எல்லாவற்றையும் இயக்குபவனை “ஈசன்” என்று ஏன் சொல்கிறோம்…?

Lord eswara gurudeva

எல்லாவற்றையும் இயக்குபவனை “ஈசன்” என்று ஏன் சொல்கிறோம்…?

உதாரணமாக ஒரு மரம் தான் முழுமை அடைந்த பின் தன் இனத்தின் தன்மையை வித்தாக உருவாக்கி தன் இனத்தைப் பெருக்குகின்றது. இதைப் போன்று தான் மனிதனுக்குள் எண்ணங்கள் வளர்ச்சி பெற்ற பின் அவன் கவர்ந்து கொண்ட உணர்வை உயிர் முழுமையாக்கும் திறன் பெற்றது – மனிதனின் உடலுக்குள் நின்றே…!

விவசாயத்தில் பல பல தாவர இனங்களை இணைத்து அதைப் புது விதமான செடிகளாக மாற்றுகின்றோம். அதைப் போன்று விலங்கினங்களில் உள்ள அணு செல்களைப் பிரித்து மற்ற விலங்கினங்களின் செல்களுடன் இணைத்து புதுப் புது விதமாக விலங்கினங்களாகவும் உருமாற்றம் செய்து வருகின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் மெய் ஞானி உணர்ந்த உணர்வின்படி “அவன் எதைக் கண்டான்…?” என்கிறபோது தனது உயிரின் தன்மையை இயக்கத்தை ஈசன் என்று காரணப் பெயரை வைத்து மற்றவர்களுக்கும் இதைப் புரியச் செய்கின்றான்.

விஞ்ஞான அறிவுப்படி ஒரு காந்தப் புலனால் கவரப்பட்டு தான் எடுக்கும் உணர்வின் தன்மையை அதே காந்தப் புலனால் அதைப் பதிவாக்கப்பட்டு மீண்டும் காந்தப் புலனறிவால் வெளிப்படுத்துகின்றான்… விரிவுபடுத்துகின்றான்…! ஒலி/ஒளிப் பேழைகளைத்தான் (CD, HARD DISK, MEMORY DRIVES) அவனால் இயக்க முடியும்.

ஆனால் மெய் ஞான அறிவுப்படி நமது உயிர்
1.காந்தப் புலனை ஈர்க்கக்கூடிய நிலையும்
2.காந்தப் புலனை உருவாக்கும் நிலையும்
3.காந்தப் புலனைத் தனக்குள் பெருக்கும் நிலையும் பெற்றது என்று அறிந்தவர்கள் மெய் ஞானிகள். இவ்வாறு உருவாக்கும் சக்தி பெற்றதை ஈசன் என்று உயிருக்குக் காரணப் பெயர் வைக்கின்றார்கள் மெய் ஞானிகள்.

ஒரு காரிலே ஸ்டேரிங் (STEERING) இருந்தால் தான் திருப்ப முடியும். ஒட்டு மொத்தக் காரையும் இயக்க வேண்டும் என்றால் அதற்குள் இஞ்சின் (ENGINE) வேண்டும்.

அதைப் போல் தான் நமது உயிர் இஞ்சினைப் போல நம் உடலை இயக்கிக் கொண்டு உள்ளது. உயிர் நமக்குள் இயங்கிக் கொண்டே உள்ளது. பரிணாம வளர்ச்சியில் நாம் வளரும் பருவத்தையும் நமக்குள் வளர்க்கும் நிலையையும் அறிந்து கொள்வதற்காகத்தான் ஈசன் என்று பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு இயந்திரம் இயங்கிக் கொண்டு இருந்தால் தான் அதனுடைய உறுப்புகள் அனைத்தும் அதனதன் செயலாக்கங்களாக இயக்கப்பட்டு முழுமையாக விஞ்ஞான அறிவு கொண்டு வேலை செய்யும் நிலைக்கு அது வரும்.

இயற்கையின் தன்மைகள் எது எதனுடன் இணைக்கின்றதோ அந்த உணர்வின் செயலாக எவ்வாறு இயக்குகின்றதென்ற நிலையை மெய் ஞானி அவன் தன்னுள் கண்டுணர்ந்து அதற்குத் தக்கவாறு காரணப் பெயரை வைக்கின்றான்.

உயிரான ஈசனுக்குள் துடிக்கும் நிலை வரப்படும் போது தான் அதிலே வெப்பம் ஏற்படுகின்றது. உதாரணமாக நெருப்பில் பாத்திரத்தை வைத்து அதிலே நீரை ஊற்றி எந்தெந்தப் பொருள்களை அதிலே நாம் போடுகின்றமோ அதை எல்லாம் இரண்டறக் கலக்கச் செய்கின்றது.

ஆனால் வெப்பத்தைக் கொடுக்காதபடி பொருள்களைப் போட்டாலும் இதனுடைய கலக்கும் முறைகள் எதுவாக இருந்தாலும் இதனுடைய இயற்கையின் தன்மையிலேயே தான் அது இருக்கும். இணைந்த நிலைகள் மாற்றம் ஆவதை நம்மால் உணர முடியாது. ஆகவே தான்
1.உயிரின் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பத்தால்
2.ஈர்க்கும் சக்தி வரும் போது
3.இயற்கையின் தன்மை எவ்வாறு கலக்கிறதென்ற நிலையை மெய் ஞானிகள் தெளிவாகக் கண்டுணர்ந்துள்ளார்கள்.

ஒலி/ஒளிப் பேழையில் (CD, HARD DISK, MEMORY DRIVES) உள்ள காந்தப் புலன் தனக்குள் ஈர்ப்பதைப் பதிவாக்குகின்றதோ இதைப் போன்று தான் நமது காந்தத் தன்மை (MAEGNETIC) கொண்ட எலும்புகளில் உள்ள நிலைகளும் காந்தத் துடிப்பால் இயக்கப்படும் போது காந்தப் புலனை அது இயக்குவதும் அதன் தொடர் வரிசையிலே அது இயக்கவும் செய்கின்றது,

நம் உயிரின் இயக்கத்தால் எதனின் உணர்வின் தன்மையை நாம் பார்க்கின்றோமோ அதைக் கண்ணிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் கவர்கின்றது. கண்ணிற்குள் இருக்கக்கூடிய கரு விழி அதைப் படம் எடுக்கின்றது.
1.கவர்ந்ததை எலும்பிற்குள் இருக்கும் ஓடுக்குள் இதைப் பதிவு (RECORD) பதிவு செய்து கொள்கின்றது.
2.பதிவு செய்து கொண்டால் தான் எந்த மனிதன் எதைப் பேசுகின்றானோ அந்த உணர்வின் நிலையை ஆன்மாவாக (எப்படி ஒலி/ஒளிப்பேழைகளில் பதிவு செய்து கொள்கின்றமோ) மாற்ற முடியும்.
3.ஆன்மாவாக மாற்றியதைத்தான் நாம் இழுத்துச் சுவாசிக்க முடியும்.
4.உயிரான காந்தப்புலன் சுவாசத்தின் மூலம் அதைக் கவருகின்றது.
5.அது தான் சுவாச நிலை என்பது.
6.சுவாசித்த உணர்வின் அலைகளை உயிர் இயக்கி உடல் முழுவதும் அந்த உணர்வலைகளைப் பரப்புகின்றது.
7.அதிலே உருவாகும் உணர்வின் சத்தை உடலாக்குகின்றது.
8.மற்ற கழிவைக் காற்றாக வெளிப்படுத்துகின்றது.

ஒரு ஃபேன் (FAN) சுழலுமே என்றால் அந்தச் சுழற்சியின் தன்மை வெளியிலிருந்து இழுத்து மறு புறம் அது காற்றாக அனுப்புகின்றது. அதைப் போல நாம் ஆன்மாவிலிருந்து எடுக்கும் இந்த உணர்வின் தன்மையை உயிர் சுழலச் செய்து இந்த உணர்வின் தன்மை வடிகட்டி வெளிப்படுத்தும் நிலைகளை காற்றலைகளை அதைத் தான் மூச்சலைகள் என்பது. இது மெய் ஞானிகள் கண்டுணர்ந்தது.

விஞ்ஞானிகள் உறுப்புகளின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தாலும் மூலத்தை அவர்களால் கண்டுணர முடியவில்லை. ஆனால் “மூலத்தையே…” அறிந்துணர்ந்தவர்கள் மகரிஷிகள்.

எதைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோமோ அதன் உணர்வைக் கண்கள் படமெடுத்து எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து அந்த உணர்வின் அலைகளை நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

இதைச் சுவாசிக்கும் போது உயிர் இந்த உணர்வின் சத்தை “ஓ…!” என்று பிரணவமாக்குகின்றது. இவ்வாறு இயக்கமாக இருப்பதற்கு “மூலம்…!” நம் உயிர் தான். அதனால் உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்றும் அதற்குள் ஏற்படும் வெப்பத்திற்குப் பெயர் விஷ்ணு என்றும் அதனுடன் இணைந்த காந்தப் புலனுக்குப் பெயர் லெட்சுமி என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.

லெட்சுமி நமக்குச் செல்வத்தைக் கொடுப்பாள். செருக்கை கொடுப்பாள் என்று தான் நாம் வணங்குகின்றோம். ஆனால் எந்தச் செல்வம்…?
1.குணச் செல்வம் இருந்தால்தான் பொருள் செல்வத்தைத் தேட முடியும்.
2.குணச் செல்வம் இருந்தால் தான் உடலினுடைய ஆரோக்கிய செல்வத்தை நாம் தேட முடியும் என்ற நிலைகள்
3.ஒவ்வொன்றையும் விரிவாக்கமாக மெய் ஞானிகள் அன்று தெளிவான முறையில் எடுத்துரைத்துள்ளார்கள்.

சந்தர்ப்பவசத்தால் ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் நாம் வைத்துக் கொண்டால் அவனை உற்றுப் பார்ப்போம் என்றால் அவனைக் கண்கள் படமெடுத்து நமக்குள் பதிவாக்குகின்றது.

அவனின்று வெளிப்படும் வேதனையான உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக பரப்பும் போது அதைக் கண்ணிற்குள் இருக்கும் காந்தப்புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து உயிருடன் இயக்கப்படும்போது தான் அவனுடைய வேதனையை நாம் அறிய முடிகின்றது.

இருந்தாலும் அவன் வேதனையால் உடல் எப்படி நலிந்திருந்ததோ அதனில் உருவான உணர்வை நாம் நுகர்ந்து அறியப்படும் போது நமக்குள் அவனின் உடலைப்போல நமக்குள் நலியச் செய்யும் உணர்வின் ஜீவ அணுக்களாக விளைகின்றது. அதன் பின் நம் உடலும் நலியத் தொடங்குகின்றது. எந்த உணர்வின் மணங்களை நாம் சுவாசிக்கின்றோமோ அதுவே நம் உடலாகின்றது.

நல்ல மகிழ்ச்சியான உணர்வாகச் சுவாசித்தால் அதனால் விளையும் அணுக்கள் தன் மலத்தால் உடலை உருவாக்கப்படும் பொழுது ஆரோக்கிய நிலைகளை நமக்குள் உருவாகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே
1.பிறர்படும் துயர உணர்வை நாம் பார்க்கும் பொழுது கண்களில் உள்ள காந்தப்புலன் அதைக் கவர்கின்றது.
2.கவர்ந்த உணர்வை உயிர் இயக்குகின்றது… உணர்கின்றோம்…!
3.இயக்கத்தின் நிலை கொண்டு ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
4.அந்த உணர்வின் சத்துக்கள் அணுவாக விளைந்து அதனின் மலமாக உடலாக உருவாகின்றது.

அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று நம் உயிரைச் சொல்கிறோம். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாகின்றது.

நம்மை இயக்குவதற்கு மூலமாக இருக்கும் உயிரை உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியை ஈஸ்வரா…! என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள் மகா ஞானிகள்.

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டியது

sleeping meditation

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டியது 

 

காலையிலிருந்து இரவு வரையிலும் கேட்டறிந்த பார்த்தறிந்த தீமைகளை அந்த அசுர குணங்களின் செயல்களை அகற்றும் நிலைக்காக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் ஆத்ம சுத்தி என்ற இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். இரவில் தூங்கச் செல்லும் போது இதை அவசியம் செய்து பழக வேண்டும்.

தினசரி நம் உடலிலே இருக்கும் அழுக்கைப் போக்க நல்ல நீரைக் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிக்கின்றோம். அது போல இரவிலே நாம் தூங்கச் செல்லும் போது சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஒரு நூறு முறை நம் உயிரை வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அன்றாடம் நாம் எத்தனையோ தீமையான செயல்களை டி.வி. பத்திரிக்கை கம்ப்யூட்டர் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் நாம் பார்க்க நேர்கின்றது.

1.அவை அனைத்தும் நம் கண்களால் கவரப்பட்டு உயிருடன் இணைக்கப்படும் பொழுது
2.நம் உயிர் அதை எல்லாம் இயக்கச் செய்யும் பொழுது
3.தவறு செய்கின்றான்… குற்றம் செய்கின்றான்… கொலை செய்கிறார்கள்… வேதனையால் துடிக்கின்றார்கள்…! என்று உணர்கின்றோம்.

இவ்வாறு உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிந்து கொண்டாலும்
1.இயக்கிய உணர்வின் சக்தி ஜீவன் பெற்று
2.நமக்குள்ளும் அதே தீமைகளை விளைவித்து விடுகின்றது.

கொலைகாரனயோ தவறு செய்பவனையோ வேதனைப்படுபவனையோ பார்த்து நுகர்ந்தறிந்த உணர்வுகள்
1.நம் உயிரின் நிலைகளைத் திரை மறைவாக மறைத்துக் கொண்டு
2.நம் சிந்திக்கும் உணர்வினைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் எண்ணங்களைச் செலுத்த வேண்டும். உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று நூறு முறை நம் உடலுக்குள் செலுத்துவது நல்லது.

சப்தரிஷி மண்டலங்களாக இருப்பினும் துருவ நட்சத்திரமாக இருப்பினும் அவர்கள் அனைவரும் தங்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு ஒளியாக மாற்றிச் சப்தரிஷிகளாக ஆனவர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை கண்ணின் நினைவாற்றலைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.

ஆக நம் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவினை உள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீமையின் உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றச் செய்வது தான் “சூரசம்ஹாரம்…!” என்பது.

ஒரு விளக்கை மறைத்துக் கொண்டிருக்கும் இருளைப் பிளந்து விட்டால் விளக்கின் வெளிச்சம் அருகிலே இருக்கக்கூடிய அனைத்துப் பொருளையும் தெரிவிக்கின்றது.

அது போலத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக்கி மீண்டும் சுவாசிக்கும் பொழுது இருள் சூழச் செய்யும் அந்த இருள் சக்தியை அது அகற்றச் செய்யும்.

தீமையான செயல்ளைச் செயல்படுத்தும் அந்த கொடூர சக்தி கண்ணின் நினைவு கொண்டு அகற்றப்படுகின்றது. ஆகவே தான்
1.இரவிலே தூங்கச் செல்லும் போது நூறு முறையாவது சப்த ரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள தீமையான உணர்வுகள் மடிய வேண்டும்
3.சப்தரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் நீங்க வேண்டும்
5.எங்கள் விவசாய நிலங்களில் அறியாது சேர்ந்த தீய அணுக்களின் நிலைகள் மறைய வேண்டும்
6.சப்தரிஷிகளின் அருள் சக்தி விவசாய நிலங்களில் படர்ந்து நல்ல அணுக்கள் உரு பெற வேண்டும்
7.அதனின் மலத்தின் தன்மை கொண்டு தாவர இனங்கள் செழித்து வளர்தல் வேண்டும்
8.சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தொழில் வளாகம் அனைத்திலும் படர வேண்டும்
9..எங்கள் வளாகத்தில் தொழில் செய்யும் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும்
10.அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று
11.இந்த ஏக்க உணர்வினை நாம் நம் நினைவால் பரவச் செய்து நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

நம் ஆன்மாவைத் தூய்மை செய்வது போல் வீட்டைத் தூய்மைப்படுத்துவதும் நம் தொழில்களிலுள்ள தீமையான உணர்வுகளை நீக்குவதும் விவசாய நிலங்களில் நல்ல உணர்வுகளைப் பரவச் செய்வதும் வேண்டும்.

தினசரி இரவு இவ்வாறு எண்ணி ஆத்ம சுத்தி செய்து இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டு வந்தாலே போதுமானது. நம் வாழ்க்கைப் பாதை சீராகும். நம் பயணம் அழியா ஒளிச் சரீரம் பெறுவதாக அமையும்.