“கங்கா சேர் வான்”

 

Lord siva, Ganga.jpg

“கங்கா சேர் வான்”

குழம்பு வைக்கும் பொழுது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளைச் சேர்த்து ருசியாக ஆக்குகிறோம்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேருகின்றது. அப்பொழுது அந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது.

அப்படிக் கலந்த தீமையான உணர்வுகளை நீக்கவில்லை என்றால் நம் நல்ல குணங்கள் வலு குறைந்துவிடும். அதை மாற்றியமைக்க வேண்டுமல்லவா.

அதற்காகத்தான் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது நல்ல அணுக்களாக மாற்றிவிடுகிறது.

1.நல்ல அணுக்களை மீண்டும் வலுப் பெறச் செய்ய வேண்டும் என்றால்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதற்கு மேல் சேர்த்து மாற்ற வேண்டும்.
3.தீமையான உணர்வுகள் நமக்குள் இரண்டறக் கலந்ததை அடிமையாக்க வேண்டும்.
4.“கங்கா சேர் வான்…” மாதிரி நாம் செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் ஒவ்வொரு உணர்வு வரும் போது “அணுவுக்குள் அணு…, ஓமுக்குள் ஓ…ம்…ஓமுக்குள் ஓ…ம்” என்று ஒவ்வொன்றும், பிரணவ தத்துவத்தைக் கொண்டு வருகிறது.

அந்தப் பிரணவத் தத்துவம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுவையும் நுண்ணிய அணுக்களாக மாற்றி மாற்றி அந்த உணர்வின் தன்மை கொண்டு சேர்த்துதான் உடலாக மாற்றுகிறது.

இந்த உடலின் அணுக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான் அதற்குத்த் தக்க மனித உறுப்புகளை உருவாக்கும்.

மனித உறுப்புகளை உருவாக்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக விஷத் தன்மையை நாம் மனித உடலில் உள்ள அணுக்களை மாற்றினால் ரூபங்களை மாற்றி அதற்குத் தக்கவாறு உண்டாக்கிவிடும்.

நாம் புழுவிலிருந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்க இந்த உறுப்புகள் மாறுகிறது. அப்படிப் படிப்படியாக வரும்போது எல்லாவற்றையும் கழிக்கக்கூடிய உடலின் உறுப்புகள் அமைகின்றது.

இந்த உறுப்புகள் உடலில் அமைந்தபின் நாம் அந்த அருள் ஒளியை, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். “உயிர் ஒளியானது” ஒவ்வொன்றிலும் தனுஷ்கோடி.

1.எல்லாவற்றையும் சேர்த்து
2.உயிர் எப்படி ஆனதோ ஒன்றாக அமைத்ததோ
3.இதுதான் “தனுஷ்கோடி” என்று சொல்வது.

இப்பொழுது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா…?

அதுதான் கோடிக்கரையில் இருக்கிறோம். எல்லாவற்றையும் இந்த கோடிக்கரை என்று ஒன்றாகச் சேர்கக வேண்டும் என்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். நேரமாகிவிட்டது என்று இராமன் என்ன செய்கிறான்? மணலைக் கூட்டிச் சேர்க்கிறான்.

இது ஒரே நாளில் முடியுமோ…?

இந்த கோடிக்கரையில் இருந்து நாம் எல்லாவற்றையும் உயிரைப் போன்று உணர்வின் ஒளியாகி நீங்கள் எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற உணர்வை என்னுடன் இணைத்து விடுகின்றது.

உங்களில் தீமை என்ற உணர்வை நீக்கத்தான் அருள் ஒளி என்ற உணர்வை உங்களில் சேர்க்கிறோம் அதே சமயத்தில் “எல்லோரும் அதைப் பெற வேண்டும்” என்று எண்ணுகிறோம்.

1.அவர்கள் அதைப் பெற்றால் பரவாயில்லை.
2.பெறவில்லை என்றால் “அவர்கள் பெற வேண்டும்” என்ற உணர்வு என்னுள் உள்ளது. என் உடலுக்குள் அந்த உணர்வுகள் பெருகுகின்றது.
3.நீங்கள் பெற வேண்டுமென்று யாம் எண்ணுகிறோம். இந்த உணர்வுகள் எனக்குள் வளர்கிறது.

ஒருவர் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிடவேண்டும்.

1.அதாவது… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்
3.எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு,
4.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்,
5.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது… “இந்த உணர்வு நமக்குள் வருகிறது”.
6.முதலில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவாகிறது. இதனுடன் கலந்து இதை யாம் இப்படி மாற்றிவிடுகின்றோம்.
7.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்து விடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றி விடுகிறோம்.
8.இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழி வேண்டுமல்லவா…!
9.பிறருடைய தீமை செய்யுன் உணர்வுகள் அது கலந்தவுடன் அதை மாற்றிவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.
10.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.
11.ஒன்றில்லாது ஒன்றில்லை. எதுவுமே, ஒன்று இணைந்தால்தான், அது வளரும்.

ஏனென்றால்… வடதுருவத்தில் இருப்பது இழுக்கும். தென் துருவத்தில் இருப்பது தள்ளும். ஏனென்றால்… தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது. வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.

காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.

இதை போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொன்றிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அப்படிச் சேர்க்கும் பருவத்தை ஏற்படுத்துவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அழுக்கு நீர் குறைந்து கடைசியில் முழுவதும் நல்ல தண்ணீராக மாறிவிடும்.

அதைப் போன்று தான் நம் உடலில் உள்ள இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை கலந்து கொண்டே இருக்க வேண்டும். நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலை உருவாக்கிய அணுக்கள் ஒளியின் அணுக்களாக மாறும். ஒளியின் சரீரம் பெற

முடியும். அந்த மகரிஷிகள் சென்று அடைந்த எல்லையை நாம் எளிதில் அடையலாம்.

இது எல்லோராலும் முடியும்.

Leave a Reply