எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம் – ஈஸ்வரபட்டர்

எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம் – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகின் ஈர்ப்பு நிலை போன்றே… எண்ணத்தின் நினைவும் தொடர் நிலை கொண்டதாக ஒவ்வோர் உயிரணுவும் அது தோன்றிய நாள் தொட்டே உயிராத்மாவுடனும் சேர்ந்து வருவது தான்.

இவ்வுலகின் சுழற்சி நிலை வேகத்தின் நிலைக்கொப்ப அது பெற்ற ஈர்ப்பு சக்திதான் இந்த உலகிற்கு உண்டு. அந்த நிலை போன்றே… நம்முடனே வளர்ந்திட்ட அமில நிலைக்குகந்த எண்ண சக்திதான் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பல நிலை கொண்ட குண நிலைகள் அமைவதெல்லாம்
1.நம்முள் உள்ள நாம் ஈர்த்துச் சேமித்த உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே
2.வளர்ந்த நிலை கொண்ட… குண நிலை கொண்ட நாம்
3.அந்நிலைக்கே… அச்சுழற்சியுடனே… இன்று வரை வழி நடந்தும்
4.எண்ண நிலை பெற்றும் வாழ்ந்து வருகின்றோம்.

எப்பிறவிக்கு வந்தாலும் நாம் நம் உயிரணுவுடன் சேமித்த அமில சக்தியுடன் தான் (உயிராத்மாவில் விளைந்தது) இன்றளவும் வாழ்ந்து வருகின்றோம்.

பல உலோகங்களும் தாவரங்களும் அதனதன் நிலைக்குகந்த அமிலத்தை ஈர்த்து ஒரே நிலை கொண்ட தன்மையில் வளர்கின்றன. பல உலோகங்களும் திரவங்களும் ஆவியான தன் இனத்திற்கு உகந்த இனத்தையே மேன்மேலும் ஈர்த்துச் செயல்படுகின்றன.

வான மண்டலத்தில் இடியும் மின்னலும் ஓர் இனத்துடன் மற்றோர் இன அமில நிலை மோதிடும் பொழுது “சத்ரு… மித்ரு…” நிலையினால் ஏற்காத நிலையில் இடியும் மின்னலும் ஏற்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இவ்வுலகினில் மற்ற எல்லா மண்டலமும் அதனதன் இனத்துடன் தான் வாழ்கின்றன. ஆனால்…
1.இம்மனித ஆத்மா நிலை கொண்ட நம்மால்
2.நம் இன நிலையான இவ்வெண்ண நிலையை
3.நாம் எடுத்திடும் சுவாச நிலையினால் நல் நிலைப்படுத்திட முடியும்.

மண்டலங்களுக்கும்… மண்டலங்களில் தோன்றி வளர்ந்திடும் இயற்கை வளங்களுக்கும்… மற்றத் தாவர இன வர்க்கங்களுக்கும் எவற்றுக்குமே இம் மனித உடல் கொண்ட ஆத்மாவுடன் கூடிய நாம்… வாழ்ந்திடும் இந்த மனிதப் பிறவியின் பாக்கியத்தை… நம்மால் நம் நினைவினில் நமக்குகந்த நிலையினை ஈர்த்து வாழ்ந்து காட்ட முடியும்.

ஆனால்…
1.எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம்.
2.வெறி உணர்வுக்கும்… பேராசைக்கும் அடிமை கொண்டு… பக்தி நிலையை வளர்த்தாலும் பலன் பெறுவது கடினம்.
3.பக்தி என்பதனையே அடிமைப்படுத்திடும் நிலையாக்கிடாமல்
4.அவரவர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அன்பாக்கி
5.அந்நிலையின் தொடரினால் ஜெப நிலையில் நல்லுணர்வு கொண்ட அமிலத்தையே நம் ஆத்மாவின் சொத்தாக்கி
6.மாறப் போகும் கலியில் இருந்து மீண்டு பல மகரிஷிகளுடன் கலந்திடலாம்.
7.இன்று இவ்வுடலில் நாம் சேமித்த ஒளி சக்தியின் தொடர்புடனே மனித வாழ்க்கைக்கும் உயர்ந்த வாழ்க்கையான
8.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடலாம்..!

இப்பூமியின் அமில சக்தி உன்னத சக்தி. அனைத்து நிலைகளும் கலந்த சக்தி. இப்பூமியின் தன்மை மாறுபடத்தான் போகின்றது. சூரியனின் நிலையும் மாறுபடத்தான் போகின்றது. ஆனால் நம் எண்ணத்தில் எண்ணிடும் நிலையில் இல்லை.

சூரியனையே நெருப்புக் கோளமாக எண்ணுகின்றனர். ஆனால் அது குளிர்ந்த பூமி. எச்சக்தியையும் அறிந்திடும் நிலை இம்மனித ஆத்மா ஒன்றுக்குத்தான் உண்டு.

யாம் உணர்ந்த ஆத்மீக நெறியையே அனைத்து உலக நிலைகளையும் உணர்த்திட்டால் “நான்…” என்ற அந்நான் நிலை வந்துவிடும்.

1.ஆத்மீக நெறியினில் அன்பு கொண்டே ஜெபம் கொண்டு அறிய வருபவர்களுக்கு
2.அந்நிலையின் தொடரை வழிப்படுத்தி
3.அனைவருக்கும் பொதுவான சக்தியின் சக்தியை உணரும் நிலையை
4.எமக்குக் கிட்டிய சக்தியின் வழித் தொடரை வழிப்படுத்துகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

Leave a Reply