“இன்றைய தியானம்” நாளைய அழியா ஒளிச் சரீரம்

அழியா ஒளிச் சரீரம்

“இன்றைய தியானம்” நாளைய அழியா ஒளிச் சரீரம்

உயிரைக் கடவுளாக மதித்து உடலைக் கோவிலாக மதித்து உணர்வுகளைத் தெய்வமாக மதித்து நாம் தியானமும் ஆத்ம சுத்தியும் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:-

தியானத்தின் பலன்கள்

1.நமக்குள் சிந்திக்கும் தன்மைகளும் தெளிவான நிலைகளும் நமக்குள் வருகின்றன.

2.நமது ஆன்மா (உணர்வுகள்) தூய்மை அடைகிறது.

3.கண் கவர்ந்து பதிய வைத்த தீமைகளை “அதே கண் கொண்டு” அகற்றும் திறன் நாம் பெறுகின்றோம்.

4.தீமைகள் உட்புகாது தடுக்க முடிகின்றது.

5.மன வலிமை உடல் நலம் தொழில் வளம் பெருகுகின்றது.

6.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நமக்குள் “புயலெனப் பெருகி..,” ஜீவ அணுக்களாகி மற்ற தீய உணர்வுகளை வெளியேற்றிவிடும்

7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் ஜீவ அணுக்களாகி அது நமது  எலும்புகளுக்குள் இருக்கும் ஊன்களுக்குள் அருள்ஞான வித்துகளாகி நமது உயிராத்மாவின் செயலாக்கமாகி நம்மை ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

8.துருவ நட்சத்திரத்தின் பேரருள்  பேரொளியின் “காந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள்” செயல்படும் நிலை பெறுவோம்.

9.கணவன் மனைவி இணைந்து எடுக்கும் தியானம் நம் ஆத்மாவை “வைரமாக.., ஜொலிக்க வைத்திடும்”.

10.மனிதனாக இன்று இருக்கும் நாம் பரிணாம வளர்சியான “ரிஷி நிலை” பெறும் தகுதியை அடைகின்றோம்.

11.நமக்குத் தீமை புரிபவர்களது உயிரையும் கடவுளாக மதிக்கும் பண்புகள் வளர்கின்றது. ஆகவே அந்த உயிரிலும் தீமை புகாது தடுத்திடும் நிலையை உருவாக்குகின்றோம்.

12.அதனால் இந்த உலக மக்களையும் நாம் காக்க முடியும். அவர்கள் படும் துயரங்களையும் நம்முள் புகாமல் தடுக்கவும் முடிகின்றது.

13.நம்மை அறியாது சேர்ந்துள்ள சாப வினைகள்  பாப வினைகள்  தீய வினைகள் பூர்வஜென்ம வினைகள் வலு இழந்து விடுகின்றன. இனி வரும் எத்தகையை வினைகளையும் மாற்றிடும் அருள்ஞானம் நமக்குள் வளர்கின்றது.

14”மெய்ப் பொருள் காணும் திறனும்” மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறுகின்றோம்.

பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறக்கூடிய வழிமுறை

1.அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகள் நம் சிந்தனைக்குள் இருக்க வேண்டும்.

2.ஞான குருவின் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப் படித்து அறிந்து உணர்ந்து அதை நம் நினைவிற்குள் கொண்டு வர வேண்டும்.

3.மகிழ்வான உணர்வுகளைக் குருவிற்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

4.“நம் எண்ணம் சொல்  செயல் வெளிப்படும் பொழுது..,” இவற்றில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் கண்டிப்பாக நுகர்ந்து “ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்.., அதை முன்னிலைப்படுத்த வேண்டும்”.

5.மற்றவர்களின் எண்ணங்கள் சொல் செயல்களால் நாம் நுகரும் எத்தகைய உணர்வுகளுக்கும் முன்பாக.., “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை உடனுக்குடன் நுகர்ந்து..,” அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.

6.சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம், இதைச் செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.

7.நாம் ஒவ்வொருவரும் இரவு தூங்கச் செல்லும் முன்  அரை மணி நேரமாவது குறைந்தது பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை நமக்குள் தியானித்து இணைக்க வேண்டும்.

8.அந்த உணர்வுடனே நாம் உறங்குதல் வேண்டும். அதே நினைவுடன் காலையில் ஒரு பத்து நிமிடமாவது அதைத் தியானித்தல் வேண்டும்.

9.உயிருடன் இணைந்த உணர்வுகளை “குரு காட்டிய வழியில்.., குருவின் துணை கொண்டு.., ஒளியின் சரீரமாக மாற்றும் சந்தர்ப்பங்களை உணர்ந்து.., அதைக் கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்”.

10.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை… சதா.., “முன்னிலைப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்”.

11.மருத்துவர் கொடுக்கும் மருந்தினை நாம் கட்டாயமாக்கி உட்கொள்வது போன்று விஞ்ஞானிகள் உயிரினத்தின் செல்களை இணைக்கும் நிலையில் (இரு உயிரணுக்களை) கட்டாயப்படுத்தி ஓர் புது ரூபத்தை மாற்றி உற்பத்தி செய்வதுபோல் “கட்டாயப்படுத்தி.., துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நமக்குள் இணைக்க வேண்டும்”.

12.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் ஒளி சுடராக மாற்றும் நிலையைத்தான்.., “நமது இன்றைய செயல்களாக அமைத்து.., நாளைய சரீரமாக நமது உயிராத்மாவை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்”.

ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா…!

10.விஷ்ணு தத்துவம்

Image

பலராம அவதாரம்

10.விஷ்ணு தத்துவம்

கடவுளின் அவதாரம் பத்து – 8. பலராம அவதாரம்

1.பலருடைய எண்ணங்களை அறிதல் – பலராமன்

பலருடைய எண்ணங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதருக்கு உண்டு. இவ்வாறு மனிதர் ஒன்றைத் தெளிந்து, தெரிந்து ஒவ்வொரு குணங்களையும் அறிந்து கொள்ளும் ஆற்றலுக்குப் “பலராமன்” என்று ஞானிகள் பெயரிட்டனர்.

“பலராமன் அவதாரம்” கடவுளின் அவதாரத்தில் எட்டாவது அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

  1. நாம் பலருடைய எண்ணங்களைக் கவர்ந்தாலும்
  2. அவர்கள் உடலில் விளைந்த தீமையான செயல்களையும் தீமையான உணர்வுகளையும் நமக்குள் நுகரப்படும் பொழுது, “வாலி” என்ற நிலைகள் நமக்குள் உருவாகி,
  3. நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களை அடக்கும் நிலை வருகின்றது.

இதிலிருந்து எவ்வாறு நாம் மீளவேண்டும் என்பதற்காக இதை உணர்த்தி, உங்களிடத்தில் பதிவாக்குகின்றோம். நமது குருநாதர் எவ்வாறு எம்மிடத்தில் பதிவாக்கினாரோ அதைப் போன்று உங்களிடத்தில் பதிவின் நிலைகளைப் பதிவாக்குகின்றோம்.

யாம் பதிவாக்கும் உணர்வுகளை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது, வாழ்கையில் வரும் தீமைகளைப் பிளந்து உங்களுக்குள் நல் உணர்வின் தன்மையைப் பெறமுடியும்.

ஏனென்றால் உலகில் வரும் தீமைகள் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் உருவாவதினால், பலராமன் பல எண்ணங்களையும் அறியும் தன்மை வருகின்றது. பல எண்ணங்களினால் வரும் வலிமையான நிலைகளை அடக்கும் நிலை பெற்றவர்தான் நரசிம்மா.

2.மந்திரங்களைப் பக்தி என்ற நிலையில் உருவாக்கியதே வாமன அவதாரம்

அன்று ஆண்ட அரசர்கள் மக்களிடத்தில் தங்களுடைய ஆட்சி அதிகாரங்களைச் செலுத்துவதற்காக மக்களிடையே மதம், இனம், எனும் வேறுபாடுகளை உருவாக்கினார்கள்.

அபிஷேகம் ஆராதனைகளைச் செய்தால் “கடவுள்.., எல்லாம் செய்வார்” என்றும் மக்களிடையே பரப்பினார்கள்.

எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எதிரிகளை ஒழிக்கவும்.., “மந்திரங்களைச் செய்தனர்”.

தங்களுடைய ஆட்சி வலுவைக் கூட்டிக் கொள்ள “மந்திரங்களைப் பக்தி” என்ற நிலையில் மக்களிடையே பரப்பினார்கள். அந்நிலை கொண்டு அரசர்களால் உருவாக்கப்பட்டதுதான் “வாமன அவதாரம்”.

அரசனால் மந்திர ஒலிகள் கொண்டு உருவாக்கப்பட்ட நிலைக்குத்தான் வாமன அவதாரம் என்று பெயர். அதில் பிராமணனைப் போட்டு.., பூணூலையும் போட்டு.., குடையும்.., வைத்திருப்பார்கள்.

இவையெல்லாம் மந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிலைகள். “சிருஷ்டிக்க வல்லவன்” என்று இன்று வேதங்களை ஓதி, உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால் அவர்கள் சொன்னது நமக்குள் உருப்பெறுகின்றது.

அதை நமக்குள் பதிவாக்கிக் கொண்டு நாம் இறந்தபின் அவர்கள் அதே மந்திரத்தைச் சொல்லி “நமது உணர்வின் தன்மையைக் கைவல்யப்படுத்திக் கொள்கிறார்கள்”.

அரசனுக்கு அவனுடைய நாட்டுக்குத் தீமைகள் என்றால் கைவல்யம் செய்த உணர்வுகளை ஏவல் செய்து கொள்கின்றார்கள்.

அரசன் உருவாக்கி வளர்த்த தெய்வீக வலை கொண்டு அரசனுடன் இணைந்து குல தெய்வம் என்று உருவாக்கி அதன் வழிகளில்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.

அரசன் வகுத்த பக்தி வழியில் நாம் பக்தி கொண்டு மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருந்தோமானால் நமது உடலைவிட்டு ஆத்மா சென்றபின் அதை மற்றொருவன் கைவல்யப்படுத்திக் கொள்கிறான்.

இது போன்ற நிலை உலகிலுள்ள எல்லா மதங்களிலும் இதுதான் இன்றைய நிலை. மந்திர நிலைகொண்டு உருவாக்கப்பட்ட பக்தி மார்க்கம் அனைத்தும் மனிதரிடம் பேருண்மையின் தன்மையை மறைத்து அவர்களது உணர்வுகளை அடிமைப்படுத்தியுள்ளன.

1.எதைப் பெறவேண்டும்..?

2.எதை நீக்க வேண்டும்? என்பதை மறந்து

3.“எல்லாம் கடவுள் செய்யும்” என்ற நிலைகளில்

4.அபிஷேகம் ஆராதனை போன்ற சாங்கிய சாஸ்திரங்களைத்தான் நாம் செய்து கொண்டுள்ளோம்.

ஞானிகள் மனிதருக்கு வகுத்துக் கொடுத்த பாதைகள் வேறு. ஆனால், அரசர்கள் ஞானிகள் கொடுத்ததை எடுத்துப் பிரித்து மனிதரை அடிமைப்படுத்த உருவாக்கிவிட்ட வழிமுறைகள வேறு.

எனவே, நாம் அரசர்கள் உருவாக்கி வளர்த்த மந்திர நிலைகளில் சிக்காமல் மாமகரிஷிகள் காண்பித்த அருள் வழி கொண்டு

  1. உடல் பொன் பொருள் நமக்குச் சதம் இல்லை.
  2. உயிர் ஒன்றே நமக்குச் சொந்தம்நா
  3. நாம் எடுக்கும் அருள் உணர்வுகளே நமக்குச் சொத்து

என்ற உண்மையினை அறிந்து குரு காண்பிக்கும் வழியில் செயல்படுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை “உணவாக உட்கொள்ளும்…, அணுக்களை” நமக்குள் உருவாக்க வேண்டும்

Image

அகஸ்தியமாமகரிஷி

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை “உணவாக உட்கொள்ளும்…, அணுக்களை” நமக்குள் உருவாக்க வேண்டும்

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது. அதை நம் பூமி துருவப் பகுதி வழியாகக் கவர்ந்து நமக்கு முன் (பூமிக்குள்) பரவச் செய்கின்றது.

அப்பொழுது நம் நினைவுகள் அனைத்தும் எங்கே இருக்க வேண்டும்?

நம்முடைய நினைவுகள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று துருவத்தின் வழி ஏங்கி இருக்க வேண்டும்.

இவ்வாறு நாம் ஏங்கிப் பெறும் பொழுது நாம் சுவாசித்த உணர்வுகள் நம் “இரத்த நாளங்களிலே” கலக்கின்றது.

அதைத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் பொழுது அது அணுக்கருவாகின்றது.

பின் முட்டையாக வளரத் தொடங்குகின்றது.

நம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் பொழுது அந்த முட்டை வெடித்து அணுவாக உருப்பெறுகின்றது.

எந்தத் துருவ மகரிஷியின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் தியானித்தோமோ அது அணுத் தன்மை அடைந்தபின் எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது.

  1. திரும்பத் திரும்ப எண்ணினால் அணுவின் “கருவாகும்”
  2. பின் “முட்டையாகும்”
  3. முட்டை வெடித்து “அணுவாகும்”
  4. அணுவானால் “உணவை” உட்கொள்ளத் தொடங்கும்

அப்பொழுது நம் சிறு மூளை பாகம் அது உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண், காது, மூக்கு, வாய், உடம்பு என்ற இந்த உணர்வுகளில் வெளிப்படுத்தி எந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து நம் பூமிக்குள் பரவியதோ அதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.

அந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்  எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகரும்போது “உமிழ்நீராக மாறி.., இரத்தமாக மாற்றி..,” அது உடனடியாகவே சேர்த்து உடலிலுள்ள அணுக்களுக்கு இதை இப்படி மாற்றியமைக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலுக்குள் ஒளி பெறும் சரீரமாக அந்த அணுக்கள் நம் உடலிலே வளரும்.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் உயிரைப் போன்று தன் உணர்வின் அணுக்களை அது ஒவ்வொன்றையும் ஒளியாக எப்படி மாற்றினானோ அதைப் போல நாம் நம் உணர்வின் அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்ற முடியும்.

நம் உடலில் அத்தகைய அணுக்கள் உருப்பெற்றால் தான் ஒளியாக வளர்க்க முடியும். ஆனால், அணுக்கள் நமக்குள் உருப்பெற்றுவிட்டாலோ தன் பசிக்குத் தன்னிச்சையாக அது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை எடுக்கத் தொடங்கும்.

அந்த “அகஸ்தியாமாமகரிஷிகள்” சென்ற எல்லையை அடைய இது மிகவும் எளிதானது.

வெள்ளிக் கோளைப் போன்று மின் கதிர்களை அகஸ்தியனும் அவன் மனைவியும் நுகர்ந்து ஒளிச்சுடராக துருவ நட்சத்திரமானார்கள்

Image

அகஸ்தியன் துருவ நட்சத்திரம்

வெள்ளிக் கோளைப் போன்று மின் கதிர்களை அகஸ்தியனும் அவன் மனைவியும் நுகர்ந்து “ஒளிச்சுடராக… துருவ நட்சத்திரமானார்கள்”

27 நட்சத்திரங்களில் வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாக வருவதை அந்த மின் கதிர்களை ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் கவர்ந்து ஒளியாக மாற்றுகிறது.

“அதே ஆற்றலை.., அகஸ்தியன் பெறுகின்றான்”. ஒளியான உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழுகின்றான்.

“அது எப்படி…?” என்று சற்றுப் பார்ப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் தன் தாய் கருவிலே இருக்கும்போது விஷத்தினை வென்றிடும் ஆற்றலைப் பெற்றான்.

தன் தாய் விஷத்தை முறித்திடும் மூலிகைகளைப் பரப்பி வைத்ததனால் விஷத்தை முறித்திடும் உணர்வுகள் அந்தத் தாயின் இரத்தங்களில் கலந்து எத்தகைய விஷத் தன்மை இருந்தாலும் முறித்திடும் தன்மையும் சிந்திக்கும் ஆற்றலும் வலு கூடும் தன்மையும் பெறுகின்றது.

அதாவது மின்னல்கள் தாக்கப்படும்போது மின் கதிர்களின் வேகத்தைத் தடைப்படுத்தி அந்த உடலில் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றும் தன்மை பெறுகின்றது.

அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும்போது தாய் கருவிலே விளையும் “அகஸ்தியன்” என்று பின் கூறும் கருவில் வளரும் அந்தச் சிசு தான் இந்த உணர்வுகளை அது பெறப்பட்டு “எதனையுமே.., ஒளியாக மாற்றும் சக்தி” அந்தக் கருவிலே விளையும் குழந்தை பெறுகின்றது.

தாயின் இரத்தத்திலே கலந்தாலும் வடிகட்டும் உணர்வின் தன்மை இந்தக் கருவில் விளையும் குழந்தைக்குக் கிடைக்கின்றது. அதன் வழி பத்து மாதமும் நுகர்ந்தபின் குழந்தை அகஸ்தியன் பிறக்கின்றது.

பிறந்தபின் “மின்னல்கள் ஏராளமாக வந்தாலும்…, மின்னல்களை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்..,” வெள்ளிக் கோள் எப்படி ஒளிக்கற்றைகளை எடுத்துக் கொள்கிறதோ இதைப் போல உணர்வுகளை இவன் நுகரும்போது அறிவின் வளர்ச்சி அவனுக்குள் வருகின்றது.

எப்படி மின்னல்கள் வெகு தூரம் ஊடுருவிச் செல்லும்போது அந்த வெளிச்சத்தில் பொருள்களைக் காண முடிகின்றதோ அதைப் போல அறிவின் ஞானங்கள் இவனுக்குள் வளர்கின்றது.

அவன் நினைவாற்றல்.., “அகண்ட அண்டத்தில்” செல்கிறது.

இப்படி ஒன்றுடன் ஒன்று மோதி இவனுக்குள் உலகத்தின் தன்மைகளை அறிந்திடும் பேராற்றல் பெறுகின்றான்.

தாயின் கருவில் விளையப்படும்போதுதான் சிறு வயதிலேயே இத்தகைய ஆற்றல்களைப் பெறுகின்றான்.

ஆகவே, இதன் தன்மை வளர்ச்சி பெற்றபின் இவன் வானை நோக்கிப் பார்த்து மின்னல்கள் எவ்வாறு வருகிறது? என்றும் எதிலிருந்து மின்னல்கள் வருகிறது? என்றும் உற்று நோக்கினான்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரும் அது நட்சத்திரங்களாக மாறி அது கவரும் உணர்வுகள் அதனதற்குத் தக்கவாறு பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதில் வரும் துகள்கள் தூசிகளாக மாறுவதைத்தான் நமது சூரியன் கவர்கிறது.

வரும் பாதையில் எந்தெந்தக் கோள் துருவப் பகுதியில் கவர்கிறதோ அதற்குத் தக்க எடுத்துக் கொள்வது இதைப் போல மின் கதிர்கள் வருவதை மற்றக் கோள்கள் எடுத்துக் கொள்வதும் அதற்குத் தக்கவாறு இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது சூரியன்.

இதைப் போல நம் உயிர் இந்த உடலை ஒரு பிரபஞ்சமாக உருவாக்குகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் “சூரியன் எப்படி ஒளிக்கதிராக மாறியதோ” இந்தச் சூரியக் குடும்பத்தில் “வெள்ளிக் கோள் எப்படிப் பெற்றதோ” இதைப் போலத்தான் அகஸ்தியன் அதைப் பெறும் சந்தர்ப்பம்  கிடைக்கின்றது.

அதாவது, அகஸ்தியன் தாய் கருவிலே விளையப்படும்போது விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அவன் பெறுகின்றான். பிறந்தபின் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திலேயே வெள்ளிக் கோள் எடுப்பது போல இவனுக்குள் அந்த ஒளியின் உணர்வை அதிகமாக எடுத்துக் கொள்கிறான்.

அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைதான் அவன் எண்ணங்களை “எங்கே செலுத்தினாலும்.., அதன் உணர்வை எளிதில் அறிந்து கொள்ளும் ஞானத்தைப் பெறுகின்றான்”.

ஏனென்றால் விஷத்தின் தன்மை கடுமையானால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள்தான் தான் திருமணமான பின் தன் மனைவிக்கு எடுத்துக் சொல்கின்றான்.

மனைவியும் கண்ணுற்றுப் பார்த்து கணவன் சொல்லும் உணர்வை நுகர்ந்தறிந்து “தன் கணவனால்தான் இதை அறிய முடிந்தது” என்று கணவனைப் போற்றித் துதிக்கின்றது.

ஆனால், அதே சமயத்தில் தன் மனைவி சொன்னதை ஏற்று இந்த உணர்வின் தன்மையை ஏற்றுக் கொண்டது என்ற உணர்வுகளை இருவரும் ஒன்றாக்கப்படும் போது “இரு உயிரும் ஒன்றி” அந்த உணர்வின் தன்மையை உருவாக்கும் தன்மை பெறுகின்றனர்.

மனிதர்கள் உடலுடன் சேரும் போது தன் இனத்தை உருவாக்குகின்றனர். அந்த உணர்வின் தன்மை தான் பெறப்படும்போது இந்த ஆண் பெண் என்ற நிலைகளில் இந்த உணர்வின் தன்மை “ஒளியின் சரீரமாக” இங்கே மாறுகின்றது.

ஒளியின் உணர்வின் கருவாக மாற்றப்படும்போது இப்படி மின் கதிரின் உணர்வைத் தனக்குள் எடுத்து ஒளியின் சரீரமாகப் பெறக் கூடிய தகுதி பெறுகின்றனர்.

அப்பொழுதுதான் அகஸ்தியன் துருவத்தை நோக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எதன் பகுதியிலிருந்து வருகின்றதோ அதையே உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து அதையே உருவாக்கினான்.

இருவருமே ஒன்றென இணைந்து அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வால் இன்று எதை எல்லையாக அடைந்தனரோ எதை எல்லையாக உற்று நோக்கினார்களோ இந்த உடலைவிட்டுச் சென்றபின் அதையே எல்லையாக அமைந்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கிறார்கள்.

அதை நாம் நுகர்ந்தால் நாமும் அவன் ஒளியாக மாற்றியது போல் ஒளியின் சுடராக மாற முடியும்.

8.விஷ்ணு தத்துவம்

Image

varaha avatar

8.விஷ்ணு தத்துவம்

கடவுளின் அவதாரம் பத்து – 8. வராகன்

நாம் எல்லோரும், பன்றியை அசுத்தத்தில் உழலும் ஒரு ஜீவனாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஞானிகள் பன்றியின் தலையை மனித உடலில் பொருத்தி கடவுளின் அவதாரங்களில் வராக அவதாரம் என்றுரைத்து நம்மை வணங்கச் செய்தனர்

  1. உணர்வின்இயக்கங்கள்

ஒரு முறை குருநாதர் எனக்குக் காபி அவருக்கு டீ வாங்கி வரச் செய்து இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பை இரண்டைப் போட்டு என்னைக் “குடி” என்கிறார்.

யாம் இதைப் பார்த்து, “நாம் வசமாகச் சிக்கிக் கொண்டோம்” என்று எண்ணி சாலையில் செல்கின்ற ஆட்களைப் பார்க்கின்றோம். அப்பொழுது என்னுடைய பார்வை என்ன செய்கின்றது?

இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன் ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது? என்றும் என்ணுகின்றேன்.

ஆக இந்த எண்ணத்தால் அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை.

எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.

அப்பொழுது நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக இந்தப் பக்கம் போகலாமா? அந்தப் பக்கம் போகலாமா? இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

அப்பொழுதுதான் உணர்வின் இயக்கங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் இயக்கி உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

எதை  எண்ணினோமோ அதே இனம் நமக்குள் நின்று அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருதேவர்.

அப்பொழுது அந்த நிலையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்று பார்த்தேன் முடியவில்லை.

“சரி நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா” என்றார் குருதேவர்.

கடையில் கொண்டு போய்க் கொடுத்தால் வாங்கவா செய்வார்கள்? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள்.

டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.

அப்பொழுது நீ வரும் பொழுது கொஞ்சம் முறுக்கு கடலைப் பருப்பு பொட்டுக் கடலை வாங்கி வா என்றார் குருநாதர்.

மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன். சாக்கடை அருகில் ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார்.

முதலில் பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.

  1. நாற்றத்தைப் பிளந்து நல்லதைப் பிரித்து எடுக்கின்றது பன்றி

அங்கிருந்து பன்றி வருகின்றது. வந்தவுடனே ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. அப்பொழுது பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.

அடுத்து, முருக்கு வேகமாக எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்துப் போகின்றது.  அந்த முறுக்கை எடுக்கின்றது.

அடுத்து எண்ணெய் வாசனை இருக்கின்றது. கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி அந்த வாசனையைத் தான் நுகர்ந்து எடுக்கின்றது.

சாக்கடைக்குள் பார்த்தாயா? என்றார் குருநாதர். அது நாற்றத்தை எடுக்கவில்லை, நீ எதை எடுக்கின்றாய்? என்றார்.

காபி இருக்கின்றது. நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை. உன் உடல் நீ ஆகாரம் சாப்பிட்டவுடனே சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை உன் உடல் பிரித்துவிடுகின்றது.

உன் உடலிலிருந்து வரக்கூடிய ஆறாவது அறிவு இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது. நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை? என்று கேட்கின்றார் குருநாதர்.

நான் என்ன பதில் சொல்வது?

இந்த உணர்வின் இயக்கங்கள் நீ சாப்பிடும் ஆகாரம் ருசியாகச் சாப்பிடுகின்றாய். அதிலே இருக்கக் கூடிய நஞ்சு அதில் இருக்கக்கூடிய நாற்றத்தையெல்லாம் மலமாக மாற்றிவிடுகின்றது  உன் உடலில் இருந்து வரக்கூடிய ஆறாவது அறிவு.

  1. அவனன்றி ஒரு அணுவும் அசையாது

பன்றியின் உயிர் தீமைகளைப் பிளந்து தீமைகளை அகற்றிடும் உணர்வினை நுகர்ந்து அதனில் விளைந்த உணர்வின் சத்தால்தான் இன்று மனித உடலைப் பெற்றிருக்கின்றது.

நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நல்லதை நுகரும் ஆற்றாலால்தான் நஞ்சைப் பிரிக்கும் உடல் உறுப்புகள் உருப்பெற்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

வராகன் என்றால் மிகவும் வலிமைமிக்கது. தீமைகளைப் பிளக்கும் சக்தி வாய்ந்த உணர்வை எடுத்துத்தான் மனிதனானோம்.

ஆகவே உயிர்தான் கடவுள். உனக்குள் நின்று

1.எண்ணியதை உருவாக்குவதும்,

2.எண்ணியதை ஜீவனாக்குவதும்,

3.எண்ணியதைச் செயலாக்குவதும் உயிரே.

4.அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

நீ எதை எதை எண்ணுகின்றாயோ அது உன்னுள் அணுவாக மாறி அணுவின் இயக்கமாகத்தான் உன் உடலின் இயக்கமும் உன் சொல் செயல் எல்லாமும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

மனிதனாக உருவாகக் காரணமாக இருந்ததே உனது உயிர்தான் என்று எமக்கு உபதேசித்தார் குருநாதர்.

6.விஷ்ணு தத்துவம்

Image

Lord-Krishna

6.விஷ்ணு தத்துவம்

கடவுளின் அவதாரம் பத்து – 4. கண்ணன்

உலகம் எவ்வாறு உருவானது? சூரியன் எவ்வாறு உருவானது? உயிரணு எவ்வாறு உருவானது? தாவர இனங்கள் எவ்வாறு உருவானது? என்பதை நமது காவியங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

அதில் உயிரினங்களிடத்தில் “கண்கள் உருவானதை” நான்காவது அவதாரமாகக் கண்ணன் தோன்றுகின்றான் என்று விளக்கியுள்ளனர்.

  1. “பார்க்க வேண்டும்” என்ற உணர்வுகள் எப்படித் தோன்றுகிறது?

ஒரு உயிரணு கடலைச் செடியிலிருந்து வெளிப்படும் மணத்தைத் தனக்குள் கவர்ந்து தனது உடலாக மாற்றி புழுவாக உருப்பெறுகின்றது. பின் இந்தப் புழு இதே வாசனையை நுகர்ந்து தனது உணவிற்காக கடலைச் செடி இருக்கும் இடத்திற்கு நகர்ந்து செல்லும்.

புழுவிற்குப் பசி எடுத்து பசியின் உணர்வுகள் உந்தப்படும் பொழுது “சாப்பிட வேண்டும்..,” என்ற எண்ணங்கள் வந்து அதனின் உணர்வின் துணை கொண்டு புழு தன் உடலை நகர்த்திச் சென்று தாவர இனத்தை உணவாக எடுக்கின்றது.

இதை விஷ்ணு தத்துவத்தில் “எந்தச் சுவையின் தன்மையை நுகர்ந்ததோ.., அந்த எண்ணங்கள் கொண்டு.., அந்த இடத்திற்கு உடலை அழைத்துச் செல்கின்றது” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

கடலைச் செடி சாந்தமானது. சாந்தத் தன்மை கொண்ட கடலைச் செடியைத் தேடி மணத்தால் நுகர்ந்து நகர்ந்து செல்லும் புழு தான் செல்லும் வழியில்.., “ஒரு விஷச் செடியின் காற்றினைச் சுவாசித்துவிட்டால்.., மயங்கி விடுகின்றது.., வேதனைப்படுகின்றது.”

அப்பொழுது அதனின் இரை தேடும் செயலும் தடைபடுகின்றது.

அதனால் புழுவிற்குத் தனது உணவினைப் “பார்க்க வேண்டும்” என்ற உணர்வின் எண்ணங்கள் வருகின்றது.

ஆனாலும் புழு தான் பார்க்க முடியாத நிலைகள் கொண்டு மற்ற விஷத் தாவர இனங்களை நுகர்வதால்.., “வேதனையின் உணர்வுகள் இதற்குள் வேதனையை உருவாக்கும் அணுக்களாக உருவாகி..,” முதலில் உருவான அணுக்களைக் கொல்லுகின்றன.

அப்பொழுது வேதனையான உணர்வின் எண்ணங்கள் உருவாகி அதன் நிலைகளில் அணுக்கள் உருவாகின்றன.

“NEGATIVE, POSITIVE” என்ற விஷத்தின் தன்மை கொண்டு எப்படி சூரியன் இயங்குகின்றதோ இதைப்போன்று எதிரிமறையான அணுக்களின் மோதலில் அங்கே புழுவாக உருவாகின்றது.

மோதலில் ஒளியின் தன்மை ஆவது போன்று இந்த உணர்வின் தன்மை நினைவின் ஆற்றல் “பார்க்க வேண்டும்…,” என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

  1. சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் – விளக்கம்

அந்த உணர்ச்சியின் தன்மை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் புழுவின் உடலில் இரண்டும் எதிர்மறையாகி நுகர்ந்த உணர்வின் தன்மை சேர்ந்து புழுவின் உடல் மடிந்து உணர்வுகள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டு இணைத்துக் கொண்ட நிலைகொண்டு மாற்று உருப்பெறுகின்றது.

பரிணாம வளர்ச்சி அடைகின்றது. இப்படிக் கண் உருவாகும் நிலைக்குத்தான் காரணப்பெயர்களைக் கொடுத்தார்கள்.

1.வாசு என்பது உயிர்.

2.தேவகி என்பது தேவையான சக்தி

வாசுதேவன் தான் சுவாசித்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது.., தேவகி தமக்குத் தேவையான சக்தியின் துணைகொண்டு தான் எண்ணும் பொழுது.., “வாசுதேவனுக்கும் தேவகிக்கும்” சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்.

அதாவது கண்கள் உருப்பெற்றது.

கம்சன் என்பது “இருள்”. இருள் சூழ்ந்த சிறையிலிருந்து தன் “அன்னை தந்தையை மீட்கக் கண்ணன் பிறந்தான்..,” என்ற நிலையைக் காண்பித்துள்ளார்கள்.

1.இந்த உயிரும்

2.தான் எண்ணிய சக்தியும் இரண்டும் சேர்ந்து

உணர்வின் கருவாக விளைந்து “கருவிழியாக” உருவாகியது.

கருவிழியின் தன்மை கூர்மையாக உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவாகி அந்த அலைகளைத் தனக்குள் எடுத்து தான் எப்படி எண்ணி மாறவேண்டும் என்ற நிலை உருவானதைத்தான் தெளிவாக்குகின்றார்கள்.

ஆகவே, நாராயணன் துவாரகாயுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் கண்ணனாக உருப்பெற்று உடலின் தன்மையைக் காக்கும் உணர்வாகக் “கண்ணன் தோன்றினான்” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

  1. கண்ணன் சங்கநாதம் செய்கின்றான்

நமது உடலினுள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் குருவாக இருப்பது நமது உயிர். நமது கண்கள் உணர்வுகளைக் கவர்ந்து நம்மை நுகரச் செய்து உயிருடன் இணைக்கின்றது.

அது “பதிவாகவில்லை..,” என்றால் இங்கு நமக்குள் நுகரும் திறன் இல்லை.

உதாரணமாக இப்பொழுது யாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டுள்ளோம். இப்பொழுது, உங்கள் நினைவின் ஆற்றலானது இங்கே இருக்க வேண்டும்.

ஆனால், “இன்றைக்குக் கடையில் வேலைக்காரன் என்ன செய்கின்றானோ…? விட்டுவிட்டுப் போய்விட்டானோ..,?” என்று உங்களுடய நினைவினைச் செலுத்திவிட்டால் யாம் சொல்லும் உணர்வுகள் உங்களுக்குள் “பதிவாகாது”.

யாராவது திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது. பதிவானால்தான் இந்த உணர்வின் அலைகளை நுகர முடியும்.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் வேதனை கொண்ட உணர்வின் அலைகளைக் கவர்ந்து நுகர்கின்றது. அதன் உணர்வின் தன்மை உயிருடன் இணைக்கப்படும் பொழுது உயிரான குருக்ஷேத்திரத்தில் “கண்ணன் சங்கநாதம் ஊதியபின்.., தான் குருக்ஷேத்திரப்போர் நடக்கிறது” என்று உணர்த்தியுள்ளார்கள்.

அதாவது, உடலை உருவாக்கிய அணுக்களின் தன்மை தனது பாதுகாப்பான நிலைகளில் வேகமாக உருவாக்கி எதிரிகளிடமிருந்து காக்கும் நிலைகளை உருவாக்குகின்றது.

இதைத்தான் “கண்ணன் சங்கநாதம் செய்கிறான்..,” என்று ஞானிகள் உரைத்தனர்.

  1. கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும்

நமது உடலிலுள்ள கண் ஒரு காட்சியின் உணர்வினைக் கவர்கின்ற பொழுது அந்த உணர்வின் வேகத்தை சத்தியபாமா நுகர்ந்தறிந்த நிலைகள் உண்மையைக் காட்டினாலும் அந்த உணர்வின் தன்மையைத் தன் உடலாக்கி அதன் அறிவாக இயக்கத் தொடங்கிவிடும்.

ஆகவேதான், சத்தியபாமா என்று கண்களின் இயக்கம், தனதாக உருவாக்கும் அந்தச் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலைகள்தான் “கண்ணனுக்கு இரு மனைவி” என்று கூறுகிறார்கள்.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டுதான் தீமைகள் என்று நமக்குள் அறிகின்றோம். தீமை என்றால் உயிர் அதை உருவாக்கிவிடுகின்றது. உணர்வின் அணுவாக மாற்றிவிடுகின்றது.

இத்தகைய நிலைகள் பெற்றாலும் மனிதன் பல கோடிச் சரீரங்களிலிருந்து தீமைகளை வென்ற உணர்வுகளைக் கொண்டு இந்த உடலின் தன்மையில் வரும் ஆறாவது அறிவுதான் “கார்த்திகேயா”.

எதனையும் அறிந்திடும் அறிவாக உருவாகின்றது.

அவ்வாறு உருவான ஆறாவது அறிவின் துணை கொண்டு.., “நன்மை தீமை” என்ற நிலைகளை அறிந்து தீமைகளை அகற்றும் நிலையினைப் பெற்றிருக்கின்றோம்.

துருவ மகரிஷிகள் தம் உணர்வின் தன்மையினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக வானில் திகழந்து கொண்டுள்ளார்.

நாம் நமது ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமது உடலினுள் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். பதிவாக்கியபின்

1.நினைவின் தன்மையை கண்ணிற்குக் கொண்டு வந்து

2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி

3.நல் உணர்வின் தன்மையை உடலினுள் செலுத்தி

4.நமது உடலுக்குள் இருக்கும் நல் அணுக்களுக்குச் சக்திவாய்ந்த நிலையைப் பரவச்செய்து

5.அதனின் வலிமை பெற்றபின்

6.வேதனை என்ற உணர்வுகள் நமது உடலில் ஆன்மாவில் இருப்பதைப் பிளத்தல் வேண்டும்.

ஏவல்களிலிருந்து விடுபடும் வழி – நடந்த நிகழ்ச்சி

Beware of black magic

ஏவல்களிலிருந்து விடுபடும் வழி 

1.மந்திரவாதி எப்படி ஜாலம் செய்கின்றான்? 

ஒரு கிராமத்தில் ஒருவர் என்ன செய்தார்? குடும்பத்தில் அடிக்கடி கஷ்டம் வருகின்றது, சண்டை வருகின்றது என்று சொன்னவுடனே, உங்கள் வீட்டில் செய்வினை செய்து வைத்திருக்கிறார்கள் என்று வருகின்றார்கள்.

அப்பொழுது குருநாதர் என்ன செய்தார்? அதை அறிந்து கொள்வதற்காக வேண்டி.., “நீ சாதாரண மனிதனாக அங்கே போ..,” என்று சொல்கின்றார்.

அதே மாதிரி அங்கே போனேன். கிராமவாசி மாதிரி அங்கே போய் நடக்கிற நிகழ்ச்சிகளையெல்லாம் “வேடிக்கை” பார்த்துக் கொண்டிருந்தேன்.

மந்திரவாதி ஒரு விளக்கைப் பொருத்தி வைத்துக் கொண்டு அந்த வீட்டில் மூலை மூலைக்குச் சுற்றுகின்றான். அப்பொழுது ஒரு உரலுக்கு அடியில் இரண்டு முழம் தோண்ட வேண்டும் என்று சொல்லுகின்றான்.

அப்படி என்று சொன்னவுடனே, “ஆ…,” இங்கே இருக்கின்றது. எனக்கு எப்படியோ மயக்கம் வருகின்றது என்று ஜாலம் செய்தான்.

அப்புறம் கல்லைத் தூக்கு.., அதை விரட்டித் தள்ளு.., அதைத் தள்ளு.., இதைத் தள்ளு.., என்று சொல்லிக் கொண்டு “சப்தம்” போட்டான்.

அப்புறம் என்ன சொல்கிறான்? தைரியமானவர்கள் யாராவது இரண்டு பேர் இங்கே வாருங்கள்.

கிராமவாசி மாதிரியே நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். அதே மாதிரி இரண்டு பேர் வந்தார்கள்.

இந்த இடத்தில் குழியைத் தோண்ட வேண்டும். “டக்..,” என்று சப்தம் கேட்டவுடனே அப்படியே நிறுத்த வேண்டும் என்று சொல்கிறான் மந்திரவாதி.

இவன் என்ன செய்தான். இந்தக் கல்லை (உரலை) அடிக்கவும் இந்தச் சப்தம் கேட்டவுடனே “ம்.., வந்துவிட்டது.., ஆ..,! என்று சொல்கின்றான்.

அப்படிச் சொன்னானோ இல்லையோ, உடனே கடப்பாரையை வைத்துக் கொண்டு “ஒரு ஆட்டைக் கொண்டு வாருங்கள்.., வெட்டுங்கள், தண்ணீரை ஊற்றுங்கள்…, ஐயோ…! என் உடலெல்லாம் எரிகிறது..,” என்கிறான்.

ஆட்டை வெட்டி இரத்தத்ததை உள்ளே விட்டுவிட்டவுடன்.., “தண்ணீர் நிறைய ஊற்று.., எரியுதே.., எரியுதே..,” என்று இவன் கத்துகின்றான்.

அடுத்து கையை வேறுவிதமாக வைத்துக் கொண்டு, “ஆ..,” கை வர மாட்டேன் என்கிறது.,, இரண்டு கோழியை எடுங்கள், இன்னும் ஒரு ஆட்டை வெட்டு..,! என்று சொல்கிறான்.

இவர்களும் தயாராக இருந்து கொண்டு அவன் சொல்வது அனைத்தையும் வெட்டுகின்றார்கள். இதையெல்லாம் பண்ணி முடிந்தவுடன்.., குழியிலிருந்து ஒரு “தகடை” எடுக்கிறான்.

இன்னார் பேரை இதிலே (தகட்டிலே) எழுதியிருக்கிறான். இன்னென்ன நிலைகளை எல்லாம் எழுதியிருக்கிறான் இப்படி எல்லாம் செய்திருக்கிறான் “பாருங்கள்..,” என்று சொல்லுகின்றான்.

இதிலே உங்கள் தலை முடியெல்லாம் இருக்கின்றது. எலும்புத் துண்டெல்லாம் இருக்கிறது. உடனே இதையெல்லாம் எரிக்க வேண்டும். அதனால் மண்ணெண்ணையக் கொண்டு வாருங்கள் என்கிறான்.

அதைக் கேட்ட அந்த வீட்டுக்காரர்கள் என்ன எண்ணுகிறார்கள்..? “அடப்பாவிகளா.., நாங்கள் என்ன செய்தோம்? இந்த மாதிரியெல்லாம் செய்வினை செய்து வைத்திருக்கின்றார்களே” என்று சொல்கிறார்கள்.

2.ஆயிரக் கணக்கில் பணம் பறிக்கின்றார்கள்

உடனே, மந்திரவாதியிடம் இதற்குக் காசு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள்.

வெட்டிய இந்த ஐந்தாறு ஆட்டையும், கோழியையும் இவன் எடுத்துக் கொள்கிறான். ஆனால், அதே சமயத்தில் “பத்தாயிரம் ரூபாய்” கேட்கிறான்.

ஏனென்றால், எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஒரு வேளை நான் இறந்துவிட்டால் “என் பெண்டு பிள்ளைகளை நான் எப்படிக் காப்பாற்றுவது?”

அதனாலே பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கூசாமல் கேட்கிறான்.

அதை எடுத்து எல்லாம் செய்துவிட்டு அந்தப் பணத்தையும் வாங்கிக் கொண்டு போய்விடுகின்றான்.

அடுத்து இந்த மந்திரவாதி என்ன செய்கிறான்? என்று நான் பின் தொடர்ந்து போய்ப் பார்க்கிறேன்.

3. குருநாதர் செய்த வேலை

இந்த மந்திரவாதி இன்னொரு இடத்தில் அங்கேயும் அதே வேலையை ஆரம்பிக்கின்றான். அப்பொழுது நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் என்ன சொல்கிறார்?

“நீ லேசாகப் போய்விட்டு வாடா…” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர். ஆக, இங்கே என்ன நடக்கின்றது?

அங்கே நான் போனவுடனே.., அந்த மந்திரவாதி “என்னென்னவோ” செய்து பார்க்கிறான். ஒன்றும் வரவில்லை. ஆக என்ன சொல்கிறான்?

இங்கே “கடும் பூதம்” இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்கிறான்.

இதுவெல்லாம் இந்த இயற்கையில் மக்களை இப்படியெல்லாம் ஏமாற்றி மந்திர தந்திரங்களைச் செய்து “எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றார்கள்..,!” என்ற வகையில் அனுபவ ரீதியில் தெரிந்துதான் உங்களிடம் சொல்கின்றோம்.

அவன் சொன்ன இந்த உணர்வை எடுத்தபின் “செய்வினை செய்திருக்கிறார்கள்” என்று அவனை எண்ணும்போது இவனே (வந்த மந்திரவாதியே) உங்களுக்குள் பதிவு செய்கிறான்.

ஆகவே, இத்தகைய நிலைகளில் நீங்கள் சிக்காதீர்கள்.
1.அகஸ்தியாமமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
5.அது எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
6.நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படரவேண்டும்
7.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும்
8.நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் தியானித்துவிட்டு
9.அந்த உணர்வுகளை அங்கே படரவிடுங்கள்.

உங்கள் மூச்சலைகளால்.., எத்தகைய கடுமையான நிலைகளாக இருந்தாலும் “அது நிச்சயம் ஒடுங்கும்”.

பித்தம் உடலுக்குள் எப்படி அதிகரிக்கின்றது? அதன் கடைசி முடிவு என்ன? மாற்றும் வழி என்ன?

Image

Nature glow

பித்தம் உடலுக்குள் எப்படி அதிகரிக்கின்றது? அதன் கடைசி முடிவு என்ன? மாற்றும் வழி என்ன?

உயிரினங்கள் ஒன்றை ஒன்று கொன்று அதன் வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது. அதனின் வளர்ச்சியில் மனிதனாக நாம் இன்று வந்துள்ளோம்.

வந்த பின் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் செயல்களைப் பார்க்க நேர்கின்றது.

1.கோபப்படுவோரை

2.நோய்வாய்ப்படுவோரை

3.வேதனைப்படுவோரை

4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.

எந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலக்க ஆரம்பித்துவிடுகின்றது.

அப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.

ஏனென்றால், “இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.

மடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டுவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.

ஒரு குளவி புழுவை எடுத்து வந்து தன் விஷத்தால் அதைக் கொட்டும் பொழுது அந்தப் புழு “குளவியாக” மாறுகின்றது.

இதைப் போல (வேதனை உணர்வுகள்) அந்த விஷத் தன்மை இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது விஷத்தை வடிகட்டும்.., “ஏற்றுக் கொள்ளக் கூடிய பித்த சுரப்பிகள்” அந்த விஷத் தன்மைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும்.

அந்த விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகிவிட்டால்.., அது உமிழ்த்த நேர்ந்தால்.., “பித்தம்” என்ற நிலைகள் நம் உடலுக்குள் அதிகரிக்கும்.

அதனால் அடிக்கடி சோர்வடையச் செய்து நம்மையறியாமல் “தலை சுற்றுவதும்” சிந்தனையற்ற நிலைகளாகவும் ஆகிவிடும்.

அப்பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாது போய்விடும். இதற்கு எதிர் நிலையான நிலைகள் ஆகிவிடுகின்றது.

ஆனால், பித்த சுரப்பிகள் அதிகமாகிவிட்டால் பச்சைக் காய்கறிகள் சாப்பிட்டால் அதைச் ஜீரணிக்கக்கூடிய சக்தி அதற்கு உண்டு.

மிருகங்களெல்லாம் பச்சையாக உணவை உட்கொண்டு பழகியது. இயற்கையில் விளைந்த தாவரங்கள் விஷத்தின் ஈர்ப்பால் விளைகின்றது. அதிலுள்ள தொக்கியுள்ள விஷத்தைத் தனக்குள் பெருக்கி இதே சத்தைத் தனது உணவாக மாற்றி மிருகங்கள் வலு கொண்ட உடலாக மாற்றும்.

வலு கொண்ட உடலாக ஆகவேண்டும் என்பதற்காக அதற்குத்தக்க “பச்சைக் காய்கறிகளை.., உணவாக உட்கொள்ளுங்கள்” என்று டாக்டர்கள் சொல்வார்கள்.

இதன் உணர்வு வழிப்படி நாம் உட்கொண்டாலும் கூட இந்த உடலை விட்டுச் சென்றபின் என்ன ஆவோம்?

இப்பொழுது ஆடு மாடெல்லாம் பச்சையாகத் தான் மற்றவைகளைச் சாப்பிடுகின்றது. “வேகவைத்தா சாப்பிடுகிறது…? இல்லை”.

இதன் உணர்வு கொண்டு உறுப்புகள் மாறி நம் உடலுக்குள் வலு கூடும். ஆனால், இந்த உடலில் “நீடித்த நாள்” நாம் இருக்கப் போவதில்லை.

இந்த உடலில் இருக்கும் வரை “சுகத்தை” வேண்டும் என்றால் தேடலாம். அடுத்து இதுவே எதிர்நிலையாகி இந்த உடலில் மாற்றமாகிவிடும்.

பித்த சுரப்பிகள் அதிகமாக அதிகமாக உடலில் இந்த அணுக்களின் பெருகமாகி நம் மனித உடலுக்கு எதிர் நிலையாகி அது அதிகரித்த பின் அதுவே நோயாக மாறி இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்றுவிடும்.

பின் நாம் எந்தெந்தக் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமோ அதன் ஈர்ப்புக்கொப்ப இந்த உணர்வுகள் மாறி “அங்கே தான்” செல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம். அடுத்து வெளியிலே போனபின் அதன் ஈர்ப்புக்குள் சென்று அதற்குத்தக்க உறுப்புகளை மாற்றி பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் உடலை அமைத்துவிடும் இந்த உயிர்.

1.உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க தான்

2.உயிர் அந்த உருவங்களை அமைக்கும்.

3.அந்த அணுவின் மலங்கள் தான் உடலின் நிலைகள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளைக் காணும்போதெல்லாம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதைச் சேர்த்து விஷத்தை வெல்ல வேண்டும். “விஷத்தை வென்றிடும் அணுக்களாக” நமக்குள் பெருக்க வேண்டும்.

பரிணாம வளர்ச்சியில் விஷத்தைக் குறைத்து இன்று மனிதனாக வந்த நாம் விஷத்தை வென்றிடும் இதனின் கணக்குக் கூடக் கூட விஷத்தை ஒளியாக மாற்றிடும் வளர்ச்சி பெறுவோம்.

“ஒளியின் சுடராகப் பெற்றிடுவோம்”. மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடலாம்.

நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி

POLARIS

நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி 

நாம் மனிதரான பிற்பாடு பிறர் சொல்லும் கவலைகளையும் சங்கடங்களையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் நமக்குள் கவலையையும் சஞ்சலத்தையும் வேதனையையும் உண்டாக்கும் சந்தர்ப்பம் தன்னாலேயே வந்து விடுகின்றது.

ஆகவே கவலை வேதனை போன்ற உணர்வுகளை நீங்கள் கேட்க நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.“நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும்
3.உங்களுடைய தொழில் நன்றாக இருக்கும்”
என்ற இது போன்ற வார்த்தைகளைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும்.

இது போன்ற வார்த்தைகளை அந்தக் கவலையாகச் சொன்னவர்களிடம்… “நீங்கள் கோபமாகச் சொன்னாலும் சரி”.

“இந்த உணர்வின் அழுத்தம்..,” நஞ்சான உணர்வுகள் உங்களிடம் வராது தடுத்துவிடும்.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும், நீங்கள் நலமாக இருப்பீர்கள், உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவர்களைப் பார்த்துக் கோபமான உணர்வுடன் “அழுத்தத்துடன் சொன்னால்” நஞ்சான உணர்வுகள் அவர்களிடமிருந்து விலகும்.

“நம்மிடம் அது வராது…!”

இல்லையென்றால் அவர்களுடைய கவலைகளை சஞ்சலங்களை “உம்… ம்…” என்று நீங்கள் காது கொடுத்துக் கேட்டால் உங்களிடம் சோர்வு வந்துவிடும். சிந்தனைத் திறனும் குறையும்.

ஒரு நண்பர் மேல் பாசமாக இருக்கிறோம். திடீரென்று… அந்த நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

“நேற்று வரை நன்மைகள் செய்தாரே…! இன்று விபத்தில் சிக்கி இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணுவோம்.

“ஆத்ம சுத்தி செய்வதை மறந்துவிடுவோம்…” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணுவதை மறந்துவிடுவோம்.

அடிபட்ட நண்பரை ஆஸ்பத்திரியில் பார்த்து எப்படி இருந்தவர் “இப்படி இருக்கின்றாரே…” என்று எண்ணினால் இதன் உணர்வுகள்தான் வரும். நமக்குள் அது வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி உடனே நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் இருளான உணர்வுகள் நம்மை “இயக்கவிடாதபடி…” தடுத்துவிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பரின் உடல் முழுவதும் படர்ந்து அவருடைய வேதனைகள் நீங்கி நல் உணர்வைப் பெறக்கூடிய சக்தி பெறவேண்டும்.

அவர் பூரண குணமடைய வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.

“இது சாதாரணமானதல்ல…” நீங்கள் இதன் உணர்வுகளைச் சொல்வதை.. “நண்பர் தம் காதால் கேட்டால்.. அவர் நுகர நேர்ந்தால்..” நீங்கள் எண்ணிய உணர்வுகள் நண்பரிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

சீக்கிரமே நண்பர் நலம் பெறுவார். இது போன்று நீங்கள் செய்து பாருங்கள்.

ஒருவர் எவ்வளவு கடிமான நோயில் இருந்தாலும் கூட நீங்கள் கூடுதலாகச் சில நிமிடம் அவருக்காகத் தியானம் செய்யும்போது அவர் சீக்கிரமே நோயிலிருந்து விடுபட்டு நலம் பெறுவார்.

“உங்களுக்கு… அந்தச் சக்தி உண்டு…!” என்று யாம் கூறுகின்றோம்.

மற்றவர்களுடைய வேதனைகளை நோய்களை உங்களால் நீக்க முடியும். ஆனால், தவறிப் போய் நோயாளியின் வேதனை உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நண்பருடைய உடல் முழுவதும் படரவேண்டும், நண்பருடைய இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், அவர் வேதனையிலிருந்து விடுபட வேண்டும். அருள் சக்தி அவர் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் நண்பரையும்.., “இது போன்று எண்ணச் சொல்லுங்கள்”. இதை உங்கள் பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால், மற்றவர்கள் சொல்கிற கஷ்டங்களை நாம் கேட்கிறோம். கேட்டவுடன் நாம் சோர்வடைகின்றோம்.

ஆத்ம சுத்தியையும் அருள் உணர்வுகளையும் சொல்லும்போது சோர்வை நீக்குகின்றோம்.

“அந்த அருள் சக்தியைத்தான்” யாம் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இருக்கும் இடத்திலிருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…!

Trust your will

இருக்கும் இடத்திலிருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…! 

ஒரு துளி விஷம் பாலில் பட்டால் அதைக் குடித்தால் என்ன ஆகின்றது? நம்மை மயங்கச் செய்கின்றது. சிறிது விஷம் அதிகமானால் மரணமடையும் நிலையே வந்துவிடுகின்றது.

இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். வேதனை என்பதே விஷம்.

வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்ததென்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இது பட்டபின் நம்மை “மயங்கச் செய்துவிடுகின்றது”.

அப்பொழுது சிந்தனை என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்கின்றது. தன்னை அறியாமலே வெறுப்பும் வேதனைப்படும் நிலைகளைச் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன உபாயம் இருக்கின்றது…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்த அந்த வழிப்படி உங்களுக்குள் விஷத்தை அடக்கிடும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

பின் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று “உள்முகமாகப் பாய்ச்சுதல் வேண்டும்”.

இப்படி எண்ணினால் அந்தத் தீமைகளை மறைத்துவிடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை என்ற உணர்வுகள் “இழுக்காது.., தடைப்படுத்தப்படுகின்றது”.

இது வலுப் பெறும் பொழுது நம் ஆன்மா மீது சுருண்டு கிடக்கும் வேதனைப்படச் செய்யும் தீமைகள் நீக்கப்படுகின்றது.

எத்தகையை நிலைகள் வந்தாலும் இதைப் போல நம்மைப் பாதுகாக்கும் வலுவான உணர்வுகள் வருதல் வேண்டும்.

இன்று இருக்கும் இந்த விஷமான உலகில் “நம்முடைய சிந்தனைகள் சிதறாது” அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக்குவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை உங்களுக்குள் அடிக்கடி உந்தச் செய்கின்றோம். உங்கள் “மனம் மாறும் நிலைகளில்” எல்லா உணர்வுகளுடன் இதைக் கலக்கச் செய்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு நீங்கள் மீண்டும் ஏங்கினால்  தீமைகளை அகற்றிட முடியும். அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.., உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படித் “தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சி… அதைச் செய்தாரோ…!” அதே போல உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றோம்.

பல இன்னல்களைச் செயற்கையாக ஊட்டினார். அதன் செயலாக்கங்களையும் அதிலிருந்து விடுபடும் மார்க்கங்களையும் தெளிவாகக் காட்டினார்.
1.என்னைக் காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று அத்தகைய நிலைகளைக் காட்டினார்.
2.நீங்கள் வீட்டிற்குள் இருந்தே இதைப் பெறமுடியும்.

தீமையை வென்ற உணர்வின் தன்மை “உணர்ச்சிகளாகக் கொடுத்து” நீங்கள் எல்லோரும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இது உலகைச் சுற்றி ஊரைச் சுற்றிக் காட்டைச் சுற்றி உணவில்லாதபடி நான் அலைந்தேன். அகண்ட அண்டத்தின் நிலைகளையும் உலக அனுபவத்தையும் குருநாதர் கொடுத்தார்.

நீங்கள் உங்கள் வீட்டிற்குள் இருந்தே அந்த அனுபவத்தைப் பெற முடியும்.

அதைப் பெற.., “உங்கள் நினைவு ஒன்றுதான்” தேவை.

தீமை என்று நீங்கள் காணும் பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.தீமையிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.
3.தீமை செய்வோர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சினால்
4.“தீமையை நுகரும் சக்திகள்” அங்கே மாறிவிடுகின்றது.

இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் கணவனும் மனைவியும் இதைச் செய்தே ஆக வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர்ந்து வரும் நிலையில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்த உயிர் எதை வலுவாக எடுத்ததோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

நாம் “பிறவியில்லா நிலை” அடைகின்றோம்.