தேடிச் சென்றால்… நம்மை நாடி வரும்… கோடிக் கோடி…

Eswara

தேடிச் சென்றால்… நம்மை நாடி வரும்… கோடிக் கோடி…

 

“நீ (ஞானகுரு) வேதனையை அறிகின்றாய்…!: அதே போல நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் அடியின் தன்மை உனக்கு எப்படி வருகின்றது..?

உதாரணமாக ஒரு பாசத்தால் அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. நீங்கள் தமாஷாக அடித்துப் பாருங்கள், கோபம் வருகிறதா…? என்று பார்க்கலாம்,

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும்போது
1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்
2.இந்த உணர்வுகள் மாறும்.

ஈஸ்வரபட்டர் எனக்குக் காட்டும் நிலைகள் கொண்டு, அவர் என்னை அடிக்கப்படும்பொழுது, அந்த உணர்வின் தன்மை, “எது…?”

“அடித்தவுடன் சிரிப்பார்… சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்…!”

உனக்குள் எத்தனை கோடி உணர்வுகள் சேர்த்து நான் அடிக்கும்.. அதாவது அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை,
1.என் (ஈஸ்வரபட்டர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும்
2.அந்த நினைவால் கலந்த உணர்வும் உன்னுடன் எப்படி அது சேர்ந்து
3.அண்டத்தை எப்படி அறிகின்றாய் என்று நீ பார்…! என்று குரு காட்டுகின்றார்.
4.நீ அண்டத்தை அறிந்துவிடு…!

மனிதனின் உணர்வுக்குள் நீ அருள் ஞானத்தைப் சொல்லைப் பாய்ச்சிவிடு, அங்கே கிளரும் உணர்வின் தன்மை நுகர்ந்தறி, நுகர்ந்தறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும், ஆனால் அவனை மாற்ற முடியாது”.

1.ஒரு செடியின் நிலைகள் காரத்தின் தன்மை கொண்டதோ கசப்பின் தன்மை கொண்டதோ அதன் நிலை மாறாது.
2.அதைப்போல அவரின் உணர்வின் தன்மை மாறாது,
3.மாறாத நிலைகள் கொண்டு நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும்
4.ஆனால் இதை எவ்வாறு மாற்றுவது…? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப்போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுத்து “விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது…? என்றும் இது கோடி உணர்வுகள் சேர்த்து உணர்வின் நிலைகள் என்று அவர் சொல்வார்,

1.“கோடி…கோடி” “கோடி….கோடி” “கோடி…கோடி”, என்ற நிலையில்
2.தேடித் தேடி… தேடித் தேடி…! இதை நான் பெற்றேன்
3.கோடி…கோடி என்ற நிலைகளில் தேடித் தேடித் தேடிச் சென்று பெற்றேன்
4.உன்னை நாடி…நாடி…நாடி வருகின்றது…!
5.ஆனால் நீ தேடித் தேடி அதைப் பெறவேண்டும்…! என்று இப்படிச் சொல்வார்.

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோமென்றால் இப்படி என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…!” என்று இப்படிச் சொல்வார்.

ஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் சூட்சமம். இது அனைத்தும் சூட்சமம் தான்.

இந்தப் பொருள் காணும் தன்மை இந்த கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது…? என்ற நிலையைத்தான் இந்த கோடியின் நிலைகளை
1.நீங்கள் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாக,
2.குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன்.
3.அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும்
4.அவர் (ஈஸ்வரபட்டர்) பிறவா நிலைகள் பெற்ற நிலையில்
5.நாமும் பிறவா நிலைகள் அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.

Leave a Reply