
அமெரிக்கா மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் செயல்கள்
அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் உதவி செய்வது போல் செய்து மற்ற நாட்டைத் தனக்குக் கீழ் கொண்டு வரும் நிலையே உள்ளது.
உதாரணமாக வேப்ப மரம் என்பது நம் நாட்டின் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. வேம்பை மாரியம்மனுக்குச் சாற்றி ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள். எத்தனையோ இலட்சம் ஆண்டுகளாக வணங்கி வந்த நிலை.
இந்த வேப்பமரத்தின் உண்மை உணர்வுகள் கேன்சரை நீக்கவும் பல தீமையான கொடுமையான உணர்வுகளை மாற்றவும் உதவுகிறது. அதே போல் மஞ்சளும் வேப்ப மரத்தின் சத்தும் இரண்டும் உராயப்படும் பொழுது அதனால் சில சில விஷத் தன்மைகளை நீக்கும் சக்திகள் உண்டு.
உடலில் உள்ள சில தீமையான அணுக்களை மாற்றும் நிலை இதிலே உண்டு என்று அறிந்து கொண்டான் அமெரிக்கா. இரசாயணக் கலவைகளாக மாற்றி அதிலே சில குறைகளை அவன் கண்டு கொண்ட பின் அவன் வலிமை கொண்ட நாடாக இருப்பதால்
1.எங்கள் நாட்டில் வளர்ந்தது தான் அது…!
2.நீங்கள் அதிலே எந்தப் பொருள் செய்தாலும் எங்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று இப்படிக் கொண்டு வருகிறார்கள்.
இதைப் போன்று தான் அன்றைய அரசர்கள் ஒரு நாட்டில் மற்றொரு அவன் கேட்ட பொருளைக் கொடுக்கவில்லை என்றால் உடனே போர் தொடுத்து அவனை அடிமையாக்கித் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.
ஆக நல்லது செய்வது போல் பண்பு கொண்ட நம் நாட்டையும் பண்பற்றவர்களாக மாற்றுகின்றனர். அதே சமயத்தில் மதத்தின் அடிப்படையில் அமெரிக்கா வளர்க்கப்படும் பொழுது அவன் எந்த மதத்தைத் தழுவினானோ அந்த மதத்தின் உணர்வுகளை இங்கே நம் நாட்டுக்குள்ளும் கூட்டி தன் இனத்தை இங்கே பெருக்குகின்றான்.
1.மதம் என்ற நிலைகள் கொண்டு அவர்கள் கடவுளை முன் நிறுத்தித் தவறுகளைச் செய்கிறார்கள்.
2.அதே சமயத்தில் பரிவு கொண்ட மனம் கொண்டு உதவி செய்வது போல் காட்டி – ஐந்தாம்படைகளாக மாற்றிக் கொண்டு
3.இங்கிருக்கும் நல்லவைகளை எடுத்துச் சென்று இந்த நாட்டின் நிலைகளையே சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அன்றாண்ட அரசர்கள் போல் இன்றும் இதன் நிலைகளில் உலகையே அவனுக்குக் கீழ் அடிமைப்படுத்திக் கொண்டு வரப் பார்க்கின்றான். அவனுக்கு இணங்கிச் செயல்படுத்தவில்லை என்றால் தன் வலுவின் தன்மை கொண்டு அடிமைப்படுத்தும் உணர்வே வளர்ந்துவிட்டது… இன்றும் நடக்கின்றது.
அப்படி அடிமைப்படுத்தும் உணர்வுகள் தொடர்ந்து வரப்படும் பொழுது
1.எத்தனை கோடி தெய்வங்களை வணங்கினாலும் சரி மற்ற எத்தனை நிலைகள் செய்தாலும் சரி
2.அவன் கற்றுணர்ந்த ஆயுதங்களை நம்மிடம் பயன்படுத்தினால் நமது தெய்வமும் சரி
3.நம் நாட்டுப் பற்றும் சரி முழுமையாக அணைந்துவிடுகிறது… நஞ்சின் தன்மையாகி விடுகிறது.
4.சிந்திக்கும் தன்மையே இழந்துவிடுகிறது…!
5.இதைப் போன்ற சூழ்நிலையில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.