தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

 

உதாரணமாக நாம் ஒரு இரும்புக் கம்பியைக் காய்ச்சுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.. அதைக் கையிலே பிடிக்கிறோம் என்றால் அதன் வழி சூடு வந்துவிடும்.
1.அந்தச் சூடு கைக்கு வராதபடி ஒரு துணியைச் சுற்றினால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம்.
2.மனிதன் தான் அந்தச் சூடு தாக்காதபடி இதைச் செயல்படுத்துகின்றான்.
3.இதே மாதிரி ஒரு வேதனைப்படும் உணர்வு நம்மைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் அல்லவா.

காரணம் அந்த வேதனை மீண்டும் நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.

பார்க்கிறோம் அல்லவா எத்தனையோ நல்ல பேரை…! எல்லோருடைய கஷ்டத்தையும் கேட்டு அதனால் வேதனைப்படுகின்றார்கள்.

எல்லோருக்கும் நன்மை செய்தேனே… எனக்கு இப்படி இருக்கிறதே… கடவுள் என்னைச் சோதிக்கின்றானே என்று கடவுளைத்தான் திட்டுகின்றோமே தவிர ஏதாவது நம்மால் மாற்றிக் கொள்ள முடிகின்றதா…?

1.ஆனால் இந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றிக் கொள்ள முடியும். அதற்குச் சக்தி தேவை.
2.ஏனென்றால் இது எல்லாம் உங்கள் அனுபவத்தில் இருக்கும்…
3.ஞாபகப்படுத்தும் போது அந்த உணர்ச்சிகள் வரும்… அப்பொழுது பழைய நினைவுகள் வருகின்றது
4.அதனுடன் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டு வருகின்றேன்.
5.உங்கள் குணங்களில் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை நீங்கள் பிரித்துப் பார்க்கக் கூடிய நிலை வேண்டும் என்பதற்குத்தான்
6.இதைச் சொல்லி கொண்டு வந்து இணைக்கின்றேன்.

அதையும் நினைக்கின்றீர்கள் இதையும் சேர்த்து இணைத்தவுடன் என்ன செய்கின்றது…?

வேதனைகளைக் குறைக்கும். அப்பொழுது வேதனையான உமிழ் நீர் மாறுவது பலம் குறைந்து நல்ல சக்திகள் கூட வந்து நீங்கள் சாப்பிடுகின்ற ஆகாரத்தை நல்ல முறையில் ஜீரணித்து இரைப்பையில் வரப்படும் பொழுது “நமக்குக் கோளாறு செய்யாது…”

அந்த நிலையைத்தான் உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.

ஆனால் இப்பொழுது நமது வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வே வரப்படும் பொழுது… வரிசையில் வந்து…
1.கடைசியில் உடல் உறுப்புகள் குறைந்து உடல் குறைந்து
2.ஆளே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றது.

இத்தகைய நிலையில்… உயிர் சென்றவுடன் என்ன ஆகிறது…? விஷத்தை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது இதை மாற்ற வேண்டும் அல்லவா.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் தீமையை நீக்கக்கூடிய அணுக்களை விளைய வைத்திருக்கின்றார்கள் நாம் குழந்தை பிறக்க ஆசைப்படுகின்றோம். அவர்கள் உணர்வின் தன்மை ஒளியின் உடலாக இரண்டு உயிரும் ஒன்றாகக்கூடிய நிலையை ஆசைப்பட்டார்கள்.
1.அவர்கள் உருவாக்கிய குழந்தைதான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது
2.அந்தக் குழந்தையில் ஒன்றை எடுத்துக் கொண்டால் தான் நமக்குச் சரியாக இருக்கும்
3.அதை வளர்த்தோம் என்றால் நமக்கு ஞானத்தை ஊட்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனம் ஒன்றி அந்த பேரருள் பெற்று பேரொளி என்ற நிலையாக அடைகின்றார்கள்.

அந்தச் சக்திகளைத்தான் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

நாம் பற்ற வேண்டிய முக்கியமானது எது…? இந்த உடல் சீராக இயங்க வேண்டும். உடல் சீராக இயங்கவில்லை என்றால் என்ன ஆகும்.

குருநாதர் இமயமலைக்கு என்னை அழைத்துச் செல்கின்றார் நடந்து போய்க் கொண்டிருக்கின்றேன் மலை மாதிரி தெரிந்தது நடந்து சென்றேன் திடீரென்று திரும்பிப் பார்த்தால் திடு…திடு… என்று பனிப் பாறைகள் இடிந்து விழுகின்றது.

அதைப் பார்த்தவுடன்… “திரும்ப எப்படிச் செல்லப் போகின்றேன்…?” என்ற பயம் வருகின்றது.
1.பயம் வந்தவுடன் பலவீனமான எண்ணங்கள் வருகின்றது
2.குடும்பத்தில் பையன் என்ன செய்வான்…?
3.நாம் போய் விட்டோம் என்றால் என்ன செய்வார்கள்…? என்ற எண்ணம் வருகின்றது.
4.போய்விட்டால் என்ன செய்வது…? என்ற மனம் வரப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.

வெறும் துண்டும் வேஷ்டியும் தான் கட்டி இருக்கின்றேன். அதைத் தவிர வேறு இல்லை.

ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி சக்திகளை அணுக்களில் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது குளிர் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பாதை இடிந்து விழுந்தவுடன் என்ன நடக்கின்றது…?

பயங்கரமான ஓசையாக வருகின்றது பயம் வராமல் இருக்குமா…? நான் நிற்கும் இடமும் விழுந்து விடுமோ…! என்ற பயம் வருகின்றது. வீட்டின் ஞாபகம் வருகிறது. கிர்ர்… என்று இருதயம் இறைய ஆரம்பித்துவிட்டது.
1.அப்புறம் வீட்டைக் கவனிப்பதா…? பையனை காப்பாற்றுவதா…?
2.சொத்து… இந்த உடலையே காக்க முடியவில்லை என்றால் பின் எதை வைத்துச் செய்வது…?

குடும்பத்தில் எல்லாம் தைரியமாகச் செய்கின்றோம். அடிக்கடி கோபமும் வேதனையும் அதிகமாகப் பட்டால் வாத நோய் வருகின்றது கை கால் இழுத்து விடுகின்றது நாம் எதைச் செய்ய முடியும்…?

பனிப் பாறையில் வைத்து இருத\யம் இறைத்தவுடன் நினைவுகள் மாறுகின்றது… அப்படி ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.

அப்பொழுதுதான் குருநாதர் காட்சி கொடுத்து மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற பாடலைப் பாடி வருகின்றார். பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? இப்பொழுது நீ போய்விட்டால் நீ எதை காக்கப் போகின்றாய்…!

1.கொஞ்ச நேரத்தில் நீ ஆசைப்பட்டதெல்லாம் சென்றுவிடுமே
2.மின்னலைப் போல மறைவதைப் பாராய் உன் ஆசை எல்லாம் மறைந்து விடுகின்றது.
3.எதிலே மடிந்தாயோ அங்கே தான் செல்வாய்.
4.ஆக நீ எண்ண வேண்டியது எது…?
5.அவர்களுக்கு அந்த அருள் பெற வேண்டும் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அங்கே வலுவாகும்.

ஆனால்… நான் சொல்லிக் கொடுத்த உயர்ந்த குணங்களை எடுக்கத் தவறினால் நீ எங்கே செல்கின்றாய்…? ஏனென்றால் அந்த இடத்தில் மன உறுதி கொண்டு வருவதற்காக இப்படி அனுபவத்தைக் கொடுக்கின்றார்.

அனுபவித்துப் பெற்ற அந்த உயர்ந்த சக்திகளை நீங்களும் பெற முடியும். குருநாதரிடம் கஷ்டப்பட்டு அனுபவித்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நிவர்த்திப்பதற்குச் சக்தி கொடுக்கின்றேன். வீட்டிலிருந்தே அதைப் பெற முடியும்..

ஆனால் நான் காடு மேடெல்லாம் அலைந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது வீட்டில் இருந்தே அதை நீக்குவதற்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றேன்.

கொடுத்தாலும் கூட… நானும் தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றேன்
1,எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது என்று
2.இதையே சொல்லிக் கொண்டிருந்தால் எது வரும்…? அதுதான் ரிமோட் பண்ணிக் கொண்டே இருக்கும்.

சிக்னல் கொடுக்கின்றார்கள்… கரெக்டாக மாற்றிக் கொடுக்கின்றது. அந்த சிக்னலை நிறுத்தி விட்டால் மறுபடியும் சிவப்பு என்றால் சிவப்பைத்தானே கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
1.அப்போது நமக்கு அந்த உணர்வு டேஞ்சரான… சோர்வான உணர்வைத் தான் ஊட்டும்.
2.இது எல்லாம் நன்றாகத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

மலை மீது வைத்து எனக்கு அனுபவத்தைக் கொடுத்து அதைத் தெளிவாக்குகின்றார்.
1.எப்படி இருக்கின்றது…?
2.அப்போது எடுக்க வேண்டிய முறை எது…?
3.அவர் கொடுத்த சக்தியை ஏன் எடுக்க முடியாமல் போனது…?
4.ஏன் அந்த மாதிரியானது…? என்று காண்பிக்கின்றார்.

இதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறைகள் வந்தால் நீங்கள் அதை நீங்கள் மாற்றப் பழக வேண்டும் அல்லவா உங்களுக்கு இந்தப் பவரை எடுப்பதற்குச் சக்தியைக் கொடுத்திருக்கின்றோம்.

அந்தக் கண் கருமணிகளில் பதிவாகி விடுகின்றது. அதன் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சக்திகளைச் செலுத்தும்படி சொல்லுகின்றோம்.

ஆனால்
1.சோர்வான எண்ணங்கள் எடுக்கப்படும் பொழுது
2.அந்தச் சோர்வுக்குத் தக்கவாறு சோர்வடைந்து கொண்டே செல்கின்றோம்.

பையனுக்குக் குறைபாடு என்றால் அவனுக்கு நல்ல நிலை வரவேண்டும் எண்ணினால் அவனுக்கும் உற்சாகம் வருகின்றது நமக்கும் தெளிவாகின்றது நன்றாக இருக்கின்றோம்.

ஆக நமக்குள் காப்பாற்றப்பட வேண்டியது எது…?
1.உங்களுக்கு அந்தப் பவரைக் கொடுக்கின்றோம்.
2.அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்

 

கோபத்தின் உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது நமது நல்ல அணுக்களுக்குள் அது ஊடுருவி நல்ல உணர்ச்சிகளை மாற்றி “ஓமுக்குள் ஓ…ம்…!” பிரணவத்தின் தத்துவத்தை அது மாற்றி விடுகின்றது.

இப்படி மாற்றிக் கொண்ட உணர்வுகளால்…
1.உடலுக்குள் இருக்கும் மற்ற உணர்வுகள் அனைத்தும் இதை நுகர நேர்ந்தால் இரத்தக் கொதிப்பாக ஊடுருவுகின்றது.
2.அதன் மூலம் நல்ல அணுக்கள் இட்ட மலங்கள் மடிய நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட நிலையும்
3.கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வுகளும் நம் இரத்தங்களிலே கலந்து
4.இதன் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே ட்ரான்சாக்சன்…! அதாவது உடலுக்குள் பரவச் செய்யும் உணர்வுகள் தான் அது.

எப்படி ஒரு ட்ரான்சிஸ்டர் மோதியபின் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை இணைத்து மைக்கிற்கு அனுப்பி அதன் வழி சப்தங்களை எப்படி நாம் கேட்கின்றோமோ இதைப் போல தான் உணர்வின் ஒலிக்கற்றைகளை நமக்குள் பரப்பப்படும் பொழுது
1.கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாதபடி ஓங்கிச் சப்தமிடுவதும்
2.சத்தமான பேச்சுகளைப் பேசுவதும் கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் செயல்களை நாம் செயல்பட ஆரம்பிக்கின்றோம்.

அப்போது அதைக் கேட்போர் இதைக் கண்டபின் வெறுக்கும் தன்மை வருகின்றது. வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க கோபத்தின் தன்மை எல்லை கடந்தே செல்லும்.

யார் மீது வெறுப்பு அதிகமாகின்றதோ அவர்களை நினைத்து நினைத்து கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து சென்று நமது உடலில் கடுமையான நோயாக உருவாகி விடுகின்றது.

பின் சிந்திக்கும் நிலைகள் இழந்து… அழுத்தம் அதிகமாகி விட்டால் அதனால் இரத்த அழுத்தங்கள் அதிகமாகும் பொழுது கண்ணுக்குச் செல்லும் இரத்தத்தின் வழி இந்த உணர்வின் தன்மை இயக்கம் கண்ணுக்குள் இரத்தம் அதிகரித்து விட்டால் “கண்கள் சிவந்து விடும்…”

சிவந்து விட்டால் கொடூர உணர்வாகத்தான் தெரிய வரும். சில பேரைப் பார்த்தோம் என்றால் அந்த கோபத்தின் கனலைக் கண்களிலே கண்டு விடலாம்.

சிவப்பு நிறமாக அதன் உணர்வுகள் இயக்கும். எதைக் கண்டாலும் எதைப் பார்த்தாலும் படித்தாலும் வெறுக்கும் தன்மையாகி… அழிக்கும் உணர்வாகவே வந்துவிடும்.

1.கோபம் வந்துவிட்டால் தன் பிள்ளையானாலும் அடிக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்துவிட்டால் கண்ணிலே கண்டாலே தட்டியெறியச் செய்யும்… நல்ல பொருள்களை உடைக்கவும் செய்வோம்.

சிந்தனைகள் குறைந்து புலி மற்றதை இரக்கமற்றுக் கொன்று புசிப்பது போன்று நல்ல உணர்வுகள் தென்பட்டாலே… மகிழ்ச்சியாக யாராவது சிரித்தாலோ… அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுப்பு என்ற உணர்வுகளே தோற்றுவிக்கும்.

அதுதான் நம்மை இயக்கும். இது எல்லாம் காரணம் யார்…?
1.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
2.அந்த உணர்ச்சிக்கொப்ப அதை இயக்குவது நம் உயிர்.

ஆகவே இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு
1.அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கும் சந்தர்ப்பங்களையும்
2.அதை வளர்த்திடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி உயிர் அதை இயக்கும்படி செய்து
3.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியின் தன்மையாக ஞானிகள் மகரிஷிகளைப் போன்று உருவாக்கி
4.நாம் தெளிந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுதல் வேண்டும்.

கோபம் வரும் பொழுது அதைத் தனக்குள் வளர்த்து விடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து அருள் வழியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தீமையைக் காணும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்

தீமையைக் காணும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்

 

இன்றைய நாளில் உங்களுக்கு ஏன் இதை ஞாபகப்படுத்துகிறேன் என்றால் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் “இன்று சந்திரன் மிகவும் பிரகாசமாக இருக்கின்றது…”

1,சந்திரனுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்கும் பருவம் பெறுகின்றது.
2.வெள்ளிக் கோளின் உணர்வுகளும் மற்ற கோளின் தடையில்லாது வருகின்றது.
3.இத்தருணத்தில் இங்கே துருவ தியானத்தில் எடுக்கும் உணர்வுகள் இருளை அகற்றும் நிலையும்
4.அருள் வழி வாழும் உணர்வுகளும் தெளிந்து வாழும் உணர்வுகளும் நமக்குள் கூட்டுகின்றது.

அதனைப் பருகுவதற்குத் தான் உபதேசிப்பது.

அதே சமயத்தில் இயற்கையில் நாம் விளைந்தாலும் செயற்கையில் தீமையின் உணர்வுகளை எவ்வாறு நுகரச் செய்கின்றது…? செயற்கையினால் நம் உடலுக்குள் பகைமை உணர்வுகள் எவ்வாறு வருகின்றது…? பகைமை எப்படி உருவாகின்றது…? இது போன்ற நிலைகள் மனிதனின் வாழ்க்கையில் வருவதிலிருந்து தடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

காரணம் 2000க்கு மேல் கடும் விஷத்தன்மைகள் பரவும் நிலையில் அதை நுகரும் தன்மை வருகின்றது. அதை நுகரும் தன்மை வந்தாலோ விஷத்தன்மைகள் கூடி மிகவும் மிருக நிலையிலான உணர்வுகளுக்கு நாம் சென்று விடுவோம்.

அதிலிருந்து நம்மைக் காக்கத் தீமை உணர்வுகள் வராதபடி தடுக்க இன்றிலிருந்து நாம் தயாராக வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு குடும்பத்திலும் தனக்குள் பருகி
2.உலக மக்கள் சேமமாக இருக்க வேண்டும் என்றும் உலகில் நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்றும் நல் பயன் பெற வேண்டும் என்றும்
3.உலக இருளை அகற்றிடும் அருள் சக்தி பரவ வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் தெளிவான நிலைகள் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மை நாம் நுகர வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியினை நமக்குள் பெருக்கி இருள் சூழும் நிலைகளைத் தடுத்து மெய்ப்பொருள் காணும் உணர்வை வளர்த்து நம் மூச்சும் பேச்சும் அத்தகைய நிலையாக இந்த உலகில் பரவச் செய்தல் வேண்டும்.

எத்தகைய கடுமையான தீமையானாலும் நோயானாலும் துருவ தியானத்தின் மூலம் பெற்ற ஆற்றலைப் பெருக்கி… அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.எப்பொழுதெல்லாம் தீமையைக் காணும் சந்தர்ப்பம் வருகின்றதோ
2.அந்தச் சந்தர்ப்பத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி தீமைகளை அகற்றி
3.அந்த இருளை அகற்றி ஒளி என்ற உணர்வை ஆட்சி புரியும் தன்மையாக
4.தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

ஆகவே அத்தகைய சீர்படும் உணர்வினை நாம் ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை வைத்தார்கள் ஸ்தபதியர்

சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை வைத்தார்கள் ஸ்தபதியர்

 

ஓர் உணர்வின் தன்மை கொண்டு ஒரு கோளின் உணர்வை அதிகரித்து இந்த மனித உடலில் வாழ்ந்தால்
1.அந்தக் கோளுக்கு மாற்றாக நல்ல உணர்வின் தன்மை இணைந்து வாழும் உணர்வின் கணக்கிற்கொப்ப நட்சத்திரங்களின் திசை நோக்கி
2.எந்த கோள்களுக்கும் சிக்காது அதன் உணர்வின் நேர் பார்வையிலே
3.சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை இணைத்து வைப்பார்கள்.

அப்படி இணைக்கும் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் இணைப்பும் மற்ற கோள்களின் இணைப்பும் இந்த துருவப்பகுதியில் கவரும் உணர்வை அதற்கு நேராக ஆலயம் அமைத்து “தெய்வீகப் பண்பை நாம் பெற வேண்டும்” என்று வைப்பார்கள்.

ஏனென்றால் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பையும்
1.மற்ற வெள்ளிக் கோளின் உணர்வுகளையும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் இரண்டாகச் சேர்க்கும் நிலை வரும் பொழுது
2.அதன் ஒளிக் கற்றைகள் அது விரிவடைந்து அந்த ஆலயத்தின் அமைப்புக்கு
3.சூரியனுடைய நேர் பார்வையில் வரும் போது அதனை மாற்றி அமைத்து அது எதனைக் கவர்கிறது…? என்பதனை அளவுகோலிட்டு
4.முந்தைய காலத்தில் கணக்கிடும் தன்மைகள் வந்தது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கால்குலேட்டர் என்ற சாதனங்களை வைத்து மனிதன் சிந்தித்து நுகரும் தன்மை இல்லாது கால்குலேட்டர் வைத்து பதிவு செய்து அதன் மேல் ஞாபகப்படுத்தும் நிலையும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பதிவின் தன்மை கொண்டு ஒன்று ஒன்றுடன் மோதும் பொழுது ஒன்றின் உணர்வுகள் எப்படிக் கணக்கிடுகிறது…? என்ற நிலையில் கணக்கிடுகின்றார்கள்.

இப்படிச் சென்றவன் இதிலே தான் நாட்டம் செல்கின்றதே தவிர மெய்ஞானிகள் உணர்வின் நிலையும் பிரபஞ்சத்தின் உணர்வின் ஆற்றலையோ கணக்கிடும் முறைப்படுத்தி உலக பிரபஞ்சத்துடன் இயக்கும் நிலை காலத்தால் மறைந்து விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கி விட்டது. அதன்வழி கம்ப்யூட்டரை இயக்கும் நிலை வந்து விட்டது.

நம் உயிர் எலக்ட்ரிக் உடலுக்குள் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. மாற்றிய உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் எண்ணுவுமே என்றால் நமது உணர்வுக்கும் நுகர்ந்த உணர்வுக்கும் எதிர்நிலை வரப்படும் பொழுது அதன் உணர்வின் அறிவைப் பிரித்துக் காட்டுகின்றது.

அதே சமயத்தில் கம்ப்யூட்டர் இதைப் போன்ற நிலையில் இயக்கினால் அதனை உடனே மாற்றி அமைக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள். கணக்கை மாற்றி விடுகின்றனர்.

இதைப்போல
1.நமது உயிரின் தன்மை எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது
2.இதனை துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

இதைப் போல் மனிதனின் நிலையில் ஓர் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மாற்றமாகும் பொழுது அதற்குத் தக்க நல்ல குணங்களின் உணர்வுகளைப்
1.பிறிதொரு எதிர் நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட நிலையில் இருந்து
2.தெய்வம் என்று காரணப் பெயராக வைத்து அந்தத் திசை நோக்கி நாம் எண்ணும் பொழுது அதன் உணர்வுகள்
3.வெள்ளிக் கோளின் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளும் மற்ற கோள்கள் நிலைகளை இணைந்து
3.இந்த உணர்வு மூன்றும் ஒன்றாகச் சேர்க்கும் அத்தகைய நல்ல உணர்வை உருவாக்கும்
4.இத்தகைய உணர்வுகள் பரவும் பொழுது அந்தத் திசை நோக்கி வைப்பார்கள்.

அதை நோக்கி நாம் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு அது கவர்ந்து வரும் திசையில் நோக்கும் பொழுது “அந்த உயர்ந்த குணத்தின் உணர்வுகள் நமக்குள் கிடைக்கும் படி வைத்தார்கள்…”

இது எல்லாம் வானவியல் சாஸ்திரத்தைக் கடந்த காலம் இயற்கையின் உண்மை உணர்வு கொண்டு உணர்வினைத் தனக்குள் மனிதனால் பதிவு செய்து கொண்ட உணர்வின் தன்மை கொண்டு… கணக்குகளை மனக்கணக்காக வைத்து அந்த மனக்கணக்கின் உணர்வு கொண்டுதான் தெளிவாக்கி தெளிந்த உணர்வு கொண்டு செயலாக்கி
1.அதன்படி வான இயலின் உணர்வின் தன்மைக்கொப்ப ஆலயங்களை அமைப்பதும் அதன் வழி செயலாக்கமும்
2.அன்று ஸ்தபதியர் என்று அவர்களைச் சொல்வார்கள்.
3.இப்படிக் கணக்கிட்டுச் செயல்படுத்தியவர்கள் உலக நிலையில் பெரும் கொண்ட மெய்ஞானிகளாக இருந்தனர்.

மெய்யைப் பெறுவதற்கு செயல்பட்ட இந்த நிலைகள் எல்லாம் இக்காலங்களில் பிறிதொரு தீமையின் நிலைகளால் மறைந்து விட்டது.

சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் தொடர் வரிசை

சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் தொடர் வரிசை

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றோமோ…
1.உடலை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்று அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால்
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நம்முடன் பழகியதை எண்ணி “ஐயோ… நல்லவராக இருந்தார்… இங்கே எல்லாம் வந்தார்… இப்பொழுது போய்விட்டாரே…!” என்று எண்ணுவதை விடுத்துப் பழக வேண்டும்.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் மனித வாழ்க்கையின் துன்பத்தை அவர் கடந்தார்… இனி பேரின்பப் பெரு வாழ்வு அவர் பெற வேண்டும்…! என்ற இந்தப் பேரின்பத்தைத் தான் எண்ண வேண்டும்.

1.உடலில் வாழ்ந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்தார்
2.உடலை விட்டு அகன்ற பின் இனித் துன்பமில்லா ஏகாந்த நிலையை அவர் அடைய வேண்டும்
3.அவர் அருள் ஒளி பெறுதல் வேண்டும்
4.உலகில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர் அருளானந்தம் பெற வேண்டும்
5.அந்த ஆன்மா ஏகாந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உடலிலே நீடித்த நாள் வாழ்ந்தவர் எவரும் இல்லை. ஆகவே நாம் செயல்படுத்த வேண்டியது துன்பத்தைக் கடந்து அவர் செல்கின்றார்… பேரின்பத்தை அவர் அடைய வேண்டும் என்பது தான்.

அவர் உணர்வு நமக்குள் இருப்பதால் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.
1.நமக்குப் பின்னும் இதே போன்று… “பின் உள்ளோர்” நாம் உடலை விட்டுப் பிரிந்த பின்
2.நாம் செய்வது போன்று அவர்கள் செய்தார்கள் என்றால் நாமும் எளிதில் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.
3.அந்தத் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்

அதற்குத் தான் கூட்டமைப்பாக அமைத்துள்ளோம்.

ஏனென்றால் “ஒரு மனிதன் தனித்த நிலைகள் அங்கே செல்ல முடியாது…!” ஒன்றுபட்ட உணர்வினை இயக்கப்பட்டுத் தான் செயல்படுத்த முடியும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் எப்படி விண் செலுத்துகின்றோமோ… இது போல நம்முடன் தொடர் கொண்டவர்கள்… நம்முடன் இணைந்தவர்கள்… கேள்வியுற்றபின் அங்கே செலுத்த வேண்டும்.
1.இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று விடாது அருள் ஒளி என்ற நிலைகள் உந்தப்பட்டு
2.என்றும் ஏகாந்த நிலை என்ற ஒளியின் சரீரத்தை நாம் பெற இது உதவும்.

ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழ்கின்றது… ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் உணர்வு ஒன்றுதான் நாம் வாழுகின்றோம்…!

ஆகவே இதை வழிப்படுத்தி நாம் செயல்படுத்துதல் வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவருமே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

 

ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதியுங்கள் அவர்கள் உடலையும் கோவிலாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் அவருடைய கண்களைக் கண்ணனாக மதியுங்கள்.

அவர்களை மதிக்கப்படும் பொழுது நமது கண்ணை மதிக்கின்றோம் நமது உயிரை மதிக்கின்றோம் உடலை சிவம் என்று மதிக்கின்றோம் அருள் ஞானிகள் உணர்வு நமக்குள் வரும் பொழுது அந்தக் கணங்களைக் கணபதி என்று மெச்சுவோம். ஆறாவது அறிவை முருகன் என்று மதிப்போம்.

1.அருள் ஒளி கொண்டு தீமைகளை அகற்றிடும் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்
2.அப்படி நாம் எண்ணினோம் என்றால் ஒரு மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்வை மாற்றிட முடியும்.
3.அவர் மேல் வரும் பகைமைகளைத் தடுத்திட முடியும்

ஒவ்வொரு உயிரையும் ஈசனாகவும் கண்ணைக் கண்ணனாகவும் உடலைச் சிவனாகவும் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு அந்த வினைக்கு நாயகனாக மனித உடல் என்றும் தீமைகளை அகற்றும் சக்தியாக மனித உடல் பெற்றதை ஆறாவது அறிவை முருகன் என்றும் எண்ணுங்கள்.

நம் எண்ணமே இராமன் என்றும் உயிரை ஈசன் என்றும் உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் உயிரால் ஈர்க்கப்படும் காந்தத்தை லட்சுமி என்றும் நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வே நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது என்ற நிலையை
1.ஒவ்வொரு மனிதனையும் அத்தகைய சக்தி வாய்ந்தவர்கள் என்று எண்ணினால் நமக்குள்ளும் அதைப் பெறுகின்றோம்.
2.நீங்கள் வாழ வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
4.உங்கள் உயிரை மதிக்கின்றேன் உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன் உங்கள் கண்ணைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.இப்படி எண்ணும் பொழுது கண்களால் அவர்களைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பு வருவதில்லை.

ஒருவர் தவறான நிலைகளைச் செய்து விட்டால் நாம் பார்த்தவுடன் கண்கள் சிவந்து விடுகின்றது. கண்ணனுக்கே நாம் துரோகம் செய்கின்றோம் அந்த உணர்வினை நுகர்ந்து விட்டால் உடலான சிவனுக்குத் துன்பத்தை உருவாக்குகின்றோம்.

ஆகவே நம் ஆறாவது அறிவைத் தெளியும் மனதினை… வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது முருகனுக்கே நாம் துன்பத்தை உருவாக்குகின்றோம் என்று நினைவில் வையுங்கள்.

அருள் ஞானம் பெற்ற இந்த உணர்வு கொண்டு அண்டம் பிண்டத்திற்குள் உருப்பெற்ற உணர்வின் சக்தியை நீங்கள் தெளிந்து ஒவ்வொரு மனிதனையும் இதைப் போல எண்ணி ஏங்குங்கள். மதம் இருக்காது இனம் இருக்காது மொழி பேதம் இருக்காது

1.ஒவ்வொரு நொடியிலும் உங்களை நான் நேசிக்கும் பொழுது என்னை நேசிக்கும் பண்பு வருகின்றது.
2.நான் உங்களைக் கடவுளாக மதிக்கும் பொழுது என்னை நீங்கள் கடவுளாக மதிக்கின்றீர்கள்.
3.கடவுள் என்ற தன்மை வரும் பொழுது பகைமைகள் அகற்றப்படுகின்றது.

குறைகளைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே பெற வேண்டும் ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும். அந்த உடலின் தன்மை சிவனாக வீற்றிருக்கும் அந்த ஆலயம் நல்ல நிலை அடைய வேண்டும் நல்வழி காட்டும் கண்ணன் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அந்தச் சக்தி நமக்குள்ளும் பெருகுகின்றது

ஆகவே
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்.
2.உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் செலுத்துங்கள்
3.பேரின்பப் பெரு வாழ்வு அடையுங்கள்
4.என்றும் பிறவியில்லா நிலை அடைய இந்த வாழ்க்கை அது உதவும்.
5.அருள் ஒளியைப் பெறுங்கள்… அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை

கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை

 

கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம் உங்களிடம் இருக்கிறது என்ற உறுதி கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும்.
1.அவர் உணர்வுகள் உங்கள் உடலிலே உண்டு
2.அதன் வலுக் கொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்,

இப்பொழுது சாங்கியம் சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றார்கள்…?

கணவன் இறந்துவிட்டால் கணவனை மனைவி மறந்துவிட வேண்டும் என்பதை ஆதாரமாகக் காட்டிக் “கணவனை இழந்தவள்” என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு மாங்கல்யத்தைப் பறிக்கின்றார்கள். அங்கேதான் தவறு செய்கின்றார்கள்.

தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு கணவன் பால் அப்படி நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி தவறு செய்ய விடாது.

இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகள் செயல்படுத்தப்பட்டு “கணவனை இழந்தவள் இழந்தவள்” என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனை உணர்வைக் கொண்டு அந்த வேதனையால் பேய் மணமாக மாற்றி… இந்த உணர்வின் துணைகொண்டு தன் குடும்பத்தின் நிலைகள் கொண்டு அது செயல்படும்.

இறந்த பின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலில் சென்று பேய் உணர்வுகளைத் தான் ஊட்டி… அந்தப் பாசத்தால் அந்தக் குடும்பத்திற்கும் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர ஒளியின் சரீரம் பெற முடியாது… நல்வழி செல்ல முடியாது.

ஞானிகள் காட்டிய நிலைகளில்…
1.வசிஷ்டரும் அருந்ததி போன்று கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்றும் ஒன்றி மனிதனுக்குள் வாழ்ந்தால்
2.அருள் ஒளி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்று அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.அப்படிப்பட்ட உணர்வுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் தான் என்றும் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

இந்த உடலில் குறுகிய காலமே இருப்பினும் அது மனைவியின் உணர்வின் துணைகொண்டு வலு கொண்டு சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி அந்த வலுவினைச் சேர்த்து விட்டால் அதை நினைவு… அந்த விண்ணை நோக்கிச் செல்கின்றது மனைவியின் எண்ணம்.
1.அந்த உணர்வு கணவன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்ததோ
2.கனாக்களில் மகிழ்ச்சியின் உணர்வையே தோற்றுவிக்கும்.

அருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து கொண்டிருக்கும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விட்டால்… அவர் அருள் ஒளிச் சுடர் பெறும் நிலைகள் கொண்டு… நமக்குள் இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகளை நமக்குள் தோற்றுவித்து நம்மை அந்த எண்ணத்துடன் வாழச் செய்யும். நம் நினைவில் நம் மக்களை வாழ்த்தச் செய்யும்.

இல்லை என்றால் மாங்கல்யத்தைப் பறித்து விட்டால் இழந்து விட்டோம் இழந்து விட்டோம் என்று சர்வத்தையும் இழந்திடும் நிலைகள் கொண்டு வேதனை கொண்டு தான் வாழும் நிலை வரும்.

கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது
1.உங்களுடன் அவர் வாழ்கின்றார் என்ற நினைவு கொண்டு
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது.

அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் இதை ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாக வைத்து
1.என்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும்
2.அந்த அணுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.

அவர் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணி இதை போன்ற காலங்களில் சப்தரிஷி மண்டலங்களுடன் ஆன்மாக்களை இணைத்து விட்டால் இந்த நினைவு அங்கே செல்லும்.

நம் உணர்வுகள் இங்கே வளரும். அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும். அருள் ஒளிச் சுடராக மாற்ற நமது எண்ணங்கள் அந்த ஞானிகள் காட்டிய வழியில் செல்ல முடியும்.

ஆகவே கணவனை இழந்துள்ளோம் என்று எண்ண வேண்டாம். அவருடைய உணர்வுகள் உங்களுக்குள் உண்டு.

இதைப் போன்று இந்த உணர்வின் வலுக் கொண்டு இன்னொரு உடலுக்குள் அந்த ஆன்மா சென்று இருந்தாலும் அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் இந்த ஆன்மாக்களைத் தொடர்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
1.காலை துருவ தியானங்களில் செயல்படுத்துவீர்கள் என்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.
2.அவர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகின்றது
3.அவர் அருள் வழி பெறுகின்றார் ஒளியின் சரீரம் பெறுகின்றார்
4.அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும் நிலையும் ஒன்றி வாழும் உணர்வினை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

இதைப் போல மனைவியை இழந்தவர்களும் மாற்று மனைவி பெற்றாலும் தவறில்லை. ஆனாலும் முந்திய மனைவியின் உணர்வுகள் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த ஆன்மா முன் சென்றால் அந்த அருள் ஒளி கொண்டு இணைந்து வாழும் மற்ற மனைவிக்கும் அருள் கொடுக்கும்.
2.அதனால் மக்களும் அருள் ஒளி பெறும் தகுதியும் இந்த வாழ்க்கையில் இருள் சூழா நிலையும் உருவாகும்.

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

 

ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”

உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!

முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.

காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.

பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.

உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.

பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.

மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.

உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.

பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி – அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் – காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் – அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”

அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.

சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.

துவர் ஆடை கொண்டு ஞான நீர் அருந்த வேண்டும்

துவர் ஆடை கொண்டு ஞான நீர் அருந்த வேண்டும்

 

வியாசக பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து… கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட அந்த மாமுனிவர் யாரப்பா…?

இயங்கும் இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள்… அவற்றின் சம்பவங்கள்…
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்… வேகம் கொண்டிட்ட விவேகம்…
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால் செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி “உண்மையின் சக்தியே வெற்றி பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே “வானவியல் ஞான திருஷ்டி…!”

சத்தியமே விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும்… சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் “குருவே (உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக… ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால்… மனித எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக… நன்னெறி வழிகாட்டிய மகரிஷிகளின் உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.

கிருஷ்ண லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். “ஈஸ்வரரின் சொரூபத்தில்”
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட லீலைகள்.

“இறை சக்தி” தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே…
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.

கோபியர்களுக்குத் தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி… ஆத்மாவின் அருள்…
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்… காக்கும் தன்மைகள் அனைத்தும் உணர வேண்டும்.

உயர் ஞான வளர்ப்பின் சித்து… சித்தன் கண்ட செயலாகக் கொண்ட எண்ணத்தின் லட்சியம் எதுவோ… அந்த லட்சியத்தை வென்றுவிடும் திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…? என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக…
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் “கர்மா” என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.

அர்ஜுனன் கைக் கொண்ட “காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட… கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள் தெரிந்ததா…?
1.இலை மறைவு… காய் மறைவு… அன்றோ அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான்… அடைந்திடும் லட்சியம் கொண்டான்.

லட்சியம் மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள்… அதுவே “உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே “ஆரம் கொண்ட முத்துக்களப்பா…”

நீர் தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும்… அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது… உயிர் வாழப் பதைபதைட்ட “பீமன்” என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு… நீர் பருகிடும் அதி அவசரத்தால்… “பாலையின் நீரைப் பருகிட முடிந்திடுமோ…?”

1.நகுல மன உத்தியால் நீர் அருந்த… நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே “ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”

ஆடையில் நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல் நீங்குமப்பா. “ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!”