
மனிதனின் நல்ல சிந்தனைகள் குறைந்து கொண்டே வருகிறது…
கடலிலே மின்னல்கள் தாக்கினால் மணலாக மாறுகின்றது. அதில் உள்ள ஆற்றலைப் பிரித்து யுரேனியமாக மாற்றுகின்றார்கள்.
நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அதனின் உணர்வின் தன்மை மாற்றப்பட்டு
1.இரண்டு நட்சத்திரங்களின் உணர்வுகளை எடுத்து
2.பாசிட்டிவ் நெகட்டிவ் என்று எதிர்நிலை கொண்டு வருகின்றார்கள்.
இதை அடக்குவதற்கு… (தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு)
1.நீரில் உள்ள ஹைட்ரஜனை (கன நீரை) அழுத்தத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது
2.உப்புச் சத்தின் உறைவால் இதில் எது சூடானாலும் நீர் என்ற நிலையாகி…
3.சேமித்து வைத்த நிலையில் அணு பிளக்காமல் (வெடிக்காமல்) தடுக்கப்படுகின்றது.
இதே போன்று ஒவ்வொரு உடலிலும் இந்த நீர் சக்தி உண்டு. அந்த ஹைட்ரஜன் தாக்கப்படும் பொழுது மனிதனை அழிக்கும் தன்மையாக வருகின்றது.
விஞ்ஞானிகளுடைய சிந்தனைகள் இப்படிச் செல்கின்றது அழிக்கும் உணர்வுகள் தான் அவர்களுக்கு வந்ததே தவிர… மனிதனை வளர்க்கும் நிலை இல்லை.
ஆனால் மனிதனை வளர்க்கும் நிலையில் ஞானத்தின் வழி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன். அவன் வழியில் பின் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பிரபஞ்சத்தில் நமது சூரியன் 27 நட்சத்திரங்களின் ஆற்றலைத் தனக்குள் கவரப்படும் பொழுது அதிலுள்ள விஷத்தைப் பிரித்து வெப்பம் காந்தம் என்று அனுப்புகின்றது.
வெப்பம் காந்தம் என்று வந்தாலும் காந்தம் கடைசியில் பிரிந்து செல்லும் வலுவிழந்த விஷத்தினைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது.
“ஆதியிலே…” வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலை எப்படி உருவானதோ அதே போல ஒரு இயக்கச் சக்தியின் அழுத்தமாகச் சூரியன் தனக்குள் உருவான பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரித்து வெப்பமும் காந்தமும் ஆக உருவாக்குகிறது.
1.விஷம் பிரிந்து வெகுதூரம் செல்வதற்கு முன் காந்தம் மீண்டும் கவர்ந்து
2.அந்த அழுத்தத்தைக் கொண்டு வரும் பொழுது மின் கதிர்களாக மாறுகிறது… வெயிலாக வருவது எல்லாம் அதுதான்.
பாதரசத்தின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இப்படி ஒன்றை எடுத்துக் கொண்ட பின் ஒன்று ஓடுவதும் பிரபஞ்சத்தை இப்படி இயக்கிக் கொண்டு இருக்கின்றது.
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் இரத்தங்களிலே கலந்த பின்
2.அதனதன் உணர்வுகளிலே மோதி அதனதன் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு
3.நமது உயிரும் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலையில் சூரியனைப் போன்றே
4.இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி அதை இயக்குகிறது.
விஞ்ஞான அறிவில் நீங்கள் இருப்பதால் உங்களுக்கு அதனுடன் இணைத்து மெய் உணர்வை அறிந்து கொள்வதற்கு இதை வெளிப்படுத்துகின்றேன் (ஞானகுரு).
அதே சமயத்தில் நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து எடுத்துக் கவர்ந்து கொண்டு வரும் அந்த அழுத்தமான உணர்வலைகள் மிகவும் கடுமையானது.. விஷத் தன்மை வாய்ந்தது.
சூரியன் தன் உணவுக்காக அதை எடுத்துக் கவரப்படும் பொழுது… பிரிந்து செல்லும் உணர்வைக் கண்ட பின் அழுத்தம் அதிகமாகி… வரும் பாதையில் இதைக் கண்ட பின் அஞ்சி நகர்ந்து ஓடுகின்றது.
அதாவது அழுத்தத்தால் மோதி விஷத்தினுடைய ஆற்றல் கொண்டு அதீதமான நிலைகள் பிரித்துச் செல்லப்படும் பொழுது “காந்தப் புலனறிவு” அதிகமாகின்றது.
1.இந்த அடர்த்திக்குள் அந்த விஷத்தின் தன்மை எடுக்கப்படும் பொழுது நியூட்ரான்…!
2.இந்தக் காந்தக் குவியல் ஒன்றாகச் சேர்த்து இணைத்துக் கொண்டால் நியூட்ரான்…!
3.இது ஊடுருவிச் செல்லப்படும் பொழுது இதைக் கண்ட பின் அஞ்சிப் பல பல விதங்களில் அணுக்கள் பல ரூபங்களாக மாற்றும் சக்தி வருகின்றது.
அதனால் தான் விஞ்ஞானி அதற்கு நியூட்ரான் என்று பெயரை வைக்கின்றான். புது விதமாக உருவாகுவதால் அந்தப் பெயரை வைக்கின்றார்கள் இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வான் வீதியில் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த உணர்வுகளை ஈர்த்துச் சேமித்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றான். இங்கே கொண்டு வந்து அதை வெடிக்கச் செய்யப்படும் பொழுது என்ன நடக்கிறது…?
அந்த விஷத்தின் ஆற்றல் காற்றிலே கலக்கப்படும் போது…
1.அதை நுகரும் உயிரினங்களின் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதிப் போர்முறையாகி…
2.சிந்தனை இழந்து விஷத் தன்மை கொண்ட நிலையில்
3.சுத்தமாகவே இந்த மனித உடலைச் சூனியமாக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றார்கள்.
கட்டிடங்கள் இருக்கும்… செடி கொடிகள் எல்லாம் இருக்கும். ஆனால் மனிதனை இப்படிச் சூனியம் ஆக்கிவிட்டால் “தன் இனத்தை… தன் நாட்டைக் காத்துக் கொள்ளலாம்…” என்று விஞ்ஞானக் கணிப்பு இன்று சென்று கொண்டிருக்கின்றது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.