மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறனை நாம் கூட்ட வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறனை நாம் கூட்ட வேண்டும்

 

இன்று இருக்கக்கூடிய உலகில் மீண்டும் மனித உடல் பெறுவோமா..? என்ற சந்தேகம் கூட வந்துவிட்டது.

ஒரு உயிரணுவின் தன்மையை எடுத்துக் கொண்டபின் அந்த கருமுட்டைக்குள் இருக்கக்கூடிய உயிரணு என்ன செய்கின்றது…? என்று எலெக்ட்ரானிக் முறைப்படுத்தி அந்த அதிர்வுகளைக் கொடுத்து அது என்ன செய்கின்றது…? என்று பார்க்கின்றார்கள்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு அதைச் செய்து பார்க்கின்றனர்.

இதே மாதிரி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை அதை எடுத்துக் கொண்டு அந்த உயிராத்மா தனியாக என்ன செய்கின்றது…? என்ற வகையில் ஒரு உடலுக்குள் இல்லாத நிலையில் தனித்திருப்பதைப் பிரித்துப் பார்த்து விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்துகின்றார்கள்.

இந்த நிலைகளை நம் பூமியில் வாழ்ந்த மெய் ஞானிகள் ஏற்கனவே சொல்லியுள்ளார்கள். அதை யாரும் சிந்திக்கவில்லை. இராமாயணம்.. மகாபாரதம்… கந்த புராணம் இவைகளில் அதைத்தான் சொல்லியுள்ளார்கள்.
1.ஆனால்… அதையெல்லாம் சாமியாக (கடவுளாக) நினைத்து விட்டார்களே தவிர
2.அதில் அனைத்து நிலைகளும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

கோவிலில் காசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் அவன் பார்த்துக் கொள்வான்…! என்று தான் இன்று எண்ணிச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால்…
1.தீமையை நீக்கிடும் உணர்வை வளர்த்தால் நம் உயிரான “இவன் பார்த்துக் கொள்வான்” என்ற நிலைக்கு வர வேண்டும்
2.இதை எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த எதிர்காலம் மிகக் கடினமான காலமாக வந்து கொண்டிருக்கின்றது. அதிலே விஷத்தின் தன்மையை நாம் எண்ணத்தால் எடுத்தால் உடனே நமக்குள் வந்துவிடும்.

அதை மாற்ற உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணிப் பழகுதல் வேண்டும். அப்போது இந்த உலக உணர்வுகள் அனைத்தும் நமக்குள் நலமாகும் உணர்வாகப் பெறுவோம். நமக்குள் தீமைகள் பெருகாது. தீமைகள் நமக்குள் புகாத நிலை ஆகிவிடும்.

இதைப் போன்று செய்து பழகிக் கொள்ளுங்கள்.

சப்தரிஷி மண்டல அலைகளை நீங்கள் எடுத்து உங்களுக்குள் வலுவாக்கி
1.உங்கள் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களின் முகப்பிலே அதை இணைத்து
3.விண்ணிலே உந்தித் தள்ளினால் அவர்கள் எல்லோரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சப்தரிஷிகளாக ஆகிவிடுகின்றார்கள்.

அவர்களை விண் செலுத்திய பிஜ்ன் அந்த உணர்வுகளை எடுத்தால் எளிதில் நீங்கள் அதைப் பெற முடியும். குடும்பத்தில் எத்தனை பெரிய சிக்கல் வந்தாலும் மாற்றிக் கொள்ளும் சக்தியாக அது வருகின்றது.

1.ஆகவே யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தியை எடுத்து வந்தால் தன்னாலே அந்த “ஞானம்” வரும்
2.எதைச் செய்வது…? எப்படிச் செய்வது…? என்ற மன வலிமை கிடைக்கும்…. சிந்தித்துச் செயல்படும் தன்மை கிடைக்கும்.

சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். தன்னாலே அந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யத் தொடங்கும். இதில் ஒன்றும் சிரமமில்லை…!

ஒரு தையல் வேலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று போனால் முதலில் கோணலாகப் போகும். பிறகு கற்றுக் கொண்டபின் என்ன செய்கின்றது…? ஒழுங்காக வந்துவிடுகின்றது…!

இதே மாதிரி நீங்கள் எண்ணும்போது உங்கள் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் இந்த ஆன்மாவிற்குள் வரும் பொழுது பல திசைகளில் திருப்பும்.

ஆனால் நீங்கள் இதை மாற்றிச் செய்து பாருங்கள். இதைச் செய்யக் “காசா… பணமா…?”
1.இடைஞ்சல் வரும் பொழுது இடைஞ்சலை நீக்குவதற்கு ஒரு சக்தியும் கொடுத்து
2.உங்களுக்கு நான் ஒரு பிரார்த்தனையும் செய்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எப்பொழுதும் நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி இதை இயக்கிக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு)
4.நீங்கள் அந்த நேரத்தில் எடுத்தால் தானே அந்தச் சக்தி உங்களுக்குள் இணையும்.

இதற்கு நேரமில்லை… இது ஒரு சிரமம்…! என்று சொல்லிக் கொண்டு “சாமியிடம் கேட்டோம்… சாமி சரியாகும்…! என்று சொன்னார். ஆனால் எங்கே நடந்தது…?”

“நடக்கவில்லை…! சாமியாவது… பூதமாவது…?” என்று எம்மையும் பேசுகின்றார்கள்.

சாமியிடம் போய் என்ன ஆனது…? என்று கேட்கின்றார்கள். அவர்கள் ஆசையைத்தான் பெருக்கப் பார்க்கின்றார்கள். ஆக நடக்கவில்லை… என்று எம்மைத் திட்டுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் இதைச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் முதலில் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுத்து நலமாக்கிக் கொண்டு தான் வந்தேன். இப்பொழுது “உங்களாலேயே உங்களை நலமாக்க முடியும்…” என்ற உணர்வைக் கொண்டு வருகின்றேன்.

அதன் வழியில் உங்கள் தீமைகளையும் நோய்களையும் நீங்கள் நீக்கிக் கொள்ள முடியும். இப்பொழுது யாம் கொடுக்கும் இந்த வாக்கினை ஆசீர்வாதமாக ஏற்று… மன உறுதி கொண்டு உங்கள் வாழ்க்கையை வழி நடத்த இது உதவும்.

1.எந்த அளவிற்குத் தீமையை நீக்க வேண்டும் என்ற ஆசையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறன் கொண்டு வருகின்றீர்களோ
3.அந்த அளவிற்கு நீங்கள் அதைப் பெறுகின்றீர்கள்… தீமைகளிலிருந்து விடுபடுகின்றீர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் அருள் வழியில் வாழ இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆத்ம சுத்தி செய்யுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்.

Leave a Reply