
உடல் உபாதைகளை அகற்ற உங்களுக்கெல்லாம் சில நிலைகளை உணர்த்துகின்றேன்
1.வெள்ளாடு நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்றது.
2.விஷத்தைத் தன் உடலாக்கி நல்ல நிலையை அது வெளிப்படுத்துகின்றது.
அதன் புழுக்கையை எடுத்து நன்றாகக் காய வைத்து ரொம்பக் கொதிகலனாகாதபடி சிறு வெப்பத்தின் நிலைகள் கொடுத்து அந்த ஆவிகள் வெளிவரும் பொழுது அதை நுகர்ந்து பாருங்கள். அதைச் சுவாசித்து உடலுக்குள் அந்த மணம் செல்லும் பொழுது மருந்து சாப்பிடுவது போன்று விஷத்தை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றது.
டி.பி. ஆனாலும் கேன்சர் ஆனாலும் கடும் நோயாக இருந்தாலும் இருதய வாயில்களில் அடைப்பானாலும் சிறிது நேரம் அதிகமாகச் சுவாசித்துப் பழகுங்கள். இரத்த நாளங்களில் இது கலக்கும்.
அதனுடன் சேர்த்து உங்கள் உயிரான ஈசனிடம் ஈஸ்வரா என்று வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
3.எங்கள் உடலுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று அந்த அருள் சக்திகள் வளர வேண்டும்.
4.எங்களை அறியாமல் இயக்கும் இந்த உடல் உபாதைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்.
ஆஸ்மா போன்ற நோய்கள் எல்லாம் பரம்பரையாக வருவது. சர்க்கரைச் சத்தும் இது போன்று பரம்பரையாக வந்து கொண்டிருக்கின்றது.. பிறந்த குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து இருக்கிறது என்று சொல்கின்றார்கள்.
நான்கு வயது மூன்று வயது குழந்தைகளுக்குக் கூட இன்சுலின் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தாய் வழியில் பரம்பரையாக. வருவதனால். காசு பண வசதி இருக்கும் வரை போடுகின்றோம். காசு இல்லை என்றால் விட்டு விடுகின்றோம்.
அதற்குப்பின் இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று இறந்து விடுகின்றார்கள். இதே உணர்வை மீண்டும் எண்ணி எடுக்கப்படும் பொழுது அடுத்தவர் உடலிலும் இப்படி வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதைக் குறைக்கும் வழி இல்லை.
கோவிலுக்குச் சென்றேன் சாங்கியங்களைச் செய்தேன். பாவத்தை போக்கக் காசைக் கொடுத்துவிட்டு செய்யும் நிலைகள் தான் இருக்கின்றது. இது எல்லாம் நம் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
வளர்ச்சி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுவானதை நுகர்ந்து நுகர்ந்து… அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டதோ
1.அந்த உணர்ச்சிகள் வளர்ச்சியான பின் அந்த வலுவான உடலில் அது புகுந்து அந்த ரூபமாக மாறுபட்டு எப்படி வருகின்றதோ
2.இதே போல் மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற ஞானிகள் அருள் உணர்வுகளை எடுத்து நாம் வளர்த்துக் கொண்டால்
3.இதன் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று உணர்வை ஒளியாக மாற்றிவிட்டு பத்தாவது நிலையான முழுமை அடைகின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.