கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷமான சக்திகளைத் தனக்கு உணவாக எடுத்து அதை மாற்றி அமைத்துத் துகள்களாக அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர்மறையானால் பூமிக்குள் வரும் போது மின்னல்களாகப் பாய்கின்றது.

கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது. அதே விஷத்தின் தன்மை மற்ற தாவரங்களில் எதிர்நிலையாகும் பொழுது அது கருகுகின்றது. இதன் உணர்வுகள் பூமியின் ஈர்ப்புக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது. பின் நிலநடுக்கம் ஆகின்றது. இது எல்லாம் மின்னலால் ஏற்படக்கூடிய நிலைகள்.

1.ஆனால் இத்தகைய நஞ்சையும் தாய் கருவிலே பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்திகளால் அடக்கியவன் அகஸ்தியன்.
2.அவன் கண்ட உண்மையின் உணர்வின் தன்மை மின்னல்களில் இருந்து வரக்கூடிய ஆற்றல்கள் அவனுக்குள் தணிகின்றது.

மின்னல்கள் பிரபஞ்சத்தில் பாயும் பொழுது அதை வெள்ளிக் கோள் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் நுகர்ந்து உடலுக்குள் பெருக்கி
2.உயிரைப் போன்றே உணர்வின் அறிவை வளர்த்துக் கொள்கின்றான்.

மின்னல் கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகிறது. ஆனாலும் அந்த மின்னலின் வீரிய உணர்வுகள் பாயும் பொழுது… சந்தர்ப்பம் மீன்கள் அதன் அருகில் சென்றால் அந்த ஒளிக்கற்றைகள் அதற்குள் பாயப்பட்டு அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

மின்னல் தாக்கும் பொழுது எப்படி ஒளிக்கற்றைகள் பரவுகின்றதோ மீன் இனங்களுக்குள் இது பட்டபின் அது நீருக்குள் உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் இப்படி மாறுவது போல
2.அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாம் நுகர்ந்தால் “நாமும் ஒளியாக முடியும்…”

அவன் துருவனானான். பின் பதினாறாவது வயதில் திருமணம் ஆகின்றது. தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். மனைவியும் அதையெல்லாம் தனக்குள் பதிவாக்குகின்றது.

பதிவான நிலைகள் கணவன் மேலும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அகஸ்தியன் தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவி பெற வேண்டும் என்று… இப்படி அந்த இரண்டு பேருமே இந்த உணர்வை வளர்த்து ஒரே உணர்வாக எண்ணப்படும் பொழுது ரிஷித்தன்மை பெறுகின்றார்கள்… துருவ மகரிஷியாகின்றார்கள்.

அந்த ரிஷி என்ற நிலை வரவேண்டும் என்றால் “கணவன் மனைவியாக இருந்தால் தான் முடியும்…”

செடி கொடிகளில் ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் தன் இன வித்துக்களை உருவாக்க முடியும். உயிரினங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் இனத்தின் தன்மை விருத்தி செய்ய முடியும்.

தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் எப்படித் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானானோ கணவன் மனைவி ஒன்றி ஒளி நிலை பெற்றார்களோ அதிலிருந்து வெளிப்படும் சக்திகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

உங்களுக்குள் அதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை எண்ணி நீங்கள் பெற்று உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண்களை மூடிப் புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் “மின் அணுக்கள் உருவாகும்…”
3.நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலுக்குள்ளும் ஒளியான உணர்வுகள் தோன்றும்.
4.உடலிலிருந்து வெளிச்சங்கள் வெளி வரும்… சிலருக்கு இது தெரியும்.
5.சிலருக்கு மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்டும்.

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

 

சில மலைப் பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று “அக்காலங்களில் அகஸ்தியன் அமர்ந்த பாறைகளை…”
1.பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற இடங்களையும்
2.தலைக்காவிரியில் அகஸ்தியன் சுழற்சி வட்டம் ஜாஸ்தி… அந்த இடங்களையும்
3.இமயமலையில் அவன் சுழன்ற இடங்களையும் அகஸ்தியன் வந்து சென்ற இடங்களையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகளாக அவன் வெளிப்படுத்தியது இன்றும் அங்கே உண்டு.

ஆனால் சாகாக்கலை என்று மந்திர ஒலிகளால் செயல்பட்டவர்கள் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்திருந்தாலும் அது எல்லாம் அழிந்து விடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலையில் விஷத்தன்மையே படர்கின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

வேகாநிலை அடைந்த மகரிஷிகள்… உயிர் ஒளியின் துடிப்பாக எப்படி இருக்கின்றதோ…? அதைப் போல தன் உணர்வினை உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக… நஞ்சினை அடக்கி ஒளியாக்குகின்றார்கள்.

வைரம் நஞ்சினை அடக்கி ஒளிச்சுடராக இருப்பது போன்று
1.உடலில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும்
2.வாழ்க்கையில் வரும் நஞ்சான உணவுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
3.அந்த ஞானி விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் “அடுக்கடுக்காகப் பரப்பி…” நஞ்சினை ஒடுக்கி
4.இந்த உணர்வின் தன்மையை மேலோங்கச் செய்து இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
5.துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
6.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி… அதனின் துணை கொண்டு ஒளியின் சிகரமாகி
7.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… அந்தத் துருவத்தில் வரும் உணர்வையே ஒளியாக மாற்றி
8.எந்த துருவத்தின் வழியில் ஈர்ப்பாகச் சக்திகளை எடுத்தானோ பூமிக்குள் வரும்… அந்த நஞ்சினை மற்றது விளையாது
9.அதையே தனக்குள் ஒளியின் சிகரமாக மாற்றி அமைத்து இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றான்…
10.அகஸ்தியன் துருவ மகரிஷியாக… துருவ நட்சத்திரமாக என்று…! இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அவனைப் பின்பற்றிவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கிறார்கள்…? என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனின் நிலைகளில் முழுமை பெற்று “உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரமாக எவ்வாறு அங்கே சென்றடைந்தார்கள்…?” என்று உணர்த்திவிட்டு அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும் என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இன்றும் ஒளியின் சரீரமாகவே இருக்கின்றான். அவன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்ட உணர்வு எது…?

அகஸ்தியனின் தாய்
1.கொடூர மிருகங்களிடம் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி
2.பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றார்கள்.

அன்று வீடு வாசல் கிடையாது… குகைகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். யானைகள் போன்ற கொடூர மிருகங்கள் வந்து விடும்… தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் குகைகளில் படுத்துத் தூங்கியவர்கள்.

இப்பொழுதும் நாம் காணுகின்றோம் பாம்பாட்டி கையிலே ஒரு வேரை வைத்துக் கொள்கின்றான். படமெடுக்கும் பாம்பு அப்படியே நின்று விடுகின்றது.

தேனை எடுத்துப் பழகியவர்கள் கையிலே ஒரு பச்சிலையைத் தடவிக் கொண்டு செல்கின்றார்கள். சும்மா கையை விட்டுத் தாராளமாகத் தேனை எடுக்கின்றார்கள்.

ஆனால் நாம் கையை வைத்தால் “கொட்டு… கொட்டு…” என்று கொட்டி நம்மைக் கொன்றுவிடும்.

அந்தப் பச்சிலை மணம் கண்ட பின் தேனீக்கள் ஒடுங்குகின்றது. தேனை லேசாக எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தப் பச்சிலைகளுக்குச் சில கடுமையான விஷங்கள் ஒடுங்குகின்றது.

யானை மிரட்டி என்று ஒரு பச்சிலை இருக்கின்றது. அதைக் கையிலே தேய்த்துக் கொண்டு நாம் சென்றால் இந்த மணத்தை கண்டால் யானை பிளிறிக் கொண்டு ஓடும்.

காடுகளில் புலையர்கள் பச்சிலையின் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் கையிலே கசக்கிக் கொண்டு யானைக் கூட்டத்திற்குள் செல்வார்கள். இவர்களைக் கண்டாலே அது ஒதுங்கிவிடும்… அருகில் வராது.

புலி போன்ற மிருகங்களுக்கும் அதற்கென்று பச்சிலைகளை உபயோகித்தார்கள் என்றால் அதுவும் ஒன்றும் செய்வதில்லை… விலகிச் சென்று விடுகின்றது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் காலங்களில் கர்ப்பமுறுகின்றார்கள்.
1.விஷத்தை முறிக்கும் மணங்களை இவர்கள் உடலில் பூசியது குகைகளில் பரப்பியது இவர்கள் சுவாசத்திலே நுகரப்பட்டு
2.கருவிலிருக்கக்கூடிய அகஸ்தியனுக்குள்ளும் இது பதிவாகின்றது.
3.விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி அந்தக் குழந்தைக்குத் தாய் கருவிலே வளரும் பொழுதே கிடைக்கின்றது.
4.அந்தப் பச்சிலைகளின் சக்தி அதற்குக் கிடைக்கின்றது.

அந்தச் சக்திகள் எல்லாம் விளைந்து தான் அகஸ்தியன் குழந்தையாகப் பிறக்கின்றான். அவன் பிறந்த பின் ஈயோ கொசுவோ தேளோ பாம்போ புலியோ நரியோ யானையோ இவன் மணத்தைக் கண்டால் அப்படியே பதும்பி விடுகின்றது. ஒன்றும் செய்வதில்லை.

இன்று விஞ்ஞான அறிவில் கூட சில நிலைகளைச் செயல்படுத்துகிறார்கள். காட்டு விலங்குகளுக்கு எதிர்மறையான இன்ஜெக்ஷனைத் தன் உடலில் போட்டுக் கொள்கின்றார்கள். போட்டுக் கொண்டு இவர்கள் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றார்கள்.

புலியோ யானையோ இவர்கள் அருகில் வருவதில்லை. ஏனென்றால் அதற்கு எதிர்மறையான மருந்தை உடலில் செலுத்திக் கொள்கின்றார்கள்.

சிலர் இது போன்ற அதிசயமான செயல்களைச் செய்வதாக டிவியில் காண்பிப்பார்கள். காட்டிற்குள் சென்று விஷப் பாம்புகளைக் கையில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காண்பிப்பார்கள்.
1.நமக்குப் பார்த்தால் பயமாக இருக்கும்.
2.ஆனால் அந்த இன்ஜெக்ஷனைப் போட்டுக் கொண்டுதான் அதைக் கையில் எடுக்கின்றார்கள்.
3.இந்த வாசனையைக் கண்டு அது ஒன்றும் செய்வதில்லை.

விஞ்ஞான அறிவில் இன்று இதைச் செயல்படுத்துகின்றார்கள்.

நல்ல பாம்பு அல்லது அதைக் காட்டிலும் கடுமையான விஷம் கொண்ட பாம்புகளைக் கூடப் பிடித்து அதனுடைய விஷங்களைச் சேமித்து எடுக்கின்றார்கள்.

ஒரு விஷத்திற்கு ஒரு விஷம் ஆகாது அதை எடுத்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றார்.

பாம்புகளிலேயே ஒரு பாம்புக்கு இன்னொரு பாம்புக்கும் ஆகாது… ஒன்று மற்றொன்று விழுங்கி விடும். ஆனால் இந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் நல்ல பாம்பு தன் உடலில் தானே கொத்திக் கொண்டால் விஷம் பாய்ந்து அது மரணம் அடைந்து விடும். உடலின் உணர்வுகள் வேறு… உடலில் இருக்கக்கூடிய விஷங்கள் வேறு.

பாம்பினுடைய பற்களிலே இருக்கக்கூடிய விஷம் தனித் தன்மையாகி எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது விரும்புகிறதோ அந்த உயிரினத்தில் இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது.
1.அதைச் சாப்பிட்ட பின் அதற்குச் சீக்கிரம் ஜீரணம் ஆகின்றது.
2.அந்த விஷமே அதற்குப் பாதுகாப்பாகின்றது.
3.ஆனால் அந்தப் பாம்பு தன் உடலில் தானே கடித்துக் கொண்டால் மரணம் அடைந்து விடும்.

உடலுக்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை… உற்பத்தியாகும் விஷத்தை உணவாக உட்கொண்டால் ஒன்றும் செய்வதில்லை.

பாம்பின் விஷத்தை மனிதர்கள் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பின் யாரையாவது நகத்தால் கிள்ளினால் போதும். இந்த விஷம் அங்கே பாய்ந்து அவர் இறந்து விடுவார்.

பாம்பு விஷத்தைக் குடிக்கும் பொழுது உடலுக்குள் புண் இருக்குமானால் நாமும் இறந்து விடுவோம். ஏனென்றால்
1.ஜீரணிக்கக் கூடிய பாதையில் செல்லும் நிலைகள் வேறு…
2.நேரடியாக ரத்தத்தில் கலக்கும் நிலைகள் வேறு…!

நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் டக்… என்று வாயிலே உறிஞ்சுவார்கள். உடலுக்குள் மேலே ஏறாதபடி உறிஞ்சித் துப்பி விடுவார்கள். ஆனால் வாயிலே அவர்களுக்குப் புண் இருந்தால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள்.

ஆனால் விஷத்தை விழுங்கினாலும் ஒன்றும் செய்யாது. அதை ஜீரணிக்கக் கூடிய நிலையாக வந்து விடும். இயற்கையின் நிலைகள் இப்படி எத்தனையோ வித்தியாசமான நிலைகள் வருகின்றது.

1.இதை எல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால்
2.கருவிலேயே விஷத்தை முறித்திடும் சக்தியாக வந்தவன் தான் அந்த அகஸ்தியன்.

ஒரு தாய் இங்கே வந்திருந்தார். அந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அவர் குடும்பத்திலே யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாது. ஆனால் அவரின் சொந்தக்காரருக்குச் சர்க்கரை நோய் இருந்தது,

இரண்டாவது குழந்தை அதன் கருவில் இருக்கப்படும் பொழுது அந்தச் சர்க்கரை நோயாளிக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அந்தத் தாய் செய்கின்றது.
1.பரிதாபப்பட்டு அந்த நோயாளியின் உணர்வுகளை இது நுகர்கின்றது.
2.நுகர்ந்த பின்… கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த உணர்வுகள் இணைந்து
3.பிறந்த பின்பு பார்த்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது.

மூன்று வயதிலேயே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகின்றது. இரண்டு நேரம் இன்சுலின் ஊசி போட வேண்டும். போடவில்லை என்றால் ஒன்றும் ஆவதில்லை. திடீரென்று அந்தக் குழந்தைக்குப் பசி எடுக்கும்.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை. சர்க்கரைச் சத்து உள்ள நோயாளியைத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தது. கருவிலே பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அது சேர்கின்றது.

தாய்க்கு ஊழ்வினை என்ற பதிவாகிறது. என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே இப்படி ஆகிவிட்டதே என்று அது வேதனைப்படுகின்றது. பின் அதற்கும் அந்தச் சர்க்கரை நோய் வரும்.

தாய்க்கு முதலில் வரவில்லை… குழந்தைக்குத் தான் வந்தது. ஆனால் நாளடைவில் பையனுக்கு இப்படி இருக்கிறது என்று தனக்குள் எண்ணி அது வளர்ச்சியாகும் போது தாய்க்கும் அந்த நோய் வருகிறது.

சில குடும்பங்களில் இயற்கையில் இப்படி நடக்கும் பொழுது இது “பரம்பரை நோய்…” என்று சொல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதே எண்ணினால் எல்லோருக்கும் சாடத் தொடங்கி விடுகிறது.

இங்கே யார் தவறு செய்தது…?

1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும்

வசிஷ்டரும் அருந்ததியும்

 

அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் பதினாறு வருடங்கள் வளர்ச்சி பெறுகின்றான். பதினாறாவது வயதில் அக்கால மக்கள் அவனுக்குப் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். திருமணத்தைச் செய்து வைக்கும் பொழுது கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றார்கள்.

துருவன் தான் கண்ட உண்மைகளைத் தன் மனைவி பெற வேண்டும் என்று உணர்வுப் பூர்வமாகச் சொல்லுகின்றான்.

அவனுடைய மனைவி கேட்கின்றது. தனக்குள் பதிவு கொண்ட உணர்வின் துணை கொண்டு “விண்ணை நோக்கி ஏங்குகின்றது…” இவன் கண்ட பேருண்மைகளை அவளும் காணுகின்றாள்… அறிவுபூர்வமாக அறிகின்றாள்.

தன் கணவனால் பெற்ற சக்தியால் பேரின்பப் பேரானந்த நிலைகள் அடைகின்றாள்.

1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணரும் பருவமும்
2.அதை நுகர்ந்தறிந்து தனக்குள் மகிழ்வுறும் உணர்வாக வெளிப்படுத்துவதையும்
3.நஞ்சினை ஒடுக்கும் ஆற்றலாக… “தான் நுகரும் உணர்வு ஒளிக் கற்றைகளாகத் தன் உடலில் இருந்து வெளிப்படுவதையும்…” உணர்கின்றாள்.

இவ்வாறு தன் கணவனால் பெற்ற சக்தியால் இந்தப் பிரபஞ்சத்தை அறிந்திடும் உணர்வுகள் தனக்குள் வளரும் தன்மை பெற்று…
1.கணவன் அந்த உயர்ந்த நிலைகளை மேலும் மேலும் பெற வேண்டும் என்ற
2.ஏக்க உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றாள்.

துருவனோ தான் உபதேசித்த உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அதன்வழி தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கண்டு அவனும் பேரானந்தப் படுகின்றான். அப்பொழுது இரு மனமும் ஒன்றாகி “ஒருவரை ஒருவர் உயர்த்தி எண்ணும் நிலை வருகின்றது…”

ஒருவர் சொல்லை ஒருவர் உயர்த்தும் நிலை வரும் பொழுது தான் அதற்கு நளாயினி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள். தன் கணவன் சொல்லைச் சிரமேல் கொண்டு அதன் வழி நடப்பதை நாமெல்லாம் புரிந்து கொள்வதற்காக நளாயினி என்று காரணப்பெயரை வைக்கின்றார்கள்.

தன் கணவன் சொன்ன சொல்லைத் தனக்குள் உயர்த்தி அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகண்ட உலகில் நட்சத்திரங்கள் எவ்வாறு உணவை உட்கொள்கின்றது…? என்பதை அறியும் பருவம் வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள் உணவாக உட்கொண்ட உணர்வுகள் நமது பிரபஞ்சத்தில் பரவும் பொழுது சூரியன் அதை உணவாக உட்கொள்வதையும் அதன்வழி அது வளர்ச்சி பெற்று வெளிப்படும் உணர்வுகளால் கோள்களும் அணுக்களும் எப்படி உருப்பெறுகின்றது…? என்ற நிலையையும் அவள் அறிகின்றாள்.

1.தான் கண்ட உண்மையைத் தன் கணவருடன் ஒன்றி அந்த உண்மையின் தன்மைகளைச் சொல்வதும்
2.இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு அதன்ன் வழியில்
3.அகஸ்தியன் தன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும்… மனைவி உயர்ந்த சக்தி பெறுகிறதென்றும் உணர்கின்றான்.

அந்த உணர்வுகள் அனைத்தும் அவர்கள் உடல்களில் விளையப்பட்டு இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை பெறுகின்றது. இரு உயிரும் எதைக் கவர்ந்ததோ அதைக் கருவாக உருவாக்கும் திறன் பெறுகின்றார்கள்.

துருவனின் உடலில் விளையும் உணர்வுகள் துருவ மகரிஷியின் மனைவியின் உடலிலும் விளைகின்றது.

அதற்கு அருந்ததி என்று, காரணப் பெயரை வைக்கின்றார்கள். தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி அதனுடன் இணைந்து வாழ்ந்திடும் நிலையை அருந்ததி என்று பெயரை வைக்கின்றார்கள்.

வசிஸ்டரும் அருந்ததியும் என்றால் வசிஸ்டர் ஆண்பால் அருந்ததி தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள்.
1.இருவரும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மையை இரண்டறக் கலந்து ஒன்றாக
2.உயிருடன் இணைக்கும் பருவம் பெறுகின்றார்கள்.

உயிருக்குள் வெப்பம் என்ற நிலைகள் இருப்பினும் ஈர்க்கும் காந்தம் பெண்பால் அருந்ததி என்றும் தன்னுடன் இயக்கும் உணர்வுகளை வசிஸ்டர் என்றும் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்த உணர்வுகள் “சத்தியவான் சாவித்திரி…” உயிருடன் ஒன்றிய உணர்வாக மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி பெறுகின்றார்கள்.

இதைத்தான் நமது ஞானிகள் நாமெல்லாம் கண்டுணர்வதற்குச்
1.சந்தர்ப்பத்தால் ஏற்படும் இணைப்பும் அதனால் உருப்பெறும் சக்தியும்
2.அவைகளுக்குக் காரணப் பெயர்களை வைத்து அழைத்து அகஸ்தியன் தொடர்களை நாமும் கண்டுணரும்படிச் செய்கின்றார்கள்.

அவ்வழியில் வளர்ந்தவர்கள்தான் எதைக் கூர்மையாக எண்ணி அந்த உணர்வினை இருவரும் ஒன்றாக இணைந்துப் பெற்றனரோ… இணைந்து இன்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.

துருவ நட்சத்திரமாக வாழ்ந்தாலும் அகண்ட உலகின் தன்மையைத் தன் உணர்வுக்குள் பெறும் தகுதியும் பெறுகின்றனர்.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் வரும் நிலையைக் கவர்ந்து அது உமிழ்த்தும் உணர்வலைகள் பால்வெளி மண்டலங்களாகப் படர்கின்றது. அணுக்களின் தன்மைகள் சுழற்சியில் வரப்படும் பொழுது தூசிகளாக மாறுகின்றது.

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பொருளைக் காற்று அழுத்ததால் அழுத்தப்படும் பொழுது அதை மிகவும் நுண்ணிய தூசிகளாக (பவுடர்) மாற்றுகின்றார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும், துருவ நட்சத்திரமாகும் பொழுது
1.பிற மண்டலங்கள் அகண்ட உலகில் அது பெறும் உணர்வுகள் தூசுகளாக வருவதையும்… பிரபஞ்சத்தில் அது பரவுவதையும்
2.பிரபஞ்சத்தில் பரவுவதை நமது பூமி துருவப் பகுதியில் ஈர்க்கப்படும் பொழுது இடைமறித்து அந்த உணர்வின் தன்மையை
3.எப்படி, நமது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியில் இடைமறித்து அதைத் தனக்குள் எடுத்து வளர்க்கின்றதோ
4.அதைப் போன்றுநமது பூமியில் விளைந்த இவர்கள் இருவரும் ஒன்றானபின்
5.அதைக் கருவாக்கும் நிலைகள் பெற்று ஒளியின் சுடராக இன்றும் மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இருவரும் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வை ஒளியின் அணுவாக மாற்றியது போன்று அக்காலங்களில் பெற்ற மற்ற மக்கள் ஆறாவது அறிவு ஏழாவது நிலைகள் பெற்றுத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள். “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.

ஆகவே நாம் அனவரும்
1.இதே வழியில் அதை உற்று நோக்கி அந்த உணர்வினைக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால்
2.நாமும் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து ஒளியின் சரீரமாவது திண்ணம். எமது அருளாசிகள்.

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படிப் பெற்றான்…?

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படிப் பெற்றான்…?

 

ஆதியிலே அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் விஷ ஜந்துக்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷ முறிவு வேர்களையும் அரைத்து உடலில் பூசுகின்றார்கள்.

சந்தர்ப்பத்தால் கருவுறும் பொழுது அந்த விஷ முறிவு வேர்களின் மணங்கள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகச் சேர்கின்றது.

பிறந்த பின் அவனுடைய வளர்ச்சி வர வர இவனைக் கண்டாலே மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகிறது.

அதே சமயத்தில் கடும் விஷத்தன்மை கொண்ட தாவர இனங்களை அவன் தாய் தந்தையர் நுகரும் பொழுது அந்த அதிகமான விஷம் கலந்து உடல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் மடிகின்றனர்.

1.கருவிலே வளரும் சிசுவிற்கு இந்த உணர்வின் தன்மை கலந்த நிலைகள் வளர்ச்சியின் தன்மை பெறுகின்றது.
2.ஆனால் தாய் தந்தையருக்கோ… மனிதனாக உருப்பெற்ற முழுமையான நிலைகள் விஷத்தன்மை ஆன பின் செல்கள் குறைகின்றது… மடிகிறது.
3.அகஸ்தியனுக்கு ஐந்து வயதாகும் போது அவர்கள் இருவருமே இறந்து விடுகின்றார்கள்.

தாய் தந்தையரை அகஸ்தியன் ஏக்கத்துடன் எண்ணுகின்றான். அவர்களோ இப்படி ஆகிவிட்டது… குழந்தை தனித்து இருப்பானே…! என்ற எண்ணத்தில் அந்த இரண்டு ஆன்மாக்களும் இவன் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

ஏக காலத்தில் இறந்து இரண்டு ஆன்மாக்களும் பிள்ளை மீது இருக்கும் பற்றால் காத்திடும் உணர்வு கொண்டு இங்கே வந்து விடுகின்றது. அதன் வழி தான் அகஸ்தியன் விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கின்றான்.

உதாரணமாக…
1.மிளகாய்த்தூளை (நெடி) சில பேய் பிடித்தவர்களுக்கு முன் போட்டு… உற்றுப் பார்க்கச் சொல்லுங்கள்… அது தும்மாது.
2.அதே போல் விஷமான பொருள்களை நுகரச் செய்தாலும் அதற்கு ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் அது விஷத்தைக் குடித்து அதனால் இறந்து இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தால் “இந்த விஷத்தைக் காண்பித்தால் அதற்கு ஆனந்தமாக இருக்கும்…”

இதைப் போன்று தான்
1.அகஸ்தியன் உடலில் இந்த இரு ஆன்மாக்கள் இருக்கப்படும் பொழுது தான் விண்ணின் ஆற்றலை அவன் பருகுகின்றான்.
2.சூரியனைப் பார்க்கும்போது அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு டேப்பிலே பதிவு ஆவது போன்று அவனுக்குள் பதிவாகின்றது.

அதிலிருந்து பரவும் நிலைகளையும்… அதன் தொடர் வரிசை நிலைகளில்… இந்தப் பிரஞ்சத்தையே உற்றுப் பார்க்கும் உணர்வின் ஆற்றல் முதல் மனிதன் அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது.

அதனால் தான் “அணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன்…” என்று சொல்வது. அவன் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அனைத்துமே இந்தப் பூமியிலே பரவி உள்ளது

அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிகின்றான்.
1.விண்ணை நோக்கி ஏகும் பொழுது நம் பூமி விண்ணிலிருந்து துருவத்தின் வழி கவரும் சக்தியைப் பூமியிலிருந்து உற்றுப் பார்க்கின்றான்.
2.அது கவரப்பட்டுப் பூமிக்குள் பரவுவதையும் காண்கின்றான்… ஆனால் அதை இவன் நுகர்கின்றான்.
3.அதன் உணர்வை அறிவாக அறிகின்றான்… அந்த உணர்வின் அணுக்கள் அவனிலே விளைகிறது.

அத்தகைய விண்ணின் ஆற்றல் வலுப்பெற்ற பின் அதே உணர்வுகள் இவனை அறியாமலேயே “நஞ்சின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாறும் நிலை வருகின்றது…”

காரணம்… தாயின் கருவிலேயே நஞ்சினை தன்மை அடக்கும் தன்மை வந்ததால் அந்த உணர்வு வரப்படும் பொழுது தாய் தந்தையரே இவனுக்குக் கடவுள் ஆகின்றார்கள்.

இதன் வழி கொண்டு தான் அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்று இவன் துருவ மகரிஷியாகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெற்று… இந்த உயிரான்மா அது வலுப் பெற்ற பின் அங்கே போகின்றது.

அகஸ்தியன் தாய் தந்தையரோ குழந்தை மீது பாசமாக வரும் பொழுது குழந்தையின் உடலுக்குள் வருகின்றது.
1.பின் இவன் விண்ணுக்குச் செல்லப்படும் பொழுது தன் தாய் தந்தையை விண்ணுக்கே அழைத்துச் செல்கின்றான்.
2.இது இயற்கையின் இயக்கம் என்று குருநாதர் காட்டினார்.

ஆகவே… மனிதர்களாக இருக்கும் நாம் இப்பொழுது எதைச் செய்ய வேண்டும்…? என்பது தான் முக்கியம்.

பக்தி கொண்டு நல்லவர்களாக இருப்பினும் பிறருடைய கஷ்டங்களை அதிகமாகக் கேட்டுணர்ந்தால் நம் நல்லது மறைகின்றது. கஷ்டம் அதிகமாக வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் மாற்றமாகின்றது.

இப்படி… சந்தர்ப்பத்தால் தீமைகள் நம் உடலுக்குள் புகுந்து அது விளைந்து நோயாக எப்படி மாறுகின்றதோ இதைப் போன்று ஒரு அழுக்குத் தண்ணீரில் நன்னீரை விடும் பொழுது அழுக்கு நீர் குறைகின்றது.

பல காலம் நம் வாழ்க்கையில் பலருடைய கஷ்டங்களைக் கேட்டு வந்த நாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் அந்தத் தீமை சிறுகச் சிறுகக் குறையும்.
2.பின் அது வலுப்பெற தீமையை நீக்கிடும் ஆற்றலே நமக்குள் பெருகுகின்றது.

வராகன் சாக்கடையைப் பிளந்து தன் வாழ்க்கையில் நல்லதை நுகர்ந்து நுகர்ந்து… தீமையைப் பிளந்திடும் உடலாக மனிதனாக வளர்ச்சி பெற்றது.

இதைப் போல… தீமைகளைப் பிளந்த அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அதை எல்லையாக வைத்து அங்கே துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அதனைப் பின்பற்றியவர்கள் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

அதனைப் பின்பற்றினால் அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நாமும் செல்கின்றோம். உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.

ஏனென்றால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலிலே நீடித்த நாள் நாம் இருக்கப் போவதில்லை. ஆகவே… எது நிலையானது…? அந்த மகரிஷிகளின் அருள் ஒளி தான்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எப்படியும் பெற வேண்டும். அவர்களைப் பின்பற்றி நீங்கள் செல்ல வேண்டும்.

காரணம்…
1.வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படியெல்லாம் மாற்றுகின்றது…?
2.உயர்ந்த நிலைகள் பெறுவதை எப்படி அது மாற்றியமைக்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் அந்த அருள் வழியில் என்றும் வாழ வேண்டும் என்பதற்கே தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

அகஸ்தியன் உணர்வுகள் மீண்டும் இந்தத் தென்னாட்டிலே தழைக்கின்றது

அகஸ்தியன் உணர்வுகள் மீண்டும் இந்தத் தென்னாட்டிலே தழைக்கின்றது

 

மனிதருக்குள் பதிவான அசுரத் தன்மைகளை மாற்றுவதற்குக் குருநாதர் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும்… நமது நாட்டில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தான். உணர்வின் தன்மை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.
1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றும் அவன் வாழ்வது போன்று நம் தென்னாட்டிலே மீண்டும் இது தழைக்கின்றது.
2.மற்ற நாடுகளில் இல்லை… தென்னாட்டில் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கலந்த இந்தக் கலாச்சாரங்கள் விளைகின்றது.
3.அதன் அடிப்படையில் தான் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அந்த அகஸ்தியன் உணர்வை உணர்த்துவதும்… உணரச் செய்வதும்.
4.அவர்கள் வளர்ந்தால் அந்த மெய்ப் பொருளின் நிலைகளில் அவருடைய வளர்ச்சியில் நாமும் பெறலாம்.
5.அந்த உணர்வுகளை இங்கே படரச் செய்யவும் முடியும்…. ஆகவே அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்தில் தொடர்பு கொண்டாலும் அங்கே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவில் உருவாகும் அந்தக் குழந்தைகள் “அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

அழகான சாமி படங்கள் எத்தனையோ இருக்கின்றது. அது போன்ற அழகான குழந்தையாக வளர வேண்டும். மகாலட்சுமி போன்று… மகா சரஸ்வதி போன்று சர்வ ஞானம் பெற வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மை பெற்ற நிலையில் இருளைப் போக்கும் மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லி அந்த ஞானிகள் காட்டிய வழியினைச் சொல்லுங்கள்.

குடும்பத்தில் மகரிஷிகள் உணர்வுகள் படர வேண்டும். குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவில் வளரும் இந்தக் குழந்தை பெற வேண்டும். உலகில் ஒன்றி வாழும் இந்த உணர்வின் சக்தி அந்த குழந்தையின் கருவிலே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

1.அந்தக் குழந்தை வளர வளர வளர தென்னாட்டில் வளரும் அத்தகைய குழந்தைகள் எந்நாட்டவரையும் காக்கும் சக்தியாக வரும்.
2.அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தது போல எந்நாட்டவரும் அந்த ஆற்றலைப் பெறும் தன்மையும்
3.அதன் வழியில் மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
4.நாம் முன் செல்கிறோம்… பின் வருவோரின் நிலைகளூம் அதே வழியில் செல்லும்.
5.ஏனென்றால் இனம் இனத்தைத் தான் வளர்க்கும்.

எதிலே எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கின்றது. தன் இனத்தின் சத்தை தன் வித்திற்கே உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போல தான் தீமைகள் மனிதனுக்குள் விளைந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதையே உணவாக ஊட்டி தீமையின் விளைவாகவே இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எல்லோரையும் மீட்க வேண்டும். பன் மடங்கு ஞானிகளை உருவாக்க வேண்டும். உங்கள் சொல்லால் செயலால் இதை வழிப்படுத்துங்கள்.

இரவிலே தூங்கும் போது ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு
1.முடிந்த மட்டும் இந்த உலகம் அந்த அகஸ்தியன் சென்ற அருள் வழியில் இப்படித்தான் வரவேண்டும் என்று தியானியுங்கள்.
2.தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று யாம் சொன்ன இந்த உபதேசத்தின் உணர்வைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அந்த நினைவினை எண்ணி வளர்த்துக் கொள்ளுங்கள். இது எல்லோராலும் சாத்தியமானது தான்.
1.சிறிது நாளைக்குச் சொல்லிப் பாருங்கள் தன்னாலே வந்துவிடும்.
2.அப்பொழுது உங்கள் உணர்வுகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் உலாவலாம்.

“இந்த அற்புதங்களை…” மற்றவர்களுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்டு மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.

1.சாமி மட்டும் பார்த்தேன் என்ற நிலைகளை…
2.சாமி பார்த்ததை எங்களாலும் பார்க்க முடியும்.
3.சாமி பார்வையால் தீமைகள் போகும்… “சாமி சொன்ன வழியில் என் பார்வையால் தீமைகள் போகும்…” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

அந்த வளர்ச்சியை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

உங்கள் மூச்சு சாதாரணமானதல்ல…! அந்த உணர்வுகள் இந்த உலகில் படரும்.
1.நீங்கள் ஒவ்வொருவரும் தவக்கோலம் பூண்டு உலக மக்கள் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இதைப் பதிவு செய்யுங்கள்.
2.அவர்களுக்குள்ளும் அது விளைகின்றது… அவர்களுக்குள் விளைய வேண்டும் என்ற எண்ண அலைகள் இங்கே பரவும்.
3.இதனுடைய பெருக்கம் கூடக் கூட உலகில் எதிர்காலத்தில் வரும் தீமைகள் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து விலகும்.

நமக்குள் முந்திய உணர்வின் தன்மை ஒடுங்கும்… எது நமக்குள் சேர்ந்திருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கும்.

இதை எல்லாம் நிச்சயம் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் நீங்கள் செய்ய வேண்டும். குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்.

துருவன் கண்டுணர்ந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்

துருவன் கண்டுணர்ந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்

 

அகஸ்தியர் ஐந்து வயதாகும் பொழுது நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றதால் துருவன் என்ற காரணப் பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.

அதன் வழிப்படி
1.தனது 5 வயது முதலே விண்ணுலகில் என்ன அதிசயங்கள் நடக்கின்றது…? என்ற நிலையை
2.சிறுகச் சிறுக அதன் உணர்வின் வளர்ச்சியைத் தனக்குள் கண்டுணர்ந்து நமது பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

பிரபஞ்சம் என்று சொல்லும் பொழுது 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படிக் கவர்கிறது…? என்பதை அறிகிறார்.

ஒரு நூலாம்படைப் பூச்சி வலை விரித்து… மற்ற ஈயோ வண்டுகளோ அதிலே சிக்கும் போது தன்னுடைய மூக்கின் நுனி கொண்டு இஞ்செக்சன் போன்று அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாகக் குடித்து விடுகின்றது.

பின் தன் இனவிருத்திக்காக மற்ற ஈக்கள் கிடைத்தால் தனக்குள் உருவாகும் சில அமிலம் கலந்த மலத்தை வெளியாக்கி அந்த ஈயைக் காற்றுப் புகாதபடி முழுமைக்கும் சுற்றித் தன் உடலில் ஊறும் உணர்வின் சத்தை அந்த ஈக்குள் பாய்ச்சப்படும் பொழுது
1.ஈக்குள் இருக்கும் ஈயை உருவாக்கும் அணுக்களில் இது படர்ந்து
2.நூலாம்படைப் பூச்சி போன்ற உணர்வுகள் அங்கே வளர்ந்து… தன் இனத்தையே உருவாக்குகின்றது.

அதே போன்று… குளவி ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த விஷத்தன்மை அதற்குள் இணைந்த பின் புழுவின் துடிப்பைக் குறைக்கச் செய்து உமிழ் நீரால் மண்ணை உருட்டி கூடைக் கட்டி அந்தக் கூட்டிற்குள் இந்தப் புழுவைச் செலுத்தி “நூலாம் படைப் பூச்சி போன்றே…” தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை அதற்குள் பாய்ச்சி அந்தக் கூட்டை மூடி விடுகின்றது.

இந்த விஷத்தின் தாக்குதலால் புழுவின் உடல் தோல் சருகு போன்று ஆகிவிடும். அவ்வாறான பின் உடலை உருவாக்கிய அணுக்கள் நூலாம்படைப் பூச்சி தன் அமிலங்களால் ஈயைத் தன் இனமாக எப்படி மாற்றியதோ அதே போன்று புழுவை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் கூழ் போல் ஆகி விடுகின்றது.

புழுவின் உயிர் குளவியின் உமிழ்நீரால் கட்டப்பட்ட அந்தக் கூட்டின் வழி கூடி புறத்தில் இருக்கும் சூரியனின் காந்தப் புலனறிவைத் தனக்குள் எடுத்துக் கோழி தன் முட்டையை எப்படி அடைகாக்கின்றதோ இதைப் போல
1.குளவியின் உணர்வுகள் அதற்குள் பாய்ச்சப்பட்டு சிறுகச் சிறுக புழுவின் உடல்
2.அந்த அணுக்கள் மாற்றமடைந்து புழு குளவியின் ரூபமாக மாறுகிறது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்.

இவ்வாறு வளர்ச்சி பெற்றது போன்று தான் பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றித் தூசியாக மாறுவதை உணவாக எடுத்துக் கொள்வதும் தூசியாக வருவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

இப்படி இந்த 27 நட்சத்திரங்களும் இடைவெளி விட்டு பிற மண்டலங்களிலிருந்து எடுத்ததைப் பால் வெளி மண்டலங்களாக அமைக்கப்படும் பொழுது ஒரு கூட்டமைப்பு போன்று ஆகி
1.பூமிக்கு “ஓசோன் திரை” எவ்வாறு முக்கியமாக இருக்கின்றதோ
2.சூரியனுக்கு இந்தப் “பால்வெளி மண்டலம்” பிற மண்டலங்களிலிந்து வருவதைக் கவர்ந்து தன் சக்தியை எடுத்துக் கொள்கின்றது.

இவ்வாறு அந்த 27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற நிலையில் அது உருப்பெறுவதை ஐந்தாவது வயதில் துருவன் சூரியக் குடும்பத்தின் முக்கிய நிலைகளைக் காணுகின்றான்.

நாம் எப்படிக் கண்களிலே ஒன்றைப் பார்க்கின்றோமோ இதைப் போல அந்த உணர்வின் தன்மை தன் உயிரில் நுகர்ந்து
1.அந்த உணர்வின் வலிமைகளை அணுக்களாகப் பார்க்கும் தன்மையும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? எப்படி வளர்கின்றது…? எப்படி வாழ்கின்றது…? என்ற நிலையை அவன் பார்க்கின்றான்.

உங்களுக்குள் இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம். அடுத்து நீங்களும் இதைக் காண முடியும். அவன் கண்டதை நீங்களும் காணும் நிலை வரும்.

டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதன் அலை வரிசைகளில் ஒளிபரப்பாவது காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து நமக்கு அது படமாகக் காட்டுகின்றது.

இதைப் போல் விஞ்ஞானிகள் கருவிகளை வான மண்டலத்தில் அனுப்பி அங்கிருப்பதைப் படமாக்கி… அந்த உணர்வின் அணுக்களைப் பல மடங்கு பெரிதாக்கி மனிதன் தனக்குகந்த அந்த உணர்வின் தன்மை எதுவோ அதைக் கண்டறிகின்றான்.

ஆனால்… “தன் தாயின் கருவிலே இருக்கும் போது வளர்ந்த ஆந்த உணர்வுகள்…” விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை அகஸ்தியனுக்கு ஏற்படுத்தியதால் அதனுடைய வளர்ச்சியால் சூரியக் குடும்பத்தின் உண்மைகளைத் தனக்குள் கவர்ந்து… அதை அறியும் ஆற்றலும்… அதன் இயக்கச் சக்தியைக் காணும் சந்தர்ப்பமும் அந்தத் துருவனுக்குக் கிடைக்கின்றது.
1.ஏனென்றால் துருவத்தின் வழி தான் இதையெல்லாம் பார்க்கின்றான்.
2.நம் பூமிக்குள் வருவதை… அந்தத் துருவத்தின் எல்லைப் பகுதியிலிருந்து
3.எப்படி… எங்கிருந்து… எதற்குள் கலக்கின்றது…? என்ற அதிசயங்களைப் பார்க்கின்றான்.
4.தனக்குள் நுகர்ந்து அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.

பால்வெளி மண்டலங்களிலிருந்து தூசிகளாக வருவதை நட்சத்திரங்கள் உணவாக உட்கொள்கின்றது. அதனுடன் இணைந்த நிலைகள் சேர்ந்து சுழலும் பரிமாணம் உள்ள துகளாக ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.

பின் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழற்சி பெற்று அந்த நட்சத்திரம் முதலிலே கோளாக இருந்து எப்படி நட்சத்திரமானதோ இதன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களாக வளர்ச்சி பெறுகின்றது.

இதன் வரிசையில் அகண்ட வெளியில் மற்ற நிலைகள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் அது எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ஒவ்வொரு உணர்வு கொண்ட நிலையாக மாறுகின்றது.

பிரபஞ்சத்தில் எப்படிச் சூரிய குடும்பத்திற்குப் பல விதமான கோள்களும் 27 நட்சத்திரங்கள் வருகின்றதோ இதைப் போல அங்கேயும் அமைப்புகள் உருப் பெறுகின்றது.

1.இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வரும் பொழுது அதனதன் வளர்ச்சிகள் அது வருவதும்
2.அது வளர்ந்து உமிழ்த்தும் நிலைகள் துகள்களாகத் தூசிகளாக வருவதும்
3.சூரியன் அதைத் தனக்குள் எடுக்கும் பொழுது மற்ற கோள்கள் இடைமறித்துத் துருவத்தின் வழி கவர்வதும்
4.இவை அனைத்தும் ஆண்பால் பெண்பால் என்ற நட்சத்திரங்கள் உணர்த்துவதை அது எதனுடன் எது இணைக்கின்றதோ
5.அதனதன் உணர்வு கொண்டு அணுக்களின் தன்மை மாற்றம் அடைவதும்
6.ஒன்றுடன் கலந்து அதே இனத்தைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது… பாறையானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்.

பிரபஞ்சத்தில் உருவாகும் இந்த நிலையை துருவன் ஊடுருவிப் பார்க்கின்றான். நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றது…? என்பதைப் பார்த்தாலும் சூரியக் குடும்பத்தில் கோள்கள் இயங்கி வருவதையும் நட்சத்திரங்கள் தன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களை எப்படி வளர்க்கின்றது…? என்பதையும் அதன் வரிசையில் நட்சத்திரங்கள் எப்படி வளர்ச்சி அடைகிறது…? என்பதையும் காணுகின்றான்.

ஒரு குடும்பத்தில் குழந்தைகள் உருவாகி அது வளர்ச்சி பெற்று வரும் பொழுது திருமணம் ஆகித் தன் இனத்தின் நிலைகளை உருவாக்குவது போன்று இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் கோள்கள் உருவாகி நட்சத்திரங்களாக வளர்ச்சி அடையும் பொழுது இதைப்போல ஒரு குடும்பமாக அந்த உணர்வின் சக்தி பெறப்படும் போது தனிப் பிரபஞ்சமாக ஒரு சூரியக் குடும்பமாகப் பிரிந்து சென்றுவிடும்.

பேரண்டத்தில் ஒன்று சேர்த்து வாழ்ந்தாலும் அகண்டு செல்லப்படும் பொழுது… முதலில் உள்ள சூரியக் குடும்பம் அதனதன் வளர்ச்சியின் தன்மையைத் தானே எடுத்து வளரப்படும் பொழுது முதலில் உருவான சூரியன் செயலிழந்து மங்க நேரும்.

பின் அது திசை மாறி ஓடும் நிலையில் கரைவதும் மற்றொன்றுடன் மோதுவதும் அதனுடைய சுழற்சி மையங்கள் மீண்டும் கரைந்து மற்றவைகளுக்கு இரையாகின்றது.

மனிதன் உருப் பெற்று வாழ்ந்த பின் அவர்கள் மடிந்தார்கள் என்றால் தன் இனங்கள் தான் விருத்தி ஆகின்றது, இவர்கள் மடியப்படும் பொழுது அந்தச் சரீரம் கரைக்கப்படுகின்றது. அதைப் போன்று தான்
1.சூரியன் அழிந்தாலும் அது கரைந்து விடுகின்றது,
2.இவ்வாறு பேரண்டத்தில் உள்ள சூரியக் குடும்பங்கள் அனைத்தும் தன் இனங்கள் நட்சத்திரங்கள் உருப் பெற்று
3.அவைகள் பிரபஞ்சமாகத் தனித்துத் தனித்து உருவாகத் தொடங்கினால்
4.முதலில் உருவான சூரியநுக்குக் கிடைக்கும் அந்தப் பங்கு கிடைக்கவில்லை என்றால் அது செயலை இழந்து விடுகின்றது.

இதை ஐந்தாவது வயதிலிருந்து துருவன் நுகர்ந்து தனக்குள் அது விளைந்து தன் எண்ணத்தால் வெளிப்படுத்திய… அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் படர்ந்துள்ளது… அழியவில்லை…!

இதைத்தான் நமது குருநாதரும் நுகர்ந்தார்.
1.அவர் பெற்ற உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்து அதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையில்
2.நீ எண்ணி ஏங்கி அதை எடுக்கப்படும் பொழுது… நீ நுகரும் பொழுது உன் உயிரிலே அது உராயப்பட்டு
3.அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எப்படி அந்த உண்மைகளை உணர்த்துகின்றது…?
4.அதன் தொடர் கொண்டு நீ எப்படி அறிகின்றாயோ அதே போல்
5.மற்றவர்களுக்கு நீ இதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களுக்கும் அறியும் ஆற்றல் வருகிறது.

உதாரணமாக… கோபம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விட்டால் அதைச் சொல்லாக மற்றவரிடத்தில் பதிவு செய்யும் பொழுது கோபமாக சொன்னவரைத் திரும்ப எண்ணும் பொழுது இந்த உணர்வு எப்படி அவர்கள் உடலில் வளர்ச்சி பெறுகின்றதோ இதைப் போன்று தான் துருவன் கண்ட உணர்வுகள் அவன் வளர்ச்சியில் வளர படும்பொழுது அதை நீ நுகருகின்றாய் உனக்குள்ளும் இது விளைகின்றது.

அந்த உணர்வின் சொல்லாக நீ சொல்லப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை கேட்போருக்குள்ளும் பதிவாகி அவர் இதை நினைவு கொண்டு எடுப்பார்கள் என்றால் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வுகளை அவர்களும் அறிகின்றார்கள்.

மனிதனாக இருக்கும் பொழுது பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்ற நிலையில்
1,ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெருக்கப்படும் பொழுது
2.தனக்குள் புது உருவாக உருவாக்குகின்றார்கள் என்று பொருள்படும்படிச் சொல்கின்றார் குருநாதர்.

அதை எல்லாம் மனிதர்கள் நாம் தான் எண்ணத்தால் எடுக்க முடியும். மற்ற உயிரினங்கள் அதைக் கவர்ந்து எடுப்பதற்குண்டான வாய்ப்புகள் இல்லை.

தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட மிருகங்களைப் பார்க்கப்படும் பொழுது அதன் வலிமையை நுகர்ந்து பதிவாக்கி அந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வை நுகரப்படும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இந்த உடல் மடிந்தபின் உயிரான்மா வெளி சென்று அதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று அந்த மிருகத்தின் உணர்வைக் கலந்து அதன் ரூபமாக மாறுகின்றது.

இப்படித்தான் நாம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம் என்ற உண்மையைத் தெளிவாக்கிப் பிரபஞ்சத்தின் இயக்கங்களும் நட்சத்திரங்களுடைய மாற்றங்களும் அதை இளமைப் பருவத்திலிருந்து கண்டுணர்ந்த துருவன் அவன் எவ்வாறு பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
1.தியானத்தில் இதையெல்லாம் நீங்கள் காணப் போகின்றீர்கள்
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்க்கப் போகின்றீர்கள்.

அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

துருவன்… துருவத்தின் ஆற்றலை ஜீரணித்து ஒளியானவன்

துருவன்… துருவத்தின் ஆற்றலை ஜீரணித்து ஒளியானவன்

 

அகஸ்தியன் துருவத்தின் வழி வானுலக ஆற்றலைத் துருவத்தின் வழி நம் பூமி பெறுவதை இடைமறித்து அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தறிந்தான்.

அந்த உணர்வுகளை நாமும் பெற…
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
2.அந்த துருவத்தினை எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
3.நமது பூமி சுழல்வதும்
4.பிரபஞ்சத்தில் உருவாகும் நிலைகள் பூமி செல்லும் பாதையில் அணுக்களாக இருப்பதை
5.துருவப் பகுதியில் அதை ஈர்க்கும் சக்தியாக வருவது உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
6.கண் வழி தான் இந்த நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றச் செய்து
7.அகக்கண் வழிகொண்டு நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

புறக்கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்த்தன் துணை கொண்டு
1.உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து நினைவினைப் பூமியின் துருவப் பகுதிக்குச் செலுத்தினால்
2.துருவப் பகுதியில் கவரும் அந்த நிலையை பூமி சுழன்று கொண்டிருப்பதையும்
3.இந்த எல்லையிலிருந்து வானுலக ஆற்றலின் சத்து அந்தத் துருவப் பகுதி வழியாக எப்படி வருகிறது…? என்பதும் காட்சியாகத் தெரியும்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன் அதன் உணர்வே ஒளியாக மாறும் நிலை அவனுக்கு வருகின்றது.

பூமி தான் சுழலும் பாதையில்… நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தக் கூடிய உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்குப் பரவி வருவதையும்… மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவத்தின் ஈர்ப்பிற்குள் வருவதையும் உங்களால் கவர முடியும்.
1.நுகரும் பொழுது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலில் பரவும்.
2.சிறிது நேரத்தில் நெடி கலந்த நிலைகளும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும் நறுமணம் கொண்ட உணர்வுகளும் வந்து கொண்டே இருக்கும்.

உணர்வுகள் உயிருடன் ஒன்றி உடலுக்குள் சென்று நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணங்களிலும் அது மோதும் பொழுது
1.உடலுக்குள் பல அதிசயங்களாக… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
2.ஒரு ஆனந்தமான ஒளி வெளிச்சமாக நமக்குள் வந்து கொண்டிருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.

சாதாரண எண்ணெயில் ஒரு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினோம் என்றால் அதிலே ஒரு எரிச்சல் கலந்த நிலையாகத் தெரியும். ஒரு பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது எண்ணெயின் சக்தியை ஆவியாக மாற்றி அது குளிர்ந்த ஒளியாக மாற்றும்.

அதைப் போல
1.இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள் துருவ மகரிஷியின் அருள் உணர்வுடன் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றி விட்டுக் குளிர்ந்த ஒளியாகக் காணுவது போன்று
3.உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் ஒளியின் தொடராகப் பரவும்.

உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களில் மீது மோதும் பொழுது
1.அந்த ஞானியின் உணர்வு உங்கள் உடலுக்குள் பளீர்…ர் பளீர்…ர் என்று மகிழ்ச்சி பெறும் உணர்வாகத் தோற்றுவித்துக் கொண்டே வரும்.
2.உடலில் மாற்றங்கள் பெறுவதைக் காணலாம்

வெல்டிங் வைக்கப்படும் பொழுது பளீர்…ர் என்று மின் ஒளிகள் வரும். அது எரிச்சல் கலந்ததாக இருக்கும் ஆனால் பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது அது எப்படிக் குளிர்ந்ததாகக் கண்ணுக்குப் புலப்படுகின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் அருள் மகரிஷிகள் உணர்வுகள் கலந்து மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக
2.நம் உடலில் ஒளித்தன்மை படர்வதைக் காணலாம்… உணரலாம்.
3.ஒரு சுவை மிக்கதாக மாறி வரும்.

புருவ மத்தியில் எண்ணி நினைவினைத் துருவ மகரிஷிகள் பால் செலுத்தி துருவ மகரிஷியின் ஆற்றல் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தப்படும் பொழுது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டி அதன் மூலம் உட்பொருளைக் காணுவது போன்று உங்கள் உடலுக்குள் வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
2.ஒவ்வொரு உணர்வின் அலைகள் மோதும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்களுக்குள் தோன்றுவதையும்
3.ஒளி கண்ட பின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஆற்றல்மிக்க சக்தியாக இது இணையும்.
4.துருவ மகரிஷியின் உணர்வுகள் உயிருடன் மோதும் பொழுது மெர்குரி போன்று உயிரிலே வெளிச்சம் வரும்.
5.இளம் நீலமாக ஒளி அலைகள் புருவ மத்தியில் கண்களுக்குப் புலப்படும்.

இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவைச் செலுத்தப்படும் பொழுது உடலில் மகிழ்ச்சி பெறும் நிலை உருவாகும்.

1.இதற்கு முன்பு அறியாது சேர்ந்த பல தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க இது உதவும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து மன பலம் பெற இது உதவும்.

விண்ணுலக ஆற்றல் பூமியின் ஈர்ப்பால் துருவத்தின் வழியாகக் கவரப்பட்டு நடு மையத்திற்குச் சென்று எப்படி அடைகின்றது…? அதனின் அடர்த்தி மின் அணுக்களாக பூமிக்குள் சென்று குவித்தவுடன் ஒன்றுக்கொன்று மோதும் பொழுது கொதிகலன் எப்படி உண்டாகின்றது…? அதிகமான வெப்பம் அங்கே எப்படி உண்டாகிறது…? என்று குருநாதர் காட்டுகிறார்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு அணுகுண்டைப் போட்ட பின் அணுக்கதிரியக்கங்கள் மற்ற பொருள்களுடன் தன் இனமான நிலைகளுடன் மோதி… இது வளர்த்துக் கொண்ட உலோகமானாலும் கல்லானாலும் மண்ணானாலும் அதை ஆவியாக மாற்றி ஒரு புகை மண்டலமாக மாறுகின்றது. மற்றொன்றை அழித்துத் தன் இனமாகப் பெருக்கி அதன்பின் அது மடிந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் பூமிக்குள் வளர்ச்சிகள் அடைகின்றது என்ற நிலையைக் குருநாதர் காட்டுகின்றார்.

இது அனைத்தையுமே… வானுலக ஆற்றலைத் தன் உடலுக்குள் காணுவது போல தன் உடலுக்குள் இருந்த உணர்வை இந்த மண்ணுலகிலும் (புவியியல்) ஊடுருவிச் செலுத்தித் துருவன் காணுகின்றான். அதிலே தாவர இனங்களின் வளர்ச்சியையும் காணுகின்றான்.

உயிரணுக்கள் நீர் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உருவாக்கப்பட்டு அதனின் கருமுட்டைகள் புயல் காற்றிலே சிக்கப்பட்டு மேக மண்டலத்துடன் கூடி நிலப்பரப்பில் விழுகப்படும் பொழுது… எதன் எதன் கலவைகள் அதற்குள் கலந்திருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு இங்கே தரைவாழ் உயிரினங்களாக உருவாகின்றது.

ஏனென்றால் இதையெல்லாம் தனித்துத் தனித்துப் பிரித்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆயுளும் பத்தாது… நேரமும் பத்தாது…! சுருக்கமான நிலைகளில் அவர்கள் கண்ட உணர்வினை குருநாதர் காணும்படிச் செய்தார். நீங்களும் அதைக் காணும் நிலைகள் வரும்.

துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலையில்… அதனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக எப்படி அழியாது பேரின்பம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாம் அனைவரும் அந்த அழியா நிலைகள் பெறலாம்.

இந்த உயிரில் எது இணை சேர்த்து வளர்க்கப்படுகின்றதோ அதை உயிர் அணுத்தன்மையாக மாற்றுகின்றது என்ற நிலையை அறியச் செய்வதற்குத் தான்
1.நம் குருநாதர் கொடுத்த இந்தச் சக்தியை நீங்களும் பெற்று உடலுக்குள் வளர்ச்சியாகி
2.அந்த அணுத் தன்மையாக வளர்த்து அதையே நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

ஆனால் அகஸ்தியன் தன் தாய் கருவிலே இருக்கும் போது விஷத்தன்மையை அடக்கி… அதன் வலுவின் தன்மைகொண்டு மற்றதை அறியும் ஆற்றல் அவனுக்கு வந்தது போன்று…
1.எல்லோருக்கும் அந்தச் சந்தர்ப்பம் வருவதில்லை.
2.ஒருவரால் உருவாக்கப்பட்டு அதிலே விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டு
3.அதே இன மக்களால் சந்தர்ப்பத்தால் கவரப்பட்டு வெளிவருவது தான்… எல்லோரும் அந்த வழியில் செய்ய முடியாது.

குருநாதர் எத்தனையோ தவத்தைச் செய்தார். அதன் வழியில் நானும் சென்றேன். அவர் பதிவு செய்த நிலைகளை அறிவதற்காக காடு மேடு அனைத்தும் அலைந்தேன். உண்மையை உணரும்படி செய்தார். எனக்குள் வளரும் நிலையை உருவாக்கினார்.

அதே போன்று நீங்கள் எல்லோரும் காட்டிற்குள் சென்றால்… தொழில் செய்வது எங்கே…? சாப்பிடுவது எங்கே…? குடும்பம் எங்கே அப்படி இருக்க முடியும்…? முடியாது…!

“யாராவது ஒருவர் விளைய வைக்கும் நிலையில் தான் செயல்படுத்த வேண்டும்…”

தாய் கருவிலே… குழந்தைகள் பெறும் பூர்வ புண்ணியம் பற்றிய உண்மைகள்

தாய் கருவிலே… குழந்தைகள் பெறும் பூர்வ புண்ணியம் பற்றிய உண்மைகள்

 

1.பூமி தன் துருவப் பகுதி வழியாக விண்ணிலிருந்து கவர்ந்து வருவதைத் தன் ஐந்தாவது வயதில் துருவன் கண்டுணர்ந்து
2.வானஇயல் தத்துவம் புவிஇயலாக மாறுவதைத் தன் தாய் தந்தையரிடம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றான்.

அந்தக் கால பாஷையில் அவன் வெளிப்படுத்தும் போது… அதற்காக வேண்டி ஒவ்வொன்றையும் பொருள்களை ஜாடையில் காட்டி அதைச் சொல்கின்றான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே வருகின்றது.

இருந்தாலும் ஐந்து வயது நிரம்பும் போது தன் குழந்தையின் அறிவைக் கண்டு தாய் தந்தையர் மிகவும் ஆனந்தப்படுகின்றார்கள்.

ஆனந்தப்பட்டாலும்… அவர்கள் பூசிக் கொண்ட விஷத்தன்மையான மூலிகைகளினால் உடலில் அணுக்கள் உருவாகி… அது வளர்ச்சி பெற்று விஷத்தின் தன்மையாக நுகரப்படும் பொழுது அவர்கள் உடலில் நோயாக மாறுகின்றது.

அகஸ்தியன் தாய் தந்தையர் உடலில் அந்த விஷத்தன்மைகள் பெருகி மனிதனாக உருவாக்கிய அணுக்களுக்கு எதிர்நிலையாக ஆகிறது. கடும் வியாதியாக மாறி அவர்கள் மரணம் அடைகின்றார்கள்.

ஆனால் தாய் கருவிலிருக்கப்படும் பொழுது
1.அகஸ்தியனுக்கு விஷத்தின் ஆற்றலை மாற்றிடும் அணுக்கள் வளர்ச்சி பெற்று
2.விஷத்தை அடக்கிடும் சக்தியாகப் பூர்வ புண்ணியமாக அவனுக்குக் கிடைக்கின்றது.

தாய் தந்தையருக்கோ… அவர்கள் உடலில் வளர்ச்சி பெற்ற… மனிதனைத் தெளிவாகும் அத்தகைய அணுக்களில்
1.விஷத் தாவர இனங்களை ஆவியாக மாற்றிச் சுவாசிக்கப்படும் பொழுது அவர்கள் உடலில் பரவி
2.மிருகங்கள் இந்த வாசனையை நுகர்ந்தபின் அஞ்சி ஓடியது போல்
3.இவர்கள் உடலில் அந்த வாசனைகள் சிறுகச் சிறுகப் புகுந்து நோயாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தாய் கெமிக்கல்களை வைத்துத் தொழில் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். வேலை செய்யும் போது அங்கிருக்கக்கூடிய விஷத்தன்மைகளைத் தாய் நுகர்கிறது.
1.கருவிலிருக்கும் குழந்தையும் அதை நுகரப்படும் பொழுது
2.அந்தக் குழந்தை “விஷத்தன்மையைத் தாங்கும் சக்தியாக” வளர்கிறது.

ஆனால் தாய் நுகர்ந்த கெமிக்கல் உடலுக்குள் சென்ற பின் தாய்க்குக் கடும் நோயாக ஆகி அது மடியும் தன்மை வருகிறது.

அதே சமயம் தந்தை… இந்தக் கெமிக்கலின் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து அதிலே உருப்பெறும் கருவின் தன்மை பெண்பால் நிலைகள் கொண்ட சுக்கிலத்துடன் கலக்கப்படும் பொழுது… ஆணில் விளைந்த விஷத்தின் தன்மை அது இரண்டும் கலந்து கரு முட்டையுடன் இணைக்கப்படும் பொழுது
1.கருவிலே உருப்பெரும் குழந்தை உடலில் விஷத் தன்மை பெருகி
2.அதற்குக் “கடும் நோயாக இது உருவாகிவிடுகிறது…”

ஏனென்றால் இதனுடன் இணைந்த உணர்வுகள் கருவாக வளர்க்கப்படுவதற்கு “அந்தக் கெமிக்கல்” உணவு கொடுக்கின்றது… உடலை உருவாக்குகின்றது. ஆக அந்த விஷத்தன்மை திடப்பொருளாக உடலாக மாற்றப்படும் பொழுது நோயாகி விடுகின்றது.

தாய் அந்தக் கெமிக்கல் கலந்த உணர்வைத் தான் சுவாசிக்கப்படும் பொழுது அது தாய் உடலில் நோயாகிறது. கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வு பட்டபின் நோயாக அது மாறுவதில்லை.

அதே சமயம் ஒரு நோயுற்ற குழந்தை வேதனைப்படுவதைத் தாய் உற்று நோக்கி அந்த உருவத்தினை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணையப்படும் பொழுது அந்த நோயுற்ற உடலில் விளைந்த உணர்வுகள் சுவாசிக்கப்படும் பொழுது… கருவிலிருக்கும் குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

1.அந்தக் குழந்தை உடலில் எந்த நோய் உருவானதோ
2.அதே நோய் கருவிலே உருவாகும் குழந்தைக்கும் வந்து விடுகின்றது.

ஏனென்றால் இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களுக்குச் சொல்கிறேன்.

மற்ற விஷத் தன்மைகளைப் பார்க்கும் பொழுது தான் சுவாசித்த உணர்வுகள் இந்த அணுக்களில் வளரப்பட்டு தாய் கருவிலே விளையப்படும் பொழுது விஷத்தை வெல்லும் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது தேள் கொட்டி விட்டால் அந்த விஷத்தன்மை கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் ஊடுருவி விடுகின்றது. குழந்தை பிறந்த பின் தேளை வைத்திருந்தாலும் “அந்தத் தேளின் விஷம் குழந்தையைப் பாதிப்பதில்லை…”

அதே போல ஒரு விஷமான பாம்பு தாயைத் தீண்டிவிட்டால் மருத்துவரிடம் சென்று அந்தத் தாய் பிழைத்து விட்டால் பாம்பினுடைய விஷம் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குள் ஊடுருவி… “அந்த விஷத்தை வெல்லும் சக்தியாக அந்தக் குழந்தை பெறுகின்றது பூர்வ புண்ணியமாக…!”
1.பல விதமான நிலைகள் கொண்டு
2.கருவில் உருவாகும் சிசுக்களுக்கு இப்படி உருவாகின்றது.

பரிணாம வளர்ச்சியில் வளரக்கூடியது மற்ற உயிரினங்கள். பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த மனிதனின் உணர்வுக்குள் விளைந்தது… இன்னொரு உடலுக்குள் புகுந்த பின் வளர்ச்சி அடைந்த நிலையில் “மீண்டும் அது வளர்ச்சியடையும் தொடருக்கு வருகின்றது… விஷத்தின் தன்மை…”

இந்த இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லது.

ஏனென்றால் ஒரு சிலர் குழந்தையைப் பார்த்த பின் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தாய் உற்றுப் பார்க்கப்படும் பொழுது தனக்குள் இது ஊழ்வினையாக மாறுகின்றது… அணுக்களாக மாறுகின்றது.

அந்த அணுவின் தன்மை மாற்றப்படும் பொழுது அதன் உணர்வு அதிகமாக விளைந்து கருவில் விளையும் குழந்தைக்கு வித்தாக மாறுகின்றது. ஆனால் கண் கொண்டு எந்த மனிதனைத் தாய் உற்றுப் பார்த்ததோ அங்கே விளையும் நோயின் அணுக்கள் தாயின் உடலில் விளையும்.

தாயின் கருவில் விளையும் சிசுவிற்கு இந்த விஷத் தன்மை வளரப்படும் பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் இங்கே வீரியமடைந்து அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே கருவில் வளரப்படும் பொழுது அந்தத் தாய் உயர்ந்த ஞானத்தை எடுத்துக் கொண்டால் உதாரணமாக…
1.யாம் இப்பொழுது போதிக்கும் உணர்வுகள் அகஸ்தியன் கண்டுணர்ந்த விண்ணின் ஆற்றலை
2.பிரபஞ்சத்தை உற்று நோக்கி அவன் பெற்ற சக்திகளை
3.தன் கருவிலிருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று கருவிலே நினைவைச் செலுத்தினால்
4.அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் கருவில் விளையும் சிசுவிற்குக் கிடைக்கிறது.

அகஸ்தியன் உடலில் உருப்பெற்ற உணர்வுகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டே உள்ளது. அகஸ்தியன் ஒரு உணர்வினை நுகர்ந்த பின் இந்த உணர்வின் எண்ணங்கள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தாயிடம் சொல்கின்றான்.

தான் கற்றுணர்ந்ததைத் தன் அருகிலிருக்கும் சகாக்களுக்கும் சொல்லப்படும் பொழுது அவர்கள் செவிகளில் இது படுகின்றது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்.

1.அப்படிக் கேட்டுணர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைகின்றது… நேருக்கு நேர் விளைகின்றது.
2.அக்காலத்தில் அகஸ்தியனைச் சூழ்ந்து வாழ்ந்தவர்களும் இதே சக்தியைப் பெறுகின்றார்கள்.

நம் தெருவிலே ஒரு போக்கிரிப் பையன் இருந்தால் அவன் செய்யும் சேட்டை எல்லாம் அவனுடன் பழகக் கூடிய மற்ற பையன்களுக்கும் இணைந்து… அவர்களும் போக்கிரியாக மாறுவார்கள். ஒரு பையன் கூட நல்ல பையனாக வரமாட்டான்.

குழந்தைப் பருவத்தில் நல்லவனாக இருந்தாலும் ஒருவன் ரொம்ப சேட்டை செய்கிறான் என்று அதை உற்றுப் பார்த்தால் அவன் செய்யக்கூடிய உணர்வுகளை எல்லாம் நுகரப்படும் போது இங்கேயும் மாற்றங்கள் ஏற்படும்.

அக்காலங்களில் அகஸ்தியன் வாழ்ந்த தென்னாடு எல்லாம் கடலுக்குள் சென்று விட்டது. அகஸ்தியன் உருபெற்ற அந்த மலை எல்லாம் கடலுக்குள் தான் இருக்கின்றது… மேவி விட்ட்து.

அதற்குப் பின் வெளிவந்த பூமி தான் இப்பொழுது நாம் கண்ணிலே காணக்கூடிய நிலை எல்லாம். அக்காலங்களில் மலைப்பகுதிகளுக்கும் பல காட்டுப் பகுதிகளுக்கும் வந்துள்ளான்.

1.வானுலக ஆற்றலைத் தனக்குள் அவன் எடுத்ததால்
2.தனக்கு நீர் வேண்டும் நினைக்கும் பொழுது எப்பகுதியில் இருந்து எந்தெந்த உணர்வுகளைச் சுவாசித்தானோ
3.இந்த உணர்வுகள் அந்தப் பாறையில் படுகின்றது… அங்கே நீர் உருவாகின்றது.

மலைப்பகுதியில் சில பாறைகள் இருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் மேகமூட்டமாக மாற்றி அந்த மலைப்பகுதியில் நீராக மாற்றும் சக்தி வரும்.

சில இடங்களில் மலை உச்சியில் பார்த்தோம் ஒன்றுமே இருக்காது… நீர் ஊற்றாக அங்கு வந்து கொண்டிருக்கும். ஆனால் கீழே தரையிலே சமமான இடத்திலே நீர் இருக்காது.

சில இடங்களில் மேலே வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் காந்தப் புலனறிவு சூரியனுடைய கதிரியக்கங்களை அதிகமாகக் கூட்டினால் அதிலிருந்து எக்கோ வரும். எக்கோ வரக்கூடிய இடங்களில் மேகங்களை இழுக்காது… கலைத்து விட்டு விடும். அங்கே நீர் இருக்காது.

ஏனென்றால் அந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மைப் போகும்படிச் சொல்லி
1.வானஇயல் ஆற்றல்கள் புவிஇயலுக்கு மாறும் பொழுது
2.மனிதனான பின் மனித நிலையிலிருந்து பதிந்த அந்தக் காந்தப்புலன் எப்படிப் படுகின்றது…? என்று காட்டுகின்றார்.

உங்கள் உடலை உருவாக்கிய “ஒவ்வொரு அணுவிலும்…” அகஸ்தியன் உணர்வுகள் இணையும்

உங்கள் உடலை உருவாக்கிய “ஒவ்வொரு அணுவிலும்…” அகஸ்தியன் உணர்வுகள் இணையும்

 

அகஸ்தியன் பிறந்தபின் குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது விண்ணைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.

அவருடைய தாய் தந்தையர் எதையெல்லாம் எண்ணிப் பெற்றார்களோ அவை அனைத்துமே கருவிலேயே வளர்ச்சி பெற்றதும் பல விஷ அணுக்கள் தன்னை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை உடலில் பூசிக்கொண்டு அந்த மணத்தை வெளிப்படுத்தும் பொழுது நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுக்களோ விஷ ஜந்துக்களோ இவை அனைத்துமே அவரை அணுகாது இருந்தது.

சூரியனை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.சூரியனின் முகப்பில் தன் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்கள் பிரிக்கப்பட்டு
2.அந்த உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒளிக்கதிர்களாக வீசிக் கொண்டிருப்பதும்
3.சூரியனின் முகப்பில் பிரிக்கப்பட்ட அந்த விஷத்தன்மை பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும்
4.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் விஷத்தை வென்றிடும் முலாம்களை உடலில் பூசியதனால் அதைக் காணுகின்றார்கள்.

அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடலில் பதிவானாலும் கருவிலே வளரும் அந்தச் சிசுவுக்குத் தாய் ரூபத்தில் பதிவாகின்றது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ… பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் பொழுது அந்தச் சூரியனின் இயக்கங்களைக் காணுகின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வெளிப்பட்டதைக் கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து முகப்பிலே அதைப் பிரித்து விட்டு தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றி அமைப்பதை
1.இந்தக் குழந்தையும் பார்க்கின்றது. ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை.
2.தான் கவர்ந்ததைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்.

அதே சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்த பின் தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை. இவன் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் பொழுது அந்த வண்டுகள் மயங்கி விடுகின்றது. விஷ ஜந்துக்களோ இதற்கு அப்பால் விலகிச் சென்று விடுகின்றது.

சூரியன் எப்படி தன் ஒளிக்கதிர்களால் அதில் விளைந்த உணர்வுகள் கொண்டு மோதும் பொழுது விஷத்தைப் பிரித்து விட்டு வெப்ப அலைகள் உருவாகின்றது என்ற நிலையை அகஸ்தியனின் தாய் தந்தையர் முதலில் காணவில்லை. ஆனால் இந்தக் குழந்தை “ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருகின்றது சொல்ல முடியாத நிலையில்…”

மற்ற உயிரினங்களையோ மிருகங்களையோ கூசாது பார்க்கின்றது. ஆனால் அந்த உயிரினங்கள் இவனைக் கண்டால் மயங்கி விடுகின்றது. மயக்கத்திற்கு அஞ்சி ஓடி விடுகின்றது.

இப்படித்தான் அந்த இளம் பருவத்தில் வரும் பொழுது தாய் தந்தையர்கள் தன் குழந்தை உடலிலிருந்து வெளிப்படக்கூடிய இந்த ஆற்றல்களைப் பார்த்த பின் “கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…” என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். அக்காலத்தில் அதைத்தான் அவர்களால் எண்ண முடியும்.

ஏனென்றால் இப்பொழுது உங்கள் எல்லோரையும் அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் அங்கே அழைத்துச் செல்கின்றேன்.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும். இந்த நினைவுகள் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்ட உணர்வுகளை… பூமியில் பரவி உள்ளதை நுகரப்படும் பொழுது அதைக் காண முடியும். அந்த உணர்வின் தன்மையை வளர்க்க இது உதவும்.

அதற்குத்தான் இதைப் பதிவாக்குவது.

1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப்போல இதை உங்களுக்குள் பதிவாக்கி
2.இதை நீங்கள் நினைவாக்கும் பொழுது அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மையை நாமும் கண்டுணர்ந்து
3.இந்த மனித உடலில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு வேகாநிலை அடைந்து
4.இன்றும் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் உணர்வை நாமும் எளிதில் பெற முடியும்.

அந்த வளர்ச்சியை நாம் இப்பொழுது… “இந்த வாழ்க்கையிலேயே அடைய முடியும்” என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருவது.

பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளை… 27 நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதை இந்தப் பிஞ்சு உள்ளம் பார்க்கின்றது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

உதாரணமாக… பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது ஜீனியைப் போட்டு அந்த இயந்திரத்தைச் சுழற்றிய பின் வெப்பத்தால் அது பஞ்சு போல் உருவாவது போன்று
1.இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் மணங்கள் பிற மண்டலத்தில் இருந்து வரும் சக்திகளை இணைத்து
2.ஒரு நூலாம்படை போலக் கவர்ந்து உறைந்து விடுகிறது.

உறைந்த பின் இந்த நட்சத்திரம் சுழலும் பொழுது இதனுடன் சேர்ந்து சுழலப்படும் பொழுது தூசிகளாக மாறுகிறது.

அதே சமயம் சூரியனுடைய காந்த சக்திகள் கவரப்படும் பொழுதும் இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுதும் அந்தத் தூசிகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்வதும் அதிலிருந்து மீண்டும் வலை விரித்து மற்றதைச் சேர்த்துக் கொண்டும் வருகின்றது.

உதாரணமாக… ஒரு நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் வலையை விரித்து வைக்கின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கி விட்டால் அதை உணவாக எடுப்பதற்குத் தன் மூக்கின் நுனி கொண்டு ஈயின் உடலுக்குள் ஊடுருவச் செய்து அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாக உட்கொள்கின்றது. ஆனால் ஈயின் உடல் அப்படியே இருக்கும் முழுதாக.

அதே சமயம் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்றால்… “அந்த உணர்ச்சியால் உருவாகும் அமிலத்தை” இன்னொரு ஈயைக் காற்று புகாது சுற்றிவிட்டு அதன் உடலுக்குள் அதைச் செலுத்தி விடுகின்றது.

உடலுக்குள் இது சேர்த்த பின்…
1.அந்த ஈயின் உயிரான்மா வெளியே செல்ல முடியாதபடி
2.அந்த ஈயை உருவாக்கிய அணுக்கள் பூராமே இது கலந்த பின் எண்ணிலடங்காத நூலாம்படைப் பூச்சிகளாக அது உருமாறுகின்றது.

இன்று விஞ்ஞானிகள் ஆண்களைப் பெண் உறுப்பு கொண்டவர்களாக மாற்றுவதற்காக “ஹார்மோன்களை” ஆண் உடலில் செலுத்துகின்றார்கள். பெண்கள் போலவே அந்த உறுப்புகள் மாறி உருவாகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு மனிதனுக்குள் சேர்க்கும் இந்த உணர்வு போலத் தான் ஈயின் உடலில் சேர்க்கப்பட்ட அமிலத்தால் அதனின் கருத்தன்மை உருமாறி… தன் இனம் எதுவோ அந்த உணர்வுகள் மாறி… நூலாம் படைப் பூச்சியின் ரூபமாக அது மாறிவிடுகின்றது.

அது போல நட்சத்திரங்கள் தூசிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் அதை “உணவாக உட்கொண்டாலும்…” இதனுடன் சேர்த்துக் கொண்ட இதனின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்ந்து சுழலும் அந்தப் பால்வெளி மண்டலத்தில் சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து… அந்த அமிலத்தைத் தனக்குள் சேர்த்துச் சேர்ந்து சுற்றும் நிலை வரப்படும் பொழுது… சூரியனுக்கு அருகில் கோள்களாகவும் வெகு தூரத்தில் நட்சத்திரங்களாக இருப்பது போலவும்… ஒவ்வொரு நட்சத்திரமும் தான் உமிழ்த்தும் பால்வெளி மண்டலத்தில் இதைப் போன்ற உணர்வுகளைச் சேர்த்து விடுகிறது.

அதனுடைய வளர்ச்சியில் நட்சத்திரங்கள் உருப்பெற்று விட்டால் மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை இது சுவாசித்து நட்சத்திரங்களாக அமைந்து அதன் வளர்ச்சி பெற்று… அதனுடன் இணைந்த நட்சத்திரங்களுக்கு இது உணவாகச் சேர்ந்து… அந்த உணர்வை இது எடுத்து இப்படி வளர்ச்சிகள் பெற்றுக் கொண்டே வருகின்றது.

நட்சத்திரங்கள் இப்படி 27 நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலையில் அது எடுக்கும் துகள்களும்… அல்லது தூசிகள் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது… “கரு இரண்டற உருவாகி ஒரு பொருளை உருவாக்கும் தன்மை அடைகின்றது…”

இதைப் பிஞ்சு உள்ளமாக இருக்கும் அகஸ்தியன் ஒன்றாவது வயது கடந்து இரண்டாவது வயதில் காணத் தொடங்குகின்றான்.
1.அதை உணர்ந்து அவனால் சில சொற்களைச் சொல்லும் நிலை வருகின்றது.
2.இந்த உணர்வின் எதிரொலி எக்கோ வருகின்றது… அதை குருநாதர் காட்டுகின்றார்.

தான் காணும் உணர்வுகளையெல்லாம் தன் தாய் தந்தையருக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றான். அவன் உடலில் விளைந்த உணர்வின் எண்ணங்களைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்திருக்கின்றது என்பதை
1.குருநாதர் சுட்டிக்காட்டி இந்த உணர்வைப் பதிவு செய்து எடுக்கும்படி சொல்கின்றார்.
2.அப்பொழுது அந்தக் குழந்தைப் பருவத்தில் அவன் சொல்லும் மழலைச் சொல்லுக்குள்
3.அந்த உண்மையின் தன்மை எப்படி உருவாகிறது என்பதை எனக்குள் கவர்கின்றேன்.

மீண்டும் அதை நினைவு கொள்ளும் பொழுது
1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்தில் எப்படிக் கண்டுணர்ந்தானோ அதை நானும் காண முடிகின்றது.
2.ஏனென்றால் நானும் அந்த இளம் பிஞ்சு வயது தான் “புதிதாகத் தெரிய வரும் பொழுது…”

இப்பொழுது காட்சி தெரிந்தால் “என்ன…? ஏது…?” என்று திண்டாடுகிறோம் அல்லவா. அது வழியில் தெரிந்தாலும் கூட… “என்னமோ ஏதோ…” என்று சொல்வது போல அன்றைக்கு அகஸ்தியன் தனக்குக் கிடைத்ததைத் தன் தாய் தந்தைக்குச் சொல்கின்றான்.

1.அவனிடமிருந்து சொல்கள் வெளி வருகிறது… அதே உணர்வுகளை உனக்குள் பதிவு செய்கிறேன்.
2.நினைவு கொண்டு அவன் எதைப் பார்த்தான்…? எதைச் சொன்னான்…? என்ற நிலையை நீயும் பார்…! என்றார் குருநாதர்.
4.உங்களுக்குள் இப்பொழுது அதைத் தான் பதிவு செய்கின்றேன். அதை நினைவு கொள்ளுங்கள்.

அதை இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

அகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் அது கவர்ந்த உணர்வுகளௌயும்… அதே போல் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும்… அது எவ்வாறு இயங்குகின்றது…? என்ற இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை தியானத்தின் மூலம் நாம் பார்ப்போம்.
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட “ஞான ஒளி” நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம் இருங்கள்.

இப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும் போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும்… பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது நினைவாக்குவதற்கும்… கவர்வதற்கும்… எளிதாக இருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எப்படி இந்த நிலையைப் பார்க்கச் சொன்னாரோ அதே போல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி… அதனின் துணை கொண்டு
1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை
2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

கண்களை மூடி… “அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை இப்போது நீங்களும் நுகருங்கள்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம் சூரியனைச் சுழன்று… பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை… ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள் தெரியும்.

அதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.

அகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.

நட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது பல வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.

அப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள் பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

கேதுக் கோள்:-
நட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப் பார்க்கலாம்.

இராகுக் கோள்:-
நட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.

சனிக் கோள்:-
மேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

சனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள் மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.

அந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப் பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக இருக்கும்.

வெள்ளிக் கோள்:-
இதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக் கதிர்கள் பாயுமோ அதைப் போன்று
2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித் தன்மையாகத் தெரியும்.

வியாழன் கோள்:-
இவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.

வியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள் சுற்றிவரும்.
1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் போன்று
2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.

புதன் கோள்;-
சூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.

செவ்வாய்க் கோள்;-
இப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்கள் வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.

இவ்வகையில் கலவைகளாகிப் பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின் நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.

நமது பூமி:-
துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும் சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.

சந்திரன்:-
பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).

இவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக் கண்டுணர்ந்த உண்மைகளை அது
1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்
2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக
3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.

நமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும் அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்
2.இதைப் போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக் காணுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால் செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்
1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி
2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.

வான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
1.அகஸ்தியன் உணர்வுகள் இணையும்.
2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.