
“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்
தும்கூர் அருகே ஒரு மலைக் காடு இருக்கின்றது… கரடி இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் உலக அனுபவம் பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் சுற்றிக் கொண்டு வந்த இடத்தை எல்லாம் காட்டி
1.இந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த உணர்வை நுகந்தால் நீங்களும் எப்படி உலகை அறிய முடியும்…? என்ற காட்சிகளைக் கொடுத்தேன்.
ஆரம்பத்தில் குரு வழியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு (சத்தியத்தின் சக்தி நிலை) அதைக் காட்டித்தான் செயல்படுத்தியது. அதே போன்று
1.ஐவர் மலையில் பழைய காலக் குகைகள் எப்படி இருக்கின்றது…?
2.அங்கிருக்கக்கூடிய சில உண்மைகளையும் பிரார்த்தனை பண்ணித் தெரியும்படி செய்தேன்.
3.அந்த இடத்தில் மின்கதிர்கள் பாயப்படும் பொழுது அது எப்படி…? என்றும்
4.மின் ஒளிகள் எப்படியெல்லாம் அங்கே வருகின்றது…? என்றும்
5.அங்கே ஒளி வட்டங்களை எல்லாம் சுற்றும்படி செய்தேன்.
இத்தனை வேலைகளையும் செய்தேன். ஆரம்பத்தில் இதை எல்லாம் செய்து காட்டினாலும்… ஒன்றுக்கும் பயனில்லாது போய்விட்டது. இதெல்லாம் மனித உடல் இச்சைக்குத்தான் சென்றது.
பல அற்புதங்களைக் காட்டினாலும் உடல் ஆசை வந்து விடுகின்றது. “நான் தெரிந்து கொண்டேன்…!” என்ற நிலை வந்து விடுகின்றது,
அதை எல்லாம் விடுத்து விட்டு இப்பொழுது உங்களை அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்கின்றேன்.
1.சிறிது பேராவது நீங்கள் தயாராகி விட்டால்
2.கோடிக்கணக்கான மக்களை நல் வழியில் நீங்கள் வளர்க்க முடியும்.
அருள் உணர்வு கொண்டு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஞாபகப்படுத்துகின்றேன். காரணம் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம் இந்த உடலுக்குப் பின் நாம் எந்த நிலை அடையப் போகின்றோம்…? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். அந்த நிலை அனைவரும் பெற வேண்டும்.
செல்வம் எவ்வளவு தேடி வைத்திருந்தாலும் அதைத் தட்டிப் பறிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. கடைசியில் தேடிய சொத்தெல்லாம் போய்விட்டதே என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.
இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… பேரருளை எப்படியும் நாம் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் தயாராகி விட்டால் எனக்கு கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கும். இல்லையென்றால் நான் இன்னும் சிரமம்தான் பட வேண்டி வரும்.
அந்தச் சிரமத்திலிருந்து நான் மீள்வதற்கு
1.ஒவ்வொருவரும் உங்கள் பார்வையில் சர்வ பிணிகளும் போக வேண்டும்
2.உங்கள் பேச்சு மூச்சும் பிறருக்கு நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.
3.மற்றவர் குடும்பத்திலே சிக்கலை நீக்கக் கூடிய சக்தியாக வளர்ச்சிக்கு வர வேண்டும்.
மற்றவர்களால் முடியவில்லை என்கிற பொழுது… தியானம் செய்யக்கூடியவர்கள் செயல்படுத்தி உங்கள் பார்வையால் மூச்சால் எல்லா வகைகளிலும் மற்றவருக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.
அந்த நிலையத்தான் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்…!
இதில் “நான் பெரிது… நீ பெரிது…” என்ற நிலை இல்லாதபடி
1.எல்லோரையும் பெரியவராக்க வேண்டும் என்று உணர்வுக்கு வரவேண்டும்… அதன்படி நாமும் அந்த உயர் நிலை பெற முடியும்.
2.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் நாமும் உயர்கின்றோம்.
இதிலே சிறு குறை கூட வராதபடி குரு காட்டிய அருள் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டும். அதைத்தான் நாம் செய்து கொண்டு வருகின்றோம்.
பல அற்புதங்களையும் நிகழ்ச்சிகளையும் காட்டத் தொடங்கினால் இந்த ஞானத்தையே கடைசியில் பேச முடியாதபடி அது தடையாகிவிடும்.
எமது அருள் உபதேசங்கள் ஒலி நாடாக்களில் வெளி வருகின்றது.
1.கூடுமான வரையிலும் ஒவ்வொருவரும் அதை எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
2.இந்த உணர்வின் ஞானம் உங்களுக்குள் வரட்டும்.
3.உணர்வின் தன்மை ஆழமாகப் பதிவாகும்… உங்களுக்குள் மெய் ஞானம் வளரும்.
காலங்கள் மிகக் குறுகியதாக இருக்கின்றது அதற்குள் நாம் அனைவரும் வளர்த்து தயாராக வேண்டும். அழியாச் செல்வமான ஒளிச் சரீரம் பெறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்குத் தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.