ஒருவர் நம்மைத் தாக்கினால் நாமும் அவரைப் பதிலுக்குத் தாக்கி விட்டால் அது “வீரம்…!” என்றும் விலகிச் சென்று விட்டால் “கோழைத்தனம்…!” என்றும் நினைக்கின்றோம் – ஞானிகள் சொல்வது என்ன…?

Image

Bravaveness of Sages

ஒருவர் நம்மைத் தாக்கினால் நாமும் அவரைப் பதிலுக்குத் தாக்கி விட்டால் அது “வீரம்…!” என்றும் விலகிச் சென்று விட்டால் “கோழைத்தனம்…!” என்றும் நினைக்கின்றோம் – ஞானிகள் சொல்வது என்ன…?

 

காந்திஜி உடலில் வளர்த்துக் கொண்ட பகைமை அகற்றும் உணர்வுகளை இன்றைக்கு அரசியல் நடத்தும் அனைவரும் எடுத்துக் கொள்ள.

நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் நல்ல குணங்களைச் சுதந்திரமாக அவரவர் உடலில் இயக்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை அனைவரும் வளர்த்துக் கொள்தல் வேண்டும். ஏனென்றால்
1.பகைமை கொண்டு ஒருவரை அழித்து விடலாம் என்று எண்ணினால்
2.அழிக்கவே முடியாது. அது வளருமே தவிர குறையாது.

கோட்சே அவரைக் கொல்லும் பொழுது அதைத் தான் காந்திஜி சொன்னார். அவன் என்னுடைய உடலைத்தான் வீழ்த்தினான்.
1.என் உணர்வை வீழ்த்த முடியாது.
2.அவனுக்கு அந்தத் திறன் இல்லை.

ஆனால் இந்த உடலை அவன் வீழ்த்தினாலும் அவன் மற்றவர்களைக் காக்கும்… உயர்ந்த நிலைகள் பெறும் அந்தத் தகுதி பெற வேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணினால் தான் நாம் செய்யும் தவறுகளில் இருந்து மீள முடியும் என்று தெளிவாக்கினார் காந்திஜி.

ஒவ்வொரு நிலைகளிலேயும் நமக்குள் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் கடவுள் என்ற நிலை வரப்படும் போது அறிந்து செயல்படும் எண்ணங்களாக அங்கே உருவாகும் என்றார்.

உடலில் ஏதாவது தாங்க முடியாதபடி திடீரென்று ஏற்பட்டால் நாம் ஐயோ… அம்மா…! என்று அலறுவோம்.
ஆனால் தான் சுடப்பட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்தாலும் அந்த உணர்வின் வேகம் அவருக்கு வரவில்லை. அஞ்சிடும் செயல்கள் வரவில்லை.

ஹரே ராம்…! ஹரே ராம்…! என்றார்.

அவனைப் போன்று மற்றவர்கள் யாரும் அவன் செய்யும் தவறான உணர்வை எடுத்து விட வேண்டாம். அவனைத் தண்டிக்க வேண்டாம். அந்த குணத்திலிருந்து அவனை மீட்டும் பக்குவத்தைக் கொண்டு வாருங்கள் என்று தான் சொன்னார்.

இதைதான் கடைசி மொழியாக அவர் சொன்னார்.

காந்திஜி குண்டடிபட்டார் என்ற செய்தி வரும் பொழுது நான் (ஞானகுரு) மதுரை மீனாட்சி மில்லில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன்.

என்னுடன் ஒரு முஸ்லீம் பாயும் வேலை பார்த்து கொண்டிருக்கின்றார்.

1.காந்திஜியைக் கொன்று விட்டார்கள்
2.நம்முடைய இனம் தான் அவரைச் சுட்டிருக்கின்றார்கள் என்று சொன்னவுடனே
3.எல்லாம் சேர்ந்து அந்த டிபார்ட்மென்ட்டில் (department) அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மில்லுக்குள்ளேயும் வந்து அடிப்பதற்கு ஆரம்பிக்கின்றார்கள். அப்பொழுது நான் என்ன செய்தேன்…?

காந்திஜியினுடைய கடைசி வாக்கு எதுவோ அதை நிறைவேற்றுவோம். அவரைக் கொன்று விட்டார்கள் என்பதற்காக இங்கே வெறித்தனமாகப் போவது சரியில்லை என்று சொன்னேன்.

அரவணைப்பாக ஒரு இருபது பேரைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு போய் அதற்கென நான்கு பேரை வைத்துத் தாக்காத நிலையில் பாதுகாத்தோம். ஏனென்றால்
1.தவறு செய்வது யாரோ…!
2.அந்த உணர்ச்சியின் வேகம் நாட்டையே கலக்குகின்றது.

நாட்டின் நன்மைக்காக நாம் பாடுபட வேண்டும் என்றார் காந்திஜி. அனைவரும் சகோதரர் என்ற நிலைகளில் ஒவ்வொருவரும் வர வேண்டும் என்றார்.

மற்றவர்கள் தவறு செய்யும் பொழுதெல்லாம் உண்ணாவிரதம் இருந்தார். தவறிலிருந்து விடுபட்டால்தான் உணவாக உட் கொள்வேன் எழுந்து வருவேன் என்று வைராக்கியமாகச் சொன்னார்.
1.தவறான நிலை வரப்படும் போது
2.நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்றார் காந்திஜி.

“அந்நியனே வெளியேறு…! என்று சொல்லி அந்நியன் என்று அவனைக் கருதவில்லை.
1.அந்நிய குணங்களாக (இங்கே) அடிமைப்படுத்தும் குணத்திலிருந்து “வெளியேறு…!” என்று தான் அவர் சொன்னார்.
2.”அந்நியமாக்கும் குணங்களில் இருந்து வெளியேறு…” என்ற
3.அந்த எண்ணத்தை தான் அங்கு உருவாக்கினார்.

நாம் ஒருவரைத் தாக்கிக் கொன்று விடுவதனால் யாரும் இறந்து விட வில்லை. உடல் தான் மடிகின்றது.
1.அவனுக்குள் விளைந்த பழி தீர்க்கும் உணர்வுகள் பரவுகின்றது.
2.அப்படிப் பரவும் உணர்வுகள் மற்றவர்கள் உடலில் சேர்த்தபின்
3.அவனும் தாக்கும் உணர்வு கொண்டு தான் செயல்படத் தொடங்குகின்றான்.
4.ஆகவே எங்கே மடிந்தது…?

இவன் செய்த நிலைகள் இங்கே மீண்டும் அவன் தாக்கப்படும் உணர்விற்கே வளர்க்கப்படுகின்றது. அப்போது நல்ல குணங்களைக் காக்கும் நிலை எங்கே இருக்கின்றது…?

1.ஒருவரைத் தாக்குவது என்றால் கோழை.
2.”பதிலுக்கு அவரைத் தாக்கிவிட்டு… மீள்வதும் கோழையே…”
3.இது வீரியம் அல்ல…! வீரமல்ல…!

தாக்குவோர் நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்று வலிமை கொள்வோர் எவரோ அவர்கள் தான் வீரியம் என்றார் மகாத்மா காந்திஜி.

பிறரைத் தாக்கும் உணர்வை விடுத்துவிட்டு மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து அனைவரையும் காக்கும் உணர்வை வளர்ப்பதே நம் ஞானிகள் நமக்கு உரைத்த மெய் உணர்வுகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி அதுவே..!

தீமை செய்யும் அணுக்கள் சுவாசத்தின் வழியாக நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…?

சுவாசநிலை - காற்று

தீமை செய்யும் அணுக்கள் சுவாசத்தின் வழியாக நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…? 

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி “ஒருவன் வேதனைப்படுகின்றான்…” என்ற உணர்வை அறிவித்தாலும் நம் உயிரில் மோதிய பின் அது அணுக் கருவாக உருவாகிவிடுகின்றது.

உதாரணமாகக் கோழி, குருவி முட்டை இடும் உயிரினங்கள் அனைத்துமே கேறும். பல்லி கூட கேறும்.

அப்படிக் கேறுவது போல “அவன் வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்…” என்று எண்ணங்களை அதிகமாகக் கூட்டி நாம் திரும்பத் திரும்ப எண்ணும் போது எந்த மனிதனை எண்ணினோமோ அந்த உணர்வின் கருவாக உடலுக்குள் உருபெறத் தொடங்கிவிடுகின்றது.

அவர் உடலிலே நோய் உண்டாக எது காரணமாக இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வரும். அது கருவான பின் நம் இரத்தங்களிலே சுழன்று வரும்.

1.பின் எந்தெந்தப் பாகங்களிலே தேங்கி நின்று விடுகின்றதோ
2.அந்தப் பாகத்திலே கருவாகி
3.முட்டையாகி வெடித்து அணுவாக வரும்.

கோழி அடைகாத்த பின் முட்டை பொரிந்து அந்தக் குஞ்சுகள் வெளி வருவது போல் வந்துவிடும். வெளி வந்த பின் அந்தக் குஞ்சுகள் எல்லாம் கத்தும். கத்தும் பொழுது தாய்க் கோழி கூப்பிட்டு மண்ணைக் கிளறி எடுத்து ஆகாரம் கொடுக்கும்.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் ஒரு அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால்
1.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
2.நம் சிறுமூளை பாகம் வந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.பின் நம் உயிர் அந்த உணர்ச்சியைப் புலனறிவு ஐந்திற்கும் கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு அனுப்பும்.
4.அதன் வழி கவரச் செய்யும் (சுவாசமாக)

எந்த மனித உடலில் இருந்து நோயின் உணர்வலைகள் வெளி வந்ததோ அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

நம் புலனறிவும் ஐந்தும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும். உடலுக்குள் போவதற்கு முன் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் என்ன நடக்கின்றது…?
1.அந்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ
2.அந்தச் சங்கடமும் சோர்வான உணர்ச்சிகளையும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்.
3.நாம் இனம் புரியாதபடி வேதனைப்படுவோம்.

அவ்வாறு நாம் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தொழிலின் நிமித்தமாக நம்மைத் தேடி வந்து “இன்ன குறை இருக்கிறது” என்று எடுத்துச் சொல்ல வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சொல்வதை நம் செவிப்புலன்கள் ஏற்றுக் கொள்ளாது. இந்த வேதனைக்குரிய நினைவைத் தான் ஊட்டும்.

அதே சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண்ணின் பார்வைக்கும் அது ஏற்றுக் கொள்ளாது. நம் கண்ணின் பார்வைக்கும் அந்த வெறுப்பின் நிலையே ஊட்டும்.

நாம் ஒரு கணக்கையோ அல்லது ஒரு பொருளையோ உருவாக்க வேண்டும் என்றால் கவனமாகப் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்போது அந்த வேதனையின் உணர்வுகள் பார்வைக்கு வரும் போது அந்த உணர்ச்சிகள் உடலை இயக்கிய பின்
1.அதை வேலை செய்ய விடாதபடி அந்த வேதனை உணர்வுகள் நம் அங்கங்களைக் குறைத்து விடும்.
2.கை கால்களைக் குறைத்து விடும் – இந்த உடலுக்கு.

அப்போது நம் உடல் என்ன செய்கின்றது?

வேதனையால் உருவான அணுக்கள் உடலுக்குள் இருக்கிறதல்லவா…! அதற்கு இந்த வேதனை உணர்வலைகளை சாப்பாடாகக் கொண்டு கொடுக்கும்.
1.வேதனையான அணுக்கள் சந்தோஷப்படும்.
2.ஆனால் நம் உடலில் உள்ள நல்ல குணங்களால் உருவான அணுக்கள் வேதனைப்படும்.

கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பருந்து வந்தால் உடனே கோழி என்ன செய்கின்றது…?

உடனே “கர்ர்ர்…ர்ர்…” என்று இரைச்சலை விடும். எல்லாக் குஞ்சுகளும் தாயின் இறக்கைக்குள் அடங்கிவிடும்.

இதே மாதிரித்தான் வேதனை என்ற உணர்வு வந்தவுடனே எல்லாமே அந்த உயிருடன் ஒன்றி அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாதுகாப்பாக இருக்கின்றது.
1.வேதனையால் உருவான அணுக்கள் மீண்டும் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.உயிர் அதனின் ஆகாரத்தை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனை அணுக்கள் உருவாக்கினால் நாம் பார்த்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ அதே வேதனை அணுக்கள் நமக்குள் உருவாகி நாமும் வேதனைப்படுவோம்.

1.சாமியைக் கும்பிட்டாலும் சரி…
2.சாமியாரைப் பார்த்தாலும் சரி…
3.அர்ச்சனை செய்தாலும் சரி…
4.யாகங்கள் செய்தாலும் சரி… அதனால் பலன் இல்லை

யாகத்தின் பால் பற்றாகி அந்த எண்ணங்களைக் கொண்டு வரப்போகும் போது யாக எண்ணத்தின் அணுவின் கருவாக உருவாகின்றது.

அதை வளர்ந்து விட்டால் “யாகத்தைச் செய்ய வேண்டும்… செய்தால் தான் சரியாகும்…! என்று அதன் வழியே தான் நம்மைச் செய்யச் செய்கின்றது.

அங்கே கோவிலுக்குச் சென்று அரச்சனை செய்து பல விதமான கனிகளையும் மலர்களையும் நல்ல மணங்களையும் வைத்து அங்கே கொடுத்தாலும்
1.ஒரு நல்ல பதார்த்தத்தில் விஷம் என்ற நிலைகள் பட்டவுடனே
2.நல்ல பதார்த்தமும் விஷத்தின் இயக்கமாகதான் மாறுமே தவிர அதற்குச் சக்தி இல்லை.
3.நீங்கள் யாகங்கள் செய்தாலும் சரி… மற்ற நிலைகள் எதைச் செய்தாலும் சரி…
4.கஷ்டத்தைப் போக்குவதற்காகத் தெய்வத்தை வேண்டி “நான் விரதம் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் சரி…
5.இன்னும் கொஞ்சம் விஷத்தைத் தான் வளர்க்கிறமே தவிர அந்த நோயை மாற்றாது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த ஆலயத்தில் காட்டிய முறைப்படி தெய்வ குணத்தை நமக்குள் கவர வேண்டும்… சுவாசிக்க வேண்டும்…!

 

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் கருவாக்கி அணுவாக்க வேண்டும். ஒளியான அணுக்கள் நம் உடலில் பெருகினால் நஞ்சான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது அது செயலிழந்துவிடும்.