
தனக்குள் கூட்டிப் பெருக்கும் உணர்வு கொண்டு வாழ்க்கையில் எப்படி வளர வேண்டும்…? என்று காட்டுவதற்குத்தான் “பல்லாங்குழி விளையாட்டு”
என் வாழ்க்கைக்காகத் தொழில் செய்கின்றேன்… அதிலே எனக்கு இலாபம் இல்லை… நஷ்டமாகிறது…! என்ற வேதனையை எடுத்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை நஷ்டப்படச் செய்து இந்த உடல் உறுப்புகளும் நலிகின்றது.
1.வேதனை என்ற இருள் சூழும் பொழுது நம் சிந்திக்கும் திறனும் குறைகின்றது.
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுக்கும் தன்மை வருகின்றது.
3.தற்கொலை செய்யும் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
4.இந்த உடலை உருவாக்கிய உயிரை மதிக்காது உடலை அழித்துவிடும் எண்ணங்கள் வருகின்றது.
எதன் பால் இந்த உணர்வின் தன்மை பற்றாகியதோ தன்னால் முடியவில்லையே…! என்று எண்ணத்திலேயே வேதனையுடன் இறந்தால்
1.அவருடன் பழகியவர்கள் “அடடா…! நன்றாக இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணினால்
2.எண்ணியவர் உடலுக்குள் அவர் ஆன்மா சென்று பேயாக ஆட்டிப் படைத்து
3.நன்றாக இருப்பவரையும் மடியச் செய்யும். அதற்குத்தான் இது உதவும்.
இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மாறுதல் வேண்டும். நமக்கு எந்த ஆசை வேண்டும்…? பேய் மனம் இல்லாது அருள் மணம் நமக்குள் வர வேண்டும்.
இதைப் போன்ற நிலைகளை உணர்துவதற்குத்தான் அன்று பல்லாங்குழி விளையாடுவார்கள். அந்த விளையாட்டை அமைத்ததின் நோக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
1.தனக்குள் கூட்டிப் பெருக்கும் உணர்வு கொண்டு
2.தன் வாழ்க்கையில் எப்படி வளர வேண்டும் என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான் அந்த விளையாட்டை உருவாக்கினார்கள்.
அதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தனக்குள் இலாபத்தை ஏற்றிக் கொள்ளும் நிலை வருகின்றது.
வாழ்க்கையின் நிலையில்…
1.சந்தர்ப்பத்தால் ஒருவர் நான் தோற்றுவிட்டேன்… என்ற நிலைகள் வரும் பொழுது
2.உன்னைத் தோற்கச் செய்கிறேன் பார்…! என்ற நிலைகள் இருக்கக் கூடாது.
அதாவது அவனும் வளர வேண்டும்… அவன் சிந்தனையும் வளர வேண்டும்…! என்ற நல்ல எண்ணத்தில் பல்லாங்குழி விளையாண்டால் அந்தக் குழந்தை நன்றாக இருக்கும்.
ஆனால் பல்லாங்குழி விளையாடும் பொழுது நான் ஜெயித்து விட்டேன் என்று சொன்னவுடனே அடுத்தவர் தோற்றுவிட்டால் “நம்மைக் கேவலமாக நினைப்பார்களே…!” என்று முகம் வாடும்.
குழந்தையாக இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை அந்த விளையும் பருவத்தில் வரப்படும் பொழுது தோல்வியைச் சந்தித்த பின் வெறுப்பின் தன்மை வரும்.
1.ஆனால் ஞானிகள்… மனோதத்துவரீதியில்
2.மனிதன் தன்னைத் தான் எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்று தான் இதைக் கொண்டு வந்தார்கள்.
நாம் தொழிலைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் உணர்வுகளை வலிமையாக எடுத்துக் கொண்டு
1.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும்
2.நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெறவேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்டோர் நலம் பெறவேண்டும் என்றும் இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஞானிகளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது. மாறாக எண்ணங்களை மாற்றிவிடுகின்றனர்.
ஆனால் நாம் நுகர்ந்ததை எல்லாம் நம் உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது. அதை மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது உருவான அந்த அணுவின் தன்மை தன் இனத்தைப் பெருக்கிவிடுகின்றது.
1.இது தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…
2.மூஷிகவாகனா…! நாம் சுவாசித்தது எதுவோ (நம் மூச்சு) அதன்படித் தான் இந்த வாழ்க்கையில் நடக்கின்றது.
ஒருவரை நாம் அடிக்கடி வேதனைப்படும்படிச் செய்து அதைப் பார்த்து ரசித்தால்… நமக்குள் அந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி… நமக்கும் அதே வேதனையை உருவாக்கிவிடும். தப்ப முடியாது.
நாம் நினைக்கின்றோம் தப்பிவிட்டோம் என்று. இந்த உடலில் கடும் நோய்களாகும் பொழுது அது முன் சேர்த்துக் கொண்ட வினை…!
அந்த வினைகள் இருப்பினும் நாம் அதைக் கடந்து அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இருளை மாற்றும் திறனைப் பெற வேண்டும்.
ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைக் கூட்டினால் பழைய தீய வினைகள் அனைத்தும் அகன்று அது சுத்தமாகின்றது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.