நாம் புறத்திலிருந்து சுவாசிப்பது உடலில் அணுக்களாக விளைந்து அடுத்த உடலுக்கு வித்திடும் விசித்திரம்

நாம் புறத்திலிருந்து சுவாசிப்பது உடலில் அணுக்களாக விளைந்து அடுத்த உடலுக்கு வித்திடும் விசித்திரம்

 

பேட்டரிகளை எல்லா வகைகளிலும் இன்று உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றோம். அதனுடைய பயன்பாடுகள் முடிந்தபின் அதை மறு சுழற்சி செய்கின்றார்கள்.

வேண்டாத பாகங்களை நெருப்பிலிட்டுப் பொசுக்குகின்றார்கள். அப்போது புகைகள் வெளி வருகின்றது. இந்தப் புகைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

1.அது எந்தத் திசையை நோக்கிச் செல்கின்றதோ அந்தப் பக்கம் நாம் வந்து கொண்டிருந்தோம் என்றால் அதைச் சுவாசிக்க நேர்கிறது.
2.சுவாசப் பைகளுக்குள் சென்று அந்தக் கெமிக்கல் நமக்குள் இருக்கும் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை மடியச் செய்கின்றது.
3.மடிந்து விட்டால் அந்த உறுப்பின் திறன் இழக்கப்படுகின்றது.
4.இதனால் நம்மை அறியாமலே மூச்சுத் திணறலும் கடும் நோய்களும் உருவாகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் சுவாசித்த உணர்வுகள் அந்தக் கெமிக்கல் இரத்த நாளங்களிலே கலந்து விட்டால் சுத்திகரிக்கும் கிட்னிக்குள் புகுந்து வடிகட்டி வெளி வரும் பொழுது வடிகட்டும் திறனை இழக்கச் செய்து கிட்னியைச் செயலிழக்கச் செய்கின்றது. சுத்திகரிக்கும் நிலை தவறும் பொழுது ரத்த நாளங்கள் தெளிவாகும் நிலை இழந்து விடுகின்றது.

இதைப் போன்று நம்மை அறியாமலே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் இத்தகைய உணர்வுகள் தீமை விளைவிக்கும் சந்தர்ப்பமாகின்றது.

1.இப்படி நமக்குள் உருவாகும் உணர்வுகள் உடலுக்குள் பரவும் பொழுது
2.அது சிறுமூளை பாகம் வரை சுழன்று கொண்டிருக்கும்.

ஒரு கோழி கருவான பின் ஒவ்வொரு நிமிடமும் எப்படிக் கேறுகின்றதோ இதைப் போல ஒரு மனிதன் ஒரு காரியம் தனக்கு நடக்கவில்லை என்றால் அதனால் திரும்பத் திரும்ப வேதனையை நுகர்கின்றான்.

1.அது 48 நாட்கள் ஆனால் கோழி கருவுற்று முட்டையாக மாறுவது போல நாம் நுகர்ந்த உணர்வு கருவுற்று விடுகின்றது… முட்டையாக மாறுகின்றது.
2.இப்படி முட்டை ஆனபின் அதனுடைய செயலாக்கங்கள் உள்ளுக்கே அடைபட்டு இருக்கின்றது.
3.இரத்த நாளங்களில் அது சுழன்று வரும்பொழுது சிறுகச் சிறுக எல்லா உறுப்புகளிலும் ஊடுருவுகிறது.

எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் உணவாக கொடுக்கும் நிலை பெற்றது தான் நம் இரத்தங்கள். ஆனால் நாம் நுகர்ந்த வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் ரத்த நாளங்களிலே செல்லும் பொழுது அதை அந்த நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கின்றது.

அதன் வட்டத்தில் சென்ற பின் சோர்வடையத் தொடங்குகிறது… உடலும் சோர்வடைகின்றது. நம் எண்ண வலுவும் குறைகின்றது.

எதனைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதை நுகர முடியாதபடி ஆனபின் பலவீனமாகி நல்ல உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரம் செல்வதில்லை. சோர்வடைந்தால் மீண்டும் நலிந்து கொண்டுதான் இருக்கும்.

ஒரு சிலர் நிறையச் சாப்பிடுவார்கள். ஆனால் சோர்வின் தன்மை வரும் போது உறுப்புகளில் அஜீரண சக்தி ஏற்படும். அது அதிகரித்து விட்டால் உடல் நலியும். நல்ல அணுக்கள் வாடும் தன்மை வருகின்றது.

இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில நிகழ்ச்சிகள்.

இதை அணுக்கள் இருதய வாயிலில் ஊடுருவி விட்டால் என்ன நடக்கிறது…? இருதயம் அழுத்தம் கொடுத்து எல்லா இடங்களுக்கும் ரத்தத்தை அனுப்பும் சக்தி பெற்றது.

1.ஆனால் இருதயத் துடிப்பிற்குள் சென்று அதிலே வெறுப்படையச் செய்யும் அந்த அணு நுழைவாயிலில் புகுந்து விட்டால் போதும்.
2.வெறுப்பின் உணர்ச்சிகள் அங்கே அணுவாக மாறி இந்த உணர்ச்சிகளை அதன் வழி பரப்பிக் கொண்டிருக்கும்.
3.அப்படிப் பரப்பும் பொழுது சிறு மூளையில் அதன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.பின் உயிரான காந்தப் புலனுக்குள் இந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது.
5.பின் கண் காது மூக்கு உடல் என்ற நிலையில் இந்த உணர்ச்சிகளை உயிர் அணுக்களாக ஒலி அலைகளாக மாற்றுகின்றது.
6.அதன் வழி எதனின் உணர்வு கொண்டு மூச்சாக வெளியிடுகிறோமோ அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
7.அதை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது… நமது ஆன்மாவாக மாற்றுகின்றது… சுவாசித்த பின் ரத்த நாளங்களில் கலந்துவிடுகிறது.

முட்டைகள் பொரித்துக் குஞ்சுகளாக ஆன பின் கோழி அதற்கு சத்தத்தை எழுப்பிக் கூவி இரை எடுத்து உண்ணும்படி எப்படிக் கற்றுக் கொடுக்கின்றதோ அதைப் போல்.. நமக்குள் உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக ஒலிகளைப் பரப்பப்படும் போது உயிர் நமது ஆன்மா வழி நுகர்ந்து உணவை ஊட்டிச் சாந்தப்படுத்தும்.

வேதனையான உணர்வை எடுத்துக் கொண்ட பின்
1.அது எனக்கு வேண்டாம் மகிழ்ச்சியின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த உணர்வு மீண்டும் துடிக்கும்… உணர்வின் வேகம் அதிகரிக்கும்,
3.எந்த உறுப்பில் எந்தப் பாகத்திலே அந்த அணுக்கள் தேங்கி இருக்கின்றதோ
4.அந்த உறுப்பிலே வேதனை என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.
5.நல்ல செயல்களைச் செயல்படுத்தும் சிந்தனை இழந்து விடும்… நம் அங்கங்களை இயக்கும் சக்தியும் குறையும்.

யாரையோ குறை கூறி வெறுப்பாகின்றோம்… யாரோ எவரோ என்று இருக்கலாம். ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவு அந்தக் குறையை உருவாக்கும்.

யாரை எண்ணி இந்த உணர்வைத் தனக்குள் உருவாக்குகின்றோமோ அதன் அணுக்களாக மாறுகின்றது. நாளடைவில் கரு முட்டையாகின்றது. முட்டையாக மாறி எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
1.அதனை இருப்பிடமாக வைத்து அதன் துணை கொண்டு உணர்ச்சிகளை உந்தி
2.இரத்த நாளங்கள் வழியாக உயிருக்கு அனுப்பி இந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.யாரைக் குறையாக எண்ணினோமோ அவரின் உணர்வுகளை உணவாகக் கொடுத்து உடல் உறுப்புகளைக் குறையாக்கி விடும்.

அப்போது அந்த வேதனையான உணர்விலிருந்து நாம் தப்ப முடிவதில்லை. அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

ஒருவரைப் பற்றிக் குறையான உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையில் தொழில் செய்யும் பொழுதும் எத்தனையோ அதிலே வலிகள் வேதனைகள் வரும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கும்.

அந்தக் குறையைத் தான் நுகர முடியுமே தவிர சொல்லால் செயலால் அன்பு கொண்டு பண்பு கொண்டு பாசமான உணர்வை அவர் வைத்திருந்தால் அதைத் தடுத்து விடும்.
1.ரேடியோ டிவிக்களில் ஒலி… ஒளி அலைகளைப் பரப்பினாலும்
2.எந்த ஸ்டேஷனில் திருப்பி வைக்கின்றோமோ அதைத்தான் எடுக்கும்.

இப்படிச் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் உணர்வின் தன்மை நம் உடலில் அணுக்களாக விளைந்து விட்டால்… தன் இனத்தின் தன்மையாகப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் எண்ணங்கள் அதிகரித்து நமக்குள் அது உருவாகி வளர்ச்சியாகி… அந்த எண்ணத்தின் வழியே அடுத்த சரீரத்தை உருவாக்குகின்றது.

இன்றைய செயல் நாளைய சரீரம்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply