ஞானிகளைப் பற்றிய சரித்திரங்களும் அவர்கள் ஞானம் பெற்ற சந்தர்ப்பங்களும்

பேரண்ட மகரிஷிகள்

எண்ணாமலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி

வினைகளை நீக்கும் மகரிஷிகளின் அருள் ஞானம்

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதாக… இணையச் செய்வதாக இருக்க வேண்டும்

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

யோகா…!

போகன் காட்டும் மெய் வழி

சப்தரிஷிகளின் ஞான வித்துக்களைத் தான் உங்களுக்குள் ஊன்றுகின்றோம்

இந்த உலகையே காக்கப் போகும் “மகரிஷிகள் நாடான இந்தியா”

ஞானிகள் காட்டிய வழியில் நாம் உருவாக்க வேண்டியது

மகரிஷிகளுடன் நாம் ஒன்றும் வழி

சிதம்பரத்தில்… திருமூலர் சொன்ன “திருமந்திரம்”

இனி எந்த நிலை வந்தாலும் குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்

அருணகிரிநாதர் மூலம் ஞானம் பெற்ற வில்லிப்புத்தூரார் உருவாக்கிய “ஆண்டாள் திருஸ்தலம்

27 நட்சத்திரங்களின் சக்தியை ஒருங்கிணைத்துப் பெறச் செய்யும் நிலைக்காக உருவாக்கப்பட்டது தான் போகர் உருவாக்கிய முருகன் சிலை

தாக்கும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்க்க வேண்டும்

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும்

அருள் ஒளியை எடுத்து அந்த ஒளி கொண்டு தாக்கினால்… இருளை ஒளியின் அறிவாக மாற்றச் செய்யும் ஒளி.. ஒலி… ஒளி…!

சர்வ மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்

வியாபித்திருக்கும் சக்தியைப் பெற்றவர் தான் வியாசக பகவான்

தனித்திருந்து… “விழித்திருத்தல் வேண்டும்…”

பரமாத்மாவிற்கு நாம் செய்ய வேண்டிய சேவை

ஞானிகளின் ஆசை என்ன…?

விஷம் தாக்கினால் இருளாகும்… விஷத்தை அடக்கினால் ஒளியாக மாறும்

27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் தான் எதுவுமே நம்மை எதிர்மறையாக இயக்காதபடி சமமாக்க முடியும்

ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்… மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…?

துன்புறுத்தும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்த்தவர்களே மகான்கள்…!

இயற்கையின் சக்தி எப்படிப்பட்டது…? ஞானிகள் அதைப் பயன்படுத்திய விதம் எப்படி…?

பண்டைய காலத்தில் ரிஷிகள் காட்டிற்குச் சென்று தவம் செய்தார்கள் என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

ஆதிசங்கரரின் சரித்திரம்

ஆதிசங்கரர் உணர்த்திய ஆன்மீகம்

ஆதிசங்கரர் தன் வயிற்றுவலியை நீக்கிய பின் துவைதவாதிகள் அவரை என்ன செய்தார்கள்..?

காற்றில் மிதக்கும் தன்மை பெற்ற ஆதிசங்கரர், கோலமாமகரிஷி

இராமலிங்க அடிகள் படிப்பு வராத நிலைகள் இருப்பினும் ஞானம் பெற்ற சந்தர்ப்பம்

இராமலிங்க அடிகள் ஞானம் பெற்ற சந்தர்ப்பம்

தீமையைப் பார்க்காது, தீமைகள் எனக்குள் விளையக்கூடாது – இராமலிங்க அடிகள் 

இராமலிங்க அடிகள் சொன்னது தீமையை நான் பார்க்கக் கூடாது

ஐயப்பன் பெற்ற நிலை

.திருமூலர் – கருமாரி – சிதம்பர இரகசியம்

பதஞ்சலி முனிவர் – திருமூலர், சிதம்பரம்

பதஞ்சலி திருமூலர் ஆக ஆனதன் சந்தர்ப்பம்

பதஞ்சலி முனிவரின் உண்மை நிலைகளை குருநாதர் சூட்சமாக அழைத்துச் சென்று காட்டினார்

அபிராமிப்பட்டர் சரபோஜியிடம் சொன்னது – மனிதனுக்குத் திதி கிடையாது

நட்சத்திரத்தை அறிந்த பிருகுவின் மகன்கள் தாய் கருவில் எடுத்த உணர்வின் இயக்கம், அத்திரி

விவேகானந்தர் கடவுளை இராமகிருஷ்ணரிடம் உணர்ந்த விதம் – சிகாகோ உபதேசம்

விவேகானந்தர் சரித்திரம்

அருணகிரிநாதரின் முழு சரித்திரம்

நபிகள் ஞானம் பெற்ற நிலை – அரசர்கள் அவர் தத்துவத்தை மாற்றியது

முகம்மது நபி ஞானம் பெற்ற நிலை

காந்திஜி சிறு வயதில் செய்த தவறுகளும் தென்னாப்பிரிக்காவில் பெற்ற ஞான உணர்வுகளும்

கோபமாகத் தாக்குவது கோழை, மன உறுதி கொண்டு அவர் மனதைச் சீர்படுத்துவது மன பலம்

தீமைகளை வென்ற ஞானிகளிடம் எதைக் கேட்க வேண்டும்

அன்று வான இயலை அறிந்து கோவிலை உருவாக்கிய மெய்ஞானிகள்

நாஸ்டர்டாமஸ் சொன்ன கருத்துக்களில் உள்ள உண்மைகள்

திருஞான சம்பந்தரின் உணர்வைப் பெற்றுத்தான் அருணகிரி ஞானியானார்

ஞானிகள் கொடுத்த பாடலுக்கு இன்றிருப்போர் கொடுக்கும் வியாக்கியானங்கள்

இராமலிங்க அடிகள் சொன்ன கந்தக் கோட்டம்

கசாப்புக் கடைக்காரனிடம் போய்க் கற்றுக் கொள் – வாசுகி கொங்கணவரிடம் சொன்னது

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகள்

போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையின் இரகசியம்

கடவுளை அறிய வேண்டும் என்ற வீரிய எண்ணம் விவேகானந்தருக்கு எப்படி வந்தது…?

இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்படுத்திய ஆச்சரியப்படும் செயல்களை குருநாதர் காட்டினார்

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?

இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் வேண்டாம்..! என்று சொன்னவர்கள் தான் “இராமகிருஷ்ணரும்… விவேகானந்தரும்…

ஞானிகளைப் புகழ்வதனாலேயோ பணிந்து வணங்குவதனாலேயோ பலன் இல்லை

ஞானிகளைச் சந்திப்போர் பெரும்பகுதி பிழைப்புக்காகத் தான் கேட்கிறார்கள் – அவர்கள் பெற்ற ஞானத்தைக் கேட்பதில்லை

ஞானிகள் வாழ்ந்த நம் நாட்டின் உயர்ந்த பண்புகளை உணர்ந்து அதன் வழி செயல்பட முற்படுங்கள்

சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்… என்று சபதம் எடுப்போம்…!

மகரிஷிகளின் அருளுடன்… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் புகுத்தி… மகரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்

.சாகாக்கலை… வேகா நிலை… போகாப்புனல்… இராமலிங்க அடிகள் சொன்னது

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்

பேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு

தியானம் செய்யும் பொழுது உடல் முழுவதுமே சூடு ஆகின்றது… ஏன்..? நல்லதா… கெட்டதா…!

fire maharishis

தியானம் செய்யும் பொழுது உடல் முழுவதுமே சூடு ஆகின்றது… ஏன்..? நல்லதா… கெட்டதா…!

 

கோவிலில் தீப ஆராதனையாக அந்த நெருப்பைத்தான் சாமிக்கு ஒளியாகக் காட்டுகின்றார்கள். அதே ஆராதனையைத்தான் நம்மிடமும் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள்.
1.அந்த நெருப்பை நம் இரண்டு கைகளாலும் பட்டும் படாமலும் தொட்டு
2.முகத்தில் இரண்டு கையையும் கொண்டு போய் புருவ மத்தியில் விரல் படுகின்ற மாதிரி ஒற்றிக் கொள்கின்றோம்.

இப்படி ஏன் செய்கிறோம்…?

இதை யாரும் யோசிப்பதில்லை. எல்லோரும் இப்படிச் செய்கிறார்கள். அதனால் நாமும் அவ்வாறு செய்கிறோம். அது தான் நமக்குத் தெரியும்.

அதாவது மகரிஷிகள் அனைவருமே நெருப்பின் சக்தியை வளர்த்துக் கொண்டவர்கள். பேரொளியாக மாற்றிக் கொண்டவர்கள். “எம அக்னி” என்று அவர்களைச் சொல்வார்கள்,
1.அவர்கள் தங்களுக்குள் பெற்று வளர்ந்த அந்த நெருப்பின் சக்தியை
2.அதாவது பேரருள் பேரொளியை…
2.சாதாரண மக்களையும் நுகரச் செய்து அவரவர்கள் உயிரிலே அந்த நெருப்பின் சக்தியைச் சேர்க்கச் செய்கின்றார்கள்.

அதைச் சேர்க்கச் சேர்க்க உடலில் அறியாது சேர்ந்த தீமைகள் அனைத்தும் வேக வைக்கப்பட்டு தீமைகள் ஆவியாகப் பிரிந்து செல்கிறது.

அதே சமயத்தில் நாம் எடுக்கும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அதீத சக்தியைப் பெறும் சந்தர்ப்பமாக அது அமைகிறது.
1.அதாவது தீமையை மாற்றி
2.நன்மை செய்யும் சக்தியாக நாம் மாற்றுகின்றோம் என்று அர்த்தம்.

கடையில் வாங்கிய அரிசி பருப்பு காய்கறிகள் எல்லாவற்றையும் பாத்திரத்திலே போட்டு அடுப்பிலே வைத்து வேக வைத்து அதிலுள்ள காரலை நீக்கி சுவையாகச் சமைத்துச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!

அது போல் புருவ மத்தியின் வழியாக மகரிஷிகளின் அருள் சக்தியை (நெருப்பை) கூட்டினால் நாம் எந்த நல்லதை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதை உருவாக்க முடியும்.

தியானம் இந்த முறைப்படி செய்தால் கடுமையான சூடு உண்டாகும். அது உண்மைதான். சூடு அதிகமானாலும்……!
1.நாம் பெறும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எத்தனை பேருக்குக் கொடுக்க முடியுமோ கொடுக்கலாம்
2.எத்தனை பேர் மேல் பகைமை கொண்டோமோ… எத்தனை பேர் மேல் வெறுப்பு கொண்டோமோ… அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சினால்
3.நம் உடலில் உள்ள சூடு உடனே குறையும்… சாந்தியாகும்…!

தியானம் செய்யும் பொழுதும் சரி… அல்லது செய்த பின்பும் சரி.. புருவ மத்தியிலோ அல்லது உடலிலோ சூடு வருகின்றது என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கின்றது என்று அர்த்தம்

சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இது…!

முழு முதல் கடவுள் யார்…?

ganesha

முழு முதல் கடவுள் யார்…?

 

ஆதிமூலம் என்ற உயிர் இந்த மனிதனாக ஆன பிறகு முழு முதற் கடவுள் என்று அன்றே ஞானிகள் தெளிவாக்கியிருக்கிறார்கள். அந்த விநாயகருக்கு அங்குசத்தையும் போட்டுக் காட்டியுள்ளார்கள். ஏன்…?

யானையை அங்குசத்தை வைத்து அடக்குவார்கள். அது போல் இந்த உலகில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது இந்த மனித உடல் என்று காட்டுவதற்காக அங்குசத்தை விநாயகருக்குக் காட்டியுள்ளார்கள்.

1.மனிதன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகிவிட்டால்
2.இந்த அண்டத்தில் இருக்கிறது எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்.
3.அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஆனால் இவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்றால் “சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… அதனால் விநாயகர் முழு முதல் கடவுள்…!” என்று இப்படிச் சொல்வார்கள்.

சிவனுக்கு முந்தியவன் வினை தான். அந்த உணர்வின் தன்மை “ஓ…!” என்று பிரணவமாகி இந்த உடலாகும் போது சிவன். உடலாகும் போது சிவன். சிவனின் பிள்ளை விநாயகன். ஆகவே பிரணவத்திற்குரியவன். எது…?

இந்த வினை.

ஒரு உயிரணுவிற்குள் எந்தச் செடியின் சத்து மோதுகிறதோ அது பிரணவம். ஜீவ அணுவாக மாற்றும் சக்தி பெற்றது உயிர். (உயிரணுவிற்குள் துடிப்பும் அதனால் வெப்பமும் உருவாகிறது)
1.செடியின் சத்தை அந்த உயிரணு நுகர்ந்தால் பிரணவமாகிறது.
2.ஆகவே அந்தச் சத்து வினையாகிறது.
3.அதனால்தான் அந்த வினை உயிருடன் சேர்க்கப்படும் போது “விநாயகா…!” என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.
4.இந்த மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு செடியின் சத்தை நுகர்ந்தால் அது வினை. அதனால் தான் சிவனுக்கு முந்தியவன் விநாயகன். செடியின் சத்தை அது நுகர்ந்தபின் “ஓ…!” என்று பிரணவமாகி “ம்…!” என்று உடலாகும் போது விநாயகன். (சிவம் என்பது திடப்பொருள்)

எந்தச் செடியின் சத்தை உயிரணு நுகர்ந்ததோ மூஷிக வாகனா…!
1.அதாவது அந்த மணமே இயக்கி
2.அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும் இயக்கச் சக்தியாக மாறுகிறது.
3.இது தான் விநாயகன்.

ஆனால் முழு முதற் கடவுள் என்று சொல்லும் பொழுது
1.பல கோடி வினைகளைச் சேர்த்து மனிதனாக ஆன பின் கணங்களுக்கு அதிபதி
2.எல்லாவற்றையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெற்றது…!
3.அதனால் தான் அங்குசத்தை வைத்துக் காட்டியது.

மனித உடலில் முழு முதற் கடவுள் என்ற நிலையில் எண்ணத்தால் எண்ணி நாம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். பிரணவத்தைத் தெரிந்து கொண்டவன் தான் மனிதன்.
1.இந்த உயிரின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவனும்
2.தன்னை அறிதல் என்ற நிலையிலே கண்டுணர்ந்தவனும் ஆதியிலே அகஸ்தியன் தான்.
3.அதாவது இயற்கையின் இயக்கச் சக்தியை உணர்ந்து கொண்டவன்… பிரணவத்தை உணர்ந்து கொண்டவன் அந்த அகஸ்தியன்.
4.ஆகையினால் தான் விநாயகரை முழு முதற் கடவுள் என்றும் நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள் என்றும் சொல்வது.

அதே சமயத்தில் மனித உடலின் ஆறாவது அறிவாக வரக்கூடிய மணம் முருகன். பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்றால் நம் உடலுக்குள் அந்த உருவாக்கும் திறன் உண்டு
1.அதை வைத்து உருவாக்கக் கூடிய நிலையும்
2.உலகில் வரக்கூடியதை அடக்கும் சக்தி பெற்றது என்றும் ஞானிகள் கொடுக்கிறார்கள்.
3.இந்த வினையைச் சேர்த்துக் கொண்டவர்கள் அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் போகலாம்.

ஆனால் இப்போது இந்த உடலிலிருந்தே இந்த உணர்வுகளை அடக்கினால் தான் உண்டு. இதைச் செய்யத் தவறி விட்டோம் என்றால் மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகத்தான் போய்விடுவோம்

ஆகவே மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை நழுவ விடாது அந்த அகஸ்தியமாமகரிஷி சென்ற அருள் வழியில் நாம் செல்வோம். அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்வோம்.

மகரிஷிகளை நாம் எப்படி நினைக்கின்றோம்…? எப்படி நினைக்க வேண்டும்…? எப்படி நினைத்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்…?

light-workers

மகரிஷிகளை நாம் எப்படி நினைக்கின்றோம்…? எப்படி நினைக்க வேண்டும்…? எப்படி நினைத்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்…?

உதாரணமாக மாம்பழமோ மாங்காயையோ சாப்பிட வேண்டும் என்றால் எதை நினைப்போம்..? சுவையா…? மணமா…? அல்லது மரத்தையா…? மாம்பழம்/மாங்காயின் நிறத்தையா…? மாங்காய் மாம்பழம் விற்பவர்களையா…?

இதில் எதை நினைத்து வாங்குவோம்…?

அதே போல் ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்றால் அவர் உயிரை நினைத்துப் பார்த்தால் கோபம் அதிகம் வருமா…? கண்களைப் பார்த்தால் கோபம் அதிகம் வருமா…? அல்லது கண்களை மூடிக் கொண்டால் அதிகக் கோபம் வருமா…?

கோபமாகப் பேசுபவனின் உணர்வுகள் வெளி வரும் பொழுது
1.அவனின் முகத் தோற்றத்தையும்
2.கண் அசைவுகளையும் அங்க அசைவுகளையும் தான் நாம் கூர்மையாக உற்று நோக்குகின்றோம்.
3.கோபமான சொல் செவிகளில் பட்டு உணர்ச்சிகளைத் தூண்டினாலும்
4.யார் அவ்வாறு பேசுவது…? எப்படிப்பட்ட ஆள்…? என்பதைப் பார்த்த பின் தான்
5.நமக்கும் அவர்கள் படும் அதே கோப உணர்வு இயக்கி நம்மையும் கோபமாகப் பேச வைக்கிறது.

தியானம் செய்யும் பொழுது இது நாள்… இப்பொழுது வரைக்கும் நான் என் உயிரை எண்ணியிருக்கின்றேன். மற்றவர்கள் உயிரை எண்ணியிருக்கின்றேன்.
1.ஆனால் வழி காட்டிக் கொண்டிருக்கும் ஞானகுருவின் (சாமிகள்) உயிரையோ ஈஸ்வராய குருதேவரின் உயிரையோ
2.மற்ற எந்த மகரிஷியின் உயிரையும் நான் எண்ணியது இல்லை.

சாமிகளின் ஞான உபதேசங்களை நேரடியாகவும் கேட்டிருக்கின்றேன். ஒலி நாடாக்களிலும் கேட்டிருக்கின்றேன். புத்தகங்களிலும் படித்திருக்கின்றேன்.

மகரிஷிகளின் உயிரை எண்ண வேண்டும்…! என்று சாமிகள் எதிலும் சொல்லவில்லை. அது சம்பந்தமான உணர்வும் பதிவு அவர் செய்யவில்லை.

அப்படியானால் மகரிஷிகள் என்றால் யார்…? எப்படி அவர்களை எண்ணுவது..?

உயிருடன் ஒன்றி ஒளியின் நிலையாக
1.ஒளிக்கற்றைகளாகவும்…
2.அருள் மணங்களாவும்…
3.கதிரியக்கச் சக்திகளாகவும்…
4.உயிர் வேறல்ல…! என்ற நிலையில் இருக்கும் அவர்களை
5.அவர்கள் உயிரை எண்ணுவது என்றால் இது மனித உணர்வின் எண்ணமாகும்.
6.ஆற்றலின் பிம்பமானதை மனித உணர்வு கொண்டு எண்ண முடியாது…!

மகரிஷிகள் என்றால் அது எம அக்னி. பெரும் நெருப்பு… அது பேரொளி…!
1.பேரொளியை நாம் ஒளியாகத் தான் எண்ண முடியும்.
2.ஒளியின் உணர்ச்சியாகத்தான் நாம் எண்ண முடியும்.
3.உடல் பெறும் நிலைக்கு வரும் பொழுது தான் உயிர் என்று சொல்ல முடியும்.
4.மகரிஷிகள் உயிரையே படைக்கும் சக்தி கொண்டவர்கள் பேராற்றல் கொண்டவர்கள்.
5.அவர்களை நாம் மனித நிலையில் வைத்து அவர்கள் உயிர் என்று பிரித்துப் பார்க்க முடியாது.

உயிரை உருவாக்குபவனை பல உயிர்களைப் பேரொளியாக மாற்றும் ஆற்றல் கொண்டவனை பழையபடி உயிர் என்று எப்படிக் குறுக்கிக் கொண்டு வர முடியும்…?

மனிதர்கள் நம்முடைய உயிர் கடுகளவு தான் இருக்கும். தியானத்தின் மூலம் ஆற்றல் பெருகப் பெருக இப்பொழுது அதை நாம் ஒரு மிளகு அளவோ அதைக் காட்டிலும் இன்னும் சிறிது அதிகமாகவோ இப்பொழுது உயர்த்தியிருக்கலாம்.

மகரிஷிகளை அபப்டி எந்த அளவு கொண்டு சொல்ல முடியும்…? விரிந்து இருக்கும் அகண்ட பிரம்மாண்ட நிலையில் அதை நாம் நம் மனித நிலையில் சொல்லாலே சொல்லவும் முடியாது.

அதனால் தான் சாமிகள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்று தான் குறிப்பிட்டாரே தவிர அவர் உயிரைப் பற்றி ஒரு இடத்திலும் சொல்லவில்லை.
1.அவர் உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரம் ஆகிப் பல கோடி ஆண்டுகளாகிவிட்டது என்று தான் சொல்கிறார்.
2.அதிலிருந்து வெளிப்பட்ட ஒளியான அணுக்கள் மற்றவர்கள் சந்தர்ப்பத்தால் நுகர நேரும் பொழுது
3.அவர்கள் அனைவரும் அவரின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து அவர்களும் மகரிஷிகளாகி விட்டார்கள் என்று தான் சொல்லியுள்ளார்.

எந்த மகரிஷியும்…. – ஈஸ்வராய குருதேவரின் உயிரையோ அகஸ்தியனின் உயிரையோ எண்ணியதாகவும் அல்லது அவர்கள் உயிரை எண்ணித்தான் ஆற்றல்களைப் பெற்றார்கள்…! என்றும் சொல்லவில்லை.

மகரிஷிகள் என்பவர்கள் நெருப்புக்குச் சமம். கடுமையான கதிரியக்கச் சக்தி தான் அது. அதைச் சாதாரண மனித உணர்வு கொண்டு எடுக்க முடியாது. குரு துணை இல்லாது அதை நெருங்கவும் முடியாது.

குரு மூலமாகத்தான் எடுக்க முடியும். அது தான் ஞான வித்து. மகரிஷிகளின் உணர்வைக் கவர்வதற்கு நமக்கு வேண்டியது ஞானகுரு உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞான வித்து.

மகரிஷிகளுடன் பேச வேண்டும் என்றால் ஞான குருவின் உபதேச வாயிலாக வரும் ஞான வித்துக்களைப் பதிவாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதன் மூலமாகத்தான் பெற முடியுமே தவிர மின்சாரம் உற்பத்தியாகும் இடத்தில் உள்ள மின்சாரத்தை அப்படியே எங்கும் யாரும் உபயோகப்படுத்த முடியாது.

அதை விநியோகம் செய்யும் (RELAY AND DISTRIBUTION) குரு மூலமாகத்தான் பெற முடியும். குருவை எண்ணி அவர் கொடுக்கும் உபதேசத்தை எண்ணி அதன் மூலமாக மகரிஷிகளுடன் எளிதில் தொடர்பு கொள்ளலாம்.

என்னுடைய அனுபவம் இது தான்…!

 

குருநாதர் கொடுத்த சக்தி “சரியா… தப்பா…?” என்று எல்லாம் அறிந்து தெரிந்த பிற்பாடு தான் உங்களுக்கும் அதைக் கொடுக்கின்றோம்…!

Agastyar ultimate power

குருநாதர் கொடுத்த சக்தி சரியா… தப்பா…? என்று எல்லாம் அறிந்து தெரிந்த பிற்பாடு தான் உங்களுக்கும் அதைக் கொடுக்கின்றோம்…!

 

சூட்சம நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் அறிவதற்காகத்தான் இந்தியா முழுவதும் எல்லா இடங்களுக்கும் (ஞானகுரு) போய்ப் பார்த்து வந்தேன்.

குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) கொடுத்த சக்தி “சரியா… தப்பா…?” என்று அவர் என்னிடம் சொல்லியது தான்.
1.உண்மையை நீ முதலில் தெரிந்து கொள்…
2.அதைத் தெரிந்து கொள்ளாதபடி எங்கேயும் நீ வெளியிடாதே…! என்று சொல்லி விட்டார்.

அப்புறம் தான் அது எல்லாவற்றையும் எடுத்துப் பல இடங்களையும் சுற்றிய பிற்பாடு அந்த உயர்ந்த சக்தியை ஒவ்வொருவருக்கும் எப்படி கிடைக்கச் செய்வது…? என்று தெரிந்து கொண்டேன். அதன் வழியில் தான் இப்போது உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நீங்கள் என்னைப் போற்ற வேண்டும்… புகழ வேண்டும்…! என்று சொன்னால் எதை வேண்டும் என்றாலும் செய்யலாம். அப்படி நான் செய்தேன் என்றால் “அடேயப்பா…!” என்று நான் (ஞானகுரு) இருக்கிற பக்கம் கூட்டம் வந்து கொண்டே இருக்கும்.

இப்பவும் கூட்டம் வருகிறது. ஆனால் அதைக் கழித்து விட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.
1.ஏனென்றால் உண்மையான நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்திலுள்ளவர்கள் தங்கி இருப்பார்கள்.
2.இந்த உடல் இச்சைக்கு என்று கேட்டு வருகிறவர்கள் கொஞ்சம் குறைத்தே தான் இருக்கும்.
3.அருள் வழியில் வருகிறவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த சத்தை ஏற்றிக் கொண்டே இருப்பேன்.
4.முழுமையாக இந்த உடலுக்குத் தான் வேண்டும்… இந்த வாழ்க்கைக்குத் தான் வேண்டும்… என்ற ஆசையில் வருபவர்களை
5.கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்து விட்டு விடுவேன்.

உடலை வைத்துத் தான் நாம் அருள் சக்திகளை எடுக்க வேண்டும். ஆனாலும் அந்த உடலை வைத்து அருள் ஞானத்தை நமக்குள் பெருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவர்களையும் பெறச் செய்யலாம்.

நீங்கள் வளர்ந்தால்தான் அந்த நிலை பெறச் செய்ய முடியும். நான் ஒருவன் என்ன செய்ய முடியும்…? என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது.
1.நான் யானையைப் பண்ணுவேன் பூனையைப் பண்ணுவேன் என்று நினைத்தேன் என்றால்
2.அதெல்லாம் திமிர் தான்…! அப்படி ஒன்றும் எதுவும் செய்ய முடியாது…!

ஒரு நெல்லை வைத்துப் பல நெல்களை உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு சமப்படுத்த வேண்டும். அந்த உணர்வு வலு கொடுத்துத் தான் எல்லாச் சக்தியையும் பெருக்க முடியும்.

குருநாதர் எனக்கு அப்படித்தான் சக்தியைக் கொடுத்த்தார். அதையே தான் உங்களையும் யாம் செய்யச் சொல்வது.
1.நான் அதைச் செய்வேன்… என்று
2.“அந்த நான்…!” என்று வந்து விட்டது என்றால் அதற்குப் பின் வளர்ச்சி இல்லை… எல்லாம் தீர்ந்தது.
3.அதனால் நீங்கள் வளர வேண்டும்… என்று நான் நினைக்க வேண்டும்.
4.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும்… உங்கள் பார்வை எல்லரையாம் நல்லதாக்க வேண்டும் என்ற
5.அந்த எண்ணம் என்றைக்கு நான் கொள்கிறேனோ நீங்களும் வளர்கின்றீர்கள்… நானும் வளர்கிறேன்… உலக மக்களையும் வளர்க்க முடிகிறது.

ஆகவே ஒன்றின் துணை கொண்டு தான் இன்று வளர முடியும். சூரியன் தானாகப் பிரகாசிப்பதில்லை.

சூரியக் குடும்பத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் (மற்ற சூரியக் குடும்பங்களில்) இருந்து எடுத்து அலைகளாக மாற்றுகின்றது. அதைக் கோள்கள் உணவாக எடுக்கின்றது. கோள்களிலிருந்து வருவதை சூரியன் எடுத்து அதிலுள்ள நஞ்சைப் பிரித்து ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை மாற்றுகிறது.

இந்தக் கூட்டமைப்பு இல்லை என்றால் சூரியன் செயலிழந்துவிடும்… மங்கிவிடும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பிற அண்டத்திலிருந்து வந்த உணர்வுகள் நம் பிரபஞ்சத்தில் சேர்த்து இந்தப் பிண்டத்தில் நம் உடலிலும் இருக்கிறது.
1.அந்த உணர்வுகளை உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றிவிட்டோம் என்றால்
2.இந்த அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையில் நாம் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம்.
3.அது வேகா நிலை… எதிலேயும் வேகாது…!
4.இரண்டாயிரம் சூரிய குடும்பத்தை முதலில் வட்டம் இடும்.
5.பின் இதைக் கடந்து அகண்ட அண்டத்திற்குப் போகும் – இப்படி அடைந்த ஒரு கூட்டமைப்பாகப் போகும்.

அப்படி அகண்ட கூட்டமைப்பாகப் போவது தான் ஆதியில் எப்படி இருண்ட உலகமாக இருந்ததோ அது மாறி அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாக விளைகின்றது. அவ்வாறு ஆக எத்தனையோ கோடி வருடங்கள் ஆகும்.

எல்லாம் பூரணமாக ஒளியாக மாறிவிட்டது என்றால் அதற்கப்புறம் மனித இனங்களை இது ஒவ்வொன்றாகச் சீக்கிரமாக ஒளியாக மாற்றும் நிலை வரும்.
1.அப்பறம் அது ஒளியின் சுடராக ஒளிக்குள் இது எல்லாம் மாறும்.
2.இப்படி எத்தனையோ ஆண்டுகள் இது உருவாகும்.

அந்த நிலைக்கு எல்லோரையும் அழைத்துச் செல்லும் நிலைக்குத்தான் இந்த உபதேசமே…!

“தனுசு கோடி..!” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…!

Image

dhanuskodi - rameswaram

“தனுசு கோடி..!” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…!

 

செடி கொடி மரங்களை எடுத்துக் கொண்டால் மற்ற மரங்களின் அடர்த்தி அதிகமானால் இந்த மணம் பட்டபின் அதனின் வளர்ச்சி குன்றுகிறது. இதனுடைய அழுத்தத்தை மாற்றி விடுகிறது.

மேலை நாட்டில் உருவான சௌண்டால் மரத்தை இங்கு கொண்டு வந்து போட்டோமானால் இதனுடைய வளர்ச்சி ஆன பின் பக்கத்தில் இருக்கும் செடிகளின் வளர்ச்சியைக் குன்றச் செய்கின்றது.

ஏனென்றால் இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

அது போல் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில் “நல்லது…!” என்று நினைத்தாலும் பிறர் படும் தீமையான நிலையும் பத்திரிக்கை டி.வி வாயிலாகப் படிக்கும் எத்தனையோ சம்பவங்களையும் நண்பர்களுடன் கலந்து உறவாடும் உணர்வுகளையும் நுகர நேருகிறது.

பகைமை உணர்வுகளுடனோ பகைமையற்ற நிலையிலோ நாம் பேசினாலும்
1.நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது
2.இரத்தங்களில் கலந்தால் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுக்கும் அது செல்கிறது.

இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலந்து கலந்து அதற்குத் தக்க இந்த உணர்வு இரத்த ஓட்டங்களில் ஓடும்போது இது அடங்குகிற வரையிலும்
1.நாம் நிறுத்தினாலும் அல்லது வேறொருவருடய நிலையில் எண்ணத்தைச் செலுத்த்னாலும்
2.இது இரத்தங்களில் சேர்த்து எல்லா அணுக்களுக்கும் எதிர்ப்பான உணர்வு வருகிறது.
3.நல்ல அணுக்களுக்கு எதிர்நிலை ஆகிவிட்டால் அந்த அணுக்களின் வளர்ச்சி குன்றுகிறது.
4.வலியோ வேதனையோ அல்லது நோயாக வந்துவிடுகிறது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை எல்லாம் நல்லதாக்கும்படி சொல்கிறேன்.

ஆகவே அந்த அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் சக்தியாக நாம் மாற வேண்டும். இதைத்தான் “நேரமாகி விட்டது…! அதனால் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் (மணலைக்) குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான்…!” என்று காட்டியிருப்பார்கள்.

அதாவது எல்லா உணர்வுகளையும் ஒன்றாகக் குவித்தான் என்று பொருள்.
1.ஒரே நாளில் அல்ல.
2.நம் ஆயுள் முடிவதற்கு முன்னாடி ஒவ்வொரு நிமிடத்திலும் இணைந்து வாழும் உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
3.வாழ்க்கையில் வரும் கார உணர்வுகளை மாற்றித் “தனுசு கோடி..!” என்ற நிலையில்
4.”முடிவான உணர்வு கொண்டு… அந்த அருள் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்…!”
5.அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும். அந்த ஒளியான உணர்வின் தன்மையை நாம் அடைய வேண்டும்.

எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் இங்கே இராமேஸ்வரம் வந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையின் நிலைகள் தெரியாதபடி எத்தனையோ வகையான நிலைகளில் பிரித்து விட்டார்கள்.

துளசி இராமாயணம் வால்மீகி இராமாயணம் கம்ப இராமாயணம் என்று இன்னும் எத்தனையோ வகையான இராமாயணங்களாக அவரவர்கள் உணர்வுக்குத் தக்க எழுதி அந்தந்த நாட்டிற்குப் பயன்படுத்தி அவர்கள் அரசுக்கு பயன்படுத்தி விட்டார்கள்.

மனித உடலுக்குப் பின் விண் செல்லும் மார்க்கத்தை மக்களுக்கு யாரும் உணர்த்தவில்லை.

இராமாயணத்தைப் படித்தவர்கள் வீட்டிலெல்லாம் பாருங்கள் சண்டை நிறைய இருக்கும். இதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குள் வெறுப்பும் வேதனையும்தான் அதிகமாகும்.

1.ஏனென்றால் சாந்தமும் ஞானமும் கொண்ட பின்
2.நான் எல்லாமும் சொன்னேன்…@ என்ற நிலையில் பிறருடைய உணர்வு அதிகரிக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் மாற்றிவிடும்.

நாம் பிறருடைய நிலைகளை நுகர்ந்து அறிகிறோம். இல்லை என்றால் அறிய முடியாது. ஆனால் அப்படி அறிந்தாலும் தீமைகள் என்று அறிந்த உடனே உடலுக்குள் தீமைகள் புகுந்து விடாதபடி முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

தங்கத்தில் திராவகத்தை ஊற்றினால் எப்படிச் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறதோ அது போல “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்ற வேண்டும்.

ஒரு நிமிடம் ஏங்கிய பின் லேசாகக் கண்களை மூடி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் பாய்ச்சிப் பழக வேண்டும்.

நாம் ரசம் வைக்கிறோம் என்றால் வெறும் தண்ணீராகத் தான் இருக்கிறது. அதில் காரம் புளிப்பு எல்லாம் சேர்க்கிறோம். எந்த உணர்வைச் சேர்க்கிறோமோ அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது.

அது போல நாம் நுகரும் எல்லா உணர்வுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து சேர்க்கப்படும் போது அருள் உணர்வின் உணர்ச்சிகள் கலந்த அலைகளாக நம் இரத்தங்களில் கலக்கிறது. ஆகவே
1.அந்தப் பேரருளைப் பெற வேண்டும்.
2.என் உடலிலுள்ள அனைத்தும் பேரொளியாக மாற வேண்டும் என்றால் நாம் அதுவாகின்றோம்.

இலக்கு இல்லாதோர் விளக்கு இல்லாதோர்…!

destiny of human body

இலக்கு இல்லாதோர் விளக்கு இல்லாதோர்…!

 

மனித வாழ்க்கையின் எல்லை எது…? என்று அறிய முயற்சிக்க முடியாதபடி மனம் போகும் (நம் எண்ணங்கள்) வழியில் எல்லாம் நாம் சென்று கொண்டிருந்தோம் என்றால் நாளை என்ன ஆகும்…?

ஒரு நெல் பயிரை விளைய வைக்க இவ்வளவு காலம் என்று உள்ளது. குறைத்தாலும் விளையாது… கூட்டினாலும் பலன் இல்லை…! அது போல்
1.மனிதனின் பிறப்பின் பலனைப் பற்றிச் சிந்திக்காமலும்
2.அந்தப் பலனை அடையக்கூடியதாக வாழ்க்கை வாழாமலும்
3.மனிதனாகப் பிறந்து எத்தனை வருடம் வாழ்ந்தாலும் எப்படி வாழ்ந்தாலும்
4.அது “இலக்கு இல்லாதோர்… விளக்கு இல்லாதோர்…!” போன்ற நிலை தான்.

ஆனால் புறத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒரு இலக்கை வைத்துத்தான் செயல்படுகின்றோம். அப்படி இல்லை…! என்று யாரும் சொல்ல முடியாது. அதுவே அகத்திற்குள் என்றால் அதில் எந்த இலக்கும் இருப்பதில்லை.

இருக்கும் வரை எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்… இறந்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியும்…? நாம் என்ன பார்க்கப் போகின்றோமோ…? என்று அதை மிகவும் சாதாரணமாக நினைக்கின்றோம்.
1.ஆக இந்த உடலில் வாழ்வதற்கு நமக்கு “இலக்கு…” தேவைப்படுகிறது.
2.ஆனால் உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலைக்கு இலக்கு தேவையில்லை.

மகாபாரதத்தில் துரோணர் வில் வித்தையைக் கற்றுக் கொடுக்கும்போது துரோணரின் மகனான அசுவத்தாமன் வந்து… “எனக்கு வித்தைகளைக் கற்றுக் கொடுக்காமல் அர்ச்சுனனுக்கு அதிகமான வித்தைகளைக் கற்றுக் கொடுக்கிறீர்கள்… அது ஏன்…? என்று துரோணரிடம் கேட்பான்.

அதற்காக அவர் ஒரு செயல் மூலமாக அவனுக்கு உணர்த்துவார். மரத்தில் ஒரு கிளி பொம்மையை வைத்து பாண்டவர்கள் கௌரவர்கள் எல்லோரையும் அழைத்து “அங்கே என்ன தெரிகிறது…?” என்று கேட்பார்.

ஒவ்வொருவரும் “மரம் தெரிகிறது…! கிளை ஆடுகிறது…! கிளி இருக்கிறது…! என்று என்னென்னமோ சொல்வார்கள்.
1.அர்ச்சுனன் ஒருவன் மட்டும் “எனக்குக் கண் தெரிகிறது…!” என்பான் (கிளியின் கண்).
2.அர்ச்சுனன் என்றால் கூர்மை… அந்த இலக்கு…!

அந்தக் கூர்மை சரியாக இருப்பதால் தான் “அவனுக்கு அதிகமாக வித்தையைக் கற்றுக் கொடுக்கிறேன்…!” என்று துரோணர் அசுவத்தாமனுக்கு விளக்குவார்.

ஆகவே நம்முடைய கூர்மை உடல் பெறக் கூடியதில் சிந்தனை இருக்குமானால் அந்த வித்தைகளைத் தான் நாம் கற்றுக் கொண்டெ இருப்போம். மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்குள் பிறந்து பல பல உடல்கள் எடுத்து ஒவ்வொரு சரீரத்திலும் பல வேதனைகளைப் பட்டுக் கொண்டே இருக்க முடியும்.

மாறாக நம்முடைய கூர்மை நம்மைப் போல் மனிதர்களாக வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையில் உணர்ந்து ஒளியாக விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் பால் இருக்குமானால்
1.அவர்கள் அடைந்த பிறவியில்லா நிலை என்ற
2.என்றுமே அழியாத ஒளி உடல் பெறலாம்.
3.நம்முடைய எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலமாகத் தான் இருக்க வேண்டும்…!

நற்குணங்களின் உணர்வைச் சுவாசமாக்கி… நல்ல மணமாக… நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம்…!

eswara aradhana

நற்குணங்களின் உணர்வைச் சுவாசமாக்கி… நல்ல மணமாக… நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம்…!

 

ஒருவர் தீமை செய்கிறார்… எல்லோரிடம் கடுமையாகவும் இருக்கிறார்… அதனால் மற்றவர்கள் வேதனைப் படுகிறார்கள் என்ற உணர்ச்சிகளை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது…?

நமக்கும் அந்த எரிச்சலைத் தான் ஊட்டுகிறது. அப்பொழுது எரிச்சலான உணர்வு தான் நம்மை ஆட்சி புரிகிறது. நம்மை ஆளும் ஆண்டவன் அதைத்தான் ஆட்சி புரிகிறது. இயக்குகிறது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

நீங்கள் சாந்தமாகவோ ஞானமாகவோ சொன்னால் அது அடங்குமோ…? என்றால் இல்லை…! ஏனென்றால் அது கடும் விஷம். விஷத்தில் கொண்டு போய் நல்ல பாலையும் நல்ல மணம் கொண்ட சுவை கொண்ட பொருள்களைப் போட்டால் மயக்கம் தான் வருமே தவிர சிந்திக்கும் தன்மை வராது.

நம் உடலிலுள்ள தீமைகளைக் கழிக்கக்கூடிய உணர்வு ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” வாழ்க்கையில் தீமை வருகிறது என்று தெரிகிறது. அப்பொழுது அதை மாற்றியமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

தீமை என்ற உணர்வுகள் நமக்குள் பதிந்தாலும் “ஈஸ்வரா”என்று நம் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

விநாயகர் கையில் என்ன இருக்கிறது…? அங்குசம் இருக்கிறது. பெரிய யானையாக இருந்தாலும் ஒரு சிறு அங்குசத்தால் அதை அடக்க முடிகிறது. அதைப் போல நாம் அந்தத் தீமைகளை அடக்கிப் பழக வேண்டும்.

எப்படி…?

நம்முடைய நினைவைக் கண்ணுக்குக் கொண்டு வந்து கண்ணின் நினைவை ஈஸ்வரா…!” என்று உயிருடன் ஒன்ற வேண்டும். ஏனென்றால் கண் வழி கவர்ந்த உணர்வுகள் உயிருக்குள் பட்டபின் தான் அந்த உணர்வை உயிர் இயக்கச் சக்தியாக மாற்றுகிறது… உணர்ச்சிகளாக ஊட்டுகிறது.
1,ஆக நாம் சுவாசிக்கக்கூடியதை எல்லாம்
2.நம் உயிர் அகக்கண்ணாக இருந்து
3.உள் உணர்வாக உணர்த்துகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி
1.நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் போது
2.காற்றிலே பரவி வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர முடிகிறது.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம் இரத்தத்தில் கலக்கச் செய்யும் பொழுது இரத்தங்களிலே கலந்த தீமையின் வீரியத் தன்மையைக் குறைக்கச் செய்கிறது. ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்துப் பழக வேண்டும்.
.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் பரப்பப்படும் போது அந்த உணர்வுகள் இரத்தங்களில் கலந்து “ஆராதனையாகின்றது…!”

அப்படியென்றால் நாம் வெளிச்சத்தைக் காட்டுகிறோம் என்று அர்த்தம். அந்த உணர்வின் இயக்க ஒளியை உள்ளுக்குள் காட்டும் போது நமக்குள் வந்த இருள் சூழும் உணர்வின் தன்மைகளை அது அடக்குகிறது.

அதன் பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும்.
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்.
4.அருள் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தோமானால்
5.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு அது ஆராதனையாகின்றது.

கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள் இல்லையா…! மலரையும் பன்னீரையும் விட்டு அபிஷேகம் செய்கிறார்கள். கனிகளையும் மற்ற பதார்த்ததையும் இணைத்துப் பஞ்சாமிர்தமாகவும் சிலைக்கு ஊற்றுவார்கள்.

ஏனென்றால் சாமி சிலைக்கு ஊற்றுவது முக்கியமல்ல…!

அருள் உணர்வுகளை நுகர்ந்து அந்த எண்ணங்களாக நம் உயிருக்குள் படரச் செய்யும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக “மகிழ்ச்சி…!” என்ற உணர்வுகள் வரும்.

அதைத் தான் தான் நற்குணங்களின் உணர்வுகளைச் சுவாசமாக்கி நல்ல மணமாக நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம் என்று சொல்வது…!

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மையை எடுத்து நமக்குள் செலுத்தும் போது “விஷ்ணு தனுசு…!”
1.நம் உடலிலே சேர்த்த உணர்ச்சிகளை இயக்க விடாது – அதாவது சிவ தனுசை இயக்காது…
2.உயிரை எண்ணி அருள் உணர்வை நமக்குள் செலுத்தினால்
3.இது விஷ்ணு தனுசாக மாறி தீமையின் உணர்வின் நிலைகளை அடக்குகிறது.
4.ஒளியின் உணர்வாக நம்மை மாற்றுகிறது.

இதை எல்லாம் சாதாரண மக்களுக்கும் தெரிய வைப்பதற்காகக் காவியங்கள் மூலம் ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்

ஓ…ம் என்ற நாதமாக எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குகிறோம்…!

Omm

ஓ…ம் என்ற நாதமாக எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குகிறோம்…!

 

நாம் எந்த உணர்வை எண்ணுகிறோமோ அது “ஓ…” என்று நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகிறது.

அவ்வாறு இயக்கப்படும் போது எந்தக் குணத்தை நாம் இயக்கி நம் உடலில் சேர்க்கின்றோமோ நம் உயிர் அதைத்தான் ஆளுகிறது.
1.அதை வைத்துத் தான் நம்மை செயல்படுத்தச் செய்கிறது.
2.அதை வைத்து தான் நாம் சொல்லைச் சொல்கிறோம்.
3.அதன் வழி தான் நாம் செயலைச் செய்கிறோம்.

சங்கடமாகவும் சலிப்பாகவும் இருக்கும் போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்கி நம்மை ஆள்கிறது.
1.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது சரியான கணக்குப் பார்க்க முடியுமோ…?
2.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது ஒருவர் யோசனை கேட்டால் உங்களால் சொல்ல முடியுமோ…? முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் நம்மை ஆட்சி புரிகிறார். யார்…? நமது உயிர் தான்…! அந்த வழியில் நம்மை இயக்குவதும் நம்மை ஆள்வதும் அவனாகத்தான் இருக்கிறான்.

இருந்தாலும் அதே உணர்வை நம் உடலில் சேர்க்கும் போது அது ஈசனாக இருந்து நாம் எதை நுகர்ந்தோமோ அதை நம் உடலில் சேர்க்கின்றது. நம் உடலுக்குள் புகுந்து விட்டால் அது நம் இரத்தங்களில் கலந்து அது நம் உடலாக ஆகிவிடுகிறது.

நீங்கள் நல்லதோ கெட்டதோ எந்த குணங்களை நுகர்ந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலுள்ள இரத்தங்களில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

அதில் பலவிதமான வண்ணங்கள் இருக்கும். பலவிதமான உணர்வுகளை உணர்ச்சிகளை ஊட்டிக்கொண்டே இருக்கும். எதன் உணர்வு வலுவாக இருக்கிறதோ அந்த உணர்வு இயக்கமாகி உணர்ச்சிகளை வெளிப்படச் செய்து அது சொல்லாகவும் செயலாகவும் மாறும்.

கோபம் வரும்போதெல்லாம் பார்க்கலாம். ஒருவர் தவறான செயலைச் செய்யும் போது உங்கள் இரத்தங்களில் எப்படி அந்த உணர்ச்சிகள் மாறுகின்றன…? என்று தெரியும்.

இதே மூச்சலைகளை மற்றவர்களும் நம்மைப் பார்த்து நுகரும் போது இந்த உணர்வுகள் அவர்களுக்குள்ளும் இயக்கப்பட்டு அவர்களும் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலைகள் வரும்.
1.அவர்கள் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன…? என்ற வகையில்
2.அடுத்து கலந்து பதில் சொல்லும் நிலையாக வரும்.

உதாரணமாக நம்முடைய நண்பன் அவனுடைய இன்னொரு நண்பருடன் இருக்கிறான். நம்முடைய நண்பனுக்காக அவன் எதையும் செய்யக்கூடியவன்.

இருந்தாலும் நம் நண்பருடன் சேர்ந்தவன் சரியில்லை… தவறு செய்கிறான் என்ற நிலையில் அவன் தப்பு செய்வதை நாம் திருத்தச் சொல்லிச் சொன்னோம் என்றால் நம் நண்பன் இந்தத் தப்பை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

1.ஏனென்றால் நம்முடைய நண்பனின் உணர்வுக்கு முன்னாடி அவனின் நண்பன் உணர்வு இருப்பதால்
2.அதை எண்ணி முன்னாடி வலு சேர்த்துக் கொள்ளும் போது
3.நம் உணர்வுகளை நுகர்ந்த உடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி
4.நம்மைத் தான் குற்றவாளியாகத்தான் சொல்வான்.
5.ஆக நுகர்ந்த உணர்வுகள் பற்று எதனின் உணர்வு கொண்டு வருகிறதோ
6.அதன் உணர்வு வலு சேர்க்கப்படும் போது நல்ல உணர்வுகள் செயல் குறைந்து போகும்.
7.இரத்தங்களில் கலந்த நிலைகள் கொண்டு இத்தகைய நிலை வருகிறது.

நம்முடைய உணர்வை ஏற்கவில்லை என்னும் போது நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுவிற்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து
1.அந்த நல்லது ஒடுங்குகிறது.
2.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தியை அது இழக்கிறது.
3.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் போது அது ஒடுங்குகிறது… ஏற்றுக் கொள்வதில்லை… பார்க்கலாம்…!

ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் நம்முடைய உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகும் போது கூடக் கொஞ்ச நேரம் நிலை நிறுத்தி விட்டோமென்றால் இதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படி மூச்சு விடுகிறோமோ அதேபோல அந்த இயக்கத் தொடருக்குப் பிரணவம் – ஜீவன் வேண்டுமென்றால் நம் உடலின் உஷ்ணத்தினால் வாயு உண்டாகிறது. அழுத்தமும் ஏற்படுகிறது.

நாம் சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனை வருகிறது…? எந்தெந்தப் பொருள்களை அதற்குள் அதிகமாகப் போட்டிருக்கின்றோமோ அந்த வாசனை தான் அதிலிருந்து வெளியிலே வரும். அதிலிருந்து உருப்பெரும்.

அதைப் போன்று நல்ல அணுக்களுக்கு உண்டான ஆகாரம் இல்லை என்கிற நிலையில் மற்ற உணர்வுகளின் அழுத்தத்தினால் உடலிலே ஒருவிதமான மாற்று உணர்ச்சிகள் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இதையெல்லாம் எது இயக்குகிறது…? நமது உயிர் தான். அது எலெக்ட்ரிக் ஆக இருக்கிறது. நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக் ஆக எதிர் நிலையான நிலையில் இயங்குகிறது.

இதைப் போன்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் நம் இரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பலவிதமான அணுக்களின் மாற்றம் ஆவதும் நடக்கிறது, நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மற்றவர்களுடன் பழகும் போது எதன் உணர்வைக் கவர நேருகின்றதோ அதனால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்…! இவை எல்லாம்.

நல்லவர்களுடன் நாம் அமைதியான நிலையில் கேட்டு வந்து பேசிக் கொண்டு பழகி வந்திருந்தாலும் அடுத்தாற்போல் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வெறுப்பாகித் தாக்கிப் பேசும் போது என்ன நடக்கிறது…?

அதை நுகர்ந்தவுடன் நமக்கு மிகவும் இக்கட்டான நிலை\யாகி ஆகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதும் போது சலனங்களும் சஞ்சலங்களும் ஆகி நம்முடைய நல்ல அணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது உடல் சோர்வடைகிறது. உணர்ச்சியும் மாறுகிறது.

எந்த உணர்வின் தன்மையை அதிகமாக்குகிறோமோ கண் வழி அதை நுகர்ந்து உயிரிலே பட்டு மீண்டும் அந்த உணர்ச்சிகள் அதிகமாக நம் இரத்த நாளங்களிலே சேர்க்கிறது.
1.இந்த இரண்டு பேருக்குள் சண்டை போட்டுவிடப் போகிறார்களோ…! என்று
2.வேடிக்கை பார்க்கும் நமக்குள் இந்தப் பதட்டம் வருகிறது. (ஆனால் நாம் சண்டை போடவில்லை)

அடுத்து அந்தச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் சொல்வதற்கு நமக்குத் துணிவு வந்தாலும் சிந்தையான பதில் சொல்லத் தெரியாது.
1.பின்பு நம்மை அறியாமலேயே பகைமை உணர்ச்சிகள் உடலுக்குள் சேரும்.
2.அப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் தான் முதலில் கலக்கிறது.

உயிர் அதை நம் உடல் முழுவதும் பரவச் செய்கிறது என்றும் அதன் வழியே தான் நம்மை வாழச் செய்து ஆளுகின்றது என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஆண்டவன் யார்…? நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும். நம் உடல் முழுவதற்கும் அந்த உணர்வைப் பரவப் செய்யும் போது நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியையும் சாந்தமும் சாந்தமான நிலைகளையும் தருகிறோம்.

நல்ல உணர்வின் உணர்ச்சிகளை நமக்குள் பரப்பச் செய்யும் பொழுது தீமையின் உணர்வுகளை அடக்கி நம்மை அமைதிப் படுத்தச் செய்கிறது

ஆனால் சாதாரண மனிதனின் உணர்வை வைத்து அதை நாம் அமைதி படுத்த முடியாது. அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் நினைவு கொண்டு “ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற (தீமையான) வித்திற்குள் இது கலந்து கொஞ்சம் கொஞ்சமாக இதன் வலு கூடும் போது அதை அடக்கக் கூடிய சக்தி பெற்று விடும்.

அப்பொழுது தீமையை அடக்கி நம் மனதை அமைதிப்படுத்தும் வல்லமையை நாம் பெறுகின்றோம்.

ஞானகுருவின் (சாமிகள்) உபதேச ஒலிக்குள் மறைந்துள்ள “பொக்கிஷங்கள்…!”

eswaraya gnanaguru

ஞானகுருவின் (சாமிகள்) உபதேச ஒலிக்குள் மறைந்துள்ள “பொக்கிஷங்கள்…!”

 

சாமிகள் (ஞானகுரு) உபதேசம் செய்யும் பொழுது அவருடைய பேச்சைக் கூர்ந்து கவனித்தாலே மகரிஷிகளுடன் தொடர்பு கொள்வது மிகவும் எளிதாகும்.
1.சாமி பேசும் பொழுது சில நேரம் மிக மிக மெதுவாகப் பேசுவார். ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்திப் பேசுவார்.
2.சில நேரங்களில் மிக மிக வேகமாகப் பேசுவார்.
3.உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவார். உணர்ச்சிகளைத் தூண்டும்படியும் பேசுவார்.
4.அதில் தான் இத்தனை இரகசியங்களும் உள்ளது.

நாம் கண்ணில் பார்த்து அல்லது காதில் கேட்டு அதன் பின் தான் பேசுகிறோம். அவர் இதையெல்லாம் செய்தாலும் விண்ணிலிருந்து இழுத்துப் பேசுவார்.

நம் நினைவுகள் மனிதர்கள் பால் அதிகம் செல்லும். அந்த உணர்வுடன் தான் பேசுவோம். அவர் விண்ணில் உள்ள அந்த மகரிஷிகளின் நினைவுடன் பேசுவார். அவர் பேச்சு அடுக்குத் தொடர் போல் வரிசையாக மாறி மாறி வரும்.

மனித உணர்வின் ஆசைகளை அதிகமாக முன்னிலையில் வைத்திருந்தால் மகரிஷிகளின் உணர்வுடன் அதிகமாக நம்மால் நெருங்க முடியாது. அதற்குள் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் மணம் நம்மிடம் அதிகமாக இருக்க வேண்டும்.

அந்த மணம் நம் ஆன்மாவில் அதிகம் வரவேண்டும் என்றால் ஞானகுருவின் உபதேச உணர்வினை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கி அதை நமக்குள் செருகேற்ற வேண்டும்.

ஏற்கனவே நம் உடலில் விளைய வைத்திருக்கும் பழைய வாசனைகள் அகன்று சாமிகள் உபதேசிக்கும் அருள் மணம் அதிகமானால் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் உள்ளே எளிதாகப் போக முடியும்.
1.சாமியை நினைத்து அல்ல…
2.அவர் விளைய வைத்த ஞானிகளின் மணத்தை முன்னணியில் கொண்டு வந்தால்
3.மகரிஷிகளின் வட்டத்திற்குள் நம் எண்ணங்கள் ஊடுருவும்.
4.அவர்களின் துணை கொண்டு ஒவ்வொரு நாளும் தெளிவான பாதையில் நாம் செல்ல முடியும்.

ஞானத்தின் வளர்ச்சியை அபரிதமாகக் காண முடியும். பேரருள் பேரொளியாக நாமும் மாற முடியும்.

தினசரி நாம் மற்ற எல்லோருடனும் பேசிக் கொண்டே தான் இருக்கின்றோம். யாருடனும் நாம் பேசாமல் இருக்க முடியாது. ஆனால்
1.மனிதர்களுடன் பேசுவதற்குப் பதில் மகரிஷிகளுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்
2.ஞானகுருவின் உபதேசங்களை தினசரி கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

அதே சமயத்தில் தினசரி கேட்ட உபதேசங்களைப் பற்றிச் சிறிய குறிப்பாக எழுத்து வடிவுக்குக் கொண்டு வந்தால் உடனடியாக ஈஸ்வரபட்டருடன் நேரடித் தொடர்பு கிடைக்கும்.

செய்து பாருங்கள். என்னுடைய அனுபவம் இது தான்…!

https://wp.me/p3UBkg-1Bx