிலையாக
1.இந்த உடலான ஆறாவது அறிவிலிருந்து மெய் ஒளியுடன் ஒளியாக
2.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சுடராக இணைத்து
3.ஒளிச் சரீரமாக உயிருடன் இணைந்து விஜயதசமி… பத்தாவது அவதார நிலையை நாம் பெறுகின்றோம்.

ஏழாவது என்பது ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன்.

ஒருவன் திட்டி விட்டால்… அவன் இடைஞ்சல் செய்கின்றான் என்று எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்சை எல்லாம் நாமும் பேசுகின்றோம்.

அந்தப் பேச்சு தனக்குள் இயங்காத வண்ணம் தடைப்படுத்துவதற்குத் தான் நாம் தியான வலுக் கொண்டவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கின்றோம்.

அப்பொழுது…
1.இடைஞ்சல் செய்தான் என்ற உணர்வுகள் தன்னை இயக்காதபடி தடுத்து நிறுத்தி
2.“சிந்திக்கச் செய்யும் நிலையை…” அது செயல்படுத்தும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் சேர்த்து விளையச் செய்யும் பொழுது எட்டாவது நிலை ஆகிறது. அது உயிருடன் இணைக்கப்படும் பொழுது ஒன்பதாவது நிலை ஆகிறது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லாவற்றிலும் இணைக்கப்படும் பொழுது இருளைத் தடைப்படுத்தி அதை ஞானமாக்கி ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

உயிர் ஒளியாக இருக்கின்றது. உணர்வுகள் ஒளியாகி இந்த உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது தசமி.

மனிதனாக இருக்கும் நாம் இப்பொழுது செடி கொடி தாவர இனங்களில் விளைந்தவற்றை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

ஆனால் இந்தப் பூமியில் இருந்து விண் செல்லும் நிலையில் பல பேரண்டங்களிலிருந்து வரக்கூடிய சக்திகளைப் பெறும் தன்மையாக… இந்தச் சூரிய குடும்பமான… பிரபஞ்சத்திற்கு வெளியே தான் இந்த உயிரான்மா ஒளியாகச் செல்கிறது.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியிலே சென்று
1.மற்ற பேரண்டங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்தப் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சக்தி பெற்றோமோ அங்கே இந்த உயர்ந்த சக்திகளை அனுப்பி
3.இந்தச் சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
4.அதே சமயம் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகளை ஒளியாக மாற்றி
5.பேரண்டத்திற்கே வழிகாட்டும் உணர்வின் அலைகளாக அதைச் சேர்க்கும் நிலைகள் பெற்றது தான் மனிதனின் கடைசி நிலை.
6.”தீப ஒளி…” என்ற அத்தகைய வழிகளில் நாம் செல்வோமேயானால் விண்ணிலே தோன்றிய நாம் மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து உன் குறைகளை எல்லாம் சொன்னால் அவன் தீர்த்துத் தருவான்…
2.அதற்காக வேண்டி நீ காணிக்கை போடு… அதைப் போடு இதைப் போடு..
3.நேர்த்திக் கடனைச் செய் அதைச் செய்…! என்று சொல்லி விட்டார்கள்
4.பழனிக்குப் போனாலும் இது தான்… திருப்பதிக்குப் போனாலும் அது தான்.

ஆனால் அந்தக் கோவிலின் பண்புகளை நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை.

“ஏழு கொண்டலவாடா…” என்று தெலுங்கில் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக “ஒளியாக மாற்ற வேண்டும்” என்று பொருள்.
1.ஏனென்றால் இந்த ஆறாவது அறிவை இயக்குவது உயிர்
2.ஆக இந்த உடலை ஆள்வது “பெருமாள்…”

திருவேங்கடாசலபதி…! இங்கே இந்த உடலில் இருப்பது எல்லாவற்றையும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

அதை நாம் யாராவது புரிந்து கொண்டோமோ…? என்றால் இல்லை. தத்துவத்தை நமக்குத் தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்… யாரும் அதை மதிப்பதில்லை.

இங்கிருந்து அங்கே திருப்பதிக்குப் போய்க் காணிக்கையைப் போட்டால் “அவன் நமக்கு எல்லாம் செய்வான்…!” என்ற நம்பிக்கை தான்.
1.சாமிக்கு விலங்கு போட்டால் ஐய்யய்யோ…! என்பார்கள்
2.காசு குறைவாக இருப்பதால் விலங்கு போட்டுவிட்டு அப்புறம் சாமியை ஜெயிலிருந்து மீட்டுகிறார்களாம்…!

இப்படி நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள்…!

இங்கே உபதேசத்தை நீங்கள் கேட்கிறீர்கள்…! எப்பொழுது உங்களுக்குள் என்ன நடக்கிறது…?

“அரங்கநாதன்…” நல்ல (ஞானிகளின்) உணர்வுகளை நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் உடலான அரங்கத்திற்குள் உயிர் என்ன செய்கிறது…? நாதங்களாக வெளிப்படுத்துகிறது. (அரங்கம் + நாதம்)

அந்த நாதங்கள் என்ன செய்கிறது..? சந்தோஷமான உணர்ச்சிகளை ஊட்டுகிறது. அது தான் அரங்கநாதன்,

அரங்கநாதனின் மனைவி யார்…? ஆண்டாள். அந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆள்கிறது. ஆண்டாள்…! என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

கோபமான உணர்வை நுகர்ந்தால் அரங்கநாதன் என்ன செய்கிறது…? அந்தக் கோபமான உணர்ச்சி தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

ஆனால் எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சுவாசித்தால் அரங்கநாதன். இந்த அரங்கத்திற்குள் மகிழ்ந்து வாழும் அந்த உணர்வுகள் நம்மை ஆளும்.

1.காரணப் பெயரை வைத்துத் தெய்வங்களை உருவச் சிலைகளாக வைத்து
2.நாம் நம்மை அறிந்து வாழ்வதற்கு ஞானிகள் எவ்வளவு பெரிய சக்தியை ஊட்டியிருக்கின்றார்கள்…?
3.அதை நாம் உணர வேண்டுமல்லவா…!

ஏனென்றால் இந்த உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழ்கிறோம். சிறிது காலமே வாழும் இந்த மனித வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வாழ்க்கையில் வரும் பகைமைகளை எல்லாம் அகற்றிடல் வேண்டும்.

எந்தப் பகைமையையும் நாம் இழுக்காதபடி வாழ்ந்து வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போய்ச் சேர்கின்றோம். இராமலிங்கமாக ஆனது தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அங்கே சென்றால் பிறவியில்லா நிலை அடைகின்றோம். அந்தப் பிறவியில்லா நிலை அடையக்கூடிய சக்தியைத் தான் ஞானிகள் நமக்குக் கோவிலில் காட்டியிருக்கின்றார்கள்.

தீப ஒளித் திருநாள்

 

ஒரு ரைஸ் மில் இருக்கிறது என்றால் நெல்லை அதிலே அதிகமாகப் போட்டுவிட்டால் “லோடு தாங்காது…” அதை இழுத்து இயக்கக்கூடிய மோட்டாரில் உள்ள காந்தம் குறைந்து விடுகிறது.

இப்படிச் சிறுகச் சிறுக அது தேய்மானம் ஆகிவிட்டால் சிறிதளவு நெல்லைப் போட்டாலும் கூட அரைக்க முடியாத நிலை ஆகி விடுகிறது.

இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்திகள் அனைத்தும்
1.கோபம் வெறுப்பு வேதனை போன்ற குணங்களை அதிகமாக எடுக்கப்படும் பொழுது
2.அதைச் சரியான முறையில் ஜீரணிக்கக் கூடிய திறன் இழந்து விடுகிறது.

அதனால்… அந்தக் கோபம் வேதனை போன்ற உணர்வுகள் அனைத்தும் நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் அது விஷம் கலந்ததாக மாறிவிடுகிறது.
1.அந்த விஷங்கள் கலந்த பின்
2.அடுத்து மகிழ்ச்சியைப் பற்றி எண்ணவே முடிவதில்லை.

ஆனால் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் இருக்கக்கூடிய விஷத்தை இந்த உடல் மலமாக மாற்றி விட்டு உடலை நல்லதாக ஆக்கச் செய்கின்றது… உடலிலிருந்து வெளிப்படக்கூடிய மணம் ஆறாவது அறிவு.

உதாரணமாக கருணைக்கிழங்கில் விஷம் இருக்கிறது என்றால் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அதை நீக்கிவிட்டுச் சுவையாகச் சாப்பிடக்கூடிய நிலை வருகிறது.

அதே சமயம் ஒருவன் தவறு செய்கின்றான் என்று கண்ணிலே பார்த்த பின் எரிச்சல் ஆகிறது. அவனால் பொருள் விரயம் ஆகின்றது என்கிற பொழுது வேதனையாகின்றது.

இந்த இரண்டையும் நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வான சத்துக்கள்… எரிச்சலும் வேதனையும் நமக்குள் வடிக்கப்பட்டு ஆகாரத்துடன் 1.
இது இரண்டும் உயிரில் சேர்க்கப்படும் பொழுது இதற்குப் பெயர் காளி…
2.மிகவும் துரித நிலைகள் கொண்டு செயல்படும் தன்மை வந்து விடுகிறது.

அவ்வளவு சக்திகள் நமக்குள் தோன்றிய பின் அதைக் கழிக்கும் திறனை இழக்கச் செய்து விடுகிறது. விஷம் இவ்வாறு கலந்த பின் சிந்திக்கும் திறன் (ஆறாவது அறிவின் தன்மை) இழந்து விடுகின்றது.

கருணைக்கிழங்கில் உள்ள விஷத்தை எப்படி வேக வைத்து நீக்குகின்றோமோ அந்த நீக்கும் எண்ணம் இருந்தாலும்… வாழ்க்கையில் ஒருவன் தவறு செய்வதிலிருந்து இந்த வேகங்கள் நமக்குள் ஆக்கிரமித்துக் கொண்டால் அதை நாம் கழிக்க முடியாத நிலையாகி உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.

நமது உயிர் ஒளியாக இருக்கின்றது. உடல் பெற்ற பின் அறிய வேண்டும் என்று எண்ணி கண் தெரிந்து… கெட்டது என்ற நிலை வந்தாலும் அதைச் சுவாசித்த பின் உடலுக்குள் அது வந்து… விஷத்தை ஊட்டிவிடுகிறது.

சிந்தனையைக் குலைக்கச் செய்யும் அந்த உணர்விலிருந்து மீட்டிக் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஆறாவது அறிவை அப்போது அது செயலிழக்கச் செய்துவிடுகின்றது.

இப்படி விஷங்கள் கலந்து சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது இதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…? என்ற இந்த உண்மையை உணர்த்துவதற்குத் தான் அன்று சூரசம்காரத்தைக் காட்டித் தீய சக்திகளில் இருந்து மீட்கப்பட வேண்டும்…! என்று காட்டினார்கள்.

ஏனென்றால் தவறு செய்பவன் அவனாக இருக்கின்றான். ஆனால் பொருள் போய்விட்டதே என்று நாம் வேதனைப்படும் பொழுது விஷமாகி விடுகின்றது. தவறு செய்தவனைப் பார்த்த உடனே எரிச்சலாகின்றது. இந்த உணர்வை நாம் சுவாசித்து விட்டால் உடலில் நோயாக மாறுகின்றது.

ஆரம்பத்தில் கண்ணில்லாத புழுவாக இருக்கும் போது அது பசியின் ஏக்கத்தில் இருந்தது. நகர்ந்து சென்று வேதனையான பின் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்… பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளைச் சுவாசித்தது.

அதற்குப்பின் கண் தெரிந்தது.

அப்பொழுது கெட்டதை நீக்கி நல்லது எது என்று அறிந்துணர்ந்து செயல்படும் அந்த வழியில் நாம் வளர்ச்சி அடைந்து வந்த பின் கெட்டது என்று தெரிகின்றது… கருணைக்கிழங்கில் புறநிலையில் இருப்பதை விஷத்தை வேக வைத்து நீக்குகின்றோம்.

அதே சமயம் ஒருவன் தவறு செய்கின்றான் என்று அறிய உதவுகின்றது. பொருள் சேதமாகிவிட்டால் எவ்வளவு நஷ்டம் ஆகி விடுமே என்ற நிலையில் வேதனை அடையச் செய்து சிந்தனையை இழக்கும்படி செய்கின்றது.

அத்தகைய வேதனை உணர்ச்சிகள் தோன்றி அது செயலாக்கிய பின் இந்த உணர்வுகள் நம் ஆகாரத்துடன் சேர்ந்து விடுகின்றது.
1.இப்படிச் சிறுகச் சிறுக நமக்குள் அந்த விஷம் உருப்பெறுகின்றது.
2.அதைத் தடைப்படுத்துவது எப்படி…?
3.தீமை அணுகாத நிலைகள் கொண்டு எப்படி மீட்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத் தான் சூரசம்காரம் என்று காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் அதன் வழி சென்றவர்கள் மெய்ஞானிகள். அவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்று இருக்கின்றார்கள். நம் பூமிக்குள் அங்கிருந்து பல ஆற்றல்மிக்க சக்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட மூச்சலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமிக்குள் சுழன்று கொண்டிருக்கிறது.

அதே போல வெறுப்பு வேதனையுடன் நாம் பேசிய எண்ண அலைகளும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதுவும் காற்றிலே மிதந்து கொண்டுள்ளது.

விஞ்ஞான அறிவால்… ஒன்றும் அறியாத நாடாக்களில் பூசப்பட்ட உலோக முலாமுக்குள் பதிவு செய்து அதை மீண்டும் ஒரு இயந்திரத்தில் போட்டு அந்த உணர்வின் ஒலியைப் பரப்பச் செய்யும் பொழுது காந்தப் புலன்கள் தனக்குள் கவர்ந்து அலைகளாக அனுப்புகின்றது.
1.டிவியில் அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது
2.காற்றுக்குள் மறைந்திருக்கக்கூடிய நுண்ணிய அலைகளைக் குவித்த பின் அங்கே எந்தப் புகைப்படத்தைப் பதிவு செய்தார்களோ அதை ஈர்க்கின்றது.
3.டிவியைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாதனம் சரியாக இருந்தால் அந்தப் படத்தை ஒழுங்காகக் காட்டுகிறது,

இதே போன்று தான் நம்மை அறியாதபடி சலிப்பு சஞ்சலம் வேதனை போன்ற உணர்வுகள் நம் நல்ல குணங்களுக்குள் கலந்த பின்… “நல்லதை எண்ணி இழுக்கும் திறன் இழந்து விடுகின்றோம்…!”

பாலுக்குள் காரத்தைக் கலந்தால் அதைக் குடிக்கும் பொழுது வெறுக்கச் செய்கின்றது. இதைப் போல நம் நல்ல மனம் கொண்டு நாளுக்கு நாள் ஒவ்வொன்றையும் பார்க்கப்படும் பொழுது
1.பிறர் தவறு செய்வதை நுகர நேருகின்றது அந்த உணர்வை அறிந்து கொள்கின்றோம்…
2.ஆனால் அவை நமக்குள் தீங்கு விளைவிக்கும் சக்திகளாக மாறுகின்றது.

அந்த சமயம் அந்தச் செயலை நீக்கிவிட்டாலும்… உடலுக்குள் சேர்ந்த அந்த விஷமான சத்தை நீக்கும் திறன் இழந்து இருக்கின்றோம். அதைத் கழிப்பதற்குத் தான் தீபாவளி திருநாளை வைத்தார்கள்.

மனிதனான நாம் அனைத்தும் அறியக்கூடிய வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் ஞானிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான் “தீபாவளி நாள்…”

ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த தீய சக்திகளை எல்லாம் மாற்றி உணர்வை ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டு ஜீவன் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
1.அவர்கள் பேசிய உணர்வலைகளை நாம் நுகர்ந்து
2.அவர்கள் எந்த வழிகளில் விண் சென்றார்களோ அந்த நிலையை நாமும் பெறுதல் வேண்டும்.

உயிர் ஒளியாகத் தோன்றியது… உணர்வை ஒளியாக மாற்றினார்கள். அந்த வழியிலே ஒளியாக இன்றும் வாழ்கின்றார்கள்.

இதைத்தான் ஓர் உயிர் ஒளியாகத் தோன்றி பூமிக்குள் விஜயம் செய்து நவராத்திரி என்று காட்டுகிறார்கள். அதாவது… பல உணர்வின் சக்திகள் உடலுக்குள் கொலு வீற்றிருந்து… இருளுக்குள் நின்று ஒளியை அறிந்து… தனக்குள் வழியறிந்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள் சப்தரிஷிகள்.

1.அந்த மகரிஷிகள் காட்டி அருள் வழிப்படி நாம் அனைவரும் ஒளியின் உணர்வாக உருப் பெறுவோம்
2.அந்தத் தகுதியை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் தான் தீப ஒளித் திருநாள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புதிதாகக் கட்டிய வீட்டில் குடி புகும் முன் யாகத்தை வளர்த்துத் தீயைப் போட்டு மந்திரத்தைச் சொல்லி காசை வாங்கிக் கொண்டு செய்கிறார்கள். யாகம் நடத்துபவரிடம் காணிக்கை கொடுத்து அவரிடம் பொட்டு வைத்துக் கொண்டு செல்வார்கள்.

புகையைப் போட்டு அங்கே சுற்றிக் கொண்டு இருந்தால் புது வீட்டில் உள்ள தோஷம் நீங்கிப் போகும்…! என்று அவர்கள் சொல்லி விட்டுப் போவார்கள். தோஷம் எப்படிப் போகும்…?

அந்தப் புகையைப் போடும் பொழுது உங்கள் மனது எப்படி இருக்கிறது…?
1.கண்ணிலே தண்ணீர் வருகிறது.
2.அப்பொழுது வெறுப்பான உணர்வைத் தான் செலுத்துகின்றீர்கள்.
3.நல்ல உணர்வைச் செலுத்துகின்றீர்களா…?

ஏனென்றால் நெருப்பில் போட்டால் இது எல்ல்லாம் நீங்கிப் போகும் என்று “சாங்கிய சாஸ்திரங்களைத்தான்…” கொண்டு வருகின்றார்களே தவிர உண்மையான சாஸ்திரம் இல்லை.

எல்லோரும் தியானத்தில் அமர்ந்து
1.இந்த வீட்டிற்குள் வரும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
3.அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி அந்த ஒலி அலைகளைப் பரப்பினால் எப்படி இருக்கும்…?

ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு இந்த உயிரிலே பட்ட உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படுகிறது. நம் உடலுக்குள் விளைந்து அது மூச்சாக வெளிப்படுகிறது.

நாம் இப்படித் தியானித்து வீட்டிலுள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து இந்த மூச்சின் தன்மை வெளிப்படுத்தி அருள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்யப்படும் பொழுது வீட்டிற்குள் வந்தாலே சந்தோஷமாக இருக்கும்.

அப்பொழுது தான் வீடு கட்டும் போது பதிவான தோஷங்கள் அகலும்.

ஆனால் வழக்கில்… புது வீட்டில் யாகம் செய்தார்களே… அதற்கு என்ன சீர் செய்தார்கள்…? எதைச் செய்தார்கள்..? என்ன சாங்கியம் செய்தார்கள்..? இதை எல்லாம் கேட்டுத் துருவுவார்கள்.

1.அவர்கள் யாகம் செய்வது புறத் தீ…!
2.ஆனால் நாம் செய்வது அகத்திற்குள் இருக்கக்கூடிய தீ..!
3.அக உணர்வைச் செலுத்தி இருளைப் போக்கக்கூடிய நிலைகளுக்கு நாம் சொல்கிறோம்.
4.நாம் செய்யக்கூடிய இந்தத் தியானம் உண்மையான யாகமாகிறது.
5.இந்தத் தீயை அவர்கள் உணரவில்லை… இந்தத் தியானமோ உணர்வின் இயக்கமாக இருக்கிறது.
6.அது விகார உணர்வைத் தோற்றுவிக்கிறது… உங்களுக்குக் கண் எரிச்சலும் இருமலும் அது தான் வரும்.

யாகம் வளர்க்கிற வீட்டிலே பாருங்கள். எத்தனை சங்கடப்படுகிறார்கள்…? வருகிறதா… இல்லையா..? புறத்தால் சாங்கியத்தைச் செய்து எந்தத் தோஷத்தையும் போக்க முடியாது. மனத் திருப்திக்குத் தான் அது உதவும்.

மனிதனுக்குள் அகத்தீக்குள் (உயிருக்குள்) அந்த வலிமையான ஞானிகளின் உணர்வைப் படைத்து அந்த உணர்வின் நினைவலைகளைப் பரப்பினால்
1.வீட்டில் உள்ள தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகிறது.
2.நமக்குள்ளும் ஆழமாகப் பதிவாகிறது.
3.வீட்டிற்கு வருபவர்களுக்கும் நல்ல உணர்வு கிடைக்கிறது.

ஏனென்றால் அதிலுள்ள மேக்னட் இதைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும்.

சில பேர் அவர்கள் வீட்டில் உள்ள சங்கடத்தையும் கஷ்டங்களையும் சொல்வார்கள். நீங்கள் “உம்…” கொடுத்துக் கேட்டால் போதும். அவர்கள் வீட்டுக் கஷ்டத்தை எல்லாம் இங்கே ஓடி ஓடி வந்து சொல்வார்கள்.

அதை எங்கே உட்கார்ந்து கேட்கின்றீர்களோ அந்த வீட்டில் படரும்.
1.அடுத்தாற்போல் நீங்கள் சந்தோஷமாக இருந்த இடத்தில் என்ன ஆகும்…?
2.ஒரு இனம் தெரியாதபடி எங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோமோ…
3.”அங்கேயே…” இழுத்துக் கொண்டு வந்து உட்கார வைக்கும்.

அப்பொழுது இனம் புரியாமல் கவலைப்படுவீர்கள். ஏன் கவலைப்படுகிறோம்..? எதற்காக வேண்டிக் கவலைப்படுகின்றோம்…? என்பது தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள்..! நாம் தவறு செய்யவில்லை. நாம் அதைப் புரிந்து கொள்வதில்லை.

புரியாத நிலைகளில் சாமி காப்பாற்றும்… சாமியார் காப்பாற்றுவார்… ஜோதிடம் காப்பாற்றும்… மந்திரம் காப்பாற்றும்… வாஸ்து சாஸ்திரம் காப்பாற்றும்…! என்று சொல்லிக் கொண்டு இப்படித் திசை திருப்பி விட்டார்கள்.

ஆனால் நாம் எந்த உயர்ந்த எண்ணத்தை எண்ணுகின்றோமோ இந்த உணர்வு நம்மையும் காக்கும்.. நம்முடைய எண்ணம் மற்றவரையும் காக்கும் இந்த உடலில் நல்ல உணர்வுகளையும் ஊட்டும். என்றைக்கு இந்த நிலையை மனிதன் நம்புகிறானோ அது வரையிலும் இது வரும்.

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? புதுப் புது உயிரினங்களை உருவாக்குகிறார்கள். புதுப் புதுத் தாவர இனங்களை உருவாக்குகிறார்கள். நாம் பார்க்கின்றோம் அல்லவா..!

அன்றைக்கு மெய் ஞானி என்ன சொன்னான்…?
1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் வந்தால்
2.தீமையை நீக்கிய உணர்வுகளை உனக்குள் நுகர்ந்து நல்ல அணுக்களை உருவாக்கு…! என்று தெளிவாகச் சொன்னான்.

கோவிலுக்குப் போய் ஞானிகள் காட்டிய வழியில் அந்த உயர்ந்த எண்ணங்களை எடுத்தால் நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்குகின்றது. அதே மாதிரி…
1.நம் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அந்த நல்ல எண்ணங்களை எண்ணி உருவாக்கினால் எப்படி இருக்கும்..?
2.உருவாக்க முடியுமல்லவா…! உங்களை நீங்கள் நம்புங்கள்…!

எதிரி எங்கே இருக்கின்றான்…?

 

ஒவ்வொரு மனிதனும் தான் தவறே செய்யவில்லை என்றாலும் திடீரென்று மற்றவர்கள் எதையாவது சொல்லிவிட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது… அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு…!

அப்படிப் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… என்னை இப்படிச் சொன்னானே…!” என்ற உணர்வுகள்
1.நமக்குள் அது எதிரியை வளர்த்துக் கொண்டே வருகின்றது.
2.நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை.
3.நல்ல குணங்கள் வலு இழக்க நாமே காரணமாகின்றோம்.

ஆகவே அந்த நல்லதைக் காப்பதற்குத்தான் தத்துவ ஞானிகள் சாதாரண நிலையிலும் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தார்கள். இது அகஸ்தியனால் காட்டப்பட்டது.

1.அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் பெறுவதற்காக இம்முறையை வகுத்தான்.
2.அவன் துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
3.எத்தகைய தீமையைக் கண்டுணர்ந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவர் திட்டி விடுகின்றார் என்றால்… இதே உயிர் தான் இழுத்து இந்த உணர்வினை உணர்ச்சிகளாக இயக்கி… செயலுக்குக் கொண்டு வருகின்றது. இதே உயிர் தான் அதை அணுவாகவும் மாற்றி விடுகின்றது.

அவன் எவ்வளவு வேதனைப் படும்படிச் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது. இது தான் விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… விஷ்ணுவுக்கு பிறந்த பிரம்மா அதை உருவாக்குகின்றார். அதாவது வேதனை என்ற விஷத்தின் தன்மை உருவாகி விடுகின்றது. அது தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்த வேதனையை உருவாக்கும்படிச் சொன்னானோ அதனால் உருவான உணர்வுகள் பிரம்மனாக தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றதனால் “அந்த ஞானத்தின் வழிகளில் செயல்படும்…!”

இயற்கையின் உண்மை நிலைகளை நாம் கண்டு கொள்ள இவ்வளவு கருத்துடன் இதைக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஒரு விஷச் செடி காற்றிலிருந்து தன் இனமான விஷத்தையே நுகர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.

அதைப் போல் உடலில் உருவான அந்த வேதனைப்படச் செய்யும் அணு…
1.எந்த மனிதன் வேதனைப்படச் செய்தானோ அவனின்று வரும் இந்த உணர்வை நமக்குள் அதைக் கிளர்ந்து சுவாசித்து
2.அதனுடைய மலத்தை நம் உடலிலே இடும்பொழுது தான் நல்ல அணுக்களுக்கும் அது வேதனை தாங்காது
3.அதனுடைய செயலைக் குறைக்கச் செய்து உடலிலே நோயாக வருகிறது.

என்னை வேதனைப்படச் செய்கின்றான்… அவனை விடுவேனா…? என்று கோபத்துடன் பதிலுக்குச் செய்தாலும் விஷத்தன்மையான அணுக்கள் மீண்டும் அவர்களை எண்ண எண்ண நோயாகவே விளைகின்றது.

அப்பொழுது எதிரி எங்கே இருக்கின்றான்…?
1.நமக்குள் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோம்…
2.நம்மை மறந்து விட்டோம் என்ற நிலை தான் வருகின்றது.

குருநாதர் எனக்கு இதை அனுபவபூர்வமாகக் கொடுத்ததனால் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் அதன் வழி தியானித்தல் வேண்டும்.
1.எத்தகைய வேதனைப்படும் நிலைகள் வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

அதன் பின் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வராது நாம் இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நம்மைப் பெற்றெடுத்த தாயை… அந்தக் காப்பாற்றிய தெய்வத்தை மறந்தால்
2.நமக்கு நல்ல வழியைக் காட்டிய குருவை மறந்தால் எங்கே சென்றாலும் நல்லதை எடுக்க முடியாது.
3.“இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்…!”

தாய் தந்தையர் இன்று எத்தனை பேர் என்ன செய்கிறார்கள்…? வளர்ந்து சம்பாதித்துச் சொத்தைச் சேர்த்த பின் அனாதை இல்லத்தில் தான் இருக்கின்றர்கள்,

அங்கே இருந்தாலும் கூட பென்சன் (PENSION) வாங்கப் போனால் உனக்கு எதற்கு இவ்வளவு காசு…? ஐநூறு அறுநூறு பத்தாதா..? என்று சொல்லி அந்தப் பணத்தையும் தட்டிப் பறிப்பதற்குத் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள்.

உழைத்தேன்… பிள்ளைகளை வளர்த்தேன்… படிக்கச் செய்தேன் என்று தாய் தகப்பன் இருந்தாலும் இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது.

நான் ஆடம்பரமாக வாழ வேண்டும்.. உனக்கு என்ன வேலை…? என் பிள்ளைகளை வளர்க்கப் பணம் வேண்டியிருக்கிறது உனக்கு எதற்குப் பணம்..? என்று கேட்பார்கள்… கொடுக்கவில்லை என்றால் உதைப்பதற்கு வந்துவிடுவார்கள்.

ஒரு தகப்பன் பணத்தைச் சம்பாரித்துப் போட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டு கொடுத்த பிற்பாடு மூன்று இலட்சம் பணம் அவர் கையில் இருக்கிறது…!

அந்தப் பணத்தால் உனக்கென்ன வேலை..? உனக்கு மாதம் தர வேண்டிய பணத்தை நான் தருகிறேன். ஆகையினால் அதைக் கொடுத்துவிடு என்று கேட்கிறது பிள்ளை.

கொடுத்தால் அதற்கப்புறம் அவருக்குச் சோறு போடுவார்களா…? இந்த மாதிரியே சொல்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி. இது எல்லாம் இன்று கொடுமையிலும் கொடுமை…!

ஏனென்றால் இந்த அரக்க உணர்வுகள் தாய் தந்தையை மறக்கச் செய்கிறது.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தாய் தந்தையரை வணங்கி எண்ணினால் ஒரு காட்டுக்குள்ளேயே சென்றாலும் புலியே தாக்க வந்தாலும் அம்மா…மா…! என்று சொன்னால் போதும். அந்தப் புலி உங்களைத் தாக்காது… அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல..! நீங்கள் இருக்கும் தெருவுக்குள் ஒரு நாயே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐய்யய்யோ ஐய்யயோ முருகா…! என்று சொன்னாலும் கூட “லபக்” என்று பிடிக்கும்.

நாய் கடிக்க வரும் பொழுது அம்மா…! என்று சொல்லுங்கள். உங்களைக் கடிக்கிறதா…? என்று பாருங்கள். பரிசீலித்துப் பாருங்கள். யானையே வந்தாலும் சரி…!
1.அந்தத் தாயின் பாச உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கிறது.
2.உடனே குவித்து உங்களுக்கு முன்னாடி வரும்.
3.யானை அந்தத் தாய்ப் பாசம் கொண்டது..
4.இந்த உணர்வுகளின் மணம் பட்டவுடன் உங்களைத் தாக்காது.

உங்கள் தொழிலிலே பெரும் சங்கடமாக இருந்தால் எந்தச் சாமியாரையோ நினைப்பதைக் காட்டிலும் யாம் சொன்ன முறைப்படி உங்கள் தாயை வணங்கினால்…
1.அம்மா…மா…! என்று சொல்லி ஏங்கி
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபடும் வலிமையும் அந்தச் சிந்திக்கும் ஆற்றலும் கிடைக்க வேண்டும் என்று உங்கள் தாயை எண்ணிப் பாருங்கள்.
3.அந்தத் தாயின் உணர்வுகள் உங்களுக்குள் எவ்வளவு வேலை செய்யும் என்று நீங்கள் காணலாம்.
4.தாயைப் பேணிக் காக்கும் முறைகளைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்படி ஞானிகள் சொல்லியிருந்தாலும் அதை எல்லாம் மறந்தே தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கோவிலுக்கு வாப்பா…! என்று சொன்னாலும் “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது… நீ போ…!” என்று சொல்லக்கூடிய காலமாக இன்று உள்ளது.

அரக்க உணர்வு மனிதரிலிருந்து தாயையே இரக்கமற்றுக் கொல்லும் நிலை வருகிறது. இரக்கமற்றுத் துன்புறுத்தும் தன்மை வருகிறது… இதை எல்லாம் நாம் பார்த்துக் கண்ணீர் விடும் நிலை இருக்கின்றது.

ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது எத்தனை அவஸ்தைப்படுகிறது..? பிறந்த பின் அந்தக் குழந்தையை வளர்க்க எத்தனை அவஸ்தை…? வளர்ந்து வரும் நிலையில் அவனைக் காக்க எத்தனை அவஸ்தை..? பிள்ளை கல்வி கற்க எத்தனையோ கடனை வாங்கிச் சிரமப்பட்டுப் படிக்க வைக்கின்றார்கள்… அதில் எத்தனை அவஸ்தை…?

இருந்தாலும் தன் பையன் கற்ற பின் அவனுடைய நிலைகளைப் பார்க்கும் பொழுது அந்தத் தாயின் நிலைகள்… கண் கொள்ளாத நிலைகள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைத் தவிர்த்ததனால் இன்று இதிலே படக்கூடிய வேதனைகள் ஏராளம்… ஏராளம்…!

என் (ஞானகுரு) அம்மாவைப் பற்றி நான் நினைக்கும் பொழுது எனக்கு (ஞானகுரு) அழுகை வந்துவிடும். காரணம்…
1.அந்தத் தாய் என்னைக் காத்த நிலைகள் கொண்டுதான்
2.இதை எல்லாம் (அத்தனை மெய் ஞானிகளையும்) அறிய முடிந்தது,
3.தாயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டதனால் தான் வருகிறது.

என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் பெண் பிள்ளை மாதிரி நான் தான் சமைத்துக் கொடுப்பேன். எதுவாக இருந்தாலும் என் தாயுடன் ஒட்டியே இருப்பேன்.

என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் (அப்பாவைப் பெற்றவர்) சண்டை வந்துவிடும். என் பாட்டி அம்மாவைக் கண்டபடி பேசும். ஒரு சமயம் என் அம்மா அதைக் கேட்டுக் கோபித்துக் கொண்டு கிணற்றில் விழுந்துவிட்டது.

எனக்கு ஒன்பது வயது இருக்கும். ஓடிப் போய்க் கிணற்றில் குதித்து என் அம்மாவைக் காப்பாற்றித் தூக்கிக் கொண்டு வந்தேன். அதற்கப்புறம் என் அம்மாவை நான் பிரிந்திருக்கவில்லை. ஏனென்றால் ஏதாவது சொன்னால் மறுபடியும் விழுந்துவிடுமே என்று…! தாயின் பாசத்தை தாய் எனக்கு உணர்த்தியிருக்கின்றது.

அந்த உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது ஒவ்வொருவரும் கடவுளைத் தேட வேண்டியதில்லை.
1.நம்மை உருவாக்கிய தாய் தான் கடவுள்…!
2.நம்மைத் தெய்வமாகக் காத்தது இந்தத் தாய் தான்…!
3.குருவாக இருந்ததும் தாய் தான்.

அதனால் இதை எல்லாம் நீங்கள் மனதில் வைத்து இன்று விஞ்ஞான உலகம் அஞ்ஞான வாழ்க்கையில் போய்க் கொண்டிருக்கும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு தாயின் பேரன்பு கொண்டு அதை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள்.

எதிலேயும் எந்த நிலையானாலும் அம்மா அப்பா அருளால் இந்தச் செயல் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து செய்து வாருங்கள்.
1.சிக்கல் வரும் பொழுது அம்மாவை எண்ணுங்கள்
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபட எனக்கு ஒரு நல்ல உபாயம் வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்தத் தாயின் உணர்வு இருப்பதால் அதே உணர்வு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்
1.தாய் நம்மைப் பேணிக் காத்த உணர்வு நமக்கு ஞானத்தை ஊட்டி
2.தப்பிக்கும் உபாயத்தையும் மார்க்கத்தையும் காட்டும்.

யாராவது நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்றால் இதே உணர்வு வந்து ஊக்கம் ஊட்டி நம்மை அவர்கள் தாக்காதபடி காக்கவும் செய்யும். எதிரிகள் எத்தனையோ நிலைகள் இருந்தாலும் தாய் எண்ணியிருந்தால் தாக்கக்கூடிய உணர்வையே மறைக்கக்கூடிய சக்தி இருக்கின்றது.

அதே போல் தாய்மார்களும் என்ன செய்ய வேண்டும்…?

குழந்தைகளுக்கு ஞானத்தை ஊட்ட வேண்டும். ஏனென்றால் பிள்ளைகள் தவறி விடுகிறது. அதை எல்லாம் எண்ணியபின்
1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று கோவிலில் போய் வேதனையைத் தான் படுகின்றோம்.
2.அவனை எண்ணி வேதனையைத் தான் வளர்க்கிறோம்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் மாற்றி என் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று.. கல்வியில் சிறந்த ஞானம் பெற்று… உலக ஞானம் பெற்று… “உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும்…” என்று இன்று விஞ்ஞான உலகிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம் இந்த முறைப்படி அவசியம் எண்ணித் தான் ஆக வேண்டும்.

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி

 

நாம் கெட வேண்டும் என்று யார் எண்ணினார்களோ அவர்களை நாம் எதிரியாகக் கருதும் பொழுது “எதிரியைத்தான்…” உடலுக்குள் வளர்க்கின்றோம்.

இதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் காட்டிய விநாயகர் தத்துவத்தின்படி
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நல்ல குணங்களுக்கு ஊக்கச் சக்தியைக் கொடுப்பதும்
2அவர்கள் தீமையான உணர்வுகளைச் சொல்லும்போது மகரிஷிகள் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும் என்றும் சொல்வது.

காரணம் கண்களிலே பார்த்தது நமது ஆன்மாவாகின்றது. சுவாசித்த பின் உயிரிலே படுகின்றது… அந்த உணர்வு இயக்கப்படும் பொழுது ஜீவணுவாக மாறுகின்றது.

முதல் அணு உருவாகி விட்டாலும் அடுத்த நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

ஏனென்றால்
1.கண் இப்படி முன்னாடி வருவதை எடுத்து அதன் வழி நேரடியாகப் பேசுகின்றது.
2.ஆனால் கண்களால் மகரிஷிகள் உணர்வை எண்ணி அதை எடுத்து இடைமறித்து உயிரிலே (புருவ மத்தியிலே) இணைக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். காரணம் என்ன என்றால் மறந்து விட்டுத் தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று தெரியவில்லை என்று திரும்பக் கேட்பாரும் உண்டு.

அதனால்தான் ஞாபகப்படுத்துவது…!

வாழ்க்கையில் வரும் தீமைகளை இடைமறித்து அருள் ஞானிகள் உணர்வை உள்ளே செலுத்தப்படும் பொழுது தீமைகளை அகற்ற முடிகின்றது.

தங்க நகைகளைச் செய்கின்றோம்… செம்பு வெள்ளியை அதனுடன் இணைத்துத்தான் செய்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோம்.

1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிய “அந்த வலுப்பெற்ற உணர்வுகள் மகரிஷிகளுடையது…”
2.அதை நாம் நுகர்வதற்குத் தான்… பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் “தியானம்…”

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இது தியானம். மகரிஷிகள் அருள் சக்திகளை உடலுக்குள் செலுத்தச் செலுத்த உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது உரம் ஆகின்றது.

1.பிறர் செய்த தீமைகள் நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்பு அந்த மகரிஷியின் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.தீமையான அணுவாக அது வளர்வதற்கு முன் “அந்த அணுவையே…” நமக்குச் சாதகமான நிலைகளாக மாற்றிவிடும்.
3.தீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்யும் பொழுது “ஒவ்வொன்றிலும் நமக்கு வலுப்பெறுகின்றது…”

இரண்டு தரம் கெட்டதைக் கேட்டோம் அல்லது சொன்னோம் என்றால் நல்லது செய்வதை அது தடைப்படுத்துகின்றது. ஆனால் அதே சமயத்தில் அது போல் ஆன பின் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை இணைத்து விட்டால்
1.அந்த அணு நம் வழிக்கே இணைந்து வருகின்றது.
2.அப்பொழுது நம்மைக் காக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அதற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் நமக்குள் எதை வினையாக்க வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இயக்க வேண்டும்…? என்று கேள்விக்குறி போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

உதாரணமாக… வேதனைப்படும் நிலையாகி விட்டால் அது வேதனையை அதிபதியாக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது. அந்த அணுவின் செயலாக்கங்களையே கொண்டு வருகின்றது.

அதே சமயம் இதை அடக்கிய மகரிஷிகள் உணர்வை அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அந்த அணுவிற்குள் ஞானியின் உணர்வுகள் அதிபதியாகத் தொடங்கி விடுகின்றது.
2.பின் ஒளியான அணுக்களாகவே உருப்பெறத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் நாம் அந்த மெய்ஞானியின் உணர்வை வினையாக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
1.நாம் யாரையுமே எதிரியாக ஆக்குவதில்லை.
2.நமக்குள் எதிர்மறையான அணுக்களும் உருவாகாது
3.ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் உருவாகின்றது… மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வீட்டில் பையன் குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கின்றான்.. சொன்னபடி கேட்கவில்லை… சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான்…! என்றால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை அதிகமாகின்றது.

அப்பொழுது சிந்தனை இழந்து கோபமாகி குடும்பத்திலும் கலவரங்கள் வருகின்றது. அப்புறம் யாரிட்ட சாபமோ…? யார் என்ன செய்தார்களோ…? என்று இப்படிப் பல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது.
1.நம்மை அறியாமல் இயக்குகிறது என்று தெரிகிறது.
2.அதை உடனே போக்க வேண்டுமல்லவா…! அதற்கு வழி..?

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வெல்லாம் வினையாகின்றது (வினை என்றால் வித்து – உடலுக்குள் அணுவாகின்றது). அது வினைக்கு நாயகனாக நம்மை இயக்கத் தொடங்குகிறது.

ஒரு பருப்பை நாம் வேக வைத்தால் முளைக்குமா…? முளைக்காது. அதைப் போல் நமக்குள் வந்த வினையை வேக வைக்க வேண்டும். அதற்காக வேண்டித்தான் விநாயகரை வட மேற்கிலே வைத்து வடகிழக்கிலே பார்த்து நம்மை வணங்கும்படிச் சொல்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரம் வடகிழக்கிலிருக்கின்றது. துருவ நட்சத்திரம் காலை நான்கு மணிக்கு உதயமாகி அதிலிருந்து அலைகள் வருகிறது.
1.அந்த நேரத்தில் நாம் முழித்து “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி
2.அப்பா அம்மாவை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று
3.நம் உடலுக்குள் பதிவு செய்து பழகிக் கொள்ள வேண்டும்.
4.அப்படிப் பதிவு செய்து பழகுவதற்குத்தான் விநாயகரை வட மேற்கிலே வைத்துள்ளார்கள்.

ஆக வடகிழக்கில் துருவ நட்சத்திரம் உள்ளது. நாம் விநாயகரைப் பார்க்கும் நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.தன்னிச்சையாகப் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

விநாயகருக்கு முன்னாடி என்ன வைத்துள்ளார்கள்..?

புல்லைத் தின்றோம்… தழைத் தாம்புகளைத் தின்றோம்.. கனிகளைத் தின்றோம்…! இன்று மனிதனாக ஆன பின் இன்று சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம் என்று கொழுக்கட்டையை வைத்துக் காண்பித்து
1.இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று
2.கேள்விக் குறியே போட்டுச் சொல்கிறார்கள்.

ஆனால் நாம் அந்தக் கேள்விக் குறியைப் போட்டுக் கணக்கு எழுதுவதும்.. வீட்டு வரவு செலவு கணக்குப் பார்ப்பதும்… நல்ல நேரம் பார்ப்பதும்.. அதற்காக வேண்டித் தான் அதைப் போட்டு ஆரம்பிக்கின்றோம். வேறு எதுவும் இல்லை.

ஆகவே மனிதனான பின் வேக வைத்துச் சாப்பிடுகிறோம். வேக வைத்தால் அது மீண்டும் முளைக்காது. இதே போல் பையன் அறியாத நிலைகளில் செயல்படுகிறான்… என்றால் அந்த வேதனை என்ற விஷம் நமக்குள் முளைக்காது தடுக்க வேண்டும்.

பையன் அறியாது செயல்படுத்தக் கூடிய அந்த வேதனையான உணர்வு நம் உயிரிலே மோதியவுடனே அது தீய வினையாக நமக்குள் சேர்கிறது. ஏன்…?
1.பல கோடிச் சரீரங்களில் முதலில் தீய வினைகளை நீக்கித் தான் மனிதனாக வந்தோம்.
2.இப்பொழுது இது தீய வினைகளாக நமக்குள் மாறுகின்றது
3.அப்படி மாறுவதைத் தடுக்க வேண்டுமல்லவா…!

இதைத்தான் இராமாயணத்தில் வாலி என்று காட்டுகின்றனர். அவனுடைய தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது “வாலி” வலிமையாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி விடுகின்றது.

அவனுடைய தவறான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது. அவன் எந்தத் தவறு செய்தானோ அதே தவறை நம்மைச் செய்யும்படித் தூண்டுகிறது. அவன் செய்த தவறையே நம்மைச் செய்யும்படித் தூண்டுகிறது.

1.அவன் தவறு செய்துவிட்டான் என்று நாம் நினைக்கின்றோம்.
2.அவன் ஒரு மடங்கு தவறு செய்தான் என்றால் அதற்குப் பதில்
3.பல மடங்கு அவனைக் கோபித்துத் திட்டுகிறோம்… அடிக்கப் போகிறோம்… தள்ளி விடுகிறோம்.

நம் பையன் என்று தெரிகிறது. அவனுக்குப் புத்திமதி சொல்ல முடிகிறதா…? அது அதிபதியாகி விடுகின்றது. அதன் வழி தான் நாம் நடக்கின்றோமே தவிர நம் நல்ல குணத்தைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடிகிறதா…? முடிவதில்லை.

பையன் குறும்புத்தனம் செய்தால் “காலையில் எடுத்துப் பதிவாக்கிப் பழகிய…” நல் வினையானை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணினோம் வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கும் உணர்வுகள் நமக்குள் வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து விட்டால் உள்ளுக்குள் போவதில்லை.

“உயிரிலே பட்டால் தான் இந்த உணர்வுகள் வரும்…!” (இது முக்கியம்). கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி இழுத்துப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும்.

1.அந்த உணர்வைச் சேர்த்தவுடனே
2.எதை வலு கொண்டு கண்ணிலே பார்க்கிறோமோ…
3.உயிரிலே… அதை இழுக்க ஆரம்பித்துவிடுகிறது.
4.அப்படி இழுக்க ஆரம்பித்தவுடனே குறும்பு செய்தான் அல்லவா…
5.அந்த உணர்வை உள்ளுக்குள் போகவிடாமல் தடுக்கிறது.

இப்படித் தடுத்து… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும் என்று முதலிலேயே அனுப்புகின்றோம்.

ஏனென்றால் அவன் செய்த வேதனை என்ற உணர்வுகள் சாப்பாட்டுடன் கலந்து அப்புறம் தான் இரத்தமாக மாறும். இரத்தத்தில் கலந்த பின் அணுவாக மாறும்.
1.அப்படிக் கலந்து வருவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்… இரத்தங்களில் கலக்க வேண்டும்…! என்று செலுத்திவிடுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி விடுகின்றோம்.

இப்படிச் செலுத்திப் பழக வேண்டும். இப்படிப் பழகிக் கொண்டால் பையனால் நமக்குள் வேதனையோ கோபமோ ஆத்திரமோ வெறுப்போ வராது. மாறாக அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல சிந்தனை வருகிறது.

அதன்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உனக்குக் கிடைக்கும்.. நீ தெளிவாக வருவாய்… உன் செயல்கள் எல்லோருக்கும் நல்லதாகும்…! என்ற நல்ல வாக்கினை பையனுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த உணர்வுகள் அவனுக்குள் சிறுகச் சிறுகச் செல்ல அவனை அறியாது இயக்கிய குறும்புத்தனங்கள் மாறி நம் சொல்லைக் கேட்கும் தன்மைக்கு வருவான்.

செய்து பாருங்கள்…!

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற வேதனைப்படக் கூடாது

 

1.எக்காரணத்தைக் கொண்டும்… இந்த வாழ்க்கையில் எத்தகைய அச்சுறுத்தும் உணர்வுகள் வந்தாலும்…
2.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை வளர்க்கப்படும் பொழுது
3.நம்மை அச்சுறுத்தும் அந்த உணர்வுகள் ஒடுங்கும்.
4.மகரிஷிகள் உணர்வுகள் அதை அச்சுறுத்தும்…!

ஆகவே… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வாழும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும்… தெருவில் இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும்…! என்ற தவத்தை மேற்கொள்ளுங்கள்.

நண்பர்களாக இருக்கின்றோம். சந்தர்ப்பத்தால் அந்தக் குடும்பத்தில் இன்னல்கள் படுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானியுங்கள்.

அந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் அந்தக் குடும்பத்தில் உள்ளோர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… குடும்பம் நலமாக இருக்க வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்று இந்தத் தவத்தை எடுங்கள்.

இது உண்மையான தவம் ஆகிறது.

1.இதைச் செயல்படுத்தினீர்கள் என்றால் நமது குரு அருளை உங்களுக்குள் காணலாம்
2.பேரண்டத்தின் நிலைகளையும் உங்களுக்குள் காண முடியும்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

யார் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டாலும் கூட உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். உடலுக்குள் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நினையுங்கள். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற தவத்தை எடுங்கள்.

இதைப் பெருக்குங்கள். இதையெல்லாம் நீங்கள் செய்து பழக வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருங்கள். அனைவரது குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தவம் இருங்கள்.
1.எல்லோரும் அப்படிச் சொல்லி… அதைப் பெற வேண்டும் பெற வேண்டும் என்று
2.எல்லோருடைய தவமும் ஒன்று சேரும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதனை வரிசைப்படுத்தி நாம் கொண்டு வருதல் வேண்டும்.

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற நிலைகளை எடுக்கக் கூடாது. தொழில் செய்யும் இடங்களிலும் இதைச் செய்து பழகிக் கொள்ளுங்கள். இந்தத் தவத்தை மேற்கொள்ளும் பொழுது அங்கே தவறுகள் மறையும்.

ஏனென்றால் இந்தத் தவறை வளர்த்துக் கொண்டால் நமக்குள்ளும் தவறுகள் விளையும். அந்த உணர்வே மீண்டும் இயக்கச் சக்தியாக வரும்.

தவறு செய்கின்றான்… தவறு செய்கின்றான்..! என்று தவறு செய்தவனைச் சொல்லிக் கொண்டிருந்தால் இது எங்கெல்லாம் சொல்கின்றோமோ இந்த உணர்வு அங்கே விளைந்து எல்லோரையும் இந்தத் தவறையே செய்ய வைத்துவிடும்.

பின்… “எங்கே பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றது…” என்று மீண்டும் அதைத்தான் வளர்க்க ஆரம்பித்து விடுவோம்.

1.குருநாதர் எந்த வகையிலெல்லாம் எனக்குக் கொடுத்தாரோ
2.அதையெல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
3.அதன் வழியில் ஒவ்வொரு நிமிடமும் தியானித்துப் பழகுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நம் குடும்பத்தில் எல்லோரும் பெற வேண்டும் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற இந்தப் பழக்கத்திற்கு நாம் அனைவருமே வந்துவிட வேண்டும்.

குரு வழியில் இப்படிச் செயல்படுத்தினால் இந்த உலகையும் காக்கின்றோம்… நம்மையும் காக்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்தக் கஷ்டமான அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருக்கின்றது.

அதை மாற்றக் கூட்டுத் தியானங்களிலிருந்து எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஞானிகள் உணர்வு இங்கே வரப்படும் பொழுது தீமைகள் ஒடுங்குகின்றது.

நம்முடைய எண்ணங்கள் அதிகமாக இதைப் பிரதிபலிக்கும் பொழுது காற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மையை ஈர்க்கும் நிலை இழக்கப்பட்டு அந்த உணர்வுகள் அகன்று சென்று விடுகிறது.

நாம் வசிக்கும் தெருவிலே இது போன்ற அலைகளைப் பாய்ச்சப்படும் பொழுது அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குக் கிடைக்கின்றது.

1.குரு அருளை நமக்குள் வளர்த்து… நாம் எல்லாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த உலகைக் காக்கும் சக்தியாக வர வேண்டும்.
2.எல்லா இடங்களிலும் இதைப் பரப்பி பழகுதல் வேண்டும்.
3.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் இதைச் செயல் வடிவுக்கு கொண்டு வந்தால் போதும்.

“சிரமம்…” என்ற அந்தச் சொல்லே நமக்கு வேண்டியதில்லை. உடனுக்குடன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். இந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தவமிருந்தால் “அந்தத் தவம்…” நமக்குள் வளர்கின்றது.

அதே சமயத்தில் குடும்பம் நன்றாக வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் போது “அந்தக் குடும்பங்களின் கஷ்டங்கள் நம்மைச் சாடாது…”

1.இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நாம் பார்க்க விரும்பிய சப்தரிஷி மண்டலமும்
2.எப்படியெல்லாம் அந்த ஞானிகள் உணர்வை ஒளியாக மாற்றி உருபெற்றார்களோ அதையும் நீங்கள் பார்க்கலாம்.
3.நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்… நீங்களும் பார்க்கலாம்.

சில பேருக்கு இப்பொழுதும் தெரிகின்றது. தெரிந்தாலும் நிஜமா… பொய்யா..? என்று சந்தேகம் உள்ளுக்குள் மாற்றிக் கொண்டே இருக்கும். நாம் பார்ப்பது நிஜமா…? என் எண்ணம் தான் இவ்வாறு இயக்குகின்றதா…? என்ற இந்த வினாக்கள் இருக்கும்.

உதாரணமாக… அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்கப்படும் பொழுது இரவிலே தூங்கும் பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ… அதே போன்று மெய்ஞானிகள் உணர்வை நாம் எடுக்கப்படும் பொழுது அந்த அச்சுறுத்தும் உணர்வை அடக்கி அந்த ஞானி உணர்வுகளை நாம் காண முடியும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகள் தெரிவது போல் தான்
2.மெய் ஞானிகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

யாரும் தவறு செய்யவில்லை. தெரிந்து யாரும் ஞானியாக ஆகவில்லை நான் ஞானியாக வேண்டும் என்று “தெரிந்து… அப்படி ஆகவில்லை…”

1.மற்றவர்கள் நலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது தான் ஞானி ஆகின்றார்கள்.
2.பிறர் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் போது தான் ஞானியாக முடிகின்றது.

ஞானிகளைப் போன்று நாமும் வாழ்க்கையில் அதைக் கடைபிடித்துச் செயல்படும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.

அந்த உயர்வான நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று உங்கள் எண்ணத்தை உயர்த்தி… எல்லோரையும் அந்த உயர்ந்த நிலையை நீங்கள் பெறச் செய்ய முடியும்
1.உங்கள் பார்வையால் உலகில் உள்ள நஞ்சின் தன்மையை மாற்ற முடியும்.
2.இங்கே 50 பேர் தான் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ண வேண்டாம்… இது ஐம்பது இலட்சமாகவும் ஐம்பது கோடியாகவும் மாறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு பயந்தவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் என்ன ஆகும்…? அதாவது இந்த இடத்தில் தான் கோரமான விபத்து ஆனது… அதை நான் நேரடியாகப் பார்த்தேன்… பயந்து விட்டேன்…! என்று அவர் சொன்னால் போதும்.

நீங்கள் அந்த இடத்திற்குப் போனால் தன்னாலே அந்தப் பய உணர்வுகள் தூண்டும். அந்த உணர்வு வந்தவுடனே உங்களை அறியமலே கிடு..கிடு…கிடு…! என்று நடுங்கச் செய்யும்.

இந்த உணர்வுகள் இயங்குவதைப் போல் தான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றேன். ஏனென்றால்
1.குருநாதர் எனக்குத் தெரியாமல் தான்
2.எனக்குள் (ஞானகுரு) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அறிமுகப்படுத்தினார்
3.அதைப் போல் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சகதிகளை “நீங்களும் பெற வேண்டும்…” என்ற ஆசையில்
4.தொடர்ந்து இதைக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆக… இனம் இனத்தைத் தான் பெருக்கும். அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளிலே எல்லோரும் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகையினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்கு ஊட்டிய அருள் உணர்வுகளை எல்லாம் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் ஒன்றாக இணைய வேண்டும் என்று
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரை ஈசனாக மதித்து
2.உங்களுக்குள்… உங்கள் உணர்வுக்குள் தொட்டுக் காட்டுகின்றோம்.

இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் சொல்வார்கள்…. தன் ஆசையின் நிலை கொண்டு என்ன செய்கிறார்கள்…? இங்கே “தட்டி” அதை எண்ணியவுடன் அவர்கள் உணர்வுகள் எல்லாம் இங்கே வந்துவிடும்.

அந்த ஆசையின் உணர்வுகள் வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். அந்த மந்திரத்தின் உணர்வுகள் வந்த பின்
1.இங்கே பார் வந்துவிட்டது… என்று
2.ஆக்கினையைத் தொடு…! என்று காட்டுவார்கள்.

அவர் ஆசையின் உணர்வுகள் இந்த உடலிலும் இயக்கும். இதே போல் சில மனிதரின் உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும். தொட்டவுடன் அவர்களுக்குக் “கிர்…ர்ர்ர்…!” என்று வரும்.

இபப்டித் தொட்டுக் காட்டிவிட்டால் அவர்களுக்கு அந்த உணர்வே தான் பழக்கம் வரும். “கிர்…ர்ர்ர்…!” என்று நெற்றி வலிக்க ஆரம்பித்துவிடும். பல நிலைகள் எல்லாம் ஆரம்பித்துவிடும். இது அல்ல..!

சாதாரணமாக ஒரு சிறிய பையனைத் தொட்டு “உனக்குள் இப்பொழுது மின்சாரம் பாய்கிறதா பார்…!” என்றால் அந்த உடலில் இருப்பதெல்லாம் இங்கே வரும்.

இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் நிலையும் ஆகும். அதைப் போன்ற நிலைகளில் எல்லாம் யாரும் சிக்காதீர்கள்…!

ஆனால் நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காண்பிப்பது என்பது எப்படி…?

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் அந்த உணர்வுகளை இணைக்கும் நிலையாக
1.இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது (படிக்கும் போது)
2.அது எப்படி ஆனது என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் உடல் அணுக்கள் அனைத்துக்கும் இது தொட்டுக் காட்டுவதாகும்.

நான் பேசுவது இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாய்கிறது. அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “உங்கள் எண்ணத்தாலேயே…” நீங்கள் அந்தத் துருவ நடசத்திரத்தின் அருள் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை நீங்கள் எண்ணி வளர்க்க வளர்க்க உங்களுக்குள் பேரொளியாக மாறும். நீங்களே அதை உணர முடியும்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பண்புள்ள மனிதன் அதைப் பார்க்கும் நிலையில் அந்த வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இவனுடைய உணர்வுகளும் இருன்டுவிடுகிறது.
1.அவனைக் காக்க எண்ணுகின்றான்
2.ஆனால் அதே உணர்வு இங்கே இருண்டு விடுகின்றது.
3.அந்த உண்மையை அறிய முடியாத நிலைகளில் இவன் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஊடுருவி விடுகின்றது.

ஆனால் பலருக்கும் இதைப் போல உதவி செய்யும் நிலையில் பிறருடைய துயரங்களை எண்ணி ஏங்கும் பொழுது அவர்கள் படும் துயரமெல்லாம் இங்கே வந்து இவன் சிந்திக்கும் தன்மையும் குறையத் தொடங்குகிறது.

ஏற்கனவே நல்லது செய்திருந்தாலும் அதைச் செய்ய முடியாத நிலைகளில் “எல்லோருக்கும் நல்லது செய்தேன்… என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று சொல்லிக் கொண்டு அவன் நல்லதைச் செய்வதையே மறக்கின்றான்.

எதைச் செய்து என்ன புண்ணியம்..? அப்படியே நாசமாகப் போகட்டும்..! அவன் கடைசி உணர்வாக இதை எடுத்துக் கொள்கின்றான்.

ஆகவே இதைப் போன்ற உணர்வு வரப்படும் பொழுது எந்த நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்களோ பிறருடைய வேதனைப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் மடிந்து விடுகின்றது.

பின் அவனைப் போல் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமக்குள் நோயாகும் நிலையும் தவறு செய்பவனாகவும் மாற்றிக் கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமல்லவா..!

இதை எல்லாம் மாற்றி அமைத்தவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வை எடுத்து நம் உடலிலே அடிக்கடி பெருக்குதல் வேண்டும்.

கடும நோயாக இருந்தாலும் இப்பொழுது பதிவு செய்த இந்த உணர்வின் வலு கொண்டு இந்தக் காற்றிலுள்ள நல்ல மணத்தை நுகரலாம்.

செடி கொடிகள் எந்த உணர்வின் சத்தைப் பெற்றதோ அந்த உணர்வின் துணை கொண்டு அந்தத் தாய்ச் செடியின் மணத்தைக் காற்றில் கலந்திருப்பதனால் அதிலே விளைந்த வித்து புவியின் துணை கொண்டு அது கவர்ந்து அதே உணர்வுகள் அதே மணம் அதே குணமாக வளர்க்கின்றது.

இதைப் போல…
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உடலிலே பல பச்சிலை மூலிகைகளை எடுத்து
2.அவன் உடலிலே விளைய வைத்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் படர்ந்துள்ளது
3.அதை எல்லோரும் பெற முடியும்… அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு உங்கள் நினைவைக் கூட்டினால் அகஸ்தியன் பல நோய்களைப் போக்கிய உணர்வை இந்தக் காற்றிலிருந்து நீங்களும் பெற முடியும்.
1.அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால்
2.அதிசயக்கத் தக்க நிலைகளில் உடல் உறுப்புகளை மாற்றமடையச் செய்யும்…
3.அறியாது வந்த நோய்களையும் மாற்றியமைக்கலாம்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் ஒளியின் சரீரமும் பெறலாம்.

அதே சமயத்தில் உடலில் சில உபாதைகள் இருக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ண முடியாது போய்விடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் வரும் பொழுது தீய அணுக்களைத் தான் நமக்குள் வளர்க்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட இப்பொழுது அந்த அகஸ்தியனின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… பயிற்சியும் கொடுக்கின்றோம்.

இங்கே சொல்லும் நிலைகளில் நீங்கள் பெற்றதை
1.ஞானகுரு நமக்குச் சொன்ன வழியில் நாம் இதைப் பெற்றோம்…
2.தீமைகளையும் நோய்களையும் நீக்கிடும் அந்த வலிமை பெற்றோம்…
3.அருளைப் பெற்றோம் இருளை நீக்க முடியும்…
4.பிறவியில்லா நிலையை அடைய முடியும்…! என்று உங்கள் ஊக்கமான உணர்வுகளை
5.உங்கள் நண்பர்களிடத்திலேயோ சொந்தபந்தங்களிடத்திலோ அவர்களுக்குள்ளும் பதிவு செய்யுங்கள்.
6.அந்த நினைவு அவர்களுக்கும் வரட்டும்… அவர்களும் அந்த உயர்ந்த நிலைகளை பெறட்டும்.

இதை எல்லாம் நீங்கள் பழக வேண்டும். ஏனென்றால் இன்று உலகம் முழுவதுமே விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த விஷத் தன்மைக்குள் மறைந்து தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இருக்கின்றது. அதைப் பிரித்து எடுப்பதற்குத்தான் உங்களுக்கு இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

எத்தனை விதமான உணர்வுகள் இருந்தாலும் ரோஜாப்பூ தன் நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றது. எத்தனை விதமாக இருந்தாலும் கருகப்பிள்ளைச் செடி தான் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப அது காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கருகப்பிள்ளைச் செடியாக மாறுகிறது.

இப்படி ஒவ்வொரு தாவர இனங்களும் அது அது தன் தன் சத்தைப் பெறுவது போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் அருள் உணர்வைப் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மையைத் தடுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்.

நீங்கள் இதைப் பழகிக் கொண்டால் உங்கள் ஆன்மாவில் இதைப் பெருக்கப்படும் பொழுது “ரிமோட்…!” உள்ளுக்குள் புகாதபடி செய்யும்.

ஈஸ்வரா…! என்று எண்ணினால் இதன் வழி உள்ளுக்குள் போகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வலுக் கொண்டதாக நிற்கும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். நமக்குள் நல்ல உணர்வை நாம் பெருக்க முடியும்.

கொஞ்ச நாள் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் பெறலாம். இந்த உடல் வாழ்க்கைக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடையலாம்.

இந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்களுக்கு உபதேசித்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உங்களுக்கு அனுபவரீதியில் கொண்டு வந்தது.

இதை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண்களை விழித்தவுடனே (குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) உங்கள் ஆன்மாவில் உள்ள நாற்றத்தை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே சேர்த்தால் உங்கள் ஆன்மா தூய்மையாகின்றது. நல்ல நறுமணங்களும் மகிழ்ச்சியும் வரும்.

இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்தப் “பச்சிலை மூலிகைகள்” அவனில் விளைந்து அந்த அருள் சக்தி படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்தியன் பெற்ற விஷத்தை நீக்கிய அந்தப் “பச்சிலைகளின் மணங்கள்” நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சிறிது நேரம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிருடன் ஒன்றி ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் பெற்ற அவன் அறிந்துணர்ந்த அந்தப் “பச்சிலை மணங்கள்” நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது…
1.அந்தப் பச்சிலையின் மணங்கள் வரும்…
2.உங்களால் நுகர முடியும்… நுகர முடிகிறது என்றால்
3.உங்கள் வாயிலே உமிழ் நீராக மாறும் பொழுது உணர முடியும்…!

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் நமக்கு முன் படர்ந்துள்ளது. அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்துள்ளோம். அதனின் நினைவு கொண்டு இதனைப் பிரித்து எடுங்கள்.

ரேடியோ டி.வி அலைகள் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ… அதைப் பிரித்து எடுக்கிறது. அதைப் போல் அகஸ்தியனின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ளது.

அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள். அவன் நுகர்ந்த பச்சிலையின் மணங்களை நுகர்ந்து எப்படி இருளை அகற்றினானோ அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்கு மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

1.அகஸ்தியன் கண்டுணர்ந்த பல பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள்… அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அகஸ்தியன் தனக்குள் இருளை அகற்றிடும் உணர்வை விளைய வைத்து… அவனின்று வெளிப்பட்ட அந்த உணர்வுகளையும்
3,நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
4.இப்பொழுது அந்தப் பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும்.
5.நுகர்ந்த அந்த மணங்கள் உங்களுக்குள் உமிழ் நீராக மாறும்… வாயிலே அந்தச் சுவைகளை உணரலாம்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு). எல்லோரும் பெற வேண்டும் என்று உங்களுக்குள் அந்த ஆசையைத் தூண்டுகின்றேன்.

நம் பூமியிலே எத்தனையோ வகையான மலர்கள் உண்டு. மனிதர்களின் பிணியைப் போக்கக்கூடிய மலர்களும்… மகிழ்ந்து வாழச் செய்யும் மலர்களும் உண்டு.

அதிலிருந்து வளர்ந்த உணர்வினை நறுமணங்களை சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. ஆகவே அந்த மலர்களின் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் ஈசனிடம் ஏங்கிக் கண்களை மூடித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு…
1.மல்லிகை மணமோ
2.மனோரஞ்சித மணமோ
3.ரோஜாவின் மணமோ
4.தாமரையின் மணமோ கிடைக்கும்.

மலரைப் போல் மணம் பெற வேண்டும்… அந்த மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கித் தியானியுங்கள். இப்பொழுது…
1.மருக்கொழுந்தின் வாசனையும் சந்தனத்தின் நறுமணமும் கிடைக்கும்.
2.அதே சமயத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகவும்
3.அந்தந்த மலரின் சத்தும் சுவையாகக் கிடைக்கும்.

இதை எல்லாம் இந்தக் காற்றிலிருப்பதை நாம் ஈர்க்கும் தன்மை அது கிடைக்கின்றது. இதை எல்லாம் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில்
1.அவ்வப்பொழுது நறுமணங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்தால்
2.அந்த நேரத்தில் எல்லாம் உடனே கிடைக்கும்.

சிலருக்குச் சங்கடமும் சலிப்பும் இருந்தால் அவர்களுக்கு இதைத் தடைப்படுத்தும். அதை எல்லாம் மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும் அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெற வேண்டும் அந்த மலர்களின் மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதனின் உணர்வை அடிக்கடி பெருக்கிப் பழக வேண்டும்.
1.காற்றில் இருப்பதை நாம் நுகர்ந்து
2.நம் உடலிலுள்ள இரத்த நாளங்களிலே கலந்து பழக வேண்டும்.

கனி வகைகளில் வெளிப்பட்ட மணங்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. கனியின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்குள்
1,மாம்பழங்களின் மணமும்
2.கொய்யாவின் மணமும்
3.பலாப்பழத்தின் மணமும் வந்து கொண்டே இருக்கும்.

இந்தக் காற்றிலே பலவிதமான கனிகளின் மணங்கள் படர்ந்துள்ளது. அந்தக் கனிகளின் மணங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இதன் மூலம் கனிகளின் மணங்களையும் நாம் நுகர முடியும்.

ஏனென்றால் இந்தக் கனி வர்க்கங்களையும் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்தவர்கள் தான் பல நிலைகளில். அதனால் வந்த அணுக்களும் நமக்குள் உண்டு.

அதனின் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது இப்பொழுது மனிதனாக ஆன பின் அந்த உணர்வை நுகர்ந்தறிய முடியும். இந்தப் பிறபஞ்சத்தின் உண்மையையும் உணர முடியும்.. அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அறிய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் காட்டினார். அதன் வழிகளிலேயே தான் உங்களுக்கும் பெறச் செய்கின்றோம்.

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”

 

நம் இந்திய நாட்டிலே அரசர்கள் ஆட்சி செய்யும் பொழுது எத்தனையோ போர் முறைகள் ஏற்பட்டது. அதிலே மதப் போர்களும் இனப் போர்களும் நடந்தது.
1.அதனால் எண்ணிலடங்காத கொலைகளும் தகாத செயல்களும் நடந்தது.
2.இது எல்லாமே அந்தந்த இடங்களிலே பதிவாகியுள்ளது
3.எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டது… எரிந்த உணர்வின் அலைகளும் ஆங்காங்கு பதிவாகி உள்ளது.

மெய் ஞானத்தால் அந்த அணுக்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் உயிரினங்களில் ஜீவணுக்களாக வளர்ந்து விடுகின்றது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரானிக் என்ற முறைப்படி (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) அந்த அலைகளைக் கவர முடியும்.
1.விஞ்ஞான அறிவால் அதை எல்லாம் அறிய முடிந்தாலும் அதனால் அவர்களுக்குப் பயனில்லை.
2.காரணம் அத்தகைய நிலை வருவதற்கு முன்னாடி… கண்டுபிடிக்கக் கூடியவர்கள் அழிந்து விடுவார்கள்.

விஞ்ஞான அறிவுகள் (எலக்ட்ரானிக்) அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது.

இதைப் போன்று தான்
1.நமது உயிரும் எலக்ட்ரானிக்காக இருந்து ஒவ்வொரு நிலைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.
2.கரண்டை உற்பத்தி செய்கிறது… எடுத்துக் கொண்ட உணர்வுகளை அலைகளாக இயக்குகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் காடு மேடேல்லாம் எம்மை அலைய வைத்தார்.

அக்காலங்களில் தவம் இருக்கச் சென்றவர்களும்
1.அகஸ்தியன் எவ்வாறு எல்லாம் தாவர இன மூலிகைகளைத் தனக்குள் நுகர்ந்தறிந்தான்…? என்ற நிலையும்
2.அதே வழியில் போகர் எவ்வாறு எடுத்தார்…? என்ற நிலைகளையும்
3.அவர்களைப் பின்பற்றிக் காட்டுப் பகுதியில் அரசர்கள் சென்ற நிலைகளையும்
4.அது எல்லாம் எப்படி ரெக்கார்டு (பதிவு) ஆகி இருக்கின்றது…? என்பதைக் காட்டுகின்றார்.
5.அந்த அலைகளை எடுத்துத்தான் எனக்கு அதையெல்லாம் குருநாதர் உணர்த்துகின்றார்.
5.அதை எல்லாம் தெரிந்து தான் உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் தெரிந்த மாதிரி நீங்களும் தெரிய வேண்டும் என்றால் சிறிது நாளாகும். ஆனால் தெரிய முடியும்…!
1.தெரிந்தாலும் நமது வாழ்க்கைக்கு இதை விலக்கி விட்டு
2.மெய் ஞானிகள் உணர்வைப் பெறுவதாகவும் அதை வளர்ப்பதாகவும் வர வேண்டும்.

தெரிந்து கொண்டேன் என்ற நிலையில் “ஆசை…” உடலின் இச்சைக்கு அதிகமாகி இதிலே சிக்கிவிட்டால் “நான் பெரிய மகான்…!” என்ற நிலையில் உடல் பற்றுக்கே அழைத்து விடும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை நீங்கள் பெற்று வளர்த்துக் கொண்டால் அங்கே செல்லலாம். காரணம் இதையெல்லாம் கண்டுபிடிக்கலாம் என்று வந்து விட்டால் இந்த உலக ஆசைகள் வளர்ந்து விடும்.

அன்றைக்கு காந்திஜி அவர் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும் போது “முதலில் அவரை உள்ளே விடமாட்டேன்…” என்கின்றார்கள்

இந்தியாவைப் பற்றிப் பேசப் போகும்போது “அரை வேஷ்டியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்…” என்று உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க முடியும்

ஆனால்… காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார் அப்பொழுது அங்கே அவர் பேசும் பொழுது அவருக்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.

இருந்தாலும் அவர்கள் ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்…? ஒரு டெலஸ்கோப்பைக் கையில் கொடுத்தார்கள்

இது எனக்குத் தெரியாது. ஆனால்… குருநாதர் இதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றார்.

மாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பிக் கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்துக் கடலுக்குள் பார்க்கிறார் காந்திஜி.

அப்பொழுது ஆழ் கடலில் உள்ளுக்குள் மீன்கள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. “ஆ…! அந்த மீன் போகிறது பார். ஆகா… இங்கே இந்த மீன் போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.

இப்படிச் சொன்னவுடனே காந்திஜி கூட வந்த தேசாய் காந்தி… அபுல்கலாம் ஆசாத்… இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே “எனக்குக் கொடு… உனக்குக் கொடு…” என்று வாங்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

கடலுக்குள் இருக்கும் அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் “வெடுக்…” என்று அதை வாங்குவது – தான் பார்ப்பது என்று… கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும் அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது

காந்திஜி ஒரு மகான்…! எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும்… அப்பொழுது அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.

அப்பொழுது அவர் என்ன செய்தார்…?

இப்படிப்பட்ட ஆசைகள் உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால்
1.நாம் மூன்று பேரும் நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.
2.”பகைமையாகி விலகி விடுவோம்…” என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
3.இது நமக்கு வேண்டாம்…! என்று இப்படிச் செய்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

காங்கிரஸில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால் குருநாதர் இதைக் காண்பிக்கின்றார். அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.

குருநாதர் இதைத் தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால்
1.இயற்கையின் பேருண்மை நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.
2.நான் உனக்குக் காண்பித்த நிலைகளை “மற்றவர்களுக்கும் நீ சொல்வாய்…”
3.எல்லோரும் “பார்க்க வேண்டும்…” என்று ஆசைப்படுவார்கள் என்று இதை எச்சரிக்கை செய்கிறார்

பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையில் “எல்லாம் தெரிய ஆரம்பித்தவுடன்…”
1.அவர்கள் அதிலேயே ஆசைப்பட்டு “இந்தப் பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும்…” என்று எண்ணுவார்கள்.
2.வந்தவர்கள் அனைவரும் இந்தப் புவியின் பற்றின் உணர்வைப் பெருக்கி விட்டார்கள் என்றால்
3.அப்புறம் – நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு அவர்கள் போக மாட்டார்கள்.

நான் அதைப் பார்த்தேன்…! இதைப் பார்த்தேன்…! என்ற இந்த உணர்வு ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.

ஆகவே அதை விடுத்து விட்டு…
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால்… உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்
1.இந்த உடல் பற்றை அகற்றி உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
2.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழ வேண்டும்
3.அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.

குருநாதர் இப்படித்தான் அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.

சிதம்பரத்தில் வைத்து… யாம் உபதேசித்ததன் நோக்கம்

 

1.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
2.எப்பொழுதுமே நம் நினைவைப் புருவ மத்திக்கே கொண்டு போய்ப் பழக வேண்டும்.

நம் உயிரே குருவாகவும் நாம் எண்ணியது ஈசனாகவும் அது உருவாக்கக்கூடிய நிலையை நாம் உணர முடியும். இந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “எதை எண்ணுகின்றோமோ…” உடலுக்குள் இந்த உணர்வுகள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.

சாதாரணமாக மூக்கின் வழி கூடித்தான் சுவாசிக்கின்றோம். கண்கள் பார்க்கின்றது… மற்ற உணர்வுகளை எடுக்கின்றோம் ஆன்மாவாக மாறுகின்றது. மூக்கு வழி கூடிச் சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளைப் பின்னாடி அறிகின்றோம்.

நாம் ஓம் ஈஸ்வரா என்று அடிக்கடி சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணிப் புருவ மத்தி வழி கூடி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் வழி கூடித் தான் நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி… மூக்கு வழி சுவாசிப்பதும் என்று அதை அறிந்து கொண்டாலும் கூட
1.தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
2.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.

நாம் எவ்வளவு நல்லதைப் பேசினாலும் கூட பிறிதொருவருடைய நிலைகள்… குடும்பக் கஷ்டமோ அல்லது நோயோ அதனுடன் கலந்த சொல்லாக வெளி வரும்.

அவரைக் கண்ணுற்றுப் பார்த்துக் கவரும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசிக்க நேரும். எனக்கு இந்த மாதிரிக் கஷ்டமாக இருக்கின்றது என்று சொல்லும் பொழுது இந்த உணர்வு கலந்து விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் வந்தாலும் கூட
1.ஈஸ்வரா…! என்று இடைமறித்து அதைப் பலவீனப்படுத்தி
2.மகரிஷியின் உணர்வுகளை உயிர் வழி கூடி எடுத்து வலுப்பெறும் போது அவரிடமிருந்து கேட்டறிந்த தீமையை மாற்றுகின்றது.

அவர் பலவீனமான நிலையில் வெளிப்படுத்தும் போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்… அவர் நலம் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுக்க வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் சமைத்து அதற்கப்புறம் அதை எடுத்துப் போட்டால் தான் ருசியாக இருக்கும்.

அதைப் போல மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்ற நாம் எண்ணினால் அதைத்தான் சமைத்து அதையே தான் அவர்களுக்கு மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம்.
1.ஆகவே இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2.அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதைக் கலந்து தான் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

தியானத்தில் 27 நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… நவக் கோள்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்று சொல்கின்றோம்.

ஏன்…?

அவைகளில் இருந்து விளைந்தது… அந்தச் சக்திகளை எல்லாம் நாம் பெற்றவர்கள்.

27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் எல்லாவற்றிலும் உண்டு. அதில் எந்த நட்சத்திரத்தினுடைய சக்தி கூட்டல் கழித்தல் என்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளைத் தூண்டுவதும்… எண்ணங்கள் இயக்குவதும் எல்லாமே அமைந்திருக்கின்றது.

1.எல்லாவற்றையும் நாம் ஐக்கியப்படுத்தி நமக்குள் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது பிரிவு இல்லை.
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

ஆக… நமது குருநாதர் காட்டிய வழியில் தியானத்தில் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

1.முதலில் அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
2.எல்லோருடைய எண்ணங்கள் நமக்குள் பிரதிபலித்து “ஒன்றாகிறது…”

அடுத்து… நவக்கோளின் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதனுடன் சப்தரிஷி மண்டலங்கள்… மனிதனான அந்த உணர்வுகளை இதனுடன் கலக்கின்றோம். பார்வையால் எடுக்கின்றோம்… எண்ணத்தால் எடுத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

நம் ஆன்மாவிலே அதைக் கலந்து கொண்டே வருகின்றோம். சப்தரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம். இது எல்லாமே கலக்கின்றது.

அவர்கள் உடலில் விளைந்ததும் கோள்தான்… அவர்கள் எண்ணமும் நட்சத்திரம்தான்.
1.முதலிலே… அவர்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெறும் தகுதி பெற்ற உணர்வுகள் உண்டு.
2.இதை எல்லாம் ஐக்கியப்படுத்தித் தான் அந்த உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்காக… 27 நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்வது.

குருநாதர் இதையெல்லாம் காண்பித்தார். அதைப் பதிவு செய்யும்போது அந்த எண்ணங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தியானிக்கும் போது இந்த எண்ண அலைகள் பரவும்.

அப்பொழுது ஐக்கிய உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

இதற்கு முன்பும் இதைப் பற்றிச் சொல்லி இருக்கின்றேன். ஆனால் அர்த்தங்கள் உங்களுக்குச் சரியாக ஆகியிருக்காது. இப்பொழுது அதை விளக்கிக் கொடுக்கின்றேன்.

27 நட்சத்திரத்தின் நிலைகள் அது எது எதில் கலந்திருக்கின்றதோ செடியில் கலந்தாலும் அந்தச் சக்தி கலக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்குத் தக்கவாறு தாவர இனத்தை உருவாக்குகின்றது.

பூமியில் செடி கொடிகள் இருந்த இடத்திலிருந்து எப்படி அதனுடைய சக்திகளைப் பெறுகின்றதோ இதே போன்று நாம் சுவாசித்து உடலில் உருபெற்ற அணுக்கள் அந்தந்த இடத்திலிருந்து விளைகின்றது.

உதாரணமாக மலைப் பகுதியில் விளையும் செடிகள் கீழே தரையில் விளைவது இல்லை. அதே போல் தரையில் விளைவதை மலையில் வைத்தால் அங்கே அது விளைவது இல்லை.

இதைப் போன்று தான் நம் உடலில் அந்தந்தக் காலப் பருவம் அதனுடைய நிலைகள் வரப்படும் பொழுது அணுக்கள் விளைகின்றது. அது அது அதற்குத் தக்கவாறு சுவாசத்தை எடுத்து வளர்கின்றது. இருந்த இடத்திலிருந்தே அது பெறுகிறது.
1.இத்தனைக்கும் சாப்பாடு கொடுப்பது நமது உயிர் தான்… உருவாக்குவதும் உயிர் தான்.
2.பிரபஞ்சத்தில் சூரியனும் இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு வித்தை உருவாக்குகின்றது.

விளைந்த பின் எதை எதை எடுத்து அது வித்தாக உருப்பெற்றதோ புவியின் ஈர்ப்பின் துணையை வைத்து அதற்குண்டான சத்தைக் கொடுத்து அதைச் செடியாக வளர்க்கின்றது. அது சந்தர்ப்பம்.

நாம் நல்ல குணங்களுடன் இருந்தாலும் பிறருடைய உணர்வுகளைக் கவர்ந்து அவர்களுக்கு உதவி செய்கின்றோம். அவர்கள் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு நம்முடைய எண்ணங்களுடன் கலந்து உயிரணுக்களாக மாறும் பொழுது புதுப் புது குணங்களாக உருவாகின்றது.

ஒருவரைப் பார்த்து… இவர் நேற்று நன்றாகப் பேசினார் இன்று மோசமாகப் பேசுகின்றார் என்போம். அதே போல்… நேற்று மோசமாக இருந்தார்… இன்று நன்றாகப் பேசுகிறார் என்று சொல்வோம்.

ஏனென்றால் அவர் அடிக்கடி யாரிடத்தில் அதிகமாகப் பழகுகின்றாரோ அந்த உணர்வின் இயக்கங்கள் அவருக்குள் வளர்ச்சி பெறுகின்றது. அத்தகைய அணுக்கள் வளரப்படும் போது அதற்குத் தக்கவாறு தான் அவருடைய மணங்கள் மாறிச் சொல்களும் வெளி வருகின்றது.

ஆரம்பத்தில் எல்லாவற்றையும் யாம் பொதுவாகச் சொல்லிக் கொண்டு வந்திருந்தாலும்
1.அதை எப்படி உங்களுக்குள் இணைத்துக் கொடுப்பது…? என்கிற வகையில் முதலிலே சொல்லவில்லை.
2.பொது இடத்திலே (PUBLIC) அதைப் பெற முடியாது… அப்படிக் கொடுக்க முடியாது.
3.குருநாதர் உடலில் விளைந்த அந்த அருள் உணர்வுகள் எனக்குள் இருக்கிறது.
4.அதைப் பெற்று விளைவித்து உங்களிடம் திரும்பச் சொல்லும் போது உங்களுக்குள் அதை இணைத்துக் கொண்டு வர முடிகிறது.
5.அதற்குத் தான் இங்கே சிதம்பரத்திற்கு உங்களை எல்லாம் வரச் சொல்லித் தெளிவாக்குகிறோம்.

அப்பொழுது… குருவால் பெற்ற உணர்வுகள் எனக்குள் விளைவதும்… அடுத்து அது உங்களுக்குள்ளும் விளையத் தொடங்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரோட்டிலே போகிறோம். நம் சந்தர்ப்பம் ஒரு தீமையான உணர்வை உற்றுப் பார்க்க நேர்கிறது…! என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன செய்ய வேண்டும்..?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அப்படிப் பாய்ச்சிய இரத்தம் நம் உடல் முழுவதும் படர்கின்றது. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று முன்னாடியே அந்த வலுவைப் பாய்ச்சி விடுகிறோம்.

அதாவது அந்த முகப்பில் இருக்கக்கூடிய காந்தப் புலன் எப்படி அந்தத் தீமை செய்பவரை உற்றுப் பார்த்து எண்ணினோமோ அவரால் வந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கிறது.

இதன் துணை கொண்டு…
1.அநதத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணப்படும் பொழுது
2.அந்த இரத்தத்தின் வழி எல்லா அணுக்களும் உள்ளுக்குள் அந்த அருள் உணர்வுகள் சாப்பாடாகக் கிடைக்கிறது.

அதாவது… இந்தக் காற்றிலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறதோ இதே மாதிரி நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அந்த இரத்தமாக மாறுவதிலிருந்து… இரத்தத்திலிருந்து தான் சாப்பாடு எடுத்துக் கொள்கிறது.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதே மாதிரி எடுத்து உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி முன்னக்கூடியே (முதலில்) செலுத்திவிட வேண்டும்.

முதலில் சிறிதளவு தான் நாம் பார்த்த அந்தத் தீமை போயிருக்கும்.

ஆனால் யாம் இப்பொழுது சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்த பின் அந்த் இரத்தம் இந்த மாதிரி எல்லா இடங்களுக்கும் போனவுடனே என்ன ஆகிறது…?
1.அந்தச் சிறிதளவு போன தீமையை இங்கேயே தடுத்து விடுகிறோம்…!
2.சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அதே சமயத்தில் நம் கண்ணில் இருக்கக்கூடிய கருவிழியில் இருக்கக்கூடிய அந்த கண்மணி… அந்த கண்ணின் மணியிலிருந்து தான் நாம் பார்க்கும் படங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறோம்.

அதிலே அந்தக் கண் மணிகளிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும். ஏனென்றால்…
1.அந்தக் கருமணி வழிக்கூடித் தான்…
2.கண்ணுடன் சேர்ந்த நரம்பு மண்டலம் வழியாக
3.உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் நாம் பார்த்த… கேட்ட.. நுகர்ந்த… உணர்வுகளைப் பரவச் செய்கிறது.

அந்தக் கண்ணை இணைத்த நரம்பு மண்டலம் வழி உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று செல்கிறது.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படர்கிறது. நல்ல உணர்வுகள் வலிமையாகின்றது. தீமைகள் சிறுத்துவிடுகிறது.

இந்த முறைப்படி எல்லோரும் இதை எடுத்து உடனுக்குடன் தூய்மைப்படுத்தலாம்… இதில் ஒன்றும் சிரமமில்லை…!

திட்டியவனைத் திரும்ப எண்ணுகிறோம்… அடுத்த கணம் அது நமக்குள் வராமல் இப்படித் தடுத்துக் கொள்கிறோம். இதை நீங்கள் செய்து பழக வேண்டும்.

எங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று நினைவைக் கொண்டு வர வேண்டும்.

1.ஆக… ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வினையாகிறது.
2.அந்தத் தீய வினைகள் நமக்குள் சேராதபடி இப்படித் தடுக்க வேண்டும்.
3.தீமைகளைத் தடுத்து அதை நிறுத்திப் பழக வேண்டும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி…!

ஆதிசங்கரர்

 

காசி கங்கைக் கரையின் எதிர்த் திசையில் இருக்கும் கரைக்கு குருநாதர் என்னைப் போகச் சொன்னார். அங்கிருக்கக்கூடிய அரண்மனைக்கு அருகில் தான் ஆதிசங்கரருக்கும் துவைதவாதிகளுக்கும் அத்வைதத்திற்கும் வாக்குவாதம் நடந்தது.

ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து வயிற்று வலியை வரவழைத்தார்கள். யாக வேள்விகளை எல்லாம் செய்தால்தான் இந்த வயிற்று வலி போகும்… நீ அதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

ஆதிசங்கரர் அதற்கு விளக்கம் கொடுத்து
1.மெய் ஞானிகள் காட்டிய உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் உயிரான நெருப்பிலே இட்டு இந்த உணர்வினைப் பரப்பி
2.நீ ஏவல் செய்ததை என்னால் சுட முடியும் என்று அதை எடுத்துச் சேர்த்துத் தன் வயிற்று வலியை நீக்குகின்றார்.

ஏவல் செய்ததை நீக்கிய பின்பு தான் இவரை இப்படியே விட்டு விட்டால் மீண்டும் நமக்குத் தொல்லைகள் வரும் என்று எண்ணி… ஆதிசங்கரரை ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விடுகிறோம் என்று படகிலே அழைத்துச் செல்லும் பொழுது கங்கையிலே கவிழ்த்து அவரை நீர் சமாதி வைத்து விடுகின்றார்கள்.

அதிலிருந்து ஆதிசங்கரருடைய (சரித்திரம்) உண்மை நிலைகள் தெரியாது. போனார்… வந்தார்… என்று இருக்கும். சங்கரர் உடலை விட்டு எப்படிப் பிரிந்தார்…? என்று இருக்காது.

இந்த உண்மையைச் சொல்லி அவர் எடுத்துக் கொண்ட ஆற்றலை எனக்கு உணர்த்துகிறார் குருநாதர்.

சாங்கிய சாஸ்திரத்திலே மூழ்கிய நிலைகள் கொண்டு துவைதத்தின் படி உருவத்தைக் காட்டிச் சாங்கியம் செய்து கடவுளிடம் வரம் கேட்பதும் அத்வைதப்படி உண்மையின் உணர்வின் சக்தியை நினைவில் கொண்டு கவர்ந்து தனக்குள் அந்த உணர்வின் தன்மை உறையச் செய்வதும் உணர்வின் நினைவாற்றல் நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்ற அந்த வாக்குவாதத்தன்மை அங்கே நடந்ததைக் குருநாதர் உணர்த்துகின்றார்.

அத்வைதம் துவைதம் என்று சொல்கிற பொழுது
1.சூட்சம நிலைகளில் நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை உடலாக்குகின்றது.
2.அந்த உணர்வின் அணுவாக இயக்கப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.தனக்குள் இந்த உணர்வின் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு இந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்று…!

ஆனால் ஆதிசங்கரருக்கு ஏன் கடைசியில் அந்தக் கதி…? என்று வரும் பொழுது
1.அவருக்கு உடல் பற்று இல்லை… விண்ணின் பற்றைத் தன் குருவான கோலமாமகரிஷியின் உணர்வுகளைப் பெற்றவர்.
2.அவரோ கோள்களின் தன்மைகளை அறிந்தவர்.
3.அதை உணர்ந்த நிலையில் தனக்குள் விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணியவர்.
4.இந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கியவர்.
5.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையை உணர்ந்தவர்.
6.விண்வெளியின் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைப் பற்றுடன் பற்றியவர் என்று
7.அந்த இடத்திலே வைத்து குருநாதர் எனக்கு இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றார்கள்.

கோலமாமகரிஷி… தான் வாழ்ந்த காலத்தில் அவர் பெற முடியாத இந்தச் சக்தியை ஆதிசங்கரர் உடலுக்குள் புகுந்து அத்வைதத்தின் தத்துவத்தைப் பரப்பியவர். அதன் வழி தனக்குள் விண்ண்ணின் ஆற்றலைப் பெருக்கியவர். அதன் துணை கொண்டு ஆதிசங்கரருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்தவர்.

ஆதிசங்கரர் என்ன செய்தார்…? கோலமாமகரிஷி என்ன செய்தார்…? என்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். இந்த உண்மைகளை எல்லாம் அங்கே குரு உணர்த்துகின்றார்.

அவர் உடலைப் பற்றவில்லை. அந்த அருள் ஞான உணர்வை எடுத்து ஏவலால் உண்டான வயிற்று வலியை நீக்குகின்றார். பின் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் செல்கிறார்.
1.அவர்கள் இருவருமே சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆதிசங்கரருடைய அருள் உணர்வுகளை நாமும் பெற முடியும்.
3.அவர் கண்ட மெய் ஒளியையும் நாம் பெற முடியும்.

தாய் வழியில் தான் அவருக்கு அந்தச் சக்தி கிடைத்தது. கங்கைக் கரையில் வைத்து குருநாதர் இதை எல்லாம் எனக்கு உணர்த்துகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோடிப் பணம் இருந்தாலும் கோடி… கோடி… செல்வங்கள் இருந்தாலும்…
1.நமது வாழ்க்கையில் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்
2.கடும் நோய்களாக நமக்குள் உருவாகிவிட்டால் இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை.

கோடிக்கணக்கில் செலவழித்து பங்களாவை அமைத்தாலும் இந்த உயிர் இந்த உடலை விட்டுச் சென்றபின் இந்த உடலிலே எதைச் சேர்த்துக் கொண்டதோ அதன் நிலை கொண்டு அடுத்த உடலுக்குள் தான் செல்கின்றது.
1.ஆக இந்தச் சொத்து எதுவும் நமக்குப் பயன்படுவதில்லை.
2.நமது பிள்ளைகளும் அதை பெறப் போவதில்லை.

அதற்காக இந்த சொத்திற்கும் மற்றவற்றிற்கும் போர்முறைகள் வைத்து வேதனை வெறுப்பு இதைப் போன்ற நிலைகள் நம் உடலில் உருவாக்காதபடி அதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்குப் பெரும் சொத்து… அழியாச் சொத்து… என்றும் நிலையான சொத்து எது…?

நாம் காலை துருவ தியானத்தில் எடுக்கும் (துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும்) பேரின்பப் பெருவாழ்வு என்று சொத்தும்… பிறவியில்லா நிலைகள் அடையும் சொத்துமே ஆகும். மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை பிறவியில்லா நிலை தான்.

1.பிறவியில்லா நிலைகள் அடைந்து…
2.அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

ஆறாவது அறிவு ஏழாவது நிலையாகத் தனக்குள் சிருஷ்டிக்கும் உணர்வின் வளர்ச்சியின் பாதையில் சென்று நாம் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே “கடைசி நிலை…”

நமது சூரியக் குடும்பத்தில் நம் சூரியன் செயலிழக்கும் தருணம் வந்து விட்டது. அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் கோள்களும் மறைந்துவிடும்.

ஏனென்றால்… சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் சூரியனைப் போன்றே அது ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் சென்று கொண்டிருக்கின்றது.

கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் இப்படிச் சில சில நட்சத்திரங்கள் சூரியக் குடும்பம் போல மாறுவதனால் நமது சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றன.

இப்பொழுது, நமது வாழ்க்கையில் நமக்குக் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்கள் ஒரு தனிக் குடும்பமாகப் பிரிந்து செல்கின்றனர்,

அவர்கள் பிரிந்து செல்லப்படும்பொழுது நாம் பலவீனமடைகின்றோம். நாம் பலவீனமடையும் பொழுது நம் குழந்தைகளிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்க முடிவதில்லை.

இதைப் போன்று தான் இந்தச் சூரியன் அழியலாம். ஆனால்
1.இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர் (நாம்)
2.அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த வழியில் நாம் செல்வோம் என்றால் “என்றும் வேகா நிலை…”

இப்பொழுது நெருப்பில் இட்டால் நமது உயிர் வேகுவது இல்லை. நமது உணர்வின் அணுக்கள் வெந்து விடுகின்றது. ஆகவே
1.வேகா நிலை என்ற நிலையை நாம் உருவாக்கி
2.அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலையை நாம் பெறுதல் வேண்டும்.

இது தான் பிறவியில்லா நிலை.

இந்த உடலில் இப்பொழுது நாம் இதை உருவாக்கத் தவறினால் “அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுதோ…?” என்று நமக்குத் தெரியாது.

புழுவாக பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய உயிரை, உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்டபின்… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் சென்றோமென்றால்… அதன் எல்லையில் நாம் என்றும் நிலையாக வாழலாம்… பிறவில்லா நிலைகள் அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்…
1.எதனின் சேர்க்கையில் இன்று இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் அகண்ட அண்டத்தில் நாம் சுழன்று சென்று,
3.வரும் உணர்வுகளை உணவாக மாற்றி ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

அகண்ட அண்டத்தில் “என்றும் பதினாறு…” என்று சிறிதாகவே நாம் இருப்போம். என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ச்சியின் பருவத்திலே பல கோடி ஆண்டுகள் வாழும் நிலைகள் வருகின்றது.

இந்த அண்டமே ஒளியின் சரீரமாக முழுமையாக அடைய… அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றது.

அகண்ட அண்டத்தில் எத்தனையோ கோடி சூரியன்கள் உண்டு… எத்தனையோ கோடி கோள்கள் உண்டு…! இப்படி எண்ணிலடங்காத நிலைகள் இருக்கும் பொழுது அதன் உணர்வுகளை நாம் நுகர்ந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.

மாறிய நிலைகளில்… நமக்குள் உருவாகும் அந்த உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது
1.அதைப் பல சூரியன்கள் எத்தனையோ கவர்கின்றன
2.அந்தச் சூரியக் குடும்பங்களை உருவாக்கும் மனித இனங்கள் உண்டு.
3.அவைகளுக்கு நம் உணர்வுகள் பயன்படும்… அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.
4.நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்.

ஒன்றுக்குள் ஒன்று சென்றிடும் நிலையாக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் சென்ற பின்… நமக்குள் தீமையை வென்றிடும் அருள் சக்தியான கடவுளாக நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

நாம் எண்ணியதை… அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நமது உயிர் அமைகின்றது.
1.நமது உயிர் அப்படி அமைவது போல
2.நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழிகளிலே என்றும் ஒளியின் சரீரமாக
3.நமக்குள் உருவாக்கும் கடவுளாக ஈசனாக உருபெறச் செய்கின்றது.

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்

 

1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் “தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது…”
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும்…! என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.

அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் “அந்த வலிமையான உடலுக்குள் சென்று… பரிணாம வளர்ச்சி அடைகின்றது…”

ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்…
1.தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி…
2.அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது… உணர்வின் சத்தைத் தனக்குள் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது.

அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!

1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும்…? இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…!
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நாம் எண்ணியதை உயிர் அணுக்களாக மாற்றும் பொழுது
1.அதைக் காக்கும் காவல்காரனாக இருப்பதும் உயிரே…
2.அந்த உணர்வுக்கு உணவு கொடுப்பதும் உயிரே…
3.அந்த உணர்வை இயக்கிக் கொண்டிருப்பதும் உயிர்தான்…!

ஆறாவது அறிவு கொண்டவர்கள் நாம் இதைத் தெரிந்து கொள்கின்றோம். அந்த மெய்ஞானிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது அதையும் காப்பது ஆண்டவனாக இருப்பதும் உயிர் தான்.

ஆகவே…
1.எண்ணியதை இறையாக்கி இறைவனாக இருப்பதும் உயிரே.
2.இறையின் உணர்வே செயலாக்கும் பொழுது தெய்வமாக ஆக்கிக் கொண்டிருப்பதும் உயிரே.
3.ஆண்டவனாக இருப்பதும்… ஈசனாக இருப்பதும் உயிரே.

இதனால் தான்
1.முதலிலேயே… உயிரே கடவுள் என்பதைச் சுருக்கமாகக் காட்டி உணர்வின் செயலாக்கங்களை
2.உயிரே கடவுள்…! என்ற நிலைகளைக் குருநாதர் எம்மிடம் சொல்லி வந்தது.

உயிர் கடவுளாக இருக்கின்றான்… ஆண்டவனாக இருக்கின்றான்… எண்ணியதை இறையாக்குகின்றான்… இறையின் உணர்வைச் செயலாக்கும் பொழுது தெய்வமாக இருக்கின்றான்.

உறையும் உணர்வின் தன்மையைச் சிவமாக உடலாக்குகின்றான். எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை வினையாக்கி
1.வினைக்கு நாயகனாக இயக்கிக் கொண்டிருக்கின்றான்… அது தான் விநாயகா…!
2.இவ்வளவு பெரிய பேருண்மையை நமது குருநாதர் அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வை நேரடி அனுபவத்தில் எனக்குக் கொடுத்துக் காட்டினார்.

ஆனால் இதை எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன்… அதைப் பெற்றேன்.

நம் குருநாதர் அவர் உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரம் பெற்றார். இருந்தாலும் அவர் உடலில் விளைந்த உணர்வலைகள் எப்படி இருக்கின்றது…? அவர் எதை எதை எல்லாம் தன் உடலில் விளைவித்தாரோ இந்த உணர்வலைகள் அனைத்துமே இங்கே உண்டு.

ஏனென்றால்… சில பேருக்குக் காட்சிகள் கிடைத்த உடனே “குருநாதர் எனக்கு வந்து சொல்கின்றார்…” என்று சொல்வார்கள். உனக்கு இதையெல்லாம் செய்கின்றேன்… எனக்கு இதைக் கொடு…! என்று சிலர் கேட்கின்றார்கள்.

அந்த ஆசையால் நுகர முடிகிறது. அவர் உருவத்தைக் காண முடிகிறது. அவர் பைத்தியக்காரராக எப்படிச் செயல்பட்டாரோ இந்த உணர்வுகளை எல்லாம் அது இயக்கும். அதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்று சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்.
1.அதாவது… உடலிலே உணர்வை ஒளியாக மாற்றி உணர்வின் அறிவாக மாற்றிய அலைகளும் உண்டு.
2.நாம் இதைத் தான் பிரித்து எடுக்க வேண்டும்…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நம்மிடம் ஒருவர் சண்டையிடுகிறார்… திட்டுகிறார்..! என்றால் அதற்குப் பின் நாம் தியானத்தில் அமர்ந்தால் “அந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்…!” அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அதைச் சுவாசியுங்கள்.

இந்த உணர்வுகளைச் சுவாசித்துக் கண்களை மூடுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வுகள் உந்தப்பட்டு நாம் தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிடுங்கள்.

அப்பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும். அதாவது எப்படிச் செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு இவ்வாறு சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாற்றவில்லை என்றால்..
1.அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து..
2.அந்த அணுக்கள் – சண்டையிட்ட அவர் திட்டிய அந்த உணர்ச்சியை உந்தித் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் நீங்கள் தியானத்தில் அமர்ந்தாலே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்… இப்படிச் செய்தார்கள்…! என்ற எண்ணங்கள் அதிகமாகி குறையாகப் பேசிய அணுக்கள் அதிகமாகி நம் நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.

1.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம்… மன நோய்… போன்ற நிலைகள் எல்லாம் வரும்.
2.பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
3.ஆக நமக்குள் மனிதன் என்ற ஆறாவது அறிவின் நிலைக்கே எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போவோம்.

இதை எல்லாம் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நம் வாழ்க்கையே இப்படித் தியானமாக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதலில் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பழகிய பின் அடுத்து மணிக்கணக்கில் உட்கார்ந்து தியானத்தில் நான் சக்தி பெறுவேன் என்றால் அடுத்த கணம் நாம் வாழ்க்கையில் செல்லும் பொழுது முதலில் சொன்ன மாதிரி வரும்.

ஏனென்றால் இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையோ பிறர்படும் கஷ்டங்களையோ இப்படி எத்தனையோ நாம் கேட்கிறோம். காணாததற்கு பத்திரிக்கையும் டி.வி.யும் பார்க்கின்றோம்.

அதைப் பார்க்கும் பொழுது அரசியலில் பற்று இருந்தால் இப்படிச் செய்கிறார்கள்..! என்று வெறுப்படைவோம்.

இதை எல்லாம் பேசிக் கலந்து உரையாடினாலும் அடுத்த கணம் இந்த உணர்வுகள் மாறாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நாம் எதைக் கேட்டோமோ அதெல்லாம் நலம் பெற வேண்டும்…
2.நாடு நலம் பெற வேண்டும்…
3.அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…
4.தெளிந்த மனம் பெற வேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் இப்படி வந்தாலும் நமக்குள் அது வளராது மாற்றியமைத்து இப்படி நல்ல அணுக்களை நாம் பெருக்கலாம்.

அந்த அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் பொழுது இது சிறுத்து விடுகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகி விடுகிறது…! அப்பொழுது அது நமக்குள் அடங்கி வந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் வந்துவிடும். ஒரு விபத்து நடந்து விட்டது…! என்று ஓடி வந்து ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆ…! என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.

1.இந்த உணர்வுகள் நமக்குள் பட்ட பின்
2.அவர் எந்த வகையில் விபத்தில் சிக்கினார்…! என்று சொன்னாரோ அதே உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டு
3.நாம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தால் ஓரத்தில் போகவிடாமல்
4.நம்மை அறியாமலே நடு ரோட்டுக்கு அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலே இவ்வாறு அழைத்துச் செல்லும். ஆகவே இந்த மாதிரி “விபத்து மற்ற அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட்டால்…” அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தை எண்ணி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்,

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் அது பெற வேண்டும் என்ற எண்ணங்களை நாம் நமக்குள் அதை உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அதை எல்லாம் நாம் நல்ல குணங்களுடன் பார்க்கும் பொழுது… பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் ஆகி… எப்படி வாழ்வது…? என்ற நம் நிலையாகிப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு அதன் ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் நாம் பற்றற்றதாக மாற்றுகின்றோம். இது ஒரு பழக்கத்திற்கு வந்து… அந்த அணுக்கள் நமக்குள் பெருகி விட்டது என்றால் நம்மை அறியாமலே அந்த நல்ல சொல்கள் வந்துவிடும்.

ஒரு பாடலைப் பாடுகிறோம் என்றால் அது பதிவாகி விட்டது என்றால் அந்தப் பாடல் சீராக வரிசையாக வரும்.

ஆனால் பாடல் முழுவதுமாகப் பாடுகின்றார்கள் என்றாலும் இடைமறித்து ஒரு வரியை மட்டும் தனித்துச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவுக்கு வராது. மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டே வர வேண்டும்.
1.அந்த வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது நமக்குள் அதனின் தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கி விட்டால் நமக்கு அந்த நினைவு வராது.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அதன் அடுத்தடுத்து அடுக்குகளில் வருகின்றது.

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்… தீமைகள் புகாதபடி விழித்திருந்து பழக வேண்டும்…! என்று சொல்வது.

சிவன் இராத்திரி அன்று விழித்திரு…! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்தே இது தான்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

 

உங்கள் எல்லோருக்கும் சக்தி கொடுத்திருக்கின்றேன். ஓரளவுக்கு அதை எல்லாம் செய்து வந்தாலும்… வீட்டிலேயோ நண்பர்கள் மத்தியிலோ தொழில் செய்யும் இடத்திலோ சிறிதளவு சோர்வு வந்தால் இதை விட்டு விடுகின்றீர்கள்.

அப்புறம் என்ன செய்கின்றீர்கள்…?

1.சோர்வான அணுக்களாக விளைந்த பின் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு ஆன்மாவிலே அதிகமான பின்
2.மகரிஷிகள் அருள் சக்திகளை எடுப்பதை இது தடைப்படுத்துகின்றது.

அதனால்தான் அடிக்கடி ஆத்ம சக்தி செய்ய வேண்டும் என்று சொல்லித் துரிதமாக உங்களுக்கு அதற்குப் பயிற்சி கொடுப்பது.

1.வாழ்க்கையில் எது வந்தாலும் அல்லது எதைக் கேட்டாலும்
2.ஒரு நிமிடம் ஆத்ம சுத்தி செய்வதற்குண்டான நேரத்தை ஒதுக்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

கையிலே மண்ணை எடுத்து வேலை செய்கின்றோம். ஆனால் அடுத்து உணவு உட்கொள்ளச் செல்கிறோம் என்றால் கை கழுவாமல் செல்வோமா…?

அல்லது கையிலே அழுக்குப் பட்டு விட்டது. ஒரு நோட்டில் எழுத வேண்டி இருக்கின்றது என்றால் கையைக் கழுவாமல் நோட்டில் எழுதுவோமா…? தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தினாலும் கையைத் துணியில் துடைத்து விட்டுத் தானே எழுதுகின்றோம். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஆகிறதல்லவா…!

அந்த மாதிரி… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெற்ற பின் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய நிலைகளைப் பார்த்தாலும் கூட… கேட்டு நுகர்ந்தாலும் கூட
1.அதற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து
2.அந்தத் தீமையின் உணர்வுகளை அடக்கும் உணர்வோடு நமக்குள் கலக்க வேண்டும். கலந்தால் தான் அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்… எப்படித்தான் இருந்தாலும் வாழ்க்கையில் பிறிதொரு தீமையை நீங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா.

நானே இருக்கின்றேன்… எல்லோருக்கும் நல்லதைச் செய்கிறேன். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் எனக்கு உடல் முடியவில்லை என்றால் “சாமிக்கு என்ன ஆனது…?” என்று தான் மிகவும் ஆர்வமாகக் கேட்பீர்கள்.

எனக்குள் விளைந்தது பல நிலைகள் அந்த வேதனை. என் மீது உள்ள பாசத்தில் எடுக்கப்படும் பொழுது வேதனையைத்தான் நுகர்வீர்கள். வேதனை நீங்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

சாமி சொன்ன வாக்கு உங்களுக்கு நல்லதாகின்றது ஆனால் சாமிக்குள் பல நிலைகள் சந்தர்ப்பத்திலே அது முந்தைய நிலைகள் விளைந்து வந்தாலும் இந்த உடலின் கடைசி முடிவு அது தான்.
1.அந்தக் கடைசி முடிவு வரப்படும் பொழுது பாசத்தால் வேதனையை நுகர்ந்து விடக்கூடாது.
2.நுகர்ந்தால் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து…
3.சாமிக்கும் அந்த மகரிஷியின் அருள் உணர்வு வளர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார். நாம் எப்படி அவருக்குச் சொல்வது…? என்று எண்ணக்கூடாது.

தபோவனத்தில் இப்பொழுது தைலம் காய்ச்சிக் கொடுக்கின்றோம். ஆரம்பத்தில் எல்லாம் நான் என்ன செய்வேன்…?

உடலில் குறைபாடுகளைச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தால்… அந்தத் தைல பாட்டிலை அவருக்குக் கொடுப்பேன். அதற்குள் குருநாதர் இருப்பார்.

பாட்டிலில் யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்பேன். குருநாதர் இருக்கின்றார் என்பார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்…? காளி வந்திருக்கின்றார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்கள்…? முருகன் வந்திருக்கின்றார்.

1.போ…! உன்னிடம் இருக்கும் கெட்டது எல்லாம் காளி மாய்த்து விடும்
2.குரு அருளால் எல்லாம் நல்லதாகிவிடும் என்று சொல்லிக் கொடுப்பேன்.
3.முந்தி அனைவருக்கும் இப்படித்தான் கொடுத்தேன். வாங்கிச் செல்வார்கள் எல்லாம் நன்றாகிவிடும்.

வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கோ இரத்தக் கட்டுகளுக்கோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் இதைக் கொடுத்து யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்று காண்பிப்பேன். பாட்டிலில் எல்லாமே தெரியும்.

இப்பொழுதும் அப்படிக் காண்பிக்க முடியும். ஆனால் அந்த ஆசையைத் தூண்டி விட்டால் எல்லாம் போய்விடும். உங்கள் எண்ணம் எல்லாம் “உடல் பற்றுக்கு வந்துவிடும்…”

ஆகையினால் இப்பொழுது அதை எல்லாம் சுத்தமாக நிறுத்தி விட்டேன்.

1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
3.இந்த உணர்வை மட்டும் எடுத்து நீங்கள் ஆத்ம சக்தி செய்து கொண்டே வந்தால் போதுமானது. எல்லாம் நன்றாகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது (ரோட்டின் ஓரமாக) வயல்களிலே ஒரு வயரை இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்குண்டான ஆயுதங்களையும் இயந்திரங்களையும் வைத்து மண்ணைத் தோண்டி உள்ளே அதைப் பதிக்கிறார்கள்.

சில இடங்களில் கடும்பாறைகள் வந்துவிடுகிறது.
1.பாறையாக இருக்கிறது என்று விட்டு விடுகிறார்களா…?
2.விடுவதில்லை… அதை வெடிக்க வைத்து எடுக்கின்றார்கள்.

அதே மாதிரி புதிதாக ஒரு ரோடு போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு இடத்தில்
1.சதுப்பு நிலமாக இருக்கின்றது. அதை அப்படியே விட்டு விடுகிறார்களா…?
2.இல்லை… அதற்கு வேண்டிய கருங்கல்களைப் போட்டு அந்தச் சதுப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு ரோடு போடுகிறார்கள்.

இதைப் போலத்தான் நமக்குள் எத்தனையோ “மேடு பள்ளங்கள்” உண்டு.

காடுகளில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு ஒன்றை ஒன்று கொன்று புசிக்கின்றதோ அதைப் போல இத்தனை மிருகங்களாக இருந்து வந்தவர்கள்தான் நாம்.

ஒன்றை ஒன்று கொன்று புசித்து அதனின் நிலைகளில் வலு கொண்டு நாம் மனிதனாக இன்று வந்துள்ளோம். அதே மாதிரி நாம் பல கோடித் தாவர இனச் சத்தை உணவாக உட்கொண்டுள்ளோம்.

அந்தத் தாவர இனச் சத்துக்கள் அனைத்தும் நமக்குள் பெரும் காடாக இருக்கிறது. அதிலே…
1.புலியும் யானையும் பாம்பும் பூனையும் இருக்கிறது என்ற நிலையில்
2.அந்தக் குணங்கள் நமக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவை அனைத்தும் நமக்குள் நின்றே தீமைகளை விளைவிக்கிறது. இதெல்லாம் கடும் சாபங்கள். இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.

நரி தன் இரையைப் பிடிக்க வேண்டும் என்றால் தந்திரமாக வேலை செய்யும். அதாவது
1.தன் வாலை உள்ளே விட்டுவிடும்.
2.வங்கிற்குள் உள்ள நண்டு அதைக் கடித்தவுடன் வெளியே எடுத்துப் போட்டு நரி அதைச் சாப்பிடும்.

அதே மாதிரி, நாம் எங்கிருந்தாலும் சாப அலைகள் நம்மை அறியாதபடி அந்தப் பழி தீர்க்கும் உணர்வாக இயங்கிக் கொண்டிருக்கும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

1.நான் தியானத்திற்கு வந்தேன்…. இதெல்லாம் செய்தேன்
2.ஆனால் எனக்கு இப்படியெல்லாம் ஆகிறதே… போகிறதே…! என்று விட்டு விட்டீர்கள் என்றால் அது வலு கொண்டுவிடும்.

சாப அலையின் வலு கூடிவிட்டால் ஆத்ம சுத்தியைச் செய்யவிடாத நிலைகள் ஆகிவிடும். அப்படி ஆத்ம சுத்தி உங்களால் செய்ய முடியவில்லை என்றால்
1.நீங்கள் கண்டிப்பான முறையில் கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
2.தியானம் செய்கின்ற நண்பர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் இதைச் சொல்லி
3.எங்களை அறியாது இயக்கும் சாப அலைகள் நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

உங்கள் உடலில் பதிந்த அந்த சாப அலைகளின் உணர்வுகள் வீட்டிலும் பதிந்திருக்கும். தியானமிருக்கும் நண்பர்களை வீட்டுக்குக் கூட்டி வந்து கூட்டுத் தியானமிருக்கச் செய்யுங்கள்.

இந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும். இந்த வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். இங்கிருக்கும் சாப அலைகள் அனைத்தும் அகல வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும் என்று நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

உதாரணமாக ஒரு கல்லை நாம் தூக்க முடியவில்லை என்றால் பலரும் சேர்ந்து அதைத் தூக்குகிறோம்.

அதைப் போன்று உங்களால் அந்தத் தீமைகளைத் தாங்க முடியாத நிலைகள் இருப்பினும்
1.கூட்டமைப்பை உருவாக்கிக் கூட்டுத் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி
2.உங்கள் வாழ்க்கையில் இடர்படும் எத்தகைய தீமைகளையும் அகற்றிக் கொள்ளுங்கள்.

இங்கிருந்து எங்கேயோ போய் யாகத்தைச் செய்வதற்கும் மந்திரத்தைச் செய்வதற்கும், எந்திரம் செய்வதற்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கிறீர்கள் அல்லவா.

இங்கே தியான வழியில் உள்ள உங்கள் நண்பர்களைக் கூட்டி
1.எங்கள் குடும்பத்தில் உள்ள சிரமங்கள் நீங்க வேண்டும்,
2.எங்கள் தொழில்கள் சிறக்க வேண்டும்
3.எங்கள் அறியாது சேரும் இருள்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் சாப அலைகள் நீங்க வேண்டும்
5.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
6.எங்கள் குடும்பத்தில் ஒன்று சேர்ந்து நாங்கள் வாழ வேண்டும்
7.கணவன் மனைவி ஒற்றுமையுடன் நாங்கள் வாழ வேண்டும்
8.அதற்காக எங்கள் வீட்டிற்கு வந்து தியானமிருங்கள் என்று அழைக்க வேண்டும்.

இத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்க வேண்டும். இந்தச் சக்திகள் உங்களுக்குள் விளையும். உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நீங்கள் விடும் மூச்சலைகளும் உங்கள் குடும்பத்தில் நன்மை செய்விக்கும் சக்தியாகப் பெருகுகிறது.

ஆகவே… சாப அலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட “கூட்டுத் தியானம் செய்யுங்கள்…” தீமைகளை அகற்றும் அருள் சக்தியைப் பெறுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து வாழுங்கள்.

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

 

எனக்குக் காட்சி கொடுத்தார்… வந்தார்… நல்லதானது…! என்று சொல்வார்கள். காட்சி கொடுத்தார் நல்லதாகும் என்ற நிலை அது சில நாளைக்குத் தான் இருக்கும். மீண்டும் காட்சி கொடுத்தார் என்று நிறையப் பேர் சொல்லலாம்.

நானும் ஆரம்பத்தில் இவ்வாறு தான் நிறையக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
1.இவைகள் எல்லாம் கூடாது…! என்று நிறுத்தி விட்டேன்
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர இந்த உடலில் விளைந்த உணர்வை நீங்கள் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நமது குருநாதர் காட்டிய வழிகளை எடுத்து இங்கே வளர வேண்டுமே தவிர இந்த உடல் என்றுமே மடிவது என்று அறிதல் வேண்டும்.

இந்த உடலில்… மெய் ஞானியின் உணர்வைப் பெற்றதை வலுப்படுத்தி அதை எடுக்கத் தொடர வேண்டுமே தவிர… “இவர் தான்…” என்ற நிலைகளுக்கு இந்த உடலின் உணர்வை எடுக்கக் கூடாது. இந்த உடலில் வரக்கூடியது அனைத்துமே வரும்… புவியின் ஆசைதான் வரும்.

உருவங்களைக் காட்சியாகக் கொடுத்தாலும்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்
2.அந்த ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்று அந்த மெய் ஒளியுடன் இணைத்து அந்த வலுவைப் பெற வேண்டுமே தவிர
3.சாமி வந்தார்… எனக்குக் காட்சி கொடுத்தார்…!
4.எனக்கு உடல் நலமானது… அது நல்லதானது… இது நல்லதானது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாகக் கண்டிப்பது. அந்த நிலையில் இருந்து நாம் மாறுபட வேண்டும். அந்த மெய் ஒளியை நாம் பெற வேண்டும். நம்முடைய பார்வையால் மற்றவர்கள் தீமைகள் நீங்க வேண்டும்.

சாமி செய்தார்…! என்பதற்குப் பதில்
1.சாமி பார்வை பிறருக்குப் பட்டு மற்றவருடைய தீமைகள் எப்படி அகன்றதோ…?
2.அதே உணர்வு உங்களால்… நீங்கள் அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக பெற வேண்டும்.
3.அதைப் பெற்றால் தான் சாமி சக்தி பெற்றதாக அர்த்தம்…!
4.இல்லை என்றால் அதில் அர்த்தமே இல்லை. அந்த வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

ஏனென்றால் அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமைகளை அது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் அவருக்குள் நுழையப்படும் பொழுது அவருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நமது வாழ்க்கையில் பிறர்படும் துயரத்தைக் கேட்கும் பொழுது நமக்குள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதைத்தான் நாம் உருவாக்குகின்றோம்.

ஆனால் எதை உருவாக்க வேண்டும்…?

பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகள்… நாம் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வுகள் நம் பார்வையால் அங்கே வித்தாகப் பதிய வேண்டும்.

யாராவது தீமைகளைச் செய்தார்கள் என்றால் அதை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே… ஈஸ்வரா என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.
1.என் பார்வை அவரைத் தீமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.
2.அவர்களும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் படைத்து அங்கே அனுப்ப வேண்டும்.
3.நமக்குள் அது வராதபடி அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்தந்த நிமிடத்தில் எந்தத் தீமை வந்தாலும் அது வேலை செய்யாது. இந்த உணர்வை நம் பார்வையால் அங்கே செலுத்தும் பொழுது
1.நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

இந்த இரு நிலையும் வேண்டும்.

துப்பாக்கியை எடுத்து அதிலே மருந்தினைக் கெட்டிக்கப்படும் பொழுது எங்கேயாவது உராய்ந்து விட்டால் வெடித்து விடும். அப்போது யார் அதைச் செய்கின்றாரோ அவரை அல்லவா அது காலி செய்து விடும்.

அப்பொழுது அதைப் பாதுகாப்பாகச் செயல்படுத்திக் குறி வைத்துத் தாக்கும் போது அங்கே வெடிக்கும் நிலை கொண்டாருகின்றார்கள்.

அதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.நம்முடைய எண்ணப் பார்வையில் அவருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்.
2.அவர்களைக் காக்கும் உணர்வு தான் நமக்குள் விளைய வேண்டும்.

நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் விளைந்தால் அவர்களைக் காக்கும் உணர்வு நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வு நமக்குள் வளரும்.

ஒவ்வொரு நொடியிலும் இதை நாம் செய்தாக வேண்டும்…!

கடலில் போகிறோம் என்றால் எத்தனையோ அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. நாம் எந்தத் தீவுக்குப் போக வேண்டுமா அதை எல்லையாக வைக்கின்றோம்.

இடைப்பட்ட அலைகள் அனைத்தையும் விலக்குகின்றோம். பெரிய அலை சிறிய அலை இதையெல்லாம் விலக்கிச் சென்று தான் அந்த எல்லையை அடைகின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நமது எல்லை எது…?

1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான எல்லை தான்… முடிவான நிலைகள் பேரானந்தப் பெரு நிலையான எல்லை.
2.அதை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையிலே பாச அலை வருகின்றது… வெறுப்பு அலை வந்து மோதுகிறது… கோப அலைகள் வருகிறது… பகைமை அலைகள் வந்து தாக்குகிறது. இப்படி எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது.

இந்த மோதலில் பாசத்தினால் நாளைக்கு என் பையன் என்ன செய்யப் போகிறான்…? என்ற இந்த உணர்வு வந்தால் இந்த அலையிலேயே மூழ்கி விடுகின்றோம்.

பையனின் நினைவாற்றலே வருகின்றது. அவனுக்குள் சென்று விடுகின்றோம்.

ஒருவன் மீது வெறுப்படைந்து… எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்… அவனை அப்படியே விடலாமா…? என்று எண்ணினால் நாம் போக வேண்டிய எல்லையை மறந்து விடுகின்றோம்.

இப்படியே இடைஞ்சல் செய்கின்றான் என்று அவனுடைய எண்ணத்திலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
1.அவனைத் திருத்தும் நிலைகளுக்கு நாம் அங்கே சென்றுவிட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்
2.அவனுடைய உணர்வு வளர்ந்த பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்கிறோம்.

வாழ்க்கையில் பல விதமான அலைகளில் சிக்குண்டு மீள முடியாத நிலை வருகிறது. ஆகவே அந்த அலைகள் வரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுத்து அந்த அலைகளைப் பிளக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும். அவன் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும்.. அவன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது அவன் பாச அலையைப் பிளக்கிறது.
1.இந்தப் பாசம் அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
2.உயர்ந்த எண்ணம் கொண்டு கண்ணிலே நாம் பார்க்கும் போது அவனை ஒழுக்கமாக்குகிறது.

இதைப் போல் பலர் பகைமை கொண்டு பேசுவார்கள். நாம் நல்லதைச் செய்தாலும் இன்னொரு கெடுதல் செய்த ஆவி அந்த உடலுக்குள் இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது. நம்மைக் கண்டாலே எதிரியாகக் கருதி இல்லாததை எல்லாம் சொல்வார்கள்.

தியானம் செய்கிறீர்கள்…! என்றாலே “என்னை ஏதோ செய்கிறான்…!” என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் ஒன்றுமே சொல்லவில்லை… என்னை இப்படிச் சொல்கிறான்…! என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஒரு உடலுக்குள் ஆவி இருக்கப்படும் போது அது செயல்பட்டால்
1.நான் எதுவுமே சொல்லாதபடி “என்னைக் குறையாகச் சொல்கிறான் பாவிப்பயல்…” என்ற இந்த அலையில் சிக்கிவிடுகிறோம்.
2.அந்த அலைகளிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.அவனுக்குள் இருக்கும் ஆவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அங்கிருந்தே நன்மை செய்யும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதிலே நமக்குத் துணிவு வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்பது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா. அந்த இடத்தில் துணிவு இருந்தால் தான் செய்ய முடியும்.

குருநாதர் கொடுத்த நிலைகளில் ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்.
1.நன்மை செய்ய வேண்டும்
2.நன்மைகள் வளர வேண்டும் என்றால் “அதற்குத் துணிவு வேண்டும்…”

நன்மைகள் செய்யப் போகும் நிலையில் அவருக்கு (உடலில் ஆவி உள்ளவருக்கு) உதவி செய்ய வேண்டும் என்று செல்லும் பொழுது… ஐய்யய்யோ…! பாவிப் பயல் எனக்கு ஏதோ செய்கின்றான் மருந்து வைக்கின்றான் விஷம் வைக்கின்றான்…! என்று சொல்வார்கள் பார்க்கலாம்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அவர் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவருக்குள் இருந்தே நன்மைகள் செய்யும் நிலை வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

நல்லது செய்கின்றோம்… ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலிலே இன்னொரு ஆன்மா இருக்கும்.

ஆன்மா இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நம்மைக் கண்டவுடனே வெறுப்பாக இருக்கும். உடலிலே எரிச்சல் ஆகும்.

சிலருடைய வீடுகளுக்குள் சென்றால் அந்த எதிர்ப்பு நிலைகள் வரும். நம்முடைய மணம் பட்ட உடனே அங்கே எதிரியாக மாறுகின்றது.
1.அதற்குக் காரணம் அந்த மனிதன் அல்ல.
2.அந்த மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு இதைக் கண்ட பின் எரிச்சல் ஆகிறது.

நாம் இவ்வளவு தியானம் செய்கின்றோம்… நம்மை ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள்…? என்று நினைக்கின்றோம்.

அந்த இடத்தில் தான் நமக்குத் துணிவு வேண்டும் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வினை அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால்
1.அவர் செயலைப் பார்த்த பின் இது வளர்ந்து விடுகின்றது.
2.ஆன்மாவிலே அது முன்னாடி அதிகமாகப் பெருகி விடும்.
3.இது பெருகி விட்டால் இதைச் சுவாசித்து அந்த உணர்வு இயக்க ஆரம்பித்து விடும்.

உயிரிலே பட்டவுடன் அதை வெளிப்படுத்துவது இந்த உயிர் தான். அது போன்ற நிலைகள் வந்தாலும்… “இடைமறித்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று இங்கே கொண்டு வர வேண்டும்.

எங்கே…?

1.நம் கண்ணின் நினைவைப் பல முறை உயிருடன் ஒன்றச் செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா… என்று இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் இருக்கக்கூடிய ஆன்மாவிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைத்து அவர்களுக்கு அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும். இந்த இடத்திலே இதைச் செய்ய துணிவு ஜாஸ்தி வேண்டி இருக்கின்றது.

ஆனால் நாம் என்ன நினைப்போம்…? சாதாரணமாக நாம் ஒன்றுமே செய்யவில்லை…! ஆனால் நம்மை கண்டாலே அவர்களுக்கு எப்படித் தான் இருக்குமோ…? ஏன்னை இந்த மாதிரி எல்லாம் சொல்கின்றார்களே…!

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாமலே அது இயக்கும்.

இந்தத் தியான வழியில் நாம் செல்லும் பொழுது இதையெல்லாம் தெரிந்து கொண்டால் தான்… அவ்வப்போது கொடுத்த இந்தச் சக்திகளை வலுப்பெறச் பயன்ன்படுத்த முடியும்.

1.நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் இருக்கிறது… அதனால் உருவான அணுக்களும் இருக்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்களுக்கு ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து விட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் செலுத்தினோம் என்றால் அதைத் தடைப்படுத்திவிடும். வளர்ந்த பின் இதை நீக்கிவிடும். அதற்குச் சத்து கிடைக்காதபடி மகரிஷிகள் உணர்வு வலுப்பெற்ற பின் தீமைகளைக் குறைக்கும்.

உங்கள் அனுபவத்தில் நன்றாக இதைத் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்.

1.முதலில் சிரமமாகத் தெரியும்… சிறிது நாள் சென்றால் அதை நீக்கிவிடும்.
2.இப்படி நாம் வளர்க்க வளர்க்க நம்முடைய பார்வையே பிறருடைய தீமைகளை நீக்கும் சக்தியாக வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் ஒரு தனி நட்சத்திரம் அல்ல…!

ஜோதிடம் பார்ப்பவர்கள்… உதாரணமாக நீ கார்த்திகை நட்சத்திரக்காரர்…! என்று “ஒரு” நட்சத்திரத்தைச் சொல்வார்கள். அது பிழை.

ரேவதி நட்சத்திரத்துடன் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ஆண் பெண் என்ற நிலைகளில் கலந்தால் தான் உயிரணு தனக்குள் ஒன்றை நுகர்ந்து உருவாக்க முடியும்.

நட்சத்திரங்கள் ஆண் பெண் என்று ஒன்றுடன் ஒன்று மோதித் துகள்களாக மாறும் பொழுது நம் பூமிக்குள் அவைகள் வரும் பொழுது அதிலே
1.ஆண் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் பாறைகள் அங்கே ஜாஸ்தி “வலுப் பெற்றதாக…!” இருக்கும்.
2.பெண் பால் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் அந்தப் பாறை அங்கே வேகமாக வளரும்… அது “தன் இனத்தைப் பெருக்கும்…!”

இதைப் போல் தான் செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்று உண்டு. ஆண் செடிகள் இல்லை என்றால் பெண் செடிகளில் இராசி பலன் இல்லை.

நெற் பயிர்களில் பார்த்தோம் என்றால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருந்தால் அங்கே பலன் இருக்காது… நல்ல மகசூல் காண முடியாது.

மரங்களிலும் அதே போல் தான். பனை மரங்களிலும் ஆண் பெண் என்று உண்டு. பப்பாளி மரத்திலும் ஆண் பெண் உண்டு. ஆண் பப்பாளி மரம் இல்லை என்றால் பெண் பப்பாளியில் கருவுறாது… பலன் கிடைக்காது.

ஆகவே இதைப் போல் ஆண் பெண் என்ற நிலையில் தான் எல்லாமே வருகின்றது. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தவன் அகஸ்தியன்.

1.கணவனும் மனைவி இருவரும் தனித்து இருந்தாலும் ஒன்றாக இணைக்கும் பருவம்
2.மனிதனான பின் இதைச் செயல்படுத்த முடியும் என்று உணர்ந்தவன் அகஸ்தியன்.

மற்ற மிருகங்கள் தான் தப்பி வாழத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்துப் பரிணாம வளர்ச்சியில் வருகின்றது,

மனிதனாக ஆனபின் கணவன் மனைவி இரண்டு உயிரின் நட்சத்திரங்களும் வேறு வேறு ஆக இருந்தாலும்… இந்த நட்சத்திரங்கள் சேர்க்கப்படும் பொழுது ஒரு உருப்பெறும் தன்மை வருகின்றது.

ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்திற்கு ரேவதி நட்சத்திரம் என்ற பெண் பால் நட்சத்திரம் இருந்தாலும் இதே மாதிரிப் பெண்களுக்கு ஆண் பால் நட்சத்திரத்தின் உணர்வும்
1.இப்படி நான்கு நிலை வரப்படும் பொழுது தான் பிரம்மம் என்ற நிலையே உருவாகின்றது.
2.இந்த நான்கு நட்சத்திரங்களும் இரண்டு உயிருடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.எதைக் கவர்ந்தனரோ… அந்த ஒளியின் கற்றையாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்த நிலைகளில் தான் நட்சத்திரங்களின் விஷத் தன்மைகளை முறிக்கும் தன்மை பெற்ற அகஸ்தியன்
1.”மின்னல்களைக் கண்ட பின் ஆனந்தமான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்டான்…”
2.அந்த உணர்வின் தன்மையை எடுத்து உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் மாற்றிக் கொண்டான்
3.அதாவது உயிரைப் போலவே (நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளாக) மாற்றினான்.

இதை வைத்துத் தான் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) என்னிடம் சொன்னார். ஏய்.. மின்னல் பாய்வதைப் பாருடா…! என்பார். அப்பொழுது எங்கள் இரண்டு பேருக்கும் சண்டை வரும்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்க்கும் பொழுது என் கண்கள் போனால் யார் சாமி கொடுக்கிறது..? நாம் பிள்ளை குட்டிக்காரன்..! என்பேன்.

அவர் என்ன சொல்வார்…? நான் சொல்வதை எல்லாம் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…!

சாமி… நான் கண் இல்லாமல் போனால் என்ன செய்வேன்…? என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும்.

அந்த மின்னலின் இயக்கங்கள் வரப்படும் பொழுது அந்தத் துகள் என்ன ஆகின்றது..?
1.நான் இருக்கிறேன் அல்லவா…
2.நான் உன்னைத் தொடுகிறேன் அல்லவா…! என்பார் குருநாதர்.

அதாவது.. அவர் கையால் என்னைத் தொட்டு எர்த் செய்து (ELECTRICAL WIRE EARTH போல) “இப்பொழுது மின்னலைப் பாருடா…!” என்கிறார் குருநாதர்.

அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் இது எந்த நட்சத்திரத்திலிருந்து வந்தது…? இது எதனுடன் மோதும் பொழுது இந்த மின் கதிர்கள் எப்படி மாறுகிறது…? என்பதையெல்லாம் காட்டுகின்றார்.

அதற்குப் பின் தான் நான் துணிந்து பார்க்க ஆரம்பித்தேன்…!

குருநாதர் என்னைத் தொட்டுக் காண்பித்தது போல் தான் அந்த உணர்வுகளை எல்லாம் உங்கள் எல்லோரிடமும் உணர்வால் தொட்டுக் காண்பிக்கின்றேன்.

இந்த உணர்வுகள் தொடும் பொழுது உங்கள் உடலுக்குள் என்ன செய்கிறது…? ஊடுருவுகிறது…! ஒளியாக மாற்றும் பருவம் பெறுகின்றீர்கள்..!
1.நீங்களும் அந்த உணர்வினைக் கவர்ந்து ஒவ்வொரு அணுக்களையும்
2.இந்த உயிரைப் போல ஆகும் அந்தத் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கிறேன்.

யாகத்தைச் செய்… கண ஹோமம் செய்…! என்று சொல்கின்றார்கள்… கண ஹோமம் என்றால் என்ன…?

 

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எல்லாம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் அபிஷேகம். பொருள்களை நெருப்பிலே போட்டு எரிக்கின்றோம் இது யாகம்.

கனிகள் மற்றவைகளை எல்லாம் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து சந்தனத்தையும் பன்னீரையும் ஊற்றுவார்கள்.
1.சந்தனத்தைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும்
3.பன்னீரைப் போன்று எனக்குள் நறுமணங்கள் பெற வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று இப்படி எண்ணினால் இது அபிஷேகம்.

ஆனால் அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து யாகக் குண்டத்திலே நெருப்பிலே போட்டால் “கண ஹோமம்…!” அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்…? என்று வேண்டுமல்லவா…!

யாரையும் நான் தவறாகச் சொல்ல வரவில்லை. காலத்தால் மாற்றப்பட்ட நிலைகள் தான் இவையெல்லாம். நம்மை அறியாமலே நம்மை அழித்துக் கொண்டிருக்கும் இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

காரணம்
1.யாகக் குண்டம் என்றால் நம் உயிர் ஒரு நெருப்பு… இது ஒரு குண்டம்.
2.நாம் எந்த மெய்ஞானியின் உணர்வை உயிரிலே போடுகின்றோமோ அது அபிஷேகம் ஆகின்றது.
3.அதில் இருக்கக்கூடிய வெப்பத் தணல்கள் ஆவியாக அலையாக உடலுக்குள் மாறி
4.ஒவ்வொரு அணுவிலும் இணைந்து நறுமணமாக வீசச் செய்கின்றது. இதுதான் கண ஹோமம் என்பது… கணபதி ஹோமம்..!

எத்தனையோ பொருள்கள் பால் தயிர் மற்ற கனிவர்க்கங்கள் அதை எல்லாம் தீயிலே போட்டு எரித்து… கடைசியில் நெய்யை ஊற்றி இப்படித்தான் காசைக் கொடுத்து யாகம் நடத்துகின்றோம்.

அப்போது நல்லதை எண்ணுகின்றோமா…? நல்லதை எண்ணி எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமா…?

அந்த உயர்ந்த சக்தியை உயிரான யாகக் குண்டத்திலே போட்டு அந்தச் சத்தின் தன்மை உயர்ந்த உணர்வின் தன்மையை உனக்குள் உருவாக்கு… இது தான் ஹோமம் என்பது. இப்படி யாரும் செய்வதில்லை.

1.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று யாராவது எண்ணி எடுக்கின்றார்களா…?
2.யாகத்தில் அமர்ந்து சொல்பவரும் நினைப்பதில்லை…! மற்றவர்களை அப்படி நினைக்க விடுவதுமில்லை.

ஜாதகக்காரன் சொன்ன குறிப்பை ஏற்றுக் கொண்டு அதற்குப் பரிகாரம் செய்வதற்காக இப்படிக் கண ஹோமம் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று காசுக்காகத் தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

கோயிலுக்குள் செல்லும் பொழுது விநாயகரை உற்றுப் பார்த்து அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துச் சுத்தப்படுத்திவிட்டு ஆலயத்திற்குள் சென்று
1.அங்கே சாத்தியிருக்கும் மலரை பார்த்து மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.அந்தச் சந்தனத்தைப் போல மணம் பெற வேண்டும் என்று நம் உயிரான நெருப்பிலே போட்டால்
4.அது கண ஹோமமாக மாறுகிறதா இல்லையா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்… மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும்.

கோவில் என்றால் அதன் தத்துவம் என்ன…? என்று சுருக்கமாகவும் காட்டுகின்றார்கள். சிறிய சிலையை வைத்து நமக்குள் உள் நின்று இயக்கும் உயிரைப் பற்றிய இயக்கத்தையும் காட்டியுள்ளார்கள்.
1.பெரிய தேரை வைத்திருக்கின்றார்கள்
2.அதிலே இந்தச் சிறிய சிலையை வைத்து… எல்லோரும் சேர்த்து வடம் பிடித்து இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள்.

ஆனால் அந்தத் தேரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு இழுத்தால் என்ன ஆகும்…? தேர் எல்லை வந்து சேருமா…?

கோவிலில் இத்தகைய சிலையை வைத்து அங்கே செல்பவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
1.இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்
2.என் பேச்சும் மூச்சும் அனைவரையும் நலமாக்க வேண்டும்
3.நான் தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று
4.எல்லோரும் இப்படி போற்றக்கூடிய நிலையாக ஒன்று போல் இந்த ஆலயத்திற்கு வந்து சொல்லப்படும் பொழுது
5.இந்த உணர்வின் சக்தி அந்தக் கோவிலில் அலை அலையாக நல்ல குணங்களாகப் படர்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் என்னிடம் வெறுப்போ வேதனையோ இருக்கின்றது என்றால் இங்கே ஆலயத்திற்குள் வரப்படும் போது
1.எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது
3.அந்த எல்லோருடைய வலுவான சக்தியால் அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நாம் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும் போது தான் தேரை எல்லை சேர்க்க முடிகின்றது. அதைப் போன்று நல்ல குணங்கள் கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து… “அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று எல்லோருடைய ஆசியும் பெற்று… ஒன்று சேர்ப்பதற்குக் கோயிலை வைத்தார்கள் ஞானிகள்.

அவ்வளவு பெரிய தேரை இழுப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் தேரை இழுக்கின்றோம். ஞானிகள் நமக்கு உணர்த்திய இந்த உண்மைகளை யாராவது நினைக்கின்றோமா…? அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட நிலைகளைச் செயல்படுத்துகின்றோமா…?

காரணம்… ஒரு சிறிய சிலையைத் தான் அவ்வளவு பெரிய தேரில் வைத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்தில் இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள். அந்தத் தேரை வைத்து இழுப்பதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டோமா…?

அந்தக் கடினமான தேரை அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படி இழுக்கின்றோமோ அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் வாய்ந்த உணர்வுகளை எல்லோரும் சேர்த்து எண்ணி எடுக்க வேண்டும்.

1.எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோருடைய உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.இந்தத் தெய்வ நிலைகள் அனைவரும் பெற வேண்டும்.
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று அனைவரையும் எண்ணும்படி
5.இதையெல்லாம் ஆலயத்திலே புறத்திலே துவைதமாகக் காட்டி
6.அகத்திற்குள்… ஒவ்வொருவருக்குள்ளும் சேர்க்கப்பட வேண்டிய உயர்ந்த உணர்வுகளை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய மனித வாழ்க்கையில் ஆசை என்று வரும் பொழுது “ஒன்றைப் பெற வேண்டும்…!” என்று எத்தனையோ வழிகளில் நாம் எப்படி எப்படியோ செல்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் தப்புவதற்காக… குருநாதர் எனக்கு அனுபவரீதியில் தான் எல்லாமே கொடுத்தார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் சுற்றும் பொழுது எனக்கு ஒரு கஷ்டமும் தெரியவில்லை. அப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

ஆனால் இங்கே நாட்டுக்குள்ளும் நகருக்குள்ளும் வந்து “நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும்…! என்று நான் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது…?”

எல்லோரும் பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அப்பொழுது ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் அவர்கள் அந்தப் பண்பினைப் பெற முடியாத நிலை ஆகும் பொழுது “வருத்தமாகின்றது…!”

தியானத்திற்கு வந்து எல்லாமும் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று அந்த உணர்வை மாற்றிக் கொண்ட பின்னாடி
2.அதைக் கேள்விப்பட்டவுடன் நமக்கு மனக் கஷ்டமாக இருக்கும்.
3.ஏனென்றால் அந்த உணர்வு நாம் எண்ணிய ஆசைகள்…
4.அங்கே அவர்களுக்குள் விளைந்த வேறு விதமான உணர்வு நம்மைத் தாக்கும் பொழுது நமக்கு இந்த நிலை மாறுகின்றது.

அதனால் தான் இதை எல்லாம்
1.சந்தர்ப்பத்திலே எப்படி வரும்…?
2.அதை நீ எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்று
3.குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார்.
4.அவர்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ எண்ணு.
5.அவர்களை அறியாது இயக்கும் அந்தத் தீமை “உனக்குள் ஒட்டக் கூடாது…” என்பார்.

உதாரணமாக நாம் தோசை சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடுப்பிலே தணல் அதிகமாகி விட்டால் என்ன ஆகின்றது…? ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது.

கருகியவுடன் நாம் தோசையை எடுக்க வேண்டும் என்றாலும் கைக்கு வராது.
1.மறுபடியும் எண்ணையையும் தண்ணீரையும் போட்டு சமமாக்கிய பின்
2.அடுத்து மாவை ஊற்றினால் சட்டியில் தோசை ஒட்டாமல் சீராக வரும்.
3.இதை நாம் ஒரு முயற்சியாக எடுத்துச் செய்கின்றோம் அல்லவா…!

இதே மாதிரித் தான் பல தீமையின் உணர்வுகள் வந்தாலும் “அது நம்மிடம் ஒட்டாமல் இருப்பதற்காக…” நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமல்லவா…!

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ இதைப் போன்ற நிலைகளை நாம் பார்க்கப்படும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வினை வலுப் பெறச் செய்து கொள்ள வேண்டும்.

நம் பையனோ பிள்ளையோ சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் பெற வேண்டும். கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் அருள் ஆற்றலும் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தாலும் அந்த அருள் சக்தியை எடுத்து நமக்குள் பெருக்கி அவர்களுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும். இப்படிப் பெருகி வந்தால் அந்த நோயோ வேதனையோ நமக்குள் வளராது.

இதை எல்லாம் நாம் பழகிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது…!

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்

 

1.பிற மண்டலங்களிலிருந்து (2000 சூரியக் குடும்பம்) வரும் சக்திகளை நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள் தான் கவருவதும்
2.நட்சத்திரங்களிலிருந்து துகள்களாக மாறுவதும் பிரபஞ்சத்தில் பரவுவதும் கோள்கள் கவர்வதும் அதிலிருந்து வருவதைச் சூரியன் ஈர்ப்பதும்
3.வான்வீதியின் உணர்வுகளை வான மண்டலத்தின் அதிசயங்களை உங்களுக்குள் நுகரும் ஆற்றலாக அறிந்து
4.இதைப் புலனறிவுகளில் காட்சிகளாகக் காண முடியும்.

அதிலிருந்து வரும் பல வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல வகையாக அவை மாறிக் கொண்டே இருப்பதையும் காணலாம்.

கேது:-
நட்சத்திரத்திங்களுக்கு அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை எவ்வாறு கவர்கின்றது…? என்பதையும் விஷமான அணுக்கள் மோதும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் ஊடுருவி… மின்னல்கள் தாக்குவது போன்று ஒளிக் கதிர்களாக ஊடுருவிப் பாய்வதைக் காணலாம்.

இராகு:-
கேதுவின் அருகிலே இருக்கும் ராகுக் கோள் இந்த விஷத்தின் தன்மை வான் வீதியின் ஒளித் தன்மையைத் தனக்குள் கவர்ந்தாலும் அந்த விஷத் தன்மை தாக்கப்படும் போது “கரும் நீலமாக…” இது உருமாறுவதைக் காணலாம்.

சனி:-
இதனின் தாக்குதலில் மற்ற நட்சத்திரங்களில் வரும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று பல பொறிகளாக மாறி மோதலில் ஆவியாக மாறுவதும் எடையற்ற நிலையில் மாறுவதை உறை பனியாக… சனிக்கோள் தனக்குள் எடுத்து உறை வட்டங்களாக மாற்றிக் கொள்கின்றது.

எப்படி மலைப் பிரதேசங்களில் உறை பனியாக மாற்றுவது போன்று தன்னுடைய சுழற்சி வட்டத்தில் உறைவிடமாக மாறுகின்றது… அது தான் “சனியின் வளையங்கள்…” என்று சொல்வது. அவைகள் மீண்டும் கரைந்து இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது

வியாழன்:-
மின் அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து அதைச் சனிக்கோள் தனக்குள் எடுத்தாலும் அதிலிருந்து வரக்கூடியதையும் மற்ற விஷத்தின் தன்மை தனக்குள் கவர்வதும் அதை வியாழன் கோள் கவர்ந்து அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்வதும் “மின்னலின் கதிர்களைக் கதிரியக்கப் பொறியாக…” வியாழன் மாற்றுவதையும் காணலாம்.

வெள்ளி:-
மின் அணுவின் தன்மை தனித்தன்மையாக ஆன பின் அந்த ஒளி அலைகளை வெள்ளிக் கோள் தனக்குள் கவர்ந்து “மிகச் சக்தி வாய்ந்த ஒளியின் சுடர்களாக…” வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம்.

புதன்:-
சூரியன் அருகில் இருக்கும் புதன் கோள் சூரியனின் எதிர்நிலை கொண்ட தாக்குதலால் அதைக் கவரும் புதன் கோள் ஒரு பகுதி வெப்பமும்… தான் பிரபஞ்சத்தில் ஈர்க்கும் மற்ற நிலையில்… “உலோகத் தன்மையாக மாற்றிக் கொண்டிருப்பதையும்…” காணலாம்.

செவ்வாய்:-
உலோகத் தன்மை வாய்ந்த்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் வரப்படும் பொழுது அதனின் காந்தப்புலனறிவு இதனுடன் மோதுண்டு பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும் அதைச் செவ்வாய்க் கோள் கவர்ந்து “ஓசைகள்…” வருவதைக் காணலாம்.

அதனுடன் மோதப்படும் பொழுது அந்த ஒலிகள் எழுப்புவதைக் காணலாம். ஒன்றுடன் ஒன்று மோதும் போது “சிகப்பு நிறமாக…” அந்தக் கோள் காணப்படும். ஒன்றுடன் ஒன்று மாறி புகை மண்டலமாகவும் மற்ற நிலை வரும் போது ஒளியின் தன்மைக்குள் சிகப்பு நிறமாகத் தோற்றுவிக்கும்.

திங்கள்:-
இவை பிரபஞ்சத்தில் கலந்து பரவிக் கொண்டிருப்பதை நமது பூமி தனது ஈர்ப்பில் வரப்படும் பொழுது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் திங்கள் தனக்குள் கவர்ந்து கொண்டிருப்பதையும் அதிலே மிதப்பதையும் அது கவரப்படும் பொழுது திங்கள் கோளில் தூசிகளாகப் படர்வதைக் காணலாம்.

பூமி:-
மற்றவை அனைத்தும் பூமியின் துருவப் பகுதியில் கவர்ந்து உள்ளே ஈர்க்கும் பொழுது… கோழி முட்டை வடிவில் உருண்ட நிலையாகவும் நீண்ட நிலைகளாக “நம் பூமி சுழல்வதைக் காணலாம்…”
1.துருவப் பகுதியில் ஈர்க்கும் தன்மையை
2.நாம் இருக்கும் எல்லையிலிருந்தே அதைக் காண முடியும்.

வியாழன் கோள் தான் பெருகுவதற்கு அதன் உபகோள்கள் அது எவ்வாறு கவருகின்றது…? அதிலிருந்து உமிழ்த்தும் தூசிகள் வியாழன் கோளைச் சுற்றிப் படர்வதும் அது நுகர்வதும் தனக்குள் மாற்றம் ஆவதும்… அந்த அற்புத நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம்.

அதே போல் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்கள் வளர்வதும் அது கவர்ந்து தூசிகளாக வெளிப்படுவதை… அவை உமிழ்த்தும் உணர்வுகளைச் செவ்வாய்க் கோள் தனக்குள் எடுத்து மற்ற கலர்கள் ஆவதையும் காணலாம்.

வான மண்டலத்தில் பல பல நிறங்களும் அணுக்கள் மாற்றமாகி அகண்டு செல்வதும் அது ஒவ்வொன்றும் பரவி அந்த நிறங்கள் மாறிக் கொண்டே செல்வதைக் காணலாம்.

1.நம் பூமியின் துருவத்தின் வழி வரக்கூடியதைத்
2.துருவ நட்சத்திரம் கவர்ந்து “ஒளி அலைகளாக மாற்றுவதைக் காணலாம்…”

நம் பூமிக்குள் பரவி வருவதை பூமியின் பரப்புகளில் தூசிகளாகப் பரவுவதும் பூமிக்குள் ஊடுருவி பூமியின் வெப்பத் தணல் கூடுவதும் கலர்கள் மாற்றமடைவதையும்
1.அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளை உங்கள் நினைவாற்றல் கொண்டு பூமியின் “நடு மையத்தையும்…” நீங்கள் உணரலாம்.
2.அங்கே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.

அண்டத்தில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் இந்தப் பிண்டத்திற்குள் உணர்வின் நிறங்கள் மாறிச் சுவாசத்திற்குள் சென்று ஒவ்வொரு உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் பரவி… அதன் நிலைகள் பூமிக்குள் எவ்வாறு மாற்றம் அடைகின்றதோ உடலுக்குள்ளும் அந்த அணுக்கள் கவர்ந்து அதன் வளர்ச்சியின் தன்மை எதுவோ… உடலுக்குள் “பல வர்ணங்கள் மாறுவதும்… பல வண்ணம் கொண்ட உணர்வுகளை எடுப்பதையும்…” காணலாம்.

1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்வதைப் பார்க்கலாம்.
2.அந்த உணர்ச்சிகள்… உதாரணமாக குருவிக் குஞ்சுகள் அது எப்படி உணவுக்காக ஏங்குகின்றதோ…?
3.அதனுடைய துடிப்பின் உணர்வுகள் எப்படி வருகின்றதோ அதைப் போன்று
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டி
4.அது பெறும் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்படும் பொழுது “மெர்குரி போன்று…” உங்கள் உணர்வுகள் மகிழ்ச்சி பொங்கும் தன்மையை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் ஒளியின் தன்மை அடைவதை உணரலாம்.

ஒவ்வொரு அணுக்களிலும் இதனுடைய மாற்றங்கள் ஆவதை நீங்கள் காணலாம்.

இப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் இணைக்கப்படும் பொழுது
1.உங்களை அறியாது சேர்ந்த விஷத்தன்மை கொண்ட அணுத்தன்மைகள் மறைவதும்
2.உடல் நோய்… அந்த விஷத்தன்மை ஆவியாக மாறுவதையும்… உடல் இலகுவாகுவதையும் உணரலாம்.

இப்பொழுது உங்கள் நினைவினைப் பிற மண்டலங்களிலிருந்து கவரும் 27 நட்சத்திரங்களுடன் இணைத்து… “அங்கே உங்கள் நினைவாற்றலைச் செலுத்துங்கள்…”

வான மண்டலத்தில் பல வர்ணங்கள் மாறி மாறி மாற்றம் அடைந்து கொண்டிருப்பதை நீங்கள் காண்கின்றீர்கள்.
1.அவை நம் துருவப் பகுதிக்கு வரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரம் அதைக் கவர்ந்து அதை எவ்வாறு ஒளியாக மாற்றுகிறது…? என்ற நிலையினை உங்களால் உணர முடியும்
3.அதிலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதையும் காணலாம்.

இவை அனைத்தையும்
1.உங்கள் புருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி அதன் வழி தான் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புதல் வேண்டும்.
2.அதன் வழி தான் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற வேண்டும்.

நம் பூமிக்கு வருவதை இடைமறித்து…
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதனுடைய மாற்றங்களை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது…? என்ற நிலையை நீங்களும் உணர்ந்து
2.உங்கள் உடலுக்குள் அதைப் பெறும் சந்தர்ப்பமும் இப்பொழுது கிடைக்கின்றது.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி “ஒவ்வொரு அணுக்களிலும் அது படர்ந்து… மகரிஷிகளின் அருள் ஒளியைக் காணும் திறன் பெறுவீர்கள்…” இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வுகள் உங்கள் உடலிலே விளையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.

உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே உயிரை ஈசனாக எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் மனிதனான பின்…
1.இந்த இயற்கையின் உண்மைகளை வானஇயல் புவியியல் உயிரியல் தத்துவப்படி அறிந்தான்.
2.நஞ்சினை வென்றான்.. இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான்…!
3.அவனில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் படர்ந்துள்ளது.
4.அந்த அகஸ்தியன் உணர்வைத் தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

அந்த அகஸ்தியன் நஞ்கினை வென்று இருளை அகற்றி மெய்ப் பொருள் கண்ட அந்த உணர்வுகளை நாம் பெற இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டிக் கண்ணை மூடி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் வேண்டி ஏங்கிக் கேளுங்கள். இப்பொழுது அந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்கின்றீர்கள்.

அப்படி நுகரும் உணர்வுகளை…
1.அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் உணர்வை உங்கள் உயிர்
2.உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.
4.“ஓ…” என்று ஜீவ அணுவாக உருவாகும் கருத் தன்மை அடையச் செய்யும்,

நம் உடலிலே அந்தக் கருக்கள் பெருகி அணுவாக ஆன பின் அந்த அகஸ்தியன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்ச்சியை உந்தும்.

அப்படி உந்தி அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகளையும்… மற்ற நஞ்சுகளையும் நீக்கிடும் ஆற்றலையும்… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியைப் பெறும் தகுதியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி உடல் முழுவதும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருளைப் பரவச் செய்யுங்கள்.
1.அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள் உங்கள் இரத்தங்களிலே கலந்து உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவுகிறது
2.அதை நீங்களும் உணரலாம்… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அது வரும்.

திருமணமான பின் அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்றுத் துருவ மகரிஷியாக ஆனார்கள். அந்தத் துருவ மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்படுத்திய அந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

1.இவை அனைத்தும் புருவ மத்தியிலேயே எண்ணி ஏங்குங்கள்.
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி இப்பொழுது உங்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும்.
3.உடல் முழுவதும் புதுவிதமான உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகியிருப்பதனால் நீங்கள் சுவாசிக்கும் பொழுது…
1.பேரின்பம் பெறும் அருள் மணங்கள் கலக்கப்பட்டு
2.பெரும் மகிழ்ச்சியின் உணர்வின் தன்மையாக உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.பற்பலவிதமான நறுமணங்கள் வரும்.
4.நஞ்சினை வென்றிடும் அருள் மணங்கள் கிடைக்கும்.
5.அருளானந்தம் பெறும் அருள் சக்தியும் உங்கள் சுவாசத்தில் கிடைக்கும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரிடம் வேண்டுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்குங்கள்.

இப்பொழுது…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் புருவ மத்தியில் மோதி
2.பேரொளி என்ற நிலைகளாகக உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.உங்கள் உடலில் உள்ள ஆன்மாவும் இதைப் போல இருளை வென்றிடும் அருள் ஒளியாகப் பெருகும்.

உங்கள் உயிருடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதும் பொழுது.. அருள் ஒளி உங்கள் புருவ மத்தியில் தோன்றும். நீங்கள் இதற்கு முன் சுவாசித்த தீமை என்ற நிலைகளைப் புக விடாது அதை வெளிக் கடத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த பேரருளைப் பெறும் அருள் உலகமாக…
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
2.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளை உங்கள் புருவ மத்தியில் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.

1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் பொழுது
2.மின்னல்கள் எப்படி மின்கற்றைகளாக வருகின்றதோ
3.இதைப் போல் உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி
3.இருளை அகற்றி உங்கள் உடலுக்குள் ஒளியாக உருவாகும்.

உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுத்து இருளை அகற்றிடும் அருள் ஒளி என்ற உணர்வுகளாக உங்கள் ஆன்மாவில் பெருக்கும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கணவன் தன் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதே போல அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி தன் கணவன் உடல் முழுவதும் படர்ந்து கணவனின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் எண்ணி இரு மனமும் ஒன்றி அந்தப் பேரருள் உணர்வினை உருவாக்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து தாய் தந்தையர் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவு அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து
2.அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.சப்தரிஷி மண்டல அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள்…
1.உங்கள் நினைவுக்கு எத்தனை பேர் வருகின்றனரோ…
2.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
3.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “உந்தித் தள்ளுங்கள்…”

உங்கள் குலதெய்வங்களின் உணர்வுகள் உங்கள் உடலிலே இருப்பதனால்… நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றதனால்… அதனின் வலுவின் துணை கொண்டு உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.

இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தாலும்… இன்னொரு உடலுக்குள் அவர்கள் ஆன்மாக்கள் சென்றிருந்தாலும்… இந்த உணர்வுகளை நாம் பாய்ச்சப் பாய்ச்ச… அந்த உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் ஊடுருவி.. அந்த உடல் மடிந்த பின் உடலை விட்டு வெளியில் வரும் ஆன்மாவை.. தினமும் செய்யும் துருவ தியானத்தின் மூலம் விண் செலுத்தி விடலாம்… அவர்கள் பிறவி இல்லா நிலை அடைவார்கள்…!

நாம் இந்த மாதிரிச் செய்தோம் என்றால் மூதாதைகள் ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் சாப அலைகளோ மற்றதுகள் விடுத்திருந்தாலும்
1.அந்த மரபு அணுக்கள் நம்மை அறியாது நம் உடலுக்குள் இருந்தாலும்
2.அந்த மரபு அணுக்களை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் பெருக்க முடியும்
3.பரம்பரை நோயை அகற்ற முடியும்.

இருளை அகற்றி விட்டுப் பேரருள் என்ற… அருள் ஒளி என்றுமே வளர்ந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வை அவர்களையும் பெறச் செய்யலாம்.

இவ்வாறு செய்து வந்தால்…
1.உங்கள் குடும்பத்தில் சமீப காலத்தில் உடலை விட்டு யார் பிரிந்திருந்தாலும்…
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.

துருவன் கண்டுணர்ந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்

 

அகஸ்தியர் ஐந்து வயதாகும் பொழுது நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றதால் துருவன் என்ற காரணப் பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.

அதன் வழிப்படி
1.தனது 5 வயது முதலே விண்ணுலகில் என்ன அதிசயங்கள் நடக்கின்றது…? என்ற நிலையை
2.சிறுகச் சிறுக அதன் உணர்வின் வளர்ச்சியைத் தனக்குள் கண்டுணர்ந்து நமது பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

பிரபஞ்சம் என்று சொல்லும் பொழுது 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படிக் கவர்கிறது…? என்பதை அறிகிறார்.

ஒரு நூலாம்படைப் பூச்சி வலை விரித்து… மற்ற ஈயோ வண்டுகளோ அதிலே சிக்கும் போது தன்னுடைய மூக்கின் நுனி கொண்டு இஞ்செக்சன் போன்று அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாகக் குடித்து விடுகின்றது.

பின் தன் இனவிருத்திக்காக மற்ற ஈக்கள் கிடைத்தால் தனக்குள் உருவாகும் சில அமிலம் கலந்த மலத்தை வெளியாக்கி அந்த ஈயைக் காற்றுப் புகாதபடி முழுமைக்கும் சுற்றித் தன் உடலில் ஊறும் உணர்வின் சத்தை அந்த ஈக்குள் பாய்ச்சப்படும் பொழுது
1.ஈக்குள் இருக்கும் ஈயை உருவாக்கும் அணுக்களில் இது படர்ந்து
2.நூலாம்படைப் பூச்சி போன்ற உணர்வுகள் அங்கே வளர்ந்து… தன் இனத்தையே உருவாக்குகின்றது.

அதே போன்று… குளவி ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த விஷத்தன்மை அதற்குள் இணைந்த பின் புழுவின் துடிப்பைக் குறைக்கச் செய்து உமிழ் நீரால் மண்ணை உருட்டி கூடைக் கட்டி அந்தக் கூட்டிற்குள் இந்தப் புழுவைச் செலுத்தி “நூலாம் படைப் பூச்சி போன்றே…” தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை அதற்குள் பாய்ச்சி அந்தக் கூட்டை மூடி விடுகின்றது.

இந்த விஷத்தின் தாக்குதலால் புழுவின் உடல் தோல் சருகு போன்று ஆகிவிடும். அவ்வாறான பின் உடலை உருவாக்கிய அணுக்கள் நூலாம்படைப் பூச்சி தன் அமிலங்களால் ஈயைத் தன் இனமாக எப்படி மாற்றியதோ அதே போன்று புழுவை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் கூழ் போல் ஆகி விடுகின்றது.

புழுவின் உயிர் குளவியின் உமிழ்நீரால் கட்டப்பட்ட அந்தக் கூட்டின் வழி கூடி புறத்தில் இருக்கும் சூரியனின் காந்தப் புலனறிவைத் தனக்குள் எடுத்துக் கோழி தன் முட்டையை எப்படி அடைகாக்கின்றதோ இதைப் போல
1.குளவியின் உணர்வுகள் அதற்குள் பாய்ச்சப்பட்டு சிறுகச் சிறுக புழுவின் உடல்
2.அந்த அணுக்கள் மாற்றமடைந்து புழு குளவியின் ரூபமாக மாறுகிறது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்.

இவ்வாறு வளர்ச்சி பெற்றது போன்று தான் பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றித் தூசியாக மாறுவதை உணவாக எடுத்துக் கொள்வதும் தூசியாக வருவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

இப்படி இந்த 27 நட்சத்திரங்களும் இடைவெளி விட்டு பிற மண்டலங்களிலிருந்து எடுத்ததைப் பால் வெளி மண்டலங்களாக அமைக்கப்படும் பொழுது ஒரு கூட்டமைப்பு போன்று ஆகி
1.பூமிக்கு “ஓசோன் திரை” எவ்வாறு முக்கியமாக இருக்கின்றதோ
2.சூரியனுக்கு இந்தப் “பால்வெளி மண்டலம்” பிற மண்டலங்களிலிந்து வருவதைக் கவர்ந்து தன் சக்தியை எடுத்துக் கொள்கின்றது.

இவ்வாறு அந்த 27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற நிலையில் அது உருப்பெறுவதை ஐந்தாவது வயதில் துருவன் சூரியக் குடும்பத்தின் முக்கிய நிலைகளைக் காணுகின்றான்.

நாம் எப்படிக் கண்களிலே ஒன்றைப் பார்க்கின்றோமோ இதைப் போல அந்த உணர்வின் தன்மை தன் உயிரில் நுகர்ந்து
1.அந்த உணர்வின் வலிமைகளை அணுக்களாகப் பார்க்கும் தன்மையும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? எப்படி வளர்கின்றது…? எப்படி வாழ்கின்றது…? என்ற நிலையை அவன் பார்க்கின்றான்.

உங்களுக்குள் இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம். அடுத்து நீங்களும் இதைக் காண முடியும். அவன் கண்டதை நீங்களும் காணும் நிலை வரும்.

டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதன் அலை வரிசைகளில் ஒளிபரப்பாவது காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து நமக்கு அது படமாகக் காட்டுகின்றது.

இதைப் போல் விஞ்ஞானிகள் கருவிகளை வான மண்டலத்தில் அனுப்பி அங்கிருப்பதைப் படமாக்கி… அந்த உணர்வின் அணுக்களைப் பல மடங்கு பெரிதாக்கி மனிதன் தனக்குகந்த அந்த உணர்வின் தன்மை எதுவோ அதைக் கண்டறிகின்றான்.

ஆனால்… “தன் தாயின் கருவிலே இருக்கும் போது வளர்ந்த ஆந்த உணர்வுகள்…” விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை அகஸ்தியனுக்கு ஏற்படுத்தியதால் அதனுடைய வளர்ச்சியால் சூரியக் குடும்பத்தின் உண்மைகளைத் தனக்குள் கவர்ந்து… அதை அறியும் ஆற்றலும்… அதன் இயக்கச் சக்தியைக் காணும் சந்தர்ப்பமும் அந்தத் துருவனுக்குக் கிடைக்கின்றது.
1.ஏனென்றால் துருவத்தின் வழி தான் இதையெல்லாம் பார்க்கின்றான்.
2.நம் பூமிக்குள் வருவதை… அந்தத் துருவத்தின் எல்லைப் பகுதியிலிருந்து
3.எப்படி… எங்கிருந்து… எதற்குள் கலக்கின்றது…? என்ற அதிசயங்களைப் பார்க்கின்றான்.
4.தனக்குள் நுகர்ந்து அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.

பால்வெளி மண்டலங்களிலிருந்து தூசிகளாக வருவதை நட்சத்திரங்கள் உணவாக உட்கொள்கின்றது. அதனுடன் இணைந்த நிலைகள் சேர்ந்து சுழலும் பரிமாணம் உள்ள துகளாக ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.

பின் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழற்சி பெற்று அந்த நட்சத்திரம் முதலிலே கோளாக இருந்து எப்படி நட்சத்திரமானதோ இதன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களாக வளர்ச்சி பெறுகின்றது.

இதன் வரிசையில் அகண்ட வெளியில் மற்ற நிலைகள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் அது எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ஒவ்வொரு உணர்வு கொண்ட நிலையாக மாறுகின்றது.

பிரபஞ்சத்தில் எப்படிச் சூரிய குடும்பத்திற்குப் பல விதமான கோள்களும் 27 நட்சத்திரங்கள் வருகின்றதோ இதைப் போல அங்கேயும் அமைப்புகள் உருப் பெறுகின்றது.

1.இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வரும் பொழுது அதனதன் வளர்ச்சிகள் அது வருவதும்
2.அது வளர்ந்து உமிழ்த்தும் நிலைகள் துகள்களாகத் தூசிகளாக வருவதும்
3.சூரியன் அதைத் தனக்குள் எடுக்கும் பொழுது மற்ற கோள்கள் இடைமறித்துத் துருவத்தின் வழி கவர்வதும்
4.இவை அனைத்தும் ஆண்பால் பெண்பால் என்ற நட்சத்திரங்கள் உணர்த்துவதை அது எதனுடன் எது இணைக்கின்றதோ
5.அதனதன் உணர்வு கொண்டு அணுக்களின் தன்மை மாற்றம் அடைவதும்
6.ஒன்றுடன் கலந்து அதே இனத்தைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது… பாறையானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்.

பிரபஞ்சத்தில் உருவாகும் இந்த நிலையை துருவன் ஊடுருவிப் பார்க்கின்றான். நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றது…? என்பதைப் பார்த்தாலும் சூரியக் குடும்பத்தில் கோள்கள் இயங்கி வருவதையும் நட்சத்திரங்கள் தன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களை எப்படி வளர்க்கின்றது…? என்பதையும் அதன் வரிசையில் நட்சத்திரங்கள் எப்படி வளர்ச்சி அடைகிறது…? என்பதையும் காணுகின்றான்.

ஒரு குடும்பத்தில் குழந்தைகள் உருவாகி அது வளர்ச்சி பெற்று வரும் பொழுது திருமணம் ஆகித் தன் இனத்தின் நிலைகளை உருவாக்குவது போன்று இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் கோள்கள் உருவாகி நட்சத்திரங்களாக வளர்ச்சி அடையும் பொழுது இதைப்போல ஒரு குடும்பமாக அந்த உணர்வின் சக்தி பெறப்படும் போது தனிப் பிரபஞ்சமாக ஒரு சூரியக் குடும்பமாகப் பிரிந்து சென்றுவிடும்.

பேரண்டத்தில் ஒன்று சேர்த்து வாழ்ந்தாலும் அகண்டு செல்லப்படும் பொழுது… முதலில் உள்ள சூரியக் குடும்பம் அதனதன் வளர்ச்சியின் தன்மையைத் தானே எடுத்து வளரப்படும் பொழுது முதலில் உருவான சூரியன் செயலிழந்து மங்க நேரும்.

பின் அது திசை மாறி ஓடும் நிலையில் கரைவதும் மற்றொன்றுடன் மோதுவதும் அதனுடைய சுழற்சி மையங்கள் மீண்டும் கரைந்து மற்றவைகளுக்கு இரையாகின்றது.

மனிதன் உருப் பெற்று வாழ்ந்த பின் அவர்கள் மடிந்தார்கள் என்றால் தன் இனங்கள் தான் விருத்தி ஆகின்றது, இவர்கள் மடியப்படும் பொழுது அந்தச் சரீரம் கரைக்கப்படுகின்றது. அதைப் போன்று தான்
1.சூரியன் அழிந்தாலும் அது கரைந்து விடுகின்றது,
2.இவ்வாறு பேரண்டத்தில் உள்ள சூரியக் குடும்பங்கள் அனைத்தும் தன் இனங்கள் நட்சத்திரங்கள் உருப் பெற்று
3.அவைகள் பிரபஞ்சமாகத் தனித்துத் தனித்து உருவாகத் தொடங்கினால்
4.முதலில் உருவான சூரியநுக்குக் கிடைக்கும் அந்தப் பங்கு கிடைக்கவில்லை என்றால் அது செயலை இழந்து விடுகின்றது.

இதை ஐந்தாவது வயதிலிருந்து துருவன் நுகர்ந்து தனக்குள் அது விளைந்து தன் எண்ணத்தால் வெளிப்படுத்திய… அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் படர்ந்துள்ளது… அழியவில்லை…!

இதைத்தான் நமது குருநாதரும் நுகர்ந்தார்.
1.அவர் பெற்ற உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்து அதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையில்
2.நீ எண்ணி ஏங்கி அதை எடுக்கப்படும் பொழுது… நீ நுகரும் பொழுது உன் உயிரிலே அது உராயப்பட்டு
3.அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எப்படி அந்த உண்மைகளை உணர்த்துகின்றது…?
4.அதன் தொடர் கொண்டு நீ எப்படி அறிகின்றாயோ அதே போல்
5.மற்றவர்களுக்கு நீ இதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களுக்கும் அறியும் ஆற்றல் வருகிறது.

உதாரணமாக… கோபம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விட்டால் அதைச் சொல்லாக மற்றவரிடத்தில் பதிவு செய்யும் பொழுது கோபமாக சொன்னவரைத் திரும்ப எண்ணும் பொழுது இந்த உணர்வு எப்படி அவர்கள் உடலில் வளர்ச்சி பெறுகின்றதோ இதைப் போன்று தான் துருவன் கண்ட உணர்வுகள் அவன் வளர்ச்சியில் வளர படும்பொழுது அதை நீ நுகருகின்றாய் உனக்குள்ளும் இது விளைகின்றது.

அந்த உணர்வின் சொல்லாக நீ சொல்லப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை கேட்போருக்குள்ளும் பதிவாகி அவர் இதை நினைவு கொண்டு எடுப்பார்கள் என்றால் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வுகளை அவர்களும் அறிகின்றார்கள்.

மனிதனாக இருக்கும் பொழுது பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்ற நிலையில்
1,ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெருக்கப்படும் பொழுது
2.தனக்குள் புது உருவாக உருவாக்குகின்றார்கள் என்று பொருள்படும்படிச் சொல்கின்றார் குருநாதர்.

அதை எல்லாம் மனிதர்கள் நாம் தான் எண்ணத்தால் எடுக்க முடியும். மற்ற உயிரினங்கள் அதைக் கவர்ந்து எடுப்பதற்குண்டான வாய்ப்புகள் இல்லை.

தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட மிருகங்களைப் பார்க்கப்படும் பொழுது அதன் வலிமையை நுகர்ந்து பதிவாக்கி அந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வை நுகரப்படும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இந்த உடல் மடிந்தபின் உயிரான்மா வெளி சென்று அதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று அந்த மிருகத்தின் உணர்வைக் கலந்து அதன் ரூபமாக மாறுகின்றது.

இப்படித்தான் நாம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம் என்ற உண்மையைத் தெளிவாக்கிப் பிரபஞ்சத்தின் இயக்கங்களும் நட்சத்திரங்களுடைய மாற்றங்களும் அதை இளமைப் பருவத்திலிருந்து கண்டுணர்ந்த துருவன் அவன் எவ்வாறு பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
1.தியானத்தில் இதையெல்லாம் நீங்கள் காணப் போகின்றீர்கள்
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்க்கப் போகின்றீர்கள்.

அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டாயிரம் சூரிய குடும்பங்களில் துருவ நட்சத்திரங்கள் உண்டு. அதன் வளர்ச்சியில் சப்தரிஷி மண்டலங்களில்… அதில் குறைவாக இருப்பவர்களும் உண்டு. நம் பிரபஞ்சத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக உண்டு.

ஆனால் இதிலும் இந்த மூவாயிரம் ஆண்டுகளுக்குப்பின் நம் சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக யாரும் விண் செல்லவில்லை.
1.இப்போது நாம் அதற்கு வேண்டிய உணர்வை எடுத்து ஆன்மாக்களை விண்ணுக்கு அனுப்புவதனால்
2.இதன் நிலையில் கொஞ்சம் இப்போது சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.

நம் உடலில் இருக்கும் என்பது உயிரான்மா “ஊசி முனையின் அளவு” எவ்வளவோ அந்த அளவுதான்.

இங்கிருந்து இன்றைக்கு விண்ணுக்குச் செல்லக் கூடியவர்களுக்கு இந்த உணர்வின் தன்மை வளர்த்து அதனுடைய வளர்ச்சி வரப்படும் போது ஊசி முனை அளவுதான்.

அது மின் அணுவின் தன்மை வரும் பொழுது, ஒளியாக வரும். அது எடுத்துக் கொண்ட ஆன்மா நிலைகள் உடல் கருகிய நிலை கொண்டு ஒளி தான் இருக்கும். அது ஓரளவுக்குக் கொஞ்சம் விரிவடைந்திருக்கும்.

இப்பொழுது ஒரு கடுகை எடுத்து கொண்டால் இதில் மூன்றில் ஒரு பாகத்தைப் பிரித்தால் எப்படி ஒரு பாகம் ஊசி முனை போல் இருக்குமோ…
1.உயிரின் உணர்வின் அலைகள் கொஞ்சம் அதனுடைய அலைகளை வீசும்.
2.இது அதற்குப் பின் அதனுடைய வளர்ச்சிகள் இருக்கும்.

ஆனால்… சிவசக்தியாக கணவன் மனைவியாக அவர்கள் இணைந்திருந்தால் அதனுடைய வளர்ச்சி வேகமாக வளரும். அது, தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி.

1.அப்படி அல்லாதவர்கள் மின் அணு போன்றுதான்.
2.மனைவி அவர்களோடு இணைந்தால் அது நன்றாக வளர்ச்சி பெறும்.

பெண்களை அங்கு அனுப்பியிருந்தால் அதில் ஆண்களுடைய உணர்வு இணைந்தால்தான் இரண்டு உணர்வும் சேர்ந்து உணர்வைத் தனக்குள் எடுத்து வளரும் பருவம் அடையும்.

இதில் இத்தனை பக்குவம் இருக்கிறது, ஒன்று, இரண்டு அல்ல.

அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள். நாம் அவர்களுடைய உணர்வில் தொடர்பு கொண்டு இருக்கிறோம். நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணும் போது, நமக்கு அந்த அலைகள் கிடைக்க முடிகிறது.
1.நம் முன்னோர்கள் முன் சென்றால் பின் நமக்கு அந்த அலைகள் கிடைக்கிறது.
2.அந்த மாதிரி அனுப்பினால்தான் கிடைக்கும்… இல்லை என்றால், நாம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அலைகளை எடுக்க முடியாது.

நாம் அதைப் பெறுவதற்குத் தான் நமது குருநாதர் கொடுத்த “அந்த நட்சத்திரத்தின் உணர்வை” உங்கள் உணர்வின் நினைவுகளில் கொடுக்கின்றோம்.

அதே மாதிரி…
1.இந்த உடலை விட்டுச் சென்ற “அந்த ஆன்மாக்களின் முகப்புகளில்…”
2.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வைச் சேர்த்து விடுகின்றோம்.
3.இந்த ஆன்மா மேலே போனால் அந்தத் திசையின் கோடியில் இழுத்துக் கொண்டு போகும்.
4.அங்கே சென்ற உடன் உடல் பெறும் உணர்வுகள் கருகி விடும்.
5.ஒளி பெறும் அறிவு நிலைத்திருக்கும்.

இப்பொழுது, ராக்கெட்டை இங்கிருந்து ஏவுகிறார்கள். அப்படி ஏவும் பொழுது, அதில் இந்த இடத்திற்குப் போக வேண்டும் என்கிறார்கள்.
1.அதில் வைத்திருக்கக்கூடிய செயற்கைக் கோள்,
2.அந்தக் கம்ப்யூட்டரில் இந்தக் கோளின் நிலையைப் பதிவு செய்திருந்தால் அந்தப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
3.இல்லையென்றால்… கோளின் அடையாளம் தெரியாது.

ஆகவே அதே மாதிரித்தான் உங்களுக்குள் இந்த நிலையைப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஊனில் பதிவு செய்யும் நிலைகள் கொண்டு
1.எந்த ஞானத்தின் முகப்பை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ இதன் நினைவு கொண்டு உங்கள் நினைவாற்றல் வரும்.
2.அப்பொழுது அந்த ஆன்மாவின் முகப்பில் அது இணைந்தது என்றால்
3.விண் சென்றபின் அந்தச் சப்தரிஷி மண்டல அலைக்கு அது செல்லும்.
4.இல்லை என்றால் வான் வீதியில் வீசி விடும். எங்கு போகும் என்றே தெரியாது…!
5.ஆகவே அதற்கு வழி தெரிய வேண்டும்.

இல்லையென்றால் அத்தனை சாதாரணமாக அனுப்ப முடியாது. இதையெல்லாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞான அறிவில் எப்படி “டெக்னிக்கல்…” இருக்கிறன்தோ இந்த மெய்ஞான அறிவில் இதைத் அறிந்து கொள்ள வேண்டும்.

1.சாதாரணமாக வாயிலே சொல்லிவிட்டு விண்ணுக்கு அனுப்பி விடலாம் என்று சொன்னால்
2.அதுவெல்லாம் ஒன்றும் நடக்காது… அத்தனை சிரமம் இருக்கின்றது.

ஆனால் அவர்கள் வாயில் சொல்வதில்… அதைப் பெறுவதற்கு யாம் சொல்லும் இந்தத் திசைகள்… இந்த உணர்வுகள்… எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

 

இந்த வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட நிலையில் எப்படியும் பொறாமை வெறுப்பு வேதனை அன்பால் பண்பால் கவர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருப்பினும்
1.அந்தப் பதிவுகள் நமக்குள் நிலைக்காது அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்து
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் வெளிப்படுத்தும் போது
3.எத்தனை பேரின் உணர்வுகளை நாம் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ
4.அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது… அந்த மனிதரின் உணர்வை சந்தர்ப்பத்தால் நாம் சேர்த்த…
5.நமக்குள் உருப்பெற்ற அந்த அணுக்களுக்குள் மகரிஷிகள் உணர்வை இணைத்துப் பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுவது தான் தியானம்.

ஒரு மனிதன் நோயாக இருக்கின்றான் என்றால் அந்த நோயைக் கவர்ந்த பின் நல்ல உணர்வுடன் அது கலந்து நல்ல உணர்வுகளால் உருப்பெற்ற அணுக்கள் மாற்றமடைகின்றது.

நல்ல உணர்ச்சியை வளர்க்கும் அந்த அணுக்கள் குன்றும் பொழுது நல்ல உடலை உருவாக்கிய அணுவின் தன்மை பலவீனம் அடைகின்றது.

பலவீனமடையாது காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்கள்… அதாவது எத்தனை பேரை நாம் எண்ணினோமோ அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எத்தனை பேருடைய நல்லதை எண்ணி அவர்களின் வேதனையை கவர்ந்தோமோ… அது நம் நல்ல உணர்வுடன் கலந்து நம் நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்துவதை
1.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் எண்ணி அந்த உணர்வினை நமக்குள் இணைக்கப்படும் பொழுது
2.இன்னொரு மனிதனில் விளைந்த தீமையின் உணர்வு “நமக்குள் விளையாது” அதை குறைக்கச் செய்யும்.

அதைத் தான் இந்நேரம் வரை உங்களுக்குள் உபதேசித்து அருள் மகரிஷிகள் உணர்வைச் சிறுகச் சிறுக அவர்கள் வளர்ச்சி பெற்றதை உங்களுக்குள்ளும் சேர்ப்பிக்கச் செய்த்து.

1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்திலிருந்து வளர்ச்சி பெற்ற உணர்வை
2.அந்தக் காலப்பருவத்தின் வயதை (துருவன் – ஒரு வயதிலிருந்து ஐந்தாவது வயது வரை பெற்றதை) உங்களுக்குள் சொல்லி
3.அவர் உடலில் விளைந்த உணவுகள் இங்கே பரவி இருப்பதை
4.அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும்5. வானியல் தத்துவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும் உங்களுக்குள் இணைத்து உபதேசித்து
5.இந்த உணர்வின் ஆற்றலை ஈர்க்கும் தன்மையாக தியானிக்கப் போகின்றோம்.

அந்த வானியல் உணர்வுகள் தனக்குள் அறிவாக எப்படி அகஸ்தியனுக்குள் இணைந்ததோ… துருவத்தை நுகர்ந்தறிந்து ஒளியின் சிகரமாக எப்படி மாற்றி அமைத்தாரோ…
1.அந்தத் துருவனின் வளர்ச்சியின் தன்மையை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்குத் தியானிப்போம்.
2.குருநாதர் எனக்குள் படிப்படியாக அதை எப்படிக் கொண்டு வந்தாரோ…
3.அதை வைத்து நீங்கள் தியானிக்கும் போதெல்லாம் அந்தச் சக்தி உங்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

உங்கள் கண்ணின் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்துங்கள்.
1.நம் பூமி “துருவத்தில் கவரும் அந்தச் சக்தி” நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது உங்களுக்குள் மிதக்கின்ற மாதிரி அந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து துருவ நிலைகள் ஈர்க்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி “ஏங்கிச் சுவாசியுங்கள்…”

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று “உங்களை மிதக்கும்படி செய்யும்…” உடல்கள் இலகுவாகும்.
1.துருவத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் பொழுது… “இது அதிகமாக அதிகமாக…”
2.இந்த உணர்வுகள் வலுப்பெற்றால் “புவியின் ஈர்ப்புக்குள் வராது…”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்.
4.அந்த ஈர்ப்பு வட்டத்தில் விளைந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணையச் செய்யும்.

ஏனென்றால் மனிதர்களாக இங்கே வாழ்ந்தவர்கள் தான் அங்கே சென்றது. அதனால் “இடைமறித்து அந்த உணர்வுகளை உங்களுக்குக் கொடுத்து” அதைப் பெறும்படி செய்தது.

1.துரித நிலையில் அந்தச் சக்திகளை எல்லாம் உங்களைப் பெறச் செய்வதற்கும்
2.அதன் மூலம் நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் நல்லதைச் செய்வேன்… அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்…! என்று சொல்லி நாம் நல்லதையே எண்ணுவோம்…! இருந்தாலும்
1.ஒருவர் வேதனைப்படும் பொழுது அந்த ரெக்கத்தில் நாம் பரிபக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
2.நம் சொல்லைச் சொல்லும் பொழுது பிறரை வேதனைப்படும் நிலைக்கு உருவாக்காதபடி அதிலே பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

நோயுடன் ஒருவர் மிகவும் சிரமப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்தப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் வலுக் கூட்டி எடுத்துக் கொண்டு
1.அந்த அருள் ஒளி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால் இது “பரிபக்குவம்…!”

வடையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் சரியாகச் சூடு ஆகாதபடி மாவைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்..? எண்ணையைப் பூராம் குடித்துவிட்டு வடையின் ருசி கெட்டுப் போகும்.

இதைப் போல் தான் நாம் நல்ல மனம் கொண்டு ஒரு மனிதன் நோயால் வாடுகின்றான் என்று உதவி செய்தாலும் அவரின் வேதனையைப் பக்குவம் தவறி நாம் கேட்டுணர்ந்தால்
1,அந்த உணர்வுகள் நமக்குள் சென்று நம் உடலுக்குள்ளும் நோயைத் தான் உருவாக்கும்.
2.நம் நல்ல மனமும் சுவை கெட்டுப் போகும்.
3.நல்ல குணத்தின் இயக்கமும் கெட்டுவிடும்.

ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்..?

காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டு உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று இந்த உணர்வைக் கூட்டி அதைச் சுவாசித்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் அவருடைய வேதனையை நாம் முதலில் கேட்டறிந்தோம். இந்த உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த வலுவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும்…! என்றால் இது பக்குவ நிலை கொண்டு அவருடைய மனதைத் திருத்தவும் நமக்குள் அந்தச் சுவை மிக்க உணர்வை நமக்குள் உருவாக்கவும் உதவும்.

வாழ்க்கையில் அதைச் (நல்லதை எல்லாம்) செய்வேன்…! சொல்லி விட்டுத் திடீரென்று என்ன செய்வார்கள்…? எல்லாம் செய்து கொண்டே இருப்பார்கள். கடைசியில்…
1.நான் எல்லா நன்மையும் அவனுக்குச் செய்தேன்…
2.ஆனால் பதிலுக்கு இப்படிச் செய்கிறான் பார்…! என்று நாம் கோபமாக மாறும் பொழுது
3.இது எல்லாமே போய்விடுகின்றது… இருள் சூழ்ந்துவிடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை வராதபடி இந்த வாழ்க்கையிலே நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதாவது “நல்லதைத் தான் செய்வேன்…!” என்ற பாட்டைப் பாடிவிட்டு மற்றவர்களின் குறைகளையும் வேதனைகளையும் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ளும் அந்தப் பரிபக்குவ நிலையை எனக்கு அருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டிக் கேட்க வேண்டும்… அந்த அருளைப் பெற்றுப் பழக வேண்டும்.

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…!

அதாவது…
1.நாம் இந்த வாழ்க்கையில் அதைச் செய்ய வேண்டும்… இதைச் செய்ய வேண்டும்… அப்படிச் செய்ய வேண்டும்… என்றெல்லாம் விரும்புவோம்
2.அந்த ஆசையினால் நாம் என்ன செய்கிறோம்..?
3.நமக்குள் தீமை என்ற உணர்வுகளும் வந்து சேர்ந்து விடுகின்றது.

தீமை என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகின்றோம்…
1.இந்த உடலின் ஆசை தான் நமக்குள் வருகின்றது.
2.நமக்குள் உயிரான ஈசன் இருக்கின்றான்..! என்ற நிலையையே மறந்து விடுகின்றோம்.

வேதனை என்ற உணர்வை எடுக்கும் பொழுது அந்தச் சிவனாக உருவாக்கிய இந்த உடலில் கடும் வேதனையை உருவாக்குகின்றது.

ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற கோவிலில் அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர
1.அந்த ஈசனான நிலைகளை நாம் வணங்க மறுக்கின்றோம்.
2.அவன் அறிவை எடுத்து நாம் தெளிவாகும் நிலையை இழந்து விடுகின்றோம்.

ஆகவே நாம் இந்த உடலின் இச்சைக்கு வாழாதபடி
1.இருளை அகற்றும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும் என்றும்
3.உயிர் எவ்வாறோ… நீ எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… என் உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளிமயமாக மாறுதல் வேண்டும் என்றும்
4.உயிருடன் ஒன்றிடும் நிலையாக நம்முடைய வாழ்க்கையை அமைத்து
5.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டிக் கேட்க வேண்டும்.

துருவன்… துருவத்தின் ஆற்றலை ஜீரணித்து ஒளியானவன்

 

அகஸ்தியன் துருவத்தின் வழி வானுலக ஆற்றலைத் துருவத்தின் வழி நம் பூமி பெறுவதை இடைமறித்து அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தறிந்தான்.

அந்த உணர்வுகளை நாமும் பெற…
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
2.அந்த துருவத்தினை எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
3.நமது பூமி சுழல்வதும்
4.பிரபஞ்சத்தில் உருவாகும் நிலைகள் பூமி செல்லும் பாதையில் அணுக்களாக இருப்பதை
5.துருவப் பகுதியில் அதை ஈர்க்கும் சக்தியாக வருவது உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
6.கண் வழி தான் இந்த நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றச் செய்து
7.அகக்கண் வழிகொண்டு நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

புறக்கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்த்தன் துணை கொண்டு
1.உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து நினைவினைப் பூமியின் துருவப் பகுதிக்குச் செலுத்தினால்
2.துருவப் பகுதியில் கவரும் அந்த நிலையை பூமி சுழன்று கொண்டிருப்பதையும்
3.இந்த எல்லையிலிருந்து வானுலக ஆற்றலின் சத்து அந்தத் துருவப் பகுதி வழியாக எப்படி வருகிறது…? என்பதும் காட்சியாகத் தெரியும்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன் அதன் உணர்வே ஒளியாக மாறும் நிலை அவனுக்கு வருகின்றது.

பூமி தான் சுழலும் பாதையில்… நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தக் கூடிய உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்குப் பரவி வருவதையும்… மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவத்தின் ஈர்ப்பிற்குள் வருவதையும் உங்களால் கவர முடியும்.
1.நுகரும் பொழுது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலில் பரவும்.
2.சிறிது நேரத்தில் நெடி கலந்த நிலைகளும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும் நறுமணம் கொண்ட உணர்வுகளும் வந்து கொண்டே இருக்கும்.

உணர்வுகள் உயிருடன் ஒன்றி உடலுக்குள் சென்று நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணங்களிலும் அது மோதும் பொழுது
1.உடலுக்குள் பல அதிசயங்களாக… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
2.ஒரு ஆனந்தமான ஒளி வெளிச்சமாக நமக்குள் வந்து கொண்டிருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.

சாதாரண எண்ணெயில் ஒரு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினோம் என்றால் அதிலே ஒரு எரிச்சல் கலந்த நிலையாகத் தெரியும். ஒரு பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது எண்ணெயின் சக்தியை ஆவியாக மாற்றி அது குளிர்ந்த ஒளியாக மாற்றும்.

அதைப் போல
1.இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள் துருவ மகரிஷியின் அருள் உணர்வுடன் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றி விட்டுக் குளிர்ந்த ஒளியாகக் காணுவது போன்று
3.உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் ஒளியின் தொடராகப் பரவும்.

உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களில் மீது மோதும் பொழுது
1.அந்த ஞானியின் உணர்வு உங்கள் உடலுக்குள் பளீர்…ர் பளீர்…ர் என்று மகிழ்ச்சி பெறும் உணர்வாகத் தோற்றுவித்துக் கொண்டே வரும்.
2.உடலில் மாற்றங்கள் பெறுவதைக் காணலாம்

வெல்டிங் வைக்கப்படும் பொழுது பளீர்…ர் என்று மின் ஒளிகள் வரும். அது எரிச்சல் கலந்ததாக இருக்கும் ஆனால் பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது அது எப்படிக் குளிர்ந்ததாகக் கண்ணுக்குப் புலப்படுகின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் அருள் மகரிஷிகள் உணர்வுகள் கலந்து மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக
2.நம் உடலில் ஒளித்தன்மை படர்வதைக் காணலாம்… உணரலாம்.
3.ஒரு சுவை மிக்கதாக மாறி வரும்.

புருவ மத்தியில் எண்ணி நினைவினைத் துருவ மகரிஷிகள் பால் செலுத்தி துருவ மகரிஷியின் ஆற்றல் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தப்படும் பொழுது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டி அதன் மூலம் உட்பொருளைக் காணுவது போன்று உங்கள் உடலுக்குள் வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
2.ஒவ்வொரு உணர்வின் அலைகள் மோதும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்களுக்குள் தோன்றுவதையும்
3.ஒளி கண்ட பின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஆற்றல்மிக்க சக்தியாக இது இணையும்.
4.துருவ மகரிஷியின் உணர்வுகள் உயிருடன் மோதும் பொழுது மெர்குரி போன்று உயிரிலே வெளிச்சம் வரும்.
5.இளம் நீலமாக ஒளி அலைகள் புருவ மத்தியில் கண்களுக்குப் புலப்படும்.

இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவைச் செலுத்தப்படும் பொழுது உடலில் மகிழ்ச்சி பெறும் நிலை உருவாகும்.

1.இதற்கு முன்பு அறியாது சேர்ந்த பல தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க இது உதவும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து மன பலம் பெற இது உதவும்.

விண்ணுலக ஆற்றல் பூமியின் ஈர்ப்பால் துருவத்தின் வழியாகக் கவரப்பட்டு நடு மையத்திற்குச் சென்று எப்படி அடைகின்றது…? அதனின் அடர்த்தி மின் அணுக்களாக பூமிக்குள் சென்று குவித்தவுடன் ஒன்றுக்கொன்று மோதும் பொழுது கொதிகலன் எப்படி உண்டாகின்றது…? அதிகமான வெப்பம் அங்கே எப்படி உண்டாகிறது…? என்று குருநாதர் காட்டுகிறார்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு அணுகுண்டைப் போட்ட பின் அணுக்கதிரியக்கங்கள் மற்ற பொருள்களுடன் தன் இனமான நிலைகளுடன் மோதி… இது வளர்த்துக் கொண்ட உலோகமானாலும் கல்லானாலும் மண்ணானாலும் அதை ஆவியாக மாற்றி ஒரு புகை மண்டலமாக மாறுகின்றது. மற்றொன்றை அழித்துத் தன் இனமாகப் பெருக்கி அதன்பின் அது மடிந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் பூமிக்குள் வளர்ச்சிகள் அடைகின்றது என்ற நிலையைக் குருநாதர் காட்டுகின்றார்.

இது அனைத்தையுமே… வானுலக ஆற்றலைத் தன் உடலுக்குள் காணுவது போல தன் உடலுக்குள் இருந்த உணர்வை இந்த மண்ணுலகிலும் (புவியியல்) ஊடுருவிச் செலுத்தித் துருவன் காணுகின்றான். அதிலே தாவர இனங்களின் வளர்ச்சியையும் காணுகின்றான்.

உயிரணுக்கள் நீர் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உருவாக்கப்பட்டு அதனின் கருமுட்டைகள் புயல் காற்றிலே சிக்கப்பட்டு மேக மண்டலத்துடன் கூடி நிலப்பரப்பில் விழுகப்படும் பொழுது… எதன் எதன் கலவைகள் அதற்குள் கலந்திருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு இங்கே தரைவாழ் உயிரினங்களாக உருவாகின்றது.

ஏனென்றால் இதையெல்லாம் தனித்துத் தனித்துப் பிரித்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆயுளும் பத்தாது… நேரமும் பத்தாது…! சுருக்கமான நிலைகளில் அவர்கள் கண்ட உணர்வினை குருநாதர் காணும்படிச் செய்தார். நீங்களும் அதைக் காணும் நிலைகள் வரும்.

துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலையில்… அதனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக எப்படி அழியாது பேரின்பம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாம் அனைவரும் அந்த அழியா நிலைகள் பெறலாம்.

இந்த உயிரில் எது இணை சேர்த்து வளர்க்கப்படுகின்றதோ அதை உயிர் அணுத்தன்மையாக மாற்றுகின்றது என்ற நிலையை அறியச் செய்வதற்குத் தான்
1.நம் குருநாதர் கொடுத்த இந்தச் சக்தியை நீங்களும் பெற்று உடலுக்குள் வளர்ச்சியாகி
2.அந்த அணுத் தன்மையாக வளர்த்து அதையே நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

ஆனால் அகஸ்தியன் தன் தாய் கருவிலே இருக்கும் போது விஷத்தன்மையை அடக்கி… அதன் வலுவின் தன்மைகொண்டு மற்றதை அறியும் ஆற்றல் அவனுக்கு வந்தது போன்று…
1.எல்லோருக்கும் அந்தச் சந்தர்ப்பம் வருவதில்லை.
2.ஒருவரால் உருவாக்கப்பட்டு அதிலே விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டு
3.அதே இன மக்களால் சந்தர்ப்பத்தால் கவரப்பட்டு வெளிவருவது தான்… எல்லோரும் அந்த வழியில் செய்ய முடியாது.

குருநாதர் எத்தனையோ தவத்தைச் செய்தார். அதன் வழியில் நானும் சென்றேன். அவர் பதிவு செய்த நிலைகளை அறிவதற்காக காடு மேடு அனைத்தும் அலைந்தேன். உண்மையை உணரும்படி செய்தார். எனக்குள் வளரும் நிலையை உருவாக்கினார்.

அதே போன்று நீங்கள் எல்லோரும் காட்டிற்குள் சென்றால்… தொழில் செய்வது எங்கே…? சாப்பிடுவது எங்கே…? குடும்பம் எங்கே அப்படி இருக்க முடியும்…? முடியாது…!

“யாராவது ஒருவர் விளைய வைக்கும் நிலையில் தான் செயல்படுத்த வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்… அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ…? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.

அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.

ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.

ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.

ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன…?
முதலிலே சூரியன்…
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்…
நான்காவது கண்கள் கண்ணன்.

துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்

ஆறாவது நிலை – வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது…?

1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது… பரசுராம்…! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.

பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து நரசிம்மா… (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.

தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,

ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது… பறந்து செல்கிறது…
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது…? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.

இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்…!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது…? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.

இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி… பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இது தான் ஏகாதசி பத்தாவது நிலை என்பது.

தாய் கருவிலே… குழந்தைகள் பெறும் பூர்வ புண்ணியம் பற்றிய உண்மைகள்

 

1.பூமி தன் துருவப் பகுதி வழியாக விண்ணிலிருந்து கவர்ந்து வருவதைத் தன் ஐந்தாவது வயதில் துருவன் கண்டுணர்ந்து
2.வானஇயல் தத்துவம் புவிஇயலாக மாறுவதைத் தன் தாய் தந்தையரிடம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றான்.

அந்தக் கால பாஷையில் அவன் வெளிப்படுத்தும் போது… அதற்காக வேண்டி ஒவ்வொன்றையும் பொருள்களை ஜாடையில் காட்டி அதைச் சொல்கின்றான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே வருகின்றது.

இருந்தாலும் ஐந்து வயது நிரம்பும் போது தன் குழந்தையின் அறிவைக் கண்டு தாய் தந்தையர் மிகவும் ஆனந்தப்படுகின்றார்கள்.

ஆனந்தப்பட்டாலும்… அவர்கள் பூசிக் கொண்ட விஷத்தன்மையான மூலிகைகளினால் உடலில் அணுக்கள் உருவாகி… அது வளர்ச்சி பெற்று விஷத்தின் தன்மையாக நுகரப்படும் பொழுது அவர்கள் உடலில் நோயாக மாறுகின்றது.

அகஸ்தியன் தாய் தந்தையர் உடலில் அந்த விஷத்தன்மைகள் பெருகி மனிதனாக உருவாக்கிய அணுக்களுக்கு எதிர்நிலையாக ஆகிறது. கடும் வியாதியாக மாறி அவர்கள் மரணம் அடைகின்றார்கள்.

ஆனால் தாய் கருவிலிருக்கப்படும் பொழுது
1.அகஸ்தியனுக்கு விஷத்தின் ஆற்றலை மாற்றிடும் அணுக்கள் வளர்ச்சி பெற்று
2.விஷத்தை அடக்கிடும் சக்தியாகப் பூர்வ புண்ணியமாக அவனுக்குக் கிடைக்கின்றது.

தாய் தந்தையருக்கோ… அவர்கள் உடலில் வளர்ச்சி பெற்ற… மனிதனைத் தெளிவாகும் அத்தகைய அணுக்களில்
1.விஷத் தாவர இனங்களை ஆவியாக மாற்றிச் சுவாசிக்கப்படும் பொழுது அவர்கள் உடலில் பரவி
2.மிருகங்கள் இந்த வாசனையை நுகர்ந்தபின் அஞ்சி ஓடியது போல்
3.இவர்கள் உடலில் அந்த வாசனைகள் சிறுகச் சிறுகப் புகுந்து நோயாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தாய் கெமிக்கல்களை வைத்துத் தொழில் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். வேலை செய்யும் போது அங்கிருக்கக்கூடிய விஷத்தன்மைகளைத் தாய் நுகர்கிறது.
1.கருவிலிருக்கும் குழந்தையும் அதை நுகரப்படும் பொழுது
2.அந்தக் குழந்தை “விஷத்தன்மையைத் தாங்கும் சக்தியாக” வளர்கிறது.

ஆனால் தாய் நுகர்ந்த கெமிக்கல் உடலுக்குள் சென்ற பின் தாய்க்குக் கடும் நோயாக ஆகி அது மடியும் தன்மை வருகிறது.

அதே சமயம் தந்தை… இந்தக் கெமிக்கலின் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து அதிலே உருப்பெறும் கருவின் தன்மை பெண்பால் நிலைகள் கொண்ட சுக்கிலத்துடன் கலக்கப்படும் பொழுது… ஆணில் விளைந்த விஷத்தின் தன்மை அது இரண்டும் கலந்து கரு முட்டையுடன் இணைக்கப்படும் பொழுது
1.கருவிலே உருப்பெரும் குழந்தை உடலில் விஷத் தன்மை பெருகி
2.அதற்குக் “கடும் நோயாக இது உருவாகிவிடுகிறது…”

ஏனென்றால் இதனுடன் இணைந்த உணர்வுகள் கருவாக வளர்க்கப்படுவதற்கு “அந்தக் கெமிக்கல்” உணவு கொடுக்கின்றது… உடலை உருவாக்குகின்றது. ஆக அந்த விஷத்தன்மை திடப்பொருளாக உடலாக மாற்றப்படும் பொழுது நோயாகி விடுகின்றது.

தாய் அந்தக் கெமிக்கல் கலந்த உணர்வைத் தான் சுவாசிக்கப்படும் பொழுது அது தாய் உடலில் நோயாகிறது. கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வு பட்டபின் நோயாக அது மாறுவதில்லை.

அதே சமயம் ஒரு நோயுற்ற குழந்தை வேதனைப்படுவதைத் தாய் உற்று நோக்கி அந்த உருவத்தினை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணையப்படும் பொழுது அந்த நோயுற்ற உடலில் விளைந்த உணர்வுகள் சுவாசிக்கப்படும் பொழுது… கருவிலிருக்கும் குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

1.அந்தக் குழந்தை உடலில் எந்த நோய் உருவானதோ
2.அதே நோய் கருவிலே உருவாகும் குழந்தைக்கும் வந்து விடுகின்றது.

ஏனென்றால் இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களுக்குச் சொல்கிறேன்.

மற்ற விஷத் தன்மைகளைப் பார்க்கும் பொழுது தான் சுவாசித்த உணர்வுகள் இந்த அணுக்களில் வளரப்பட்டு தாய் கருவிலே விளையப்படும் பொழுது விஷத்தை வெல்லும் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது தேள் கொட்டி விட்டால் அந்த விஷத்தன்மை கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் ஊடுருவி விடுகின்றது. குழந்தை பிறந்த பின் தேளை வைத்திருந்தாலும் “அந்தத் தேளின் விஷம் குழந்தையைப் பாதிப்பதில்லை…”

அதே போல ஒரு விஷமான பாம்பு தாயைத் தீண்டிவிட்டால் மருத்துவரிடம் சென்று அந்தத் தாய் பிழைத்து விட்டால் பாம்பினுடைய விஷம் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குள் ஊடுருவி… “அந்த விஷத்தை வெல்லும் சக்தியாக அந்தக் குழந்தை பெறுகின்றது பூர்வ புண்ணியமாக…!”
1.பல விதமான நிலைகள் கொண்டு
2.கருவில் உருவாகும் சிசுக்களுக்கு இப்படி உருவாகின்றது.

பரிணாம வளர்ச்சியில் வளரக்கூடியது மற்ற உயிரினங்கள். பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த மனிதனின் உணர்வுக்குள் விளைந்தது… இன்னொரு உடலுக்குள் புகுந்த பின் வளர்ச்சி அடைந்த நிலையில் “மீண்டும் அது வளர்ச்சியடையும் தொடருக்கு வருகின்றது… விஷத்தின் தன்மை…”

இந்த இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லது.

ஏனென்றால் ஒரு சிலர் குழந்தையைப் பார்த்த பின் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தாய் உற்றுப் பார்க்கப்படும் பொழுது தனக்குள் இது ஊழ்வினையாக மாறுகின்றது… அணுக்களாக மாறுகின்றது.

அந்த அணுவின் தன்மை மாற்றப்படும் பொழுது அதன் உணர்வு அதிகமாக விளைந்து கருவில் விளையும் குழந்தைக்கு வித்தாக மாறுகின்றது. ஆனால் கண் கொண்டு எந்த மனிதனைத் தாய் உற்றுப் பார்த்ததோ அங்கே விளையும் நோயின் அணுக்கள் தாயின் உடலில் விளையும்.

தாயின் கருவில் விளையும் சிசுவிற்கு இந்த விஷத் தன்மை வளரப்படும் பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் இங்கே வீரியமடைந்து அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே கருவில் வளரப்படும் பொழுது அந்தத் தாய் உயர்ந்த ஞானத்தை எடுத்துக் கொண்டால் உதாரணமாக…
1.யாம் இப்பொழுது போதிக்கும் உணர்வுகள் அகஸ்தியன் கண்டுணர்ந்த விண்ணின் ஆற்றலை
2.பிரபஞ்சத்தை உற்று நோக்கி அவன் பெற்ற சக்திகளை
3.தன் கருவிலிருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று கருவிலே நினைவைச் செலுத்தினால்
4.அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் கருவில் விளையும் சிசுவிற்குக் கிடைக்கிறது.

அகஸ்தியன் உடலில் உருப்பெற்ற உணர்வுகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டே உள்ளது. அகஸ்தியன் ஒரு உணர்வினை நுகர்ந்த பின் இந்த உணர்வின் எண்ணங்கள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தாயிடம் சொல்கின்றான்.

தான் கற்றுணர்ந்ததைத் தன் அருகிலிருக்கும் சகாக்களுக்கும் சொல்லப்படும் பொழுது அவர்கள் செவிகளில் இது படுகின்றது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்.

1.அப்படிக் கேட்டுணர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைகின்றது… நேருக்கு நேர் விளைகின்றது.
2.அக்காலத்தில் அகஸ்தியனைச் சூழ்ந்து வாழ்ந்தவர்களும் இதே சக்தியைப் பெறுகின்றார்கள்.

நம் தெருவிலே ஒரு போக்கிரிப் பையன் இருந்தால் அவன் செய்யும் சேட்டை எல்லாம் அவனுடன் பழகக் கூடிய மற்ற பையன்களுக்கும் இணைந்து… அவர்களும் போக்கிரியாக மாறுவார்கள். ஒரு பையன் கூட நல்ல பையனாக வரமாட்டான்.

குழந்தைப் பருவத்தில் நல்லவனாக இருந்தாலும் ஒருவன் ரொம்ப சேட்டை செய்கிறான் என்று அதை உற்றுப் பார்த்தால் அவன் செய்யக்கூடிய உணர்வுகளை எல்லாம் நுகரப்படும் போது இங்கேயும் மாற்றங்கள் ஏற்படும்.

அக்காலங்களில் அகஸ்தியன் வாழ்ந்த தென்னாடு எல்லாம் கடலுக்குள் சென்று விட்டது. அகஸ்தியன் உருபெற்ற அந்த மலை எல்லாம் கடலுக்குள் தான் இருக்கின்றது… மேவி விட்ட்து.

அதற்குப் பின் வெளிவந்த பூமி தான் இப்பொழுது நாம் கண்ணிலே காணக்கூடிய நிலை எல்லாம். அக்காலங்களில் மலைப்பகுதிகளுக்கும் பல காட்டுப் பகுதிகளுக்கும் வந்துள்ளான்.

1.வானுலக ஆற்றலைத் தனக்குள் அவன் எடுத்ததால்
2.தனக்கு நீர் வேண்டும் நினைக்கும் பொழுது எப்பகுதியில் இருந்து எந்தெந்த உணர்வுகளைச் சுவாசித்தானோ
3.இந்த உணர்வுகள் அந்தப் பாறையில் படுகின்றது… அங்கே நீர் உருவாகின்றது.

மலைப்பகுதியில் சில பாறைகள் இருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் மேகமூட்டமாக மாற்றி அந்த மலைப்பகுதியில் நீராக மாற்றும் சக்தி வரும்.

சில இடங்களில் மலை உச்சியில் பார்த்தோம் ஒன்றுமே இருக்காது… நீர் ஊற்றாக அங்கு வந்து கொண்டிருக்கும். ஆனால் கீழே தரையிலே சமமான இடத்திலே நீர் இருக்காது.

சில இடங்களில் மேலே வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் காந்தப் புலனறிவு சூரியனுடைய கதிரியக்கங்களை அதிகமாகக் கூட்டினால் அதிலிருந்து எக்கோ வரும். எக்கோ வரக்கூடிய இடங்களில் மேகங்களை இழுக்காது… கலைத்து விட்டு விடும். அங்கே நீர் இருக்காது.

ஏனென்றால் அந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மைப் போகும்படிச் சொல்லி
1.வானஇயல் ஆற்றல்கள் புவிஇயலுக்கு மாறும் பொழுது
2.மனிதனான பின் மனித நிலையிலிருந்து பதிந்த அந்தக் காந்தப்புலன் எப்படிப் படுகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோலமாமகரிஷி “ரிஷி நிலையை” எப்படிப் பெற்றார் என்று உணர்வதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் (ஞானகுரு) ஆறு வருடம் தியானமிருந்து வந்தோம். மழைக் காலம் வரும் பொழுதெல்லாம் அங்கே செல்வோம்.

கோள்களின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அதனால் தான் அவரைக் கோலமாமகரிஷி என்பது. அவர் கண்டறிந்த உண்மைகளை அறிவதற்காக குருநாதர் அங்கே என்னை அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் அந்தக் கோள்களின் இயக்கங்களை அங்கிருந்து தியானித்தேன்.

இதை எல்லாம் பார்த்து அறிந்து உணர்வதற்காக வேண்டி மங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பேன். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள்.

இரண்டு பேரும் இறந்தவுடன் பையனுடைய பாட்டி என்ன செய்கிறது…? நீ பிறந்ததும் அப்பாவையும் அம்மாவையும் தூக்கி விழுங்கி விட்டாய்… நாசமாகப் போகிறவனே…! எங்கேயாவது தொலைந்து போடா…! என்று அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பையனுடைய அக்காவோ… ஏன் பாட்டி…! பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன தெரியும்…? அதற்காக வேண்டி அவனைத் திட்டுகிறாயே,..! என்று சொல்கிறது.

உனக்கு ஒன்றும் தெரியாது. இவன் பிறந்த நேரத்தில் தான் எல்லோரையும் விழுங்கி விட்டான்… இந்தக் கழுதையை எங்கேயாவது குப்பையில் போடு..! என்று பாட்டி பேசிக் கொண்டே உள்ளது.

இதெல்லாம் நடக்கும் பொழுது நான் அவர்கள் வீட்டிலே போய் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே என்ன… ஏது… அது எப்படி நடக்கின்றது…? என்பதை அறிந்து கொள்வதற்காக குருநாதர் சொன்ன வழியில் அங்கே சென்று கொண்டிருக்கின்றேன்.

அங்கே சென்று அவர்களுடன் பழகிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பையன் பேசுவதும்… அந்தப் பாட்டி பேசுவதும்… இப்படியே போராடிக் கொண்டே இருந்தார்கள்.

அந்தப் பாட்டி இறந்தது. ஆனால் தன் பேத்தி மீது பற்றாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பாட்டி தான் குடும்பத்தை முழுவதுமாக ஆதரித்து வந்தது.
1.தன் பேத்தி மீது மிகவும் பிரியமாக இருந்ததால்
2.இறந்த பின் பாட்டியின் உயிராத்மா பேத்தியின் உடலுக்குள் வந்து விட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் அக்காவும் பேசத் தொடங்கினார்கள்.

தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில் தம்பியைப் பார்த்து, “தொலைந்து போகிறவனே.. எல்லோரையும் தூக்கி வாரி விட்டாய்… நாசமாகப் போடா…!” என்று சொன்னாள். அதன்படியே தம்பியை விரட்டி விட்டாள்.

இது நடந்த நிகழ்ச்சி…!

1.ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்குள் சென்ற பின் அது எப்படி இயக்குகிறது…?
2.உடலுடன் இருக்கும் பொழுது இந்த உணர்வுகள் மாறியதும்
3.அவர்கள் எப்படி இயங்குகின்றனர்…? என்பதை அனுபவபூர்வமாக என்னால் அங்கே அறிய முடிந்தது.

இந்த மாதிரி குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு இதை எல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை எடுப்பது மாதிரி வேஷ்டியும் துண்டும் மட்டும் தான் போட்டுக் கொண்டு போவேன்.
1.அங்கங்கே என்ன நடக்கிறது…
2.அந்த உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…?
3.சாப அலைகள் என்ன செய்கிறது…?
4.நோயின் உணர்வுகள் எப்படி வருகிறது…? இறக்கச் செய்கிறது…? என்று
5.எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குத்தான் காட்டிற்குள்ளும் நகரத்திற்குள்ளும் குருநாதர் அனுப்பினார்.

பாட்டி இறந்த பின் அந்தப் பெண் குழந்தையிடம் நான் சொன்னேன்…!

ஏம்மா…! பாட்டி தான் உன் தம்பியைத் திட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுது நீ உன் தம்பியைத் திட்டுகிறாயே…! என்றேன்.

அட… நீ… போய்யா….! என்று இப்படி என்னைச் சொல்கிறது.

அந்தப் பாட்டி எப்படிச் சொல்லுமோ அதே மாதிரி என்னிடமும் “அட போய்யா…!” என்கிறது.

கூட வந்த நண்பர் அந்தப் பெண்ணிடம் “சாமியை நீ இப்படிப் பேசலாமா…?” என்று கேட்டார்.

சாமியாவது… பூதமாவது…? என்று இப்படியே “வெடுக்..” என்று பேசுகிறது. அந்த உணர்வுகள் அதே மாதிரி வேலை செய்கிறது.

ஏனென்றால் ஒரு உடலுக்குள் இந்த உணர்வுகள் எதை வளர்த்ததோ அதே உணர்வின் செயலாக எப்படிச் செயலாக்குகிறது என்பதை யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை அந்த வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… இதனுடைய நிலைகளை நீ பார்…! என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.

உங்கள் உடலை உருவாக்கிய “ஒவ்வொரு அணுவிலும்…” அகஸ்தியன் உணர்வுகள் இணையும்

 

அகஸ்தியன் பிறந்தபின் குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது விண்ணைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.

அவருடைய தாய் தந்தையர் எதையெல்லாம் எண்ணிப் பெற்றார்களோ அவை அனைத்துமே கருவிலேயே வளர்ச்சி பெற்றதும் பல விஷ அணுக்கள் தன்னை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை உடலில் பூசிக்கொண்டு அந்த மணத்தை வெளிப்படுத்தும் பொழுது நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுக்களோ விஷ ஜந்துக்களோ இவை அனைத்துமே அவரை அணுகாது இருந்தது.

சூரியனை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.சூரியனின் முகப்பில் தன் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்கள் பிரிக்கப்பட்டு
2.அந்த உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒளிக்கதிர்களாக வீசிக் கொண்டிருப்பதும்
3.சூரியனின் முகப்பில் பிரிக்கப்பட்ட அந்த விஷத்தன்மை பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும்
4.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் விஷத்தை வென்றிடும் முலாம்களை உடலில் பூசியதனால் அதைக் காணுகின்றார்கள்.

அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடலில் பதிவானாலும் கருவிலே வளரும் அந்தச் சிசுவுக்குத் தாய் ரூபத்தில் பதிவாகின்றது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ… பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் பொழுது அந்தச் சூரியனின் இயக்கங்களைக் காணுகின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வெளிப்பட்டதைக் கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து முகப்பிலே அதைப் பிரித்து விட்டு தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றி அமைப்பதை
1.இந்தக் குழந்தையும் பார்க்கின்றது. ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை.
2.தான் கவர்ந்ததைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்.

அதே சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்த பின் தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை. இவன் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் பொழுது அந்த வண்டுகள் மயங்கி விடுகின்றது. விஷ ஜந்துக்களோ இதற்கு அப்பால் விலகிச் சென்று விடுகின்றது.

சூரியன் எப்படி தன் ஒளிக்கதிர்களால் அதில் விளைந்த உணர்வுகள் கொண்டு மோதும் பொழுது விஷத்தைப் பிரித்து விட்டு வெப்ப அலைகள் உருவாகின்றது என்ற நிலையை அகஸ்தியனின் தாய் தந்தையர் முதலில் காணவில்லை. ஆனால் இந்தக் குழந்தை “ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருகின்றது சொல்ல முடியாத நிலையில்…”

மற்ற உயிரினங்களையோ மிருகங்களையோ கூசாது பார்க்கின்றது. ஆனால் அந்த உயிரினங்கள் இவனைக் கண்டால் மயங்கி விடுகின்றது. மயக்கத்திற்கு அஞ்சி ஓடி விடுகின்றது.

இப்படித்தான் அந்த இளம் பருவத்தில் வரும் பொழுது தாய் தந்தையர்கள் தன் குழந்தை உடலிலிருந்து வெளிப்படக்கூடிய இந்த ஆற்றல்களைப் பார்த்த பின் “கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…” என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். அக்காலத்தில் அதைத்தான் அவர்களால் எண்ண முடியும்.

ஏனென்றால் இப்பொழுது உங்கள் எல்லோரையும் அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் அங்கே அழைத்துச் செல்கின்றேன்.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும். இந்த நினைவுகள் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்ட உணர்வுகளை… பூமியில் பரவி உள்ளதை நுகரப்படும் பொழுது அதைக் காண முடியும். அந்த உணர்வின் தன்மையை வளர்க்க இது உதவும்.

அதற்குத்தான் இதைப் பதிவாக்குவது.

1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப்போல இதை உங்களுக்குள் பதிவாக்கி
2.இதை நீங்கள் நினைவாக்கும் பொழுது அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மையை நாமும் கண்டுணர்ந்து
3.இந்த மனித உடலில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு வேகாநிலை அடைந்து
4.இன்றும் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் உணர்வை நாமும் எளிதில் பெற முடியும்.

அந்த வளர்ச்சியை நாம் இப்பொழுது… “இந்த வாழ்க்கையிலேயே அடைய முடியும்” என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருவது.

பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளை… 27 நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதை இந்தப் பிஞ்சு உள்ளம் பார்க்கின்றது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

உதாரணமாக… பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது ஜீனியைப் போட்டு அந்த இயந்திரத்தைச் சுழற்றிய பின் வெப்பத்தால் அது பஞ்சு போல் உருவாவது போன்று
1.இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் மணங்கள் பிற மண்டலத்தில் இருந்து வரும் சக்திகளை இணைத்து
2.ஒரு நூலாம்படை போலக் கவர்ந்து உறைந்து விடுகிறது.

உறைந்த பின் இந்த நட்சத்திரம் சுழலும் பொழுது இதனுடன் சேர்ந்து சுழலப்படும் பொழுது தூசிகளாக மாறுகிறது.

அதே சமயம் சூரியனுடைய காந்த சக்திகள் கவரப்படும் பொழுதும் இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுதும் அந்தத் தூசிகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்வதும் அதிலிருந்து மீண்டும் வலை விரித்து மற்றதைச் சேர்த்துக் கொண்டும் வருகின்றது.

உதாரணமாக… ஒரு நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் வலையை விரித்து வைக்கின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கி விட்டால் அதை உணவாக எடுப்பதற்குத் தன் மூக்கின் நுனி கொண்டு ஈயின் உடலுக்குள் ஊடுருவச் செய்து அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாக உட்கொள்கின்றது. ஆனால் ஈயின் உடல் அப்படியே இருக்கும் முழுதாக.

அதே சமயம் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்றால்… “அந்த உணர்ச்சியால் உருவாகும் அமிலத்தை” இன்னொரு ஈயைக் காற்று புகாது சுற்றிவிட்டு அதன் உடலுக்குள் அதைச் செலுத்தி விடுகின்றது.

உடலுக்குள் இது சேர்த்த பின்…
1.அந்த ஈயின் உயிரான்மா வெளியே செல்ல முடியாதபடி
2.அந்த ஈயை உருவாக்கிய அணுக்கள் பூராமே இது கலந்த பின் எண்ணிலடங்காத நூலாம்படைப் பூச்சிகளாக அது உருமாறுகின்றது.

இன்று விஞ்ஞானிகள் ஆண்களைப் பெண் உறுப்பு கொண்டவர்களாக மாற்றுவதற்காக “ஹார்மோன்களை” ஆண் உடலில் செலுத்துகின்றார்கள். பெண்கள் போலவே அந்த உறுப்புகள் மாறி உருவாகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு மனிதனுக்குள் சேர்க்கும் இந்த உணர்வு போலத் தான் ஈயின் உடலில் சேர்க்கப்பட்ட அமிலத்தால் அதனின் கருத்தன்மை உருமாறி… தன் இனம் எதுவோ அந்த உணர்வுகள் மாறி… நூலாம் படைப் பூச்சியின் ரூபமாக அது மாறிவிடுகின்றது.

அது போல நட்சத்திரங்கள் தூசிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் அதை “உணவாக உட்கொண்டாலும்…” இதனுடன் சேர்த்துக் கொண்ட இதனின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்ந்து சுழலும் அந்தப் பால்வெளி மண்டலத்தில் சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து… அந்த அமிலத்தைத் தனக்குள் சேர்த்துச் சேர்ந்து சுற்றும் நிலை வரப்படும் பொழுது… சூரியனுக்கு அருகில் கோள்களாகவும் வெகு தூரத்தில் நட்சத்திரங்களாக இருப்பது போலவும்… ஒவ்வொரு நட்சத்திரமும் தான் உமிழ்த்தும் பால்வெளி மண்டலத்தில் இதைப் போன்ற உணர்வுகளைச் சேர்த்து விடுகிறது.

அதனுடைய வளர்ச்சியில் நட்சத்திரங்கள் உருப்பெற்று விட்டால் மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை இது சுவாசித்து நட்சத்திரங்களாக அமைந்து அதன் வளர்ச்சி பெற்று… அதனுடன் இணைந்த நட்சத்திரங்களுக்கு இது உணவாகச் சேர்ந்து… அந்த உணர்வை இது எடுத்து இப்படி வளர்ச்சிகள் பெற்றுக் கொண்டே வருகின்றது.

நட்சத்திரங்கள் இப்படி 27 நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலையில் அது எடுக்கும் துகள்களும்… அல்லது தூசிகள் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது… “கரு இரண்டற உருவாகி ஒரு பொருளை உருவாக்கும் தன்மை அடைகின்றது…”

இதைப் பிஞ்சு உள்ளமாக இருக்கும் அகஸ்தியன் ஒன்றாவது வயது கடந்து இரண்டாவது வயதில் காணத் தொடங்குகின்றான்.
1.அதை உணர்ந்து அவனால் சில சொற்களைச் சொல்லும் நிலை வருகின்றது.
2.இந்த உணர்வின் எதிரொலி எக்கோ வருகின்றது… அதை குருநாதர் காட்டுகின்றார்.

தான் காணும் உணர்வுகளையெல்லாம் தன் தாய் தந்தையருக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றான். அவன் உடலில் விளைந்த உணர்வின் எண்ணங்களைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்திருக்கின்றது என்பதை
1.குருநாதர் சுட்டிக்காட்டி இந்த உணர்வைப் பதிவு செய்து எடுக்கும்படி சொல்கின்றார்.
2.அப்பொழுது அந்தக் குழந்தைப் பருவத்தில் அவன் சொல்லும் மழலைச் சொல்லுக்குள்
3.அந்த உண்மையின் தன்மை எப்படி உருவாகிறது என்பதை எனக்குள் கவர்கின்றேன்.

மீண்டும் அதை நினைவு கொள்ளும் பொழுது
1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்தில் எப்படிக் கண்டுணர்ந்தானோ அதை நானும் காண முடிகின்றது.
2.ஏனென்றால் நானும் அந்த இளம் பிஞ்சு வயது தான் “புதிதாகத் தெரிய வரும் பொழுது…”

இப்பொழுது காட்சி தெரிந்தால் “என்ன…? ஏது…?” என்று திண்டாடுகிறோம் அல்லவா. அது வழியில் தெரிந்தாலும் கூட… “என்னமோ ஏதோ…” என்று சொல்வது போல அன்றைக்கு அகஸ்தியன் தனக்குக் கிடைத்ததைத் தன் தாய் தந்தைக்குச் சொல்கின்றான்.

1.அவனிடமிருந்து சொல்கள் வெளி வருகிறது… அதே உணர்வுகளை உனக்குள் பதிவு செய்கிறேன்.
2.நினைவு கொண்டு அவன் எதைப் பார்த்தான்…? எதைச் சொன்னான்…? என்ற நிலையை நீயும் பார்…! என்றார் குருநாதர்.
4.உங்களுக்குள் இப்பொழுது அதைத் தான் பதிவு செய்கின்றேன். அதை நினைவு கொள்ளுங்கள்.

அதை இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

அகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் அது கவர்ந்த உணர்வுகளௌயும்… அதே போல் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும்… அது எவ்வாறு இயங்குகின்றது…? என்ற இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை தியானத்தின் மூலம் நாம் பார்ப்போம்.
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட “ஞான ஒளி” நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம் இருங்கள்.

இப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும் போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும்… பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது நினைவாக்குவதற்கும்… கவர்வதற்கும்… எளிதாக இருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எப்படி இந்த நிலையைப் பார்க்கச் சொன்னாரோ அதே போல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி… அதனின் துணை கொண்டு
1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை
2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

கண்களை மூடி… “அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை இப்போது நீங்களும் நுகருங்கள்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம் சூரியனைச் சுழன்று… பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை… ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள் தெரியும்.

அதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.

அகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.

நட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது பல வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.

அப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள் பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

கேதுக் கோள்:-
நட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப் பார்க்கலாம்.

இராகுக் கோள்:-
நட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.

சனிக் கோள்:-
மேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

சனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள் மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.

அந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப் பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக இருக்கும்.

வெள்ளிக் கோள்:-
இதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக் கதிர்கள் பாயுமோ அதைப் போன்று
2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித் தன்மையாகத் தெரியும்.

வியாழன் கோள்:-
இவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.

வியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள் சுற்றிவரும்.
1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் போன்று
2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.

புதன் கோள்;-
சூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.

செவ்வாய்க் கோள்;-
இப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்கள் வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.

இவ்வகையில் கலவைகளாகிப் பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின் நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.

நமது பூமி:-
துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும் சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.

சந்திரன்:-
பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).

இவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக் கண்டுணர்ந்த உண்மைகளை அது
1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்
2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக
3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.

நமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும் அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்
2.இதைப் போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக் காணுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால் செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்
1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி
2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.

வான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
1.அகஸ்தியன் உணர்வுகள் இணையும்.
2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு சமயம் ஒரு வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

குருநாதர் சொன்னபடி அங்கே அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவர் “எனக்கு இப்படிச் செய்கிறார்களே… இந்தப் பாவிகள்…!” என்று சொல்லிச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோய் தாங்காதபடி அவர் சொல்கிறார். ஏனென்றால்
1.அவர் நினைக்கிறபடி அந்த வீட்டில் உள்ளவர்கள்
2.அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை…! என்று சாபமிட்டுக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால் அந்தக் குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம் தான்…! இவருடைய சாப அலைகள் இந்தக் குடும்பத்தில் சேர்ந்து பின் விளைவுகளுக்கு வந்து அவர் இறந்த பிற்பாடு… அந்தக் குடும்பமே அப்படியே மொத்தமாக நொறுங்கிப் போனது…!

அவர் உடலுடன் இருக்கும் வரை ஓரளவுக்கு ஒருவிதமாக இருந்தனர். ஆனால்
1.அவர் இறந்த பிற்பாடு என்ன ஆகிறது…? என்கிற வகையில்
2.அந்த உண்மைகளை எல்லாம் காண்பதற்காகத்தான் குருநாதர் அங்கே பார்க்கச் சொன்னார்.

பல அனுபவங்கள் பெறுவதற்காக வேண்டி குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அப்பொழுது எனக்குச் சரியான சாப்பாடு இல்லை.

வெறும் பேரீட்சம்பழம் தான் எனக்குச் சாப்பாடு. ஒரு நான்கு பழத்தைச் சாப்பிட வேண்டியது. தண்ணீரை வயிறு நிறையக் குடிக்க வேண்டியது.
1.குருநாதர் சொன்னபடி சில சுவாசங்களை எடுத்துக் கொள்வது.
2.வயிறு கம்…! என்று இருக்கும்… வேறு எண்ணமே வராது.
3.நான்கு பழத்தை உறித்துப் போட்டுத் தண்ணீரைக் குடித்தோம் என்றால் நன்றாக இருக்கும்… ஒன்றும் செய்யாது.

எனக்கு வேறு ஒரு உணவும் கிடையாது.

இதெல்லாம் குருநாதர் யாம் ஒவ்வொன்றையும் அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்காகப் பல இடங்களுக்கு என்னைச் சென்றுவரச் செய்தார்.

குருநாதர் இப்படிப் போகச் சொன்ன பக்கம் ஒரு இடத்திற்குப் போனால் அங்கே (ஏற்கனவே) யாரோ ஒருவரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

அவரின் இரத்தங்கள் அங்கே மண்ணில் பதிவாகி இருக்கின்றது. அதே மண்ணில் அவருடைய உணர்வுகளும் பதிந்திருக்கின்றது.

ஆனால் குறித்த நேரம்…
1.அதாவது அவர் எந்த நேரம் கொல்லப்பட்டாரோ…
2.அந்தக் கொல்லும் பொழுது எந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ..
3.அதே நேரத்தில் என்னைப் போகச் சொன்னார்,

யாம் போன சமயம் “அடப் பாவிகளா…! என்னைக் கொல்கின்றீர்களேயடா… என்னைக் கொல்கின்றீர்களேயடா…!” என்று சப்தம் போடுகிறது.

அங்கே போனவுடன் இறக்கும் பொழுது சொன்ன அதே உணர்வு வருகிறது.
1.அந்த ஒலி அலைகள் மண்ணில் பட்டவுடன் இந்த உணர்வுகள் எப்படி உராய்கின்றது…?
2.இது எந்தெந்த நிலையைச் செய்கின்றது…?
3.உடலில் விளைந்த உணர்வுகள் இறந்த பின் அங்கே எப்படிப் பதிவாகிறது..? என்று அதை எல்லாம் பார்க்கும்படிச் செய்தார் குருநாதர்.

அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்து கொள்ளும்படிச் செய்தார் குருநாதர்.

ஒரு மனிதரின் ஆவி இன்னொரு உடலிற்குள் எப்படிச் செல்கிறது…? சென்றபின்… புகுந்து கொண்ட உடலில் எப்படிப்பட்ட அணுக்கள் உருவாகின்றது…? இது போன்ற உணர்வுகள் என்னவாகும்…? என்பதையெல்லாம் குருநாதர் பல இடங்களுக்கு எம்மைச் சென்றுவரச் செய்து… பல இன்னல்களைச் சந்திக்கச் செய்து… அதிலிருந்து தெரிந்து கொள்ளும்படி செய்தார்.

அவ்வாறு பெற்ற அனுபவங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன்.

“அகஸ்தியனாக நீங்கள் மாறுவதற்கு” முதல் நிலையாக உங்களுக்கு இதைக் கொடுக்கின்றேன்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
1.வெறும் சொல்லாக இல்லாது உயிருடன் ஒன்றி ஒலிகளை எழுப்ப வேண்டும்
2.நமது நினைவை “உயிருக்குள் செலுத்தி” அதை ஏங்குதல் வேண்டும்.

யாம் உபதேசிப்பதைக் கூர்மையாக நீங்கள் கேட்கின்றீர்கள்… பதிவாகின்றது. அதை உடலுக்குள் உருவாக்க… தனக்குள் இயக்கச் சக்தியாக மாற்ற… ஓ…ம் ஈஸ்வரா என்று நாம் உயிரோடு ஒன்றி அதைக் கவர்தல் வேண்டும்.

ஓ…ம் ஈஸ்வரா என்றால் அது நமக்குள் இயங்குகிறது என்று பொருள். என்னை ஜீவனுள்ளவனாக இயக்கிக் கொண்டுள்ளாய்… நான் எண்ணுவதை எனக்குள் இயக்குகின்றாய் எனக்குள் உருவாக்குகின்றாய்…! என்பது.

குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் “புருவ மத்தியிலே… துடிப்பின் நிலைகள் வலு அதிகமாகும்…”

ஆகையினால் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிருடன் நினைவைச் செலுத்தி இந்தக் குரலை நாம் எழுப்புதல் வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்த நினைவோடு நாம் அருள் சக்திகளை எண்ணி எடுக்க வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வின் ஒலி அலையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது “அந்த அதிர்வின் நிலைகள்” செயலாகும்.

எத்தனை பேர் சேர்ந்து நாம் இதைச் சேர்ந்து சொல்கின்றோமோ எத்தனை வகையான குணங்கள் இருந்தாலும்… நம்முடைய நினைவில் இந்த ஆற்றல் பெருகும்.

அகஸ்தியன் தாய் கருவிலே உருப்பெற்ற உணர்வுகளையும் குழந்தைப் பருவத்திலே பெற்ற உணர்வுகளையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.அதை நினைவாக்கி மீண்டும் சுவாசிப்பதற்கு முதல் படியாக இதைக் கொண்டு வருகின்றோம்.
2.இதற்கு முன் பரவலாகச் சொல்லி இருந்தாலும் அந்த உண்மை உணர்வுகளைச் சொல்லி
3.இதிலிருந்து உங்களை வளர்ச்சி பெறச் செய்வதற்கே இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

அணுவின் ஆற்றலை அறிந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அகஸ்தியர் தாய் கருவிலே பெற்ற சக்தியும் பிறந்த பின் அவர் பெற்ற உணர்வலைகளையும்
2.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாக தனக்குள் உருப்பெற்றதையும்
3.நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகித் தன் உணர்வலைகளை தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த “அந்த முதல் நிலையை…”
4.புருவ மத்தியில் எண்ணி ஏங்கிப் பெறுங்கள்.

அகஸ்திய மாமகரிஷி முதல் நிலைகளில் குழந்தைப் பருவத்தில் தாய் கருவில் பெற்ற உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கிப் பார்க்கும் பொழுது… சூரியனை உற்றுப் பார்த்து அதன் இயக்கத்தைக் காணுகின்றார்… உணர்கின்றார்.
1.அதை நாம் பார்க்க வேண்டும்… உணர வேண்டும்… நுகர வேண்டும்
2.அகஸ்தியன் கண்ட சூரியனின் செயலாக்கங்களைக் காண வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் புருவ மத்தியில் சூரியனின் மின் அணுக்களின் கதிர்களைப் பார்க்கலாம். உயிரிலே மோதும் பொழுது புருவ மத்தியிலே கனமும்… அந்த ஒளிக்கதிர்களும்… அதை உணரும் சக்தியும் கிடைக்கும்.

நமது பிரபஞ்சத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மற்ற இருண்ட கோள்களின் மீது பட்டு அந்தக் கோள்களும் மின்னணுக்களைப் போன்று தோன்றுவதைக் காணலாம்.

உங்கள் நினைவின் ஆற்றல் இப்போது விண்ணிலே இருக்கின்றது. வானத்தில் நாம் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம் அல்லவா. அதைப் போன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் கோள்களில் தாக்கப்படும் பொழுது அது மின் அணுக்களாக உங்களுக்குத் தோற்றமளிக்கும்.
1.அன்று அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணை நோக்கிப் பார்த்தான் அல்லவா…
2.அதே உணர்வுகள் உங்களில் இப்பொழுது தெரியும்.

மறந்திடாது உங்கள் உயிருடன் ஒன்றி… உயிர் வழியாக விண்ணிலே நினைவைச் செலுத்தி… வான் வீதியிலே பரவி வரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் தாக்கி அது மின்னுவதை… இப்பொழுது உங்கள் உடலுக்குள்… நினைவுக்குள்… அந்த உணர்வின் அலைகள் பாயும் பொழுது “காட்சிகளாக…” அதை உணரலாம்.

இரவிலே நட்சத்திரங்கள் வான மண்டலத்தில் எப்படி மின்னுகின்றதோ அதே உணர்வுகள் உங்களுக்குக் காட்சிகளாக அந்த மின்னணுவின் தன்மையைக் காண முடியும்.

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு
1.அவன் தனக்குள் பெற்ற மகிழ்ச்சி பெறும் உணர்வுகள்
2.உங்கள் உடலுக்குள் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று மகிழ்ச்சியான உணர்வுகள் தோன்றும்
3.உங்கள் உடல்களில் ஊடுருவி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகத் தோன்றும்.
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.

இப்பொழுது அகண்ட வெளியைப் பார்த்தது போன்று உங்கள் உடலுக்குள் இந்த உணர்வலைகள் படர்ந்து வருவதை உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் ஒளியின் சுடராக ஊடுருவதை உணர முடியும்.

சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் எப்படி மற்ற கோள்களில் படும் பொழுது அது மின்னுகின்றதோ உங்கள் உயிரின் உணர்வுகள் இதன் வழி கொண்டு உங்கள் உடலுக்குள் அது மின்னுவதைக் காண முடியும். உங்கள் உடலுக்குள் அந்த ஒளியின் சுடர் தெரியும்.

இப்பொழுது
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… தனக்குள் விளையச் செய்து அந்த உணர்வின் அலையை எமக்குள் பாயச் செய்து
2.நம் குருவின் உணர்வலைகள் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருப்பதை
3.குரு அருளின் துணையால் அகஸ்தியன் உணர்வுகளைப் பெறும் அந்த தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அந்த உணர்வின் அறிவு உங்கள் உடலுக்குள் பதிவாகி அதனின் நினைவாக
1.நீங்கள் எண்ணும் போதெல்லாம் மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் உடலுக்குள் பரவுவதை உணர முடியும்… ஒளியின் சரீரம் ஆவது போன்று…!

அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் பொழுது தாய் தந்தையரைப் பார்த்து நுகர்ந்த…
1.அவர்கள் உடல்களிலிருந்து வெளி வந்த அந்த பச்சிலை வாசனைகளை இப்பொழுது நீங்கள் நுகர்வீர்கள்… நுகரும் ஆற்றல் பெறுவீர்கள்.
2.இது உங்கள் உடலில் உள்ள பல பிணிகளைப் போக்க உதவும்.

அகஸ்தியன் தன் நினைவினைத் தாய் தந்தையர் பால் செலுத்தும் பொழுது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் பொழுது
1.அவன் மகிழ்ச்சி பெற்ற உணர்வுகள் அது எவ்வாறோ அதைப் போன்று
2.அந்த மணங்கள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று “கடும் தீமைகளை அடக்கி…”
3.மகிழ்ச்சி பொங்கும் உணர்வாக… அந்த மகிழ்ச்சியின் பெருக்காகப் பெருகுவதை உணரலாம்.

நாம் மலைப் பகுதிகளுக்குச் சென்றால் ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை நுகர்வது போன்று
1.நம்முடைய சுவாசத்தில் நம் உடலுக்குள் இப்பொழுது அந்த நஞ்சை வெல்லக்கூடிய மூலிகை மணங்கள் சென்று
2.பல அற்புத மணங்களாக உங்கள் உடல் முழுவதும் படரும்
3.உங்கள் நினைவுகள் அனைத்து மகிழ்ச்சி பெறும்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த அண்டத்தினை… அதன் அறிவின் தொடராக அறிந்துணரும் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ளோர் அனைவரும் பெற்று… அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

இது அனைத்துமே முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்பட்டது…! பதிவாக்கி இருக்கின்றேன்…! ஈர்க்கும் சக்தி வரும் பொழுது நினைவுபடுத்தி அதை ஏங்கிப் பெறுகின்றீர்கள்… அதை உணர்கின்றீர்கள்.

பாடநூல்களைப் படித்த பின் இன்னதுதான் என்ற நிலையில் ஒரு பொருளை இணைத்து விஞ்ஞான அறிவில் காண்பது போன்று
1.அகஸ்தியன் கண்டதை எல்லாம் நீங்கள் காணும் நிலை பெறுகின்றீர்கள்.
2.அந்தச் சக்தியாக நீங்கள் மாறுகின்றீர்கள்… மாறுவதற்குத் தான் முதல் நிலையாக இதை உங்களுக்குள் கொடுக்கின்றேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என்னைக் (ஞானகுரு) காசிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சொன்னார் குருநாதர். மோட்சம் கொடுக்கும் இடம் என்று சொல்வார்கள். ஆனால் பார்த்தால் நரகத்தைச் சிருஷ்டிக்கும் இடம் என்று சொல்லலாம்.

கங்கையில் காலையில் பார்த்தோம் என்றால் தலை ஒன்று கால் ஒன்று இதெல்லாம் பாதையில் இழுத்துக் கிடக்கும்.

நாற்பத்து எட்டு நாள் அங்கே இருக்க வேண்டும் என்றும்… அங்கு நடப்பதை எல்லாம் நீ பார்க்க வேண்டும் என்றும் குருநாதர் சொல்லி விட்டார்.

அங்கே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் என்ன…? என்கிற பொழுது காசிக்கு வருபவர்கள் “இறந்தவர்களை மோட்சத்திற்கு அனுப்ப வேண்டும்..!” என்று பிண்டங்களை வைத்துச் சாங்கியம் செய்கிறார்கள்.

அங்கே பூராம் பண்டாக்கள் இருக்கிறார்கள்… எல்லாம் தாதாக்கள் தான். உதவி செய்பவர்கள் ஈசனுக்கு நைவைத்தியம் செய்யக் கூடியவர்கள்

ஈசன் பிறந்த இடம் என்கிற வகையில் எல்லோருக்கும் மோட்சத்தைக் கொடுக்கின்றான்…! என்று சொல்லி எல்லாம் நடக்கிறது.

காசி விஸ்வநாதன் கோவிலுக்கு முன்னாடி கீழே சுரங்கம் மாதிரிப் போகிறது (UNDER GROUND). நான் போன நேரத்தில் உள்ளே பார்த்தால் பிரேதம் மிதந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றது. தண்ணீர் அதிலே அடித்து மேலே பொங்கிக் கொண்டு வருகிறது.

பார்த்தால் இன்னொரு மடத்திலிருந்து பிரேதத்தைத் தண்ணீரில் தள்ளி விட்டிருக்கின்றார்கள். இங்கே வந்து பாதையில் அடைத்துக் கிடக்கின்றது. அப்புறம் அதை எடுக்கின்றார்கள்.

இதே மாதிரி மடங்களில் இருந்தாலும் அங்கே தள்ளிய பின் கங்கைக்கு வந்து விடுகின்றது. இப்படி எல்லாம் தவறுகள் செய்யக்கூடிய சொர்க்க பூமியாக இருக்கின்றது.

இரவிலே என்ன செய்கிறார்கள்…? என்றால் சிவன் உடுக்கையை வைத்து ஆடினான் என்று சொல்லி ஊ…ம் ஊ….ம் ஊ…ம்..! என்று சிவ பூஜை செய்கிறார்கள்,

உடுக்கையை அடித்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சுகின்றார்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்..? என்ற வகையில் அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்…?

தண்ணீரை எடுத்து வந்து சிவலிங்கத்தில் ஊற்றிய பின் பதார்த்தங்களைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அது எல்லாம் பின்னாடி மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது,

அதே மாதிரி சிவனுக்கு ஆராதனைக்காகப் போடப்படும் பூக்களும் மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது. இப்படி எல்லாம் அங்கே தவறுகள் நடக்கின்றது.

சிவன் எப்படி இருக்கின்றான்…? என்று தெரியாது. சொர்க்கத்திற்குப் பதில் நரகமே நடக்கின்றது. பல விபரீத நிலைகள் நடக்கிறது.

நான் (ஞானகுரு) முதலிலே இரயிலில் இங்கிருந்து செல்லப்படும் பொழுது காசியில் காலடி எடுத்து வைத்தவுடனே தமிழிலேயே பேசுகிறான் சாப்பிட வாருங்கள்…! வெறும் எட்டணா தான்…! என்கிறான்.

பரவாயில்லையே… இந்த ஊரில் எட்டணாவிற்குச் சாப்பாடு போடுகிறானே…! என்று நினைத்தேன். ஊரெல்லாம் சுற்றிக் காட்ட என்று என் கூட இரயிலில் ஒருவர் வந்திருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து அங்கே போனோம்.

சாப்பிட ஆரம்பித்தோம். டால் (பருப்பு) என்று எல்லாம் வைத்தான். பில்லைக் கொடுத்தான். சாப்பாடு எட்டணா…! காய் பருப்பு எல்லாம் வைத்தது என்று சொல்லி முப்பது நாற்பது ரூபாய் என்று பில் போட்டான்,

கடைசியில் பில் முந்நூறு ரூபாய். “எட்டணா சாப்பாடு” என்று சொல்லி இப்படிப் போட்டான். எனக்கு முந்நூறு கூட வந்த ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் பில். நான் முழித்துப் பார்த்தேன்.

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் இதே மாதிரி ஒருவன் பில் அதிகம்…! என்று கேட்கிறான். அவனை அடிக்கிறான்.

நீ சாப்பிடுவதற்கு முன்னாடி அல்லவா கேட்க வேண்டும்… சாப்பிட்டு விட்டுக் கேட்கிறாயே…! என்று சொல்லி அந்த ஓட்டல்காரன் அவனை அடிக்கிறான்.

இதைப் பார்த்ததும் நாம் ஏதாவது கேட்டால் நம்மையும் உதைத்து விடுவான் போல… என்ற எண்ணம் வருகிறது. பேசாமல் உட்ககார்ந்திருந்தேன்.

மற்றவர்கள் எல்லாம் பயப்படுகின்றார்கள்.. கேட்ட காசை அப்படி அப்பபடியே கொடுக்கின்றார்கள்.

நான் வந்தேன்… இந்தக் காசை வைத்துக் கொள்..! என்றேன். உன் சாப்பாட்டைப் பார்… எடுத்துச் சாப்பிட்டுப் பார் என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

எல்லாச் சாப்பாட்டையும் சாப்பிட்டுப் பார்…! என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

“கசப்பாக இருப்பதற்கு” நான் எவ்வளவு ரூபாய் கொடுப்பது…! என்று கேட்டேன். அது போக அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் “எல்லாம் கசக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் கசக்கிறது… கசக்கிறது… என்று சொன்னவுடனே இந்தக் காசை வைத்துக் கொள் நான் போகிறேன்…! என்று சொல்லிக் கிளம்பினேன்.

பாபுஜி மாப் கரோஜி…! பாபுஜி மாப் கரோஜி…! (மன்னிப்பு) என்று தன் காதுகளைப் பிடித்துச் சொல்லிக் கொண்டே என் பின்னாடியே ஓட்டல்காரன் வருகின்றான்.

விஸ்வநாதனிடம் போய்ச் சொல்…! நான் அவனைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன் அவன் தான் உனக்கு ஏதோ செய்திருக்கின்றான் ஆகையால் அவனைப் போய்க் கேட்டுக் கொள்..! என்றேன்.

நான் போகும் பொழுதே அவன் (அந்த ஓட்டல்காரன்) பின்னாடியே வந்தான். அங்கே இருப்பவன் என்ன சொல்கிறான்…?

உஸ்ஸ்க்…! உன் கழுத்தை அறுத்துப் போடுவான்… அவன் பின்னாடி போகாதே… என்கிறான்.

கங்கை எங்கே இருக்கிறது…? என்று கேட்டேன். சொன்னான்…! அங்கே போய்க் குளித்தேன். குளித்த பின்னாடி விஸ்வநாதன் எங்கே இருக்கிறான்…? என்றேன்.

இந்தப் பக்கம் இருக்கிறது என்று சந்துக்குள் கூட்டிக் கொண்டு போனான். பாபுஜி மாப் கரோஜி…! என்று சொல்லிக் கொண்டே வந்தான். கசப்பாக இருப்பதை எல்லாம் மாற்றிக் கொடுங்கள்…! என்று கேட்டுக் கொண்டே வருகின்றான்.

நீ வா… விஸ்வநாதனிடம் போய்க் கேட்கலாம்…! என்றேன். அங்கே போனதும் நீ “பேடா” வாங்கிக் கொண்டு வா..! என்றேன்.

பேடாவை விஸ்வநாதனுக்குக் கொடு… நீ சாப்பிட்டுப் பார்… எப்பொழுது இனிப்பு வருகிறதோ அப்பொழுது நீ போகலாம்…! என்றேன்.

அங்கே ஓட்டலில் ஏமாற்றிக் காசு எவ்வளவு வாங்கினானோ அதுவரையிலும் பேடாவை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டே இருந்தான்.

போட்டால் அந்தச் சாமியார் வாங்க மாட்டேன் என்கிறான். இது எதற்குடா வம்பு..? என்று தூக்கித் தூக்கி எறிகிறான். அங்கே இருக்கும் பண்டாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.

திருப்பித் திருப்பி திருப்பி வைத்துக் கடைசியில் நன்றாக ஆனது. சரி விஸ்வநாதன் மன்னிப்புக் கொடுத்தான். நீ இனிமேல் யாரிடமும் ஏமாற்றிக் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டுப் போ….! என்றேன்.

யாரையாவது நீ உதைத்துத் தப்பான வழிகளில் காசு சம்பாரித்தாய் என்றால் உன் வியாபாரமே போய்விடும்..! என்றேன்.

இனிமேல் இந்த மாதிரிச் செய்ய மாட்டேன்…! என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். இது காசியில் நடந்த சமாச்சாரம்.

September 2025 – உபதேசம்

எமது உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்

 

உங்களுடைய துன்பங்கள் நீங்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன்.

என்னை உங்களுடைய கண் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது…
1.சாமி சொன்ன நிலைகளை நாம் சரியாகக் கேட்க வேண்டும்
2.அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கேட்டுக் கொண்டிருந்தால் தான் “இது கூர்மையாகின்றது…”
3.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது.

ஏனென்றால்…
1.துன்பத்தை நீக்கும் உணர்வுகளைப் பெற்றவர்கள் மகா ஞானிகள்.
2.துன்பங்களின் இயக்கத்தின் தன்மையை அறிந்துணர்ந்தவர்கள் அந்த மகா ஞானிகள்.

அந்தத் துன்பத்தின் விஷத்தின் தன்மை நீக்கி தன் உணர்வினை ஒளியாக மாற்றி… இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.

அவருடைய வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி நீக்கினார்கள்…? அவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் எப்படி வந்து சேர்ந்தது…? என்பதை அறிந்தார்கள்.

அவ்வாறு அறிந்த உண்மையைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அந்த உண்மையின் சக்தியைத் தான் யாம் இப்பொழுது உங்களுக்குச் சொல்வது.

நன்மையின் தன்மை கொண்டு நாம் காரியங்களை எண்ணிச் செய்தாலும் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய துன்ப உணர்வுகள் நமக்குள் எப்படி வந்து சேருகிறது…? என்ற நிலையை “அந்த ஞானிகள் சொன்ன வழிப்படி” உங்களுக்குள் சொல்லும் பொழுது இது பதிவாகின்றது.

பாலுக்குள் காரம் பட்டபின் அந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகளை நாம் உணர முடிகின்றது. ஆனால் அந்தச் சுவையை உணர முடியாத நிலை ஆகிவிட்டால் “அதை நாம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது…”

ஒரு விஷத்தின் தன்மையைக் குடிக்கப்படும் பொழுது அதனால் சிந்திக்கும் செயல் இழந்து விடுகின்றோம்… அறிய முடிவதில்லை. செயலற்ற நிலை ஆகிவிடுகின்றோம். அது போல்…
1.நாம் தவறு செய்யாமலேயே “குறைகள் எனக்குள் வருகின்றதா…?” என்ற மனம்
2.அது எண்ணமாக உங்களுக்குள் தூண்டச் செய்யும் நிலையே சந்தர்ப்பங்களில் மறைந்து விடுகிறது.

ஆனால் அந்த மகா ஞானிகள் அதிலிருந்தெல்லாம் விடுபட்டுப் பழகியவர்கள்.
1.சக்திவாய்ந்த ஆற்றலைத் தனக்குள் கூட்டி தீமையைக் குறைத்து அந்த உணர்வின் ஆற்றலால்
2.உயிர் எப்படி ஒவ்வொரு குணத்தையும் அது உணரச் செய்து… அறியச் செய்து அந்த இயக்கத்தை இயக்கச் செய்வது போல
3.கெட்டதை நீக்கி நல் உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாறும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து அழியா ஒளிச் சரீரம் பெற்றவர்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய சொல்களை… அவர்களை எண்ணும் பொழுது அந்த மணம் எனக்குள் உணர்வின் செயலாக சொல்லாக அது இயங்குகின்றது. அந்த மணத்தின் தன்மை உடலுக்குள் கிரியை ஆகி என்னை இயக்குகின்றது.

சிவகாமி…! அந்த ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கவர்ந்த சக்தி” உடலுக்குள் சென்று சிவம்… தான் கவர்ந்து கொண்ட சக்தி எனக்குள் கிரியையாகி “அதனின் சொல்லாக (உபதேசமாக) வருகின்றது…”

1.இதையெல்லாம் நீங்கள் கூர்மையாகக் கவனிக்கும் பொழுது இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பதிவாகும்.
2.பதிவானதை மீண்டும் எண்ணத்தால் எப்படி எடுக்க வேண்டும்…? என்று நினைவூட்டும் சக்தியாகவும் இது செயல்படும்.
3.அதற்குத்தான்… வேறு நினைவுகள் இல்லாதபடி உங்களைக் கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கும்படி சொல்வது

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் ஒரு ஊரில் ஒருவருக்கொருவர் பகைமையில் என்ன செய்கிறார்கள்…? ஒருவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகிறார்கள்.

அங்கே புதைத்த பின் இதிலே எதிரிகளிடம் இருக்கும் பொழுது ஒரு கூலி ஆளிடம் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருப்பது பழக்கம்.

இறந்தவரின் ஆவி கூலி ஆளிடம் பழக்கமாக இருந்ததால் அவன் உடலுக்குள் போய்விட்டது. அவன் உடலுக்குள் போனவுடனே என்ன செய்கிறது…?

ஐய்யய்யோ…! என்னை வெட்டிப் போட்டார்களே… வாழை மரத்தடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

பைத்தியம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டேயிருப்பார் என்று ஊர்க்காரர்களே சொல்கிறார்கள். நான் சித்தான புதிதில் அந்த ஆள் இங்கே வருகிறார்.

1.என்னை வெட்டிப் போட்டார்கள்..
2.வாழை மரத்தில் புதைத்து விட்டார்கள்…
3.என் துணி எல்லாம் இங்கே இன்ன இடத்தில் இருக்கிறது
4.அவர்கள் வெட்டிய அரிவாள் எல்லாம் இன்ன இடத்தில் இருக்கிறது
5.என்னைப் புதைத்தவர்கள் இன்னார் என்று அவர்கள் பேரை எல்லாம் சொல்கிறது.
6.இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று விபரம் சொல்கிறது.

அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாடி தான் நான் இருக்கின்றேன். அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடை மனைவியின் தங்கை கேரளாவில் இருக்கிறது. அங்கே அந்தப் பெண்ணுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் சேலை கட்டினால் அது கிழிந்து போகும். வெளியிலே வர முடியாது. இரவு நேரத்தில் பார்த்தால் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்திருக்கும்.

அதை எல்லாம் பார்த்த பின் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அங்கே கூட்டிச் சென்றிருந்தார். ஏனென்றால் அந்தப் பெண்ணை வெளியிலே கூட்டி வர முடியவில்லை “நீங்கள் வர வேண்டும்…!” என்று என்னை அங்கே கூட்டிச் சென்றார்.

அந்தப் பெண் அவஸ்தைப்படுகிறது… என்ன செய்வது…? என்று தெரியவில்லை என்று சொன்னார்.

நான் போய்ப் பார்த்தேன். மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்துள்ளார்கள் என்று சொன்னேன். அதற்குச் சுருட்டும் மதுவும் வைத்திருப்பார்கள்.

அதை எல்லாம் ரூமில் நீங்கள் வைத்து சில பதார்த்தங்களையும் வைக்கும்படி சொன்னேன். வைத்தவுடனே அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்றைக்கு இரவு எதுவும் நடக்கவில்லை.

சேலை எல்லாம் அப்படியே இருக்கிறது. முகத்தில் காயம் இல்லை. சுயநினைவு வந்தவுடன் இங்கே கூட்டி வந்தார்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் எடுத்துக் கொண்டு வா..
2.அது உனக்குப் பாதுகாப்பாக வரும் என்று சொன்னேன்.
3.சொன்ன மாதிரிச் செய்ததும் அதிலிருந்து அந்தப் பெண்ணுக்கு நன்றாகி விட்டது.
4.செய்வினையின் செயல் அதற்கப்புறம் இல்லை.

அதிலிருந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தார் என்றால் என்னிடம் சிறிது நேரம் அமர்ந்து இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் முதலில் சொன்ன ஆள் வந்து உருள்கிறான்.. என்னை வெட்டிப் போட்டார்கள்… என்று சொல்லி…!

இது என்ன…? என்று இதைக் கவனித்த சப் இன்ஸ்பெக்டர் போய் இது நிஜமா… பொய்யா..? என்று பார்க்கத் தொடங்கினார். அது இத்தனாவது வாழை மரம் என்று சொல்லி போய்த் தோண்டினால் அங்கே அந்தப் பிரேதம் இருக்கிறது.

அந்தத் துணிகள் எல்லம் யார் யார் வீட்டில் இருக்கிறது..? வெட்டிய ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று எல்லாமே சொல்கிறது. அதை எல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வந்துவிட்டார்கள்,

எடுத்ததும் மற்றவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். கடைசியில் அவர்கள் என்னையே கொலை செய்ய வந்து விட்டார்கள். இந்த ஆள் தான் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றார்கள்.

தேடி வரும் பொழுது போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொண்டு போனார்கள். கடைசியில் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தது.

இருந்தாலும் முதலில் அந்தச் சந்தர்ப்பம் அதைச் சொல்லப்படும் பொழுது “எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டு வருகிறது…? என்ற வகையிலே குருநாதர் காட்டுகிறார்.

அவர் சில உணர்வுகளை எனக்கு உணர்த்தி…
1.கொலை செய்ய வருபவர்களின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
2.ஆபத்திலிருந்து உன்னைக் காப்பதற்கு நீ இந்த மாதிரிச் செய் என்றார்.

அவர் சொன்னபடி அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கிறது என்பதை
1.இறந்த ஒரு ஆன்மா எப்படி எங்கே செல்கிறது…?
2.இன்னொரு உடலுக்குள் சென்றால் என்ன செய்கிறது…?

இதை எல்லாம் அறிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைப் பார்த்தது. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுழி முனை – எண்ணம் தோன்றும் இடம்

 

ஒரு மணத்தின் தன்மை அணுவிற்குள் சேர்க்கப்படும் பொழுது சீதா என்ற சுவையானாலும் அந்த உணர்வின் தன்மை அது எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் கண்டுணர்வதற்கு அந்த ஞானிகள் சுழிமுனை என்று காட்டினார்கள்.

1.இந்த உயிர் தனக்குள் அதை (சீதா) எடுத்து
2.இந்த உணர்வின் தன்மையைத் தான் பிரித்து
3.அந்தச் சத்தின் உமிழ் நீராக உடலுக்குள் இணைத்து விட்டு உணர்வின் அலைகளை அதற்குள் இயக்கச் செய்கிறது.

இது தான் சுழிமுனை என்று சொல்வது. எதை நாம் எண்ணுகின்றோமோ சுழி முனை அதை இயக்கும். தியானம் செய்கின்றோம் என்கிற போது சுழி முனை வழியாக உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது எண்ணங்கள் என்ன செய்கின்றது…?

எவ்வளவு தான் நல்லதை எண்ணினாலும் முடிவதில்லை. ஏன்…?

மற்றவர்களின் வெறுப்பான உணர்வுகளை உடலுக்குள் இருந்தால் இந்த உணர்வுகள் ஆங்கே பாயும்.

உங்களை யாராவது திட்டி இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு பையனை வேலைக்குச் சொல்லி இருந்தோம் நேரத்திலே அந்த வேலையை அவன் செய்து முடிக்கவில்லை என்றால் அந்த உணர்வு அழுத்தமாக ஓங்கி வந்து விடும்.

1.அந்த அலைகள் எல்லாம் முன்னாடி இருக்கும் அப்பொழுது
2.சுழி முனையை நீங்கள் நினைத்துக் கட்டாயப்படுத்தி எண்ணினால் என்ன ஆகும்…?
3.ஒருநிலைப்படுத்த முடிவதில்லை…!

சுழி முனையில் நிலை நிறுத்துவதற்காக என்ன செய்கின்றார்கள்…? “பிராணயாமம்… வாசியோகம்…” என்று மூச்சை இப்படி இழுத்து இப்படி விட்டீர்கள் என்றால் சுழி முனையில் நிறுத்தலாம் என்கிறார்கள்.

அடுத்தாற்போல்… தொட்டுக் காண்பித்தல் என்றும் சொல்வார்கள் ஒருவருடைய எண்ணத்தை… மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறோம் என்று முதுகுத் தண்டிலே தட்டி எழுப்பி அவருடைய எண்ணத்தைச் செலுத்தப்படும் பொழுது அந்த உடலிலிருந்து வரும் உணர்வுகளை நாம் சுவாசித்து ஏதோ குறு…குறு… என்று ஏறுகின்றது. ஏதோ சக்தி கொடுக்கின்றார் என்ற நினைவு வரும்.

யாராக இருந்தாலும் தொட்டுக் கொடுத்துவிட்டு மூலாதாரத்தை நான் தட்டி எழுப்புகின்றேன் நுகர்ந்து பாருங்கள் என்று சொன்னால் அந்த எண்ணத்திற்கு வரும் பொழுது அவருடைய எண்ணங்களை நுகரப்படும் பொழுது அவர் சொன்ன வழியிலேயே அது இயக்கும்.

1.மூலம் என்பது நமது உயிர்…
2.ஆதாரம் என்பது நமது ஆன்மா.
3.அதனால்தான் ஆதிமூலம் என்று விநாயகருக்குப் பெயர் வைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் புழுவாக உடல் பெறும் பொழுது ஒரு செடியின் சத்தைத் தான் முதலில் அது எடுத்தது.

அதாவது… சூரியனிலிருந்து வெளிவந்த வெப்ப காந்தம் அந்தச் செடியின் சத்தைக் கவர்ந்தது. சூரியனிலிருந்து வந்த வெப்ப காந்தம் இந்தச் செடியின் சத்தினைக் கவர்ந்து சீதா லட்சுமி ஆக மாறி அது அந்தப் புழுவிற்குள் வரும் போது சீதாராமனாக மாறுகின்றது.

1.புழுவாக உடல் பெற்ற நிலையில் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் சீதா ராமனாக மாறுகின்றது… எண்ணங்கள் தோன்றுகின்றது
2.அந்தச் சுவையின் சத்தாக அதிலிருந்து வெளிப்படும் மணம் எண்ணமாக
3.அந்த எண்ணம் உணர்ச்சிகளைத் தூண்டி அம்புகளாகப் பாய்ந்து இயக்கச் சக்தியாக மாறுகிறது… சீதாராமா…!

ஆகவே ராமஜென்ம பூமி எங்கே உருவாகின்றது…? ஒருவர் என்னைத் திட்டுகின்றார் என்கிற பொழுது அந்த உணர்வைச் சுவாசிக்கின்றேன். அதைச் சுவாசித்தால் சுவை சீதா.

அந்த உணர்வின் தன்மை எனக்குள் வந்து அந்த உணர்வான சத்தை உடலுடன் சக்தியாகச் சேர்ந்து கொள்கின்றது. அதிலிருந்து சொல்லாக வரும் பொழுது சீதாராமன் ஆகின்றது.

அந்தச் சொல்லின் நிலைகள் ராமன் அம்பை எய்கின்றான்.
1.ராமன் எங்கே பிறக்கின்றான்…? ராமஜென்ம பூமி எது…?
2.நம் உடல் தான்.

சீதா லட்சுமி ஆக வந்து உடலுக்குள் வரும் பொழுது சீதாராமனாகப் பிறக்கின்றான் ராமா சீதா என்று சொல்கின்றார்களா…? சீதாராமா என்று சொல்கின்றார்களா…?

சீதாராமா என்று வரிசைப்படுத்தித் தானே சொல்கின்றார்கள்.

நாம் அணுவின் தன்மையாக உருப்பெற்றதிலிருந்து ஒவ்வொரு சரீரத்தையும் பெற்று வளர்ச்சியில் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதை உணர்த்துவதற்குத் தான் இந்த இயற்கையின் சக்தியைக் கண்டுணர்ந்த ஞானிகள் விநாயகரை ஆதிமூலம் என்று காண்பிக்கின்றார்கள்.

1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று
2.யானைத் தலையை மனித உடலில் இணைத்து “விநாயகா” என்று மனித உடலைக் காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் நம்மைத் திட்டினால் அவனின் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது, பதிவான உணர்வை மீண்டும் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அந்தத் திட்டிய உணர்வுகள் வந்து
1.நம் உடலிலே அத்தகைய அணுக்கள் பெருக்கி விட்டால்
2.இதற்கும் நமக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கும் இரண்டுக்கும் போர் முறையே வரும்.
3.பளீர்…ர்ர் பளீர்…! என்று உடலிலே மின்னும்.

ஆனால் நமக்கு அது என்ன என்று தெரிவதில்லை. ஏனென்றால் நமக்குள் அணுக்கள் உருவாக்கப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வுகள் பாய்ச்சப்படும் பொழுது நம் தசைகளில் சில நேரங்களில் பளீர்… பளீர்… (ஊசி குத்துவது போல்) என்று மின்னும்.

இவை எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மையே அங்கே அப்படி வருகின்றது.

ஆகவே நம் உயிரை ஈசன் என்று உணர்ந்து கொண்ட பின் ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நாம் எப்படிக் கோவிலாக மதிக்க வேண்டும்…? இந்த உடலான சிவனை எப்படி மதிக்க வேண்டும்…? என்ற நிலையில் நாம் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனிதனின் நிலையில் உயர்ந்தவன் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தோம் என்றால் நமக்குள் வரும் தீமையை நீக்கி நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது,
1.தூய்மையான உணர்வுகள் வளர வளர
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கின்றது.

அத்தகைய பற்று வளர்ந்தால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் எதனை வளர்த்துக் கொண்டோமோ இந்த உயிர் அங்கே அழைத்துச் சென்று அதிலிருந்து வரக்கூடிய உணர்வை எடுத்து ஆறாவது அறிவாக உள்ள நிலையை ஏழாவது ஒளியாகப் பெறச் செய்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நாம் அன்பு பண்பு பாசம் என்று வளர்த்தாலும் பிறருடைய துயர்களை நாம் கேட்டறிந்து தான் உதவி செய்கிறோம்.

அந்தத் துயரமான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுத் தன்மையை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

மீண்டும் மீண்டும் அவர்களை நாம் எண்ணும் பொழுது அந்த அணுக்களின் தன்மை பெருகி
1.நம்மையறியாமல் நல்ல அணுக்கள் மடிந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே நம் நல்ல குணத்தையும் காக்க முடியாமல் போய்விடுகின்றது,
3.நம் உயிரான ஈசனையும் மறந்துவிடுகினறோம்
4.அதனால் மனித உடலில் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்.
5.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளிலிருந்து நமக்கு விடுபடத் தெரியவில்லை.

“விடுபட வேண்டும்” என்றால் என்ன செய்ய வேண்டும்..? என்பதற்குத் தான் இப்பொழுது ஒவ்வொரு நிலைகளிலும் தெரிந்து அந்த அருள் சக்திகளைப் பெறக்கூடிய உணர்வுகளை உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

நுகர்ந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் எப்படி இயங்குகிறது…? உங்களுக்குள் தீமைகள் விளைவது எப்படி…? என்று அறிந்து
1.அந்தத் தீமைகளிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
2.இது இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது,
4.இந்த அணுக்கள் பெருகி விட்டால் உங்கள் உடலுக்குள் தீமை என்ற உணர்வின் அணுக்களை இது வளராது தடுத்துவிடும்.

மனிதனின் சுவாச நிலை

 

உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது. எப்படி…?

ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.

அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து வைத்திருக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.

அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?

1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” – நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.

காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!

ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.

மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.

அப்பொழுது உங்கள் உடலில் இருந்து எது வெளிப்படுகிறதோ… வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.

உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது அவரைப் பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி (டேப்பில் பதிவு செய்வது போல்) விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.

இதிலே கவனங்கள் எப்படி இருக்கிறதோ… ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.

ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “என்னங்க…? நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.

ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகப் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரமும் வெறுப்பும் வருகிறது

இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் குப்..குப்.. என்று வரும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.

போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “அவன் என்ன செய்வான்…? பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்…”

அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் எடுக்கக்கூடிய வார்த்தை நம் சிறுமூளை உயிரிலே பட்டு…
1.அந்தச் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.

எப்படி…?

வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.

அதைப் பற்றி நான் சொன்னாலும்… மாங்காயையே இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?

மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.

மாங்காயைப் பார்க்கவில்லை… ஆனால் அந்தச் சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.

இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே எரிச்சலான உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!

எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது

ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.

இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலைவரிசையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”

எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.

அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!

ஆகவே… நாம் எண்ணக் கூடியதை எல்லாம் எலும்பிற்குள் அந்த மேக்னெட்டில் பதிவு செய்து விடுகின்றது. மீண்டும் நினைத்தவுடன்…
1.அந்த எண்ணங்கள் வீரியமடைந்து கண்ணின் நினைவுகளுக்கு வருகின்றது
2.காற்றில் இருப்பதை இழுக்கிறது… இழுத்தவுடனே சுவாசத்திற்குள் கொண்டு வருகின்றது
3.சுவாசிக்கும் பொழுது எதை எதை நாம் பதிவு செய்திருக்கின்றோமா
4.நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் மொத்தமாக இழுத்துப் பிரித்து ஆத்மாவாகக் கொண்டு வருகின்றது.
5.அதைத்தான் நாம் சுவாசிக்கின்றோம்… அதுதான் நம்மை ஒவ்வொரு நொடியிலும் இயக்குகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்தால் சடங்குகள் என்ற நிலையில் சாஸ்திரங்கள் செய்து அந்த உடலைச் சுட்டுச் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் பாவங்கள் போய்விடும்..! என்று செய்கின்றனர்.

அதே சமயத்தில் புதைத்து விட்டால் அதற்காக மாவில் ஒரு பொம்மையைச் செய்து அவர் இந்த நிலையில் இருந்தார் என்று அவர் பேரைச் சொல்லி மந்திரங்களைச் செய்து மாவைக் கரைத்தால் (பிண்டத்தை) அவருடைய பாவங்கள் போய்விடும் என்று சாங்கிய சாஸ்திரங்கள் கூறுகின்றது.

பத்தாவது நாள் அல்லது பதினாறாவது நாள் அந்த வீட்டிலே சொந்த பந்தம் எல்லாம் அனைவரும் வந்து அவர் என்னென்ன பிரியப்பட்டுச் சாப்பிட்டாரோ அந்தப் பலகாரங்களைச் செய்து கொடுத்து விட்டு
1.எங்களுடன் நீ வாழ்ந்தாயே.. நீ இப்படிப் போய்விட்டாயே…
2.எங்களுடன் நீ இல்லாமல் இப்படிப் போய்விட்டாயே… என்று சொல்லி
3.எல்லாரும் அழுது கொண்டிருப்பது தான் வேலை.
4.ஆக அந்தத் துயரத்தை அதிகமாகக் கூட்டி அவரை ஒளிச் சரீரம் பெற முடியாத நிலையாக்கத்தான் முடிகிறது.

பதிமூன்றாவது அல்லது பதினாறாவது நாள் இதெல்லாம் செய்த பிற்பாடு சாதத்தை ஆக்கிக் காக்காய்க்குக் கொண்டு போய்க் கொடுத்தால்
1.அந்தக் காகம் சாப்பிட்டுவிட்டால்…
2.பாவ விமோசனம் ஆகிவிடும் என்று சாங்கியங்களைச் செய்து கொண்டுள்ளோம்.

பின் எண்ணையைத் தேய்த்து தலை முழுகி விட்டுச் சொந்தபந்தங்கள் எல்லாம் புதுத் துணியைக் கொடுத்துக் கட்டச் செய்து எல்லாம் பெருமைப்படும்படி செய்வார்கள்.

அவர் போய்விட்டார்…! ஆனால் உங்களுக்கு நாங்கள் ஆதரவாகப் பாதுகாப்பாக இருக்கிறோம்… துணிமணிகளைப் போடுகிறோம்…! என்று இந்த மரியாதைகளை எல்லாம் செய்வார்கள்.

தலைமகனைக் கூப்பிட்டு மாவிளக்கு செய்து… நெய் தீபம் இட்டு… முக்காடிட்டு… அந்தத் தீபத்தை அணையாமல் கொண்டு போய் விநாயகர் கோவிலில் காட்டி அங்கே அர்ச்சனை அபிஷேகம் செய்தால் “மோட்ச தீபம்…” என்று இப்படி சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டாடுகின்றனர்.

அடுத்து வரும் அமாவாசை அன்றைக்கு என்ன செய்வார்கள்…?

அவர் உடுத்திய துணி… அவர் சாப்பிட்ட உணவு… எல்லாம் போட்டுப் படைத்து அவருக்குச் சாப்பாடு கொடுத்து
1.எங்களுடன் வாழ்ந்தாய்… சொத்தெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தாய்
2.உங்களுக்கு ஆக்கிக் கொடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுகிறோம் என்று
3.சாப்பாட்டை வைத்துக் கும்பிடுவது தான் இன்றைய வழக்கில் உள்ளது.

அடுத்து… சடங்கின் பிரகாரம் மந்திரங்களைச் சொல்லிப் பாவத்தைக் கரைக்க வேண்டும் என்ற நிலையில் செருப்பு குடை காய்கறி அவர் உட்கொண்ட பதார்த்தங்கள் எல்லாம் தானமாகக் கொடுப்பார்கள். சில வசதி படைத்தவர்கள் பசு மாட்டையும் கொடுப்பார்கள்.

1.பசு மாட்டைக் கொடுத்து அதன் வழி கொண்டு பாவத்தைப் போக்கியதால்
2.அந்தப் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு அப்படியே சொர்க்கத்துக்கே கொண்டு போய்விடுமாம்.
3.இப்படி எல்லாம் சொல்லி நம்மைச் சர்வ முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள் (அன்றைய அரசர்கள்)
4.அரசர்கள் கொடுத்த சாங்கிய சாஸ்திரங்களைத் தான் இன்று நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

ஏனென்றால் அந்தச் சாங்கிய சாஸ்திரங்களை அரசர்கள் ஏற்படுத்தினார்கள் அல்லவா..! அதற்கென்று ஒரு கூலி ஆளை வைத்திருப்பான். (அவர்கள் தான் இன்று குடுகுடுப்புக்காரராகவும் மந்திரவாதியாகவும் உள்ளார்கள்)

சாங்கியம் எல்லாம் செய்து தனித்துப் பிரித்து வைத்த பிற்பாடு முச்சந்தியில் இருக்கும் வீட்டு வாசல்படி மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த உடலை எங்கே கொண்டு புதைத்தார்கள்… அல்லது சுட்டார்கள்…? என்று அறிந்து கொள்வார்கள். அங்கே சென்று இறந்த ஆன்மா எந்தச் சாமி மேல் அவர் பக்தியாக இருந்தாரோ… எந்தெந்த வழிகளில் அதை வழிபட்டாரோ… அதை எல்லாம் வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவான்.

இன்ன தெய்வத்தின் மேல் பற்று கொண்டார் என்ற நிலை வரும் பொழுது இறந்தவருடைய வீட்டில் அமாவாசை அன்று அப்பாவை (இறந்தவரை) நினைத்துக் கூப்பிடுவார்கள்.
1.அவர்கள் பாத மண்ணை வைத்து இவன் மந்திரத்தைச் சொல்லி இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்
2.பின் அந்த ஆன்மாவை வைத்துப் பல பல வேலைகளைச் செய்வான்.
3.குட்டிச் சாத்தானாக மாற்றுவான்… பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்..
4.மற்றவர்கள் நோய்களைப் போக்கவும் பயன்படுத்துவான்.

கர்ப்பமான ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்வார்கள். அதே போல் ஆஸ்பத்திரிகளில் உடைநீர் என்று எடுத்துக் கொள்வான். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய வேலைகள்.

அதை எல்லாம் எடுத்து வைத்து அதற்கென்று மந்திரத்தைச் சொல்லி கரு சிதைந்ததோ உடைநீரோ அந்த ஆன்மாக்களை வைத்து
1.கரு வித்தைகளைச் செய்வதும்
2.ஜோதிடங்கள் பார்ப்பதும்
3.சில குடும்பங்களைக் கெடுப்பதும்
4.தனக்கு ஆகாதவரைக் கெடுப்பதும்
5.குட்டிச் சாத்தானை வைத்துச் செய்யும் வேலைகளை எல்லாம் செய்வார்கள்.

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்கள் எல்லாம் பேயாகப் போய்… நோயாகப் போய்… அவர்கள் “சர்வ நாசமாகும் நிலைகளுக்கு…” அங்கே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் நாம் சாப்பாடு வைத்துக் கூப்பிடுகின்றோம். ஆனால் கடைசியில் அவர்கள் நிலை என்ன ஆகிறது…?

இன்னொரு உடலுக்குள் போய் அவஸ்தைப்பட்டுப் அந்த உடலை விட்டுப் போன பின் தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் இந்த ஆன்மா பிறக்கும்.

வீட்டுப் பக்கம் குடுகுடுப்புக்காரன் வருவான். பெரும்பகுதி அவர்கள் வீட்டிலே புது துணி கொடுத்தாலும் வாங்க மாட்டான். “கொஞ்சம் பழைய துணி இருந்தால் கொடுங்கள்…!” என்று அதைத் தான் கேட்பான்.

1.ஏனென்றால் உடலில் இருக்கக்கூடிய மணம் அதிலே இருக்கும்.
2.மந்திரங்களை அவன் ஜெபித்தவுடனே என்னென்ன செய்திருக்கின்றீர்களோ அந்த மணம் பட்டு
3.உங்கள் வீட்டுக்குள் அடுக்குப் பானையில் இருக்கும் சங்கதி எல்லாம் கூடச் சொல்வான்.

நமக்கு ஆகாதவர்கள் யார்..? என்று தெரிந்து கொள்வான். அங்கே போய் ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு “அவர்கள் தான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்…!” என்று நம்மிடம் சொல்வான்.

அடப்பாவிகளா..! என்று நாம் நினைப்போம்.

இதை எல்லாம் வெளியிலே சொல்லக் கூடாது ஏனென்றால் ஆபத்தான விஷயங்கள் இருக்கிறது என்று நம்மிடம் “சத்தியம்” வாங்கிக் கொள்வான்.

ஆகாதவர்களின் தலை முடி… துணி… ஏதாவது எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சிநேகிதமாகப் பேசுவது போல் எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலை முடி… துணி… அவன் வைத்திருக்கும் அந்தக் கருவையும் வைத்து சில மந்திரங்களைச் சொல்லி எடுத்து வைத்திருக்கும் பாத மணலில் போட்டு வீட்டில் தெளித்து விடுவான்.

1.மணல் பட்டதும் சில வீடுகளில் கை கால் வராமல் போகலாம்
2.பெண்கள் கருவுற்றிருந்தால் கரு சிதைந்து போகும்
3.இந்த மாதிரி எல்லாம் சில குடும்பங்களில் நிறைய நடக்கிறது… (சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்களில்…!)

காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பலாம் என்று செய்யலாம். ஆனால் அப்படிப் போக முடியாது…!

இதை எல்லாம் தெரிந்து அறியாமல் இயக்கும் மந்திர தந்திரங்களிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்..!

ஆதியிலே அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றியது எமது குருநாதர் தான்…!

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எனக்கு உபதேசித்ததை உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டா… எமது குருநாதர் – ஆதியிலே “அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றிய அவர்…”
2.தனக்குள் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலை
3.துருவப் பகுதியின் ஆற்றலை நுகர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்

அவர் எவ்வாறெல்லாம் சக்தி பெற்றார்…? என்ற நிலையை எனக்கு உபதேசித்தார்… உபதேசித்தது மட்டுமல்ல…!
1.அந்த அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.

இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல… அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர் அவர்.

ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டி
2.அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.

அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.
3.இதை அலட்சியமாக எண்ண வேண்டாம்.

27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.

எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.

அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.

அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் (முகப்பில் உள்ளது) கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.

தன் எண்ணத்தின் முகப்பு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அணுமதிக்கின்றது.

அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எண்ணத்தால் இயக்கி… ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து… 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைக்கச் செய்வதே தியானத்தின் முக்கியப் பொருள்.

என்ன…? பெரியதாக 27 நட்சத்திரங்கள் சக்தியைப் பெறச் சொல்கிறார்…? என்று எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் 27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் எனக்குக் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்ற எண்ணத்தைப் பரப்பி
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஞானிகள் மனித வாழ்க்கையில் வந்த இருளை நீக்கிப் பெற்ற ஆற்றலையும்
9.ஒளிச் சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.

குருநாதர் உபதேசித்த அந்த அருள் வழிப்படி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உங்களுக்கு உபதேசித்து வருகின்றேன்.
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

எப்படிப் பிறர் செய்யும் தீங்கான உணர்வுகள் தீய வினைகளாகி உடலில் நோயாக வருகின்றதோ இதைப் போல் “அந்த நோயை மாற்றவல்ல” அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை “உங்களை அறியாமலே அந்த நல்வினைகளை ஓங்கச் செய்கின்றேன்…”

அதை நினைவு கொண்டு நீங்கள் எடுக்கும் போது இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வாக உங்களுக்குள் விளைந்து… பொருள் கண்டுணர்ந்த அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் நீங்கள் சென்று… பெருவீடு பெரு நிலை என்ற நிலையாக “ஒளிச் சரீரம் நீங்கள் பெற வேண்டும்” என்ற இச்சையில் தான் இதை உபதேசிக்கின்றேன்.

கீதையிலே சொல்வது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…! நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் உங்களுக்குள் பெருக வேண்டும் என்ற இந்த உணவின் நோக்கம் கொண்டு தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த நீங்களும் இதையே பின்பற்றினால் அதன் வழி கொண்டு
1.பிறர் வாழ வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
2.அந்த வாழ வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
3.உங்களுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் சக்திகள் அது ஒடுங்கி
4.மெய் உணர்வைக் காணும் சக்தியாக உங்கள் பேச்சு மூச்சும் வெளிப்பட்டு
6.விஞ்ஞான உலகால் ஏற்படுத்தப்பட்ட நஞ்சினை வென்று
6.இந்தப் பூமியிலிருந்து நஞ்சினை அகற்றிடும் ஆற்றலாக நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

அத்தகைய ஆற்றலை இந்தப் பூமிக்குள் உருப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும். அத்தகைய மூச்சலைகளாக உங்கள் மூச்சு வெளிப்பட வேண்டும்.

அந்த நிலை பெற வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பெற்றால் ஒழிய இனி வரக்கூடிய தீமையான விளைவுகள் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.

ஆகவே இனி வரும் நிலையில்
1.இந்த உலகிற்கு அருள் வழி காட்டக்கூடிய அரும் பெரும் சக்திகளாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கணவன் இறந்தால் சாங்கிய சாஸ்திரப்படி மனைவியின் மாங்கல்யத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால்
1.“கணவனை இழந்தவள்…” என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
2.அந்த மாங்கல்யத்தைக் கழட்டி விட்டால் தான் தன் குழந்தைகள் மீது பற்று வருமாம்.

இப்படிச் செய்கின்றனர்.

மாங்கல்யத்தைத் தான் தூக்கி எறிந்து விடுகின்றார்கள். வாழ்க்கையில் என்று திருமணம் ஆனதோ அவருடன் கலந்து உறவாடிய உணர்வுகள் உடலுடன் இருக்கின்றதே அதை என்றைக்குத் தூக்கி எறிவது…?

சொல்லுங்கள் பார்க்கலாம். தூக்கி எறிய முடியுமா…? அவர் சம்பாரித்த சொத்தைத் தூக்கி எறிகின்றீர்களா..?

“கணவர் தன்னுடன் இருக்கின்றார்…!” என்ற நிலைகளை எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் கணவரின் உயிரான்மா இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை மனைவி எண்ணி எடுக்க வேண்டும்.

அங்கே சப்தரிஷி மண்டலங்களில் இணைத்த பின் அவரை “ரிஷி” என்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த அருள் பெற வேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று மனைவி அதை எண்ணி வளர்த்தால் அந்த அருள் உணர்வுகள் இங்கே வரும்.

மாறாக… கணவன் மேல் பற்று கொண்டு “என்னை விட்டுப் போய்விட்டாயே…!” என்று எண்ணினால்
1.கணவனின் உயிரான்மா மனைவியின் உடலுக்குள் தான் வருகின்றது.
2.அவர் உடலில் வந்த நோய்கள் தான் இங்கே விளைகின்றது.

மீண்டும் இந்தப் பற்றின் தன்மை கொண்டு “போய்விட்டார்” என்று எண்ணி என் குழந்தைகளை நான் எப்படிக் காப்பேன்…? என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தைத்தான் வளர்க்க முடிகின்றது.
1.கணவனையும் பாதுகாக்க முடியவில்லை.
2.ஆக நம்முடைய உணர்வையும் நாம் காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட விஷத்தின் தன்மை பெற்றால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் விஷத் தன்மை கொண்ட உடலாகத்தான் மாற்றுகின்றோம்…! என்ற நிலையை எல்லோருமே மறந்து விடுகின்றனர்.

ஆனால் நம் ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை என்ன…?

மனிதன் பல கோடிச் சரீரங்களில் விஷத்தை நீக்கி… நீக்கி… நீக்கி… விஷத்தை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக இந்த மனித உடலை உருவாக்கியுள்ளான்..! என்பதைச் சாதாரணமாக “ஒரு கல் சிலையை வைத்து…!” நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

1.யானைத் தலையை வைத்து மனித உடலைப் போட்டு
2.நாம் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
3.இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

“ஆதிமூலம்” – நம் பூமிக்குள் ஆதியிலே வந்த இந்த மூலமான உயிர் தன் வாழ்க்கைக்குச் சுவாசித்த உணர்வு மூஷிகவாகனா… அதாவது
1.சுவாசித்த உணர்வு கொண்டு வாழ்க்கை நடத்தி
2.தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசித்துக் கணங்களுக்கு அதிபதியாகி
3.பரிணாம வளர்ச்சியாகி நஞ்சு கொண்ட உணர்வுகளிலிருந்து விடுபட்டு
4.இப்படித் தான் நாம் மனிதனாகப் பெற்றோம் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

மிருகங்கள் அனைத்துக்கும் உடல் வலிமை உண்டு. ஆனால் மனிதனுக்கு எண்ண வலிமை உண்டு என்று காட்டுவதற்காகத் தான் யானைத் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டு விநாயகரைக் காட்டினான் ஞானி.

ஆக… ஆதிமூலம் என்ற உயிர் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

இந்த வினைகளுக்கெல்லாம் நாயகா… விநாயகா என்று மனிதனாகப் பெற்ற பின்
1.இந்த உடலை மதிக்கும்படி செய்கிறான்
2.இந்த உடலை உருவாக்கிய கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா என்று
3.உயிரான ஈசனை வணங்குபடிச் சொல்கிறான்.

இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை எல்லாம் அகற்றி விட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நல் வினைகளாகச் சேர்த்து ஒளியாக மாறி “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீ ஆக வேண்டும்…” என்பது தான் விநாயகர் தத்துவத்தின் மூலம்…
1.ஞானிகள் காட்டிய சாஸ்திரம் இது தான்.
2.அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் விநாயகர் தத்துவம்.

ஆகவே நேற்றைய செயல் இன்றைய மனித உடல்… இன்றைய உடல் நாளைய ஒளி உடலாக நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து அதன் வழி கொண்டு நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

கண்ணுக்குத் தெரியாதபடி… “அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி” யாரும் எதையும் செயல்படுத்த முடியாது

 

உதாரணமாக… சோர்வான எண்ணத்தை நாம் எடுக்கிறோம் என்றால் இந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… “ஹூம்… என் உடலுக்கே முடியவில்லை…” என்று வந்து விடுகிறது.
1.சோர்வை வலுவாந பின் உடலுக்கு முடியாது போய் விடுகின்றது.
2.மீண்டும் அதிகமான நிலைகளில் வேதனையை ஊட்டும்

அந்தச் சோர்வின் வலிமை வரும் பொழுது அது அர்ஜுனன். அந்த உணர்வினைக் கண்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது…
1.அங்கே அந்த வேலைக்குப் போக முடியாது…! சரி நீ இரு…! என்று
2.இந்த உணர்வினை உபதேசித்து அதாவது இந்த உடலுக்கு தக்கவாறு அந்த அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றார்.

நாம் எடுத்துக் கொண்ட நினைவின் அலைகள் எதுவோ அதிலே எதிர் நிலைகள் தாக்கப்படும் பொழுது அந்த நிலை வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் மகிழ்ச்சியாக இருந்து ஒரு காரியத்தைச் செயல்படப் போகும் போது “ஒரு வேண்டாத எதிரி அங்கே வருவான்…” என்றால் அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு
1.மகிழ்ச்சியான உணர்வுடன் மோதப்படும் பொழுது ஆத்திரத்தைத் தூண்டுகின்றது.
2.என் வலுவான எண்ணங்கள் கொண்டு “அயோக்கியன் போகின்றான் பார்…” என்ற எண்ணத்தை எனக்குள் உணர்த்தி உபதேசிக்கின்றது.
3.அவரிடம் போனால் ஏதாவது செய்துவிடுவான் அதனால் நீ இப்படித் தப்பிச் சென்று விடு…! என்று வழிகாட்டுகின்றது.

ஒருவன் பால் எதிரியாக இருக்கிறோம் என்றால் அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையைப் பார்த்த பின் “எதிரி போகின்றான்” என்ற நிலையும் தனக்குள் வலுவான… தன்னைக் காக்கும் எண்ணங்களைக் கண்கள் ஊடுருவி “நீ இப்படிக் காத்துக் கொள்…” என்ற நிலையை இந்த ஞானத்தைப் போதித்து இந்த உணர்வின் தன்மை இயக்குகின்றான்.

இது தான் கீதா உபதேசம் என்று சொல்வது.

1.நமக்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வும் அர்ஜுனன்…! அவன் சகலகலா வல்லமை பெற்றவன்…! என்று
2.உடலுக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் அதிலே எதை எண்ணுகின்றோமோ அதனதன் வல்லமையை அது காட்டும்.

அந்த வல்லமைக்குத் தக்கவாறு எண்ணிய நினைவில் இந்தக் கண்ணன் வழிகாட்டி அதனுடைய நிலைகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைக் கண்ணின் இயல்பான நிலையும் நம் உடலுக்குள் அது இயக்குவதையும் வியாசக பகவான் காட்டுகின்றார்.

நம் உடலின் உறுப்புகளில் கண்ணின் நிலைகள் புழுவிலிருந்து வரப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து அதை வளர்த்து அந்த உணர்வின் தசையாக நமக்குள் உருவாகி அந்த மணத்தின் தன்மை கொண்டு நாம் எப்படிச் செயல்படுகின்றோம்…? என்ற நிலை தான் கீதா உபதேசத்தின் தெளிவான நிலைகள்.

கண்ணன் மகா ஞானி என்று சொல்கின்றோமே தவிர இந்தக் கண்ணன் யார்…? நமக்குள் சாரதியாக இருப்பது யார்…?

ரோட்டிலே சென்றாலும் நம் கண்கள் தான் சாரதியாக இருந்து வழி காட்டுகிறது.
1.இது மேடு… இது பள்ளம்…!
2.இங்கே வேகமாக வண்டி வருகின்றது… அங்கே மாடு மிரண்டு வருகின்றது… ஆகவே இந்தப் பாதையில் நீ செல்
3.இங்கே உன்னுடைய எதிரி வருகின்றான்… அங்கே உன் நண்பன் வருகின்றான் அவனிடம் நீ அணுகு
4.அவருடைய உதவி உனக்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது யார்…?
5.நம்முடைய கண்ணான கண்கள் தான் ஒவ்வொரு நொடியிலும் அதை உபதேசிக்கின்றான்.

நமக்குள் இருக்கக்கூடிய குணம் கொண்டு கண்ணால் நாம் பார்க்கப்படும் பொழுது எதிரியின் வேகமான உணர்வுகளைக் கண் இழுத்தாலும் நமக்குள் இருக்கும் வலுவான எண்ணங்களுக்குள் அதைச் சமப்படுத்தும் பொழுது
1.அந்த உணர்வின் நினைவைத் தூண்டி… வலுவான எண்ணங்களைக் கூட்டி
2.அதனுடன் இயக்கச் செய்யும் இந்த ஞானத்தை ஊட்டுகின்றது நமது கண் தான்.

அதைத்தான் கண்ணன் கீதா உபதேசம் செய்தான் என்று அவன் ஒரு பெரிய மண்டலத்தையே நமக்குள் அமைத்திருக்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பேரண்டத்தின் நிலைகள் இங்கே செயல்படுகின்றது என்று காட்டினார்கள்.

அதனால் தான் கண்ணன் சொல்கின்றான்…! “என்னை அறியாது…” எச்செயலும் யாரும் செயல்படுத்த முடியாது என்று…!

நம் கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி யாரும் எதையும் செயல்படுத்த முடியாது.
1.எதைக் கூர்ந்து கவனித்தோமோ அந்த உணர்வின் சக்தியைப் படமாக்கி
2.அந்த உணர்வின் சக்தியை உடலாக்கி
3.அந்த உணர்வின் எண்ணங்களை உருவாக்கி வைப்பது இந்தக் கண்கள் தான்.

ஆகவே தான் கண்கள் தோன்றிய பின் ஒவ்வொன்றையும் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அதைப் படம் எடுத்து அந்த உணர்வின் சக்தி தனக்குள் வலுக் கூடி கூர்மை அவதாரமாக நாம் எண்ணிய நிலைகள்… அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உருமாற்றிக் கொண்டு வந்தது.

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நம்முடைய கூர்மை அவதாரம் எதில் இருக்க வேண்டும் என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்து உணர்த்தினார்.

கீதாச்சாரம் என்ற நிலையில் அன்று வியாசக பகவான் எதை உணர்த்தினாரோ
1.அந்த உணர்வலைகள் நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
2.அவர்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தையும் நாம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அது கலவையாகும் பொழுது அது எப்படி எல்லாம் மாறுகின்றது…? அதிலே ஒளிக் கதிர்களாக இருப்பது தங்கமாக எப்படி மாறுகிறது..? என்று இதை எல்லாம் வரிசைப்படுத்திக் காட்டினார் குருநாதர்.

27 நட்சத்திரத்தின் சக்திகளை ஒவ்வொரு கோள்களும் எப்படி எடுக்கிறது…? அதற்குள் எனென்ன மாற்றங்கள் ஆகிறது…? என்று ஒவ்வொன்றாகக் காட்டினார்.

செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் சிவப்பு நிறமான நிலைகளும்… அதிலிருந்து வருவதும்… எப்படி இருக்கின்றது…?

புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகிறது…? 27 நட்சத்திரங்களின் சக்திகள் இதனுடன் கலவையாகப்படும் பொழுது புதன் கோள் எடுத்து எத்தனையோ வகையான உலோகத் தன்மை கொண்டதாக எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது..?

அதே சமயத்தில்
1.வியாழன் கோள் எடுக்கும் பொழுது
2.அந்த நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி
3.ஒரு பொருளுக்குள் ஊடுருவி “இணைக்கும் சக்தியை” எப்படிக் கொடுக்கின்றது…?

இதிலே ஆவித் தன்மையாக ஆன பின் சனிக்கோள் எப்படி அந்த ஆவியான நிலைகளை எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? இதை எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபகோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எடுத்து வளர்கிறது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டுக் கோள் பத்துக் கோள் பன்னிரெண்டு கோள் என்று உப கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு. அந்த 27 கோள்களும் 27 நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாக மாற்றுகின்றது.

அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகளில் வரும்.

வியாழனின் உபகோள்களிலேயே
1.ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்
2.ஒன்று அப்படியே மாற்றிச் சுற்றி வரும்.
3.விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
4.அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகிறதா…!
5.இது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் உள்ளார்கள்.

அந்த 27 உபகோள்களும் அது சுழன்று கொண்டு தான் இருக்கிறது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து இதற்குள் அதை எல்லாம் சேர்த்து ஒரு கலவையாகி இந்த உணர்வின் தன்மை “ஒரு புதுவிதமான கதிரியக்கமாக…” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படி அது உறைபனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோள் உறையும் பனியாக மாற்றுகின்றது. இன்றும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.எதிர் காலத்தில் இந்த உண்மைகளை நீங்களும் அறிய வேண்டும்.
2.நான் மட்டும் தெரிந்தால் போறாது… எத்தனை காலம் இந்த உடலில் இருக்கப் போகின்றேன்…!

ஆகவே அந்தப் பேருண்மைகளை நீங்கள் எல்லோரும் உணர்ந்து… நீங்களும் தெளிந்து… “இந்த உலகில் வரும் இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்…!”

அதுவே என்னுடைய (ஞானகுரு) தவம்.

ஒளியின் சரீரத்தை நமக்குள் “விடாப்பிடியாக உருவாக்கச் செய்யும் சக்தி”

 

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது இந்த மனித உடலை உருவாக்கிய சக்திகள் தான். இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியாகச் சேர்த்து
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது விண்ணுலகம் சென்ற அந்த மெய்ஞானிகள் நிலையை
2அவர்கள் கண்டுணர்ந்த அந்தச் சக்தியைத் தான் நாம் இன்று தியானத்திலே எடுப்பது.

தாவர இனச் சத்தில் விளைந்ததை நாம் புசிக்கின்றோம். அதனின் சத்தை ஆவியாக மாற்றிப் பாலாக எடுத்து இந்த உணர்வின் சத்தை வடிகட்டி ஒவ்வொரு நிலைகளிலும் பார்க்கின்றோம்.

பாலை வைத்து இறக்கி தாவர இனச் சத்தின் நிலைகள் அது ஒரு நிறமாக இருந்தாலும் அதை நீக்கிவிட்டு அதற்குள் வெள்ளையான ரசத்தை எடுத்து அதை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் தாவர இனத்திலே விளைந்த சத்துகள் மனித உடலானாலும் இந்த உடலுக்குள் நின்று மெய்ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அந்த உணர்வின் தன்மையை
1.ரசத்தை எப்படி இறக்குகின்றார்களோ இதைப் போன்று மனித உடலில் இருந்து மெய் ஞானிகளின் அருள் வித்தின் நிலைகளைக் காட்டி
2.உடலில் இந்தத் தாவர இனச் சத்தின் தசைகளை நீக்கி அந்த தசைக்குள் விளைந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அன்று உருவாகியது சப்தரிஷி.

ஆறாவது அறிவு சரஹணபவா குகா நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் மறைந்திருந்த விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல சத்தினையும் நல்ல குணத்தினையும் நமக்குள் எண்ணமாகக் கொண்டு நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்று
1.அதனின் நிலைகள் நல்லதைச் செய்யும் நிலைகள் யாம் எழுப்பும் ஒலியின் நிலை சப்தம்
2.உங்களுக்குள் சொல்லும் உணர்வுகள் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளில் அதை உருவாக்கச் செய்து
3.அந்த மகிழ்ச்சியைத் தோன்றச் செய்வது தான்… ஆக அது சப்தரிஷி…!

ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று அந்த ஒலியின் நாதத்தால் ஏழாவது அறிவைக் கொண்டு இயக்குவது தான் சப்தம் நாதமும்… ஏழாவது நிலையும் இரண்டற ஒருக்கிணைந்து சப்தரிஷிகள் என்பது.

மனித உடலில் மெய் ஒளியாகச் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷி என்பது. சப்தரிஷி மண்டலம் என்பது ஏழு அல்ல. எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு மனிதனிலிருந்து உருப்பெற்றது தான்.

மனித வாழ்க்கையில் எண்ணிலடங்காத குணங்கள் இருந்தாலும் ஏழாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் தெளிவாக உணர முடிகின்றது… அதைச் செயல்படுத்த முடிகின்றது. அதற்குத்தான் அப்படிப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

உணர்வினை ஒளியாக மாற்றிய தன்மையைத் தான் ரிஷியின் மகன் நாரதன் என்று சொல்வது. நாரதனோ அவன் ஒரு முனிவன். அவன் கலகப்பிரியன்.

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை வென்று உணர்வின் சத்தை ஒளியாக மாற்றித் துருவம் சென்றடைந்து அதன் பின் அதிலிருந்து விளைந்து சப்தரிஷி மண்டலங்களாக உருபெற்றது.
1.ஒளியின் தன்மையாகப் பேரண்டத்தின் உண்மைகளை அறிந்து
2.தீயதை நீக்கி மெய் ஒளியைத் தனக்குள் எடுத்து ஒளியின் சரீரமாகப் பெற்று
3.விண்ணிலே வரக்கூடிய விஷத்தின் தன்மையை அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் நுகர்ந்து அதை ஒடுக்கி ஒளியாக மாற்றினார்கள்.

வைரம் விஷத்தைத் தனக்குள் ஒடுக்கி ஒளியின் தன்மையாக என்றும் நிலையாகப் பிரகாசிக்கின்றது. இதைப்போல இந்த மனித உயிராத்மா ஒளியின் சரீரம் பெற்று விஷத்தை உள்ளடக்கிய பின் அந்த விஷமே ஒளியாக மாறுகின்றது.

அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகள் ஊடுருவி வரப்படும் பொழுது
1.அதை நம் எண்ணத்தால் நுகர்ந்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இந்தப் புவியிலிருந்த ஆசைகளைக் கலகமாகக் கலக்கிவிட்டு அந்த மெய் ஞானிகள் பெற்றது போல நாமும் ஆற்ரலைப் பெற முடியும்.

அதாவது… நாம் பாலைக் கடையும் போது வெண்ணை திரண்டு வருகிறது. அதை உருக்கப்படும் பொழுது அதனுடைய சக்தி நெய்யாக வடிவது போல
1.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாம் நுகரப்படும் போது மனித வாழ்க்கையில் வந்த விஷமான பிடிப்புகள் அகன்று
2.அந்த விஷத்தின் தன்மையே சத்தான நிலைகள் வடித்து மெய் ஞானிகள் ஒளியாக ஆனது போல நாமும் பெற முடியும்.

ஆனால் நாரதன் கலகப் பிரியன் கலகமோ நன்மையில் முடியும் அவன் ஒரு முனிவன்.
1.தான் பெற்ற ஒளியின் சரீரத்தை “விடாப்பிடியாக” அவன் நமக்குள்ளும் சிருஷ்டித்து விடுவான்… அது தான் முனி என்பது
2.அந்த உணர்வான சக்தியை நமக்குள் சேர்த்து அந்த வலுவான நிலைகளை உருவாக்கச் செய்வது தான் முனி என்பது.

ஆகவே மெய் ஞானிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் நம்மை அறியாயது வரும் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு அவன் ஒளிகளிலேயே நாமும் விண் செல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் உனக்குத் தங்கம் செய்யத் தெரியுமாடா…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்..?

எனக்கென்ன சாமி தெரியும்…! என்று சொன்னேன்.

ஈயக்கட்டியை வாங்கிக் கொண்டு வா… ஒரு இரும்புக் கரண்டியைக் கொண்டு வா… என்றார். வாங்கிக் கொண்டு வந்தேன்.

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அங்கே “சில மரங்களுக்கு முன்னாடி இருக்கும் குப்பைகளை எல்லாம் காண்பித்து…” இதை எல்லாம் எடுத்துக் கொண்டு வா..! என்றார்.

அதை எல்லாம் அள்ளிப் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்துடா என்றார். குப்பை எரிந்த பிற்பாடு பார்த்தோம் என்றால் அதிலே இருக்கும் சத்துகள் எல்லாம் ஈயத்தில் இறங்கி அடுத்தாற்போல் பார்த்தால் “தங்கமாக” இருக்கிறது.

குருநாதர் இந்தப் பக்கம்… அந்தப் பக்கம்… என்று பல இடத்திலிருந்து எனக்குத் தெரியாமல் தான் குப்பையை அள்ளச் சொன்னார். நானும் அதை எல்லாம் குறித்து (அடையாளம்) வைத்துக் கொண்டேன்.

எல்லாம் செய்த பிற்பாடு தங்கக் கட்டியாகி விட்டது. குருநாதரிடம் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாத்தியார் ஆசாரியார் எல்லாம் என்னிடம் பழக்கமானவர்கள் இருந்தார்கள்.

குருநாதர் செய்த தங்கக் கட்டியை விற்கச் சென்றேன். அப்பொழுது அந்தத் தங்கக் கட்டியின் தரம் எப்படி இருக்கிறது… பாருங்கள்..! என்றேன்.

நீ பைத்தியக்காரரிடம் (ஈஸ்வரபட்டர்) ஏன் சுற்றுகிறாய்…? என்ற காரணம் இப்பொழுது தான் தெரிகிறது என்றார்கள் அவர்கள். நீ சரியான “காரியப் பைத்தியம் தான்…” என்றார்கள்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தைச் செய்து கொண்டு வா.. நான் வாங்கிக் கொள்கிறேன்…! என்றார் அந்த ஆசாரி.

முதலில் குருநாதர் தங்கம் செய்த மாதிரியே அவருக்குத் தெரியாமல் நானும் செய்து பார்த்தேன். தங்கம் வந்துவிட்டது…! அதைச் செய்த பிற்பாடு ஆசாரியிடம் கொடுத்த பிற்பாடு அவர் என்ன செய்தார்…?

அட அடா… எனக்குக் கொஞ்சம் வழி கொடுத்தால் நான் எத்தனையோ செய்வேன்.. அடுத்து வாத்தியார் என்ன செய்தார்…? அட.. நீ செய்யாமல் போனால் பரவாயில்லையப்பா…! என்று அந்த வாத்தியார் என்னைச் சுற்றி சுற்றி வந்தார். நான் போகும் பக்கம் எல்லாம் வந்தார்.

கொஞ்சம் போல.. ஒரு கோடி மட்டும் காட்டிவிடு…! என்றார். நீ பாவம் செய்ய வேண்டாம் நான் அதைச் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறேன்.

அடேயப்பா..! அவர் என்னைச் சுற்றியே வந்தார். இப்படித் தங்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரொம்பப் பேர் என்னைச் சுற்றி வந்தார்கள் சிறிது காட்டிக் கொடுங்கள் என்று…!

தங்கமே எனக்குச் செய்யத் தெரியாது என்றேன்.

இல்லை… நீங்கள் தங்கத்தை விற்று வந்திருக்கின்றீர்கள்… அது எப்படி…? மிகவும் நயமான தங்கம் என்று எல்லோரும் சொல்கிறார்களே…! என்று கேட்டு நான் எங்கே போனாலும் துரத்திக் கொண்டே வருகின்றார்கள்.

காரணம்… குருநாதர் ஒவ்வொரு தாவரத்திலும் என்ன சத்து அடங்கி இருக்கின்றது…? என்று காட்டினார்.
1.ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வும் எப்படி மாறியது…?
2.அந்தத் தாவர இனச் சத்துக்களைச் சூரியன் எப்படி எடுத்து வைத்திருக்கிறது…?
3.அதை எடுத்து அலைகளாக மாற்றும் பொழுது நட்சத்திரங்கள் இரண்டு மோதும் பொழுது இந்த உணர்வுகள் எப்படி அதிலே இணைகிறது…?
4.அது இணந்த பின் அதனுடைய மாற்றங்கள் எப்படி மாறுகிறது…? என்கிற வகையிலே குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லால் சொல்லி நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதில் வைத்திருக்க முடியாது.

ஆனால் செய்து காண்பித்தோம் என்றால் சாமி சொல்லி விட்டார் அல்லவா… நாமும் செய்து பார்ப்போம் என்று
1.இந்த ஆன்மீக நிலையை எடுப்பதற்குப் பதில்
2.இந்த வாழ்க்கைக்குத் தேவை என்று “பணத்தின் மீது” ஆசை வைத்து விடுவீர்கள்.

அந்த மாதிரிப் போனவர்கள் நிறைய உண்டு… இன்றும் இருக்கின்றார்கள்.

“சாயிபாபா” லிங்கத்தை எப்படிக் கக்கி எடுத்துக் கொடுக்கின்றார்…! என்று ஒரு பையனுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவன் செய்தான்… அதற்குப் பின்னாடி அவன் பெரிய கடவுளாக மாறிவிட்டான்.

சிலருக்கு இந்த மாதிரி விவரங்கள் எல்லாம் சொன்னவுடனே தனித் தனிக் கடவுளாக மாறி
1.ஈஸ்வரபட்டர் தனித்து (SPECIAL) அவர்களுக்குக் கொடுத்தார் என்று
2.இந்தக் குருநாதரை மறந்து விட்டார்கள்.

உலகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்று சிலருக்குக் காண்பிக்கப்படும் பொழுது அதிலேயும் “எல்லாம் தெரிந்து விட்டது…!” என்று சில பேர்
1.இன்னும் கொஞ்சம் தானே…
2.அப்புறம் பிடித்தால் போய்விட்டது என்று
3.எம்மை (ஞானகுருவை) மறந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இப்பொழுதும் அப்படி குருவை மறப்பவர்கள் உண்டு. ஏனென்றால் தனித்து இந்த உடலின் ஆசை தான் வருகிறது.

மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற நிலையோ இயற்கை எப்படி இருக்கிறது….? அதிலே நீங்கள் எப்படி வளர வேண்டும்…? என்ற உண்மையைச் சொன்னாலும் கூட இந்த உடல் இச்சையே வருகிறது.

அந்தப் பேரின்பப் பெருவாழ்வு என்ற அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற ஆசை வருவதில்லை.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாக அந்த உண்மைகளை உணர வேண்டும் என்பதற்கே அனுபவமாகக் கண்டதை வெளிப்படுத்துகின்றேன்.

எல்லோரையும் காக்க வேண்டும் என்ற நிலை மாறி… “அழிக்க வேண்டும்” என்ற உணர்வே வளர்ந்து விட்டது

 

இந்த மனித வாழ்க்கையில் இந்த ஆசை அந்த ஆசை என்று இருந்தாலும் அதனின் வளர்ச்சியில் உலகெங்கிலும் எத்தனையோ வகைகளில் எத்தனையோ நிலைகளில் போர்க்களங்கள் ஆகிக் கொண்டுள்ளது.

அதனால் ஆங்காங்கு வாழும் மக்களின் நிலை என்ன ஆவது…?

ஒவ்வொருவரும் தன்னைக் காக்க எத்தனையோ விஷமான குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்து
1.தன் நாட்டைக் காக்கப் போகின்றேன்… அதை வைத்து எதிரியை வீழ்த்தப் போகின்றேன் என்ற இந்த உணர்வை ஓங்கி வளர்த்து
2.அதேபோல மற்ற நாட்டவரும் எதிரிகளிடம் இருந்து காக்க அவனை அழிக்க வேண்டும் என்று அதை நுகர்ந்து
3.தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்து விடுகின்றான்.

இவன் உடலில் இருக்கக்கூடிய நல்ல எண்ணத்தை இவன் அழித்தும்… பதிலுக்கு எதிரியை அழிக்க வேண்டும் என்ற உணர்வுகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் நல்ல குணங்களை அவன் அழித்திடும் நிலையாகவும் தான் செயல்படுகின்றனர்.

1.ஆக… யாரைக் காக்க வேண்டும் என்று இப்படி எண்ணினார்களோ அவர்கள் யாரையுமே காக்க முடியாது
2.அனைவருமே நல்ல குணங்களை இழந்து மண்ணுடன் மண்ணாக மடியும் நிலைதான் வருகின்றது.
3.மடிந்தாலும் விஷ பூச்சிகளாகப் பிறக்கும் நிலை தான் உருவாகிக் கொண்டுள்ளது.

எப்படி… எதனால்…?

விஷமான ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளார்கள் அதை வெடிக்கும் போது சுட்டுப் பொசுக்கிப் பாதிப்பாகும் பொழுது அதனால் ஏற்படும் வேதனையான உணர்வுகள்
1.எந்தெந்த விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றனரோ அதற்கொப்ப இறந்து விடுவோமே என்ற வேகத்தில் அதை எல்லாம் சுவாசிக்கப்படும் பொழுது
2.குண்டுகளாக் நம்மை அழித்து விடுவான் சுக்குநூறாக ஆக்கி விடுவான் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு
3.அதனின் பய உணர்வுகள் கொண்டு அதனால் தாக்கப்படும் பொழுது இந்த உடலை அழித்து
4.அந்த உணர்வு தாங்கிய தன்மையாக மனிதன் இறந்த பின் விஷப் பூச்சிகளாகத் தான் இனி பிறக்க வேண்டி வரும்.

“யுத்தங்கள் நடக்கும் பகுதிகள் அனைத்திலும்” மனிதர்களாக இருப்பவர்கள் அங்கே இறந்து விட்டால் விஷப் பூச்சிகளாகப் பிறக்கும் நிலையைத் தான் அடைகின்றார்கள். யாராக இருந்தாலும் சரி…!

ஏனென்றால் பாலிற்குள் விஷத்தை ஊட்டினோம் என்றால் அதைக் குடித்தால் நம்மை நினைவை இழந்து மடியச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மனிதனுடைய ஆசை அலைகள் அனைத்துமே அழிந்து இனி எந்த நிலை ஆகப்போகின்றோமோ என்ற நிலையில் எதிரிகளின் பால் நினைவைச் செலுத்தி அவர்கள் வீசும் குண்டுகளினால் தன்னை அழித்து விடுவான் என்ற நிலையில் நல்ல உணர்வுக்குள் இத்தகைய விஷமான உணர்வு இணையப்படும் பொழுது அதன் அறிவுகள் உடலுக்குள் இது ஊடுருவித் தாக்கப்பட்டுச் சுக்குநூறாக்கிவிடுகிறது.

இந்தக் குறுகிய காலத்திலே விளைந்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தின் ஆற்றல் கொண்ட ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டு அதன் வழி உடலாகப் பெறப்படும் பொழுது
1.அடுத்து நல்ல உடல் பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
2.இந்தப் பூமி விஷமான நிலையிலிருந்து நல்ல நிலை பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
3.அப்படி நல்ல நிலை பெற்று அதிலே மீண்டும் மனிதர்களாக வரக்கூடிய எக்காலம்…? என்றும் சொல்ல முடியாது.

இப்பொழுது இருக்கக்கூடிய காலத்திலே எத்தனை சுகபோகங்களை அழித்தோமோ எத்தனை வேதனைகளை அனுபவித்தோமோ எந்த வேதனையை வளர்த்துக் கொண்டோமோ வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மைகள் இந்த உயிரிலே ஒன்றிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும் “வேதனைப்பட்ட நிலையிலிருந்து நாம் மீளவே முடியாது…”
1.உயிருடன் இந்த வேதனை துடித்துக் கொண்டு தான் இருக்கும்.
2.அந்த வேதனையின் உணர்வின் இயக்கங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.

இப்பொழுது உடலில் இருக்கும் பொழுது உணர முடிகின்றது உடலின் துணை கொண்டு. சந்தர்ப்பத்தால் அதை மாற்றி அமைக்கவும் முடிகின்றது மனிதனாக இருக்கும் பொழுது தான் மாற்றவும் முடியும்.

ஆனால் மனித உடலில் நீக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த வேதனையான விஷம் உயிராத்மாவிலே சேர்க்கப்படும் பொழுது எப்பொழுதுமே விஷத்தன்மை கலந்ததாக இயக்கி “நம்மை வேதனையால் துடிக்கும்படி செய்து விடும்…”

அப்படிப்பட்ட உலக சூழ்நிலையில் தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து
1.நல்ல நினைவிருக்கும் பொழுதே மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று விஷத்தன்மைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
2.அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் வருகின்றது. அந்த அறிவிலிருந்து நீங்கள் மீள வேண்டும். மற்றவர்களையும் மீட்க வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இந்த உடல் இருக்கும் பொழுதே நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும். ஏனென்றால்
1.எத்தனை நிலை இருந்தாலும் கோடிச் செல்வங்கள் நாம் வைத்திருப்பினும்
2.நமக்கு அந்தச் செல்வம் உறுதுணையாக இருப்பதில்லை.

ஏன்..?

“நம் உடல் நலம் சரியில்லை…!” என்றால் செல்வத்தைக் கொண்டு வந்து நமக்கு முன்னாடி வைத்தால் அதன் மீது வெறுப்பு தான் வரும்.

அந்தச் செல்வத்திற்காகவும் சொத்தின் பாகங்களைப் பிரிக்கும் பொழுதும் ஒருவருக்கொருவர் சகோதரர்களுக்குள் சண்டையாகிப் பகைமையாகி அதனால் எடுத்துக் கொண்ட வெறுப்பு உணர்வுகள் நோயின் தன்மையாக அடைந்த பின் அந்தப் பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு தான் வரும்.
1.இதனால் தான் எனக்குப் பகைமையானது…
2.இதனால் தான் எனக்கு நோயே வந்தது…
3.சனியன்…! அதன் முகத்திலேயே நான் முழிக்கக் கூடாது…! என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் புறப் பொருளைப் பற்றித் தெரியாதபடி அருளைப் பற்றி நாம் தெரிந்து… அதை வளர்த்துக் கொண்டால்… பொருள் மேல் ஆசையே வராது. (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே… அருள் ஞானத்தின் மீது ஆசை வரப்படும் பொழுது அருள் சக்தியை வைத்துக் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாதபடி எடுக்கப்படும் பொழுது மன நிம்மதி கிடைக்கும்…!

போதுமான நிலைகளில் நமக்கு வேண்டியது நிச்சயம் வந்து கொண்டே இருக்கும். இதையும் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

உதாரணமாக நான் (ஞானகுரு) யாரிடத்திலும் தபோவனத்திற்காகப் பணத்தைத் தேடிப் போவதில்லை. ஆனால் தபோவனத்தின் வளர்ச்சி அதுபாட்டுக்கு வளர்கிறது.

எப்படி…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்..! என்று
2.குருநாதர் இட்ட கட்டளைப்படி அருள் சேவையைச் செய்து கொண்டேயிருக்கின்றேன்.
3.பணம் எப்படி வருகிறது… எப்படி நடக்கிறது…? என்பது இங்கே என்னுடன் கூட இருப்பவர்களுக்கே தெரியாது.

ஆனால் வெளியில் இருந்து பார்க்கிறவர்கள்.. இந்தச் சாமி என்ன கள்ள நோட்டு அடிக்கிறாரா..? என்று கேட்கிறார்கள்…! அதற்கு என்ன செய்வது..?

காசு வருகிறது… எந்த வழியில் காசு வருகிறது…! என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம். எனக்கே கூடச் சந்தேகம் தான்.

“காசு இல்லை…!” என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அடுத்த நாள் பார்த்தால் எந்த வகையிலாவது பணம் வந்து விழுகிறது.

காரணம்…
1.இந்த இயற்கையின் உணர்வுகள் எதை எண்ணுகின்றோமோ…
2.அதை மக்கள் மத்தியிலே ஒன்று சேர்த்து.. அந்த உணர்வின் தன்மை
3.“நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும்…!” என்ற இந்த உணர்வு ஒன்று சேர்க்கப்படும் பொழுது
4.அது தான் தன்னிச்சையாக எடுத்து அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.
5.நான் (ஞானகுரு) அல்ல…!

எல்லோரது மனமும் அந்த உறுதியாக்கப்படும் பொழுது அந்த ஒளியின் உணர்வை நமக்குள் உறுதியாக்கும் சக்தியாகச் செயல்படுகின்றது.

இங்கே எம்முடன் பத்து இருபது வருடமாகப் பழகியவர்கள் இதை எல்லாம் அறிந்திருக்கலாம். எப்படி வளர்ச்சி அடைகிறது… எப்படி எப்படிச் செயல்படுகிறது..? என்ற நிலையைச் சிலர் உணர்ந்தும் இருக்கலாம்.

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது காசு ஏன் உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் இதற்குத்தான். மற்றவர்கள் யாரும் இப்படிக் காசு கொடுக்க மாட்டார்கள்…!

அருளைப் பெருக்குங்கள்.. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்… அழியாச் செல்வம் உங்களைத் தேடித் தேடி வரும்…!

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?

 

நம் பிள்ளை பேர் வாங்க வேண்டும் என்றால் நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்துக் கோவிலுக்குச் சென்று ஆடும்படி செய்கின்றோம். “ஆண்டவன் சன்னிதானத்தில் ஆடியது…” என்று எல்லோரும் சேர்ந்து போற்றப்படும் பொழுது நம் பிள்ளைக்கு நல்ல ஆசி கிடைக்கும் என்று செயல்படுத்துகின்றோம்.

ஆனால் இப்படி எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட யாராவது ஒருவர் “நண்டு மாதிரி இருந்து… எப்படி நன்றாக ஆடுகின்றது பார்…?” என்று பொறாமைக் கண்களோடு பார்த்தால் என்ன நடக்கின்றது…?

1.நல்லதாகச் சொன்னது அனைத்துமே விடுத்து விட்டு இந்த உணர்வுகள் பாய்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடும்.
2.பிள்ளைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது என்ற நிலை ஆகிவிடுகிறது.

நாட்டியத்தைப் பார்த்த அத்தனை பேரும் நன்றாகச் சொன்னாலும் கூட ஒருவருடைய பார்வை… “இந்த வயதிலேயே இந்த மாதிரி ஆடுகின்றது பார்…” என்று வெறுப்பான எண்ணங்களை ஊட்டப்படும் பொழுது
1.ஆயிரம் பேர் சேர்ந்து நல்ல எண்ணங்களை ஊட்டினாலும்
2.இந்த வெறுப்பான உணர்வு பார்வையாகப் படப்பட்டு அந்த நல்லதை வீணாக்கி விடுகின்றது.

உதாரணமாக இசைக் கருவிகளை வாசிக்கப்படும் பொழுது… அதிலே ஒரு வாத்தியத்தின் இசை கொஞ்சம் குறையாகி விட்டால் போதும்.

மற்ற எல்லாம் சீராக இருந்தாலும் கூட ஒன்று குறையாகி விட்டால்…
1.“அச்சச்சோ போய்விட்டதே…” என்று நல்லதாக வாசித்த அத்தனையுமே நாம் விட்டு விடுவோம்.
2.சுருதிகள் மாறி நன்றாக இருந்த இசை இப்பொழுது கெட்டுப் போய்விட்டது என்று வந்து விடுகின்றது.

அதே போன்றுதான் குழந்தை நன்றாக நாட்டியம் ஆடினாலும் அது வளர்ந்த நிலைகள் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?

குறையாகப் பேசியவருடைய உணர்வை வளர்த்துக் கண் திருஷ்டி பட்டது… கண் திருஷ்டி பட்டுவிட்டது… எல்லாமே கண் திருஷ்டி ஆகிவிட்டது என்று தனக்குள் விளைந்து அதையே எண்ணி எடுத்து குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது இந்த உணர்வினை ஊட்டிக் கொண்டிருப்போம்.

ஒருவர் தான் கண்களால் வெறுப்பாகப் பார்த்தார். ஆனால் அதைத் தாய் தந்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றோம். குழந்தை நன்றாக நாட்டியம் ஆடியது… ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டது என்ற எண்ணத்தை எடுத்து வருவோர் அனைவரிடமும் இதைத்தான் சொல்வோம்.

ஆக அந்த உணர்வை எடுத்துத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த விஷம் எதிலே கலந்தாலும் அது ஊடுருவி இயங்கி விடுகின்றது.
1.இதைத் தடைபடுத்த நாம் ஏதாவது செய்கின்றோமா…? இல்லை…!
2.சிறிதளவு குறையைக் கண்டால் போதும்… அந்தக் குறையத்தான் வளர்க்கின்றோம்.
3.எவ்வளவு மகிழ்ச்சியான நிலையில் இருந்திருந்தாலும் அந்த மகிழ்ச்சியைக் காக்கும் நிலை வருவதில்லை.

அதைப் போன்ற உணர்வின் தன்மை தான் “கூர்மை அவதாரம்…” அதாவது நாம் எண்ணியது அனைத்துமே உயிர் அவதார புருஷனாக “நம்மை அதுவாக ஆக்கி விடுகின்றது…”

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து நம்முடைய கூர்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.எப்பொழுதுமே அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே அதைக் கூர்மையாக்கி
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் செயல்பட்டோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வளர்ந்து அதுவாக நம்மை ஆக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)

அங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்..! இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்..! என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…?

என்ன..? நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…!
1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..! என்ற
2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.
3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்…! என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.

ஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது
1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி
2.அவன் நினைவை நமக்குள் கூட்டி
3.அந்த அணுக்கள் பெருக்கப்பட்டு
4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ
5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.

அதாவது…
1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது
2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.

இதெல்லாம் எப்படி…? என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…!
1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்
2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.

ஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.

எப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…! ஆக
1.இந்த நாட்டையும் காக்க முடியாது
2.வீட்டையும் காக்க முடியாது…
3.தன்னையும் காக்க முடியாது.

அரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது…! என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.

இன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்…! என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.

ஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி
3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது…? எப்படி இயக்குகிறது…?” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானத்தின் வழித் தொடர் கொண்டு நீங்கள் செயல்பட்டு
3.இருளை வென்று ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.. தீமைகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்றும் தெளிவாக உணர முடியும்.

உணர்ந்த நிலையில் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி என்ற உணர்வுகளை எடுத்து ஒளியான அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

யாம் கொடுக்கும் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

 

ஆரம்பத்தில் எத்தனையோ காட்சிகளை எல்லோருக்கும் நான் கொடுத்துக் கொண்டு வந்தேன்… சில உண்மைகளை அறியும் படியும் செய்தேன் – புவியின் ஈர்ப்புக்குள்.
1.அதிலே மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது… உடலின் இச்சைக்குள் நிகழ்ந்தது…
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

ஆகவே… அதை எல்லாம் நிறுத்தி விட்டு இப்பொழுது உங்களுக்குள் அந்த மெய் உணர்வைப் பெறும் ஆற்றலாக உபதேசிக்கின்றேன்,

விஞ்ஞான அறிவால் வரும் காற்று மண்டலம் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது மனிதன் அதை நுகர்ந்து சிந்தனையற்றவனாகச் செயல்படும் உருப்பெறும் அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள நம் சிந்தனையை விண்ணில் செலுத்தி மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்.

1.அதனைப் பெற்று நம் உணர்வு கொண்டு தன் அருகில் வரும் மனிதனின் தீமைகளிலிருந்து விடுபடவும்
2.நுகர்ந்த உணர்வுகள் மற்றவரைக் காக்கவும் தன்னைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
3.உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய இது உதவும்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால்… வாழ்க்கையில் இந்த உடலின் இச்சைகுகந்த உணர்வுகளைப் பெறப்படும் பொழுது எந்தத் தெய்வம் செய்யும் என்ற உணர்வுகளைப் பதிவு செய்தனரோ அதே தெய்வச் சிலையாகப் பார்த்துணர்ந்த உணர்வுகள் மடிந்த பின் அதே உணர்வலைகளை அதே ஏக்கம் கொண்டவர்கள் “இன்ன தெய்வத்தைக் கண்டேன்…” என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மனிதனுடைய இச்சைக்குள் வளர்த்துக் கொண்ட நிலைகள்.

ஆகவே இந்தத் தெய்வக் காட்சிகள் என்பது… மனிதனில் உருவாக்கி வேஷமிடப்பட்டு அதனைப் படமாக்கி மீண்டும் அலைகளாக அனுப்பி (விஞ்ஞான அறிவிலே) அதை நுகரப்படும் பொழுது அதையே எப்படிக் காட்சியாகக் காணுகின்றமோ இதைப் போலத் தான் கண் புலனறிவுகளில் சிலையை உற்று நோக்கி ஆடைகளை அலங்கரித்த அதன் உணர்வை நமக்குள் பதிவாக்கிய பின்… உடலை விட்டுச் சென்ற பின் அந்த அலையின் ரூபமாகச் செல்லும்.
1.அதை மீண்டும் குவிக்கப்படும் பொழுது
2.எதனை வலுவாகச் சேர்த்தோமோ அந்த ரூபமாக முருகனாகவும் காளியாகவும் காட்டும்.

கொடூர உணர்வின் தன்மை கொண்டு ஒரு பூதகணையைக் காட்டி (துஷ்ட தெய்வங்கள்) கோரப் பல்களைக் காட்டி இதுதான் காக்கும் என்றும் அதற்குப் பல உயிரினங்களைப் பலியிடப்பட்டு அதனை நேசித்துத் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஒரு மனிதன் நுகர்ந்து மடிந்திருந்தால் அதே உணர்வலைகளை உற்று நோக்கி அச்சத்தால் நுகர்ந்தால் கோரப்பல் கொண்ட அந்தச் சிலையின் உணர்வுகள் ரூபங்கள் பட்டு அதைக் கோர உருவமாகக் காட்டும்.

கோரமான உருவம் பற்களுடன் வருகிறது என்று சிலர் சொல்வதையும் கேட்கலாம். என் வாய் பேசாது தடுக்கின்றது என்றும் சொல்வார்கள். அச்சம் கொண்ட நிலையாக வேறு எந்தச் செயலையும் செய்ய முடியாதபடி செயலாற்றதாகவும் அது மாற்றும்.

மனிதனில் உருவாக்கப்பட்ட உணர்வுகள்… இதை எல்லாம் காட்சிகளாகக் காணக்கூடாது. மெய் வழி சென்று மெய் உணர்வைத் தனக்குள் பெற்ற அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெறுவதற்குக் காலத்தால் இந்தக் காட்சியின் தன்மை சிறுகச் சிறுக குறைத்து விட்டேன்.

ஆரம்பக் காலங்களில் சில நேரங்களில் பக்தியின் நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது சில உணர்வின் இயக்கங்கள் “பொருட்கள் எப்படி வருகின்றது…?” என்று அதை எல்லாம் காட்டினேன்.

நான் குடியிருந்த தெருவில் முதலில் யாரும் நம்ப மாட்டார்கள். ருக்மணி என்ற அம்மாள் வீட்டிலே பூஜை புனஸ்காரம் செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பக்கம் இருக்கக்கூடிய விநாயகர் அந்தப் பக்கமாக நகர்ந்து செல்லும். அந்த விநாயகர் மீது பல விபூதிகள் வரும். பல பொருள்கள் மாறி மாறி வரும்.

அதையெல்லாம் கண்டபின் “சாமி மிகவும் சக்தி வாய்ந்தவர்” என்று அதற்குப் பின்னால் தான் நம்புகின்றார்கள். இந்த அடிப்படையில் தான் என் தெருவிலிருப்பவர்கள் நம்பி இங்கே பலர் வந்தார்கள்.

எங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் எங்களுக்கும் அந்த விபூதி வேண்டும் என்றார்கள். உங்களுக்கு “ஒரு சக்கரம்” தருகிறேன் என்று கொடுத்தேன்… பின் அதிலிருந்து விபூதி வந்தது,

இதைக் கண்டு ஒரு ஐந்து ஆறு பேர் சாமி எங்களுக்குச் சக்கரம் வேண்டும் என்று கேட்டார்கள். சக்கரத்திலிருந்து விபூதி வந்தவுடனே இந்தப் பக்தி என்ன செய்கிறது…?

சாமி நமக்குப் பெரிய சக்தி கொடுக்கின்றார்… அருள் கொடுக்கின்றார்… வரம் கொடுக்கின்றார்…! என்று இப்படித்தான் எம்மை உணர்ந்தார்கள்.
1.ஆனால் இது எப்படி இயக்குகிறது…? என்று அதை அறியும் பற்றினைச் செலுத்தவில்லை.
2.அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் யாம் காட்டப்படும் பொழுது
3.இதிலே தான் சக்தி இருக்கின்றது கடவுளே உருமாற்றி உதவி செய்கிறார் என்று இந்த உணர்வுகளைத் தான் அவர்களால் வளர்க்க முடிகின்றது.

ருக்மணி பல பேரைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து… பூஜை அறையில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி… பாருங்கள்…! சாமியை நாம் என்னமோ மோசமாக நினைக்கின்றோம்… ஆனால் விபூதி எல்லாம் வந்திருக்கிறது…! என்று தெருவில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டுக் காண்பித்தது.

அதற்குப் பின் தான் தெருவில் உள்ளவர்கள்… “ஓஹோ…! சாமிக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று… நான் அங்கே வரும்பொழுது எல்லாம் விபூதி வாங்குவதற்கு வருவார்கள். இப்படித்தான் அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

இது எல்லாம் தன் உணர்வின் சக்திகள் வளர்ந்திருப்பதை நுகரும் ஆற்றலை அது எப்படி உருவாகின்றது மந்திர ஒலிகளால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் எப்படி அந்த அணுக்களாக மாறுகின்றது…? என்று
1.இந்த நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களின் பதிவையே அங்கே ஊட்டி…
2.அவர்கள் எண்ணங்கள் மூலமாகவே விபூதியாக எப்படி அங்கே வருகிறது…? என்று
3.அன்று நான் அப்படிச் சொல்லவில்லை (அதாவது உண்மையைச் சொல்லவில்லை).

“சாமிக்குச் சக்தி இருக்கிறது…” என்று எதை ஏங்கிப் பெறுகின்றனரோ இந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே பதிவாகும் பொழுது… அவர்களாலேயே அதனை அங்கே இயக்கும்படிச் செய்தது. குருநாதர் காட்டிய நிலைகள் அங்கே சில அற்புதங்களையும் செயல்படுத்திநேன்.

ஏனென்றால் நான் செய்தேன் என்று இவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களுக்கு முன்னாலேயே அந்த உணர்வு குவிக்கப்படும் பொழுது…
1.சேர்த்து விபூதியை வரவழைப்பதும் அந்த சிலைகள் நகரும்படி செய்வதும்
2.அவருக்குள் அந்த உணர்வின் சக்தியைக் கொடுத்துத் தான் அதை அறியும்படி செய்தேன்.

அவருடைய எண்ணங்கள் வளர்ச்சி எதுவோ அதனின் உணர்வலைகள் பாயப்படும் பொழுது அதில் உள்ள காந்தப்புலன் நினைவாற்றலை அங்கே குவிக்கும்… அதன் வழி எல்லாமே நடக்கும்.

ஆனால் அதற்குப் பிற்பாடு அது எதுவும் வரவில்லை… நடக்கவில்லை. காலத்தால் பல உண்மையின் உணர்வுகளைச் சொல்லச் சொல்ல… உண்மையின் நிலைகள் அங்கே வளர வளர அவை எதுவும் வராது.

ஏனென்றால் சாமிக்குச் செய்யத் தெரியாது என்று அல்ல. எல்லாவற்றையும் கவர்ச்சி செய்வதற்கு வந்தார் என்று என்னைப் பெரிய ஆளாகக் காட்டி என்னைப் போற்ற வைக்கவும் முடியும்.
1.அதனால் எனக்கு என்ன பலன்…?
2.உங்களுக்கு என்ன பலன்…? – ஒன்றும் இல்லை.

ஏனென்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுடன் ஒன்றி மனிதனின் எல்லையான சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும்.

1.ஞானிகள் சென்ற பாதையிலே நாம் செல்ல வேண்டும். அந்த உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.இருள் சூழ்ந்ததை நீக்கிடும் ஆற்றலை நமக்குள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் மனிதனில் தீமைகளை வென்று ஒளியாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் செல்லும்படி செய்து
4.அங்கிருந்து வரும் உணர்வலைகளை நுகர்வதற்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

அதைத் தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று காட்டியது. மனிதனான அகஸ்தியன் ஒளியாக மாறித் துருவ நட்சத்திரமாக உருப்பெற்றுள்ளார்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உருவான உணர்வின் தன்மையை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ அவர்களுக்குள் அது நாரதனாகச் சென்று
1.தீமைகள் அகற்றும் உணர்வாக ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் சென்று அந்த உணர்வினை அடக்கி
2.தீமைகளை அடக்கிடும் சக்தியாக இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது என்று தான் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அது எல்லாம் இன்று “அந்த நிஜம் பொய் ஆகிவிட்டது… பொய் நிஜமாகிவிட்டது…”

இப்பொழுது பொய்யைக் காட்சியாகக் காணும் போது அதை நிஜமாகக் காணுகின்றீர்கள் அல்லவா…!
2.அதே சமயத்தில் உங்கள் உணர்வின் நினைவாற்றலை உங்களை நம்பாது பொய்யாக்கி விடுகின்றீர்கள்.

உணர்வின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து… “சாமி சொல்கிறார் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே…!” என்று ஏக்கமாகும் பொழுது நம்மால் முடியவில்லை…! என்று “உங்கள் சக்தியைப் பொய்யாக்கி விடுகின்றீர்கள்…”

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதன் தீமைகளை வென்று ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கூர்மையாக நுகர்ந்தறிந்து அதனை வளர்த்து… இருள் சூழ்ந்த உணர்வை நீக்கி அருள் பெறும் உணர்வின் தன்மையை என்றும் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலையில் வாழும் அந்த நிலையை “இந்த மனித சரீரத்திலேயே நீங்கள் பெற வேண்டும்…”

இத்தகைய கூர்மை அவதாரத்தை நீங்கள் எடுத்தால் ஒளியின் சரீரமாக மாறலாம்.

ஒவ்வொரு உயிரினமும் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட மற்ற உயிரினங்களை கூர்மையாக உற்றுப் பார்த்து அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதனின் வலுவை எடுத்து வளர்ச்சி பெற்றுத் தான் ரூபங்கள் மாறியது.

அகஸ்தியனும் அவன் மனைவியும் விண்ணின் ஆற்றலை துருவத்தின் வழிக் கூர்மையாக ஏங்கிப் பெற்றனர். தீமை அகற்றும் வலிமை பெற்றனர்… இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரம் ஆனது.

இந்தப் பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையுமே ஒளியின் சரீரமாகத் தனக்குள் கருவாக்கி உருப்பெற்று அகண்ட பேரண்டத்தில் என்றும் 16 என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதைக் கூர்மையாக எண்ணி அதன் வலிமையை பெற்றோம் என்றால் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி “என்றும் பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையில் நாமும் வாழ முடியும்.

ஆகவே… மனிதனின் கடைசி எல்லை என்பது… உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் எல்லையை நாம் அடைவதுதான்.

ஆனால்… உடலில் ஆசை கொண்டு அந்த உணர்வு உயிருடன் ஒன்றி விட்டால் அந்த உணர்வுக்கொப்ப இன்னொரு கூட்டுக்குள் அழைத்துச் சென்று அந்த ரூபமாக நம்மை மாற்றி அதன் உணர்வாக நம்மை இயக்கிவிடும். இது அனைத்தும் உயிரின் செயல்களே.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதனையே அது உருவாக்குகின்றது… அதன் செயலாக நம்மை இயக்குகின்றது… அதன் ரூபமாக நம்மை மாற்றுகின்றது.

“தனக்குள் பயமோ வெறுக்கும் நிலையோ தீமைகள் செய்து அது வலுப்பெற்ற பின்”
1.அத்தகைய வலுவை நாம் நுகர வேண்டியதில்லை.
2.அருள் ஞானிகள் உணர்வை நாம் பெறுவோம்.
3.நமது பார்வையில் பிறருடைய இருளை நீக்கிடும் சக்தியாக மாற்றுவோம் என்ற இந்த வலிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பிறருடைய தீமை நம்மைத் தாக்காது. இந்த உணர்வு அவர்களுக்குள்ளும் ஊடுருவி அவர்களும் உண்மையை உணரும்படி செய்யும்… தீமையிலிருந்து விடுபடுவார்கள். நமக்குள் வரும் தீமையைத் தடுக்கும் ஆற்றலும் வருகின்றது.

அதனைப் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை அனைவரும் எளிதாகப் பெறும்படி வழிகாட்டுகின்றோம்.

அகஸ்தியர் காட்டிய விநாயகர் தத்துவத்தை முன்னணியில் வைத்துக் காலை துருவ தியானத்தில்… கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைக் கணவன் மனைவி நீங்கள் இருவரும் பெற்று இரு உடல்களிலும் வளர்த்து இரு உணர்வையும் ஒன்றாக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் சக்திகளாக நீங்கள் பெற்றுப் பழகுங்கள்.

பிறவி இல்லா நிலையை இந்த உடலிலேயே பெறுவோம் என்ற உணர்வுடனே இந்தப் பயணத்தைத் தொடருங்கள். இந்த அலையின் தொடர் கொண்டு உங்களுக்குள் தீமைகளை அகற்றும் சக்தியாக வளரும். அதை நீங்கள் காணலாம்.

“பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்” அச்சுறுத்தும் உணர்வு கொண்ட நிலை இருந்தால் அந்தப் பயமான உணர்வு வந்து அது அச்சுறுத்தும் உணர்வாகக் குவிந்து உயிரிலே மோதப்படும் பொழுது இரவிலே அறியாதபடி புலனறிவிலே சொப்பணங்களைக் காணுவதும் காணாத உருவங்களைக் காண்பதும் அந்த அச்சத்தினால் உடல் நடுக்கம் ஆவதும் உடல்கள் வேர்ப்பதும் அஞ்சி எழுந்து ஓடும் நிலைகளும் கூட வரும்.

1.அத்தகைய அஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
2.அந்த அச்சத்தை நீக்கிடும்… அச்சமான இருளைப் போக்கிடும்…
3.அந்த மகரிஷியின் அருளை கணவன் மனைவியாக நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.திருமணமாகாதவர்கள் அன்னை தந்தை உணர்வோடு இணைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அருள் ஞானம் பெற வேண்டும் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் மன பலம் பெறுவீர்கள் மன உறுதி பெறுவீர்கள் தெளிந்த நிலை பெறுவீர்கள்

“அத்தகைய சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தான் குருநாதர் எனக்குக் காட்டிய அனைத்தையும் உங்களுக்கு அப்படியே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆகவே அருள் உணர்வுகளை வளர்த்து அருள் வாழ்க்கை வாழுங்கள் “அருளானந்தம் பெறுவீர்கள்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு அன்பருக்குத் தியானத்தில் கிடைத்த காட்சி:
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நான் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது பல பாம்புகள் எனக்குள் செல்வது போல் தெரிகின்றது.

பாம்புகள் உள்ளே சென்று அனைத்தும் தன் வாயிலிருந்து நாகரத்தினங்களை உமிழ்கின்றன. ஒளியாகத் தெரிகிறது. இதற்கு ஞானகுருவின் விளக்கம் தேவை.

ஞானகுருவின் விளக்கம்:
அவருக்குக் கிடைத்த காட்சிப் பிரகாரம் தன் உடலுக்குள் பலவிதமான பாம்புகள் செல்கிறது என்றால்… உடலுக்குள் பல விதமான விஷத் தன்மைகள் ஊடுருவுகின்றது. அப்படி ஊடுருவும் பொழுது என்ன நடக்கிறது..?

நாகப் பாம்பின் உடலுக்குள் பல விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத் தன்மைகள் நமக்குள் சென்றாலும் உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலால் அதை எல்லாம் எப்படி ஒளியாக மாற்றுகின்றது என்ற நிலைதான் அவருக்குக் காட்சியாகக் கிடைத்தது.
1.ஏனென்றால் நாம் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும்
2.விஷம் இல்லாத உணர்வின் இயக்கமே கிடையாது.

ஆகவே தான் நமக்குள் பல விஷத் தன்மைகள் (எதிர் நிலையான உணர்வுகள்) சென்றாலும் நமக்குள் அந்தப் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து இது அனைத்தும் ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக மாற்றிடல் வேண்டும்.

ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது. கட்டுவீரியன் உடலில் விளைந்தது என்றால் அது வேறு விதமாக இருக்கும்.

நாகம் பல உயிரினங்களின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அந்த உடல்களின் விஷத்தைத் தனக்குள் சேமித்து அதன் விஷங்கள் கூடிக் கூடி நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ அதே போல் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்றும் காட்சிகளைத் தான் பாம்பினமாக அவர் காண முடிந்தது.
1.ஏனென்றால் உருவ அமைப்பில் பாம்பு என்றாலும்
2.அதன் உணர்வின் சக்தி விஷம்…! என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.

சாஸ்திரங்களில் ஆமையை வைத்துக் கூர்மை அவதாரத்தைக் காட்டுகின்றனர். பன்றியை வைத்து வராக அவதாரத்தைக் காட்டுகின்றனர்.

ஆகவே நமது வாழ்க்கையில் எந்தெந்த உணர்வுகளை நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் வளர்ச்சி அடைந்து அடைந்து அதற்குத் தக்க பரிணாம வளர்ச்சி அடைந்தோம்.

கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றது பன்றி என்றும்… ஆக தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும்… சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நறுமணங்களை நுகர்கின்றது…! என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான்…
1.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
2.அந்தத் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி “உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை…”

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத் தன்மையான நிலையையும் நாம் மாற்றியமைத்து உயிருடன் ஒன்றி ஒளியான நிலைகள் பெற வேண்டும்…! என்பது தான் சாஸ்திரங்களின் மூலக் கருத்து.

அந்தக் காட்சியின் தன்மையைத்தான் அவர் பார்க்க நேர்ந்தது.

ஏனென்றால் இதனின் விளக்க உரைகளை இப்பொழுது யாம் (ஞானகுரு) கொடுத்தபின் தியானத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தால்
1.மீண்டும் எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின் உண்மையின் உணர்வு எது…? என்று நீங்கள் அறியும் உணர்வைச் செலுத்தினால்
3.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து
4.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் எது..? என்பதை அறிந்திட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுது அதிலிருக்கும் உண்மைகளை உங்களால் உணர முடியும். அதன் மூலம் ஒரு தெளிவான உணர்வை உங்களுக்குள் எப்படி உருவாக்குகிறது..? என்ற நிலையையும் பார்க்கலாம்.

ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் உதாரணமாக ஒரு வெறுப்படைந்ததாகவோ அல்லது ஒரு புலமை பெற்ற மனிதனின் உணர்வாகவோ இருந்தால்
1.அவரின் உணர்வுகள் மடிந்த பின் அந்த உணர்வுகளை நாம் பெற்றால்
2.அந்த மனித உடலில் உருவான கற்பனை உணர்வுகள் இங்கே வரும்.

ஆனால் அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளோ இருளை அகற்றி ஒளியின் தன்மையாக மாற்றிடும் உணர்வுகள் கொண்டது. அது நமக்குள் வரும் பொழுது இருளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

1.சூரியன் எப்படி ஒளிக் கதிராக மாற்றுகின்றதோ…
2.நாகம் எப்படி அந்த நாகரத்தினமாக மாற்றுகின்றதோ…
3.அந்தப் பாம்பு இறந்தாலும் அதிலே விளைந்த ஒளிகள் எப்படிக் கூடுகின்றதோ…
4.இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் என்றும் பிரகாச ஒளியாக நின்று
5.தீமைகள் நமக்குள் புகாது… இருள் சூழாது… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக அது நமக்குள் உருப்பெறும் என்பதை நீங்கள் உணர முடியும்.

எல்லோரும் தெளிவாக உணரக்கூடிய அருளை நீங்கள் காட்சியாக வெளிப்படுத்தினீர்கள்… இது எல்லோருக்கும் நன்மை பயக்கும்…! என்று கருதுகின்றேன். அனைவரும் அந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்… எமது அருளாசிகள்..!

மனிதனின் கடைசிக் கடமை

 

யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி நினைவை விண்ணிலே செலுத்தி கடவுளின் அவதாரம் என்று கூறிய அகஸ்தியன்…
1.அவன் எவ்வாறு மெய் ஞானம் பெற்றான்…? என்ற நிலையும்
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட அவனில் விளைந்த உணர்வுகளை வியாசகர் தனக்குள் பெற்றதையும் நாம் பார்ப்போம்.

அவனில் (வியாசகர்) விளைந்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அவன் கண்டுணர்ந்த உணர்வை அறிய நாம் தியானிப்போம்.

வியாசகர் சந்தர்ப்பத்தால் தன்னை மீன் காத்ததை எண்ணி ஏங்குகிறான். காரணம்… எதைக் கொன்று அவன் புசித்தானோ “அதுவே தன்னைக் காத்தது” என்ற நிலையில் நினைவினை விண்ணிலே செலுத்துகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெறுகின்றான்… அகஸ்தியன் உணர்வைப் பெறுகின்றான்.

அந்த உணர்வின் அறிவை தனக்குள் எவ்வாறு கண்டான்…? என்ற அந்த வியாசகர் பெற்ற மெய் ஞானத்தை நாமும் பெறுவோம்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து பாற்கடலைக் கடைந்தான் என்ற பேருண்மையை அவனுள் கண்டறிந்ததை… அவன் தெளிவாக்கிய உணர்வினை உருவமாக்கி… அருவத்தின் தன்மை தனக்குள் பெறும் சக்தியாகப் பின் வந்த ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

அதை அறிவதற்கு
1.வியாசகர் கண்டறிந்த அந்த உணர்வின் சத்தை நாம் ஏங்கிப் பெறுவோம்.
2.அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பின் வந்தோருக்கு வழி காட்டிய உணர்வையும் உயிரின் இயக்கத்தையும் நாம் காண
3.நம் வலிமையைக் கூட்டி… கூர்மையாக அவன் காட்டிய உணர்வுடன் எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
4.அதன் உணர்வின் அறிவாக நாமும் அறிந்திட நம் நினைவைச் செலுத்துவோம்.

பல அணுக்களின் சேர்க்கையாக மேரு என்ற மலை போல் அது உருப்பெற்று விஷத்தன்மையால் தாக்குண்டு இயக்கும் அந்த வரிசைத் தொடர் அணுக்களின் தாக்குதலால் பூமி எவ்வாறு சுழல்கிறது…? துருவப்பகுதி வழியாக எவ்வாறு நுகர்கின்றது…? பூமி தனக்குள் ஒவ்வொன்றையும் தாவர இனங்களை எப்படி உருமாற்றுகிறது…? என்ற உணர்வின் நிலையை
1.வியாசகர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நாமும் காண்போம்.
2.வியாசகர் தனக்குள் உணர்ந்த உணர்வின் தன்மை விளைய வைத்த அந்த உணர்வினை நாம் நுகர்வோம்.
3.அதன் அறிவாக அவன் கண்டறிந்த உணர்வினை நாமும் அறிவோம்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்வதும் துருவப் பகுதி வழியாக நுகர்வதும் பூமிக்குள் பல உணர்வுகள் தனக்குள் மற்றதுடன் இணைத்து தாவர இனங்களாக உருவாக்குவதையும் அந்த மகா ஞானி கண்டுணர்ந்து… அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளை நாமும் காண்போம்.

பூமி துருவப் பகுதி வழியாக நுகர்வதை… அந்தத் துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்கியதைத் பூமி தனக்குள் இணைக்கப்படும் பொழுது “பார்வதிக்கும் சிவனுக்கும் திருமணம்…” என்று உணர்த்திக் காட்டினான் அன்று வியாசகன்.

பிரபஞ்சத்தில் மிதக்கும் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து உணர்வின் இயக்கமாக… ஆலகால விஷத்தைச் சிவன் தன் கழுத்திலே நிறுத்திக் கொண்டான் என்ற நிலையில் துருவப் பகுதியில் விஷத்தின் தன்மை அடக்கி அதைச் சிறுகச் சிறுகப் படரச் செய்கின்றான்.

ஏனோ சிவன் இந்த உலகைக் காக்க விஷத்தைத் தனக்குள் அடக்கிக் கொண்டான் என்று காவியத் தொகுப்பில் இதனை முன் மொழிந்திருப்பார்கள்.

விண்ணிலிருந்து வரும் சக்திகளை நுகரப்படும் பொழுது…
1.நமது பூமி நீள வடிவமாக அது வளர்ந்து கொண்டே செல்வதைக் காணலாம்.
2.துருவப் பகுதியிலே உறை பனியாக உறைந்து அடுக்கு வரிசையாக வரும்.

அதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்யும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து உங்கள் உணர்வுகள் அனைத்தும்
2.நமது பூமியை மேலிருந்தே பார்க்கும் நிலையாக இந்த உணர்வுகள் தோன்றும்.
3.நமது உணர்வுகள் மிதக்கும் தன்மை அடையும்… அங்கிருந்து பூமியைப் பார்க்கும் சந்தர்ப்பம் உருப் பெறுகின்றது.

உறைந்த பனிகள் கடலாக மாறி… வெப்பத்தினால் ஆவியாக மாறி மேகங்களாகக் கூடுவதும் இதிலே தாவர இனங்கள் உருப்பெறுவதும் தாவர இனங்கள் உருமாறுவதும் அதில் உயிரினங்கள் உணவாக உட்கொண்டு அது அது சேர்த்த நிலைகள் கொண்டு தன்னை வளர்த்திடும் நிலையாக… இதையெல்லாம் கண்டறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நாம் நுகர்வோமென்றால் அவன் கண்ட பேருண்மையை நமக்குள்ளும் நாம் காணலாம்.

வியாசக பகவான் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.தியானத்தில் அமர்ந்துள்ள அனைத்து உயிராத்மாக்களும் வியாசக பகவானின் உணர்வுகள் பெற்று
2.வியாசகரின் அருள் ஞானமாகத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றிப் பேருண்மையின் உணர்வை உணர்ந்து
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளைப் பின் வந்த அரசர்கள் யாக வேள்விகளை நடத்திச் சிலைகளை உருவாக்கி உணர்வின் தன்மை பதிவாக்கி பதிவின் அலைகள் மனிதனுக்குள் உருப்பெறச் செய்தார்கள்.

அந்த மனிதன் உடலை விட்டு அகன்ற பின் அதே உணர்வின் அலைகள் இங்கே படர்ந்திருப்பதும்… அதே தெய்வத்தினைப் பக்தி கொண்டு செல்வோர்கள் எண்ணி ஏங்கும் பொழுது… அந்தச் சிலையின் உணர்வைத் தனக்குள் வளர்க்கப்பட்டு… சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளும் அலங்காரங்களும் படங்களாக உருவாக்கப்பட்டு அதனின் உணர்வலைகளாக வெளிப்படும் பொழுது… “அதனை மீண்டும் குவித்து” டிவிக்களில் நாம் உருவங்களாகக் காணுவது போன்று காணலாம்.

அதாவது… மனிதனுக்குள் பக்தி என்ற உணர்வை வளர்த்து எந்தச் சிலையை உருவாக்கினோமோ அதனை மனிதனின் உடலில் எந்தப் பக்தி கொண்டு எடுத்தார்களோ அது எல்லாமே “அலைகளாக இன்றும் உள்ளது…”

உதாரணமாக “முருக பக்தி கொண்டு” உடலை விட்டு வந்த அந்த உணர்வலைகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை
1.இப்போது நீங்கள் வானை நோக்கி எண்ணி…
2.ஆறாவது அறிவின் உணர்வாக வளர்த்துக் கொண்ட அந்த முருகனைக் காண வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.
3.அந்த அலைகள் குவிந்து முருகனாகக் காட்சி தெரியும்… மேல் நோக்கிப் பாருங்கள்.

“காட்சி…” என்றால் மனிதனுக்குள் எந்தெந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு இந்தப் பூமிக்குள் அலைகளாகப் பரப்பப்பட்டதோ “அதைக் குவிக்கப்படும் பொழுது”
1.அந்தந்த உருவங்களை மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது
2.டிவிக்களில் காணுவது போன்று குவிந்து உருவமாகக் காட்டும்.

வியாசகரும் அகஸ்தியரும் வானுலக ஆற்றலைத் தனக்குள் வளர்த்து இந்த உண்மையின் தன்மை உணர்த்தி அவர் உடலில் பெருக்கப்பட்டு அருள் ஞான ஒளியாகக் கண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் எடுக்கப்படும் பொழுது… வியாசகர் கண்ட உணர்வுகள் “பூமி விஷத்தின் தன்மையால் சுழல்வதும்… துருவப் பகுதி வழி கவர்வதும்… உணர்வுகள் தனக்குள் மாற்றம் அடைவதும் தாவர இனங்களாக உருப்பெற்றதும்… அதை மற்ற உயிரினங்கள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும்…” காண முடிந்திருக்கும்.

இந்த்த் தியானம் இருக்கும் பொழுது மேரு என்ற மலையை மத்தாக வைத்து என்று சொல்லும் பொழுது இந்தப் பூமியினுடைய இயக்கத்தைச் சிலர் காட்சியாகப் பார்த்திருக்கலாம்.

இது எல்லாம் வியாசகர் அன்று கண்டறிந்த உணர்வுகள்…!

அகஸ்தியன் கண்டறிந்த அலைகளை அவன் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களைக் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வை… அக்கால மொழி கொண்டு வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்… ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

இவ்வாறு எண்ணி ஏங்கப்படும் பொழுது
1.துருவ மகரிஷியாகும்போது கணவனும் மனைவியும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இருவரும் பரிமாறிக் கொண்டதை
2.அவர் உடலிலிருந்து அந்த அலைகள் வந்து படர்ந்து இருப்பதை நாம் காண்போம்.

வானை நோக்கி உற்றுப் பாருங்கள்…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளைப் பரப்பும் பொழுது
1.அந்தக் காலத்தில் வாழ்ந்த அவர்கள் உடலின் அமைப்பு
2.அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக அவர்களுக்குள் இணைந்து ஒளியின் சரீரம் பெற்று எங்கே நிலை கொண்டார்களோ அந்த எல்லைக்குச் சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்றதையும் நீங்கள் காணலாம்.

துருவ மகரிஷியும் அவருடன் இணைந்த அருந்ததி அக்காலத்தில் வாழ்ந்த நிலைகளும்
1.அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரமாகத் துருவப் பகுதி வழியாகச் சென்றதைக் காணலாம்.
2.துருவ நட்சத்திரத்தினுடைய ஒளியையும் காண முடியும்.

இந்த உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின்…
1.துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இரவிலே படுத்தால்
2.அந்த உணர்வுகள் கலந்து உயிருடன் ஒன்றிப் பெருகி… அந்த உணர்வின் ஆற்றலைப் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு கவர்ந்து நம்மை எப்படிக் காணச் செய்கின்றார்களோ… இதைப் போலத்தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலில் இருந்து வெளி வந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றி வைத்துள்ளது… நாமும் அதைக் காண முடியும்.

1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வை எமக்குள் பதிவாக்கி உணர்வின் நினைவை எடுக்கச் சொல்லி
2.அருள் ஞான வித்தாகக் கேட்போருக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து வினைக்கு நாயகனாக ஆக்கி
3.நினைவு கொள்ளும் பொழுது படர்ந்திருக்கும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து கண் புலனறிவில் நிச்சயம் காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக் காட்சிகளாகத் தெரிய ஆரம்பித்தால் திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது உருவத்தைக் கண்டால் அஞ்சி ஓடுவோர் பலர் உண்டு.

பயத்தின் நிலை அடைந்து விடுவார்கள். ஆகையினால் அத்தகைய உணர்வின் தன்மை காட்சியாகக் கிடைக்கக் கூடாது என்பதற்கும்
1.ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வினை உங்களுக்குள் வளர்ப்பதற்கும் தான் இதைச் செய்வது.
2.சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம்.
3.நாம் காண வேண்டியது… பெற வேண்டியது… உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிடும் திறனைப் பெறுவது தான்

மனிதனின் கடைசிக் கடமை அது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.
2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.

என்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான்… வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெற வேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.

தவம் என்றால் என்ன…? தியானம் என்றால் என்ன..? என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள்…? என்று தெரியவில்லை.

தியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள்…? என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.

எதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்…? என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.

அதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…!”

1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்
2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.

என்னை அப்படிச் செய்தானே… இப்படிச் செய்தானே… என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.

அப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…? என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்…? என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்…? என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.

உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

உதாரணமாக… சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.

வாலி என்ன செய்கிறான்..? இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.

ஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.

அருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை
1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)
2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…? என்றும்
3.நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா…! நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

அதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்…! என்று வாழக்கூடிய நிலை வருகிறது.

சூரியன் என்ன செய்கிறது…? தனக்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் என்ன செய்கின்றான்…? நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.

அப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..!

“தன் இனம்” பெருக வேண்டும் என்பதற்குத்தான்… ஞானிகள் தான் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்

 

விஞ்ஞானிகள் இன்று மண்ணுக்குள் பதிந்திருப்பதை “காந்தப் புலனறிவு கொண்ட ஒரு டப்பாவில்” வைக்கின்றான். இது… பூமியில் இருக்கும் இந்த உணர்வுகள் எதனுடன் கலந்ததோ “அதன் இனத்தைக் காற்றிலிருப்பதை அது ஈர்க்கும்…”

அதைக் கண்டு கொள்வதற்காக மேலே விமானத்திலே பறந்து
1.அதிலிருந்து உணர்வலைகளை ஊடுருவிப் பாய்ச்சப்படும் போது ஈர்க்கும் சக்தியை அதிகமாகின்றது.
2.அதற்குள் இருக்கும் அளவுகோல் மானிகளை இதனுடன் இணையச் செய்து
3.பூமிக்குள் இன்ன இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் “இன்னது இருக்கிறது” என்பதை விஞ்ஞானி அறிகின்றான்.

ஆனால் அன்று ஆதியிலே… அகஸ்தியன் “தாய் கருவிலேயே” விஷத்தை அடக்கும் உணர்வுகள் கொண்டு விளைகின்றான். பிரபஞ்சத்தில் உருவாகும் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றான்… துருவன் ஆனான்.

1.வானஇயலையும் புவிஇயலையும் உயிரியிலையும் கண்டறிந்த பின் உயிரியலின் ஆற்றலைப் பெருகும் நிலையும்
2.நம் பூமியில் பரவிக் கிடந்த பல கோடித் தாவர இனங்களின் வலிமை கொண்டு அந்த எண்ணங்கள் கொண்டு தன்னை அறியும் ஆற்றலும்
3.இது எந்த வகையில் வந்தது என்று “துருவத்தினை நுகரப்படும் பொழுதுதான்” விண்ணின் ஆற்றலைத் துருவன் நுகர்கின்றான்.
4.இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகிறது…? என்பதையும் காண்கின்றான்
5.இந்தப் பிரபஞ்சத்திற்கு மூல காரணமாக எது எது இயக்குகிறது…? என்று தனக்குள் அறிகின்றான்.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மைகளை நம் குருநாதர் எப்படி அறிந்தார்…?

1.துருவத்தைப் பின்பற்றுகின்றார்… துருவனின் உணர்வைக் கவர்கின்றார்.
2.கவர்ந்த உணர்வின் தன்மை அவருக்குள் அறியும் ஆற்றலாக வருகின்றது.

அதன் உணர்வை வளர்த்துக் கொண்ட நிலை தான் எமது பாலும் அந்த உணர்வின் கருக்களைப் பதியச் செய்து அந்தக் கருவின் வித்தினை நினைவு கொள்ளும் பொழுது அதன் உணவை நானும் நுகர முடிகின்றது… அறிய முடிகின்றது.

அதிலே விளைந்த உணர்வின் வித்தை இப்பொழுது சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அதை நீங்கள் கேட்கும் போது ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது உலகை அறிய முடிகின்றது… உங்களைக் காக்கும் உணர்வும் வருகின்றது.
3.இந்த இரண்டையும் பிணைத்துத்தான் இப்போது உபதேசமாகக் கொடுக்கின்றோம்.
4.குருநாதர் எமக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதன் வழியே தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.

ஏனென்றால்… மனிதனாகப் பிறந்த பின் கார்த்திகேயா பல கோடி உணர்வுகளிலிருந்து எதிரி வருகிறது என்று அந்த உணர்வால் அறிகின்றது… உணர்வின் வலுவை அறிகின்றது… அதனின் உணர்வைத் தனக்குள் கவருகின்றது… விளைந்த பின் அதிலிருந்து தப்பிக்க எண்ணுகின்றது… அதன் வலுவும் கூடுகின்றது.

இவை அனைத்தும் இணைந்து எதனை உற்றுப் பார்த்துக் கூர்மையானதோ அதனின் வலிமை இதற்குள் விளைகின்றது. இந்த நினைவு ஓங்கி வளர்கின்றது.

வலிமையாகி உடலை விட்டுச் சென்ற பின் எதைக் கூர்மையாக எண்ணியதோ அதன் உடலுக்குள் சென்று… “அதன் வலிமை கொண்டு அதனின் உருவமாக மாறுகின்றது” என்று இதையெல்லாம் காவியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரத்தில் உயிரின் உணர்வுகள் எதைக் கூர்மையாகக் கண்களால் உற்று நோக்கி வலிமையாக்கிக் கொண்டதோ… அதன்படி அந்த வலிமை பெறுகிறது என்று வியாசகர் அதை உணர்த்துகின்றார்.

கண்ணின் உணர்வுகள் அனைத்துடனும் இணைக்கப்பட்ட நிலையில்
1.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதனை நினைவுபடுத்துவதற்குத் தான் வியாசகரைப் பகவான்… என்றார்கள்.
2.காரணம் அதைக் கண்டுபிடித்து உருவாக்கியவன் அவன்.

கண்ணைக் கண்ணன் என்றாலும் கண்கள் பெற்ற உணர்வினைத் தனக்குள் நுகர்ந்தறிந்து பரமாத்மா. இந்தப் பரமில் உள்ள அனைத்திலும் கலந்துள்ளது. ஒவ்வொரு உயிரினங்களும் கண்ணின் நினைவாற்றல் கொண்டு கவர்ந்து அந்த உணர்வின் நிலையாக விளையச் செய்தது… பரமான பூமியில் பரமாத்மாவாகக் கலந்துள்ளது.

கண்ணின் செயலாக்கங்கள் உருவாக்கப்பட்டு
1.மீண்டும் இந்தப் பூமியில் படர்ந்திருப்பது மனிதனுக்குள் பரமாத்மாவாக மாறுகின்றது.
2.பூமிக்குப் பரமாத்மாவாக மாறுகின்றது… நமக்குள் பரமாத்மாவாக இயக்குகின்றான்.

வியாசகரால் உணர்த்தப்பட்ட உண்மை இது…!

காரணம் ஞானிகள் கொடுத்த காரணப் பெயர்கள் அனைத்துமே தெளிவானதே. தான் கண்டுணர்ந்ததைத் “தன் இனங்கள் பெருக வேண்டும்” என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாகப் பிறப்பதற்கு முன் நாம் பாம்பாகவோ தேளாகவோ இருந்திருப்போம்…! நம்முடைய அம்மா அதை அவர்கள் பார்த்துத் தங்கள் பாதுகாப்பிற்காக அடித்துக் கொன்றிருப்பார்கள்.
1.நம் உயிர் அவர்கள் உடலுக்குள் சென்றிருக்கும்.
2.போனவுடன் இந்த உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.

தேளாக இருந்தவர்கள் கருவான பிற்பாடு நம் தாய் என்ன செய்கிறது..? மனிதனாக உருவாக்குகிறது…! என்று குருநாதர் எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஆகவே நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்..? நம் அம்மா அப்பாவின் உயிர் தான். கடவுளாக இருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்.

அப்பொழுது கடவுள் யார்…?

அம்மா அப்பாவை முதலில் தெய்வமாக வணங்கிப் பழக வேண்டும். யாராவது அப்படி நினைக்கின்றோமோ…? என்றால் இல்லை.

தாயைத் திட்டுபவர்கள் நிறையப் பேர் உண்டு. பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ஏதாவது எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் தாயைக் கோபித்துத் திட்டுபவர்கள் உண்டு. ஆண்களிலும் தன் அம்மாவைத் திட்டுபவர்கள் நிறைய உண்டு.

இத்தகைய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். பத்து மாதம் அந்தத் தாய் சிசுவைச் (நம்மை) சுமக்கின்றது. அந்த உண்மையை உணர வேண்டும்.

இப்பொழுது நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு நாளைக்குத் தலையில் கல்லை வைத்துப் பாருங்கள். சுமக்க முடிகின்றதா…?

ஆனால் நம் தாய் நம்மைப் பத்து மாதம் சுமக்கிறது. சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் இந்த உணர்வுகளை எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைப் பட்டு நாம் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. பிறந்த நிலையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன்னாடி ஏதாவது நாம் செய்தோம் என்றால்
1.உதாரணமாக ஒரு நெருப்பையே தொடுகின்றோம் என்றால் அடடா.. டேய்.. நெருப்புடா…! என்று பதறி
2.நம்மை உடனே அந்தத் தெய்வமாக இருந்து காக்கின்றது.
3.குருவாக இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பது நம் தாய் தான்…!

இன்று நாம் எத்தனை பேர் தாயை மதிக்கின்றோம்..? பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றோம்… இப்படி இருந்தாலும் தாயை மதிப்பவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

திடீரென்று ஒரு எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் தாயைக் கோபிக்கக்கூடியவர்கள் தான் இருக்கின்றார்கள்.

தாயை நினைத்து வணங்கி..
1.அந்தத் தாய் அருள் வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் வளர்த்துக் கொண்டால் எங்கே போவோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

எத்தனையோ துன்பப்பட்டு என்னை வளர்த்தாய்…! என்ற நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்திட வேண்டும்
3.மலரைப் போல் மணமும் அந்த மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
4.என்றென்றும் எனக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று தாய் தந்தையை இப்படி வணங்க வேண்டும்.

இந்த மாதிரி எண்ணினீர்கள் என்றால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆழமாக நமக்குள் பதிகின்றது.

எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
1.அம்மா…! எனக்கு இந்த நோய் நீங்க வேண்டும்
2.அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் இதே மாதிரி “என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று தான் எண்ணுகிறது.
1.இந்த உணர்வை நீங்கள் நுகர்ந்தீர்கள் என்றால்
2.உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

சந்தர்ப்பத்தில் ஒரு காட்டுக்குள்ளேயே நீங்கள் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புலியோ யானையோ துரத்தி வருகிறது என்றாலும் “அம்மா…!” என்று நீங்கள் சொன்னால் போதும்.

அந்தப் புலியானாலும் யானையானாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள் போகச் சொல்லி தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

நான் போய்க் கொண்டேயிருப்பேன். பாதையில் திடீரென்று புலி வந்தது என்றால் ஐய்யய்யோ..! என்று சப்தம் போடுவேன். அப்பொழுது அந்த இடத்தில் உடனடியாக உணர்த்துவார் குருநாதர்.

டேய்… உன் அம்மா எங்கேயடா.. போய்விட்டது…? என்பார். உன் அம்மாவை நினைடா…! என்பார்.

அவர் சொன்னதும் “அம்மா…!” என்று சப்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வருகிற புலி அப்படியே நிற்கிறது. இப்படி… எல்லாவற்றையும் அனுபவத்தில் தான் குருநாதர் கொடுத்தார்.

நீங்களும் உங்கள் தாயை நினைத்து அவர்களின் அருளைப் பெறுங்கள்..
1.மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள்…!

உடலில் உள்ள “ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வை” நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

 

தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளைக் கூர்மையாக வலிமை கொண்டு பதிவாக்கி அதைப் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணப்படும் பொழுது அது நம் உடலுக்குள் செல்கின்றது.

தீமையை வென்றவன் சுக்ரீவன்… அவன் வாலியின் சகோதரன்… இளையவன்.

விஷத்தின் தன்மை கொண்டு வளர்ச்சி பெற்றுத் தான்
1.பல கோடிச் சரீரங்களில் அது எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு,,, பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக உருவாக்கியது.
2.மனிதனான பின் விஷத்தின் தன்மை ஒடுக்கி அந்த உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவன் துருவ மகரிஷி.
3.ஆகையினால்… பின் தான் இதனுடைய வளர்ச்சியின் தன்மை பெற்றவன் என்றும் சுக்ரீவன் வாலியின் சகோதரன் என்றும் இளையவன் என்றும்
4.பின் வந்த நிலையை நாம் அறிவதற்காக நமக்குக் காட்டியுள்ளார்கள் இராமாயணக் காவியத்தில்.

கடும் வேதனைகளை அடக்கியவன் சுக்ரீவன். பல கோடிச் சரீரங்களில் உருவான இந்த உணர்வைத் துருவன் அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றுகின்றான்.

உதாரணமாக ஒரு விஷமான பாம்பு உணவுக்காகத் தனக்குள் விளையும் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதனை உட்கொள்ளும் பொழுது இந்த விஷமே அந்த உடலைக் கரைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

துரித நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பாக இந்த விஷம் விளைந்தாலும் எதை உட்கொள்கின்றதோ அந்த உடலிலும் விஷம் உண்டு. அந்த விஷத்தையும் தன்னுடன் கலந்து அதை ஜீரணிக்கும் சக்தி வரப்படும் பொழுது
1.மீண்டும் விஷத்தினை வளர்த்து விஷம் உருவாக்கும் அந்தப் பையில் (பாம்பின் உடலில்) அதை நிரப்பும்.
2.பையில் நிரப்பப்படும் பொழுது அதில் சிறுகச் சிறுகச் சேர்த்து வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.
3.விஷப் பைகளில் வளர்ச்சியின் தன்மை பெறும் பொழுது ஒளியின் சுடராக மாறுகின்றது.

அதே போல் தான்
1.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வினைப் பெற்று ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ மகரிஷி.
2.அந்தத் துருவ மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்வோமென்றால் அது உடலுக்குள் சென்று நம்மை அறியாது சேர்ந்த வேதனைகளை அடக்குகின்றது.

எந்த உணர்வு நம்மைச் சோர்வடையச் செய்ததோ… அந்த உணர்வுகள் விஷத்தின் தன்மையை மீண்டும் நுகர்ந்து சோர்வடையாதபடி… அந்தத் துருவனின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் போது… அந்த விஷத்தினை ஒடுக்குகின்றது.

அதனால் தான் வாலியை இராமன் “சுக்ரீவன் துணை கொண்டு அடக்கினான்…” என்று சொல்வது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வே எண்ணங்களாக இயக்குகின்றது என்றும் “அருள் ஒளியின் உணர்வாக இயக்கப்பட வேண்டும்” என்றும் காட்டுகின்றார்கள்.

அதாவது பிராணயாமம் என்று சொல்வார்கள்.

ஆனால்… மூக்கு வழி கூடிச் சுவாசித்து உணர்வினை உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வை ஜீவனாக்குவது அல்ல பிராணயாமம்.

1.புருவ மத்தியில் உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி
2.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் ஊடுருவச் செய்து
3.அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்து… அதனின் இயக்கமாக நமக்குள் இயக்கச் செய்வதே பிராணயாமம் என்பது.

ஏனென்றால் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வு நம் உடலுக்குள் சென்று… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது எதனின் வலுப் பெறுகின்றதோ அதன் இயக்கமாக அது நம்மை “ஒளியான நிலைகளாக…” மாற்றி அமைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் கரையான் புற்று அருகிலே என்னை அமரச் செய்தார் குருநாதர்.

கரையான் என்னுடைய தசைகளை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நான் போட்டிருந்த வேஷ்டி டிராயர் எல்லாமே மண்ணாகிவிட்டது.
1.கையில் தொட்டால் கரையான் நசுங்கிவிடுகிறது
2.ஆனால் அந்தக் கரையானுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அதிலே விளைந்த அமிலச் சத்து உன் உடமைகளில் பட்ட பின் அது கரைந்து எவ்வாறு சுக்குநூறாகத் தெறிக்கிறது…! என்று காட்டுகிறார்.

என் உடலை ஒன்றும் செய்யவில்லை என்றாலும் இந்த நகங்கள் கரைகின்றது. கரையானில் எதனில் வலிமை இருக்கின்றது…? என்று சற்று சிந்தித்துப் பார்…! என்றார் குருநாதர்.

அந்தக் கரையான் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது. அந்தக் கரையானின் உணர்வுகளைப் பல நிலைகள் உனக்குள் சேர்த்து இதை இன்னென்ன வழியில் இன்னென்ன உணர்வுகளுடன் இணைத்து அதை நீ கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.இதனின் உணர்வின் ஒலி அலைகளை (உதாரணமாக) ஒரு பொருளுடன் இங்கே இணைத்து
2.ஒரு ஆயிரம் முறை அதை வெளிப்படுத்தும் பொழுது
3.இந்தப் பொருளுக்குள் இந்த உணர்வுகள் அது செலுத்திவிடுகின்றது.

மீண்டும் வேறொரு பக்கம் சென்று அங்கே அமர்ந்து அதற்குண்டான உபாயத்தைச் சொல்லி இந்த உணர்வுகளை… ஒலிகளை… “நீ ஈர்க்கும் தன்மையில் இந்த ஒலிகளை எழுப்பு…!” என்றார்.

அப்பொழுது அங்கே கரைந்த அவ்வளவு பெரிய பொருள் இங்கே சிறு துவாரத்தின் வழியாக அது எப்படி நுழைந்து வருகிறது…? அது உருபெறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

இது தான் “கரையான் மந்திரம்…!” என்பது.

ஆகவே அந்தப் பொருளில் பாய்ச்சிய இந்த உணர்வுகளை அதிலுள்ள காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்ட பின்
1.மீண்டும் இந்த ஒலிகளை எழுப்பப்படும் பொழுது இதனுடைய அளவுகோல் இது கூடிய பின்
2.எத்தகைய உலோகத்தையும் அது கரைத்து ஆவியாக மாற்றுகின்றது.
3.மீண்டும் அதற்கு எதிர்மறையான உணர்வுகளை இணைத்த பின்
4.ஒரு ஊசி புகும் அளவு துவாரம் உள்ள பெட்டிக்குள் அணுக்களாகச் சென்று
5.பொருளாக எப்படி உறைகிறது…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

வேதங்களில் அதர்வண வேதம் என்ற நிலைகளில் இன்று மந்திரம் தந்திரம் என்று இதைச் சொல்வார்கள்.
1.கடவுளையே நான் கைவல்யப்படுத்தியுள்ளேன் என்று பொருள்களை வரவழைத்து
2.மக்களை மதி மயக்கச் செய்து பல மாயாஜாலங்களைக் காட்டி
3.இந்த உடலின் இச்சைக்கே அவர்கள் செய்கின்றார்கள் என்று இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்.

ஏனென்றால் இந்தக் கரையானின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்ட பின் அதிலே சில ஒலி அலைகள் – நுண்ணிய அலைகளை வெளிப்படுத்தி அதையும் எனக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு எலெக்ட்ரிக்குடன் நுண்ணிய அலைகளாக ஒலிபரப்புச் செய்யப்படும் பொழுது இந்த ஓசையைக் கண்டு கொசுக்கள் இங்கே வராது அஞ்சி ஓடுகின்றது.

இதைப் போல் தான்…
1.மெய் ஞானக் கரையான் உணர்வைக் கண்டுணர்ந்த நம் குருநாதர்…
2.ஈஸ்வரபட்டர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்தக் கரையான் உன் ஆடைகளை எப்படிக் கரைத்ததோ… உன் நகத்தைக் கரைத்ததோ… இதைப் போல் அதிலே உள்ள உணர்வின் ஒலி அலைகளை நீ கவரப்படும் பொழுது எதனுடன் இணைக்கின்றாயோ அது கரையும்.

ஏனென்றால் பூமியிலே உலோகத் தன்மையிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது தாவர இனங்களாக வளர்ந்து
1.அதனின் சத்தின் தன்மை மறைந்து
2.அதை உணவாக உட்கொண்டு ஜீவ அணுக்களாக உருவாகும் நிலைகள் எப்படி வந்தது…?
3.இது எல்லாம் எவ்வாறு உருமாறுகிறது… உருபெறுகிறது… உருமாற்றமாகின்றது…! என்று காட்டினார் குருநாதர்.

அது தான்.. ரிக் சாம அதர்வண மறுபடியும் யஜூர் மீண்டும் சாம. அந்த உணர்வின் தன்மைகள் எவ்வாறு மாறிக் கொண்டு வருகிறது என்ற நிலைகளைத் தான் நம்முடைய வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

சாதாரண மக்களும் தன்னை அறிந்திடச் செய்யும் அவ்வளவு பெரிய வேத சாஸ்திரங்களுக்குள் தன் சுயநலன்களுக்காகக் கடும் தவறுகளை உருவாக்கி அதற்குள் இருக்கும் மூலங்களையே மறைத்து விட்டார்கள்.

இந்த உடலின் இச்சைக்காக உபயோகப்படுத்திய அவனும் மடிந்தான்… அவனைப் பின்பற்றிய அனைவரும் இன்றும் மடிந்து கொண்டே உள்ளார்கள். எதனின் ஆசையைத் தனக்குள் வளர்த்தனரோ அதன் வழிகளிலே தான் இன்றும் உள்ளார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

போகன் உருவாக்கிய “மனோசிலை… காயகல்பம்…!”

 

மனித உடலில் எடுத்த உணர்வின் ஒலிகளைப் பாய்ச்சி அந்த வலுவைக் கூட்டி மந்திர ஒலிகளால் பதிவான பின் அந்த மனிதன் மடிந்து விட்டால் அந்த உணர்வின் ஒலிகள் கொண்டு பல நிலைகளை அறியலாம்.

அதாவது இப்பொழுது நாம் பேசும் உணர்வுகளைப் போல ஒவ்வொரு உலோகத்திற்கும் தனித்த ஒலியின் நாதங்கள் உண்டு. அதனைத் தனக்குள் எடுத்து அந்த நாதங்களைப் பாய்ச்சி அந்த உணர்வுகளைத் தனக்குள் எந்தெந்த நிலை என்று ஒலியைப் பாய்ச்சி விட்டால்
1.எந்த மனிதன் இறந்தானோ அதனைத் திருப்பி எடுத்து நினைவு கொண்டு
2.பூமிக்கடியில் உள்ள பொருள்களை அறியும் நிலை கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3அங்கே அடியில் உள்ள உலோகங்களைக் காண முடிகின்றது.

ஏனென்றால் பல கோடி உணர்வின் தன்மை பெற்றவன் மனிதன். இதற்குள் இணை சேர்க்கப்பட்டு உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கொடுக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து கிளம்பும் அதிர்வுகளைப் பாய்ச்சியபின் தூரத்தின் தன்மை தனக்குள் கணக்கிடப்பட்டு
2.இந்த இடத்தில் நீர் உள்ளது… இந்த இடத்தில் உலோகங்கள் உள்ளது என்று
3.மனிதனின் உணர்வின் துணை கொண்டு அறிந்தார்கள் அக்காலத்தில்.

அதன் வழி கொண்டு தான் மனிதனுக்குள் பெற்ற வலிமையின் உணர்வுகள் அதைக் கண்டறியப்படும் பொழுது உலோகக் காலங்களாக மாறுகின்றது… மந்திரக் காலங்கள்.

உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது… பூமிக்குள் மறைந்த எதிர்நிலை கொண்ட மண்ணில் விளைந்த மனோசிலை கந்தகம் மற்ற பொருள்களைக் காணுகின்றார்கள்.

அதாவது… அது மண்ணில் விளைந்த உப்புச்சத்து. சூரியனுடைய காந்த சக்தி மண்ணிலே அமிலங்களாகக் கலக்கப்படும் பொழுது ஒரு வெட்கையின் தன்மை வரும்.
1.அதை மீண்டும் வேக வைத்து அந்த உப்பை உறையச் செய்து கந்தகத்துடன் அளவுகோல் கொண்டு இணைக்கச் செய்து
2.மோதும் பொழுது வெடிக்கும் தன்மையாக அதற்குண்டான நிலைகளைச் (வெடி பொருள்களை) சேர்க்கின்றான் அன்று போகன்.
3.மனோதத்துவ ரீதியில் உணர்வின் தன்மையை நீக்குவதற்கு மனோசிலை என்று கொண்டு வந்தான் போகன்

வைத்திய ரீதியிலே மருந்துகளை உலோக நிலைகளை எடுத்து விஞ்ஞானிகள் சேர்க்கை சேர்ப்பது போன்று மெய்ஞானியான போகர் பல நிலைகளைத் தனக்குள் உருவாக்கி “மனோசிலை” என்று உருவாக்குகின்றார்.
1.அதை மனித உணர்வின் எரிபொருளுடன் கலக்கப்படும் பொழுது அது உடலுக்குள் ஊடுருவி வெடிக்கும் தன்மையாக வந்து
2.அந்த அதிர்வால் தீமை செய்யும் அணுக்களை மடியச் செய்தான் அன்று.

பாறைகளைப் பிளக்க வேண்டும் என்றால் அதே மனோசிலை வைத்து எதிர் நிலையான நெருப்புகளை உருவாக்கப்படும் பொழுது அந்தப் பாறைகள் தகர்த்து எறியப்படுகின்றது.

அதே போல் அந்த மெய்ஞானியான அவன்… மனோசிலை கந்தகம் போன்ற பல பொருள்களை அளவுகோல்படி இடப்பட்டு
1.மருந்தின் தன்மையாகக் கொண்டு வரப்படும் பொழுது அழியாத் தன்மையும்
2.வெடித்த பொருள் போகத் தொக்கி நிற்பது… தீமையான அணுக்களுக்கு எதிர்நிலையாகிக் கொன்று விடுகின்றது உணர்வின் அதிர்வுகள்.

அப்போது நமக்குள் உணரலாம்.

ஆகவே இதைக் கண்டுணர்ந்தவன் போகன். இதைப் போல எத்தனையோ வகைகளில் ஒவ்வொரு நிலைகளைப் பெற்றவன் அவன்.

போகனைக் கண்டவுடன் குருநாதர் “திருடன்… திருடன்…” என்று சொல்வார். ஏன் சாமி…? அவனைத் திருடன் என்று சொல்கிறீர்கள் என்று நான் கேட்பேன்.

1.அவன் எல்லாவற்றையும் திருடும் சக்தி பெற்றவன்.
2.தாவர இனத்திலிருந்து வரக்கூடிய சத்தை நுகர்வான்… அதைத் திருடுவான்.
3.அதைத் தனக்குள் எடுத்து… தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குவான்.
4.இப்படி அவன் எல்லாச் சக்தியையும் திருடுகின்றானப்பா…! என்பார் குருநாதர்.

ஒரு தாவர இனச் சத்து என்று இருந்தால் அதை நுகர்வான். அதைத் தன் உடலுடன் போகிக்கின்றான். அதனால் தான் போகர் என்று சொல்வது. அதை “மோகிக்கின்றான்… போகிக்கின்றான்…” ஒரு பொருளின் சத்தை அறிய வேண்டும் என்று மோகம் கொள்கிறான் அந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இரண்டற இணைத்துப் போகிக்கின்றான்.

அதனால் தான் “போகர்…” என்று அந்தக் காரணப் பெயருக்குண்டான விளக்கத்தைக் குருநாதர் சொல்கிறார்.

கரு உருவாக்கப்படும் பொழுது இதனின் உணர்வின் தன்மை உதிரங்கள் நீக்குவதுண்டு. கரு உருவாக்கும் இதற்குத் தடையாக இருக்கும் உணர்வினை நீக்கப்படும் பொழுது கழிவின் தன்மை வருகின்றது.

அதனுடைய கருவின் தன்மை உருவாகப்படும் போது இந்த உணர்வின் அணுக்கள் ஹார்மோன் அதிகமாக இருக்கும் பெண்களின் உணர்வுகள் இது விந்தானாலும் அதனுடைய நிலைகள் மனோதத்துவப் பிரகாரம் பெண்களின் உணர்வுகளை இதனுடன் சேர்த்து அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

அது எவ்வாறு உருவாக்குகிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அதைச் சொன்னாண்.

கருக்களின் உருக்களில் சீனாவின் பக்கம் நெருங்கப்படும் பொழுது “அங்கிருக்கும் சீதோஷ்ண நிலைகளால்” அணுக்களின் கருக்கள் மனிதனுக்குள் ஏராளமாக உருவாகின்றது.

இதைக் கண்டுணர்ந்து
1.அந்த அணுக்களின் மோக உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அந்த எண்ணங்களை உருவாக்கும் பொழுது தான் அபின்களைக் கொடுக்கின்றான்.
2.அதைக் கொடுத்துத் தன் நிலையை மறக்கச் செய்து மோகத்தை உருவாக்கப்படும் பொழுது
3.அதனால் ஈர்க்கும் அணுக்களின் தன்மையைத் தாவர இனங்களை அதில் இணையச் செய்கின்றான்.

அவன் அன்று செய்தது.

சாதாரண அணுக்கள் வந்தது என்றால் மனிதனுக்குள் எடுத்து அது புழுக்களாக எப்படி உருவாகின்றதோ இதைப் போல பல அணுக்களின் தன்மை கொண்டு ஒவ்வொரு குணங்கள் கொண்ட நிலையும் அதற்குத் தக்க பச்சிலைகளை விரிக்கின்றான்.

இந்த மோகம் கொண்டு உணர்வின் தன்மை கவரப்படும்போது அதன் உணர்ச்சிக்குத் தக்க பச்சிலைகளில் அது ஒட்டுகின்றது. அந்தப் பச்சிலைகளில் ஒட்டும் பொழுது தான் இந்த உணர்வின் தன்மை ஜீவன் பெறும் தன்மையே வருகின்றது.
1.ஜீவன் வரப்படும் பொழுது தான் நாத விந்துகள் என்று கணக்கிடப்பட்டு
2.அந்த உணர்வினைத் தனக்குள் எடுத்துக் “காயகல்பமாக” அவன் மாற்றுகின்றான்.

அவன் சொன்ன முறைகள் வேறு. அதற்குப் பின் வந்தவர்கள் கற்றுணர்ந்த கவியின் புலமைகள் வேறு. ஒருவன் கற்றுணர்ந்த நிலையில் கற்பனையில் தான் மற்ற நிலைகளைச் செய்தார்களே தவிர அந்தப் போகன் அன்று சொன்ன நிலைகளை இவர்கள் செய்யவில்லை.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு எம்மைத் தெளிவாக்கினார்.

எதனையும் ஊடுருவித் திருடும் பழக்கம் பெற்றவன் போகன்….! இச்சையின் நிலைகள் கொண்டு ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை எப்படித் திருடுகின்றோமோ இதைப் போலத் தான் போகனும் எதனையும் கண்டுணரப்படும் பொழுது மோகம் கொள்கின்றான்.

அந்த உணர்வின் தன்மை கருவின் தன்மை தனக்குள் திருடுகின்றான்.
1.உலகெங்கிலும் பறக்கும் தன்மை கொண்ட அணுக்களைத் தனக்குள் சேமிக்கின்றான்.
2.ஒரு நொடிக்குள் இயக்கப்படும் போது கவன உணர்வின் அணுக்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டபின் “பறந்து செல்கிறான்…”

மந்திரக்கோலை வைத்து எவ்வாறு ஒரு பொருளின் தன்மை இணைத்துக் கொண்ட பின் கரையான் மந்திரம் என்று செயல்படுத்துவார்கள்.

கரையான் தன் மலத்தை இட்டபின் இயற்கையில் விளைந்த மரத்தின் சத்தை ஆவியாக மாற்றி உணவாக எடுத்துக் கொள்கின்றது. இயற்கையில் \மண்ணில் விளைந்த மரத்தை மீண்டும் மண்ணாக மாற்றுகின்றது. நம்மால் அவ்வாறு ஒரு மரத்தைச் சீக்கிரம் கரைத்து மண்ணாக மாற்ற முடியுமா…?

இதைப் போல உயிரணு அதற்குள் சேர்ந்த அமிலங்கள் இந்த மரத்தைத் துரித நிலை கொண்டு கரைகின்றது.

அதில் விளைந்த உயிரணுவையும் தன்னுடன் இணைத்து ஒன்று எளிதில் கரையக்கூடியதும் மற்றொன்றை உருவாக்கும் நிலைகள் பெற்று… இவர்கள் உருவாக்கும் நிலைகள்… மாந்திரீகமாக மாற்றுகின்றார்கள்.

உணர்வின் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் இணைக்கச் செய்து அந்த அணுவின் தன்மை உருவாக்கப்பட்டு மீண்டும் அதே ஒலிகள் வரப்படும் பொழுது அது கரைக்கப்படும்.

கரையான் மந்திரம் என்பது இதுதான். மனிதன் சில நிலைகளை எவ்வாறு செயல்படுத்துகின்றான் என்று குருநாதர் காட்டுகின்றார்.

ஆனால் போகன் கவனக் குளுவின் நிலைகள் கொண்டு எதனதனை உருவாக்கப்பட்டு எந்த எல்லையில் உருவாக்கப்பட்டதோ அதை எடுத்து உணர்வின் ஒலி அலைகள் பாய்வதைத் தனக்குள் இணைத்து நினைவின் ஆற்றலைக் கொண்டு ஜீவணுக்களை உருவாக்கப்படும் பொழுது பறவையின் உணர்வின் தன்மையைத் தனக்குள் கவர்கின்றான்.
1.அந்த உணர்வு வரப்படும் பொழுது எதனின் எண்ணங்களை எடுக்கின்றானோ உடல் எடையற்றதாக மாறுகின்றது.
2.குறித்த இடங்களுக்குச் அந்த எல்லையைச் சென்றடைகின்றான்.

அவன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட சக்திகள்…
1.ஒவ்வொரு இடங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை எப்படி வளர்க்க வேண்டும்…?
2.எதனைப் பெருக்க வேண்டும்…? என்று 5000 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தியவன் போகன்.

இதைப்போல் ஒவ்வொரு ஞானிகளும் பெற்ற சக்திகளைச் சுட்டிக் காட்டினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இதை எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு… யார் அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் சரி பாதி இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இந்தச் சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இதைப் போல் தான் ஒரு வேதனையோ கோபத்தையோ நாம் காண நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று அதனுடன் இணைத்திட வேண்டும்.

அடுத்த நிமிடம் நம் எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.

எண்ணங்கள் அங்கே சென்று அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி வேதனைப்படுவோர் பெற வேண்டும்… அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அவர் குடும்பத்தில் அருள் ஞானம் பெருக வேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்து விட்டால்
1.அந்த வேதனை என்ற தீமையை நீக்கக்கூடிய சக்தி
2.நமக்குள் அணுவாக உருவாக்குகிறது.,

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மைதான் அதுவாக நம்மை மாற்றுகின்றது நம் உயிர்.

ஆனால் இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”

 

விஞ்ஞானி ஒரு பொருளைச் செய்கிறான் என்றால்… அதிலே இயக்கம் தடைப்படும் பொழுது
1.அந்தத் தடைக்குண்டான காரணத்தைக் கண்டறிவான்.
2.அதை நீக்க முயற்சி எடுப்பான்.

ஆனால் தொழில் செய்து கொண்டுள்ளவர்கள் அதைச் சரியாக இயக்கவில்லை என்றால் “எல்லாம் போய்விட்டது… என்ன செய்வது…?” என்று விட்டு விடுவார்கள். பின் அதைத் தெரிந்தவர்கள் வந்து தான் சரி செய்ய முடியும்.

இதைப் போல
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானத்தின் உணர்வுகளை அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை பதிவான பின்…
2.அந்த நினைவைக் கொண்டு வந்தால்…
3.வாழ்க்கையில் வரும் எந்தக் குறைகளோ அதை நீக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெறுகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் காடு மேடல்லாம் அலையச் செய்து… ஒவ்வொன்றும் எப்படி உருவானது…? என்று அந்த அகஸ்தியனைப் பற்றிக் கடைசி வரையிலும் கொண்டு வந்து… துருவன் அகண்ட உலகத்தைக் கண்டபின் இந்த உணர்வுகள்
1.“உலகம் எப்படி உருவானது…?” என்ற நிலையைக் காட்டப்படும் பொழுது என் நினைவுகள் இழந்து விட்டது.
2.”விட்டு அடித்தால்” (அந்த நேரத்தில் குருநாதர் எம்மை அடிக்கின்றார்) என் உடலில் “ஜிர்ர்…ர்ர்…” என்று சுருதி ஏறுகின்றது.
3.அவரின் நினைவுகள் வருகிறது… மற்ற தீமைகளை அகற்றும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

இப்பொழுது நீங்கள் கூடச் சொல்லலாம். உங்கள் கஷ்டத்தை என்னிடம் சொல்லும் பொழுது எனக்கு “ஜிர்ர்…ர்ர்…” என்று கோபம் வரும். அந்த உணர்வு என்ன செய்கிறது…?

1.நீங்கள் சொல்லக்கூடிய கஷ்டம் எனக்குள் புகாதபடி முதலிலே தடைப்படுத்துவது.
2.தடைப்படுத்திய பின் அதே உணர்வின் தன்மை தீர்க்கப்படும் பொழுது
3.அவன் அறியாது இடும் சாப அலைகளை உணர்வான்… அவன் நொறுங்கிப் போவான் என்ற நிலைகளைச் சொல்வது.
4.இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படும் பொழுது… “கஷ்டம் என்று சொல்பவருடைய” உணர்வின் வேகத்தைக் கூட்டுவது.

அதாவது…
1.கஷ்டமான உணர்வுகளை எனக்குள் வராது தடுப்பதும்
2.உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு நான் அழுத்தமாகச் சொல்லும் பொழுது
3.எதைக் குறை கூறுகின்றாரோ அவருடைய நினைவைக் கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது
4.“இந்த உணர்வுகள் ஆழமாகப் பதியும்…! சொல்வோர் உணர்வுகளில்…!”
5..அடுத்து… யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அங்கே நல்லதாக வளர்ச்சி பெறும்.

ஆகவே… “யாம் வெளிப்படுத்தும் இந்த வேகத் துடிப்பு” யார் எதைச் செய்தாலும் உடனடியாக அதை நல்லதாக மாற்றும்.

ஸொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனால் இதைப் பார்த்த பின்… என்னடா…? சாமிக்குக் கோபம் வராது என்று சொல்கின்றார்கள். சாமிக்கே இங்கே “இப்படிக் கோபம் வருகிறது என்று…!”

“எனது கோபம்” எதைத் தடுக்கிறது…? தீமைகள் உங்களுக்குள் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பாக வருகின்றது.

ஆனால் “உங்களுடைய கோபமோ…”
1.மற்றவர்கள் எந்தத் தீமையைச் செய்தாரோ அந்த தீமையே உங்களுக்குள் விளைந்து
2.அவர்களைப் பொசுக்க வேண்டும் என்ற உணர்வாக வருகின்றது.

மீண்டும் தெளிவாக்குகின்றேன்…! தீமை எனக்குள் வராது தடுப்பதும்… அந்த நினைவாற்றல் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பை அருள் மகரிஷிகள் உணர்வுகளைச் சொல்லித் தீமைகள் வராது தீமை செய்வோர் எவரோ அவர்கள் உணர்வார்கள் என்று சொல்லப்படும் போது…
1.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அங்கே திருப்பம் வரும்.
2.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற உணர்வுகள் வரும் பொழுது திரும்பும்.

ஆனால் நம்முடைய உணர்வுகள் (தியானம் செய்த) அங்கே பாய்ச்சப்பட்டு… அவன் அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற வரிசைத் தொடரைச் செய்யப்படும் பொழுது சிறுகச் சிறுகப் போய் அவன் உடலிலே விளையும்.
1.தீமைகளின் பாதிப்பால்… திரும்ப நன்மையை எண்ணி ஏங்குவான்.
2.அப்பொழுது நாம் இங்கே எண்ணி… அது யாரோ… அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கலந்து வெளியிட்டது அங்கே சென்ற பின்…
3.அவர்களுக்கு ஒரு “திருப்புமுனையாக” மாறும்.

அவர்கள் திரும்பி அதை ஏங்கிப் பெறும் அந்தத் தகுதி ஏற்பட்டால் அங்கே வருகின்றது. இல்லை என்றால் என்னதான் சொன்னாலும் அங்கே எடுபடாது.

காரணம்…
1.விஷத்தால் ஒடுங்கப்படும் பொழுது தப்பிக்கும் உணர்வுகள் வருகின்றது
2.தப்பிக்க ஏங்கும் நிலையில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவான நிலையில்
3.”அதிலிருந்து விடுபட வேண்டும்” என்ற உணர்வை நாம் கூட்டக் கூட்ட
4.இந்த உணர்வுகள் அங்கே மறைந்திருந்து தன் (அவர்கள்) உணர்வை மாற்றி அது திருப்புமுனையாக மாறும்.

அதனால் தான் சில நேரங்களில் உங்களிடம் யாம் கோபமாகப் பேசுவது.

ஆனால் வேறு விதமாக இதை எடுத்துக் கொள்கின்றார்கள் சாமிக்கே இப்படிக் கோபம் வருகிறது… சாமிக்குக் கோபம் வரலாமா…? இப்படிப் பேசுகிறார் என்று…!

1.என் கோபம் யாரையும் கெடுதலாக ஆக்காது.
2.தீமையான உணர்வுகள் உள்ளே போகாது தடுக்கும்.
3.இந்த உணர்வின் தன்மை அழுத்தமாகப் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வுகளை இயக்காது தடைப்படுத்தும்.

குருநாதர் அவருக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் “நான் அடி வாங்க வேண்டி வரும்…” என்னை அடித்த பின் அவர் சிரிப்பார். அப்புறம் விளக்கம் சொல்வார்.
1.உனக்குள் அந்தக் கெட்டது வராமல் இருப்பதற்காகத் தான் நான் கோபித்தேன்
2.என் உணர்வு உனக்குள் புகுந்து… கெட்டது நுழைய விடாது பாதுகாக்கும் என்பார்.

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய நிலைகளில் (நீங்கள்) கோபமாகப் பதிவு செய்து விட்டால்… இந்த உணர்வின் தன்மை எதிரியாகக் கருதி விட்டால் எதிரியின் தன்மையாகத் தான் வரும்.
1.ஆனால் அந்தக் கோபத்தின் தன்மை (சாமியின் கோபம்)
2.தன் இருளை நீக்க உதவும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தால் இருளை நீக்கும்.

ஆகவே ஒவ்வொருவரும்
1.எதை இணை சேர்த்து
2.எதனுடன் கொண்டு வந்தால் எதன் நிலை வருகின்றது…? என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தீ (நெருப்பு) சுடுகின்றது. அந்தத் தீயை வைத்துத்தான் பல ஆக்கப் பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கின்றோம். அந்த உணவுப் பொருள் சுடச் சுட வெந்து வருகிறது.

ஆனாலும் அதை அப்படியே சூடாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆசை வருகின்றது…! கையை வைத்தால் சுரீர் என்று சுடுகின்றது. இருந்தாலும் அதை ஆற்றி ஆற்றி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அப்படிச் சாப்பிடுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது சில மோதல் தன்மை வரும்.
2,அது நன்மை செய்யும் சக்தியாக வருகிறது என்பதை உணர்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமி…! என்ற எண்ணத்தில் என்னைத் (ஞானகுரு) தேடி வருவார்கள். இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். அப்புறம் என்ன…?

இந்த மாதிரி ஒருவர் என்னைத் தேடி வந்தார். மருத்துவர் போட்ட ஊசியினால் (INJECTION – SEPTIC) செப்டிக்காகி மூன்று வருடமாக நடக்க முடியாமல் இருந்தவர்.

மற்ற யாரிடமோ கேள்விப்பட்டு இங்கே தபோவனத்திற்கு வந்தார். ஒரு வாரம் இங்கே இருந்து தியானம் மற்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டவுடன் நடக்க முடியாமல் இருந்தவர் நன்றாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தார்.

நடந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா…?

சாமி…! எங்கள் ஊரில் இருக்கும் கூட்டம் எல்லாம் இங்கே வந்து குவியப் போகிறது…! என்றார் என்னிடம்.

எதற்கப்பா…! என்றேன்.

பாருங்கள்… நான் எப்படி நடக்கிறேன்…! எங்கள் ஊரிலே இதைக் காண்பித்துச் சொன்னவுடன் எத்தனை பெரிய கூட்டம் வரும் பாருங்கள்…! என்றார்.

எனக்குத் தொல்லை கொடுப்பதற்கா…? என்று கேட்டேன்.

இல்லை…. சாமி….! எனக்குக் கால் நன்றாக ஆனது. அது போல் எல்லோருக்கும் நன்றாக வேண்டும் என்ற நிலையில் வருவார்கள்…! என்றார்.

சரிதானப்பா..! என்றேன்.

ஊருக்குப் போய்விட்டு நான் வருகிறேன்… என்று சொல்லிப் போனார். ஆனால் அதற்குப் பின்னாடி பத்துப் பதினைந்து நாள் ஆனது. ஆளையே காணோம்…!

அதற்குப் பின்னாடி ஒரு மூன்று வருடத்தில் காய்க்கும் தென்னை மரக் கன்றையும் ஒரு சீதா மரக் கன்றையும் வாங்கிக் கொண்டு இங்கே வந்தார்.

சாமி… நான் நன்றாக நடந்தேன் அல்லவா…! திருப்பதி வெங்கிடாசலபதிக்கு நான் வேண்டியிருந்தேன். “கால் நன்றாகி நான் நடந்தேன்” என்றால் அங்கே வந்து காணிக்கை போடுகிறேன் என்று வேண்டியிருந்தேன். ஒரு ஐம்பதினாயிரம் வரை அந்தப் பணம் இருந்தது.

இங்கிருந்து நிறையப் பேரைக் கூட்டிக் கொண்டு அங்கே போனேன். அவர்களுக்காகச் செலவழித்தேன். மீதி இருந்த இருபத்தி ஐந்தாயிரம் பணத்தை உண்டியலில் காணிக்கையாகப் போட்டேன்.

உங்களுக்கு ஞாபகார்த்தமாக இந்த தென்னை மரத்தையும் சீதா மரத்தையும் கொண்டு வந்துள்ளேன். இது மூன்று வருடத்தில் காப்புக் காய்க்கும்…! என்று சொல்லி என் கையாலே இங்கே ஊன்ற வேண்டும் என்றார்.

(அவர் ஊன்றி வைத்தார்… ஆனால் அடுத்து அது சரியாக வளரக்கூட இல்லை)

கட்டாயமாக அந்த மரக் கன்றுகளை ஊன்ற வேண்டும் என்று வைத்தார். அப்புறம் போனார்… வந்தார்.

சாமி… நடக்க முடியாத காலத்தில் நான் வெங்கிடாசலபதிக்குக் கோரிக்கை வைத்திருந்தேன்.
1.பாருங்கள்… நான் கால் சரியானவுடனே மலை மீது கிடு…கிடு…கிடு.. என்று ஏறிப் போனேன்.
2.எப்படிப் போனேன்…! என்று எனக்கே ஒன்றும் தெரியவில்லை.
3.எல்லோருக்கும் தாராளமாகச் செலவழித்துக் கூட்டிக் கொண்டு போய்விட்டு என் கோரிக்கையை நிறைவேற்றி வந்தேன் என்றார்.

மிகவும் நல்லதப்பா.. வெங்கிடாசலபதி தான் இதைச் செய்தார்… நீ அவனுக்குத் தான் செய்ய வேண்டுமப்பா…! என்றேன்.

அந்த வெங்கிடாசலபதி யார் என்று தெரியுமாப்பா..? என்றேன்.

என்னங்க..! “ஏழுமலையான்…” என்றார் அவர்.

ஏழுமலையான் என்றால் யார் தெரியுமா…! என்று கேட்டேன். ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக “ஒளியாக இங்கே பள்ளி கொண்டான் வெங்கிடாசலபதி…” என்று காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

திருவேங்கிடம்…!
1.நமக்குள் இயக்குபவன் இந்த உயிர் தானப்பா..!
2.உன் உயிர் தான் இந்த நிலைகளை எடுத்து உருவாக்குகிறதப்பா…!
3.இவனை மறந்து விட்டாயே..!
4.நீ அங்கே கொண்டு போய் அல்லவா எல்லாம் செய்திருக்கிறாய்…! எத்தனை கஷ்டப்பட்டாய்…? என்றேன்.

இப்படிச் சொன்ன பிற்பாடு.. ஹும்…! உச்…! என்னமோ நான் கோரிக்கை வைத்திருந்தேன்… அதைச் செய்யவில்லை என்றால் அது என் மனைதை உறுத்திக் கொண்டேயிருக்கும். “அவனால் ஆனது” என்ற நம்பிக்கை இருந்தது… அதனால் அப்படிச் செய்தேன்…! என்றார்.

சரியப்பா.. போறும்…! என்றேன். இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பேர் இப்படி உண்டு…!

இங்கே வந்து சௌகரியமான பின் வெங்கிடாசலபதி காப்பாற்றினார்.. காளி காப்பாற்றினாள்… என்று அங்கே மொட்டை எடுத்துக் காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன் என்று சொல்கிறார்கள். ஒரு ஆட்டைக் கூட வெட்டிப் பலி கொடுத்தேன்…! என்பார்கள்.

ஆட்டை வெட்டிப் பொங்கல் வைக்கிறேன் என்று நான் நேர்த்திக் கடன் வைத்திருந்தேன். அதனால் அதைச் செய்தேன்…! என்று
1.தன் பாவத்தைப் போக்க இன்னொரு பாவத்தைச் சேர்க்கும் நிலை தான் உள்ளது.
2.இந்த நிலைகளில் தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அடங்கப்பா..! நீ பாவம் செய்யாதே..! என்று இங்கே சொன்னால் பாவத்தை அல்லவா மீண்டும் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.. என்று சொல்கிறோம்.

ஆனால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான் உள்ளது. ஏனென்றால் இன்னமும் பரம்பரை வழக்கங்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் பிரகாரம் தான் நம்முடைய உணர்வுகள் இயக்குகிறது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நீங்கள் கோவிலாக மதித்துப் பழக வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அந்த அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்துப் பழக வேண்டும்.

வேதனையோ சலிப்போ சஞ்சலமாகவோ அந்த உணர்வுகள் இந்த உடலான கோவிலுக்குள் போகாதபடி நாம் எப்படிக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்றோமோ அந்த மாதிரி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நீங்கள் செய்யக்கூடிய சேவை..!

இன்றைய உலகில் பலருடன் பழகுகிறோம். எத்தனையோ விதமான உணர்வுகளை நீங்கள் பார்க்க நேர்கிறது. அந்தத் தீமையான உணர்வு உங்களுக்குள் வந்தால் அந்தத் தீமை தான் உங்களை இயக்குகிறது.

உதாரணமாக ஒருவன் உங்களைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். “என்னைத் திட்டினான்…திட்டினான்…!” என்று அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் உங்கள் ஆண்டவனுக்குத் தீங்கு செய்கிறீர்கள்…! என்று தான் பொருள்.

1.அதற்குப் பதில் திட்டியனுக்குள் இருக்கும் அறியாத இருள் அகல வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
3.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
4.மனப்பூர்வமாக எண்ணினால் நீங்கள் அங்கே தெய்வமாகின்றீர்கள்.
5.உங்கள் எண்ணம் உங்களை உயர்த்துகிறது. உங்கள் மூச்சு அவர்களுக்கும் நல்லதாகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
1.ஆனால் எது விரதம்…?
2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.

சாப்பாடு சாப்பிடாமல் விரதம் இருக்கின்றேன் என்று உடலில் உள்ல நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது எல்லாம் சோர்வடையும்.

சோர்வடைந்த நிலையில் என்ன நடக்கும்…?

ஏதாவது ஒரு சாமானை எடுத்து வரச் சொல்லியிருந்தால்.. அல்லது பிள்ளையிடம் சொல்லிக் கடையில் போய் வாங்கிக் கொண்டு வா..! என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே பையன் வரச் சிறிது காலதாமதமாகி விட்டால் என்ன ஆகும்…?

டேய்… நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாயேடா…! என்று வேகமாகக் கோபம் வந்துவிடும்.

நீங்கள் விரதம் இருக்கும் பொழுது வெளியில் போய் ஒரு சாமானை வாங்கச் சொல்லி உங்களிடம் வந்து சொன்னால் உடனே… “உனக்கு இந்த நேரம் தான் கிடைத்ததா…? போடா…!” என்று விரட்டுவோம்.

அப்பொழுது எதை விரதமாக இருக்கின்றீர்கள்…!
1.நல்லதை வளர்க்காதபடி நாம் விரதம் இருக்கின்றோம்.
2.ஆக விரதம் என்றாலே நாம் என்ன என்றே தெரியாமல் இருக்கின்றோமே…!

விரதம் என்பது எது..? தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்து தீய அணுக்களாக விளையாதபடி தடுக்க வேண்டும். நல்ல அணுக்களுக்கு நாம் ஆகாரம் கொடுத்தல் வேண்டும்.

எதை…?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு இந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

சண்டை போட்ட குடும்பங்கள் இருக்கும். அவர்கள் உணர்வை நாமும் நுகர்ந்திருப்போம். சண்டையிட்டதை நுகர்ந்தது நமக்குள்ளும் இருக்கும். அப்பொழுது அவர்களும் நாமும் பிரிந்து இல்லை.

அதே மாதிரி ரோட்டில் போகும் பொழுது ஒரு பிச்சைக்காரன் அவஸ்தைப் பட்டிருப்பான். பரிவுடன் அதைக் கேட்டறிந்து அவனைக் காப்பாற்றியிருப்போம்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்ந்த பின்னாடி ஓ…ம்… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலில் சேர்த்து விடுகிறது. அப்பொழுது அவனும் நாமும் பிரிந்தில்லை.

அப்பொழுது அந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அவன் உணர்வுகள் இங்கே வந்ததும் என்ன செய்யும்…? நம் உடலிலும் அந்த அவஸ்தைப்படும் அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடும்.

நாம் உதவி தான் செய்தோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் அதை நமக்குத் துடைக்கத் தெரியவில்லையே…!

நல்லது செய்யும் நிலையில் நம்மை அறியாமல் இந்த மாதிரி நமக்குள் வரும் தீமைகளைத் துடைப்பதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள்.

1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதற்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள்
3.உலகிலேயே வேறு எங்கும் இத்தகைய நிலைகள் கிடையாது,
4.இயற்கை எப்படி இயங்குகிறது… எப்படி விளைந்தது…? என்று
5.சூட்சம நிலைகள் (கண்ணுக்குத் தெரியாதது) நம்மை எப்படி இயக்குகிறது என்று
6.உருவம் அமைத்து அருவ நிலைகளை நாம் எப்படி நுகர வேண்டும் என்பதை
7.நினைவுபடுத்தும் ஆலயமாகத் தான் அன்றைய ஞானிகள் அதற்குள் உருவங்களை வைத்தார்கள்…!

ஆனால் அந்த உருவங்களை நாம் இன்று அவமதிக்கின்றோம். தெய்வங்களைப் பார்த்து ஆசைகளைத் தான் பெருக்குகின்றோமே தவிர
1.தன்னை அறியாது வந்த தீமைகளைப் போக்கும் ஆலயம் என்று எண்ணுவதில்லை.
2.தீமைகளைத்தான் சேர்த்துக் கொள்கின்றோமே தவிர தீமைகளை நீக்கும் அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை.

சிவன் இராத்திரி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்…?

முதலில் சொன்ன மாதிரி ரோட்டில் எத்தனையோ உணர்வுகளைப் பார்த்திருப்போம்… ஒருவருக்கொருவர் சண்டையிட்டவர்களைப் பார்த்திருப்போம்… அந்த நினைவுகள் வரும்.
1.அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.அவர்களை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட வேண்டும்.
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெற வேண்டும்.

இப்படி இந்த நினைவுகளை எல்லாம் அன்றைய நாள் முழுவதும் கூட்டி நல்லதாக நமக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமைகளையே நுகராதபடி… விரதம் இருப்பது என்பது இது தான்…!

மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் “ஞானப் பாதை” அடைபட்டுவிடும்

 

நட்பாக இருக்கிறோம் என்றால் நம்மிடம் ஆயிரம் கஷ்டத்தைச் சொல்வார்கள். அதையெல்லாம் உ…ம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம். அது நம் நல்ல அறிவை மூடிவிடும்.

1.கஷ்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்தால் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகள்.
2.யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வுகளை மூடி மறைத்து விடும்… நினைவுக்கு வராது.

ஆகவே… யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வு உங்கள் நினைவுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று அருள் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்த உணர்வின் தன்மை
1.அவன் இருண்ட உலகையும் கண்டான்… அது ஒளி பெற்ற உணர்வையும் கண்டான்… இந்தப் பிரபஞ்சத்தையும் கண்டான்.
2.அவனில் விளைந்த உணர்வுகள் அந்தந்தத் தொகுதிகளில் இதை இணைத்து விட்டால்
3.அவன் எவ்வாறு தன் தன் தொகுதிகளில் தீமைகளை நீக்கினானோ
4.ஒவ்வொரு வளர்ச்சியின் நிலைகள் ஒன்றோடு இணைக்கப்படும் போது வளராது தடுக்கும் நிலைகளை அவன் அகற்றினானோ
5.தனக்குள் தன்னைக் கண்டு உணர்வின் ஆற்றலாக எப்படிப் பெருக்கினானோ அதை நாமும் பெற முடியும்.

அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குவது.

ஆக… மற்றவர்கள் படும் வேதனைகளை நுகரக் கூடாது. மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் அவர்கள் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அவர் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று
1.“அவர் பெற வேண்டும்” என்று எண்ணினால்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

பாசத்தால் பரிவால் பண்பால் அதைக் கேட்டறிந்தோம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தால்… மூச்சே விடாதபடி கஷ்டத்தையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்நேரம் வரை யாம் பதிவு செய்ததை மறந்து விடுவீர்கள். நல்ல அணுக்களின் தன்மையை மாசுபடுத்தி விடும்.

குப்பைக்குள் மாணிக்கம் மறைந்திருந்தால் வெளியிலே வெளிச்சம் தெரியுமோ…? காரணம் அந்தக் குப்பை அடர்த்தி ஆகிவிடுகின்றது.

சூரியனின் ஒளிக் கதிர்கள் வெயில் அடிக்கும் பொழுது தெரிகின்றது. ஆனால் இங்கிருக்கும் தூசிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதை மறைத்து விட்டால் சூரியனின் வெளிச்சம் தெரிவதில்லை… இருண்டு விடுகின்றது.

இதைப்போல் உயிரால் உணர்வின் ஒலிகள் நமக்குள் வரப்படும் பொழுது பிறர்படும் துயரத்தை அதிகமாகக் கேட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் தூசி போன்று நம்முடைய ஒளியையும் மங்கச் செய்கின்றது.

யாராவது உங்களிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள் என்றால்
1.அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களுக்குள் பொருள் காணும் சக்தி பெருகும் உங்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்…
3.திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்…. உங்களுடைய உணர்வுகள் தான் அங்கு அதிகமாக வர வேண்டும்,
4.இந்த உணர்வுகள் பதிவானால் அவருடைய இருளைப் போக்க உதவும்.

இல்லை என்றால் அந்தக் குப்பை நம்மை மூடி விட்டால் நம்முடைய ஒளியை அது மங்கச் செய்துவிடும்.

நான் எவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்தாலும் மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் இப்படி வந்துவிடும்.

குடும்பங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து இருப்பார்கள். சந்தர்ப்பத்தில் அவர்கள் இம்சைப்படுவார்கள். கணவன் அவருடைய சாப அலைகளால் நன்மை ஏற்பட விடாதபடி மனைவிக்குப் பல தீமைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

அந்தச் சாப அலைகளின் இயக்கம் வரும் போது பெண்களை மகிழ்ச்சியாக அங்கே வாழ விடாது செய்யும். நாம் கட்டிக் கொடுத்த பெண் அங்கே வேதனைப்பட்டால் நம் நிலை எப்படி இருக்கும்…?

அந்த உனர்வின் வேகங்கள் கூடும் போது பொழுது நான் இருளைப் போக்கும் நிலையாக உயர்ந்த சக்தியைக் கொடுத்தாலும் அதை மறைத்து விடும். நல்லதை எடுக்கும் திறன் இழந்து விடுவோம்.

நான் செய்தேன்… இருந்தாலும் என்னால் எங்கே முடிந்த்து…? எதை எடுப்பது…? என்ன செய்வது…? என்று முடியாத நிலைகள் வந்த பின்… அடுத்தாற்போல் என்ன நினைப்பார்கள்…!

செத்த பிற்பாடு என்ன ஆகப் போகின்றோம்…? போகட்டும் போ…! என்று இந்த உணர்வின் தன்மை சோர்வடைந்து சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. ஆகவே… இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே வருகின்றது.

மற்றவரிடத்திலோ நண்பரிடத்திலோ உறவினர்களிடத்திலோ இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் வேகங்கள் கூடும். அந்த நண்பன் தியான வழியில் இருந்தாலும் இந்த வளர்ச்சி அதிகமாகப் போகும் பொழுது இதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.

இந்நேரம் வரை உபதேசித்த உணர்வின் ஆற்றலை…
1.அகண்ட உலகையும் இருண்ட நிலைகளை நீக்கிய உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை இவ்வளவு தூரம் உபதேசித்து
2.பல வருடம் யாம் கஷ்டப்பட்டு வளர்த்த உயர்ந்த வித்தை உங்களுக்குள் ஊன்றினாலும் இதை அது மறைத்து விடும்…
3.சோர்வும் விரக்தியும் தான் ஏற்படும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குக் “கூடுமானவரை மற்றவருடைய துன்பங்களைக் கேட்டறிவதைத் தவிர்க்க வேண்டும்…”

அப்படி அவர்கள் சொன்னாலும் அடுத்த கணமே மகரிஷியின் அருள் ஒளி நீங்கள் பெறுவீர்கள் குடும்பத்தில் இருள் நீங்கும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறுவீர்கள் என்ற இந்த உணர்வினைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்தல் வேண்டும்.
1.நாம் எடுத்த நல்ல உணர்வை அவர்கள் உணர்வு மறைத்திடாது
2.நினைவு கொண்டு அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

ஒரு சிலர் கஷ்டம் வந்து விட்டால் அதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்களுக்குள் அது வரப்படும் போது அதனால் சோர்வடைந்து நீங்கள் போகும் பாதையை தடைப்படுத்தி விடும்.

அவ்வாறு ஆகாதபடி தடுப்பதற்குத் தான்
1.யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது அந்த இருளான நிலைகளை இது மறைக்கும்.
2.அப்படி மறைத்துத் திரும்ப இந்த உயர்ந்த உணர்வுகளை அதனுடன் இணைத்து மீண்டும் இயக்குவது.
3.தீமை உங்களுக்குள் அடைத்திடாது அதை அகற்றும் உணர்வுகளை “அடுக்கடுக்காகச் செயல்படுத்திக் கொண்டே வருவது…”

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு எம்முடைய உபதேசங்களை அடிக்கடி நீங்கள் கேட்டுப் பதிவாக்கி… உங்கள் நல்ல அறிவை எந்த்த் தீமையும் மறைத்திடாது… வளர்ச்சியின் பாதையிலே தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்குத்தான் “திரும்பத் திரும்ப இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…”

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்

 

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் மனித உடல் அது எப்படி உருப்பெற்றது…? என்பதனைத் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் கொண்டு ஒவ்வொன்றாகத் தனக்குள் வளர்ச்சியாகித் “தன்னை அறிந்தான்…” தனக்குள் விளைந்த உணர்வின் வலுக் கொண்டு “அகண்ட பேரண்டத்தையும் அறிந்தான்…”

அவனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அதனை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இயற்கையின் உண்மையின் வளர்ச்சியை உங்களுக்குள் வலுவாக்கி அதன் உணர்வால் உருவாக்கும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

1.நமது குருநாதர் அவர் உருவாக்கியது போல அவர் நமக்குள் உருவாக்கிட
2.அவரைப் போன்றே நினைவினை நான் செலுத்தப்படும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை கருவாக்கி உருவாக்கும் அந்த வலிமை பெறுகின்றது.
4.அதே வலிமையின் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது
4.நீங்கள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இந்த நினைவினை உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.
5.ஆகவே… நம்முடைய நினைவாற்றல் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவன் வழி செல்ல வேண்டும்.

நம்முடைய எல்லை எது…?

துருவன் பெற்ற அந்த எல்லையை அடைய வேண்டும் என்ற நினைவைக் கூட்டினால் இதனின் வரிசைத் தொடரில் அது வளர்ச்சியாகி பிறவி இல்லாத நிலை அடைந்து அந்த எல்லையை நாம் அடைகின்றோம்.

இல்லை…! என்னை இப்படிப் பேசினான்… அப்படிச் செய்தான்…! என்ற இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால் இதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி… இந்த வேதனை நம்மை மீண்டும் கீழான நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

இதனின் வளர்ச்சி அதிகமாகி விட்டால் இப்போது உபதேசித்த இந்த உணர்வுகளை அது மேலே மூடிவிடும்.

ஆக… அப்படி ஆகாதபடி ஊழ் வினையாக இந்த உபதேச வாயிலாக அதை அமுக்கச் செய்து… இந்த உணர்வினை அணுவாக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவின் ஆற்றல் அந்த மெய் ஞானி சென்ற பாதையில் செல்லும்.

இந்தக் காற்று மண்டலத்தில் மனிதனின் இச்சை கொண்ட உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் உடலுக்குள் தீமை இயக்காது அதை இது மறைத்துவிடும்.

குப்பைக்குள் ஒரு மாணிக்கம் கிடந்தால்… மாணிக்கம் இருக்கிறது என்று கண்களுக்குத் தெரியுமா…? அந்தக் குப்பையை நீக்கி விலக்கிப் பார்த்தால் தான் அதற்குள் இருக்கும் ஒளிகளை நாம் காண முடியும்.

இதே போல இப்பொழுது உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் ஒளியின் உணர்வுகளை…
1.குப்பையைப் போன்று வாழ்க்கையில் அதனைக் கொண்டு மூடி மறைத்து விட்டால்
2.அந்த ஒளியின் தன்மை மின்னும் நிலையோ அதன் உணர்வின் தன்மை பளிச்சிடும் நிலையில்
3.அதன் அருகில் இருக்கக்கூடிய பொருளைக் காணும் நிலையோ தடுக்கப்படுகின்றது காண முடியாது.

ஆகவே அதைக் காணும் ஆற்றல் கொண்ட ஞானிகள் உணர்வினை இப்பொழுது பதிவாக்கி… அகண்ட பேரண்டத்தின் நிலைகளையும் துருவன் கண்ட நிலைகளையும் அவனில் அறிந்துணர்ந்ததையும் பெற்று… இனி எந்த இருளிலும் சிக்காது ஒளியின் தன்மையாக மாற்றிய உணர்வுகள் உங்களில் விளைய வேண்டும் என்பதற்குத் தான் உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குள் அதனை உருவாக்கினார்… அதை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
1.அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றேன்.
2.நான் பெற வேண்டும் என்று அல்ல நீங்கள் பெற வேண்டும் என்று…!

“அந்த உணர்வின் ஒளியாக நீங்கள் பெற வேண்டும்” என்று ஏங்கப்படும் பொழுது
1.உங்களிடம் இருக்கக்கூடிய தீமைகளை நான் எண்ணுவதில்லை.
2.உங்களை அறியாது இயக்கும் கஷ்டங்களை நான் எண்ணுவதில்லை.
3.உங்களை அறியாத வந்த நோய்களை நான் எண்ணுவதில்லை.

யாம் உபதேசித்த வழியில் நீங்கள் அந்த அருள் ஞானத்தைப் பெற்றால் அந்தத் தீமைகள் அனைத்தும் அகன்று ஓடிவிடும்.

1.உங்களுக்குள் இருக்கும் கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் அறிய முற்பட்டு அதை அறிந்து கொண்டிருந்தால்
2.இந்த உணர்வின் தன்மை எனக்குள் இது தான் அதிகமாக வளரும்.

ஆகவே நாம் எண்ண வேண்டியது என்ன…? “தனக்குள் நோய் வந்தாலும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை வளர்த்தல் வேண்டும்.

அதே சமயத்தில்
1.எது எவ்வளவு வேதனையாகின்றதோ அந்த நேரத்திலே
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
3.இருளாக்கும் தீய வினைகள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் தனக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் அவர் ரிக் வேதத்தைத் தெளிவாகத் தலைகீழாகப் பாடுவார். வேதங்கள் என்றால் என்ன…? என்பதை தெளிவாகச் சொன்னார். அவரும் பிராமணர் தான்.

இதை எனக்குத் (ஞானகுரு) தெரியப்படுத்துவதற்காக ஒரு நாள் குருநாதர் என்ன செய்தார்…?

ரிக் வேதத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு வாத்தியார் நாங்கள் இருக்கும் தெருப் பக்கமாக நடந்து வந்தார்.

வந்தவுடனே… இங்கே வாடா…! என்று கொச்சையான வார்த்தையால் அவரைத் திட்டி அப்படியே குடுமியைப் பிடித்துத் தூக்கினார் குருநாதர்.

அடுத்து… ஏண்டா இப்படித் தப்பு செய்தாய்…? என்று ஓங்கி ஒரு அறை கொடுக்கின்றார்…! அந்த ஆள் முழிக்கின்றார். அவர் முழித்தவுடனே…
1.அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாய் அல்லவா…?
2.அது எப்படி என்று இப்பொழுது திருப்பிச் சொல்லு… என்கிறார் குருநாதர்.

வாத்தியார் பெ…பே…! பெ… பே…! என்கின்றார்.

சொல்லத் தெரியவில்லை என்றதும்… குருநாதரே சொல்கின்றார்
1.அப்படியே சொல்லித் தலைகீழாக கட…கட..வென்று மறுபடியும் மேலே ஏற்றுகிறார்.
2.ஒரு சொல் கூட… அந்த நாதம்… சுருதி மாறாமலே பாடியவுடனே
3.அந்த வாத்தியார் திரு…திரு…திரு… என்று முழிக்கின்றார்.

ஆனால் எனக்கு இது எல்லாம் ஒன்றும் தெரியாது. என்னமோ சொல்கின்றார்… என்னவோ உளர்கின்றார்..! என்று தான் நான் (ஞானகுரு) நினைக்கின்றேன்,

ஏனென்றால் அந்த வேதங்களைப் பற்றிப் பேசுவது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரிகிறது. அடிவாங்கிய பின் இனிமேல் தப்பு செய்யக் கூடாது…! என்று சொன்னவுடன் சரி…! என்று அவர் போய்விட்டார்.

இவன் திருட்டுப் பயல்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தப்புத் தப்பாகச் சொல்கின்றான்…! என்றார் குருநாதர்.

பின்பு அடுத்த நாள் அந்த ஆள் அடி வாங்கியவர் என்னிடம் வந்தார்.
1.சாமி…! இவர் மனிதனே இல்லை… இவர் ஒரு ரிஷி பிண்டம்…
2.எப்படி நீங்கள் இவரைப் பெற்றீர்கள்…?
3.இந்த வேதத்தை யாரும் சொல்லவே முடியாது
4.சொற் பிழை இல்லாமல் அந்தச் சுருதியுடன் சொல்கின்றார்…!

“அவர் என்னை அடித்தார்………! நான் செய்த தப்பெல்லாம் ஓடியே போய்விட்டது………!” இனிமேல் நான் இந்த மந்திரம் சொல்லும் வேலைக்குப் போகவே மாட்டேன் என்றார்.

அந்த ஆள் உடுப்பி. நான் என் ஊருக்கே செல்கிறேன் என்றார்.

உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம்… அவரைக் (ஈஸ்வரபட்டரை) குருவாக நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்…! என்று கூறிவிட்டு எனக்கு நீங்கள் ஆசிர்வாதம் கொடுங்கள்… நான் ஊருக்குச் சென்று ஏதாவது வேறு தொழில் செய்து கொள்கின்றேன்…! என்றார்.

நான் சமையல் செய்து ஒரு ஓட்டல் கடை வைக்கலாம் என்று விரும்புகிறேன். நான் செய்யும் சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள் சாமி…! என்றார்.

அப்புறம் அவரிடம் ஆசீர்வாதம் செய்து ஒரு ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால்…
1.குருநாதர் அத்தனை நிலைகளையும்
2.அவர் எந்தெந்த வழியில் தெரிந்து இருக்கின்றார் என்ற நிலையை
3.நான் அறியவில்லை என்றாலும் என்னை அறிய வைக்கின்றார்.

அதே சமயத்தில் குருநாதர் என்ன எல்லாம் செய்வார் தெரியுமா…!

டெலிபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தில் அடிப்பார் இந்த லயன்… அந்த லயன்.. இந்த லயன்.. அந்த லயன்…! (LINE) என்று சொல்லிக் கொண்டே வருகின்றார்.

இவர் என்னத்தைக் “கிரகத்தைச் சொல்கிறார்… பைத்தியம் பிடித்தது போல் எதையோ கூறுகின்றார்…!” என்று நான் எண்ணிக் கொண்டிருப்பேன்.

ஒன்றும் புரியாது.

டேய்…! மிளகாய் ஒரு லட்சம் கோடி…! கோடி..கோடி…கோடி…! என்று சொல்வார். குருநாதர் தெலுங்கு மற்றும் எல்லா பாஷைகளிலும் பேசுவார்.

கோடி இங்கே இருக்கின்றது சாமி…! என்றேன்.

டேய் அந்தக் கோடி இல்லைடா… “ஈ கோடிடா…” என்பார். இப்படி மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி…! அது…இது… என்று என்னனென்னமோ கோடி… கோடி…! என்று சொல்லுவார்.

எனக்கு அர்த்தம் புரியவே இல்லை. இந்த லயன் அந்த லயன் இந்த லயன் அந்த லயன்…! என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அப்புறம் அந்த உணர்வுகள் எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் (ஒளிக் கற்றைகள்) ஒன்றோடு ஒன்று கலந்து
2.அந்த உணர்வுகள் எத்தனை “கோடியாக” மாறுகின்றது…?
3.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
4.எதன் செயலை இது மாற்றுகின்றது…? (அப்படி என்றால் அது “அந்த லயன் – LINE)

மின்னலாக வெளிப்படும்போது இந்த உணர்வுகள் எதனுடன் எது எப்படிச் சேர்கின்றது…? உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை “உள்ளுணர்வில் உணர்த்துகின்றார்…!”
1.அதாவது முதலில் சொல்கின்றார் (புரியாதபடி)
2.பின்பு புரிய வைக்கின்றார்.

இப்பொழுது உங்களிடம் அதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கின்றேன். எனக்குக் குருநாதர் எப்படிச் சொல்லிப் பதிவு செய்தாரோ… அதை உங்களிடமும் பதிவு செய்கின்றேன்.

உங்களுக்குச் சந்தர்ப்பம் வரும் பொழுதெல்லாம் இந்த நினைவுகள் வரும். தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இது உங்களுக்குள் வரும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகத்தில் உலகமே விஷத் தன்மையாக மாறும் இந்த நேரத்தில் அந்த விஷத்தையே வெல்லக்கூடிய சக்தியாக நீங்கள் பெற வேண்டும். உங்கள் மூச்சு பிறரைக் காக்க வேண்டும்.

அத்தகைய சக்திகளைப் பெறுவதற்குத்தான் இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை
2.குருநாதர் உணர்வுதான் பேசுகின்றது
3.அந்த உணர்வு தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றது.

இதை நிலைநிறுத்தி… உங்களுக்குள் அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.உங்களையும் காக்கின்றீர்கள்
2.நாட்டையும் காக்கின்றீர்கள்
3.மக்களையும் காக்கின்றீர்கள்
4.இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்…!

உங்களுக்குள் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ணினால் உங்களுக்குள் நிச்சயம் அது வரும்… வளரும்…!

எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

 

தாய் கருவிலே வளர்ந்த அந்த உணர்வின் ஆற்றல் தான் நஞ்சின் தன்மையை அடக்கும் சக்தியாக சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து…
1.அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சின் இயக்கத் தொடரைக் காணும் திறன் பெற்றான் துருவன் (அகஸ்தியன்).
2.அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.ஒவ்வொரு நொடியிலும் உங்களைச் சாடும் தீமையான உணர்வுகளை அது மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து நீங்கள் வேறு பக்கம் செல்லும் பொழுது என்ன நடக்கிறது…?

யாரும் உங்களைத் திட்டவே வேண்டாம். சும்மா இருக்கும் போது ஒருவன் மற்றவனைக் கடுமையாகச் சாடிப் பேசுகின்றான். அதை நாம் கேட்க நேர்கின்றது அந்த ஒலிகள் பட்டு அதைச் சுவாசித்த பின் நம்மை அறியாமலே அதே உணர்வுகள் இயக்கி விடுகின்றது… அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொருவன் கடுமையான ஆயுதத்தைக் கொண்டு மற்றவனைத் தாக்குகின்றான். அடிபட்டவன் அலறி ஓடுகின்றான். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குப் பதட்டமாகின்றது. நம்மை அறியாமலே நடுக்கமும் பயமும் வருகின்றது.

அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் ஓ… என்று ஜீவணுவாக மாற்றித் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறது.

பின் அவனில் விளைந்த உணர்வின் தன்மை நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக… நினைவு வரும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் தூண்டிக் கொண்டே இருக்கின்றது.

நினைவு வரும் போது இயக்கினாலும் நினைவு இல்லாத பொழுது அதனுடைய வலிமை என்ன செய்யும்…?
1.புலனடங்கிச் சாந்தமாக… வேலை இல்லாது அமைதியாக ஒரு இடத்திலே உட்கார்ந்து இருந்தோம் என்றால்
2.இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அது வலிமை பெற்றுவிடும்.
3.அடுத்து எந்த வேலைக்கும் போக விடாது…! பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்
4.நுகர்ந்த உணர்வு அதனுடைய வளர்ச்சி அதிகமாகும் பொழுது இப்படி இயக்கத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சில குடும்பங்களில் வளர்ச்சி பெறும் குழந்தைகளின் உள்ளங்களில் இது போன்ற உணர்வுகளைக் கண்டு விட்டால் அது இயக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.

நீங்கள் நுகர்ந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து… யாருடன் பேசினாலும் கேட்போர் உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகள் பதிவாகி அவர்களையும் இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீட்டிடல் வேண்டும்.

அத்தகைய நிலைகள் உங்களுக்குள் வந்தால் பிறிதொரு உணர்வுகளை உங்களுக்குள் இந்தத் தீமை நம்மை இயக்கிடாது அதை அடக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான்
1.அருள் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாக்கி
2.அந்த உணர்வின் வலிமை பெறச் செய்வது.

இந்த நினைவை நாம் வளர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கூட்டுத் தியானங்களில் யாம் வெளிப்படுத்திய உபதேசக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை எடுத்து அடிக்கடி படிக்க வேண்டும். கேட்டது நினைவில் இல்லை என்றாலும் அது வலுப்பெறுவதற்கு
1.அந்த அருள் ஞான நூல்களை மீண்டும் படிக்க வேண்டும்… நினைவாற்றலை மீண்டும் பெருக்க வேண்டும்.
2.கூட்டமைப்பில் மற்றவர்கள் செவிகளிலும் இது கலக்கப்பட வேண்டும்.
3.தியானத்தில் ஒருவர் இன்று படித்தார் என்றால் அடுத்து மற்றொருவரைப் புத்தகத்தைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அவருக்குள் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் கலக்கின்றது. கூட்டமைப்பில் எல்லோரும் சேர்த்துத் தியானிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட பயத்தால் ஒரு சிலர் பயமான உணர்வுடன் இருப்பார்கள். அப்போது மனிதனை உருவாக்கிய மகிழச் செய்யும் அணுக்கள் பலவீனம் அடையப்படும் பொழுது… தனக்குள் இனம் புரியாதபடி நோய்கள் வருவதும் பிறர் வேதனைப்படும் உணர்வுகள் சிறுகச் சிறுக வந்து கடும் நோயாக விளையச் செய்து… நம்முடைய நினைவுகளை திசை மாற்றிக் கொண்டிருக்கும்.

அது போன்ற நிலைகளை நாம் அடக்க வேண்டும் என்றால்… அதற்கு அவசியம் யாம் வெளிப்படுத்திய அருள் ஞானப் புத்தகங்களை எடுத்துப் படியுங்கள்.
1.ஒரு பத்து பேர் இருந்தாலும் படிக்க வேண்டும்… ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் படியுங்கள்.
2.ஒருவரே என்று இல்லாதபடி தினமும் ஒருவரைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அது போன்ற கூட்டமைப்பாக அமைத்துத் தியானித்து முடிந்த பின் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்… அவர் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வினை அனைவரும் சேர்த்து அந்தப் பயந்தவரின் செவிப்புலனில் இயக்கப்படும் பொழுது வலிமை மிக்கதாக இது மாறி அவர் உடலில் இருக்கக்கூடிய பிணிகளை நீக்கும்.

தனித்த நிலையில் யாரும் இதைச் செய்ய வேண்டாம். காரணம்… ஒருவருக்குக் கடுமையான நோய் இருந்தாலும் அல்லது இன்னொரு ஆவி உடலுக்குள் புகுந்து இருந்தாலும் அதனுடைய வேகம் அதிகமாக இருக்கும்.

அதனுடைய உணர்ச்சிகளை பார்க்கப்படும் பொழுது அங்கிருக்கும் வெறுப்படைந்த உணர்வுகள் வேகத்தின் உணர்வுகள் அதற்கு வலு ஜாஸ்தி.
1.நமக்குள் நல்லதை எடுக்க விடாது முன் பகுதி இருந்து கொண்டு தடைப்படுத்தும்.
2.நல்ல உணர்வுகளை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது…?
3.இதைப் போன்ற வருவதைத் தடைப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தன்மைகளை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

நாம் நுகரும் உணர்வின் தன்மை உயிலே பட்டுத் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செல்லும். ஆக அந்த்த் தீமை புகாது தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலுப்பெறச் செய்து உங்கள் வலிமையைக் கூட்டுகின்றோம்.

ஆனால் இந்த வலிமை வருவதற்கு முன் தீமையின் வலு சேர்ந்து விட்டால் நல்லது நமக்குள் வராதபடி ரிமோட்… தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது நல்லதை நுகர்வது எங்கே…? அந்த அறிவின் ஞானம் வருவது எங்கே…? இந்த வலிமையைப் பெறுவது எங்கே…?

ஆக நாம் எண்ணியதை உயிர் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீங்கள் அறிவதற்குத் தான் அகஸ்தியனைப் பற்றிச் சொல்வது. அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அணுவின் ஆற்றலை அறிந்தவன்… நஞ்சை ஒடுக்கியவன்… ஒளியின் சுடராக இருப்பவன்…! அதை நாமும் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். சாமி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று எண்ணுவார்கள்.
1.உங்களுக்குள் அதை இணைத்து “அவர்கள் பெற்ற வளர்ச்சியை” உங்களுக்குள் நினைவுபடுத்தியே ஆக வேண்டும்.
2.அப்போது அந்த உணர்வின் “தொடர்வரிசையாக” மீண்டும் உங்களுக்குள் அது இயங்கும்.

பலகாரம் சுடுபவர்கள் ஒரு தரம் மாவைப் போட்டுப் பிசைந்தார்கள் என்றால் அடுத்தடுத்து அதே மாவைப் போட்டுப் பிசைந்து சுட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் இப்படி திரும்பத் திரும்ப மாவைப் பிசைகின்றார்கள் என்று சொல்லக்கூடாது. முதலில் போட்ட அதே அளவுகளை மீண்டும் போட்டு அதைக் கொண்டு வரும் பொழுது தான் அதே ருசி… அதே மணம்… எல்லாமே ஒன்று போல் வரும்.

அவர்கள் எப்படிப் பலகாரங்களை மீண்டும் மீண்டும் சுவையாகச் சுடுகின்றார்களோ இதைப் போன்று தான் ஒவ்வொரு சமயத்திலும்
1.அந்த அருள் உணர்வுகளைச் சுவை மிக்கதாக வளர்த்ததை உங்களுக்குள் இணைத்து
2.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதை வளர்க்கச் செய்வபதற்குத் தான் திரும்பத் திரும்ப யாம் சொல்வது.

அதாவது… பிறிதொரு உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே கலந்துவிடாதபடி
1.அருள் உணர்வுகளைக் கூட்டி மற்ற தீமையின் வலுவைக் குறைக்கச் செய்வதற்கு தான் இவ்வாறு செய்வது.
2.எமது குருநாதர் எனக்கு இப்படித்தான் செய்தார்… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்வதும் திரும்பத் திரும்பச் சொல்வதும்.

ஏனென்றால்
1.இந்த மனித உடல் நமக்குச் சதமானது அல்ல.
2.உயிர் தான் சதம் என்று நமக்குத் தெரிகின்றது.
3.அதனுடன் உணர்வுகளைச் சதமாக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து விடாது அழியா ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அதற்குத் தான் பல வகைகளிலும் உங்களுக்கு விளக்க உரையாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யுதர்கள் ஆதாம் ஏவாள் என்ற நிலைகளைச் சொல்கின்றார்கள். ஆதாம் என்றால் பூமி… ஏவாள் என்றால் இயக்கம்…!

ஆண் பெண் என்று இங்கு பூமியிலே ஆதியில் தோன்றினார்கள். ஆண் பெண் ஆன பின் விஷத் தன்மை இருக்கும் பக்கம் போக வேண்டாம்..! என்று ஆண்டவன் கூறினார்.

ஆனால் அந்த விஷத்தை உறிந்த பின் அதற்குத் தண்டனையாக பாம்புகளாகப் பிறந்தார்கள்… அதுவாகப் பிறந்தார்கள்…! என்று அவன் சொல்கின்றான்.

ஏனென்றால் இதே தத்துவத்தை இங்கே நம் நாட்டிலே அன்றே சொன்னார்கள். சக்தி சிவமாகின்றது என்று…!

ஆதியிலே ஒரு சமயம் அகஸ்தியன் வாழ்ந்து வளர்ந்த காலங்களில் பூமியின் தன்மை முட்டை வடிவில் வருகின்றது… எப்படி…? அதாவது பனிப்பாறைகள் அங்கே உறையப்படும்பொழுது அது பூமி திரும்பும் தன்மை வருகின்றது எடை கூடும்போது…!

அப்பொழுதுதான் தெற்கில் போ…! என்று அகஸ்தியனைப் போகச் சொன்னதாகக் காவியங்கள் உண்டு.

அந்த உணர்வுக்கொப்ப சூரியனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உறைந்த பனிப்பாறைகளைக் கரையும்படி செய்கின்றான்… அகஸ்தியன். ஏனென்றால் அந்த உணர்வின் வலிமையை அவன் பெற்றதனால் அவ்வாறு மாற்றிச் சமநிலைப்படுத்தினான்.

அதற்கு அப்புறம் இப்பொழுது விஞ்ஞானி வந்துவிட்டான்.

ஒரு பக்கத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்தான் என்றால் அதனால் புகை மண்டலங்கள் பெருகினால் மேலே ஈர்க்கக் கூடிய தன்மை எல்லாம் போய்விடும். இப்போது உறைபனி அதிகமானால் டபக்… என்று பூமி திரும்பிவிடும்.

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு முட்டை வடிவில் வந்த பூமியை அது திரும்பாதபடி சமப்படுத்தி வைத்தான்… இன்றளவும் சீராக ஓடிக் கொண்டுள்ளது.

அதை நமக்குப் புரியச் செய்வதற்காக சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என்று குட்டிக் கதையாகப் போட்டு விளக்குகின்றார்கள்.

சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகின்றது. அதனால் கூட்டங்கள் அங்கே நிறையச் சேர்ந்துவிடும்.
1.அதை நீ சமப்படுத்தத் தெற்கே போ… என்று
2.சிவன் அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டான்
3.அகஸ்தியன் அவ்வாறு போனான்…!

சிவனும் பார்வதியும் என்றால் பூமி சுழலும் போது துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்குவதை எடுத்து அது வழியாக பூமியாகின்றது.
1.அதனால்தான் பார்வதி பஜே
2.இந்த உணர்வின் சக்தி எதுவாகுதோ அதன் வழி இயக்குகின்றது.
3.ஆகவேதான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்
4.சக்திகள் வந்து உறைந்து உடலாகும்போது இரண்டும் இணைந்து பூமியாகின்றது என்பதைக் காட்டுவதற்காக
5.இப்படி ஒரு சாஸ்திரத்தை தெளிவாகக் கூறுகின்றார்.

நீ தெற்கில் போ…! என்று வரும்போது தெற்கில் தான் வெப்பத்தின் தன்மை அதிகம். அப்போது அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் எடுத்து அதைச் சமப்படுத்துவதற்காக திசைத் திருப்புகின்றான்.

அப்போது திசை திருப்பும்போது இதன் உணர்வுகள் மாறி எடையற்ற நிலைகளும் இது சேர்க்கப்படும்போது சமநிலை வருகின்றது.

இப்படி அகஸ்தியன் மாற்றியமைத்தான்…! என்ற நிலைகளைச் சாஸ்திரங்கள் மறைமுகமாக மனிதன் அறிந்து கொள்வதற்குத் தெளிவான நிலைகள் கூறுகின்றது.

அன்று அகஸ்தியன் சமப்படுத்திய உணர்வுகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது. அவனுக்குள் விளைந்த பேராற்றல்களும் இங்கே பரவி உள்ளது.

நான் (ஞானகுரு) மட்டும் இதைக் கண்டுணர்ந்து சொல்கிறேன் என்று இல்லை. இதையெல்லாம் நீங்களும் தெரிய முடியும்… தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்தால் தான் இந்த நாட்டில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத் தன்மையை மாற்ற முடியும். ஏனென்றால் அகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் மறைந்துவிட்டது.

இந்தச் சூரியனும் அழியும் தருணம் வந்துவிட்டது. ஆனால் சூரியன் அழிவதற்கு முன் இந்த உயிரினங்களின் மாற்றங்கள் அதிகரிக்கும்.

நாம் மனித இனமாக இன்று நல்ல நிலையில் இருக்கும்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று சேர வேண்டும்.

ஏனென்றால் இனம் இனத்தை வளர்க்கும்…!

1.குருநாதர் அந்த உயர்ந்த உணர்வைப் பெற்றார்
2.இந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் பதிவு செய்தார்.
3.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யும் போது
4.அருள் என்ற உணர்வைச் சேர்க்கப்படும்போது இது பெருங்கூட்டமாக மாறுகின்றது…!

அருள் உணர்வுகளை நீங்கள் பெறப்படும் போது “பளீர்ர்…” என்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சம் வரும்

 

அகஸ்தியன் கண்டதை… துருவன் கண்டதை… எல்லோரும் காண முடியும். அந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நமக்குள் அது வளர்ந்து நம்மை அறியாமலே அதைக் காணும்படி செய்யும்.

எப்படி…?

உதாரணமாக கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் ஒருவன் துர்மரணம் அடைந்ததையும் சிதைந்து கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டதையும் நாம் கேட்டுணரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது.

துர்மரணம் அடைந்தவன் வேகமாகவும்… கோபத்துடன் தாக்கும் உணர்வுகள் செயல்பட்ட்தையும்… அப்படிப் பதிவான உணர்வலைகள் இரவிலே தூங்கப்படும் பொழுது “கொடிய உணர்வின் சத்து…”
1.அந்த ஆவியின் அலைகளை உடல் அதை ஈர்த்துச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டு
2.புலனடங்கித் தூங்கும் நிலையில் முன் பின் பார்க்காதவர்களின் ரூபங்களைக் காணுவோம்.

தலை சிதைந்து அல்லது தலை இல்லாத மனிதனோ… அதாவது கொலை செய்யும் பொழுது தலை இல்லாத நிலையில் ஓடும். அந்த உடலில் இருந்து சிதைந்த உணர்வுகள் அணுக்களாக மாறியதை… பிறர் சொல்வதை நாம் கேட்டிருந்தாலும் கூட அது பதிவாகி இந்த நினைவுகள் அலைகளாக நம் சுவாசத்தில் புகுந்து கொடிய உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று அப்படி ரூபங்கள் தெரிய வரும்.

இரவிலே தூங்கும் பொழுது பார்த்தால் அது கையில்லாததாக இருக்கும் காலில்லாது இருக்கும். ஒருவரை ஒருவர் தாக்க எண்ணும் இந்த உணர்வுகள் நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களில் மோதியவுடன் நம்மை அறியாமல் வியர்த்து விறுவிறுத்து திடீரென்று முழிப்பாகி எழுந்து விடுவோம்.

இந்த உணர்வுகள் எப்படி நம் உடலை இயக்குகின்றதோ இதைப் போலத் தான்
1.இயற்கையின் நிலைகளைத் துருவன் கண்டுணர்ந்து தனக்குள் படிப்படியாக அவன் நுகர்ந்த ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஒன்றில்லாது ஒன்றில்லை என்ற நிலையில் அவனிடமிருந்து வெளிப்பட்ட தீமையை நீக்கிய உணர்வுகள் படர்ந்திருப்பதை
3.நினைவு கொண்டு அந்த உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
4.இரவில் தூங்கும் பொழுது சிலருக்கு அவர்களை வான மண்டலத்திற்கே அந்தப் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்வதையும் காணலாம்.

இந்தத் தியான வழியினைக் கடைப்பிடிப்போர் வானிலே மிதந்து கொண்டிருப்பதாகவும்… மிதந்து கொண்டே செல்வதாகவும் அந்த வான மண்டல இயக்கங்களைக் காணவும் முடியும்.

ஒரு சிலர் இரவிலே இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மிதந்து கொண்டே அதைப் பார்த்த உடனே இதிலே அச்சப்படுவோரும் உண்டு.

பூமிக்குள் வராது அப்படியே மேலே சென்று விடுவோமோ…? வீட்டிலே பெண்டு பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டுச் சென்று விடுவோமோ…? என்ற இந்த உணர்வுகள் கலந்து விட்டால் திடீரென்று உடலிலே வியர்வையாகி “பூமிக்குத் திரும்ப மாட்டோமோ…” என்று திடுக்கிட்டு… முழிப்பவர்களும் உண்டு.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை புவியின் ஈர்ப்புக்கு வரும் பொழுது இப்படியும் கனாக்கள் பல நிலைகளில் வருவது உண்டு.

கனாக்கள் வருவதே…
1.எதை நுகர்கின்றோமோ அந்த உணர்வுகள் உயிருடன் உராய்ந்து
2.உடலுக்குள் சேர்த்து அது மோதுவது தான் நினைவாற்றலாக வருகின்றது.

குருநாதர் எனக்குள் பதிவு செய்த… துருவன் கண்டுணர்ந்த உணர்வினை… அந்த நினைவின் ஆற்றலை நான் பெறுவதற்கு எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

இந்த உணர்வுகள் உன்னை எப்படி இயக்குகின்றது…? அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்ற உண்மையைச் சொல்லப்படும் பொழுதுதான் அவர் வழியில் துருவன் பெற்ற ஆற்றல்களை… அவன் எவ்வாறு எல்லாம் தனக்குள் வந்ததை மாற்றி அமைத்தானோ “அதையும் நான் பெறும் தகுதியாக குருநாதர் ஏற்படுத்தினார்…”

அவர் எவ்வழியில் உணர்த்தி இதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினாரோ அதன் வழியில் உங்களுக்குள்ளும் இதைப் பதிவாக்கி அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இந்த உணர்வுகள் உருவானது என்ற நிலையையும் நினைவுபடுத்தி
2.அதனின் வலிமை கொண்டு நீங்களும் இதை அறிந்து உங்களுக்குள் இது விளைந்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி
3.உங்கள் சொல்… கேட்போர் உணர்வுகளிலும் ஆழமாகப் பதிந்து
4.அவருக்குள் விளைந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக இது உருவாக வேண்டும்.
5.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் பதட்டத்தையும் மற்ற தீமைகளையும் அடக்கி “வெளிச்சமாக…” உங்கள் உடலிலிருந்து வரும்.

பழனியில் இருக்கும் ஒருவருக்கு இது போன்று கிடைத்தது. அவர் எதையுமே கூர்மையாக உணரக்கூடியவர். இந்த உபதேசத்தைக் கொடுக்கப்படும் பொழுது கூர்மையாகக் கவனித்தார். இப்படி எல்லாம் நடக்குமா…! என்று ஆச்சரியக் குறியுடன் எண்ணினார்.

இரவிலே தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பளீர்ர்… என்று ஒளிகள் அவர் உடலிலிருந்து வெளிப்படுகின்றது. அவர் அரண்டு எழுந்திருக்கின்றார்… சப்தமிடுகின்றார்.

சப்தத்தைக் கேட்டு அவர் மனைவியும் எழுந்து பார்க்கின்றது. கணவர் உடலிலிருந்து வரும் வெளிச்சத்தை அதுவும் பார்க்கின்றது. அந்த இடமே வெளிச்சமாக மாறுகின்றது.

இந்த வயதிலேயே இதையெல்லாம் கண்டு விட்டால் நான் இனி என்ன செய்வது என்று தனக்குத் தானே அச்சுறுத்திக் கொண்டு என்னிடம் வந்து இதைக் கேட்டார்.

1.வெளிச்சத்தைப் பார்த்த நாளிலிலிருந்து எனக்குப் பயமாக உள்ளது.
2.மனிதனாகப் பிறந்தேன்… என் ஆசை எல்லாம் போய் விட்டால் நான் என்ன பண்ணுவது…? என்று அவர் இதைப் பிடிவாதமாகப் பிடிக்கின்றார்.
3.உண்மைகளை அவர் நுகர்ந்தாலும் அவருடைய பிடிவாத உணர்வுகள் அது இயக்கிக் கீழே அழைத்துச் சென்றது.

அவரின் பிடிவாதத்திற்குக் காரணம் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் மற்றவர்களின் பழக்க வழக்கங்களைச் சேர்க்க விரும்புகின்றார். நண்பர்களுடன் அதிகமாகச் சேர்ந்து “மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது…”

மதுப் பழக்கம் உள்ளவருடன் இணைந்து வரும் பொழுது அது அதிகமாகி விட்டது… தன் ஒழுக்கம் அவரிடம் மறைந்தே விட்டது.

1.உயர்ந்த சக்திகளைக் கொடுத்தும் இதை அவர் வலு சேர்க்கவில்லை.
2.தன் உடலின் இச்சை வரப்படும் பொழுது அதனுடைய மாற்றங்கள்…
3.மற்றவன் தான் செய்யும் உணர்வு வரப்படும் பொழுது அவருடைய நிலை ரொம்பவும் மோசமான நிலைக்குப் போய்விட்டது.
4.உயர்ந்த உணர்வுகல் கிடைத்தும் அவருக்குப் பலனில்லை.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை உடலின் இச்சைக்குத் தான் வருகின்றது. உடலின் இச்சைக்கு வந்தாலும் பல செயல்களைப் பார்த்துப் பலவீனம் அடையப்படும் பொழுது மன நிலை குழம்புகின்றது.

அதை அடக்குவதற்கு மதுவைக் குடிக்கின்றார்… தன் நிலையை மறக்கின்றார். மறக்கும் உணர்வுகள் தனக்குள் வளர்க்கப்படும் பொழுது தன் நிலையையே இழக்கச் செய்கின்றது.

1.ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் வரும் ஆசையின் உணர்வுகள்…!
2.அது வளர்ந்து விட்டால் நான் உயர்ந்த உணர்வுகளைக் கொடுக்கும் போது
3.அதை நீங்கள் “பயனற்றதாக ஆக்கி விடக்கூடாது… என்பதற்குத் தான் “உங்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கின்றேன்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இனி நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 2004க்கு மேல் செல்லும் பொழுது இயற்கையே நம்மை அழித்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் தான் வாழ செயற்கைக்கு மாற்றி… கடும் விஷத் தன்மைகளைக் கொண்டு வந்ததால் மனிதனுடைய நல்ல குணங்களையே சீர்குலைக்கும் தன்மையாக இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தான்…!
1.ஆனால் இந்த நாடு ஒன்று தப்பும்…
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று
3.அந்த அகஸ்தியன் பிறந்த நாட்டில் தான் இங்கே மீண்டும் முளைக்கின்றது.

அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் உணர்வைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

1.விஜய தசமி… நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்தது
2.தசமி பத்தாவது (ஒளியாக) நிலை அடையக் கூடிய மனித உடல்.
3.உயிர் உடல் பெற்று மனிதனாகும் பொழுது மகாசிவன் இராத்திரி என்று
4.இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்து ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அந்த ஞானிகள் கொடுத்ததை மதிக்கின்றோமா..? அரச வழியைப் பின்பற்றி தவறுகளைச் செய்யத் தான்… இந்த உடலுக்காகத்தான்… இச்சைப்படுகின்றோம்.

சாகாக்கலை என்ற நிலையில்… “அரசன் தான் எப்பொழுதும் வாழ முடியும்…!” என்ற நம்பிக்கையில் இருந்தான். அந்த ஆசையிலே கடும் பூதங்களாகி மற்றதை எத்தனை இம்சை செய்தானோ அத்தகைய அரசன் எவனும் இருந்ததில்லை.

அன்று ஆங்கிலேயர்கள் உலக நாடுகள் பலவற்றை அடக்கி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார்கள். இருந்தாலும் இன்று அவர்கள் நாட்டிலே அங்கே எத்தனையோ நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்…!

இதைப் போன்ற சாம்ராஜ்யங்களை ஆண்ட அரசர்கள் எல்லாம் எந்த நிலை ஆனார்கள்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அடக்கி ஆள வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இருப்பினும் “எதை வைத்து… எதை அடக்க வேண்டும்…?”

தீமை செய்யும் நிலைகளைத் தான் நாம் அடக்க வேண்டும்.
1.அந்த அருள் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால்
2.தீமைகளை அடக்கி ஆட்சி புரியலாம்… அனைத்தையும் ஒளியாக மாற்றலாம்.

மனிதனின் வாழ்க்கையில் எது வலிமையோ அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கும்.

சாந்தமும் ஞானமும் விவேகமும் இன்று இருப்பினும் ஒரு கோபக்காரனைப் பார்த்தால் அந்த வலிமை நமக்குள் பயப்படும்படிச் செய்கிறது.

வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை நம்மை நடுங்கச் செய்கிறது… நம்மைச் சோர்வடையச் செய்கிறது. அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட “கார்த்திகேயா…” என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பாய்ச்சுகின்றோம்
2.கண்களால் ஏங்கிப் பெறச் செய்து உங்களுக்குள் நுகரச் செய்கின்றோம்
3.இப்படிப் பதிவாகும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் எளிதில் பெற்று உங்களைக் காத்திட முடியும்..
4.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்
5.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று என்றுமே அழியாத வாழ்க்கை வாழ முடியும்.

அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலை அனவரும் பெற முடியும்

 

அகஸ்தியரும் அவர் மனைவியும் தனக்குள் அறிந்த உணர்வுகளை இருவருமே ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற நிலையில் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்தனர்.

1.உயிர் எவ்வாறு மின்னல் போன்ற மின்னிக் கொண்டிருந்ததோ இதைப் போல
2.தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்து எதனின் ஈர்ப்பிலும் சிக்காது
3.இரு உயிரும் ஒன்றாகி இரு உடலில் விளைந்த உணர்வுகளும் ஒன்றாகி
4.இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் அனைத்தும் நம் பூமிக்குள் வரும் அந்தத் துருவதிலே நின்று அதனை ஒளியின் கருவாக உருவாக்கி
5.இன்றும் தங்கள் வாழ்க்கையில் அழியாத நிலைகள் கொண்டு “துருவ மகரிஷியாக…” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

அந்தத் துருவ மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம். துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி நாம் ஏங்கித் தியானிப்போம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

சப்தரிஷி மண்டலங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வலைகள்
1.உங்கள் புலனறிவுக்குள் ஈர்க்கப்பட்டு உங்கள் உடலுக்குள் ஊடுருவதும்
2.அதனைப் பின் தொடர்ந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியும் உங்கள் புலனறிவிலே ஈர்க்கப்பட்டு
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது இணையும்.

அந்த உணர்வின் ஒளிகள் இணைந்து வருவதை உங்கள் நினைவிலே உணர முடியும். உங்களுடன் இணை சேர்க்கும் பொழுது அதன் உணர்ச்சிகளை உங்கள் உடலில் உணர முடியும்.

உங்கள் எண்ண உணர்வுகள் அனைத்தும் இணைந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்தி உங்கள் ஈர்ப்பிற்குள் வருவதும்… உங்கள் நினைவலைகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வருவதையும்… அங்கிருந்து உங்கள் உடலுக்குள் பாய்வதையும் உணரலாம்.

1.மீண்டும் மீண்டும் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்திற்குள் சுழன்று வருவதும்
2.அந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் சுவாசங்களில் பல ஆற்றல்கள் உயிரிலே ஈர்க்கப்பட்டு
3.நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்தி உங்கள் உடலுக்குள் ஊடுருவி அனைத்து அணுக்களிலும் அது கவரப்படும் பொழுது
4.துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை விண்ணிலே எப்படிக் காண முடிகின்றதோ அதைப்போல
5.உங்கள் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஒளியாகப் பரவுவதைக் காணலாம்… காட்சியாகவும் தெரிய வரும்.
5.இப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியும் காட்சிகளாக உங்கள் உணர்வுகளிலே தென்படும்.

வான மண்டலத்தில் வெளிப்படும் பல வர்ணங்களைக் காட்சியாகவும் உங்கள் உணர்வுகளில் நுகர்ந்து அது மாற்றி அமைக்கும் சக்திகளை உங்களுக்குள் உணரலாம்.

யாம் உபதேசித்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய நிலையில்… அண்டத்தில் நமது பிரபஞ்சம் நட்சத்திர இயக்கங்களுடன் சுழன்று தனிப் பிரிவாகச் சுழல்வதை இப்பொழுது நுகர முடியும். உங்களுக்குள் அந்த உணர்வு தென்பட்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.

பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் ஈர்த்து ஒளிப்பிளம்புகளாக வெளிப்படுத்தும் போது பல வித வர்ணங்களாக வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள் உமிழ்த்தித் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வுகள் மோதப்படும் பொழுது பல பல வண்ணங்கள் உருமாறி பல பல வண்ணங்களாக மாற்றமடைந்து
1.அணுத்தன்மையாகப் பிரபஞ்சத்தில் மிதந்து வருவதையும் அதைக் கோள்கள் நுகர்வதையும்
2.கோள்கள் நுகர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியனின் காந்த சக்தி கவருவதையும்
3.சூரியன் கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டுத் தன் ஒளிப்பிளம்பாக மாற்றும் நிலைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

வான மண்டலங்களில் நட்சத்திரப் பொறிகளின் இயக்கத்தையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். பல வர்ணங்களில் வெளி வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
1.அந்த வர்ணங்கள் பூமிக்குள் புகுந்து பாறைகளுக்குள் ஊடுருவதையும்
2.பிளந்து… அதாவது ஒரு குகைக்குள் நாம் நுழைவது போன்று நினைவாற்றல் வந்திருக்கும்.

அதே சமயத்தில் பூமிக்குள் கொதிகலனாகச் சேர்ந்து மாற்றம் அடைந்து இருப்பதையும் பூமியில் எதிரொலிகள் உள்ளே நிலநடுக்கங்கள் வருவதையும் உணர்ந்திருக்கலாம்.

அதனின் விரிவாக்கங்கள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
1.அண்டத்தில் இருப்பது பிண்டத்திற்குள் அணுக்களாக மாற்றமாகி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது பளீர்ர்… என்று வெளிச்சமாக உங்கள் உடலுக்குள் தெரிந்திருக்கும்.

இது எல்லாம் தெரியவில்லை என்று யாரும் சோர்வடைய வேண்டாம். எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள முடியும் எல்லோருக்கும் இந்த உணர்வுகள் கிடைக்கும்படி அதை இணைத்து அந்த வளர்ச்சிக்குக் கொண்டு வருகின்றோம்.

செடிக்கு உரமிடும் பொழுது அதைத் தன்னுடன் இணைத்துத் தன் இனமான சக்தியைக் கவரும் பொழுது அது சீராக வளர்கின்றது. அதைப் போல்
1.அனைவரும் அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.அந்த நம்பிக்கையில் தான் சொல்கிறேன்.

எமது குருநாதர் அண்டத்தின் ஆற்றலைப் பெற எமக்குப் பயிற்சியாகக் கொடுத்தார். அவர் காட்டிய வழியில் அண்டத்தையும்… பிரபஞ்சத்தையும்… புவியின் ஈர்ப்பையும்…
1.அண்டத்தில் இருப்பது இந்தப் பிண்டத்திற்குள் அணுக்களாக எப்படி மாற்றம் அடைகின்றது என்பதையும்…
2.துருவ மகரிஷி தனக்குள் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றியதையும்
3.அதன் உணர்வைப் பின் வந்த மனிதர்கள் ஏழாவது நிலையாகப் பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழண்று கொண்டிருப்பதையும்…
4.இந்தப் பிரபஞ்சத்திற்குள் தனி சுழற்சியாக அது சுழன்று கொண்டிருப்பதையும் காண முடியும்.

நாளுக்கு நாள் உங்களுக்குள் தெளிவடையும் நிலையாக இது வளர்ச்சியடையும். அதை அறிந்திடும் அறிவும் வளரும்.

தியானமிருக்கும் பொழுது உங்கள் அனைவருக்குமே ஒரு மிதப்பது போன்ற உணர்ச்சி தோன்றி இருக்கும் வான மண்டலத்தை நோக்கி மேலே மிதப்பது போன்று தோன்றியிருக்கும். புவியீர்ப்பின் பிடிப்பைக் கடந்து எடை குறைந்ததாகத் தெரியவரும்.

அகஸ்தியன் தான் பெற்ற சக்திகளைத் தன் மனைவிக்கு எப்படிப் பெறச் செய்தாரோ மனைவி பெற்ற நிலையை மீண்டும் அவர் பெற்று இருவரும் ஒன்றாக இணைத்து மாற்றமடையச் செய்த அந்த அருள் சக்தியைத்
1.தியானத்தில் அமர்ந்திருக்கும் கணவன் மனைவி இருவருமே பெற்று நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்த முடியும்.
3.விண் செலுத்தி அந்த ஆற்றலைப் பெறும் பொழுது கணவன் ஒளிச் சரீரம் பெற்றதும் அதே போல் மனைவி ஒளிச் சரீரம் பெற்றதும் தெரிய வரும்.

ஏனென்றால் கணவன் உணர்வுகள் மனைவியிடம் உண்டு மனைவியின் உணர்வுகள் கணவனிடம் உண்டு. யாரும் பிரிந்தில்லை.

அதன் வழி எடுக்கும் அந்த ஆற்றல் பெருகும் போது அதன் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து மனித வாழ்க்கையில் கணவன் மனைவி எவ்வாறு ஒன்றி வாழ்ந்தார்களோ அதைப் போன்று “இரு உயிரும் ஒன்றாகிப் பெரு வாழ்வு வாழும் ஒளியின் சரீரமாக வாழும் நிலையாக மாற்றிக் கொள்ள முடியும்…”

இந்தத் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு இரவு முழுவதும் வான மண்டலத்தில் உங்கள் நினைவுகள் சஞ்சரித்து
1.வானஇயல் புவியியல் உயிரியல் என்ற அடிப்படையில் நினைவு கொள்ளும் பொழுது பல அற்புதங்கள் விளையும்.
2.உங்கள் உடலில் உள்ள பிணிகள் குறையும்… மன பலம் பெறுவீர்கள்… அருள் ஞான உணர்வுகள் வளர்ச்சி பெறும்

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? பல விதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். பல மரபணுக்களை எடுத்து உயிரினங்களை மாற்றுகின்றார்கள். மனித உடலிலும் எத்தனையோ வகையான உறுப்புகளை மாற்றுகின்றார்கள். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார்கள்.
1.ஆனால் இந்த உயிரின் தன்மையை
2.உணர்வை ஒளியாக மாற்றும் திறன் அவனுக்கு இல்லை…!

உடல்களை மாற்றிக் கொள்ள முடியும் இவனுடைய சிந்தனைகளை எடுத்துக் கொள்வான். இந்த ஆராய்ச்சி இவனுக்குள் வரும். ஆட்டை மாட்டாக ஆக்கினான் என்றால் அந்த உணர்வுகள் வந்தபின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இந்த ஞானத்தின் தொடர் கொண்டு புது விதமான உடலைத் தான் அவன் பெறுவான்.

எதை மாற்ற வேண்டும் என்று எண்ணினானோ இந்த உணர்வுகள் தன் உயிரிலே வளர்க்கப்பட்டு இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பெரிய தத்துவம் ஆனாலும் இந்த உணர்வின் தன்மை அணுவாக்கப்படும்போது இறந்தபின் எதன் உணர்வை மாற்றி அமைக்கச் செய்தானோ அதே உணர்வு கொண்ட உடல்களில் புகுந்து விடுவான்.

1.ஆட்டின் மேலே ஞாபகம் வைத்தான்…
2.ஆட்டை மாற்றியமைக்க எண்ணினான்…
3.இதே உணர்வு கொண்டு உடலைவிட்டுச் சென்றபின் இந்த விஞ்ஞானி அதோடு மடிந்துவிடுகின்றான்.
4.எந்த உணர்வின் தன்மையைப் பெருக்கினானோ அந்த உணர்வின் தன்மை இங்கு வருகின்றது.

ஆகவே இதையெல்லாம் வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிடும் அந்த உணர்வை எவர் பெறுகின்றனரோ மீண்டும் உடல் பெறாதபடி அதை மாற்றி அமைக்க முடியும்.

இதையெல்லாம் நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றோம். காவியங்களில் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். நாம் அதையெல்லாம் இழந்துவிட்டோமே…!

இப்பொழுது என்ன செய்கின்றோம்…? யாகங்களைச் செய்து பாவங்களைத் தான் ஜாஸ்தியாகச் செய்கின்றோமே தவிர பாவத்தைப் போக்கும் மார்க்கம் இல்லை.

உடலில் நோய் வந்துவிட்டது என்றால் காளி கோவிலிலோ மற்ற கோவில்களிலோ யாகத்தைச் செய்து அந்தப் பாவத்தை எல்லாம் போக்க முற்படுகின்றோம்.

அடுத்ததாக… அதாவது சாகா நிலை கொண்டு வரக்கூடிய நிலையாக அறுபதாவது வயது வந்த பின் “சஷ்டியப்த பூர்த்தி…” செய்கிறோம். வயதைக் குறைக்காமல் வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி அதைப் பூர்த்தி செய்கிறார்கள்.

1.ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மந்திரம் சொல்கின்றார்களே
2.மந்திரம் சொல்பவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா…?

சாகாமல் இருப்பதற்காக வேண்டிச் சில கோவில்களில் ஒரு யாகத்தைச் செய்கின்றார்கள். அந்த யாகத்தைச் செய்பவன் உயிரோடு இருக்கின்றானா என்றால் இல்லை…!

இதுகள் எல்லாம் நாம் ஆசையின் நிலைகள் கொண்டு காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆசைகளைத் தான் வளர்த்துக் கொள்ள முடிகிறது. எந்த யாகத்தை வளர்த்தோமோ செத்த பிற்பாடு “எந்த மந்திரக்காரன் சொன்னானோ” அவனிடம் கைவல்யமாகிப் போய்விடுவோம்.

இது சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் போய் இதே உணர்ச்சிகள் கொண்டு இதே நிலையைத் தான் உருவாக்கும். ஆனால் வேகா நிலை அடைவதில்லை.

உதாரனமாக நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் வேகுவதில்லை… அழிவதில்லை. அது போல்
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்து விட்டால்
2.எதிலேயும் இது சிக்காது ஒரே ஒளியாக மாறுகின்றது
3.இது தான் வேகாநிலை… எதுவுமே இதை அழிக்க முடியாது.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கிக் கொள்தல் வேண்டும்.

ஜாதகத்தைப் பார்த்தவுடனே ஆயுள் கம்மியாக இருக்கின்றது என்று தெரிந்தவுடனே ஆயுளைக் கூட்டுவதற்காக வேண்டி ஆயுள் ஹோமம் செய்து பல யாகங்களைச் செய்து மந்திரங்களைச் செய்வார்கள்.

அறுபதாம் கல்யாணம் முடிந்தவுடனே சில கோவில்களில் எல்லாம் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்வார்கள். ஆனால் ஆயுள் ஹோமம் செய்து தருபவன் சாகாமல் இருக்கின்றானா என்றால் இல்லை…! அப்பொழுது அவனிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி இருக்கும்…?

நமக்குத் தெரியும்… அவனே சாகப் போகின்றான் என்று…! இருந்தாலும் அவன் ஆயுள் ஹோமம் செய்து நம் ஆயுளைக் கூட்டித் தருவான் என்ற ஆசை. சாங்கியங்களைச் செய்து கொஞ்ச நாளாவது வாழ முடியாதா…?

ஆயுள் ஹோமம் செய்து முடிந்த பிற்பாடு என்ன நடக்கின்றது..? சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்த வேதனையை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த வேதனையான உணர்வு அதிகமான பின் துடுக்கு… துடுக்கு… என்று கடைசியில்
1.“இத்தனை சம்பாரித்தேனே… எல்லாம் போய்விட்டதே…!
2.இத்தனை சம்பாரித்தேனே… ஆண்டவன் என்னை ரொம்பவும் சோதிக்கின்றானே…! என்று
3.இந்த வேதனைகளையே உருவாக்கிக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உடல் குறுக… குறுக… வேதனை என்ற உணர்வை வளர்க்க… வளர்க்க… இந்த உடலின் ஆயுள் என்ன ஆகின்றது…? ஆயுள் ஹோமம் செய்து இந்த வேதனையை வளர்த்தது தான் மிச்சம்…!

ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…?

ஆயுள் ஹோமம் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலின் தன்மை நீங்கிய பின் என்றும் ஒளியாக நாம் இருக்க முடியும்…!

யாம் கொடுக்கும் சக்தியை “நீங்கள் எண்ணி எடுத்தால்…” அதை உணரும் வழி

 

1.எப்படி இருந்தாலும் உடலை விட்டு நம் உயிர் பிரிந்து தான் ஆகும்.
2.கோடிச் செல்வம் இருந்தாலும் உடலுக்குள் உயிர் இருக்காது.

செல்வத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி “அவன் என்ன செய்வான்…? இவன் என்ன செய்வான்…?” என்ற இந்தப் பயம்தான் வரும் பயத்தைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்து நாம் எந்த நிலையிலும் தீமைகள் தன்னைத் தாக்காது மன உறுதி கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்க்க வேண்டும்.

மன உறுதி கொண்டிருந்தாலும் அதிர்ச்சியான நிலைகளில் ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்த பின் நம் உடலுக்குள் வந்த உடனே பயம் ஏற்படுகின்றது.

ஏனென்றால்
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையாகும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்
2.அந்த அதிர்வுகள் நமக்குள் வருகின்றது.

அந்த அதிர்வான உணர்வுகள் நமக்குள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்த பின்… பயத்தை ஊட்டும் உணர்வின் தன்மை உடலில் தசைகளில் ஏற்பட்டு விடுகின்றது. அல்லது இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களுடன் சேர்த்துப் பயத்தை ஊட்டுகின்றது அந்த உணர்வின் அதிர்வுகள் தான்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து தப்ப நாம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் 20 வருடம் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அவரிடம் பெற்ற அனுபவங்களைத் தான் இப்பொழுது உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எத்தனை பேர் இதை எடுத்துக் கொள்கின்றார்கள்…! எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதே வழியில் எத்தனை பேர் ஆசைப்பட்டு எடுக்கின்றார்கள்…?
1.கொஞ்சப் பேர் தான் வருகின்றார்கள்
2.அவர்களும் கூட… ஏதோ தொழிலுக்காக என்று எண்ணித்தான் வருகின்றார்கள்
3.நினைத்தது நடக்கவில்லை என்றால் இந்தச் சாமியிடம் என்ன இருக்கிறது…? என்று போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
4.யார் எதைச் செய்தாலும் இந்த உடலில் என்ன வைத்திருக்கிறோம்…? என்று தெரியாது…!

ஆகவே… உயர்ந்த சக்திகளை நீங்கள் எடுத்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைய வேண்டும்.

ஜோதிடம் பார்த்து எல்லாம் பார்த்து “எல்லாம் போய்விட்டது” என்று வேதனையைத் தான் வளர்க்க நேரும். கடைசியில் பேயாசையாக அது வருகின்றது.

அந்த உணர்வுடன் இறந்தால் இதே போன்று ஆசை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்து அங்கே போய்ப் பேயாகத் தான் ஆட்ட முடியும். அந்த உடலை வீழ்த்திய பின் மற்றதை மிரட்டி வாழும்… பார்த்த உடனே அச்சப்படச் செய்யும் அத்தகைய உடலமைப்பாகத்தான் உயிர் உருவாக்கி விடும்.

இன்று மனிதனாக இருக்கின்றோம்… நாளை அந்த நிலை ஆகிவிடும்…!

டாக்டர்கள் எப்படி இன்ஜெக்ஷன் செய்து உடனடியாக மருந்தை ரத்தத்தில் கலக்கச் செய்து விஷ அணுக்களைத் தணியச் செய்து உற்சாகமூட்டி உடல் நலம் பெறச் செய்கின்றார்களோ அதே போல் தான்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஆத்ம சுத்தி மூலம் உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.உங்கள் கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து
3.உயிரின் நினைவு கொண்டு அருள் சக்திகளை உடலுக்குள் பாய்ச்சினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…”

நாம் புறக்கண்ணால் பார்க்கின்றோம். அதை நுகர்ந்து உயிரான அகக்கண்ணால் உணர்கின்றோம்.
1.புறக்கண்ணால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏங்கி
2.நம் அகக் கண்ணான உயிருடன் மோதச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதை ஈர்க்கும் சக்தி கொண்டு வந்தால்
4.உயிரில் உள்ள காந்தம் கண்ணின் தன்மை கொண்டு வந்து அதை இழுக்கும்.

நாம் அப்படி இழுக்கக் கற்றுக் கொண்டால் தீமை என்ற அணுக்கள் உடலில் இருக்கின்றதல்லவா… அதற்கு ஆகாரம் செல்லாதபடி முதலில் தடைப்படுத்தும்.

தடைப்படுத்தப்படும் பொழுது தீய உணர்வுகள் அதற்குக் கிடைக்காமல் போனால் அந்த அணுக்கள் சோர்வடையும். சோர்வடையும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற ரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பரிதாபப்பட்டு ஒருவருக்கு உதவி செய்கின்றோம். இறக்கும்போது அவன் என்ன செய்கின்றான்…? “மகராசன்…!” நல்ல நேரத்தில் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணுவான்.

அப்போது அந்த உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா இந்த உடலுக்குள் தான் வந்து சேரும்… ஜீவான்மாவாக மாறிவிடுகிறது.
1.அவன் எப்படி வேதனைப்பட்டானோ துயரப்பட்டானோ அந்த உணர்வு உங்கள் ரத்தத்திலிருந்து அதனுடைய உணர்வை எடுக்கும்.
2.ரத்தத்தில் தான் அதனின் ஜீவிதமே இருக்கும்… தன் உணர்வை வளர்க்கும்.
3.உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது… போகும் இடமெல்லாம் உடலில் குடைச்சல் வரும்.

அதே சமயத்தில் ரத்தத்தின் உணர்வுடன் சேர்த்து உயிர் பாகம் சென்றால் உணர்ச்சிகளாக இயக்கி அதன் இயக்கமாக நம் நினைவை இழக்கும்படி செய்துவிடும்.

உடலில் எந்தக் கோளாறும் இருப்பதில்லை. ஆனால்… ஐயோ என்னை அடிக்கின்றான்… பிடிக்கின்றான்…! என்று சொல்பவர்கள் இன்று எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பழி தீர்க்கும் உணர்வைச் சேர்த்து “உன்னை நான் விடமாட்டேன்… நான் கொன்றே தீருவேன்… எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்கள்” என்று பூதகணங்களாக வளர்ந்து உடலுக்குள் வந்தால் உடலையே அழித்திடும் நிலையாக வரும்.
1.ஆக எதன் உணர்வைச் சேர்த்ததோ ரத்தத்திலிருந்து அதனுடைய வேலையைச் செய்யத்தான் செய்யும்.
2.அப்பொழுது அதை மாற்றுவது யார்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே எண்ணி அந்த ஜீவான்மாக்களுக்கு உணவு சேராதபடி தடைப்படுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

கண்ணின் நினைவை உடலுக்குள் அப்படிச் செலுத்த வேண்டும்.

நண்பர்களுக்குள் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணும் போது உடலை இயக்குகின்றது.

அதே துரோகம் செய்த உணர்வு நமக்குள் இருக்கும் பொழுது அவனை எண்ணும் போது நமக்கு பதட்டமும் இப்படிச் செய்தானே என்று ஆத்திரத்தை ஊட்டும் உணர்வுகள் வரும் பொழுது… நாம் மற்றவர்களையும் சந்தேகப்பட்டு இங்கேயும் வெறுக்கும்படி செய்து “நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாதபடி” தடுத்து விடுகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஜீவணுக்களின் நுனியிலும் இந்தக் காந்த சக்தி உண்டு. கண்ணால் கவரப்பட்டு உணர்வின் தன்மை கரு முட்டையாகி அது அணுவாக மாறுகின்றது.
1.அதனால் அந்த அணுக்களில் அந்த அருள் சக்தியை மோதச் செய்ய வேண்டும்.
2.கண்ணின் நினைவை நேரடியாக இணைக்கப்படும் பொழுது நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் காந்தத்தைச் செலுத்துகின்றோம்.

சிறுகச் சிறுக இப்படிச் சேர்த்துப் பழகினால் இன்னொரு உடலில் இருந்து நம் உடலுக்குள் தீமை செய்ய வந்தாலும் “அதை நாம் அருள் ஒளி கொண்டு மாற்றலாம்…”

இல்லை என்றால் எந்த இன்ஜெக்ஷனுக்கும் அது கட்டுப்படாது. அதன் உணர்வையே நமக்குள் செயல்படுத்தும். மற்ற எதையும் வைத்து அதை மாற்ற முடியாது.

மந்திரத்தை வைத்து இன்னொரு ஆவியை ஏவலாம். இரண்டு மாதம் மூன்று மாதம் அமைதியாக இருக்கும். மறுபடியும் அந்த ஆவியின் தன்மை வேலை செய்யும்.

இது போன்ற தீமையிலிருந்து நாம் தப்ப வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் இருந்து விடுபட வேண்டும் அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும் இந்த உடலைக் காக்கும் ஞானமும் உலகைக் காக்கும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய பிரார்த்தனையே இருக்கின்றது.

ஒரு வெறுப்படைந்தவனுடைய உணர்வு எப்படி இயக்குகின்றதோ அதைப் போன்று
1.நீங்கள் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.இந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.
3.சில நேரங்களில் நீங்கள் அதைக் கவனிக்கலாம்.
4.அந்த நேரத்தில் சிந்தனையைச் செலுத்தி… அந்த உயர்ந்த சக்திகளை எடுத்தால் நன்மை பயக்கும் சக்தியாக அதைப் பெற முடியும்.
5.ஏதோ ஒரு விதமான உற்சாகம் கிடைக்கின்றது என்று சொல்வீர்கள்… அடுத்து அந்த நினைவால் உயர்ந்த சக்தியை எடுக்கலாம்.
6.சில நேரங்களில் உங்களுக்கு அந்த நல்ல வாசனைகள் வரும். இனம் புரியாத ஒரு உற்சாகம் வரும்.
7.அன்று சந்தோசமாக இருக்கும்.. காரியங்கள் சீராக நடக்கும்.

இது எல்லாம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கிறேன். அதையே பயிற்சியாகக் கொடுத்து உங்கள் உடலில் இருக்கும் அணுக்களுக்கு கண்ணின் நினைவு கொண்டு அருள் ஞான உணர்வைப் பதிவு செய்கின்றேன்.

கண்ணால் பதிவு செய்யும் பொழுது எலும்புக்குள் ஊழ் வினையாகப் பதிவாக்கி விடுகின்றது.

செல்ஃபோன்களில் பதிவாக்கிய பின் அழைத்தால் அந்த நம்பர் எப்படித் தெரிய வருகின்றதோ அதைப்போல அந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
1.மீண்டும் நினைவாக்கும் போது அந்தச் சக்தியை நீங்கள் பெற முடியும்.
2.அருள் உணர்வுகளை உங்களால் நுகர முடிகின்றது அறிய முடிகின்றது.
3.ரத்தத்தில் அது சேர்ந்து கெட்டதை அகற்றுகின்றது… நல்லதை உருவாக்க ஜீவன் கொடுக்கின்றோம்.

ஆனால் வீணாகக் கவலைப்பட்டு சஞ்சலப்பட்டு சங்கடப்பட்டு வெறுப்படைந்து வேதனைப்பட்டால் மீண்டும் அதை வளர்த்து மனித உடலிலே நோயாகி… அடுத்து மனிதனல்லாத உடலை உருவாக்கத்தான் அது உதவும்.

ஜோசியம் ஜாதகம் நல்ல நேரம் கெட்ட நேரம் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம்… தீமையை நீக்க வேண்டும் என்று எந்த நேரத்தில் எண்ணுகின்றீர்களோ அதுவே உங்களுக்கு நல்லது.

1.தீமை வரும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைப் பயன்படுத்தி
2.என் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எப்பொழுது எண்ணுகின்றீர்களோ “அது எல்லாம் நல்ல நேரமாகின்றது…”

மனிதனுக்கு ஜாதகம் இல்லை… அவன் உருவாக்கும் சக்தி பெற்றவன். நல்லதை உருவாக்கப்படும் பொழுது நல்ல நேரம் வருகின்றது… நல்ல செயல் நடக்கின்றது… மன பலம் கிடைக்கின்றது… மன உறுதி கிடைக்கின்றது.

“எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லைப்படுத்தினான்” என்று எண்ணினால் அந்த நேரம் கெட்ட நேரம் ஆகின்றது. தொழில் செய்து நஷ்டம் ஆகிவிட்டது பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று எண்ணினால் அது எல்லாம் கெட்ட நேரம் தான்.

என் பையன் நல்ல ஒரு தெளிவானவனாக வரவேண்டும் தொழில் சீராக வேண்டும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பிள்ளைக்கு நல்ல நேரம்… நமக்கும் நல்ல நேரம் ஆகின்றது…!

நல்ல நேரமாக ஆக்க வேண்டும் என்றால் அதற்கு வலு வேண்டும் அல்லவா. சாதாரணமாக நினைக்க முடியாது.
1.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.அதை நீங்கள் பெற்று உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் அதை நினைக்கும் போதெல்லாம் நல்ல நேரம் ஆகின்றது.

வேதனை என்று வரப்படும் பொழுது சர்க்கரைச் சத்து ரத்தக் கொதிப்பு ஆஸ்மா போன்ற நோய்கள் கடுமையாகின்றது. நான் நாளை என்ன செய்வேன்…? என்ற திகைப்பானால் வேதனை வெறுப்பானால் சளியாக உருமாறும் நிலையும் வந்து விடுகிறது. அடிக்கடி சலிப்பும் சஞ்சலமும் உருவானால் உப்பு சத்து உருவாகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு “எதிர்ப்பான நிலை வரும் பொழுது… அது செயலற்றதாக மாறி…” இந்த உடலையே சீர்குலைக்கச் செய்கின்றது.

அதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடுவதற்குத் தான்
1.எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்திலும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்ச வேண்டும்
3.அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர வேண்டும்
5.உங்கள் பார்வை பிறருடைய தீமைகள் வராது தடுக்க வேண்டும் என்று இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“கருநொச்சி” என்று தபோவனத்தில் வைத்திருக்கின்றோம்.

நீங்கள் இங்கே தபோவனம் வரும் பொழுது அதிலே ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீடுகளிலோ அல்லது அங்கே இடம் இல்லை என்றால் பக்கத்து வீட்டிலேயோ ஊன்றி வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஏனென்றால் அந்த நொச்சி மரத்தில்
2.மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பாய்ச்சி வைக்கப்பட்டுள்ளது.

அது முளைத்து வரும் பொழுது ஒரு ஐந்து இலைகளை எடுத்து அதை நீங்கள் காய்ச்சி ஒரு அரை டம்ளர் சாப்பிட்டால் போதும். சாப்பிட்ட பின் இது இரத்தத்தில் கலக்கின்றது.

நாம் நுகர்ந்த… சுவாசித்த உணர்வுகளில்… வைரஸ் என்ற அணுக்கள் இரத்தங்களிலே உருவாகி இருந்தால் அதிலே இது (நொச்சி) பட்ட பின் அது பலவீனம் அடைகின்றது.

1.நம் உடல்களில் சளி என்ற நிலைகள் வந்தாலும் சரவாங்கி நோய் (மூட்டு நோய்) என்று வந்தாலும் அதை எல்லாம் குறைத்து நமக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.
2.இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில் இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே வந்துவிடும்.
3.காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும். உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.
4.அதே போன்று தும்மலுக்கு… மூக்கில் தொடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு மஞ்சள் நொச்சி இலை வேப்பிலை பச்சையாகப் போட்டு புகையைப் போடுங்கள்…! அதை நுகருங்கள்…! சரியாகப் போகும்.
5.ஆஸ்த்மாவிற்கு வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே சரியாகும்.

அதே சமயத்தில் நோயாளிகளை நீங்கள் பார்த்து விட்டால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்… கண்ணின் நினைவைச் செலுத்தி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளியின் உடலில் படர வேண்டும் அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

1.அவர் உடலில் எதை எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அதை எல்லாம் உங்கள் உயிர் இங்கே உருவாக்குகின்றது
3.அதாவது உடலிலே அணுத் தன்மை ஆகும் கருவாக உருவாக்குகின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தத் தீமையின் நிலையைத் தணிக்கச் செய்து அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டச் செய்து நமக்குள் நல்லதாக்க வேண்டும்.

முன்னோர்களுக்குச் சாப்பாடு இன்று எப்படிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்…?

 

முன்னோர்கள் உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது வேதனையுடன் தான் வெளியில் செல்கின்றது. அந்த வேதனையை நமக்குள் கவர்ந்து கொண்ட பின் வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் மாறுகின்றது.

அந்த அணுவிற்குச் சாப்பாடு எங்கே…?

மூதாதையர்கள் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட அந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமிக்குள் பரவி இருக்கின்றது.
1.அதை எடுக்கப்படும் பொழுது மூதாதையரின் நினைவும் அவர் பட்ட கஷ்டமும் நமக்கு நினைவு வருகின்றது.
2.அந்த உணர்வைச் சேர்க்கப்படும் போது அவர் உடலிலே எப்படி நோய்கள் உருவானதோ
3.நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் நிலை வந்து விடுகின்றது.

அதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்…?

பூரண நிலா அன்று துருவ நட்சத்திரம் நமக்கு நேராக வருகின்றது. அந்த நேரத்தில் முன்னோர்கள் உயிரான்மாக்களை ஒளியின் சரீரமாக்கி… நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு அந்த ஒளியை உணவாகக் கொடுக்க வேண்டும்.
1.ஏனென்றால் வேதனைப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கின்றது.
2.அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.அதன் வழி வேதனைகளை நீக்கப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்த பின்… அந்த உணர்வு எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும்.

1.மூதாதையர்கள் பெற்ற உணர்வு எனக்குள் இருந்து அது உயர்ந்த உணர்வு பெற்று
2.நல் உணர்வை உருவாக்கும் அந்த அணுத்தன்மை எனக்குள் பெருக வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.அப்பொழுது அதற்கு உணவு கொடுக்கின்றோம்…! என்று பொருள்.

“எனக்கு இப்படித் துரோகம் செய்தான்” என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் உண்டு. அவனை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் சுவாசித்து வெறுப்பான உணர்வு ஆகி அந்த வேதனையான உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சாப்பாடாகச் சேருகின்றது.

அந்த அணுவின் மலம் உடலாக்கப்படும் போது உடலில் நோயாக வருகின்றது. சாதாரண நிலைகளில் இது நடக்கின்றது.

அது போல் நம்முடைய மூதாதையர்களின் உடலில் எத்தனை வகையான நோய்வாய்ப்பட்டார்களோ அதன் வழி வெளியில் செல்கின்றனர்.

அவர்களை நாம் எண்ணும் பொழுது… எங்களை வாழ வழி வகுத்துக் கொடுத்தீர்கள்…! ஆனால் நோயுடன் உடலை விட்டுப் பிரிந்தீர்கள்…! என்று எண்ணினால் அதே உணர்வு “பரம்பரை நோய் என்ற நிலையும் பரம்பரை குணம் என்ற நிலையும்” அத்தகைய உணர்வாக நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

முதலிலே குடும்பம் நன்றாக இருந்திருக்கும். எல்லோரையும் காக்க அவர் வேதனைப்பட்டு இருப்பார். அவர் இறந்த பின் அந்த உணர்வு வழி வழி வரப்படும் பொழுது அந்தக் குடும்பத்தில் பின் தொடர்ந்து தொல்லைகள் தான் அதிகமாகும்.

காரணம்… அவர் வேதனைப்பட்ட உணர்வுகளைப் பாசத்தால் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பரம்பரை நோயாகவும் பரம்பரை குணமாகவும் பரம்பரை செயலாகவும் மாறி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களுடைய ஆன்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவர்களை விண் செலுத்த வேண்டும்.

எங்களை வளர்ப்பதற்காக எத்தனையோ தொல்லைகள் பட்டீர்கள் அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை இப்படி விண் செலுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
1.எங்களுக்குள் இருக்கும் மூதாதையரின் அத்தனை அணுக்களுக்கும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.ஏனென்றால் அவையெல்லாம் நமக்குள் ஜீவணுவாக இருக்கும்.
3.அந்த அணுக்களுக்கெல்லாம் இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் செலுத்தி அதற்கு உணவு கொடுக்க வேண்டும்.

முன்னோர்கள் ஒளி உணர்வு பெற்றதை நாம் எண்ணி நம் உடலில் உள்ள அந்த ஜீவணுக்களுக்கு அந்த அருள் உணர்வுகளைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுவதன் காரணம் என்ன என்றால் நமக்குள் முந்தைய நிலைகளில் சந்தர்ப்பத்தால் கவரப்பட்ட வேதனைகள் உணர்வுகள் வெளிப்பட்டு அந்த நிமிடம் அது உடலில் இருந்து வேதனையைத் தரும்.

அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகள் ஆன பின் கண்ணின் நினைவு உயிருக்கு வருகின்றது.

உதாரணமாக காலில் முள் குத்தினால் உடனே உயிருக்குத் தான் அந்த உணர்வுகள் வரும். கண் என்ன செய்கிறது…? அது முள்ளா அல்லது வேறு எது குத்தியது…? என்று தேடுகிறது.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது
1.அதைக் கூர்ந்து கவனிக்கும் தன்மை வருகின்றது…
2.அதை நுகர்கின்றது…
3.அதை உற்றுப் பார்த்துக் காலில் ஏறிவிட்டதா…! என்ன…? என்கிற வகையில்
4.அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இதைப் போன்ற நமக்குள் முந்தைய நிலைகள் பெற்ற இந்த உணர்வுகள் அந்த அணுக்கள் அது தன் பசிக்காக உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது…! என்றால் “சந்தோஷமாக இருங்கள்” என்றால் உங்களால் இருக்க முடியுமோ…? நம் உடலிலே ஏற்கனவே பெற்ற அந்த அணுக்கள் தன் பசிக்கு அதன் உணர்ச்சிகளை உந்தும்.

அந்த வேதனையான உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளும் அந்த வேதனையின் நிலையை நாம் அறிய முடிகின்றது.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிருடன் தொடர் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

ஏனென்றால்…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

பின் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ…
2.அங்கே உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வாருங்கள்.

இப்படிச் செய்ய…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பட…
2.அந்த விஷத் தன்மைகள் அங்கே குறைந்து…
3.நமக்குள் இருக்கும் அந்த வலியைக் குறைக்க உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து உடலில் செலுத்தச் செலுத்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் சிறுகச் சிறுக வீரியத் தன்மை இழந்து உடலில் உள்ள நல்ல அணுக்கள் வலிமை அடையக்கூடிய சக்தி பெறுகின்றது.

அதற்குத்தான் இதைச் செய்யச் சொல்கிறோம்…!

உலகம் உருவாகும் விதமும்… ஒளியான உலகை உருவாக்கும் விதமும்…!

 

சந்தர்ப்பத்தில் மிகவும் வேதனையான உணர்வு நமக்குள் வருகின்றது. அப்பொழுது எதை நினைக்கின்றோம்…? அதை நிவர்த்திக்க…
1.எத்தனை தெய்வங்களை நினைத்தோமோ… எத்தனை கடவுள்களைப் பற்றிச் சொன்னார்களோ…
2.அங்கே தான் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

வேதனையான உணர்வுகள் வந்த பின் உடலுக்குள் என்ன நடக்கின்றது…? தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சிகள் மேலோங்குகின்றது. அந்தக் காப்பாற்றும் உணர்ச்சி தூண்டப்படும் பொழுது உயிருக்குத் தான் தெரிய வருகின்றது… அங்கே தான் அறிவாகின்றது.

உடலுக்குள் சென்றபின் பிரம்மமாக உருவாகின்றது. அப்பொழுது சிவன் என்ன சொல்கின்றான்…! நான் என்ன செய்வேன்…? விஷ்ணு வரம் கொடுத்து விட்டான்… ஆகவே விஷ்ணுவிடம் கேட்போம் என்று அழைத்துச் செல்கின்றார்.

அதாவது இந்த உடலின் உணர்ச்சிகள் எல்லாம் “உயிரிடமே எண்ணும் எண்ணங்களை இயக்குகின்றது” என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

உயிரான விஷ்ணுவே… எனக்கு வரம் தான் கொடுக்கத் தெரியும்…! என் மகனான பிரம்மா “அதனால் உருவான இந்த அணுக்கள் அவனுக்குத் தான் அது தெரியும்… எனவே பிரம்மனிடம் செல்வோம்…” என்று அழைத்துச் செல்கின்றார்.

ஆனால் பிரம்மனோ என் தந்தை சொல் தட்டாது நான் இதை இயக்குகின்றேன். அதன்படி உருவாக்கவில்லை என்றால் உலகம் உருவாகாது. விஷ்ணு வரம் கொடுக்கவில்லை என்றால் உலகத்தில் உருவாகும் தன்மை எதுவும் இருக்காது.

உருவாகும் உணர்வுகள் அது அணுவானால் உடலான சிவன் அரவணைக்கவில்லை என்றால் ஒரு உருவின் தன்மை வராது. மும்மலம் என்ற நிலையில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

எல்லோரும் சேர்ந்து இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வேதனையிலிருந்து நிவர்த்திக்க கூடிய வழி எவருக்கும் தெரியவில்லை.

1.விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான்
2.உள்ளே சென்ற பின் பிரம்மன் அணுவாக உருவாக்கி விடுகின்றான்.
3.அணுவின் மலம் உடலாகின்றது சிவன் அரவணைத்துக் கொள்கின்றான் என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

இப்பொழுது என்ன செய்வது…? என்று உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…! என்று உணர்வின் ஒலியை எழுப்புகின்றார்கள்.

உடலின் வழி உயிருக்கும் உயிரின் தன்மை பிரம்மனுக்கும் எட்டப்படும் பொழுது இதுவெல்லாம் யாருக்குத் தெரியும்…? யாரிடம் கேட்டால் வேதனையை நீக்குவதற்குண்டான வழி கிடைக்கும்…? என்று விஷ்ணுவும் பிரம்மனும் சிவனும் கூட்டுச் சேர்ந்து ஆலோசனை செய்கின்றார்கள்.

கண்ணனுக்குத் தான் இது எல்லாமே தெரியும்…
1.கண்ணுக்குத் தான் எல்லாம் தெரியும்…!
2.கண்ணால் பார்த்து அதன் வழி தான் உணர்வின் தன்மை பதிவானது.
3.ஆகையினால் அவனிடம் போவோமா…? என்று கேட்கின்றார்கள்.

கண்ணனிடம் சென்று எல்லோரும் முறையிடுகின்றார்கள்.

அப்பொழுது கண்ணன் கேட்கின்றான். விஷ்ணு நீ வரம் கொடுக்கவில்லை என்றால் இந்தத் தொல்லை வராது அல்லவா. அது எப்படி…? நான் வரம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் உருவாகாதே என்று விஷ்ணு சொல்கிறான்.

பிரம்மனிடம் கேட்கின்றான்… நீ உருவாக்காமல் விட்டுவிடலாம் அல்லவா என்று. என் தந்தை சொல்படி நான் உருவாக்கவில்லை என்றால் உலகம் எதுவும் உருவாகாது என்று பிரம்மன் சொல்கிறான்.

கண்ணன் சிவனிடம் கேட்கின்றான். வேதனையை உடலுக்குள் வராதபடி… அரவணைக்காதபடி நீ விட்டு விட்டால் தொல்லை வராதல்லவா. உடலுடன் அரவணைக்கும் போது தானே தொல்லை வருகின்றது தெளிவாகக் கேட்கின்றான்.

வருவோரை நான் அரவணைக்கத்தான் தெரியும் அதுதான் என்னுடைய வேலை என்று சிவன் சொல்கிறான். இப்படி மூன்று பேரும் மூன்று வேலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

வேதனையிலிருந்து விடுபட ஏதாவது வழி வேண்டும்…? என்று எல்லோரும் கண்ணனிடம் கேட்கின்றார்கள்.
1.அதாவது கண்ணிலே இந்த எண்ணங்கள் வருகின்றது… சிறிது நேரம் யோசிப்போம் என்று கண்ணன் சொல்கின்றான்.
2.சிறிது நேரம் வானை நோக்கிப் பார்க்கின்றான். யார்…? இந்தக் கண்கள்.
3.அப்படிப் பார்க்கும்போது “அதோ வருகின்றான் ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் அவனிடம் கேட்போம் என்று சொல்கிறான்

ரிஷி என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெற்றது துருவ நட்சத்திரம். அது தான் ரிஷி.

ஏனென்றால் எல்லாவற்றையும் சிருஷ்டித்துக் கொண்டது உயிர்தான்.
1.ஆறாவது அறிவால் தீமைகளை நீக்கிடும் உணர்வு கொண்டு ஒளியாகி ஒளியின் சரீரம் பெற்றது… ஏழாவது நிலை பெற்றது சப்தரிஷி.
2.சப்தரிஷி என்றால் உணர்வின் நாதங்களால் இயக்கப்பட்டு
3.அந்த நாதத்தின் இயக்கமாகத் தீமைகள் தனக்குள் வராதபடி இயக்கும் சக்தி பெற்றது என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

நம்முடைய காவியத் தொகுப்புகளில் தவறில்லை.

வேதனைப்படும் உணர்வைச் சூரியன்… அந்த நாராயணன் வெப்பம் காந்தம் விஷம் என்று இயக்க அணுக்களை அனுப்பி அதைக் கவர்ந்து தனக்குள் எடுத்து இயக்கச் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.

வேதனைப்படும் உணர்வினை எடுக்கும் பொழுது அந்த வேதனையின் தொடர்கள் நமக்குள் வருகின்றது. ஆனாலும்…
1.அந்த வேதனையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியவன் துருவ நட்சத்திரம்.
2.அதிலிருந்து ஒளி அலைகள் வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.
3.வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் அதைக் கவர்ந்து கொண்டால் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின் அறிவாக இயக்கும் இயக்க அணுவாக அது மாறுகின்றது.

இதையும் தெளிவாக்குகின்றது நமது சாஸ்திரங்கள்.

அதோ வருகின்றான் நாரதன் என்று கண்ணன் சொன்னபின் மற்ற எல்லோரும்…
1.ஐயோ அவன் கலகப் பிரியன் ஆயிற்றே…! பல தொல்லைகள் கொடுப்பானே…!
2.அவன் பரிசீலனைக்கெல்லாம் நாங்கள் தப்ப வேண்டுமே…! என்ன செய்வது…? என்று இந்த மூன்று பேரும் சொல்கின்றார்கள்.

“கலகம் நன்மையில் தானே முடிகின்றது” என்று கண்ணன் சொல்கின்றான்.

ஓருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நாமும் வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுகள் நமக்குள் போன உடனே உயிரிலே படும் போது குருக்ஷேத்திரப் போராக மாறுகின்றது.

அதாவது உயிரிலே படும் பொழுது விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் சென்ற பின் அது அணுவாகப் பிரம்மம் ஆகி விடுகின்றது. அந்த உணர்வின் தன்மை சிவமாகி விடுகின்றது.

அவன் எப்படி வேதனைப்பட்டானோ அந்த உணர்வு நம் உடலாக மாறும் பொழுது
1.வேதனை எப்படி இயக்குகின்றது…? என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.
2.இது எல்லாம் ஞானிகளால் நமக்குக் கொடுக்கப்பட்டவை தான். இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்…?

கண்களால் கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்ன செய்கிறது…? என்று கண்ணனிடத்தில் கேட்ட பின் சொல்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்
1.கண்களால் தான் அறிந்து தப்பும் உணர்வுகளைக் கொடுத்து தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக உருவாக்கியது
2.அதனால் தான் கண்கள் அதோ வருகின்றான் நாரதன் என்று சுட்டிக் காட்டுகின்றது.

தியானத்தில் நாம் என்ன செய்கின்றோம்…?

சூரியன் காந்த சக்தி கவர்ந்து வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை “நமது குரு காட்டிய வழியில் அந்தச் சக்தியைப் பெற வேண்டும்” என்று கண்களால் ஏங்கப்படும் பொழுது அந்த உணர்வு இங்கே பதிவாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அந்த வேதனையை மாற்றி அமைக்க முடிகின்றது.

வேதனைப்பட்டவனையோ நோய்வாய்ப்பட்டவனையோ பார்த்தால் நாம் என்ன சொல்கின்றோம்…? நல்ல மனிதன் “இப்படி ஆகிவிட்டானே வேதனைப்படுகின்றானே…” என்று சொல்கின்றோம்.

அதே சமயத்தில் ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகிறான் என்றால் “எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் பாவி…” என்று அவன் மீது விடாப்பிடியாக இருப்போம்.

நல்ல மனிதன் கஷ்டப்படுகின்றான் என்று
1.அந்த வேதனையைத் தான் சொல்ல முடிகின்றதே தவிர
2.அதை மாற்றியமைக்கும் உணர்வு நமக்குள் வருவதில்லை.

அதை மாற்றுவதற்குத் தான் இந்தத் தத்துவத்தைச் சொல்வது. “அதோ வருகின்றான் நாரதன்…” என்று சாஸ்திரங்கள் நமக்கு வழிகாட்டுகின்றது.

ஆதன் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் அங்கே இணைத்து விட்டால் தீமை என்ற உணர்வுகள் உள்ளே போகாது அது தடுத்து விடுகின்றது. தடுத்தபின் வேதனை உணர்வுகள் நிறுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் செலுத்தப்படும் பொழுது எல்லா அணுக்களுக்கும் அதை இணைக்கப்படும் பொழுது நாரதன்…! தீமை உள்ளே புகாதபடி எல்லா அணுக்களும் வலுவாகின்றது.

சிறிது நேரம் இவ்வாறு எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது “உடலுக்குள் வேதனையை ஈர்க்கும் சக்தி அங்கே குறைகின்றது…” அப்பொழுது நமக்கு முன் இருக்கும் அந்த தீமை “அனாதையாகின்றது…”

அனாதையாக இருப்பதைச் சூரியனுடைய காந்த சக்தி அது தன் ஈர்ப்பால் கவர்ந்து இழுத்துச் சென்று விடுகின்றது
1.நம் ஆன்மா தூய்மை அடைகின்றது
2.ஆன்மா நலமாகும் பொழுது உடலும் நலமாகின்றது
3.உயிரான்மாவும் புனிதம் (ஓளி நிலை) பெறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும்…? நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…? என்றும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்,,,? பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் நாம் அறிதல் வேண்டும்.

நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு… எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும்…! என்ற உண்மையின் நிலைகள் வாழ்த்துவது வேறு.
1.ஆனால் உங்களைப் போற்றித் துதித்துவிட்டு
2.அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகச் செயல்படுத்தி (ஏமாற்றி) போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு.

இதைப் போன்ற நிலைகள் அல்லாது “போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் “நாம் அதைப் பற்றி…” நமக்குள் நாம் போற்றிக் கொள்ள வேண்டும்.

1.அவர் உயர்ந்தார்…! அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
2.“அவருக்குள் வளரும் உணர்வுகள்…” நமக்குள் நின்று நாமும் வளர்வோம்.

ஆனால் சிலர் மற்றவருக்கு எல்லா உதவியும் செய்வார்கள்.

அவரிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..,
1.பார்…! அன்றைக்கு எல்லா உதவியும் செய்து அவனை வளர்த்து விட்டேன்
2.இன்றைக்கு அவன் என்னை மதிக்கின்றனா…? பார்…! என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.
3.செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் “கௌரவம்” என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
4.“தன்னை மதிக்கவில்லையே…!” என்ற உணர்வு கொண்டு
5.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். உங்களுடைய உணர்வுகள் எல்லாம் தெளிந்த மனம் கொண்டு பேரருள் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

2004க்கு மேல் செல்லும் பொழுது கடும் விஷத் தன்மைகள் வளரத் தொடங்குகின்றது. அதிலே சிக்கிடாது அந்தப் பேரருள் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்து இருள் என்ற உணர்வுகளைக் கவர்ந்திடாது மெய் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இருளை அகற்றிடும் வல்லமை உங்களிலே பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குத் தெளிவாக்குவது.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.அவர் அறிந்த மெய் உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் பெற்ற உண்மையின் துணை கொண்டு இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்லி உங்கள் நினைவாற்றலைப் பெருக்கச் செய்கின்றோம்.

மாரி

 

நமது சகஜ வாழ்க்கையில் பண்பும் பரிவும் அன்பும் பாசமும் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் நோயுடன் வேதனைப்படுகிறார் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்து உணர்ந்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம்.

அவ்வாறு உதவி செய்யப்படும் பொழுது…
1.அவர் உடலில் இருந்து விளைந்த நோயை நாமும் நுகர்ந்தறிவதனால் அதே உணர்வின் சக்தி நமக்குள் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
2.அது மாறி (மாரி) நமக்குள் தாயாக வந்து விடுகின்றது.

நாம் அடிக்கடி அந்த நண்பனை (நோயாளியை) எண்ணும் பொழுது நமக்குள் அந்த உணர்வின் வளர்ச்சி ஏற்பட்டு நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் சக்தியாக வந்து விடுகின்றது.

அது தான் மாரியம்மாள்…!
1.ஏனென்றால் அவர் கசந்த வாழ்க்கை வாழ்ந்தார்
2.அவருடைய உணர்வை நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையையும் கசந்த வாழ்க்கையாக உருவாக்கி விடுகின்றது.
3.ஆகையினால் தான் மாரியம்மன் கோவிலில் “வேப்ப மரத்தை” ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள்.

கசந்த வாழ்க்கையில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நோயாளியைப் பார்த்தபின் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியின் உணர்வை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமையான உணர்வுகளைக் கருக்கிடல் வேண்டும்.

அந்த நோயாளிக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்த உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.

இது போன்று
1.நமக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளை கேட்டறிகின்றோம்.
2.அதை நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் மாறி (மாரி) தீமைகள் நமக்குள் விளையாயாது தடுப்பதற்குத் தான்
3.மாரியம்மன் ஆலயத்தில் அக்னி குண்டத்தை வைத்திருப்பார்கள்.

பகைமையான உணர்வை நுகர்ந்தால் நமக்குள் அது தீமையாக விளைந்துவிடும். அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்…? என்பதனை உணர்த்துவதற்குத் தான்
1.இந்த வாழ்க்கையில் தீமையோ துன்பங்களோ நோயோ அதையெல்லாம் கேட்டறியும் பொழுது
2.அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது தடுப்பதற்கு அன்றைய ஞானிகள் “துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறும்படி செய்கின்றனர்…”

இதன் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் நாம் எவரைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி என்ற உணர்வை உருவாக்குதல் வேண்டும்.

இல்லை என்றால் பிறருடைய தீய உணர்வுகள் அது மாறி(ரி) நமக்குள் நோயாக வருவதைத் தடுக்க முடியாது. ஆனால் தடுக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கினோம் என்றால் தீமைகளிலிருந்து விடுபடலாம்… நம்மையும் காத்திடலாம் என்று இந்தப் பொது விதிகளை அமைத்தனர்.

நம் சகஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் நோய்களைப் பற்றியோ பகைமைகளைப் பற்றியோ கேட்டறியும் பொழுது நுகரப்படும் பொழுது அது வளர்ந்து விடுகின்றது.

பகைமை கொண்டால் அவரை அழிக்க வேண்டும் என்றும்… கொடூர நிலை கொண்டு கொலை செய்வதும் போன்ற கொடுமைகள் செய்யும் உணர்வுகளாக உருவாகி விடுகின்றது.

இத்தகைய தவறான நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டுமென்றால் மாரியம்மன் ஆலயத்திற்குள் வரப்படும் பொழுது அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் சந்திப்போர் அனைவரது உடல்களிலும் படர வேண்டும்
2.எங்களை அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகள் மாற வேண்டும்
3.அருள் ஒளி எங்களுக்குள் பெருக வேண்டும்
4.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் பேரின்பம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் செய்தால்
5.நாம் எடுத்துக் கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது… நமக்குள் வந்த தீமைகளைப் பொசுக்குகின்றது.

அதற்குப் பின் இந்த ஊரும் உலகமும் உலக மக்களுக்கும் இந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணி நாம் பரவச் செய்தல் வேண்டும்.

எங்கள் தெரு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் ஊரில் படர்ந்துள்ள பகைமை உணர்வுகள் மாற வேண்டும்… சகோதர உணர்வுகள் வளர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்.

எங்கள் தெரு மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும். மத பேதம் இல்லாது இன பேதம் இல்லாது மொழி பேதம் இல்லாது அரசியல் பேதம் இல்லாது வாழும் அந்தச் சகோதர உணர்வுகள் எங்கள் ஊர் முழுவதும் உலகம் முழுவதற்கும் படர வேண்டும் என்று அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரப்புவோம் என்றால்
1.நமக்குள்ளும் அந்த வளர்ச்சி பெறுகின்றது
2.பகைமை உணர்வை நீக்கிடும் ஞானமும் கிடைக்கின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமையும் பெருகுகின்றது.
4.தன்னை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றோம்.

பாலிலே பாதாமைப் போட்டால் அது நல்ல சத்தாக மாறுகின்றது. ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டால் பாதாமினுடைய சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.

இது போன்று… நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் பகைமை உணர்வுகள் உள்ளே புகுந்து விட்டால் அது தீமையான உணர்வின் அணுக்களாக விளைந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்காக… ஏகோபித்த நிலைகள் கொண்டு சமுதாயத்தில் மக்கள் அனைவரும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.அவர்தம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றி
2.வாழ்க்கையில் பேரின்பம் பெரு வாழ்வு பெற எமது அருளாசி உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.

அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.

ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”

ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.

ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.

அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.

நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.

இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.

கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.

ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாக்காதபடி நாம் எப்பொழுதுமே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளைக் காண நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு)… இதை மறவாது செயல்படுத்துங்கள்.

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”

 

1.மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமைகளை எல்லாம் நீக்கும் உணர்வு பெற்றவன் கார்த்திகேயா.
2.தீமை என்று தெரிந்து கொண்டபின் சேனாதிபதி பாதுகாக்கக் கூடியவன்.
3.முருகு மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன்… இந்த ஆறாவது அறிவு என்று இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளது நமது சாஸ்திரங்கள்.

யாரும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் முறைப்படுத்தி அதைக் காட்டுகின்றோம். இது இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது.

கோடிக்கரை…! நாம் பல கோடி உடல்களை எடுத்துக் கடைசிக் கரையாக இருக்கின்றது மனித உடல்.
1.தீமைகளை நீக்கும் உணர்வுகள்… தீமைகளை நீக்கும் சக்தி பெற்றது தனுசுகோடி.
2.கடைசி நிலையில் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவர்ந்தோமென்றால் தீமையை நீக்கும் சக்தி வருகின்றது.
3.எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அதை நீக்கும் போது பல கோடித் தீமையை நீக்கும் உணர்வாக (தனுசுகோடி) நமக்குள் வருகின்றது.

வேதனைப்படும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அது எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தப்படும் பொழுது வாழ்க்கையில் வரும் பல கோடி உணர்வுகளிலிருந்து… தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெற்றது கோடிக்கரை… மனிதன் அதைப் பெற முடியும்.

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் ரத்த நாளங்களில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்செலுத்தினால்… இப்படி வாழ்க்கையில் வரும் எத்தனையோ கோடி உணர்வுகளை மாற்றினால் அது தனுசுகோடி.

இராமேஸ்வரத்தில் கடலோரப் பகுதியில் துருவ நட்சத்திரத்தை நேரடியாகக் காண முடிகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் இந்த மனித உடல். எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று கோடிக்கரையாக வந்துள்ளது மனித உடல்.

1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் தனுசு
2.தீமையிலிருந்து விடுபடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
3.அந்த தனுசைப் பாய்ச்சி ஒவ்வொரு தீமையையும் நீக்க வேண்டும் தனுசுகோடி.

இதை உணர்த்துவதற்குத் தான் மனித உடலில் நேரம் ஆகிவிட்டது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள். ஏனென்றால் சிறிது காலமே இந்த உடலில் வாழுகின்றோம்.

ஆகையினால் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக உருவாக்கி இராமன் அதைப் பூஜித்தான். அதற்கு என்ன அர்த்தம்…?

இந்த மனித வாழ்க்கையில் தீமை என்று வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும் ஏன்று இதை எடுத்து
1.ஒவ்வொரு நிமிடமும் உடலுக்குள் செலுத்தி தீமை வராது தடுக்கும் அந்த தனுசை வைத்து நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
2.உடலில் அந்த அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்குள் இந்த அரும்பெரும் சக்திகளைச் சேர்த்தோம் என்றால் நம் மனது ஒன்றாகின்றது. பகைமை இல்லாது ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.
1.அருள் உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியாகி இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையும் நிலை உருவாகின்றது.

அதற்குத்தான் இந்த தத்துவங்களை எல்லாம் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் (மகரிஷியாக) ஆவதற்கு முன் அவனுடைய தாய் தந்தையர்கள் நுகர்ந்தறிந்த பச்சிலை மணங்கள் இப்பொழுது வெளிப்படுகிறது. வெளிப்பட்டுள்ள அந்த மணங்களை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க நாம் இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

1.அதை நீங்கள் நுகரும் பொழுது இப்பொழுது அவர்கள் காலத்தில் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்)
2.எப்படி நஞ்சினை வென்ற உணர்வுகளை அகஸ்தியன் கவர்ந்தானோ
3.அதே சக்தியை நாமும் பெற முடியும்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் பல பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் முலாமாகப் பூசினாலும் அந்த உணர்வுகளை அவர்கள் நுகர்ந்து கருவில் இருக்கும் அணுக்களுக்கு இந்தச் சக்திகளைக் கொடுத்தார்கள்.

அதையும் இப்பொழுது உங்களுடைய உணர்வுகளை நினைவாக்கி நினைவு கொண்டு அதைப் பெறத் தியானிக்கப் போகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழி நீங்கள் நுகரப்படும் பொழுது…
1.நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறப் போகின்றீர்கள்.
2.உங்கள் உடலிலே வளர்ந்து வரும் அந்த அணுக்களும் இதை நுகரப் போகின்றது.
3.அதன் வழி அன்று அகஸ்தியன் பெற்ற… அவன் வளர்ந்த… வளர்ச்சி பெற்ற அந்தத் திறனை எல்லாம்
4.நாம் அனைவரும் பெறப் போகின்றோம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற நினைவினை உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அதை நாம் நுகரப்படும் பொழுது அனைவருக்கும் அவர்கள் பெற்ற (அகஸ்தியன், அவன் தாய் தந்தையர்) அருள் சக்தியிலிருந்து வெளிப்பட்டதை நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அந்த மணங்களை இப்பொழுது நீங்களும் உணர முடியும்.

மணத்தை உணர முடியவில்லை என்றால் உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவுவதை (சக்கரம் போல் சுழல்வதை) உணரலாம்.
1.உங்கள் உடலில் தீங்கினை விளைய வைக்கும் அணுக்கள்
2.அது ஒடுங்குவதையும் உங்களால் உணர முடியும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி இங்கே படர்கின்றது… தியானிக்கும் உணர்வுகளில் அதை ஈர்க்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் திருமணமான பின் துருவ மகரிஷியாகப் பருவம் பெற்ற
1.அவர்கள் கணவனும் மனைவியும் துருவத்தை உற்று நோக்கி…
2.இருவரும் ஒன்றாக நுகர்ந்தறிந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் இப்பொழுது பரவி
3.உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அந்தச் சக்தியைப் பெறும்.

அதன் வழி உங்கள் நினைவின் ஆற்றல்… “துருவப் பகுதியில்” செல்லும். அங்கிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் நுகர்வீர்கள்… அந்த உணர்வுகள் உங்கள் உடலிலே பரவும்… உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெறும். உங்கள் இரத்தநாளங்களில் இவை அனைத்தும் கருவாக உருப்பெறும்.

1.உங்கள் புருவ மத்தியில் இளம் நீல நிற அலைகள் வரும்
2.அந்த உணர்வுகள் உயிரினின்று உடலுக்குள் பரவும் உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்… காணலாம்…!

துருவத்தில் நிலை கொண்டு… துருவ நட்சத்திரமாக வானுலக ஆற்றலைக் கவர்ந்து இன்றும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவாற்றல் அனைத்தும்… துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி… அதன் வழி கவர்ந்து… உங்கள் உடல்களில் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள்.

1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியில் பளீர்…ர்ர்…! என்று இளம் நீல அலைகள்
2.உங்கள் உயிர் ஈர்க்கும் நிலையை உணரலாம்… காணலாம்
3.உங்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் பரவுவதையும் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து வரும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்று உணர்வுகள் வரும்.

அரும் பெரும் காட்சியாக வானுலகம் உங்கள் உடல்களிலும் உணர்வுகளிலும் காண முடியும். வளர்ந்து வரும் உணர்வினை உங்களால் அறிய முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற “குலதெய்வங்களின் உயிரான்மாக்கள்…” சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளி பெறும் சரீரம் பெறவேண்டும் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றும் அவர்களை உந்திச் செலுத்துங்கள்.

எமக்கு குருநாதர் வழி நடத்திச் சென்ற அதே வழிப்படித்தான் இதை இந்த அதிகாலையில் தியானிக்கும்படிச் செய்தது. அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதியச் செய்து அதை நீங்கள் நுகர்ந்து உடலில் பதியச் செய்யும் நிலையும் உருவாக்கியது.

1.அந்த அகஸ்தியன் பெற்ற விஷத்தை வென்றிடும் ஆற்றலும்
2.விண்ணுலக ஆற்றலைப் பெற்ற நிலைகளும் நீங்கள் இப்பொழுது நுகர்ந்திருந்தால்
3.அந்த மணங்கள் நுகர்ந்தவர்கள் அதை அறியும் பருவம் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது “அவன் பெற்ற மகா பச்சிலைகளின் மணங்களை…” நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து துருவ எல்லையை துருவ மகரிஷிகளை எண்ணும் பொழுது
1.புருவ மத்தியில் இளம் நீல ஒளிக்கதிர்கள் – ஈர்ப்புடன் ஈர்ப்பு வட்டமாக
2.அந்த உணர்ச்சிகள் அந்த ஒளி அலைகள் தெரிந்திருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வரும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நுகரும் பொழுது வானில் மிதப்பதைப் போன்று அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள். உங்கள் உடலில் அந்தச் சக்திகள் படர்ந்திருக்கும்.

இதுகள் எல்லாம் அகஸ்தியன் கருவிலிருந்து அந்த உணர்வுகளைப் பெற்று அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து அலைகளாகப் படரச் செய்துள்ளது.

இதனை நீங்கள் வரிசைப்படுத்தி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினோம்.

அதன் வழி கொண்டு காற்றிலிருக்கும் அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் நுகர்ந்து அறியும் ஆற்றலும் அகஸ்தியன் வளர்ந்து வந்த அந்த அருளாற்றல் உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

அவர்கள் துருவ மகரிஷியாகி அதனின்று வெளிப்பட்ட உணர்வுகளை அவர்கள் சென்ற பாதையில் நீங்களும்
1.இதைக் கணவனும் மனைவியுமாகக் கவர்ந்து உங்களில் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்கும்…
2.அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வெளிப்படுத்தியதை உங்களில் பெறச் செய்வதற்கும்..
3.உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்வதற்கும்
4.உங்கள் இரத்த நாளங்களிலே இரத்தங்களில் கலக்கச் செய்வதற்குமே இதைச் செய்தது.

பூமியின் ஈர்ப்பை விடுத்துச் சென்று துருவ நட்சத்திரமாக எல்லை கொண்டு பூமிக்கு வரும் அனைத்துச் சக்தியும் ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டும் ஒளிச் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றோர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி உயிர் தோன்றி அகஸ்தியன் வழியில் நாம் செல்லும் பொழுது அடுத்து நம்முடைய எல்லை பிறவியில்லா நிலை தான்…!

எல்லையில்லாத அகண்ட அண்டத்தில்… என்றும் நிலையான உணர்வுகள் கொண்டு… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானித்து… உங்களுக்குள் பதியச் செய்து அதை ஞான வித்தாக ஊன்றியுள்ளோம்.

1.பதிந்த சக்தியின் துணை கொண்டு
2.நீங்கள் தியானிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தச் சக்தி கிடைக்கும்.
3.ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தை ஒரு பத்து நிமிடமாவது அவசியம் இருக்க வேண்டும்.

மாங்கல்யத்தைக் கழற்றுவது என்பது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்

 

மனிதனின் சகஜ வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தாலும் பண்பு பரிவு பாசம் கொண்டு வாழும் பொழுது பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து அதை அறிந்துணர்ந்த பின் அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களின் வேதனையான உணர்வுகளைத் தனக்குள் அதிகமாக நுகர்ந்து விடுகின்றோம்.

அப்படி நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக வளர்ச்சி அடைந்து இந்த நோயாளியின் உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றால் கேட்டறிந்த நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.அவ்வாறு வந்துவிட்டால் தீமையின் உணர்வுகள் இந்த உடலுக்குள் விளைந்து
2.மனிதன் என்ற பண்பையும் இழக்கச் செய்து விடுகின்றது.

கணவனும் மனைவியும் இருவருமே அந்த வேதனை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். வேதனை உணரவைப் பகிர்ந்து கொண்டாலும் எந்த வேதனையைக் கவர்ந்து கொண்டார்களோ இந்த உடலின் நிலை கொண்டு இன்னொரு ஆன்மா இங்கே சேர்ந்து விடுகின்றது. ஆக கணவனுக்கு மனைவி இல்லை.

கணவனும் இதைப் போன்று பல தீமையான உணர்வுகளைப் பரிவுடன் கேட்டறிந்தாலும் தீமை அதிகரித்து விட்டால் அதன் வழி இந்த உடலிலே கடும் நோய்கள் உருவாகி விடுகின்றது.

இதன் வழி பெற்றாலும் தன் வாழ்க்கையில் அந்த விஷத்தின் தன்மை அதிகரிக்க இந்த உடலை விட்டுச் சென்றால்
1.இன்னொரு விஷத் தன்மை கொண்ட உடலாகத் தான் உருவாகுமே தவிர மனித உடல் பெறுவது என்பது முடியாத நிலை.
2.கணவனும் மனைவியும் இங்கே பிரிக்கப்படுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் கணவனின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வைத் தனக்குள் வலுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பின்… உடலை விட்டு பிரிந்து சென்ற கணவனின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
1.என்னுடன் இணைந்து வாழ்ந்த பண்பு கொண்ட பரிவு கொண்ட உணர்வுகள் நிலைத்த அறிவாக பேரொளியாகப் பெற்று
2.பெரு வீடு பெரு நிலை என்று நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று மனைவி கணவனை இவ்வாறு எண்ணுதல் வேண்டும்.

இதைப் போல மனைவியினுடைய உயிரான்மா பிரிந்து விட்டால் கணவன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெற்றோமோ
2.சூட்சும நிலை அடைந்த அந்த ஆன்மாக்களை அங்கே செலுத்தி விடலாம்.

அங்கே செலுத்திய பின் என்றென்றும் ஒளியின் சுடராக எங்கள் குடும்பத்திற்குள் இருளை அகற்றும் அருள் சக்தியாக வர வேண்டும் என்று எண்ணி ஏங்கிடல் வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவியும் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றாக இணைந்து வாழ்வீர்கள்…”

இந்த உணர்வுகள் இருக்கப்படும் போது அந்த உணர்வின் வலுவால் “நீங்கள் என்றுமே பிரிவதில்லை…” உடலை விட்டுப் பிரிந்தாலும் அவருடைய உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

1.கணவர் உடலை விட்டுப் பிரிந்தால் பெண்கள் மாங்கல்யத்தைக் கழற்றி விடுகின்றார்கள்.
2.அவ்வாறு செய்வது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்.

கணவனுடைய உணர்வுகள் தனக்குள் உண்டு. சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழ்ந்திடும் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் வரும் அறியாது சேர்ந்த இருளை நீக்கி எங்கள் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று மனைவி கணவன் உயிரை உயர்ந்த நிலை கொண்டு எண்ணினால் இந்த உணர்வு இங்கேயும் வளர்கின்றது… குடும்பத்திற்குள் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.

மனைவி கணவனை இவ்வாறு எண்ணுவதும் கணவன் மனைவியை இவ்வாறு எண்ணுவதும் இதைப் போல் இணைந்தால் இதன் வழி வரும் சந்ததியினருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகள் படரப்பட்டு தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெறுகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய இந்த அருள் வழிப்படி நடந்தால்
1.இந்த உடலுக்குப் பின் யார் முந்திச் சென்றாலும் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
2.அதே உணர்வைப் பற்றுடன் பற்றும் பொழுது எளிதில் அங்கே சென்று இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து ஒளியைப் பெருக்க இது உதவும்.

பெண்கள் மாங்கல்யத்தை நீக்குவது என்பது கணவனை நீக்குவது என்பதாகும். மாங்கல்யம் இங்கு இருந்தால்தான் அவருடைய நினைவே வரும்.

அவர் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து அதன் வழி கொண்டு இரு உணர்வும் ஒன்றாகச் சேர்த்து அருள் வழி வாழவும் இதைப் பின் தொடர்ந்து வரும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானத்தை ஊட்டவும் அருள் உணர்வுகளை வெளிப்படுத்தவும்
1.அவர்களும் இதைப் பின்தொடர்ந்து வரப்படும் போது உங்கள் ஆன்மா வெளிப்பட்டாலும்
2.குழந்தைகள் இதே முறைப்படி செயல்படுத்தும் போது இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய உதவும்.
3.ஆகவே பெண்கள் மாங்கல்யத்தை நீக்காது கணவனின் நினைவு கொண்டு அந்த மாங்கல்யத்தை எடுத்து
4.“நாங்கள் அருள் வழி பெற வேண்டும்… ஒன்றி வாழும் அந்த அருள் சக்தி எங்களிலே வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் இவ்வாறு செய்தீர்கள் என்றால் இந்த பிறவியின் முழு பயனையும் நீங்கள் அடைகின்றீர்கள். சிந்திக்கும் வலிமை பெற்று நம் குரு அருளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வளமாக வாழ்ந்திட எமது அருளாசி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா

 

ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம் அந்த வேதனையான உணர்வை நுகர்ந்தோம் என்றால் “உயிரான விஷ்ணு உள்ளே புக வரம் கொடுக்கின்றான்…”

ஆனால் உள்ளே சென்ற பின் வேதனைப்படுத்தும் அணுவாக உருவாகி விடுகின்றது. அந்த வேதனைப்படும் உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.மனிதனை உருவாக்கிய அணுக்களுக்குள் அது கலந்து விடுகின்றது.
2.மனிதனை உருவாக்கிய அணுக்கள் தான் தேவாதி தேவர்கள் என்பது.

மனித உடலை உருவாக்கிய தேவர்கள் வேதனை என்ற உணர்வைக் கண்ட பின் “எங்களால் எதையும் செயல்படுத்த முடியவில்லை…” என்ற வேதனையுடன் சிவனிடம் வருகின்றனர்.

இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து எங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் “எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…!” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றார்கள்.
1.வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால்
2.முதலில் உடலிலே தான் அந்த வேதனை தெரிய வரும்.

மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் தேவாதி தேவர்கள் என்று நாம் அறியும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

சிவனிடம் எல்லோரும் வந்து முறையிடும் பொழுது “நான் என்ன செய்வேன்…? வருவோர் அனைவரையும் வரவேற்பது தான் என்னுடைய செயல்…”

இவை அனைத்தும் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான். நாம் விஷ்ணுவிடம் கேட்போம் என்று எல்லா உணர்வுகளும் சேர்த்து உயிரான விஷ்ணுவிடம் வேண்டும்படி வருகின்றார்கள்.

விஷ்ணுவிடம் கேட்டாலோ “எனக்கு வரம் கொடுக்கத் தான் தெரியும்… பிரம்மன் அல்லவா உருவாக்குகின்றான்… அவனிடம் கேட்போம்…!” என்று அங்கே வருகின்றார்கள்.

பிரம்மாவோ என் தந்தை சொல்படி நான் உருவாக்கித் தான் ஆக வேண்டும்.
1.அப்படி உருவாக்கவில்லை என்றால் “உலகம் எப்படி உருவாகும்…?” என்று
2.நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு காரணப்பெயர் வைத்து இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.

இருப்பினும் இதிலிருந்து விடுபட யாரிடம் கேட்பது…?

விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும் மூன்று பேரும் சேர்ந்து இந்த உடலுக்குள் இருக்கும் தேவாதி தேவர்கள் மனித உடலை உருவாக்கிய அனைத்து உணர்வும் ஒன்று சேர்த்து யாரிடம் கேட்பது…? என்ற நிலைகளில் எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கண்கள் தோன்றிய பின்பு… அந்தக் கண்களால் தான் உற்றுப் பார்த்துப் பல தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருப்பவன் துருவ மகரிஷி.

தீமைகளை எல்லாம் அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால்
1.அது “ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!”
2.அவனிடம் கேட்டால் வழி கிடைக்கும் என்று நம் கண்கள் (கண்ணன்) உணர்த்துவதாகக் காட்டுகின்றார்கள்

வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம்… நமக்குள் அந்த வேதனை வருகின்றது. இதை நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்தால் வேதனை என்ற அந்த விஷத்தை நீக்க முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.

அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்தப்படும் பொழுது
2.வேதனையான உணர்வு வராது தடுக்கும்… நம்மைச் சிந்திக்கும்படி செய்யும்.

உடலுக்குள் வரும் வேதனையை அடக்கி எந்த வேதனையான உணர்வுகளை உற்று நோக்கிக் கவர்ந்தோமோ அவர்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்த வேதனைப்படும் அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

ஆகவே… வேதனையை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.
2.உடலுக்குள் அது சென்று தீமையை வென்றிடும் பிரம்மனாகி விடுகின்றது.
3.தீமையை அகற்றிடும் உணர்வின் வலுவாகும் பொழுது சிவனான உடலுக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.

இதனைத் தெளிவாக்குவதற்குத் தான் குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று காட்டினார்கள்.

குரு விஷ்ணு நம் உயிர் எல்லாவற்றிற்கும் குருவாக இருக்கின்றது. குரு பிரம்மா நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ அந்த குணத்தின் தன்மைகள் குருவாக இயக்கும். குரு சாட்சாத் மகேஸ்வரா எல்லாவற்றையும் உருவாக்கும் அந்தச் சக்தி மனித உடலுக்குள் உண்டு என்பதை
1.மனிதனானவன் அவன் தன்னைத்தானே தான் வணங்கி தனக்குள் எவ்வாறு உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும்…? என்று
2.குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று இதைத் தெளிவாக்கி நாம் தெரிந்து கொள்ளும் சக்தியாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இதன் வழி உங்கள் வாழ்க்கையில் “உங்களை நீங்கள் அறிந்து” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வளர்ந்து… தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற எமது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் சொத்து சுகம் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த உடலின் பற்றே அதிகரிக்கின்றது.

அந்த உடல் பற்றினால் சந்தர்ப்பத்தில் நம் காரியங்கள் தடைப்பட்டால் வேதனைப்படுகின்றோம்.

தொடர்ந்து வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அதையே…
1.நாம் பிடிவாதமான முறையில் அந்த வேதனை உணர்வுகளை அடைகாத்து
2.வேதனையை உருவாக்கும் அணுக்களை வளர்த்து
3.யாரால் வந்தது…? என்று அந்த எதிரிகளை எண்ணியபடி நம் தொழிலைப் பலவீனப்படுத்தி
4.அதனால் நம் நல்ல எண்ணங்களையும் தடைப்படுத்தி
5.கடைசியில் ஒருவரிடத்தில் உதவிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட
6.நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள் எல்லாம் சேர்த்து “நமக்கே எதிரியாகின்றது…”

உதவி செய்வோரின் நிலைகளிலிருந்தும் மாறுபடச் செய்கின்றது. இதைப் போல் நாம் செயல்படும் உணர்வுகள் நமக்குள் அந்த் எதிரியை உருவாக்கும் தன்மை தான் வருகின்றது.

அதை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை உடலுக்குள் அந்தக் கருவாக உருவாக்க வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் இந்த வாழ்க்கையில்…
1.நாரதன் கலகப் பிரியன்… கலகம் நன்மையில் முடியும்…!
2.அதாவது நமக்கு இப்படித் தீங்கு செய்துவிட்டானே… என்ற இந்த எண்ணங்கள் வளராது அதைத் தடைப்படுத்தும்
3.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க இது வலு பெறும்.
4.எனக்கு இப்படிச் செய்கிறானே…! என்ற கோபமான வேதனையான எண்ணத்தை விடுத்துவிடும் அல்லது விடுக்கும்படிச் செய்யும்.
5.அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக வளர்க்கும்படி செய்யும்.
6.நாம் எடுக்கும் இத்தகைய எண்ணங்கள் நமக்கு எவர் தீங்கு செய்கின்றாரோ அவர்களுக்குள் பாய்ந்து அதை நினைவுக்குக் கொண்டு வரும்.
7.நம்மை எண்ணும் பொழுதெல்லாம் அவர்களைப் பலவீனப்படுத்தும்… தீங்கு செய்யும் நிலைகளை மடக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளைத்தான் நாரதன் கண்ணனிடம் செல்வார்… இந்திரனிடம் போகின்றார்… அசுரனிடமும் போகின்றார்… எல்லோரிடமும் போகின்றார்… என்று இந்திரலோகத்தையே சொல்லிக் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொருவரிடமும் இந்த உண்மைகளை உணர்த்திச் சொல்லி அந்த உணர்வுகளை எப்படிச் சீர்ப்படுத்துகிறார் என்ற நிலைகளை விளக்கவுரைகளாகக் காட்டுகின்றார்கள்.

ஆக நமக்குள் இருக்கக்கூடிய பிடிவாதமான குணங்களுக்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை ஒவ்வொன்றும் படரச் செய்து அது மட்டுமல்லாதபடி…
1.எதிரி தீங்குகளையும் தவறுகளையும் செய்கிறான் என்றால்
2.இதே உணர்வுகள் கண்கள் கொண்டு பார்க்கப்படும் பொழுது
3.இந்த எண்ணம் அவர்கள் நுகரப்படும் பொழுது ஊடுருவி
4.பிடிவாதமாக இருப்பதையும் தொந்தரவு செய்வதையும் உணர்த்தி
5.அதனால் உங்களுக்கு என்ன விளைவு ஏற்படுகிறது…? என்றும் அவர்களுக்குள் உணர்த்தச் செய்கின்றது.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் அவன் கண்ணனிடத்திலும் செல்கிறான்… மும்மூர்த்திகளிடமும் செல்கிறான்… மற்றவர்களிடத்திலும் செல்கின்றான்… என்ற நிலையில்
1.அந்த நாரதன் என்ற மகரிஷியின் அருள் உணர்வுகள்
2.நாம் பகைவர்களை எண்ணும் பொழுது கூட
3.கண்ணன் அங்கே அழைத்துச் சென்று அங்கே பதியச் செய்து இந்த உணர்வை ஊட்டுகின்றான்.

அதாவது நாம் எதைக் கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வலைகள் படரச் செய்யப்படும் பொழுது இந்தக் கண்களின் நினைவாற்றல் கொண்டு அவர்கள் நம்மை எண்ணும் பொழுதெல்லாம்
1.அதே கண்கள் அங்கே அழைக்கப்பட்டு இந்த நாரதன் உள்ளே சென்ற பின்
2.அவர்கள் செய்யும் தவறான உணர்வுக்குள் நாரதன் கலகப் பிரியனாகி
3.அந்தக் கலகமோ நன்மையில் முடியும்… அப்பொழுது அந்த உணர்வுகள் சென்ற பின் அது அங்கே அடக்குகின்றது.

அவர்கள் அறியாது செய்யும் இச்சைகளும் வெறுப்பான நிலைகளில் அவர்கள் செய்யப்படும் பொழுதும் அவராலும் சந்தோஷத்தை அனுபவிக்க முடிகின்றதா… அதனால் தொல்லைகள் அனுபவிக்கின்றனர்… வெறுப்பலைகளைச் சுவாசிக்கின்றனர்…! அவர்களுக்கும் இந்த நோய் வருகின்றது…! என்பதை முழுமையாக உணர்த்திக் காட்டுகின்றான் என்று காவியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாரதனை மையமாக வைத்துக் காட்டினாலும் அந்த நாரதன் யார்..? அகஸ்திய மாமகரிஷி அவர் உயர்ந்த சக்தி பெற்று இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதும் அதனைப் பின்பற்றிச் சென்றோர் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் சக்திகளைத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்று காட்டுகின்றார்கள்.

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அந்த அரும்பெரும் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டு கண்ணிலே எண்ணும் பொழுது
1.யார் தவறு செய்தாலும் அவர்கள் திருந்த வேண்டும்
2.அவர்கள் அறியாமை நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்திப் பாருங்கள்.
3.இந்த உணர்வை நாம் செலுத்தப்படும் பொழுது அவர்களின் தீமையின் உணர்வுகள் நமக்குள் விடுவதில்லை.

அவர்கள் தீமை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் எண்ணும் பொழுது இது ஊருவும். உதாரணமாக… எப்படித் தீங்கு செய்தான் என்று எண்ணும் பொழுது புரை ஓடுகின்றதோ அதைப் போல் இந்த அலைகளை நாம் எடுத்துக் கொண்டால்
1.அங்கே அவர்கள் தீங்கும் செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது
2.நம் உணர்வுகள் அவர்களைத் திருத்தவும் உதவுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நமக்கு ஒருவர் தீங்கு செய்கிறார் என்றால் அதைத் தடைப்படுத்த என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்…! என்று எண்ணினால் போதும்.

நமக்கு யார் தீமை செய்தாலும் சரி… இவ்வாறு தான் எண்ண வேண்டும்.

நாம் வளர்த்துக் கொண்ட அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள்
1.அவர்கள் தீமையை எண்ணும் பொழுதெல்லாம்
2.நமக்குத் தீமை செய்ய எண்ணும் பொழுதெல்லாம்
3.சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக அவர்கள் உடலிலே இது ஊடுருவப்பட்டு
4.அங்கே இருக்கும் தீமையின் உணர்வுகள் – நம் பேரில் இருக்கக்கூடிய அந்த அணுக்களை இது தணியச் செய்யும்.

அதே சமயத்தில் நமக்குள் அந்தத் தீமையின் அணுக்கள் வளராது… நோய் வராது… அவைகளைத் தடைப்படுத்தும் தன்மை வருகின்றது.

நாம் ஒரு காரியத்திற்கே செல்கிறோம்… திரும்பத் திரும்பச் செல்கிறோம்… என்றால் அதனால் அடிக்கடி சோர்வு என்ற நிலைகள் வரும். அப்பொழுது அதுவே நமக்கு எதிரியாகிவிடுகின்றது.

அப்படி எதிரியாகாதபடி தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டுதல் வேண்டும்.

அந்தத் துருவ மகரிஷியை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் தீமைகளைக் காட்டிலும் இது வல்லமை பெற்றது.. அதை அடக்கும் சக்தி கொண்டது.

ஆகவே அருள் உணர்வின் தன்மையை இப்படிக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
1.அந்தத் தீமையான உணர்வுகளையோ மற்ற துன்பங்களையோ எண்ணும் பொழுது
2.நாம் அதை எண்ணி எண்ணி அடைகாக்காதபடி.. அதை வளர்க்காதபடி தடைப்படுத்துகின்றோம்.

இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பழக்கத்திற்கு வந்தபின் ஒரு காரியத்தை நாம் சரியான முறையில் செய்ய முடியவில்லை என்றாலும் அதை அடுத்து…
1.நாம்… இப்படித்தான் நடக்க வேண்டும்…! என்ற மகரிஷிகளின் அருள் உணர்வைத் தனக்குள் வளர்த்து
2.இந்தக் காரியங்கள்… “இப்படித்தான் சித்தியாக வேண்டும்…!” என்ற அந்த உணர்வினை
3.மகரிஷிகளின் அருள் வட்டத்துடன் இணைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நமக்குள் அந்த அருள் ஞானத்தை வளர்க்கும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியும் பெருகுகின்றது. நம் காரியங்களும் சீராகின்றது. மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றது.

செய்து பாருங்கள்..!

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்

 

செடி கொடிகள் வாடிவிட்டால் அதற்குத் தக்க உரங்களை இடும் பொழுது அது வலுவாகி அது தன் இனத்தின் சத்தைச் செழிப்பாக உருவாக்குகின்றது.

இதைப் போல
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உரமாக அறிவின் தெளிவாக இணைத்து விட்டால்
2.மனித வாழ்க்கையில் தீமையை வென்றிடும் உணர்வின் சத்தாக அது விளைந்து அதன் வித்தாக நமக்குள் உருவாகி
3.அந்த அருள் ஞானிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ்கின்றார்களோ அதைப் போல
4.அவர்கள் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் சென்று பேரானந்தப் பெரு நிலை என்று அழியா ஒளிச் சரீரம் பெற்று நாம் வாழ முடியும்.
5.”அவன் எந்த வழியில் சென்றானோ அவ்வழியில் நாம் செல்வதற்குத் தான்”
6.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னார்கள்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கும் அந்தத் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் தன்னை அறிந்து விண்ணுலகை அறிந்து நம் பூமி நுகரும் அந்தத் துருவப் பகுதியிலே அமைந்து துருவப் பகுதியிலிருந்து ஆற்றல்களை நுகர்ந்தான்.

நமது பூமி பல தாவர இனங்களாக அதனின் சத்தை மாற்றி உயிரணுக்கள் அதை நுகர்ந்து அதில் வரக்கூடிய எண்ணங்கள் கொண்டு பல கோடிச் சரீரங்கள் ஆகி “மனிதனாக நம்மை உருவாக்கியது உயிர்” என்ற நிலையில் தன்னை அறிந்தவன் அகஸ்தியன்.

1.வட துருவத்தில் உருவாகும் உணர்வினை இடைமறித்துத் தனக்குள் அதை நுகர்ந்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றான்.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக அமைக்கின்றது. பின் சூரியனின் சுழற்சி வட்டத்தில் அது சுழலப்படும் போது தூசிகளாக மாறுகின்றது.

தூசியின் தன்மைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது நம் பூமியின் அருகில் வரப்படும் பொழுது துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து சூரியனின் வெப்பக் கதிர்களையும் கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை
1.துருவப் பகுதி வழியாக நுழைவதை… இந்த வாயில் வழியாக அதை அகஸ்தியன் கவர்ந்து தனக்குள் சிருஷ்டித்து
2.உடலில் உள்ள தீய அணுக்கள் அனைத்தையும் கருக்கி விட்டு ஒளிச் சுடராக மாறும் உணர்வின் ஒளியின் கூறாக இந்த உடலிலே விளைய வைத்து
3.எந்தத் துருவத்தின் வழி தன் எண்ணத்தால் எடுத்தானோ அந்த உணர்வின் வலிமை கொண்டு
4.உடலை விட்டுச் சென்ற பின் இன்றும் துருவ நட்சத்திரமாக துருவ மகரிஷி அமர்ந்துள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தியினைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அந்தச் சக்தியினை நம் பூமி தனக்குள் கவர்ந்து வந்து கொண்டுள்ளது.

இதைத் தான் நாம் கிழக்கே பார்த்து வணங்கும்படி செய்து… மேற்கே பார்க்க விநாயகரை வைத்து நாம் வணங்கும் முறைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

ஏனென்றால் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஏற்றால் அதன் வழியில் எந்த நாட்டவராக இருந்தாலும் ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று தான் கருத்தினை அக்காலங்களில் இப்படிப் பதிவு செய்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எதிரிகளை எதிரிகள் என்று எண்ணாது
2.அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்தல் வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கொடுக்கும் இந்தச் சக்தியை வலு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க அவர்கள் உணர்வுகள் உங்களை இயக்காது. அதே சமயத்தில்…
1.யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்.
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வர வேண்டும் என்று
3.இந்த உணர்வைப் பதிவாக்கி நம் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது அவர் நமக்குத் தீங்கு செய்கிறார்…! என்ற உணர்வை நமக்குள் வளர்த்து “நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதில்…”
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்திடும் நிலையாகக்
2.கண் வழி கொண்டு தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (நாரதன்) உணர்வைக் கவர்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை அங்கே சென்ற பின் அங்கே அவர் செய்யும் தீங்கினையும் மற்ற உணர்வினையும் அது வெளிப்படுத்துகின்றது. அப்பொழுது நம் மீது வரக்கூடிய இந்த உணர்வினைப் பலவீனைப்படுத்துகின்றது.

இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணங்கள் கொண்டு அதை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது நம் உடலில் முந்தைய தீய வினைகளையும் அடக்கிட முடியும்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ வேதனையோ கொண்ட உணர்வால் நம் உறுப்புகள் நல்ல உறுப்புகளில் இந்த இரத்தநாளங்களில் கண்டு இந்தக் கருக்களை அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கின்றது.

ஆகவே அந்தத் தீங்கு விளைவிக்கும் உணர்வைத் தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று கருக்களாக உருவாக்கப்படும் பொழுது இரத்தநாளங்களிலே இது பெருகுகின்றது.

உடலுக்குள் இந்த இரத்தம் போகாத இடமே இல்லை.

ஏனென்றால் இதனின் உணர்வுகள் நம்முடைய எண்ணமே எதனின் உணர்வின் தன்மையோ பாதுகாப்பான நிலைகள் அழைத்துச் சென்று அங்கே பகைமை உணர்வைத் தடுக்க உதவுகிறது.

இதைத்தான் இராமனுக்குப் படகோட்டியான குகன் தன் படகின் மூலம் நதியைக் கடக்க உதவி செய்கின்றான்…! என்று காட்டினார் வான்மீகி.

1.ஆக நம் எண்ணங்களின் நிலை கொண்டு
2.இந்த உணர்வுகள் எல்லாவற்றையும் அந்த அருள் உணர்வின் எண்ணமே கருவாகி
3.கருவின் உணர்வாக உருவாகி அதன் செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது..? என்றும் இதைக் காட்டுகின்றனர் ஞானிகள்.

இப்படி நம் உடலுக்குள் பகைமை உணர்வைச் சாராத நிலைகள் கொண்டு பாதுகாக்க வேண்டும் என்றால் இதைப் போன்று அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்தல் வேண்டும்.

அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர் தீங்கு செய்தார் என்ற எண்ணங்கள் வருவதற்கு முன்
1.என் மீது தீங்கு எண்ணும் அந்த எண்ணங்கள் அங்கே மறைய வேண்டும்
2.என்னை நினைக்கும் பொழுதெல்லாம் தீங்கு செய்யும் அந்த எண்ணங்கள் மடிந்திட வேண்டும் என்ற உணர்வினை
3.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வினை எண்ணிவிட்டு அந்த எண்ணத்தைப் பாய்ச்ச வேண்டும்.

“கண்ணால் இந்த உணர்வைப் பாய்ச்சி…” இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் நினைவாற்றல் கொண்டு ஊடுருவிச் செலுத்தப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அங்கே நாரதனாகச் சென்று
2.மற்றவர்கள் தீங்கு செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்தும் நிலைகள் வருகின்றது.

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

 

பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் நம் பூமியான பரமாத்மா கவர்ந்து தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. அப்படி மாற்றும் பொழுது தனது சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் தனக்குள் பலவையும் பல கலவையாகிப் பாறைகளாகவும் உலோகங்களாகவும் மற்ற நிலைகளாகவும் உருவாக்குகின்றது.

1.அது உருவாக்கி உமிழ்த்தி வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால்
2.மீண்டும் இந்தப் பரமாத்மாவில் பல கலவைகளாக மாறுகின்றது.

ஆகவே இந்த ஆன்மாவில் விளைந்து கூட்டமைப்பாக வெளிப்பட்ட அந்த உணர்வின் ஆவியின் தன்மையைச் சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து பரமாத்மாவாக மாற்றுகின்றது.

இந்தப் பரமாத்மாவில் ஒன்றுடன் ஒன்று பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தாவர இனங்கள் விளைகின்றது. தாவர இனங்கள் விளையப்படும் போது அதுவும் பல பல கலவை கொண்டு உருவாகின்றது.

உதாரணமாக ஒரு விஷச் செடியை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அந்தச் சத்தினைப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

பரமாத்மாவாக பூமியிலே படர்ந்து கொண்டிருக்கப்படும் பொழுது இந்த விஷச் செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றினால்… இந்தப் பரத்தில் ஊன்றினால்… பரத்தின் துணை கொண்டு பரமாத்மாவில் இருக்கும் விஷச் செடியின் சத்தினை அது நுகர்ந்து தன் இனத்தின் வித்தினை வளர்க்கின்றது… அந்தச் செடி வளர்கின்றது.

இதைப் போல் தான் எண்ணிலடங்காத தாவர இனங்கள் உருமாறி அது அது வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பரமான இந்தப் பரமாத்மாவாக மாற்றிக் கொண்டுள்ளது.
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் சகல தாவர இனங்களும் வளர்ந்து
2.தன் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது இதே பரமாத்மாவில்.

உயிரணு தோன்றி பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக மாறுகின்றது. ஜீவான்மாவாக மாறிய பின் தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது… இந்தப் பரமாத்மாவிலிருந்து தனது உடலைச் சுற்றி வரும் ஆன்மாவாக மாறுகின்றது.

தனது ஆன்மாவாக மாறிய பின்… உயிர் உடலில் இருக்கும் ஜீவான்மாவிற்கு உணவைக் கொடுத்து வளர்க்கின்றது.

வேதனைப்படுபவரை… சங்கடப்படுபவரை… சலிப்புப்படுபவரை… வெறுப்பப்படுபவரைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் அனைத்தும் பரமாத்மாவிலே கலக்கின்றது.
1.உற்றுப் பார்த்து நுகர்ந்தறிந்தால் அதே உணர்வின் அணுவாக நம் உடலில் ஜீவான்மாவாக உருவாக்கி விடுகின்றது.
2.ஜீவான்மாவாக உருவாக்கி விட்டால் உயிரின் துணை கொண்டு பரமாத்மாவிலிருந்து தனது ஆன்மாவாக மாற்றி
3.தனக்குள் விளைந்து தன் உடலுக்குள் இருக்கும் ஜீவான்மாக்களை வளர்க்கின்றது.

ஒரு செடி விளைந்தால் எப்படித் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றதோ இதைப் போல நமது சகஜ வாழ்க்கையில் எத்தகைய நல்ல குணங்கள் பெற்றிருப்பினும் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு குரோதம் கோபம் பகைமை உணர்வுகள் இதைப் போன்ற நிலைகள் அதிகமாக நமக்குள் வளர்ச்சியாகி விளைந்து விட்டால் “விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களின் பெருக்கமாகிவிடும்…”

ஏனென்றால் நமது ஜீவான்மாக்கள் தீமையின் உணர்வை வளர்க்கப்படும் பொழுது நம் உடலான பரத்தில் பல தீமைகள் உருவாகி… மனித உடலான இந்தப் பரதத்தில் அதை மாற்றும் சக்தியாக வருகின்றது.

1.எப்படி ஒரு வித்து முழுமையான பின் அதைக் கொண்டு மற்ற நிலைகள் விளைகின்றதோ…
2.பல கலவை கொண்டு அக்ரிகல்ச்சரில் வித்துக்களை உருவாக்குவது போன்று…
3.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தீமையின் விளைவுகள் அதிகமானால்
4.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் சேர்த்து உயிரான்மாவாக மாறுகின்றது.

உடலை விட்டு உயிரான்மா சென்றால் இதே வேதனை கொண்ட உடலைப் பரமாக்கி… வேதனை உணர்வைத் தனது ஆன்மாவாக்கி… அதன் வழியில் வாழ்க்கையின் வழித் தொடர ஆரம்பித்து விடும்.

இதிலிருந்து நாம் மாற்றுவதற்கு துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் இந்தப் பரமாத்மாவிலே தான் படர்ந்துள்ளது.
1.அதை நமக்குள் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி உடலில் பெருக்கிக் கொண்டால்
2.நமது ஆன்மாவும் தூய்மையாகின்றது மன வலிமையும் பெறுகின்றது நமது உடலும் நலமாகின்றது.
3.உடலுக்குள் இருக்கும் ஜீவான்மா தெளிவடைகின்றது… ஒளியின் தன்மை பெறத் தொடங்கி விடுகின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னலாக வெளிப்படும் அந்த ஒளிக் கற்றைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளியின் அலைகளாக மாற்றுகிறது.

1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொண்டால்
2.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நாமும் நகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கும் நஞ்சினை மாற்றிடும் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தப் பேரருள் உணர்வுகளைப் பெற்று நம் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்றிப் “பிறவி இல்லாத நிலை அடைந்திட உயிரான்மாவை ஒளிமயமாக மாற்றி ஒளிச் சரீரம் பெற்றிட” குரு அருளும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்தக் குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் எப்படி வழி நடத்திச் செல்கிறான் என்ற நிலைகள் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

1.நமது கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலுக்குள் எப்படி உருவாகிறது…? என்றும்
3.அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிர் ஆணையிடும் பொழுது சிறு மூளை பாகம் சென்று
4.அதே சமயத்தில் உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி
5.கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் நம் மனத்திற்கும் இந்த உணர்வுகள் இயக்கி
6.நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது என்ற நிலையை வியாசகர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

தீமையான உணர்வுகளை ஒரு தடவை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விடுகின்றோம். மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது நம் உயிருடன் சேர்த்து அந்த உணர்வுகள் அந்தப் போரை… சங்க நாதம் எழுப்புகின்றது நம் கண்கள்.

அதாவது தீமை செய்பவர்களை நினைத்து நாம் சுவாசித்த பின் அது நம் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.
1.உணர்வின் ஒலி அலைகள் பட்ட பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள்
2.நாம் எதை எண்ணினோமோ – நியாய அநியாய உணர்வுகள்
3.அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

ஒரு வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனம் அடையச் செய்து விடுகின்றது. நம் செயல்களைச் சீராகச் செய்ய முடியாதபடி ஆக்குகின்றது.

உதாரணமாக… தன் பையன் மீது வெறுப்பின் தன்மை வந்துவிட்டால் பையனுக்காக வேண்டிச் சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த மற்ற பொருளையும் எடுத்து அடித்து நொறுக்கும் தன்மை தான் வருகின்றது.

நொறுக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று வியாசகர் அதைத் தெளிவாக்குகின்றார்.

வியாசகர் என்றால் கல்வியறிவு இல்லாத மூடனாக இருந்தாலும்
1.வியாபித்திருக்கும் உணர்வுகளைத் தனக்குள் அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்ற பின் அவர் அனைத்தையும் அறிந்தார்.
2.அதனால் வியாசகர் என்ற காரணப் பெயரைச் சுட்டிக் காட்டினார்கள் அக்காலங்களில்.

பகவான்…! என்றால் தன்னுடைய நிலைகளில் எல்லா உணர்வையும் நுகர்ந்தார்… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தார். அதற்குப் “பரமாத்மா…” என்று வியாசகர் ஒரு பெயரை வைத்தார்.

பரத்தில் இருக்கக்கூடிய ஆத்மாவைத் தனக்குள் எடுத்துத் தனக்குள் வளர்த்தார் என்பதற்குத்தான் “வியாசக பகவான்…!” என்ற பெயர்களை வைத்தார்கள்.

ஆக…
1.மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…?
2.நம்மை அறியாது தீமைகளை எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகின்றது
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் அது தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

நமக்கு ஒருவர் அடிக்கடி தொந்திரவு செய்கிறார் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நமக்குள் வெறுக்கும் உணர்வுகளே தூண்டுகிறது. அந்த வெறுக்கும் உணர்ச்சிகளைத்தான் அது ஊட்டும். நமக்குள் அதனதன் உணவுக்காகப் போராடும். அதனதன் உணர்வுக்கு அங்கே போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் தடைப்படுத்தும் உணர்வுகள் பெற்றவன்… இதை வென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால்
1.அதை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகிறது.
2.நாரதனாக நமக்குள் சென்ற பின் “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கின்றோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கின்றது.

அப்பொழுது நாம் யார் மீது வெறுப்படைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி
1.நம் கண்களின் நினைவாற்றலை அங்கே செலுத்தப்படும் பொழுது
2.கண்ணன் (கண்கள்) நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
3.கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை அந்த நாரதர் வேலையைச் செய்யும்.

பகைமையாக்கும் உணர்வுகளுக்குள் இந்த அருள் ஞானியின் உணர்வுகள் சென்ற பின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

அதைத்தான் நாரதன் கண்ணனிடம் செயலாக்கிய பின்
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.கண்களுக்கும்… நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
3.வியாசகர் எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கிறார் என்ற நிலைகளை நாம் தெரிந்து கொண்டால் போதும்.

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் சுவாசிப்பது மூஷிகவாகனா. ஒருவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அதைச் சுவாசித்தால் உயிரிலே பட்டு அந்த உணர்வின் வேகமாகத் துடிக்கும் பொழுது காளி.

காளி கோவிலிலே புலியைத்தான் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.மனிதன் தவறு செய்கிறான் என்றால் அதனைப் பார்க்கும் பொழுது நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த கோபத்தைச் சுவாசித்தால் உயிரிலே பட்ட பின் காளியாக அது மாறுகின்றது.
3.உடலான சிவனோ ருத்ர தாண்டவமாக… “இருடா நான் பார்க்கின்றேன்” என்று இது போன்ற ஆட்டங்கள் ஆடுகின்றது.

அந்தக் கோபத்தின் உணர்வுகளால் அழிக்கும் செயலாக வந்தபின் அவன் பதிலுக்கு எதிர்த்து விட்டால் மீண்டும் அதே வேகங்கள் வருகின்றது.

அந்த வேகத்தால் அவனை அடித்து உதைக்கும் உணர்வைச் சுவாசித்தால் அத்தகைய அணுக்களின் தன்மை இந்த உடலிலே பெருகிச் சிறுகச் சிறுக விளைந்து இரத்தக் கொதிப்பாக மாறி விடுகின்றது.

1.அதன் அடிப்படையில் அடிக்கடி கோபங்கள் வந்தே தீரும்.
2.அவ்வாறு கோபமாகப் பேசப் பேச… கோபத்தை ஊட்டும் உணர்வின் அணுக்கள் உடலிலே விளைந்து நல்ல அணுக்களைக் கொல்லும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் மணத்தை மனிதன் நுகர்ந்து விட்டால் அது விஷமான அணுக்களாக உடலிலே விளைந்து விடுகின்றது. அத்தகைய விஷ அணுக்கள் நல்ல அணுக்களைக் கொன்று புசிப்பது போல…
1.கோபமான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து விட்டால் அந்த உணர்ச்சிகள் மேலோங்கி
2.நம் உடலில் உள்ள நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் முறையாகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தோரைப் பாருங்கள். மேல் வலிக்கின்றது கை வலிக்கின்றது தலை வலிக்கின்றது தலை சுற்றுகிறது என்று எல்லாமே வரும்.

இது எல்லாம் மூஷிகவாகனா…! சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் நின்று அது வாகனமாக அமைந்து இத்தகைய உணர்வுகளை விளையச் செய்து விடுகின்றது.

அதற்குத்தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

புலி தனக்கு வேண்டிய இரை கிடைத்து விட்டது என்றால் சாந்தமாக அதைச் சாப்பிடும் நிலை இல்லை. ஆவேச உணர்வு கொண்டு தான் அந்த உணவை உட்கொள்ளும்.

இதைப் போன்று தான் கோபப்படும் ஒரு செயலை நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது கொன்று விழுங்கும் நிலை வருகின்றது.
1.நல்ல உணர்வுகளுக்குச் செல்லும் உணவைத் தடைப்படுத்துகின்றது.
2.அப்படித் தடைப்படுத்தும் பொழுது கை கால்கள் சுருங்கி விடுகின்றது… அதனின் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதே போன்று தான் வேதனை வேதனை என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம் என்றால் இந்த வேதனை உணர்வுகள் உடல் முழுவதும் பரவிவிடும்.

ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் உடல் எப்படித் துவண்டு விழுகின்றதோ அதைப் போன்று இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது… உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்து கை கால்கள் செயலற்றதாக மாறுகின்றது.

வேதனையை அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது நமது சிறுநீரகங்களிலும் விஷத்தன்மை அதிகமாகி அதுவும் சீராக இயங்குவதில்லை. அது சீராக இயங்கவில்லை என்றால் சர்க்கரைச் சத்தையும் உப்புச் சத்தையும் சரியாக அது பிரித்துச் சமப்படுத்தாது.
1.உணவாக உட்கொள்ளும் அந்தச் சத்துகள் அனைத்தும் அப்படியே இரத்தத்தில் கலந்து அதனதன் வலு அதிகரிக்கப்படும் பொழுது
2.தீமையை விளைவிக்கும் அணுக்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது.
3.உறுப்புகள் செயலற்றதாக மாற்றிவிட்டால் கடும் நோயாக மாறி விடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள். அதிலே எதை நமது உடலாக ஆக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

விநாயகருக்கு அருகே அரச மரத்தை வைத்திருப்பார்கள். ஏன்…?

ஒரு குருவி அரசம் பழத்தை உணவாக உட்கொண்டு அது தன் மலத்தைக் கழிக்கும்போது அதனுடன் கலந்து வந்த அரசமர வித்து பாழடைந்த கட்டிடத்தில் விழுந்தால் போதும்.
1.காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை நுகர்ந்து அது செடியாக வளர்ந்து
2.விழுதுகளைப் பரப்பி நீர்களை உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது… செழித்து வளர்கின்றது.
3.வளர்ந்த பின் அந்தக் கட்டிடத்தையே கூட வீழ்த்துகின்றது.

இதைப் போன்று தான் அந்த அரச மரத்தின் நிலைகளுக்கொப்ப… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்…
1.தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் பூமியின் துருவப் பகுதியில் நின்று துருவத்தின் வழி
2.பூமிக்குள் வரும் சக்தியைத் தனக்குள் எடுத்துத் தன் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.
3.அதிலிருந்து வெளிப்படுத்தும் விழுதுகள் நம் பூமியிலே பரவிக் கொண்டே உள்ளது.

எந்த மனிதனின் நிலைகள் தொடர்பு கொண்டோமோ மனித உடலில் விளைந்த உணர்வுகள்… அவர்களை (மகரிஷிகளை) நாம் எண்ணி ஏங்கும் பொழுது நமக்குள் அது விளைந்து… நாமும் அவனின் அரவணைப்பில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஏனென்றால் அதன் வழியினைப் பின்பற்றிச் சென்றவர்கள் தான் இன்றும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

அதுவே மனிதனின் கடைசி எல்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நண்பர்களாகப் பழகுகின்றனர். பழகிய நிலைகள் கொண்டு சந்தர்ப்ப பேதத்தால் வெறுப்படைகின்றது. வெறுப்படையும் பொழுது தொழிலில் நஷ்டம்.

இரண்டு பேருமே…
1.எனக்குத் துரோகம் செய்தார் என்று இவரும் எண்ணுகின்றார்
2.துரோகம் செய்தார் என்று அவரும் எண்ணுகின்றார்.

சந்தர்ப்பத்தால் சிறு பிழைகள் வரப்படும் பொழுது பலவீனமான நிலையை உருவாக்கி விடுகிறது. அதை நுகரப்படும் பொழுது அந்தப் பலவீனத்தை ஏற்படுத்தும் அணுக்கள் உடலுக்குள் அந்தக் கருக்களாக உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

இவ்வாறு அதிகமாகி விட்டால் அது தன் உணர்ச்சியைத் தூண்டும்.

அப்பொழுது சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை வளர்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் கண்களிலே பாய்ச்சும்.
1.கண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
2.நல்லவராக இருந்தாலும்… சந்தேகப்பட்டுப் பார்த்த பின் என்ன ஆகும்..?

இந்தப் பார்வையைக் கண்ட பின் அவர் தலைகள் ஆடுவதும் உடலை அசைப்பதையும் வித்தியாசமான நிலைகள் வரும்.

நல்லவராகவே இருக்கட்டும் சந்தேகப்பட்டு ஒருவரை எண்ணிப் பாருங்கள்.
1.உங்கள் பார்வை பட்டவுடனே… ஏன் இப்படிப் பார்க்கிறார்…? என்ற நிலையில்…
2.நான் நினைத்தேன் அந்தச் சந்தேகம் சரியாகப் போய்விட்டது என்ற இந்த உணர்வுகள் அங்கே இயக்கி விடுகின்றது.

இதைப் போல அந்த உணர்வுகள் இயக்கத் தொடங்கினால் அது வளர்ச்சி அடைகின்றது. அந்தச் சந்தேகத்தின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் “பகைமை” வளர்கின்றது.

அந்தப் பகைமை வளர்ந்த பின்னாடி வெகு தூரத்தில் ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ்ந்தாலும் இரண்டு பேரிடமும் பழகிய ஒரு நண்பன் வருகின்றான்.

அவன் வந்தவுடனே சொல்கிறான். இந்த மாதிரி உன் நண்பரை அமெரிக்காவில் பார்த்தேன் என்று…!

அவனா…? துரோகி.. உருப்பட மாட்டான் அவன்..! என்ற இந்த உணர்வுடன் சொல்கள் வெளி வருகின்றது. ஏனென்றால் அவனை நினைவுபடுத்தியவுடனே “கண்ணின் நினைவு” அங்கே செல்கிறது.

கண்ணின் நினைவு அங்கே செல்லப்படும் பொழுது ஏற்கனவே உள்ள அந்தப் பகைமை உணர்வுகள் என்ன செய்கிறது…? பதிவாகின்றது.

பதிவான உணர்வுகளுடன் அது மோதியவுடனே
1.அங்கே அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இது ஊடுருவி
2.உறுப்புகளை இயங்கவில்லை என்றால் “புரை” என்ற நிலையில்
3.ஒரு சோற்றுப் பருக்கை நுரையீரல் பக்கம் இந்த மூச்சு இழுக்கும் பொழுது உள்ளுக்குள் போனால் அவ்வளவு தான்…!

ஏனென்றால் புரைகளில் இது மிகவும் விசித்திரமானது…! உணவு உட்கொள்ளும் பொழுது இந்த மாதிரிப் புரைகள் ஏற்பட்டால் அந்த ஆகாரம் நுரையீரலுக்குள் சென்றுவிடும்.

சிறிது தேங்கிவிட்டால் அங்கே நாளடைவில் அழுகும். அந்த அணுக்கள் அங்கே பெருகி டி,பி. போன்ற நோய்களை உருவாக்கும் தன்மை வந்துவிடும். அந்த நுரையீரலையே ஓட்டை போடும் அளவுக்கு ஆகிவிடும்.

ஒரு பழத்தை வெளியிலே அப்படியே வைத்திருந்தால் எப்படி அது அழுகிப் புழுக்களாகிப் பின் வெடித்துவிடுகின்றதோ அதைப் போல உடல் உறுப்புகளைச் சிதைக்கும் தன்மை வந்துவிடும்.

நாம் நினைக்கின்றோம்… சாதாரணமாகத் தான் நினைத்தோம்..! என்று. ஆனால் இயற்கை… இந்த உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

ஒரு காரை ஓட்டிச் சென்றாலும் கூட முதலில் சொன்ன மாதிரி துரோகம் செய்தான் பாவி..! என்று எண்ணினால் புரை ஓடுவது போன்று ஆனால்
1.எதிரிலே வரக்கூடிய வாகனங்களைக் கண் கவர்ந்து சொல்லும் நிலைகளை இது இடைமறித்து
2.அவர் அதைச் சுவாசித்து விட்டால் காரை பிரேக் போடுவதோ ஸ்டீரிங்க் திருப்புவதையோ இழக்கின்றார்
3.விபத்துக்குள்ளாகி விடுகின்றது…!
4.துரோகம் செய்தான் பாவி என்று எண்ணப்படும் பொழுது இவ்வாறு இயக்கிவிடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நம்முடைய பழக்கவழக்கங்களில் நம்முடைய எண்ணங்களே நமக்கு எதிரியாகின்றது. ஆக அவர்கள் எண்ணும் சந்தர்ப்பமும் நாம் செயல்படும் சந்தர்ப்பமும் இந்த வெறுப்பின் உணர்வு வந்துவிட்டால் அங்கே விபத்துக்குள்ளாக்கி விடுகின்றது.

நாம் எங்கே சென்றாலும் இந்த ஆத்ம சுத்தியை மறவாது செய்து கொள்ள வேண்டும். ஆத்ம சுத்தி செய்து..
1.என்னுடைய பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும் என்ற
2.இந்த எண்ணங்கள் கொண்டு நாம் செல்லப்படும் பொழுது
3.அந்தத் தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த முடியும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டே வருதல் வேண்டும்.

ஒருவர் நம்மிடம் வந்து இந்த மாதிரி உனக்குத் தீங்கான நிலைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றான் உன்னுடைய நண்பன் என்று சொன்னால் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்..?

ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அவர் அங்கே சொல்லப்படும் பொழுது
1,என்னை நினைக்கும் பொழுதெல்லாம் அவன் நல்லவனாக வேண்டும்
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினக்கும் பொழுதும் அவனுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் நினைவை வைத்து கண் கொண்டு நாம் பார்க்கப் போனால்
5.கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கிறான் என்று காவியத்தில் உணர்த்தியது போல்
6.நம் உணர்வின் தன்மை தாங்கிச் செல்லும் தன்மை நாரதன் என்ற உணர்வு கொண்டு அங்கே ஆணையிடப் போகும் பொழுது
7.இந்த உணர்வுகள் அவர்கள் உணர்வுக்குள் ஊடுருவி அங்கே இருக்கும் பிடிவாதமான குணங்களை அகற்றுகின்றது.
8.நமக்கும் நல்லதாகின்றது… அவர்களையும் நல்வழிப்படுத்தும் சந்தர்ப்பமாகின்றது.

ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?

 

நான் கொடுக்கக் கூடிய உபதேசங்களைப் பெண்கள் ஆசையுடன் அதைப் பெற வேண்டும் என்று கூர்ந்து கவனித்தால் ரெக்கார்ட் ஆகிவிடும்.
1.பெண்கள் அதிகமாக அவ்வாறு நினைக்கப்படும் பொழுது
2.மகரிஷிகளின் சக்தியை அணுத்தன்மையாக மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டு.

கணவர் தொழிலின் நிமித்தம் பல நிலைகளைச் சந்திக்கப்படும் பொழுது அதிலே பல உணர்வுகள் அவர் மீது மோதினாலும்
1.என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
3.அவர் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
4.இதை உங்களில் வலுவாக்கி கணவருக்கு இது பெற வேண்டும் என்று பாய்ச்சினால் நிச்சயம் அது அவருக்கு நல்லதாகும்.

ஏனென்றால் தொழிலின் நிமித்தமோ அல்லது மற்ற எத்தனை அலுவல்களுக்குச் சென்றாலும் அதற்குள் எத்தனையோ எதிர்ப்புகள் இருக்கின்றது எத்தனையோ உணர்வுகளை அவர் சுவாசிக்க நேர்கின்றது.

ஆனால் அப்போதெல்லாம் பெண்கள் தன் கணவருக்கு உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தினால் “அவரைத் தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்…!”

அதே சமயத்தில் அவர் செயலைப் பார்த்து என்ன…? உன் கணவர் இப்படி இருக்கின்றார்…! என்று யாராவது சொன்னால் என்ன ஆகிறது…?

இப்படி இருந்தால் என்ன பண்ணுவது…? என் தலைவிதி இவருக்கு என்னைக் கட்டிக் கொடுத்து விட்டார்கள்…! என்று பெண்கள் இந்த வேதனையை எடுப்பார்கள்.

இந்த வேதனைப்படும் உணர்வோடு கணவனை எண்ணினால் என்ன செய்யும்…?
1.வெளியிலிருந்து அவர் வரும் பொழுதே உணர்வுகள் மாறிவிடும்… அவர் உள்ளே வரும் பொழுது உற்றுப் பார்ப்போம்.
2.கணவர் பார்க்கும் பொழுது என்ன…! மனைவியிடம் ஒரு வித்தியாசமான பார்வை தெரிகிறதே என்று
3.இந்தக் கண்கள் கணவருக்கு இப்படிக் காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த உணர்வின் இயக்கம் ஆன பின் ஓஹோ…! இப்படியே இருந்து கொண்டிருந்தால் என் வாழ்க்கை என்னாவது…? அடுத்து ஒரு வார்த்தையைச் சொன்னால் போதும்.

வீட்டுக்கு வந்தவுடன் இது தானா வேலை…? என்று இந்த வெறுப்பு அங்கே விளைந்து இந்த உணர்வு ஒலியாகி (சொல்) கசப்பின் தன்மையாக வந்து விடும்.

ஆகவே மற்றவர் வாயிலாகக் கணரைப் பற்றிப் பிறிதொன்றைக் கேட்டாலும்…
1.கணவருக்கு அந்த அருள் பெற வேண்டும்… அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால்… இப்படி எத்தனை பெண்கள் நீங்கள் எண்ணுகின்றீர்கள்…?

சம்பாதித்துக் கொடுத்தால் என் கணவர் மாதிரி யாருமே இல்லை என்று சொல்வோம்.. ஆனால் கொடுத்துக் கொண்டே இருக்கும் பொழுது அதிலே தடையாகி விட்டால் “எனக்கு எல்லாம் தெரியும்…! வர வர எனக்கு ஒன்றுமே கொடுப்பதில்லை…!” என்று இரண்டு தரம் இப்படி ஆகிவிட்டால்…
1.இப்படி செய்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் என்ன மிச்சம் பிடிப்பது…?
2.குழந்தை குட்டிகள் எல்லாம் இருக்கின்றது… குடும்பத்தை என்னத்தைக் கவனிக்கின்றீர்கள்…? என்று வந்து விடும்.

இது எல்லாம் எப்படி வருகின்றது…?

எதைக் கூர்ந்து கவர்கின்றோமோ அந்த உணர்ச்சிக்கொப்ப உணர்வின் செயல்கள் நமக்குள் வருகின்றது. எதைப் பதிவு செய்தோமோ கவர்ந்தது உயிரிலே படுகின்றது ரத்தத்தில் கலக்கின்றது. ஆக… தீமையை உருவாக்கும் சக்தியாக நமக்குள் உருப்பெறுகின்றது.

இந்த வாழ்க்கையில் எப்படித் தெரிந்து வாழ வேண்டும் என்பதற்கு எவ்வளவோ சாஸ்திரங்களை ஞானிகள் நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எத்தனையோ விதமான குணங்களை உருவங்களை வைத்துச் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

1.நல்லதைச் செய்யப்படும் பொழுது நமக்குள் அது தெய்வமாகச் செயல்படுகின்றது.
2.அதன் வழியில் என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.வசிஷ்டரும் அருந்ததி போன்று நாங்கள் இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று
4.தனது ஆசை “கணவரை உயர்த்த வேண்டும்” என்ற நிலைக்கு வருகிறது

ஒரு சில குடும்பம் ராஜ குடும்பமாகவே இருக்கும். ஆனால் மேலே சொன்னது போன்ற சிக்கல்கள் அங்கே வந்தே தீரும். பையனுக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து இந்த மாதிரியே ஆக்கிவிட்டார்கள் என்று வந்துவிடும்.

அல்லது சொந்தத்தில் யாராவது கஷ்டப்படுகின்றார்கள் என்று உதவி செய்தால் அப்பொழுது அதிலேயும் ஒரு சிக்கல் வரும்.

செல்வம் இருந்தாலும் நிம்மதி இருக்கின்றதா என்றால் இல்லை…!

உணர்வின் தன்மை இது போன்று எதிர் நிலையாகும் பொழுது எதைக் கலந்து எது உருவானதோ அதன் வழியே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபட்ட இந்த உடல் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்ற இந்த மனித உடலில் தீமையை அகற்றும் சக்தியை இழந்திருக்கின்றோம்.

எதன் வழியில்…? ஆசையை நிமித்தம் கொண்டு…!

1.எதையோ ஒன்றை ஆசைப்படும்போது மற்றொன்றை இழந்து விடுகின்றோம்.
2.ஆசையின் தன்மை பெறப்படும் பொழுது காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.
3.இது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் ஏற்படுகின்றது.

அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக எடுத்துக் கொண்டால்… என்ன…! சாமிக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…! தபோவனத்தில் இருப்பவர் இந்த மாதிரிச் செய்துவிட்டாரே என்று..! சில பேருக்கு இந்த எண்ணம் வரலாம்.

எனக்கு (ஞானகுரு) இந்த உடலைப் பற்றிய நினைப்பே இல்லை.

இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுது நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் ஆன்மா அந்த ஒளியின் நிலை பெறுகின்றது.

1.அவன் தீங்கு செய்துவிட்டான்… (தபோவனத்தில்) என்ற எண்ணங்கள் வரப்படும் பொழுது
2.அதை எடுத்துக் கொண்டால் பழி தீர்க்கும் எண்ணங்களாக வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எனக்குப் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். கை விரலை நீட்டினால் ஒரு மரத்தையே தூக்கி எறியச் செய்யும்.

எண்ணத்தால் எண்ணி.. இவன் மடிந்துவிடுவான்.. அல்லது இப்படித்தான் ஆகிவிடுவான்…! என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி அவனுக்குள் வேலை செய்யும். துரித நிலையிலும் மடிந்து விடுவான் (தீங்கு செய்தவன்).

நாம் ஏன் சொல்வானேன்…? அவனை ஏன் நாம் வீழ்த்துவானேன்…! அவன் எண்ணிய உணர்வுகள் அவனுக்குள் வீழ்த்தும்… அறியும் தன்மை வரும்.

இப்படித்தான் நாம் இருக்கின்றோமே தவிர குருநாதர் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். ஆனால் அது பயன்படுத்துவதற்கு அல்ல…!

ஆஹா… எங்கள் சாமி எப்படிப்பட்டவர் பார்…! கெடுதல் செய்தான்… விரலை நீட்டினார்… விழுந்து விட்டான்… என்று நீங்கள் பெருமை பேசலாம்…!

அப்படிச் செய்தால் இது…
1.அவன் உடலில் உள்ள மற்ற நல்ல அணுக்களையும் சேர்த்துக் கொன்றதாகத் தான் அர்த்தம்.
2.அவனுக்குள் இருக்கக்கூடிய தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைந்ததாகத் தான் பொருளாகுமே தவிர
3.அவன் தீங்கின் செயல் நமக்குள் வந்து
4.அவன் உணர்வு வலிமையாகி நம்மை இயக்கும் பொழுது
5.அவன் தான் தவயோகியாகின்றான்.

அப்பொழுது நமக்குள் என்ன இருக்கின்றது…?

ஆகவே இந்த அருள் ஞானத்தின் வலிமை கொண்டு தாங்கும் சக்தி வர வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதைத் தான் வலிமையாக்க வேண்டும். அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்றைய செயல் நாளைய சரீரம்…!

1.அருள் ஒளியின் உணர்வு கொண்டு ஒளியின் சரீரமாக
2.இனி அகண்ட அண்டத்தில் என்றும் நாம் வாழ முடியும் என்ற நிலையை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதனாக ஆன நாம் இதைச் செயலாக்கும் தன்மைக்கே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கைக்காகச் செல்வம் தேவைப்படுகின்றது, ஆனாலும் நாம் சேர்த்து வைக்கும் செல்வம் எதுவுமே நம்முடன் கடைசியில் வருவதில்லை.

பொருளில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை… அருளில்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை…! என்கிற பொழுது அருளை வளர்க்கப்படும் பொழுது அந்த உலகம் அமைகின்றது. பொருள் இருக்கும் பொழுது இந்த உலகத்தில் மகிழ்ச்சியின் தோற்றம் வருகின்றது.

1.பொருள் குறைந்து விட்டாலோ மதிப்பு இழக்கப்படுகின்றது
2.அன்றே நமக்குள் சோகம் குடிகொண்டு விடுகின்றது
3.வேதனை என்ற உணர்வே வளர்கிறது.
4.இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் கடந்து பழக வேண்டும்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் மக்களுக்கு இந்த அருள் ஞானத்தைப் பற்றி எடுத்துச் சொல்தல் வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.நம் குருநாதராக மாற வேண்டும்
2.அகஸ்தியராக மாற வேண்டும்
3.துருவ மகரிஷியாக மாற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக அந்த ஒளிச் சரீரம் பெறும் தகுதி பெற வேண்டும்.

ஆகவே இதன் வழிப்படி உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். ஏனென்றால் இன்றைய உலகம் மிகவும் விஷத் தன்மை கொண்டதாகப் பரவிக் கொண்டிருக்கின்றது… மனிதனை அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

அந்த விஷம் நம்மை வீழ்த்தி விடாதபடி இனி இந்த உடலே ஒளியின் சரீரமாக… என்றென்றும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் தன்மை வர வேண்டும்.

1.இந்த விஞ்ஞானத்தின் விளைவுகளால் உலகம் தவிக்கப் போகின்றது.
2.மனிதனுடைய சிந்தனைகள் காட்டு விலங்குகளைப் போன்றே சிந்தனைகள் வந்துவிடப் போகின்றது
3.(இதை ஞானகுரு உபதேசித்த வருடம் 1997 – இன்று அந்த நிலை வந்துவிட்டது)

இதிலே எல்லாம் நாம் சிக்கிடாதபடி ஒவ்வொருவரும் அகஸ்தியராகிடல் வேண்டும்… ஒவ்வொருவரும் துருவ மகரிஷியாகிடல் வேண்டும். மக்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.

அவர்கள் எப்படியும் வளர வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எடுக்க வேண்டும். நாம் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்ட பின்
1.வாய் கொண்டு சொல்லக்கூட வேண்டியதில்லை.
2.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானம் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எடுத்துப் பாய்ச்சி
4.நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாளடைவில் வளர்க்கப்படும் பொழுது அவர்களும் நம்மை அணுகுவர். அவர்கள் அணுகினால் அவருக்கு இலாபம். அணுகவில்லை என்றால் நாம் “வருத்தப்பட வேண்டியதில்லை…”

1.ஆகவே அவர்கள் எப்பொழுதும் பெறுவார்கள்…! என்ற உணர்வை மட்டும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் போதும்.
2.இந்த நல்ல செய்தியை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டேன்..! என்கிறார்கள் என்ற எண்ணத்தை
3.நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அனைவரும் பெறும் தகுதியைப் பெறும் காலம் வரும்…! என்ற முழுமையான நிலையை… “அந்த நம்பிக்கையுடன்…” நாம் இருத்தல் வேண்டும்.

பொதுவாகப் பெண்கள் நீங்கள் ஒவ்வொரு இடத்திலேயும் அணுகும் பொழுதெல்லாம் நீங்கள் அகஸ்தியராக மாறவேண்டும். குறைகளை வளர்த்திடவே கூடாது. குறைகள் இருந்தால் அதை நீக்கும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் பண்புகளை வளர்க்க வேண்டும். அவர்கள் எல்லாம் அப்படித்தான்…! என்ற நிலைகளில் உடனே சொல்லிவிடக்கூடாது.
1.குறைகளை நாம் கேட்டாலும்..
2.மனதில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் ஒருவர் நம்மிடம் ரொம்பவும் பழகி விட்டார் என்றால் அவர் சொல்வதை மட்டும் அதிகமாக வைத்துக் கொள்வோம். அப்புறம் அவர் சொல்வதை வைத்து அடுத்தவரைக் கணித்தோம் என்றால் அவரைக் குற்றவாளியாக்குவோம்.

ஆகவே அவர்கள் இருவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படும் உணர்வையே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். “ஒன்றி வாழும் நிலையே வளர வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படிப்பட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எல்லாம் ஒன்று என்ற நிலைகள் உணர்தல் வேண்டும். யாரும் பிரிந்து வாழவில்லை.

நண்பர் நன்றாக இருக்க வேண்டும்…! என்று நாம் எடுத்துக் கொண்டால் அந்த நல்ல சக்தியும் வளர்கின்றது.

ஆனால் நண்பர் இப்படித் தியான வழியில் இருந்தும் குறையாகி விட்டார்…! என்று அந்தக் குறையின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்தக் குறையின் உணர்வே நமக்குள்ளும் வளர்கின்றது.

1.நண்பர் உயர வேண்டும்…!
2.அதன் வழி குரு அருள் அங்கே அவருக்குக் கிடைக்க வேண்டும்
3.தியானத்தின் மூலம் அவர் எடுத்துக் கொண்ட நல்ல பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை
4.இப்படித்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

August 2025 – உபதேசம்

உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”

 

நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டோம் என்றால் அந்தப் பொருளின் மணமே அதிலிருந்து வரும். அதைப் போன்று நம் உயிரிலே எந்தச் சத்தைப் போடுகின்றோமோ அந்தச் சத்தின் மணமே வெளிப்படும்.
1.நமது உயிர் நெருப்புக்குச் சமம்.
2.மனிதனான பின் இந்த உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”
3.உயர்ந்த உணர்வு வரும் போது அது நமக்குள் அது திரும்பி வர வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அந்த உணர்வு தான் நம் உடலுக்குள் பாய்ந்து அந்த வேதனையின் இயக்கமாக இங்கேயும் மாறுகின்றது.

அதே சமயத்தில் வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தோம் என்றால்… நம் வேதனை நீங்கி ஒளி என்று அறிவாகும் தன்மையாக… நமக்குள் நஞ்சு கலக்காது நஞ்சு வளராது தடுத்துக் கொள்ளும் சக்தியாக அது வருகின்றது.

மனிதனில் இப்படி வளர்ந்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது. அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நீங்கள் எடுத்துப் பழகுவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்.
1.”ஏராளமாக…” அங்கிருந்து விளைந்து வருகின்றது.
2.எடுத்துப் பழகினால் உங்களுக்கு நல்லதாகும்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றி… தீமைகளை அடக்கி நமக்குள் மகிழ்ந்து வாழும் சக்தியாக என்றும் ஏகாந்த நிலையாகப் பெறச் செய்யும். ஏகாதசி என்றால் எதுவுமே நம்மைத் தாக்காத நிலை பெறலாம். ஏகாதசி விரதம் என்றும் சொல்வார்கள்.

நாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாம் பார்த்த குடும்பம் எல்லாம் பேரருள் பேரொளி பெற வேண்டும். இருளை அகற்றிப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் பொழுது
1.எல்லோருடைய உணர்வு நமக்குள் இருக்கின்றது.
2.அவர்கள் பகைமையை நாம் எடுப்பதில்லை.
3.நமக்குள் இருக்கும் அந்த அணுக்களுக்கு அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே இருக்கும்.

நோய் என்று வரும் பொழுது எப்படி டாக்டர்கள் இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்கின்றார்களோ இதைப் போன்றே உயிர் வழி கவர்ந்து நம் உடல் உறுப்புகளில் இணைக்கப்படும் போது அந்த அணுக்களை நாம் நன்மை செய்யக்கூடியதாக மாற்றியமைக்க முடியும்.

எப்படி இன்ஜெக்ஷன் செய்கின்றார்களோ அதைப் போன்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்தால் “அது தான் முக்கண்…!”
1.நாம் புறத்தால் பார்க்கின்றோம் அதையே… உயிருடன் சேர்த்து எண்ணப்படும் பொழுது உயிர் வழி நாம் இயக்க முடியும்.
2.அதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வை இயக்கப்பட்டு எளிதில் பெறுவதற்கு இப்படிக் கொடுப்பது.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை. எனக்கு அந்த நினைவு வருகின்றது இந்த நினைவு வருகிறது என்று எதையும் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினாலே போதுமானது. இந்த உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும். உடலில் வரும் சிரமங்களைப் போக்க முடியும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடல் அழியக் கூடியது தான்.
1.உயிர் அழிவதில்லை…! அழியா உயிருடன் ஒன்றி அழியா உணர்வு பெற்ற அந்த மகரிஷியின் உணர்வுகளை எடுத்து
2.வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தப் பேர்ருள் பேரொளி உணர்வைக் கவர்ந்து நமக்குள் சேர்த்தால்
3.உடலின் ஆசைகளை விடுத்து ஒளி என்ற உணர்வின் தன்மை இணைத்து பிறவி இல்லா நிலை அடையும் சக்தி பெறுகின்றோம்.

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

 

நாம் நன்றாகத்தான் இருக்கின்றோம். இரு நண்பர்களுக்குள் ஆகவில்லை. ஆனால் அவரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

என்னங்க…! நீங்கள் இவ்வளவு உதவி செய்கின்றீர்கள்… உங்களைப் பற்றி அவன் கேவலமாகப் பேசுகின்றான்…! என்பார்கள்.

நாம் “அப்படியா” என்போம்.

அவர்களுக்கு அந்த நண்பன் ஆகவில்லை.
1.நாம் செய்யும் உதவி அவனுக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக நம்மிடம் இப்படிச் சொல்கிறார்கள்.
2.ஆனால் சொன்னவுடன் நாம் மோப்பம் பிடிக்கின்றோம்.

கருப்பண்ணசாமிக்கு முன் என்ன இருக்கின்றது…? நாய் இருக்கின்றது… கையிலே அரிவாள் இருக்கின்றது.

நம்மைத் தவறாகச் சொல்கிறான் என்று அவர் சொன்ன தீமையான உணர்வுகளை நாம் கேட்டபின் “உடனே நம் மனம் இருண்டு விடுகின்றது…”

நாய் என்ன செய்கின்றது…? யார் அதை வளர்த்தார்களோ அதற்கு விசுவாசமாக இருக்கின்றது.
1.எதன் உணர்வை மோப்பம் பிடித்ததோ உடலுக்குள் சேர்த்துக் கொண்டதோ
2.அதன் உணர்வின் தன்மைக்கு விசுவாசமாக இருக்கின்றது.

இவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவன் சொன்னான். ஆனால் நாமோ “இருக்கட்டும் பார்க்கின்றேன்…” என்ற இந்த உணர்வை… நல்லதை நீக்கிவிட்டு அந்தப் பகைமையான உணர்வுகளை உருவாக்கி விடுகின்றது.

பரசுராம் என்று வரும் பொழுது தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்ற நிலையினை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இருந்தாலும்… மனித வாழ்க்கையில் அவன் சுகத்திற்காக இவ்வாறு தீமைகளைச் செய்யப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலேயே நமக்குள்ளும் தீமைகளை உருவாக்கி விடுகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவரும் பெறட்டும்… தெளிந்த மனம் பெறட்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர் பெறட்டும் என்று எண்ணி விட்டோம் என்றால்
3.அவர் சொன்ன உணர்வு நமக்குள் குரோதமாக ஆக்காது.

இப்படி மாற்றவில்லை என்றால்… அவர் சொன்னதைப் பதிவாக்கிய பின் அவரைப் பார்த்தாலே மோப்பம் பிடிப்போம். பிறகு எதையாவது பேசினோம் என்றாலும்… இந்த மாதிரிச் சொன்னீர்கள் அல்லவா… என்று அந்தப் பதிவு நினைவாகி “மீண்டும் பகைமையை உண்டாக்கிவிடும்…”

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாது சந்தர்ப்பத்திலே ஊருவாகுவதைக் காட்டுவதற்குத் தான்
1.கருப்பணசாமியை வைத்து அந்த உணர்வின் இயக்கங்களை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
2.இருண்ட நிலையாக நமக்குள் உருவாகிவிடுகிறது என்பதை இப்படிக் காட்டுகின்றார்கள்… நல்லதைக் காக்க முடியாது போய் விடுகின்றது.

மேலும் கருப்பண்ணசாமிக்கு ஆட்டைப் பலி கொடுப்பதும் மற்றதையும் செய்தால் அவன் நம்மைக் காப்பான் என்று… ஞானிகள் கொடுத்த உண்மையின் உணர்வுகள் எல்லாம் “தலை கீழாக மாறிய நிலையில் தான் இன்று உள்ளது…”

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

 

கோவிலில் தெய்வச் சிலையை அலங்காரம் செய்வதற்கு முன்னாடி அபிஷேகம் செய்கின்றார்கள். சிலை மீது பாலை ஊற்றுகின்றார்கள் சந்தனத்தை ஊற்றுகின்றார்கள் கனி வர்க்கங்களைக் கரைத்து ஊற்றுகின்றார்கள் கடைசியில் நன்னீரை விட்டுக் கழுவுகின்றார்… அப்புறம் பன்னீரை ஊற்றுகின்றார்கள்.

சிலைக்கு எதற்காக இதைச் செய்கின்றார்கள்…? ஆனால் அப்போது நாம் என்ன செய்கின்றோம்…?

இங்கே வீட்டிலே கோரிக்கை வைக்கின்றோம். எப்படி…?

என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று பாலாபிஷேகம் செய்யப் போகிறோம். விவசாயம் சரியாக வரவில்லை… என்னிடம் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்று அதற்காக வேண்டி ஆண்டவனுக்குப் பஞ்சாமிர்தத்தை ஊற்றி அபிஷேகம் செய்து… குறைகளை எல்லாம் அங்கே சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்று அவனை (தெய்வத்தை) திருப்திப்படுத்துவதற்காகச் செயல்படுத்துகின்றோம்

இருந்தாலும்… இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று தான் சிலையாக அங்கே வடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை மீது தான் இத்தனையும் ஊற்றுகின்றார்கள்… பார்க்கின்றோம். ஏன்…?
1.ஊற்றுவது பால் என்று தெரிகிறது… பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
2.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.என் பையனுக்குத் தீமையை நீக்கிடும் பாலைப் போன்ற அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும்.
4.கணவன் மனைவிக்குள் சில குறைபாடுகள் இருக்கும். என் கணவருக்குப் பாலை போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும்.
5.அவர் சொல்லிலே இனிமை வர வேண்டும். சந்தனத்தைப் போன்ற நல்ல நறுமணம் பெற வேண்டும் என் கணவருக்கு.
6.இந்த ஆலயம் வருவோர் குடும்பங்கள் அனைவருக்கும் அந்தப் பாலை போன்ற மனம் பெற வேண்டும் என்று
7.பாலாபிஷேகம் செய்யும் பொழுது யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…?

ஏனென்றால் அப்படிச் சுவாசித்தால் நம் உயிருக்கு அந்த அபிஷேகம் நடக்கின்றது. இந்த உணர்வுகள் இரத்தத்திலே கலந்து அமுதாக… உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரமாக அது கிடைக்கின்றது. நல்ல வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது.

1.கண்களிலே பார்ப்பது துவைதம்.
2.அதிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தால் அத்வைதம்.
3.நுகர்ந்து உயிரிலே பட்டால் விசிஷ்டாத்வைதம்.

நாம் எந்த மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு ஆகாரத்துடன் சேர்த்து உடலாக மாறுகின்றது. உயர்ந்த குணங்களை உனக்குள் உருவாக்கு… “துவைதம் உடல்…”

தெரியாத மக்களுக்குத் தெரிய வைக்க… “சூட்சுமத்தில் நடக்கும் உண்மைகளை” உருவம் அமைத்து அந்த உணர்வின் சக்தியை நாம் பெறுவதற்கு ஞானிகள் அதை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

யாராவது கொஞ்ச நேரம் இவ்வாறு எண்ணி எடுக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

என் கணவருக்குப் பாலை போலச் சந்தனத்தைப் போல பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெற வேண்டும். எனக்கும் அந்த தெளிந்த மணம் பெற வேண்டும். கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் இப்படி எண்ணி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மணம் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணி எடுக்கும்படி… ஆபிஷேகிக்கும்படிச் சொல்லி உள்ளார்கள்.

யாருக்கு…? “நம் உயிருக்கு…!”

அதற்குத்தான் இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டியுள்ளார்கள். காரணப் பெயரை வைத்துச் சிலையை வைத்து ஊற்றும் பொழுது அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் எண்ணி ஏங்குவதற்குத் தான் நறுமணமானதை அங்கே ஊற்றினார்களே தவிர… ஊற்றி முடித்த பின் அந்தத் தீர்த்தத்தைப் பிடித்துச் சென்று குடிப்பதற்கு அல்ல… அதை பிடித்து நம் வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு அல்ல…!

இதை நமக்குள் எடுத்து இந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்துவதற்குச் செய்தான் ஞானி.

இன்று டாக்டர்கள் என்ன செய்கின்றார்கள்…? நோய் என்று தெரிந்தால் இன்ஜெக்க்ஷனைப் போட்டு இரத்தத்தில் தான் அந்த மருந்தைக் கலக்கும்படி செய்கின்றார்கள்.

அது ஜிர்ர்… என்று போய் நல்ல அணுக்களுக்கு வீரியத்தை ஊட்டுகின்றது. அதற்குண்டான உணவைக் கொடுத்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது அதனுடன் இணைத்து நோய்க்குக் காரணமான அணுக்களை வலு இழக்கும்படி செய்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் என்ன செய்தார்கள்…? அங்கே தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.உற்றுப் பார்த்து அந்த உயர்ந்த மணத்தை நாம் சுவாசித்து
2.உயர்ந்த சக்திகளை நம் இரத்தத்திலே எப்படிக் கலக்க வேண்டும்…? என்று அபிஷேகம் செய்து காட்டுகின்றார்கள்.

அவ்வாறு அதை நுகர்ந்து எடுத்தால் நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் ஆகின்றது. மகிழ்ச்சியூட்டும் உணர்வின் உணர்ச்சிகளாக அதன் வழி நம்மை இயக்குகின்றான்.

நாம் இப்படி எண்ணும் உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது உயிரிலே படும் பொழுது அரங்கநாதன். எந்த உணர்ச்சியின் உணர்வோ ஆண்டாள். “அந்த உயர்ந்த உணர்வுகள் நம்மை ஆளத் தொடங்குகிறது…”

“நம்முடைய எண்ணமே நம்மை ஆளுகின்றது” என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.நமது சாஸ்திரங்களில் பொய்யில்லை.
2.ஆனால் நாம் மெய்யைப் பொய்யாக்கி விட்டு… பொய்யைத் தான் இன்று மெய்யாகச் செய்து வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும்

 

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகி விடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும் நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும் போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும் போது “அரங்கநாதன்…”
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது “ஆண்டாள்…”

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப் போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.

1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து
2.பல வித்துகளை உருவாக்குவது போல
3.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாகி விடுகின்றது.

ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.

“கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய்
1.இந்த மாதிரி… எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்…
2.“ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும் போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகி விடுகின்றது.

1.ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
2.அந்த “நல்லது சொல்வது” என்பது சிறிது காலம் இருந்தாலும்
3.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
4.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
5.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

ஆக முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம்.

பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்த பின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும். அதைத் தான் “விநாயகர் சதுர்த்தி” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

சதுர்த்தி என்றால் “நிறுத்தி” என்று பொருள்.

1.தீமையான வினைகள் (வித்துக்கள்) நமக்குள் விளையாமல் “நிறுத்தி”
2.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து “அதை வினையாக்கி”
3.”ஞானக்கனியாக” நமக்குள் விளைய வைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உணர்த்திய விநாயகர் தத்துவம்.

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

 

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
2.என் பையன் ஞானியாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
3.என் குழந்தைகள் உடல் நலமாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
4.என் தொழில் வளமாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று
5.இதைத் தான் நீங்கள் என்னிடம் வாக்காகக் கேட்டுப் பெற வேண்டும்…. கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

ஆனால் இப்படிக் கேட்பதற்குப் பதில் கஷ்டம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் முதலில் இருளாகிவிடும். அப்போது நான் சொல்லும் உயர்ந்த வாக்குகள் உங்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.

இதை எதிர்த்துத் தள்ளி விடுகின்றது. கஷ்டம் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நல்ல வாக்குகளை அது உள்ளே விடுவதில்லை. ஏனென்றால் அது வாலியாக மாறி விடுகின்றது.
1.உங்கள் எண்ணமே நல்லதைப் பெற முடியாதபடி தடுக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
2.இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு நல்லதை வேண்டிக் கேட்டுப் பெறும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வீக குணம் பெற வேண்டும் கொவிலுக்கு வரும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். கோயிலை அவமதிக்காதீர்கள்.

நம்மைத் திரிந்து வாழச் செய்யும் நிலையில் நமக்குள் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் பகைமையிலிருந்து மாறவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் தான் கோவில் என்ற நிலையில் அதை மதித்து நடங்கள்.

ஆகவே நான் சொல்வதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.உங்களுடைய நினைவு கொண்டு தான் மீண்டும் அதை எண்ணி எடுக்க வேண்டும்.

திட்டியவனை நினைத்தவுடன் அவனுடைய உணர்வுகள் உடனடியாக உங்களுக்கு வருகிறது அல்லவா. கோபம் வருகிறது காரியமெல்லாம் கெடுகிறது… அங்கேயும் புரையோடுகிறது காரியங்கள் கெடுகிறது.

பிள்ளை மீது பாசமாக இருந்து என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்ற துன்பப்பட்டால் அந்த வேதனையால் உங்கள் செயல்கள் தடுமாற்றம் ஆகின்றது.

நீங்கள் அந்த வேதனையுடன் சமையல் செய்தீர்கள் என்றால் சூடாக இருக்கும் பாத்திரம் பொங்கி வரும் போது சரியான முறையில் ஆதைக் கையாளாதபடி உடுத்தியிருக்கும் துணியில் தீ கூடப் பிடித்து விடும்.

காரணம்…
1.சிந்தனை இல்லாத உணர்வு கொண்டு அவசரப்பட்டு இயக்கப்படும் பொழுது நமக்கே அது தீங்கு விளைவிக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
2.ஏனென்றால் வேதனை என்பது விஷம்… சிந்திக்கும் தன்மையை அது இழக்கச் செய்து விடும்.

ஆகவே அடுத்தடுத்து அடுத்தடுத்து “கஷ்டம் என்ற நிலையினை உள்ளே விடாதபடி” மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நான் பார்ப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் எங்களுக்குள் அருள் ஞானம் வளர வேண்டும்… என்று அதிகாலையில் இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள்.

பகைமைகள் அகலும்… மனம் ஒன்றாகும். இருளைப் போக்கும் அருளைப் பெருக்கும். பேரருள் பேரொளியாக வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகைய ஆனந்தத்தை நீங்கள் பெறுங்கள்.

நான் பதிவு செய்த நிலைகள் கொண்டு எண்ணி எடுத்துப் பாருங்கள்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படிக் கரைகின்றதோ அதைப் போல் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்த்தால் அது உங்கள் கவலையையும் வேதனைகளையும் கரைத்து உங்களைச் சிந்திக்கச் செய்து ஆற்றல் மிக்க வலிமையைக் கொடுக்கும்.

அந்த வலிமை பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு கோவில்
2.அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் வெளிப்படுத்துகின்றேன்.
3.அதே ஆசையுடன் நீங்கள் அருள் சக்திகளை நுகர்ந்தால் அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
4.சிந்திக்கும் தன்மை வருகின்றது… அருளைப் பெருக்க முடிகின்றது… அருள் வாழ்க்கை வாழ முடிகின்றது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பெரருள் பேரொளி பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்திகள் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றோம்…!

சிலருக்கு அந்த அணுக்கருவின் தன்மை வலுவாக வளர்ந்திருக்கும். ஆகவே அந்த வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது அவர்களால் துருவ நட்சத்திர ஒளி அலைகளைக் காண முடிகின்றது. நுகரும் பொழுது அபூர்வ மணங்களையும் சுவாசிக்க முடிகின்றது.

இருந்தாலும் சிலரால் இதை உணர முடியாத நிலைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்
1.தியானத்தில் நமக்கு ஒன்றும் தெரியவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்தையே விட்டுவிடுங்கள்.
2.நாம் நிச்சயம் பெறுகின்றோம்… பெற்றுக் கொண்டிருக்கின்றோம்…!

ஒரு தோசையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடியில் தணல் அதிகமாகிவிட்டால் ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது. கருகிய பக்கம் நாம் தோசையைப் பிரட்டினால் சட்டியில் ஒட்டிக் கொள்கிறது… சீராக நாம் தோசையை எடுக்க முடிவதில்லை.

அதற்கு நாம் என்ன செய்கின்றோம்…? நீரைத் தெளிக்கின்றோம். ஒட்டிய இடங்களில் எண்ணையைப் போட்டுத் தேய்த்து எண்ணைய் பசையைக் கொண்டு வருகின்றோம்.

அப்பொழுது அந்தச் சூட்டின் தன்மையை அங்கே சமப்படும் பொழுது அடுத்து தோசையைச் சுடும் பொழுது கருகாதபடி சட்டியில் ஒட்டாதபடி சீராக வருகின்றது.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் சிலருக்கு எத்தனையோ விதமான கொதித்தெழும் உணர்வுகள் உடலிலே வளர்ந்திருக்கும்.

1.என்னை மோசம் செய்தார்கள்…
2.என்னை எப்படியெல்லாம் சங்கடப்படுத்தினார்கள்…? கேவலப்படுத்தினார்கள்..?
3.இன்றும் எப்படி எப்படித் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்…? என்ற
4.ஆவேச உணர்வுகள் தொடர்ந்து உள்ள அவர்கள் உடல்களில்
5.தியானத்தில் ஒளி அலைகளையோ… மணங்களையோ… அறிவது கொஞ்சம் கடினம்.

ஏனென்றால் தியானம் இருக்கும் பொழுதே அந்தத் தியான நினைவே இருக்காது. டக்… என்று வேறு வேறு பக்கம் நினைவுகள் சென்றுவிடும்.

இரண்டு வார்த்தை மூன்று வார்த்தை சொல்லும் பொழுது இருக்கும் நினைவுகள் அடுத்து… அதற்கப்புறம் தொடர்ந்து… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகரவிடாதபடி அசையாது நிறுத்திவிடும்.

இல்லை என்றால் தியான நினைவு வரப்படும் பொழுது ஏற்கனவே பட்ட சங்கட அலைகளோ வெறுப்பு அலைகளோ ஊடுருவும்.

தியானமிருக்கும் பொழுது
1.அடுத்து அங்கே போக வேண்டும்…
2.இதைப் பார்க்க வேண்டும்… அதைச் செய்ய வேண்டும்… தொழிலைச் சீராக்க வேண்டும்…
3.குடும்பத்தில் பையனோ பிள்ளையோ இப்படி இருக்க வேண்டும் என்ற இந்த அலைகள் வந்தால்
4.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வராது தடுத்துக் கொண்டே இருக்கின்றது என்று பொருள்…!

தியானத்தில் இப்படி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட அடுத்து நாம் தியானிக்கும் பொழுது மீண்டும் கண்களைத் திறந்து கண்ணின் நினைவு கொண்டு அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த நினைவை மறக்காது எடுத்துப் பழக வேண்டும்.

மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

உங்கள் அனைவருக்குமே அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் தான் யாம் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசிக்கின்றோம்.. தவமிருக்கின்றோம்.

உபதேசிக்கும் இந்த உணர்வுகளை யாரெல்லாம் உற்று நோக்கி உணர்வைக் கூர்மையாக எண்ணுகின்றார்களோ அவர்கள் உடலில் உள்ள ஊன்களில் ஞான வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.

1.“பதிவானதை மீண்டும் மீண்டும் எண்ணினால்…”
2.உங்கள் நினைவாற்றல் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே செல்லும்.
3.அந்த ஒளி அலைகளையும் மணங்களையும் நுகர முடியும்… காண முடியும்.

ஆகவே ஞானிகளைப் பற்றிய பதிவுகள் என்பது மிகவும் முக்கியம்…! “ஞான வித்து நம் உடலிலே ஊனிலே பதிந்திருந்தால் தான்…” அந்தச் சக்திகளைக் கவர முடியும்.

நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் “இப்பொழுது தேவை”

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன்.

நம்மால் முடியவில்லை என்றாலும்… வீட்டில் கர்ப்பமானால் அந்தப் பத்து மாதமாவவது அமைதியாக இருந்து
1.அகஸ்தியன் பெற்ற அருள் கருவிலே இருக்கும் சிசு பெற வேண்டும்
2.உலகை அறிந்த அகஸ்தியனுடைய அருள் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்
3.துருவத்தின் ஆற்றலைp பெற்ற அந்த அருள் சக்தி கருவிலிருக்கக்கூடிய சிசு பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக ஆன அந்த ஒளியான உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய சிசு பெற வேண்டும் என்று
5.காலையில் 6:30 மணிக்குள்ளாவது ஒரு பத்து நிமிடமாவது எண்ணிப் பாருங்கள்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பகைமைகளை மறந்து விடுங்கள்… ஞானிகளை உருவாக்குங்கள். அவன் உருவாக உங்கள் குடும்பத்தில் சாப அலைகளோ பாவ அலைகளோ பூர்வ ஜென்ம அலைகளோ அத்தனையும் நீக்கும் மகரிஷியாக அவன் உருவாகின்றான்.

விஞ்ஞான உலகில் காற்று மண்டலத்தில் பரவி உள்ள நச்சுத்தன்மையை நீக்க… பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கியது போன்று… வளர்ச்சியில் மனிதனாக எப்படி அது உருவானதோ…
1.ஞானி அவன் வாழ்க்கையில் தனக்குள் வந்த இருளை நீக்கி ஒளியாக எப்படி மாற்றினானோ அதன் உணர்வை
2.கருவில் வளரும் அந்தச் சிசுவிற்கு ஊட்டினால் அவன் இருளை அகற்றி ஒளியான உணர்வை நமக்கு ஊட்டுவான்… இந்த உலகைக் காப்பான்.

ஆகவே உலகைக் காத்திடும் மகரிஷிகளை நாம் உருவாக்குதல் வேண்டும்

அகஸ்தியன் தெரிந்து அந்த ஆற்றல்களைப் பெறவில்லை. தாய் கருவிலே நுகர்ந்த உணர்வு தான் அவனை இயக்கியது.

அவன் பெற்ற சக்தியை எடுத்துக் கர்ப்பிணியின் செவிகளிலே ஓதுங்கள். கர்ப்பிணியை எண்ணி எடுக்கும்படி செய்யுங்கள்… சுவாசித்து உமிழ் நீராக உருவாக்குங்கள்… அதைக் கருவில் இருக்கும் சிசுவிற்கு ஊட்டுங்கள். அருள் ஞானியை உருவாக்குங்கள்.

இப்படி உருவாக்கினால் விஞ்ஞான உலகில் வரும் அசுரத் தன்மைகளை நீக்க முடியும். காரணம்… இன்று உலகெங்கிலும் நரமாமிசத்தைச் சாப்பிடும் அளவிற்கு மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகள் சென்று விட்டது.

குழந்தைகள் கருச் சிதைவானால் சிதைந்த உடலை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள் சீனாவிலே. அதை முதியவர்கள் சாப்பிட்டால் வலிமை பெறுவார்கள் என்று இப்படி நம்பிக்கையை ஊட்டி தாய்லாந்து நாட்டிலும் மற்றும் நீக்ரோக்கள் வாழும் நாடுகளிலும் ரஷ்யாவிலும் ஏன் அமெரிக்காவிலும் கூட இப்படி அறிவிலிகளாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால்… இந்த உடல் எத்தனை காலம் வாழ்கிறது…? என்று எண்ணுகின்றான்…! அதே சமயத்தில் விஞ்ஞானி பல உணர்வுகளைச் சேர்த்து மனிதனை 1500 வருடம் வாழ வைக்க முடியும் என்று நினைக்கின்றான்,

அவ்வளவு காலம் வாழ்ந்தால் இவனுடைய எண்ணங்கள் ஆசையின் பால் சென்று நிராசையாகி வேதனையின்பால் செல்லப்படும் பொழுது “அந்த வேதனையைத் தான் வளர்க்க முடியும்…” என்பதை மறந்து விட்டார்கள்.

இது போன்று உலகம் சென்று கொண்டிருக்கும் இத்தகைய நிலையில் இருந்து மக்களை மீட்ட அருள் ஞானிகளை நாம் ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அதிகாலையில் எடுத்துப் பழகுங்கள். உங்களுக்குள் பதிவான நிலைகள் கொண்டு கருவிலே இருக்கும் சிசுவிற்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.அகஸ்தியன் பெற்ற அருளை அவன் பெற வேண்டும்
2.அவன் துருவத்தின் ஆற்றல் பெற்றதை இந்தக் குழந்தை பெற வேண்டும்
3.இருளை நீக்கி ஒளி என்ற உணர்வாகப் பிறவி இல்லாத நிலை அடைந்த அந்த அருள் சக்தி பெற வேண்டும்
4.உலக இருளை நீக்கும் ஞானியாக வரவேண்டும்
5.அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வரும் அந்த மகரிஷியாக வேண்டும் என்று
5.”இது போன்ற ஆயிரம் அகஸ்தியர்களை நாம் உருவாக்க வேண்டும்…”

அன்று ஒரு சமயம் பூமி நீளவாக்கிலே வளர்ந்து வரும் பொழுது தலைகீழாக்க் குடை சாயும் நேரத்திலே அகஸ்தியன் அவனுடைய திறமையால் பூமியைத் திசை திருப்பிச் சமப்படுத்தினான்… சீராக்கினான்.

தென் துருவம் வட துருவம் சில பகுதிகளில் உறை பனி உருவாவதைச் சமப்படுத்தி இன்று வரை இந்த பூமியைச் சீராக இயங்கும்படி செய்துள்ளார்.

இரண்டு நட்சத்திரத்தினுடைய சக்திகள் எதிர்மறையாகி மோதலாகி மின்னலானால் மரத்தைக் கருக்குகின்றது. கடலில் பட்டால் மணல் ஆகின்றது. பூமிக்குள் ஊடுருவினால் கொதிகலனாக மாறுகின்றது.

ஆனால் கடலில் இவ்வாறு விளைந்த மணலை விஞ்ஞானி எடுத்து யுரேனியமாகப் பிரித்து எதிர்நிலையான உணர்வுகள் மோதம்படி செய்து மீண்டும் மின்னலைப் போல கதிரியக்கங்களை உருவாக்கச் செய்து மின் கதிர்களாக மாற்றுகின்றான்.

மனித உடலுக்குள் இது மோதும்படிச் செய்து மனிதனையே கரைக்கும் தன்மையும் மரத்தைக் கரைக்கும் நிலையம் கல் மண் அனைத்துமே அதற்குள் தாக்கப்பட்டு அதிலிருக்கக்கூடிய கதிரியக்கங்கள் ஒன்று சேர்ந்து கரைந்து போகும் படி செய்கின்றான்.

அந்த அளவுக்கு இன்று விஷத்தன்மைகள் வளர்ந்து விட்டது.

1.மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் நம் பிரபஞ்சத்தில் சூரியனால் அது கவரப்பட்டு
2.பூமி கொதிகலனாகி நிலநடுக்கம் ஆவது போன்று சூரியனுக்குள்ளும் எதிர்நிலையாகிக் கரும் புகைகளைக் கக்கிக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய விஷத்தன்மைகள் மோதப்படும் பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் பரவி இரு நிலையான மோதலாகி… எப்படி மின்சாரம் செல்லும் வயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இரு மடங்கு மின்சாரமாகின்றதோ இதைப் போன்று சூரியனுக்குள் அது இரு மடங்கு இயக்கச் சக்தியாகி….
1.இந்த விஞ்ஞானமும் அழியப் போகின்றது.
2.மனிதன் உயிரின் துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது… சிந்தனைகள் கருகப் போகின்றது.
3.மிருக உணர்வு கொண்ட நிலையில் விஷத்தன்மை கொண்ட மனிதர்களாகத் தன் இனத்தைப் புசிக்கும் அளவிற்கு வந்துவிடும்.

தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டு அதைக் கண்டு ஆனந்தப்படும் நிலையாக வந்துவிட்டது.

எங்கே சென்றாலும் இது போன்ற விஷ உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் எந்தச் செல்வத்தைத் தேடப் போகின்றோம் எதைக் காக்கப் போகின்றோம்…?

அழியாச் செல்வமான அந்தப் பேரருளை நீங்கள் பெற்று இருளை மாய்த்திடும் தன்மை பெற்று வீட்டிலே கர்ப்பமாக இருக்கும் அந்த கருவில் வளரும் சிசுக்கள் மகானாக வேண்டும் என்று அவர்களை மகரிஷியாக உருவாக்குங்கள்.

இது போன்ற ஆயிரம் குழந்தைகளை உருவாக்கினால் நீங்கள் வாழும் ஊருக்குள் விஷத்தன்மை புகாதபடி தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரம் எப்படி விஷத்தை ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போன்று இந்தக் குழந்தைகள் விஷத்தை மாற்றிடும் உணர்வின் அறிவாகப் படரச் செய்யும் பொழுது தொக்கி உள்ள மனிதர்களைக் காக்க முடியும்… தப்புவிக்க முடியும்.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்… நம்பிக்கையுடன் நீங்கள் செயல்படுங்கள்.

கர்ப்பம் என்று தெரிந்தாலே அந்தக் குடும்பத்தில் யாரும் சங்கடமே படக்கூடாது
1.சந்தோசம் வரவேண்டும்… ஞானி உருவாகின்றான் என்று…!
2.உலகைக் காக்கப் போகின்றான்
3.இருளை அகற்றப் போகின்றான்
4.மெய்ப்பொருளைக் காணப் போகின்றான்
5.அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லப் போகின்றான்
6.அவன் பார்வையில் சர்வ பிணிகளையும் நீக்கப் போகின்றான்
7.அத்தகைய கரு குடும்பத்தில் உருவாகின்றது என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்…
8.அந்தக் கர்ப்பிணியிடம் இதைச் சொல்லிப் பாருங்கள்… அற்புதம் நடக்கும்.

இன்றைய உலகம் இருக்கக் கூடிய சூழ்நிலை என்பது தலைக்கு மேல் கத்தியை தொங்க விட்டிருப்பது போன்று தான் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தாலும் அவர்கள் வெடிக்கவில்லை என்றாலும் தானாக வெடிக்கும் வாய்ப்புகள் வருகின்றது.

அவை வெடித்தால் பூமியே முழுமையாக நஞ்சின் தன்மையாகிவிடும். மனிதனுடைய உடலையே மனிதப் பிறவியை அழிக்கக்கூடிய நிலைகளாக வந்துவிடும். மனிதனல்லாத பிறவிக்குத் தான் செல்ல நேரும்.

ஆனால் அதற்குள் ஞானிகளை உருவாக்கி விட்டால்…
1.அவனுடைய நிழலால் நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்… அவன் மடிய மாட்டான்… நம்மை உந்தித் தள்ளுவான்.
2.நம்மை ஒளியாக்குவான்… பிறவியில்லா நிலையை அடையச் செய்வான் இருளைப் போக்குவான்.

ஆகவே… நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் இப்பொழுது தேவை. ஞானிகள் உலகமாக நாம் உருவாக்க வேண்டும். காலம் குறுகிக் கொண்டிருக்கின்றது.

அன்று அகஸ்தியன் கொடுத்த தத்துவங்கள் பெரும்பகுதி மறைந்து விட்டது. விஞ்ஞான உலகம் அழியும் தருணத்தில் உங்களுக்கு ஞானிகள் அருள் உணர்வுகளை உபதேசமாகக் கொடுக்கின்றேன்.

உடலை விட்டு அகன்று ஒளியாக நான் சென்றாலும்
1.எனக்குக் கிடைத்த சக்தி உங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் .என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றேன்.
2.நீங்கள் அனைவரும் ஞானியாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
3.நீங்கள் அவ்வாறு உருவானால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் செயலாக அமையும்.

உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… குரு வழியில் நீங்கள் எல்லோரும் அந்த நிலை பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன். அதன் வழி செயல்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மீன்களை ரசித்துச் சாப்பிடுவார்கள். சில மீன்களை வாங்கிச் சமையல் செய்யும் பொழுது பெண்கள் அதை அப்படியே உயிருடன் உராய்வார்கள்… போட்டுச் சுரண்டி அதை நரக வேதனைப்படுத்தி பின் வேக வைத்துச் சாப்பிடுவார்கள்.

1.எவ்வளவு தூரம் மீனை உராய்ந்து அதை இம்சை செய்தோமோ
2.உற்றுப் பார்த்துச் சுவாசித்ததை நம் உயிர் சும்மா விடுவதில்லை…!
3.அதன் உணர்வின் கருவாக நம் இரத்தத்தில் முட்டையாகி அது நாளடைவில் அணுவின் தன்மை அடைந்தால்
4.உராயும் பொழுது அதற்கு (மீனுக்கு) எப்படி எரிச்சலானதோ அந்த எரிச்சல் பெண்களுக்கு நிச்சயம் வரும்.

மீன் குழம்பை வைத்தவர்களுக்கு எல்லாம் பெரும்பகுதி மீனை உயிருடன் உராய்ந்திருந்தால் உடலில் எரிச்சல்… கை காலிலும் எரிச்சல் வரும்.

எம்மா… எரியுதே…எரியுதே…! என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் சென்றாலும் அதற்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்துச் சரி செய்ய முயன்றாலும் மீனை உயிருடன் போட்டுச் சுரண்டி உராய்ந்தவர்களுக்கு வரும் எரிச்சலை எந்த மருத்துவத்தாலும் நிறுத்த முடியாது.

நான் இந்த டாக்டரிடம் சென்றேன்… கேட்கவில்லை.. அடுத்த டாக்டரிடம் போனேன்…! அதுவும் கேட்கவில்லை.. என்று தான் சொல்வீர்கள்.

ஆக நம்மை அறியாமலே எரிச்சல் ஊட்டும் நிலைகள் கொண்டு நாம் ரசித்ததை இந்த உடலில் நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.

அத்தகைய உணர்வின் அணுக்கள் உடலிலே பிறந்து விட்டால் இதன் வழி உடலை விட்டு நாம் வெளியிலே சென்ற பின் அதற்குத் தகுந்த உடலைத் தேடி நம் உயிர் அழைத்துச் சென்று அதன் படியே அங்கே வளரும். அந்த உருவாகத் தான் உயிர் நம்மை உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்… கடவுள்… எங்கே இருக்கின்றான்..? நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்…? அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…!

ஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும்
1.நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும்
2.நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி…! என்று தான் நம்மைச் செலுத்துவான்.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு பெற்று வளர்ந்த நாம் இதைப் போன்ற கொடிய தீமைகளை எல்லாம் அப்புறப்படுத்தி அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்ப்பித்தால் அதையும் நம் உயிரே உருவாக்குகின்றான்.

நாம் எண்ணியது எதுவோ அந்த அருள் ஒளிகளை உருவாக்கி நமக்குள் சொர்க்கலோகத்தையே அமைக்கின்றான். இந்த உடலிலேயே சொர்க்கலோகத்தை உருவாக்குகின்றான்.

இந்த உடலை உருவாக்கிய பின்…
1.பழைய உடலைப் பிளந்து விட்டு
2.என்றும் பதினாறு என்ற நிலையை ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றான்.

இதை யார் உருவாக்குவது…? நம் உயிர் தான்,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள் வரும். அது எல்லாமே நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைவதனால் வருவது தான்…!.

1.தெரிந்து செயல்படும் உணர்வுகளும் நமக்குள் அணுக்கருவாக மாறுகின்றது.
2.நம்மை அறியாமல் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததும் அணுக்கருவாக மாற்றுகின்றது நம் உடலில்.
3.இப்படி நுகர்ந்தது (சுவாசித்தது) அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்றது தான் நம் உயிர்.

ஆகையினால் “விஷ்ணு…” வரம் கொடுக்கின்றான் என்று இதைக் காட்டுகின்றார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால் அணுவாகின்றது.

அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அது தன் உணவை எடுக்கின்றது. பின் தன் இனத்தைப் பெருக்குகின்றது. இது தான் “பிரம்மா…” உருவாக்குகின்றான்.

அதே சமயத்தில் உடலான “சிவன்..” அரவணைத்துக் கொள்கின்றான். உடலுக்குள் எது எல்லாம் வருகின்றதோ அந்த உணர்வுகள் அனைத்தையும் அது அரவணைத்துக் கொள்கின்றது.

1.எக்குணத்தின் செயலாக நாம் எடுத்தோமோ அந்த அணுவின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது.
2.ஆகவே இந்த சக்தியின் தொடர் கொண்டு தான் சிவனின் இயக்கமே இருக்கின்றது.

உடலில் வலி ஏற்பட்டால் அம்மம்மா… அப்பப்பா..! என்று நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அப்பொழுது சக்தி சிவனை ஆட்டிப் படைக்கின்றது என்று சிவ நடனத்தைக் காட்டுகின்றனர்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதன் வழி உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
1.சக்தியின் கீழ் தான் சிவன் அடிமையாகி இருக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.
2.சிவனைச் சக்தி தன் திரிசூலத்தால் தாக்குகின்றாள் என்றெல்லாம் உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள்.

நாம் ஒருவரைத் தாக்கும் உணர்வு (எண்ணம்) கொண்டு நுகர்ந்தால்.. நம் உயிரின் தன்மை அதை உருவாக்கும் அந்தச் சக்தியாக உருவாகி நம் உடலான சிவமாக அது மாறியே விடும்.

பின் அதனின் கடுமையான வேகங்கள் கூடப்படும் பொழுது.. இந்த உடலைச் செயலற்றதாக மாற்றி… அதன் கீழ் தாக்கும்..! என்ற நிலையையும் “படமாக்கிச் சித்தரித்து…” அதன் காவியத் தொகுப்பையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை

 

ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கிக் கொண்டு வருகின்றோம்… திடீரென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றது. உடனே நமக்கு அதிர்ச்சி வருகின்றது… வேதனை வருகின்றது.

சந்தர்ப்பத்திலே இந்த வேதனை அதிகமாக நுகரப்படும் பொழுது இந்த உணர்வு நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.அந்த அதிர்ச்சியான உணர்வுகள் நம் இருதயத் துடிப்பிலே பட்டு விட்டால் அங்கே படபடப்பு அதிகமாகி
2.நம் சுவாசத்தை கட்டுப்படுத்தும் பயத்தின் தன்மையாக வரும்… பதட்டம் வந்து விடுகின்றது.

பதட்டாமன உணர்வுகள் சிறிது காலம் அது இருந்தால் உமிழ் நீராகி ஆகாரத்துடன் கலந்து அதே உணர்வு வளரப்படும் பொழுது நடுக்கவாதம் வரும்.

இது எல்லாம் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள். இதைப் போன்ற நிலையில் இருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

கை தவறிப் பொருள் கீழே விழுந்து விட்டாலும் அந்த ஆசையினால் “பொருள் போய்விட்டதே…” என்ற அந்த வேதனை உணர்வைத் தடுப்பதற்கு ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

1.சுவாசத்திற்கு மேலே செல்லாதபடி (உயிரிலே படாதபடி) தடுத்து நிறுத்தும் நிலையாக
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மன உறுதி கொண்டு அந்தச் சக்தியை எடுத்து
4.சரி… “நாளை சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…”

இப்படி நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமையை நாம் பெறுதல் வேண்டும்.

நம் பிள்ளை மீது பிரியமாக இருப்போம். பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் வேதனைப்படுவோம். அவன் வேதனைப்படுகிறான் என்றால் நமது சிந்தனையும் குறைந்து விடுகின்றது வேதனையுடன் சொல்லப்படும் பொழுது அவனும் சிந்தனை இழந்து விடுகின்றான்.

எல்லாம் ஆனபின் நமக்குக் கோபம் வருகின்றது. இப்படி நமக்குள் ஒன்றின் பின் ஒன்று தொடராக… “நாம் சுவாசிக்கும் உணர்வுகள்” நம் உடலில் தீய விளைவுகளை உருவாக்கும் தன்மையாக வந்து விடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கிய நாம்… சந்தர்ப்பத்தால் இதைப் போல் வாழ வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் பொழுது “மேலே சொன்னது போன்ற தீமைகள்” வந்து விடுகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி விட்டு அந்தச் சக்தி நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தி உள்ளுக்குள்ளே வலிமை ஆக்கினால்… தீமை செய்யும் சக்திகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளலாம்.

வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது வாலி. உடலுக்குள் அந்த வேதனையான அணுக்கள் நல்ல அணுக்களுடன் சேர்ந்து விட்டால் இரண்யன்.

அந்த இரண்யனை மடி மீது வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளக்கின்றான். சூரியன் எப்படித் தன் மீது மோதும் நஞ்சினைப் பாதரசத்தால் பிளக்கின்றதோ அதைப் போல்
1.கார்த்திகேயா என்று மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.ஒளியாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவோம் என்றால் தீமைகளைப் பிளக்க முடியும்.

நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலுவாகும் போது தீமைகள் அனாதையாகி விடுகின்றது… ஈர்க்கும் சக்தி குறையும் பொழுது சூரியன் அந்த தீமைகளைக் கவர்ந்து சென்று மாற்றி அமைத்து விடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது…!

ஆகவே நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி நாம் எதையுமே நல்லதாக மாற்றிட முடியும்.

1.கோலமாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்
அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி, மிகவும் சக்தி வாய்ந்த சப்தரிஷிகளின் அருள்சக்தி, கோலமாமகரிஷி அவர் வளர்த்த இச்சக்தி, நம்முன் படர்ந்து கொண்டிருப்பதை நாம் கவர்ந்து, நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று நமக்குள் இணைப்போம்.

அவ்வாறு, நமக்குள் இணைத்து, அந்தத் தத்துவ மகரிஷி, உலகவியல்களை எவ்வாறு கண்டுணர்ந்தார்? அவருக்குள் எப்படி விளைய வைத்தார்? அதைப்போன்று, அந்தக் கோலமாமகரிஷி, அவருக்குள் விளைந்த, அருள்ஞான வித்தை உங்களில் பதிவு செய்து, உண்மையான மெய் உலகில், நாம் அவர்கள் சஞ்சரித்த அவ்விடங்களில் நாமும் சென்றடைய இது உபயோகமாக இருக்கும்.

ஆகவே, இங்கே கொல்லூரில் வந்து நாம் தியானிக்கிறோம். ஏனென்றால், அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தனக்குள் கண்டுணர்ந்தான். ஆனால், கோலமாமகரிஷியோ
1.“அழியாப் பெருவாழ்வு என்ற நிலை பெற வேண்டும்”,
2.“அவர் எண்ண வலுவால், தனக்குள் நுகர்ந்தறிய வேண்டும்”,
3.“இன்னொரு சரீரம் வேண்டியதில்லை” என்ற வலுவான எண்ணத்தை அவர் கொண்டு,
4.“என்றும் அந்த சப்தரிஷிகளுடன் நாம் இணைந்திடல் வேண்டும்” என்று தன் எல்லையை வகுத்து
5.அவர் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி, மெய்ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்து, அவர் விண்ணுலகம் சென்றார், மிகக் குறுகிய காலங்களில்தான்.

இவையெல்லாம், 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சி. ஆகவே சமீபத்தில் அவருக்குள் விளைந்த உணர்வுகள், அவர் எங்கெங்கு தவமிருந்தாரோ, அந்த அலைகளின் தன்மை இங்கே படர்கிறது.

அதை நாம் பருகுவோமென்று பிரார்த்தித்து, உயிரான ஈசனை வேண்டி, நாம் அனைவரும் தியானிப்போம்.

2.கொல்லூருக்கு நாம் எதற்கு வருகிறோம்…?
நாம் மனிதனாக இருக்கிறோம். கூட்டாக இருக்கிறோம். கூட்டாக இருக்கும்போது, எதைப் பெறுகின்றோம்? அந்த மெய் ஒளியை எப்படிப் பெற வேண்டுமென்று எண்ணுகிறோம்?

மெய்வழி எப்படி என்ற நிலையை, அறிய முற்படுகிறோம். அப்பொழுது இங்கேயும் தேடி வருகிறோம். நாம் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும், மெய்யுணர்வைப் பெறவேண்டுமென்ற நிலைக்குத்தான், இங்கே தேடி வருகிறோம்.

இதைப்போலத்தான் கோலமாமகரிஷி அவர்கள் கண்டுணர்ந்த நிலைகளை, துருவத்தை உற்று நோக்கினார்கள். அதன் வழிகளில் துருவத்தின் ஆற்றல் பெற்ற, அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளை இவர்கள் அறிகின்றார்கள். அதன்வழி கோள்களைப் பார்க்கின்றார்கள், இல்லையென்றால் இவர்கள் அறிய முடியாது.

நாமும் இந்த உணர்வை நுகரப்படும்போது, அகஸ்தியன் அணுவின் ஆற்றலை கோள்களக மாற்றிச் சென்றபின், இந்த உணர்வின் அலையை, நாம் அதனுடன் தொடர்பு கொண்டு வருவதற்குத்தான், எல்லாவற்றையும் கலந்து, ஒவ்வொரு உணர்வையும் கொடுக்கிறோம்.

துருவத்தை நுகர்ந்து பழகிக்கொண்டால், அதனின் ஆற்றலில், விண்ணின் ஆற்றல்களை நாம் பார்க்க முடியும்.

விண்ணின் ஆற்றலைப் பார்க்க முடியுமென்றால், நம் உணர்வின் தன்மை, சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மையுடன் நாம் ஒன்றுகிறோம். அப்பொழுது, இந்த உடலைவிட்டு நாம் சென்றோமென்றால் நமக்கு இருப்பிடம் அதுதான். அதை எல்லையாக வைக்கிறோம்.

யாம், குறைந்தது ஆறு வருடங்கள் இங்கே இருந்தோம். முதலில், 1½ வருடம் இங்கே வந்து போய்க் கொண்டிருந்தோம். பின் இங்கே தங்கியிருந்த காலங்களில்தான், பாக்கி விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இவைகளெல்லாம் சொல்வது, உங்களுக்குள் பதிவு செய்வதற்குத்தான்.

ஏனென்றால் அவர் பெற்ற உணர்வுகள் இங்கே இருக்கிறது. இருந்தாலும், இங்கு வந்து உபதேசிக்கும் போது, எளிதில் நீங்கள் இதைப் பெற முடியும்.

நாம் இங்கிருந்து சொல்கிறோம் என்றால், இந்த உணர்வுகள் இங்கே பதிந்து இருக்கின்றது. அப்படி அவரைப் பற்றி சொல்லும் போது, உங்களுக்குள் பதிவாகின்றது. மூலமாகின்றது.

நஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த நிலை உண்டு. ஆனால், மனிதனுக்குள் உள்ள மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு, அந்தச் சக்தியை நீக்க முடியும். இதைப் பயன்படுத்தவேண்டும்.

மனிதனுக்குள் விளைந்த சக்தி, ஆறாவது அறிவு, மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு. நஞ்சின் சக்தி மிக அதிகமாக இருப்பினும், மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு, எல்லாமே அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால், நஞ்சினையும் நாம் ஒடுக்க முடியும்.

அணுகுண்டை உருவாக்கியவனும் மனிதன்தான். அதே சமயத்தில், அதை அடக்கி வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான். இதைப்போல அன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்தின் நிலைகள் வரப்படும்போது, இவன் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவனுள் அலைகளாக வருகின்றது.

இவர் யாக வேள்விகள் நடத்தப்படும்போது, பல அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள். அதற்காகத்தான், இந்தக் கோவிலில் ஒரு பக்கம் முருகனும், இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும், காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.

ஆக, வலுவான என்ணங்கள் கொண்டு, நஞ்சினை நீக்கிப் பழகவேண்டும். இந்த தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா! முருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன? கோவிலில் ஒரு பக்கம் முருகன், மறு அக்கம் வீரபத்திரசாமி.

ஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு, தனக்கு இணையாக, வலுவின் (வீரபத்திரன்) துணை கொண்டு, எதற்குமே அஞ்சாநெஞ்சன், துணை கொண்டு வெல்ல வேண்டும்.

ஆகவே உயர்ந்த நிலைகள் எதுவோ, அதைத்தான் அவர் கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு, என்று தெளிவாகக் காட்டினார். இங்கே கோவிலில் பார்த்தால், அதுதான் இருக்கும்.

இதைப்போல அரசனாக இருக்கும்போது, பல கொடூரச் செயல்கள் செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து, பல எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.

தவம் என்பது உயிர். யாகம் என்பது, உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால் விண்ணின் ஆற்றலைப் போடும்போது, இந்த அசுர குணங்கள் தனக்குள் வராது தடுப்பது எவ்வாறு? என்பதுதான், அவர் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.

3.மூகாம்பிகையில் வந்து நாம் எந்த ஞானத்தைப் பெற வேண்டும்?
மூன்று சக்தியின் நிலைகள் – வெப்பம், காந்தம், விஷம். நமக்குள் ஈர்க்கப்பட வேண்டியது எது? நம்முடைய மனதில், ஞானம் பெற வேண்டியது எது? என்கிற நிலையை அறிவற்குத்தான், எமது குருநாதர் இங்கே அழைத்துவந்தார்.

இங்கே வந்து அமர்ந்து தியானிக்கும்போதுதான், அதற்கான விளக்கங்கள் கிடைப்பதற்கும், மனிதனின் உணர்வுக்குள் என்ன செய்கிறது? அது எதற்காக வேண்டி, கோலமாமகரிஷி செயல்பட்டார் என்ற நிலையும், தெரிய வந்தது.

அவரின் செயலாக்கத்தில், மனிதனுக்குள் சேர்ந்த உணர்வுகளை ஆட்சி புரிவதற்காக, பலகாலம் தனக்குள் பதிந்துகொண்ட நிலைகளை, இது பிளக்க, ”துருவத்தின் நிலைகளை” அதிகமாக எடுத்துத் தவமிருந்தார், கோலமாமகரிஷி.

துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பருகும்போதுதான், தான் வளர்ந்து வர வர, இவர் வயதும் முதிர்ந்து விடுகிறது. அதிலிருந்து இவர் ஆன்மா வெளிவந்தபின், அவர் அதற்குத் தகுந்த உடலாக, அன்றைக்கு “ஆதிசங்கரர்” உடலைத் தேர்ந்தெடுத்தார்.

மற்றவர்கள் உடலின் இச்சை கொண்டு, ஆதிசங்கரரை கங்கையிலே மூழ்கடிக்கும் போது, இந்த உடலின் பற்று இல்லாதபடி, எதைப் பற்றியதோ, ஆதிசங்கரர் உடலுக்குள் சென்ற கோலமாமகரிஷியின் உயிரான்மா, விண்வெளி செல்கிறது. ஆதிசங்கரரின் உடலிலிருந்துதான் விண் சென்றது.

ஆகவேதான், எமது குருநாதர் எம்மைக் காசிக்குப் போகச் சொன்னார். அந்த காசியிலே இருக்கப்படும்போது, அன்று, ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து அவருக்கு வயிற்றுவலி வரவைத்து, ஒரு விநாயகர் கோவிலில் “அர்ச்சனை, அபிஷேகம், யாகங்கள் செய்ய வேண்டும் என்றும், வேள்விகள் செய்தால்தான், உன்னுடைய வயிற்றுவலி நீங்கும்” என்றும், அதிலிருந்து “நீ யாகத்தைச் செய்யவில்லையென்றால் தப்பமுடியாது” என்று துவைதவாதிகள், ஆதிசங்கரரை மிரட்டிய நிலைகளை எமக்குக் காண்பித்தார், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால், ஆதிசங்கரர் அத்வைதத்தைப் பற்றிப் பேசுகிறார். சூட்சும நிலைகள் எப்படி இயக்குகிறது? எந்த மணத்தை நுகர்கின்றாயோ, அது ஞானம். அது சூட்சமத்தில் உனக்குள் எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையையும், வசிஷ்டாத்வைதத்தையும் அங்கே எடுத்துரைக்கிறார்.

“வசிஷ்டாத்வைதம்” என்பது, தான் கவர்ந்து கொண்ட சத்து, தனக்குள் மறைந்து எவ்வாறு இயங்குகிறது என்ற நிலை தான்.

இவர் அத்வைதத்தை எடுத்தாலும், நீ கவர்ந்து கொண்ட “வசிஷ்டாத்வைதம்”, உனக்குள் எப்படி இயங்குகிறது? என்று உணர்த்தினார்.

அவ்வாறு சொல்லப்படும்போதுதான், அன்று அரச காலங்களில் துவைதத்தை வைத்து வணங்கியவர்கள், சிலையை வைத்து வணங்கி, யாக வேள்விகளைச் செய்யக் கூடியவர்கள் அனைவரும் சேர்ந்து, இவர் யாகம் வளர்த்து, மற்ற வேள்விகளைச் செய்தால்தான், உண்மையான பக்தி என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர், இம்முறையைச் செய்வது தவறு என்று வாதிட்டார். உண்மையான நெருப்பு உயிர் என்று உபதேசித்தார். ஆக இது வசிஷ்டாத்வைதம். தனக்குள் நெருப்பின ஈர்ப்பான அந்தக் காந்தத்தால் கவரக்கூடிய நிலையையும், கவர்ந்து கொண்ட நிலையையும் என்றார்.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ,
2.அதனின் உணர்வு நமக்குள் கவரப்படும்போது, தன்னுள்,
3.தனக்குத் தெரியாமலே அதன் இயக்கங்கள் இருக்கும்… “வசிஷ்டாத்வைதம்” என்ற நிலையை அவர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு அந்த நிலையை உணர்த்தினாலும், “இது உண்மையல்ல” இந்தச் சிலையிலிருந்துதான் நீ எல்லா நிலைகளும் பெறுகின்றாய். இந்தச் சக்தியை, இந்த தெய்வத்தின் நிலைகளிலிருந்துதான் நீ பெற முடிகின்றது” என்று இவர்கள் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர், இதுவல்ல உண்மை,
1.”உயிர் நெருப்பு”
2.புறத்தீயிட்டு நீ வேகவைப்பது உன்னுடைய இச்சைக்கு இருக்கும். இந்த இச்சையை எண்ணினால், “உனக்குள் எரிக்கும் சக்திதான் வரும்”.
3.“தீமைகளினுடைய நிலைகளைத்தான் உனக்குள் வளர்க்க முடியும்”,
4.“இந்த நல்ல ஜீவனுள்ள அணுக்களை இழக்கின்றாய், அழிக்கின்றாய்”
5.“நல்ல வாசனையான பொருட்களைப் போட்டு, நீ அழிக்கின்றாய்”.

ஆக, உயிரான நிலைகளில், உன்னுள் தீமையான உணர்வுகளைப் போட்டு உனக்குள் பொசுக்கு என்று விவாதிக்கிறார், அன்று ஆதிசங்கரர்.

“உயிர்களைப் பலியிடப்படுவது யாகம்” அதிலிருந்து உணர்வுகளை வெளிப்படுத்தி எடுப்பது தனக்குச் சாதகம் என்ற நிலைகளில், அந்த இடத்தில் வாக்குவாதம், பட்டிமன்றம் நிறைய நடக்கிறது.

காசிக்குச் சென்று கங்கைக்கரையில், விநாயகர் கோவிலில் அமர்ந்து யாம் தியானிக்கும்போது, இவருள் இருந்து என்ன செய்கிறது என்பதை உணர முடிந்தது.

இவர்களுக்குள் வாதிக்கும்போது, ஆதிசங்கரரை “நாஸ்தீகன்” என்ற நிலைகளில் பட்டம் கட்டினார்கள். இதனுடைய உண்மை நிலைகளைத் தெரிந்து கொண்டபின் தான், யாம் அங்கு சென்றோம்..

அவ்வாறு பட்டிமன்றம் நடக்கும்போது “இது உண்மையில்லை”, இது உன்னையும் “நாஸ்தீகனாக்கும்” எந்த மனிதன் உணர்வைக் கொண்டு நீ எடுத்தாயோ, அது உன் சொல்லைக் கேட்போரையும், நாஸ்தீகனாக்கும் என்ற நிலைகளில், ஆதிசங்கரரை நாஸ்தீகன் என்று பட்டம் சூட்டினார்கள்.

1.“புறத்தீயிட்டு, எந்த நிலைகளில் நீ வேக வைக்கின்றாயோ” இங்கே பொருட்கள் கருகுகின்றது. நறுமணம் அழிகின்றது.
2.இதனுடன் நெருப்பில் இடப்படும்போது அதனின் உணர்வு அங்கே கருக்கப்படுகின்றது.
3.ரோஜாப்பூ போட்டாலும், கருகத்தானே செய்கிறது எந்த நறுமணத்தைப் போட்டாலும் கருகுகின்றது.

ஆனால், உயிரான நெருப்பில், நாம் அந்த நறுமணங்களைப் போடும்போது, இது அலைகளாகப் படருகின்றது. இது வசிஷ்டாத்வைதம். அந்த நறுமணத்தின் தன்மையை நீ கவரப்படும் பொழுது, இந்த உணர்வுகள் உனக்குள் நறுமணமடைகின்றது.

இதை உணர்த்துவதற்கு, கண்ணால் கவரப்படும் உணர்வுகளுக்குக் காட்சியாக வைத்ததுதான்.
1.ஆனால், எண்ணத்தால் எவ்வாறு எடுப்பது? என்ற அளவில்
2.அங்கே பட்டிமன்றம் நடக்கின்றது… அந்த அளவுக்கு வாக்குவாதம் நடக்கிறது.

அங்கே தியானத்தில் அமரும்போதுதான், குருநாதர் எமக்கு இதை ஏல்லாம் உணர்த்திக் காட்டினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.உண்மையின் உணர்வைப் பெற வேண்டும் என்றும்
2.தெய்வீகப் பண்பையும் கடவுளை அடைய வேண்டும் என்றும்
3.அவனிடமே இணைந்து வாழ வேண்டும் என்று தான்
4.எல்லா மதங்களும் சட்டங்களை இயற்றிச் செயல்படுகின்றது.

அதன் வழி கடைப்பிடித்துக் கொண்டு வந்தாலும் “கடவுள்…” எங்கே… எப்படி இருக்கின்றான்…? என்று யாருக்கும் தெரியாது.

மதங்கள் காட்டிய உணர்வை வளர்க்கப்படும் பொழுது அதே போல் அந்த மதத்தின் சார்புடையவர்களாகப்படும் பொழுது மற்ற மதத்தினைக் கொன்று குவிக்கும் நிலைதான் இன்று வருகின்றது.

ஒரு மதத்தின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அதை வழி நடத்திச் செல்வோர் நிலைகளில் மக்கள் இருவரோ நான்கோ ஆகி விட்டால் அதைப் பங்கிடப்படும் பொழுது அதற்குள் “தன் இனம்…” என்ற நிலைகள் இனப் போர்களே துவங்குகிறது.

அந்த அரச சாம்ராஜ்யம் அழிந்த பின் அடுத்து அது ஒரு இனமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுத் தனது சாம்ராஜ்யத்தைத் தொடர்கின்றது.

மற்றவர்களைக் கொன்று குவித்துத் தனக்குக் கீழ் கொண்டு வந்து
1.“தான் ஆட்சி புரியும்…!” அந்த ஆசையின் தொடர் கொண்டே செயல்படுகின்றனர்.
2.ஞானிகள் கொடுத்த உணர்வுகளை எல்லாம் மறையச் செய்துவிட்டனர்.

இராமாயணம் மகாபாரதத்தைப் போன்ற காவியங்களில் ஞானிகளால் காட்டப்பட்ட உணர்வுகள்
1.ஒன்று ஒன்றுடன் இணைத்தால் ஒன்றின் செயலாக்கங்கள் எப்படி உருவாகின்றது…?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே எப்படிக் கலக்கின்றது…. உடலில் அணுவாக எப்படி மாறுகின்றது…?
3.தாவர இனங்களின் வித்துக்களில் மற்ற வித்துக்களின் உணர்வைக் கலக்கப்படும் பொழுது தாவரங்கள் எப்படி உருமாறுகின்றது…?
4.அதிலே சுவைகளை மாற்றுகின்றது…? வித்துக்களை எப்படி மாற்றுகின்றது என்று உணர்த்தியுள்ளார்கள்.

அதை எல்லாம் அரசக் காலங்களில் மனித உடலில் உருவாக்கிய இந்த மந்திர ஒலி கொண்டு தான் அறிந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு மாற்றியமைக்கும் தன்மையாக வந்து விட்டது.

இப்படி வளர்ச்சி அடைந்து வந்த இந்த உலகம் தான் ஆசையின் உணர்வாக வளர்த்த உணர்வுகள் இங்கே அதிகமாக வளர்ந்து அரசனுக்குக் கீழ் வந்த மக்களும்… “தானும் வளர வேண்டும்…” என்ற ஏக்கம் கொண்டு வந்து விட்டனர்.

1.தான் வாழ தன் அருகிலே உள்ளவர்களை வீழ்த்தினால் தான் சரிப்படும் என்றும்
2.ஒருவர் வியாபாரம் செய்தால் ஆரம்பித்தால் அந்த வியாபாரத்தைக் கெடுத்துவிட வேண்டும் என்றும்
3.அவனை வீழ்த்தினால் தான் என் வியாபாரம் பெருகும் என்றும்
4.வியாபார முறையிலே போர் முறை வந்தது.

அதிலே நெருக்கடி வளர வளர இன்று எடுத்துக் கொண்டால் தள்ளுபடி (DISCOUNT) என்ற பெயரில் கணக்கு வழக்கு இல்லாமல் கொடுத்து மக்களை ஏமாற்றிடும் நிலை வந்து விட்டது.

தள்ளுபடி என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து தன் வியாபாரத்தைப் பெருக்குவதும் மற்ற வியாபாரத்தை வீழ்த்துவதும் உண்மைகளை உணரவிடாதபடி “வியாபாரமே இன்று தலைகீழாக மாறிவிட்டது…!”

ஆசையின் உணர்வின் தன்மை வளர்ந்து கொண்ட பின் அந்த ஆசைகளாலேயே தான் நாம் இன்று வாழ்கின்றோம்.. வளர்கின்றோம்.
1.அங்கே போனோம்.. போனதற்கு 50% தள்ளுபடி கிடைத்தது
2.தள்ளுபடியில் வாங்கிய சேலை கிழிந்தால் பரவாயில்லை… போனால் போகிறது போ..
3.அதற்கு இனாமாக இன்னொரு சேலை கொடுத்தார்கள் அல்லவா..! என்று
4.இப்படித்தான் பெண்கள் அங்கே மடிகின்றார்கள்.

ஆக மொத்தம் நாம் ஏமாற்றப்பட்டோம்… ஏமாற்றப்படுகின்றோம்…! என்ற நிலை வருவதே இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் பொழுது உண்மையின் நிலைகள் அந்தச் சரக்கின் தன்மையும் தெரிகின்றது.
1.சரக்கின் தன்மையைத் தெரிந்தே… அவன் குறைவாகக் கொடுக்கின்றான்…! என்றால்
2.எதன் அடிப்படையில் அப்படி நல்ல சரக்கைக் கொடுக்க முடியும்..! என்று இல்லாதபடி
3.நாம் ஏமாற்றமே அடைகின்றோம்…! இன்றைய மனிதனின் வாழ்க்கையில்..!

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்…!

புலஸ்தியர் அகஸ்தியர்

 

தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அவன் வளர்ச்சி அடையும் பொழுது காரணப்பெயராக “அகஸ்தியன்” என்று வைக்கின்றார்கள்.

அவருடைய தாய் தந்தையர் செடி கொடியின் மணத்தைப் புலனறிவால் நுகர்ந்து அறிந்ததனால் “புலஸ்தியர்” வம்சத்தில் வந்தவர்கள் அவர்கள்.

ஆனால் தாய் கருவிலே சக்தி பெற்றுப் பிறந்ததால்
1.அணுவின் இயக்கத்தை அறியும் ஆற்றல் பெறுகின்றான்
2.அகத்தின் இயக்கங்களை அறிந்ததனால் அகஸ்தியன்.

செடியின் மணத்தை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்… “இந்தச் செடி இன்னது தான் செய்யும் என்று…” அதனுடைய விஷத்திற்கு எல்லா விஷத்தையும் இயக்கத் தெரிந்தாலும் “உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்…”

மனிதனின் சிறுநீரை எடுத்து அதிலே சில கெமிக்கல்களைப் போட்டால் அதில் இரத்தத்தில் இருக்கக்கூடிய பலவிதமான சத்துக்களை விஞ்ஞான அறிவு கொண்டு இன்று அறிகின்றார்கள்.

இரத்தக் கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றதா…? சளி இருகின்றதா…? உப்புச் சத்து இருக்கின்றதா…? சர்க்கரைச் சத்து இருக்கின்றதா…? என்று பிரித்துக் காணுகின்றார்கள்.

ஆனால் அகஸ்தியன் எல்லாவற்றையும் கடந்து தாய் கருவிலேயே ஆற்றல்களைப் பெற்றதனால் ஒவ்வொரு தாவர இனத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றான்.

அப்படிப் பெற்ற ஆற்றல் தான் அவன் வாழ்நாளில் அவன் வளர வளர
1.நோய் வந்தவர்களுக்கு ஒரு பச்சிலையைக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்கின்றான்…
2.நோய் நீங்குகிறது. அகஸ்தியன் குழம்பு என்று சொல்வார்கள்.
3.அவன் அறிந்த உணர்வு கொண்டு அக்காலங்களில் பல நோய்களைப் போக்கவும் காரணமாகின்றான்.
4.அதே சமயத்தில் இவனைக் கண்டாலே மற்ற மிருக இனங்கள் இவன் அருகில் வராது விலகிச் சென்று விடுகிறது.

பச்சையாக வேப்பிலைகளைச் சாப்பிட்டால் உடலில் கசப்பின் மணம் வரும். வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் உடலில் வெங்காய வாசனை வரும். கத்திரிக்காயைச் சாப்பிட்டால் அந்தக் காரல் வாசனை வரும்.

இது எல்லாம் இயற்கையின் உண்மையின் உணர்வுகள். உயிரின் இயக்கத்தால் அறியும் ஆற்றல் வந்து விடுகின்றது.

இதை எல்லாம் அகஸ்தியன் அறிந்ததனால் அன்று மனிதனுக்குகந்த புதுப்புது தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
1.உருவாக்கினாலும் அதை வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றான்.
2.வேக வைக்கப்படும் பொழுது “அதனின் இயக்கங்கள் மாறுகின்றது” என்று உணர்கின்றான்.

அதே சமயத்தில் மற்ற பொருள்களை இணைத்து அதைச் சுவையாகவும் உருவாக்க முடியும் என்றும் காணுகின்றான். அத்தகைய சக்தி பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் “உணவை எப்படிச் சமைக்க வேண்டும்…?” என்று தெரிந்து கொள்கின்றான்.

இன்றைய விஞ்ஞானிகள் செய்வது போன்று அக்காலத்திலே மனிதனுக்குகந்த பல பயிரினங்களையும் அகஸ்தியன் உருவாக்குகின்றான்.

இப்படி அவன் வாழ் நாளில் அவன் வளர்ச்சி அடையப் படும்போது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எப்படி உணவு கிடைக்கின்றது…? என்று அவன் அறிகின்றான்.

பிரபஞ்சத்திற்குள் இருந்து வரும் சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி கவர்ந்து… பூமிக்குள் பரவச் செய்து நீராகவும் மண்ணாகவும் கல்லாகவும் வளர்ந்து அதனுடைய கலவை கொண்டு தாவர இயல்கள் உருவாகி… தாவரவியல் உருவாக்கப்படும் பொழுது அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு உடல்கள் பெற்று மனிதனாக எப்படி உருவாக்கியது…? என்று இந்த பூமிக்குள் வளர்ச்சியான சகலத்தையும் அறிகின்றான்.

இதையெல்லாம் அறிந்து கொண்ட முதல் மனிதன் அகஸ்தியன் மனிதனான பின்
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று பழகியவனும் அவனே.
2.இந்த உண்மைகளை எல்லாம் தனக்குள் அறிந்து பூமிக்குள் வரும் விஷத்தை அடக்கும் தன்மையும் பெறுகின்றான்.

பிரபஞ்சத்தில் இருக்கும் விஷத்தன்மைகள் துருவத்தின் வழி பூமிக்குள் வந்தாலும் தாவர இனங்களில் அது இணைந்து விடுகின்றது. ஆனால் மனிதனாகி விஷத்தை ஒடுக்கியதால் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் போது விஷத்தின் இயக்கத்தையும் அறிந்து கொண்டான்.

அவனுடைய வளர்ச்சியில் காலப்பருவம் வரும் பொழுது திருமணம் ஆகின்றது. தான் கண்ட அனைத்தையுமே தன் மனைவிக்கு எடுத்து உணர்த்துகின்றான்.

மனைவிக்குள் இது பதிவான பின் கணவன் தெரிந்து கொண்ட நிலையைத் தானும் அறிய வேண்டும் என்று அதன் வழி பெற்று
1.மேலும் தன் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
2.அதே போன்று அகஸ்தியனும் தன் மனைவி அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றான்.

அவர்கள் இருவரும் வசிஷ்டர் அருந்த்தியும் போன்று வாழ்ந்து தான் தெரிந்த உண்மையை மனைவிக்கும் மனைவி தெரிந்த உண்மையைக் கணவனுக்கும் இருவரும் ஒன்றாக இணைந்து வானுலக ஆற்றலை அறியும் பருவம் பெறுகின்றனர்.
1.எதை எல்லையாகக் குறி வைத்து அந்த ஆற்றல்களை எல்லாம் வளர்த்துக் கொண்டார்களோ
2.அங்கேயே அவர்கள் சென்று துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றார்கள்… வளர்கின்றார்கள்… அழியாத நிலைகள் கொண்டு…!

அதிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்தாலும் அவர் மற்றவர்களின் குணங்களையும் செயல்களையும் அது எப்படியெல்லாம் அவர்களை இயக்குகிறது…? என்று அறியத் தொடங்கினார்.

1.ஒரு மனிதன் கொலை செய்துவிட்டு அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்பதற்காக வேண்டி
2.பணத்தைக் கொடுத்து வாதிடச் சொல்வதும்
3.தவறைச் செய்துவிட்டு பணத்தைக் கொண்டு அந்தத் தவறை மறைப்பதற்காக இவர்களை அணுகி வருவதையும்
4.வழக்கறிஞராக மாறிய பின் விவேகானந்தர் நேரடியாகக் காணுகின்றார்.

ஆனால் அவருடைய தாய்… “தெய்வமோ… கடவுளோ… எப்படி இருக்கின்றது…?” அந்த உண்மையின் உணர்வைக் கொண்டு உணர்த்திய உணர்வுகள் இவருக்குள் இயக்கப்பட்டு… தன் தொழிலில் வரக்கூடிய சமுதாயத்தையும் உணர்கின்றார்.

கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் மற்றவர்களுக்குத் தோன்றப்பட்டு… கொலையையும் செய்துவிட்டு.. கொலையிலிருந்து மீள்வதற்காக
1.பணத்தைக் கொடுத்து அவன் எப்படி மாற்றுகின்றான்..? என்ற நிலைகளையும்
2.அவன் எண்ணியதை அவன் உயிர் எப்படி இயக்குகின்றது..? என்ற நிலைகளையும் விவேகானந்தர் உணர்கின்றார்.

“ஒருவனைக் கொலை செய்ய வேண்டும்…!” என்று எண்ணும் போது அதே உயிர் அந்த உணர்வை ஊட்டிக் கொலை செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டி… ஆளை வைத்துக் கொல்லும் நிலை வருகின்றது.

அதே சமயம் “ஒருவன் வாழ வேண்டும்…!” என்று பல உயர்வினைக் காட்டி அதற்கென்ற உகந்த நிலைகளைச் செய்கின்றான் என்று சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து வாழ வைக்க வேண்டும்…! என்ற எண்ணங்களை ஊட்டி வாழச் செய்கின்றது.

ஆகவே இப்படி எண்ணியதை எல்லாம் உருவாக்குவது யார்…? “உயிரே கடவுள்…” என்ற நிலையை உணர்கின்றார் விவேகானந்தர்.

1.எண்ணியதை உருவாக்கும் உயிர் ஒவ்வொரு உடலிலும் இருக்கும் பொழுது
2.அங்கே ஆட்சி புரியும் சக்தியே பெரும் சக்தி என்றும்
3.அவர்கள் எதை நுகர்கின்றனரோ அதையே இயக்குகிறது.

உதாரணமாக ஒருவர் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை எண்ணினால்… அந்த உயிரே அங்கே அந்த நிலைகளைச் செய்கின்றது என்பதையும் உணர்கின்றார் விவேகானந்தர்.

இருந்தாலும் இதை எல்லாம் எப்பொழுது உணரத் தொடங்கினார்…? “நீ கடவுளை எங்கே பார்க்க வேண்டும்..?” என்ற இந்த உணர்வு விவேகானந்தருக்கு எப்பொழுது வருகின்றது…?

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் வருகின்றார்…!

1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.நீ கடவுளைக் காட்டுகின்றாய்…! என்று சொல்கின்றார்கள்.
3.கடவுளை நீ பார்க்கின்றாயா…?
4.நானும் அந்தக் கடவுளை எனக்குள் பார்க்க வேண்டும் என்று
5.இப்படிப்பட்ட வினாக்களை இராமகிருஷ்ணரிடம் எழுப்புகின்றார் விவேகானந்தர்.

அப்பொழுது பரமகம்சர் விவேகானந்தரிடம் கூறுகின்றார்…!

கடவுளைக் காண முடியாது…!

1.நீ எண்ணும் உணர்வுகள்… உன் உள் நின்று… அதுவே கடவுளாக நின்று உணர்த்துகின்றது…
2.அதன் வழியே நீ செயல்படுகின்றாய்..! என்று இராமகிருஷ்ணர் தெளிவாக அவருக்கு உணர்த்துகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமகிருஷ்ன பரமகம்சர் காளி கோவிலில் பூஜை செய்து வரும் வேளையில் அங்கே இரவிலே நடக்கும் சம்பவங்களை அறிய நேர்ந்த பின் தனக்குள் உண்மையையும் சத்தியத்தையும் எண்ணி ஏங்குகின்றார்.

ஏற்கனவே இந்த உண்மைகளை எல்லாம் உணர வேண்டும் என்று நல்லதுக்காக ஏக்கம் கொண்டு மடிந்தவனின் ஆன்மா அதே ஏக்கம் கொண்ட இவரின் உடலில் புகுகின்றது. அதன் பின் அவரை அறியாமலே சில செயல்களைச் செய்கின்றார்.

இராமாயணத்தைக் எடுத்துக் கொண்டால் குரங்கு எப்படித் தாவுகின்றதோ இதைப் போல் தன் எண்ணத்தின் தன்மை கொண்டு எப்படி இயக்குகிறது என்ற நிலைகளை உணர்த்திக் காட்டுவார்.

அதாவது குரங்கின் ரூபம் இட்டு
1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு எக்குணத்தைக் கொள்கின்றோமோ
2.அதன் வழி தான் அது நமக்குள் இயக்குகிறது என்பதைக் குரங்கைப் போன்று ஆட்டிக் காட்டுவார்.

மரத்தில் ஏற்றிப் பார்ப்பார்… ஆக…
1.நம் உணர்வின் தன்மை எதைப் பறிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
2.அதன் உணர்வின் தன் எண்ணத்தால் வரும் போது அதை அவ்வாறு ஏற்றிக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

இதைப் போல் இறந்த சரீரங்களைப் புதைத்திருந்தால் அங்கே அமர்வார். அதனின் எண்ணங்கள் எவ்வாறு…? என்ற நிலையை உணர்வார்.

இப்படித் தன்னை அறியாமலேயே தனக்குள் இயக்கும் இன்னொரு ஆன்மாவின் தன்மை கொண்டு… அங்கே… ஏங்கி எடுக்கும் பொழுது… தான் கண்ட உண்மை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

அவரை அறியாமலே “பல ஆச்சரியப்படும் செயல்களை…” இயக்கிக் காட்டினார்.

அதைக் கேள்விப்பட்ட பெரும் பெரும் மந்திரவாதிகளும் பிறரைக் கைவல்யப்படுத்தக்கூடிய சாமர்த்தியசாலிகளும் இங்கே தேடி வருகின்றனர்.
1.ஒரு பித்தன் போல் இருக்கின்றான்… இவனுக்கு எப்படி இந்தச் சக்திகள் வந்தது…?
2.உண்மைகளை உரைக்கின்றான்…. அவை அனைத்தும் நடக்கின்றது.
3.இவன் செயலாக்கங்கள் எல்லாம் தெளிவாகின்றது என்ற நிலைகளில் அவரை நாடி வருகின்றார்கள்.

இமய மலைச்சாரலில் ஒரு பெண்… அது மகா மந்திர சக்திவாய்ந்தது. மனிதனையே தன் மந்திர சக்தியால் மாய்க்க வல்லமை பெற்றது. மனிதனுக்குள் தன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அவன் உடலில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தச் செய்து அதை அறியக்கூடிய வல்லமை பெற்றது.

அந்தத் தாயும் ராமகிருஷ்ண பரமகம்சரை அணுகி அவரின் உண்மையை உணர்வதற்காக வருகின்றது. ஆனால் அவரால் இவரின் உண்மைகளை அறிய முடியவில்லை.

1.அவரின் அறியும் சக்தியை இவருக்குள் (ராமகிருஷ்ணர்) பெற்ற சக்தி அதைத் தடுக்கும் சக்தியாக வரப்படும் பொழுது
2.அறியும் வன்மை கொண்டு அந்தத் தாயிடம் மாறுகின்றது.
3.பின்.. “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்றும்
4.உண்மையின் நிலைகள் கொண்டு “இப்படித்தான் வாழ வேண்டும்…” என்றும் புத்தி கூறுவது போல உணர்வுகள் வந்த பின்
5.எந்த மந்திரத்தால் அறிய வேண்டும் என்று வந்த அந்த மந்திர சக்தி கொண்ட தாயும் மனம் மாறுகின்றார்.

இப்படி பல தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகள் கொண்டவர்களும்… அன்று இராமகிருஷ்ண பரமகம்சரைச் சந்தித்த பின்
1.அவரின் செயலைப் பார்க்கும் பொழுது… அவருக்குள் விளைந்த உணர்வை நுகர்ந்த பின்
2.மாற்றம் அடைந்தே அவர்கள் சென்றார்கள்.

இது எல்லாம் ஈஸ்வரபட்டர் எம்மைக் (ஞானகுரு) கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டிய நிலைகள்.

கோலமாமகரிஷி

1. கடும் தவமிருந்து சக்தி பெற்றவர்
கோலமாமகரிஷி, கர்நாடகா கொல்லூர் என்ற ஊருக்கு அருகில், “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும், இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு இந்த அணுக்கள் ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று.

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே, அதையே பற்றி தன் வலிமையினாலே
1.இந்த உடலை விட்டுச் சென்றால்…
2.ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான்
3.அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான், “மூகாம்பிகை” என்று, கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.

நமது பூமி சுழலும் போது வரக்கூடிய வெப்பம் “விஷ்ணு”. நமது பூமியை சிவம், சீவலிங்கம் என்றார். அதாவது, நமது பூமி சுழலும்போது எடுக்கக்கூடிய காந்தமும் பிரபஞ்சத்திலேயுள்ள காந்தமும் இரண்டும் உராயப்படும்போது ஏற்படக்கூடியது வெப்பம்.

அந்த வெப்பத்தால் வரக்கூடிய உணர்வின் தன்மை, நாதம், “ஓ” என்று வந்தாலும் “ம்” என்று பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற சத்துக்களுடன் இருக்கக்கூடிய வெப்பகாந்தங்களுடன் மோதியவுடன், இந்த பூமி வெப்பமாகிறது.

அப்போது அந்த வெப்பம், சுழற்சியிலே பூமியின் நடுவிட்டத்திற்குச் செல்கின்றது.

ஒரு தம்ளரில் தண்ணீர் வைத்து, ‘கிர்’ என்று சுற்றினால், கடைசி பாகம் ஒட்டிய இடத்திலேயே நிற்பது போல, விண்ணிலே தோன்றக்கூடிய
1.இந்த வெப்பத்தின் நிலைகள் பூமியின் நடுமையத்தில் தேங்கி
2.வெப்பத் தணல்கள் அதிகமாகக் கூடிக் கொண்டே வரும்.

அப்படிக் கூடும்போது, அதன் அலைகள் சிறுகச் சிறுக மேலே வரும்போது பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற பொருட்கள் அனைத்துமே, ஜீவன் பெறக்கூடிய சக்தி உண்டாகிறது.

அதனால்தான் “ஓம்” என்ற பிரணவத்தை அங்கே சொல்லி, இது ஜீவன் உண்டானாலும், சிவலிங்கம் இந்த பூமி ஜீவன் உள்ளது. எல்லாவற்றையும் இயக்கக்கூடிய சக்தி பெற்றதும், சீவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள்.

கொல்லூரில் வைத்திருப்பது சிவலிங்கம்தான். அந்த சிவலிங்கத்தில் சரிபாதி விஷ்ணுசக்தி, சரிபகுதி சிவசக்தியினுடைய நிலை என்று சொல்வார்கள்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே, கோள்களின் ஆற்றலின் பேருண்மையை நிலையை அறிந்தவர் அவர். ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.

2. கோலமாமகரிஷி இப்பொழுது பாய்ச்சும் ஆற்றல்
கோலமாமகரிஷி கடும் ஜெபமிருந்து, அந்த ஆதிசங்கரருடைய இளமைப் பருவத்திலே அவருக்குள் புகுந்திருக்கும் பொழுது, அவர் எண்ணத்தால் சுழன்று வந்த நிலையைத்தான் இப்பொழுது எடுத்து உபதேசிக்கின்றோம்.

ஆதிசங்கரர், அன்று காசியிலிருந்து, ஒவ்வொரு பாகமும் யாத்திரை செய்யப்படும் பொழுது, தன் உயிரை வேண்டி அந்த உணர்வை எடுத்து, ஒவ்வொரு மக்களையும் வருந்தி அந்த ஆற்றல் மிக்க சக்திகளைப் பற்றிப் பேசினார்.

ஏனென்றால், மக்கள் அனைவரும், அவர்கள் எண்ண அலைகளாலே, அவர் அறியாத நிலைகள் மனிதனால் வளர்க்கப்பட்ட இந்த ஆசை அலைகள் உள்ளே சென்று
1.அவர்கள் நல்லதை எண்ணினாலும் கூட,
2.முடியாத நிலைகளில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியை மாற்றுவதற்காக,
3.அத்வைதத்தின் தத்துவத்தை (சூட்சமம் – கண்ணுக்குப் புலப்படாத நிலை) ஒவ்வொரு மக்களுடைய நிலைகளிலும் ஊடுருவச் செய்தார்.

மக்கள் அனைவரும் எத்தனையோ அவஸ்தைகள்பட்டு, தொல்லைகள்பட்டு, அவர்கள் சிந்திக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள். நல்லதை நினைக்கின்றார்கள், நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.

பக்தியின் நிலையில் இருக்கப்படும் பொழுது, அந்த உணர்வலைகளால் ஈர்க்கப்பட்டு, அது திடீரென்ற நிலைகளில் அவர்களைச் சிந்திக்க முடியாத நிலைகள் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று, எந்தெந்த பக்தியின் வசத்தில் நாம் சிக்கினோமோ, இந்த உணர்வின் தன்மை கொண்டு, நம்மையறியாமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது என்ற நிலையும், அந்த உணர்வின் நிலையில் சிக்கி, நாம் எந்தெந்த உணர்ச்சி வசப்பட்டோமோ, அந்த உணர்வுகளே நம்மை இட்டுச் செல்கின்றது.

நாம் ஆசாபாசத்துடன் இருக்கப்படும் பொழுது, அந்தப் பாசத்திற்குள் நமக்குத் தெரியாத நிலைகளில் நம்மை அறியாமலேயே, சில நிலைகளில் தவறுகள் செய்ய வைத்துவிடுகிறது.
1.நாம் தவறு செய்யவில்லை.
2.அந்தத் தவறு இல்லாத நிலைகளில் எத்தனையோ இன்னல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு சொல்லின் தொடர் வந்துவிட்டதென்றால், அதைப் பின் தொடர்ந்து முடியாத நிலைகளில், பலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களெல்லாம் மீள வேண்டுமென்றுதான், இந்தக் கோலமாமகரிஷியினுடைய அருள் சக்தியின் நிலைகள் எடுத்து, அவர் எந்த அலையின் தன்மை கொண்டு எல்லோரும் பெறவேண்டுமென்று, விரும்பினாரோ, அதை யாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுது யாம் பேசுகின்றோம் என்று எண்ண வேண்டாம்.
1.இவை அனைத்துமே, அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ
2.அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் வெளிப்படுத்துகின்றார்கள்.
3.அந்த உணர்வின் ஆற்றலைத்தான், யாம் உங்களுக்குள் இப்பொழுது பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக, பாய்ச்சும் இந்த உணர்வினை நீங்கள் துருவ தியானத்தின் நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய எத்தகைய நோயானாலும், எந்தக் கவலையானாலும், குடும்பத்தில் எந்தச் சிக்கல் இருந்தாலும் அது நிவர்த்தியாகும்.

கோலமாமகரிஷி, ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று, விண் சென்றார். ஆதிசங்கராச்சாரியருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்றுவிட்டது.

அவர்களெல்லாம், இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள். அவர்கள் உணர்த்திய இந்த அருள் வழியை, நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டும்.

3. கொல்லூரில் எடுத்து வளர்த்த சக்தி
நம்மை அறியாமலேயே, நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று, உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.

ஏனென்றால், இதை உங்களுக்கு யாம், வாக்குடன் கூடி, கொடுக்கும் நிலைகள். நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை, சரியான முறைகளில், உங்களுக்குக் கொடுப்பதற்கு, இந்த உணர்வின் தன்மையை, யாம் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து, வளர்த்து, “அந்த வாக்கின் ஒலியை” உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை,
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ,
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும், நிச்சயம் நீங்கிவிடும்.

பழனியம்பதியின் தத்துவம்

 

மாமகரிஷி போகன் இந்தப் பிரபஞ்சத்தின் நிலையில் மனிதனாக உருப்பெற்ற நிலையைக் கருவாக உருவாக்கினான்.

சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய பாதரசத்தை அவன் கவர்ந்து 27 நட்சத்திரங்கள் உமிழ்த்தும் சக்தி வைரக்கல்களாக உருப்பெற்றதை எடுத்து நவக்கோளின் பாசாணக் கற்களையும் பூமியில் விளைந்ததைத் தனித்துப் பிரித்து எடுத்து “அனைத்தையும் ஒன்று சேர்த்து” ஒரு சிலையாக மனிதனைப் போன்று உருவாக்கினான்.

புழுவிலிருந்து நாம் மனிதனாக உருவாகும் வரையிலும் எந்தெந்தத் தாவர இனத்தை உணவாக எடுத்து வளர்த்துத் தன்னை அது காத்திட்டதோ
1.தீமையை அகற்றிடும் நிலையாக வளர்ச்சி பெற்ற அந்தத் தாவர இனங்களை எல்லாம்
2.முருகன் சிலைக்குள் அதையும் சாரணையாக ஏற்றினார் அந்த மாமகரிஷி.

இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உணர்வின் சத்து உயிரணுவாகித் தோன்றி மனிதன் வரை வளர்ச்சி பெற்ற நிலையில் தீமைகளை நீக்கிடும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வாழ்ந்தாலும் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிட அருள் ஞானி அவன் கண்டுணர்ந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.

ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்து… அவன் அமைத்த ஆலயம் என்று இந்த உடலை மதித்து… அந்த ஆலயத்தில் தீமைகள் புகுந்தால் அதை அகற்றிடும் சக்தியாக முருகன் சிலையை உருவாக்கி
1.எண்ணிலடங்காத தாவர இனச் சத்துக்களை அதற்குள் சாரணையாக்கி
2.மனிதனின் ஆறாவது அறிவில் புகுந்த தீமைகளை அகற்றிட… சிலையாக அவன் வடித்து வைத்தான்.

அக்காலங்களில் அந்தச் சிலை மீது சொட்டு சொட்டாக நீரை விழும்படி செய்திருப்பார்கள்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் என்று அதற்குள் இது எதிர்மறையாக இயக்கப்படும் பொழுது அந்த நீரின் தன்மை ஆவிகளாக வெளிப்படும்.
2.நம் உடலில் வெப்பத்தால் எப்படி வியர்க்கின்றதோ அதைப் போன்று அந்த முருகன் சிலையிலிருந்து “உயர்ந்த மணங்கள்” வெளிப்படும்.
3.அதை நுகரப்படும் போது தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது நமக்குள் வரும்.

கீழிருந்து நாம் படியேறி அங்கே மேலே செல்லப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம்மைக் காத்திடும் நிலையாக… போகன் தனக்குள் விளைய வைத்த உணர்வினைப் பெறும் நிலையாக விண்ணை நோக்கி ஏகி… அந்த நினைவினைப் பற்று கொண்டு வெளியில் இருந்து வரும் தீமைகளுக்கோ நஞ்சுகளுக்கோ இடம் கொடுக்காது விண்ணிலிருந்து வரும் உணர்வின் சத்தைப் பெறும்படி செய்தான் போகன் பழனியம்பதியில்.

அதே சமயத்தில் இடைமறித்துச் சோர்வடையப்படும் நேரத்தில் தீமைகள் வரும் போது அதை அகற்றிட இடும்பன் என்றும் அங்கே வைத்தார்.

தொழில் செய்யும் பொழுது வலுக் கொண்டு செயல்பட்டாலும் சோர்வடையும் சமயத்தில் இடைமறித்துத் தீமைகள் நமக்குள் வந்து விடுகிறது என்ற நிலையை உணர்த்துவதற்காக இடும்பனை வைத்துக் காட்டியுள்ளான்.

நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு வருகின்றதோ அப்போது அமர்ந்து ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… போக மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி… ஏங்கி அவன் ஊட்டிய உணர்வை உடலுக்குள் வலு சேர்த்து ஆறாவது அறிவைக் காத்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வைப் பெற வேண்டும்.

1.அறிவின் தன்மையாக இருக்கும் “முருகு” மாற்றி அமைக்கும் அந்தச் சக்தியை
2.ஒளிச் சுடராக உருவாக்கும் நிலை நாம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மேல் நோக்கிச் செல்லும்படி செய்தான் போகன்.

ஒரு மனிதன் வேதனைப்படுவதைப் பார்த்தபின் அது நம்மைச் சோர்வடையச் செய்கின்றது. அதே சமயத்தில் அந்தச் சோர்வான உணர்வுகள் நம் நல்ல உணர்வுடன் கலந்து விடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளை அகற்றிடும் நிலையாக முருகன் சிலையை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் சத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த அழுக்கினைத் துடைக்க தீமைகளை அகற்றிட அத்தகைய நிலைகளைச் செய்தான் போகன்.

மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த நினைவுடன் கண் கொண்டு அந்தச் சிலையைக் கூர்ந்து நோக்குவோம் என்றால் அவன் வடித்த உணர்வின் தன்மையை நாமும் நுகர முடியும்.

உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து அதற்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து
1.ஆன்மாவில் அறியாது புகும் தீமைகளைச் சுத்தப்படுத்தும் மார்க்கமாகத் “தன்னை வணங்கும்படி” அந்தச் சிலையை உருவாக்கினான் அன்று போகன்.
2.அவன் காட்டிய வழிப்படி அதைச் செய்தோம் என்றால் இது தான் “பஞ்ச அபிஷேகம்” என்பது.

கண் காது மூக்கு இவைகள் கொண்டு ஒருங்கிணைந்து அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது… ஒலி கொண்டு அதைக் கேட்டாலும்… கண் புலனறிவால் உற்று நோக்கப்படும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் மணங்களைச் சுவாசிக்கும் போது நறுமணமும்… இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது சுவையாகவும்… நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் செய்து இந்த உணர்வின் ஆற்றலைப் பருகும் நிலையாக அந்தச் சிலையை உருவாக்கினான் போகன்.

பல கனிகளை அபிஷேகித்து அதை உணவாக உட்கொண்டால் நம் தீமை அகலும் என்று எண்ணுகின்றோமே தவிர இது புறநிலைக்கு உகந்தது… அகநிலைக்கு உதவாது.

அகநிலைகளுக்குள் எடுக்கும் சக்தியை உணர்ந்து அறியாமல் புகுந்த தீமைகளை அகற்றிட… பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் அதைச் செய்தாலும் அதே போன்று…
1.ஆறாவது அறிவின் தன்மையை இயல்பாகக் கொண்டு தனக்குள் ஞானத்தைக் கண்டுணர்ந்து
2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக ஒவ்வொன்றிலும் உயர்ந்த சக்திகளைப் போகித்தான் மோகித்தான்…
3.இந்த உணர்வினைத் தனக்குள் இணைத்தான் போகன் ஒவ்வொரு சக்தியாக.

இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி அவன் கண்டறிந்த உணர்வின் சத்தைத் தனக்குள் தெரிந்து… சரீரத்தையும் காத்து முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தான்.

அவன் வாழ்ந்த காலம் 5000 ஆண்டுகளுக்கு முன். ஆனால் காலத்தால் இது மறைக்கப்பட்டு விட்டது.

பல கோடித் தாவரங்கள் மூலிகைகளைப் பச்சிலைகளை நுகர்ந்தான். அந்தச் சத்தியினைத் தனக்குள் இணைத்தான் உணர்வினை அறிந்தான் தீமை அகற்றிடும் ஆற்றலை கண்டான் அந்தச் சக்திகளைத் தான் சிலைக்குள் சாரணையாக ஏற்றினான்.

1.நல்லதைக் காத்திடும் நிலையாக “தீமைகளை அகற்றிடும் ரிமோட் கண்ட்ரோல் போன்று”
2.அந்தச் சிலையை உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்றிடும் நிலைக்கே அதை உருவாக்கினான்.

பழனியம்பதியின் தத்துவம் இதுதான்.

அவன் வெளிப்படுத்திய உணர்வலைகள் இங்கே படர்ந்துள்ளது. அதை நுகர்ந்தால் இந்த மனிதப் பிறவியின் முழுமையை அடையலாம்.. தீமைகளை அகற்றலாம்.

இன்று விஞ்ஞானிகள் தாவரங்களின் சத்தை இணைத்துப் புது விதமாக எப்படி உருவாக்குகின்றார்களோ அதைப் போன்று
1.மெய் ஞானிகள் உணர்வுகளை நமக்குள் இணைத்திடும் சக்தியாக அந்த அரும்பெரும் சக்திகளை ஆலயத்தில் வணங்கிப் பெற முடியும்
2.போக மாமகரிஷியின் அருளை இணைத்து நமக்குள் உருவாக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பதார்த்தங்கள் அனைத்தையும் நாம் சுவையாகச் செய்து வைத்து கடைசியில் ஒரு விஷம் கொண்ட பொருளை அதிலே இணைத்து விட்டால் உட்கொள்வோரை நிச்சயம் மடியச் செய்துவிடும்.

அது போல் உலகில் தோன்றிய மகான்கள் எல்லோருமே உயர்ந்த தத்துவங்களைக் கூறியிருந்தாலும்
1.அங்கே அந்த மகான் காட்டிய உணர்வுக்கு மேல் இன்னொன்றாக
2.தீமை செய்வோர்களை அழித்திடும் கடுமையான உணர்வைத்தான் கடைசியில் சேர்க்கின்றோம்.

இது எல்லாம் காலத்தால் அரசர்களால் உருவாக்கப்பட்டது…!

ஏனென்றால் மகான்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த நிலைகள் அனைத்தும் அரசு காலங்களில் அந்தப் பேருண்மைகள் மறைந்து விட்டது… இன்று நமக்கு அதைக் கிடைக்கவிடாதபடியே செய்து விட்டார்கள்.

அந்த மகான் காட்டிய வழிகள் வரப்படும் பொழுது அன்றைய அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்…?

1.தீமை என்ற நிலை வந்தால் அதை உடனே அழித்துவிட வேண்டும் வேட்கைகள் தூண்டுகின்றது.
2.தனக்கு அல்லது தன் மதத்திற்கு விரோதமானவர்கள் எல்லாம் “நம் கடவுளுக்கு விரோதமானவர்கள்…!”

ஞானிகள் காட்டிய வழி தவறி… கடைசி நிமிடத்தில் நீ எதிரிகளை (கடவுளுக்கு விரோதமானவர்களை) வீழ்த்திட வேண்டும்… தவறு செய்பவர்களை அழித்திட வேண்டும்… என்ற உணர்வு கொண்டு இந்தத் தாக்குதல் வரப்படும் பொழுது அந்தத் தாக்கிடும் உணர்வே கடைசியில் விளைகின்றது.

“கடவுளுக்கு விரோதமானவர்கள்…” என்று சொல்லிக் கொண்டு அந்தக் கடவுளின் தன்மையில் தான் பல மதங்களை உருவாக்கி விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் இப்படித்தான்…!

இந்து மதமானாலும் சரி முஸ்லிம் மதமானாலும் சரி புத்த மதமானாலும் சரி கிறிஸ்தவ மதமானாலும் சரி இதைப் போல “தனது கடவுளுக்கு எதிரியானவர்கள்…” என்று எதிரிகளை உருவாக்கி
1.நல்லவைகளைப் பேசினாலும்
2.மற்ற மதங்களைச் சாடும் பொழுது எதிரி என்ற நிலையும்
3.பிசாசு என்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றனர்.

இப்படி உலக நிலைகளில்… மற்றவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று சாரார் சொல்லப்படும் பொழுது மற்ற மதங்களும் இதைப் போல “அவர்களும் பிசாசை வணங்குபவர்கள்…” என்று சொல்வதும்
1.உயர்ந்த குணங்களை எல்லாம்
2.அந்த ஆவேச உணர்வு கொண்டு தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அன்று நபிகள் சொன்னது:-
1.மனிதனை மனிதன் நீ மதித்து நட
2.மனிதனை உயர்த்த வேண்டும் என்று நீ எண்ணினால் நீ உயர்வாகின்றாய்.
3.மனிதன் பேரன்பைப் பெற்று அனைவரின் தன்மையும் உயர வேண்டும்

ஒரு மனிதன் பசியால் வாடப்படும் பொழுது… அந்தப் பசியைத் தீர்க்கும் எண்ணங்கள் உனக்குள் வந்தால்… அந்தப் பசி தீர்க்கும் உணர்வே உனக்குள் விளையும்… பசி தீர்க்கும் உபாயம் உனக்குள் கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் உண்மையின் சொரூபம் கொண்டு
1.பொய் பேசாதே
2.பொய்யான செயல்களைச் செய்து பிறரை ஏமாற்றாதே
3.தவறான உணர்வுகளை உனக்குள் சேர்க்காதே
4.தவறின் உணர்ச்சிகளை உனக்குள் இயக்கி விடாதே என்று நபிகள் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய பேருண்மையை யாரும் அதைத் தெளிவாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் வந்த அரசர்கள் அவர்கள் நியாயத்தை முன் வைத்து அதன் வழிகளில் தான் இவர்கள் ஆட்சி புரிந்தனர்

நபிகள் காட்டிய அந்தக் கடவுளைக் காணும் நெறியை இவர்கள் முன் வைத்துக் கொள்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் இயற்றும் சட்டத்தைக் கொண்டு இதற்கு மாறாக நடந்தால்
1.அவர்களை ஆண்டவனின் எதிரி என்று மக்கள் மத்தியில் பலியிடுவார்கள்.
2.ஆண்டவனுக்கு விரோதமாக இருந்ததனால்… நீ தவறு செய்ததனால்.. நீ பொய் பேசியதனால்…
3.உன் கைகள் துண்டிக்கப்படும்.. உன் அங்கங்கள் அவமதிக்கப்படும்… உன் சிரசு துண்டிக்கப்படும்…! என்று
4.இப்படி அரசு சட்டங்களை நீதியாக்கி அதை “ஆண்டவன் கட்டளை…” என்று செய்தார்கள்.

அதே உணர்வுகள் தான் இன்றும் உள்ளது.

ஆனால் அந்த அருள் ஞானிகள் தீமைகளைப் பற்றிக் கூறியது என்ன…?

தவறான உணர்வுகள் உனககுள் இருந்தால் அந்த உணர்வின் தன்மை அரக்க உணர்வுகளாக உனக்குள் விளைந்துவிடும். அதனால் உன் அங்கங்கள் சீர்கெடுகின்றன… உன் குணங்கள் மாறுபடுகின்றது… நீ எண்ணிய உணர்வுகள் உனக்குள் மாறுபடச் செய்கின்றது..!

1.உனக்குள் இருக்கும் அந்தத் தவறின் நிலைகளை எல்லாம் அகற்றிவிடு… அருள் ஒளியைக் கூட்டி விடு…
2.ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ வேண்டும் என்று நீ எண்ணு.
3.அவன் பசியைத் தீர்க்கும் உணர்வை ஏங்கு
4.அந்த உணர்வு உனக்குள் இருந்து பேரன்பாக வளர்கின்றது என்று தான் மகான்கள் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஞானிகள் கூறியதை யாரும் பின்பற்றவில்லை…! இன்றைய உலக நிலை இது தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கொடூரத் தெய்வங்களை வணங்கித் தன் பாவத்தைப் போக்கவும் தன் எதிரிகளை வீழ்த்தவும் ஆடு கோழிகளைப் பலியிட்டு அந்தத் தெய்வங்களை வழிபட்டு அதே சிந்தனையிலிருந்து விட்டால் அந்த உணர்வின் அலைகள் வெளிப்படுவதை நுகர்ந்த பின் எப்படிக் கொடூரத் தன்மை பெற்றதோ இந்த உணர்வின் தன்மை வழிபட்டோர் உடல்களுக்குள் சென்றுவிடும்.

அந்த உணர்வுகளைப் பெற்ற பின் அவர் இறந்துவிட்டால் பயத்தால் இத்தகைய ஆவியின் தன்மைகள் ஒரு உடலுக்குள் புகுந்து விட்டால் அவர்களுக்குக் காட்சி தரும்.

எப்படி…?
1.அந்தக் கொடூரப் பற்கள் கொண்ட அந்தத் தேவி வந்துவிட்டாள்…!
2.இந்த அச்சத்தால் வரும் பொழுது நரம்புகள் இயங்காது. பேசவும் வராது.
3.என்ன…? என்ற நிலைகள் வரப்படும் பொழுது..
4.கொடூரப் பற்கள் கொண்டு என்னைத் தாக்க வருகின்றது…! என்று அவர் ஒரு வார்த்தை சொன்னாலும்
5.அடுத்த கணம் இந்த உணர்வின் தன்மை வாய் அடைத்துவிடும்.

தெய்வத்திற்குப் பலி கொடுத்துப் பல உணர்வுகளை வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இப்படித்தான் வரும்.

இதைப் போன்று எந்த மதத்திலும் சரி…! அவர்கள் வழிப்படுத்திய நிலைகள் கொண்டு அது ஏங்கிப் பெறும் உணர்வுகள் இவ்வழியில் அங்கே சென்றுவிட்டால் இதே நிலை வரும்.

இதைச் சைத்தான் என்பார்கள் பல நிலைகளில். நாம் பேய் என்போம். இப்படிப் பல உணர்வுகள் நமக்குள் திரண்டு அதன் வலுவாக நமக்குள் இயக்குகின்றது.

1.நாம் எண்ணியது எந்த உணர்வோ அதன் உணர்வு கடவுளாக நின்று
2.அந்தச் சக்தியாக நம் உடலில் இயக்கி
3.நாம் மடிந்த பின் இந்த நிலைகளை உருவாக்குகின்றது.

நாம் பார்க்கும் ரூபங்களில் எந்தத் தெய்வமும் அப்படி இல்லை…!

நாம் உணர்வதற்காகத்தான் அவரவர்களின் மதத்தின் அடிப்படையில் இன்னென்னது என்ற நிலைகளை உருவாக்குகின்றார்கள்.

மெக்காவில் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் மெக்காவிற்குச் சென்ற பின் சைத்தானை ஓட்ட வேண்டும் என்று கற்களை எடுத்து வீசுவார்கள்.

தாக்கும் உணர்வு கொண்டு வரும் பொழுது போர் முறை கொண்டு இதிலே போட்டி கொண்டு தாக்குவார்கள்.
1.அந்தச் சைத்தானை விரட்டும் நிலைகள் கொண்டு கற்களைக் கொண்டு எறியப்படும் பொழுது
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரப்படும் பொழுது அதிலே சிலர் மடிவார்கள்.

வருடா வருடம் மெக்காவிற்குச் செல்லப்படும் பொழுது அந்த ஞானிகள் காட்டிய உணர்வை மறந்து விட்டு
1.வெறியின் ஆசை கொண்டு நான் தீமைகளை வெல்லப் போகிறேன் என்று
2.இத்தகைய தீமையின் வெறி கொண்ட உணர்வுகளை இவர்கள் சுவாசிக்கும் பொழுது
3.அறியாமலே வெறி கொண்ட உணர்வுகள் வந்து அது இயக்கும் தன்மை வருகின்றது.

பாவத்தைப் போக்கவும்.. அருள் ஞானத்தைப் பெறவும்… அங்கே சென்றாலும் கடைசியில்…
1.வெறி கொண்டு தாக்கும் பிசாசுகளை ஒட்டும் உணர்வு கொண்டு
2.அந்தக் கற்களை எடுத்து வீசப்படும் பொழுது
3.இந்த உணர்வின் “வேகத் துடிப்பு…” வருகின்றது.

நம் நாட்டிற்குள் எடுத்துக் கொண்டாலும் இது போல சில நிலைகள் உண்டு. ஒருவனின் நிலைகளில்…
1.இவன் ஆண்டவனுக்கு விரோதமானவன்.. இவனைத் தாக்கிவிட வேண்டும்… அழித்துவிட வேண்டும்.
2.இல்லை என்றால் ஆண்டவனைப் பறைசாற்றுபவனை இவன் அழித்துவிடுவான்… என்ற
3.வெறி கொண்ட உணர்வுகளிலும் சில நிலைகள் உருவாகின்றது.

ஆகவே இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அது உள் நின்று அதன் வழியே செயல்படுத்துகின்றது.

அருள் ஞானியான அந்த நபிகளோ…
1.“தீமைகள் தனக்குள் வராதபடி…”
2.தன் எண்ணத்தின் தன்மை கொண்டு
3.தன் அருகிலே வராதபடி தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தன் பாவங்களைப் போக்கி அந்த அருள் ஒளிகளைத் தமக்குள் கூட்டி அந்த உணர்வு கொண்டு “இந்த உலகமே உய்ய வேண்டும்…” என்று விரும்பினார். அந்த அருள் ஞானி ஊட்டியபடி மெக்காவிற்குச் சென்றால் அது நலமாக இருக்கும்.

ஆனாலும் பின் வந்தோர்கள் அவருக்குப் பின் அதை உருவங்களாக வடிவமைத்துப் பிசாசு என்ற எண்ணங்களை ஓங்கி கற்களால் அதை நீ எறிய வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

மெக்காவிற்குச் சென்று திரும்பும் பொழுது இதே உணர்வுகள் தான் கடைசியில் தாங்கி வருகின்றார்கள்.

நான் தியானிப்பது யாரை…?

 

குருநாதர் பித்தரைப் போன்று இருந்து சாக்கடை அருகே எம்மை அமரச் செய்து…
1.அந்தச் சாக்கடையை நீக்கி நல்ல உணர்வுகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று
2.உபதேசித்த அருளைத் தான் “நீங்களும் நிச்சயம் பெற முடியும்” என்று உபதேசித்து வருகின்றோம்.

அந்த அருள் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்த ஆற்றல்கள இங்கே நமக்குன் முன் படர்ந்திருப்பதை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

நாம் எண்ணியதை நம் உயிர் படைக்கின்றது என்ற நிலையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றோம். கீதையில் சொன்னது போன்று நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

கண் காட்டிய வழியில் நிச்சயம் அந்த அருளை நீங்கள் பெற முடியும்.

1.யாம் உபதேசித்த உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று “நான் தியானிப்பது யாரை என்றால்… உங்கள் உயிரைத் தான்…!”
2.உயிரால் அமைக்கப்பட்ட இந்த உடலான ஆலயத்திற்குள்…
3.மனிதனாக உருவாக்கப்பட்ட அரும்பெரும் சக்திகள் நல் உணர்வுகளாகத் தெய்வமாக இருக்கும் நிலையில்
4.அறியாத உட்புகந்து தீமைகள் செய்யும் அந்த நிலையை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தியான பயிற்சி.

ஒருக்கிணைந்த நிலையில் தியானிக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவலைகள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணும் போது… “உங்கள் உயிரை நான் தியானிக்கின்றேன்…”

1.என் குரு காட்டிய நிலைகள் கொண்டு உங்களுக்கு உறுதுணையாக
2.உங்கள் உயிரை ஈசனாக மதித்து அவன் கட்டிய ஆலயத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தியானிகின்றேன்.

மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்தியான அந்தத் தெய்வ நிலைகள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அங்கே அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.

நீங்கள் இதை எண்ணித் தியானித்து அந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம்.

இந்த உபதேச வாயிலாக உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் இணைய வேண்டும் என்று உங்களை தியானிக்கும் பொழுது
1.நீங்களும் அதே போன்று எண்ணினால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் சக்தி பெற்று
2.உங்கள் ஆன்மாவிலே கலக்கப்பட்டு… உங்களுக்குள் சக்தி வாய்ந்த ஞான வித்துக்களாக ஊன்றப்படுகின்றது.

இந்த உணர்வின் நினைவு கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்த்து தியானத்தில் அமர்ந்திருக்கும் “அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற வாக்கினைப் பதியச் செய்கின்றோம்.

அதன் வழியில் உடல் நலம் மன நலம் மன பலம் மன வளம் தொழில் வளம் பெறவும்… யாம் கொடுக்கும் வாக்கின் தன்மையால் ஒற்றுமையான உணர்வுகளை வளர்க்கவும் இது உதவும்.

இந்த உணர்வின் துணை கொண்டு உங்களுக்குள் அதை வலுப் பெறச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் உபதேசித்து உங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.

அந்த அருள் ஞானியின் சக்திகளைப் பருகும் தகுதி பெற வேண்டும் என்பதற்குத்தான் கூட்டுத் தியானத்தைச் செய்வது.

கூட்டுத் தியானம் இருக்கக் கற்றுக் கொண்டவர்கள்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்த நிமிடத்தில் என்று எண்ணினாலும்
2.உடனுக்குடன் அதை நீங்கள் பெற முடியும்… தீமைகளிலிருந்து விடுபட முடியும்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் சகஜ வாழ்க்கையில் எப்பொழுது தீமையும் கொடுமையும் நாம் நுகர நேர்கின்றதோ… அறிய நேருகின்றதோ… “அறிந்துணர்ந்தாலும்…” நமக்குள் அது வளராது தடுத்துப் பழக வேண்டும்.

தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும். அதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பகைமை என்ற உணர்வுகள் வளராது நல்லதாக்க முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் கூர்மையாக எண்ணி ஏங்கிப் பெறும் பொழுது அது கூர்மை அவதாரமாகி… ஒளியான உணர்வின் அணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக முடியும்.

1.எதன் வலிமையைப் பெற்றோமோ…
2.இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

அங்கே அதனின் உணர்வின் தன்மை கொண்டு இருளை வென்று உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றது.

நாம் எண்ணத்தால் உருவாக்கிய உணர்வுகள்… எண்ணம் சீதாராமா. எந்தச் சுவை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக நமக்குள் தூண்டுகின்றது.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகள் நமக்குள் சேரும் பொழுது சீதா…! உணர்ச்சிகள் சீதாராமனாகத் தோன்றுகின்றது.
1.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நம்மை இயக்கி
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும் பொழுது இராமலிங்கம்.

சீவலிங்கமாகக் கோள்கள் உருவாகின்றது. ஆனால் அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக ஜீவ ஆன்மாவாக நாம் விளைகின்றோம். ஜீவ ஆன்மாக்களாக எதை விளைவிக்கின்றோமோ சிவமாக (உடலாக) மாறுகின்றோம்.

உயிரின் தன்மை நமக்குள் இயக்கவில்லை என்றால் இந்த உடல் சவமாகின்றது. எந்த உணர்வை எடுத்தோமோ அதற்குத் தகுந்த அடுத்த ரூபத்தை உயிர் மாற்றுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

மனிதனாக ஆன பின் கார்த்திகேயா… இதை அறிந்திடும் பக்குவம் பெற்றவர்கள் நாம்… இந்த உடலினின்றே இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அணுவாக மாற்றுதல் வேண்டும்.

ஆகவே தான்…
1.அந்த ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்குகின்றோம்.
2.அந்த உணர்வின் சத்தாக உங்களை நுகரச் செய்கின்றோம்.
3.அந்த அணுவின் கருவாக உங்களுக்குள் உருவாகச் செய்து
4.உங்கள் இரத்தநாளங்களில் பெருக்கும்படி செய்கின்றோம்.

இதையே நீங்கள் அடைகாத்தது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று காலை துருவ தியானத்தில் ஏங்கினால் அந்த உணர்வின் அணுக்கருக்களுக்கு ஜீவன் ஊட்டுகின்றீர்கள். ஒளியான அணுக்களின் பெருக்கமாகின்றது.

நாம் எந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர வேண்டும் என்று எண்ணினோமோ அந்த அணுக்கள் தனக்கு வேண்டிய உணவைப் பற்றி ஏங்கும் பொழுது
1.அதே அருள் உணர்வுகளை நுகரச் செய்து
2.ஞானத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்குவதும்
3.ஞானிகள் சென்ற வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிட்டால் இதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலிலே ஏற்கனவே இருந்த இருள் சூழ்ந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்துவிடுகின்றது.
1.அது மடியும் தன்மை வரும் பொழுது ஒளியின் அணுவாக மாறுகின்றது
2.மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்றால்
3.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்.

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மற்றவர் (யாரோ) நமக்குச் செய்வார்கள் என்ற ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் “அவர்கள் மகா சக்தி பெற்றவர்கள்” என்ற நிலைகள் கொண்டு அவர் வலையில் சிக்கி… நம் புத்தியை இழந்து… அவர்களிடம் நாம் அடிமையாகின்றோம்.

பாதிப்படைந்த பின்… “தப்ப வேண்டும் தப்ப வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வருகின்றோம்.

உதாரணமாக இந்தத் தொழிலைச் செய்தால் அதிலே நீ அதிகமான லாபம் பெறலாம் என்ற உணர்ச்சிகளை ஒருவர் தூண்டி விட்டால் போதும். அவர்களைப் பற்றிய புகழாரம் அனைத்தும் பாடத் தொடங்குவார்கள்… அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று…!

அவர் உதவி செய்வார் என்ற எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்பார்கள். அதாவது புகழ்ந்து பேசிய பின் இப்படிக் கேட்பார்கள்.

கொடுத்து விடுவீர்கள்…!

சிறிது நாள் கழித்து கொடுத்ததைக் கேட்கலாம்… என்று சென்றாலும் “நீங்கள் தக்க நேரத்தில் உதவி செய்தீர்கள்…! இன்னும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…” என்பார்.

இப்படிப் புகழ்ந்து பேசுபவருடைய நிலைகளுக்கு நாம் அடிமையாகி விட்டால் இப்படிப் பேசிப் பேசியே நம்மிடமிருந்து காசை வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் கஷ்டமாக இருக்கும் பொழுது நாம் கேட்டால் நம்மைப் புகழ்ந்து பேசியவர் “ஐயோ…!” இப்பொழுது என்னிடம் காசில்லையே…! என்பார்.
1.ஆனால் நாம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்க மாட்டார்.
2.நம்மிடம் பணம் கேட்பதையும் நிறுத்த மாட்டார்
3.நாம் பணம் இல்லை… என்று சொன்னாலோ உடனே பகைமையை ஊட்டிவிடுவார்.
4.காசைத் திருப்பிக் கேட்கிறார் என்றும் அடுத்தவரிடம் நம்மைப் பற்றிச் சொல்லிச் சீண்டிவிடுவார்.
5.இவருடைய செயல்கள் இப்படி…! என்று கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் சொல்லி இடையூறுகளை ஊட்டுவார்.

கடைசியில் கொடுத்ததை எல்லாம் கேட்டால் “என்னிடம் எப்பொழுது பணம் கொடுத்தீர்கள்…!” என்பார். இப்படியெல்லாம் புகழாரம் பாடுவோர் கையில் நாம் சிக்கிவிட்டால் இந்த மனித வாழ்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

ஆகவே…
1.நாம் ஒருவருக்கு உபகாரம் செய்வது என்றால் திருப்பிப் பெறும் நிலைகள் இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலைகள் செயல்படுத்த வேண்டும்
3.ஒன்று இரண்டு ஏதோ அவர்களுக்கு.. எப்படியோ நன்றாக இருக்கட்டும்…! என்ற நிலைகளில்
4.புகழ் பாடுவோர் கையில் கொடுத்து விட்டால் போதும்…!
5.கொடுத்ததைத் திரும்பக் கேட்கும் நிலையற்ற நிலையில் இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு தரம் உதவி செய்தாலும் மீண்டும் அவர்கள் கேட்பார்கள். உதவி செய்யவில்லை என்றால் பழியைச் சுமத்துவார்கள். அதனால்…
1.நம்மை அறியாமலே நண்பர்களுக்குள் பகைமை உருவாகின்றது.
2.இன்றைய உலகம் இப்படித்தான் இருக்கின்றது…!

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைச் சுவாசித்து உடலுக்குள் கருவின் தன்மையை உருவாக்கி அந்தக் கருவை நமக்குள் அணுவாக வளர்த்திட வேண்டும்.

அதன் வளர்ச்சி கொண்டு இந்த அருள் உணர்வின் வலிமை பெற்று
1.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்
2.சிந்திக்கும் தன்மை அவருக்கு வர வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு நல்ல உணர்வு தோன்ற வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட உணர்வினைக் கருவாக்கி உணர்வின் தன்மை பெற்றுவிட்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவோரும் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
6.அந்த ஏமாற்றும் தன்மையே அவர் உடலிலிருந்து மறைந்து விடுகின்றது.

ஆகவே இன்றைய உலகில்… பிறிதொரு பகைமையோ ஏமாற்றும் உணர்வுகளோ வராதபடி நாம் மாற்றியமைத்தல் வேண்டும். அதே சமயத்தில் நாம் நுகரும்… அல்லது நுகர்ந்த அருள் சக்திகள் நமக்குள் வளர்ந்து அரும் பெரும் சக்தியாக மலர்கின்றது.

இதையே நமக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் ஒளி பெறுகின்றோம்.

“உந்து விசை” இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது

 

தாய் தந்தையர் நம்மைக் காத்திட எத்தனையோ வேதனைகளை அனுபவித்து உடலில் அதை நுகர்ந்துள்ளார்கள். அவ்வாறு நம்மைக் காத்திட நஞ்சின் தன்மையாக விளைய வைத்த நிலையில் அன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விட்டால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வின் துணை கொண்டு
2.என் அன்னை தந்தைக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்.
4.என்னை ஈன்ற அந்த அன்னை தந்தையர் பிறவா நிலை பெற வேண்டும்.
5.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று உடல் பெறும் அந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தும் கரைந்து விட வேண்டும்.

என்னை வளர்த்திட்ட “உயர்ந்த உணர்வின் ஒலிகள்” உயிருடன் ஒன்றி என்றும் நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி… அழியா ஒளிச் சரீரமான பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று
1.”விண்ணை நோக்கி உந்தி” இந்த உணர்வின் வேட்கை கொண்ட பின்
2.எந்தத் தாயின் சரீரத்தில் இருந்து நாம் உருவானமோ அவர்களை விண்ணை நோக்கி உந்தித் தள்ள வேண்டும்.

ஆகவே… தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்தால் இன்னொரு உடலுக்குள் புகாது… நஞ்சு கொண்ட உணர்வுகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் சேர்த்திருந்தாலும்… அதிலே அவர்கள் சிக்காது அடுத்த கணமே விண் செலுத்தும் படி தான் ஞானிகள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.

அவ்வாறு செலுத்தி விட்டால் சப்தரிஷி மண்டலத்தில் அவர்கள் உயிரான்மாக்கள் இணைந்து “சப்தரிஷிகள் உமிழ்த்தும் உணர்வை உணவாக எடுத்து” ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருப்பார்கள்.

ஆனால் இன்று ஐதீகம் என்று சொல்லி இறந்தவர்களின் சுட்ட சாம்பலைக் கங்கையில் கொண்டு கரைத்து விட்டால் “செய்த பாவம் போய்விடும்” என்று இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

அவர்களுக்குப் பிரியப்பட்ட பதார்த்தங்களை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் மகிழ்ந்து விடுவார்கள்… சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள்…! என்று தான் நமக்குக் காட்டியுள்ளார்கள்.

எது சொர்க்கம்…? எவ்வாறு அங்கே அனுப்ப வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய உண்மைகள் காலத்தால் மறைந்து விட்டது.

ஆகவே ஞானிகள் காட்டிய வழிப்படி உடலை விட்டுப் பிரிந்த முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணை வேண்டும் என்று
1.உந்து விசை கொண்டு தான் அங்கே செலுத்த வேண்டும்.
2.உந்து விசை இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது.

ஈர்ப்பால் கவர்ந்த தாவர இனச் சத்து நம் உடலாக விளைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பிலே தான் இருக்கும். அதே சத்தின் துணை கொண்ட நிலையில் மனிதருடன் பற்று கொண்டால் “அந்தப் பற்றின் ஈர்ப்பின் நிலைகளுக்கே மீண்டும் உடல் பெறும் நிலைகளுக்கே வந்துவிடும்…”

எதன் மீது பற்று அதிகமானதோ… அந்த நஞ்சு கொண்ட உணர்வு இணைக்கப்படும் பொழுது அதனின் நிலைகள் கொண்டே உயிரினங்களுடைய ரூபங்கள் மாறத்தான் செய்யும்.

குருநாதர் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

ஆகவே அவர் காட்டிய அருள் வழிப்படி உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உந்தித் தள்ளி” அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.

அதன் மூலமாக சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை எளிதில் பெற்று மூச்சும் பேச்சும் பிறருடைய தீமைகளை அகற்றும் நிலையாக வருகின்றது.

நீங்கள் இதனைச் செயல்படுத்தும் போது… விஞ்ஞான உலகில் ஏற்பட்டுள்ள நஞ்சினை உங்கள் மூச்சலைகள் துரத்தி விட்டு… மெய் ஞானிகள் உணர்வுகளைக் கூட்டச் செய்து… மெய் உணர்வினை இந்த உடலுக்குள் சேர்த்து உடலை விட்டு அகன்றாலும் மெய் ஞானியின் உணர்வுடன் நாம் ஒன்றிட முடியும்.

ஆகவே… உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

1.எண்ணியதை இயக்குவது உயிரே
2.எண்ணியதை இறையாக்குவதும் உயிரே
3.எண்ணியதை உடல் ஆக்குவதும் உயிரே
4.எண்ணியதை உடலுக்குள் விளையச் செய்வதும் உயிரே
5.நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிரே
6.எண்ணியதைப் பிரம்மமாகச் சிருஷ்டிப்பதும் உயிரே
7.எடுத்துக் கொண்ட உணர்வின் ஞானமாக இயக்குவதும் அவனே.

இதனை நினைவு கொண்டு அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் குருவாக நின்று… நாம் எண்ணியதை எல்லாம் ஈசனாக இருந்து… அந்த உணர்வுகளை எல்லாம் நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய கருவின் தன்மை பெறச் செய்வதற்கு உயிரே குருவாக இருக்கின்றது.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்பொழுது ஏங்கித் தியானிப்போம். நமது குரு ஈஸ்வரபட்டரின் அருள் சக்தி பெற்று அவர் வழியில் இதை நாம் எண்ணி நுகர வேண்டும்.

அப்படி நுகரப்படும் பொழுது…
1.குரு வழியில் அகஸ்தியன் அருளை எளிதில் பெறலாம்.
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான
3.அந்த உணர்வின் வழி நடந்து சென்ற ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்ற
4.சப்தரிஷி மண்டலமாக அடையும் நிலையை நீங்கள் பெறலாம்.

அகஸ்தியனைப் பற்றி உபதேசிக்கும் பொழுதும்… பேசும் பொழுதும்…
1.அவன் பெற்ற சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போல் இருக்கும்.
2.அவன் நுகர்ந்த அந்த மகா பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும்.
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்.

உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வல்லமை பெற்ற சக்தியாக… நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக… நீங்கள் நுகரும் தன்மை பெறுகின்றீர்கள். அந்த அணுவின் தன்மையை உடலுக்குள் கருவாக உருப்பெறச் செய்யும் சக்தியும் பெறுகின்றீர்கள்.

கருவுறும் அந்த உணர்வின் கருவிற்கு ஞானிகளின் உணர்வைச் செருகேற்றி… ஞானிகளைப் பற்றி யாம் உபதேசித்த பல கலவைகளையும் சேர்க்கும் பொழுது அதுவும் அணுக்கருக்களாக உங்கள் இரத்த நாளங்களில் கலந்து பரவும்.

இப்படிப்பட்ட அரும் பெரும் சக்திகளை உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து இயக்கிடும் சக்தியாக வருகின்றது.

அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. நினைக்கும் பொழுதெல்லாம் அந்தச் சக்திகளை நீங்கள் பெறலாம்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்பொழுது யாம் (ஞானகுரு) பதிவு செய்த எண்ணத்தால் உருவாக்கப்பட்டது அனைத்தும் உங்களுக்குள் நின்று அது வலுவாக இயக்கும்.

1.அந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது
2.அகஸ்தியனைப் பற்றிய எண்ணங்கள் கண்ணிற்கே நினைவு வருகின்றது.

அதாவது… யாம் சொல்லும் சொல்லின் நிலைகளை உங்கள் கண் பதிவாக்கி அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.

1.அது தான் ஹரி…! – அறியக் கூடிய அறிவு
2.சூரியனால் இயக்கப்படுகின்றோம் – ஹரி கிருஷ்ணா
3.கிருஷ்.. என்றால் பதிவாக்கக்கூடிய நிலை.

அப்படிப் பதிவான பின் அந்த உணர்வுகள் எண்ணமாகும் பொழுது “ஹரிராமா” அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்தால் “ஹரிகிருஷ்ணா”

1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தால் உள்ளுக்குள் பதிவாகி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்தப் பதிவின் நிலையே நுகர்ந்து
3.உடலுக்குள் அணுவின் கருவாக மாற்றும் திறன் வருகின்றது.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா எனறு ஏங்குங்கள்

உபதேசிக்கும் உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கும் எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது கண் வழி அதை நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்த நாளங்களிலே கருத்தன்மை அடையும் கருக்களாக அது உருவாக்கப்படுகின்றது.

அந்த அகஸ்திய மாமகரிஷ்யின் அருள் சக்திகளை ஏங்கிப் பெறும் நோக்கத்துடன் தியானிக்க வேண்டும்.
1.தியானம் என்பது வெறும் சொல்லாகச் சொல்லி அப்படியே விட்டிடாது
2.அவருடைய அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.

அந்த அருள் மகரிஷி நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மையாக விளைந்து
1.அவனின்று வெளிப்பட்ட மூச்சலைகள்…
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவும் பொழுது
3.உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை ஊட்டி
4.அதை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுவீர்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதையே திரும்பத் திரும்ப ஏங்கி உங்கள் உடலுக்குள் இரத்த நாளங்களில் கருவாக உருவாக்குங்கள்.

உங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.
1.அவன் உணர்வுகள் உங்களுக்குள் படும் பொழுது – அந்த உணர்வின் அலைகள் உங்கள் வாழ்க்கையில்
2.நுகரும் சக்தியும்
3.அறியும் சக்தியும்
4.வளர்க்கும் சக்தியும்
5.வளர்ந்திடும் சக்தியும் கிடைக்கும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி உங்கள் அருகிலே சுழன்று… நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்திற்குள் சென்று.. உங்கள் உடலுக்குள் செல்லும் நிலையை இப்பொழுது இந்தச் சந்தர்ப்பம் உருவாக்குகிறது.

அகஸ்தியன் நுகர்ந்த அந்த மணத்தின் தன்மையைக் கவர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அகஸ்தியன் நுகர்ந்த மணத்தை இப்பொழுது நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் கணவனும் மனைவியும் வானுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கி துருவ மகரிஷியாகி அவர்கள் உருவாக்கிய சக்தி இங்கே பரவி இருக்கிறது.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் உள்ள அணுக்களில் மோதும் பொழுது
1.புருவ மத்தியில் அந்த ஒளிக்கதிர்கள் தெரியும்
2.உங்கள் உடலுக்குள் அந்த உணர்வின் ஒளி அலைகள் பாயும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் நினைவனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அதனுடன் தொடர் கொண்டு… அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி அதை இழுத்துக் கவர்ந்து கவர்ந்து சுவாசியுங்கள்… உடலுக்குள் செலுத்துங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்
2.அந்த உணர்வின் அலைகள் உங்களை அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே சேர்க்கும்.

பிராணயாமத்தின் மூலக்கூறு

 

ஆண்டென்னாக்களை வைத்து அதில் பல சக்திகளைக் கூட்டி அதனின் ஆற்றல் கொண்டு அதைத் திசை திருப்பி வைக்கப்படும் பொழுது வெகு தொலைவில் இருப்பதை… எங்கிருந்தாலும் அந்த அலைகளை இழுத்துக் கவர்ந்து கொண்டு வருகின்றது.

இதைப் போன்று
1.நாம் அந்த அருள் ஞானிகள் வித்தை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.அதனின் நினைவைக் கண்ணுக்குள் கொண்டு வரப்படும் பொழுது
3.உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைவினைக் கூட்டப்படும் பொழுது
4.மகரிஷிகளின் அருளாற்றல் நமக்கு முன் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து
5.நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் சக்தியாக உருவாக்கச் செய்வது தான் அது.

அன்றாட வாழ்க்கையில் உடல் அழுக்கைப் போக்குகின்றோம் ஆனால் அதே போல் வாழ்க்கையில் நம் நல்ல உணர்வுகளில் படும் அழுக்கைப் போக்குகின்றோமா…?

அன்புடன் பண்புடன் பணிவுடன் மற்றவருடைய துயரைக் கேட்டு அவர்களுக்கு நன்மைகளை செய்திருந்தாலும் அவருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது அதைத் துடைத்திடும் நிலையாக ஆன்மாவைத் தூய்மை செய்தல் வேண்டும்.

தங்க நகை செய்யும் பொழுது தெரிந்து தான் செம்பும் வெள்ளியையும் இணைக்கின்றோம். அதைப் போல் வாழ்க்கையில் நாம் சென்றாலும் மற்றவர்கள் குறைகளைக் கேட்டுத் தான் அதை நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கின்றது.

ஆக… அதை நுகர்ந்து உணர்ந்து அதன் பின் பல நன்மைகள் செய்திருந்தாலும் நமக்குள் அவர்களின் உணர்வின் சத்து நம் நல்ல குணத்துடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

தீமைகளில் இருந்து அகற்றிடும் நிலையாகத் தன்னைக் காத்திடும் நிலையாகப் பரிணாம வளர்ச்சியில்
1.தனக்குள் வலுக் கொண்ட நிலைகளை நுகர்ந்தாலும்
2.அதனின் உணர்வுகள் இதற்குள் வலுவாகி அதனின் மணத்தை நுகர்ந்து அதனின் ஈர்ப்புக்குள் சென்று
3.“அப்படித்தான் பரிணாம வளர்ச்சி என்பதே வளர்ந்தது…”

அப்படிப் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த நாம் மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஒன்றி ஒளியாக மாற்றிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் தான் அவன் தீமையை அகற்றியது போன்று நாமும் நம்மை அறியாத உட்புகந்த தீமைகளை அகற்ற முடியும். அதைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உடலுக்குள் செலுத்தும் பொழுது “அதற்குப் பெயர் பிராணயாமம்…”

ஒரு பானையிலே பொருளைப் போட்டு நெருப்பைக் கூட்டி வேக வைத்துச் செயல்படுத்தினோம் என்றால் அது வெந்து ஆவியாக வெளியாகி வருவது போல
1.நாம் உயிரோடு ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி
2.உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த உடலுக்குள் கவர்ந்தோமென்றால்
3.உடலில் அந்த மணங்கள் வெளிப்படுகின்றது… தீமைகளைப் பிளக்கின்றது… ஆன்மாவிலிருந்து அதை அகற்றுகின்றது.

ஒரு பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தை எண்ணாது தன்னுடைய வலுவால் அதைப் பிளந்து அதற்குள் இருக்கும் நல்லதை எடுப்பது போன்று அருள் ஞானிகள் உணர்வை விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் ஆற்றலைப் பதிவு செய்து நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எண்ணி எடுத்துக் கொண்டால் இது பிராணயாமம். அந்த மகரிஷிகளின் உணர்வு உடலுக்குள் சென்று நமக்குள் கலக்கப்படும் பொழுது ஆன்மாவில் இருக்கக்கூடிய தீமைகளைப் பிளக்கின்றது.

இதைத் தான் நரசிம்ம அவதாரம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

நாம் விண்ணை நோக்கி ஏகி… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரின் துணை கொண்டு வலு சேர்க்கப்படும் பொழுது… வாசல்படி மீது அமர்ந்தான் நர நாராயணன். மடி மீது அமர்த்தி இரண்யனைப் பிளக்கின்றான்.

இரண்யன் என்பது இந்த வாழ்க்கையில் கேட்டறிந்த வேதனையான உணர்வுகள் நல்ல குணங்களைக் கொல்லும் திறன் பெற்றது. நம் ஆன்மாவிலே அது கலந்து நல்ல சிந்தனைகள் செய்யக்கூடிய உணர்வின் அலைகளைச் செயல்படுத்தத் தடைப்படுத்துகின்றது.

இதைத்தான் நாராயணன் மடி மீது இந்தத் தீமைகளை வைத்து அது உள் புகாது பிளந்தான் வாசல்படி மீது அமர்ந்து…! என்று சொல்வது.
1.நமக்கு இந்த மூக்கு தான் வாசல்படி…. அந்த வாசல்படிக்கு மேல் பகுதியில் தான் நமது உயிர் அமைந்திருக்கின்றது.
2.அங்கே நம் நினைவைச் செலுத்தி அதன் வழி அருள் ஞானிகளின் உணர்வை உடலுக்குள் செலுத்தினால் இது நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

உயிர் வழி மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தி அதன் வழி இயக்கச் சக்தியாகக் கொண்டு வரும் பொழுது உடலுக்குள் இருந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் “அருள் மணங்களாக வெளிப்படும் பொழுது” நம் முன் படர்ந்து இருக்கும் தீமையான உணர்வுகளைப் பிளக்கின்றது… சிந்திக்கும்படி செய்கின்றது.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதில் கலந்துள்ள செம்பு பித்தளை எப்படி ஆவியாக மாறுகின்றதோ… அது போன்று நமக்குள் இரண்டறக் கலந்த தீமை செய்யும் உணர்வின் சத்தை அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகள் வலு இழக்கச் செய்கின்றது.

1.அன்றைய ஞானிகள் மகரிஷிகள் எவ்வாறு தங்களுக்குள் வந்த தீமைகளை வலுவிழக்கச் செய்தார்களோ
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் இந்த விநாயகர் தத்துவமே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தன் தாய் தந்தையரின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்தாலும் அவன் இளம் குழந்தையாக ஐந்து வயது இருக்கப்படும் பொழுதே தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றனர்.

அவர்கள் ஆன்மாக்கள் பிரியும் பொழுது தன் குழந்தையின் பால் நினைவைச் செலுத்தி அதே ஏக்கத்திலேயே பிரிந்ததால் அகஸ்தியன் உடலில் புகுந்து விட்டனர்.

அகஸ்தியன் உடலுக்குள் வந்த நிலையில்
1.அகஸ்தியன் தாய் தந்தையர் எந்தெந்த வழியில் அவர்கள் தங்கள் செயல்களைச் செயல்படுத்தினார்களோ
2.அதை எல்லாம் அகஸ்தியன் உடலிலிருந்து அந்த உணர்வைப் பெறும்படி செய்து அந்த உடலை இயக்கினார்கள்.

அகஸ்தியன் அவன் வளர்ந்த நிலையில் பதினாறாவது வயதில் திருமணமான பின் இருவரும் கணவனும் மனைவியுமாக நம் பூமியின் துருவத்தின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டார்கள்.

துருவத்தின் ஆற்றலைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு வளர்ச்சி அடைந்த பின்
1.அவர்கள் இருவரது ஆன்மாக்களும் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
2.அவருடைய தாய் தந்தை ஆன்மாக்களும் கலந்தே விண் செல்கிறது.
3.இப்படி நான்கு பேருடைய உணர்வுகள் கலந்து உருவானது தான் “துருவ நட்சத்திரம்…”

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி நுகர்ந்தறிந்த ஆன்மாக்கள் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது ஒளியாகப் பெற்றவர்கள் துருவ நட்சத்திரதின் ஈர்ப்பு வட்டதிற்குச் சென்று என்றுமே ஒளியின் சரீரமாக “சப்தரிஷி மண்டலங்களாக” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இப்படி அந்த அகஸ்தியன் காலத்தில் அவனுடன் இணைந்த நிலையில் விண் சென்றவர்கள் ஏராளம்…!
2.அது தான் முப்பத்து முக்கோடி தேவர்கள் – சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் குடும்பங்களில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பற்றுடன் வாழும் நிலையில் மனைவி மேல் பற்று கொண்ட நிலையில் கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் மனைவியின் உடலில் சேர்ந்து இந்த உணர்வுகள் ஒன்றி வாழும்.

அதே போல் கணவன் மீது பற்று கொண்ட நிலையில் மனைவி உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா கணவன் உடலுக்குள் சேர்ந்து ஒன்றி வாழும்.

இப்படிப் பற்று கொண்டு வாழும் நிலையில் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானம் செய்து ஒன்று சேர்ந்தால் அடுத்து…
1.கணவன்/மனைவி ஆன்மா பிரியப்படும் பொழுது
2.கணவனுடன்/மனைவியுடன் இணைந்தே சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
3.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைக்கப்பட்டு
4.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
5.விண்வெளியிலிருந்து வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
6.என்றும் பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைய முடிகின்றது.

கணவன் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மா மனைவியின் உடலுக்குள் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனின் உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரங்களைப் பெற்றுவிடுகின்றது.

ஆனால் இன்றைய வழக்கப்படி செய்யும் சாங்கிய சாஸ்திரங்களால் இந்த நிலையை அடைய முடிவதில்லை. பற்று கொண்ட நிலையில் மீண்டும் பிறவிக்கே வருகின்றது.

ஆகவே இதைக் கேட்டுணர்ந்தோர் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானத்தில் இருக்கும் பொழுதும் சரி… அதிகாலை துருவ தியானத்திலும் சரி…
1.கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும்
2.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வது மிகவும் நலம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நெசவுத் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு கணவன் மனைவி அவர்களுக்கு நான்கு குழந்தைகள். ஒரு சமயம் ஆஸ்த்மா நோயால் கணவர் மிகவும் அவதிப்பட்டார்.

ஓரளவுக்குச் செல்வத்தைச் சம்பாரித்து எளிய குடும்பமாக இருப்பினும் தன் மனைவி மீது இருந்த அந்தப் பற்றின் தன்மையும் குழந்தை மீது இருந்த பற்றின் தன்மையும் கொண்டு தான் அவர் வாழ்ந்தார்.

ஆனால் தன் நோயினால் அதைத் தாங்காத நிலைகள் கொண்டு விஷத்தை உணவாக உட்கொண்டு விட்டார். அவரின் ஆன்மா பிரிந்து விட்டது.

பிரியும் பொழுது தன் மனைவியின் நினைவாகவே ஆன்மா சென்றதால் மனைவியின் உடலுக்குள் சென்றுவிட்டது.

ஆன்மா மனைவி உடலுக்குள் சென்ற பின் அவர் விஷத்தைக் குடித்த பின் அவர் உடல் எப்படித் துடி துடித்ததோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடி துடிப்பு வந்துவிட்டது.

1.அந்த ஆன்மா மனைவியின் இரத்தநாளங்களில் சுழன்று வரப்படும் பொழுது
2.சிறுமூளை பாகம் சென்ற பின் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதே உணர்வு அதே சொல் அதே செயலாக வருகின்றது.

இப்படித்தான் அந்த உடலை இயக்கிக் கொண்டிருந்தது.

என்னிடம் (ஞானகுரு) அவரை அழைத்து வந்தார்கள். தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.

இதற்கு முன்னாடி ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிறிது நேரம் அந்த உணர்வின் இயக்கம் இருக்கும். பின் சரியாகப் போகும் ஆனால் இப்பொழுது இந்த இரண்டு நாட்களாக மிகவும் மோசமாகிவிட்டது என்றனர்.

ஆவிகளை ஓட்டுபவர்களிடம் எல்லாம் சென்று நாங்கள் பார்த்தோம். செல்வங்களை எல்லாம் செலவழித்தோம். வறுமைக் கோட்டில் மிகவும் வாடிக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது…! என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் என்னிடம் சொல்கிறார்கள்.

அப்பொழுது அந்த அம்மாவுக்கு நினைவு இல்லை. குழந்தைகளும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

குடும்பத்தைச் சார்ந்தோருக்கு விவரத்தைச் சொல்லி இந்த முறைப்படி தியானமிருங்கள் என்று சொன்னேன்.
1.அந்த உடலில் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும்.
2.அந்த உடலில் உள்ள ஆன்மா அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்.
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்லச் சொன்னேன்.

அதன் வழியிலே அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் செய்தார்கள். என்னிடம் வந்திருக்கும் பொழுது ஒரு அரை மணி நேரம் இதைச் சொல்லிச் செய்தார்கள்.

அந்த அம்மாவிற்குச் சிறிது தெளிவாகியது. பின் எழுந்த பின் இதே போன்று அவர்களிடமும் விவரத்தைச் சொன்ன பின் அவர்களும் இதே போல் நினைவைச் செலுத்தினார்கள்.

பின் பரிசுத்தமாகியது…!

பின் அந்த அம்மாவுக்கு நல்ல நிலைகள் வந்து அவர்கள் குடும்பத்தைப் பேணிக் காக்கும் நிலையும் வந்தது.

கடைசியில் இறந்த பின்…
1.அந்த ஆன்மாக்கள் இரண்டுமே ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது… ஒளி பெறும் சரீரம் பெற்றது.

இது இருபத்தைந்து வருடம் முன்னாடி நடந்த நிகழ்ச்சி. (ஞானகுரு உபதேசம் செய்தது 1997).

ஆரம்ப நிலைகளில் நான் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றி வரும் பொழுது இத்தகைய நிலைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வந்தது.

1.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்படி எளிதில் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப முடியும்.

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்

 

இன்று நமது வாழ்க்கையில் எத்தகைய நிலையில் இருப்பினும் அதை நாம் சீர்படுத்துவதற்குப் பல பல முயற்சிகளை மேற்கொள்கின்றோம். மந்திரம்… எந்திரம்… யாகங்கள்… ஆலயங்களுக்குச் செல்வது… என்று இப்படி எத்தனையோ நிலைகளைச் செய்து “அதை எல்லாம் நிவர்த்தி செய்து விடலாம்…” என்ற எண்ணத்தில் தான் நாம் செல்கின்றோம்.

ஆனால் பண்டைய கால ஞானிகள் எவ்வாறு உயர்ந்த சக்திகள் பெற்றார்கள்…? என்பதை
1.நீங்களே உங்களுக்குள் உணர்ந்து…
2.அறியாது புகுந்து தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகளை நீக்கிட முடியும் என்ற நிலையை
3.பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் இதையெல்லாம் உணர்த்துகின்றார்.

ஆனால் நான் அவரை அணுகிச் செல்லவில்லை. அவரே தான் எம்மை அடிக்கடி அணுகி வந்து கொண்டிருந்தார். அவர் அணுகப்படும் போது அவரிடமிருந்து விலகிச் செல்லும் நிலையே ஏற்பட்டது. அப்படி நான் விலகிச் சென்றாலும் அவரிடம் இருந்து என்னால் தப்ப முடியாத நிலையில் என்னை அணுகியே சில நிலைகளைச் சொல்வார்.

அதை எல்லாம் நான் கேட்ட பின் பித்தன் என்ற நிலையில் மந்திரங்கள் தந்திரங்கள் செய்து அதில் சிக்குண்டு தவிக்கின்றார்.
1.ஆக அவரிடம் நாம் சிக்கிவிட்டால் நமக்கும் இந்தக் கதி வந்துவிடும் என்று
2.அவரை அணுகாது நான் விடுபட்டுச் சென்று கொண்டிருந்தேன்.

இருப்பினும் அவர் விட்ட பாடில்லை.

அது சமயம் என் மனைவிக்குக் கடுமையான எலும்புருக்கி நோய் வந்தது. வந்தபின் ஒட்டன்சத்திரம் ஹாஸ்பிடல் சேர்த்தோம். ஆனால் அங்கே டாக்டர்களால் ஒன்றும் முடியாத நிலை ஏற்பட்டு அவர்கள் கூட்டிச் சென்று விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

காரணம் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கொடுத்த மயக்க மருந்து வேலை செய்யவில்லை. ஆகையினால் “ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

என்னுடைய மாமனாருக்கு ஒரே பெண் குழந்தை. வீட்டுக்கு மனைவியை நான் கூப்பிட்டு வந்த நிலையில் “இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற பின் மூர்ச்சையாகி” அவர் மரணமடைந்து விட்டார்.

பின் அதற்கு வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்தேன். என் மனைவி இன்றோ நாளையோ என்று ஜீவன் பிரியும் நிலையில் இருக்கின்றது. இத்தருணத்தில் பித்தரைப் போன்று இருந்த குருநாதர் இங்கே வருகின்றார்.

அவருடைய உணர்வுகள் என்னைக் கடுமையாகச் சாடுகின்றது. “இங்கே வா” என்று என்னைக் கூப்பிடுகின்றார்… நான் மறுக்கின்றேன்.

ஏனென்றால் மாமனார் இறந்த சூழ்நிலை வேறு விதமாக இருப்பதால் நான் அவரிடம் செல்ல மறுக்கின்றேன். ஆனால் அவரோ “நீ வந்து தான் ஆக வேண்டும்…” என்று போர் செய்யும் முறையில் வருகின்றார்.

சுற்றத்தார் அனைவரும் அங்கே இருக்கப்படும் பொழுது இவருடன் அடிக்கடி தகராறு செய்தால் மற்றவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நிலையில் “சரி” என்று அணுகி அவருடன் சென்றேன்.

காபி வாங்கிக் கொடுத்தார் குடித்தேன் குடித்த பின்பு… இன்று உன்னை விடவே மாட்டேன் என்று கட்டாயப்படுத்துகின்றார். பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் நீர் இல்லாத தெப்பக்குளத்திற்குள் அழைத்துச் செல்கின்றார்.

அங்கே என்னுடைய வாழ்க்கை வரலாறு… என் இளமைப் பருவம்… சிறு வயதில் இருந்து நடந்த நிகழ்ச்சிகளை எல்லாவற்றையும் சொல்கின்றார்.
1.நான் உன்னைப் பல காலமாகப் பின் தொடர்ந்தே வருகின்றேன்.
2.என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்று சொல்கின்றார்.

என் வாழ்க்கையை முழுவதும் சொல்லி உன் மனைவி இறந்துவிடும் நிலையில் இருக்கின்றது. ஆகையினால் நான் கொடுக்கும் இந்த விபூதியையும் எலுமிச்சம் பழத்தையும் உன் மனைவிக்குக் கொடு… எழுந்து நடப்பாள் நலமடைவள்…! என்று சொல்கின்றார்.

அவர் சொன்னது போன்று செய்த பின் என் மனைவி அதிலிருந்து மீண்டது. இரண்டு நாட்களில்… இடுப்புக்குக் கீழ் அசைவில்லாது இருந்த கால்களில் அசைவுகள் கிடைத்தது. அடுத்து எழுந்து உட்காரும் நிலையும் வந்தது… உணவு உட்கொள்ளும் நிலையும் வந்தது… அதன் நடமாடும் நிலைகள் வந்தது.

ஒரு மாதம் கழித்து குருநாதர் மீண்டும் எம்மைச் சந்திக்கின்றார் அவரைச் சந்தித்த பின் அவருடன் சென்றேன்.

இப்பொழுது எனக்கு டீ வாங்கிக் கொடு என்று என்னிடம் கேட்கின்றார். வாங்கிக் கொடுத்த பின் என்னை அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்துகின்றார்.

ஒரு சமயம் என்னைச் சாக்கடை அருகிலே அமரும்படி சொல்கின்றார். கடைக்குச் சென்று காபி டீ வாங்கி வா என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு வந்து வைத்த பின் அங்கிருக்கக்கூடிய சாக்கடையில் இருந்து அள்ளிப்போட்ட குப்பைகளை அதிலே போடுகின்றார்.

அவர் டீ குடிப்பார் நான் காபி குடிப்பேன். சாக்கடையை அள்ளிப்போட்டு என்னை குடிக்கச் சொல்கிறார். நான் மறுக்கின்றேன்…! அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

நான் சொல்வதை எல்லாம் செய்கின்றேன் என்று சொன்னாயே இப்பொழுது ஏன் மறுக்கின்றாய்…? என்று மீண்டும் கேள்வி எழுப்புகின்றார்.

இருப்பினும் எனக்கு அந்த இடத்திலே சிரமம் ஏற்படுகின்றது அங்கே வருவோர் போவோரை எல்லாம் உற்றுப் பார்க்கின்றேன். இவரையும் பார்க்கின்றேன்… மற்றவர்களையும் பார்க்கின்றேன்.

சாக்கடை அருகில் அமரச் செய்து சாக்கடையும் அள்ளிப் போட்டுக் குடிக்கச் சொல்கின்றார்… வசமாகச் சிக்கிக் கொண்டேனே…! என்று தவிக்கின்றேன்.

காரணம்…
1.என் மனைவியை எழுப்பிய பின்… நான் சொல்வதை எல்லாம் செய்கின்றாயா…! என்று
2.சரி செய்கிறேன் என்று என்னிடம் வாக்கை வாங்கிக் கொண்ட பின் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.

சரி அதைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வா. வரும் பொழுது முறுக்கு கடலைப்பருப்பு பொரிகடலை வாங்கி வா என்று சொன்னார்.

வாங்கி வந்த பின் சாக்கடைக்குள் கோடுகளைப் போடச் சொல்கின்றார். அவர் சொன்ன முறைப்படி கோடு போட்ட இடங்களில் முருக்கையும் கடலைப் பருப்பையும் பொரிகடலையும் போட்டேன்.

பன்றி அங்கே வருகின்றது. சாக்கடைக்குள் அமிழ்ந்திருக்கும் கடலைப் பருப்பை நுகர்ந்து எடுத்து முதலிலே உட்கொள்கின்றது. அடுத்து முறுக்கைச் சாப்பிடுகின்றது. கடைசியில் பொரிகடலையும் சாப்பிடுகின்றது.

சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை எண்ணாது
1.பன்றி எவ்வாறு அதிலிருக்கும் நல்ல உணவுகளை எடுத்துக் கொள்கின்றது…?
2.அதற்கு அந்த நுகரும் சக்தி எப்படி வந்தது…?
3.நல்லவைகளை எப்படி நுகர்கின்றது…? தீமைகளை எப்படிப் பிளக்கின்றது…?
4.அதனுடைய வலிமை எப்படிப்பட்டது…? என்பதை இங்கே உணர்த்துகின்றார்.

கடவுளின் அவதாரத்தை அங்கு அமர்ந்தே உபதேசிக்கின்றார். வராக அவதாரம் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று சொன்னார்.

ஓர் உயிரணுவின் தோற்றமும் பல நிலைகளிருந்து மீண்டு காத்திடும் உணர்வுகளை ஒவ்வொரு சரீரத்திலும் நுகர்ந்து நுகர்ந்து… பரிணாம வளர்ச்சியில் பன்றியாகப் பிறந்து மற்ற தீமைகளை பிளந்திடும் உணர்வாக அந்த சக்தியைப் பெற்றுப் பெற்று… கெட்டதை நீக்கிடும் வலிமை கொண்டு நல்லதை நுகரும் சக்தியும் வலுவான நிலை கொண்டு அதைப் பெற்று வளர்த்து எவ்வாறு இத்தகைய செயல்களைச் செயல்படுத்துகிறது…? என்று உணர்த்துகின்றார்.

1.பின் நல்லவைகள் அதற்குள் அதிகமாக நாற்றமான உணர்வுகள் தணிய
2.நாற்றமான உணர்வுகளுக்குள் நல்ல உணர்வின் வலிமை அதிகமாக
3.அந்த நாற்றம் தணிந்து இந்த நாற்றத்தை நீக்கிடும் அந்த உணர்வின் சத்து அதிகமாக விளைந்து உடலைப் பிளந்து
4.அதில் விளைந்த வித்தின் உணர்வின் சத்தை அது கவர்ந்து வெளிவந்த பின் பரசுராம் என்று
5.அந்தத் தத்துவப் பிரகாரம் சமப்படுத்தும் உடலாக மனிதனாக உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
6.இதைத் தான் கடவுள் என்ற நிலையில் புழுவிலிருந்து மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

கல்வி அறிவு அற்றவனாக நான் இருந்தாலும் குருநாதர் பதிவு செய்த உணர்வின் சக்தி அதை நான் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அன்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சி… கணக்கிலடங்காத நிலைகளையும் அவர் உணர்த்திதை மீண்டும் நினைவு கூறும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாமும் கவர முடிகின்றது.

உங்களுக்கு அதை உபதேசிக்கும் பொழுது நீங்கள் நுகர்ந்தாலும் எனக்குள் அது விளைகின்றது. சூரியனின் காந்த சக்தி கவரு போது கேட்போர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.

பதிவை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணும் பொழுது அந்த மெய்ஞானிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ அதைப் போன்று
1.தனக்குள் விளையும் இந்த உயர்ந்த உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்
2.கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருவது.

ஆகவே பொறுமையான நிலைகள் கொண்டு மகரிஷிகள் அருள் உணர்வலைகளை எண்ணி எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளுமாறு எல்லோரையும் வேண்டுகின்றேன்.

ஊழ்வினையின் இயக்கங்கள்

 

இன்று விஞ்ஞான அறிவால் ஒன்றுமறியாத நாடாக்களில் முலாம்களைப் பூசி வைத்திருக்கின்றார்கள். மைக்கை நேர்முகமாக வைத்து அதிலே நாம் பேசும் பொழுது அதில் உள்ள காந்தப் புலன்கள் கவர்ந்து அதனை அப்படியே பதியச் செய்கின்றது.

இதைப் போன்று தான்
1.இயற்கையில் ஓர் உயிரணுவாக இருந்தாலும் சரி அணுவாக இருந்தாலும் சரி
2.இவைகள் அனைத்திலும் அதில் இருக்கும் காந்தப் புலனே கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது அது பதியச் செய்கின்றது.

மனிதனாக நாம் பிறந்திருப்பினும் நம் உடலில் இருக்கக்கூடிய எலும்புக்குள் மேக்னட் சக்தி உண்டு. புழுவிலிருந்து நாம் மனிதனாக வளர்ந்து இருப்பினும் அதனதன் சேர்த்துக் கொண்ட நிலையில் ஊழ்வினையாக அந்த உணர்வுகள் வளர்ச்சி பெற்று அதிலே வளர்ந்த உணர்வின் அணுக்கள் விளைந்துள்ளது.

நாடாக்களில் பதிவு செய்வது போல நமது எலும்புகளுக்குள் இருக்கும் மேக்னட் காந்தப் புலன் ஊழ்வினையாகின்றது.
1.இப்பொழுது யாம் பேசுவதைக் கூர்ந்து கவனித்தால் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
2.பதிவான பின் தான் பேசியதை அது கவர்ந்து கொள்ளும்.
3.பின் ஆன்மாவாகக் கவர்ந்து அதிலிருந்து சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதனின் உணர்வலைகளை அறியச் செய்கின்றது.

அந்த நாடாக்களில் எவ்வாறு பேசிப் பதிவாக்கப்படுகின்றதோ இதைப் போல இப்பொழுது யாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தால் அது பதிவாகும். அதே சமயம்
1.வேறு அலுவல் காரணமாக “வேலைக்கு நேரமாகிவிட்டது” என்ற எண்ணத்தைச் செலுத்தி உங்கள் நினைவினை அங்கே பாய்ச்சினால்
2.அதனின் உணர்வலைகள் தான் உங்களை இயக்கும்… நான் பேசுவது பதிவாகாது.

உதாரணமாக ஒரு நண்பன் கடுமையாக நம்மை ஏசுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதை உற்று நோக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

உடலிலிருந்து வரக்கூடிய அவனின் உணர்வலைகளைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கும் பொழுது உயிருடன் ஒன்றி அந்த உணர்வுகள் இயக்கி உடல் முழுவதும் படர்ந்து அறியச் செய்கின்றது.

அதே போல்… இங்கே யாம் பேசும் அந்த உணர்வின் சக்தியை நேர்முகமாக இருந்து கேட்டறிந்தால் போதும். குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் உபதேசிக்கும் பொழுது
1.இன்றைய நிலைகளில் பாட நிலைகள் அல்லாதபடி
2.இது என்னமோ சொல்கின்றார் என்ற நிலையில்லாதபடி
3.தெய்வத்தை நாம் வணங்கி வரும் அதற்கு மாறான நிலைகளில் சொற்பொழிவாற்றுகிறார் என்று எண்ணாதபடி நீங்கள் கூர்ந்து கவனித்தால்
4.விநாயகர் தத்துவப்படி… இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறி வைத்திருக்கும் அதனுடைய மூலக்கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும்.

ஆற்றல் மிக்க நிலைகளை யாம் உபதேசிக்கும் பொழுது நீங்கள் பதிவு செய்து கொண்டால் அடுத்து நீங்கள் திரும்ப எண்ணும் பொழுது… நமக்கு முன் பரவி இருக்கும் ஆற்றல்மிக்க அருள் ஞானிகளின் சக்திகளை நீங்கள் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

விஞ்ஞான அறிவால் பல நிலையில் கொண்டு ஒலி/ஒளிபரப்பு செய்யக்கூடிய பல நிலைகளையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

விஞ்ஞானக் கருவியின் துணை கொண்டு மற்றொரு பக்கம் அதனின் சுவிட்சை இயக்கினோம் என்றால் அங்கிருக்கக்கூடிய ஆண்டெனா காற்றிலிருக்கக் கூடியதைக் கவர்ந்து டிவி மூலமாக ஒளிபரப்பு செய்கின்றது… திரைப்படமாகக் காட்டுகின்றது.

இதைப்போல இந்த மனித வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களைப் பலருடன் உறவாடப்படும் பொழுது
1.“எதை ஆழ் கருத்தாக நாம் பதிவு செய்கின்றோமோ… அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவாகி விடுகின்றது…”
2.பின் அதனின் நினைவலைகளைக் கொண்டு வரும் பொழுது கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.

டிவிக்கு ஆண்டென்னா எப்படி முக்கியமோ இதைப் போல நமது கண் நமக்கு ஆண்டென்னாவாக இருக்கின்றது.

நாம் நினைவுபடுத்திப் பார்க்கப்படும் பொழுது நமக்கு முன் பரவிப் படர்ந்திருக்கும் இதற்கு முன் உறவாடிய உணர்வுகள் நமக்குள் அது பதிவு உண்டு.
1.நண்பர்கள் ஆனாலும் எதிரிகள் ஆனாலும் அதிலே பதிவுகள் உண்டு.
2.அது பதிந்த நிலைகள் கொண்டு நாம் பேசிய உணர்வலைகள் இங்கே படர்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால்… டிவி மற்ற இன்றைய எலெக்ட்ரானிக் கருவிகள் மூலமாகப் பதிவு செய்யும் நிலைகள் வேறு. மனித உணர்வுகள் இயற்கையின் இயக்கத்தின் சக்தி அதன் மூலமாக பதிவு செய்யும் நிலைகள் வேறு.

இவ்வாறு படர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையை நண்பன் எதிரியாக கடும் சொற்களைச் சொன்னால் அதைப் பதிவு செய்து கொண்டால் திரும்ப எண்ணினால் அவன் எங்கோ இருப்பான் என்றாலும்
1.அதே உணர்வுகள் நமக்குள் கவர்ந்து நம்மை அறியாமலேயே கோபமும்
2.அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகளும் நமக்குள் வருகின்றது.

நாம் ஒரு விதையைப் பூமியில் பதித்து விட்டால் தன்னுடைய உணர்வின் சத்தால் காற்றிலிருந்து தன் உணர்வினைச் சுவாசித்து அதனின் சத்தாக விளைகின்றது. அந்த வித்து அதன் இனமான செடியாக வளர்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் ஒரு மனிதனுடன் உறவாடினால் அந்த உணர்வின் வித்து நமக்குள் பதிவாகி… அதுவும் வளர்கிறது.
1.தாவர இனங்கள் பூமிக்குள் இருந்து எப்படித் தன் உணர்வின் மணங்களை அது கவர்கின்றதோ இதைப் போல
2.நமக்குள் பதிவான அந்த மனிதனுக்குள் விளைந்த அந்த உணர்வின் வித்து நமக்குள் பதிவாகின்றது.
3.இப்படிப் எண்ணிலடங்காத குணங்களும் எண்ணிலடங்காத உணர்வுகளும் நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

அப்படிப் பதிவாகி இருக்கப்படும் போது தன் தன் இனத்தின் நிலையில் அதனின் உணர்வின் தன்மை இயக்கும். அப்படி இயக்கப்படும் பொழுது
1.நாம் ஒருவருக்கொருவர் பேசி உறவாடிய உணர்வுகளைக் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றும்.
2.ஆன்மாவாக மாற்றப்படும் பொழுது அதிலே எது அதிகமாக இருக்கின்றதோ அது முன்னணியில் வந்துவிடும்.

உதாரணமாக… குழம்பு வைக்கப்படும் பொழுது காரம் புளிப்பு துவர்ப்பு இனிப்பு இவைகளைப் போட்டுச் சுவைமிக்கதாக ஆக்கினாலும் அதில் காரத்தைக் கூட்டிவிட்டால் காரமாகத் தான் அது இருக்கும்… உப்பு அதிகமானால் கையிப்பு அதிகமாகிவிடும்.

இதைப் போன்று தான் நமக்குள் எண்ணிலடங்காத குணங்கள் பதிவாகி இருந்தாலும் ஊழ்வினையாகின்றது. அதிலே நாம் எதை அதிகரித்துக் கொள்கின்றோமோ அந்த உணர்வின் சத்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே அது எந்த குணத்தின் அடிப்படையிலோ “கோபம் என்றால் கோபம் வருவதும்… சலிப்பு என்றால் சலிப்பு வருவதும்…” இப்படி மாறி மாறி எத்தனையோ வந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு நாம் ஊழ்வினையாகப் பதிவு செய்தது எல்லாம்
1.நமது மனம் எப்பொழுது சோர்வடைகின்றதோ அதிலே நஞ்சான உணர்வு முன்னெழுந்து
2.அதனின் உணர்வின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்திவிடும்.

இதை நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் அன்று அகஸ்தியன் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று பெயரிட்டு நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றான்.

ஆகவே நாம் நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக எதை ஆக்க வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் அனைவரும் நுகரும் சக்தி கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் கடுமையான பகைமையாகி விட்டால் அதனால் வெறுப்படையும் நிலையே வருகின்றது.

அந்த வெறுப்புடன் “நாசமாகப் போடா…!” என்று சொல்லப்படும் பொழுது என்ன நடக்கின்றது…?

இது அவன் செவிகளில் படும் பொழுது
1.இந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குப் பாதகத்தை உண்டாக்கி
2.வாகனங்களில் செல்லும் பொழுது எதிர்பாராது விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே… இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
1.பிறருடைய வேக உணர்வுகள் வந்து தாக்கி விட்டால்
2.நம்முடைய சிந்தனையைச் சீர்குலையச் செய்து விபத்துக்களுக்கே அழைத்துச் செல்கின்றது.

அல்லது அதே போல் சில விபரீதச் செயல்களையும் நம்மை அறியாமலே செயல்படுத்தத் தொடங்கி விடுகின்றது.

அந்தச் சாப அலைகள் பாய்ந்து விபரீதச் செயல்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாதபடி நம்மையே குற்றவாளியாக ஆக்கும் நிலையையும் உருவாக்கி விடுன்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் விடுபட காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி வலுவாக்கிக் கொண்ட பின் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய தீமைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தத் தீமையான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாது
2.நாம் நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி அதை அடக்கிவிடும்

நம்மை யார் யார் எல்லாம் கேலி செய்தார்களோ… அவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி அவர்கள் பெற வேண்டும்
2.அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாற வேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலிலேயே அவர்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்த பின் நம்மைப் பார்த்து எண்ணும் பொழுதும் சரி அல்லது சார்புடையோருக்கும் சரி
1.நம் பேரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஊடுருவிச் சென்று
2.யார் தீங்கு செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் ஞானத்தை ஊட்டும்.
3.அதாவது… நாரதன் கலகப்பிரியனாகி.. அங்கே உண்மையை வெளிப்படுத்தி அதை உணர்த்தும் சக்திகளாக வருகின்றது.

காவியங்களில் இதைத் தெளிவாக்கியுள்ளார்கள் நம் ஞானிகள்.

ஆகவே நாரதன் (துருவ நட்சத்திரத்தின் ஒளி) என்ற இந்த உணர்வை வழிப்படுத்தினால்… நம்மை அறியாது புகுந்து…
1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் செயல்களிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி…
2.நம் எண்ணமே நமக்குள் தீமைகளை உருவாக்கும் நிலையிலிருந்து முழுமையாக விடுபடச் செய்யும்.

மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வை இப்படி நாம் தொடரப்படும் பொழுது அதைப் பற்றுடன் பற்றுகின்றோம்…. வாழ்க்கையில் வரும் தீமைகளையும் துன்பங்களையும் குறைகளையும் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

மகிழ்ந்து வாழும் சக்தியையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நாம் பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோர்ட்டுகளில் பணம் கொடுத்துச் சிலர் கேஸ்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள். அந்த மாதிரி நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

காலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் எண்ணங்களைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதை வலுவாக நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்ட பின்…
1.எனது சார்புடைய கட்டுகளை வக்கீலோ அல்லது நீதிபதியோ எடுக்கும் பொழுது
2.அவர்களுக்குள் சிந்திக்கும் திறன் வந்து…
3.உண்மையின் உணர்வை உணர்ந்து…
4.அதன் வழியில் தீர்ப்புக் கூறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்த நீதிபதி முன்னாடி வாதங்கள் நடக்கின்றதோ அவர்ளுக்கு இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள். அதிகாலையில் இவ்வாறு செயல்படுத்த வேண்டும்.

1.இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து… அவருக்குள் உண்மையின் உணர்வை உணர்த்தும்.
2.அதன் பின் அவரை அறியாமலே பேசுவார்கள்
3.பணம் வாங்கியிருந்தாலும் கூட அவர்கள் அறியாமலே நல்ல தீர்ப்பைக் கூறும் நிலை வரும்.

வக்கீல்கள் எல்லாம் கொக்கி போட்டே பேசுவார்கள். எதிர் வக்கீல் அப்படி வாதாடிக் கொண்டிருந்தாலும் நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவருக்குள் பாய்ந்த பின் – நாரதன் கலகப் பிரியன் ஆகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் ஊடுருவிய பின்
2.அவர் தன்னை மறந்து உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார்.

நீங்கள் நாரதரைப் பற்றிய காவியங்களில் படித்திருப்பீர்கள். ரொம்பவும் நாசூக்காகச் சொல்லித் தான் அந்த நாரதன் உண்மையை வரவழைப்பான்.

அதனால் தான் “நாரதன் கலகப் பிரியன்… கலகமோ நன்மையில் முடியும்..!” என்று சொல்வது.

தீமைகளை அகற்றும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது அந்தத் துருவ நட்சத்திரம்.

ஆகவே..
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவர் நுகர்ந்தாலும்
2.தனக்குள் அறியாது சேர்ந்த உணர்வினைப் பிரித்துத் தவறு என்ற நிலைகளை உணர்த்தும்.

இந்த உணர்வின் தன்மையைக் கூட்டப்படும் பொழுது… நம்மைப் பார்த்து அந்த உணர்வுகளை நீதிபதி எண்ணும் பொழுது அவரை அறியாமலே அந்த நல்ல தீர்ப்பினைக் கூறிவிடுவார்.

செல்வத்திற்கு அடிமையானவர்கள்… பணத்தின் மீது குறிக்கோளாக வைத்துப் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் தீர்ப்பினையே கூறுவார்கள். அவர்களிடம் நியாயமான… உண்மையான தீர்ப்பு வராது…!

இன்று சத்தியமும் தர்மங்களும் “செல்வத்தில் தான்” இருக்கின்றது.

ஆனால் நாம் அந்த அருள் செல்வத்தை வைத்து… அருள் ஞானத்தை வைத்து… நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களும் தவறில்லாத நிலைகளில் நடந்து கொள்வதற்கு…
1.தவறு செய்வோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அவர்களும் உண்மையை உணர வேண்டும்… நல் வழியில் நடக்கும் செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்ச வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வரப்படும் பொழுது மற்றவர்கள் நம்மை எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் உணர்வினைப் பிளந்து
2.உண்மையின் உணர்வை உணர்த்தும் சக்தியாக மாறும்

இந்தச் சக்தி உங்கள் அனைவருக்குமே உண்டு…!

நாரதனை “முனி” என்று காட்டியது ஏன்…?

 

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் இவைகளில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகளைத் தான் (துருவ நட்சத்திரத்தின் அணு) நாரதர் என்று காரணப் பெயர் வைத்தார்கள். ரிஷியின் மகன் நாரதன்… அவன் ஒரு முனிவன்.
1.முனி என்பது வலு கொண்டது… எதற்கும் அடங்காதது
2.விஷத்தின் தன்மை அணுகாத நிலை கொண்டது…
3.விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது என்ற நிலை கொண்டு தான் முனி என்றும்
4.வீரிய நிலைகள் பெற்றவன் என்றும் அன்று பெயர் வைத்தார்கள் “அந்த அணுவிற்கு…”

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளி வரும் அந்த உணர்வலைகளை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ… இந்த மனித வாழ்க்கையில் தன் ஆசையின் நிலைகளைக் கலைத்து… தன்னை அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான செயல்களை நீக்கிவிட்டு… “கலகப் பிரியன்” என்று அது நன்மையிலே முடியும்.

மனித வாழ்க்கையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும் நம்மை அறியாது அதிலே சிறு தடை ஏற்படும் போது நாம் எண்ணியபடி அவன் வளர்ந்து வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்ற அந்த விஷமான உணர்வுகள் நமக்குள் வந்து கலக்கமாகிச் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்யும் இந்த நிலையை அவன் இப்படிச் செய்தான் இப்படிச் செய்கின்றானே என்ற இந்த ஏக்க உணர்வு கொண்டு செயல்படுத்துவோம்.

அதே சமயத்தில் பிறருக்கு உதவி செய்யும் போது… தான் எண்ணியபடி காசைக் கொண்டு வந்து அவர்கள் கொடுக்கவில்லை என்றால் அவரை எண்ணி நேரத்தில் உதவி செய்தேன் இப்படிக் காலம் கடத்துகிறார்கள் என்று ஏசி வேதனைப்படுவோம்.

இதைப் போன்ற மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகள் “பற்றுடன் நமக்குள் வரும் பொழுது… பாசத்திற்கு எதிராக வரும் பொழுது” வெறித்தனமாகக் கூடி அந்த வெறியான உணர்வுகளைக் கூட்டிடும் இந்த நிலையை
1.அந்த நாரதன் என்ற உணர்வினை நுகரும் பொழுது அதை எல்லாம் பிரித்து விட்டு
2.நமக்குள் ஓங்கி நிற்கும் ஒளியாக… நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிடும் திறன் கொண்டது.

அதற்காக வேண்டித் தான் ரிஷியின் மகன் நாரதர் என்று துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் அணுவிற்குப் பெயரிட்டு அழைத்தார்கள் சாதாரணமாக நாம் புரிந்து கொள்வதற்கு…!

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அதை நுகரும் திறனுக்காக உங்களுக்குள் அந்த நினைவின் உணர்வுகளை உந்தச் செய்வதற்கும் அந்த நினைவுகளை எண்ணும் பொழுது அந்த ரிஷியின் சக்தியை நீங்கள் பெறுவதற்கும் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

நன்மை செய்ய வேண்டும் என்ற நிலையில் பிறர் படும் துயரத்தை நுகர்ந்து பரிவுடன் பண்புடன் பண்புடன் அவருக்கு உதவி செய்தாலும் நீங்கள் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் உங்களுக்குள் வருவதை உங்கள் நல்ல குணங்களை அழித்திடும் அந்த உணர்வை
1.அதை அழித்திட்ட தனக்குள் அடக்கிட்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நுகர்ந்தால் அதை மாற்றி
2.உதவி செய்த நல்ல பண்புகளைக் காத்துப் பிறரைக் காத்திடும் நிலை கொண்ட உணர்வாக விளைய வைத்து
3.என்றும் நிலையான நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் 16 என்ற நிலையை நாம் அடைய முடியும்.

இதைத்தான் குருநாதர் பல வகைகளிலும் காட்டினார்.

பித்தரைப் போன்று அவர் வாழ்ந்தாலும் தன் உடலுக்கு அந்த உணர்வுகளை (பித்தான) கொடுக்காது தன் உடலுக்குள் மெய் ஒளியின் உணர்வுகளை உணர்த்திக் காட்டி அதன் வழி செயல்பட்டார்.

எத்தகைய நல்ல துணிகளை அவருக்குக் கொடுத்தாலும் பைத்தியக்காரனைப் போன்று “அதைக் கிழித்துக் காலில் கட்டிக் கொள்வார்… ஒவ்வொரு கட்டாக கட்டி விடுவார்…”

என்ன சாமி…? புது துணிகளை எல்லாம் இப்படிக் கிழித்துக் கட்டி விட்டீர்கள்…! என்று கேட்டால்
1.கடும் விஷம் ஏறுகிறதப்பா…! அதைத் தடைப்படுத்தப் புது துணியைக் கிழித்து நான் கட்டிக் கொள்கின்றேன்
2.இல்லையென்றால் விஷம் ஏறிவிடுகின்றது என்று இப்படித்தான் உணர்த்தினார்.

ஒவ்வொரு எண்ணங்களுக்கும் அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகளைக் காட்ட ஒவ்வொரு நிறத்திலே துணியைக் கட்டுவார். அதே போன்று தாவர இனங்களுடைய சக்தியை அதனுடைய திறனை அறிவதற்கு அது எப்படி விஷத்தை முறியடிக்கிறது…? எப்படி எல்லாம் தனக்குள் அந்த ஆற்றலை கவர்ந்து கொள்கிறது…? என்பதையும் காட்டுவதற்காக காலிலே துணிகளைக் கட்டுகின்றார்.

ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் உடலை விட்டுச் சென்ற பின் மலைக் காடுகளுக்குள் நான் செல்லப்படும் பொழுது அவரை நினைவு கொண்டு துணிகளை எல்லாம் ஏன் அப்படிக் கிழித்துக் கட்டினார்…? என்று எண்ணும் போது
1.காலில் கட்டிய கிழிந்த ஆடையும்… அவர் நினைவலைகளாக நின்று அதை நான் சுவாசிக்கும் பொழுது
2.அந்த உண்மைகளை நுகர முடிந்தது… தீமைகளிலிருந்து நான் விடுபட முடிந்தது.

அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் காட்டிற்குள் அவன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்… அவன் அன்னை தந்தையினுடைய உணர்வுகள் அவனுக்குள் எப்படிச் சென்றது…? தீய விளைவுகளிலிருந்து விஷமான ஜந்துக்களிடமிருந்து தனக்குள் வரும் பய உணர்வுகளிலிருந்து எவ்வாறு மீண்டான்…?

அவன் பெற்ற அந்த ஆற்றல்கள் அவன் அமர்ந்த இடங்களில் இந்த உணர்வலைகள் படர்ந்துள்ளது. அங்கே சென்று அதை நுகரும் பொழுது நுகர்வோர் உள்ளங்களில் அது எதைச் செயல்படுத்துகிறது…? என்ற நிலையை எனக்கு உணர்த்துவதற்காகத் தான் குருநாதர் காலிலே இது போன்று பல கட்டுகளைக் கட்டி இருந்தார்.

12 வருட காலம் காட்டிற்குள் நான் அலையப்படும் பொழுது திகைத்து நான் எந்த நிலையைச் செய்வது…? என்று உணவுக்காக நான் தவித்துக் கொண்டிருக்கும் நிலை வந்தது. உணவே இல்லாது காட்டிற்குள் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?

எதை எதையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். இருந்தாலும் அரிசிச் சோறு சாப்பிட்டுப் பழக்கப்பட்டது… அந்த நினைவு வரும் பொழுதெல்லாம் துயரங்களே ஏற்படும்.

அதைப் போன்ற நினைவுகள் வரும் பொழுது குருவைத் தான் எண்ணுவேன். அவர் உணர்வினை நுகரும் போது மெய் உணர்வுகள் எனக்குள் ஈர்க்கப்பட்டு
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் சென்ற பாதையும் அவன் விஷத்தை முறிக்க எடுத்துக் கொண்ட நிலையும்
2.அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதையும் பூமியிலே இறுகிப் பதிந்திருப்பதையும்
3.அந்த இடங்களில் நின்ற பின் அந்த உணர்வின் நினைவலைகள் எனக்குள் வருகிறது என்ற நிலையை உணர முடிந்தது.

மெய் ஞானியான அகஸ்தியன் சென்ற பாதையும் அவன் உணர்வின் ஆற்றலையும் உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன் என்றால் அது குருநாதர் காட்டிய வழி கொண்டு தான்.

அவர் உடலை விட்டுச் சென்ற பின் இதையெல்லாம் அறியக்கூடிய நிலையும்… நுகர்ந்தறிந்து… எனக்குள் என்னை அறியாது வந்த தீயவினைகளை அடக்கியதும்… “மெய் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு ஓங்கி வளர்ந்த அந்த உணர்வின் எண்ண அலைகளே” இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றது “நான் அல்ல…!”

1.குருவை நான் நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை உங்களுக்குப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.
2.அதை நீங்கள் கூர்ந்து கேட்டு நுகரும் போது உங்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.

ஆகவே… குருநாதர் எனக்கு எப்படி அந்த உயர்ந்த ஆற்றல்களைப் பெறும்படி செய்தாரோ… அதற்குண்டான உபாயங்களைத் தெரியப்படுத்தினாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும் இப்பொழுது அந்த உயர்ந்த சக்தியைப் பெறுவதற்குண்டான தகுதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்.

அதன் வழி நீங்கள் எண்ணி ஏங்கினால் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பெற்று அவர்களைப் போன்ற உயர்ந்த நிலையைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ… அப்போது உடலில் இருந்து வரக்கூடிய மணமே உங்களுக்கு எதிரியாக மாறி விடுகின்றது அதை அடிபணியச் செய்யும் நிலைக்கே “என்னுடைய (ஞானகுரு) ஆசீர்வாதம்…”

துன்பத்தை விளைவிக்கும் நோயோ… துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ… அதெல்லாம் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அருளாசி கொடுப்பதை நீங்களும் அப்படியே எண்ணிப் பெற்றால் அந்த ஞானிகளுடைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் படர்ந்து துன்பங்கள் அகலும்.

உதாரணமாக மாம்பழம் வாங்க வேண்டும் என்று விரும்பினால் நுகர்ந்த உணர்வு உங்களை அந்தக் கடைக்கு அழைத்துச் செல்கிறது. அதே போல்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் உடல் நோய் நீங்க வேண்டும்… துன்பம் நீங்க வேண்டும்
3.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… செயல் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
4.அது உங்களுக்குள் கிடைக்கப் பெறும்.

அதற்குப் பதிலாக சாமி…! என் துன்பம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… “நீங்கள் தான் கடவுளாக இருக்கின்றீர்கள்…” என்று என்னை வணங்கினீர்கள் என்றால் “உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கின்றீர்கள்” என்று தான் அர்த்தம்.

நான் கொடுத்த உபதேசம் அனைத்தும் வீணாகிவிடும்.

இவ்வளவு தூரம் பெரியவர் உயர்ந்த கருத்துக்களைச் சொல்கின்றார் என்று என்னை உயர்த்தி விட்டு… உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள்
1.உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்… உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்த சக்தியைத் தாள் பணியச் செய்யுங்கள்.

எனக்கு குருநாதர் காட்டிய நிலைகள் அதுதான்…!

ஒருவர் துன்பப்படுகிறார் என்றால் “நம் சொல்” அவரைத் தீமையிலிருந்து மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று எண்ணும் பொழுது நாம் முதலில் நலமாகின்றோம் நம் சொல்லும் செயலும் நல்லதாகிறது. நம் சொல் மற்றவர்கள் உள்ளங்களை மகிழச் செய்கின்றது.

அந்த மகிழ்ச்சியால்
1.மற்றவர்கள் நம்முடன் இணைந்து செயல்படும் நிலையாக
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிபடுத்துவதும்
3.தடையின்றி தொழில் நடப்பதும் தடையற்ற நிலையாக நமக்குள் எல்லாமே உருவாகின்றது.

இந்த அடிப்படையில் நீங்கள் எம்மிடம் ஆசி வாங்கினால் அது உங்களைப் பின் தொடர்ந்து எப்போதுமே உறுதுணையாக அமையும்.
1.உங்களைக் காக்கும்… உங்களுக்குள் உயர்வை ஊட்டும்
2.மெய் ஒளியின் தன்மையைப் பெறச் செய்யும்… நீங்கள் அருள் ஒளி பெறுவீர்கள்.

ஆக… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; நலமும் வளமும் நாங்கள் பெற வேண்டும்; எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்; எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் நல்ல உள்ளங்கள் வளர வேண்டும் என்ற
1.இத்தகைய உணர்வுகளை எண்ணினால் இதுவே உங்களுக்கு
2.”எம்முடைய ஆசியாகக் கிடைக்கின்றது அருள் ஞான வித்துக்களாக…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரண நிலையில் இன்று உடலை விட்டுப் பிரிந்தவர்கள் அடுத்தவர்கள் உடலில் பேயாக ஆடுவதைப் பார்க்கலாம்… அருளாடுவதையும் பார்க்கலாம்… துன்பத்தை விளைவிப்பதையும் காணலாம்.

இந்த உடலில் எதை விளைய வைத்தோமோ இறந்தபின் இன்னொரு உடலுக்குள் சென்று அதைத் தான் அங்கே விளைவிக்கச் செய்ய முடியுமே தவிர குழந்தையாகப் பிறக்க முடியாது.
1.இன்றைய சூழ்நிலையில் இறந்தவர்கள் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்குண்டான வழி இல்லை.
2.காரணம் காற்று மண்டலமே நஞ்சாக மாறி விட்டது.

மீண்டும் மனிதனாக வரவேண்டும் என்றால் ஆடாகவோ மாடாகவோ சென்று… இன்னொரு மனிதனின் உடலுக்குள் சென்று வந்தால் தான் முடியும்.

ஆடு மாடு நாய் என்று எத்தனையோ செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம். “என் கண்ணுக்குட்டி” என்று அன்புடன் பழகுகின்றோம்.

ஆனால் அது திடீரென்று இறந்து விட்டால் “ஐய்யய்யோ… நான் ஆசையாக வளர்த்த கன்று இறந்துவிட்டதே…!” என்ற இந்த ஏக்கம் நமக்குள் வரும் பொழுது அதனுடைய உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும். வந்த பின் நாம் உடலில் மனித உணர்வை ஈர்த்து வளர்த்து… கருவாகி குழந்தையாக உருவாகி அப்படித்தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

நாயை அன்புடன் வளர்க்கின்றோம்… நான் சொன்னதை எல்லாம் கேட்கின்றது… செல்லமாக நான் வளர்க்கிறேன் என்று சொல்லலாம்.

ஆனால் இறந்தபின் செல்லமாக வளர்த்த நாய் இறந்து விட்டதே…! என்று ஏங்கினால் அந்த ஆன்மா நம் உடலின் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நாம் சோறு போட்டு வளர்த்த நாயெல்லாம் அதே ஏக்கமாக இருக்கும்.

யார் உணவை அன்புடன் கொடுத்தார்களோ அதே ஏக்கத்திலே தான் இருக்கும் போட்டவர்கள் இல்லை என்றால் அது இறந்துவிடும்.
1.வேறு எங்கேயாவது சென்று உடலை விட்டுப் பிரிந்தாலும்
2.யார் சோறு போட்டார்களோ அந்த உடலுக்குள் வந்து மீண்டும் மனிதனாகப் பிறக்கும்.

ஆனால் நாம் மனிதர்கள் என்ன் செய்கிறோம்…? எத்தனையோ சந்தர்ப்பங்கள் எத்தனையோ காலகட்டங்களில் நம்மை அறியாது உடலை விட்டு உயிர் பிரிகின்றது.

பிரிந்தாலும் பாசத்துடன் வாழ்ந்த நிலையில் நம்முடைய நினைவுகள் கடைசியில் எங்கே செல்கின்றது…?

எட்டுப் பிள்ளைகள் இருக்கின்றது… ஏழு பேர் அதிலே பிழைத்துக் கொள்வார்கள் ஒரு பையன் சிரமப்படுகின்றான்… கஷ்டப்படுகின்றான்… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று வேதனையை எடுத்து அந்தப் பையன் மீது நினைவு அதிகமாக இருந்தால் இறந்தபின் அவன் உடலுக்குள் தான் செல்லும்.

அங்கே சென்று இன்னும் கொஞ்சம் வேதனையை வளர்த்து அவனையும் மண்ணுடன் மண்ணாக்கி அவனை வீழ்த்தத்தான் இந்த ஆன்மா உதவும்.

இன்னும் கொஞ்சம் அதிகமான விஷத்தன்மையைத் தானும் பெற்று தன் குழந்தையும் பெறச் செய்ய முடியும்.
1.அங்கே சென்று வேதனையை விளைவிக்கத்தான் முடியும்…
2.அவனைக் காக்கவே முடியாது… மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த உணர்வுகள் இப்படித்தான் இயக்கும்.

இதை எல்லாம் நாம் வடிகட்ட வேண்டும்…!

ஒவ்வொரு குணத்திற்குள்ளும் வேதனையான உணர்வுகள் அடைபட்டுக் கிடைக்கின்றது. அந்த வேதனையை நீக்கும் உணர்வின் சக்தியாக ஞானிகளின் அருள் சக்திகள் உங்களுக்குள் இப்பொழுது நிரப்பப்பட்டுக் கொண்டுள்ளது.

நான் கொடுக்கக்கூடிய ஞான வித்தை வளர்க்கும் விதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு பத்து நிமிடவாவது எடுத்துப் பழகுங்கள்.
1.எப்பொழுது சிரமங்கள் வருகின்றதா வேதனை வருகின்றதோ துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
2.மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் வேதனைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக “வாழ்க்கையே தியானமாகின்றது…”.

இப்படித்தான் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டு வர முடியும்…!

நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… மகிழ்ச்சி உங்களுக்குள் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த உபதேசமே அமைகின்றது.

ஆகவே நீங்கள் அதே பிரகாரம் எண்ணினால் உங்களுக்குள் இது ஓங்கி வளர்ந்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் செயல் அனைத்தும் புனிதமும் பெறும் உங்கள் பார்வையும் நல்லதாகும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நீங்கள் எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.உங்களுக்குள் அது தெளிவை ஊட்டிக் கொண்டே இருக்கும்.

குருநாதர் எனக்குள் இன்னல்களை ஏற்படுத்தி அதிலிருந்து மீண்டிட ஆற்றல்களைக் கொடுத்தார். ஆக…
1.ஆற்றல் மிக்க சக்தியாக இருந்தாலும் அதை ஆக்க ரீதியிலே எப்படி நீ பயன்படுத்த வேண்டும்
2.ஆற்றல் மிக்க சக்தியை நீ பெற்றாலும் அந்தச் சக்தியின் வழித் துணை கொண்டு
3.தனக்குள் ஆற்றல்மிக்க எண்ணத்தின் ஒளி கொண்டு வரும் பொழுது
4.”எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தியாக நீ எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று
5.காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் எனக்குக் காட்டினார்.

அதைப் போன்று தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் எல்லாமே துஷ்ட மிருகங்கள் போன்று தான் உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது. “அதை எல்லாம் மாற்றுவதற்குண்டான சக்தியாகத்தான்” இப்பொழுது ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் நிலையான ஒளிச் சரீரமாக நாம் மாற வேண்டும்… அது தான் நிலையானது…!

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை “நமக்கு முன் மலை போல் குவியச் செய்ய வேண்டும்”

 

அன்று ஞானிகள் எவ்வாறு செயல்பட்டார்கள்…? அவர்கள் வழியில் எந்த வினைகளை நமக்குள் சேர்க்க வேண்டும்…? என்பதை குருநாதர் காட்டினார்.
1.அன்று அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தீமையை நீக்கும் சக்திகளை எப்படி எடுத்தாரோ…? அதைப் போல
2.சந்தர்ப்பத்தால் துன்பப்பட்டு வருவோருக்கு மெய் உணர்வுகளை உணர்த்தி… அருள் ஞானிகள் அருள் வித்துக்களை அவர்களுக்குள் பதியச் செய்.
3.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்படி செய்… அந்த உணர்வுகளை அங்கே வளரச் செய்
4.அவர்களை அறியாது வந்த இருளை நீங்கச் செய்
5.அவர்களுக்குள் அது வளர்ந்து அதனால் மகிழ்ந்து உறவாடுவதை நீ பார்
6.அந்த மகிழ்ச்சியான உணர்வை உனக்குள் எடுத்துக் கொள்.
7.அந்த நிலையை நீ உருவாக்கி மகிழ்ச்சியான சொல்களை நுகர்ந்து உன் உடலுக்குள் செலுத்திவிடு…! என்று குருநாதர் காட்டினார்.

நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். உங்களை அறியாது சேர்ந்த விஷமான உணர்வுகள் நீங்கி இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று “குருநாதர் காட்டியபடி யாம் செய்து கொண்டிருக்கின்றோம்…”

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணும் பொழுது அவர்கள் மூலம் சப்தரிஷி மண்டல ஒளிகளை நாம் பெற முடிகின்றது… வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடிகின்றது.

உங்களுக்குள் அந்த நினைவின் எண்ணங்கள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்குத் தான் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலம் சென்றடைந்து என்றும் 16 என்ற நிலை அடைந்து ஒளிச் சரீரமாக அவர்கள் பெற வேண்டும் என்று “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து… உந்தித் தள்ள வேண்டும்…”

அதற்காகத் தான் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் ஆற்றல் ஒவ்வொரு உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்து அந்த உணர்வின் உணர்ச்சிகளை ஓங்கி வளரச் செய்துள்ளோம். அனைவரும் சேர்ந்து ஒரே எண்ணத்தில் ஏங்கப்படும் பொழுது தான் “அந்த மகா ஞானிகள் ஆற்றலைப் பெற முடியும்…”

ஏனென்றால்
1.மகரிஷிகள் எந்த ஒரு மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் சிக்காமல் தப்பிச் சென்றவர்கள்.
2.அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகளை இழுக்கக்கூடிய வலு இழந்தவர்கள் தான் சாதாரண மனிதர்கள்.

இருந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போன்று எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது அது வலுவடைந்து பெரும் வெள்ளமாக அமைகின்றது.

மழையினால் ஏற்படும் வெள்ளம் குப்பை செத்தைகளை அடித்துச் செல்வது போல
1.நாம் எண்ணக்கூடிய அந்த ஒவ்வொரு ஞானிகளுடைய எண்ணங்களும் சிறுகச் சிறுகப் பதிவாகி
2.இந்த எண்ணங்கள் அனைத்தையும் அவர்கள் பால் ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வலைகள் வளம் பெற்று
3.நமக்கு முன் நிற்கும் அசுத்த உணர்வுகளை… விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை அகற்றச் செய்யும்.

பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பருப்பை எப்படி நுகர்ந்து எடுக்கின்றதோ அதைப் போல நாம் அனைவரும் சேர்ந்து இந்த உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது அந்த மாக ஞானிகளின் உணர்வலைகள் இங்கே நமக்கு முன் குவிகின்றது. செத்தை குப்பை என்ற விஷத் தன்மைகளைப் பிளந்து அப்புறப்படுத்துகின்றது.

ஆக…
1.அந்த அருள் ஞானிகளுடைய சக்திகளை அவர்களை ஒத்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது அது இங்கே குவிக்கப்பட்டு
2.அவரவர்கள் எண்ணிய அளவுக்குத்தக்க நமக்கும் சிறிதளவு பங்கு கிடைக்கின்றது.
3.நம் உடலுக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.
4.அதை மீண்டும் எண்ணும் பொழுது எந்த நேரத்திலும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

அதே சமயத்தில் நம் மூதாதையர்கள் அவர்கள் தவம் இருக்கவில்லை என்றாலும் வரம் வாங்கவில்லை என்றாலும் அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் உண்டு.

நாம் அனைவரும் ஒத்த உணர்வு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது… அந்த ஒளி அலைகளுடன் அது மிதந்து அந்த விண்ணின் ஆற்றலில் நம்மால் சுழல வைக்க முடியும்…!”

இப்படித்தான் குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

நமக்காக வேண்டி பாடுபட்ட அந்த நல்ல உள்ளங்கள் தன்னை அறியாது சேர்ந்த இருளான நிலைகளில் இருந்து விடுபட இம்முறைகள் தான் கடந்த காலங்களில் ஞானிகள் காட்டிய நிலைகள். ஆனால் பிற்காலங்களில் இது மறைந்து விட்டது.

இன்று மனிதனுடைய எண்ணங்கள் முழுமையாக அழியும் இத்தருணத்தில் அது மீண்டும் இங்கே கிளர்ந்து எழுகின்றது. குருநாதர் எம்மிடம் சொன்னது…
1.அந்த ஞானிகளின் அருளாற்றலை உனக்குள் ஓங்கி வளரச் செய்து
2.உன்னை நாடி வருவோர் (எண்ணுவோர்) அனைவருக்கும் மகரிஷியின் அருள் ஒளி படர வேண்டும் என்று ஏக்க உணர்ச்சிகளைச் தூண்டி
3.அவர்கள் துன்பங்களிலிருந்து விடுபடச் செய்து அந்த மெய் ஒளியின் மகிழ்ச்சியான நிலைகள் வெளிப்படுவதை
4.நீ நுகர்ந்து அந்த விண்வெளியின் ஆற்றலை நீ பெறு.
5.இதுதான் உனக்கு நான் கொடுக்கின்ற வரம்…! அதைத்தான் நீ வளர்க்க வேண்டும் என்று குருநாதர் காட்டினார்.

ஆகவே நீங்கள் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்ற இந்த இச்சையில் நான் எண்ணி ஏங்கிய உணர்வுகள் “என் உடலுக்குள் கிரியை ஆகிச் சொல்லாக வெளிப்பட்டதும்… என் உடலுக்குள் அந்த உணர்வுகள் கிரியை ஆகி அது இயங்கியதும்… அந்த ஞானத்தின் வழியிலே தான்…”

குருநாதரை நான் எண்ணும் பொழுதெல்லாம்… குரு வழியிலேயே அவர் காட்டிய அருள் ஞானம் எனக்குள் நான் எடுத்துக் கொண்ட இச்சையில் “இன்றும் விளைந்து கொண்டிருக்கின்றது…”
1.அந்த ஞானத்தின் சொல் தொடராக வெளிப்படுகின்றது.
2.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போதும் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
3.அருள் வித்தாக அதன் சத்தைப் பெறும் சக்தியாக உங்களுக்குள் விளைகின்றது.

அதற்காக வேண்டித் தான் பொறுமையுடன் பொறுப்புடன் ஏங்கி… ஒவ்வொரு நாளும் அந்த அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். உங்களை அறியாது வந்த இருள் நீங்க வேண்டும் என்ற ஆசையில் தான் மணிக் கணக்கில் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பச் சொல்வது…”

காரணம்…
1.ஒவ்வொரு நொடியிலும் நல்லதையே எண்ணுவோம்…! ஆனாலும் அடுத்த கணம் சங்கடத்தை எண்ணுவோம்…!
2.இது போன்ற நிலைகள் நமக்குள் சேராத வண்ணம் தடுப்பதற்குத் தான்
3.“திரும்பத் திரும்ப நீங்கள் வளர வேண்டும்” என்று அந்த இச்சையை நான் வெளிப்படுத்துகின்றேன்.

நமது குருநாதர் உபதேசித்து உணர்த்திய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் வலுக் கொண்டதாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். உயிருடன் ஒன்றும் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அனுபவரீதியிலே தான் எல்லாவற்றையும் அறியும்படி செய்தார்.
1.என் (ஞானகுரு) குடும்பத்தையே இன்னலுக்கும் ஆளாக்கினார்.
2.இந்த உணர்வு – தன்னை ஒட்டி வரப்படும் பொழுது தான் அனுபவ ரீதியில் யாம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு நொடியிலேயும் இந்த உணர்வுகள் உலகில் எப்படி இயங்குகின்றது…? உலக மக்கள் தன்னை அறியாது எப்படி இன்னல்கள் படுகின்றனர்..? எப்படி அவதிப்படுகின்றனர்…? என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான்
1.இருபது வருடம் என்னைக் கால் நடையாகவே இந்தியா முழுவதும் நடக்கச் சொன்னார்…
2.மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அந்தக் குடும்பங்களில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி
3.பல அனுபவங்களைப் பெறச் செய்தார் குருநாதர்.

அறிந்த உண்மையின் தன்மையில் பார்க்கும் போது சந்தர்ப்ப பேதத்தால் எத்தனையோ பேர் அவதிப்படுகின்றனர். அதிலிருந்து மீண்டிடும் நிலையாக மெய் ஞானிகள் காட்டும் அருள் வழியில் நீங்கள் நடந்தால்
1.உங்கள் எண்ணமே உங்கள் துன்பத்தைப் போக்கும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து… அதை நீங்கள் அனுபவித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்… அதைப் பற்றுடன் பற்றி உங்களை அறியாது வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்…! என்று தான் சொல்கின்றேன்.

இதை ஏற்றுக் கொள்வார் இல்லை…!

சாமியைப் (ஞானகுரு) புகழ் பாட முடிகின்றது பாத நமஸ்காரம் செய்யத்தான் விரும்புகின்றார்கள். இது வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.

1.அருள் ஒளியைப் பெறுங்கள்…
2.உங்களுக்குள் தீமைகள் வருவதை அடக்கிப் பழகுங்கள்…
3.உங்களால் முடியும்…! என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.

தாய் தந்தையரை உயர்த்தினால் தான் நமக்கு உயர்வு

 

விநாயகனைக் கும்பிடும் பொழுது தாய் தந்தையரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்
2.அவர் அருளால் என்னை அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் தாய் தந்தையர்களை எண்ணும் பொழுது அவர்களை அங்கே இணைக்கச் செய்கின்றது.

தாய் தந்தையர் முதுமை அடைந்து உடலை விட்டுச் சென்று விட்டால் அந்த உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்கள் என்றும் 16 என்ற நிலையில் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “நாம் உந்தித் தள்ள இந்த நினைவு கொண்டு அங்கே செலுத்த முடியும்…”

அதைத் தான் கந்த புராணத்தில் காட்டப்பட்டது.

நாரதன் கனியைக் கொண்டு வந்து சிவனிடம் கொடுக்கப்படும் பொழுது சிவன் சொல்கின்றான். கலகத்தை மூட்டுவதற்காக இங்கே நீ இதைக் கொண்டு வந்திருக்கின்றாயா… என்ன…? சரி சொல் எது என்று பார்க்கின்றேன்…? என்று நமக்குத் தெளிவுபடுத்த புராணத்தில் இப்படிக் காட்டுகின்றார்கள்.

இந்த உலகை யார் வென்று வருகின்றார்களோ அவர்களுக்கு இந்தக் கனி என்று சொல்லப்படும் பொழுது
1.ஆறாவது அறிவு என்ற திறனின் தன்மை எண்ணத்தைப் பலவாறு செலுத்தி மகிழ்வாகனா…!
2.நான் எதையுமே மகிழ்ச்சியாக படைக்கும் திறமை கொண்டு உலகைச் சுழன்று வந்து விடுவேன் என்ற அகம் அங்கே வளர்கின்றது.
3.ஆனால் தாய் தந்தையரை மறந்து விடுகின்றது.

விரிவடைந்த எண்ணங்கள் கொண்டு தன் ஞானத்தாலே தன் எண்ணத்தைக் கொண்டு சக்தியின் திறனை எண்ணினாலும்… அங்கு நாரதன் காட்டுகின்றான் “நீ இந்த உடலில் சேர்க்க வேண்டிய வினை எது…?”

அன்னை தந்தை உடலில் இருந்து வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றாய். ஆகவே பேரண்டமும் பெரும் உலகத்தின் தன்மையும் அவர்கள் தான்.

ஆகவே இந்தக் கனி எப்படிப் பிஞ்சாக இருந்து துவண்டு அது காயாகும் பொழுது புளித்து கனியாகும் போது எப்படி இனிப்பாகின்றதோ இதைப் போல
1.அன்னை தந்தையர் கனியின் தன்மை பெற வேண்டும்
2.அவர்கள் முழுமையின் தன்மை அடைய வேண்டும்
3.மெய் உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று மெய் உணர்வினைப் பெற்று
இந்த மனித உடலில் உயிரின் தன்மையைக் கனியாக்க வேண்டும்.

அப்படி என்றுமே சுவை கொண்டதாக விண்ணிலே திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த மணம் தான் இந்த நாரதன்.

உன் அன்னை தந்தையை நேசித்து…
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில்
2.இந்த வினையை உனக்குள் சேர்த்துக் கொள்…! என்று தெளிவுறக் கந்த புராணத்தில் காட்டியுள்ளார்கள்.

அன்னை தந்தையர் முதலில் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். அவர்கள் நமக்காகப் பட்ட துயரங்களில் இருந்து அவர்கள் மீண்டு என்றும் பதினாறு என்ற நிலை பெற வேண்டும் என்று அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு அந்த ஞானி சென்ற அருள் வழியினை நுகர்ந்து தனக்குள் அதைச் சேர்த்து
1.அன்னை தந்தையருக்கு இதை ஆராதனையாகவும் அவர் ஏக்க அலைகள் உயர வேண்டும் என்று நினைத்து
2.இந்த உணர்வினை இணைத்துக் கொண்டால் தான் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்
3.என்றும் அழியாத நிலைகள் கொண்டு ஒளியான சரீரத்தைப் பெறும் நிலை வருகின்றது.

அன்னை தந்தையரின் உணர்வைத் தனக்குள் வினையாகச் சேர்த்து இந்த மனித உடலை உருவாக்கிய அவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று “கனியாகப் பெற்ற ஞானிகளின் அருள் சத்தைத் தனக்குள் கனிந்திடும் நிலையாக எண்ணி” அதே கனியின் தன்மையைத் தாய் தந்தையரைப் பெறச் செய்ய வேண்டும் என்று உணர்த்துகின்றார்கள்.

தாய் தந்தையை விநாயகர் சுற்றி வந்து கனியைப் பெற்றார் என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் ஆறாவது அறிவு விரிவடைந்த தன்மை கொண்டு
1.எதையும் செயல்படுத்தி விடுவோம் என்ற உணர்வை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது
2.பொருளாக்கத்தை இழந்து எங்கோ பரந்த மனம் கொண்டு போய் விடுகின்றது.

ஆக நமக்கு முன் படைக்கும் சக்தி கொண்ட தாயின் உயிரும் தாயின் உடலும் தாய்க்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியும் மனிதனை (நம்மை) உருவாக்கி நல்வழி காட்டியது என்ற நிலையைத் தெளிவுற உணர்த்துகின்றார்கள்.

அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி… அந்த மகரிஷியின் அருள் ஒளி கொண்டு இந்த இருள் சூழ்ந்த உலகை வென்று மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் நின்று “என்றும் பதினாறு என்ற நிலையினை அனைவரும் அடைய வேண்டும்” என்று காட்டப்பட்டது.

விநாயகரை எண்ணும் பொழுது மகரிஷியின் அருள் சக்தி என் தாய் தந்தையர் பெற வேண்டும்… தாய் தந்தையரின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்… அவருடைய அருளால் எனக்குள் வரும் இருளை நீக்கி… மெய் ஞானிகள் அருள் வழியில் என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறும் தகுதியைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தன் உணர்வுக்குள் அதைச் சேர்த்து இப்படிப் பூஜிக்கும் நிலையைச் செய்தார்கள்.

ஆதியிலே அகஸ்தியன் தன் குழந்தைப் பருவத்திலிக்கும் போது
1.தன்னை அறியாமலே தாய் தந்தையரின் ஈர்ப்பின் ஆற்றல்களைப் பெற்று விண்ணை நோக்கி ஏகி
2.வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று ஞானம் பெற்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றான்.
3.அதே வழியில் தான் நாமும் விண் செல்ல வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கருவிலிருக்கப்படும் பொழுது ஒரு தாய் பாசத்தால் அன்பால் பண்பால் பரிவால் ஒரு குழந்தை கடும் நோயால் அவதிப்படுவதௌ உற்றுப் பார்க்கின்றது. அடப் பாவமே…! இந்தச் சிறிய வயதில் இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணுகின்றது.

ஏனென்றால் கருவுற்றிருக்கும் காலத்தில் தாய்க்குக் குழந்தைப் பாசம் அதிகமாக வரும். கர்ப்பமாகி விட்டாலே அந்த தாயின் சுவாசமே வேறு விதமாக இருக்கும். அந்தப் பாசம் என்ற உணர்வுகள் தோன்றும்.

நோயுற்ற அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்த பின் கண்களால் பார்த்த பின் தாய் உடலில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிகின்றது.

ஆனால் அது கருவிலே விளையப்படும் பொழுது சிறுகச் சிறுகச் சேர்ந்து பிறந்த பின் குழந்தைக்கும் இது நோயாக மாறுகின்றது. நோயாக மாறிய பின் தாய்க்கும் அந்த வினையாகின்றது. குழந்தையைப் பார்க்கச் செல்வோருக்கும் இதிலே விளைந்தது (நோய்) அங்கே வருகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அதைப் போல் தான் பண்டைய காலத்தில் அகஸ்தியன் அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது தாய் நுகர்ந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல்கள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின்
1.அவனுடைய அபூர்வ செயலை அவனுடன் வாழ்ந்த சகாக்களும் உற்றுப் பார்க்கின்றனர்… நுகர்கின்ரனர்.
2.அப்பொழுது அகஸ்தியன் உடலில் விளைந்த பேராற்றல்கள் அவர்களுக்குள்ளும் விளைகின்றது.
3.இப்படி அக்கால மக்கள் அகஸ்தியனுடன் வாழ்ந்து அவன் வழியில் சென்றவர்கள் தான்
4.சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள்.

அதன் பின் சென்றது அரசர்களாக ஆன பிற்பாடு ஒன்று இரண்டு போனது அபூர்வமாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் குருநாதர் இதை எல்லாம் காட்டிய பின் காந்திஜி இராமகிருஷ்ண பரமகம்சர் இராமலிங்க அடிகள் போன்றோரை விண் செலுத்தினோம்.

இருந்தாலும் அந்த ஞானிகள் மீது பற்று கொண்டோர் எல்லாம் அவர்களிடத்தில் ஏதோ கிடைக்க வேண்டும் என்று தான் சென்றார்கள். அவர்கள் கண்ட உண்மையின் உணர்வைப் பெற வேண்டும்… அந்த ஞானத்தைப் பெற வேண்டும்…! என்று யாரும் கேட்கவில்லை.

1.மகானிடம் சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்
2.மகானைப் போய்ப் பார்த்தால் நம் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான்
3.இன்று வரையிலும் சந்திக்கச் செல்கிறார்கள்.

ஆனால் பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும்…! என்று சென்றாலும் “ஞானம் இல்லை…” என்றால் வந்த பணத்தைச் சீராக்க முடியுமா என்றால் முடியாது…!

பணமே வந்தாலும் ஞானம் இல்லை என்கிற பொழுது என்ன நடக்கிறது..?

1.ஆசை அதிகமாகின்றது
2.அதிலே ஏதாவது பிசகானால் இப்படி ஆகிவிட்டதே…! என்று மறுபடியும்
3.இதைப் பெற வேண்டும் அதைப் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டப்பட்டு… அந்த ஆசை நம்மை “விடுவதில்லை…!”

இதை மட்டும் பெற்றால் பரவாயில்லை என்போம். பின் இது நன்றாக வந்தது… இதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம்…! என்று சொல்லி அதிலே நஷ்டமானால் வேதனை தான் மிச்சமாகின்றது.

வேதனை வந்த பின்
1.முதலில் வந்த செல்வமும் போய் விடுகிறது…
2.அதற்குபின் தொழிலைச் சீராக்கி வளர்வதும் போய்விடுகிறது..

இரண்டுக்கும் சேர்த்து வேதனை என்ற அணுக்களை வளர்த்து வளர்த்து… உடலிலே நோயை உருவாக்கத்தான் நாம் தயாராகின்றோம்.

நோயாக ஆன பின்… நான் இப்படி எல்லாம் செய்தேனே.. இப்படி எல்லாம் வந்தேனே…! எல்லாம் போய்விட்டதே..! என்று புலம்புவார்கள்…!

மனிதனுடைய இன்றைய வாழ்க்கை இப்படித்தான் இருகின்றது.

உயிரினங்கள் எல்லாம் “நாங்கள் சாப்பிடுவதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்பார்கள்

 

மலேசியா போன்ற சில நாடுகளில் போதைப் பொருள்களை அவர்கள் உபயோகித்தாலும் “அதிக போதை வேண்டும் என்பதற்காக” நல்ல பாம்பை வைத்து அதன் நாக்கை நீட்டச் சொல்லி நாக்கிலே கொட்டச் செய்து இதைப் போன்று விஷத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் மனிதர்களும் உண்டு.

இங்கே குரங்கை நாம் வணங்குகின்றோம். ஆனால் சில நாடுகளில் உயிருடன் இருக்கும் குரங்கை அதன் மேலே இருக்கும் ஓட்டைத் தட்டி விட்டு மூளையைக் குழப்பி சில பொடிகளைப் அதற்குள் போட்டு “ஸ்ட்ராவை வைத்துச் சர்பத் சாப்பிடுவது போன்று உறிஞ்சிச் சாப்பிடுகிறார்கள்…”

மனிதனாகப் பிறந்தும் மிருக உணர்வு கொண்டு இப்படி இருக்கும் நிலைகள் உண்டு.

ஜப்பானை எடுத்துக் கொண்டால் விஞ்ஞான அறிவில் அவர்கள் வளர்ந்தவர்கள் தான். அங்கே “கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை எண்ணெயில் போட்டு வறுத்து ரசித்துச் சாப்பிடுபவரும் உண்டு…”

இது போன்ற உணவுகளை உட்கொள்வோர் எல்லாம் உடலுக்குப் பின் எங்கே செல்வார்கள்…?

அவர்கள் வணங்கும் ஆண்டவனை எந்த மதத்தின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் ஆண்டவனுக்காகச் சில உயிர்களைப் பலி கொடுத்து அவைகளை எங்களுக்காகப் படைத்தான் என்ற நிலையில்…
1.உனக்கு (ஆண்டவனுக்கு) அதைக் கொடுத்துவிட்டு “உன் பெயரைச் சொல்லி நான் உட்கொள்கிறேன்” என்று சாப்பிடுகின்றார்கள்.
2.ஆனால் அப்படிச் சாப்பிட்ட உணர்வு கொண்டு அந்த மணம் இவர்கள் உடலில் சேருகின்றது.

மிருகங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மையைத் தன் உடலாக ஏற்றுக் கொண்டது. அப்படிப்பட்ட உயிரினங்களை உட்கொள்ளும் பொழுது இந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவிவிடும்.

அந்த மிருகங்கள் செய்யும் கொடூரத் தன்மையை அது மற்ற விஷமானவற்றை எப்படி உட்கொள்கின்றதோ இதைப் போன்ற உணர்வின் சத்து உடலுக்குள் வரும் பொழுது “அந்த உணர்ச்சிகளைத் தூண்டி”
1.நம்மைக் கேட்காமலேயே காற்றிலிருந்து அதே உணர்வுகளை நுகர்ந்து அது வளர்ச்சியாகி
2.அந்த விஷத்தின் தன்மை கொண்ட செயலை உருவாக்கி அதையே ரசித்து உட்கொள்ளும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற இரக்கமற்ற நிலைகள் கொண்டு எந்தெந்தக் கடவுள்களை மதத்தின் அடிப்படையில் வணங்கினாலும் அதைப் போல எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலுக்குள் சேர்ந்து… விஷமான உயிரினங்களை உட்கொண்டோர் அனைவரும் உடலை விட்டுச் சென்ற பின் அது போன்ற உயிரினமாகத் தான் பிறப்பார்கள்.

விஷப் பூச்சிகள் விஷத்தைக் கொட்டித் தன் உணவை உட்கொண்டு அதனால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றதோ இதைப் போன்று மனித வாழ்க்கையில் பிறிதொருவர் வேதனைப்படுவதைக் கண்டு ரசித்து அதைச் சுவாசிப்போம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நல்ல உணர்வுகள் அனைத்தையும் அழிந்துவிடும்.

விஷத்தின் ஈர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும் நிலையில் மனிதனில் விளைய வைத்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி அது மணமாகச் சேரும்.

உயிராத்மாவில் எந்த மணத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ உடலை விட்டுப் பிரிந்த பின்… அந்த மணத்தின் நிலைகள் கொண்டு இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தாலும்
1.அதற்கு ஒத்த விஷ ஜந்துக்களின் உயிரும் இந்த உயிரின் தன்மையும் அந்த உணர்வுகள் ஓங்கி வளரப்படும் பொழுது
2.அதனுடைய ஈர்ப்புக்குள் சென்று அந்த உடலின் தன்மையை அதனுடைய சத்தைக் கவர்ந்து கருவாகி முட்டையாகி
3.முட்டைக்குள் அதனின் சத்தை எடுத்து இந்த உயிர் அதனின் உடலாக இது உருவாக்கி மனிதனைப் பாம்பாக ஆக்கிவிடும்.

ஆகவே… எத்தகைய நிலைகளைச் செய்தாலும் மற்றவர்களிடம் மறைத்து விடலாம். ஆனால்
1.உடலுக்குள் உயிராக இருக்கும் ஈசனிடம் எதை நாம் எடுக்கின்றோமோ அதை நமக்குள் விளைய வைத்து
2.அந்த உணர்வின் மணத்தைத் தாங்கி அதையே அடுத்த உடலாக்கி அப்படிப்பட்ட நிலையாக உருவாக்கிவிடும் உயிர்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்… நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ விஷங்களை நீக்கி வந்த நிலையில்… மனித உடலில் விஷத்தை முழுமையாக அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றும் திறன் பெற்றவர்கள் மகரிஷிகள்.

விண்ணிலே படர்ந்து வரும் விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து அதை அடக்கி நிலையான ஒளிச் சரீரமாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து கொண்டே இருக்கின்றது அது நிறைந்து கொண்டே இருக்கின்றது.
2.ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளால் அதை நுகர்ந்தால் நாமும் அந்த மகரிஷிகள் அடைந்த எல்லையை அடையலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித வாழ்க்கையில் தவறு செய்யாமலே சாப அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்பதைக் குருநாதர் சொன்ன நிலைகளில் ஒவ்வொன்றையும் பரீட்சித்துப் பார்த்ததைத் தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு உடலிலிருந்து வரக்கூடிய தீய வினைகள்… சாப வினைகள்… எப்படி வருகின்றது…? ஒரு தலை முறைக்கு இரண்டு தலை முறைக்கு அது எப்படிப் பாதிக்கின்றது..? என்று நேரடியாகக் காட்டுகின்றார்.

1.ஆனால் அவர்களுக்கு நீ இந்தப் பாதிப்பைப் போக்குகின்றாய் என்று வைத்துக் கொள்வோம்.
2.அதனால் அவர்களுக்கு அங்கே மகிழ்ச்சியாகும்.
3.அந்த உணர்வுகள் நல்லதாக ஆன பின் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.
4.இருந்தாலும் நீ சொல்லும் ஞான வழியினை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.
5.மீண்டும் அவர்கள் செல்லும் வழியிலேயே சென்று “தவறு செய்யத் தொடங்குவார்கள்…”
6.அந்தத் தவறின் தன்மை வந்தது… அன்றைக்கு நல்லதாக ஆனது.
7.ஆனால் மீண்டும் இன்றைக்கு ஆகவில்லையே…! என்று ஏங்கிக் கொண்டு
8.நீ சொல்லும் ஞானிகள் உணர்வை அவர்கள் எடுக்கவே மாட்டார்கள்…! என்று
9.ஈஸ்வரபட்டர் எமக்கு இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

உடனடியாக ஒரு தரம் நல்லதாக ஆனால்… அதைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் அடுத்து வரும் தீமைகளை மாற்றியமைத்துக் கொள்ள உதவும்.

அதைப் போல் குரு அருளால் நலமாக வேண்டும் என்று ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆனாலும் பதிவு செய்யும் பொழுதே என்ன செய்கின்றார்கள்…?

எங்கெங்க…? என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! பணம் வாங்கிச் சென்றவன் தர மாட்டேன் என்கிறான்…! என்று என்னிடமே திருப்பிச் சொல்கிறார்கள்.

ஒரு நோயாளிக்கே நல்ல வாக்கினைக் கொடுத்தாலும் அவர்கள் சார்புடையோர்… (அதாவது அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தவர்கள்)
1.“இவருடைய கஷ்டத்தை ஒன்றும் சொல்ல முடியாது…!” என்று இப்படி ஞாபகப்படுத்துகின்றார்கள்.
2.யாம் சொல்லும் ஞான உணர்வுகளை அவர்களைக் கேட்க விடாதபடி இடைமறித்து
3.இப்படிச் சொல்லகூடிய உணர்வுகள் தான் வருகின்றது.

அருள் வாக்கினைப் பதிவு செய்து… நினைவுக்குக் கொண்டு வந்து அவர்களை மீட்க வைக்கலாம்…! என்று நான் (ஞானகுரு) எண்ணினாலும் முடியவில்லை.

ஆனால் இதை எல்லாம் அறிந்து கொள்ள எத்தனை சிரமப்பட்டேன்…? எத்தனை அவஸ்தைப்பட்டிருப்பேன்…! காட்டுக்குள் அழைத்துச் சென்று தான் குருநாதர் இதை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார். நேரத்தில் சாப்பிடுவதற்கு சோறு (உணவு) இல்லை.

காட்டுக்குள் சென்றால் குருநாதர் என்ன செய்வார்…?

கத்திரிக்காய்… மிளகாய்… மாங்காய்… என்று மோரில் ஊற வைத்ததை அவர் எடுத்துக் கொடுப்பார். அதிலே அவர் எத்தனையோ பக்குவம் செய்து வைத்திருப்பார். உப்பு காரம் என்று தனியாக எதுவும் எடுத்துக் கொண்டு போவதில்லை.

இதிலேயே தான் எல்லாம் இருக்கும்.

ஒரு சிறிய டப்பா தான். அதிலே சிறிதளவு அரிசியை எடுத்துப் போட்டு நீரைக் கொஞ்சம் விட்டு அதனுடன் மோரிலே ஊற வைத்த ஒரு மிளகாய் அல்லது கத்திரிக்காயைப் போட்டு வேக வைக்கச் சொல்வார்.

பின் அது எல்லாம் வெந்த பின் குருநாதர் ஒரு அளவாகத் தண்ணீரை ஊற்றுவார். கஞ்சி மாதிரிப் பக்குவம் வரும். ஆளுக்குக் கொஞ்சம் குடித்துக் கொள்வோம்.

இது எப்படிடா… இருக்கின்றது…? என்பார் குருநாதர்.

நன்றாக இருக்கிறது சாமி…! என்பேன்.

ஒரு லிட்டர் அரிசியை வைத்து நானும் குருநாதரும் காட்டிற்குள் “இரண்டு மாதம் சாப்பிட்டுக் காலம் தள்ளியிருக்கின்றோம்…!” என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வேறு ஒன்றையும் அங்கே சாப்பிட விடமாட்டார். சாம்பாரும் அது தான்… காயும் அது தான்…! எல்லாம் அந்தக் கஞ்சியைக் குடித்துக் கொள்ள வேண்டியது தான்,

குடும்பம்… தொழில்… உணவு… எல்லாவற்றையும் விட்டுத்தான் யாம் இத்தனையும் தெரிந்து கொண்டு வந்தோம். அப்படிப் பெற்ற ஞான வித்தை உங்களுக்குள் பதிய வைக்க எத்தனையோ வழிகளைச் செய்கிறோம்.

ஆனால் அதை எத்தனை பேரால் எடுத்து வளர்க்க முடிகிறது…? தனக்குள் வந்து தீமைகளையும் சாப அலைகளையும் போக்க முடிகிறது…?

1.சாமி செய்வார்…
2.குருநாதர் செய்து தருவார்.. என்ற எண்ணத்திலேயே தான் இருக்கின்றார்களே தவிர
3.யாம் பதிய வைக்கும் ஞான வித்தை வளர்ப்பார் இல்லை…!

சாமி எதை எதையோ சொல்கிறார்… இது எல்லாம் தனக்குத் தேவையா…? என்று சிலர் எண்ணுவார்கள்

 

வாழ்க்கையில் நாம் நல்லதே எண்ணி இருந்தாலும் பிறிதொரு தவறான உணர்வுகளை… அல்லது பிறர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அவர் உடலிலே விளையும் உணர்வை நாம் நுகர நேருகின்றது.

நுகர்ந்த உணர்வுகளை உயிர் உணர்த்திக் காட்டினாலும் அந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி விடுகின்றது. இதைப் போன்று தான்
1.இப்பொழுது நாம் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையை நுகர நேருகின்றது.
2.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் படர்கின்றது… அப்படிப் பரவிய உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி விடுகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்யாமலேயே உங்கள் உணர்வு இயக்கும் நிலையில்… அதாவது பிறிதொரு உணர்வுகள் உங்கள் உடலுக்குள் புகுந்து அது இயக்கும் நிலையில் “நீங்கள் அதைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு அதை வழிகோல் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்…”

ஏனென்றால்…
1.இதையெல்லாம் சொல்லி நாம் கேட்டறிந்து என்ன செய்யப் போகின்றோம்…?
2.சாமி சுருக்கமாகச் சொன்னால் போதுமே என்று சிலர் எண்ணுவார்கள்.
3.நான் சுருக்கமாகச் சொல்வதற்கில்லை…!

நீங்கள் விரிவாகத் தெரிந்து கொண்டாலும் பாட நிலையாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்… உட்பொருளைக் காண முடியாது.

உதாரணமாக… கல்வியில் படிக்கும் பாட நிலையை எந்த மனது கொண்டு படிக்கின்றீர்களோ அந்த மனதைக் கொண்டுதான் அது முழுமையாக வரும். ஆக… தன் வீட்டில் எந்த அளவிற்கு மன நிம்மதி இருக்கின்றதோ அந்த உணர்வு முன்னணியில் இருக்கும்… நன்கு படிக்க முடியும்.

ஆனால் வீட்டிலே சிறிது சஞ்சலப்பட்டு அந்த உணர்வுகள் வந்து கொண்டேயிருந்தால்… இன்ஜினியரிங் படிக்கக் கூடியவர்கள் தன் படிப்பை அங்கே படித்தால்
1.எதைக் கூர்மையாகக் கவனித்தாலும் இந்தச் சஞ்சல அலைகள் கலந்து தான் பதிவாகும்.
2.மீண்டும் நினைக்கப்படும் பொழுது இது சரியா…! தவறா…? என்று அதைச் சரியாக நிர்ணயம் செய்ய முடியாதபடி சஞ்சல நிலைகளையே உண்டாக்கும்.

சஞ்சல நிலைகள் உண்டான பின் தேர்விலே கேள்விகள் கேட்கப்படும் பொழுது அதனின் விடையை அறிந்து கொள்வதற்காகச் சிந்தித்தாலும்…
1.அந்தக் கேள்வியைக் கண்டாலே ஒரு திகைப்பான நிலையும்
2.அதனால் பரீட்சையில் தேறாத நிலைகளாக வந்துவிடும்.

ஆனால் பரீட்சை எதற்காக வைக்கின்றார்கள்…?

தான் படித்ததை அந்தந்த நேரங்களில் (திடீரென்று) அதைச் சிந்தித்து “இது இப்படித்தான்” என்று நாம் அறிந்து கொள்வதற்காக… படித்த நிலையை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ பரீட்சை வைக்கப்படும் பொழுது… நமக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மூலமாக நாம் படித்ததை அறிந்து தேறுவதற்காக அதை வைக்கின்றார்கள்.

ஆனால் இந்த வாழ்க்கையில் வீட்டிலே அமைதி கொண்டிருந்தாலும் வெளியிலே வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

நண்பர்கள் பால் உள்ள பற்றால் ஆர்வ உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் வழியில் சென்று விட்டால்… படிப்புக்கு என்று செல்லப்படும் பொழுது கல்வி கற்கும் இட்த்தில்
1.நுண்ணிய உறுப்புகளின் செயலை… இதை இப்படி இதில் பொருத்தினால் இன்னது தான் நடக்கும் என்று சொல்லிக் கொடுக்கும் போது
2.அங்கே அதைக் கூர்மையாகக் கவனிக்கும் நிலைகள் வரும் பொழுது
3.ஆர்வ உணர்ச்சிகள் தூண்டப்பட்ட நண்பர்களிடமிருந்து வந்த உணர்வு முன்னணியில் வந்து
4.அதை எண்ணிய உடனே ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது “மனதிற்குச் சிக்கலாக வரும்…”

“தனக்குள் இது சரியாக வரவில்லையே…” என்ற உணர்வு இயக்கப்படும் பொழுது
1.தன் நினைவலைகள் வரப்படும் பொழுது கண்ணின் ஈர்ப்பு சக்தி சோர்வடையும்… கண் கனமாகும்… தன்னை அறியாமலேயே தூக்கம் வரும்.
2.நான் படிக்கச் சென்றேன்… ஆனால் எனக்குத் தூக்கம் வருகிறது… என்னால் முடியவில்லை…! என்று சொல்வார்கள்.

ஏனென்றால் நுண்ணிய கருத்த்துக்கள் பாடநிலையாக வரும் பொழுது அதை எடுத்து எண்ணத்துடன் பிணைத்து அதனைத் தெரிந்து கொள்ளும் நினைவலைகளை ஊட்டப்படும் பொழுது நண்பரின் ஆர்வத்தின் உணர்வுகளைக் கொண்டு வந்த உடனே அது முடியாத நிலைகள் கொண்டு “படிக்க வேண்டியதை மறைத்துக் கொண்டே இருக்கும்…”

நண்பன் அங்கேல்லாம் சென்றார்… அழகான இடங்களைக் கண்டார் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளைப் பார்த்தார் என்று இந்த நினைவலைகளை எண்ணப்படும் பொழுது… காரணம்
1.தொழிலிலே மிகவும் லாபமாகச் சம்பாதிக்கின்றார்கள்… அதனால் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்று
2.இப்படிப்பட்ட ஆர்வங்கள் உந்தப்படும் பொழுது இது முன்னணியில் வரும் பொழுது கல்வியைச் சீராகக் கற்க விடாது…
3.அது பதிவானாலும் நினைவுபடுத்திச் சரியாகச் செயல்படுத்த முடியாது.

இதுகள் எல்லாம்… இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் மாறுபாடான செயல்கள் எத்தனையோ நடக்கின்றது.

ஒரு கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே தெரிந்தவர்கள் வந்துவிட்டால் அந்தக் கடைக்காரர் அவர்களைத்தான் முதலிலே கவனித்துச் சரக்கை எடுத்துக் கொடுப்பார்.

என்னங்க…! எனக்குச் சரக்கு கொடுங்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்போம். நாம் சொல்லச் சொல்ல நேரம் ஆக ஆக நம்மை அறியாமலே கடைக்காரர் மீது நமக்குக் கோபம் வரும்.

அந்தக் கோபத்துடன் பார்க்கப் பார்க்க நம்மைக் கடைக்காரர் பார்த்தவுடன்… “இவர் என்ன…? கொடுப்பதற்கு முன் ஆத்திரப்படுகிறார்…?” என்று இன்னும் கொஞ்சம் நம்மை நிறுத்தி விடுவார்.

நாம் பொறுமை இழந்து “ஏய்யா… ரொம்ப நேரமாக நான் நின்று கொண்டிருக்கின்றேன்…! நீ சரக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறாய்…!” என்று ஸொல்வோம்.

வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு செயல்களிலும் இத்தகைய உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினாலும்…
1.நல்ல குணங்களுக்குள் இது எல்லாம் கலந்த பின் எதை எண்ணினாலும் கலக்கமுடன்தான் இருக்க முடிகின்றதே தவிர
2.நிம்மதியான நிலைகள் கொண்டு எந்தச் சொல்லையும் நல்லது என்று வலு கொண்டு நிலைத்திருக்க முடியவில்லை.
3.எதை எடுத்தாலும் கவலையும் சஞ்சலமும் ஏற்பட்டு எல்லா குணங்களிலும் கலக்கச் செய்து அந்த உணர்வை நுகரப்படும் பொழுது
4.எதன் எதன் அளவைக் கூட்டிக் குறைத்துச் சுவாசித்தோமோ அதற்குத் தக்கவாறு உடல் உறுப்புகளில் நோய்கள் உருப்பெறுகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் இருளை வென்று உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் இன்றும் ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளார்கள். அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தி தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன்.

நாராயணன் என்றால் சூரியன். ஒளியின் சுடராக இருக்கும் சூரியன்
1.எதைத் தனக்குள் கவர்ந்தாலும் அதன் இனத்திற்கு அதன் அறிவாக ஊட்டுகின்றது.
2.அது அறியச் செய்கின்றது… அதனின் நிலையில் வளர்க்கின்றது.
3.உலகை உருவாக்குகின்றது உணர்வின் அறிவாக இயக்குகின்றது.

அதைப் போன்று தான் மனிதனாகத் தோன்றி தன் வளர்ச்சியின் பாதையில் இருளைப் போக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக நிலை கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி தான் கவர்கின்றது. கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கிறது.
1.அந்த நினைவை நாம் நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால் தான்
2.அதிலிருந்து வந்த உணர்வை அதை நகர முடியும்.
3.அதுவே நினைவில் இல்லாதபடி எடுக்க முடியுமா என்றால் முடியாது

துருவ நட்சத்திரத்தை நாம் கண்ணிலே பார்க்கும் நிலை பெற்றவர்கள். ஆனால் சப்தரிஷி மண்டலங்களை கண்ணிலே எப்படிப் பார்க்கப் போகின்றேன்…? சப்தரிஷிகளை எங்கே பார்ப்பது…? என்று சிலர் வினாக்களை எழுப்புவார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் யாம் (ஞானகுரு) வெளியிலே சொல்லவில்லை… இப்பொழுது இங்கே வெளிப்படுத்திக் காட்டுகின்றேன்

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வளர்கின்றார்கள்.

நட்சத்திரங்களும் கோள்களும் சூரியனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வளர்வது போல பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி மனிதனாக வளர்ச்சியாகி
1.பிரபஞ்சத்தின் உணர்வினை ஒளியாக மாற்றிய உயிரணுவின் ஒளியின் மாற்றம்
2.எந்தத் துருவத்தின் வழி நுகர்ந்து பூமி உணவாக எடுக்கின்றதோ
3.அதே துருவத்தில் நிலை கொண்டு ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றது துருவ நட்சத்திரம்.

இது தான் நமது குருநாதர் காட்டிய நிலைகள்…!

அந்த உண்மை வழிப்படி துருவ நட்சத்திரத்தினை உற்று நோக்கி அதைப் பதிவு செய்து அதிலிருந்து விளைந்த உணர்வின் ஆற்றல்கள் தான் மகரிஷிகள்… சப்தரிஷிகள்… சிருஷ்டித்துக் கொண்டவர்கள்.

ஆறாவது அறிவின் தன்மை ஏழாவது சப்தரிஷி… ஒளியின் உணர்வின் நாதங்களாகத் தனக்குள் இயக்கப்பட்டுச் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்
1.அந்த சப்தரிஷிகள் உருவாக்கிய உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.அதனின்று வளர்ந்த சப்தரிஷி மண்டலங்கள்… சிருஷ்டித்துக் கொண்ட அந்த மண்டல இயக்கத்தின் நிலைகள் நாம் பெற வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதைத் தனக்குள் சேர்க்க வேண்டும்
1.இது தான் பேரின்பப் பெரு வாழ்வு
2.அழியாச் சொத்தும் அது தான்…!

நீங்கள் எல்லாம் மெய் ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற ஏக்கத்துடன் உபதேசிக்கின்றேன்

 

மனிதனுடைய எண்ணங்கள் இன்றைய உலகில் சீர் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் இயற்கையின் உண்மை நிலைகளை “மூடனாக இருந்த என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்…”

பன்றி சாக்கடையை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல பருப்பை நுகர்கின்றது. இதே போல் சாக்கடையாக இருக்கும் இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும்
1.நல்ல உணர்வுகளான ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதை எடுத்துச் சொல்லின் ஒலியாக நீ வெளிப்படுத்தும் போது
2.எவர் இதைக் கேட்டு உணர்கின்றார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலைகள் நீங்கி மெய் ஒளி காணும் நிலைகளாக வளரும்.

இதை நீ செய்…! அவர்கள் வளர வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ வளர்கின்றாய். அவர்கள் வளர வேண்டும் என்று நீ விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வின் சக்தி உனக்குள் விளைகின்றது. ஆகவே
1.ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரையும் மெய் ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி நீ உபதேசி.
2.அந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பச் செய்.

இதை நினைவு கொண்டோர் உள்ளங்களில் அவரை அறியாது வந்த இருள்கள் நீங்கட்டும். அவர் வாழ்க்கையில் நல்ல உணர்வுகளாக மலரட்டும். அவருடைய மூச்சும் பேச்சும் இருள் சூழ்ந்த உலகில் இருந்து அவர்களை மீட்டி…
1.மெய் ஞானிகள் சென்றடைந்த அந்த அருள் ஒளிக் கூட்டத்துடன் இந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.அவர்கள் அனைவரும் மெய் ஞானிகளாக வளரட்டும்.

இதையெல்லாம் நீ எண்ணும் பொழுது அந்த நிலையை நீ அடைகின்றாய். இதைக் கேட்டுணர்ந்தோரும் அதை அடைகின்றார்கள் என்றார் குருநாதர்.

இந்த வாழ்க்கையில் எவ்வளவு நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும்… பிறர் செய்யும் குறைகளைக் காணும் போது நம்மை அறியாது வேதனைப்படுகின்றோம்… வேதனைப்படச் செய்கின்றது.

யாம் சொல்லும் முறைப்படி விநாயகர் தத்துவப்படி எண்ணும் போது அந்தத் துன்பங்கள் மறைகின்றது.

விநாயகர் என்பது “நம் உடல்” வினைக்கு நாயகனாக இருக்கின்றது…. அதை நாம் பூஜிக்க வேண்டும். முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் வினையாகச் சேர்ப்பிக்க வேண்டும்.

மெய் ஞானிகள் ஒளிச் சரீரம் பெற்றது போன்று இந்த உடலில் வினைக்கு நாயகனாக ஒளிச் சரீரமாகப் பெறச் செய்யும் நிலை தான் விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ளது.

1.அவர்கள் சென்ற பாதையை நீ எண்ணுவாய் என்றால் நீயும் அதுவாகின்றாய்… கேட்டுணர்வோரும் அந்த நிலை பெறுகின்றார்கள்.
2.அவர்கள் பெற வேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது அவர்களுக்கு முன் நீ பெறுகின்றாய்.
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தவர்களும் உனக்குப் பின் அந்த நிலையில் வருகின்றனர்.

இதை எல்லாம் குருநாதர் எனக்கு உணர்த்தியது. இதைப் போன்றே நீங்களும் செயல்படுங்கள்.

பூமியில் மனிதனாகப் பிறந்த நிலையில் அருள் உணர்வுகளைப் பெற்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்து நீங்கி
1.உங்களுடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கச் செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்ற ஏக்கத்தில் தான்
2.இதை எல்லாம் உபதேசிக்கின்றேன் “குருநாதர் காட்டிய அருள் வழிப்படி…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தினசரி காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தினால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோமோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு எளிதில் அனுப்ப முடியும்.

1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.இந்த உணர்வுகள் பட்டு உடல் பெறும் உணர்வைக் கரைத்துவிடும்.
3.ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அனைவருமே உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது. இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை… அந்த விஷத்தை… அது கவர்ந்து செல்கின்றது. ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை வேக வைத்தால் அந்த விஷத் தன்மைகள் பிரிந்து செல்கிறது. பிரிந்தாலும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக அதை மாற்றி வைத்துக் கொள்கின்றது.

இயற்கையில் விளைந்த உணர்வானாலும்… நாம் வேக வைத்து விஷத்தை நீக்கினாலும்…
1.இது எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்திய பின் – நாம் கருணைக் கிழங்கை உணவாக உட்கொண்டாலும்
3.அந்த உணர்வின் தன்மை சூரியன் காந்த சக்தி எடுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்களாக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் அதை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனதன் உணர்வின் தன்மை கொண்டு உடலில் அணுக்களாக உருவாகின்றது.

ஆனால் அதே சமயத்தில்
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
3.இதை நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும் (முக்கியமானது).

இதைப் போல் நாம் எடுக்கும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சூரியனின் காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது.

ஆனால் நாம் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலையில் சூரிய உதயம் வரப்படும் பொழுது ஓசோன் திரை என்று விஷத்தின் தன்மை அடர்த்தியாகித் தன்னுடன் அந்த விஷத்தை (உடல் பெறும் உணர்வை) இணைத்துக் கொள்கின்றது.

சூரியனிலிருந்தும் மற்ற பிரபஞ்சங்களிலிருந்தும் வரக்கூடியதை நம் பூமி கவரும் நிலையில்
1.அது பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியாக ஆன பின் தான்
2.விஷத் தன்மைகள் உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது.
3.அது தான் ஒசோன் திரை என்பது.

சூரியனிலிருந்து வரக்கூடியது “அல்ட்ரா வயலட்” – விஷத்தின் தன்மை கொண்டது. அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தின் தன்மைகளைப் பிரிகின்றது.

பிரித்தாலும்… இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் போது
1.நம் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக ஆன பின் (ஓசோன் திரை)
2.நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற அனைத்தும் வாழும் தகுதி பெறுகின்றது
3.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்று தான் நாம் விண் செலுத்தும் ஆன்மாக்களின் உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் ஓசோன் திரையுடன் அதனின் அடர்த்தியில் கலந்து விடுகின்றது.

இப்படி இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் அடுத்த உடலைத் தான் இந்த உயிர் இங்கே உருவாக்கும்.

அதாவது…
1.இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உணர்வின் தன்மை கொண்ட உடலாக உருவாக்கும்.

அரச மரமும்… விண் செல்லும் மார்க்கமும்

 

அரச மரத்தை விநாயகர் அருகே ஸ்தல விருட்சமாக வைத்துள்ளார்கள். ஏன்…?

அரச மரத்தின் பழத்தை ஒரு குருவியோ மற்ற பட்சிகளோ உணவாக உட்கொள்கிறது. அது பறந்து செல்லும் போது சந்தர்ப்பத்தில் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை இட்டுவிடுகிறது.

ஆனால் அதற்குள் மறைந்திருக்கக்கூடிய அரச வித்து
1.அந்தக் கட்டிடத்தில் நீர் இல்லை என்றாலும் வறட்சியாக இருந்தாலும்
2.இரவிலே வரும் குளிரைக் கொண்டு அதைத் தனக்குள் பரவச் செய்து அந்த பாழடைந்த கட்டிடத்தில் ஜீவன் பெற்று
3.தன் இனத்தின் தன்மை எதுவோ அதைக் காற்றிலிருந்து நுகர்ந்து அந்த உணர்வின் சத்தாகச் செடியாக மலர்ந்து
4.அதன் பின் அது வளர வளர தன் விழுதுகளை அனுப்பி அந்தக் கட்டிடத்தைப் பிளந்து
5.பூமியின் நிலத்தின் ஈர்ப்புக்குக் கொண்டு வந்து தனக்கு வேண்டிய ஆகாரத்தை தேடும் நிலைக்கு அது வருகின்றது.

இதைப் போன்று தான் ஞானிகள் உயிரோடு ஒன்றித் தன் உயிரான்மாவை ஒளியாக மாற்றிக் கொண்ட பின் விண்ணுலகில் சுழலும் நிலை.

விண்ணிலே மிதந்து வருவது மிகவும் கடுமையான விஷத்தன்மைகளாக இருந்தாலும்… அந்த விஷத்தை முறித்து அதை அடக்கித் தன் உணர்வினை ஒளியாக மாற்றி அங்கே சென்ற நிலையில் “அது பாழடைந்த நிலை…”

விண்ணிலிருந்து வரும் விஷத்தின் தன்மையும் கோள்களில் இருந்து வருவதும் பேரண்டத்திலிருந்து வரும் பல விஷமான துகள்களும் “அங்கே வரும் பொழுது… எதுவுமே உற்பத்தியாகாது…”

விஷத்தின் தாக்குதலால் பல நிலைகளால் மாறிக் கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட பாழடைந்த இடத்தில் மனிதனாக இங்கிருந்து சென்றவர்கள் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதாவது… வைரம் எவ்வாறு விஷத்தை உள்ளடக்கி ஒளிச் சுடராக வெளிப்படுத்துகின்றதோ அதைப் போல ஜீவன் கொண்ட இந்த உயிராத்மாக்கள் (மகரிஷிகள்) விண்ணிலிருந்து வரும் விஷத்தினை முறித்து அந்த உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

ஏனென்றால் பாழடைந்த இடத்திலே தனக்கு வேண்டிய ஒளியின் சுடராக… “அங்கே சூரியனின் ஒளி இல்லை என்றாலும்”
1.தனக்குள் இருக்கும் உணர்வின் ஒளி கொண்டு
2.மற்றவைகளை ஒளியாக்கும் திறன் கொண்டவர்கள் அந்த மகரிஷிகள்.

அந்தத் துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவருமே அந்த எல்லையில் தான் இருக்கின்றார்கள். அதை உணர்த்துவதற்குத் தான் இங்கே விநாயகர் அருகிலே அரச மரத்தை வைத்தனர்.

ஒரு பாழடைந்த கட்டிடத்திலே அரச மரம் எப்படித் தன் விழுதுகளை ஊன்றிக் காற்றிலே மறைந்திருக்கும் ஜீவசக்தியின் தன்மையை… அந்த உணர்வினை தனக்குள் நுகர்ந்து விளைய வைத்துக் கொள்கின்றதோ அதைப் போல
1.அந்த மகரிஷிகள் விண் சென்ற வழியில்… அவர் வழியிலே அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு
2.மனிதர்களாக இருக்கும் நாமும் சென்றால் அவர்கள் பெற்ற நிலையை நாமும் பெற முடியும்.

அதை உணர்த்துவதற்குத் தான் நீர் நிலை இருக்கும் பக்கம் விநாயகரை வைத்து… இந்த உடலுக்குப் பின் “மனிதன் விண் செல்லும் மார்க்கங்களை” மக்களுக்கு உணர்த்திச் சென்றார்கள்.

நேற்றைய செயல் இன்றைய சரீரம். இன்றைய செயல் நாளைய சரீரம்…!
1.மிருகமாகி… அதிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி பெற்று வந்த நிலையில்…
2.மனிதனுக்கு அடுத்த தெய்வ நிலை பெற வேண்டும் என்பதற்கே இதையெல்லாம் நமக்குக் காட்டினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஆன்மீகத்தின் நிலைகளை எவரும் பழித்திடும் நிலை வராது… வரக்கூடாது என்பதை குருநாதர் அன்றே சொன்னார். அவர் காட்டிய வழியினைத்தான் நானும் (ஞானகுரு) இப்பொழுது சொல்கின்றேன்.

விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் மூதாதையர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும்…
1.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது
2.எங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் அவர்களை உந்தித் தள்ளுங்கள்… அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள்ளும் சேரும்.
5.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…
6.தீமைகளை விளைய வைக்கும் “தீய உணர்வுகள் அகல வேண்டும்” என்ற உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

தத்துவ ஞானிகள் வளர்ந்து தீமைகளை அகற்றிய நாடு இது. முதல் நிலையாக உலகெங்கிற்கும் மெய் ஞானத்தை உணர்த்திய பூமி இது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நிலைகளை இங்கிருந்து தான் உலகிற்குத் தெளிவுற எடுத்துரைத்தது.
1.விண்ணுலகின் ஆற்றலை ஒளியின் சரீரமாகச் சிவமாக்கியவன் அகஸ்தியன்.
2.எந்த நாட்டவரும் அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெற முடியும்.

சீவலிங்கமாக இன்று இருக்கின்றோம். அகஸ்தியன் உணர்வை எடுத்து அதனின் துணை கொண்டு “உயிருடன் ஒன்றிய இராமலிங்கமாக” எண்ணத்தின் வழிகளிலே எண்ணத்தால் உருவாக்கப்பட்ட தன்மை கொண்டு… என்றும் ஒளிச் சரீரமாக இருக்க முடியும்.

இந்த உலகில் தீய சக்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் யாம் இதை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

தீமைகள் பரவாது தடுக்கச் செயுயும் அந்த ஞானிகள் உணர்வுகள் இங்கே அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும் எல்லோருக்கும் பேரானந்த அமுதாக இது கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் கூறினார்.

அதன் வழியில் தான் நான் இதைச் செயல்படுத்துகின்றேன் சாமி வேகமாகப் பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

உலகில் நல்லது என்று சிந்தித்துச் செயல்படுத்தும் மக்களை வீழ்த்திடும் நிலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எளிமையானவர்களிடமிருந்து பொருள்களைத் தட்டிப் பறிக்கும் நிலையே உருவாகிக் கொண்டுள்ளது

வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (அங்கிருந்து) ஆணையிடுவதை சிரம் மேல் ஏற்று நடப்பவர்கள் அசுர உணர்வு கொண்டோர் இங்கே நம் நாட்டிலும் உண்டு. அதிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ண வேண்டும்.

சாஸ்திரப் பிரகாரம் நரசிம்ம அவதாரமாக தீமைகளை அகற்றிய அந்த மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து… உயிருடன் ஒன்றி… விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்ற வேட்கையைக் கூட்டி ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமைகளை அகற்றுங்கள்.

அதே போன்று
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தும் உணர்வுகளை அடிக்கடி கூட்டிக் கொண்டே வாருங்கள்.
2.அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்
3.அவர்கள் முன் சென்றால்… அடுத்து நாமும் நிச்சயம் பிறவா நிலை பெற முடியும்.

“இரக்கப்பட்டு ஊருக்கெல்லாம் உதவி செய்தாலும்…” நலிவடைந்து விட்டால் நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்

 

குருநாதர் சொன்னது:-
வாழ்க்கையில் நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர் செய்யும் தவறுகளை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இரக்கப்பட்டோ அதற்காகப் பரிவு கொண்டோ அதை நீ ஏங்கிச் சுவாசித்து
2.உன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்தாலும் அவர்களைக் காத்திட நீ பொருளைக் கொடுத்து உதவி செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் விஷத்தின் தன்மையைத் துடைக்கவில்லை என்றால் பின் விளைவு எப்படி இருக்கும்…?
4.முதலில் புகழ் கிடைக்கும்… பேர் கிடைக்கும்… இரக்கமானவர்… நல்லவர் என்று போற்றுவார்கள்.
5.ஆனால் கடைசியில் நீ நலிந்து போகும் பொழுது “யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்…”
6.நல்லதைச் செய்தேனே…! என்று வேதனையான குரலைத் தான் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டி வருமே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.

இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் மனித உடலை வெறுக்கும் நிலை வந்து மீண்டும் மனித இனத்தின் கூட்டிற்குள் சென்றாலும் அந்த உடலையும் அழித்துவிட்டு வேதனையின் விஷத்தை அதிகமாகக் கூட்டி உடலை விட்டுச் சென்ற பின் பரிணாம வளர்ச்சியில் விஷத்தைத் தாங்கிடும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சென்று அங்கே தான் அடுத்த உடல் பெற முடியும்.

இதை எல்லாம் குருநாதர் இயற்கையின் செயல்கள் என்று காட்டினார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின்பு தான் (மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து) உங்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.

ஆக… நன்மை செய்த நிலைகளில் அந்த நல்லவர்களைக் காத்திட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு கூட்டு தியானத்திலும் இணைந்து கொண்டு அங்கே கலந்து கொண்ட அனைவருக்கும் “மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் குடும்பத்திலே மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும். அவர் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்க வேண்டும். அவர்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெற வேண்டும். என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தினால்
1.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வலுவாகின்றது.
2.இந்தச் சொல்லின் வாக்கும் உங்களுக்குள் விளைகின்றது.
3.உங்கள் வாக்கின் மூச்சு அவரை நலம் பெறச் செய்கின்றது.
4.இதை இந்த வாழ்க்கையில் பொறுமையாக இருந்து செயல்படுத்துதல் வேண்டும்.

வயலிலே காய்கறிகளின் விதைகளைப் போடுகின்றோம். அப்படிப் போட்டவுடனே அதைச் சமைக்க முடியாது. அதைப் பக்குவமாக விளைய வைத்து ஒருவர் பறிப்பர். அதை இன்னோருவர் எடுத்துக் கொண்டு போய் கடையில் வியாபாரம் செய்வார்.

நாம் கடைக்குச் சென்று அதை வாங்க வேண்டும். அதற்குப் பின் அதைச் சமைத்துப் பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக்கி அப்புறம் தான் நாம் உணவாக உட்கொள்ள முடியும்.

இதைப் போன்று தான் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுவது போன்று தான் நாம் எண்ணியதைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.

மெய் ஞானிகள் அருள் சக்திகளை நாம் பெற்று அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை வளர்த்துக் கொள்வதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

1.நீங்கள் எண்ணியவுடன் அந்த மெய் ஞானிகளின் ஆற்றலைக் கிடைக்கச் செய்கின்றோம்.
2.எண்ணி எடுத்த பின் உங்கள் உடலுக்குள் வரும் துன்ப நிலைகளை நீக்கி நல்வினைகளை நீங்கள் கூட்டிக் கொள்ள முடியும்.

மாங்காய் புளிப்பாக இருப்பது கனியாகும் பொழுது அது சுவை ஆகின்றது. அதிலிருந்து அந்த மாவித்தாக வருகின்றது. அந்த வித்தினை நாம் நிலத்திலே ஊன்றினோம் என்றால் மரமாக அது மீண்டும் முளைக்கின்றது.

நம் உயிர் ஆரம்ப நிலைகளில் வித்தாக உருவாகி மற்ற செடி கொடிகளாக உருவாகி மரமாகி பூவாகி பிஞ்சாகி காயாகிக் கனியாகின்றது. பல உயிரினங்களாக நாம் இருக்கும் பொழுது அது மரமாகி… மனிதனாகும் பொழுது பூவாகி பிஞ்சாகி… அந்தப் பிஞ்சின் தன்மையிலிருந்து காயான நிலையில் இருக்கின்றோம்.

1.இந்தக் காயின் தன்மையில் இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றும் பொழுது
2.உயிருடன் ஒன்றிய கனியாக முழுமை பெறுகின்றது… கனிந்து விட்டது…!
3.உயிர் எப்படியோ அதைப் போன்று உணர்வுகள் ஒளியாகும் பொழுது நிலையான சரீரம் பெறுகின்றோம்.

அந்த நிலையான ஒளிச் சரீரம் பெற்ற மெய் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்வதற்குத் தான் “திரும்பவும் ஒரு ரவுண்டு உங்களுக்குள் வந்து” நினைவின் செல்களில் பதியச் செய்கின்றேன்.

அதை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டு எண்ணும் பொழுது காற்றில் பதிந்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வை நீங்கள் எளிதில் பெற முடிகின்றது. “அருள் ஞானிகளாக நீங்களும் வளர முடிகிறது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் இறந்து விட்டால் சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் உடலை சுட்டுக் கருக்கிவிட்டு பின் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் மோட்சம் அடைந்தார்…! என்று சொல்வார்கள்.

1.அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் எந்தெந்தக் குணங்களை அவர் எடுத்துக் கொண்டாரோ
2.இந்த உணர்வுகள் அனைத்தும் அந்த உடலுடன் உண்டு.
3.ஆனால் இந்த உடலைக் கருக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து
4,அது அனைத்தையும் மீண்டும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விடுகின்றது.

அதாவது இந்த உடலின் தசைகள் கரைந்தாலும் இந்த உணர்வின் தன்மையை மாற்றி விடுகின்றது சூரியன். நம் பரமாத்மாவில் (காற்றிலே) இங்கே கலக்கின்றது.

இந்த உடலை விட்டு ஆன்மா போன பின்…. சுட்ட பின்…
1.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்
2.இந்த உடலை உருவாக்கிய அணுக்களின் இயக்கம் தான் இதற்குள் இழுத்துச் சேர்க்கும் தன்மைகள்.
3.வெப்பத்தின் தன்மை கொண்டு இங்கே பிரிக்கப்படும் பொழுது
4.அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வின் உறைவிடமாக இருக்கின்றது. அந்த அணுக்களில் (உணர்வின் ஒலிகளாக)

இப்பொழுது நாம் சொல்லால் சொல்கின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் அதிலே இருக்கும். அதே போல் அவர் மந்திர ஒலிகளைப் பதிவாக்கியிருந்தால் அதுவும் இருக்கும்.

இப்படி… இறந்த உடலைக் கருக்கிச் சாம்பலாக்கினாலும் இந்த உடலை உருவாக்கிய உணர்வின் நிலைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

பின் அது கவர்ந்த நிலைகள் அனைத்தும் அவர் சொன்ன அதே மந்திர ஒலிகளைச் சொல்லப்படும் பொழுது இழுத்துக் கொண்டு வரும்.

எப்படி…?

ஏனென்றால் அவருடைய உணர்வின் தன்மை அங்கே சென்றது. அவர் அணிந்திருந்த ஆடையும் அவர் நடந்து சென்ற பாத மண்ணும் அவர் தலை முடியும் இந்த மூன்றையும் எடுத்தால்… அவருடைய உடலின் மணமும் பாத நிலைகளும் அதிலே இருக்கும்.

அவர் (இறந்தவர்) எந்தத் தெய்வத்தின் நிலைகள் கொண்டு பக்தி கொண்டு மந்திரங்களை ஓதித் தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ இறந்த பின் மாந்திரீகம் செய்பவர்கள் அந்த உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து அதை எடுத்துப் பில்லி சூனியம் ஏவல் போன்ற சில தவறான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சாங்கியம் செய்து கரைத்து விட்டுக் கண ஹோமம் செய்து மோட்சத்திற்கு அனுப்பியதாகச் சொல்வார்கள் ஒரு சாரர்.

அதே சாங்கியங்களைச் செய்து கரைத்த பின் விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கை ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்பார்கள் இன்னோரு சாரார்…!

1.இப்படி எல்லாம் சாங்கியங்களைச் செய்து வெளி வந்தாலும்
2.அந்த உணர்வுகள் எல்லாமே காற்றிலே தான் படர்ந்திருக்கும்.
3.அதை மாற்றும் வல்லமை இல்லை…!

அதை மாற்றி அமைக்க வேண்டும் என்றால்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும் என்றால்… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும் என்றால்… என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொள்கின்றாரோ…
1.அதன் மூலம் அவர்கள் சார்புடையோரை உந்தித் தள்ளினால் விண் செலுத்த முடியும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

குருநாதர் காட்டிய வழியிலே உங்களுக்குத் “தொட்டுக் காண்பிக்கின்றேன்”

 

இந்த வாழ்க்கையில் நம் நல்ல குணங்களை இழக்காத வண்ணம் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து நமக்குள் வரும் துன்பத்தை நீக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குள் ஊன்றி வளர்க்கும்படி செய்கிறோம். ஏனென்றால் திரும்பத் திரும்பப் பல தடவை சொல்கிறேன்.

1.ஒரு தடவை சொன்னாலும்… அப்படியே சொல்லிக் கொண்டே சென்றால் அடுத்து உங்களுக்கு அந்த நினைவு வராது.
2.அதை மீண்டும் சொல்லும் பொழுது தான் ஞானிகள் உணர்வலைகள் உங்களுக்குள் பதிவாக ஏதுவாகும்.
3.பதிந்த பின் நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது நினைவுக்கு வர இது உதவியாக இருக்கும்.
4.ஆனால்… சாமி இப்பொழுது தான் சொன்னார்… திரும்பவும் அதையே சொல்கிறார் என்று எண்ணி விட்டால்
5.“ஏற்கும் பக்குவம் குறைவாகி விடுகின்றது…” (இது முக்கியம்)

உதாரணமாக நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகிறோம் என்றால் வானம் தோண்டிச் சுண்ணாம்பையும் கல்லையும் வைத்துக் கட்டிக் கொண்டே போகின்றோம். அது ஈரமாக இருக்கின்றது.

சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்று செங்கலை மேலே ஏற்றி ஒரே நாளில் கட்டிட்த்தைக் கட்டினால் என்ன ஆகும்…? மொத்தமாக அமுக்கிக் கீழே விழுந்து விடும்.

கட்டிடத்தை ஆறச் செய்து நிறுத்தி அந்த ஈரம் உணரும் வரையிலும் பொறுத்திருக்க வேண்டும். கட்டியது இந்தப் பக்கம் சாய்ந்து இருக்கின்றதா…? அந்தப் பக்கம் சாய்ந்திருக்கின்றதா…? சரியாகக் கட்டியிருக்கின்றோமா…? என்பதைச் சிந்தித்துப் பார்த்து… ஈரம் காய்ந்த பின் அதன் மேல் கட்டிடத்தைக் கட்டுவது சாலச்சிறந்ததாக இருக்கும்.

அதைப் போன்று தான் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் நிலையாக என்னிடம் நீங்கள் வரும் பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கிடும் உணர்வின் ஆற்றலைப் பதிவு செய்கின்றேன்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுதல்” என்று சொல்வது.

சில பேர் வருவார்கள். நான் அங்கே சென்றேன்… அவர் முதுகில் தட்டிக் காண்பித்தார்…! நெற்றியில் தொட்டுக் காண்பித்தார்…! நெற்றியில் பார் அங்கே தெரியும்… பின் உச்சிக்கு கொண்டு போ அது தெரியும்…! என்றெல்லாம் சொன்னதாகச் சொல்வார்கள்.

திட்டியவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது. பதிந்ததை மீண்டும் எண்ணும் பொழுது உங்களுக்குக் கோபம் வருகிறது.

அதைப் போல் மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறும் போது துன்பத்தைப் போக்கும் உணர்வுகளாக அது உங்களுக்குள் வருகின்றது. தொட்டுக் காட்டுதல் என்பது…
1.உங்கள் உணர்வுக்குள் ஆழமாக… உங்கள் உள்ளத்திற்குள் தொட்டு
2.”உள்ளத்தைத் தொடும் நிலையாக உணர்வுகளை ஒன்றச் செய்து” பதியச் செய்கின்றோம்.
3.இது குருநாதர் காட்டிய வழியிலே தொட்டுக் காட்டும் முறைகள்.

மீண்டும் இதை நீங்கள் எண்ணும் போது காற்றில் படர்ந்திருக்கக்கூடிய ஞானிகள் அருள் சக்திகளைச் சுவாசித்து… உங்களுக்குள் வரும் படபடப்பு பயம் வேதனை இது போன்ற நிலைகளைக் குறைத்திட இது உதவும்.

சாமி ஆசீர்வாதம் கொடுத்தார் என்று வெறுமனே நினைப்பதில் பயனில்லை… குருநாதர் எனக்கு எப்படி ஆசீர்வாதம் கொடுத்தார்…?
1.மெய் வழியைப் பெறும் உணர்வின் தன்மையைத் தொட்டுணரச் செய்து
2.அந்த உணர்வின் செயலை ஒவ்வொன்றும் ஆழமாக எனக்குள் பதியச் செய்து
3.அந்த எண்ணத்தை நான் நுகர்ந்தறிந்து என் உடலுக்குள் சேர்க்கச் செய்து
4.அதை எண்ணும்போதெல்லாம் அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரவச் செய்து பேச்சால் மூச்சால் அது வெளிப்படுவதை
5.அந்த உணர்வுகள் எனக்குள் விளையப்படும் பொழுது “அது எனக்குப் பாதுகாப்பாக வருகிறது…”
6.அந்த உணர்வின் சத்து என் உடலில் மணமாக வரும்.

இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கின்றேன். துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை நீங்கள் பார்க்கின்றீர்கள்.

“உங்கள் துன்பம் விலகிவிடும்…” என்று வாக்காக நான் சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் உங்கள் செவிகளிலே பட்டு ஒன்றிய பின் என்னை நீங்கள் அந்த உணர்வுடன் கூர்மையாகப் பார்க்கப்படும் பொழுது
1.எந்த மெய் ஒளியின் தன்மையை நான் பேசிக் கொண்டிருந்தேனோ
2.என் உடலிலிருந்து வெளிப்படும் அந்த மணத்தை நீங்கள் நுகர்ந்து
3.உங்களுக்குள் ஆறுதலை ஊட்டும் நிலையாக யாம் சொல்லும் வாக்குகள் பதிவாகி
4.அந்த உணர்வு வளர்ச்சியாகித் துன்பத்தைப் உணர்வுகளாக உங்களுக்குள் வரும்.
5.மறுபடி மறுபடி அதை எண்ணும் போது சிந்தித்து செயல்படும் அந்த எண்ணங்கள் உங்களில் தோன்றும்.

இதைத்தான் “தொட்டுக் காண்பிப்பது” என்று சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்… உணர்வின் சேர்க்கையும்…” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

அது மட்டுல்ல…
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.

“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.

ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது

வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

 

மனித உடலில் இருந்து தீமையான உணர்வுகளை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள் மெய் ஞானிகள். அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இந்த உணர்வின் அலைகளை நமக்கு முன் பரவச் செய்து கொண்டு தான் இருக்கின்றது.

உதாரணமாக நெருப்பின் அருகில் நாம் சென்றால் நெருப்பின் தணல் அருகில் வராதபடி நம்மை ஒதுக்கிவிடும். அதைப் போல
1.நெருப்பை ஒத்த மனிதர்கள்…
2.நெருப்பை ஒத்த அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டவர்கள் மெய் ஞானிகள்.

ஏனென்றால் இன்னொரு உடலின் ஈர்ப்பிற்குள் செல்லாதபடி உயிரின் ஈர்ப்புடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் அவர்கள் நிலையாக இருந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

பிறவியற்ற நிலைகள் அடையும் அந்த ஆற்றல்களை நுகர்ந்திருந்தார்கள்.
1.அதை நாம் பருக வேண்டும் என்றால் “நமக்கு அந்தச் சக்தி வேண்டும்…”
2.அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

கடந்த காலங்களில் அன்று ஆண்ட அரசர்கள் என்ன செய்தார்கள்…? மாற்று அரசர்கள் இந்த அரசைக் கைப்பற்ற… அந்த அரசனுடைய குழந்தைகளை அது அரசனாகும் நிலைகளுக்கு வரும் பொழுது… சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொன்றிடும் நிலை வந்துவிடும் என்று தெரிந்த பின்பு…
1.அந்தக் குழந்தை… தாயின் கருவிலே கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே
2.விஷத்தை சிறுக சிறுக சிறுகச் சிறுக தலைமுடியில் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாய்க்குக் கொடுத்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றுவார்கள்…”
3.பிறந்த பின்னும் பாலூட்டும் பொழுதும் சிறுகச் சிறுக விஷத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையைச் செய்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றி விடுவார்கள்…”
4.அப்படி ஏற்றி விட்டால் மற்றவர்கள் வேறு எந்த விஷத்தைக் கொடுத்தாலும் இவர்களை மாய்த்து விட முடியாது.

அதே சமயத்தில் இந்த விஷத்தை உணவாகக் கொண்டபின் இந்த உணர்வுகள் அனைத்தும் குழந்தையின் உடலிலே வீரியம் கொண்டதாக மாறி விடுகின்றது. அதனால் தான் கடந்த கால அரசர்களுக்கு வலு மிகவும் அதிகம்.

1.அந்த விஷத்தின் தன்மை கொண்டு இவர்கள் வளர்ச்சி பெற்றது போன்று
2.ஞானிகளும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட சக்தியை குருநாதர் வளர்த்துக் கொண்டார்.

குருநாதர் எனக்கு இதை நேரடியாகக் கொடுக்காதபடி அதைப் புரிந்து கொள்வதற்காக பைத்தியம் போன்று அவர் இருக்கப்படும் பொழுது அவருடைய காலிலே வேஷ்டிகளைக் கிழித்துக் கட்டுவார்… வேறு நிறம் கொண்ட சில துணிகளையும் கட்டிக் கொள்வார்.

ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறார்…? என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவர் பைத்தியம் போன்று தான் நடித்துக் கொண்டிருந்தார்.

எதை எடுத்தாலும் ஒரு நிமிடம் என்னிடம் நன்றாகப் பேசுவார்… ஒரு நிமிடம் பைத்தியக்காரர் போன்று பேசுவார். அப்போது என்னுடைய எண்ணமும் அப்படித்தான் இருந்தது.

ஆனால் காலிலே கட்டிக் கொண்டு ஒவ்வொரு செடிக்கும் சென்று ஒவ்வொரு விதமான நிறம் கொண்ட துணிகளை அங்கேயும் கட்டுவார்.
1.அப்பொழுது பரிபாஷையிலே அங்கே ஒன்று சொல்வார்.
2.ஆனால் அந்த பரிபாஷையில் சொல்வது எனக்கு விளங்காது…!

துணியைச் செடியில் கட்டி விடுவார். அதை என்னிடம் காட்டி இவைகளுக்கு யார் சோறு போடுவது…? என்று கேட்பார். யார் சோறு போடுவது…? என்று எனக்குத் தெரியாது… அது சோறு சாப்பிடாது சாமி…! என்று நான் சொல்வேன்.

சோறு சாப்பிடாமல் அது எப்படி வளரும்…? என்று என்னென்னமோ பேசுவார். எனக்கு அப்பொழுது ஒன்றும் புரியாது இப்படி அவர் சொல்லிக் கொண்டே வந்தபின்… மீண்டும் என்னிடம் தெரியுமா…? என்று கேட்பார்.

தெரியவில்லை…! என்று நான் சொன்னவுடன் இரண்டு உதை கொடுப்பார்.
1.அடி வாங்கும் பொழுது அவருடைய நினைவு வரும்.
2.இப்படித்தான் அவருடைய எண்ணத்தை எனக்குள் செருகச் செய்தார்.

அவர் உடலை விட்டுச் சென்றார். அவர் காட்டிய உணர்வின்படி அகஸ்தியர் வாழ்ந்த இடங்கள்… முதலில் தலைக்காவிரிக்குச் சென்றேன். அங்கே அகஸ்தியருடைய உணர்வுகள் இருக்கின்றது.

பாகமண்டலம் என்று உண்டு. அங்கே மலை உச்சியிலே தண்ணீரை எவ்வளவு எடுத்தாலும் குறையாது. உயரமான மலை… அதற்குக் கீழ் தான் மற்ற எல்லாம் தணிந்து இருக்கின்றது.

ஆனால் மலை உச்சியிலே அந்த நீர் இருக்கக்கூடிய பள்ளம் இருக்கின்றது. அதிலே தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் குறைவதில்லை.

எங்கிருந்து நீர் அங்கே வருகின்றது…? என்பதை முதன் முதலில் அறிவதற்காக என்னை அங்கே செல்லும்படி செய்தார் குருநாதர்.

அங்கே தியானத்தில் இருக்கப்படும் பொழுது உயரமான அந்த இடத்தில் மேலே மேகங்கள் செல்கின்றது. மேகங்கள் செல்லும் பொழுது
1.மலையில் இருக்கக்கூடிய காந்தம் நீர் பசை உள்ள அந்த மேகங்களைக் கவரும் சக்தி பெறுகின்றது.
2.இதே போன்று சில மரங்களுக்கும் அந்த மேகங்களை இழுத்துக் கவரும் சக்தி வருகின்றது.
3.மேகங்கள் மரத்தால் இழுக்கப்படும் பொழுது நீரை அது உணவாக எடுத்துக் கொண்டாலும் மரத்தில் இருந்து மீண்டும் நீர் வடிந்து நீராக ஓடுகின்றது.

அதனுடைய தன்மைகள் வேறு.

மலையில் அகஸ்தியன் உட்கார்ந்து அவர் ஜெபித்த உணர்வின் சக்தி காற்றாகப் படர்ந்து செல்லும் அந்த மேகத்தை இழுத்து
1.அதை நுகரச் செய்யும் அந்தச் சக்தி அகஸ்தியன் உட்கார்ந்த இடத்திலே அந்தப் பாறைகளில் பட்டிருக்கின்றது.
2.ஆகையினால் மேகங்கள் மேலே செல்லும் பொழுது கவர்ந்து நீராக வடிந்து செல்கின்றது.

நாம் இங்கே வீட்டில் சமையல் செய்கிறோம் நீர் ஆவியாகப் போகின்றது. அதன் மீது ஒரு தட்டை வைத்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றினால் அந்த ஆவி நீராகக் கொட்டுகின்றது.

எந்தச் சத்தின் தன்மையை ஆவியாக மாற்றினோமோ… தட்டை வைத்துக் குறுக்காட்டப்படும் பொழுது நீரை ஊற்றிய பின் ஆவியாகச் செல்வதை நீராக வடியச் செய்கின்றது.

அந்த இடத்திலே மேகமே இல்லை என்றாலும் அந்த ஞானியின் அருள் சக்திகள்… மணங்கள் பட்டவுடன் குவித்து மேகங்களாக மாறுகின்றது. மேகங்களாக மாறிய பின் தன் உணர்வின் சக்தியை இழுத்து இதற்குள் உறைந்த பின் நீராக மாறுகின்றது.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்தாலும் அந்த இடங்களுக்கு நான் சென்ற பின்
1.குருநாதருடைய உருவம் தெரிகின்றது… அவர் காலில் கட்டிய துணிகள் தெரிகின்றது…
2.அங்கிருக்கக்கூடிய மரங்களிலும் இவர் கட்டிய துணிகள் தெரிகின்றது.
3.அப்பொழுது குருவின் நினைவு வருகின்றது.
4.முதலில் உடலுடன் அவர் இருக்கும் போது சொன்ன பரிபாஷையின் நிலைகள் அந்த இடத்திலே எனக்குப் புரியும் நிலை வருகிறது.
5.இந்த நீராக வடியக்கூடிய ஆற்றல் எப்படி…? என்று அங்கே அப்பொழுது நான் அறிய முடிந்தது.

உயிருடன் இருக்கும் பொழுது எனக்கு இதை உணர்த்தவில்லை.

இருந்தாலும் அடி கொடுத்தார். அந்த உணர்வின் நினைவலைகள் வரப்படும் பொழுது “அந்த எண்ணத்தில் வரும் பொழுது புரிகின்றது…” அன்று வாழ்ந்த அகஸ்தியன் ஆரம்ப காலங்களில் விண்ணினுடைய ஆற்றல் எப்படி நுகர்ந்து எப்படி அவன் பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார்.

அகஸ்தியன் எங்கெல்லாம் சென்றானோ அந்த மலை இருக்கக்கூடிய பகுதிகளில் இது போன்ற நீர்கள் உற்பத்தி ஆகின்றது. மைசூரிலும் இதே போன்று நீர் நிலைகள் உண்டு… நாழிக் கிணறு என்று சொல்வார்கள்.

மற்ற இடங்களில் நீர் இருப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் மட்டும் நீர் இருக்கின்றது. எடுக்க எடுக்க அங்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் எடுத்த அளவுக்கு நீர் வந்து மீண்டும் நிரம்பிவிடும். அது உச்சிமலை… பாறை தான்… வேறு ஒன்றும் இல்லை…!

அன்று அகஸ்தியன் அவன் சென்ற இடங்களில் எல்லாம்… நான் எடுத்துக் கொண்ட ஜெப நிலைகளில்
1.ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகள் எப்படி விண்ணிலிருந்து வருகின்றது…? என்ற நிலையை நேர் பார்வை கொண்டு
2.அந்த அட்சரேகையின் சுழற்சி வட்டத்திற்குள் அது வெளிப்படுத்தும் நிலையும்… அதற்கு மத்தியிலே கோள்கள் எவ்வாறு செல்கிறது…? என்றும்
3.நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தினை அது முறியடித்து பிரபஞ்சத்திற்குள் தணிந்த அலைகளாக வரும் பொழுது
4.மத்தியிலே செல்லும் பொழுது ஒவ்வொரு கோளும் இந்த சக்தியை தனக்குள் நுகர்ந்து எப்படிச் செயல்படுகின்றது…?
5.செயல்பட்ட பின் ஓன்றுடன் ஒன்று கலந்து இந்த உணர்வின் சக்தி எப்படி மாறுகின்றது…?
6.அது வெளிப்படுத்தும் சக்தியை அதற்கடுத்துக் கீழ் வட்டங்களில் இருக்கும் மற்ற கோள்கள் இதிலிருந்து வருவதை அது எப்படிக் கவர்கின்றது…?

அதைப் போல சூரியனுக்குள் வரப்படும் பொழுது ஒன்று இங்கேயும்… ஒன்று அங்கேயும்… ஒன்று இங்கேயும் என்று இதே மாதிரி நட்சத்திரத்தின் நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறி இருக்கும் நிலைகள் கொண்டு அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை அவர் உணர்ந்தார்.

அவர் அமர்ந்த இடத்தில் குருநாதர் காட்டிய நிலையில் நானும் அங்கே அமரப்படும்போது விண்வெளியின் ஆற்றலும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கமும் எல்லாமே அறிய முடிந்தது.

ஆதியிலே இதையெல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அவன் நுகர்ந்த உணர்வின் தன்மையை அங்கே அமர்ந்து நானும் கண்டேன். அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வரப்படும் பொழுது குரு பலத்தால் அறிய முடிந்தது.

அன்றைய அரசர்கள் விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகச் சேர்த்து அதற்குப்பின் மற்ற விஷங்களை எடுத்துக் கொண்டாலும் அது பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்பட்டார்களோ… அதைப் போன்று தான்
1.மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளை அவருடைய சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது.
2.காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண்ணுலகம் சென்றவர்கள்.
3.அவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் விஷம் மற்றொன்றை எப்படி வீழ்த்துகின்றதோ அதைப் போன்று
4.மகா ஞானிகள் தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள்.

அவர்களுடைய உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்றால் இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் பொழுது
1.நம்முடைய நினைவலைகளைச் சுத்தமாகவே மாற்றிவிடும்.
2.நம்மைச் செயலற்றதாக ஆக்குமே தவிர அதிலிருந்து பருகும் நிலையும் அற்றுப் போய்விடும்.
3.ஆகையினால் மனித வாழ்க்கையில் நாம் சிறுகச் சிறுக அதை எடுத்து வளர்க்க வேண்டும்.

எப்படி அரசர்களுக்கு விஷத்தைச் சிறுக சிறுகக் கொடுத்து அதைத் தனக்குள் சேர்க்கும் படி செய்து பெரும் கொண்ட விஷங்களைக் குடித்தாலும் தன்னைப் பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போலத் தான் குரு காட்டிய நிலையில் அதைச் செயல்படுத்த முடியும்.

முதலிலே அவர் எனக்கு இதை உணர்த்தும் பொழுது “வேறொரு நிலைகளாகத் தான்” உணர்த்தினார். பின் சிறுகச் சிறுக எண்ணத்தின் ஏக்கத்தை அதை நிலைப்படுத்தச் செய்து அகஸ்தியன் சென்ற மலைப் பகுதிகளுக்குச் சுற்றச் செய்தார்.

அங்கே சுற்றும் போது பல கஷ்டங்களும் இன்னல்களும் என்னைத் தாக்கும் நிலை வரும் பொழுது அங்கே அமைதி கொண்டு அமர்ந்து அந்த ஞானிகள் உணர்வை நான் எடுக்கப்படும் பொழுது தான் விஷத்தின் தன்மை முறிக்கும் அகஸ்தியன் உணர்வை நான் நுகர்ந்து “துன்பத்தைத் துடைக்கும் உணர்வுகளாக வேதனைகள் அகற்றப்பட்டு… மெய் ஒளியைக் காணும் ஆற்றலாக எனக்குள் பெருகி வந்தது…”

அப்படி எனக்குள் பெருகிய நிலைகளைத் தான்
1.நீங்கள் துன்பம் என்று வரும் பொழுதெல்லாம் உங்களுக்குள் உபதேசமாகச் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றேன்
2.அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு ஏக்கத்தில் இருக்கின்றீர்களோ அதன் வழி தான் உங்களைச் சுவாசிக்கச் செய்வது.
3.சுவாசித்த உணர்வுகள் சிறுகச் சிறுக உங்கள் உடலில் வளரத் தொடர்கின்றது.

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் தன் மனித வாழ்க்கையில் பல தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனைப் பின்பற்றியோர் உணர்வுகள் பத்தாவது நிலையாக ஒளியாக ஆன பின் உடலை விட்டுச் சென்று அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்த இயற்கையின் வாழ்க்கையில் இந்தச் சூரியக் குடும்பமே ஒன்பதாவது நிலை தான்.

ஆனால்…
1.கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து
2.உணர்வின் தன்மையை ஒளியாக விளைய வைக்கும் பருவத்தை அடைந்து விட்டால்
3.நுகர்ந்த உணர்வுகள் அந்த ஒளியாக மாற்றும் திறன் வந்துவிடும்.

அந்தத் திறன் வந்து விட்டால் அண்டத்தில் எங்கு வேண்டுமானால் செல்லும் ஆற்றலும் அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் பெறுகின்றது.

அகண்ட அண்டம் எல்லையே இல்லாதிருக்கின்றது… இருந்தாலும் அதிலிருந்து வரும் உணர்வை நுகரும் சக்தி பெற்றால் என்றும் பதினாறு…!

அதாவது…
1.அகண்ட அண்டம் பெரிது
2.அதிலே நம் வளர்ச்சியின் தன்மையோ சிறிது தான்
3.இருந்தாலும் ஒளியாக மாற்றிக் கொண்டே வரும் இதனுடைய வளர்ச்சி வரும் பொழுது
4.என்றும் பதினாறு… என்று அதை இளமைப் பருவமாகக் காட்டுகின்றனர்…!

அப்படிப்பட்ட வளர்ச்சி வளர… வளர… அகண்ட அண்டத்துடன் ஒப்பிட்டால் இது சிறிதே…! இது இளமையானதே…! பருவமானதே… என்று இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான்
1.என்றும் பதினாறு என்ற நிலையை
2.அன்று மார்க்கண்டேயன் பெற்றான்..! என்று காட்டினார்கள் ஞானிகள்.

அந்த மார்க்கண்டேயன் என்பது யார்…?

துருவ நட்சத்திரம்…!

அது “என்றும் பதினாறு” என்ற நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றது. அதன் வழியில் சென்றவர்கள் தான் இன்றும் அதன் நிலை சப்தரிஷி மண்டலமாகப் பெறுகின்றனர்.

ஏற்கனவே ஆதியிலே… முதன் முதலில் பிரபஞ்சம் உருவான விதத்தைச் சொல்லியிருக்கின்றேன். ஒரு அணுவின் தன்மை பல நிலைகள் அடைந்து கோளாகி… நட்சத்திரமாகிச் சூரியனாகி ஓர் பிரபஞ்சமாகின்றது.

அதே போன்ற வளர்ச்சியில் நம் உயிர் உருவாகி மற்ற நிலைகள் பல எத்தனையோ உணர்வுகள் கொண்டு இன்று மனிதனாக உருவாக்கியுள்ளது. சூரியனை ஒத்த நிலை போன்றது தான் மனிதனின் உயிரும்.

சூரியன் தனக்குள் மோதும் தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்று
1.எந்த விஷத்தால் அது உணர்வின் ஒளியாக உருவானதோ
2.அதே விஷத்தை நீக்கி விட்டுத் தன்னிச்சையாக ஒளியாக மாறும் தன்மை வருகின்றது.
3.அதன் உணர்வு எதனுடன் கலக்கின்றதோ அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக வருகின்றது.

மனிதனாக ஆன நிலையில் கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வின் ஒளி அணுக்களை உருவாக்கும் தன்மை பெற்று விட்டால் “என்றுமே அது அழியாத் தன்மை கொண்டது.. உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது….!”

“தனித்த மனிதன்” இதை எடுத்துச் சென்றாலும் அந்த ஒளியின் தன்மை பெறுவது கடினம். ஆண் பால் என்றாலும் பெண் பால் என்றாலும் வளர்ச்சி இருக்காது.

ஆனாலும் அந்தத் தொடர் கொண்ட ஆன்மாக்களில் (கணவன் அல்லது மனைவி) ஒன்று பிரிந்து விட்டாலும் அவருடைய உணர்வுகள் நமக்குள் உண்டு.

இதற்கு முன்னாடி செய்யத் தவறி இருந்தாலும் அந்த ஆன்மாக்களைக் இப்பொழுது அதிகாலை துருவ தியான நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவேற்றிக் கொண்ட பின்
1.நம்முடன் வாழ்ந்த நினைவலைகள் கொண்டு அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்திச் செலுத்துதல் வேண்டும்.

இப்படி நாம் தொடர்ந்து காலையில் செய்து வரப்படும் பொழுது இன்னொரு உடலிலிருந்து அந்த ஆன்மா (நம்மைச் சார்ந்தோர்) வெளி வந்தாலும் அவருடைய உணர்வு நமக்குள் உண்டு. அதனைக் கவர்ந்து அங்கே செலுத்தி விடலாம். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடலாம்.

1.அவர்கள் விண் சென்ற அந்த உணர்வை எண்ணி ஏங்கும் பொழுது
2.அடுத்து இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்
3.அவருடன் இணைந்து வாழும் தன்மை வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் தனக்குள் பருகப்பட்டு அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்தால் வான்வீதியில் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

1.ஒரு ஆன்மா முன் சென்றாலும்… பின் வரும் நிலைகள்
2.அதே தொடர் கொண்ட நிலைகளில் செயல்படுத்துவோம் என்றால் பிறவியில்லா நிலைகள் அடைகின்றது.

இது மனிதன் ஒருவனால் தான்… முடியுமே தவிர மற்ற மிருகங்களால் முடியாத நிலை ஏற்படுகின்றது.

அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக் கொடுக்கின்றேன்

 

உங்களுக்கு எல்லா நிலைகளும் பெறுவதற்காகச் சுலபமாகச் சக்திகளைக் கொடுக்கின்றோம். அதை ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் எடுத்து நல்ல முறையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1.எந்த நேரம் சங்கடங்கள் வந்தாலும் சரி… உடனே ஆத்ம சுத்தி செய்யுங்கள்… உங்களிடம் அழுக்குகள் சேராது.
2.அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
3.ஏனென்றால் நான் இதை எல்லாம் அனுபவித்து வந்தது.

நொடிக்கு நொடி… நொடிக்கு நொடி… என்னை இம்சை பண்ணித் தான் குருநாதர் சக்திகளைக் கொடுத்தார். உங்களுக்கு எப்போதெல்லாம் இம்சை வருகின்றதோ அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றோம்.

ஆனால்… “எங்கெங்கே நேரம் இருக்கிறது…?” என்று சிலர் இதைச் செயல்படுத்துவதில்லை. யாம் எந்த அளவுக்குச் செய்கின்றோமோ அந்த அளவுக்குச் சாமிக்கே விஷம் கொடுக்க வந்து விடுகின்றார்கள்.

இரவு பூராமே சாமியை வணங்கிக் கொண்டிருந்தேன்…! “எனக்கு இப்படி இருக்கின்றதே…” என்று என்னை நினைத்து அழுது வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

சினேகிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் எண்ணினால்… நண்பர்களாக எண்ணும் பொழுது விக்கல் பாய்கின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையேறுகின்றது. பாசத்துடன் இருக்கிறோம் என்றால் மனது படக்கு படக்கு என்று இனம் புரியாதபடி பயத்தைத் தூண்டுகின்றது.

தாய் தன் பிள்ளைகளைப் பாசத்தால் எண்ணி… அது வெளியில் சென்று வரக் காலதாமதம் ஆகிவிட்டால் “என்ன ஆனதோ… ஏதானதோ…!” என்று சும்மா நினைத்துக் கொண்டிருந்தால் போதும்.

பிள்ளை நல்லவனாகத் தான் இருப்பான். இருந்தாலும் இந்தத் தாயினுடைய உணர்வு பாய்ந்து அவனைத் தவறான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும். இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான் என்றால் அவனை அறியாதபடி கையை அதற்குள் கொடுத்து விடுவான்… விபத்தாகி விடும். இதெல்லாம் பாச உணர்வின் செயல்கள்.

இதே போன்று தான் சாமி மீது பக்தியாக இருந்து “இரவெல்லாம் தலை வலிக்கிறது உடல் வலிக்கிறது என்று மேல் வலிக்கிறது” என்று வேதனையுடன் புலம்பிக் கொண்டுள்ளார்கள்.

1.ஆத்ம சுத்தி செய்யுங்கள் என்று யாம் சொல்லி இருந்தாலும் அந்த நேரத்தில் அதைச் செய்வதில்லை…
2.என்னைத் தான் நினைக்கின்றார்கள்… அப்போது இவர்களுடைய உணர்வு என்னைப் பாதிக்கின்றது.

ஏனென்றால் பாசத்தால் எல்லோருடைய உயிரையும் நான் கடவுளாக மதித்து நினைக்கப்படும் பொழுது… அவர்கள் இப்படி நினைக்கின்றார்கள்.

ஒரு வீட்டிலே நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் குறைகள் இருந்தது என்றால் தாய் தந்தையரால் அதைச் சமாளிக்க முடிவதில்லை.

ஆனால் ஒரு 2000 பேர் சேர்ந்து கஷ்டம் நஷ்டம் என்று என்னை எண்ணினால் எப்படி இருக்கும்…? நான் உங்கள் மேல் பாசமாக இருக்கின்றேன். பாசத்திலே குறையாக எண்ணி என்னிடம் அந்த நினைவைச் செலுத்துகின்றார்கள். அது என்னைத்தான் பாதிக்கின்றது.

இதைச் சமாளிப்பதற்கு உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் உங்கள் துன்பங்கள் அகல வேண்டும் என்று சதா தியானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

இதை யாரும் நினைக்க மாட்டேன் என்கிறார்கள்…!

ஒரு சமயம்… அதிகாலை மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தைக்கு இளம்பிள்ளை வாதம் என்று எம்மைச் சந்திக்க வந்தார்கள். பக்கத்து கிராமம் தான்.

பெண் குழந்தைக்கு ரெண்டு காலுமே சுவாதீனம் இல்லை. அது படுகின்ற அவஸ்தை பார்த்தால் எவ்வளவோ இருக்கின்றது. இப்படி இருக்கிறதே…! என்று அழுது கொண்டு வருகின்றார்கள். இரண்டு வருடம் ஆகிவிட்டது ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்கள்.

ஆசிர்வாதம் கொடுத்து அந்த நரம்பின் இயக்கங்களைச் சீர் செய்த பின் அது நன்றாக ஆனது. ஆனால் அதற்கு பின் என்ன ஆனது…?

நன்றாகிச் சென்று அதற்குப்பின் எம்மை என்ன… ஏது…? என்று ஒரு முறை எட்டிக் கூட வந்து சந்திக்கவில்லை.
1.தூக்கிக் கொண்டு வந்தோம்… வைத்தியம் பார்த்தோம்…
2.சரியாகி விட்டது…! என்று அதோடு சென்று விட்டார்கள்.

யாம் உங்களுக்குப் போதிப்பது என்ன…?

ஒவ்வொரு நாளும் தீமைகள் வரும் பொழுதெல்லாம் “அந்த மகரிஷிகளின் மூச்சலைகளை எடுத்து”
1.உங்களுக்குள் அந்தத் தீமை வராதபடி காத்துக் கொள்ளுங்கள்
2.உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ள முடியும் என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஆனால்… சாமியாரையும் மற்றவர்களையும் தான் தேடிப் போக வேண்டும் என்று விரும்புகின்றார்களே தவிர
1.தனக்குள் அந்த உயர்ந்த உணர்வை எடுத்துத் தீமைகள் வராது
2.தன் எண்ணத்தினால் மாற்றிக் கொள்ள முடியும் என்று யாம் சொல்வதைக் கவனிப்பதில்லை.

அதைத் திரும்பக் கேட்டோம் என்றால் “எங்கெங்கே…? இதற்கெல்லாம் நேரமில்லை…! என்று இப்படித்தான் சொல்கின்றார்கள். “காசைச் செல்வழித்துத் தான் உடலைச் சரி செய்ய வேண்டும்” என்று விரும்புகின்றார்கள்.

மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். தன்னுடைய எண்ணத்தால் எடுத்து எத்தகைய தீமையும் மாற்றி அமைக்க முடியும் என்று பல முறை யாம் சொன்னாலும் அதை எடுத்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் அந்த முழுமையான சக்தி இருக்கிறது என்பதை நம்பிப் பழகுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறருடைய வேதனையான உணர்வை நாம் சுவாசித்தால் உடலுக்குள் வளராதபடி அதைப் பிரித்திடல் வேண்டும். பிரிக்கக்கூடிய சக்தி அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உணர்வினைச் செலுத்த வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். இப்படி நுகர்வது அனைத்துமே முதலில் நம் இரத்த நாளங்களுக்குள் தான் சேர்கின்றது.

தீமையான உணர்வின் வளர்ச்சி கொண்ட நிலையில் உறுப்புகள் செயலிழந்திருந்தாலும் இதைக் கண்ட பின் அந்த உணர்வுக்குள் கிளர்ந்து எழுகின்றது.

அறியாத நிலைகளில் நமக்குள் அப்படிப் பதிவான தீமைகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
1.அப்பொழுது காற்றிலிருக்கும் தீமைகளை அதிகமாக நுகர நேருகின்றது.
2.அந்த உணர்ச்சிகளை நாம் எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ உடலும் மாறுபடுகின்றது… சொல்லும் செயலும் மாறுபடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால் மண்ணிலே ஒரு நல்ல பொருள் விழுந்தால் உடனே நீரை விட்டு அதைக் கழுவிக் கொள்கின்றோம். இதைப் போல் பிறருடைய தீமையின் உணர்வுகள் நம் உடலில் இரத்தங்களில் கலந்தால் அதன் வீரியத்தைத் தணிக்க “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இங்கே உபதேசிக்கும் பொழுது
1.உங்கள் கண்கள் என்னை (ஞானகுரு) உற்றுப் பார்க்கின்றது.
2.உபதேசிக்கும் சொல்லின் உணர்வுகள் செவியிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவலைகளைப் பதிவாக்குகின்றது.
4.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிடும் அலைகளை ஆன்மாவாக மாற்றுகின்றது.
5.மாற்றிய உணர்வுகள் உயிரிலே படுகின்றது… இந்த உணர்ச்சிகளை உடலிலே பரவச் செய்கின்றது…. இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இந்த உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… இரத்த நாளங்களில் கலக்கக் கலக்க…
1.உங்கள் உடலில் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு
2.இந்த இரத்தநாளங்களின் வழியாக உயர்ந்த உணர்வுகள் போகும் பொழுது அதனுடைய தணிவுகள் ஏற்படுகின்றது.

நல்ல குணங்கள் இருக்கப்படும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அது இரத்தத்தில் சுழலப்படும் பொழுது நல்ல அணுக்களுடைய நிலைகள் அதை நுகர மறுக்கின்றது.

அப்பொழுது இயக்கச் சக்தி குறைகின்றது…. உடல் சோர்வடைகின்றது. இப்படிச் சோர்வடையப்படும் பொழுது நல்லதை நினைக்கும் திறன் இழக்கப்படுகின்றது,

சோர்வடையும் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் உணர்வின் தன்மை நாளடைவில் அதிலே பழகி விட்டால் “எது எடுத்தாலும் அந்தச் சோர்வு தான் வரும்…”

மட்டன் சாப்பிடாதவர்கள் இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் பிறகு “கொஞ்சம் மட்டும் சாப்பிடலாம்…” என்ற உணர்வு தோன்றும். ஒரு காயை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வார்கள். பின் அதைச் சுவையாக்கி விட்டால் சரி… இப்பொழுது சாப்பிடலாம்…! என்பார்கள்.

இதைப் போன்று இந்த உணர்வுகள்…
1.எதனின் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உனர்வின் தன்மை
2.அங்கே அந்த உணர்ச்சிகளைத் தூண்டத்தான் செய்யும்.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை அதை அடக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் பலவித கோணங்களில் உங்களுக்கு இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.

தீமைகள் எப்படிச் சாடுகின்றது..? தீமைகளை அகற்றும் வழி என்ன…? என்பதைத் தான் கலவையாக்கி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துப் பதிவாக்குகின்றோம்.

1.தீமைகளை அகற்றிய உணர்வைக் கலந்தே உங்களுக்குள் கொடுத்திருப்பதனால்
2.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது
3.உங்களுக்குள் எத்தகைய பகைமையும் தீமையும் துன்பமும் வளராது தடுக்க இது உதவும்.

எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

 

பணத்தை வைத்து வாழ்க்கையில் எதை வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம். ஆனால்
1.ஆன்மீகத்தின் மூலம் மனதைப் பெரிதாக வைத்துக் கொண்டால் உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
2.இது மனதார எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய… கிடைக்கச் செய்யக்கூடிய பெரும் சக்தி.

பணத்தாலே செய்யக் கூடியது எதை வேண்டுமென்றாலும் உடனே சுலபமாகப் பெறலாம்.

ஒருவருடைய அன்பைப் பெறலாம். அவருக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்தால் உடனே நல்லவர் என்று சொல்லிவிடுவார். ஆனால் அடுத்து கொடுக்கவில்லை என்றால் திட்டுவார்கள்.

காசைக் கொடுக்கக் கொடுக்க… நல்லவர் என்று போற்றிக் கொண்டே வருவார்கள். காசை மற்றவர்களுக்காகச் செலவழிக்கப்படும் பொழுது நான் தவறு செய்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.

காசு கொடுத்து உங்களுக்காகச் செலவழித்துக் கொண்டேயிருக்கின்றேன் இருந்தாலும் தவறைச் செய்கின்றேன். அப்பொழுது நான் செய்வதை எல்லாம் சரி என்று தான் நீங்கள் சொல்ல முடியும்.

என்னங்க… இப்படித் தவறு செய்கிறீர்கள்…? என்று மீறிக் கேட்டால் என்னிடமே வாங்கிச் சாப்பிட்டு விட்டு எனக்கே துரோகம் செய்கிறான் பார்…! என்ற நிலை வந்துவிடும். வந்துவிடும் வம்பு…!
1.எந்த வகையில் தருமம் செய்தாலும் இப்படித்தான் வரும்.
2.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.

காரணம்… பணம் என்பது உடலுக்குத் தான் வரும்

ஆனால் மெய் ஞானிகளுடைய அருள் உணர்வுகளைக் கூட்டினாலோ வாழ்க்கையில் வரக்கூடிய இருளை மாய்க்க உதவும். இதற்கு நீங்கள் எந்தப் பணமும் செலவழிக்க வேண்டியதில்லை.

உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த ஞானிகள் அருள் பெற வேண்டும் என்னுடைய மூச்சும் பேச்சும் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று யாம் சொல்லும் ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு வந்தால்
1.வியாபாரம் நல்லதாகும்… குடும்பத்திற்குள் சண்டையை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கச் செய்யும்
2.கேட்போருக்கும் நல்லதாகும் அறியாத வரக்கூடிய பகைமைகளைத் தடுத்து நிறுத்தும்
3.இதை வைத்து எத்தனையோ உயர்ந்த நிலைகளைக் கொண்டு வர முடியும்.
4.உங்களுடைய எண்ணங்கள் அண்டவெளி வரை செல்லும்.

ஆனால் இவ்வளவு சுலபமாக இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் செய்வதற்கு நேரமில்லை…! இதை யார் செய்வார்கள்…? என்று அலட்சியப்படுத்தி விடுகின்றார்கள்.

காசைக் கொடுத்து விட்டு நட்சத்திரத்திற்கு அர்ச்சனை ஆராதனை செய்வதிலே தான் குறியாக இருக்கின்றார்கள். செய்தால் தெய்வம் ஓடி வந்து செய்யும்…! என்ற இந்த நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.

பணத்தைச் செலவழித்து யாகத்தை வேள்விகளையும் செய்வதற்குப் பதிலாக எந்தச் செலவும் இல்லாமலே…
1.உங்கள் தாய் தந்தையரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்து அதை உங்கள் உயிரான நெருப்பில் இணைத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களை வைத்து “உங்களிடம் இருக்கும் சக்திகளை” நீங்களே உணர முடியும்.

ஏனென்றால் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவது தான் என்னுடைய தியானமே. ஒவ்வொரு மகரிஷியும் ஞானியும் மனிதனைத் தான் தேடி வருகின்றார்கள்.

ஆகவே உங்களுக்குள் உங்களையே நீங்கள் தியானம் செய்யுங்கள் அந்த அருள் உணர்வுகள் சேரச் சேர… உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சகல உணர்வுகளும் விலகி விடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்டிற்குள் சென்று எத்தனையோ சிரமங்கள் பட்டேன்… துன்பங்களும் பட்டேன்…! அங்கே குருநாதர் இயற்கையின் உண்மைகளை எல்லாம் அறியும்படிச் செய்தார்.

அதை அறிந்து… அந்த உணர்வைப் பதிவு செய்து… அந்த உணர்வை வளர்த்துக் கொண்டேன். அப்படிப் பெற்ற ஞானிகளின் உணர்வுகளைத்தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இதை எல்லாம் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழியில் இப்பொழுது முன்னுக்கு வந்தாலும் “பற்றுள்ளவர்கள்” என்ன செய்கின்றார்கள்…?

இரவு நேரத்திலே சாமி…! எனக்குத் தலை வலிக்கிறேதே… உடல் வலிக்கிறதே… நெஞ்சு வலிக்கிறதே… என்னைக் காப்பாற்ற மாட்டாயா…? என்று தான் நினைக்கின்றார்கள்.

இப்படிச் சாமியைத்தான் (ஞானகுரு) நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெறவேண்டும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களிலே கலக்க வேண்டும்
3.தீமைகளை வென்றிடும் அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.இப்படி எண்ணும்படிப் பல முறை நான் சொன்னாலும் அப்படி எண்ணவே மாட்டேன் என்கிறார்கள்.

நான் தான் பதிவு செய்தேன் என்று சாமியைத்தான் நினைக்கின்றார்கள். இப்படி ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து நினைத்தால் அந்த உணர்வு தாக்கினால் எப்படி இருக்கும்…? அந்த ஆயிரம் உணர்வுகள் என்னைத் தாக்கும் பொழுது
1.அது அத்தனையும் நான் சமாளிக்க வேண்டும்
2.என்னையும் காக்க வேண்டும்.. உங்களுக்கும் அந்த அருள் சக்தி கொடுக்க வேண்டும்.
3.குருநாதர் எனக்குக் கடுமையான வேலையைத்தான் கொடுத்தார்.

ஆக… என்னைப் பாதுகாக்க குருநாதர் அருளைக் கொடுத்தார்… அதை வளர்த்து என்னைக் காத்துக் கொள்கின்றேன்.

அதே மாதிரி உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு என்றைக்குமே உறுதுணையாக வரும். அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெற முடியும்.
1.குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
2.அதைக் கிடைக்கும்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
3.சாமி ஒன்றும் கொடுக்கவில்லை என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால் இந்த வாழ்க்கை என்ன…? என்று அறிந்து கொண்ட பின் நாம் இனி எப்படி வாழ வேண்டும்…? என்று உணர்ந்து.. இந்த உடலுக்குப் பின் “பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்..” என்று அதைத் தான் பெற முயற்சிக்க வேண்டும்.

இன்னொரு பிறவி என்று மீண்டும் இங்கே வந்தாலோ நரகலோகம் தான் செல்கிறோம். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று இருப்பது அந்த நிலை தான்…!

1.மனித உடல் பெற்றாலே “சொர்க்கலோகம்” என்று சொல்வார்கள்.
2.ஆனால் அது பண்டைய காலமாகப் போய்விட்டது (இன்று நரகலோகமாகத்தான் உள்ளது)

நம் உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனையை உருவாக்கும் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலேயும் இன்று நமக்குள் போர் முறைகளே வருகின்றது.

நல்ல குணங்களுக்கும் தீமையான குணங்களுக்கும் மற்றவர்கள் செய்யும் உணர்வை நமக்குள் நுகர்ந்த பின் பெரிய போரே நடக்கின்றது.
1.இந்தப் போரினால் மனக்கலக்கங்கள் வருகின்றது.
2.உடல் நோய்கள் வருகின்றது… சிந்திக்கும் திறன் இழக்கின்றது,

அதன் வழியில் நம் உடலுக்குள் இருக்கும் நாம் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி நமக்குள் உணர்வு இயங்கி நம்மை அந்த வழிக்கே அழைத்துச் செல்லும்.

கடைசியில்… “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் இந்த உடலையே அழித்திடும் நிலைக்கும் திருப்பி விடுகின்றது.

இது எல்லாம் நாம் செய்யவில்லை, நாம் நுகரும் உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் எது உணர்வோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குகின்றது… நம் உயிரே தான்…!

ஆனால் அருள் ஒளி பெற வேண்டும் என்றும்… இருளை அகற்ற வேண்டும் என்றும்… அருள் ஞானத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதித்த பின்
1.இதை மீண்டும் மீண்டும் நினைவுக் கொண்டு வந்து
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.இந்த உணர்வின் தன்மை வாழ்க்கையில் வரும் போரினை அடக்கும்.
4.எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலைகளுக்குக் கொண்டு வர முடியும்.

இந்த உணர்வு வலிமை பெற்றுவிட்டால் நாம் எந்த அருள் உணர்வை வலுப் பெற்றோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் நம்மைச் “சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்…!”

குரு பலன்

 

அகஸ்தியனுக்கு முன் எவரும் விண் செல்லவில்லை. அகஸ்தியன் தான் துருவத்தை அறிகின்றான்.
1.அந்த உணர்வின் தொடர் கொண்டு முதல் மனிதனாக துருவ நட்சத்திரமாக உயிராத்மா ஒளியின் நிலை பெறுகின்றது.
2.பல லட்சம் வருடங்கள் ஆகிவிட்டது… இதையெல்லாம் நுகர முடியாது.
3.நமது குருநாதர் அவரின் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு தான் அதை நமக்கு உணர்த்துகின்றார்.

விண் செல்லும் அந்த ஆற்றல்களை அவர் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பருகிய
1.அந்தச் சக்தியின் திறன்… அவர் சொல்லும் உணர்வுகளை ஏங்கி எனக்குள் பதிவு செய்து கொண்டதனால்
2.அவரைப் பின்பற்றி அவரின் உணர்வை நினைவு கொள்ளும் பொழுது விண்வெளியின் ஆற்றலை நானும் நுகர முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய வழியில் அந்த விண்வெளியின் ஆற்றலை நாம் நுகர்ந்து அறிந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அதைச் சேர்த்துக் கொண்டிருந்தாலும் சாதாரண மக்கள் மத்தியில் பழகும் போது விருப்பு வெறுப்பு உணர்வுகளை நுகர நேர்கின்றது. அது போன்ற ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அது விஷத்தன்மை கொண்டது.

யார் வந்தாலும் என்னிடம் கஷ்டம் துன்பம் என்று சொல்கின்றார்கள் அல்லவா. எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… என் குடும்பத்தில் துன்பமாக இருக்கின்றது…! என்று சொல்கின்றார்கள்.

அதைக் காதிலே கேட்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் உந்தப்பட்டுத்தான் அதை அறிவாக நான் அறிந்து கொள்ள முடிகிறது.

அப்படி வந்தாலும் குரு காட்டிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எனக்குள் கலந்து நான் சுவாசித்து…
1.ஒவ்வொரு நாளும் அதைச் சமப்படுத்த… சமப்படுத்த… சிறுகச் சிறுக எனக்குள் அது சேர்கின்றது.
2.அந்தச் சமப்படுத்தும் உணர்வின் தன்மையை மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கும் பொழுது
3.இந்த உணர்வின் எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

உபதேசிப்பதைக் கேட்கப்படும் போது அதை நீங்கள்
1.எந்த அளவிற்குக் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்துகின்றீர்களோ
2.எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றீர்களோ
3.எந்த அளவிற்குக் கூர்ந்து பதிவு செய்து கொள்கின்றீர்களோ… அந்த அளவுக்கு ஆழமாக உங்களுக்குள் இது பதிவாகின்றது.

அப்படிப் பதிவாக்கிய பின்… அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மெய் ஞானிகள் வழிகளிலே நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைக் கூட்டினால் இந்தச் சக்தி உயர்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் விண்ணை நோக்கி ஏங்கி… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று விண்ணிலிருந்து அதை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைவலைகளைச் செலுத்தும் போது உங்களுக்குள் சிறுகச் சிறுக இது சேர்கின்றது.

பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம் என்றால் பாடங்களைச் சொல்லாக… அதாவது “அவர்கள் சொன்னதை வெறும் பாடமாகப் படிக்கும் நிலைகள் வேறு…”

அதே சமயத்தில்
1.நேரடியாக… இன்னன்னது செய்கின்றது என்று அனுபவ நிலைகள் கொண்டு “அந்தப் பாடத்துடன் சேர்த்து உணரச் செய்யும் நிலைகள் வேறு…”
2.அனுபவத்துடன் காட்டும் நிலை வரும் பொழுது பொருள் கண்டுணர்ந்து விரயமற்ற நிலைகளில் செயல்படுத்த முடியும்.

ஆனால்… புதிதாக நான் ஒன்றை கண்டுணரப் போகின்றேன் என்ற நிலை வரும் பொழுது அது “குரு அற்ற நிலை…!” வெறும் பாட நிலைகளைக் கண்டுணர்ந்த பின் அதைச் செயலாக்கும் நிலைகளில் “எந்த உணர்வின் தன்மையும் தெரிந்து கொள்ளும் பொழுது பல விரயங்கள் ஆகும்…”

ஏனென்றால் அதைத் தெளிந்துணர வேண்டிய நிலை தான் வருகின்றது.

அது போல்… வாழ்க்கையில் தடைகள் வரும் போது பிறருடைய சோர்வான எண்ணங்கள் அதில் கலக்கப்படும் பொழுது “மெய் ஒளியைக் காணும் திறன் அற்று விடுகின்றது…”

ஆனால் குரு பலன் என்பது…
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி “எண்ணத்திலே எண்ணி நான் அவரை நினைவுக்குக் கொண்டு வந்து”
2.மெய் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகளைக் கூட்டப்படும் பொழுது
3.அவர் வழியினைக் கண்டு… அவர் உபதேசித்த உணர்வின் அலைகளைப் பின் தொடர்ந்து… அதை நான் நுகர நேர்கின்றது.
4.அவர் எதைப் பருகினாரோ “அவர் உணர்வுடன் ஒன்றி” அவர் பருகியதை நானும் பருக முடிகின்றது.
5.அதை நான் பருகப்படும் பொழுது… அந்த உணர்வின் எண்ண அலைகள் “எனக்குள் குவிகின்றது…”

அதே உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. இப்பொழுது நீங்கள் கேட்டுணரும் பொழுது எந்த அளவுக்குக் கூர்மையாக எண்ணுகின்றீர்களோ உங்களுக்குள் பதிவாகின்றது.

பதிவை மீண்டும் நினைவாக்கி யாம் சொல்லிக் கொடுத்த ஆத்ம சுத்தியை நீங்கள் அடிக்கடி செய்தாலே போதும்.
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
2.அருள் ஞானம் பெற முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும்.
3.பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையில் எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாவதில்லை.
1.அந்த அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால்
2.இருளை வென்று உணர்வை ஒளியாக்கும் தன்மை பெற முடியும்.
3.அதைத் தான் இந்த மனித வாழ்க்கையில் சொந்தமாக்க வேண்டும்.

ஏனென்றால் எந்த நிலைகளீல் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தமாவதில்லை உடலால் சம்பாரித்த செல்வமும் நின்றதில்லை.

கோடிக் கோடி செல்வம் பெற்றிருந்தாலும்… பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்துச் சுகமாக வாழ்வேன்…! என்றாலும் அப்படிப்பட்ட அரசன் எவனும் இன்று இருந்ததில்லை. அவன் பேய் மனமாகத் தான் சென்றான்…. அவன் உணர்வுகளும் பேய் மனமாக மாறியது…!

அவனைப் போன்ற ஆசையைப் பின்பற்றியவர்கள் அனைவரும் அவன் வழியிலே சென்று மத வெறி கொண்டு மனிதனை மனிதனே அடித்துக் கொன்று… அதைக் கண்டு மகிழும் நிலையே இன்று உருவாகி விட்டது.

அரசன் அவன் எதிரிகளைக் கொன்று குவித்தான். பல வகையிலும் மதம் என்ற பேரால் பேதங்களை அவன் உருவாக்கினான்.

அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனம் என்ற நிலைகள் பல இனங்களாக வளர்ந்து விட்டது. அவன் அவன் “தன் இனமே பெரிது…!” என்று மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான். அதனால் பழி தீர்க்கும் உணர்வுகளே வளர்ந்தது.

மனிதனுக்கு மனிதன் உருக்குலையச் செய்யும் நிலைகளும்… சிந்தித்து வாழும் நிலைகளும் செயல் இழந்து… சிந்தனையற்ற செயலாகவே நாம் இன்று வாழ்ந்து கொண்டுள்ளோம்.

சிந்தனையற்ற செயலை நாம் நுகரும் பொழுது
1.நஞ்சு கொண்ட உணர்வுகள் நமக்குள் வளர்ந்து
2.நஞ்சை உணவாக உட்கொள்ளும் நிலை வளர்ந்து
3.நஞ்சின் செயலாக்கங்களாகச் செயல்படும் நிலையும்
4.நஞ்சு கொண்ட உணர்வையே வளர்த்திடும் நிலையே வளர்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட வேண்டும்…! என்று எமது குரு எனக்குள் பதிவு செய்திருந்தாலும் அவரை நமது குரு என்ற நிலைகளில் எண்ணி ஒவ்வொருவரும் நாம் வாழ்தல் வேண்டும்.

1.முன்பு எமது குருவாக இருந்தார்…
2.இந்த உணர்வின் தன்மை நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் வழி சென்றால்
3.நமது குரு என்ற நிலையில் ஒன்று சேர்ந்து வாழும் நிலை வரும்.
4.சாமியையும் குருவையும் பிரித்து எண்ண வேண்டியதில்லை (இது முக்கியம்)
5.அருள் ஒளியின் தன்மை கொண்டு “நமது குரு…” என்ற நிலைகளில்
6.நாம் எல்லாம் ஒன்று…! என்ற நிலையில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

குரு அருள் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும்… அருள் ஞானம் பெறுதல் வேண்டும்…! என்ற உணர்வை நாம் தியானித்து வளர்த்தல் வேண்டும்.

பகைமை என்ற உணர்வுகள் வந்தாலும் அது நமக்குள் வளராது தடுத்து அருள் ஒளியை நமக்குள் பெற்று
1.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும் என்ற உணர்வை ஓங்கச் செய்து
2.அருள் ஞானத்தை வளர்த்திடும் புவியாக நாம் மாற்ற வேண்டும்.

அருள் ஞானிகள் பிறந்த இந்தப் பூமியில்… அருள் ஒளியின் சுடர்களை எண்ணி…
1.இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம்
2.ஒவ்வொரு மனிதனின் மனமும் மாறி
3.அருள் ஒளிச் சுடராக மாறும் நிலைக்கு வளர வேண்டும்.

நாம் எல்லாம் உலகுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வளர வேண்டும்…!

ஞானிகள் உணர்வைச் சிறு குழந்தைகளைப் போல் பதிவு செய்து கொண்டால்… ஞானிகள் செய்ததை நாமும் செய்ய முடியும்

 

ஞானிகள் உணர்வைத் திரும்பத் திரும்ப உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.
1.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்
2.இப்பொழுதே அதை முழுமையாகப் பெறவும் செய்யலாம்.

ஆனால் ஒரு சிலருடைய எண்ணங்கள் எப்படி இருக்கிறது…? என்றால் நான் படித்திருக்கின்றேன்… எல்லாப் புத்தகங்களையும் படித்து இருக்கின்றேன்…! ஆனால் சாமி சொல்லும் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை…! என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

நமக்கே முடியவில்லை… மற்றவர்கள் எப்படித் தெரிந்து கொள்வார்கள்…! என்பார்கள். நான் எல்லாவற்றையும் படித்திருக்கின்றேன்
1.சாமி சொல்வதை என்னாலேயே பின்பற்ற முடியவில்லை… சாதாரண ஆட்களால் எப்படி முடியும்…?
2.இப்படிப் பிறரை எண்ணித் தன்னைத் தாழ்த்திக் கொள்வோர் தான் உண்டு.

மூன்று வயது நான்கு வயது சிறு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் படிக்கவே இல்லை. டிவி.க்கு முன் உட்கார வைத்து அந்தக் குழந்தைகள் அதைக் கூர்ந்து கவனித்தால் போதும். அதில் பாடும் பாட்டை அப்படியே பாடும்… அங்கே ஆடும் ஆட்டங்களையும் ஆடும்.

ஆனால் பெரியவர்கள் நம்மால் அப்படிச் செயல்படுத்த முடியுமா…?

1.குழந்தை கூர்மையாகக் கவனித்தது…
2.அதற்குள் அந்த உணர்வுகள் பதிவானது…
3.அதுவே மீண்டும் அங்கே செயலாக்குகின்றது.

நாம் அதைப் பார்த்துவிட்டுச் சொல்வோம். டிவி.யில் பாடிய பாட்டை என் குழந்தை அப்படியே பாடுகின்றது… அப்படியே ஆடுகிறது…! என்று எல்லோரிடமும் பெருமை பேசுவோம்… புகழ் பாடுவோம்.

ஆனால் தன்னால் அதைச் செயல்படுத்த முடிகிறதா…? என்றால் இல்லை…! குழந்தை எதைப் பதிவு செய்ததோ அந்த உணர்வுகள் அங்கே இயங்குகின்றது.

அதைப் போன்று தான் யாம் உபதேசிக்கும் இந்த நிலைகளில் நாம் அனைவருமே இப்பொழுது “குழந்தைப் பருவம் போன்று தான்…”
1.ஞானிகள் உணர்வுகளைக் குழந்தைகளைப் போல் பதிவு செய்து கொண்டால்
2.அவர்கள் செய்த நிலைகளை எல்லாம் நாமும் செய்ய முடியும்.
3.அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.

அப்படி இல்லாது… “எங்கே…!” நான் எத்தனையோ புத்தகங்கள் படித்து இருக்கின்றேன். சாமி புதிதாகச் சொல்கிறார். அதை என்னால் கிரகிக்க முடியவில்லை… பின்பற்ற முடியவில்லை…! என்று இப்படிச் சொல்லி விடுகின்றார்கள்.

பெரும்பகுதியானவர்கள் தன்னைத் தானே தாழ்த்தி… தாழ்த்திடும் நிலைகளுக்குத் தான் கொண்டு செல்கின்றார்கள்.

காரணம்…
1.எதை எல்லாம் அதிகமாகப் படித்துப் பதிவாக்கி வைத்திருக்கின்றோமோ அந்த வழிப்படிதான் நம்முடைய எண்ணங்கள் செல்லும்.
2.இந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதன் வழிக்கே தான் நம்மை இழுத்துச் செல்லும்.
3.யாம் சொல்வதை அது காலி செய்து கொண்டே இருக்கும்.
4.படித்தது மட்டும்தான் முன்னாடி நிற்கும்… சாமி என்னத்தைச் சொல்கிறார்…? என்று அதை ஒதுக்கிவிடும்.

சிறு குழந்தைகள் ஒன்றாவது வகுப்பிலே படிக்கின்றது. அடுத்து இரண்டாவது வகுப்பு வந்த பின் “முதலில் படித்ததைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றது… நான் எப்படிப் படிக்கப் போகின்றேன்…!” என்று எண்ணினால் இரண்டாவதைப் படிக்க முடியாது.

ஆக… படிப்படியாகப் படித்து வளர்ச்சியாகித் தான் எல்லாவற்றையும் தெரிந்து “விஞ்ஞானியாக ஆவதும் அதன் மூலம் தானே…!” இந்த நினைவே வருவதில்லை.

தத்துவஞானிகள் அனைத்தையும் கொடுத்துச் சென்றார்கள். ஆனால் அது ஏமாற்றுபவன் கையிலே சிக்கித் திசை திரும்பி விட்டது. பக்தி என்ற நிலையில் நினைவுகள் எல்லாம் வெளியிலே சென்றுவிட்டது.

அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகங்கள் செய்து விட்டால் எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று “காசு கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்குச் சென்று… அதிலே தான் நம் நம்பிக்கையும் சென்று விட்டது…”

1.ஆனால் நாம் எண்ணுவதை எல்லாம் நம் உயிர் நெருப்பாக இருந்து
2.அது தான் நமக்குள் உருவாக்குகின்றது என்ற இந்த நம்பிக்கை வருவதில்லை.

இதையெல்லாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று அன்றைய ஞானிகள் சொன்னதை நாமும் ஓதிக் கொண்டே உள்ளோம்.

நம் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்… அண்டத்தின் ஆற்றல்களை எடுத்துப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றி இன்றும் ஒளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எந்நாட்டவரும் பின்பற்றி அந்த அகஸ்தியன் வழிகளிலே எல்லோரும் வளர முடியும்.

1.என் நாடு… உன் நாடு…! என்று நிலை இல்லாதபடி
2.எந்நாட்டவரும் அவன் வழியிலே சென்றால்
3.அருள் ஒளியின் சுடராக அகஸ்தியனைப் போன்று முழுமை அடையலாம்.

இந்த உடலை விட்டு அகன்ற பின்… என்றும் ஏகாந்த நிலையில்… ஏகாந்த வாழ்க்கை வாழும் உணர்வைக் காட்டிய அந்த அகஸ்தியன் அருள் வழியில் நாம் திகழ்தல் வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் யார்… எதை… எப்படி… எந்த வகையில்… குறைகளைக் கண்டாலும்
2.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அந்தக் குறையை வளர்த்திடவே கூடாது.
3.அருள் ஒளி பெருக வேண்டும்…! என்ற உணர்வைத் தான் செலுத்திட வேண்டும்.

குறைகள் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.. தெளிந்திடும் மனம் வேண்டும்… தெரிந்து.. தெளிந்து… தெளிவாக வாழும் அந்தத் திறன் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் உருவாக்கிவிட்டால் “பகைமை உணர்வுகள் மாறும்…!”

இதைப் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது…
1.ஒரு காலம்… அவர்களுக்குள் இருக்கும் தவறை உணர்வார்கள்…!
2.நம்மைப் பற்றி எண்ணும் பொழுது அவர்களுக்குள் சிந்திக்கும் செயலும்… மாற்றியமைக்கும் திறனும் நிச்சயம் வரும்.

ஆகவே மனிதர்கள் நாம் இந்த அருள் ஒளியின் தன்மையைப் பெற்று மற்றவர்களுக்கும் பாய்ச்சிட வேண்டும்.

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அதைப் போல் ஒளியான உணர்வுகளை அவர்களுக்குள் நாம் பாய்ச்சும் பொழுது
1.பல தீமையான உணர்வுகளுக்குள் அவர்கள் அடைபட்டிருந்தாலும்
2.நம்மைத் திட்டி அவர்கள் ஏளனப்படுத்தியிருந்தாலும்
3.நாம் பதிக்கும் அருள் உணர்வுகள் ஒரு சமயம் இயக்கப்பட்டு
4.நாம் சொன்ன உணர்வின் நினைவுகள் அவருக்குள் கிளர்ந்தெழுந்து
5.அவருக்குள் இந்த ஒளியின் தன்மை பெறும் தகுதி பெறும்.
6.அவரை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் நிலையும் ஏற்படும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

July 2025 – உபதேசம்

பாக மண்டலத்தில் அமர்ந்து தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக இயக்கங்களை நான் அறிய முடிந்தது

 

“ஆதியிலே” உருவான உருவின் (உணர்வின்) தன்மையை அது எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்டவன். அதை எல்லாம் அவன் பாக மண்டலத்தில் (கர்நாடகா காவிரி ஆறு உருவாகும் இடம்) இருக்கப்படும் பொழுது கண்டது.

உணர்வின் அணுக்களின் இயக்கங்கள் எப்படி…? என்பதை அதாவது
1.ஒரு உணர்வின் தன்மை “எதனின் பாகம்… எதனுடன் இணைந்து கலந்து செல்கின்றது…?” என்பதை அறிகின்றான்
2.அதனால் தான் அந்த இடத்திற்குப் பெயர் “பாக மண்டலம்” என்ற பெயரே வந்தது.

பிரபஞ்சம் எப்படி உருவானது…? தனித்தனித் தன்மையாக (கோள்கள் நட்சத்திரங்கள்) இருந்தாலும் சுழற்சி வட்டத்திற்குள் அது எப்படி இயங்குகின்றது…? கூட்டமைப்பாக பிரபஞ்சம் என்ற நிலையை அது எப்படி அடைகின்றது…? என்பதையும் அகஸ்தியன் அறிகின்றான்.

இதே போன்று தான் நம் உயிரின் தன்மையின் இயக்கமும்…!
1.உடலுக்கு அது சூரியனாக இருக்கின்றது.
2.நம் உடலுக்குள் பல கோடி உணர்வுகள் சேர்த்து இது ஒரு பிரபஞ்சம் ஆகிறது.

நம் சூரியக் குடும்பத்தைப் போல அண்டத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. அதே போல் பல ஆயிரம் குடும்பங்கள் வளர்ச்சி பெற்றதும் உண்டு. அவை எல்லாம் தனித்தனியாக அகண்ட அண்டமாகச் சுழன்று கொண்டுள்ளது.

சில இடங்களில் பார்த்தோம் என்றால் வான மண்டலத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக அடர்த்தியாகத் தெரியும். அது எல்லாம் இன்னொரு பிரபஞ்சத்தில் உள்ளதைத்தான் நாம் அவ்வாறு காண முடிகிறது.

இது எல்லாம் “பாக மண்டலத்தில் என்னை அமர வைத்து குருநாதர் காட்டிய நிலைகள்…!”

அது ஒன்றுடன் ஒன்று இணைந்து சுழற்சியாகும் நிலை இங்கிருந்து பார்க்கப்படும் பொழுது வித்தியாசங்களாகத் தெரிய வரும்.

இதையெல்லாம் விஞ்ஞானிகளும் படம் எடுக்கின்றார்கள். எப்படி இருக்கிறது…? என்பதையும் அறிகின்றார்கள். அது எங்கே சுழலுகின்றது…? எங்கெங்கு நகர்ந்து செல்கிறது…? என்பதையும் பார்க்கின்றார்கள்.

எப்போதோ ஓர் காலத்தில் கோள்கள் அனைத்தும் சந்தர்ப்பத்தில் ஒரே நேர்கோட்டில் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
1.அப்படி வந்தால் பூமிக்கு அதனுடைய ஈர்ப்பு சக்தி குறைகின்றது.
2.ஒன்று நகர்ந்து ஓடலாம்… அது எப்படிப் போகும்…? என்று சொல்ல முடியாது.
3.ஒரு நொடிக்குள் இது நடக்கும். சூரியனுடைய ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் டபக்… என்று கீழே இறங்கிவிடும்.

இன்று இருப்பது நாளை இல்லை…! இது போன்று எத்தனையோ மாற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது.

வான்வீதியில் உருவாகும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் இயக்கத்தினால் தான் உயிரணுவிற்குள் துடிப்பு வருகின்றது. இரண்டும் சண்டை இட்டுக் கொண்டே இருக்கும்.

எது…?

ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால். கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் அதைக் கண்டவுடன் அஞ்சி ஓடுகின்றது.

இப்படி இது இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்ற நிலை வரும் பொழுது
1.வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகள் தாக்கிய உடனே மூன்றும் சேர்த்து ஒன்றாக இணைந்து
2.இரண்டு என்ற நிலை இல்லாது மூன்று என்ற நிலை அடைகின்றது.
3.அப்பொழுது அங்கே துடிப்பு ஏற்படுகின்றது.

அத்தகைய துடிப்பின் ஈர்ப்பினால் அதற்கு அருகில் இருக்கக்கூடியது சிக்கப்படும் பொழுது மற்ற உணர்வுகளைத் தனக்குள் சேர்த்து ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்து “உயிரணுவின் தோற்றமாகின்றது…”

உயிரணுவின் துடிப்பினால் வெப்பம் (உயிர்) உருவாகிறது. ஆனால் கோள்கள் அனைத்தும் சுழற்சியினால் வெப்பமடைகிறது. அதனால் தான் சூரியனைச் சர்வேஸ்வரன் என்றும் பூமியைப் பரமேஸ்வரன் என்றும் உயிரை ஈஸ்வரன் என்றும் ஞானிகள் காரணப் பெயரிட்டு அழைத்தார்கள்.

உயிர் மற்ற ஜீவணுக்களை உருவாக்கும் சூரியன் அணுக்களை உருவாக்கும். சூரிய பிரபஞ்சத்தில் தான் உயிர் அணுக்கள் துடிப்பின் நிலைகள் கொண்டு உருவாகின்றது.

அந்தத் துடிப்பினால் மற்ற உணர்வோடு சேர்த்து இரண்டும் மோதலான பின் அணுவின் துடிப்புகளாகி அந்த அணுவின் மலம் தான் இந்த உடலாகின்றது.
1.இந்த அணுக்களின் மலத்திற்கு… இந்த உடலைப் பாதுகாக்கத் தான் இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றோம்.
2.பல கோடி அணுக்களின் மலம் நம் உடல்.
3.இதைத் தான் மும்மலம் மும்மலம் மும்மலம் என்று சொல்வார்கள்.

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றினால் உருவாகும் அந்த அணுக்களின் மலம் தான் இந்த உடல் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஆக…நாம் இந்த உடலை… நமது… எனது… எனக்குச் சொந்தம்…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்… அதைத் தான் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
1.ஆனால் நமக்கு சொந்தமானது உயிர் தான்
2.அந்த உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றும் அத்தகைய பருவத்தைத் தான் உங்களுக்கு இப்போது ஏற்படுத்துகின்றோம்.

“தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுள்ளது போல் தான்” இன்றைய மனிதனின் வாழ்க்கை இந்த உலகிலே உள்ளது

 

பூமிக்கு வெளியிலே அணுகுண்டுகளை வெடித்துப் பரீட்சித்துப் பார்த்ததும்… இராக்கெட்டுகளை அதிகமாக விண்ணிலே செலுத்திக் கொண்டிருப்பதும்… அதன் மூலம் கதிரியக்கங்கள் எல்லாக் கோள்களுக்குள்ளும் அதிகமாகப் பரவி விட்டது.

நட்சத்திரத்திலிருந்து இயற்கையாக வெளிப்படக்கூடிய கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வரும் பொழுது
1.விஞ்ஞானத்தினால் பரவச் செய்துள்ள கதிரியக்கங்களில் இது பட்ட பின் இரு மடங்காகிவிடும்… கோள்களிலும் இது அதிகமாகிவிடும்.
2.இப்படிப்பட்ட அலைகள் இந்தப் பிரபஞ்சத்திற்குள் இப்பொழுது சுழன்று கொண்டுள்ளது… சூரியனுக்கு அருகிலும் வந்துவிட்டது.

உதாரணமாக… இரண்டு மின்சார வயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இரண்டு மடங்கு கரண்டுகள் அதிகமாகி அதனுடன் சேர்ந்த பல்புகள்… மற்ற சாதனங்கள் அனைத்தும் ஃப்யூசாகி விடுகின்றது.

சூரியனின் சுழற்சியில் இப்பொழுது மின்சாரம் (இயக்கம்) சீராக இருக்கின்றது. ஆனால் இயற்கையால் உருவாகும் கதிரியக்கமும் மனிதனால் பரவச் செய்த கதிரியக்கமும் மோதிய பின் இரு மடங்கு இயக்கமாகி சூரியனுக்குள் அப்படிச் செல்லும் போது அங்கே இரு மடங்கு மின்சாரம் உற்பத்தி ஆகும்.

அப்போது நம் உயிரின் துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது. அதனால் நம் உடலில் உள்ள அணுக்களும் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கும். இப்படி வேகமானால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.

ஒரு நொடிக்குள் இப்படி நடந்து விட்டால்…
1.மனிதனுக்கு மனிதன் அடித்துக் கொல்லும் நிலை வந்துவிடும்.
2.இந்த உணர்வலைகள் பாய்ந்து காட்டிற்குள் இருக்கக்கூடிய மிருகங்களும் நகரத்திற்குள் வரும் வாய்ப்புகள் உண்டு.
3.ஒரு நாள் முழுவதற்கும் இதனுடைய பாதிப்பு இருந்தால் உலகில் முக்கால்வாசி மக்கள் தன் நினைவை இழந்து… இறந்து விடுவார்கள்.

விஞ்ஞான ரீதியில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று எத்தனையோ கம்ப்யூட்டர்களை உலகெங்கிலும் வைத்துள்ளார்கள். எலக்ட்ரிக்கின் சக்தி இரு மடங்காகும் பொழுது அதனுடன் தொடர்பு கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் கருகிவிடும். அதில் இவர்கள் வைத்திருக்கின்ற அளவுகோலும் மாறிவிடும்.

அடுத்த நாட்டை அழிப்பதற்காக பூமிக்குள் எத்தனையோ குண்டுகளைச் சேமித்து வைத்துள்ளார்கள். அதிலே மற்ற மின்னலோ இயற்கையின் சீற்றங்களோ பாதித்து விடாதபடி அதற்குண்டான பாதுகாப்புக் கவசமாகக் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைத்து வைத்துள்ளார்கள்.

ஒரு மின்னல் பாய்ந்து அந்தக் குண்டுகள் அனைத்தும் வெடித்தால் அருகில் இருக்கக்கூடிய இடமே முழுமையாக அழிந்துவிடும். அதனால் தான் எல்லா இடங்களிலும் அதைக் காப்பதற்காக வேண்டி கம்ப்யூட்டர் மூலம் நுண்ணிய நிலைகளில் இயக்கிச் சீராக வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் இரு மடங்கு மின்சாரம் உற்பத்தியானால் என்ன ஆகும்…? இவைகள் அனைத்துமே செயல் இழந்துவிடும். கம்ப்யூட்டர்கள் ஃப்யூஸ் ஆகிவிடும்.

ஏனென்றால் இயக்கத் தொடர் அதிகமானவுடன் அதற்குள் இருக்கும் காந்தம் அதிகமாகி… அனைத்தையுமே வேகமாக இயக்கும்படி செய்து கருக்கி விடுகின்றது. அந்தப் பாதுகாப்பு இழந்தால் புதைத்து வைத்த குண்டுகள் வெடிக்கத் தொடங்கும்.

1.நாடு… நகரம்… மக்கள்… நீ… நான்… உன் சொத்து… என் சொத்து… என்று சொன்னாலும் எல்லாமே சிதைவுண்டு போய்விடும்.
2.அந்த அளவிற்குத் தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டு கீழே அமர்ந்திருப்பது போன்று
3.”எப்பொழுது கயிறு அறுந்து விழும்…?” என்று சொல்ல முடியாத நிலையில் இப்படிப்பட்ட போர் முறையில்தான் இருக்கின்றோம்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரம் உயிரின் துடிப்பாகிப் பல உணர்வுகளை மாற்றி அமைத்து உணர்வின் தன்மை எதனையுமே பக்குவப்படுத்தும் மனித நிலை பெற்ற பின் தான் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து தனக்குள் அதை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றான் மனிதன்.

ஆனால் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் அஞ்ஞான வாழ்க்கையாகி… இன்று உடலின் இச்சைக்கு என்று வளர்த்துக் கொண்டார்கள் விஞ்ஞானிகள்.

அகஸ்தியனோ நஞ்சினை வென்று உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடைந்து (அந்த உயிர்) என்றுமே ஒளியாக இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

அவனைப் பின்பற்றிச் சென்றவர் அனைவரும்… மனிதனின் ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்று ஒளியின் சரீரம் பெற்றது சப்தரிஷி மண்டலம்.

அது தான் சிருஷ்டித்துக் கொண்ட மண்டலம். ஆறவது அறிவைத் தனக்குள் நுகர்ந்து உணர்வினைச் சிருஷ்டித்துக் கொண்டது… சப்தரிஷி… சிருஷ்டி…! காரணப்பெயராக இவ்வாறு வைத்து நாம் தெரிந்து கொள்ளக் காட்டினார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.நடக்கப் போகும் அந்தத் தீமையிலிருந்து நாம் மீள முடியும்.
3.நம் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய பின்
4.அகண்ட அண்டத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றி மீண்டும் நிலையான சரீரமாக வளர முடியும்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி அத்தகைய நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் உள்ளார்கள்.

ஆனால் தனித்த நிலையில் வளர்ச்சி பெற்றால் முனி…! மற்றொன்றை வீழ்த்திடும் சக்தி கொண்டது. பின் அதுவும் மடிந்து விடும். வளரும் சக்தி இல்லை.. இதற்கு முனி என்று பெயர். தன் வலிமையைக் காட்டும்… மற்றொன்றை முறியடிக்கும்… பின் அதுவும் மடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை எடுத்து…
1.இரு உணர்வும் ஒன்றாக இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைத்து உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே வந்தால்
2.உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றடைய முடியும்.
3.விஞ்ஞானத்தினால் வரக்கூடிய தீமைகளிலிருந்து தப்பி விண் செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யார் நமக்குத் தீங்கு செய்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வு பெற வேண்டும் என்று அதை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தத் தீங்கின் உணர்வை எடுக்காதீர்கள்.

ஏனென்றால் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

பதிவு செய்த உணர்வின் வலிமை கொண்டு அந்த மகரிஷிகளை நீங்கள் எண்ணும் பொழுது
1.எத்தகைய தீமைகளோ பகைமைகளோ இருப்பினும்
2.இரக்கமற்றுக் கொன்று குவிக்கும் உணர்வுடன் மற்றவர்கள் வந்தாலும்
3.ஒருவனைத் தாக்கிக் கொன்றிட வேண்டும்…! என்ற உணர்வுகள் வருவதை
4.அந்த அசுர குணங்களிலிருந்து நாம் அவசியம் தப்புதல் வேண்டும்.

அதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவின் நினைவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஒன்றச் செய்யுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தநாளங்களில் கலக்கட்டும்.
3.உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகள் அனைத்தும் அதனுடைய வலிமை ஒடுங்கட்டும்.

ஆகவே அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் செலுத்துங்கள். அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் பெறவேண்டும்.

உங்கள் பார்வையில் இந்த நாட்டில் உள்ள பகைமைகள் அனைத்தும் நீங்க வேண்டும். மனிதன் என்ற தன் நிலையை அடைந்து சகோதர உணர்வுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

1.நீங்கள் வெளி விடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள
2.விஞ்ஞானத்தால் வந்த அசுர உணர்வுகளை எல்லாம் அழிக்கட்டும்…!
3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளரட்டும்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணுகுண்டுகளைத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்து மற்றதை அழிக்கச் செய்கின்றான். அதே போல் அதை வைத்து மற்ற இயந்திரங்களையும் துரிதமாக இயக்கச் செய்கின்றான்.

அதாவது குறைந்த எடை கொண்ட கதிரியக்கச் சக்திகளை வைத்து அதிகச் செலவில்லாதபடி இயக்கத்தின் வேகத்தை அதிகமாகக் கூட்டி மற்ற சாதனங்களை இயக்கச் செய்கின்றான்.

அப்படி இயக்கினாலும்…
1.இந்தக் கதிரியக்கங்கள் கசிவாக்கப்படும் பொழுது இயக்க ஓட்டத்தை மிகவும் துரிதமாக்குகின்றது
2.மனிதனின் ஆசைக்குள் அந்தக் கதிர்வீச்சுகளை நுகரப்படும் பொழுது
3.நம்முடைய எண்ணங்கள் துரித நிலைகளில் இயக்கப்படுகின்றது
4.சிறிது தடைப்பட்டால் வெடிக்கும் நிலையே வருகின்றது.

நம் எண்ணங்கள் எதை உற்று நோக்குகின்றோமோ… சீராக வரவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் சிதறுண்டு போகும் மனங்களாகத்தான் மாற்றுகின்றது.

ஒன்றின் வீரியத் தன்மைகள் கொண்டு நுகரப்படும் பொழுது…
1.மற்றொன்று நாம் எதிர்பார்க்கும் உணர்வுகள் அது துரித நிலையில் நடக்கவில்லை என்றால்
2.உணர்வின் மோதலால் அது சிதறுண்டு நம் சிந்தனைகள் இழக்கப்படுகின்றது
3.நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது…
4.இந்த விஞ்ஞான அறிவால் வந்த நிலைகள் தான் இது…!

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டுமா இல்லையா..?

ஆனால்… இதை எல்லாம் நான் படித்துப் பேசவில்லை. அந்த உணர்வின் இயக்கத்தைக் குருநாதர் எனக்கு நேரடியாக உணர்த்தியதை உங்களுக்கும் அப்படியே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உலகம் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றது. இத்தகையை சூழ்நிலையில் அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திலேயே நாம் ஒன்றி வாழ வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் நினைவைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியரின் பால் செலுத்துங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…!

அவரிடம் இருந்து வெளிப்பட்ட அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் உடலுக்குள் அதன் உணர்வின் சக்தியை உணரலாம்.

1.ஆகவே தியானிக்கும் பொழுது
2.அந்த அகஸ்தியரின் அரும் பெரும் சக்தி
3.“மனப்பூர்வமாக எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்…” என்று ஏங்கிப் பெற வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.“ஈஸ்வரா…” என்று சொல்லும் பொழுது
2.உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…!
1.எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட என்று சொல்லும் பொழுது இரத்தத்திற்குள் நினைவைச் செலுத்துங்கள்.
2.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது உங்கள் புருவ மத்தியில் உயிரிடம் நினைவைக் கொண்டு போங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று குழந்தைகள் (திருமணம் ஆகாதவர்கள்) ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
துருவ மகரிஷியாக ஆன பின் அவர் பெற்ற உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதை நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த அரும் பெரும் சக்தி உங்கள் இரத்தநாளங்களில் கலக்கும்.
2.சர்வ பிணிகளையும் போக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.அங்கிருந்து துருவப் பகுதியின் வழியாக வரும் அருள் சக்தியை நுகர்ந்து
2.எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளையும் துருவ மகரிஷிகளையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணி இவ்வாறு தியானிப்பதால்
1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.
2.அதே சமயத்தில் நம் உடலில் அறியாது சேர்ந்த
3.தீய வினைகள்ளோ சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகலும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று… அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து… தெரிந்து… வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பால் நினைவைச் செலுத்துங்கள்.

சப்தரிஷி மண்டலங்களிண் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியை இப்படி எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் நம்முடைய முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்தப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து நேரே அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்…

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

இதைப் போன்ற தியானம் தினசரி நாம் செய்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்

 

அகஸ்தியன் தன் வாழ்க்கையில் நஞ்சினைப் பிளந்து… கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

1.இந்தக் காற்றிற்குள் எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் அதையெல்லாம் பிளந்து விட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

உயிரணு பூமிக்குள் வந்த பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைப் பெற்று பன்றியின் உடலை அமைத்து அதனின் வலுவின் துணை கொண்டு நாற்றத்தைப் பிளந்து வராக அவதாரமாக… நல்ல உணர்வுகளை நுகர்ந்து… அடுத்து பரசுராம்…! தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் மனிதனாக உருப்பெற்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் எது இருந்தாலும் சமப்படுத்தி… அதைத் தனக்குகந்ததாக உருவாக்கும் சக்தி பெற்றவன் மனிதன். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எத்தகைய விஷத்தையும் ஒடுக்கக்கூடிய சக்தி பெற்றதுதான் துருவ நட்சத்திரம்.

அவ்வாறு வரக்கூடிய அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை நம் பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்து கொண்டுள்ளது.

அதை நாம் எடுக்கக்கூடிய நேரம் எது…?
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி பிரபஞ்சத்தில் பரவி வருவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி
2.அதை நம் பூமியின் துருவப் பகுதி வழியாகக் கவரும் அந்த அதிகாலை நேரம் தான்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்த வேண்டும்

இதை உறுதிப்படுத்த… உருவாக்க… உணர்வினை வலுவாக்க… உடலுக்குள் அந்த வலிமையைச் சேர்க்க… தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவருடைய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… அருள் ஒளி அவருக்குள் படர வேண்டும். அந்த அருள் ஒளி எனக்குப் பாய்ச்ச வேண்டும் என்று
1.இரு மனமும் ஒன்றுபட வேண்டும்… இரண்டு பேருமே இவ்வாறு எண்ணிக் கலந்து உருவாக்குதல் வேண்டும்.
2.இது தான் ரிஷி… சிருஷ்டிப்பது…! ரிஷி பத்தினி என்று அன்று சொல்வார்கள்.
3.இருவருமே ஒன்றாகச் சேர்த்து அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் முழுமை பெறுகின்றோம்.

இதைத் தான் காவியமாகப் படைத்து நமக்குக் கொடுத்துள்ளார்கள் அன்று ஞானிகள்.

காலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சேர்த்துக் கொண்ட பின்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என் பார்வை அவர்கள் தீமையை அகற்றிடும் சக்தியாக வர வேண்டும் என்று நாம் நினைவுகளைச் செலுத்த வேண்டும்.

அதே சமயத்தில் இன்று விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். காற்று மண்டலத்தில் ஏராளமான நச்சுத் தன்மைகள் பரவி உள்ளது. அது நமக்குள் புகாது தடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவை
2.மீண்டும் மீண்டும் நாம் சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உலகப் போர் என்ற நிலைகளில் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்டு அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் பரவி எல்லாக் கோள்களும் எடுத்து சூரியன் அருகிலே சென்றால் அதற்குள் மோதலாகி “இரு மடங்கு காந்தத்தை” சூரியன் உற்பத்தி செய்யப் போகிறது.

அத்தகைய இயக்கச் சக்தி வரும் போது
1.நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்
2.அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.
3.உணர்வின் தன்மை மடியும் நிலைகள் வந்து விடும்.

அது போன்ற நிலை நம்மைப் பாதிக்காது தடுக்க வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்லதை மட்டும் எப்படிக் கூர்மையாக நுகர்ந்ததோ… அது போல் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

இதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்… இதனுடைய அர்த்தங்களைப் புரிந்து செயல்பட வேண்டுமென்றால் ஆயுள் பத்தாது. குருநாதர் எமக்கு கொடுத்த அருள் உணர்வுகளை…
1.பாக மண்டலத்தில் (கர்நாடகா அகஸ்தியன் அமர்ந்த இடம்) பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்று
2.அகஸ்தியன் கண்ட உணர்வுகளை நானும் எடுத்து அதைக் கண்டு கொண்டதனால்
3.அந்த உணர்வின் அறிவு எனக்குள்ளும் வந்து குருவின் துணையால் இந்த உண்மைகளை அறிய முடிந்த்து.
4.அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் அறிவுதான் எனக்குள்ளும் புகுந்து அதையெல்லாம் அறிய முடிகின்றது.

இதைப் போலத் தான் நீங்களும் அறிந்து உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… “அகண்ட அண்டத்தில் நடப்பதை அறிந்துணர்ந்து” அந்த அருள் ஒளியை உங்களுக்குள் விளையை வைத்துப் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பச் சொல்வது.

முதலிலே சொன்னது போன்று சூரியனுக்குள் இருந்து இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கும் சந்தர்ப்பமாக அதிக சக்தி வாய்ந்ததாக இனி வரப்போகின்றது.

நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது. அந்தத் துடிப்பாகும் பொழுது நமக்குள் உணர்வின் தன்மை அதிகரித்து… நம் நல்ல எண்ணங்கள் அனைத்தும் ஃப்யூஸ் ஆகிவிடும். சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.

பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போன்று தான் ஒரு நொடிக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து விடும். எலெக்ட்ரிக் இரு மடங்காகி சிந்தனைகள் இழந்து விட்டால்…
1.மறுபடியும் நல்ல சிந்தனைகளைக் கொண்டு வருவது மிகவும் கடினம்.
2.ஆகவே இப்பொழுது இருந்தே நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதன் உணர்வின் வலிமை கொண்டு எந்த நொடியிலே அந்த விஷத்தன்மையான இரு மடங்கு துடிப்பு அதிகமானாலும் அதைப் பிளந்து உங்கள் இயக்கத்தைச் சமப்படுத்தி கொள்ள இது உதவும்.

ஒரு நொடியானாலும் ஒரு மணி நேரம் ஆனாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து சிந்தனை சிதறாது வைத்திருக்கலாம். உங்களையும் காக்கலாம் எதிர்கால மக்களையும் காக்கலாம்.

இயற்கையின் சீற்றங்கள் வரப்படும் பொழுது…
1.அந்த நேரத்தில் ஞானிகள் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்களோ
3.அந்த உணர்வை நமக்குள் செலுத்தினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்
1.”ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை…!” என்ற அந்தக் குறைகளைத் தாய் கேட்டுப் பதிவாக்கியிருந்தால்
2.அந்த அதிர்ச்சியான உணர்வலைகள் அந்தக் கருவிலே விளைந்துவிடும்.
3.இது பூர்வ புண்ணியமாக அமைந்து… அதனால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்குத் திருமணத் தடை வருகின்றது.

ஆனால் இப்படித் தடைகள் வந்தாலும் அதை நாம் மாற்றி அமைக்க முடியும்.

என் குழந்தை அருள் ஞானம் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தையின் உடலிலே படர வேண்டும். திருமணமாகி எங்கே சென்றாலும் அந்தக் குடும்பத்தில் தொழில் வளம்… செல்வம்.. செல்வாக்கு பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆனால் குழந்தை மீது பாசமாக இருக்கும் பொழுது பிள்ளைக்கு வயதாகின்றதே… திருமணம் ஆகவில்லையே…! என்ற சோர்வும் அதனால் வேதனையும் வரும் பொழுது பாலிலே பாதாமைப் போட்டாலும் பாதாமிற்குள் சிறிது விஷம் பட்டால் என்ன செய்யும்..?

பாதாமிற்குச் சக்தி இழந்து விடும்.

பக்தி மார்க்கங்களில் நாம் சென்றாலும்… நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சி வரும். கொஞ்சம் குறையானால் அந்த குறையைத் தாங்கும் நிலையற்றுப் போய் விடுகின்றது.

வாழ்க்கையில் வரும் குறையை நிவர்த்தி செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானத்தை உங்களுக்குச் சொல்கிறோம்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரத்தைக் காட்டினார்கள் ஞானிகள். பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து பல கோடிச் சரீரங்கள் எடுத்துக் கொண்ட பின் வராகனகாக வரும் பொழுது சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கிவிட்டு நல்ல உணர்வை நுகர்கின்றது.

1.அதன் வாழ்க்கையில் அது அறிந்து நுகரவில்லை….!
2.சந்தர்ப்பத்தில் விளைந்து கொண்ட உணர்வை அது நுகர்கின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் அதன் உடலிலே சேர்கின்றது.
4.நல்லதை நுகர்ந்த உணர்வோ அந்தப் பன்றி உடலைப் பிளக்கின்றது.
5.பன்றி உடலைப் பிளந்த பின் பரசுராம்… மனிதனாகப் பிறக்கின்றது
6.தீமைகளை நீக்கும் அந்த அருள் சக்தியை மனித உடலில் பெறுகின்றது.
7.ஏனென்றால் சமப்படுத்தும் உணர்வுகளாக அந்த எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கும்.

இதன் வழிப்படுத்தி மனிதன் வாழக் கற்றுக் கொண்டால் தீமையை அகற்றிக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றையும் சமப்படுத்தி நாம் வாழ்வோம் என்றால் நமக்குள் அருள் என்ற நிலைகளும்… ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்.. இனிப் “பிறவியில்லா நிலை..” என்ற நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் பற்றின் நிலை கொண்டு எனக்கு வரவில்லையே.. ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.

இந்த மனித வாழ்க்கையில் குடும்பத்தில் எல்லோரும் நலமாக வேண்டும்…! என்ற பற்றுடன் தான் இருக்க வேண்டுமே தவிர
1.கல்யாணம் நடக்கவில்லையே…! என்ற பற்றைக் கூட்டினால்
2.அந்த உணர்வின் தன்மை முன் நின்று நடத்தச் செய்யும் நல் உணர்வுகளைத் தாழச் செய்யும்.
3.நாம் செய்யக்கூடிய காரியங்களுக்குத் தடையாகும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ இதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ஓ..ம் நமச்சிவாய…! என்று உடலாக நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

சிவாய நம ஓம்…! நமக்குள் பதிவு செய்த உணர்வுகளே மீண்டும் நமக்குள் அந்த எண்ணங்களாகத் தோற்றுவித்து நம்மைச் சோர்வடையச் செய்யும்.

நம் பெண்ணைப் பார்க்க வருவோருக்கும் இந்தச் சோர்வான உணர்வுகள் படப்படும் பொழுது வருவர்கள்… பார்ப்பார்கள்… போய் விடுவார்கள்…! இதைப் போன்ற நிலையில் நம் மனம் தான் வருவோரை அகற்றுகின்றது

தாயின் கருவின் மூலம் வந்த அந்த உணர்வின் தன்மை நமக்குள் வித்தாக வளர்த்து அந்த உணர்வின் தொடர் வரிசையிலேதான் இந்த வாழ்க்கையில் இப்படி ஒரு தடை வருகின்றது. இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் அல்லவா…!

மேலும் இந்தக் காற்று மண்டலமே இன்று நச்சுத் தன்மை ஆகிவிட்டது. இதிலிருந்து மனிதர்கள் நாம் எப்படி மீள வேண்டும்..? என்பதற்குத்தான் ஆத்ம சுத்தியையும் தியானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் தியானத்தின் மூலம் அருள் சக்திகளை அதிகமாகக் கூட்டிக் கொண்டு
1.வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி மாற்றிட வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும்… அருள் வழியில் வாழ்க்கை நலம் பெறவேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்ற இத்தகைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டே வந்தால்
6.அருள் உணர்வின் கரு நமக்குள் உருவாகும்… இந்த உணர்வின் அலைகள் நமக்குள் பெருகும்.

அதன் மூலம் நம் சொல் அனைவருக்கும் நலமாகின்றது. நாம் எண்ணிய காரியங்கள் ஜெயிக்கும் தன்மையாக அதன் உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து வரும்.

நெருப்பைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்… ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை

கோவிலுக்குச் சென்று யாகங்கள் செய்து வேள்விகள் செய்தால் ஆண்டவன் காப்பாற்றுவான்…! நீ ஏன் கஷ்டப்படுகின்றாய்…? யாகத்தை வளர்த்தால் தன்னாலே ஆண்டவன் வருகின்றான்…! என்று ஈப்படிச் செய்வதில் தான் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.

நெருப்பைத் திகு திகு என்று எரியவிட்டு அதிலே பால் நெய் இன்னும் என்னென்னமோ பொருளை எல்லாம் போட்டால் ஆண்டவனுக்கு இந்த வாசனைகள் போய் “எனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்… அவன் நமக்குக் கொடுப்பா…!” என்ற எண்ணத்திலே தான் நாம் இருக்கின்றோம்.

உதாரணமாக… நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.

ஆனால் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம்மை இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தைச் செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் உயிரான நெருப்பில் யாகத்தீயாக அந்த அருள் ஞானிகள் உணர்வுளைப் போட வேண்டும்.

நம் உயிர் ஒரு நெருப்பு…!
1.உயர்ந்த ஞானிகள் உணர்வுகளை யாக்க் குண்டமான உயிரான நெருப்பிலே செலுத்தி
2.நம் உணர்வுகளை எல்லாம் புனிதப்படுத்திச் சொல்லின் நிலையாக அதை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.நமக்குள்ளும் தீமைகள் நீங்குகின்றது நம் சொல்லைக் கேட்பவர்கள் தீமைகளும் நீங்குகின்றது
4.தீமையை நீக்கும் எண்ணங்களாக இந்தக் காற்று மண்டலத்திலே பரவுகின்றது… எல்லோருக்கும் நன்மை செய்யும் சக்திகளாக…!

இதுதான் ஞானிகள் சொன்னது.

இதைப் புத்தகத்தில் எழுதிக் காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றதோ… அப்படித்தான் நமது உயிரும் வேலை செய்கிறது…! என்று அன்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

உயிரின் நிலைகள் வேலை செய்யும் என்று சொல்லவில்லை… அதற்குப் பதிலாக “நெருப்பு தான் செய்யும்…” என்று நெருப்பிலே பொருளைப் போட்டு ஆண்டவனுக்கு மணமாக அனுப்பி விட்டால் போதும் என்று இப்படி மாற்றி விட்டார்கள்.

ஆனால் அந்த நெருப்பிலே பொருளைப் போட்டால் எப்படி மணங்கள் வெளி வருகின்றதோ அதைப் போன்று தான்
1.நமது உயிரான நெருப்பிலே நாம் எண்ணத்தால் எடுத்து அந்த உயர்ந்த எண்ணங்களைப் பரப்பிச் சொல்லாகச் செயல்படுத்தி
2.உணர்ச்சிகளின் தன்மையாக நம் உடலுக்குள் விளைவிக்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்.

இந்த உயிர் என்ற நிலைகளை விட்டு விட்டார்கள்… நெருப்பு தான் எல்லாம் செய்கிறது…! என்று அதைப் பிடித்துக் கொண்டார்கள்.

கல்யாணம் செய்யும் பொழுது எல்லாம் இந்த நெருப்பைப் போட்டு அக்னி சாட்சியாகச் செய்கிறோம் என்பார்கள்.

புதிதாக வீட்டைக் கட்டி அங்கே புகுந்தாலும் இதைப் போன்ற அக்னியைத்தான் அங்கே வளர்க்கின்றார்கள். கோவிலிலும் மற்ற இடங்களிலும் இந்த யாகங்களைத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் அதனுடைய உட்பொருளே நமது உயிர் ஒரு நெருப்பு அந்த நெருப்பிலே உயர்ந்த உணர்வுகளைப் போட்டு அந்த மணங்களைப் பெருக்கி அதைத் தானும் மற்ற எல்லோரும் பெறும்படியாகத்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாகச் சாஸ்திரமாகக் கொடுத்துச் சென்றார்கள்.

1.நெருப்பை மட்டும் தான் இன்று நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்
2.ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மறைந்த உண்மைகளை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்றப்படும் பொழுது “அருளை…” நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் நடக்கின்றது… நல்ல முறையில் சித்தியாகின்றது…!

ஆனால் வாழ்க்கையில் குடும்பப் பற்றை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றைக் குறைக்கப்படும் பொழுது என்ன ஆகும்…?
1.குடும்பப் பற்று வந்தாலே அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.
2.தன் பிள்ளைகளுக்கு இப்படி ஆக வேண்டும்… அப்படி ஆக வேண்டும்… என்ற உணர்வு வந்துவிட்டாலே போதும்
3.நமக்குள் ஏற்கனவே பதிந்திருந்த பழைய உணர்வுகள் அனைத்தும் முன்னாடி வந்துவிடும்…!
4.அது முன்னாடி வந்துவிட்டாலே “அதைக் காப்பது” என்பதே பெரிய சிரமம்.

ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலேயும் “ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டும்…” என்றால் நாம் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்… வாழ்க்கையில் எல்லாம் தெளிவாக வேண்டும்…! என்ற உணர்வுகளைக் கூட்டிக் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்.

கூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

1.கண்ணைத் திறந்து விண்ணை நோக்கிப் பார்க்க வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நினைவை விண்ணிலே செலுத்தி
3.ஒரு ஐந்து நிமிடமாவது சுவாசிக்க வேண்டும்.

பின்… எது நம் வாழ்க்கையில் குறையாகத் தென்படுகின்றதோ அது நிறைவு பெற வேண்டும்… வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் தொழில் சீராக வேண்டும்… பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவேண்டும்… சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆனால் குறித்த காலத்தில் நடக்கவில்லை என்கிற பொழுது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது… திருமணம் ஆகவில்லையே…! என்ற ஏக்கம் வருகின்றது… சோர்வடைகின்றோம்.

சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் “வலுவாக” இருந்தால் இந்தச் சோர்வே வராது.

அப்படி எண்ணவில்லை என்றால் விஷத் தன்மைகள் அதிகமாகி…
1.இந்தப் புவியின் பற்று கூடி… உடலின் பற்று அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருள் ஞானிகளின் பற்றைக் கூட்டினால் தான்
1.வாழ்க்கையில் வரக்கூடிய மற்ற பற்று
2.அது எதுவாக இருந்தாலும் வெல்ல முடியும்…! (முக்கியமானது)

ஆக.. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் எடுக்கும் உணர்வுகள் வேகமாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது அதிலே கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மைகளைக் கூட்டிவிடுகின்றது.

இப்படி… இந்த மனிதனின் “வாழ்க்கையின் எண்ணங்கள்” கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி தான் வருகின்றது.

அதே சமயத்தில் வீட்டில் வயதான தாய் நோயாக இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவர்கள் நலம் பெறவேண்டும் என்று வீட்டில் உள்ள பிள்ளைகள் எண்ணுகின்றோம்.

நம்பிக்கையுடன் மகரிஷிகளின் உணர்வுகளைத் தாய்க்குப் பாய்ச்சப்படும் பொழுது அருள் உணர்வின் தன்மை அங்கே உருவாக்கப்படுகின்றது.

நலம் பெற வேண்டும் என்று பாய்ச்சப்படும் உணர்வுகளால்
1.தாய்க்குள் வேதனை என்ற உணர்வுகள் வளராது
2.அருள் ஒளி பெறுவோம்..! என்ற உணர்வுகள் தாயிற்கு வளரத் தொடர்கின்றது.

அவ்வப்பொழுது தெளிவாகின்றது… தெளிந்த மனமும் தாய்க்கு வருகின்றது. நலம் பெறும் எண்ணத்தில் எல்லோரும் இருக்கும் பொழுது பிள்ளைகள் எண்ணும் உணர்வுகளால்.. ஒளியின் தன்மையைப் பெறும் தகுதியைத் தாய் பெறுகின்றது.

1.அப்பொழுது உடல் பற்று வராது… அருள் பற்று அங்கே வருகின்றது.
2.அந்த அருள் பற்று அங்கே வரப்படும் பொழுதுதான்…
3.தாய் வேதனையற்ற நிலைகள் கொண்டு வேதனை என்ற எண்ணமே எடுக்காது
4.அருள் ஒளி பெற வேண்டுமென்ற அனைவரது கூட்டு ஐக்கிய உணர்வுகளும் கிடைக்கின்றது.

ஏனென்றால் தாயின் உணர்வு தான் பிள்ளைகளாகிய உங்கள் உடல். பின் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் தாய் சூட்சம நிலை அடைகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வின் தன்மை கொண்டு அவர்களை விண் வெளி செலுத்தி உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கும் தன்மை வருகின்றது.
1.அருள் ஒளி கூடுகின்றது…
2.தாயின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளியாகின்றது.

அவர்கள் அங்கே இணைந்த பின்… சப்தரிஷி மண்டலத்தின் ஒளி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் படர வேண்டும்.. எங்கள் குழந்தைகளுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்…! என்ற இந்த உணர்வினைக் கூட்டுதல் வேண்டும்.

அருள் வழியில் வாழ வேண்டிய முறைகள் இது…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து “அதையே முன்னிலைப்படுத்த வேண்டும்”

 

ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல சரக்குகளை அதனுடன் இணைக்கின்றோம். அதிலே
1.உப்பு அதிகரித்தால் கைப்பின் நிலையே வரும்.
2.இனிப்பின் சத்தைக் கலந்து விட்டால் இனிப்பின் நிலையே வரும்.
3.காரத்தை அதிகரித்து விட்டால் காரத்தின் உணர்வின் செயலாகவே அது உள்ளடங்கும்.

இதை போலத்தான் மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட குணங்கள் பல பல இருப்பினும் ஒரு குழம்பிற்குள் கூட்டாக வைப்பது போல… உயர்ந்த குணங்கள் கொண்டு மனிதன் இருப்பினும்… இரக்க உணர்வு கொண்டு பிறருடைய துயரைக் கேட்டறிந்து நன்மைகள் செய்தாலும்… அந்த இரக்கத்தால் ஈர்த்துக் கொண்ட வேதனை உணர்வுகள் உடலுக்குள் சிறுகச் சிறுகக் கலந்து விடுகிறது.

குழம்பிற்குள் நஞ்சைக் கலந்து உணவாக உட்கொண்டால் எப்படி மயக்கப்படும் நிலை வருகிறதோ அது போல நல்ல உணர்வின் சத்துக்கள் நமக்குள் இருப்பினும்
1.வேதனையான உணர்வுகளை நம் ஆன்மாவிலே கலக்கப்படும் பொழுது
2.நம்மை அறியாமலே அடிக்கடி வேதனை என்று சொல்லே வரும்… வேதனை என்ற நினைவே வரும்.
3.அதைக் கொண்டு வாழ்க்கையை பலவீனப்படுத்தச் செய்யும்
4.எதையுமே சரியாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

வேதனையை எடுத்தோம் என்றால் அது உமிழ் நீராக மாற்றப்பட்டு நம் உணவுடன் கலக்கப்பட்டு அந்த வேதனையே உணவுடன் கலந்து இரத்தங்களாக மாறுகின்றது. வேதனை என்பது நஞ்சு.

பல பொருள்களைப் போட்டு அதனுடன் எந்த வாசனையான பொருளை இணைக்கின்றோமோ அந்த வாசனையின் தன்மையாகவே “சுவை” இருக்கும்.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் உயர்ந்த குணங்கள் இருப்பினும்
1.வேதனையை எடுக்க எடுக்க நஞ்சு கலந்த உணர்வின் தன்மை உணவுடன் கலக்கப்பட்டு உணர்வின் சுவையை மாற்றி விடுகின்றது.
2.அதிலே கலந்து அது ரசமாக மாற்றப்படும் பொழுது அது இரத்தமாக மாறுகின்றது.

அந்த இரத்தத்தினை உடலில் உள்ள வால்வுகள் இழுத்து உடலுக்குள் பரவச் செய்யும். அல்லது அதை வடிகட்டும் நிலையில் கொண்டு கிட்னி கல்லீரல் இவைகளுக்கு எடுத்து அனுப்பும்.

இரத்தமாக மாறியதை அனுப்பும் பொழுது
1.முதல் வால்விலே இந்த நஞ்சின் தன்மை தாக்கிய பின் வீக்கமடைந்து விடுகின்றது.
2.உருவான இந்த இரத்தத்தை ஈர்க்கும் தன்மையும் அது இழந்து விடுகின்றது… பின் எரிச்சல் வருகின்றது.

அடுத்த பிஸ்டன் இந்த இரத்தத்தை உடலுக்குள் இழுப்பதற்கு முன்னால் இது இழுத்தவுடன் அதனுடைய தொடர் வரிசைக்குக் கிடைக்கவில்லை என்றால் “அங்கே பளீர்ர்… என்று மின்னும்…”

காரணம் அந்த இரத்தத்தை உறிஞ்சினால் இதற்கு வலு இருக்காது விஷம் கலந்த நிலைகள் கொண்டால் அந்த நஞ்சினால் மயக்கம் வரும்.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது வால்விலே வீக்கம் ஏற்பட்டு இரத்தம் அதிகமாக அதன் வழி புகும் நிலை இழக்கப்படுகின்றது. அப்பொழுது எரிச்சலாகிறது.
1.ஒரு பக்கம் எரிச்சலாகும்
2.மறு பக்கம் பளீர்ர்… என்று மின்னும்.

ஆனாலும் திருப்பி எடுக்கும் நிலைகள் கொண்டு இரத்தம் வரவில்லை என்றால் வாய்வின் தன்மை பளீர்ர்… என்று ஊடுருவிச் சென்று ஆகாரம் இல்லாத நிலைகளாக மற்றதை இயக்கச் செய்யும். அப்பொழுது அங்கே வலி அதிகமாகும்.

மருத்துவரிடம் சென்றால் இது ஹார்ட் அட்டாக் என்று சொல்வார்கள்.
1.விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் நாடியின் துடிப்புகளும் குறையும்.
2.நாடியின் துடிப்பு ஒரு நொடிக்கு இவ்வளவு இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி வேதனைப்படுவோருக்கு அது குறையாக இருக்கும்.
3.மருத்துவரும் இதை உறுதிப்படுத்தி அதற்கு வேண்டிய உதவிக் கருவிகளை மாற்ற வேண்டும் என்பார்.
4.அதை வைத்து இந்தத் துடிப்பைச் சீர்படுத்தினால் தான் வாழ முடியும்… இல்லையென்றால் இருதயம் நின்று விடும் என்பார்.

விஞ்ஞான அறிவுப்படி அதைச் செய்தோம் என்றால் அதன் வழி வாழலாம் சிறிது காலம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி யாம் சொல்லும் இந்தக் கூட்டுத் தியானங்களின் மூலம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் உணர்வை எடுத்து என்ற இந்த இயக்கத்தின் தொடரை நாம் ஈர்ப்போம் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்து ஆகாரத்துடன் கலந்து
2.இரத்தத்தில் உள்ள நஞ்சினைக் குறைக்கச் செய்யும்… நாடித் துடிப்பின் வேகத்தைக் கூட்டச் செய்யும்.

ஹார்ட் அட்டாக் வருவதன் காரணமே… மற்றவர்கள் பட்ட வேதனையை… அவர்களுக்குள் துடிப்பு குறைந்த நிலையை நுகர்ந்தது.. அந்த நஞ்சான உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்தது… இருதயத்தின் வால்வுகள் அதனால் சீராக இயங்க முடியவில்லை.

இந்த உணர்வின் சத்து உடல் முழுவதும் பரப்பப்படும் பொழுது மற்ற உறுப்புகளும் செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

மற்றவருடைய வேதனைகளைக் கேட்டு உபகாரம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகளை உயிர் இயக்கி அதை உணர்த்தினாலும்… உணர்த்திய உணர்வின் சத்து உணவுடன் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… இந்த அமிலத்தின் சத்து இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது வால்வுகள் சீர் கெடுகின்றது.

இருதயத்திற்குள் சென்ற இதே இரத்தம் கிட்னிக்கு வந்தால் சிறுகச் சிறுக அதையும் சீராக இயக்க விடாது தடுத்து விடுகிறது. இரத்தத்தில் வரும் தீமைகளை அகற்றும் தன்மையை கிட்னி இழந்து விடுகின்றது.

இதைப் போல பல நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்குத் தான் கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்க்க நேர்ந்தால்… அடுத்த கணம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அவ்வப்போது உடனுக்குடன் நுகர்ந்து பழக வேண்டும்.

உடனுக்குடன் கவரும் அந்தத் திறன் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகளை எனக்குள் பதிவு செய்து இது எவ்வாறு இயக்குகிறது…? என்று
2.உணர்த்திய உணர்வவினை எனக்கு உபதேசித்த முறையிலேயே உங்களுக்கும் அதைக் கொடுக்கின்றேன்.

கேட்டறிந்த உணர்வுகள் பதிவாகி… மீண்டும் நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அந்த உணர்வின் ஆற்றல் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறச் செய்கின்றது.

அதை நுகர்ந்தால் நோய்களை உருவாக்கும் அத்தகைய சக்திகளை மாற்றி விடுகின்றது அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குச் சொல்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய கால கட்டத்தில்… நாம் செய்யும் தியானத்திற்குப் புதிய அன்பர்கள் வந்தால்… உதாரணமாக அவர்களுக்கு நோய் என்று சொன்னால் கூட்டுத் தியானங்களில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தியானமிருந்த பின் அவர்களுக்கு உடல் நோயோ குடும்பத்தில் கஷ்டமோ இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
2.குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்பட வேண்டும்
3.அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று
5.கூட்டுத் தியானத்தில் அனைவரையும் சொல்லச் செய்து இந்த வாக்கினைப் பரவச் செய்யுங்கள்.

இது பதிந்து அவர்கள் மீண்டும் அந்த அருள் சக்திகளை எடுக்கத் தொடங்கினால் அவர்கள் சிரமங்களும் நீங்கும். அப்பொழுது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.

நீங்கள் கொடுக்கக்கூடிய அருள் வாக்கு அவர்களுக்கு நல்ல முறையில் விளைந்து மகிழ்ந்த நிலைகள் பெறுவார்கள்.

யாராவது கோபமாகவோ வெறுப்பாகவோ பேசினால் உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர்கள் அறியாமை நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தச் சக்திகளைப் பெற வேண்டும்… அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நிலையும்… நல்ல பண்பும் அன்பும் பெருகக்கூடிய சக்தி பரவும்…! என்று சொல்லிப் பழக்கப்படுத்தச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இதே மாதிரி செய்து வந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்தி நாம் எதை எண்ணுகின்றோமோ ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் அந்தச் சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த அணுக்களும் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் குறைகளை அதிக நேரம் கேட்டுக் குறைகளைக் கேட்க ஆரம்பித்தால் அவர்கள் வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

அப்படிச் சொன்னால்…
1.எங்கள் குடும்பத்தில் இந்தக் குறை இருக்கிறது… அது நீங்க வேண்டும்…! என்று சொல்லி அப்படிக் கேட்கச் சொல்லிப் பழக்குங்கள்.
2.எங்கள் உடலில் இந்த நோய் இருக்கின்றது… அது நீங்கி என் உடல் நலமாக வேண்டும்…! என்று சொல்லச் சொல்லுங்கள்.
3.இருப்பதைச் சொல்லி விட்டு… அது நீங்க வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்ற உணர்வை ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

ஏனென்றால் எது இருக்கிறது என்று தெரிய வேண்டும் அல்லவா…! சரவாங்கி நோய் இருக்கிறது… கை கால் மூட்டுகள் வலிக்கிறது… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் மூட்டு வலி நீங்க வேண்டும். என் உடல் நலமாக வேண்டும்…! என்று எண்ணி இதை ஒரு பழக்கமாக்க வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் இந்த மாதிரிச் சிக்கல் இருக்கின்றது மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து சிக்கல் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று சொல்லிக் கேட்க வைக்க வேண்டும்.

1.இப்படி நல்ல எண்ணங்களை உருவாக்கி
2.அவ்வாறு எண்ணிய நல்ல சக்திகளை அவர்கள் பெற்று உடல் நலம் பெறச் செய்ய வேண்டும்.

ஈரேழு பதினாலு லோகம் எது…? அதை வென்றவர்கள் யார்…?

 

ஆரம்ப நிலைகள் விண்ணிலே உயிரணுவாகத் தோன்றினாலும்… அப்படித் தோன்றிய நிலைகள்
1.பலவாறு அணுவின் தன்மை ஒன்றை ஒன்று விழுங்கி அணுத் தன்மை வளர்ந்து அதன் வழிகளிலே கோளாகி…
2.கோளாகி ஆற்றல் பெற்று நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் சூரியனாகி அதனின்று விளைந்து ஒரு பிரபஞ்சமாகி
3.பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகி அந்தக் கோளுக்குள் மற்ற அனைத்தும் வடிக்கச் செய்து பூமியான நிலைகள் கொண்டு அதிலே உயிரணுக்கள் தோன்றி
4.மற்ற கல்லும் மண்ணும் மற்ற நிலைகள் ஆவியாக மாறி தாவர இனச் சத்துக்களாக மாறி
5.தாவர இனச் சத்துகளின் ஆவிகளைச் சுவாசித்து உயிரணுக்கள் அதை உட்கொண்டு வடித்து
6.அணுத் திசுக்களாக உயிரினங்களின் தோற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

ஒரு அணுவின் தன்மை வளர்ச்சியில் சூரியனாக எப்படி ஆனதோ அதே போன்று பிரபஞ்சத்திற்குள் தோன்றிய உயிரணுவின் துடிப்பு மற்ற உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது “எதையுமே அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”

ஆரம்ப நிலையில் அணுவின் தன்மை பெற்ற நாம் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் சூரியனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் “சூரியனையே அடக்கியாளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”

அத்தகைய ஆற்றலின் தன்மை…
1.எல்லாவற்றிலும் அது வடித்து உணர்வின் ரசத்தின் தன்மையை அது வடிகட்டிய நிலைகள் கொண்டு மனிதனாக உருப்பெற்றான்.
2.அவ்வாறு உருப் பெற்றதன் நிலைகள் தன் எண்ணத்தை சூரியனிடத்திலே பாய்ச்சி இவனுடைய உணர்வுகளை அங்கே இயக்கச் செய்து
3.சூரியனையே திசை திருப்பவும் கோள்களைத் திசை திருப்பவும் கூடிய ஆற்றல்கள் பெற்றவர்கள் அன்றைய மெய் ஞானிகள்.

அவ்வாறு பெற்றவர்தான் அகஸ்திய மாமகரிஷி…!

மனித உருவாகும் பொழுது தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் இந்த வினைக்கு நாயகனாக மனித உடலிலிருந்து வெளிப்பட்டது தான் ஆறாவது அறிவு.

சூரியனிலிருக்கக் கூடிய நிறங்கள் ஆறு அதைப் போன்று மனிதனுக்குள் அறிவு ஆறு.
1.சூரியனுடைய ஆறாவது அறிவு ஆறு நிறங்கள் ஏழாவது ஒளி.
2.மனிதனுக்கு அறிவு ஆறு ஏழாவது அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை.
3.பிரபஞ்சத்திற்குள் வரக்கூடிய விஷத்தின் ஆற்றலைச் சூரியன் ஒளியாக மாற்றும்… ஒளியாகக் காட்டும்.
4.ஆனால் மனிதன் இருளுக்குள் மறைந்த பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றவன்… இருளை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன்.

இருளான சரீரத்திற்குள் நின்று உயிர் உணர்வுகளை வளர்க்கச் செய்த இந்தத் தசைகளை (உடலை)
1.மீண்டும் இன்னொரு தசைகளின் (உடல்) தன்மை பெறுவதற்குப் பதில்
2.சூரியன் எப்படிப் பிரகாசிக்கின்றதோ இதைப் போன்று தன் உணர்வை ஒளியாக மாற்றி உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் செல்வது…

இது தான் கடைசி நிலை.

சூரியப் பிரபஞ்சத்திற்குள் தோன்றிய எத்தகைய சக்தியின் நிலைகளையும் வென்று “அதை ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்…” என்ற நிலையை அன்றைய அகஸ்திய மாமகரிஷி நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றுள்ளார்.

அவன் தென்கோடியிலே தோன்றியவன் தான். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் அவனைத் தான் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
1.அவன் வழி வந்த மக்கள் தான் நாம் அனைவருமே.
2.அவன் சென்ற எல்லையினை நாமும் அடைய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் பெற்ற அந்தச் சக்தி எமக்குள் ஞான வித்தாக வளர்த்த அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் நினைவைக் கூர்ந்து கேட்கும்படி செய்து அருள் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

அந்த வித்தினை வளர்க்க நாம் தியானிக்க வேண்டும். எந்த வித்தின் தன்மை அவர் பெற்றாரோ அந்த நினைவைக் கொண்டு நீங்கள் ஏங்கி அந்த வித்தினை வளர்க்கும் தன்மை தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

இந்தத் தியானத்தின் நினைவு கொண்டு உங்களுக்குள் வளர்த்து…
1.அருள் ஞானச் சத்தாக உங்களுக்குள் விளைய வைத்து
2.அருள் ஒளியின் சுடராக உங்கள் எண்ணங்கள் சென்று
3.அந்த உணர்வின் நிலையை உடலின் உணர்வின் ஒளியாக மாற்றிட
4.இது உங்களுக்குள் உபயோகமாக இருக்கும்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம் ஜீவ அணுவாக இருந்து நமது உயிர் தனக்குள் சேர்த்துக் கொண்ட அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது என்று எண்ண வேண்டும்.

நமது குரு அண்டசராசரத்தைத் தனக்குள் கண்டுணர்ந்தார். தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு
1.அருள் ஞான வித்தாக நமக்குள் தெளித்த உணர்வுகள்…
2.அவரின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யப்படும்போது
3.அந்தக் குருவை நீங்கள் நினைவில் கொண்டால்
4.அவர் பெற்ற உணர்வின் சக்தியும் அவரின்று வெளிப்பட்ட உணர்வையும் அது உங்களுக்குள் இயக்கப்பட்டு
5.அவர் அருள் ஞானம் பெற்ற அருள் வழியில் அது குருவாக உங்களுக்குள் நின்று
6.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் உணர்வின் குருவாக உங்களுக்குள் அமைந்து
7.அருள் வழியாக உங்களுக்குள் சேர்த்து இருளை அகற்றிடும் உணர்வாக விளைந்து
8.அதன் வழி இன்று குரு அமர்ந்திருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை அழைத்துச் சென்று..
9.நம்மை அரவணைத்துப் பிறவியில்லா நிலைகளை அடையச் செய்யும்…!

ஆகவே நாம் அந்தக் குரு வழியில் செல்வோம்.

இந்த வாழ்க்கையில் என்னைத் துன்பப்படுத்தினார்…! என்ற உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அது ஓ… என்று ஜீவ அணுவாகி விடுகின்றது. அந்த துன்பப்படுத்தும் உணர்வை நமக்குள் அதிகமாக வளர்த்தால் அது குருவாகின்றது.

அது குருவானால் இந்த உடலைத் துன்பப்படுத்தி எவர் துன்பப்படுத்தினாரோ அவர் உடலுக்குள் அழைத்துச் சென்று அதன் குரு வழி கொண்டு அவனுள் நம்மைச் சேர்த்துவிடும். இருள் சூழ்ந்த நிலைகளை நமக்குள் உருவாக்கிவிடும். ஆகவே
1.நாம் எண்ணியது எதுவோ…
2.நாம் எதன் வழி செயல்படுகின்றோமோ
3.அதுவே நமக்குள் குருவாகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது அனைத்திற்கும் உணர்வின் தன்மை நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆனால் நமது குரு அண்டசராசரத்தையும் தனக்குள் வளர்த்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் பெற்று அதனின் அருள் ஞான வித்தாக எனக்குள் பதிவு செய்தார். அதை வளர்த்துக் கொண்டேன்.

அவர் காட்டிய வழியில்… நீங்களும் அந்த அருள் ஞானச் சக்தி பெற வேண்டும் என்று… அருள் ஞான வித்தை உங்களுக்குள் இதனை உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இந்த உயிர் எப்படி மனிதனானதோ மனிதனானபின் ஒளிச் சரீரம் எப்படிப் பெற்றேன்…? என்று குரு கண்ட உணர்வின் தன்மையை அந்த அருள் ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.

உயிர் உடலை வளர்த்ததையும் உணர்வின் தன்மை பெற்றதையும் இதனின் தன்மை உங்களுக்குள் பதிவு செய்ததை
1.மீண்டும் நினைவு கொண்டு அந்தக் குருவினைக் கண்டால்
2.அவர் ஒளிச் சரீரம் பெற்ற நிலையில் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
3.அவர் அரவணைப்பில் வைத்துக் கொள்ளும்…
4.இன்னோரு உடல் பெறா நிலையை உருவாக்கும்.

நம் உயிர் குரு என்றாலும்…
1.நம் குருநாதர் பெயரும் ஈசன் தான்
2.நம் உயிர் பெயரும் ஈசன் தான்…!

ஆகவே இந்த இரு உணர்வும் ஒன்றி…
1.உயிர் உருவாக்குவது போன்று நம் குருநாதர் உருவாக்கி
2.அது ஜீவ அணுக்களாக மாற்றும் திறன் பெற்றதனால்
3.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
4..நம் உயிரையும்
5.நம் குருநாதர் காட்டிய அந்த ஈசனான நிலையையும்
6.இரண்டு தரம் நினைவில் கொண்டு வாருங்கள்.

இந்த நினைவின் அடிப்படையில் நாம் எண்ணும்போது குரு பெற்ற அருளை நாம் முழுமையாகப் பெறுகின்றோம்…!

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

பார்த்தது வேடிக்கை என்றாலும்… நம்மை அறியாமலே அது நோய்க்குக் காரணமாகின்றது

 

நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. கோப உணர்வு கொண்டு ஒருவன் மற்றவனைத் தாக்குகிறான் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்க்க நேர்ந்தால் அவன் உடலிலே விளைந்த தாக்கும் உணர்வுகள் அந்தக் கார உணர்ச்சிகள் வெளிப்படுவதை அவன் உடலிலிருந்து வெளி வந்த அந்த உணர்வலைகளைக் கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

1.உற்றுப் பார்த்த இந்த உணர்வின் சத்தைக் கண்கள் ஊழ்வினையாக நமக்குள் பதிவு செய்கின்றது.
2.பதிந்த உணர்வுகளை நாம் ஈர்க்கப்படும் பொழுது உடலுக்கு முன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உயிருக்குள் படும் பொழுது எரிச்சலும் வேதனையும் வருகிறது.

நல்ல குணம் கொண்டு பார்ப்பதனால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு “சப்” என்று இருக்கும் பொருளுக்குள் காரத்தை இணைத்து விட்டால் “காரத்தின் சுவையே” முன்னாடி வரும்.

இதை போலத் தான் தவறு செய்வோரை உற்றுப் பார்த்து வேகமாக “இப்படிச் செய்கிறானே…” என்று அந்தக் கொடூர உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது இந்த உணர்வை நம் கண் கவர்ந்து உடலுக்குள் பதிவு செய்ததை உடலுக்குள் விளையும் தன்மையாக மாற்றி விடுகின்றது.

நாம் எண்ணிய உணர்வுகள் அது ஆன்மாவாக வருகின்றது… சுவாசித்த பின் உயிரிலே ஒன்றுகின்றது. நல்ல குணங்களுடன் அது கலக்கப்படும் பொழுது அவன் செய்த தவறின் உணர்வாக உடலுக்குள் வேகமாக இயங்குகின்றது.

1.கோபமான அந்த உணர்வலைகள் நம் சாப்பிட்ட உணவுடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது.
2.இப்படி அந்த வேகமான நிலைகள் இரத்தமாக மாறி வரும் பொழுது இருதய வால்வுகளில் எரிச்சலும் வேதனையும் வருகின்றது.
3.எரிச்சலான உணர்வுகள் உடலுக்குள் வடிகட்டப்படும் பொழுது உடலெல்லாம் எரிச்சலும்
4.நம் சொல்லிலே எரிச்சலும்… எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் எரிச்சலும் நமக்குள் உருவாகத் தொடங்குகிறது.

நம்மைப் பார்ப்போர் ஆன்மாவில் இது பட்ட பின் நம்மை அறியாமலே அவர்களும் எரிந்து விழுவார்கள்… நம்மை வெறுப்பார்கள். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சண்டையிடுவதை வேடிக்கை பார்த்தோம். அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது “இரத்தக் கொதிப்பை உருவாக்கும் செல்கள்” அதிகமாக விளைந்து விடுகின்றது. நாம் மகிழ்ந்து உணர்ந்த உணர்வுகள் இனிப்பு… இதிலே கலக்காது பிரிந்து சென்று விடுகின்றது.

இனிமை கொண்ட நண்பர்களிடத்திலே பழகினால் அடிக்கடி அங்கே கோபப்படும் பொழுது “இவன் கோபக்காரன்…” என்று அவர் நம்மிடமிருந்து விலகுவது போல
1.சுவை மிக்க உணர்வை உருவாக்கி அந்தச் சுவையை அறிவிக்கும் உணர்வுகள் இரத்தத்தில் கலந்திருப்பினும்
2.காரத்தின் நிலைகள் எல்லை கடந்து சென்ற பின் இந்தச் சுவையான நிலைகள் பிரிந்து விடுகின்றது.
3.அதனால் ஜீரணிக்கும் சக்தி இழக்கப்பட்டுச் சர்க்கரைச் சத்தாக விளைந்து விடுகின்றது. இவ்வாறு
4.சர்க்கரைச் சத்து வரும் பொழுது இரத்தத்தில் அது அதிகரிக்க நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சோர்வடையச் செய்கின்றது.

அதே சமயம் இறுகிய உணர்வு கொண்ட இந்தக் காரத்தின் உணர்ச்சிகள் சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது கண்கள் சிவப்பதும்… இரத்தக் கொதிப்பு ஆவதும் இது இரண்டுமே எதிர்மறையாகும் பொழுது “மயக்கங்கள்” வருகின்றது.

மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது… மனிதன் கீழே விழுந்து விடுகின்றான்.

சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் இரண்டும் வந்தாலும் சர்க்கரைச் சத்திற்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்பிற்கு ஒத்துக் கொள்ளாது. இரத்தக் கொதிப்பிற்கு மருந்து கொடுத்தால் சர்க்கரைச் சத்திற்கு ஒத்துக் கொள்ளாது.

நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற நிலைகளில் இயங்கும் பொழுது
1.சுவாசப் பையிலே சளிகள் உருவாகத் தொடங்கும்… மூச்சு இறைக்கவும் தொடங்குகிறது.
2.உடலுக்குள் வரும் உமிழ் நீர்களை இலகுவாக்கி அதனின் தன்மை குறைக்கும் நிலைகளில் ஜீரணிக்கும் சக்தியையும் இழக்கச் செய்கின்றது.

கோபத்தை அதிகரிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் அதிகமாக அந்தப் பித்தத்தைச் சுரக்கின்றது. எவ்வளவு கடினமான பொருளைச் சாப்பிட்டாலும் பித்த சுரப்பி இயங்கி சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணிக்கின்றது.

ஆனால் கார உணர்வுகள் அதிகமாகும் பொழுது பித்த சுரப்பியின் இயக்கம் அதிகரித்து வேகமாகப் பீய்ச்சப்படும் பொழுது பசியும் அதிகரிக்கும். பசியினால் அதிகமாகச் சாப்பிடச் சாப்பிட பித்த சுரபி அதிகமாகச் சுரக்கச் சுரக்க விஷத்தின் தன்மை அதிகரித்து உடலில் உறுப்பின் இயக்கங்கள் குறைய நேர்கின்றது.

சீராக இயக்க வேண்டும் என்ற நிலை வரும் பொழுது சர்க்கரையின் தன்மை அதிகமாக இருப்பதால் அதற்கொத்த செயலைச் செயல்படத் தொடங்குகிறது. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும் பொழுது இதனுடைய செயல் அதிகரிக்கிறது. உறுப்புகள் சோர்வடைகிறது.

அதே சமயத்தில் சிந்திக்கும் போது அதிகக் கோபமும் சுவையான பொருள்களை உட்கொள்ள முடியாத நிலையும் வரும்.

1.சர்க்கரைச் சத்து அதிகரிக்கப்படும் பொழுது செவ்வணுக்கள் வளராதபடி
2.நுகர்ந்த உணர்வுகள் மலங்களாகக் கழிக்கப்படும் பொழுது இரத்தத்தை நீராக மாற்றும் நிலை ஆகிவிடுகிறது.
3.இதனால் மற்ற உடலின் எஞ்சிய பாகங்கள் செயலற்றதாகிக் கிருமிகள் உருவாகித் தசைகள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்படுகின்றது.
4.விஷங்கள் அதிகரிக்கப்படும் பொழுது வேதனை அதிகரிக்கின்றது… உறுப்புகள் பலவீனம் அடைகின்றது.

இதற்கு மத்தியில் காரத்தின் நிலையும் உச்சகட்டம் அடையப்படும் பொழுது காரத்துடன் விஷத்தின் தன்மையும் கலந்து விட்டால் சிறு மூளையின் பாகம் தாக்கப்படும் பொழுது நரம்புகளைச் சுண்ட வைத்து விடும்..

ஒரு மிளகாயை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்… வாயிலே உமிழ் நீர் காணாது போய் விடுகின்றது. இது போன்று நஞ்சின் தன்மை சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது “நரம்பியல்களை” அது முடக்கி விடுகின்றது.

உதாரணமாக கார்களில் பிரேக் இடுவதற்காக பிரேக் ஆயில் கொண்டு அழுத்தி அதன் மூலமாக இயந்திரத்தை இயக்கி அதை நிறுத்துவார்கள். இது போன்று தான்
1.நம் நரம்புகளுக்குள் உருவாகும் ஆசிட்டின் தன்மையின் இயக்கங்கள்
2.நாம் எண்ணப்படும் பொழுது அதிலிருக்கக்கூடிய காந்தப்புலனின் தன்மைகள் ஊடுருவி
3.கை கால்களை மடக்குவதும் அங்கங்களை இயக்குவதும் செயலாக்குவதும் இதன் வழி தான்.

தீமையான உணர்வுகளால் (கார உணர்ச்சிகளால்) சிறு மூளை தாக்கப்பட்ட பின் இரத்தக் கொதிப்பின் அழுத்தம் அதிகரிக்க அங்கே இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணிய அலைகள் செயலற்றதாகி விடுகிறது.
1.அதற்குள் அனுப்பும் ஆசிட் அதனுடைய செயலை இழந்துவிட்டால் கை கால் அங்கங்கள் சுருங்கி விடும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பத்தால் சண்டையிட்டதை வேடிக்கையாக பார்த்து நுகர்ந்தோம் அதனுடைய வளர்ச்சி தான் இந்த நிலைக்கு வந்து விடுகின்றது,

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

காரணம் அந்த மகரிஷிகள் எத்தகைய நஞ்சினையும் தன் உணர்வின் வலுவால் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு அதை அடக்கி ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

அப்படி விண் சென்ற மகரிஷிகள் எத்தனையோ பேர் உண்டு…!
1.அவர்கள் பெற்ற சக்திகளை நாம் பெற்றோம் என்றால்
2.நமக்குள் வரும் இத்தகைய தீமைகளை மாற்றி அமைக்க முடியும்… நோய் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம். செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்…! என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?

என் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக் காப்பானா…? எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.

1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக வருகின்றது.
2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும் வேதனைதான் அதிகமாகின்றது.

வேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம் எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால் அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.
1.செல்வத்தைச் சம்பாதித்தோம்…
2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…?

செல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள் நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.

இப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பினும்
1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக் கடைசியில்
2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.

அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து நாம் எப்படி மீளுவது…? எந்த வகையில் மீளுவது…?

நம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்
1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…
2.வேதனைப்படுவோரின் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.
3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம் செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

குற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின் அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.
1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…
2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,, அறியும் உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)
2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..!)

“என் மீது பற்று இருந்தால் தான்” இந்த உபதேசக் கருத்துக்கள் உங்களுக்குள் பதிவாகும்

 

ஞானிகள் சென்ற அவர்களுடைய அருள் வழிப் பாதைகளை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணுகின்றேன். அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க…
1.குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வை எனக்குள் பல உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
2.அவர் உடலுக்குள் விளைய வைத்ததை எண்ணத்தின் செயலாக என்னிடம் சொல்கின்றார்
3.அதை நான் உற்று நோக்கும் பொழுது அந்த உணர்வின் சத்து
4.அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப்புலன் ஈர்த்தாலும்
5.அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாக பதிவாகி விடுகிறது.

ஊழ்வினை என்றால் என்ன…?

ஒரு மரம் விளைந்து அதனின் வித்தாகும் பொழுது அந்த வித்தை எடுத்து நிலத்திலே நாம் அதைப் பதியச் செய்யும் பொழுது அந்த வித்து என்ன செய்யும்…/

எந்த மரத்திலிருந்து எந்த உணர்வின் சத்தை வித்தாக வளர்த்துக் கொண்டதோ அந்த வித்தின் உணர்வின் இயக்கமாக பூமியின் துணை கொண்டு இங்கே படர்ந்து இருக்கும் அந்த அலைகளைக் கவர்கின்றது.

உதாரணமாக வேப்ப மரத்தில் வித்து உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம். வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் அந்தக் கசப்பின் உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கிறது.

வேப்ப மரத்தின் வித்தை மண்ணிலே பதியச் செய்யும் பொழுது காற்றிலே பரவிப் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் உணர்வின் சத்துக்களை… சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்திருப்பதைப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு
1.அந்தச் சக்தியைக் கவர்ந்து உணவாக எடுத்துத் தனக்குள் விளைய வைத்து
2.வேப்ப மரமாக வளர்ந்து… “அதனின் வித்தாகவே” மீண்டும் விளைகின்றது.

இது தான் ஊழ்வினை என்ற வித்தின் இயக்கம்…!

இதைப் போலத் தான் குருநாதர் அவருக்குள் விளைய வைத்த உணர்வின் சத்தை எமக்கு உபதேசிக்கும் பொழுது… செவி வழி நான் கேட்டறிந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக உந்தப்பட்டு..
1.அந்த உணர்வின் ஆற்றலை நினைவு கொண்டு நான் மீண்டும் கூர்ந்து அதை எண்ணும் பொழுது அதைக் கவரும் நிலை ஏற்படுகின்றது.
2.கவர்ந்த உணர்வுகள் என் நினைவுடன் இணைக்கப்பட்டு ஒரு கருவின் தன்மையாக ஊழ்வினையாக வித்தாக எனக்குள் பதிவாகின்றது.

அதாவது… அவர் உபதேசித்த உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அதுவே எனக்குள் பதிவாகி அது மீண்டும் என் நினைவுக்கு வரும் போது அவர் உடலில் விளைந்த தீமைகளைக் கண்டறிந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்த உணர்வுகள் எனக்குள் வருகிறது.

மெய் உணர்வைத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றி… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி… இன்றும் விண்ணுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அவர் தற்காலத்தில் தான் விண் சென்றவர்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவர்.

அவர் உடலிலே விளைந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் இப்பொழுது உபதேசிக்கப்படும் பொழுது கேட்டுணர்ந்தவர் அனைவருக்குள்ளும் ஊழ் வினையாகப் பதிவாகின்றது.

பதிந்ததை மீண்டும் எண்ணும் பொழுது…
1.குருநாதர் காட்டிய அருள் வழியின் உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை
2.அவரின் நினைவு கொண்டு அவருக்குள் விளைந்த உணர்வுகளை நாம் அனைவரும் கண்டுணர முடிகின்றது… கவர முடிகின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.
4.அதன் மூலம் அவர் கண்ட அனைத்தையும் நாமும் அறிய முடிகிறது.

விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கும் குருவின் ஆற்றல் நமக்குள்ளும் வளரும் தன்மை இப்பொழுது உருவாகின்றது.

அதைப் பெறுவதற்குத் தான் உங்களுக்குள் விளக்கமாக இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

உதாரணமாக… வேப்ப மரத்தின் வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து “தன் இனமாகவே” வளர்த்துக் கொள்கின்றது. இதைப் போன்று தான்
1.சாமி மீது உங்களுக்குப் பற்று இருந்தால்
2.இப்பொழுது சொல்லக்கூடிய உபதேசக் கருத்துக்கள் அனைத்துமே உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

ஆனால் மற்றவர்களிடம் சென்று அவரின் (அந்த குருவின்) உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து வைத்திருந்தால் அவர் மந்திரங்களையோ அல்லது மற்ற எதைச் சொன்னாரோ அவர் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து விட்டால் அது வலுக் கொண்டதாக இருக்கும்.

நான் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் எட்டாது. அவரின் வலு அதிகமாக இருக்கப்படும் பொழுது நான் சொல்வதை ஒதுக்கிவிடும்.

1.என் மீது பற்று கொண்ட நிலையில் இருக்கப்படும் பொழுது தான்
2.நான் உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்ய முடியும்… நுகர முடியும்… வளர்த்துக் கொள்ள முடியும்.
3.நம் குருநாதர் உணர்ந்த பேருண்மைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆயிரம் தான் சொல்லுங்கள்…! மீண்டும் ஜாதகத்தை தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்ற நிலைகளைத்தான் தேடிச் செல்ல முடியும்.

நல்ல நேரமாக உங்களால் மாற்ற முடியாது…!
1.ஏனென்றால் இந்த உடலுக்கென்று நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.
2.பதிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆசையைத் தூண்டிக் கொண்டிருக்கும்.
3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டிருக்கும்
4.தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும்
5.அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைத்துவிடும் நிலைகளாகத் தான் வரும்.

மனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஆறாக இருப்பினும் அடுத்து ஏழாவது நிலைகளைப் பெறவில்லை என்றால் மனிதன் தேய்பிறைக்குத் தான் செல்ல நேரும்.

ஆகவே அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப் போக்க வேண்டுமே தவிர இருளைச் சேர்த்திடுதல் கூடாது.

மனிதன் நாம் ஆறாவது அறிவைக் கொண்ட பின் பொருளைக் காணுகின்றோம் பொருளைக் கண்டபின் அதற்குள் மறைந்திருக்கும் இருளை நீக்கிவிட வேண்டும்.

நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினைப் பிளக்கின்றது. நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. அந்த நல்ல உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.

1.அந்த அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள் இருக்கும் இருளைப் பிளந்திடல் வேண்டும்.
2.இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலைகள் பெற வேண்டும்
3.இது தான் நம் ஞானிகள் காட்டிய அறநெறிகள்.

அதனை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

செடிகளுக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உண்டு. அத்தகைய பல கோடித் தாவர இனங்களின் சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணவின் சத்தே உடலாக ஆனது உயிர் ஜீவ அணுக்களாக உருவாக்கியது. அதனின் மலமே உடலாக உருவானது.

ஆக… இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு… வாடிய உணர்வுகள் பலவும் உண்டு

அருள் ஞானியின் உணர்வின் நிலைகளை நினைவு கொண்டு… அவருடன் நிலை கொண்டு… அதனை எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் உணர்வின் தன்மையாகத் தான் இந்த உபதேசமே யாம் (ஞானகுரு) கொடுக்கின்றோம்.

விவசாயத்தில் (AGRICULTURE) வாடிய பயிரை வளமாக வளர்க்க… எவ்வாறு பல அணுக்களின் வீரியச் சத்து கொண்ட உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்துகளை உருவாக்குகின்றனரோ… இதைப்போலத்தான்
1.அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
2.மகரிஷிகள் உணர்த்திக் காட்டிய நிலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு உரமாகக் கொடுக்கின்றோம்.

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் பேரண்டத்தின் நிலைகளை அறிந்து… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து… தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைத் தன்னுள் விளைய வைத்தார். விளைந்த உணர்வு கொண்டு உயிரோடு ஒன்றி இன்றும் ஒளியாக இருக்கின்றார்.

1.ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை நினைவு கொண்டு
2.உங்களுடன் இணைத்து… இணைத்து… இணைத்து…
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் உரமாக இணைப்பதே என்னுடைய வேலை…!

நாம் அனைவரும் செய்ய வேண்டிய குரு சேவை… அருள் சேவை…!

 

உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசித்த அருள் சக்திக்கு வலுக்கூட்டும் நிலையாக
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டி
2.அனைவரும் ஒன்று சேர்த்துத் தியானிக்கும்படி செய்து
3.என் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் அனைவரது உயிரையும் ஈசனாக மதித்து
4.ஈசனால் கட்டப்பட்ட உடல்களை ஆலயத்தை மதித்து
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தையும் தெய்வமாக மதித்து
6.உங்களை அறியாது உட்புகுந்த தீமைகள் நீங்க வேண்டும்
7.மனிதனாகக் காத்திட்ட அந்த அருள் தெய்வங்களான நற்குணங்கள் உங்களுக்குள் நிலைத்திருக்க வேண்டும் என்று
8.உங்களை நான் தியானிக்கின்றேன்… “என் குரு வழிப்படி…”

இப்போது உபதேசித்த உணர்வின் துணை கொண்டு நீங்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும்போது நம் முன் படர்ந்திருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை…
1.பிறவா நிலை அடைந்த அவர்களின் உணர்வைக் கவர முடியாதபடி சக்தி வாய்ந்த நிலைகளாக இருந்தாலும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்து அதே நினைவின் வலுக் கொண்டு
3.நம் முன் படர்ந்திருக்கும் அந்த அரும்பெரும் சக்தியை அனைவரும் சேர்த்துக் கவர்ந்து
4.நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலச் செய்து
5.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அகற்றும் உணர்வாக கலக்கச் செய்து… அதன் உணர்வைச் சுவாசிக்கும்படி செய்து
6.அதை எப்பொழுதும் பெறும் நிலையாக உடலுக்குள் ஞான வித்தாக உங்களுக்குள் இப்போது ஊன்றப்படுகின்றது.

அவ்வாறு ஊன்றிய பின்… அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் தியானத்தில் அமர்ந்த அனைவருக்கும் மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி ஏங்கி அந்த அலைகளைப் பாய்ச்ச வேண்டும்.

அவரவர் உடலுக்குள் வெறுப்பு கோபம் குரோதம் என்ற எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் நாம் அனைவரும் சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கி வளர்த்து அனைவருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.தனக்கென்று கேளாது அனைவருக்கும் அது பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.சூரியன் காந்த சக்தியால் இது கவரப்பட்டுச் சக்தி வாய்ந்த உணர்வின் அலைகளாகப் படர்வதை
3.உங்கள் செவிப்புலனுக்குள் உணர்ச்சிகளை உந்தச் செய்து
4.அதனின் துணை கொண்டு உங்கள் கண் புலனறிவு அதைக் கவர்ந்து
5.எல்லோரும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால் உங்களுடைய அனைவருடைய அருள் துணை கொண்டு இவ்வாறு செயல்படுத்தும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் இது சக்தி வாய்ந்ததாக இது மாறுகின்றது. அதனைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானமாக அமைத்துக் கொடுத்துள்ளோம்.

மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்…!

யாரையெல்லாம் யாம் சந்தித்தோமோ… உபதேசம் கேட்ட அந்த அனைவருக்கும் எமது குரு அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்கள் உடலை அவன் கட்டிய கோட்டையாக மதித்து உங்களை வளர்த்திட்ட அருள் குணங்களைத் தெய்வங்களாக எண்ணி அந்தச் சக்தி பெற நான் தியானிக்கின்றேன்.

அதே போல் நீங்களும் உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்களிடம் இருக்கும் அருள் குணங்களைக் காத்திடும் நிலையாக அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானித்தால்
1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான…
2.நீங்கள் எண்ணியதை உயர்த்தும் அந்த உயிரான ஈசனுடைய அருளைப் பெறுகின்றீர்கள்.

அதே சமயம் அவன் கட்டிய ஆலயமான இந்த உடலைப் பரிசுத்தமாக்க… நஞ்சினை நீக்கி ஒளிச் சுடராக மாற்றும் ஆலயமாக உருவாக்கிட… அவனுடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீங்கள் நிலைத்திருக்க… உங்கள் ஆறாவது அறிவு உறுதுணையாக இருக்கும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்று தியானியுங்கள்.
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன் என்று நினைவு கொள்ளுங்கள்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து நற்குணங்களை எல்லாம் தெய்வங்களாக மதித்து உங்கள் வாழ்க்கையில் இவ்வாறு தியானிப்பீர்கள் என்றால் அருள் ஞானிகள் சுழற்றிய அந்த உணர்வுடன் உங்கள் எண்ண அலைகள் சுழன்று அறியாது வந்த தீமைகளை ரிமோட் கண்ட்ரோல் போன்று நீக்க முடியும்.

ரிமோட் கண்ட்ரோல் என்றால்…
1.விஞ்ஞான அறிவால் ஓரு சுவிட்சைத் தட்டி மேலே பறக்கும் விமானத்தையும் ராக்கெட்டையும் இங்கிருந்து இயக்குவது போல
2.ஞானிகளை எண்ணியவுடன் நம் நினைவுகள் அவர்கள் பால் சென்று அவர்களின் உணர்வினைக் கவர்ந்து
3.தீமையை நீக்கிடும் அந்த அரும்பெரும் சக்தியாகத் தனக்குள் விளைந்து
4.இந்த உடலே தீமைகளை அழித்திடும் நிலையாக ஒளியின் சுடராக மாற்றிடும் நிலையாக எல்லோரும் பெற முடியும்.

உங்களை நம்புங்கள்…! உயிரைக் கடவுளாக மதியுங்கள்…! உடலை ஆலயமாக மதியுங்கள்…! திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

ஏன்… உங்களால் நல்லதைப் பெற முடியும் என்று “உங்களை நீங்கள் நம்ப முடியாதா…?” சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தொழிலைச் செய்து சொத்தைச் சேர்க்கலாம் என்று விரும்புகிறோம். இருந்தாலும் அது எல்லாம் அழியக்கூடிய சொத்து தான்… காரணம் நம் உடலே அழியக்கூடியது தான்.

உடலால் செல்வத்தைச் சம்பாதித்தாலும் “அது இந்த வாழ்க்கைக்கு தான் உதவும்…!” ஆனால் அதையும் சீராகப் பார்க்கவில்லை என்றால் அந்தச் செல்வத்தையும் நம்மால் காக்க முடியாது.

சொத்தைச் சம்பாதித்து வைத்திருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் நோயாகி வேதனை வேதனை என்று வந்தால்
1.அப்படி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலே
2.சம்பாதித்த சொத்தை எல்லாம் கையிலே கொடுத்தால் “இது எதற்கப்பா…?” என்று கேட்பார்கள்.

சம்பாரித்த சொத்து அவர்களுடையது தான். அதை விரிவாக்கி அங்கே இவ்வளவு இருக்கின்றது… இங்கே இவ்வளவு இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்யலாம்…? எப்படி செய்ய வேண்டும்…? என்று கேட்டால்
1.எங்கேயாவது தொலைந்து போங்கள்…!
2.என்னிடம் ஏனப்பா சொல்கிறீர்கள்…?

இந்த உணர்வின் தன்மை வந்துவிடுகிறது.

சம்பாதித்து வைத்திருந்தாலும் வேதனையாக இருக்கும் பொழுது இந்த சொத்தைப் பற்றிச் சொல்லும் போது என்ன ஆகிறது…?

எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வரும்.

சொத்தைச் சம்பாதித்து வளர்த்துக் கொண்டிருக்கும் போது உடலிலே நோயான பின் “எனக்கு இப்படி வந்து விட்டதே…!” என்று வேதனையில் உடலின் பற்று தான் வருகின்றது… அதனால் நஞ்சாகி விடுகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது யார் மேல் நம் நினைவுகள் பற்று அதிகமாக வருகின்றதோ… இந்த உணர்வின் தன்மை வந்தபின் அதைப் பற்றிக் கொள்கின்றோம்… அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்… அங்கே சென்றுவிடும்.

இந்த உடலுக்குள் வரும் பொழுது என்ன செய்கின்றோம்…?
1.இந்த உடலிலே விளைந்தது சாகாக்கலையாக உருவாகி
2.ஆசையை அங்கே தூண்டி அதன் வழியில் அந்த உடலையும் மடியச் செய்யும்

அதன் உணர்வு பேயாக அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி பூத கணையாக விளைகின்றது… அது தான் பூதங்கள்…! இத்தகைய உணர்வின் தன்மை விளைய வைத்த பின் எதனை அடக்கி அதற்குள் வளர்ந்ததோ அது அந்த உணர்வின் தன்மை வந்த பின் உயிரினங்கள் எதனின் வளர்ச்சி பெற்றதோ அங்கே கொண்டு போய் அதுவாக உருவாகி அதனின் செயலாகவே உருவாக்கிவிடும்.

புலியோ நரியோ பாம்போ இவையெல்லாம் தன் இரையத் தேடி இரக்க்கமற்றுக் கொன்று சாப்பிடுகிறது. மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. அதைக் கொடூரமாகத் தாக்கி உணவாக எடுக்கிறது.

இந்த மனித வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிலைகளைச் செய்பவர் எவரோ அந்த எல்லைக்குத் தான் இந்த உயிர் அழைத்துச் செல்லும். அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.

ஆக… பிறர் படும் வேதனையை நாம் எடுத்து விளைய வைத்துக் கொண்டால் இத்தகைய நிலை வந்து விடுகிறது.

நம் குழந்தை மீது நமக்குப் பற்று இருக்கின்றது. குழந்தை வேதனைப்பட்டால் பாசத்தால் நாமும் அதைக் கண்டு வேதனைப்படுகின்றோம்.

ஆனால் எனக்கு பிடிக்காதவர்கள் ஏதாவது வேதனைப்பட்டார்கள் என்றால் வெறுப்பால்… “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசிக்கின்றோம்.

நம் பையன் சரியாக வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். ஆனால் பிடிக்காதவர் என்றால் “நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித்தான் நடக்கும்…!” என்று இந்த விஷத்தை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்.
1.ஏனென்றால் எது அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும்
2.அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!

ஆகவே அதனின் உணர்வின் செயலாகவே அதனின் அறிவாகவே நம்முடைய இயக்கமும் நம் பார்வை எதுவோ இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் கூர்மை அவதாரம்.

எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ அப்படிப்பட்ட அவதார புருஷனாக இது மாற்றி விடுகின்றது.

ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து ஒளியாக ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டால் கல்கியின் அவதாரம்.

எது மற்றவருக்குள் தீமையாக உருவாக்கியதோ அந்த இருளில் இருந்து விலக வேண்டும்… பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.வெறுமனே சொன்னால் அவர்கள் உணர்வு தான் நமக்குள் புகுந்து விடும்
2.ஈஸ்வரா என்று உயிரிடம் சொல்லி அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.கேட்டறிந்த உணர்வின் தன்மையை ஆன்மாவிலிருந்து முதலில் பிளக்க வேண்டும்… நரசிம்மா…!

இப்படி… அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மையை முதலில் நமக்குள் சேர்க்க வேண்டும். தீமைகளைப் பிளந்து ஒளியாக மாற்றி… நஞ்சினை வென்றிடும் நிலையாக…
1.மற்றவருக்கு வழிகாட்டும் உணர்வின் தன்மையாக
2.இதைத்தான் நாம் கொண்டு வர வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் எதைத் தியானிக்கின்றோம்…?

 

ஆலயங்களுக்குச் செல்வோர் இன்று பெரும்பகுதியானவர்கள் எப்படி வணங்குகின்றார்கள்…?

1.என் பையனை நான் கஷ்டப்பட்டு வளர்த்தேன்… அவன் இப்பொழுது என்னை எதிர்க்கின்றானே…!
2.எனக்கும் மனைவிக்கும் மக்களுக்கும் ஒத்துக் கொள்ளாத நிலைகளில் வேதனைகளை நீ அனுபவிக்கச் செய்கின்றாயா…?
3.எத்தனை காலம் தான் நீ என்னை சோதிக்கின்றாய்…? என்று தீமையைத்தான் அங்கே எடுக்கின்றோம்.

கையிலே விஷத்தைத் தடவி அப்படியே அடுத்த பொருளை எடுப்பது போன்று தான் செயல்படுகின்றோம்.

ஆனால் ஞானிகள் காட்டியதோ… ஆலயத்திற்குள் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்களை எண்ணித் தியானித்து… அந்தச் சக்தியைத் திரும்பத் திரும்ப எண்ணி நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலைதான்… அதாவது நல்லதை வளர்ப்பது தான் “தியானம்…”

ஒருவன் நம்மை ஏசி விட்டாலோ… பையன் மீது பற்று இருந்து அவன் தவறு செய்கின்றான் என்று ஒரு முறை ஆழமாகப் பதிவு செய்து விட்டாலோ… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்று “தியானிக்கின்றோம்…”

1.அதனின் உணர்வு நமக்குள் அவனை வெறுக்கும் நிலையாக அந்த வெறுப்பு வளர்ந்து…
2.நம் சொல்லைக் கேட்போருக்கு நம்மை வெறுக்கும் நிலையும்…
3.அதே வெறுக்கும் நிலை வியாபாரத்தில் ஒரு சொல்லைச் சொல்லும் பொழுது என்னைப் பார்க்கும் போது வெறுப்பாகி…
4.நம் வியாபாரமும் மந்தமாகி விடுகிறது.

இது மட்டுமல்ல…! வாழ்க்கையில் எங்கே சென்றாலும் சலிப்பு சஞ்சலம் வெறுப்பு போன்ற உணர்வுகளை அடிக்கடி எண்ணினோம் என்றால் “இதெல்லாம் தியானம் தான்…”

இந்தத் தியானத்தின் பலன் நாம் தொழில் செய்யும் இடங்களிலேயும் வெறுப்பான உணர்வுகள் பதிவாகி அதையே மீண்டும் எண்ணி… இவனும் இப்படிச் செய்கின்றான்… அவனும் இப்படிச் செய்கின்றான்… எல்லோரும் மோசமானவர்கள்…! என்று “இதைத் தியானிக்கிறோம்…”

மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு கருணைக் கிழங்கை வேக வைத்து விஷத்தை நீக்கி சுவை மிக்கதாகப் படைக்கின்றோம். இதே போல தங்க நகை செய்யும் போது செம்பும் வெள்ளியையும் வைத்து அழகான ஆபரணமாகச் செய்தாலும்… பின் மீண்டும் அதை அழித்துப் புதிய நகை செய்ய வேண்டும் என்றால் திரவகத்தினை ஊற்றி அதனுடன் கலந்த செம்பையும் வெள்ளியையும் ஆவியாக்கி நீக்கிவிட்டுச் சுத்தமான நிலையில் மீண்டும் நகையைச் செய்கின்றோம்.

இதைப் போன்று தான்…
1.இந்த மனித வாழ்க்கையில் துன்பப்படுவோருக்கு நாம் நன்மைகள் செய்தாலும்
2.நம்மை அறியாமல் பிற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அது துரிதமாக இயக்கி வேதனைப்படுகின்றார்கள் என்பதை உணர்த்தினாலும்
3.அதைத் துடைக்காது விட்டு விட்டால் நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.

இப்படி மீண்டும் மீண்டும் நல்ல குணங்களை மறைக்கும் செயலாக அந்தத் தீமைகளைத் துடைக்காது சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை அடுக்கடுக்காகச் சேர்த்துக் கொண்டே வந்தால் நல்ல உணர்வுகளை எல்லாம் நாம் செயலற்றதாக மாற்றி விடுகின்றோம்.

நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சரீரத்தைப் பாழ்படுத்தி நம் எண்ணத்தையும் சொல்லையும் மற்றவர்கள் கேட்கப்படும் போது அங்கேயும் பாழ்படுத்திக் கொள்ளும் நிலையாக உருவாகி விடுகிறது.

1.ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை ஒவ்வொரு நாளும் தியானிக்கின்றோம்…?
2.சங்கடத்தையும் சலிப்பையும் கோபத்தையும் வெறுப்பையும் வேதனையும் தான் நாம் தியானிக்கின்றோம்.

இதிலிருந்து விடுபட வேண்டும் அல்லவா…!

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி விநாயகரைப் பார்க்கப்படும் போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதைத் தியானித்து… எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கிடைக்க வேண்டும்… அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால்… கீதையிலே சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!

1.பிறர் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.விளைந்த அந்த உணர்வின் சொல் கேட்போர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி விடுகின்றது.

நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்…? நாம் எடுக்கும் தியானம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்கள்.

நல்லது செய்யும் பொழுது மறைந்த நிலையில் தீமைகள் நமக்குள் உள் சென்று நல்ல குணங்களை இயக்கத் தடைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தத் தடைகளை நீக்க..
1.அருள் ஞானிகளின் உணர்வைத் தியானித்து உள் செலுத்தித் தீமையை அகற்றிடும் நிலையாக
2.ஆறாவது அறிவால் இயற்கையில் விளைந்த நஞ்சினை நீக்கி நல்ல உணர்வினை அதற்குள் சேர்ப்பித்து சுவை மிக்கதாகப் படைப்பது போல
3.எது நல்ல குணமோ அதை நம் வாழ்க்கையில் மீண்டும் சுவைமிக்கதாக மாற்றும் நிலையாகத் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த நன்மையின் நிலைகளைக் காத்திடவும் அந்த நன்மைகள் உங்கள் உடலைக் காத்திடவும் பிறருக்கு நன்மை செய்த அவர்களைக் காத்திடவும் அருள் ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று உங்களை அறியாத வந்த தீமைகளை நீக்க ஒரு “ரிமோட் கண்ட்ரோல்…!”

அதாவது… ஒரு வேப்பமரம் தன்னுடைய கசப்பான மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய வலுவால் தன் அருகிலே மற்ற நறுமணங்கள் வந்தாலும் அதை வர விடுவதில்லை. இதே போன்று தான் ரோஜாச் செடி மற்ற மணங்களைத் தன் அருகிலே வர விடுவதில்லை.

இதைப் போல… கோபம் கொண்டவர்கள் சாந்தமாக ஒருவர் பேசினால் அவர்களைக் கண்டாலே எரிச்சல் வரும். சாந்தமானவர்களுக்கு கோபமாகப் பேசுபவர்கள் செயலைப் பார்த்தபின் அவர்களுக்கு அந்த வேதனை வருகின்றது.

ஆனால் தாவர இனங்கள் அனைத்தும் மற்ற மணங்களைத் தன் அருகிலே வரவிடாதபடி ஒதுக்கி விடுகின்றது. மனிதர்களோ
1.அதே மணத்தைக் கொண்ட எண்ணங்களை “நாம் நுகர்ந்து தான்” அறிய முடிகின்றது.
2.ஆனால் “தாவரங்கள் நுகராது” தன் வலுவால் மணத்தால் ஒதுக்குகின்றது.

அதே தாவர இனச் சத்து மனிதனுக்குள் வரும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்து… பின் இதை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விடுகின்றது. ஆனால் உள் சென்று தான் வெளி செல்கின்றது.

உயிரினங்களுக்கும் தாவர இனங்களுக்கும் உண்டான வித்தியாசம் இது தான்…!

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற… தங்கத்திலே திரவகத்தை ஊற்றுவது போல மகரிஷிகள் உணர்வை நமக்குள் நுகர்ந்து… தீமைகள் புகாது காத்திடும் நிலையே அருள் ஞானிகள் காட்டிய தெய்வப் பண்புகள்.

எத்தகைய துயரம் ஏற்பட்டாலும் “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று தியானித்தால் இந்த உணர்வு உங்களுக்குள் விளைகின்றது.

நான் சொன்ன இந்த முறைப்படி தியானித்தால் அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்….! (ஞானகுரு)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோவிலுக்குச் செல்வோர் சிலர் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்…?

தாய் தன் பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கும். கோவிலுக்குள் போனவுடனே… “ஆண்டவனே என் பிள்ளை இப்படிச் செய்கின்றானே…? நான் பிள்ளையைக் கஷ்டபட்டு வளர்த்தேனே… ஊரெல்லாம் அவனை இப்படிச் பேசுகிறதே…! அவன் என்றைக்குத் தான் திருந்துவானோ…?

பையன் தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் விநாயகனிடம் போய் “ஊரெல்லாம் பேசுகிறதே… திமிராகப் பேசிக் கொண்டிருக்கின்றானே… என்றைக்குத் தான் திருந்துவானோ…? நீ என்றைக்குத் தான் பார்க்கப் போகின்றாயோ…? என்று இத்தகைய இந்த வினைகளைத் தான் சேர்த்துக் கொள்கின்றோம்.

நல்ல ஒழுக்கங்களை எப்படி நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் இந்த நிலைகள் இப்படித்தான் இருக்கின்றது.

முதியவர்களை எடுத்துக் கொண்டால் தெய்வத்தின் மேல் நல்ல பக்தி இருந்தாலும்.. தெய்வத்தின்மேல் நல்ல ஒழுக்கம் நம்பிக்கை இருந்தாலும்… ஞானிகள் காட்டிய வழிப்படி
1.நாம் தெய்வமாக வேண்டும் என்று சொல்லியிருந்தாலும்
2.அந்தத் தெய்வமாக யாரும் ஆகுவதில்லை.

நாம் எண்ணிய எண்ணங்கள் எதுவோ சுவாசித்தது எதுவோ… அதை எல்லாம் நம் உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தை “ம்…” என்று உடலாக்கி… நினைவின் ஆற்றலை தெய்வமாக நமக்குள் இயங்க வைக்கின்றது. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தியானத்தில் இருப்பவர்கள் நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். தியானமும் செய்கின்றார்கள்… ஆனால் அங்கே கோவிலுக்கும் போகின்றார்கள்…! என்று இப்படிச் சொல்லாதீர்கள்.

கோவிலுக்குப் போக வேண்டும். ஞானிகள் காட்டிய அருள் வழியை மற்றவர்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஏனென்றால் கோவில் நம்மைப் புனிதப்படுத்தக் கூடிய இடம்தான். அதனால் அதை முறைப்படுத்திக் காட்ட வேண்டும். ஆகவே யாம் சொல்லக்கூடியதை நினைவுபடுத்துங்கள்

நீங்கள் செய்வதைக் கண்டால் மற்றவர்களும் என்ன..? என்று பார்ப்பார்கள்.

கோவிலுக்குச் சென்றால் இந்த மாதிரி கும்பிடச் சொன்னார்… குருநாதர். ஆகவே இவ்வாறு கும்பிட்டால் நாம் தெய்வமாக மாறுவோம்…! என்று நீங்கள் சொல்லுங்கள் இது தான் பக்தி.
1.நல்லதைப் போற்ற வேண்டும்…
2,எல்லாரும் போற்றும் நிலைக்கு வளர வேண்டும்…
3.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.விநாயகரை வணங்கும் போதெல்லாம் இப்படி எண்ணுதல் வேண்டும்.

கடை வைத்திருக்கின்றோம் என்றால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் நம் பிள்ளைகளிடம் சொல்லும் பொழுது.. விநாயகரிடம் போய்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பா…!
3.இது போல் நீ வேண்டிக் கொண்டு வந்தால் உனக்கு நன்றாக இருக்கும் என்று நாம் போதிக்க வேண்டும்.

இது பக்தி… இதையே நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தான் தியானம். நாம் அந்த உயர்ந்த எண்ணங்களைத் திருப்பி எண்ணும்போது நூறு முறை சொல்ல வேண்டும்

ஏனென்றால் இதை எல்லாம் குருநாதரிடம் அடிபட்டு உதைபட்டுத்தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன். அடி உதை எதுவும் இல்லாமல்… சொல்லால் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்கின்றீர்கள்.

இதை நீங்கள் சீராகத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் பக்தி கொண்டு கோவிலுக்குச் செல்வது நல்லது தான். ஆனால் கோவிலுக்குப் போனால் எப்படிச் சாமி கும்பிட வேண்டும்…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் குடும்பங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கும்போதெல்லாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள்.
4.இதைக் கணங்களுக்கு அதிபதியாக ஆக்குங்கள்.
5.இதையே பக்தியாகக் கொண்டு வாருங்கள்.
6.இதையே தியானியுங்கள்…. இந்தத் தியானமே உங்களுக்குக் கைகொடுக்கும்.

அந்த நிலை பெறுங்கள்… எமது அருளாசிகள்…!

எமது உபதேசங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்

 

மனிதனாக இருக்கும் நாம் பிறர் செய்யும் தவறை நாம் நல்ல உணர்வு கொண்டு பார்க்கப்படும் பொழுது இது இணைந்து… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் இயங்கி… நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி நல்ல உடலையும் செயலற்றதாக நலியச் செய்து அதிலிருந்து தோன்றும் எண்ணத்தையே நலியச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான் எமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர்… காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
1.விண்ணின் ஆற்றலை அருள் ஞானிகள் எவ்வாறு பெற்றனர்…?
2.அந்த உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் எப்படிப் பெருக்கினார்கள்…?
3.அதை எப்படிப் பருகினார்கள்…? தனக்குள் எப்படி விளைய வைத்தனர்…?
4.இன்றும் விண்ணிலே எப்படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…?
5.அவர்களின் உணர்வை நீ நுகரும் பொழுது உன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்தார்.

அவர் சொன்ன வழிகளில் அதைக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் தீமையை அகற்றிடும் நிலையாக இங்கே எம்மிடம் வருவோருக்கு
1.”உங்களுக்கு நோய் இல்லை…” என்று நான் சொல்லும் பொழுது
2.அந்த வாக்கினை ஏற்று இனி நோய் இல்லை என்று நீங்கள் திரும்ப எண்ணும் பொழுது அந்த நோய் குறைகின்றது.

ஆகவே இதை நீங்கள் எண்ணி இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளும் பொழுது உயிரிலே ஜீவன் பெற்று இந்த உணர்வினைக் கவரும் நிலை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் ஆண்டென்னாவிற்குச் சக்தி கொடுப்பதற்காக அதனுடன் சில வீரியக் கருவிகளைப் பொருத்துகின்றார்கள். அதன் துணை கொண்டு தான் பல பல ஆற்றல்கள எடுக்கின்றார்கள்.

அதைப் போல
1.அருள் ஞானிகள் உணர்வின் சத்தை உங்கள் நல்ல குணத்துடன் இணையச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.
2.அதன் வழி வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து இந்த உணர்வின் துணை கொண்டு மீட்டிக் கொள்ள முடியும்.

தாவர இனங்கள் வாடி நலிந்திருப்பதை அதற்குள் உரச் சத்தை இணைத்து அதை ஏற்றுக் கொண்ட பின் தன்னிச்சையாகக் காற்றிலிருந்து அதன் சக்தியை எடுத்துச் செழித்தோங்கி வளர்ந்து வீரிய வித்தாக அது உருவாக்கிக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்ட நாம்… சந்தர்ப்பசத்தால் நலியும் நிலை வரும் பொழுது அதை மாற்றிட அருள் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை “நீங்கள் எண்ணியவுடன் இந்த உபதேசம் மூலமாகக் கிடைக்கப் பெறச் செய்கின்றோம்.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் நாம் சந்தித்தோர் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கேட்டு…
1.”திருடன் திருடன்” என்று சொல்லி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்து நம்மையும் திருட வைத்துவிடும்.
2.இவன் “பொய் சொல்கின்றான் பொய் சொல்கின்றான்” என்று திரும்பத் திரும்பச் சொன்னால்
3.அவனைக் காட்டிலும் நாம் பன்மடங்கு பொய் சொல்லும் நிலையே வந்துவிடும்.
4.இவன் “ஏமாற்றுகிறான் ஏமாற்றுகிறான்” என்று எண்ணி மற்றவரிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தால்
5.அந்த ஏமாற்றும் உணவுகள் நமக்குள் விளைந்து இந்த வாழ்க்கையில் நாமும் ஏமாற்றும் நிலை அடைந்து விடுகின்றோம்.
6.அவன் செய்தான் நாம் ஏன் செய்யக்கூடாது…? என்ற நிலைகள் இதனின் நிலைகள் நமக்குள் வந்துவிடும்.

நம் வாழ்க்கையில் எதனைச் செய்கின்றோமோ இது தான் தியானம் என்பது. மற்றதை எண்ணித் திரும்பத் திரும்பச் சொன்னால் அதையே தியானிக்கிறோம்… அது விளைகின்றது.

அதைப் போல்… இப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெறும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றோம்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.எனக்குள் தீமைகள் விளையாது தடுப்பேன்.
3.நான் பார்ப்பது அனைத்தும் நலம் பெறும் என்று அடிக்கடி எண்ணி எடுத்தால்… அதையே சொன்னால் இது தான் தியானம்.

அடிக்கடி அந்த அருள் ஞானிகளின் சத்தை நமக்குள் கிடைக்கச் செய்து அதனின் உணர்வை ஓங்கி வளர்க்க வேண்டும்.

இப்பொழுது ஒருவன் வேதனைப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பார்க்கின்றோம்… அந்த வேதனையை நுகர்ந்தறிகின்றோம்… வேதனைப்படுகின்றான் என்று எண்ணுகின்றோம்… வேதனையிலிருந்து காத்து விடுகின்றோம்.

இருப்பினும் அவன் பட்ட வேதனை நமக்குள் வந்ததை நீக்க வழி வேண்டும் அல்லவா…!

அதற்குத்தான் இப்பொழுது அந்த அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் நல்ல குணங்களுடன் அடிக்கடி இணைத்துக் கொண்டே வருகின்றோம்.

இந்த உணர்வின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
1.அவன் பட்ட வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே கலந்து விடாது
2.நம் உடலில் உள்ள ஜீவான்மாக்களில் கலக்காது
3.உயிருடன் இணைந்து மீண்டும் தொடர்ந்து செயல்படாது இதைத் தடுக்க முடியும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த உணர்வின் சத்து உங்கள் ஆன்மாவிலே கலந்து தீமைகளை நீக்கி தீமையை நீக்கிடும் சக்தியாக உங்கள் நல்ல உணர்வுகளுடன் அது இணைந்து அதனின் உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது “ஓ…” என்று ஜீவனாகி “உங்கள் உடலை ஒளிச் சரீரமாக உருவாக்க இது உதவும்…!

அதற்கே இந்த உபதேசத்தின் வாயிலாகச் சக்தி கொடுக்கின்றோம்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்துத் தொலை தூரத்தில் இருக்கும் அலைகளை எப்படி இழுக்கின்றோமோ இதைப் போன்று அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது இதனை நீங்கள் நினைக்கும் பொழுது
1.உங்கள் கண்ணான ஆண்டென்னா வீரிய நிலை அடைந்து
2.சூட்சமமாக மறைந்திருக்கும் அருள் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உங்கள் ஆன்மாவாக மாற்றி
3.உடலுக்குள் அந்த சக்தியினை வளரச் செய்வதற்குத் தான் இதை உபதேசிப்பது.

ஆண்டனாவிற்கு அதனுடன் இணை சேர்த்த இயந்திரங்கள் இல்லை என்றால் அதற்குத் தொலை தூரத்தில் இருக்கக்கூடிய அலைகளை இழுக்கும் திறன் இல்லை.

இதைப் போன்று தான் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் கவர்வதற்கு உங்களுக்குள் “அந்தத் தகுதியினை” ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால்…
1.அந்த மகரிஷிகள் உடல் பற்றை விடுத்துப் பிறவி இல்லாத நிலை அடைந்தவர்கள்… மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பெற்றவர்கள்.
2.அவர்கள் எண்ணங்களைத் தொட வேண்டும் என்றால் நமக்கு அந்தச் சக்தி வேண்டும்.
3.அந்தச் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

எண்ணங்களைக் கூர்மையாக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “இந்த உபதேசங்களை யார் ஒருவர் கூர்ந்து கேட்டு இதைப் பதிவாக்குகின்றார்களோ” அவர்களுக்கு இந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.

மான் புலியைக் கண்டபின் அதனிடமிருந்து தப்பிக்க வலிமையாக எண்ணுவது போன்று தீமைகளிலிருந்து விடுபட அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கூர்மையாக நினைவைச் செலுத்தினால்… வலுவாக நினைவைச் செலுத்தினால்” இப்பொழுது உபதேசிக்கும் பொழுது அருள் சக்தியாக உங்களுக்குள் அது இணை சேர்கின்றது.

அப்படி இணைந்த நிலைகள் கொண்டு அந்த ஆற்றலை வலுப்பெறச் செய்வதற்கு நாம் தியானிப்போம். எல்லோரும் கூட்டாக எண்ணித் தியானிக்கப்படும் பொழுது அதனின் வலுக் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

ஆகவே… பிறருடைய வேதனையான உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று திரும்பத் திரும்ப எண்ணி அந்த சக்திகளைச் சேர்க்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் நிலைகள் தடுக்கப்படுகிறது.

அடுத்து… மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களும் பெற வேண்டும் என்று நாம் எண்ணி
1.நம் கண் புலனறிவால் அந்த உணர்வின் ஆற்றல்களை அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் அவர் உடலுக்குள் ஊடுருவி அவர்கள் வேதனையைத் தணிக்க உதவும்.
3.அதே சமயத்தில் அவர்கள் வேதனை நமக்குள் வளராது தடுக்க முடியும்

இதைச் செயல்படுத்துவதற்குத் தான் “நீ விநாயகனை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…!” என்று தெளிவாக எடுத்துக் காட்டி உள்ளார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் செய்யும் அன்பர்களுக்குள் கொஞ்சம் குறையாக வந்து விட்டால் குறையை வளர்த்துக் கொள்ளத்தான் முடியுமே தவிர “மகரிஷிகள் உணர்வை எடுக்க முடியாது…”

1.கூட்டமைப்பாக இருக்கும் ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்ற நிலை வரும் ஆனால் குறைகள் தான் வளரும்…
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்பது முதலில் வராது.

தன்னுடைய நிலைகள் முன்னணியில் எது போகும்…?

எதன் வளர்ச்சி வந்ததோ நம்மை அறியாமலே ஸ்தாபனத்தின் உணர்வுகள் குரு கொடுத்த உணர்வுகளை பெறாதபடி தடுக்கும் நிலை தான் வருமே தவிர இதை வளர்க்க முடியாது. காப்பதாக நினைப்போம்… அதைக் காக்க முடியாது.

காப்பதாக நினைத்துக் கொண்ட பற்று என்ன செய்யும்…?
1.உயர வேண்டும் என்று ஆசை இருக்கும்
2.ஆனால் காக்க வேண்டும் என்ற நிலை இருக்காது
3.நம்மை அறியாமலே காக்கும் நிலைகள் தவறிவிடும்.

காக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் ஆனால் அந்தப் பற்றின் தன்மை என்ன செய்யும்…? அறியாதபடி “பிழைகளாக” வந்துவிடும்.

எப்படி…?

நான் (ஞானகுரு) ஸ்பின்னிங் மில்லுக்குள் இயந்திரம் எவ்வாறு ஓடுகின்றது என்று பார்ப்பதற்குச் செல்கிறேன். அப்பொழுது என்ன நடந்தது…?

வழியில் இருந்த சாக்கடையைத்தான் நான் கவனித்தேன் தலைக்கு மேல் உயர்ந்த இடத்தில் இருக்கும் கம்பியை நான் பார்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு நான் எல்லாவற்றையும் உபதேசிக்கின்றேன் அதே சமயத்தில் அந்த அவசர காலம் அதில் மோதுகின்றது மோதும் பொழுது மண்டையில் இடித்து விட்டது.
1.தவறிப் போய் இடித்து இருந்தால் ஆள் அவுட் ஆயிருக்கும் (நான் இறந்திருப்பேன்). அந்த மாதிரியான இடத்தில் தான் மோதி இருக்கின்றது.
2.ஆகவே… தவறுகள் யார் எதைச் செய்தாலும் அந்த சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…?
3.அதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செல்லும் பாதைகளில் அது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்கி விடாதபடி அந்த நேரத்தில் “நம்மைப் பாதுகாக்கும் உணர்வை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்…”

ஒரு சந்தர்ப்பம் இப்படி நடந்து விட்டது என்றால் உடனே
1.ஈஸ்வரா…! என்று அந்த உணர்வை நுகர வேண்டும். உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நாம் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

உதாராணமாக சமையலே செய்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பிலே வைத்திருக்கின்றோம்… அதிலே வேறு ஒரு பொருள் தவறி விழுந்து விட்டால் என்ன ஆகும்…? ஒரு பல்லியே விழுந்து விட்டால் சமைத்த பொருள் அனைத்தும் விஷமாக மாறிவிடும்.

நல்ல குழம்பை வைக்கின்றோம் அதிலே கசப்பை அதிகமாகப் போட்டு விட்டால் குழம்பின் ருசி கேட்டுவிடும் அதை நாம் மாற்ற வேண்டும் அல்லவா…?

இதைப் போன்று நாம் நல்ல செயல்கள் செயல்படும் பொழுது
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் “வந்தே தீரும்…!”
2.அப்படி வரும் பொழுது அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

அதை நீக்குவதற்கு வழி…?

அதற்குத் தான் “குரு வழி” என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடனுக்குடன் தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்வது…!

இதை இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள். இராமன் குகை மீது இருக்கும் பாறையைத் தட்டி வாலி வெளியே வர முடியாதபடி பாதையை மூடி விடுகின்றான். வாலி செயல் இழந்து விடுகிறான்.

குகை மேல் என்கிற பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இங்கே நம் புருவ மத்தியில் வைத்து மூடி விட்டால்
2.தீமை உள்ளே புகுவதற்கு வாய்ப்பு இல்லை… புறத்தால் தடுக்கப்படுகிறது.

உடலுக்குள் வாலி என்ற (தீமை செய்யும்) உணர்வுகள் அதிகமாகி விட்டால் இரண்யன் நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும் ஆகவே தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து அதை நிறுத்த வேண்டும் என்று சொல்வது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “சுக்ரீவன்” என்று காரணப் பெயராக வைக்கிறார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும் பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இது தான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

மகாபாரதத்தில் காட்டப்படுள்ள வியூகத்தின் தத்துவம்

 

ஒரு தவளை மற்ற வண்டுகளை உணவாக விழுங்குகின்றது. வண்டுகளுக்குச் சிறகுகள் உண்டு.

தவளையின் வாயிலே சிக்கும் பொழுது ஒரு வண்டு தப்பித்துச் சென்று விட்டால்
1.அந்த வேதனையான உணர்வுகளை அந்த வண்டு சுவாசித்து
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு தாக்கிச் செல்லும் உணர்வின் வேகங்கள் கூடி வண்டின் உயிரான்மாவிற்குள் இது விளைந்து
3.வேதனையினால் அதிகமான விஷத்தன்மை சுரக்கப்பட்டு அது உயிராத்மாவில் சேர்ந்து
4.அடுத்து அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் “ஒரு தேளாக” அது ரூபம் பெறுகின்றது.

ஆனால் அதே சமயம் வண்டுகள் தவளையின் வாயிலே சிக்கி அதை உணவாக உட்கொள்ளும் போது… வண்டுகளுக்கு எப்படிச் சிறகுகள் முளைத்திருந்ததோ இதைப் போன்ற உணர்வின் பொறிகள் தவளையினுடைய தசைகளுக்குள் சேர்கின்றது.

வண்டின் உயிரான்மா தவளையின் ஈர்ப்புக்குள் செல்கின்றது. அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்து அதனுடைய சக்தியை எடுத்து “வண்டு தவளையாகப் பிறக்கின்றது…”

இப்படிப் பல தவளைகளை விழுங்க எண்ணிய பாம்போ தன் விஷத்தின் தன்மையைக் கொட்டி அதைப் பலவீனப்படுத்தி அதற்குள் விஷத்தின் தன்மை சுரந்து அதைத் தனது ஆகாரமாகச் சேர்த்து அதைத் தன் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

எத்தனை விதமான வண்டுகளை அந்தத் தவளைகள் புசித்ததோ இதற்குள் சேர்த்துக் கொண்ட அதனுடைய உயிராத்மாக்கள் அதனுடைய உணர்வின் நிலையில் கொண்டு பாம்பின் தசைகளுக்குள் போய்ச் சேருகின்றது.

1.தவளையின் உயிரான்மா பாம்பாகப் பிறக்கின்றது.
2.பாம்பிற்குள் உணவாகச் சென்ற தவளையின் தசைகள் – வண்டின் சிறகுகள் முளைத்து செல்களாக அது வளர்த்துக் கொண்ட நிலைகள்
3.அந்தப் பாம்பு இறந்த பின் அடுத்து “பருந்தாகப் பிறக்கின்றது…”

பருந்தாக வரப்படும் பொழுது… முதலிலே பாம்பு தவளைக்குள் தன் விஷத்தை எப்படிச் செலுத்தியதோ இதைப் போல
1.அந்த உணர்வின் நிலைகள் கொண்டு… பருந்திற்குள் இருக்கும் இந்த விஷத்தினைக் கண்டாலே பாம்பு நடுங்குகின்றது..
2.ஏனென்றால் அந்த விஷத்தின் நுண்ணிய அலைகளாக வந்த பின்
3.தன்னைப் பருந்து கொத்தி விடும் என்று எதிர் நிலைகள் கொண்டு அதைக் கண்டாலே பாம்பு நகர்ந்து அப்பால் சென்றுவிடுகிறது.

இயற்கையின் நிலைகள் கொண்டு இப்படிப் பல பல வேதனைகளை அனுபவித்து இந்த உயிருடன் ஒன்றியே நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.

எத்தனையோ போர் முறைகளைச் செய்து மகாபாரதத்தில் வியூகத்தின் தத்துவத்தினைத் தனக்குள் அமைத்து… ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஒன்றுக்குள் ஒன்று கலவைகள் மாறி மாறி… அதற்குத் தக்க உடலின் ரூபம் பெறுகின்றது.

உதாரணமாக புலி மானைத் தாக்குகிறது என்றால் மான் சாந்தமானது… புலியின் வேகமோ கடினமானது. மானை விழுங்க வேண்டும் என்று எண்ணி அதன் வலு கொண்டு புலி தாக்குகிறது. மானோ அதனிடமிருந்து விடுபட எண்ணுகின்றது.

இருந்தாலும் புலி மானை அடித்துக் கொல்கிறது. அப்போது மானின் உயிரான்மா அந்தப் புலியின் உடலுக்குள் சென்ற பின் புலியின் உடலைப் பெறும் தகுதி பெறுகின்றது.

1.ஏனென்றால் பெரும் வியூகத்திற்குள் ஊடுருவி…
2.“அதன் வலுவையே தான் கண்டான்…” என்று மகாபாரதத்தில் தத்துவங்கள் உண்டு.
3.எந்த வியூகத்திற்குள் சென்றாலும் இந்த உணர்வின் வேகத் தொடர்கள் கவர்ந்து அதனின் உடலாகப் பெறுகின்றது.

மானின் சக்தியோ சாந்தம் புலியின் உடலுக்குள் கலக்கப்படும் பொழுது அது பலவீனம் அடைகிறது வீரியத் தன்மையும் குறைகின்றது. இப்படிப் பல மான்களை உணவாக உட்கொண்ட புலி அடுத்து… தாவர இன்ங்களை உட்கொள்ளும் “காண்டாமிருகமாகப் பிறக்கின்றது..”

உதாரணமாக மாவுடன் காரத்தைக் கலக்கின்றோம் என்றால் அதனுடைய செயலை இழந்து மாவுடன் சேர்த்து காரம் சுவை மிக்கதாக வருகின்றது. ஆக…
1.சுவையற்ற நிலைகள் இருப்பதைச் சுவையான உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வு பெறும் நிலையாக
2.இப்படித்தான் உருமாறி உருமாறி “மனிதனாக வந்தோம்” என்பதை மகாபாரதம் தெளிவாக்குகின்றது.

இன்று மனிதனாக இருக்கும் நாம் அடுத்து எந்த வியூகத்திற்குள் செல்ல வேண்டும்…? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அற்புத சித்துகளை எல்லாம் உங்களுக்கு நான் (ஞானகுரு) கற்பித்துக் கொடுக்கலாம். அந்த மாதிரிக் கொடுத்தவர் யாரும் கரை சேர்ந்ததில்லை.. நல்ல நிலையிலும் இல்லை…!

அவரவர்கள் ராஜாவாக… தனிக்காட்டு ராஜாவாக “நான் சர்வத்தையும் அறிந்து கொண்டேன்…!” என்ற நிலைக்குப் போய் விடுகின்றார்கள்.

ஆகவே அந்த அற்புதங்கள் நமக்குத் தேவை இல்லை. நமக்குள் இருக்கும் அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?

1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் அருள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
3.நம்மைப் பார்ப்போர் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று மனம் மகிழ வேண்டும் என்ற
4.இத்தகைய நிலையை நாம் பெறுவோம் என்றால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

என்னைப் பார்ப்போர் மனம் மகிழ வேண்டுமென்றால்… நாம் படுகின்ற வேதனையைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.நம் சொல்லால்
2.நம் பேச்சால்
3.நம் செயலால்
4.நம் பார்வையால்
5.அவர்கள் அதைப் பார்த்து… “நான் நல்லதானேன்…!” என்று அந்த மகிழ்ச்சி அங்கிருந்து வர வேண்டும்.

ஆகவே… உங்கள் பார்வை பிறருடைய தீமையை நீக்கும் சக்தியாக வர வேண்டும். உங்களுடைய உணர்வின் தன்மை “தூய்மைப்படுத்தும் சக்தியின் ஆன்மாவாக” மாற்ற வேண்டும். தூய்மையான நிலைகள் கொண்டு தீமையைத் தனக்குள் வராமல் ஒளியாக மாற்ற வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் மற்ற பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய நிலைகளை (பெரும் பெரும் பாறைகளை) நொறுக்கி அதனுடைய நிலைகள் துகள்களாகப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. அதைத் தூசியாக மாற்றி மற்ற கோள்கள் எடுக்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாறுகின்றது பின் அதன் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனின் தன்மை தனக்குள் கவர்ந்து “ஒளிச் சுடராக” மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.மாமகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.உங்களுக்குள் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இதை இணைத்து இணைத்துக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சுகளையும் அதனின் தன்மைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே… அதன் உணர்வின் தன்மை பெற வேண்டுமென்ற இந்த நோக்கத்துடன் தான் இதை உபதேசிக்கின்றோம்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் உங்களிலே இயங்கி
2.தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மைகள் உங்களிலே விளைந்து
3.இந்த உடலை விட்டு அகன்றால் “என்றும் தூய்மையின் நிலைகள் பெற முடியும்…!” என்ற
4.தன்னம்பிக்கை உங்களுக்கு வரவேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்வது.

“மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும்” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம்… அதனால் பலனில்லை

 

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பிச் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். ஆக்ஞை இட்டு… பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய்… இதன் வழி கொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ…! என்று சொல்கின்றார்கள்.

ஆக… மூலாதாரம்,..! இந்த உடல் முழுவதற்கும் கீழே இழுக்கப்பட்டு,…இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு… இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம். “மூலாதாரம் கீழே இருக்கின்றது” என்று கொண்டு போகின்றார்கள்.

ஆனால் மூலம் என்றால் என்ன…? என்றே தெரியாதபடி இருக்கின்றார்கள்.

1.மூலம் என்பது உயிர்.
2.ஆதாரம் என்பது நமக்குள் இருக்கக்கூடிய உணர்வு.
3.அதில் மெய் ஒளியைக் காணும் ஆதாரத்தைத் தட்டியெழுப்பி
4.அந்த உணர்வின் சக்தியை நாம் சுவாசித்து
5.அந்த உணர்வைப் பெருக்கச் செய்வதுதான் “மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது” என்று ஞானிகள் சொன்னது.

ஆனால் இவர்கள் என்ன செய்கின்றார்கள்…!

மூலாதாரத்தைத் தட்டியெழுப்பி என்று நினைவை எங்கெங்கோ செலுத்தி “மூலம்… பூரம்… மணிப்பூரம்…” என்று சொல்லி எதை எதையோ இவர்கள் சிருஷ்டித்துக் கொண்டு இவர்களும் அறியாத நிலையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களையும் அறியவிடாது செய்து விடுகின்றனர்.

“பூரம்” என்ற நிலைகளில் அந்த இடத்திற்குக் கொண்டு செல்லும் பொழுது “தாமரை” இங்கே இருதயத்திற்குள் நினைக்கும்போது பொழுது ஹார்ட் அட்டாக் வந்து நெஞ்சு வலித்தது என்பார்கள்.

நான் சிந்தனையுடைய நிலைகளை எடுத்தேன்… ஏதோ ஒரு பிரம்மத்தில் போய்ச் சேர்ந்தது… எனக்குப் பித்துப் பிடித்தது என்றும் சிலருடைய நிலைகள் சொல்வார்கள்.

ஆனால் அவர்கள் சொன்ன பூரம் ஆதாரம் இவைகளைத் தட்டியெழுப்பினால் நிச்சயம் அந்த உணர்வின் தன்மை அந்தந்த இடங்களைப் பாதிக்கச் செய்யும்,

குண்டலினி யோகம் செய்தவருடைய நிலைகள் எல்லாம் HEART WEAK… அந்த உணர்வின் தன்மை இருதயம் பலவீனமாக இருப்பதைப் பார்க்கலாம்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் சில பேர் குண்டலினி யோகா… அதற்காக இங்கே தொட்டுக் காட்டுகின்றேன் என்று புத்தகங்களைப் படித்துக் கொண்டு தெரியாத நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

அதன் விளைவு ஹார்ட் அட்டாக்… பிரமை பிடித்து ஞாபக சக்தி குறைந்து விட்டது… என்றெல்லாம் வரும்.

இந்தப் பயிற்சியை மேற் கொண்டோம்… அதனால் எங்களுக்கு இப்படி ஆனது என்று இது போன்று என்னிடம் ஒரு ஆறேழு பேர் வந்து சொன்னார்கள்.

இயற்கையின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது
1.வடிகட்டும் உணர்வின் தன்மை “சுவாசம்”
2.நமக்குள் உணர்வின் தன்மையை… செல்களைத் தட்டியெழுப்பி
3.நம் மூச்சின் தன்மையை உடலாக்குவது தான்…
4.அந்த உணர்வின் சக்தியை வடிப்பது தான்… இந்த இயற்கை.
5.அந்த இயற்கையுடன் ஒன்றிய நிலைகளில் நாம் செல்வது தான் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி.

ஒரு தென்னை மரம் மற்ற மரங்களால் வெயில் மறைக்கப்பட்டு அதனால் தனக்குக் காந்த சக்தி குறைவாக இருந்தால் என்ன செய்யும்…? வளைந்து நெளிந்து அந்தச் சூரியனின் காந்த சக்தியை எடுத்துத் தனக்குள் விளைவித்துக் கொள்ளும்.

அதைப் போல் தான் மனிதன் அந்த மெய் ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் அதற்குத் தக்கவாறு நாம் எண்ணி ஏங்கி எடுத்தல் வேண்டும்.

ஒரு ட்யூப் லைட்டில் (TUBE LIGHT) அதற்குத் தக்க மின்சாரத்தின் அளவுகோல் சரியாக வைக்கும் பொழுது சரியான நிலைகளில் எரிகின்றது… குறைந்தாலோ எரிவதில்லை.

இதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் அதற்குத்தக்க காந்த சக்தி இருந்தால் தான் காற்றிலிருந்து நாம் எடுக்க முடியும்.
2.”மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும்” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம்… அதனால் பலனில்லை.
3.அந்த உணர்வின் ஆற்றல்மிக்க இந்தச் சக்திக்கு யாம் உபதேசித்தாலும் அந்தக் காந்தத்தின் சக்தியைக் கூட்டினால் தான் அதை எடுக்க முடியும்.

நாள் முழுவதற்கும் நாம் உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தச் சக்திகளை எடுத்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

1.“ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும்.
2.கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.
3.மகரிஷிகளின் உணர்வைக் கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
4.அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க வேண்டும்.

இப்படி நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்ப்பிப்பது தான் “குண்டலினி யோகா…”

அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது எத்தகையை தீமையாக இருந்தாலும் அதைப் பிளக்கின்றது… நமக்குள் ஆற்றல்கள் பெருகுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தங்க ஆபரணங்களை நீங்கள் அணிந்திருந்தால் அந்த ஆபரணங்களை எண்ணி… நம்மைப் போன்றே மற்றவருக்கும் இது கிடைக்க வேண்டும்…! என்று எண்ணுங்கள்.

1.அந்தத் தங்கத்தைப் போன்ற நல்ல மனம் எங்களுக்குள் வளர வேண்டும்.
2.எங்களைச் சார்ந்தோர்… எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் “தங்கத்தைப் போன்ற மங்காத மனம்” கிடைக்க வேண்டும்.
3.வாழ்க்கையில் தங்கத்தைப் போன்ற பளிச்சென்ற மங்காத நிலைகள் எல்லோரது மனதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால் வெறும் நகையாக மட்டும் தங்கத்தை அணிந்து கொண்டிருப்பதற்கு அல்ல…!

தெய்வங்களுக்குத் தங்கத்தை மாலைகளாகப் போட்டு பல விதமான ஆபரணங்களாக அணிந்து பார்க்கின்றோம் அல்லவா…! அந்தத் தங்கம் எவ்வாறு மங்காது இருக்கின்றதோ… இதைப் போன்று நமது எண்ணங்கள் மங்காது அனைவருடைய அரவணைப்புடன் இருக்க வேண்டும்.

காரணம்… குடும்பத்திற்குள் எல்லோருடனும் நாம் மகிழ்ச்சியாக இருப்பினும் அந்த மகிழ்ச்சிக்குள் சிறிது குறை ஏற்பட்டால் உடனே அவர்கள் மேல் கோபமோ ஆத்திரமோ வேதனையோ ஏற்பட்டு நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் மறையத் தொடங்குகின்றது.

அப்பொழுது நம் நல்ல எண்ணங்கள் மறையாது இந்தத் தங்கத்தைப் போன்று மங்காது பாதுகாத்திடல் வேண்டும்.

அவர்களுடைய குறை உணர்வுகள் நமக்குள் வந்ததைத் துடைத்துவிட்டு “பளிச்…” என்ற நிலையில் அவர்களுடைய உணர்வும் தெளிந்திட வேண்டுமென்ற எண்ணத்தை நாம் எடுத்து நமக்குள் வளர்த்திட வேண்டும்.

ஏனென்றால் தியானம் என்றாலே இது தான்…! நமக்காக மட்டுமல்ல…!

சூரியன் எவ்வாறு பிற கோள்களின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து அதிலுள்ள தீமைகளைக் கழித்துவிட்டு ஒளியின் நிலையாக அது உருப்பெற்று வளர்ந்து கொண்டே இருக்கின்றதோ இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கின்றதோ… இதைப் போல நமது எண்ணங்கள் எப்போதுமே அந்தப் பிரகாச நிலைகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

பிறர் மேல் இருக்கும் குறையோ… குற்றமோ… வெறுப்போ,,, நாம் நுகர்ந்து அறியப்படும்போது… அது நமக்குள் வளராது…
1.அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு பளிச்சிடச் செய்து
2.”தங்கம் கருகாது” எப்படி அதனுடைய உணர்வு என்றுமே ஒளி வீசுவது போல்
3.நம் ஒவ்வொருவருடைய மனதையும் தங்கத்தைப் போன்று மங்காத நிலை பெறச் செய்து
4.நாம் எதிலே ஈடுபட்டாலும் நம் உணர்வுகள் மங்காத நிலைகள் பெறச் செய்ய வேண்டும்.

இதை நாம் வழிப்படுத்த வேண்டும்.

பிறிதொரு ஆன்மா இல்லாத மனித உடலே இல்லை…!

 

“சரியான நேரத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கின்றீர்கள்” என்று நம் மூலமாக அந்த உதவியைப் பெற்றவர் என்ன செய்வார்…?
1.வேறு யாரும் உதவி செய்யவில்லை… இந்த மனிதர் தான் எனக்கு உதவி செய்தார்…! என்று கடைசியிலே அவர் எண்ணினால் போதும்.
2.அந்த ஆன்மா நேராக நம் உடலில் புகுந்து விடும்… அவர் உடலில் ஏற்பட்ட தொல்லைகளை எல்லாம் இங்கே செயல்படுத்தும்.

ஒரு வயதான கிழவியாக இருந்தது. அவர்கள் வீட்டில் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. ஆனால் பெரியம்மா என்ற நிலையில் நாம் சந்தர்ப்பத்தில் உதவி செய்தோம் என்றால்… “இறக்கப்படும்போது அந்த அம்மாவிற்கு நம் நினைவு தான் வரும்…”

அதற்கு முன்னாடி உதவி செய்திருக்க மாட்டோம். கடைசியிலே அது இறப்பதற்கு ஒரு நான்கு நாளைக்கு இந்த உதவி செய்திருந்தால் போதும்…! மற்ற நிலைகளை எல்லாம் மறந்து இது அந்த அம்மாவின் முன்னணியில் வந்து விடும். அது எந்தெந்த வேதனைப்பட்டதோ அதெல்லாம் நமக்குள் வந்து இயக்கத் தொடங்கும்.

இப்படிப் பல நிலைகள். ஏனென்றால் ஒரு மனிதன் இறந்து பின் அவன் இன்னொரு உடலுக்குள் வந்தால் மனிதனாக உருப் பெறும் கருவாக உருவாவதில்லை.

அந்த உடலுக்குள் சென்று அவனை உருக்குலையச் செய்து அவனைச் சின்னாபின்னமாக்கி இந்த உடலிலே விஷத்தைக் கலந்து… ஒரு மிருகம் எப்படி விஷமான சத்து கொண்ட தன் உடலைப் பாதுகாத்துக் கொள்கின்றதோ அது போன்று மனித சிந்தனைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து மனித நிலை அற்ற பிற்பாடு மிருகத்தின் ஈர்ப்புக்குள் செல்கிறது.

உதாரணமாக பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் மனிதருடைய நினைவு இழக்கப்பட்டு பாம்பினுடைய ஈர்ப்பிற்குள் சென்று பாம்பாகத்தான் பிறக்க நேரும்.

ஆனால் அதே சமயத்தில் “கொசு கடிக்கிறதே…” என்று கொசுவை நாம் அடிக்கிறோம் என்றால் அது நம் உடலுக்குள் வந்து கொசு மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இப்படி எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது போன்று தான் ஒன்றுக்குள் ஒன்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் ஏப்படி எல்லாம் மாறி வருகிறது என்ற நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து எப்படி நாம் தப்புவது…?

ஒரு சிலர் அடுத்தவரின் ஏச்சையும் பேச்சையும் பொறுக்க முடியாமல் “பேயாகச் சென்றாலும் நான் உன்னை விடமாட்டேன்…! என்று பேசுவார்கள். எனக்கு இப்படிச் செய்தார்களே பாவிகள்…! என்று இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் இங்கே வந்து விடுகிறது.

குடும்பத்திற்குள்ளோ மற்றதற்குள்ளோ எதைச் செய்தாலும் இந்த உணர்வுடன் இறந்தபின் அதே உணர்வின் ஒலி கொண்டு இங்கே வந்துவிடுகிறது. அதற்குத் தான்… நீ செய்த தொல்லைகளுக்குப் பேயாகப் போ என்று ரிஷி சாபமிடுவதாகக் காட்டுகின்றார்.

பேயின் தன்மை அடைந்தபின்… ஐயனே எனக்கு வேறு வழி இல்லையா…? என்று தன் விமோசனத்திற்குக் என்று கேட்கப்படும் பொழுது “உயர்ந்த நிலைகள் கொண்ட ஒரு மனிதனை நீ தீண்ட எண்ணுவாய்… அவன் நிழல் பட்டு மீண்டும் மனித நிலையை அடைவாய்…!” என்று ரிஷி சொல்வார்.

நாம் நல்லதைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த நன்மை செய்த நிலைகள் கொண்டு இன்னொரு ஆன்மா இந்த உடலுக்குள் வந்து இந்த உணர்வின் தன்மை இயக்கமாகின்றது.

அதாவது பாலிற்குள் விஷம் பட்டால் எப்படி அதனுடைய நிலைக்கு இட்டுச் செல்கின்றதோ இதைப் போன்று “நாம் உதவி செய்த நிலைகள்…”
1.வேதனையான இயக்கத்தால் இந்த உடலுக்குள் வந்துவிட்டால்… அது அதனின் நிலையையே இங்கே உருவாக்குகின்றது.
2.நம்முடைய உணர்வும் அதனுடைய உணர்வும் இரண்டும் கலந்து உயிரிலே படும்போது “இரண்டு எண்ணங்கள்” வருகின்றது.

பேய் பிடித்தவரைப் பாருங்கள். நல்லா இருப்போம் என்று நினைப்போம்… ஆனால் என்னை எங்கேயோ இழுக்கிறதே… என்னை எதுவும் செய்ய விட மாட்டேன் என்கிறதே… கை கால்கள் குடைகின்றதே… இடுப்பு எல்லாம் வலிக்கின்றதே… என்னைத் தூக்கு போடச் சொல்கின்றதே… என்னை எங்கேயோ ஓடச் செய்கின்றதே என்று பேசுவதெல்லாம்
1.தன் நினைவுகள் நல்லதாக இருந்தாலும் அந்த உணர்வுகள் இவ்வாறு இயக்குகின்றது.
2.நாம் தவறு செய்யாமலேயே இப்படி நடக்கின்றது.
3.இன்னொரு ஆன்மாவின் உணர்வின் தன்மை இவ்வாறு இயக்குகின்றது.
4.அதை நமக்குள் அடக்க வேண்டும். அதற்கு நமக்குச் சக்தி வேண்டும்.

அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் அந்த மெய்ஞானிகள் அருள் வாக்குகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

ஒன்றும் தெரியாத மூடனிடத்தில் (என்னிடத்தில்) அந்த மெய் ஞானிகள் உணர்வை ஊட்டி அந்த வித்தினை வளர்க்கும் முறையைக் காட்டினார் “எனது குருநாதர் ஈஸ்வரபட்டர்…”

அவர் காட்டிய அந்த உணர்வின் ஓளியை… அவர் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த ஒளியான வித்தைத்தான் இப்போது உபதேசமாகக் கொடுத்து உங்கள் உடலுக்குள் விதைக்கின்றோம்.

அதன் மூலம் காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்கே இந்த நிலை.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அடக்குங்கள். அதன் மூலம் உங்கள் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்ற முடியும்… இருளான நிலையிலிருந்து விடுபட முடியும்.

அத்தகைய சந்தர்ப்பத்தை… அந்த நிகழ்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியான பயிற்சியைக் கொடுக்கின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நெற்றியில் திலகம் வைத்தாலும் அந்தத் திலகத்தின் தன்மை எதுவாக
இருக்க வேண்டும்…? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் குறித்துக் கொள்ளுங்கள்

வீட்டில் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மாற்றிவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எனக்குள் மன பலம் பெற வேண்டும்… மன வளம் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
4.குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப் பட்டிருந்தாலும் அவர்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
5.அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று
6.விரலால் தொட்டு அந்தத் திலகம் இடுவதற்கு முன் இந்த நினைவலைகள எண்ணுங்கள்.
7.நீங்கள் எண்ணிய அந்த உணர்வின் நிலைகள் உங்கள் உடலுக்குள் அலை அலையாகப் பரவிப் படர்கின்றது.

இந்த எண்ணத்துடன் திலகத்தை இடுங்கள்.

அதைப் போல யார் யாரெல்லாம் நலம் பெற வேண்டுமோ திலகம் இடும் பொழுது எண்ணி அவர்களை எல்லாம் நலம் பெறச் செய்யுங்கள்

யார் யாரெல்லாம் நம் மேல் வெறுப்பு அடைந்தனரோ… அந்த வெறுப்பை அகற்ற அவர்களுக்கும் தெளிந்த மணங்கள் வர வேண்டும்…! என்று எண்ணத்தை எண்ணி நீங்கள் திலகமிடுங்கள்

ஏனென்றால் “தொட்டுக் காட்டுவது” (பொட்டில்) என்று சொல்லும் பொழுது
1.பிறர் தொட்டுக் காட்டுகிறார்… என்றால்
2.அவருடைய எண்ணங்களைத் தொட்டுக் காட்டும் பொழுது
3.அவருடைய நிலைகளைத் தான் நமக்குள் நாம் எண்ணிச் சுழலச் செய்கின்றோம்.

ஆகையால் அதைப் போன்று இல்லாது நீங்கள் உயர்ந்த எண்ணங்களை எண்ணி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஐம்பது முறையாவது எண்ணி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் குடும்பத்தில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த வகையில் அவர்கள் நன்மை பெற வேண்டுமோ அவர்களுக்கு எல்லாம் எண்ணத்தால் எண்ணிப் “புருவ மத்தியில்” திலகத்தை வையுங்கள்.

அப்போது இந்த உணர்வுகள் அங்கு ஆழப் பதியும்… நினைவலைகளாகத் தெளிவாக வரும்…. உங்கள் சிந்தனைகள் சீர்குலையாது. வெறுப்பின் அலைகள் உங்களுக்குள் புகாது அதைத் தடுக்க இந்த முறைப்படி நீங்கள் திலகமிட வேண்டும்.

இன்று நீங்கள் உடைக்குத்தக்க பல அணிகலன்கள் அணிகின்றீர்கள். அது எத்தனையோ ஃபேஷனாக இன்று வந்துவிட்டது.

ஆக… நாம் எப்படி ஒருவருடைய நிலைகளை மகிழ்ந்திடும் நிலைகள் செய்கின்றோமோ அதைப் போல “நம் எண்ணங்களை உயர்ந்ததாக்கி” அதையே நாம் ஆபரணங்களாக அமைக்க வேண்டும்.

என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும்… எப்போதும் மகிழ்ச்சி பெற வேண்டும்…! என்று இந்த முறையைச் சிறிது காலம் சொல்லிப் பாருங்கள். அது உங்களுக்குள் தெளிவான நிலைகளாக வரும்.

இப்படி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நாம் செயல்படுத்துதல் வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் நமது பற்று அந்த மகரிஷியின் பால் செல்கின்றது. அந்த மகரிஷியின் உணர்வு ஓங்கி வளருகின்றது.

அத்தகைய பற்றின் தன்மை
1.அந்த மகரிஷிகளின் சக்திகள் கணக்கு எந்த அளவுக்குக் கூடுகின்றதோ
2.அதன் வழிப்படி நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

அதே சமயம் நம் குடும்பத்தில் வரும் எத்தகைய தீமையும் நம்மை அணுகாது பார்த்துக் கொள்ளுகின்றோம். நம் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் செல்லுகின்றது.

விண்ணை நோக்கி செல்லும் நிலையை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால்
1.“சித்திர புத்திரன்” கணக்கின் பிரகாரம் தான் உடலுக்குப் பின் அடுத்த நிலை என்பது போல்
2.எந்த விண்ணின் பற்றை நாம் அதிகமாகக் கூட்டுகின்றோமோ
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் அனைவரும் ஐக்கியமாகின்றோம்.

அரசு அன்று கேட்கும்… தெய்வமோ நின்று கேட்கும்…!

 

உதாரணமாக நம் பையன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். பாடப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கின்றோம். அழகான துணிமணிகளையும் கொடுக்கின்றோம்.

அவன் நல்ல நிலையில் தெளிவாக வளர்ந்து வர வேண்டும் என்று இத்தனையும் ஆசை கொண்டு செயல்படுத்துகின்றோம். இவ்வாறு நினைக்கும் போது மூஷிகவாகனா.

அந்த உணர்வுகளைச் சுவாசித்து குழந்தைகக்கு வேண்டியதைப் பக்குவப்படுத்தி அவனைச் சீராட்டுகின்றோம் தாலாட்டுகின்றோம். ஆனால் இந்த மகிழ்ச்சி என்ன ஆகின்றது…?

பையனோ அவனுடைய உணர்வுக்கொப்ப அந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடிய பக்கங்களைக் கிழித்து விட்டு விளையாண்டு கொண்டிருக்கின்றான்.

நாம் எண்ணியபடி அவன் வரவில்லை என்ற நிலையில் அதைப் பார்த்த உடனே “இப்படி நஷ்டம் ஆக்கிவிட்டானே…” என்று வேதனைப்படுகின்றோம்.

தேள் நம்மைக் கொட்டி விட்டால் சிந்தனை வருமா…? அந்தப் பொருள் வீணாகிவிட்டதே…! என்ற நிலையைச் சிந்தித்த உடனே விஷமான நிலைகள் கொண்டு கடுகடுப்பாகின்றது.
1.சிந்திக்கும் செயல் இழந்து… இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு “இப்படிச் செய்து விட்டயாடா…?” என்று ஆத்திரம் வருகிறது.
2.நாம் எதைக் கொண்டு அவனைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று விரும்பினோமோ… அவனையே அழிக்கும் நிலைகள் வருகின்றது.

அது தான் மூஷிகவாகனா…! வேதனையும் எரிச்சலும் இரண்டும் சேர்த்து எனக்குள் சுவாசிக்கும் பொழுது கோபம் வருகின்றது காளி…!

அந்தக் காளி என்ன செய்கின்றது…? நாம் பார்க்கும் பொழுது தவறு செய்தால் துர்மார்க்கனை அழிக்கும் நிலை வருகின்றது.

அவன் செய்யும் சேட்டையை உணர்ந்து “அவன் எதைச் செய்தானோ அதைப் பார்க்கும் பொழுது அதுவாகி” அந்த உணர்வின் தன்மை கொண்டு அவன் செயலையே அழிக்கும் நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.

அது தான் “ஓ…ம்”
1.அவன் செய்த பிழையான உணர்வுகள் அங்கே இருள்… அவனுக்குள் எடுத்த உணர்வுகள் வெளி வருகின்றது.
2.அவனைப் பார்த்து நாம் அதை எடுக்கப்படும் போது ஓம் நமச்சிவாய… அந்த உணர்வின் சத்து நமதாக இங்கே பிரணவமாகிறது.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து அங்கே இருக்கின்றது. அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.“அவனை உதைக்க வேண்டும்” என்ற நிலைகளில் அவன் செயல் என்னை இழுத்துச் செல்கின்றது.
2.அது தான் ஓம் நமச்சிவாய… சிவாயநம ஓம்… அதாவது நமதாக மாறி நம்மிடமிருந்து அதே உணர்வின் இயக்கமாக அங்கே திரும்பச் செல்கிறது.

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்ற நிலையும் இதைப் போன்ற உணர்வின் தன்மை அது எப்படி இயக்குகிறது…? என்ற தத்துவத்தைத் தான் நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் என்று சொல்வோருக்கு அபாயம் ஒன்றும் இல்லை என்று எண்ணினால் சரியாகிவிடுமா…?
1.அவன் கொடுத்த தத்துவத்தை அவன் காட்டிய சிவத்தை எதுவாக ஆக்க வேண்டும்…?”
2.எந்த உணர்வின் தன்மையாக உனக்குள் பெருக்க வேண்டும்…?
3.இயற்கையின் நீதிகளின் தன்மைகள் வளர்வதற்கு என்ன வழி…? என்று அன்று மெய் ஞானி உணர்த்தினான்.

அதைத் தான் அங்கே பார்க்கப்படும் பொழுது அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்…! நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எனக்குள் நல்ல குணங்களாக வளர்ந்து இருந்தாலும் அவன் செயலைப் பார்க்கும் பொழுது
1.நான் சுவாசித்த நிலைகளால் எனக்குள் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்தும் அடங்கி
2.வேதனையையும் கோபத்தையும் ஊட்டும் நிலையாக இது எனக்குள் ஆட்சிக்கு வருகின்றது.
3.கணங்களுக்கு அதிபதி கணபதி அவனைத் தாக்கும் நிலைகளுக்கு நான் வந்து விடுகின்றேன்… உதைக்கின்றேன்
4.நான் வாங்கி கொடுத்த புத்தகத்தைக் கிழித்து விட்டயாடா பாவி…! என்று அவன் அழுதாலும் இரக்கமற்று அடிக்கின்றோம்.

காளிக்கு முன்னாடி என்ன இருக்கின்றது…? புலி…! அவன் உணர்வைச் சுவாசித்து அதன் வழியில் காளியின் ரூபமாக என்னை அழைத்துச் சென்று புலியைப் போன்று தாக்கும் நிலைகளை உருவாக்குகின்றது.

புலி எப்படி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுக் கொல்கின்றதோ அவனை அடித்து விட்டோம். இருந்தாலும் சுவாசித்த உணர்வுகள் என் உயிரிலே பட்டு அந்த உணர்வின் சத்தினை எனக்குள் வடித்து என் நல்ல உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணத்தை அழிக்கச் செய்து விடுகின்றது… அந்தச் சக்தி…”
2.அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்…!
3.எனக்குள் உருவான அந்தக் காளியான சக்தி நல்ல குணங்களுக்குள் ஊடுருவி இரத்தக் கொதிப்பாக மாறி
4.வேதனை கொண்ட கடுகடுப்பும் வியாதியாகத் தோற்றுவிக்கும் நிலையாக உருப் பெறுகின்றது.

அதனால் தான் அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்வது. அவனை அடித்த உணர்வுகள் திரும்பத் திரும்ப அதைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையே இயக்கமாகிறது.

ஒரு ரேடியோவிற்குள் எப்படி அந்தப் பேசிய அலைகளை மீண்டும் நினைவு கூறும் பொழுது அதனின் அலைவரிசையைத் தொகுப்பாக வைத்துத் திருப்பி வைக்கப்படும் போது அந்த உணர்வின் நினைவலைகளை ஊட்டி நாம் அதன் மூலமாகக் கேட்பது போன்று
1.நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனின் சக்தி வேகத் துடிப்பு கொண்டு அவனை அடிக்க வேண்டும் என்று எண்ணி எதைச் செயல்படுத்தினேனோ
2.அந்த உணர்வின் காந்தப்புலன்கள் கவர்ந்து நாம் மீண்டும் வேகமாக இழுக்கும் பொழுது
3.அந்த உணர்வலைகள் சுழன்று நின்று… என்னைச் சுற்றி நிற்கின்றது… அதுவே இயக்குகின்றது,

உதாரணமாக ஓசோன் திரை இந்தப் பூமிக்கு பாதுகாப்பாக எப்படி அமைந்ததோ… அதாவது விண்வெளியில் தோன்றும் விஷத்தின் அணுக்கள் பூமிக்குள் நுழையப்படும் பொழுது அது வெளிச் செல்லும் போது மீண்டும் காந்தப் புலன்கள் கவர்ந்து இதன் சுழற்சி வட்டத்தில் அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்து… மீண்டும் தனக்குள் வரும் விஷத்தைத் தனக்குள் அடுக்கடுக்காகச் சேர்த்து… இந்தப் பூமிக்குள் விஷம் வராதபடி அது ஆற்றல்மிக்க நிலையாக ஓசோன் திரையாக அது எப்படி வளர்கின்றதோ இதைப் போன்று
1.நாம் எடுத்த ஆத்திரத்தின் நிலைகள்… வேகமாக எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள்
2.ஓசோன் திரை போன்று ஆத்திரத்தை தூண்டும் உணர்வின் நிலைகளாக எனக்குள் ஆன்மாவாகக் “குவித்துக் கொள்கிறது…”

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…! அடுத்து… நான் ஒரு வியாபாரத்திற்குச் செல்கின்றேன். வாங்க வருபவரிடம் பொருளை எடுத்துக் கொடுக்கின்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு எடுத்துக் கொடுக்கப்படும் பொழுது நான் எடுத்துக் கொண்ட உணர்வின் (ஆத்திரமான) ஒலிகள் அங்கே அவர் செவிகளில் பட்டு இதே உணர்வுகள் அங்கே உந்தும் பொழுது “அவர் என்னைப் பார்க்கின்றார்…”

பாலுக்குள் காரத்தைக் கலந்து விட்டால் அது எப்படிச் சுவையற்றதாக மாற்றுகின்றதோ அதைப் போல அந்த ஆத்திரமான உணர்வுகள் அவருடைய சுவாசத்திற்குள் சென்று
1.நான் எப்படி என் பையனை வெறுத்துத் தாக்கினேனோ இதே உணர்வுகள் கண்ணின் புலனறிவுகளிலே பட்டு அங்கே பாய்ச்சப்பட்டு
2.எடுத்துக் கொடுக்கும் பொருளை சொல்லாகச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவருக்குள் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு
3.கையிலே எடுத்துக் கொடுக்கும் பொருளை வெறுக்கச் செய்கின்றது.

தன் இனத்தின் தன்மை… தான் பாதுகாக்கும் நிலையாகத் தான் செய்த நிலையை உருப்பெறும்… உருவாக்கும் சக்தியாக… அங்கே உருவாகின்றது.

இதைத்தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. இவனை அடித்து விட்டேன் என்று எண்ணினாலும் இந்த உணர்வின் சத்து நாம் செயலாக்கப்படும் பொழுது இது முன்னணியில் வந்து விடுகின்றது.

அதைத் தான் இயற்கையின் நிலை அது எவ்வாறு இயக்குகிறது…? என்று அன்று காட்டினார்கள் ஞானிகள்.

ஞானிகள் காட்டிய அந்த உண்மைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளைச் சுவாசித்து… நல்லது செய்யக்கூடிய பண்புகளாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்தப் படம் ஆடும். அதுவும் பதிவாகும். அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” – பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகி விட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சக்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”

செய்து பாருங்கள்.

தீமையை நீக்கும் சக்திகளைக் குருவான உயிரிடம் வேண்டுவது தான் “குருக்ஷேத்திரப் போர் என்பது…!”

 

குருக்ஷேத்திரம் என்பது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் குருவான (உயிர்) நிலைகள் கொண்டு அது வளர்த்துக் கொண்ட நிலைகளில்
1.நாம் எதை எடுக்கின்றோமோ அந்த நிலைகொப்ப ஞானத்தை உருவாக்கி
2.அவன் உபதேசிக்கும் உணர்வின் நிலைகள் தான் குருவுடன் அணுகி
3.நமக்கு எப்பொழுது துன்பம் வருகின்றதோ அவனை நினைக்கும் போது அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் உருப் பெறச் செய்கின்றது.

இது கீதா உபதேசத்தின் நிலைகள் கொண்டு அன்று கண்ணன் சொன்னது.

நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது பிறர் செய்யும் தவறை உணர்கின்றோம். அப்படி உணர்த்திய நிலைகள் கொண்டு அவன் நிலைகளிலேயே என்னை இயக்குகின்றது.

ஆகவே என் நிலையைக் காக்க வேண்டும் என்றால் அவன் உணர்வுகள் என் உடலுக்குள் சென்று தீய விளைவுகளாக உருவாக்காதபடி தடைப்படுத்த வேண்டும்.

அப்படித் தடைப்படுத்தும் நிலைகளுக்குத் தான் கீதா உபதேசத்தை அன்று வியாசகர் காட்டினார்.
1.ஓ…ம் இந்த உணர்வின் உணர்ச்சி ஓங்கார நாதம் வானை நோக்கி ஓதுகின்றான்.
2.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய பல எண்ண அலைகளை அடக்கி ஓம் என்ற நாதத்தில் உயிரில் சுருதியை ஏற்றி
3.இந்த உடலுக்குள் குருவான உணர்வின் தன்மை கொண்டு விண்ணிலே ஏகி அந்த ஓ…ம் என்ற ஓங்காரத்தைச் செலுத்தி
4.மனித உடலுக்குள் சிற்றலைகளை அமுக்கி உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி
5.மெய் உணர்வை ஊட்டிய மகரிஷியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏகி
6.அந்த மெய் ஒளியை எனக்குள் சேர்ப்பேன்…! என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு
7.எங்கே என்னைத் தாக்க வேண்டும் என்று எண்ணினார்களோ அந்த எண்ணத்தை அங்கேயே வீழ்த்த வேண்டும்.

அம்பைக் கொண்டு அல்ல. புறத்தால் காட்டப்பட்ட அம்பை எய்து அந்த உடலை வீழ்த்துவது அல்ல.

உடலை வீழ்த்த வேண்டும் என்று… அந்த உடலுக்குள் நின்று இந்த உணர்வு இயக்கியதை அங்கே வீழ்த்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்…” இதைத்தான் குரு எனக்கு உபதேசித்தார்.

குருவே எதிரிகளின் பக்கம் இருந்து அந்த விஷத்திற்குள் சிக்கிய பின் அந்த உணர்வின் சக்திகளை எப்படி நீக்குவது…?

குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவர் அறியாது நுகர்ந்த உணர்வு இயக்கும் நிலைகள் தான்.
1.பாசத்த்தின் வலையில் நாம் சிக்கப்படும் பொழுது குரு என்ற நிலையில் மரியாதை… சகோதரர் என்று மரியாதை…
2.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.
3.எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு அவரை வீழ்த்தி விட்டால்… “நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன்…!” என்ற
4.இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது தீயதை வளர விடும் நிலையும் நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது.

மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை வீழ்த்த முடியவில்லை… பலமிழந்த நிலையில் அது நம்மையே வீழ்த்தி விடுகின்றது.

அர்ஜுனன் என்பது சகல வல்லமையும் கொண்ட உணர்வின் நிலைகள் தான். தன் உயிரான நிலைகள் கீதை உபதேசிக்கப்படும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் நீ வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலில் விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதன் நிலையில் கொண்டு அதுவாகின்றாய்.
5.யார் எதைச் செய்தாலும் என்னிடமே வந்து சேர்வாய்… என் நிலையை நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு நினைவுகள் என்ன ஆகின்றது…? என்று அங்கே காட்டுகின்றார் வியாசகர்

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்ற நிலையில் அவர் அறியாத நிலைகள் அங்கு நுகர்ந்த தீமையான உணர்வின் சத்து இயக்குகின்றது.

அது இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி கண்ணின் நிலையை அவனுடன் ஒன்றி கண்ணா…! என்று நாம் எண்ணி… கண்ணின் நிலைகள் உயிரோடு ஒன்றி நம் நினைவை விண்ணிலே செலுத்தி… அந்த மெய் ஒளியின் தொடரை ஈர்க்கும் நிலையாக அதை நமக்குள் ஊட்டிக் கொண்டிருக்கும் குருவான உயிரிடம் வேண்டுவது தான் “குருக்ஷேத்திரப் போர் என்பது…!”

தீமையான உணர்வைச் சுவாசித்து உயிரான குருவிடம் பட்டுத் தான் அதை அறிய முடிகின்றது. இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகள் உடலுக்குள் செல்லாதபடி
1.அருள் உணர்வுகளைப் பெருக்க ஈஸ்வரா என்று உயிரிடம் ஏங்கி… அந்த மெய் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியைக் கூட்டப்படும் பொழுது
2.அந்த உணர்வின் தன்மை தான் எனக்குள் வலுக்கூட்டி என் நினைவின் எண்ண அலைகளை உயிரோடு ஒன்றி ஒளியாக்கும் தன்மைகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்டிற்குள் குருநாதர் அழைத்துச் சென்றார் பல அனுபவங்களைக் கொடுத்தார்… நான் பெற்றேன். அது எப்படி…? என்ன…? என்று அறிந்து கொள்ளும்படி செய்தார்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ வேதனைகளை நான் அனுபவிக்க நேர்ந்தது. வேதனையை நுகர்ந்த பின்
1.என் உடலுக்குள் எப்படி எல்லாம் மாற்றங்கள் ஏற்படுகிறது…?
2.உடலுக்குள் எப்படி எல்லாம் மாறுபடுகின்றது…? என்று அதையெல்லாம் காண்பிப்பார்.

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் திடீரென்று சில நேரங்களில் வயிற்றால் போய்விடும்… ஒன்றுமே செய்ய முடியாது.

சாமி எனக்குக் கிரக்கமாக வருகின்றது என்பேன்.

1.நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா… நுகர்ந்தாய் அல்லவா
2.அது உன் உடலுக்குள் சென்ற பின் மற்ற அணுக்களை எல்லாம் அடக்கி
3.உன் உறுப்புகளைச் சீராக இயக்க விடாதபடி எப்படி இயக்குகிறது…? பார்…!

ஆனால் நீ தவறு செய்யவில்லை.

1.நீ நன்றாகத்தானே சுவாசித்துக் கொண்டிருந்தாய்
2.நீ ஆகாரம் ஒன்றும் சாப்பிடவில்லை.
3.சாப்பிடவில்லை என்றாலும் இது எப்படி வயிற்றால் போகின்றது…?

இப்படித்தான் பல வகைகளிலும் என்னைச் சிரமப்படுத்தி அதை அறிந்து கொள்வதற்குச் சூழ்நிலைகளை உருவாக்கினார்.

அதே போன்று உங்களுக்கும் இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கலாமா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

சாதாரணமான நிலைகள் நீங்கள் நுகர்ந்த உணர்வு உங்களுக்குள் சென்ற பின் “சாமி எங்களை ரொம்பச் சோதிக்கின்றார்…!” என்று எண்ணுவீர்கள்.

ஏனென்றால் சாமி சொன்னதைக் கேட்டு அதன் வழி நடந்து வரும் பொழுது சாமியை நினைப்பார்கள்.
1.சாமி சொன்னார் என்று நான் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றேன்
2.ஆனால் என்னை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள்…?
3.என்னால் பொறுக்க முடியவில்லை… என்னால் தாங்க முடியவில்லை நான் எப்படி இப்படியே பொறுமையாக இருப்பது..? என்று
3.நான் சொன்ன உயர்ந்த கருத்துக்களை விட்டு விடுகின்றார்கள்… பிறர் உணர்வை எடுத்துக் கொள்கின்றார்கள்.
4.நான் சொன்னதை நிறுத்திவிட்டு அதைத் தான் வளர்க்க முடிகிறது.

சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

சில குடும்பங்களில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது ஒருவருக்கொருவர் கவலையாக… சங்கடமாக… பேசிக்கொள்வார்கள்… சஞ்சலமாகப் பேசுவார்கள்.

சாப்பிடும் போது இப்படிக் கவலையாகப் பேசுவது எல்லாம் என்ன ஆகும் என்றால் அவர்கள் பட்ட வேதனை எல்லாம் அந்த உணவோடு சேர்த்து உடலில் அணுக்களாக உருவாகும்.

1.ஒருவர் சொல்வதை எல்லோரும் உ..ம் கொடுத்துக் கேட்பார்கள்.
2.இது வளர்ந்த பின் சாப்பிடும் பொழுதெல்லாம் அந்த எண்ணங்கள் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைவதற்கு இதுவே ஏதுவாக மாறிவிடுகின்றது.

ஆனால் சந்தோஷமாகச் செய்து அந்த மகிழ்ச்சியான உணர்வு கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.

ஆனால் சாப்பிடும் போது வேதனையாகச் சொல்லிப் பாருங்கள். அது எத்தகைய வேதனைகளை உருவாக்குகிறது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதனால் பல நோய்கள் வரக் காரணமாகின்றது.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்

 

மனித வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களாக இருந்தாலும் யாம் சொல்லும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்து… நமக்குள் பரிசுத்த நிலைகளை ஊட்டி… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக நமக்குள் கூட்டி… உணர்வின் எண்ண அலைகளை ஒளியாகக் கூட்டி… இந்த உணர்வின் சக்திகள் உயிருடன் ஒளியாக மாறி வெளியில் சென்ற பின்… எந்தத் தீங்கும் நேராதவண்ணம் தீமையான உணர்வுகளை மாய்த்துத் தனக்குள் ஒளியின் சுடராக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

ஆகையினால் யாம் லேசாகச் சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம்.

யாம் கொடுக்கும் நல் வாக்கினை எண்ணி “அதைப் பெற வேண்டும்” என்று ஏங்கி இருந்தீர்கள் என்றால் ஆற்றல்மிக்க சக்திகள் உங்களுக்குள் ஊடுருவி உங்களுக்குள் நன்மைகளை வளர்த்து தீமைகளை விலக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

எல்லாமே வாக்கு தான்…! ஜோதிடம் ஜாதகம் பார்க்கப்படும் பொழுது
1.“கேட்ட நேரம் வருகிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்ன வாக்கினை மனதினிலே ஏற்றி
2.அதன் உணர்வை உருக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நசித்துக் கொள்கின்றீர்கள் அல்லவா…!

ஆனால் சாதாரண ஒலியின் தன்மை தான் அது.

அவன் சொன்ன வாக்கை மீட்டுவதற்கு “உபசாந்திகளைச் செய்… யாகத்தைச் செய்தால் மீள்வாய்… இந்த ஆலயத்திற்குச் சென்றால் மீள்வாய்…” என்று பல பொருள்களைச் செலவழிக்கச் சொல்வார்கள்.

அதை போல் அல்ல யாம் சொல்வது…!
1.நீங்கள் ஒவ்வொருவரும் யாம் சொன்ன முறைப்படி
2.மெய் ஒளியின் சுடரை எடுத்து ஒளியின் சுடராக உங்களுக்குள் வளரச் செய்யுங்கள்.

இந்த மனித வாழ்க்கைக்குத் தான் சொன்ன குறைகளை மாற்றி அமைப்பதற்குச் செய்யப்பட்ட நிலைகள் தான்
1.ஜாதகங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
2.ஆனால் “விதிப்படி நடக்கும்…!” என்று இருக்கப்படும் பொழுது கேள்விகளை நடத்தினால் எப்படி மாறும்…?

ஆனால் அதை எப்படி எதன் வழிகளில் நடத்த வேண்டும்…?

நம் உணர்வின் தன்மை ஒளியாக… ஞானிகளின் அருள் வித்தாக நமக்குள் மாற்றி அமைத்தால் தான்… “இந்த வேள்வியை நடத்தினால்தான் மாற்ற முடியுமே தவிர… புற கேள்விகளைச் செய்து அல்ல…!”

அவன் சொன்ன நிலைகளை நாம் எடுப்பது போல மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் வளர்த்து மெய் ஒளியுடன் நீங்கள் செல்ல
1.அன்று ஆதிசங்கரர் சொன்ன அருள் தத்துவத்தை உங்களுக்குள் ஏற்று
2.மெய் ஒளியாக நல்ல உணர்வினை இயக்கக் கூடிய சக்தியாக தனக்குள் துவைதமாக்கி
3.உணர்வின் மன ஒலியாக அத்வைதமாக இயக்கி
4.அத்வைதத்தின் தத்துவமாக என்றும் நம்முடைய பேச்சு மூச்சம் உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக
5.இருளை நீக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்.

இது ஆதிசங்கரர் சொன்ன உண்மை நிலைகள்…! அதன் வழியில் நீங்கள் பெற வேண்டும் என்று அந்த ஆசையின் நிலைகள் கொண்டு இதைச் சொல்கின்றேன்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானமும் ஆத்ம சுத்தி என்ற நிலையும் கடைப்பிடித்து உடலிலே எந்த நோயாக இருந்தாலும்… வயிற்று வலியாக இருந்தாலும்…
1,மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வலி இருக்கும் இடங்களிலே படர்ந்து
2.அந்த வலிகள் நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ணுங்கள்.

கேன்சர் நோய் வந்து விட்டது… உங்களால் முடியவில்லை என்று எண்ண வேண்டாம் முடியவில்லை என்கிற பொழுது… “வேதனை… வேதனை…” என்று எண்ணுவது போல “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று எண்ண வேண்டும்.

உடலில் எங்கே கேன்சர் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனை நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி ஆங்கே படர்ந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக எனக்குள் விளைய வேண்டும் என்று… கண்ணைத் திறந்து வானை நோக்கி ஏகி பின் கண்களை மூடி அந்த இடத்திலே நினைவினைச் செலுத்த வேண்டும்.

கண்களை மூடி… கண்களைத் திறந்து இவ்வாறு சிறிது நேரம் செய்ய வேண்டும்.

1.நாள் முழுவதற்கும் ஐயோ வலிக்கிறதே…” என்று வேதனையாகச் சொல்வதற்குப் பதில்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்.

இந்த வாக்கின் சுடரின் தன்மை உங்களுக்குள் அந்த மெய் ஒளியினை உணர்த்த… அந்தத் தீய நிலைகளை மாற்ற… அதனின் தன்மை கொண்டு “நன்மை பயக்கும் நிலையை” நாம் பெற முடியும்.

நாம் எடுத்துக் கொண்ட நினைவு தான் சுவாசமாகி… அந்தச் சுவாசத்தின் உணர்வு தான் நமக்குள் இயக்கமாகி… அந்த உணர்வின் சக்தி உறைந்து நமக்குள் விளைந்து பரிணாம வளர்ச்சியில் வந்திருக்கின்றோம்.

1.தீமைகளிலிருந்து மீட்டிட ஞானிகள் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடித்து அதைப் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.
2.ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கூட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணலாம்.

பத்திரிகையைப் பார்க்கின்றோம் டிவியைப் பார்க்கின்றோம். அதில் எத்தனையோ உணர்வுகளைத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து எங்கள் பேச்சும் மூச்சும் உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக நடக்க வேண்டும் என்று எண்ண அலைகளைப் பரப்ப வேண்டும்.

அப்போது அந்தச் சங்கட உணர்வுகள் உங்களுக்குள் சேராது தடுக்க முடியும்.

நோயாளியைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு உங்களுக்கு “இனி நோய் இல்லை நலம் பெறுவீர்கள்…” என்று நல்ல வாக்கினைச் சொல்லுங்கள்.

உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து அந்த அருள் உணர்வுடன் உணவை உட்கொள்ளுங்கள். அருள் உணர்வுகள் உமிழ் நீராகக் கலந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.

இந்த வாழ்க்கையில் நல்லது என்று பார்க்கும் போது… தீமை என்ற நிலைகளை உணர்த்துகின்றது. அதைத் தெரிந்து தான் நாம் விலகிச் செல்கின்றோம்.
1.விலகிச் சென்றாலும் அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சென்று நோயாக மாறிவிடுகின்றது.
2.அதை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி இல்லாதபடி கடவுள் செய்வார் யாரோ செய்வார் எவரோ செய்வார் ஜாதகம் செய்யும் நல்ல நேரம் செய்யும் என்று அப்படி எண்ண வேண்டியது இல்லை.

1.நல்ல நேரம் எது என்றால்…? “நல்ல உணர்வுகளைச் சேர்க்கும் நேரமே நல்ல நேரம் ஆகின்றது…”
2.மனிதனுக்கு நேரமும் காலமும் ஜாதகமும் ஜோதிடமும் கிடையாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனிதனாக இருக்கின்றோம்… இந்தச் சூரியக் குடும்பம் அழிந்துவிட்டால் அணுக்களாகத் தான் செல்வோம்… பிரபஞ்சத்தில் மிதப்போம். பின்
1.ஏதாவது ஒரு கோளுக்குள் இழுத்துக் கொண்டு போகும்
2.அங்கே அதற்குண்டான உணவு (சத்து) இருந்தால் புழுவாக பூச்சியாக அல்லது கிருமியாக வளர வேண்டி இருக்கும்
3.விஷத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்.

தாவர இனங்கள் அழிந்து விட்டால் அதை விட்டு வெளியே சென்று விடும். மற்ற கோளுக்குள் செல்கின்றது. ஆனால் எந்தப் பிரபஞ்சத்திற்குள் செல்லும்…? என்று சொல்ல முடியாது.

எல்லாமே அகண்ட நிலையிலிருந்து வளர்ந்தது தான். ஆனால் சூரியன் செயலிழந்தால் பூமி நகர்ந்து ஓடிப் போய்விடும். இதிலிருந்து தப்புவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய வழியில் இத்தனை வேலையும் செய்கின்றோம்.

காரணம் இன்று நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று தனித்துத் தனித்துச் சூரிய குடும்பங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களுக்குத் திருமணம் ஆகி தனக்கென்று ஒரு குடும்பம் உருவாவது போல்
1.நட்சத்திரங்கள் தன் வளர்ச்சியில் சூரியனாகும் போது பிரிந்து சென்று விடும்.
2.பிரிந்து செல்லச் செல்ல நாளுக்கு நாள் நம் சூரியனும் செயல் இழக்கும்
3.சூரியனின் ஈர்ப்பில் உள்ள பூமி கரைந்து ஓடும்
4.இதில் உள்ள உயிரணுக்கள் மற்ற உயிரணுக்களுக்குக் குருவாக அமையும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் இது போன்றுதான் பிரிக்கப்பட்டு நம் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது. அதிலே இன்னும் உயிரணுக்களின் தன்மைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. ஆனால் இப்போது உயிரினங்கள் அங்கே இல்லை.

அதிலிருந்து வரக்கூடிய உயிரணுக்கள் தான் சிறுகச் சிறுக பிரபஞ்சத்திற்குள் வந்து உயிரணுவாக மாறும் தகுதி கிடைக்கின்றது.
1.வியாழனில் கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதால் தான் உயிரணுக்களே உண்டாகிறது.
2.அந்தக் கரு சேர்ந்த பிற்பாடு தான் உயிரணுக்களுக்கு மூலமாகிறது
3.இல்லை என்றால் உயிரணுக்கள் தோற்றமே இல்லை
(சில இதுகள் அதில் இருக்கின்றது… சுருக்கமாக உங்களுக்குச் சொல்லிப் பதிவு செய்கிறேன்).

ஆகவே… அண்டத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் உடலான இந்தப் பிண்டத்திற்குள் இருக்கின்றது. மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றி… நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக நாம் மாற்றி விட்டால்
1.அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நாம் செல்ல முடியும்
2.”என்றும் பதினாறு” என்று இந்த வளர்ச்சி… வேகா நிலை அடைகின்றது… எதிலுமே நம் உயிரான்மா வேகாது.

நம் 2000 சூரியக் குடும்பத்தையும் முதலிலே வட்டமிடும். பின் இதைக் கடந்து மற்ற 1000, 2000, 3000 என்ற சூரியக் குடும்பங்களின் கூட்டமைப்பிற்குள் செல்லும்.

ஆரம்பத்தில் இருண்ட உலகமாக இருந்து அதிலிருந்து வளர்ச்சி பெற்று ஒளியின் சிகரமாக அண்டம் வளர்ந்தது,,, எத்தனையோ கோடி வருஷங்களாக வளர்ந்தது.

எல்லாமே ஒளியாக மாறி விட்டால் அதற்கப்புறம் “மனித இனங்களை ஒவ்வொன்றாகச் சீக்கிரமாக ஒளியாக மாற்றும் நிலை வரும்…” ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே இது மாறும். எப்படி எத்தனையோ ஆண்டுகள் வளர்ச்சியின் பாதையிலே வந்து கொண்டிருக்கிறது.

ஆதிமூலம் என்ற உயிர் “மனிதரான பின் முழு முதல் கடவுள்…!” இதை ஞானிகள் நமக்கு தெளிவாக்கி உள்ளனர். உலகில் உள்ள அனைத்துமே அடக்கி ஆளும் சக்தி பெற்றது
1.பிரபஞ்சத்தில் இருப்பதை அடக்கி ஆளும் தன்மையைப் பெற்று ஒளியின் சரீரமாக ஆகிவிட்டால் முழுமை பெறுகின்றது
2.மற்ற அகண்ட அண்டத்திலிருந்து வரும் எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்

அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்…!

ஆறாவது நிலையிலிருக்கும் நாம் பத்தாவது நிலையை அடைதல் வேண்டும்

 

மிளகாயை மற்ற பொருள்களுடன் இணைத்து அதை எப்படிச் சுவையாக்குகின்றோமோ இதைப் போல
1.சர்வத்தையும் சுவையாக மாற்றிய அந்த அருள் ஞானிகள் அருள் வாக்கின் உணர்வை நாம் சுவாசித்து
2.நாம் கேட்டறிந்த பிறர் சொன்ன வேதனையான உணர்வுகளுக்குள் அதைக் கலந்த உடனே அந்த விஷம் தணிந்து
3.குழம்பைச் சுவையாக ஆக்குவது போல நம் உடலுக்குள்ளும் சுவையாக ஆக்க முடியும்.

நம் உடலோ விஷத்தை மலமாக நீக்கிவிட்டு நல்ல உணர்வின் தன்மை உடலாக எப்படிச் சேர்த்ததோ இந்த உணர்வின் நிலைகள் கொண்டு ஞானியின் அருள் வித்தைத் தனக்குள் செலுத்தி இந்த உணர்வின் எண்ண அலையாக தனக்குள் வளர்த்து “ஆறை ஏழாவதாக ஆக்கப்படும் பொழுது சப்தரிஷி…!”

நாம் எடுக்கும் இந்த உணர்வுகள்
1.அந்த நாதத்தின் தன்மை தனக்குள் உணர்வாக வடிக்கப்பட்டு
2.அதை ரிஷியாக்குவது… சிருஷ்டிப்பது… அதுதான் ரிஷி…!

இப்படித்தான் ஞானிகள் பெற்றார்கள். அந்த ஏழாவதைத் தனக்குள் எட்டாவதாக விளையச் செய்ய வேண்டும்.

ஒரு மரம் எப்படி நல்ல உணர்வை எடுத்துத் தன் உணர்வாக எடுத்துக் கொள்கின்றதோ இதைப் போல
1.நமக்குள் தீமை நமக்குள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த உணர்வின் ஆற்றல் என் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எனக்குள் இருக்கும் ஜீவாத்மா பெற வேண்டும் என்று இப்படிக் கலக்கச் செய்யும் பொழுது
4.இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமலே வரும் இடையூறுகள் வேதனையை ஊட்டும் அந்த உணர்வுக்குள் கலந்து கலந்து கலந்து கலந்து
5.அந்த செல்களை மாற்றிவிட்டால் வித்தாக அது விளைகின்றது.

உதாரணமாக வேப்பமரம் தன் கசப்பை மட்டும் தான் அது எடுத்துக் கொள்கிறது… மற்றதைத் தள்ளி விடுகின்றது. ஒரு ரோஜாச் செடி அதனுடைய நறுமணத்தை மட்டும் எடுத்துக் கொள்கின்றது. கசப்பைத் தன்னை அணுக விடாதபடி தடுத்துக் கொள்கிறது.

இதைப் போன்று தான் எட்டாவது… எட்டுக் கோளின் சக்தியின் தன்மையை நமக்குள் உணர்வின் சத்தாக எட்டாவதாக ஒளியின் சுடராக வளரும் பொழுது
1.யாராவது கெடுதலாக எண்ணிக் கொண்டு நம்மிடம் வந்தால் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னை இயக்காத வண்ணம் பாதுகாக்கும்.
2.இவ்வாறு செய்த இந்த உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றி ஒளியாக மாறும் பொழுது ஒன்பதாவது நிலை… இது காயத்ரி.
3.எனக்குள் தீமை அணுகாது நிலையை உருப் பெறச் செய்யும் நிலை வரும் பொழுது… உடலை விட்டுச் செல்லும் பொழுது தசமி பத்தாவது நிலை.

இந்த உடலில் எட்டாவது நிலையாக இருந்து வெளி வந்தது போல
1.வெளியிலே இன்னொரு உடலுடன் இருக்கக்கூடிய ஆன்மா என்னைக் கவர வந்தால்
2.அது தன்னை அணுகாது விரட்டி விட்டு ஒளியின் சுடராகத் தனக்குள் ஆக்கித் தான் விண் செல்வதே கல்கி.

விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்தியை… இந்த உடலுக்குள் எப்படி எட்டோ அதைப்போல மற்ற எட்டுக் கோளின் சக்தியை ஒளியின் சுடராக மாற்றுவது பதினெட்டு.

இங்கே எட்டு உடலுக்குள் எட்டு வெளியே வரக்கூடிய எட்டுக் கோளின் ஆற்றலின் உணர்வுகள் தாக்காதபடி ஈரெட்டு பதினாறு.
1.இங்கேயும் எட்டாக விளைந்து
2.எட்டாகத் தான் வெளியே சென்றாலும் உணர்வின் ஒளியாக மாறும் பொழுது ஈரெட்டு பதினாறு… என்றும் பதினாறு
3.துருவ மகரிஷியைத் தான் மார்க்கண்டேயன் என்று காட்டப்பட்டது.

அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் படைத்து ஒளியின் சுடராக இன்றும் மனிதனுக்கு உணர்வின் எண்ண ஒளியாகக் காட்டிக் கொண்டிருப்பது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவத்தின் நிலைகளைத் தான் கதைகளாக எழுதி இந்த உணர்வினை எட்டும் நிலைகளில் அதைத் தனக்குள் சிருஷ்டிக்கும் அந்த என்றும் பதினாறு… ஒளியின் தொடராக… ஒளியின் சுடராகப் பெற்றதை மார்க்கண்டேயன் கதையாகத் துருவ மகரிஷியினைக் குழந்தையாகக் காட்டி… அது வளர்த்துக் கொண்ட நிலையை… அகஸ்தியனின் வாழ்க்கை நிலைகளைச் சித்தரித்துக் காட்ட மார்க்கண்டேயனைக் காட்டினார்கள்.

இது எல்லாம் மெய் உணர்வுகள்…! ஆனால் நான் படிக்காதவன்… எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு இதைச் சொல்லவில்லை. ஞானிகளுடைய உணர்வுகளைக் கவர்ந்து… உணர்ந்து… அதைத்தான் வெளிப்படுத்துகின்றேன்.

1.குருநாதர் எனக்குக் காட்டிய அருள் உணர்வுகளை அந்த வித்தினை உங்களுக்குள் பரவச் செய்யும் பொழுது
2.இதை நீங்கள் நினைவு கூர்ந்து எடுத்தால் உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கின்றோம். ரோட்டிலே நாம் செல்லும் போது ஒருவர் “ஐயா பசிக்கிறது…” என்று சொல்கின்றார். அந்த வேதனையை நாம் நுகர்கின்றோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

எந்த வேதனை கொண்டு அந்தச் சோக குரலிலே அவர் வெளிப்படுத்தினாரோ சோக உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக நம் உடலில் விளையத் தொடங்குகிறது… இது சிவமாகின்றது.

இன்னொரு பக்கம் கோபமாக ஒருவர் உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றார் அதை நாம் கண்களில் பார்க்கின்றோம்.. “ஓம் நமச்சிவாய…” நம் உடலில் இது இணைகின்றது. அடுத்தாற்போல்
1.வீட்டில் நம் குழந்தை ஏதாவது சொன்னபடி கேட்கவில்லை என்றால்
2.இந்த உணர்ச்சிகள் தூண்டி அவனை உதைக்கும்படி செய்கிறது.

இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் சேர்த்துச் சேர்த்து சிவமாகின்றது (உடலாக்கப்படுகிறது). ஆனால் மனிதனாக ஆன நிலைகள் பரசுராம்…!

ரோட்டிலே வேதனைப்படுகின்றார் என்று தான் உதவி செய்தோம். ஆனால் அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.அந்த வேதனைப்பட்ட உணர்வுடன் இதைச் சேர்த்து அதைத் தணித்தல் வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் அணுவாக மாற்றுதல் வேண்டும்.. இதை உடலாக மாற்ற வேண்டும்.

சொல்து அர்த்தமாகிறதல்லவா….!

ஆக அது போன்ற சந்தர்ப்பங்களில் நம் நினைவுகள் எப்படி இருக்க வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர்கள் வேதனையில் இருந்து விடுபட வேண்டும் என்று “இந்த உணர்வின் ஒலியைப் பரப்புதல் வேண்டும்…” (இது முக்கியம்)

வேதனைப்படுகிறார் என்று உணவு கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு உதவியாக இருக்கும். அன்று ஒரு நேரம் தான் அது பசி அடங்கும் அடுத்து அவனுக்கு நாம் நிவர்த்தி செய்ய முடியுமா…? முடியாது.

ஆகவே அவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.அவருடைய வேதனை உங்களுக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவாய்… உன் எதிர்காலம் சிறந்து இருக்கும்… நீ நன்றாக வாழ்வாய் என்ற
3.இந்த ஞான வித்தை அங்கே போட்டு விட வேண்டும்.
4.அவனுக்கு அந்த எண்ணம் வந்து அதை எண்ணினால் அவனுக்கு அது கிடைக்கும்.
4.எண்ணவில்லை என்றால் அவனுக்கு அது கிடைக்காது… ஆனால் இந்த வித்தை நாம் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே போன்றுதான் நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழகி வரும் பொழுது நண்பர் நோய்வாய்ப்பட்டு விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் என்ன செய்கின்றோம்…? என்ன…? ஏது…? என்று விசாரிக்கின்றோம்.

உயிரிலே பட்டபின் நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அப்போது சோர்வடைச் செய்யும் அணுவாக உடலில் விளைந்து விடுகின்றது. மனித உடலில் விளைந்தது அவர்கள் எத்தனை வேதனைப்பட்டார்களோ அதை எடுத்து நமக்குள் மீண்டும் விளையத் தொடங்குகிறது.

விளையாதபடி தடுக்க வேண்டும் என்றால் அவருடைய நோயைப் பற்றி விசாரித்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைத்துக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு நிமிடமாவது இவ்வாறு எண்ணிப் பழகுதல் வேண்டும் செய்து முடிந்த பின் நண்பனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும்… என்று எண்ணிவிட்டு “நீ நலம் பெறுவாய்…” என்று வாக்கினை அங்கே பதிவு செய்ய வேண்டும்.

இப்படிச் செய்யப்படும் பொழுது அருள் உணர்வு கலந்து வலிமை பெற்றதாக நமக்குள் சேர்கின்றது. அதை நீங்கள் எடுப்பதற்கு இந்த உபதேசத்தின் வாயிலாக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

திட்டியவனைத் திருப்பி எண்ணும் பொழுது பதட்டமும் கோபமும் வருகிறது. அதே போன்று அந்த அருள் ஞானிகள் சக்தியைப் பெறுவதற்கு உங்களுக்குள் இப்போது பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
1.திருப்பி நீங்கள் அதை நினைவாக்கும் பொழுது கண்ணுக்கு வருகின்றது
2.அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கின்றீர்கள்.
3.எடுத்து உங்கள் குணங்களுக்குள் இதனைக் கலந்து பழகுதல் வேண்டும்
4.அப்படிக் கலந்து பழகினால் தான் வரும் தீமைகளை அடக்க முடியும்.
5.இதை உங்கள் உடலாக… சிவமாக ஆக்க வேண்டும்.

நோயைப் பற்றி விசாரித்துத் தனித்த நிலையில் எடுத்துக் கொண்ட பின் அதற்கப்புறம் வீட்டிற்குச் சென்று நண்பர் நன்றாக வேண்டும் என்று நினைத்தோம் என்றால் அது சரியாக வராது.

ஏனென்றால்
1.முதலில் கேட்டுப் பதிவானது உடலில் அணுவாக விளையத் தொடங்கும்
2.இரண்டாவது… அதை சரி பண்ணிக் கொண்டு வர முடியாது.

ஒரு செடி விளையப்படும் பொழுது அந்தச் செடியுடன் உரத்தை இணைத்து விட்டால் நன்றாக இருக்கும். அது போல் தீமை நமக்குள் வளராதபடி தடுக்க வேண்டும் என்றால் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அது தான் வாழ்க்கையே தியானம் என்று சொல்வது…!

துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் பொழுது தீமைகள் நமக்குள் உருவாகாதபடி உடனுக்குடன் தடுக்கப்படுகிறது.

எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் அதிலே முதலில் நாம் கேட்டது அல்லது பார்த்தது தவறிப் போய் உடலுக்குள் அணுவாக உருவாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.ஆனால் அது விளைவதற்கு முன் ஒரு இரண்டு நிமிடமாவது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சேர்த்து அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

வளர்ச்சிக்குக் காந்த சக்தி மிகவும் அத்தியாவசியம்

 

உதாரணமாக ஒரு டேப்பின் நாடாவிலே நாம் பதிவு செய்யும் பொழுது அதற்குள் காந்தப்புலன் இருக்க வேண்டும். நாம் எடுக்கும் உணர்வை அது ஈர்க்கும் ஆற்றல் இருந்தால் தான் அதிலே பதிவாகும்.
1.அந்தக் காந்தப்புலனுக்குள் மற்ற உணர்வின் சத்தைக் கலக்கப்படும் பொழுதுதான் உணர்வின் எண்ண அலைகளை அதற்குள் பதிவு செய்கின்றது.
2.காந்தம் இல்லை என்றால் ஈர்க்கும் திறன் இழக்கின்றது.

ஒரு குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. குளவிக்குள் இருக்கும் விஷத்தின் அமிலத்தை அது கொட்டும் பொழுது “புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன்” அதைக் கவர்ந்து கொள்கின்றது.
1.விஷத்தின் துடிப்பின் நிலைகள் கொண்டு
2.புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் துடிக்கும் நிலையான இயக்கத்தின் தன்மை கொண்டு வருகின்றது.

ஒரு மத்தாப்பை நாம் நெருப்பை இட்டுக் கொளுத்தினோம் என்றால் அதில் சேர்த்துக் கொண்ட உணர்வின் பொறிகளுக்கொப்ப ரூபங்கள் பல பல நிலைகளாக மாறுகிறது.

அதைப் போன்று… பொதுவாக உயிரினங்கள் தாவர இனத்தை மணமாக எடுத்துக் கொண்டாலும் அந்த மணத்தின் சத்தின் தன்மையை…
1.தனக்குள் நுகர்ந்த சத்தை… உணர்வை… ஒலி ஒளியாக உயிரினங்கள் வளர்க்கும் நிலைகள் கொண்டு
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப விஷத்தன்மையாக வளர்க்கப்பட்டு
3.அந்த விஷத்தைத் தான் குளவி புழுவின் மீது கொட்டுகிறது.

அப்பொழுது புழுவின் உடலில் இருக்கும் காந்த செல்கள் அந்த உணர்வுகளைக் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப “உயிரின் ஓட்டத்தால் காந்தப் புலனின் இயக்கத் தொடர்கள் வரிசைகளில் இயங்கப்படும் பொழுது” இந்த உணர்வுக்கொப்ப உணர்வின் இயக்கங்கள் அந்த உடலில் இருக்கும் உறுப்புகளை அதனை அமைக்கின்றது.

ஆகவே எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொரு செயலின் தன்மையும் அமைகின்றது.

இதனால் தான் குளவி புழுவை எடுத்து அதற்குள் நஞ்சைப் பாய்ச்சும் போது அதனுடைய துடிப்பைத் தாங்காது “நினைவலைகளைக் குளவியின் பால் செலுத்துகின்றது புழு…”

குளவி தனக்குள் சுரக்கும் உமிழ் நீரை மண்ணிலே கொட்டி மண்ணைப் பிசைகின்றது. அதற்குள் தன்னுடைய சப்தத்தை டைங்…டைங்…டைங்… டும்…டும்…டும்… என்ற நிலைகளிலே இந்த உணர்வின் நாதங்களைப் பதியச் செய்து குளவி தன்னுடைய நினைவலைகளை… தன்னுடைய ஒலிகளைப் பரப்பச் செய்கின்றது.

கல்லானாலும் சரி… மணலானாலும் சரி… அது அது தனது காந்தப்புலனின் நிலைகள் கொண்டுதான் தன் உணர்வின் சத்து எதனுடன் எது கலந்ததோ அது தனக்குள் இட்டு பூமியின் காந்தப்புலனுடன் ஐக்கியமாகி அந்த ஐக்கியத்தின் தொடர் கொண்டு அது வளர்கின்றது.

அதைப் போல மண்ணுக்குள் அது தனித்திருந்தாலும் குளவி தனக்குள் எடுத்துக் கொண்ட தாவர இனச் சத்தைத் தன் உடலாக மாற்றினாலும்
1.உணர்வின் ஒளி ஒலி என்ற நிலைகள் கொண்டு அது வடித்து
2.உணர்வின் நாத ஒலிகளாகச் சுரக்கச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை தன் உணர்வின் தன்மை எதுவோ
3.தன் எண்ணத்தின் நிலைகள் கொண்டு இந்த மண்ணிற்குள் பதிவு செய்து உருட்டுகின்றது.

உருட்டப்பட்ட இந்த மண்ணால் கூடு கட்டும் பொழுது அந்த கூட்டிற்குள்ளும் தன் நாத சுரப்பியின் தன்மையை அது இயக்கச் செய்கின்றது.

நாம் எதையாவது தட்டியவுடனே அதிர்வுகள் எப்படி ஏற்படுகின்றதோ… இதைப் போன்று நாதத்தின் தன்மையை சுருதியால் தட்டிய உடனே அது உருப் பெறும் சக்தியாக “அந்தக் கூட்டைக் கட்டுகின்றது…”

பின் புழுவைக் குளவி தூக்கி வருகின்றது. அது எடை கூட இருந்தாலும் அதைப் பலவீனப்படுத்துவதற்காக ஒரு கொட்டு கொட்டுகின்றது. அதனுடைய துடிப்பைச் சாந்தப்படுத்தித் தன் உணர்வின் நிலைகள் கொண்டு தன் சக்திக்கு மீறிய புழுவையும் தூக்கிக் கொண்டு வந்து கூட்டுக்குள் வைக்கின்றது.

கூட்டிற்குள் வைத்த பின் மீண்டும் தன் விஷத்தின் தன்மையை அதன் உடலில் பாய்ச்சுகின்றது. புழுவின் மேல் தோல் சருகுபோன்று ஆகின்றது அந்தச் சருகிற்குள் புழுவின் தசைகள்… தசைகளை உருவாக்கிய அணுக்கள் இதற்குள் சிக்கிக் கொள்கின்றது.

1.புழுவின் இயக்கத்திற்கு உயிரான துடிப்பின் இயக்கம்
2.அதற்குள் இருக்கக்கூடிய காந்தம்… அது வெப்பம் ஏற்படுத்தும் நிலைகள்… அது இயக்கச் சக்தி
3.இந்த விஷத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது இந்த செல்களின் துடிப்பு கொண்டு உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.

அதிகமான துடிப்பு ஏற்படும் போது கூட்டிக்குள் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் மோதுகின்றது. அந்த மோதலின் தன்மை கொண்டு இயக்கச் சக்தியினைத் தொடர்ந்து
1.புறநிலையில் பறக்கும் காந்தப் புலனின் சக்தியைத் தனக்குள் எடுத்து உயிரின் ஊட்டச்சத்திற்கு தனக்குள் இயக்கச் சக்தியைச் சமநிலைப்படுத்தி
2.அது எடுத்துக் கொண்ட உணர்வின் நிலையைத் தனக்குள் வெப்பமாக எடுத்துக் கொண்டு
3.புழுவின் உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க காந்தப்புலனின் செல்களில் குளவியின் சத்தான விஷத் தன்மைகள் பட்டதனால்
4.புழுவின் தசைகள் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு ஆவியாக மாறி
5.ஆவியின் தன்மை மீண்டும் உயிரின் காந்த ஈர்ப்பிற்குள் வந்து இது உறைந்து
6.அந்த உணர்வின் பொறிகளுக்கொப்ப செல்கள் விளைந்து குளவியின் ரூபம் பெறுகின்றது.

இப்படிக் குளவியாக ரூபம் பெற்றபின் தாய்க் குளவிக்கு எப்படி உமிழ் நீர் சுரந்ததோ அதைப் போன்று இதற்குள்ளும் உமிழ் நீர் சுரக்கின்றது. அதனின் துணை கொண்டு அடைப்பட்டிருந்த மண் கூட்டினை இளக வைத்து… குடைந்து… துவாரமிட்டு… தன்னிச்சையாக குளவியாக வெளியே வருகின்றது.

ஆனால் இதற்கு யார் சொல்லிக் கொடுத்தது…? யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.

அந்தத் தாய்க் குளவி எதைச் செய்ததோ மீண்டும் இந்தக் குளவி அதையே செய்யத் தொடங்குகிறது. “அதற்குள் இருக்கக்கூடிய உணர்வின் இயக்கம் தன் நினைவலைகளை இயக்கி அவ்வாறு அதைச் செய்யச் செய்கின்றது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவருக்கு நன்மைகளைச் செய்கின்றோம்… அதனால் நாம் சந்தோஷப்படுகின்றோம். ஆனால் நம்மிடம் உதவி பெற்ற அந்த மனிதனோ அவருடைய சந்தர்ப்ப பேதத்தால் தவறு செய்கின்றார் அல்லது வேதனைப்படும்படியாக ஒரு செயலைச் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

வேதனை என்பதே விஷம். விஷத்தை உட்கொண்டால் எப்படி மயங்கச் செய்யுமோ இருளடையச் செய்கின்றதோ சிந்திக்கும் தன்மையையும் இழக்கச் செய்கின்றதோ இதைப் போன்று நாம் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் சிந்தனை குறைகின்றது… நம் சொல்லின் தன்மையும் மறைந்து விடுகின்றது.
1.மறைந்த பின் எவ்வளவு தான் நல்ல உபதேசங்களைக் கொடுத்தாலும்
2.சரியான வழியைச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

பாலில் விஷம் பட்டால் குடிப்போரை அது மயங்கச் செய்யும். நல்ல பாலை அதிலே அதிகமாக ஊற்றும் பொழுது அந்த விஷத்தின் தன்மை குறையும்.

அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தக் குடத்தில் உள்ள பால் அனைத்தும் வீணாகி விடுகிறது. அந்தப் பால் முழுவதுமே விஷம் ஆக்கிரமித்துக் கொள்கின்றது.
1.ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்றினால் விஷம் சிறுத்து விடுகிறது
2.அந்த விஷம் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது

அது போல் ஆயிரம் நல்ல குணங்களை நாம் எடுத்தால் தான் ஒரு தடவை வேதனைப்பட்ட நிலைகளை நல்லதாக்க முடியும்.

இல்லை என்றால் வேதனை தாங்காது… தாங்குமோ…? அதற்குண்டான மனமில்லை. வேதனையே ஆக்கிரமிக்கும் சக்தியாக மாறுகின்றது வேதனை என்ற விஷத்தை நுகரப்படும் பொழுது கண்களைப் பார்த்தால் கரு நீலமாகத் தெரியும்… ஒளி மங்கியே தெரியும்.

இத்தகைய வேதனைப்பட்டு விட்டால் ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு கணக்கையோ பார்த்துப் படிக்க வேண்டும் என்று
1.அந்த எழுத்துக்களைப் பார்த்தாலும் அந்த எழுத்துக்கள் சீராகத் தெரியாது
2.அதைப் படித்தாலும் சிந்திக்கும் தன்மை இழந்து தப்புத் தப்பாகத் தான் படிக்க வேண்டி வரும்.

இதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலிமைப்படுத்த வேண்டும்

ஆக… ஒருவருக்கு நாம் பல உதவிகளைச் செய்தாலும் அவர் தவறான வழியில் செயல்படும்பொழுது அதைக் கண்டு நாம் வேதனைப்படுகின்றோம்.

சந்தர்ப்பம் அதை நுகரப்படும் பொழுது வேதனை உருவாக்கும் அணுவாக உடலில் உருவாகின்றது அந்த வேதனையான அணு உருவாவதற்கு முன்
1.பிறர் படும் வேதனைகளைப் பார்த்த உடனே
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.புருவ மத்தியில் இடைமறித்து உயிருடன் ஒன்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று சிறிது நேரம் அதை ஈர்க்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா பெற வேண்டும் என்று நினைவின் ஆற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்திய பின்… நம்மை வேதனைப்படும்படி யார் செய்தார்களோ அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும் என்று
1.நாம் அவனைப் பற்றி எண்ணி வேதனைப்பட்ட உணர்வை
2.இவ்வழியில் நமக்குள் இணைத்து அந்த அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.

ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய… நமது உயிர் “ஓ” என்ற ஜீவ அணுவாக மாற்றுகின்றது ஆனால் உற்றுப் பார்த்து வேதனை என்ற உணர்வு வந்தவுடனே விஷத்தின் தன்மை அதிகம்.

ஆனால் அந்த விஷத்தை முறிக்கும் வல்லமை பெற்றது நட்சத்திரத்தின் ஆற்றல்.

உதாரணமாக விஷத்தின் தன்மை ஒரு மனிதனுக்குள் சாடி விட்டால் எருமை மாட்டின் சாணத்தைக் கரைத்து அதன் மீது இரண்டு கால் பாதங்களை வைத்தால் உடலுக்குள் சென்ற விஷத்தை முறித்து விடுகின்றது.

ஏனென்றால் எருமை மாட்டிற்கு விஷத் தன்மை ஜாஸ்தி. விஷத்தைத் தன் உடலாக ஆக்கிக் கொண்டு நல்லதை அதனுடைய சாணமாக மாற்றுகிறது.

இது எல்லாம் வைத்தியர்கள் தான் கொடுக்கும் மருந்துகளில் பேதிக்கோ மற்ற நிலைகள் அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த நிலை ஆகிவிடும்
1.அப்பொழுது எருமை மாட்டுச் சாணத்தை கரைத்து அதில் சிறிது நேரம் பாதத்தை வைக்கும்படி செய்வார்கள்… அதை முறித்து விடும்.
2.உள்ளுக்குள் சாப்பிட வேண்டியதில்லை… பாதத்தில் வைக்கப்படும் பொழுது அதை முறிக்கும் ஆற்றல் வருகிறது
3.எருமை மாட்டு சாணத்திற்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உண்டு
4.நஞ்சினை மாற்றிடும் சக்தியாக அதனுடைய சாணம் வெளிப்படுகிறது

வேதனைப்படும் உணர்வுகளை நாம் எப்போது நுகர்கின்றோமோ அல்லது செவிகளில் கேட்கின்றோமோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தி கண்கள் உற்று நோக்கும்… அதே வேதனை உணர்வை நுகரச் செய்யும்

உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் சுழலத் தொடங்கும். உடல் முழுவதும் அந்த வேதனை சுழலப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களின் அணுக்களிலும் இது சாடி விடுகின்றது.

விஷம் ஊடுருவி எதிலும் கலந்துவிடும்
1.நல்ல குணங்களை அதற்குப்பின் என்னதான் எண்ணி எடுத்தாலும் இந்த விஷம் அந்த நல்ல குணங்களை அடக்கிவிடும்.
2.நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சரி வேதனைப்படும்படி ஒரு சொல்லைச் சொல்லி விட்டால்
3.அடுத்தாற்போல் “அவர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்… விட்டு விடுங்கள்… என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா…!
4.உங்களுக்கு என்ன தெரியும்…? என்பீர்கள்.

இது எல்லாம் இயற்கையின் நியதிப் பிரகாரம் இந்த உணர்வின் செயலாக்கங்கள் இப்படித் தான் இயக்கும். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இத்தனை விளக்கங்களையும் சொல்கிறோம்.

பெரும்பகுதியான மகரிஷிகள் சீடர்களின் உந்து விசையால் தான் விண் சென்றுள்ளார்கள்

 

குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களைக் குலதெய்வங்களாக எண்ணிக் கூட்டு குடும்ப தியானங்கள் செய்து… சப்தரிஷி மண்டலத்துடன் அவர்கள் இணைய வேண்டும் என்று அடிக்கடி இவ்வாறு எண்ணி விண் செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் புலனறிவுகளை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றுவதற்குத் தான்
2.பௌர்ணமி அன்று உங்களை விண்ணை நோக்கி எண்ணச் செய்து இந்த ஆற்றல் பெறும்படி செய்கின்றோம்.

உங்கள் உயிரை ஈசனாக எண்ணி அந்த உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை நான் பிரார்த்தித்து
1.விண்ணில் எட்டாத் தூரத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் எண்ண அலைகள் கலக்க வேண்டும் என்று
2.இந்த உணர்வினை உந்தப்படும் போது உங்கள் புலனறிவுகள் விண்ணை நோக்கி ஏகுகின்றது.

அப்போது… மனிதனாகி உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பால் “உங்கள் எண்ணங்கள் ஊடுருவிப் பாய்கின்றது…”

அவ்வாறு எட்டிப் பாயப்படும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்ற இந்த நினைவினைக் கூட்டி நமக்குள் பழக்கப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழக்கப்படுத்தினால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தச் செய்து அங்கே இணையச் செய்யும் பொழுது… இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாய்த்துவிட்டு ஒளியின் சரீரமாக மாறிச் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்துடன் அவர்கள் சுழல்வார்கள்.

அவ்வாறு சுழலச் செய்த பின் மீண்டும் அடிக்கடி இந்த நினைவினைக் கூட்டி விண்ணை நோக்கி எண்ணும் பொழுது நம் உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெருக்கி
1.அதே உணர்வின் எண்ண நிலைகள் மிதக்கும் நிலையாக புவியின் ஈர்ப்பிலிருந்து மிதக்கப்படும் பொழுது
2.நாம் அனைவரும் ஒன்று சேர்த்த உணர்வின் தன்மை கொண்டு சப்தரிஷி மண்டலத்தை எண்ணி
3.அவ்வாறு ஏங்கிய உணர்வின் எண்ணங்களை “உந்து விசையாக உந்தி”
4.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மக்களை அந்தத் தருணத்திலேயே நாம் அனைவரும் சேர்ந்து விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.

அப்படி விண்ணுக்குச் செலுத்தினால்தான் அந்த ஆத்மா அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

எந்த ஞானியானாலும் எந்த மகரிஷியானாலும் தன் உடலுக்குள் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்கினாலும் அந்த உணர்வின் ஆற்றலாக மற்றவருடைய உள்ளங்களிலே அதைப் பதிவு செய்து… அவர்கள் தீமைகளை நீக்கி மகிழ்ச்சியூட்டும் உணர்வின் எண்ண வலுவை அங்கே பெருக்கச் செய்து… மெய் வழியின் உணர்வுகளை வளர்க்கச் செய்து… “அதன் வழி தான் விண் சென்றார்கள்…”

1.போகனோ அகஸ்தியனோ வியாசகரோ வான்மீகியோ இது போன்ற மெய்ஞானிகளோ
2.மனித உள்ளங்களில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்து வளர்த்துக் கொண்டு
3.அவர்கள் வெளியிலே செல்லும் பொழுது சீடனின் தன்மை கொண்டு விண்ணிலே உந்தித் தள்ளி
4.அந்த உணர்வினைப் பெறும் தகுதியை ஏற்படுத்திவிட்டுச் சென்றார்கள்.

அவர் வழியிலே தான் நாமும் அங்கே சென்றடைய முடியும். ஆகவே அவர்கள் காட்டிய நல்வழியிலே நாமும் செயல்படுவோம்… விண் செல்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வைரம் எவ்வாறு நஞ்சின் தன்மை எதுவாக இருப்பினும் அது ஒளியாக மின்னுகின்றது. நஞ்சின் தன்மை இதற்குள் உயிர் ஊட்டுகின்றது.

ஒரு பாம்பினம் தன் நஞ்சினைப் பாய்ச்சியே மற்ற உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றது. அதன் வழியில் நஞ்சினைப் பெருக்கிய பின் அந்த நஞ்சே வைரக் கல்லாக… நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் வாழ்வில் எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் அருள் ஞானிகள்.

அந்த நஞ்சினை அடக்கிய அருள் ஞானியின் உணர்வைப் பெறும் நிலையாக..
1.கூர்மையாக விண்ணை நோக்கி நாம் ஏங்கி
2.அந்த ஞானிகளின் உணர்வின் சத்தைப் புத்திரனாக்கி
3.அதனுடைய நிலைகள் பெற வேண்டுமென்ற பாசத்தின் உணர்வுடன் உந்தி… அதைக் கயிறாக மாற்றி…
4.உயிருடன் ஒன்றி அந்த அருள் ஞானி உணர்வுடன் நாம் சேர்ந்தே இருந்தோம் என்றால் நல்லது.

அப்படி இல்லாமல் ஒரு வேண்டாதவரைப் பார்த்து அவருக்கு அப்படித்தான் வேண்டும்… வேண்டும்…! என்று அவர் படும் வேதனையைக் கண்டு ரசித்தால்… இந்தப் பாசம் என்ன செய்யும்…?

இது அப்படியே கயிறாக மாறும். அவர் எத்தனை வேதனைப்படுகின்றாரோ அதெலெல்லாம் இங்கே சிருஷ்டியாகத் தொடங்கும். இது உங்களுக்கு தெரியாது… யாருக்கும் தெரியாது.

பாருங்கள்…. நான் பேசிக் கொண்டே இருக்கின்றேன்.. அயோக்கியத்தனம் செய்கின்றான் என்பார்கள். ஆக…
1.தான் சொல்வதைச் சொல்லி விட்டு “அவன் அயோக்கியத்தனம் செய்கிறான்..
2.இப்படி இருந்தால் என்னங்க செய்வது…?” என்று அடுத்தவரிடம் நியாயத்தைப் பேசுவார்கள்.

இப்படி இங்கே அந்த உணர்வுகளை நுகர்ந்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும்.

எப்படிப் பாம்பினம் தனக்குள் விஷத் தன்மையைக் கூட்டிக் கொள்கின்றதோ அதைப் போல் இந்த அணுக்கள் உடலில் விளைந்து அதன் துணை கொண்டு அடுத்துப் பாம்பாக நிச்சயம் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

ஆனால் இதனை அடக்கிய அருள் ஞானிகள் உணர்வின் மீது நாம் இச்சைப்பட்டு அதன் உணர்வின் தன்மையை நாமெடுத்தால் நஞ்சை அடக்கிடும் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.

ஏனென்றால் இந்த மனிதனின் வாழ்க்கையில் தண்டனைக்குரியது எது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1.ஒருத்தர் மேல் வெறுப்பாகும் பொழுது அது எந்த அளவுகோலுக்கு அதிகரிக்கின்றதோ அவர் படும் துயரமெல்லாம் தனக்குள் வரும்.
2.பாசத்தால் அன்பால் பரிவால் இப்படி வேதனைப்படுகின்றானே…” என்று அடிக்கடி எண்ணினால்
3.அதன் கணக்கின் பிரகாரம் அதுவே தண்டனையாகக் கிடைக்கும்.
4.எடுத்துக் கொண்ட அந்த நஞ்சான உணர்வு கொண்டு அடுத்த உடலைப் பெறுவோம்.

புலி இரக்கமற்று மற்றதை அரக்கத்தனமாகக் கொன்று விழுங்குகின்றது. இதைப் போல தன் வலுவின் தன்மை கொண்டு மற்றவரைப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்பட்டால் அதன் கணக்கு அதிகமாகக் கூடி விட்டால் அடுத்து புலியாகப் பிறப்பாய்…! சித்திர புத்திரன் கணக்குப் போட்டு இவ்வாறு காண்பிக்கின்றான்…! என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

அடுப்பிலே பாத்திரத்தை வைத்து… அதிலே எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிச் சமைக்கின்றோமோ… அதனின் சுவையாகத் தான் மாறும். அதைப் போன்று தான் நம் உடலிலும் நிகழ்கின்றது.

மதத்தின் அடிப்படையில் காட்டிய உணர்வை எடுக்கப்படும் பொழுது நல்ல நேரம்… கெட்ட நேரம்..! என்று. எழுதி வைத்ததைக் கேட்டறியப்படும்போது “உனக்கு இப்பொழுது “ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது…!” என்றால் அதை மனதிலே பதிய வைத்துக் கொள்கின்றோம்.

அதன்படி எண்ணி… அதையே சிருஷ்டித்து… காலங்களையும் நேரங்களையும் நமக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றோம். கெட்ட நேரம் என்று பதிவாக்கி… அந்தக் கெட்டதையே உருவாக்கி விடுகின்றோம். (கேட்டால் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… என்று சொல்லி அதையே ஏற்றுக் கோள்வோம்)

இப்படி அவன் கொடுத்த காலத்தை நமக்குள் சிருஷ்டிப்பது போல்
1.தீமையை அகற்றிடும் உணர்வை… தீமைகளை அகற்றிய மகரிஷிகளின் உணர்வை
2.நமக்குள் இணைத்திடும் பழக்கம் வந்து விட்டால்
3.எந்த நேரமானாலும்… தீமையில்லாத உலகை நாம் சிருஷ்டித்து விடலாம்.

ஏனென்றால் இனி வரும் எதிர்காலத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அது நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகி… அதன் மேல் பாசத்தைச் செலுத்தி… அதையே வளர்த்திடல் வேண்டும்….!

எதை நமக்குள் காயத்ரி ஆக்க வேண்டும்…?

 

1.கண்ணுக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா…!
2.அதிலிருந்து நாம் எண்ணி எடுப்பது ஆத்மா
3.அந்த உணர்வுகள் எனக்குள் விளைவது ஜீவாத்மா
4.விளைந்த உணர்வுகள் எதனெதன் உணர்வுகள் எனக்குள் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணினேனோ
5.இந்த உணர்வின் ஆற்றலுடைய நிலைகள் என் உயிருடன் சேர்த்து நினைவுடன் இயக்கக்கூடிய ஆற்றலாக
6.ஒரே இயக்கமாக வருவது காயத்ரி நான்காவது – உயிராத்மா.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் தனக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது.

இறைவா என்று சொல்லும் பொழுது எதை இறையாக்க வேண்டும்…? எதை நாம் காயத்ரி ஆக்க வேண்டும்…?

காயத்ரி என்றால் உயர்ந்த எண்ணங்களை எண்ணி எடுக்க வேண்டும். பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா காயத்ரி. நாம் விளைவித்த உணர்வின் தன்மையை இயக்கிக் காட்டுவது தான் காயத்ரி.

சூட்சமத்தில் நடக்கக்கூடிய நிலைகள் சூரியனைப் பற்றியது.
1.உயிருடன் இணைந்து இயக்கும் நிலையில் சூரியனுடைய நிலைகள் உயிரின் தன்மையாக மாற்றி
2.மற்றதனுடன் கலந்து இயக்கும் நிலைகள் காயத்ரி… ஆக உருப்பெறும் சக்தியாக மாறுகின்றது
3.மனிதனுடைய எண்ண உணர்வுக்குள் ஒன்றுக்குள் பட்ட உடனே காயத்ரி.

ஆனால் அழிக்கும் உணர்வாக காயத்ரி ஆக மாற்றப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை அதர்வண வேதத்தில் தத்துவத்தை அப்படி மாற்றி விட்டார்கள்

அழிக்கும் உணர்வைத் காயத்ரியாக்கி மந்திர ஒலியாகத் தனக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் அலையாகத் தனக்குள் இயக்கி மந்திரம் என்ற நிலையில் கொண்டு சென்று விட்டார்கள்.

காயத்ரி மந்திரம் பெரும்பகுதி எதற்கு உதவுகின்றது…? அதர்வண வேதத்திற்குப் பயன்படுகிறது. அதர்வண வேதத்தில் சிருஷ்டிக்கும் தன்மை உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பச் செய்து அதனின் நிலைகள் கொண்டு கவர்வது தான்… உண்மையை அவர்கள் உணராதவர்கள் அல்ல.

ஆனால் மனித வாழ்க்கை பிரதானம் என்கிற பொழுது நமக்குள் படைக்கும் தன்மை இங்கே எதிலே படைத்து பக்தியில் நாம் எங்கே செல்கிறோம்…? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.பக்தி என்பது நல்லது தான்
2.அதிலே நல்லதைக் காக்கும் திறன் இல்லை என்கிற பொழுது மெய் வழியை இழந்து விட்டு
3.இருள் சூழும் நிலையில் சிக்கி அதிலே தான் செல்ல வேண்டி வரும்.

இதிலிருந்து விடுபடுவதற்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். நமக்குள் எண்ணியதை அவன் ஈசன் படைத்து விடுவான்… பிரமமாக இருந்து நமக்குள் சிருஷ்டிப்பவன் அவன் தான்.

ஆகவே நாம் எந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்…? பிரம்மத்தின் சக்தியாக எதைத் தனக்குள் வளர்க்க வேண்டும்…? என்ற நிலையை நிலைப்படுத்தி காற்றிலே படர்ந்திருக்கும் மகரிஷிகள் உணர்வுகளை எடுக்கும் திறனுக்கு நாம் வர வேண்டும்.

உணவை எடுத்து நாம் சாப்பிடுவதற்குக் கைகள் வேண்டும் கைக்குண்டான வலுப்பெற வேண்டும். வெறுமனே பார்த்து அல்லது எண்ணி அதைச் செயல்படுத்த முடியாது.

1.காற்றுக்குள் படர்ந்து இருக்கும் ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஞானிகளின் ஆற்றல்மிக்க வித்துக்களை நமக்குள் பெருக்கித் தான் அதைக் கவர்ந்து எடுத்துக் கொள்ள முடியும்.

வேப்பமரம் தன் உணர்வின் ஆற்றல் வலுக் கொண்டு இருக்கும் போது தான் அந்தக் கசப்பான உணர்வை… மற்ற உணர்வுகள் படர்ந்திருந்தாலும்… தனக்குள் அந்தக் கசப்பினைப் பிரித்து அதனின் உணர்வின் சத்தாக விளைய வைத்துக் கொள்கின்றது.

ரோஜாச் செடியை எடுத்துக் கொண்டால் தன்னுடைய சத்தின் தன்மை இந்த காற்றுக்குள் படர்ந்து இருந்தாலும் அந்த விஷத்திற்குள் இருந்து தான் நறுமணத்தின் தன்மை கவர்ந்து வளர்த்து அந்த நறுமணத்தினை நமக்கு ஊட்டுகின்றது.

இதைப் போன்று நமக்குள் ஆயிரக்கணக்கான குணங்கள் இருந்தாலும் வேதனை ஊட்டும் உணர்வின் தன்மை வரும் பொழுது வேதனையைச் சுவாசித்து உடல் நலியும் தன்மையும் நோயையும் வரவழைத்துக் கொள்கின்றோம். நறுமணத்தின் நல்ல குணங்களைச் சுவாசிக்கும் வலுவை நாம் இழந்து விடுகின்றோம்.

ஆகவே அந்த நறுமணத்தின் நிலைகள் ஆற்றல் மிக்கதாக ஓங்கச் செய்வதற்கு மெய் ஞானிகள் ஆற்றலை நமக்குள் சேர்க்கப் பழக வேண்டும்.

நாம் இதை உணர்ந்து
1.உயிரான ஈசனுக்குள் அதை இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பிரம்மமாகி பிரணவமாகி
2.அந்தப் பிரணவத்தின் தத்துவம் நமக்குள் இயக்கமாகி
3.அந்த உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரமாக ஒளியின் சுடராக என்றும் நிலையான நிலைகள் பெருக்க முடிகின்றது.

இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது நிரந்தரமான ஒளியின் சுடரை நாம் பெற வேண்டும். பொருளை அறியும் உணர்வாகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆகவே விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டது போன்று மிருக உடலிலிருந்து என்று மனிதனாகத் தோன்றினானோ அவன் முழு முதல் கடவுள் – சிருஷ்டிக்கும் தன்மை.

எப்பொழுது மனித உடலில் பெற்றோமோ இயற்கையில் விளைந்ததை நிறுத்திவிட்டு கொழுக்கட்டையாக சுவை மிக்கதாக நாம் சமைத்து சாப்பிடுகிறோம். விநாயகர் சதுர்த்தி என்று அதை நினைவுபடுத்துகின்றார்கள்.

மிருக நிலையில் இருந்து மனிதனாகத் தோன்றிய பின் தனக்கு வேண்டியதைப் படைத்து
1.தனக்குள் சுவை மிக்க வளர்த்துக் கொள்ளும் நிலைபெற்றவன் நீ மனிதா
2.முழு முதல் கடவுள் நீ… சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்ற மனிதன் நீ என்று உணர்த்தினார்கள்.

மூஷிகவாகனா…! எக்குணத்தின் தன்மை சுவாசிக்கின்றோமோ இந்த உடலைச் சுமந்து சென்று அந்த வினைகளாக உருவாக்கும். எதை நினைக்கின்றோமோ நம்மை உருவாக்கும் உயிர் அதை வழிநடத்திச் செல்கின்றது

திருட வேண்டும் என்று நினைத்தால் கண்கள் திருடச் செல்ல வழி செய்கின்றது. திருடனுக்குத் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளையும் இதே கண் வழிகாட்டுகின்றது.

நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய். ஆகவே நீ எங்கே சென்றாலும் என்னை விட்டு நீ பிரிய முடியாது.

நீ திருடச் சென்றாலும் எனக்குள் தெரியும்… பிறருக்கு நன்மை செய்தாலும் எனக்குத் தெரியும்…! எடுத்துக் கொண்ட நிணைவை அதன் வழியைக் காட்டி அதன் வழியே நீ செல்வாய்… அதனின் வழியில் நீ அடுத்த உடலைப் பெறுவாய்…! என்ற
1.கீதையின் மகத்துவத்தை மெய் வழியினை ஒளியின் சுடரை வியாசகர் காட்டி இருக்கிறார் என்றால்
2.அந்த உண்மையின் தத்துவத்தை நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி… அம்மா அப்பா அருளால் நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களையும் “ஒன்றாகச் சேர்த்து”
2.உங்கள் கண்ணின் வழி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வை
3.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கி இருங்கள்.

அதைப் பெற வேண்டும் என்ற இச்சைப் பட வேண்டும். அந்த உணர்வை உங்களுள் கிரியையாக்கி… ஞானத்தின் வழி உங்கள் வாழ்க்கையை வாழ இது உதவும்.

1.உங்கள் உடலுக்குள் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த கண்ணின் ஈர்ப்பிற்கே வரும்….!

அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் ஈர்ப்புக்கு வரும்போது உங்கள் கண் “கனமாக” இருக்கும் வெகு தொலைவில் இருந்து வரக்கூடிய உணர்வை… எண்ணி ஏங்கும்போது…! அது நம் பூமியில் படர்ந்து வருவதை எளிதில் பெற முடியும்.

யாம் (ஞானகுரு) பதிவாக்கிய அந்த உணர்வின் தன்மை பெறச் செய்யும்போது.. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் நோக்கத்துடன் ஏங்கித் தியானியுங்கள் ஒரு இரண்டு நிமிடம்.

இப்பொழுது அந்தச் சக்திகள் உங்கள் கண்ணுக்கே வரும்.
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்துங்கள்.
2.கண்ணை மூடுங்கள்….!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களை இயக்கி கொண்டிருக்கும் “உயிரான ஈசனிடம்” இந்த உணர்வைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செலுத்துவதனால் உங்கள் உடலுக்குள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை போன்ற வேண்டாத உணர்வு கொண்ட அணுக்கள் இருந்தால்
1.அவைகளுக்கெல்லாம் ஆகாரம் செல்லாதபடி
2.உங்கள் இரத்தத்தில் மாசுபடும் நிலை வராதபடி தடுக்க இது உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தி வரப்படும்போது இப்பொழுது கனமாக இருக்கும். சிலருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் உங்கள் புருவத்தில் மோதும்போது ஒளிக் கற்றைகள் தெரிய வரும்.

எனக்கு குருநாதர் எப்படிச் செய்தாரோ அதன் வழிப்படியே உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி உங்களுக்கும் அந்த அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அதன் வழியிலேயே நீங்கள் கவருங்கள்.

இப்பொழுது..
1.உயிர் வழி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிலிருந்து வரும் பேரருளை அது கவருகின்றது
2.உங்கள் உயிரின் தன்மை அது வலுப் பெறுகின்றது.
3.தீமைகள் புகாது தடைப்படுகின்றது.

உங்கள் மனதில் அமைதி கிடைக்கும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் நல்லவை எல்லாம் கேட்டறிந்தாலும் இந்த உணர்வுகள் இயக்கணுவாக… உங்கள் இரத்ததில் வந்தவுடனே ஜீவணுவாக மாறுகின்றது.

உங்கள் கண்ணின் நினைவினை அந்த ஜீவணுக்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும்போது இந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த உடலில் உள்ள ஜீவணுக்களும் அதைப் பெறுகின்றது.

“ஜீவான்மா…!” இன்னொரு உடலில் விளைந்தது ஆன்மா…! நீங்கள் பாசத்தோடு பண்போடு பிறருக்கு உதவி செய்தாலும் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அவர் உடலில் விளைய வைத்த அந்த வேதனை விஷத் தன்மை கொண்டு உங்கள் உடலுக்குள் வருகின்றது.

ஆக… அந்த ஆன்மாவுக்கு அது மாற்ற முடியாது…. மாற்றத் தெரியாது.

விஷமாக இருப்பதனால் இந்த இரத்தத்தில் இருந்து இரத்தத்தையே மீண்டும் மாசுப்படுத்தி அதனால் வந்த ஜீவணுக்களுக்கு ஆகாரம் கொடுத்து அதை வளர்க்கும் அதன் உணர்வே உங்கள் செயலில் வரும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது உங்கள் உடலில் புது உணர்ச்சி அந்த இரத்த நாளங்களில் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து.,.. எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்

1.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள் அந்தச் சக்தி பெற
2.அந்த அணுக்களை எண்ணி நான் (ஞானகுரு) ஏங்கித் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதே போல் எண்ணி ஏங்கும் பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் சந்தர்ப்பமும்…
2.அதைக் கவரும் சக்தியும்
3.அது வளரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். உங்கள் உடலைச் சுற்றி “ஒரு வெளிச்சம் வரும்…!”

குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில்” நாம் செல்ல வேண்டும்

 

மனித உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு உணர்வின் தன்மை உயர்ந்த உணர்வின் சக்தியாக மாற்றக்கூடிய ஆற்றல் ஒவ்வொரு உடலிலும் சிறுகச் சிறுக வளர்ச்சி பெற்று மனிதன் தீயதை நீக்கி ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெறுகின்றான்.

இதனைக் கடவுளின் பத்து அவதாரங்கள் வராக அவதாரத்தில் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் பன்றித் தலையை போட்டுத் தெய்வமாகக் காட்டப்பட்டு கும்பிடச் சொல்கிறார்கள் என்றால் “அதில் உள்ள உட்பொருளை” நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ச்சி பெற்று வந்தோம்…?
2.ஒவ்வொரு சரீரத்திலும் எப்படி எல்லாம் ஆற்றல்களைப் பெற்று வந்தோம்…? என்று மெய் உணர்வுகளைத் தான் காட்டி இருந்தார்கள்.

ஆனால் அந்த மெய் வழிகளை நாம் காலத்தால் அறிய முடியாது போய் விட்டது. ஆனால் அதை எல்லாம்
1.இப்பொழுது நான் அதைப் பேசுகிறேன் என்றால் அதற்குண்டான தகுதி பெற்றவன் அல்ல.
2.மெய்ஞானியான மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் உணர்வால் மெய் உணர்வலைகளை யாம் காண முடிந்தது.

இருந்தாலும் அதையெல்லாம் அறிந்து கொள்ள அவர் எனக்குப் பல இம்சைகளைக் கொடுத்தார். அந்த இம்சைகளை எல்லாம் மாற்றுவதற்கு மெய்ஞானியின் அருள் ஒளியினை எப்படிப் பெற வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.

1.துன்பங்களைக் கொடுத்து அந்தத் துன்பங்களை மாற்ற மெய் ஒளியினைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.
2.ஆனால் உங்களுக்கோ… துன்பம் ஏற்படும் போது அந்தத் துன்பத்தை நீக்க மெய் ஒளி பெறும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்.

ஆகவே இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

எனக்கு துன்பங்களைச் செயற்கையில் உண்டாக்கித் தான் அந்தத் தீய நிலைகளை நீக்குவதற்கு ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.. எனக்குள் அது வளர்ந்தது.

அது போன்று உங்களுக்குள்ளும் அந்தச் சக்தி வளர வேண்டும் என்பதே எம்முடைய ஆசை.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழி கொண்டு துன்பங்களை நீக்கி அந்த உயர்ந்த ஆற்றல்களை நான் பெற்றது போன்று உங்களை அறியாது வரக் கூடிய துன்பங்களை நீக்க “உங்கள் எண்ணங்களை வளர்த்துக் கொண்டால்” துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தின் நிலைகளை வளர்க்க முடியும்.

என்றும் பேரின்ப நிலையாக பெருவீடான நிலைகள் பெற முடியும் என்பதை உங்களுக்குள் இப்பொழுது தெளிவாகக் கொடுக்கின்றோம். ஆனால் லேசாகச் சொல்கின்றோம் என்று இதை விட்டு விடாதீர்கள்.

விவசாய ஆபீஸில் எவ்வளவு நாளோ பக்குவப்படுத்தி நமக்குக் கொடுத்த வித்தினை அவர்கள் சொன்ன முறைப்படி அதை விதைத்து நீரை ஊற்றினால் இவ்வளவு பலன் தரும் என்று சொல்வது போல்
1.குருநாதரிடம் 12 வருட காலம் அவர் எனக்குள் பதிவு செய்த
2.அதன் மூலம் வளர்த்துக் கொண்ட அருள் வித்தைத் தான் உங்களுக்குள் அருள் வாக்காகப் பதிவு செய்கின்றோம்.

யாம் பதிவு செய்த வாக்குகளுக்குள் உங்களுடைய நினைவலைகளைச் செலுத்திக் கூட்டி காற்றிலிருந்து அந்த ஆற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பெருக்கி அதை வளர்த்துக் கொள்ளும் முறைதான் யாம் கொடுக்கக் கூடிய தியானப் பயிற்சி. ஞானிகள் சென்ற வழியும் அது தான்…!

ஆனால் சாமியிடம் சென்றால் தலைவலி போகும் மேல் வலி போகும் வயிற்று வலி போகும் என்றால் அது வளர்ச்சிக்கு வர முடியாது.
1.சாமி சொன்ன வழிகளில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொண்டால்
2.வலிகள் நீங்கும் என்ற உணர்வை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அது தன்னாலே போகும்.
3.அந்த வழியில் செல்லும் பொழுது இருள் நிற்காது. அந்த இருளை நீக்கிடும் ஒளியின் தன்மை பெற வேண்டும்.

ஆனால் பாத்திரங்களிலே ஓட்டை உடைசலை அப்போதைக்கப்போது ஒட்டி அடைப்பது போன்று… இந்தச் சாமி செய்யும் அந்தச் சாமியார் ஏதாவது செய்வார் என்று சென்றால் அது எல்லாமே கழன்றுவிடும்.

அந்த மாதிரி இல்லாதபடி மெய் ஒளியின் தன்மை உங்களுக்குள் வளர வேண்டும். அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும். உங்களுக்குள் அந்த சக்தி ஓங்கி வளர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நம்மைப் போன்ற பூமியிலே வாழ்ந்த மனிதர்கள் தான் ரிஷித் தன்மையை அடைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள். அவருடைய உணர்வுகளைத் தான் பதிவு செய்கின்றோம்.

ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அனைத்தும் தெரிந்து விட்டேன் என்ற நிலை வந்தால் தான் என்ற நிலை வளர்ந்து விடும். அது போன்று இல்லாதபடி உங்கள் அனைவருக்கும் பதிவு செய்கின்றேன்.

ஒன்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒன்றுக்குள் இணைத்து அதனின் துணையுடன் வளர்க்கப்படும் பொழுது தான் “விண்ணின் ஆற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலை வருமே தவிர”
1.சாமி இவ்வளவு பெரிய ஆற்றல் பெற்று இருந்தாலும்
2.அது எல்லாம் எனக்குள் ஜீரணிக்கும் அந்த “குரு பலம்” கொண்டது தான்.

அதே போன்றுதான் நீங்கள் எந்தக் கரண்டுடன் தொடர்பு கொள்கின்றீர்களோ அதன் நிலைகள் தான் வளர்ச்சி இருக்கும். ட்ரான்ஸ்பாரம் மாறி இருக்கும் போது வேறு லைனில் இணைத்தோம் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் நம்மையும் திசை மாற்றிவிடும்.

ஆகையினால் மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கரண்ட் எத்தகைய லைட்டை நாம் போடுகின்றோமோ அதற்கு தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய முடியும். நமக்குள் எந்த வலுவோ அதை நாம் பெற முடியும்.
1.குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில் நாம் செல்லும் பொழுது தான்”
2.அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைக்க வேண்டும்.

அவருடைய உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. நாம் எடுத்துக் கொண்ட ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று
1.அவர்களை உந்திச் செலுத்தும் பொழுது
2.நேராகச் சப்தரிஷி மண்டலம் போய்ச் சேர்கின்றது.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அவர்கள் கரைத்தவர்கள். அங்கே சென்றவுடன் நம் முன்னோர்கள் மீண்டும் உடல் பெறும் அந்த உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கி விடுகின்றது… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது

கரைத்த பின் அறிவாக இருக்கும் அந்த ஒளி நிலைத்து நிற்கின்றது. அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் அவர்கள் சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதே போன்று குடும்பத்தில் யார் உடலை விட்டுப் பிரிகின்றார்களோ கணவன் இறந்தால் கணவனை முதலில் அனுப்புகின்றோம்… மனைவி இறந்தால் மனைவியை முதலில் அனுப்புகின்றோம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கணவன் முதலில் ஒளியாக ஆன பிற்பாடு மனைவி இங்கே இருக்கும் பொழுது
1.அதே உணர்வுடன் கணவன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி இதை எண்ணப்படும் பொழுது அடுத்து மனைவி உடலை விட்டுச் சென்றாலும் அங்கே சென்று விடும்.
3.அதாவது அந்த உணர்வை எண்ணினாலே “ஆட்டோமேட்டிக்காக மனைவியின் ஆன்மா அங்கே சென்றடைந்து விடும்…”

நாம் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குள் பெருக்குவதற்குத் தான் இப்போது கூட்டாக உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். செய்கிறோம்.
1.இந்தப் பதிவு இல்லை என்றால்
2.அங்கே நாம் யாரையும் அனுப்ப முடியாது.

மனைவி முதலில் பிரிந்தால் மனைவியின் ஆன்மாவைக் கணவன் உந்தி அங்கே சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திய பின் கணவன் இங்கே எண்ணியவுடன் “ஆட்டோமேட்டிக்காக கணவனின் ஆன்மாவும் அங்கே சென்று விடுகின்றது…”

யார் பிரிந்தாலும் முதலில் அவர்களை அங்கே அனுப்பி வைத்து விடுகின்றோம். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.அங்கு இணைந்த பின் அவர்கள் உணர்வு இங்கே இருக்கின்றது.
2.அந்த ஒளியின் உணர்வை இங்கிருந்து நாம் பெருக்குகின்றோம்.
3.பெருக்கிக் கொண்டால் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
4.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சப்தரிஷி மண்டலம் தான் நாம் செல்வோம்.

நண்பர்களுக்குள் நன்மை செய்தான் என்று பாசமாக இருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்பத்தில் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால்…
1.பாசத்தால் எண்ணி “நண்பா நான் போகின்றேன்…” என்று எண்ணினால் நண்பனுடைய உடலுக்குள் தான் அந்த ஆன்மா செல்லும்.
2.அந்த நண்பனும் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தானே… “இப்போது போய் விட்டானா…” என்று எண்ணும் பொழுது அந்த உடலுக்குள் தான் செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

ஆகவே… இதற்கு முன்பு மூதாதையர்களை விண் செலுத்தும் அந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டோம். இப்போது மீண்டும் அந்த ஞானிகள் கண்ட வழியினை “உங்களுக்குள் தொடரும்படி செய்கின்றோம்…”

மனிதனான பின் பிறவி இல்லா நிலை அடைந்தவர்கள் அக்காலத்தில் விண் சென்றவர்கள் தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்” என்று சொல்வது. சப்தரிஷி மண்டலத்திற்குள் கண்ணுக்குப் புலப்படாது ஒளியாக எண்ணிலடங்காதோர் உள்ளார்கள்.

அவர்கள் பல கோடி ஆண்டுகள் ஆகித்தான் ஒளியின் சரீரமாக உள்ளார்கள் “என்றும் பதினாறு” என்று வாழுகின்றார்கள்.
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற சூரிய குடும்பத்தில் இருந்து ஆற்றல்களைப் பெற்றதனால்
2.அதிலே நஞ்சாக வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள்.
3.என்றும் பதினாறு என்று அகண்ட நிலையில் எங்கும் செல்லும் திறன் பெற்றவர்கள்
4.ஒரு எல்லையில் இருந்து தனக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள்.

எந்த எல்லையில் இருக்கின்றார்களோ… துருவத்தை எல்லையாக வைத்து சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் வருவது போன்றது துருவ நட்சத்திரத்தினுடைய வட்டத்தில் அவர்கள் சுழன்று வருகின்றார்கள் சப்தரிஷி மண்டலங்களாக…! மனிதனாகப் பிறந்து வாழ்ந்தவர்கள் தனித்தன்மை கொண்டு வாய்ந்தவர்கள் தான் அகண்ட அண்டம் பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது.

அதிலே எத்தனையோ கோடி ஆண்டுகள் வரப்படும் பொழுது அணுவாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனான பின் நட்சத்திரமாகிக் கோளின் தன்மை அடைந்தது பலர்.

இந்தக் குடும்பங்கள் அழிந்தாலும் அதற்குள் எத்தனை நிலையில் உள்ளது

ஒரு சூரிய குடும்பமே எத்தனை கோடி மைல்கள் எல்லை விஸ்தீரணம் கொண்டது. அதே போன்று அடுத்த சூரியக் குடும்பத்தை எடுத்தாலும் அது எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.

நாம் இந்த 2000 சூரியக் குடும்ப வட்டத்தில் தான் வாழுகின்றோம். ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான் சுழலுகின்றது. இது வேறு 2000 சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய சக்தியை எடுத்துத் தான் வாழுகின்றது.

இப்படி ஒவ்வொன்றிலும்
1.மனிதனாக உருப்பெற்றவன் ஒளியாக மாறிய பின் தனித்தன்மை வாய்ந்ததாகச் செல்லுகின்றது
2.இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாது செல்கின்றது… துருவத்தின் எல்லையில் தான் வாழ்கின்றார்கள்.

ஆகவே என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அடைய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

ஆகவே யாராக இருந்தாலும் நாம் பலருடைய ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்துகின்றோம்… மூதாதையர்களை அனுப்புகின்றோம்.
1.இவ்வாறு செய்து கொண்ட பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால்
2.யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாம் அங்கேதான் செல்கின்றோம்.

தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று இந்த உணர்வை நாம் வளர்க்க வளர்க்க
1.உடலை விட்டு நாம் சென்றால் அங்கே தான் உயிர் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர
2.புவியின் ஈர்ப்புக்குள் இருக்காது…!

இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் ஒரு தொடர்பு வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆன்மாக்களை அங்கே அனுப்புகின்றோம்.
1.எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியம் ஆகும் பொழுது
2.நம் குருநாதர் காட்டியபடி ஒளியின் கூட்டமைப்பாகின்றது.

கால் வலியும் அதனின் பின் விளைவுகளும்

 

வேதனையான உணர்வை அதிகமாக எடுத்தால் அந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.புவியின் ஈர்ப்பில் நடந்து செல்லப்படும் பொழுது
2.நமது கால் பாதங்களிலும் முழங்கால் கீழ் உள்ள பாகங்களிலும் வேதனை உணர்வுகள் அதிகமாகப் பரவுகின்றது.

இதன் உணர்வுகள் கீழ்பாகங்களில் உறையும் தன்மை ஏற்பட்டால்
1.நாளடைவில் நாம் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுதோ படுத்திருக்கும் பொழுதோ
2.இதனின் உணர்வுகள் நமது இரத்தத்திலே கலந்து “மிகக் கடினமாக உறையும் தன்மை கொண்ட நிலையாகி விடுகின்றது…”

இப்படிப்பட்ட துகள்கள் இரத்தத்தில் கலந்து கொண்டால் ஆங்காங்கு இரத்த நாளங்களில் நுண்ணிய பாதை இருக்கும் பாகங்களில் இது உறைந்து நின்றால் அந்தந்த பாகங்களில் உள்ள உறுப்புகளை சீராக இயங்க விடாதபடி தடுக்கும்.

அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்கு உணவு போய்ச் சேராது தடைப்படுத்துவதனால் அந்த உறுப்புகளை உருவாக்கும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது. இதனால் அந்த உறுப்பின் தசைகள் குறைவடைகிறது.

இது போன்ற பிணிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ மருந்துகளைக் கொடுத்து பக்குவங்களைச் செய்து இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றார்கள். விஷம் கலந்த உணவின் உணர்ச்சிகளை இரத்தத்தில் கலக்கச் செய்கின்றனர்.
1.இதன் உணர்வுகள் ஊடுருவி அந்த விஷத் துகள்களை உடைத்தாலும்
2.இயற்கையில் செயல்படுத்தப்பட்ட விஷத்தின் இயக்கங்கள் உடல் முழுவதும் ஊடுருவிச் செல்கின்றது.
3.இரத்தத்தில் உள்ள உணர்வுகளைக் கவர்கின்றது.

ஆக விஷ உணர்வுகள் கொண்டு விஷத் துகள்களைக் கரைத்து விடலாம்.
1.”கரைத்த உணர்வுகள்” இரத்தத்தில் கலக்கின்றது.
2.கலந்த உணர்வோ நமது இருதய பாகங்களுக்குச் செல்லப்படும் பொழுது “அங்கே வலி ஏற்படுகின்றது…”

இங்கே வடிகட்ட முடியாத நிலைகளில் அவை நமது சிறு மூளை பாகம் செல்லும் பொழுது கண்களிலும் இதைப் போன்று உணர்ச்சிகள் தடைப்பட்டு கண்களில் ஈர்க்கும் தன்மை குறைந்து அங்கே அழுத்தம் அதிகமாக உருவாகும் பொழுது நமது கருவிழியில் திரைப்படமாகக் காட்டும் அந்தக் கல்லுக்கு அருகில் இருக்கக்கூடிய உணர்வுகளை இது மறைத்து விடுவதனால் “கண்களிலும் பார்வைக் குறைவு ஏற்படுகின்றது…”

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மையை அதிகமாக நுகர்ந்ததனால்… புவியின் ஈர்ப்பில் நாம் இருப்பதனால் உடலுக்கு வேளை இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுது “வேதனையினால் உருவான விஷத்துகள்கள்” கீழ் நோக்கி வந்து நமது காலின் கீழ் பாகங்களில் உறைகின்றது.

இதைப் போன்ற நிலைகள் நம் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்கும் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட நுண்ணிய பாகங்களுக்கும் சென்றால் அங்கே அழுத்தம் அதிகரித்து அதனுடைய பாகங்களும் அடைப்படுகின்றது.

சிந்தித்துச் செயல்படக்கூடிய மனிதராக இருப்பின் இந்த உணர்ச்சிகள் தேங்கி வரும் பொழுது நுண்ணிய அலைகளைச் சீக்கிரம் கிரகித்து அறியும் தன்மையும் இழக்கப்படுகின்றது.

நமது உடலில் பிற உறுப்புகளை இயக்கும் நுண்ணிய பாகங்களுக்கு ஆணையிடும் சிறுமூளை பாகத்தில் சிறு மூளை பாகத்தில் தடை ஏற்படும் போது நமது இயக்க உறுப்புகள் மிகவும் பலவீனமடைந்து விடுகின்றன.
1.அதனால் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்குச் சீராக உணவு கிடைக்காது அந்த உறுப்பும் பலம் இழந்து விடுகின்றது.
2.இதனால் உடல் நலியத் தொடங்குகின்றது.
3.விஷத்தின் ஆக்கிரமிப்பு அதிகமானால் நமது சிறுநீரகம் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை நிறுத்தி விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…!

உதாரணமாக நாம் ஒரு புலியைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புலியை நுகர்ந்து பார்த்த பின் அதனின் வலிமையைக் கண்டபின் அச்ச உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது.

ஏனென்றால் புலி மிகவும் கொடூரமானது. அதன் உருவத்தைப் பார்த்தால் புலியிடமிருந்து வரும் உணர்வுகளை நுகர்ந்தால் ஓம் நமச்சிவாய. அதாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய உணர்வுகளுக்குள் இது பதிவாகி நமது உடலில் நடுக்கத்தின் உணர்வு வரப்படும் பொழுது நமது உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபடுகின்றது.

1.இந்த நடுக்க உணர்வுகளால் கல்லீரல் வடிகட்டும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அது சமயம் நுரையீரலும் சீராக இயக்குவதில்லை.
3.இயக்க நிலைகள் பதட்டம் அடைவதால் இரத்தத்தில் உள்ள கழிவைப் பிரிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

இப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சீராக இயக்க முடியாத நிலை வருகின்றது.

அதே சமயம் பித்த சுரப்பியில் இத்தகைய விஷத்தன்மை அதிகமாகும் பொழுது பித்த சுரபியின் வளர்ச்சியும் அதிகமாகிறது. பித்தத்தின் தன்மை அதிகரித்தால் அதனுடைய இயக்கமும் அதிகமாகின்றது.
1.அந்த பித்தம் உடல் முழுவதும் பரவி மற்ற அணுக்களையும் நடுங்கச் செய்து பலவீனமடையச் செய்கின்றது.
2.நம்மிடத்தில் சிந்திககும் ஆற்றலைக் குறைக்கின்றது… தலை சுற்றலும் வருகின்றது.
3.ஏனென்றால் பயத்தால் நுகர்ந்த உணர்வுகள் கொண்டு அதற்குத் தக்க அணுக்களை நமக்குள் சேமித்து அதனின் உணர்வை வளர்க்கின்றது.

இப்படி பித்தத்தை நமக்குள் அதிகப்படுத்திப் பழகிவிட்டால் அதிகமான பித்தத்தைச் சுரக்கும் அடுத்த உடலை உருவாக்கி அதன் உணர்வுகளையும் ஜீரணிக்கும் சக்தி கொண்டதாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளை எப்படி மாற்றுவது…?

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். எப்பொழுது தீமை என்று வருகின்றதோ துன்பம் வருகின்றதோ அடுத்த கணமே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய் அணுக்கள் துருவ நட்சத்திரத்தினுடைய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
5.இப்படி ஒரு இரண்டு நிமிடம் அந்த உயர்ந்த சக்தியை எல்லா அணுக்களிலும் பெறச் செய்தோம் என்றால்
6.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த நஞ்சான உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெற விடாதபடி தடைப்படுத்துகின்றது.

தீமையிலிருந்து நாம் விடுபடுகின்றோம். இதை நாம் அவசியம் செய்து பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

போகருடைய தாயை ஒரு விஷம் கொண்ட பாம்பு தீண்டி விடுகின்றது. காளிங்கராயன் என்பவரை போகர் அப்போது அணுகுகின்றார்.

தன் தாயைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அவரிடம் பல பச்சிலை மூலிகைகளை அறிந்து அதை வைத்துத் தன் தாயை எழுப்புகின்றார். விஷத்தின் தன்மை எவ்வாறு ஒடுக்குவது…? என்று அவரிடம் பழகித் தெரிந்து கொள்கின்றார்.

விஷத்தை ஒடுக்கும் உணர்வினைத் தனக்குள் அதன் உணர்வின் அறிவாக தெளிந்த நிலையில் கொண்டு வருகின்றார். போகர். அதன் வரிசையில் தான் பல ஆற்றல்கள் அவருக்குள் பெருகத் தொடங்கியது.

1.நட்சத்திரங்கள் கோள்கள் இயக்கங்களையும் அறிகின்றான்… வான மண்டலத்தையும் அறியத் தொடங்குகின்றான்.
2.இதையெல்லாம் அறிந்த பின் அவன் இன்னொரு கூட்டிற்குள் (உடலுக்குள்) செல்லவில்லை
3.ஒளியின் தன்மையைப் பெருக்குகின்றான்…
4.ஒளியின் தன்மை ஆனாலும் “உந்தித் தள்ளி… விண்ணுக்கு அவனை அனுப்பும் வழி இல்லை…”
5.ஏனென்றால் அதற்குண்டான முகப்பு வரவேண்டும்… இருந்தாலும் அந்த ஒளி அலைகள் வருகின்றது.

குருநாதர் போகரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவன் பெரிய திருடன்… வானத்தையே திருடி இருக்கின்றான்…! ஆனால் விண்ணுக்குப் போகும் வழியைத் திருடத் தெரியவில்லை…! நீயும் ஒரு திருடன் ஏன்று என்னிடம் (ஞானகுரு) சொல்கின்றார்.

அப்பொழுதுதான் இந்த உணர்வின் தன்மை எடுத்து
1.போகருக்கு நீ அந்த விண் செல்லும் பாதையின் உணர்வைச் செலுத்து
2.அந்த உயர்ந்த உணர்வுகளை… நினைவுகளை எடு
3.அவருடன் தொடர்பு கொள்… அந்த உணர்வின் துணை கொண்டு இந்த முகப்பைக் கூட்டு.
4.ஒளி நிலை பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு
5.ஏனென்றால் உயர்ந்த சக்தி பெற்றவர்.. அந்த உணர்வின் துணை கொண்டு விண்ணுக்குச் செலுத்து…! என்றார் குருநாதர்..

இப்படித்தான் இராமலிங்க அடிகள்… காந்தியடிகள்… விவேகானந்தர் என்று இது போன்று ஏனைய எத்தனையோ மகான்களை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர். “ஒன்று இரண்டு அல்ல…”

ஒவ்வொருவரும் தத்துவங்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டாலும்
1.”விண் செல்லும் பாதையை… அந்த முகப்பின் தன்மை…” எவ்வாறு அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்…?
2.ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று தெளிவாகக் கூறினார்.

இந்தப் பழக்கத்தை எல்லாம் ஏற்பபடுத்திய பின்பு தான் அவருக்கும் “தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்” என்று குருநாதர் இந்த வேலையைச் செய்தார்.

ஏனென்றால்
1.அவர் (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ உடல்களைத் தாவியவர் தான்
2.தகுந்த உடல்கள் பெறவில்லை… அதற்குத் தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை
3.அவரவர்கள் இச்சைக்குத் தான் செல்கின்றார்கள்.
4.(குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள் இருக்கின்றது).

அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கின்றதோ அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் முருகன் சிலையை வைத்தான் போகன். அது யாருக்கும் தெரியாது.

போகன் சிலையை மாற்ற வேண்டும்… வைக்க வேண்டும்… என்று பல பேர் வந்து கேட்டார்கள். அந்த மாதிரிச் செய்ய முடியாது. ஏதாவது மீறித் தொட்டீர்கள் என்றால் குடும்பம் எல்லாம் நாஸ்தி ஆகிவிடும்… தொடும் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிவிடும் என்று சொன்னேன்.

உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிலையை வைத்தான் போகன்.

ஆனால் தனித்த நிலைகள் கொண்டு சுயநலத்திற்காக வியாபாரத்திற்காக அந்தச் சிலையைப் பயன்படுத்தினால் அவன் யாரும் உருப்பட மாட்டான். ஏமாற்றும் நிலைகள் கொண்ட எவனும் இங்கே உருப்படியாக மாட்டான்.

மற்ற கோவில்களில் செய்வது வேறு… அங்கிருக்கக்கூடிய சிலைகள் வேறு. பழனி முருகன் சிலை அப்படிக் கிடையாது. அத்தனை பெரிய அணையை போகன் இங்கே போட்டு வைத்திருக்கின்றார்.

தவறு செய்ய முடியாது… தவறு செய்தான் என்றால் நொறுங்கிப் போவான். உணர்வின் தன்மை விஷமாகிவிடும். விஷத்தை உட்கொண்டால் எப்படி நினைவிழக்கச் செய்யுமோ… புழுவாக பூச்சியாக பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்.

அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தால் கிடைக்கும் நன்மை

 

1.அம்மா அப்பா அருளால் குரு அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
2.மகரிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்

இதற்குப் பெயர் ஆத்ம சக்தி என்பது.

அடிக்கடி ஆத்ம சுத்தி செய்வதால் பெறும் நன்மை:-
இப்படி நாம் அடிக்கடி செய்து வந்தோம் என்றால் நாம் எண்ணி எடுத்த அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது.
1.நாம் பரப்பிய அந்த அலைகளை
2.மீண்டும் நாமே எடுத்துப் பெருக்கிக் கொள்ள இது உதவும்.

ஒருவரிடம் சண்டை போட்டால் “என்னை இப்படிப் பேசினான்… பேசினான்…” என்று எண்ணப்படும் பொழுது அந்த உணர்வலைகள் ஒலிபரப்பாகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகிறது.

மீண்டும் சண்டையிட்டவனை நாம் எண்ணும் போது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்த அந்த அலைகள் குவிந்து
1.எங்கே போனாலும் சண்டை வரும்… பேசினாலும் சண்டை… நம்மைப் பார்த்தாலே மற்றவருக்கு வெறுப்பு வரும்.
2.இதைப் போல் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய வாய்ப்பாக நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

உடலில் உள்ள ஆன்மாவைப் புனிதப்படுத்தும் முறை:-
ஒரு சிலர் உடலிலே ஆவி புகுந்து விட்டது பேய் பிடித்து விட்டது அருளாடுகிறது என்று சொல்வார்கள்
1.இது எல்லாம் எந்தெந்த குணங்களிலே ஓங்கி எடுத்துக் கொண்டோமோ இன்னொரு ஆத்மா வெளியில் இருப்பது இங்கே வந்துவிடுகிறது.
2.காரணம் மனிதன் இன்னொரு உடலுக்குள் வந்து தான் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

ஆனால் எந்த குணத்தின் உணர்வுடன் அவன் இறக்கின்றானோ அதே உணர்வு கொண்டு ஒரு மனிதன் ஏங்கி இருந்தால் அந்த உடலில் ஈர்க்கப்பட்டு விடும். எந்த நிலையில் ஆன்மா நோயாகி உடலை விட்டுப் பிரிந்ததோ புகுந்த உடலில் அதே நோயை உருவாக்கி அவனையும் வீழ்த்தும்.

தற்கொலை செய்து உயிர் பிரிந்திருந்தால் அடுத்த உடலுக்குள் சென்றால் அங்கேயும் தற்கொலை செய்ய வைக்கும். பக்தியின் நிலைகளில் “முருகன் எனக்கு இப்படிச் செய்தானே” என்ற வேதனையான எண்ணத்துடன் பிரிந்திருந்தால் அதே பக்தி கொண்டு யாராவது எண்ணினால் அந்த உடலில் சென்று “முருகன் இப்படிச் செய்கின்றானே” என்று ஆட்டிப்படைத்து அங்கேயும் நோயாக்கி அவனையும் வீழ்த்தும்… அடுத்து மனிதனாகப் பிறப்பதில்லை.

1.அத்தகைய ஆன்மாக்கள் நமக்குள் சரியான நிலையில் கட்டுப்பட்டால் தான்
2.இந்த மனித வாழ்க்கையில் நாமும் நல்லதை எடுக்க முடியும்.

ஆனால் பேயை ஓட்டுகின்றேன் என்று யார் செயல்படுத்தினாலும் உடலுக்குள் புகுந்த அந்த ஆவியை வெளியேற்ற முடியாது.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தை… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை… அதற்கும் உணவாக ஊட்டி
2.அந்த ஆன்மாவை நமக்குள் நல்லதாக மாற்றினால் ஒழிய யாரும் மாற்றவே முடியாது.

அப்படி யாரும் மாற்றியதாகச் சொன்னால் ஒரு போக்கிரியான ஆவியை வைத்து அடக்கலாம். ஆனால் அந்த போக்கிரியான ஆன்மாவும் மந்திரத்தால் செருகப்பட்டால் அந்த ஆவி முதலில் புகுந்ததை அடக்கிவிடும்.

ஆனால் இது இயங்கத் தொடங்கி போக்கிரியான உணர்வுகளை இங்கே உருவாக்கும் உடலுக்குள் கை கால் குடைச்சல் அதிகமாகும் அதனால் விளையக்கூடிய உடல் வலிகள் எந்த டாக்டரிடம் சென்றாலும் அது நிவர்த்தி ஆகாது.

இது போன்ற மீண்டும் மீண்டும் தீமையின் நிலைகளுக்கு மரணமடையும் நிலைகளுக்குத் தான் செல்ல முடியுமே தவிர நல்லதை நீங்கள் காண முடியாது.

ஆகையினால் நீங்கள் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். காற்றுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி பரவி உள்ளது. அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.நம்மையறியாது கெட்டது நமக்குள் வந்து எப்படி ஆட்டிப்படைப்பதை மாற்றி அமைக்க
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அந்தத் துன்பத்தை அகற்ற
3.”நம் எண்ணம் தான்” உதவுமே தவிர மற்ற யாரும் காப்பாற்ற முடியாது.
4.நீங்கள் எடுத்துக் கொண்ட “அந்த எண்ணத்தை” உங்கள் உயிர்தான் சிருஷ்டிக்கின்றது
5.சிருஷ்டித்த உணர்வு தான் உங்களுக்குள் விளைகின்றது… உங்களை இயக்குகிறது.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் பிரம்மமாக இருந்து அந்த குணத்தினைச் சிருஷ்டிக்கின்றது. அந்தச் சக்தியின் உடலாக இயக்குகின்றது ஆகவே… நீங்கள் எண்ணியதை நடத்திக் கொடுப்பது உங்கள் உயிர் என்பதை மறந்து விடாதீர்கள்.

கீதையில் சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று அந்த உணர்வின் சக்தியாகத்தான் “நாம் எண்ணுவது நமக்குள் விளையும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாக உருவாக்கப் பங்கு கொண்டது 1008 குணங்கள். அந்த 1008 குணங்களைத் தான் ஞானிகள் ஆலயத்தில் தெய்வங்களாகக் காட்டுகின்றார்கள். சிலையாக உருவாக்கி வைத்தது ஞானிகள்… அது துவைதம்.

அந்தச் சிலைக்கு வைர கிரீடத்தை வைக்கின்றான்.. தங்க ஆபரணத்தைப் போடுகின்றான்… மலர் மாலைகளை அணிகின்றான். ஔஷதங்கள் சுவையாக உருவாக்கப்பட்டு தெய்வத்திற்கு உணவாகப் படைக்கின்றான்.

இயற்கையில் விளைந்த கனியும் அங்கே வைக்கின்றான். இயற்கையில் விளைந்ததும் செயற்கையில் விளைந்ததும் என்ற உணர்வைக் காட்டுவதற்காக…!

நமக்குள் நல்ல குணங்கள் எப்படி வளர்ந்தது…? ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் தன்மை பெற்ற நிலையை ஒன்றுடன் இணைத்து நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்பதற்காகச் சிலையை உருவாக்கினான்…!

பதார்த்தங்களையும் வைத்தான்… திரையிட்டு மறைத்தான்.
1.தீப ஆராதனையைக் காட்டித் தன்னை அறியும்படி செய்தான்
2.தனக்குள் மறைந்திருக்கும் இந்த உணர்வைத் திறந்து பார்க்கப்படும் பொழுது உணர்வுகள் எப்படி…? என்பதை அறியம்படி செய்தான்

இது தான் ஆலயம்.

திரையைத் திறந்தபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகிறது. எதனால்…? வெளிச்சத்தால்…!

கார்த்திகேயா என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உணர்வை நுகர்ந்தறியும் தன்மை பெற்றவன் மனிதன். எதனெதன் குணங்களைத் தனக்குள் எடுத்து… உருவாக்கும் தன்மை எப்படிப் பெற வேண்டும் என்பது ஆறாவது அறிவு… ஆக படைக்கத் தெரிந்து கொண்டவன்.

விண்ணின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது இனிமையின் உணர்வை வளர்க்கின்றது. தீமையின் நிலைகளை அகற்றிடும் சக்தி பெறுகின்றது என்பதற்காகச் சிலையை உருவாக்கி வைத்தனர்.

தீபத்தை அங்கே காட்டப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் நாம் வேண்ட வேண்டும்.

இந்த ஆலயம் வருவார் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அருள் ஒளியின் சுடராக அந்தக் குடும்பங்களில் வளர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.ஏனென்றால் நமக்குள் பல குடும்பங்கள் உண்டு
2.பலருடைய எண்ணங்கள் நமக்குள் குடும்பமாக வாழ்கிறது
3.கோபப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நமக்குள் கோபத்தின் அணுக்கள் வளர்கின்றது
4.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் அது போர் செய்கின்றது
5.ஆகவே அதை மாற்றி நட்பின் தன்மை அடைவதற்கு இந்த ஞானிகள் உணர்வை நாம் இப்படி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அணுவாக மாறுகின்றது… அணுவின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது. எதனின் வலு அங்கு வருகின்றதோ அதனின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது. இதை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் கோவிலிலே இப்படிக் காட்டியுள்ளார்கள்

அந்த ஆலயம் வருவோர்… நாம் பார்ப்போர் குடும்பங்கள்… நாம் தொழில் செய்யும் இடங்களில் பணிபுரிவோர்… எல்லோருமே பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

உதாரணமாக நாம் தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் வேலை செய்யும் ஒருவனுக்கு வீட்டிலே சங்கடமாக இருக்கின்றது.
1.சங்கட உணர்வுடன் இங்கே வந்து வேலையைச் செய்யும் பொழுது…
2.தவறாகச் செய்து விடுகின்றான்… உற்பத்தி ஆகும் பொருள் நஷ்டமாகி விடுகின்றது

அல்லது அவன் வேலைக்கு வரும் பொழுது ஒருவன் ரோட்டிலே எதிர்பாராது கீழே விழுந்து விடுகின்றான். அவனை உற்று நோக்கி இருந்தால் அந்த இரக்க மனம் கொண்டு அந்த வேதனையை எடுத்துக் கொள்கின்றான்.

அவன் நல்ல குணத்துடன் இந்த விஷம் கலந்து விடுகின்றது. அப்போது இருளடைந்து விடுகின்றது. இருளான உணர்வுகள் கலந்து இங்கே வேலையில் அமர்ந்து வேலை செய்யப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் திறன் இழக்கப்படுகிறது… உற்பத்தி குறைந்து விடுகிறது.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம்மிடம் வேலை செய்யும் அந்த தொழிலாளி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் “அடுத்து அவன் தவறில்லாதபடி வேலையை நிதானித்துச் செய்வான்…”

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை அனைவருக்கும் நாம் வேண்டிடல் வேண்டும்… அதை வளர்த்திடல் வேண்டும். அதற்குத் தான் ஆலயத்தில் இந்த மார்க்கத்தைக் காட்டினார்கள்.

சிலையைப் பார்க்கும் பொழுது துவைதம். ஸ்தல புராணமாக வடித்து நற்குணங்களை அங்கே விவரித்துக் காட்டியுள்ளார்கள்.
1.அந்தத் தெய்வ குணத்தையும் தெய்வீக நிலைகளையும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்
2.இந்த ஆலயம் வருபவர் எல்லோரும் தெய்வகுணம் பெற வேண்டும் தெய்வ நிலைகளும் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் தெய்வ குணமும் தெய்வீகப் பண்புகளும் பெற வேண்டும்
4.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் தெய்வ குணங்கள் பெற வேண்டும்…
5.தெய்வ சக்தி அங்கு வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.நமக்குள் இல்லாதவர்கள் யாரும் இல்லை… எல்லோருமே நமக்குள் இருக்கின்றார்கள். “
7.எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்கும்படி செய்ய வேண்டும் “மறைமுகமாக…”

ஏனென்றால் ஒரு வேதனைப்படுவனுடைய உணர்வுகள் “மறைமுகமாக” நமக்குள் வந்து தான் விஷத்தின் தன்மையாக மாறி… நம்மை அறியாமலே வேதனைப்படும் செயலாக அமைத்து விடுகின்றது. மற்றவரிடம் அதைச் சொல்லப்படும் போது அது எல்லோரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.

இதை மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் கல்யாணராமா…! பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றும்படி ஆலயத்தில் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

கூட்டுத் தியானம் மிக மிக அவசியம்… ஏன்…?

 

எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானிக்கப்படும் பொழுது அந்தச் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வீட்டிலே கவலை சஞ்சலம் மேல் வலி இடுப்பு வலி இது போன்று எத்தனையோ நிலைகளைச் சந்திக்க நேர்கின்றது. இருந்தாலும்…
1.கூட்டுத் தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரே ஏக்க அலையுடன் நாம் தியானிக்கிறோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி… மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எல்லோரும் ஒன்று போல் சொல்கின்றோம்.

இது அனைத்தையுமே காந்தப்புலன்கள் கவர்ந்து கொள்ளும்.
1.ஒவ்வொருத்தருடைய உடலில் இருக்கக்கூடிய துன்ப நிலைகளை மறந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒன்று போல் எடுத்து ஏக்க உணர்வுடன் பதிவு செய்யப்படும் பொழுது
3.எப்படிப் பல விதமான சத்துகள் உடைய செடிகள் பல குணங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்த்து அது உயர்ந்த மரம் செடிகளாக விளைகின்றதோ
4.பல விதமான பொருள்களைச் சேர்த்துக் குழம்பை ருசியாகச் சமைத்து மகிழ்ச்சியாக உணவாக உட்கொள்வது போன்று
5.கூட்டு தியானத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இதைப் போன்று சொல்லி
6.ஒருவருக்கொருவர் இந்த உணர்வினைப் பாய்ச்சப்படும் பொழுது எல்லோருடைய உணர்வின் மணமும் ஒன்று சேர்கின்றது.

காரம், புளிப்பு இனிப்பு துவர்ப்பு அனைத்தும் சேர்த்து ருசியாகுவது போன்று இந்த வாழ்க்கையில் எந்த நிமிடத்திலும் எந்த நேரத்திலும் கூட்டுத் தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை கலந்து எடுத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் சுவை மிக்க நிலைகளாக உருவாக்க இது உதவும்.

அந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியை ஏற்படுத்தத் தான் இந்தக் கூட்டு தியானம். கூட்டுத் தியானம் இருப்பதே அதற்குத்தான்.

1.பல சங்கடமான எண்ணங்கள் இருந்தாலும் அது அனைத்தும் ஒன்று சேர்த்து
2.எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று ஒரே உணர்வுடன் ஒலியை எழுப்பப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகிவிடுகிறது.
3.பதிவு செய்து அந்த எண்ணத்தை நமக்குள் வலுப்படுத்துவதற்குத் தான் இந்தத் தியானம்.

கூட்டு தியானம் இருந்து பழகிக் கொண்டவர்கள் உடலை விட்டு உயிரான்மா பிரிந்தாலும் கூட… அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து நாம் கூட்டு ஐக்கியமாக இருந்து விண் செலுத்தப்படும் பொழுது மீண்டும் இந்த உடல் என்ற கூட்டிற்குள் செல்லாதபடி தடுத்து… ஒளிச் சரீரம் பெறும் நிலைக்கு “நாம் உந்தித் தள்ளலாம்…”

அதற்குத் தான் கூட்டுத் தியானங்களில் சப்தரிஷி மண்டலத்தினை நினைவுபடுத்தி அந்த உணர்வுடன் உங்களை இணைக்கின்றோம்.

சிறு துளி பெரு வெள்ளம். அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் எடுத்து கூட்டு தியானங்களில் ஒரே நிலையில் இருந்து… உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தி தள்ளி அங்கே இணைக்க முடியும். அப்போது அவர்கள் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.

1.கடும் தவம் இருந்தோ வரம் வாங்கியோ எடுப்பதற்குப் பதிலாக
2.இராக்கெட்டை உந்து விசை கொண்டு விண்ணிலே ஏவி அங்கிருக்கக் கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை அறிந்துணர்வது போல
3.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டு தியானத்தின் மூலமாக
4.உடலை விட்டு பிரிந்த உயிரான்மா இன்னொரு உடல் பெறாதபடி ஒளிச் சரீரம் பெறும் தகுதிக்கு அங்கே உந்திச் செலுத்தலாம்.

அப்படி அல்லாதபடி கடும் ஜெபம் இருந்து நான் தனித்து விண்ணுக்குப் போவேன் என்றால் அது முடியாது. ரிஷித்தன்மை பெற்றவர்களும் இதைப் போன்று மக்கள் மத்தியிலே விண் செல்லும் மார்க்கத்தை அங்கே ஊட்டி அவ்வாறு தான் அவர்கள் விண் சென்றார்கள்.

இந்த தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மாக்களை நாம் உந்தி விண் செலுத்தி விடுகின்றோம். நாம் இந்தப் பூமிக்குள் இருந்தால் மீண்டும் உடலுக்குள் தான் வர வேண்டி வரும்.

அதிலிருந்து தப்புவதற்குண்டான வழியைத்தான் இங்கே உபதேசிக்கின்றோம். “இது ஞானிகள் கண்ட அறவழி…”

மந்திரத்தைச் சொல்லி சொர்க்கலோகம் போகலாம் என்றால் அந்த மந்திரத்தால் அடுத்தவன் கையிலே சிக்கித் தவிக்க வேண்டி வரும். அப்படிப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அப்படி நீங்கள் செல்லலாம்.

இல்லை… கூட்டுத் தியானம் இருந்து யாம் என் சொல்லும் முறைப்படி விண்ணுக்கும் செல்லலாம். ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்.
1.இந்த உடல் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைக் கழற்றி எறிந்து விட்டு
2.அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றால் அது உங்கள் மனதைப் பொறுத்துத் தான் உள்ளது.

ஆக அந்த மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கும்போது உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகள் நீங்கும். அதற்குண்டான சக்திகளைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
1.சாமி ஏதோ சொல்கிறார் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
2.இப்பொழுது நாம் உங்களைத் தேடி வந்து தான் இதைக் கொடுக்கின்றோம்.

நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்த சக்தியைப் பெற முடியும் என்ற வாக்கினையும் பதிவு செய்கின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

அதே சமயத்தில் இப்பொழுது நன்றாக இருக்கின்றோம்… திடீரென்று உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் “அய்யய்யோ இறந்து விட்டாரே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

தியானத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று விண் செலுத்தினால்
1.ஜிர்…ர்ர்… என்று அந்த ஆன்மா மேலே போய்விடும்
2.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) அவசியம் தேவை.

அதைச் செய்வதை விடுத்து விட்டு அழுகிய சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து “இங்கே புதைக்கலாமா…? அங்கே புதைக்கலாமா…? சமாதி கட்டி அழகுபடுத்தலாமா…?” என்று யோசனை செய்து கொண்டிருந்தால் இந்த புவியின் பற்றுக்குள் தான் வர வேண்டி வரும்.

1.இந்த நாய் எப்படியோ போகின்றது… அது பூராம் குப்பை… என்று தூக்கி எறிந்து விட்டு
2.உயிராத்மா அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் நிலையான நிலைகள் பெற வேண்டும் என்று
3.அங்கே கொண்டு போய் விண்ணிலே செலுத்த வேண்டும்.

இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்…! உடலிலிருந்து தான் உயிராத்மா அழியா ஒளி உடல் பெற முடியும். ஏனென்றால் இந்த உடல் அழியக்கூடிய சமாச்சாரம் தான்.

உயிராத்மா மெய் ஒளி பெற வேண்டும்… அது தான் முக்கியம்…!

மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இந்த உடல். அது மண்ணுடனே மண்ணாக மக்கட்டும். மண்ணிற்குள் இருந்து எடுத்த சத்தை உயிர் ஒளியாக மாற்றிய பின் விண்ணுலகம் செல்ல வேண்டும்

எல்லோரும் அந்த ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிருடைய வேலை அது நெருப்பிற்குச் சமம் தான். அதிலே எப்பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ அதிலே வேக வைத்த பொருளின் மணம்… சுவை… வருவது போல
1.நம் உயிரின் தன்மை நாம் நுகர்ந்தது எதுவோ
2.அதனின் உயிர் அணுக்களாக மாற்றி அது படைத்துவிடுகின்றது.

எதனின் உணர்வின் தன்மையோ அதை நாம் கண்ணால் பார்க்கும்போது உணர்வால் நுகரும் தன்மை வருகின்றது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் நிலையாக உடலின் அமைப்பு வருகின்றது.

நாம் எதனின் நிலைகளை உற்று நோக்கி… அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் பதிவாக்கி அதனின் கணக்கின் பிரகாரமே அடுத்த நிலை.

ஆகவ… அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு
1.நாம் என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலையை
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!

அவனுடன் இணைந்து இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தனையோ இடையூறுக்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைத்து இணைத்து அந்த அருள் ஞானிகளின் உணர்வை யாம் கொடுக்கின்றோம்.

தாவர இனங்களுக்கு ஊட்டம் கொடுக்கும் பொழுது முதலில் ஒரு முறை கொடுக்கின்றோம். ஒரு முறை எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை தாவர இனத்தைப் புதுப்பிக்கின்றோம்.

அப்படி… அதற்குத் தக்கவாறு அதனுடன் இணைத்துக் கொண்டு தான் புது வித்தின் தன்மையாக மாற்ற முடியும்.
1.ஏனென்றால் ஒரு வித்தின் தன்மை எடுத்த பின் நேரடியாக அதை மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு சிறுகச் சிறுக இணைத்து இணைத்து
3.அதை மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி இதை சீராக ஒன்றிணைக்கும் நிலைகள் கொண்டுதான் மாற்ற முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்.
2.பகைமையான உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வித்துகள் ஏராளம் ஏராளம்.
3.தன்னைக் காக்க தான் எடுத்துக் கொண்ட கோபத்தின் தன்மை ஏராளம் ஏராளம்.

இதைப்போல நமக்குள் வித்துகள் அதிகமாக பெருக்கி இருக்கும் வேளையில்… இவை அனைத்தும் ஒருக்கிணைந்து….. இதையெல்லாம் இணைத்து… அரவணைத்து… அதை அடக்கி…
1.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய… அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டுதான்..
2.உங்களில் இணைந்து வரும் குணத்துடன் இணைத்து இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை இதைப் போன்று பிணைத்து
4.இந்த உணர்வின் தன்மை உங்கள் குணத்துடன் ஒன்றச் செய்து
5.நினைவு கொண்டு நீங்கள் பெறும் ஆற்றல் பெற அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் (எம்முடைய வேலை)

அது அல்லாது செய்தோம் என்றால் வெறும் பாடப் புத்தகங்களை படித்துவிட்டு ஆகா…! நன்றாக இருக்கிறது என்ற நிலைகள் கொண்டு தூக்கி எறிவது போன்று ஆகிவிடும். அடுத்த நினைவுகள் வராது…!

ஆகையினால்… எந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நினைவாற்றல் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்

இதைப் படிப்பவர் அனைவரும் இதை மனதில் பதிவு செய்யுங்கள்….!

உங்களுக்கு எது சொந்தம்…? அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்குங்கள். இந்த வாழ்க்கையில் அதைச் சொந்தமாக்குங்கள்.

1.அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய குறைகளைச சொந்தமாக்க வேண்டாம்.
2.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.

அந்தச் சொந்தத்தைக் கொண்டாடி விட்டால் பகைமை உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும். அதனின் இனப் பெருக்கமாக மாறிவிடும்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்களாகத் தான் பெருகும்.

மான் அதனின் கூட்டமைப்பாக வாழ்கின்றது. அதே சமயம் மற்ற மான்களின் குணங்களுக்கொப்ப வகை வகையான மான்கள் வருகின்றது. பல வகைகள் இருந்தாலும் அதனதன் கூட்டம் அதோடு சேர்ந்து விடுகின்றது.

இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் பெருக்கத்தை அதிகமாகக் கொண்டாருகின்றோமோ நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாறிவிடும்.

அப்படி மாறினால்… அதனுடைய கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அதனுடைய கூட்டமைப்பு எங்கே வாழுகின்றதோ…
1.அங்கே நம் உயிரான்மா சென்று
2.அந்தக் கூட்டமைப்புக்குள் சுற்றி
3.அதனின் உணர்வுக்குள் நுழைந்து
4.அந்த உணர்வின் ஆற்றலாக உடலை மாற்றிவிடும்.

ஆகவே இதையெல்லாம் தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தைப் படித்து விட்டு உங்களிடம் பாடவில்லை.. எனக்குக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் குருநாதர் எம்மை மாட்டுக்குள்ளும் புகுரச் செய்தார்… பாம்புக்குள்ளும் போகச் சொன்னார்… யானைக்குள்ளும் போகச் சொன்னார்… அதை எவ்வாறெல்லாம் பெற வேண்டுமென்று…!

இதை எல்லாம் உங்களிடம் எளிதில் சொல்லவில்லை…! முன்னாடி சொல்லியிருக்க மாட்டேன்…!

வித்தை எல்லாம் தெரிந்து கொண்டு தான் அதற்குள் போகின்றேன். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை பெருகி விட்டால் ஆன்மாவின் தன்மை எப்படி ஆகும்…?
1.அதற்கு முன்னாடியே குருநாதர் என்னை கைவல்யம் செய்து
2.எப்பொழுதுமே கைப் பிடித்து வைத்திருந்தார்.

ஆகவே இதைப்போல அந்த உணர்வை இயக்கச் செய்து உணர்வின் தன்மை கவர்ந்து கொண்ட பின் இந்த உணர்வின் ஆன்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.அதிலே எது பெருகுகின்றது…?
2.எதனின் உடலில் ஆன்மாவை அழைக்கின்றது…?
3.மனித உடலில் பெருகிய பின் அந்த உடலுக்குள் போய் எப்படி இயக்குகின்றது..?
4.மீண்டும் நீ வெளிவர வேண்டும் என்றால் என்ன செய்வது…?

மனிதனின் உடலில் இது உருவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகின்றது…? என்று தெளிவாக்கினார் குருநாதர்

இதுதான் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ நிலைகளில் இன்று இருந்தாலும் இந்தச் சரீரத்தை விட்டு ஆன்மா பிரிந்து சென்று விட்டால் நம் அழகையும் அல்லது நாம் போற்றித் துதித்த தருமத்தையும் யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…?

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள்…! என்று தான் சொல்கின்றார்கள்.

அங்கே எரிக்கும் இடத்தில் என்ன செய்கின்றனர்…? நெருப்பிலே இட்டு எரிக்கும் பொழுது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…! என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் உடலைப் போடும்போது அதை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? நம்மைச் சேர்ந்த சொந்தக்காரர்கள் தூக்கிப் போடுகின்றார்களா…? என்றால் இல்லை…!

யாரையாவது வைத்துத் தூக்கி போடுங்கள்…! என்று தான் போடுகின்றோம். அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு “அவர்கள் அதற்குதான்…!” என்கின்றார்கள்.

ஏனென்றால் இவர்களை அது சாடிவிடுமாம்…!

ஆனால் இறந்தவர்களின் சொத்து தேவை… வீடு வாசல் பணம் எல்லாம் தேவ…!. ஆகவே இப்படித்தான் நமது உணர்வு வருகின்றது.

1.இந்த உடலை “நமக்குச் சொந்தம்…!” என்று ஆக்க வேண்டாம்
2.இந்த உடலில் சொந்தம் கொண்டாடி அதிலே அறியாது வளர்த்துக் கொண்ட தீய வினை சாப வினைகள நீக்கி
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி அதிலே நிலை கொள்ள வேண்டும்.

என்றுமே நிலையான சரீரம் நமக்கு வேண்டுமென்றால் நம் பற்று எதிலே வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் உணர்வில் நமக்குப் பற்று வேண்டும். அந்தப் பற்றினை வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் அங்கே மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்கின்றோம்.

இல்லை என்றால்… சாப அலையில் தீய அலையில் சிக்கியவர்கள்… நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற இந்த எண்ணம் கொண்ட உணர்வுகள் வளர்ந்து… தாவர இனத்தை புசித்து வாழும் உடல் நிலை மாறி… மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் உடலாக வரும்.

அப்படிக் கொன்று மற்றொன்றின் உடலுக்குள் புகுந்து…
1.இப்படி பல நிலைகள் மாறி மாறிப் பல நரக லோகத்தைச் சந்தித்த பின்…
2.அந்தத் தண்டனைகளை எல்லாம் அனுபவித்த பின் தான்
3.மீண்டும் மனிதனாக வர முடியும்.

சாதரணமாக மனிதனின் கையில் சிக்கி அத்தகைய உயிரினங்கள் சாகாது தன் பசிக்காக ஏங்கி இருக்கும் மிருகங்களின் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி இதை அடித்துக் கொல்கிறதென்றால் அப்பொழுது புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பினத்தில் சிக்கித் தவிக்கிறது என்றால் அடுத்த பிறப்பில் அந்த உயிர் பாம்பாகதான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

1.எமக்கு குருநாதர் அந்த விண்ணுலக ஆற்றலையும்
2.மண்ணுலக நிலையில் உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

அவர் காட்டிய அந்த அரும் பெரும் சக்திகளை… உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் வந்த குணங்களும்… நீங்கள் வளர்ந்து வந்த நிலைகளும் அவைகளுடன் இணைத்தே உபதேசிக்கின்றோம் .

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய நிலைகளை
1.அந்த அண்டத்தில் இருக்கும் நிலைகளை
2.பிண்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உணர்வோடு இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளுக்கு உங்களை உருவாக்குவதுதான் என்னுடைய வேலை.

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப்போல உங்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் அந்த மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

உபதேசத்தைக் கேட்டுவிட்டு “சாமி நன்றாகக் கதை சொல்கிறார்” என்று எண்ணினால் அது உங்கள் இஷ்டம்…!

 

இன்றைய விஞ்ஞான உலகம் எதிலே இருக்கின்றது…? காற்று மண்டலம் விஷமாகி விட்டது. புழு பூச்சியைக் கொல்வதற்காக உணவுப் பயிர்களில் விஷத்தைத் தூவுகின்றார்கள். ஆக சாப்பிடும் உணவிலே விஷம்…. உணர்விற்குள் விஷம்.
1.விஷம் கலந்து விட்டால் சிந்தனை இல்லை… ஆனால் அதைத்தான் கலந்து உணவாகச் சாப்பிடுகின்றோம்.
2.சிந்திக்கும் திறனை இழந்து கொண்டே வருகின்றோம்.

உடலில் ஏதாவது வலி எடுக்கிறதா…? காய்ச்சல் அடிக்கின்றதா…? உடனே ஒரு இன்ஜெக்ஷன். அந்த ஒரு டோஸ் போட்டதும் நின்று விடும்… நிற்கவில்லை என்றால் இன்னொரு டோஸ் சேர்த்துக் கொடுப்பார்கள். எல்லாம் நின்று விடுகின்றது.

பின் விளைவாக… உடலுக்குள் இனிப்புச் சத்தை எல்லாம் மாற்றி விடுகின்றது. காய்ச்சலுக்கு ஊசி போட்டேன் அடுத்தாற்போல் சர்க்கரைச் சத்து வந்துவிட்டது.

அதே போல் காய்ச்சல் என்று சொல்லி இன்னும் நான்கு டோஸ் போட்டோம் என்றால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுகிறது. நம் இரத்தங்களில் உப்புச் சத்து வந்து விடுகின்றது.

தலை வலிக்கு என்று மாத்திரை சாப்பிடுவார்கள்.
1.எப்பொழுதெல்லாம் தலை வலிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மிட்டாய் சாப்பிடுவது போல் மாத்திரையைச் சாப்பிடுவார்கள்… தலைவலி நின்றுவிடும்…
2.கூடிய சீக்கிரம் கிட்னியில் விஷத்தினைப் பிரிக்கும் நிலையினை அந்த வலுவை இழந்து விடுகின்றது… கிட்னி சரியாக வேலை செய்யாது.

இப்படிப்பட்ட விஞ்ஞான உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யாரையும் யாம் குறையாகச் சொல்லவில்லை.
1.ஏனென்றால் அவசரத்திற்கு… இந்தத் தலைவலி நீங்கினால் போதும் என்று விரும்புகிறோம்.
2.ஆனால் சிறுகச் சிறுக நம் சிறுநீரகங்கள் பாதிப்படைவது நமக்குத் தெரிவதில்லை.
3.கடைசியில் இலட்சக்கணக்கில் அதற்குச் செலவழிக்க வேண்டி வருகின்றது.

இது மட்டுமல்ல அறியாத நிலையில் இருந்தால் மயக்க மருந்தோ மாத்திரையோ கொடுத்து ஆளை அபேஸ் செய்து ஆஸ்பத்திரியில் நம் உடலில் இருக்கக்கூடிய முக்கியமான உறுப்புகள் கண்கள் சிறுநீரகங்கள் இதையெல்லாம் திருடி விடுகின்றார்கள். அது வியாபாரம் ஆகின்றது… விஞ்ஞான உலகம் அப்படி இருக்கின்றது.

பண வசதி படைத்தவனுக்கு இந்தக் கண்கள் மற்ற உறுப்புகள் எல்லாம் பயன்படுகிறது. குழந்தைகள் காணாமல் போய்விட்டது என்று கேள்விப்படுகின்றோம்.கடத்திக் கொண்டு போய் என்ன செய்கின்றார்கள்…? குழந்தைகளின் மூளையை எடுத்து வடிகட்டி மருந்தாகத் தயார் செய்கிறார்கள்.

பண வசதி உள்ளவர்கள் வயதானவர்கள் 75 வயதாகி விட்டது… உடல் சுருங்குகின்றது உணர்வுகள் சுருங்குகின்றது.
1.சிறு குழந்தைகளிடம் இருக்கக்கூடிய மூளைகள் மூலமாக உருவாக்கிய சத்துக்களை ஊசியாக அவர்களுக்கு செலுத்தப்பட்டவுடன்
2.அவர்கள் வயசுப் பிள்ளையாக மாறிவிடுகின்றார்கள்.
3.குழந்தைகள் சாக வேண்டும் ஆனால் அவர்கள் வயதுப் பிள்ளையாக வாழ வேண்டும் என்று
4.இன்றைய விஞ்ஞானத்தில் இது நடந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான வழியில் போக வேண்டும் என்றால் அப்படிப் போகலாம். இந்த உலகம் பூராம் விஷத்தன்மை பாயும் நேரத்தில் மெய் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தப்பிக்கலாம்.

காடு மேடலாம் விஷத்தன்மை பரவி விட்டது. மேலை நாடுகளில் எல்லாம் தழைத் பாம்புகளை அது போன்ற சத்துள்ளவைகளை ஆடு மாடு போன்ற மற்ற தான் வளர்க்கும் உயிரினங்களுக்குக் கொடுத்து நன்றாக வளர்த்து அந்த மாமிசங்களை இவர்கள் உட்கொள்கின்றார்கள்.

அதே மாதிரி மனிதர்கள் உறுப்புகளை எடுத்து வியாபாரம் செய்வது… மனிதன் தனியாகச் சென்றால் அவனுக்கு உதவி செய்வது போன்று அழைத்துச் சென்று அவனையே அறுத்து வேக வைத்துச் சாப்பிட வேண்டியது. அப்படிப்பட்ட காலம் வந்துவிட்டது.

நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நிலை உலகிலே உருவாகி விட்டது…!

சில இடங்களிலே நாங்கள் அனாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்கிறோம் என்று வளர்ப்பார்கள். கடைசியில் எங்களுக்குக் குழந்தை வேண்டும் (தத்துக்கு) என்று சொல்லி மேலை நாடுகளுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.

வேண்டிய உறுப்புகளை மட்டும் எடுத்துவிட்டுக் கப்பலில் சென்று மற்றதைத் தூக்கிக் கடலிலே வீசி விடுகின்றார்கள்.

இதெல்லாம் இன்று நடந்து கொண்டிருப்பது…
1.மனிதன் மிருகம் ஆகிவிட்டான்…
2.இந்த உலகத்தில் தான் இன்று வாழ்கின்றோம்
3.உலகத்தில் மாற்றத்தினுடைய நிலையில் நெருங்கி விட்டது.

இதிலிருந்து நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன செய்யப் போகின்றீர்கள்…?

மந்திரத்தினால் யந்திரத்தினால் நன்றாக வேண்டும் என்று எண்ணினால் அந்த வழியில் செல்லுங்கள். இல்லை என்றால் இப்பொழுது யாம் உபதேசிப்பது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி அந்த ஆற்றல் மிக்க சக்திகளை வளர்த்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய இஷ்டம் தான் அது…!

1.குருநாதர் காட்டிய அருள் வழியில் அனைத்தையும் நான் கண்டேன். பார்த்தேன் உண்மையைச் சொல்கின்றேன்.
2.நீங்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று உயர்ந்த சக்திகளைக் கொடுக்கிறோம்.
3.அதை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்…
4.இல்லை… “சாமி நன்றாகக் கதை சொல்கின்றார்” என்று நினைத்துக் கொண்டு போனாலும் போகலாம்.
5.”பழைய நிலைகளிலிருந்து மாறாதபடி… அப்படியே இருக்கலாம்…”

இது எல்லாம் உங்களுடைய இஷ்டம் தான்.

நல்ல நிலைகள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். திட்டியவர்களைப் பற்றி எண்ணியவுடன் அல்லது காதிலே கேட்டவுடன் அவர்களை உடனே தாக்க வேண்டும் என்று எப்படி அந்த வேகங்கள் வருகின்றதோ அதே போன்றுதான்
1.நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.உங்கள் துன்பங்களை அகற்றிவிட்டு நோய்களை அகற்றிவிட்டு உங்களை மகிழ்ந்து வாழச் செய்யும்.
3.அந்த நிலைக்கு வர வேண்டும் என்றால் யாம் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம். “அது உங்கள் இஷ்டம்…”

இன்று வாழ்கின்றோம்… செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இறந்த பின் உடலுக்குள் “பேயாக ஆடுவதையும்” தீயிலே குதித்து இறந்து விட்டது என்றால் அடுத்த உடலுக்குள் சென்று “அய்யய்யோ அய்யய்யோ எரிகிறது” என்று அலறிக் கிடப்பதையும் பார்க்கலாம்.

இறந்த பிற்பாடு இந்த ஆன்மாக்கள் அடுத்த உடலில் புகுந்து விட்டால் இப்படித்தான் வேலை செய்யும்.

மருந்து குடித்து இறந்ததென்றால் அந்த ஆன்மா ஒரு உடலுக்குள் சென்றால்… அது மருந்தைக் குடிக்கும் போது “தொண்டை எல்லாம் எப்படி மண்ணையைப் பிடித்து இறுக்கியதோ” இந்த உடலில் அதே மாதிரி இயக்கும்.

ஆக… இறந்த பிற்பாடு எங்கே செல்கிறோம்…? என்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அவனை வீழ்த்தி விட்டு அந்த விஷத்தின் தன்மை கொண்ட அடுத்த உடல் பெறுவதற்கு… மிருக இனங்களாகச் செல்வதற்குத் தயாராகி விடுகின்றது.

இப்படித்தான்… “நாம் செத்த பின் சொர்க்கலோகம் போகிறோம்…” என்று சொல்வது.

ஆகையினால் இந்த உண்மை நிலை எல்லாம் நீங்கள் உணர்ந்து கொண்ட பின் மெய் வழியின் தன்மை பெற வேண்டும் என்றால் இது போன்ற தியானங்களின் மூலம் அந்த ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் எடுக்க முடியும்.

அவர்கள் எல்லாம் பத்தாவது நிலையான கல்கி நிலையை அடைந்தவர்கள். அந்த உயர்ந்த எண்ணங்களை எடுக்க வேண்டும் என்றால் அதற்குத் திறன் வேண்டும். “அதற்கு வேண்டிய மின்சாரம் தேவை…”

எமது குருநாதர் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல்களை உடலுடன் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொண்டதை அது எப்படி…? என்று எமக்கு உபதேசித்தார்.
1.மெய் ஒளியின் தன்மையைப் பெருக்கும் நிலையும் மனித உணர்வுகள் அண்டாத நிலையும்
2.அந்த விண்ணுலக ஆற்றலை எடுத்து அதை வளர்த்துக் கொள்ளும் முறையையும்
3.மெய் ஞானிகள் அருள் சக்திகளை எடுக்கும் தகுதியையும் எனக்கு ஏற்படுத்தினார்.

12 வருட காலம் அனுபவமாகப் பெற்றேன். அதைத் தான் சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள் நினைவு கொண்டால் ஆத்ம சுத்தியின் மூலமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளை அகற்ற முடிகின்றது.

கருணைக்கிழங்கினை வேக வைத்து விஷத்தை நீக்கிப் பல சுவை மிக்க பொருள்களைப் போட்டு அதை உணவாக உட்கொண்டு மகிழ்ச்சி அடைவது போன்று
1.எப்படிப்பட்ட சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் புகுத்தி
2.அந்த ஆற்றலைத் தனக்குள் சேர்த்து உடலுக்குள் தீமை வராதபடி தடுக்க இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணன் துகிலை உறிந்தான்… யார்…? கிருஷ்ணன்…! குளிக்கும் பெண்களின் சேலைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான் என்று காவியங்கள் சொல்கின்றது.

அதனின் உட்பொருள் என்ன…?

1.நம் கண்கள் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது… அந்த உணர்வைப் பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அந்த எண்ணத்தின் அலைகள் வரப்படும் பொழுது
3.தனக்குள் அந்த உணர்வுடன் மோதும் பொழுது (அங்கே என்ன நடக்கிறது என்பதை) அவர் திருட்டுத்தனம் செய்கின்றார்…? என்று
4.அதற்குள் அவர் உணர்வின் தன்மையை இழுக்கின்றது… அதாவது துகிலை உறிகின்றான்.
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு உள்ளே மறைத்த நிலைகள் செயல்படுவதை
6.உள் நின்று அந்த உணர்வை இழுத்துத் தனக்குள் அறிகின்றது – நம் கண்கள்.

இதைக் காட்டுவதற்குத் தான் உருவமாகக் காட்டி “கண்ணன் துகிலை உறிந்தான்…” என்று கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்றும் சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் (அதற்குள் இருக்கும் வலிமையை) “தீமையை நீக்கும்” உள் இருக்கும் உணர்வை அறிகின்றது.

உதாரணமாக ஜாதகம் ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று நல்லது கெட்டது பார்க்கப் போனால் தெரியும்… ஏனென்றால் அவர்கள் கண்களைத் தான் உற்றுப் பார்ப்பார்கள்.

நீங்கள் அவரைப் பார்க்காதபடி தலையை மட்டும் கொஞ்சம் குனிந்து கொண்டே இருந்தால் போதும். அவரால் ஒன்றும் சொல்ல முடியாது… பேச முடியாது.

அவர்கள் அதே எண்ணத்தில் (பழக்கத்தில்) இருக்கும் பொழுது
1.நம் கண்களை நேர் கொண்டு பார்த்த பின் உணர்வின் தன்மை மோதும் போது
2.இப்படி இருந்தது அல்லவா…! என்று நடந்ததைச் சொல்வான்.
3.அறியாமலே நாம் தலையாட்டத் தொடங்குவோம்
4.அதை பிடித்துக் கணக்கு போட்டுக் கொண்டே சொல்வான்.

அதற்குத் தகுந்த மாதிரி அவன் சொல்லச் சொல்ல… நாம் ஆமாம்… ஆமாம்… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே வருவோம் வரிசையில் அவன் சொல்லிக் கொண்டு போவான்.

ஜாதகம் ஜோதிடம் சொல்பவர் எல்லாம் இப்படித்தான் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் ஆனால் ஜோதிடமும் ஜாதகமும் மனிதனுக்கு இல்லை.

ஏனென்றால் அவன் தான் நமக்குள் அதைப் பதிவு செய்கின்றான். எப்படி…?

உங்கள் குழந்தை இந்த நேரத்திலே பிறந்திருக்கின்றது. இந்த நேரத்திலே இந்த நட்சத்திரத்திற்கு மிருகம் தான் பிறக்கும். ஆகையினால் அந்த குணத்தின் தன்மையாக உங்கள் குழந்தை இருப்பான்… அசுர செயல்களைச் செயல்படுத்துவான் என்று இவன் “கால்குலேஷன்” போடுவான்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது… குடும்பத்திற்கு ஆகாது…! மிருகங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியாதோ அது போல் குழந்தை அவன் உணர்ச்சிப்படியே செல்வான். அவன் பிறந்ததிலிருந்து “உங்கள் குடும்பத்திற்கு சனியன்” என்று வரிசையில் சொல்லிக் கொண்டு போவான்.

ஆனால் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லையே…!

குழந்தை பிறந்த ஜாதகத்தை… அந்தச் சட்டத்தை இவன் எழுதுகிறான். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லும் பொழுது இதை எடுத்து உருவாக்கி வைத்து விடுகின்றான்.

அடுத்து நாம் என்ன செய்கின்றோம்…?

இந்த உணர்வுடன் நாம் தொழில் செய்யும் இடங்களுக்குச் சென்றால் நம்மிடம் பொருளை வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பக் கொடுப்பானா…! கொடுக்க மாட்டானா…? என்று எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் வந்த பின் சந்தேக உணர்வு அவனுக்குள் ஆனபின் அவன் கொடுக்கவே மாட்டான். இங்கே எண்ணிய எண்ணம் அங்கே செயலாகிறது.

1.ஆக… அந்த ஜாதகக் குறிப்புப் பிரகாரம் அவன் சொன்னது நமக்குள் பதிவாகி அது கடவுளாக இயங்க ஆரம்பித்து விடுகிறது.
2.அவன் தான் (ஜோதிடம் சொல்பவன்) சிருஷ்டிக்கின்றான்… எண்ணத்தால் நமக்குள் இப்படி உருவாகிவிடுகிறது.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை பெற்று “அவன் இப்படித்தான் இருக்க வேண்டும்… நற்பண்புகள் நற்குணங்களுடன் வாழ வேண்டும்…” என்று கருவில் இருந்தே இப்படி வளர்த்துப் பாருங்கள்.

குடும்பத்தில் எவ்வளவு தரித்திரம் இருந்தாலும் அது நீங்கிவிடும். அத்தகைய சக்தி பெற்ற வல்லமை பெற்றவனாக அவன் மாறுவான். நீங்கள் இதைத்தான் உருவாக்க வேண்டும்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் எப்படி இருக்கின்றோம்…?

குடும்பத்தில் கர்ப்பம் என்று இருந்தாலும் கூட ஆயிரம் சண்டைகள் போடுவோம்.
1.இதெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணுக்குள் பதிவான பின் குழந்தை உருவாகிப் பிறந்த பின்
2.அவன் அதே குணத்துடன் எல்லோருடன் சண்டை இழுத்துக் கொண்டிருப்பான்.
3.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் இழுத்துக் கொண்டு வருவான்.

காரணம்… சண்டையிட்ட உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானது. கருவிலே விளையும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

குழந்தை உருவாகும் பொழுதே மகரிஷிகள் சக்தி என் குழந்தை பெற வேண்டும். அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… தீமைகளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்… நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற வேண்டும்… என்று தாயும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி இப்படிச் சொல்லிப் பாருங்கள்.
1.ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து
2.அருள் ஞானக் குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள்

அக்கால அரசர்கள் வல்லமை பெற்ற குழந்தைகளை இப்படித் தான் உருவாக்கினார்கள்… ஆனால் மக்கள் யாரும் செய்யவில்லை.

அரச குடும்பத்தில் கர்ப்பம் ஆகிவிட்டார்கள் என்று தெரிந்தாலே கர்ப்பிணித் தாய்க்கு பலவிதமான விஷங்களையும் பலவிதமான போதனைகளையும் கொடுத்து… அந்தக் கருவிலேயே விஷமான உணர்வுகளை ஏற்றி… எந்த விஷமும் பாதிக்காத அளவிற்குத் தன் நாட்டினுடைய பெருமைகளைச் சொல்லி சக்தி வாய்ந்த குழந்தைகளை அன்று உருவாக்கினார்கள்.

விஷத்தின் ஆற்றலால் தான் (எல்லாமே) வலிமை பெற்றது. அந்த உணர்வைக் கொடுத்துக் கொடுத்து அந்த விஷத்தை ஏற்றி வைத்துத் தாயினுடைய இரத்தத்தின் வழி குழந்தைக்கு அது போய்ச் சேரும்படி செய்தார்கள். மிருகத்துக்கு ஒத்த வலு அந்தக் குழந்தைக்கு வருகின்றது

அதே சமயத்தில் பல போதனைகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

நாட்டினுடைய நன்மை பெருமைகள்… எதிரிகளைப் பற்றிய உண்மைகள்… எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும்…? இராஜதந்திரங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று கதையைச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

இந்த கர்ப்பிணி அதை கேட்டுக் கொண்டே இருக்கும். அரச குழந்தைகளை இப்படித்தான் அன்று உருவாக்கினார்கள். ஆனால் மக்களிடம் சொன்னால் யார் கேட்கின்றார்கள்…?

அன்று அரசர்கள் எப்படி உருவாக்கினார்களோ அது போன்று
1.அந்த ஞானிகள் காட்டிய வழியில் மெய் ஞானிகளை
2.உலகைக் காத்திடும் சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்… உருவாக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எம்முடைய உபதேசங்களை எல்லோரும் கேட்கின்றீர்கள் ஆனால் அடுத்தாற்போல் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள். அதை எல்லாம் முதலிலே நீக்கிப் பழக வேண்டும்… மாற்றி அமைக்க வேண்டும்

மணிக்கணக்காக யாம் (ஞானகுரு) உபதேசிப்பதன் நோக்கமே அந்த ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று நன்மை பெறும் சக்தியாக உங்களுக்குள் மாற்றுவதற்குத் தான்.
1.யாம் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் அது உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது
2.தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றது… தீமை அகற்றும் சக்தி பெறுகின்றீர்கள்

அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

ஆனால் மணிக்கணக்கில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எடுத்து விடுகின்றீர்கள். குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும் பொழுது பல வேதனையான நிலைகளைச் சந்திக்கும்படி செய்கின்றார்.
1.அதை எப்படி மாற்றுவது…? என்ற நிலையில் மாற்றுவதற்குண்டான உபாயத்தைக் காட்டினார்
2.அவர் சொன்ன முறைப்படி செய்து எனக்குள் வந்த வேதனைகளை மாற்றி அதிலிருந்து மீண்டேன்
3.அதைத்தான் உங்களுக்கும் இப்பொழுது வாக்காகக் கொடுக்கின்றேன்

இதற்கு முன் இதை எல்லாம் அதிகமாக வெளிப்படுத்தியதில்லை இங்கே தான் வெளிப்படுத்துகின்றேன். ஏனென்றால்
1.எங்கெங்கு… யார் யார்… ஏங்கி இதைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கெல்லாம் இந்த உணர்வுகள்
2.உங்களுடைய ஏக்கம் தான் அருள் உணர்வுகளை என்னை வெளிப்படுத்தும்படி செய்கின்றது
3.நானாக இப்படிப் பேச (உபதேசம்) முடியாது.

ஏக்கத்தின் உணர்வு கொண்டு அந்தத் தொடர் வரப்படும் பொழுது… அந்த உணர்வுக்கொப்பத்தான் நான் பேச முடியும். அப்படி அல்லாதபடி… நானாக எடுத்துச் சொல்வது என்றால் அது வராது.

உணர்வின் தன்மை மோதலாகும் பொழுது.. மின்னல் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் பொழுது அந்த உணர்வுகள் பிளந்து அதனுடைய அலைகள் படர்கின்றது.

இதைப் போன்று தான்
1.நீங்கள் ஏங்கும் பொழுது அந்த உணர்வை நுகர்ந்துதான் நான் பேசுகின்றேன்
2.தீமைகள் எப்படி இயக்குகின்றது… அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்று
3.அந்த அருள் ஞானி உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சித் தீமையைப் பிளக்கும் உணர்வுகளை நுகரச் செய்து
4.அந்த அருள் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும்படி செய்கின்றேன்.

அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் உருவாக்கி தீமைகளையும் பகைமைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் சக்தியாக “கல்யாணராமனாக” நீங்கள் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய உபதேசத்தின் நோக்கம்.

இதனைப் பின்பற்றி நீங்கள் வளர்ந்து வந்தீர்கள் என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் என்னிடம் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் காற்றிலே விட்டு விட்டுச் செல்வதாக இருந்தால்
1.சாமி சொன்னார் என்று சாதாரணமாகத் தான் தெரியும்
2.சாமி எனக்கு என்ன செய்தார்…? என்று தான் பேசுவீர்கள்.

குருநாதர் எனக்குக் காட்டிய பேருண்மைகளை அவர் எனக்கு கொடுத்ததைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன் இதற்கு மேல் நான் என்ன உதவி செய்ய வேண்டும்…?

1.நீங்கள் எல்லாம் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்
2.என்னைச் சந்தித்தவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
3.சதா உங்கள் உயிரை எண்ணி நான் தியானம் இருக்கின்றேன்

அந்த உணர்வினை நீங்கள் தான் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞானிகள் உணர்வை யாம் கொடுத்தால் அதை நுகரும் பருவத்தை நீங்கள் இழந்து விடக்கூடாது. நல்ல சாப்பாடு போட்டால் அதை நீங்கள் உட்கொள்ள வேண்டும் அல்லவா…!

ஒரு விவசாயம் செய்யும் இடத்தில் உயர்ந்த வித்தினைக் கொடுக்கின்றார்கள். அதைச் சீராக விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அப்படி விதைக்காதபடி மண்ணிலே வீசிவிட்டுச் சென்றால் எது எப்படி முளைக்கும்…?

எறும்போ பூச்சியோ மற்ற பறவைகளோ அந்த விதைகளைத் தின்றுவிடும்… அது எப்படி முளைக்கும்…?

அதே சமயத்தில் விதைத்தது சீராக முளைத்து வந்தாலும் அந்தந்தக் கால பருவத்திற்கு அதைப் பண்படுத்தும் நிலைகளையும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

அது போன்று தான்
1.நாம் கொடுத்த உபதேச வாயிலாகக் கொடுக்கும் பதிவை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்று அந்த அருள் உணர்வுகளைக் கூட்டினால்
3.அறியாது வந்த இருளைப் போக்கும்… அருள் வழி வாழவும் முடியும்
4.பிறவி இல்லா நிலையும் நீங்கள் அடைய முடியும்.

இது உங்கள் கையில் தான் இருக்கின்றது…!

தாயை மறந்தால்… எந்த ஒரு நல்லதையும் நம்மால் பெற முடியாது…!

 

நம்மை மனிதனாக உருவாக்கியது யார்…? அம்மா அப்பா தான்… அவர்கள் தான் கடவுள். ஒன்றும் அறியாத வயதிலிருந்து விவரம் தெரியும் வரை நம்மைக் காத்தது நம்முடைய தாய் தந்தையர் தான். அவர்கள் தான் நமக்குத் தெய்வங்கள்.

பல தீமைகளிலிருந்து விடுபட்டு என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஞானத்தை ஊட்டி “நம்மைக் காத்த தெய்வம் நம் தாய் தான்…” இது நல்லதப்பா… இது கெட்டதப்பா… உன் வாழ்க்கையில் இப்படி இருக்க வேண்டும்…! என்று சொன்ன “குருவும் தாய் தந்தையர் தான்…”

இதை எல்லாம் மறந்து விட்டு
1.ஆயிரம் சாமியார்களைத் தேடினாலும் சரி
2.ஆயிரம் கடவுளைத் தேடினாலும் சரி
3.நம்மை மனிதனாக உருவாக்கிய தெய்வமான தாயை மறந்து விட்டால்
4.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தை மறந்து விட்டால்
5.நமக்கு நல்ல வழிகளைக் காட்டிய குருவை மறந்து விட்டால்
6.எங்கு சென்றாலும் நல்லதை ஒன்றும் எடுக்க முடியாது.

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

தாய் தந்தையர் சொத்தைச் சம்பாதித்த பின்பு இன்று அனாதை இல்லங்களில் இருக்கின்றார்கள். அங்கே இருந்தாலும் கூட பென்ஷன் வாங்கச் சென்றால்… “உனக்கு எதற்கு இவ்வளவு காசு…? இத்தனை ரூபாய் பத்தாதா…?” என்று அதையும் தட்டிப் பறிப்பதற்குத் தான் இன்றைய குழந்தைகள் இருக்கின்றது.

இது போல் இன்று நிறைய நாம் கேள்விப்படுகிறோம்.

உழைத்தேன்… பிள்ளைகளை வளர்த்தேன்… படிக்க வைத்தேன்…! என்று தாய் தந்தையர் இருந்தாலும்… குழந்தைகளோ…
1.நான் ஆடம்பரமாக வாழ வேண்டும்
2.உனக்கு எதற்குப் பணம்…? என் பிள்ளைகளுக்குத் தேவை…! என்று பிடுங்கிச் செல்கிறார்கள்.
3.இது மட்டுமல்ல தாய் தந்தையரை உதைப்பவர்களும் இருக்கிறார்கள்.

தகப்பன் சம்பாதித்து விட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்த பிற்பாடு மூன்று லட்சம் கையிலே பணம் வைத்திருக்கின்றார்கள்.

மூன்று இலட்சத்திற்கு உனக்கு என்ன வேலை…? உனக்கு மாதம் வேண்டிய பணத்தை நாங்கள் கொடுத்து விடுகின்றோம் அந்த மூன்று லட்சம் ரூபாய் எங்களிடம் கொடு… கொடுக்க வேண்டியது தானே…! என்று கேட்கின்றார்கள்
1.ஆனால் பணத்தைக் கொடுத்த பின் அடுத்து சோறு போடுவார்களா…?
2.இது எல்லாம் இன்றைய காலத்தில் கொடுமையிலும் கொடுமை.

அரக்க உணர்வுகள் தாய் தந்தையரை மறக்கச் செய்து விட்டது.

யாம் சொன்ன முறைப்படி தாய் தந்தையரை மதித்துச் செயல்படுத்தினால் காட்டிற்குள் சென்றால் ஒரு புலியே தாக்க வருகிறது என்றாலும் “அம்மா…” என்று உங்கள் தாயை அழைத்தால் போதும். அந்தப் புலி தாக்காது.

தெருவிலே நாய் விரட்டி வந்தாலும் “அய்யய்யோ… அய்யய்யோ…! முருகா…! என்று சொன்னாலும் கூட லபக் என்று பிடிக்கும். ஆனால் “அம்மா…!” என்று அழைத்துப் பாருங்கள். அந்த நாய் உங்களைக் கடிக்கிறதா..? என்று பார்க்கலாம்… கடிக்காது.

யானையே தாக்க வந்தாலும் சரி அந்தத் தாயின் பாச உணர்வு நம் உடலில் இருக்கின்றது. “அம்மா” என்று எண்ணிணால் அந்த அலைகள் குவிந்து நம்மைக் காக்கச் செய்யும்.

சந்தர்ப்பத்தில் தொழிலே பெரும் சங்கடங்கள் வருகிறது என்றால் சாமியார்களை நினைப்பதைக் காட்டிலும்
1.யாம் சொன்ன முறைப்படி உங்கள் தாயை வணங்கி… அம்மா…! என்று ஏங்கி
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபடக்கூடிய வலிமையும் எனக்கு அந்தச் சிந்திக்கும் ஆற்றலும் வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
3.அந்தத் தாயினுடைய உணர்வு உங்களுக்கு எப்படி வேலை செய்கிறது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

ஞானிகள் நம் தாயைப் பேணிக் காக்கும் முறைகளைக் காட்டியுள்ளார்கள். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் தாய் தந்தையினுடைய அருளால் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

ஆனால் இன்று இதையெல்லாம் மறந்து இருக்கின்றோம். தாய் தந்தையர் “கோவிலுக்கு வா…” என்று கூப்பிட்டால் “உனக்குப் பைத்தியம்… நீ போ…” என்று சொல்லக்கூடிய காலமாக இருக்கின்றது.

அரக்க உணர்வுகளாக வளர்ந்து தாயையே இரக்கமற்றுக் கொல்லும் தன்மைகளும்… துன்புறுத்தும் நிலைகளும் இன்று கண்களிலே நாம் பார்க்கும் படியாக நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் தாய் தன் குழந்தையைக் கர்ப்பத்தில் வளர்க்கப்படும் பொழுது எத்தனையோ இன்னல் படுகின்றது… வேதனைப்படுகின்றது. பிறந்த பிற்பாடு அவனை ஆளாக்குவதற்கு எவ்வளவோ சிரமப்படுகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று அல்லும் பகலும் எத்தனையோ முயற்சிகள் எடுக்கின்றது. அவனுடைய கல்விக்கும் எத்தனையோ சிரமப்பட்டுக் கடனை வாங்கியாவது அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றது.

ஆனால் கற்றபின் குழந்தையினுடைய செயல்களைப் பார்க்கப்படும் பொழுது எத்தனையோ தவறான செயல்களை அவர்கள் செயல் படுத்துகின்றார்கள். இது எல்லாம் ஞானிகள் காட்டிய வழிகளை இன்று தவற விட்டதால் ஏற்படுவது தான்… அதனால் நாம் படக்கூடிய வேதனைகள் ஏராளம்.

ஆகையினால்
1.என் அம்மாவைப் பற்றி நான் எண்ணினாலே எனக்கு (ஞானகுரு) அழுகை வந்து விடும்.
2.காரணம் என் தாய் என்னைக் காத்த நிலைகள் கொண்டுதான் இந்த ஞானத்தையே நான் பெற முடிந்தது….
3.உங்களுக்கு இதைப் போதிக்கவும் முடிகின்றது.
4.தாயின் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டதனால் இந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஒரு பெண் பிள்ளை போன்று நான் தான் சமைத்துக் கொடுப்பேன்… எல்லா உதவிகளும் செய்வேன்.

என் பாட்டிக்கும் (தாயின் மாமியார்) என் தாய்க்கும் சண்டை வரும். என் பாட்டி கண்டபடி பேசும். அதனால் ஒரு சமயம் கோபித்துக் கொண்டு போய் என் தாய் கிணற்றில் விழுந்து விட்டது.

நானும் உடனே கிணற்றில் குதித்து என் தாயைத் தூக்கி வந்தேன். எனக்கு வயது அப்போது எட்டு இருக்கும் என் தாயும் நானும் அதிலிருந்து பிரிந்து இருப்பதே இல்லை…. ஏதாவது வேதனைப்பட்டால் மீண்டும் கிணற்றில் விழுந்து விடுமே என்று..!

ஏனென்றால் தாயினுடைய பாசத்தை என் தாய் எனக்கு உணர்த்தியது. அந்த உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது
1.ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் தாயை வணங்கினாலே போதுமானது.
2.கடவுளை எங்கேயும் தேட வேண்டியதில்லை… நம் தாய் தான் கடவுள்.

நம்மைத் தெய்வமாக இருந்து காப்பாற்றியது தாய் தான். குருவாக வழிகாட்டுவதும் தாய் தான். ஆகையினால் இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துச் செயல்படுங்கள்.

விஞ்ஞான வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கையாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மெய் ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு தாயினுடைய பேரன்பைப் பெற முற்படுங்கள். அதை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எந்த நிலை வந்தாலும் என் தாய் தந்தையின் அருளால் என் செயல் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்படுத்திப் பாருங்கள்.
1.எந்தச் சிக்கல் வந்தாலும் அதை நிவர்த்திக்கக் கூடிய நல்ல உபாயம் வேண்டும் என்று தாயை எண்ணுங்கள்.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! தாய் நம்மைப் பேணிக் காத்த உணர்வுகள் இயக்கி நமக்கு ஞானத்தை ஊட்டும் தப்பிக்கும் மார்க்கத்தையும் காட்டும்.
3.யாராவது இடைஞ்சல் செய்ய வந்தால் தாயின் உணர்வு வந்து நமக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் நம்மைத் தாக்காது தடுக்கவும் செய்யும்.
4.எத்தகைய தாக்கக் கூடிய நிலைகள் வந்தாலும் தாயை எண்ணினால் அதை மறைக்கக் கூடிய சக்தி உண்டு.

ஆக அதைப்போன்று தாய் தந்தையரும் தங்கள் குழந்தைகளுக்கு ஞானத்தை ஊட்ட வேண்டும். கோவிலுக்குச் சென்றாலும் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனையைத் தான் வளர்த்து விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் மாறி… இனி வரக்கூடிய காலங்களில் இருந்து மீட்டுவதற்கு இந்த முறைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் காட்டில் விளையும் தாவர இனங்களை எல்லாம் நுகர்ந்தறிந்தான். அதன் இயக்கங்கள் எவ்வாறு…? என்று அவன் அறிந்த உணர்வைத்தான் நானும் நுகர்ந்து உனக்குள் சொல்ல முடிகின்றது என்றார் ஈஸ்வரபட்டர்.

அவன் முதலிலே துன்பப்பட்டான்… உணர்ந்தான்… அவனுக்குள் விளைந்தது. அதை எல்லாம்… எனது சந்தர்ப்பம் நுகரும் அறிவு வந்தது. அறிந்த உணர்வுகள் கொண்டு அது எனக்குள் வலுப்பெறும் தன்மையும் வந்தது.

அகஸ்தியன் துருவனாகும்போது வானை உற்று நோக்கி துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்குகின்றான். 27 நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகள் எப்படித் துருவத்தை நோக்கி வருகிறது…? என்று அதன் உணர்வின் அறிவாக அவன் அறிந்து கொள்கின்றான்.

திருமணம் செய்யும்போது அதை எல்லாம் தன் மனைவிக்குப் போதித்தான். அந்த உணர்வின் வலுவைத் தன் மனைவிக்கும் செருகேற்றி “இருவரும் சமம்” என்ற உணர்வுகள் பெற்றனர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் உணர்வினை இருவருமே நுகர்ந்து இரு உயிரையும்… இரு உணர்வையும்… ஒன்றாக்கிக் கொண்டனர்.

1.நட்சத்திரங்களின் தாக்குதலால் உயிரணு தோன்றியது போன்று
2.பல பல நட்சத்திரங்கள் வெளிப்படும் உணர்வினை இருவருமே உற்று நோக்கி
3.அந்த ஒளிக் கற்றைகளைக் கணவன் பெற வேண்டுமென்று மனைவியும்…
4.மனைவி பெற வேண்டுமென்று கணவனும்… இருவருமே எண்ணுகின்றனர்.

இப்படி அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் விஷத் தன்மைகளை அடக்கிப் பழகிய
1.அவர்கள் இருவர் உணர்வுகளும் ஒன்றாக்கப் படும்போது
2.அத்தகைய அணுத்தன்மை உருவாகும் கருவாக அவர்களுக்குள் உருவாகி
3.அந்த உணர்வுகள் இருவர் உடல்களிலும் அணுக்களாக விளைகின்றது.

அத்தகைய அணுக்கள் உருவான பின் அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் சிதைவுகளை உற்று நோக்கினால் அந்த ஒளி அலைகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்ளும் நிலை அகஸ்தியனுக்கும் அவர் மனைவிக்கும் வருகின்றது.

நட்சத்திரங்களின் சக்தியால் உயிர் துடிப்பின் நிலை பெற்றது. அதே உயிரின் தன்மை கொண்டு… 27 நட்சத்திரங்களின் சக்திகளைச் சமப்படுத்தி ஒன்றென இணைத்துக் கொண்டனர்.

27 நட்சத்திரங்களின் ஒளிகளைச் சூரியன் தனக்குள் பாதரசங்களை எடுத்து உலகையே ஒளிக்கற்றையாகச் சூரியன் எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போன்று
1.27 நட்சத்திரங்களின் உணர்வின் அணு செல்கள் விளைந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் அணு தன்மையாகப் பெற்றது தான் இந்தத் துருவ நட்சத்திரம்.

அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி வந்தது…? என்று அந்த அகஸ்தியன் அறின்றான்…!

கடல் வாழ் நிலைகள் சனிக் கோளின் சக்தியால் புயலால் ஈர்க்கப்பட்டு அதன் உணர்வுகள் மேகங்களில் பரவப்பட்டுப் பரவிய பின் கடல் வாழ் உயிரினங்கள் தரை வாழ் உயிரினங்களின் நிலைகளாகச். சிறு சிறு சங்குகள் நத்தைகளை நீர் நிலைகளில் பார்க்கலாம். (புயல் காலங்களில் பெய்யும் மழை நீரில் நம் வீடுகளிலேயே பார்க்கலாம்)

கடல் வாழ் நத்தைகளைப் போன்று நிலங்களில் உள்ள மற்ற குளம் குட்டைகளிலும் பார்க்கலாம்…. நத்தைகளும் வருகின்றது தவளைகளும் வருகின்றது நீர்ப் பாம்புகளும் தரை வாழ் பாம்புகளும் நீரில் கலக்காத பாம்பினங்களும் உருவாகின்றது

அதனதன் உணர்வுக்கொப்ப அதனுடைய வாழ்க்கையின் தன்மை அமைகின்றது என்பதனை… “இவன் தன்னை அறிகின்றான் அந்த அகஸ்தியன்….!”

விஷத்தின் தன்மை ஒடுக்கியபின்…
1.வான் வீதியில் தோன்றிய உயிர் முதலில் கடல் வாழ் நிலைகள் பெற்று
2.பின் அதிலிருந்து சனிக்கோளால் கவரப்பட்டு
3.அதன் உணர்வின் தன்மை மேகங்களில் படரப்பட்டு
4.அதன் வழிகள் கொண்டு தரை வாழ் நிலைகளாகப் புழு பூச்சிகளிலிருந்து
5.தரை வாழ் மனிதனாக நாம் எப்படி விளைந்தோம்…? என்ற உண்மையினை உணர்ந்து
6.நட்சத்திரங்களின் உணர்வால் உயிர் எவ்வாறு ஆனது…? என்ற நிலையும் அகஸ்தியன் அறிந்துணருகின்றான்.

தன் உடலில் உள்ள அணுக்களில்…
1.நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒவ்வொன்றையும் மின் கற்றைகளைச் சேர்த்து… தனக்குள் இணைத்து…
2.உயிருடன் ஒன்றி… ஒரே ஒளித் தன்மையாக.. கணவனும் மனைவியும் இதைக் கருவுற்று
3.கருவின் நிலையாக அந்த ஒளியின் அணுவாக உருவாக்கி…
4.அவர்கள் இருவரும் எதை உற்று நோக்கினார்களோ
5.அந்தத் துருவப் பகுதியை எல்லையாக வைத்து அவர்கள் இரு உயிரும் ஒன்றி வாழுகின்றது…. துருவ நட்சத்திரமாக…!

அவன் பெற்ற ஒளி சக்தியை எடுப்பதே துருவ தியானத்தின் நோக்கம்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எலெக்ட்ரானிக் கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

1.ஆனால் அதில் சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.
2.எதிர்மறையான உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அதில் உள்ள பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.

இதைப் போலத்தான் நம் உயிரின் இயக்கமும்…!

நாம் எண்ணும் சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…
1.நமது உயிர் அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது
2.இயக்கத்தின் துடிப்பு கம்மியாகின்றது.

அப்படிக் கம்மியாகும்போது உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.

ஏனென்றால் நமது உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)” அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.

1.அதில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
3.அந்த உணர்வுகளில் மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.
4.வெளி வரும் சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.
5.அந்த உணர்வின் சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.

இந்தத் தியான வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம். ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.

ஏனென்றால் இதை “அங்கக்கலை…!” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லி விட்டால் எலலா உண்மைகளும் வெளியில் வரும்.

உங்களிடம் நான் (ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன வருகின்றது…? என்றும் பார்ப்பேன்.

அதைத் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது…? என்ற நிலையில் சிலதுகளை இணைத்துக் கொடுப்பேன்.

அதாவது உங்கள் சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள் இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

இந்த அலைகளை தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று சொல்லி யாம் கொடுக்கின்றோம்..
1.தமாஷாகச் சொல்வது போல் இருக்கும்…
2.ஆனால் அதற்குள் ரொம்ப விஷயம் இருக்கும்.

அதாவது உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி…!”

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால் வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால் அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லுவார்.

வாத்தியார் அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது…! என்றால் வாத்தியார் என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின் நிலைகள்.

1.அதே சமயத்தில் பார்வையின் நிலைகள் என்னவாகும்…? இருட்டாகும்… கலர் கறுப்பாகும்.
2.எந்த நல்லதையும் பார்க்க முடியாது.
3.இருள் சூழ்ந்த நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.

ஏனென்றால் நல்ல பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை கொண்ட உணர்வாக மாறிவிடும்.

அச்சமயம் பதிவு செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…!

இது எல்லாம் நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…!

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்

 

இராமனுக்குத் திருமணமாகும் பொழுது “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும் வந்து ஆசீர்வதித்தார்கள்…” அந்த இராமன் யார்…? சீதாராமன்…! “சந்தோஷத்தை ஊட்டும் உணர்வுகள்…”

1.உங்கள் உடலுக்குள் பல பகைமையான உணர்வுகள் இருந்தாலும்
2.சந்தோஷமான வார்த்தையை எடுத்துத் தியானத்தில் எல்லோரும் சொல்லப்படும் பொழுது
3.மகிழச் செய்யும் உணர்வின் இயக்கமாக வருகின்றது.

ஒவ்வொரு உடலிலும் எண்ணிலடங்காத குணங்கள் உண்டு. நாம் எத்தனை பேர் கூட்டுத் தியானத்தில் இருக்கின்றோம்…? இத்தனை பேருடைய உணர்வின் ஒலிகள் படரப்படும் பொழுது வீட்டில் எப்படி இருக்கும்…?

எல்லோரும் சேர்ந்து வீட்டிற்குள் அருள் உணர்வுகளைப் படரச் செய்யப்படும் பொழுது… செவிகளில் கேட்டு இந்த உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடல் எப்படி இருக்கும்…?

இது எல்லாம்… ஞானிகள் சொன்ன அந்த மார்க்கத்தினை நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.

இன்று இந்த உலகமே விஷமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமை புகாது வலிமையை நாம் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தூக்கி எறிய வேண்டுமென்றால் அதற்குண்டான சக்தி பெற வேண்டும்.
2.அந்த அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியானப் பயிற்சியை கொடுப்பது.
3.எதாவது ஆயுதம் இல்லாது ஒன்றும் செய்ய முடியாது.

இந்த மனித வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு போன்றவைகளுக்கு வலிமை ஜாஸ்தி. அதை நீக்குவதற்கு உங்கள் நல்ல குணங்களால் முடிகிறதா…? அவையெல்லாம் அலறும்.

ஆனால் இத்தகைய விஷத்தை வென்று உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதை எடுத்து உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் சேர்த்துப் பழகி விட்டால் அந்த உணர்வுகள் வளர வளர
1.தீமையான உணர்வுகள் அணுகாது அதைத் தூக்கி எறியும் மன வலிமையும்
2.அந்த உணர்வினைப் பற்றுடன் பற்றி உங்களுக்குள் நல்ல உணர்வுகளை வளர்க்கும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.
3.இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!

மற்றவர்கள் சிரமப்பட்டாலும் அது உங்கள் செவிகளில் பட்டாலும் அதை மாற்றி அமைத்து
1.சிந்தித்துச் செயல்படும் நிலையாக உங்களுடைய சொல் அவர்களுக்குச் சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
2.”இன்னார் சொன்னார் நன்றாக இருந்தது…” என்று அவர்கள் அந்த மகிழ்ச்சி பெறக்கூடிய செயலுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

அது தான் உண்மையான தியானம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள்… ஒவ்வொரு உடலும் கோவில்… பல கோடி உடல்களில் சேர்த்து மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் “அவை தான் நமக்குத் தெய்வம்…!”

எனக்கு குருநாதர் எப்படி வழிகாட்டிக் கொடுத்தார்…?

உயிர் கடவுளாக இருக்கின்றது அந்த உடல் கோவிலாக இருக்கின்றது
1.இந்த உடலில் தெய்வங்கள் இருக்கின்றது
2.அந்தத் தெய்வத்திற்கு சேவை செய்ய நான் கொடுத்த அருள் சக்தியை அவர்களை நுகரச் செய்து
3.அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்தி உயர்ந்த குணங்களைத் தெளிவாக்க “நீ பிரார்த்தனை செய்” என்றார்.

அந்தச் சேவையைத் தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். குரு வழியில் யாம் சேவை செய்யும் பொழுது உங்களுக்கு அந்தச் சந்தோஷம் வருகிறது. அப்பொழுது எனக்குச் சந்தோசமான சாப்பாடு கிடைக்கின்றது. எனக்குக் கொஞ்சம் பூரிப்பு வருகின்றது.

ஆகவே வாழ்க்கையில் வரும் சங்கடங்களை நீக்கி… மற்றவருடைய தீமைகளைப் போக்கச் செய்யும் அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் யாம் உபதேசிப்பது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருத்தர் உடலில் ஆவி (ஆன்மா) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் நாம் அவரிடம் பேசினால் அங்கே போகாதே… போகாதே…! என்று மற்றவர்களிடமும் சொல்லும்.

நாம் அவரிடம் பேசினால் போதும்… நம் உணர்வுகள் பட்டவுடனே… போகாதீர்கள்… போகாதீர்கள்…! என்று சொல்லும். காரணம்… அதற்கு ஆகாது.

அதே உணர்வை நாம் கேட்டோம் என்றால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அது பெற வேண்டும்
2.அது இருள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வு வளர வேண்டும் என்று எண்ணி
4.ஒரு பத்து தடவை செய்துவிட்டு உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

அப்புறம் தன்னாலே மயங்கி விழுந்தாலும் விழும்…. போய் விடும்….! ஏனென்றால் சில சாப அலைகள் ஒருவருக்கொருவர் பாய்ந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது.

அந்த மகரிஷிகள் தனக்குள் கோடி… கோடி… கோடி…! என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள். ஆகவே அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்து இதை அவருக்குள் புகுத்த வேண்டும்.

அப்படிப் புகுத்தினோம் என்றால் அவர்கள் உணர்வு நீங்கும். “புகுத்த வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் வலுப் பெறும். இந்த அலைகள் படரும். நம் நினைவு அங்கே மகரிஷிகள் பால் போகும்.

ஆகவே… எதை எடுத்தாலும்… நாம் அந்த விண்ணின் பற்றிற்கே வருகின்றோம்…!

இல்லையென்றால் நம் வாழ்க்கையில் இப்படி இருக்கின்றார்களே…! என்ற இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.

ஆகவே…
1.அந்த விண்ணின் பற்றுடன் ஒவ்வொரு நிமிடத்திலேயும் இதைப்போல எண்ணி ஆத்ம சுத்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இந்த நினைவினை எடுத்து இங்கே கொண்டு வர வேண்டும்.

அதாவது… இங்கே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும்.

எங்கே…?

பயிற்சி:-
1.கண்ணின் நினைவினை விண்ணிலிருந்து சிந்தனையை எடுத்துப் பாருங்கள்.
2.அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்ற மாதிரி இருக்கும்
3.செவிகள் கேட்கும்…. இரண்டும் கலக்கும்…. அதை உணர்த்தாது…. வந்தாலும் அது நம்மை இயக்காது.
4.சரி…! என்று எதிர் பதில் சொல்லச் செய்யும்.

அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கும்போது நேராக மட்டும் அவர்களைக் கண்ணுற்று மட்டும் பார்க்காதீர்கள். (இது முக்கியம்)

சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்தீர்கள் என்றால்
1.அது உங்களை இயக்காதபடி அப்புறம் உங்கள் சொல்லால் சொல்லும்போது அது இயங்கும்.
2.அவர்களை இயக்கி மாற்றிவிடும்….!

ஏனென்றால் இந்தப் பதிவுகள் நமக்கு அதிகம் தேவைப்படும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மின்னல்கள் கடலில் தாக்கப்படும்போது மணலாகின்றது. கடல் ஓரங்களில் அது மறைந்து விடுகின்றது. அந்த மணலுக்குள் இருப்பதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான் விஞ்ஞானி.

அதிலே பல பல நட்சத்திரங்கள் எதிர் நிலை கொண்டு கலந்திருப்பதை… அது எதிர்மறையாக எப்படி வெடித்ததோ (மின்னலாக) அதைப் போல எதிர் மறை கொண்ட உணர்வின் தன்மையைச் சேர்த்து… அதைத் தனித்துப் பிரித்து.. மீண்டும் எதிர்மறையாக மாற்றப்படும்போது வெடிக்கும் தன்மைக்கு (அணுக் கதிரியக்கம்) வைக்கின்றான்.

அது வெடித்தால்… எந்த மின்னலின் தன்மை அந்த நட்சத்திரங்கள் உணர்வுகள் கொண்டு ஊடுருவி…
1.அது இரண்டும் மோதும்போது இரும்பானாலும் உலோகமானாலும் அதைக் கருக்கிவிட்டு
2.தன் இனத்தின் தன்மையைப் பிரித்து விடுகின்றது.

இப்படி அதனுடைய வீரிய உணர்வுகள் அணு குண்டை வெடித்தால் நம் உடலில் இருக்கக்கூடிய அதே நட்சத்திரத்தின் உணர்வைத் தாக்கித் தன் இனத்தைப் பெருக்கி “இந்த உடலையே அழித்துவிடும்…!”

இப்படி வெடிக்கப்பட்ட கதிரியக்கங்களின் தன்மை அதிகரித்து சூரியன் பக்கம் போகும்போது… அதனின் எதிர்மறையான நிலைகள்
1.எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூரியனின் இயக்கத்திற்குள் செல்லும்போது
2.எதிர்மறையான நிலைகள் அங்கே அதிகரிக்கும்
3.அப்பொழுது இரு மடங்கான கரண்ட் உற்பத்தியாகும்.

உதாரணமாக இரண்டு கரண்ட் வயர் ஒன்றுடன் ஒன்று மோதினால் என்ன ஆகும்…? எரிந்து அப்படியே கருகிவிடும்.

அதாவது சூரியனின் காந்தப்புலன் 27 நட்சத்திரங்களின் உணர்வைக் கவர்ந்து அது ஒன்றோடு ஒன்று மோதும் போது எப்படிச் செயல்படுகின்றதோ இதைப் போலத்தான்
1.இந்த உணர்வின் தன்மை பாய்ச்சப்படும்போது (அணுக் கதிரியக்கங்களை)
2.அதன் அலைவரிசையில் மோதப்படும்போது இங்கிருக்கும் பொருளைக் கருக்கிவிட்டு
3.செயலற்ற நிலைகளாக்கி மற்ற எல்லாவற்றையும் கவர்ந்து கொள்கின்றது.

இந்த உணர்வின் தன்மை கூடி ஆவி மண்டலங்களாக மாறும்போது இதனைச் சூரியன் எடுத்துச் செல்லுகின்றது. போகும் பாதையில் பல கோள்கள் எடுக்கின்றது.

அதிலிருந்து வடித்து மீண்டும் சூரியனுக்கு வரப்படும்போது இதே தீமையின் விளைவுகள் வரப் போகின்றது. இரண்டு வயர் மோதினால் எப்படி எர்த் (EARH) ஆகின்றதோ அதைப்போல
1.அந்த அதிர்வின் தன்மை ஆனபின் நம் உயிரின் துடிப்பு அதிகரித்துவிடும்
2.அந்தத் துடிப்புக்கு ஈடுகட்டும் நிலை நம் உடல் அணுக்களுக்கு இல்லை
3.அந்த உணர்வுகள் எல்லாம் செயலிழந்து விடும். (FUSE)

ஒரு பல்பிற்குள் மின்சாரம் அதிகமாகி விட்டால் அது எப்படி அதனுடைய இயக்கங்களை ஒளி காட்டுவதை இழந்துவிடுகின்றதோ (FUSE) அதைப்போல மனித அறிவின் தன்மையை இழக்கச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வது எவ்வாறு…?

இன்று விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ள நிலையில்… எத்தனை கடவுளை வணங்கினாலும்… எத்தனை பக்தி கொண்டிருந்தாலும்… என்ன ஆகும்..?

நல்ல ஒழுக்கங்களை எல்லாம் கடைப்பிடிக்கலாம். இருந்தாலும் இத்தகைய தீமை என்ற நிலைகள் நடந்தால் எல்லாமே பாழடைகின்றது.

ஆகவே… அந்தத் தீமை என்ற உணர்வை நமக்குள் வளராது தடுக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தே ஆக வேண்டும்
2.அதை எடுத்தால் நீங்கள் உங்களைக் காக்கலாம்… பிறவியில்லா நிலை அடையலாம்.
3.உங்களை நம்பிப் பழக வேண்டும்.

இந்தச் சாமியார் செய்வார்… அந்தச் சாமியார் செய்வார்… அந்தக் கடவுள் செய்வார்… இந்தக் கடவுள் செய்வார்…! என்ற நிலையை விடுத்துவிடுங்கள்

உங்கள் உயிரே ஈசனாக இருக்கின்றான்… ஆண்டவனாக இருக்கின்றான்… கர்த்தராக இருக்கின்றான்…. கடவுளாக இருக்கின்றான்…! ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துதான் இந்த உயிரை அழைக்கின்றனர்.

அந்த உயிர் இயக்கும் தன்மை வரப்படும்போதுதான் பல வண்ணங்களில் பல நிலைகளில் பேசி அதைக் கடவுள் என்று சொல்கின்றனர்.

நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதாவது…
1.உள் நின்று இயக்குவதைக் கடவுள் என்றும்
2.அந்த உணர்வின் தன்மை மீண்டும் இயக்கித் தன் இனத்தை உருவாக்கும் பொழுது ஈசன் என்றும்
3.அது இயக்கும் தன்மை மீண்டும் உருவாக்கும் போது பிரம்மன் என்றும்
4.அந்த உணர்வின் தன்மை உடலாக்கும்போது சிவன் என்றும்
5.இப்படித் தெளிவான நிலைகளை நம் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நம் உடலுக்குள் இயக்கும் நிலையே கடவுள். உள் நின்று இயக்கும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் செயல்படுகின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

எந்த நேரமும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை நீங்கள் பெற முடியும். அதைப் பெற்று “உயிரின் துடிப்பைச் சீராக்க முடியும்…!”

இந்த உலகை அறிய விரும்பி பூமிக்குள் வந்தாலும்… நீ பட்டது போதும் தாயே மகாலட்சுமி…!

 

1.மனிதனின் உயிர் என்ற நிலை வரப்படும் பொழுது “மகாவிஷ்ணு” சர்வத்தையும் எடுத்து வருகின்றது.
2.உயிரில் உள்ள காந்தம் எத்தனையோ விதமான உணர்வுகளை நமக்குள் சேர்த்தது “மகாலட்சுமி…”
3.நம் உடலிலே எல்லா வகையான உணர்வுகளையும் வளர்த்து வைத்திருக்கின்றது.

சீதாவை ராவணன் கடத்திச் சென்று விடுகின்றான் இராமன் எத்தனையோ போர்களைச் செய்து சீதாவை மீட்டி வருகின்றான். மீட்டி வந்த பிற்பாடு மக்கள் என்ன சொல்கிறார்கள்…?

அசுரனிடத்தில் இவ்வளவு நாள் இருந்ததால் மக்கள் சீதாவினுடைய புனிதத் தன்மையை சந்தேகப்படுகிறார்கள் என்று சொல்லி அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

அதன் வழி அக்கினிப் பிரவேசம் செய்து சீதா வருகின்றது. வந்தபின் சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. இராமனும் சீதாவும் அரண்மனைக்குச் செல்கின்றார்கள்.

ஆனால் சிறிது காலத்திலேயே சீதா கர்ப்பம் ஆகின்றது. இதைத் தெரிந்து கொண்ட பின் மக்கள் என்ன சொல்கிறார்கள். சீதா ராவணனிடம் சிறைப்பட்டிருந்ததால் அவன் மோசமானவன்…! ஆகவே இது அவனுக்கு உருவான கரு தான் என்று மக்கள் கருதுகின்றார்கள்.

இது இராமனின் செவிகளுக்கும் செல்கின்றது. தன் சகோதரன் லட்சுமணனைக் கூப்பிட்டு “சீதாவைக் காட்டிற்குள் சென்று விட்டு விட்டு வந்துவிடு… ஒன்றும் சொல்லாதே…!” என்கிறான்.

தன் மனைவி கர்ப்பிணி என்றும் தெரிகின்றது… இருந்தாலும் அவ்வாறு சொல்கின்றான்.

அசுர உணர்வுகள் கொண்டு வாழும் மிருகத்தின் மத்தியிலே கர்ப்பிணியை விட்டுச் சென்றால் என்ன ஆகும்…? உணவுக்கோ பாதுகாப்புக்கோ ஒருவரும் இல்லை என்றால் அதனுடைய நிலை என்ன ஆகும்…?

அப்போது அங்கே அந்தக் காட்டிற்குள் வரக்கூடிய ஒரு பெண் “இது கர்ப்பிணியாக இருக்கின்றது… அனாதையாக இருக்கின்றது… இது யார்…? என்றும் தெரியவில்லை… இருப்பினும் வான்மீகி மகரிஷி அங்கே தவம் இருக்கின்றார்… இந்தப் பெண்ணை அங்கே அழைத்துச் சென்று அடைக்கலம் செய்யலாம்…? என்று கூட்டிச் செல்கின்றது.

வான்மீகி சீதாவைப் பார்த்தபின் உண்மையை உணர்கின்றார். சரி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கின்றார்.

இயற்கையில் இராமனைப் பற்றிய உண்மை நிலைகளையும் தசரதச் சக்கரவர்த்தியின் நிலையையும் உலக நிலைகளையும் எப்படி இருக்கின்றது…? என்ற நிலையைக் கருவிலே உருப்பெற்ற குழந்தைக்குக் கர்ப்பிணியிடம் செவி வழி சொல்லி அதை நுகரச் செய்து அதன் வழி ரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுகின்றான் வான்மீகி.

1.இராமனுடைய செயல்கள் எப்படி…?
2.உலக மக்களின் செயல்கள் எப்படி…?
3.ராவணனுடைய செயல்கள் எப்படி…? என்று
4.இந்த உண்மைகள் அனைத்தையுமே சீதாவிற்குக் கதையாகச் சொல்லப்படும் பொழுது
5.கர்ப்பிணி காது வழி கேட்டு கண் வழி கவர்ந்து மூக்கு வழி நுகர்ந்து
6.அந்த உணர்வுகள் ரத்தத்துடன் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த ஞானத்தை ஊட்டுகின்றது.

இதில் “எத்தனையோ அற்புதமான உண்மைகள்” இருக்கின்றது…!

அதற்குப் பின் குழந்தைகள் பிறக்கின்றது லவ குசா என்று இரட்டைக் குழந்தைகளாகக் காரணப் பெயராக வைக்கின்றார்கள். அதாவது…
1.கவர்ந்து கொண்ட உணர்வுகள் எதிரொலியாக எப்படிச் செல்கின்றது…?
2.எதைக் கவர்ந்து உருவானதோ அந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தி அந்த உணர்வின் தன்மை எப்படிச் செயல்படுத்தும்…? என்பதற்காக
3.இரட்டைக் குழந்தைகள் பிறந்தது என்று காவியப்படி கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் சீதா இல்லாததால் இங்கே இராமன் ஆட்சி செய்யும் இடத்தில் பல இன்னல்கள் சூழப்பட்டு விடுகிறது. அதிலிருந்து மீட்கத் தன் தந்தை செய்த அஸ்வமேத யாகத்தை மீண்டும் செய்ய வேண்டும் என்று இராமன் சொல்கிறார்.

ஆகவே அரசைக் காக்க வேண்டும் என்று அந்த யாகத்தைச் செய்ய முற்படுகின்றார்கள். தேதியைக் குறித்து அந்த நாளிலே அதைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆயத்தம் செய்கின்றார்கள்.

வான்மீகி இதைத் தெரிந்து கொள்கிறார். நாளை அந்த யாகம் தொடங்க இருக்கிறது என்றால் அங்கே மற்ற எல்லோரும் கூடியிருப்பார்கள் என்ற நிலையில்
1.லவ குசாவை அழைத்து “நீங்கள் அங்கே செல்லுங்கள்…”
2.அங்கே சென்று தன் சரித்திரத்தை நான் எப்படிப் பிறந்தேன்…? எப்படி வளர்ந்தேன்…?
3.இதற்கு மூலம் யார்…? என்ற தத்துவத்தை எடுத்து ஓதும்படிச் சொல்லி அனுப்புகின்றார்.

அதன்படி யாகம் தொடங்கும் வேளையில் அந்த குழந்தைகள் இதையெல்லாம் பாடல்களாகப் பாடி வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்தப் பாடல்களைக் கேட்ட இராமன்… என்னுடைய சுய சரிதம் எனக்கும் சீதாவுக்கும் மட்டும் தான் தெரியும் அப்படி இருக்கும் பொழுது இந்தக் குழந்தைகள் அதைப் பாடுகிறார்கள் என்றால் “இவர்கள் யாராக இருக்கும்…?” என்ற வகையில் அவர்களை அணுகி… உங்களுடைய தாயார் யார்…? எங்கே இருக்கின்றார்கள்…? என்று இராமன் கேட்கின்றார்.

அவர்கள் ஒன்றும் சொல்லாமல் சீதா இருக்கும் வான்மீகி ஆசிரமத்திற்கு இராமனை அழைத்துச் செல்கின்றார்கள். இராமனும் உற்றுப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கின்றான். நாட்டு மக்களும் உணர்கின்றார்கள்.

ஏனென்றால் அவர்களும் யாகசாலையில் இந்த பாடல்களைக் கேட்டதால் உலக மக்கள் புரிந்து கொண்டனர். “இனி நாம் சேர்ந்து வாழலாம்” என்று இராமன் சீதாவை அரண்மனைக்கு அழைக்கின்றான்.

அப்பொழுது தான் பூமாதேவி சீதாவிடம் “நீ பட்டது போதும் தாயே…!” என்று சொல்கிறது.

உயிரின் இயக்கம் ஈசன்… அதிலே ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.
1.இந்த உடலுக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைச் சேர்த்து வைத்தது உலகை அறியும்படிச் செய்தது.
2.நாம் உலகை அறிந்து கொள்ளும் நிலைக்காக எடுத்துச் சேர்த்தது.

மகாலட்சுமி நீ உலகை அறிய விரும்பினாய். அந்தச் சுவையின் தன்மை வரும் பொழுது நீ மகாலட்சுமியாக இருந்தாலும் “இந்த உடலில் பட்டது போதும்…”

சுவை சீதா என்ற நிலையே பூமியிலிருந்து தான் அது உருவாகக் காரணமானது.
1.பூமியிலிருந்து விளையப்பட்ட சுவைதான் உடலாக விளைந்தது
2.நீ பட்டது போதும் தாயே…! என்று பூமி பிளந்து “சீதா என்ற இந்த உடல் மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகின்றது…”

சீதா உயிரை நோக்கி விஷ்ணுவை நோக்கித் தவமிருந்தது விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததால்
1.அதனுடன் ஐக்கியமாகி சந்தோச உணர்வுடன் இணையப்படும் பொழுது
2.உடல் பிரிந்தபின் உடலில் வரும் இருளை நீக்கிவிட்டு உயிரோடு ஒன்றி அவனுடன் அவனாக ஐக்கியமானது.

ஏனென்றால் ஒளி இருக்கும் உயிர் தான் எல்லாவற்றையும் அறிவித்தது “அந்த விஷ்ணு…” ஆகவே தான் கண்ட அந்த உணர்வின் சுவையை ஒளியின் சுடராகக் காட்டியது.

விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததனால் அங்கே போய் உயிருடன் ஒன்றி ஐக்கியமாகின்றது. அப்படி என்றால் என்ன அர்த்தம்…?
1.உடலில் வந்ததை எல்லாம் நீக்கிவிட்டு
2.உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை அடைவது.

ராவணனும் அரக்க உணர்வை எடுத்து அவனும் விஷ்ணுவை நோக்கித்தான் தவமிருக்கின்றான். (சீதாவோ) லட்சுமி விஷ்ணுவுடன் இணைந்து இயக்கி வந்தாலும் சீதா என்ற சுவையால் உடலாக ஆனாலும்
1.எத்தனையோ வேதனைகள் இருந்தாலும் விஷ்ணுவின் இயக்கத்துடன் நின்று
2.துயரத்தைத் தாங்கிக் கொண்டு அவனின் இயக்கமாகத்தான் இருந்தது.

துயரம் என்ற உணர்வுகள் மண்ணிலே தோன்றியது. ஆகையினால் மண்ணுடன் இந்தச் சடலம் போய் விடுகின்றது
1.அதிலே சேர்த்த உணர்வின் ஒளி உயிருடன் இருந்து இருளை நீக்கி ஒளி என்ற உணர்வைப் பெறுகின்றது…
2.பிறவியில்லா நிலை அடைவது தான் மனிதனின் எல்லை…! என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது இராமாயணக் காவியம்…!

நாம் புரிந்து கொண்டோமா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உபதேசம் எல்லாம் கேட்போம்…! கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்த உயர்ந்த நிலைகளில் நாம் இருக்கின்றோம்…! என்கிற பொழுது என்ன அவர் பெரிய சாமியா…? என்று (ஞானகுருவை) யாராவது சொன்னால் உடனே அந்த உயர்ந்ததை விட்டுவிடுவோம்.

சாமிக்கு என்னய்யா தெரியும்…? என்று சொன்னால் உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். ஆனால் சமாளிக்கக்கூடிய திறன் வராது. அவர்களுடைய உணர்வுகள் நம்மை மாற்றிவிடுகிறது.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

ஞானிகள் கொடுத்த உணர்வின் வலுக் கொண்டு…
1.அவர் அறியாமை நீங்க வேண்டும் என்று “மௌனம் சாதித்து…”
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெற வேண்டும்.
3.உண்மையை நிச்சயம் அவர் உணர்வார்… உணரும் பருவம் வரும் என்ற
4.இந்த உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வின் பலனை நீ சிக்கிரம் உணர்வாய்… பாரப்பா…! என்று இந்த உணர்வை அங்கே பதிவு செய்யுங்கள்.

அப்புறம் அப்படி…இப்படி.. என்பார்…! திரும்பித் திரும்பிப் பார்ப்பார்…! இந்த உணர்வுகள் உள்ளே போனவுடனே அவருக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை நிச்சயம் உணர்த்திக் காட்டும்.

1.நீ புரிந்து கொள்வாய்… புரிந்து கொள்ளக்கூடிய காலம் வரும்
2.நீ நிச்சயம் புரிவாய்… உன்னை நீ அறிவாய்
3.இந்த உலக இருளைப் போக்குவாய்…
4.உண்மை நிலையை நீ அறிவாய் என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள்.

அப்படி இல்லாமல் அவரிடம் கடைசியில் எங்கள் சாமியைப் பற்றி இப்படிச் சொல்கிறாயா…? இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்…! என்று சொன்னால் அவர் உணர்வு தான் உங்களைப் பார்க்கும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால் அந்த உணர்வின் சக்தியை நாம் அறிந்திடல் வேண்டும்.

இதே மாதிரி வேறு சில நிலைகளையும் சொல்வார்கள். ஆனால் பற்று இருக்கும். நான்கு பேர் அப்படிச் சொன்னவுடனே அவர்கள் கோபம் குறைகளை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள்.

கடைசியில் நாம் போகும் பாதையை விட்டுவிட்டு என்ன சொல்வார்கள்..?

செ…! எங்கே பார்த்தாலும் அவன் இப்படிப் பேசுகிறான்.. இவன் இந்த மாதிரிப் பேசுகின்றான் என்று அந்தச் சண்டைகளை எல்லாம் கொண்டு வந்து வீட்டிலே விடுவார்கள்… தொழிலிலேயும் விடுவார்கள்.

அப்புறம் நல்ல சிந்தனை செய்யும் நம் நிலையே மாறி நமக்கு நாமே தண்டனைக் கொடுக்கும் நிலை ஆகிவிடும்.

நம் உடல் உணவாக உட்கொண்ட உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றி… நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது ஆறாவது அறிவின் மணம் கொண்டு…!

அத்தகைய தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்ட நாம் கேள்விப்பட்ட தீமையான நஞ்சினை நீக்கி… நல்ல உணர்வினைப் படைத்திடும் ஆற்றலைத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.

அப்படிப் படைக்க வேண்டும் என்றால்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்களுக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத்தான்
2.பல வட்டங்களை எழுப்பி இங்கே உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து… அந்த மகரிஷிகளின் பால் இணைத்து உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை தாவர இனங்களுக்கு உரம் கொடுப்பது போல் ஏற்படுத்துகின்றோம்.

ஆனால் நீங்கள் அதை நினைவு கொள்ள வேண்டும்

1.பிறருடைய குறைகள் எது வந்தாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக் கூடாது.
2.வந்தால்… உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற நினைவினை
3.அங்கே அதிகமாக்கி அந்தச் சித்திர புத்திரன் கணக்கைக் கூட்ட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வீணையை ஏழாக வாசிக்கின்றோம். ஒன்றோடு ஒன்று இணையாக வாசிக்கும்போது அது இனிமையாக இருக்கின்றது. அதிலே சுருதியைச் சீராக இயக்கவில்லை என்றால்… அதைக் கேட்டாலே வெறுப்பாகத்தான் வருகின்றது.

இதைப் போலத்தான் சொல்லின் “நயம்” மாறினால் வெறுப்பின் தன்மை ஊட்டுகின்றது.

ஒரு சிலரைப் பாருங்கள்…! பேசும் பொழுது வெறுத்துச் சொல்வார்கள்…! நியாயத்தைச் சொல்வார்கள்.. ஆனால் சும்மா வள…வள… என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
1.அதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்
2.சொன்னவுடன் அவர்களைப் பார்த்தவுடனே அடுத்தாற்படி வெறுப்பு வரும்.

அதே சமயத்தில் அவர்கள் உள்ளடக்கி என்ன சொல்வார்கள்….?

தன்னை நியாயவாதியாக நல்லவர்களாகக் காட்ட எண்ணுவார்கள்… உள்ளுக்குள்ளே எல்லாம் வெறுப்பாக இருக்கும்…. சொல்களில் நயம் மாறும்…!

சொல்வது அரத்தமாகின்றதல்லவா…?

“இது அப்படி இருக்கின்றது… அது இப்படி இருக்கின்றது…” என்று சொல்லிக் கொண்டே போவார்கள். அப்படிப்பட்ட உணர்வு பட்டவுடனே அந்த நயம் மாறும்.
1.அவர்களிடம் அந்த உணர்வின் குணம் மாறும்
2.முகத்திலே…. கண்ணிலே எல்லாம் மாறும்… சொல்லிலும் பார்க்கலாம்…
3.நம்மை ஏமாற்றுகின்றார்கள் என்று தெரிந்துவிடும்.

உள்ளடக்கி எத்தனையோ தீங்கு செய்கின்றார்கள். மற்றவர்களை எல்லாம் தீங்காகச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். தன்னை நல்லவர்களாகச் சொல்வார்கள்.

இதைக் கேட்டாலே நமக்கு வெறுப்பு வரும்…!

திரும்பத் திரும்ப இடைஞ்சல் பண்ண வேண்டுமென்று அவர்கள் சொல்லும் பொழுதெல்லாம்… அந்த உணர்வுக்குத் தக்கவாறு மணம்… அவர்களுடைய முகம்… அவர்களுடைய கண்ணும் மாறும்

கேட்கும்போது டக்கு… டக்கு… டக்கு… என்று நமக்கு உணர்வுகள் ஒவ்வொன்றாக மாறும்.

ஏனென்றால் அவர்களுடைய நினைவலைகளில் எதைக் கலக்கின்றார்களோ… இதனுடன் கலந்து வரப்படும்போது அந்தக் கலர் மாறும் எதிலே கொண்டு போய்விட்டாலும் இந்தச் சுவை வெளிப்படுத்தியே விடும்.

ஏனென்றால் மனிதனுக்கு இந்த உணர்வுகள் தன்மை…!

1.ஆனால் திரும்பத் திரும்ப நல்லவர்களாகச் சொல்லக்கூடிய நிலைகள் வேறு…!
2.அவர்கள் உண்மையிலே நல்லதாகச் சொல்வார்கள்.
3.அந்த நல்லதைத் அதை திரும்பத் திரும்பச் சொல்லும்போது பார்த்தால்
4.நமக்குள் அந்த மகிழ்ச்சியின் தன்மையே ஊட்டிக் கொண்டு இருக்கும்.

முந்தி எல்லாம் ஒரு மனிதனைப் பார்த்தவுடனே கோபமாக இருக்கும்போது எந்தக் கலரில் வருகின்றது…? வேதனைப்படும்போது அந்த உடலில் இருந்து உற்பத்தியாகும் கலர்கள் எப்படி மாறுகிறது…? என்று காண்பிப்பேன்.

அதுவெல்லாம் இந்த கண்ணிலே எப்படி வருகின்றது…? இந்த அலைகள் எப்படி உற்பத்தியாகின்றது…..? நாம் சுவாசிக்கும்போது இந்த உணர்வுகள் பட்டபின்…
1.நல்லதை எல்லாம் விலக்கி விட்டுவிடுகின்றது.
2.இந்த உணர்வுகள் அது சராமாரியாகப் போகின்றது…
3.உள்ளுக்குள் சுற்றி வரப்போகும் போது மற்ற எதற்கும் இடம் கொடுக்காது.
4.அப்பொழுது கை கால் எல்லாம் இந்த அலைகள் பாயும்
5.ஆன்மாவிலே இதுதான் பெருகும்…. மற்றதெல்லாம் உள்ளுக்குள் அடங்கிவிடும்.

இத்தகைய நிலை ஆனால் அடிக்கடி வேதனையாகும்…! இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே விளக்கமாகச் சொல்கிறேன்.

தினசரி தியானம் எடுத்து முடித்த பிற்பாடு நாம் செய்ய வேண்டியது

 

சங்கடமோ சலிப்போ கோபமோ குரோதமோ தொழிலில் சோர்வோ இது எல்லாம் வரும் பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்துவதற்கு
1.அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை ஒரு நிமிடம் எண்ணிவிட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று கண்ணிலே ஏங்க வேண்டும்.

அடுத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்தி விட்டால் அந்தச் சங்கடமோ பிறருடைய கோபமோ பிறருடைய நோயோ அது எல்லாம் நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

1.எங்கள் தொழில் சீராக நடக்க வேண்டும்…
2.நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
3.நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.இதைப் போன்று வாழ்க்கையில் நம் ஆன்மாவை ஒவ்வொரு நொடிப் பொழுதும் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் யாம் பதிவு செய்திருக்கின்றோம்.

நம்மைத் திட்டியவனை திட்டினான் திட்டினான் என்று எண்ணும் பொழுது அவனுடைய நினைவு எப்படித் தொடர்ந்து வருகின்றதோ… துரோகம் செய்தான் பாவி என்று அவனை எண்ணினால் நம் காரியங்கள் எப்படி அன்று கெடுகின்றதோ அவனுக்கும் கெடுகின்றதோ அதைப் போல்
1.நீங்கள் எப்போது அருள் சக்திகளை எண்ணினாலும்
2.உங்கள் எண்ணத்தால் அந்த சக்திகளை நீங்கள் எளிதில் கவர முடியும்… உங்கள் எண்ணம் உதவி செய்யும்.

தீமை செய்வோரைப் பார்த்து “இப்படிச் செய்கின்றார்களே…!” என்று நாம் எண்ண வேண்டியது இல்லை… எண்ணக் கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் அவருடைய அறியாத தீமைகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இப்படித் தான் நாம் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் தீமை செய்வோரைப் பார்த்து இப்படிச் செய்கின்றானே என்று எண்ணினோம் என்றால் அவன் உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையை அது கெடுக்கின்றது.

ஆகவே அப்படி அது நமக்குள் வராதபடி இந்த முறைப்படி சீர்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தகைய நிலைகள் வந்தாலும் இது போன்று கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்து வந்தால் பிறருடைய தீமை நமக்குள் புகாது.

இருவர் சண்டை இட்டு கொண்டிருந்தாலும் கூட இதைப் போன்று உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்… பகைமைகள் அகல வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தால் போதுமானது.

அதை விடுத்து விட்டு
1.ஏன் இப்படிச் சண்டை இடுகிறார்கள்…? என்று அதை அழுத்தமாக எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டையிடும் உணர்வை வளர்த்துவிடும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்து சேருகின்றது. அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி இது போன்ற பயிற்சிகளைக் கொடுப்பது. உங்கள் வாழ்க்கையையே தியானமாகக் கொண்டு வர முடியும்.

கையிலோ உடலிலோ அழுக்குப்பட்டால் உடனே தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. விஷமான பொருளோ அசிங்கமான பொருளோ நம் மீது பட்டால் உடனடியாக அதை நாம் தூய்மைப்படுத்துகிறோம் அல்லவா.

இதே மாதிரித் தான் உடனுக்குடன் உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்தியைக் கொடுக்கின்றோம். கொடுத்ததைச் சரியாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் ஜோசியமோ ஜாதகமோ மந்திரம் எந்திரம் எந்த மாயமும் தேவையில்லை.

1.யாம் சொல்லிக் கொடுக்கக்கூடிய முறைப்படி செய்தால்
2.உங்களாலேயே அதை மாற்றிக் கொள்ள முடியும்… எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

உங்கள் வியாபாரத்திலும் இது போன்ற அருள் உணர்வுகளைப் பாய்ச்சி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களுக்குப் பொருளைக் கொடுத்தால் வியாபராமும் சீராகும்.

எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் நலம் பெற வேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

எந்தத் துறையாக இருந்தாலும் இதே போன்று அருள் உணர்வைப் பாய்ச்சி அங்கே இனைக்கும்படி செய்து
1.அனைவருக்கும் இதைக் கிடைக்கும்படி செய்து வந்தால் எல்லாமே மகிழ்ச்சியூட்டும் நிலையாக வளரும்.
2.இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இதன் வழி நீங்கள் கடைப்பிடிக்கப்படும் பொழுது இதைச் செய்து பார்க்கும் பொழுது
1.அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் என்னிடம் கேளுங்கள்
2.அதற்கு என்ன வழி…? என்று நிச்சயமாக வழி காட்ட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக பள்ளிகளில் பாடங்கள் படிக்கின்றார்கள் குழந்தைகள். நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கின்றது.

ஆனால் பாடங்கள் தான் நினைத்தபடி வரவில்லை என்று
1.“எனக்கு ஞாபகம் இல்லையே…!” என்ற உணர்வினை
2.ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அந்த உணர்வு “ஒரு வித்தாக” மாறுகின்றது.
3.பதிவாகவில்லை… பதிவாகவில்லை… பதிவாகவில்லை…! என்ற இந்த ராகம் தான் வரும்.

மீண்டும் எப்படிப் படித்தாலும் இதனுடன் கலந்து அந்த உணர்வு வரப்படும்போது… தன் நினைவை இந்த அலையுடன் கலந்து “நினைவற்றதாக மாற்றுகின்றது…”

அதை மாற்ற வேண்டும் என்றால் எந்த முறையைக் கையாள வேண்டும்…?

1.தன் தாயை எண்ண வேண்டும்…!
2.தாய் அன்பு கொண்டு நமக்குள் பதிவு செய்த அந்த தாயின் அன்புள்ளம் எனக்குள் பெருக வேண்டும்
3.அவர்கள் எனக்கு எந்த ஆசிர்வாதம் கொடுத்தாரோ அந்த ஆசியின் வழிப்படி கல்வியில் சிறந்தவனாக வர வேண்டும்
4.என் அன்னையின் அருள் என்றும் எனக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.
5.கல்வியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
6.சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை நிச்சயம் அகற்ற முடியும்.

ஏனென்றால் தாய் எப்போதுமே தன் குழந்தைகள் எல்லோரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் உருவாக்கி “ஊழ் வினை என்ற வித்தாக” நமக்குள் போட்டுள்ளது.

ஆனால் அதை நினைவு கொண்டு யாரும் எடுப்பதில்லை.

குழந்தைகள்… தன்னைத் திட்டியவர்களையும்… விளையாட்டுத்தனமாகப் பிறர் பேசும் தீமைகளையும்… தீமையான செயல்களையும் பதிவு செய்து… அதன் உணர்வின் நினைவாக அந்த எண்ணங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்.

பின்… இவர்கள் பாட நிலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

ரோட்டிலே செல்லப்படும்போது ஒருவன் தீங்கான செயல்களைச் செய்கின்றான். இந்தக் குழந்தையோ நல்ல குழந்தை… ஆனால் உயர்ந்த ஞானம் பெற்ற குழந்தை.

ஆனால் தீங்கான செயலைச் செயல்படுத்துவோரின் தாக்கும் உணர்ச்சியின் வேகம் வரப்படும்போது அன்பும் பரிவும் கொண்ட இந்தக் குழந்தை அதைப் பார்த்தபின் பயமும் பதட்டமும் அதற்கு வந்து விடுகின்றது. இது பதிவாகி விடுகின்றது.

அதற்கு அடுத்து… பள்ளிக்குச் சென்றபின் அதே பதட்ட நிலையில் இருக்கின்றது. அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து…
1.பாட நிலைகளைத் கவரும் போதெல்லாம்
2.அது இதனுடன் மோதும் போது… பய உணர்ச்சிகள் தோன்றி
3.நல்ல நினைவாற்றல் வராது சென்று விடுகின்றது… ஞாபக சக்தி குறைகின்றது.

அந்த ஞாபக சக்தி கூட வேண்டுமென்றால்… நான் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேசித்த உணர்வின் தன்மையையும் அம்மா அப்பா அருளாசியையும் நாங்கள் பெற வேண்டும் என்று குழந்தை எண்ணுதல் வேண்டும்.

தாய் அன்புள்ளம் கொண்டு… தனது குழந்தை கல்வியில் உயர்ந்த நிலை பெற வேண்டும்… உயர்ந்த ஞானம் பெற வேண்டும்…! என்று எண்ணி அது உடலில் உருவாகிய அருள் ஞானத்தைக் குழந்தை மேல் பாய்ச்சி வைத்துள்ளது.

தன் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்… என்ற எண்ணத்தை ஊட்டி அதை அவர்கள் வெளிப்படுத்திப் பதிவு செய்த நிலைகளும் குழந்தையிடம் உள்ளது.

ஆகவே குழந்தைகள் ஒரு அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் உடனே…
1.ஈஸ்வரா…! என்று எண்ணியதை உருவாக்கும் உயிரைப் புருவ மத்தியில் நினைவில் கொண்டு
2.அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.தன் அம்மாவை நினைத்தால்… இந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்

பெற்று விட்டால் யாரைக் கண்டு அஞ்சினோமோ அந்த உணர்வினை “தாய் அன்பும்… அதன் வழியில் யாம் உபதேசிக்கும் அருள் ஞானமும் கலந்து…” அச்சுறுத்தும் உணர்வுகள் விளையாது அதை அடக்கும்.

இது தான் கல்யாணராமன் என்பது.

இந்த வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகள் பெற்றாலும் மேலே சொன்ன முறைப்படி நினைத்து அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
1.தீமையின் செயலாக்கங்களை அது அடக்கி… அச்சுறுத்தும் உணர்வுகளை அடக்கி…
2.அந்த ஞானியின் உணர்வின் துணை கொண்டு மெய்ப் பொருள் காணும் அந்த வலிமையான நிலைகள் பெறச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் காட்டிற்குள் செல்லும் போது (ஞானகுரு) ஒரு சிறு பூச்சி ஒன்று என்னைக் கடிக்கின்றது. அது கடித்தபின் எனக்கு மயக்கமே வருகின்றது.

குருநாதர் அதை விட்டுக் கடிக்கச் செய்கின்றார். என் உடல் முழுவதும் நஞ்சு பாய்கின்றது. அந்த விஷம் ஓடும்போது உடலில் ஒரு கருக்கல் போல்… அது இரத்த நாளங்களில் பட்டபின் இரத்த நாளங்களே கருப்பாகின்றது.

அப்பொழுது அதனின் உணர்வுகள் எவ்வாறு…? என்று எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

நீ இவ்வளவு பெரிய மனிதனாக ஆகியுள்ளாய். ஆனால் இதற்கு முன்னாடி இதைப் போன்ற பூச்சியாகவும் இருந்தாய். அந்தப் பூச்சியின் நிலைகளில் இருந்து தான் மீண்டாய்.

இப்பொழுது மீண்டும் அதே பூச்சி உன்னைக் கடிக்கும்போது உன் உணர்வின் நினைவாற்றல் அங்கே செல்கின்றது…?

அதனுடைய விஷம் படர்வதைப் பார். உன் கவன நரம்புகளைத் தாக்குவதைப் பார்… அங்கே தாக்குவதற்கு முன் நீ சிந்தித்துப் பார். ஆனால் இது உன் கவன நரம்பில் தாக்கிவிட்டால் உனது நினைவுகள் மறைந்துவிடும். நீ எங்கே செல்வாய்…? என்ற உணர்த்திக் காட்டுகின்றார்.

அந்த உணர்வலைகள் எனக்குள் படர்வதையும் என் நினைவாற்றல் முழுவதும்..
1.இந்தப் பூச்சி கடித்துவிட்டதே…
2.நான் மடிந்துவிடுவேனே…
3.இந்த உடலை விட்டுப் போய்விடுவேனே…! என்று
4.இந்த உணர்வுகள் தான் தோன்றுகின்றதே தவிர
5.தன்னைக் காக்கும் உணர்வுகள் வரவில்லை.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் பூச்சியாக புழுவாக இருக்கப்படும்போது இன்று பார்க்கின்றோம். ஒரு பட்சி ஈயை விழுங்குகின்றது அதனைத் தன் இரையாக்கி கொள்கின்றது. ஆனால் ஈயின் உயிரோ பலியாகின்றது.

அதே சமயத்தில் பல்லியை ஒரு தேள் கொட்டுகின்றது. விஷத்தைப் பாய்ச்சுகின்றது. அது தசைகளை உணவாக உட்கொள்கின்றது.

இது போன்று பல கோடிச் சரீரங்களில் நீ எத்தனை இம்சைப் பட்டிருப்பாய்…? என்றார் குருநாதர்.

அதிலிருந்தெல்லாம் மீண்டிடும் நிலைகள் பெற்ற நீ.. மீண்டிடும் சக்தி பெற்றபின் உன்னால் ஏன் முடிவதில்லை…! ஒரு சிறு விஷம் கொண்ட அணு தான் இது…! ஆனால் கடித்தபின் அதனுடைய வலிமை உனக்கு எவ்வளவு பெரிய வேதனையாகின்றது.

உயர்ந்த ஞானங்கள் பெற்று உயர்ந்த நிலைகள் பெற்றதனால் அடுத்து விஷத்தை முறிக்கும் ஒரு மருந்தினை இதனுடன் இடப்படும்போது உனக்குள் அதைத் தடைப்படுத்துகின்றது.

ஆனாலும் அந்த விஷப் பூச்சி உன்னை கடித்ததல்லவா…!
1.அது கடித்தது உனக்குள் ஒரு வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.
2.மருந்தைக் கொண்டு புண்ணை ஆற்றிவிடலாம்…. இன்று நீ தப்பிவிட்டாய்.
3.ஆனாலும் இந்த விஷ அணுக்கள் ஊழ்வினையாகப் பதிவான பின் வித்தாகின்றது.

முதலிலே நீ நுகர்ந்த உணர்வுகள் ஓ… என்று இந்த உடலிலே அணுவாக மாறுகின்றது. மருந்தைக் கொடுத்து விஷத்தை நீக்கி நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன்.

1.கடித்த உணர்வின் தன்மை உன் எலும்புக்குள் அந்த விஷம் வித்தாக ஊன்றிவிடுகின்றது.
2.நீ நுகர்ந்ததோ ஓ என்று ஜீவ அணுவாக மாறுகின்றது
3.அந்த அணுவின் மலம் உன் உடலாக மாறுகின்றது.

நான் மருந்து கொடுத்து விட்டேன்… விஷத்தையும் முறித்துவிட்டேன்…! இதை நீ தெளிவாகத் தெரிந்து கொண்டாய்..
1.ஆனால் விஷத்தை உருவாக்கும் அந்த வித்து
2.உன் உடலுக்குள் ஊழ்வினையாக ஊன்றியுள்ளது.
3.இதை அடக்க முடியாது.

நிலத்திலே களைகளைப் பிடுங்குவது போல் மருந்தால் அந்த அணுக்களைக் கொன்றாலும் மீண்டும் அதை நினைவுபடுத்தினால் அந்த அணுக்கள் வளரத் தான் செய்யும். இதை நீ தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால்… இது போல் ஒவ்வொன்றும் தன் நினைவிற்கு வரவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பம் விஷம் என்று நீ அறிந்தது. இந்த உணர்வின் தன்மை பதிவானால் தான் அதே இனத்தின் தன்மை மீண்டும் வரப்படும்போது
1.இது தன் இனம் என்று கவர்ந்து… சுவாசித்து… உயிரிலே பட்டு…
2.இன்ன விஷம் கொண்டது என்பதனை நீ தெரிந்து கொள்ள உதவும்
3.மீண்டும் அத்தகைய விஷத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

இத்தகைய அறிவில்லை என்றால் உனக்கு நினைவில்லை என்று எனக்குத் தெளிவாக உணர்த்துகின்றார் குருநாதர்.

மரண பயம் எதிலே வருகின்றது…?

 

சகோதர தத்துவம் நமக்குள் எதிலே இருக்க வேண்டும்…?
1.நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் எனக்குள் அந்தச் சகோதர தத்துவம் வளர்கின்றது.
2.உங்கள் குடும்பம் வளம் பெற வேண்டும் என்று எண்ணினால் எனக்குள் இருக்கும்
3.நல்ல குணமும் எதிர் குணங்களும் நலம் பெறுகின்றது.
4.ஏனென்றால் எனக்குள் எல்லாமே அந்த அணுக்கள் ஒரு குடும்பமாகத் தான் வாழ்கின்றது
5.”நீங்கள்… நான்…” எல்லோரும் சேர்த்து இந்த உடலில் ஒரு குடும்பமாக வாழ்கின்றது.
6.ஒரு உலகமாக வாழும்… ஒரு ஊராக வளர்கின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் பிரிந்து இருக்கின்றோம்…? யாரும் யாரை விட்டுப் பிரிந்து இல்லை. ஒரு வேளை சாபமிட்டால் அங்கே இருவருடைய உணர்வும் ஒன்றாகி விடுகின்றது.

நட்பாகின்றது அல்லது பகைமையாகி விடுகின்றது. பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் பகைமையைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது. நட்பின் தன்மை வரப்படும் பொழுது அந்த நட்பே நமக்குள் பெருகுகின்றது.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளரும் பொழுது தான்… ஐயோ மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது உடல் வலிக்கின்றது முதுகு வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்று வருகின்றது.

இந்த உணர்வுகள் வர வர
1.நாம் கோபப்பட்டால் தான் அதற்குச் சாப்பாடு கிடைக்கும்.
2.அல்லது என்னை இப்படிப் பேசினார்களே என்று வேதனைப்பட்டால் அந்த வேதனையான அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

நீங்கள் சும்மா இருந்து பாருங்கள் இனம் புரியாதபடி வேதனைகள் வரும்… அறியாத கோபம் வரும்… நமக்குள் பகைவர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

அந்த நேரத்திலே பகைமை உருவாக்கப்படும் பொழுது புறத்திலேயும் பகைவர்களை உருவாக்கி விடுகிறது. அப்பொழுது “மரண பயம்” என்ற நிலை வருகின்றது.

மரண பயம் எதிலே வருகின்றது…? மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு…
1.நமக்கு ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ…?
2.நம் ஆசை நிறைவேறாமல் போய்விடுமா…?
3.அதல பாதாளத்திற்குப் போய் விடுவோமா…?
4.நம் குடும்பம் சிரமப்பட்டுவிடுமோ…? என்றெல்லாம் எண்ணும் பொழுது மரண பயம் வந்து விடுகின்றது.

மரண பயம் வந்து விட்டால் மனிதனைக் காக்கும் நிலை இழக்கப்படுகின்றது. பயத்தால் துடிப்பு நிலை அதிகரிக்கிறது…! எதை எண்ணுகின்றோமோ அதனின் வளர்ச்சி இங்கே வருகின்றது.

ஒவ்வொரு குணங்களுக்குள்ளும் மரண பயம் பட்டால் அது மடிந்து விடுகின்றது… செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி விடுங்கள். உடனே அந்த நல்ல குணங்களுக்கு நாம் சொன்னது தப்பாகி விட்டதோ…! என்று பட…பட… என்று இங்கே துடிப்பாகும். நல்ல குணங்கள் மடியும் தருணம் வந்து விடுகின்றது.

என்ன சொல்வாரோ…! ஏது சொல்வாரோ…? இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் மடிந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நம் நல்ல குணங்களைக் காண முடியுமா…?
1.நல்ல குணங்கள் மடிந்து மரண பயத்தை ஊட்டுகின்றது.
2.மனிதனையே மரணமடையச் செய்யும் நிலை உருவாக்கி விடுகின்றது.
3.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
4.மகரிஷிகளின் அருளை நாம் பெறுதல் வேண்டும்
5.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்.

எமது அருளாசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எவ்வாறு பெற வேண்டும்…? என்று யாம் (ஞானகுரு) தொடர்ந்து உணர்த்தினாலும்… பக்தி கொண்டவர்கள் சிலர்… முனித் தன்மை கொண்ட பாடல்களைப் பாடிப் பழகிக் கொண்டால் அந்தப் பாடலின் உணர்வுகளே அவர்களுக்கு முன்னாடி வரும்.

1.அது முன் வரப்படும் பொழுது
2.இங்கே கொடுக்கப்படும் அருள் ஞான இணைப்பை அது இணைக்க விடாது தடுக்கும்.

முனித் தன்மை கொண்ட பக்தி மார்க்கங்களிலும்… மதத்தின் அடிப்படையால் அவர்கள் கவிப் புலமையால் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளையும் மற்ற பாடலுடன் பதிவு செய்து கொண்டால் அந்தப் புலமைகள் கொண்ட புலவர்கள் பால் எடுத்துக் கொண்ட உணர்வே முன் நிற்கும்.

இங்கே உபதேசிக்கும் பொழுது அது முன் எழுந்து நின்றுவிடும்.

இந்தப் புவியின் பற்றை அற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைக்கத் தொடங்கினாலும் அவர்களுக்கெல்லாம் இணைப்பது மிகவும் கடினம்.

அந்த வகையில்… பக்தியின் புலமையில் அதிகமாக எடுத்துக் கொண்டோரின் நிலைகளிலும் ஒரு சிலரே மீள்வர். நூற்றுக்கு ஒரு பத்துப் பேர் தேறுவதே மிகக் கடினம்.

காரணம்… அவர்கள் மதத்தின் நிலைகள் கொண்டு ஞானிகள் என்ற நிலைகளும் புலமைகள் பாடியும்… பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த உயிரினங்களின் உணர்ச்சியைப் பற்றிப் புலமைகள் பேசினாலும் “அந்தப் புலமைகளே முன் வந்து எழும்…”

ஆனால் மூலத்தை இவர்கள் அறியார். மூலமற்ற நிலைகள் கொண்டு வாதிக்கும் நிலையே தான் அவர்களுக்குள் அதிகமாக விளையும்.
1.வாதிடும் திறமைகள் உண்டு.
2.ஆனால் மெய் ஒளி பெறும் உணர்வினை ஏற்றுக் கொள்ளும் மனப் பண்பு வராது.

வாதிடும் திறமைகள் ஆகப் படும் பொழுது அந்த முனித் தன்மை என்ற நிலையே இங்கே அடையும். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.

ஏனென்றால் இந்த முனித் தன்மை கொண்டோரிடம் வாக்குவாதத் தன்மை அதிகமாகி விட்டால்… “சாமி நமக்குன் இவ்வளவு சொல்லி இருக்கின்றாரே…!” என்ற நிலைகளைக் கலந்து…
1.எதிர் மறையான பொறிகள் – ஒரு கல்லுடன் உராயப்படும் பொழுது பொறிகள் எழும்புவது போல்
2.நமக்குள் வெறுப்பும் வேதனையும் அதிகமாகத் தொடர்ந்து விடும்.

இதனால் நமக்குள் உறைந்திடும் உணர்வு கொண்டு கலவைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்துவது போல் நம் உயர்ந்த குணத்திலேயும் மாற்றம் ஏற்படும் நிலையே வந்துவிடுகின்றது.

ஏனென்றால் பல நிறங்கள் தனித் தன்மையாக அவை இருப்பினும் அதனுடன் மற்ற நிறத்தை இணைக்கப்படும் பொழுது… நீங்கள் என்ன தான் வாயிலே சொன்னாலும்… சொல்லச் சொல்ல… அவர்கள் வெறுக்க வெறுக்க… அந்த மாற்றுப் பொருளாகச் சொல்வார்கள்.

அப்பொழுது உங்கள் உணர்வுகளும் அதைப் போல மாறுபட்டு நாம் போகும் பாதைக்கே ஒரு தடை விதிக்கும் நிலையாக வந்துவிடும்.

“இதிலே மிகவும் கவனம் தேவை…!”

காரணம் அதைப் போன்ற நிலைகள் வந்தாலும் உங்களுக்குக் காட்டிய அருள் வழி கொண்டு யாம் கொடுத்த…
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்…! என்று எண்ணத்தால் எண்ணி
2.அதைப் பல முறை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.அவர்கள் மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவர்கள் உண்மையை உணர வேண்டும்.. நிச்சயம் உணர்வார்கள்…! என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும்.

”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று நாம் எண்ணுதல் வேண்டும்

 

1.இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எது…? தெளிய வேண்டியது எது..?
2.நாம் அறிய வேண்டியது என்ன…? நாம் சேர்க்க வேண்டியது என்ன…?

இன்றைய செயல் நாளைய சரீரமாக நாம் அனைவரும் ஒளிச் சரீரம் பெற வேண்டும். முந்தைய செயல் இன்றைய மனித சரீரம் இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆக… பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…. ஒளியின் சரீரமாக நாம் மாற்றி அமைக்க வேண்டும். எல்லோருக்கும் அந்த அருள் ஞானத்தைப் பெறச் செய்ய வேண்டும்.

1.இன்று உடலில் இருக்கக்கூடிய நோயை எல்லாம் மறந்து விடுங்கள்.
2.எப்படி இருந்தாலும் இந்த உடல் இருக்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிகின்றது.
3.இந்த உடலுக்காக ஏன் கட்டி அழுக வேண்டும்…?
4.இந்த உடலை விட்டு விடலாம்… அடுத்து ஒளியின் உடலாக நாம் பெற வேண்டும்.

கர்ப்பமுற்றிருக்கும் தாய் தன் குழந்தைக்காக எத்தனையோ வேதனைப்படுகின்றது. ஆனால் குழந்தை பிறக்க வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் இணைக்கப்படும் பொழுது நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…?

தன் உடலில் வரக்கூடிய சுமைகளை கர்ப்பிணி எவ்வாறு எண்ணுகின்றதோ அதைப் போன்று
1.அருள் ஒளியை நான் வளர்க்கின்றேன்
2.அருள் ஞானத்தைப் பெறப் போகின்றேன்.
3.அருள் வழியினை நான் பின்பற்றுகின்றேன் என்ற இந்த உணர்வில் மகிழ்ச்சி பெற வேண்டும்.

குழந்தையின் மேல் உள்ள ஆசையில் கர்ப்பிணித்தாய் என்ன செய்கின்றது…?

தன் கணவனையும் பார்க்க வேண்டும்… குடும்பத்தையும் பார்க்க வேண்டும்… தன்னையும் பார்க்க வேண்டும்… வீட்டு வேலையும் செய்ய வேண்டும்…! இத்தனை வேலைகளையும் அது செய்து கொண்டிருக்கின்றது. ஆக மொத்தம் தன் இனமாகக் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றது.

அருள் ஞானிகள் என்ன செய்கின்றார்கள்…?

இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையை ஒளியாகப் பெற்று “எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும்” என்று எண்ணுகின்றார்கள். அதை நாமும் நமக்குள் உருவாக்க வேண்டும்.

கர்ப்பிணி தனக்கு வரக்கூடிய தீமைகளை அது எப்படி எண்ணுவதில்லையோ குழந்தை மீது பற்று கொண்டு தன் குழந்தையை எண்ணிக் கொண்டிருக்கின்றதோ எத்தனையோ அவஸ்தைகள் வந்தாலும் அதை எண்ணாமல் குழந்தையை வளர்க்கும் உணர்வையே தனக்குள் பெருக்கிக் கொள்கின்றது.

அந்தக் கர்ப்பிணியைப் போன்று
1.நாம் அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் சுமந்து
2.நமக்குள் வரக்கூடிய நஞ்சினை வளர்த்திடாது
3.நான் அருள் வழியில் வளர்கின்றேன்
4.அருள் ஒளி எனக்குள் உருவாகின்றது
5.அருள் ஞான அணுக்கள் எனக்குள் உருவாகின்றது
6.”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் இது போன்று உருவானது தான் அந்தத் துருவ நட்சத்திரம். ரிஷியின் மகன் நாரதன்…! அது ஒளியின் கருவாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் நிலை பெற்றது.

மனிதன் என்ற நிலை அடைந்த பின் இருளை அகற்றும் உணர்வின் தன்மை நாரதனாக அமைகின்றது ஆகவே அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டினால் தனக்குள் உண்மைகளை உணர்த்தும் அறிவின் தெளிவாக நமக்குள் ஊட்டும்.

இருளை அகற்றியவன் அவன் அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டப்படும் பொழுது இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றி விட்டு உயிருடன் ஒன்றிய நிலைகளாக நம் எண்ணங்களுக்குள் வலு சேர்த்து தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும். ஆகவே அந்த அருள் ஒளியைக் கூட்டும் நிலையை உருவாக்குங்கள்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதை ஒவ்வொருவரும் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.அருள் ஞானச் சுடராக அருள் ஒளி பெற்று அனைவரையும் அதைப் பெறச் செய்யக்கூடிய சக்தியாக நீங்கள் வளர வேண்டும்.
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நீங்கள் என்றும் இணைந்து வாழ வேண்டும்.
3.அருள் ஞானச் செல்வம் பெற்று அருள் வழியில் வாழ்க்கை நடந்து
4.அருள் சொல்களைச் சொல்லி அந்தத் தெய்வீகப் பண்புகள் உங்களுக்குள் வளர வேண்டும் என்று பிரார்த்தித்து இதை நிறைவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அதாவது இந்த விண்வெளியில் எத்தனையோ வகையான நட்சத்திரங்கள் இருக்கின்றது. அந்த நட்சத்திரத்திற்குள் இந்தத் தூசி (துகள்கள்) வருவதற்கு… ஒளிகள்… நிறங்கள் கவர்வதற்கு எத்தனை கோடி அண்டங்களிலிருந்து சக்தி கிடைக்கிறது தெரியுமா…? என்பார்.

ஒரு நட்சத்திரம் ஒளியைக் கொடுப்பதற்கு எத்தனையோ கோடி நட்சத்திரங்களின் அந்தச் சக்தி சேர்த்துத் தான் வருகின்றது.
1.இந்த நட்சத்திரம்… இது கோடி…!
2.அது கோடி… கோடி… கோடி…

அதிலிருந்து கோடியாக வரப்படப்போகும் போது இந்தத் தாவர இனங்களில் அது ஒவ்வொன்றும் காரமாக வருவதற்கு எத்தனை காரம்…? தெரியுமா..?

உடனே “மிளகாய் கோடி… கோடி… கோடி…” என்பார்.

இந்தக் காரம்… கோடிக்குள் கோடியாக எப்படி உண்டானது…? அந்தக் கோடியின் உணர்வுகள் காரத்தின் ருசியாக வருவது போல்..
1.நமக்குள் இதே மாதிரியான எண்ணங்கள் பல சேர்த்து
2.அது கோபத்தின் உணர்ச்சிகளாக உருவாகும்.

கோபத்தின் உணர்ச்சிகள் உடலுக்குள் வளரப்படும்போது இந்த உணர்வின் பொறிகள் எப்படி நோயாக மாறுகின்றது…? என்று இப்படிக் கேள்வி எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிக் கோடி… கோடி… கோடி… என்று அன்று பூராம் எனக்குச் சோறு அந்த அடி தான்…! (குருநாதர் கோடி கோடி என்று சொல்லி அடிப்பார்)

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் சொல்கிறோம். என்னமோ… சாமி லேசாக உங்களிடம் வந்து சொல்கின்றேன் என்று இல்லாதபடி உங்களுக்குள் குருநாதர் காட்டிய உணர்வலைகளை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே நம்மை கோபக்காரனாக ஆக்கி விடுகிறது…. வேதனைப்படுவோனாக ஆக்கி விடுகிறது… தாய் தந்தையை மறக்கச் செய்து விடுகின்றது….!

1.தாய் தந்தை நம்மை நன்றாக வளர்க்க வேண்டுமென்று எண்ணினாலும் இடைப்பட்ட உணர்வுகள் தடுக்கின்றது.
2.தன் தாய்க்கும் தன் மனைவிக்கும் ஆகாது என்கிற நிலை வரும்போது இந்த உணர்வை இழுக்கின்றது
3.இதைப் பிளந்து தள்ள வேண்டுமென்றாலும் முடிவதில்லை.

சில குடும்பங்களில் இப்படி எல்லாம் இருக்கிறது. அதே சமயத்தில் தாய்க்கும் மகனுக்கும் ஆகவில்லை. தாய் தான் கடவுள் என்கின்றோம் தாய் தான் தெய்வம் என்கின்றோம் தாய் தான் குரு என்கிறோம்.

ஆனால் யாம் சொன்னதற்கும் இதற்கும் புறம்பாகப் போகின்றது. காரணம்… ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மையை அந்தக் குணத்தின் வித்தினை விளைய வைத்தால் அது பல கோடி ஆகின்றது.

ஒரு உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு மற்ற உணர்வோடு அதைச் சேர்க்கப்படும்போது இங்கே மனிதன் என்ற தன்மையே பிரிக்கப்படும். இந்தப் பிரிவிலிருந்து மீள்வதற்கு முடியவில்லை.

மிளகாயை இணைத்து விட்டால் காரம்… காரம் தான்…! என்று சொல்லும். அதற்குப் பக்கத்தில் இஞ்சியை எடுத்துக் கொண்டால் அதையும் காரம்… காரம்… என்று தான் சொல்லும்.

ஏனென்றால் இந்த உணர்வு அதைத் தான் சொல்லும். காரத்திற்குள் இஞ்சி மிளகு எல்லாம் ஒன்றாகுவது போல் இந்தக் கோப குணங்களிலே நியாயங்களையும் பேசும்.

ஆனால் அந்தக் கோபங்கள் என்ன செய்யும்…? என்றால் தன் இருப்பிடத்தை வலுப்படுத்திக் கொண்டே இருக்கும். அதைப் போக்க வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது சொல்வது.

காரணம் இதையெல்லாம் குருநாதர் என்னிடம் இருக்கக்கூடிய வெறுப்புகளை எல்லாம் வெளியே கொண்டு வந்து குருநாதர் என்னை அடித்து அந்த விண்ணுலக ஆற்றலைக் காட்டினார்.

அப்பொழுது “தெரியவில்லை…” என்று நான் சொன்னால் அதற்கு ஒரு அடி விழும் திடீரென்று…!

உன்னைப் பேய் பிடித்து ஆட்டுகின்றது…! என்பார்.

பேய் என்றால் என்ன….?

1.ஒரு மனிதனின் உடலில் விளைந்த உணர்வுகள்
2.அவனை ஆட்டிப்படைத்த அதே செயல்
3.அவன் எந்த உடலை அழிக்க எண்ணினானோ
4.தன் உடலையோ அல்லது மற்றவர் உடலையோ அழிக்க வேண்டும் என்ற ஆணவம் கொண்ட உணர்வுகள் அங்கே விளைந்தது.
5.அந்தக் கார உணர்ச்சிகளுடைய உணர்வுகளை நீ வேடிக்கையாகப் பார்க்கின்றாய்
6.தர்மத்தை நீ கடைபிடிக்கின்றாய்… ஆனாலும் அவனைப் பார்த்த அந்தப் பேய் குணம்
7.உன்னில் வந்து உனக்குள்ளும் அதைப் படைத்துவிடுகின்றது.

உனக்குள் அதைப் படைத்தபின் உன்னுடைய நியாயம் இந்தக் கோபத்தைக் கொண்டே அதை நீக்க வேண்டும் என்று சொல்கின்றது.

உதாரணமாக நாம் சொல்லிப் பார்க்கின்றோம்… கேட்கவில்லை…! தப்பாகச் சொன்னால் இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் வருகின்றது.

நம் நல்ல குணத்தை மாற்றிவிட்டு “இரு நான் பார்த்துவிடுகின்றேன்…” என்று வருகிறது. இதுதான் ஓம் நமச் சிவாய சிவாய நம ஓம். நம் உணர்வின் செயல்கள் இப்படி எல்லாம் வந்து சேர்ந்து விடுகின்றது

இதைப் போன்ற நிலை எல்லாம் மாற்றிட வேண்டும் என்பதற்குத்தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடிப் பழக்கம் உள்ளவரை நீங்கள் அணுகி அவரிடம் இரண்டு மூன்று தடவை பேசிப் பாருங்கள். அந்த உணர்வின் அணுக்கள் ஆகிவிடும். அப்புறம் அந்த நினைவு நமக்குள் வரும்.

அந்த நினைவு வந்தபின் கொஞ்சம் குடித்துப் பாரப்பா…! என்று அவர் சொன்னால் அந்தப் பழக்கம் நமக்கும் வந்துவிடும்.
1.அப்புறம் ஒரு தரம் குடித்து விட்டால் அந்த அணுக்களுக்கு அது குடித்துத் தான் ஆக வேண்டும்.
2.குடிக்கவில்லை என்றால் இது விடாது…. அங்கே இழுத்துக் கொண்டே போகும்.

அப்புறம் என்ன செய்யும்…?

அந்த உணர்வின் தன்மை ஆனபின் நாம் சிந்திக்கும் நிலையே மறக்கும். இதனின் உணர்வு பட்டபின் இதைப் போல குடித்துக் கொண்டிருந்தால்
1.கடைசியில் நாம் இறந்துவிட்டால்
2.ஆன்மா அந்தக் குடியின் மணத்துடன் இருப்போர் உடலுக்குள் தான் போகும்.

குடிப்போர் உடலுக்குள் புகுந்து விட்டால்… குடிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் எவ்வளவு தான் எண்ணினாலும் இது விடாது. அது குடிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
1.ஏனென்றால் அதற்கு உணவு தேவை
2.அப்புறம் குடித்துக் கொண்டே இருக்கச் சொல்லும்.

அதர்வண வேதத்தில் இந்தப் போதை மருந்தைக் கொடுத்துதான் மாமிசத்தையும் கொடுத்து… இந்த உணர்வின் தன்மை நினைவிழக்கச் செய்வார்கள். பின் தீயில் இட்டுப் பொசுக்கி அதிலே எடுக்கும் மந்திரத்தைச் சொல்லி இந்த உணர்வினைக் கவர்ந்து இழுப்பார்கள்.

அதாவது அந்த அதர்வண வேதப்படி… மனிதன் உணர்வுக்குள் மந்திரங்களை ஓதி அதனின் தன்மை கொண்டு உருவாக்கி அவனின் நினைவை இழக்கச் செய்து இந்த மதுவை அவருக்குள் கொடுத்து இது சிறுகச் சிறுக இந்த எண்ணத்தை அங்கே அது பதியச் செய்வார்கள்.

மது குடித்தவர்களைப் பாருங்கள்… அது எதாவது யார் மேலயாவது கோபம் வந்தால் சரி. அதிலேயே தான் நிற்கும்.
1.யாரை நினைத்துக் குடித்தார்களோ…
2.இன்றைக்கு அவரை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த இரண்டில் ஒன்று பார்க்கச் சொல்லும்.

அப்புறம் அந்தச் சண்டையில் சமரசத்திற்கு ஆயிரம் பேர் சொன்னாலும் கேட்காது.

இதைப்போல அன்று மந்திரத்தில் இந்த மதுவினைச் செருகி மந்திரத்தை ஏற்று… இந்த உணர்வின் தன்மை செருகாக்கிய பின் அது கேட்டுணர்ந்தபின்
1.இந்த மனிதன் இறந்தான் என்றால்
2அதே மந்திரத்தைச் சொல்லி மதுவையும் வைத்தால் அந்த ஆன்மா இவர் கைவல்யம் ஆகும்.

இப்படி அந்த மது அருந்ததுவோரின் உணர்வுகள் எல்லாம் மந்திரக்காரன் கையில் சிக்கி அது என்னென்ன எண்ணங்களுக்குப் பயன்படுத்துகின்றாரோ அதற்குப் பயன்படும்.

நாம் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் இந்த மதுவின் வேலைகள்… அந்த அதர்வண வேதத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தியது.

ஏனென்றால் அதர்வண என்ற நிலைகளில்
1.தீமையை விளைவிக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இருந்து எடுத்து
3.அந்த நல்ல குணத்தை அழித்துவிட்டுத் தன் எண்ணத்தைப் புகுத்தி
4.அதனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மனிதன் இறந்தபின்
5.இந்த மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அங்கே கைவல்யம்.

மதுவின் தன்மை வைத்து அந்த உணர்வின் தன்மை கவரப்படும்போது தன் இச்சைக்கு அது வரும்.

அந்த அதர்வண வேதத்தில் இந்த மந்திரம் ஓதுவோர் அனைவரும் மதுவை வைத்திருப்பார்கள்… மாமிசத்தை வைத்திருப்பார்கள்.

அதை வைத்துத்தான் இந்த மந்திரங்கள் ஓதி மற்ற ஆவிகளை அவர்கள் கைப்பிடிப்பார்கள். இத்தகைய நிலையை மனிதனைக் கைவல்யப்படுத்தி விட்டால் அவன் ஆட்டிப் படைக்கும் படைப்பாகப் போய்விடும்.

ஆகவே உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்…! என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இந்த வாழ்க்கையில் எங்கே போகப் போகின்றோம்…? என்ற எண்ணத்தில்
1.இருக்கும்வரை… “தன்னை மறந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு…”
2.அவர்கள் செய்தார்கள்… இவர்கள் தப்பு செய்தார்கள்…! என்று எண்ணத்தில் குடித்தால்
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த கணம் மந்திரவாதி கையில் நேரடியாகப் போய்ச் சேரும்.

இல்லையென்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அந்தக் குடிப் பழக்கம் உள்ளவர் உடலில் சென்று இன்னும் கொஞ்சம் குடிக்கச் செய்யும். அந்த இரண்டும் ஒன்றாகி விட்டால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் மீண்டும் அதே மந்திரவாதி கையில் சிக்கும்.

ஒன்றை ஆயிரமாகப் பெருக்கி அந்த உணர்வின் எண்ணத்தைப் பெருக்கிவிட்டால் அது அதர்வண என்று பொருள்

ஆகவே எதனின் மதுவை வைத்து இதை செய்கின்றார்களோ இன்னொரு ஆன்மாவைக் கைவல்யப்படுத்துகின்றான்.

ஆகவே இது போன்ற நிலைகளில் சிக்குண்டு தவிப்பதிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

June 2025 – உபதேசம்

திருமண வாழ்த்து

 

யாகங்கள் செய்த வீடுகள் எல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும் என்று தானே அதைச் செய்கின்றோம். அந்த உணர்வின் தன்மை கலவை எதுவாகின்றது..?

ஜாதகம் பார்த்துத் தானே எல்லாத் திருமணங்களும் செய்கின்றோம். நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்துப் பார்த்துச் செய்யப்படும் பொழுது அவர்கள் நன்றாகத் தானே இருக்க வேண்டும்.

ஆனால் இவ்வளவும் செய்து எத்தனையோ குடும்பங்கள் ஏன் பிரிந்து வாழுகின்றது…?

முழுமையாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதற்குத் தானே ஜாதகம் பார்க்கின்றோம். இடைவெளியில் ஏன் மடிந்து விடுகின்றார்கள்…? அல்லது பிரிந்து விடுகின்றார்கள்…?

1.ஜாதகம் மனச்சாந்திக்க வேண்டுமென்றால் அவன் சொன்ன உணர்வை எடுத்துக் கொள்ளலாம்.
2. ஏனென்றால் “ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தால் தப்பு வந்து விடுமே” என்று தான் செயல்படுத்துகின்றோம்.

அப்படி எண்ணவில்லை என்றாலும் கூட ஜாதகம் பார்ப்பவர்கள் என்ன செய்கின்றார்கள்…? எதிர்ப்பு நிலை ஒன்றாகும்.
1.ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருப்பார்கள். இது ஒத்து வரும் என்று சொல்லிவிடுவார்கள்.
2.அதே சமயத்தில் ஒருவர் கோபமாக இருப்பார் ஒருவர் சாந்தமாக இருப்பார் ஆனால் ஜாதகப்படி ஒத்து வராது என்று சொல்லிவிடுவார்கள்.
3.அடிக்கடி வேதனைப்படுபவராக இருப்பார்கள். ஆண் பெண் இரண்டு பேருமே அப்படித்தான் இருப்பார்கள்.
4.இது இரண்டும் பொருத்தம் சரியாக இருக்கிறது என்பார்கள்.
5.ஆனால் திருமணமான பின் வேதனையைத் தான் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆக பொருத்தம் எங்கே இருக்கின்றது…? இந்த உணர்வின் நினைவுகள் வரப்படும் பொழுது இரண்டு விஷமும் அதற்குள் ஒடுங்குகின்றது. இப்படித்தான் பொருத்தம் பார்க்கின்றார்கள்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக… தாலி இத்தனை மணிக்குள் இந்த நேரத்திலே கட்ட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அலங்காரம் செய்து முடித்து ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டது என்றால் என்ன ஆகிறது…?

தாமதம் ஆகிவிட்டால் என்ன செய்கிறது…! என்ற இந்த உணர்வோடு தான் தாலி கட்டும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அந்தக் குறித்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…? ஏன் இன்னும் காலதாமதம் செய்கின்றீர்கள்…? “மேளத்தைக் கொட்டையா… கொட்டையா…” என்பார்கள். அங்கே மந்திரம் சொல்வது முழுமை பெறுகின்றதா…? இல்லை…! பரபரப்பு தான் அங்கே வருகின்றது.

தாலி கட்டப்படும் பொழுது எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்று மந்திரம் சொல்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் ஏழ்மையான வீட்டில். பணக்காரர்கள் வீட்டிலே மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருப்பார்.

1.தாலி அவரிடம் கொடுத்துத்தான் வாங்கி கட்ட வேண்டும் என்று முறை வைத்திருப்பார்கள்.
2.இப்படிப்பட்ட எண்ணங்களோடு தாலியைக் கொடுத்துக் கட்டச் சொன்னால் என்ன ஆகிறது…?

மந்திர ஒலிகளைப் பதிவு பண்ணி இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்த இது உதவும்.

நல்லவை ஆனாலும் கெட்டவை ஆனாலும் உணர்வுகளைப் பதிவு செய்து பதிவு செய்து கவர்ந்து கொள்கிறார்கள். “அதைத்தான் நாம் நம்புகின்றோம்…”

(ஏனென்றால் உணர்வின் இயக்கங்கள்… எண்ணங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். சீதாராமா…! நம் எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? அந்த எண்ணத்தின் உணர்வுகள் அதன் சக்தி கொண்டு எப்படி இயக்குகின்றது…?)

ஆஅகவே… கல்யாணராமனைப் பற்றிச் சொல்லிப் புதிதாகத் திருமணமாகும் அந்தக் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எங்கே பார்ப்பது…?

ஏனென்றால் தாலி கட்டும் நேரத்தில் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நேரம் ஆகிவிட்டது நேரம் ஆகிவிட்டது என்று தாமதமாகும் போது இந்த இடத்திலும் “பகைமை” வந்து விடுகின்றது.

நல்ல உணர்வைஸ் சேர்க்கும் நேரங்களில் இப்படி இதைச் சேர்க்கின்றார்கள். பகைமை கலந்தபின் “இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…!” என்று அந்தப் பற்றுள்ளவர்கள் மன நிலையினைப் பார்த்தால் “கசகச கசகச…” என்று இருப்பார்கள். அப்பொழுது எதை ஊட்டுகின்றோம்…?

ஆனால் திருப்பூட்டும் போது எப்படி இருக்க வேண்டும்…?

1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் படர வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணி
6.அந்த இரு மனமும் ஒரு மனமாகும் அந்தத் தம்பதியர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்
7/மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
8.அவர்கள் அன்னை தந்தையின் அரவணைப்புடன் என்றுமே வாழ வேண்டும்
9.அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும் மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
10.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும்.
11.அவர்கள் எண்ணங்கள் ஒன்றி இரு மனமும் ஒரு மனமாகி கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
12.உலகைக் காத்திடும் உத்தமஞானியாக வளர வேண்டும் பண்பினை வளர்க்கும் அத்தகைய அருள் ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று
13.எல்லோரும் இந்த எண்ணத்தோடு இப்படி வாழ்த்த வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் அந்தத் திருமண நாளை எண்ணினாலே “இந்த முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் வாழ்த்தை எண்ண வேண்டும்” நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் இதற்குள் ஒடுங்கி விடுகின்றது.

இப்படி அந்த எல்லோருடைய வாழ்த்துக்களும் அங்கே ஒன்று சேர்க்கப்படும் பொழுது இந்த வாழ்த்து இருவருக்குள்ளும் பதிவாகி அங்கே மகிழ்ச்சியின் தன்மை உருவாகின்றது.
1.இந்த உணர்வு பதிவான பின்
2.அவர்களுக்குக் “குழந்தை இல்லை” என்ற சொல்லே வராது.

ஆகவே திருமணம் நடைபெறும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று “வழியறிந்து நாம் செயல்பட வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மூகாம்பிகை என்றால் மூன்று சக்தியின் தொடர்பு கொண்ட இயக்கம். ஒரு உயிரணுவிலும் அதே இயக்கமாகத் தான் இயக்குகின்றது. பூமியிலும் அதே நிலைகள் கொண்டு தான் இயங்குகின்றது.

1.பூமி சுழலும் போது வெப்பம் (1) ஆகின்றது
2.சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தால் ஈர்ப்பு சக்தி (2) வருகிறது.
3.அந்த ஈர்க்கும் சக்தியால் தான் எதைக் கவர்ந்து கொள்கின்றதோ (3) அதன் செயலாக
4.இந்த மூன்று நிலைகள் கொண்டு பூமி இயங்குகின்றது என்ற நிலை தான் “மூகாம்பிகை” என்பது.

ஆக… தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுவே மணம் ஞானம்.

அதே போல் உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு அந்த இயக்கத்தால் வெப்பமாவதும்… அந்த இயக்கத்தினால் ஈர்ப்பு சக்தியாவதும்… ஈர்ப்பால் தனக்குள் கவர்ந்து எத்தகைய நிலையைத் தன்னுடன் இணைத்து அது இயங்குகின்றதோ அந்த இயக்கமே மூன்று சக்தி… “மூகாம்பிகை” என்று பெயர் வைத்தார்கள்.

அதனுடன் இணைக்கும் பொருள் எதுவோ… அப்பொருளின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதனையே கோலமாமகரிஷி மக்களுக்குத் தெரியப்படுத்தியது. ஆகவே அதற்குப் பெயர் மூகாம்பிகை என்று வைத்தார்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பத்திற்குப் பெயர் பராசக்தி அதனுடன் இணைத்து இயங்கும் சக்தியின் பெயர் லட்சுமி. என்றும் இவை அனைத்தும் சூரியனைக் கடந்து வெளி வரப்போகும்போது விஷம் இயக்கச் சக்தி… இந்த மூன்றும் சேர்த்து அது ஒரு சக்தியாகின்றது.

இயக்கத்தின் நிலைகள் கொண்டு சூரியன் சுழற்சியாகும் போது உருவாகும் வெப்பம் பராசக்தி என்றும் அதனுடன் இணைந்த காந்தத்திற்குப் பெயர் லட்சுமி என்றும் அதைக் கடந்து அந்த விஷத்தின் நிலையைத் தனக்குள் அது கவர்ந்து வரப்படும்போது ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

மூன்று சக்திகள் கொண்டு இயங்குவதால் அதையும் மூகாம்பிகை என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் நம் உயிரின் இயக்கம்…
1.தான் கவர்ந்து கொண்ட மணம்… ஞானம் என்ற நிலையில்
2.எதன் நிலைகள் கொண்டு அது கவர்கின்றதோ
3.அதன் இயக்கமாகத் தான் இயங்குகின்றது என்ற இந்த நிலையை நாம் உணர்வதற்குத்தான்
4.மூகாம்பிகை ஆலயமாக வைத்தார் கோலமாமகரிஷி.

இந்த கோலமாமகரிஷி. கடும் தவத்தால் கண்டுணர்ந்து தனக்குள் விளைய வைத்த சக்தியால் மண்ணாகி அணுக்களின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது என்றும் தனக்குள் கவர்ந்துணர்ந்த நிலை. இருப்பினும் அது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனால் கண்டுணர்ந்து உணர்த்தப்பட்ட உணர்வுகள் தான்…!

1.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வலைகள் அனைத்தும் இன்று நம் பூமியில் படர்ந்துள்ளது.
2.அதை நுகர்ந்தவர்கள் அனைவருமே மகரிஷிகள் ஆகின்றனர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று தனக்குள் அனைத்து சக்தியையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெறுபவர் எவரோ அவர்கள் அனைவரும் “மகரிஷி ஆகின்றார்கள்…!”

அதனால் தான் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமென்று திரும்பத் திரும்பச் சொல்வது…! அர்த்தமாகிறதல்லவா…!

மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே இருந்தாலும் பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும் போது
1.அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்
2.உணர்ந்தபின் அதை நீக்குதல் வேண்டும்.
3.அதாவது இன்று தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
4.ஆனால் தெரிந்த உணர்வுகள் நம் உடலிலே இணைந்திடக் கூடாது அதை நீக்கிடல் வேண்டும்.
5.தீமைகள் எதுவோ அதனை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ.. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிடல் வேண்டும்.

காரத்தைத் தனித்து நாம் உணவாக உட்கொண்டால் காரத்தின் வேக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது. ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவையோடு இணைக்கும் பொழுது சுவை மிக்கதாக மாற்றுகின்றது.

இதைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்… பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள் படும் வேதனையைப் பார்த்துச் சொல்லால் கேட்டுணர்ந்தாலும்… உணர்ந்த அச்சக்திகளை எல்லாம் நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம்… ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீவினையாகச் செயல்படும் நிலைகளை மாற்றிடல் வேண்டும்.

பிறர் தீமையைக் கேட்டுணர்ந்து தீமையிலிருந்து விடுபட நாம் உதவி செய்கின்றோம் ஆனாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நாம் கேட்டுணர்ந்தபின் அடுத்த கணம்…
1.நம் முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை நாம் கவர்ந்து
2.நமக்குள் அடுத்து தீமை விளைவிக்கும் நிலையை
3.அந்தத் தீமை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

அதைத்தான்… அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கற்றுணர்ந்த உணர்வுகளை கோல மாமகரிஷி கவர்ந்து அன்றைய மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் எவ்வாறு எடுத்துரைத்தாரோ அதனை நாம் கவர்ந்து கொண்டால் நம்மில் இருக்கும் தீமைகளை அகற்ற இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கொசுத் தொல்லையாக இருக்கின்றது..! என்று கொசுக்களை எல்லாம் கொல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அது எத்தகைய வேதனைப்படுகின்றதோ அந்த வேதனை உணர்வுகள் கொசுவின் உயிரான்மாவுடன் கலக்கின்றது.

“கொன்று விட்டோம்…!” என்று நாம் எண்ணும் போது எந்த எண்ணம் கொண்டு கொன்றோமோ கொசுவின் உயிர்கள் நம் உடலுக்குள் வருகின்றது.

உதாரணமாக ஒரு கொசு நம் மீது அமர்ந்து அது இரத்தத்தைக் குடிக்கும் போது உற்றுப் பார்த்து “அதை நசுக்க வேண்டும்…” என்று மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம் கை கொண்டு அடிப்பதற்கு முன்னாடி அந்தக் கொசு பறந்துவிடும். மனிதனை ஒத்த அறிவு அதற்கு இல்லை என்றாலும்
1.மனிதனின் அறிவின் ஞானத்தைப் பெற்ற “இரத்தத்தை” (மனித உணர்வுகள் கலந்த) அது புசிக்கும் போது
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதற்குள் அந்த உயிர் அதை இயக்கிக் காட்டும்
3.ஆகவே அது தப்பித்துக் கொள்ளும்… இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

கொசு நம்மைக் கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தால் நமக்குள் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகின்றது. ஆயிரம் கொசுக்களை நாம் நசுக்குகின்றோம் அல்லது கொல்கிறோம் என்றால் அந்தத் தடிப்புகள் உடல் முழுவதும் நிச்சயம் வரும்.

சில பேர் அமாவாசை அன்று உடலெல்லாம் தடிப்பு வருகின்றது… மேல் எல்லாம் அரிப்பு வருகின்றது என்று கூடச் சொல்வார்கள். இது எல்லாம் இறந்த அந்தக் கொசுக்களின் நஞ்சு கலந்த நிலைகள் உடலுக்குள் சென்ற நிலையில் இயற்கையின் செயலாக அப்படி உருப்பெறும்.

யானையின் தோல் மிகவும் முரடானது. ஈட்டியால் குத்தினாலும் உடம்புக்குள் இறங்குவது கொஞ்சம் கடினம். ஊசியால் குத்தினாலும் ஊசி வளையுமே தவிர ஊசிக்கு வலு இல்லை என்று கூடச் சொல்லலாம். யானையின் தோலுக்கு அவ்வளவு சக்தி உண்டு.

ஆனால் கொசுவைக் கையால் நசுக்கி விட்டால் அதனுடைய உருவத்தையே நாம் காண முடியாது. அப்படி நசுக்கப்படும் நிலை பெற்றாலும் “தனது மூக்கால்…” ஊசி போல யானையின் தோலுக்குள் ஊடுருவி அதனின் இரத்தத்தைக் குடித்துவிடும்.

கொசுவிற்கு அவ்வளவு பெரிய வலு உண்டு…!

கொசுவின் முகத் துவாரத்தில் இருக்கும் நஞ்சின் தன்மையை அது பாய்ச்சியபின் அந்த யானையின் தோல் விலகுகின்றது. கொசு தன் முகவாயை உள் செலுத்துகின்றது.

உள் செலுத்தி அது தன் மணத்தால் இரத்த நாளங்கள் ஓடும் பாகத்தை நுகர்ந்தறிந்து அந்த இரத்தத்தைக் குடிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் யானைக்குத் தான் வலு என்று. யானையைக் காட்டிலும் கொசு மிகச் சிறிதாக இருப்பினும் அதனுடைய வலுவைக் காட்டிலும் அதைப் பிளந்து அது உணவாக உட்கொள்ளும் திறன் அதற்கு உண்டு. கொசுவை எளிதில் மதிக்க வேண்டாம்…!

ஒரு சமயம் காட்டிற்குள் கொசு தாக்காமல் இருப்பதற்காக சில உணர்வலைகளைப் பரப்பச் செய்தார் குருநாதர். அப்பொழுது என் அருகில் கொசுக்கள் வரவில்லை.

காட்டுக் கொசுவிற்கு வலிமை ஜாஸ்தி. மற்ற மிருகங்களின் இரத்தத்தைக் குடித்துப் பழகி இருப்பதனால் மனிதனக் கடித்தால் மிகக் கடுமையான வேதனைகள் வரும்.

குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். முதலிலே அவர் சில் அலைகளைப் பாய்ச்சி விட்டார். அதனால் நான் படுத்து உறங்கும்போது அந்தக் கொசுக்கள் கடிக்காதபடி ஆனந்தமாகத் தூங்கினேன்.

சிறிது நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அவர் செயலைக் காட்டி விட்டார்…!
1.கொசுக்கள் வராதபடி செய்த அலைகளை எடுத்து விட்டார்.
2.எல்லாக் கொசுக்களும் ஏகக் காலத்தில் என்னைக் கடிக்கத் தொடங்குகின்றது.

என் இரத்தத்தைப் பூராமே அது குடிக்கின்றது. என் உடல் முழுவதும் அரிப்பு எடுத்து விட்டது. என்னால் வேதனை தாங்க முடியவில்லை. கல்லை வைத்துத் தேய்க்கின்றேன்.

இரத்தம் ஒழுகினாலும் தேய்க்கத் தேய்க்க அதன் மேல் ஆனந்தம் வருகின்றது. அரிப்பின் தன்மை தாங்காது நகத்தால் சுரண்டினாலும் அதற்கு அவ்வளவு ஆனந்தம் வருகின்றது.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ வலு பெற்றவனாக இருக்கின்றாய்.. இருந்தாலும் அந்தக் கொசுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்று பார்…!

அதே சமயம் அதை எல்லாம் நீ தேய்த்துக் கொல்லும்போது அதனுடன் கலந்த விஷத்தின் உணர்வின் தன்மை உன் உடலுக்குள் எவ்வாறு புகுகின்றது…?

உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தபின் அதுவும் (கொசுவின் உயிர்) கலந்து அது குடி கொண்டு இருக்கும் காலத்தில் உன் இரத்தத்தைத் தனதாக மாற்றி… அது எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஒரு தட்டாம்பூச்சி தன் உடலில் விளையும் கருவின் தன்மையை அது மற்ற தாவர இனங்களில் இட்டுவிட்டால் அதனின் சத்தை இது நுகர்ந்து அதனின் உணர்வின் செயலாகப் பட்டாம் பூச்சியாக அது விளையும்.

1.தாவர இனத்தின் சத்தை எடுத்து அந்தப் பூச்சி உருவாவது போல…
2.நம் உடலுக்குள் வந்த இந்தக் கொசுவின் உயிரான்மா
3.அது எத்தகைய நிலையைச் செயல்படுத்தி தன் உணர்வின் நிலைகளைப் பரப்பி
3.இரத்தத்தையே மாற்றி அது அதன் உணவாக எப்படி எடுத்துக் கொள்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்த உணர்வின் தன்மை மாற்றம் அடையும் போது கொசு மனிதனுக்குள் மனிதனாக உருப்பெறும் அணுவாக மாறுகின்றது.

முதலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றது. தன் உணவைத் தேடுகின்றது. நம் உடலில் உள்ள உணர்வின் தன்மை அதனின் உணர்வுகள் மாற்றமடைந்து மனிதனில் உருவாகும் கருவாக மாறுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!

செயற்கைக் கோளை விண்வெளிக்குச் செலுத்துவது போல் நம் முன்னோர்களை விண்ணுக்குச் செலுத்த முடியும்

 

நம் குலதெய்வங்களான முன்னோர்கள் மூதாதையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டல ஒலி அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பெருவீடு பெருநிலை என்ற நிலை அடையச் செய்தல் வேண்டும்.

அவ்வாறு அழியா ஒளிச் சரீரம் பெற்று அவர்கள் பிறவி இல்லா நிலை அடைந்து ஒளியின் அறிவாக ஒளியின் உடலாக வாழ்ந்து வளர்ந்து…
1.அருள் ஒளியைக் குடும்பத்தில் பாய்ச்சிக் குடும்பத்தில் இருளை அகற்றும் சக்தியை உருவாக்கி
2.விண் சென்ற எங்கள் குலதெய்வங்கள் அருள் வழியில் எங்களைக் காத்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஆனால் குல வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் குடும்பத்தில் பற்று கொண்டால் அந்தப் பற்றின் ஈர்ப்பின் துணை கொண்டு “யார் மேல் அதிகப் பற்று கொண்டதோ” அந்த உடலுக்குள் வந்துவிடும்.

அவ்வாறு வந்து விட்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் பொழுது எத்தகைய நோய்வாய்ப்பட்டிருந்ததோ
2.அந்த உணர்வினைப் புகுந்த உடலுக்குள்ளும் இயக்கி
3.பாசத்தால் உள்ளே வந்தாலும் இந்த உடலுக்குள் வந்து அதையே உருவாக்கிவிடும்.

முதலிலே மூதாதையர் மனிதனாகப் பிறந்தார்கள்… நம் தாய் தந்தையை உருவாக்கினார்கள்… தாய் தந்தை நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். இந்த உயிரின் கடைசி முடிவு அழியா ஒளிச் சரீரம் பெறுவது தான்.

உயிர் ஒளியானது உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனித உடலில் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற சூட்சும சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம் என்றால் அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள்.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்… ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். அந்த அருள் ஒளியுடன் நம் குலதெய்வங்கள் ஒன்றி வாழ… அவர்களைப் பிறவில்லா நிலை அடையச் செய்ய… நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

உதாரணமாக சிலர் எண்ணலாம் இது எப்படி சாத்தியப்படும்…? என்று…!

இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்… அதிலே நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள். எதெனதன் உணர்வைப் பதிவு செய்கின்றார்களோ ராக்கெட்டிலே அது பொருத்தப்பட்டு விடுகிறது.

உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் நட்சத்திரம் இருக்கிறது என்றால்
1.எதன் திசைப் பக்கம் இந்த ராக்கெட் செல்ல வேண்டுமோ நாடாக்களில் அதை இங்கே பதிவு செய்து விடுகின்றார்கள்.
2.ஏனென்றால் நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட அந்த இயந்திரத்தின் செயல் அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
3.எத்திசையின் உணர்வை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ அத்திசைப் பக்கம் அந்தக் கோள்கள் உமிழ்த்தும் உணர்வலைகள் இதற்குள் பட்டபின்
4.அதன் பாதையினை அது அமைத்து அந்தக் கோளைச் சென்று அடைகின்றது.

கோளின் உணர்வுகளை நுகர்ந்து அறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் ஒலி நாடாவின் மூலம்
1.தரையில் இருப்பவர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து
2.இங்கே பதிவு செய்து அதன் பாதையை அமைக்கின்றார்கள்.

இதைப் போன்று தான்
1.நம் மூதாதையர்களின் உணர்வுகள் (நமக்கு வழிகாட்டிய உணர்வுகள்) நமக்குள் இருப்பதனால் அதன் துணை கொண்டு
2.நாம் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நமக்குள் வலுக் கொண்டு… அந்த அருள் ஞானிகளின் சக்தியை எடுத்து
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய உந்தித் தள்ளினால்
4.அங்கே சென்ற பின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.

வழிகாட்டிய அறிவின் ஒளியாக நிலைத்து விடுகின்றது. உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.

அதன் வழி கொண்டு அவர்கள் வளர… அவரின் உணர்வுகள் நமக்குள் பெருக்க… அவர்களை எண்ணும் பொழுது அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க அவர்கள் உதவுவார்கள்.

இதற்கு முன் நாம் செய்யத் தவறியதால்… பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் புகுந்து இருப்பினும்… அதை நாம் இவ்வழியில்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த உணர்வுகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது… நமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அந்த உணர்வு கிடைக்கின்றது
3.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளியின் சுடராக நம்மையும் மாற்றும்.
4.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
5.நாமும் அதே வழியில் இணையும் தருணம் வருகின்றது.

ஞானிகள் காட்டிய இந்த அருள் வழியில் செல்வோம் என்றால் இந்த உயிர் என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றது. நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று பேராசையின் நிலைகள் கொண்டு… பொருளுக்காக ஏங்கி அரசனாக இருந்து ஆட்சி செய்தவன் தான் அத்திரி. தன் குடிமக்களினுடைய ஆசையை நிறைவேற்றித் தன் புகழுக்காக ஏங்கியவன் தான் அத்திரி

இருந்தாலும் தன்னுடைய மக்களின் ஆசை தன்னுடைய பிள்ளை என்ற நிலைகளை மறந்து தன்னுடைய ஆசையென்ற நிலையையே வளர்த்துக் கொண்டான்.

அவன் செய்யும் தவறின் நிலைகள் தாங்காது அங்கே குடிமக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கப்படும்போது பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை உணரத் தொடங்குகின்றான்.

மனிதன் இறந்தபின் என்ன ஆகின்றான்…? என்ற நிலைகள் சிந்திக்கின்றான்… உணர்கின்றான். அரசைத் துறந்து காட்டுக்குள் சென்று கடுந்தவங்கள் செய்து அகஸ்தியரின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெறுகின்றான்.

1.ஒவ்வொரு மனிதனையும் மகிழச் செய்வதற்கு என்ன வழி…? என்று அறிந்து
2.மீண்டும் மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து
3.தன் உணர்வின் நல் எண்ணத்தைப் பாய்ச்சி ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து
4.அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து
5.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
6.தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றி விண் சென்றார் அத்திரி மாமகரிஷி.

அன்று அரசனாக இருந்த நிலையில் எல்லை கடந்த நிலைகள் சென்ற பின் தான் தன்னை உணர்ந்து… அரசைத் துறந்து… உயர்ந்த ஆற்றலைப் பெற்று விண்ணுலகம் சென்றார் அத்திரி.

அது போன்று தான் இன்று மிகவும் விஷத் தன்மையான ஆற்றல்மிக்க நிலைகள் பரவிக் கொண்டுள்ளது. ரேடியோ டி.வி. இவைகளை எந்த அளவுக்குக் கவனிக்கின்றோமோ அந்த அலை வரிசைகள் எல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞானிகள் பூமிக்கு வெளியிலே பல செயற்கைக் கோள்களை அமைத்துள்ளனர். அதன் மூலமாகத்தான் இன்று டி.வியும் ரேடியோவும் மற்றதும் நாம் பார்க்க கேட்க முடிகின்றது.

இருந்தாலும் அந்தச் செயற்கைக் கோள்களை அமைத்த நிலைகள் கொண்டு அதன் மூலம் மற்ற விண்ணிலிருக்கும் விஷத் தன்மையான நிலைகளும் அதிலே கலக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்படும்போது சிறுகச் சிறுகச் சேர்க்கின்றனர்.

செயற்கைக் கோளின் வழியாக வரும் அலைகளை வீட்டிலே அமர்ந்த இடத்திலிருந்து ரேடியோவும் டி.வி.யும் வைத்து ரசித்துக் கொண்டிருக்கின்றோம்.

உணர்வைத் தூண்டும் நிலைகளில் நாம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில எதிர்நிலையான கதிர்வீச்சுகளை அவைகளில் கலந்து விட்டவுடனே கேட்டுக் கொண்டிருப்போரின் புத்திகள் சிதறிவிடும்.

என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்ற நிலையில் எல்லாவற்றையும் நொறுக்கி விட்டுத் தன் பிள்ளைகளையும் கொன்று விட்டு… இது என்ன உலகம்…? என்ற இருண்ட நிலைகளுக்குப் போகும் காலம் நெருங்கிவிட்டது.
1.கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
2.இது கூடிய சீக்கிரம் நம் விஞ்ஞானத்தில் நடக்கும்.

விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் கண்டு கொண்டார்கள்… பேரண்டத்தின் நிலைகளையும் கூடக் கண்டு கொண்டார்கள். இவர் (ஞானகுரு) என்ன பைத்தியக்காரர் மாதிரி எதையோ சொல்கிறார்…! என்று நினைக்க வேண்டாம்.

ஆனால் அந்த மாதிரியான அழிவின் நிலைகள் நெருங்கிவிட்டது…! இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மெய் ஒளியைப் பெற்றால் தான் முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காப்பதற்காக வேண்டி நமது குருநாதர் காட்டிய முறை கொண்டு சில உணர்வுகளினுடைய நிலைகளில் தொடர்பு கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

குருநாதர் எமக்குத் தெரியாமல் எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ அதே மாதிரித் தான் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தெரியாமலே பல சக்திகளை உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே இருக்கின்றேன்.

1.ஆகவே விஞ்ஞானத்தால் விளைந்த அந்த அலைகள்
2.உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது அதை மாற்றும் நிலைக்கு நாம் வர வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்
4.நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டியபின் மகரிஷிகளின் ஒளியை நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் பெறுங்கள்.
5.அந்த அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் என்னை (ஞானகுரு) “மின்னலைப் பார்…!” என்றார்.

மின்னலைப் பார்த்தால்… “என் கண்கள் குருடாகிவிடும் சாமி…!” என்று சொன்னேன்.

நான் சொல்கின்றேன்… நீ மின்னலைப் பார்…! என்று மீண்டும் குருநாதர் சொன்ன பின் மின்னலைப் பார்த்தேன்.

ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அணுக் கதிரின் புலன் இயக்கங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து எதிர்மறையாக மோதப்படும்போது
1.அது எப்படி மின்னல்களாக உருப் பெறுகின்றது…?
2.மற்றதை எப்படி மாய்க்கின்றது…?
3.மற்றொன்றோடு எப்படி இணைகின்றது…?
4.அணுக்களோடு எப்படி இணைகின்றது…?
5.இணைந்த பின் அந்த இசைந்த ஓசைகள் எவ்வாறு மாறுபடுகின்றது…? என்று
6.இதை எல்லாம் தெளிவாக்குவதற்குத் தான் மின்னலைக் காட்டுகின்றார் குருநாதர்.

உயிரே கடவுள் என்ற புத்தகத்தில் மின்னலைக் கண்ட அனுபவத்தை முதலில் எழுதியுள்ளேன். ஆனால் அன்று விளக்கவுரையை முழுவதும் கொடுக்கவில்லை. இன்று அந்த விளக்கவுரைக் கொடுக்கின்றேன்.

உண்மையின் நிலைகளை ஒரு முறை காட்டும் சில விதிமுறைகளைத் தான் அதிலே அங்கே வெளிப்படுத்தியது. ஏனென்றால் அதை ஒவ்வொரு தருணத்திற்குத் தக்கவாறுதான் வெளிப்படுத்த முடியும்.

1.ஒரு உணர்வில் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.உணர்வின் இயக்க இசைகள் மாறுவதும்
3.மணங்கள் மாறுவதும்
4.உணர்ச்சிகள் தூண்டுவதும்
5.உணர்ச்சிகள் ஒதுங்குவதும் என்ற நிலைகள் எல்லாம்
6.வேதங்களில் உள்ள உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுளது.

எதை எதனுடன் சேர்த்து… எதனின் உணர்வு கொண்டு அது உருப்பெறுகின்றதோ… அதை ரிக் என்றும் அதனின்று வெளிப்படும் உணர்வின் சத்தை சாம என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

உதாரணமாக ஒரு பூனை தன் கடுமையான உணர்வின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி தனக்குள் இரையாக்கிய உணர்வின் இசையாக அதிலிருந்து வெளி வருகின்றது.

அதே சமயத்தில் அந்தப் பூனையை உற்றுப் பார்க்கும் ஒரு எலியோ…
1.நுண்ணிய அலைகள் கொண்டு தன் செவிகளை ஒவ்வொரு திசையிலும் திருப்புகின்றது.
2.அந்தத் திசை திருப்பும் நிலைகள் வரும்போதுதான்
3.தன் செவிகளைக் கொண்டு இசைகள் ஒலிப்பதை நுகர்கின்றது.

அப்பொழுது சுருதிகள் (பூனையின் ஒலி ஓசைகள்) அதிகமாகும் போது எலிக்குள் இருக்கும் அதனின் உணர்வின் தன்மையை அது அடக்குகின்றது.

இந்த ஓசையின் உணர்வுகள் எலி உடலை உருவாக்கிய அணுக்களில் இணைந்தபின் அது ஒடுங்கி விடுகின்றது. இப்படி அது அடக்கும் நிலைகள் பெறுவதைத்தான் “அதர்வண” என்று பிருகு அன்று இதைச் சொல்லுகின்றார்.

ஏனென்றால் நட்சத்திர இனங்கள்…. ஒளி அலைகளை ஒளி பரப்பும் அந்த உணர்வின் அணுக்கள்… மற்றொன்றோடு சேர்த்து அதனை இணைத்து… இணையும் உணர்வாக மாற்றும் உணர்வு கொண்டது.

இப்போது லேசாக உங்களிடம் பதிய வைத்து விடுகின்றேன். இதனின் உணர்வின் நிலைகளை நீங்கள்
1.உங்களுக்குள் ஞானத்தால் பெருக்கிக் கொள்ளவும்
2.தீமைகளை அடக்கிடவும் அந்த மெய் ஞானியின் உணர்வை நீங்கள் பெறவும் இது உதவும்.

மனிதனாகப் பிறந்த நாம் நமக்குள் ஏற்படும் தீமைகளை அடக்கி… உணர்வினை அறிவின் ஒளியாக மாற்றி… ஒளியுடன் ஒன்றி “ஒளியின் சரீரமாக…” நிலை கொள்ள இது உதவும்.

ஆலயத்தை உருவாக்கிய ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?

 

மனிதன் தனது வாழ்க்கையில் ஆறாவது அறிவை வைத்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள். நம் கண்களின் இயக்கங்களைப் பற்றி அன்று வியாசகர் தெளிவாகக் கொடுத்துள்ளார்.
1.கண்களால் காணும் உணர்வுகளைப் பதிவாக்குவதும்
2.கண்களால் கவர்ந்த உணர்வை உயிருடன் இணைப்பதும்
3.உயிரின் நிலைகள் அதை இயக்கிச் செயலாக்குவதும்
4.அதன் உணர்ச்சிகள் நம்மை எப்படி உருவாக்குகிறது…? என்பதையும் அறியச் செய்தார்.

தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து அந்தச் சிலையின் குணங்களை நாம் எடுக்கும் பொழுது… இந்தத் தெய்வ குணம் நாங்கள் பெற வேண்டும்… இந்த ஆலயம் வருவோர் எல்லாம் அந்தத் தெய்வ குணம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி எண்ணும் பொழுது நாம் அதுவாகவே ஆகின்றோம்.
1.பண்படுத்தும் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது
2.நம் சொல் பிறரைப் பண்படுத்தும் நிலையும் உருவாக்குகின்றது.

ஆக இந்த உடலுக்குள் இருக்கும் சக்தியின் நிலைகளைத்தான் தெளிவாக்கி நீ எதை எப்படி வளர்க்க வேண்டும்…? எதன் வழிகளிலே இந்த வாழ்க்கை வாழ வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.

யாகம் என்றால் என்ன…?

நமது உயிர் ஒரு நெருப்பு. அதிலே அருள் உணர்வைச் சுவாசிக்கும் பொழுது உடல் முழுவதும் படர்கின்றது.
1.நம் மூச்சு வழி சொல் வழி கூடி இந்த உணர்வலைகள் வெளிப்படுகின்றது.
2.கேட்போர் உணர்வுகளை மகிழச் செய்கின்றது

ஆனால் யாகத் தீயிலே பல நல்ல பொருள்களைப் போட்டவுடன் கருகிப் புகை மண்டலமாக வெளி வருகின்றது. நம் கண்ணிலேயும் படுகின்றது சுவாசித்தால் நெடியும் வருகின்றது.

இந்த யாக மண்டலத்தில் என்ன இருக்கின்றது…? புறநிலையைக் காட்டி அதனை அகநிலைகளுக்கு ஊட்ட முடியாது.

நம்முடைய கண்கள் புறக்கண் உயிர் அகக்கண். நாம் புறக்கண்ணால் பார்ப்பதும் உயிரிலே உராயப்படும் பொழுது அகக்கண்ணாக அது உள் நின்று நம்மை இயக்குகின்றது என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் இது துவைதம்… அதாவது உருவம்.
1.சமஸ்கிருதத்தில் துவைதம் – இது உருவம்
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்
3.அருவத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி.
4.துவைதம்… அத்வைதம்… விசிஷ்டாத்வைதம்… தனக்குள் மறைந்து இயக்கும் என்று உணர்த்துகின்றார்கள்.

கண்ணிலே ஒரு பாம்பைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்ச்சி “ஐயோ… பாம்பு…!” என்று இயக்குகின்றது. ஒரு அழகான பொருளைப் பார்த்தோம் என்றால் “ஆஹாஹா…” என்று மகிழ்ச்சி அடைகின்றோம்.

பொருள் துவைதம் உருவம் உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம். உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சி. அந்த உணர்வின் தன்மை உணர்ச்சியை ஊட்டும். உயிர் அந்த அணுவாக மாற்றுகின்றது.

ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வம் அது உருவம்… அந்த உயர்ந்த குணங்களை உன் உடலாக்கு. ஆனால் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து உருவாக்கினால் உடல் நலிகின்றது… “சைவ சித்தாந்தப்படி…!” ஏனென்றால் அதன் வழிகளில் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.

அந்தத் தெய்வச் சிலைக்குப் போடப்பட்டிருக்கும் வைர கிரீடத்தைப் பார்க்கப்படும் பொழுது அது எப்படி ஜொலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல் ஜொலிக்க வேண்டும். அதாவது என் சொல்லைக் கேட்போருக்கெல்லாம் சந்தோசம் வர வேண்டும்.

தங்கம் எப்படி மாங்காது இருக்கின்றதோ என் மனம் எப்பொழுதும் அவ்வாறு மங்காது இருத்தல் வேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரும் தங்கத்தைப் போன்று மங்காத மனம் பெற வேண்டும்.
1.நீங்களும் நினைக்கின்றீர்கள்… நானும் எண்ணுகின்றேன்
2.இருவருமே உயருகின்றோம்.

சாமி மீது போட்டிருக்கும் மலர் எதற்கு…?

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த மணம் தான் இங்கே வரும். ஆகவே அந்த மலரைப் போன்ற நாங்கள் மணம் பெற வேண்டும் இந்த ஆலயம் வருவோர் எல்லாம் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

மகரிஷிகள் எவ்வாறு தங்கள் பார்வையில் மற்றவருடைய தீமைகளை அகற்றி மகிழ்ச்சி பெறச் செய்தார்களோ
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அந்த உணர்வை இந்த உடலான ஆலயத்தில் சேர்க்க வேண்டும்
2.மகரிஷிகள் அல்லாது நறுமணத்தைக் காக்க முடியாது
3.அதை இணை சேர்க்கவில்லை என்றால் நம் வாழ்க்கையில் நன்மைகள் பெற முடியாது.

ஆலயத்தை உருவாக்கியது ரிஷிகள்…! ஆனால் அந்த ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…’ என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.

நமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்…! நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…!

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்றது. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ
2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)
3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)

இது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.

இப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.

1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ
2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின்றது.

அதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.

ஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.

இதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)

நாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நம்மை அறியச் செய்கின்றன… உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….
2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.

உணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது… ஒரு முட்டையாக…! அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.

நாம் எண்ணக்கூடியதை ஓ…! என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.

நாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.

அவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.

உயர்ந்த ஞானத்தின் வழிகளில் இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை
2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று
5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி
6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.

ஆகையினால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.

அப்படி மதித்து நமது குரு காட்டிய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.அணு குண்டும் ஹைட்ரஜன் குண்டும் போய்…
2.மனிதனுக்கு மனிதன் தீவிரவாதம் என்ற நிலைகளும் போய்
3.அவைகளிலிருந்து வந்த விஷத் தன்மைகள் கலந்து மற்ற விஷப் பூச்சிகளில் பட்டு அது இறந்து
4.விஷக் கிருமிகளாக மாறி மனிதனைக் கொல்லும் தன்மைக்கு இன்று வந்து விட்டது.

அதே சமயத்தில் நாம் சுவாசித்த இந்த உணர்வுகளோ நம் உடலுக்குள் போய் நல்ல அணுக்களை எல்லாம் மாற்றி
1.விஷ அணுக்களாக உருவாக்கி நமக்குள் நோயும்
2.நம் உடலிலிருந்து வரக்கூடியது நம்மைச் சார்புடையோர்களுக்கும் பாய்ந்து
3.அவர்களுக்கும் இந்த நோய்கள் வந்துவிடுகின்றது.

உலகம் முழுவதும் இப்படிப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று நம் உடலுக்குள் நாம் இதைப் பெருக்கி கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பத்திரிக்கை வாயிலாகவோ டி.வியின் நிலைகளாகவோ உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை பதிவாகிக் கொண்டே உள்ளது.

அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த விஷத்தின் தன்மையை உடலில் வளர்த்து நமக்குள் விஷக் கிருமிகளைத் தான் உருவாக்குகின்றோம். அதனா நமக்குள் கடும் நோய்களே வந்து விடுகின்றது.

புதுப் புது நோய்கள் வரக் காரணமே…. இதைப் போன்று கேட்ட உணர்வை நுகர்ந்து… பதிவாக்கி… மீண்டும் அதையே நுகரும் நிலை ஆகி… அது நம் இரத்த நாளங்களிலே விஷக் கிருமிகளாக மாறுகின்றது.

இதன் உணர்வைச் சொல்லாகவோ… செயலாகவோ… நம் பார்வையில் பார்க்கப்படும்போது நமக்குள்ளும்… நம்மை சார்புடையோர் உடல்களிலும்… பாய்ச்ச முடிகின்றது.

இப்படி விஷத்தின் தன்மை கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரான ஈசனைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.

அவன் தான் (உயிர்) நம்மை இந்த உடலை உருவாக்கியவன் என்றும் இந்த மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைக் காக்க
1.ஞானியர் கண்ட உண்மையின் உணர்வை இங்கே உபதேச வாயிலாகப் பதிவு செய்வதை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.விஷக் கிருமிகளை ஒடுக்கி உங்கள் உடலுக்குள் அறியாத சேர்ந்த தீமைகளைத் தூய்மையாக்கிப் பழக வேண்டும்.

தங்கத்திற்குள் செம்பும் வெள்ளியும் வைத்து ஆபரணங்கள் செய்தாலும் அவைகளும் அதிலே இரண்டறக் கலந்து விடுகின்றது. மீண்டும் நகை செய்ய வேண்டும் என்றால் அவைகளைப் பிரிக்க நாம் திரவத்தை ஊற்றித் தங்கத்தைச் சுத்தமாக்குகின்றோம்.

இதைப் போலத்தான் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்… உடலிலுள்ள உறுப்புகளில் அதை அடிக்கடி செலுத்தப்படும்போது
1.விஷக் கிருமிகள் காற்றுடன் வந்து நம்முடன் கலந்திருந்தாலும்
2.அது பலவீனமாகி நல்ல உணர்வின் தன்மையாக மாற்றிவிடும்.

ஆனால் நோய்களையும் கிருமிகளையும் அகற்ற விஞ்ஞான அறிவு கொண்டு உடலில் உள்ள இரத்தங்களில் மருந்துகளைச் செலுத்தப்படுபோது உடல் முழுவதும் பரவி தீமையின் உணர்வை மாற்றுவது போல மாற்றினாலும்
1,கடுமையான மருந்துகளைக் கொடுக்கப்படும் போது
2.உடலில் உள்ள கிட்னிக்கு வரப்படும்போது அதைப் பலவீனப்படுத்தி
3.மறுபடியும் வேறொரு நோய் வருகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முறைப்படி நீங்கள் செயல்படுத்தும் போது உங்களுக்குள் வந்த தீமைகளையும் நோய்களையும் நீக்கும்… நம் கிட்னியையும் வலுவாக்கும்.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நிலைகளையும் நாம் பெற முடியும்.

ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான். இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வால் வேதனைப்படுவதும் கவலைப்படுவதும் வெறுப்படைவதும் கோபப்படுவதும் தற்கொலை பண்ணுவதும் இந்த மாதிரி நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

ஆக மனிதனின் ஆசைகள் நிறைவேறவில்லை என்றால்…
1.நல்லது செய்து நல்லதைப் பழக்கப்பட்ட மனிதன்…
2.நல்லது செய்தே நொந்து போன மனிதன்
3.இது என்ன வாழ்க்கை…? என்று பேய் மனமாகி
4.இன்னொரு உடலுக்குள் சென்று அதே ஆசையின் உணர்வுகளாகி அவனையும் வீழ்த்தி
5.அதிக வேதனையை உருவாக்கிக் கொண்டு அடுத்து மனிதனல்லாத பிறவிக்கே போய் விடுகின்றது.

இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு அருள் உணர்வு பெற்று அருள் வாழ்க்கையில் நீங்கள் வாழ எமது ஆசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு அருள் பெற்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… சந்தர்ப்பத்தால் அறியாது சேரும் தீய வினைகளை நீக்கி… அருள் உணர்வைப் பெருக்கி… உடல் நலம் பெற்று மன பலம் பெற்று… இந்த வாழ்க்கையில் அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து… பிறவியில்லா நிலை அடையும் அந்த அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.

குடும்பத்தில் பண்பும் பாசமும் பரிவும் வளர்ந்து… தொழிலில் அரவணைத்து அன்புடன் வாழும் அருள் சக்தி பெற்று… தெளிந்த மனமும் மகிழ்ந்த உணர்வும் பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற
1.இங்கே உபதேசித்த உணர்வுகள் உள் நின்று உங்களுக்கு நல்வழி காட்டி
2.அருள் வழி வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற
3.எமது அருளும் குரு அருளும் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

உபதேச வாயிலாக யாம் கொடுக்கும் சக்தி “உங்களுக்குள் இயக்கச் சக்தியாக மாற வேண்டும்”

 

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.“துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்குத் தான் அடிக்கடி உங்களுக்கு உபதேசிப்பது…”
2.இந்த உணர்வுகள் பதிவாகி விட்டது என்றால் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன் அதைப் பெறுவதற்கு.
3.காரணம் பல நினைவுகள் உங்களை மூடி மறைக்கின்றது.

நான் சொல்வதைக் கேட்கும் பொழுது உங்களுக்கு வீரியம் பெறுகின்றது. அடுத்தாற்போல் இருவர் சண்டையிடுவதை நீங்கள் பார்த்தால்… சாமி என்ன சொல்கின்றார்…? பார்…! இவர்கள் என்ன செய்கிறார்கள்…? என்று
1.நான் சொன்னதை விட்டு விடுவீர்கள்… அதை எடுத்துக் கொள்வீர்கள்.
2.தீய அணுக்களுக்கு நிறைய சாப்பாடு கொடுத்து விடுவீர்கள்… அதற்கு விரியம் ஜாஸ்தி.
3.நமக்குள் அணுக்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதை மாற்றும் சக்தியைக் கொடுத்து அதை மடக்கச் செய்ய வேண்டும்.

அப்படியென்றால் அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? காலை துருவ தியானத்தில் கொடுத்த சக்தியை நினைவுபடுத்தி வளர்க்க வேண்டும்.

பின்… சண்டை யாராவது போடுகிறார்கள் என்றால் பார்க்கப்படும் பொழுது அவர்களைக் கண் பதிவாக்குகின்றது. தவறு செய்கிறார் என்று பார்க்கின்றோம். அந்த உணர்வு அதே அணுவாக உடலுக்குள் மாற்றி விடுகின்றது.

இங்கே என்னிடம் உபதேசங்களைக் கேட்டுச் செல்கின்றீர்கள்…
1.நான் ஒருவன் தானே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசுகின்றார்கள்… செயல்படுகின்றார்கள்.
3.அது உங்களுக்குள் பெருகிவிடுகின்றது. நான் சொன்னது சிறுத்து விடுகின்றது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… அங்கே தெய்வத்தை வணங்குகின்றார்கள். தவறு செய்பவர்களை அங்கே பார்க்க நேர்கிறது. அர்ச்சனை செய்து பரிவட்டம் கட்டிப் பல மரியாதைகள் அவர்களுக்குச் செய்வார்கள்.

பல தவறுகள் செய்கின்றான்… சாமி அவனுக்குத்தான் உதவி செய்கின்றது என்று எண்ணுவோம். அந்த இடத்தில் கோவிலையே நீங்கள் வெறுக்கின்றீர்கள். அப்பொழுது நம் உணர்வுகள் என்னாகின்றது…? தீமைகள் தான் வருகின்றது.

அதே போல்… உபதேசங்களை நான் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதைக் கேட்டு விட்டு
1.வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து உலகம் கெட்டு விட்டது என்று நீங்கள் அதற்குத் தான் சக்தி கொடுப்பீர்கள்.
2.நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்றி அமைக்க முடிகிறதா…? இல்லை.
3.ஏனென்றால் அந்த உணர்வுகள் அவ்வாறு இயக்குகின்றது.

நாம் எதற்காக வேண்டி காலையில் துருவ தியானம் செய்கின்றோம்…? ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் உடனுக்குடன் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி இந்த ஆலயத்திலே படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

சங்கடமாகப் பேசுகின்றார்கள் அவசியமில்லாமல் பேசுகின்றார்கள் என்று பார்க்கின்றோம். அந்த நேரத்தில் ஈஸ்வரா என்று எண்ணி நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாக்கடையில் ஒருவன் கல்லைத் தூக்கிப் போடுகின்றான் அல்லது ஒரு பன்றி அதற்குள் விழுந்து போகின்றது… வாலை வீசிக்கொண்டு எழுந்து செல்கின்றது. நம் மீது அசுத்தம் பட்டு விடுகின்றது.

நான் நல்ல துணியைப் போட்டேன் இவ்வாறு ஆகிவிட்டதே என்றாலும்… அடுத்து நாம் அதை உடனே துடைக்கத் தானே முற்படுகின்றோம் ஐய்யயோ இப்படிப் பட்டுவிட்டது ஐய்யய்யோ இப்படிப் பட்டுவிட்டது என்று சொல்லிக் கொண்டே போகின்றோமா…? இல்லை…!

புறத்தால் ஏற்படும் அசுத்தங்களை உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்துகின்றோம். அகத்திற்குள் படும் தீமைகளைத் துடைக்க வேண்டும் என்றால் அதற்குத்தான் அந்த அருள் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.கண் கொண்டு பார்த்த உணர்வு இங்கே ஆன்மாவாகி சுவாசிக்கச் செய்து உயிரிலே படுகின்றது
2.அந்த உணர்வு தான் அறியச் செய்கின்றது…. உடலில் பரப்பச் செய்கின்றது.
3.அப்பொழுது உங்கள் நினைவு இங்கே செல்கின்றது…?

ஈஸ்வரா என்று கண்களின் நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் புருவ மத்தியை நினைக்கின்றீர்களா…?

கண்ணின் நினைவை இங்கே இணைத்து விட்டால் அது அகக்கண். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் இன்று இங்கே தடைப்படுத்தும் பொழுது தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது. இது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இடைமறித்து உள்ளே செலுத்த வேண்டும்.
1.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்
2.எல்லோரும் நாம் பழக வேண்டிய நிலைகள்.

நாம் தவறு செய்யவில்லை…! அந்த உணர்வுகள் வந்தது என்றால் நம்மை இயக்கிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திவிட்டு யாரைப் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… இதைக் கலந்து இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்ப வேண்டும்.

இதை நாம் “பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வர வேண்டும் நம் ஆன்மாவிலே…!” இப்படிச் செய்யும் பொழுது பிறருடைய உணர்வு நமக்குள் இழுக்காதபடி… நாம் எடுத்த உயர்ந்த உணர்வின் நினைவு வந்து நம்மைக் காக்கக் கூடிய சக்தியாக வரும்.

1.இது அரும்பெரும் சக்தி…! நாம் எடுத்து எடுத்து எடுத்து இதைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
2.வாழ்க்கையில் நாம் இப்படி மாற வேண்டும்.

குறையைக் கண்டு தான் விலகிச் செல்கின்றோம். ஆனால் குறைகளை உணர முடியவில்லை என்றால் அதிலே வீழ்ந்து மடிவோம்.

பூச்சிகள் மற்ற பறக்கக்கூடிய வீட்டில் பூச்சிகள் பறந்து வருகின்றது விளக்கு (தீபம்) எரிந்து கொண்டிருக்கின்றது என்றால் ஈர்க்கப்பட்டு அதில் விழுகின்றது. வேகமாக வந்து அதிலே பட்ட பின் கருகுகின்றது.

அதற்குத் தெரியாது…! நாம் தெரிந்தவர்கள்…! நம்முடைய தூய்மைப்படுத்தக் கூடிய உணர்வுகள் நஞ்சால் கருக்கப்படுகின்றது. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வேதனைகளைச் சமப்படுத்தத் தெரியவில்லை என்றால் நம் நல்ல அணுக்களை அது கருக்கி விடுகின்றது.

விஷம் தாக்கப்படும் பொழுது தான் வெப்பமாகின்றது அதே விஷத்தின் தன்மை தாக்கப்படும் பொழுது நல்ல உணர்வை ஆவியாக மாற்றி விடுகின்றது. இந்த விஷம் நெருப்பாக மாறுகின்றது.
1.விஷத்தால் கவரப்படுவது என்ன செய்கிறது…?
2.எதிலே பட்டாலும் விஷம் அதைக் கெடுக்கின்றது.
3.அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தையே யாம் கொடுக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று மகரிஷிகள் எந்த அருள் வழியைக் காட்டினார்களோ அதன் வழியில் நம் உள்ளத்தைத் தங்கமாக்க வேண்டும்.

தங்கம் என்ன செய்கின்றது…? தங்கத்திற்கு என்ன குணம் இருக்கின்றது..?
1.தங்கம் எதிலையும் அது மாசுபடுவதில்லை.
2.அதாவது வெள்ளி செம்பு போன்று அதனுடைய நிறம் கருப்பதே இல்லை.

அதைப் போன்று தான் அந்தத் தங்கத்தைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டால்
1.ஒருவர் நம்மைத் திட்டினாலும் நம்மை
2.நல்ல எண்ணத்திலிருந்து மாசுப்பட்டு நம்மை அழிக்காது.

இதைத் தான் மனதைத் தங்கமாக்குவது என்று சொல்வது…! ஏனென்றால் தங்கத்தில் உள்ள அழுக்கு நிற்குமோ…? நிற்காது… அதனுடைய நிறத்தை மாற்றாது.

நம்முடைய உணர்வின் நிலைகளை பிறர் நம்மைச் சங்கடப்படுத்துகின்றார்கள்… நம்மைப் பழித்துப் பேசிவிட்டார்கள்..! என்ற இத்தகைய உணர்வுள் வந்து விட்டால் செம்பிலேயோ வெள்ளியிலேயோ அழுக்குப்பட்ட மாதிரி உள்ளே மறைந்து விடுகிறது.

அது பக்கு பக்காக நீங்கள் தேய்க்க தேய்க்கத் தேய்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தங்கத்தினுடைய நிலைகள் மாசில்லாத நிலைகளாக இருக்கப்படும் போது பளிச்… என்று பளபளப்பாக… இருக்கும்.

நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்கள்… இருள் சூழும் நிலைகள் வந்து விட்டால் உடனே இங்கே இந்த ஞானத்தை ஊட்டும் நிலைகள் மறையும். நாம் அறிந்து இந்த அந்த இருளை எப்படி மாற்றுவது…? என்ற அந்த எண்ணத்தை அகற்றிவிடும்.

அப்படி ஆகாமல் மாற்றுவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிக்கும் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு
1.மனதைச் சுத்தப்படுத்துவோருக்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி
3.மாசுபடும் நிலைகளை மாற்றி நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் எண்ணத்தையும் தங்கமாக மாற்ற வேண்டும்.

இது தான் கொங்கணவர் தன் மனதைத் தங்கமாக்கிய நிலைகள். ஆகையினால் அதே மாதிரி நீங்களும் செயல்படுத்துங்கள்.
1.உங்கள் வாழ்க்கையில் செல்வம் வரும்
2.உங்கள் மனதில் மகிழ்ச்சி வரும்
3.உங்கள் சொல்லிலும் செயலிலும் தெளிவும் வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகண்ட அண்டம் இருண்டதாக இருப்பினும் அண்டத்தின் நிலை கோளாகும்போது இருண்ட நிலை தான். ஆனால் அந்தக் கோளின் தன்மை
1.நட்சத்திரமாகும் போது ஒளியின் நிலை அடைகின்றது.
2.நட்சத்திரமாகும் போது உணர்வை வளர்க்கும் நிலைக்கு வருகின்றது.

இருண்ட நிலையில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கோள்களில் புழு பூச்சிகளாக உருவானால் அதுவும் இருண்ட நிலை தான். அதே சமயத்தில் அதிலே பரிணாம வளர்ச்சிகள் அடைந்து… அடைந்து…
1.உணர்வின் தன்மை கொண்டு அறிவின் தன்மை கொண்டு உடலாகும் போது நட்சத்திரம்
2.அதாவது நாம் மனிதனாகும் போது நட்சத்திரம்
3.மனித நிலையில் அனைத்தையும் பக்குவப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றால் நாம் இவ்வுலகின் சூரியன் ஆகின்றோம்.

ஆகவே உணர்வின் தன்மை உயிராக உருவாக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான நாம் ஒவ்வொருவரும் ஈசனாக மாற வேண்டும். நம் உணர்வு ஒவ்வொன்றையும் ஈசனாக மாற்றிடல் வேண்டும்.

உயிர் ஈசனாக இருந்து உணர்வின் அறிவை ஊட்டுகின்றது. ஆறாவது அறிவின் தன்மை இருளை அகற்றும் உணர்வாக வருகின்றது.
1.அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு இந்த உயிர் என்றும் அழியா நிலைகள் கொண்டு வந்தது.
2.உயிரின் துணை கொண்டு அருள் ஒளியின் உணர்வாக
3.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஆக நாம் எண்ணியதை நமக்குள் உருவாக்குவது நமது உயிரே. எண்ணிய வழிப்படித் தான் இந்த உடலை உயிர் இயக்குகின்றது.

ஆகவே நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குவோம். அருள் ஒளியின் சுடராக மாறுவோம். பிறவியில்லா நிலைகளை அடைவோம். அண்டத்தில் அகண்ட அண்டத்தில் என்றும் பெரு வீடு என்ற நிலையை அடைவோம்.

1.இதைப் படித்துப் பதிவாக்குவோர் அனைவரும் மகானாக வேண்டும்… மகரிஷிகள் ஆக வேண்டும்.
2.உயிரின் தன்மை ஈசனாக மாற்ற வேண்டும்
3.ஒவ்வொரு அணுக்களையும் ஈசனாக மாற்ற வேண்டும்.

அருள் வழியில் அருள் ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வளர்த்தால் அந்த ஈசன் என்ற நிலை வரும்போது இதே உணர்வுகள் நோயுற்றவருக்குள் சென்றாலும் அங்கே ஈசனாக… அருள் ஒளி சுடரின் தன்மையாக அவர் நோயை நீக்கி… ஒளியின் உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது
2.நமது உணர்வுகள் அனைத்தும் ஈசனாக வேண்டும்.
3.நம்முடைய சொல் ஒவ்வொரு உடலிலும் பாய்ந்து ஈசனாக மாற வேண்டும்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும் என்று நிலை கொள்ளுங்கள். யாரோ செய்வோர்…! எவரோ செய்வார்…! என்று எண்ண வேண்டாம். யாருக்கோ காசு கொடுத்து இதைச் செய்ய வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உணர்வின் வலுவைக் கூட்டினால் அதுவே உங்களில் உருவாக்கும். உங்கள் வலுவின் தன்மை பிறரின் தீமையைப் போக்கும்.

பொருளுக்காக பல மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலங்களைச் செய்கின்றனர். அதனால் பொருள் அவனுக்கு வருகின்றது.

அனைவருக்கும் சொல்கின்றான். இருந்தாலும் அவன் அழிகின்றான். ஏனென்றால் அவன் வளர்த்த சொத்தை அவன் பிள்ளையே அழிக்கின்றான். இலட்சம் இலட்சமாகச் சம்பாரித்தார்… எல்லாம் போய் விட்டது என்று நம் கண் முன்னாடியே பார்க்கலாம்.

1.ஏனென்றால் தவறான வழிகளில் செல்வத்தைச் செலவழித்தால் தவறான மகனே பிறக்கின்றான்.
2.தந்தையின் உணர்வை பிள்ளை தனக்குள் அங்கே கலக்கின்றான்.
3.அந்த உணர்வின் தன்மையில் சொத்தை இவன் அழிக்கின்றான் என்ற இந்த நிலைகள் தான் வருகிறது.

யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள்…? என்று சற்று சிந்தியுங்கள்.

1.உங்கள் உயிரின் தன்மைக்காகப் போர் செய்யுங்கள்
2.அருள் வழியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.இருளை அகற்றும் ஆற்றலைப் பெறுங்கள்.
4.அருள் ஞானியின் உணர்வை உருவாக்கும் அதையே ஈசனாக மாற்றுங்கள்

உங்கள் உணர்வின் தன்மை மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து அவருக்குள்ளும் அந்த ஈசனின் உணர்வை அது உருவாக்கும்.

இதன் வழி உணர்வின் ஆற்றலைப் பெருக்குவோம்… குரு வழியில் செல்வோம்…. அருள் ஆனந்தம் பெறுவோம்…. அருள் வாழ்க்கையை நடத்துவோம்… இருளை அகற்றுவோம்…. மெய் உணர்வுடன் ஒன்றுவோம்… மெய் ஞானத்துடன் வாழ்வோம்…. மெய் உணர்வுடன் வாழ்வோம்…. மெய் உலகாக மாற்றுவோம்…. ஒவ்வொரு மனித உடலிலும் மெய்யை அறிந்திடும் உணர்வின் தன்மை பெற தியானிப்போம்… தவமிருப்போம்…!

நிறைந்த மனம் கொண்டு இதைச் செய்யுங்கள். அனைவரையும் நிறைவுபடுத்தும் மனமாக உயர்ந்த பண்புடன் சொல்லுங்கள். பண்பு கொண்ட உணர்வை வளர்த்திடுங்கள்.

இத்தகைய உயர்ந்த பண்புடன் அரவணைக்கும் நிலை கொண்டு நமக்கு மதம் அல்ல… இனம் அல்ல… என்று செயல்படுத்துங்கள். இனமும் மதமும் நம்மைப் பிரிக்கும்.

ஆனால் அருள் ஒளி நம்மை என்றும் ஒளியாக சுடராகப் போற்றும் என்ற இந்த நினைவு கொண்டு இந்த வாழ்க்கைப் பயணத்தை குரு வழியில் வழிபடுத்துவோம்.

நம் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை அகற்றுவோம். அனைவரும் ஒன்றென்ற நிலைகளில் உருப்பெறச் செய்வோம்.
1.அனைவரையும் மகிழ்சி பெறச் செய்யும் உணர்வினை உருவாக்கும் ஈசனாக
2.நம் உணர்வின் தன்மை ஒவ்வொரு உடலிலும் ஈசனாக உருவாக வேண்டும்.

அருள் ஒளிச் சுடராக நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் எண்ணுவதே நமக்குள் ஈசனாகின்றது. அந்த அருள் வழியின் நிலைகள் வளர வேண்டுமென்ற நிலைகள் கொண்டு இதை மனதில் வைத்துக் குரு அருளின் துணை கொண்டு நாம் இதைச் செயலுக்குக் கொண்டு வருவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.

சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்

 

கருப்பை இல்லை… அதனால் குழந்தைப் பாக்கியம் இல்லை என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில் கணவன் மனைவியாக எம்மிடம் வந்து “எங்களுக்குக் குழந்தை வேண்டும்” என்று கேட்டார்கள். யாம் ஆசீர்வாதம் கொடுத்த பின் குழந்தை கிடைத்தது.
1.அதைப் பற்றிப் பெருமைப்பட்டார்கள்.
2.ஆனால் அதற்குப்பின் சாமியைத் திரும்பி பார்த்தார்களா…? என்றால் இல்லை.
3.ஒரு நாள் ஒரு பொழுது கூட என்னிடம் வந்து எதையும் கேட்கவில்லை.

ஒரு முறை வீட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பின் எம்மைச் சந்திக்கவும் இல்லை.

அப்பொழுது எம்முடைய அருள் உபதேசங்கள் எல்லாம் என்ன…?

உங்கள் எண்ணம் தான் உங்களுக்குள் (அந்த உணர்வுக்குள் குழந்தை கருவாகி) எப்படிப் பதிவாகின்றது…? அதனால் “நான் செய்தேன்” என்று எண்ண வேண்டியதில்லை என்று அவர்களுக்கு உணர்த்தினோம்.

ஆக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… “சாமி செய்கிறார் என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கின்றது…?” நம் எண்ணத்தால் தானே உருவாகின்றது என்று…!

1.எண்ணத்தின் உணர்வு கொண்டு உயிர் என்ன செய்கிறது…? என்று யாம் சொல்கின்றோம்.
2.அதற்குண்டான ஒரு நல்ல கருவை ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
3.ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்தப் பருவம் வர வேண்டும் அல்லவா.

பின் இதை எதற்காகச் (அவர்களுக்கு) செய்தோம்…?

1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது அந்த இணக்கங்கள் நல் வழியை உயர்த்தும்
2.இது என் குருநாதர் எனக்குச் சொன்னது…!

போற்ற வேண்டும் என்று “நான் செய்தேன்” என்றால் தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். நல்லவைகள் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
1.அனுபவரீதியிலே கொண்டு வருவதற்குத் தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
2.சிறிதளவு பேராவது “இந்த உண்மைகளை உணர்ந்தால்” தெளிவாக இருக்கும்.

ஒரு நோயாளி தன் நோயைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் இதே உணர்வுகள் தான் எல்லோருக்கும் இயக்கப்பட்டு அந்த நோய் தான் மற்றவருக்கும் பரவுகின்றது.

ஆனால் அருள் ஒளியைப் பெற்று நல்லதாகும் பொழுது “இதே வாக்கினை நீங்கள் சொன்னீர்கள்” என்றால் உங்கள் வார்த்தைகளைக் கேட்டால் தீமைகளை அது அகற்றும்.

விளம்பரம் செய்யாததின் நோக்கங்கள் என்ன…? என்றால்
1.ஆசையை ஊட்டி விட்டோம் என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதை குறிக்கோளாக வைத்து வந்தார்களோ அது தான் கிடைக்கும்.
3.அதன்படி கிடைத்து வந்தாலும் அதைப் பாதுகாக்கும் சக்தி இழந்து விடுகின்றார்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…! யாம் கொடுக்கும் அருள் சக்திகளைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் வளர்ப்பதில்லை…
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதுமில்லை.

ஆரம்பத்திலிருந்து இதைத்தான் நாம் தெளிவாக சொல்லிக் கொண்டு வருகின்றோம் எத்தனையோ பேர்களை குருநாதர் காட்டிய வழியிலே நாம் தபோவனத்தில் பார்த்திருக்கின்றோம் அல்லவா…!

ஆகவே அந்த அசுத்த உணர்வு எப்படிப் போகின்றது…? அதனுடைய தாக்கத்திலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? இது மிகவும் முக்கியமானது.

ஓசோன் திரை கிழியப்பட்டு எந்தெந்தப் பகுதியில் அதன் வழி விஷத் தன்மைகள் வருகிறதோ அங்கே அது பரவுகின்றது. ஆனால் ஒரே இடத்தில் நிற்காது.

விஷத்தன்மைகள் பூமிக்குள் பரவினாலும் தன் இனத்தைச் சேர்த்து ஒரு குவியலாக வரும். குறிப்பிட்ட இடத்தில் தான் சுழன்று கொண்டிருக்கும் எல்லா இடத்திலும் வராது.

அப்பொழுது இந்த ஊரையும் தெருவையும் நாம் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

“அருள் ஒளி பெற வேண்டும் என்று” எல்லோரும்
1.ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் பரவச் செய்து இந்த அலைகளைப் பரப்பி விட்டீர்கள் என்றால்
2.இந்த உணர்வு பரவிய பின் அந்த விஷத்தன்மைகளை இது விலக்கி விட்டு விடும்.
3.இந்த ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்டு நிற்கும்.

அதைச் செய்வதற்கு தானே யாம் திரும்பத் திரும்ப இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியான வழியில் இருக்கக்கூடிய அன்பர்கள் காலை துருவ தியானத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு கணவன் மனைவி ஒன்றிணைந்து வாழ்ந்திட வேண்டும். குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றிடல் வேண்டும்

ஏனென்றால் அந்த நேரம் தான் அந்தத் துருவ மகரிஷிகளின் அலைகள் இங்கே அடர்த்தியாகப் படர்கின்றது. யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணங்கள் கொண்டு
1.நாங்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றல் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும்
3.கணவன் மனைவி இருவரும் நாங்கள் ஒன்றி வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
4.ஒருவருக்கொருவர் இந்த உணர்வின் தன்மைகளை வளர்த்திடல் வேண்டும்.

இருவரும் இப்படி எண்ணினால் தன் குடும்பத்தில் வரும் தீமைகளை நீக்கும் உணர்வின் உபாயங்கள் அங்கே வரும். அதனின் துணை கொண்டு வாழ்ந்தால் இன்றைய நஞ்சு உலக நிலைகளிலிருந்து தன்னை மீட்டிடும் நிலைகள் வளரும்

ஏனென்றால்…
1.இந்த உலகம் எங்கேயோ போய்க் கொண்டு உள்ளது
2.மனித உருவையே உருமாற்றும் நிலைகளாக
3.காற்று மண்டலம் நச்சுத் தன்மையாகி எங்கெங்கோ அழைத்துச் செல்லுகின்றது.

அகஸ்தியன் உணர்வு கொண்டு அவன் அரவணைப்பில் விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கும் அந்த அருள் ஞானிகளுடைய உணர்வுடன் ஒன்றி அந்தப் பேரானந்த நிலைகள் பெறும் தகுதிகளுக்குக் கணவனும் மனைவியும் நீங்கள் இந்த நிலைகள் பெற வேண்டும். முதலில் இந்த குடும்பத்தின் நிலைகள் கொண்டு இதை செயல்படுத்துதல் வேண்டும்.

ஆனால் இன்று பெரும் பகுதி நாம் பார்ப்பவர்கள் தியானத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம் என்ற நிலையில் உள்ளார்கள். இருந்தாலும் சில இடங்களில் பார்க்கப் போனால் ஒன்றுக்கொன்று “கீரியும் பாம்பையும்…” போலத்தான் உள்ளார்கள்.

எம்மைப் (ஞானகுரு) பார்க்கின்றார்கள்… கேட்கின்றார்கள்… ஆசிர்வாதம் கேட்கின்றார்கள். கேட்பதில் பயன் என்ன இருக்கிறது…? எதற்காக வந்தோமோ நாம் அதைப் பெற வேண்டுமா இல்லையா…?

1.எனக்குக் கூட்டம் தேவை இல்லை
2.அருள் ஞானம் பெறும் அருள் ஞானிகள்ளின் அமைப்பு தான் எனக்குத் தேவை.
3.அந்த அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை
4.ஞானத்தைக் கூட்டிக் கூட்டிப் பெருக்கிக் கொள்வோர்கள் தான் தேவை
5.என்னைப் போற்றித் துதிப்போர் தேவையில்லை.
.என்னை போற்றிப் புகழ்வதில் பயனில்லை.

ஆனால் போற்றுதல் எவ்வாறு இருக்க வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் ஞானத்தைத் தனக்குள் ஊட்டி வளர்த்து… அந்த உணர்வின் தன்மை கொண்டு… “உலகம் போற்றும் உத்தம ஞானிகளாக நீங்கள் வர வேண்டும்…”

அது தான் நீங்கள் என்னைப் போற்றுவதாகும்…!

இல்லையெனில் என்னைத் தூற்றுவதாகவும் குருநாதரைத் தூற்றுவதாகவும் தான் ஆகுமே தவிர இதில் பயனில்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ரோட்டிலே நாம் போகும்போது அது கோள்களைப் போன்ற நிலை தான். அங்கே பிறிதொருவர் செய்யும் தவறைப் பார்க்க நேர்கின்றது. கூர்ந்து கவனித்தால் அதை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோம்.
1.எந்தக் குணத்தில் எண்ணிச் சுவாசித்தோமோ அது நம் உடல் முழுவதும் பாய்கின்றது.
2.நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணம் கெட்ட குணம் எல்லாவற்றிலும் அது மோதும்.
3.அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் முழுவதிற்கும் செலுத்தும்போது அந்த உணர்வின் துடிப்புகள் அதிகமாகின்றது
4.அப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்களைப் பதறச் செய்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்த அந்த உணர்வுகள் உள்ளே சென்றவுடன் உடலோடு அமைப்பாக இருக்கும் மற்ற அணுக்கள் ஒவ்வொன்றும் அதற்குத்தக்கவாறு நெளிந்து கொடுக்கின்றது.

அதாவது நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் பூமியில் பல சக்திகள் வருகின்றது. இந்த வேப்ப மரத்திலிருந்து கசப்புகள் வருகின்றது. அந்தப் பக்கம் குப்பையைக் கொட்டி வைக்கின்றார்கள். இன்னொரு பக்கம் ஒரு தொழிற்சாலையிலிருந்து விஷமான நிலைகள் வெளி வருகின்றது.

ஒரு காற்றடித்தால் இத்தனை விதமான மணங்களும் நமக்கு அடிக்கின்றது. நம் உடலுக்குள் மற்ற மற்ற அந்த அணுக்களின் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் நாம் சுவாசிப்பது உடல் முழுவதற்கும் எல்லா பாகத்திற்கும் போய்க் கொண்டுதான் வரும்.

நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் உறவாடுகின்றது.

ஆனால் தீமையாக இருக்கும் பட்சத்தில் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் அது மோதும் போது அப்பொழுது நமக்குப் பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

இப்படி நாம் சுவாசிக்கக் கூடிய நிலைகளில் அடிக்கடி நாம் கெட்டதைச் சுவாசித்தால் என்ன ஆகின்றது…? உடலில் நோய் வருகின்றது…!

நாம் சலிப்பான நிலை கொண்டு “அசிங்கம்” என்ற நிலைகள் கொண்டு மனம் சோர்வடைந்து பேசுகின்றோம். ஒரு நெடியான வாசனைக் கண்டவுடனே உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது. இதைப் போல…
1.நாம் சுவாசிக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும்
2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடனே
3.அது நம் உடலுடன் சேர்த்து இயக்கப்படும்போது சிறுகச் சிறுக மாசுபடும் நிலையாக வருகின்றது.

இவ்வாறு… வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சேர்க்கும் இத்தகைய நிலைகளினால் அசுத்தமாகின்றது.

1.உதாரணமாக ஒரு சண்டை போடும் உணர்வைப் பார்க்கும் போது அடுத்து நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகி விடுவோம்.
2.அடிக்கடி பயத்தினுடைய நிலைகளில் இருப்பதைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்.

இதைப் போன்ற உணர்வின் தன்மை அது வளர்ச்சியான பின் அந்த நிலைக்கே நம்மை அது “திசை திருப்பி விடுகின்றது…!” அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் தன்மை அனைத்தும் மாறிவிடும்.

ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் அதிலே உப்பை அதிகமாகப் போட்டு விட்டால் அந்தக் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே சமயம் காரம் அதிகமாகி விட்டாலோ நாம் வெறுக்கின்றோம்

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் நம் உடலுக்குள் இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சஞ்சலமோ கோபமோ ஆத்திரமோ இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே சேர்ந்து விடுகிறது.

ஏனென்றால் பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் நாம் பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றது.

1.அன்றைய தினத்தில் நாம் எதை எதையெல்லாம் பார்த்தோமோ
2.அதற்குத் தகுந்த மாதிரிதான் அன்றைக்கு நமது செயல் எல்லாமே இருக்கும்.

இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தால் ஆத்திரமும் பயமும் நாம் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப வேகமாக இந்த அலைகள் கொண்டு அன்றைய இரவில் காது சம்பந்தப்பட்ட வலியோ கண்ணிலே வலியோ ஏற்படும்.

ஏனென்றால் அந்த ஒளி… ஒலிகளை இழுத்துப் பேசும் அந்த மேக்னெட் பவரும் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகிவிடும் ஒரு மோட்டாரை இயக்கினாலும் அதிலே லோடு அதிகமாகி விட்டால் சுழன்றால் அது சூடாகிவிடுகின்றது.

அதைப் போல் சமமான அந்த உணர்வுகளை இழுக்கும்… ஒலியை நமக்கு ஊட்டக் கூடிய அந்த காதுகளில் காந்தம் தேய்மானமாகின்றது. சூடாகும்போது அதனுடைய காந்த சக்தி குறையும்.

பயமோ ஆத்திரமோ இவைகளை அதிகமாக எடுத்தால் நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் பலவீனமாகிவிடும். இதைப்போல சோர்வு சஞ்சலம் அதிகமாக எடுத்தாலும் கரு விழியில் இருக்கக்கூடிய நிலைகள் அது இயக்கச்சக்தி என்ற நிலைகள் கம்மியாகும்.

சஞ்சலமும் சோர்வும் மற்ற உணர்வின் தன்மையும் அடிக்கடி எடுத்தால் செவியில் இருக்கக்கூடிய நாதங்களை இயக்கும் நிலைகள் மந்தமாகச் செய்து அதனுடைய நிலைகள் பதிவாகிவிடும்.

இப்படி கண் காது மூக்கு முதற் கொண்டு நம் உடலில் உள்ள எல்லாவற்றிலுமே அது கலந்துவிடும். நாம் அடிக்கடி சுவாசிக்கும் இந்த உணர்வின் நிலைகள் எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளிலும் அது படருகின்றது.

அந்த எலும்புகளில் இருக்கும் காந்த சக்தியினால் தான் நம் உயிருக்கே கரண்ட்டை உற்பத்தி செய்ய கூடிய காந்தம் உருவாகி அதன் மூலம் இந்த உடலை இயக்க முடிகின்றது.

1.அதாவது… உயிரின் துடிப்பு வரப்படும்போது காந்த அலைகள் உருவாக
2.அந்தக் காந்தம் இருந்தால்தான் (உடலிலே) உயிரே துடிக்கும்

இல்லை என்றால்… காந்த உற்பத்தி குறைவாகி விட்டால்…
1.உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த துடிப்பு கொண்டு
2.இந்த உடலில் இருக்கும் காந்தத்தை இழுக்காமல்
3.வெளியில் இருக்கக்கூடிய காந்தத்தில் இழுத்துவிடும்… ஈர்க்கப்பட்டு விடும்.

இந்த உடலில் விளைய வைத்ததின் நிலை இது தான் மரணம் என்பது…!

புவியின் ஈர்ப்பிற்குள்… அந்தத் துடிப்பின் நிலை “நம் காந்தம்…” என்றைக்குக் கம்மியாகின்றதோ அந்தச் சமயத்தில் இந்த உயிராத்மா வெளியே வந்துவிடும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிய… மகரிஷிகளின் எண்ண ஒளிகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இந்தக் காற்றிலே மிதந்து கொண்டு இருக்கின்றது.
1.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உபதேசமும்
2.அதன் வழி செயல்பட வேண்டிய தியானமும்.

“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!”

 

பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்றால் இந்த உடல் பற்று இருக்கக் கூடாது. ஆனால் இந்த உடல் பற்று இல்லாமலும் இருக்க முடியாது.

தன் பிள்ளை மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா…? வெளியிலே சென்று சேட்டை செய்து விட்டு வீட்டுக்குள் வருகின்றான். நீங்கள் என்ன செய்வீர்கள்…?

பாசத்தினால் “ஏண்டா இப்படிக் கெட்டுப் போகின்றாய்…?” என்று கேட்பீர்கள்.
1.பாச உணர்வு இல்லை என்றால் அவனைத் தடுக்க முடியுமா…?
2.எப்படியோ போகின்றான்…! என்ற வகையில் சேட்டை செய்கின்றவனுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா…?
3.அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்…?

வாடி வதங்கி அவனுக்குள் விளையும் வேதனை நமக்குள்ளும் புகுந்து நம்மையும் வேதனைப்படச் செய்யும். அவன் உணர்வு நமக்குள் கலந்து பாசத்தால் வெறுப்பின் உணர்வுகளை வளர்த்து அவனையும் வெறுத்துப் போகும் அளவிற்கு வந்துவிடும்.

அடிக்கடி வெறுப்பைக் கலந்து அவனிடம் பேசினால் என்ன ஆகும்…? அந்த எண்ணம் மேலும் மேலும் அவனை நல்வழிக்கு அழைத்துச் செல்வதற்கு மாறாக அவனின் வழிகளுக்கே அழைத்துச் செல்ல முடியும். அவனைத் திருத்த முடியுமா…?
1.நம்மிடம் இருந்து அவனைப் பிரிக்கத்தான் முடியுமே தவிர திருத்த முடியாது.
2.திருத்தியவர்கள் யாரையாவது சொல்லச் சொல்லுங்கள்.

திருத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு மந்திரவாதிகளிடம் சென்று தாயத்தைக் கட்டினேன் என்று ஆவி நிலைகள் கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். சிறிது நாள் நன்றாக இருப்பான்… மீண்டும் அவன் வழிக்குத் தான் அவன் செல்வான்.

அவன் மீது பட்ட வேதனை இங்கே வளரும். அதைத் துடைக்காமல் இருக்க முடியுமா…? துடைக்க வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமக்குள் வலுக் கூட்ட வேண்டும்.
2.அவனால் நாம் நன்மை பெறுகின்றோம்… அவனுக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சாக்கடை வாசனை வருகிறது என்றால் அதை நுகர்ந்தால் எரிச்சல் ஆகிறது அந்த வாசனை நமக்குள் வராது எதையாவது வைத்து அதைத் தடுக்கின்றோம் அல்லவா…!

“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!” எண்ணெயாக இருக்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் தான் அதிகமாகும்.
1.அதனால் தான் சோப்பில் என்ன செய்கின்றார்கள்…?
2.”எண்ணெய்ப் பசையைக் கொடுத்து” அதைத் தேய்க்கப்படும் பொழுது
3.நுரை வருகின்ற மாதிரிச் செய்து… அது ஊடுருவி எண்ணெயை அகற்றுகின்றது… இடம் தூய்மை அடைகிறது.

எண்ணெயை வைத்துத் தான் எண்ணெயை அப்புறப்படுத்த முடியும்.

இதே மாதிரித் தான் நமது வாழ்க்கையில் நஞ்சின் தன்மை கலக்கிறது. ஆனால் நஞ்சினை நீக்கிடும் ஆற்றலை அகஸ்தியன் பெற்றான். அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் வாழ்க்கையில் வந்த நஞ்சினை நாம் நீக்க முடியும்.

இந்த நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு நல்ல உணர்வுகளை எடுத்துப் பையனிடம் இப்படி வர வேண்டும் என்று நாம் சொன்னோமென்றால் அவனைத் திருத்தவும் முடியும்.
1.அவனால் இந்த அருள் உணர்வை பெற்று நாம் நன்மை பெறுகின்றோம்…!
2.அவனை நல்ல வழிக்கும் கொண்டு வரவும் முடியும்.

ஆனால் முதலிலே சொன்னபடி அவனிடம் குறையைச் சொல்லும் பொழுது வெறுப்பு தான் வளரும். நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பு தான் வரும்.

ஆக… தவறு செய்கின்றான் என்றால் “நல்ல வழியைச் சுட்டிக் காட்டாமல்” இருக்க முடியுமா…? ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்று தெரிந்த பின்பு நாம் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே வருகின்றது.

ஆனால் ஒரு சிலருக்கு அந்த நோயாளி ஆகாதவர் என்றால் “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்பார்கள். அந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு அங்கு இல்லை. அப்படித்தான் அவனுக்கு வேண்டும் என்று நினைக்கும் பொழுது அதைக் கண்டு அவன் ரசிக்கின்றான்.

ஆனால் பண்பு கொண்ட மனிதன் பாசத்தால் தன் உடலுக்குள் எடுத்துக் கொள்கின்றான். காத்து அவனுக்கு உதவி செய்கின்றான், அந்த உணர்வு இங்கே வளர்கின்றது.

“மகராசன்” என்னைக் காப்பாற்றினான் என்று அவன் சொல்கிறான்.

காத்திடும் உணர்வும் நோயான உணர்வும் ரெண்டும் செயல்படுகின்றது. இந்த உணர்வு வளர்ந்த பின் உடலை விட்டு அவன் பிரிந்தால் ஆன்மா இங்கே வருகின்றது. நம்முடைய வலு அவன்பால் இருக்கப்படும் பொழுது அது இங்கே வந்துவிடுகிறது.
1.அதே நோய் இங்கே உருவாகி நம்மை வீழ்த்துகிறது.
2.உதவி செய்கிறோம்… ஆனால் நம்மை வீழ்த்துகிறது… இதற்கு என்ன செய்வீர்கள்…?

உதாரணமாக உணவு அதிகமாக இருக்கின்றது… சாப்பிடுகின்றோம். ஆனாலும் வழக்கத்திற்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு அது நல்லது செய்கின்றதா…? இல்லை. ஏனென்றால் இது இயற்கையின் நியதி. ஜீரணிக்கும் சக்தி வேண்டும்.

ஆகவே தீமைகளை அடக்க வேண்டும் என்றால்
1.தீமைகளை அகற்றிய நஞ்சை வென்ற அருள் ஞானிகள் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.
2.எடுக்கப் பழக வேண்டும் என்றால் அந்தச் சக்தியை யார் பெற்றார்களோ
3.எடுத்தவர்களிடம் விளைந்த சொல் ஞானம்… அது நமக்குள் வித்தாக வேண்டும்.
4.பதிந்த வித்தினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அந்த ஞானம் நமக்குள் விளையும்.

அப்போது… கஷ்டம் வரும் பொழுது ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அந்தச் சக்தியால் நாம் நலம் பெறுகின்றோம்.

இதை எடுக்கவில்லை என்றால் அவனால் நஷ்டம் அடைகின்றீர்கள். அவனையும் நஷ்ட,மடைய வைக்கின்றீர்கள். பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த விஷம் நமக்குள் வளர்ந்து நம்மை நாம் காக்க முடியாது போகிறது.

காரணம் அந்த விஷத்தின் அளவுகோல்…!
1.எப்படி ஒரு சோப்பைத் தேய்த்தவுடன் அது எண்ணைப் பிசுபிசுப்பை அகற்றுகின்றதோ
2.இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகள் உணர்வைக் கலந்த பின்
3.அது விஷத்தை ஒளியாக மாற்றுவது போல் நமக்குள் இருளை அகற்றுகிறது.

பையனைக் கூப்பிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி உன் உடலில் படர வேண்டும். தீமைகள் நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். அவன் இந்த உணர்வை எடுத்துக் கொள்ளும் போது… “கேட்டான்” என்றால் அவன் நல்லவனாகின்றான்.

இருந்தாலும்… எப்படியும் அவன் இதை எடுத்து மாற வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும்போது என்ன ஆகிறது…?

முதலிலே உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்
1.இப்பொழுது இந்த உணர்வை எடுத்து “நாம் மாற வேண்டும்” என்று எண்ணினால் இந்த உணர்வு என்ன செய்யும்…?
2.அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.
3.அதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தை உங்களுக்கு கொடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை இந்த உபதேசங்கள் வாயிலாகத் தருகின்றோம்.
நீங்கள் அதை எண்ணி எடுத்து வளர்த்தீர்கள் என்றால் உங்கள் உயிர் அதை உருவாக்கும். ஒளியின் சுடராக மாற்றும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.

அதே வளர்ச்சிப் பாதையில்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இப்பொழுது நமக்குள் எடுத்து
2.அந்தக் கணக்கைக் கூட்டினால் நாம் பிறவியில்லா நிலை அடைவோம்.
3.இதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்
4.நாம் எங்கே போகின்றோம்…? என்பது முன்னாடியே தெரியும்.
5.சொல்ல முடியும்… நான் இங்கு தான் போகின்றேன் என்று…!

உதாரணமாக கோபியைச் சேர்ந்த ஒரு அன்பர் “நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்” என்று சொல்லிவிட்டே போகின்றார். அதையே அவர் வீட்டில் காட்சியும் கொடுத்திருக்கின்றார்.
1.நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்
2.என்னைப் பற்றி எண்ணி அழுகாதீர்கள்…!

அவர் வீட்டில் அவர் மனைவிக்கு இந்தத் தியானம் பற்றிய விவரம் தெரியாது… தியானத்திற்கும் வராதவர். ஆனால் இவர் தான் தியானம் செய்வார். இருந்தாலும் இதை எல்லாம் அவர்களுக்கு உணர்த்தி விண் சென்றுள்ளார்.

ஏனென்றால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடல் உறுப்புகளில் இணைத்து ஒளியாக ஆக்கி விட்டால் அடுத்து ஒளி உடல் பெறுகின்றோம் அவ்வளவுதான்…!

இது தான் விஜய தசமி… உயிரைப் போல உணர்வுகள் ஒளியாகின்றது… கல்கி…!

1.இந்தப் பிரபஞ்சமே அழிந்தால் கூட துருவ நட்சத்திரம் அழிவதில்லை
2.அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வாழும் பழக்கத்திற்கு நாம் வந்துவிட வேண்டும்.

ஆகவே…
1.எது எப்படி இருந்தாலும்… “அந்தத் துருவ நட்சத்திரம் நம் நினைவிற்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்…”
2.கஷ்டம் என்ற நினைவை உள்ளுக்கே விடாதபடி நாம் தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும்.

எதாவது ஒரு சிறு மாற்றம் வந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலிலே அல்லது வேலை செய்யும் இடங்களிலோ ஏதாவது எதிர்பாராது குறைகள் வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியை உடனே எடுத்து வலு சேர்க்க வேண்டும்.
1.அது கொஞ்ச நேரத்தில் சிந்தனை கிடைக்கும்.
2.என்ன செய்ய வேண்டும்…? என்று அமைதியும் சாந்தமும் விவேகமும் அந்த இடத்தில் வளரும்.

இது மாதிரி அனுபவத்தில் வந்தால் எதையுமே சீர்படுத்தும் வலிமை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் பெற முடியும்.
1.கொஞ்ச நாள் அனுபவித்துப் பாருங்கள்… உங்களால் பெற முடியும்.
2.கவலை என்பதை விட்டுவிடுங்கள்
3.சோர்வு என்பதை விட்டுவிடுங்கள்
4.வெறுப்பு என்பதை விட்டுவிடுங்கள்.
5.வேதனை என்ற நிலையை விட்டுவிடுங்கள்

இதே மாதிரிச் செய்யுங்கள்.

செய்த நிலையில் எனக்கு நல்லதானது என்று மற்றவருக்குச் நீங்கள் சொல்லப்படும்போது அவர்களுக்கும் அந்த உற்சாகத்தை ஊட்ட முடியும்.

அதே மாதிரி யாம் (ஞானகுரு) இல்லை…! என்று எண்ண வேண்டியதில்லை. யாம் உபதேசித்த கருத்துக்களை… அந்த ஒலி நாடாக்களை எடுத்துப் போட்டு விளக்கங்களைக் கொடுங்கள். சும்மா இருக்கும் நேரத்தில் இதன் வழி செயல்படுத்தி மற்றவரையும் கேட்கச் செய்யுங்கள்.
1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை நுகர்வதும் அதை வெளிப்படுத்துவதும்
2.அறியாது வரும் இருளை நீக்குவதுமே நம் வாழ்க்கை என்ற நிலைக்கு வந்துவிட வேண்டும்.

இன்றைய உலகில் எந்தப் பொருளைத் தேடினாலும் அது எதுவுமே நமக்குச் சொந்தம் இல்லை.
1.நாம் சொந்தமாக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத்தான்…!
2.அதைச் சேர்த்து உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியின் உடலாகப் பெற்று
3.துயரற்ற நிலையாக இன்னல் இல்லாத நிலையை அடைவதுதான் கடைசி நிலை.

பல கோடி உடல்கள் பெற்றுத் தீமைகளிலிருந்து நீக்கிடும் சக்தியாக இந்த உயிர் தான் மனித உடலை உருவாக்கியது. இந்த மனித வாழ்க்கையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டால் அழியா ஒளி உடல் பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் மற்றொரு பிடிப்பில் இல்லாததை எல்லாம் தனக்குள் கவர்கின்றது. கவர்ந்து தன் அருகிலே கொண்டு சென்றால் அதைப் பஸ்பமாக்கி விடுகின்றது. மீண்டும் பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பற்றி விசாரித்து அவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அது நமது ஆன்மாவில் நிற்கும். அதைச் சுவாசிக்கும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டும். (ஆன்மாவிலிருப்பதைத்தான் நாம் சுவாசிக்க முடியும்)

அவர் நோயால் வேதனைப்படுகின்றார். ஆனால் அவரின் வேதனையான உணர்வை நுகர்ந்து நாமும் வேதனைப்படத் தொடங்குகின்றோம்.

அந்த வேதனை நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு ஏங்கி எடுத்தால்
5.நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் இருப்பதை இழுக்காது…
6.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கவரப்படுகின்றது
7.வேதனப்படும் உணர்வின் ஈர்ப்புத் தன்மை குறைந்ததனால் நாம் ஈர்க்காமல் விட்ட
8.நம் ஆன்மாவில் இருக்கும் அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை
9.சூரியன் காலையில் அழைத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது
10.நமது ஆன்மா தூய்மையாகின்றது… தீமையான அணுக்கள் வளராது தடுக்கின்றது
11.தீமையான அணுக்களுக்கு உணவு போகாமல் தடுக்கின்றது.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்கிவிட்டு அந்த நோயாளியைப் பார்த்து.. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீ பெறுவாய்… உன் நோய் நீங்கிவிடும்… நீ நலமாவாய்…! என்று சொல்ல வேண்டும்.

இந்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழியாக எண்ணி எடுக்கும் போது
1.தீய அணுக்களுக்குப் போகும் வேதனையை உருவாக்கும் உணர்வுகள் தடைப்படுத்தப்படுகின்றது.
2.நம் ஆன்மாவிலிருந்து விலக்கித் தள்ளியதைச் சூரியன் காலை ஆறு மணிக்கெல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றது.

தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல் தடைப்படுத்தப்படும் போது தீய அணுக்களின் வளர்ச்சி குறைந்துவிடும். பரமாத்மாவும் தூய்மை ஆகின்றது.

இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தடுத்து நிறுத்த…
1.நீங்கள் எண்ணும்போதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றீர்கள்.
2.உங்கள் உயிர்… துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலில் அணுக்களாக உருவாக்குகின்றது.
3.தீமைகளில் இருந்து நீங்கள் விடுபடும் ஆற்றலைப் பெறுகின்றீர்கள்.

இதைத்தான் ஆறாவது அறிவு… (முருகன்) “பிரம்மாவை சிறைப்பிடித்தான்…! என்று சொல்வது. நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக நின்று அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தோமென்றால்… நமக்குள் தீமையை நீக்கிடும் அத்தகைய நிலைகள் பெறுகின்றது.

தீமையை நீக்கிடும் ஒளியான அணுக்களை நமக்குள் பெருக்கினால் “துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியாக இருக்கின்றதோ…” அதைப்போல நாமும் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் அரும்பெரும் சக்தி அதிகாலையில் இந்தப் பூமியில் பரவுகின்றது. ஆகவே கணவன் மனைவியும் காலை துருவ தியான நேரங்களில் இதைப் போன்று எடுத்துப் பழகுங்கள்.

அந்தக் காலை நேரத்தில் உங்கள் உணர்ச்சிகளை… உங்கள் எண்ணங்களை… துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அந்த உணர்வினை உங்கள் கண்களால் பதிவாக்கி நுகருங்கள்,

கண் வழி நுகர்ந்ததை உயிர் வழி சுவாசிக்கும் பொழுது உயிர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யும். அந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம் என்பது.

1.உயர்ந்த உணர்வினை உங்களுக்குள் உருவாக்கினால் இருளை அகற்றும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்.
2.வானுலக ஆற்றலைப் பற்றுடன் பற்றினால்
3.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

விதி இயக்கினாலும்… செய்த பாவத்திற்கு அனுபவித்தாலும்… “அருள் பற்றை மட்டும் தான் நாம் வளர்க்க வேண்டும்”

 

சிலர் “கஷ்டம் கஷ்டம் கஷ்டம்” என்று வந்து என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதிகமாகச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வை யாம் எடுத்தவுடனே அது ஜீவன் பெறுகின்றது.

1.அபயக் குரலை இடுகின்றார்கள்… அது இங்கே வரப்படும் போது நன்மை செய்ய எண்ணுகின்றோம்.
2.அந்த விதி…! உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது… சந்தர்ப்பங்கள் அதை உணர்த்தும்… உருபெற்றபடி என்ன செய்கிறோம்…?

வரபோகும் போது மேடான பாதையிலிருந்து காலை வைக்கப்படும் போது அங்கே சரியாக என்னால் போக முடியவில்லை.
1.அங்கே விபத்தாவதைத் தப்பிக்க (அபயம் கேட்டவர்களை) வைக்கின்றோம்.
2.ஆனால் இங்கே என் உடலைக் காக்க முடியவில்லை… விதி இங்கே வேலை செய்கின்றது (ஞானகுரு தனக்கு எலும்பு முறிந்ததைச் சொல்கிறார்)

மீண்டும் அதையே எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

1.அதனுடைய எதிர் அலைகள் ஏராளமாக வரும்… அப்பொழுது உடல் பற்று வருகின்றது
2.விதிப்படி நாம் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்… பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.

அந்த உணர்வுகளை அதிகமாக வளர்த்து விட்டால் இதைப் போன்று பல இம்சைகளை உருவாக்கக்கூடிய ஒரு உயிரினமாக உயிர் மாற்றிவிடும். “நம் உடலில் இப்படி எத்தனையோ விதிகள் உண்டு…”

அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
1.நாம் செய்த நிலைகளுக்கு இது கழிகின்றது…
2.இனி நாம் அருள் வழியை கூட்ட வேண்டும் என்ற நினைவில்
3.”போய்க் கொண்டே இருக்க வேண்டும்…”

எது எப்படி இருந்தாலும்… தெரிந்தோ தெரியாமலோ… நுகர்ந்தால் உயிர் இயக்கிவிடும்.

பாத்திரத்தை அடுப்பில் வைக்கின்றோம்… சமையல் செய்கின்றோம்.
1.நான் தானே சமையல் செய்கிறேன்… நான் போடாமல் அதிலே வேறு ஒரு பொருள் விழுந்தால் என்ன ஆகும்…?
2.அதற்கு நான் என்ன செய்ய முடியும்…? நான் போடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்…!

ஏனென்றால்
1.காற்றிலிருந்து ஒரு விஷப் பூச்சி பறந்து வந்து பாத்திரத்திற்குள் விழுகிறது.
2.பூச்சியை நான் போடவில்லை…! நான் போட்டால் தானே அது வரும் என்று சொன்னால் என்ன ஆகும்…?

இதைப் போன்று தான் நம் உயிரின் வேலை. அது நெருப்புக்குச் சமம்…!

பாத்திரத்தை வைத்து அதில் எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு சமைக்கும். உயிருடைய வேலை அது தான்.

ஆனால் இதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கின்றது…? நம் ஆறாவது அறிவிடம் இருக்கின்றது.
1.ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.மீண்டும் தேய்பிறைக்குச் சென்று விடுகின்றோம்.

இதற்கு முன் எத்தனையோ சரீரங்களில் நாம் வேதனைப்பட்டு இருக்கின்றோம்… எத்தனையோ இம்சைப் பட்டிருக்கின்றோம்.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம் அல்லவா…! ஒரு விட்டில் பூச்சி பறக்கிறது என்றால் காகம் அதைக் கொத்திக் குதறுகின்றது… விழுங்குகின்றது. தன்னுடைய குஞ்சுகளுக்கு உனவாகக் கொண்டு போய்க் கொடுக்கின்றது அந்த வீட்டில் பூச்சியின் உயிர்… அடுத்து காகமாகப் பிறக்கின்றது.

பத்து எறும்புகள் சேர்த்து ஒரு வீட்டில் பூச்சியைக் கடித்துக் கொண்டு செல்கின்றது. அந்த உணர்வை நுகரப்படும் பொழுது… எறும்பின் நினைவே வீட்டில் பூச்சிக்கு வந்து அடுத்து அது எறும்பாகப் பிறக்கின்றது.

இப்பொழுது நாம் பல கோடிச் சரீரங்கள் தாண்டி மனிதனாக வந்திருக்கின்றோம். ஒரு பாம்பு நம்மைத் தாக்க வருகிறது. நம்மைக் காப்பாற்ற நாம் அதை அடிக்கின்றோம். அந்தப் பாம்பின் உயிர் அடித்தவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது. மனித உணர்வைக் கருவாக்கி அந்தப் பாம்பு அடுத்து மனிதனாகப் பிறக்கும் தகுதிக்கு வருகின்றது.

ஆனால் பாம்பு மனிதனைக் கடித்தால் நினைவுகள் இழக்கப்படுகின்றது “ஐயோ… பாம்பு கடித்து விட்டது… பாம்பு கடித்து விட்டது…” என்றே நினைவு வருகின்றது. இந்த உணர்வின் தன்மை ஆன பின் மனிதனின் உயிர் அந்தப் பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறக்கும்.
1.பரிணாம வளர்ச்சியில் முதலில் மனிதனாக வந்தோம்
2.மீண்டும் விஷத்தன்மையான பின் நினைவாற்றலை இழந்து விஷத்துக்குள் தான் சென்று அடங்குகின்றோம்.

இது ஒரு விதியாக மாறுகின்றது. விதியைப் பற்றி ஏன் சொல்கிறோம் என்றால்……!

என் வாழ்க்கையில் சிறுபிள்ளையிலிருந்து நடந்த சம்பவங்களை எல்லாம் குருநாதர் என்னிடம் சொல்லிக் கொண்டு வருகின்றார். எறும்பை நசுக்கினாய்… ஒடக்கானைப் பிடித்து அதன் கண்ணிலே பொடியைப் போட்டாய்…! அது தலை ஆட்டுவதைக் கண்டு ரசித்தாய். அதற்குப் பின் நீ எத்தனை நாள் தலையாட்டினாய்…? என்று கேட்கிறார்.

நான் கல்யாணம் முடித்த புதிதிலே வீட்டிலிருந்து நடந்து டவுனுக்குப் போய்க் கொண்டிருக்கின்றேன். தன்னை அறியாது கிறு கிறு என்று தலை சுற்றலானது நடக்க முடியவில்லை… கீழே விழுந்து விட்டேன்…!

அதை ஞாபகப்படுத்திச் சொல்கின்றார் நீ இந்த இடத்தில் நினைவிழந்து விழுந்தாய்… உனக்குத் தெரியுமல்லவா…! என்றார்.

ஓரு சமயம் நானும் என் மனைவியும் ஒரு சிறிய பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே சென்று கொண்டிருந்தோம். வண்டி வந்து கொண்டிருந்தது. சிறிது கவனம் இழந்திருந்தால் இரண்டு பேருமே அடிபட்டிருப்போம். ஆனால் தப்பிவிட்டோம்.

குருநாதர் அதைச் சொல்லி…
1.இது எல்லாம் நீ சிறு வயதில் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து உனக்குள் இருக்கப்படும் போது விதியாக அது அமைகிறது.
2.“டேய்…! அன்று நான் தான்டா அப்போது உன்னைக் காப்பாற்றினேன்” என்று குரு சொல்கின்றார்…!
3.முன் ஒரு சமயம் வேறு ஒரு பிறவியிலிருக்கப்படும் பொழுது நீ எனக்கு ஒரு உதவி செய்தாய்.
4.அருள் சக்திகளை நான் பெற்றிருக்கின்றேன்… இப்பொழுது (இந்தப் பிறவியில்) நான் உன்னைக் காப்பாற்றினேன்.
5.மறைந்த உணர்வுகளை வரிசைப்படுத்தி குருநாதர் எடுத்துக் காட்டுகின்றார்.

இப்படி என் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று எல்லாவற்றையுமே குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

நீ உன் இளமையில் செய்த தவறுகள் நீ அறியாது செய்த நிலைகள் நீ எண்ணியதை எல்லாம் உன் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அதன் வழிப்படி ஒவ்வொரு தவறாகச் செய்யச் சொல்லி அது பெருகிக் கொண்டே வந்தது. உன்னைத் தவறான நிலைக்கு அந்த உணர்ச்சிகள் எப்படிக் கொண்டு செல்லும்…? என்று சொல்கிறார்.

தப்பித் தவறி நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பூச்சியைக் கொல்லும்படி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் நாம் எதைச் செய்கின்றோமோ உயிர் நுகர்ந்ததை இயக்கிவிடும்.

மனித வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்பதை குருநாதர் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். அதைத்தான் இப்பொழுது உங்களையும் செய்யச் சொல்கின்றோம்.

1.எது எப்படி இருந்தாலும் அவ்வப்போது இது (வினை – விதி) கழியும்.
2.நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன். நான் ஏன் கீழே விழுவானேன்…? என் எலும்பு ஏன் முறிந்தது…?

எல்லோருக்கும் நன்மை செய்தேன் இவ்வளவு பெரிய சக்தி பெற்றிருக்கின்றேன். குருநாதரைப் பார்த்து “என்னை இப்படி எல்லாம் சோதிக்கின்றாயே…! என்று சொன்னால் என்ன ஆகும்…?”
1.நான் செய்த பாவத்திற்கு நான் தானே அதை அனுபவித்தாக வேண்டும்.
2.ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்று
3.மேலே பட்ட தூசியைத் தட்டி விடுவது போன்று துடைத்துக் கொள்ள வேண்டும்.
4.உடல் பற்று இல்லாதபடி அருள் பற்றுடன் நாம் சென்றால் இந்த உடல் பற்று நம்மை இயக்காது.

என் உடலிலே எத்தனையோ முறை எரிச்சல் வந்திருக்கின்றது. ஒரு சந்தர்ப்பம் நான் சுற்றுப்பயணம் செய்து வரும் பொழுது குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

தீயில் எரிந்த ஒரு ஆன்மா ஒரு அம்மாவின் உடலுக்குள் சென்று விட்டது. அந்த அம்மாவிற்கு 45 வயது. உடல் எல்லாம் “எரியுதே எரியுதே” என்று குதிக்கும். மேலே சேலையைப் போட்டாலே குதிக்கும்… “ஐய்யய்யோ எரிகின்றதே… என்னைக் கொல்கின்றீர்களே…!” என்று சொல்லிக் கொண்டு ஓடும். அதனால் பொறுக்க முடியாது.

எம்மிடம் அழைத்து வர வேண்டும் என்று துணியைப் போட முயற்சித்தார்கள். ஆனால் துணியை போட முடிந்தால் தானே…! மேலே பட்டாலே “என்னைக் கொல்கிறார்கள்” என்று ஓடுகின்றது.

எங்களால் அந்தப் பெண்ணை அழைத்து வர முடியவில்லை என்று என்னிடம் சொன்னார்கள். நாலாபுறமும் சுற்றித் துணியைக் கட்டி மறைத்து அழைத்துக் கொண்டு வாருங்கள்… மேலே துணியைப் போட வேண்டாம் என்றேன்.

அதன்படி செய்தார்கள். இங்கே கூட்டுத் தியானம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
1.தியானத்தில் எடுக்கக்கூடிய அலைகள் அந்தப் பெண்ணின் உடலில் எப்படிப் பாய்கின்றது…? என்று
2.சிறு குழந்தைகளை வைத்து நேரடியாகப் பார்க்கும்படி சொன்னேன்.

அந்த உடலில் இருக்கும் ஆவி வெளியே செல்கின்றது. அது போய்விட்டது என்று தெரிந்த உடனே இந்த அம்மா எழுந்து உட்காரும். துணியைக் கொடுப்பார்கள்.

ஆவி மறுபடியும் வந்து விட்டது என்று சொல்லி “எரியுதே” என்று அந்த அம்மா மீண்டும் சொல்லும். இப்படிப் பல நிலைகள் ஆனபின் ஒரு வழியாக அது விலகியது. இந்த அம்மாவுக்குச் சரியானது.

ஆனால் “அந்த அம்மா உடலில் பட்ட எரிச்சல்” அது எப்படி இருக்கிறது…? என்பதை நீ பார் என்று குருநாதர் சொன்னார். நான் எடுத்தவுடனே கப… கப… என்று என் உடல் எல்லாம் எரிகின்றது.

அந்த உடலிலே இருந்த அந்த ஆவியின் தன்மை அடங்கினாலும் அதனுடைய எரிச்சலான உணர்வுகளை நான் கவரப்படும் பொழுது நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகின்றது.

அது உடலில் இருந்த ஆவி…
1.அது எரிந்த உணர்வலைகள் அதிலிருந்து வந்ததை நான் சுவாசிக்கப்படும் பொழுது எனக்கு அந்த நேரத்தில் எரிகின்றது
2.இப்பொழுது எரிவதற்குக் காரணம் உன் உடலுக்குள் ஏற்கனவே விளைந்தது… “அது எரிந்தது…” இப்படி இயங்குகின்றது (குரு சொல்கிறார்)

உன் சிறு வயதில் நீ குருவியைச் சுட்டு எப்படியடா தின்றாய்…? கயிறை வைத்துக் கட்டி தலை கீழாக உயிருடன் குருவியை வாட்டினாய் அல்லவா.
1.ஆனால் இப்பொழுது நீ உயிருடன் இருக்கும் போது (அந்த அம்மாவிற்கு) நன்மை செய்யப் போனாய்.
2.தீயிலே வெந்த ஆவி அந்த உடலில் இருக்கின்றது. அதை நீ அடக்க எண்ணும் போது அந்த வேதனையைச் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.
3.அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்கின்றது…? நீ எண்ணி எடுத்தாய் உனக்குள் வந்துவிட்டது.
4.காரணம் அந்தக் குருவி எப்படி எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில் இருப்பதற்குச் சாப்பாடு தேவை.
5.இதை எடுக்கின்றது அந்த எரிச்சல் உனக்குத் தெரிகின்றது…!

நடந்த நிகழ்ச்சி…! அனுபவித்துத் தான் இதைச் சொல்கின்றேன்.

நான் செய்த தவறு… அது ஒரு விதி ஆகிறது. அந்த நேரத்திலே அங்கே எரிச்சல் ஆகிறது.
1.ஆனால் அவரைக் காப்பாற்றுகின்றேன்.
2.எனக்குள் கொஞ்சம் அந்த ஊழ்வினை மறைகின்றது.

இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு. இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

நான் தினமும் தியானம் செய்கின்றேன். எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது…? எனக்கு ஏன் நோய் வருகிறது…? என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் இங்கேதான் இருப்போம். அங்கே விண்ணுலகம் செல்ல முடியாது,

ஆகையினால் எந்தக் (எத்தகைய) கஷ்டம் வந்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இதை எண்ணி வளர்த்தோம் என்றால் நம் உணர்வுகள் அங்கே செல்கின்றது… அடுத்து நாம் சப்தரிஷி மண்டலம் செல்கின்றோம்.

ஆனால் என்னை இப்படி எல்லாம் பேசினார்கள் பாவிகள் உருப்படுவார்களா…? அவர்களால் தான் இப்படி ஆனேன்…! என்று சொன்னால் இந்த உடலுக்குப் பின் யாரை எண்ணிச் சொன்னோமோ அங்கே சென்று மீண்டும் நோயால் வாடும். மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.
1.அதற்குத்தான் குருநாதர் எனக்குக் காட்டியதை
2.உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். நோயாளிகளைப் பார்த்திருப்போம்… சண்டை போட்டவர்களையும் பார்த்திருப்போம்.

நோயுற்ற உணர்வுகளையும் சண்டை போட்ட உணர்வுகளையும் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் உருவாக்குகின்றோம்… அதாவது சதா சிவமாக்கிக் கொண்டே இருக்கின்றது நமது உயிர். (சிவம் என்றால் உடல்)

ஆனால் இதை மாற்றுவதற்கு நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…? அந்த அருள் ஞானியின் உணர்வைச் சிவமாக்க வேண்டும். இதைப் பழகுதல் வேண்டும்.

காலையில் விழித்தவுடனே “ஈஸ்வரா…!’ என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் வலுப் பெறச் செய்ய வேண்டும்.

என்னடா…! சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்பச் சொல்கின்றார் என்று நினைக்க வேண்டியதில்லை. யாம் சொல்வதைத் திருப்பிக் கேட்டு என்ன சொன்னேன்…? என்று கேட்டால் தலையைச் சொறிவீர்கள்.

ஆனால் நான் திரும்பச் சொன்னால்… அப்போது சொன்னதைத் தான் இப்பொழுதும் சொல்கின்றார்… திரும்பச் சொல்வதுதான் இவருக்கு (ஞானகுரு) வேலை போலிருக்கிறது என்று எண்ணுவீர்கள்…!

இராமயாணத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் வருடம் தோறும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதிலே எதாவது மாற்றிச் சொல்கின்றார்களா…? இல்லையே…!

இராமாயணத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்…
1.அந்த ஞானிகளின் உணர்வின் தன்மையைத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான்
2.உங்கள் உடலில் அந்த அணுக்களின் பெருக்கமாகின்றது.

பல உணர்வுகளில் நீங்கள் இருக்கும் பொழுது ஒரு இரண்டு தடவை சொன்னால் இது மறைந்துவிடும். ஏனென்றால் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…?

அவன் அப்படிச் செய்தான்…! இவன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்க்கின்றான்…! இங்கே உடம்புக்குச் சரியில்லை…! என்று
1.எத்தனையோ வேதனைப்படும் உணர்வை ஒரு நாளைக்கு நூறு தடவை சொல்கின்றீர்கள்
2.நல்லது செய்வதை ஒரு தடவை அல்லது இரண்டு தடவை சொன்னால் பற்றாதே… இது அழிந்துவிடுமே…!
3.அப்போது எங்கிருந்து மாற்றுவது…?

ஒரு அழுக்குத் தண்ணீருக்குள் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்றத் தான் அது தெளிவாகிக் கொண்டே வருகின்றது

அதைப் போன்று தான் நீங்கள் எத்தனையோ சங்கட உணர்வுகள் கொண்டிருக்கும்போது…
1.மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வை
2.உங்களுக்குள் செலுத்தச் செலுத்தத் தான்…
3.அந்த உணர்வை வலுப்பெற கூடிய நிலையே வருகின்றது.
4.வலுப்பெறச் செய்ய வேண்டுமென்று தான் இதை உங்களிடம் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அடுத்தாற் போல் என்ன செய்ய வேண்டும்…?

இந்த வாழ்க்கையில் யாரை யாரை எல்லாம் நாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
1.என்னிடம் “கஷ்டம்…” என்று சொன்ன அந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பக் கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும்
3.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இதை நாம் எண்ணிப் பழக வேண்டும்

அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணினால் “அந்த நலம் பெறும் சக்தி” என்னிடம் இது வந்துவிடுகின்றது. அந்த உணர்வு எனக்குள் என்னோடு சேர்த்துதான் வாழுகின்றது.

அவர்கள் நல்லாக வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் எனக்குள் நல்லதாகின்றது.

அதே போல வேதனைப்படுவோரைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அந்த வேதனை எல்லாம் நீங்கி ஒன்று சேர்த்து வாழும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி எல்லோரும் செய்ய வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயர்ந்த உணர்வுகளை அகஸ்தியன் பெற்றான். அவன் பெற்ற வழியிலேயே தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்.

ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குத்தான் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார் நம் குருநாதர்.

1.காட்டிற்குள் அகஸ்தியன் போன இடங்களில்…
2.எங்கேயெல்லாம் அவன் உணர்வுகள் பதிவாகியிருக்கின்றதோ
3.அங்கெல்லாம் போகச் சொன்னார் குருநாதர்.

அவன் எடுத்துக் கொண்ட நிலைகள் பார்த்தால் மலை உச்சியில் உட்கார்ந்து இருக்கின்றான் அகஸ்தியன். அந்த இடத்தில் பார்த்தால் மேகங்களைக் கூட்டிக் குவித்து நீராக மேலே உச்சியிலே உருவாகிறது.

அதனால் தான் அகஸ்தியருக்குக் கையிலே கமண்டலத்தைக் கொடுத்துக் காண்பித்தார்கள். “முதலில் ஜீவ சக்தி ஆனது இது மிகவும் முக்கியம்…!”

அந்த மாதிரி இடங்களை எல்லாம் குருநாதர் காண்பித்ததனால் யாம் தெரிந்து கொண்டு அவ்வப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.
1.சொல்வதோடு மட்டுமல்ல… உங்களிடம் இந்த கவனத்தைப் பதிவு செய்து
2.அந்த அகஸ்தியன் நிலைக்கே உங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

அந்த அகஸ்தியன் பெற்ற வழிகளிலேயே இந்தக் காற்றிலிருந்து “நல்லதைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்…”

அப்படிப் பெறக் கூடிய தகுதியை நீங்கள் பெறுவதற்காக வேண்டித்தான் அடிக்கடி இதை உபதேசிப்பது. எம்முடைய (ஞானகுரு) பிரார்த்தனையும் இது தான்.

ஏனென்றால்… இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்த உடலுக்கு நாம் சொந்தமல்ல…
1.உயிரை நாம் சொந்தமாக்கிக் கொண்டே போக வேண்டும்.
2.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையாக
3.நாம் என்றும் ஒளியான நிலைகளைச் சொந்தமாக்க வேண்டும்… அது தான் முக்கியம்.

ஆகையினால் இதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளையும் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பம் எது வந்தாலும்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டு
2.”இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நாம் ஆணையிட வேண்டும்.

“எம்முடைய உபதேசங்களை எல்லோரையும் கேட்கச் செய்து” உண்மைகளை உணரக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்குங்கள்

 

நீங்கள் எல்லோரும் “அருள் வழியில் தயாரானால்தான்” மிகவும் நல்லது. ஒரு விதையைப் போட்டால் உயர்ந்த நிலைக்கு அதை விளைய வைத்து வளர்த்துக் காட்ட வேண்டும்.

ஒருவர் வேதனை நோய் என்று சொன்னால் அதைக் கேட்பவர்களுக்கு எல்லாம் அந்த நோய் வரும். அருள் ஒளியைப் பெற்று இருளை நீக்கக் கூடிய சக்தி பெற்று உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நோய்களைப் போக்க வேண்டும்.
1.சாமியாக நீங்கள் இருக்க வேண்டும்…! சாமிக்கு மட்டும் அந்தச் சக்தி அல்ல.
2.அந்த உயர்ந்த நிலைகளில் நீங்கள் செயல்பட வேண்டும்.

அதை நீங்கள் சீராகச் செயல்படுத்த வேண்டும் என்றால் யாம் வெளிப்படுத்திய உபதேச கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுப் படிக்க வேண்டும். உங்களுக்குள்ளும் பாடமாகும்… மற்றவர்களுக்குள்ளும் பதிவாகும்.

தனித்துச் செல்லும் பொழுது தவறு என்று வந்தால்… பார்…! சாமி சொன்னதை இவர் தவறாகச் சொல்கின்றார் என்று ஆரம்ப நிலைகளில் வரும்.
1.ஆனால் எல்லோரும் உபதேசங்களைக் கேட்டுப் படிக்கப்படும் பொழுது “எல்லோருமே அந்த உண்மைகளை உணரக்கூடிய சக்தி வரும்…”
2.அப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும்.

காரணம்… போர் என்ற நிலையில் அணுகுண்டுகளையோ மற்ற கெமிக்கல் குண்டுகளையோ உயிரியல் குண்டுகளையோ பயன்படுத்தினால் அதை எல்லாம் “நாம் ரிமோட் செய்யக்கூடிய (தடுக்கும்) சக்தியாக வரவேண்டும்…”

ரோட்டிலே நாம் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம்… ஒருவன் தவறான எண்ணத்துடன் செல்கின்றான் என்றால் அவனுடைய நடை மாறும். அவன் மீது அறியாமலே நமக்கு ஒரு வெறுப்பு வரும்.

ஒருவன் சைக்கிளை ஓட்டிச் செல்கின்றான் கண்ணிலே உற்றுப் பார்த்த உடனே உயிரிலே மோதச் செய்கின்றது. அவன் மீது வெறுப்பு வருகின்றது. நாம் சும்மா ரோட்டில் நடந்தாலும்
1.இந்தக் கண் இப்படி அளந்து பார்க்கிறது… காண்பிக்கின்றது.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பதிவாக்கி
3.அந்த உணர்வுகளைக் கவர்ந்து உயிரிலே மோதும் பொழுது தான் உணர முடிகின்றது.

ஜோசியம் பார்ப்பவர்கள் எல்லாம் அதே பழக்கத்தில் இருப்பார்கள். வந்தவுடன் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் கஷ்டத்துடன் வந்திருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் அதைச் சொல்லுகின்றார்கள்.

ஆனால் அதே பழக்கத்தில் எடுக்கப்படும் பொழுது மற்றவர்களுடைய கஷ்டத்தை நுகர்ந்தவர்கள் கடைசியில் அவர்களுக்குள் பல விதமான நோய்கள் வரும். எல்லோருக்கும் ஜோசியம் செல்வார்கள்.. கடைசியில் அவர்களுக்கு நோய்கள் தான் வரும்.

உங்களுக்கு நான் கொடுத்த “பவரை” (சக்திகளை) வைத்துப் பார்க்கப்படும் போது கஷ்டங்கள் தெரிய வரும். அல்லது மற்றவர்கள் தவறு செய்தால் தெரியும்… தவறான ஆள் என்றும் உணர்த்தும்.

அதைத் தெரிந்து கொண்ட பின் அவன் மோசமான ஆள்… ஏமாற்றுவான் என்று சொல்லிப் பழகினால் என்ன ஆகும்…?
1.இந்த உணர்வு தான் நம்மை இயக்கும்… அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றது…
2.நம் நல்ல உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை… அதை மாற்ற வேண்டும் அல்லவா.

இந்த மாதிரித் தவறான உணர்வு வந்தால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செல்லாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் வலுவாக்க வேண்டும். வலுவான பின் நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அந்தத் தீமைகள் அகன்று செல்கின்றது.

ஆகவே… உயர்ந்த சக்தியைக் கூட்டப்படும் பொழுது தீமைகளை நீக்குகின்றது. உள்ளே சென்று இயக்காதபடி தடைப்படுத்துகின்றோம். வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

குழந்தை படிக்கவில்லை சேட்டை செய்கிறான் என்று நினைத்தாலே அது உடனே வேலை செய்யும். ஆகவே இது போன்ற சமயங்களில் எல்லாம் ஆத்ம சுத்தியை உடனே கடைப்பிடித்தாக வேண்டும்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

மனிதர்களுடன் நாம் பேசுகின்றோம். ஒருவருக்கொருவர் கோபமாகப் பேசிப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள்ளும் அது வந்து விடுகிறது. சந்தர்ப்பத்திலே நாம் சோர்வடையப்படும் போது இவனால் தான் எனக்கு எத்தனை கஷ்டம் வந்தது… இவனெல்லாம் உருப்படுவானா…! என்று சும்மா இருக்கும் பொழுது எண்ணங்கள் தோன்றும்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்பொழுது மற்ற வேலைகளை நாம் சரியாகச் செய்ய முடியாது… தவறுகள் வந்துவிடும்…! பெண்கள் சமையலிலே காரத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். குழம்பைச் சரியாக வைக்க மாட்டார்கள். காய்கறிகளை வித்தியாசமாகச் சமைப்பார்கள்.

எது இயக்குகின்றது…? நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஏனென்றால் இது எல்லாம் நான் கண்ட உண்மைகள்.

அதே சமயத்தில் உங்களைக் கண்ட மாத்திரத்திலே உங்களுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும் நான் சொல்லலாம்.
1.ஆனால் அதைச் சொல்வதை விடுத்து
2.உங்களுக்கெல்லாம் நல்லதாக ஆக வேண்டும் என்று தான் நான் மாற்ற வேண்டும்.

இதைப் போல நீங்களும் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வந்தால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து அவர்களுக்கு நல்ல மனதும் நல்ல எண்ணங்களும் நல்லது செய்யக்கூடிய எண்ணங்களும் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
1.அவரைப் பற்றி இவ்வாறு நாம் எண்ணினால் நாம் அந்த நல்லதைப் பெறுகின்றோம்.
2.அவருடைய தீமையின் உணர்வைக் குறைத்து இதை வளர்த்து அருளுணர்வைப் பெற்றால்
3.உயிர் நம் இரத்தங்களிலே படரச் செய்கின்றது… இரத்தத்தில் கலந்த அருள் உணர்வுகள் தீமைகளைத் தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதனுடைய இயக்கத்தைக் குறைக்கின்றது… நல்ல அணுக்கள் பெருகுகின்றது.
5.நல்ல உணர்வும் நல்ல உடலும் நல்ல வளர்ச்சியும் நமக்குள் வருகின்றது.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… உங்களால் தானே முடியும். ஆனால் “சாமி ஒன்றும் செய்யவில்லை” என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றார்கள்.

தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியால் பிறருடைய தவறைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அந்தத் தீமைகள் நம் உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள “அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…” இந்த உண்மைகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றேன்… பதிவு செய்து கொள்ளுங்கள்.

இயற்கையின் உண்மைகளை எல்லோரும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இதை உணர்த்தி அந்தத் தன்னம்பிக்கையைக் கொண்டு வருகின்றேன்.

1.அந்த அருள் ஒளியை என்றுமே நம் உயிருடன் சேர்த்துச் சொந்தமாக்கி நாம் பழகுதல் வேண்டும்.
2.நான் யாரை நினைக்கின்றேன்…? உங்களைத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
3.உங்களுக்கு ஃபுல் பவர் (FULL POWER) சதா கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன் அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் புனிதத் தன்மைகள் ஏற்பட வேண்டும் ஈசன் வீற்றிருக்கக் கூடிய உடலான சிவம் உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் அதனால் உயர்ந்த நிலை ஏற்பட வேண்டும்.

உங்களிடமிருந்து வெளிப்படும் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய நிலை வர வேண்டும். “என்னுடைய தியானமே இது தான்…” நீங்களும் அதே போன்று செய்து பாருங்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறைந்து கொண்டே வரும். ஆகவே… எங்கே குறைகளைக் கண்டாலும் அந்தக் குறை நமக்குள் இயக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அன்பையும் பண்பையும் பேணிக் காக்கும் அருள் ஞானம் அவருக்குள் பெருக வேண்டும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி விட்டீர்கள் என்றால் அது ஒவ்வொரு நொடியிலும் நம்மைக் காக்கும்… அவர்களையும் காக்கும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணினால் விஷ்ணு தனுசாக மாறுகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது சிவ தனுசை அடக்குகின்றது.

பிறிதொருவர் தீமைகள் சிவ தனுசு… அதைப் போய் இது அடக்குகிறது. ஏனென்றால்
1.அதைக் காட்டிலும் வலுவானது “விஷ்ணு தனுசு…”
2.இது செய்யப்பட்டது இனி நாம் செய்ய வேண்டியது.

அருள் மணங்களை நாம் எப்படி எடுக்க வேண்டும்…? என்று இராமாயணத்தில் இப்படித் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் சிவ சக்தி என்ற நிலையில் செயல்பட வேண்டும் சக்தி தான் சிவமாகின்றது பெண்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்தச் சக்தி என்ற நிலையை உருவாக்கித் தன் கணவனுடன் சேர்க்கப்படும் போது சிவமாகின்றது.

சக்தி என்ற உணர்வுகள் கணவன் தனக்குள் நுகர்ந்து
1.மனைவியின் ஆற்றல் எனக்குக் கிடைக்க வேண்டும்
2.என் மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
3.இருவருமே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்து இதை வளர்த்துப் பாருங்கள்.
4.இரு உணர்வும் ஒன்றாகின்றது அதனுடைய நல்ல பலன்களை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞான அறிவில் வளர்ந்து கொண்டே தான் செல்கின்றார்கள். எத்தனையோ விதமான நிலைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதிலே தப்பும் வழி இல்லை.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும். இரவு படுக்கப் போகும் போது முதலில் தாய் தந்தையை நினையுங்கள். அவர்தான் நம்மை மனிதனாக உருப்பெறச் செய்தார்கள்.

அந்த அரும் பெரும் சக்தியின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த எண்ணத்தோடு படுங்கள்.
1.இரண்டு நிமிடம் மூன்று நிமிடம் சொல்லுங்கள்.
2.உங்கள் உடலுக்குள் இந்த அருளைப் பாய்ச்சுங்கள்… திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.

எங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வர வேண்டும் கல்வியில் ஞானம் வர வேண்டும். நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். பகைமைகள் அகல வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் எல்லோருக்கும் உயர்ந்த எண்ணம் வர வேண்டும் என்று இரவில் இப்படி எண்ணி வளர்த்துப் பழகுங்கள் இதை வளர்க்க வளர்க்க அந்தப் பகைமைகள் நிச்சயம் மாறும்.

இப்படி நம் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழக வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை எல்லாம் அகற்றி… பேரொளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் ஒவ்வொருவரும் நுகர்ந்து பழக வேண்டும்

1.அந்த மரபணுவின் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி
2.பகைமையை மாற்றிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று
3.ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

இந்தப் பேருண்மையைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன். அந்த மரபணுக்களை நாம் எல்லோருமே பெற முடியும்.

இதை நிலை பெறச் செய்வதற்குத் தான் “துருவ தியானம்” என்றும் “பௌர்ணமி தியானம்” என்றும் வழிப்படுத்தியுள்ளோம்.

அந்தத் தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து நஞ்சினைக் கரைத்துவிட்டு அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் “உயிர்” என்ற நிலைகள்… “ஒளி” என்ற உணர்வின் அறிவாகத் தெரிந்து கொண்ட பின் தீமைகளை எல்லாம் கரைத்துவிட்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலையை அங்கே பெறச் செய்ய வேண்டும்.

நம் மூதாதையர்கள் அங்கே ஒளியாகச் செல்லப்படும்போது “நம்மைக் காத்திட வேண்டும்…” என்ற அந்த மரபணு நம் தீமைகளை எல்லாம் அகற்றி நம்மைக் காக்கும்.

1.அதே மரபணுவை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு நாம் ஏங்கும் போது
2.பேரருள் பேரொளி என்று பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த அந்த உணர்வுகளை
3.நாம் எளிதில் பெற முடியும்… அந்தத் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால்… சாங்கிய சாஸ்திரப்படி உடலை விட்டுப் பிரிந்தவர்கள் சுட்ட சாம்பலைக் கரைத்துவிட்டு “மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன்” என்று விநாயகர் கோவில் போய் “மோட்சத் தீபம்” காட்டுவதற்கல்ல.

ஒளியான மரபணுக்களைப் பெறுவதற்குத் தான் அன்று விநாயகத் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள். மனிதனாக வாழும் போது சந்தர்ப்பத்தால் வந்த பகைமை உணர்வுகளை அகற்றிவிட்டு ஒளி என்று உணர்வினை உருவாக்கி… ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் அகஸ்தியன் “துருவ நட்சத்திரமாக..”

அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும். மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும். மெய்ப் பொருள் காண முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

உபதேச வாயிலாக ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்…!
1.உணர்வின் அழுத்தத்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரச் செய்து
2.அந்த மகரிஷிகள் அருளாற்றல்களை உங்களுக்குள் இணையச் செய்கின்றோம்.

அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால்… நினைவு கொண்டு மீண்டும் மீண்டும் அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் வரும் பகைமையை மாற்றி பேரருள் என்ற உணர்வை ஊட்டி… “இனி பிறவியில்லை” என்ற நிலையை அடையலாம்.
1.குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம்.
2.பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம்
3.பரிவான நிலைகளில் வாழவும் முடியும்
4.பரிவால் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியான வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும்போது சுற்றி இருப்பவர்களுடைய தவறான செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் திருந்த வேண்டுமென்ற எண்ணங்களை எண்ணிச் செய்வதில்லை.

1.தான் உண்மைகளை எல்லாம் அறிந்தும்
2.தான் சொல்லியும் கேட்காமல் பிழைகளைத் தான் செய்கின்றார்கள் என்ற
3.வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர
4.தவறு செய்வோர் உண்மைகளை அறிய வேண்டும்… மூலக்கூறுகளை அறிய வேண்டும்…
5.மூலத்தை அறிந்து சரியான பாதையில் அவர்கள் செயல்படவேண்டும் என்ற
6.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா…? என்றால் இல்லை…!

காரணம்… சாங்கிய உணர்வுகள் வளர்த்துக் கொண்ட வழியின் துணை கொண்டே
1.பிறர் செய்யும் செயல்களைக் குறைவாக எண்ணி
2.குறை… தவறு… என்ற நிலைகள் கொண்டு
3.தன்னைப் பலவீனப்படுத்தும் வேதனை உணர்வைத் தான் வளர்க்க முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசித்து அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மையை உங்களுக்குத் தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றோம்.

அதனை வலுக் கொண்டு எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றோம்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் வேதனை என்ற நிலைகளாக உங்களுக்குள் புகுந்து அது தீமை விளைவிக்காதபடி பாதுகாக்க “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தையும் முறைப்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இத்தனையும் வாக்காக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் நினைவு கொள்ளும்போது
1.உங்களை அறியாது வந்த தீமைகளை நீங்களே அகற்ற முடியும் என்ற
2.தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கவும் செய்கிறோம்.

இத்தனையும் யாம் செய்தாலும் அவரவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலுப்பெற்ற நிலைகள் கொண்டு இயங்கி
1.தன்னைச் சீர்படுத்தும் நிலையே மாறி
2.தியான வழியில் உள்ளோரும் இதிலே சிக்குண்டு
3.மீளும் நிலையே இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

“ஒரு சிலரே” இதனின் உணர்வை உணர்ந்து… அறிந்து…
1.தீமைகளை அகற்றிடும் உணர்வினை வலுப் பெற்று
2.தன்னுள் தீமை நாடா நிலையும்
3.தன்னைச் சார்ந்தோருக்கும் தீமைகள் நாடாதபடி சொல்வாக்கு கொண்டு பதியச் செய்து
4.வளர்ந்து கொண்டுள்ள அப்படிப்பட்ட தியான வழி அன்பர்களும் உண்டு.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம்…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பிறர் படும் கஷ்டமோ பிறர் செய்யும் குறைகளையோ அதை எல்லாம் நாம் முதலிலே தெரிந்து கொண்டோம்… அறிய முடிகின்றது. இருந்தாலும்…
1.இனி நாம் தெரிய வேண்டியது என்ன…? என்பதைத் தெளிந்து
2.இந்த வாழ்க்கையைப் புரிந்து இருள் சூழும் நிலைகளிலிருந்து விடுபட்டு
3.இருளைப் பிளந்து பொருள் காணும் உணர்வினை நமக்குள் வளர்த்து
4.என்றென்றும் மெய்ப் பொருளாக அந்தப் பொருள் கண்டுணரும் நிலையும்
5.நஞ்சினைப் பிளந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் சக்திகளை நமக்குள் வளர்க்க முடியும்… வளர்க்க வேண்டும்…!

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே இதை எல்லாம் தெளிவாக்குகின்றோம்.

விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றியமைக்கும் திறன் “சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்”

 

1.காலையில்… மாலையில்… படுக்கப் போகும் முன்… தொழிலுக்குப் போகும் முன்… மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.
2.பிறருடைய தீமைகளைப் பார்க்க நேர்ந்தது என்றால் அதையெல்லாம் தனக்குள் பதிவாகாதபடி அழித்துப் பழகுதல் வேண்டும்… பதிவாக்கக் கூடாது.
3.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
4.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் வளர்ச்சி பெறுகின்றீர்கள். உங்கள் மூச்சு உலகைக் காக்க உதவும்.

எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் நன்மை பெறச் செய்ய வேண்டும் என்று நாம் சொல்கின்றோம் அல்லவா…! அதைப் போல மூச்சு ஒரு நூறு பேர் தெருவில் விட்டாலே அங்கே தீமைகள் வராதபடி பாதுகாக்கலாம். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துங்கள்… தீமை புகாது உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்.

இதைச் செய்யச் செய்ய… அறியாமலே பல அற்புதங்கள் உங்களுடைய பேச்சால் மூச்சால் வரும்… பல நிலைகளைச் செய்ய நாம் பழக வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்… அருள் வாழ்க்கை வாழ வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்.

1.தபோவனம் என்று சொன்னால் நீங்கள் தான் தபோவனம்…! நான் அல்ல…!
2.நாம் எல்லோரும் சேர்ந்தால் தான் தபோவனம்.

உயர்ந்த குணங்களை எடுத்து எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க வேண்டும். உயர்ந்த நிலைகள் நாம் பெற வேண்டும். “எல்லோரும் உயர்வான நிலைகள் வர வேண்டும்” என்று இதை நாம் முன்னணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் மட்டுமல்ல… வீட்டிற்குள்ளும் எந்தக் குறையாக இருந்தாலும் உடனே நிவர்த்தி செய்ய வேண்டும். சாந்தத்தையும் ஞானத்தையும் வளர்த்து நம்முடைய நிலைகளை “மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்…”

யாம் வெளிப்படுத்தியுள்ள உபதேச நூல்களை ஒரு நாளைக்கு “ஒரு அரை மணி நேரமாவது” படிக்க வேண்டும்.
1.அதில் இருக்கக்கூடிய “முக்கியமான கருத்துகளை” வெளிப்படுத்த வேண்டும்.
2.எல்லோருக்கும் அதைப் படித்துச் சொல்லும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.
3.எல்லோருக்கும் கேட்கும்படியாக அந்த “அருள் உணர்வோடு” வாசிக்க வேண்டும்.

இப்படிச் செய்தோம் என்றால் அனைவரும் ஒன்றாகின்றோம்.

1.என் சொல்லே உங்களுக்குள் வருகின்றது.
2.குருவின் அருள் எனக்குள் இருக்கின்றது
3.அந்த குருவின் அருளே உங்களுக்குள் பாய்கின்றது
4.அந்த உணர்வே நம் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றது.

மனப்பாடம் செய்து புத்தகங்களைப் படித்தால் ஏற்றத்தாழ்வுகள் கூட வரலாம். சிறிது நாளைக்கு இந்த மாதிரி எடுத்து ஒரு இடத்தில் உபதேசம் செய்கிறோம் என்றால்… கேட்டார்கள் என்றால்…
1.எம்முடைய புத்தகத்தை எடுத்து அந்த உணர்வை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் ஒன்று போல குரு அருளை நாம் எல்லோரும் எடுத்துப் பேசலாம்
2.குரு அருளால் நாம் அனைவரும் ஒன்றாக இயங்கும் தன்மை வந்துவிடும்.

நம் உணர்வுகள் அதிலே பற்று வளர்ந்து விட்டால் எந்தக் கலக்கமும் வராது… உணர்வுகள் தெளிவாகும். ஆகையினால் ஒவ்வொருவரும் எம்முடைய உபதேசங்களை அடிக்கடி படியுங்கள்… கேட்டுப் பதிவாக்குங்கள்.

ஒரு விசேஷத்துக்குச் சென்றாலும் உபதேசக் கருத்துக்களை எடுத்துக் கணவன் மனைவி வசிஷ்டரும் அருந்த்தியாக எப்படி வாழ வேண்டும்…? என்ற தத்துவத்தை வாழ்த்தாகச் சொல்லி நம்முடைய புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

ஒருங்கிணைந்த நிலையில் நாம் செயல்படும் பொழுது நாம் விடும் மூச்சலைகள் இந்த காற்றிலே தான் பரவுகின்றது… இது பெருகிக் கொண்டே வரும்.

ஆனால் சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் தான் இந்தக் காற்றில் அதிகமாக உள்ளது. இதிலிருந்து மாறுபட்ட உணர்வுகளாக
1.இந்த உலகத்திலே நாம் உயர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி
2.அதை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

எத்தனையோ கெமிக்கல் கலந்த விஷங்களை விஞ்ஞான முறையிலே பிரிக்கின்றார்கள்… நியூட்ரானைப் பிரித்து அணு உலைகளாகவும் உருவாக்கியுள்ளார்கள். ஆகையினால் விஷத் தன்மைகள் வெப்பத்தால் பிரிந்து பலவாறு பூமி முழுவதும் பரவிக் கொண்டுள்ளது.

சூரியனுடைய காந்த சக்தி அனைத்தையும் கவர்ந்து வைத்துள்ளது. இந்த விஷங்கள் ஒரு பக்கம் அடர்த்தியாகி இன்னொரு பக்கத்திலிருந்து எதிர்நிலையான அலைகள் வந்தால் “மோதிச் சூறாவளியாக மாறி அதிவேகமாகச் சுழல ஆரம்பிக்கின்றது…”

உலகம் முழுவதற்கும் “எந்த நிமிடத்தில் என்ன நடக்கும்…?” என்று இப்பொழுது சொல்ல முடியாது. செல்வம் நம்முடன் வரப் போவதில்லை. விஞ்ஞானிகள் இருக்கக்கூடிய இடங்களிலும் விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி பரிதாப நிலைகளில் தான் அவர்களும் உள்ளார்கள்.

1.எந்த இடத்திலே பார்த்தாலும் மனிதன் தன்னம்பிக்கை இழந்து வாழக்கூடிய நிலைகளாக இருக்கின்றது.
2.தன்னம்பிக்கை வர வேண்டும் என்றால் நம்மைப் போல் இந்த அருள் ஞான வழியினைச் செயல்படுத்துபவர்கள் தான் அதை வழி நடத்த முடியும்.
3.நாம் செய்யும் தியானத்தைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வெளிப்படுத்துங்கள். எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள். இந்த உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நாளடைவில் “உங்களுடைய சக்தியை” நீங்கள் பார்க்கலாம்.

குரு அருளால் அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த உணர்வுகளை மூச்சலைகளாக வெளிப்படுத்துகின்றீர்கள். இதை நீங்கள் செய்ய முடியும்.
1.சூறாவளிகள் வருகிறது என்றால் ரிமோட் செய்கின்ற மாதிரி
2.நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

உதாரணமாக அன்று போபாலில் விஷ வாயு கசிவு ஆனது. நம்முடைய தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் குடும்பமே தியானத்தில் இருந்தது. அதன் வழியிலேயே தான் எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒன்றுமே தெரியாதபடி “யாரோ ஒருவர் திடீரென்று அங்கிருந்து உடனே கிளம்பி வாருங்கள்” என்று சொல்கின்றார்.

குடும்பத்துடன் அங்கிருந்து பூனாவிற்குக் கிளம்பி விட்டார்கள். இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் போபாலில் வெடிச் சத்தம் கேட்கின்றது அதற்குப்பின் டிவியில் ஒளிபரப்பு செய்கின்றார்கள் “விஷவாயு டேங்க் வெடித்தது… என்று…!”

இந்தக் குடும்பம் இருந்த வீட்டிற்கு அருகில் தான் அந்த டேங்க் இருந்தது. எல்லாம் பாதிப்படைந்து விட்டது. இவர்களுடைய உறவினர்கள் என்ன ஆனதோ…? என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால் இவர்கள் நாங்கள் வெளியிலே வந்து விட்டோம்… பூனாவில் பாதுகாப்பாக இருக்கின்றோம். நாங்கள் வசித்த தெருவில் இருப்பவர்களுக்குக் கண் போய்விட்டது மாடெல்லாம் இறந்துவிட்டது ஏராளமானோர் இறந்து கொண்டிருக்கின்றார்கள் என்று ஃபோனிலே சொல்கிறார்கள்.

இதைப் போன்று இன்னொரு பையன் திருநெல்வேலியில் இருந்து வந்து அங்கே தங்கி இருந்தான். அவனுடைய தாயார் எம்முடைய உபதேசப் புஸ்தகத்தைக் கொடுத்து “இதைப் படித்துக் கொண்டே வா…” என்று சொல்லி இருக்கின்றார்கள்.

அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது என்ன ஆனது…? அவரும் விஷக் கசிவிலிருந்து தப்பிவிட்டார்.

திடீரென்று என்னவென்றே தெரியவில்லை…!
1.வித்தியாசமான நெடி தெரிந்தவுடன் கம்பளித் துணி போட்டு அந்த நெடி பாதிக்காதபடி மூடிக்கொண்டு
2.ஈஸ்வரா குருதேவா ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி தன்னுடைய தாயை நினைத்துக் கொண்டே இருந்திருக்கின்றார்.

அடுத்து பார்த்தால் அருகிலே மற்ற இடங்களில் உள்ளவர்கள் எல்லாம் இறந்து கிடக்கின்றார்கள்.

அதற்குப் பின்னாடி அவர் மாற்றலாகி டெல்லி சென்றார். அங்கே எம்மைச் சந்தித்து இந்த விவரங்களை எல்லாம் என்னிடம் சொன்னார்.
1.என் தாய் சொல்லித் தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். இந்தப் புத்தகம் தான் கடவுள்…
2.என் தாய் தான் எனக்குக் கடவுளாக இருந்து காப்பாற்றியது.
3.இதைப் படிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நானும் அந்த விபத்தில் சிக்கியிருப்பேன்.

என் அருகில் இருந்தவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் நான் தப்பிவிட்டேன் என்று என்னிடம் சொல்கின்றார்.

இதெல்லாம் காரணம் என்ன…? என்று கேட்டால் “நமக்கு நாமே… நாம் எதை எண்ணுகின்றோமோ… அதுவே நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக வருகின்றது…!”

வேதனை என்ற உணர்வு வந்தால் பாதுகாப்பு இல்லை… போகும் இடங்களில் எல்லாம் சண்டை வருகின்றது… தொழிலில் நிம்மதி இல்லை. ஆனால் அருள் உணர்வுகளை நாம் வளர்த்துக் கொண்டால் போகும் இடங்களில் எல்லாம் அனுசரணையாகி பாதுகாக்கக்கூடிய நிலையாக வருகின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றால் நமக்கு அது பெரிய பாதுகாப்பாக அமைகின்றது.
2.ஒரு எதிர்பாராத நிலைகள் வருகிறது என்றால் ஓரளவுக்குத் தாங்கி நம்மைப் பாதுகாக்கக் கூடிய நிலையும்
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தில் ஏதாவது ரிமோட் செய்து “வேறு பக்கம் அழைத்துச் செல்லக்கூடிய நிலைகள் இருக்கின்றது…”

இந்த உணர்வுகள் ஒளியாக மாற்றக்கூடிய சக்தியாகக் கிடைக்கும் ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.சாமி தான் என்று நினைக்கிற மாதிரி…
2.சாமி மாதிரி நானும் பெரிய சக்திக்கு வர வேண்டும்.
3.என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் போக வேண்டும்
4.என் மூச்சால் மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்துக் கொண்டு வாருங்கள்.

இது உலகம் முழுவதற்கும் பரவ வேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் சதா என்னுடைய தியானமே. நீங்கள் எல்லாம் தயாராக வேண்டும்.

இந்த உடல் தான்… தொழில் தான்… சம்பாத்தியம் தான்… அது தான் மிச்சம் என்று எண்ணாதபடி
1.அருள் தான் நமக்கு வேண்டும்… அது தான் நிலையானது என்று உணர்வோடு வளருங்கள்.
2.துருவ நட்சத்திரத்தை மறந்து விடாதீர்கள்… எந்த நிமிடமும் அதை எடுத்துப் பழகுங்கள்.
3.இந்த உணர்வை உங்களுக்குள் சேருங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

எதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது. அதன் வழி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று சொன்னது போல்.

எல்லோருக்கும் நான் நன்மை செய்தேனே…! “எனக்கு ஏன் இப்படி வந்தது…?” என்று வேதனைப்பட்டால் அதுவாக நாம் மாறி விடுகின்றோம். ஆகவே அருள் ஒளி பெற வேண்டும். எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்…”

எல்லோருடைய அந்த உயர்ந்த உணர்வுகளும் நமக்குள் வரும் பொழுது உலகைக் காக்கும் எண்ணங்கள் நமக்குள் வளருகின்றது ஆகையினால் நாம் அனைவரும் அதைச் செயல்படுத்துவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… உலகத்தைக் காப்போம்.

1.உங்கள் உணர்வுகள் நீங்கள் வாழும் பகுதியிலோ அல்லது மற்ற இடங்களிலோ உண்மையில் நல்லதைச் செய்யும்.
2.உங்களையும் காக்கும் மற்றவர்களையும் காக்கும்
3.உலகையே காக்கக்கூடிய திறன் உங்களிடமிருந்து அது வெளிப்பட வேண்டும்.

சாதாரண மனிதனாக உங்களை நீங்கள் எண்ண வேண்டாம்…! எல்லோருக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துச் செயல்படுத்துங்கள்.

ஒவ்வொருவரும் அன்பை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அரவணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இருளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
1.தனக்குள் வரும் தீமைகளை அகற்றும் அந்த வலிமை பெற வேண்டும்.
2.அந்த நிலையை வளர்த்துக் காட்டி உலகிற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய செயல்கள் இருக்க வேண்டும்.
3.நமது குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் தான் இயங்கிக் கொண்டுள்ளார்.
4.அவருடைய அருளை நாம் எளிதில் பெறலாம். இருளை அகற்றலாம் மெய்ப்பொருளைக் காணலாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
5.அந்த நிலைக்குத் தான் இந்த உபதேசம்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை என்று தெரிகின்றது… சொத்து நம்முடன் வருவதில்லை என்றும் தெரிகின்றது. தெரிந்தும் நாம் அதில் சிக்கிவிடக் கூடாது.

நாம் அந்த அருள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் வழியில் வாழ வேண்டும் இருளை அகற்றி மெய்ப் பொருளுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற இந்த உணர்வே நமக்குள் உருவாக வேண்டும்.

அருள் ஞானம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் இருளை அகற்றும் சக்தி ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும்.
1.விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றி அமைக்கும் திறன்
2.சாதாரண மனிதனுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வேண்டினோம் என்றால்
3.இந்த உண்மைகள் உலகம் முழுவதும் பரவும்.

இதை எடுத்து நுகர்வோர் எவரோ… காக்கும் சக்தியை அவரே பெறுகின்றார்கள்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. நான் ஒருவன் என்ன செய்ய முடியும்…?
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் பிராத்திக்கின்றேன்.
2.எண்ணுகின்றவர்களுக்கு இது கிடைக்கின்றது… பெற வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் வருகின்றது
3.அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஒருவருக்கு நோய் வந்துவிட்டது அல்லது குடும்பத்தில் கஷ்டம் என்று கேள்விப்பட்டால் அதைக் கேட்போர் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கின்றது.

அப்போது இந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்து உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் தொழில் நன்றாக இருக்க வேண்டும். நோய் இல்லை என்று இந்தச் சொல்லை அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்.
1.உங்கள் உணர்வுகள் அவர்களுடைய நோயை நீக்கும்
2.அவர்கள் கஷ்டத்தைப் போக்கக்கூடிய சக்தியாக வர வேண்டும்.
3.அவருடைய உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அவருடைய அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும். எல்லோரும் பேரின்பம் பெறக்கூடிய தகுதி அந்தச் சக்தி பெற வேண்டும் எல்லோரும் அதைப் பெறக் கூடிய அந்த நிலையை உருவாக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.உலகம் நலம் பெறத் தியானிப்போம்.
2.உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் விளைய வைப்போம்
3.நம்மையும் காப்போம்..,. உலக மக்களையும் காப்போம்.
4.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுவோம்.
5.எல்லா மக்களுக்குள்ளும் இதைப் பதிவு செய்வோம்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி உடலுக்குள் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை
1.நாம் விண்ணிலே “உந்திச் செலுத்தி” அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்
2.அப்பொழுது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது.
3.மனிதனாக வளர்ந்த தெளிவான அறிவு நிலைக்கின்றது
4.உயிருடன் ஒன்றி… அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளி பெற்று
5.அங்கே பேரின்பப் பெரு வாழ்வு வாழத் தொடங்குகின்றார்கள்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நம்முடன் வாழ்ந்து வந்த தாத்தாவோ பாட்டியோ அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தாலும் மேலே சொன்னபடி செய்ய மறந்திருந்தாலும் இப்பொழுது நாம் அதைச் செய்ய வேண்டும்… அவர்களை விண் செலுத்த முடியும்.

அதே போல் கணவனை இழந்திருந்தாலும் அல்லது மனைவியை இழந்திருந்தாலும் இங்கே உடலுடன் இருப்பவர்கள் அந்த உயிரான்மாவை யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

கணவனும் மனைவியும் வாழ்ந்த காலங்களில் இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்தது தான். ஆனால் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு உங்கள் உடல்களில் உண்டு.

ஆகவே அந்த உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் தான்…
1.அவர்கள் அங்கே ஒளிச் சரீரம் ஆகும் போது
2.அவர் ஒளியான உணர்வை நாமும் பெற்று
3.இந்த உடலை விட்டு நாம் சென்ற பின்னும் அவருடன் ஐக்கியமாகி
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதைப் போன்று
5.அருள் ஒளிக் கதிர்களை உருவாக்கி ஒளியின் சரீரமாக்கி நாமும் நிலைத்துக் கொண்டிருக்க முடியும்.

சூரியனின் ஒளி மங்கப்பட்டு… இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… இதில் உருவான மனிதர்கள்… ஒளி நிலை பெற்ற சப்தரிஷிகள் அகண்ட உலகில் சென்று அந்த உணர்வினைத் தனக்குள் பெற்று “ஒளியாக மாற்றி… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்து நிற்க முடியும்…!

1.அத்தகைய நிலையைப் பெறுவதற்குத்தான்
2.பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் முயற்சிக்கின்றனர்.

மகரிஷிகள் என்பவர்கள் இதை எல்லாம் (ஒளி) சிருஷ்டித்துக் கொண்டவர்கள். ஞானிகள் கண்டுணர்கின்றார்கள். ஞானிகள் கண்டுணர்ந்த நிலைகள் உயிருடன் உருவாக்கப்படும்போது ரிஷி ஆகின்றார்கள்.

1.ஞானத்தின் வழி கொண்டுதான் ரிஷியின் தன்மை உருவாக்க முடியும்.
2.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் விமானத்தை உருவாக்குகின்றான்
3.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் இராக்கெட்டை உருவாக்குகின்றான்
4.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றான்
5.அதே ஞானத்தின் துணை கொண்டுதான் விண்ணிலிருக்கும் பல பல நட்சத்திரங்களையும் மனிதன் கம்ப்யூட்டர் கொண்டு பதிவு செய்கிறான்.

பதிவு செய்த உணர்வை இராக்கெட்டின் முன்னாடி முகப்பில் வைக்கின்றனர். இராக்கெட்டின் முகப்பில் வைத்தபின் எந்த நட்சத்திரமோ அங்கே அழைத்துச் செல்கின்றது. அங்கே அழைத்துச் சென்று அங்கிருப்பதை எல்லாம் படமாக்குகின்றது. அங்கே படமாக்குவதை எல்லாம் தரையில் இருக்கக்கூடிய கம்ப்யூட்டர் மூலம் உணர்கின்றனர் பார்க்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.

இதைப் போலத்தான்…
1.சப்தரிஷி மண்டல உணர்வினை தன் கணவரின் (உயிரின் முகப்பில்) முகப்பில் வைத்து
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று இணைத்து விட்டால்
3.அதே சப்தரிஷி மண்டல உணர்வினை முகப்பில் வைத்துத் தானும் வளர்ந்து கொண்டிருந்தால்
4.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவருடன் இணையச் செய்து… இரு உயிரும் ஒன்றச் செய்து
5.அணுவின் ஒளிக் கதிராக மாற்றும் தன்மை அடைகின்றோம்.
6.இது ஒன்றும் கடினமல்ல… விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
7.மெய் ஞானிகள் பல காலத்திற்கு முன்னாடியே சொன்னார்கள்…!

அதைத்தான் யாம் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி விண் செல்லும் உணர்வை ஊட்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குரு உணர்த்திய அருள் வழியில் எந்த நிலையில் நாம் வாழ்ந்தாலும்… எவ்வளவு தர்மத்தின் சிந்தனையில் இருந்தாலும்…
1.பிறர்படும் கஷ்டங்களையோ
2.பிறர்படும் துயரங்களையோ
3.பிறர் செய்யும் தவறுகளையோ எதையும் கேட்டுணராது நாம் இருக்க முடியாது.

பாலிலே சுத்தமான பாதாமைப் போட்டுச் சத்தாக உருவாக்கி உணவாக அதைக் குடித்தாலும் சந்தர்ப்பத்தால் தீமை என்ற உணர்வினை நுகர்ந்தறிந்தால் அந்த பாலின் சத்து நமக்குள் வளராது அதையே அழித்துவிடும்.

அதே போல் எவ்வளவு சத்து கொண்ட உணர்வை உணவாக உட்கொண்டாலும் வேதனையான உணர்வினை அடிக்கடி சுவாசிக்கும் போது வேதனையின் தன்மை வளர்ந்து… நீங்கள் உணவாக உட்கொண்ட சத்தான ஆகாரத்தையும் அது பலியாக்கி விடும்.

இதைப் போன்ற நிலைகளில்…
1.நம்மைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நஞ்சு கொண்ட உலகில்
2.விஞ்ஞான அறிவால் வெளிப்பட்ட சில விஷத் தன்மைகள்
3.தீமையின் உணர்வாக மனிதருக்குள் விளைந்து விட்டது.

அவ்வாறு விளைந்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியாலும் கவரப்பட்டு உலகம் முழுமைக்கும் நஞ்சு கொண்ட அலைகளாகச் சேமித்து வைத்துள்ளது. அதே சமயத்தில் நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகளை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பதிவாக்கி வைத்துள்ளோம்.
1.அப்படிப் பதிந்து கொண்ட உணர்வுகள்
2.மனிதர்கள் வெளி விட்ட நிலைகளை… அது வளர… அது கவரும்.
3.கவர்ந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகரும் போது
4.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்கும்.
5.அதனின் சத்து நம் உடலுக்குள் விளைந்து தீமையின் நிலைகளே விளையும். (நோயால் இன்றைய உலகம் அவதிப்படும் நிலை)

ஆகவே இதை அகற்ற வேண்டும் என்றால் தீமையை அகற்றிய அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்தே ஆக வேண்டும். அந்த நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… நமது குருநாதர் காட்டிய நிலைகளில் இந்த உபதேச வாயிலாக உண்மைகளை உரைக்கின்றோம்… உயிரின் ஆக்கங்களைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வினைப் பெற உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக இந்த உணர்வினைப் பதிவு செய்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வின் இயக்கத்தால் (உபதேசங்கள் மூலம்) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியினை ஏற்படுத்தினால்தான் தீமைகளை அகற்றிட முடியும்… உங்களால் சாத்தியமாகும்.

தவமோ குண்டலினி யோகமோ மற்ற யோகங்களோ செய்தாலும் இதைப் பெறுவது மிகக் கடினம்.

அந்த மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் அதிகமாச் சேர்த்து… ஒருக்கிணைந்த அதனின் உணர்வின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்த வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்..

உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து விட்டு… இந்த வாழ்க்கையில் அறிந்திடும் அறிவின் நிலைகள் நிலைக்கச் செய்து… உயிருடன் ஒன்றி… என்றும் உண்மைப் பொருளாக மெய்ப் பொருளாக ஒன்றி… பிறவா நிலை என்ற பெரு நிலை அடைந்து ஒளியின் சரீரமாக நாம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உயிரான்மாக்களை இப்படி நிலைக்கச் செய்த பின் அவரின் உணர்வைக் கொண்டு நாம் விண்ணை நோக்கி ஏங்கும்போது அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வை நாம் எளிதில் பெற முடியும்.
1.நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்
2.இந்த வழி இல்லாதபடி நாம் எதையும் செய்ய முடியாது…!

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் இதனைச் செயல்படுத்த வேண்டும்.

இனி நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை

 

இன்று கோடிச் செல்வம் தேடினாலும் இந்த உடலை விட்டு உயிர் போகத்தான் செய்யும். இதிலே எந்த உணர்வை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த உணர்வுடன் தான் வெளியே செல்லும். விஷத்தன்மைகள் நாட்டிலே பரவப்படும் பொழுது பல மாற்றங்கள் ஆகும்.

ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே சொல்லி உள்ளேன். அணுகுண்டு ஹைட்ரஜன் குண்டு இதையெல்லாம் செய்கிறார்கள்.
1.அதில் வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இந்த அலைகள் பரவிக்கொண்டே இருக்கும்.
2.எதிர்நிலையான அலைகள் வரப்படும் பொழுது அது சூறாவளியாக மாறும்.

சனிக்கோள் என்ன செய்கின்றது…? ஆவியின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து நீர் என்ற நிலையில் வருகிறது. நீர் வரும் பக்கம் எல்லாம் சுழற்சியால் அதைக் கவர்ந்து மேலே கொண்டு செல்கின்றது… மேகங்களாக மாற்றுகின்றது. அதிலே சிக்கிய கரு முட்டைகள் நிலத்திற்கு வருகின்றது. இது சனிக்கோளின் வேலை.

அதே சமயத்தில் நம் பூமியில் வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைக் கண்டபின் ரோஜாப் பூவின் நறுமணம் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த அலைகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.
1.அது ஓடும் பாதையிலே விஷச் செடியினுடைய மணத்திலே மோதினால் அழுத்தம் தாங்காது உடனே சுழற்சியாகின்றது.
2.சிறு சிறு சுழல் காற்றுகளை பார்க்கலாம்.

இந்த விஷத்தன்மையினால் சுழிவாக ஏற்படக்கூடிய அந்த இடத்திலே ஒரு கர்ப்பிணி நின்றிருந்தால் அந்த உணர்வைச் சுவாசித்து கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இணைந்தால் “மூளை வளர்ச்சி அற்று சிந்தனையில்லாது போகும்… சிந்தனை இருக்காது…” செவிகள் கேட்காது… ஊமையாகவும் மாறும்.

குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள்… ஆனால் எனக்கு ஏன் ஊமைக் குழந்தை பிறந்தது…? என்று கேட்கலாம்.

ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது விஷத்தன்மையான உணர்வின் சுழற்சி நம் வட்டத்திலே கண்டால் அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் மூளை வளர்ச்சி குறைகின்றது.

குருநாதர் இதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டினார்.

நாம் தவறு செய்தோமா இல்லை…! இதைப்போல இது எப்படி சுழற்சி ஆகின்றதோ அதைப் போல் தான் விஞ்ஞானத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலைகளும் சுழன்று வரும்.

ஹைட்ரஜன் குண்டோ அணுகுண்டோ அதனுடைய கழிவுகளோ அதையெல்லாம் சூரியன் எடுத்து அலைகளாகப் பரப்பி வைத்திருக்கின்றது.
1.அதிலே இந்த அழுத்தங்கள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் அதிகமாக இருக்கப்படும் பொழுது
2.ஒன்றோடு ஒன்று மோதும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலே “சூறாவளி” ஏற்படும்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் கம்ப்யூட்டர்களை வைத்து இதை எல்லாம் கண்டுபிடிக்கின்றார்கள். எதிலிருந்து வந்தது என்று அவர்களுக்குத் தெரியாது.

அழுத்தங்கள் ஏற்பட்டு மோதலால் ஏற்படும் சந்தர்ப்பங்களினால் காற்றின் சுழற்சி (TORNADO) வேகம் இவ்வாறு இருக்கும் என்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக் மூலமாக அறிவிப்பு கொடுக்கின்றார்கள்.

அமெரிக்காவில் இந்த நகரத்தின் பக்கம் இது போன்று வரும் என்று அனுமானம் செய்து எச்சரிக்கை செய்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வெளியேற்றுகின்றார்கள்.

சேட்டிலைட் மூலமாக இந்த ஒளிக் கதிர்களின் உணர்வுகளை ஈர்த்து “எதிலே மோதுகின்றது…?” என்பதைக் கண்டுணர்கின்றார்கள். புயல் எதிலே வருகிறது என்றும் பார்க்கின்றார்கள்.
1.ஆனால் கடலில் உருவாகும் புயல் வேறு
2.இங்கே நகரத்திற்குள் ஏற்படும் சூறாவளி வேறு.

விஷத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அப்படியே மோதி அலேக்காகக் கட்டிடங்களைத் தூக்கிச் செல்கின்றது. மூன்று மாடிக் கட்டிடமாக இருந்தாலும் தூக்கி எறிகின்றது.

இதை எத்தனையோ வருடங்களுக்கு முன்பே யாம் சொன்னோம். ஆனால் யாம் சொன்னால் யார் ஏற்பார்கள்…? சொன்னாலும் எதையோ ஒட்ட வைத்து இணைத்துச் சொல்கிறார் என்று புதிதாகத் தான் பார்ப்பார்கள்.

ஆனால் என்னுடைய உபதேசங்களை முன்னாடி கேட்டவர்களுக்கு இது புரியும். இது இப்படித்தான் வரும்… அது எந்தப் பக்கம் மோதுகின்றதோ அதனுடைய செயலாக்கங்கள் இப்படித்தான் இருக்கும்…! என்று பல முறை எடுத்துக் கூறியுள்ளோம்.

ஒரு சமயம் டெல்லியிலிருந்து பத்ரிநாத்துக்குச் செல்வதற்காக ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். அங்கே ஒரு சூறாவளி வருகின்றது. எனக்கு முன்னாடி கார் பஸ் லாரி எல்லாம் சென்று கொண்டிருக்கின்றது.

வந்த வேகத்தில் “டப்…” என்று திசை திரும்பி பஸ் லாரி கார் அவைகளைத் தூக்கி எறிந்தது. பஸ்சைப் பக்கத்தில் இருந்த காம்பவுண்டுக்குள் மாடியில் தூக்கி எறிந்தது… அது தலைகீழாக நிற்கின்றது. உள்ளே இருப்பவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லாரியிலிருந்து மூட்டைகள் சரிந்து உள்ளே இருந்தவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு வினாடிகளுக்குள் நடந்த நிகழ்ச்சி இது. சித்தான பிற்பாடு நான் பார்த்தது இது.

ஆனால் சித்தாவதற்கு முன்னாடி அகமதாபாத்தில் நான் இருக்கும் பொழுது இது போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்தச் சூறாவளி எப்படி உருவாகிறது…? என்று சொன்னால் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்களை தொழிற்சாலைகளில் இருந்து வடிகட்டுகின்றார்கள்.
1.மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி விஷத்தை வடிகட்ட வேண்டும் என்று இவர்கள் செய்கின்றார்கள்.
2.இப்படி இதையெல்லாம் வடிகட்டினாலும் தண்ணீரில் கலக்கின்றது.
3.நீரெல்லாம் காய்ந்த பின் அதில் இருக்கக்கூடிய மணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
4.மீதிக் கழிவுகள் களிமண் போன்று படித்திருக்கின்றது… அதிலிருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலையும் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.

ஏனென்றால் இது எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள்.

1.இது போன்ற தொழிற்சாலைகள் எங்கெல்லாம் வைத்திருக்கிறார்களோ அது பரவலாகப் பரவிச் செல்லும் பொழுது
2.சந்தர்ப்பத்தில் இந்த அலைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக மோதப்படும் பொழுது சூறாவளியாக மாறுகின்றது.

மணி சாயங்காலம் 4 மணி இருக்கும். அந்த நேரத்தில் நான் ஒரு தையல் கடையிலே உட்கார்ந்து இருந்தேன். தற்செயலாக நான் பார்க்கின்றேன்… துணிமணிகள்… எத்தனையோ பொருள்கள்… தகரம்… எல்லாம் மேலே போய்க் கொண்டிருக்கின்றது. நூறு ரூபாய் நோட்டுகள் கூட பறந்து வந்து கொண்டிருந்தது.

பக்கத்திலேயே சூறாவளி வந்துவிட்டது.

அங்கே கட்டிலிலே ஒருவர் படுத்திருந்தார். அந்தச் சூறாவளி கட்டிலுடன் சேர்த்து அலேக்காக பனை மர உயரத்திற்குத் தூக்கிப் பறந்து செல்கின்றது அவர் அலறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் கட்டிலை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதை மற்றவர்கள் கவனிக்கவில்லை ரூபாய் நோட்டை எடுக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

நானும் ஒரு 200 ரூபாய் பணம் எடுத்தேன். அந்த நேரத்தில் என்னிடம் காசு இல்லை… இது நடந்த நிகழ்ச்சி. ஒரு நாயை அப்படியே தூக்கிச் சுழற்றுகின்றது அது வள் வள் என்று கத்திக் கொண்டிருக்கின்றது.

வீடுகளில் சில இடங்களில் மேலே ஒட்டுத் தகரங்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அதை எல்லாம் பிய்த்துத் தூக்கிக் கொண்டு மேலே செல்கின்றது. பார்த்தால் அடுத்து இங்கே வீட்டிற்கு மேல் ஒன்றையும் காணோம். உள்ளே இருக்கக்கூடிய சாமான்களை எல்லாம் தூக்கிக் கொண்டு செல்கின்றது.

இதை எல்லாம் கண்ட பின் ஒவ்வொருவரும் அரண்டு வீட்டிற்குள் சென்று ஒடுங்கத் தொடங்கினார்கள். தகரம் பறந்து வருகின்றது அல்லவா… வெட்டிவிடும் என்று சொல்லி வீட்டிற்குள் சென்றார்கள். நானும் வீட்டிற்குள் வந்து விட்டேன்.

இது எல்லாம் எதிர்நிலையான உணர்வின் இயக்கங்கள். நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குருநாதர் என்னிடம் பின்னாடி சொல்கின்றார். கண்ட அனுபவங்களைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

காற்றிலே இருக்கக்கூடிய நிலைகள் ஒரு செடியில் இருக்கக்கூடிய மணம் மற்ற மணங்களோடு கலந்து புது விதமாகத் தாவரங்கள் மாறுகின்றது அல்லவா. இது இயற்கை.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு தாவர இனங்களின் வித்தின் அணு செல்களை மாற்றிப் புது விதமான செடிகளைக் கொண்டு வருகின்றார்கள். உயிரினங்களிலும் அதனுடைய அணுக்கருக்களை எடுத்துக் கருப்பைக்கு வெளியிலே வைத்துப் புது உயிரினங்களாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். விஞ்ஞானம் இன்று இவ்வளவு முன்னேறி இருக்கின்றது.

ஆக இத்தனை இருந்தாலும்
1.நாம் எங்கே செல்ல வேண்டும்…?
2.எங்கே போகின்றோம்…? எங்கே போக வேண்டும்…? என்று சிந்தனை செய்யுங்கள்.

இன்னும் தலைவலி போகவில்லை மேல் வலி போகவில்லை என்று தான் என்னிடம் கேட்டுக் கொண்டு வருகின்றார்கள். “என்னுடைய வலி… வேதனை… போக வேண்டும் அதற்கு அருள் சக்தி வேண்டும்…” என்று கேளுங்கள் என்று சொன்னால் அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.

காரணம்…
1.உங்களுக்கெல்லாம் முழு சக்தி கொடுத்திருக்கின்றேன் அல்லவா.
2.நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை…! துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் எடுக்கப் பழக வேண்டும்.
3.சாமி காப்பாற்றுவார் சாமியார் காப்பாற்றுவார் என்பதை எல்லாம் முதலில் விடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு ஆக்சிடெண்ட்டை நாம் பார்க்க நேர்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலே அடிபட்டவர்கள் உடல் நசுங்கி இறந்து விடுகின்றார்கள்.

அடிபட்டு இறந்தவர்கள் வெளிப்படுத்திய உணர்வின் ஒலி ஒளிகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

டி.வி.யில் ஒரு மனிதனை இயந்திரத்தின் துணை கொண்டு படமாக்குகின்றனர். அதை ஒலிப்பேழைகளில் பதிவு செய்து மீண்டும் காந்தப் புலனறிவால் இயக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்புகின்றனர். அதை இன்னொரு இயந்திரத்தின் துணை கொண்டு நம் வீட்டில் அமர்ந்த இடத்திலிருந்து பார்க்கின்றோம்.
1.இதை வீடியோ என்று சொல்கிறோம்.
2.ஆனால் அதிலே படச் சுருள்களையோ உருவங்களையோ பார்க்க முடிவதில்லை.

ஏனென்றால் அது ஒலி… ஒளிப் பேழைகளை அதிலிருந்து அலைவரிசைகளாகத் தான் வெளிப்படுத்துகின்றது. காந்தப் புலனறிவால் கவரப்பட்டு எந்த மனிதனைப் படமாக்கி உருவாக்கப்பட்டதோ… அவன் எந்த நிலைகளில் இருந்தானோ அதனை அப்படியே நாம் டி.விக்களில் நாம் காணுகின்றோம்.

ஆகவே இதே காந்தப் புலனறிவால்தான் அது கவருகின்றது. அதன் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது… இது விஞ்ஞானம்…!

அதே போல் தான் ஒரு விபத்துக்குள்ளான மனிதனின் உடலிலிருந்து வேதனைப்பட்ட உணர்வுகள் அது வெளிப்படும்போது ஒலி ஒளி என்ற நிலைகள் அலைவரிசையில் வெளி வருகின்றது. அதைச் சூரியன் காந்த சக்தி கவருகின்றது.

1.எந்த மனிதனை நாம் உற்றுப் பார்த்தோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
2.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதில் எழும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.
3.அதை நமக்குள் உணர முடிகின்றது.

இதைத்தான்… நம் உயிரிலே இருக்கும் கவரும் சக்தியான காந்தப் புலனை லட்சுமி என்று ஞானிகள் சொன்னார்கள்.

ஒவ்வொன்றையும் தனக்குள் அந்த லட்சுமி கவர்ந்து… விஷ்ணுவாக (வெப்பம்) இருக்கும் தன் கணவனுடன் இணைந்து கவர்ந்த உணர்வின் சக்தியை அதே வேதனைப்படும் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக….! இதெல்லாம் நம் உயிருக்குள் நடக்கும் சம்பவங்கள்.
1.ஆக்சிடென்டைக் கண்ணுற்றுப் பார்த்தோம்
2.நம் உயிர் அதனை இப்படி ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

அந்த ஆக்சிடென்ட்டில் சிதைந்து போன உணர்வின் தன்மை உடலிலே உருப்பெறப்படும் போது அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வரும் போது இரவிலே சிதைந்த உடல் எல்லாம் கனவாக உருவங்களாக வரும். ஆனால் நாம் இங்கே பார்த்த இந்தச் சிதைந்தவனின் உருவு வராது

இவ்வாறு உடல்கள் சிதைவதையும்… சிதைந்து கொண்டு இருக்கும் உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வாக நம் ஆன்மாவில் இருந்து கொண்டு… நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி… மனிதனாக உருப்பெற்ற தன்மைகளையே மறைக்கச் செய்யும்.

அதற்குப் பின் நமக்குள் எதனைக் கண்டாலும் அச்சுறும் தன்மையும் அஞ்சிடும் உணர்வாகவும் வலுவாக இயக்கத் தொடங்கும். நம்மை உருமாற்றத் தொடங்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் ஆக்சிடென்டில் சிதைந்தான். ஆனால் நமக்குள் நுகர்ந்த உணர்வு உடலாக உருவான அந்த அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் பொழுது நமது உடல்கள் சிதைந்து விடுகின்றது.

அதே உணர்ச்சி நம் எலும்புகளில் பட்டுவிட்டால்…
1.அடிபட்டவனின் எலும்புகள் எப்படி நொறுங்கியதோ
2.அதிலிருந்து வந்த உணர்வின் தன்மையை நம் காந்தப் புலன் அறிவுகள் கவர்ந்து
3.இதனின் மலத்தொடர்கள் நம் உடலில் எலும்பை உருவாக்கும்
4.நல்ல அணுக்களின் மலங்களைக் குறைக்கச் செய்கின்றது… நம் எலும்புகள் பலவீனம் அடைகின்றது.

பின் எலும்பின் தன்மை சிதைந்து எதையாவது தொட்டவுடனே அல்லது ஏதாவது பட்டு இடித்து விட்டால் சடக்கென்று நொறுங்கிவிடும்… மாவு போல ஆகின்றது. அங்கே எலும்புகள் நொறுங்கியது. நொறுங்கிய உணர்வின் தன்மை அலைகளாகச் சென்றது. அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் இத்தகைய நிலை ஆகின்றது.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை அங்கே கவர்ந்தது நமது கண்கள் தான். இந்த உணர்வின் தன்மை “ஓ…” என்று ஜீவனாகின்றது. ஜீவ அணுவாக சிவமாகின்றது.

சிவத்திற்குள் அணுவின் தன்மை தனக்குள் அது தன் உணர்வை ஏங்கிப் பெற்று அதே உணர்வின் மலத்தை இடும்போது நம் உடலில் உள்ள எலும்பைத் தேய்மானாமாக்குகின்றது.

சில பேர் எனக்கு மூட்டு வலிக்கின்றது…! என்று சொல்வார்கள். நாம் கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த உணர்வின் தன்மை எதனுடன் தொடர்பு கொள்கின்றதோ இந்த உணர்வின் தன்மை ஓ…ம் நமச்சிவாய… என்று உடலாகின்றது.

சிதைந்த தன்மை வரும்போது அதே இடத்தில் உணர்வு சோர்ந்து வரும்போது சொன்னாலும் தான் அந்த பாகத்திற்குள் அதே அணு வளரும். இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

அதாவது நாம் நுகரும் அந்த அணுக்கள் இங்கே வந்துவிட்டால் அந்தப் பாகத்தில் இருந்து சர்க்குலேசன் – ஓடி வரப்படும்போது நம் நினைவாற்றல் எதுவோ அந்தக் குறித்த இடம் வந்தவுடன் அந்த இடத்தில் தேங்கிவிடும்.

பின் அதனின் உணர்வின் தன்மை மலமாகும்போது எலும்பு தேய்வடையும். டாக்டரிடம் போனால் உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள்.

இவர்கள் என்னால் நடக்க முடியவில்லை…! என்பார்கள். உடல் எடையின் தன்மை கூடும்பொழுது
1.முதலில் நேராக இருந்த கால்
2.தாங்காமல் நடந்து வந்தவுடன் இப்படிப் போகின்றது.

இவைகளையெல்லாம் அந்த இயற்கையின் நிலைகள் நமக்குள் எவ்வாறு மாற்றுகின்றது…? என்பதை நாம் பார்க்கலாம்.

இதைத்தான் கீதையிலே…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று
2.கண்ணின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் தெளிவுற உணர்த்தினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வருடம் முழுவதும் நேராகக் கோவிலுக்குள் போவோம். ஆனால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசலைத் திறப்பார்கள். அதாவது வடக்கு வாசலைத் திறப்பார்கள்.

அன்றைய தினம் எல்லாக் கோவிலிலும் வடக்கு வாசல் வழியாகப் போகும் படி அந்தச் சொர்க்க வாசலைத் திறந்து வைத்திருப்பார்கள்.

நாம் வழக்கமாகத் தெற்கு வாசலில் இருந்தும் போகலாம். கிழக்கு வாசலில் இருந்தும் போகலாம். வடக்கு வாசலை மட்டும் என்றைக்கும் அடைத்து வைத்திருப்பார்கள். “அது தான் துருவ நட்சத்திரம் என்பது…!” (நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருப்பது துருவ நட்சத்திரம்)

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரப்படி என்ன செய்கிறார்கள்…? வடக்கு வாசல் வழியாகக் கோவிலுக்குள் போய் சாமியைத் தரிசனம் செய்தோமென்றால் அன்றைக்கு “நமக்கு மோட்சம் பெறும் நாள்” என்று செய்து வைத்திருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக வேண்டி இராத்திரி எல்லாம் பட்டினியாக இருந்து விடிய விடிய முழித்துக் கொண்டு இருப்பதைக் காட்டி “நமக்கு நினைவும் படுத்துகின்றார்கள்…”

பரமபதம் என்று ஒரு அட்டையை வைத்திருப்பார்கள் அதிலே கீழே இருக்கும் கட்டங்களில் பல விதமான உயிரினங்களைப் போட்டிருப்பார்கள். முதலில் தாயம் போட்டவுடனே நகற்றிக் கொண்டே இருப்போம்.

ஒன்று இரண்டு மூன்று போட்டவுடன் ஒரு ஏணி இருக்கும் மேலே டக்… என்று மேலே போய்விடும்

மனிதனாக இருக்கின்றோம்…! பாம்பு வருகிறது என்று அந்தப் பாம்பை நாம் அடித்து விட்டால் அந்தப் பாம்பு மனிதனாகப் பிறக்கின்றது. அதே மாதிரி இந்த வால்பாகம் இந்த உணர்வின் தன்மை வந்தபின் டக்… என்று வந்தால் நேராக மேலே போகின்றது (பெரிய ஏணி).

பெரிய ஏணியை வைத்து மேலே போனாலும் பின்பு அதைக் கடந்து வந்தபின் பரமபதம் போவதற்கு முன் அங்கே விஷம் கொண்ட பெரிய பாம்பு இருக்கிறது.

தாயக் கட்டையை வைத்து உருட்டும்போது பாம்புத் தலை இருக்கும் அந்தக் கட்டத்தில் போனால் ஜர்.. என்று கீழே போய்விடும் எங்கே…? பாம்பிடம் பட்ட பிற்பாடு அந்த விஷத்தைக் கொண்டு நேராக பன்றியிடம் கொண்டு வந்து விட்டுவிடும்.

பன்றியிடம் வந்தபின்… மீண்டும்..
1.பன்றி எப்படித் தீமையை நீக்கி அந்த உணர்வின் தன்மை படிப்படியாக வலுப் பெற்றதோ
2.அதைப் போல தீமையை நீக்கும் ஆற்றலை நீ பெற வேண்டும்
3.மீண்டும் மனிதனாகி அதன் வழியில் வளர வேண்டும் என்று வரிசைப்படுத்தி இருப்பார்கள்.

இப்படி அந்தச் சொர்க்கவாசலை அடையும் வழியை… அந்தப் பரமபதம் என்ற ஒரு விளையாட்டின் மூலமாகக் கூடக் காட்டி
1.நமது வாழ்க்கையில் எப்படி எல்லாம் உயருகின்றோம்…?
2.எப்படித் தாழுகின்றோம்..? எப்படி நாம் மாறுகின்றோம்…? என்று காட்டுகின்றார்கள்.

பின் அந்தப் பெரிய பாம்பைக் கடந்து சென்றபின்தான் ஒவ்வொரு குணங்களுக்கும் நகர்ந்து சென்று அபாயம் இல்லாத நிலைகளை அடைகின்றோம். அப்படி அபாயம் இல்லாத நிலைகள் வரப்படும்போது “பூரண நிலைகள்” அடையும் தன்மை அங்கே வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் விஷத் தன்மைகளைக் கடந்த பின் அங்கே சொர்க்க வாசல் என்று (பரமபதம்) நமக்குக் காட்டுகின்றார்கள். சொர்க்கவாசல் என்பது… இந்த “உயிரின் வழி (வாசல்)” கொண்டு தான் அதை அடைய முடியும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நுகர்வது உயிரிலே பட்டுத் தான் அந்தந்த உணர்வுகள் நமக்குள் தெரிகின்றது.

ஆனால் அதே சமயத்தில் கண்ணிலே பார்த்த உணர்வின் தன்மை நம் உடலிலே பதிவாக்குகின்றது. பதிவானபின்.. அந்த எண்ணம் கொண்டு மீண்டும் கண்ணிலே பார்த்துத்தான் அந்த எண்ணங்களை எல்லாம் நாம் நுகர நேர்கின்றது.

அதைப் போன்று தான்…
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.
2.உங்கள் நினைவைக் கூர்மையாக்கி இதைப் பதிவாக்கிக் கொல்ளுங்கள்.

அந்தப் பதிவின் தன்மையை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்து “உங்கள் சொர்க்க பாதையான உயிரில் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்…!”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினை உள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து அதனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றால் தீமைகளை அகற்றிவிட்டு என்றும் ஒளியின் சரீரமாகத் திகழ முடியும்.

இது நம்முடைய சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் நல்லவர் கெட்டவராவதும் கெட்டவர் நல்லவராவதும் “சந்தர்ப்பங்களில் தான்…” கெட்டவர் நல்லவர் என்றாலும்…
1.”அந்தக் கெட்டவர்” நல்லவரின் நல்ல போதனைகளைக் கேட்கப்படும் பொழுது கெட்டதின் பலனைச் சிந்திக்கின்றார்.
2.நாம் கெடுதல் செய்தோம் நாம் அதிலிருந்து இப்பொழுது மகிழ்ச்சி என்ற நிலைகள் வரப்படும் பொழுது சிந்திக்கத் தொடங்குகின்றார்.
3.நல்லவரின் உபதேசத்தை ஏற்றுக் கொண்ட பின் தன்னை அறிந்து எப்படிப் பக்குவமாக நடந்து கொள்வது…? என்று அவருக்குள் சிந்தனை தோன்றுகின்றது.
4.சிந்தனை தோன்றும்போது அதன் வழி தனக்குள் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளும் (தீமையால் பட்ட அனுபவத்தால்)
5.பிறருக்குத் தீமை செய்து அவர்கள் தொல்லைப்பட்ட உணர்வுகள் நுகர்தறிந்ததால் ஞானங்களும் அங்கே அவருக்கு வருகின்றது.

இதைப் போன்று அவன் வாழ்க்கையில் நல்லவன் செயலை அதிகமாகக் கூர்மையாகக் கவனித்தால் அந்த உணர்வின் வளர்ச்சியாகி தன் வாழ்க்கையில் வியாபாரத்தை எப்படிப் பெருக்க வேண்டும்…? உயர்ந்த ஞானங்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்ற உணர்வுகள் அங்கே விளைகின்றது. “அவன் வாழ்க்கையிலே செல்வந்தன் ஆகின்றான்…”

அதே சமயத்தில் நல்லதைச் செய்து அதனால் எதிர்பார்த்த நிலைகள் வரும் பொழுது இரக்கம் ஈகை கொண்ட உணர்வுகளை நுகர்ந்து… நல்லவர் பிறர்படும் கஷ்டத்தினை நுகர்ந்து விட்டால்… அந்த உணர்வுகள் அவருக்குள் வலிமை பெற்ற பின் “பதட்டமும் பயமும்” வந்து விடுகின்றது.

ஏனென்றால் பிறிதொரு உணர்வின் தன்மை அச்சுறுத்தும் உணர்வுகளை இவர் பார்த்தாலும்
1.பரிவு மனம் கொண்டு இதனை நுகரப்படும் பொழுது
2.தன் உடலில் உள்ள நல்ல குணங்களில் இது பட்டபின் உணர்வுகள் எதிர்நிலையாகின்றது.

எவ்வாறு…?

நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலில் உள்ள நிலையும் அந்த அணுக்கள் இணைந்து “புது விதமான அணுக்களாக மாறுகின்றது…” அவ்வாறு உருமாறி விட்டால் அதனால் அடிக்கடி பயப்படுவதும்… சிந்திக்கும் திறன் இழப்பதும்… கவனக் குறைவுகள் ஆவதும்… பயத்தின் உணர்வு கொண்டு தன் வாழ்க்கையைச் சீராகப் பயன்படுத்த முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகவே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளால்
1.நல்லவர் கெட்டவராவதும் சந்தர்ப்பத்தால் கடும் நோயாக ஆவதும்
2.இதைப்போல பண்பும் அன்பும் கொண்டோர் உணர்வுகள் இவ்வாறு இயங்குகின்றது.

கண் கொண்டு பிறருடைய துயர்களை உற்றுப் பார்த்துக் கேட்டறிந்த பின் “ஓ…ம் நமச்சிவாய…” என்று இந்த உடலுக்குள் அணுக்களாக உருப்பெற்று விடுகின்றது.

இப்படி இருக்கும் இந்த நிலையில் நல்லவரை காக்க வேண்டும் அல்லவா. காரணம்… இந்த விஞ்ஞான உலகில் அனைத்தையுமே நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

மனிதன் கல்வியில் கற்றுக் கொண்ட உணர்வு கொண்டு “இதன் இதன் உணர்வுகள் இவ்வாறு இயக்கும்” என்று பதிவு செய்து கொண்டால் பதிவினை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது சிக்கலை நீக்கும் தன்மை வருகின்றது… வாழ்க்கையின் சிக்கலை நீக்க உதவுகின்றது.

ஆனால் வாழ்க்கையில் சிக்கல் கொஞ்சம் கடினமாகி விட்டால் வேதனையாகி அந்த வேதனை வளர்ந்து விட்டால்… சிக்கலை நிவர்த்திக்கும் உணர்வுகள் வந்தாலும்
1.வேதனைப்பட்டபின் தன்னையே சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அப்போது சோர்வடைகின்றது… அந்தச் சோர்வடைந்த நிலையில் ஒருவர் நல்லதைச் சொன்னால்
3.அந்த உணர்வுகள் தாங்காது கோபம் வருகின்றது… உணர்ச்சிவசப்படுகின்றார்.

இவ்வாறு நம் உடலுக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் “ஒவ்வொரு நொடிகளிலும் உணர்வு மாறிக் கொண்டே உள்ளது…!”

இன்றைய நிலை நாளை இல்லை…!

அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாகக் கூறுகின்றார்கள். அதே சமயத்தில் விநாயகருக்கு முன் எலியைப் போட்டு மூஷிகவாகனா என்று காட்டுகின்றார்கள்.

1.நாம் நல்லவர்களைப் பார்த்து அந்த உணர்வை அதிகமாக நேசித்தால்
2.நமக்குள் இருக்கும் கெட்ட குணங்களை அந்த நல்லது அடக்குகின்றது. அது தான் மூஷிகவாகனா…!

சுவாசித்த உணர்வுகள் இயக்கினாலும் வேதனையும் துன்பமும் படும் உணர்வினை ஒரு நல்லவர் பண்புள்ளவர் அந்த நல்ல சொல்லைக் கேட்டு நடந்தால் (சாதாரண நிலைகளில்) அதை நுகரப்படும் பொழுது கேட்டறியும் தன்மை வந்தால் இது பெருகுகின்றது ஓம் நமச்சிவாய என்று…!

கெட்ட குணங்களுக்குள் அந்த நல்ல உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது குறைகின்றது. ஆகவே
1.இயற்கையின் நியதிகளை… சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்தது…
2.அந்தந்த உணர்வின் இயக்கங்களாக நம்மை எப்படித் திசை மாற்றுகிறது…? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து தெளிந்து ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை… அந்த ஒளியான உணர்வுகளை நமக்குள் சேமித்து… இருள் சூழச் செய்யும் நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். நம் நல்ல குணங்களைக் காக்க வேண்டும்.

ஞானிகள் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றி விட்டால் அது செடியாகி அது வளர்ச்சி பெறும்போது அதனின் வித்துக்களை அதிகமாக உருவாக்குகின்றது.

இதைப் போல நம் உடலும் ஒரு நிலம் போன்றது தான். கோபமாகப் பேசும் மனிதன் உணர்வை நுகர்ந்து நாம் வித்தாக நமக்குள் ஊன்றி விட்டால் அந்த உணர்வு நமக்குள் கோபத்தை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கி விடுகின்றது.

கோபத்தின் உணர்வின் அணுக்கள் நம் உடலிலே பெருகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் சாந்த குணமாக இயக்கும் அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

உதாரணமாக பார்க்கலாம்… ஒரு கோபக்காரர் நம் பக்கத்தில் இருந்தால் அவர் யாரை எடுத்தாலும் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பார். இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்.. என்ன செய்கின்றேன் பார்…! என்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டுக் கோப உணர்வாக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.

இதைப் போன்று நாம் நுகர்ந்த கோப உணர்வுகள் அது அணுக்களாக உடலுக்குள் வளரப்படும் பொழுது…
1.புலி எப்படி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று புசிக்கின்றதோ
2.இதைப்போல நம் உடலுக்குள் அந்த அசுர அணுக்கள்
3.தன் அருகில் இருக்கும் நல்ல அணுக்களை இது கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

பின் நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த நல்ல உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாற்றும் “திரவகப் பொருட்கள்” கிடைக்காது போகும்

1.நம் உடலில் உள்ள நரம்புகளில் ஒரு விதமான அமிலம் உண்டு
2.அந்த திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ நீட்டுவதோ கடினம்.
3.அதே மாதிரி மூட்டுகளிலும் இந்தத் திரவகம் இணைக்கப்பட்டுள்ளது
4.மடக்கவும் நீட்டவும் அந்த வலுக் கொண்டு நம்மை இயக்க உதவுகின்றது.

இன்று நாம் பார்க்கலாம்.. இயந்திரங்களுக்கும் வண்டிகளுக்கும் விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு வித திரவகப் பொருளை (மசகு எண்ணை – LUBE OIL) கலக்குகின்றனர். அதன் மூலம் இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

பெரிய பெரிய இன்ஜின்களிலும் இதே போல் திரவகத்தைக் கலக்கின்றனர். அதற்குள் இருக்கும் பேரிங்குகளோ பிஸ்டனோ இந்தத் திரவகத்தை கலக்கப்படும்போது தேயும் தன்மையும் குறைகின்றது… ஒரே சீராக இயங்குகின்றது.

இதைப் போலத்தான்… நம் உடலில் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்ட அதனுடைய மலம் திரவகமாக மாற்றப்பட்டு எல்லா உறுப்புகளுக்குள்ளும் அது இணைந்த நிலையில் சீராக இயங்க உதவுகின்றது.

நம் உடல் உறுப்பு நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நுரையீரலில் நுண்ணிய அலைகளாக இயக்கி…
2,அதை இயக்கச் செய்யும் அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்
3.நாம் சுவாசிக்கும் அந்த வாயுவினுடைய (காற்று) தன்மைகள் சென்றபின் அது விரிவடைகின்றது.
4.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதிலுள்ள திரவக அணுக்கள் அதைச் சுருங்கி இழுக்கும்…. மீண்டும் அந்தக் காற்று புகும்போது விரிவாகும்.

ஒரு காற்றினை அழுத்தப்படும்போது அதனால் விரிவாவதும் பின் காற்றினைக் குறைக்கப்படும்போது அதனுடைய நிலைகள் குறைக்கின்றதோ இதைப் போல் தான் நம் சுவாசப்பைகள் இயக்குகின்றது.

இவ்வாறு தொடர்ந்து இந்த நுரையீரலை இயக்கச் செய்யும் நிலைகளில்… மற்ற அனைத்திற்கும் இந்த உணர்வின் தன்மையை ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களுக்கு அனுப்பும் செயல்களில்
1.இந்த ஆசிட் பவர் (திரவகம்) குறைந்து விட்டால்
2.அது இழுத்து விரிவடையச் செய்யும் காற்றின் நிலைகள் விரிவடைந்து விட்டால் “அதிகமாக விரிவடைந்துவிடும்…”
3.அதே போல் சுருங்கச் செய்யும் சக்தியும் நரம்பு மண்டலங்களில் அந்தத் திரவகப் பொருள் இல்லையென்றால்
4.நுரையீரலைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்துவிடுகின்றது.

இப்படி அந்தச் சுருங்கச் செய்யும் சக்தி குறைவடையப் போகும்போது நமது நினைவாற்றலையும் குறைக்கச் செய்யும்.

அதாவது…
1.இந்தத் திரவகம் நம் சிறு மூளை பாகம் வரை சென்று
2.அதனுடன் ஒன்றுடன் ஒன்று இயக்கப்படும் பொழுது
3.அதனுடைய அழுத்தக் குறைவு ஆகிவிட்டால் அந்த உறுப்புகளை இயங்க விடாமல் தடைப்படுத்துகின்றது
4.மிகவும் நுண்ணிய நிலைகளாக ஆக்கி விடுகின்றது (சிறுத்து விடுகின்றது)

இத்தகையை நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால் நமக்குள் தீய அணுக்கள் உள்ளே புகாது அவைகளைத் தடைப்படுத்தும் அந்த சக்தி இழக்கப்படுகின்றது.

நாம் எடுக்கும் கோப உணர்வின் அமிலங்கள் இத்தனை வேலைகளுக்கும் காரணமாகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் தீமையான உணர்வின் அமிலங்கள் நமக்குள் உருவாகாதபடி நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் எல்லாம் காட்டிற்குச் சென்று தவமிருந்து மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவது என்றால் முடியாது.

ஈஸ்வரபட்டர் என்னை (ஞானகுரு) வீட்டிலிருந்து அழைத்துச் சென்று காடு மேடெல்லாம் அழையச் செய்தார். என் குடும்பத்தாரையும் கஷ்டப்படுத்தினார். இயற்கையின் உண்மைகளை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காக அத்தனையும் செய்தார்.

என்னுடைய மூத்த பையன் அவன் நல்ல பையன் தான். ஆனால் வீட்டிலிருக்கும் சொத்தை எல்லாம் செலவழிக்கச் செய்துவிட்டார் குருநாதர். சொத்தெல்லாம் போய் அநாதையாக ஆக்கி விட்டார்.

என் பையன் செய்த அந்தக் குறும்புத்தனத்தால் பணம் எல்லாமே போய்விட்டது. அந்தச் சமயத்தில் குடும்பத்தை வழிநடத்த என் மனைவி மிகவும் அவஸ்தைப்பட்டது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு விஞ்ஞானி அவன் பல சங்கடங்கள் படலாம். தன்னுடைய விடா முயற்சியினால் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான். அதை இயந்திரமாகச் செய்து அதை இயக்கிக் காண்பிக்கின்றான். அதனின் செயலை நாம் அறிகின்றோம்.

அவன் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததை சரியான முறையில் நாம் ஏற்றுக் கொண்டோமென்றால் அந்த விஞ்ஞான அறிவு நமக்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரைச் செய்து கொடுக்கின்றான் என்றால்… முதலில் எவ்வளவு சிரமப்பட்டு அதை அவன் செய்திருப்பான்..! ஆனால் இன்று நாம் அதை விளையாட்டுக்குத் தட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கம்ப்யூட்டர் ஒன்றும் வேலை செய்யாது.

அதைப் போன்று தான் எவ்வளவோ சிரமப்பட்டு விளைய வைத்த ஞானிகளின் உணர்வை உங்களுக்கு இங்கே உபதேசமாக வித்தாகப் பதிவாக்குகின்றேன். அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணக்கூடிய உணர்வை எல்லாம் நம் உயிர் பதிவாக்கிக் கொள்கின்றது. எதன் வழி…? நம் கண்கள் வழி தான்…!

ரேடியோவிற்கும் டி.வி.க்கும் ஆன்டென்னா எப்படி இருக்கின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்திற்கும் இந்தக் கண்ணே ஆன்டென்னாவாக இருக்கின்றது… பதிவாக்குகின்றது.
2.பதிவான பின் அதே நினைவைச் செலுத்தப்படும்போது
3.வெளியில் காற்றிலிருப்பதை இழுத்துக் கொடுப்பதும் நமது கண் தான்.

கண் வழியாகக் கவரப்படும் உணர்வுகள் உயிரிலே படும்போது எண்ணமாக வருகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மைதான் இந்த உடலை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைப் பற்றிக் கோபமான எண்ணங்களைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தப் பதிவு… அவரை நினைத்தவுடனே இங்கே ஆத்திரம் வரும்.

அப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சிகள் வரும்போது அடுப்பில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தால் போதும். தன் நினைவை இழந்து அடுப்பிலே எதாவது பொங்கி வந்தால்…
1.துணியையோ மற்ற உபகரணத்தையோ எடுக்காமல்
2.உடனே அப்படியே கையில் தூக்குவார்கள்… கை சுட்டுப் போகும்… பார்க்கலாம்…!

அதே மாதிரி ஒரு கணக்கை எழுதிக் கொண்டிருந்தோம் என்று சொன்னால் அந்த வெறுப்பான எண்ணங்கள் வரும்போது இங்கே தப்பான கணக்காகப் போட்டு விடுவோம்.

பணத்தையே எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அந்த வெறுப்பான சமயங்களில் எண்ணிக்கை கணக்கில் வித்தியாசம் ஆகிவிடும்.
1.ஏனென்றால் அந்த உணர்வுகள் பதிவான நிலைகள்தான் நம்மை அவ்வாறு இயக்குகின்றது.
2.அந்த மாதிரி இயக்காமல் தடுக்க வேண்டுமல்லவா…!

இதையெல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தி இந்த ஆறாவது அறிவுக்கு உண்டு.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்… அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி முறைகளைத்தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்

 

இன்றைய உலகத்தில் நாம் செய்யக்கூடிய நன்மைகளுக்கு எவ்வளவு தூரம் அதனுடைய பலன் நமக்குக் கிடைக்கும்…? என்று பார்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் நன்மை செய்தீர்கள் என்றால்
1.அதற்காக வேண்டித் தவறுகளை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும்…
2.இந்தக் காலத்தில் சாட்சியங்கள் எல்லாம் அப்படித்தான் வரும்.

ஏனென்றால் “நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும்…!” இது குருநாதர் நமக்கு உணர்த்தியது.
1.நன்மை செய்ய வேண்டும் என்றால் மன உறுதி வேண்டும்.
2.பின் விளைவுகள் வராதபடி பாதுகாக்கக்கூடிய அந்தத் திறனும் ஞானமும் வேண்டும்.
3.நன்மை செய்பவர்களுக்குக் கெடுதல்கள் நிறைய வரும்
4.அதையெல்லாம் சமாளிக்கக் கூடிய வலிமை வேண்டும்.

இது எல்லாம் சாதாரண அனுபவத்தில் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டது.

ஆகவே இந்த வாழ்க்கையில் மிகவும் ஜாக்கிரதையாகவும் சிந்தனையுடனும் இருத்தல் வேண்டும். எதையுமே பரிசீலனை செய்து “வழி நடத்துதல் வேண்டும்”
1.அன்பை மட்டும் செலுத்தினால்… அந்த அன்பைக் காக்கக்கூடிய சக்தி வேண்டும்.
2.ஆகவே பண்பை நமக்குள் எப்படி உயர்த்த வேண்டும் என்ற நிலையைச் சிந்திக்க வேண்டும்.
3.அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ உணர்வுகள் வெளிப்பட்டால் அது பகைமை உணர்வுகளையே தூண்டும்.
4.பகைமை என்ற உணர்வு தோன்றி விட்டால் வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றும்.
5.வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றி விட்டால் நமக்குள் வெறுக்கும் உணர்வே வளரும்.

ஓம் நமச்சிவாய என்று இந்த உணர்வுகள் வேலை செய்யும். பகைமை என்ற உணர்வுகள் வரும் பொழுது ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் உருவாகும். அந்த அணுக்கள் நமக்குள் பெருக எந்த வகையில் அந்த அணுக்கள் உருவானதோ அதுவாகவே நம்மை இயக்கும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் அணுக்கள் உருவாகிவிட்டால் நல்ல செடிக்கு வரக்கூடிய சத்தினை அது கெடுத்து விடுகின்றது. அது போல் நாம் நுகரும் வேதனை உணர்வுகள் அணுக்களாக உருப்பெற்று விட்டால் அந்த உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது அதனுடைய வலிமை ஜாஸ்தி.
1.நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு அதற்குண்டான சத்து கிடைக்காதபடி தடைப்படுத்தும்.
2.நல்ல குணங்கள் வாடும். நல்ல குணத்தை உருவாக்கிய அணுக்கள் அது சுருங்கத் தொடங்கும்… நோயாக மாறும்.
3.இந்த விஷத்தன்மை அதிகமாக மாறி நம்மை அறியாமலே நல்ல பண்புள்ளவர்களை மாற்றி அமைத்துவிடும்.

பக்தியில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னைச் சோதிக்கின்றாயே…? என்று இந்த வேதனையைத் தான் நுகர முடிகின்றது. வேதனையிலிருந்து மீளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.

இயற்கையிலே ஒன்றை ஒன்று பார்த்து… உணர்வின் தன்மை நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான். மனிதனாக ஆன பின் நல்ல உணர்வுகளை… அருள் உணர்வுகளை… சீராக நுகரவில்லை என்றால்
1.நுகர்ந்த உணர்வுகள் இந்த உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி நோயாகி
2.மனிதனல்லாத உருவையும் அடுத்து உருவாக்கி விடுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்கின்றோம்
2.அந்த உணர்வின் ஏக்கத்தைப் பெருகச் செய்கின்றோம்
3.மகரிஷிகளின் பால் உங்கள் நினைவாற்றலைப் பெருகச் செய்கின்றோம்
4.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் ஆழப் பதிவு செய்கின்றோம்

ஆலயங்களில் இந்தத் தெய்வம் உங்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற நிலையில் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் யாக வேள்விகளைச் செய்யச் செய்து உங்களை வசியப்படுத்துகின்றனர்.

கோவில்களிலே வசியப்படுத்துவது போன்று… குருநாதர் என்னை வசியப்படுத்தியது போன்று…
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டுமென்று
2.உங்கள் உணர்வை அதிலே வசியப்படுத்தச் செய்கின்றேன்.

இந்த வசியத்தைக் கண்டுணர்ந்தபின்… உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் “கைவல்யப்படுத்த முடியும்…”

இதனின் துணை கொண்டு எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வைப் பிறர்பால் பாய்ச்சி அவர்களுடைய தீமைகள் வராமல் தடுத்தால் அது “ஏவல்…”
1.அந்தத் தீமைகள் அகல வேண்டும் என்ற நினைவால்
2.உங்கள் உணர்வின் தன்மை அங்கே தீமைகளை அகற்ற முடியும்…
3.உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஆகவே… அருள் ஞானிகள் காட்டிய பாதையில் நாம் செல்வோம். அருள் ஞானிகள் காட்டிய உணர்வில் அந்த முழுமை அடைவோம்.

உயிரால்… உணர்வால் நாம் அறிந்திடும் நிலையும்… இருளைப் போக்கிடும் உணர்வின் ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம். இருளைப் போக்கி ஒளி காணும் தன்மையாக உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்.

நாம் நுகரும் உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு “உணர்வை இன்னது தான்…” என்று அறியும் ஆற்றலைக் கொடுத்த அந்த நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக நாம் பெற முடியும்.

நம்மை ஆண்டு கொண்டிருப்பது நம் உயிர் தான். நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத் தான் உயிர் நம்மை ஆட்சிப் புரிகின்றது.

ஆகவே நமது குருநாதர் காட்டிய நிலைகள் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து… நீங்கள் வசியமாக்கிக் கொண்டு இந்த உணர்வின் தன்மை நீங்கள் அதை கவர்ந்துணர்ந்தால் அதை வைத்து மீண்டும் அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் கைவல்யப்படுத்த முடியும்.

உங்கள் மூச்சால் பேச்சால் உங்களுக்குள் வரும் தீமைகளை ஏவல் செய்து மீட்டிட முடியும். பிறருக்குள் உங்கள் சொல்லை அங்கே ஏவல்படுத்தித் தீமைகளை ஒழித்திட முடியும்.

நமக்குள் விளைந்த இந்த உணர்வின் தன்மைகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால் விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளையும் மந்திரத்தால் உருவான தீமைகளையும் அகற்றச் செய்ய முடியும்.

அந்த மெய் ஞான உணர்வு கொண்டு நாம் அனைவரும் கூட்டமைப்பாக இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும்போது தீமைகளை விளைவிக்கும் நிலைகளைப் பிளக்கவும் முடியும்.

அந்த ஆற்றல் பெற வேண்டும் என்றால் உங்கள் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும். விண் செலுத்தி விட்டால்…
1.விண் சென்ற அவர்கள் உணர்வை எளிதில் பெற்று
2.அவர்களின் துணை கொண்டு அந்த அருள் ஞானியின் உணர்வை எளிதில் பெற முடியும்.
3.நம்மை அறியாது வந்த தீமைகளைச் சுட்டு பொசுக்க முடியும்.

உண்மையான தியானம் இது தான்…!

ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை கவரும் நிலைக்கே உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை வசியப்படுத்தச் செய்கின்றோம்.

அதாவது இந்த உபதேசத்தை உற்றுக் கேட்ட உணர்வுகள் அந்த ஞானிகள் உணர்வின் தன்மை பதிவான பின்பு வசியம்…!

இந்த உணர்வின் தன்மை கூடும் போது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும். அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக அதைச் சேர்க்கும்போது அது கைவல்யம். ஒவ்வொருவரும் தனக்குள் அந்த சக்தியைச் சேர்த்திட முடியும்.

பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.யாரைப் பார்த்தாலும் “தீமைகள் அகன்றுவிடும்” என்று
2.உங்கள் சொல்லால் இந்த உணர்வின் தன்மை ஏவல் படுத்தும்போது
3.அங்கே இருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.

ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்து அதை எல்லை சேர்ப்பது போல நாம் அனைவரும் சேர்ந்து அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து இயக்கினோம் என்றால்
1.நமக்கு முன் படர்ந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை
2.அவரவர்கள் எண்ணி ஏங்கி எடுக்கும் அந்தப் பங்கின் விகிதாச்சாரப்படி உங்கள் ஆன்மாவில் கலக்கும்.
3.இப்படி இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும்போது தான் கைவல்யம் ஆகும்.

முதலில் வசியப்படுத்தும் நிலைக்கு உங்களைத் தயார் செய்தது இந்த உபதேசம். பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும்போது கைவல்யம். உங்களுக்குள் அந்தச் சக்தியின் தன்மை பெருகும்.

பின் தீமைகளை அகற்றும் உணர்வின் தன்மையாக கொண்டு நினைவால்… சொல்லால்… ஏவல் செய்ய முடியும் தீமைகளை அகற்ற முடியும். உங்களை நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதனுக்குள் உருவாகும் உறுப்பின் தன்மையை நேரடியாக நீ பார் என்றார் குருநாதர்.

ஒரு சமயம் திருச்சியில் ஒரு பையன் கையில் போட்டிருந்த மோதிரத்தை விழுங்கி விட்டான். டாக்டரிடம் சென்று மோதிரத்தை வெளியில் எடுக்க முயற்சித்திருக்கின்றார்கள். ஒன்றும் வெளியில் வரவில்லை.

பேதிக்கு மருந்து கொடுத்தார்கள் அது ஒன்றும் ஆகவில்லை. குடலில் சிக்கிவிட்டது.. அதனால் குடலை ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால் ஆபரேஷன் செய்தால் அவன் செத்து விடுவான்… என்ன செய்வது…? என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் பையனுக்கு ஏழு வயது. அப்புறம் நான் அங்கே செல்லும்போது அந்தப் பையனின் தாயாரைக் கூப்பிட்டு வந்து பையன் உடலில் உள்ள மோதிரத்தைப் பாரம்மா…! என்று சொன்னேன்.

ஆமாங்க… இந்த இடத்தில் இருக்கின்றது என்று அந்த அம்மாள் சொல்கிறது.

இரண்டு மூன்று வாழைப்பழத்தைச் சாப்பிடச் சொல்லி சில இதுகளைச் செய்யும் போது அந்த மோதிரம் கீழே இறங்கி வருகின்றது. அவர்கள் கண்ணில் பார்க்கின்றார்கள். வயிறு வலிக்கின்றது… இந்த இடத்தில் வலிக்கின்றது என்று சொல்கிறான். அப்புறம் இது வெளியில் வருகின்றது.

இது எல்லாம் யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் போது பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

ஏனென்றால் குருநாதர் ஒவ்வொரு உறுப்புகளையும் பார்க்கச் சொன்னார். சூட்சும நிலைகள் இயக்குவதின் நிலைகள் எவ்வாறு என்று அறியச் சொன்னார். அதைத் தெளிவாக அறிய முடிந்தது.

முன்பு எம்மிடம் பழகியவர்கள்… உதாரணமாக கந்தசாமி அவர்களை எடுத்துக் கொண்டால் முருகன் வருகிறார்… அவர் வருகிறார்.. இவர் வருகிறார்… என்று எத்தனையோ நிலைகளை அவர்களுக்குக் காண்பித்தேன்.

ஏனென்றால் ஒரு மனித உடலில் எடுத்துக் கொண்ட பக்தியின் உணர்வின் அலைகள் அது எவ்வாறு வருகின்றது…? என்று தெளிவுப்படுத்தி உள்ளேன்.

இயற்கையின் நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சாட்சியாக எடுத்து ஒவ்வொருவருக்கும் யாம் எடுத்துக் காட்டினாலும் அவரவர்கள் பெரிய சித்தராக ஆகி விடுகின்றனர்.

சாமிக்குத் (ஞானகுரு) தெரியாது…! நம்மிடம் கேட்டுத் தான் தெரிந்து கொள்கின்றார் என்று இப்படிப் பிரித்து சென்றவர் பல பேர்.

ஒரு நூற்றியெட்டுப் பேரை யாம் வடிவமைத்து ஒரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குவது…? என்ற அந்த உண்மைகளை எல்லாம் அறியச் செய்ய யாம் பல நிலைகளைச் செய்தாலும் அதைப் பெற முடியாத நிலைகளில் அவர்கள் இடைவெளிகளிலேயே பிரித்துக் கொண்டனர்.

எல்லாம் குவித்து ஒவ்வொரு நிலைகள் காண்பிக்கப்பட்டு எப்படி சத்திய சாய்பாபா தன் வாயிலிருந்து லிங்கத்தை எப்படிக் கக்குகின்றார் என்று அதே மாதிரி ஒரு பையனுக்கு எடுத்துக் காட்டச் சொல்லிச் செய்யச் சொன்னேன்.

பல முறைகளை பலருக்கும் பலவிதமான நிலைகளைக் காட்டிச் செய்யச் சொன்னேன்.

அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்கு அகஸ்தியருடைய உணர்வின் தன்மையை ஏற்றிக் கொடுத்த பின் அவன் தியானத்தில் இருக்கும்போது பச்சிலைகள் வரும்.

அங்கே ஒரு டாக்டருடைய அப்பாவிற்குக் கடுமையான தலை வலி. வலி குறைய 12 ரூபாய் மாத்திரை மூன்று வேலைக்குச் சாப்பிட வேண்டும். ஆனால் முழுவதும் தலை வலி நிற்கவில்லை.

ஆனால் அந்த டாக்டர் இந்தத் தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த மாதிரி இருக்கப்படும்போது அவர் தந்தை என்னுடைய தலை வலியைப் போக்க முடியவில்லை… என்னடா தியானம்…? என்று சொல்லிச் சத்தம் போட்டு அவர்களுக்குள் பெரிய கலாட்டா வந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் தான் முதலில் சொன்ன அம்பாசமுத்திரத்தில் இருந்த அந்தப் பையன் தியானத்தின் மூலம் எண்ணி எடுக்கும் போது ஒரு பச்சிலை வேர் வந்தது.

அந்த வேரை குருநாதர் டாக்டருடைய தந்தையின் தலை மாட்டில் வைக்கச் சொன்னார் என்று அங்கே போய் வைத்தான். அதை வைத்தவுடனே தலை வலியே போய்விட்டது.

அந்த விஷத் தன்மைகளை எல்லாம் எடுத்துவிட்டது. 12 ரூபாய் மாத்திரைக்கு வேலை இல்லாது போய்விட்டது.

1.அகஸ்தியன அன்று கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள்
2.அவர் அலைகள் இங்கே புகுத்தப்பட்டு
3.அதே உணர்வின் தன்மை எடுக்கப்பட்டு
4.21 பச்சிலைகள் (முக்கியமானது) அதை உறையும் தன்மையாக அந்த வேராகக் கொண்டு வரும்படி செய்தேன்.

கடைசியில் என்ன ஆகிவிட்டது…? அந்தப் பையன் வரவே இல்லை. வேறு வேறு விதத்தில் தவறான நிலைகளுக்கு அவன் நடக்க ஆரம்பித்தான்.

ஞானத்தின் வழியில் வளர்ச்சி ஆவதற்குத் தயார் செய்தேன். ஆனால் அவன் வேறு நிலைகளுக்குப் போய்விட்டான். நான் கூப்பிட்டவுடன் கிராக்கி செய்கிறான்.

அந்தப் பையனின் அப்பா பையனிடம்… சாமி உனக்கு எவ்வளவோ சக்தி எல்லாம் கொடுத்தார். ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்கிறார்.

“இது உனக்கெல்லாம் தெரியாது…” என்று அவன் கூறிவிட்டான். இப்படியெல்லாம் சில நிலைகள் ஆரம்பத்தில் நடந்தது.

ஏனென்றால் ஞானிகள் பெற்ற சக்திகளை நிரூபணம் செய்வதற்காக நான் சில முயற்சிகளை எடுத்தேன். அது எல்லாம் பலனற்றுப் போய்விட்டது.

இன்றைய உலகம் சுருங்கிக் கொண்டிருக்கின்றது. விஞ்ஞான அறிவால் பேரழிவின் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

மனிதனின் எண்ணங்கள் குறைந்து வரும் இந்த நேரத்தில் மெய் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் பரவ வேண்டும். உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். வேறு எதுவும் இல்லை.

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை

 

உதாரணமாக…
1.யாகம் நடக்கும் இடங்களில் மந்திரத்தை ஓதுகிறார்கள்… நாம் அதை உற்றுக் கேட்டோம் என்றால் அந்த மந்திரங்கள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
2.சோமபானம் என்ற நிலையை இணைத்தால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

எதனை எண்ணினோமோ அதன் வழி செல்கின்றது இதன் வழி நாம் செல்லும் இந்த உடலின் உணர்வுகள் பதிந்த பின் கேட்டறிந்த நிலைகள் பிறிதொரு உணர்வின் இயக்கமாகவே வருகிறது.

ஆலயங்களில் இந்தத் தெய்வம் தான் எல்லாவற்றையும் காக்கும் என்று சொல்லும் பொழுது யாகத் தீயிலே பல பொருள்களைப் போட்டு மணத்துடன் அந்த எண்ணத்தைப் பரப்புகின்றனர்.

நாம் நுகர்ந்தறிந்த நிலையில் தெய்வம் நல்லது செய்யும் நம்பிக்கையில் அதை நுகர்கின்றோம். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் இதன் வழி அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம்.

அங்கே வைத்திருக்கும் சிலையின் உருவமும் அங்கே அலங்கரித்த நிலைகளும் பதிவாகி நமக்குள் வருகின்றது அதிலிருந்து வரக்கூடிய மணத்தையும் மற்றதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தது அலைகளாக வருகின்றது.

அந்த அலையை நுகரப்படும் பொழுது உருவத்தைக் காண முடிகின்றது… அங்கே இருக்கக்கூடிய நிறங்களையும் காண முடிகின்றது. அதனின் மணத்தையும் உணர முடிகின்றது.

இப்படி நாம் உணர்ந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தபின் மடிந்தோம் என்றால் என்ன நடக்கிறது…?

இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீ முருகனைக் காணலாம் என்று சொல்லியிருப்பார்கள். எந்தெந்த குணங்களின் தன்மையோ அதற்குண்டான பதார்த்தங்களை வைத்து அவர்கள் ஜெபிக்கின்றனரோ
1.மனித உடலுக்குள் இந்த உணர்வுகள் கலந்த பின் இறந்தான் என்றால்
2.சூட்சும சரீரத்தில் முருகனைப் போன்று காட்சி தரும்… காளியைப் போன்று காட்சி தரும்.
3.காளியைப் போன்று அசுர உணர்வு கொண்டு செயல்பட்டால் இவன் குணமும் அதே நிலைகள் மாறும்… அசுர செயல்களையே செயல்படுத்துவான்.
4.கருப்பண்ணசாமியோ மாடசாமியோ போன்ற கொடூர உணர்வுகளை நுகர்ந்தால் அதனுடைய செயல்களே நமக்குள் வரும்… பார்க்கலாம்.
5.அருளாடும் போது அசுரத்தனமாக உணர்வுகள் பாய்ச்சப்பட்டு இயக்கும்.

ஆனால் அந்த உணர்வுகள் அவனுக்குத் தெரியாது. அது வேதனை என்ற நிலையாகி பல துன்புறுத்தும் நிலைகளையும் பார்க்கலாம். அவன் அறிய முடியாது. அவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அதைத் தாங்கிக் கொள்ளும்.

1.தீமிதி என்ற நிலை வரும் பொழுது அந்த அக்கினியைத் தனக்குள் நுகர்ந்தால்
2.யாகத் தீயைப் போட்டு அதன் வழி இன்னொரு மனிதன் மடிந்திருந்தால் அந்த உணர்வை நுகர்ந்தால்
3.தீயைப் போட்டு மிதித்து இருப்பான் (இறந்தவன்) என்றால்… இவன் அந்தத் தீமிதியைத் தாங்கும் நிலை வருகின்றது.

தீமிதி விழா என்று நாம் கொண்டாடும் பொழுது இதன் வழி விளைந்து அந்தத் தாய் மீது பற்று கொண்டோர் உணர்வுகளும் அதன் வழி மடிந்தால் இந்த உணர்வை மற்றவர்கள் நுகர்ந்தால்
1.தீமிதி விழா என்று வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு அவனுக்குத் தீயைத் தாங்கும் வல்லமை உண்டு.
2.இது எல்லாம் மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.

ஒரு ஆவியின் தன்மை உடலில் இணைந்து இயக்கப்பட்டால் நெருப்பிலே மிளகாயைப் போட்டோம் என்றால் அந்த நெடியைச் சுவாசித்து நாம் தான் எழுந்து வர வேண்டுமே தவிர “ஆவி பிடித்த அந்த உடலுக்குத் தும்மலும் வராது எதுவும் செய்யாது…”

இதைப் போன்ற இயற்கையின் நிலைகள் மாறி வரும் இந்நிலையில் நாம் இதையெல்லாம் உணர்ந்தால் நாம் எதனைப் பெற வேண்டும்…? எந்த வழியில் வாழ வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நலம்.

குரு காட்டிய அருள் நெறி கொண்டு அவரிடம் 20 வருடம் பெற்ற அனுபவத்த
1.ஒரு உயிர் தோன்றி மனிதன் வரை எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது…?
2.சூரியன் தோன்றிய பின் உயிரணுக்கள் எவ்வாறு உருவானது…? என்று குரு காட்டிய அருள் வழியில்
3.அவர் கண்ட நிலையில் உயிரணுக்களின் தோற்றங்களும் மாற்றங்களும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறியதைக் கண்டுணர்ந்த பின்பு தான்
4.நீங்களும் இதைப் பெற முடியும்… அறிய முடியும் என்று உணர்த்துகின்றேன்.

இந்த வாழ்க்கையில் இனி எது வேண்டும்…? பிறவி இல்லா நிலை வேண்டும் பிறவா நிலை வேண்டும். அந்த அருள் பெறுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துப் பழக வேண்டும் என்று சொல்வது.

அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெறுவோம். அதை நமக்குள் கூட்டுவோம். வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் நஞ்சுகளை மாற்றுவோம்.
1.தீமை வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை இடைமறித்து
2.இருள் சூழச் செய்யும் உணர்வினை மாற்றி நமது வாழ்க்கையில் பேரருளை உருவாக்கும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதருக்குள் ஒருவருக்கு ஒருவர் பகைமையான உணர்வுகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை நிறுத்த… அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து.. அந்தப் பகைமையை நீக்க அகஸ்தியனால் கொடுக்கப்பட்டதே விநாயகர் சதுர்த்தி.

1.எனக்குள் வந்த பகைமையை நான் நீக்குவதும்
2.யாரை நான் பகைமையான எண்ணினேனோ அவரும் இதே போல் பகைமை உணர்வை மறுப்பதும் தான் விநாயகர் சதூர்த்தி.

இப்படி ஏகோபித்த நிலைகள் கொண்டு மக்கள் அனைவரும் இந்த உலகம் முழுவதும் பகைமைகளை அகற்றிடும் சக்தியை எடுத்துத் தொழுவார்கள் என்றால் பகைமை உணர்வு இங்கே முழுமையாக அழிக்கப்படுகின்றது.

பமையான உணர்வுகளை இங்கே ஈர்க்கும் சக்தி இழக்கப்படும் பொழுது அதன் இருப்பிடத்தை மாற்றி நகன்று சென்று கடலின் ஈர்ப்பிற்குள் சிக்கி அது மறைத்து விடும்.

அந்த அகஸ்தியன் காட்டிய இந்த நிலைகளைத் தான் தத்துவ ஞானியர் விநாயகர் சதூர்த்தி என்று காட்டினார்கள்.

அன்றைய நாள் ஏகோபித்த நிலைகள் கொண்டு அனைவருடைய எண்ணங்களும் பகைமை அகற்றிடும் நிலையாக தீமைகள் தமக்குள் புகாது தடுத்து நிறுத்தும் மார்க்கம் தான் விநாயகர் சதூர்த்தி.

இதைப் பின்பற்றுவோர் நீங்கள் “சொற்பமாக இருக்கின்றீர்கள்…” என்று எண்ண வேண்டாம்.
1.நீங்கள் எடுத்து வெளிவிடும் அந்த அருள் ஞானிகளின் மூச்சலையால்
2.விஞ்ஞான அறிவைப் பொசுக்கிடும் திறமை பெறுகின்றீர்கள்.

நான் (ஞானகுரு) சொல்வது எளிமையான நிலைகளில் இருக்கின்றது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் யாம் பதிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து அந்த வலிமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செயல்படுத்த முடியும்.

மகரிஷிகள் தோன்றிய நம் நாட்டிலே..
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்பது போல
2.அந்த அகஸ்தியன் உணர்வலைகளை நமக்குள் பெருக்கி
3.அவன் உணர்வின் துணை கொண்டு நம் நாட்டைக் காக்கலாம்
4.உலக மக்களைக் காக்கும் சக்தியும் நமக்கு உண்டு.

அத்தகைய ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர் குலதெய்வங்களின் உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

அங்கே இணைத்து உடல் பெறும் உணர்வினைக் கருக்கி விட்டால் அதே உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது நஞ்சின் தன்மை கருக்கிடும் வல்லமையை நாமும் பெற முடியும்.

அதன் மூலம் நாம் எடுத்துக் கொண்ட மூச்சின் அலைகள் உலகம் எங்கும் பரவச் செய்யும் நிலைகள் வரும். இந்த உலகின் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது செயல்படும்.

மெய் ஞானியான… அன்று பித்தனைப் போல் இருந்த மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய “அந்த உணர்வின் சக்தியை” எல்லோரும் பெற முடியும்.

ஒரு திட்டுவோரின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அவரின் நினைவு வந்து நம்மை அடக்குவது போல அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை… தீமைகளை அகற்றிய அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும்போது… தீமையை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே மறவாதீர்கள்… ஏதோ பேசுகின்றேன்…! என்ற நிலைகள் வேண்டாம். உங்களுடன் ஒன்றிப் பேசும் போது தான் அந்த ஞானிகளின் உணர்வின் நிலைகள் உங்களுக்குள் ஒன்றி வரும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மன பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவரும் பரவச் செய்யுங்கள். உலக மக்களை ஒன்று சேர்க்கும் நிலையாக அது உங்களால் முடியும்.

அதே போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் நல்ல மழை நீர் பொழிய வேண்டும் என்று அந்த அருள் சக்திகளை மேகங்களில் கலக்கச் செய்தால் அந்த உணர்வின் தன்மை மழையாகப் பெய்யும்போது தாவர இனங்களில் இனம் புரியாத விஞ்ஞான அறிவால் தூவப்பட்ட நஞ்சின் தன்மைகளும் மறையும்.

இதற்கு முன் நம்மில் விளைய வைத்த நஞ்சின் தன்மையை ஒடுக்கவும் இது உதவும். நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அமெரிக்கா விஞ்ஞானத்தில் மிகவும் உயர்ந்தவன் ஆகிவிட்டான். மற்ற நாட்டின் விஞ்ஞான அறிவுகளைத் தடைப்படுத்தும் வல்லவனாக ஆகிவிட்டான்.

சேடிலைட் டி.வி. என்று அந்த அலைகளை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டுள்ளோம். இருந்தாலும்… “அதில் வரும் கேடான அலைகளை” யாரும் அறியவில்லை.

சில டி.வி.க்களில் அவன் விஷம் கலந்த உணர்வினை ஒளிபரப்பு செய்கின்றான். அது நமக்குள் பதிவாகின்றது.

அந்த ஒளி அலைகளின் நிலைகளை எல்லாம் சேமிக்கும் கிடங்காக… எதிர் நிலையான ஒளி அலைகளைக் கவர்ந்து நிலை கொள்ளும் நிலைகளுக்கு… அந்த விஞ்ஞான அறிவைப் பரப்பி விட்டான்.

ஏனென்றால் படிப்பறிவில்லாதவன் நான் சொல்கின்றேன். நாளைக்கு உங்களுக்குப் பத்திரிக்கை வாயிலாக வந்தால்தான் எல்லாமே தெரியும்.

ஐயோ… இதை அன்றைக்குச் சாமி சொன்னாரே…! என்று சொல்வீர்கள்.

விண்ணிலே ஒரு பெரிய கோளின் சிதையுண்ட பாகம் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னேன். அந்தப் பாகம் நம் பூமியில் விழாது… வியாழன் கோளில் தான் விழுகும்…! என்றும் சொல்லியிருந்தேன் (சுமார் 30 வருடம் முன்).

ஆனால் விஞ்ஞானிகள் இங்கே விழுகுமோ… என்றும் பின் தப்பி விட்டது…! என்றும் அவர்கள் கருவிகள் மூலம் கண்டுணர்ந்து சொன்னார்கள். பின் அந்த விஞ்ஞானி “அவன் தான் கண்டுபிடித்துச் சொன்னான்…” என்று அவன் பெயரையும் அதற்கு வைத்துக் கொண்டார்கள்.

அதே போல் தான் இதையும் யாம் சொல்கிறோம். விஞ்ஞான அறிவால் டி.வி. ரேடியோவை ரசித்துக் கேட்கின்றோம்… உற்றுப் பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம்.

அதன் மூலமாக… ஒரு நஞ்சு கலந்த உணர்வின் தன்மையை அவன் இயக்குவான் என்றால் அதை நமக்குள் பாய்ச்சியபின் காக்கா வலிப்பு போல் சுண்டும்.

இராணுவத்தில் இருக்கின்றான் என்றால் ரேடியோ அலைவரிசையில் அவனுடைய கூர்மையாக நிலைகளில் எதிரியைக் காண விரும்புகிறான் என்றால் அவனுக்குள் ஊடுருவி அவனுக்கு காக்கா வலிப்பாக வரவைக்கும்.

அவனுக்கு மட்டுமல்ல…! டி.வி.யைக் கேட்டவர்கள் அனைவருக்கும் அந்த அலைகளாக வந்தவுடன் உடலில் பதிவு செய்தது சுண்டிவிடும். பெரும் பகுதி இந்த மாதிரி வலிப்புகள் நிறைய வருகின்றது.

மனிதரைச் செயலிழக்கச் செய்யும் நிலைகளுக்கு அவன் பல முறைகளைக் கையாண்டுள்ளான். அதாவது
1.சக்தி கூடியதும் சக்தி குறைந்ததும்
2.விசை கூட்டியும் குறைத்தும் வைத்திருக்கும் இந்த நிலைகள்
3.எந்த நிமிடம் எதைச் செய்வார்கள்…? என்று சொல்ல முடியாது.

ஒரு நாடு தனக்கு அடங்கி வரவில்லை என்றால் இத்தகைய ஆயுதத்தை எடுத்துப் பயன்படுத்தித் “தனக்கு எவனும் எதிரி இல்லை…” என்ற நிலைக்கு அமெரிக்கா செய்வான்.

இத்தகைய நிலைகளை அவன் செய்வான் என்றால் தத்துவ ஞானியர்கள் (மகரிஷிகள்) அவ்வளவு எளிமையானவர்கள் அல்ல. அவன் கண்டுபிடித்த அணு குண்டைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்…!

இந்திய நாட்டைச் சீர்குலைக்கும் நிலைகளுக்கு எதைச் செய்தாலும் நிச்சயம் அதைப் படுவார்கள். ஏனென்றால்
1.அந்த விஷமான அலை வரிசைகளைக் கொண்டு மனிதனை செயலிழக்கும் நிலையாக
2.ஒவ்வொரு நாட்டையும் அடிமைப்படுத்த விஞ்ஞான அறிவால் வரப்படும்போது
3.அவனும் அழிகின்றான்… மற்றவர்களையும் அழிக்கின்றான்.
4.நாட்டு மக்களுக்கும் தீங்கைச் செய்கின்றான்

இதைப் போன்ற விஞ்ஞானத்தால் உருவாகும் தீமைகளில் இருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

 

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் எண்ணினால் அதற்குத் தக்க உடலுக்குள் அணுக்கள் உருவாகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதனுடைய இனத்தைப் பெருக்குகின்றது.

அது அனைத்தும் பெருகிவிட்டால் நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.
1.வேதனை அதிகமாகும் பொழுது உடல் சுருங்குகின்றது… எண்ணங்களும் சுருங்குகின்றது.
2.இந்த உடலையே மாற்றி அமைக்கும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத உடலைத் தான் பெறச் செய்கின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் நமக்குள் நாடி வருவது எதுவும் இல்லை. கோடிச் செல்வம் இருப்பினும் அதனால் நாடி வருவது எது…?
1.தீமை என்ற நிலையில் செல்வத்தைக் காத்திடும் அச்சமும் பயமும் வருகின்றது.
3.அதைக் காத்திடும் நினைவு வரப்படும் பொழுது காக்கும் உணர்வே வருகின்றது.
3.அதனால் வேதனை என்ற உணர்வும் தோன்றுகின்றது.
4.வெறுப்பை ஊட்டும் உணர்வுகள் பெருகுகின்றது.
5.நம் உடலுக்குள் அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகிறது.
6.செல்வம் நம்மைக் காப்பதில்லை. மனித உருவைச் சீர்குலைக்கும் ஆசையை ஊட்டுகின்றது.
7.பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கச் செய்கின்றது… தனக்கு எதிரி என்ற நிலைகள் பணம் கொண்டு கொலை செய்யச் சொல்கிறது.

துன்பப்படும் பொழுது அவன் சாபமிடுகின்றான். எனக்கு இவ்வாறு செய்கின்றான் அவன் உருப்படுவானா…? என்ற சாப அலைகள் பாய்ந்தால் இந்தச் செல்வத்தினால் சாபத்தைத் தேடுகின்றான்.

அந்தச் சாபத்தினால் இவன் செல்வத்தைக் காக்கும் நிலையே அற்று விடுகின்றது.. இதைப் போன்ற கொடுமைகள் மனிதனை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.தீமைகளை அகற்றும் உணர்வு பெற்றும் தீமைகளை வளர்த்திடும் உணர்வுகளே நமக்குள் வளர்ந்து
2.நம்மை அறியாதபடி அந்த இழி நிலை என்ற உணர்வுகளுக்கே செல்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நல்ல நிலை பெற வேண்டும். அதற்காகத்தான் பிறருடைய உணர்வுகள் தனக்குள் வளராது தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அருள் செல்வமாக அழியாச் செல்வமாகச் சேர்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது. நமக்குள் அறியாத புகுந்த தீமைகளை அது மாற்றி அமைக்கும்.

மனிதருக்குள் மனிதர் ஒன்று சேர்ந்த உணர்வுகள் ஒன்றாக இணைத்து கூட்டுத் தியான்ங்களின் மூலம்
1.உணர்வினை ஒலியாகப் பாய்ச்சப்படும் பொழுது செவி வழி உணர்வுகள் உடலுக்குள் செல்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் நிலை கொண்டு கண் வழி நுகர்கின்றது.
3.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
4.உணர்வின் தன்மை உடலுக்குள் அனைவரது ஆதரவும் நமக்குக் கிடைக்கின்றது
5.அறியாத வந்த பகைமைகளை மாற்றிடவும் முடிகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது இருக்கக்கூடிய உலக நிலைமை மிகவும் மோசமாக இருப்பதினால்
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற நிலையில்
2.நம் நாட்டில் அதிகமாகப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து
3.நம் நாட்டு மக்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர்ந்து சகோதர உணர்வு வளர வேண்டும். மத பேதமில்லாமல் இன பேதமில்லாமல் மொழி பேதமில்லாமல் அரசியல் பேதமில்லாமல் மக்கள் வாழ வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து இந்தக் காற்று மண்டலம் சுத்தமாக வேண்டும். நாம் அனைவருமே உலகத்திற்கு எடுத்துக் காட்டும் நிலைகளாக வளர்ந்து வர வேண்டும் என்று “நாம் எல்லோரும் எண்ண வேண்டும்…!”

இதை எல்லாம் சர்கார் தான் (அரசில் உள்ளவர்கள்) செய்யும் என்று எண்ணாமல்
1.நாம் தான் சர்காரில் (சர்காராக) இருக்கின்றோம்…
2.நாம் தான் ஆபிசராக இருக்கின்றோம்…
3.நாம் தான் தொழிலாளியாக இருக்கின்றோம்.. என்று எல்லோரையும் ஒன்றாக்கி
4.நாங்கள்…! “நாம்…” என்ற இந்த எண்ணங்கள் வரப்படும்போது பேதங்களே இந்த உலகில் வராது…
5.அந்தந்த அரசும் தடையில்லாமல் நடக்கும்
6.நம்முடைய இந்த நல்ல எண்ணங்களும் உலக முழுவதும் பரவும்.
7.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்.

இன்றிருக்கும் நிலையில் உதாரணமாக… நான் உத்தியோகத்தில் இருந்தேன் என்றால் நான் ஏதாவது தவறு செய்கின்றேன். ஆனால் உத்தியோகத்தில் இல்லாமல் வெளியே இருக்கின்றேன் என்றால் அவர்கள் செய்யும் குறைகளைச் சொல்கின்றேன்.

அதே சமயத்தில் உத்தியோகத்தில் இருக்கின்றார்கள் என்றால் நான்கு பேர் ஒன்று போல் ஒரு தேவையின் நிமித்தமாகக் கேட்கின்றார்கள் என்றால் அரசில் இருப்பவர்களாகச் செய்ய முடியவில்லை.

அந்த நான்கு பேரில் ஒருத்தருக்கு உத்தியோகத்தில் இருப்பவர் (அரசு) வேண்டியதைச் செய்தால் “இவர் நல்லவர்” என்று சொல்கின்றார். ஆனால் மீதி மூன்று பேர் “இவர் நல்லவர் இல்லை…” என்கிறார்கள்.

இப்படித்தான் உலக நிலைகளிலே இத்தகைய நிலைகள் வருகின்றது. குறை காணும் நிலையும் பகைமையாக்கும் நிலையும் வருகின்றது.

இது போன்ற நிலைகள் எல்லாம் மாற வேண்டுமென்றால் முதலிலே சொன்ன மாதிரி தியானித்தால் எல்லாருடைய உணர்வுகளும் சீராக வரும். விநாயகரை வணங்கும்போதெல்லாம் இந்த முறைப்படுத்தி நாம் தியானிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
1.நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் பெற வேண்டும்
2.எங்கள் ஊர் முழுவதும் படர வேண்டும்
3.இந்த நாடு முழுவதும் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணினோம் என்றால்
4.இந்த அருள் உணர்வுகள் பெருகுகிறது… குறைகள் நீங்குகின்றது.
5.நாம் என்ற நிலைகளில் அனைவரும் ஐக்கியமாவோம்
6.நமக்குள் பேதமில்லா நிலைகள் உருவாகும்.

இந்த நிலைகளை நாம் அவசியம் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால் தீவிரவாதிகள் கடுமையான நிலைகளைச் செயல்படுத்தி விட்டார்கள். பல விஷத் தன்மைகளையும் விஷத்தை உருவாக்கும் மருந்துகளையும் அவர்கள் உருவாக்கத் தெரிந்து கொண்டார்கள்.. அது உலகம் முழுவதும் பரவி விட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் சிறுகச் சிறுகப் பரவி இன்று உலகம் முழுவதிற்கும் பரவிவிட்டது. இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்
1.நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்
2.அதன் மூலம் விண்ணின் ஆற்றலை நாம் பெருக்க வேண்டும்
3.காற்று மண்டலத்தில் அந்த அரும் பெரும் சக்திகளைப் பரப்ப வேண்டும்.

அனைவரும் இவ்வாறு செய்தோம் என்றால் நம்மிடம் தீமையான உணர்வுகள் பதிவாகாது. பதிவானாலும் அதற்குச் சாப்பாடு வராது.

ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும் போதும் அதிகாலையில் எழுந்திருந்ததும் இது போன்று எண்ணுங்கள். மத பேதம் வராதபடி இன பேதமில்லாதபடி மொழி பேதமில்லாதபடி
1.உலகில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் சொல்லிப் பாருங்கள்.
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி…! என்று அந்த அகஸ்தியன் வாக்கு மீண்டும் இங்கே பிரதிபலிக்கும்
3.உலகம் அழியும் தருவாயில் இருந்தாலும் அதை நம்மால் காக்க முடியும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நஞ்சு கொண்ட உணர்வுகள் மனித உணர்வுக்குள் கூடிக் கூடி… இன்று மனித சிந்தனையே இழக்கப்பட்டு… மனிதனாக ரூபம் இருந்தாலும் மிருகத்திற்குண்டான உணர்வுடன் அசுர உணர்வு கொண்டு ஒருவனை ஒருவன் அழித்திடும் நிலை வருகின்றது.

இத்தகைய தன்மைகள் வரும்போது மதம் இனம் குலம் என்ற நிலைகளில் பாகுபாடுபடுத்தி… மனிதன் என்ற இனத்தை “நமக்கு நாமே அழித்திடும் நிலை வந்துவிட்டது…”

ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகளையும் இனத்தால் ஜாதியால் மதத்தால் நம்மை அறியாமலே நமக்குள் வெறி கொண்ட உணர்வு கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வந்தது… இந்த விஞ்ஞான அறிவால் தான்.

ஏனென்றால் இந்த விஞ்ஞானமே அன்று நாட்டைக் காத்திட அரசன் “பிரிவினை” என்ற உணர்வை ஊட்டப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு நாட்டுப் பற்று என்ற பெயரில் தன் நாட்டைக் காக்க இத்தகைய அழிவின் தன்மையை அன்றைய அரசன் இதைச் செய்தான்.

ஆனால் மெய்ஞானியோ இந்த மனித வாழ்க்கையின் நிலைகள் தனக்குள் வந்த தீய வினைகளைப் போராடி அதனை வென்று தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி விண் சென்றான்.

மனித உடலுக்காக வேண்டி இச்சைப்பட்டுத் தான் வாழ வேண்டும் என்று பிரித்தாளும் நிலைகள் கொண்டு அரசர்கள் இப்படித் தனக்கென்ற ஒரு கடவுளை நியமித்து அதை மதங்களாக மாற்றப்பட்டு கடவுளின் இஷ்டப்படி நாம் செயல்படுகின்றோம் என்று உணர்த்தினார்கள்.

ஒவ்வொரு மதங்களும் அதற்கென்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து… தான் எண்ணிய உணர்வைக் கடவுளாக்கி… அதன் நிலைகளை நியாயப்படுத்தி அதையே காத்திட முற்படுகின்றார்கள்.

தன் மதத்தைக் காக்க வேண்டும் என்ற நிலையில் மாற்று மதங்களாக இருந்தாலும் அந்தக் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் அதை அழித்திடும் நோக்கத்துடன் தான் எல்லா மதங்களும் உள்ளன.

தான் எண்ணிய கடவுள் இதைத் தான் கட்டளை இட்டான் என்ற நிலைகள் கொண்டு மனித இனத்தையே அழித்திடும் நிலைகள் கொண்டு போர்க்களங்களாகி மனிதனுக்குள் இந்த நஞ்சினை விளைய வைக்கும் நிலை ஆகிவிட்டது.

அரசன் கட்டளைப்படி போர் செய்தாலும் போர்க்களங்களில் உயிரை விடப்போகும்போது (உயிர் பிரிக்கப்படும்போது) தன் குழந்தைகளின் மேல் பற்று பாசமாக இருந்து அந்த பாச உணர்வால் தனக்குள் வெறித்தன்மையான உணர்வுகள் விளைந்து அந்த அலைகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது.

இதனால்… இன்று சிறிதளவு நமக்குள் குறை ஏற்பட்டாலும்
1.அது பழி தீர்க்கும் உணர்வின் தன்மையாக நமக்குள் வளர்ந்து
2.அவரைப் பழித்திடும் உணர்வும்… பழி தீர்த்திடும் உணர்வாக வளர்ந்து சிந்தனை இழந்து
3.ஒன்றும் அறியாத குழந்தைகளையும் தாக்கி… அவர்களைக் கூடப் பாதுகாக்கும் திறனற்று
4.நமக்குள் நஞ்சு கொண்ட உணர்வாக வளர்ந்து கொண்டுள்ளது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்ற அந்த மெய் ஞானிகள் உணர்வினை உங்களுக்குள் அருள் ஞான வித்துகளாகப் பதியச் செய்ய உபதேச வாயிலாக அதைக் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வலுவாக்கி… அதிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு…
1.நீங்கள் விடும் மூச்சலைகள்
2.இந்தக் காற்று மண்டலத்தில் பரவியுள்ள நஞ்சினை வென்றிடும் சக்தியாக மலர வேண்டும்
3.அருள் உணர்வு உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
4.உங்கள் மூச்சலைகளால் பிறருடைய தீமைகள் அகல வேண்டும்.

ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படும் நறுமணத்தின் தன்மை கொண்டு அதனுடைய வலுவால் மற்றதை எப்படி விலக்கித் தள்ளுகின்றதோ இதைப் போல
1.உங்கள் மூச்சின் அலைகள் வெளி வருவது
2.நஞ்சு கொண்ட அலைகளை இது துரத்தி… அதனைச் செயலற்றதாக்கி
3.அதனை நல்லதாக மாற்றும் நிலையாக வரவேண்டும்.

இந்த நிலை வந்தால்தான் வேகாக்கலை என்ற நிலையை அடையும் தன்மை வருகின்றது. ஆகவே…
1.வேகாக்கலை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்
2.அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் விளைந்திட வேண்டும் அது வளர்ந்திட வேண்டும்
3.உங்கள் பேச்சால் மூச்சால் செயலால் இந்த உலகைக் காத்திட வேண்டும்.
4,உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய நல் உணர்வைக் காத்திட வேண்டும்
5.உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்.

குரு அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்

 

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. மற்ற நட்சத்திரத்தின் அளவுகோல் வரும் பொழுது அதன் வழி மோதி எலக்ட்ரிக் என்ற நிலையும் மோதலின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது… மற்ற கோள்களையும் இயக்கும் தன்மை பெறுகின்றது.

பிரபஞ்சத்தில் இந்தக் காந்தப்புலனறிவு தான் உருவாகின்றது. பிரபஞ்சமே அதன் வழி தான் இயங்குகின்றது.

இருப்பினும் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் வானிலே வீசப்படும் பொழுது அது சூரியனில் மோதும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு மேக்னட் (டைனமோ) அதிகமாகச் சுழன்றால் காந்த சக்தி அதிகமாக உருவாக்கப்பட்டு அந்தக் காந்தத்தின் பவர் அதிகமாகி அதில் இணைக்கப்பட்ட சிறு பல்பின் தன்மை ஃபியூஸ் ஆகி விடுகிறது.

இதைப் போல தான் நமது உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுது
1.அதிலே வரக்கூடிய உணர்வினை அணுகுண்டின் கதிரியக்கப் பொறிகள் சூரியனில் தாக்கப்படும் பொழுது
2.ஒரு நொடிக்குள் இரு மடங்கு எலெக்ட்ரிக் அதிகமாகிவிடும்.
3.அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்திலும் அந்த இயக்கச் சக்தி பாய்கின்றது.

ஒரு அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எப்படி மின்னலாக மாறுகின்றதோ… இதைப் போல சூரியனில் மனிதனால் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் அதிகமாக மோதும் காலம் வந்து கொண்டே இருக்கின்றது.
1.அதனால் நம் உயிரில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வேகமாகச் சுழன்று
2.அந்த உணர்வு வரும் பொழுது நம் உடலில் உருவாக்கப்பட்ட அணுக்களின் தன்மை அனைத்தும் ஃப்யூசாகிவிடும்… நினைவுகள் இழந்து விடும்.
3.அசுர குணங்களே வரும்… உயிர் மடியாது… உணர்வுகள் மடிகின்றது… உணர்வுகள் மாறுகின்றது.
4.மனிதனாக உடலில் இருப்பினும் உணர்வுகள் சிதைந்து விட்டால் சிந்தனையற்ற நிலை ஆகிவிடும்.

இன்றும் சிலரை நாம் பார்க்கின்றோம். பித்துப் பிடித்தது போல் இருக்கின்றார்கள். மற்றவர் தாக்கினால் அவனுக்குத் தெரிவதில்லை. உடலில் பல காயங்கள் இருப்பினும் ஈ எறும்பு அதைக் கடித்தாலும் அதை அவன் உணர்வதில்லை.

இதைப் போன்ற நிலைகளில் உடல்கள் சிதைந்து மடிந்து மனிதனல்லாத உருவைப் பெரும் தகுதி தான் உருவாகும். உணர்வின் இயக்கத்திற்கொப்ப உணர்வினை உடலாக மாற்றும் தன்மையே வருகின்றது.

இதைப் போன்ற கொடுமையிலிருந்து நாம் மீள நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்தல் வேண்டும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்த ஞானத்தின் தன்மை பெற்றோமோ அந்த அருள் ஒளியாகப் பெருகுகின்றது.
1.“எண்ணத்தால் தான்” இதை எடுக்கின்றோம்.
2.சூரியன் தனக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து வரும் பொழுது நாம் நுகர்ந்தால்
3.அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது.

எண்ணத்தின் தன்மை வரப்படும் பொழுது எதை எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் கருவாகிறது. துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது அதன் உணர்வின் தன்மை நமக்குள் கருவாகி அது உருவாகின்றது. “அது எப்படித் தீமைகளை வென்றதோ அந்த ஞானம் நமக்குள் வருகின்றது…”

அந்த உணர்வின் தன்மை உடலாகும் பொழுது சிவமாகின்றது.
1.அகஸ்தியன் எப்படி ஒளியாக மாறினானோ… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்தால்
2.மின் கதிர்கள் பாய்ந்தாலும் அதனை எளிதில் பாய்ச்சி நம் உடலுக்குள் அந்தச் சக்தியைப் பெருக்குகின்றது… “மின் அணுக்களாக” மாற்றுகின்றது.

எப்படி மின்னட்டாம் பூச்சி தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் அதனுடைய துடிப்பில் மோதும் பொழுது “அதன் உடலின் பின் பகுதியில் வெளிச்சம் வருகின்றதோ” இதைப் போல
1.நம் உயிரின் துடிப்பின் தன்மை மின் கதிர்களாக மாற்றுகின்றது.
2.இந்த நிலையில் மனிதனான நாம் அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால்
3.இந்த உடலுக்குப் பின் இனி உடல் இல்லை… மனித உடலின் ரூபம் மாறி ஒளியின் நிலையைப் பெறுகின்றோம்.

கணவன் மனைவி இருவருமே இதை ஏங்கிப் பெற்று இந்த உணர்வின் தன்மை அறிவாக மாற்றி அருள் ஒளியாக மாற்றிப் பேரொளியாக மாறும் நிலை வருகின்றது.

அந்த வழியினைப் பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள். “நாமும் அவர்களுடன் இணைய முடியும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு தியானத்தின் மூலமாக வெளியிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் சிறுகச் சிறுகப் படர்ந்து இந்த நாட்டிற்கும் நன்மை செய்யும்… உடலுக்கும் நன்மை செய்யும்.. நம் எண்ணத்திற்கும் வலு வரும்.

இந்த உடலில் நாம் எத்தனை காலம் வாழப் போகின்றோம்…? அதிக பட்சம் நூறு வயது வரை வாழலாம். நூறு வயதிற்குப் பின் அப்புறம் இந்த உடலை விட்டு போகத்தானே வேண்டும்.

அதற்குள் நாம் சக்தியை எதன் வழியில் எங்கே பெருக்க வேண்டும்…?

இன்று உடலுடன் நாம் இருக்கும்போது
1.நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்த வேண்டும்.
2.அதன் வழி எண்ணத்தைப் பெருக்க வேண்டும்
3.நமக்குள் அந்தச் சக்தியைப் பெருக்க வேண்டும்.

இந்தப் பூமி முழுவதற்கும் நாம் விடும் மூச்சலைகள் உலகைக் காக்கும் எண்ணங்களாக வெளிப்பட வேண்டும்.

எப்பொழுதுமே… எதிலேயுமே… நாம் குறைகள் கண்டாலும் “அது நிவர்த்தியாக வேண்டும்…” என்ற எண்ணத்தில் தியானத்தைச் செய்து பழக வேண்டும்.

1.நிச்சயம் அந்த உணர்வுகள் நமக்குள் குறையாக வளராது
2.உலகைக் காக்கக் கூடிய நினைவாகவே அது வளரும்.

ஆகையினாலே நாம் ஒவ்வொருவரும் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்ற நிலையில் தென்னாட்டில் தோன்றிய நாம் (தமிழ் நாடு) முதலில் தெளிந்த நிலைகள் வர வேண்டும்.

இதிலே அரசியலை எண்ணவே கூடாது. ஏனென்றால் நாம் தான் அரசாங்கம். “அரசு நன்றாக இருக்க வேண்டும்…” என்று எல்லோரும் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகளால் நம் நாடு நன்றாக இருக்க… அதற்குண்டான நிலைகள் வளரும்.

நம் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது நல்ல உணர்வுகள் வளரும். அரசியல் பேதங்கள் வந்துவிட்டது என்றால் குறைகளைத் தான் கூறிக் கொண்டே இருப்போம்.

ஆனால் அரசியல் பேதமில்லாதபடி “அரசு இப்படித்தான் இருக்க வேண்டும்…” என்று நாம் எண்ணினோம் என்றால்
1.நாமும் அந்த நல்ல வழிக்குச் செல்கின்றோம்
2.மத பேதங்கள் இல்லாது… இன பேதங்கள் இல்லாது போகின்றோம்
3.நம் நாட்டை காக்கக் கூடிய நிலையாக வருகின்றோம்.

அதன் மூலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யலாம். அந்த உயர்ந்த பண்பின் நிலைகள் நம் நாட்டில் வர வேண்டும்.

ஏனென்றால் “தமிழ் பண்புகள்” என்பது என்றுமே… அன்றைய காலத்தில் இருந்து இன்று வரையிலும்… எல்லோரும் “குறையே இல்லாத நிலைகளை நிறைவான நிலைகளை அரவணைத்த நிலைகள் தான்…!”

சரித்திர பூர்வமாக எந்த நிலைகள் எடுத்துக் கொண்டாலும்… தமிழ் நாட்டிலிருந்து “அந்த ஞானிகள் இங்கிருந்து தான்…” உலகம் முழுவதும் உயர்ந்த தத்துவங்கள் பரவப்பட்டு இருக்கின்றது.

1.உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்
2.நாம் அனைவருமே எடுத்துக்காட்டாக வரவேண்டும்.

இந்த மாதிரிக் கொஞ்ச நாள் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியாலே நாம் உயர்ந்த நிலைகள் பெறுவோம். எல்லோரையும் உயர்த்த வேண்டிய நிலைகள் வரும். நல்ல பண்புகள் கிடைக்கும். கருவிலே விளையக் கூடிய குழந்தைக்கும் இந்த மாதிரி செயல்பட்டு வாருங்கள்.

மத பேதமும் இன பேதமும் மொழி பேதமும் அரசியல் பேதமும் உலகம் முழுவதற்கும் இராட்சச உருவை எடுத்து ஆடுகிறது. அதைப் போன்ற நிலைகளை நாம் மறந்து செயல்பட்டால் எல்லாமே நல்லதாகும். இந்தக் காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை நாம் நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இங்கிருந்து உலகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். இதே நிலையில் நாம் தியானிப்போம்… பிரார்த்திப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா. எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் மகரிஷிகள் அருள் சக்தி படர அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்து அந்த வலுவை நம் உடலில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

விநாயகரை வணங்கும் போதெல்லாம்…
1.மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
2.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும்…
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதற்கு அப்புறம் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும். எங்கள் ஊர் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் நன்றாக இருந்தால்… இந்த ஊர் நன்றாக இருந்தால்… நம் நாட்டு “அரசியலும்” நன்றாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு நிலைகளிலும் இந்த மாதிரிச் செய்யுங்கள்.

மகரஷிகளின் அருள் சக்தி எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும். தெருவில் வசிக்கும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்… நல்ல மழை பெய்ய வேண்டும்… நல்ல விவசாயம் நடக்க வேண்டும்…! என்று எல்லோரும் சொல்லுங்கள்.

நாம் இப்படிச் சொல்கிறோம்… ஆனால் அடுத்தவர்கள் சொல்லவில்லையே…! என்று நீங்கள் எண்ணவே வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து தெரு நன்றாக இருக்க வேண்டும்… விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

இப்படி நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லச் சொல்ல இந்த மூச்சலைகள்… அலைகளாகப் பரவும். பத்திரிக்கை வாயிலாகவோ மற்ற டி.வி. வாயிலாகவோ அரசியல் பேதமோ மத பேதமோ இன பேதமோ நாம் படித்து அல்லது பார்த்துத் தெரிந்து கொண்டால் கூட… அந்தப் பேத உணர்வுகள் நமக்குள் விளைந்திடாது தடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை பார்த்தாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள். அந்தத் துருவ நட்சத்த்திரத்தின் பேரருள் பேரொளி “என் உயிராத்மா பெற வேண்டும்…” என்று பல முறை சொல்லுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த ஊர் முழுவதும் படர வேண்டும். நம் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். நம் இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

இதனால் மொழி பேதங்கள் எல்லாம் மறையும்.

ஆகவே இதைப்போல நாம் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையில்
1.நமது தமிழ்நாடு அமைதி பெற வேண்டும்
2.இந்தியா முழுவதும் அமைதி பெற வேண்டும்
3.இந்தியாவினால் உலகம் முழுவதும் அமைதி பெற வேண்டும் என்று
4.இவ்வாறு வரிசைப்படுத்திக் கொண்டு போக வேண்டும்.

இதைத்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று சொல்வது.

குறைகளைக் கூறினால் குறைகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். அதை நிவர்த்தி செய்ய அப்பொழுது…
1.இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டால்
2.எல்லாமே நல்லதாக நடக்கும்.

எத்தகைய விஷத் தன்மைகளும் நாம் வாழும் பகுதிக்குள் வந்துவிடக் கூடாது. மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இங்கிருந்து எல்லாருக்கும் பரப்பச் செய்து உலகை நலம் பெறச் செய்யும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் செயல்படுத்தினால்தான் நாம் எல்லோரும் நன்றாக இருக்க முடியும்.

கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி

 

கணவன் மனைவி இல்லாது தனித்த மனிதனாக விண் சென்றால் அது வளர்ச்சி இல்லாதது. “முனி” என்ற நிலையையே அடைகின்றது.
1.அப்படி முனி என்ற நிலையில் வளர்ச்சி இல்லை என்றால் கடுகளவே இருக்கும். நாளடைவில் அது தேய்பிறை ஆகிவிடும்.
2.தேய்பிறையாகி அந்த ஒளிக்கற்றைக்குள் அது கலந்து “மற்றதற்கு உணவாக ஆகும் தன்மையே அங்கேயும் வருகின்றது…”

கணவன் மனைவி என்ற இரண்டற இணைந்தால் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் மகிழ்ந்திடும் உணர்வுகள் வருகின்றது. இங்கே எப்படி மகிழ்ந்து வாழ்கின்றோமோ… நாம் இப்போது விண் செலுத்தும் ஆத்மாக்கள் அங்கே இரண்டறக் கலந்தாலும்
1.மனைவியுடன் கலந்தால் அது வளர்ச்சிக்கு பெறும்.
2.இணைந்து வாழும் வளர்ச்சியாகி என்றும் ஜீவனுடன் இருக்கும்.

சாமியார்கள் என்று சொல்பவர்கள் திருமணம் ஆகாத நிலையில் அவருக்குப் பின் இனவிருத்தி இல்லை. எந்த உணர்வின் தன்மையைப் பெற்றார்களோ அதன் வழியில் அவன் மடிவான். அவன் வளரும் தன்மை இல்லை. அவன் வார்த்தைகளைக் கேட்ட மற்றவர்களும் மனைவி இழக்கும் நிலை தான் வரும். இவனும் அதற்குமேல் வளராத நிலையைத் தான் அடைய முடியும்.

சாதுக்களாக இருந்து திருமணம் ஆகாதபடி நான் பெரிய முனிவனாக இருக்கின்றேன். குடும்பப் பந்தம் இல்லாது செல்கின்றேன் என்று சொன்னாலும் அவர்கள் யாரும் மீள முடியாது.

மடாதிபதிகள் திருமணமாகாது இருக்கலாம். அன்று அரசன் காட்டிய வழியில் அவன் இயற்றிய சட்டத்தைக் காக்கும் காவலாளிகள் தான் மடாதிபதிகள்.

காரணம் திருமணமானால் பிள்ளைகள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள் என்று இப்படிப் பிரித்து உருவாக்கி விட்டார்கள். அவர் வழியில்… அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும் என்றும்
1.அருள் பெறத் தவம் இருக்கின்றேன் எனக்கு மனைவி வேண்டாம் மக்கள் இருந்தால் இந்த நிலை வராது என்று இருந்தால்
2.இவரைப் போன்று மடையர்கள் எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
3.நமது குருநாதர் அதைத் தான் சொல்வார்.

சொத்துக்காக சுகத்திற்காக வருகின்றார்கள். நாம் போற்றுகின்றோம்… ஆட்சி புரியும் நிலையில் அந்தந்த மதத்திற்குக் குருவாக வரும் பொழுது குருவின் அருளைப் பெறுவதற்காக தவறுகள் பல செய்கின்றார்கள்.

நமது குருநாதர் உலகில் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் தெளிவாக எனக்குக் காட்டினார். மனிதனால் தன் உடலின் இச்சையைத் தான் வளர்க்க முடிகின்றது.

மதத்தின் அடிப்படையில் அவன் ஆட்சி புரிய எண்ணினால் அந்தச் சட்டத்தை இயற்றும் காவலன் தான். மதத்தைக் காக்கும் காவலாளிகளாகத் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். மக்களை அவர்கள் வழியில் வழிப்படுத்தும் நிலைகள் தான் வருகின்றது.

ஆனால்
1.இயற்கையின் உண்மையின் இயக்கத்தின் நிலையை அறிந்து
2.மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை மதங்கள் சிந்திப்பதில்லை.

மதங்கள் காட்டிய நிலையில் அவன் காட்டும் ஆண்டவன் தான் கடைசி முடிவு. ஈகையும் இரக்கம் கொண்டு பிறருக்கு நீ உதவி செய் என்று சொல்லும் பொழுது அவன் இரக்க பாவத்தை ஈகையுடன் கேட்டறிந்தால் அந்த உணர்வுகள் அவனுக்குள் வந்தால் இந்த விஷங்கள் அவனுக்குள் மாறி இவன் அழியும் நிலையாக மீண்டும் இந்த புவிக்குள் சுழலும் நிலை தான் வருகின்றது. பிறவியில்லா நிலை அடைவதில்லை.

மதத்தின் அடிப்படையில் வருபவர்களால் தன் மதத்தைக் காக்க உதவும்.

ஆனால்
1.ஞானிகள் காட்டிய நிலைகள் மகரிஷிகள் காட்டிய நிலைகள் அவன் வளர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற்ற
2.அவனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.அந்த உணர்வின் துணை கொண்டு நஞ்சை ஒளியாக மாற்றிடும் நிலை பெற முடியும்.

அந்த நிலையை அடைவது தான் மனிதனின் கடைசி நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூட்டுத் தியானங்களில் நாம் பதிவு செய்த வலுவான சக்தி துணை கொண்டு ஈஸ்வரா… என்று நம்மை இயக்கும் உயிரை எண்ணி ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் மூலம் நம் உடலுக்குள் நம்மை அறியாது சேர்ந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வின் சக்திகளை பலவீனப்படுத்தச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அது நம் உடலுக்குள் நோயாகி நல்ல குணங்களைச் செயல்படுத்தாது ஆக்கி விடும்.

1.இப்படி அடிக்கடி நாம் அந்த விண்ணை நோக்கி ஏகி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஆத்ம சுத்தி நாம் செய்து கொண்டால்
3.அன்றன்று அந்தந்த நிமிடங்களில் நமக்குள் நம்மை அறியாது ஏற்படும் தீமைகளை அகற்ற இது உதவும்.

அது மட்டுமல்லாமல்… நம்முடைய எண்ணங்கள் கூர்மையாக அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நம் நினைவலைகள் அங்கே இணைக்கப்படுகின்றது.

இதனை நாம் வலுக் கூட்டக் கூட்ட… விண்ணின் ஆற்றலும் அந்த மகரிஷிகளின் தொடர்பும் நமக்குக் கிட்டுகின்றது.

நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ வேதனைகளை அனுபவித்துத் தான் நம்மை வளர்த்து நமக்கு எத்தனையோ சுகங்களையும் கொடுத்துள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாக உயர்ந்து வாழவும் வைத்துள்ளார்கள் செல்வங்களும் நமக்கு சேமித்து வைத்து உள்ளார்கள். செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் செல்வத்தைச் சேமிப்பதற்கு எவ்வளவோ வேதனைகள் பட்டு அனுபவித்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.

அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து மனித நினைவு இழந்து உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்க்கப்படும்போது இன்னொரு மனிதனின் உடலுக்குள் அவர்கள் புகுந்தாலும்
1.அந்த ஆன்மா முதல் முதலில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்வை அந்த உடலிலே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி
2.நஞ்சின் உணர்வைத் தான் அந்த ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

மீண்டும் இப்படி பல உடலுக்குள் போனாலும் அந்த நஞ்சைத் தான் வளர்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனின் உருவாக அந்தக் கருப்பெறும் தன்மையை இழக்கப்படுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சியில் வந்தது போல… மீண்டும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச்சி தேய்பிறையாகி… பௌர்ணமிக்கு மறு நாள் தேய்வதுபோல மனிதனின் ஒளிச்சுடர் நாம் அறியும் நிலைகள் மங்கி… நாம் மீண்டும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாம்போ தேளோ பல்லியோ இது போன்ற விஷ ஜந்துக்களின் நிலையை அடையச் செய்து விடுகின்றது நமது உயிர்.

நம் முதாதையர்களின் உணர்வுகள் நம் உடலிலே உண்டு. அவர்களுடைய உணர்வுதான் நம் உடலை இத்தகைய நிலைகளுக்கு வளர்த்தது. நம்மை மனிதனாக உருவாக்கியது நம் முதாதையர்களுடைய எண்ணங்களே.

1.ஆகவே நம் வாழ்க்கையில் வரும் துன்பத்தைத் துடைக்க
2.அடிக்கடி விண்ணை நோக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும்போது
3.நமக்குள் வலுப் பெறும் இச்சக்தியின் துணை கொண்டு
4.நம் முதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி இணைக்கச் செய்ய வேண்டுமென்றால் இப்போது நாம் இங்கே எப்படிக் கூட்டுத் தியானங்களில் செய்கின்றோமோ இதைப் போன்று குடும்பக் கூட்டு தியானங்கள் செய்து அந்தந்தக் குடும்பத்திலிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைப் பிரிந்த நிமிடமே அவர்கள் இதைப்போல சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து பிறவா நிலை என்னும் ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று ஐக்கிய உணர்வின் வலுக்கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கூட்டுத் தியானம் உதவும்.

அந்த உணர்வின் சக்தியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தையே வைத்துள்ளோம்.

ஒரு உந்து விசை வைத்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி மற்ற செயற்கைக் கோள்களை விஞ்ஞான அறிவு கொண்டு அனுப்புவது போல மகா ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு
1,நம் முதாதையர்களின் உயிரான்மாக்களை
2.சரீரம் அற்ற அந்தச் சூட்சம சரீரத்தை… “விண் செலுத்துவதே” இந்தப் பயிற்சி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நம் நண்பரின் கஷ்டத்தை நாம் கேட்டறிகின்றோம். அவர் பட்ட கஷ்ட உணர்வு நம் உயிரிலே பட்டவுடனே நாமும் சோர்வடைகின்றோம்.

ஐயோ.. பாவம்…! நல்ல மனிதன்… உனக்கும் இப்படிக் கஷ்டம் வந்துவிட்டதா…? என்று கேட்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம். அப்போது உதவி செய்யும் போது நம் நல்ல மனதில் அவருடைய கஷ்டமான உணர்வுகள் கலந்து விடுகின்றது.

தங்கத்தை நகையாகச் செய்ய வேண்டும் என்றால் செம்பையும் வெள்ளியையும் கலப்பார்கள். அதைப் போன்று அவருடைய கஷ்டம் கலந்தாலும் வாழ்க்கையில் உதவி செய்து விட்டோம்.

வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு உதவி செய்தால் தான் நாளைக்கு அவரும் உதவி செய்வார். அப்பொழுது
1.இந்த வாழ்க்கை என்ற செயினிற்கு (தொடருக்கு)
2.அவரோடு தொடர்பு கொண்டு அந்த அன்பை நீங்கள் வளர்க்கின்றீர்கள்.
3.கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்து வீட்டிற்குள் வருகின்றீர்கள். பேரப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சியதும் அந்தக் குழந்தை வீர்… வீர்… என்று கத்துகின்றது.

குழந்தை கத்தியவுடன் மருமகளைக் கூப்பிட்டு… நீ பிள்ளையைக் கவனிக்கும் முறை இது தானா…? ஏன் உன் பிள்ளையை இப்படி அழுகச் செய்கிறாய்…? என்று கேட்போம்.

இல்லையே…! இது வரை குழந்தை நன்றாகத் தான் இருந்தது. இப்பொழுது நீங்கள் வந்தவுடன் தான் அழுகின்றது…! என்று மருமகள் சொல்கிறது.

அதற்கு நாம் என்ன சொல்வோம்..? அப்படியானால் நான் தான் தப்பு செய்தேனா…? என்று அங்கே சண்டை வருகிறது.

ஏனென்றால்…
1.அங்கே நம் நண்பருடைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்டோம்
2.அதை நாம் சுத்தப்படுத்தவில்லை
3.அது இங்கேயும் வந்து வரிசையில் அடிக்கின்றது.

கேட்டறிந்த கஷ்டத்தையும் வெறுப்பையும் வேதனையையும் துடைக்க வேண்டுமல்லவா…?

அதற்காகத்தான் விநாயகரைத் தெருவுக்குத் தெரு வைத்துக் காட்டினார்கள் நம் ஞானிகள். நண்பருடைய இன்னல்களைக் கேட்டறிந்தோம்… உதவியும் செய்துவிட்டோம்… ஆனால் அந்த இன்னலான உணர்வு நம் உடலில் அது சேரக் கூடாது.

நம் உடலில் சேரக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். நாம் எண்ணுவதை எல்லாம் அவன் தான் நமக்குள் உற்பத்தி (உடலாக) செய்கின்றான்.

ஆகவே அவனைத் தான் அந்த நேரத்தில் எண்ண வேண்டும். ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.விநாயகரைப் பார்த்து இந்த முறையில் கும்பிட்டுப் பழகினால் தான்
2.நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்
3.நம்மை அறியாது உட்புகந்த கஷ்டங்களையும் இன்னல்களையும் அடக்கும்…
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக வளரும்.

ஆனால்… இரண்டு தோப்புக்கரணம் போடுகிறேன்… உனக்கு இரண்டு அருகம்புல்லை வைக்கின்றேன்…! எனக்கு நல்லது செய்…! என்று விநாயகரிடம் கேட்டால் இந்த எண்ணம் தான் வரும்.

ஆகையினால் ஈஸ்வரா.. என்று நம் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து நினைவை வானை நோக்கிச் செலுத்தி மீண்டும் கண்ணின் நினைவை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது…!

கண்ணில் பார்த்தவுடன்…
1.ஒருவன் தப்பு செய்கின்றான் என்று நம் கண் காட்டுகிறது.
2.அது மட்டுமல்ல… தவறு செய்த உணர்வை நம் கண் இழுத்து
3.அவன் தப்பு செய்கின்றான் என்று கண் தான் நமக்குள் தெரிய வைக்கின்றது… இல்லையா…?

அப்பொழுது நாம் நண்பரின் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டோம் என்று கண் உணர்த்திய பின் உடனே என்ன செய்ய வேண்டும்…?

அதே கண்ணின் நினைவை கொண்டு… உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி அந்தச் சக்தியைச் சுவாசித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வலிமையான மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகுவதற்குத்தான் விநாயகரை வைத்தனர். ஒவ்வொரு நாளும் காலையில் அங்கே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்ய வேண்டும் என்று உந்தித் தள்ளும்படி செய்தார்கள் ஞானிகள்.
1.முன்னோர்க்ளை முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும் நல் வினையை உன் உடலில் சேர்க்க வேண்டும்
2.அப்பொழுதுதான் நீ விண்ணிற்குச் செல்வாய்… மனிதன் என்ற நிலையில் நீ முழுமை பெறுவாய்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் நம் உயிரை வேண்டி கஷ்டப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.தங்கத்தில் திரவத்தை ஊற்றி அதில் கலந்துள்ள செம்பும் வெள்ளியையும் ஆவியாக மாற்றுவது போல்
2.அந்த ஞானியர்கள் உணர்வைச் செலுத்தி நாம் சுத்தப்படுத்த வேண்டும்.

அதன் பின் நண்பரைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய். உன் சிரமம் எல்லாம் நீங்கிப் போகும். நீ நன்றாக இருப்பாய்…! என்று
1.நம்மை முதலில் தூய்மைப்படுத்திவிட்டு அந்த வலுக் கொண்டு
2.நீ நன்றாக இருப்பாய்…! என்று நண்பரிடம் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்

 

அன்று புலையர்கள் என்று மலைவாழ் மக்களாக காடுகளில் விலங்குகளுடன் வாழ்ந்தவர்கள் விஷத்தன்மைகளை முறிக்கும் ஆற்றல்களையும் தான் நுகரும் வேதனை கொண்ட சக்திகளிலிருந்தும் விடுபடும் சக்தி பெற்றிருந்தார்கள்.
1.மற்ற எதிர் நிலையான உணர்வுகள் எவ்வாறு இருக்கிறது…? என்றும்
2.மூலிகைகளின் மணத்தை நுகர்ந்து அதன் இயக்கம் எவ்வாறு…? என்றும் அறிந்துணர்ந்து
3.அதை வைத்து நோய்களை மாற்றி அமைத்தார்கள்.

ஆபரேஷன் செய்வதற்கு இன்று மனிதனை நினைவிழக்கச் செய்வது போன்று ஒரு பச்சிலையை எடுத்து உடலின் அந்தப் பாகத்தில் வைத்து தடவி விட்டால் அந்த இடத்தில் உணர்ச்சிகள் இருக்காது.

அதைக் கிழித்து அவன் எலும்பை இணைத்துக் கொண்டு வரும் வரையிலும் இப்படித் தப்பிக் கொண்டார்கள்.

காடுகளின் விலங்குகளுடன் விலங்குகளாக வாழ்ந்தவர்கள் மிக விபத்தான நிலைகள் ஏற்பட்டாலும் சில பச்சிலைகளின் சாறுகளை எடுக்கின்றார்கள்.
1.பெரிய எறும்புகளை எடுத்துப் பிண்ணை (PIN) வைத்துத் தைப்பது போன்று
2.இரண்டு குடலையும் வைத்து எறும்பை வைத்துக் கடிக்க வைக்கின்றார்கள்
3.அதற்குப் பின் எறும்பின் தலையைக் கிள்ளி விடுவார்கள்.
4.இது இறுக்கிப் பிடித்த பின் சேர்ந்து விடுகின்றது.
5.இன்று தையல் போடுகின்றோம்… ஆனால் அக்காலங்களில் இந்த முறைப்படி செய்தார்கள்.
6.அந்த எறும்பின் உடலின் விஷத்தின் அமிலங்கள் இதனுடன் கலந்த பின் இரண்டறக் கலந்து விடுகின்றது.
7.இதனின் உணர்வுகள் அதனை இணைத்துக் கொண்டு பச்சிலை என்ற மூலிகைகள் ஒன்றுடன் ஒன்று தசைகளை இணைத்து விடும்.

இன்று அபூர்வமாகப் பல ஆபரேஷன்களைச் செய்கின்றேன் என்று சொல்கின்றார்கள். இதைக் காட்டிலும் அன்றே நுணுக்கமாகச் செய்துள்ளார்கள்.

கேன்சர் நோயாக இருந்தாலும் அதற்கு இதே பச்சிலைகளை எடுத்து கேன்சர் உண்டான இடங்களில் அதை நேராக பாய்ச்சப்படும் பொழுது
1.எங்கே அந்த விஷத்தின் வேர்கள் வருகின்றதோ அங்கே கறுக்கப்படுகின்றது.
2.இது சென்றபின் அந்த விஷத்தை முறித்து விடுகின்றது… கேன்சர் நோயையும் நீக்கினார்கள்.

அந்தக் காலத்தில் ராஜ வைத்தியம் செய்தவர்கள் எல்லாம் அரசர்களுக்கு மட்டும் செய்வார்கள். மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள். இப்படித்தான் அன்று செயல்படுத்தினார்கள்.

இதை எல்லாம் கண்டுணர்ந்த புலஸ்தியர்கள் அதைச் செய்தார்கள்.
1.ஆனால் நானும் பார்த்தேன் குருநாதர் உணர்வால்…!
2.அன்றைய மலைப் பகுதி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்…?
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் துணை கொண்டு எப்படித் தீமைகளை நீக்கினார்கள்…?
4.எப்படி நோய்களைப் போக்கினார்கள்…? என்று அறிந்து கொண்டேன்.

ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு தன் நாடு நான் அரசன் என்ற நிலை வரும் பொழுது இருப்பதை எடுத்துக் கொண்டால் தனக்கு வேண்டும் என்று போர் முறைகள் வந்தது. அரசர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

தன் ஆசையின் உணர்வால் மற்றொன்றை அழித்து மிருகங்களைப் போன்று “மற்றவர்களுடைய நிலையைப் பறித்துத் தான் சுகமாக வாழ வேண்டும்” என்று செயல்படுத்தினார்கள்.

அதன் வழிப்படித் தான் இந்த உலகமே இன்றும் மாயையில் சிக்கிக் கொண்டு மனித உடலின் இச்சைக்கே வருகின்றது. அரசன் தான் வாழப் பல முறைகளைக் கையாண்டான்.

அதன் வழிகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞானத்தால் பூமிக்குள் பல நச்சுத்தன்மைகள் அடைந்து விட்டது. சாக்கடையின் கழிவிற்குள் பன்றி தன் உணர்வைப் பாய்ச்சி நஞ்சினைப் பிளந்து அதற்குள் மறைந்த நல்ல உணர்வினை எவ்வாறு நுகர்கின்றதோ அதைப்போல
1.நீங்களும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நஞ்சினைப் பிளந்து தீமைகளிலிருந்து விடுபட்டு
2.நல்ல உணர்வுகளை நுகரும் சக்தி பெற்று பேரருள் என்ற உணர்வுகளை உருவாக்கி
3.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் ஒளியின் சரீரமாக வேண்டும்.

பன்றி நஞ்சினை நீக்கி நஞ்சற்ற நிலைகளைச் சுவாசித்து நல்ல உணர்வுகளான பின்… நஞ்சால் உடலான நிலைகளைப் பிளந்து விட்டு நஞ்சினைப் பிளந்திடும் உணர்வுகள் கொண்டு மனிதனாகப் பிறக்கச் செய்தது. மனிதனான பின்… உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது மனித உடல்.

அதைப்போல நமக்குள் வரும் நஞ்சினை நீக்கும் ஆற்றலை “நம் எண்ணத்தால்” எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும். அப்படி நீக்கிப் பழகியவர்கள் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதன் வழியைப் பெற… உங்களுக்குள் பதிவாக்கும் உபதேசத்தின் நிலை கொண்டு
1.இந்தப் பிரபஞ்சத்தில் கலந்த நஞ்சினை உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு பிளந்து
2.நஞ்சிற்குள் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து… உங்களுக்குள் அதைச் சேர்த்து
3.நஞ்சால் கவர்ந்த உடலை நீக்கிய பின்… உயிரான ஒளி கொண்டு ஒளியின் சரீரமாக இணைந்து வாழ்ந்திடவும் வளர்ந்திடவும் முடியும்.

கணவன் மனைவி இருவரும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து… யார் ஒருவர் இந்த உணர்வினை வளர்க்கின்றார்களோ… அவர்கள் முழுமையான வளர்ச்சி அடைய முடியும். அத்தகைய நிலையை நீங்கள் எல்லோருமே பெற மகரிஷிகளை வேண்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுத் தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்

இதிலிருந்தெல்லாம் மீண்டு இன்னொரு மனிதனுடைய ஈர்ப்புக்குச் சிக்காமல் முதல் முதலில் நம் பூமியிலே வாழ்ந்த அகஸ்தியர் என்ன செய்தார்…?

நம் பூமியின் சக்திகளை எல்லாம் அறிந்தார். சூரியக் குடும்பத்திலிருந்து வரும் சக்திகளை எல்லாம் நம் பூமி வட துருவத்தின் வழியாக எப்படிக் கவர்கின்றது…? என்பதையும் உணர்ந்தார்.

அந்தத் துருவத்தையே எண்ணி ஏங்கி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக விண்ணிலே இன்றும் இருக்கின்றார்.

அதிலிருந்து ஒளிச் சரீரமாகப் போனவர்களிடமிருந்து பல பல ஒளி அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. அகஸ்தியனைப் பின்பற்றிப் போனவர்கள் தான் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

1.வானிலே நாம் பார்த்தால் அந்த ஏழு நட்சத்திரங்கள் தனியாகத் தெரியும்
2.கேள்விக் குறி போல் அது தெரியும்.

நாளை நீ எதுவாகப் போகின்றாய்…? இந்தப் பிள்ளை யார் (பிள்ளையார்) என்று கேள்விக் குறி போட்டிருக்கின்ற மாதிரி இதிலிருந்து தப்பிப் போனவர்கள் அனைவரும் எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அந்தக் கேள்விக் குறி மாதிரி… அந்த நட்சத்திரங்கள் இங்கிருந்து பார்க்கும் போது
1.நாம் எங்கே போக வேண்டும்
2.மனிதன் எப்படி இருக்க வேண்டும்…? என்று
3.கேள்விக் குறியாகப் போட்ட மனிதன் அங்கே இருக்கின்றான்.

இப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து போன உயிரணுக்கள் நம் கண்ணுக்குப் பார்த்தால் தெரிகின்றதோ…?

ஒரு சிலர் இந்தத் தியானத்தில் இருப்போருக்கு உடலை விட்டு உயிராத்மா செல்லும் போது கொஞ்சமாவது தெரியும். பாக்கிப் பேருக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இதே எண்ணத்தில் இருப்பதனால் காண முடிகிறது.

இந்த உயிராத்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவுடனே முதலில் சிறியதாக இருக்கும். சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய சக்தியை உணவாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் விண்ணிலிருந்து வரும் விஷத்தை வடிகட்டி வெளியில் அனுப்புவதனால் அந்த வட்டத்திற்குள் இருப்பதை ஆகாரமாக எடுத்து இந்த உயிராத்மாக்கள் ஒளியின் சரீரமாக ஆகும்.

நாம் பூமியில் விளைய வைத்த இந்தச் சத்தை எடுத்து உடலாக மாற்றுகின்றது புழுவிலிருந்து மனிதன் வரையிலும். ஆனால்
1.இதிலே இந்த உணர்வை ஒளியாக மாற்றி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்திகளை எல்லாம்
3.தன்னிச்சையாக விஷத்தை முறித்து ஒளியாக மாற்றிடும் சக்தி இந்த ரிஷிகளுக்கு உண்டு.

அந்த அலைகள் விண்ணிலேயும் இருக்கின்றது. நம் பூமியிலும் படர்ந்திருக்கின்றது. அதை எடுப்பதற்காக வேண்டித் தான் இங்கே உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

கெட்டதை நீக்கி நல்லதை (ஒளியான உணர்வுகளை) எடுக்கக்கூடிய இந்த ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும்போது உங்கள் உயிரை ஈசனாக மதித்து நடக்க வேண்டும். உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உடலுக்கும் உங்கள் உயிரே குரு…!

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும்போது அனைவரும் ஒன்று போல உங்கள் உயிரான ஈசனை வேண்டி ஏங்கி யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி எண்ணும்படி வேண்டிக்கொள்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

1.நீங்கள் யாரையும் வேண்டவில்லை… உங்கள் உயிரைத்தான் வேண்டிக் கொள்கின்றீர்கள்
2.அவனின்றி ஒரு அணுவும் அசையாது
3.இந்த உயிர் உடலில் இல்லையென்றால் உடலான சிவம் சவமாகி விடுகின்றது
4.சிறிது நேரமானால் நீசமாகிவிடுகின்றது என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

அதனால் தான் மீண்டும் சொல்கின்றேன். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கும்போது…
1.அருள் உணர்வைப் பெறலாம்
2.அறியாத இருளை நீக்கலாம்
3.பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்
4.அருள் வாழ்க்கையும் வாழலாம்.
5.இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றவும் முடியும்.

இந்தச் சக்தி ஒவ்வொரு மனிதர் உடலிலும் உண்டு. இப்படி நாம் பக்குவப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையே… சந்தர்ப்பமும் மற்ற சூழ்நிலைகளாலும் பல திசைகளிலும் இயக்கப்பட்டு அதன் மூலம்
1.மனிதன் வாழ்க்கையில் உயர்வதும்
2.மனிதன் வாழ்க்கையில் நோய் வருவதும்
3.மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருவதும்
4.ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் சந்தர்ப்பத்தால்… “நுகர்ந்தறிந்து உணர்ந்த உணர்வால் நிகழ்வதுதான்… இது எல்லாம்…!”

யாரும் தவறு செய்யவில்லை என்று மீண்டும் சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிர் வழியாகச் சுவாசித்து உடலுக்குள் விளையச் செய்தால் அந்தச் சந்தர்ப்பத்தால் வரும் இன்னல்களை அகற்றலாம்.

நல்லதை உருவாக்கும் சந்தர்ப்பமாக நாம் என்றுமே உருவாக்க முடியும். அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று நம் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்கின்றோம்.

எனக்குப் பின்னாடி… நீங்கள் தான் சாமி ஆகின்றீர்கள்… எல்லோரையும் அருளைப் பெறச் செய்யுங்கள்

 

அருளைப் பெருக்க உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன். அதன் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் பெறுவீர்கள். அதை ஏங்கிப் பெறுங்கள்.

இதுவரையிலும் உபதேசித்த உணர்வுகள் உங்களிடம் பதிவாகி இருக்கின்றது. குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி “அவர் ஒளியான உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துக் கொடுக்கின்றேன்…” நிச்சயம் நீங்களும் அந்த அருளைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி மெய்ப்பொருளை நீங்கள் காண முடியும்.

சில பேர் என்ன நினைக்கின்றார்கள்…?
1.சாமி இருக்கின்ற வரையிலும் தபோவனம் இருக்கின்றது.
2.சாமிக்குப் பின் என்ன செய்யப் போகின்றோம்…? என்ற எண்ணங்கள் இருக்கின்றது…!
3.சாமி என்றைக்குமே நீங்கள் தான்…! நீங்கள் சாமி ஆகின்றீர்கள்…!
4.இந்த உணர்வுக்குப் பின்னாடி இந்தச் சக்தியை நீங்கள் பெருக்குகின்றீர்கள்.
5.இந்த உணர்வைப் பதிவு செய்து விடுகின்றேன்.

குருநாதர் உடலுடன் இருக்கும் பொழுது எனக்குள் (அப்படித்தான்) பதிவு செய்தார். இப்பொழுது ஒளியின் உடலாக இருக்கின்றார். அவர் கண்ட உண்மை எல்லாம் நான் பெற முடிகின்றது.

அந்த உணர்வுகளை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.எனக்குப் பின்னாடி நீங்கள் இதையெல்லாம் எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல முடியும்.
2.நான் ஒருத்தன் தான் இத்தனை பேருக்கும் சொன்னேன்.
3.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து உலகத்தின் நிலைகளை இந்த ஸ்தாபனம் மூலம்
4.”உலகத்திற்கே எடுத்துக்காட்டாக” பெரிய ஸ்தாபனமாக இது அமையும்… அதைப் பார்க்கலாம்.

இதைப் பதிவு செய்வதற்குத் தான் உங்களிடம் தெரியப்படுத்தியது.

ஆகையினால்
1.எப்பொழுதுமே உங்களுக்குள் அருளைப் பெருக்குகின்றீர்கள்.
2.அதை எல்லோருக்குள்ளும் பெருகச் செய்கின்றீர்கள்.
3.எல்லோருக்கும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் யாம் பதிவு செய்வது.
4.நீங்கள் வளர்ந்தால் உலகத்தில் ஞானங்கள் பெருகுகின்றது.
5.உலகத்தில் ஞானம் பெருகினால் உலகமே அமைதி அடைகின்றது.

அப்படி அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள். யாருடைய கஷ்டத்தை நீங்கள் கேட்டாலும் “ஈஸ்வரா…” என்று சொல்லி உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உங்கள் தொழில் நன்றாக இருக்கும் குடும்பம் நன்றாக இருக்கும் வாழ்க்கை நன்றாக இருக்கும் உடல் நலமாகும் என்று இந்த வாக்கினை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

1.உங்கள் உணர்வு அவர்களை நல்லவராக்கும்… கஷ்டம் என்ற சொல் உங்களுக்குள் வராது.
2.இப்படி நீங்கள் ஒவ்வொருவருமே என்னைப்போல வளர வேண்டும்.
3.நான் பார்த்த உடனே உங்கள் நோய் போகின்றது நீங்களும் அந்த அளவிற்கு வளர்ந்து வந்தால் தான் நல்லது.
4.சாமியைப் பார்த்த்தால் என் நோய் போனது… ஆகவே “நான் (சாமி) பெரிது” என்ற எண்ணத்திற்குச் சென்று விடாதீர்கள்… தவறான வழியில் சென்று விடாதீர்கள்.
5.நோயை நீக்கும் உணர்வுகளும் நோய் உடலுக்குள் புகாத நிலைகளையும் கொண்டு வாருங்கள்.

இனி இந்த உலகம் எப்படி இருக்கும்…? என்று சொல்ல முடியாது. இந்த 4000 ஆண்டுகளுக்குள் பல சிக்கல்கள் இருக்கின்றது.

ஆகவே கருவில் வளரும் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானத்தை ஊட்டுங்கள். ரோஜாப்பூ எப்படி நல்ல நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றதோ அதே போன்று நாமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் எடுத்து நம் உடலுக்குள் நல்ல அணுக்களைப் பெருக்கிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் உங்களுக்குச் சக்திகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

குழம்பு வைக்கும் போது நீங்கள் சங்கடமாக இருந்து பாருங்கள்… குழம்பு ருசியாக இருக்காது… அது கெட்டுவிடும். சந்தோஷமாக இருந்து செய்து பாருங்கள்… அது நல்ல ருசியாக இருக்கும். ஆக உங்களுடைய உணர்வு தான் அதை ருசியாக மாற்றுகின்றது. பிறருடைய தீமை உங்களுக்குள் புகாது இருக்க வேண்டும்.

உயர்ந்த ஞானம் பெற்று பிறருடைய தீமைகளைப் போக்கும் அருள் சக்தியாக நீங்கள் மாறியே ஆக வேண்டும். அந்த நிலை பெறுவதற்குத் தான் அடிக்கடி இந்த உபதேசத்தைக் கொடுப்பது.

1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் குரு அருளையும் பெறப்படும் போது வசிஷ்டர்.
2.அந்தச் சக்தி உடலிலே பிரம்மம் ஆகும். பிரம்ம குருவின் மனைவி அருந்ததி.
3.நமது குருவும் துருவ நட்சத்திரமும் எதைச் செய்ததோ அந்தச் சக்தி இணைந்தே நமக்குள் வாழும்.
4.அதன் வழியே நமக்குள் குருவாக அது வந்து வழிகாட்டும்… பிறருடைய உணர்வுகளில் அதைப் பாய்ச்சப்படும் பொழுது அதுவும் அந்த நிலை ஆகும்.
5.ஆகையினால் இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றை மட்டும் நீங்கள் சொன்னால் போதுமானது.
6.உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள். “வாயில் அல்ல… செயலில்…!”

இந்த உணர்வைக் கூட்டக் கூட்ட காற்று மண்டலத்தில் எத்தகைய தீமைகள் இருப்பினும் அது நம்மைத் தாக்காது. அருள் உணர்வுகள் நமக்குள் பெருக நமது சொல் பிறரின் இருளைப் போக்கும்.

அந்த நிலைக்கு நீங்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும். நீங்கள் பெருகப் பெருகத் தான் உலகத்தில் ஞானக் குழந்தைகள் பெருகும். உலக மக்களையும் நலம் பெறச் செய்யும் சக்தியாக மாறும்.

உங்களுக்குள் அற்புத நிலைகளாக…
1.நமது குரு எங்கெல்லாம் சென்றாரோ அந்த அருளை எல்லாம் நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்… அதைப் பதிவாக்குகின்றேன்.
2.குருவை நீங்கள் தரிசனம் செய்யலாம்… அனேகமாக அவர் உங்களுக்குக் காட்சி தரலாம்… உங்களை அவர் துருவ நட்சத்திரத்தோடு இணைக்கலாம்.
4.உங்கள் மனதில் எந்த அளவிற்கு ஏக்கம் இருக்கின்றதோ குருவை நீங்கள் பார்க்க முடியும்.
5.அருளை நீங்கள் பெறலாம்… பேரின்பம் பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குரு காட்டிய அருள் நெறிகளை இப்பொழுது உங்களிடம் பதிவு செய்கின்றேன். ஏனென்றால் இன்று குரு ஒளி உடல் பெற்ற நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

1.அவரைப் போலவே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றுங்கள்
2.இந்த உடலுக்குப் பின் இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுங்கள்.

ஆனால் உங்களுக்காக… நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. சாமி மாற்றுவார்… சாமியார் மாற்றுவார்… என்று சொன்னால்
1.நீங்கள் அந்த உணர்வை எண்ணுகின்றீர்களோ
2.அதை உங்கள் உயிர் தான் உருவாக்குகின்றது.

நீங்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்று எண்ணும்போது முதலில் நான் அதைப் பெறுகின்றேன். நீங்களும் இதே போல இந்த உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று ஏங்கினால் அதை நீங்களும் பெறலாம்.

நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் இதை எல்லாம் பின்பற்றுவோம். அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால்
1.நான் ஒருவரைப் பார்த்தேன்.. அவர் தீமைகளைக் கேட்டேன்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நான் பெற்று என் ஆன்மாவைத் தூய்மையாக்கினேன்
3.பின் அந்த அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்களுக்கும் நல்லாக வேண்டுமென்று சொன்னேன்
4.அதன் வழியில் அவர்கள் நன்றாக ஆனார்கள் என்று இந்தச் சந்தோஷம் உங்களுக்கு வரும்.

இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

அப்படி அல்லாமல்… ஒருவர் என்னைத் திட்டினார்… இரு நான் உன்னைப் பார்க்கின்றேன் என்று அவனைத் தொலைத்தேன்…! என்ற நிலை வரக்கூடாது.

அந்த அருள் உணர்வைப் பெற்றேன்… அவன் தீமைகளில் இருந்து விடுபட்டான்… அவனும் நல்லவனான்… அந்த உடலில் இருந்த நோய்கள் விலகியது என்று இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார் நான் உங்களுக்கு அந்த நிலையை உணர்த்துகின்றேன்… பதிவாக்குகின்றேன். இதைச் செயலாக்குவது உங்களுடைய பொறுப்பு தான்.

ஆகவே..
1.பகைமையை மாற்றுங்கள்
2.பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்
3.அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்
4.அரவணைக்கும் சக்தியை உங்களுக்குள் கூட்டிப் பேரன்பை உருவாக்குங்கள்.

பேரிருளை மாற்றுங்கள். பேரன்பைக் கூட்டினால் இருள் என்ற நிலைகள் நமக்குள் வராது தடுக்க முடியும் குருநாதர் பெயரைச் சொல்லித்தான் இந்த தபோவனம் அமைத்துள்ளோம்.

1.அவர் அணியில் தான் நாம் எல்லோரும் இருக்கின்றோம்.
2.நாம் எல்லோரும் அருள் வழியில் செல்வோம்
3.இன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…! என்று உறுதி கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு ஆமையை உற்றுப் பார்க்கும் நரி அதைத் தன் இரைக்காக விழுங்க எண்ணுகின்றது. நரியைப் பார்த்த உடனே ஆமை தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கின்றது.

இதிலே சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் அந்த நரியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வைக் கவர்ந்து கொண்டால் அது வலிமையானது…!

இதை அர்ச்சுனன் என்று காட்டுகின்றனர். அவன் மிகவும் திறமைசாலி ஆனவன். குறி வைத்துத் தாக்கக்கூடிய வல்லமை பெற்றவன்… குறி தவறாது அர்ச்சுனனுக்கு.

அர்ச்சுனனுக்கு யார் கற்றுக் கொடுப்பது…? கண்ணன் தான். அந்த சகல சக்தியும் அர்ச்சுனனுக்குக் காட்டுகின்றான். எதன் வலிமையோ அதனின் நிலையை உணர்த்துகின்றான் என்ற நிலையைக் காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றது.

கீதா உபதேசத்தைப் படிக்கும்போது அதை நீங்கள் நுகர்ந்து இதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் கீதா உபதேசம் கண்ணன் எங்கிருந்தோ கொடுக்கின்றான்…! என்று தான் நீங்கள் படிக்க முடியுமே தவிர
1.ஆமையின் “கண்கள் தான்” இந்த நரி உன்னை விழுங்கிவிடும் என்ற
2.”உபதேசத்தைக் கொடுக்கின்றது” என்ற நிலைகளை நீங்கள் இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆகவே இந்தப் புலனறிவான அந்த அர்ச்சுனன் ஆமையைத் தாக்கியபின்… அந்த உணர்வுகள் ஆமையின் உடலுக்குள் சென்ற பின்… அதனுடைய சாந்தமான குணத்தை அது அமிழ்த்தி விடுகின்றது. நரியின் உணர்வே ஆமைக்கு வருகின்றது.

ஆனால் குறி வைத்துத் தாக்கியபின் இந்தச் சாந்தமான அணுக்குள் காந்தம் உண்டு. அந்தக் காந்தம் இழுத்து நரியின் உணர்வைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளப் போகும்போது சகாதேவன்.

நரியின் உணர்வை ஆமை தனக்குள் இணைத்துக் கொள்கின்றது என்ற நிலையை இந்த உணர்வினை சகாதேவன் என்று கூறுகின்றனர். புலனறிவு ஐந்தையும் இப்படித் தெளிவாக்குகின்றனர்.

அதே சமயத்தில் இந்த நரியின் உணர்வினைச் சாந்தமான ஆமையின் உணர்வுக்குள் சேர்த்த பின் நகுலன்…
1.இந்த நரி எப்படி உருவானதோ அதைப் போல
2.”உணர்வின் பொறிகளை எழுப்பும்” என்பதனை இங்கே காட்டுகின்றனர்.

இது புரியவில்லை என்று விட்டுவிட வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் இதுதான்…!

இது உங்களை நீங்கள் அறிவதற்கும்… பிறர் அவர்கள் வாழ்க்கையில் துயரப்படுவதைக் கேட்டறிந்தால் அதனால் உங்கள் உடலிலே எப்படி மாற்றம் அடைகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

1.அறிந்த நிலை கொண்டு
2.இதிலிருந்து மீட்டுவதற்கு உபாயத்தை நாம் கையாளவில்லை என்றால்
3.பரிணாம வளர்ச்சியில் வந்தது போலே நாமும் தேய்பிறையாகச் செல்ல வேண்டியதுதான்.
4.இன்று மனிதன்… நாளை மனிதனல்லாத நிலையை உருவாக்கி விடும் நம் உயிர்.

ஆனால் அன்று ஞானிகள் கூறிய அருள் வழியில் நாம் செயல்படுத்த வேண்டும். அதற்குத்தான் இதைக் கூறுகின்றோம் (ஞானகுரு).

அப்பொழுது நரியின் உணர்வுகள் ஆமையின் உடலிலே இணைந்து கொண்டபின் சாந்தமான ஆமையின் உடலுக்குள் இது வலுவாகின்றது. இது பீமன். எதையும் அடித்து நொறுக்கும் உணர்வுகள் அந்த உடலுக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் இது கூர்மையாகப் பார்த்தது. அனால் ஆமையை இந்த நரியால் அடக்க முடியவில்லை. ஏனென்றால் ஓட்டுக்குள் ஒளிந்து விடுகின்றது.

ஆனாலும் நரியின் உணர்வினை இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்டபின் இது வலிமையானபின் வேறு வழியில்லை. புல்லை மேய முடியவில்லை. இந்த உணர்வின் தன்மை அதற்குள் சேர்ந்துவிடுகின்றது.

இந்த உடலை விட்டுச் செல்லும் இந்த உயிரான்மாவிற்கு… அதுதான் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான்.

1.எதன் வலிமை பெற்றதோ… இந்த உடலை விட்டு இந்த உயிர் செல்லப்படும்போது
2.எந்த நரியின் உணர்வை எடுத்ததோ அதற்குச் சாரதியாக இந்த உயிரான்மாவை நரிக்குள் அழைத்துச் செல்கின்றது.

வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! கீதா உபதேசத்தில் இந்தக் கண்கள் எதன் வலிமை அதனுள் இருந்து கவர்ந்ததோ அதை இணைத்துக் கொடுக்கின்றது.

அதனால்தான் “கண்ணன் பிரம்மத்தைச் சேர்ந்தது” என்பார்கள். அது உருவாக்கும் திறன் பெற்றது என்பது இங்கே தெளிவாக்கப்படுகின்றது.

இப்படி அந்த நரியின் உடலுக்குள் ஆமையின் உயிரான்மா சென்ற பின் நரியின் ரூபமாக மாற்றுகின்றது. அப்பொழுது ஆமை நரியாகப் பிறந்தபின் அந்த நரி தன் குட்டியைப் பாதுகாக்கின்றது. உன்னைப் பாதுகாக்கும் உடலை… அந்த உணர்வைக் கொடுப்பதைத் தான் தர்மன் என்று காட்டுகின்றார்கள்.

1.புலனறிவு ஐந்தானாலும் இதன் வழி சென்ற பின்
2.உன்னைப் பாதுகாக்கும் இடம் அதுதான் என்று அந்த நிலையை
3.வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் சொல்கிறார்.

அந்த நரியின் உடலுக்குள் ஆமை சென்று அது குட்டியான பின் அந்தக் குட்டியைப் பாதுகாக்கின்றது நரி.

“இந்தக் கண்கள் எப்படி எல்லாம் நம்மை வழி நடத்துகிறது…?” என்று நாம் புரிந்து கொள்வதற்குக் கீதா உபதேசத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

 

ஒருவர் திட்டினாலும் பேசினாலும் கவலையான நிலைகளாக இருந்தால் அதை எடுத்தால் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. வேதனை வெறுப்பு கோபம் சலிப்பு சஞ்சலம் இது எல்லாம் உடலுக்குள் வந்தபின் இந்த உடலான கோயிலில் அசுத்தமாகின்றது… நோய்கள் ஆகின்றது பல வேதனைகள் ஆகின்றது.

1.”கூட்டுத் தியானத்தின் மூலம்” நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உணர்வினைச் செவிகளிலே பாய்ச்சப்படும் பொழுது
3.நமது கண்கள் இந்தக் காற்றிலிருக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தைக் கவருகின்றது நம் உயிரிலே படுகின்றது.
4.இந்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.

இந்தக் கூட்டு தியானத்தின் அமைப்பிலே இந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்துப் பழகிக் கொண்டால்
1.உயிரான ஈசனுக்கும் இந்த அசுத்தம் சேர்வதில்லை.
2.இந்த உடலான கோவிலுக்குள் தீமைகள் புகாது தூய்மைப்படுத்துகின்றோம்.

ஒருவன் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் எண்ணுகின்றோம். அப்போது புரையேறுகிறது. தொழிலில் எத்தனையோ இடைஞ்சல் ஆகிறது.

ஆனால் கூட்டுத் தியானத்தின் மூலம் அத்தனை பேரும் சேர்ந்து அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியைக் கிடைக்கச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது.

எல்லோருடைய உடல்களிலும் அருள் உணர்வுகள் வளர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்… எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… உடல் நலமாக இருக்க வேண்டும்… எங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும்… என்று
1.கூட்டு தியானங்களில் இதைப் போன்று எடுத்துக் கொண்டால்
2.உங்களுடைய வாக்கு எல்லோருக்குள்ளும் ஆழமாக இது பதிந்து நோய்களைப் போக்க முடியும்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெரிய மகானாக முடியும்
4.உங்களுடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க வேண்டும்.
5.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களை அறியாத சேர்ந்த துன்பங்களை அகற்றும்.

இதை நாம் வலுப்பெறச் செய்தல் வேண்டும்.

நாளைக்கு வரும் விஞ்ஞான உலகத்தால் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் பொழுது “அந்த விஷங்கள் நமக்குள் சேர்ந்து”
1.நமது சிந்தனையை அழித்துவிடக் கூடாது.
2.அருள் உணர்வுகளை அழித்துவிடக் கூடாது.
3.அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் வலிமை பெற வேண்டும்.

அதற்காகத்தான் இதைச் சொல்கின்றேன்… உங்களால் முடியும்.

நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது உடனே நல்லதாகின்றது. ஏன்..? நீங்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கு நல்லதாக்க முடியும் அல்லவா.
1.அந்த அளவுக்கு நமக்குள் பெருக்கி விட்டால் காற்றிலிருக்கக்கூடிய தீமைகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
2.நாட்டு மக்களைக் காக்கலாம் நல்லவர்களைக் காக்கலாம்.
3.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்க்கலாம்… பகைமையற்ற வாழ்க்கை வாழலாம்.
4.உயிருடன் என்றும் ஒன்றிடலாம்… அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது போன்றது என்றும் நாம் வாழ முடியும்.
5.மனதை ஒன்றாக்கப்படும் பொழுது ஒளியின் சுடராக முடியும்.

குறுகிய காலமே நாம் வாழுகின்றோம். மனதை ஒன்றாகக் குவித்து நாம் வாழ வேண்டும் உடலில் அறியாது சேர்ந்த பகைமைகளை அகற்றிப் பண்பைக் காட்டி… அன்பைக் காட்டி.. அரவணைத்து… அருளைப் பெருக்க வேண்டும் என்று நமக்குள் செலுத்த வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அதைச் செயல்படுத்த வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞானத்தினால் பரவப்பட்டுள்ள நச்சுத்தன்மைகளை நாம் அனைவரும் சேர்ந்து அகற்றுவோம். அருள் வழியில் வாழ்வோம்… அதை நாம் செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை நாம் பெறுவோம். அதுதான் நம்முடைய கடைசி எல்லை. இந்த உடலுக்குப் பின் அந்த எல்லையை அடைவோம்.

அந்த எல்லை எங்கு இருக்கின்றது…?
1.நம் உயிருடன் ஒன்றி அந்த உணர்வைக் கூட்டினால் அவனே நம்மை அழைத்துச் செல்கின்றான்.
2.ஒளியின் உடலாக நம்மை உருவாக்குகின்றான்.

இல்லை… எனக்குத் தீமை செய்கிறான் என்ற உணர்வை ஊட்டினால் தீமை செய்யும் உடலுக்குள்ளே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும். ஆக நாம் எண்ணிய நிலைக்கொப்பத் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.

ஆகவே நாம் அருள் வழியைப் பெறுவோம் பேரருளைக் கூட்டுவோம். யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலே படரப்பட்டு நமது குருவின் உணர்வுகளை நீங்கள் பெற்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் சக்தி பெறுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் வந்த இருண்ட நிலையை நீக்கி அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தியை நீங்கள் பெற்று அதை மகிழ்ந்து வாழும் உணர்வை உங்களுக்குள் ஊட்டி “உங்கள் பேச்சால் மூச்சால் உலக மக்களைத் தெளிந்து வாழும் மக்களாக வாழச் செய்யுங்கள்…”

1.இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரவச் செய்யுங்கள்.
2.நமது குரு அருளை உலக மக்களுக்குப் பெறச் செய்யுங்கள்… நீங்களும் அதைப் பெற்று வளருங்கள்.
3.நம் குரு வழியில் அவருடைய சீடர்களாக நாம் அனைவரும் ஆவோம்.
4.அவர் ஒளியின் தன்மை பெற்றார்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஒளியைக் கூட்டுவோம்.

நம் பேச்சும் மூச்சும் பிறருடைய இருளைப் போக்கட்டும்… மெய்ப்பொருளைக் காண்போம். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைவோம். அந்த அருள் சக்தியைப் பெறுவோம்… அனைவரையும் பெறச் செய்வோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்… மெய் வாழ்க்கை வாழ்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் ஒளியான சக்தியும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து படர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அதனின் பேரருளும் பேரொளியும் உங்கள் ஈர்ப்புக்குள் நீங்கள் ஈர்க்கப்படும்பொழுது இங்கே அந்த ஒளி அலைகள் பரவுகின்றது.

அவர்கள் பிறவா நிலைகள் பெற்றவர்கள்…! ஒரு நெருப்பிற்குள் போய் ஒரு விட்டில் பூச்சி விழுந்தால் அது என்ன செய்யும்…? அது சுட்டுப் பொசுக்கிவிடும்.

இதைப் போன்று சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள் நாம்
1.அந்த ஞானியரினுடைய அருள் சக்தியை நேரடியாகப் பெற முடியாது.
2.காரணம்… அவர்கள் எல்லோரும் இந்த பூமியினுடைய பிடிப்பை அறுத்து விட்டுச் சென்றவர்கள்.

பூமியின் பிடிப்பை விட்டுச் சென்ற அந்த ஞானியரின் உயர்ந்த உணர்வலைகளைத் தூண்டச் செய்து… உங்களுக்குள் அதைச் செருகேற்றி…
1.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்தச் சக்தியை
2.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து இழுக்கப்படும் பொழுது
3.சிறு துளிகளாகச் சேர்ந்து பெரும் மழை போல அது அப்படியே படர்ந்து வருகின்றது.

அதன் மூலம் இப்பொழுது ஒவ்வொருத்தருடைய உடலுக்குள்ளும் சேர்க்கச் செய்வதுதான் தியானம். தியானம் இருந்த பிற்பாடு நம் முதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் மூதாதையரின் உடலின் உணர்வு கொண்ட சரீரம்தான் நாம். அந்த மகரிஷிகளின் சக்திகளைச் செருகேற்றிக் கொண்ட பின் நம் மூதாதையரின் உயிராத்மாக்களை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் உயிராத்மா சூட்சும நிலையில் உள்ளது. நம் உடல் எந்திரம் போன்று உள்ளது. நாம் எந்திரமாக உந்தித் தள்ளும் போது மூதாதையரின் உயிராத்மாக்களை விண்ணிற்கே செலுத்தி விடுகின்றோம்.

இப்படி நாம் செலுத்திப் பழகினால் அவர்களும் பிறவா நிலைகள் பெறுகின்றனர். அவர்கள் தவமிருக்கவில்லை என்றாலும் நம் உணர்வின் துணை கொண்டு அவர்களுடைய சந்தர்ப்பம் விண் செல்ல நேருகின்றது.

மனித வாழ்க்கையில் ஒன்றும் அறியாத மூடர்களாக இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் ஞானியாகின்றார்கள்.

இதைப்போலத்தான் நானும் (ஞானகுரு) ஒரு படிப்பறிவு இல்லாதவன்தான். சந்தர்ப்பம் என் மனைவியினுடைய உடல் நிலை சரியில்லாத போது என் குருவின் (ஈஸ்வரபட்டர்) சந்தர்ப்பம் அவரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரால் மனைவி எழுந்து அது நடமாடும் நிலையும் வந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு…
1.குருவின் ஈர்ப்பிலே நான் சிக்கப்பட்டு
2.அவர் உணர்த்திய உணர்வின் ஆற்றல்தான் சந்தர்ப்பம் நான் இதைப் பெற முடிந்தது…
3.இதை எல்லாம் என்னால் பேசவும் முடிகின்றது.
4.ஏட்டுச் சுவடிகளிலோ மற்றவைகளைக் கற்றுணர்ந்தோ நான் இதைப் பெறவில்லை…. நான் அதைப் பேசவும் இல்லை.

குரு காட்டிய அருள்வழி கொண்டு உணர்த்திய அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அனுபவரீதியாகக் கண்டுணர்ந்து என் உடலில் அனுபவித்த இந்த உண்மையின் நிலைகள் கொண்டுதான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தச் சக்தி பெற்றவர்கள் அனைவருமே நாம் முதாதையர்களை முதலிலே விண் செலுத்தினால் நாமும் அங்கே செல்கின்றோம்.

இதைப்போன்ற வலுவை நாம் ஏற்றிக் கொண்ட பின் நமக்குள் எத்தகைய துன்பம் நேரினும்… எத்தகைய துன்பம் கஷ்டம் வந்தாலும்… அதை நாம் மறக்க வேண்டும்.

அதை மறக்கச் செய்வதற்கு ஈஸ்வரா…! என்று உயிரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகும்போது… அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறக்கூடிய தகுதியினைப் பெறுகின்றீர்கள்.

அத்தகைய தகுதி பெறத்தான் இந்தத் தியானம்…!

இதே மாதிரி நாம் ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைவை மேலே விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இழுத்து நம் உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வை வலுப்பெறச் செய்தால் இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்கள் நீங்குகின்றன… இந்த வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகள் எல்லாம் நீங்குகின்றது.

பின் நாம் எதையெல்லாம் நினைவில் வைத்தோமோ… கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் அங்கே…
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது அங்கே செல்கின்றோம்.

மனிதன் அடைய வேண்டிய எல்லை அது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது நாம் எல்லோரும் ஒரே உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த ஞானிகளின் அருள் சக்தி நமக்குள் ஓங்கி வளர்கின்றது.

அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததியும் எப்படி ஒருமித்த சக்திகளைக் கொண்டு வந்தனரோ… அதைப் போல
1.நாமும் அந்த ஒருமித்த எண்ணத்தைக் கொண்டு
2.மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம்
3.கவர்ந்து கொண்டு வரப்படும்போது ஒத்த நிலைகள் ஏற்படுகின்றது.

இந்த ஒருமித்த உணர்வின் ஆற்றல்மிக்க வலிமை கொண்டு சிறு துளி பெரு வெள்ளம் போல ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நம் மூதாதையருடைய உயிராத்மாக்களை விண் செலுத்துவதே யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய இந்த அருள் வழிப்படி நாம் கூட்டுத் தியானங்கள் மூலமாக ஏகோபித்த நிலையில் இந்த மகரிஷிகளின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து இந்த உணர்வை வலுப்பெறச் செய்கின்றோம்.

அந்த வலுவால் நம்முடைய மூதாதையருடைய உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அவர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

1.அங்கே அந்த சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் சென்று
2.இருள் சூழ்ந்த உடலைப் பெறும் நிலைகள் நீங்கி
3.மெய் ஒளி கண்டு மெய் வழியில் என்றும் நிலையான சரீரம் பெற வேண்டும் என்று எண்ணச் செய்வதற்கே
4.குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

இதைத்தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவது. ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு உண்மைகள் வரும். போன மாதம் பௌர்ணமிக்குச் சொன்னதையும் இந்த மாதம் சொல்லலாம்… புதிதாகவும் கருத்துக்கள் வரும்.

ஏனென்றால் இராமயாணக் கதையை எடுத்துக் கொண்டால் ஒன்றே தான் இருக்கும். வேறு எதாவது சொல்வார்களா…? இல்லை.

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதிலுமே ஒன்றே தான் இருக்கும். கீதையை எடுத்துக் கொண்டால் அங்கே கண்ணன் சொன்ன உணர்வும் ஒன்றே தான்.

நாம் பள்ளியிலே படிக்கின்றோம் என்றால் அதிலே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுப்பார்கள். ஐந்தாம் வகுப்பிற்கு மேலே போகும்போது கற்கும் நினைவுகள் சீராக வந்தால் மேல் படிப்புக்கு அடுத்து சீராகப் போக முடியும்.

அதைப் போன்று தான்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள்
2.நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பொறுத்துத் தான்
3.விண்வெளியின் ஆற்றலைப் பெறும் தகுதியை நாம் பெறுவது.

பள்ளியிலே பத்தாவது படிப்பு வரை அந்த யுக்திகள் எல்லாம் வாத்தியார் சொல்லிக் கொடுப்பது நமக்குள் வரும். அந்த யுக்தியின் வலு பெற்ற பின் அடுத்து அந்த சிந்தனையுடன் வெளி வரப்படும்போது அதற்கு அப்புறம் கல்லூரிப் படிப்பு மிகவும் எளிது.

அப்பொழுது நாம் படிக்கும் திறனும் சீராக வருகின்றது. நாம் எதையும் கிரகித்து அது செயல்படும் தன்மை வரப்படும்போது நம்மாலே நம் யுக்தியால் செயல்படும் தன்மை வருகின்றது.

நான்கு வருடத்தில் படிப்பதைக் கூட ஒரு வருடத்திற்குள் படிக்கும் திறன் வருகிறது.
1.பல விதமான பாட நிலைகளைக் கற்றிடும் தன்மையாக
2.தன் உணர்வின் ஞானம் அங்கே வரப்போகும்போது
3.சீக்கிரம் தெளிவாகும் நிலை அங்கே கல்லூரிகளிலே வருகின்றது.

இதைப் போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மையை அன்று பக்தி மார்க்கத்தில் காட்டியதை உணர்ந்திருந்தாலும் அந்த உண்மையின் தன்மை உங்களுக்குள் அணு செல்களாகப் பதிவாகியுள்ளது.

அதன் மூலம்… மகா ஞானிகள் காட்டிய… நமது குருநாதர் பெற்ற… மற்ற மகரிஷிகள் பெற்ற அந்த பேரண்டத்தின் பேருண்மையை உங்களுக்குள் மறைந்து இருக்கும் உணர்வின் ஆற்றலைத் தட்டி எழுப்புகின்றேன் (ஞானகுரு).

இந்த உணர்வின் சக்தியைக் கூட்டி நீங்கள் அந்த விண்வெளியின் ஆற்றலை எடுக்கப்படும்போது இன்றைய வாழ்க்கையில் உங்களை அறியாது சேரும் துன்ப நிலைகளை மாற்றிட முடியும்.

அதே சமயத்தில் இதற்கு முன்னாடி அறியாத நிலைகள் உடலுக்குள் சென்று தீய வினைகளாக உருவாகி நோய்களாக இருந்தாலும் நாம் எடுக்கும் இந்த தியானத்தின் மூலம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று எண்ணும்போது
2.அழுக்குத் தண்ணீரில் நல் நீரை விடப்படப் போகும்போது அழுக்கு நீர் குறைவது போல
3.சதா ஒவ்வொரு நிமிடமும் ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் பின் தொடரப் போகும்போது
4.அது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உடலில் வரக்கூடிய துன்பத்தைத் துடைத்திடும் சக்தியாக மலரும்.

ஆனால் வாழ்க்கையுடனே ஒன்றிக் கொண்டு… நான் தியானத்தைச் செய்தேன்… என் கடையில் வியாபாரம் இப்படி குறைந்தது…! நான் அதைச் செய்தேன் இப்படி ஆகிவிட்டது…! என்று மீண்டும் இந்த எண்ணத்தைக் கொண்டு குழப்பினீர்கள் என்றால் மேலே போக முடியாது.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.என் பார்வை எல்லாவற்றையும் நலமாக்க வேண்டும்
4.எங்கள் சொல்லினுடைய நிலைகள் அது இனிமை பெற வேண்டும்
5.எங்கள் செயலின் தன்மை அது புனிதம் பெற வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளை எடுத்து நமக்குள் படைக்கப்படும் பொழுது அது முதிர்ந்த நிலைகள் நல்ல பலன் தரும்

உதாரணமாக… ஒரு செடியை விதைத்து விட்டு அது வேர் விட்டிருக்கின்றதா… இல்லையா…? என்று நோண்டிப் பார்த்துக் கொண்டு இருந்தால் ஒவ்வொரு வேராக அறுந்து கொண்டிருக்கும்.

சரி வேர் போடவில்லை…! என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக உரம் போடலாம் என்று சொல்லி உரம் போட்டால் எந்தப் பலனையும் கொடுக்காதபடி அப்படியே அது கருகிப் போய்விடும்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மணிக்கணக்கில் உட்கார்ந்து நாம் அதிகமான நிலைகள் தியானத்தை எடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்தால் அது ஒன்று வளர்ந்து விடும்.

ஆனால் நமக்குள் நல்ல குணம் சிந்திக்கும் செயலிழந்து உட்கார்ந்து இருப்போம்.

நம்மைப் பார்ப்பவர்கள் “ஏனப்பா நீ இப்படிச் செய்தாய்…! உன் பிழைப்பு என்னாவது…?” என்று சொன்னால் இதிலே கசப்பு வெறுப்பு எல்லாமே சேர்ந்து கருகிப் போகின்றது. நம் நல்ல குணங்களை எடுக்க முடியாமல் போகின்றது.

இதையெல்லாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்
1.எப்போது நமக்குள் துன்பம் வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை பெற வேண்டுமென்று எண்ணி
3.உடலுக்குள் ஈர்த்து அந்த உணர்வின் சக்தியைச் செலுத்தி நமக்குள் இருள் சூழ்ந்த நிலைகளை அது நீக்கிக் கொண்டே வர வேண்டும்
4.வாழ்க்கையே தியானமாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

 

எப்பொழுது துன்பம் வருகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு நீங்கள் எல்லோருமே வர வேண்டும்.

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள் கண்களைத் திறந்தே ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று உடல் முழுவதற்கும் செலுத்தி உள் நினைவாகக் கொண்டு வாருங்கள். ஒரு ஐந்து முறை எண்ணுங்கள்.
1.இப்பொழுது அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு அந்த உமிழ் நீர்கள் கூடி வரும்.
2.இது தான் உங்களுக்கு உயர்ந்த சத்தாக உடலுக்குள் சேருகின்றது.

இப்பொழுது கண்களைத் திறங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. கண்களைத் திறந்து ஏங்கியிருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

கண்களைத் திறந்து ஏங்கிய பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஒரு ஐந்து முறை இவ்வாறு எண்ண வேண்டும்.

அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்

1.உதாரணமாக வயிற்று வலியாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
2.அந்த வலிக்கும் இடத்தில் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து
3.அந்த வயிற்று வலி நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்
4.கண்ணின் நினைவை அந்த இடத்தில் செலுத்தப்படும் பொழுது வயிற்று வலி நீங்கும்.
5.குடல் புண்ணாக இருந்தாலும் அந்தப் புண் ஆற வேண்டும் என்றால் அதுவும் ஆறும்.

கேன்சராக இருந்தால் ஒரு 15 அல்லது 20 நிமிடம் இதைப் போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு எங்கே வலி தோன்றுகின்றதோ
1.வலி ஏற்படக்கூடிய இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள வேதனை அகல வேண்டும்.
2.நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று கண்களை மூடி நினைவைச் செலுத்தி அந்த இடத்திலே எண்ண வேண்டும்.

மீண்டும் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த நோய் நீங்க வேண்டும் என்று வலிக்கும் இடத்திலே எண்ணி விட்டு மறுபடியும் கண்களை மூடி எங்கே வலி ஏற்படுகின்றதோ அங்கே
1.வெளியில் இருந்து அந்தச் சக்திகளை இழுத்து அந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.”அபூர்வமான சக்தி வாய்ந்த மருந்தாக” அந்த நோய் இருக்கும் இடங்களிலே பாய்ந்து அந்த நோய்கள் குணமாகும்.

நாம் எடுத்துக் கொண்ட மூச்சினால் தான் நமக்குள் இந்த நோய்கள் வருகின்றது. ஞானிகளுடைய மூச்சலைகளை உடலில் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தக் குறித்த இடங்களில் அதைச் செலுத்தப்படும் போது
2.அது எவ்வளவு கொடிய நிலைகள் இருந்தாலும் அது மாறி அது நலம் பெறும். ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் வரை இவ்வாறு எண்ணலாம்

ஆஸ்த்மா நோய் இருக்கிறது என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ண வேண்டும்.

ஆஸ்த்மா நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி மறுபடியும் சுவாசத்தை உள்ளே செலுத்தி ஐந்து தடவை சொல்லி கண்களைத் திறந்து மூடி
1.இப்படித் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப பத்து நிமிடம் வரை இந்த மாதிரி சுவாசம் எடுத்தால்
2.காற்றிலிருக்கக்கூடிய நல்ல சக்திகள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு நல்ல மருந்தாக நம் உடலில் கலந்து
3.அந்த நோயை நீக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நோய்களும் இதே போன்றுதான் அந்தந்த சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொண்ட சுவாசங்கள் அந்தந்த குணங்கள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… ஆகாரத்துடன் கலந்து… அது நஞ்சாக மாறி… அது தான் நோயாக மாறுகின்றது.

ஆகவே அந்த நோய்களைப் போக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
1.வாக்கின் தன்மையாக இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.மகரிஷிகளின் அருள் ஞான வித்தினை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து ஊன்றுகின்றேன்.

வயல்களை எப்படிப் பண்படுத்தி நல்ல வித்துக்களைப் போட்டு நீரை ஊற்றிய பின் தன்னிச்சையாக காற்றிலிருந்து அந்த வித்தின் சத்தை எடுத்து வளர்ந்து அதனுடைய மகசூலை நாம் அறுவடை செய்து எவ்வாறு சுவை மிக்கதாக்கிச் சாப்பிடுகின்றோமோ இதைப் போன்று தான்
1.ஞானிகளின் அருள் வித்தை ஊன்ற உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த பண்பான நிலை ஆனபின் அருள் வித்தைப் பதிவு செய்து
2.உங்களை அறியாது வரும் துன்பங்களை நீக்கி அந்த மகரிஷிகளின் அருள் வித்தால் உங்கள் நோய்களும் நீங்கி
3.உங்கள் எண்ணங்களையும் அதன்வழி நலம் பெறும் சக்தியாகப் பிரதிபலிக்கச் செய்து
4.நல்ல உணர்வின் மூச்சுலைகளாக… எண்ண அலைகளாக நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கும் இது நல்லதாகின்றது.

“நல்லதைப் பெற வேண்டும்” என்ற உங்கள் மூச்சும் பேச்சும் உங்கள் உடலுக்குள் எப்படி நன்மை தருகின்றதோ இதைப் போன்று “உங்களைச் சார்ந்தவர்களுக்கும்” அவர்கள் எண்ணும் பொழுது அவர்களுக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

நாம் இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்தப்புலனறிவுகள் கவரப்படும் பொழுது
1.இந்தக் காற்று மண்டலத்தில் அது பரவி
2.இந்த நாட்டு மக்களுக்கும் நல்லதை எண்ணுவோர் அனைவருக்கும் அந்த நல்ல உணர்வுகள் கிடைக்கப் பெற்று அவர்களும் நன்மை பெறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கக்கூடிய அனைவருமே நல்லது எண்ணுகின்றோம். ஆனால் வேதனை கலந்த உணர்வுகளைப் பரப்பப்படும் போது நல்லதைச் சிந்திக்கும் நிலையற்று இருக்கின்றது.

ஆகையினால் அதை எல்லாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி… மற்ற மந்திர ஒலிகள் எதுவும் கலக்காதபடி இயற்கையினுடைய தன்மைகளில் ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அருள் வித்தினை உங்களுக்குள் பதிவு செய்து
1.துன்பம் நேரும் பொழுதெல்லாம் வயல்களில் களை எடுப்பது போல
2.எப்பொழுது கஷ்டம் என்று வருகின்றதோ அந்தக் கஷ்டத்தை உள்ளுக்குள்ளே நுழைய விடாதபடி வேதனை வந்தாலும் அதை விடாதபடி
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனைகள் அகல வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
6.அது எப்பேர்ப்பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் உங்கள் உணர்வால் போக்க முடியும்.

ஏனென்றால் இதைக் கேட்போர் உள்ளங்களில் வாக்காகப் பதிவு செய்கின்றேன். இதை மீண்டும் நினைவுபடுத்தும் போது காற்றிலிருந்து அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

உங்களை மீட்டிக் கொள்ள நீங்கள் தான் எண்ணி எடுக்க வேண்டும். சாமியார் செய்து கொடுப்பார் சாமி செய்து கொடுப்பார் ஜோசியம் செய்யும் தெய்வம் செய்து கொடுக்கும் என்று எண்ணுவதற்கு மாறாக “நீங்கள் எடுக்கும் அந்த உயர்ந்த எண்ணமே தெய்வமாகின்றது…”

1.நீங்கள் எண்ணும் எண்ணம் விதையாகி அந்த உணர்வின் செயலாக அதுவே உங்களுக்குள் நின்று தெய்வமாகி
2.எந்த உயர்ந்த எண்ணங்கள் எடுக்கின்றீர்களோ… அந்தத் தெய்வமாக இந்த சக்தி உள் நின்று உங்களுக்குள் செயல்படும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில் சாமி சொன்ன வழியில் அந்த உயர்ந்த சக்தியினை… அந்த ஆற்றலை நாம் பெற்றோமேயானால் நமக்குள் வரக்கூடிய துன்பத்தை நீக்க முடியும். நம் மூச்சும் பேச்சும் நம்மைச் சார்ந்தவருக்கும் அவர்களை நலம் பெறச் செய்ய உதவும் என்ற “இந்த எண்ண அலைகளிலேயே நீங்கள் செயல்படுங்கள்…”

அப்பொழுதுதான் இந்த நாட்டின் நிலையில் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே தன்னிலை அடைய முடியும். உயிரோடு ஒன்றிய உணர்வுகள் ஒளி பெற்று மனிதனான நிலையில் இன்னொரு உடல் பெறாதபடி இதையே ஒளிச் சரீரமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதை எல்லோருமே பெற முடியும்.

இப்படித் தான் இருக்க வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இல்லை. நீங்கள் நினைத்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

1.துன்பம் வரும் சமயத்தில் அது எப்படி நோயாகின்றதோ
2.துன்பம் வரும் போதெல்லாம் நோயாகும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி
3.அந்தத் துன்பத்தையும் நோயையும் உங்களால் நீக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!
1.ஆக “நமக்குள் நல்ல சக்திகள் இருக்கின்றது” என்பதைத் தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்
2.உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மிக மிகச் சக்தி வாய்ந்த அருள் வாக்காக இதை உங்களுக்குக் கொடுக்கின்றேன். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நமது வாழ்க்கையில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றால் சந்தர்ப்பத்தால் அடுத்த கணம் மனம் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

இதைப் போன்று மாறி மாறி வரும் இந்த நிலைகளில் இருந்து மாறாத நிலைகள் பெற்ற அந்த ஞானிகளின் உணர்வின் அலையைப் பெறச் செய்யக்கூடிய அந்தப் பிரகாசமான நாள் தான் நம் குருநாதர் காட்டிய இந்த பௌர்ணமி நாள்.

பௌர்ணமி அன்று நாம் எல்லோரும் சேர்த்து நம் மூதாதையருடைய உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களை உந்தித் தள்ளி சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்வதற்கே இந்த பௌர்ணமி தியானம்.

அவர்கள் முதலில் விண் சென்றால் அவர்கள் வழியில் நாமும் பின் நாம் செல்ல முடியும். நாம் முன்னாடி அங்கே அந்தப் பாதத்தை… பாதையை வகுத்துக் கொண்டால்தான் அந்த நிலைகள் பெற முடியும்.

ஆகையினாலே ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் இருந்தே அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டுமென்ற எண்ண வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நம்மை எதிர்கொண்டு துன்ப அலைகள் வீசுவதை அது நம்மை அணுகாது அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைச் சுவாசித்து அதிலிருந்து காத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் விண் செல்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானம்.

ஆகையினாலே….
1.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வழியில் செல்ல வேண்டும் என்று
2.நம் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டால் தான் அங்கே செல்ல முடியும்.

இல்லை என்றால் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொன்னேன். என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லை… நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். என் மேல் வலி கால் வலி போகமாட்டேன் என்கின்றது. கொடுத்த கடன் திருப்பி வரமாட்டேன் என்கின்றது என்று இப்படி எல்லாம் ஊடே ஊடே கலந்து கொண்டிருந்தால் எல்லாம் போய்விடும்.

நமக்கு வர வேண்டிய பாக்கி வர வேண்டும். கடன் கொடுத்தோமென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்… எனக்குத் திரும்பக் கொடுக்கும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் பணம் வரும்.

இதைப்போன்ற பக்குவ நிலை கொண்டு நாம் எண்ணத்தை வளர்க்கும்போது
1.பிறிதொரு தீமையான உணர்வின் தன்மை வராது தடுத்தால்
2.நமக்குள் அதுவே பெரும் சொத்தாக வந்து சேர்ந்துவிடுகின்றது… மெய் ஒளியின் சத்தாக…!

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் இதைச் செய்யலாம்.

இல்லை என்றால் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கிறோம்…?

நம் உடலைவிட்டு ஈசன் சென்று விட்டால் அப்புறம் நீச உடலுக்காக வேண்டித் தான் வெகு நாளாகப் பாடுபட்டிருக்கின்றோம் என்று அர்த்தம். ஏனென்றால் உயிர் போய் விட்டால் அப்புறம் என்ன இருக்கின்றது…?

நாற்றமாக இருக்கின்றது… சீக்கிரம் தூக்கிக் கொண்டு போய் விடுங்கள்… ஐஸ் கட்டி (FREEZER BOX) வைத்துவிடுங்கள்… அதை வையுங்கள் இதை வைத்துவிடுங்கள்…! என்று தானே சொல்கின்றோம்.

எவ்வளவு செல்வமாக அழகாக இந்த உடலை வளர்த்திருந்தாலும் அதிலே ஒரு சிறு அழுக்குப் பட்டு விட்டால் என்ன பாடுபடுகின்றோம்…!
1.ஆனால் அந்த ஈசன் உயிரை விட்டுப் போன பிற்பாடு என்ன செய்கின்றோம்…?
2.நடப்பதை எல்லாம் நாம் கண்ணிலே பார்க்கத்தான் செய்கின்றோம்
3.ஆனால் இது நமக்கு நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது.

ஏனென்றால் நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது செல்வோம்…? என்று யாருக்கும் தெரியாது

ஆகவே இந்த உடலில் உயிர் இருக்கும்போது அந்த மெய் ஞானிகளுடைய அலைகளை ஒளி வட்டமாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிலைகள் பெற வேண்டுமென்பதற்குத்தான் இந்தத் தியானத்தை உங்களுக்குள் சொல்லிக் கொடுப்பது. நம் மூதாதையர்கள் இன்னும் நமது பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய ஆத்மாக்கள் இன்னொரு உடலில் புகுந்திருந்தாலும் நாம் அடிக்கடி இது மாதிரி செய்யப்படும்போது அந்த உடலை விட்டு வெளிவரப் போகும்போது அந்த ஆத்மாக்களையும் நாம் விண் செலுத்திவிடலாம்.

ஆகையினாலே நீங்கள் ஒவ்வொருவரும் ஏனோ என்று இல்லாதபடி இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் உங்கள் வீட்டில் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும். உங்கள் முதாதையர்களை விண் செலுத்த கூடிய எண்ணங்களைச் செலுத்த வேண்டும்.

அடுத்தாற்படி நாம் செய்ய வேண்டிய முறைகள் என்ன…?

நமக்குள் யாராவது பகைமை வெறுப்பு என்ற நிலைகளில் இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று அதைத் தணிக்க வேண்டும்.

உதாரணமாக நாம் பொண்ணு கொடுத்திருப்போம். மாமியார் வீட்டில் கொஞ்சம் தொல்லை கொடுத்திருப்பார்கள். அடப்பாவிகளா… இப்படிச் செய்கின்றார்களே…! என்று அவர்கள் மேல் பகைமையை வளர்த்துக் கொண்டே இருப்போம்.

அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்யும்…? நம் உடலில் அந்த உணர்வு விளைந்து கொண்டே இருக்கும். பின் நல்ல உடலை நோயாக மாற்றிக் கொண்டு இருக்கும்.
1.நாம் சொல்லக்கூடிய உணர்வுகள் நம் குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் அங்கே சாடும்
2.இப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீளாதபடி
3.அந்த விஷத்தின் தன்மை ஒன்றில் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் நிலைகளில் நாம் மூழ்கி விடுகின்றோம்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள ஒரே வழி இதுதான். நாம் செய்ய வேண்டிய நிலைகள் வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டுத் தியானம் இருக்கப்படும்போது
1.நாம் யார் கூட எல்லாம் வெறுப்பின் தன்மை அடைந்தோமோ
2.குடும்ப சகிதமாக எங்களுடைய பார்வை எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்.
3.எங்களுடைய பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் நிலைகள் வர வேண்டுமென்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம் மேல் பகைமை கொண்டிருந்தால் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் சொல் அவரை இனிமையாக்க வேண்டும். அவர்கள் என்னைப் பார்க்கும்போது நல்ல நிலைகள் அடைய வேண்டும். என் வாடிக்கையாளர் நல்ல நிலைகள் அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்பொழுது கடன் கொடுத்து வாங்குகின்றோம் என்றால் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும். எனக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் வர வேண்டும் என்று இவ்வாறு எண்ணிக்கொண்டு இருந்தீர்கள் என்றால்
1.அங்கே பகைமை தீருகின்றது
2.நமக்குள் மெய் ஒளி வளருகின்றது
3.அந்த மெய்யின் தன்மை நாம் நிச்சயம் அடைய முடியும்.

அந்த நிலை பெறுவதற்குத்தான் வாரத்தில் ஒரு நாள் நீங்கள் கூட்டுத் தியானம் இருங்கள் என்று சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றதை விநாயகன் என்றும் இந்த வினையெல்லாம் தீர்க்கும் தகுதி பெறுகின்றான் என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்.

வினையெல்லாம் தீர்ப்பவனே விநாயகனே… ஆதிமுதல்வனே…! என்றும் சொல்கிறோம். ஆதிமுதல்வன் என்றால் யார்…?

நம்முடைய இந்த மனித உடலை உருவாக்கிக் கொண்டு வருவதற்கு ஆதிமுதல்வனாக இருந்தது நமது உயிர். அதைத் தான் ஆதிமுதல்வன் என்றார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? விநாயகர் கடவுளுக்கு அப்பாற்பட்டவர். அவர்தான் முதல்…! என்ற நிலைகளை நாம் எண்ணுகின்றோம்.

நம் உடலுக்குள் நின்று இந்த மனிதனாக உருவாக்கிய இந்த நிலைகளை “ஆதிமுதல்வன் நம் உயிர் தான்…!” என்று தெளிவுற அன்று உணர்த்தியுள்ளார்கள்.

விநாயகருக்கு புல்லைக் காட்டித் தழைத் தாம்புகளை வைத்து அதை அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஸ்தல விருட்சமாக வைத்து இதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அரசு என்ன செய்கின்றது…? ஒரு குருவி அந்த அரசம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அது இட்ட மலம் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டு விட்டால் அதற்குள் அந்த வித்து நீரேயற்ற இடத்தில் வளரத் தொடங்குகிறது.

இப்பொழுது நாமெல்லாம் ஒரு வீட்டில் குடியிருந்தோமென்றால் அங்கே நாம் நீரைச் சிந்துவோம். அதிலிருந்து வரக்கூடிய வாசனைகள் படும். இது அதனால் முளைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் குருவிகள் இட்ட அந்த மலத்தின் தன்மை கொண்டு அரச வித்து ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால்…
1.அந்த அரசு காற்றிலே இருக்கக்கூடிய வீரிய சக்தியும்
2.தன் இனமான சக்தியையும் எடுத்து ஓங்கி வளர்ந்து
3.தன் விழுதை நீர் இருக்கும் இடத்தில் பாய்ச்சித் தனக்கு வேண்டியதை நுகர்ந்து எடுத்துக் கொள்கின்றது.

அதனின் விழுதுகளில் உள்ளது போல இலைகளில் உள்ள நரம்பியல்கள் காற்றில் இருக்கும் ஈரப்பதைத் தனக்குள் அது உறிஞ்சி தன் உணர்வின் தன்மையை வலுப் பெறும் தன்மையை அது அடைகின்றது.

அன்று மனிதனாக வாழ்ந்தவர்கள் தங்கள் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

விண்வெளியிலே சப்தரிஷி மண்டலங்களாக இருக்கிறதென்றால் அங்கே எல்லை இல்லை. ஆனால் தனித்து நிற்கின்றது. நீரோ குளமோ அங்கே கிடையாது.

இருந்தாலும்…
1.மனிதனாக இருந்த போது தன் உடலில் உணர்வின் தன்மை ஒளியான வித்தாக மாற்றி
2.விண் சென்றபின் பேரண்டத்தில் வரும் விஷங்களை எல்லாம் முறித்து
3.உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் நிலையான சரீரமாக
4.எந்த உழைப்பும் இல்லாமல்… தூங்காது…
5.தூங்காமல் தூங்குவது எக்காலம் என்பது போல ஓங்கி வளர்ந்து
6.இன்றும் நிலையான சரீரம் பெற்றுள்ளார்கள் என்ற நிலையைக் காட்டி
7.அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத்தான் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டுகின்றார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்தாலும் இடைப்பட்ட நேரங்களில் கசப்பின் தன்மையான உணர்வுகள் நாம் நுகர நேருகின்றது. நம்மை மேலே எழுந்திரிக்க விடாமல் செய்கின்றது.

அதே சமயம் நாம் விண்ணை நோக்கி அண்டத்திலே இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்து… கசப்பான நிலைகளை இங்கே சிறுக்கப்பட்டு அந்தக் கசப்பின் தன்மையை நீக்கி நல் உணர்வின் தன்மை ஓங்கி வளரும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டுமென்பதற்காக அங்கே நினைவுப்படுத்தி ஸ்தல விருட்சமாக வேம்பையும் அரசையும் அங்கே வைத்தார்கள்.

ஆனால் இந்த வேம்பையும் அரசையும் நாம் வேடிக்கையாகத் தான் சுற்றி வருகின்றோமோ தவிர அதில் உணர்த்தப்ப்ட்ட உயர்ந்த சக்தியை நுகர்வோர் யாரும் இல்லை. அதை நினைப்பாரும் யாருமில்லை.

1.சுற்றி வந்தால்… விநாயகன் நமக்கு ஓடி ஓடி வந்து செய்வான் என்றும்…
2.அவன் எங்கோ இருக்கின்றான்…! நமக்கு எப்படியோ வந்து செய்கின்றான் என்ற நிலையிலும் தான் நாம் இருக்கின்றோமே தவிர
3.அந்த உண்மையின் தன்மையை நாம் உணர முடியல்லை.

இன்று இந்த உண்மையைச் சொன்னாலும் நம் உடலுக்குள் பதிவு செய்த இந்த உணர்வுகளோ எதிர்க்கும் நிலையாக வருகிறது.

இப்பொழுது யாம் (ஞானகுரு) இதைத் தெளிவுபடுத்தினாலும் கூட…
1.என்ன…? அன்றைக்கு எழுதி வைத்தவர்கள் எல்லாம் முட்டாளா..?
2.இவர் மட்டும் புதிதாகச் சொல்கின்றார் என்றால் அது எப்படி…? என்ற நிலையில்
3.நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டது அது வெறுக்கின்றது.

ஒரு கசப்பைச் சாப்பிட்ட பின் நாம் இனிப்பை கொடுத்தால் எப்படி இருக்கும்…! அந்த உணர்வின் தன்மை இனிப்பை ஏற்றுக் கொள்ளாது.

அதைப் போல இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் இயக்கங்கள் அந்த உணர்வின் வழிகளைத்தான்… “நாம் எண்ணியதை… இந்த உணர்வின் தன்மை… சேர்த்த மணத்தின் உணர்வின் எண்ணமாக…” நமக்குள் அது இயக்கிக் கொண்டிருக்கின்றது.

எந்த உணர்வு ஆனாலும் நம் உயிர் அந்த மணத்தை நுகர்ந்தால் அதை எண்ணமாக மாற்றுகின்றது.
1.ஆனால் அதற்குள் மறைந்த இந்த உணர்வின் சக்தி
2,இந்த உடலைத் தனக்குள் அதனின் இயக்கமாகச் செயல்படுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் காட்டிய வழியில் செல்வதே நல்லது.

நம் குணங்களைச் சமப்படுத்தத் தெரியாததால் வரும் தீமைகள்

 

இந்த மனித வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் வெறுப்பு வேதனை தன்னை அறியாமல் இப்படிப் பல நிலைகள் நமக்குள் வந்து சேர்ந்தது
1.நாம் பலவீனமாகும் பொழுது இந்த நினைவலைகள் தான் நமக்குள் வருகின்றது.
2.அந்த நினைவலைகளைத் துரித நிலையில் கொண்டு நாம் சுவாசிக்க நேர்கின்றது.

இவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அடிக்கடி நினைவு வரும் பொழுது நாம் உணர்வுக்குள் எடுத்து உடலில் சோர்வடையச் செய்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உமிழ் நீராகச் சேர்ந்து நாம் சாப்பிட்ட சத்தான ஆகாரத்துடன் கலந்து அந்த சத்தினைச் செயலாக்க விடாதபடி அதையும் நஞ்சாக்கி விடுகிறது.

நஞ்சாக மாறி அதற்குள் விளைந்த இந்த உணர்வின் சத்துகள் நமக்குள் (சலிப்பு சஞ்சலம் வேதனை கோபம் குரோதம் என்று) கலந்து கொண்டால் நம் உடலுக்குள் கை கால் குடைச்சல் மூட்டு வலி வாத நோய்கள் போன்று உருவாகின்றது.

இதை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் பொழுது இந்த உணர்வின் வேகத் துடிப்புகள் இரத்தத்திற்குள் கலந்து… அதீதமான நிலைகள் இரத்தத்தின் துடிப்பு வேகமாகும் பொழுது “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பினால் எரிச்சலாகி…
1.அதனால் வேதனையின் உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது
2.நாம் மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வை அதாவது சர்க்கரை அந்த இனிப்பான சத்துகள்
3.மற்றதுடன் இணைந்து செயல்படாது அந்தச் சர்க்கரைச் சத்து தனியாகப் பிரிந்து விடுகின்றது.
4.அந்தச் சுவையான சத்து இதனுடன் இணையாதபடி விலக்கி விடுகின்றது.

உதாரணமாக இனிப்பை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகிய நாம் கடைக்குச் செல்லும் பொழுது இனிப்பை நாம் வாங்கிப் புசிக்கின்றோம். அதை ரசித்துச் சாப்பிடுகின்றேன்.

அதே போல ஒருவன் காரத்தை அதிகமாகப் புசித்துப் பழகியவன் அந்தக் கடையிலே வந்து காரத்தை வாங்கி அதை ரசித்துச் சாப்பிடுகிறான்.

அவனைப் பார்த்த உடனே என் வாய் எரிவது போல் எரிச்சல் ஆகின்றது. அந்தக் காரத்தைச் சாப்பிடுபவனுக்கோ நாம் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்க்கப்படும் பொழுது “இப்படிச் சாப்பிடுகின்றானே” என்று உமட்டல் வருகின்றது.

காரணம் இதற்கும் அதற்கும் எதிர் நிலை.

இதைப்போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இந்த உணர்ச்சிகள் நமக்குள் இரண்டறக் கலந்து
1.அது இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது எரிச்சலின் தன்மை பிரிந்து
2.அதே சமயம் சர்க்கரை இனிப்பான நிலைகள் இதனுடன் கலந்து இயங்காத நிலைகள் ஆகின்றது.

பால் பிருத்து விட்டால் எப்படி அதன் சத்தின் தன்மைகள் கெட்டுப் போய் விடுகின்றதோ அப்பொழுது அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் காண முடிவதில்லை.
அந்த வெண்ணையின் சத்து அது செயலிழக்கப்பட்டு விடுகின்றது.
2.நீரிலே இந்தச் சத்தின் தன்மை பிரிந்து விடுகிறது.
3.பிருத்த பாலிலிருந்து நாம் வெண்ணெய் எடுக்க முடியாது.

பாலைப் பக்குவமாகக் காய்ச்சினால் தான் அதனுடன் இரண்டறக் கலந்திருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுக்க முடிகின்றது.

இதைப் போன்று தான் உயர்ந்த சத்தின் தன்மையை எடுக்கும் நிலையில் ஆத்திரமும் வேதனையும் கலந்து அதிகமாக எடுக்கப்படும் பொழுது
1.இரத்தத்திற்குள் இரு முனையான இரு நிலையான நிலைகளாகச் செயல்படும் பொழுது
2.நல்ல உணர்வினைச் சேர்க்காவண்ணம் தடுத்துத் தனித்துப் பிரித்து விடுகின்றது.
3.காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலந்தால் தான் அது சுவை மிக்கதாக மாறுகின்றது.

ஒரு குழம்புக்குள் காரம் புளிப்பு மற்ற பொருள்களைச் சமமாகப் போடப்படும் பொழுது அது ருசியாக அமைகின்றது.

அதில் எத்தன்மை அதிகமாகக் கூடுகின்றதோ அதற்குள் நாம் இனிப்பையோ அல்லது எதைப் போட்டாலும் அந்த இனிப்பு இயங்கா வண்ணம் அதை ஒதுக்கி விடுகின்றது.

ஆனால் அதே சமயம் காரம் எவ்வளவு இருந்தாலும் இனிப்பை அதிலே எவ்வளவு சேர்த்தாலும் இதனுடன் இணைக்கச் செய்து காரத்தின் தன்மையைத் தான் காட்டுகின்றது.

ஆக… வேதனையான எண்ணங்கள் நமக்குள் உருவாகி விட்டால் அந்த விஷம் அதை நினைக்கும் பொழுதே மயக்கமும் மற்ற சோர்வான நிலைகளும் வந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.காரத்துடன் இந்த வேதனையான விஷங்கள் கலக்கப்படும் பொழுது
2.இனிப்பான சத்தைப் பிரிக்கப்படும் போது நம் உடலில் அது ஊடுருவி
3.இயக்க நிலை வரும் பொழுது இரு நிலைப் போராகி
4.எண்ணங்களை எண்ணும் பொழுது மயக்க நிலை வருகின்றது.

நாம் எண்ணி ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று நடக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் உடலை அழைத்துச் செல்லும் நிலைகள் இழந்து “மயக்க நிலை” வருகின்றது. அதே போல நம் உடலின் உறுப்புகளுக்குள் அதை இயக்கும் சக்திகளும் குறைகின்றது.

இயக்கச் சக்தி குறையப்படும் பொழுது விஷத்தின் உணர்வலைகள் அதிகமாகச் சேரும் பொழுது சுவைமிக்க நிலைகள் வரும் பொழுது
1.நாம் பேசிய உணர்வலைகள் சூரியனுடைய காந்தப்புலனுக்குள் பட்டு
2.வேதனை கொண்ட உணர்வுகள் விஷத்தின் தன்மையாக நம் ஆன்மாவிலே சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் இருக்கும் இனிப்பின் சத்து வெளிப்படும் பொழுது மற்ற கிருமிகள் தாக்கப்பட்டு
4.நம் உடலில் இருந்து வரக்கூடிய வாசனை அது கிருமிகளாக உருவாகின்றது.

கிருமியின் சத்து நமக்குள் உருவாகி நம் உடலில் எங்கே அது ஒட்டுகின்றதோ உடலிலே சிறு புண்ணாகி விடுகின்றது. புண்ணாகி விட்டால் அதனுடைய மலம் கழிக்கப்படும் பொழுது தசைகளைப் பூராம் அழிக்கும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

சர்க்கரைச் சத்து வந்தவர்களுக்கு “சிறிதளவு புண்ணானாலும் அதை ஆற்ற முடிவதில்லை…”

நாம் வேகமாக எண்ணங்களை எண்ணி… வேதனையான உணர்ச்சிகள் உந்தப்பட்டு
1.ஒரு பக்கம் நரம்பு அல்லது நம் சுவாசப்பையில் உள்ள குழாய்களோ அதீதமான நிலைகள் வேகத்தால் துடிக்க ஆரம்பித்தால் “பலூனைப் போல் உப்பி”
2.அந்த உணர்வின் தன்மை மூளை பாகம் இயக்கப்படும் பொழுது அந்த மூளையின் நரம்புகள் வீக்கமாகி
3.இரத்தக் கசிவாகி மனிதனை மாய்த்து விடுகிறது…. இருதய அடைப்பு என்றும் சொல்வார்கள் மூளைக் கசிவு என்றும் சொல்வார்கள்
4.ஆக நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் நல்ல உணர்வின் சத்தை இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் சாதாரண மனிதர்களை எண்ணும் பொழுது இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதை யார் துடைப்பது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில இடங்களில் வற்புறுத்திச் சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால் கௌரவத்திற்காக… இல்லை நான் இப்பொழுதுதான் சாப்பிட்டு வந்தேன்…! என்று தலையைச் சொறிவார்கள்.

பசியும் இருக்கும்…! சாப்பிடுங்கள்…! என்று சொன்னால் எப்படி சாப்பிடுவது…? என்று சொல்வார்கள். ஆனால் அந்தச் சலிப்பான நிலைகள் கொண்டு இருப்பார்கள்.

இல்லை இல்லை…! எங்கள் வீட்டில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்…! என்று சொன்ன பின் சரி உங்களுக்காகச் சாப்பிடுகின்றேன் என்று உட்கார்வோம்.

இந்தச் சலிப்பும் சோர்வும் அடைந்த பின்.. அந்த சலிப்பு என்பது ஒரு புளிப்பின் தன்மையை உண்டாக்கும்.

இந்தப் புளிப்பு கலந்த பின் சாப்பாடு போட்டவுடனே கொஞ்சம் தான் சாப்பிட்டிருப்பார்கள். அதற்கு அப்புறம் உள்ளுக்கே விடாது. ஏனென்றால் அப்போது அந்தப் புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடுகின்றது.

1.கொஞ்ச நேரத்தில் பார்த்தவுடனே நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
2.அந்த உணர்வில் புளிப்பின் சக்தி வரப்படும்போது… நாம் வேறு எதை விழுங்கினாலும் அந்த புளிப்பு என்ன செய்யும்…?
3.அன்னக் குழாய்களில் அதிலுள்ள அமிலத்தைக் கரைத்துவிடும்.
4.பின் நமக்குள் அது உராயும் போது நெஞ்சு எரியும்.

நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் இந்த அமிலங்களை உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நாம் நமது எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது. நமது உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

நாம் அடுத்து உணவுகள் உட்கொள்ளும்போது நம்மை யார் சாப்பிடச் சொன்னார்களோ… அவர்களை எண்ணி… “நான் வேண்டாம் என்று சொன்னேன் என்னை இப்படியெல்லாம் செய்துவிட்டார்கள்…. என் நெஞ்சைக் கரிக்கின்றது…!” என்று சாப்பாடு போட்டதற்காக அவர் மேலும் வெறுப்படைவார்கள்.

இதைப்போல பெண்களும் பெரும்பகுதியான பேர் இருப்பார்கள்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று உடனே முதலில் கொஞ்சம் சாதம் போட்டிருப்பார்கள்.. இரண்டாவது போட்டவுடன் “லபக்….” என்று தள்ளுவார்கள்,

தள்ளியவுடன் பார்த்தால்… பெரிய பாறையையே தூக்கிப் போட்ட மாதிரி இருக்கும். ஐயோ இப்படிப் போட்டு விட்டார்களே…! என்ற உணர்வுகள் பட்டபின் அவர்கள் உடல்கள் எப்படி இருக்கும்…? என்று நினைக்கின்றீர்கள்

இதைச் சாப்பிட முடியாது. உடனே சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும். ஆனால் அவர்கள் சிரிப்பார்கள்.

இந்தச் சந்தர்ப்பம் அவர்கள் மேல் வெறுப்பின் அணுக்கள் வளர்ந்த பின் இந்த வெறுப்பின் அணுக்கள் வளர்ந்து அந்த ஆகாரத்தைப் போட்டவர்களை நினைத்தவுடன் அந்த வீட்டிற்குப் போனவுடனே “இப்படித் தான் செய்வார்கள்” என்ற இந்த எண்ணங்கள் வரும்.

இந்த வெறுப்பின் அணுக்களை நமக்குள் விளையப்படும் போது நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்துவிடும். அந்த வெறுப்பின் நிலை கொண்டு இப்படி செய்துவிட்டார் என்று பார்க்கப்படும் போது சிரித்துக்கொண்டு பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் விலகும்.

வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது…!

ஆகவே இதைப்போல வெறுப்பை உருவாக்கிவிட்டால் அங்கே அவருக்குள் என்ன ஆகிறது…? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைப் போன்று ஒரு சொந்தமோ பந்தமோ உங்களுக்கு உணவை அவர்கள் சமைக்கப்படும்போது இந்த வெறுப்பின் உணர்வு அதிகமாகும் போது
1.அந்தக் குழம்புகளில் அவர்களும் ஏதாவது பொருளை அதிகரித்து விடுவார்கள்
2.அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டாலே நாம் வெறுக்கும் தன்மையே வரும்
3.உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும்.
4.சீரகத்தை அதிகமாக சேர்த்து விட்டால் ஒமட்டலின் தன்மை வரும்.
5.காரத்தை அதிகமாக்கிவிட்டால் வெறுப்பின் தன்மை வரும்.

இதைப்போன்று அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி அந்தப் பொருளை அதிகமாகச் சேர்க்கும் தன்மை வரும். இது எல்ல, நம்மை அறியாமலேயே இயக்கும் சில நிலைகள்…!

ஆகவே… எப்போதுமே பிறருக்கு உணவு சமைக்கும் போதும்… பரிமாறும் போதும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர் மகிழ்ச்சி பெறும் சக்தி பெற வேண்டுமென்று எண்ணி உணவைச் சமையுங்கள்… போடுங்கள்…!

அதே சமயத்தில் இது போன்ற நிலைகளை எவருக்கும் நாம் அவரை மகிழச் செய்ய அதிகமாக உணவைப் போட்டுவிடாதீர்கள்…! போதும்… என்றால் அதை நிறுத்தி விடுங்கள்.

இரண்டாவது தடவை வந்து போடட்டுமா… போடட்டுமா…? என்று சொன்னால் அவர் சாப்பிட்டதைவிட அந்த வெறுப்பின் தன்மை கூடி நான்கு தடவை சொன்னால் என்ன நடக்கும்…?

இல்லைங்க கொஞ்சம் தான் என்று சொல்ல அவர் வேண்டாம் என்று சொல்ல இல்லை கொஞ்சம் தான் என்று மீண்டும் அழுத்திச் சொல்ல
1.அப்பொழுது இந்த வெறுப்பின் உணர்வை அங்கே வளர்த்து
2.அது உமிழ் நீரில் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணம் தான் செய்யும்

அப்போது அஜீரணம் ஆகும்போது என்ன ஆகின்றது…? நீங்கள் சாப்பாடு போட்டும் பயனில்லாமல் போகின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஔவொருவரும் மீள்தல் வேண்டும்.

ஏனென்றால் இதெல்லாம் நம்மை அறியாத அன்பால் நடக்கும் செயல்கள்…!

மிகவும் ருசியாக இருக்கின்றது என்று நீங்கள் எதையாவது உணவை அதிகமாக்கி விட்டால் உங்கள் உடல் ஏற்றுக் கொள்கின்றதா….? இல்லையே…! அஜீரண சக்தியாகி அதிக புளிப்பின் தன்மை அடைந்து நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களும் சோர்வடையச் செய்துவிடுகின்றது அல்லவா….!

அப்படிச் சோர்வடைந்த நிலைகளில் தொழில் செய்ய நேருகின்றது. நம்முடைய எண்ணங்கள் பிறருடன் பேசும் போதும் அதே சோர்வின் தன்மை அடைகின்றது. நம் வாழ்க்கையில் இது போன்ற அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தே ஆக வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகில் காலத்தால் சிறுகச் சிறுக விஷத் தன்மைகள் பரவி இந்த காற்றுத் தன்மையே நச்சுத் தன்மையாகி விட்டது. மனிதனுக்குள்ளே இது பெரும் பிரளயமாக மாறிவிட்டது.

இன்று பார்க்கின்றோம். சிறைச்சாலைகளில் எல்லாம் போலீஸ் பந்தோபஸ்து உள்ளது. இருந்தாலும் அந்தச் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து தன் எதிரியை மடக்கியே தீர வேண்டும்… கொன்றே தீர வேண்டும்… என்று எவ்வளவு காவல்கள் இருந்தாலும் உள்ளே சென்று அந்த மனிதனைக் கொன்று அந்த பழியைத் தீர்த்து கொள்ளும் உணர்வுகள் தான் வருகின்றது

பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அந்தக் காவலர்களையும் தாக்கிவிட்டுத் தன் எதிரியைத் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு செயல்படும் தன்மைகள் அதிகமாக வளர்ந்துவிட்டது.

1.தான் எப்படி நல்லதாக ஆக வேண்டும் என்று சிந்தனை இல்லை
2.ஆனால் எதிரியை வீழ்த்திவிட வேண்டும் என்ற உணர்வுதான் வருகின்றது.

அதே போல் குடும்பத்தில் ஒரு வெறுப்பின் தன்மை ஆகிவிட்டால் இதனின் உணர்வை தனக்குள் வளர்த்துத் தான் எப்படியும் மடிந்தே (தற்கொலை) ஆக வேண்டுமென்று எண்ணிவிட்டால் எந்த வழியிலும் மடிந்து கொள்ளும் எண்ணங்களே வருகின்றது.

ஆக… எப்படியும் வாழலாம் என்ற நிலைகளே மனிதனின் உணர்வுக்குள் விளைந்துவிட்டது

இன்று செல்வத்தைச் சேர்த்து தன் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியாக இருப்போம் என்று தான் ஒவ்வொருவரும் எண்ணுகின்றோம். ஆனால் தான் வாழவேண்டும் என்றும் எப்படியாவது வாழவேண்டும் என்று உணர்வை ஏற்றுக் கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள்…?

1.நாம் இரவிலே தூங்கப்படும்போது… மனிதனை விட்டாலும் கூட பரவாயில்லை
2.எழுந்துவிட்டால் தன்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவான் என்று அடித்துக் கொலை செய்துவிட்டு
3.வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றார்கள்.

பின் நாம் உழைத்துச் சம்பாதித்த சொத்து எங்கே இருக்கின்றது…? இப்போது இதனின் வளர்ச்சிதான் அதிகமாகப் பரவியும் இன்று உருமாறிக் கொண்ட நிலைகள் இருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் விளையும் இந்த உலகில் நாம் வாழும்போது அஞ்சியே… திருடன் வந்து விடுவான்… நம்மைக் கொலை செய்துவிடுவான்…! என்ற உணர்வை அதிகமாக வளர்த்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை வளரப்படும்போது அதே எண்ணங்களே வருகின்றது.

அந்தத் திருடன் என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்வின் அலைகள் பட்டபின் திருட வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அவன் இந்த வீட்டிற்கே வருவான்.

அதாவது… யார் வரப் போகிறார்கள்…! தைரியமாக இரு… என்று இருக்கும் அந்த வீட்டிற்குச் செல்ல மாட்டான்.

அங்கே திருடுகின்றார்கள்… இங்கே திருடுகின்றார்கள் என்றும் பொருள் எல்லாம் போய்விட்டது என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்…
1.இரவில் படுக்கும்போது இந்த எண்ண அலைகளை பரப்பினால் போதும்
2.நிச்சயம் அந்த வீட்டிற்குள் திருடன் வந்துவிடுவான்.

“சரட்… என்று சத்தம் போட்டால் போதும்.. ஆ…! என்று இந்த மூச்சை விடுவார்கள். இந்த மூச்சலைகள் படரும்போது திருடனுடைய நிலைகள் என்ன…?

ஒரு கல்லைப் போடுவார்கள். அந்தக் கல்லை போட்டபின் அதனின் எதிரொலிகளைப் பார்ப்பார்கள். இரண்டாவது கல்லைப் போடுவார்கள் மூன்றாவது கல் வரப்படும்போது இந்த உணர்வுகள் அப்படியே மறைந்துவிடும்.

நமக்குச் சத்தம் கேட்கும்… ஏதோ கல் என்று…! இரண்டாவது கல்லைப் போடும்போது ஏதோ சத்தம் கேட்கும்… “சரி விடு…” என்போம். மூன்றாவது கல் வரப்படும்போது முழித்திருந்த உணர்வுகள் மாறி நன்றாகத் தூங்க வைத்துவிடும்.

இப்படி அவர்கள் எண்ணங்கள் திருட வேண்டுமென்ற எண்ணம் வரும்போது நம்மைத் தூங்க வைத்தேவிடும்.

திருடன் வருவான் என்று எவ்வளவோ உஷாராக இருப்பார்கள். இருந்தாலும் திருடன் வரும்போது நன்றாகத் தூங்கிவிடுவார்கள்.

ஏனென்றால் நம்முடைய எண்ணங்கள் அது சிறுகச் சிறுக இவ்வாறு வந்து… அந்த உணர்வின் தன்மை சோர்வடையச் செய்து… அவனுடைய எண்ணம் வலுவாகி… அவனுடைய எண்ணக் குறிகளை வைக்கும்போது அந்த உணர்வலைகளே நம்மைத் தூங்க வைத்து விடுகின்றது.

நான் எவ்வளவோ உஷாராக முழித்துக் கொண்டுதான் இருந்தேன் இருந்தேன். என்னை எப்படியோ ஏமாற்றி விட்டார்கள் என்பார்கள்.

வேறொன்றும் தேவையில்லை. இங்கே தபோவனத்தில் கூட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பேட்டரி லைட் அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது. ஃபோர்மேன் ஒருவர் இருந்தார்.

தபோவனத்தில் உள்ள வேலியெல்லாம் எடுத்துவிட்டு கால்களை ஊன்றிக் கொண்டிருந்தோம். இத்தனை நாள் வேலி இருந்தது. இன்றைக்கு இல்லை என்று சொன்னவுடன் தாராளமாக எல்லோரும் வந்து போகும் நிலை இருந்தது.

அதனால் தான் நான் (ஞானகுரு) அப்பொழுது சொன்னேன்…! முன்பு வேலியில்லாமல் இருந்தது அதைப்பற்றி யாரும் சிந்திக்கின்றதில்லை. பல பொருள்கள் உள்ளே வைத்திருப்பதனாலே இதைப் பார்த்திருப்பார்கள். வேலி இல்லை என்பதைப் பார்த்தவுடன் அந்த எண்ணம் தூண்டும்… நிச்சயம் வந்து எதாவது எடுப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்றேன்.

அட…! நான் எப்பொழுது பார்த்தாலும் முழித்துக் கொண்டுதான் இருப்பேன் என்றார் அந்த ஃபோர்மேன்.

அவர் அன்று சொன்னாரோ இல்லையோ நேராக அவரிடம் இருந்த புதிய டார்ச் லைட் அவர் வைத்திருந்த தாமிர வயர் (COPPER COIL) எல்லாவற்றையும் அலுங்காமல் கொண்டு சென்று விட்டான்.

கொண்டு போகும் போது அங்கே ஒருத்தர் பார்த்திருக்கின்றார். யாரோ போகின்றார் என்று. அட நம்முடைய ஆள் தான்…! வேலியில்லை.. அதனால் ஓரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார் என்ற எண்ணத்தால் பேசாமல் போய்விட்டார்.

ஏனென்றால் அந்த உணர்வின் எண்ணங்கள் இப்படித்தான் இயக்குகிறது.

ஆனால் அந்தத் திருடனுடைய வலுவான நிலைகள் வரப்படும்போது எது எப்படி மாறுகின்றது…?

தபோவனம் தான்…! இருந்தாலும் அவருடைய எண்ணங்கள் இப்படி இருக்கப்படும்போது அதெல்லாம் ஒன்றும் செய்யாது என்றார் ஃபோர்மேன். ஆனால் பொருள் போய்விட்டது.

என்னா சாமி…? இந்த இடத்தில் வந்து இப்படிக் கொண்டு போய்விட்டாரே…! என்று என்னிடம் கேட்டார்.

உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கின்றது…! என்ற நிலையை அவருக்கு எடுத்துக் காட்டினேன். ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்று…!

1.மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு மன பலம் கொண்டு
2.உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.

ஊண் உடம்பு ஆலயம்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருமே துன்பத்தை அனுபவித்து “எனக்கு இப்படி வந்து விட்ட்தே…” என்று சொல்லி எல்லாத் தெய்வங்களையும் வணங்குகின்றோம். நான் உன்னை வணங்கினேனே எனக்கு இப்படித் துன்பம் வருகிறதே… தெய்வமே…!

எந்தெந்தத் தெய்வத்தை வணங்கினோமோ
1.அந்தத் தெய்வ குணத்தை… நல்ல குணத்தை எண்ணாதபடி நாம் வேதனைப்படுகின்றோம்
2.நல்ல பாலிலே விஷத்தை ஊற்றிக் குடித்தது போன்று…!

அதே சமயம் ஆத்திரம் வந்து விட்டால் “உன்னைத்தான் நான் வணங்கி வந்தேன் என்னைப் பரிசோதிக்கின்றாயே…” என்ற ஆத்திரம்…! அந்த நல்ல குணத்தில் காரத்தைக் கலந்து நாம் குடித்தது போல் ஆகின்றது.

ஆனால் ஆலயத்தில் காட்டப்பட்டது என்ன…?

நாம் நல்ல குணங்களைச் செயல்படுத்தினோம் என்றால் அவை நமக்குள் மறைந்திருக்கின்றது. “ஊண் உடம்பு ஆலயம்…!” நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஊணாக மாறி உடலாக மாறி இது ஆலயமாக மாறும்.

1.நான் எந்தக் குணத்தின் தன்மையை எடுத்தேனோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாக இருக்கின்றது.
2.நான் நல்லதை எண்ணி நினைவுபடுத்தும் பொழுது அதைப்போல நான் சுவாசித்து உயிரான ஈசனிடம் படும்பொழுது
3.அந்த மகரிஷிகள் எண்ண ஒலிகளைப் பரப்பி நான் நல்லதைச் செய்வேன் என்ற எண்ணம் வருகின்றது.
4.அத்தகைய குணம் எனக்குள் நல்லதை உருவாக்கும் பக்குவமாக
5.அந்த எண்ண அலைகள் உணர்வுகள் எனக்குள் வளர்ந்து தெய்வமாக இருக்கின்றது மனிதனுக்குள்.

நாம் சாப்பிடும் ஆகாரத்திற்குள் விஷம் மறைந்திருந்தாலும் அந்த விஷத்தை மாற்றி விட்டு உடலை நல்லதாக்கி… எனக்குள் வரும் மணத்தின் தன்மை சுவாசித்து… நல்லதைச் செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலாக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கும் “அந்த நல்ல குணங்களைத் தான்”
1.ஒவ்வொன்றையும் தனித்துத் தனித்து இன்னென்ன குணங்கள் இன்னென்னது செய்யும் என்று
2.1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 ஆலயங்களாகப் பிரிக்கப்பட்டது.

நான் நல்லதைச் செய்ய வேண்டும் என்று என் பையனை எண்ணுகின்றேன். அந்த நல்ல உணர்வுடன் போகும் பொழுது சம்பந்தமில்லாதபடி ஒரு குழந்தை உருண்டு கீழே விழுந்து விடுகின்றான்.

கீழே விழுந்தவுடனே அவன் அலறுகின்றான். தாய்ப் பாசம் கொண்டு நாம் “ஐயோ இப்படி ஆகிவிட்டதே” என்ற வேதனை கொண்டு நல்ல உணர்வுடன் எண்ணும் பொழுது நான் எந்தக் குணத்தை எண்ணினேனோ அந்த உணர்வின் சுவாசம் (நினைவு) அந்த எண்ண அலைகள் சுவாசிக்கப்பட்டுச் செயல்படும் ஆற்றலாக இங்கே வருகின்றது.

அவன் கீழே விழுந்த பின் அவன் சுவாசித்த வேதனையின் உணர்வலைகளை
1.நான் சுவாசிக்கும் போது என் உயிரிலே பட்டு எனக்கு அந்த வேதனை தெரிகின்றது.
2.அவன் வலி எனக்கு வந்ததாகக் கருதி அவனைக் காப்பாற்றுகின்றேன்.

அவனைக் காப்பாற்றி விட்டேன் ஆனால் அந்த நல்ல குணத்திற்குள் வேதனைகள் கலந்து வரும் பொழுது “யார் பெத்த பிள்ளையோ…? இப்படி ஆகிவிட்டதே…! என்ற வேதனையும் அவன் வேதனையில் பட்ட துடிப்பு நிலையும் என் நல்ல குணத்துடன் கலந்து விடுகின்றது.

இதை இப்படியே விட்டு விட்டால் என்ன செய்யும்…?

இன்று இதைச் செய்து விட்டோம். இதைப் போன்று ஏதாவது ஒரு உணர்ச்சிகள் நாம் போகும் பாதையில் ஒரு பையன் ஒரு சாமானைத் தூக்கிப் போடுகிறான் என்றால் பயத்தால் இந்த உணர்ச்சியின் வேகங்கள் எனக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.

பய உணர்வுகள் தோன்றி
1.அதைத் தடுக்கும் நிலைகளில் இருந்து கீழே விழுந்து விடுமோ விழுந்து விடுமோ என்று எண்ண எண்ண அந்தப் பொருள் கீழே விழுந்து விடும்.
2.சரியான நிலைகள் பக்குவப்படுத்த முடியாதபடி உணர்வின் இயக்க நிலைகள் மாறி விடுகின்றது.
3.நான் நல்லதை நினைத்தேன்… நல்லதைச் செய்தேன்…! :எதைத் தொட்டாலும் என் காரியம் விளங்க மாட்டேன் என்கிறது…”

நல்லதை நினைத்தேன் ஏன்று வேதனையான நிலைகளை எடுத்துக் கொண்டு அந்த உணர்வலைகள் அதிகமாகும் பொழுது என் வட்டமாகின்றது.

உதாரணமாக ஒரு குழம்பை வைக்கப்படும் பொழுது எல்லாம் சமமாக இருந்தால் ருசியாக இருக்கும். காரம் அதிகமாகி விட்டால் உசு உசு என்று எரிச்சல் ஆகின்றது அதே சமயம் காரல் அதிகமாகி விட்டால் அதற்குத் தக்க சுவை மாறுகின்றது. உப்பு அதிகமாகிவிட்டால் கரிக்கின்றது.

இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மணம் அதிகமாக எடுக்கப்படும் பொழுது அது முன்னணியில் வந்து விடுகின்றது. அப்பொழுது ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு நான் போகிறேன் என்றால்
1.நான் வாயை திறந்து பேசினாலே போதும்
2.சங்கடமான அலைகள் முன்னாடி இருக்கும் பொழுது
3.என் சொல் மற்றவர்கள் செவிகளிலே படும் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னைப் பார்க்கின்றார்கள்.
4.எனக்கு முன் இருக்கும் இந்தச் சங்கட அலைகள் அவருடைய ஈர்ப்புக்குள் போகும்.
5.அதைச் சுவாசித்த உடனே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லாது வெறுப்படைவார்கள்.
6.நான் எவ்வளவு நல்லது செய்கிறேன் ஆனால் என்னைப் பார்த்து வெறுக்கின்றார்களே என்று நாம் சொல்வோம்.

ஆனால் தவறு செய்யவில்லை. அப்பொழுது இதை யார் துடைப்பது…? இதற்குத்தான் ஆலயத்தைக் கட்டி வைத்துள்ளார்கள்.

நல்ல குணத்தை எதனால் நீ போர்த்திக் கொள்ள வேண்டும்…? அந்த மலரை வைத்து நல்ல வாசனை கொண்ட பூக்களைப் போட்டு.
1.வாசனையான சந்தனத்தை சாமி மீது ஊற்றுகின்றார்கள்.
2.ஏனென்றால் நம்மிடம் இருக்கும் குணத்திலே அதை ஊற்றினால் தான் அந்தத் தீமையான வாசனை போகும்.

என் நல்ல குணத்துடன் கீழே விழுந்தவனைப் பார்த்தேன். அவன் வேதனைப்பட்ட உணர்வை எடுத்த உடனே இதை மூடிவிட்டது அதிலிருந்து
1.பாலில் விஷம் பட்டால் குடித்தால் நம்மையும் எப்படி வேதனைப்படச் செய்யுமோ
2.நல்லது எண்ணும் போதெல்லாம் வேதனை வந்து கொண்டே இருக்கின்றது.

அதைத் துடைப்பதற்குக் கோவிலைக் கட்டி வைத்து அந்தத் தெய்வ குணத்தைப் பெறும்படி செய்தார்கள்.

இருட்டறைக்குள் சாமியை வைத்திருக்கின்றார்கள் திரையை நீக்கியபின் எதைக் கொண்டு அங்கே பார்க்கின்றோம் தீபத்தைக் காட்டும் போது வெளிச்சத்தால் இருட்டுக்குள் மறைந்த அனைத்தும் தெரிய வருகின்றது.

பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஈசனிடம் கேட்கின்றோம். அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரிலே படுகின்றது.

கீழே விழுந்தான்… கீழே விழுந்ததைச் சுவாசித்த பின் உயிரிலே பட்டு “ஆ” என்று பயமாகி அந்த வேதனைப்பட்டு அவனைக் காக்கச் செய்கின்றது. ஈசனுக்குள் படும் பொழுது தான் இது வரும்.

அதே உணர்வு உமிழ் நீராக மாறி அந்த வேதனை என் உடலுக்குள் போகும்போது என் நல்ல குணங்கள் எல்லாம் பதறுகின்றது. அந்த நல்ல குணங்களை எல்லாம் சேர்த்துத் தாங்கி உடலாக இருக்கும் சிவம் இப்படிச் செய்கின்றதே என்று பதட்டமாகின்றது. இந்த உடல் முழுவதும் பதட்டமாகின்றது நல்ல குணங்களுக்கும் பதட்டமாகின்றது. ஆனால் ஈசனுக்கோ வேதனையாகின்றது.

அதைத் துடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? கோவிலில் அங்கே சென்று அங்கிருக்கும் சிலைக்கு அபிஷேகம் செய்தால் இங்கு சரி ஆகுமா…?

அபிஷேகம் எதைச் செய்ய வேண்டும்…? எங்கே செய்ய வேண்டும்…?

அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நான் பெற வேண்டும் என் பேச்சிலும் மூச்சிலும் நல்ல இனிமையான உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா என்று
1.இங்கே நம் உயிருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
2.இதை அங்கே புறத்திலே சிலைக்கு ஊற்றிக் காண்பிக்கின்றார்கள். ஆனால் இப்படி யாரும் நினைப்பது இல்லை.

அங்கே சந்தனத்தை ஊற்றுவார்கள். அப்போது “பையன் சொன்னபடி கேட்கவில்லையே” என்று இங்கே வருத்தமாக இருக்கும். ஆக இங்கே வருத்தத்தைச் சுவாசித்து இங்கிருக்கும் ஆண்டவனுக்குக் கவலையை அபிஷேகம் செய்கின்றோம்.

நல்ல மணத்தை எடுத்து உனக்குள் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு அதைக் கொடு என்று ஆலயத்திலே காண்பித்தால் யாரும் அவ்வாறு கும்பிடுவதில்லை.

சரணாகதித் தத்துவமாக உன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அழுது சொல்லு. அவன் பார்த்துக் கொள்வான் போ…! தேங்காய் பழம் பலகாரத்தைச் செய்து கொடுத்து…
1.உனக்கு நல்லதை எல்லாம் கொடுத்து இருக்கின்றேன் என்னை எப்படி எல்லாம் துன்பப்படுத்துகின்றார்கள்
2.நல்லதைச் செய்கின்றேன் என்னை இப்படிப் பேசுகின்றார்கள் நல்லதைச் செய்தேன் ஏமாற்றுகின்றார்கள்
3.நீயே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! ஏன் நீ அவர்களுக்குச் சொல்லக் கூடாதா…? என்று சரணாகதித் தத்துவமாக அழுது அங்கு புலம்புகின்றோம்.

வேதனையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் எதைச் சம்பாதித்து வருகின்றோம்…?

எதை நீக்குவதற்காகக் கோவிலை வைத்தார்களோ
1.அந்தக் கோவிலுக்குச் சென்று சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக அசுத்தப்படுத்துகின்றோமே தவிர
2.கோயிலின் மரியாதையையே நாம் கெடுத்து விடுகின்றோம்.

இந்த உடலான கோவிலைச் சுத்தப்படுத்துவதற்கு நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக அவன் பட்ட வேதனையைத் தான் எண்ணுகிறோம். காரணம் என் நல்ல குணங்களை அது மூடிவிட்டது. அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.

ஆனால் நல்ல குணங்களைக் காப்பாற்றிய ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக அங்கே இருக்கின்றார்கள். அதனால் தான் பௌர்ணமி அன்று விண்ணை நோக்கி உற்றுப் பார்க்கும்படி சொல்வதும் காலையில் சூரியனைப் பார்க்க வேண்டும் என்றும் அன்று ஞானிகள் சொன்னார்கள்.
1.ஞானிகள் உணர்வை எண்ணி எடுப்பதை காயத்ரி என்பார்கள்.
2.இந்த காற்றிற்குள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட ஞானிகள் பேசிய உயர்ந்த சக்திகள் இருக்கின்றது.
3.அதை எண்ணி எடுத்து அந்த ஞானியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் சேமிக்க வேண்டும்.

அது பரமாத்மா பூமியில் இருப்பது. அதை எண்ணி எடுக்கப்படும் பொழுது உடலுக்குள் அணைப்பாக வருகின்றது. இரண்டாவது என் ஆத்மா. அதிலிருந்து சுவாசித்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது ஜீவாத்மா. இது எல்லாம் நல்ல குணங்களை விளைய வைத்துச் சுத்தப்படுத்தி உயிருடன் சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வாக வரப்படும் பொழுது நான்காவது உயிராத்மா. “இதற்குப் பெயர் காயத்ரி…”

அந்த உயர்ந்த உணர்வுகளை நமக்குள் எடுத்து விளைய வைத்தால் உண்மையான முழு சக்தியாக அங்கே பெறுகின்றது. இதை ஆண்கள் தான் செய்ய வேண்டும் பெண்கள் செய்யலாமா… வேண்டாமா…? என்று இப்படி ஒரு கேள்வி கேட்பார்கள்.

முதலில் தாய்மை…!
1.சக்தி தான் முதலில் சிவமாகின்றது. சிவத்தில் இருந்து தான் சக்தியும் வளர்ச்சி பெறுகின்றது
2.சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
3.சக்தியை முதலில் வைத்துத்தான் சிவமாகும் என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள்.

ஆனால் இன்று இருக்கக்கூடிய சாஸ்திர சட்டங்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா கூடாதா என்று சொன்னால் இது என்ன கேள்வி…? பெரும்பகுதியானவர்கள் “பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக் கூடாது… சொன்னால் தப்பு” என்கிறார்கள்… இவர்கள் சொல்லிக் கொள்ளும் காயத்ரி மந்திரம்.

மந்திரம் என்றால் என்ன…? அந்த இயற்கையின் சக்தி ஞானிகளுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஈர்க்கப்படும் பொழுது நமது ஆத்மாவாகி சிறுகச் சிறுகச் சேர்ந்து ஜீவாத்மாவாக நமக்குள் விளைந்து அதில் விளைந்த நிலைகள் உயிராத்மாவாகச் சேருகின்றது.

கோவிலிலே பார்க்கப்படும் பொழுது எந்தக் குணத்தைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அந்தக் குணமான சக்தி எனக்குள் இருக்கின்றது. அந்தக் குணத்தை நான் எண்ணும் பொழுது தான் அவனைக் காப்பாற்றினேன் (கீழே விழுந்தவனை). ஆனால் அதே உணர்வு எனக்குள் கலந்து விடுகின்றது.

அந்த குணத்திற்குள் கலந்ததை நான் துடைக்க வேண்டும். அதற்குத் தான் அங்கே காட்டியுள்ளார்கள்.
1.அவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த உணர்வின் சத்து எனக்குள் பட்டுவிட்டது.
2.அந்த வேதனையை அகற்றிவிட்டு நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால்
3.கோவிலில் காட்டப்பட்டுள்ள அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
4.இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா. வானை நோக்கி நாம் எண்ண வேண்டும்.
5.இந்தத் தெய்வ குணத்தை அவர்களுக்குள் விளைய வைத்து இது தான் உண்மை என்று அறிந்து சொன்ன வாக்கினை நாம் எடுக்க வேண்டும்.

தெய்வத்தைச் சொல்லி அந்தத் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால் நல்லது என்று சொன்ன சாதாரண மனிதன் இங்கே இருக்கின்றான். நல்லதைச் சொல்லிச் செய்பவன் எல்லாம் விண்ணிலே இருக்கின்றான். ஆனால் சாமியை நீ சொல் என்று மந்திரத்தைச் சொல்லி நீ இதைச் செய்தால் நல்லதாகும் என்று சொல்கின்றான்.

அதே மந்திரத்தைச் சொல்லி தெய்வத்தை ஜெபித்து வணங்கப்படும் போது நாம் இறந்த பின் இன்னொரு மனிதன் அதே மந்திரத்தைச் சொல்வான் என்றால் அவனுக்குள் ஆட்டிப்படைக்கும் பொம்மையாக ஆவோம்.

1.எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உடலில் சேர்த்துக் கொண்டோமோ இறந்த பிற்பாடு
2.அதே மந்திரத்தை இன்னொரு மனிதன் சொன்னால் அந்த மந்திரத்திற்குள் சிக்கப்பட்டு
3.அவன் என்னென்ன வேலை செய்கின்றானோ அதற்கு அடிமையாவோம் இவர்கள் சொல்லும் மந்திரத்தில் சென்றால்…!

ஞானிகள் சொன்ன வழிப்படி.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் அந்த மகரிஷிகள் உணர்த்திய அருள் சக்தியான தெய்வ நிலைகள் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி என் உடலுக்குள் அதைச் செலுத்தி மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் இந்த வாசனை என் உடலுக்குள் பெற்று அந்த நறுமணமான நிலைகள் பெற வேண்டும். என் சொல்லுக்குள் அந்த நறுமணம் வரவேண்டும். நான் சொல்வதெல்லாம் மற்றவர்களுக்கு இனிமையாக இருத்தல் வேண்டும் என்று எண்ண வேண்டும்.

கனியைப் பார்க்கின்றோம். அதை உட்கொண்டால் எப்படி இனிமையாக இருக்கின்றதோ அது போன்று என் சொல்லுக்குள் அந்த இனிமை கலந்து பிறருடைய செவிகளிலே படும் பொழுது அங்கே நல்லதாக அமைய வேண்டும்.

ஆனால் கீழே விழுந்தவனைப் பார்த்தவுடனே ஆ…! என்று எனக்குள் அலறல் ஆகின்றது. பிறருடைய மகிழ்ச்சியான சொல்களைக் கேட்கப்படும் பொழுது எனக்குள் ஆனந்தத்தைத் தூண்டுகின்றது.
1.இதைப் போல அந்த மகிழ்ச்சியான உணர்வின் தன்மை நான் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எனக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்தால்
3.இந்த உணர்வின் தன்மை கீழே விழுந்தவனைக் காப்பாற்றிய “அந்த விஷத்தை நீக்கிட” அந்த ஞானியின் அருள் வித்து உதவுகின்றது.
4.இவனைக் காப்பாற்றினேன்… அதே உணர்வின் தன்மை எனக்குள் அந்த நல்ல குணத்தை நிலை நிறுத்த முடிகின்றது.

இப்படித்தான் ஆலயத்தின் பண்புகளை நமக்குச் சொன்னார்களே தவிர சரணாகதித் தத்துவமாக துன்பத்தை எல்லாம் சொல்லி எல்லா பதார்த்தங்களையும் அங்கே வைத்துவிட்டு நான் எல்லாமே உனக்குச் செய்தேன் என் பிள்ளை மக்காக இருக்கின்றானே…! உன்னைத்தானே நான் வேண்டினேன் என்று வேதனையைத் தான் சொல்கின்றோம். எல்லோருக்கும் நான் தர்மத்தைத் தானே செய்தேன். எல்லோரும் ஏமாற்றுகின்றார்களே…!

அப்பொழுது எதை வணங்குகின்றோம்…?

ஆக நமக்குள் வந்த தீமையைத் தான் அந்தக் கோவிலுக்குள்ளும் சென்று அங்கேயும் அதே தீமையை வளர்க்கின்றோம். நாம் விடும் மூச்சுகள் நமக்குக் கெட்ட்தாவதோடு மட்டுமல்லாதபடி மற்றவர்களுக்கும் அது அங்கே கெடுதல் ஆகின்றது.

ஆலயம் நம்மைப் புனிதப்படுத்தும் நிலைக்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆகையினால் இனி எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் ஈஸ்வரா. இதையெல்லாம் அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மலரைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும். என் மூச்சாலும் பேச்சாலும் நல்ல மணங்கள் வெளிப்பட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

பிறரை மகிழ வைக்க வேண்டும். கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும். என் சொல்லால் பிறர் மகிழ வேண்டும் என் செயலால் பிறர் ஆனந்தப்பட வேண்டும்.
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எனக்குள் அது விளைய வேண்டும் ஈஸ்வரா.
2.அந்தக் கோவிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.என் சொல்லும் செயலும் இங்கு வருவோர் அனைவரையும் மகிழ வைக்கும் எண்ண அலைகளாகப் படர வேண்டும் ஈஸ்வரா என்று
4.இப்படி எல்லாம் செய்யும் போது நாம் தெய்வமாகின்றோம்.

இது தான் கோவிலின் தத்துவம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிலையிலும்…. ஒவ்வொரு ரூபத்திலும்…
1.குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த ஏட்டை (பதிவுகளை) நினைவு கொள்ளும் போது
2.எனக்குள் (ஞானகுரு) உணர்த்தி உணர்வின் தன்மையை அவரே இந்த உடலை வழி நடத்துகின்றார்.

ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!

அவர் பதிவு செய்த நாடாக்களை (RECORD) நான் எண்ணும் போது… “அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு…”
1.நீங்கள் பெற வேண்டும் என்று
2.அவர் செய்த உண்ர்வைத்தான் நானும் (ஞானகுரு) செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னைச் செய்விக்கின்றது.

ஆகவே குரு அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய வழியில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலிலே பெறச் செய்வோம்.

நாம் பார்க்கும் அனைவரின் உடலையும் மகிழச் செய்வோம். மகரிஷிகளின் அருள் உணர்வுடனே இந்த வாழ்க்கையை ஒன்றி வாழ்வோம்.

என்றும் பேரானந்த நிலைகள் பெற்ற பெரும் நிலையுடன் ஒன்றியே வாழ்ந்திடும் நிலையை நாம் உருவாக்குவோம். குருவுடன் ஒன்றி வாழும் நிலையைப் பெறுவோம்.

உங்களுக்குள் குரு உணர்த்திய பேருண்மைகளைப் படிப்படியாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலமும் இல்லை… நேரமும் இல்லை.

குருநாதர் எமக்குக் கொடுத்துப் பதிவு செய்த நிலைகள் எண்ணிலடங்காதது. இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
1.அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வைப் பதிவு செய்த இந்த நிலையை
2.எல்லோரும் பெற வேண்டும் என்பதற்கு
3.அவ்வப்போது அந்தத் துணுக்குகளை எடுத்து அந்த நினைவைக் கூட்டும் போது
4.உணர்வு ஒளியாகி… உணர்வின் தன்மைகள் எண்ணமாகி… அதனின் நிலைகளில் தான் செயல்படுகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டே உள்ளது.

குருநாதர் எனக்குக் (ஞானகுரு) காட்டிய அந்த உணர்வின் தன்மைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டபின் அந்த உணர்வின் வலுவான எண்ணம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் “பரமாத்மாவாக” (காற்று மண்டலத்தில்) மாறுகின்றது.

1.இந்த அருள் உபதேசங்கள் உங்கள் செவிகளில் படும்போது அதனின் உணர்ச்சிகளாக உங்களுக்குள் தூண்டப்படுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் வழி அதனின் நினைவாற்றல் உங்கள் கண்களுக்கு வந்து
3.அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர நேருகின்றது.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வருகின்றது. அந்த எண்ணத்தின் தன்மை உங்கள் “ஆன்மாவாக” மாறுகின்றது. அப்போது நீங்கள் அதை நுகர்ந்தால் அது உடலுக்குள் “ஜீவான்மாவாக” மாற்றும் தன்மை வருகின்றது.

இப்படி உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளும் உங்களுக்குள் அணுத் தன்மையாக மாறுகின்றது.

1.பின் அந்த அணுக்கள் வாழ அதன் உணர்வுகளை… உணர்ச்சிகளை… உந்தும்.
2.அப்படி உந்தும் போது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அதிகரிக்கும் தன்மை வரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கொண்டு… நீங்கள் கணவனும் மனைவியும் இரு உணர்வும் இரண்டறக் கலக்கப்படும்போது
1.இன்று தன் இனத்தை நாம் எப்படி உருவாக்குகின்றோமோ அது போல
2.கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரு உடலிலும் இணைந்து வாழச் செய்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து இந்த உணர்வை ஒளியாக மாற்றி… இந்த உடலை விட்டு யார் முந்திச் சென்றாலும் அதன்பின் அடுத்தவரையும் அந்த ஆன்மாவையும் தன்னுடன் இணைத்தே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “இணை பிரியாத நிலைகள் கொண்டு…” அந்த ஒளியின் உணர்வை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

1.இங்கே எப்படிக் கணவனும் மனைவியாக மகிழ்ந்து வாழ்கின்றோமோ
2.அதே மகிழ்ச்சியின் தன்மை அங்கேயும் இருக்கும்.

ஒவ்வொரு விஷத்தின் தன்மையும் தன்னுடன் மோதும்போதும் அந்த விஷத்தின் தன்மையைத் துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அத்தகைய உணர்வைக் கவரும் போது இன்று நாம் எப்படி இயற்கையில் விளைந்த உணவைச் சமைத்து உட்கொண்டு… அதில் மகிழ்ச்சி பெறுகின்றோமோ… அதைப்போல எத்தகைய தன்மையின் நிலையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

என்றுமே ஏகாந்த நிலையாக… எதிர்ப்பே இல்லாத நிலைகொண்டு இன்று நாம் எப்படி இங்கே வாழ்கின்றோமோ இந்த நினைவாற்றல் எல்லாம் அதற்குள்ளும் உண்டு.
1.இரு உயிரும் ஒன்றென இணைந்து
2.ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றது.

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண் பெண் என்ற நிலைகளில் மோதுண்டு தான் ஒரு உயிரின் தன்மையை உருவாக்குகின்றது. அந்த உயிர் மற்றொன்றைக் கவர்ந்து அந்த உணர்வின் தன்மையை உருவாக்கும் தன்மையாக உடல் பெறுகின்றது.

இதைப் போலத்தான்… கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து விட்டால் இந்த உணர்வுகள் அனைத்தும் “பிறவியில்லா நிலை..” என்ற நிலைகளை அடைய உதவுகின்றது.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

நாரதன் எனும் ஞானக் கனியை நாம் புசிக்க வேண்டும்

 

கந்த புராணத்திலே அன்று சொன்னது. பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான். ஆகவே
1.நீ வேறு உலகம் சுற்ற வேண்டியதில்லை.
2.அன்னை தந்தையினுடைய எண்ண உணர்வலைகளுக்குள் நீ சுழன்று வந்தால் அதனின் நிலைகள் நீ கனியாவாய் என்று
3.அந்தக் கனியைப் பெறும் தகுதியை யார் கொடுத்தது…?
4.நாரதன்…! அந்த நாரதன் யார்…?

ஏனென்றால் மனிதனாகித் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்று சப்தரிஷி மண்டலம் ஆகி
1.அதிலிருந்து வெளிவரும் மூச்சலைகள் – நான் பேசும் அந்த உணர்வின் அலைகள் தான்
2.அந்த வளர்ந்து கொண்ட அணு தான் நாரதன்.

அந்தக் கனியான அருள் வித்தை “நாரதன் தான் இந்தக் கனி” என்று சுட்டிக் காட்டுவதற்கு அவர்கள் சென்ற வழியில் செல்ல வேண்டும் என்றால் அன்னை தந்தையின் சொல்லின் சுழற்சிக்குள் இன்று ஒருங்கிணைந்து அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வை கொண்டு நாம் சுழன்று வந்தால் இந்த உணர்வின் தன்மை கனியின் தன்மையை நீ பெறுகின்றாய்.

இப்பொழுது நான் சொல்லும் நிலைகள் கொண்டு “விண்ணை ஏகும் முறையை” அன்று கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

அந்த மெய் ஒளியின் உணர்வை நாம் சரியான நிலைகள் பெறுவதற்கு அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி வாரத்தில் ஒரு நாள் மூதாதையர்களான குலதெய்வங்களை விண் செலுத்த வேண்டும்.

1.அதை பழகிக் கொள்ள வேண்டும்… பழக்கிக் கொடுக்க வேண்டும்.
2.ஒவ்வொரு நாளும் அல்லது அந்த வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து
3.குழந்தைகளையும் பழக்கி விண்ணின் ஆற்றலைப் வெறும் தகுதியை ஏற்படுத்தும் போது ஒரே தொடர்பாகக் கூட்டமைப்பாக வருகின்றது..

ஆனால் இப்பொழுது நாம் குழந்தைகளை வளர்க்கப்படும் பொழுது அவன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன செய்கிறோம்…? இவனுக்கு நல்ல நேரம் இருக்கின்றதா… கெட்ட நேரம் இருக்கிறதா…? என்று ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

கெட்ட நேரம் இருக்கின்றது என்று சொல்லி யாகத்தை வளர்த்தால் சரியாகிப் போய்விடும் என்று காசைக் கொடுத்துச் செலவழித்து அவன் சொல்வதைச் செய்வோம்.

யாகத்தைச் செய்தால் அது எப்படி சரியாகும்…?

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நாம் இப்படித்தான் ஜாதகக்காரனிடம் கேட்டு “நல்ல நேரம் இருக்கிறதா…” என்று தெரிய விரும்புகின்றோம்.

ஆனால் அங்கே அவன் கெட்டதைச் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம். கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம்.
1.பையனுக்கு நல்ல புத்தி சொல்வதற்குப் பதிலாக
2.கெட்ட நேரம் இருக்கிறது கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வதைத் தான் நாம் ஆழமாகப் பதிவு செய்கின்றோமே தவிர
3.நல்லதை நினைத்து அதை எடுத்துச் செய்வதற்கு இல்லை.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துத் தான் நான் இன்று எல்லாமே செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் கெட்டது என்று ஜாதகக்காரன் சொல்லிவிட்டால் அந்த உணர்வு வேகமாக பதிவாகி விடுகிறது.

நல்லதாகும் என்று சொல்லி இருந்தால் அது நடப்பதில்லை.
1.காரணம் விஷம் வேகமாக வேலை செய்யும்
2.நல்லதாக வேண்டும் என்றால் திரும்பத் திரும்ப நல்லதை எடுத்து நல்லதையே எண்ணி வளர்க்க வேண்டும். அது எங்கே இருக்கிறது…!

ஜாதகக்காரன் சொல்லும் நல்லது நடக்காது. ஆனால் “கெட்டது அனைத்துமே… ஜாதகக்காரன் சொன்னபடி நடக்கிறது…!” என்று அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்கின்றோம்.

குழந்தை பிறந்த நேரத்தின்படி அவன் தாய்க்கு ஆகாது என்று அவன் ஜாதகப்படி சொல்வான். அந்த ஜாதகப்படி இத்தனாவது மாதத்தில் இத்தனாவது வருடத்தில் “தாய்க்கு இந்த மாதிரி ஆகும்” என்று அவன் சொல்லி விடுவான்.

அதைக் கேட்ட உடனே ஆரம்பத்திலிருந்து அந்த வித்தை நமக்குள் பதிவு செய்து வளர்க்க ஆரம்பித்து விடுகின்றோம்.
1.கொஞ்சம் கொஞ்சமாக அதை நினைத்து நினைத்து வளர்த்து அந்த வயது வரை
2.ஜாதகக்காரன் சொன்னான் ஜாதகக்காரன் சொன்னான் என்ற அதை நினைவைக் கொண்டு வரும்பொழுது
3.காற்றிலிருந்து அதைச் சுவாசித்து அந்த நோயை நமக்குள் வரவழைத்துக் கொள்கின்றோம்.

ஜாதகக்காரன் சொன்னான்…! சொன்னது சரியாகி விட்டது. சொன்ன நேரத்தில் சரியாக நடந்து விட்டது “ஜாதகம் பொய்யா…?” என்று தான் நாம் வாதிப்போம்.
1.அது விளைந்த பிற்பாடு ஜாதகக்காரன் சொன்னது மெய்யாகி விட்டது
2.அப்பொழுது அவன் கடவுளாகி விடுகின்றான்… நன்றாக இதை கவனித்துக் கொள்ளுங்கள்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை சூரியனுக்கு பூமிக்கோ செடி கொடிகள் மற்றும் அனைத்திற்குமே ஜாதகம் உண்டு… சொல்ல முடியும்
1.காரணம் அவையெல்லாம் “நினைத்து” எதையும் மாற்ற முடியாது
2.மனிதனுக்கோ… கெட்டது என்று வந்து விட்டால் அதை நீக்கிவிட்டு நல்லதைச் செய்யக்கூடிய நிலைகள் உண்டு.

நாம் உணவாக உட்கொள்ளும் ஆகாரம் எத்தகைய சுவையாக இருந்தாலும் அதற்குள் மறைந்து இருக்கக்கூடிய விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றிடும் சக்தி நம்முடைய அறிவு ஆறாவது அறிவுக்கு உண்டு.

அந்த அறிவால் தான் செடிகளில் விளைந்த காய்கறிகளில் அதில் உள்ள காரலை வேக வைத்து நீக்கிவிட்டுப் பல பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்கின்றோம்.

மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்கிவிட்டு
1.தனது ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் சப்தரிஷிகள்
2.சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்… அதிலிருந்து வெளிப்படும் ஒளியான அணு தான் நாரதன் என்பது.

அந்தச் சக்திகளை நமக்குள் வளர்த்தால் அவர்களைப் போன்று நாமும் எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்க முடியும். அவர்களைப் போன்று நாமும் கனியின் தன்மையை (முழுமை) அடைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. கருவில் இந்த உயிரணு உடல் பெறும்போது… இன்னொரு உடலில் பெற்ற நிலையோ அல்லது தாய் நுகரும் உணர்வின் தன்மையில் அந்தக் கருவில் இருக்கும் சிசுக்கு இந்த உணர்வுகள் பட்டபின் அந்த கருவும் அந்த வேதனைப்படுகின்றது.

அந்த வேதனை என்ற உணர்வுகளையே அது இயக்குகின்றது. இதை நமது குருநாதர் பல முறை காட்டினார்
1.கருவில் வளரும் குழந்தைகள் தாய் நுகரும் உணர்வால் எவ்வாறு இயங்குகின்றது…?
2.இன்னொரு உடலில் பெற்ற அந்த உயிரணு (உயிராத்மா) தன் உடலுக்குள் சென்ற பின் அந்த உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது..?
3.நாம் கொல்லும் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்தபின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உரு பெறும் தன்மைகள் எப்படிப் பெறுகின்றது…?

மனித உருப்பெறும்போது அந்தத் தாய் வேதனைப்படுவோரையோ சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ பார்க்கும்பொழுது அந்த உடலில் இருந்து வெளிப்படுவதை அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனின் காந்தச் சக்தி கவரும்போது கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உருப்பெறுகின்றது…?

இதைப்போல ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும்… தாய் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும்… ஆனால் கருப்பைக்குச் சென்ற பின் அந்தக் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகின்றது…?

இதை எல்லாம் குருநாதர் காட்சியாகவே காண்பித்தார். நான் (ஞானகுரு) இதை எல்லாம் அறிந்து கொள்வதற்காக குறைந்தது “ஒரு லட்சம் உணர்வுகளின் தன்மைகளையாவது..” குருநாதர் காட்டினார். இதற்கு மூன்று வருடம் ஆகிவிட்டது.

அதைக் காணும் போது சரியான ஆகாரம் கிடையாது.. குறித்த நேரங்களில் சில பச்சிலைகளையும் ஒரு பேரீச்சம்பழத்தையும் தான் சாப்பிட வேண்டும். அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

இதற்கு ஒரு அரை மணி நேரம் விடுபடும்படி செய்வார். அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து அவர் சொன்னதைப் பேசாமல் பார்த்திருக்கும்படி சொல்வார்.

ஏனென்றால் இவை அனைத்தும் கொல்லூர் மூகாம்பிகை என்று சொல்லும் என்று குடசாஸ்திரி மலைக் காட்டில் தான் பார்த்தது.

1.அன்று கோலமாமகரிஷி அவர் தியானமிருந்த இடம் சிறு குகையாக இருக்கும்.
2.அங்கு பெரிய வனமாக இருக்கும்… தபோவனமும் உண்டு.
3.மலை மேலே கொஞ்ச தூரம் இவ்வளவு தூரம் சென்றால் கூடு மாதிரி இருக்கும்
4.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளை எல்லாம் காணும்படி செய்தார் குருநாதர்.

மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் அவர்கள் உடலுக்குள் செல்கிறது. இப்பொழுது நாம் செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம் ஆடு மாடு எல்லாம் வளர்க்கின்றோம். அவை யார் மேல் பற்றுள்ளதோ அது பற்றுள்ள நிலைகளில் இறந்தால்… அந்த ஆன்மா வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கின்றது…? என்ற நிலையையும் இதை தெளிவாகக் காட்டியுள்ளார்.

இப்படி எல்லாம் நாம் எத்தனையோ நிலைகள் பட்டுப் பல பிறவிகள் தாண்டித் தான் இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று காட்டுகிறார் குருநாதர்.

இதைப் போல் தான் நம் பூமியில் ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். அவனைப் பின்பற்றியவர்கள் எல்லாம் சப்தரிஷி மண்டலமாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் அவர்கள் எல்லாம் எத்தனையோ இன்னல்கள் பட்டு அந்த நிலையை வளர்த்துக் கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த சக்திகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளியை நாம் சுவாசித்து…
2.அதை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டோம் என்றால்
3.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான அறிவுப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்று காட்டுகின்றார்கள். அந்த விஞ்ஞான அறிவுப்படியே மெய் ஞான அறிவையும் உங்களுக்கு ஊட்டுகின்றோம்.

நம் உயிர் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… சூரியனும் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
1.அதன் (சூரியன்) இயக்கச் சக்தியினுடைய நிலைகள் அது பூமியில் படரப்படும் போது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சக்தியை அது எதைக் கவர்ந்ததோ
3.அதை எல்லாம் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதே போல் மனிதனாக இருக்கும் நம் மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வினை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால்
1.இந்த மனித உடலில் உருவான அந்த உணர்வின் உணர்ச்சிகளை இயக்கும்
2.அதாவது சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் அதை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
3.அதன் உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.
4.(அதை நாம் நுகர்ந்தால் உணர்ச்சிகளாக இயக்கும்)

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பேசிய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் இது எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது.

படிக்காதவன் தான்…. நான் இதைச் சொல்கிறேன். ஆக… சாமி சொல்வது புரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.
1.ஏனென்றால் பதிவின் நினைவு எதுவோ
2.அது அந்த நினைவின் நிலையைக் கவர்கின்றது.
3.அதன் உணர்வின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது.

உதாரணமாக… சிறு குழந்தைப் பருவத்தில் குழந்தைகள் படித்ததில்லை. ஆனால் ரேடியோவையும் டி.வி.யையும் உற்றுப் பார்க்கின்றது. அதிலே வரும் இசையைக் (பாடலை) கவர்ந்து கொண்ட பின் இந்த உடலில் அந்த உணர்வுகளுக்கொப்ப அந்தக் குழந்தை ஆட்டங்கள் ஆடுகின்றது.

1.அதற்கு ஒன்று,மே தெரியவில்லை என்றாலும்
2.பாடநிலை இல்லை என்றாலும் – சிறிதளவே பதியச் செய்த பின்
3.அது பேசத் தொடரும் போது இந்தப் பாடலை எளிதாகப் பாடுகின்றது.

இது குழந்தைப் பருவத்திலே…!

ஆனால் பெரியவர்களாக இருப்போர்கள் நாம் பல விதமான உணர்வுகளை மாற்றிக் கொள்கின்றோம். பல உணர்வுகள் நமக்குள் கலக்கும் போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்.

குழந்தைப் பருவத்தில் அத்தகைய நிலை இல்லை. குறுகிய உணர்வுகளும்… பார்த்துணர்ந்த உணர்வுகளும் பதிவாக்கிக் கொள்ளும் போது அதனுடைய சிந்தனை அதன் வழியில் செல்லப்படும் போது அதை இயக்கும் சக்தி பெறுகின்றது.

பெரியவர்களாக இருக்கும் நாம் அதைக் காண முடியவில்லை.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால்
1.எம்முடைய உபதேச உணர்வுகளை (எலெக்ட்ரானிக்) நீங்கள் குழந்தைகள் பதிவாக்குவது போல் பதிய வைத்துக் கொண்டால்
2.ஞானிகள் கண்ட அறிவின் ஞானம் அனைத்தும் உங்களுக்குள் தோன்றும்.
3.ஞானிகளின் உணர்வின் இயக்கமாக நீங்கள் செயல்படுவீர்கள்.
4.அவர்கள் தீமையை நீக்கிய அந்த ஆற்றல்களை நீங்களும் பெறுவீர்கள்.

உங்கள் உணர்வுகளை எல்லாம் நீங்கள் ஒளியாக மாற்ற முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

அணுவின் இயக்கம்… உணர்வின் இயக்கம்…!

 

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வரும் கசப்பான சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. கவரப்படும் பொழுது வேப்ப இலை எந்த உருவமாக இருக்கின்றதோ அதனின் மணத்தை வெப்ப காந்தம் கவர்ந்த உடனே அந்த இலையைப் போலவே அந்த அனல் வீசும்.

1.மணத்தின் நிலைகள் இலையைப் போலவே ரூபம் இருக்கும்.
2.அந்த இலை எப்படி இருக்கின்றதோ அதைப் போன்று அந்தப் பொறிகளை வீசி இலையின் ரூபமாக இருக்கும்.

ஒரு இலுப்ப மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனுடைய இலைகள் வட்ட வடிவமாக இருக்கும். அதிலிருந்து வரக்கூடியது துவர்ப்பான சத்து.
1.அதைச் சூரியனுடைய வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால்
2.அந்த அணுவைப் பார்த்தால் வட்ட வடிவமாக இருக்கும்.

இலுப்ப மரத்தின் துவர்ப்பான சக்தி அதிகமான ஆற்றல் இருப்பதால் அதற்குப் பக்கத்தில் ஒரு ரோஜாச் செடி இருந்தாலும் இது அதைக் கவர்வதில்லை. அதனுடைய ஆற்றல் இருக்கும் பொழுது நல்ல மணத்தை ஒதுக்கி விடுகின்றது.

அதே போன்று வேப்ப மரத்திற்கு அருகில் நல்ல மணங்கள் வந்தாலும் இந்தக் கசப்பின் ஆற்றல் இருக்கப்படும் பொழுது அதனுடைய வலுக் கொண்டு அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

கசப்பான சத்து இருந்தாலும் ரோஜாப்பூ தன் நல்ல நறுமணத்தைத் தான் அது எடுத்துக் கொள்கின்றது.. கசப்பை உள்ளே விடுவதில்லை.

ஏனென்றால் ஒவ்வொன்றின் ஆற்றலும் அத்தகைய தன்மை வாய்ந்தது.

ஆக வலுவான சக்தியாக இருப்பதால்
1.காற்றுக்குள் இருக்கும் நுண்ணிய அலைகளைச் சிற்றலைகளாக வரும் பொழுது
2.தன் இனமான சக்தி சிறுத்திருக்கின்றது… அந்தச் சக்திகளை அது எளிதில் கவர்ந்து கொள்கின்றது.

காற்றுக்குள் இருக்கும் தன் இனமான சக்திகளைத் தன் வலுவின் ஆற்றல் கொண்டு கசப்பான சத்தைக் கவர்ந்து வேப்பமரம் வளர்கின்றது. அது வெளிவிடும் நிலையை காற்றுக்குள் எவ்வளவு இது கலந்து இருந்தாலும் அடுத்த வேப்பமரம் இந்தச் சத்தை எடுத்து அது வளர்கின்றது… தன் இனத்தை வளர்க்கின்றது.

ஆனால் இயற்கையின் மாற்றங்கள்… அணுக்களின் தன்மை தனித்துத் தனித்து வேப்ப மரத்தின் கசப்பான சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் அதே போன்று இலுப்ப மரத்தின் சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து தனித்தனியாக அலை அலையாகச் செல்லும் பொழுது
1.அதில் எந்த உணர்ச்சியின் தன்மை வேகமாக இருக்கின்றதோ
2.அதற்குத் தக்கவாறு அந்த அணுவின் நகர்ந்து செல்லும் ஆற்றலும் இருக்கும்… வேகமாக இருக்கும்.

மனிதனைத் தேள் கொட்டி விட்டால் கடு…கடு… என்று அந்த விஷத்தின் தன்மை ஏறுகின்றதல்லவா. இதைப் போலத் தான் ஒவ்வொரு நிலையிலும் ஆற்றல்மிக்க அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறு விஷத்தின் ஆற்றல் கலந்துள்ளது. அது தான் ஆவி.

அந்த இயக்கத்தின் தன்மையில் எந்தெந்தத் தாவர இனத்தின் விஷம் அதிகமாகக் கலந்திருக்கின்றதோ கலந்த நிலைகளுக்கொப்ப அந்த உணர்வின் சக்தி பொறிகளாகக் கிளப்பக் கூடிய ஆற்றலும் அதிகமாக உண்டு.

இந்த அணுக்களின் தன்மை இரண்டும் தனித்தனியாகப் போகும் போது வேகத்தின் துடிப்பு படர்ந்து சென்றாலும் இதிலே கலந்திருக்கக்கூடிய நிலைகளுக்கொப்பத்தான் இதனுடைய இயக்கச் சக்தி.

இந்த அணுக்கள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதியுடனே வெப்பமும் காந்தமும் ஒன்றாக இணைந்து கொள்கின்றது. இரண்டு வெப்ப காந்த அணுக்கள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஆற்றல் அதிகமாகும். ஆனாலும் அந்த வேப்ப மரத்தின் கசப்பின் சத்தும் இலுப்ப மரத்தின் துவர்ப்பின் சத்தும் இதுவும் இரண்டறக் கலந்து விடுகின்றது.

வேப்ப மரத்தின் ஆற்றல் விஷம் ஜாஸ்தி அது உமட்டல்… இயக்கச் சக்தி அதிகமாக இருக்கிறது. இலுப்ப மரத்தினுடைய திகட்டல் கம்மி… உள்ளடங்கி வட்ட வடிவமான நிலைகளில் இருக்கும் பொழுது அதை வெளிப்படுத்தும் நிலைகள் கொண்டு
1.வேப்ப மரத்தின் இலை ரம்பம் போன்று இருப்பது
2.அடுத்து இலுப்ப மரத்தின் இலை வட்டமாக இருக்கும் இரண்டும் சேர்த்து புது விதமான இலையாக உருவாகின்றது

இது உணர்வின் இயக்கம்.

நாம் ஒரு காரத்தை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்.. ஆனால் கசப்பை வாயிலே போடும்போது உமட்டலாக “ஓய்…” என்று வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது.

இதே மாதிரி இயற்கையின் உணர்வின் அணுக்கள் அது சேர்க்கையாகும் பொழுது இந்த அணுவின் தன்மைகள் ரூபங்கள் மாறும்.

இப்படிப் பல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று அடக்கி இயக்கமாகி காந்தத்தின் ஆற்றல் அதிகமாகி இப்படி நூறு அணுக்கள் நூறு விதமான தாவர இனத்தைக் கவர்ந்து கொண்டு வந்தால் அதனுடைய கலவைக்குத் தக்கவாறு உணர்வின் நிலைகள் உருமாறி இந்த உணர்வின் சத்துக்கொப்ப இயக்கச் சக்தியாக மாறி அந்த அணுவின் ஈர்ப்பு காந்தமும் வெப்பமும் அதிகமாகி எடை கூடி புவியின் ஈர்ப்பிற்குள் அமைந்து விடுகிறது.

பூமிக்குள் அமைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பு காந்தத்தின் துணை கொண்டு வெளியில் இருந்து வரக்கூடிய வெப்பத்தின் தன்மையை ஈர்க்கும் தன்மை பெறுகிறது.
1.மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் ஒரு மின்னல் தாக்கப்படும் பொழுது
2.இந்த அணுவிற்குள் பட்ட உடனே அது துடித்து எழுந்து இயங்கத் தொடங்குகிறது.

அப்படி இயங்கும் பொழுது தனக்குள் எந்த உணர்வின் சக்தியை இது பெற்றுக் கொண்டதோ… காற்றிலே மிதந்து வரும் தன் இனமான சக்திகளை எத்தனை வகையான உணர்வுகளைத் தனக்குள் அது ஈர்த்ததோ… அதைப் போன்று நுண்ணிய அலைகளைப் பிரித்து இணைக்கச் செய்து… அது ஒரு புதுச் செடியாக மரமாக புது இலைகளாக உருப்பெறுகின்றது.

புது விதமான செடியாக வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனை வகையான நிலைகள் இதிலே சேர்த்து இருந்ததோ அந்தச் சத்துக்குத்தக்கவாறு மரம் வளர்கின்றது.

மரமாக வளர்ந்து அந்த நூறு விதமான நுண்ணிய அலைகளைத் தனக்குள் பிரித்துச் சேர்த்து அதற்குள் விளைந்து பூவாகி காயாகி கனியாகி வித்தை உருவாக்குகின்றது.

முதலிலே கவர்ந்த அணுவின் தன்மை அது செடியாகி மரமாகி அந்த உணர்வின் சக்தியை மீண்டும் வளர்த்து வித்தாக உருப்பெறுகின்றது.
1.வித்தின் பரிணாமம் பெரிது.
2.ஆனால் முதலில் அணுவின் சக்தி சிறிது.

இதனின்று வளர்ந்த இந்த நிலைகள் பரிணாம வளர்ச்சியில் வருவது போல ஒரு உயிரணு புழுவில் இருந்து மனிதனாக வரும் போது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து வளர்ச்சிக்கு வருகின்றது.

1.ஒவ்வொரு உணர்வின் சத்தாகச் சேர்க்கப்பட்டு தான் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பாகி… ரூபங்களாகப் பரிணாம வளர்ச்சியாகி
2.எத்தனை கோடித் தாவர இனங்களை… உயிரினங்களாக இருக்கும் பொழுது உட்கொண்டதோ
3.இந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தின் நிலையும்
4.அதனதன் உணர்வுக்கொப்பத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளைச் சுவாசித்து… தன்னை தற்காத்துக் கொள்ளும் வினைகளைச் சேர்த்து
4.அது கலந்து சேர்த்துக் கொண்ட உணர்வின் அணுவின் தன்மை அதற்குள் விளைந்தது
5.ஒவ்வொரு உயிரினமும் அதைத் தன் உயிரான்மாவாக வடித்துச் சேர்த்துக் கொள்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவில் படித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ வகையில் இப்பொழுது தனக்கு வேண்டிய உயிரணுக்களை மற்ற உடல்களில் இருந்த செல்களை எடுத்து மற்ற உடலில் சேர்த்துப் புது புது ஆட்டினங்களையோ மாட்டினங்களையோ நாயினங்களையோ உருவாக்குகின்றார்கள்.

எத்தனையோ எண்ணிலடங்காத நாய்களைப் பூனை போல்… கரடி போல் உருவாக்கியிருக்கின்றனர். பூனை போல்… கரடி போல் உள்ளது மற்ற உயிரினங்களிலிருந்து எடுத்து அதை ஒன்றாகக் சேர்த்து புதுப் புது நாய்களை உருவாக்குகின்றான்.

அதே போல் உணவுப் பொருள்களில் பார்த்தாலும் சாதாரண மனிதன் பல வகையான பொருள்களைச் சேர்த்துப் புதுப் புது பதார்த்தங்களை செய்கின்றான்.

மனிதனுக்குச் சுவையாக இருப்பதற்குப் புதுப் புது பதார்த்தங்களைச் செய்கின்றோம். எந்தப் பொருளை எதனுடன் போட்டால் எதன் சுவை வரும்…? என்ற நிலையில் மனிதன் கற்றுணர்ந்து அதன்படி சுவையான பதார்த்தங்களைச் செய்கின்றான்.

அன்றெல்லாம் ரொட்டிக் கடையில் மட்டும் தான் ரொட்டி தான் இருக்கும். இப்பொழுது வீட்டிலேயே கூட ரொட்டியோ மற்றதோ செய்யக்கூடிய அளவிற்குக் குடும்பங்களில் படித்ததை வைத்துச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இதைப்போல மனிதன் தன் எண்ணத்தால் புதுப் புதுப் பொருள்களை உருவாக்கும் அளவிற்குத் திறன் பெற்றுள்ளான் மனிதன்.

பெண்கள் வீட்டில் வகை வகையான குழம்புகளை வைக்கின்றார்கள். பருப்பை எடுத்து அளவாகப் போட்டு அதற்கு வேண்டிய சரக்குகளைப் போட்டுப் பக்குவப்படுத்திச் சுவையான உணவு வகைகளைச் சமைக்கின்றனர்.

அதே சரக்குகளை அதே அளவுகோல்படி இன்னொரு பெண்மணியிடம் கொடுத்து அதே மாதிரிச் சமைக்கச் சொன்னால் அதன் சுவை வித்தியாசமாகத் தான் இருக்கும்.

காரணம் அவர் உணர்வுகொப்ப அந்த சுவையைக் கூட்டிடும் உணர்வுகளை உருவாக்குகின்றது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் பார்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சுவையாக இருப்பதற்குக் காரணம்… அங்கிருக்கும் பெண்கள்
1.கூடுமான வரையிலும் நல்ல சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்டதனால்
3.அந்த உணர்வுகள் அந்தந்தப் பக்குவத்தை பெறப்படும் பொழுது
4.குழம்பைச் சுவையாக செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கொஞ்சம் விரக்தியாக வரட்டும் அல்லது சண்டை போடட்டும்…! ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான உணர்வு வரப்படும்போது அன்று குழம்பு வைப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலா.

உதாரணமாக.. கோபமாக இருந்தால் காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்கள். சலிப்பு சஞ்சலம் அதிகமாக இருந்தால் இரண்டு உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.

ஆனால் அதே சரக்குகளை வைத்துச் சுவையாக முதலில் செய்தவர்கள் தான். அந்த அளவுகோலும் இருக்கின்றது. ஆனால் இந்த உணர்ச்சிகள் அதற்குத்தக்க இந்த உடலை இயக்குவது எது…?

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்தான்…! அவர்கள் தப்பு செய்யவில்லை.

குழம்பு வைத்த பிறகு பார்த்தோமென்றால் ஐய்யய்யோ… நான் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி குழம்பு வைத்துவிட்டேன் என்பார்கள்.

அதே போல் பக்கத்து வீட்டுப் பையன் அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். பார்த்தவுடனே… இப்படியா அவர்கள் வீட்டில் சண்டை போடுவார்கள்…! என்று சலிப்படைந்தேன். அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தேன். இங்கே உப்பு அதிகமாகி விட்டது என்பார்கள்.

இதை எல்லாம் மாற்றுவது யார்…?

பிறர் செய்யும் சிந்தனையற்ற செயலின் உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் ஓடி அவரின் உணர்வுகளுக்குத் தக்கவாறு நாம் குழம்பு வைக்கின்றோம்.

அப்பொழுது யார் தப்பு செய்தது…? நாம் அந்தச் சந்தர்ப்பத்தில் நுகர்ந்தது தான் இயக்குகிறது.

கையிலே மண்ணை எடுத்து ஒரு வேலையாகப் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள். கையைக் கழுவாமல் அப்படியே நீங்கள் அடுத்தாற்படி குழம்பை வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும்…?

இந்த மண்ணோடு காய்கறிகளைச் சேர்த்தோமென்றால் இந்த மண்ணும் சேர்த்து நர…முற… நர…முற… என்று இருக்கும். அப்படியானால் நம் கையைக் கழுவுகிறோம் அல்லவா…?

அதே சமயத்தில் வழு வழுவென்று இருக்கக்கூடிய பதார்த்தத்தைத் தொட்டு வேலை செய்கின்றோம். கை கழுவாமல் இருந்தால் அதே உணர்வின் தன்மை நாம் வைக்கும் குழம்பில் சேருமல்லவா…? அதை சுத்தப்படுத்திவிட்டுத் தானே வேலை செய்கின்றோம்.

இதே மாதிரித் தான்…
1.ஒரு கோபப்படும் உணர்வை நாம் கேட்கின்றோம்… உயிரிலே படுகின்றது
2.இந்த உணர்ச்சிகள் போனவுடனே நம் ஆன்மாவில் தூய்மை கெடுகின்றது
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே கோப உணர்ச்சிகளை இயக்குகின்றது
4.அப்பொழுது நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமா இல்லையா…?

அதற்கு என்ன ஆயுதம் வைத்துள்ளீர்கள்…?

ஏனென்றால் இதெல்லாம் மறைமுகமாக நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றுகின்றது நல்ல உடலையும் நோயாக மாற்றி விடுகின்றது.

பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கப் பார்க்க அந்த உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுள்ளவனாக மாற்றி விடுகின்றது.

அதனால்தான் விநாயகர் கையில் கொடுத்திருப்பது அங்குசபாசவா.

அதாவது உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில்
1.ஒவ்வொரு பிறவியிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று
2.தன் கண்களால் கூர்மையாகப் பார்த்து அதன் வலிமையை நுகர்ந்து
3.எதிரியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து
4.அதிலிருந்து விலக வேண்டும் என்ற உணர்வு அதிகமானபின் தன் உடலில் இது விளைந்து
5.இது இறந்தபின் எதன் வலுவான உணர்வு நுகர்ந்ததோ அந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனான நிலையில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கிட… ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து… அதை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதற்கே “அங்குசபாசவா” என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இங்கு வெளியிடப்பட்டுள்ள அருள் ஞான நூல்களை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போது உங்கள் வாழ்க்கையில் மனம் சோர்வடைகின்றதோ அப்போது அதை எடுத்துப் படித்தால் அந்தச் சோர்வின் தன்மையை அது மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.

ஆகவே இதை ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாக வைத்து அதைப் படியுங்கள். படித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.நான் (ஞானகுரு) ஒரு பங்கு தான் வளர்ந்திருக்கின்றேன்
2.என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு உயர்ந்தவர்களாக முடியும்.
3.அருளானந்தத்தைப் பெறக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்.
4.அனைவருக்கும் அருளானந்தத்தைக் கொடுக்கும் உயர்ந்த நிலைகள் நீங்கள் பெறலாம்.

சாமிக்கு மட்டும் ஏதோ சக்தி இருந்து பெற்றதில்லை…! என்னைக் காட்டிலும் நீங்கள் “நான்கு மடங்கு அதிகமாக” அந்த அருள் சக்தியைப் பெறலாம். இதன் வழி நீங்கள் பின்பற்றிப் பாருங்கள்.

நீங்கள் எந்த அளவுக்கு உயர்கின்றீர்களோ உங்களிடமிருந்து அந்த ஆனந்தமான உணர்வை நானும் பெறுகின்றேன். இதைப் போல பிறருக்கு நீங்கள் போதித்து அவர்கள் வளர்ச்சி அடையும்போது அதைக் கண்டு நீங்களும் ஆனந்தப்படுங்கள்.

இணைந்து வாழும் நிலையும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் நாம் அனைவரும் பெறுகின்றோம். நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற கருத்தில்தான் இதை உபதேசித்து அந்த உயர்ந்த உண்மையின் உணர்வை நீங்கள் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

நீங்கள் எந்த அளவுக்கு இதிலே வளர்ச்சி பெறுகின்றீர்களோ அந்த அளவுக்கு எனக்கு ஆனந்தம் வரும்.

ஒரு வித்தினை ஊன்றியபின் அது சீராக முளைத்து நல்ல பலன் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்…? சந்தோஷம் என்ற நிலை வரும்.

ஒரு வித்தினை ஊன்றி அது சரியாக முளைக்காவிட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்… சோர்வடைந்துவிடும்…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் போதித்து அருள் உணர்வுகள் உங்களில் வளர வேண்டும். இந்த வாழ்க்கையில் துன்பங்களை அகற்றிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும். பேரானந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்றுதான் எனது தியானமே.

இதைக் கேட்டுணர்ந்தோர் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெருக்குங்கள் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுங்கள். அதைப் போல பேரானந்தத்தைப் பெருக்கும் நிலையை கூட்டுங்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமைகளை அகற்ற உதவும். உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வளர்வதைக் கண்டால் எனக்குச் சந்தோஷம். அதே போல் நீங்கள் உங்களுடன் அணுகி வருவோருக்கு உங்கள் நோயெல்லாம் போய்விடும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதன் மூலம் அவர்கள் சந்தோஷப்படும்போது உங்களுக்கும் சந்தோஷம் வருகின்றது.

ஆகையினால் இந்தத் தியானத்தைச் செய்வோர் பிறருடைய நிலைகளைக் கண்டு “உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று கேட்க வேண்டாம்.

உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு…
1.உங்கள் நோய் ஓடிப் போகும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் தொழில் லாபகரமாக இருக்கும் என்ற இந்த வாக்கினைக் கொடுங்கள்.

உங்கள் வாக்கு அது ஒரு ஞான வித்தாகி அவர்கள் நினைவு கொண்டால் நிச்சயம் அவர்கள் நலம் ஆவார்கள். ஒருவருக்கொருவர் இப்படிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக… ஒருவர் “தான் படும் துன்பத்தைச் சொன்னால்” அதை நாம் கேட்டபின் அந்தத் துன்ப நிலையே நமக்குள்ளும் விளைகின்றது.

இதைப் போல் பேரின்பம் பெற வேண்டுமென்று உங்களுக்குள் அருள் ஞான வித்தை யாம் ஊன்றிய பின் இதன் உணர்வை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் கூட்டுக் குடும்ப தியானம் இருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்.

தீமைகள் வரும் போது சிந்தித்துச் செயல்படுகின்றோமா…?

 

தவறு செய்கின்றார் என்று ஒருவரை நாம் எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாமல் அது இயக்குகின்றது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
2.அதற்குத்தான் நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
3.உடலைக் கோவில் என மதிப்போம்
4.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் எனத் துதிப்போம் என்ற இந்த பாடலைக் கொடுப்பது.

ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் உடல். அவர்களை அறியாமல் செய்ல்களைச் செயல்படுத்துகிறது என்று சொன்னால்… சொல் வெளிப்படுகிறது என்று சொன்னால்…
1.அந்த நேரத்திலே ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
2.ஏனென்றால் வெளியில் இருந்து தான் தூசிகள் உள்ளே செல்கின்றது.

ராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள். குகைக்குள் அவன் இருக்கின்றான். அம்பை வயது அந்த கல்லைக் போட்டு அவன் வெளியே வராதபடி ராமன் குகையை மூடி விடுகின்றான். ஆனால் “அவனைக் கொல்லவில்லை…!” அவன் வீரியத்தைத் தடைப்படுத்துகின்றான்.

இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்கு தான் இராமாயணத்தில் நம் எண்ணங்கள் கொண்டு உணர்ச்சிகள் வரும் பொழுது
1.பிறர் செய்யும் தீமைகள் நமக்குள்ளே சென்று விட்டால் என்ன செய்யும்…?
2.அதன் உணர்வாக அது வலிமையாக இயக்க ஆரம்பித்து விடும்.
3.நல்ல குணம் நமக்குள் இருக்குமோ…? அது செயலற்றுப் போய் விடுகின்றது.

ஒருவர் கோபமாகப் பேசுகின்றார் தவறான செயல்களைச் செய்கிறார் என்றால் நாம் நுகர்ந்த உடனே அவர் மீது வெறுப்பு வரும் அந்த உணர்வு இரண்டும் சேர்த்து ஈஸ்வரலோகத்தில் உருவாக்கும்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஜாடையாகப் பேச வைக்கும். யோக்கியன் மாதிரி எதை எதையோ பேசுகிறான் என்று சொல்லும்படி வரும் இவன் எல்லாம் யோக்கியனா…? என்று நம்மைப் பேச வைக்கும்.

இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி வெறுப்பின் தன்மை உண்டாக்கிவிடும். நம்மை அறியாமலே இந்த வெறுப்பு ஈஸ்வரலோகத்தில் உருவாகி கருவின் தன்மை பெற்று இந்திரலோகமாக நம் உடலுக்குள் பிரம்மலோகமாக அணுத்தன்மை பெற்று விடுகின்றது.

அப்படி ஆகிவிட்டால் அதே உணர்வு கொண்டு அது சாப்பாட்டுக்கு ஏங்கும். அப்பொழுது அதை மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா.

அப்பொழுது நம்மை நாம் சிந்திக்க வேண்டும்… நம்மை எது கோபிக்கச் செய்கிறது…? என்று. அவர்கள் செய்த தவறு நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது… சொல்லாக வெளிப்படுகின்றது.

அடுப்பிலே எந்தெந்தக் காய்கறிகளைப் போட்டு வேக வைக்கின்றோமா அந்த மணம் தான் வரும் இந்த மணத்தை நாம் மாற்றி அமைப்பதற்காக வேண்டித் தான் உங்களுக்கு “இந்தத் தியானத்தின் மூலமாகச் சக்தியைக் கொடுப்பது…”

நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில்…
1.தனக்குள் எப்படி எது இயக்குகிறது…? என்று தன்னை அறிதல் வேண்டும்.
2.நாம் ஏன் கோபிக்கின்றோம்…? எதற்காகக் கோபம் வருகின்றது…? என்ற நிலையை அறிய வேண்டும்.

அந்தக் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

உங்களிடம் இருந்து ஒரு தவறு வருகிறது என்றால் அதை எப்படி நீக்க வேண்டும் என்ற வகையிலே அன்பு பரிவு அதனுடன் சேர்த்து பண்புடன் அறிவுடன் நாம் வாழப்படும் பொழுது
1.உண்மையின் உணர்வை எண்ணி நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அதைப் பயன்படுத்தும் நேரம் சரியில்லை என்றால் அது பகைமை உணர்வைத் தான் ஊட்டும். அதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

என் குடும்பத்தைப் பற்றிச் சொல்லப்படும் பொழுது சந்தர்ப்பம் அந்தப் பகைமை உணர்வு வரும் பொழுது சாப அலைகள் ஆகி அதன் தொடர்ச்சியில் என் பெரியப்பாவின் குடும்பமே சின்னாபின்னமானது.

அதன் வழி பின் வந்த சந்ததியினர்களும் தவறு செய்யவில்லை ஆனால் அங்கேயும் தீமைகள் விளைந்தது.

இதைப் போன்று ஒரு குறையைக் காணுகிறோம் என்றால் பிறருடைய நிலை தான் நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டும்.

உடனே சிந்தித்துப் பார்த்தோம் என்றால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று எண்ணிவிட்டால் அவர்கள் செய்யும் தவறு நமக்குள் வராது.

1.அந்த ஆலயத்தில் அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
2.அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
3.அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மனத்தூய்மை ஏற்பட வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

நமக்குள் கோபமோ பழிச் சொல்லோ அப்பொழுது நமக்கு வராது.

ஆனால் அவர் சொல்லும் சொல்லை நாம் சொல்லும் பொழுது இப்படிச் செய்கின்றீர்களே என்று பழிச் சொல்லாக மாறும். பதிலுக்கு நீங்கள் என்ன யோக்கியமாகப் போய்விட்டது…? என்ற நிலை வந்துவிடும்.

இராமன் அம்பை தான் என்றால் கணைகளைத் திரும்பி வாங்கிக் கொள்வான். அப்பொழுது இதில் யார் தவறு செய்தது என்றே முடிவு தெரியாது.

சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. இந்த உணர்வு ஊட்டப்படும் பொழுது பழிச் சொல்லாக மாறி நம்மை அதாவது இரண்டு பேருமே யார் தவறு செய்தார்கள்…? என்று இருவருக்குமே தெரியாது.

கோபப்பட்டுச் சண்டை போட்டாலும்.. நான் ஒன்றும் சொல்லவில்லை அவன் தான் செய்தான் என்று
1.இருவருமே ஒருவருக்கொருவரைத் தான் சொல்ல முடியும் தவிர
2.முடிவே காண முடியாது. காண முடியுமா…!

இதிலே நியாயம் பேசுபவரும் “சரி போங்கள்” என்று உண்மை எடுத்துச் சொன்னால் உடனே அவர்கள் மீதும் பகைமை வரும். இரண்டு பேரில் ஒருத்தரிடம் பகைமை வந்து தான் தீரும்.

சமாதானமாகிப் போனால் சரி அவருக்கென்ன அவருக்கு வேண்டியவர் போலிருக்கிறது பேசி விட்டுப் போகிறார் என்று இப்படி
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் பொழுது
2.இப்படி எல்லாம் மாறுபட்ட உணர்வுகள் நல்ல குணங்களைச் சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.

காரத்தை எதிலே கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும் ஆகவே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் நிலைகள் பக்குவப்படுத்திடும் நிலையாகி
1.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் உணர்வுகளை எடுத்து மாற்றி அமைத்து
2.அதன் வழியில் தெளிந்து தெரிந்து நாம் செயல்படுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செல்வங்களை எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருப்போர் குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எத்தனை துயரங்கள்…? எத்தனை தொல்லைகள்…? எத்தனை வெறுப்புகள்…? அடைகின்றார்கள் என்று பார்க்கலாம்..

செல்வம் இல்லாதவர்கள்… அது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே… என்று அவர்களும் வேதனை அடைவதைப் பார்க்கின்றோம். ஆனால்
1.செல்வம் இல்லாத போது உடலில் வேதனைப்பட்டாவது செல்வத்தைத் தேட வேண்டும் என்ற வலிமை வருகின்றது.
2.செல்வம் வந்த பின் செல்வத்தைக் காக்க உணர்வுகள் வலிமை பெறுகின்றது. இருந்தாலும் வேதனையை வளர்க்க நேருகின்றது.
3.அப்பொழுது தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் உணர்வுகள் இழக்கப்படுகின்றது.

செல்வம் உள்ளோருக்குத் தன்னிடம் தேடிய செல்வம் இருப்பினும் வேதனை என்ற உணர்வை நீக்க முடியவில்லை.

செல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டுமென்ற ஆர்வம் வருகின்றது. அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு உடல் உழைப்புகளைச் செய்து… தனது கஷ்டங்களை எண்ணாது… எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டுமென்று மன உறுதி கொண்டு வளர்கின்றது.

நாளைக்குச் சாப்பாட்டுக்கு இல்லை என்று சொன்னால் எப்படியும் சாப்பாட்டைத் தேட வேண்டுமென்ற நிலையில் அந்த மன உறுதி வருகின்றது.

அடுத்தாற்போல் பார்த்தால்…
1.கூட நான்கு நாட்களுக்கு சாப்பாடு இருந்தால்… “சரி விடு போ… பார்க்கலாம்…!” என்று
2.தேடிச் சேமிக்கும் நிலையும் குறைந்துவிடுகின்றது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தகைய உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்…
1.இந்தச் சரீரத்தை விட்டு உயிரான்மா சென்று விட்டால்
2.நம் அழகையும்… நாம் போற்றித் துதித்த தருமத்தையும்…
3.யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…? இல்லை…!

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள் என்று தான் சொல்கின்றார்கள்.

அத்தகைய நிலைகள் கொண்டு சென்றாலும் அங்கே எரிக்கும் இடத்தில் பார்த்தாலோ அதிலே நெருப்பிலே இட்டு எரிக்கப்படும்போது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் போடும்போது அதனை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? சொந்தகாரர்கள் நாமாவது சடலத்தைத் தூக்கி போடுகின்றோமா…! என்றால் இல்லை.

யாரையோ வைத்துத் தூக்கிப் போடுங்கள் என்று தான் சொல்கின்றோம்… இல்லையா…? இதைத்தான் அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு அவர்களை அதற்குத்தான் (குடியானான் என்றும் வெட்டியான் என்றும்) என்று வைத்திருக்கின்றோம்.

ஏனென்றால் இவர்களை அது சாடி விடுமாம்…!

ஆனால் இவருடைய சொத்து… செல்வம்… எல்லாம் தேவை. இப்படித்தான் நம்முடைய உணர்வுகள் வருகின்றது.

ஆகவே… இந்த உடல் நமக்குச் சொந்தம் என்று ஆக்க வேண்டாம். இந்த உடலின் சொந்தம் கொண்டாடி அதில் வளர்த்துக் கொண்ட சாபங்களை நீக்கி இந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி என்றுமே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் நிலை கொள்ள வேண்டும்.

நமக்கு அந்த நிலையான சரீரம் வேண்டுமென்றால் பற்று எதில் வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருளுணர்வோடு பற்று வேண்டும். அந்தப் பற்றை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் இந்த வாழ்க்கையில் எந்த மகரிஷிகளின் உணர்வை அதிகமாகக் கூட்டுகின்றோமோ அங்கே செல்கின்றோம்.

இல்லையென்றால் இந்தச் சாப அலைகள் சிக்கியவர்கள் நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற நிலை ஆகிறது. பின் தாவர இனங்களைப் புசித்து வரும் நிலை மாறி மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் நிலைகள் வரும்.

1.அப்படிக் கொன்று மற்றொரு உடலுக்குள் புகுந்து
2.இப்படிப் பல நிலைகள் மாறி மாறி நரக லோகத்தைச் சந்தித்த பின் தான்
3.அதாவது சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் இந்தத் தண்டனைகளை எல்லாம் நாம் அனுபவித்த பின் தான்
4.மீண்டும் மனிதனாக வர முடியும் (உடனடியாக வருவது மிகவும் கடினம்)

ஏனென்றால் சாதாரணமாக மனிதனின் கையில் சிக்கி அந்த உயிரினங்கள் சாகாது. அதனுடைய நிலைகள் தன் பசிக்காக ஏங்கி எடுக்கும் அதன் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி அடித்துக் கொல்கிறது என்றால் அவன் புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பிடம் சிக்கித் தவித்தது என்றால் அடுத்த பிறவியில் அவன் பிறப்பு பாம்பாகத்தான் பிறக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான்
1.விண்ணுலக ஆற்றலும் மண்ணுலக நிலையையும்
2.உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எதுவாக மாறுகின்றது…? என்ற
5.அந்தப் பேருண்மைகளை எல்லாம் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக எடுத்து காட்டினார் நமது குருநாதர்.

உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசியலின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் நமக்குள் பட்ட குணங்களும்… நாம் வளர்ந்து வந்த நிலைகளும்… அவைகளுடன் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியினை இணைத்தே…
1.அண்டத்தில் இருக்கும் நிலைகள் பிண்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுடன் இணைத்து
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளை
3.உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப் போன்று உங்களையும் ஞானியாக உருவாக்க வேண்டுமென்பதற்குத் தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் நிலைகளை இன்று எண்ணத்தால் உங்களிலே பெருக்கச் செய்கின்றோம்.

ஒவ்வொருவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்குக் கிடைத்த பூர்வ புண்ணியம்

 

குரு அருளால் என் (ஞானகுரு) குடும்பம் ஓரளவுக்கு எல்லோருக்கும் சேவை செய்யக்கூடிய நிலைகள் வந்து சேர்ந்திருக்கின்றது.

காரணம் என்னுடைய தாய் கர்ப்பமாக அந்தக் கருவில் நான் இருக்கப்படும் பொழுது என்னுடைய பாட்டி… இன்னொரு தம்பி மகளை என்னுடைய அப்பாவுக்கு இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தது.

“என் அம்மாவிற்கு ரொம்பவும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது…” என் அண்ணனுக்குப் பின் இருவர் பிறந்தார்கள்.
1.அந்த மாதிரி நேரத்தில் நான் கருவில் இருக்கும் பொழுது என்னுடைய அம்மா சொல்லியது (பின்னாட்களில்).
2.உன்னுடைய பாட்டி… அப்பாவுக்கு எப்படியாவது இரண்டாம் தாரம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டுள்ளது.
3.இதை நிறுத்த வேண்டும் என்பதற்காக நான் வேண்டாத தெய்வங்கள் இல்லை.
4.கோயில் குளமெல்லாம் சுற்றி வந்தேன். மூதாதையர்கள் குலதெய்வங்கள் எல்லோரையும் வேண்டினேன்.
5.எங்களுடைய பாட்டனுடைய பாட்டன் மந்திர சக்தி எல்லாம் கொஞ்சம் கற்றுக் கொண்டவர்கள்.
6.அவர்களையெல்லாம் எண்ணி இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.
7.நீ கர்ப்பத்தில் இருக்கும் பொழுது. அதே துயரத்தில் நான் இருந்து கொண்டிருந்தேன்
8.அதனால்தானப்பா…! உனக்கு இந்த ஞானமெல்லாம் கிடைத்தது என்று என்னிடம் தாய் சொன்னது.
9.நம்முடைய குலதெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நமக்குத் துணையாக நின்றது.

என்னுடைய அண்ணன் எங்கள் பாட்டியைத் தான் அம்மா என்று கூப்பிடுவார். தன்னுடைய அம்மாவை மதிக்க மாட்டார். இது நடந்த நிகழ்ச்சி.

என்னுடைய அத்தைக்குப் பிள்ளை இல்லை. சொத்தை என் அண்ணனுக்கு எழுதி வைத்து விடலாம் என்று ஏற்பாடு செய்தார்கள். அந்தச் சொத்தை இந்தப் பிள்ளைக்கு எழுதி வைத்து நம் வீட்டில் இருந்த 25 ஏக்கர் நிலமும் நகையும் கொடுத்துக் கட்டி வைக்கலாம் என்று திட்டம் போட்டார்கள். என் அம்மா மீது வெறுப்பு.

இது எல்லாம் நீங்கள் கவனமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் எமக்குக் குருநாதர் காட்டிய உண்மையின் உணர்வுகள்.

1.உன் குடும்பத்தில் எப்படி இப்படி நடந்தது…?
2.இது போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை சிக்கல்கள் வருகிறது பார்…! என்று எல்லாம் அணுபவபூர்வமாகக் குருநாதர் காட்டினார்.

நான் பிறந்த பிற்பாடு என்னுடைய பாட்டி என்னுடைய தாயைத் திட்டுவது கொஞ்சநஞ்சம் அல்ல. நான் சிறு பிள்ளையாக இருந்து வளர்ச்சியாக… என் தாய்க்கு உதவி செய்தேன். எனக்குப் பின்னாடி இருவர் பிறந்து இறந்து விட்டார்கள் எனக்கு முன்னாடி பிறந்த இருவரும் இறந்து விட்டார்கள்.

அடுத்து தம்பி பிறந்து இருக்கிறார் என்று என்னுடைய பாட்டி என் கழுத்தில் சூடு போட்டது இன்னும் எனக்கு அது நினைவிருக்கிறது. ஏனென்றால் சூடு போட்டால்… அடுத்து நோய்கள் வராது என்று அந்தக் காலத்தில் ஒரு மூடநம்பிக்கை.

தெற்கத்தி நோய் என்று வலிப்பு மாதிரி வரும் காக்கா வலிப்பு நோய் என்று சொல்வார்கள். என்னுடைய பெரியப்பா வீட்டில் பிள்ளைகளுக்கு இது போன்று வந்ததால் அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக இந்த மாதிரி சூடு போடுகின்றார்கள்.

எனக்குத் தம்பி பிறந்த அன்று “சாமி கும்பிடு” என்று சொல்லி சூடு போட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது.

ராஜபாளையத்தில் என்னுடைய தங்கை திருமணம் ஆகிக் கர்ப்பமாக இருந்த அந்த நேரத்திலே என்னுடைய பாட்டி திட்டி விட்டது என்று சொல்லிக் கோபித்துக் கொண்டு “என் அம்மா கிணற்றில் விழுந்து விட்டது…”

ஆனால் அந்த ஊர் வழக்கப்படி குழந்தைகள் இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே அருகில் இருக்கும் குளங்களில் நீச்சல் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.

அம்மா கிணற்றில் விழுந்தவுடன் நான் ஓடிப் போய்க் காக்க முயற்சி செய்தேன். ஏனென்றால் அங்கே ஒருவரும் இல்லை… எனக்கு லீவு வேறு. எனக்கு அப்போது வயது ஏழு அல்லது எட்டு இருக்கும்.

கிணற்றில் நான் குதித்து.. என் அம்மா என்னைப் பிடித்துவிடும் என்று சொல்லி அவருடைய தலை முடியைப் பிடித்து அப்படியே இழுத்துக் கொண்டே வந்தேன்.

படி மேல் ஏற்றிவிட்டு “நீ மேலே ஏறி வருகின்றாயா இல்லையா…?” என்று சொல்லி என் தாயைக் காப்பாற்றினேன்.
1.அதிலிருந்து என் அம்மா கூடவே எப்பொழுதும் இருப்பேன்.
2.என்னுடைய அம்மாவின் “அந்த ஆசி தான்” எனக்குக் குரு அருள் கிடைத்தது
3.தாய் எடுத்துக் கொண்ட கருவில் எனக்குள் விளைந்த பூர்வ புண்ணியம்
4.அவர்கள் வேண்டிக் கொண்ட அந்த உணர்வு தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது.
5.என்னுடைய அண்ணனுக்கோ தம்பிக்கோ தங்கச்சிக்கோ ஒருத்தருக்கும் இது கிடைக்கவில்லை.

அனுபவபூர்வமாக குருநாதர் இந்த உணர்வுகளை எனக்கு நினைவுபடுத்தி நீ எப்படி வளர்ந்து வந்தாய்…? உன் குடும்பப் பாரம்பரியம் எப்படி வந்தது…? என்ற நிலையும் உணரச் செய்தார்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் தவறு இல்லாமலேயே சங்கடங்களும் சந்தர்ப்பத்தால் பாசத்தால் நுகர்ந்த நிலையில் எத்தனையோ தொல்லைகளும் வேதனைகளும் எப்படி வருகின்றது…?

இதைப் போன்ற உண்மையின் நிலைகளை விளக்கி… மனிதன் என்ற பண்பை வளரச் செய்து…
1.அன்று அகஸ்தியன் பெற்ற உணர்வுகளைப் பெறச் செய்து
2.தன்னை எது இயக்குகின்றது…? என்பதை குருநாதர் உணர்த்தினார்.

தவறு செய்கின்றீர்கள் என்றால் நீங்களா…? இல்லை…! பிறருடைய உணர்வுகள் உங்களுக்குள் இயக்கப்படும் பொழுது நல்ல குணம் தாங்காது அது போன்று இருளான நிலைகளுக்குச் சென்று விடுகின்றோம்.

அதையெல்லாம் மாற்றிப் பழகுதல் வேண்டும். அதற்குத் தான் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையை முதலில் அவர்களைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதரானார்கள். ஆனால் நாம் ஈயாக எறும்பாக தேளாக பாம்பாக இருந்திருப்போம்.

அதை அடித்திருப்பார்கள். அந்த உயிர் அவர் உடலில் ஈர்ப்புக்குள் சென்றது. அவர் உடலில் சேர்த்த அந்த உணர்வைக் கவர்ந்தது. நம் உயிர் அவர் உடலுக்குள் சென்றால் அவர் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையை அது கவர்ந்தது… மனிதனாக உருப்பெரும் சந்தர்ப்பமாகின்றது.

தாய் கருவில் இருக்கக்கூடிய காலத்தில்… தாய் நல்லதைப் பற்றி ஏங்கியிருந்தால் நல்ல உணர்வாகக் கருவுக்குள்ளும் சேர்த்து நல்ல உடலாக உருவாக்குகிறது.

ஆனால் நாம் கருவிலே இருக்கப்படும்போது
1.தாய் வேதனையும் துயரமும் அதிகமாக எடுத்திருந்தது என்றால்
2.நம் உடலில் பல நோய்களும்… ஊனமான உடலாக உருவாக்கும் தன்மை கூட வருகின்றது.

ஆகவே நம்முடைய சந்தர்ப்பம்… கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக் கொண்ட மகிழ்ந்த நிலை உணர்வுக்குத்தக்க தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது… சிந்தித்துச் செயல்படும் திறனாகவும் பெற்றது.

தாயின் உணர்வால் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் பெற்று இப்பொழுது நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் கிடைக்கிறது.

1.தாயின் உடலில் கருவாக இருக்கும் பொழுது அத்தகைய நல் உணர்வை எடுத்தவர்கள் தான்
2.அந்த வலுக் கொண்டு இதைக் கேட்கும் சக்தியுடன் இங்கே அமர்ந்திருப்பார்கள்
3.அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் கவர முடியும்.

அப்படிப்பட்ட பூர்வ புண்ணியம் இல்லாதவர்கள் உபதேசம் கேட்டுப் பார்ப்பார்கள்.
1.அதிலே தனக்கு வேண்டியதை எதிர்பார்ப்பார்கள்
2.அது இல்லையென்றால் போய்க் கொண்டே இருப்பார்கள்.

அது மட்டுமல்ல…! நல்ல உணர்வு பெற வேண்டுமென்ற தாய் எடுத்த உணர்வின் தன்மையே உங்களை இங்கு அமர்ந்து இதைக் கேட்கும்படி செய்கிறது.

1.எத்தனை தொல்லைகள் இருப்பினும்
2.எத்தனை துயரங்கள் இருப்பினும்
3.இந்த அருள் உணர்வை நீங்கள் பெறும் தகுதி ஏற்படுத்துவது உங்கள் தாயே.

ஆகவே உங்கள் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் நம்மை எத்தனையோ வகையில் நாம் பிறந்த பின் நம்மைக் காத்தருளிய தெய்வம் அது. நமக்கு நல் வழி காட்டிய குருவும் நம் தாயே.

தாய் கருவில் இருக்கப்படும்போது எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும்…!

ஆகையினால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் தாய் தந்தையர் உயிரைக் கடவுளாக மதித்து அவர்களைத் தெய்வமாக மதித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஒவ்வொரு சமயமும் உபதேசத்தை உணர்த்தும் பொழுதெல்லாம் நம் குரு காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

இதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அந்த அருளைப் பெறலாம். உங்களுக்குள் அறியாது புகுந்த இருளைப் போக்கலாம். தெளிந்த மனம் பெறலாம்… தெளிவான வாழ்க்கை வாழலாம்.

ஆகவே… இந்த அருள் ஞான வழியில் நாம் பயணம் செய்யக் காரணமாக இருக்கும் நம் தாய் தந்தையரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் சூரியனுடைய நிலைகள் அழிந்தாலும் இந்தச் சப்தரிஷி மண்டலம் ஒருக்கிணைந்து அகண்ட வெளிப்பாதைக்குச் (COSMOS) செல்லும் திறன் பெற்றது

அகண்ட வெளிப்பாதைக்குச் சென்றாலும் நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒன்று சேர்த்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் நிலைகள் கொண்டது… அழிவே இல்லாது என்றும் நிலையானது தான் சப்தரிஷி மண்டலம்.

ஆகவே பரிணாம வளர்ச்சியில் மனிதனானபின் முழுமைப்படுத்தும் உணர்வுகள் கொண்டு தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் பெற்றவர்கள் அது தான் பரசுராம்.
1.எண்ணங்களால் சமப்படுத்தி
2.எண்ணத்தின் உணர்வை ஒளியாக்கி
3.உணர்வின் தன்மை என்றும் ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெற்றது.

ஆகவே.. நாம் இந்த மனித உடலை இழப்பதற்கு முன் அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டி இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையில் அகண்ட வெளியில் நாம் பிறவியில்லா நிலை கொண்டு மகிழ்ந்து வாழும் அந்தப் பேரின்பப் பெருவாழ்வு பெற முடியும்.

அந்த நம்பிக்கையுடன் வாழ வேண்டும்…!

1.எத்தனையோ கோடிச் செல்வம் இருப்பினும்
2.கோடி நண்பர்கள் இருப்பினும் அந்தக் கோடி நண்பர்கள் பால் நாம் பழகியிருப்பினும்
3.அந்த உணர்வுகள் எல்லாம் நாம் இந்த உடலில் வாழும் வரை தான்… என்றும் நிலைத்ததல்ல…!

இந்த உடலில் நாம் எத்தகைய நிலைகள் அதிகமாக வளர்த்திருக்கின்றோமோ அதன் வழியில் தான் இந்த உடலை விட்டு உயிரான்மா செல்கின்றது.

ஆகவே நாம் சேர்க்க வேண்டிய அழியாத செல்வம்… அருள் செல்வமான அந்தத் துருவ மகரிஷியின் நிலைதான்.
1.நம்முடைய பற்று துருவ நட்சத்திரம்தான் என்ற நிலையில் முடிவாக்கி
2.இந்த வாழ்க்கையில் என்றும் அழியாப் பருவம் பெற வேண்டும் என்று
3.இந்த உடலில் சேர்த்தால் அது அழியாத செல்வமாக வருகின்றது.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நேரம் சென்றாலும்… அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் பருவத்தைப் பெற வேண்டும்.

நமக்குள் அந்த அருள் வழியின் தன்மையை நாம் கூட்ட கூட்ட கூட்ட அதை இரத்த நாளங்களில் பெருக்க பெருக்க அனைத்தும் ஒன்றென்ற நிலையில் ஒளியாகின்றது.

அதனின் தொடர் வரிசையில் நம் எண்ணங்களை அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும். காலம் குறுகி இருப்பதினால் இவ்வாறு சொல்கிறேன் (ஞானகுரு).

முன்பு சூரியனைப் பார்க்கச் சொன்னேன்… சூரியனின் ஒளிக் கதிர்களைப் பார்க்கச் சொன்னேன். அக்காலம் அது வித்தியாசமாக இருந்தது.

சூரியனில் நச்சுத் தன்மைகள் அதிகரித்து விட்டது என்ற காரணத்திற்காகத்தான் இனி அதிலெல்லாம் தொடர்பு கொள்ளக் கூடாது என்று நிறுத்தியது.

காலங்கள் நெருங்கி வரப்படும் பொழுது…
1.இனி நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அந்தத் துருவ நட்சத்திரத்துடனே என்ற நிலையில்
2.அதனுடன் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் வருதல் வேண்டும்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் உருப்பெற்றதன் நிலையும் அவன் துருவனான நிலையும் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான இந்த நிலை இருப்பதனால் அந்த அடிப்படை வரிசையிலேயே நாம் நுகர்ந்து நம் உடலில் இரத்த நாளங்களில் அந்தச் சக்திகளைப் பெருக்குவோம்.

“இந்த வரிசைப்படுத்தி…” நம் குரு காட்டிய அருள் வழியில்
1.அகஸ்தியன் பாதையில் நாம் செல்வோம்
2.வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அடக்குவோம்
3.என்றுமே ஒளிச் சுடராக வாழ்வோம்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றும் ஒன்றி வாழ்வோம் என்று நிலைப்படுத்தி
5.நாம் அந்த நிலையான உணர்வுடன் ஒன்றியே வாழ்வோம்
6.சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை

 

நமக்குள் வெறுப்போ சலிப்போ இதற்கு முன் அறியாத நுகர்ந்த உணர்வுகளோ நோயாக உருவாக்கப்பட்டு உணர்வின் தன்மை வேதனைப்பட்டாலும் அதை மாற்றி அமைக்க யாம் உபதேசிக்கும் உணர்வின்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது அதனுடைய வளர்ச்சியைக் குறைக்கலாம்… வளராது தடுக்கலாம்.

1.நமக்குள் ஊழ்வினை என்ற வித்துகள் அதிகமாக இருக்கும் பொழுது
2.அதன் இன விருத்தியின் உணர்வுகளை நமக்குள் வளராதபடி தடுக்க
3.அருள் ஒளியை நமக்குள் சேர்த்து இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றி
4.நமக்குள் தெளிந்த மனதை நாம் உருவாக்கினால் நோய்களிலிருந்து விடுபடச் செய்யும்.

மனக்கவலையோ மனசோர்வோ சஞ்சலமோ நமக்குள் தோன்றும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.அந்த அருள் உணர்வை எடுத்து உங்களுக்குள் தீமை வளராது இந்த உணர்வினைத் தடைப்படுத்துங்கள்.
2.நம் ஈர்ப்புக்குள் வராததை நாம் கவராததை சூரியன் கவர்ந்து மேலே அழைத்துச் சென்று விடுகின்றது.
3.தீமையான உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தி விடுகின்றது.
4.இவ்வாறு நமது வாழ்க்கையில் தொடர்ந்து இந்தப் பணிகளைச் செய்தல் வேண்டும்.
5.இந்த உலகை விட்டுச் செல்லும் வரையிலும் அருள் ஒளி என்ற உணர்வினை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.

ஆனாலும்… இந்த உடலை விட்டு உயிர் எப்படியும் சென்றே தான் ஆகும். எதனின் உணர்வை முதிர்வாகத் தனக்குள் வளர்த்தோமோ அதற்குத்தக்க உணர்வு கொண்ட உடலை எடுக்கும்.

பேரருள் என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கப்படும் பொழுது பேரொளியான உணர்வுகளை உருவாக்குகின்றது.

இருள் சூழ்ந்த ஒரு உடலுக்குள் நின்று அறிவென்ற நிலை இருந்தாலும் உடலில் இருந்து இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை இது.
1.அங்கே அப்படி அல்ல…!
2.உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றது
3.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் அறிந்த அறிவின் தன்மை இயக்குவது அல்ல.
4.உணர்வினை ஒளியாக மாற்றும்… அதை நுகர்வோருக்கு இருளை அகற்றி அறிவைத் தெளிவாக்கும் நிலை வரும்.

இதன் தொடர் வரிசையில் முழு முதல் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல் மனிதனின் உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையினை உருவாக்கும் சக்தி பெற்றது.

பேரருள் என்ற உணர்வினை உருவாக்கினால்
1.அந்த ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி “ஒளி” என்ற உணர்வினை உருவாக்கும் கடவுளாக நாம் ஆக முடியும்.
2.உள் நின்று தீமைகளை அகற்றி பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு மனிதனையும் நல்வழிப்படுத்தும் நிலை வரும்.

ஆகவே நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடைந்த நிலையில் துருவ தியானத்திலிருந்து தங்கள் குடும்பத்தில் அந்த அருள் சக்தியைப் பரவச் செய்தால்
1.உங்கள் குடும்பத்தில் உடலை விட்டுச் சென்ற மூதாதையர்கள் உணர்வுகள் இங்கே இருப்பினும்
2.அந்த அருள் ஒளி என்ற உணர்வுகள் இந்த இருளை அகற்றி
3.நல்வழி காட்டும் நிலையும் மெய்ப்பொருள் காணும் நிலையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெற முடியும்.

அருள் வழி வாழுங்கள் மெய்ப்பொருளைக் காணுங்கள் பிறவி இல்லாத நிலை அடையுங்கள். விண் செல்லும் மார்க்கமாகத் துருவ தியானத்தைக் கடைப்பிடியுங்கள்.

இதன் தொடர் கொண்டு உங்கள் வாழ்க்கையே தியானம் ஆக்குங்கள். தீமை புகாது தடுக்க அருள் உணர்வுகளைப் பெறுங்கள்… அதைப் பெருக்குங்கள்.

இல்லற வாழ்க்கையில் வரும் துன்பங்களை அகற்றுங்கள். தன்னை அறியாது இயக்கும் தீமைகளை தனக்குள் புகாது தடுத்து நிறுத்துங்கள். பேரின்பப் வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.
1.இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அருள் ஒளி என்ற உணர்வினைக் கூட்டுங்கள்… இருளை அகற்றுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் ரொம்பப் பிரியப்படுவார் நல்லது பெற வேண்டுமென்று…! மிகவும் கஷ்டப்பட்டவருக்கு ஒரு வேதனைப்பட்டுக் கொண்டிருப்போருக்கு இவர் ரொம்ப உதவி செய்கின்றார்.

உதவி செய்யும் இவரோ தெய்வ பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார்…! இருப்பினும் உதவி பெற்றவரோ…
1.நான் தெய்வத்தை எல்லாம் வேண்டினேன்
2.எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டுவிட்டது என்று
3.தெய்வத்தின் மேல்… நல்லொழுக்கத்தின் மேல்… வெறுப்புணர்வு இருக்கும்.

ஆனால் இவருக்கு உதவி செய்த நல்லவர் எல்லாருக்கும் உதவி செய்திருப்பார். அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பெயரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோயில்களுக்கு ஓடி ஓடியும் பல நல்லவைகளைச் செய்திருப்பார். கோயிலில் காட்டிய பக்தி கொண்டு கஷ்டப்பட்ட அந்த மனிதனுக்கு ஓடிப் போய் அடடா முருகா…! அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும்…! என்ற எண்ணத்திலே உதவி செய்திருப்பார்.

இருந்தாலும் உதவி பெற்றவரோ… இவர் உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகன் என்று சொல்லப்படும்போது எல்லாம் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டார்…
2.நீதானப்பா என்னைக் காப்பாற்றுகிறாய்…! என்று சொல்வார்.

அப்பொழுது இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்து எல்லா உதவியும் வாங்கிக் கொண்டவரின் உயிரான்மா இவர் மேல் எண்ணமாகி இறந்த பின் செய்த நன்றிக்கு இவரை எண்ணி அந்த ஆன்மா இவர் உடலில் வந்து சேர்ந்துவிடும்.

அது வரை எல்லாக் கோவில்களுக்கும் பக்தியாகப் போய் செய்து கொண்டிருந்தவர் அதற்கு அப்புறம் என்ன செய்வார் தெரியுமோ…?

கோயிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால் அந்த நோய்வாய்ப்பட்டு இறந்த ஆன்மா இவர் உடலுக்குள்ளே வந்து விட்டதல்லவா. அதனால் அது அவருக்குள் இருந்து வெறுக்கச் செய்யும்.

நல்லது என்று சொல்லி இங்கே உட்கார வைத்தாலும் எழுப்பி வெளியே இழுத்துக் கொண்டு போய் விட்டுவிடும்.

பக்தி மார்க்கங்களில் இப்படித்தான் நாம் உதவி செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலையில் அதிலே அந்த எண்ண வலு எது பெற்றதோ அது உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்து விட்டால் சந்தர்ப்பம் இப்படி ஆகின்றது.

நாம் ஒருவருக்கு நன்மை செய்தோம். ஆனால் அவருக்கு யார் மேலேயோ வெறுப்புப்பட்டது. அந்த வெறுப்பின் உணர்வு நமக்குள் வரும் போது நம் நல்லொழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

கடைசியில் என்ன சொல்வோம்…?

என்ன நல்லது செய்து என்ன ஆனது…? எனக்கு இப்படி நோய் வந்துவிட்டது…! என்ற வேதனை தான் வரும்.

ஏனென்றால் அந்த உணர்வு கொண்ட ஆன்மா உடலுக்குள் வந்து விட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

சொல்வார்கள்…! நேற்றெல்லாம் இவர் கோயில்களுக்கு ஓடி ஓடிப் போய் என்னென்னமோ நல்லது செய்தார். இன்று நல்லது என்று சொன்னாலே நிற்க மாட்டேன் என்கின்றார். இப்பொழுது சதா வேதனையே சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்வார்கள்.

காரணம்… அவர் நல்லவர்தான்…!
1.அவரை அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால்
2.அதன் உணர்வுகள் தனக்குள் வந்து அந்த ஆன்மா குடி கொள்கின்றது.

புலியிடம் சிக்கும் மான் என்ன ஆகிறது…?

புலி தன்னை இம்சிக்கும் உணர்வு கொண்டு அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்ற எண்ணத்திலே புலியையேக் கண்டு கண்டு அது நிலைகள் கொண்டு மானின் ஆன்மா வெளியே சென்றபின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்பிற்குள் சென்று புலியின் உணர்வைக் கொண்டு “அந்த மான் புலியாகவே மாறுகின்றது…!”

இதைப் போன்றுதான் இவர்கள் நல்ல உணர்வு கொண்டாலும்… இந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால்… பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால்… குடிப்போரைக் கொன்று விடுவதைப்போல இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் மகரிஷி. அந்த அருள் சக்தியின் வலுக் கொண்டு தீமைகளை அடக்க வேண்டும். ஏனென்றால். அவர்கள் தீமையைப் பொசுக்கியவர்கள்.

அந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணி எடுக்கும்போது நமக்குள்ளும் தீமைகளைப் பொசுக்கும். அருள் உணர்வுகளை வளர்த்து நாம் வெளி சென்ற பின்
1.அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று இந்த உடல் பெறும் உணர்வைக் கருக்கும்.
2.கருக்கிய உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் நாம் நிலைத்திருப்போம்.

மனிதனே மனிதனுக்குள் சென்று நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி… மனிதரல்லாத உருவைத் தான் பெறுகிறது

 

ஒருவருக்கு சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும்… இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும்… ஆஸ்மா நோயிருக்கும்… டி.பி. நோய் இருக்கும்.

1.ஆஸ்மா நோய் உள்ளவர்கள் இரத்தக் கொதிப்பிற்குண்டான மருந்துகளைச் சாப்பிட்டால் அது ஆஸ்மா நோய்க்கு ஒத்துக் கொள்ளாது.
2.அதே சமயத்தில் ஆஸ்மாவிற்குண்டான மருந்தை உட்கொண்டால் இரத்தக் கொதிப்பிற்கு அது ஒத்துக் கொள்ளாது.
3.ஆனால் சர்க்கரைச் சத்துக்குரிய மருந்தைச் சாப்பிட்டால் இந்த மூன்றுக்கும் ஒத்துக் கொள்ளாது.

தனித்தனித் தன்மையாகி நம் உடலுக்குள் பல விதமான போர் முறைகளை ஆரம்பித்து எத்தகைய மருந்திற்கும் அது கட்டுப்படாது நிலை ஆகிறது.

ஆக மூன்றுக்கும் ஒரு விதமான மருந்தை உட்கொள்ளும் பொழுது
1.அந்த விஷம் கலந்த மருந்தினைச் சாப்பிடும் பொழுது
2.கிட்னி விஷத்தைப் பிரிக்கும் தன்மை இழந்து விட்டால் உப்புச் சத்தாக மாற்றி விடுகின்றது.

உப்புச் சத்தும் சர்க்கரைச் சத்தும் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் இதைப் போன்ற பல நிலைகள் வரப்படும் பொழுது மனித உறுப்புகள் சீராக இயங்காது மனித உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து விடுகின்றது.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பழுதடையும் பொழுது அதில் விளைந்திடும் அணுக்கள் தான் கடைசியில் நமக்குள் வருகின்றது.
1.இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர முடியாத தன்மையும் வரும் பொழுது
2.உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது.

வெளி செல்லும் பொழுது “கடைசி நிமிடம் எதனை இந்த உடலில் வளர்த்துக் கொண்டதோ” அந்த அணுத்தன்மையாக அது உயிரான்மாவில் பெருகி விடுகின்றது.

பல விதமான பயிர்களை விவசாயம் செய்கின்றோம். அதிலே எந்தெந்தப் பொருள்களை இணைத்து அந்த வித்து விளைகின்றதோ அடுத்த செடி விளையும் பொழுது அதே போல விளைகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு பல விதமான கலவைகளைச் சேர்த்து ஒரு கருவுக்குள் மாற்றி அமைத்து அப்படிப்பட்ட வித்தினை உருவாக்கி விட்டால் அது வளர்ந்த பின் அதன் இனத்தைப் பெருக்குகின்றது.

மாடு ஆடோ நாயோ மனிதனோ எலியோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மனிதன் இன்று புதிது புதிதாக மாற்றி அமைக்கின்றான்.

இந்த ஒரு உடலுக்குள் வந்த பின்
1.எப்படி இன்னொரு உடலுக்குள் அணுக்கருக்களைச் சேர்த்து அதைக் கருவாக விஞ்ஞானத்தில் உருவாக்குகின்றானோ
2.இதே போல நாம் இந்த உடலை விட்டு வந்தபின் யாருடன் நாம் பிரியமாகப் பழகி இருந்தோமோ
3.அந்த வலு ஈர்க்கப்பட்டால் அந்த உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து விடுகின்றது.
4.புகுந்த பின் இந்த உடலில் எதனை உருவாக்கியதோ அதே போல அணுக்களை அங்கே மாற்றம் அடையச் செய்து
5.அந்த உடலில் உள்ள அணுக்களும் அந்த உயிருக்கு அது மாற்றம் அடையச் செய்து விடுகின்றது

ஆனால் இதைப் போல இந்த உடலில் எத்தனை துயரங்கள் பட்டதோ எத்தனை வேதனைகள் பட்டதோ எத்தனை சங்கடப்பட்டதோ எத்தனை சலிப்புப் பட்டதோ குடும்பத்தில் எத்தனை விரக்தி அடைந்ததோ…
1.ஆக அன்பும் பாசமும் கொண்டு நாம் இப்படி வாழ்ந்தோம் பிறருக்கு உதவி செய்தோம் என்று எண்ணினாலும்
2.அந்த வேதனையின் நிலையே முன் வந்து வேதனை அதிகரித்து அதிகரித்த நிலையில்
3.அடுந்த உடலுக்குள் சென்ற பின் அந்த உடலில் இதே நிலையாகி அதில் அந்தக் கருவாக உருவாக்கப்பட்டு
4.இந்த உயிர் மனிதனல்லாத உருவினை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கிவிட்டு
5.அந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளிவந்த பின் மனிதனல்லாத உருவை உருவாக்கி விடுகின்றது.

இந்த உயிரின் வேலை அது தான்.

எந்த உடலில் உருப்பெற்றதோ அந்த உடலிலும் அந்த வேதனை என்ற நஞ்சு வளர்ச்சியாகி அவர்கள் பண்பு பரிவு கொண்ட நிலையில் அவர்களை யார் நுகர்தறிந்தாலும் அவர் உடலுக்குள் சென்று… இப்படித்தான் மனிதனே மனிதனுக்குள் சென்று மனிதனை நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி மனிதரல்லாத உடல்களைத் தான் பெறுகின்றது.

ஆகவே… துயர்படும் உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும் அதிலிருந்து விடுபட நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உபதேசித்து
1.செவி வழி கேட்டுணர்ந்து உணரச் செய்து…
2.உங்கள் உயிரில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருக்களை ஈஸ்வர லோகத்தில் உருவாக்கச் செய்கின்றோம்.

அந்த உணர்வு உங்கள் இரத்த நாளங்களில் கருக்களாக உருவாக்கச் செய்து உங்கள் உடலுக்குள் வளர்ச்சி அடையப்படும் பொழுது உங்களுக்குள் இதற்கு முன் தீமை என்ற உடலை வளர்த்த நிலைகளுக்கும் நஞ்சு கொண்ட உணர்வுகளுக்கும் எதிர்ப்பாகும் பொழுது
1.நாம் நல்ல குணம் கொண்டு தீமைகளை உருவாக்கப்படும் பொழுது நமக்குள் துயர் என்ற நிலைகள் எப்படி வருகின்றதோ
2.துயர் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இதிலிருந்து விடுபட்ட அருள் ஞானிகளுடைய உணர்வை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது
3.தீமையை உருவாக்கும் அணுக்களை அது மடியச் செய்து விடுகின்றது.
4.தீமைகள் நமக்குள் வந்தாலும் மடிந்திடும் உணர்வுகள் தனக்குள் அது ஒளியாகி உயிரோடு ஒன்றி ஒளியின் சுடராகப் பெருகுகின்றது.

பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வுகளை நுகர்ந்து மனிதனாக அடுத்து எவ்வாறு சரீரம் பெற்றதோ இதைப் போல
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக அதிகமாக
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால்
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய நேரும் (இவ்வழியில் செல்வோர்…!)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.

தெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
1.இதனுடைய குணம் என்ன…?
2.இதனுடைய மணம் என்ன…? இது என்ன செய்யும்…?
3.நம்மை வேதனைப்படுத்துமா…? உடம்புக்கு நல்லதாகுமா…? என்று சிந்திக்கின்றோம்.

செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அந்தச் செடியின் வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நாம் இயங்குகின்றோமா…? நம்மை மற்றது இயக்குகின்றதா…?
2.அல்லது நாம் தவறு செய்கின்றோமா…?
3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?
4.அப்படித் தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா…? நாம் நுகர்ந்த உணர்வா…? நமது உடலா…? என்பதனை எல்லாம்
5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.

உதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது

அந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம் உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்
2.ஓய்ய்…ய்ய்ய்…! கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்
3.அப்போது இயக்குவது யார்..? நாம் நுகர்ந்த உணர்வு தான் இயக்குகின்றது
4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..? உயிர்
5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அது தான் நம்மை இயக்குகின்றது… ஆண்டாள்…! (காரணப் பெயர்)

வேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.

அந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன…? என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.

அப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி…? நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா…? என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.

வாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.

ஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில் அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.

ஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி வெளியே தள்ளுகின்றது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.

1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது
2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…!

அத்வைதத்தின் உணர்வுகளை எல்லோரும் அறிவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லும் பொழுது உங்கள் உயிர் உங்கள் உடலுக்குள் நின்று ஓ என்று இயங்கிக் கொண்டுள்ளது. நாம் கேட்டது பார்த்தது நுகர்ந்தது அனைத்தையும் ஓ என்று இயக்கி ம் என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

அதாவது நம் உயிர் எப்படி இயக்குகின்றதோ இயங்குகின்றதோ இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் குணங்கள் அனைத்தும்
2.நம் உடலில் உள்ள ரத்தங்களில் கலந்து மீண்டும் ஜீவணுவாக உருவாக்குகின்றது உருப்பெறுகின்றது.
3.ஆகவே உருவாக்கக் கூடிய சக்தியை நம் உயிரை ஈசனாக மதித்து நட்த்தல் வேண்டும்.

அதிலே ஏற்படும் வெப்பம் விஷ்ணு ஈர்க்கும் காந்தம் லட்சுமி நாம் எத்தகைய குணத்தை நுகர்கின்றோமோ அக்குணம் நம் உயிரிலே மோதும் பொழுது அந்தந்தக் குணத்தின் சத்துகள் வெளிப்படுகின்றது.

அதனால் தான் “சங்கு சக்கரதாரி” என்று உருவம் (விஷ்ணுவுக்கு) அமைத்து
1.அருவ நிலைகளில் நடப்பதை நம் உடலில் நாம் நுகர்ந்த எத்தகைய குணமோ
2.அத்தகைய உணர்ச்சிகள் நம் உடலில் எவ்வாறு இயக்குகின்றது…? செயல் ஆக்குகின்றது…?
3.அந்த உணர்வலைகள் சுழன்று எப்படி உடலாகின்றது…? என்பதனை நாம் அறிவதற்குத் தான்
4.அதாவது கண்ணுக்குப் புலப்படாது சூட்சுமத்தில் நடப்பதை “அத்வைதம்”.
5.அதை உருவமாக்கி… துவைதமாக்கி அதற்குக் காரணப் பெயர் வைத்து
6.உயிரின் இயக்கத்தை நாம் அறிந்து கொள்வதற்காக ஞானிகள் இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்கள்.

எல்லோரும் அத்வைதத்தின் உணர்வுகளை அறிய முடியாது.

ஆகவே உருவம் அமைத்து நினைவுபடுத்திக் காவியம் படைத்துக் காவியத்தின் வழியிலே கருத்தினை நுகரும்படி செய்து அதன் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு
1.அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து
2.நல்ல குணங்களை நம் இரத்தத்தில் கலக்கச் செய்வது தான் துவைதத்தின் அமைப்பு.

எந்தக் குணத்தின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ… நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம் என்று காரணப் பெயர் வைக்கிறார்கள்.

சிலையைப் பார்க்கும் பொழுது காவியப் படைப்பின்படி இது துவைதம். அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அந்தக் கருத்தினை எண்ணி ஏங்கும் பொழுது அந்தக் குணம் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளாக வெளிப்படுத்துகின்றது. நாமும் அறிய முடிகின்றது இந்த உடலையும் இயக்குகின்றது.

அதனால் இது விசிஷ்டாத்வைதம்…! நம் உடலுக்குள் இந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது எப்படி இயங்குகின்றது என்பதை நாம் அறியும்படி செய்தார்கள் ஞானிகள்.

சாதாரண மக்கள்
1.கல்வி கற்காதவரும்… கற்கவே இல்லை என்றாலும் கருத்தினைக் கவர்ந்து உணர்வின் செயலை அறிந்து
2.அதன் வழியில் அருள் வழியில் செயல்படும்படி செய்தனர்… அதன் வழி தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் எதாவது குறைபாடுகள் வரும். எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

நம்மைச் சங்கடத்திலோ சலிப்பிலோ வெறுப்பிலோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்கு வந்தால்…
1.அந்த உணர்வுகள் எல்லாம் மூக்கின் வழியாகச் சென்று
2.புருவ மத்தியில் உயிரிலே பட்டுத்தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
3.ஆண்டென்னாவான (ANTENNA) நமது கண் தான் அதை எடுக்கின்றது.
4.அதன் அழி ஆன்மாவிலிருந்து சுவாசித்துக் கொண்டே இருக்கும்
5.அந்தக் கெட்ட அணுக்கள் தான் வளரும்… சிந்திக்கும் தன்மை போய்விடும்.

அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று சொல்லி ஒரு பிரேக்…!

நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒட்டி ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்பொழுது அந்தச் சங்கட அலை மூக்கின் வழி உள்ளே போவதை இங்கே தடுக்கின்றது.

நெருப்பிலே ஒரு பொருள் பட்டால் தான் அந்த வாசனை தெரியும். அதே மாதிரி உயிரிலே பட்டால் தான் இயங்கும். ஆகவே
1.தீமை செய்யும் உணர்வுகள் உயிரிலே படாமல் அதை முதலில் தடுத்துப் பழக வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இதன் வழி (புருவ மத்தி) உள்ளுக்குள் இழுக்க வேண்டும்.
3.இது தான் பிராணயாமம் என்பது.

பிராணயாமம் என்றால் மூச்சை ஒரு பக்கமாக இழுத்து இன்னொரு பக்கமாக விடுவதில்லை. மூக்கு வழி போவதை நிறுத்தி… புருவ மத்தி வழி உள்ளே கொண்டு செல்ல வேண்டும். இது தான் சூரியகலை என்பது.

சந்திரகலை என்பது சாதாரணமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக எடுக்கும் சுவாசம் தான் அது.

ஆனால் உயிர் வழி எடுக்கும் போது சூரியகலை.

சூரியன் இழுத்துத் தான் எல்லாவற்றிற்கும் ஒளி அலைகளை அனுப்புகின்றது. அதாவது காற்றில் வரக்கூடிய அலைகளை அது எது எது வருகிறதோ… அதை எல்லாம் எடுத்து அந்தந்த அலைகளாக இயக்கச் செய்கின்றது

சூரியகலை என்கிறபோது நாம் என்ன செய்கின்றோம்…?

நம் ஆறாவது அறிவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று சொல்லி “உயிர் வழி…” உள்ளுக்குள் நேரடியாகக் கொண்டு போகிறோம்.

அதே சமயத்தில் நம் ஆன்மாவில் இருப்பது சுவாசத்தின் மூலம் உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றோம்.

1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வுகளை
2.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து இயக்குவதுதான் பிராணயாமம்.
3.நல்ல அணுக்களை நமக்குள் உயர்த்த வேண்டும்… அதனால் தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பது…!

ஆனால் இவர்கள் பிராணயாமத்தை எத்தனையோ அர்த்தங்களில் கொண்டு போகின்றார்கள்.

ஆதியும் அந்தமும் அறிந்துணர்ந்த அகஸ்தியன்

 

நாம் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதைத்தான் விநாய புராணம் கந்த புராணம் மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.

1.அகஸ்தியன் தனக்குள் இது எல்லாம் எப்படி…? என்று பல வினாக்களை எழுப்பித் துருவத்தின் ஆற்றலை எண்ணி
2.சூரியன் எப்படி உருவானது…? சூரியன் உருவாகுவதற்கு முன் என்னவாக இருந்தது…? என்று
3.இவனுக்குள் பட்ட… இடி மின்னல்கள் கலந்து செல்லும் உணர்வுகளை இவன் தாய் கருவிலேயே பெற்றதனால்
4.பூர்வ புண்ணியமாக அறியும் தன்மை கொண்டு… அவனுக்குள் அறியும் ஞானமும் அதை வளர்த்துக் கொள்ளும் சக்தியும் பெறுகின்றான்.

அதன் வழி வசிஷ்டர்…!
1.“தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால்” அவனுக்குள் நுகர்ந்தான்… உணர்ந்தான்…!
2.அவன் உடலில் விளைந்தது அதன் வழி விளைந்தது தான் துருவனான பின்
3.“இந்த அகண்ட அண்டத்தையும் எப்படி அறிந்து கொள்ள வேண்டும்…? என்று “மேலும்” அவனுடைய உணர்வுகளை விரிவடையச் செய்கின்றான்.

அப்படி விரிவடைந்த நிலையில் தான் சூரியன்களும் கோள்களும் இல்லாத பொழுது எப்படி உருவானது…? என்ற நிலையை அறிய அவனுடைய உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

ஏனென்றால் அகண்ட அண்டத்திலிருந்து கவர்ந்து தான் சூரியன் தனது சக்திகளை எடுக்கின்றது. பிரபஞ்சத்தில் உருவான கருவின் தன்மை தான் வான இயல் புவியியலாகி தாவரவியலாகி உயிரியலாக அந்த உணர்வுகளைக் கவர்ந்து மனித உடலாகி உணர்வுகள் எண்ணங்களாகி எண்ணத்தின் தன்மை வலுப் பெற்றது. அப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.

இந்த உண்மையின் நிலையைப் படித்தவர்கள் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். படிக்காதவர்களுக்குள் பதிவானால் நினைவு வருகின்றது.

ஆனாலும் படித்தவர்கள் பெரும் பகுதி என்ன செய்கின்றார்கள்…? இதற்கும் அதற்கும் எப்படி…? இது உண்மையா அது பொய்யா…? என்று கலக்கப்பட்டு உண்மையை அறியும் நிலையை தனக்குள்ளேயே தடைப்படுத்திக் கொள்ளும் நிலையே வருகின்றது.
1.இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு
2.உங்களுக்குள் பேருண்மைகளைப் பதிவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம்.

அன்று தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அகஸ்தியன் உண்மைகளை அறிகின்றான்.

மாமிசங்கள் உண்பதையும் மற்ற நிலைகளையும் விடுத்து விட்டு வேகவைத்துப் பல பொருள்களைச் சுவையாகச் சேர்த்து மகிழ்ச்சி ஊட்டும் உணர்வை உருவாக்கி அத்தகைய உணர்வின் எண்ணங்களைத் தனக்குள் தோற்றுவித்து உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அவைகளின் இயக்கங்களைத் தெளிவாக அறிகின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் ஒன்றுக்கொன்று இணைந்து எவ்வாறெல்லாம் இயக்குகின்றது…? என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன்.
1.துருவனான பின் அகண்ட அண்டத்தையும் அவன் அறிய ஆரம்பிக்கின்றான்.
2.சூரியக் குடும்பம் ஆவதற்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்தது…? என்பதையும் தனக்குள் கண்டறிந்து மூச்சலைகளாக வெளிப்படுத்தியுள்ளான்
3.இதையெல்லாம் நாமும் கவர்ந்தோம் என்றால் அவன் கண்ட பேருண்மைகளை நாமும் காண முடியும்… உணர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தன் மகன் திருமணத்திற்குத் தகுந்த மணப்பெண் வேண்டுமென்றால் “மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண் நமக்குக் கிடைக்கும்…” என்று இந்த உணர்வினை எண்ணிச் செயல்படுத்திப் பாருங்கள்.

இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும்போது அதற்குத்தக்க நல்ல இடத்தை அழைத்துக் சென்று நல்ல மணமகளைப் பார்க்க முடியும். அதே போல் நல்ல மணமகனையும் தேர்ந்தெடுக்கும் சக்தி உங்களிலே பெருகும்.

ஆனால் ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால்… அது உங்களைத் தான் அடிமையாக்குமே தவிர மெய் உணர்வை உங்களை அறியச் செய்யாது.

1.ஜாதகம் ஜோதிடம் பார்க்காது மனம் ஒத்துச் சென்றால்
2.உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஜாதகம் பார்த்துப் பார்த்து எதுவும் ஒன்றி வரவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி… கடைசியில் சோர்வின் தன்மை அடையப்படும்போது அதற்குத் தகுந்த “சோர்வான மாப்பிள்ளையையோ சோர்வான பெண்ணையோ தான்” பார்க்கும்படி வரும்.

அப்படி வந்த பின் கீரியும் பாம்பும் போல தான் அவர்கள் வாழ்க்கை அமையுமே தவிர மகிழ்ச்சி பெறும் தன்மை இல்லை.

ஜாதகம் ஜோதிடம் பார்த்து ஆயுட்காலத்தை நிர்ணயித்துத் தான் திருமணத்தைச் செய்கின்றார்கள். எல்லாப் பொருத்தமும் இருந்தால் அவர்களுக்கு நோய் வராது…! என்பார்கள். அதன் பிரகாரம் வாழ்கின்றனரா…? நோயில்லாமல் வாழ்கின்றனரா…?

1.மனப்பொருத்தத்தைப் பார்த்து அருள் ஒளி பெற வேண்டுமென்று ஏங்கிப் பெற்றால்
2.ஒன்றி வாழும் நிலை பெற்று அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறுகின்றனர்.

ஆகவே அருள் ஞானி காட்டிய அருள் வழிகள் அவர்கள் பெற வேண்டும் அதன் வழி எங்கள் குடும்பங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலைகளை ஒழித்துத் தள்ளுங்கள். அருள் வழி பெற வேண்டுமென்ற நிலைகளில் நம் குடும்பம் ஒத்து வாழ வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணுங்கள்.

பொண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவர்கள் வாழ்க்கையில் நோயின் தன்மையை விசாரியுங்கள். குணத்தின் தன்மையை விசாரியுங்கள். நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றாரா…? என்று பாருங்கள்.

இப்படித்தான் பொருத்தங்களைப் பார்க்க வேண்டும். நல்லொழுக்கத்துடன் செயல்பட்டால் இந்த முறைப்படி நாம் தியானித்தால் இந்த நல்லொழுக்கம் மீண்டும் வளர்கின்றது. தவறுகள் வராது.

ஆனால் தவறு செய்வோர் ஆசையின் உணர்வுகளை ஊட்டுவார். அதை ஏற்றுக் கொண்டு ஏமாந்து விட்டால் “நான் ஏமாந்துவிட்டனே…” என்று ஆன பின் திருமணமான பின் தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளே வருகின்றது.

ஆகவே துருவ தியானங்கள் இருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நம் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்
2.நம் பெண் எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் தொழில் வளம் பெருக வேண்டும்
3.அதன் பார்வை அந்தக் குடும்பத்திற்கு நலம் பெறும் சக்தியாக அமைய வேண்டும்
4.அதே போல வீட்டிற்கு வரும் மருமகளும் மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்
5.மகிழ்ச்சி அடையச் செய்யும் அந்த உணர்வுகள் பெற வேண்டும்
6.அத்தகைய மணப்பெண் நம் வீட்டிற்கு வர வேண்டுமென்ற எண்ணத்தைத் தொடருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைகள் நிச்சயம் வரும்.

May 2025 – உபதேசம்

கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து

 

உங்கள் வாழ்க்கையில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும் என்றால் நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்தும் மனைவி கணவனை மதித்தும் நடக்க வேண்டும். சாவித்திரியைப் போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிட வேண்டும் இரு உணர்வும் ஒன்ற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் போன்று எண்ணினால் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்.

அப்படி என்றால் எமன் யார்…?
1.பிறருடைய வேதனையான உணர்வுகளை எடுத்து அதை நுகர்ந்து கொண்டால் வெறுப்பு வேதனை நோய் என்ற நிலை நமக்குள் வருகின்றது.
2.அப்படி நுகர்ந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது பல நோய்கள் வருகின்றது… அவர் உணர்வே நமக்குள் வலுவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு எப்போதுமே கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் தன் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அந்த அருள் என்றுமே எனக்கு உறுதுணையாக இருந்து
2.அந்த ஆசி கொடுத்தல் வேண்டும் என்று எண்ணிக் கணவன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.

அதே சமயத்தில் மனைவியும் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக அமைய வேண்டும்.
2.அவரைப் பார்ப்பவருக்கு எல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எப்போதுமே மனைவி வாழ்த்துதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் என் கணவருக்கு அந்த அருள் மணம் பெற வேண்டும் தொழிலில் செழித்திருக்க வேண்டும் அவர் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

. இதே மாதிரி எண்ணி இருவரும் வாழ்தல் வேண்டும்.

ஒருவன் தனக்குத் தீங்கு செய்தான் என்ற நிலையில்… அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தீங்கு செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இதே மாதிரி எண்ணினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது.

வாகனம் ஓட்டும்போது எண்ணினால் விபத்தாகின்றது. தொழிலில் இதே போன்று எண்ணினால் சிந்தனை குறைகின்றது… எந்திரங்களில் சிக்கி விடுகின்றார்கள்.

ஒரு கணக்கோ பொருளோ நல்ல முறையில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிந்தனை குறைந்து முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் அவருக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மனைவி வாழ்த்துக் கூறுதல் வேண்டும்.

அதே சமயத்தில் வெளியில் செல்லக்கூடிய கணவனும்
1.என் அன்னை தந்தையின் அருளால் மனைவியின் அருள் துணை எனக்குக் கிடைக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கணவனும் செல்லுதல் வேண்டும்.

இருவருமே இதைப் போன்று எண்ணி வாழ்ந்து வந்தால் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணைந்து வாழ்கின்றோம் என்று பொருள்.

ரோட்டில் செல்கின்றோம். எதிர்பாராது எங்கிருந்தோ ஒரு பஸ் தறி கேட்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சந்தர்ப்பத்திலே “மனைவியின் உணர்வுகள் கணவனை அங்கே போக விடாது தடுக்கும்…”

அல்லது பஸ்ஸிலே ஏறப்போகின்றோம் என்றாலும் இதே நிலைகள் வளரப்படும் பொழுது “மனைவியின் உணர்வுகள் அந்தப் பஸ்ஸில் ஏற விடாது தாயின் உணர்வுகள் அங்கே தடுக்கும்…”

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக நாம் நடந்து செல்லப்படும் பொழுது நமக்கு எதிரியாக இருப்பவர்கள்… “எனக்குத் துரோகம் செய்தான் அல்லது இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது மேடு பள்ளம் தெரியாதபடி விபத்தாகி விடும்.

அல்லது ஒரு வாகனம் வந்தாலும் தெரியாதபடி புரையோடுவது போன்று சிந்தனைகள் இழந்து விடும். இனம் புரியாதபடி விபத்தாகி விடும். இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில சம்பவங்கள்.

ஆனால் இதை மாற்ற அன்னை தந்தையரை எண்ணி… “அவருடைய அருள் துணை எனக்கு என்றும் இருக்க வேண்டும்…” என்று எண்ணிச் சென்றால் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.

தாய் எப்போதுமே தன் பிள்ளைகள் வாழ்க்கையிலே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆசி கொடுத்துக் கொண்டே இருக்கும். அதே சமயத்தில் மனைவியின் எண்ணங்கள் வரும் பொழுது அந்த அன்பான எண்ணங்கள் மகிழ்ச்சியான உணர்வு கொண்டு எங்கே சென்றாலும் காக்கும் சக்தியாக வரும்.

தீமை என்று வரப்படும் பொழுது “அந்த எண்ணமே எமன்…”
1.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்… இணைந்து வாழ்வதே சாவித்திரி.
2.ஆகையினால் மனைவி அருள் உணர்வு கொண்டு எண்ணப்படும் பொழுது அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே தாய் தந்தையரை வணங்கி மனைவியின் அருள் பெற வேண்டும் என்று கணவன் வெளி செல்வதும் கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் மனதில் நினைத்து ஆசீர்வதித்து மனைவி அனுப்புதல் வேண்டும்.

தொழிலுக்குச் சென்றாலும் சரி அவர் செய்யும் தொழில் எல்லாம் உற்பத்தியாகும் பொருள்களிலும் அதை வாங்குவோர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே “மனைவி கணவனை வாழ்த்திக் கொண்டிருத்தல் வேண்டும்…”

கணவன் மீது மனைவி பிரியமாக இருக்கின்றது. வீட்டில் இருக்கக்கூடிய சொந்த பந்தங்களோ நாத்தனாரோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி பேசி விடுகின்றார்கள்.

அந்த வேதனையால்… கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் “பாவிகள் இப்படிப் பேசுகின்றார்களே…” என்று இந்த உணர்வுகளைச் சேர்த்துத் தன் கணவனை எண்ணும் பொழுது இதே உணர்வுகள் அவர் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் தடைப்படும்.

அவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனைவி எண்ணினால் அவருடைய சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.சாதாரண மனிதனுடைய உணர்வுகள் எண்ணும்பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் கணவரை எண்ணினால் அங்கே தடையாகின்றது.

இதை எல்லாம் தடைப்படுத்த வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று குறை கூறுவோர் நிலைகளை இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

என் கணவருக்கு அந்த அருள் உணர்வு பெற வேண்டும். பேரானந்த நிலைபெறும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி கணவனை உயர்ந்த நிலை பெற எண்ணுதல் வேண்டும்.

இதே மாதிரிக் கணவனும் எங்கே சென்றாலும் மனைவியை எண்ணி மனைவிக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி எண்ணினால் அன்று அகஸ்தியன் எப்படி வாழ்ந்தானோ
2.அதைப்போல வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) சொல்லும் தியானத்திற்கு மந்திரம் சொல்ல வேண்டும்… அது எனக்கு மறந்து போய் விட்டது…! என்று எல்லாம் நீங்கள் சொல்லத் தேவை இல்லை.

ஈஸ்வரா… என்று உயிரை உங்கள் புருவ மத்தியில் நினைக்கின்றீர்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..! என்று உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்தினாலே போதும்.

எந்த நல்லதைச் செய்ய விரும்புகிறீர்களோ அந்தக் காரியம் நல்லதாக இருக்க வேண்டும் என்று என்ணினாலே போதுமானது.

ஆனால் துருவ நட்சத்திரத்தை நினைத்தேன்… தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது… என்றைக்குத் தான் போகுமோ…? என் வயிற்று வலி என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று இருக்கிறது என்று இதைத் தியானித்தால்
1.இன்னும் விஷம் அதிகமாகப் போகும்
2.சுத்திகரிக்கும் நிலையே மாறிவிடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை விடுத்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுகின்றேன். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் இரத்த நாளங்களில் கலக்கின்றது. என் உடல் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது. நோய் நீக்கும் சக்தி அந்த அரும் பெரும் சக்தியை நான் பெறுகின்றேன்…! என்று எண்ணுதல் வேண்டும்.

சர்க்கரைச் சத்தோ… இரத்தக் கொதிப்போ… வாத நோயோ… எதுவாக இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எனக்குள் சர்க்கரைச் சத்தை நீக்கும் அந்த அரும் பெரும் சக்தி வளர வேண்டும்.

அதே மாதிரி இரத்தக் கொதிப்பை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும். ஆஸ்துமா போன்ற நோய்கள் நீக்கி அந்த அரும்பெரும் சக்தி எனக்குள் பெற வேண்டும் என்று இதை மாற்றியமைக்க வேண்டும்.

இதைப்போல தியானத்தின் முலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வாருங்கள்.

1.இந்த உணர்வை நீங்கள் அடிக்கடி அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்
2.இதை நுகர நுகர உங்கள் இரத்த நாளங்கள் பரிசுத்தமாகும்
3.எந்த நோயாக இருந்தாலும் அதை நீங்கள் மாற்றி அமைக்கும் நிலை வரும்.

உங்கள் எண்ணத்தால் தான் நோய் வருகின்றது. உங்கள் எண்ணத்தாலேயே அதைப் போக்கவும் முடியும்.

எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றது…? பிறர் படும் தீமைகளை அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வை உற்றுப் பார்க்கின்றோம். அவர் உடலில் இருந்து வருவதை நுகர்கின்றோம்.

நுகர்ந்தது நம் இரத்த நாளங்களில் கலந்து நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் முறைகள் வருகின்றது. ஒன்றுக்கொன்று மோதல் அதிகமாகும்போது இந்த உணர்வின் தன்மை வரும்.

இடைப்பட்ட நேரத்தில் இதைச் சமப்படுத்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் இதைச் சமப்படுத்தலாம்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை…!

ஏனென்றால் ஒருத்தருக்கொருத்தர் குடும்பத்தில் சண்டை போட்டுப் பல சிக்கல்கள் வருகின்றது. இதை யார் பஞ்சாயத்து செய்தாலும் ஒன்றும் நடக்காது.

அந்த உணர்வுக்கொப்பத் தான் இப்படிப்பட்ட செயலாக்கங்களும். அந்த உணர்வுக்கொப்பத்தான் இந்த எண்ணங்களும் வரும்.

அதை மாற்றிட…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என்னை இயக்கும் இந்த சக்தியிலிருந்து நான் விடுபட வேண்டும்.
3.என் பார்வையில் அனைவரும் நலமாக வேண்டும்
4.அனைவரும் நல்ல உணர்வுகளைப் பெறும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வை எண்ணினால் பகைமையான உணர்வு நமக்குள் வளர்க்காது பாதுகாக்கலாம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் மீண்டிட குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். இனி வரும் காலத்தில் அனைவரும் பிறவி இல்லை என்ற நிலை பெற வேண்டும்.

ஏகாந்த நிலைகள் கொண்டு… எதுவுமே நம்மைத் தாக்கிடாது… எதையுமே வென்றிடும் உணர்வுகளை நாம் இந்த மனித உடலில் உருவாக்கினால்தான் உடலை விட்டு உயிர் சென்றபின்… இந்த உணர்வின் துணை கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இல்லையென்றால் மீண்டும் மீண்டும் உடலின் தன்மை பெற்று அந்த உடலைக் காத்திடும் எண்ணங்கள் தான் வரும். உயிராத்மாவை ஒளியாக்கும் எண்ணம் வராது.

ஆனால் நம் உணர்வுகளை ஒளியாக்கி விட்டால் இருள் என்ற நிலை வராதபடி ஒளிச் சரீரம் நாம் பெறலாம். ஒளியாக மாற்றும் அந்தத் திறனை உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் அன்னை தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.இப்படி நாம் அடிக்கடி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்வோம்.

உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்

 

துன்பம் வரும் பொழுது உங்கள் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

நாரதன் கலகப் பிரியன்… நாரதன் கையிலே இனிமையான இசை உண்டு.
1.பிடிவாதமான உணர்வுகளை வளர்த்திடாது அருள் ஒளி கொண்டு இருளை நீக்கி இனிமை என்ற உணர்வினை இணைவாக ஏற்றி
2.மகிழச் செய்யும் உணர்வினை நமக்குள் வளர்த்திடல் வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.

இந்த வாழ்க்கையில் குறுகிய காலமே வாழும் நாம் இந்த உடலின் இச்சையை வளர்த்திட வேண்டாம். அருள் உணர்வின் தன்மையாக அவன் (அகஸ்தியன்) அருள் பெற வேண்டும் என்று இந்த இச்சையைக் கூட்டுங்கள்.

1.ஒளியின் உணர்வாக என்றும் நிலை கொண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்
2.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை உணவாக எடுப்போம்
3.வருவது அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றுவோம் என்ற இந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணுகின்றோமோ அதைக் கண் காட்டுகின்றது.

நமக்குள் அருள் ஒளி என்று பதிவான பின் மீண்டும் அது கண்ணுக்கு எட்டப்படும் பொழுது
1.எதனின் உணர்வை நமக்குள் நுகர்ந்தோமோ அந்த இடத்திற்கே கண் நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வினை நுகரச் செய்கின்றது… பகைமை உணர்வை மாற்றுகின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்குகின்றது.

ஆகவே அருள் ஒளியைப் பெறுவோம் என்று நாம் தியானிப்போம். இந்த வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் இதைப் போன்ற உணர்வுகளை நீக்குவோம்.

நோயாளியை அன்புடன் பண்புடன் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவரைக் காக்க உதவுகின்றது. ஆனால் நம்மைக் காக்கும் நிலை அற்று விடுகின்றது. நம்மைக் காக்கும் நிலை இல்லை என்றால் நல்லது அழிந்து விடுகின்றது.

நல்லவைகள் அழிந்திடாது அருள் ஞானத்தைப் பெருக்கித் தீமையை நீக்கும் சக்திகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி… நம்முடைய சக நண்பர்களுக்கும் அதை உணர்த்தி
1.அவர்கள் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்… அவர்களும் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும்
2.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
3.அவர் உணர்வு கொண்டு நாமும் வளர முடியும்… நம் உணர்வு கொண்டு அவரை வளர்க்கவும் முடியும்.

நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் இந்தப் பரலோகத்தில் பரவுகின்றது. அந்த உணர்வின் தன்மை “நம் எண்ணமே நம்மைக் காக்கின்றது…”

அருள் ஒளியை நாம் பெற்றால் அனைவரும் அது பெற வேண்டும் என்று எண்ணினால் அனைவருடைய உணர்வுகளும் நமக்குள் ஒன்றென இணைகின்றது.

பகைமையற்ற உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. நாரதன் கலகப்பிரியன் தீமைகளை அகற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது…
1.அதைப் பெருக்குகின்றது… அதுவே நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்வின் இயக்கமாக உயிர் ஒளியாகின்றது.

இதை நாம் அனைவரும் செயல்படுத்துவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய வாழ்க்கையில் நோயை நீக்க மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே இன்னொரு விஷத்தின் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும்போது அதில் உள்ள விஷமும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் நோயை நீக்கப் பல உபாயங்களைச் செய்தாலும் இந்த விஷத் தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உறுப்புகளைப் பாழாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆக… கொஞ்ச காலம் வாழ்வதற்காக நாம் எத்தனையோ உபாயங்களை வைத்துச் செயல்படுத்துகின்றோம்.

மனிதன் உறுப்புகள் செயலிழந்து விட்டால் நுரையீரலில் இருந்து எல்லா ஈரல்களுக்கும்.. கிட்னி… இருதயம்… போன்றவைகளையும் மாற்று உறுப்புகளை வைத்து மனிதனை வாழ வைக்க முடியும்…! என்று விஞ்ஞானி செயல்படுத்துகின்றான்.

ஒரு எலும்பே இல்லை என்றாலும் அந்த எலும்பைப் போல இன்னொரு உடலில் அந்த எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து மோல்ட் (அச்சு) செய்கின்ற மாதிரி செய்து மனிதனுக்குத்தக்க எலும்புகளை உருவாக்கி… கை கால்களுக்கோ மற்ற இடங்களுக்கோ அதைப் பொருத்தி மீண்டும் சாதாரண மனிதனைப் போல வாழச் செய்ய முடியும்…! என்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.

ஏனென்றால் எலும்புகள் உருவாக்கிய அணுக்களை வைத்து மீண்டும் அதைப் பெருக்கப்படும் பொழுது அந்த மலம் உருவாகின்றது. அப்படி வளர்த்து மீண்டும் பொருத்துகின்றான்.

பண வசதி உள்ளவர்கள் இதைப் போல் பல லட்சம் செலவழித்து அதை எடுத்துப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படிப் பொருத்தினாலும்…
1.அங்கங்களை இழந்த நிலையை எண்னும் போது
2.மற்றவர்கள் எல்லாம் சுயமாக இருக்கப்படும்போது நமக்கு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று
3.மீண்டும் அந்த நோயின் உணர்வுகள் கிளர்ந்து வருகிறது.

இதைப் போல் தொடர்ந்து வரும் போது அதை முழுமையாக நீக்கும் திறன் இல்லை.
1.செல்வத்தைச் செலவழித்து. உறுப்புக்களை மாற்றி அமைத்தாலும்…
2.உடலில் வரும் அந்த வேதனை உணர்ச்சிகள் (வேதனை என்றாலே நஞ்சு)
3.உடலை விட்டுச் செல்லப்படும்போது… உயிருடன் சேர்ந்தே செல்கின்றது.

சேர்த்துக் கொண்ட இந்த வேதனைக்கொப்ப மாற்று உடலாக மற்ற உயிரினங்களாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

ஆனால் நாம்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் இத்தகைய விஷத் தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கிக் கொண்டால்
1.நமது வாழ் நாளில் தீமைகளைக் கண்டாலும் உடனே அதைத் தடுத்து
2.நல்ல உணர்வாக அந்த அணுக்களையே மாற்றிவிட முடியும்.

இன்று எப்படி விஞ்ஞானி இந்த உறுப்புக்களின் தன்மையைப் பெற்று அந்த எலும்பையே உருவாக்கச் செய்கின்றானோ இதைப்போல நல் அணுக்களைப் பெருக்கி அதைச் சீராக்க இயக்கிட முடியும்.

உறுப்புகளை உருவாக்க முந்தி மற்ற பொருள்களால் செய்து வைத்தான். இப்பொழுது அதே போல் உறுப்புகளையே உருவாக்கிச் செயல்படும் நிலைகளை வைத்து கொள்கின்றான்.

மனிதனின் மேல் தோல் பாழாகிவிட்டால் அதைப் போல் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து வளர்த்து மீண்டும் அழகான உடலாகவும் உருவாக்கும் நிலையைச் செய்கின்றான்.

1.ஆனால்.. இந்த உயிரைப் போல (அழியாத) உணர்வின் தன்மை உருவாக்கும் செயல் விஞ்ஞானியிடம் இல்லை.
2.உடலைக் காக்கப் பல முறைகள் கொண்டு விஞ்ஞானி செயல்படுத்தினாலும்
3.வேதனை உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
4.உடலுக்கு பின் சேர்த்து கொண்ட வேதனைக்கொப்ப இந்த உயிர் மாற்று உடலை உருவாக்கி விடுகின்றது.

இதிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டால்… நாம் அந்த நினைவினை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது…
1.ஒரு கஷ்டப்படுவோரோ வேதனைப்படுவோரோ துயரப்படுவோரோ… அல்லது
2.ஒருவர் நம்மிடம் பழகி உடலை விட்டு அவர் பிரியும் போதோ அந்த நேரமெல்லாம்
3.அதைத் தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் நாம் வைத்து
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.உயிர் வழியாகக் கவர்ந்து நம் உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு செலுத்தி
6.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று உள் முகமாகப் பாய்ச்சப்படும்போது
7.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நம் இரத்தத்தில் பெருகி தீமையான அணு உருவாகாதபடி தடுக்கின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. ஒளியான உணர்வாக மாறுகின்றது.

வாழ் நாளிலே எத்தனை கோடித் தவறுகளை நாம் பார்த்தாலும் அந்தந்தச் சமயத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டுமென்று உள்ளுக்குள் செலுத்தி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும். எந்த நேரத்தில் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் உயிரான்மா துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்… அழியாத நிலைகள் பெறலாம்.

மெய் உலகை உருவாக்குவோம்

 

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள்… நேரமாகிவிட்டது வீட்டுக்குச் செல்ல வேண்டும்… தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று சிலருடைய எண்ணங்கள் இருந்தால்… உங்கள் எண்ணங்களைப் பல நிலை கொண்டு அலைய விட்டால்… இந்த அருள் உணர்வுகளைப் பெறுவது கடினமாகி விடுகின்றது.

ஆலயங்களுக்குச் செல்கிறோம் என்றால் மலர் பூஜை விளக்கு பூஜை என்று எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள். அதைச் செய்ய நாள் கணக்கில் மணிக்கணக்கில் கூட உட்கார்ந்து இருக்கின்றோம்.

யாகங்கள் வேள்விகளைச் செய்தால் அங்கேயும் அமர்ந்து… தான் எந்த ஆசையில் போனோமோ “அவன் அதைக் கொடுப்பான்” என்று ஆர்வத்தில் உட்கார்ந்து இருக்கின்றோம்.

ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் தெய்வத்தையே பழித்திடும் நிலைகள் வருகின்றது. ஆக ஆசைக்கொப்பத் தான் நாம் அங்கெல்லாம் செல்கின்றோம்.

அவ்வாறு இல்லாதபடி
1.நமது ஆசை அனைவரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும் என்றும்
3.என் பார்வை சொல் செயல் எல்லாம் அனைவரும் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று
4.உயிரான நெருப்பில் இந்த உணர்வின் அலைகளைப் பரப்பினால்
5.உண்மையான யாகம்… உயிரின் நிலைகள் கொண்டு அவ்வாறு உருவாக்கும் சக்திகள் தான்.

அதாவது எண்ணத்தின் உணர்வு கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்ச்சிகளைப் பரப்புவதும்… அந்த உணர்வின் அணுக்களாக மாற்றுவதும்… சொல்லின் உணர்வுகள் அனைவருக்கும் பரவச் செய்து…
1.கண்ணின் நினைவாற்றல் கொண்டு யாரை எண்ணுகின்றோமோ அந்தச் சொல்லின் ஆற்றல் அங்கே ஊடுருவி
2.அவர்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் ஒன்றி வாழ வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் போது
3.நம் எண்ணத்தின் உணர்வுகள் கண்ணின் நினைவு கொண்டு அவர்கள் மேல் பாய்ச்சப்படுகின்றது.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “அவருடைய தீமை நமக்குள் வராதபடி தடுக்க இது உதவும்…”

ஆகவே ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம். உலக மக்கள் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம். நமது பார்வையும் சொல்லும் செயலும் புனிதம் பெறுவோம். அனைவரையும் புனிதமாக்கும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

உலக மக்கள் நலம் பெறத் தியானிப்போம். விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அனைவரும் அந்த அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய்ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்று தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் இந்த மனித வாழ்க்கையிலேயே ஒளி என்ற உணர்வை உருவாக்கும் பிறவி இல்லாத நிலை என்ற நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று தியானிப்போம்.

1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்றும்
2.அவரவர்கள் குடும்பத்தில் பற்றுடன் வாழ வேண்டும் என்றும்
3.எதிர்காலக் குழந்தைகள் மெய்ஞானத்தை வளர்க்க வேண்டும்… மெய் உலகை உருவாக்க வேண்டும் என்றும்
4.எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் தன் உடலில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த உணர்வின் நிலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கே பூமியில் சுழன்று கொண்டிருப்பதை ஈஸ்வரபட்டர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவு கொண்டு எண்ணும்போது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நான் சுவாசிக்க நேருகின்றது.

என் உடலுக்குள் அது கலந்த பின்… தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் திரவகத்தை ஊற்றிப் பிரிப்பது போல
1.அந்த அருள் ஞானியினுடைய உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று
2.தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது…
3.தீமைகளைப் பிரித்துவிடுகின்றது… அதைச் சுத்தப்படுத்துகின்றது

இதுதான் ஆத்மசுத்தி என்பது.

மற்றவர்களுடைய குறைகளை நான் கேட்டாலும் இந்த முறைப்படி சுத்தப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எத்தனையோ வேதனைகளை அனுபவிக்க நேரும்.

உங்களுக்கு நன்மை செய்யலாம்… ஆனால் நீங்கள் பட்ட தீமைகள் எல்லாம் எனக்குள் அதிகமாக வந்து எனக்குள் நல்லதை மூடி மறைத்துவிடும்.

இதைப் போன்று தான் உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குவதற்கும் இந்த உபாயத்தை… அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையைக் காட்டிக் கொண்டு வருகின்றேன்.

எந்த அளவுக்கு நீங்கள் கூர்ந்து இதைக் கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாக உங்கள் எலும்புக்குள் பதிவாகின்றது.

எப்போது நீங்கள் தீமைகளைச் சந்திக்க நேருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை நீங்கள் தூண்டப்படும் போது
2.அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும்போது
3.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வைச் சுவாசிக்க நேருகின்றது.

டி.வி.யுடன் சேர்ந்த ஆண்டன்னாவின் பவரைக் கூட்டும்போது வெகு தொலைவில்… செயற்கை கோள்கள் மூலமாக அங்கிருந்து ஒலி… ஒளிபரப்பச் செய்வதைக் கவர்ந்து அது காட்டுகிறது

அதை நாம் டி.வி.யில் பார்ப்பதைப்போல அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்பொழுது யாம் சொல்லும்போது கூர்ந்து கவனித்தால் உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு ஆவது மட்டுமல்ல…
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
2.அதனின் நிலைகள் கொண்டு ஆழமாகப் பதிவானபின்
3.அந்த நினைவின் அலைகளை… மகரிஷிகளை எண்ணும்போதே
4.ஆண்டன்னாவின் சக்தியைக் கூட்டியது போல்… நம் கண் (ஆண்டன்னா) மிக சக்தி வாய்ந்ததாக மாறி
5.அந்த ஆற்றல்களைக் கவர்தல் வேண்டும்.

ஆகவே இப்பொழுது கேட்டுணரும்போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை இணைந்து… நான் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உடலிலே பதிவு செய்கின்றது.

அதே சமயம்
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகளுக்கு…
2.அந்தத் திரைகளுக்கு அனுப்பும் கண்ணின் நினைவை
3.ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும் இது சக்தி வாய்ந்ததாகச் சேர்க்கின்றது.

பின்பு அந்த ஆண்டன்னா பவர் போல… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுக்ள் சென்று அறியாது வந்த தீமைகளை நீக்கிட உதவும்.

இப்படிச் செய்யாமல் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்ற எண்ணம் இருந்தால்
1.நமக்கு நாமே ஏமாந்து நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து
2.நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்வதுபோல் தான் ஆகும்.
3.யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ இதை எல்லாம் நிவர்த்திக்க முடியாது.

யாகம் என்பதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இது தான் யாகம்… அது தான் வேள்வி.

அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் செலுத்தினால் ஒழிய துன்பங்களை அடக்க முடியாது.

1.நம் உயிர் ஒரு நெருப்பு
2.அதிலே எதைப் போடுகின்றோமோ அந்த வாசனை தான் வரும்

ஒரு நஞ்சினை நெருப்பிலே போட்டால் அந்த நஞ்சின் வாசனை தான் வரும். ஆனால் அதிலே நல்ல மணத்தின் தன்மையைப் போட்டால் நல்ல மணத்தின் தன்மையை நாம் காணலாம்.

இதைப் போன்று தான் நம் உயிரில் நல்ல மணத்தின் தன்மையைப் போடும்போது நம் எண்ணங்கள் நல்லதாக வருகின்றது.

ஆகவே மிக சக்தி வாய்ந்த ஒரு நறுமணம் கொண்ட நிலையை நாம் இடும்போது அதிலிருந்து வெளிப்படுவதைச் சுவாசிக்கும்போது நல்ல வாசனை கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் நஞ்சான நிலைகள் நெருப்பிலே விழுகும்போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகின்றோம்.

இதைப் போலத் தான் நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்பான உயிருக்குள் இந்த உணர்வின் அலைகளாக உடலுக்குள் சென்று அந்த குணங்களுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

ஆக அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்துத் தீமையின் உணர்வுகளை நீக்கி நல் உணர்வின் சத்தை நமக்குள் வலுக்கொண்டதாக மாற்றிக் கொள்வதற்குத்தான் எமது குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்கின்றோம்.

1.நீங்கள் அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.இருள் நீங்கிய உணர்வலைகள் கொண்டு நீங்கள் பேசப்படும்போது
4.நீங்கள் வெளியிடும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும்போது
5.பிறருடைய உணர்வுகளுக்குள் அது சென்றாலும் அல்லது
6.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
7.உங்கள் மூச்சின் அலைகள் பிறருடைய தீமைகளை நீக்க இது நிச்சயம் உதவும்.

சோம்பேறியாக இருக்கும் நம்மை உஷார்படுத்தும் சந்தர்ப்பம்

 

நம்மை ஒருவன் தவறாகப் பேசுகின்றான் பழித்துப் பேசுகின்றான் சங்கடமான நிலைகளில் தொல்லை கொடுக்கின்றான் என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1அவன் எண்ணிய உணர்வுகளை நமக்குள் வளர்த்து அவன் நினைவிலேயே நாம் வளர்ந்து விடுகின்றோம்.
2.நல்ல உணர்வுகளை இழக்க நேர்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பகைமை உணர்வுகள் நமக்குள் விடாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பகைமை கொண்டு ஒருவன் பேசினால் அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களும் அந்தப் பகைமை உணர்வுகள் ஒன்றுக்கொன்று வீரியத்தன்மை அடைந்து மேல் வலி கை கால் குடைச்சல் இது போன்று வேதனையின் நிலைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.

ஆகவே நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வு உள்புகாது காத்திடல் வேண்டும். ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி தீமை உள்புகாதபடி தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து அதை வலுவான நிலைகள் கொண்டு உருவாக்குதல் வேண்டும்.
1.அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.
2.ஒருவன் தீமை என்ற நிலையில் அதிகமான அளவு தொல்லை கொடுக்கின்றான் என்றால்
3.அதை மறக்க அருள் ஒளி பெற வேண்டும் என்று இதை உருவாக்கிடல் வேண்டும்.
4.இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.
5.நாம் சும்மா இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்திருக்க மாட்டோம்.
6.ஆனால் ஒருவன் தீமை செய்யும் உணர்வுடன் வரும் பொழுது அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குகின்றோம்.
7.அந்த வலுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது
8.சோம்பேறியாக இருந்தவனை உஷார்படுத்தியது போன்று வந்து விடுகின்.றது.

வயல்களிலே தண்ணீரை வாய்க்காலிலிருந்து பாய்ச்சுகின்றோம். கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் போகும் பாதையில் உடைப்பாகிவிட்டால் நீர் வேறு பக்கம் சென்று விடும். சீரான நிலையில் கொண்டு நம் வயலுக்குப் பாய்ச்ச முடியாது.

அதைப் போன்று நாம் இந்த வாழ்க்கையில் நமக்குள் நல்ல உணர்வின் தன்மையைத் தடைப்படுத்தும் நிலை எதுவாக இருந்தாலும் அவ்வாறு இடைமறித்தால் அதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

நம் கண்ணுக்குப் பெயர் இடையன் என்றும்… நல்ல எண்ணம் கொண்டு நாம் செல்கின்றோம் இடைமறித்துத் தவறான உறவுகள் நமக்குள் வந்தால் அதனின்று காத்து நல்வழி செயல்படுத்தும் உணர்ச்சிகளை ஊட்டிடல் வேண்டும்.

நம் கண்களுக்குப் பெயர் கண்ணன் என்றும் இடையன் என்றும் அவன் மாடுகளை மேய்ப்பவன்… இந்தக் கண் நம்மை மேய்க்கின்றது. தவறு என்ற உணர்வு வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் நம்மை இடைமறித்து நல்வழியான நல்ல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றது.

நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கின்றோம் திடீரென்று எண்ணங்கள் உதயமாகும். நண்பரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் “அவர் வேறு ஒரு தெருப் பக்கம் சென்று கொண்டு இருந்தாலும்” நம் கண்ணின் நினைவாற்றல்கள் அங்கே செல்லும். அவரை இழுத்துக் கொண்டு இங்கே வரும்.

அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
2.அதை பதிவாக்கிக் கொண்ட பின் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…?
3.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஒரு நோயாளியை உற்றுப் பார்க்கிறோம் உதவி செய்கிறோம் என்றால் அதை வலுவாக்கினால் இதே கண் அந்த நோயாளி மடிந்த பின் நம் உடலுக்குள் அந்த ஆன்மாவை அழைத்து வந்துவிடும்.

ஆகவே இந்தக் கண்ணின் இயக்க நிலைகளை கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். எதன் உணர்வை வலுப்பெறுகின்றாயோ அதன் தன்மையை நீ அடைகின்றாய் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே நாம் இந்த உடலுக்கு பின் எதுவாக வேண்டும்…? அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

குரு பலம் நாம் பெற வேண்டும்

எனக்குள் (ஞானகுரு) வந்த தீமைகளிலிருந்து விடுபட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “பல உணர்வின் ஒலிகளைக் கூர்மையாகக் கேட்டுணரும்ப்படி செய்து… அந்த உணர்வை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்தார்…!”

1.அவர் பதிவு செய்யும் போது
2.அவரைக் கூர்மையாகக் கவனிக்கும் போது
3.அவர் சொன்ன நிலைகளிலிருந்து
4.எனக்கு வரும் தீய விளைவுகளிலிருந்து என் குருவை எண்ணும் போதெல்லாம்
5.எனக்குள் வந்த தீமையை நீக்கி நல்ல வினைகளை எனக்குள் வளர்க்க முடிகின்றது.

அதே சமயம் மற்றவர்கள் என்னிடம் அவர்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கேட்க வரப்படும் போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் எனக்குள் கேட்டறிந்தாலும் “அந்தக் கஷ்டம்” என்னை இயக்காதவண்ணம் மாற்ற முடிகிறது.

இப்பொழுது கசப்பு புளிப்பு காரம் போன்ற பல சரக்குகளை இணைத்து எப்படிச் சுவையாகச் சமைத்து உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போல் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது.

ஏனென்றால் ஒவ்வொருவரும் என்னை அணுகும் போது அவர்களின் துன்பத்தையும் கஷ்டத்தையும் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்து தான் நான் பதில் சொல்ல வேண்டியது வரும்.

1.உங்கள் உடலில் விளைய வைத்த துன்பங்களை நீங்கள் சொல்லும் போது
2.நான் கேட்டறியப்படும் போது அந்தப் பலவும் சேர்த்து என் உடலுக்குள் வந்தால்
3.ஒரு நூறு பேர் சொல்கிறீர்கள் என்றால்.. எனக்குள் அது நோயாக உருவாக்கத் தான் தூண்டும்.

ஆனால் அவை அனைத்தும் எனக்குள் நோயாக விளையாதபடி குருநாதர் காட்டிய வழிகளில் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து அதனுடன் கலக்கச் செய்து நான் மாற்றிக் கொள்கிறேன்.

ஒரு குழம்பை வைக்கும் போது காய்கறிகளையும் மற்றதையும் போட்டு வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை (காரலை) நீக்கிச் சுவைமிக்கதாக ஆக்குகின்றோம் அல்லவா…!

அதைப் போல் நீங்கள் பேசும்… எம்மிடம் கேட்க வரும் அந்த நிலையை
1.எனக்குள் சேராவண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.அந்தக் குழம்பைச் சுவையாக்கியது போல் எனக்குள் அந்தத் தீமை விளைவிக்காதபடி சுவைமிக்கதாக ஆக்கிக் கொள்கிறேன்.

மிளகாயை வாயிலே போட்டவுடனே ஆ… என்று அலறுகின்றோம். நம் உமிழ் நீரே காணாது போய்விடுகின்றது. ஏனென்றால் அதில் உள்ள விஷத் தன்மை அதனின் துடிப்பு நம் அங்கங்களை அவ்வளவு வேகமாக இயக்குகின்றது.

அது வேகமாக இயக்கினாலும் அதே மிளகாயைப் பல சரக்குகளுடன் சேர்த்து இந்தக் காரத்தை அதிலே அளவுடன் போடும் போது
1.இரசனை கொண்டு நம் உமிழ் நீரைச் சுரக்கச் செய்து
2.ஆகா..!. என்று நாம் ருசித்துச் சாப்பிடும் நிலையாக உணர்ச்சிகளைத் தூண்டி
3.மனிதனுக்குள் வலுவின் தன்மை கூடி சிந்திக்கக்கூடிய உணர்வை ஊட்டி
4.நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அதே காரம்…! (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

இதைப் போல் தான் கோபமாகவோ வெறுப்பாகவோ சலிப்பாகவோ சஞ்சலமாகவோ வேதனையாகவோ பல சோர்வடைந்த நிலைகளில் அவரவர்களுடைய கஷ்டங்களை எம்மிடம் சொல்லி… அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணம் தேட என்னிடம் கேட்க வந்தாலும்… நீங்கள் கஷ்டப்படும் உணர்வின் தன்மை நான் கேட்டறியும் போது அந்த உணர்வுகளை என் செவிப்புலன் ஈர்த்தாலும்… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நான் சுவாசித்து என் உயிரிலே பட்டு அதை அறிந்து தான் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.

1.குருநாதர் கொடுத்த சக்தி கொண்டு பல உபகாரங்களை உங்களுக்குச் செய்தாலும்
2.நான் அதை மாற்றவில்லை என்றால் நீங்கள் சொன்ன உணர்வுகள் என் உடலுக்குள் சென்று
3.கடுமையான தீய விளைவுகளை உண்டாக்கிவிடும்.

அத்தகைய நிலையை நான் சமப்படுத்துவதற்குத் தான் குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை… நீ எப்படிப் பருக வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.

அதை எடுத்துச் சுத்தப்படுத்தி… வேக வைத்து… அதனைச் சமப்படுத்தி… சமைத்து… ருசியாக்கி…
1.யார் உன்னிடம் சொன்னார்களோ அவர்களின் தீமைகளை நீக்க
2.அருள் உணர்வின் வாக்கினை அங்கே அவர்களுக்குள் பதிவு செய்து
3.அவர்களைத் தீமையிலிருந்து விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…! என்று குருநாதர் சொன்னார்.

உங்களை அறியாது உடலில் சேரும் தீமையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் “குருநாதர் சொன்ன வழியில்… உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்…!”

நீர் சக்தியை உருவாக்கும் அகஸ்தியன்

 

இந்தப் பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் எவ்வாறெல்லாம் சூரியன் கவர்ந்து இந்த உணர்வுகள் வளர்ந்துள்ளது…? தாவர இனங்கள் எதனெதன் நிலையை எடுத்துக் கொண்டதோ அது வித்தான பின் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தைக் கவர்கின்றது.

பல உணர்வுகளை இரண்டறச் சேர்த்து ஒரு வித்தாகச் செடியாக மாறினால் அதிலிருந்து வரும் அதனின் வித்து அந்தத் தாய்ச் செடியின் சத்தை எப்படிக் கவர்கின்றது…? என்பதை அணுவின் ரகசியத்தை அகஸ்தியன் உணர்கின்றான்

1.ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மேகமாக மாறி அதன் வழி கொண்டு மேகத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு
2.இவனுக்குள் பல தாவர இனங்களை நுகர்ந்து வியர்வை போன்று வரும் உணர்வின் தன்மை உடலில் உருவாக்கிய பின்
அவன் எந்தப் பாறை மீது அமர்ந்தாலும் தனக்குள் ஈர்க்கும்… நீராக உருவாகும் ஊற்றாக உருவாகின்றது.

மின்னல்களோ மற்ற நிலைகளோ மோதி ஆவியின் தன்மை எடையற்ற நிலைகள் கொண்டு மேகங்களாகக் கூடினாலும்
1.இதனை ஈர்க்கும் சக்தி எடையற்ற நிலைகள் அந்த அகஸ்தியன் அமர்ந்த தரைப் பாகங்களில் பட்டால்
2.அங்கே ஈர்க்கப்பட்டு நீர் ஊற்று உருவாகும் நிலை வருகின்றது.

மலை உச்சியில் இந்த ஊற்றுகள் உருவாகின்றது. ஆனால் மலையின் அடிவாரத்தில் நீர் இருப்பதில்லை. கீழே தோண்டினாலும் நீர் வருவதில்லை. ஆனால் வெறும் பாறையாக இருக்கின்றது.
1.அதன் உணர்வின் தன்மை வியர்த்து அதன் உணர்வுடன் கரைக்கப்பட்டு
2.அதன் வழி பாறைகளின் இடைவெளிகளில் நீரூற்றுகள் தோன்றுகின்றது.

அகஸ்தியன் இருந்த இடங்களில் எல்லாம் நீர் சத்து கலந்தே வருகின்றது. ஆக பல பல உணர்வின் தன்மை அவன் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் அவன் தாய் கருவிலேயே உருப்பெற்ற நிலைகள் தான் அவை.

ஆகவே முதல் மனிதனான அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை மாற்றியமைக்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கின்றது. இப்படிக் கிடைத்த மனிதன் தான் தன் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது காடுகளுக்குள் எங்கே சென்றாலும் அவனுக்கு எதிர்ப்பே இல்லாத நிலைகள் வருகின்றது.

காட்டு அரசன் என்ற நிலைகளில் அவனுக்குப் பெயர் சூட்டுகின்றனர்.
1.மிருகங்கள் அனைத்தும் அஞ்சுகின்றது. விஷம் கொண்ட மனிதர்கள் இவனைக் கண்டு அஞ்சுகின்றனர். இவன் வழியே இணங்கி வருகின்றனர்.
2.இப்படி ஒடுக்கும் உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்து அவன் அறியாமலே செயல்கள் செயல்படுகின்றான்.

ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதே சமயத்தில் சாந்த குணம் கொண்ட ஒருவன் கடையிலே சென்று சில்லறை கேட்கின்றான் என்றால் போயா…! உனக்கு இல்லை என்பான் கடைக்காரன்.

ஆனால் அந்தப் போக்கிரி கேட்டால் அவன் அறியாமலேயே அவனை இயக்கச் செய்து சில்லறையைக் கொடுத்து விடுகின்றான்.

இதைப் போல உணர்வின் இயக்கங்கள் உற்று நோக்கும் பொழுது அகஸ்தியனுக்கு எப்படிச் சாதகமாக இயங்குகின்றது…? என்றும் இது எல்லாம் சந்தர்ப்ப இயக்கங்கள் தான்.

இயற்கையில் கோள்கள் எதை நுகர்ந்ததோ அதைத் தனக்குள் நுகர்ந்திடும் வல்லமை பெற்றது. சனிக்கோளோ மற்ற அணுக்கள் மோதும் பொழுது ஆவியாக எடையற்ற நிலையாகப் பரவுவதும் தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் நீராக மாற்றும் சக்தி பெற்றது.

இதைப்போல மனித உடலுக்குள்ளும்
1.தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருந்த நிலையை நீராக மாற்றுவதும் விஷக்கழிவினை நீராக மாற்றி விஷத்தை நீக்கி விட்டு
2.நமக்குள் உமிழ் நீர் என்று ஜீரணிக்கும் உமிழ் நீராக மாற்றுகின்றது.

நமக்குள் ஊறும் உமிழ் நீர்கள் உணவாக உட்கொள்ளும் அந்தப் பொருளை அமிலமாக மாற்றி அதை இரத்தமாக மாற்றுகின்றது. குளுக்கோஸ் ஒரு சுவையின் தன்மை மாற்றுவதும் அது சுழன்று வரப்படும் பொழுது வடிகட்டும்போது அமிலமாக மாற்றுவதும் அது ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது வாயு உற்பத்தியாகின்றது.

அந்த வாயுவின் தன்மை கொண்டு கை கால்களைச் சுருக்குவதும் மடக்குவதும் போன்ற நிலை வருகின்றது. எண்ணத்தின் உணர்வு கொண்டு செயல்படுத்தும் பொழுது நரம்பு மண்டலம் சீராக இயங்கி எதை எண்ணுகின்றோமோ அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.

நண்டை எடுத்துக் கொண்டால் தன் உணர்வின் வலு கொண்டு எதிலே எண்ணத்தைப் பாய்ச்சுகின்றதோ அது இயக்குகின்றது. ஆனால் அதற்கு நரம்பு மண்டலங்கள் கிடையாது.

இருந்தாலும் கூட்டாக அமைந்திருக்கும் அதனுடைய உணர்வுக்குள் அமிலங்கள் இரண்டறச் சேர்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் வாயு உருவாகின்றது.

இடுக்கி போன்ற தன் கை கால்களை இயக்குவதும் தன் உணர்வின் வலுக் கொண்டு அதைச் செயல்படுத்துவதும் நரம்பு மண்டலம் இல்லாமலே நண்டினங்கள் செயல்படுத்துகின்றது. தேள் இனங்களும் அவ்வாறே இயக்குகின்றது.

இதையெல்லாம் குருநாதர் இயற்கையின் உண்மையின் உணர்வால் அதை எவ்வாறு இயக்குகிறது என்பதையும் இந்த உண்மையை உனக்குள் அறிந்து கொள். இதை எல்லாம் கடந்து தான் நீ மனிதனாக வந்திருக்கிறாய்.
1.அவை அனைத்தையும் அறியும் உணர்வின் தன்மை உனக்குள் உண்டு.
2.கார்த்திகேயா என்று உனது எண்ணத்தை எதன் பால் செலுத்துகின்றாயோ அதனை அறியும் பருவம் பெறுகின்றாய்.
3.தீமையை அகற்றும் உணர்வினை நீ நுகர்ந்தால் தீமையகற்றிடும் சக்தியைப் பெறுகின்றாய் என்று
4.குருநாதர் அடிக்கடி இவ்வாறு எனக்கு உணர்த்துவார்.

அவர் கண்ட உண்மையின் உணர்வுகளைப் பதிவாக்கி நினைவு கொண்டு உற்று நோக்கிச் சுவாசிக்கும்படி செய்து தீமைகளிலிலிருந்து விடுபடும் உணர்வை உருப்பெறச் செய்யும்படி சொல்வார்.

தீமைகளிலிருந்து விடுபடும் சக்திகள் உனக்குள் அது உருப்பெற்றுவிட்டால்
1.உன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளுக்குள் இத்தகைய ஆற்றல்கள் பதிவாகி அவர்களும் தீமையிலிருந்து விடுபட இது உதவும்.
2.உன் சார்புடையோர் அனைவருக்கும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை அவர்கள் வளர்த்து விட்டால்
3.தீமையை அகற்றிடும் வல்லமை கொண்ட காற்று மண்டலம் இங்கே சுழலுகின்றது.

எந்த நண்பனின் நிலைகளில் தீமைகளை அகற்றிடும் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ அந்த நண்பன் அவன் உடலில் விளைய வைத்த உணர்வுகள் உனது ஆன்மாவாக மாறுகின்றது. அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் உன் உடலில் உருவாகின்றது.

1.ஒரு மனிதனை இவ்வாறு உருவாக்க வேண்டும் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்றால்
2.நீ கண்டறிந்த உணர்வினை உன் சார்புடைய மக்களுக்கு இதை எடுத்துரைத்து அவர்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.

தீமையை நீக்கும் உணர்வுகள் அங்கே விளைந்தால் உனக்குள் தீமை அகற்றிடும் உணர்வுகளாக… அவர்களுக்குள் அது உற்பத்தியாகும் பொழுது தான் அந்த நிலை வருகின்றது.

சிறு துளிகளாக மழை பெய்கின்றது. ஆனால் அதை ஆங்காங்குள்ள பூமியினுடைய நிலைகள் இழுத்து விடுகின்றது… வெள்ளமாகச் செல்வதில்லை.

ஆனால் அதே சமயத்தில் சிறு துளிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வலுப்பெறும் போது வெள்ளமாக ஓடத் தொடங்குகிறது. இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் பெற்ற உணர்வினை அருள் ஒளியை உருவாக்குதல் வேண்டும். உணர்வின் வலிமையை உருவாக்குதல் வேண்டும்.

அவர் உடலிலிருந்து வெளிப்படும் அத்தகைய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டால்
1.நம் உணர்வு அவர் உடலிலும் அவர் உணர்வு நம் உடலிலும் ஈர்க்கப்படும் போது
2.இருவரது உணர்வுகளும் ஒன்றாக இணைகின்றது.

கோபமான உணர்வு ஒரு உடலிலே பதிவானால் அந்தக் கோபமான உணர்வுகளும் இரண்டறக் கலக்கத்தான் செய்கின்றது. நமக்குள் நல்ல குணங்களை மீறி அந்தக் காரத்தின் உணர்ச்சியை ஊட்டும் பொழுது அத்தகைய அணுக்கள் விளைந்தால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

இதை அருள் ஞானிகள் உணர்வு கொண்டு அடக்கினால் தனது நண்பனுக்கும் அந்த நிலை பெற வேண்டும் என்று சந்தர்ப்பத்தால் வேதனையோ துன்பங்களை ஏற்படும் பொழுது அருள் ஒளி பெற வேண்டும் என்று தனக்குள் எடுத்து அதை உருவாக்க வேண்டும்.

அதாவது ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவன் உடலுக்குள் ஊடுருவி தவறிலிருந்து மீட்கும் நிலையாகச் சிந்திக்கும் செயலாகப் பெற வேண்டும் என்று உணர்வை ஊட்டிடல் வேண்டும்.

பல முறை நாம் செய்தால் அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். நண்பன் என்று பேசப்படும் பொழுது ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அத்தகைய உணர்ச்சிகளை ஊட்டி அதை ஏற்கும்படி செய்து அது அங்கே பதிவானால் நினைவு கொண்டு தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறுகின்றான்.
1.அந்த அருள் வழியில் என்றும் இணைந்து வாழலாம்.
2.இப்படிப்பட்ட கூட்டமைப்பை அதிகமாகச் சேர்த்தால் வலு கொண்ட உணர்வாகச் செல்கின்றது.

இராமாயணத்தில் வாலி என்ற நிலை வரும் பொழுது விஷம் கலந்த உணர்வுகள் எதனையுமே தாக்கிடும் நிலையாக அந்த ஆற்றல் பெற்றது. அது வாயுபுத்திரன் தான். உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விஷத்தின் தன்மை பாய்ச்சுகின்றது.

வாலி எவரைக் கண்டாலும் அவனுடைய வலுவையும் சேர்த்து சம வலிமை பெறுகின்றான். ஒரு நோயாளியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நமது கண்கள் உற்றுப் பார்க்கின்றது.

அவனின்று வெளிப்படும் உணர்வினை நல்ல குணங்களை அடக்கிடும் வாலியாக அது வருகின்றது. அதை நுகர்ந்தால் நல்ல குணங்கள் செயலிழந்து விடுகின்றது. நம்முடைய வலிமையும் இழக்கச் செய்கின்றது.

1.அதைப்போல சுக்ரீவன் என்று வரப்படும் பொழுது அது அவனுடைய சகோதர இனம் தான்.
2.சூரியனின் நிலைகள் கொண்டு அதீதமான வெப்பத்தையும் மற்ற உணர்வுகளையும் விஷத்தின் தன்மை கலந்து
3.வாயு என்ற நிலையில் அதிகரிக்கப்படும் பொழுது சூறாவளி போன்று தீமைகளை அடித்துச் செல்லுகின்றது.

ஆஞ்சநேயர் என்பது வாயுபுத்திரன் தான்.

நாம் எண்ணும் எந்த உணர்வின் தன்மையோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவி உணர்ச்சிகளைத் தூண்டி நாம் சொல்லைக் கேட்போர் உடலுக்குள் இந்த உணர்வுகள் தாவிச் சென்று அந்த உடலான கோட்டைக்குள் ஊடுருவி உணர்வின் உணர்ச்சிகளை உந்தி மெய் உணர்வாக அறியச் செய்கின்றது.

இதைப் போல தான் உணர்வின் தன்மை ஒன்றிலே மோதும் போது எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? வெளிப்படுத்தும் உணவுகள் சூரியனுடைய காந்த சக்தி கவரப்படும்போது சீதா லட்சுமி ஆக மாறுகின்றது.

வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்தால் வாலி என்று வருகின்றது. கோபப்படும் உணவை நுகர்ந்து கொண்டால் காளி என்றும் இதைப் போன்று பல பல உணர்வுகள் தீமைகளை அடக்கும் தன்மை வருகின்றது.

1.ஓர் விஷத்தின் தன்மை கொண்ட நிலையில் மற்ற விஷத்தினை இதற்குள் கலக்கப்படும் பொழுது அடக்கும் தன்மையாக வருகின்றது.
2.தாவர இனங்களிலே பல விதமான விஷங்கள் உண்டு… அதிலே ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
3.இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளாது… அந்த விஷம் அதை ஒடுக்குகின்றது.

இதைப் போன்று நமக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது விஷ அணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?

மனிதனாக இருக்கும் நாம் நல்ல மருந்துடன் விஷத்தினைக் கலக்கின்றோம். அதை உட்கொள்ளும் பொழுது வேகமாக உடலுக்குள் பரவுகின்றது. உடல் முழுவதும் விஷ வாயுவாக உருவாக்குகின்றது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அந்த இரத்தத்திலிருந்து தான் விஷ அணுக்களும் உணவாக எடுத்துக் கொள்கின்றது.
1.நல்ல மருந்துடன் விஷத்தைக் கலந்து உள்ளே அனுப்பப்படும் பொழுது நல்ல மருந்திற்கு வீரிய சக்தியாக அமைந்து
2.நம் உடலில் இருக்கும் விஷமான அணுக்களை மடியச் செய்கின்றது.

விஷமான உணர்வைக் கொடுத்து நல்ல மருந்தினைக் கொடுத்து அடக்கினாலும் நாம் அடுத்து அதை நிறுத்தாவிட்டால்
1.நல்ல மருந்து மற்ற விஷத்தை ஒடுக்கிய இந்த உணர்வுகள்
2.நம் உடலில் விஷத்தை உருவாக்கும் வேறொரு அணுக்களாக உருவாக்கி
3.மற்ற அணுக்களைக் கொன்று குவிக்கும் நிலை வருகின்றது.

அதனால் தான் டாக்டர்கள் குறித்த அளவு கொண்டு இந்த மருந்தினை உட்கொள்ளும்படி சொல்வார்கள். அந்த அளவுகோல் மீறி அந்த மாத்திரையை உட்கொண்டால் அதுவே நமக்குள் கடும் நோயாக மாறி விடுகின்றது.

சித்த வைத்தியர்களை எடுத்துக் கொண்டாலும் விஷத்தின் தன்மை கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொண்டு வருவார்கள். ஆனால் அவர் சொன்ன அளவுகோலுக்கு மீறி அதை உட்கொண்டால் விஷத்தின் தன்மை உடலில் பரவி நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகள் வந்து விடுகின்றது.

நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகளுக்கும் மற்ற உயிரைக் கொல்வது போன்று இதைப் போன்று இயற்கையின் உண்மை நிலைகளை அன்று அகஸ்தியனால் கண்டுணரப்பட்டது தான்.

மற்ற மனிதனின் உணர்வுகள் தன்மை கொண்டு எவ்வாறு வாழ்கின்றனர்…? எதன் எதன் உணர்வின் இயக்கங்கள் மாறுகின்றது…? நம் உயிர் எவ்வாறு செயலாக்குகின்றது…? என்ற நிலையை உண்மையினை நீ உணர்ந்து கொள் என்றார் குருநாதர்.

ஒருவன் ஏசுகிறான் என்று உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை சிவலோகம் என்ற நிலையை அந்த உயிரின் இயக்கமாக உணர்ச்சிகள் உடலுக்குள் தூண்டுகின்றது.
1.சுழற்சியின் உணர்வை ஊட்டுகின்றது உணர்வின் தன்மையாக இயக்குகின்றது.
2.இரத்தத்துடன் கலந்து கருவுறும் தன்மை வருகின்றது. இந்திரலோகமாக இந்திரீகமாக மாறுகின்றது.

கோழி முட்டை எப்படி உருவாகின்றதோ நம் இரத்த நாளங்களில் அது கருவுறும் அணுவாக உருப்பெறும் தன்மை பெறுகின்றது. கரு என்ற உணர்வுகள் உருவாக்கி விட்டால் அதனின் காலக்கெடு வரப்படும் பொழுது அந்தக் கருமுட்டை வெடிக்கின்றது. எக்குணத்தின் தன்மை பெற்றதோ அந்த அணுவின் தன்மையாக வருகின்றது.

இரத்த நாளங்கள் எங்கே சுழல்கின்றதோ எந்த உறுப்பில் அது வெடிக்கின்றதோ அந்த உறுப்புகள் நஞ்சாகி விஷத்தின் தன்மை பாய்ச்சி நல்ல அணுக்களைக் கொல்லும்… அல்லது செயலிழக்கச் செய்கின்றது.

நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் மடிந்தால் அல்லது அஞ்சி நடுங்கினால் உடலுக்குள் ஒரு விதமான வேதனை வருகின்றது. கல்லீரலோ மண்ணீரலோ மற்ற சுரப்பிகள் நரம்பு மண்டலங்களிலோ மாற்றப்பட்டால் கடும் வேதனைகள் வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

இதைப் போன்ற உணர்வுகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றது என்பதனை குரு உணர்த்துகின்றார். அகஸ்தியரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள் நஞ்சினை வென்றிடும் உணர்வு கொண்டு நஞ்சின் இயக்கத்தை உணர்ந்தவன் அவன்
1.நஞ்சினை அடக்கிடும் உணர்வு பெற்றவன்.
2.விண்ணை நோக்கி உற்றுப் பார்த்து மின் கதிர்களை நுகர்கின்றான் அதை அடக்குகின்றான்.
3.மின்னட்டாம் பூச்சி போன்று தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் அணுக்களாக மாற்றுகின்றான்.
4.துருவப் பகுதியில் வரும் ஆற்றலை நுகர்ந்து துருவனாகின்றான்.
5.கடும் விஷங்களையும் அடக்கிடும் ஆற்றல் சந்தர்ப்பத்தால் இந்த உணர்வுகள் விளைகின்றது.

அந்த ஆற்றல்களை நாம் அனைவரும் பெறுதல் வேண்டும். அதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.

இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.

இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.

இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுக தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.

ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.

1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.

அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.

நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

அகஸ்தியனுக்குள் விளைந்த நுண்ணறிவுகள்

 

1.அகஸ்தியன் கற்றறிந்து வந்தவனல்ல.
2.தாய் கருவிலே கவர்ந்த உணர்வுகள் அந்த அணுக்களே இயக்கி அவன் உடலுக்குள்ளே விளைந்தது.
3.விஞ்ஞானி எப்படி உணர்வுகளை உருமாற்றுகின்றானோ அதைப்போல
4.இயற்கையின் தன்மையைத் தனக்குள் உருவாக்கி அந்த உணர்வினைக் கண்டுபிடிக்கும் மெய்ஞானி ஆகின்றான்.

விஞ்ஞானி ஒன்றைப் பதிவு செய்து அதைப் பெற வேண்டும் என்று தன் உணர்வைக் கூட்டுகின்றான். அதன் வழி நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு ஒவ்வொரு பொருளையும் அவன் உருவாக்குகின்றான்.

உருவாக்கும் உணர்ச்சிகள் அவனுக்குள் வரப்படும் பொழுது அந்த அணுக்கள் அவனுக்குள் உருவாகின்றது. அப்படிப்பட்ட அணுக்கள் உருவான பின் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உணர்வின் அறிவாக அது இயக்குகின்றது.

மேலும் மேலும் இவன் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகவும் அதைச் செயலாக்கும் உணஸ்சிகளின் செயல்களும் மற்ற உணர்வுகளை நுகந்தறிந்து செயலாக்கத்தையும் கண்டுணர்ந்து விஞ்ஞானி ஆகின்றான்.

அதைக் கண்டுணர்ந்தவன் எந்திரத்தை உருவாக்கி அதை எப்படிப் பிரிப்பது…? என்று தத்துவத்தைக் கண்டு இவன் கண்டு கொண்ட ஒரு பொருளுக்குள் மறைந்த உணர்வை எவ்வாறு பிரிக்க வேண்டும்…? என்றும் அதற்குள் இன்ன பொருள் இருக்கிறது என்றும் விஞ்ஞானி காணுகின்றான்.

ஆனால் அதே சமயத்தில் இன்ஜினியர் அதற்குண்டான உறுப்புகளைச் செய்து விஞ்ஞானி கண்ட உணர்வுகளை எந்திரத்தின் துணைகொண்டு இவனின் உணர்வைக் கொண்டு
1.எதனை எதனுடன் கலந்தால் வெப்ப நிலைகள் எப்படி இங்கே கூடுகின்றது…?
2.வெப்ப நிலைகள் கொண்ட பின் ஆவியாக ஆன பின் இதை உறையச் செய்யும் மார்க்கம் என்ன…? என்ற
3.டெக்னிகலை இன்ஜினியர்கள் அதைக் கண்டுகொள்கின்றார்கள்.

அவன் கொடுத்த கருவினை இவன் உருவாக்கி இதைப் பிரித்துச் சேமிக்கும் உணர்வாக விஞ்ஞானி கொடுக்கும் நிலைகள் கொண்டு “இதனுடைய ஆக்கச் சக்தி இவ்வளவுதான்” என்ற அளவீடு கொண்டு வரப்படும் பொழுது இன்ஜினியர் அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்கி உறுப்புகளுக்கு வலுக் கொடுத்து அதிலே வரும் தடைகளைச் சீர்படுத்தி உருப் பெறும் உணர்வுகளைப் பிரித்து அதை எவ்வாறு செயல்படுத்துவது…? என்ற நிலைகளைக் கொண்டு வருகின்றார்கள்.

உதாரணமாக மணல்களைக் கடலிலிருந்து எடுத்து வந்து அதிலே பிரிக்கப்படும் போது வெடிக்கும் நிலை வந்து விட்டால் என்ன செய்வது…? ஹைட்ரஜன் என்ற நிலையில் ஊடுருவப்பட்டு கடலின் தன்மை கொண்டு உப்புச் சத்தின் நிலைகள் அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது “யுரேனியமாக” அது மாறுகின்றது.

அதே கடலின் சத்தின் தன்மையை எடுத்து இது பிரிக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்த பின் இதற்குள் அடைத்து மீண்டும் கிடைக்கும் உணர்வு கொண்டு இதைக் கரைத்து அணுத் தன்மை கொண்டதாகப் பல நிலைகள் பிரிக்கின்றார்கள்.
1.அணு விசைகளை அணுக் கதிரியக்கங்களை தனக்குள் ஒரு பவுடரைப் போன்று உருவாக்குகின்றார்கள்.
2.மணலில் இருக்கும் தன்மைகளை மணலைக் கருக்கி அதனுள் வரும் உணர்வினைப் பிரித்து அணுகுண்டுகளைத் தயார் செய்கின்றான்.
3.அந்தக் கடுகளவு இருக்கும் அணு விசைகளைக் கொண்டு ஒரு இயந்திரத்தில் இணைக்கப்படும் பொழுது
4.அதனுடைய வேகத்தடிப்பு கொண்டு இயந்திரத்தையே துரிதமாக இயக்கச் செய்கின்றது.

இது எல்லாம் விஞ்ஞானி கண்ட நிலைகள்.

இதைப் போன்று தான்
1.”விஷத்தின் துடிப்பு கொண்ட நிலைகளைத் தாய் கருவிலே பெற்ற அகஸ்தியர்”
தன் உணர்வின் எண்ணம் கொண்டு மூன்றாவது வயதிலே வானத்தை உற்றுப் பார்க்கின்றான்.
3.அந்த வானுலகம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதையும் அது எப்படிப் பிரபஞ்சமாக மாறுகிறது…? என்பதையும்
4.அதிலிருந்து வரக்கூடிய சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி எவ்வாறு கவர்கிறது…? என்பதையும்
5.நஞ்சு கலந்ததாக வருவதைத் தனக்குள் இவன் ஒடுக்கி அந்த உணர்வின் இயக்கப் பொறிகளை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

அவ்வாறு கண்டு கொண்ட நிலையில் அந்தக் காட்டுக்கே அரசனாக மாறுகின்றான் தன் 5 வயதிலேயே…!

இறைச்சிகளை உணவாக உட்கொண்ட அவன் இன மக்கள் இறைச்சிகள் அல்லாத உணவை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்று கனிகளையும் மற்றதுகளையும் உட்கொள்ளும்படி செய்தான்.

பல பயிர்களை இட்டு பல பல வித்துக்களை ஒன்றாக்கி அதையெல்லாம் விளைய வைத்த பின் உணவாக உட்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.

தனக்குள் உணர்ந்த நிலைகள் கொண்டு இறைச்சிகளை உட்கொள்ளாது அருள் ஒளி உணர்வினை உருவாக்கும் தன்மை பெறுகின்றான். முதல் மனிதன் அணுவின் தன்மையை அறிந்த அகஸ்தியன் பல பல தாவர இனங்களை உருவாக்குகின்றான்.

அதன் வரிசையில் மனித நிலைகளுக்குள் சிறுகச் சிறுக ஊடுருவி இதன் உணர்வின் எண்ணங்கள் வலுப்பெற்று விஞ்ஞானி ஆகின்றார்கள். கற்றுணர்ந்து உணர்வினை அறியும் அறிவுக்கு வரும் பொழுது இவன் உணர்வினை எதற்குள் செலுத்துகின்றானோ அதில் வளர்ச்சி பெற்று விஞ்ஞானி ஆகின்றான்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒன்றின் இயக்கங்களைத் தனித்துப் பிரித்து ஒழுங்குபடுத்தும் நிலைக்கு வருகின்றான் மனிதன். விவசாய நிலங்களில் கால சூழ்நிலைக்கொப்ப வெயில் காலங்களிலும் வளரும் பயிர்களை உருவாக்குகின்றான்.

வெயில் காலத்தில் நமக்கு வியர்க்கின்றது. சனிக்கோளின் உணர்வுகள் மற்ற மற்ற அணுக்களில் இருக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று வெப்பத்தின் தணல் ஆகும் பொழுது ஆவியாக மாறுகின்றது.

1.ஆவியின் தன்மை வரப்படும் பொழுது அதிலிருந்து நீர் சத்தைப் பிரிக்கின்றது.
2.அந்த நீர்சத்தை உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களை உருவாக்குகின்றான்.

மறைந்த நிலையில் நமக்குள் வியர்க்கின்றது. அதுவே அந்த அணுவின் உணவாக உட்கொண்டு பயிரினங்கள் வளரும் தன்மையும் அதை உருவாக்குகின்றான் விஞ்ஞானி.

அன்று மெய்ஞானி இத்தகைய நிலைகள் காலப்பருவத்திற்கொப்பத் தனக்கு உணவு தேவை என்றும் பல பல உணர்வுகளை இணைத்து மனிதனுக்கு உகந்த தாவர இனங்களாக உருவாக்கினான்.

இறைச்சிகளை உணவாக உட்கொள்ளாது தாவர இனத்தைப் பிரித்து அந்த உயர்ந்த குணங்களைத் தனக்குள் சேர்த்து உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றான் அகஸ்தியன்.

அவ்வகையில் வளர்ந்தவன் தான் பல தாவரங்களின் நிலைகளை உண்மையை அறியும் பொழுது அதையெல்லாம் நுகந்தறிந்து தனக்குள் அணுவாக உருவாக்குகின்றான்.
1.அறியும் உணர்வுகள் இவனுக்குள் இரு மடங்கு மோதப்படும் பொழுது ஞானத்தின் தன்மை பெறுகின்றான்.
2.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எவ்வாறு என்றும் தனக்குள்ளேயே அறிகின்றான்.
3.அவன் எவ்வாறு அறிகின்றான்…? என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

அதையே தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஞானிகள் தவம் இருந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

சில மந்திர ஒலிகள் கொண்டவர்களும் சரி… அல்லது தவத்தின் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் சரி… எந்தெந்த இடங்களில் அவர்கள் அமர்ந்து தியானம் செய்தார்களோ அங்கெல்லாம் உதாரணமாக ஒரு பாறை மீது என்றால் அங்கே அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
1.அந்தப் பாறைகளில் நீரோட்டம் வரப்போகும் போது அதைச் சுவை கொண்டதாக மாற்றும்.
2.இது தான் இந்தப் பாறையினுடைய தன்மை.

திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் எல்லாம் அந்தக் காலத்தில் (ஆதியிலே) ஞானிகள் வாழ்நத காலம். பூமியின் மணல் திட்டுகள் மாற்றமாகி அல்லது நீராக (கடலாக) அந்தப் பிரதேசம் மாறப்படும் பொழுது அந்த ஞானிகள் விட்ட அலைகளால் அந்த நீரையே சுத்தப்படுத்தும் தன்மையாக வருகிறது.

இராமேஸ்வரம் திருச்செந்தூர் இந்தப் பகுதிகளில் எல்லாம் அத்தகைய பாறைகள் கடலில் மூழ்கி இருக்கிறது. கடந்த கால நிலையில் மெய் ஞான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்த மனிதர்கள் உண்டு. மனிதனுக்கு ஒத்த இந்த உணர்வின் தன்மை வரப்போகும் போது இந்த அலைகளை நல்ல நீராக மாற்றும் தன்மையும் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவனது உணர்வுகள் இங்கே அலைகளாகப் படரப்படும் போது
1.அகஸ்தியன் நடந்து சென்ற அவன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் நீர் சக்தியைக் கவரும் ஆற்றல் பெற்று
2.மேகங்களைக் குவித்து நல்ல நீராக வடியச் செய்கிறது,

கீழே பூமியில் தண்ணீர் இருக்காது…! அங்கே மழையும் பெய்திருக்காது…! ஆனால் அகஸ்தியன் அமர்ந்த அந்த மலை உச்சியில் மேகத்தை இழுத்து நீராக வடிந்து கொண்டே இருக்கும்.
1.எத்தகைய கடுமையான வறட்சியான காலமாக இருந்தாலும்
2.நீர் அங்கே வந்து கொண்டே இருக்கும்.

இதைப் போல அந்தக் காலங்களில் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்திருந்தால் அங்கிருக்கும் நீரும் வற்றாது. சுவையாகவும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையைத் தாண்டினால் நீரே இருக்காது. ஏனென்றால்
1.இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த வீரிய உணர்வுகள் அலைகளாக
2.அங்கங்கே பதியும் பொழுது அதற்கொப்ப நீர் நிலைகள் வருகின்றது.
3.இதே மாதிரி கடல் நீருக்குள்ளும் பல ரகசியங்கள் உண்டு.

ஆரம்பத்தில் உயிரினங்கள் முதலில் தோன்றியது கடலில் தான். மீன் இனத்தில் இருந்து வந்தவன் தான் மனிதன்.

புயல்கள் வீசும் பொழுது கடல் நீரைக் கவர்ந்த மேகங்கள் அதனுடன் மீன் முட்டைகளையும் கருக்களையும் நிலப் பகுதியிலே மழையுடன் சேர்ந்து பெய்யும் பொழுது தரை வாழ் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் ஆகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று எந்த ரிஷிகளை எடுத்துக் கொண்டாலும் கையில் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள். ஏனென்றால் அந்த நீர் என்பது ஜீவ சக்தி… அதாவது உருவாக்கும் சக்தி…!

உருவாக்கும் சக்தியின் மகத்துவத்தை நாமும் அறிந்து அந்த ஞானிகளும் ரிஷிகளும் எந்த ஜீவ சக்தியை நுகர்ந்தார்களோ அதைப் பெற்று வளர்த்தால் இந்தப் பூமியைச் சொர்க்க பூமியாக மாற்றலாம்…! நமக்குள் அந்த ஆற்றல் உண்டு…!

குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு

 

ஒரு கம்ப்யூட்டர் என்ற சாதனத்தில் எலக்ட்ரிக் என்ற அறிவின் தன்மை கொடுத்த பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு அது ஒரு ரூபத்தையே அமைத்துக் கொடுக்கின்றது.

இதைப் போன்று
1.நம் உயிர் உயிர் துடிக்கும் நிலையில் எலக்ட்ரிக்காக இயங்கினாலும்
2.நுகரும் உணர்வுகள் இணைந்த பின் பொறிகளைக் கிளப்பும் எலக்ட்ரானிக்காக (உணர்வுகள்) மாறுகின்றது.

அந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? விஞ்ஞான அறிவிற்கும் அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததற்கும் நுகர்ந்த உணர்வுகள் ரூபமாக எப்படிக் காட்சி தருகின்றது…? என்ற நிலையைக் காட்சியாகவே காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு உயிரினத்திலிருந்து (என்றோ வாழ்ந்து மடிந்த) வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தறியும் பொழுது… அதன் வாழ்க்கையும் அதன் உணர்வின் தன்மையையும் கம்ப்யூட்டரால் விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி அதிர்வுகளைக் கூட்டி… அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய இயக்கங்களும் உணவுக்காக அது தேடி அலைந்ததும் அதன் ரூபத்தையும் அதனின் குணத்தையும் விஞ்ஞானிகள் அறிகின்றார்கள்.

அதாவது…
1.எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் இருப்பினும் பாறைகளுக்குள் மக்கிய உணர்வுகளும் அது ஆவியாகக் கலந்த பின்
2.அந்த ஆவியின் தன்மை அந்தப் பாறைகள் அமைந்த இடத்தில் எப்படிச் சுழல்கின்றது…? என்பதையும்
3.அந்த உணர்வைக் கவர்ந்து அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய உருவத்தைப் படமாக வரையப்பட்டு
4.அதனுடைய செயலாக்கங்களை விஞ்ஞான ரூபமாக இன்று காணுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நமது குருநாதர் அவர் வாழ்க்கையில்
1.அகண்ட அண்டத்தினை… அகஸ்தியன் கண்ட உணர்வினைக் கண்டுணர்ந்தார்
2.குரு தனக்குள் பெற்றதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? எதனை…? எவ்வாறு…? என்பதை எனக்கு (ஞானகுரு) அந்த வழியைக் காட்டி
3.செவி வழி ஓதி… உணர்ச்சிகளை உந்தச் செய்து… உணர்வினை அறியும்படி… நுகர்ந்தறியும் ஆற்றலை எனக்குக் கொடுக்கின்றார்.

நுகரும்போது உணர்ச்சியால் உடலில் அறிவதும் உணர்வின் தன்மை குவியும் பொழுது காட்சிகளாகத் தெரிவதும் இதைப் போன்று அறியும்படி செய்கின்றார்.
1.அதன் வழி அறிந்தேன்
2.அதனின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
3.அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால் அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் உருப்பெறும் தன்மையாக அது இணைகின்றது.

உணர்வுகள் குவிக்கப்படும் பொழுது அது காட்சியாகவும் தெரியும் கண் திறந்திருந்தாலும் சரி கண் மூடி இருந்தாலும் சரி உணர்வின் தன்மை அலைகளாக மாறும் தன்மை வரும்.

ஆக தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடினால் உணர்வின் தன்மை புற நிலை அடக்கி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருக்குள் உணர்வின் தன்மை காட்சியாகவும் நாம் அறியும் உணர்வாகவும் உணர்வின் தன்மை குவித்து ரூபமாகக் காட்சிகளாகத் தெரிய வரும்.

குருநாதர் பெற்றார் எனக்குள் அதை எனக்குள் பெறும்படி உபதேசித்தார். எனக்குள் பதிவானது பதிவின் நிலைகள் அறிவாக இயக்கி அந்த இயக்கத்தின் தன்மை எனக்குள் உருவாக்கினேன்.

அதையும் நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். ஏனென்றால் ஒரு வித்து யாருக்கும் பசி தீர்க்காது.
1.அந்த உணர்வின் சத்தை எல்லோருடைய உணர்வுகளிலும் படரச் செய்து
2.அதை நீங்களும் வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் ஒன்றனை இணைத்து விடலாம்.

சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது புவிக்குள் அது இணைந்து விடுகின்றது. அதே சமயத்தில் சிறு துளி பெருவெள்ளம் என்பது போன்று
1.பலரும் பல உணர்வுகள் கொண்டு சிறு துளிகளாக இருப்பினும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணங்களை இணைத்தால் பெரும் வெள்ளமாக மாறி
3.அரும் பெரும் சக்திகளை நாமும் பெறலாம்… நம்முள் வரும் தீமையான உணர்வுகளை அதை நீக்கவும் செய்யலாம்.

கூட்டமைப்பின் தன்மையில் நாம் உபதேசித்த உணர்வின் துணை கொண்டு கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அருள் ஒளியைப் பெருக்கவும் அது உதவும்.

அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் தெளிவாகக் கூறிக் கொண்டு வருகின்றேன் அதை எளிதில் கண்டுணர… இந்தப் பூமி என்பது பரம். உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமான பரலோகத்தில் பரவி உள்ளது. நாம் அதை நுகர்ந்தறிந்தால் சிவலோகமாக மாற்றுகின்றது.

1.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது ஒளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவுகின்றது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
3.இரத்தங்களில் கலக்கின்றது… நாளடைவில் உறைகின்றது
4.உணர்வுகள் கருவாகின்றது கருவின் தன்மை அணுவாகின்றது
5.எதன் வழி கொண்டு அணுவானதோ அந்த உணர்வை அது உந்துகின்றது.
6.உணர்வை நுகரச் செய்கின்றது
7.நுகரும் தன்மை வரப்படும் பொழுது அருள் உணர்வுகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது
8.உயிரின் தன்மை வரப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை அறிவென்ற நிலைகள் அறிகின்றோம்.
9.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் அருள் ஒளியின் அணுக்கள் விளைகின்றது.
10.தீமைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக நாம் பெறுகின்றோம்

ஆகவே… இருளை அகற்றி மகிழ்ச்சி பெறும் தன்மை பெற்றிட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும். அதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்முடைய சூரியக் குடும்பத்திலிருந்து கார்த்திகை நட்சத்திரம் விலகிப் போய்விட்டது. அதனால் நம் பிரபஞ்சத்தில் அறிவின் ஞானம் சூனியமாகிப் போய்விட்டது. ஏனென்றால்
1.ஒன்றுடன் ஒன்று மோதி… அந்த உணர்வின் தன்மை
2.”அறிவு ஒளியாக..” வருவதெல்லாம் குறைந்து விட்டது.

கார்த்திகை நட்சத்திரம் போல ஏனைய சில நட்சத்திரங்களும் விலகிக் கொண்டுள்ளது. அதனால் நம் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

சில ஆயிரம் ஆண்டுகள் செல்லப்படும் போது நம் சூரியன் தனித்துப் பிரிந்து விடும். நம் பூமிக்குள் நீர் வளம் அதிகமாகிவிடும். இந்த எடையின் தன்மை கூடும் போது ஈர்க்கும் தன்மையாகி சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

சூரியனை விட்டு விலகினால் அப்பொழுது பூமி முழுவதும் பனிப்பாறைகளாக (வியாழன் கோள் போல்) மாறும். அதற்குள் இங்கே இருக்கக்கூடிய உயிரினங்கள் தாவர இனங்கள் அனைத்தும் பூமிக்குள் (பனிகளுக்குள்) ஒடுங்கி விடும்.

ஐஸ் (பெட்டிக்குள்) பாறைகளுக்குள் வைத்து மறுபடியும் சுழலும்போது சிதறுண்டு போகும் போது உயிரணுக்கள் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்திற்குள் பரவும்.

நம் உயிரான அணுக்கள் அப்படிப் பரவப்போகும் போது அது எடுத்துக் கொண்ட… நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப… வேறு எங்கேயோ போய் உருவாக்கும். இதைத் தான் நாம் பெற முடியும்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உடலில் நாம் இப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே குறுகிய காலத்திற்குள் நாம் ஒளி நிலை பெற வேண்டும்.

1.ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் நாம் வாழுகின்றோம்…? என்று தெரிகிறது. (அறுபதே எழுபதோ அவ்வளவு தான்…!)
2.நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக வாழ வேண்டும்…! என்று தான் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றோம்.
3.அதைச் செலவழிக்கவும் செய்கிறோம். ஆடம்பரப் பொருளுக்காகவும் செலவழிக்கின்றோம்.

ஆனால் இது எல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறதா…?

சம்பாதித்து வீடு சொத்து பணம் பொருள்கள் மனைவி மக்கள் எல்லாமே அழகாக வைத்திருந்தாலும் கூட
1.நமக்கு நோய் என்ற உணர்வு வந்தால் என்ன செய்கிறோம்…?
2.அதை எல்லாம் தள்ளி விட்டுத் தூக்கித் தூக்கி எறிகிறோம்.
3.உடல் சரியில்லை என்றால் நல்ல உணவை உட்கொள்ளும் எண்ணமோ சொத்தையும் சுகத்தையும் உடைகளையும் நகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா…? இல்லையே…!
4.அப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர “நன்றாக இருக்க வேண்டும்…!” என்று அது நமக்கு உதவுகிறதா…?

அதே போல் நாம் நன்றாகத் தான் இருக்கிறோம். அடுத்தாற்போல யாராவது வந்து நம்மை ஏளனமாகச் சிரித்து கேவலப்படுத்தினால் என்ன நினைக்கின்றோம்…?

பார்…! என்னை எப்படிக் கேவலப்படுத்துகின்றான்..? இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் எண்ணுகின்றோம்.

அந்த உணர்வை எடுத்தவுடனே நாம் நன்றாக இருந்ததை மறந்து விட்டு அவர் மேல் கோபமும் வெறுப்பும் வேதனையும் ஆகி அவர்கள் எதை எதை எல்லாம் சொல்கிறார்களோ… அதை நமக்குள் விளைய வைக்கின்றோம். அதைத் தான் பழகி வைத்திருக்கின்றோம்.

அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்குகின்றார்கள்…!

1.அவர்கள் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…
2.அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும்…
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து
4.அவர்கள் சொல்லும் தீமை நமக்குள் வராது தடுக்கப் பழக வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அந்த அருள் ஞானத்தை நாம் பெருக்கப்படும் போது அது நமக்குப் பாதுகாப்பாக வரும்.

அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? நாம் எந்த மகரிஷிகளை எண்ணுகின்றோமோ அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் நினைக்கப்படும் போது உயிர் அதை உருவாக்குகிறது.

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. அறிந்துணர்ந்து செயல்படும் அந்தச் சக்தியைக் “கார்த்திகேயா…!” என்று காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் தீமையின் உணர்வின் தன்மையாக நம்மை மாற்றும். அதைத் தடுக்க அருள் ஒளியை உருவாக்கும் அணுவை நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கும்…!

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

நஞ்சை முறிக்கும் சக்தி

 

ஒரு தேள் வெள்ளாட்டைத் தீண்டி விட்டால் விஷம் பாய்ந்து அந்த ஆடு மடிகின்றது. ஆனால் அதே சமயத்தில் கோழி பட்சி மற்ற பறவைகள் இதை உணவாக உட்கொள்கின்றது. அவைகள் பயப்படுவதில்லை… அதற்கு வீரிய உணர்வுகள் வருகின்றது.

உதாரணமாக கருடனை எடுத்துக் கொண்டால் அதுவும் விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது… அதை ஒடுக்கி விடுகின்றது தேள் கொடுக்கு மிகவும் விஷம் கொண்டது. தேள் இறந்தாலும் அந்தக் கொடுக்கை வைத்து லேசாகக் குத்தினாலே அதில் உள்ள விஷங்கள் நமக்குள் கடுகடுப்பை ஊட்டிவிடும்.

ஆனால் கோழி மற்ற பறவைகள் அதை உணவாக உட்கொள்கின்றது அதனின் உடலில் இருக்கக்கூடிய அமிலம் இந்த விஷத்தைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது… வீரிய நிலைகளும் பெறுகின்றது.

கருடனைப் பாம்பு சீறித் தாக்கினால் அதனுடைய விஷம் அதற்குள் ஏறுவதில்லை. கருடன் அதை தாங்கிக் கொள்கின்றது. அது கூட்டைக் கட்டிக் குஞ்சுகளைப் பொரிக்கின்றது.
1.இரும்புக் கம்பிகள் கொண்டு அந்த குஞ்சுகளை நாம் விலங்கிட்டோம் என்றால்
2.கருடன் பறந்து சென்று அதை முறிக்கக் கூடிய தாவர இனங்களைத் தேடிச் செல்கிறது.
3.அதனுடைய குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து அந்த இரும்புக் கம்பி மேல் போடுகின்றது… அந்தக் கம்பிகள் அறுந்து விடுகின்றது.

அந்தத் தாவர இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் நம்மால் முடியாது.

ஒரு வாய்க்காலிலே நீர் வேகமாக ஓடுகிறது என்றால்
1.அந்தக் கருடன் குஞ்சுகளை வைத்திருந்த கூட்டைப் பிரித்து அதில் போட்டால்
2.அது (மீன்களைப் போல்) எதிர்நீச்சல் அடிக்கும்.

மெய்ஞானிகள் சில முறைப்படுத்தி இதை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் விஷத்தை ஒடுக்கும் உணர்வாக மற்ற உலோகங்களை முறித்திடும் நிலையாக அத்தகைய தாவர இனங்களுக்கு இந்த ஆற்றல் உண்டு.

இது எல்லாம் இயற்கையில் விளைந்த உணர்வுகள் தான்.

ஒவ்வொரு உயிரினங்களும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வாறு இயங்குகின்றது…? என்று இதையெல்லாம் அறிவதற்காகப் பல நிலைகளை எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

ஒரு சமயம் நான் கொல்லூரிலே குருநாதர் காட்டிய வழியில் தியானமிருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே ஆற்றங்கரை ஓரங்களில் கருநாகம் போன்று மிகப் பெரிய பாம்புகள் உண்டு… காளிங்கராயன் என்று சொல்வார்கள்.

அந்த ஆறு குடசாஸ்திரி என்ற மலையிலிருந்து பச்சிலைகளையும் மூலிகைகளையும் பல பல தாவர இனங்களின் சத்துக்களையும் கவர்ந்து கொண்டு இங்கே வருகின்றது.

அங்கிருக்கக்கூடிய ஒரு பாறையிலே தான் அமர்ந்து இயற்கையின் உண்மை நிலைகளை அறிவதற்காக இரவு முழுதும் தியானம் இருப்பேன். காலையில் எழுந்து காலைக்கடன் கழிப்பதற்காக எழுந்து நடக்கின்றேன்

அவ்வாறு நடந்து செல்லப்படும் பொழுது என்னை அறியாமலேயே ஒரு செடியின் புதரிலே காலை வைத்து விட்டேன்.
1.சிர்….ர்ர்ர்…! என்று அந்தப் பாம்பு எழுந்து நின்றது. சுமார் 70 அடி நீளம் இருக்கும்
2.என் தலைக்கு மேலே “சுளவு” போன்று படத்தைப் பிடிக்கின்றது.

அப்பொழுது குருநாதர் சொல்கின்றார். நீ அந்தப் பாம்பை இடறி விட்டாய். ஆனால் அது உன்னைச் சீறித் தாக்கவில்லை. நீ தெரியாமல் மிதித்து விட்டாய் என்பதை அது உணர்கின்றது… ஆகையினால் தாக்கவில்லை.

1.இங்கே வாழ்ந்த சில ரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை அந்தப் பாம்பு நுகர்ந்துள்ளது.
2.அதனால் அதனுடைய பரிமணம் சில விஷத்தன்மைகளை நீக்கும் வல்லமையும் பெற்றது என்று குருநாதர் இதையும் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எங்கெங்கு எங்கெங்கு ஏங்குகின்றனரோ அந்த ஏக்கத்தின் உணர்வை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது தான் என்னால் உபதேசமே கொடுக்க முடியும். நானாகப் (ஞானகுரு) பேச முடியாது.

ஏக்கத்தின் உணர்வின் தொடர்பு வரப்படும் போது அந்த உணர்விற்கொப்பத்தான் பேசும். ஞானிகளின் உணர்வுகளை நானாக எடுத்துச் சொல்வது என்றால்
1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது
2.மின்னலாகி ஒளிக் கற்றைகளாக மாறி அந்த அலைகள் எப்படிப் படர்கின்றதோ
3.அதைப்போலத் தான் இங்கே ஏங்கி உள்ளோர் உணர்வுகளை நுகர்ந்து தான் நான் பேசுகின்றேன்.

தீமைகள் எப்படி இயக்குகிறது…? என்று இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி தீமையைப் பிளக்கும் மெய் ஞானிகளின் உணர்வினை உங்களை நுகரச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகள் தங்களுக்குள் விளைய வைத்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்து அதை உங்களுக்குள் உருவாக்கச் செய்து அறியாது வரும் தீமைகளையும் பகைமைகளையும் அகற்றி கல்யாணராமனாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால் தான் எனக்கு மகிழ்ச்சி. சொல்வதைக் கேட்டு விட்டு அப்படியே விட்டு விட்டு போனீர்கள் என்றால்
1.சாமி சொல்கிறார்… பார்க்கலாம்…!
2.சாமி எனக்கு வேறு என்ன செய்தார்…? என்று எண்ணாதீர்கள்.

இன்னும் இதைவிட என்ன உதவி செய்ய வேண்டும்…? மெய் ஞானிகள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
2.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்கள் உயிரை எண்ணிச் சதா தியானம் இருக்கிறோம்.

அந்த உணர்வை நுகரும் பருவம் நீங்கள் இழந்து விட்டால்…! நல்ல சாப்பாடு ஆக்கி வைத்து விட்டு அதை உட்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்…?

விவசாயப் பண்ணைகளில் நல்ல வித்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்ததை மண்ணிலே விதைக்காமல் வெளியிலே இறைத்து விட்டால் என்ன செய்யும்…?
1.எறும்போ மற்ற பூச்சிகளோ பறவைகளோ எடுத்துத் தின்று விட்டுப் போகும்… முளைக்காது…!
2.அப்படியே முளைத்துப் பயிர் வந்தாலும் தகுந்த பருவத்தில் நீரோ உரமோ ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் மொத்தமாக அழித்து விடுகின்றோம்.

ஆகவே யாம் பதிவு செய்யும் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால் தான் உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.

அருள் ஞானத்தின் வழியில் வாழ முடியும். இருளை அகற்றிப் பேரொளியாக மாற்றும் ஆற்றலைப் பெற முடியும். பிறவியில்லா நிலையை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

இது உங்கள் கையில் தான் இருக்கிறது…!

சொர்க்கலோகம்

 

பல கோடி நஞ்சுகளை வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனான். அவன் உணர்வை நாம் பெற்றோம் என்றால் சொர்க்கலோகம் என்ற நிலையை அடைகின்றோம்.

சொர்க்கவாசல் என்பது
1.நம் உயிரின் நிலை கொண்டு எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்கின்றோமோ
2.நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி அது விண் செல்லச் செய்கின்றது.

நாம் சுவாசிக்கும் உணர்வு எதுவோ நரகலோகம் செல்வதும் அதன் வழியே… ஆனால் சொர்க்கலோகம் செல்வதும் அதன் வழியே…! ஆனால்… ஆறாவது அறிவின் துணை கொண்டு எவர் ஒருவர் சொர்க்கத்தின் உணர்வை உருவாக்குகின்றனரோ அவரே விண் செல்கின்றார்.

அகஸ்தியன் அணுவின் இயக்கத்தைத் தன்னுள் உணர்ந்து அவன் வெளியிட்ட உணர்வுகள் அவனில் விளைந்த நிலைகள் இந்தப் பரமான பூமியில் பரலோகமாகப் படர்ந்து கொண்டே உள்ளது.
1.அவன் பெற்ற உணர்வை நாம் நுகர்ந்து சிவலோகமாக மாற்றி அருள் லோகமாக மாற்றி
2.இருளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை ஊட்டி உருவாக்கி
3.எதனை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ – அதன் வழி கொண்டு சொர்க்கலோகம்
4.எந்தத் தீமையும் தனக்குள் வராது ஒளியின் சிகரமாகத் தனக்குள் உருவாக்கும் நிலைகள் பெறச் செய்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தை இழந்தால் எதன் உணர்வை நமக்குள் அதிகரிக்கின்றோமோ அதன் வழி கணங்களுக்கு அதிபதியாகி உயிர் உடல்களை மாற்றி அமைத்துவிடும்.

அதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடும் நிலையாக நமது குரு ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி நாம் அருள் ஒளி பெற்று பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்வோம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளை அதிகாலை நேரம் சூரியன் துருவப் பகுதி வழியாகப் புவியின் ஈர்ப்புக்குள் நமக்கு முன் அழைத்து வருகின்றது.

1.அதைப் பருகுவதற்கு எம்முடைய உபதேசத்தின் உணர்வைப் பதிவாக்கி
2,அந்த உணர்வின் எண்ணத்தை வலுவாக்கி விண்ணை நோக்கி ஏகி அருள் ஒளியின் உணர்வைச் சுவாசியுங்கள்.
3.சுவாசித்த உணர்வுகளை உயிர் உருவாக்கும் அதை நாம் உருவாக்குவோம்
4.இருளை அகற்றும் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமன் வாலியை எப்படிக் கொல்கிறான்…? இராமன் வாலியை மறைந்து இருந்து தான் தாக்குகின்றான்.

ஒருவரைப் பார்த்த பின் அவர் வேகமான நிலைகளில் நம்மைத் தாக்கி விடுவார் என்ற உணர்வை நாம் எடுக்கின்றோம். அவனை உற்றுப் பார்த்தால் என்ன செய்கின்றது…?

அவர் கோபமான உணர்வுகளை நம்மிடம் சொல்லப்படும் போது அதை நாம் நுகர்ந்தவுடனே அந்த உணர்வு நம்மை வீழ்த்துகிறது.

அவன் எண்ணத்தை நுகர்ந்து பதிலுக்கு நாமும் கோபமாகச் சொல்வதை விடுத்து விட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் வலுவாக எண்ணிச் சுவாசித்து விட்டு – அந்த மறைந்த நிலைகளில்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனை அறியாது இயக்கும் இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் திருப்பினால்
4.அவன் உணர்வை நாம் அடக்குகின்றோம்.

வாலி என்ற நிலைகளில் போர் முறைகள் செய்யும் போது அதனின் வலுவின் செயலாக்கங்களுக்கு நம்முடைய வலிமையை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று தான் வான்மீகி தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் கண்கள் கொண்டு அவர் கோபமாகப் பேசுவதை உற்று நோக்கிக் கூர்ந்து பதிவாக்கி விட்டால் அவன் உணர்வே நம்மை இயக்கும். அதை இயக்கவிடாது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தடுக்க வேண்டும்.

இருந்தாலும் இதைப் போன்ற உணர்வின் தன்மை நம்மை இயக்கும் நிலைகளைக் காட்டுவதற்குத்தான் மகாபாரதத்தில் அதே சமயத்திலே பீஷ்மரைக் காட்டியிருப்பார் வியாசகர்.

கடைசியில் பீஷ்மர் அம்புப் படுக்கையின் மீது தான் படுத்து இருப்பார்.
1.தான் செய்த பாவம் எல்லாம் தன் உடலில் எப்படி இருக்கிறது என்று உணர்த்தி
2.அதைத் தாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்ற நிலையில்
3.மக்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பார் வியாசகர்.

கொலையோ மற்ற இம்சைகளையோ செய்தாலும் இந்த உணர்வு நமக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதனின் செயலாக்கங்கள் எப்படி வரும்…? என்பதையும் அதை மாற்றும் வல்லமை எப்படிப் பெறவேண்டும் என்பதையும் குருநாதர் அன்றைக்கு எமக்குக் (ஞானகுரு) காட்டுகிறார்.

சரித்திரத்தைக் காட்டி நம் கண்களின் வேலை என்ன..? நம் எண்ணங்கள் எப்படி இயங்குகிறது…? நம் உயிர் எப்படி இயங்குகிறது…? என்று ஒவ்வொன்றையும் அனுபவபூர்வமாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

“நம் கண்ணுடன் இணைந்தே” பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது

 

ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் முதலிலே கெடுகின்றோம்…” கெடுமதியின் உணர்வைப் பாய்ச்சுகின்றோம்… பாய்ச்சும் உணர்வுகள் கேட்போருக்குள் பதிவாகின்றது.
1.பதிந்த உணர்வுகள் அவர்களையும் கெடுக்கின்றது அவர்களில் விளைந்த உணர்வுகள் வெளிப்படுகின்றது.
2.எங்கே வித்தாகி உருவானதோ மீண்டும் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் சத்தாக நமக்குள் கவர்ந்து அவரும் கெடுவர் நாமும் கெடுவோம்.

ஒருவர் கெட வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்கி அவரைப் பார்த்த பின் அவரை எப்படியும் வாழ்க்கையிலே கெடுக்க வேண்டும் துன்பத்தை ஊட்ட வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டுகின்றது.

அவ்வாறு தூண்டி அந்த உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. இந்த உணர்வு எவர் கெட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவர் மீது பாய்ச்சுகின்றோம்.

மீண்டும் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. பகைமைகளைத் தான் நாம் வளர்க்கின்றோம். விளைந்த உணர்வுகளைப் பிறருக்குப் பாய்ச்சுகின்றோம்.

அவர்களும் நினைவு கொண்டு இதைக் கவர்கின்றனர் இருவருமே கெடுகின்றனர். கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தக் கெடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கின்றோம். பிறரைக் கெடுக்கும் இச்சை வளர்கின்றது.

இதே போன்று
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி
2.நாம் பார்க்கும் அனைவரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று உணர்வுகளை உருவாக்கினால்
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை நமக்குள் உருவாக்குகின்றோம்… நாமும் அதுவாகின்றோம்.

ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெற வேண்டும்… நாம் பார்ப்போருக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாகின்றோம்.

அருளொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வித்தாக்குவோம். ஊழ்வினையாக உருவாக்குவோம். இந்த உணர்வின் துணை கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள் அனைவரது உணர்வுகளும் உண்டு.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வுகளும் நமக்குள் நலம் பெறுகின்றது. கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். நம் கண்கள் கூறியது போன்று
1.ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்துடன் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின்
2.அவரைப் பார்த்த பின் நன்மை செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகள் தூண்டுகின்றது.
3.அதன் வழி நன்மை செய்யும் உணர்வுகளை நுகர்கின்றோம்… நல்வழிப்படுத்தும் உணர்வினை இயக்கச் சக்தியாக மாற்றுகின்றோம்.

இதை உணர்த்துவதற்காகக் கண்ணனும் பலராமனும் ஒன்றெனெ இணைந்தவர்கள்… “சகோதரர்கள்” என்று காட்டுகின்றார்கள்.

சுவை மிக்க உணர்வுகளை எண்ணும் பொழுது சீதா ராமன் என்றும் இப்படி பல கோடிஸ் சரீரங்களைப் பெற்ற நிலையில். கண்கள் ஒன்றைக் காட்டி அந்த உணர்வை நுகர்ந்து அந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணத்தின் உணர்ச்சியால் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்ற நிலைகளைத் தெளிவாகக் கூறுகின்றனர்.
1.நம் கண்ணுடன் இணைந்தே பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது.
2.அதனால் தான் கண்ணனின் சகோதரன் பலராமன் உடன் பிறக்கவில்லை என்றாலும்
3.உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.

எண்ணங்களின் இயக்கங்களுக்குக் காவியங்களாகப் படைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.

நமக்குள் இணைந்து வாழும் நிலைகள் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை… நண்பன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எண்ணினால் அந்த கண்கள் உற்று நோக்குகின்றது உதவி செய்யச் சொல்கின்றது.

ஆகவே
1.எண்ணங்கள் வரும் பொழுது இந்தப் பார்வை அதைச் செய்கின்றது.
2.நண்பனைப் பார்த்த உடனே நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது.
3.ஒன்றுடன் ஒன்று இணைந்து எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையை அருள் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
4.கண்ணன் வேறல்ல நம் எண்ணங்கள் வேறல்ல.

கண்கள் இல்லாத பொழுது பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் பல கோடிச் சரீரங்களில் வலுப் பெற்று உருவாகின்றது. உருவான உணர்வுகள் உடலுக்குள் தான் எண்ணி ஏங்கிய பின் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறக்கின்றான்.

கம்சன் என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளைச் செயல்படுத்துகின்றது என்று இப்படித் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

உதாரணமாக… புழுக்கள் இரண்டு நாள் வாழும் அல்லது நான்கு நாளைக்கு இருக்கும். இப்படி மடிந்து மடிந்து… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டிக் கூட்டி அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தான்
1.வாசு… சுவாசித்த உயிரான தேவனுக்குத் தனக்குத் தேவையான உணர்வு என்ற நிலையில் அந்த எண்ணங்கள் உருவாக்கப்படும் பொழுது தான்
2.வாசுதேவனுக்கும் தேவகிக்கும் உடலான சிறைச்சாலைக்குள் கம்சனை வெல்ல
3.அந்த நாராயணன் ஒளிக்கதிராக இருக்கும் இந்த உணர்வின் தன்மை
4.”ஒளியை ஊட்டி… ஒளியை அறிவாக்கும்… அதை அறிந்திடும் உணர்வின் தன்மை” தனக்குள் காட்டுவதே கண்ணன்.

ஆக… கண்ணனாகப் பிறந்தான் நாராயணன்…. துவாரகா யுகத்தில் இருளை நீக்கிக் கண் ஒளி கொண்டு உணர்வின் அறிவாகத் தான் இயக்கும் சக்தி பெற்றான். அதே நாராயணன் நமக்குள் இருக்கிறான் என்ற நிலைகளில் காட்டுகின்றார்கள்.

இவ்வாறு
1.கண்கள் எண்ணத்தால் தோன்றியது
2.பின் பார்வையால் நுகரப்படும் பொழுது எண்ணங்கள் வருகின்றது
3.எண்ணத்தால் எதை நாம் எண்ணி ஏங்குகின்றோமோ கண் அதைக் காட்டுகின்றது.

இப்படி எண்ணங்கள் பல உண்டு. பல கோடிச் சரீரங்களைப் பெற்ற பின் பலராம் என்ற நிலையினை மனிதன் அடைகின்றான். இதை மனிதன் தான் உணர்கின்றான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஸ்தல புராணம் என்பதே அரசர்களால் உருவாக்கப்பட்டது தான். அன்று வாழ்ந்த புலமைகள் பெற்றோர் அரசனைப் புகழ் பாடுவது வழக்கம். ஏனென்றால் தன்னுடைய பிழைப்பிற்காக அவ்வாறு செய்வார்கள்.

அந்தப் புகழ் பாடிய நிலைகள் வரப்போகும் போது ஸ்தல புராணத்திற்குப் பேர் ஜாஸ்தியாகின்றது. அரசனை உயர்த்துவதற்காக ஸ்தல புராணத்தில் புகழ் பாடினால் அவனுக்குப் பிழைப்பு வருகிறது.
1.ஆனால் மக்கள் உயர வேண்டும் என்று
2.ஏதாவது சொல்லி இருக்கார்களா என்றால் இல்லை.

அதனால் தான் திருவள்ளுவர் என்ன செய்தார்…? எந்த ஒரு அரசனையும் அவர் புகழ் பாடவில்லை. அருள் ஒளியின் உணர்வின் தன்மை கொண்டு “ஆதி ஆண்டவன்…!” என்று உயிரைத் தான் ஆதாரமாக வைத்தார்.

உயிரை வைத்துத் தான் பாடினார்கள். கடவுளாக உனக்குள் இயக்குவது எது…? என்ற நிலையில்
1.ஒருவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினால் காக்கும் நிலையாக அது வரும்.
2.ஒருவனை அழிக்க வேண்டும் என்று எண்ணினால் அழிக்கும் உணர்வாக அது வரும் என்று
3.அன்றைய பண்டைய தமிழில் பாடலாகக் கொடுக்கின்றார்கள்.

திருவள்ளுவர் ஏழ்மையில் வாடிக்கொண்டு இருக்கும் போது அவர் நுகரும் உணர்வுகள் தனக்குள் எது… என்ன…? என்று எல்லாவற்றையும் அறிகின்றார்.

அவருடைய மனைவி வாசுகியோ தன் கணவன்படும் துயரத்தைக் கண்டு அருள் ஒளியை இவருக்குள் பெற வேண்டும் என்ற உணர்வினைப் பாடலாகப் பாடுகின்றாள். அதாவது கணவனைத் தேற்ற அதைப் பாடுகின்றாள்.

யார்…? வாசுகி…!

துணிகளை நெய்து அதன் வழி ஜீவித்து வந்தவர்கள் தான் வள்ளுவரும் வாசுகியும். ஒரு துண்டை நெய்து அதை விற்று வந்தால் தான் அன்றைக்குச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு வறுமை.

சந்தர்ப்பத்தில் அவர் நோய்வாய் படப்போகும் போது அந்த உயர்ந்த உணர்வு தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்.

அப்பொழுது தான் அவருடைய மனைவி வாசுகி
1.தன் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்று புலமையில் பாடுகின்றார்.

ஆக தன் கணவன் எல்லாவற்றிலும் உயர்வான நிலை பெற வேண்டும் என்று கணவன் பெயரில் வாசுகி பாடியது தான் அந்த “வள்ளுவன் குறள்… வையகமெல்லாம் பரவியது…!” என்று சொன்னது. வள்ளுவர் உயர வேண்டும் என்று வாசுகி பாடிய பாடல்கள் தான் அது.

ஆனால் அன்றைய அரசன் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இவர்கள் இருவரும் இப்படி வாழ்ந்த காலத்தில் தான் கொங்கணரும் வருகின்றார். அவன் மந்திர ஒலிகளைக் கற்று கொண்டு வந்தவன். மதச் சார்பில் கடவுள் என்ற நிலைகளை இந்த மனித நிலைகள் எந்த பக்தி கொண்டானோ அவனைக் கைவல்யப்படுத்திக் கொண்டு வந்தவன்.

தனக்குள் தீமை என்ற நிலைகளில் யாராவது ஏவினால் அவர்களை எல்லாம் ஒடுக்கி விடுவான்.

ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.

“கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது…!” என்று தன் எண்ணத்தின் பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை.

கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும் போகும் பாதையில் தற்செயலாக எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.

“பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான். அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே…!” என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.

ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம் கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)

ஆனால் வாசுகிக்கோ உடுத்திக் கொள்ளச் சரியான துணி இல்லை. துணி நெய்யக்கூடிய குடும்பமாக இருந்தாலும் ஒரு முண்டு தான் உடுத்தி இருக்கிறது.

அதற்காக வேண்டி ஒரு துணியை மாற்றிக் கட்டிக் கொண்டு வருகிறது. பிச்சை போட்டாலும் உடலை வெளியில் காட்டிக் கொண்டா இருப்பார்கள்…! அதனால் நேரமாகிப் போய்விட்டது.

வாசுகி வந்ததும் கொங்கணர் விழித்துப் பார்க்கின்றான்.

கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா…! என்கிறது வாசுகி.

கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது…? நீ எங்கே இதைக் கற்றுக் கொண்டாய்…! என்று கொங்கணர் கேட்கின்றார்.

கசாப்புக் கடைக்காரரிடம் கேள் என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டால் தான் “உனக்குத் தெரியும்…!” என்று சொல்கிறது.

கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்…? ஆடை வெட்டி வியாபாரத்தைச் செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது…? ஆட்டை ரசித்துச் சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.

1.நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது.
2.அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின்… நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று
3.வாசுகி தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது…”

அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது…?

ஏனென்றால் நான் (ஞானகுரு) படிக்காதவன். நான் ஏட்டையும் படிக்கவில்லை ஒரு கத்திரிக்காயும் தெரியாது. ஆனால் அன்று அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளின் பதிவு இங்கே இருக்கிறது.

அதை நுகர்ந்து அக்காலத்தில் நடந்ததை வெளிப்படுத்துகின்றேன். நான் மட்டும் இல்லை. நீங்களும் இதைப் பார்க்கலாம்… உணரலாம்… நுகரலாம்…! உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமையிலிருந்து விடுபடலாம்.
1.அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் எல்லாம் தன்னாலேயே வரும்.

மலைப் பகுதிகளில் குருநாதர் எனக்குக் காட்டிய இயற்கையின் பேருண்மைகள்

 

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் எத்தனையோ வகையான மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் பச்சிலைகளைக் கண்டு எடுக்கின்றார்கள்.
1.அந்தப் பச்சிலைகள் எப்படி உருவானது…?
2.அதற்கு அந்த ஆற்றல் எவ்வாறு வந்தது…? என்பதனைக் குருநாதர் எனக்குக் காட்டுகின்றார்.

தொடர்ந்து மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வருடம் அங்கே அலைந்து திரிந்தேன்.

அக்காலங்களில் ஒரு மிருகம் மற்றொன்றை எப்படிக் கொன்று புசித்தது…? அதைக் கொன்று புசித்த பின் அந்த மாமிசத்தை மற்றவைகள் உட்கொள்ள முடியாத நிலை ஆகிறது.

கழுகு காக்கைகள் மட்டுமே உட்கொள்கின்றது. ஆனால் சிறிது காலம் கழித்து அது அழுகிய மணம் வந்த பின்பு தான் அந்தக் கழுகுகள் பறந்து வந்து அதனை நுகர்ந்து உட்கொள்ள வருகின்றது.

ஆனால் அதே சமயம் இது மடிந்த பின் இது உடலில் இருந்து வரக்கூடிய ஆவியின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாறுகின்றது… பரவுகின்றது…!

அந்த உடலை (அழுகிய) உருவாக்கிய அணுக்கள் திறந்த வெளிக்கு வந்தபின் அதையே உணவாக உட்கொள்ளும் புழுக்களாக அதிலே உருவாகின்றது. புழுவாக உருப்பெற்றாலும் உட்கொண்டு இரை தீர்ந்தபின் அவைகளும் மடிந்து விடுகின்றது.

1.மடிந்த உயிரான்மாக்கள் வெளியே செல்கின்றது.
2.சென்றாலும் எந்தெந்த உயிரினங்களை இது அடித்து உணவாகப் புசித்ததோ அந்த உணர்வின் துணை கொண்டு
3.அந்தந்த மிருகங்களின் உடலில் பட்ட பின் ஈக்களாக உண்ணிகளாக உருவாகின்றது.
4.அதன் ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்கின்றது.

இதையெல்லாம் காட்டுப் பகுதியில் வைத்து குருநாதர் காட்டுகின்றார்.

தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடல் பெற்றுத் தான் வாழும் நிலையானாலும் அது மடிந்த பின் மற்றதைக் கொன்று குவிக்கும் புலியோ நரியோ நாயோ மற்ற உடலைப் புசிக்கும் உணர்வு கொண்ட நிலைகள் மடிந்த பின் இவை எல்லாம் என்ன ஆகின்றது…? என்பதனை காட்டுக்குள் அழைத்துச் சென்று பார்க்கும்படி செய்கின்றார்.

உடலில் இருந்து சென்ற ஆவிகளைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து அலைகளாக மாற்றுகின்றது. ஒரு ஆட்டின் உடல் பெற்ற பின் நரியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின் இதைக் கண்ட பின் ஆட்டின் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும் ஓடு பாதையில் இன்னொரு தாவர இன சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கொண்டால் இதற்குள் ஊடுருவி சுழற்சியின் தன்மை அடைந்து ஒன்றுடன் ஒன்று மோதுகிறது.

மற்ற உயிரினங்களாகப் பெற்ற பின் இதனுடைய மணம் வெளிப்பட்ட பின் இது மூன்றும் இரண்டறக் கலக்கின்றது.

மோதலில் ஏற்படும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொண்ட பின் தாவர இனத்தின் அடர்த்தி அதிகமாகி இதனுடன் இணைந்து விடுகின்றது. இணைந்த பின் ஒரு வித்தாகின்றது… நிலத்தில் பதிவாகின்றது.

வித்தான பின் புவியின் கால நிலைகள் கொண்டு மழை நீரோ மற்ற ஈரப்பசை கொண்ட காற்றலைகள் வரப்படும் பொழுது செடியாக முளைக்கின்றது. முளைத்து விட்டால்…
1.இது எதையெல்லாம் கொன்று புசித்ததோ அந்தச் செடி தன் அருகிலே வரக்கூடிய மிருகங்களை உயிரினங்களை
2.தன் கொடிகளைப் பாய்ச்சி அதனின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றது.

உயிரணு பெற்ற பின் மீண்டும் தாவர இனங்களுடன் இணைந்து தாவர இனச் செடியாக மாறினாலும்
1.நீரை உணவாக உட்கொள்ளும் நிலை இருப்பினும்
2.அதே சமயத்தில் இரத்தத்தை உறிஞ்சி உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பெறுகின்றது.

இப்படிப் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது… இது எவ்வாறு நடக்கிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர். இதையெல்லாம் அறிவதற்கு நான் சாதாரண உணவை உட்கொள்ளவே முடியாது.

சில பச்சிலைகளைக் கொடுத்து வாயிலே ஒதுக்கிக் கொள்ளும்படி சொல்வார். அதை மென்று கொண்டே இந்த உணர்வினைச் சுவாசிக்கும்படி செய்வார்.

நடந்து செல்லும் போது சில இடங்களில் ரொம்பக் களைப்பானால் நீரைக் குடிக்கும்படி சொல்வார், நீரைக் குடித்த பின் வயிறு உப்பிக் கொள்ளும்

சில இடங்களில் செடிகளின் இலைகளைத் தண்ணீரில் கசக்கிப் பிழிந்து விட்டால் நொங்கு போன்று ஆகிவிடும். அதை எடுத்து உணவாக உட்கொள்ளும்படி சொல்வார்.

இப்படி எல்லாம் பல தாவர இனங்களின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதைக் காட்டுவார்.

உயிரணு பெற்று அந்த உடலின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொண்டால் ஒன்றுடன் ஒன்று மோதி அது மீண்டும் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது எந்த உயிரினத்தில் இருந்து இந்தச் செடியுடன் கலந்ததோ அத்தகைய உயிரினங்கள் வரப்படும் பொழுது… இந்த இலைகள் அதனுடன் ஒட்டப்பட்டு இரத்தத்தைக் குடிக்கின்றது. இப்படிப் பல விதமான தாவர இனங்கள் உருபெறுகின்றது.

வேறு சில இடங்களுக்குச் சென்றால் அங்கே மனிதனையே பலியிட்டு உணர்வுகளைப் பிரித்து விட்டு அவருடைய உயிரை வெளியே எடுத்து இருப்பார்கள்.
1.அந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் தாவர இனத்தின் மணத்தை கண்டபின் ராட்சசத் தன்மை கொண்டு ஆவிகள் வேகமாக ஓடுகின்றது.
2.இன்றும் சில இடங்களில் இந்தச் சுழிக்காற்றுகளைப் பார்க்கலாம்.
3.சில குறித்த நேரங்கள் வரும்பொழுது உயிர் பலி இடப்பட்ட இந்த உணர்வுகள் அதைக் கண்ட பின்
4.மற்ற தாவர இனங்களில் சுழிக் காற்றாக அடித்து ரொம்ப வேகமாகத் தள்ளிக் கொண்டு இருக்கும்.

அதற்குள் யாராவது மனிதன் சிக்கினால் உயிருக்குள் பட்டபின் காக்காய் வலிப்பு போன்று வந்துவிடும். கர்ப்பிணி யாராவது நுகர்ந்து விட்டால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பாதிப்பாகி அதனுடைய உறுப்புகளைச் சீராக உருவாகாதபடி செயலிழக்கச் செய்துவிடும்.

இது எல்லாம் காட்டிற்குள் சென்ற பின்
1.இயற்கையின் நிலைகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அக்கால மக்கள் எப்படி வாழ்ந்தனர்…?
3.கடும் பூதங்களாகவும் ராட்சசர்களாகவும் எப்படி உருவானார்கள்…? என்று காட்டுகின்றார்.

இன்றும் சில பகுதிகளில் மனிதன் பக்தி கொண்டு மந்திர ஒலிகளைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்ட பின் அவன் மடிந்தால் அந்த உயிரணுக்கள் எதனின் எல்லை கொண்டு இருப்பானோ அதன் பகுதிகளிலே அது சுழன்று கொண்டிருப்பதும் அந்த அலைகள் குவிவதும்… அங்கே செல்வோர் அஞ்சினால்… அந்த உணர்வை நுகர்ந்து அந்த உருவங்கள் தெரிவதும் அப்படிப் பல நிலைகள் உருவாகின்றது.

சில மலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது ராட்சச உருவம் கொண்டு மற்றவர்களைக் கொன்ற நிலையில்… அங்கே மற்றவர் படுத்திருக்கும் பொழுது அந்த உணர்வலைகள் அங்கே குவிகின்றது.

குவிந்தபின்
1.படுத்திருக்கும் உடலை எப்படிச் செயலற்றதாக அமுக்குகின்றது…?
2.அமுக்கிய பின் இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது…?
3.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின் அதன் நிலை கொண்டு அதுவும் காற்றலைகளுடன் கலந்து எவ்வாறு செயல்படுகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

தீமைகள் வளர்ந்து வளர்ந்து மனிதனின் நிலைகளில் அக்காலங்களில் இருந்து இக்காலங்கள் வரையிலும் இதைப் போன்று தான் நடந்து வருகின்றது.

இந்த உடலில் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு சாகாக்கலையாக இந்தப் புவியில் தான் மீண்டும் மாறி மாறி உடல்கள் பெறுவதும் நரகலோகத்தைச் சந்தித்து மீண்டும் சொர்க்கலோகம் வருவதற்குப் பல காலமாகின்றது.

இதிலிருந்து மீள்வதற்கு அக்காலங்களில் முதல் மனிதனானவன் தாவர இன்ங்களைப் பயன்படுத்தியவர்களைப் பற்றி மகாபாரதத்திலோ இராமாயணத்திலோ புலஸ்தியர்கள் என்று சொல்வார்கள்.

புலஸ்தியர் என்றால் காட்டுவாசிகள்…! அன்று அடர்த்தியான காடுகளில் அவர்கள் இருந்தாலும் அதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த இடத்தில் வாழ்ந்த அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்…? என்ற நிலையும் காலங்கள் எவ்வாறு சென்றது…? என்பதையும் உண்மையின் உணர்வைச் சொல்லி வருகின்றனர்.

எவ்வழியில் எதனை நாம் செயல்படுத்த வேண்டும்…? என்ற நிலைகளில் பின் தெளிவாக அவர்கள் கூறிய நிலையில் எழுத்து வடிவுக்கு வரும் பொழுது இதனைக் கூறியுள்ளார்கள்.

ஆனால் எழுத்து வடிவிற்கு வரப்படும் பொழுது அரசன் அந்த எழுத்தின் அறிவைக் கொண்டு வரப்படும் பொழுது ஞானிகள் காட்டிய பேருண்மையின் தன்மைகள் காலத்தால் மறைந்தும் போய் விட்டது.

இப்படித்தான் மறைந்து… மறைந்து…
1.விஞ்ஞான அறிவுகள் வளர்ந்த பின் விஞ்ஞான வளர்ச்சி முதிர்ந்து
2.இன்று மனிதனையே சீர்குலைக்கும் உணர்வாக விளைய வைக்கும் இந்தக் காலத்தில்
3.விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
4.இருந்தாலும் இனி நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை குருநாதர் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

அஸ்ஸாம் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே காட்டு விலங்குகள் அதிகமாக இருக்கின்றது. அந்த மலைப்பாங்குகளில் எவ்வாறெல்லாம் தாவரங்கள் எப்படியெல்லாம் மாற்றம் அடைந்துள்ளது என்பதனைக் காட்டுகின்றார்.

குருநாதர் ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கி என்னிடம் கொடுத்தார்… இதை வைத்துக் கொள்…! என்று.

அது எதற்கு…? என்று எனக்குத் தெரியாது ஆனால் அதை வைத்துக் கொண்டு நடந்து செல்லும் பொழுது ஒரு யானைக் கூட்டமே அங்கே வருகின்றது.

கூட்டமாக வரக்கூடிய யானைகள் இந்த பச்சிலையின் வாசனையைக் கண்டபின் அது பிளிறுகின்றது… அஞ்சுகின்றது கத்துகின்றது… அருகிலேயே வராதபடி ஓடுகின்றது.

ஒரு காண்டாமிருகம் வருகின்றது. அது யானையைக் கூட ஒரு தட்டுத் தட்டி எறியக்கூடிய வலு பெற்றது. அது நடந்து வரப்படும் பொழுது
1.சந்தர்ப்பத்திலே ஒரு செடியிலே உராய்ந்து விடுகின்றது.
2.பட்டபின் இரத்தத்தை அந்தச் செடி உறிஞ்சி விடுகின்றது… அப்படியே கீழே விழுகின்றது.

முதலிலே ஒரு சில இதை நுகர்ந்து விடுகின்றது… அதனால் அந்தப் பக்கம் வருவதில்லை. ஆனால் காண்டாமிருகங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுத் தாக்குதல் ஏற்பட்டுத் தப்பி ஓடும் வேகத்தில் வரும் போது… இந்தச் செடிகளிலே உராய்ந்த பின் இரத்தத்தை உறிஞ்சிய பின் கீழே விழுந்து விடுகின்றது. இதைக் குருநாதர் காட்டுகின்றார். காடுகளில் இத்தகைய செடி கொடிகள் சில இடங்களில் உண்டு.

கேன்சர் நோய் என்றால் மருத்துவத்திற்கு இன்று ஏதேதோ செய்கின்றோம்.
1.ஆனால் இத்தகைய செடிகளின் சத்தை உடலின் மேலே முலாமாக அரைத்துப் பூசினால்
2.கேன்சர் எந்தப் பாகமோ அதற்குள் ஊடுருவி அந்த நோயை அழித்து விடுகின்றது… அதோடு அந்தக் கேன்சர் நோய் தீர்ந்து விடுகின்றது.

டிபி போன்ற நோய்களுக்கும் இந்தத் தாவர இனங்களை மேலே முலாமாகப் பூசினால் சுவாசிக்கும் பொழுது அந்த டிபி அணுக்கள் மடிந்து விடுகின்றது… நோயும் நீங்கி விடுகின்றது.

எப்படி எல்லாம் இது செயல்படுகிறது…? என்பதனை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளச் செயல்பட்டதையும் இன்று விஞ்ஞான அறிவால் எப்படிச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…? என்பதனையும் குருநாதர் காட்டுகின்றார்.

தன் உணவுக்காக வேண்டிக் கனிகளையும் மற்ற மிருகங்களையும் மற்ற உயிரினங்கள் கொன்று உணவாகப் புசித்தாலும் அத்தகைய மிருகங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் இத்தகைய பச்சிலைகளின் இரகசியங்களை அறிந்து கொண்டார்கள்.
1.ஒருவர் அறிந்ததை மற்றவருக்குச் சொல்வதில்லை.
2.அதன் செயலாக்கங்களை அவரவர்கள் மட்டும் வலுவாக வைத்துக் கொள்கின்றார்கள்.

இன்றும் ஒரு சிலர் பச்சிலைகளுடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டால்… வசதி உள்ளவராக இருப்பார். சில நோய்களுக்காக வேண்டி இதை ஒரு சாமியார் கொடுத்தார். நான் தான் அதைப் பயன்படுத்துவேன் என்று சொல்வார்கள்.

ஆஸ்மா நோயைப் போக்குவதற்காக வேண்டி யாரோ ஒருவர் ஆந்திராவில் சொன்னதை
1.ஒரு மீனை எடுத்து அதற்குள் மருந்தைப் போட்டு முழுதாக விழுங்கப்படும் பொழுது
2.அந்த உயிரணுவின் செல்கள் ஊடுருவி ஆஸ்மா நோய் உருவாக்கும் அணுக்களை அது விழுங்கி விடுகின்றது என்ற இரகசியத்தைச் சொன்னார்கள்.

இது குடும்பப் பாரம்பரியத்தில் உண்டு. முழுதாக அந்த மீனை விழுங்கிய பின் உடலுக்குள் சென்று ஜீவ அணுக்களாக மீண்டும் அணுக் கருக்களாக மாற்றுகின்றது.
1.அந்த ஆஸ்மாவை உருவாக்கும் சளி எங்கே இருக்கின்றதோ அதற்குள் அணுக்களாக வெடித்து
2.சளியை உருவாக்கும் அணுக்களை விழுங்கி விடுகின்றது…. ஆஸ்மா நோய் நீங்கி விடுகின்றது.

இப்படி எல்லாம் சில முறைகள் எவ்வாறெல்லாம் அது இயங்குகிறது…? என்பதையும் நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதைப் போன்று அன்றைய காலங்களில் காடுகளில் வாழ்ந்தவர்கள் விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் வேட்டையாடி வந்த நிலையில் அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தப்பித்து வாழ்ந்தார்கள்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதல் மனிதன் அகஸ்தியனை… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்று எத்தனையோ நிலைகள் கொண்டு அவனைத் தான் நாம் போற்றுகின்றோம்.

அவனுடைய தாய் தந்தையர்கள் தான் பற்பல விதமான மூலிகைகளைப் பச்சிலைகளைத் தாங்கள் படுத்துறங்கும் குகைக்கு முன் போட்டுக் கொள்வதும் தங்கள் உடலிலே முலாமாக அரைத்துப் பூசிக் கொள்வதும் போன்ற நிலைகளில் இருந்தார்கள்.

காரணம் இந்த மணத்தை விஷ ஜந்துக்களோ மிருகங்களோ நுகர்ந்தால் அவைகளுக்கு ஒரு மயக்கம் போன்று வரும்… அதனால் இவர்கள் அருகிலே அவைகள் வருவதில்லை. தங்களைக் காத்துக் கொள்வதற்காக அவ்வாறு செயல்படுத்தினார்கள்.

இந்த மணம் அவர்களுடைய சுவாசத்தில் கலந்து இரத்தத்திலும் கலக்கின்றது. கர்ப்பம் ஆகும்போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது இணைகின்றது.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர் அந்தப் பச்சிலைகளின் மணங்களை நுகர நுகர இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.
1.கருவில் இருக்கக்கூடிய அகஸ்தியனுக்கு இந்த உணர்வுகள் கிடைக்கப் பெறுகின்றது.
2.நஞ்சை வென்றிடும் அணுக்களாக அவனுக்குள் உருப்பெறுகின்றது.
3.அதன் வழிப்படி அவன் உடலும் உருப்பெறுகின்றது
4.கருவிலேயே அத்தகைய ஆற்றல் பெற்றுப் பிறக்கின்றான்.
5.பிறந்த பின் இவன் அருகிலே விஷ ஜெந்துக்களோ மிருகங்களோ யானையோ மற்ற கொடூர மிருகங்களோ வருவதில்லை.
6.அவன் தான்… தன்னுடைய வளர்ச்சியில் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகின்றான்.

இதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். அதில் “சில விளக்க உரைகளைக் கூட்டி… இணைத்துத் தான்… ஒவ்வொரு தடவையும் கொடுப்பது…”

ஒவ்வொருவரும் தெளிந்த மனம் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
1.அந்த அருள் ஞானி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அரும்பெரும் சக்திகளை
2.நீங்கள் பெற “இது உதவும்” என்பதற்கே மீண்டும் பல கோணங்களில் வெளிப்படுத்துகின்றேன்.
3.இதை நுகரச் செய்து… பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கப்படும் போது கடும் விஷத்தன்மையிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

ஆகவே
1.எதனின் எண்ணத்தைப் பதிவு செய்கின்றீர்களோ
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏங்கி நுகரும் போது அது வளர்ச்சி வரும் சக்தியாக அடைகின்றது.
3.அந்த வழியிலே நீங்கள் வளர வேண்டும்.
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து காக்கும் சக்தியாக வளர வேண்டும்
5.எப்பொழுது இந்த உடலை விட்டு அகந்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

தீமை என்ற நிலையில் சிக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து பிறப்பின் தன்மை அடையும் நிலையிலிருந்து விடுபட்டு இன்று நல்ல நினைவிருக்கும் பொழுதே அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்துத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவி இல்லாப் பெரு நிலை அடைவதே நல்லது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு குழந்தை பிறந்து விட்டது என்ற உடனேயே நாம் ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

அவன் பார்த்து விட்டு குழந்தை பிறந்த நேரம் சரியாக இல்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் மிருக குணம் அதிகமாக இருக்கும். அவன் அசுர செயல்கள் கொண்டு செயல்படுவான் என்று அந்த ஜாதகம் பார்ப்பவன் கணக்குப் போட்டுச் சொல்கிறான்.
1.இந்தக் குழந்தை ஏழரை நாட்டுச் சனி பிடித்தவன்.
2.உங்கள் குடும்பத்திற்கே ஆகாது என்று சொல்கிறான்.

மிருகங்கள் எப்படி தன்னைக் கட்டுபடுத்தாத நிலைகள் கொண்டு செயல்படுமோ அதே உணர்ச்சிப்படியே இவன் போவான். “அவனால் உங்கள் குடும்பத்திற்கே சனியன் பிடிக்கும்…!” என்று விளக்குகிறான் ஜாதகக்காரன்.

ஆனால் அந்தக் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லை.

குழந்தை பிறந்த ஜாதகத்தை அவன் கட்டத்தைப் போட்டு எழுதுகிறான். நாம் நம்பிக்கையுடன் போனவுடனே இதை எடுத்து நமக்குள் உருவாக்கி வைத்துக் கொள்கிறோம்.

அடுத்தாற்போல என்ன செய்கிறோம்…?

“குடும்பத்திற்குச் சனியன் பிடித்துவிட்டதே…!” என்ற இதே உணர்வை எடுத்துக் கொண்டவுடன் தொழில் ரீதியாக ஒருவரிடம் வியாபாரம் செய்தாலும் நம் பணத்தை இவன் கொடுப்பானா.. கொடுக்க மாட்டானா…! என்று நினைத்துக் கொண்டே பொருளைக் கொடுக்கிறோம்.

நம்முடைய இந்தச் சோக உணர்வு அவனுக்குள் போன பின் அவன் நம் பணத்தைக் கொடுக்கவே மாட்டான். நம் எண்ணமே அதை மாற்றி விடுகிறது.

ஏனென்றால் ஜாதகக்காரன் சொன்ன அந்த உணர்வைப் பதிவு செய்யும் போது அது நமக்குள் கடவுளாக மாறுகிறது. “அவன் தான் நம்முள் சிருஷ்டிக்கிறான்…!” என்ற நிலைகள் கொண்டு எண்ணத்தால் எடுத்து நமக்குள் இப்படி அறியாத நிலைகள் கொண்டு உருவாக்கி விடுகிறோம்.

அதே சமயத்தில்
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்
3.அந்தக் குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருவிலிருந்து வளர்த்துப் பாருங்கள்.
4.குடும்பத்தில் தரித்திரம் இருந்தாலும் “அதை எல்லாம் நீக்கிடும் வல்லமை பெற்றவனாக” அந்தக் குழந்தை வளர்ந்து வருவான்.

சில வீட்டில் கர்ப்பமாக இருக்கும் போது பாருங்கள். ஆயிரம் சண்டை போடுவார்கள். பிறந்த பிற்பாடு அந்தக் குழந்தை என்ன செய்வான்…?
1.அந்தச் சண்டை போடும் வழக்கத்திற்கே போவான்.
2.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு வருவான்.

ஏனென்றால் சண்டையை உற்றுப் பார்த்த உணர்வுகள் தாய் உடலில் ஊழ்வினையாகின்றது. கருவில் வளரும் குழந்தைக்கோ அது பூர்வ புண்ணியமாகின்றது.

ஆகவே இதை எல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அன்றைய அரசன் தன்னுடைய குழந்தை மிகவும் வலிமையாக இருப்பதற்காக என்ன செய்தான்…? அரசனின் மனைவி கர்ப்பம் ஆகி விட்டது என்றாலே ஒரு முடியில் விஷத்தைத் தொட்டு அதை உணவுடன் கலந்து அந்தத் தாய்க்குக் கொடுப்பார்கள்.

இப்படிப் பிறக்கும் குழந்தை வீரியமான வலு கொண்டதாகவும்… மற்றவர்கள் விஷத்தைக் கொடுத்தாலும் கொன்று விடமுடியாத அளவிற்கு இதைச் செய்தார்கள்.

மக்கள் யாரும் அதைச் செய்யவில்லை.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே ஒவ்வொரு நிமிடத்திலேயும் கருவில் இருக்கும் குழந்தை மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும். உலகில் வரும் தீமைகளை எல்லாம் அகற்றக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். நஞ்சை வென்றிடும் உணர்வு பெற வேண்டும் என்று குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லுங்கள்.

கர்ப்பமான தாயும் இந்த முறைப்படி எண்ணி அந்த மெய் ஞானிகளுடைய உணர்வை எடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அபூர்வ சக்தியாக ஞானக் குழந்தையாக வளர்வான்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். நீங்கள் ஜாதகக்காரனைத் தேட வேண்டியதில்லை…!

அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்

 

அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வேண்டினால் நமக்குள் பகைமை உணர்வுகள் வராது தடுக்கப்படுகின்றது. அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எண்ணி எடுத்தால் அது நமக்குப் பாதுகாப்பாகவும்… நமக்குள் நன்மை செய்யும் சக்தியாகவும் மாறும்.

அதே சமயத்தில் உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.

அன்று தாய் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியன்…
1.அவனின் தாய் சந்தர்ப்பத்தால் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் பெற்று அந்த உணர்வின் சக்தியைத் தான் நுகர்ந்தாலும்
2.அதன் வழி கொண்டு தாய் கருவிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு
3.அவன் பிறந்த பின் தன் தாய் தந்தையை இன்னொரு பிறவி இல்லா நிலைகள் அடையச் செய்தான்.

துருவ நட்சத்திரம் என்று சொல்கின்றோமே…
1.அகஸ்தியனுடைய தாய் தந்தையும் அகஸ்தியனின் மனைவியும் இவர்கள் நான்கு பேரும் பிரம்மமாக நின்று அன்னை தந்தை அரவணைப்புடன்
2.நஞ்சை வென்றிட்ட உணர்வினைத் தன்னுடன் அரவணைத்து ஒன்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக உருப்பெற்று
3.அதனின் அரவணைப்பில் சப்தரிஷி மண்டலங்களாகத் தன் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்து கொண்டுள்ளான் அன்று அகஸ்தியன்.

இதனை வழிப்படுத்தி கர்ப்பமுற்ற தாய் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஒவ்வொரு நாளும் மகரிஷிகள் உணர்வுகளைக் கருவில் இருக்கும் சிசு பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
1.துருவ மகரிஷியின் ஆற்றல் அங்கே பெற்று
2.நஞ்சை வென்றிடும் உணவுகள் பெற்று உங்களையும் காக்கும் உணர்வாக வருகின்றான்.

நமக்குள் வளர்ந்த இனமாக இருப்பினும் “நாம் எண்ணிய உணர்வின் கருவின் உணர்வை அது ஒளியாக மாற்றுகின்றது…” நமக்குள் தெளிவாக்கும் உணர்வின் தன் மகனாகவும் வருகின்றது. நமக்கு அருள் ஞானத்தைப் போதிக்கும் அருள் ஞானக் குழந்தையாகவும் வளர்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் கர்ப்பம் என்று அறிந்தாலே துருவ மகரிஷியின் உணர்வுகள் கருவில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் உத்தம ஞானியாக வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்துக் குழந்தை பிறக்கும் வரையிலும் இந்த உணர்வினை வலுக்கூட்டிச் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்த பின் உலக ஞானத்தை அவன் அறியும் தன்மையும் உலகைக் காத்திடும் உணர்வுகளும் அவனுக்குள் விளையும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அருள் ஞானிகள் உணர்வுகளைக் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஊட்டுதல் வேண்டும்.

எப்படி அகஸ்தியனின் தாய் தந்தையர் சந்தர்ப்பத்தால் விஷத்திலிருந்து விடுபடும் உணர்வுகளைத் தனக்குள் முலாமாகப் பூசும் போது… அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே வளரும் சிசுவுக்குள் இணைந்து… நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்று அதன் வாழ்க்கையில் நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றது போன்று…
1.நீங்களும் இந்த உணர்வின் தன்மையை அருள் ஒளி பெற வேண்டும் என்ற நினைவினைக் கூட்டி
2.அருள் ஞானக் குழந்தையாக உருவாக்கி உங்களைக் காத்திடவும்
3.இந்தப் புவியில் வாழும் மனித இனத்தைக் காத்திடும் உணர்வாக உங்களில் அருள் ஞானம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
4.அருள் ஒளிச் சுடராக அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஞானத்தைப் பெறக்கூடியதைத்தான் “அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை..! என்று
1.நான் யாரிடமும் யாசிக்கவில்லை…
2.நான் யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது…! என்று இராமலிங்க அடிகள் இந்தப் பாடலைப் பாடுகின்றார்கள்.

அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது நமக்குள் ஒளியாக மாறுகின்றது. மற்றவர்கள் கேட்கும் பொழுது இல்லை என்ற நிலை வராதபடி அந்த அருள் ஒளி அவர்களுக்குள்ளும் படர்கின்றது.

1.நீ அன்பையே சிவமாக்கு…! என்று அவர் சொன்னார்.
2.அந்த அரவணைக்கும் உணர்வுகள் அன்பாகி இந்த உடலாகச் சிவமாக்கு.
3.எல்லாவற்றையும் நீ அரவணைத்துக் கொள்…!
4.இந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை உனக்குள் மகிழ்ச்சியூட்டும் ஒளியாகும் என்ற
5.இந்த உணர்வின் தன்மையைத் தான் அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை என்றார்.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தோஷத்தை உருவாக்கிவிட்டால் எனக்குள் இருள் வருமோ…? வராது…! இருண்ட நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகளுக்காக இராமலிங்க அடிகள் அதைச் சொல்கிறார்.

அப்பொழுது அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகள் அருள் பெரும் ஜோதியாகி தனிப் பெரும் கருணையாகின்றது.
1.நான் எண்ணியதை நீ உருவாக்குகின்றாய்… கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! (கந்தவேல் யார்…?)
2.நம் உயிர் தான் அந்தக் கந்தவேல்.

கந்த… அதாவது பல விதமான உணர்வுகள் கொண்ட கோட்டை இது. நம் உடல் என்ற கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அதாவது வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்து நம் உடல் கந்தக் கோட்டம்.
2.அந்த உயிருடன் ஒன்றி நாம் எண்ணப்படும் பொழுது
3.அந்தக் கூர்மையின் நிலைகளில் இயக்குகிறது என்பதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே.. அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை…! என்றார் இராமலிங்க அடிகள்.

அங்கே கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்து கூர்மையாக… உணர்வின் ஜொலிப்பாக… உணர்வின் கூர்மையாக… உணர்வின் தன்மையை அறியச் செய்கின்றாய்…! நீ ஒவ்வொன்றையும் எனக்குள் ஒளியாக நின்று உணர்த்துகின்றாய்… அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய்…! என்று தன் உயிரிடம் தான் ஏங்குகின்றார்.

கந்தக் கோட்டம் என்று இந்த உடலுக்குள் இயங்கும் உயிரைப் பற்றித் தான் இராமலிங்க அடிகள் சொன்னார்.
1.இருளை அகற்ற வேண்டும்
2.ஜோதியாகப் பேரொளியாக ஆக வேண்டும் என்ற பொருள்படும்படியாகச் சொன்னார்.

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

 

சிறு வயதிலே நாம் பல குறும்புத்தனங்கள் செய்கின்றோம்… தாய் என்ன செய்கின்றது…? தூக்கி நம்மை வெளியே எறிந்து விடுகின்றதா…? இல்லை.

அவன் எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும்… எதை எதையோ சொல்லி அவனை அரவணைத்து “இந்தடாக் கண்ணு அதைச் சாப்பிடுடா இதைச் செய்யிடா…! என்னடா இப்படிச் செய்கின்றாய்…?” என்று குழந்தையைக் கெஞ்சிப் பராமரித்து வருகின்றது.

ஆனால் வளர்ந்த பின் தன் தாய் ஏதாவது சொன்னால்… தாயைப் பார்த்து “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகின்றாய்…” என்று தாயைப் பேசுபவர்கள் தான் பலர் உள்ளார்கள். தாயை மறக்கும் நிலையே வருகின்றது.

1.தாயை மறந்திடாது எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அந்த அருள் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.

ஒரு பித்துப் பிடித்த தாயாகவே இருந்தாலும் தன் குழந்தையை இன்னார் இந்த இடத்தில் அடித்து விட்டார்கள் என்று சொன்னால் போதும்.

பிள்ளை மீது கவனம் முழுமையாக இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்ட பின் உடனே பதறி அழுகும். ஆனால் அந்தப் பித்துப் பிடித்த தாயை ஒருவர் அடித்தால் அதனுடைய பிள்ளை இதைக் கேள்விப்பட்டு “கிரகம்…! அப்படித்தான் வேண்டும்” என்று சொல்லும்.

தாயைக் கவனித்துப் பார்ப்பார்களா…? என்றால் இல்லை. ஏனென்றால் இன்று மனிதனுடைய உணர்வுகள் அந்த வழிக்குச் சென்று விட்டது.

அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
2.அந்த உணர்வுகள் என்றும் உறுதுணையாக இருக்கும்.

நண்பனுக்குள் உதவி செய்வது போன்று பின் தாயின் உணர்வுகள் நமக்கு உதவுகிறது. தாயை எண்ணி ஏங்கினால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும்.

ஒரு காரியமே நடக்கவில்லை என்றால்
1.அம்மா…! என்று ஏங்கித் தாயினுடைய அருளைப் பெற்று
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். உடனடியாக அது கிடைக்கும்.

இதையெல்லாம் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மனிதன் என்ற முழுமை பெற வேண்டும் என்றால் இந்த நிலை அடைய வேண்டும். அதற்காக வேண்டித் தான் அம்மா அப்பாவை நினைவுபடுத்தி அக்காலத்தில் வணங்கும்படி செய்தார்கள் “விநாயகர் ஆலயத்தில்…”

இதை வினையாக்க வேண்டும் அருள் உணர்வுகளை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

நம் பாட்டன் பாட்டி… அந்தக் குல வழியில் தான் நாம் மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும். பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் ஈஸ்வரா என்று
3.காலை துருவ தியான நேரத்திலே அவர்களை எண்ணி விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். சப்தரிஷியுடன் ரிஷியாகின்றார்கள். அவர்கள் உணர்வு நமக்குள் இருக்கின்றது மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் உடனடியாக அந்தச் சக்தி இங்கே கிடைக்கும்.

இதை வளர்த்துக் கொண்டால் நாம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்முடைய உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்லும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை ஒருவன் துன்பப்படுத்துகின்றான். அப்பொழுது “இப்படிச் செய்கின்றானே…!” என்று எண்ணுகிறோம். திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
2.கருவாகி 48 நாள் ஆனபின் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது
3.அது வேதனையை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
4.அணுவாகி உடல் உறுப்புகளில் ஒட்டிவிட்டால் நம் இரத்தங்களிலிருந்து தான் ஆகாரம் எடுக்கும்.

சூரியன் மற்ற தாவர இனச் சத்துக்களை எல்லாம் தனக்குள் எடுத்துக் காற்றுகளாக மாற்றியமைத்து வைத்துக் கொள்கிறது. ஒரு செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றும் பொழுது
1.காற்றுடன் காற்றாகக் கலந்து வரும்
2.தன் இனமான சத்தின் உணர்வைப் பிரித்தெடுத்து அந்தச் செடி விளையும்.

டி.வி ரேடியோ இவைகளில் ஒலி ஒளி அலைகளாக ஒலி பரப்பு செய்கிறார்கள், எத்தனையோ இடங்களிலிருந்து பரப்புகின்றார்கள். இருந்தாலும் நாம் எந்த அலை வரிசையில் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ இந்தக் காற்றிலிருந்து அந்த ஸ்டேசனிலிருந்து வருவதை மட்டும் பிரித்து நமக்குக் காட்டுகின்றது.

இதைப் போல நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மை நமக்குள் எடுக்கும். நமக்குள் அதை இழுத்தே கவர்கின்றது.
1.வேதனைப் பட்டோம் என்றால் வேதனையைக் கவரும்.
2.கோபத்தை எண்ணினால் கோபமான உணர்வைக் கவரும்.

இப்படி எந்தெந்த எண்ணத்தின் உணர்வை கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மை நமக்குள் கரு முட்டையாக மாறும். இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகங்களில் இது இணைகின்றதோ அந்தக் காலப் பருவமாகும் பொழுது அது அணுவாக மாறுகின்றது. கூட்டை விட்டு வெளி வருகின்றது.

நத்தைகளைப் பார்த்தால் அந்த ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அந்த ஓடு அதற்குப் பாதுகாப்பு. அதே போல் நாம் கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் அணுக்களாகப் பாதுகாப்பாக நம் உடலின் உறுப்புடன் ஒட்டி உருவாகின்றது.

அது எந்த உணர்வு கொண்டு உருவானதோ அதனின் சத்தை இரத்தத்தின் மூலம் வருவதை உறிஞ்சி உணவாக எடுத்து அதன் மலத்தை இட்டு உறுப்புகளாகச் சேர்க்கின்றது.
1.ஏனென்றால் அணுவை நாம் பார்க்க முடியாது.
2.ஆனால் அந்த அணுவின் மலம் தசையாக உடலாக மாறும் பொழுது காண முடிகின்றது.

உறுப்புகளில் சேர்க்கும் பொழுது என்ன ஆகின்றது…?

ஏற்கனவே நல்ல அணுக்களால் ஆன உறுப்புகள் உடல் நன்றாக அழகாக இருக்கும். ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிலே சேர்த்து இணைந்து விட்டால்
1.உதாரணமாக நுரையீரலிலோ கல்லீரலிலோ அந்த மாதிரி அணுக்கள் தேங்கி விட்டால்
2.விஷத்தின் தன்மை பாய்ந்த பின் அந்தந்த உறுப்புகள் நலிகிறது.

அடுத்து நம் இரத்தங்களைப் பிரிக்கும் இருதயத்தில் உட் புகுந்து அங்கிருந்து பல உட்பிரிவுகளாகச் செல்கின்றது. இருதயத்தில் இயற்கையாகவே மூன்று வால்வுகள் இருக்கின்றது.

அதிலே இiந்த வேதனைப்படும் அணுக்கள் உருவாகினால்
1.மூன்றில் ஒன்று அடைபட்டாலும் இரண்டு எடுக்கும்
2.இரண்டில் அடைபட்டாலும் ஒன்று எடுக்கும்.
3.ஆனால் ஒன்றில் எடுக்கப் போனால் திணறல் அதிகமாகும்.
4.கடைசி அந்த ஒன்றிலும் அடைபட்டால் அவ்வளவு தான்.

விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் எத்தனையோ காட்டுகின்றார்கள். வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உறுப்புகள் உருவாகின்றது, மற்ற மிருக இனங்களில் இத்தகைய நோய்கள் வருவதில்லை.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் (ஞானகுரு) என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு உணர்வுகளை எடுக்கப்படும் பொழுதும்
1.நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?
2.உறுப்புகளுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கின்றது…?
3.அணுக்களுக்குள் என்ன நடக்கின்றது…? என்று குருநாதர் ஒவ்வொன்றாகக் காட்டினார்.
4.அதை நேரடியாகப் பார்த்ததால் தான் உங்களிடம் சொல்கிறோம்.

சாமிக்கு ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்திகளும் கொடுத்தார். நாம் இதையெல்லாம் பார்க்க முடியுமா…? என்று எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நிலைகளை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள்

யாம் உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
1.நாம் இதை எல்லாம் என்றைக்குப் பெறப் போகின்றோம் என்று
2.உங்கள் எண்ணத்தை இப்படிக் கொண்டு போனால்
3.நான் சொல்வது உங்களுக்குள் பதிவே ஆகாது – அந்த ஆற்றல்களை எடுக்கவும் முடியாது.

ஏனென்றால் நம் எண்ணத்தால் எப்படி நமக்கு நோய் வருகின்றதோ அதே எண்ணத்தால் அந்த நோய் நமக்கு வராமலும் தடுக்க முடியும். ஆகவே தீமைகள் தாக்கும் பொழுது நீங்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் கொடுத்த சக்திகளை பல கோணங்களில் உங்களுக்கும் சொல்லி அந்த ஆற்றல்களை ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.

எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

“என்றோ நடந்தது…” என்றாலும் நீங்களும் அதைப் பெற முடியும்

 

ஆதியிலே… ஒவ்வொரு அணுக்களும் மோதி மேகமாகி மேகம் அடர்த்தியாகி எடையற்ற நிலைகளில் கூடுகின்றது. இப்படி ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்தபின் இந்த அணுக்கள் மேகக் கூட்டத்திற்குள் மோதுகின்றது.

மோதலான பின் நீராக வடிகின்றது. நீரான பின் பல விதமான உணர்வு கொண்ட அணுக்கள் அதனுடன் சிக்கி எடை கூடுகின்றது… நகர்ந்து ஓடத் தொடங்குகிறது.

ஓடும் நிலையில் உராய்கின்றது… வெப்பமாகின்றது… ஆவியாக மாறுகின்றது இந்த உணர்வுகள் இரண்டறச் சேர்த்து ஒரு பொருளாக உருவாகின்றது.

அதாவது… இயற்கை அதனுடைய சந்தர்ப்பத்தில் இதைக் கடந்த நிலைகள் கொண்டு ஒன்றின் தன்மை அடைந்த பின் ஓடும் வேகத்தில் சூடாகி ஆவியாகி இதற்குள் சிக்கிய உணர்வுகள் அணுத் தன்மையாகும் போது பரமாகிறது.

பரம் என்றால் எல்லை… ஒரு பொருளாகின்றது… ரூபம்…! அதற்குத் தான் “பரம்பொருள்” என்று காரணப் பெயரை வைக்கிறார்கள்.
1.இது எல்லாம் இயற்கை எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் மனிதனான பின் அணுவின் இயக்க ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அவன்.
2.அவனுள் அவன் கண்டு… உண்மைகளை உணர்ந்து… உணர்வின் இயக்கம் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்கினான்
3.அவனுள் விளைந்த இந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டதை நமது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

என்றோ நடந்தது…!

ஆனால் மனிதனான பின் தன்னை அறிந்து கொள்ளும் உணர்வால் அறிந்த அவன் (அகஸ்தியன்) அவனுள் விளைந்த உணர்வின் ஒலியலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது நமது பூமியில்.

ஏனென்றால் திட்டியவர்களை எண்ணும் பொழுது உடனே உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனைப்படும்படி ஒருவன் செய்வதைப் பார்த்தவுடன் பாவிப்பயல் இப்படிச் செய்கிறானே….! என்ற உணர்ச்சிகள் தூண்டுகின்றது… இது விளைகிறது.

இதைப் போல
1.இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்திருப்பதை
2.எமது குரு… அவன் அருளைப் பெறும் உணர்வினை எனக்குள் பதிவு செய்து
3.நினைவு கொண்டு அதனைப் பார்…! அதை நுகர்ந்து அறி…! உலகம் எப்படி உருவானது என்ற உண்மையை உன்னில் நீ காண்.
4.இந்த உணர்வின் தன்மையை உனக்குள் விளையச் செய்
5.இயற்கை எப்படி விளைந்தது…? நீ மனிதனானது எவ்வாறு…? மனிதனான பின் நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…?
6.உன்னுடைய வாழ்க்கையினுடைய கதி என்ன…? (ஏனென்றால்) இந்த மனிதனுக்குப் பின் உடல் இல்லை.

உயிர் ஒளியானது… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுதல் வேண்டும். அந்த அருளைப் பெற்றவன் அகஸ்தியன். அவன் மண்ணுலகை வென்றான்… விண்ணுலகை அடைந்தான்… வானுலகையும் அளந்தான்… அண்டத்தையும் அறிந்தான்…!

அந்தச் சக்திகள் எல்லாம் பிண்டத்திற்குள் எப்படி விளைந்தது…? என்ற நிலையை அவன் கண்டுணர்ந்ததனால் அவனுக்குப் பின் வந்தவரால் “அகஸ்தியன்” என்று காரணப் பெயராக வைக்கப்பட்டது.

1.ஆதியில் நமது பூமியோ சூரியனோ இல்லாத காலங்களிளிருந்து “அதையெல்லாம்” அவன் அறிந்து உணர்ந்தவன்.
2.அவனுள் விளைந்த இந்தச் சக்தியைப் பெற்றால் அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எடுத்துக் கொண்டால் மதத்திற்கு என்று குருக்கள் உண்டு. உயர்ந்த தத்துவத்தை எல்லாம் பேசுவார்கள்.
1.ஆனால் அந்தத் தத்துவங்கள் மற்றவருக்குத் தானே தவிர
2.அந்தத் தத்துவம் தனக்கில்லை என்று நிலைகளில் தான் நடந்து கொள்வார்கள்.

அந்தத் தத்துவத்தின் கீழ் நடக்காதிருந்தாலும் அந்தத் தத்துவத்தை வளர்க்கப்படும் போது மற்ற மதங்களைப் பழித்துப் பேசுவதும் பகைமை ஊட்டுவதும் போன்ற நிலைகள் தான் இன்றும் உண்டு. எல்லோரையும் இணைத்துச் சேர்க்கும் நல்ல பண்புகள் இல்லை.

ஆனால் அந்த உயர்ந்த பண்பு நம் நாட்டில் நம் காலத்தில் வளர்ந்த தவறு செய்த ஒரு மகானுக்கு எப்படி வருகிறது…? தன் சுகபோகங்களுக்கும் சிற்றின்பங்களுக்கும் மது வகைகளுக்கு அடிமையான அந்த மனிதன் காந்திஜி தான்…!

காந்திஜி அரசியல் சட்டங்களை உணர்ந்தவர். BHARAT LAW மேல் நாட்டிலே படித்துணர்ந்தார். மேல் நாட்டின் அறிவையும் அவர் உணர்ந்தார். மேல் நாட்டில் செய்யும் அநாகரிகத் தன்மையெல்லாம் இங்கேயும் வந்து செய்தார்.

இவர் தனக்குள் இன்பத்தையும் சுகபோகத்தையும் குடிப்பதையும் தன் தாய் தந்தையையும் மீறியும் செயல்பட்டவர். மேலை நாட்டினர் நாகரீகத்தையும் மேலை நாட்டார் செய்யும் செயல்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்.

ஏனென்றால் செல்வத்தின் செழிப்பில் ஜமீன்தார் என்ற முறையில் அவர் வளர்ந்து வந்ததனால் பல சுக போகங்களையும் அனுபவித்து வந்தவர் அவர்.

ஆனால் இவருக்கு எப்படி இந்த ஞானம் கிடைத்தது…?

ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலுக்காகச் செல்லும் பொழுது அவர் தன் கண் முன் பல தவறுகள் நடப்பதைக் கண்டுணர்ந்தார். அங்கே நீக்ரோக்கள் வேதனைப்படும் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உணர்கின்றார்.

மதத்தை அடிப்படையாகப் படிப்பதும் மற்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சட்டத்தைப் படித்த அவர் தீமையில் இருந்து இந்த மக்களை எப்படி விடுவிக்க வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் நாளுக்கு நாள் வலு பெறச் செய்கின்றார்.

காந்திஜி தனது வாழ்க்கையில் தவறுகள் பல செய்து இருப்பினும் அந்த தவறுகளில் இருந்து தான் எவ்வாறு மீள வேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாக அவருக்குள் மேலோங்குகின்றது.

பிரிட்டனிடம் இருந்து ஒரு மதத்தின் அடிப்படையில் சிக்கி அவனுக்குக் கீழ்
1.தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் அதிலிருந்து நீதி வேண்டும்.
2.உலக மக்கள் மற்றோர் அடிமையில் இருந்து மீள வேண்டும்.
3.அருள் ஞானிகள் காட்டிய அருள் செயல்கள் தனக்குள் வளர வேண்டும் என்ற பேருண்மையை தனக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றார் காந்திஜி.

அதே சமயத்தில் தான் படித்த படிப்பின் நிலைகள் கொண்டு உலக நிலைகளை அறிவதற்கு தன் எண்ணங்களைப் பரவவிட்டு உலக நூல்களை அனைத்தும் படிக்கின்றார்… படிக்கின்றார்…!

படிப்பின் நிலைகள் கொண்டு
1.நாட்டில் நடக்கும் அரசியல் வாழ்க்கையும்
2.மதங்கள் சேர்ந்து மத வாழ்க்கையும் மக்களை எப்படித் திசை திருப்புகின்றது..?
மக்களுடைய மன நிலைகள் எப்படி மாறுகின்றது…?

மதத்திற்கு மதம் போர் செய்வதும் மதத்திற்குள் இனங்கள் ஒன்றொன்று போர் செய்தும் உண்மையில் மகான்கள் கொடுத்த ஞானிகள் கொடுத்த மனித வாழ்க்கைக்கு உண்டான நிலைகள் சிதறுண்டு உண்மையைப் பெற முடியாது எவ்வாறு போகின்றது இந்த நாடு என்ற நிலையைத் தெளிவாகக் கற்றுணர்கின்றார் மகாத்மாஜி.

வான்மீகி இயற்றிய இராமாயணத்தைக் காந்திஜி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.

அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று விட்டால் நம்மை அறியாமல் இயக்கும் தீமை உணர்வுகளை அடக்கி தீமை செய்வோர் உணர்வுகளிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்று அதை முழுமையாக உணர்கின்றார்.

சுதந்திரம் என்றால்… “நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது…” அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை… “அந்நியர்கள்…” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3.”சகோதரத்துவத்தைத் தான்…” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.

”மகிழ்ச்சி…” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள் சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா…!). வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு அது தான்.

அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்… அவருடைய எண்ண வலுவால்… நம் நாட்டுக்குச் சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது. உலக மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார்.

எண்ணவில்லை என்றால் “பதிவில்லை…” மீண்டும் நினைக்கவில்லை என்றால் “ஈர்ப்பு இல்லை”

 

ஒருவர் திட்டி விட்டார்… என்னை இப்படித் திட்டுகின்றான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்து விட்டால் மீண்டும் என்ன செய்கின்றோம்…?

திட்டினான்… திட்டினான்… திட்டினான்… என்று அவனுடைய உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி அவன் மீது வெறுப்பாகி இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் இதற்கும் வெறுக்கும் தன்மை வந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… பல விதமான நோய்கள் உடலிலே உருவாகின்றது.

இதையெல்லாம் இயற்கை எவ்வாறு விளைகிறது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கே உணர்த்துகின்றேன். பொறுமையாகக் கேளுங்கள்.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழுகின்றோம். அண்டத்தையும் அளந்தறியும் சக்தியாகக் கம்ப்யூட்டர் என்று சாதனம் மூலமாகக் காணுகின்றார்கள். உடலின் இயக்கத்தையும் அறிகின்றான்.

எங்கோ காணா இடத்தில் இருப்பதையும் (கோள்கள்) இங்கிருந்து நுகருகின்றான். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்கி உந்து விசையால் விண்ணிலே ஏவுகின்றான்.

கோள் எங்கே இருக்கின்றதோ அதை இங்கே பதிவாக்கி அதை வைத்து இராக்கெட் என்ற சாதனத்தை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
1.தன் இனமான உணர்வு கண்டபின் அந்தக் கோளுக்கே இவன் செலுத்திய இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது…
2.அங்கிருப்பதையும் அறியும்படி செய்கிறது.

இவ்வாறு இருக்கும் இன்றைய விஞ்ஞானக் காலத்திலே பக்தி மார்க்கங்களில்… யாரோ செய்வார் சாமியார் செய்வார் எந்திரம் செய்யும் மந்திரம் செய்யும் ஜாதகம் செய்யும் யாகம் செய்யும் வேள்விகள் செய்யும் என்ற நிலைகளில் தான் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

நமக்குள் தீமை என்ற நிலை இருப்பினும் அதை நீக்கிட
1.அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அதை நமது உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது
2.அவ்வழியில் அதைத் திரும்ப எண்ணும் பொழுது நமக்குள் அந்த நன்மை செய்விக்கும் நம் உடலை நலம் பெறச் செய்யும் சக்தியாக வளரும்
3.நம் சொல்லைக் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதனைத் தெளிவாகக் கூறி இருப்பினும்
4.அதை நாம் யாரும் இதுவரையிலும் பின்பற்றவில்லை.

சாமியார் வந்துவிட்டால் சாமியாரிடம் தான் பெரிய சக்தி இருக்கிறது என்று அவரிடம் ஆசி வாங்கச் சென்று விடுகின்றோம். ஆனால்
1.சாமி சொன்ன இந்த உணர்வின் சக்தியைப் பதிவு செய்து அதை மீண்டும் நினைவு கொண்டால் அந்த உயர்ந்த குணத்தை நாம் பெற முடியும்.
2.தனக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.நம் சொல் பிறரைப் புனிதமாக்க உதவும் புனிதமாக்கும் உணர்வுகள் நமக்குள் விளையும் என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அடிக்கடி நாம் ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் அடுத்து நாமும்… குறையான செயல்களைச் செயல்படுத்தும் அதுவாக மாறி விடுகின்றோம்.

அடிக்கடி ஒருவரை வேதனைப்படும்படி செய்தோம் என்றால் வேதனைப்படச் செய்யும் உணர்வுகள் நமக்குள் விளைந்து “ஐயோ எனக்கு மேல் வலிக்கின்றது… தலை வலிக்கிறது…” என்று வரும்.

இவர் நினைப்பார்…! நான் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொன்னேன். அவர் தவறு செய்வதைத் தானே நான் சொன்னேன் என்று…! ஆனால் தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படி புண்படுத்தும்படி சொல்லைச் சொல்வார்.

இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்த பின்… கை வலிக்கின்றதே கால் வலிக்கின்றதே மேல் வலிக்கின்றது…! நான் எல்லோருக்கும் நல்லது தானே செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே…! என்று பெரும் பகுதி பிறரைக் குறை கூறிப் பேசும் நிலைகளே நடக்கின்றது.

ஆனால் இவர்கள்
1.தெய்வத்திற்குப் பூமாலை சூட்டுவதும் அபிஷேகங்கள் செய்வதும் ஆராதனைகள் செய்வதும் இப்படிச் செய்தாலும்
2.பிறரிடம் சொல்லும் போதெல்லாம் தன்னைத்தான் எண்ணாது தவறுகளைச் செய்து கொண்டே அதை நுகர்வதும்
3.அப்படி நுகர்வதை உயிர் அந்த அணுவாக மாற்றி இவர் உடலாக மாற்றி அந்த உணர்வின் சக்தியாகத் தனக்குள் இயக்கும் என்பதை மறந்து விட்டார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் இயற்கை எப்படி விளைந்தது…? கடவுள் ஒருவனா…? கடவுள் ஒருவன் இல்லை…!

வெப்பம் காந்தம் விஷம் மணம் அந்தச் சத்து இந்த ஐந்தும் சேர்ந்து இயக்கும் நிலைகளில் உருவாக்கும் சக்தி பெற்றது. கடவுள் ஒருவன் என்றால் எப்படி நியாயமாகும்…!

ஓரு செடியானாலும் அது தான். ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலையில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவதே கடவுள்.
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்தால் உருவாக்குவதை ஈசன் என்றும்
3.உருவான பொருளைப் பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும்
4.உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் துடிப்புக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்று சாஸ்திரங்கள் தெளிவாக நமக்கு இப்படி உணர்த்துகின்றன.

நான் (ஞானகுரு) இப்போது பேசுகிறேன் என்றால்…
1.இது எல்லாம் ஆதியில் விளைந்த அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த அவனுள் விளைந்த உணர்வுகள் தான்
2.வெளியிலே பரவி உள்ளது… அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
3.அதை நீங்களும் நுகரலாம்…!

இந்த உலகில் மனிதனாகப் பிறந்தோர் அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து கொண்ட பின் அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அதைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நல்ல பாம்பு தன் உடலில் உருவான நஞ்சை ஒரு எலி மேல் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக் கொள்கிறது. எலியின் உணர்வை இயக்குவதும் அந்த நஞ்சு தான்.

எலியின் உடலில் உள்ள நஞ்சின் தன்மை வேறு. அதே போல தவளையின் உணர்வுகள் அதில் உள்ள விஷங்கள் வேறு. நல்ல பாம்பு தவளை மேல் தன் விஷத்தைப் பாயச்சி அதையும் உணவாக உட்கொள்கின்றது.

பாம்பு தனக்குள் உருவாகும் விஷத்தைப் பல உயிரினங்களின் பாய்ச்சிப் பல விதமான விஷங்கள் கொண்ட உடல்களை அந்தப் பாம்பு விழுங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பலதரப்பட்ட உயிரினங்களைப் பாம்பு உணவாக உட்கொள்வதால் பல விஷத்தின் தன்மை அந்தப் பாம்பிற்குள் கலக்கப்பட்டு அது பல விதமான உணர்வின் வர்ணங்களாக இருக்கும்.
1.நாகரத்தினத்தை எடுத்துக் கொண்டால் அதிலே பல வர்ணங்கள் இருக்கும்.
2.ஆனால் வைரத்தின் நிறங்களோ நீலம் கலந்த நிலையில் வரும். அதனுடைய மின்னணு ஒளியின் தன்மை கூடும்.
3.பாம்பு விஷத்தைப் பாயச்சி பல உணர்வுகளை எடுத்ததால் நாகரத்தினத்தில் பல பல நிறங்கள் வரும்.
4.இதுதான் நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் உண்டான வித்தியாசம்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களின் விஷங்களைத் தனக்குள் எடுக்கும் பொழுது அந்த விஷங்கள் உறைந்து விடுகிறது. ஆனால் வளர்ச்சி அற்றது. அது முழுமை அடைந்து விட்டால் அதிலே விளைந்த உணர்வுகள் அந்த ஒளியைத் தான் ஊட்டும்.

1.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியான நிலையில்
2.பல விதமான கோணங்களில் விஷத்தை ஒடுக்கிய உணர்வுகளைப் பெற்றதால்
3.வைரத்தைப் போன்ற அந்த நீலத்தின் தொடர் கொண்டு நீல நிறமாக ஒளிச் சுடராகக் காட்டுகிறது.

உதாரணமாக நெருப்பு எரியும் போது அது நீல நிறமாக இருந்தால் தான் அந்த நெருப்பிற்கே வீரிய சக்தி உண்டு. சிவப்பாகவோ மஞ்சளாகவோ நிறம் இருந்தால் அதற்கு அவ்வளவாக வலு இல்லை.

நீலம் கலந்த ஒளி வரப்போகும் போது சூடு அதிகமாகும். ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை குவிக்கப்பட்டு வீரியத் தன்மை பெறுகிறது.

இதைப் போலத்தான் பல கோடிச் சரீரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக வளர்ச்சியாகி இயற்கையில் விளைந்த விஷத்தை ஒடுக்கி ஒடுக்கித் தன் வலுவான நிலைகள் பெற்றவன்.

தன் உடலில் உள்ள அணுக்களை எல்லாம் அத்தகைய வலுவான ஆற்றல்களைப் பாய்ச்சிக் கொண்டவன். திருமணமான பின் அகஸ்தியன் தான் பெற்ற சக்தி அனைத்தையும் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.

அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒரு உணர்வாகி இரு உயிரும் ஒரு உயிராக ஒன்றென இணைத்துக் கொண்டவர்கள்,

இருந்தாலும் ஒரு மனிதன் தனித்த நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் வெல்வேன் என்ற உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்தாலும் பாம்புக்குள் வீரிய சக்தி எப்படி நாகரத்தினமாக மாறுகின்றதோ இதைப்போல தனித் தன்மை கொண்டு வளர்ச்சி பெறும் ஜீவனற்ற கல்லாகத் தான் இருக்கும்.

அதாவது கடும் தவம் என்ற நிலைகள் கொண்டு முனி என்ற நிலையில் எதையும் தாக்கிடும் உணர்வாகத் தான் வரும்.
1.அப்படிப்பட்ட உணர்வைத் தான் பெற முடியுமே தவிர
2.இரண்டறக் கலந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி பெறச் செய்யாது.

ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் பேரொளியைக் கவர்ந்து “கணவன் தன் மனைவி பெற வேண்டும்… என்றும் மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும்…!” இரு உணர்வும் ஒன்று சேர்த்து விட்டால்
1.துடிப்பு கொண்ட ஜீவனுள்ள உணர்வின் தன்மையாகப் பேரொளியாக வருகிறது.
2.திடப் பொருளாக மாறாது. பேரருளின் சேமிப்பாக ஒளி அலைகளாகப் பேரொளியாக மாறும்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் இளம் நீல நிறமாக இருக்கும்.
4.தியானம் செய்பவர்கள் அதைக் கண்களால் நிச்சயம் காண முடியும்.

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

 

எம்முடைய அருள் உரைகளைக் கேட்கும் அனைவரும் நீங்கள் இதை ஆழமாகப் பதிவு செய்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து
1.என்றும் அழியா பெருவீடு பெருநிலை என்று ஒளிச்சரீரம் பெற்று
2.நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி ஒளி பெறும் உணர்வின் தன்மை உங்கள் உடலிலே வளர்த்து
3.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நூல் வடிவிலே உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

உபதேச வாயிலாகக் கொடுத்ததை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது சொல் வடிவிற்கும் எழுத்து வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதினால் யாமே இதை எழுத முடியாததால் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவரை வைத்து இதை எழுதுவதினால்
1.சிறிது மாற்றங்கள் குறைகள் இருந்தாலும்
2.அதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் பொழுது இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே அந்தக் குறைகளை எண்ணாது மீண்டும் மீண்டும் இதைப் படிக்கும் பொழுது இடைவெளியில் விடப்பட்ட சிறு குறைகளையும் அதை நீக்கக்கூடிய சக்தியாக உங்கள் உணர்வுக்குள் தோன்றி அதில் நிறைவு செய்யும் நிலையை நீங்கள் அடைகின்றீர்கள்.

1.நீங்கள் படிக்கும் பொழுது எத்தகைய குறை வந்தாலும் மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
3.எழுத்து வடிவில் வரும் குறைபாடுகளை நீக்கிவிட்டு மூலப்பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து
4.உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

இந்த உணர்வோடு நீங்கள் படித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அந்த மகரிஷியின் அருள் சக்தியை சேர்த்துப் பாருங்கள்.

1.எழுத்து வடிவில் மாற்றங்கள் இருந்து உண்மைகள் மறைந்து இருந்தாலும்
2.அந்த உண்மைகளைத் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் உணர்வதை நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியா ஒளிச்சரீரமாக அதைப் பெறும் நிலையாக உங்களுக்குள் ஊட்டப்படுவது தான் இந்தத் தியானத்தின் அறவழிகள்.

ஆகவே இதைத் தெளிவாகத் தெரிந்து இதைக் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று அந்த உணர்வின் சக்தி ஒளியாக மாற்றும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று என்றுமே அந்த மகரிஷிகளின்ன் நினைவுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

தபோவனத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட
1.அனைத்துப் புத்தகங்களையும் அனைத்து ஒலி நாடாக்களையும் அதில் வெளிப்பட்டுள்ள உபதேசங்களை நீங்கள் படித்து கேட்டு…
2.மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டும் என்று உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.

கூட்டுத் தியானம் இருப்போம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். ஆத்ம சக்தி செய்வோம்… அன்றாட வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம்.

பொன்னான இந்த மனிதச் சரீரத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்
1.நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று சதா பிரார்த்திப்போம்.
2.நாம் பார்க்கும் எல்லோரும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.தபோவன தியான மண்டபத்தில் நீங்கள் அமர்ந்து தியானித்தால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆகாதவர்களைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வரும். போகிறான் பார்…! இவன் தான் என்னை ஏமாற்றினான்…! என்ற உணர்ச்சிகள் நம்மை அறியாமலே இயக்கும்.
1.ஏதாவது நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தாலும்
2.அவரைப் பார்த்ததுமே இத்தகைய உணர்வுகள் வரும்.

இது எதனால் வருகிறது…?

சில பேர் என்ன செய்வார்கள்…? அவர்களுடைய உணர்விற்குத் தகுந்த மாதிரி ஒரு கம்பீர நடையாக இருக்கும். கம்பீரமாக மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு அவர்கள் நடந்து போவார்கள்.

ஆனால் நம்முடைய உணர்வு சோர்வடைந்திருக்கும் பொழுது அவரைப் பார்த்தோம் என்றால் என்ன சொல்வோம்…? நடையைப் பார்…! என்னத்தைக் கண்டான்… என்று தெரியவில்லை…! என்போம்.

அவருடைய கம்பீரமான நடையைப் பார்த்தவுடனே நம்மை அறியாமலே அந்த வெறுப்பும் வேதனையும் சோகமும் வரும். அதாவது தாங்க முடியாமல் அந்த உணர்ச்சிகள் இயக்கும்.

அதிகமான ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தால் தாங்க முடியாமல் இருக்கிறோம் அல்லவா. அதே மாதிரி அவருடைய மகிழ்ச்சி நம் உடலில் நல்ல அணுக்களுக்கு தாங்க முடியாது போய்விடுகிறது.

அப்போது நாம் நுகரும் உணர்வுகள் பொறாமையாக வளர்ந்து விடுகின்றது. ஆனால் பொறாமை உணர்வை வளர்த்து விட்டோம் என்றால் அடுத்து என்ன தான் அங்கே நல்லதைச் சொன்னாலும் நம் வாயிலே வேறு விதமாகத்தான் வார்த்தைகள் வரும்.

யார் யாரை ஏமாற்றினாரோ…? என்னென்ன செய்தாரோ…? அதனால் தான் இப்படிக் கம்பீரமாகப் போகிறான் போல…! என்று அறியாமலே இந்த மாதிரி உணர்வுகளைச் சேர்த்து நம் உடலுக்குள் அணுக்களை வளர்த்து விடுகிறோம்.

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகள் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் நமக்குள் அந்தத் தாங்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

ஆனால் அந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்குள் தோன்றுகிறது என்றாலும் அது நாமல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை நம் உடலில் சில சிரமங்களும் பக்குப்பட முடியாத நிலைகளும் அவ்வாறு இயக்கிவிடுகின்றது.

1.அதாவது நம் குழந்தை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.கடன் வாங்கியவன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றான் என்ற
3.இதைப் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக இயக்கினால் நம்மை அறியாமலே அந்தச் சலிப்பும் சஞ்சலமும் வரும்.
4.அந்த நேரத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற உணர்வு பட்டவுடனே
5.நம்மால் அதைத் தாங்க முடியாதபடி எதிர் நிலையாகின்றது.
6.அந்த அணுக்களால் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா..!

ஆகவே இதைப் போன்ற சந்தர்ப்பங்களால் தீமையான நிலை உருவாகிறது என்றால் “ஈஸ்வரா…! என்று தடைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சேர்க்கப் போகும் போது இங்கே உருவாக்கி விடுகிறது.

1.விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) எப்படி வித்தின் தன்மை
2.அந்தச் செல்களை கொஞ்சம் மாற்றி அமைத்துப் புது வித்துகளை உருவாக்குகின்றார்களோ அது போல்
3.நமக்குள் மற்ற உணர்வுகள் பதிவாகும் போதே
4.அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் இணைத்திடல் வேண்டும்.

கோபமோ ஆத்திரமோ பயமோ வேதனையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துக் கொண்டு அவர்களுக்குள் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வு வர வேண்டும். அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுங்கள்.

இப்படிப் பழகிக் கொண்டால் இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் இங்கே பதிவாகும் (“RECORD”). அது மட்டுமல்ல…!
1.சண்டை போடுகின்றவர்களை எங்கே பார்த்தாலும்
2.அடுத்தாற்போல நமக்குள் அந்தச் சரிபடுத்தும் உணர்வின் தன்மைகளே வரும்.
3.நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதை எல்லாம் கொண்டு வர வேண்டும்.

அதை விட்டு விட்டு நான் சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன். நன்றாக ஆசிர்வாதமும் கொடுத்தார். நானும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

ஆனால் என் கஷ்டங்கள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. இது என்ன தியானம்…! என்று சொல்கிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் “கார்த்திகேயா…” என்ற நிலையில் தெளிவாக அறிந்து கொண்ட பின்… தீமைகளை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம். முறைப்படி எண்ணினால் காற்றிலிருக்கும் அந்தச் சக்திகளை எளிதில் நீங்கள் பெற முடியும்.

அந்த அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது புதுவிதமான உணர்ச்சிகளாக நம் உடலிலே இருக்கும். ஆனால்
1.தீமை செய்பவர்களைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்
2.தொக்கிய நிலைகளாக நம் இரத்த நாளங்களில் கலந்து வந்தாலும்
3.நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அழுத்தம் அதை அடக்கும்.

வலுக்கொண்ட உணர்வுகள் நம் உடலிலே வளர்ச்சி பெறும். ஆக சிந்திக்கும் ஆற்றல் வரும். இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாள் இதைப் பழக்கம் செய்து கொண்டால் அப்புறம் சர்வ சாதாரணமாக வரும்.

நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டுத் தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது… அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
1.அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.
2.அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது.
3.இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும்.
4.அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லதாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும்
1.தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து
2.உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும்.
4.தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சமையல் செய்யும் பொழுது அதிலே பல பல பொருள்களைப் போடுகிறோம். நெருப்பை வைத்து வேக வைக்கப்படும் பொழுது பார்த்தால் பல விதமான வாசனைகள் வருகிறது.
1.ஏனென்றால் நெருப்பிலே போட்டு இரண்டறக் கலந்து
2.அது வேகப்படும் பொழுது தான் அது ருசியாக மாறுகிறது.
3.இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இரண்டறக் கலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

எப்படி…?

நம் உயிர் இந்த உடலுக்குக் குருவாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கோ வியாழன் கோள் குருவாக இருக்கின்றது.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலிருந்தும் வெளி வரும் தூசிகள் (கதிரியக்கச் சக்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாகத் தாக்கப்பட்டு மற்ற கோள்களின் சத்துடன் கலக்கப்பட்டு அந்த உணர்வுகள் வந்தாலும்
1.இவை அனைத்தையும் ஒருக்க ஏற்றி இணைத்திடும் பாலமாக வியாழன் கோள் இருக்கின்றது.
2.ஆக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வியாழன் கோளின் சத்து கலந்தால் தான்
3.மற்றதுடன் இணைத்து அந்த அணுத் தன்மைகளை மாற்றும் நிலை வரும்.
4.(இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது)

அதே போல் தான் நம் உயிரின் தன்மையும் குருவாக இயக்குகிறது.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதை எல்லாம் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ நுகர்கின்றோமோ அதையெல்லாம் நம் உயிர் இணைத்து நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது. இது தான் நம் உயிரின் இயல்பு.

இயல்பாக இப்படி இருந்தாலும்
1.நம் உயிரின் துணை கொண்டு அதாவது உயிரான குருவின் துணை கொண்டு
2.எந்தெந்த உணர்வின் தன்மைகளைச் சேர்க்கின்றோமோ
3.அதற்குத்தக்கவாறு மற்றதை எல்லாம் நாம் மாற்ற முடியும்.

நமது ஆறாவது அறிவை முருகா என்றும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டினார்கள் ஞானிகள். அதே சமயத்தில் முருகனை “குமரகுரு… குருபரன்…!” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அதை வைத்து மாற்றியமைக்கும் தன்மை வருகிறது.

ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் உணர்வை இப்படி இணைத்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அமைக்க முடியும்…!

இதைக் கொண்டு நாம் இணைத்து நல்ல உணர்வுகளை நாம் வளர்த்தல் வேண்டும். நம் ஞானிகள் காரணப் பெயரை வைத்துக் காட்டியதன் நிலைகள் சாதாரணமானதல்ல.

யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது…! உருவாக்கும் சக்தியான உயிரிடேமே வேண்டினால் தான் நாம் மாற்றி அமைக்க முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

கண்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள்…
1.உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்று அந்தச் சக்தியை முதலிலே நாம் பெறுதல் வேண்டும்.
2.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையை உருவாக்குதல் வேண்டும்.

இந்த உணர்வின் சக்தி கொண்டு குழந்தைகளுக்குள் சில குறைபாடுகள் இருப்பினும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்டுங்கள்.

நம்முடைய நினைவுகள் அதுவாக இருக்க வேண்டும்.

கல்வியில் திறன் இல்லை என்றாலும்
1.மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்கள் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவனாக வளர வேண்டும்
3.என்றும் அருள் வழியிலே வாழ வேண்டும் என்று எண்ணங்களைக் கூர்மையாக அவன் மேல் பாய்ச்சுங்கள்.

அதைப் போல குழந்தைகளும் எண்ணி ஏங்கி இதைப் பதிவாக்குங்கள்.

அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.

அப்படி இணைக்கக் கற்றுக் கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் ஞானமாக வளரும்… அந்த உணர்வின் தன்மை விளைகின்றது. குழந்தைகள் மீது இப்படித்தான் பாசம் வைக்க வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் வரும்.

இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவில் சிக்குண்ட நாம் ரேடியோ டிவி இதைப் போன்ற நிலைகளில் பார்த்து கர்ப்பமுற்று இருக்கும் காலங்களில் பகைமை உணர்வுகளையும் மற்ற தீமைகளின் உணர்வுகளை அதிகமாகப் பார்க்கப்படும் பொழுது இதைப் பதிவாக்கி விட்டால்… பிறக்கும் குழந்தைகள் அதைத்தான் செய்யும்.

ஆனால் கர்ப்ப காலங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று யாம் உபதேசித்த உணர்வுப்படி
1.அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினைச் செலுத்தினால்
2.வியாசகன் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டானோ இந்த உணர்வுகள் அனைத்தும்
3.கருவிலே வளரும் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெறும்.

அகஸ்தியன் எவ்வாறு வானஇயலையும் துருவத்தின் ஆற்றலையும் புவியியலையும் அறிந்தானோ கருவிலே வளரும் குழந்தைகள் அதைப் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்குங்கள் துருவ தியான நேரத்தில்.

அதன் உணர்வைத் தனக்குள் செலுத்துங்கள்… தன் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வலைகள் கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் அது பாயும். நமக்குள் வளர்ச்சி கொண்டிருக்கும் அணுக்களுக்குள்ளும் இந்தச் சக்தி பெருகும்.

கண்ணின் பார்வை எங்கிருந்தாலும் அதைத்தான் “பரமாத்மா” என்று சொல்வது.
1.நாம் இந்த நினைவை… இந்தப் பிரபஞ்சத்திற்குள் எங்கே நினைவைச் செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்களுக்கு உண்டு.

அதை ஈர்க்கும் சக்தி கொண்ட மனித உடலுக்குள் உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது அதைப் பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்.

எனக்கு குருநாதர் அதை கொடுத்ததால் தான்…
1.அந்த வலிமை கொண்டு பெறும் சக்தியும் அதை அறிந்திடும் உணர்வும் வளர்த்திடும் உணர்வும் பெற்றாலும்
2.உங்களுக்குள் நீங்களும் அதை பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் உங்களுக்குள் இதைப் பதிவு செய்கிறேன்.

நீங்கள் அனைவரும் பெற்று உங்களைச் சார்ந்தவர்களையும் அதைப் பெறச் செய்து பகைமைகளையும் தீமைகளையும் அகற்றும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதை நீங்கள் எல்லோரும் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் மின் கதிர்கள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகித் தாக்கும் பொழுது மின்னல்கள் உருவாகின்றது. அத்தகைய மின்னல்கள் கடலிலே தாக்கப்படும் போது அதற்குள் அடங்கி மணல் பாங்காக மாறுகின்றது. அதை விஞ்ஞானி பிரித்து எடுத்து கதிரியக்கப் பொறியாக மாற்றுகின்றான்.

மாற்றிய கதிரியக்கச் சக்தியை வைத்து அணு உலைகளை உருவாக்கி அணு குண்டுகளையும் உருவாக்கி விட்டார்கள். அணுவின் இயக்கத்தைப் பிரித்து அணுவின் ஆற்றலைப் பெருக்கி ஒரு பொருளுடன் மோதச் செய்து வெடிக்கச் செய்து நாட்டையே அழிக்கும் தன்மைக்கு வந்துவிட்டார்கள்.

இயற்கையில் இரு நட்சத்திர உணர்வுகள் மோதும் போது மின் கதிர்களாக எப்படி மாறுகின்றதோ அதே போல விஞ்ஞானிகளால் பிரித்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கதிரியக்கச் சக்திகளையும் அவன் சோதித்து இது இரண்டையும் மோதச் செய்யும் போது அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது,

பூமியில் உருவான ஒவ்வொரு பொருளுக்குள்ளும் (கல்லானாலும் மணலானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்) நட்சத்திரத்தின் சக்திகள் பதிந்துள்ளது. செயற்கையில் உருவான நிலைகள் கொண்டு வெடிக்கச் செய்து இரண்டும் மோதும் போது
1.கல்லுக்குள் இருக்கும் உணர்வுகள் அது வீரியம் ஆகி
2.அந்தக் கல்லை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் பஸ்பமாக ஆவியாக மாறி
3.மரங்களுக்குள்ளும் மனித உடலுக்குள்ளும் மற்ற உயிரினங்களுக்குள்ளும் அனைத்திலும் ஊடுருவி
4.அதற்குள் இருக்கும் எதிர் நிலையான நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி மின்னலைப் போன்று மின்னிப் பொசுக்கிப் பூராவற்றையும் பஸ்பமாக்குகிறது.

ஆகவே இதைப்போல விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அணு விசைகள் அனைத்தும் மக்களையும் நாட்டையும் அழிக்கும் உணர்வுகளுக்கே பயன்பட்டது. நாட்டாசை கொண்டு உலகை அழித்திடும் உணர்வுகளுக்கே அதைப் பயன்படுத்துகின்றார்கள்.

அன்றைய அரசர்கள் மந்திரங்களைச் சொல்லி மாயங்களைச் சொல்லித் “தான் சக்தி பெற்று வாழ வேண்டும்…!” என்று அவர்கள் வித்திட்ட அதே உணர்வே இன்றும் இயக்கிக் கொண்டுள்ளது.

அசுர உணர்வு கொண்டு ஒரு மனிதனுக்கு மாமிசங்களைக் கொடுத்து சோம பானம் (மது) என்ற உணர்வுகளைக் கொடுத்து அவனை மதி மயங்கச் செய்து மந்திர ஒலிகளை எழுப்பி அவனுக்குள் அதை வளர்க்கப்பட்டு அவன் இறந்த பின் அந்த உணர்வை மந்திரத்தால் கவர்ந்து கொண்டார்கள் அன்றைய அரசர்கள்.

தனது ஆட்சிக்காக வேண்டி இதைப் போன்ற நிலைகளை ஒரு இயக்கச் சக்தியாக மாற்றி பில்லி சூனியம் ஏவல் என்ற நிலையில் மனித உடலுக்குள் மோதச் செய்து மற்ற எதிரி நாட்டாரைப் பித்தனாகவும் பைத்தியக்காரனாகவும் தன்னை மறந்து செயல்படும் நிலைகளுக்கு அன்று அரசர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

அதைப் போலத் தான் இன்று விஞ்ஞானிகளும் விஞ்ஞானக் கருவி கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகள் கொண்டு வந்து மனிதனைப் புத்தி பேதமாக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆக மொத்தம் நியூட்ரானும்… எலக்ட்ரிக் – எலெக்ட்ரான்… அதே சமயத்தில் கதிர் இயக்கப் பொறியான அந்தக் கதிர் வீச்சின் உணர்வுகள்…! இந்த மூன்றையும் தனித்தனியாக எடுத்தாலும் அதிலே “நியூட்ரான்…” என்ற அழுத்தம் கடும் விஷத் தன்மை கொண்டது.

விஷத் தன்மை கொண்ட நிலையில் சுழல் போல உருவாகி அந்த உணர்வின் தன்மை ஒன்றோடு ஒன்று மோதி
1.கட்டிடங்களிலேயோ மரங்களிலேயோ மற்றதுகளிலேயோ மோதும் போது
2.அது பூராவற்றையும் தூசி தூசியாகக் கரைத்துத் தூக்கி எறிந்து கொண்டு போகும்.

வலுக் கொண்ட கட்டிடங்களாக இருந்தாலும் அதற்குள் ஊடுருவி இந்தக் கதிர் இயக்கங்களின் விஷத் தன்மையால் அதனுடைய சக்தியை இழக்கச் செய்து காற்றலைகளாகப் பறக்கின்றது.

1.அதே சக்தி கடல் நீர்களிலே படரப்படும் போது கொதிகலனாக மாற்றி
2.மிகப் பெரிய மேகக் கூட்டங்களைக் கூட்டிச் சூறாவளியாக மாறி
3.நீரை எல்லாம் தனக்குள் அள்ளி வீசி மழை நீர் கொட்டு கொட்டென்று கொட்டி
4.நகரங்களையே சுத்தமாக அழித்திடும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் இன்றைக்குப் பெரும் பகுதியான நிலைகள் வருகின்றது.

இன்று (இப்பொழுதும்) மிகப் பெரிய புயல் என்று சொல்கிறார்கள் அல்லவா… (CYCLONE, TYPHOON, HURRICANE). இது எல்லாமே ஏற்கனவே பரீட்சாந்திரமாகச் சோதித்த நிலைகளும் அணு உலைகள் மூலமாகக் கசிந்த கதிரியக்கச் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டுப் பரவியதே காரணம்.

1.பரவி இருக்கிறது என்றால் பூமிக்கு வெளியில் மட்டுமல்ல.
2.பூமியின் நடு மையத்திலும் கலந்து விட்டது.
3ஆகவே எப்பொழுதெல்லாம் அது எதிர்மறையாகின்றதோ அப்பொழுதெல்லாம் எதிர்பாராத நிலைகளாக இது நடக்கும்.
4.எங்கெங்கு அதிகமாக அந்தக் கதிரியக்கங்கள் கசிந்ததோ அங்கே இதனின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்
5,இவர்கள் வைத்திருக்கும் கருவிகளால் அதை முழுமையாகக் கணிக்க முடியாது. அப்படியே கணித்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆகவே இதைப் போன்ற சூறாவளி என்று வரப்படும் பொழுது அதன் உணர்வுகள் நாம் மாற்றி அமைக்கும் சக்தியாக வளர வேண்டும். விஞ்ஞானத்தால் விளைந்து கொண்டிருக்கும் இத்தகைய இருள் சூழ்ந்த நிலைகளை முறியடிக்கும் சக்தியாக நாம் வளர வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன்… தன் உணர்வின் தன்மை ஒளியாக்கி உலகில் உள்ள நஞ்சினை வென்று ஒளியின் உணர்வைப் பெற்றவர். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெற்று நாம் இடும் மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் பரவும் நிலைகள் கொண்டு மக்களை நல்வழிபடுத்தும் உணர்வாக அது அமைந்து அதன் மூலம் நாமும் வாழ்ந்து நமது எதிர் கால சந்ததிகளையும் அருள் வழியில் வாழச் செய்வோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வைக் கூட்டி இருளை அகற்றி உணர்வை ஒளியாக்கி தெளிந்த மனம் கொண்டு வாழ்ந்திடும் நிலை பெறுவோம்.

1.விஞ்ஞான அறிவில் வரும் உணர்வுகளை நமக்குள் வராது
2.ஒரு சுழல் காற்றாக நாம் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் அது செயல்படும்…!
3.உங்களை நீங்கள் நம்புங்கள்.
4.நம்மைக் காப்போம்… நம் வீட்டைக் காப்போம்.. நம் ஊரைக் காப்போம்… உலகை காப்போம்…! என்ற உணர்வு கொண்டு நாம் செயல்படுவோம்.

“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு

 

அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பெற்ற ஆற்றல்களை எல்லாம்… அவனைச் சுற்றி இருந்த வட்டாரங்கள் அனைத்தும் இந்த அதிசயங்களைப் பார்க்கின்றது… பார்த்து ஆச்சரியப்படுகின்றார்கள்.
1.இவன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரும் பொழுது “உற்றுப் பார்த்தபின்”
2.இந்த உணர்வின் தன்மை அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் இதைத் தெரிந்திடும் அறிவாக வருகின்றது.

இவனுக்குள் விளைந்த அலைகளைக் கூர்மையாக அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது இவன் காணும் அதிசயங்களை மற்றவர்களுக்கும் அறியும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகிறது. அவைகள் இன்றும் உண்டு.

அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும்பகுதி நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது… 10 வருட காலம் காடு ,மேடெல்லாம் அலைந்தது.
1.அகஸ்தியர் எந்தப் பகுதிகளுக்கு எல்லாம் சென்றாரோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.குருநாதர் பதித்த உணர்வினை ஆங்காங்கு சென்று அதைப் பதிவாக்கிய பின் எது உண்மை எது பொய் என்பதை அறியும் பருவத்தைக் கொடுத்தார்..
3.இன்றும் எல்லோரும் அதை நுகர முடியும்.
4.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயம் அதை நுகர முடியும்.
5.நுகர்வதற்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றேன்.

வானை நோக்கி அகத்தியன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவனுக்குள் சிறுகச் சிறுக அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

மிருக இனங்களோ விஷ ஜந்துகளோ பூச்சிகளோ எல்லாமே இவனைக் கண்டு விலகி ஓடுகின்றது. கொசுக்களும் எரி பூச்சிகளும் ஓடுகின்றது… இவன் மேல் பட்டால் மடிந்து விடுகின்றது. குரு அருளால் இதையெல்லாம் என்னால் காண முடிந்தது… அறிந்து கொள்ள முடிந்தது.

நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டால் ஓம் நமச்சிவாய…!
1.திருப்பி இந்த உணர்வின் தன்மையை அதிகமாக நீங்கள் வளர்த்துக் கொண்டால் இந்த உண்மையின் உணர்வுகளை நீங்களும் அறியலாம்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கவும் உங்களால் முடியும்.

சாமி மட்டும் கெட்டிக்காரர் அல்ல. குரு கொடுத்தார்… அதை வளர்த்துக் கொண்டேன். குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் இதை வளர்க்கச் சொல்கின்றோம்.

வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செயல்படுத்த முடியும் பிறருடைய தீமைகள் விடுபட வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் அந்தச் சக்திகளை வளர்த்தால் உங்களுக்குள் தீமையை நீக்கும் சக்தி வளர்கின்றது.

அகஸ்தியரும் அவர் மனைவியும் அவர்கள் இரு உணர்வும் ஒன்றாக இணைந்து… எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகந்தார்களோ… அந்த உணர்வின் வலிமை கொண்டு உடலை விட்டுச் சென்ற பின் அதே எல்லையை அடைகின்றார்கள்.. பூமிக்கு வரும் உணர்வினை ஒளிக்கதிராக மாற்றுகின்றார்கள். “இது ஓர் குடும்பம்…”

அகஸ்தியன் தாய் தந்தையர் அவன் உடலிலே இருந்தார்கள். அந்தச் சக்தி கொண்டு அதே ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.
1.இதைப் போன்று சென்றவர்கள் இவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றவர்கள் இணைந்து
2.அன்னை தந்தையின் அரவணைப்பில் இருக்கும் இவனைப் போன்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போர் பலரும் உண்டு.

அன்னை தந்தையை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்… உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்… அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள் அழியா ஒளிச்சரீரமாக.

சப்தரிஷி மண்டலங்களிலே பார்க்கலாம் எண்ணிலடங்காத நிலைகள்…!
1.நம் கண்ணுக்கு புலப்படாதது ஏராளம் உண்டு… டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய நிலைகள் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அதன்பின் சென்றவர்களும் பலர் உண்டு.
3.அந்த எல்லையை அடைவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக தண்ணீரின் மீது சூரிய வெயில் அடிக்கடி பட்டதென்றால் விஷம் (POISON) உண்டாகிறது. விஷத்தின் தன்மை பச்சை பசேலென்று என்ன கொஞ்சம் கொஞ்சமாக உறைகிறது. அந்தத் தொட்டியில் உறைகிறது.

அப்புறம் பார்த்தால் கொடி போல உருவாக ஆரம்பித்து விடுகிறது. கொடி போல உருவான பிறகு மனிதனோ மற்ற உணர்வின் உணர்ச்சிகளோள் அதிலே படும்போது அதற்குள் சேர்ந்து அணுத் தன்மை உண்டாகிறது.

தொட்டியிலே முதலில் தண்ணீர் இருக்கும் பொழுது பார்த்தால் ஒன்றும் இருக்காது. ஆனால் மேலே சொன்ன நிலைகள் ஆன பின் பார்த்தால் தண்ணீருக்குள் கொச… கொச… என்று நெளிந்து கொண்டிருக்கும்.

இது எங்கிருந்து உற்பத்தியாகிறது…? சூரியனின் ஒளிக்கதிர்கள் அதனின் உணர்வின் தன்மை உறையும் போது கொஞ்சம் கொஞ்சமாக உறைகிறது.

சாதாரணமாக சிறு நீரைக் கழிக்கிறோம் என்றால் இந்த உடலில் உணர்வுகள் அது மோதல் ஏற்படும். மோதலால் ஏற்படும் உணர்வுகள் உறையும். கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக் கல் போல வரும். சிறுநீர் கழிக்கும் இடங்களில் இதைப் பார்க்கலாம்.

இதே மாதிரி ஒவ்வொரு தன்மையும் நம் இரத்த நாளங்களில் இது கலையும். இதைத் தான் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகளில் விஷங்கள் வந்தால் நம் கிட்னி (KIDNEY – சிறு நீரகங்கள்) அந்த இரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்கிறது.

1.ஆகாரத்திற்குள் சேர்ந்து வரும் சில விஷங்களையும் வடிகட்டுகிறது.
2.நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கும் நிலைகளையும் இந்தக் கிட்னி வடிகட்டுகிறது.
3.அதாவது நாம் சுவாசிக்கும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் இரத்தத்தில் தான் மீண்டும் கலக்கிறது. அதை வடிகட்டி அனுப்புகிறது.

வடிகட்டி அனுப்பும் போது வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் என்ன செய்கிறது…? இதனுடைய உணர்ச்சிகள் தாங்காது வடிகட்டும் தன்மையை இழந்து விடுகிறது.

அதீதமான வேதனை உணர்வுகளை கிட்னி வடிகட்டும் போது விஷங்கள் அதிகமாகத் தாக்கித் தாக்கிக் கிட்னி பலவீனமடைகிறது. அது பலவீனம் அடைந்து விட்டால் விஷத் தன்மைகள் நம் இரத்த நாளங்களில் அதிகமாகப் பரவுகிறது.

ஒரு சல்லடையில் ஓட்டை அதிகமானால் தொப்… தொப்…! என்று விழுவது போல் இயக்கச் சக்தியின் தன்மை… பிழியும் தன்மை முடியாத நிலை வரும் போது கெட்ட அணுக்கள் இரத்தத்தின் வழி கூடி எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.

அதனால் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு வேண்டிய நல்ல உணர்வுகள் கிடைப்பதில்லை. அசுத்த இரத்தம் பரவும் பொழுது இதயத்தில் உள்ள வால்வுகளில் பம்ப் (PUMP) பண்ணிப் போகும்போது அந்தக் கழிவுகள் இதயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறையத் தொடங்குகிறது.

ஒன்றுக்கு ஒன்று வடிகட்டிச் செல்லப்படும் போது உறைந்து விட்டது என்றால் நம்ம இதயத்தில் தொந்தரவுகள் அதிகமாகிறது. அப்போது அழுத்தம் அதிகமாகப் போகும் போது இரத்தத்தை இழுக்கும் சக்தி குறைகிறது.

காற்று அடிக்கும் பம்பில் ஒரு ஓட்டை இருந்தால் சரியாகக் காற்றை இழுத்துத் தள்ள முடியாது. அதைப் போல்
1.இருதய வால்வுகளில் ரொம்பப் பலவீனப்படுத்தும்.
2.அடிக்கடி மூச்சுத் திணறல் வரும்.

வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நாம் அறியாமல் நுகரும் வேதனைகளையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ பயமான உணர்வுகளையோ வடிகட்டத் தவறும் பொழுது அதனால் ஒவ்வொரு நிமிடத்திலேயும் வேதனை உணர்வுகள் வரப்படும் போது இப்படி நம் கிட்னி செயலிழக்கும் தன்மை வந்து விடுகிறது.

கிட்னி செயலிழந்தால் மற்ற உறுப்புகளும் சீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. உங்களுக்கு வைத்திய ரீதியில் இதை எல்லாம் சொல்கிறேன். நான் (ஞானகுரு) வைத்தியம் படிக்கவில்லை. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து…
1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.
3.கிட்னி இதயம் தொந்திரவு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது இப்படி இதை எண்ணி எடுக்க வேண்டும்.

அப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி பெறும். நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும் ஆற்றல் பெறும். உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் சீராக இயங்கத் தொடங்கும்.

சலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது
3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

இதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கடவுள் தனித்து ஒருவன் இல்லை

 

அடிக்கடி ஞாபகப்படுத்துவது எதை ஆரம்பித்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்று நாம் செயல்படுத்துகின்றோம். காரணம் நமது உயிர் “ஓ…” என்று இயங்கிக் கொண்டே உள்ளது.

இதைத்தான் ஓ என்று ஞானிகளால் காரணப்பெயர் சூட்டப்பட்டது. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகின்றது. ம் என்று நம் உடலாக மாற்றுகின்றது அதனால் தான் ஓம் ஈஸ்வரா குருதேவா.

1.நான் எண்ணியதை உருவாக்குகின்றாய்.
2.என் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் நீயே குருவாக இருக்கின்றாய் என்ற பொருள்படும்படித் தான்
3.இதை நாம் அடிக்கடி பயன்படுத்துவது.

ஈசன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… ஆண்டவன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… கர்த்தர் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்…!

ஆகவே நமக்குள் இந்த உயிர் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை ஆட்சி புரிகின்றது… அதை இயக்குகின்றது… என்ற பொருள் படும்படித் தான் உணர்த்தியுள்ளார்கள்.

ஆண்டவன் என்று சொல்லும் பொழுது உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்தான். ஆகவே
1.அவனன்றி அணுவும் அசையாது என்பது போன்று
2.நம் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் இந்த உடலில் உள்ள ஒரு அணுவும் அசையாது.
3.அதனால் தான் அவன் இன்றி அணுவும் அசையாது என்று சொல்கின்றோம்.

கடவுள் இல்லை என்றால் எதுவும் அசையாது என்பார்கள்.

நமக்குள் அந்த உயிர் கடவுளாக நின்று இயங்குகின்றது.
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அது எத்தகையதாக எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் நம் உடலாக இறையாகி…
2.இறையின் உணர்வுகள் நமக்குள் அணுவாகி அணுவின் சக்தியாக நமக்குள் இயங்கப்படும் பொழுது… நம்முள் நின்று இயக்கம் கடவுளாகின்றது.

ஆகவே கடவுள் என்று ஒருவர் தனித்து யாரும் இல்லை.

நமக்குள் பல விதமான குணங்களும் பல விதமான உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே தான் உள்ளது… நாம் இயங்கிக் கொண்டுதான் உள்ளோம்.

நாம் கோபமாகப் பேசுகிறோம் என்றால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் உருவாக்கி… அணுவாக்கி உடலாக்கப்படும் பொழுது நமக்குள் அது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் செயலாக இயக்கப்படும் பொழுது… அதற்குத் தெய்வம் என்று பெயர் வைக்கிறார்கள்… காரணப்பெயர்.

அதே சமயத்தில் நமக்குள் நின்று அது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நாம் நினைக்கின்றோம் அதைப் பதிவாக்கிவிடுகின்றோம்.
1.மறுபடியும் அதை நினைத்தோம் என்றால்
2.அது குருவாக வந்து அந்தத் தெய்வமாக நம்மை இயக்குகிறது என்று பொருள்.

ஆகவே அந்த அணுவின் தன்மை நமக்குள் இங்கே நிலை கொண்டிருந்து அதே உணர்வை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கிறது என்றால் “உருவாக்கிக் கொண்டே இருக்கும்…”

ஒரு வித்தினை மண்ணிலே ஊன்றி விட்டால் அது செடியாகித் தன் இனத்தின் வித்தினை உருவாக்குவது போன்று…
1.நமக்குள் கடவுளாக இருந்து அந்தக் குணத்தின் தன்மையைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் என்று பொருள்.
2.ஆக… கடவுள் தனித்து ஒருவன் இல்லை… இயக்கத்தை ஞானிகள் இவ்வாறுதான் உணர்த்தி உள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.உணர்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது தான் நாடித் துடிப்பு என்றும்
2.அந்த நாடித் துடிப்பின் வீரிய உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரித்தான் நம்முடைய செயலாக்கங்கள் என்றும்
3.மருத்துவர்கள் பார்க்கின்றார்கள்
4.(அன்று கருவி எதுவும் இல்லாமல் பார்த்தார்கள்… இன்று கருவிகளை வைத்துப் பார்க்கின்றார்கள்)

ஆகவே “நாடித் துடிப்பு…!” என்றாலும் உடலில் சில நோய்களின் உணர்வுகள் வரப்படும் பொழுது அதில் உறைந்த உணர்வுகளை ஸ்கேன் மூலம் (SCAN) பல விதமான நுட்பங்களை உபயோகித்துப் பார்க்கின்றார்கள்.

ஸ்கேன் மூலம் உடலுக்குள் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் துடிப்புகள் அதிர்வுகளாக ஒலி அலைகள் ஏற்படும். அந்த எக்கோ (ECHO) வருவதைப் பார்த்து
1.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் அதிகம்…
2.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் குறைவு…! என்ற நிலைகளுக்குத் தக்க
3.ஒலி அலைகளைப் பெருக்கிக் காட்டுகிறது…!
4.அதன் மூலம் இரத்த நாளங்களில் எது கூட இருக்கிறது… எது குறைபாடாக இருக்கிறது என்ற வகைகளில்
4.அந்தந்த உறுப்புகளைப் பற்றி “இதிலே இன்னது தான்…! என்று கண்டறிகின்றனர்.
5.பின் அந்தக் குறைபாடுகளை அகற்றி நல்லதாக மாற்றுகிறார்கள்.

இயற்கையில் கை நாடி பார்ப்பது போலத் தான் ஒலி அதிர்வுகளை வைத்து
1.உடல் உறுப்புகளில் எங்கெங்கே மோதுகிறது…?
2.எதன் வழிகளில் அது செயலற்றதாக மாறுகிறது…? என்ற நிலைகளில்
3.மருத்துவத் துறையில் இவ்வாறு விஞ்ஞானி காண்கிறான்.

அதே போல குகை (CAVE) போல் ஒரு புற்று இருக்கிறது. அதற்குள் ஒரு பாம்பு புகுகின்றது என்றால் அதற்குள் சிறு கம்பியைத்தான் (PROBE) விடுகிறார்கள்.

புற்றுக்குள்ளிலிருந்து வரும் உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கவர்ந்து… அதை நுகர்ந்து… உள்ளே என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? என்று அப்படியே தெரிந்து கொள்கிறார்கள்.

இதே மாதிரி கர்ப்பமுற்ற தாயின் கருவில் வளரும் குழந்தைக்கும் இதே போல ஒலி அதிர்வுகளைக் கூட்டிக் “கருவிலே வளரும் குழந்தை என்ன செய்கிறது..?” என்று பார்க்கிறார்கள்.

விஞ்ஞானம் இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னேற்றம் அடைந்திருந்தாலும்
1.அவர்களால் உடலில் உள்ள தசைகளிலோ அல்லது உறுப்புகளிலோ இருக்கும் நிலைகளைத்தான் சீர் செய்ய முடிகிறது.
2.எலும்புக்குள் ஊனாக இருப்பதை அவர்களால் காணவும் முடியவில்லை… அதை மாற்றவும் முடியவில்லை.

சிறிது காலத்திற்கு இந்த உடல் வாழ்க்கைக்குத்தான் அதைப் பயன்படுத்த முடியும். உடலுக்குப் பின் உயிராத்மாவைக் காக்கும் எந்த நிலையும் அவர்களால் முடியவில்லை,

ஆனால் அன்றைய மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்…?
1.தன்னுடைய உணர்வலையால் – வரும் அலைகளை நுகர்ந்து
2.அதனின் ஆற்றலையும் அதற்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளை அறியக்கூடிய தன்மையையும்
3.அவ்வாறு வரும் அந்த உணர்வுகள் தன்னை இயக்காதபடி மாற்றிக் கொள்ளும் தன்மையையும் வளர்த்து
5.விண்ணின் ஆற்றலைப் பெற்று அதை உடலுக்குள் விளைய வைத்து உயிராத்மாவை வலுவாக்கி
5.உயிருடன் ஒன்றிய ஒளியாக… அழியாத ஒளிச் சரீரம் பெற்றார்கள்.

யார்…? அகஸ்தியன்…!

அவன் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுதே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்றதால் எத்தகைய விஷத்தையும் வென்றிடும் அதனின் உணர்ச்சியின் இயக்கங்கள் அவனுக்குள் விளைந்தது.

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த நுண்ணிய ஆற்றல்கள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக நமக்கு முன் பரப்பி வைத்துள்ளது. அதை ஒவ்வொருவரும் நுகரலாம்.

1.அந்த அகஸ்தியனின் ஆற்றல்களை நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்று
2.எல்லாவற்றிலும் வல்லவனாக… உயர் ஞானம் பெற்று மெய் ஞானியாக ஆகலாம்…!

துருவத்தின் ஆற்றல்

 

உயிரணு தோன்றி மனிதனிலிருந்து விடுபட்டு ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குப் பழக்கத்தில் பெறும்படி யாம் செய்தது.

இதை நீங்கள் எளிதில் கவர்ந்து நுகர்ந்து உணர்ந்து தீமைகளை நீக்கிடும் ஞானத்தைப் பெற முடியும். அதைத்தான் இப்பொழுது பெறச் செய்தது.

இதை எடுத்துக் கொண்ட பின்
1.அடுத்து எப்பொழுது வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கண்களை மூடி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கி
5.ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தியானித்தால் போதும்.

அதை நம் உடலுக்குள் வலுவாக்கி வேதனைப்பட்டோர் உணர்வைக் கேட்டறிய நேர்ந்தாலும் அது நம் உடலுக்குள் வலுப் பெறாதபடி அதை நீக்கி… நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களைப் பாதுகாப்பாக… நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

இல்லையென்றால் அந்த வேதனை என்று அணுக்கள் வளர்ச்சி அடைய கடுமையான நோய்களும் கடுமையான வேதனைகளும் வரும்.

தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து அதை நீங்கள் பாதுகாத்தாலும் உங்கள் உடலில் இருந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறு ஒரு உடலாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களுக்குள் வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ அல்லது வேதனைப்படுபவர்களை நுகர்ந்தாலோ உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்கின்றோம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை புருவ மத்தியில் உயிரின் நிலைகள் இணைக்கப்படும் போது
2.கண் வழி கவர்ந்தாலும் கண்ணின் நினைவினை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும் திறன் வரும் பொழுது
4.மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.

பின் நம்முடைய நினைவாற்றல் நம் உடலில் உள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப்பெற்று நம் உட;லுக்கு முன் முகப்பில் உள்ள விஷத்தன்மைகளை தூர ஒதுங்கிச் செல்லத் தள்ளி விடுகின்றது. நமது ஆன்மா தூய்மை அடைகின்றது.

1.அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா ஒரு வட்டம் உண்டு… அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
2.இந்த உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக அணுக்கள் வளர்ச்சி வரும் சக்தி பெறுகின்றது.

அப்படி ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து… ஒளி என்ற அறிவு எப்படி இருந்ததோ அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் நமது உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.
1.எந்தத் துருவத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
2.அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செடி நன்றாக வளர்வதற்காக நாம் என்ன செய்கிறோம்…? உரத்தைப் போடுகின்றோம். அது ஆவியாகப் போய் செடியில் இணைந்து விடுகிறது.

1.உரத்தின் சத்து செடியில் இரண்டறக் கலந்த பின் தான்
2.அந்தச் செடி தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து எடுத்து செழித்து வளர்கிறது.
3.ஆகவே அந்தச் செடியைச் செழித்து வளரச் செய்வதற்கு இந்த உரம் உறுதுணையாக இருக்கின்றது.

ஆனால் செடியில் உள்ள சத்துடன் உரம் இணையவில்லை என்றால் காற்றிலிருந்து இழுக்கும் சக்தி இல்லை. செடி செழிப்பாக வளர்வதில்லை.

அதே மாதிரித்தான் உங்களுக்குள்ளும் அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை உரங்களாகக் கொடுத்து காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறோம்.

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் நீங்கள் அதைப் பரப்ப வேண்டும்.

நான் சும்மா வாயிலே சொல்லிக் கொண்டு போனால் இந்த குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டுவது போல் தான் ஓடிக் கொண்டு இருக்க வேண்டும். யாம் (ஞானகுரு) அப்படிச் சொல்லவில்லை…!
1.அந்த விண்ணுலக ஆற்றலைச் செருக வேண்டும் என்றால்
2.குருவின் அருள் நாம் பெற்று இருக்க வேண்டும்.
3.அதை உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்.
4.அந்தப் பாதை தெரியாமல் நாம் போக முடியாது.

ஆரம்பக் கல்வியும் உயர் கல்வியும் பள்ளிகளில் நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அதிலே படிப்படியாக வந்த பிற்பாடு விஞ்ஞானிகளிடம் போனால் அந்த விஞ்ஞான அறிவின் கலவைகள் பெருகுகின்றது. அந்த நிலைக்கு வருபவன் விஞ்ஞானியாகவே வளர்வான்.

அதைப் போன்ற பெருக்கத்தின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக வேண்டித்தான்…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தனக்குள் வளர்த்த மெய் ஞானத்தையும்
2.மெய் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளையும் எடுக்கும் பழக்கத்தை எனக்கு எப்படி ஏற்படுத்தினாரோ…
3.அனுபவ வாயிலாக உணரச் செய்து எனக்குள் மெய் ஞானத்தை எப்படி விளையச் செய்தாரோ…
4.அதைப் போல உங்களுக்குள்ளும் வளர்க்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும். மெய் ஞானியாக நீங்கள் வளர்வீர்கள்.

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

 

எந்த மனிதன் கோபிக்கின்றானோ வெறுப்படைகின்றானோ தற்கொலை செய்து கொள்கின்றானோ குரோதமான நிலைகளில் ஒருவனைத் தாக்குகின்றானோ இவையெல்லாம் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு இந்தக் காற்றிலே அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த மனிதனை நாம் பார்க்கப்படும் பொழுது
1.அந்த மனித உடலிலிருந்து வெளிப்பட்டதை
2.நமது கண் அந்த மனிதனை நெஞ்சு எலும்பில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அவன் உடலிலிருந்து என்னென்ன நிலைகள் வெளிப்பட்டதோ அவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அல்லது வெறித்தனமாகப் பேசுகிறான் என்றால்
1.அதன் உணர்வுகள் நம் உடலில் பதிவாக்கி
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்த வெறித்தனமான சொல்லும் நமக்குள் அந்த செயலும் வருகின்றது.

அல்லது அவன் வெறித்தனமாகச் செயல்படுத்தும் போது அந்த உணர்வு நமக்கு அது பயமாக இருந்தால் அந்த நேரத்தில் வெறித்தன்மையான உணர்வுகள் நம் உடலில் பயத்தையே ஊட்டும். சிந்திக்கும் ஆற்றலையும் செயலற்றதாக மாற்றிவிடும்.

இப்படி
1.நாம் சந்தர்ப்பத்தால் சந்தித்த உணர்வுகள் எல்லாம்
2.நெஞ்சின் எலும்புக்குள் “எண்ணிலடங்காத வித்துக்களாக” ஊழ் வினையாக அது பதிவாகியுள்ளது.

இவை அனைத்தும் அதனதன் உணர்வுகளைக் கவர்ந்து அதற்கொப்ப நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அத்தகைய அணுக்கள் நம் உடலில் உருவாகத் தொடங்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.

இந்த இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளில் இவையெல்லாம் கலந்து விடுகின்றது ஆனால் உடலில் நல்லவைகளாக இருந்து வளர்ந்த இந்த உணர்வுகளில் நிலைகளில் நாம் படிப்படியாக வேதனைப்பட்டோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் நுகர நுகர நமது உடலில் அத்தகைய அணுக்கள் விளைந்து விடுகின்றது.

மீண்டும் அவர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு பயம் கோபம் குரோதம் அது எந்தெந்த குணங்களோ… எண்ணும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

அப்பொழுது அதனால் நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்கும் வெறுப்பான குணங்களுக்கும் இது ஒன்றுக்கொன்று இந்த உணர்வலைகள் பாயப்படும் பொழுது
1.உடலுக்குள் பல விதமான வலிகள் பல கலக்கங்கள் நம்மை அறியாமலேயே ஏன் எதற்குச் சங்கடப்படுகின்றோம்…? என்று தெரியாது.
2.அத்தகைய உணர்வுகள் நம் உடலுக்குள் போர் செய்யத் தொடங்கி விடுகின்றது.

நம் கண்ணால் பார்த்தவுடன் அல்லது நினைத்தவுடன் அந்த அதிர்ச்சி வருகின்றது. அதே சமயத்தில் உடலுக்குள்ளும் அந்த அதிர்ச்சியின் உணர்வு தோன்றுகின்றது அன்றைய நிலைகளில். அப்போது நல்லதை எண்ணுவதோ அல்லது அதைச் செயல்படுத்துவதோ முடியாது.

அந்த வெறித்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி சிறு குடலுக்கு வரும் பொழுது வெறித்தனமான உணர்ச்சிகள் சிறு குடலை உருவாக்கிய அணுக்களை… (நாம் எப்படிப் பயந்தோமோ) அதனின் இயக்கத்தைத் தணியச் செய்து நாம் சாப்பிட்ட ஆகாரத்தை அஜீரணம் ஆக்கி விடுகிறது அல்லது விஷத்தன்மையான இரத்தமாக மாற்றி விடுகின்றது.

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் பெருங்குடலில் சேர்ந்தாலும் அதே வெறித்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது பயத்தின் உணர்வுகள் வந்து ஆகாரத்தை ரசமாக மாற்றும்போது அதிலேயும் இந்த விஷத்தன்மை கலந்துவிடுகிறது.
1.அவை நம் கணையங்களிலே சேர்க்கப்பட்டு அமிலங்களாக மாற்றும் போது
2.அந்த அமிலங்கள் கல்லீரல் மண்ணீரலிலே படும் பொழுது இதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.அந்தக் கல்லீரல் மண்ணீரலில் நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாக அதையும் சரியாக இயக்க விடாதபடி
4.இரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகப் பரவும் தன்மை வருகின்றது.

இப்படி இந்த விஷத்தின் தன்மை பரவி நுரையீரலுக்குள் சென்றபின் அதையும் சீராக இயக்காத படி அந்த நுரையீரலில் கலந்த பின் விஷத்தின் தன்மை நுகந்து சிந்திக்கும் தன்மையை இழந்து நம்மை அறியாமலே ஏன் எதற்கு என்று வெறி உணர்ச்சிகள் வருவதும் அல்லது சோர்வடைவதும் பயமடைவதும் வரும்.

அனால் நாம் தவறு செய்யவில்லை. இதே போல நமது உடலில் அடிக்கடி நிகழும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அண்டத்தில் உள்ளது இந்தப் பிண்டத்தில் (மனித உடலில்) உள்ளது என்று சொல்கிறோம். அண்டத்தில் இருக்கிற சக்திகள் நம் உடலில் எவ்வாறு இயங்கி கொண்டு இருக்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்டம் என்பது அகண்ட அண்டம். அதிலே பிரபஞ்சம் என்பது ஒரு சூரியக் குடும்பம். 27 நட்சத்திரங்களும் நவக் கோள்களும் அதனுடைய உபகோள்களும் சேர்ந்து ஒரு சூரியக் குடும்பமாகின்றது.

ஒரு நூலாம்படைப் பூச்சி வலையை விரித்துத் தனக்குத் தேவையான உணவை எப்படி எடுக்கிறதோ அது போல் சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் வலை வலையாகப் பால்வெளி மண்டலங்களைத் தனக்கென்று அமைத்துக் கொள்கிறது.

நட்சத்திரங்களின் சுழழும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் அமிலங்கள் நூலாம்படை போல் அது விரிவடைகிறது. விரிவடையும் போது இந்த மொத்தச் சூரிய பிரபஞ்சமும் சுற்றும் நிலையில் அதிலே மற்ற அகண்ட அண்டத்திலே வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைத்துப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகிறது.

1.கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கிறது. அடுத்து ரேவதி நட்சத்திரம் இருக்கிறது.
2.27 நட்சத்திரங்களும் இப்படி வரிசையில் பல மைல் தூரம் வித்தியாசத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும்.
3.வித்தியாசத்தில் இருக்கிறது என்றால் சூரியனுடைய சுழற்சி வேகத்தில் வரும் போது அது பின் தங்கி வரும்.
4.இரண்டாவது நட்சத்திரம் அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.
5.மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வருகிறது.
6.சூரியனை ஒட்டி இருக்கும் கோள்களும் இதைப் போன்று தான். ஒன்றன் பின் ஒன்றாகத் தன்னுடைய சுழற்சியில் பின் தங்கி வரும்.

பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் நட்சத்திரங்கள் விரித்த வலையில் ஒட்டி கொள்கிறது. நட்சத்திரம் சுழற்சி ஆகும் போது (RICE MILL போல்) பால்வெளி மண்டலமாகிறது… தூசிகளாக மாறுகின்றது.

அதற்கு அடுத்தது இன்னொரு நட்சத்திரம் எதிர்த்து இருக்கும். இது இடைமறித்து வரும் போது இதற்கும் அதற்கும் மோதலாகி இரண்டு கலவைகள். இப்படி 27 நட்சத்திரக் கலவைகள் மாறி மாறித் தூசிகளாக வருவது தான் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது.

நட்சத்திரங்களின் மோதலில் வெளி வரும் இந்தத் தூசிகளை இடைமறித்து முதலில் வரக்கூடியதை கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை மட்டும் எடுத்து கொள்கின்றது. வரக்கூடிய கரும் புகைகளை ராகுக் கோள் எடுத்துக் கொள்கிறது.

ஆவியாக வெளிப்படுவதைச் சனிக் கோள் எடுத்து நீராக மாற்றுகிறது. 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கங்களை வியாழன் கோள் எடுத்துக் கொள்கிறது.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்கள் மோதும் பொழுது வெளிப்படும் ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது. மோதலில் உண்டாகும் நாதங்களை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கிறது.

இதையெல்லாம் கலவையாகிச் சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கோளுக்குள் செல்லும் பொழுது அதனின் அதீத வெப்பத்தால் உலோகங்களாக மாற்றிக் கொள்கிறது.

அந்தந்தக் கோள்கள் உணவாக எடுத்து அது வெளிப்படுத்தும் உணர்வுகள் பல கலவையாகின்றது. ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷத் தன்மையின் உணர்வுகள் கலவையாகின்றது.

இந்தக் கலவையின் தன்மைகள் வரப்படப்போகும் போது மற்ற கோள்களுடன் கலக்கப்படும் போது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட்டு அதெல்லாம் சூரியனுக்கு வரும் போது அந்த விஷத்தை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறது. விஷத்தைப் பிரித்து ஒளியாகப் பாதரசமாக மாற்றுகின்றது.

1.முதலில் அமிலமாக இருந்தது தான் நட்சத்திரங்கள்.
2.அதிலிருந்து வரப்படும் போது இதனுடைய உணர்வுகள் மாற்றமாகி மாற்றமாகி
3.சூரியன் அதைப் பாதரசமாக மாற்றும் நிலை வரும்.
4.அப்பொழுது அது முழுமையான விந்தாக இந்த உலகையே உருவாக்குவதற்கான மூலமாக ஆகின்றது.

பாதரசம் மிகவும் எடை கூடியது. எடை கூடிய நிலைகளாக வரப்போகும் போது மற்றதைத் தள்ளுகின்றது. அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகள் நட்சத்திரங்கள் கோள்களில் கலவையான பின் அதைச் சூரியன் இழுத்துக் கவரும் பொழுது மோதலாகின்றது.

சூரியனுக்கு வெளிப்புறத்தில் ஏற்படும் இந்த மோதலினால் தான் வெப்பமாகின்றது. ஆனால் சூரியன் மிகவும் குளிர்ச்சியானது. சூரியனுக்குப் பல ஆயிரம் மைலுக்கு அந்தப் பக்கம் தான் இந்த மோதல் நடக்கிறது.

வெப்பமாகும் பொழுது கெட்டதைப் பூராம் தூக்கி எறிந்து விடுகிறது. நல்லதைப் பாதரசமாக மாற்றிக் கொள்கிறது. இது மெய் ஞானப்பாடம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டினார். அந்தப் பாதரசத்தினுடைய நிலைகளை எடுத்துக் காட்டி
1.அது மற்ற பொருளுடன் சேர்க்கும் போது திடப்பொருளாக எப்படி ஆகிறது…?
2.இன்னொரு பொருளைச் சேர்த்தவுடனே ஆவியாகப் பிரிந்து எப்படிப் போகிறது?
3.ஆவியாகப் போன பிற்பாடு பொருள்கள் எப்படி இணைகின்றது…? என்றும்
4.அதன் துணை கொண்டு உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கவும்
5.மற்றொன்றை எடுத்துச் செல்லவும் மற்றொன்றோடு இணைத்து வாழச் செய்யும் நிலையாகவும்
6.சூரியன் எப்படிச் செயல்படுகிறது…? என்று காட்டினார்..

அப்படிப் பாதரசமாக மாறவில்லை என்றால் உலகம் இல்லை. ஆகையினால் தான் இதை “நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…! என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

ஆதியிலே நாத விந்துகள் என்ற உணர்வின் தன்மை வரப்படும் போது தான் இது எல்லாமே உருவானது.
1.அந்த உணர்வின் இசையின் ஒலிகள் எப்படி உருவானது…?
2.ஒவ்வொன்றும் அந்த உணர்வின் ஒலியாக
3.நமக்குள் சுருதியின் இயக்கமாக
4.அந்த உணர்வின் ஒலியாக
5.அந்த உடலின் ரூபமாக மாறுகின்றது..! என்று இதற்குள் இவ்வளவு கருத்து இருக்கிறது.

27 நட்சத்திரங்களின் கலவைகள் உணர்வின் இயக்கங்களாகவும் நவக் கோள்களின் கலவைகள் உடல் உறுப்புகளாகவும் நமக்குள் அமைந்துள்ளது. உயிர் சூரியனாக இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கின்றது.

தியானத்தில் அமரும் பொழுது இதை எல்லாம் இணைத்துப் பார்த்தீர்கள் என்றால் அண்டத்தையே நீங்கள் பார்க்கலாம். ஆர்வத்துடன் கேட்டு இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் தியானத்தில் உங்களை அங்கேயே அழைத்துக் கொண்டு போகும். நிச்சயம் உணரலாம்…!

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

 

நாம் நண்பர்களாகப் பழகிய அல்லது குடும்பத்தில் பழகியவர்கள் உடலில் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் பதிவாகி இருப்பதால்
1.அதே நினைவு கொண்டு நாம் எண்ணினோம் என்றால்
2.அவர் உடலில் இருந்த உணர்வுகளும் நோய்களும் நினைத்தவர் உடலுக்குள் வருகின்றது.
3.இருள் சூழ்ந்த நிலையாகி விடுகிறது.

ஆனால் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தப்படும் பொழுது ஒளியின் உடலாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின்
1.சப்தரிஷி மண்டலம் என்று எண்ணினாலே அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் புகுந்து தீமைகளை அகற்றி
2.நல் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! ஒரு செடியில் எத்தகைய குணம் உண்டோ சுவை உண்டோ அதிலே விளைந்த வித்தினை நிலத்திலே போட்டால் அதைக் கவர்ந்து அதனுடைய சுவை அதனுடைய குணங்களை மீண்டும் காட்டுகின்றது.

இதைப் போல் தான் பிறிதொரு உடலில் விளைந்த நோயின் உணர்வுகள் அது வெளிப்படும் என்றால் “அது வித்து…” நாம் நுகர்ந்து நம் உடலில் பதிவாகி விட்டால் அவரைப் பற்றி எண்ணினால் அந்த நோயின் உணர்வே வரும்.

அதற்கு முன்பு அவர் நல்லதாக இருந்த நிலையை எண்ணும் பொழுது அடுத்து இப்படி ஆகிவிட்டாரே…! என்று தான் வரும். அப்போது அவருடைய முழுமை விஷத்தன்மை அடைவதால் நாம் எண்ணினோம் என்றால் அந்த விஷத்தின் உணர்வே நமக்குள் இயக்கப்பட்டு அவர் எப்படி வருத்தப்பட்டாரோ அதே வருத்தம் நமக்குள்ளும் வருகின்றது.

எத்தனை பேருடன் இப்படி பழகுகின்றோமோ வாழ்நாள் முடிவில் நோயின் தன்மை கொண்டு உடலை விட்டு வெளியேறும் போது அவர்கள் உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.ஆக நோய் என்ற உணர்வுகள் கொண்டு பலவும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது
2.அவர்களுக்குள் விளைந்த தீமைகளை நமக்குள் வந்து சேருகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைக்கப்படும் பொழுது நஞ்சுகள் கரைக்கப்படுகின்றது.
2.அந்த எண்ணத்தை நமக்குள் செலுத்தப்படும் பொழுது நஞ்சை நீக்கும் உணர்வும் நல்ல சிந்திக்கும் தன்மையும் நமக்கு கிடைக்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதில் சாவியைப் (PASSWORD) போட்டோம் என்றால் எந்த அட்டைக்கு எந்தச் சாவி என்று அதைப் பாய்ச்சி விடுகின்றனர்.

அதைச் சரியாகப் போட்டால் தான் திறக்கின்றது… இல்லையென்றால் திறப்பது இல்லை இதைப் போன்று பல விதமான உணர்வின் தன்மைகளை பிளாஸ்டிக் அட்டைகளிலேயே கொடுத்துத் திறக்கும்படி செய்கின்றார்கள்.

இதைப் போல
1.நாம் நமது உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்
2.நமது எண்ணத்தின் திறவுகோலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
3.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு இருளை நீக்கி நல்வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் நம் மனதைத் திறக்க வேண்டியது உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு மட்டும் தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிரபஞ்சத்திலுள்ள கோள்கள் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரப்படும் போது தான் சில பூமியினுடைய ஈர்ப்புத் தன்மை குறைகிறது. (இது ஏற்கனவே இந்த மாதிரி ஆகி விட்டது).
1.அதனால் நம் பூமி ஒரு நிமிடம் வித்தியாசத்தில் வரும்.
2.அதனால் வித்தியாசத்திற்குப் பூமி சூரியனை விட்டு நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகும்.
3.இதே மாதிரி மற்ற கோள்களும் நகர்ந்து நகர்ந்து வித்தியாசமாகப் போகும்.

கீழே இருக்கும் கோள்கள் தடுத்து நிறுத்தி விட்டது என்றால் இந்த (சூரியனின்) ஈர்ப்பு இல்லை என்றால் நகர்ந்து மேலே போகும். அதற்கு மேல் இருக்கும் கோள்கள் அப்படியே நகன்று நகன்று மேலே போகும். (மேலே என்றால் ஈர்ப்பை விட்டு வெளியே என்று அர்த்தம்)

நகர்ந்து மேலே போகும் கோள்கள் எல்லாம் என்ன செய்யும்…? இது நட்சத்திரங்களாக மாறும் சக்தி கிடைக்கிறது. இதே மாதிரி ஈர்ப்புத் தன்மை இல்லை என்கிற போது இந்த 27 நட்சத்திரங்களும் நகர்ந்து செல்லும்.

ஆக அப்படி நகர்ந்து செல்லப்போகும் போது மற்ற உணர்வுகள் எடுத்து நம் பிரபஞ்சம் முதலில் எப்படி உருவானதோ அது போல் இந்த 27 நட்சத்திரங்களும் அது அது தன் வளர்ச்சிக்குண்டான நிலையில் கோள்களை உருவாக்கும்.

கார்த்திகை நட்சத்திரம் ஒரு சூரியக் குடும்பமாக வளர ஆரம்பித்து விட்டது. இதே மாதிரி மற்ற நட்சத்திரங்களும் தனித் தனிப் பிரபஞ்சமாகிவிட்டால் இந்தச் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்படும்.

அதனால் தான் நம் சூரியனில் அநேகமாக இந்தக் கருப்பு நிலைகள் (SUNSPOT) அதிகமாக வருகிறது. ஒளியாக மாற்றுவதற்குண்டான நிலைகள் மாறிப் போகும்…. மாறிக் கொண்டிருக்கிறது…!
1.அப்படி மாறியது என்றால் இன்னும் கொஞ்ச காலத்தில் சூரியன் மங்கிப் போய்விடும்.
2.அதனுடன் சேர்ந்த (நம்) பூமி எங்கே போகும்…? என்று சொல்ல முடியாது.

மற்றொரு சூரியக் குடும்பம் அழிந்து அதிலிருந்து கரைந்து வந்த ஒரு கோள் வியாழன் கோளில் ஏற்கனவே சுமார் 25 வருடத்திற்கு முன்னாடி விழுந்தது அல்லவா…! பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். (விழுவதற்கு முன்னாடி குருநாதர் காட்டிய வழியில் இந்த மாதிரி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னேன்… பழைய அன்பர்களுக்குத் தெரியும்)

நம் பூமியில் விழுந்திருந்தால் நாமும் அம்போ தான். ஏனென்றால் அந்தக் கல் நம் பூமியைப் போல ஒரு இரண்டு மடங்கு. ஆனால் வியாழன் கோளில் பனிப்பாறைகள் அதிகமாக இருப்பதால் அதற்குள் போய் அமிழ்ந்து விட்டது.

வியாழன் கோள் முழுவதுமே பனிப்பாறைகளாக உள்ளது. இப்போது நாம் வாழும் பூமியும் சூரியனின் ஈர்ப்பை விட்டுக் கொஞ்சம் நகன்று விட்டதென்றால் முழுவதும் பனியாக உறைந்து விடும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் சூரியனாக வளர்ச்சி ஆகிவிட்டது என்றால் அந்தச் சூரியனுக்கு சாப்பாடு கிடைக்காது பிற மண்டலத்திலிருந்து சக்திகளை நட்சத்திரங்கள் எடுத்து கொடுக்கவில்லை என்றால் சூரியன் மங்கலாகிவிடும்.

கார்த்திகை நட்சத்திரம் ஏற்கனவே விலகிப் போய்விட்டது. அதைப் போல ஒரு ஐந்தாறு (ரேவதி அசுவினி) நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரபஞ்சமாக வளர்ந்து கொண்டுள்ளது. மற்ற நட்சத்திரங்களும் அதைப் போன்ற நிலைகள் கூடிய சீக்கிரம் ஆகும்.

1.நாம் குழந்தையைப் பெற்று அது வளர்ச்சி அடைந்தவுடனே அது ஒரு குடும்பமாகப் பிரிந்து போகிற
2.அதே மாதிரித் தான் சூரிய குடும்பத்திலேயும் நட்சத்திரங்கள் சூரியனாகும் பருவம் வந்த பின்
3.தனக்கென்ற ஒரு குடும்பமாகப் பிரிந்து போய்விடும்.
4.பிரிந்த பிற்பாடு நாளுக்கு நாள் இந்தச் சூரியன் செயல் இழக்கும் தன்மை ஆகும்.
5.அதனுடன் சேர்ந்த பூமி கரைந்து ஓடும்.

அப்பொழுது பூமிக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் என்ன செய்யும்….? மற்ற உயிரினங்களுக்கு இது குருவாகும். நம் வியாழன் கோளில் இதைப் போன்ற மற்ற நிலைகள் சிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது.

வியாழன் கோளில் இன்னும் உயிர் அணுக்களினுடைய நிலைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. அதிலிருந்து தோன்றியது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நம் பிரபஞ்சத்தில் பரவப்பட்டு வருகிறது.

அத்தகைய கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதனால் வியாழன் கோள் தான் உயிரணுக்களின் தோற்றத்திற்கு மூல காரணமாகின்றது. அதில் இருந்து வரும் கரு இல்லை என்றால் உயிர் அணுக்ககளின் தோற்றமே இல்லை.
1.அதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
2.சும்மா சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

நாம் வாழும் இந்தச் சூரியனும் செயலிழக்கும் தன்மைக்கு இப்பொழுது வந்துவிட்டது. இன்று நாம் மனிதராக இருந்தாலும் இந்தச் சூரியக் குடும்பம் அழிந்து விட்டது என்றால் அணுக்களாகப் போவோம். மீண்டும் பிரபஞ்சத்தில மிதப்போம். ஏதாவது கோளுக்கு இழுத்துக் கொண்டு போகும்.

அந்த கோள்களில் அதற்குண்டான சத்து இல்லை என்றால் புழுவாகவோ பூச்சிகளாவோ கிருமிகளாவோ தான் வளர முடியும். வேறு வழி இல்லை. நம்மை விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டு இருக்கும்.

நம் பூமியில் தாவர இனங்கள் இருக்கிறது. அதனால் மனிதனாக இருகின்றோம். தாவர இனங்கள் அழிந்து போய்விட்டது என்றால் உயிரினங்கள் வாழ முடியாது.
1.அப்படி நாம் வெளியிலே போய்விட்டால் அப்புறம் எந்தக் கோளுக்குள் நாம் போவோம்…?
2.என்ன ஆவோம்…? என்று சொல்ல முடியாது.

இதிலிருந்து தப்புவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இத்தனை வேலையும் செய்து கொண்டிருக்கின்றோம்.

விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் எடுத்து உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் சேர்த்துக் கொண்ட ஒளியான உணர்வுக்கொப்ப
2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.
3.வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.
4.உயிருடன் சேர்த்து ஒளியாக்கப்படும் போது அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் நாம் போகலாம்.

ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை விண் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால்
1.அவர் உடலில் விளைந்த உணர்வுகள் எப்படி அங்கே கரைந்ததோ
2.உடலில் பெற்ற உணர்வு ஒளியின் உடலாகப் பெற்றதோ அவரை எண்ணி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியின் உடலாக பெறச் செய்த இந்த உணர்வுகளை நினைவு கூர்ந்து
4.நாம் அந்த ஆன்மாக்களை விண் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அவர் சார்புடைய நிலைகள் அங்கே இருந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெற்று அவர் சம்பந்தப்பட்ட உணர்வுகள்… ஏனென்றால்
1.கண் கூர்ந்து கவனிக்கும் பொழுது கருவிழியால் பதிவான உணர்வுகளை அதே நினைவு கொண்டு
2.அவர் நினைவு நாளில் இதைப் போன்று நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்துவோம் என்றால்
3.அவர் குறை கூறிய உணர்வோ அல்லது குடும்பத்தின் மீது இருந்த வெறுப்புணர்வோ
4.அவர் நோயாக வேதனைப்பட்ட உணர்வோ நமக்குள் பதிவாகி இருந்தாலும் அந்தப் பதிவின் மீது இது வந்து மேலே பதிவாக்கும்.

ஒரு வித்து விளைந்த பின் மற்ற தாவர இனங்களின் வித்துக்களை இதனுடன் கலக்கச் செய்து அதிலே புது விதமான வித்துகளை உருவாக்குவார்கள்.

அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தபின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது போக “அவருடன் உணர்வுகள் ஒளியாக நிற்கும்…”

அந்த நிலையில்…
1.நினைவு நாளில் நாம் அதை எண்ணிக் கொண்டு வந்தோம் என்றால் உடலுக்குள் பதிந்த அவரின் உணர்வை மாற்றி விடலாம்.
2.அதே சமயத்தில் அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள் காற்றலைகளில் இருப்பினும் அதை ஈர்க்கும் சக்தியை இங்கே தடுத்து விட்டால்
3.அவர் உடலில் இருந்த நோயோ அவரைப் பற்றிய பகைமை உணர்வுகளோ நம்மை இயக்காது.

அதற்குத் தான் இந்த நினைவு நாளைக் கொண்டாடச் சொல்வது.

அவரின் உணர்வுகள் நம் உடலில் பதிந்திருப்பதால்
1.அவர் உணர்வுக்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாகப் படைத்தால்
2.நமக்குள் தீமை என்ற உணர்வு இல்லாது மறைக்கப்படுகின்றது.
3.நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு அன்று ஞானிகள் இவ்வாறு வழி வகுத்தனர்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவானாலும் அதன் தனித்தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது தான் வருகின்றது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால்… இந்த வாழ்க்கையிலே வெறுப்பு வேதனை சலிப்பு கோபம் பகைமை என்ற உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது சிறிது நேரமே செயல்படுத்துகின்றோம். ஒரு நாளைக்கு காலையில் எழுந்ததும் செயல்படுத்துகின்றோம்.

அதற்குப் பின்
1.ஏதாவது சிரமம் வந்தால் அந்தச் சிரமத்தை தான் எடுத்துக் கொள்கிறோம்.
2.ஆனால் அவரைப் பற்றிய நினைவு நமக்கு வருவதில்லை.
3.ஆனால் அந்த வேதனைப்படும் உணர்வுகள் தூண்டி அதை வளர்க்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாற்றி அமைக்க… உடலை விட்டுப் பிரிந்து சென்று அந்த ஆன்மாவிற்கு…
1.நம் உடலில் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவான (அவரைப் பற்றியது) நிலைகளுடன் சேர்த்து விட்டால்
2.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றில் இருப்பதை நாம் நுகராமல்… நமக்குள் அது வளர்ச்சி பெறாமல்… தடுத்து நிறுத்த முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எந்த உணர்வை எண்ணுகிறோமோ அது “ஓ…” என்று நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகிறது.

அவ்வாறு இயக்கப்படும் போது எந்தக் குணத்தை நாம் இயக்கி நம் உடலில் சேர்க்கின்றோமோ நம் உயிர் அதைத்தான் ஆளுகிறது.
1.அதை வைத்துத் தான் நம்மை செயல்படுத்தச் செய்கிறது.
2.அதை வைத்து தான் நாம் சொல்லைச் சொல்கிறோம்.
3.அதன் வழி தான் நாம் செயலைச் செய்கிறோம்.

சங்கடமாகவும் சலிப்பாகவும் இருக்கும் போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்கி நம்மை ஆள்கிறது.
1.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது சரியான கணக்குப் பார்க்க முடியுமோ…?
2.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது ஒருவர் யோசனை கேட்டால் உங்களால் சொல்ல முடியுமோ…? முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் நம்மை ஆட்சி புரிகிறார். யார்…? நமது உயிர் தான்…! அந்த வழியில் நம்மை இயக்குவதும் நம்மை ஆள்வதும் அவனாகத்தான் இருக்கிறான்.

இருந்தாலும் அதே உணர்வை நம் உடலில் சேர்க்கும் போது அது ஈசனாக இருந்து நாம் எதை நுகர்ந்தோமோ அதை நம் உடலில் சேர்க்கின்றது. நம் உடலுக்குள் புகுந்து விட்டால் அது நம் இரத்தங்களில் கலந்து அது நம் உடலாக ஆகிவிடுகிறது.

நீங்கள் நல்லதோ கெட்டதோ எந்த குணங்களை நுகர்ந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலுள்ள இரத்தங்களில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

அதில் பலவிதமான வண்ணங்கள் இருக்கும். பலவிதமான உணர்வுகளை உணர்ச்சிகளை ஊட்டிக்கொண்டே இருக்கும். எதன் உணர்வு வலுவாக இருக்கிறதோ அந்த உணர்வு இயக்கமாகி உணர்ச்சிகளை வெளிப்படச் செய்து அது சொல்லாகவும் செயலாகவும் மாறும்.

கோபம் வரும்போதெல்லாம் பார்க்கலாம். ஒருவர் தவறான செயலைச் செய்யும் போது உங்கள் இரத்தங்களில் எப்படி அந்த உணர்ச்சிகள் மாறுகின்றன…? என்று தெரியும்.

இதே மூச்சலைகளை மற்றவர்களும் நம்மைப் பார்த்து நுகரும் போது இந்த உணர்வுகள் அவர்களுக்குள்ளும் இயக்கப்பட்டு அவர்களும் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலைகள் வரும்.
1.அவர்கள் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன…? என்ற வகையில்
2.அடுத்து கலந்து பதில் சொல்லும் நிலையாக வரும்.

உதாரணமாக நம்முடைய நண்பன் அவனுடைய இன்னொரு நண்பருடன் இருக்கிறான். நம்முடைய நண்பனுக்காக அவன் எதையும் செய்யக்கூடியவன்.

இருந்தாலும் நம் நண்பருடன் சேர்ந்தவன் சரியில்லை… தவறு செய்கிறான் என்ற நிலையில் அவன் தப்பு செய்வதை நாம் திருத்தச் சொல்லிச் சொன்னோம் என்றால் நம் நண்பன் இந்தத் தப்பை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

1.ஏனென்றால் நம்முடைய நண்பனின் உணர்வுக்கு முன்னாடி அவனின் நண்பன் உணர்வு இருப்பதால்
2.அதை எண்ணி முன்னாடி வலு சேர்த்துக் கொள்ளும் போது
3.நம் உணர்வுகளை நுகர்ந்த உடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி
4.நம்மைத் தான் குற்றவாளியாகத்தான் சொல்வான்.
5.ஆக நுகர்ந்த உணர்வுகள் பற்று எதனின் உணர்வு கொண்டு வருகிறதோ
6.அதன் உணர்வு வலு சேர்க்கப்படும் போது நல்ல உணர்வுகள் செயல் குறைந்து போகும்.
7.இரத்தங்களில் கலந்த நிலைகள் கொண்டு இத்தகைய நிலை வருகிறது.

நம்முடைய உணர்வை ஏற்கவில்லை என்னும் போது நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுவிற்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து
1.அந்த நல்லது ஒடுங்குகிறது.
2.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தியை அது இழக்கிறது.
3.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் போது அது ஒடுங்குகிறது… ஏற்றுக் கொள்வதில்லை… பார்க்கலாம்…!

ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் நம்முடைய உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகும் போது கூடக் கொஞ்ச நேரம் நிலை நிறுத்தி விட்டோமென்றால் இதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படி மூச்சு விடுகிறோமோ அதேபோல அந்த இயக்கத் தொடருக்குப் பிரணவம் – ஜீவன் வேண்டுமென்றால் நம் உடலின் உஷ்ணத்தினால் வாயு உண்டாகிறது. அழுத்தமும் ஏற்படுகிறது.

நாம் சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனை வருகிறது…? எந்தெந்தப் பொருள்களை அதற்குள் அதிகமாகப் போட்டிருக்கின்றோமோ அந்த வாசனை தான் அதிலிருந்து வெளியிலே வரும். அதிலிருந்து உருப்பெரும்.

அதைப் போன்று நல்ல அணுக்களுக்கு உண்டான ஆகாரம் இல்லை என்கிற நிலையில் மற்ற உணர்வுகளின் அழுத்தத்தினால் உடலிலே ஒருவிதமான மாற்று உணர்ச்சிகள் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இதையெல்லாம் எது இயக்குகிறது…? நமது உயிர் தான். அது எலெக்ட்ரிக் ஆக இருக்கிறது. நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக் ஆக எதிர் நிலையான நிலையில் இயங்குகிறது.

இதைப் போன்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் நம் இரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பலவிதமான அணுக்களின் மாற்றம் ஆவதும் நடக்கிறது, நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மற்றவர்களுடன் பழகும் போது எதன் உணர்வைக் கவர நேருகின்றதோ அதனால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்…! இவை எல்லாம்.

நல்லவர்களுடன் நாம் அமைதியான நிலையில் கேட்டு வந்து பேசிக் கொண்டு பழகி வந்திருந்தாலும் அடுத்தாற்போல் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வெறுப்பாகித் தாக்கிப் பேசும் போது என்ன நடக்கிறது…?

அதை நுகர்ந்தவுடன் நமக்கு மிகவும் இக்கட்டான நிலை\யாகி ஆகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதும் போது சலனங்களும் சஞ்சலங்களும் ஆகி நம்முடைய நல்ல அணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது உடல் சோர்வடைகிறது. உணர்ச்சியும் மாறுகிறது.

எந்த உணர்வின் தன்மையை அதிகமாக்குகிறோமோ கண் வழி அதை நுகர்ந்து உயிரிலே பட்டு மீண்டும் அந்த உணர்ச்சிகள் அதிகமாக நம் இரத்த நாளங்களிலே சேர்க்கிறது.
1.இந்த இரண்டு பேருக்குள் சண்டை போட்டுவிடப் போகிறார்களோ…! என்று
2.வேடிக்கை பார்க்கும் நமக்குள் இந்தப் பதட்டம் வருகிறது. (ஆனால் நாம் சண்டை போடவில்லை)

அடுத்து அந்தச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் சொல்வதற்கு நமக்குத் துணிவு வந்தாலும் சிந்தையான பதில் சொல்லத் தெரியாது.
1.பின்பு நம்மை அறியாமலேயே பகைமை உணர்ச்சிகள் உடலுக்குள் சேரும்.
2.அப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் தான் முதலில் கலக்கிறது.

உயிர் அதை நம் உடல் முழுவதும் பரவச் செய்கிறது என்றும் அதன் வழியே தான் நம்மை வாழச் செய்து ஆளுகின்றது என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஆண்டவன் யார்…? நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும். நம் உடல் முழுவதற்கும் அந்த உணர்வைப் பரவப் செய்யும் போது நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியையும் சாந்தமும் சாந்தமான நிலைகளையும் தருகிறோம்.

நல்ல உணர்வின் உணர்ச்சிகளை நமக்குள் பரப்பச் செய்யும் பொழுது தீமையின் உணர்வுகளை அடக்கி நம்மை அமைதிப் படுத்தச் செய்கிறது

ஆனால் சாதாரண மனிதனின் உணர்வை வைத்து அதை நாம் அமைதி படுத்த முடியாது. அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் நினைவு கொண்டு “ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற (தீமையான) வித்திற்குள் இது கலந்து கொஞ்சம் கொஞ்சமாக இதன் வலு கூடும் போது அதை அடக்கக் கூடிய சக்தி பெற்று விடும்.

அப்பொழுது தீமையை அடக்கி நம் மனதை அமைதிப்படுத்தும் வல்லமையை நாம் பெறுகின்றோம்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் நெறி

 

மனிதனின் வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றது
1.நல்ல குணங்கள் அடங்கிய பின் வேதனை அதிகமாகி
2.”இந்த உடலை விட்டு எப்படா செல்வோம்…” என்ற இந்த உணர்வுகள் வந்துவிடும்

ஆனால் யாம் சொல்லும் தியானத்தைக் கடைப்பிடித்த ஒரு அன்பரின் நினைவு என்ன…?

1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற உணர்வுகள் வலுவாக இருப்பதால்
2.அந்த துருவ தியான நேரத்தில் காலை நான்கு மணிக்கு அதனின் வலுக் கொண்டு
3.அந்த ஆன்மா பிரிந்து அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலே சென்றடைகின்றது.

ஆனால் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டவர் அனைவருமே அமாவாசை நாளுக்கு அருகிலே தான் உடலை விட்டுப் பிரிவார்கள். அதாவது விஷ அலைகள் பரவும் நேரத்திலே தான் அந்த ஆன்மாக்கள் பிரியும்.

அப்படிச் சென்றால் வேதனையான உணர்வுகளை அதிகமாக எடுத்து விஷத்தின் தன்மை பெற்று அந்த உணர்வோடு வெளி வரப்படும் பொழுது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுக்கின்றதோ இந்த விஷம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளும்.
1.அதன் உணர்வு கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கிவிட்டு விஷத்தின் அணுக்களாகப் பெருகி…
2.உயிர் பாம்பின் ஈர்ப்பிற்கு அழைத்துச் சென்று நம்மைப் பாம்பாக உருவாக்கிவிடும்,

ஆடு, மாடு மற்ற உயிரினங்கள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கிக் கொள்கின்றது. அதனுடைய கழிவை (சாணத்தை) நல்லதாக வெளிப்படுத்துகின்றது.

இத்தகைய தன்மையிலே இந்த மனித உடலில் வேதனை என்று உணர்வு அதிகமாகி விட்டால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அந்த வலுவின் தன்மை கொண்ட மாடாகவோ ஆடாகவோ… அதிகமான விஷமானால் விஷத்தைப் பாய்ச்சிப் பாம்பாகும் நிலை வந்துவிடும்.

காரணம்… ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று… “அதைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்” என்றால் நிச்சயம் பாம்பாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.

சந்தர்ப்பத்தால் வேதனைகளின் உணர்வை நுகர்ந்தால்…
1.அந்த வேதனையை மறக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் நாம் சேர்த்துக் கொண்டு வந்தால் அந்த உணர்வு வலுவாகி
2.அந்த அடிப்படையில் உடலை விட்டுச் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலத்தின் எல்லையைச் சென்றடைகின்றோம்
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் செயல்படுத்த வேண்டிய நெறி முறை இது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் மலைப் பகுதிகளில் சில பாறைகளில் அமர்ந்துள்ளான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அதிலே பதிவான நிலைகள் கொண்டு அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்கின்றது.

மேகங்களை இழுத்துக் கவர்ந்து மோதியவுடனே அங்கே நீராக வடியத் தொடங்குகிறது. அகஸ்தியருடைய கையில் அதனால் தான் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.

அகஸ்தியன் எங்கெங்கெல்லாம் போய் உட்கார்ந்தானோ அங்கெல்லாம் இத்தகைய தண்ணீர் இருக்கும்.
1.கீழே நீர் இருக்காது.
2.ஆனால் அந்த மலை உச்சிகளில் மேகங்கள் போவதைக் கவர்ந்து நீராக வடிந்து
3.சில தெப்பங்களும் அங்கே இருக்கும்… கர்நாடக மாநிலத்தில் நிறைய இடங்களில் இது இருக்கும்.

பெல்காம் பக்கத்தில் ஒரு மலை இருக்கிறது. அதில் உள்ள ஒரு சிறிய குகையில் சிலை இருக்கிறது. அந்தச் சிலை மீது நெய்யை விட்டால் அது வெண்ணெயாக மாறும். அந்தக் கல்லில் அந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும்.

நெய்யைக் கொண்டு போய் சிலை மீது ஊற்றுவார்கள். பின் தண்ணீரை விட்டு அபிஷேகம் செய்து முடிந்தவுடன் சுரண்டி எடுத்தோம் என்றால் அந்த வெண்ணெயாக மாறும்.
1.நெய்யில் இருந்து வெண்ணெயாக மாறும்.
2.அந்தச் சிலைக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
3.அபிஷேகத்திற்கு நெய்யைக் கொடுப்பார்கள். மாற்றம் அடைந்தவுடன் வெண்ணெயாக எடுத்து வருவார்கள்.
4.அதை எடுத்து வந்து சாப்பிடுவார்கள்.

அந்த மாதிரி சில இடங்கள் அங்கே உண்டு. அதற்கு மேலே உச்சியில் பார்த்தீர்கள் என்றால் நாழிக்கிணறு. அதில் நீங்கள் தண்ணீர் எவ்வளவு மோந்தாலும் வந்து கொண்டே இருக்கும்.

அங்கே மலை மீது ஏறும் இடத்தில் இன்னொரு குகை இருக்கிறது. அதற்குக் கீழே பார்த்தீர்கள் என்றால் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரில் ஏதாவது ஒரு பொருளைப் போட்டோம் என்றால் கீழே ஒரு பாதை இருக்கும். அதிலே மிதந்து வெளியிலே வரும். ஆனால் இந்தத் தண்ணீர் வற்றுவதே இல்லை.

மைசூர் பாகமண்டலம் தலைக் காவிரிக்குப் போனால் அங்கே மலை உச்சியிலிருந்து தண்ணீர் வரும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமாக இப்படி வரும்.

மேக மண்டலங்களை இழுத்து மோதித் தண்ணீராக வருகின்றது. அங்கேயும் அந்தத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால்
1.அங்கே அகஸ்தியன் அமர்ந்த இடம்.
2.மேகங்களை இழுத்து தண்ணீராக மாற்றக்கூடிய நிலைகள் அங்கே இருக்கிறது.

அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள்
1.நீருக்காக வேண்டி அங்கே மேகத்தை இழுப்பதற்காக வேண்டி
2.பல பச்சிலைகளையும் அங்கே தடவி இருக்கின்றார்கள்.

இயற்கை எப்படி மாற்றங்கள் ஆகின்றது…? நீர் சுரபிகள் எப்படி உருவாகின்றது..? என்று இதெல்லாம் அனுபவபூர்வமாகக் கண்டறிந்தது.

மனிதனுக்கும் இத்தகைய நீர் சுரபிகள் உண்டு. ஒரு பச்சிலையைக் கொடுத்தால் நீர் சுரப்பி எல்லாம் அடைத்துக் கொள்ளும். பின் வறட்சி ஆகிவிடும்.

அதே சமயத்தில் சாப்பிடக்கூடியதை இரத்தமாக மாற்றக்கூடிய சில பச்சிலைகளும் உண்டு. இப்படி எத்தனையோ வகைகள் இருக்கிறது. ஒரு தாவர இனத்தின் உணர்வுகள் மற்றொன்றோடு மாற்றப்படும் போது எப்படி மாறுகிறது…? என்று இது அத்தனையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்தார்… உணர்த்திக் காட்டினார்.

இந்த மாதிரி அதிசயங்களை எல்லாம் யாம் (ஞானகுரு) பார்த்தோம். ஏனென்றால் இதெல்லாம் அந்த மலைப்பகுதியில் நடந்து போய்ப் பார்த்து வந்தது.

அவ்வாறு கண்ட பார்த்த உணர்ந்த உண்மைகளை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். இதைப் பதிவாக்கிக் கொண்டால்
1.அன்று வாழ்ந்த மெய் ஞானியான அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நீங்கள் எளிதில் பெறலாம்.
2.அவன் பெற்ற அண்டத்தின் ஆற்றல்களை நீங்களும் பெறலாம்.

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

 

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தையும்
1.நமது உயிர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று அந்தக் குணங்களில் இயக்கும் அணுவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
2.இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும் சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ வேதனைகள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவணுவாக மாற்றி “ம்” என்று நமது உடலாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… செடி கொடியினில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றுகின்றோம். ஆனால் (முதலில் உருவான) அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

நிலத்தில் ஊன்றப்பட்ட அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு… சூரியனால் கவர்ந்து வைக்கப்பட்டுள்ள தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே செடியாக விளைந்து அதன் வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் பயம் அவசரம் ஆத்திரம் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால்
1.எந்தெந்த மனிதனின் உடலிலிருந்து அந்த வேதனை உருவாகி வெளி வந்ததோ அதனை நாம் நுகரப்படும் பொழுது
2.அதே வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது.

இப்பொழுது ஒரு செடியில் விளைந்த வித்து எவ்வாறு தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது தனது வித்தை உருவாக்குகின்றதோ… தன் இனத்தை உருவாக்குகின்றதோ அதே போல்
1.நம் உடலுக்குள் பிறர்படும் வேதனையோ அல்லது மற்றதையோ வேடிக்கை பார்த்தால்
2.அல்லது சாபமிடுவதைப் பார்த்தால் ஒருவர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்தால்
3.அந்த உணர்வை நாம் நுகர்ந்து வேதனைப்படுகின்றார் என்று அறிகின்றோம்.

ஆனாலும் அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் உயிர் அறியச் செய்கின்றது. அவை நம் இரத்தங்களில் கலந்து…
1.எந்த உடலில் அது உருவானதோ அதே அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு இரை தேவை.
2.எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ அது காற்றில் உண்டு.
3.அப்பொழுது நம் உடலுக்குள் இருந்து அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது அதே உணர்வை நாம் நுகர்வோமென்றால்
4.நமக்குள் இதே போல் வேதனைப்படுவதும் வெறுப்படைவதும் சங்கடப்படுவதும் போன்ற நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இவ்வாறு நமக்குள் வருவதிலிருந்து நாம் மீள்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்றால் யாம் கொடுக்கும் உபதேச உணர்வினைப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரமோ இப்புவியில் துருவ மகரிஷி அல்லது அகஸ்தியராக இருக்கும் பொழுது தீமைகளை வென்று வானை நோக்கி உணர்வுகளை நுகர்ந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

அதனின்று வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமியோ அதைத் துருவப் பகுதியில் கவர்ந்து நமது பூமிக்குள் கொண்டு வருகின்றது.

1.அதனை நீங்கள் நினைவு கூர்ந்து உங்களில் பதிவாக்கி நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற முடியும்.
2.அப்போது நாம் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமையின் அணுக்களை நமக்குள் வளராது தடுக்க உதவும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வுகளை நமக்குள் அந்த அணுக்களைப் பெருக்கவே நாம் தியானமிருக்கின்றோம்….
3.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யவும் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் என்னைத் தங்கம் செய்யச் சொன்னார் குருநாதர். பாதரசம் ஈயம் காரீயம் இதை எல்லாம் கொண்டு வரச் சொன்னார். ஒரு இரும்புக் கரண்டியையும் கொண்டு வரச் சொன்னார்.

எல்லாம் போட்டு அதிலே அதிலே பாஷாணக் கல்களைப் போட்டவுடனே தண்ணீராகக் கரைகிறது. ரசமாக மாறி குழம்பு மாதிரி ஆகிவிடுகிறது.

அது குழம்பு மாதிரி ஆன பிற்பாடு அங்கே இருக்கிற குப்பை செத்தை எல்லாவற்றையும் போட்டு எரிக்கச் சொன்னார். அது எரித்தவுடனே அதிலே இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாம் ஆவியாகப் போய்விடுகிறது.

அதிலே பாதரசம் மாதிரி மிஞ்சுகிறது, பல பொருள்களும் அது வேக வேக இந்த உணர்வுகள் அதிகமாகிறது. கடைசியில் “இது எப்படிடா இருக்கிறது…?” என்று கேட்டார் குருநாதர்.

நெருப்பிலே இருந்தால் எப்படி இருக்கும்..? அது பளீர்…! என இந்த நெருப்பு மாதிரியே தெரிந்தது.

எப்படிடா இருக்கிறது…? என்றார்.

தக…தக…! என்று இருக்கிறது என்று சொன்னேன்.

என்னடா…! தக…தக…? என்று சொல்லி எனக்கு இரண்டு அடி கொடுத்தார். அவர் எப்படி இருக்கிறது என்று கேட்கக் கேட்க நான் தக…தக…! என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

தக…தக…! என்றால் என்ன…? என்றார்.

தங்கம் மாதிரி இருக்கிறது….! என்றேன்.

தூ……! என்று துப்புடா… போட்டு விட்டார். தூ…! என்று அவர் துப்பினார். இது எனக்குத் தெரியாது. தூ…! என்று உமிழ் நீரைத் துப்பி அதாவது
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லச் சொல்லி விட்டு
2.அந்த உணர்வை எடுத்து அது மேலே துப்புகின்றார்.

மூடுடா…! என்றார். அப்புறம் பார்த்தால் தங்கக் கட்டியாக இருக்கிறது. இதிலே இத்தனை வேலை இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்லி அந்த உணர்வை எல்லாம் எனக்குள் ஊட்டி ஒவ்வொரு அறிவையும் கொடுக்கிறார்.

தங்கத்தைக் கொண்டு போய் கடையில் விற்று வா என்றார் குருநாதர். நகைக் கடை ஆசாரி ஒருவரிடம் கொடுத்ததும் அவர் உரசிப் பார்த்தார்.

அட… அட… அடா…! நைனா… கிடைத்துவிட்டது கிடைத்துவிட்டது…! அவருக்கு வார்த்தையே வர மாட்டேன் என்கிறது. நீங்கள் இதை எதிலே செய்தீர்கள்…? எப்படிச் செய்தீர்கள்…! என்று கொஞ்சம் சொல்ல வேண்டும். பெரிய கட்டிடமாகவே கட்டிவிடலாம் என்று சொல்கிறார்.

நீ கிழவனுடன் (ஈஸ்வரபட்டருடன்) சேர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும் போதே எனக்குத் தெரியும் என்று சொல்கிறார் அந்த ஆசாரி. இன்னும் கொஞ்சம் செம்பை அதிலே சேர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். அதை விற்று வந்துவிட்டேன்.

ஏனென்றால் குருநாதர் தங்கம் செய்ய என்னென்ன வேலை செய்தார்…? என்று
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லி
2.அந்த உணர்வுக்குண்டான கலவைகள் என்னென்ன…?
3.அதைச் சொல்லும் பொழுது “என்னென்ன உமிழ் நீர்கள் சுரக்கிறது…?” எனக்கு அந்த உணர்வை ஊட்டுகிறார்.

ஏனென்றால் பல கோடித் தாவர இனங்களையும் சாப்பிட்டு விட்டுத் தான் இன்று மனிதனாக வந்து இருக்கிறோம். அதில் எதை எதைக் கலக்க வேண்டும்…? என்று உணர்த்தி அந்த உமிழ் நீரை அதில் துப்பும்படிச் சொல்லி அதில் பட்டவுடனே எப்படித் திரவகத்தை ஊற்றியதும் நிறங்கள் மாறுமோ அது மாதிரி அங்கே உயர்ந்த தஙகமாகிறது.

இப்படி அனுபவபூர்வமாகச் செய்து காட்டினார் குருநாதர்.

(ஆனால் மற்றவர்கள் தங்கம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பாதரசத்தையும் பச்சிலைகளையும் உருட்டிப் பிரட்டி என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். கடைசியில தங்கத்தையும் கலக்கின்றார்கள். எல்லாம் முடிந்ததும் பார்த்தால் போட்ட தங்கம் மட்டும் இருக்கிறது மற்ற எல்லாம் கரைந்து போய்விடுகிறது. தங்கம் செய்வதைக் கொஞ்சம் காட்டிக் கொடுங்கள். உங்களுக்குக் கோவிலையே கட்டிவிடலாம் என்று எமக்குப் (ஞானகுரு) பின்னாடி சுற்றியவர்கள் ஏராளம் பேர்)

அப்புறம் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதே போல் நானும் முயற்சி செய்தேன். அவர் எங்கெங்கே போய் குப்பை செத்தை எல்லாம் அள்ளச் சொன்னாரோ மறுபடியும் நான் அதை எடுத்தேன்.
1.எல்லாம் செய்து அவர் சொன்ன மாதிரி அந்த உணர்வு கொண்டு தூ……! என்று துப்பினேன்.
2.இரண்டாவது தரம் தங்கமாகிப் போனது…!

நகைக் கடைக்குக் கொண்டு போனவுடனே அந்தக் கட்டியைப் பார்த்தவுடனே “துள்ளுகிறார்கள்…” அடடா…! தினம் இவ்வளவு கொண்டு வந்து கொடுத்தால் போதும்…! என்கிறார்கள்.

அப்புறம் என்னை விரட்டி விரட்டிப் பிடித்தார் குருநாதர்.
1.அவன் ஆசையை ஊட்டி விட்டு உனக்கு யோசனை சொல்கிறான்.
2.”நீ உன் மனதை தங்கமாக்க வேண்டும்…!” என்று நான் சொன்னால்
3.நீ இதைப் போய்த் தங்கமாக்குகிறாயே…!
4.அவன் ஆசையை ஊட்ட நீ தங்கத்தைச் செய்ய எங்கேடா போகிறாய்…?
5.உன்னுடைய ஒவ்வொரு உணர்வும் அது மங்காத நிலைகளுக்கு
6.”அந்தத் தங்கம் போல் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்யச் சொன்னேன்..!” என்று தெளிவாக்கினார் குருநாதர்.

சாதாரணமாக நான் கற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றிலேயும் “அடி வாங்கித் தான் கற்று வந்தேன்…” சொல்வது அர்த்தம் ஆனதா…?

முதலில் தங்கத்தை விற்றதற்கு ஒன்றரை ரூபாய் கொடுத்தார். இரண்டாவது கொடுக்கும் போது… சுத்தமாகவே நீ பொய் பேசினாய்… ஏமாற்றினாய் அதனால் உனக்குக் காசில்லை… போ…! என்று விற்ற காசு எல்லாவற்றையும் வாங்கி கொண்டு விட்டார்.

அது மட்டுமல்ல. அடி வேறு கொடுத்தார்.
1.நீ திருடன்டா…! என்கிறார்.
2.தங்கம் செய்துவிட்டு ஏமாற்றித் தப்பி ஓடலாம் என்று பார்க்கிறயா…?
3.நீ உன் மனதைத் தங்கமாக்குடா… போடா…….!

இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும்

 

கர்ப்பிணியாக இருக்கும் அனைவரும்
1.வியாசகன் அகஸ்தியன் போகர் என்று பெரும் தத்துவ ஞானிகளுடைய பெரும் மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணி எண்ணி ஏங்குங்கள்.
2.கருவிலிருக்கக்கூடிய குழந்தை அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இவ்வாறு பெரும் மகரிஷிகளை நீங்கள் சிருஷ்டிக்க வேண்டும்.

எதிர்காலக் குழந்தைகள் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பரப்பினால் தான் விஞ்ஞான அறிவால் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்து இந்த உலகை மீட்ட முடியும்.

காரணம்… மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலையில் உருப்பெற்றுக் கொண்டிருக்கும்… அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும்… மனிதனை மனிதன் என்று இல்லாது அசுரத் தன்மை கொண்டு அழித்திடும் உணர்வுகள்… ஒவ்வொரு மனிதனின் நிலைகளிலும் இது ஊடுருவி உள்ளது.

அத்தகைய அசுர உணர்வுகளிலிருந்து மீட்டிட அந்தச் சப்தரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உருப்பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
1.அந்தக் குழந்தை உங்களையும் காக்கும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்.
2.எந்த ஊரிலே பிறந்ததோ அந்த ஊரையும் காத்திடும்.
3.அதனின்று உலகைக் காத்திடும் நிலை வரும்.

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவை அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகள் அது வளர வளர வளர இந்த உலகில் உள்ள தீமைகளை மாற்றி அமைத்திடும் திறன் பெறும்.

இனி இந்த உலகம் பெரும் மாற்றங்களைச் சந்திக்கப் போகின்றது. எவ்வளவு கோடிப் பணம் வைத்திருந்தாலும் அவை நமக்கு உதவப் போவதில்லை.

1.இன்று காஷ்மீரிலோ அல்லது இந்தியாவின் சில பகுதிகளை எடுத்துக் கொண்டாலோ
2.அல்லது மற்ற பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் உள்ளோர் அனைவருமே தன் பிள்ளை எது…? தன் குழந்தைகள் எது…? என்று
3.செல்வங்கள் அழிந்து… அனாதைகளாக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
4.இது போன்று உலக நிலைகள் அனைத்திலும் ஆப்பிரிக்காவிலும் இன பேதங்களால் பேரழிவுகள் வந்து கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் இது போன்று ஏற்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில்… அகஸ்தியனால் தீமைகளை அழித்திடும் ஆற்றல் அவனில் பெற்று தீமையற்ற உடலாகத் தான் வளர்த்து… இன்றும் துருவ நட்சத்திரமாக… ஒரு பேரண்டமாக சப்தரிஷி மண்டலமாக வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அகஸ்தியன் காட்டிய அறநெறியைப் பின்பற்றி எத்தனையோ தத்துவ ஞானிகளும் மகான்களும் தோன்றியுள்ளார்கள். ஆகவே… இன்று கர்ப்பிணியாக இருப்பவர் அனைவரும் அந்த அகஸ்தியன் வியாசகன் போகர் போன்ற அந்த மகரிஷிகளுடைய உணர்வுகளைக் கருவிலிருக்கும் குழந்தைக்கு இணைத்துப் பழகுதல் வேண்டும்.

பிருகு அத்திரி போன்றவர்கள் ஆரம்பத்தில் அரசர்களாக இருந்தாலும் பின்பு பெரும் கொண்ட சக்திகளை தங்களுக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டார்கள். அத்தகைய மகரிஷிகளின் உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று சதா அதை உருப் பெறச் செய்யுங்கள்.
1.உலகில் இருக்கும் அசுர சக்திகளை மாற்றிடும் திறன் அந்த எதிர்காலக் குழந்தைகளுக்கு வளர்கின்றது.
2.தீமைகளில் இருந்து உலகைக் காத்திட இந்தத் தென்னாடு பயன்படப் போகின்றது.

உலகில் பேரழிவு வரும் இந்த நேரங்களில்… இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள சகோதரிகள் கர்ப்பிணிகளாக இருந்தால் இதை உபதேசியுங்கள்.

அவ்வாறு நாம் செய்தோம் என்றால்
1.இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்கலாம்.
2.அவர்களின் மறைவில் நாமும் பிறவா நிலையை அடையலாம். இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

போகருடைய தாயை ஒரு விஷம் கொண்ட பாம்பு தீண்டி விடுகின்றது. காளிங்கராயன் என்பவரை போகர் அப்போது அணுகுகின்றார்.

தன் தாயைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அவரிடம் பல பச்சிலை மூலிகைகளை அறிந்து அதை வைத்துத் தன் தாயை எழுப்புகின்றார். விஷத்தின் தன்மை எவ்வாறு ஒடுக்குவது…? என்று அவரிடம் பழகித் தெரிந்து கொள்கின்றார்.

விஷத்தை ஒடுக்கும் உணர்வினைத் தனக்குள் அதன் உணர்வின் அறிவாக தெளிந்த நிலையில் கொண்டு வருகின்றார். போகர். அதன் வரிசையில் தான் பல ஆற்றல்கள் அவருக்குள் பெருகத் தொடங்கியது.

1.நட்சத்திரங்கள் கோள்கள் இயக்கங்களையும் அறிகின்றான்… வான மண்டலத்தையும் அறியத் தொடங்குகின்றான்.
2.இதையெல்லாம் அறிந்த பின் அவன் இன்னொரு கூட்டிற்குள் (உடலுக்குள்) செல்லவில்லை
3.ஒளியின் தன்மையைப் பெருக்குகின்றான்…
4.ஒளியின் தன்மை ஆனாலும் உந்தித் தள்ளி விண்ணுக்கு அவனை அனுப்பும் வழி இல்லை.
5.ஏனென்றால் அதற்குண்டான முகப்பு வரவேண்டும்… இருந்தாலும் அந்த ஒளி அலைகள் வருகின்றது.

குருநாதர் போகரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவன் பெரிய திருடன்… வானத்தையே திருடி இருக்கின்றான்…! ஆனால் விண்ணுக்குப் போகும் வழியைத் திருடத் தெரியவில்லை…! நீயும் ஒரு திருடன் ஏன்று என்னிடம் (ஞானகுரு) சொல்கின்றார்.

அப்பொழுதுதான் இந்த உணர்வின் தன்மை எடுத்து
1.போகருக்கு நீ அந்த விண் செல்லும் பாதையின் உணர்வைச் செலுத்து
2.அந்த உயர்ந்த உணர்வுகளை… நினைவுகளை எடு
3.அவருடன் தொடர்பு கொள்… அந்த உணர்வின் துணை கொண்டு இந்த முகப்பைக் கூட்டு.
4.ஒளி நிலை பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு
5.ஏனென்றால் உயர்ந்த சக்தி பெற்றவர்.. அந்த உணர்வின் துணை கொண்டு விண்ணுக்குச் செலுத்து என்றார் குருநாதர்..

இப்படித்தான் இராமலிங்க அடிகள்… காந்தியடிகள்… விவேகானந்தர் என்று இது போன்று ஏனைய எத்தனையோ மகான்களை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர். “ஒன்று இரண்டு அல்ல…”

ஒவ்வொருவரும் தத்துவங்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டாலும்
1.விண் செல்லும் பாதையை அந்த முகப்பின் தன்மை எவ்வாறு அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்
2.ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று தெளிவாகக் கூறினார் குருநாதர்.

இந்தப் பழக்கத்தை எல்லாம் ஏற்பபடுத்திய பின்பு தான் அவருக்கும் “தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்” என்று குருநாதர் இந்த வேலையைச் செய்தார்.

ஏனென்றால்
1.அவர் (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ உடல்களைத் தாவியவர் தான்
2.தகுந்த உடல்கள் பெறவில்லை… அதற்குத் தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை
3.அவரவர்கள் இச்சைக்குத் தான் செல்கின்றார்கள்.
4.(குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள் இருக்கின்றது).

அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கின்றதோ அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் முருகன் சிலையை வைத்தான் போகன். அது யாருக்கும் தெரியாது.

போகன் சிலையை மாற்ற வேண்டும்… வைக்க வேண்டும்… என்று பல பேர் வந்து கேட்டார்கள். அந்த மாதிரிச் செய்ய முடியாது. ஏதாவது மீறித் தொட்டீர்கள் என்றால் குடும்பம் எல்லாம் நாஸ்தி ஆகிவிடும்… தொடும் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிவிடும் என்று சொன்னேன்.

உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிலையை வைத்தான் போகன்.

ஆனால் தனித்த நிலைகள் கொண்டு சுயநலத்திற்காக வியாபாரத்திற்காக அந்தச் சிலையைப் பயன்படுத்தினால் அவன் யாரும் உருப்பட மாட்டான்.

ஏமாற்றும் நிலைகள் கொண்ட எவனும் இங்கே உருப்படியாக மாட்டான். மற்ற கோவில்களில் செய்வது வேறு… அங்கிருக்கக்கூடிய சிலைகள் வேறு. பழனி முருகன் சிலை அப்படிக் கிடையாது. அத்தனை பெரிய அணையை போகன் இங்கே போட்டு வைத்திருக்கின்றார்.

தவறு செய்ய முடியாது… தவறு செய்தான் என்றால் நொறுங்கிப் போவான். உணர்வின் தன்மை விஷமாகிவிடும். விஷத்தை உட்கொண்டால் எப்படி நினைவிழக்கச் செய்யுமோ… புழுவாக பூச்சியாக பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்.

இந்த உடலில் நேரமாகி விட்டது

 

நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றைப் பார்த்து, அதனிடமிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகொண்டு அதற்கு இரையாகி அதனின் உணர்வைக் கவர்ந்து… கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப சரீரம் பெற்று, இப்படி பல கோடிச் சரீரங்களைப் பெற்றுப் பல கோடி சரீரங்களைப் பெற்றதன் பின்
1.இன்று எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
2.நம்மை மனிதனாக உருவாக்கியது… இதுதான் “கோடிக்கரை”.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை உருவாக்குகின்றது. உணர்வின் தன்மையை நமது உடலாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக, அன்று ஞானிகள் இராமேஸ்வரம் என்று பெயரை வைத்து, ஸ்தல புராணங்களை வடித்து வைத்தார்கள்.

1.உலகில் எங்கிருந்து சுழன்று வந்தாலும் எத்தனை ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும்
2.கடைசியாக மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும் என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு குணமும் நுகரப்படும்போது, அந்த குணங்களுக்கெல்லாம் அந்தந்த உடலைக் காக்கும் நிலை வருகின்றது. காத்திடும் உணர்வுகள் அந்தந்த உடலில் வரப்படும்போது, அந்த குணங்கள் அனைத்தும் தெய்வமாகின்றது.

நுகர்ந்த உணர்வின் எண்ணங்களை உயிர் உடலாக உருவாக்குகின்றது. அதாவது, எதை நுகர்கின்றோமோ அதை “ஓம் நமச் சிவாய” என்று நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி, உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை நாம் ஏசும் பொழுது “ஏசுகின்றார்” என்ற உணர்வை எடுத்து, அந்த உணர்வுகள் அவரிடத்தில் உடலாகி விட்டால் அவருடைய உடலுக்குள் சேரும் அனைத்தும் “சிவதனுசு”.

நம் உடலுக்குள் அதே ஏசிய உணர்வின் தன்மை பதியும்போது, அதனின் எண்ணங்கள் கொண்டு நமது செயலாக்கங்கள் இருக்கும் என்பதைத்தான் நமக்குக் காவியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

நமது உடலில் சேர்த்த உணர்வு கொண்டு “ஒருவன் என்னைக் கோபித்தான்” என்று தன் நண்பன் ஒருவரிடம் சொல்லி,
1.“என்னை இது மாதிரியெல்லாம் பேசுகிறான் அவனை விடுவேனா பார்” என்று அங்கு சொல்லப்படும்போது,
2.நமது உடலில் விளைந்த இந்த உணர்வுகள் தனுசாக மாறி கோபமான சொல்லின் உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அதற்குத்தான் “தனுசு” என்று பெயர் சூட்டுகின்றனர்.

ஓருவர் நமக்கு தீங்கு செய்தார் எனும்போது, அதனின் உணர்வின் தன்மை “ஓம் நமச்சிவாய” என்று
1.நமது உடலாகும் பொழுது சிவம் ஆகின்றது.
2.அதனின் உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படும் போது சிவதனுசு ஆக மாறுகின்றது.

ஆனால் ஒருவர் நம்மைத் திட்டியதை நமது நண்பரிடம் சொல்லுகின்றோம். நண்பரிடத்தில் சொல்லப்படும் பொழுது, இந்த உடலில் திட்டிய உணர்வுகள் வந்ததனால்“அவனை நான் விடுவேனா பார் அவனைத் தொலைத்துக் கட்டுகிறேன் பார்” என்று நாம் சொல்லுகிறோம்.

ஆனால் நம்முடைய நண்பர் அவருக்கும் (திட்டியவர்) நண்பராக இருக்கும் பட்சத்தில் நம்மைப் பற்றி அவர் (திட்டியவர்), நமது நண்பரிடத்தில் கூறியதை நண்பர் நம்மிடம் வந்து “அவர் உன்னை இந்த மாதிரிப் பேசுகிறார்…” என்று சொல்லும்போது என்ன ஆகின்றது…?

நாம் “ஆ…. அப்படி ஆகிவிட்டதா…! அவனை அடிக்கிறேன் அவனைக் கொல்கிறேன்” என்று இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, சுவாசித்த உணர்வுகள் என்ணங்களாக மாறுகின்றது,

1.அதனின் உணர்ச்சிகளை உடலாக மாற்றுகின்றது
2.சொற்கள் தனுசாக மாறி, எவரைச் சொல்கின்றோமோ
3.அவரிடத்தில், இதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.அதனால்தான், நமது உடலிலே விளைந்த உணர்வுகளை “சிவதனுசு” என்று காவியங்கள் தெளிவாக கூறுகின்றன.

ஆகவே நாம் உயிரால் நுகரப்படும் உணர்வுகள் உடல் பற்றுடன் இருக்கப்படும்போது, பற்றின் உணர்வுகள் இந்த உடலைக் காப்பதற்குத்தான் இந்த தனுசு உதவும்.

உடல் பற்றின் தன்மை கொண்டுதான் பல கோடிச் சரீரங்களைப் பெற்று, இன்று “கோடிக்கரையாக” மனித உடலைப் பெற்றோம் என்பதனை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

இராமாயணத்தில் “இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது, என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின் பூஜைக்கு நேரமாகிவிட்டது என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

ஏனென்றால்
1.“நேரமாகிவிட்டது” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர்.
2.ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது” என்பதுதான் அதனுடைய பொருள்.
3.நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு, இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து)
4.சிவபூஜை செய்தார்… சிவலிங்கத்தை பூஜித்தார்… சிவலிங்கமாக மாற்றினார் என்று காண்பித்தார்கள்.
5.எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

அனைத்துத் தீமைகளையும் விஷத்தையும் வென்றது, துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, காலையில் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. அதை நமது பூமி, துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது.

இப்படி நம் பூமியில் படரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை, மனிதர்களான நாம், நமது எண்ணம் கொண்டு நம்முள் பெற முடியும். ஆகவே
1.இதிலிருந்து நாம் இராமேஸ்வரம்… நமது எண்ணத்தால்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
2.“தனுசுகோடி”, நம் என்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகரும்போது,
3.அதனின் உணர்வுகள் நமது உயிருடன் ஒன்றி கடைசி நிலையாகப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது என்ற நிலையை அறிந்து தியானித்து, இதனின் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதனை நமது எண்ணங்கள் கொண்டு, எப்படி வளர்க்க வேண்டும்…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், தன்னைக் காத்திடும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து நுகர்ந்தறிந்த உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட உணர்வுகள் மனிதராகப் பிறக்கின்றது.
1.தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து
2.தீமையிலிருந்து விடுபடும் மனிதரின் உடலை நமது உயிர் உருவாக்கியுள்ளது.
3.ஆகவே மனிதர்களான நாம் தான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைகளை எண்ண முடியும்.

ஆனால் தனுசுகோடி என்பது உயிர் பல கோடித் தீமைகளை வென்று தீமைகளையும் விஷங்களையும் வெல்லக்கூடிய சக்தி பெற்று உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

நாம் அனைவரும் உயிரோடு ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் எமது அருளாசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் கடைசிக் கரையாக இதை மனிதன் புரிந்து கொள்வதற்காக ஓரத்தில் ஒதுங்கி ஒரு திட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள் – கோடிக்கரை.

அங்கே கடல் தெரிகின்றது.
1.அந்தக் கடலுக்கு நேராக வடக்குத் திசையில் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கும் அளவிற்கு அந்தத் தீவும் அமைந்திருக்கின்றது.
2.அதனால் இராமேஸ்வரம் என்ற ஊரில் அங்கே துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சாதாரண மக்களும் எண்ணி ஏங்கி
3.இந்த உடலுக்குள் சார்ஜ் செய்வதற்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஏற்றி வலுப்படுத்திக் கொண்டபின் அடுத்து தனுசு கோடி.

சந்தர்ப்பத்தில் நம் வாழ்க்கையில் எத்தனையோ வேதனைகளைச் சந்திக்கின்றோம். உதாரணமாக ஒரு பொருள் உடைந்து அதிகமான பணம் செலவழிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திவிட்டு, “சரி நாளைக்குச் சம்பாதித்துக் கொள்வோம்…” என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம்
1.பக்தி மார்க்கத்திலே பக்தி எப்படி இருக்க வேண்டும்…?
2.மனிதன் தீமைகளை எப்படி நீக்க வேண்டும்…?
3.அதற்கு வேண்டிய உபாயங்களைக் கொடுத்துக் காட்டியுள்ளார்கள்.

ஆகவே தனுசு கோடி எத்தனை கோடி உணர்வுகளைப் பெற்று இன்று இந்த மனிதனாக ஆனோமோ தீமைகளை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த வாழ்க்கையில் எடுத்துக் கொண்டு வந்தால் ஒவ்வொரு நிலைகளிலும் கோடி.
1.இப்படிக் கோடி உணர்வுகளை எடுக்கப்படும்பொழுது
2.நம் உயிர் ஒன்றாகின்றது.

கோடி உணர்வின் ஒளியின் ஒன்றாகி அது இன்றைக்கு ஒளியின் சரீரமாக இருப்பது துருவ நட்சத்திரம். அங்கே சென்றால் நாமும் ஒளியின் சரீரம் ஆகின்றோம்.

27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து சூரியன் ஒளியாக ஆகிறது. அதே போல 27 நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது…? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

1.27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எடுத்து நமக்குள் மனிதனாகி ஒளியின் உணர்வு பெற்றபின்
2.அது ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

சாதாரணமாக நாம் வாழும் (மற்ற) இடங்களில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்க முடியாது. அந்தக் கடலோரப் பகுதிப் பக்கம் போகும் போது இராமேஸ்வரத்தில் வடக்குத் திசையில் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம்.

துருவ நட்சத்திரத்தைப் பார்த்து அதை நமக்குள் உரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் ஞானிகள் அன்று அந்த இராமேஸ்வரத்தில் காட்டியுள்ளார்கள்.

இதை யாரும் சொல்வதில்லை. ஆனால் இன்று என்ன செய்கிறார்கள்…?

காசை வாங்கிக் கொண்டு சாங்கியங்களைச் செய்து பாவத்தைப் போக்கும் இடம் என்று
1.தவறான பாதைகளைக் காட்டித் தவறான வழிகளில் போய்
2.அதுதான் நமக்குச் சிறந்தது என்று
3.இதன் வழிதான் பெரும்பகுதி மக்கள் போய்க் கொண்டுள்ளார்கள்.

நமது வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஞானிகள் காட்டிய நிலைகளில் உன் உயிரை நீ மதித்து நட, உன்னை அறியாது சேர்த்த அழுக்கை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியை எடுத்துக் கொள் என்று தான் இராமேஸ்வரத்தை வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் 27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளியாக ஆக்குகின்றது சூரியன்.

27 நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)

27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
1.விஷத்தின் தன்மையை முறித்தவன்,
2.உணர்வின் தன்மையை ஒளியாக்கியவன்
3.ஒளி உடலாக ஆனவன் அகஸ்தியன்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆண் பெண் என்ற நிலைகளில் இணைந்து ஒளி உடல் பெற்றவன் அவன். உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை இதே சூரியன் தான் கவர்கின்றது. நமக்கு முன் வந்து கொண்டிருக்கின்றது.

ஒரு செடியிலிருந்து வெளிப்படும் சத்தை சூரியன் கவர்கின்றது. உயிரணு நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அணுவின் தன்மை உருவாகி உடலாக மாறுகின்றது.

செடியில் விளைந்த சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்தால் அந்தச் செடியின் வித்தை மண்ணிலே ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தை எடுத்து அதே செடியாக விளைகின்றது. அதே உணர்வு அதே வித்து அதனின் நிலையாக உருவாக்குகின்றது.

27 நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான்
1.இதே உயிர் பல விதமான உணர்வுகளை எடுத்து 27 நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டது.
2.ஒளியின் உடலாக அதே உயிர் கொண்டு நம் உணர்வை ஒளியாக மாற்ற முடியும்.

வேதனைப்படுவது என்பது மனிதனைக் கொல்லும் நஞ்சு

 

ஒரு விஷம் தாக்கப்பட்டால் எப்படி உடல் எல்லாம் செயலற்றுப் போகின்றதோ “இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மையினால்”
1.உடலில் உள்ள மற்ற நுண்ணிய பாகங்களில் அது பட்டபின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலையாகி விடுகின்றது.
2.தசைகளில் மிஞ்சியுள்ள இரத்தத்தில் அதனுடைய உணர்ச்சிகள் கோபத்தை உண்டாக்குவதும் அங்கங்களைச் செயலற்றதாகவும் மாற்றி விடுகின்றது.
3.உடல்களிலே உணர்ச்சியற்ற நிலையும் உணர்வுகள் இழந்த நிலையில் நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று பிரஷர் வந்தவருடைய நிலைகள் கை கால் அங்கங்கள் குறுகி விடுகின்றது.
4.சிறு மூளையில் இது தாக்கப்பட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்பொழுது கைகால் அங்கங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.
5.பித்த சுரப்பியில் நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் பித்தம் அதிகமானால் தலை சுற்றி கீழே எப்படி விழுகின்றோமோ இதைப் போல் ஒவ்வொன்றும் செயலற்றதாக மாறி அங்கங்கள் சோர்ந்து வீழ்ச்சி அடைந்து விடுகின்றது.
6.சுவாச உறுப்புகள் பலவீனம் ஆகிவிட்டால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகி விடுகிறது.

இதைப் போன்று சிறுகச் சிறுக நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தால் நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயக்கவில்லை என்றால் ஆஸ்மா போன்ற நோய்களும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.

நாம் கூர்ந்து சிந்திக்கும் கண்களுக்கு… பார்வைக்குச் செல்லும் பொழுது வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது கண் கொண்டு ஒரு பொருளை நாம் காணுவது என்பது அந்த பொருளைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைந்து விடுகின்றது… மறைத்து விடுகின்றது.

பொருளைச் சிறிது நேரம் காணுவோம் என்றால் அல்லது அந்தப் போருளைச் செயல்படுத்த முடியாத நிலைகள் சோர்வடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் கண்ணில் இருக்கும் கருவிழியால் அது கவர்ந்தாலும் அதிலே எடுத்த அமில சக்தியின் தன்மை உடல் முழுவதும் ஊடுருவி அடையச் செய்யும் இந்த நாளங்கள் அது மங்கிச் செயலற்றதாகி விடுகின்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி செயல்படுவோமே என்றால் கருவிழிகளில் படும் பட உணர்வுகளை அது தெளிவாக எடுத்துக்காட்டாத நிலைகள் மங்கும் நிலை அடையப் படும்பொழுது பொருள் காணும் நிலைகளில் கவர்ந்த கருவிழியும் அதுவும் பலவீனமடைகின்றது.

கண்களில் உள்ள அந்த நுண்ணிய படத் திரைகளைக் காட்டும் அந்தத் திரை வழியும் பலவீனம் அடைந்து விடுகின்றது. நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத். தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகின்றது.

இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்து அதன் மூலம் வேதனப்பட்டதால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே இது சிறுகச் சிறுக விளைந்து
1.இதனின் பலனாக நமக்குள் கோபமும் வேதனையும் வரும் பொழுது
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலையும்
3.பிறிதொன்றைப் பார்க்கப்படும் பொழுது நமக்குள் பதிய வைத்த இந்த உணர்வுகள்
4.குடும்பத்தில் உற்று நோக்கும்பொழுது நம்மை அறியாது கோபமும் வேதனையும் பட நேரும்.

இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறும் பொழுது நமக்குள் இனம் புரியாது மனக்கலக்கங்களும் கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.

பலவிதமான உணர்வுகளை நமக்குள் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் கொண்டு உடலில் “பல பிணிகளை” ஏற்படுத்தும் நிலைகள் உருவாகி விடுகின்றது

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான எதிர் நிலையாகும் பொழுது கிட்னிக்கோ கண்ணிற்கோ கல்லீரலோ நுரையீரலிலோ இதைப்போன்ற நிலைகள் மாசுபடும் பொழுது இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது

1.அதீதமான வேதனைகளை நாம் படுவோமே என்றால் கேன்சர் என்ற வித்தாக முளைக்கத் தொடங்கி விடுகின்றது
2.விஷச் செடியின் தன்மை முளைத்து விட்டால் ஆரம்பமாக இருக்கும் பொழுது தெரியாது… .கேன்சர் நோயும் அப்படித்தான்.
3.அதனின் முதிர்ந்த பருவம் வித்தின் தன்மை முளைத்து முடிவில் தான் தெரிய வரும்.

உதாரணமாக கஞ்சாச் செடி அது முதிர்ந்து கடைசியில் பிசின் ஒழுகும் போது தான் அதனுடைய மணங்கள் தெரிய வரும்.. அதுவரையிலும் அது கஞ்சாச் செடி என்று தெரிந்து கொள்ளவே முடியாது அதனுடைய மணம் அப்பொழுது தான் வீசும்.

1.இதைப் போன்ற துரித நிலையில் மனிதன் வேதனைப்பட்ட இந்த உணர்வுகள் அது சிறுகச் சிறுக விளைந்து
2.கஞ்சா செடியைப் போல\ இந்த உடலின் மணத்தை வேதனையாக உருவாக்கி வரும் பொழுது தான் கேன்சர் என்றே அறிய முடியும்
3.அதுவரையிலும் வயிற்று வலி மற்ற வழி என்ற நிலையில் அல்லது மேல் வலி கை வலி என்ற நிலைகளும்
4.அதை நாம் எத்தகைய மருந்து சாப்பிட்டாலும் அது கேட்காது.

சிறுகச் சிறுக வேதனையைக் குறைத்து வந்தாலும் “அது முழுமையான வித்தை அடையப்படும் பொழுது” நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஆகிய விடுகின்றது.

நவீன விஞ்ஞான அறிவு கொண்டு கருவிகளை வைத்துக் கண்டுணர்ந்தாலும் அதனைத் தடுத்திடவும் முடியாத நிலை ஆகிவிடுகிறது.
1.ஒரு வேதனை என்ற வித்து நமக்குள் தொடர்ந்து விட்டால் அதனுடைய கிளைகள் அதிகமாக உடல் முழுவதும் பரவி
2.நாம் எண்ணிய எண்ணத்துடன் மூளை பாகம் வரையிலும் அதனுடைய தொடர்பலைகள் உண்டு.
3.மூளையிலிருந்து எண்ணத்தால் உருப்பெறும் உணர்வுகள் ஒரு பக்கம் அறுவை சிகிச்சை செய்து அதை எடுத்தாலும்
4.அதனின் விழுதின் தொடர் கொண்டு மீண்டும் அவருடைய தொடர் வரிசையாகத் தான் வரும்.

இன்று இல்லை என்றாலும் பத்து வருடம் கழித்து வேதனை என்ற நிலைகள் உருவாகி அந்த கேன்சர் என்ற நிலை வந்தால் அந்த கேன்சரை எடுத்து விட்டு மீண்டும் அதை மீண்டும் அதை விட்டோம் என்றால் வாழ் நாளுக்குள் மீண்டும் அது தழைத்து ஓங்கச் செயல்படுத்திவிடும். முழுமையாக அறுத்திடும் நிலை இல்லை.

காரணம்
1.நஞ்சினுடைய அதிவீரியத்தன்மையின் செயலாக்கங்கள் தான் இவைகள் எல்லாம்.
2.எக்காரணத்தைக் கொண்டும் வேதனைகளை நம் வாழ்க்கையில் வளர்த்து விடக் கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைக்க வேண்டும்.

அவருடைய உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. நாம் எடுத்துக் கொண்ட ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று
1.அவர்களை உந்திச் செலுத்தும் பொழுது
2.நேராக சப்தரிஷி மண்டலம் போய்ச் சேர்கின்றது.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அவர்கள் கரைத்தவர்கள். அங்கே சென்றவுடன் நம் முன்னோர்கள் மீண்டும் உடல் பெறும் அந்த உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கி விடுகின்றது… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது

கரைத்த பின் அறிவாக இருக்கும் அந்த ஒளி நிலைத்து நிற்கின்றது. அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் அவர்கள் சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதே போன்று குடும்பத்தில் யார் உடலை விட்டுப் பிரிகின்றார்களோ கணவன் இறந்தால் கணவனை முதலில் அனுப்புகின்றோம்… மனைவி இறந்தால் மனைவியை முதலில் அனுப்புகின்றோம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கணவன் முதலில் ஒளியாக ஆன பிற்பாடு மனைவி இங்கே இருக்கும் பொழுது
1.அதே உணர்வுடன் கணவன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி இதை எண்ணப்படும் பொழுது அடுத்து மனைவி உடலை விட்டுச் சென்றாலும் அங்கே சென்று விடும்.
3.அதாவது அந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக மனைவியின் ஆன்மா அங்கே சென்றடைந்து விடும்.

நாம் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குள் பெருக்குவதற்குத் தான் இப்போது கூட்டாக உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். செய்கிறோம்.
1.இந்தப் பதிவு இல்லை என்றால்
2.அங்கே நாம் யாரையும் அனுப்ப முடியாது.

மனைவி முதலில் பிரிந்தால் மனைவியின் ஆன்மாவைக் கணவன் உந்தி அங்கே சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திய பின் கணவன் இங்கே எண்ணியவுடன் ஆட்டோமேட்டிக்காக கணவனின் ஆன்மாவும் அங்கே சென்று விடுகின்றது.

யார் பிரிந்தாலும் முதலில் அவர்களை அங்கே அனுப்பி வைத்து விடுகின்றோம். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.அங்கு இணைந்த பின் அவர்கள் உணர்வு இங்கே இருக்கின்றது.
2.அந்த ஒளியின் உணர்வை இங்கிருந்து நாம் பெருக்குகின்றோம்.
3.பெருக்கிக் கொண்டால் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
4.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சப்தரிஷி மண்டலம் தான் நாம் செல்வோம்.

நண்பர்களுக்குள் நன்மை செய்தான் என்று பாசமாக இருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்பத்தில் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால்…
1.பாசத்தால் எண்ணி “நண்பா நான் போகின்றேன்…” என்று எண்ணினால் நண்பனுடைய உடலுக்குள் தான் அந்த ஆன்மா செல்லும்.
2.அந்த நண்பனும் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தானே “இப்போது போய் விட்டானா…” என்று எண்ணும் பொழுது அந்த உடலுக்குள் தான் செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

ஆகவே… இதற்கு முன்பு மூதாதையர்களை விண் செலுத்தும் அந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டோம். இப்போது மீண்டும் அந்த ஞானிகள் கண்ட வழியினை “உங்களுக்குள் தொடரும்படி செய்கின்றோம்…”

மனிதனான பின் பிறவி இல்லா நிலை அடைந்தவர்கள் அக்காலத்தில் விண் சென்றவர்கள் தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்” என்று சொல்வது. சப்தரிஷி மண்டலத்திற்குள் கண்ணுக்குப் புலப்படாது ஒளியாக எண்ணிலடங்காதோர் உள்ளார்கள்.

அவர்கள் பல கோடி ஆண்டுகள் ஆகித்தான் ஒளியின் சரீரமாக உள்ளார்கள் “என்றும் பதினாறு” என்று வாழுகின்றார்கள்.
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற சூரிய குடும்பத்தில் இருந்து ஆற்றல்களைப் பெற்றதனால்
2.அதிலே நஞ்சாக வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள்.
3.என்றும் பதினாறு என்று அகண்ட நிலையில் எங்கும் செல்லும் திறன் பெற்றவர்கள்
4.ஒரு எல்லையில் இருந்து தனக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள்.

எந்த எல்லையில் இருக்கின்றார்களோ… துருவத்தை எல்லையாக வைத்து சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் வருவது போன்றது துருவ நட்சத்திரத்தினுடைய வட்டத்தில் அவர்கள் சுழன்று வருகின்றார்கள் சப்தரிஷி மண்டலங்களாக…! மனிதனாகப் பிறந்து வாழ்ந்தவர்கள் தனித்தன்மை கொண்டு வாய்ந்தவர்கள் தான் அகண்ட அண்டம் பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது.

அதிலே எத்தனையோ கோடி ஆண்டுகள் வரப்படும் பொழுது அணுவாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனான பின் நட்சத்திரமாகிக் கோளின் தன்மை அடைந்தது பலர்.

இந்தக் குடும்பங்கள் அழிந்தாலும் அதற்குள் எத்தனையோ நிலைகள் உள்ளது

ஒரு சூரிய குடும்பமே எத்தனை கோடி மைல்கள் எல்லை விஸ்தீரணம் கொண்டது. அதேபோன்று அடுத்த சூரிய குடும்பத்தை எடுத்தாலும் அது எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.

நாம் இந்த 2000 சூரியக் குடும்ப வட்டத்தில் தான் வாழுகின்றோம். ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான் சுழலுகின்றது. இது வேறு 2000 சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய சக்தியை எடுத்து தான் வாழுகின்றது.

இப்படி ஒவ்வொன்றிலும்
1.மனிதனாக உருப்பெற்றவன் ஒளியாக மாறிய பின் தனித்தன்மை வாய்ந்ததாகச் செல்லுகின்றது
2.இதற்கு அதற்கும் சம்பந்தமில்லாது செல்கின்றது… துருவத்தின் எல்லையில் தான் வாழ்கின்றார்கள்.

ஆகவே என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அடைய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

ஆகவே யாராக இருந்தாலும் நாம் பலருடைய ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்துகின்றோம்… மூதாதையர்களை அனுப்புகின்றோம்.
1.இவ்வாறு செய்து கொண்ட பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால்
2.யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாம் அங்கேதான் செல்கின்றோம்.

தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று இந்த உணர்வை நாம் வளர்க்க வளர்க்க
1.உடலை விட்டு நாம் சென்றால் அங்கே தான் உயிர் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர
2.புவியின் ஈர்ப்புக்குள் இருக்காது…!

இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால் ஒரு தொடர்பு வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆன்மாக்களை அங்கே அனுப்புகின்றோம். எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியம் ஆகும் பொழுது நம் குருநாதர் காட்டியபடி “ஒளியின் கூட்டமைப்பாகின்றது…”

பூணூல்

 

ஒருவன் நம்மைப் பழித்துப் பேசுகின்றான் என்றால் அந்தச் சமயத்தில் நம் உடலில் உள்ள குணங்களைக் காத்திட நாம் ஆவேச நிலைகள் கொண்டு தான் செயல்படுவோம்.

அப்போது… “நாம் எண்ணிய நிலைகள் கொண்டு தான் உயிரே இயக்குகின்றது” என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து உணர்த்துவதற்கே வசிஷ்டாத்வைதம் என்ற நிலைகளை வியாசகன் பிரித்து உடலின் உறுப்புக்குள் இயக்கும் நிலைகளை உணர்த்தினான்.

1.மகரிஷிகளால் உணர்ந்து ஒளியின் சரீரம் பெற்றதை… வியாசகன் கண்டுணர்ந்த இந்தத் தத்துவத்தைத் தான்
2.தனக்குள் அதை ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்
3.“ஆவணி அவிட்டம்” என்றும் அந்த நாளில் “பூணூல் போடுவது” என்று காட்டினார்.

நமக்குள் எத்தனை நிலைகள் வந்தாலும் அதிலிருந்து தன்னைக் காத்திடல் வேண்டும். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இதை உணர்த்திய மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று தான் “வசிஷ்டாத்வைதத்தை” வியாசகன் காட்டிணார்.

நம் உடலுக்குள் அனைத்து நிலைகளும் இருப்பினும்
1.அந்த ரிஷிகளுக்குள் தீமைகள் அடங்கியது போல…
2.அத்தகைய அடக்கி ஆட்சி புரியும் நிலைகளைப் பெறும் நன்னாளாக எண்ணுவது தான் “பூணூல் பூட்டும் நாள்…”

சாஸ்திர விதிப்படி பூணூலை அணிந்து கொண்டு என் மதம் என் இனம் என்ற நிலைகளில் எங்கள் இனத்திற்காக நாங்கள் அதை அணிந்து அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சாரார் அவரவர்கள் விதிப் பிரகாரம் அதைச் செயல்படுத்துகின்றார்கள். அன்று இதைச் செய்து சாஸ்திரீகம் சாங்கியம் என்பதைப் பின்பற்றுகின்றனர்.

1.வசிஷ்டாத்வைதம் என்ற நிலையினை நமக்குள் ஆதாரமாக அமைத்து
2.எப்படி இந்த இரு நூலின் தன்மை வலுக்கொண்டதாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் இணைந்திருக்கும் நிலைகள் கொண்டு
3.ரிஷியின் தன்மையாக உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும் இணைக்கும் தன்மையாக
4.நமக்குள் புறநிலைகளிலே ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் நிலையைத் தான் உணர்த்தப்பட்டது.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன்னை அறியாது தன் சந்தர்ப்பத்தால் மெய் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து அவனின் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றான்.
1.அவனைப் பின்பற்றி அவன் ஒளியான நிலைகளை வெளிப்படுத்தியதுதான்
2.இந்த 4000 ஆண்டுகளுக்குள் வியாசகரால் சந்தர்ப்பத்தால் விண்ணுலக ஆற்றலை அறியும் ஆற்றல் வருகின்றது.

காரணம் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அறிந்தாலும் அதைச் சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்த வியாசகரால் சாதாரண மக்களும் எட்டும் அளவிற்கு அவன் கண்டறிந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.

வெளிப்படுத்தினாலும் அரும்பெரும் சக்திகளைத் தனக்குள் எவ்வாறு பருக வேண்டும் என்ற நிலைகளை மறந்து ஐதீகம் என்ற நிலையில் மாற்றப்பட்டதே தவிர ஐதீகம் என்று சாஸ்திர விதிகளைத் தான் பின்பற்றும் நிலை வந்தது. ஐதீகத்தை எடுத்துக் கொண்டால் சாங்கியம் சடங்குகள் என்று புறநிலைகளுக்குத் தான் வருகின்றது.

அகநிலைகளைக் கூட்டும் நிலைகள் இல்லை.

1.அந்த ஆற்றல்மிக்க அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை நமக்குள் உள் செலுத்தி அதனைப் பூணூல் ஆக அதனின் நிலையே நமக்குள் அடக்கி
2.வசிஷ்டாத்வைதத்தை நமக்குள் நம்முடைய நிலைகளுக்குள் அடங்கி நடக்க வேண்டும் என்ற நிலையும்
3.அதனை ராஜரிஷி என்ற நிலைகள் மற்றவர்கள் ஒடுங்குவது போல அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்து
4.நமக்குள் அகங்காரமோ பாசமோ மற்ற நிலைகள் தீமையை விளைவிக்கும் நிலைகளில் இருந்து மீட்டி
5.உயிருடன் ஒன்றிய இந்த ராஜ நீதியை அன்று உணர்த்தினான் வியாசகன்.

அதனின் வழிகளை நாம் பின்பற்றிச் செல்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் ஒரு குழம்பை வைக்கப் போகும்போது சமமான நிலைகள் கொண்டு சுவையாக சமைத்து விடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே சந்தர்ப்பவசத்தால் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் உணவாக உட்கொள்ளும் அனைவருமே மயக்க நிலை பெற்று சிந்தனை இழந்து விடுகின்றார்கள்.

அதே சமயம் ஞாபகக் குறைவாக சிறிதளவு மிளகாய்த் தூளை அதிகமாகச் சேர்த்து விட்டால் சாப்பிடும்போது வாயில் காரம் அதிகமாகின்றது. அதிலே உணவு உட்கொள்வது கணவராக இருந்தால் “குழம்பு வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்…!” என்று கோபமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில் நாம் நன்றாகத் தானே வைத்துள்ளோம்… என்ற எண்ணத்தால் “சந்தர்ப்பத்தால் நாம் ஒரு மிளகாய் அதிகமாகச் சேர்த்தோமா…! என்ற நினைவு இருக்காது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும்…!

அப்பொழுது கணவன் இவ்வாறு கோபமாகப் பேசிவிட்டாரே…! என்ற அந்த வேதனை வரும்போது…
1.விஷத்தை ஒரு துளி நுகர்ந்து விட்டால் நம் சிந்தனை குலைந்து விடுவது போன்று
2.சிந்தித்துப் பதில் சொல்வதை விட்டுக் கண்ணை கசக்க அழுகத் தொடங்கிவிடுவோம்.

நான் இப்பொழுது என்ன செய்தேன்…? இப்பொழுது என்னைக் கணவர் இப்படிக் கோபித்துப் பேசுகின்றார்…! நான் நன்றாகத் தான் குழம்பை வைத்துள்ளேன்…! என்று எண்ணுவார் மனைவி.

கணவரோ… நான் என்ன செய்து விட்டேன்…? என்று நீ கண்ணைக் கசக்குகின்றாய்…! என்று சொன்னால் போதும்.

மீண்டும் அந்த உணர்வின் தன்மை விளையச் செய்து இங்கே காரத்தின் உணர்வுகள் மனைவிக்குள் அதிகமாகும்.

ஏனென்றால் இந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகள் இங்கே இருக்கப்படும்போது அதே உணர்வுகள் தூண்டப்பட்டு எதைச் சொன்னாலும் இப்படித் தான் அழுகும் என்ற நிலைகள் வரும்.
1.கணவரைப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்ச்சிகள் அந்த மனைவிக்கு ஏற்பட்டுவிடுகின்றது.
2.இங்கே மனைவியைப் பார்க்கும்போது கோபத்தின் தன்மை கணவனுக்கு வந்துவிடுகின்றது.

மாமியாருக்கோ… நம் பிள்ளை சொல்கின்றான் ஆனால் பார்..! எதிர்த்துப் பேசும் அளவுக்கு வந்து விட்டாள். இப்பொழுது வர…வர… வர..வர… மருமகளுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது என்று அதைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆக இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள்…!

இப்பொழுது என்ன சொன்னோம்…? என்று நீ அழுது கொண்டிருக்கின்றாய். இப்படியே அழுது கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆகும்…? என்று கேட்கத் தொடங்குவார்கள்.

இவைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகளை (அவரவருக்குத் தக்க) நமது உயிர் நம்மை இயக்கிக் காட்டுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவறு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் இயக்கி
1.இந்த உணர்வுகளை உயிர் உணர்த்துகின்றது… உணரச் செய்கின்றது.
2.உணர்ந்ததை ஜீவனாக்குகின்றது… ஜீவ அணுவாக மாற்றுகின்றது
3.நம் உடலாக மாற்றிவிடுகின்றது உயிர்…!

April 2025 உபதேசம்

கூட்டுத் தியானத்தை யாம் அமைத்ததன் முக்கியமான நோக்கம்

 

ஒவ்வொரு நொடியிலும் நமது வாழ்க்கையில் நாம் நல்லோரைச் சந்தித்தாலும் சரி… அவருடன் உறவாடினாலும் சரி… ஆனால் அவர் உடலிலே அதற்கு முன் அவர் அறியாது வந்த நோய்கள் பல உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்நிலைப் பட்ட அந்த உணர்வின் தன்மைகள் உண்டு. உதாரணமாக இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்
1.ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது.
2.மற்றொரு உணர்வின் தன்மை எதிர் நிலையாகி அது துடிப்பின் இயக்கமாக உயிராக உண்டாகி
3.அதனின் துடிப்பின் இயக்கத்திற்குள் அது எடுத்துக் கொண்ட உணர்வினை ஜீவணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது “ஒவ்வொரு உயிரும்…”

கார்த்திகை நட்சத்திரம் என்பது அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளையும்… ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அலைகளாக அது பெருகினும்… மற்ற மற்ற 27 நட்சத்திரங்களும் ஒவ்வொருவிதமான நிலைகள் கொண்ட்து.

வைரங்களில் எத்தனை விதமான கலர்கள் இருக்கின்றதோ அவை அனைத்துமே ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மை பெற்றது.
1.27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.இதைப் போல தான் உணர்வின் இயக்கங்களும் இருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் இருப்பினும் பிறிதொரு உடலில் விளைய வைத்த கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர்கள் அவர் உடலில் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்கள் வெளிப்படுத்தினும் அவர்கள் நல்லவராகத் தோன்றினும் அதே சமயத்தில் அது எதிர்மறையான நட்சத்திரம் கொண்ட நான் அவருடன் நட்புடன் இருப்பினும் நாம் பேசிடும் உணர்வு கொண்டு அவர் உணவாக உட்கொண்ட மற்ற அந்த நட்சத்திரத்துடன் ஒத்துக் கொண்ட மற்ற உணர்வின் நிலைகள் கொண்டு எதிர்நிலையாக இயக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தால் தான் ஒவ்வொரு உணர்வின் எதிர் நிலையின் மறைகள் உருவாகி அதனின் நிலைகள் கொண்டு தாவர இனங்களும் விளைகின்றது.

அந்தத் தாவர இனச் சத்தை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனின் மணங்கள் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக்கொண்ட நிலைகளும் வரும். ஆனால் அதே சமயம்
1.மற்றவர்களுடைய நிலை வரும் பொழுது எண்ணத்தால் எதிர் நிலைகள் வரும்.
2.அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அவர் சொல்லால் எனக்குள் வரப்படும் பொழுது
3.என்னை அறியாமலே எனக்குள் தீமையை விளைவிக்கும் நிலையாக வரும்.

இதைப் போல உணர்வுகள் மாறுபட்ட நிலைகள் விண்ணிலே நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாது அதனின் உணர்வின் தன்மை அலைகளாகப் பிரிந்து… “எப்படித் தாவர இனங்கள் இருக்கின்றதோ இதைப் போல தான் நட்சத்திரங்களின் இயக்கமும்…”

1.அதனின் உணர்வுகள் எதிர்மறையாகி ஒன்றுடன் ஒன்று எதிர் நிலையாகும் பொழுது தான் விண்ணுலகில் ஆற்றல் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
2.அதைப் போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் பொழுது எதிர்மறையான உணர்வுகள் வரும் பொழுது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

இன்று எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது அது இயக்க வேண்டுமென்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் இயக்கும். அதைப் போல
1.ஒரு உணர்வின் சக்தி உடலுக்குள் ஒத்துக் கொண்ட உணர்வாக இருப்பினும்
2.எதிர்மறையான நிலைகள் இருக்கும் பொழுது தான் அது உந்தி இயக்கும் நிலைகள்.

கரண்ட் ஆக நாம் உபயோகப்படுத்தினாலும் அதனின் நிலைகள் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்று எதிர்மறையான நிலைகள் வரும் பொழுது தான் மின் அணுவின் நிலைகளும்… அதனின் அழுத்தத்தைக் கொண்டு மற்ற மோட்டார்களை இயக்கச் செய்யும் நிலைகள்.

ஆனால் அந்த மின் அழுத்தத்தின் நிலைகள் கொண்டு அதனின் இயக்கத்திற்குத் தக்கவாறு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது அதனுடைய ஒலிப்பேழைகளை மாற்றி அமைப்பதும் அதற்குத் தக்க நிலைகளை அது உருவாக்கவும் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் தொடர… மனிதனின் உணர்வுக்குள் நாம் நண்பர்களாகப் பழகியிருந்தாலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறைகள் உண்டு.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம்… ஒரு குழந்தை ஒத்து வராத நிலை வரும். எதிர்மறையான நிலைகள் வரப்படும் பொழுது எதிர்ப்பு உணர்வுகள் வருகின்றது.

இதைப் போன்று தான் வசிஷ்டாத்வைதம்
1.27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் நவக்கோள்களின் சக்திகளையும் உள்ளடக்கி
2.உணர்வின் சக்தி ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
3.அந்த மண்டனல்களிலிருந்து வரும் உணர்வின் சக்தியை நாம் கவரும் திறனாகத்தான் உங்களுக்குக் கூட்டுத் தியானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நாம் பலருடன் பழகினாலும்… எண்ணத்தால் கவர்ந்து நட்பின் நிலைகள் கொண்டு கேட்டுணர்ந்தாலும்… கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாகும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்… நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் பொழுது இன்னொரு நண்பருடன் நாம் பேசி வரும் பொழுது தன்னை அறியாமலே ஒரு கலக்கமும்… ஒரு வியாபார ரீதியாகச் சென்றாலும் அவருடன் உறவாடி விட்டுச் சென்றால் இனம் புரியாது கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.

இது எல்லாம் நம்மை அறியாது நடக்கும் செயல்கள். நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய உணர்வின் தன்மை எதிர்நிலையாக மாற்றங்கள் அமைக்கப்பட்டு நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்ற நிலைகள் தான் “வசிஷ்டாத்வைதம்” என்ற தத்துவம்.
1.எதையுமே தனக்குள் கவரச் செய்து – அருந்த்தி…!
1.இணைந்தே வாழும் நிலைகளும்
2.இணைத்து அறிந்திடும் நிலைகளும்
3.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்
4.இந்த உடலிலே இணைத்திடும் நிலைகள் கொண்டு என்று நாம் என்று கொள்ளுகின்றோமோ
5.இதனை இணைந்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பருக வேண்டும்.
6.அப்படிப் பருகும் நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்தக் கூட்டுத் தியானம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்தப் படம் ஆடும். அதுவும் பதிவாகும் அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” – பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகிவிட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சுத்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”

செய்து பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை

 

வராகன் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நல்ல பொருளை எடுத்து அது உணர்வுக்குள் நல்லதாக மாற்றி நாற்றமான உடலைப் பிளந்து மனிதனாகப் பிறக்கச் செய்தது

அதைப் போல் விஞ்ஞான அறிவால் இந்த காற்றுக்குள் இருக்கும் நச்சுத்தன்மைக்குள் மகா ஞானியின் உணர்வலைகள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் நுகர வேண்டும்.

1.அந்த மகா ஞானியின் உணர்வலைகளை உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்ய
2.உங்கள் நினைவின் எண்ணங்களைக் கூர்மையாக்க
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த நிலை.

பதிந்தபின் நீங்கள் தியானித்து அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காக…
1.நாம் அனைவரும் சேர்ந்து எண்ணி ஏங்கி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது எளிதில் கிடைக்கும்.

ஒரு நூலால் ஒரு கடினமான பொருளைத் தூக்க முடியாது ஆனால் பல நூல்களை இணைத்துப் பெரும் கடினமான பொருளையும் தூக்க முடியும்.

சாதாரண மனிதன் இந்தப் புவியின் ஆசையுடன் இருக்கப்படும் பொழுது நம் எண்ணத்திற்கு வலு குறைவு. ஞானிகள் பிறவிக் கடனை வென்று இன்னோரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி ஒளியின் சுடராகச் சென்றவர்கள்.

அவர்கள் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளுக்கு அருகிலே நம் உணர்வுகள் செல்ல அருகதையற்றது. அதனை நுகர்வது என்றால் மிகக் கடினமானது.

அந்த ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டி உணர்ந்து உணர்வின் தன்மையை எம்மை ஏங்கிப் பெறச் செய்து
1.அதை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.ஞானிகள் கண்ட உணர்வினை உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி இந்த உணர்வுகளைக் கேட்க வைத்து
3.இந்த உணர்வுகளை நுகரச் செய்து நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து
4.இந்த நினைவின் ஆற்றல் எண்ணும் பொழுது
5.டிவியும் ரேடியோவும் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதை காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் காட்டுவது போல
6.இந்த மகா ஞானிகளின் உணர்வலைகளை நம்மால் எடுக்க முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

ஆலயங்களிலே தேரை இழுக்கப்படும் பொழுது பலரும் ஒன்று சேர்த்து அந்தக் கடினமான தேரை இழுப்பது போன்று நாம் அனைவரும் இந்நேரம் வரை கேட்டுணர்ந்த உணர்வை அந்த மகரிஷ்களின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் தியானிக்கப்படும் பொழுது “காற்றுக்குள் மறைந்துள்ள இந்த ஞானிகள் உணர்வலைகளை இங்கே படரச் செய்வதுதான்…”

இங்கே படர்ந்த உணர்வின் சத்தை அவரவர்கள் ஏங்கிய நிலையில் கொண்டு பெற முடியும்.

இந்தத் தியானம் முடிந்த பின் தியானத்தில் அமர்ந்த அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்… எல்லோருக்கும் பெற வேண்டும் என்று உணர்வினை வெளிப்படுத்தும் போது சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து உயர்ந்த எண்ணத்தின் வலுவாக அது கூடி… நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் புற நிலையில் ஈர்த்து உங்களுக்குள் சக்தி வாய்ந்தத உணர்வுகளாகப் பதியச் செய்வதே இந்தக் கூட்டுத் தியானம்.

கூட்டுத் தியானத்தின் மூலம்
1.அனைவரின் எண்ணத்தின் வலு கொண்டு நாம் ஈர்க்கும் திறன் பெற்று
2.இங்கே அணைத்து வந்த உணர்வுகள் நமக்குள் இணைத்திடும் சக்தியாக ஆக்கிய பின்
3.இதற்கடுத்து நாம் தனித்து இருந்தாலும் அந்த உயர்ந்த சக்திகளை “எப்பொழுது வேண்டுமென்றாலும் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனதில் நாம் எதைப் பதிவு செய்கிறோமோ அது தான் இயக்கும்.

உதாரணமாக… உங்களுக்கு முன்னாடியே நல்லது செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.ஆனால் அதை நீங்கள் மோசமாக எண்ணுகின்றீர்கள்
2.அப்போது நல்லது செய்தார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வீர்களா…?
3.அதில் எப்படிக் குறை காணுவது…? என்ற உணர்வு தான் வரும்.
4.அது உங்களுக்கே தெரியாது… உங்களுக்குத் தெரியாமல் அது இயக்குவது தான்.

ஆகையினால் குறையான உணர்வுகள் வந்தபின் நல்லது செய்கிறார்கள் என்றால் அதிலே எப்படியெல்லாம் குறைகளைக் காண வேண்டுமோ அப்படி எல்லாம் அதைத் திருப்பிக் கொண்டு வரும். ஆக நல்லதாக்கும் நிலைகளுக்கு வராது. இது எல்லாம் மனிதனுடைய இயற்கையின் நிலைகள்.

எவ்வளவு பெரிய சக்தி எடுத்தாலும் எல்லாம்… எல்லாம் அனுபவித்தாலும் “நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த ஆதங்கம்”
1.மற்றவருடைய நிலைகளைப் பார்க்கப்படும் போது
2.தன்னை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் நிலை வருகின்றது.

நன்மை செய்வதற்கு நான் பற்று கொண்டுள்ளேன்… ஆனால் மற்றவருக்குப் பற்று இல்லை என்கிற பொழுது இந்த மாதிரிக் குறைகளை வடிவமைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இதனால் எத்தனையோ பிழைகள் வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றும். நாம் போகும் பாதையை விட்டுவிட்டுத் திசைகளைத் திருப்பும்… ஆனால் சேவை செய்ய வேண்டும் என்ற பற்று இருக்கும்.

எல்லா உணர்விலும் அது சாம்பிள் போட்டுக் கொண்டே இருக்கும் நன்றாக இருக்கின்றது நல்ல ருசியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஸ்ஸ்…ஆ…! காரமாக இருக்கிறது நல்லதைக் காரமாகச் சொல்வது போன்று காண ஆரம்பிக்கும்.

இது எல்லாம் அன்பைக் காட்டுகின்றது ஆனால் பேராசையைக் காட்டுகின்றது ஆனால் கடைசியில் நிராசையாக மாறுகின்றது.
1.இந்தப் பேராசை (நல்லது செய்ய வேண்டும்) என்ன செய்யும்…?
2.நிராசையாக மாற்றிக் கொள்ளும் சக்தி தான் வருகின்றதே தவிர நல்லாக்கும் நிலை இல்லை.

பேராசை என்கின்ற பொழுது எப்படி இருக்க வேண்டும்…?

நீங்கள் (அடுத்தவர்கள்) உயர வேண்டும் என்றால் இது பேராசை.
1.நான் உயர வேண்டும்…
2.நான் உயர்ந்திருக்கின்றேன் என்ற இந்தப் பேராசை வரக்கூடாது.

இதுவும் பேராசை தான்… அதுவும் பேராசை தான்.

மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எப்படியும் தெளிந்த மனம் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற இந்தப் பேராசை நம்மைக் குறைகளிலிருந்து மீட்கச் செய்யும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறை காணும் இயல்புகள் உண்டு எனக்கும் கூட உண்டு உங்களிடம் எல்லாம் சொல்கின்றேன் அந்த மாதிரி உணர்வு… சில நேரங்களில் எனக்குள்ளும் (ஞானகுரு) வரும்.

இதனால் தான் குருநாதர் என்ன செய்தார்…?

ஒரு சந்தர்ப்பம் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு மரத்தைக் காண்பிக்கின்றார். “தூக்கி வீசுடா…..!” என்றார் அவர் சொன்ன முறைப்படி செய்த பின் மரம் பறந்து போய் அங்கே விழுகின்றது.

1.அடுத்து எனக்குத் திமிரே வருகின்றது
2.யாராவது ஏதாவது செய்யட்டும்… நான் தூக்கிப் பந்தாடுகின்றேன் பார்…! என்று சொல்கின்றேன்.

“இப்போது உனக்குத் திமிர் வந்து விட்டது” என்று குருநாதர் சொல்கின்றார். எதற்காக வேண்டி உன்னை மரத்தைத் தூக்கி எறியச் சொன்னேன் தெரியுமா…?

ஒருவருக்குள் ஆட்டிப் படைக்கும் தீய சக்திகளைத் தூக்கி எறிய வேண்டும்.

சாதாரணமாக ஜீவனுடன் வாழும் அந்த மரத்தைத் தூக்கி எறிந்த உடனே உனக்குத் திமிர் வருகின்றது. அதை வைத்து யாரை வேண்டுமென்றாலும் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தானே உனக்கு வருகின்றது என்று அந்த இடத்தில் அதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அந்தத் திமிர் வருவதனால்… யாராவது கோபித்துச் சொன்னால் அல்லது தவறாகச் செய்தால்
1.இருக்கட்டும்… கொஞ்சம் சுண்டிப் பார்க்கலாம்
2.அப்போதுதான் அவருக்கு அந்த அனுபவம் வரும் என்று நான் இதைச் செய்தால் எப்படி இருக்கும்…?

குறைகள் தான் வரும்.

அதை நிவர்த்திப்பதற்குண்டான வழியைத் தானே நான் சொல்ல வேண்டும்.
1.இன்னென்ன காரணத்தால் குறைகள் ஏற்பட்டது
2.அதனால் அது உங்களை இப்படிப் பாதிக்கின்றது என்று வழி காட்ட வேண்டுமே தவிர
3.அங்கே குறையைக் குற்றமாக ஆக்கி அவரைத் தண்டிக்கும் நிலைகளுக்கு வரக்கூடாது.

குருநாதர் எனக்கு முதலில் இதைத் தான் உணர்த்தினார்.

என்னைப் பெரிய ஆளாகக் காட்டுவதற்கும்… என்னை மெச்சும்படி செய்வதற்கும்… உங்களுக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்து மரத்தை தூக்கி எறியச் செய்யலாம்.

அப்போது உங்களுக்கும் அதே எண்ணம் தான் வரும். மனிதனுக்குள் இது போன்ற சக்திகள் கிடைத்தால் உடனே… அப்போதே… அந்தத் திமிர் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.நல்லது என்ற எண்ணத்தில் மற்றவருக்குச் சேவை செய்யும் நேரங்களில் இது போன்ற சில உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.
2.நாம் அல்ல… நாம் எடுத்துக் கொண்ட ஆர்வத் துணிவு குற்றத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதில் குற்றத்தைப் பெருக்கத்தான் செய்யும்.

குற்றம் என்ற நிலையில் அவர்கள் தாழ்ந்து போனால் “பேசாமல் போகின்றார்கள் பார்…” என்ற நிலை வந்துவிடும். அதைக் கொண்டு குற்றங்களை எப்பொதுமே மாற்ற முடியாது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆகவே சேவை செய்ய நாம் அணுக வேண்டிய முறைகள் எப்படி இருக்க வேண்டும்…?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று அவர்களை மதித்து
1.அங்கே அமைதி பெறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அமைதி பெறச் செய்யும் அந்தச் சக்தியை கொண்டு வந்தால் தான் அது சீராகும்.

அது அல்லாதபடி மற்ற எத்தனையோ பெரிய நிலைகளைச் செய்தாலும்
1.ஞானத்தின் வழியில் தேர்வு பெறுவது கடினம் தான்…
2.ஒரு சிலர் தான் தேற முடியும்.

கூட்டமாக ஒரு பக்கம் வந்து கொண்டே இருந்தாலும் “இதிலே என்னடா இருக்கின்றது…?” என்று களைந்து வெளியில் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்…. வர முடியாது… இதை வளர்க்கவும் முடியாது.

உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!

ஞான வழியில் வளர்வதற்கு மாறாகத் “தன்னுடைய செயல்கள்தான் உண்மை…” என்று அதை நிலை நாட்டும் போது நல்லதை நிலைநாட்ட முடியாது போய் விடுகிறது.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகள்

 

அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டிலே வாழும் போது அவர்களுடைய புலனறிவால் தன்னைக் காத்துக் கொள்ளும் ஞானத்தின் நிலைகள் வளர்கின்றது. அப்படி வளர்த்த அந்த தாய் தந்தையரின் கருவில் வளர்ந்த நிலைதான் பிற்காலத்தில் அகஸ்தியன் என்ற நிலை வந்தது.

அகஸ்தியன் அங்கே குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே நஞ்சு கொண்ட எதுவுமே வருவதில்லை. மிருகங்கள் கொஞ்சித் திரியும் நிலைகளுக்கு வந்து விட்டது.

1.ஆக தாய் தந்தையர் முலாம் பூசிக் கொண்ட அந்த நஞ்சு கொண்ட மணத்தை நுகர்ந்து கண்டு மற்ற மிருகங்கள் விலகிச் சென்றாலும்
2/ஆனால் அதே சமயம் அந்த நஞ்சு கொண்ட மிருகங்கள் அனைத்தும் அகஸ்தியனைத் தீண்டாமல் பாதுகாக்கும் நிலைக்கே அமைகிறது.

இதைக் கண்ட அன்னை தந்தையர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
1.கடவுளின் அவதாரமாக நம் குழந்தை பிறந்து இருக்கிறது என்று பேரானந்த நிலை பெற்று
2.அன்று சூரியனை வணங்கி வந்த வழக்கப்படி அந்தக் குழந்தைக்கு அவனே தான் இந்த அருள் கொடுத்தது என்று
3.அவர்கள் அறியாது இயங்கிய நிலைகள் கொண்டு அந்த குழந்தையைப் போற்றிக் காத்து வந்தார்கள்.

இருப்பினும் அவர்கள் உடலிலே அதிகமான நஞ்சின் தன்மை பூசியதால் அதனின் உணர்வுகள் உடலில் சிறுகச் சிறுக விளைந்து இந்தக் குழந்தை ஐந்து வயது ஆவதற்கு முன் அந்த உடல்கள் மடிந்து விடுகின்றது.

மடிந்தபின் இவன் தனித்து வாழுகின்றான் அகஸ்தியன். தன் அன்னை தந்தையர் இறந்துவிட்டனர் என்று இந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு காலை கதிரவன் அவன் சுடரை வீசி வரப்படும் போது கதிரவனைப் பார்த்து…
1.என்னை ஈன்ற அன்னை தந்தையர் மடிந்து விட்டனர்
2.அந்த அன்னை தந்தையரின் அருளை நான் பெற வேண்டும்
3.அவருடைய அணைப்பு எனக்கு வேண்டும் என்றும்
4.என் அன்னை தந்தையரை நான் பார்க்க வேண்டும் என்றும் இந்த உணர்வினை விண்ணை நோக்கி ஏங்கி
4.அன்னை தந்தையரைப் பெற வேண்டும் என்ற உணர்வில்… அறியாப் பருவத்தில்
5.ஒளி சுடராக வீசி வரும் அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி அந்தக் கதிரவனின் காந்தப்புலனை எண்ணி ஏங்கி வணங்குகின்றான்.

அப்படி வணங்கப்படும் போதுதான் தான் தாயின் கருவிலே அவன் உடலுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வின் தன்மை… “நஞ்சினைக் காணும் நிலையை” அவனுக்குள் உருவாக்குகின்றது.

இப்படித் தன் தாய் தந்தையரை எண்ணி அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கம் கொண்டு கதிரவனைப் கண்ணால் பார்க்கப்படும் பொழுது கதிரவனிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சின் தன்மையை அவன் உணர்கின்றான்.

விஞ்ஞானிகள் அல்ட்ரா வயலட் என்று இன்று சொல்வதை அன்று இவன் உடலில் இருந்த நஞ்சின் ஆற்றலால் அந்தச் சூரியனிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சினைக் கண் கொண்டு பார்க்கின்றான்.

ஆக இவன் அறியாத நிலைகளில் இருந்தாலும்
1.இவன் உடலில் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள் இவன் எதை எடுத்துச் சூரியனை வணங்கினானோ
2.அந்த ஞானத்தின் உணர்வின் தொடராக அந்த காந்தப் புலனின் ஆற்றல் பெருகி
3.இவன் எண்ணத்தின் நிலைகள் வலுப் பெற்று
4.சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வினை உற்று நோக்க அதனின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான்.

அதிலிருந்து வெளிப்படும் நஞ்சும் சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புலன்களும் அதைக் கடந்து வரப்படும் பொழுது அந்த அணுவின் இயக்கங்கள் எவ்வாறு மாறுகிறது…? என்று முதல் முதலிலேயே அணுவின் இயக்க உணர்வின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

ஆகையினால் தான் அவன் விண்ணுலக ஆற்றலும்… அதனின் பரிணாம வளர்ச்சியும்… அணுவின் ஆற்றலும்… பிரபஞ்சம் உருப்பெற்றதையும்… அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலே அவன் மெய்யுணர்வைக் காணும் நிலைகள் அங்கே வளர்ந்தது.

ஏனென்றால் தாயின் கருவில் இருந்து வளர்ந்த நிலைகள்
1.அந்த நஞ்சு வலுக்கொண்டதாக… நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் வளர்ந்ததனால்
2.நஞ்சான உணர்வின் தன்மைகளைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை அகஸ்தியன்ன் அறிந்திடும் பருவம் பெற்றான் முதல் நிலைகளில்.

அவன் உடலில் விளைந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் பிரபஞ்சத்தின் இயக்கமும் பிரபஞ்சத்தில் அணுவின் ஆற்றலின் பெருக்கமும் அதனின் நிலைகள் கொண்டு கோள்களானதும் கோள்கள் நட்சத்திரமாவதும் நட்சத்திரங்கள் சூரியன் ஆவதும் என்ற நிலையினை வெளிப்படுத்துகின்றான்.

அந்தச் சூரியன் நட்சத்திரமாகும் போது அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அது எவ்வாறு கோள்களாக மாறி கோள்கள் நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் அனைத்தும் விண்ணுலக ஆற்றலைப் பெற்று இந்த நட்சத்திரங்கள் நஞ்சினை வென்று நல்ல உணர்வுகளைத் தனக்குள் பாய்ச்சி இந்த பிரபஞ்சத்திற்குள் செலுத்துகிறது என்றும்
1.பிரபஞ்சத்திற்குள் இருக்கும் நிலைகள் அதனைக் கவர்ந்து கோளாக மாறி
2.அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக மாற்றி
3.அதனுடன் கலந்த நஞ்சினைப் பிரித்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெற்றது என்ற உண்மை நிலையை
4.முதன் முதலில் உணர்ந்து பரிணாம வளர்ச்சியும் அணுவின் வளர்ச்சி நிலையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அப்பொழுது பக்கத்திலே ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார்… பார்க்கின்றோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள்.

இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் அவரிடம் அதிகமான பழக்கமில்லை. இரயிலில் போகும் பொழுது தான் அவரிடம் நாம் யதார்த்தமாகப் பழகுகின்றோம்.
1.அவர் படும் வேதனையை நாம் மிகுந்த இரக்கத்துடன் பார்க்கின்றோம்.
2.ஆனால் அவருடன் கூட வந்தவர்கள் சலிப்பாக சஞ்சலமாகத் தான் பேசுவார்கள்.
3.ஏனென்றால் அடிக்கடி அவர்களிடம் துயரப்பட்டுப் பழகியதால் அந்த நிலை.

இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இந்த மாதிரி அடிக்கடி அது வேண்டும்… இது வேண்டும்… என்று கேட்கிறாய்…? என்பார்கள்.

ஆனால் நாம் இரக்க மனம் கொண்டு ஏனம்மா…! என்ன செய்கிறது…? உனக்கு என்ன வேண்டும்…? என்று இரக்கத்துடன் கேட்கின்றோம். ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே நாம் பழகியது…!
1.அது அவருக்குள் பதிவாகிறது.
2.அவருக்கு ஆதரவாக நாம் அப்படிப் பேசுகின்றோம்.
3.பண்புடன் நாம் அங்கே சொல்லப்படும் பொழுது அவர்களுக்குக் கொஞ்சம் தணிவாகின்றது.
4.இந்த உணர்வு “அவருடைய உடலில் வலுப்பெற்று விடுகின்றது…”

நாம் என்ன நினைக்கின்றோம்…? அந்த அம்மா இவ்வளவு தூரம் சிரமப்படுகின்றது ஆனால் கூட வந்தவர்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாதபடி இப்படிப் பேசுகிறார்கள்… சமுதாயம் இப்படி இருக்கின்றதே…! என்று “அவர்கள் உணர்வை நமக்குள் பதிவு செய்கிறோம்…”

ஆனால் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் அவரை சார்ந்தவர்கள் வரப்படும் பொழுது நோயாளிக்குள் எண்ணங்கள் அதிகமாகிறது.

பார்…! ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தோம்… எத்தனை வசதிகள் செய்தோம்… நல்லது செய்தோம்…! நம்மை இவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை…!

ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது அந்த மகாராசி எனக்கு அவ்வளவு ஆதரவாக உதவி செய்தார்… எந்த அளவுக்கு உபசாரம் செய்தார்…! என்று இந்த உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

நாம் அவர்கள் பட்ட வேதனையை வலுப்பெற்று வைத்திருக்கின்றோம்
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…
2.நம்முடைய உணர்வுகள் பதிவானது அங்கே….
3.அவர் வீட்டில் அவரைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பு.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் போது தனக்கு இரயில் பிரயாணத்தில் உதவி செய்த நல்லவர் மீது… அதாவது நம் மீது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது.

விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்…!

அப்படி எண்ணிய உடனே அந்த உயிரான்மா
1.நாம் இங்கே இருந்தாலும் எதனின் வலுப்பெற்றதோ இங்கே இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது.
2.நம் உடலில் புகுந்து விடுகிறது… நமக்குத் தெரியாது… ஒன்றுமே தெரியாது.

ஆனால் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்படைந்த உணர்வைப் பதிவு செய்தது… “எல்லோரும் பாவிகள்” என்று அங்கே அந்த எண்ண அலைகளைப் பரப்புகின்றது.

அந்தச் சாப அலைகள் அந்தக் குடும்பத்தையே சாடுகின்றது. இந்த உடலில் விளைந்தது அங்கே போகின்றது

தன் மீது பற்று கொண்ட உணர்வின் நினைவுடன் “மகராசி எனக்கு உதவி செய்தார்…” என்று அவர் உடலில் விளைந்தது இங்கே வந்து… விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்குமோ அது போன்று அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

கடைசி நேரத்தில்
1.என்னென்ன வேதனைப்பட்டுப் புலம்பல் ஆனதோ
2.தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாவிகள் என்று வெறுப்புடன் எப்படிப் பேசியதோ
3.அது எல்லாம் இங்கே வந்து அவர் செயல்படுத்தியது போன்றே தன் குடும்பத்தில் வெறுப்பாகப் பேசும்.

குடும்பத்தில் சிலருடைய நடவடிக்கைளைப் பார்க்கலாம்…! நேற்று வரை எல்லாம் செய்தார்… இப்பொழுது என்னமோ தெரியவில்லை “கண்டபடி வெறுத்துப் பேசுகின்றார்…! நல்லது செய்தவர்தான்… ஆனால் வெறுத்துப் பேசுகின்றார் என்று அவருடைய செயலாக்கங்கள் திடீரென்று மாறுவதைப் பார்க்கலாம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே ஏற்படக்கூடிய சில தீங்கான நிலைகள்…!

இதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.
1.அறியாமல் வரக்கூடிய தீங்குகளை… அதனின் உண்மையை உணர்ந்து
2.ஞானிகள் காட்டிய வழியில் அதை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

பிறருக்கு நாம் எப்படி உதவி செய்ய வேண்டும்…? உதவி செய்தாலும் அவர் பட்ட துன்பங்களும் வேதனைகளும் நமக்குள் வராதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்…?

1.நம்மையும் காத்து பிறரையும் காக்கும் சக்தியாக
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்பதற்குத்தான்
3.இதை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

 

இப்பொழுது நம் உடலில் வேதனை என்ற உணர்வுகள் அடர்த்தியானால் கேன்சருக்குண்டான அணுவாக உருவாகின்றது. அப்பொழுது விஷத்தைத் தான் அது உணவாக உட்கொள்கின்றது.

அந்த அணுக்கள் உருவானவுடன் விழுதுகளைப் பரப்புகின்றது. எந்தப் பாகத்தில் போகின்றதோ அந்தப் பாகத்தில் எல்லாம் பரப்புகின்றது. அந்த விஷத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.
1.விஷம் இருந்தால் தான் அது இயக்கும்.
2.அப்பொழுது என்ன செய்கின்றது…? நம் உடலில் கேன்சர் வருகின்றது.
3.ஆக வேதனை ஒரு பக்கம் அதிகமாகக் குமியும். நல்ல அணுக்களைச் செயலற்றதாக்கும்.

இப்பொழுது நமக்குள் சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று அதிகமானால் நம் நுரையீரல்களில் அது அதிகமாகச் சேர்கின்றது. அப்பொழுது அது சளி கட்டும் தன்மை வரும்.

இந்த வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் கிட்னி ஃபெயிலியர் ஆகி இரத்த நாளங்களில் இருக்கக்கூடியது நீர்ச்சத்தாக மாறி நெஞ்சுகளில் அதிகமாக ஆகும்.
1.கிட்னி சரியாக இயங்குவதில்லை… நீர்ச்சத்தாக மாறும்.
2.துரித நிலைகள் கொண்டு மனிதனை அழித்துவிடும்.

அடிக்கடி வேதனை என்ற உணர்வு அதிகமானால் பித்த சுரப்பியின் உணர்வுகள் அதிகமாகின்றது. இந்தப் பித்த சுரப்பிகள் அதிகமாகி விஷத்தின் தன்மை கூட்ட நம் இரத்தத்துடன் அது கலக்கப்படும் பொழுது தலை சுற்றும் கிறு… கிறு… என்று வரும்.

ஆகவே இந்த வேதனை என்ற உணர்வுகளை நாம் பார்த்தால் நினைப்பு வேதனை. ஆனால் இங்கே பித்தங்கள் அதிகமாகும். நாம் தவறு செய்யவில்லை. அந்த விஷத்தின் தன்மை பெருகுகின்றது.

அதே மாதிரி இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது நம் உடலில் மேலே தடிப்பாகின்ற மாதிரி கல்லீரலில் அதே மாதிரித் தடிப்பானால் நம் உடலில் இனம் புரியாத வலி ஏற்படும்.

அப்பொழுது அந்தக் கல்லீரல் வீக்கம் ஆகத் தொடங்கி விடும். கல்லீரல் வீக்கமானால் மண்ணீரலிலும் இதைப் போன்று பல வீக்கங்கள் தொடரும். அதைப் பார்த்தோம் என்றால் ஈரல் பக்கம் முழுவதும் பெரிதாகிவிடும். அது நீண்டு வளரத் தொடங்கிவிடும்.
1.ஆக அந்த மாதிரி அணுக்களை உருவாக்கினால் ஈரலைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
2.டாக்டரிடம் சென்றால் ஈரலை குறைத்தால்தான் நல்லது என்று சொல்வார்கள்.
3.ஆனால் அதைக் குறைத்து யாரும் பிழைத்த மாதிரிக் கண்டதில்லை.

ஆகவே இதைப் போல உறுப்புகளை மாற்றி உறுப்புகளை வளர்த்தாலும் சிறிது காலமே இருக்க முடியும்.

தேடிய செல்வம் எல்லாம் கொஞ்ச நாள் வாழ்க்கைக்கு பல லட்சங்கள் இருப்பதைப் போட்டு தப்பித்து வந்து விடுகிறார்கள். அடுத்தாற்படி வாழ்க்கைக்கு இல்லை என்றால் மறுபடியும் அந்த வேதனையைத்தான் உருவாக்கும்.

ஓரளவுக்கு அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நிம்மதியாக இருக்கும். உதவிக்கு ஆள் இருக்க வேண்டும். காசு போய்விட்டால் கடன்காரனாகி விடுவோம். இருக்கிற வீட்டை விற்றுவிட்டுச் சிறிய வீட்டிற்குச் செல்வார்கள்.
1.ரொம்பச் செல்வந்தர்களாக இருந்தாலும் கடைசியில்
2.இதை எல்லாம் எதற்கு…? போ…! என்று போகின்ற நேரம் தான் வரும்.
3.ஆகவே இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்.

என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வுகள் நாம் பெறுவதற்கு நாம் இப்பொழுது சொல்லும் இந்த ஆயுட்கால மெம்ராகப்படும் பொழுது உங்களுக்கு கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

என் பிள்ளை இப்படி வரவில்லையே அது வரவில்லையே என்று கூறிக் கொண்டு அதாவது இந்த உணர்வின் தன்மைக்கு நீங்கள் செலவழித்தால் இதிலிருந்து நாம் என்றைக்கும் மீள முடியாது.

அப்பொழுது
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வை நீங்கள் பெருக்கி
2.என் பிள்ளைக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும் அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
3.கல்வியிலோ அல்லது வேறு எந்த நிலைகளிலோ தவறானாலும்
4.அவன் செய்யும் அந்தத் தவறான உணர்வு நமக்குள் வளராது காத்துக் கொள்ள வேண்டும்.

அவன் செய்யும் தவறின் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனை ஆகி இந்த உணர்வுகள் வந்த பிற்பாடு நமக்கு நோயாகின்றது. நோயாகி வெளியே வந்த பிற்பாடு யார் உடலுக்குள் செல்வோம்…?

யாரைப் பற்றி எண்ணி இந்த விஷங்கள் உருவானதோ அவர் உடலுக்குள் தான் செல்வோம். அவனும் பாழானான் நாமும் பாழானோம். இது தான் நடக்கும்.

ஆகவே தெரிந்தும் தவறு செய்யக் கூடாது.
1.நீங்கள் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகி
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வளர்ந்து தீமைகளை அகற்ற வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்த்தே வாழ்தல் வேண்டும். கணவன் வெளியில் சென்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும். அவர் செய்யக்கூடிய காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

கணவன் வெளியில் போகும் பொழுது மனைவிக்கு அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும். ஒன்றுபட்ட உணர்வோடு நாங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
1.பண்பு கொண்ட உணர்வுகளை மனதால் நினைத்து அருள் உணர்வைச் சேர்த்து
2.அந்த ரசத்தை… பெண்பாலின் உணர்வைக் கணவன் எடுத்துக் கொண்டால் வெறுப்பு என்ற நிலைகள் மாறும். இருவருக்குமே இது பாதுகாப்பாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

 

உலகில் பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து வருகின்றனர். அகண்ட அண்டமும் இந்தப் பிரபஞ்சமும் இந்த உடலும் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அறியாமையிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும்..

ஒருத்தர் இங்கிருந்து போகிறார் என்றால் அங்கே சாக்கடையாக இருக்கின்றது…! என்று சொல்கின்றோம். அந்தச் சாக்கடையில் அவர் விழுகாமல் இருப்பதற்காகச் சொல்கின்றோம்.

ஒருத்தர் குளிக்கப் போகின்றார். இந்த இடத்தில் மடுகு இருக்கின்றது நீ விழுந்து விடாதே என்று சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏனென்றால் அவன் அங்கே சென்றால் செத்துப் போய்விடுவான் என்று காப்பாற்றுவதற்காகக் கட்டாயப்படுத்தி நாம் இழுக்கின்றோம்.

சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான்… “போகட்டும்…!” என்று விடுவதற்கு மனது வருகின்றதா…?
1.அதே போல் நம்முடைய ஞானத்தால் மற்ற மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.அவன் அகராதி பிடித்தவன் என்று சொல்லக்கூடாது‌ அந்த உணர்வு நமக்குள் வந்து நம் நல்லதையே மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலோ அல்லது மற்றவர்களோ சில சந்தர்ப்பங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்… குறைபாடுகள் வந்துவிடும்.

அந்த அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்ற வகையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று அவர்களுக்கு நாம் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் நமக்குள் முதலில் இயங்கிவிடக் கூடாது. முன்னால் தடுத்துப் பழக வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவர்களாக மாற்றுகின்றது.

இப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…?
1.நான் சொல்லிப் பார்த்தேன் முடியவில்லை என்றால்
2.அதைக் காட்டிலும் நாம் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் வரப்படும் பொழுது தேடிய செல்வத்தைக் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை. நல்ல ஒழுக்கங்கள் எல்லாம் போய் என்ன வாழ்க்கை…? என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். இராமேஸ்வரத்தில் என்ன செய்கின்றோம்…? நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. இப்பொழுது மனிதனாக ஆனபின் என்ன செய்கின்றோம்…? தனுஷ்கோடி.

அகஸ்தியன் என்ன செய்கின்றான்…? தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றினான்.
1.ஆக நமது வாழ்க்கையில் தீமையின் நிலைகள் வந்தால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இப்பொழுது நோயாளியைப் பார்த்து இரக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினால் சிவ தனுசு ஆகின்றது. அந்த உணர்வின் தன்மை நாம் இயக்கப்பட்டு அந்த நிலைக்குப் போனால் நாம் அடுத்த பிறவிக்குப் போகின்றோம். மனிதனல்லாத பிறவிக்குத் தான் போக வேண்டும். அவன் வேதனை எப்படிப் பெறுகின்றானோ அந்த உணர்வாகின்றது.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன பிற்பாடு அந்த துருவ நட்சத்திரம் என்பது விஷ்ணு தனுசு.
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றும்.
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அதை நமக்குள் பெருக்கி எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியரும்… அவரைப் பின்பற்றிய நமது குருவும்… சப்தரிஷிகளின் அருளும் அதன் பின் 4000 ஆண்டுகளுக்குள் வியாசகர் பெற்ற நிலையும் தான்.

1.அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் எடுத்து உணர்வின் ஒளியாகப் பெற்றவர் வியாசகர்
2.அவரிடமிருந்து வெளிப்பட்டதை பிருகு அத்திரி இதைப் போன்ற மகரிஷிகள் அந்த உணர்வை தனக்குள் வளர்த்து
3.அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டு எழுத்து வடிவில் பதிவு செய்தனர்
4.எழுத்து வடிவில் இல்லை என்றாலும் கூட சுருதி வடிவிலே தனக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்
5.அதன் வழியில் அவர்களுக்குள் விளைந்ததும் பின் அவர்கள் பிறர் பெற வேண்டும் என்று எண்ணியதும்
6.மற்றவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் நன்மை பெற வேண்டும் என்று அவர்கள் செயல்படுத்தினார்கள்.

ஆனால் பின் வந்தோர் அதை மாற்றி விட்டார்கள் இது எல்லாமே உங்களுக்குத் தெரிய வரும். உபதேசத்தின் மூலக்கூறுகளை அந்தந்தக் காலகட்டத்தில் உங்களுக்குள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

நீங்கள் வளர… பிறரைத் தெளிவாக்க தெளிந்த பூமியாக தெளியச் செய்யும் உணர்வாக நமக்குள் வளர்க்க… என்றும் பேரானந்தப் பெருநிலை என்று நிலை அடைய இது உதவும். நாம் எல்லோரும் அதைப் பெறுவோம்.

உதாரணமாக பலசரக்குக் கடையிலே பொருள்களை வாங்குகின்றார்கள். பொருள்களை எல்லாம் விற்றால் வியாபாரம் நன்றாக இருக்கும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

அதே மாதிரித் தான்
1.அந்த அருள் ஞானிகளின் சக்திகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தால்
2.அவர்கள் அதைப் பெறும்பொழுது மகிழ்ச்சியின் நிலைகள் உங்களுக்குள் வளரும்.

புறப்பொருளை விற்றுப் பணத்தை வாங்குகின்றீர்கள் ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் எடுத்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று செலுத்தும் போது
2.அதை அவர்கள் பெற்று மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும் போது பேரானந்தச் செல்வமாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகையினால் “எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்யுங்கள். அந்த மகிழ்ச்சியான அரும்பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் இது பேரானந்தப் பெரும் செல்வம்.

ஆகையினால் அதைப் பெறுவதற்கு முயற்சிப்போம் குரு அருளை நாம் என்றுமே பெறுவோம். அவருடைய அருளால் எல்லா நிலைகளையும் நாம் பெறுவோம் எல்லோரையும் நாம் மகிழ்வடையச் செய்ய முடியும்.

நம்மை மனிதனாக உருவாக்கிய நம் அன்னை தந்தை உயிரைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய நிலையும் மனிதன் நல் ஒழுக்கத்தையும் நல் நிலைகள் பெறுவதற்குக் குருவாக வழிகாட்டிய முதல் குருவின் ஆசியை நாம் பெறுவோம். அவர்கள் துணை கொண்டு
1.மெய் உலகின் உணர்வின் தன்மையை வழிகாட்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளும்
2.அவரின் அருள் துணை கொண்டு மெய் ஞானிகள் அருளும்
3.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வையும்
4.அதிலிருந்து வளர்ச்சி பெற்ற சப்தரிஷிகளின் அருள் உணர்வுகளையும் நாம் பெறுவோம்.

உலக இருளை மாய்ப்போம்… மெய்ப்பொருள் காணும் அந்தப் பாக்கியத்தைப் பெறுவோம்.

அருள் ஞானச்சக்கரம்

 

“அருள் ஞானச்சக்கரம்” பூஜை அறையில் வைக்க வேண்டும். சில சிரமங்களையோ சங்கடங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளையோ உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும் “எந்தக் காரணத்தைக் கொண்டும்…”
1.கணவன் மனைவிக்குள் பேரானந்த நிலையைத் தான் என்றும் உருவாக்க வேண்டும்.
2.கோபங்கள் வரலாம்… ஆத்ம சுத்தி செய்து உடனே அதைத் தடுத்துப் பழக வேண்டும்…
3.நானும் விடுபட வேண்டும்… மனைவியும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.ஆனால் இதை நீங்கள் சீராகச் செய்தால் “நான் செய்வது தான் சரி” என்று வராது.

பால் ருசியாகத் தான் இருக்கின்றது… அதிலே பாதாமைப் போட்டால் ருசியாகத் தான் இருக்கிறது. ஒரு துளி காரம் பட்டு விட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சி தான் வரும்.

ஆது போல் நம் நல்ல மனதில் வெறுப்பை ஊட்டினால் என்ன செய்யும்…? விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைத் தணித்துச் சுவையாக மாற்ற வேண்டும்.

தியானம் செய்தேன் என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என்றால் நீங்கள் எதைச் செய்கின்றீர்கள்…? இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகிறீர்கள்.

1.தியானத்தைக் கூட்டி நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.அந்த உணர்வு பெறுக வேண்டும் என்று மனதிலே பெருக்க வேண்டும்.

வேதனை உணர்வுகளை எடுத்து “எல்லாம் செய்தேன்… இப்படி ஆகிவிட்டது என்னத்தைத் தியானம்…?” என்று கொண்டு போனால் அது நமக்கு அல்ல. கடைசியில் நாம் எதை எடுத்து எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் உருவாக்கும்.

ஆகவே எந்த காரணத்தைக் கொண்டும் தனுசுக்கோடி…! வரக்கூடிய தீமைகளை மாற்றி… கோடி என்று சொன்னால் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது… பிறவில்லா நிலை அடையச் செய்வது.

உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதை நாம் கடைபிடித்து நம் வாழ்க்கையை இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.

என்னதான் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் அது நிற்குமா…? இந்த உடலே சொந்தமில்லை என்கிற போது உடலால் தேடிய செல்வம் எப்படி நிலைத்து இருக்கும்…!

1.அந்தப் பேரருளை இந்த உடலிலே கூட்ட வேண்டும்
2.எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாகின்றது.
3.என்றும் ஏகாந்த நிலை வருகின்றது… அழியா ஒளிச்சரீரம் பெறுகின்றோம்
4.அதைத்தான் ஒவ்வொரு மகரிஷிகளும் பெற்றார்கள்… அதையே நாமும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்… உணர்வின் சேர்க்கையும்…” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

அது மட்டுல்ல…
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.

“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.

ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது

வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.

சந்தேக உணர்வின் விளைவுகள்

 

தன் கணவன் ஒருவரோடு பழகுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த உடனே.. நேரடியாகப் பார்க்கும் மனைவி அதைச் சந்தேகப்படுகின்றார்.

அந்தச் சந்தேகப்படும் உணர்வுடன் கலந்து மனைவி நுகர்ந்து விட்டால் அதன் உணர்வின் தன்மை திருப்பிப் பாய்ச்சப்படும் போது அந்த உணர்வின் அணுக்கள் இங்கே வருவதும் இதனால் தன் மனதில் “மனக் கலக்கம்” ஆகும் உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

அதே போல் கணவன் மனைவி மேல் வெறுப்படைந்து இதே போல் சந்தேக உணர்வு ஏற்பட்டால் இந்த உணர்வுகள் இதனுடன் கலக்கப்பட்டு இங்கே மனதில் கலக்கத்தின் தன்மை ஏற்படுகின்றது.

இப்படி வெறுப்படையும் உணர்வுகள் இருவருக்குள்ளும் வரும்போது
1.உடலுக்குள் எதிர்நிலைகள் உருவாக்கப்பட்டு
2.நல்ல குணங்களை உருவாக்குவதற்கு மாறாகத் தீமையின் உணர்வுகளைத் தான் அந்த அணுக்கள் மாற்றும்.

இப்படி மாற்றி வரப்படும் போது பகைமை உணர்வுகள் சேரத் தன் உடலுக்குள் மீண்டும் தீமையின் உணர்வுகளை விளைவிக்கும் தன்மையாக வந்துவிடும்.

ஆனால் அதே சமயத்தில் தொழில் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை என்ன செய்யும்…! இப்போது எதற்கடா…? என்று தோன்றும்.

ஆனால் அதே சமயத்தில் எப்படியும் சம்பாரிக்க வேண்டும் நம் குடும்பத்தைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

பிறகு அந்த நிலைகளில் பலவீனமான நிலைகள் அடையும் பொழுது வளர்த்து வந்த தன்மையும் இழந்து மற்ற உணர்வின் தன்மை தன் உள்ளடக்கும் தன்மை வருகிறது… பகைமை உணர்ச்சிகளே வரும்.

1.அப்போது நம்மை எது இயக்குகின்றது…?
2.நாம் தவறு செய்கின்றோமா…? என்றால் இல்லை…!
3.சந்தர்ப்பம்… இவ்வாறு நுகரப்படும்போது நம் உணர்ச்சிகளை மாற்றி சந்தேகப்படுபவர்களாக இரண்டு பேரையும் மாற்றி விடுகின்றது.

இதனின் விஷத்தன்மை மனித உடலையே அழிக்கச் செய்யும். தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் செல்லும். இல்லையென்றால் ஏன் எதற்கு என்று வாழ்க்கையையே விரயமாக்கச் செய்யும். கணவன் மனைவியைப் பிரித்து வாழச் செய்யும்.

ஆகவே பிரித்து வாழும் போது வேதனையின் தன்மை உருவாகும். இதைப் போல இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்தால் என்ன ஆகும்…?

மனிதனாகப் பிறந்தும்
1.விஷத்தின் தன்மை கொண்டு தனக்குத் தானே எமனாகவும் மனித உருவுக்கு எமனாகவும்
2.இரண்டு பேருமே பெற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இப்படி விளையும் உணர்வுகள் எதிர் நிலையாகப்படும் பொழுது நரகலோகத்தையே சந்திக்க நேர்கின்றது…! ஏன் வாழ்கின்றோம்…? எதற்காக வாழ்கின்றோம்…? என்று இந்த உணர்வுகள் இரண்டு பாலருக்கும் இருக்கும்.

இரண்டு பேருக்குள்ளும் இப்படி மனப் போராட்டங்கள் ஏற்படும் பொழுது இந்த உணர்வுகள் பித்த சுரப்பிகளில் வேதனை உணர்வுகள் (விஷம்) அதிகரித்து கடும் நோயாக மாறிவிடுகிறது. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அகஸ்தியனும் மனைவியும் நஞ்சினை வென்று ஒன்றாக இணைந்தனர். துருவத்தின் எல்லையில் இருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினர். இன்றும் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

என்னை குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுட்கால மெம்பராக ஆக்கினார். அதே போல்
1.மனித வாழ்க்கையில் இருளை நீக்கித் துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ
2.அதிலே நீங்களும் ஆயுட்கால மெம்பராக இணைந்து என்றும் ஒளியாக நிலை பெற வேண்டும்.
3.இருள் சூழ்ந்த நிலைகள் உங்கள் மனதை மாற்றக்கூடிய நிலைகள் வரக்கூடாது.

தங்க நகை செய்யப் பித்தளை செம்பு போன்ற சில பொருட்களை அதனுடன் இணைக்கின்றோம். அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தால் இதைப் பிரித்து தங்கத்தைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல் நமக்குள் மனப் போராட்டங்கள் பல சந்தர்ப்பத்தில் இணைந்தாலும் திரவகத்தை ஊற்றித் தங்கத்தைத் தெளிவாக்குவது போல
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் இப்படி சந்தேக உணர்வுகளும் மற்ற நிலைகளும் கடும் விஷத்தின் தன்மையை உருவாக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து தனக்குள் இணைத்தோம் என்றால்
3.கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் நிலை ஏற்படும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.குருநாதர் எம்மைத் தொட்டு உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் (பவர் கொடுத்தார்).
2.என் ஒருவனுக்குத் தான் குருநாதர் சக்தி கொடுத்தார் ஆனால் உங்களிடம் யாம் (ஞானகுரு) என்ன செய்கின்றோம்…?
3..அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
4.உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக மதித்து அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிருடன் நினைவை இணைக்கின்றேன்.
5.அந்த அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் உயிர் மேக்னெட்.. கவரும்
6.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு நீங்கள் எல்லோருமே அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

ஒரு பக்கத்திலே கம்ப்யூட்டரை வைத்து இயக்குகின்றார்கள். அதிலிருந்து இணைப்பைக் கொடுத்த பின் “உலகம் முழுவதற்கும் அது இயக்குகின்றது…”

ஒரு இடத்திலே அதை வைத்து ஆணையிட்டாலும் அடுத்த பக்கத்தில் மற்றதை இயக்கும்படி வைத்திருக்கின்றனர். இதே மாதிரித் தான்
1.குருநாதர் கொடுத்த அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை அங்கே எண்ணி உங்களுக்குள் பதிவு செய்து… உங்களை எடுக்கச் சொல்கின்றோம்.
3.(உபதேசத்தின் வாயிலாகப் பல முறை பதிவு செய்திருக்கின்றோம்)
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால்… எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் பெற முடியும்.

இப்படித்தான் உயர்ந்த நிலைகளை யாம் உங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம்…!

ஏனென்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து இந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆனால் குருநாதரைப் பார்க்கும் போது ஒரு பைத்தியக்காரராகத் தெரிந்தார்… பைத்தியக்காரராகத் தான் நான் நினைத்தேன்.

ஆனால் நான் சொல்வதை இப்பொழுது நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்…? சாமி சாதாரணமாகச் சொல்கின்றார் என்று…!
1.சொல்லிலே சாதாரணம்…!
2.ஆனால் எம்முடைய வாக்கின் பதிவு “குரு அருளின் சக்தியை அப்படியே உங்களிடம் பதிவு செய்கிறேன்…!”

ஒரு கொலைகாரனைப் பார்த்த பின் அது பதிவாகி அவனை நினைக்கும் போதெல்லாம் நடுக்கமும் பயமும் உண்டாகின்றது.

அதே மாதிரி… தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள் முந்தி ஏற்கனவே பதிவு செய்த தீமையின் விளைவுகள் அதைக் கண்ட பின் நமக்குள் நடுக்கம் உண்டாகும்.
1.நான் நினைத்தேன்… ஒரு நாள் எடுத்தேன்… அடுத்த நாள் என்னால் எடுக்க முடியவில்லை… என் உடல் எல்லாம் நடுங்குகிறது
2.சிறிது நாளைக்கு அந்த நடுக்கம் வரும்.

காரணம்… ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்துப் பதிவு செய்த பின் அவனை நினைக்கும் போதெல்லாம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்கும். அவனை நினைக்கும் போதெல்லாம் நல்ல செயல்களைத் தடைப்படுத்துகின்றது.

இத்தகைய சங்கடத்தை உருவாக்கும் தீமையின் நிலைகளை அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் யாம் பதிவு செய்ததை எண்ணி உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை நம் உடலுக்குள் ஆக்கினை இங்கே இணைத்து விட்டால் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் ஆணையிட வேண்டும். என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

1.மகரிஷிகளின் உணர்வுகளைக் கண் கொண்டு தான் பதிவு செய்கிறோம். (பொட்டில் தொட்டு அதைப் பதிவு செய்ய முடியாது)
2.அதைப் பெற வேண்டும் ஏக்க உணர்வு கொண்டு பதிவு செய்து விடுகின்றோம்.
3.மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… இயக்கம் “அந்த உயிரின் இயக்கமாக வருகின்றது…”

இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிருடன் இணைத்துக் கொண்டு வர வேண்டும். முதலில் கண் கருவிழி பதிவாக்கி விடுகிறது. பதிவானால் தான் எடுக்க முடியும். ஆன்மாவில் வந்து உயிரிலே பட்டு நாம் தெரிய முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை இங்கே கொண்டு வரச் சொல்கின்றோம்… பதிவாக்கி விடுகிறோம். இது தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

அன்றாட வாழ்க்கையில் உடனுக்குடன் நாம் செய்ய வேண்டியது

 

நாம் எப்போது பிறருடைய உணர்வுகளை எடுக்கின்றோமோ அதன் உணர்வின் தன்மை நமக்குள் வந்து விடுகின்றது. அப்போதே நாம் அதைக் கொன்று விட்டால் தீமை செய்யும் இயக்கமாக வராது.

வேதனையான உணர்வு வரப்படும் பொழுது ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதை அடக்கி விட்டால் நமக்குள் அந்தப் பரம்பரை என்ற நோய்கள் வராது.

தொழிலில் நஷ்டம் ஆகிறது… வேதனைப்படுகின்றோம்.
1.அந்த வேதனை உணர்வு நமக்குள் வளராது
2.நாம் அப்பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொன்று விட்டால்
3.அந்த உணர்வின் தீமைகள் நமக்குள் செயல்படாது.

உணர்வின் உணர்ச்சிகள் நுகர்வது எண்ணங்களாக எப்படி ஆகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

காரணம் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு. இப்பொழுது நாம் ஒருத்தர் பேசுவதை நாம் கவர்ந்து கேட்டால் வசிஷ்டர். உணர்வின் தன்மை நுகர்ந்தால் நம் உடலில் அக்குணத்தின் தன்மை நமக்குள் உருவாக்கும் பிரம்மம் ஆகி அணுவாக உருவாகிவிடுகின்றது.

அந்த அணுத்தன்மை ஆகிவிட்டால் வசிஷ்டர் பிரம்மகுரு. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி.

1.எந்தக் குணத்தின் தன்மை கவர்கின்றோமோ அது உணர்வின் தன்மை அணுவாகும் பொழுது
2.அதன் இனத்தின் தன்மையே தான் இயக்கும் அருந்ததி… என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.

ஆக இங்கே விஷ்ணு உயிர். விஷ்ணுவின் மகன் பிரம்மா. சீதாராமன் விஷ்ணுவின் மறு அவதாரம் என்ற நிலைகளைத் தெளிவாக கூறுகின்றனர்.

நாம் எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பிரம்மம் ஆகும்பொழுது அந்த பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
1.இங்கே அதன் ஞானமாக இயக்கும் என்றும்
2.வசிஷ்டரின் மனைவி அருந்ததி எதைக் கவர்ந்தோமோ அது உருவாக்கப்படும் பொழுது பிரம்மம் ஆனாலும்
3.அது இணைந்தே அந்தச் சக்தியாக இயக்குமென்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றது.
4.எந்த உணர்வின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை இங்கே இயக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். எதன் சுவையின் உணர்ச்சிகள் எண்ணங்களாக இயக்குகின்றதோ அப்பொழுது அது அணுவாகப் படும் பொழுது அதனுடைய இயக்கமும் ஈசன்… அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

உயிரின் இயக்கமும் இதே தான். விஷ்ணு என்று இருக்கும் பொழுது இயக்கம் ஈசன் அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

ஆகவே விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். ஆக எந்த உணர்வின் தன்மையோ அதன் உணர்ச்சியின் அணுவாகி அந்த உணர்வின் தன்மை உடலாகி அதன் வழியே இயக்கும் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே இங்கே இராமாயணத்தில் பரதன் கைகேயிடம் என்ன சொல்கின்றார்…? உன் தாயார் பாட்டன் வீட்டில் எதைச் செய்ததோ… அதையே நீ இங்கேயும் செய்கின்றாய். அதாவது
1.பரம்பரை நோயும் பரம்பரை குணங்களும் நமக்குள் வருகின்றது.
2.ஏனென்றால் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மையே நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது நமக்குள் அது வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அதைக் கொன்று பழக வேண்டும்.

சங்கடத்தையோ சலிப்பையோ வேதனையோ வெறுப்பையோ சந்தர்ப்பத்தால் நுகரும்போது ஆசையின் நிமித்தம் வரப்படும் பொழுது அதன் அருகிலே நாம் செல்கின்றோம்.

தொழிலில் நாம் வேலை செய்து வரப்படும் பொழுது எல்லோருக்கும் நன்மையை செய்கின்றோம். அதில் எதிர்பாராத நிலைகளில் ஒருவன் குறை கூறினால் நாம் நல்லது செய்தும் குறை கூறும் போது அவன் நம்முடைய இடத்தைப் பிடிப்பதற்காக அவன் குறை கூறுகின்றான் அந்தக் குறையின் உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் விளைந்த பின் அது தான் தாய் ஆகின்றது.

அந்த உணர்ச்சியின் தன்மை வெறுப்படைந்து… “என்னை இப்படிச் செய்கின்றானே..” என்று வேதனை உணர்வை நமக்குள் எடுக்கப்படும் பொழுது அவனை நினைக்கும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.

அப்பொழுது நாம் வேதனைப்படும் செயல் வரப்படும் பொழுது நம் சிந்திக்கும் தன்மை எல்லாம் இழக்கின்றது. நமக்குத் தீங்கு செய்தவன் உணர்வு தான் வளர்கின்றதே தவிர நமது நன்மை செய்த உணர்வை நாம் வளர்க்க முடியவில்லை.

1.ஆனால் அந்தத் தீமை செய்யும் உணர்வு நமக்குள் வளராது “அப்போதே அதைக் கொன்று பழகுதல் வேண்டும்…”
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று அந்த இயக்கச் சக்தியை நாம் மாற்றினோம் என்றால்
3.நமக்குள் அந்தத் தீமை என்ற நிலைகள் வராது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் சொன்னது:-
1.உனக்கு இடைஞ்சலாகும் பொழுது நான் சொன்ன உயர்ந்த சக்தியை நீ சேர்த்துக் கொண்டால்
2.உன் கெடுதல் நீங்கும்… உன் துன்பங்கள் விலகும்
3.அந்தத் துன்பத்தை நீக்குவதற்குத் தான் உனக்குள் இதைப் பதிவு செய்கிறேன்…!

இதைக் கடைசியில் சொல்வார். ஆனால் அதற்கு முன்னாடி என்னை உதைப்பார்… எனக்கே தெரியாது.

“ஏன் தான் இப்படித் தொல்லை கொடுக்கின்றாரோ…” என்று அவர் மேல் எனக்கு வெறுப்பு வரும். அவரிடமிருந்து “தப்பித்து ஓடிப் போய் விடலாமா…!” என்று நினைப்பேன்.

எங்கேயடா நீ தப்பப் போகின்றாய்…? என்பார் குருநாதர்.. பல இம்சை…!

வழுக்கலான பாறையாக இருக்கும் அங்கே போகச் சொல்வார். போனால் கீழே விழுந்து பல்லெல்லாம் உடைந்து விடும். அதிலே ஒரு பொருளைக் காட்டி “நீ எடுத்துக் கொண்டு வாடா…” என்பார்

அதே போன்று பனிப்பாறையாக இருக்கும் இமயமலை போன்ற இடங்களுக்குச் செல்லும்படி சொல்வார் ஆனால் மேலே துணி ஏதும் போடக்கூடாது… கோவணத் துணியை மட்டும் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பார்.

பார்த்தால் பாறைகளாக எல்லாம் உருப்படியாகத் தான் தெரியும் ஆனால் மரத்தின் மேலே பனி உறைந்திருக்கும். ஏமாந்து அங்கே கையை வைத்து விட்டால் “டப்…” என்று உள்ளே போய் பாதாளத்திற்கே போய்விடுவோம். ஆனால் அங்கே போடா… என்பார்.

இதையும் காட்டுவார்… எல்லாவற்றையும் சொல்வார்…!
1.ஆனால் இதில் இருந்து எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்குச் சக்தி வேண்டும்… வலு வேண்டும்…
2.அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா…? என்பார்
3.நான் சொன்னதை நினைக்கவில்லை என்றால் நீ உள்ளே சென்று விடுவாய்
4.நான் சொன்ன முறைப்படி எண்ணினால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஏனென்றால் ஆபத்து வரும் நேரங்களில் இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பார் குருநாதர்.

நான் போய்க் கொண்டே இருப்பேன். ஒரு இடத்தில் மரத்தின் மீது பனிக்கட்டியாக உறைந்து இருக்கின்றது. ஆனால் அந்தப் பக்கம் பார்த்தால் திடு…திடு… திடு…திடு… என்று பனிப்பாறைகள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றது.

இங்கே பனி மலையில் காலை வைக்கின்றேன். பொரு..பொரு.. என்று உள்ளே போகின்றது. என்னுடைய ஒரு கால் “டபக்…” என்று உள்ளே இறங்கி விட்டது. இறங்கியவுடன் என்னுடைய எண்ணம் எப்படி வருகின்றது…?

“செத்து விடுவேன்…!” என்ற எண்ணம் தான் எனக்கு வருகின்றது…!

1.நான் உன்னிடம் என்னடா சொன்னேன்…!
2.நீ இப்போது என்னடா செய்கின்றாய்…? என்கிறார் குருநாதர்

ஆக… என்னுடைய உணர்வு ஏன்ன செய்கின்றது…?

1.குருநாதர் கொடுத்த சக்தியை அந்த இடத்திலே என்னால் பயன்படுத்த முடியவில்லை.
2.புவியின் ஈர்ப்பில் இருக்கப்படும் பொழுது இறந்துவிடுவோம்…! என்ற உணர்வு தான் உடனடியாக வருகின்றது
3.நல்லதை நினைக்கவே முடியவில்லை…!

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து ஈஸ்வரா…! என்று எண்ணித் தியானத்தில் அமர்ந்தவுடன்… எனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை (கான்சன்ட்ரேஷன் பண்ண முடியவில்லை) தியானம் வரவில்லை… என்னால் எண்ணத்தை நிலையாக நிறுத்த முடியவில்லை… சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

நிலையாக அதை நிறுத்த முடியாது… அது பல அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இப்பொழுது யாம் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருந்தால் அது நல்ல அலைகளாக இருக்கும். ஆக… எப்பொழுதெல்லாம் குணங்கள் கெடுகின்றதோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நல்ல உணர்வு எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்தக்கூடிய நிலையில் ஆத்ம சுத்தியில் தான் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய வழியில் மிக மிக உயர்ந்த அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி காற்றிலே படர்ந்து இருக்கின்றது.
2.அதை எடுக்கக்கூடிய திறன் உங்களுக்கு வேண்டும் அல்லவா…!
3.நான் பேசுகின்றேன்… நீங்கள் கேட்கின்றீர்கள்… அதற்கு வேண்டிய கரண்ட் தேவை…!
4.இல்லை என்றால் உங்களால் எடுக்க முடியாது… வெறுமனே எண்ணி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் தொடர்பு கொண்டு அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

தையல் வேலை பழகியவர்கள் துணியை வெட்டி அழகாக நேர்த்தியாகத் தைக்கின்றார்கள். மற்றவரிடம் பேசிக் கொண்டு கூட தைப்பார்கள்.

ஆனால் புதிதாகத் தைக்க வேண்டும் என்று சென்றால் கவனமாகப் பார்த்துத் தைத்தாலும் கூட சரியாக வராது. அந்தப் பழக்கம் வரும் வரை அது சீராக வராது.

அதைப் போன்று தான் அந்தப் பழக்கத்திற்கு வருவதற்குத் தான் உங்களுக்குத் திரும்பத் திரும்ப… பல கோணங்களில் உணர்த்திக் கொண்டு வருவது.

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று தான்… “முதலிலே சொன்ன மாதிரி பல இம்சைகளைக் கொடுத்து… ஞானிகள் சக்திகளைப் பெறுவதற்குப் பழக்கிக் கொடுத்தார்…!”

இப்பொழுது உங்களிடம் இதை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லித் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். மரம் செடி கொடிகளுக்கு உரத்தைப் போடுவது போன்று
1.இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அவரவர்கள் மன நிலைக்குத் தகுந்த மாதிரி…
2.எத்தனை பேர் எந்தெந்த வகையில் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்ற நிலையில் தான்
3.என்னுடைய இந்த உபதேசமே அமையும்… உங்களுக்குள் அந்தச் சக்தி கூடும்.

ஞானிகள் உணர்வை இப்படி உரமாக உங்களுக்குள் ஏற்றி வைத்த பின் ஈஸ்வரா…! என்று நீங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல குணங்கள் வலுவாகி… அடுத்து நல்லதைச் சிந்திப்பதற்கும் நோய்கள் அகன்று… வேதனைகள் அகன்று உங்கள் சொல்லிலே வலிமையும் செயல்கள் புனிதமும் பெறும்.

என் பையன் சொன்னபடி கேட்கவில்லை; என் வீட்டுக்காரர் என்னை எதிர்த்துக் கொண்டேயிருக்கின்றார்; என் நண்பன் வெறுத்துப் பேசுகின்றான்; என் தொழில் சரியாக நடக்கவில்லை என்று இப்படி எல்லாம் சொல்ல வராது.

என் பையன் தெளிந்த நிலை பெறுவான்… என் வியாபாரம் விருத்தியாகும்… கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்வோம்… நோய்கள் அகலும்… என்று தன்னாலே சொல்ல வைக்கும்.

தீமையாக எண்ண விடாதபடி நல்லதாகவே உங்களை எண்ண வைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

நல்லது எது…? கெட்டது எது…?

 

குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலையச் செய்து ஒவ்வொரு உணர்வுகளும் நீ நுகரப்படும் போது என்ன செய்கின்றது…? என்று பச்சிலையின் ரூபமாகக் காட்டினார்.

1.ஒரு பச்சிலையை நுகர்ந்த பின் அது உனக்குள் எப்படிப் பேசுகின்றது…? என்று பார் என்கின்றார்.
2.அதை நுகர்ந்த உடனே அந்தப் பச்சிலை பேசுமா…? என்று கேட்கின்றார்.

எப்படி சாமி பேசும்…! என்றேன்.

இப்பொழுது பேச வைக்கின்றேன் பார்…! என்று பச்சிலையை நசுக்கி என்னை நுகரச் செய்தார். நுகர்ந்தவுடனே “ஓ…ய்” என்று பேச ஆரம்பிக்கின்றது… ஐய்யய்ய… என்று ஒரு மாதிரியாக உமட்டலாக வருகின்றது.

1.இப்பொழுது எது பேசுகின்றது…? நீ பேசுகின்றாயா…? இல்லை… அந்தப் பச்சிலையா…?
2.இப்படி ஒவ்வொரு இலைகளையும் நுகரப்படும் பொழுது உணர்த்துகின்றார்.

திடீரென்று என்னை ஓங்கி அடிக்க வருகிறார். அப்பொழுது அடிக்க வந்தவுடன் நுகர்ந்தவுடன் என்ன செய்தது…? யார் அடிக்க வந்தது…? நுகர்ந்த உணர்வு உனக்குள் வந்து உன்னைப் பயப்பட வைக்கிறது.

அப்பொழுது நீ பயந்தாயா…? நான் செய்த செய்கையை நீ நுகர்ந்த பின் உன்னைப் பயமுறுத்தச் செய்கின்றது. அப்பொழுது நீயா…? இல்லை நானா…?

1.இதில் இரண்டையும் சொல்லி இப்படி எல்லாம் வினாக்களைக் கேட்பார்.
2.ஏனென்றால் இதை அனுபவ ரீதியில் ஒவ்வொன்றையும் உணர வைக்கின்றார்.

சில நேரங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் இதை ஏதாவது ஒன்று சொல்வார். இது நல்லதா… கெட்டதா…? என்பார். நல்லது என்று சொன்னால் எப்படி நல்லது…? என்பார் கெட்டது என்று சொன்னால் எப்படிக் கெட்டது…? என்பார்.

இந்த வினா கொடுப்பதற்கு முன்பே கெட்டது என்று சொன்னாலும் கூட எப்படி கெட்டது என்று…! நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல என்பார்.

இப்பொழுது நீங்கள் நல்ல தேனும் பாலும் சுவையாகச் சாப்பிடுகிறீர்கள்… அது நல்லது தானே…!
1.ஆனால் உடம்புக்கு முடியாத நேரத்தில் இதைச் சாப்பிட்டால் என்ன செய்கின்றது…? எதிர்நிலையாகின்றது.
2.அப்பொழுது இது நல்லதா… கெட்டதா…? என்பார்.

இதைச் சொல்லிவிட்டு இது எல்லாம் நல்லது தானே..! எப்படி நீ நல்லது என்று சொல் பார்ப்போம்…? என்று கேட்பார். உடம்பு முடியாமல் போனால் நல்லதை நீ சாப்பிட்டவுடன் அது நல்லது செய்கின்றதா இல்லை கெட்டது செய்கின்றதா…? என்பார்.

1.எவ்வளவு நாசூக்காக அவருடைய உணர்வுகளை உணர்த்துவதற்காக வேண்டி அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.
2.ஆனால் மனிதன் வாழ்க்கையில் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல.

இப்பொழுது நாம் மருந்து சாப்பிடுகின்றோம்… அது கசப்பாக இருக்கின்றது. ஆனால் நோயை நீக்கக்கூடிய தன்மை இருக்கின்றது. மருந்தைச் சாப்பிட்டவுடன் என்ன செய்கின்றது…?
1.நமக்குள் இருக்கக்கூடிய கெட்டதை நீக்கிவிட்டு நல்லது ய்கின்றது.
2.அப்பொழுது அந்த மருந்துக்குள் இருக்கக்கூடிய கசப்பின் உணர்ச்சி என்ன செய்கின்றது…? நமக்கு நல்லது செய்கின்றது அல்லவா…!

ருசியின் தன்மை இருக்கும் போது நீ ருசியாகச் சாப்பிடுகின்றாய். சாப்பிடும் போது உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்கின்றது…? வயிற்று வலி வருகின்றது தலைவலி வந்து விடுகின்றது வாந்தி வந்து விடுகின்றது எல்லாம் வந்து விடுகின்றது. அப்பொழுது இது எப்படி நல்லதாகும்…? என்று கேட்கின்றார்.

ஆக நாம் நுகரும் உணர்வுகளை இயக்குவது யார்…? நமது உயிர். அப்பொழுது நமக்குக் கடவுள் யார்…? நமது உயிர். அந்த உணர்வின் தன்மையை நாம் இயக்கி உடலில் உணர்வின் தன்மை அணுவாகி விட்டால் நம் உள் நின்று குணத்தின் தன்மை உயிரைப் போலவே உள் நின்று கடவுளாக இயக்கும்.

1.அது தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் பிரணவத்திற்குள் பிரணவம்.
2.இயக்கத்தின் தன்மை எப்படி இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

ஆகையினாலே நாம் இந்த ஆயுட்கால மெம்பராக இருப்பதெல்லாம் எப்போது நமக்குத் தீமை என்று தெரிகின்றோமோ அப்போதே அதைக் கொன்று பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது நமக்குள் வளராது ஆத்ம சுத்தி செய்து அதை நாம் அடக்கிப் பழக வேண்டும். அதை வளரவிடக் கூடாது.

நாம் மிளகாயை அள்வாகக் குழம்பில் போடும்போது அது ருசியாக வருகின்றது. அதே மிளகாய் அதிகமாகி விட்டால் ருசி கெடச் செய்கிறது. ஆகவே நாம் தீமை என்ற கார உணர்ச்சிகளை நுகரும் போதெல்லாம் கொன்று பழக வேண்டும்.

குழம்பில் அதிகமாக காரம் இருந்தால் இரண்டாவது முறை சாப்பிடத் தோன்றுமா? உஷ்…உஷ்… என்று தள்ளி விட்டுவிடுகிறோம். அப்போது அதைச் சாப்பிடுகின்றோமா…? இல்லை.

இதை போல தான் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவர் தீங்கு செய்தான் என்று தெரிகிறது. இப்படித் தீங்கு செய்தானே இப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று நாம் உள்ளுக்குள் போட்டவுடன் என்ன செய்கின்றது…? நமக்குள் இருக்கக் கூடிய நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது. ஆக நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றும்.

அப்பொழுது நாம் எதைக் கொல்ல வேண்டும்…?
1.அவனை எண்ணி அவன் வழியில் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் கொல்வதா…?
2.ஆனால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காக்க… தீமை என்று உணர்வு நமக்குள் வருவதை அதைக் கொல்வதா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

அந்த உயர்ந்த சக்திகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்காக குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராக என்னை இணைத்தாரோ அதே போல் ஆயுட்கால மெம்பராக உங்களையும் இணைக்கின்றேன்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்றானோ கணவன் மனைவி ஒன்றாக இணைந்தனரோ இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமாகப் பெற்றனரோ… அதன் வழிப்படி இந்த ஆயுட்கால மெம்பர்கள் உங்கள் குடும்பத்தில் அன்புடனும் பற்றுடனும் பரிவுடனும் வாழ்தல் வேண்டும்.

தன்னை அறியாது வரும் தீயவினைகளை…
1.இராமாயணத்தில் பரதன் சொன்னது போல அந்தத் தீமை என்ற உணர்வுகளை
2.அப்போதே அதைக் கொன்று அருள் உணர்வினைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

ஆயுட்கால மெம்பராக வந்தவர்கள் நீங்கள் இதனை வழிப்படுத்தி நடத்தி இந்த உடல் தான் கடைசி உடல் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.

ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்

யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகிப் பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்

யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?

 

நான் என்னுடைய அனுபவத்தில் சொல்கின்றேன். 20 வருட காலம் குருநாதர் காட்டிய அருள் வழியில் எதை எதை எப்படி எல்லாம் நுகர்கின்றோமோ…? அது எல்லாம் எப்படி என்னை இயக்குகிறது…? என்று அதைக் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லப்படும் பொழுது ஒரு மோசமான இலை இருக்கின்றது. அதை நசுக்கியவுடன் ரொம்ப நாற்றம் அடிக்கின்றது.
1.நாற்றம் அடிக்கின்றது என்று முகத்தைச் சுளித்தால்
2.இந்த உணர்வின் தன்மை முகத்தைச் சுளிக்க வைப்பது எது…? நீயா… இல்லை அந்தப் பச்சிலையா…? என்று கேட்பார்.

அந்த பச்சிலையின் உணர்வு உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சியின் தன்மை உடலாக்கப்பட்டு
1.அந்த உணர்ச்சிகள் உன்னை எப்படி முகத்தைச் சுளிக்க வைக்கின்றது…?
2.வாந்தி உமட்டல் எப்படி வருகின்றது…?
3.இது எதனுடைய காரணம்…?

நீ நுகர்ந்த உணர்வு தான் அதை இயக்குகின்றது. இயக்குவது யார்…? உயிரே…! ஆக அந்த உயிர் இயக்கும் உணர்வுகளில் இருந்து இது எப்படிச் செயல்படுகின்றது…? என்பதனை இப்படித் தெளிவாக்குகின்றார்.

இதைப்போல் எத்தனையோ வகையான பச்சிலைகளை நுகரும்படி செய்கிறார். சந்தர்ப்பங்களில் என்னை இடக்கு முடக்கான இடங்களில் கொண்டுபோய் ஏற்றி வைத்துவிட்டு நீ இங்கே இரு… நான் வருகின்றேன்…! என்று போய்விடுவார்.

அப்பொழுது அவர் போனவுடனே என்ன நடக்கிறது…? அவர் இருக்கும் பொழுது முதலில் தைரியமாக இருந்தது. ஆனால் அதற்குப் பின் அந்த இடத்திலிருந்து கீழே இறங்க முடியாத நிலையும் பயம் கொள்ளும் உணர்ச்சிகளை எனக்குள் ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் தோன்றிய பின் அதன் பின் நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் என்னென்ன செயல்கள் செயல்படுகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும்…? என்று இவ்வளவும் ஞாபகப்படுத்தினாலும்
1.அந்தப் பயம் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறந்து விடுகின்றோம்.
2.மறந்தவுடன் நடுக்கம் ஆகின்றது… மன உறுதியே இருக்காது. நாக்கு கூட சில நேரங்களில் வறண்டு போகும்.

ஒரு ஆபத்தான இடத்தில் விட்டவுடன் அந்த உணர்ச்சியின் வேகம் வரும்போது இதை உற்றுப் பார்க்கும்போது நாக்கு வறட்சியாகி விட்ட்து. தண்ணீருக்கு எங்கே செல்வது…? அப்பொழுது வறட்சி ஆகும்போது பலவீனமடைகின்றது.

இதையெல்லாம் எது இயக்குகின்றது…?

1.நீ உன்னுடைய எண்ணத்தால் நுகர்ந்த நிலை உன்னைப் பலவீனப்படுத்தச் செய்து
2.அப்பொழுது நீ எடுக்கும் மன பலம் குறைகின்றது.
3.இங்கே வறட்சி ஆகின்றது. உன் உடலில் வேர்வையாகின்றது.

ஆக இதன் உணர்வுகள் உள் நின்று வெப்பமாகி இதன் உணர்வுகள் ஆவி ஆக்கப்படும் போது நீ எந்தப் பொருளைத் தொட்டாலும் அது வழுக்கும் தன்மை வருகிறது. மீண்டும் இங்கே உன் பலவீனம் தான் காட்டப்படுகின்றது.
1.பலவீனம் காட்டுவது எது…?
2.உன்னுடைய எண்ணம் தான்.

உயிரிலே பட்டு இயக்குவது யார்…? அந்த உயிரே தான். அந்த உணர்ச்சியின் தன்மை உன் உடலில் இயக்குவது யார்…? இந்த உயிரே தான் என்ற நிலையில் இப்படி ஒவ்வொரு நிலைகளையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான் ஞானியர்கள் அரங்கநாதன் என்றும் இந்த அரங்கத்திற்குள் உணர்வின் தன்மை மோதும் போது அந்த உணர்ச்சிகள் (ஆண்டாள்) நம்மை ஆளுகின்றது… அது சொல்லைக் கேட்பவரையும் ஆளுகின்றது என்று தெளிவாக்கினார்கள்

இப்பொழுது வேறு ஒன்றும் தேவையில்லை. நாம் கொஞ்சம் தைரியமாக இருப்போம், ஒருத்தர் முடியாத நிலையில் அவர் பலவீனமான உணர்வை நுகர்ந்த பின் அந்த நாதத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அவருடைய செயலைப் பார்க்கும்போது நாம் வலுவாக இருப்பவர்கள் என்ன செய்வோம்…?

என்னப்பா…? இதற்கெல்லாம் போய் நடுங்கிக் கொண்டிருக்கின்றாய்…! என்று நாம் கேலி செய்வோம். ஆனால் அவருக்கு அங்கே முடியாத நிலை. ஆனால் நாம் கேலி செய்வோம்.

அந்தக் கேலியின் தன்மை சிரிக்கச் சிரிக்க மீண்டும் அவருடைய பலவீனத்தைத் தான் ஊட்ட முடியும். ஆனால் அவருக்குத் தெளிவூட்டுகின்றோமோ…?

ஆனால் அதே சமயத்தில்
1.அவன் முடியாத நிலைகளை நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து இந்த மாதிரிச் சந்தர்ப்பம் வரும்போது நமக்கும் இதே மாதிரி நடுக்கம் வரும்.
2.நடுக்கம் வரும்போது யாராவது சிரித்தால் நமக்கு உடனே கோபம் வரும்.
3.என்னைப் பார்த்து அவன் கிண்டல் செய்கின்றான் பார் என்று கோபம் வரும்… அல்லது பதட்டம் வரும்.

ஆக
1.அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக பரவப்பட்டு
2.நம்மை ஆளுவது நாம் எண்ணிய எண்ணங்கள் தான் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொரு நிமிஷமும் எத்தனையோ வகையான ஆயிரக்கணக்கான நிலைகள் வருகின்றது. அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே நெருப்புக்குச் சமமானவர்கள்… தீமையைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய சக்தி பெற்றவர்கள். அந்தச் சக்தி நமக்கு முன் இந்தக் காற்றிலே இருக்கின்றது.

நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… மெய் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று எடுத்து நமக்குள் அந்தத் தீமைகளைப் பொசுக்கிப் பழகுதல் வேண்டும்.

குருக்ஷேத்திரப் போர்…! குரு…! இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

நான் பேசுகின்றேன்; நீங்கள் திட்டுகிறீர்கள்; மற்றதைப் பார்க்கின்றேன்; எல்லாவற்றையும் சுவாசித்து… உயிரான குருவிடம் சென்றுதான் அது வேலை செய்கின்றது… உயிர் அதை எல்லாம் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

உதாரணமாக… வேதனை வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.வேதனை உருவாக்கக்கூடியதைக் காதிலே கேட்டு…
2.அந்த உணர்ச்சிகளைச் தூண்டி சுவாசித்து… உயிரான குருவிடம் சென்ற பின்… (அப்போது மனப் போராகிறது)
3.ஈஸ்வரா…..…! என்று உயிரை எண்ணி (மனப் போரை நாம் குருக்ஷேத்திரப் போராக்க வேண்டும்)
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
5.குருக்ஷேத்திரப் போரில் அவனிடம் (உயிரிடம்) ஒப்படைத்து விட்டால்
6.மற்றவர்கள் திட்டியது… கேலி பேசியது… வேதனைப்படச் செய்தது… உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகிறது.

அதாவது குருவிடம் (உயிரிடம்) சொல்லி தனக்குள் கெட்டது புகாமல் தடுக்கச் செய்வதற்குத் தான் “குருக்ஷேத்திரப் போர்…” என்று நமக்குக் காண்பித்துள்ளார்கள்.

நம்மை ஒருவன் திட்டிக் கொண்டே இருக்கின்றான் என்று அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். சுவாசித்ததும் ஜிர்.. ஜிர்..ர்ர்.. ஜிர்.. என்று இயக்கிக் கொண்டிருக்கும் (நமக்குள் இரைச்சலாகிறது).

அந்த உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
1.ஈஸ்வரா…….! என்று ஓங்கி (சொல்லி) அந்த ஓங்காரம்… வானை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இங்கே குருவிடம் (புருவ மத்தியில்) வந்து விடுகிறது.
3.அப்போது சாதாரண மனிதன் பேசிய (திட்டியதை) உணர்வைச் சுட்டுப் பொசுக்கி விடுகிறது.

இத்தகைய பேருண்மைகளைக் காட்டிய மெய் ஞானியின் உணர்வை எண்ணி அதைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அவன் தான் சிருஷ்டிக்கின்றான்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும். என்னைத் திட்டியவர்களுக்கு என் சொல் நல்லதாகப் பட வேண்டும்… என் பார்வை அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… என் சொல் அவர்களுக்கு இனிமை ஊட்ட வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வேண்டும்.

இப்படிச் செய்தால் குருக்ஷேத்திரப் போர்… தீமைகள் நமக்குள் வராதபடி தடுக்கப்படுகின்றது.

.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.

எப்போது…?

ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாகப் பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.

மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!

நடராஜா என்றால் நமக்குத் தெரியுமா…? தெரியாது. உருவம் கிடையாது… நடராஜாவை வைத்திருக்கின்றார்கள் நம் பூமி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.

இதற்குள் தோன்றிய நிலைகள் கொண்டு “நடனங்கள் பல…” சுழற்சியின் தன்மை கொண்டு அது நிற்காமல் ஓடுகின்றது.

அதே சமயத்தில் அது மோதும் நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் செயல்களும் “ஒலி ஒளி என்ற நிலைக்கே…”
2.இந்த பூமிக்குள் வளர்ச்சியின் தன்மை மாறி மாறிப் பல ஆயிரம் உடல்களாக எடுத்து
3.ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்கி – புலிக்குக் கோபம் மானுக்குச் சாந்தம் எருமைக்கு அசுர குணங்கள் என்று
4.ஒவ்வொரு குணத்தின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டதை 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 நடனங்களைக் காட்டினார் திருமூலர்.

நடராஜா என்கிற பொழுது பூமி ஓங்கார நடனம்…! அதாவது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் “ஓங்காரக் காளி” தீய சக்திகள் அனைத்தையும் அழித்து விடுகிறது. காலிலே அசுரனைப் போட்டு மிதிப்பதாக அதைக் காட்டுகின்றார்கள்

இங்கே சிவத்தைக் காட்டும் பொழுது நடராஜா…! பூமி சுழலும் போது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி உள்ளே வடிகட்டி வருவதை அசுரனைக் காலிலே மிதித்து அடக்குவதாக இங்கே காட்டப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் தவறான செயலைப் பார்த்துக் கோபப்படுகின்றோம். கோபமான உணர்வைச் சுவாசித்து உயிருக்குள் பட்ட பின் எரிச்சலாகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்வின் சக்தி உடலுக்குள் பரவி நல்ல குணங்களுக்குள் கலந்தவுடனே அனைத்தும் எரிச்சலாகிறது. அப்போது இந்த உடலான சிவம் என்ன செய்கிறது…?
1.ஓங்கார நடனம்… இரு உன்னை அழித்து விடுகிறேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
2.சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் அது கோப உணர்வின் சக்தி உடலை இயக்கும் நிலைகள் – ஒலி ஒளி
3.தாவர இனத்தினுடைய மணம்… குணம்… ஆனால் அதனுடைய உணர்வு… இயக்கம்…!

மிளகாயை வாயிலே போட்டால் என்ன செய்கின்றது…? காரம்… ஸ்…ஆ…! என்று அலறுகின்றோம் கசப்பை வாயிலே போட்டால் ஓய்…! உமட்டல் என்ற நிலை வருகிறது.

இதைப் போன்று தான் இந்தப் பூமி நடராஜா… நிற்காமல் சுழல்வதால் அதனின் ஜீவன் கொண்ட நாம் எப்படி இருக்கின்றோம்…? என்பது தான் அந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.

சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.

தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.

தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்

அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

வெள்ளிக் கோளும் அகஸ்தியன் ஒளியாக ஆனதும்

 

தாய் கருவிலே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்ற இந்த அகஸ்தியன் அவன் வாழ்நாளிலே இது எப்படி செடிகளுக்கு மணம் வந்தது…? எப்படி இயக்குகின்றது…? என்ற வகையில் அறிய ஆரம்பிக்கிறான்.

ஏனென்றால் விஷத்தை முறிக்கும் ஆற்றல் வரப்படும் பொழுது அந்த உண்மையை அறியக்கூடிய சக்தி அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது. அப்பொழுது இவனைக் கண்டால் காட்டில் உள்ள விஷ ஜந்துக்களே மறைகின்றது.

1.மின்னல்கள் வந்தால் எப்படி வெள்ளிக் கோள் அதை எடுத்து அதன் உணர்வின் தன்மை ஒளிக்கற்றையாக மாற்றுகின்றதோ
2.இதே மாதிரி மின்னல்களிலிருந்து வரக்கூடிய உணர்வை இவன் எடுத்து ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றான் அகஸ்தியன்.

அதாவது சூரியன் அருகிலே செல்லப்படும் பொழுது மோதும் உணர்வின் ஒளிகளை வெள்ளிக் கோள் எடுத்து ஒளியாக மாற்றுவது போல இவன் மனிதன் நிலையில்
1.பூமிக்குள் வரும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய உணர்வின் ஒளியைத் தனக்குள் எடுத்து
2.அந்த ஒளியின் அறிவாலே எங்கெங்கெல்லாம் அது மோதுகின்றதோ… அங்கிருக்கும் இருள்கள் எல்லாம் நீங்குகின்றதோ
3.அதன் உணர்வின் இயக்கம் எதுவோ அதை எல்லாம் அறியக்கூடிய சக்தியாகப் பெறுகின்றான் இந்த அகஸ்தியன்.

அப்பொழுது அணுவை அறிந்து அகஸ்தியன் ஆகப்படும் பொழுது அவன் வாழ்க்கையில் தீமையை வெல்லும் சக்தி பெறுகின்றான். அந்தத் தீமையை வெல்லும் சக்தி பெற்ற பின் அவனுக்குப் பருவம் வரும் பொழுது திருமணத்தை முடிக்கின்றார்கள்.

திருமணம் முடிந்த பிறகு அவன் எதையெல்லாம் தெரிந்து கொண்டானோ அவை அனைத்தையும் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான். மனைவிக்கு எடுத்துச் சொல்லும்போது மனைவியும் அதைக் கேட்கிறது.

கேட்டுணர்ந்த பின் கணவன் மேலும் உயர வேண்டும் என்றும் தன் மனைவி ரொம்ப உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும் எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்… இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இரண்டு பேருமே இப்படி எண்ணி வாழ்கின்றார்கள்.

அப்போது இவர்கள் இரண்டு பேர் கண்ட உண்மையின் உணர்வுகள் ரெண்டு பேர் உடலிலும் உருவாக்கி இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உடலுக்குப் பின்
1.எந்தத் துருவத்திலிருந்து வரக்கூடிய நிலையினை எதை இவர்கள் நுகர்ந்தார்களோ
2.அந்தத் துருவத்தில் வரக்கூடிய உணர்வை நுகர்ந்த பின் அதையெல்லாம் ஒளியாக மாற்றிய பின்
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் முதல் மனிதர்களில் இந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது.

இந்தப் பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. துருவ நட்சத்திரம் நமது துருவத்தின் நேராகத்தான் அது இருக்கிறது.

ஏனென்றால் இந்தப் பூமியில் வந்து உயிரணு தோன்றி அந்தத் துருவத்தின் எல்லைக்குப் போன பிற்பாடு நம் பூமிக்கு வரக்கூடிய உணர்வெல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அதிலிருந்து விளைந்த உணர்வுகளைக் காலையில் சூரியன் எடுத்து நமது பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமி துருவ வழியில் கவர்ந்து வந்து நமது பூமிக்குள் பரவச் செய்கிறது.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் இப்பொழுது இந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்த்துவது.

என் குருநாதர் இதையெல்லாம் சொல்லி எனக்குள் பதிவு செய்தார்.
1.உனது வாழ்க்கையில் நீ எதையெல்லாம் நுகர்ந்தாயோ அதனால் உன் உடலில் எப்படி எல்லாம் கெடுதல் உண்டானது…?
2.அந்தக் கெடுதலை நீ எப்படி நீக்க‌ வேண்டும்…? என்று சொல்லி
3.அந்தத் துருவ நட்சத்தித்தினை எண்ணி எடுக்கச் சொந்னார்.

இந்த உடலுக்குள் அது சென்ற பின் எப்படித் தீமையின் வலு குறைகின்றது. அதனை உனக்குள் எப்படி நல்லதாக மாற்றி அமைக்க முடியும்…? என்பதனை உணர்த்தினார்.

ஆகவே
1.உன் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ எடுத்து உன் உடலில் செலுத்திக் கொண்டே வந்தால்
3.இந்த வாழ்க்கையில் அதனுடைய வலு பற்று அதிகமாகின்றது
4.அப்பொழுது உன்னை ஆயுள் காலம் மெம்பராக அதிலே இணைக்கின்றேன் என்றார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.இராவணன் யார்…? அவன் சிவ பக்தன்… (மனித உடல்).
2.இராமனோ விஷ்ணு பக்தன் உயிரின் இயக்கத்தைக் கொண்டவன்.

இராவணன் இந்த உடலின் இச்சைக்குச் சகலத்தையும் கற்று உணர்ந்தவன். சகோதரி சூர்ப்பணகையின் பாசத்தால் “என்னை அவமதித்து விட்டானே…” என்று அந்த சாம்ராஜ்யத்தில் வெறுப்பின் தன்மை வளருகின்றது.

பத்துத் தலை இராவணன் என்று சொல்லும் பொழுது மனிதன் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டு பத்தாவது நிலை அடையக்கூடிய தன்மை வந்தாலும்
1.நான் என்ற அகம் வரப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை இல்லாது போய் விடுகின்றது.
2.நான் என்று அகம் வரப்படும் பொழுது தன் சகோதரனாக இருக்கும் அதாவது இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தூங்குகின்றது (கும்பகர்ணன்).

இராவணவன் எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் இந்த உடலின் இச்சைக்குச் செயல்படுபவன் என்று தான் அவனைக் காட்டுகின்றார்கள்.

எதனின் சுவையின் தன்மை கொண்டானோ சூர்ப்பணகையினால் வந்த வினையை… தன் சகோதரி மேல் இருக்கும் பாசம் என்ற அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது… தனக்கென்று அகம் கொண்ட செயலின் தன்மை வரப்படும் போதுதான் அங்கே அழிவின் தன்மை வருகின்றது.

1.இங்கே இராவணனைக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உணர்ச்சி வசப்படும்போது சிந்தனை (கும்பகர்ணன்) இல்லை
2.அங்கே அவமதிக்கும் தன்மை வரும் பொழுது இதே உணர்வுகள் எதிரியின் தன்மையாக (இலட்சுமணன் – சூர்ப்பணகை) வாழ்க்கையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத்தான்
3.இந்த உடலுக்குள் எண்ணிய சக்திகள் இயக்கமும்
4.அதே சமயத்தில் தசரதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிர் சக்கரவர்த்தியாக இயக்குகின்றது என்ற நிலையும்
5.இந்த இரண்டு பிரிவையும் காட்டியுள்ளார்கள்.

குருநாதர் இதை மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார்…!

இராவணன் எங்கே இருக்கின்றான்…? என்றால்
1.எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும் என்ற இச்சை கொண்ட நம் உடல் தான்.
2.முடிவின் தன்மையில் இருக்கப்படும் போது அகம் என்ற நிலையில் தேய்பிறையாகி விடுகின்றது.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்தச் சக்திக்கு எது அருவமோ அதனின் உணர்வின் தன்மை கொண்டு இங்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும் இது அதற்குள் இயங்கி (உயிர் உடலுக்குள்) எவ்வாறு வருகிறது…? என்று காவியத் தொகுப்புகள் தெளிவாகக் காட்டுகின்றது.

இதற்காக வேண்டி இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன் (ஞானகுரு). ஆனால் நேரமில்லை…!

1.பலரும் பல விதமாக எழுதி இருக்கின்றார்கள்
2.அதற்குள் நீ எதற்காகப் போகின்றாய்…? நான் சொல்வதை மட்டும் புரிந்து கொள்…! என்று சொன்னார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதை நுகர்வதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகச் சொல்லி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
1.சும்மா இல்லை…
2.நீங்கள் நினைத்த உடனே… யாரும் சொன்னவுடனே…
3.இப்படி எடுங்கள்…! என்றால் எடுக்க முடியாது…!

நீங்கள் அதைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி இந்த நினைவுக்குள் உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு),

1.திட்டியவனை எண்ணிய உடனே எப்படி ஜிர்..ர்ர்ர்… என்று வேகம் வருகின்றதோ
2.திட்டியவனைப் பத்து வருடம் கழித்துப் பார்க்கப்படும் போது… துரோகம் செய்தான் பாவி…! டட்டட்…டட்ட… என்று கோபம் வருகின்றது…”
3.பல்லை எல்லாம் நற…நற… தன்னை அறியாமலே கடிக்க வைக்கும்.
4.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற நிலை வரும்.

அதைப் போன்று தான்
1.உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அந்த நேரத்தில்
2.ஈஸ்வரா…….! என்று “வேகமாக எண்ணுங்கள்…”

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… என் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு அடுத்து எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்..

துன்பத்தைப் போக்கச் செய்து உங்கள் காரியத்தை நல்லதாக ஆக்கிவிடும்.

சில உடல்களிலே ஆவிகள் இருக்கும்… என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் சதா திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் நமக்கு வேதனை அதிகமாகும்.

அதைக் கேட்கக் கேட்க நமக்குக் கை கால் குடைச்சல் வந்துவிடும்
1.பேசுபவர்களுக்குக் கொஞ்சம் குடைச்சலாகும்…
2.ஆனால் அதைக் கேட்பவர்களுக்கு அதிகமான கைகால் குடைச்சல் வரும்.

சண்டை போடுபவர்களை… திட்டுபவர்களை எல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அடுத்த நாள் பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்பார்கள்.

முதுகுத் தண்டில் மூன்றாவது எலும்பு… இடுப்பில் இருக்கும் மூன்றாவது எலும்பு… கழுத்தில் இருக்கும் எட்டாவது எலும்பு… தன்னாலே அங்கே வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.

டாக்டரிடம் சென்றால் “எலும்பு தேய்மானம்” ஆகிவிட்டது என்பார்கள் அல்லது இடுப்புக்குப் பெல்ட் போட வேண்டும் என்று சொல்வார்கள். இது தான் நடக்கும்.

அடிக்கடி கவலை… வீட்டிலே சண்டை போடுவது போன்ற எரிச்சலான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இது இரண்டும் ஒன்றாகக் குவியும்
2.விரிந்து கொடுக்கும் நிலை வரப்படும் பொழுது அந்த இரண்டு எலும்புகளுக்குள் நீர் புகுந்து விடும்
3.புகுந்த பின் தாங்க முடியாதபடி வலிக்க ஆரம்பிக்கும்
4.நரம்பு செயலற்றதாகி வேதனையாகி (நரம்பு) பிடித்துக் கொள்ளும்.

மூன்றாவது எலும்பு விரிந்து கொண்டே இருக்கும்… எக்ஸ்ரேயில் பார்த்து உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். இப்படி எல்லாம் வரும்.

இது போன்ற நிலையில் இருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்வதற்கு ஆத்ம சுத்தியை அவசியம் செய்து கொள்ளுங்கள். இருளை நீக்கி மெய் ஒளியின் தன்மையை பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

தீமையை நீக்கும் சக்தியைப் பற்றி குருநாதர் எனக்கு உணர்த்திய விதம்

 

மனிதனான பின் நாம் என்ன செய்கின்றோம்…? மனிதன் ஆன பின் பண்பு பரிவு பாசம் என்ற நிலை வருகின்றது பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனைகளையும் பங்கு கொள்கின்றோம்… கேட்கின்றோம்.

நம்மிடம் சம்பாத்தியம் இருந்தால் உதவி செய்கின்றோம். சம்பாத்தியம் இல்லை என்றால் கூட உடலால் சிறிது உதவி செய்கின்றோம். ஆனால் அவர் கஷ்டத்தை நுகர்கின்றோம்.

நாம் நுகர்ந்த அந்த உணர்வைச் சுத்தப்படுத்துகின்றோமா…? இல்லையே…! அதற்கு என்ன வழி…?

அதற்குத்தான் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று
1.அந்தப் பழங்கால நிலைகளில் வாழ்ந்த அந்தப் புலஸ்தியர்கள்
2.தங்களுக்கு வரும் தீமையிலிருந்து எப்படித் தப்பித்துக் கொண்டார்கள்…? என்பதைச் சொண்னார்.

காட்டிற்குள் கூட்டிக் கொண்டு போனவுடனே ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கச் சொல்கின்றார்.

யானைகள்… கூட்டமாக வரும் நேரத்தில் கொண்டு போன உடனே அந்தப் பச்சிலையை நசுக்கச் சொன்னார்/

யானை மனிதனைப் பார்த்த உடனே சும்மா விடுமா…? அது என்ன செய்கின்றது. அது தனக்குள் காதை விடைத்துத் தலையைத் தூக்குகின்றது.

அப்பொழுது
1.கையில் பச்சிலையை நசுக்கி “ஃபூ…” என்று ஊது என்கின்றார்..
2.ஊதியவுடன் அந்த விஷத்தினால் அந்த யானையிக்கு ஒரு மயக்கம் வரச் செய்கின்றது.
3,அப்பொழுது அதற்குப் பெயர் யானை மிரட்டி.. அந்தப் பச்சிலையைப் பார்த்தவுடன் யானை மிரண்டு ஓடுகின்றது.

இதே மாதிரி புலி வருகின்றது. அந்த புலியின் தன்மைக்கு என்ன செய்கின்றார்…? அதே மாதிரி ஓரு பச்சிலையை எடுத்து நசுக்கி இதே மாதிரி “ஃபூ…” என்று ஊது என்கிறார்.

அப்பொழுது அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்தவுடனே விஷம் ஒடுங்குகின்றது… புலி விலகிச் செல்கிறது.

அப்போது இன்னொரு பச்சிலை எடுக்கின்றார். ஒரு தேன்கூடு இருக்கின்றது. நீ பச்சிலையைத் தேய்த்து விட்டுக் கையைக் கொண்டு போய்க் கூட்டிற்குள் விடு என்கின்றார்.
1.தேனீ என்னைக் கொட்டவில்லை.
2.அதுபாட்டிற்கு விலகிச் சென்று விட்டது. அப்பொழுது அந்த பச்சிலையைப் பார்த்தவுடன் அதனின் விஷங்கள் ஒடுங்குகின்றது.

அப்புறம் ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்/ தேளைப் பிடித்து என் மீது விடுகின்றார். சாமி…சாமி…! என்கின்றேன்.

அட நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா. தேள் உன்னை என்ன செய்யும் என்கிறார்…? பச்சிலையை கையில் கொடுத்து விட்டு தேளை விடுகின்றார். தேள் என்னை ஒன்றும் செய்யவில்லை.

பச்சிலையைக் கீழே போடு என்கின்றார். கீழே போட்டவுடன் பட்டீர்… என்று அடித்தது. கீழே போட்ட உடன் பொட்டென்று அடித்தது.

ஏன்டா இப்பொழுது கொட்டுகின்றது என்றார்…? எனக்கென்ன சாமி தெரியும்…! என்றேன்.

1.உன் உடலில் இருந்த அந்தப் பச்சிலையின் மணத்தினால் தேளின் விஷத் தன்மை ஒடுங்குகிறது.
2.பச்சிலைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரியுமா…?
3.பச்சிலை நம்மைக் காக்கவும் செய்கின்றது… மருந்தாகவும் பயன்படுகின்றது
4.பல விஷ ஜந்துகளிடமிருந்து நம்மைக் காக்கவும் செய்கின்றது.

இந்தப் பச்சிலைகளைத் தான்… உயிரணு புழுவில் இருந்து எல்லா உயிரினமும் எல்லாவற்றையும் சாப்பிட்டு வந்தது. இத்தகைய நிலைகள் கொண்டு தான் மனிதனாக இருக்கிறோம்.

மனிதனான பிற்பாடு என்ன செய்கின்றோம்…? இதையெல்லாம் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்த பிற்பாடு கெட்டது வராதபடி தடுக்கின்றோம்.

இப்படித்தான் புலஸ்தியர் என்று சொல்பவர்கள்… காட்டு விலங்குகளுடன் விலங்குகளாய் வாழ்ந்து வந்த அந்தக் காலத்து மனிதர்கள் இந்த மாதிரி விஷங்களை ஒடுக்கக்கூடிய பச்சிளைகளை எல்லாம் சந்தர்ப்பத்தால் தெரிந்து கொள்கின்றார்கள் என்று என்னைத் தெளிவாக்கினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்… கண்ணன் வழிகாட்டிச் செல்கின்றான்… என்றால் நம் கண்கள் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றது என்று காட்டுகிறார்கள்.

இங்கே மாடு வருகின்றது… மனிதன் வருகின்றான்… அவன் தவறாகப் பேசுகிறான்… என்றும் ஒரு காரை ஓட்டிச் செல்லும் பொழுது
1.ஒருவன் குறுக்கே வருகின்றான் வந்தால் மோதிவிடும் என்று கண்கள் தான் உபதேசிக்கின்றது.
2.வண்டியை நீ இப்படி ஓட்டு என்று அந்த உணர்வுடைய நிலைகளை அங்கங்களை கைகளை இயக்கச் செய்வது கண்கள் தான்…!

அதாவது…
1.நம் கண் பார்க்கின்றது… அந்த உணர்வினை இழுக்கின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு “அங்கங்களை இயங்குகிறது…”

எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நாம் இயங்கினாலும் “இந்த உணர்வுகள் வடிகட்டப்படுகிறது…”

இதைப் போன்று அவன் (கண்கள்) கொடுக்கும் உபதேசத்தின் தன்மை தன்னைக் காக்கும் உணர்வாக எடுக்கப்படும் பொழுது… தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அதே சமயம்… ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்தத் தாக்கும் உணர்வு அவனைத் தாக்கும் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றது.

அவனை அழிக்க வேண்டும் என்ற நிலையில் சிந்திக்காது செயல்படும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டுகிறார்கள். விநாயகர் தத்துவத்தில் நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவே உனக்கு வாகனமாக அமைந்து நீ அதுவாக ஆகின்றாய் என்று காட்டுகிறார்கள். இதை ருத்ர தாண்டவம் என்று திருமூலர் காட்டியுள்ளார்.

1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் எப்படித் துடிக்கின்றதோ
2.நாம் எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அந்த அங்கங்களைப் பாசமாக அணைக்கின்றதோ
3.நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படியோ
4.அதை எல்லாம் நடனங்களாகக் காட்டி… அபிநயங்கள்…!
5.அதாவது… தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
6.அந்த நரம்பியல்கள் எப்படி நாதத்தின் நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத்தான் (ஏனென்றால் அங்கங்களை இயக்குவது நரம்புகள் தான்) ஒலி ஒளி என்ற நிலையில்
7.நாதத்தைப் பற்றி… அந்த நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
8.ஒலி ஒளி அதற்குள் எத்தனையோ உட்பொருள்கள் அடங்கியுள்ளது.
9.ஒலியைப் பற்றி எத்தனையோ வியாக்கியானங்கள் செய்யலாம்…
10.ஆனால் நம் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று அந்த மெய் ஒலி(ளி)யைக் காட்டியது சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்.

விண்ணிலே தோன்றிய அந்த உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது ஓங்காரமாகிப் (ஓ…ம்ம்ம்ம்) பல நிலைகள் ஆகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்குகிறது.

ஒவ்வொரு தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்ட உடனே அந்த இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்…
1.சுவாசிக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிரணுக்களின் இயக்கமும்
2.அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
3.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருமாற்றமும்
4.அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்… ஒலியின் தன்மை கொண்டு “ஒளியாக நீ எவ்வாறு ஆவது…? என்று வெளிப்படுத்திய ஸ்தலம் தான் இது.

அந்த உட்பொருளை நாம் இன்னும் காண முடியாது தேடிக் கொண்டிருக்கின்றோம். புரியவில்லை என்று எண்ண வேண்டாம்…! நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு)

ரோட்டிலே செல்லும் பொழுது எத்தனையோ உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. காரணம் நமக்குள் 1008 குணங்கள் இருக்கின்றது பார்க்கப்படும் பொழுது இரக்க மனம் கொண்டு “ஐயோ இப்படி ஆகிவிட்டதே…!” என்று எத்தனையோ எண்ணுகின்றோம்.

மனிதரை உருவாக்கிய அந்த 1008 நல்ல குணங்களை வைத்துத் தான் அடுத்தவர்களிடம் நாம் என்ன ஏது என்று கேட்டறிகின்றோம். அப்போது
1.நல்ல குணத்துடன் அது சேர்ந்து வடித்து அந்த நல்ல குணமும் ரிப்பேர் ஆகிவிடுகின்றது.
2.அந்த நல்ல குணத்தை எண்ணும் போது அந்த வேதனை பயம் ஆத்திரம் கோபம் எல்லாமே வருகின்றது.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை.

பிறருடைய குறைகளையோ அவர்கள் படும் துன்பங்களையோ தவறான செய்திகளையோ பார்க்கின்றோம். பத்திரிகை டிவிகளைப் பார்க்கின்றோம் உலகம் இப்படி இருக்கிறது…? நாளைக்கு என்ன ஆகுமோ…! என்று வர்ணனை செய்திருப்பார்கள்.

இங்கே திருடி விட்டார்கள் அங்கே கொன்று விட்டார்கள் அடித்து நொறுக்கி விட்டார்கள் என்று எத்தனையோ சம்பவங்களை நாம் பார்க்க… படிக்க… கேட்க நேருகிறது. அந்த நேரத்தில் நல்ல குணங்கள் அனைத்தும் பதறுகின்றது… பதட்டமாகின்றது. நல்ல குணங்கள் எல்லாமே ரிப்பேர் ஆகி விடுகின்றது.

உதாரணமாக… ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு மின்னல் தாக்குகின்றது. ஏரியில் வழி எடுக்கப்படும் பொழுது எர்த் ஆனவுடன் கரகரப்பாகி… கொர…கொர… என்று சத்தம் போடுகின்றது.

ஒலியை இழுத்துக் கொடுப்பது அங்கே ஓட்டையைப் போட்டு விடுகிறது அப்போது எதையுமே தெளிவாகக் கேட்க முடிவதில்லை.

1.ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்து எடுத்து வடிகட்டி கொடுக்கக்கூடிய…
2.நுண்ணிய அலைகளில் பாய்ந்து வரக்கூடிய
3.அந்த அலைவரிசைகளைப் பிரித்து எடுத்துக் கொடுப்பதில் உள்ள இணைப்புகள் சூடாகி
4.அந்த இணைப்பு (பற்ற வைப்பு – SOLDERING) கழன்று விடும்… அதற்குப் பின் இது எடுத்துக் கொடுக்காது.

இதைப் போன்றுதான்
1.மனிதனுடைய உடலில் நுகர்ந்த உணர்வுகள்… மூளைக்குள் இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.குறையான உணர்வுகள் பட்டவுடனே பொறிகளை இழுக்கும் அந்த நிலைகள் நின்றுவிடும்.
3.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நம் உடலுக்குள் நல்லதை இயக்கக்கூடிய குணங்கள் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

உங்களால் அதைச் சரி செய்ய முடியவில்லை…! அப்போது
1.ரிப்பேரான குரலில் தான் பேச முடியும்
2.ரிப்பேர் ஆன நிலைகளைத் தான் சுவாசிக்க முடியும்
3.ரிப்பேரான நிலைகளைத் தான் எடுக்க முடியும்…!

அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தான் ஞானிகள் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். அதாவது வாழ்க்கையின் இடைவெளியில் ரிப்பேரானால் அதில் மீட்டுவதற்கு அங்கே வழி காட்டுகின்றார்கள்.

உன் உடலில் இன்னென்னது இப்படி மறைந்திருக்கின்றது. ஆகையினால் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணு… மகரிஷிகளின் அருள் சக்தியை அதிலே போடு அபிஷேக ஆராதனைகளைப் போடு சுவையான இனிமையான மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணு. இதை உணர்த்திய அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணு…!
1.பொருளைக் காட்டி… அதைக் கண்ணில் உற்றுப் பார்க்கும்படி செய்து…
2.உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி சொல்கின்றார்கள்… காவியத்தையும் படைத்துள்ளார்கள்.

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல

 

இன்றும் நமது நாட்டில் பல நிலைகள் இருக்கின்றது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் திருநெல்வேலியில் டாக்டர் இருக்கின்றார் அவர் பல நிலைகளில் சென்று வந்தவர். இருந்தாலும் குட்டிச் சாத்தான் என்ற நிலைகளை வைத்து மந்திரவாதிகளிடம் பழக்கம் உள்ளவர்.

ஆனால் அந்தக் குட்டிச் சாத்தான் இவர் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு போகிறது. இங்கே தபோவனத்திற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்தார்கள்.

இங்கே தங்கி இருக்கும் பொழுது நகைகள் போகவில்லை. மறுபடியும் அங்கே வீட்டிற்குப் போனவுடன் நகைகள் போகின்றது.

நான்கு பவுன் செயின் கழுத்தில் இருந்தால் எடுக்க முடியாது. இவர் கழுத்தில் உள்ளதைக் கழட்டி என்ன செய்கின்றார்…? தலையணைக்கு அடியில் வைத்தார். எடுத்துக் கொண்டு போய் விட்டது. இரவு எனக்குப் ஃபோன் செய்கின்றார்.

இது வரை பத்தாயிரம் நோட்டு… கட்டாக அப்படியே எடுத்துக் கொண்டு போய்விட்டது. குட்டிச்சாத்தான் ஏவல் தான் அது.

இந்த மந்திரவாதிகள் ஜீ…பூம்பா… வரும் என்று சொல்கிறார்கள் அல்லவா.
1.நமக்குச் சொத்து கிடைக்கும் சுகம் கிடைக்கும் என்று அவர்களிடம் ஜாஸ்தி பழகியவர்.
2.இப்பொழுது பழகியவுடன் என்ன ஆகிவிட்டது…? இங்கே இருக்கும் காசு எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகின்றது.

சிலருக்கெல்லாம் இந்த நோட்டைக் காட்டுகிறார்கள் அல்லவா. சில தாயத்துகளை எடுத்துக் காட்டுவார்கள். வீட்டில் வைத்துவிட்டு அதை அப்படியே எடுத்து வரும்.

அதே மாதிரி நீங்கள் வீட்டில் நோட்டை வைத்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும். இன்னொரு வீட்டில் லட்டு வைத்திருந்தால் அதை எடுத்துக் கொடுக்கும். ஆனால் அந்த மந்திரவாதியை லட்டைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டான்.

இந்த மாதிரி ஒரு குட்டிச்சாத்தான் ஒரு மனித உணர்வின் தன்மையை இப்படி முச்சந்தி மண்ணை எடுத்துக் கொண்டு போய் அதுவும் அமாவாசை காலம் கூப்பிட்டோம் என்றால் அது குட்டிச்சாத்தான் என்றால்… கரு கலைந்த சிதைந்த அதற்கு மேல் இதை வைத்து… அதற்காக வேண்டி சில மந்திரங்களைச் செய்து இந்த உணர்வை எடுத்து அந்த ஆவியை அழைத்துக் குட்டிச்சாத்தான் ஆக வைத்துக் கொள்வார்கள்.

அதை மற்ற பக்கம் ஏவல் செய்யும் பொழுது அது இவன் சொல்லும் வேலையை எல்லாம் செய்யும்.
1.நகையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னால் எடுத்து வரும்.
2.ஒரு பொருளைத் தொட்டுக் கரைத்து விடு என்றால் கரைத்து விடும்… ஆவியாக மாறும் அவன் கைக்கு வந்துவிடும்.

இந்த மாதிரி எல்லாம் இன்றைக்கு மனிதனைப் பயன்படுத்துகிறார்கள். அரசர் காலங்களில் செய்த கொடுமை. ஆனால் இனி விஞ்ஞான உலகம் வந்த பின் நாம் அறிந்து கொண்டோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.ஆக நாம் அதைத்தான் அதிகமாக விரும்ப வேண்டும்.

எத்தகைய நிலைகள் இருந்தாலும் ஆயுள் கால மெம்பராகச் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து என்றும் பிறவியில்லா நிலையை அடைவது தான் நம்முடைய முழு நோக்கம்.

ஆக அந்த அருளைப் பெற்றால் இருளை நீக்க முடியும். கையில் விளக்கை எடுத்துக் கொண்டால் என்ன செய்யும்…? அங்கிருக்கும் பொருள் தெரியும்.
1.அவ்வப்போது ஆத்மசுத்தி செய்து கொண்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கும் பொழுது
2.நாம் எப்படிச் செயல்படுவது…? என்கிற சிந்தனை வரும்.
3.அதற்குத் தக்க உபாயமும் கிடைக்கும். ஆக நாம் நல்வழிப்படுத்தி நம்மை வழி நடத்திக் கொள்ள அந்தச் சக்தி கிடைக்கும்.

இல்லை என்றால் நாம் கோயிலுக்குப் போய் எல்லாம் செய்து மந்திரம் செய்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கி விடுவோம் என்றால் அது நடவாது.

இடைஞ்சல் வந்தது என்றால் வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்து… “இந்த வீட்டு வாசல்படியை இப்படி இடித்துப் போடு… அப்படி இடித்துப் போடு… இதை மாற்று…!” என்றால் சம்பாதித்த காசைஸ் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஆசையின் நிமித்தம் இன்னொருத்தர் செய்தால் இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்பான் இன்னொரு வாஸ்து சாஸ்திரக்காரன். அப்பொழுது எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்ப்பது…?

ஜாதகத்தை பார்த்தாலே இன்றைக்கு எடுத்துக் கொண்டால் இன்றைக்கு ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் ஒன்று போல எல்லாம் இருக்கின்றதா…? என்றால் இல்லை.

கௌரி பஞ்சாங்கத்தில் ஒரு விதமாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஒரு விதமாய் இருக்கின்றது இந்த மாதிரி பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் மூன்றையும் பார்த்தால் மூன்றும் மூன்று விதமாக இருக்கின்றது.

நீங்கள் எதை நம்புவீர்கள்…?

அவரவர்கள் எடுத்துக் கொண்ட்து இதுதான் சரி என்கின்றார்கள். அவர்கள் அதைத் தான் சரி என்கின்றார்கள் ஆனால் அவன் சொன்னது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்து இது தான் பதிவாகி இருக்கின்றது இதுதான் எனக்குச் சரியாக இருக்கும் என்பான்.

அந்த உணர்வை எடுத்து வழிபடும் பொழுது இப்படி ஆகின்றது. அடுத்தவன் சொன்னால் இதை மோசம் என்போம்

ஆக இதன் வழி தான் உலகம் முழுவதற்கும் பஞ்சாங்கங்களைப் பார்த்து நடப்பதும்… நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் பார்ப்பதா…? என்று ஆகிவிடும்.

நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் உருவாக்கியவன் மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.

1.மனிதனால் நல்ல நேரங்களை நல்ல காலங்களை உருவாக்க முடியும்.
2.நல்ல காலங்களை உருவாக்கக்கூடிய திறனை உங்களுக்கு கொடுத்து
3.ஆயுட் கால மெம்பராக இருப்பவர் எல்லாம் அடுத்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூட்டுத் தியானத்தினுடைய முக்கியத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் மட்டும் தனித்து ஒன்றும் செய்து விட முடியாது. பலரின் அலைககளைக் குவிக்கச் செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டுதான்
1.விஞ்ஞான உலகின் நச்சுத்தன்மைகளிலிருந்து மீட்கும் சக்தியாக
2.எத்தகைய விஷமும் நம்மை அணுகாத நிலையாகக் கூட்டுக் குடும்ப தியானம் செய்து
3.மகரிஷிகளின் அலைகளைப் பரப்பி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

பூமி தனக்குப் பாதுகாப்பாக ஓசோன் திரையை அமைத்துக் கொள்வது போன்று… எத்தகைய நிலைகள் வந்தாலும் ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்கள் ஆன்மாவிலே வலுகொண்டதாகப் பெருக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.. உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ
1.சாதாரணமாகக் கிடைக்கின்றது
2.சாதாரணமாகக் குருநாதர் சொல்கின்றார்
3.சாதாரணமான நிலையில் விளக்கம் சொல்கின்றார்
4.சாதாரண நிலைகள் இருக்கின்றதே… என்று
5.சாதாரணமாக விட்டு விடாதீர்கள்…!

எவ்வளவோ பணத்தைச் செலவழித்து… அலைந்து திரிந்தாலும் பெற முடியாது… அப்படி எல்லாம் இருக்கும் போது சாமி சாதாரணமாகச் சொல்கிறார்…! நாம் பெற முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இதைக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானம் இருந்து பழகுங்கள். நாள் முழுவதும் உழைக்கின்றோம் ஒரு பத்து நிமிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தினமும் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால் அது காக்கக் கூடிய சக்தியாக உங்கள் எண்ணம் வரும்.

ஒவ்வொரு சமயமும் சொன்னதையே சாமி சொல்கின்றார் என்று தெரிந்தாலும்… அப்படிச் சொல்வதற்குள் “சில நுண்ணிய உணர்வுகளைக் கலந்து” சொல்வேன்.

மரங்களுக்கு உரம் கொடுப்பது போன்று… வெயில் காலத்திற்குத் தகுந்த மாதிரி… மழை காலத்திற்குத் தகுந்த மாதிரி… அந்தந்தக் காலங்களுக்குத் தகுந்த மாதிரி… சூழ்நிலைக்குத் (உங்களுடைய) தகுந்த மாதிரி
1.ஞானிகள் உணர்வுகளை உரமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குச் செருகேற்றி
2.அதன் மூலம் காற்றில் இருக்கக்கூடிய அரும் பெரும் சக்திகளை எடுத்துக் கொண்டு வந்து மெய் ஒளி பெறச் செய்கிறோம்.

ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள்… உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்துப் பழகுங்கள்… உடலில் வரக்கூடிய விஷத்தை நீக்கிப் பழகுங்கள்… ஒளியின் சுடராக நீங்கள் பெற வேண்டும்.

எந்த நேரத்தில் எல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

“திட்டியவனை எண்ணியவுடன்” நம் உடல் எப்படிப் பதறுகின்றதோ… “இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது எப்படி மனம் சோர்வடைகின்றதோ…
1.அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணுங்கள்.
2.சாமி சொன்னார்… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்தீர்கள் என்றால்
3.அந்த நடுக்கமோ சோர்வோ இவைகள் நீங்கி உங்கள் எண்ணம் சொல் வலுவாகி
4.உங்களுக்குள் அனைத்தும் வலுகொண்டதாக ஆற்றல்மிக்கதாகச் செயல்படக்கூடிய சக்தி கிடைக்கும்.

உங்களுக்கு ஒருவர் தீமை செய்கின்றார்… குறையாகச் சொல்கிறார்… திட்டுகின்றார் என்றால் உங்கள் நல்ல குணங்கள் வலு குறைந்து… இனிமை குறைந்து… மயக்கப்படும் நிலையாக… எதிர்மறையான உணர்வுகளை எப்படித் தூண்டுகிறதோ… அதைப் போன்று தான்
1.அந்த மாதிரி நேரங்களில் சாமி சொன்னார்…!
2.அவர் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
3.என் உடல் முழுவதும் அது படர வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
5.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
6.அந்தக் கணமே இப்படி எண்ணி எடுக்கப் பழகிக் கொன்டீர்கள் என்றால் “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்…!”

அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வது

யாம் சொன்னதைச் சிறிது காலத்திற்குச் செய்யப் பழகிக் கொண்டால் போதும்
1.எத்தகைய சந்தர்ப்பங்களிலும் சமாளிக்க கூடிய ஆற்றல்
2.உங்களுக்குக் கிடைக்கும்… செய்து பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் இருந்து முடிந்த பின் உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று… வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து “உந்தித் தள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்…”

1.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் விண்ணை எட்டி அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு
2.பௌர்ணமி அன்று சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

காரணம்… அன்று சூரியனுடைய காந்த சக்தி சந்திரனில் முழுமையாகப் படுகின்றது
1.உங்கள் எண்ணங்களை மேல் நோக்கிச் செலுத்தச் செய்து
2.சந்திரனையும் பார்க்கச் செய்து… அந்தக் காந்தப் புலனுடன் இழுக்கச் செய்து
அதைத் தாண்டி இருக்கும் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கும்படி செய்கிறோம்
4.உங்கள் உணர்வின் எண்ண அலைகளை அங்கே பதியச் செய்கின்றோம்.

உங்கள் குடும்பத்தில் உடலைப் விட்டு பிரிந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி… “குலதெய்வங்களாக அவர்களை எண்ணி” அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

விஞ்ஞானிகள் இராக்கெட்டை உருவாக்கி அது நூறு டன் எடையாக இருந்தாலும் கூட விண்ணிலே செலுத்துகிறார்கள்.

அங்கேயும் ரேடார் (RADAR) வைக்கின்றனர் பூமியிலும் ரேடாரை வைக்கின்றார்கள். விண்ணில் இருப்பதையும் இங்கு இருப்பதையும் இழுத்து அதே சமயத்தில் லேசரையும் (LASER) கலந்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.

லேசர் என்றால் எதிலேயும் ஊடுருவி மற்றொன்றுடன் மோதி… அந்த அலை நிற்காமல் ஊடுருவிச் செல்லும் நிலைகள் பெற்றது.

இப்படிச் செய்து எல்லாம் இணைத்துக் கொண்ட பின் மனிதனுடைய பேச்சைச் சொல்லாலே… இடத்தைக் குறித்து… ஒலிகள் மூலமாகக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து… அந்த நாடாவிலே போட்ட பின் (COMMANDS) ரேடார் கவனித்துக் கொள்கிறது.

இராக்கெட்டைத் திசை திருப்ப வேண்டும் என்றால் இங்கிருந்து ஆணையிடுகின்றனர்.
1.மனிதனுடைய எண்ண ஒலிகளால் பதியச் செய்த நுண்ணிய அலைகள்
2.இயந்திரத்தில் பதிவு செய்ததன் துணை கொண்டு தொலைதூரத்தில் செல்லும் இராக்கெட்டைத் திசை திருப்புகின்றது.

கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனிதனுடைய எண்ண ஒலியைப் பதிவு செய்து இயந்திரத்திற்குள் அதை அலை வரிசையை வைத்து இராக்கெட்டில் இணைக்கச் செய்து இயக்குகின்றார்.

அதே போன்று…
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் முன்னோரின் உணர்வுகளின் துணை கொண்டு
2.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்திச் செலுத்தப்படும் பொழுது
3.சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலக்கச் செய்கின்றது.

அந்த அலைகளுக்குள் (ஒளி கங்கையிலே – ஒளிக் கடல்)) இந்த ஆன்மாக்கள் பட்டவுடன்… புவியிலே மனித வாழ்க்கையில் “வாழ வேண்டும்” என்று எடுத்துக் கொண்ட வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை எல்லாம் கருக்கிப் பஸ்பமாக்கி விடுகிறது.

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக ஒளியாக… ஞானிகளால் படைக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து… ஒளி உடலாக முன்னோர்கள் பெறுகின்றார்கள்.

அனைவருமே ஒருவருக்கொருவர் நாம் பேசிப் பழகி இருக்கின்றோம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை கூட்டுக் குடும்ப தியானமிருந்து மேலே சொன்ன முறைப்படி விண் செலுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி அவர்களை எண்ணி ஏங்கி
1.எல்லாம் சம்பாதித்து வைத்தார்… போய்விட்டாரே…! என்று அழுவதும்
2.மிகவும் நல்லவராக இருந்தார்… போய்விட்டார்…! என்று ஏங்கி இழுத்து விட்டால் போதும்.
3.யார் அதிகமாக எண்ணி ஏங்கினாரோ அந்த உடலுக்குள் புகுந்துவிடும்

எந்த அளவுக்கு அவர் மேல் பாசம் கொண்டு பற்று கொண்டு எண்ணி எடுக்கின்றார்களோ… அந்த உடலில் புகுந்து “நான் வந்து விட்டேன்…” என்ற நிலையில்… உடலை விட்டுப் பிரியும் பொழுது கடைசிக் காலத்தில் அவர் உடலில்பட்ட வேதனை… நோய்… எல்லாவற்றையும் இங்கே உருவாக்கிவிடும்.

ஆகவே… அப்படி அழுக வேண்டும் என்றால் அழுது “இழுத்துக் கொள்ளுங்கள்…” இல்லை… நமது குருநாதர் சொன்ன முறைப்படி மோட்சத்திற்கு – சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் “உந்தித் தள்ளுங்கள்…”

முன்னோர்கள் விண் சென்ற பிற்பாடு அவர்களின் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் முழுமை பெற்றுப் பிறவியில்லா நிலை அடையலாம்.

ஆன்மாவைத் தூய்மை செய்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுப்பது

 

ஒருத்தர் என்னைத் திட்டினார் என்று எண்ணப்படும் பொழுது அவன் நினைவே நமக்குள் வருகின்றது. அவன் நினைவு வரப்படும் பொழுது அவன் உணர்வைத் தான் நமக்குள் வளர்க்கின்றோமே தவிர நல்ல குணங்களை நாம் பாதுகாக்கின்றோமா என்றால் இல்லை.

பையன் மேல் பிரியமாக இருக்கின்றோம். அவன் நஷ்டம் ஆகிவிட்டான் என்று எண்ணப்படும் பொழுது அவன் நஷ்டத்தைப் பற்றித் தான் சிந்தித்து
1.“இப்படியே ஆகிக் கொண்டிருக்கின்றதே…” என்று நஷ்டத்தை நமக்குள் வளர்த்து நமக்குள் நோய் ஆக்குகின்றோம்.
2.நமக்குள் விளைந்ததை நம் பையனைப் பற்றித் திரும்ப “இப்படியே செய்து கொண்டிருக்கின்றானே…” என்று எண்ணும் போது
3.அவனும் கஷ்டமும் நஷ்டமும் தான் படுவானே தவிர அவனை மீட்டவும் வழியில்லை… நமக்குள் மீளவும் வழியில்லை.

இப்படித்தான் நமக்குள் அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது. நாம் இதைப் போக்க வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதற்கு உங்களுக்குள் பதிவாக்குவது. இதை நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.

அதற்குத்தான் உங்களை ஆயுட்கால மெம்பராகச் சேரச் சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் எடுத்து இந்த ஆயுள் முழுவதற்கும்
2.இந்த வாழ்க்கையில் எப்போது துயரங்கள் வருகின்றதோ சங்கடங்கள் வருதோ சலிப்புகள் வருதோ படிக்க முடியாமல் ஞாபக சக்தி குறைகின்றதோ
3.அப்பொழுதெல்லாம் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

பிறருடைய நிலைகளில் தவறு செய்பவரைப் பார்த்தவுடனே அந்த வேதனை என்ற உணர்வாகப் படும்பொழுது பாலில் விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாதது போல நாம் நுகர்ந்த வேதனை என்ற உணர்வு நம்மைச் சிந்தனையற்ற நிலைகளும் மறதிகளும் வந்து விடுகின்றது. படிக்கிற குழந்தைகளுக்குப். பிறர் செய்யும் தவறுகளை நுகரப்படும் பொழுது அந்த வழியில் சென்றவுடன் அவர்கள் ஞாபக சக்தி இழக்கப்படுகிறது.

இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுது மீண்டும் அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம். இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாமோ எப்படி ரேடியோ டிவிகளில் ஒலிபரப்பாகும் பொழுது எங்கிருந்து ஒலிபரப்பாகின்றதோ எந்த ஸ்டேஷனோ அந்த ஸ்டேஷனில் வைக்கின்றோம். அப்பொழுது அந்த அலைவரிசையில் நாம் பார்க்கின்றோம்.

இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் நமக்கு எப்போது துன்பங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் நமக்குள் தாக்கி இயக்குகின்றதோ அப்பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
2.அதன் உணர்வலைகள் நமக்குள் சென்று நமக்குள் தீமையின் நிலைகளை மாற்றிவிடும்..

ஆக இப்படி நமது வாழ்க்கை முழுவதுமே கஷ்டம் சங்கடம் நோய் இதைப்போல எத்தகைய விதமான உணர்வுகள் தாக்கினாலும் அது நமக்குள் இயங்காது தடுக்கும் வேண்டும்.

இப்பொழுது நமக்கு ஒருவர் தொல்லை கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்காவில் இருக்கின்றார். அவரை நினைக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது நம் காரியம் இங்கேயும் கெடுகின்றது… அங்கேயும் தாக்கப்படுகின்றது.

அவனுடைய நிலைகளில் சாப்பிடும் பொழுது பேசினால் புரை ஓடுகின்றது. இதைப்போல பல நிலைகளில் நம்மைத் தொடர்ந்து இயக்கும் இந்த நிலைகளில் இருந்து மீட்டிக் கொள்ளத் தான் உங்களை ஆயுள் காலம் மெம்பராக சேர்த்தது.

1.என்னை குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராகச் சேர்த்தாரோ
2.அவர் பெற்று உணர்ந்த உணர்வுகள் கொண்டு அகண்ட அண்டத்தை அறியச் செய்தாரோ
3.அதையெல்லாம் உங்களுக்குள் ஒவ்வொரு உபதேச காலங்களில் பதிவாக்குகின்றோம்.
4.அதை வளர்க்க உங்கள் நினைவு தான் முக்கியமாகத் தேவை.

ஆக ஒவ்வொரு நிமிடமும் துயரமான உணர்வைக் கேட்டறியும் பொழுது அதை மறக்கச் செய்ய ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இதைச் சேர்த்து அதைத் தூய்மையாக்கப்படும் பொழுது அந்த இரத்த நாளங்களிலே கலந்த பின்… எப்படி தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகின்றதோ… இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏங்கி நம் இரத்த நாளங்களில் அதிகமாகக் கலக்கச் செய்யும் பொழுது இப்பொழுது நமது அணுக்களில் அதைக் குறைக்க உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் என்னிடம் சொன்னது:-
1.உடலை விட்டுச் செல்லும் பொழுது நீ எங்கே இருக்க வேண்டும்…? என்று சொன்னார்
2.அந்த உணர்வுக்குள் என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்…
3.வெளியில் வந்த பிற்பாடு “நான் எவ்வாறு செல்கிறேன் பார்,..!” என்றார்.

குருநாதர் இங்கே உடலுடன் இருக்கும்போது வெறும் துண்டு மட்டும்தான் கட்டி இருப்பார். அசூசையான (சாக்கடை) இடங்களில் தான் அவர் படுத்திருப்பார்.

குளிர்காலம்…! நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தால் அதை எல்லாம் கிழித்துக் கைகளிலும் கால்களிலும் கட்டிக் கொள்வார்.

பார்… யாரோ வந்து இவ்வாறு கிழித்து விட்டான்…! என்று சொல்வார் எவனோ கிழித்து விட்டுப் போய்விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…? என்று கேட்பேன்.

கிழித்து விட்டுச் சென்று விட்டான்… நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டான்…!

ஏனென்றால் அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித்தான் சிந்தித்தார். அவர் பைத்தியக்காரத்தனமாகக் காண்பிக்கும் போதெல்லாம்…
1.ஐயோ… இவரோடு ஒரே தொல்லையாகி விட்டதே… வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.அவர் பேசுவது… செய்வது… எல்லாம் பார்க்கும் பொழுது இப்படித்தான் தோன்றியது.

ஆனால் அவர் “உடலை விட்டுச் செல்லும் பொழுது…” எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது “பளீர்… பளீர்ர்…” என்று தள்ளிக் கொண்டு போகின்றது.

அப்படிச் சென்றாலும் இந்த பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிரான்மா என்ன செய்கிறது…? பார்…! முன்னாடியே எனக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

அன்றைய ஞானிகளும் மகரிஷிகளும் பூமியில் வாழும் காலத்தில் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியே சென்றாலும் மீண்டும் பூமிக்குள் வராதபடி தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட்டார்கள்…? என்று குருநாதர் காட்டுகிறார்.

அந்த உணர்வுக்கொத்த (ஞானிகளின்) விழுது “பூமியிலிருந்து உந்தித் தள்ள வேண்டும்…!” இதற்காக வேண்டித்தான் எவ்வளவு பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனைத் தேடி அந்த ஞானிகள் வருகின்றார்கள்.

அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு அங்கே மகிழ்ச்சியை ஊட்டி அவனிடமிருந்து வரக்கூடிய மகிழ்ச்சியான மூச்சுலைகளைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு… ஏகாந்தமாக விண் சென்றார்கள்.

ஒருவன் துன்பப்படுகிறான் என்றால் பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷமான சில நிலைகளையும் தான் கஷ்டப்பட்டு எடுத்து… அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று அவர்கள் துன்பத்தை நீக்கினார்கள்

ஆனால் அன்றைக்கு அவர்கள் காசு எதுவும் வாங்கவில்லை…!

துன்பப்படுகிறான் என்றால் உடனே அவனுக்குள் நிவாரணத்தை ஏற்படுத்தித் துன்பத்தை நீக்கிவிட்டு மெய் ஒளியின் சுடராக மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து… மருந்து கொடுத்து நோயை நீக்கி அங்கே சந்தோஷத்தை உருவாக்கினார்கள்.

1.”எனக்கு நல்லது செய்தார்…” என்ற அந்த எண்ணத்தை ஏங்க வைத்து
2.அதை ரசித்துத் தனக்குள் எடுத்து அவன் பேரானந்த நிலை பெற்றான்.

சகஜ வாழ்க்கையில் பார்த்தோம் என்றால்…
1.பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்… ஒருவன் துன்பப்படுகிறார் என்றால் வேதனை வருகின்றது
2.அசுர உணர்வு கொண்டு துன்பப்பட்டவனைப் பார்த்து… “கிடக்கட்டும் அவனுக்கெல்லாம் அப்படித்தான் வேண்டும்…” என்று எண்ணினால் முரட்டுத்தனமான நிலைகளில் சிக்கி அவன் அடிபடுகின்றான்

ஆனால் ஞானிகளோ
1.துன்பப்படுபவனுக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை நீக்கி
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

விஷத்தைத் தனக்குள் இயங்காத வண்ணம் அதை அடக்கினான்…! எந்த விஷமாக இருந்தாலும் அவனுக்குள் அது ஒடுங்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன் என்றால் “குருநாதர் கொடுத்த அந்த நிலைகள் தான்…!”

வாழ்க்கையில் உங்களை அறியாது இருள் சூழ்ந்த நிலைகள் வந்தாலும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்று யாம் உபதேசிக்கும்போது இதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்தவுடன் உங்கள் துன்பத்தைப் போக்கச் செய்து நோயைப் போக்கச் செய்கிறது. அத்தகைய மெய் ஒளியினைப் நீங்கள் பெற வேண்டும் என்ற அந்த ஆசையில் தான் சொல்கிறேன்.

ஆனால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல இம்சைகளைக் கொடுத்தார்.. பல தொல்லைகளைக் கொடுத்தார்.

யானைக்குப் பலமா…! எனக்குப் பலமா…? என்று கேட்பார்.

இவருக்குப் பலம் என்று சொன்னால் எப்படி…? என்று கேட்பார் யானைக்குத் தான் பலம் என்று சொன்னாலும் வம்பு தான்…! அது எப்படி…? என்று கேட்பார்.

என்ன சொன்னாலும் இரண்டு உதை கிடைக்கும்…!

எப்படி என்று நீ சொல்லுடா என்பார்… எப்படிடா நீ சொல்கின்றாய் என்று கேட்பார் நான் சுவாசிக்கின்றேன்… யானை இப்போது என்ன செய்கிறது என்று பார்…!

சுவாசித்து உணர்வலைகளை அவர் வெளிப்படுத்தும் போது யானை பயப்படுகின்றது. இப்போது யாருடா பயப்படுகிறது…? என்று கேட்பார்.

நான் எப்படிச் சொன்னாலும்… நான் எதைச் சொன்னாலும்
1.ஏறுக்கு மாறாகவே சொல்லிச் சொல்லிச் சொல்லி
2.இந்த உணர்வின் மோதல் எப்படி ஆகின்றது… உனக்குள் எப்படி உருவாகின்றது…?
2.நான் சொல்வது உனக்குள் எப்படி ஆகின்றது…?
3.இந்த உணர்வின் தன்மை காற்றிலிருந்து எவ்வாறு வருகின்றது…?
4.கவர்ந்து கொண்ட பின் எண்ணத்தின் நிலைகள் என்ன ஆகிறது…?
5.உடலுக்குள் பதிவாகும் பொழுது என்ன ஆகின்றது…? என்று இப்படித்தான் பாடம் கொடுத்தார்

நான் எந்தப் புத்தகத்தையும் படித்து உங்களுக்கு உபதேசிக்கவில்லை.

குருநாதருடைய உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எவ்வாறு எதன் நிலையில் கொண்டு நான் என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் தான் வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று தெளிவாகக் காட்டினார்

அவர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை “நீங்களும் பெற வேண்டும்…” என்பதற்குத் தான் உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்.

பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷங்கள் வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியாக மாற்றி… உணர்வின் தன்மையை மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்… “சப்தரிஷி மண்டலங்களாக அந்த ஞானிகள்…”

அந்த நிலையை நீங்களும் அடைய வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… ஒவ்வொரு கோவிலிலும்… முன்னாடி “ஓ…ம்” போட்டு வைத்திருக்கின்றார்கள். நாம் கோவிலுக்குச் சென்றால் சாமி கும்பிடுகின்றோம்…! ஏன் கும்பிடுகிறோம்…? எப்படிக் கும்பிடுகின்றோம்…? கும்பிடுவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கின்றது…? இதை யாரும் தெளிவாக நமக்குச் சொல்லவில்லை.

1.கஷ்டம் வந்தது என்றால் “அந்தத் தெய்வத்திடம் உன் குறைகளை எல்லாம் சொல்லிக் கேள்…”
2.மனம் உருகி நீ அழுது முறையிடும் பொழுது “தெய்வம் உனக்கு உதவி செய்யும்…” என்று தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

இப்போது நாம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம் ஈஸ்வரா என்றால் “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்…” அங்கிருந்து அவன் சிருஷ்டிக்கின்றான்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் அந்த ஈஸ்வரன் யார்…?

ஓ…ம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… ஜீவன் உள்ளது…! என்று இப்படித்தான் எல்லோரும் வாதிடுகின்றார்கள்.

உதாரணமாக ரோட்டில் செல்கின்றோம். ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். நாம் பாசமாக இருக்கின்றோம் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது
1.நம் கண் அவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வுகள் அவன் வெளிப்படுத்துவதைக் கண் இழுக்கிறது
3.இழுத்துச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு நமக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… அடிபட்டு அவன் உடலில் வேதனையாகின்றது வேதனை தாங்காது அவன் அழுகின்றான். அவன் வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய “வெப்ப காந்தங்கள்” அது தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

“வேதனைப்படுகின்றானே…” என்று அவனைப் பார்த்தவுடனே அதே உணர்வலைகளை நம் கண் இழுத்து உணர்த்துகிறது.

உதாரணமாக இப்பொழுது நான் (ஞானகுரு) பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால்
1.இந்த மைக் நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுத்துக் கவருகின்றது
2.அதே போன்று தான் அந்த அடிபட்ட பையன் வேதனையான உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.நம் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கிறது… கண் அதைப் பார்க்கின்றது.
4.அந்த அலை பட்டாலும் கண் கருவிழி அதைக் படமாக்குகின்றது.
5.கண்ணில் இருக்கக்கூடிய காந்தம் அதை இழுக்கின்றது… இழுத்தவுடன் நாம் சுவாசிக்கின்றோம்.

நல்ல குணம் கொண்டு ரோட்டில் செல்கின்றோம் அப்பொழுது பையன் கீழே விழுகின்றான் பார்த்ததும் வேதனையான நிகழ்ச்சிகள் தெரிகின்றது.

அந்தச் சப்தத்தைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து நாம் நுகரும்பொழுது நமக்குத் தெரிய வைக்கிறது.
1.சுவாசித்தவுடன் அந்த வேதனையான உணர்வு உயிரில் பட்டு
2.அது ஜீவன் பெறுகின்றது. அதற்குப் பெயர் தான் “ஓ…”

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடியிலே நெருப்பை வைத்தால் கொதித்து… “ததாபுதா…!” என்று சப்தம் இடுகின்றது. தண்ணீர் தான்… ஆனால் அது சப்தம் போடுகின்றது.

காரணம்
1.கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியில் படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் பட்டவுடன்
2.அதை இழுத்து இந்தச் சப்தத்தைப் போடுகின்றது… இது இயற்கை…!

இங்கே எப்படிச் சப்தமிடுகின்றதோ இது போன்றுதான் அந்த உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே
1.அந்தப் பையன் வேதனைப்பட்டது… காந்த அலைகளால் கவரப்பட்டது
2.இங்கே பிரணவமாகி நமக்குள் ஜீவன் பெறுகின்றது.
3.நமக்கும் உடலில் வேதனையான உணர்ச்சிகளைத் தூண்டி உணர்த்துகின்றது.

அவன் அடிபட்டு வேதனையை “ஆ…!” என்று அலறி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். ஆனால் இந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது

நாம் கண்ணிலே பார்த்தாலும் அதை இழுத்துக் கவர்ந்து உயிரிலே பட்டபின் ஜீவன் பெற்று நமக்கும் அந்த வேதனையைத் தூண்டி “அடிபட்டு விட்டனே…!” என்று அவனைக் காப்பாற்றும்படி செய்கின்றது.

பாச உணர்வால் நாம் காப்பாற்றுவதற்குச் செயல்பட்டாலும் அவன் பட்ட வேதனை உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இது ஓ…!

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெருப்பைக் கூட்டி நீரைப் உற்றி அதில் எந்தச் சரக்கைப் போட்டு வேக வைக்கின்றமோ அது கொதித்து அந்த வாசனைகள் நீருடன் கலக்கிறது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது. பொருளை வேக வைத்தால் கரைந்து மற்றதோடு இணைகின்றது. இது போன்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வுகளைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.அந்த உணர்வுகள் அது பிரிந்து விடுகிறது.
3.வேதனையின் சத்து உமிழ் நீராக மாறி நம் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.

இது “ஓ…ம்” அதாவது
1.கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சக்தி உயிரிலே பட்ட பின் ஜீவனாகி
2.உடலுடன் சேர்த்து இரண்டறக் கலக்கப்படும் பொழுது ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய…
3.அவருடைய வேதனை நமக்குள் வந்த பின் அந்தச் சக்தி… சிவமாக… உடலாக… மாறி விடுகின்றது
4.சக்தியாக நம் உடலில் சேர்ந்து இயக்க ஆரம்பிக்கின்றது.

ஆக நாம் சுவாசித்ததை உயிர் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது… உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. ஓ… என்பது பிரணவம் ம்… உடலுக்குள் சேர்த்து பிரம்மமாகி விடுகின்றது.

வேதனையை உருவாக்கும் சக்தியாக உடலுக்குள் விளைந்து… அது உயிருடன் சேர்ந்து விட்டால் நம்மை அறியாமலே அடுத்து வேதனைப்படும்படி செய்யும்.
1.எதை எடுத்தாலும் வேதனை… எதை எடுத்தாலும் வேதனை… என்று
2.அந்த வேதனையான உணர்வுகள் உடல் முழுவதும் படர்ந்து அதையே பேச வைக்கும்.

ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?

 

நாம் எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்திருக்கிறோம் என்றால்… குருநாதர் என்னை ஆயுட்கால மெம்பராகச் சேர்ப்பதற்கு முன்னாடி இதையெல்லாம் வரிசைப்படுத்தி எனக்குள் உபதேசித்தருளினார். அதாவது
1.நாம் எப்படி வாழ்கின்றோம்…?
2.நம் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பம் நம்மை எப்படி எல்லாம் பல இன்னல்களைக் கொடுக்கிறது…?
3.இதிலிருந்து எல்லாம் நாம் எப்படித் தப்ப வேண்டும்…? என்பதை உணர்த்தினார்.

அதன் வழிப்படி துருவ நட்சத்திரம் என்பது அகஸ்தியன் துருவனாகி அவர்கள் திருமணமான பின் அவர்கள் இரு மனமும் ஒன்றாகித் துருவத்தின் நிலையை எண்ணி ஏங்கி அந்த ஆற்றலைப் பெற்று… அவர்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று…
1.எந்தத் துருவத்தின் எல்லையை அது குறியாக வைத்து
2.அதனின்று வரும் உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கின்றனரோ
3.இந்த மனித உடலுக்குப் பின் கடைசி நிலை அது பிறவியில்லா நிலை.
4.தங்கள் உடலில் உள்ள நஞ்சுகளைக் கரைத்து விட்டு
5.எத்தகைய நஞ்சினையும் கரைத்து ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் ஆனார்கள்.

அதிலே தான் நாம் அங்கத்தினராகச் சேர்ந்திருக்கிறோம். இனி பிறவியில்லா நிலை என்ற நிலை அடைவதற்குத் தான் ஆயுட்கால மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றதோ அதே போல் நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை நீக்கி இந்த வாழ்க்கையிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று நமது உடலில் தீமைகள் புகாது பாதுகாத்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த அந்த அருளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது நாம் தியானிக்கும் முறைகள்.
3.குரு வழி வகுத்த இந்த முறைப்படி நாம் நடந்தோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.

ஆகவே நாம் இதை முழுமையாகக் கடைப்பிடித்தல் வேண்டும். ஆக ஆயுள் கால மெம்பராக எதிலே சேர்த்திருக்கின்றோம்…?

இப்பொழுது இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் நாம் இந்தத் தியானத்தில் கொடுத்த சக்தியின் துணை கொண்டு தீமைகளை வராதபடி அதை மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் நாம் அதை கடைப்பிடித்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையைக் கண்டுணர்ந்தால் அடுத்த நிமிடமே ஆத்ம சக்தி செய்து கொண்டால் இதற்குப் பெயர் “நரசிம்ம அவதாரம்…” அந்த ஞானிகள் உணர்வுகளை இவ்வாறு சேர்த்துக் கொண்டே வந்தால் தான்
1.உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றாலும்
2.வேறு எந்த ஒரு உடலின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி உயிரான்மா ஒளியின் சரீரம் பெறும்… இது உறுதி.

இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு நஞ்சு கலக்காது நாம் செயல்படுவதே யாம் சொல்லும் ஆத்ம சுத்தியின் நோக்கம்.

வாழ்க்கையில் வேதனை தாக்கப்படும் பொழுதெல்லாம்… ஆத்ம சுத்தியைக் கூடக் கொஞ்ச நேரம் செய்து அதைச் சுத்தப்படுத்திக் கொண்டால் நஞ்சினைப் பிளந்து அருள் உணர்வினை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் உணர்வுகள் விளைந்து உடலில் இருந்து வெளியேறும் போது
1.அது ஒளியின் உணர்வுகளாகக் கல்கியின் அவதாரமாக உயிர் பெறுகின்றது
2.நம் உடலின் உணர்வுகள் அதனுடன் இணைகின்றது
3.என்றும் அழியாத சரீரமாக மகிழ்ச்சி கொண்ட உணர்வுகள் உயிருடன் ஒன்றிப் பெரு வீடு பெரு நிலை அடைய முடியும்.

இது தான் “சகஜ மார்க்கம்” என்று ஞானிகள் சொன்னார்கள்.

சகஜ மார்க்கம் என்றால் வாழ்க்கையில் எப்பொழுது துன்பங்கள் வருகின்றதோ… அந்த நேரத்தில் எல்லாம் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் நிலையாக “உன்னை நீ தகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான்…!”

அதற்குத் தான் “விநாயகர் தத்துவம்” என்று கொடுத்தார்கள். அந்த ஞானி காட்டிய உணர்வைத் தனக்குள் வளர்த்து ஒவ்வொரு நிமிடமும் சதுர்த்தி…! தீய வினைகளை தனக்குள் வளராது அதை நிறுத்தி மெய் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்ப்பிக்கும் நிலையே “விநாயகர் சதுர்த்தி” என்பது.

இதையெல்லாம் நீங்கள் அவசியம் பழகிக் கொள்ள வேண்டும்.

மெய் ஞானிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வளர்ந்து… உலகில் படர்ந்துள்ள இருள் சூழ்ந்த நஞ்சான உணர்வுகளை நீக்கிட உங்கள் மூச்சலைகள் பயன்பட வேண்டும்.

ஆகவே அந்த ஆற்றல்கள் உங்களில் விளைய வேண்டும்… உங்களுக்கு அது கிடைக்க வேண்டும்… என்று சதா நான் தியானிக்கின்றேன். நீங்களும் இதே போன்று
1.மகரிஷிகளின் அருள் ஒளியை நான் பெறுவேன்
2.என்னை அறியாத வந்த இருளை நீக்குவேன்
3.மெய்ப் பொருளைக் காணுவேன்… மெய் வழியில் செல்வேன்
4.மெய் உணர்வுடன் என் வாழ்க்கையை வழி நடத்துவேன்
5.வாழ்க்கையில் வரும் இருள்கள் நீங்கி நோயற்ற வாழ்க்கையாகவும் மெய் உணர்வினைப் பெறும் பாக்கியமாகவும் அடைவேன்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறுவேன் என்று இதனைச் சபதம் ஏற்று
7.இதன் அடிப்படையில் உணர்வுகளைச் செயல்படுத்தி நினைவினை இயக்கிப் பாருங்கள்..!

ஒரு வீடு கட்ட நாம் பிளான் செய்து அதை நினைவில் கொண்டு அதே வேலையாக இருந்து அந்த வீட்டை எப்படிக் கட்டி முடிக்கின்றோமோ… புதிதாக வேலைக்குச் சேர வேண்டும் என்றால் பல இடங்களுக்குச் சென்று பல பேரை நாம் சந்தித்து அந்த வேலையை வாங்கி நாம் அங்கே சென்று எப்படி அமர்கின்றமோ… அதே போன்றுதான்
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறுவேன்
2ஒவ்வொரு நொடியிலும் மகரிஷியின் அருள் சக்திகளைப் பெற்று அறியாது வரும் இருளை நீக்குவேன்
3.மெய் உணர்வுகளை வளர்த்து ஒளியின் சரீரமாக இந்தச் சரீரத்தை ஆக்குவேன் என்ற உறுதி கொள்ளுங்கள்

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு). குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானி அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதனை அடக்கி வெடிக்கச் செய்யும் பொழுது உலகை அழித்திடும் நிலையாக அணு குண்டாக வருகின்றது.

ஆனால் நம் ஆறாவது அறிவு கொண்டு
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை எடுத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இருள் சூழ்ந்த நிலையைப் பிளந்து உடலுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
3.என்றும் ஒளிச் சுடராகத் தன்னுடன் அணைத்துச் செல்லும்.

இரும்போ மற்ற உலோகங்களோ மரமோ கல்லோ மண்ணோ இவை அனைத்துமே கதிரியக்கச் சக்தியின் துணை கொண்டு தான் வீரிய உணர்வைத் தனக்குள் கவர்ந்து அது வளரச் செய்கின்றது.

ஆனால் விஞ்ஞான அறிவால் அணு குண்டை உருவாக்கும் போது அணுவைப் பிளந்து… “ஹைட்ரஜன்” நீருக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து அதனின் (ஹைட்ரஜன்) துணை கொண்டு இதனை அடக்கி அதனுடன் ஒருக்கிணைந்து வெடிக்கச் செய்யும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வேகமாக எல்லாவற்றிலும் ஊடுருவுகிறது.

சக்தி வாய்ந்ததாக உள்ள இரும்பாக இருந்தாலும் சரி… மற்ற உலோகங்களாக இருந்தாலும் சரி… அதற்குள் ஊடுருவி அந்த உலோகத்திற்குள் இருக்கும் கதிரியக்கங்களுடன் ஒன்றிணைந்து கொள்கின்றது.

இணைந்த பின்
1.அதே இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அந்த உலோகங்கள் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.
2.கதிரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு விளையச் செய்த கல்லும் மண்ணும் அதுவும் ஆவியாக மறைந்து விடுகிறது.

அதே போல்
1.எதனின் உணர்வால் கல்லின் மண்ணின் சத்தைத் தாவர இனங்கள் கவர்ந்ததோ
2.அந்தக் கதிரியக்கச் சக்தியின் காந்த செல்கள் வெடித்தவுடன் தன் இனத்துடன் கலந்து
3.அதனால் கவரப்பட்ட அனைத்துமே தரைமட்டமாகி விடுகின்றது.

வெடித்த பின் அந்த கதிரியக்க செல்கள் மனித உடலுக்குள் பட்ட பின் நெகட்டிவ் பாசிட்டிவ் (-/+) என்ற நிலைகள் கொண்டு “தசைகள் அனைத்தும் கருகி…” காந்தப் புலனின் செயல்கள் ஒன்றிணைந்து விடுகின்றது.

ஆனால்
1.இது அனைத்தும் நம் உயிரைத் தொட முடியாது
2.உடலுக்குள்… உணர்வுக்குள் இருப்பதைத் தொடலாம்
3.உயிரின் நிலைகள் தொடும் ஆற்றல் அணுக் கதிரியக்கத்திற்கு இல்லை.

எந்த அணு குண்டு வெடிப்பால் கதிரியக்கங்கள் நம் தசைகளுக்குள் பாய்ந்ததோ தசைகள் வெந்து வேதனைப்படும் உணர்வுகளாக வருகிறது. தசைகளில் விளைந்த வேதனை உயிருடன் சேர்த்த பின் எப்பொழுதும் வேதனையாகவே இருக்கும்.

உயிரிலே இயக்கப்படும் இந்த வேதனை அடுத்து வேதனைப்படும் சரீரங்களாக விஷம் கொண்ட உயிரினமாக… விஷத்தை உணவாக எடுக்கும் அத்தகைய உடல்களிலே புகுந்தால் தான் இது அடங்கும்.

இல்லையென்றால் அந்த அணுக்கதிரியக்கத்தின் வேகம் வீசிய பின் இறந்த பின் உயிரின் தன்மைகள் சதா வேதனையிலேயே இருக்கும்.
1.வேதனை வென்றிட்ட அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்தால் ஒழிய அதை நீக்கவே முடியாது
2.ஆகவே மனிதனாகப் பிறந்த நாம் மெய் ஞானிகள் உணர்வை நாம் பருக வேண்டும்
3.உங்களை அறியாது வந்த தீயவினைகள் நீக்கிட வேண்டும்
4.மெய்ப்பொருளின் உணர்வுகள் உங்களுக்குள் வளம் பெற வேண்டும்

அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றல் மிக்க நிலைகளை கண்டு கொண்ட விஞ்ஞானியைப் போன்று மெய் ஞானிகள் அணுவைப் பிளந்து… மனித உடலுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து… அந்த அணுவின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி…
1.அணுவால் ஈர்க்கப்பட்ட தசைகளுக்குள் சேர்ந்த நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவர்களே அருள் ஞானிகள்

அத்தகைய மெய் ஞானிகளின் ஆற்றலை எனது குருநாதர்… நமது குருநாதர்… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் புகுத்திக் கொண்டிருக்கின்றேன்.

அந்த மெய் ஞானிகளைப் போன்று நீங்களும் ஆக வேண்டும் என்று இச்சைப்படுகின்றேன். அந்த இச்சைகளை நான் கவர்ந்தால் எனக்குள் அது வளர்கின்றது.

அதனால்தான் மணிக்கணக்கில் இடைவிடாது தொடர்ந்து உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றேன். எதை உங்களுக்கு உபதேசித்தேனோ அந்த உணர்வினை எனக்குள் கவர்ந்து கொள்கின்றேன்.

அதே சமயத்தில் இந்த உபதேசத்தினைக் கூர்ந்து நீங்கள் கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் இருக்கும் உயிரின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் கவரப்பட்டு… உங்கள் உடலுக்குள் ஈர்க்க்கும்படி செய்து ஊழ்வினை என்ற வித்தாகவும் பதிவு செய்கிறேன்.

இந்தப் பதிவை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் இருக்கும் தீய வினைகளைப் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும் என்ற “இந்த நம்பிக்கையில் தான் உங்களுக்குள் சொல்கிறேன்… நீங்கள் இதை எடுத்துப் பாருங்கள்.

மனித வாழ்க்கை என்பது உடல் நமக்குச் சதம் அல்ல
1.நமக்குச் சதமான உயிரைப் பிடித்துக் கொள்ளுங்கள்…
2.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று உங்கள் உயிரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்
3.உங்களை ஆள்வதும் அவனே…
4.எண்ணியதை இயக்குவதும் உயிரே…
5.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே…
6.எண்ணியதை எல்லாம் உடலிலே விளையச் செய்வதும் உயிரே…
7.விளைந்ததின் உணர்வைத் தனக்குள் எடுத்துச் செல்வதும் உயிரே…
8.எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப உடலாக்குவதும் உயிரே…!
9.நம்மை ஆள்பவனும் இந்த உயிரே…!

இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எண்ணும் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததோ…
1.எந்த ஞானியின் உணர்வை நமக்குள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ
2.அதை ஜீவனாக்கி.. அந்த உணர்வின் தன்மை உடலாக்கி… ஒளியான அணுக்களாக உருவாக்கி
3.அதனின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக நம்மை ஆக்கக் கடமைப்பட்டிருக்கின்றான்… உயிர்…!

நாம் எண்ணியதைத்தான் உருவாக்கிக் கொடுக்கின்றான் காரணம் உயிரின் வேலை கொடுப்பதைச் சமைத்து உருவாக்குவது தான்.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்த ஞானிகள் உணர்வைக் கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத்தான் நம்மை அடுத்த நிலைக்கு அவன் உயர்த்துவான்…!

நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?

 

உதாரணமாக நமது குடும்பத்தில் இருப்போர் (மூத்தவர்கள்)) அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள். அந்த நன்மை செய்த பின் நாம் அந்த நன்மை செய்தவரை எண்ணும் பொழுது எப்படி எண்ணுகின்றோம்…?

அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன்… எனக்கு எல்லாம் நல்ல வழி வகுத்துக் கொடுத்தார் என்று நாம் ஏங்குகின்றோம். ஆனால் அவர் அந்த உடலை விட்டுப் பிரிந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்…?

1.இப்படி எனக்கு எல்லாம் உதவி செய்தார்.
2.நோயோடு வாடும் பொழுது… “நல்ல மனிதன் இப்படி நோயோடு வாடுகின்றார்…” என்று. இந்த உணர்வைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
3.ஆனால் உடலை விட்டு அவர் பிரியப்படும் பொழுது நல்ல மனிதன் போய் விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
4.அவருடைய உணர்வு நமக்குள் வேதனைப்படும் காலத்தில் நமக்குள் இருப்பதனால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது.
5.நல்லது செய்தார்… ஆனால் உடலை விட்டுப் பிரியும் போது அவருடைய பக்குவ நிலையை நாம் இழுக்கப்படும் போது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

ஆனால் அவர் கடைசியில் எந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளர தொடங்கி விடுகின்றது.

ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்…?

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்… நமது அறியாமை பண்பும் அன்பும் பரிவுடன் நாம் எண்ணும் பொழுது அவருடைய ஜீவன் பிரியப்படும் பொழுது நம்முடைய வேகமான உணர்வுடன் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

1.ஆனால் நம் உடலுக்குள் வந்த பின் நம் உடலில் அது கவரப்பட்டு நமக்கும் அவரின் நோய் வரத் தொடங்கி விடுகின்றது.
2.நோயின் உணர்வு நமக்குள் வரும் பொழுது அவருடைய ஆன்மா நமக்குள் இருந்து விஷத்தை வளர்த்து
3.நாம் இறந்தபின் மனித உடலுக்குள் செல்லாதபடி விஷத்தின் தன்மை கொண்ட மிருக உடல்களுக்குள் அவரை அழைத்துச் சென்று விடுகிறது.

மாடு ஆடு என்று இவையெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்கு: அதனதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கின்றது.

மானோ யானையோ மாடோ புலியோ நாயோ நரியோ இவையெல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப அதன் விகிதாச்சாரப்படி அந்த உறுப்புகளை எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப அந்த விஷத்தின் இயக்கத்தினால் அதன் ரூபங்கள் உருவாகின்றது.

உயிரால் உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்த உடல்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது…? என்பதனை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே இவ்வழியில் தெளிந்து கொண்ட பின்னும் இப்பொழுது நமக்கு நன்மை செய்தார்கள் என்றால் நமக்காக நன்மை செய்தார். இனி இவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?

அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது அந்த நோயின் தன்மையால் வேதனைப்படுகின்றாரே…!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலை அடைய வேண்டும்.
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அந்த வேதனை உணர்வு உருவாக்கப்பட்டு நாம் இறந்தபின் மனிதனல்லாத உருவை உருவாக்கத்தான் பயன்படுத்த முடிகிறது. அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செயல்படுத்த முடியவில்லை.

மௌனமாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா எல்லோருக்கும் நன்மை செய்திருந்தாலும்
2.அவர் கேட்டறிந்த விஷத்தின் தன்மை அந்த உடலிலிருந்தாலும்…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
5.இனி துயரமே இல்லாத நிலையாக என்றும் ஏகாந்த நிலை அடைய வேண்டும் என்று அவரை உந்தித் தள்ள வேண்டும்.
6.அது தான் ஞானிகள் காட்டிய முறை.

பிறருக்கு உதவி செய்து தன் துயரத்தின் தன்மை தனக்குள் எடுத்து நோயாகிப் பிரிந்து சென்றாலும் இனி அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று யாராவது எண்ணுகின்றோமா…? யாரும் எண்ணுவதில்லை.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பற்றுடன் இருந்தால் “ஐய்யய்யோ இவ்வளவு நாள் எல்லாம் கொடுத்தாயே… இப்படிப் போய்விட்டாயே… இவ்வளவு சொத்தையும் வளர்த்தாயே… என்னைக் கண்காணித்தாயே…!” என்ற நிலையில் அழுகப்படும் பொழுது யார் அதிகமாக எண்ணுகின்றாரோ அவர் உடலில் அந்த ஆன்மா வரும்.

அந்த உடலுக்குள் வந்தால் மீண்டும் அந்த உடலை வீழ்த்திவிட்டு அந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் மீண்டும் பாவ நிலையான மனிதனல்லாத உடலைப் பெறுகின்றது.

இப்படித்தான் நம்மை அறியாதபடி நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்த வேண்டும். அதற்குத்தான் தெளிவாகச் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே… அகஸ்திய மாமகரிஷி விண்ணுலக ஆற்றலைத் துருவத்தின் வழியாக நுகர்ந்து தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி அவர் எவ்வாறு விண் சென்றார்…? என்பதை குருநாதர் எனக்கு உபதேசித்தார்.

1.அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.

இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்.

ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று
2.நேரடியாகக் காட்டி அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.

அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

அதனைப் பெறும் தகுதியாக…
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.

27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.

எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.

அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.

அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.

தன் எண்ணத்தின் வலு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அமைத்துக் கொள்கின்றது.

அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதையும் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைத்து தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்று
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஒளி சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் இணைக்கச் செய்கின்றோம்.

அதற்காக வேண்டி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உபதேசித்து
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்து
5.நல்வினைகளை ஓங்கச் செய்து அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் உங்களை இணையச் செய்து கொண்டுள்ளோம்,

புத்தாடை

 

ஒருவன் தீமை செய்வதைக் கண்களால் பார்க்கின்றோம் தீமை செய்பவனைப் பார்க்கப்படும் பொழுது கண்கள் கூர்மையாகப் பார்க்கின்றது. அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றது. அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல குணங்களைக் கொல்கிறது.

நமது வாழ்க்கையில் அறிந்து கொள்ள நம் எண்ணங்களைச் செலுத்துகின்றோம். நோயோடு வாடுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம். கேட்டு உதவி செய்கின்றோம்… இதே கண்களால் தான்…!

1.கண்கள் கொண்டு பார்த்து உதவி செய்தாலும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தே விடுகின்றது.
2.நம் உடலுக்குள் சேர்ந்த பின் பூராம் நரகாசுரனாக மாறி விடுகின்றது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று பார்த்து உணர்ந்து நுகர்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் “திருடனைப் போன்று” அந்த வலிமை புகுந்து நம் நல்ல குணங்களைக் கொன்று குவிக்கின்றது.

நரகாசுரனைக் கொன்ற நாள் எது…? தீபாவளி.

தீமை என்ற உணர்வைத் தெரிந்து தீமையை நுகர்ந்ததனால் நமக்குள் இத்தனை நோய்கள் வந்தது… அதைக் கண்களால் பார்த்தோம்.
1.அதே கண்களால் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.அந்தக் காலையில் 4 மணிக்கு எண்ணப்படும் பொழுது
3.கண்ணுற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து
4.நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் ஜீவணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பாய்ச்ச வேண்டும்.

யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில்கள் வளம் வர வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அன்றைக்கு முழுவதுமே இப்படிச் சொல்ல வேண்டும்.

இப்படி நமக்குள் தீமைகளை மறந்து செயல்பட்டால்
1.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை காலை 6 மணிக்கெல்ல்லாம் சூரியன் அதை எடுத்துச் சென்று விடுகின்றது.
2.பரமாத்மாவில் உள்ள அசுர குணங்களும் மாற்றப்படுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட அருள் உணர்வுகள்… எல்லோரும் அன்புடன் பண்புடன் இருக்கப்படும் பொழுது நம் ஆன்மாவிலே அன்பு கொண்ட புத்தாடையாகின்றது.

தீமைகளை நீக்கி நல்ல உணர்வு கொண்டு நமது வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்று தான் இந்த புத்தாடை அணியும் நிலையைக் காட்டுகின்றார்கள்.

நாம் துணிகளைப் புதிதாக அணிவதல்ல…!

தீமைகளை நீக்கும் துருவ நட்சத்திரத்திண் உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி… நமக்கு அது புத்தாடையாகி பகைமை உணர்வு வராதபடி நம்மை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? நாம் எப்படி மற்றவர்களைப் பார்க்க வேண்டும்…? என்பதற்காகத்தான் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.

நாம் அதை எல்லாம் மறந்திருக்கின்றோம் விஞ்ஞான உலகால் உலகம் அழியும் தருணத்தில் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் காட்டிய நெறிகளைப் பின்பற்றினால் வரும் விஷத் தன்மைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளலாம்.

வருடம்தோறும் ஒவ்வொரு மாதத்திலும் விழாக் காலங்களில் அருள் உணர்வுகளைப் பெருக்கிப் பாருங்கள்.
1.உடலுக்குள் இருக்கும் பகைமைகள் மாறுகின்றது.
2.இந்த காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய தீமையான உணர்வுகளும் தூய்மையாக்கப்படுகின்றது
3.எல்லோரும் இதை செயல்படுத்தும் பொழுது பரமாத்மா பரிசுத்தம் அடைகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எல்லோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) பூரண ஆசீர்வாதம் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலமாக வேண்டும் பிள்ளைக்குத் திருமணமாக வேண்டும் தொழில் சீராக வேண்டும் என்று
1.உங்களுக்கு எது நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை மனதில் எண்ணி ஆசி பெறுங்கள்.
2.சிந்தனைகளைச் சிதற விட்டுப் பல பல கோரிக்கைகளை வைக்காதீர்கள்.

எம்மிடம் வருகின்றீர்கள் என்றால்… என் பிள்ளைக்குத் திருமணம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று மனதில் எண்ணி இப்படிக் கேளுங்கள். “அதைக் கொடுத்து விடலாம்…”

அடுத்த முறை வரும் பொழுது இன்னொன்றை நீங்கள் கேட்கலாம்…!

ஆனால் ஒன்றைக் கொடுத்த பின் மொத்தமாக எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்துச் சொல்ல ஆரம்பித்தால்
1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது
3.சம்பாதிக்கிற பணம் செலவழிந்து கொண்டிருக்கின்றது
4.வியாபாரம் நஷ்டமாகிக் கொண்டே வருகின்றது என்று இப்படி வரிசையில் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

நான் எதற்கு ஆசி கொடுப்பது… எதற்குப் பதில் சொல்வது…?

எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஆசி கேளுங்கள் அதே போல் எங்கள் தொழில் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். அதற்கு நல்ல ஆசி வேண்டும் என்று கேளுங்கள்.

இது எல்லாம் வாக்கு தான்…!

திட்டியவர்களைப் பதிவு செய்கின்றோம் திருப்பி எண்ணும் பொழுது “திட்டினான்… திட்டினான்…” என்று வருகிறது.

நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாக்காகப் பதிவு செய்கின்றேன்.
1.அதைத் திரும்ப நீங்கள் எண்ணினீர்கள் என்றால்
2.அதே மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் வேலை செய்யும்
3.ஏனென்றால் நான் சதா தியானம் இருந்து கொண்டே இருக்கின்றேன்

ஒருவர் ஒரு தரம் திட்டிவிட்டார் என்றாலும் அடுத்து அதை யாரிடம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். அந்த அலைகளை அவர் பரப்பிக் கொண்டே இருப்பார்.

பதிலுக்கு நீங்களும் அவர்களை அடிக்கடி நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்பீர்கள். நீங்களும் இந்த எண்ணத்தை பரப்பிக் கொண்டே இருப்பீர்கள்
1.அவருடைய நினைப்பு உங்களிடம் வளர்கின்றது
2.இரண்டும் கலந்து பேசிக் கொண்டே இருக்கும்.

இதே போன்றுதான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “எந்தெந்த வகையிலோ தந்திரமாக உங்களுக்குள் நுழைய வைக்கின்றேன்…”

அதைப் பெற வேண்டும் என்று திரும்ப எண்ணி விட்டீர்கள் என்றால் அதை நீங்கள் பெருக்கிக் கொள்கின்றீர்கள் உங்களிடம் கோபப்படச் செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதை அது கொஞ்சம் அடக்குகிறது.

உங்கள் சொல்லே உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.

1.எந்த எந்த வகையிலோ உங்களுக்குத் தெரியாமலே கஷ்டம் எப்படி வருகின்றதோ அதே போலத்தான்
2.உங்களுக்குத் தெரியாமலேயே கஷ்டத்தை நீக்க கூடிய சக்தியை கொடுக்கின்றோம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் யாரைப் பார்த்தாலும் “உங்கள் பார்வையால் அவர்கள் கஷ்டம் விலக வேண்டும்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

அந்தச் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்… பரப்புகின்றேன்…!

ஆகையினால் கூடுமான வரையில் அடுத்தவருடைய கஷ்டங்களையோ குறைகளையோ எடுத்துப் பேசாதீர்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பழகுங்கள்.

எங்கேயாவது ஏதாவது குறை நடந்தது என்றால் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள். ஏனென்றால்
1.முந்திப் பதிவு செய்த குறையான உணர்வுகள் இருக்கும்
2.அது எல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் மனது நிறைவு பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.இதைத்தான் நாம் சொல்ல வேண்டும்… பெருக்க வேண்டும்.

குறையைக் கண்டு… பார்த்து… பேசி… அதையே வளர்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படியே விட்டு விட்டால் அந்தக் குறை நமக்குள் வளர்ந்து கொண்டே வரும் குறையை இயக்குவதற்குண்டான தூண்டுதலாக நமக்குள் வளர்ந்துவிடும்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி என்று வளர்த்துக் கொண்டே வர வேண்டும் நீங்கள் அனைவரும் அதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்தனை செய்கின்றேன் (ஞானகுரு).

உயிரின் இயக்கம்

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் நமது உயிரை ஈசனாக மதித்து உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குரு என்ற நிலையில் மதித்தல் வேண்டும்.

ஓம் என்றால்…
1.நமது உயிர் ஓ என்று இயங்கிக் கொண்டே உள்ளது.
2.நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்த்து எல்லாம் நமது உயிரில் மோதும் பொழுது ஓ என்று அந்தக் குணங்கள் இயங்கி
3.அந்தக் குணத்தின் உணர்வுகள் ம் என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

ஆதாவது ஓம் நமச்சிவாய…! நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரைப் போன்று ஜீவ அணுவாக மாற்றி அணுவின் மலம் நம் உடலாக சிவமாக மாறுகின்றது.

.இப்பொழுது நாம் எத்தனை வகை குணங்களை நுகர்ந்து அறிகின்றோமோ அறிய உதவுகின்றது…
1.உணர்வு அந்தந்த நிலைக்கொப்ப குணங்களுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கினாலும் அந்த உணர்வின் தன்மை அணுவாக அந்தக் குணத்தை வளர்க்கும் சக்தி பெறுகின்றது..

ஒரு செடியில் வித்து உருவானால் நிலத்தில் அதை ஊன்றினால் எந்தச் செடியில் அது விளைந்ததோ அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய சத்தை இந்த வித்து நுகர்ந்து செடியில் விளைந்த வித்தைப் போல பல வித்துக்கள் உருவாகி அதன் செடிகளை உருவாக்கும்.

அதைப் போன்று ஒருவன் கோபப்படுகிறான் என்ற உணர்வை உற்றுப் பார்த்தால் நமது கருவிழி ருக்மணி நமது விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாக பதிவாக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ
1.அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நமது ஆன்மாவாக மாற்றி
2.நம் உயிரிலே மோதும் போது அவன் கோப்த்தின் உணர்வு எதுவோ அதே போல அந்தக் கோப உணர்வுகள் நம் உயிரிலே மோதும் போது
3.அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும் உணர்ச்சிகளாக நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
4.கோபித்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி ம் என்று உடலாக அமையும் சந்தர்ப்பம் வருகின்றது.

காரணம் அது உமிழ் நீராக மாறும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுடன் கலக்கப்படும் பொழுது
1.அவன் எப்படிக் கோபித்தானோ அதே போல நாம் ஆகாரத்திற்குள் கார உணர்ச்சிகளை உருவாக்கி “அதன் உணர்வுகள் இரத்தமாக மாறுகின்றது…”
2.இப்படித்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உயிர் நம் சுவாசித்ததை எல்லாம் இரத்தமாக அணுக்களாக உடலாக மாற்றிக் கொண்டே வருகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் முதல் நாள் கடைகளுக்குச் சென்று சாம்பில் (SAMPLE) காண்பித்து அதை வைத்து “ஆர்டர்” எடுக்கின்றோம்.

சரக்கு நன்றாக இருக்கிறது. ஆகவே காண்பித்த சாம்பில் பிரகாரம் இத்தனை பண்டல் சரக்கைக் கொண்டு வந்து கொடுங்கள்…! என்று கேட்கின்றார்கள்.

ஆர்டர் பிரகாரம் மறு நாள் நாம் சரக்கைக் கொண்டு செல்கிறோம். ஆனால் நம் நினைவுகள் எங்கே இருக்கின்றது…?
1.ஆர்டர் கொடுத்த கடைக்காரரிடம் இருக்கின்றது.
2.இவ்வளவு விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அந்த மகிழ்ச்சியான சிந்தனையிலே சென்று கொண்டிருக்கின்றோம்.

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது… ரோட்டிலே நாம் கடந்து செல்லும் பாதையிலே… ஒரு கண்ணாடி பாட்டில் உடைந்து எண்ணை எல்லாம் சிதறிக் கிடக்கிறது… அதைப் பார்த்து விடுகிறோம்.

பார்த்தவுடன்… “காலில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்…! என்று நமக்குள் பதட்டமாகி… அறிவு கெட்ட நாய்கள்…! இப்படி நடுரோட்டில் பாட்டிலை உடைத்து போட்டுவிட்டுச் சென்று விட்டார்களே…” என்று பேச ஆரம்பிக்கின்றோம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் பார்த்தவுடன் அந்த உணர்வு என்ன செய்கிறது…? காலில் குத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும்…! என்று அந்த வேகம் வருகிறது.

ஆனால் தாண்டி விட்டோம்… காலில் அடிபடவில்லை…! இருந்தாலும் அதைப் பார்த்த மாத்திரத்தில் “உலகமே கெட்டு விட்டது…! நடு ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்திருக்கின்றான் பார்…!” என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம்.

1.அந்த இடத்தில் நம் கண்கள் “இது கெட்டது…!” என்று உணர்த்துகின்றது.
2.அதைத் தான் கண்கள் (கண்ணன்) உபதேசம் செய்கிறான் என்று காட்டுகிறார்கள் (கீதா உபதேசம்).

எண்னணெய் சிந்தியிருக்கிறது… கண்ணாடி காலில் குத்திவிடும். அதனால் அதை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு யார் அவ்வாறு செய்தார்களோ அவர்களுக்குப் பரிகாரமாக நல்லது வர வேண்டும் என்று எண்ணினால் “இது நல்ல சிந்தனை…”

ஆனால் அதற்குப் பதிலாக “அறிவு கெட்டதனமாகப் போட்டிருக்கின்றார்கள் பார்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?
1.கெட்டதை நீக்கச் சொல்லித் தான் கண்ணன் (கண்கள்) வழிகாட்டுகிறது.
2.ஆனால் கெட்டதைத் தான் (அறிவு கெட்டதனமாகச் செய்தார்கள் என்று) நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
3.வியாபாரத்தை எண்ணி மகிழ்ச்சியாகச் செல்லும் பொழுது “காலில் குத்தியிருந்தால் நம் காரியம் தடைப்பட்டிருக்குமே…” என்று இதைத்தான் நினைக்கின்றோம்.

ஆனால் அந்தக் கெட்டதை நீக்குவதற்கு மனது வருகின்றதா…! கீதையிலே கண்ணன் இதை எல்லாம் தெளிவாகச் சொல்கிறான்.

எப்படி…?

அவன் (பாட்டிலைப் போட்டவன்) அயோக்கியத்தனம் செய்தான் என்ற எண்ணத்தை நாம் எடுக்கும் போது உதைக்க ஆரம்பிக்கின்றான். அரச தண்டனையாக நமக்குள் மாறுகின்றது (உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி).

பொதுவாக நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை நல்ல குணமாக இருந்து ஆட்சி செய்கின்றது. இருந்தாலும்…
1.இந்தச் சந்தர்ப்பம் எடுத்துக் கொண்ட எண்ணம் நீ இப்படியா செய்கின்றாய்…? என்று
2.“அது நோயாக மாறுவதற்கு” “அரச தண்டனையாக” அமைந்து விடுகிறது.

எடுத்த எண்ணம் அரசனாக ஆனாலும் அதை இயக்கக்கூடியது குரு… “குருக்ஷேத்திரம்” என்று காட்டுகின்றார்கள். இங்கே அந்தக் கேட்டதை நினைக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை என்னை இயக்குகிறது என்றால் ஈஸ்வரா…! குருக்ஷேத்திரத்தில் உயிரை எண்ணி அவனிடம் (நல்லதை) கேட்க வேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…?
1.உனக்குள் அனைத்தையும் இயக்கும் உயிர் குருவாக இருக்கின்றான்
2.அவனிடத்தில் நீ முறையிடு…!

கண்ணின் உணர்வின் இயக்க நிலைகளை அன்று வியாசகர் இப்படித் தெளிவாக உணர்த்தி உள்ளான்.

குருக்ஷேத்திரப் போரில் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகின்றது. ஈசன் அதைத் தடைப்படுத்துகின்றான்.

நாளைக்கு இந்தத் தவறு நடக்காதபடி
1.அவனுக்கு (பாட்டிலை உடைத்தவன்) நல்ல சிந்தனைகள் வரவேண்டும் என்று இங்கே நிலை நிறுத்தினால்
2.குருக்ஷேத்திரப் போரில் இது அரசனாக வந்து விடுகிறது.
3.அப்போது தீமைகள் உள்ளே புகாதபடி அந்தத் தீமைக்குத் தண்டனை கொடுத்து விடுகின்றான்.

ஆனால் அதற்குப் பதிலாக நாம் இங்கிருந்து “அறிவு கெட்டதனமாகச் செய்கிறான்…!” என்று சாபமிட்டு அவனை எண்ணும் பொழுது இந்த உணர்வு அரசாட்சியாகி நல்லதைக் கெடுக்கின்றது.

1.நான் சொல்கிறேன்… நீ அயோக்கியத்தனம் செய்து விட்டாய்…! என்று
2.உடலுக்குள் அது நோயாக மாற்றி விடுகின்றது… தண்டனை ஆகிவிடுகிறது.
3.நம் நல்ல குணங்கள் என்ன ஆகிறது…? வெறுப்பின் தன்மையாக மாறும் போது “நல்லது எல்லாம் அழிகின்றது…”
3.ஆகவே அந்தத் தீமைகளை வடிகட்டுவதற்கு மெய் ஞானிகள் உணர்வைச் சேர்க்க வேண்டும் என்று தான் கீதாச்சாரத்தில் சொன்னது.

நம் கண் எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது…! என்று அதனுடைய உணர்வின் இயக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எண்ணியதை (கண்கள்) அலைகளாக மாற்றுகின்றான்… அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்க்கின்றான். இந்த உணர்வின் இயக்கமே அது.

ஆனால் எண்ணியதை உயிர் பிரம்மமாக இருக்கின்றான் உருவான ஒவ்வொன்றுக்கும் அவனே வழி காட்டுகின்றான். உணர்வின் தன்மையை அவனே பிரம்மனாக இருந்து சிருஷ்டிக்கின்றான். எடுத்துக் கொண்ட மணம் ஞானமாக இருந்து இயக்குகின்றது சரஸ்வதி…!

எடுத்துக் கொண்ட உணர்வின் நாதம்… எந்தக் குணத்தின் தன்மை உணர்வானதோ இயல்பான அந்த நாதம்…
1.அது இனிமையான நாதங்களாக இருந்தால் ஆனந்தமாகத் தலையை அசைக்கச் செய்கிறது.
2.ஆனால் படபடா…! கடபுடா…! என்று ஒரே சத்தமாக இருந்தால் என்ன ஏது என்று அதிர்வாகி எரிச்சலாகி முறைக்கின்றோம்.
3.எந்த வேகத்தின் உணர்வு நாதமானதோ அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது… வீணையின் நாதம்.

அதனால் தான் சரஸ்வதிக்கு இங்கே வீணையைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம் எந்த உணர்வின் தன்மை சுவாசித்து உராயச் செய்கின்றோமோ அந்த நாதத்தின் சுருதியே நம்மை இயக்கும்.

ஏனென்றால்
1.குருவின் ஆணைப்படி தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்
2.நீங்கள் தெளிவானால் உங்களுடைய மூச்சு மற்றவர்களின் கெட்டதை எல்லாம் நீக்கும்.
3.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சு உங்கள் நோயைப் போக்க வேண்டும். அதற்காக வேண்டித் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

விஞ்ஞான உலகில் நாளை வரக்கூடிய விஷமான உணர்வுகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்க முடியும். “அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்” (ஞானகுரு).

பாட்டில் உடைந்ததைப் பார்த்துத் திட்டி விட்டு அதை ஓரமாகவும் ஒதுக்கிப் போடாதபடி அப்படியே அந்த உணர்வுடன் நாம் கடைக்குச் செல்கிறோம்.

கொண்டு போன சரக்கை அவரிடம் சிரித்துக் கொண்டே காட்டுகின்றோம். ஆனால் எந்த வேகத்தை வரும் வழியில் எடுத்தேனோ எனக்கு முன்னாடி அது (ஆன்மாவிலே) இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…!

இங்கே பாட்டில் உடைத்தவனை “அயோக்கியன்…” என்று சொல்லித் திட்டிய உணர்வு ஆன்மாவில் முன்னணியில் இருப்பதால்… துணியை எடுத்து அந்த உணர்வுடன் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது…?

என் உணர்வு பட்டவுடனே… கடைக்காரர் துணியைப் பார்க்கின்றார் பார்க்கப்படும் பொழுது
1.இங்கே ரோட்டில் எப்படி நாம் வெறுத்து பேசினோமோ
2.அவருடைய கண் இந்த வெளிப்படும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
3.அந்த அலைகள் இயக்கி நான் சொன்ன நல்ல உணர்வுடன் கலந்து அவரை இயக்குகின்றது.
4.என்னங்க…? நேற்று ஒரு சரக்கைக் காண்பித்தீர்கள். இன்று வேறு சரக்காகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று கேட்க ஆரம்பிப்பார்.

ஆனால் சாம்பிள் காண்பித்ததும் கொண்டு போன துணியும் இரண்டும் ஒரே துணி தான்…!

அது தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. மணி ஓசையைக் கேட்டவுடன் யானை வருகிறது என்ற உணர்வு இயக்கி நாம் ஒதுங்கிக் கொள்கிறோம்.

அது போல்
1.நம்முடைய எண்ணம் அவருக்குள் முன்னாடியே பாய்ந்து
2.அந்தக் கெடுதலான எண்ணம் நம் சரக்கை அவருக்கு மட்டமாகக் காண்பித்து விடுகிறது… வியாபாரம் போய்விடுகிறது.

நாம் என்ன நினைப்போம்…? நேற்று சரக்கைக் கொண்டு வரச் சொன்னான்.. கொண்டு வந்த பின் இந்த மனுஷன் வேண்டாம் என்று இன்றைக்குச் சொல்கிறான்…!
1.ஆக என்னுடைய உணர்வு தான் அங்கே அவனை அவ்வாறு பேச வைக்கின்றது என்பதை
2.நாம் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

இது எல்லாம் இயற்கை…!

குருக்ஷேத்திரப் போர்…! என்ற நிலையில் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து அதைத் துடைத்து விட்டு… “அவர்களுக்கு நாளை நல்லது நடக்கட்டும்…” என்று அங்கே சொல்லிவிட்டு தீமையை அப்புறப்படுத்தி விட்டு நாம் செல்ல வேண்டும்…!

ஆகவே… ஒன்பதாவது அவதாரத்தில் இப்போது இருக்கின்றோம். அடுத்து “கல்கி அவதாரம்…” என்றால் உயிரின் தன்மை ஒளி கொண்டு விஷத்தின் தன்மையை நீக்கி… நிலையாக நின்று ஒளியின் சரீரமாகப் பறந்து செல்வது (குதிரை மீது) கல்கி…!
1.உணர்வின் தன்மை வேகத்தின் துடிப்பு கொண்டு எதிலே இருக்கின்றதோ
2.வாளை வைத்துக் குதிரையைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
3.ஒளியின் சரீரமாகச் செல்லும் “கல்கி அவதாரத்தின் வேகங்கள் வேறு…”

பத்தாவது நிலை அடையப்படும் பொழுது ஒளியின் தன்மையாகக் கல்கி அவதாரமாகப் போகின்றோம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாரதர் சிவனிடம் வருகின்றார்… கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.

முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.

ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தே… அதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

இருந்தாலும்… இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).

விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.

உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்… என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.

ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே “உயிரான அந்தச் சத்து…!”

இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு… இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.

மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது… அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதை “நாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”

ஏனென்றால் அது “விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானது… இனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு… சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான்… அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் “அது கனியாகும்…!”

காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது… இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.

தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி… அந்தப் பாசத்துடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி… அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.

1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள்… கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.

தீமைகள் எது வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

 

தீமையிலிருந்து விடுபடுவதற்கு உபாயம் என்ன…? இந்த ஆறாவது அறிவு தீமை என்று அறிந்து கொள்கின்றது கார்த்திகேயா.
1.தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம்.
2.அதை வழிநடத்தி அதனின் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்களால் ஏங்கி வானை நோக்கி அதன் உணர்வு பெற வேண்டும் என்று ஏக்கத்தால் எண்ணி அதே கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது கண்ணால் பார்த்து உயிரிலே படும் பொழுது தான் உணர்வால் அறிகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வைக் கண்களால் நுகர்ந்தோம் உயிரின் காந்தம் நுகர்ந்து அந்த உணர்வை அறியச் செய்கின்றது கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில வைக்கப்படும் பொழுது அது வலிமையாகி விடுகின்றது.

ஏனென்றால் வேதனைப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றோம் கேட்டு அறிந்து. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் புருவ மத்தியில எண்ணி அதைப் பெற வேண்டும் என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு கட்டளையிட வேண்டும் சேனாதிபதி.

தீமையான உணர்வை நுகர்ந்திருந்தாலும் முதலிலேயே அது சிறிதளவு போய்விட்டது… அது புகாதபடி தடுக்க வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இணைக்கும் போது உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றது.

தடைப்படுத்துவது மட்டுமல்ல நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துதல் வேண்டும்.

இதை ஆணையிடுகின்றது… ஆறாவது அறிவு சேனாதிபதி கார்த்திகேயா. இந்த உணர்வு கொண்டு உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் செலுத்தப்படும் பொழுது அவை வீரியமடைகின்றது.

நாம் எண்ணியபடி அந்தத் தீமை வராதபடி உஷாராகின்றது.

நுகர்ந்து சிறிதளவு போன நிலையும் இந்த உணர்வுகள் சேர்த்து
1.இது உமிழ் நீராக மாறி உள்ளே சேர்க்கப்படும் பொழுது அந்த விஷத்தை அடக்கும் சக்தியாக
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தீமை நுகராது தடுத்த பின் சிறுத்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி உமிழ் நீராக மாறும் பொழுது அது சிறுக்கப்படுகின்றது. இதன் வழி கொண்டு எத்தகைய தீமையின் உணர்வை நுகந்தாலும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்தச் சக்தியை எடுத்து நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்கி நினைவாக்கி நீங்கள் தீமையிலிருந்து விடுபட முடியும்.

தீமையில் இருந்து விடுபட முடியாதபடி… நன்மை செய்தோர் அனைவரும் தீமையில் சிக்குண்டு… “நான் எல்லோருக்கும் நல்லது செய்தேனே என்னை இப்படி ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று எண்ணுகின்றார்கள்.

நாம் எண்ணியதை உணர்த்துவதும் உணர்வின் தன்மை உடலாக்குவதும் உடலாக்கிய பின் இதை ஆள்வதும் ஆண்டவனாக இருக்கின்றான் நமது உயிர். எண்ணியதை இயக்குகின்றான். ஆக யாரைப் பழி போடுவது…?
1.எங்கேயோ ஆண்டவன் இல்லை நமக்குள் எண்ணுவதைத் தான் உருவாக்குகின்றான்.
2.அந்த உணர்வு வழி தான் நம்மை வழி நடத்துகின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதனுடைய ஆறாவது அறிவு சேனாதிபதி. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எடுத்து கண்ணின் நினைவை இங்கே தடைப்படுத்தினால் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
1.அதைச் செலுத்தப்படும் பொழுது அணுக்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து அந்தப் படைகலன் தீமைகளை எதிர்க்கும் சக்தியாக பெறுகின்றது.
2.மனிதன் ஒருவனால் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
3.தீமைகள் எது வந்தாலும் மாற்றிக் கொள்ள முடியும்

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

உடனுக்குடன் தீமைகளை நீக்குவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும் ஏனென்றால் முந்தி ஆரம்பத்திலே யாம் (ஞானகுரு) போட்ட வித்து அது…!

உதாரணமாக வயலிலே களைகள் முளைக்கிறது என்று அவைகள் எல்லாவற்றையும் பிடுங்கிச் சுத்தம் செய்கிறோம். ஆனால் மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றது. மற்றதை விளைய விடுவதில்லை.

இது போன்று தான்
1.நம் உடலுக்குள் முந்தி விளைந்ததெல்லாம் இருக்கின்றது.
2.இருந்தாலும் அவைகள் மீண்டும் முளைத்து விடாமல் நாம் கொஞ்சம் தடுத்துக் கொண்டே வர வேண்டும்.
3.அருள் ஞான உணர்வை எடுத்து நல்ல பயிரை நாம் வளர்ப்பதற்கு முற்பட வேண்டும்
4.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அந்தத் துன்பங்களை மறைப்பதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும்..

ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்திக் கொண்டே வாருங்கள்

“என்னத்தை… ஆத்ம சுத்தி செய்து…?” என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கின்றோம். புல்லை நோண்டி அப்புறப்படுத்துவதற்கு அதைக் கொடுத்திருக்கின்றோம்.

கையிலே தான் புடுங்க முடியவில்லை. இந்த ஆத்ம சக்தி என்று ஆயுதத்தை வைத்து அதை எடுத்து விடலாம் அல்லவா. வாக்கால் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

1.நான் (ஞானகுரு) பேசுவது அனைத்துமே வெறும் பேச்சு அல்ல
2.எல்லாவற்றையும் வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன்
3.பதிவு செய்து எப்படியும் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீள வேண்டும்
4.உங்கள் மூச்சு உங்கள் துன்பத்தை நீக்க வேண்டும்
5.உங்கள் பேச்சு மூச்சும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அவ்வாறு செய்கின்றேன்

இதைத்தான் அன்று கந்த புராணத்தில் நாரதன் சொல்வதாக அன்னை தந்தையின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

தாய் உன்னைக் கருவில் வைத்து வளர்த்தது. அந்தத் தாய் தந்தையரின் ஆன்மாக்கள் பிரிந்த பிற்பாடு அதற்கு நல்ல ஆகாரமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நாம் அதன்படி செய்கிறோமா…?

தாய் தந்தையர் இறந்து விட்டார்கள் என்பதற்காக சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கவும் கடலில் கரைக்கவும் எங்கெங்கோ இடத்தைத் தேடிச் செல்கிறோம். இது சாங்கிய சாஸ்திரம்.

தண்ணீரே ஓடவில்லை என்றாலும் ஒரு குழியைத் தோண்டி அதில் தண்ணீரை ஊற்றிக் கரைக்க வேண்டும் என்று எத்தனை வழியில் செயல்படுத்துகின்றார்கள்.

ஏனென்றால் மழை பெய்து நாளைக்கு வெள்ளம் வந்தால் அது கடலில் சேர்த்துவிடும் என்று இப்படி ஒரு நம்பிக்கை. ஆனால்
1.தாய் தந்தையருடைய ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக்கடலிலே
2.உந்தித் தள்ளி இணைக்க வேண்டும் என்று தான் அன்று சொன்னார்கள்
3.அதை யாரும் செய்யத் தயாராக இல்லை.

பணத்தைச் செலவழித்துச் சாங்கியத்தைச் செய்து உணவு படைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். காரணம் பாவ நிலைகளை நீக்குவதற்கு இப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

அதே சமயத்தில் துணிமணிகளை எடுத்து மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தால் ஒட்டி இருக்கும் பாவங்கள் போய்விடும்… தோஷங்கள் போய்விடும் என்று
1.அப்பா பேரைச் சொல்லித் தானம் செய்வதும்
2.அம்மா பேரைச் சொல்லித் தானம் செய்வதும் என்று இப்படித்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தானம் செய்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
1.நாம் அங்கே ஒன்றி இருத்தல் வேண்டும்.
2.அவ்வாறு செய்தால் தான் அந்த ஒளிகள் நம்முடன் இணையும்
3.இல்லையென்றால் அந்த ஒளிகள் ஒன்றும் செய்யாது.

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

 

நாம் நமது வாழ்க்கையில் இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம். எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்று இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது.
2.வேதனை என்ற உணர்வு வளர்ந்தால் தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் சக்தியும் இழக்கப்படுகிறது.
3.பாதுக்க்கும் தன்மை இழந்து விட்டால் நம் உடலில் நோய் உருவாகின்றது.
4.நோய் உருவானால் இதுவே நாம் தேடிய செல்வமாக மாறிவிடுகின்றது.
5.நோயின் உணர்வுகள் விளைந்தால் அந்தச் செல்வத்தின் வழியே உயிர் அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்த உடலை உருவாக்கி விடுகின்றது.

ஆகவே தேடிய செல்வங்கள் நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. வேதனை வெறுப்பு என்ற உணர்வைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடும். கோபம் குரோதம் என்ற நிலையானால் அதன் வழி அடுத்த உடலை உருவாக்கி விடுகிறது.

ஒரு நிலம் சரி இல்லை என்றால் அதைப் பண்படுத்துகின்றோம். ஒரு வீடு கட்டினால் அது சரியில்லை என்றால் அதைக் காட்டிலும் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகின்றோம்.

இதைப் போல தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது உயிர். ஆனால் அதைப் போன்ற உடலின் தன்மை வரும் பொழுது அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது.

1.அத்தகைய வேதனைகளை உருவாக்குவதற்கு மாறாக
2.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றைக்கும் நிலையான சரீரமாக வாழும் நிலையை
3.பேரருள் பெற்ற உணர்வினைச் செல்வமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கிப் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

அதைத் தான் இராமேஸ்வரத்தில் ராமன் நேரமாகிவிட்டது என்று உணர்வின் தன்மை கூட்டி பூஜிக்கத் தொடங்கினான் என்று காட்டியுள்ளார்கள்.

இதைப் போலத் தான்
1.அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் பகைமையற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் உணர்வினை ஒன்று சேர்த்துக் கூட்டி
2.அந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாகி ஒன்றாகி ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வுகளைப் பெருக்கி நீங்கள் எண்ணும் பொழுது
3.அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஒளியாக மாறி அருள் ஒளி என்ற நிலைகள் பெறும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றேன்.

இந்த உடலின் நிலைகள் நாளடைவில் கரையும் தன்மை தான் வளரும். அதாவது வளரும் தன்மையில் உடல் கரையும்… ஆனால் உணர்வுகள் வளரும்.

1.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… ஆக அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்
2.அந்த அருள் ஒளியை நாம் பெறுவதற்கே நாம் முயற்சிப்போம்.

செல்வமும் இந்த உடலும் நம்முடன் வருவதில்லை. அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளரும் பருவத்தினை ஏற்படுத்தி வளர்த்திடும் நிலையும்… இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியில் நாம் செல்வோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே நாம் வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித வாழ்க்கை என்று இருந்தாலும் இந்த உடலை விட்டு நமது ஆன்மா ஒரு நாள் பிரியத் தான் செய்யும். அது சமயம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி தியானம் இருக்கும் போதெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து உந்தி விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகள் இந்த உயிரான்மாவில் பட்டபின்
2.இன்னொரு உடல் பெறும் உணர்வின் சத்தை அது பஸ்பமாக்கிவிட்டு உணர்வின் ஒளி சுடராக அந்த உயிரான்மா வளரும்

எத்தனையோ மனிதர்களை விஞ்ஞான அறிவு கொண்டு இராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அந்த இராக்கெட் விபத்தாகி வெடித்து விட்டால் இறந்த ஆன்மா அங்கே விண்ணிலே தான் மிதந்து கொண்டிருக்கும்.

அப்படி மிதந்தாலும் அங்கிருக்கக்கூடிய மற்ற கதிரியக்க சக்திகள் அதிலே படப்படும் பொழுது
1.அந்த உயிராத்மா அது உயர்ந்த நிலை பெற முடியாது ஒளிச் சரீரமும் பெற முடியாது
2.வானில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மிதந்தாலும் அது செயலற்றதாகத் தான் மாறும்.

ஆனால் இங்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் இங்கிருந்து சப்தரிஷி மண்டலத்திற்குக் கூட்டமைப்பாக விண் செலுத்தும்படி செய்கின்றோம்.

அப்போது அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வலைகள் இந்த உயிர் ஆத்மாவிலே கலக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒளியாகச் செயல்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தாலும் விபத்தாகி இறந்தால் நச்சுத்தன்மை கொண்ட உயிரான்மாவாகத் தான் விளைகின்றது.

விண்ணிலே சுழன்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திலே மற்ற கோளின் ஈர்ப்புக்குள் வந்தால்
1.உடல் பெறும் தன்மையற்று விஷத்தின் ஆற்றல் கொண்ட குறுகிய உடல்களால
2.புழு போன்ற உயிரினங்களாகத் தான் உடல் பெற முடியும்.
3.அல்லது அப்படியே மனித உணர்வு கொண்ட உடல் பெற்றாலும் கூட
4.சிந்தனை இழந்து வேதனைப்பட்டு விஷத்தின் தன்மையைத் தான் வளர்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லப்படும் பொழுது சுலப நிலைகளில் விண் செல்ல முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.விண் செல்லும் பாதையை “எந்த மகரிஷி நமக்குக் காட்டினாரோ”
2.அவரின் உணர்வின் ஆற்றலை இங்கே தொடர்புகளாக உங்களுக்கு ஏற்படுத்தி
3.அதைத் தொடர் வரிசையாக உங்களுக்குள் பதிவு செய்து
4.அந்த ஆற்றலை ஓங்கி வளர்க்கும்படி செய்து இந்த உணர்வின் புலனறிவை
5.சப்தரிஷி மண்டலத்துடன் (உங்களை) இணைக்கச் செய்யப்படுகின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்டோமானால் உடலை விட்டுப் பிரியும் போது அனைவரும் சேர்ந்து ஏக காலத்தில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “உந்தி அங்கே செலுத்தப்படும் பொழுது…” சுலப நிலைகள் அங்கே இணையச் செய்ய முடியும்… நாமும் அங்கே இணைய முடியும்.

இதைப் போல் உந்தச் செய்வதற்குத் தான் அன்று ஒவ்வொரு ஞானியும் சாதாரண மனிதனைத் தேடி வந்தார்கள்.

அந்த ஞானிகள் பூமியிலே வாழும் காலத்தில்… எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க சக்திகளை அவர்கள் பெற்றிருந்தாலும்
1.மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய துன்பத்தைப் போக்க செய்து
2.அந்தப் பாச உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து… நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து
3.தன் மீது அந்த எண்ணத்தை வளர்க்கும்படி செய்து
4.தன் சிஷ்யர்கள் சிலரிடம் சொல்லி… இன்ன உணர்வு கொண்டு என்னை விண்ணிலே உந்திச் செலுத்து என்று
5.உந்திச் செலுத்தும்படி செய்து அவ்வாறு விண் சென்றவர்களே பலர்…!

அதனால் தான் ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.அவர்களை விண் செலுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.சப்தரிஷி மண்டல நினைவுகள் உங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

அதைத் தான் பயிற்சியாக யாம் (ஞானகுரு- கொடுக்கின்றோம்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரிந்த… எடையற்ற அந்த உயிரான்மாவை இயக்க வல்ல உணர்வின் ஆற்றலை
2.மனித உடலுக்குள் இருந்த நினைவின் அலைகளைக் கூட்டி… அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு
3.சப்தரிஷி மண்டலத்திலே அங்கே செலுத்த முடியும்.

அத்தகைய விண் செல்லும் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்தினால்… நாமும் சரி… நமக்குப் பின் செல்பவர்களுக்கும் அதே நிலை இயக்கப்படுகின்றது

ஆனால் இதை அறியாதவர்கள் அல்லது இந்த முறைப்படி தியானம் செய்யாதவர்களை அங்கே விண் செலுத்த வேண்டும் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவர்கள் தாய் தந்தையருடன் ஒன்று சேர்த்து
2.அந்த உணர்வுடன் இயக்கச் செய்து அவருடைய துணை கொண்டு அங்கே அனுப்ப முடியும்.
3.இந்த வழி தெரியாதவர்களை அப்படித் தான் விண் செலுத்த முடியும்.

நீங்கள் வெளிவிடும் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்தும் சக்தியாகப் படர வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உடலில் பதிவாக்கி அதை நினைவு கொண்டு வளர்த்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் அசுத்த உணர்வுகளை நீக்கி அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் இருளை அகற்றிடும் வல்லமையும் பெறுவீர்கள்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போல அவ்வப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்குள் கலந்த விஷத்தை அகற்றி நல் உணர்வினைப் பெருக்கி இப்பிறவியில் பிறவி இல்லா நிலை என்னும் அருளுணர்வைப் பெருக்கி நாம் வாழ முடியும்.

அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருளை பதிவாக்கி கொண்டே வருகின்றேன்.

திட்டியவரை மீண்டும் எண்ணப்படும் பொழுது தீமையின் உணர்வு எப்படி வருகின்றதோ… வேதனைப்படுபவரைப் பார்த்து அந்த உணர்வு பதிவானால் அவரை எண்ணும் பொழுது வேதனை உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றதோ… இதைப் போல
1.வேதனைகளை அகற்றிய இருளை அகற்றிய அருளைப் பெருக்கும் தன்மையை நுகர்ந்து உங்களுக்குள் பதிவாக்கச் செய்கின்றேன்
2.எமது குருநாதர் எமக்குள் பதிவாக்கியது போன்று…!
3.அதன் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.
4.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை இருளில் இருந்து மீட்டிடும் திறன் பெற வேண்டும்.
5.உங்கள் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தையே நஞ்சினை அகற்றிடும் தன்மை பெறுதல் வேண்டும்
6.உங்கள் மூச்சால் உணவாக உட்கொண்ட உணவு தாவர இனங்களில் அது பட்டபின் நல்ல அணுக்களாக உருவாகி
7.அதனுடைய மலங்கள் தாவர இனங்களைச் செழித்து வளரச் செய்யும் தன்மை வர வேண்டும்.
8.உங்கள் மூச்சால் கேட்போர் உணர்வில் இருளகற்றி நல் அணுக்களாக உருவாக்கி நற்பயனை அடையும் மக்களாக நீங்கள் மாறுதல் வேண்டும்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றேன்.

என் ஒருவனால் இது முடியாது. ஒரு உயர்ந்த வித்தினை அது பலவாக உருவாக்கி பல வளர்ச்சிகளைப் பெறச் செய்து அனைவரது உடல்களிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கினால் உலக இருளை அகற்றலாம்… அருள் ஒளியைப் பெருக்கலாம்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும் என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைத் தனக்குள் வளர்த்து விட்டால் அது தன் இனத்தை வளர்க்கச் செய்யும்… அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

1.ஆகவே பேரருளை நமக்குள் பதிவாக்குவோம்
2.இருளை அகற்றுவோம் பேரொளியை வளர்ப்போம் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம். அகஸ்திய மாமகரிஷி கண்டுணர்ந்த உணர்வுகளையும் இதில் கலந்தே உங்களுக்குள் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்..

யாம் (ஞானகுரு) உபதேசித்ததை எண்ணித் தியானிக்கும் போது
1.மகரிஷிகள் கண்டதை எல்லாம் உணரும் பருவம் நீங்கள் பெறலாம்…
2.அதைக் காட்சியாகவும் தெரியலாம்… நறுமணங்களாகவும் உங்களுக்குள் வரும்…!
3.அவரவர்கள் இந்த உபதேசத்தைக் கேட்டுப் பதிவு செய்த நிலைகள் கொண்டு நிச்சயம் உணர முடியும்… மணத்தால் உணர முடியும்
4.கடந்த காலக் காட்சிகளை குருநாதர் எனக்கு எந்தெந்த இடத்திலே வைத்து எப்படிக் காட்டினாரோ
5.அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் உணர முடியும்… புது உணர்வுகளாக உங்களுக்குத் தோன்றும்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகள் நமக்கு முன் இந்தக் காற்றிலே படர்ந்து இருந்தாலும் அதைக் கவரக்கூடிய வலிமை நமக்கு வேண்டும்.

ஆயிரம் பேர் சேர்ந்து தான் ஆலயத்தில் இருக்கும் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனால் அந்தத் தேரை இழுக்க முடியாது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.மகரிஷிகள் அனைவரும் இந்தப் புவியின் ஈர்ப்பின் பிடிப்பை அறுத்து
2.அந்த அறுத்த உணர்வுகளை அவர்களுக்குள் விளைய வைத்து
3.எந்த மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் தான் சிக்காதபடி
4.இன்னொரு உடல் பெறாதபடி சப்தரிஷி மண்டலங்களாக விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இருந்தாலும்…
1.புவியின் ஈர்ப்பின் பற்று கொண்ட நாம்
2.உடலின் உணர்ச்சிகளுக்கு அடிமையான நாம்…
3.எண்ணத்தால் அந்த மகா ஞானிகளின் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
4.நமக்கு அந்தத் திறன் நிச்சயம் தேவை.

அந்தத் திறனைப் பெறுவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அருள் வழிப்படி மகா ஞானிகளின் ஆற்றல்மிக்க உணர்வின் எண்ணங்களை
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்து
2.அந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து
3.அனைவரும் சேர்ந்து ஏங்கிப் பெறும்படி செய்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகமாக நீங்கள் ஏங்கினால் ஆயிரம் பேர் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுப்பது போன்று அந்த மாமகரிஷிகளின் சக்திகளை நமக்கு முன் கொண்டு வர முடியும்

1.அவரவர்கள் எந்தெந்த விகிதாச்சாரப்படி எண்ண வலு கொண்டு
2.எண்ணி ஏங்குகின்றீர்களோ அவரின் ஆன்மாக்களிலே அது கவரப்படும்.
3.ஆன்மாவில் கலந்து சுவாசித்து அந்த அருள் ஞான சக்தியைப் பெறும் தகுதி பெற்று
4.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக அதை விளைய வைக்க முடியும்

அதைத்தான் இப்பொழுது குரு வழியிலே யாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

தியானிக்கும் போது அவரவர்கள் எண்ண வலுவுக்கு ஏற்றார் போல் மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் ஆன்மாவில் கலப்பதை உணரலாம். எந்த அளவுக்கு உயர்த்தி எண்ணுகின்றீர்களோ நிச்சயம் உணரலாம்… அதை நுகர முடியும்.

அந்த அறிவின் தன்மை தான் உங்களுக்குள் இப்போது படைக்கப்படுகின்றது. யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் உங்களில் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும். அறியாது வந்த சாப நிலைகளை பாவ நிலைகளை மாற்ற முடியும்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளைக் கூட்டமைப்பாக இழுத்துக் கவர்ந்து…
1.எல்லோரும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்கே யாம் சொல்லும் இந்தத் தியானம்.
2.ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வலுக் கொண்டு தியானித்து நாம் அனைவரும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்திகள் இருக்கின்றது. அந்த அருள் ஞான வித்துக்களை நீங்கள் பெறுவதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

உதாரணமாக பலகாரம் சுட வேண்டும்… அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அது கரண்டியை எடுத்துக் காய வைத்துக் கொள்கின்றார்கள் அதற்குப்பின் அதிலே மாவை ஒட்ட வைத்துச் சுடுகின்றார்கள்.

ஆனால் அந்த கரண்டியை காய வைக்காதபடி அதைச் செயல்படுத்த முடியுமா…?

அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அந்த இரும்பு கரண்டியை முதலிலேயே அது சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
1.அது சூடான பிற்பாடு மாவிலே முக்கினால் சொய்ங்… என்று ஓட்டிக் கொள்கிறது
2.அதற்குப் பின் எண்ணைய்ச் சட்டியிலே அதைச் சுட்டால் முறுக்கு சீராக வரும்… கரண்டியிலிருந்து அச்சு முருக்கு அழகாக விழுகும்.

பக்குவம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள்…!.

அச்சு முறுக்கு அவர்கள் சுடுகிறார்கள் என்று நாம் கரண்டியைக் “காய வைக்காதபடி… பச்சையாக வைத்தால்” என்ன ஆகும்…? மாவு ஒட்ட மாட்டேன் என்கிறது கரண்டி சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா…?
1.அந்தக் கரண்டி சூடாகி
2.மாவை இழுக்கக்கூடிய அந்தப் பவர் (சக்தி) வேண்டும்.

அதே போன்றுதான் நம்மிடம் எத்தனையோ குணங்கள் இருக்கின்றது சொன்ன முறைப்படி தான் நான் தியானம் செய்கின்றேன் என்று “காந்த சக்தியை எடுக்காதபடி…” தியானம் செய்தால் எப்படிச் சரியாக வரும்…?

1.காந்த சக்தியை எடுத்து நமக்குள் சூட்டை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
2.ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் பரிபூரணமாக
2.அந்த உணர்வோடு புருவ மத்தியில் எண்ண வேண்டும்… இது முக்கியம்…!

(“ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…” என்று சும்மா வெறுமனே சொல்வதனால் பயன் இல்லை)

1.ஓ…ம் ஈஸ்வரா என்கிற போது நாம் எண்ணியது பிரணவமாகின்றது
2.உணர்வுடன் நினைவை அங்கே செலுத்தப்படும் பொழுது காந்த சக்தி ஓடுகின்றது… இழுக்கக்கூடிய திறனும் கூடுகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது பிரணவமாகின்றது. எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டு ஜீவன் பெறும் போது பிரணவம். அதற்குப் பெயர் தான் ஓ…!

ஓ…! என்று சப்தமாகி ம்… உடலுக்குள் சென்று அந்த உணர்வின் சத்து அடங்குகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது நம் உடலாக மாறுகின்றது ஆகையினால் ஈஸ்வரா என்று எண்ணும் போது அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் “அயோக்கியப் பயல்…!” என்று ஒருவனை எண்ணும் பொழுது அவனை நினைத்தாலே எரிச்சல் ஆகின்றது.

அதை மாற்றி அமைக்க… “ஈஸ்வரா…!” என் சொல் பேச்சு அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம்மைக் கெடுதலாக நினைத்தார்கள் என்றால் என் பேச்சு அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இந்த எண்ணத்தை நாம் எண்ணினாலே போதுமானது.
1.காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது
2.இந்த நல்ல உணர்வின் சக்தி நமக்குள் கூடுகின்றது.

யாருடனாவது சண்டை போட்ட பின்பு பாருங்கள் உங்கள் நெஞ்சுப் பகுதியில் படபட… படபட… என்று துடிப்பலைகள் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லட்டும். இந்த நேரத்திற்கு வந்து சொல்கின்றான் பார்…! என்று வெறுப்பு தான் வரும். நல்லதைச் சொன்னாலும் கூட சனியன் எப்படியோ போகுது போ…! என்ற எண்ணம் தான் வரும்.

வீட்டிலே பையன் நம்மிடம் சண்டை போட்டு விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் தொழிலில் வேலை செய்வோர் நம்மிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் லாபம் வருகிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்…?

சந்தோஷமான செய்தியாக அவர் சொன்னாலும் கூட என்னத்தைச் சம்பாரித்து வைத்து என்னத்தைப் பண்ணப் போகின்றோம்…? போய்யா நீ…! என்ற சொல் தான் வரும்.

பத்தாயிரம் ரூபாய் பணம் லாபம் வருகிறது என்று அந்த நேரத்தில் சந்தோஷப்பட முடியுமா…? முடியாது.

ஏனென்றால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பையன் மீது வெறுப்பாக இருக்கின்றோம் காரணம் நாம் சொன்னபடி அவன் கேட்கவில்லை… நம்மை எதிர்க்கின்றான்… முறைக்கின்றான்…! என்றால் உடனே வெறுப்பாகி விடுகிறது.

அப்போது இங்கே வியாபாரத்தில்
1.லாபம் அதிகமாக வருகிறது சரக்கு எல்லாம் நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னாலும் கூட
2.இந்த அளவுக்குப் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னாலும் கூட
3.எனக்கு இந்த அளவுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்தால் கூட போதும் என்று அவர் நம்மிடம் விவரங்களை எல்லாம் சொன்னாலும் கூட
4.எனக்கு எல்லாம் தெரியும்… நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா…! என்று
5.பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்று சந்தோஷப்பட முடியாதபடி உதறித் தள்ளும் உணர்வு தான் வரும்.

ஏனென்றால் பையன் மீது இருக்கும் வெறுப்பு நம்மை இவ்வாறு இயக்கி விடுகின்றது. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தையும் அடுத்து மாற்றுகிறது.

இது எல்லாம் நடைமுறையில் ஒவ்வொருவரும் செய்வதைத் தான் சொல்கின்றேன்.. நான் புதிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. இதைத் தான் அனுபவம் என்று சொல்வது.

உங்களுக்கும் இப்போது தெரிகின்றது இதை மற்றவர்களுக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.

இதிலிருக்கும் உண்மைகள் இன்னென்ன மாதிரி இருக்கின்றது என்று பிறருக்குச் சொல்லிச் சொல்லி… ஞானிகள் காட்டிய வழியில் திரும்பத் திரும்ப நாம் செயல்படுத்தினோம் என்றால் “அந்த ஞானம் நமக்குள் தன்னிச்சையாக வரும்…”

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துக் கொண்டே வந்தால்
1.அந்த ஞானிகள் உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சியில் தூண்டப்பட்டு அந்த ஞானத்தின் தொடராக அது வரும்
3.மற்றவர்களுக்கு தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையாக வரும்.

தொடர்ந்து இதைச் செய்தால் உயர்ந்த சத்தாகவும் உங்களுக்குக் கிடைக்கின்றது உங்கள் சொல் அனைவரையும் காக்க கூடிய சக்தியாகவும் வரும்…!

எங்கள் சாமி (ஞானகுரு) பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொல்வதை விடுத்து விட்டு சாந்தமான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்து… எல்லோரையும் பெறச் செய்யும் அந்தப் பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் கண்ட அகண்ட பேரண்டம்

 

அகண்ட அண்டமும் பிரபஞ்சமும் அண்டத்துடன் அகண்டு அதன் நிலைகள் வந்த பின் இதிலே தோன்றிய உயிரணுக்கள் ஒவ்வொன்றும் ஆற்றல்களை நுகர்ந்து நுகர்ந்து… இந்தப் பிரபஞ்சத்தின் நிலையையும் அகண்ட அண்டத்தினையும் அறிந்திடும் உணர்வு பெற்ற மனிதன் “ஆறாவது அறிவு பெற்றவன்” என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

அதன் வழி பெற்றாலும்
1.அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைப் பெறுகின்றான்.
2.அகண்ட அண்டத்தையும் அறிகின்றான்
3.பிரபஞ்சம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான்
4.பேரண்டம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான் அகஸ்தியன்.

அவன் அறிந்த உணர்வுகள் தான் இன்று உலகம் எங்கிலும் வானவியல் தன்மைகளும் உருப் பெற்றது. இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை மட்டும் தான் இன்று காண முடிந்தது.

அகண்ட அண்டத்தையும் அதற்கு முந்திய நிலைகள் இருண்ட உலகையும் அறிந்துணர்ந்தான் அகஸ்தியன். அணுவின் இயக்கப் பொருளை உணர்ந்தவன் அகஸ்தியன்.

அவனால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள் அவன் உடலில் விளைந்தது.
1.2000 சூரியக் குடும்பமாக இருந்தாலும் அதைக் காட்டிலும் எத்தனையோ 2000 குடும்பங்கள்
2.அகண்ட பேரண்டமாக இருக்கும் அதன் உணர்வுகளில் ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான்
3.ஒவ்வொன்றும் வாழ்கிறது என்ற நிலையை உணர்ந்தான்.

இவை அனைத்தும் கலந்த உணர்வு கொண்டு தான் மனித உடலுக்குள் அனைத்தையும் அறியும் தன்மை வருகின்றது. சகல பிரபஞ்சங்களையும் சகல அண்டங்களின் இயக்கங்களிலிருந்தும்… அத்தகைய அகண்ட அண்டத்துடன் தொடர்பு கொண்டு தான் நமது பிரபஞ்சமும் இயங்குகின்றது.
1.இதன் உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன் அகஸ்தியன்.
2.இந்த உண்மைகளை நமது குருநாதர் என்னிடம் தெளிவாக எடுத்துக் காட்டிநார்.

இந்தப் பூமியில் மனிதனான பின் நஞ்சினை வென்றிடும் முதல் மனிதனாக அகஸ்தியன் பிறக்கின்றான். தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நஞ்சினை மாற்றியமைக்கும் நிலையைப் பெறுகின்றான்.

அவ்வாறு பெற்றவன் தான் பிறந்தபின் அவன் உடலுக்குள் இயக்கும் உணர்வின் தன்மையை அறிகின்றான். அறிந்து கொண்ட பின் உணர்வின் தன்மையை பிரபஞ்சத்தையும் பிரபஞ்சம் அகண்ட அண்டத்துடன் இயக்குவதையும் நமது பிரபஞ்சத்தில் கவரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து துருவத்தின் வழி கவர்வதையும் அறிந்துணருகின்றான்.

அவன் உணர்ந்த உணர்வுகள்
1.அவனுக்குள் உலகை அறியும் தன்மையும் உடலுக்குள் இயக்கும் உணர்வையும் அறிகின்றான்.
2.அகஸ்தியன் துருவன் ஆனான்… துருவ மகரிஷியானான்.

திருமணமான பின் தன் மனைவிக்குச் சொல்லி மனைவியும் ஏற்றுக் கொண்டு… கணவன் பெற்ற உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கி… தான் ஓதிய உணர்வுகள் மனைவி ஏற்றுக் கொண்டு இரு மணமும் ஒன்றானது.

அவர்கள் இருவரும் ஒன்றான பின் தான் அண்டத்தை உணர்ந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்து… அண்டத்தின் ஆற்றலையும் அருள் ஒளியாக அது மாறிய நிலைகளை… கணவன் மனைவி ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கினார்கள்.

அவ்வாறு உருவாக்கித் துருவத்தை எல்லையாக வைத்து அதை நுகர்ந்தறிந்து துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகின்றார்கள்
1.அகஸ்தியன் கண்ட பேரண்டத்தையும் அந்த ஆதியின் நிலையையும் நீங்கள் அறிய முடியும்
2.அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இது எல்லாம் இமயமலையில் வைத்து குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மை நிலைகள்.

ஒருவர் பெரும் செல்வந்தராக இருக்கின்றார். ஆனால் கடைசியிலே வாத நோய் வந்து துடித்துக் கொண்டிருக்கிறார்… பேச முடியவில்லை. அவர் உடலில் இயற்கைக் கழிவு வெளியே வருகின்றது. அதை அவரால் சொல்ல முடியவில்லை. ஓ… என்று சத்தம் போடுகின்றார்.

ஆனால் கிரகம்…! இப்படிச் செய்கின்றாரே…! என்று அவரை கவனிப்பவர்கள் ஏசிப் பேசுகின்றார்கள். இதை எல்லாம் அப்படியே கண்ணில் காண்பிக்கின்றார் குருநாதர்.

“பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!”

1.சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும்… எல்லாம் மறைந்து போய் அவர் எந்த ஏக்கத்தில் இருக்கிறார்…?
2.ஆனால் இவர் விரும்பிய நிலைகளை அங்கே செயல்படுத்த முடியவில்லை…! என்று குருநாதர் காண்பிக்கின்றார்.

இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையிலும் நல்லதாக நடந்தால் “சாமி செய்து கொடுத்தார்…!” என்று சந்தோசப்படுவீர்கள். கஷ்டம் வந்து விட்டாலோ
1.கஷ்டத்தை எண்ணிய பின் “சாமி என்னத்தைச் செய்தார்…? என்று எண்ணம் வந்துவிடும்.
2.ஆக… பத்து தடவை உங்களுக்கு நல்லதாக நடந்து இருந்தாலும் கூட
3.மற்ற எண்ணங்கள் உங்களிடம் புகுந்து விட்டால் இது ஓங்கி வளர்ந்து அந்த நல்லதை மறந்து
4.“சாமி என்ன செய்தார்…?” என்று உணர்வுகளை மாற்றி உண்மையைப் பெற முடியாது தடைப்படுத்தி விடுகின்றது.

இதிலிருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் மனிதனுக்குள் விளைந்த 1008 உணர்வின் இயக்கங்களை உணர்த்தினார் குருநாதர். ஒரு மனிதப் பிறப்பில் இருக்கப்படும் பொழுது அவனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கிறது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

குடும்பத்தில் சம்பாதித்த சொத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றது… கூட்டுக் குடும்பமாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பபேதத்தால் ஒருவருக்கொருவர் பகைமை ஆகின்றது… சாபமிடுகின்றார்கள்.

சாபமிட்ட உணர்வுகள் உடலுக்குள் விளையப்படும் பொழுது இறந்த பின் சாபமிட்ட ஆன்மா யார் மேல் சாபம் இட்டதோ அந்த உடலுக்குள் சென்று
1.தீய விளைவுகளை அந்தக் குடும்பத்தில் எவ்வாறு பரப்புகின்றது…?
2.அந்தக் குடும்பங்கள் எப்படி அல்லல்படுகின்றது…?
3.செல்வங்கள் இருந்தாலும் எல்லாமே எப்படிச் சிதறிப் போகின்றது…?
4.இப்படி 1008 விதமான (மனிதனுடைய) எண்ணங்கள் உருவாகும் நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்

இப்படித் தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார் குருநாதர் அதிலே 1008 குணங்களாக இருந்தாலும்
1.மனிதப் பிறப்பின் தன்மை ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பங்கள் எவ்வாறு உருவாகின்றது…?
2.செல்வங்கள் சம்பாதித்தாலும் அதில் என்ன பாடுபட்டார்கள்…?
3.சம்பாதிக்கும் போது அதில் எத்தனை வேதனைப்படுகின்றார்கள்…?
4.சம்பாதித்த பின் தான் எண்ணியபடி குடும்பத்தார் நடக்கவில்லை என்றால் வேதனைகள் எவ்வாறு உருவாகின்றது…?
5.வேதனை வளர்ந்து நோயாக ஆனபின் எப்படி மரணமடையும் நிலை வருகிறது…?
6.இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றோமே… இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்…? என்ற எண்ணத்திலே உயிர் பிரியும் போது
7.யார் மீது நினைவுகள் அதிகமாகின்றதோ இந்த உயிரான்மா அங்கே அவருக்குள் சென்றுவிடுகிறது.
8.ஆன்மா அந்த உடலுக்குள் சென்ற பின் சம்பாதித்து வைத்த காசையே அது நிலைத்து இருக்காதபடி அந்தக் குடும்பங்கள் எப்படி இன்னல் படுகின்றது…?
9.பணமோ சேர்த்து வைத்த சொத்துகளோ இவர்களுக்கு உதவி செய்கிறதா…?

இல்லை.

அதே சமயத்தில் எத்தனையோ வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டினாலும் அவருடைய சந்ததிகள் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவருடைய சாப அலைகள் பின் தொடர்ந்து அவர்களை எவ்வாறு மடியச் செய்கின்றது…? என்று இதை எல்லாம் குருநாதர் காணும்படி செய்கின்றார்.

அதே சமயத்தில் ஒரு சிலர் போக்கிரித்தனங்கள் செய்து அந்த வலுவைக் கொண்டு செல்வங்களைச் சம்பாதிக்கின்றனர். அப்படிச் சம்பாதித்தாலும் போக்கிரித்தனமாகச் சேமித்த சொத்தை எல்லாம் அவருடைய சந்ததிகள் அழித்து விடுகின்றார்கள்.

போக்கிரியாகச் செயல்பட்டுச் சமுதாயத்தில் பிறரை வேதனைப்படுத்திய உணர்வுகள் நோயாக விளைந்து அந்த உடலில் தன் எண்ணத்தால் கவர்ந்த அந்த உணர்வுகள் அவன் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

1.இவன் செய்த நிலையால் குடும்பத்தார் வேதனை அனுபவிப்பதும்
2.மற்றவரை ஏசிச் பேசி வேதனைப்படுத்திய உணர்வுகள் உடலில் விளைந்து
3.அவனுடைய மறு பிறவி எங்கே எப்படிச் செல்கின்றது…?
4.மீண்டும் வேதனைகளை அனுபவிக்கும் சரீரமாக அடுத்து அது எப்படி உருவாக்குகின்றது…?

உடனடியாக எந்த உடலுக்குள்ளும் செல்வதில்லை…! இருந்தாலும் பிறரை எப்படி எல்லாம் வேதனைப்படுத்தியதோ அதிலே விளைந்தது உயிருடன் ஒன்றி அது எவ்வாறு இயங்குகின்றது…? என்று காணும்படிச் செய்தார் குருநாதர்.

இதைத்தான்
1.அன்றைய பெரியவர்கள் உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…!
2.என்று தெளிவாக நமக்கு உணர்த்தி உள்ளார்கள்.

இன்று ஒருவரை நாம் வேதனைப்படச் செய்தாலும் அதை ரசித்துக் கொண்டிருந்தால் அதை உயிர் அணுக்களாக உருவாக்கி உடலில் விளைய வைத்த உணர்வுகள் உயிருடன் இணைந்து அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்கும்படிச் செய்யும்.

மறு உடல் பெறும் வரை அதை அனுபவித்துக் கொண்டிருப்பதும் வேதனைக்குண்டான சரீரம் கிடைத்தபின் நஞ்சு கொண்ட சரீரமாக உயிர் உருவாக்கி விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று “நீ சென்று பார்…!” குருநாதர் எனக்கு இட்ட ஆணைப்படி உலகம் முழுவதும் நகர் பகுதிகளிலும் சிறு ஊர்களிலும் மற்ற கிராமத்துப் பகுதிகளிலும் எல்லா இடங்களுக்கும் யாம் (ஞானகுரு) சென்று வந்தது தான்.

ஒரு இடத்தில் மூலையிலே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் என்னென்ன நடக்கின்றதோ அதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்… பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பத்தில் இதற்கு முன்னாடி இறந்தவருடைய உணர்வுகள்
2.அந்த வீடுகளில் எப்படிப் படர்ந்திருக்கின்றது…? என்று குருநாதர் காட்டுவார்.

அதை எல்லாம் அறிந்து இப்படி 1008 பேரின் உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின் என்னை இமயமலைக்குச் செல்லும்படி சொன்னார். அங்கிருந்து கொண்டே உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் எந்த நிலை அடைகின்றது…? என்பதையும் அறியும்படி செய்தார்.

இமயமலையில் அமர்ந்து
1.விண்ணின் ஆற்றலை எவ்வளவு சுலப நிலையில் பெற வேண்டும்…?
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி தியானிக்கும் போது உயர்ந்த சக்திகளை அப்பொழுது நான் பெற முடிந்தது… நுகர முடிந்தது.

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலக அனுபவங்களைப் பெறுவதற்காக பல இன்னல்களை என்னை அனுபவிக்கச் செய்தார்.
1.நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…?
2.இதிலிருந்து மாற்றியமைக்கும் தன்மை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்று உணர்த்தினார்.

எறும்புக் குழியில் அமர்ந்து தவம் இருக்கும்படி செய்கின்றார். அமைதியாக நான் இருக்கும் பொழுது ஒன்றும் நடக்கவில்லை ஒரு எறும்பு என் காதிற்குள் சென்றது. அது உள் செல்லாதபடி விரலை வைத்துத் தள்ளினேன். அது துடித்து விட்டது.. மடிந்து விட்டது.

அந்த உணர்வின் அலைகளை மற்ற எறும்புகள் நுகர்ந்து துரித கதியில் இயங்கத் தொடங்குகிறது. புற்றிலிருந்து வரக்கூடிய எறும்புகள் அனைத்தும் இந்த உணர்வின் ஒலியை எப்படி அறிந்ததோ மணத்தின் தன்மை எப்படி அறிந்ததோ தெரியவில்லை.

என்றாலும் அதன் உணர்வின் தன்மையை வேகமாக அறிந்து கொண்டு என் உடலில் பல நிலைகள் கொண்டு கடிக்கின்றது. கடி தாங்காது அதையெல்லாம் நான் தேய்க்கத் தொடங்கினேன்.

1.நீ தேய்த்து நசுக்கிய எறும்புகள் அனைத்தும் உன்னுடைய ஈர்ப்புக்குள் வந்து விடுகிறது.
2.உனது உணர்வைக் கவர்ந்து கருவாக மாறுகின்றது.
3.ஆனால் எறும்பின் உடலில் உள்ள விஷமும் அது நசுக்கப்படும்போது அதனின் வேதனையையும் நுகர்ந்து நீ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாய்.
4.அந்த உணர்வுகள் உன் உடலுக்குள் செல்லும்போது உன் இரத்த நாளங்களில் விஷ அணுக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.

நீ எத்தனை எறும்பை நசுக்கினாயோ உன் உடலில் 48 நாட்களுக்குள் இது ஒரு கூட்டமைப்பான உணர்வுகள் விளையப்பட்டு
1.உன் உடலில் கை கால் குடைச்சல் என்றும்
2.அந்த எறும்புகள் சாகும்போது எந்தத் துடிப்பு அவைகளுக்கு இருந்ததோ
3,பளீர் பளீர் என்று ஊசி குத்துவது போல் அதை நீ உணரலாம் என்று உணர்த்தினார்.
4.அதனுடைய இயக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனான பின் ஒன்றைக் கொன்றோம் என்றாலும் அல்லது மனிதனாகப் பிறந்தாலும் கொல்லும் பொழுது பட்ட வேதனையின் உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது.

கொல்லவில்லை என்றாலும் விஷம் தாக்கப்பட்டு அதன் உணர்வின் நினைவானால் உடலுக்குள் செல்கின்றது. இதிலிருந்து மீளும் மார்க்கம் என்ன…? என்று இந்த வினாவை எழுப்புகின்றார்.

ஆக மொத்தம் எறும்பு தான் வாழ அது செயல்படுகிறது. அதனைக் காக்க அதன் உணர்வால் நம்மைத் தீண்டுகின்றது. நம்மைத் தீண்டும் போது அதன் உணர்வு நமக்குள் பட்டால் நாம் அதுவாக மாறிவிடுகின்றோம். இது இயற்கையின் நியதிகள்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் நாம் அதைக் கொன்றால் உடலுக்குள் வந்தாலும் அதனின் வேதனையை நாம் துடைக்க வேண்டும் அல்லவா அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்கின்றார் குருநாதர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீ நுகர்ந்தால் அது உனக்குள் பதிவாகி இருந்தால் அந்தச் சக்தியை நீ பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் உடலில் படர வேண்டும்.
2.கொன்ற உயிரான்மாக்கள் என் உடலுக்குள் வந்தாலும் “அருள் உணர்வு பெற வேண்டும் அருள் ஒளி என்ற உணர்வைப் பெறுதல் வேண்டும்…”
3.அருள் ஞானம் பெறும் உயர்ந்த உணர்வாக எனக்குள் வளர வேண்டும் என்று உடனுக்குடன் அதை மாற்றப்படும் பொழுது
4.அதைக் கொன்றாலும் நமக்குள் வந்து “அருள் ஞான உணர்வை வளர்த்திடும்” கருத்தன்மை அதிலே இணைந்து வளரும் தன்மை வருகின்றது.

இவ்வாறு இந்த உணர்வின் தன்மை இணைத்து விட்டால் உடனடியாக நமக்குள் அந்த அணுக்கள் ஈரத்தத்தில் வளரப்படும் பொழுது தீமையை மாற்றி நன்மையின் உணர்வை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இது அனைத்தும் நம் இரத்த நாளங்களில் வந்த பின் தான் உடலை உருவாக்கும் கரு விந்து என்ற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதனின் வலுக் கொண்டு தான் மனிதனை உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

1.அப்படிக் கருத்தன்மை அடைவதற்கு முன் இந்த உணர்வினை மாற்றி விட்டால்
2.நாம் ஏங்கிய அருள் உணர்வுகள் கரு அறைகளுக்கு செல்லப்படும் பொழுது
3.அதை மாற்றி அமைத்து விடுகின்றது என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மந்திரவாதி அவன் இறந்து விட்டால் அவனுடைய மந்திரத்தை இன்னொருவன் கேட்டுணர்ந்து அதன் துணை கொண்டு செயல்பட்டால்
1.அந்த மந்திரவாதி உடலில் விளைந்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்த பின்
2.அதே ஆவியின் தன்மை இங்கே வந்து பல பல நிலைகளைச் செயல்படுத்தும் “அவனை அறியாமலே…!”
(இது எல்லாம் படித்துத் தெரிந்து கற்று வருவதல்ல – மனிதனுக்குள் விளைந்தது)

மந்திரவாதி எந்தெந்தச் சக்திகளைச் செய்தானோ இந்த உணர்வின் தன்மை அவனுடன் பற்று கொண்டு அவன் செயலாக்கும் தன்மையை இங்கே உருவாக்கும்.

ஆனால் அதனால் விளைந்த உணர்வின் வினைகள் அங்கே விளையும் பின் இவனின் (உடலுடன் உள்ளவன்) காலத்தில் இவனின் இச்சைகள் கூடி நஞ்சின் தன்மை கொண்டு அது மறையும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்Rறைய மெய் ஞானியான அகஸ்தியனுக்கு எப்படிப் பேராற்றல் கிடைத்தது…? அவன் எவ்வாறு வளர்ச்சி பெற்றான்…? என்ற உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குத் தான்.

அன்று அவன் பெற்றாலும்
1.இன்றைய நிலைகளில் நடைமுறை சாத்தியத்திற்கு… நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
2.விண்ணுலக ஆற்றலை அன்று அகஸ்தியன் ஐந்து வயதில் அந்தப் பிஞ்சு உள்ளத்திலே எப்படிக் கற்றுணர்ந்தான்…? என்ற நிலைகளை
3.உங்களுக்குள் நினைவு கொள்ள இது உதவும்…!

குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகளை நீங்களும் தெளிந்திடும் உணர்வாகத் தெரிந்திட வேண்டும்.
1அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற உண்மையின் சக்தியை
2.இன்றைய நடைமுறைக்கு நீங்கள் உணர இது உதவும்… அது உணர்ந்தால் தான் வரும்.

ஏனென்றால்…
1.சாமி சொல்கிறார் நிஜமாக இருக்குமோ…! அல்லது பொய்யாக இருக்குமோ…? என்று எண்ணினால் அங்கே வீழ்ந்து விட்டது
2.சந்தேக உணர்வு கொண்டால் மெய் உணர்வின் தன்மை பெறும் தகுதியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

ஒரு இயந்திரத்தைக் கட்டுப்படுத்த கம்ப்யூட்டரில் ஆணையிட்டு வைக்கின்றனர். வெப்பத்தின் நிலைகள் வரும் போது அந்த அலைகளைக் கொண்டு அளந்தறிந்து (SENSOR)
1.இத்தனை டிகிரியில் அது இயங்க வேண்டும் என்று வைத்து விட்டால்
2.அதே டிகிரி வெப்பம் வந்தபின் அந்தக் கம்ப்யூட்டர் சமநிலைப்படுத்தி இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் அருள் ஞானியின் உணர்வை நீங்கள் எண்ணி வரப்படும் பொழுது
1.உங்கள் டிகிரியை சந்தேக உணர்வு கொண்டு வந்து விட்டால் கீழே இழுத்து விடும்.
2.நான் கொடுக்கும் பதிவின் தன்மையை மாற்றிவிடும்.
3.மாறாது இருப்பதற்கே இடைமறித்து இடைமறித்து உங்களுக்குள் ஒவ்வொரு ஞானத்தின் நிலைகளையும் உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு உணர்வின் இயக்கங்களும் அது எவ்வாறு இயங்குகின்றது…? என்பதைத் தெளிந்து கொண்டால் இந்த மனித வாழ்க்கையில் விஞ்ஞான உலகில் உடலை விட்டு நாம் அகன்றாலும் மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளிச் சரீரத்தைப் பெற முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இப்பொழுது இழந்து விட்டால் மீண்டும் தேய்பிறையாக விஞ்ஞான அறிவினால் நஞ்சுக்குள் சிக்கப்பட்டு வேதனை கொண்ட சரீரங்களுக்கே நம்மை உயிர் கொண்டு சென்றுவிடும்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனுக்குள் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் படர்ந்து கொண்டுள்ளது. அதை நாமும் பெற முடியும்.

ஆரம்பத்திலே குருநாதர் என்னைப் பழனியிலே மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறுவதற்கு விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்து இந்த உயர்ந்த உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வுகளை எனக்குள் தூண்டச் செய்து அதை நான் நுகர்ந்தறியும் பொழுது அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இன்று நாம் டிவிக்களில் பார்ப்பது போன்று உருவமாகக் காண முடிந்தது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு சேட்டிலைட்டை (செயற்கைக் கோள்) பூமிக்கு வெளியியே அனுப்பி ஒளி/ஒலியலைகளைப் பதிவு செய்து
1.பூமிக்குள் நடக்கும் பூகம்பமும்
2.பூமிக்கு அடியில் இருக்கும் நீர் நிலைகளையும்
3.பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணை வளங்களையும்
4.பூமிக்கு அடியில் இருக்கும் உலோகத் தன்மைகளையும் எப்படி அறிகின்றார்களோ
5.அதைப் போன்று தான் என்னுடைய எண்ணத்தை ஊடுருவச் செய்து
6.“நினைவை அண்டத்திலே பாய்ச்சிப்பார்…! என்ற குருவின் வாக்குப்படி அவரின் துணை கொண்டு
7.அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

அகஸ்தியன் கண்டதை நீயும் காண முடியும். அவனுடைய அறிவின் தன்மையை நீ உனக்குள் பெற்று அதை முழுமையாக அறிய முடியும் என்று எனக்குள் ஆழமாகப் பதிவாகும்படி உபதேசித்தார் குருநாதர்.

அதே வழியில் இப்பொழுது உங்களுக்கும் அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் பழனியில் இருந்த என்னை (ஞானகுரு) திடீரென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலைப்பகுதியில் வெறும் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய ஒரு இடத்திலே குருநாதர் கொண்டு போய் நிறுத்தி வைத்து விட்டார்.

இதற்கு முன் அவர் எத்தனையோ உபதேசங்களை எனக்குக் கொடுத்திருந்தாலும்
1.அந்த இடத்திற்கு வந்த பின் எல்லாவற்றையும் காற்றிலே விட்டுவிட்டேன்.
2.அவர் போதித்ததையெல்லாம் விட்டுவிட்டுச் சிந்தனை இல்லாது இருக்கின்றேன்
3.கீழே பார்த்தால் கிறு கிறு என்று வருகின்றது… இந்தப் பக்கம் காலை வைப்பதற்கு இடமில்லை
4.நிமிர்ந்து பார்த்தால் கீழே சாய்ந்து விழுந்து விடுமோ என்ற எண்ணம் வருகின்றது.
5.குருநாதர் சொன்ன தத்துவங்களை நினைத்துப் பார்க்க நேரமில்லை…
6.குருவை மறந்து என் உடலைப் பற்றிய இச்சைக்கு வந்து விட்டேன்… என் குடும்பத்தை எண்ண ஆரம்பிக்கின்றேன்.

என் குழந்தை என்னுடைய மனைவி அவர்களுடைய சிந்தனை வந்தது. ஏனென்றால் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் அப்போது தான் எழுப்பி வைத்தார்.

அது மீண்டும் இறந்து விட்டால் யார் காப்பது…? பிள்ளைகள் அனைத்தும் சிறியவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யார் நல்லதைச் சொல்லிப் பாதுகாப்பது…? என்று இந்தப் புத்தி எனக்குள் வர ஆரம்பித்துவிட்டது

ஏனென்றால் அவர்கள் மீது வளர்த்துக் கொண்ட பாசம் உடலின் இச்சை வரப்படும் பொழுது தன் இனத்தை வளர்க்கும் நிலைக்காக எனக்குள் வந்துவிட்டது.

பதட்டம் ஆகின்றது… உடலில் வேர்வை அதிகமாகின்றது…! மேலே ஒரு குடம் நீரை ஊற்றிக் குளித்தால் எப்படி நீர் ஓடுமோ அப்படி வேர்வை வருகின்றது.

நான் இருந்த இடம் வழுக்குப் பாறை… செங்குத்தாக இருக்கின்றது அதில் தான் இரண்டு பாதம் மட்டும் இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன். கால் வழுக்கும் நிலையும் வருகின்றது.

எதையாவது பிடிக்க வேண்டும் என்றாலும்… வழுக்கி விட்டால் என்ன செய்வது…? நான் தொங்கத்தான் வேண்டும். தப்பித்துக் கீழே இறங்கும் பாதையும் இல்லை… குதித்தால்தான் இறங்க முடியும்…! என்று இப்படி என்னுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

என் வீட்டை நான் எப்பொழுது பார்ப்பது…? என் மனைவி பிள்ளைகளை எப்படிப் பார்ப்பது…? என்று இந்த சந்தேகம் வந்துவிட்டது. தவித்துக் கொண்டிருக்கிறேன்…!

இனி எத்தனை நாள் இப்படி வேதனைப்படப் போகின்றோமோ…? என்று உயிர் பிரியுமோ…? அது வரை இந்த வேதனையை அனுபவிக்கத் தான் வேண்டும் வெயில் அடிக்கின்றது… தண்ணீர் தாகமாக இருக்கிறது… உணவு இல்லை… இதிலே தான் இருக்கிறேன்…!

1.இப்படிப்பட்ட இம்சையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று தான்
2.பல உபதேசங்களையும் உண்மைகளையும் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

இந்த இடத்தில் இப்படி நிற்பதற்கு முன் மந்திரம் செய்வதைப் பற்றியும் மந்திரவாதிகளைப் பற்றியும் அப்பொழுது நிறைய சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

மந்திரவாதி எப்படியெல்லாம் ஆள்களை இன்னொரு பக்கம் மாற்றுவான்… பெரும் கல்களையும் பாறைகளையும் தூக்கி எறிவான்… எத்தனையோ அமானுஷ்யமான வேலைகளைச் செய்வான்…! என்பதை நேரடியாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் முதலில் சொல்லி இருந்ததால்
1.எவனோ ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி தான் நம்மை இப்படிச் சிக்க வைத்து விட்டான்
2.மந்திரவாதியிடம் சிக்கி விட்டோம் இது தெரியாமல் போய்விட்டதே.
3.மந்திரவாதிகளிடம் சிக்கினால் எப்படித் தப்புவது…? என்ன செய்ய வேண்டும்…! என்று
4.குருவிடம் கேட்க மறந்து விட்டோமே…! என்று அப்பொழுதுதான் குருவைப் பற்றி எண்ணமே வருகின்றது.

உடலில் கடும் அவஸ்தைகளைக் கண்ட பின் குருவிடம் கேட்காமல் விட்டு விட்டோமே…! என்று அப்பொழுதுதான் அந்த நினைவாற்றல் வருகின்றது

அப்பொழுதுதான் ஒரு பாடலும் வருகின்றது… குருவையும் நான் காண முடிகின்றது…!

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதை பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வருகின்றார்.

குருநாதரின் குரலைக் கேட்டு அவரை உற்றுப் பார்க்கும் போது என் முன்னே அலையாக வந்து நிற்கின்றார்… அப்போது சிரிக்கின்றார்…!
1.என்னை நீ நினைக்க மறந்து விட்டாய்…
2.நான் உபதேசித்ததை எல்லாம் தெருவிலே விட்டுவிட்டாய் காற்றிலே விட்டாய்.

இத்தகைய சந்தர்ப்பங்கள் வந்தால் உன்னை நீ காக்க முடியாது…
1.பிறரைக் காக்க வேண்டும் என்று நான் சொன்னேனே…!
2.அதை உன்னால் காக்க முடியுமா…? என்று இப்படி வினாக்களை எழுப்புகின்றார்.

குருநாதரிடம் விளைந்த அந்த உயர்ந்த சக்தியை வேண்டி ஏங்கிப் பெறுவோம் என்றால்
1.பதிந்த உணர்வுகளுக்கு ஊக்கமாகி உணர்வின் அலையாக அதைப் பருகி
2.தன்னைக் காத்திடும் நிலையும் பிறரைக் காத்திடும் உணர்வுகளும் அது வரும்…! என்று அங்கே வைத்துத்தான் உபதேசித்தார்.

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்

 

ஆசையின் வாலிப பருவத்தின் உணர்வில் ஆணைக் கண்ட பின் அந்த உணர்வின் தோற்றமானால் அந்த உணர்வுக்கு நாம் அடிமையாகி விட்டால் அதன் உணவின் வளர்ச்சியாகி நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு நாம் இழுக்கு தேடும் நிலையே வருகின்றது.

தாய் வேதனைப்படுகிறது என்பதனை உணர்வதில்லை. நம் இச்சைகள் இப்படி வளரப்படும் போது இப்பொழுது உலக மாற்றங்கள் ஏற்படும் போது இதனுடைய விளைவுகள் எத்தனையோ ஆகிறது.

1.தாய் தந்தையை மறுத்து வெளியே சென்று தனித்து வாழும் உணர்வுகள் அனைத்தும்
2.துயர்படும் நிலைகள் தான் வாழ நேருகின்றது.
3.அது தவிர தாயையும் தந்தையையும் துயரத்தில் ஆழ்த்துகின்றோம்.

தேடிய செல்வங்கள் இருப்பினும் அதைக் கொண்டு தன்னைக் காத்திடும் நிலை இல்லாதபடி வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கித் தன் தந்தைக்குள் விஷத்தன்மை ஊட்டப்பட்டு
1.பாம்பாய் இருந்தேன்… என்னை அடித்து உன்னிடம் வளர்த்து மனிதனாக்கினாய்
2.நீ பாம்பாகப் போ என்று வேதனை உணர்வைத் தன் தாய் தந்தைக்கு ஊட்டி
3.அந்தப் பாம்பினத்தில் சேர்க்கும் தன்மை தான் இன்றைய குழந்தைகளுக்கு உள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுதல் வேண்டும்.

மனிதனான பின் உணர்வின் தன்மை எல்லாவற்றையும் கடந்து உணர்வின் ஒளியானது நட்சத்திரம். தீமையை நீக்கும் ஆறாம் அறிவின் தன்மை கொண்டு அவன் தெளிந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரம் ஆனான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வை
1.ஆறாவது அறிவின் வலிமையின் துணை கொண்டு காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்வோமென்றால்
2.நுகர்ந்த உணர்வுகள் வலிமைமிக்கதாக மாறி அந்த உணர்வுகள் தெய்வ ஆணையாகி
4.தீமைகளை வெளியேற்றும் உணர்வின் வலிமையாகி நமக்குள் தீமை புகாது உணர்வின் வலிமை பெறச் செய்யும்.

இவ்வாறு வலிமை பெற்ற உணர்வுகள் எதன் வலிமையைப் பெற்றோமோ நாம் இந்த உடலை விட்டுக் கடந்த பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை இணைத்து… ஆறாவது அறிவை ஏழாவது நிலையான இனி பிறவி இல்லா நிலை நிலையும்… உடல் மாற்றம் இல்லாது இந்த உடலிலேயே ஒளியின் உணர்வாக நாம் மாறிடும் நிலை வருகின்றது.

எப்பொழுது துயரம் என்ற நிலைகளைச் சந்தர்ப்பத்தால் நுகர்கின்றோமோ அதை உடனே மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் வலிமையை
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய நிலைகள்…
1.நான் சொன்ன முறைப்படி நீ அருள் ஞானிகள் உணர்வுகளை உனக்குள் எடுத்து அதை விளைய வைத்து
2அந்த உணர்வின் வித்தை மற்றவர்களுக்குள் நீ பதிவு செய்ய வேண்டும்.
3.யாரெல்லாம் கவர்ந்து அதைப் பதிவாக்குகின்றார்களோ… விளையும் பருவத்தை அவர்களுக்குள் ஊட்டி
4.ஞானியின் வித்து அங்கே விளையும்படி என்று நீ உருவாக்குகின்றாயோ
5.அந்த உணர்வின் துணை கொண்டே அவர்களுக்குள் “என்னை நீ காண முடியும்…!” என்றார்.

உங்களை எப்போது எங்கே பார்ப்பது…? என்று நான் (ஞானகுரு) வினா அவரிடம் எழுப்பும் போதெல்லாம்
1.எங்கும் எதிலும் என்னை நீ பார்க்கலாம்…
2.நான் கொடுத்த அருள் உணர்வின் தன்மை பிறரில் இயக்கச் செய்து
3.அதன் வழி தீமைகள் அகன்று எங்கெல்லாம் அது மகிழ்ந்த உணர்வாக வருகின்றதோ
4.அங்கே நான் வருவேன்…! என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உபதேசிப்பதை நினைவு கொண்டு யாரெல்லாம் அதன் படி செயல்படுத்துகின்றீர்களோ
1.உங்கள் பார்வையால் பிறருடைய கஷ்டங்களும் நோய்களும் என்று அது நீங்குகின்றதோ
2.நான் பார்த்தேன்… சொன்னேன்… அதன் வழி கடைப்பிடித்தார்கள்…
3.இப்போது நாங்கள் நலமாக இருக்கின்றோம் என்று மற்றவர் எப்பொழுது சொல்லுகின்றனரோ
4.அதிலே தான் என் குருவை உங்களில் நான் காண முடியும்.

மணிக்கணக்காக உங்களிடம் நான் பேசினாலும் உங்களில்… குருவைக் காணும் நிலையாக… உங்கள் மகிழ்ச்சியால் பேரானந்த நிலை பெறும் பாக்கியசாலியாக நான் ஆகின்றேன்.

1.உங்களிடம் இருந்து தான் அவரின் சக்தியை என்னைப் பெறும்படி செய்தாரே தவிர
2.தனித்து “நான் மகான் என்று காண்பித்து… மற்றதை அடக்கு…!” என்று அவர் சொல்லவில்லை.

ஆகவே குருநாதர் உணர்த்தியபடி ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம் என்றால்… உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு மனிதனில் முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி என்றும் நிலையான ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… தெரிந்து கொள்ளுங்கள்… அறிந்து கொள்ளுங்கள்…!
1.பல காலம் இதை மறைத்து வைத்திருந்தேன்.
2.விஞ்ஞான அழிவுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த உண்மையினுடைய நிலைகளை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டு உணர்ந்தோர் உங்களை அறியாத வந்த தீமைகள் நீங்க வேண்டும். தீமை உங்களை அணுகாது தடுக்கும் சக்தி பெற வேண்டும்.

1.தீமையை நீக்கிட்ட உங்கள் சொல்லின் உணர்வுகள் பிறரின் செவிகளில் உந்தப்பட்டு
2.உங்களை அவர்கள் உற்றுப் பார்க்கும் போது தீமையை அகற்றும் உணர்வுகள் அவர்களுக்குள் புகுந்து
3.அவரில் அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்…
4.அந்தச் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதை உபதேசிக்கின்றேன்.

உபதேசிக்கும் பொழுதெல்லாம் குருவின் நினைவு எனக்குள் வருகின்றது… அவரின் ஆற்றல் எனக்குள் பெருகுகின்றது… அவர் உணர்வின் அலைகள் இங்கே படர்கின்றது… கேட்டுணர்ந்தோர் உங்கள் உடலிலும் பதிவாகின்றது.

பதிந்த குருவின் ஆற்றல் உங்களுக்குள் நிச்சயம் செயல்படும்…! என்ற நம்பிக்கையிலே உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… மெய் உணர்வின் ஆற்றல் உங்களில் விளைய வேண்டும் என்ற ஆசையில் இதைச் செயல்படுத்துகின்றேன்.

அதன் வழி உங்களுக்குள் மகிழ்ச்சி பெருக வேண்டும். அதுவே எனக்குள் பேரானந்தப் பெரு நிலையை உருவாக்கும்.

தீமை அகற்றிடும் சக்தி பெற்றவரை நான் (ஞானகுரு) காணும் பொழுதெல்லாம்
1.எனக்குள் தீமை அகற்றிடும் சக்தியாக அது விளைந்து
2.குருவின் அருள் எனக்குள் விளைந்து அவருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.என்றும் நிலையான பிறவா நிலை வேகாநிலை என்ற நிலையை நான் உங்களிடமிருந்து பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் அனுபவம் பெறுவதற்காக யாம் (ஞானகுரு) கன்னியாகுமரியில் இருந்து வடக்கே சைனா பார்டர் வரை சென்று வந்தது தான்.

என் கால்களிலே எத்தனையோ ஆணிகள் உண்டு. இமயமலையின் மீது செல்ல வேண்டுமென்றால் வெறும் கோவணத் துணியுடன் தான் செல்ல வேண்டும்.
1.குருநாதர் சொன்ன முறைப்படி அவர் எதை எண்ணும்படி சொன்னாரோ
2.அதை எண்ணிக் கொண்டுதான் அங்கே செல்ல வேண்டும்.

நடந்து செல்லும் வழியில் ஒரு சுடு தண்ணீர் குளம் இருந்தது. அங்கே சூடு கதகதப்பாக இருந்ததால் அந்த இடத்திலே அமர்ந்து குருநாதர் சொன்னதைச் செய்யலாம்…! என்று நினைக்கின்றேன்.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார். நீ இங்கே குளிர் காய வரவில்லை… குளிர் அடிக்கும் இடத்திலே போய் உட்கார்…! என்றார்.

விண்ணுலக ஆற்றல் அனைத்தையும் நினைவு கொண்டு எடுத்துக் கொண்டிருந்தேன்.
1.ஒரு முக்கியமான ஒன்றைச் சொன்னார்…
2.அதை நீ எண்ணும் போது இன்ன நிலை இருக்கும். உனக்குக் குளிர் வராது உன்னைப் பாதிக்காது
3.அதே சமயத்தில் உன் நினைவுகள் அனைத்தும் விண்ணை நோக்கிச் செல்லும்… துருவ நட்சத்திரத்துடன் உன்னை இணைக்கும்
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை ஒடுக்கினானோ அந்த சக்தி உனக்குள் பெருகும்
5.உன் உணர்வின் தன்மை உயர்த்த இது உதவும் என்று சில முறைகளைச் சொன்னார்.

அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்..!

ஆனால் முதலில் நடந்து செல்லும்போது அது சைனா பார்டராக இருப்பதால் அங்கு இருப்பவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்னென்னமோ சொல்கிறார்கள்…! எனக்கு ஒன்றும் புரியவில்லை… கண்களை இறுக்கி மூடி விட்டேன்.

நடந்து செல்லும் போது காலை வைத்தால் முழங்கால் வரை உள்ளே செல்கின்றது. பனி முழுமையாக உறையாமல் இறுகலாக இல்லாதபடி கால் உள்ளே செல்லும்படியாக பொல பொல என்று இருக்கின்றது. கால் எல்லாம் கடு..கடு.. என்று இருக்கின்றது.

1.அத்தகைய பனிக்குள் கால் அதிக நேரம் இருந்தால் உணர்ச்சியற்றுப் போகும்
2.உன் கால் அழுகிப் போய்விடும் என்று ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார்.

அங்கே எப்படிச் சென்றாலும் என் உணர்வு குரு கொடுத்த சக்தியை மறந்து செயல்படும் பொழுது கடுகடுப்பு அதிகம் ஆகிவிட்டது. கடுகடுப்பு அதிகமான பின் என் நினைவுகள் எப்படி வருகிறது…?

இப்படி ஆகிவிட்டதே… ஊரை விட்டு இங்கு வந்து விட்டோமே… என் பையன் அவன் என்ன செய்கிறானோ…? என்று நினைவு வந்து விட்டது. உடனே என் இருதயம் குளிரினால் கிர்… என்று இறைய ஆரம்பிக்கின்றது. சரி… இதோடு எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கின்றது என்ற எண்ணம் தான் வருகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது அந்த இடத்தில் இத்தனை இம்சைகளும் வருகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து காக்கப்பட வேண்டும் என்றால்
1.குரு சொன்ன நினைவை எடுக்க வேண்டும்
2.உன்னைக் காக்க வேண்டும் என்றால் நீ அந்த உயர்ந்த சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
3.உயர்ந்த சக்தியைப் பெற்றால் தான் உன் குழந்தையைக் காக்க முடியும்
4.உடலில் காக்கும் உணர்வு இருக்கின்றது… அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் உயர்ந்த சக்தி எடுக்க
5.இந்த உடல் தேவை…! என்று இப்படி உபதேசிக்கின்றார்.

குருவை எண்ணி அவர் கொடுத்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

உலக மக்கள் அனைவரும் எத்தனையோ வகையில் சிக்குண்டுள்ளனர்.. வேதனையில் உழன்று கொண்டுள்ளனர். அதிலிருந்து மீட்ட “அந்த அருள் ஞானிகள் உணர்வை எல்லோரும் பெற வேண்டும்…” என்று எண்ணும்படி சொன்னார்.

விண்ணை நோக்கி ஏங்கி அந்தச் சப்தரிஷி மண்டலங்களை உற்றுப் பார்த்து… இருளை மாய்த்து உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வை நுகரும் பொழுது இங்கே இருள் மறைகின்றது.

இந்த இடத்திலே
1.எல்லோருக்கும் சேர்த்து வேதனைப்படுவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
2.உன் பிள்ளைக்கு மட்டும் என்று தனித்துக் கேட்காதே…! என்று குருநாதர் சொன்னார்.

பாச உணர்வுகள் என்னை எப்படி இயக்குகிறது என்பதை உணர்த்துகின்றார். பழனியில் அங்கே காட்சி தெரிகின்றது வீட்டில் என் பையன் ரோட்டின் முச்சந்தியில் உட்கார்ந்து நானா… நானா… (நைனா) என்று என்னைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவனுக்கு மூலம்…! இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது இமயமலையில் இருந்து பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்…? குரு அனைத்தையும் குரு காண்பிக்கின்றார்.

ஆக அவன் வேதனைப்படுவதை எண்ணும் பொழுது தான் எனக்குள் இருள் சூழச் செய்கிறது… இருதயம் இறைய ஆரம்பித்தது. அப்போது என் பையனைக் காக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை.

அவனை எண்ணி வேதனைப்படும் நிலையில் அந்த வேதனை என்ற நஞ்சு உன்னை எப்படிச் செயலற்றதாக மாற்றுகின்றது…? ஆதை மாற்ற நீ என்ன செய்ய வேண்டும்…? இந்த உணர்வின் இயக்கங்களில் இருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்ற உண்மையை இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

உங்களிடம் இப்போது லேசாகச் சொல்லுகிறேன்… நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்கின்றீர்கள்.
1.ஆனால் இதைக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்ற பின் மறந்து விடுகின்றீர்கள்
2.சாமி என்ன சொன்னார் தெரியவில்லையே…! என்று விட்டு விடுகின்றீர்கள்.

குருநாதர் என்னைக் கடுமையான கஷ்டங்களுக்கு உள்ளாக்கித் தான் இந்தப் பேருண்மைகளை உணர்த்தினார்.
1.என்னால் மறக்காது…
2.குரு காண்பித்த அந்த உயர்ந்த சக்தியை எடுக்க முடிகின்றது.

கஷ்டப்பட்டுப் பெற்ற அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன். ஆனாலும் சாமி பிரமாதமாகப் பேசுகிறார்… இதை என்ன என்று சொல்வது…! என்று பெருமை பேசி விட்டுச் சென்று விடுகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றால் அங்கிருக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் இவ்வாறு செய்கின்றார் என் அப்பா இப்படிச் சொல்கிறார்… என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… எனக்கு ஒரே கஷ்டமாக இருக்கிறது என்ற உணர்வுகள் தான் உங்களுக்குள் வருகின்றது.

அதை எல்லாம் மாற்றுவதற்குத் தான் இந்த உண்மைகளை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். நீங்கள் எங்கு சென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் யாம் சொல்லிக் கொடுத்த பக்குவம் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.பார்க்கும் அனைவரையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வேன்
3.எங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
4.என்னைப் பார்க்கும் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ வேண்டும்
5.அவர்கள் குடும்பங்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
6.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினைக்கும் பொழுதும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
7.இப்படித்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அந்த பனிப்பாறைகளுக்கு மத்தியிலே எனக்கு குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

நீங்கள் இங்கிருந்தே அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும். குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களை அறியாத இருங்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
1.ஏகோபித்து நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.
2.குரு இட்ட ஆணைப்படி இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

அதைப் போன்று நீங்களும்… பிறருடைய தீமைகளைக் கண்டபின் அதை அவர்கள் நீக்கிடும் நிலையாக நீங்கள் செயல்பட்டு… அவர்கள் தீமைகளை நீக்கி மகிழும் போது… நீங்கள் அதைக் கண்டு பேரானந்த நிலை பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய இந்த வழியில் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

கலகப்பிரியன் நாரதன்

 

ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். அதில் ஒருவர் நல்ல மனுஷன்…! இவன் இப்படிப் பேசுகின்றானே…! என்று நினைக்கின்றோம்.

திட்டப் போகும்போது நம்முடைய மனது கேட்கிறதோ…? ஏம்பா இந்த மாதிரி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றாய் என்கிறோம்.

உனக்கென்ன ஐயா…? என்று கேட்டால் இல்லாத வம்பெல்லாம் வரும். திருப்பி அதைத் திருத்த முடிகின்றதா என்றால் முடியவில்லை.

உங்களால் சொல்ல முடியுமா…?

1.அதே உணர்வு நமக்கு வந்தால் விட்டுவிடுவோமா. நான் சொல்கின்றேன் கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.இரு நான் பார்க்கிறேன் என்று வம்பு தான் பேசுவோம்.

தெரியுது… ஆனால் சொன்னாலும் வம்பு தான். அப்பொழுது அந்தக் கலகம் வருகிறது.

ஆனால்
1.அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோம் என்றால் உயிருக்கு வருகின்றது
2.அந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரம் இதையெல்லாம் கரைத்தது. உள்ளுக்கே சென்று பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கும்படி செய்கிறது.

வாயிலே சொன்னால் அந்த சமயத்தில் கேட்காது. நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணிச் செலுத்துதல் வேண்டும்.

1.அப்பொழுது முன்னாடி பாதுகாப்பு வருகின்றது.
2.அதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
3.அதைச் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சேர்த்து விட்டால் நாம் எடுத்த உணர்வுகள் உமிழ் நீராகி சிறுகுடல் பெருங்குடலுக்குச் செல்லுகின்றது. இரத்தமாக மாறுகின்றது.

உடல் முழுவதற்கும் ஒரு நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றீர்கள். அந்த உமிழ் நீர் வருகின்றது இந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கம் சென்று வேதனைப்படுத்துகின்றது.

ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப் பிரியன். இந்த பிடிவாத குணங்களை விடுத்து விட்டு இருவரும் சமாதானமாகச் செல்லுங்கள் என்று விளக்கத்தைச் சொல்ல முடியும்.

நம் உடலிலும் அதைச் சமாதானப்படுத்த வேண்டும்

இந்த மனிதன் சும்மா இருந்தாலும் இவன் இப்படிப் பேசுகின்றான் பார்…!
1.அதை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
2.ஆனால் அவர்கள் செய்த தவறை நாமும் செய்கின்றோம்..
நாம் தவறு செய்யவில்லை ஆனால் இந்த உணர்வு வருகின்றது.

அது தான் நாரதன் கலகப் பிரியன் கலகமோ நன்மையில் முடியும். நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ “அதை எல்லாம் மாற்றி விடுகின்றது…”