கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!

Shiva - ardhanreeswara

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!

 

இராமாயணத்தைக் கற்றுக் கொண்ட இராகவேந்திர சுவாமிகள் இராம நாம ஜெபத்தைப் பாடிக் கொண்டே “நான் சொர்க்கம் அடைய வேண்டும்” என்ற நிலை பெற்றவர்.

இராமனுடைய பாடல்களை… இராம ஜென்ம பூமி என்ற நிலைகளில் இராமாயணக் காவியங்களைப் பாடிக் கொண்டவர்.

சங்கர பீடங்களில் இராம நாம ஜெபத்தைத் தினமும் ஆயிரம் முறை எழுதிக் கொண்டிருந்தால் “உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்…!” என்று இன்றும் சொல்வார்கள். இராமன் யார் என்றே அறிய முடியாதபடி அந்த நிலைகள் அவ்வாறு இருக்கிறது.

இராகவேந்திரரின் மனைவி என்ன செய்கிறது…?

நீ இராமனையே பாடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றாய்…! எனக்குச் சாப்பாட்டுக்கு இல்லையே…! என்று கேட்கிறது.

நீ என் கூட வந்தால் பிசாசு…! நீ வரக்கூடாது என்கிறார். நான் இராமனையே பாடிச் சொர்க்கம் அடையப் போகிறேன்…! என்று உலகிற்குச் சொல்கிறார்.

தன் மனைவியைக் கூட வரவிடாதபடி துரத்திவிடுகின்றார். ஆனால் உலகிற்கு இராம நாம ஜெபத்தைப் பாடுகின்றார்.

மனைவியோ இராம நாமத்தைப் பற்றிச் சொல்ல முடியாதபடி அவர் உணவுக்கு வழி இல்லை.

ஆக மொத்தம் திருமணமாகிக் கணவனும் மனைவியும் ஆன பிற்பாடு இங்கே அனாதையாக விட்டுவிட்டு… “நான் போகின்றேன்…!” என்றால் என்ன ஆகிறது…?

அப்பொழுது மனைவி பின்னாடியே வருகின்றது. எனக்கு எப்படியும் உணவைக் கொடு… இல்லை என்றால் உன் கூடவே நானும் பாடுகிறேன்…! என்று சொல்கிறது.

1.நீ (மனைவி) வந்துவிட்டால் எனக்கு உன் மீது ஆசை வந்துவிடும்.
2.அதனால் நரகத்திற்குத்தான் போவேன்…! என்று இப்படிப்பட்ட நம்பிக்கையில் அவர் சொல்கிறார்.

அவரை இன்று கடவுளாகத் துதிக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியைத் துறந்துவிட்டு இப்படிப் போகிறார். அவருடைய மனைவியும் பின்னாடியே துரத்திக் கொண்டே போகின்றது.

நான் இராமனைப் பாடுகிறேன். நீ பிசாசு… வரக்கூடாது…! என்றே சொல்கிறார்.

நான் பிசாசாகி உன்னிடமே வருவேன்…! என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறது. வெளி வந்த அந்த ஆன்மா அங்கே அவருக்குள் போகிறது.

அதற்குப் பின் அவரால் பாடல்கள் பாட முடியவில்லை. அப்பொழுது என்ன செய்கிறார்…? அந்தக் காலத்தில் “ஜீவ சமாதி” என்பார்கள்.

இனி என்னால் முடியாது என்று சொல்லிக் குழியைத் தோண்டச் சொல்லி அந்த இராமனைப் பாடிக் கொண்டே ஜீவ சமாதிக்குள் சென்று அதற்குள் ஐக்கியமாகின்றார்.

ஆனால் மனைவியின் ஆன்மா அவர் உடலுக்குள் தான் போனது. போய் இந்த நிலை (ஜீவ சமாதி) ஆன பிற்பாடு உயிர் எங்கே போகிறது…? விண் செல்லவில்லை.

சோறு மேல் தான் ஆசை வந்தது…! இராகவேந்திரர் சாமிகள் கும்பிடுபவர்களை எல்லாம் பெரும்பகுதி பாடல்களைப் பாடி விட்டு சாப்பாடு போட்டார்கள்… சாப்பாடு போட்டார்கள்…! என்று தான் சொல்வார்கள்.

அதனின் உணர்வின் ஆசை இருக்கும் பொழுது அதிலே சிக்கிக் கொண்டு செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொத்து வேண்டும்…! என்று தான் போவார்கள்.

அர்ச்சனை என்று எல்லாக் காசுகளும் போட்டு இந்த ஆசைகளில் தான் கும்பிடுகின்றார்கள். “மோட்சம் அடைய வேண்டும்” என்ற எண்ணம் இல்லை.

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
3.ஆனால் தன்னை அணுகி உள்ளவரை (மனைவியை) மறந்துவிட்டார்.

இராகவேந்திரரின் ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

அவருடைய உடலில் இராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெற முடிந்தது.

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ
1.முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.

தவறை எண்ணி வருந்தும் பொழுதே நம் ஆத்மா “நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றது…!”

meditation tips.jpg

தவறை எண்ணி வருந்தும் பொழுதே நம் ஆத்மா “நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றது…!” 

1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”