உடலைக் காக்கும் சக்தி சிவ தனுசு… உயிரான்மாவை ஒளியாக்கும் சக்தி விஷ்ணு தனுசு

உடலைக் காக்கும் சக்தி சிவ தனுசு… உயிரான்மாவை ஒளியாக்கும் சக்தி விஷ்ணு தனுசு

 

பரசுராமனுக்கும் சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது.

ஏனென்றால் “சிவ தனுசு” எனும் பொழுது
1.உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு
2.இந்த உடல் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே அந்த உடலின் உணர்வுகள் வருகின்றது,

ஆனால் “விஷ்ணு தனுசு” எனும் பொழுது தீமைகளை அகற்றி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது.
1.நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது
2/துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் “விஷ்ணு தனுசு” ஆகின்றது.

அதாவது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்றது.

அப்பொழுது தான் விஷ்ணு தனுசிற்கும் சிவ தனுசிற்கும் போர் முறை வருகின்றது.

ஏனென்றால்… சீதா என்றால் சுவை கொண்டது… மகிழ்ச்சி கொண்டது… மகிழ்ந்து வாழக்கூடியது… மகிழ்வான செயல்களைச் செய்வது…! மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது.

நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும் எந்தெந்தக் குணங்களை நமக்குள் பெற்றோமோ “அதைத்தான்…” அது நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.

உதாரணமாக…
1.நாம் கோபப்படுகின்றோம் என்றால் அந்தக் கோபமான நிலைகளை எடுத்துத்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த “சிவ தனுசு” உதவும்.
2.நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால் “இரு உன்னை நான் பார்க்கிறேன்…” எனும் எண்ணம்தான் நமக்கு வரும்.

இது பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற நம் உடலில் வளர்த்துக் கொண்ட “சிவ தனுசு…”

இப்படி நாம் கோபப்படும் பொழுதோ சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால் நம்மில் உருவான தனுசை எடுத்துத் தான் பயன்படுத்துகின்றோம். “தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று சிவ தனுசைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ அதற்கொப்பத்தான் அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால் அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களைப் புரிந்து கொள்வதில்லை.

“என் பிள்ளை…” என்ற நிலையில் இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ அதனின் உணர்வைப் பாய்ச்சித்தான் அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.

இதில் நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் “விஷ்ணு” வரம் கொடுத்து விடுகின்றார். பின் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது உயிர் நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது.

உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான் இந்திரலோகம் என்று காரணப் பெயர் வைத்தார்கள் ஞானிகள்.
1.இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும்.
2.குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுது தான் அணுக்கரு வெடிக்கின்றது.
3.அப்படி வெடித்தபின் அதன் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.
4.இப்படி உருவான அணு இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது.
5.உடலில் உருவான இவ்வணு தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்து எந்த இனச் செடியின் வித்தோ அதே இனச் செடியைத் தான் உருவாக்குகின்றது. கடைசியில் அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.

ஆகவே… நாம் சுவாசித்த உணர்வின் தன்மை அணுவாகி உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது…? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.

ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது இதற்கும் நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும் போர் என்ற நிலை நமது உடலில் நடைபெறுகின்றது.

அது சமயம் நாம் கோபத்தின் தன்மை கொண்டு தனுசைப் பாய்ச்சினோம் என்றால் அதனின் உணர்வின் கூட்டமைப்பு தன்னில் ஒரு படையையே உருவாக்குகின்றது.

சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது கோபம் அதிகமாகி… கோபக்காரர் என்ன செய்கிறார் என்றால் தன்னைக் காத்துக் கொள்வதற்கு “இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்ற கோப உணர்வு கொண்டு பிறிதொருவரைத் தாக்குகின்றார்.

1.கோபம் உள்ளவர் சிவ தனுசைத் தனக்குள் எடுத்துக் கொண்டு கோப உணர்வுகளைத் தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.
2.இதே போன்று வேதனை என்ற நிலை வரும் பொழுது வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.

“பரசுராம்…!” நாம் சுவாசித்த உணர்வுகள் எந்தக் குணமோ அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள் தான் வருகின்றது.

உதாரணமாக ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு.

இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது மனிதர் தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ அது சிவ தனுசு.
1.அதாவது உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான் சிவ தனுசு.
2.உயிர் என்ற ஒளியின் தன்மையை என்றும் ஒளியாக வைத்து இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் “விஷ்ணு தனுசு…”

மனித வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சிருஷ்டித்துக் கொண்ட நிலை ரிஷி…! அது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து புவிக்குள் கொண்டு வருகின்றது. ஆகவே இதனை “ரிஷியின் மகன் நாரதன்” என்றும் “நாராயணனின் அபிமான புத்திரன்” என்றும் காவியங்களில் குறிப்பிட்டனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை நாம் நுகர்ந்தோம் என்றால்
1.“நாரதன் என்னும் உணர்வுகள்” உயிரான விஷ்ணுவிடமும் செல்கின்றது.
2.மற்றும் உடல் பாகங்கள் அனைத்திற்கும் சென்று
3.பகைமை உணர்ச்சிகளை மாற்றுவதற்கான நிலை எதுவோ அதைச் சொல்லி பகைமையைத் தணிக்கச் செய்கின்றது.
4.உண்மையை விளங்கச் செய்கின்றது இந்த நாரதர் என்னும் உணர்வுகள்.

எனவே நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப நுகர்ந்தால் அதன் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து பகைமை உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கி நம்மை நல்வழிப்படுத்தும்.

ஆகவே தான்
1.ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமானப் புத்திரன் என்றும்
2/“நாரதர் நன்மைகள் தான் செய்வார்…” என்றும் காவியங்களில் காண்பித்தார்கள் ஞானிகள்.

நமது உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் “விஷ்ணு தனுசு…” உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கின்றது. ஒளியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் “சீதா” மகிழ்ச்சியான உணர்வை நமக்குள் ஊட்டும்.

ஒளி என்ற உணர்வை ஊட்டும் நாரதன் தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் நிலைகளை உருவாக்கி உணர்வின் நிலையைத் தெளிவாக்குவார் என்பதுதான் பொருள்.

ஆகவே அரும்பெரும் ஞானிகள் காண்பித்து உணர்த்திய உண்மைகளைத் தம்முள் உணர்ந்து அதன்வழி இயங்கி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும் விஷ்ணு தனுசினைக் கைக்கொண்டு தம்முள் பகைமை உணர்வுகளை அகற்றி மகிழ்ச்சி தரும் உணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் உடல் நலம் உடல் பலம் மன நலம் மன பலம் மன வளம் செல்வம் செல்வாக்கு பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

 

நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் நடக்கின்றது. நான் போனேன்… போகும் போது “அந்த இடத்தில் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

உடனே ஆ…! என்று அதிர்ச்சியோடு நாம் கேட்போம். இந்த உணர்வுகள் நமக்குள் படப்பட்டு
1.“அவர் எந்த வகையில் அந்த விபத்து ஏற்பட்டது…” என்று சொன்னாரோ
2.அதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம்மை அறியாமல் அது இயக்கும்.
3.ரோட்டில் நடந்து சென்றால் அறியாமலே நம்மை நடுரோட்டிற்கு அழைத்துச் சென்று விடும் ஓரத்தில் ஒதுங்கிச் சென்றாலும் கூட…!

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாதபடியே இவ்வாறு அழைத்துச் சென்று விடும்.

இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து “அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் பெற வேண்டும்…” என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் நாம் பார்க்கும் பொழுது தான்… பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் இனி எப்படி வாழ்வது…? என்ற நிலைகளில் பல திசைகளுக்கு நம்மை ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் உடனடியாக நாம் ஆத்ம சுத்தி செய்தோம் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொண்டே இருக்கின்றோம்.
2.அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால்… அத்தகைய அணுக்கள் நமக்குள் வளர்ந்து விட்டால் நம்மை அறியாமலே “அந்தத் துருவ நட்சத்திரத்தின் சொல் வரும்…”

உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டே இருக்கின்றோம். அது ஆழமாகப் பதிவாகி விட்டால் பாடல் தொடர்ச்சியாக சரியாக வரும்.

ஆனால் பாடிக் கொண்டிருந்தாலும் இடைமறித்து அதிலே ஒன்றை தனியாகச் சொல்ல வேண்டும் என்று குறுக்காட்டினால் இரண்டாவது தடவை அது சரியாக நினைவுக்கு வராது.

மீண்டும் முதலில் இருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால்
1.வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது அதனுடைய தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கிவிட்டால் அந்த நினைவு நமக்குள் வராது.
3.காரணம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அடுத்தடுத்து அந்த அடுக்குகளிலேயே அது வருகின்றது.

இதனால்தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. சந்தர்ப்பத்தால் நாம் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி விழித்திருந்து பழகுதல் வேண்டும்.

இதைத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பிறருடைய கஷ்டங்களும் நஷ்டங்களும் எப்பொழுது பார்த்தாலும்
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.நம் நல்ல குணங்களை வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

நம் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் இருக்க வேண்டும்…?

நம் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் இருக்க வேண்டும்…?

 

இனபேதத்தினால் வரக்கூடிய உணர்வுகள் மனிதனிலிருந்து அது விளைந்தது தான். உற்றுப் பார்த்து அந்த உணர்வுகள் பதிவானது. பதிவு மீண்டும் நினைவாகும் பொழுது எது வலுவோ அது தான் நம்மை இயக்கும்… நம்மையும் அந்தப் பேத உணர்வு இயக்கும்.

சந்தர்ப்பத்தால் வரும் இது போன்ற ஒரு தீமைகளை மாற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். குருநாதர் எனக்குக் கொடுத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

அதனை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.இந்தக் காற்று மண்டலத்திலே யார் எந்த வகையில் நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்திருந்தாலும்
2.நமது குரு அருளின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்க முடியும்.
3.அவ்வாறு உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை அடைய முடியும்.
4.அது தான் கல்கி ஒளி உடலாக மாற்ற முடியும்… இதிலே சிரமம் ஒன்றுமில்லை.

உங்களுக்குள் பதிவு செய்ததை மீண்டும் எண்ணத்தால் எண்ணி எடுத்தால் இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு டிவி.யை இன்னென்ன அலைவரிசையில் என்று அதை வைக்கப்படும் பொழுது ஒவ்வொரு ஊரிலிருந்து வெளிப்படுத்துவதை அது கவர்ந்து நமக்குக் காட்டுகின்றது.

ஆங்காங்கு ஒளிபரப்பு செய்வதை அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்து எடுத்துக் கொள்கின்றோம்.

இதைப் போலத்தான்
1.மக்கள் பேசிய தவறான உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு.
2.அவர்களை எண்ணினால் அந்த அலைவரிசையில் நமக்குக் கோபம் வரும் வெறுப்பு வரும் சங்கடம் வரும் இத்தனையும் வரும்.

ஆனால் அது அத்தனையும் நீக்கியது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குரு துணை கொண்டு கவர்ந்து நமக்குள் எடுத்துக் கொண்டால்
1.”அந்த அலைவரிசை…”
2.தீமைகளை நீக்கும்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வரும்… நம் வாழ்க்கையை உயர்த்தும்.

இந்த உயர்ந்த உணவுகள் வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை என்ற நிலையை நாம் அடைய முடியும். அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும். அத்தகைய ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்.

1.உங்கள் பார்வையால் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும்
2.உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும்
3.உங்கள் பார்வை அனைவரையும் ஞானிகளாக ஆக்க வேண்டும்.
4.இத்தகைய கூட்டம் அமைய வேண்டும்.
5.இத்தகைய கூட்டங்கள் அமைந்தால் தான் மனிதனுக்குள் இருக்கும் பேதங்களை மாற்ற முடியும்.

குரு அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்கள்.

இதைப் படிப்போர்… இதைக் கேட்போர் அனைவரும் இதன்படி செயல்பட்டால் பல ஆயிரம் பேராக மாற்றலாம். அந்த ஆயிரம் பேர் “பல லட்சக்கணக்கான பேராக மாற்ற முடியும்…” இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.

வேம்பின் கசப்பான உணர்வுகள் வரும் பொழுது மற்ற உணர்வலைகள் எப்படி அது விலகி ஓடுகின்றதோ இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை காலை துருவ தியான நேரத்தில் நமக்குள் சேர்க்கப்படும் பொழுது… தீமை செய்யும் உணர்வலைகளை “விலகி ஓடச் செய்யலாம் அல்லது அது இயங்காதபடி தடைப்படுத்தலாம்…”

சாதாரணமாக… நம் உடலுக்குள் பல வகைகளிலும் பலருடைய உணர்வுகள் பதிவாகி இருப்பதனால் அதை இழுக்கக்கூடிய திறன் வருகின்றது. உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணம் ஆகின்றது.

துருவ தியானத்திலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமை உள்புகாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுத்தால் காலை ஆறு மணிக்குச் சூரியன் உதயமாகும் பொழுது நாம் இழுக்கத் தவறும் அந்த உணர்வுகளை அது மேலே அழைத்துச் சென்று மாற்றி அமைக்கின்றது. நமது ஆன்மா சுத்தமாகின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்திலே தொல்லை என்று அடிக்கடி வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வலு சேர்த்து தீமை உள்புகாது தடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் ஆத்ம சக்தி என்று உங்களுக்குத் தெளிவாகக் கொடுக்கின்றோம். நம் குரு எப்படி அருள் வழியில் செயல்பட்டாரோ அது போன்று நாமும் செயல்பட முடியும்.
1.அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுடன் குருநாதர் செயல்பட்டார்.
2.ஒவ்வொரு உயிரையும் ஈசன் என்று மதித்தார்.
3.அதற்குத் தான் போஸ்டிலே கல்லைக் கொண்டு தட்டுகின்றேன்.
4.எல்லோருக்கும் அந்த ஞானம் வரட்டும் அந்த உயர்ந்த உணர்வுகள் பெருகட்டும் என்று சொன்னார்.

ஆகவே நாம் அனைவரும் நம் குரு காட்டிய அருள் வழியில் செல்வோம். விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை விடுபடச் செய்வோம்.

அந்த அஞ்ஞான வாழ்க்கையின் உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மை இயங்கிடாதபடி “மெய் ஞான உலகை நமக்குள் சிருஷ்டிப்போம்…”

இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து

இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து

 

அருள் ஞானச் சக்கரத்தை யாம் கொடுத்தால் சிலர் அதிலிருந்து விபூதி வருமா…? மருந்துகள் வருமா…? என்று கேட்கின்றார்கள். எதன் மீது ஆசை போகிறது…?
1.துருவ நட்சத்திரத்தின் அருள் வரும்
2.இருளைப் போக்கும் அருள் சக்தி கிடைக்கும் உண்மைகளை அறியலாம் என்று நான் சொன்னால்
3.விபூதி வராதா…? மருந்து வராதா…! என்று கேட்கின்றார்கள்.

ஏனென்றால் பழைய அன்பர்களுக்கு ஆரம்பத்தில் அப்படிக் கொடுத்த நிலையினை எண்ணிக் கொண்டு அந்த ஆசையிலே கேட்கின்றார்கள்.

அருளைப் பெற வேண்டும் என்று தான் வர வேண்டும். இருளை நாடக்கூடாது.
1.ஆசை என்று வரும் பொழுது இருள் தான்.
2.ஆசையிலே பொருள் வந்தால் மற்றதைச் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது.
3.இருளுக்குள் தான் செல்கிறோம்.

அந்த அருளைப் பெற வேண்டும்… தெரிந்து கொள்ளும் அறிவைப் பெற வேண்டும் என்றால் ஒளிக்குச் செல்கின்றோம்.

ஆகவே… ஆயுள் கால மெம்பர்களாக இருக்கக்கூடிய நமக்கு எது தேவை…? இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து.

அந்தக் கோடிக்கணக்கான உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை. ஏகாதசி… வைகுண்ட ஏகாதசி…!
1,எதுவுமே நம்மை அழித்துவிட முடியாது
2.என்றுமே நிலையானது அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுவது தான்.
3.மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை தான்.

அதைத்தான் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள். கடைசியில் சீதா எங்கே போகின்றது…? நாம் சாப்பிட்டது எல்லாம் சேர்த்து இந்த உடல் பூமிக்குள்… மண்ணுக்குள் தான் போகின்றது.

“மண்ணுக்குப் போகும் உடலுக்காக…” ஏன் இந்த மாதிரி அவஸ்தைப்பட வேண்டும்…? என்று இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

உணர்வின் தன்மை சீதா…!
1.ஒளியின் அறிவாகவும் இருளுக்குள் சிக்காத தன்மை கொண்டு விஷ்ணுவுடன் இணைந்தது.
2.அப்பொழுது அங்கே சொர்க்கம் அடைகின்றது… இது தான் அங்கே காட்டப்பட்டுள்ளது.

இதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களிடம் எதைச் சொல்லி நிரூபிப்பது…? சீதா அவஸ்தைப்படுகிறது… இராமன் சந்தேகப்பட்டான்…! என்று சந்தேக உணர்வைத் தான் கொடுக்கின்றார்கள். ஆனால் அதற்குள் எத்தகைய மூலம் இருக்கிறது…? என்பதை அறிய முடியவில்லை.

ஆகையினால் ஆயுள் கால மெம்பர் ஆக வேண்டும் என்றால் பேருக்கு அல்ல… இயற்கையிலே ஆயுள் மெம்பராக வேண்டும். துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்.

உங்கள் குடும்ப வாழ்க்கையிலோ நண்பருடைய குடும்ப வாழ்க்கையிலோ… எல்லோரும் அருளைப் பெற்று இருளைப் போக்க கூடியவர்களாக மாற வேண்டும்.

1.உங்கள் சொல் பிறருடைய தீமைகளை நீக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
2.உங்கள் சொல்லின் தன்மை சிந்திக்கும் தன்மையை ஊட்டி அவர்களைச் சிக்கலிலிருந்து மீட்டக் கூடிய சக்தியாக மாற வேண்டும்.
3.ஒவ்வொருவரும் அந்த வளர்ச்சிக்கு வர வேண்டும்… அது தான் ஆயுள் கால மெம்பர் என்று சொல்வது.

பிறிதொரு தீமை நமக்குள் புகாதபடி அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் சக்தி வர வேண்டும்.

ஆகவே நீங்கள் மன உறுதி கொண்டு அருள் சக்தியைப் பெறுங்கள். இருளை நீக்குங்கள் உயர்ந்த ஞானத்தைப் பேசி ஒவ்வொரு குடும்பத்தையும் பரிபக்குவ நிலை பெறச் செய்யக்கூடிய சக்திகளாக நீங்கள் மாற வேண்டும்.

அவர்களைப் பக்குவப்படுத்தும் பொழுது அவர்கள் உணர்வு நமக்குள் வராது.

பாசத்தால் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தால் அந்த வேதனை நிச்சயம் நமக்குள் வரும்.
1.ஆனால் வேதனையை நீக்கக்கூடிய சக்திகளாகத்தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர அதை வளர்க்கும் நிலை வந்து விடக்கூடாது.
2.அருளைப் பெருக்குங்கள்… இருளைப் போக்குங்கள்.

அந்த வழியில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழுங்கள்.

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

 

ஒரு வித்து முளைத்து அதனுடைய நுனி வெளி வந்தபின் அதன் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து வளரும். ஆனால் முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து விட்டால் அதனுடைய சத்தையும் எடுக்காது… தொடரையும் எடுக்காது.

இதைப் போன்று தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக வளர்ந்து விட்டால் தீமையின் இயக்கமாக இயக்கிவிடும். ஆனால் அவ்வாறு உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன்பே அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்
1.வாழ்க்கையில் இடைமறித்து நல்ல உணர்வுகளைத் தடைப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக ஆக்கும்
2.அது போன்ற நிலைகளை வராதபடி தடைப்படுத்த வேண்டும்.
3.அதாவது… தீமை என்று வந்தால் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் ஃபிட்டர்களை (FITTER) வைத்திருப்பார்கள்.

தொழிற்சாலையில் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால் அந்த இயந்திரங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் ஃபிட்டர் வந்து அதை சரி செய்து தருவார்… இயந்திரத்தை உற்பத்தி செய்பவரிடம் நாம் செல்வதில்லை…!

அதைப் போன்று தான் அந்த ஃபிட்டரை நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும்.
2.அதற்குண்டான உபாயத்தை அது சொல்லும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.

நம்மை உருவாக்கக்கூடிய சக்தியாக உயிர் இருந்தாலும் அவனிடம் நாம் போவதில்லை. தீமைகளை மாற்றி அமைத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது அதற்குண்டான உபாயங்கள் வரும்.

தொழிற்சாலைகளில் ஓடும் இயந்திரங்களை உற்பத்தி செய்தவன் எங்கேயோ இருப்பான். ஆனால் அந்த இயந்திரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் அதைச் சரி செய்பவன் இங்கேயே இருப்பான். உற்பத்தி செய்பவரைத் தேடிச் செல்வதில்லை.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன். நமக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது

குறைகள் என்று வந்துவிட்டால்
1.“சாமி சொன்னாரே…!” என்று எண்ணி இதை எடுத்தால் அதைச் சீர்படுத்தும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
2.அதற்குத்தான் மணிக் கணக்கிலே உபதேசங்களைக் கொடுப்பது… நினைவுபடுத்துவது… நினைவின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்வது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைச் சீர்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த ஞானிகள் உணர்வுகள் அதைச் சீர்படுத்தும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயந்திரம் கோளாறாகிய பின் ஃபிட்டரைத் தேடவில்லை என்றால் என்ன ஆகும்…? நாமாக அதைச் சரி செய்ய முடியாது. நாம் எதையாவது செய்யப் போனால் இன்னும் கொஞ்சம் ரிப்பேராகிவிடும். ஆனால் ஃபிட்டரைக் கூப்பிட்டால் உடனே அதைச் சரி செய்து விடுவார்.

ஆகவே உங்களுக்குள் அந்தச் சீர்படுத்தும் உணர்வு கொண்ட அந்த அறிவை பதிவாக்குகின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமையை நீக்கும்.
1.அந்த உணர்வு உங்களுக்குள் ஞானமாக இயக்கும் ஞானத்தைப் பெறும் தகுதியும் வரும்.
2.உங்களை அறியாது வரும் இருளைப் போக்க வழி வகுக்கும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது. நமக்கு முன் எல்லா உயர்ந்த சக்திகளும் உண்டு. அதை நாம் நுகர்ந்தறிய வேண்டும்.

அது தான் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம்…! ஒன்றைப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது. அதனுடைய வலிமை அதிகமாகும் பொழுது வராகன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கூர்மையாகப் பதிவு செய்து விட்டால்
2.தீமையை அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் அது வளர்கின்றது.

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்

 

1.பிற மண்டலங்களிலிருந்து (2000 சூரியக் குடும்பம்) வரும் சக்திகளை நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள் தான் கவருவதும்
2.நட்சத்திரங்களிலிருந்து துகள்களாக மாறுவதும் பிரபஞ்சத்தில் பரவுவதும் கோள்கள் கவர்வதும் அதிலிருந்து வருவதைச் சூரியன் ஈர்ப்பதும்
3.வான்வீதியின் உணர்வுகளை வான மண்டலத்தின் அதிசயங்களை உங்களுக்குள் நுகரும் ஆற்றலாக அறிந்து
4.இதைப் புலனறிவுகளில் காட்சிகளாகக் காண முடியும்.

அதிலிருந்து வரும் பல வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல வகையாக அவை மாறிக் கொண்டே இருப்பதையும் காணலாம்.

கேது:-
நட்சத்திரத்திங்களுக்கு அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை எவ்வாறு கவர்கின்றது…? என்பதையும் விஷமான அணுக்கள் மோதும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் ஊடுருவி… மின்னல்கள் தாக்குவது போன்று ஒளிக் கதிர்களாக ஊடுருவிப் பாய்வதைக் காணலாம்.

இராகு:-
கேதுவின் அருகிலே இருக்கும் ராகுக் கோள் இந்த விஷத்தின் தன்மை வான் வீதியின் ஒளித் தன்மையைத் தனக்குள் கவர்ந்தாலும் அந்த விஷத் தன்மை தாக்கப்படும் போது “கரும் நீலமாக…” இது உருமாறுவதைக் காணலாம்.

சனி:-
இதனின் தாக்குதலில் மற்ற நட்சத்திரங்களில் வரும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று பல பொறிகளாக மாறி மோதலில் ஆவியாக மாறுவதும் எடையற்ற நிலையில் மாறுவதை உறை பனியாக… சனிக்கோள் தனக்குள் எடுத்து உறை வட்டங்களாக மாற்றிக் கொள்கின்றது.

எப்படி மலைப் பிரதேசங்களில் உறை பனியாக மாற்றுவது போன்று தன்னுடைய சுழற்சி வட்டத்தில் உறைவிடமாக மாறுகின்றது… அது தான் “சனியின் வளையங்கள்…” என்று சொல்வது. அவைகள் மீண்டும் கரைந்து இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது

வியாழன்:-
மின் அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து அதைச் சனிக்கோள் தனக்குள் எடுத்தாலும் அதிலிருந்து வரக்கூடியதையும் மற்ற விஷத்தின் தன்மை தனக்குள் கவர்வதும் அதை வியாழன் கோள் கவர்ந்து அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்வதும் “மின்னலின் கதிர்களைக் கதிரியக்கப் பொறியாக…” வியாழன் மாற்றுவதையும் காணலாம்.

வெள்ளி:-
மின் அணுவின் தன்மை தனித்தன்மையாக ஆன பின் அந்த ஒளி அலைகளை வெள்ளிக் கோள் தனக்குள் கவர்ந்து “மிகச் சக்தி வாய்ந்த ஒளியின் சுடர்களாக…” வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம்.

புதன்:-
சூரியன் அருகில் இருக்கும் புதன் கோள் சூரியனின் எதிர்நிலை கொண்ட தாக்குதலால் அதைக் கவரும் புதன் கோள் ஒரு பகுதி வெப்பமும்… தான் பிரபஞ்சத்தில் ஈர்க்கும் மற்ற நிலையில்… “உலோகத் தன்மையாக மாற்றிக் கொண்டிருப்பதையும்…” காணலாம்.

செவ்வாய்:-
உலோகத் தன்மை வாய்ந்த்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் வரப்படும் பொழுது அதனின் காந்தப்புலனறிவு இதனுடன் மோதுண்டு பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும் அதைச் செவ்வாய்க் கோள் கவர்ந்து “ஓசைகள்…” வருவதைக் காணலாம்.

அதனுடன் மோதப்படும் பொழுது அந்த ஒலிகள் எழுப்புவதைக் காணலாம். ஒன்றுடன் ஒன்று மோதும் போது “சிகப்பு நிறமாக…” அந்தக் கோள் காணப்படும். ஒன்றுடன் ஒன்று மாறி புகை மண்டலமாகவும் மற்ற நிலை வரும் போது ஒளியின் தன்மைக்குள் சிகப்பு நிறமாகத் தோற்றுவிக்கும்.

திங்கள்:-
இவை பிரபஞ்சத்தில் கலந்து பரவிக் கொண்டிருப்பதை நமது பூமி தனது ஈர்ப்பில் வரப்படும் பொழுது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் திங்கள் தனக்குள் கவர்ந்து கொண்டிருப்பதையும் அதிலே மிதப்பதையும் அது கவரப்படும் பொழுது திங்கள் கோளில் தூசிகளாகப் படர்வதைக் காணலாம்.

பூமி:-
மற்றவை அனைத்தும் பூமியின் துருவப் பகுதியில் கவர்ந்து உள்ளே ஈர்க்கும் பொழுது… கோழி முட்டை வடிவில் உருண்ட நிலையாகவும் நீண்ட நிலைகளாக “நம் பூமி சுழல்வதைக் காணலாம்…”
1.துருவப் பகுதியில் ஈர்க்கும் தன்மையை
2.நாம் இருக்கும் எல்லையிலிருந்தே அதைக் காண முடியும்.

வியாழன் கோள் தான் பெருகுவதற்கு அதன் உபகோள்கள் அது எவ்வாறு கவருகின்றது…? அதிலிருந்து உமிழ்த்தும் தூசிகள் வியாழன் கோளைச் சுற்றிப் படர்வதும் அது நுகர்வதும் தனக்குள் மாற்றம் ஆவதும்… அந்த அற்புத நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம்.

அதே போல் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்கள் வளர்வதும் அது கவர்ந்து தூசிகளாக வெளிப்படுவதை… அவை உமிழ்த்தும் உணர்வுகளைச் செவ்வாய்க் கோள் தனக்குள் எடுத்து மற்ற கலர்கள் ஆவதையும் காணலாம்.

வான மண்டலத்தில் பல பல நிறங்களும் அணுக்கள் மாற்றமாகி அகண்டு செல்வதும் அது ஒவ்வொன்றும் பரவி அந்த நிறங்கள் மாறிக் கொண்டே செல்வதைக் காணலாம்.

1.நம் பூமியின் துருவத்தின் வழி வரக்கூடியதைத்
2.துருவ நட்சத்திரம் கவர்ந்து “ஒளி அலைகளாக மாற்றுவதைக் காணலாம்…”

நம் பூமிக்குள் பரவி வருவதை பூமியின் பரப்புகளில் தூசிகளாகப் பரவுவதும் பூமிக்குள் ஊடுருவி பூமியின் வெப்பத் தணல் கூடுவதும் கலர்கள் மாற்றமடைவதையும்
1.அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளை உங்கள் நினைவாற்றல் கொண்டு பூமியின் “நடு மையத்தையும்…” நீங்கள் உணரலாம்.
2.அங்கே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.

அண்டத்தில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் இந்தப் பிண்டத்திற்குள் உணர்வின் நிறங்கள் மாறிச் சுவாசத்திற்குள் சென்று ஒவ்வொரு உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் பரவி… அதன் நிலைகள் பூமிக்குள் எவ்வாறு மாற்றம் அடைகின்றதோ உடலுக்குள்ளும் அந்த அணுக்கள் கவர்ந்து அதன் வளர்ச்சியின் தன்மை எதுவோ… உடலுக்குள் “பல வர்ணங்கள் மாறுவதும்… பல வண்ணம் கொண்ட உணர்வுகளை எடுப்பதையும்…” காணலாம்.

1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்வதைப் பார்க்கலாம்.
2.அந்த உணர்ச்சிகள்… உதாரணமாக குருவிக் குஞ்சுகள் அது எப்படி உணவுக்காக ஏங்குகின்றதோ…?
3.அதனுடைய துடிப்பின் உணர்வுகள் எப்படி வருகின்றதோ அதைப் போன்று
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டி
4.அது பெறும் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்படும் பொழுது “மெர்குரி போன்று…” உங்கள் உணர்வுகள் மகிழ்ச்சி பொங்கும் தன்மையை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் ஒளியின் தன்மை அடைவதை உணரலாம்.

ஒவ்வொரு அணுக்களிலும் இதனுடைய மாற்றங்கள் ஆவதை நீங்கள் காணலாம்.

இப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் இணைக்கப்படும் பொழுது
1.உங்களை அறியாது சேர்ந்த விஷத்தன்மை கொண்ட அணுத்தன்மைகள் மறைவதும்
2.உடல் நோய்… அந்த விஷத்தன்மை ஆவியாக மாறுவதையும்… உடல் இலகுவாகுவதையும் உணரலாம்.

இப்பொழுது உங்கள் நினைவினைப் பிற மண்டலங்களிலிருந்து கவரும் 27 நட்சத்திரங்களுடன் இணைத்து… “அங்கே உங்கள் நினைவாற்றலைச் செலுத்துங்கள்…”

வான மண்டலத்தில் பல வர்ணங்கள் மாறி மாறி மாற்றம் அடைந்து கொண்டிருப்பதை நீங்கள் காண்கின்றீர்கள்.
1.அவை நம் துருவப் பகுதிக்கு வரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரம் அதைக் கவர்ந்து அதை எவ்வாறு ஒளியாக மாற்றுகிறது…? என்ற நிலையினை உங்களால் உணர முடியும்
3.அதிலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதையும் காணலாம்.

இவை அனைத்தையும்
1.உங்கள் புருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி அதன் வழி தான் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புதல் வேண்டும்.
2.அதன் வழி தான் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற வேண்டும்.

நம் பூமிக்கு வருவதை இடைமறித்து…
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதனுடைய மாற்றங்களை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது…? என்ற நிலையை நீங்களும் உணர்ந்து
2.உங்கள் உடலுக்குள் அதைப் பெறும் சந்தர்ப்பமும் இப்பொழுது கிடைக்கின்றது.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி “ஒவ்வொரு அணுக்களிலும் அது படர்ந்து… மகரிஷிகளின் அருள் ஒளியைக் காணும் திறன் பெறுவீர்கள்…” இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வுகள் உங்கள் உடலிலே விளையும்.

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”

 

1.மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமைகளை எல்லாம் நீக்கும் உணர்வு பெற்றவன் கார்த்திகேயா.
2.தீமை என்று தெரிந்து கொண்டபின் சேனாதிபதி பாதுகாக்கக் கூடியவன்.
3.முருகு மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன்… இந்த ஆறாவது அறிவு என்று இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளது நமது சாஸ்திரங்கள்.

யாரும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் முறைப்படுத்தி அதைக் காட்டுகின்றோம். இது இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது.

கோடிக்கரை…! நாம் பல கோடி உடல்களை எடுத்துக் கடைசிக் கரையாக இருக்கின்றது மனித உடல்.
1.தீமைகளை நீக்கும் உணர்வுகள்… தீமைகளை நீக்கும் சக்தி பெற்றது தனுசுகோடி.
2.கடைசி நிலையில் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவர்ந்தோமென்றால் தீமையை நீக்கும் சக்தி வருகின்றது.
3.எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அதை நீக்கும் போது பல கோடித் தீமையை நீக்கும் உணர்வாக (தனுசுகோடி) நமக்குள் வருகின்றது.

வேதனைப்படும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அது எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தப்படும் பொழுது வாழ்க்கையில் வரும் பல கோடி உணர்வுகளிலிருந்து… தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெற்றது கோடிக்கரை… மனிதன் அதைப் பெற முடியும்.

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் ரத்த நாளங்களில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்செலுத்தினால்… இப்படி வாழ்க்கையில் வரும் எத்தனையோ கோடி உணர்வுகளை மாற்றினால் அது தனுசுகோடி.

இராமேஸ்வரத்தில் கடலோரப் பகுதியில் துருவ நட்சத்திரத்தை நேரடியாகக் காண முடிகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் இந்த மனித உடல். எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று கோடிக்கரையாக வந்துள்ளது மனித உடல்.

1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் தனுசு
2.தீமையிலிருந்து விடுபடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
3.அந்த தனுசைப் பாய்ச்சி ஒவ்வொரு தீமையையும் நீக்க வேண்டும் தனுசுகோடி.

இதை உணர்த்துவதற்குத் தான் மனித உடலில் நேரம் ஆகிவிட்டது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள். ஏனென்றால் சிறிது காலமே இந்த உடலில் வாழுகின்றோம்.

ஆகையினால் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக உருவாக்கி இராமன் அதைப் பூஜித்தான். அதற்கு என்ன அர்த்தம்…?

இந்த மனித வாழ்க்கையில் தீமை என்று வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும் ஏன்று இதை எடுத்து
1.ஒவ்வொரு நிமிடமும் உடலுக்குள் செலுத்தி தீமை வராது தடுக்கும் அந்த தனுசை வைத்து நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
2.உடலில் அந்த அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்குள் இந்த அரும்பெரும் சக்திகளைச் சேர்த்தோம் என்றால் நம் மனது ஒன்றாகின்றது. பகைமை இல்லாது ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.
1.அருள் உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியாகி இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையும் நிலை உருவாகின்றது.

அதற்குத்தான் இந்த தத்துவங்களை எல்லாம் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

நாரதனை “முனி” என்று காட்டியது ஏன்…?

நாரதனை “முனி” என்று காட்டியது ஏன்…?

 

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் இவைகளில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகளைத் தான் (துருவ நட்சத்திரத்தின் அணு) நாரதர் என்று காரணப் பெயர் வைத்தார்கள். ரிஷியின் மகன் நாரதன்… அவன் ஒரு முனிவன்.
1.முனி என்பது வலு கொண்டது… எதற்கும் அடங்காதது
2.விஷத்தின் தன்மை அணுகாத நிலை கொண்டது…
3.விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது என்ற நிலை கொண்டு தான் முனி என்றும்
4.வீரிய நிலைகள் பெற்றவன் என்றும் அன்று பெயர் வைத்தார்கள் “அந்த அணுவிற்கு…”

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளி வரும் அந்த உணர்வலைகளை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ… இந்த மனித வாழ்க்கையில் தன் ஆசையின் நிலைகளைக் கலைத்து… தன்னை அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான செயல்களை நீக்கிவிட்டு… “கலகப் பிரியன்” என்று அது நன்மையிலே முடியும்.

மனித வாழ்க்கையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும் நம்மை அறியாது அதிலே சிறு தடை ஏற்படும் போது நாம் எண்ணியபடி அவன் வளர்ந்து வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்ற அந்த விஷமான உணர்வுகள் நமக்குள் வந்து கலக்கமாகிச் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்யும் இந்த நிலையை அவன் இப்படிச் செய்தான் இப்படிச் செய்கின்றானே என்ற இந்த ஏக்க உணர்வு கொண்டு செயல்படுத்துவோம்.

அதே சமயத்தில் பிறருக்கு உதவி செய்யும் போது… தான் எண்ணியபடி காசைக் கொண்டு வந்து அவர்கள் கொடுக்கவில்லை என்றால் அவரை எண்ணி நேரத்தில் உதவி செய்தேன் இப்படிக் காலம் கடத்துகிறார்கள் என்று ஏசி வேதனைப்படுவோம்.

இதைப் போன்ற மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகள் “பற்றுடன் நமக்குள் வரும் பொழுது… பாசத்திற்கு எதிராக வரும் பொழுது” வெறித்தனமாகக் கூடி அந்த வெறியான உணர்வுகளைக் கூட்டிடும் இந்த நிலையை
1.அந்த நாரதன் என்ற உணர்வினை நுகரும் பொழுது அதை எல்லாம் பிரித்து விட்டு
2.நமக்குள் ஓங்கி நிற்கும் ஒளியாக… நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிடும் திறன் கொண்டது.

அதற்காக வேண்டித் தான் ரிஷியின் மகன் நாரதர் என்று துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் அணுவிற்குப் பெயரிட்டு அழைத்தார்கள் சாதாரணமாக நாம் புரிந்து கொள்வதற்கு…!

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அதை நுகரும் திறனுக்காக உங்களுக்குள் அந்த நினைவின் உணர்வுகளை உந்தச் செய்வதற்கும் அந்த நினைவுகளை எண்ணும் பொழுது அந்த ரிஷியின் சக்தியை நீங்கள் பெறுவதற்கும் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

நன்மை செய்ய வேண்டும் என்ற நிலையில் பிறர் படும் துயரத்தை நுகர்ந்து பரிவுடன் பண்புடன் பண்புடன் அவருக்கு உதவி செய்தாலும் நீங்கள் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் உங்களுக்குள் வருவதை உங்கள் நல்ல குணங்களை அழித்திடும் அந்த உணர்வை
1.அதை அழித்திட்ட தனக்குள் அடக்கிட்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நுகர்ந்தால் அதை மாற்றி
2.உதவி செய்த நல்ல பண்புகளைக் காத்துப் பிறரைக் காத்திடும் நிலை கொண்ட உணர்வாக விளைய வைத்து
3.என்றும் நிலையான நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் 16 என்ற நிலையை நாம் அடைய முடியும்.

இதைத்தான் குருநாதர் பல வகைகளிலும் காட்டினார்.

பித்தரைப் போன்று அவர் வாழ்ந்தாலும் தன் உடலுக்கு அந்த உணர்வுகளை (பித்தான) கொடுக்காது தன் உடலுக்குள் மெய் ஒளியின் உணர்வுகளை உணர்த்திக் காட்டி அதன் வழி செயல்பட்டார்.

எத்தகைய நல்ல துணிகளை அவருக்குக் கொடுத்தாலும் பைத்தியக்காரனைப் போன்று “அதைக் கிழித்துக் காலில் கட்டிக் கொள்வார்… ஒவ்வொரு கட்டாக கட்டி விடுவார்…”

என்ன சாமி…? புது துணிகளை எல்லாம் இப்படிக் கிழித்துக் கட்டி விட்டீர்கள்…! என்று கேட்டால்
1.கடும் விஷம் ஏறுகிறதப்பா…! அதைத் தடைப்படுத்தப் புது துணியைக் கிழித்து நான் கட்டிக் கொள்கின்றேன்
2.இல்லையென்றால் விஷம் ஏறிவிடுகின்றது என்று இப்படித்தான் உணர்த்தினார்.

ஒவ்வொரு எண்ணங்களுக்கும் அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகளைக் காட்ட ஒவ்வொரு நிறத்திலே துணியைக் கட்டுவார். அதே போன்று தாவர இனங்களுடைய சக்தியை அதனுடைய திறனை அறிவதற்கு அது எப்படி விஷத்தை முறியடிக்கிறது…? எப்படி எல்லாம் தனக்குள் அந்த ஆற்றலை கவர்ந்து கொள்கிறது…? என்பதையும் காட்டுவதற்காக காலிலே துணிகளைக் கட்டுகின்றார்.

ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் உடலை விட்டுச் சென்ற பின் மலைக் காடுகளுக்குள் நான் செல்லப்படும் பொழுது அவரை நினைவு கொண்டு துணிகளை எல்லாம் ஏன் அப்படிக் கிழித்துக் கட்டினார்…? என்று எண்ணும் போது
1.காலில் கட்டிய கிழிந்த ஆடையும்… அவர் நினைவலைகளாக நின்று அதை நான் சுவாசிக்கும் பொழுது
2.அந்த உண்மைகளை நுகர முடிந்தது… தீமைகளிலிருந்து நான் விடுபட முடிந்தது.

அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் காட்டிற்குள் அவன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்… அவன் அன்னை தந்தையினுடைய உணர்வுகள் அவனுக்குள் எப்படிச் சென்றது…? தீய விளைவுகளிலிருந்து விஷமான ஜந்துக்களிடமிருந்து தனக்குள் வரும் பய உணர்வுகளிலிருந்து எவ்வாறு மீண்டான்…?

அவன் பெற்ற அந்த ஆற்றல்கள் அவன் அமர்ந்த இடங்களில் இந்த உணர்வலைகள் படர்ந்துள்ளது. அங்கே சென்று அதை நுகரும் பொழுது நுகர்வோர் உள்ளங்களில் அது எதைச் செயல்படுத்துகிறது…? என்ற நிலையை எனக்கு உணர்த்துவதற்காகத் தான் குருநாதர் காலிலே இது போன்று பல கட்டுகளைக் கட்டி இருந்தார்.

12 வருட காலம் காட்டிற்குள் நான் அலையப்படும் பொழுது திகைத்து நான் எந்த நிலையைச் செய்வது…? என்று உணவுக்காக நான் தவித்துக் கொண்டிருக்கும் நிலை வந்தது. உணவே இல்லாது காட்டிற்குள் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?

எதை எதையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். இருந்தாலும் அரிசிச் சோறு சாப்பிட்டுப் பழக்கப்பட்டது… அந்த நினைவு வரும் பொழுதெல்லாம் துயரங்களே ஏற்படும்.

அதைப் போன்ற நினைவுகள் வரும் பொழுது குருவைத் தான் எண்ணுவேன். அவர் உணர்வினை நுகரும் போது மெய் உணர்வுகள் எனக்குள் ஈர்க்கப்பட்டு
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் சென்ற பாதையும் அவன் விஷத்தை முறிக்க எடுத்துக் கொண்ட நிலையும்
2.அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதையும் பூமியிலே இறுகிப் பதிந்திருப்பதையும்
3.அந்த இடங்களில் நின்ற பின் அந்த உணர்வின் நினைவலைகள் எனக்குள் வருகிறது என்ற நிலையை உணர முடிந்தது.

மெய் ஞானியான அகஸ்தியன் சென்ற பாதையும் அவன் உணர்வின் ஆற்றலையும் உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன் என்றால் அது குருநாதர் காட்டிய வழி கொண்டு தான்.

அவர் உடலை விட்டுச் சென்ற பின் இதையெல்லாம் அறியக்கூடிய நிலையும்… நுகர்ந்தறிந்து… எனக்குள் என்னை அறியாது வந்த தீயவினைகளை அடக்கியதும்… “மெய் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு ஓங்கி வளர்ந்த அந்த உணர்வின் எண்ண அலைகளே” இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றது “நான் அல்ல…!”

1.குருவை நான் நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை உங்களுக்குப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.
2.அதை நீங்கள் கூர்ந்து கேட்டு நுகரும் போது உங்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.

ஆகவே… குருநாதர் எனக்கு எப்படி அந்த உயர்ந்த ஆற்றல்களைப் பெறும்படி செய்தாரோ… அதற்குண்டான உபாயங்களைத் தெரியப்படுத்தினாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும் இப்பொழுது அந்த உயர்ந்த சக்தியைப் பெறுவதற்குண்டான தகுதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்.

அதன் வழி நீங்கள் எண்ணி ஏங்கினால் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பெற்று அவர்களைப் போன்ற உயர்ந்த நிலையைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து “அதையே முன்னிலைப்படுத்த வேண்டும்”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து “அதையே முன்னிலைப்படுத்த வேண்டும்”

 

ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல சரக்குகளை அதனுடன் இணைக்கின்றோம். அதிலே
1.உப்பு அதிகரித்தால் கைப்பின் நிலையே வரும்.
2.இனிப்பின் சத்தைக் கலந்து விட்டால் இனிப்பின் நிலையே வரும்.
3.காரத்தை அதிகரித்து விட்டால் காரத்தின் உணர்வின் செயலாகவே அது உள்ளடங்கும்.

இதை போலத்தான் மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட குணங்கள் பல பல இருப்பினும் ஒரு குழம்பிற்குள் கூட்டாக வைப்பது போல… உயர்ந்த குணங்கள் கொண்டு மனிதன் இருப்பினும்… இரக்க உணர்வு கொண்டு பிறருடைய துயரைக் கேட்டறிந்து நன்மைகள் செய்தாலும்… அந்த இரக்கத்தால் ஈர்த்துக் கொண்ட வேதனை உணர்வுகள் உடலுக்குள் சிறுகச் சிறுகக் கலந்து விடுகிறது.

குழம்பிற்குள் நஞ்சைக் கலந்து உணவாக உட்கொண்டால் எப்படி மயக்கப்படும் நிலை வருகிறதோ அது போல நல்ல உணர்வின் சத்துக்கள் நமக்குள் இருப்பினும்
1.வேதனையான உணர்வுகளை நம் ஆன்மாவிலே கலக்கப்படும் பொழுது
2.நம்மை அறியாமலே அடிக்கடி வேதனை என்று சொல்லே வரும்… வேதனை என்ற நினைவே வரும்.
3.அதைக் கொண்டு வாழ்க்கையை பலவீனப்படுத்தச் செய்யும்
4.எதையுமே சரியாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

வேதனையை எடுத்தோம் என்றால் அது உமிழ் நீராக மாற்றப்பட்டு நம் உணவுடன் கலக்கப்பட்டு அந்த வேதனையே உணவுடன் கலந்து இரத்தங்களாக மாறுகின்றது. வேதனை என்பது நஞ்சு.

பல பொருள்களைப் போட்டு அதனுடன் எந்த வாசனையான பொருளை இணைக்கின்றோமோ அந்த வாசனையின் தன்மையாகவே “சுவை” இருக்கும்.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் உயர்ந்த குணங்கள் இருப்பினும்
1.வேதனையை எடுக்க எடுக்க நஞ்சு கலந்த உணர்வின் தன்மை உணவுடன் கலக்கப்பட்டு உணர்வின் சுவையை மாற்றி விடுகின்றது.
2.அதிலே கலந்து அது ரசமாக மாற்றப்படும் பொழுது அது இரத்தமாக மாறுகின்றது.

அந்த இரத்தத்தினை உடலில் உள்ள வால்வுகள் இழுத்து உடலுக்குள் பரவச் செய்யும். அல்லது அதை வடிகட்டும் நிலையில் கொண்டு கிட்னி கல்லீரல் இவைகளுக்கு எடுத்து அனுப்பும்.

இரத்தமாக மாறியதை அனுப்பும் பொழுது
1.முதல் வால்விலே இந்த நஞ்சின் தன்மை தாக்கிய பின் வீக்கமடைந்து விடுகின்றது.
2.உருவான இந்த இரத்தத்தை ஈர்க்கும் தன்மையும் அது இழந்து விடுகின்றது… பின் எரிச்சல் வருகின்றது.

அடுத்த பிஸ்டன் இந்த இரத்தத்தை உடலுக்குள் இழுப்பதற்கு முன்னால் இது இழுத்தவுடன் அதனுடைய தொடர் வரிசைக்குக் கிடைக்கவில்லை என்றால் “அங்கே பளீர்ர்… என்று மின்னும்…”

காரணம் அந்த இரத்தத்தை உறிஞ்சினால் இதற்கு வலு இருக்காது விஷம் கலந்த நிலைகள் கொண்டால் அந்த நஞ்சினால் மயக்கம் வரும்.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது வால்விலே வீக்கம் ஏற்பட்டு இரத்தம் அதிகமாக அதன் வழி புகும் நிலை இழக்கப்படுகின்றது. அப்பொழுது எரிச்சலாகிறது.
1.ஒரு பக்கம் எரிச்சலாகும்
2.மறு பக்கம் பளீர்ர்… என்று மின்னும்.

ஆனாலும் திருப்பி எடுக்கும் நிலைகள் கொண்டு இரத்தம் வரவில்லை என்றால் வாய்வின் தன்மை பளீர்ர்… என்று ஊடுருவிச் சென்று ஆகாரம் இல்லாத நிலைகளாக மற்றதை இயக்கச் செய்யும். அப்பொழுது அங்கே வலி அதிகமாகும்.

மருத்துவரிடம் சென்றால் இது ஹார்ட் அட்டாக் என்று சொல்வார்கள்.
1.விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் நாடியின் துடிப்புகளும் குறையும்.
2.நாடியின் துடிப்பு ஒரு நொடிக்கு இவ்வளவு இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி வேதனைப்படுவோருக்கு அது குறையாக இருக்கும்.
3.மருத்துவரும் இதை உறுதிப்படுத்தி அதற்கு வேண்டிய உதவிக் கருவிகளை மாற்ற வேண்டும் என்பார்.
4.அதை வைத்து இந்தத் துடிப்பைச் சீர்படுத்தினால் தான் வாழ முடியும்… இல்லையென்றால் இருதயம் நின்று விடும் என்பார்.

விஞ்ஞான அறிவுப்படி அதைச் செய்தோம் என்றால் அதன் வழி வாழலாம் சிறிது காலம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி யாம் சொல்லும் இந்தக் கூட்டுத் தியானங்களின் மூலம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் உணர்வை எடுத்து என்ற இந்த இயக்கத்தின் தொடரை நாம் ஈர்ப்போம் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்து ஆகாரத்துடன் கலந்து
2.இரத்தத்தில் உள்ள நஞ்சினைக் குறைக்கச் செய்யும்… நாடித் துடிப்பின் வேகத்தைக் கூட்டச் செய்யும்.

ஹார்ட் அட்டாக் வருவதன் காரணமே… மற்றவர்கள் பட்ட வேதனையை… அவர்களுக்குள் துடிப்பு குறைந்த நிலையை நுகர்ந்தது.. அந்த நஞ்சான உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்தது… இருதயத்தின் வால்வுகள் அதனால் சீராக இயங்க முடியவில்லை.

இந்த உணர்வின் சத்து உடல் முழுவதும் பரப்பப்படும் பொழுது மற்ற உறுப்புகளும் செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

மற்றவருடைய வேதனைகளைக் கேட்டு உபகாரம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகளை உயிர் இயக்கி அதை உணர்த்தினாலும்… உணர்த்திய உணர்வின் சத்து உணவுடன் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… இந்த அமிலத்தின் சத்து இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது வால்வுகள் சீர் கெடுகின்றது.

இருதயத்திற்குள் சென்ற இதே இரத்தம் கிட்னிக்கு வந்தால் சிறுகச் சிறுக அதையும் சீராக இயக்க விடாது தடுத்து விடுகிறது. இரத்தத்தில் வரும் தீமைகளை அகற்றும் தன்மையை கிட்னி இழந்து விடுகின்றது.

இதைப் போல பல நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்குத் தான் கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்க்க நேர்ந்தால்… அடுத்த கணம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அவ்வப்போது உடனுக்குடன் நுகர்ந்து பழக வேண்டும்.

உடனுக்குடன் கவரும் அந்தத் திறன் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகளை எனக்குள் பதிவு செய்து இது எவ்வாறு இயக்குகிறது…? என்று
2.உணர்த்திய உணர்வவினை எனக்கு உபதேசித்த முறையிலேயே உங்களுக்கும் அதைக் கொடுக்கின்றேன்.

கேட்டறிந்த உணர்வுகள் பதிவாகி… மீண்டும் நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அந்த உணர்வின் ஆற்றல் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறச் செய்கின்றது.

அதை நுகர்ந்தால் நோய்களை உருவாக்கும் அத்தகைய சக்திகளை மாற்றி விடுகின்றது அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குச் சொல்கின்றோம்.

ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?

ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?

 

நாம் எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்திருக்கிறோம் என்றால்… குருநாதர் என்னை ஆயுட்கால மெம்பராகச் சேர்ப்பதற்கு முன்னாடி இதையெல்லாம் வரிசைப்படுத்தி எனக்குள் உபதேசித்தருளினார். அதாவது
1.நாம் எப்படி வாழ்கின்றோம்…?
2.நம் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பம் நம்மை எப்படி எல்லாம் பல இன்னல்களைக் கொடுக்கிறது…?
3.இதிலிருந்து எல்லாம் நாம் எப்படித் தப்ப வேண்டும்…? என்பதை உணர்த்தினார்.

அதன் வழிப்படி துருவ நட்சத்திரம் என்பது அகஸ்தியன் துருவனாகி அவர்கள் திருமணமான பின் அவர்கள் இரு மனமும் ஒன்றாகித் துருவத்தின் நிலையை எண்ணி ஏங்கி அந்த ஆற்றலைப் பெற்று… அவர்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று…
1.எந்தத் துருவத்தின் எல்லையை அது குறியாக வைத்து
2.அதனின்று வரும் உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கின்றனரோ
3.இந்த மனித உடலுக்குப் பின் கடைசி நிலை அது பிறவியில்லா நிலை.
4.தங்கள் உடலில் உள்ள நஞ்சுகளைக் கரைத்து விட்டு
5.எத்தகைய நஞ்சினையும் கரைத்து ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் ஆனார்கள்.

அதிலே தான் நாம் அங்கத்தினராகச் சேர்ந்திருக்கிறோம். இனி பிறவியில்லா நிலை என்ற நிலை அடைவதற்குத் தான் ஆயுட்கால மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றதோ அதே போல் நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை நீக்கி இந்த வாழ்க்கையிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று நமது உடலில் தீமைகள் புகாது பாதுகாத்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த அந்த அருளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது நாம் தியானிக்கும் முறைகள்.
3.குரு வழி வகுத்த இந்த முறைப்படி நாம் நடந்தோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.

ஆகவே நாம் இதை முழுமையாகக் கடைப்பிடித்தல் வேண்டும். ஆக ஆயுள் கால மெம்பராக எதிலே சேர்த்திருக்கின்றோம்…?

இப்பொழுது இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் நாம் இந்தத் தியானத்தில் கொடுத்த சக்தியின் துணை கொண்டு தீமைகளை வராதபடி அதை மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் நாம் அதை கடைப்பிடித்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.