
மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறியக்கூடிய பேரண்ட மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்
ஈ… கொசு… மனிதனின் தலை முடி… இவைகளில் ரேடியத்தைத் தடவி அன்று வல்லரசுகள் எப்படி ஒருவருக்கொருவர் அடுத்த நாட்டு இராணுவ இரகசியங்களை வேவு பார்த்தனர்…?
இரகசியமாக நடக்கும் கூட்டங்களில் அங்கே அவர்கள் பேசுவதைப் பல மடங்கு பெருக்கி அவர்கள் பேசுவதை எல்லாம் எப்படி அறிந்து கொண்டார்கள்…? என்று
1.அவர்கள் வேவு பார்ப்பதை நம் ஞானகுரு உணர்ந்துள்ளார்.
2.அவர் படிக்காதவர் தான்…!
3.ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எத்தகைய நுண்ணிய நிலைகளையும் அறியும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.
அறியாமல் இயக்கும் அத்தகையை தீமைகளிலிருந்து விடுபட அவர் பெற்ற அந்த அருளாற்றல்களை எல்லாம் நாமும் பெறும் வண்ணமாக அருள் ஞான உபதேசங்களாகப் பதிவு செய்கின்றார்கள். இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால்
1.நாமும் 2000 சூரியக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு
2.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் ஆற்றலை வளர்த்து அவர்களுடன் தொடர்பு கொண்டு
3.விஞ்ஞானத்தால் வரும் எத்தகைய விஷத் தன்மைகளையும்
4.எத்தகைய நுண்ணிய நிலைகளில் அவர்கள் செயல்பட்டாலும் அதை அகஸ்தியன் உணர்வைப் பாய்ச்சி முறியடித்து
5.நம்மையும் காத்து உலகுக்கு வழி காட்டியாகவும் நாம் ஒவ்வொருவரும் வளர முடியும்.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அத்தகைய வேவு பார்க்கும் உணர்வுகள் (ELECTRONIC) வளர்ச்சி அடைந்து வளர்ச்சி அடைந்து அதிக அளவில் பெருகி இன்று டி.வி… கம்ப்யூட்டர்… ஃபோன்… மூலம் மனித இனத்தையே புத்தி பேதமாக்கும் அலைகளைப் பரவச் செய்துள்ளார்கள்.
அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதை ஞானகுரு அவர்கள் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.