கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் சொர்க்கம்…!

கணவன் மனைவிக்குள் “பற்று…” எப்படி இருக்க வேண்டும்…?

கணவன் மனைவி தியானத்தின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகள்

அன்று அகஸ்தியன் வாழ்ந்த வாழ்க்கையும் இன்று கணவன் மனைவி ஒன்றி வாழும் வாழ்க்கையும்

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் சூட்சமம்

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள்

ஈஸ்வரன்… ஈஸ்வரி…! – சிருஷ்டிக்கும் ஆற்றல்

கணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்

நல்ல மணமகன் நல்ல மணமகளைத் தேர்ந்தெடுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறை

அருள் ஞானக் குடும்பங்களாக உருவாகுங்கள்

.கணவன் இழந்தால் மாங்கல்யத்தைக் கழட்டச் சொல்கிறார்கள்… மொட்டை அடிக்கும்படி சொல்கிறார்கள் இது எல்லாம் தவறானது

கணவன் மனைவி ஒன்றாகச் செய்தால் கிடைக்கும் ரிமோட் சக்தி

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் சொர்க்கம்

கணவன் மனைவி சேர்ந்து வாழ வேண்டியதன் அவசியம்

கணவன் மனைவி தியானம் – பாதுகாப்புக் கவசம்

கணவன் மனைவி தியானம்

கணவன் மனைவி பண்டைய காலத்தில் ஒன்றி வாழ்ந்த நிலைகள்

கணவன் மனைவிக்குள் எதிர்நிலையான உணர்வுகளின் இயக்கத்தால் வரும் விளைவுகள்

மனைவி கணவன் மேல் வேதனை உணர்வைப் பாய்ச்சினால் தீங்கு விளையும்

ஜாதகம் பார்த்து நாம் கல்யாணம் செய்வதும், அகஸ்தியனும் மனைவியும் ஒன்றி வாழ்வதும்

கணவன் மனைவி அடிமையாக அடக்கி வாழும் நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகள்

கணவன் மனைவி அருள் வழியினைப் பக்குவப்படுத்துங்கள்

கணவனை விட்டு மனைவியும் மனைவியை விட்டு கணவரும் – நாங்கள் பிரிய மாட்டோம்…!

தண்ணீ போடும் கணவர்களை (பெண்கள்) மாற்றிடும் உபாயங்கள்

கணவன் மனைவி – குடும்பத்தில் மகிழ்ச்சி

அகஸ்தியனும் அவர் மனைவியும் போன்று கணவனும் மனைவியும் மகிழ்ந்து வாழுங்கள் – தியானம்

கணவன் மனைவி பாச உணர்வின் இயக்கங்களும் விளைவுகளும்

மாமியார் மருமகள் ஒற்றுமை

பெண்களுக்குண்டான சக்திகள்

பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி நல்ல உணர்வை ஊட்ட வேண்டும்

குடும்பத்தை அருள் வழியில் நடத்துங்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும் முறைகள்

உணவு பரிமாறும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது

கோலம் – எல்லாவற்றையும் இணைப்பது போல் குடும்பத்தில் அரவணைக்கும் சக்தி பெறவேண்டும்

வீட்டு வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடச் சொன்னதன் உண்மை நிலைகள்

இயற்கையின் இயக்கத்தில் ஆண் பெண் என்ற நிலையும் கணவனும் மனைவி ஒன்றி வாழ வேண்டியதின் அவசியமும்

கணவன் மனைவி பாதுகாப்புக் கவசம்

கணவனை இழந்தவர்கள் மாங்கல்யத்தைக் கழட்ட வேண்டுமா…?

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய ஆசீர்வாதம்

அகண்ட அண்டத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

இராகவேந்திர சாமிகள்

.கணவன் மனைவியாகச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் ஒன்றி வாழ வேண்டிய வழி முறை

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் – விளக்கம்

மகரிஷிகளின் எல்லையை அடையும் வழி முறை…!

eswarapattauya gurudevar circle

 மகரிஷிகளின் எல்லையை அடையும் வழி முறை…!

 

தாயிடம் சேய் (பிறந்த குழந்தை) தனக்குப் பசிக்கிறது என்பதை எப்படிக் கேட்கும்…? குழந்தைக்கு எந்த மொழி தெரியும்…? ஒன்றுமே தெரியாது…!

தன்னுடைய அழுகை ஒலி மூலமாகப் பாசத்தால் பிடிவாதத்துடன் தான் உணவைக் கேட்கும். பிடிவாதத்துடன் கேட்கும் அந்தக் குழந்தையின் பசியை அறிந்த தாய் அப்பொழுது தான் பாலை உணவாகக் கொடுக்கும்.

அழுகாத சேய்க்குத் தாயிடமிருந்து உணவு உடனடியாகக் கிடைக்குமா…? கிடைக்காது…!

ஏனென்றால் சேய் அழுவது வேதனையால் அல்ல…! தன் உணவுக்காக…!

அந்தச் சேய் தனக்கு உணவை வேண்டிக் கேட்பது போல் நாமும் கேட்க வேண்டும்.

நல்லது நடக்க வேண்டும்…. தெளிவு வேண்டும்… ஞானம் பெறவேண்டும்… பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
1.நம்முடைய இலக்கைப் புருவ மத்தியில் உள்ள ஈசனிடம் வைத்தால்… வேண்டினால்… சுவாசித்தால்… இழுத்துக் கவர்ந்தால்…
1.உயிரும் நம்முடன் பேசும்…!
2.வழி காட்டிக் கொண்டிருக்கும் குருநாதரும் நம்முடன் பேசுவார்.
3.2000 சூரியக் குடும்பத்திற்கப்பால் உள்ள பேரண்ட மகரிஷியாக இருந்தாலும் பேசத்தான் செய்வார்கள்.

இரண்டு கண்களின் நினைவையும் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
1.புருவ மத்தி வழியாக… அதாவது உயிர் வழியாக…!
2.பூமியின் வட துருவத்தின் வழியாக நேரடியாக நினைவைச் செலுத்தி
3.மெய் ஞானிகளின் உணர்வலைகளைக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
4.தேடுவதும் கிடைக்கும்… நமக்குத் தேவையானதும் கிடைக்கும்… நாம் போக வேண்டிய பாதையும் கிடைக்கும்.

எதுவாக இருந்தாலும் உயிரிடம் சொல்லி விட்டு… பின் மகரிஷிகளிடம் தெளிவாகக் கேட்டு… பின் உயிரிடம் அவர்களிடம் (மகரிஷிகளிடம்) கேட்டு எனக்கு வாங்கிக் கொடு…! என்று உயிரிடம் வலுவாக அழுத்தமாகக் கேட்க வேண்டும்.

என் நினைவலைகளை இப்படிக் குவித்துச் செலுத்தித் தான் ஊடுருவிப் (SCANNING and PROCEEDING) போய்க் கொண்டேயிருக்கிறேன். பதிலும் வருகிறது… பலனும் கிடைக்கின்றது…!

எண்ணும் எண்ணக் குறி வைத்தே…
எடுக்கும் பகுத்தறிவு வளர் ஞானத்திலே…
ஏற்றத்திலே உணரும் உணர்வாய் நீர்…
ஏற்ற உடல் ஆத்ம ஜீவனிலே
ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே…!
ஐக்கியமாகிவிடு…!
ஈஸ்வரபட்டாய குருதேவா… ஈஸ்வரபட்டாய குருதேவா…!

துன்பத்தை விட்டுவிடுங்கள் – அது… “ஓடிப் போகட்டும்…!”

let it go

துன்பத்தை விட்டுவிடுங்கள் – அது “ஓடிப் போகட்டும்…!”

1.கவலை, சஞ்சலம் போன்ற உணர்வுகள் கெடுதலை எப்படி ஏற்படுத்துகின்றது..?

நீங்கள் மோசமான ஒரு துணியைக் கட்டிச் சந்தோசமாக இருந்தால் அது பந்தோபஸ்தான நிலையில் இருக்கும். நீங்கள் எந்தப் பொருளை எடுத்தாலும் மனதிற்குத் தக்கவாறு உணர்வுகள் வேலை செய்யும்.

சஞ்சலம் சலிப்புடன் இருக்கும் பொழுது ஒரு புதுத் துணியைக் கட்டிப் பாருங்கள். எப்படியும் அது கிழிந்தே தீரும்.

ஒரு பெரிய இரும்புக் கம்பியினுடைய தன்மைகள் இருந்தாலும் மனிதன் கவலையும் சோர்வும் அதிகமாக எடுத்து அந்த நட்டை (NUT) முறுக்கினால், “டக்…” என்று தெறித்துப் போகும்.

ஏனென்றால், அந்த உணர்வின் அலைகளின் நிலைகள்.

வேறொன்றும் வேண்டியதில்லை. ஒரு இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்பட்டு அடுத்து கவலை அதிகமானால், ரிப்பேர் அதிகமாகிவிட்டால் அதைச் சரியாகக் கவனிக்கவில்லையென்றால் “SHAFT” தெறித்துப் போகும்.

1.அவ்வளவு பெரிய இரும்பு
2.இந்த மனிதனுடைய உணர்வுகள் பட்டவுடன் அந்த எண்ண அலைகள், 3.“கண் பார்வை” என்று சொல்கின்றோமே அது தெறித்துவிடுகின்றது. 4.அந்தப் பொருள் உடைந்து விடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை எப்படி தடுப்பது…?

2.துன்பத்தை நினைக்கவே வேண்டாம்… அது “ஓடிப் போகட்டும்…!”

இன்று விஞ்ஞான காலம். காலமே இல்லை. நாம் உண்மையைத் தெரிந்து கொண்டோம். நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஆகவே, இந்த நிலைகளைத் தெரிந்து கொண்டு, நாம் ஒவ்வொரு நிமிடமும் விழித்திருக்க வேண்டும்.

இப்பொழுதாவது உட்கார்ந்து கேட்கிறோம். வரும் காலங்களில் உட்கார்ந்து கேட்க முடியாது. அந்த மாதிரி நிலை வரும். நாளைக்கு உட்கார்ந்தும் பார்க்கலாம், சிருஷ்டிக்கவும் செய்யலாம்.
1.அந்த மன உறுதியின் தன்மையும் பெறலாம்.
2.எந்த உணர்வு தாக்கினாலும் இந்த உடலை விட்டு நாம் விண் செல்லலாம்.

ஆகையினாலே சாமி என்னமோ சொல்கிறார் என்று இல்லாதபடி, இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். நல்ல விதைகளை விதைக்கின்றோம். இதற்கு நீர் ஊற்ற வேண்டியது தியானம்.

அடுத்து ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைச் சொல்லியுள்ளோம். ஓம் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ண வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று. நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

உங்கள் உடலிலே எத்தகையை துன்பங்கள் வந்தாலும் சரி
1.துன்பத்தை விட்டுவிடுங்கள்
2.“நீ ஓடிப்போ” என்று அதை நினைக்கவே வேண்டாம்.

“இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து, தீமைகளை நீக்கினேன்” என்று நீங்கள் சொல்லும் பொழுது,
1.பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன்
2.அவர்கள்… “எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக விலகிவிடும்,
3.எங்களுக்கு நன்றாக இருக்கும்” என்ற எண்ணங்கள் அங்கே தோன்ற வேண்டும்.

அதற்குத்தான் யாம் இதைச் சொல்வது.

கண்ணனை – கண்களைப் பரமாத்மா என்று ஏன் வியாசகர் சொல்கிறார்…?

antenna power of sages

கண்ணனை – கண்களைப் பரமாத்மா என்று ஏன் வியாசகர் சொல்கிறார்…?

 

வேதனைப்படுவோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் சுவாசித்தால் அந்த உணர்வலைகள் நம் நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கிறது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் போது
1.நாம் எடுத்துக் கொண்ட நல்ல உணர்வுகளால் உருவான நல்ல அணுக்களுடன்
2.இந்த வேதனைப்படும் அணுக்கள் மோதும் போது இது ஒவ்வொன்றாகச் சேர்த்துச் சேர்த்து
3.வேதனைப்படும் உணர்வின் தன்மையாகக் கருத்தன்மை அடைகிறது.

அப்போது கருத்தன்மை அடையப்படும் பொழுது அது எதை எடுத்து எந்த உணர்வின் தன்மை வெறுப்பின் தன்மை ஆனதோ அது நம் உடலிலே சேரும்போது நம் உறுப்புகளில் அந்தக் காலக்கெடு வரும்போது அந்த அணு முட்டையாக மாறுகிறது.

அணு முட்டையாக மாறும்போது தசைகளில் ஒட்டி இரத்த நாளங்களில் வருவதை உணவாக உட்கொள்ளத் தொடங்கும். அந்த உணர்வின் தன்மை மலமாக்கப்படும் போது
1.வேதனை என்ற உணர்வுகளையோ
2.வெறுப்பு என்ற நிலைகளையோ
3.நஞ்சென்ற நிலைகளையோ நாம் நுகர்ந்திருந்தால்
4.நல்ல அணுக்களால் உருவான தசைகளுக்கும் இது இரண்டுக்கும் எதிரியாகும்

அதனால் அந்த அணுக்கள் ஒன்று சேர்ந்து இயக்கும் நிலைகளில் இது மாற்றம் அடைகிறது. மாற்றம் அடையும் போது எந்த உணர்வின் அணுக்களாக அந்தத் தசைகள் வளருகிறதோ (முதலில் உருவானது) அது குறையத் தொடங்குகிறது.

அதே உணர்சியின் தன்மை வரும்போது நம் எண்ணங்களும் சொற்களும் மாறுபடும் நிலை வருகிறது. நம் செயலும் பார்வையும் வித்தியாசமாக மாறுகிறது.

உதாரணமாக வேதனை என்ற உணர்வின் தன்மையை அதிகமாக எடுத்திருந்தால்
1.அந்த அணுத்தன்மைகள் நம் இரத்த நாளங்களில் கலந்து
2.ஒளி ஈர்க்கும் தன்மை கண் பார்வைக்கு வரப்படும்போது (ஏனென்றால் நம் ஒவ்வொரு உறுப்புகளிலிருந்தும் கண்ணுக்கு நேரடியான இணைப்பு உண்டு)
3.அங்கே வலிக்கிறதென்றால் கண் வழிதான் முதலில் அந்த உணர்வு உணர்ச்சியாகி உயிருக்கு வருகிறது.
4.அப்பொழுது கண் பார்க்கிறது. இன்ன இடத்தில் தான் வலிக்கிறது…! என்று நம் கைகள் அங்கே போகிறது.
5.இல்லையென்றால் நம் கை போகுமோ…?

கண்களை மூடிக் கொண்டாலும் வலி என்ற உணர்வின் தன்மை வெளிவரப்போகும் போது
1.அங்கேதான் வருகிறது..! என்று நம் கை இயங்கும்.
2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அங்கே இயக்குகிறது.
3.பொதுவான நிலையாக உடலில் உள்ள எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டது நம் கண்கள்.

அதாவது நம் கண்கள் தான் “கண்ணன்…!” என்று மகாபாரதக் காவியத்தின் மூலமாக வியாசகர் இதைத் தெளிவாக்குகிறார் அதனால்தான் கண்கள் என்ற உணர்வு வரும்போது பரமாத்மா.
1.இது ஒரு பரம்.
2.இது எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்து இயக்குகின்றான் பரமாத்மாவாக.

அந்த உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் நுகர்ந்த அந்த உணர்வின் தன்மை கொண்டு இயக்கச் செய்கிறான் என்பதை கண்ணன் இந்த லோகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றான் என்று வியாசகர் காட்டுகின்றார்.

உதாரணமாக முதுகு பக்கம் வலிக்கிறதென்றால் இங்கே தான் வலிக்கிறது என்று உணர்ச்சி சொல்கிறது. அப்பொழுது… அது என்ன…? ஏது..? என்று திரும்பிப் பார்க்க வேண்டும்…! என்று அந்த உணர்ச்சியின் தன்மையைக் கவர்ந்து கொடுப்பது யார்…?

நம் கண்கள் தான்…!

இந்தக் கண்களுக்கு இயக்கம் எது..? நம் உயிர் தான். அந்த உயிரின் தன்மை எலெக்ட்ரிக்காக இயங்கி அந்த உணர்ச்சிகளுக்குத் தக்க நமக்கு ஊட்டும் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அதை கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அகக்கண்ணான உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிர் வழியாக எண்ணி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் கண்ணின் நினைவை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி எங்கே வலிக்கின்றதோ அங்கே மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படரவேண்டும் என்று
1.அந்த அணுக்களுக்குள் இணைத்தால் வலியை நீக்க முடியும்.
2.தீமையால் உருவான அணுக்களைக் கரைக்கவும் முடியும்.
3.ஒளியான அணுக்களாக நம் உடலுக்குள் உருவாக்கவும் முடியும் இதே கண்களால்…!

செய்து பாருங்கள்…!

சுடு தண்ணீர் ஊற்று பூமிக்குள் இருந்து மேலே எப்படி வருகிறது…?

hot spring ganshpuri

சுடு தண்ணீர் ஊற்று பூமிக்குள் இருந்து மேலே எப்படி வருகிறது…?

பூமி ஓடும் பாதையில் எத்தனையோ பாறைகள் வருகிறது. வரப்போகும் போது மேலிருந்து அந்தத் துகள்கள் பூமிக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் பூமியின் நடு மையம் வெப்பம் அடைகிறது. உள்ளே இருக்கிற பொருள்களை எல்லாம் வேக வைக்கின்றது.

எல்லாம் வேக வைத்துக் கலந்து வெளி வரப்போகும் போது இந்த உஷ்ணத்தினால் சிறுகச் சிறுக வெடிப்பாகும். அதன் வழி கூடி அந்த இடைவெளியில் வரும்.

அந்தச் சந்து வழியாக வரப்போகும் போது இதற்குத் தக்கவாறு
1.சில நட்சத்திரத்தின் கலவைகள் ஆன பிற்பாடு இதனுடைய வெப்பம் ஆகும் பொழுது
2.சில இடங்களில் தங்கமாகும்… சில இடங்களில் யுரேனியமாக மாறும். 3.
இப்படிச் சில அடுக்கடுக்காக வரிசையில் வரப்போகும் அந்தந்தப் பாறைகளுக்கு ஒப்ப மாற்றங்கள் ஆகிறது,

அதே மாதிரி கடலில் உப்பு நீர் இருந்தாலும் அதன் அருகே இருக்கும் பாறைகளுக்கு மத்தியில் நல்ல நீர் இருக்கும். ஏனென்றால் அந்த உப்பு நீரை அது வடிகட்டித் தனக்குள் எடுத்துக் கொண்டு நல்ல நீராகக் கொடுக்கும்.

இராமேஸ்வரத்தில் பாருங்கள்…! ஒரே கிணறாக இருந்தாலும் அந்தந்தப் பாறைகளுக்குத் தக்கவாறு தண்ணீரை வடிகட்டும் போது அங்கே நான்கு விதமான தண்ணீர் இருக்கும்.

இவை எல்லாம் அன்றைக்கு ஞானிகள் கண்டு கொண்ட நிலைகள்.

இதே மாதிரிச் சில இடங்களில் பார்த்தோம் என்றால் கந்தகத் (SULPHUR) தண்ணீர் உண்டு.
1.கீழே அடியில் என்ன செய்யும் என்றால் வெப்பம் உருவாகும்.
2.வெப்பம் உருவான பிற்பாடு ஆவி (GAS) உருவாகும்.

நடு மையத்தில் கொதிகலன் ஆகப்போகும் போது அந்த ஆழத்திலிருந்து அதனுடைய வெடிப்புகள் வெடித்து வரும் பொழுது கந்தக அமிலங்கள் வருகிறது.

அப்போது அந்தக் கந்தக அமிலங்கள் பட்டவுடனே சூடாக வருகிறது.
1.யாரும் ஒன்றுமே ஓட்டை போட வேண்டாம்.
2.நிலத்திற்கு மேலே அந்தத் தண்ணீர் கொப்புளித்து வெளியிலே வரும்
3.அதைச் சுடு தண்ணீர் கிணறு (HOT SPRINGS) என்று சொல்வார்கள்.

மும்பைக்கு அருகில் உள்ள கணேசபூரிக்கு நான் போயிருக்கும் போது அங்கே சுடு தண்ணீர் எப்படி வருகிறது…? மலை மேலிருந்து எப்படி வருகிறது…? என்று அங்கே ஒரு மாதம் இருந்து பார்த்து வந்தேன் (ஞானகுரு).

அங்கே பல தொட்டிகள் கட்டி வைத்து இருப்பார்கள். முதலிலே லேசான சூடு இருக்கும். இரண்டாவது ஒரு சூடு இருக்கும். மூன்றாவது ஒரு சூடு இருக்கும். மிதமான சுடு தண்ணீரிலிருந்து குளித்து விட்டுப் போனால் தான் அடுத்து உடம்பே தாங்கும்.

அந்தக் கணேஷபுரியில் நித்யானந்த சாமிகளின் சமாதி உள்ள இடத்தில் ஆசிரமம் வைத்து இருக்கிறார்கள். ஏற்கனவே நித்யானந்த சுவாமிகள் அந்த மலைப்பகுதியில் உள்ள குகைகளில் யாரும் அங்கே வரக் கூடாது என்ற நிலையில் பல ஜெபங்களை எடுத்திருக்கிறார்.

அந்தக் குகைகளுக்குள் போக வேண்டும் என்றால் படுத்துத் தான் உள்ளே போக வேண்டும். அங்கே புலிகள் நடமாட்டமும் உண்டு. அது மனிதனை நுகர்ந்து வந்து பிடித்து விடாதபடி குகைகளுக்குள் ஒளிந்திருக்கிறவர்களும் உண்டு.

இமயமலைப் பகுதியிலும் சில இடங்களில் இதே மாதிரி மண்ணுக்குள்ளே மூடி இதே ஜெபத்தைச் சொல்லிக் கொண்டு புதையுண்டு இருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் தான் யாம் வந்தோம். கண்ட பார்த்த இயற்கையின் உண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.