நொச்சி இலையின் பயன்கள் (தபோவனம்)

நொச்சி மரத்தை உங்கள் வீடுகளிலேயும், அக்கம்பக்கம் உள்ள வீடுகளிலும் வளருங்கள்.

தபோவனத்திற்கு வரும் பொழுது நோச்சிக் குச்சியை எடுத்துக் கொண்டு போய் ஊன்றி உங்கள் வீடுகளில் வளருங்கள். ஏனென்றால், அந்த மரத்தில் தியானம் பண்ணி வைத்திருக்கின்றோம்.

அந்த நொச்சி இலையை நான்கு அல்லது ஐந்தைப் போட்டு, நன்றாகக் காய்ச்சி அந்தச் சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில் இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே வந்துவிடும்.

காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும் உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.

அதே போன்று தும்மலுக்கு, மூக்கில் தோடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு வேறு ஒன்றும் வேண்டியதில்லை. மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை பச்சையாகப் போட்டு புகை போடுங்கள், அதை நுகருங்கள். சரியாகப் போகும்.

ஆஸ்த்மாவிற்கு, சரவாங்கி நோய்க்கு, வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே சரியாகும்.
தபோவனத்திலிருந்து நொச்சி மரக்குச்சியை வீட்டில் நட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நொச்சி மரத்திலே சில சக்திகளைப் பாய்ச்சி வைத்திருக்கின்றேன். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Reply