வலிமையான ஆயுதம் இராமபானம்

Sri Ram.jpg

வலிமையான ஆயுதம் இராமபானம் 

நமக்குள் வரும் துன்பத்தைப் போக்குவதற்குத்தான் ஆத்ம சுத்தி. யாம் கொடுக்கும் அந்த ஆயுதத்திற்குள் (இராமபானம்) பல இரகசியங்கள் இருக்கின்றது.

அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் நிலைகளுக்குத்தான் இதை உணர்த்துகின்றோம். இராமன் என்பது – நம் உயிருக்குள் உணர்ந்த ஒவ்வொரு குணத்தின் நிலைகள்தான்.., இராமன், பரசுராமன், பலராமன் என்பது.

அம்பு என்று இருந்தாலும்
1.இராமபானத்தைப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு – நம் எண்ணங்கள் கொண்டு
2.இந்த எண்ணத்தின் வேகத்தின் நிலைகள் கொண்டு
3.நாம் எந்த எண்ணத்தின் உணர்வைப் பாய்ச்சுகின்றோமோ
4.அந்த அம்பின் தன்மைதான் மற்றதைக் கவர்ந்து அதை இழக்கச் செய்யும்.
5.அந்த எண்ணத்தின் நிலைகள் செயலாவதுதான் ஆஞ்சநேயன்
6.ஆஞ்சநேயன் – வாயு புத்திரன்.., இராமனின் தூதுவன். அதாவது நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் வாயுவாகச் சென்று மற்றொன்றை இயக்கும் நிலை.

இதையெல்லாம் சாஸ்திரத்தில் தெளிவாக அன்று மெய்ஞானிகள் உணர்த்தினாலும் அதற்குள் இருக்கும் நிலையை மெய்ப்பொருளை உணர்வார் இல்லை.

இப்பொழுது யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் எண்ணங்கள் அனைத்துமே இராமபானங்கள்.

மற்றவர்கள் (சீதா சுயம்வரத்தில்) வில்லைத் தூக்க முடியவில்லையென்று சொன்னபோது மெய்யுணர்வின் தன்மையைத் தூக்கும் சக்திக்குத் தக்க கணையை உங்களுக்குள் இயங்கச்செய்து,

1.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்தை
2.நீங்கள் சரியான விதத்தில் பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க மகரிஷிகளின் அருள் ஒளி பெற தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள். மனதிற்குள் எண்ணி ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உங்கள் உடல் முழுவதற்கும் நினைவைச் செலுத்தி உங்கள் உடலைத் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியால் உடல் நோய் நீங்கி நாங்கள் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று ஏங்கி இருங்கள்.

1.எங்களுக்கு நல்ல எண்ணமும்
2.எங்களைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணமும்
3.எங்கள் வழி நல் வழியாகவும்
4.எங்களுக்கு உன்னை என்றும் மறவாத எண்ணமும் கொடு ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தியால் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இவ்வாறு தியானத்தால் எண்ணி எடுக்கும் உணர்வுகள் இராமபானமாக இயங்கி உங்களை மகிழ்ந்து வாழச் செய்யும்.

அதே சமயத்தில் நீங்கள் மற்றவர்களுக்குப் பாய்ச்சும் அருள் உணர்வுகள் ஆஞ்சநேயனாக அவர்களுக்குள் சென்று அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றும் சக்தியாக இணைந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக இயக்கும்.

“ஆத்ம சுத்தி” தீமைகளை எப்படி நீக்குகின்றது…?

soul cleaning.jpg

ஆத்ம சுத்தி தீமைகளை எப்படி நீக்குகின்றது…?

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அது எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

நம் புலனறிவு (கண்களால்) கொண்டு முன்னால் பார்ப்பது வெகு தூரத்தில் உள்ளதைக் கூர்ந்து கவனித்து அப்பொருளை நாம் காண முயற்சிக்கின்றோம். அந்தப் பொருளின் சத்தின் தன்மையை நாம் அறிகின்றோம்.

1.நம் உணர்வுக்குள் அனைத்து நிலைகளிலும் “கண் இணைக்கப்பட்டிருக்கின்றது”,
2.நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோ அந்த உணர்வின் நினைவலைகள்
3.உயிரிலே பட்டு அதன் வழி தான் தெரியும்.

அதைப்போல அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் கண்ணின் நினனைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று
1.உள் நினைவிலே உங்கள் உடலுக்குள் செலுத்தப்படும்போது
2.உடலிலுள்ள அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி இணைகின்றது.

அப்படி இணையும் பொழுது நமக்குள் நம்மையறியாமல் உட்புகுந்த அணுக்களுக்குள் சேரும் தீமைகளை
1.வேக வைத்து ஆவியாக மாற்றி உடலிலிருந்து அப்புறப்படுத்தி விடுகின்றது.
2.அதற்குப் பின் நம் உடலில் தீமை செய்யும் அணுக்கள் உற்பத்தியாவதில்லை.
3.அதாவது தீய வினைகள் நமக்குள் வளர்வதில்லை.
4.நம் எண்ணங்களும் மாசுபடுவதில்லை.
5.நம் ஆன்மா பரிசுத்தமடைகின்றது.

இதுதான் ஆத்ம சுத்தி. இந்த ஆத்ம சுத்தியை உங்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் தனித்து நாள் முழுவதும் இருந்து பெற முடியாத சக்தியை ஒரு பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்றபின் அடுத்து உங்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும் நீங்கள் சந்திக்கும் துன்பங்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள “இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்” உங்களுக்குப் பயன்படும்.

பயன்படுத்திப் பாருங்கள்…!