அருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை

அருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை

 

குருநாதர் பிறவியில்லா நிலையை அடைந்தார். ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் சேர்த்து இருளைப் போக்கிப் பழக வேண்டும். அது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

ஒவ்வொருவரும் துருவ தியானம் முடிந்தவுடன்
1.உங்களிடம் இருக்கும் அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்தீர்கள் என்றால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஒளிகள் இதிலிருந்து வரும்.
3.நாளுக்கு நாள் அது வளர ஆரம்பிக்கும்… உங்கள் உணர்வுகளில் ஒரு தெளிவான மனம் கிடைக்கும்.
4.இதனுடைய வரிசையில் சில சமயங்களிலே பிரபஞ்சங்களும் தெரியலாம்.
5.அந்த மகரிஷிகள் யார்…? என்ற நிலைகளும் உங்களுக்குத் தெரியவரும்.

தெரிய வரும் என்று சொன்னவுடன்… தெரியவில்லையே…! என்ற உணர்வுக்குப் போய்விடாதீர்கள். அதை நாம் பெற வேண்டும் என்ற உணர்வை மட்டும் செலுத்திக் கொண்டு வந்தால் போதும். ஏனெனில் அந்த உணர்வு உங்களுக்குள் வளர்ச்சியாகும்.

ஒரு செடியை வைத்துவிட்டு உடனே பூ பூக்கவில்லை… காய் காய்க்கவில்லை என்றால் முடியுமோ…?

எத்தனையோ ஆண்டுகள் பல உடல்கள் பெற்று இப்பொழுது மனிதனாகப் பிறந்துள்ளோம். இவ்வாறு மனிதனாகப் பிறந்ததில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொன்றாகச் சேர்க்கிறோம்.

அந்த நினைவின் ஆற்றலும் ஈர்ப்பும் உங்களுக்குள் வருவதற்காகவே இந்த அருள் ஞானச்சக்கரத்தைக் குறைந்தது “மூன்று வருடமாக…” பூஜை அறையிலே வைத்து அதற்காகத் தியானம் பண்ணியுள்ளேன்.

எங்கே போக வேண்டும் என்றாலும் கொஞ்ச நேரம் சக்கரத்தின் முன் நின்று சக்கரத்தைப் பார்த்து, “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு நன்றாகப் படிப்பு வரவேண்டும்… நல்ல ஞாபக சக்தி வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலுக்குப் போகும் பொழுது என் தொழில் நன்றாக இருக்க வேண்டும். என் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று, எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

அந்தச் சக்கரத்தினைச் சௌகரியப்படும் இடத்தில் வையுங்கள். உடகார்ந்து பார்ப்பதற்கோ நின்று பார்ப்பதற்கோ தகுந்த மாதிரி செய்து கொள்ளுங்கள்.

1.அதைப் பார்த்து விட்டு… உங்கள் காரியம் ஜெயமாக வேண்டும் என்று
2.இந்த உணர்வை மீண்டும் மீண்டும் வலுப் பெறச் செய்து கொள்ளுங்கள்.
3.மன உறுதி கிடைக்கும்… உங்கள் சொல் கேட்போருக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.
4.நாமும் நம் குழந்தைகளும் இந்த மாதிரிச் செய்து அதைக் கட்டாயாமாக்கி ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இந்தச் சக்திகளை நீங்கள் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ்ந்து… பிறரையும் மகிழ்வித்து வாழ்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

எமது உபதேசங்களை நீங்கள் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ள வேண்டிய சரியான முறை

எமது உபதேசங்களை நீங்கள் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ள வேண்டிய சரியான முறை

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வெறும் சொல்லாகச் சொல்வதல்ல.
1.ஓ…ம் என்பது நமது உயிர்… உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது…
2.ஓ…! நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சக்தி ம்…! என்று நம் உடலுடன் ஐக்கியம் ஆகிறது.

அதே போல நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை உடலுக்குள் இருக்கும் எலும்பு – மேக்னட் அதற்குள் இருக்கும் ஊன் அது ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் “ஜீவன் பெறச் செய்கின்றது…” அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா.

குருதேவா… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்த குணங்களும் நம் உடலில் இயக்கப்பட்டு அதை ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருந்தது நமது உயிர். ஆகவே “குருவாக இருப்பதும்…” நமது உயிரே.

அதைத்தான்…
1.ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும்
2.அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி
3.அந்த ஏக்க உணர்வுடன் தான் அனைவரும் சொல்ல (எண்ண) வேண்டும்.

ஒரு மைக் நாம் பேசுவதை… நாடாக்களில் உள்ள முலாமும் முலாமுக்குள் மறைந்துள்ள காந்தமும் அதைக் கவர்ந்து எப்படிப் பதிவு செய்து கொள்கின்றதோ அதைப் போல நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளில் இருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயம் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் கிளர்ந்து எழுகின்றது. காற்றிலிருந்து அந்த உணர்வினை நம் உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது,

1.தனது ஆன்மாவாக ஆக்க வேண்டும் என்றால் நாம் எண்ணும் எண்ணம் ஊழ் வினையாகப் பதிவாக வேண்டும்.
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊழாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்.
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டி வரும்.
5.நாம் எண்ணிய உணர்வின் தன்மையைச் சுவாசித்து அந்த உணர்வுக்கொப்ப நம் உயிரின் தன்மை இயங்குகின்றது.

ஆகவே… ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் அந்த உயிருடன் ஒன்றி எண்ண வேண்டும்.

இப்பொழுது யாம் எதை உபதேசிக்கின்றோமோ அதைக் கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ் வினையாக எலும்புக்குள் பதிவாகிறது. அப்படிப் பதிவாகும் பொழுது நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வலைகளை
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நான் எண்ணி… அதை நான் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாகப் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கூர்ந்து விண்ணின் ஆற்றலைப் பெருக்கி சுவாசித்து
3.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக இப்போது வெளிப்படுவதை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள் என்றால்
4.அந்த உணர்வின் சத்து உங்களுக்குள் ஊழ் வினையாகப் பதிவாகிறது.

உங்களுக்குள் அப்படிப் பதிவாகும் பொழுது மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் எந்த ஞானியின் அருளாற்றல் உங்களுக்குள் பதிவாகின்றதோ அதை நீங்கள் பெற முடியும்.

ஞானிகள் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் தங்களை அறியாது வந்த தீய வினைகளை அவர்கள் மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி இருளை நீக்கி ஒளியின் தன்மையாக வாழ்ந்தார்களோ
2.அதே உணர்வின் ஆற்றலை நாமும் பெற முடியும்… அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகிறோம்.

“உங்களுக்குத் தெரியாமலே…” தீமை நீக்கும் சக்தி கொடுக்கின்றேன்

“உங்களுக்குத் தெரியாமலே…” தீமை நீக்கும் சக்தி கொடுக்கின்றேன்

 

கையில் வைத்திருக்கும் செல்ஃபோனில் நமக்குத் தேவையான எத்தனையோவற்றைப் பதிவு செய்கின்றோம். யார் பேசியது…? என்று தெரிந்து கொள்கின்றோம். பின் நாம் அதைப் பதிவாக்கி அந்த நம்பர் வந்தவுடன் இன்னார் தான்…! என்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

அதாவது யார் பேசுகின்றார்கள்…? யாரிடம் பேச வேண்டும்…? என்று எல்லாவற்றையும் நாம் அறிந்து அதைப் பயன்படுத்துகின்றோம்.

இதைப் போன்று தான்… “நமது கண்” அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கிறது,
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று திரும்ப எண்ணினால் அந்த வேதனை நமக்கு வருகின்றது.
2.அவர்கள் என்னென்ன செய்தார்களோ அந்த நினைவுகள் வருகின்றது.
3.எனக்கு இடைஞ்சல் செய்தானே… அது எல்லாம் நியாயமா…? என்ற எண்ண ஓட்டங்கள் வருகின்றது.

நியாயத்தைப் பேசுவோம்…! ஆனால் இடைஞ்சல் செய்கின்றார்…! என்று சொல்வோம். அப்பொழுது நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் ரத்தத்தில் கலந்து அணுவாக வளர்ச்சி பெற்றுப் பெருகத் தொடங்குகிறது.

இரத்தத்தில் வேதனை என்ற அணுக்கள் பெருகி விட்டால் அது செல்லும் பாதைகளில் உள்ள… நல்ல அணுக்களுடன் எல்லாம் போர் செய்யத் தொடங்கும்.

தலை வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது வயிறு வலிக்கின்றது கால் வலிக்கின்றது என்றெல்லாம் சொல்வோம். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. அந்த அணுக்கள் பெருகுகிறது.

1.ஒரு நான்கு நாள் வேதனைப்பட்டுப் பாருங்கள்.
2.இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தால் அந்த விஷமான அணுக்கள் இருக்கிறது என்று காட்டுவார்கள்.

அது அதிகமாகி விட்டால் மூச்சுத் திணறல் கூட வந்துவிடும். நுரையீரலில் வலி கல்லீரலில் வலி கிட்னியில் ஒரு விதமான வலி இருதயத்தில் வலி என்று வரும்.

ஏனென்றால் இரத்தம் போகும் பாதையில் எந்தெந்த உறுப்புகளுக்குள் எல்லாம் செல்கின்றதோ… அங்கெல்லாம் வலி வரத் தொடங்குகிறது.

மருத்துவர்கள் அந்த இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்து விஞ்ஞான அறிவுப்படி அந்த விஷமான அணுக்கள் எதிலே மடிகிறது…? என்று அதற்குத்தக்க மருந்து கொடுக்கின்றார்கள்.

முன்பிருந்த மருத்துவம் வேறு… ஸ்கேன் வைத்துப் பார்த்துப் பொதுவான மருந்து கொடுப்பார்கள். இப்பொழுது
1.அந்த இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதில் எத்தகைய ரூபமான அணுக்கள் இருக்கின்றது…?
2.அதற்கு இந்த மருந்தைக் கொடுத்தால் எப்படி மயக்கமடைகிறது…?
3.அல்லது அது முட்டையிடாமல் எப்படித் தடுப்பது…? அதை மலடாக்குவது எப்படி…?

ஒரு அணு சென்று விட்டது… அதை மலடாக்க வேண்டும். அப்போது அது தன் இனத்தைப் பெருக்காது.
1.இனத்தைப் பெருக்கவில்லை என்றால் இங்கே கெடுதல் வராது.
2.இப்படி ஆராய்ச்சி செய்து செயல்படுத்துகின்றனர்.

ரொம்பக் கடுமையாகி விட்டது என்று அதைக் கொல்ல மருந்து கொடுத்தால் நல்ல அணுக்களும் விஷத்தன்மையாகி அது கெட்டுப் போய் விடுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…? அந்தக் கெட்டது உருவாகாதபடி இரத்தத்தில் அந்த அணுக்களை மலடாக்கி அது முட்டையிடாதபடி தடுக்கின்றார்கள்.

ஏனென்றால் நமக்குள் நடக்கும் இயக்கத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் ஈஸ்வரன்… அதற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி… விஷ்ணுவின் மறு அவதாரம் சீதா ராமன். நாம் சந்தோஷமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி நம் உடலில் அணுக்களாக மாறுகிறது.

உயிரைப் போன்றே அணு உண்டாகிறது… சுவைக்கொப்ப உணர்ச்சிகள் தோன்றுகிறது… அந்த எண்ணங்கள் வருகின்றது. சந்தோஷமானது நான் சீதா. அதிலிருந்து வரக்கூடிய உணர்ச்சி தான் எண்ணங்கள்.
1.அது தான் சீதா ராமா…! ராமா சீதா என்று வராது.
2.உயிர் அந்த உணர்வின் தன்மை ஆகும் போது அந்த எண்ணங்கள் வருகிறது.

அகஸ்தியன் உலகை அறிந்து கொண்டான்… உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துத் தீமைகளை நீக்க வேண்டும்.

உங்கள் நினைவை அங்கே கொண்டு செல்லும் போது அந்த உணர்வு உங்களுக்குள் உமிழ் நீராக மாறி அந்தச் சத்து உங்கள் உடலில் ஒளியான அணுக்களாக விளையும். நீங்கள் ஒளியாக வேண்டும் என்பதற்குத்தான் இதை ஞாபகப்படுத்துகின்றேன்.

கூர்ந்து கவனிக்கும் பொழுது யாம் சொல்லக்கூடிய உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

1.உங்களுக்குத் தெரியாமல் தான் தீமைகள் வருகின்றது.
2.அதே போல் உங்களுக்குத் தெரியாமலே தீமை நீக்கக்கூடிய சக்தியை உபதேசத்தின் வாயிலாகக் கொடுக்கின்றேன்.

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?

 

குருக்ஷேத்திரப் போர்…! ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள் அது உடலுக்கு குரு. ஓ…ம் என்பது பிரணவம்…. அதாவது நாம் எண்ணுவது ஜீவன் பெறுகின்றது.

ஆகவே… உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.குருக்ஷேத்திரத்தில்… உயிரிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருங்கள்.

நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாகப் பெற்று யாம் உபதேசித்த ஆற்றல்மிக்க சக்தியை… “நீங்கள் எண்ணிய போது… எண்ணிய நிலைகள் கொண்டு…” உங்களுக்குள் கிடைக்கச் செய்கின்றேன்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்தத் துன்ப உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தான் பணியச் செய்வதே எமது ஆசி.

ஆகவே அந்த உணர்வுடன் நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி விண்ணிலே நினைவைச் செலுத்தி உயிரிடம் வேண்டுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயல் புனிதம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் பார்ப்போர் அனைவரும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இதை மட்டும் எண்ணி ஆசி பெறுங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சக்திகள் அனைத்தும் தாள் பணிந்து…
1.உங்களுக்குள் ஒத்துழைத்து உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு வழிகாட்டியாக அது அமையட்டும்.
2.எது…?
3.எதுவும் கெட்டது அல்ல…! உங்களுக்குள் வலுவூட்டவும் வழிகாட்டியாகவும் அது இருக்கும்.

கெட்டது என்று அது தான் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் நீக்கிவிட்டுச் செல்ல விரும்புகின்றோம். கெட்டது என்று அது வழி காட்டினாலும் அந்த உணர்வு எனக்குள் சேர்ந்து விடுகின்றது.
1.ஆனால் வழிகாட்டிய நிலைகளும் எனக்குள் அது பணிந்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
2.ஆக… வழிகாட்டிய அந்த விஷமே என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.
3.ஆகையினால் தான் அத்தகைய நிலைகளை “ஆசீர்வாதம்…” என்பது
4.உயர்ந்த சக்தியாக… ஞானத்துடன் கூடிய… “மெய் வழி பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்…” என்று ஆசி கொடுக்கிறேன்.

அந்த வழியில் ஆசி வாங்கிப் பழகுங்கள்.

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்

 

தும்கூர் அருகே ஒரு மலைக் காடு இருக்கின்றது… கரடி இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் உலக அனுபவம் பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் சுற்றிக் கொண்டு வந்த இடத்தை எல்லாம் காட்டி
1.இந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த உணர்வை நுகந்தால் நீங்களும் எப்படி உலகை அறிய முடியும்…? என்ற காட்சிகளைக் கொடுத்தேன்.

ஆரம்பத்தில் குரு வழியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு (சத்தியத்தின் சக்தி நிலை) அதைக் காட்டித்தான் செயல்படுத்தியது. அதே போன்று
1.ஐவர் மலையில் பழைய காலக் குகைகள் எப்படி இருக்கின்றது…?
2.அங்கிருக்கக்கூடிய சில உண்மைகளையும் பிரார்த்தனை பண்ணித் தெரியும்படி செய்தேன்.
3.அந்த இடத்தில் மின்கதிர்கள் பாயப்படும் பொழுது அது எப்படி…? என்றும்
4.மின் ஒளிகள் எப்படியெல்லாம் அங்கே வருகின்றது…? என்றும்
5.அங்கே ஒளி வட்டங்களை எல்லாம் சுற்றும்படி செய்தேன்.

இத்தனை வேலைகளையும் செய்தேன். ஆரம்பத்தில் இதை எல்லாம் செய்து காட்டினாலும்… ஒன்றுக்கும் பயனில்லாது போய்விட்டது. இதெல்லாம் மனித உடல் இச்சைக்குத்தான் சென்றது.

பல அற்புதங்களைக் காட்டினாலும் உடல் ஆசை வந்து விடுகின்றது. “நான் தெரிந்து கொண்டேன்…!” என்ற நிலை வந்து விடுகின்றது,

அதை எல்லாம் விடுத்து விட்டு இப்பொழுது உங்களை அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்கின்றேன்.
1.சிறிது பேராவது நீங்கள் தயாராகி விட்டால்
2.கோடிக்கணக்கான மக்களை நல் வழியில் நீங்கள் வளர்க்க முடியும்.

அருள் உணர்வு கொண்டு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஞாபகப்படுத்துகின்றேன். காரணம் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம் இந்த உடலுக்குப் பின் நாம் எந்த நிலை அடையப் போகின்றோம்…? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். அந்த நிலை அனைவரும் பெற வேண்டும்.

செல்வம் எவ்வளவு தேடி வைத்திருந்தாலும் அதைத் தட்டிப் பறிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. கடைசியில் தேடிய சொத்தெல்லாம் போய்விட்டதே என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… பேரருளை எப்படியும் நாம் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் தயாராகி விட்டால் எனக்கு கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கும். இல்லையென்றால் நான் இன்னும் சிரமம்தான் பட வேண்டி வரும்.

அந்தச் சிரமத்திலிருந்து நான் மீள்வதற்கு
1.ஒவ்வொருவரும் உங்கள் பார்வையில் சர்வ பிணிகளும் போக வேண்டும்
2.உங்கள் பேச்சு மூச்சும் பிறருக்கு நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.
3.மற்றவர் குடும்பத்திலே சிக்கலை நீக்கக் கூடிய சக்தியாக வளர்ச்சிக்கு வர வேண்டும்.

மற்றவர்களால் முடியவில்லை என்கிற பொழுது… தியானம் செய்யக்கூடியவர்கள் செயல்படுத்தி உங்கள் பார்வையால் மூச்சால் எல்லா வகைகளிலும் மற்றவருக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.

அந்த நிலையத்தான் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்…!

இதில் “நான் பெரிது… நீ பெரிது…” என்ற நிலை இல்லாதபடி
1.எல்லோரையும் பெரியவராக்க வேண்டும் என்று உணர்வுக்கு வரவேண்டும்… அதன்படி நாமும் அந்த உயர் நிலை பெற முடியும்.
2.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் நாமும் உயர்கின்றோம்.

இதிலே சிறு குறை கூட வராதபடி குரு காட்டிய அருள் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டும். அதைத்தான் நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

பல அற்புதங்களையும் நிகழ்ச்சிகளையும் காட்டத் தொடங்கினால் இந்த ஞானத்தையே கடைசியில் பேச முடியாதபடி அது தடையாகிவிடும்.

எமது அருள் உபதேசங்கள் ஒலி நாடாக்களில் வெளி வருகின்றது.
1.கூடுமான வரையிலும் ஒவ்வொருவரும் அதை எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
2.இந்த உணர்வின் ஞானம் உங்களுக்குள் வரட்டும்.
3.உணர்வின் தன்மை ஆழமாகப் பதிவாகும்… உங்களுக்குள் மெய் ஞானம் வளரும்.

காலங்கள் மிகக் குறுகியதாக இருக்கின்றது அதற்குள் நாம் அனைவரும் வளர்த்து தயாராக வேண்டும். அழியாச் செல்வமான ஒளிச் சரீரம் பெறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம்

சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம்

 

அழுக்குத் தண்ணீரிலே நன்னீரை ஊற்றும் பொழுது முதலில் கலங்கலாக இருக்கும். நன்னீர் அதிகமான பின் கலக்கத்தின் தன்மை சிறிது தெளியும்.

இதைப் போன்று எத்தனையோ உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில், அழுக்கு உணர்வாக இருப்பினும் அதிலே அருள் ஞான உணர்வை இணைக்கும் போது உங்களுக்குள் மனம் தெளியும் நிலை வருகின்றது.

அதனால்தான் யாம் உபதேசம் செய்யும் நேரத்தைக் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம்.

யாம் சொல்வதெல்லாம்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு அணுக்களிலும் இணையச் செய்து
2.உங்கள் நினைவாற்றலை ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்று அறியச் செய்ய
3.அந்த நினைவுடன் அருள் ஞானியின் உணர்வைக் கலக்கச் செய்து அந்த ஆற்றலைப் பெறச் செய்கின்றேன்.

உங்களுடைய நல்ல சிந்தனையை அடக்கச் செய்யும் நிலைகளிலிருந்து அதனை அடக்கும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பெருக்கும் சூழ்நிலையை உருவாக்கும் நேரம் இது (துருவ தியான உபதேசம்).

உங்களுடைய அழுத்தத்தின் நிலைகளை (எண்ண உணர்வுகளை) அளவுகோலாக வைத்து ஒவ்வொரு உணர்வுகளிலும்… வாழ்க்கையில் எதிர்நிலை (தீமைகள்) வருகின்றதென்றால் அந்தக் காலத்தை அளக்கும்.
1.அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற சிந்தனை வரும்
2.பருவம் வரும் பொழுது, சொல்வோம் என்று விலகிச் செல்லும்… காலத்தை விரயமாக்காது.

நாம் உயர்ந்த தத்துவத்தை வைத்திருக்கிறோமென்று அவசரமாகப் போகிறவரிடம் சொன்னால் சரி…சரி…! என்பார்கள். ஆனால் ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாது போய்விடும்.

இதுவெல்லாம் உங்களுக்குள் அனுபவரீதியில் கொடுப்பதற்காகத் தான் யாம் (ஞானகுரு) எதை எடுத்தோம்…? எப்படிச் செய்தோம்…? எதனுடைய உணர்வுகள்…? என்று காட்டியது.

நீங்கள் பிறருக்கு எவ்வழியில் சொல்ல வேண்டும்…?

எமது உபதேசங்களைக் கேட்ட நீங்கள் ஒவ்வொரு கால நேரத்தையும் யாம் உபதேசித்த வழியில் பயன்படுத்துதல் வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் எலெக்ட்ரானிக் என்ற அழுத்தத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… கால நேரம் வரும் பொழுது அந்த அழுத்தத்தின் உணர்வுகள் தீமையை தள்ளி விட்டுச் செயல்படுகின்றது.

இதைப் போன்றுதான்
1.உங்கள் அழுத்தத்தின் உணர்வுகள் ஏற்புடையதாக வரும் பொழுது இதனுடைய அழுத்தம் தீமையை நீக்குகின்றது.
2.அதாவது நல்லவைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தீமையை நீக்குகின்றது.

யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது… சீக்கிரம் போக வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்தக் காலம் வரும்போது யாம் உபதேசிப்பதைத் தள்ளி விடுகின்றது. அதன் வழி உங்களை இயக்குகின்றது.

ஆகவே தியானம் மற்றும் உபதேசத்தை நீங்கள் கேட்கக்கூடிய நேரங்களில்
1.கால மணியை, அந்த அழுத்தத்தைப் பதிவு செய்து கொண்டு
2.அதனை நமக்குள் ஏற்புடையதாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு உட்கார்ந்தால்,
3.நினைவு வேறு எங்கும் போகாது,.. இந்த உணர்வின் (அருள் ஞான உணர்வின்) அழுத்தமாகும்.

சீர்புடையதும் சீர்பற்றதும் போன்ற உணர்வுகளைத் தனக்குள் மாற்றி ஒவ்வொன்றையும் யாம் சொல்லும் பொழுது தனக்குள் பக்குவப்படும் நிலைகள் வரும்.

அந்தப் பக்குவ நிலை ஏற்படுத்துவதே குருவின் தன்மை. எமது அருளாசிகள்.

தொட்டுக் காட்டுதல்

தொட்டுக் காட்டுதல்

 

யாம் உபதேசிக்கும்போது கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள்.
1.இந்த உணர்வைக் கண்ணின் கரு விழி உங்களுக்குள் படமாக்குகின்றது… பதிவாக்குகின்றது.
2.சொல்லக்கூடியதைக் காந்தப்புலன் அறிவுகள் உள்ளே இழுக்கின்றது.

அன்று நான் குருநாதரைச் சந்தித்துப் பெற்ற உணர்வுகளை எடுத்து உங்களுக்குச் சொல்லும் பொழுது “கண் வழியாகவும் சொல்வழி கூடியும்…” வெளிப்படுகின்றது. “மூலக்கூறுகளை…” குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

இங்கே வந்து எம்மைச் சந்தித்தவர்களுக்கு மட்டுமல்ல…! இதைக் கேட்டுணர்ந்தோர்… படித்துணர்ந்தோர்… பல பாகங்களில் மற்றவருடன் பழகப்படும் பொழுது
1.சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லம் எங்கே எந்தக் குறைகளை நீங்கள் கண்டாலும்
2.நம் குரு அருளின் தன்மை அங்கே குறைகளை நிவர்த்திக்கும் உணர்வலைகளாகப் பாயும்.
3.குறைகளை அணுக விடாது… உங்களுக்குள் அருள் உணர்வுகளைப் பெறச் செய்யும்.

அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

உதாரணமாக ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள். அந்த உணர்வு நமக்குள் பதிவாகி விட்டால் அவர்கள் உணர்வை மீண்டும் நமக்குள் கவரத் தொடங்கும். அப்பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

அந்தத் தடைகளை விதிப்பதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று நம்முடைய எண்ணம் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராதபடி அதைத் தணிக்க வேண்டும்.

1.அதற்காகத்தான் இயக்கத்தின் உண்மை நிலைகளை விரிவாக்கப்பட்டு உங்கள் நினைவாற்றலுடன் இதைப் பதியச் செய்வது.
2.இது தான் தொட்டுக் காட்டுதல் என்பது.

பொட்டிலே தொட்டுக் காட்டுதல் என்று மற்றவர்கள் சொல்லும் பொழுது “அவர்கள் தொட்டுக் காட்டுகின்றார்கள்…! அங்கே பதிவாகின்றது…” ஆனால் தொட்டுக் காட்டிய “மனிதனுடைய நினைவு தான்” அங்கே வரும்.

ஆனால் நாமோ குருநாதர் கொடுத்த அந்த உணர்வின் சக்தியை
1.மகரிஷிகள் ஞானிகள் எதைப் பெற்றார்களோ அதை ஒவ்வொரு உணர்வுகளிலும் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைப் பதிவு செய்கின்றோம்.
2.நமக்குள் எத்தனையோ கோடி குணங்கள் உண்டு… அதில் எத்தனையோ வகைகள் உண்டு.
3.அதற்குள் ஞானிகள் உணர்வை இணைக்க வேண்டும்
4.அப்படி இணைத்தால் உங்களுக்குள் அது கருவுற்று ஞானிகள் உணர்வோடு வளர்வதற்கு இது உதவும்.

ஏனென்றால் பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தால் உடனே மனம் மாறுகிறது. பக்கத்து வீட்டுக்காரருடைய செயலைப் பார்த்தால் மனம் மாறுகின்றது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம் அவர்கள் வீட்டிற்குள் சென்றால்… வீட்டிலே வேறு விதமாக இருப்பார்கள். எல்லோரும் அங்கே ஒன்று சேர்ந்திருப்பார்களா…? யாரோ ஒருத்தர் எதிர்மறையாக இருப்பார்.

தியானத்திற்குப் போகின்றாராம்… ஏதோ அள்ளிக் கொட்டுகின்றாராம்…! என்று நாம் அங்கே போய் உட்கார்ந்திருக்கும் பொழுது பேசுவார்கள்.

என்னடா…! இப்படிப் பேசுகின்றார்கள்…? என்ற உணர்வுகள் வந்து விட்டால் நாம் எதன் மீது பற்றாக இருக்கின்றோமா… அதைக் குறை கூறும் பொழுது இந்தக் குறைகள் அதிகமாக வளர்ந்து விடுகிறது.

நம்முடைய வளர்ச்சிக்கு அதுவே தடையாகின்றது. இப்படியும் நமக்குள் வருகின்றது.

ஆகவே இந்தத் தீமையின் விளைவுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் செலுத்தி இதை வலுப்பெறச் செய்து
2.அவர்கள் எப்படியும் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த நினைவாற்றல் நமக்குள் உருவாக வேண்டும்.
3.அப்பொழுது நம் நினைவலைகள் அங்கே படரும்… நம்மையும் பாதுகாக்கும்
4.அவர்கள் நம்மை எண்ணினால் அங்கே ஊடுருவி அவர்களை மாற்றும் நிலைக்கும் வரும்.
5.அவ்வாறு மாற்றும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நல்ல சக்தியாக பூமியிலே பரப்பவும் செய்யும்.

மற்றவர்களுக்கும் அது நல்ல உணர்வை ஊட்டும்…!

யாம் பாய்ச்சும் சக்திகள் உங்களைப் பின் தொடர்ந்து… உறுதுணையாக இருந்து… உங்களைக் காக்கும்

யாம் பாய்ச்சும் சக்திகள் உங்களைப் பின் தொடர்ந்து… உறுதுணையாக இருந்து… உங்களைக் காக்கும்

 

1.எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
3.நாம் முதலிலே நலமாக இருக்கின்றோம்.

அந்த மெய் ஒளி நமக்குள் வளர்ந்து சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது. நம் சொல்லைக் கேட்போர் உள்ளங்களையும் மகிழச் செய்கின்றது.

1.அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர்கள் பக்குவமாக என்னுடன் இணைந்து செயல்படும் தன்மையும்
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதும்
3.தடையின்றி வியாபாரம் நடப்பதும்… தடையின்றி மகிழ்ச்சி பெறுவதும்… தடையற்ற நிலையாக நமக்குள் உருவாகின்றது.

ஆகையினால் இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். நாங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயலெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படி வியாபாரத்திற்கோ மற்ற எங்கே சென்றாலும் இதைச் செயல்படுத்துங்கள்.

1.யாம் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகள் எப்பொழுதும் உங்களைப் பின் தொடர்ந்து உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
2.உங்களுக்குள் உயர்வை ஊட்டும்… மெய் ஒளியின் தன்மை எட்டச் செய்யும்.

அதை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆகையினால் நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து எம்மைப் பார்க்கும் பொழுது… சாமி…! நீங்கள் சொன்னபடி நாங்கள் எடுத்தோம்… நாங்கள் நன்றாக இருக்கின்றோம் எங்கள் உடல் நலமானது என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அதிலே தான் எனக்கு மகிழ்ச்சி…!

காரணம் சதா உங்களைத்தான் நான் பிரார்த்தனை செய்கின்றேன். உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உடலைக் கோவிலாக எண்ணி உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணி
1.அந்தக் கோவிலில் மகிழ்ச்சியான நிலைகள் உருவாக வேண்டும்.
2.அந்தக் கோவிலில் இருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று
3. உங்களைத் தான் – நான் பார்த்த கோவில்களை “ஒவ்வொருத்தராக நான் தியானம் செய்கின்றேன்…”

அதிகாலையில் 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கின்றேன். அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

அதைப் பெறும் போது உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே உங்களுக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகள் மாறி… அது நல்லது செய்யும் ஆற்றலாக வரும்.

1.அதைப் பெறச் செய்வதற்கு உங்களுக்கு அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.ஆகையினால் முழு நம்பிக்கையுடன் உங்களை நம்பி நீங்கள் செயல்படுங்கள்.

சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள் ஆனால் “உங்களிடம் அத்தனை சக்தியும் இருக்கின்றது…”

“உங்களுக்கு முன்னாடியே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது…” அதை எண்ணினால் உங்களுக்குள் அது கூடும். நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளியைக் காண முடியும்.

மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை.

ஆகவே… உங்களை நம்பி இதைச் செயல்படுத்துங்கள்.
1.சாமி சொன்னார் என்று சொல்லி…
2.சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமி செய்து கொடுப்பார் என்று எண்ண வேண்டியதில்லை.

உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சுகின்றேன். அது கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனிலிருந்து காந்த அலைகள் வெளி வருகின்றது. பூமி அதை எடுத்துக் கொண்டால் தான் வளர முடியும். பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படருகின்றது. போகும் பாதையில் அதை ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்.

இதைப் போன்று தான் மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
2.அதன் மூலம் நீங்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்
3.காற்றிலிருந்து அந்த மகரிஷிலளின் அருள் சக்தியை நீங்கள் கவர முடியும்.

சிதம்பரத்தில் வைத்து… யாம் உபதேசித்ததன் நோக்கம்

சிதம்பரத்தில் வைத்து… யாம் உபதேசித்ததன் நோக்கம்

 

1.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
2.எப்பொழுதுமே நம் நினைவைப் புருவ மத்திக்கே கொண்டு போய்ப் பழக வேண்டும்.

நம் உயிரே குருவாகவும் நாம் எண்ணியது ஈசனாகவும் அது உருவாக்கக்கூடிய நிலையை நாம் உணர முடியும். இந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “எதை எண்ணுகின்றோமோ…” உடலுக்குள் இந்த உணர்வுகள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.

சாதாரணமாக மூக்கின் வழி கூடித்தான் சுவாசிக்கின்றோம். கண்கள் பார்க்கின்றது… மற்ற உணர்வுகளை எடுக்கின்றோம் ஆன்மாவாக மாறுகின்றது. மூக்கு வழி கூடிச் சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளைப் பின்னாடி அறிகின்றோம்.

நாம் ஓம் ஈஸ்வரா என்று அடிக்கடி சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணிப் புருவ மத்தி வழி கூடி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் வழி கூடித் தான் நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி… மூக்கு வழி சுவாசிப்பதும் என்று அதை அறிந்து கொண்டாலும் கூட
1.தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
2.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.

நாம் எவ்வளவு நல்லதைப் பேசினாலும் கூட பிறிதொருவருடைய நிலைகள்… குடும்பக் கஷ்டமோ அல்லது நோயோ அதனுடன் கலந்த சொல்லாக வெளி வரும்.

அவரைக் கண்ணுற்றுப் பார்த்துக் கவரும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசிக்க நேரும். எனக்கு இந்த மாதிரிக் கஷ்டமாக இருக்கின்றது என்று சொல்லும் பொழுது இந்த உணர்வு கலந்து விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் வந்தாலும் கூட
1.ஈஸ்வரா…! என்று இடைமறித்து அதைப் பலவீனப்படுத்தி
2.மகரிஷியின் உணர்வுகளை உயிர் வழி கூடி எடுத்து வலுப்பெறும் போது அவரிடமிருந்து கேட்டறிந்த தீமையை மாற்றுகின்றது.

அவர் பலவீனமான நிலையில் வெளிப்படுத்தும் போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்… அவர் நலம் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுக்க வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் சமைத்து அதற்கப்புறம் அதை எடுத்துப் போட்டால் தான் ருசியாக இருக்கும்.

அதைப் போல மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்ற நாம் எண்ணினால் அதைத்தான் சமைத்து அதையே தான் அவர்களுக்கு மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம்.
1.ஆகவே இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2.அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதைக் கலந்து தான் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

தியானத்தில் 27 நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… நவக் கோள்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்று சொல்கின்றோம்.

ஏன்…?

அவைகளில் இருந்து விளைந்தது… அந்தச் சக்திகளை எல்லாம் நாம் பெற்றவர்கள்.

27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் எல்லாவற்றிலும் உண்டு. அதில் எந்த நட்சத்திரத்தினுடைய சக்தி கூட்டல் கழித்தல் என்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளைத் தூண்டுவதும்… எண்ணங்கள் இயக்குவதும் எல்லாமே அமைந்திருக்கின்றது.

1.எல்லாவற்றையும் நாம் ஐக்கியப்படுத்தி நமக்குள் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது பிரிவு இல்லை.
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

ஆக… நமது குருநாதர் காட்டிய வழியில் தியானத்தில் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

1.முதலில் அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
2.எல்லோருடைய எண்ணங்கள் நமக்குள் பிரதிபலித்து “ஒன்றாகிறது…”

அடுத்து… நவக்கோளின் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதனுடன் சப்தரிஷி மண்டலங்கள்… மனிதனான அந்த உணர்வுகளை இதனுடன் கலக்கின்றோம். பார்வையால் எடுக்கின்றோம்… எண்ணத்தால் எடுத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

நம் ஆன்மாவிலே அதைக் கலந்து கொண்டே வருகின்றோம். சப்தரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம். இது எல்லாமே கலக்கின்றது.

அவர்கள் உடலில் விளைந்ததும் கோள்தான்… அவர்கள் எண்ணமும் நட்சத்திரம்தான்.
1.முதலிலே… அவர்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெறும் தகுதி பெற்ற உணர்வுகள் உண்டு.
2.இதை எல்லாம் ஐக்கியப்படுத்தித் தான் அந்த உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்காக… 27 நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்வது.

குருநாதர் இதையெல்லாம் காண்பித்தார். அதைப் பதிவு செய்யும்போது அந்த எண்ணங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தியானிக்கும் போது இந்த எண்ண அலைகள் பரவும்.

அப்பொழுது ஐக்கிய உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

இதற்கு முன்பும் இதைப் பற்றிச் சொல்லி இருக்கின்றேன். ஆனால் அர்த்தங்கள் உங்களுக்குச் சரியாக ஆகியிருக்காது. இப்பொழுது அதை விளக்கிக் கொடுக்கின்றேன்.

27 நட்சத்திரத்தின் நிலைகள் அது எது எதில் கலந்திருக்கின்றதோ செடியில் கலந்தாலும் அந்தச் சக்தி கலக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்குத் தக்கவாறு தாவர இனத்தை உருவாக்குகின்றது.

பூமியில் செடி கொடிகள் இருந்த இடத்திலிருந்து எப்படி அதனுடைய சக்திகளைப் பெறுகின்றதோ இதே போன்று நாம் சுவாசித்து உடலில் உருபெற்ற அணுக்கள் அந்தந்த இடத்திலிருந்து விளைகின்றது.

உதாரணமாக மலைப் பகுதியில் விளையும் செடிகள் கீழே தரையில் விளைவது இல்லை. அதே போல் தரையில் விளைவதை மலையில் வைத்தால் அங்கே அது விளைவது இல்லை.

இதைப் போன்று தான் நம் உடலில் அந்தந்தக் காலப் பருவம் அதனுடைய நிலைகள் வரப்படும் பொழுது அணுக்கள் விளைகின்றது. அது அது அதற்குத் தக்கவாறு சுவாசத்தை எடுத்து வளர்கின்றது. இருந்த இடத்திலிருந்தே அது பெறுகிறது.
1.இத்தனைக்கும் சாப்பாடு கொடுப்பது நமது உயிர் தான்… உருவாக்குவதும் உயிர் தான்.
2.பிரபஞ்சத்தில் சூரியனும் இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு வித்தை உருவாக்குகின்றது.

விளைந்த பின் எதை எதை எடுத்து அது வித்தாக உருப்பெற்றதோ புவியின் ஈர்ப்பின் துணையை வைத்து அதற்குண்டான சத்தைக் கொடுத்து அதைச் செடியாக வளர்க்கின்றது. அது சந்தர்ப்பம்.

நாம் நல்ல குணங்களுடன் இருந்தாலும் பிறருடைய உணர்வுகளைக் கவர்ந்து அவர்களுக்கு உதவி செய்கின்றோம். அவர்கள் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு நம்முடைய எண்ணங்களுடன் கலந்து உயிரணுக்களாக மாறும் பொழுது புதுப் புது குணங்களாக உருவாகின்றது.

ஒருவரைப் பார்த்து… இவர் நேற்று நன்றாகப் பேசினார் இன்று மோசமாகப் பேசுகின்றார் என்போம். அதே போல்… நேற்று மோசமாக இருந்தார்… இன்று நன்றாகப் பேசுகிறார் என்று சொல்வோம்.

ஏனென்றால் அவர் அடிக்கடி யாரிடத்தில் அதிகமாகப் பழகுகின்றாரோ அந்த உணர்வின் இயக்கங்கள் அவருக்குள் வளர்ச்சி பெறுகின்றது. அத்தகைய அணுக்கள் வளரப்படும் போது அதற்குத் தக்கவாறு தான் அவருடைய மணங்கள் மாறிச் சொல்களும் வெளி வருகின்றது.

ஆரம்பத்தில் எல்லாவற்றையும் யாம் பொதுவாகச் சொல்லிக் கொண்டு வந்திருந்தாலும்
1.அதை எப்படி உங்களுக்குள் இணைத்துக் கொடுப்பது…? என்கிற வகையில் முதலிலே சொல்லவில்லை.
2.பொது இடத்திலே (PUBLIC) அதைப் பெற முடியாது… அப்படிக் கொடுக்க முடியாது.
3.குருநாதர் உடலில் விளைந்த அந்த அருள் உணர்வுகள் எனக்குள் இருக்கிறது.
4.அதைப் பெற்று விளைவித்து உங்களிடம் திரும்பச் சொல்லும் போது உங்களுக்குள் அதை இணைத்துக் கொண்டு வர முடிகிறது.
5.அதற்குத் தான் இங்கே சிதம்பரத்திற்கு உங்களை எல்லாம் வரச் சொல்லித் தெளிவாக்குகிறோம்.

அப்பொழுது… குருவால் பெற்ற உணர்வுகள் எனக்குள் விளைவதும்… அடுத்து அது உங்களுக்குள்ளும் விளையத் தொடங்கும்.

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”

 

விஞ்ஞானி ஒரு பொருளைச் செய்கிறான் என்றால்… அதிலே இயக்கம் தடைப்படும் பொழுது
1.அந்தத் தடைக்குண்டான காரணத்தைக் கண்டறிவான்.
2.அதை நீக்க முயற்சி எடுப்பான்.

ஆனால் தொழில் செய்து கொண்டுள்ளவர்கள் அதைச் சரியாக இயக்கவில்லை என்றால் “எல்லாம் போய்விட்டது… என்ன செய்வது…?” என்று விட்டு விடுவார்கள். பின் அதைத் தெரிந்தவர்கள் வந்து தான் சரி செய்ய முடியும்.

இதைப் போல
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானத்தின் உணர்வுகளை அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை பதிவான பின்…
2.அந்த நினைவைக் கொண்டு வந்தால்…
3.வாழ்க்கையில் வரும் எந்தக் குறைகளோ அதை நீக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெறுகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் காடு மேடல்லாம் அலையச் செய்து… ஒவ்வொன்றும் எப்படி உருவானது…? என்று அந்த அகஸ்தியனைப் பற்றிக் கடைசி வரையிலும் கொண்டு வந்து… துருவன் அகண்ட உலகத்தைக் கண்டபின் இந்த உணர்வுகள்
1.“உலகம் எப்படி உருவானது…?” என்ற நிலையைக் காட்டப்படும் பொழுது என் நினைவுகள் இழந்து விட்டது.
2.”விட்டு அடித்தால்” (அந்த நேரத்தில் குருநாதர் எம்மை அடிக்கின்றார்) என் உடலில் “ஜிர்ர்…ர்ர்…” என்று சுருதி ஏறுகின்றது.
3.அவரின் நினைவுகள் வருகிறது… மற்ற தீமைகளை அகற்றும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

இப்பொழுது நீங்கள் கூடச் சொல்லலாம். உங்கள் கஷ்டத்தை என்னிடம் சொல்லும் பொழுது எனக்கு “ஜிர்ர்…ர்ர்…” என்று கோபம் வரும். அந்த உணர்வு என்ன செய்கிறது…?

1.நீங்கள் சொல்லக்கூடிய கஷ்டம் எனக்குள் புகாதபடி முதலிலே தடைப்படுத்துவது.
2.தடைப்படுத்திய பின் அதே உணர்வின் தன்மை தீர்க்கப்படும் பொழுது
3.அவன் அறியாது இடும் சாப அலைகளை உணர்வான்… அவன் நொறுங்கிப் போவான் என்ற நிலைகளைச் சொல்வது.
4.இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படும் பொழுது… “கஷ்டம் என்று சொல்பவருடைய” உணர்வின் வேகத்தைக் கூட்டுவது.

அதாவது…
1.கஷ்டமான உணர்வுகளை எனக்குள் வராது தடுப்பதும்
2.உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு நான் அழுத்தமாகச் சொல்லும் பொழுது
3.எதைக் குறை கூறுகின்றாரோ அவருடைய நினைவைக் கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது
4.“இந்த உணர்வுகள் ஆழமாகப் பதியும்…! சொல்வோர் உணர்வுகளில்…!”
5..அடுத்து… யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அங்கே நல்லதாக வளர்ச்சி பெறும்.

ஆகவே… “யாம் வெளிப்படுத்தும் இந்த வேகத் துடிப்பு” யார் எதைச் செய்தாலும் உடனடியாக அதை நல்லதாக மாற்றும்.

ஸொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனால் இதைப் பார்த்த பின்… என்னடா…? சாமிக்குக் கோபம் வராது என்று சொல்கின்றார்கள். சாமிக்கே இங்கே “இப்படிக் கோபம் வருகிறது என்று…!”

“எனது கோபம்” எதைத் தடுக்கிறது…? தீமைகள் உங்களுக்குள் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பாக வருகின்றது.

ஆனால் “உங்களுடைய கோபமோ…”
1.மற்றவர்கள் எந்தத் தீமையைச் செய்தாரோ அந்த தீமையே உங்களுக்குள் விளைந்து
2.அவர்களைப் பொசுக்க வேண்டும் என்ற உணர்வாக வருகின்றது.

மீண்டும் தெளிவாக்குகின்றேன்…! தீமை எனக்குள் வராது தடுப்பதும்… அந்த நினைவாற்றல் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பை அருள் மகரிஷிகள் உணர்வுகளைச் சொல்லித் தீமைகள் வராது தீமை செய்வோர் எவரோ அவர்கள் உணர்வார்கள் என்று சொல்லப்படும் போது…
1.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அங்கே திருப்பம் வரும்.
2.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற உணர்வுகள் வரும் பொழுது திரும்பும்.

ஆனால் நம்முடைய உணர்வுகள் (தியானம் செய்த) அங்கே பாய்ச்சப்பட்டு… அவன் அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற வரிசைத் தொடரைச் செய்யப்படும் பொழுது சிறுகச் சிறுகப் போய் அவன் உடலிலே விளையும்.
1.தீமைகளின் பாதிப்பால்… திரும்ப நன்மையை எண்ணி ஏங்குவான்.
2.அப்பொழுது நாம் இங்கே எண்ணி… அது யாரோ… அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கலந்து வெளியிட்டது அங்கே சென்ற பின்…
3.அவர்களுக்கு ஒரு “திருப்புமுனையாக” மாறும்.

அவர்கள் திரும்பி அதை ஏங்கிப் பெறும் அந்தத் தகுதி ஏற்பட்டால் அங்கே வருகின்றது. இல்லை என்றால் என்னதான் சொன்னாலும் அங்கே எடுபடாது.

காரணம்…
1.விஷத்தால் ஒடுங்கப்படும் பொழுது தப்பிக்கும் உணர்வுகள் வருகின்றது
2.தப்பிக்க ஏங்கும் நிலையில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவான நிலையில்
3.”அதிலிருந்து விடுபட வேண்டும்” என்ற உணர்வை நாம் கூட்டக் கூட்ட
4.இந்த உணர்வுகள் அங்கே மறைந்திருந்து தன் (அவர்கள்) உணர்வை மாற்றி அது திருப்புமுனையாக மாறும்.

அதனால் தான் சில நேரங்களில் உங்களிடம் யாம் கோபமாகப் பேசுவது.

ஆனால் வேறு விதமாக இதை எடுத்துக் கொள்கின்றார்கள் சாமிக்கே இப்படிக் கோபம் வருகிறது… சாமிக்குக் கோபம் வரலாமா…? இப்படிப் பேசுகிறார் என்று…!

1.என் கோபம் யாரையும் கெடுதலாக ஆக்காது.
2.தீமையான உணர்வுகள் உள்ளே போகாது தடுக்கும்.
3.இந்த உணர்வின் தன்மை அழுத்தமாகப் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வுகளை இயக்காது தடைப்படுத்தும்.

குருநாதர் அவருக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் “நான் அடி வாங்க வேண்டி வரும்…” என்னை அடித்த பின் அவர் சிரிப்பார். அப்புறம் விளக்கம் சொல்வார்.
1.உனக்குள் அந்தக் கெட்டது வராமல் இருப்பதற்காகத் தான் நான் கோபித்தேன்
2.என் உணர்வு உனக்குள் புகுந்து… கெட்டது நுழைய விடாது பாதுகாக்கும் என்பார்.

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய நிலைகளில் (நீங்கள்) கோபமாகப் பதிவு செய்து விட்டால்… இந்த உணர்வின் தன்மை எதிரியாகக் கருதி விட்டால் எதிரியின் தன்மையாகத் தான் வரும்.
1.ஆனால் அந்தக் கோபத்தின் தன்மை (சாமியின் கோபம்)
2.தன் இருளை நீக்க உதவும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தால் இருளை நீக்கும்.

ஆகவே ஒவ்வொருவரும்
1.எதை இணை சேர்த்து
2.எதனுடன் கொண்டு வந்தால் எதன் நிலை வருகின்றது…? என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தீ (நெருப்பு) சுடுகின்றது. அந்தத் தீயை வைத்துத்தான் பல ஆக்கப் பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கின்றோம். அந்த உணவுப் பொருள் சுடச் சுட வெந்து வருகிறது.

ஆனாலும் அதை அப்படியே சூடாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆசை வருகின்றது…! கையை வைத்தால் சுரீர் என்று சுடுகின்றது. இருந்தாலும் அதை ஆற்றி ஆற்றி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அப்படிச் சாப்பிடுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது சில மோதல் தன்மை வரும்.
2,அது நன்மை செய்யும் சக்தியாக வருகிறது என்பதை உணர்தல் வேண்டும்.