October 2025 உபதேசம்

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம். ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு கோவிலிலும் ஓ..ம் போட்டு வைத்திருக்கின்றார்கள்… அங்கே பிரசாதம் வைத்திருக்கின்றார்கள். மற்ற எத்தனையோ நிலைகளைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

கூடுமான வரையிலும் அங்கே சென்று தெய்வத்தை வணங்குகின்றோம். ஏன் வணங்குகின்றோம்…? எதற்காக வணங்குகின்றோம்…? எப்படி வணங்குகின்றோம்…? அப்படி வணங்குவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கிறது…? என்பதை யாரும் சொல்லித் தரவில்லை.
1.உனக்குக் கஷ்டம் வந்தால் தெய்வத்திடம் உன் குறையை எல்லாம்… முழுவதையும் சொல்லிவிடு.
2.அதைச் சொல்லி மனம் உருகி அழுகும் பொழுது அந்தத் தெய்வம் உதவி செய்யும் என்று தான் சொல்லி வைத்திருக்கின்றனர்.
3.எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் என்றால் எங்கேயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். எங்கேயோ இருந்து நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்கின்றதே தவிர அந்த ஈஸ்வரன் யார்…? என்று அறியவில்லை.

ஓம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… அது தான் ஜீவன்… “ஜீவன் உள்ளது…” என்று எல்லோரும் வாதிடுகிறார்கள்.

உதாரணமாக… ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். நான் பாசமாக இருக்கின்றேன் என்னிடம் இருக்கும் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது அவன் படக்கூடிய துன்பத்தைக் கண் பார்க்கின்றது
1.அதே சமயத்தில் அவன் வேதனைப்பட்டு வெளிப்படுத்துவதை என் கண் இழுக்கின்றது.
2.அதைச் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எனக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… உடலில் வேதனையாகின்றது. அவன் வேதனை தாங்காது வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய காந்த சக்திகள் அதைத் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

அந்தப் பையனை எண்ணி… “அவன் வேதனைப்படுகின்றானே…” என்று கண்ணிலே பார்த்தவுடனே அந்தக் கண் அதே உணர்வலைகளை எனக்குள் இழுக்கின்றது.

நான் இப்பொழுது பேசுகிறேன் என்றால்… “இந்த மைக்..” நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுக்கின்றது. அதே போல் அந்தப் பையன் இடக்கூடிய சப்தத்தை என் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கின்றது… அந்த உணர்வின் ஒலியைத் தட்டுகிறது.

கண் பார்க்கின்றது… கரு விழி பார்த்தாலும் அந்த அலைகளை இழுக்கின்றது. கரு விழியில் படம் தெரிகின்றது கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த அலைகளை இழுக்கின்றது. அதை இழுத்த உடனே நான் சுவாசிக்கிறேன்.

நல்ல குணம் கொண்டு நான் போகும் பொழுது இந்தப் பையன் கீழே விழுகின்றான். பார்த்தவுடனே அவன் வேதனைப்படுவது எனக்குத் தெரிகின்றது. வேதனையால் வெளிப்படுத்தும் ஒலியைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து எனக்குள் கொண்டு வந்து வைக்கின்றது.

ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்புச் செய்கின்றார்கள் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்கின்றது. இங்கே நாம் வீட்டிலே அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அங்கே வெளிப்படுத்தக்கூடிய ஒலி அலைகளை… பாடல்களை இங்கே ரேடியோவில் பாடுகின்றது… நாம் கேட்கின்றோம்.

இது விஞ்ஞானம்… செயற்கையில் செய்தது. அதற்கு ஜீவன் இல்லை… ஒலி அலைகளை மட்டும் எடுத்துக் கொள்கின்றது.

1.ஆனால் நான் பார்த்த… அந்த வேதனையான உணர்வலைகள் உயிரிலே படுகின்றது.
2.சுவாசித்து இழுத்து உயிரிலே பட்ட பின் அவனிடமிருந்து வெளிப்பட்ட
3.வேதனையான உணர்வின் சக்தி என் உயிரிலே பட்ட பின் “ஜீவன்…” பெறுகின்றது.
4.அதற்குப் பெயர் தான் ஓ… என்று சொல்வது.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பை மூட்டி வைத்தால் தண்ணீர் சூடாகிக் கொதித்து “தத… புதா…” என்று சத்தம் போட ஆரம்பிக்கின்றது.

காரணம் அது கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியிலே படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் அதிலே பட்ட பின் இழுத்து அந்தச் சப்தத்தைக் கொண்டு வருகின்றது. இது இயற்கை…!

தண்ணீர் தான்… ஆனால் “தத… புதா…” என்று சத்தம் போடுகின்றது. அப்படிக் கொதிக்கும் நேரத்தில் நாம் எந்தப் பொருளை (பலசரக்கை) அதனுடன் இணைக்கின்றோமோ அந்த வாசனை வெளி வருகின்றது.

ஏனென்றால்
1.கொதிக்கும் பொழுது கலந்து ஆவியாக வெளியே அனுப்பும்போது அதைச் சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து கொண்டு வருகின்றது.
2.என் கண்ணிலே பார்த்தவுடனே… சத்தியபாமா உண்மையை எடுத்து இழுத்து எனக்குள் உணர்த்துகின்றது.
3.என் உயிருக்குள் பட்ட உடனே அது பிரணவம்… ஜீவன் பெறுகின்றது.
4.ஆக… உயிர் அங்கே எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உயிர் நெருப்பு.

விஞ்ஞானம் எப்படி இருக்கிறது…? மெய் ஞானம் எப்படி இருக்கின்றது…? இயற்கை எப்படி விளைகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜனகச் சக்கரவர்த்தி அவர் உழுகும் பொழுது அதிலிருந்து ஒரு பெண் குழந்தை கிடைக்கின்றது. அதைத் தத்துக்கு எடுத்துத் தன் குழந்தையாக அவர் வளர்க்கின்றார்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால் சூரியன். மற்ற உணர்வுகள் விஷத் தன்மையைப் பெற்ற பின் அந்தத் தீமைகளை அகற்றி நல் உணர்வைச் சமைக்கும் தன்மை பெற்றது.

நாம் என்ன செய்கின்றோம்…? உழுது பயிரிட்டு நமக்கென்று நல்ல சத்துள்ள பொருள்களை விளைய வைக்கின்றோம்.

அதனால் தான் உழுகும் பொழுது கிடைத்தது குழந்தை என்று சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் இராமாயணத்தில் அக்காலத்தில் இதைத் தெரியப்படுத்துகின்றனர்.
1.உழுது பயிரிட்டால் தானே நல்ல பயிரினங்களை விளைய வைக்க முடியும்.
2.உழுகவில்லை என்றால் தன்னிச்சையாக என்னென்னமோ விளைந்து விடுகின்றது அல்லவா…!

மனிதனை வளர்க்க ஜனக சக்கரவர்த்தி உழுது பயிரிடும் நிலையிலிருந்து அந்தச் சத்தை எடுத்து வைத்திருக்கின்றது… சூரியனின் காந்த சக்திகள்.
1.இந்த உயிர் வாழும் மக்களை உயர்த்த எண்ணுகிறது
2.மனிதனைக் காக்க எண்ணுகிறது என்ற இந்த உண்மையைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.தீமையற்ற நிலை அது.

காவியப்படி அந்தக் குழந்தை வளர்ந்த பின் அதற்குத் திருமணம் வைப்பதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார்கள். அங்கே அவரவர் திறமைகளைக் காட்டுகின்றார்கள்.

தன்ன்னுடைய வில்வித்தைகளை எல்லாம் காட்டுகின்றார்கள். வில்லை எடுத்து நாணை ஏற்றி அம்பால் குறி வைத்துத் தாக்குகின்றார்கள். குறி வைத்துத் தாக்கும் பொழுது அவரவர் திறமைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

1.ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?
2.அவனுடைய வல்லமையை எப்படிக் கொண்டு வருகின்றான்..?
3.பிறருக்குத் தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்.

வில்லில் நாணை ஏற்றி அம்பைப் பாய்ச்சினால் தானே பிறரைத் தாக்க முடியும். அந்த வில்லையே ஒடித்து விட்டால் எதிலே அம்பை எப்படி ஏற்ற முடியும்..? அதை எப்படிப் பாய்ச்ச முடியும்..? அப்பொழுது அது பிறருக்குத் தீங்கு செய்யாது.

தீமை செய்யும் அந்த வில்லையே இராமன் முறித்துவிடுகின்றான்.
1.அதனுடைய உட்பொருள் என்ன என்றால்
2.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்களைத் தனக்குள் நீக்குகின்றான்.

கோவிலில் என்ன செய்கிறோம்…?

பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் தனக்குள் இருப்பதை ஒடித்துவிட்டு அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறார்கள். “எல்லோரும் அப்படி எண்ண வேண்டும்…” என்று உணர்த்துகின்றார்கள்.

1.தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்துவிட்டால் எல்லோரையும் அரவணைக்கும் சக்தியாக வருகின்றது. அது தான் கல்யாணராமா.
2.எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்த எண்ணங்கள் நமக்குள் வர வேண்டும்.
3.கோவிலுக்குள் சென்றால் நாம் இப்படித்தான் எண்ணி எடுக்க வேண்டும்.

நம் ஞானிகள் கொடுத்த காவியங்களுக்குள் அத்தனை பேருண்மைகள் உள்ளது.

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

 

மரத்திற்கு வேண்டிய உரத்தைப் போடுகின்றோம். அதை ஏற்றுக் கொண்டு நல்ல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில் சில நச்சுத்தன்மைகள் அந்த மரத்தினுடைய வேரிலே பட்டு அது ஊடுருவி விட்டால் அந்த விழுதிலே நஞ்சு கலந்து மரம் கெட்டு விடுகிறது.

இதைப் போல
1.நம்மை அறியாமல் இருளான உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது
2.அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இட்ட அந்த உணர்வின் சத்தான நிலைகள் உண்டு.
3.அந்தச் சத்தைத்தான் உங்கள் உணர்வுகளுக்குள் ஏற்றிக் கொடுக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எது எல்லாம் உங்களுக்குள் தேய்மானம் ஆகிச் சிந்திக்க முடியாமல் இருந்ததோ சிந்தித்துச் செயல்பட முடியாமல் இருந்ததோ
1.அதை மாற்றியமைக்க மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
2.செவிப்புலன் கொண்டு கேட்கச் செய்கின்றோம்.

எனக்கு என் குருநாதர் எப்படி உண்மைகளைக் காட்டினாரோ அதைப் போன்று தான் உங்களுக்கும் சொல்கிறோம்.

எந்தெந்த நல்ல மனதுடன் எல்லோருக்கும் நன்மைகளைச் செய்தீர்களோ… பிறருடைய துன்பத்தை இழுத்து உங்கள் நல்ல குணத்தைச் செயல்பட முடியாதபடி உங்கள் உடலுக்குள் தொல்லையும் துன்பமும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ…
1.அந்தத் துன்பத்தை நீக்க நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி உங்களை இந்த அருள் உணர்வைக் கேட்கும்படி செய்து
2.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற உணர்ச்சியின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.அந்த உணர்வாலே சுழன்று கொண்டிருந்த விஷத்தின் தன்மை நீங்கி
4.மெய் ஒளியின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து நீங்கள் இழுத்துச் சுவாசித்து
5.அந்தச் சத்தான நிலைகள் பெற்று உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றி
6.குருநாதர் எப்படி ஒளியின் சரீரமாகச் சென்று விஷம் தனக்குள் எதுவும் அணுகாத நிலை பெற்றாரோ
7.எனக்கு குருநாதர் காட்டிய அந்த நிலையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்து கொள்கின்றோமோ… நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் நாம் அறியாதபடி அந்த உணர்வுக்குள் விஷம் பட்டு விஷத்திலிருந்து எழ முடியாத நிலைகள் வந்து விடுகின்றது.

அந்த விஷத்தை நீக்கும் ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆவலில் தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்வதற்குத் தியானத்தின் முறையை குருநாதர் எனக்கு எப்படி வழி காட்டினாரோ அதே வழியில் நீங்களும் தியானத்தைச் செய்து கொண்டால் இந்த காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும்.

மரத்திற்கு உரமான சத்தைக் காட்டிய பின் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றில் மறைந்திருக்கும் தன் சத்தினை எடுத்துத் தான் எப்படி வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றே
1.உங்கள் நல்ல உணர்வின் தன்மையைக் காக்க மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நீங்கள் சுவாசித்து
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காத்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் மூச்சுக்குள் உடலுக்குள் நலமும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும் நிலையும் ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெறும் நிலையும்
4.இந்த உடலிலிருந்தே உயிரின் தன்மை உணர்வுகள் ஒளியாக மாறி
5.என்றும் பதினாறு என்ற ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை நீங்களும் பெற முடியும்.

அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு விண் சென்றார்களோ அதே போன்று நீங்களும் அந்த மெய் ஒளியின் சுடரின் நிலைகள் கொண்டு அந்த மெய் வழியில் செல்லக்கூடிய தகுதியைப் பெறுவீர்கள்.

குருநாதர் காட்டிய வழியில் தான் யாம் உங்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு அழுக்குத் தண்ணீரில் நந்நீரை விட்டது போல் உங்கள் கண்ணின் நினைவினை எல்லா உறுப்புகளிலும் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்யுங்கள்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.சிறுகச் சிறுக உடல் உறுப்புகள் அனைத்திற்கும் உணவாகக் கொடுக்கும் அந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் எலும்புக்குள் இருக்கும் எலும்பை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எங்கிச் செலுத்துங்கள்.
1.இப்பொழுது எலும்புகளில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் வரும்.
2.கூச்சப்படுவது போன்ற உணர்ச்சிகள் தோன்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர்ந்து ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் உணர்வினைச் செலுத்துங்கள்.

எக்ஸ்ரே கருவிகளில் அனுப்பப்படும் பொழுது எப்படி அது ஊடுருவி எலும்புக்குள் இருக்கக்கூடிய நிலைகளைப் பிளந்து கொடுக்கின்றதோ இதைப் போல எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி கொண்ட அணுக்களாகப் பதிவாக்குங்கள்.

1.செல்ஃபோன்களில் நமக்கு வேண்டியதைப் பதிவாக்கிக் கொண்டு
2.எப்படி அவ்வப்பொழுது அதை எடுக்கின்றோமோ
3.அதைப் போல நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் செல்களைப் பதிவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்படிப் பதிவாக்கிக் கொண்டால் அந்த நினைவுகள் நமக்குள் ஆகி
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நம்மை நுகரச் செய்து
2.அந்த ஞானத்தின் வழி நாம் செயல்படுத்த இந்தத் தியானம் உதவும்.

உடலில் எடுக்கக்கூடிய “மெய் ஒளியைத் தான் நான் சிந்தித்தேன்…” என்றார் குருநாதர்

 

வைகுண்ட ஏகாதசி அன்றுதான் என் குருநாதர் உடலை விட்டு வெளியே சென்று ஒளியாகப் போனார். குருநாதர் எனக்குக் காட்டி உணர்த்தியது…
1.இந்த உடலிலே நான் எப்படி ஒளியாக மாறி வெளியே செல்கின்றேன்…?
2.வெளியில் சென்றபின் மற்ற மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி எல்லாம் கவருகின்றது…?
3.அப்படிக் கவரும் பொழுது உயிரான்மா அதனுடைய சுழற்சியின் நிலைகள் என்ன செய்கின்றது…?
4.தன்னை அணுக விடாதபடி சுழற்சியின் நிலைகள் கொண்டு விலகுகின்றது…!

விஷத்தைக் கழித்து விட்டு நல்ல உடலாக மாற்றிக் கெட்டதை நீக்கக்கூடிய எண்ணத்தின் நிலைகள் சிருஷ்டிக்கும் தன்மை கொடுத்த இந்த மனித உடலில் அதைப் பெறுவதற்கு குருநாதர் காட்டிய நிலைகள் இது.

குருநாதர் அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் வெறும் துண்டைத்தான் கட்டியிருப்பார். “டிச்சியின்…” அருகில் தான் படுத்திருப்பார்.

குளிர்காலம் என்று நல்ல வேஷ்டியை கொடுத்துக் கட்டச் சொன்னால் அதை எல்லாம் கிழித்து கையிலும் காலிலும் கட்டிக்கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டுச் சென்றான்…! என்பார்.

என்ன சாமி…? இப்படிச் சொல்கிறீர்கள்…! என்றால் கிழித்து விட்டுச் சென்றான் நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன்… அவன் கிழித்து விட்டுச் சென்றான் என்பார்.

1.அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை.
2.இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் அவர் சிந்தித்தார்.

பைத்தியக்காரர் போன்ற நிலையில் நான் அவரை பார்க்கும் பொழுதெல்லாம்… “அய்யய்யோ பெரிய தொல்லையாக இருக்கின்றது… இவரிடம் சிக்கிவிட்டோமே…!” என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஏனென்றால் அவருடைய செயல்களைப் பார்க்கும் பொழுது அப்படித்தான் என்னால் எண்ண முடிந்தது.

ஆனால் உடலை விட்டுச் செல்லும் போது… குருநாதர்… நான் எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது பளீர்.ர்ர்… பளீர்.ர்… என்று மற்ற எல்லாவற்றையும் தள்ளி விட்டு விண்ணுக்கு எப்படிப் போகின்றது…? அப்படிச் சென்றாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் அந்த உயிரான்மா என்ன செய்கின்றது…? பார்…!

அதற்கு முன்பே எனக்கு அதைச் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

உயிராத்மா இங்கேயிருந்தாலும் அன்று வாழ்ந்த மகரிஷிகள் ஞானிகள் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியிலே போனாலும் பிறிதொரு ஈர்ப்புக்கு வராது தடுத்தாலும்
1.இந்த உணர்வுக்கு ஒத்த விழுது இந்தப் பூமியிலிருந்து உந்தி ஆன்மாவை மேலே தள்ள வேண்டும்.
2.அதனால் தான் எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனிடத்தில் வருகின்றார்கள்.
3.அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு உடலுக்குள் மகிழ்ச்சியை ஊட்டி
4.அவனிடமிருந்து வரக்கூடிய மூச்சைத் தன் உடலுக்குள் சேர்த்து அந்தச் சந்தோசமான உணர்வை நுகர்ந்து தான் விண் சென்றார்கள்.

குருநாதர் அதை எல்லாம் காட்டும் பொழுது
1.உயிராத்மா வெளியிலே சென்ற பின் எவ்வாறு…? எதன் நிலை கொண்டு என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் அதிலே வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று காட்டினார்.
அவர் காட்டிய உண்மையைத் தான் உங்களுக்குச் சொல்லி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற இந்த உணர்வினை உங்களுக்குள் “செல்களாகப் பதிவு செய்கின்றேன்…”

மெய் ஒளியின் தன்மை… இயற்கையில் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் இயக்கமாக மாறி மனிதன் வரை ஏப்படி வந்தது…? என்று எனது குருநாதர் காட்டினார்.

மனிதனிலிருந்து அவன் ஒளியின் சரீரமாகப் பெற்றுச் சப்தரிஷி… சிருஷ்டிக்கும் தன்மையாகப்
1.பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷம் வந்தாலும் அதை தனக்குள் ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை மகிழ்ச்சியாக நின்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் நமது சாஸ்திர விதிகள் “அம்மி மிதித்து… அருந்ததியைப் பார்..!” என்று கல்யாணக் காலங்களில் சொல்லிக் காட்டுகின்றார்கள். ஆனால் எதற்காகப் பார்க்கச் சொன்னார்கள்..,? ஏன் பார்க்கச் சொல்கின்றார்கள்…? என்று தெரியாது.

கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த நிலையில் தனக்குள் எடுத்துக் கொண்டதை உருவாக்கச் செய்யும்.

கணவன் மனைவி என்பதே…
1.உயிர் கணவன் ஆகின்றது
2.தான் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மை தான் அது மனைவியாகின்றது.

எந்தச் சக்தியின் தன்மை கொண்டு இந்த உயிர் தாவர இனச் சத்தைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை அணுத் திசுக்களாக மாற்றி அந்தச் சத்திற்குள் இருந்த உயிரின் துடிப்பு… அந்த உணர்வின் மலமாகித் தான் அது உடல் பெறுகின்றது.

அதைப் போல கடந்த கால ஞானிகள் சொன்ன முறைப்படி கணவன் மனைவி இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு
1.ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் மெய் ஒளியை எடுத்துக் கொண்டால்
2.அந்த இரு சக்தியும் ஒன்று சேர்ந்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக அது உருப் பெறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் காண நேர்ந்தால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அதிலே மோதி அதே உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் படர்கிறது.

அந்த மனிதன் மேல் நாம் இரக்கமாக இருந்தால் அவன் படும் அதே வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் தோற்றுவிக்கிறது.

அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி விடுகின்றது. ஏனென்றால் ஓ.. என்று அது பிரணவமாகி ம்.. என்று உடலாக அடங்குகிறது.

ஒரு செடியின் சத்தை வேக வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.வேக வைக்கும் பொழுது ஆவியாக வெளி வருகின்றது
2.மேலே பச்சை (குளிர்ந்த) நீரை ஊற்றி விட்டோம் என்றால் அந்த ஆவியை… செடியின் சத்தை “ரசமாக…” இறக்கிவிடும்.

இதே போல் தான் நம் உயிரிலே மோதும் உணர்ச்சிகள் அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக எல்லாவற்றிலும் மோதி இயக்கச் செய்கிறது. அதற்குத்தக்க நம் எண்ணம்… சொல்… செயல்… என்ற நிலைகளில் இயக்குகின்றது.

அதே சமயத்தில் சுவாசித்த (வேதனை) உணர்வுகள் (ரசமாகி) உமிழ் நீராக மாறி நம் உடலிலே சேர்த்து நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

நாம் வயிறு நிரம்ப சத்துள்ள ஆகாரத்தைச் சாப்பிட்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.இந்த வேதனை என்ற விஷம் நம் குடலில் ஜீரணிக்கக்கூடிய அணுக்களில் பட்டவுடனே
2.அது மயக்கம் அடைந்து சரியாகச் ஜீரணிப்பதில்லை.
3.சிறிது நேரம் ஆனவுடன் புளித்து விடுகிறது… அப்பொழுது எதிர்த்துத் தாக்க ஆரம்பித்து விடுகின்றது.
4.அதனால் குடலுக்குள் ஒருவிதமான எரிச்சல் வருகின்றது.

இப்படி ஆனதும் நம் ஆகாரத்தை நல்ல சத்துள்ளவைகளாக மாற்றுவதற்கு மாறாக… ஒரு பழம் அழுகி விட்டால் எப்படி அதனின் ருசி கெட்டுப் போகுமோ… அதே மாதிரிச் சுவைத்துச் சாப்பிட்ட அந்த ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாகச் “சுவை கெட்ட இரத்தமாக” மாறுகின்றது.

அப்படி இரத்தமாக மாறிய பின் அந்த மனிதன் உடலில் எந்த உணர்ச்சிகள் இயக்கியதோ அதே உணர்ச்சி நம் இரத்தத்தில் பட்டவுடன் அது கருவாகி விடுகின்றது.

அந்த மனிதன் உடலில் எந்த நோய் விளைந்ததோ அதே நோய் இங்கேயும் விளையக் கூடிய சக்தி பெறுகின்றது. நமக்குள் அந்த ஊழ்வினை என்ற வித்தாக இருப்பதனால்
1.அதைக் கண் கருவிழி பதிவாக்கிய நிலையில்
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி
3.உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் அவன் வேதனைப்படுகின்றான் என்று உணர்த்துகின்றது.

அவன் (உடலில்) எப்படி… வேதனைப்படுகின்றான்…? எதனால் வேதனைப்படுகின்றான்…? என்று உற்றுப் பார்க்கின்றோம். உயிரிலே மோதும் பொழுது உணர்வால் அறிகின்றோம். அந்த உணர்ச்சியாக இயங்குகின்றோம்.

நம் கண்கள் புறக் கண்… உயிரோ அகக் கண்.
1.என்ன தான் கண்ணில் பார்த்தாலும்
2,அந்த உணர்ச்சிகள் உயிரிலே இயக்கவில்லை என்றால் அது என்ன…? ஏது…? என்றே தெரியாது (இது முக்கியமானது)
3.உங்களுக்கு முன்னாடியே (கை நீட்டி) அவனை அடித்தாலும் கூட உங்களுக்குத் தெரியாது.
4.அடி வாங்கியவன் வேதனைப்பட்டால் கூட உங்களால் அறிய முடியாது.
5.ஆனால் அந்த உணர்வுகள் உயிர் பாகம் போகப்படும் பொழுது தான்… உயிரிலே மோதினால் தான்… அந்த உணர்ச்சிகளையே ஊட்டும்.
6.வேதனையோ கோபமோ ஆத்திரமோ அதை அப்பொழுது தான் உணர முடியும்.

இப்படிக் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அத்தனை உணர்வுகள் இயக்கினாலும் அந்த வினை இயக்கமாக நம் இரத்தத்தில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

ஒருவன் வேதனைப்படுகின்றான்.. ஒருவன் கோபப்படுகின்றான்… ஒருவன் குரோதப்படுகின்றான்… என்றாலும் அது அது தனித் தனிப் பிரிவாக நம் இரத்தத்திற்குள் வேலை செய்யும்.

காட்டிலே எத்தனை இலட்சம் மரங்கள் இருக்கின்றது…? அதிலிருந்து வரக்கூடிய சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் எந்த மரத்தின் சத்து அதிகமாகின்றதோ அந்த மரத்தின் வாசனை அதிகமாக வரும்.

இதே மாதிரி நாம் ஒரு நிலத்தில் ஊன்றுவது போல் நம் உடலில் கோபமோ வேதனையோ வெறுப்போ பயமோ எல்லாமே ஊழ்வினை என்ற வித்துக்களாக உருவாகிவிடுகின்றது.

அவர் உடலில் பட்ட உணர்வுகள் அனைத்தும் அது தீய வினைகள். அவர் வேதனைப்பட்ட உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது தீய வினைகள். இதே மாதிரி கோபப்படுவோரைப் பார்க்கின்றோம். அதுவும் தீய வினைகள்.

சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற எத்தனையோ வகை உணர்வுகளை உற்றுப் பார்த்தோம் என்றால் அவைகள் எல்லாம் நம் எலும்புக்குள் பதிவாகி அந்தத் தீய வினைகள் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

நம் உடலில் வினைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. இதை எல்லாம் அன்றாடம் நீக்குகின்றோமா என்றால் இல்லை…! அதை எல்லாம் நீக்கி நல்ல வினைகளாகச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து உடலிலே சேர்த்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் ஒளியின் அணுக்களாக மாறும்.

இந்த உடலுக்குப் பின் நாம் அழியாத நிலை பெறலாம்.

மனிதனைப் போன்று உருவாக்கப்பட்ட சிலையின் மகத்துவம்

 

போகன் எதைக் கருத்தில் கொண்டு முருகன் சிலையைச் செய்தானோ மக்கள் யாரும் அதை நினைவில் கூடக் கொண்டு வரவில்லை.

பிரபஞ்சம் எவ்வாறு சூரியனால் உருப்பெறுகின்றது…? அது ஒவ்வொன்றிலும் கருவாகி எப்படி உருவாகின்றது…? நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் தன் ஒளிக் கதிர்களை வீசி அது எவ்வாறு நட்சத்திரத்தின் தன்மை பெறுகின்றது…?

அது அது சுழலும் பாதையில் ஒவ்வொரு கோளும் அதற்குண்டான பாஷாணங்களை விஷத்தன்மைகளைத் தனக்குள் எப்படிச் சேமிக்கின்றது…? என்ற உண்மையை உணர்ந்தவன் போகன்.

அது உமிழ்த்தி வருவதைச் சூரியன் கவர்ந்து பிரிக்கின்றது… பாதரசமாக மாற்றுகின்றது. அதிலிருந்து தூவும் உணர்வுகள் தான் விந்து என்றும் அது எதைக் கவர்கின்றதோ அதன் வழி கொண்டு மற்றது உருவாகிறது என்று தெரிந்து… மற்ற எத்தனையோ நிலைகள் ஆகி மனிதனாக இது உருவாக்கி இருக்கிறது என்ற நிலையைக் காட்டித்தான் முருகன் சிலையை வடிக்கின்றான்.

1.பாதரசத்தையும் நவக் கோள்களில் விளைந்த பாஷாணத்தையும்
2.நட்சத்திரங்களின் வைரக் கல்களையும் அது விளையும் பருவம் கொண்டு வெடிக்காது பிஞ்சின் தன்மை அடைந்த வைரங்களை இதனுடன் இணைத்து
3.தாவர இனத்தின் தன்மையும் பாதரசத்தையும் அவன் இடும் புடத்தால் இரண்டறக் கலந்து முருகன் சிலையை உருவாக்கினான்.

மனிதன் எந்தெந்த உணர்வை உட்கொண்டானோ தீமைகளை அகற்றினானோ அதை… அந்தத் தாவர இனங்களைச் சாரணையாக சிலைக்குள் கொடுத்தான். மனிதனைப் போன்று தண்டாயுதபாணி என்று உருவாக்கி வைத்தான்.

அக்காலங்களில் அந்தச் சிலை மீது பாத்திரத்தை வைத்து நீரை ஊற்றி வைத்திருப்பார்கள்.
1.சிலை மீது அந்த நீர் பட்டவுடன் அதிலே ஒரு விதமான வெப்பங்கள் வரும்
2.வியர்வை வரும்… அதிலிருந்து ஆவிகள் வரும்…!

ஒரு மனிதன் கோபமாகப் பார்க்கும் பொழுது அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்களை நுகரும் போது நமக்கு நோயாக மாறுகின்றது.

அதே போன்று… மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளை எடுத்திருந்தாலும் “அதை அகற்றிடும் சக்தியைப் பெற…”
1.இங்கே முருகன் சிலையைப் பார்த்து “அதிலிருந்து வரும் மணங்களைச் சுவாசிக்க..”
2.விண்ணை நோக்கி (மலை மீது ஏறி) ஏகும்படிச் செய்கின்றான். ஏனென்றால் மலை மீது முருகன் ஆலயம் இருக்கின்றது.

போகன் காட்டிய அந்த நெறிகளையும் அவன் வகுத்துக் கொண்ட நிலைகளை எண்ணத்தில் எண்ணி “அந்த மகா மகரிஷி காட்டிய அருள் வழியில் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தைத் தனக்குள் எடுத்து நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி ஏகும் பொழுது கதிரவனின் காந்த ஒளியலைகள் அங்கே பரவுவதும்… அந்த நினைவுடன் விண்ணை நோக்கி எண்ணி எடுக்கும் பொழுது அது வருவதும்… இந்த நினைவாற்றல் அந்த ஆற்றலைப் பருகுகின்றது.

1.அப்போது தன் உடலில் வந்த தீமைகளை மறக்கின்றான்.
2.விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளை உந்தும்படிச் செய்கின்றான்.
3.ஆறாவது அறிவின் உண்மையை உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்திகளை ஈஸ்வரா என்று ஏங்கி நுகரும்படிச் செய்கின்றான்.

சோர்வையோ அதனால் உடலில் வந்த வலிமைக் குறைவையோ அதை மாற்றி… அந்த மெய் ஞானிகளுடைய உணர்வுகளைச் செருகேற்றி அதை நுகரும்படிச் செய்து… படி மீது ஏறி மேலே செல்லும்படிச் செய்கின்றான். மேலே ஏறி அங்கே கிரிவலம் வரும் பொழுது மகரிஷிகளை எண்ணத்தால் நாம் எண்ணி அதை நுகரும்படிச் செய்தான்.
அங்கே ஒரு தூப ஸ்தூபியும் உண்டு. அதிலே அக்கினியைப் போட்டு வைத்திருப்பார்கள்.

ஒளியின் சுடராக அங்கே வைத்து அந்த ஞானியின் ஒளிச் சுடரைப் பெறுவதற்காக விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வினை ஏங்கிப் பருகும்படி செய்து…
1.எந்த ஞானி காட்டினானோ இந்த உணர்வினைத் தனக்குள் செருகேற்றி
2.நினைவாற்றலை விண்ணிலே சேர்த்து அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று காந்தப் புலனறிவைக் கூட்டும்படிச் செய்தான்.

அதே ஏக்க உணர்வுடன் நாம் உள்ளே செல்லும் பொழுது அந்தச் சிலை மீது நீர் படுவதை உற்றுப் பார்த்தால்
1.எந்த நல்லதை எண்ணி ஏங்கி வந்தோமோ அந்த உணர்வுடன் அதை நுகரப்படும் பொழுது
2.நம் உடலுக்குள் அந்த மணம் சென்று நம்மை அறியாத வந்த தீமைகளை அது பொசுக்குகின்றது.

ஆனால் அதை நாம் நுகர (சுவாசிக்க) வேண்டும்…!

அவன் சொன்ன முறைப்படி நுகர்ந்து நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்ற இந்த ஏக்க உணர்வுடன் பார்த்து நாம் சுவாசித்தால் உடலில் வந்த கடுமையான பிணிகளும் நீங்குகின்றது.

போகன் அதைத் தனக்குள் நேசித்தான். இந்த உணர்வின் சக்தியைப் பருகினான். தன்னில் தன்னைத் தான் அறிந்தான். விண்ணின் நிலையை உணர்ந்தான்… விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகினான்.

இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கிய உணர்வின் தன்மை கொண்டு மனிதன் உருவான நிலையை உணர்ந்தான். மனிதனுக்குள் அறியாத வந்த தீமைகளை எப்படி நீக்குவது…? என்று என்ற உபாயத்தை உணர்ந்தான். அதைச் சிலையாக வடித்து வைத்தான்.
1.அந்த அருள் ஞானம் பெறும் நிலையும் நமக்குள் மறைத்திருக்கும் நஞ்சினை கொல்லும் உணர்வினைச் சுவாசித்து
2.தீய அணுக்களைக் கொல்லும் மார்க்கங்களைக் கொடுத்தான்.

நாம் எப்படி வாழவேண்டும்…? தன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி அகற்ற வேண்டும் என்று நம் உடலைக் கோவிலாக மதித்தான் போகன். உயிரைக் கடவுளாக மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று எண்ணினான். அதற்குள் மனிதனாக உருவாகிய குணங்களை அரும்பெரும் சக்திகள் என்று எண்ணினான்.

அந்த மனிதன் மகிழ்ந்தான் என்றால் அந்த மகிழ்ச்சியைத் தான் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நான் கண்டறிந்த நிலையை உருவாக்கினான்.
1.இதைக் கண்டு எத்தனை பேர் மகிழ்கின்றார்களோ அந்த மகிழ்ச்சியின் தன்மையை ஏங்கி
2.மனிதனுக்குள் உருவான உணர்வின் சத்தை அன்று உணர்வாகப் பெறுகின்றான் போகன்.

அதைப் பெறுவதற்கு… தாவர இனச் சத்தை இந்த உடலிலேயே மாற்றிக் காயகல்பாகப் பெறும் பாக்கியம் வரையிலும் இன்னொரு உடலுக்குள் புகாது இந்த உடலிலிருந்தே செயல்பட்டான்.

அவன் காட்டிய உணர்வின் சத்தை மற்ற மக்கள் எடுக்கும் உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி… அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் ஒளியாக்கி… அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உடலை விட்டு “விண் செல்லும் மார்க்கத்தைக் கண்டு கொண்டான்…”

இது தான் போகன் செய்த நிலைகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் நல்ல குணத்துடன் தான் இருக்கின்றீர்கள். ஆனால் சந்தர்ப்பத்தில் பகைமையாகி அதனால் வேதனையான உணர்வை நுகர்ந்த பின் உங்கள் மனதிற்குள் என்ன நடக்கிறது…?

உள்ளுக்குள் மனப் போராட்டமாகி (மனதிற்குள்) சண்டை போட்டுக் கொண்டு மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… என்று சொல்வீர்கள்.

அப்பொழுது உங்களுக்குச் சரியான சிந்தனை இல்லை. ஒரு வேலையின் நிமித்தமாக உங்கள் பையனைக் கூப்பிடுகின்றீர்கள். கூப்பிட்டதும் அவன் வரவில்லை என்றால் “கூப்பிடுகிறேன் பார்… உடனே வர மாட்டேன் என்கிறானே…!” என்ற இந்த உணர்வு தான் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும் இடத்தில் முதலில் சொன்ன மாதிரி மனதில் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் என்ன நடக்கிறது…?

கடைப் பையனைக் கூப்பிட்டு இந்தச் சரக்கை எடுத்து வா என்று சொன்னாலும் அவன் வரவில்லை என்றால் “நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்… உனக்கு என்ன காது கேட்கவில்லையா…?” என்று இப்படிக் கேட்டு இந்த வம்புக்குப் போவோம்.

அந்த உணர்வுகள்… அங்கே தாங்கவில்லை என்றால் “நாம் சொன்ன சரக்கை அவன் எடுத்துக் கொண்டு வரட்டும்…!” என்று பொறுமையாக இருக்க முடியாது. “தான் சொன்னதை ஏன் அவன் செய்யவில்லை…?” என்ற வேகம் தான் வரும்.

நாம் சொன்ன நேரத்தில் அவன் வேறு ஒரு சரக்கைக் கட்டிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்ததும் ஏம்பா…! நான் சொல்வதைக் கேட்கவில்லையா…? என்று அழுத்தமான சொல் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை அறிந்து ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதை எப்படிச் செய்ய வேண்டும்..? என்று தெளிவாக உணர்தல் வேண்டும்.

1.மாறுபட்ட எண்ணங்கள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் அதைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்தால் “அவன் ரிஷியின் மகன் நாரதனாகின்றான்…!”

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அவன் உருவாக்கிக் கொண்டவன். அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். (சூரியன் என்றால் நாராயணன்)

அவன் (சூரியன்) எப்படி உலகை இரட்சிக்கின்றானோ அதே போல் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் மகரிஷிகளின் உணர்வின் தன்மையைக் கவர்ந்தால்
1.இரட்சிக்கும் அலைகளாக அந்த உணர்வின் இசைகள் நம்மை நல் வழிக்கு மாற்றும்.
2.அதனால் தான் நாரதன் கையில் இசைக் கருவி இருக்கும்.
3.அது சுழன்று சீராகினால் இங்கே மகிழ்ச்சியின் தன்மை வந்து அறியாது வந்த இருளைப் போக்குகின்றது.

சரஸ்வதி கையில் என்ன இருக்கிறது…? வீணை. ஒவ்வொரு உணர்வின் மணமும் அந்த இசையை ஊட்டுகின்றது. எதனின் குணமோ அதனின் ஞானமாக அது இயக்கும். அந்த உணர்வினை ஒளியாக அது இயக்கும். உணர்வை அது ஊட்டும்… உணர்வை அது வளர்க்கும்…!

1.அதைத் தான் இங்கேயும் சுருதி ஏழு…. அங்கேயும் சுருதி ஏழு…! என்று போட்டுக் காட்டியிருப்பார்கள்.
2.ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுவது.
3.ஆக ஞானத்தின் தன்மை ஏழாவது நிலை அடைந்தவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்…!

இதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்து விட்டு சாமி (ஞானகுரு) நன்றாகச் சொன்னார் என்று விட்டுவிடாதீர்கள்…! சொன்ன முறைப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருளைப் பெருக்கி இருளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்விலும் அவர்கள் இருள் நீங்க வேண்டும்.

அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் தன்மையை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

இரத்தம் போகும் பாதையில் அடைப்புகளை அகற்றும் எளிய பயிற்சி

 

நம்முடைய சுவாச நாளங்களில் இரத்தம் போகும் பாதைகளில் அடைப்புகள் இருக்கலாம் சந்தர்ப்பத்தில் நாம் சுவாசிக்கும் போது புகையிலை… அதாவது
1.சில புகை பிடிப்பவருடைய அந்தப் புகையை நாம் சுவாசித்து இருந்தாலும்
2.நாம் புகை பிடிக்கவில்லை என்றாலும் கூட அவர்கள் பிடிக்கின்றார்கள் என்று எண்ணினால் போதும்
3.சுவாசத்தின் வழி கூடி சுவாசப் பையிற்குள் சென்று இரத்தம் போகும்… அந்த நாளங்களிலே உறைந்து விடும்.

இப்படி உறைந்து விட்டால் அந்தப் பக்கம் இரத்தம் போகவில்லை என்றால் இன்னொரு பக்கம் போகும். அங்கேயும் அடைபட்டால் அடுத்த பக்கம் போகும்.

இப்படி மூன்று பாகமும் அடைபட்டால் நிரையீரலுக்கோ மற்ற உறுப்புகளுக்கோ இரத்தம் போகாதபடி இருதய வலி வருகின்றது நெஞ்சு வலி அதிகமாகின்றது மடியக் கூடச் செய்து விடுகின்றது.

ஆகவே… இருதய வலி இருந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது நேரம் பின்னுக்குச் சாய்ந்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவாற்றலுடன் மூச்சை எடுத்து… அடக்கி… மீண்டும் அந்த மூச்சை விடுங்கள்.
2.மூச்சை இழுங்கள் ஒரு நொடி நிறுத்துங்கள்
3.பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சை வெளியில் விடுங்கள் “மெதுவாக..”

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று சுவாசத்தை எடுத்து உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும். இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அதை நீக்கிவிடும்.

அதிகமான தொல்லையாக இருந்தால் ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் தியானம் செய்யக்கூடியவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். விபூதியையோ நீரையோ முன்னாடி வைத்துத் தியானித்து
1.அவருக்கு இருதய வலி நீங்கி இருதயம் சீராக இயங்கி அவர் நலம் பெற வேண்டும் என்று அதைக் கொடுங்கள்.
2.அதை அவர் குடிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
3.அவர் இருதயம் சீராக இயங்க வேண்டும் அவர் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும். ஏனென்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அது நல்லதாகும்.

இந்தப் பயிற்சிகளை ஒரு ஐந்து நிமிடம் செய்யலாம். பயிற்சி முடித்த பின் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண அலைகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்த வேண்டும்.

நம் உடல் அப்பொழுது தூய்மையாகும். பற்று மகரிஷிகள் பால் செல்கின்றது. உடல் நலம் பெறுவதற்கு இந்த முறைப்படி செய்து கொண்டோம் என்றால் அது நல்லதாகும். கூட்டுத் தியான்ங்களில் இதைச் செயல்படுத்துங்கள்; (ஆனால் கர்ப்பமாக இருப்பவர்… ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.)

குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தால் அருள் ஞான நூல்களை எடுத்து அதிலுள்ள கருத்துக்களைப் படியுங்கள். மகரிஷிகள் அருள் சக்தி கருவில் வளரும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் தந்தையரும் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களும் தியானம் செய்துவிட்டு
1.அந்தக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று ஆசி கொடுத்தால்
2.அந்த மகரிஷியின் உணர்வுகள் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.
3.குடும்பத்திலே அந்த அருள் ஞானி உருவாவான். இதை நாம் செயல்படுத்துவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தலை வலி.. மேல் வலியுடன் வருவார்கள்.. காசுக்காக வேண்டி கட்டிட வேலைக்கு வருவார்கள். அவர்கள் வீட்டில் அங்கே அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கலில் சண்டை இருக்கும்.

இங்கே கட்டிட வேலைக்கு வந்தவுடன் தன் வேலைக்காக ஒரு அரைச் செங்கலை எடுத்துக் கட்ட வேண்டும் என்றால் அது தனியாக இருந்தாலும் அதை எடுக்க மாட்டான். ஒரு முழுச் செங்கலை எடுத்து உடைப்பான்.

சில கொத்தனார்களைப் பார்த்தால் அவர்கள் அந்த வெறுப்பான நிலையில் இருந்தார்கள் என்றால் இப்படித்தான் செய்வார்கள். கீழே கிடைக்கும் அரைச் செங்கலை எடுக்கச் சொல்ல மாட்டான். முழுதாக இருப்பதையே எடுத்து உடைப்பான்.

அட.. ஏம்பா…? என்று நாம் கேட்டால் நம்மை முறைத்துப் பார்ப்பான். இயற்கை…! அந்த உணர்வுகள் எதைச் செய்யும் என்றால் இப்படித் தான்.

இப்படிக் கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் நாம் உட்கார்ந்தால் அதிலே மேக்னட் உண்டு. அந்தக் காந்தப் புலன் தான் ஈர்க்கும். பார்த்தது.. பேசியது… எண்ணியது… சண்டையிட்டது… எல்லாவற்றையும் இழுத்து அதற்குள் பதிவாக்கி இருக்கும். இதிலே எந்த உணர்வு கொண்டு வந்தாலும் தாங்க முடியாது.

ஆனால் அந்தக் காந்தம் இல்லை என்றால்
1.நீங்கள் கட்டிடத்திற்குத் தண்ணீர் விட்டால் உள்ளுக்குள் போகாது.
2.அந்தக் காந்தம் இல்லை என்றால் இந்தக் கலவையின் தன்மை இரண்டையும் சேர்த்து ஒட்டாது.
3.இதிலேயும் காந்தப் புலன் உண்டு… அதிலேயும் காந்தப் புலன் உண்டு.
4.நீருக்குள் காந்த நிலை இல்லை என்றால் ஒன்றுக்குள் இணைந்து வேலை செய்யாது.

நமக்குள் காந்தப் புலன் ஒற்றுமை இல்லை என்றால் உணர்வின் தன்மை ஒன்றி வராது. ஆக ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகப்படும் பொழுது தான் அது விரிவடையும் தன்மை வந்து உடலையே குறைக்கிறது… உடலைச் சிறுக்கச் செய்கிறது… கரைக்கிறது…!

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் அவர்கள் சிரமப்பட்டுத் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்வது தொழில்.
1.இருந்தாலும் அந்தத் தொழில் செய்யும் இடத்தில்
2.பல குறை உணர்வுகள் பதிவாகும் பொழுது அது சாக்கடையாகின்றது.

குடும்பத்திலோ தொழில் செய்யும் இடத்திலேயோ நண்பர்களிடமோ காசு கொடுத்தது சரியானபடி திரும்ப வரவில்லை என்றால் என்ன செய்வோம்..? அந்தக் கோபத்தில் தான் இருப்போம்.

இங்கே கட்டிட வேலைக்குச் சிமெண்ட் வேண்டும். ஆனால் இல்லை என்கிற பொழுது அது வருவதற்குக் கொஞ்சம் காலதாமதமாகி விட்டால் வேலை பார்ப்பவர்களிடத்தில் வந்து சாடுவோம்.

சிமெண்டைச் சிந்தினாலே உடனே நமக்குக் கோபம் வரும். சீக்கிரம் கட்டி முடிக்கலாம் என்று சொன்னால் சிமெண்ட் கிடைக்கவில்லை என்பான். அதே மாதிரி ஜல்லி வேண்டும் என்று சொல்லியிருப்போம். அன்று அந்த ஜல்லி வரவில்லை…! என்றால் மனம் ஒடுங்கிவிடுகிறது.

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது வெறுத்துச் சொல்வோம். இந்த உணர்வு எல்லாம் கலந்து தான் அவன் கட்டிடம் கட்டுவான்.

இந்த மாதிரிக் கட்டிய சில வீட்டுகளில் பாருங்கள். வீட்டுக்குள் போனால் நிச்சயம் சண்டை இருக்கும். இதைப் போன்ற நிலைகளை எல்லாம் யார் தூய்மைப்படுத்துவது…?

சிறு துளிகளாக மழை பெய்தாலும் ஒன்று சேர்ந்து அது பெரும் வெள்ளமாக வரும் பொழுது சாக்கடையை எல்லாம் அடித்துச் சென்று விடுகின்றது.
1.அதாவது அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை
2.நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து
3.இந்தப் புது மனைக்குள் பாய்ச்சப்படும் பொழுது அது தூய்மைப்படுத்தப்படுகின்றது.
4.எங்கள் புதுமனை முழுவதும் தரையிலும் சுவரிலும் மகரிஷிகள் அருள் சக்தி படரவேண்டும்.
5.இந்த வீட்டில் படர்ந்துள்ள தீமையான எண்ணங்கள் நீங்க வேண்டும்.
6.இந்த வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படவேண்டும்,

இந்த வீட்டில் குடியிருப்பவர்களும் இந்த வீட்டிற்கு வருகை புரிபவர்கள் எல்லோரும் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும். என்று இப்படி அவசியம் கூட்டுத் தியானம் செய்யவேண்டும்.

ஆனால் நாம் வழக்கமாக கிரகப்பிரவேசம் அன்று எல்லோரையும் வரச் சொல்கிறோம். யாகத்தை வளர்த்து அதில் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுகிறோம். நெய்யை ஊற்றுகிறோம். பஸ்பத்தைப் போடுகிறோம். சில குச்சிகளைப் போடுகிறோம். இதைத்தான் செய்கிறோம்.

நீங்கள் கூட்டுத் தியானம் செய்து உயர்ந்த குணங்கள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து சுவாசித்து அந்த அலைகளை நீங்கள் எல்லோரும் சேர்ந்து வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.
1.இது உங்களுக்கு உயர்வைக் கொடுக்கும்.
2.இதை நீங்கள் செய்து உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாகங்கள் செய்த வீடெல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். “நன்றாக இருக்க வேண்டும்..!” என்று தானே புதுமனை புகும் பொழுது யாகத்தைச் செய்கிறோம்.

அதே மாதிரி ஜாதகம் பார்த்த பின் தானே கல்யாணம் செய்கின்றோம். அவர்களும் நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்து நாம் பார்க்கப்படும் பொழுது கணவன் மனைவி நன்றாகத் தானே இருக்க வேண்டும்.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்தாலும்… அதற்குப் பின் எத்தனை பேர் எத்தனை குடும்பங்கள் பிரிந்திருக்கின்றது…?

திருமணமானாலும் முழுமையாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்று தானே ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்கிறார்கள். இடைவெளியில் ஏன் மடிந்துவிடுகின்றார்கள்…? இதற்கு எங்கே போவது…?

மனச் சாந்திக்கு வேண்டுமானால் பார்க்கலாம். அவன் சொன்ன உணர்வை எடுத்து நாம் என்ன செய்வோம்…? ஐயோ.. ஜாதகம் பார்க்கவில்லை என்றால் தப்பு வந்துவிடும்..! என்ற பய உணர்வு வந்துவிடும்.

அப்படி எண்ணவில்லை என்றாலும்
1.ஜாதகப்படி எடுத்துக் கொண்டால் இரண்டு எதிர்ப்பு நிலையும் ஒன்றாகும்.
2.அப்பொழுது எதிர்மறை இரண்டும் ஒன்றாகும் பொழுது
3.எதிரியின் நிலையாக ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருந்தால் இரண்டும் ஒத்துப் போகும்.
4.ஆனால் ஒருவர் சாந்தமாக இருப்பார்.. ஜாதகப்படி சாந்தம் என்றும் இருக்கும். இவரோ கோபக்காரராக இருப்பார். இது இரண்டும் ஒத்து வராது என்பான்.
5.அடிக்கடி வேதனைப்படுத்தக்கூடியவர் அதே மாதிரி இன்னொருவர் வேதனைப்படுபவர் இவர்கள் இரண்டும் வந்தால் ஜாதகப்படி பொருந்தும் என்பான்.
6.கல்யாணம் செய்த பின் அங்கே வேதனைப்படுத்தும் நிலைகள் தான் மிஞ்சும்.

ஆக ஜாதகப் பொருத்தம் எதிலே இருக்கிறது…?
1.இந்த உணர்வின் நினைவு வரப்படும் பொழுது அதுவும் விஷத் தன்மை இதுவும் விஷத் தன்மை.
2.இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளும்… இப்படித் தான் பொருத்தம் பார்ப்பது இருக்கிறது.

பொருத்தம் பார்த்துச் செய்த வீடுகளில் எல்லாம் எப்படி இருக்கிறது…?

அதுவும் அங்கே திருமணம் செய்யும் பொழுது இத்தனை மணிக்கு.. இந்த நிமிடத்திற்குள் செய்ய வேண்டும்…! என்று சொல்லிவிடுவான்.

இங்கே அலங்காரம் செய்து உட்கார்ந்து யாகம் எல்லாம் முடிக்கும் பொழுது தாலி கட்டும் முன்னாடி இன்னும் இரண்டு நிமிடம் தான் இருக்கின்றது… ஒரு நிமிடம் தான் இருக்கின்றது…! என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

நேரமாகி விட்டது என்ற இந்த நினைவுடனே தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டிலும் பெண் வீட்டிலும் பாருங்கள்… அலங்காரம் செய்து வருவதற்கு முன்னாடி… அந்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…?

ஒரு நிமிடம் தான் இருக்கிறது.. அதற்குள் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றார்களே…! என்ற வேகத்தில் கொட்டு மேளம் வாசிப்பவர்களைப் பார்த்துக் “கொட்டுய்யா… கொட்டுய்யா…! மேளத்தைத் தட்டுய்யா.. தட்டு…!” என்று சப்தம் போடுவார்கள்.

அங்கே அந்த மந்திரம் சொல்வது முழுமையாகச் சொனனர்களா…? இல்லை. அந்தப் பரபரப்பு தான் வருகிறது. தாலி எடுத்துக் கொடுத்துக் கட்டச் சொல்லும் பொழுது என்ன செய்கிறார்கள்…?

இங்கே பணம் எவ்வளவு கொடுப்பார்கள் என்று நினைப்பான். ஏழ்மையான வீட்டில் இப்படி நினைப்பான். பணக்கார வீட்டில் நிறையக் கொடுப்பார்கள் என்பதால் அதைப் பற்றி எண்ணுவதில்லை.

தாலி எடுத்துக் கொடுக்கும் முன் அவனுக்கு ஒரு நூறு ரூபாய்த் தாளைக் கொடுங்கள். உடனே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி வரும். அதற்காக வேண்டித் தான் தாலியை மற்றவர்கள் எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் இவனே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பான்.

அதே சமயத்தில் கட்டும் பொழுது அந்த உணர்வுகள் ஒலியாகப் பாய்ச்சப்பட்டு அவன் கையில் தான் கொடுக்கின்றோம். இந்த மந்திர ஒலியைப் பாய்ச்சிய பின் இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் கைவல்யப்படுத்திக் கொள்ளத் தான் இந்த மந்திரம் உதவும்.

நல்லதானாலும் சரி கெட்டதுக்குப் பயன்படுத்தினாலும் சரி. இந்த உணர்வுகளைப் பதியச் செய்து இந்த நிலை ஆக்கப்படுகின்றது.
1.ஆனால் இதைத் தானே நம்புகிறோம்
2.ஜாதகம் பார்த்து மந்திரம் சொல்லிக் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று தானே விரும்புகிறோம்.
3.அதன் வழி இப்படித்தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கம் இந்த எண்ணங்களைப் பற்றி சீதாராமா…! எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? எண்ணத்தின் உணர்வுகள் எப்படி ஆகிறது…? எந்தக் குணமோ அந்தச் சக்தி எப்படி இயக்குகின்றது…?

இராமனைப் பற்றியும் ஒற்றுமையைப் பற்றியும் கல்யாணராமனையும் எங்கே பார்ப்பது…? அதற்கு மாறான எண்ணங்களைத் தான் அங்கே (யாகத்திலும் சரி ஜாதகக் குறிப்பிலும் சரி) உருவாக்குகின்றான்.

தாலி கட்டும் முன் ஒவ்வொருவரும் பரபரப்பாகப் பார்ப்பார்கள். நேரம் ஆகிவிட்டது… ஆகிவிட்டது…! என்றே எண்ணுவார்கள்.

ஏனென்றால் இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும். இருந்தாலும் அவருடைய சொல்லின் நிலைகளே இங்கே மாற்றம் ஏற்படும்.
1.இதிலேயும் பகைமை…
2.நல்ல உணர்வுகளைச் சேர்த்து இன்னொரு உணர்வையும் சேர்த்தவுடன் இப்படிப் போராட்டம்.

இந்தப் பகைமை உணர்வுகள் தனக்குள் வந்த பின் இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…! என்று இதற்குள் கச..கச…கச..கச….! என்று அந்த உணர்ச்சிகள் மாறிவிடும்.

ஒரு நான்கு பேர் அந்தப் பற்றுடன் எண்ணினால் போதும். அந்தக் கசகசப்பு வரும். அப்படியானால் திருப்பூட்டும் பொழுது எந்த உணர்வை ஊட்டுகிறோம்…?

ஆனால் திருப்பூட்டும் பொழுது எப்படி இருக்க வேண்டும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருடைய உணர்வுகளையும் ஏகோபித்த நிலைகள் கொண்டு வரச் செய்து
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வைக்க வேண்டும்.

பின் இந்த இரு மனமும் ஒரு மனதாகும் இந்தத் தம்பதியர்கள்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் மணமக்கள் ஒன்றி வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
5.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
6.அவர்கள் அன்னை தந்தையரின் அரவணைப்பில் அவர்கள் இருவரும் வாழ வேண்டும்
7.அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்… மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இருவருக்குள்ளும் விளைய வேண்டும்
9.இருவரது எண்ணமும் இரண்டற ஒன்றி அவர்கள் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
10.இந்த உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும்
11.அந்தப் பண்பு கொண்ட அருள் ஞானக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும் என்று
12.திருமணத்திற்கு வந்த உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோருடைய வாக்கையும் இப்படிப் பதியச் செய்ய வேண்டும்.

இப்படி நடக்கும் இந்தத் திருமண நாளை அந்தத் தம்பதிகள் எண்ணினாலே முப்பத்தி முக்கோடி தேவாதி தேவர்கள் வாழ்த்தினார்கள்…! என்ற நிலைக்கு வரும்…! எப்படி…?

நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் என்ன செய்கிறது..? இதற்குள் ஒடுங்கிவிடுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் எல்லோருடைய வாழ்த்தும் அங்கே சேர்க்கப்படும் பொழுது அந்த வாழ்த்தின் தன்மை அங்கே பதிவாகி அந்த மகிழ்ச்சியின் தன்மை அங்கே உருவாகின்றது.

இந்த மாதிரி வாழ்த்துகளின் உணர்வு பதிவான பின் அங்கே “குழந்தை இல்லை…” என்ற சொல்லே வராது…!

இதே மாதிரித் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இதைப் போன்று தியானவழி நண்பர்களைக் கூப்பிட்டு சிறிது நேரம் தியானம் இருக்கச் செய்யுங்கள்.

தியானம் இருந்தபிறகு அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போல இந்த மணமக்கள் வாழ வேண்டும். அன்னை தந்தையரோடு அரவணைத்து வாழ வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

தொழில் வளம் பெருக வேண்டும். அவர்கள் மற்றவரை மதித்து நடக்கும் அந்தச் சக்தி மணமக்களுக்குக் கிடைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் இருவரும் பெற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் இந்தெந்த வழிகளில் நடக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு பத்து பேர் சேர்ந்து அந்த இடத்தில் தியானமிருங்கள்.

நீங்கள் அக்னி குண்டம் வளர்த்து வேள்வி நடத்தித் திருமணம் செய்கிறீர்கள் அல்லவா. நீங்கள் ஒரு பத்துப் பேர் சேர்ந்து இந்த தியான முறைப்படி சொல்லி வாழ்த்துக் கூறுங்கள்.
1.தாய் தந்தையரிடம் தாலியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள்.
2.அந்த மணமக்களை (உங்கள் குழந்தைகளை) வாழ்த்துங்கள்.

பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் மற்றவர்களும் இணைந்து நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி வாழ்ந்தோம்.
1.எதிர்காலத்தில் மணமக்கள் நீங்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் குறைகளை நீக்கி வாழுங்கள். தெரிந்துணர்ந்து வாழுங்கள்.
3,உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று இத்தகைய உயர்ந்த எண்ணத்தைச் செலுத்தித் திருப்பூட்டச் செய்யுங்கள்.

அதே நேரத்தில் தியானமிருந்தவர்கள் அனைவரும் யாகம் வளர்ப்பதற்குச் சமம். யாகம் வளர்க்க வேண்டும் என்றால் புற நிலை. ஆனால் நீங்கள் இதை அகத்திற்குள் இருந்து உயர்ந்த அலைகளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போல மணமக்கள் வாழ வேண்டும். அவர்கள் இருவரும் என்றென்றும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அவர்கள் குழந்தைகள் ஞானக் குழந்தையாக எதிர்காலத்தில் வளர வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அந்த அலைகள் அங்கே படரும்.

இது தான் ஞானிகள் காட்டிய திருப்பூட்டும் முறை…!

சிதம்பரத்தைச் சாதாரணமாக நினைக்கின்றோம்…!

 

தில்லையம்பதி என்ற நிலையில்… சிதம்பரத்தில் ஆலயம் அமைத்திருக்கும் இடத்தைப் பற்றிய “உண்மையை (சரித்திரத்தை)” நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை உணர்த்தியவர் யார்…? திருமூலர்.

1.”மூலத்தின் உண்மைகளை…” ஒவ்வொரு அணுவின் இயக்கத்தின் உண்மைகளை அறிந்தவன் என்பதற்குத்தான் திருமூலர் என்று பெயர் வந்தது.
2.அண்டத்தின் இயக்கம் பிண்டத்தில் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்று அவர் கூறியுள்ளார்.

அது இந்த ஸ்தலத்திலே… தில்லையம்பதியிலே காட்டப்பட்டது.

பதஞ்சலியாக அரசாட்சி பரிந்து கொண்டிருக்கும் பொழுது யாகங்களையும் கேள்விகளையும் பல மந்திர நிலைகளையும் செய்து வரும் போது “கூடுவிட்டு கூடுபாயும்…” உணர்வுகளைக் கற்றுக் கொண்டவன் அவன்.

பதஞ்சலி அரசனானக ஆட்சி செய்து வந்தாலும் அந்த உடலை மற்ற அரசர்கள் இறக்கும்படி செய்தால்… அதிலிருந்து தப்பி இன்னொரு உடலுக்குள் தாவிச் செல்லும் வித்தையை கற்றுக் கொண்டவன் அவன்.

“தன்னுடைய சுகத்தை எதிலேயுமே மறையாது…” பல உடல்களில் தாவி மகிழ்ந்து வாழ முடியும்…! என்று பதஞ்சலி அதைச் செயலாக்கி அதன் வழி அவன் அரசாட்சி செய்து வந்தான்.

1.அவனுடைய மனைவி இன்னொரு அரசனுடைய மகள்தான்… அவளுக்கு அஞ்ச வேண்டும்
2.நாட்டைக் காக்கும் சேனாதிபதிகள் பலர் இருந்தாலும் அவன் உதவியை நாட வேண்டும்.
3.அரசன் இட்ட சட்டத்தை மக்களுக்குப் புகுத்தினாலும் போர் முறை வரும் பொழுது
4.சேனாதிபதி எதிராகத் திரும்பி விட்டால் அவனுக்கு அஞ்சி அவளிடம் நயந்தே செயல்பட வேண்டும்.
5.தான் சட்டத்திற்கு மாறாக நடந்தால் மக்கள் கொதித்து எழுவார்கள்… ஆக மக்களைக் காக்கும் எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படிப் பல நிலைகளிலிருந்து தன்னைக் காத்திடும் நிலைக்காகக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினான்.

அதிலே இரு வகை உண்டு.

உருவாக்கிக் கொண்ட மந்திர ஒலிகளை ஒருவர் சொல்வார் என்றால்… உடலுக்குள் அவன் சொன்ன நிலையில் எடுக்கப்படும் பொழுது இந்த ஆன்மா அந்த உடலுக்குள் சென்று அந்த உடலைச் செயல்படுத்தும்… இது ஒரு முறை.

அதே சமயம் யாருடைய தயவும் இல்லாதபடி நஞ்சு கொண்ட பாம்பின் உடலுக்குள் புகுந்து… நகர்ந்து சென்று வேறு ஒரு உடலின் மீது இந்த விஷத்தைப் பாய்ச்சி அந்த உடலைச் சுருங்கச் செய்து… அதன் வழி கொண்டு அந்த உடலை ஆட்சி புரியும் நிலை… இது ஒரு முறை.

இப்படித்தான் பதஞ்சலி செய்து கொண்டான்.

எதிரிகள் வரும் பொழுது எதிரிகளிடமிருந்து மீள்வதற்காகப் பதஞ்சலி தன் சேனாதிபதியிடம் விவரத்தைச் சொல்கின்றான்.

போர்ப்பயிற்சியாக நான் செல்கிறேன்… என்னுடைய சரீரத்தை ஒளித்து வைத்துவிடு. இந்த உடலை விட்டு நான் பாம்பின் உடலுக்குள் ஏவி வெளியில் செல்கின்றேன்.

இந்த உடலை நீ பாதுகாத்து வைத்திருப்பாய் என்றால் நான் மீண்டும் இந்த உடலுக்குள் வர உதவும். இன்னென்ன பக்குவத்தில் நீ வைத்துக் கொள்…! என்று சேனாதிபதியிடம் பதஞ்சலி சொல்கின்றான்.

சரி… என்று சொன்னவுடன்… பதஞ்சலி அந்த உடலை விட்டு வெளிவந்து பாம்பின் உடலுக்குள் செல்கிறான். ஆனால் அவ்வாறு சென்ற பின் சேனாதிபதி அரசனின் உடலைப் பொசுக்கி விடுகின்றான்.

இப்படி… பதஞ்சலி மீண்டும் தன் உடலுக்குள் வர முடியாத நிலை ஆன பின்பு தான் நாடு முழுவதும் அவன் சுழன்று வந்து “தில்லையம்பதியில்… சிதம்பரத்தில் வந்து சேர்கின்றான்…!

இங்கிருக்கக்கூடிய ஆலயத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அந்த ஆலயத்திற்குள் அங்கே பாம்பின் உடல் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தான்.

இப்பகுதியில் அக்காலத்தில் நந்தவனம் என்றும் உண்டு. பதஞ்சலி அவைகளைச் சுற்றி வருவதும் காடு மேடுகளில் அலைவதும் மற்றவர் கண்களுக்குச் சிக்காது அலைந்து கொண்டிருந்தது.

எப்படியும் மனித ரூபம் பெற வேண்டும் என்று அதற்குண்டான சந்தர்ப்பத்தை எடுத்து… ஒரு மாடு மேய்ப்பவனைத் தீண்டி இந்த விஷத்தின் துணை கொண்டு அந்த உடலுக்குள் புகுகின்றது.

அப்பொழுது மாடு மேய்ப்பவனுடைய உணர்வுகள் பலவீனம் அடைகின்றது இவனுடைய உணர்வு அந்த உடலை ஆட்சி புரியத் தொடங்குகிறது.

ஆட்சி புரிந்தாலும் இதன் நிலையில் கொண்டு மாடு மேய்ப்பவனுடைய வீட்டுக்குச் சென்ற பின்… அவனுடைய மனைவி இவனுக்கு வேண்டிய உபகாரங்களையும்… சுடு தண்ணீர் வைத்துப் பணிவிடைகளையும் செய்கின்றது.

அதைப் பார்க்கும் பொழுது தான் அவன் திகைக்கின்றான்…!

அரசு வாழ்க்கையில் தான் அரசனாக இருக்கும் பொழுது அரசிக்கு அஞ்சியும் சேனாதிபதிக்கு அஞ்சியும் தான் இட்ட சட்டத்திற்கு மக்களுக்காக வேண்டி அஞ்சியும் எதிரியான அரசனிடமிருந்து தப்ப அஞ்சி வாழ வேண்டிய சூழ்நிலைகளே வந்தது.

1.ஞானிகள் காட்டிய விண்ணுலக ஆற்றலை தன் சுயநலங்களுக்காக மாற்றிய உணர்வுகள் எவ்வாறு ஆனது…? என்று
2.இங்கே மாடு மேய்ப்பவனின் உடலிலிருக்கும் போது… அவன் மனைவி பணிவிடை செய்யும் பொழுது இவனுக்கு அந்தச் சிந்தனைகள் வருகிறது.

அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை தில்லை நடராஜா…! தில்லை என்பது நமது பூமி. அது நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது.

இந்தப் பூமியின் செயலாக்கங்களில் அந்தச் சுழற்சியின் வேகத்தினால் இங்கே மற்ற உயிரினங்களும் தாவர இனங்களும் எவ்வாறு விளைந்தது…? என்று கற்றுணர்ந்தது தான் தில்லை நடராஜா.

தில்லையம்பலத்தாண்டவா…!
1.இந்த உடலான தில்லையை ஆண்டு கொண்டிருப்பவன் உயிர் என்றும்
2.தில்லை அம்பலம் என்ற இந்த உடலின் தன்மையை உணர்வின் குணங்களால் இயக்கும் நிலைகளும்
3.குணங்களுக்கொப்ப உடலின் இயக்கம் நடனம்… என்று இந்த நடனக் கலையைக் காட்டியவன் திருமூலர்
4.உணர்வுக்கொப்ப உடலின் இசையும் இசைக்கொப்ப உடலின் இயக்கம் என்றும் தெளிவாகத் தெரிந்து மக்களுக்கு வெளிப்படுத்தினார் திருமூலர்.

அவன் சொன்ன தத்துவம்… நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது என்பது.

ஆதியிலே… பேரண்டத்தில் விஷத்தின் தாக்குதல் விஷமற்றதைத் தாக்கப்படும்போது வெப்பமாகின்றது. வெப்பம் தாங்காது அணுக்களாகச் சிதறுண்டு ஓடுகின்றது. அந்த ஓடும் நிலைகள் ஈர்க்கும் நிலையில் தான் காந்தம் வருகின்றது.

இது தான் திருமூலம் ஆதியிலே உருப் பெற்ற உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றான்.

இந்த இடம்… தில்லையைப் பற்றிச் சாதாரணமாக நினைக்கின்றோம்…! ஆனால் எவ்வளவு பெரிய சரித்திரத்தைப் படைத்த இடம்…! என்று உணர்ந்தால் சிதம்பரத்தில் இந்த ஆலயத்தில் வணங்கும் முறைகளை நாம் பார்க்கலாம்.
1.தன்னை உணர்தல் என்றும்
2.தான் எடுக்கும் (சுவாசிக்கும்) உணர்வின் இயக்கம் என்றும்
3.வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? என்றும் காட்டிய நிலைகள் தான்
4.தில்லை நடராஜா என்றும் தில்லை அம்பலத்தாண்டவா என்றும் காட்டினார்.

பேரண்டத்தில் இத்தகைய நிலைகள் வரும் பொழுது ஆதி சக்தி என்பது விஷம்… அதனால் தாக்குண்டு வெப்பமாக உருவாகும் பொழுது ஆதி பராசக்தி… வெப்பத்தின் தணலால் தான் நகர்ந்து செல்லும் பொழுது ஈர்க்கும் காந்தமாக விளையும் நிலை ஆதிலட்சுமி…!

திருமூலர் காட்டிய இந்த நிலைகளை…
1.காரணப் பெயரும் காரணத்துடன் இயற்றப்பட்டதையும் நாம் உணர்ந்தால்
2.அந்த மகா ஞானி அமர்ந்த இந்த இடத்திலிருந்து அவருடைய ஆற்றல்களைப் பெற முடியும்.

தன் வாழ்க்கையில் அரசனாக இருக்கும் பொழுது ஆசையுடன் வாழ்ந்த நிலைகளை உணரப்படும் போது… எவ்வாறு அது இழக்கப்பட்டது…? என்றும் நாம் அந்த மெய்யை எதனால் இழந்தோம்…? அதை மீண்டும் எப்படிப் பெற வேண்டும்…? என்று தன்னில் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வைத் தான் அவன் அங்கே வெளிப்படுத்துகின்றான்..

மெய்ப்பொருளைக் கண்டறிந்த அந்தத் திருமூல மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் எடுத்தால் “வாழ்க்கையில் வரும் தீமைகளை…” நீக்க முடியும்.

அதே சமயத்தில்…
1.அந்த மகரிஷியின் உணர்வுகளை அனைவரும் பெற வேண்டும்… பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
3.சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது இந்த முறைப்படி தியானியுங்கள்.
4.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தவம் இருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.

வெறுமனே ஆண்டவனை அடையப் போகின்றேன் அவன் அருளைப் பெறப் போகின்றேன் என்று அவனையே எண்ணுவதற்குப் பெயர் தவமல்ல…!

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருப்பது உயிர். ஆண்டவனாக இயக்கிக் கொண்டிருப்பதும் எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டிருப்பதும் உணர்வின் சக்தியை அணுவாக உடலாகச் சிவமாக மாற்றிக் கொண்டிருப்பதும் சிவத்திற்குள் சக்தியாக இயக்கிக் கொண்டிருப்பதும் “உயிரே…”

இந்த உடலை ஆள்பவன் யார்…? ஆண்டவன் (உயிர்).
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ந்திடும் உணர்வை நாம் ஊட்டி
2.மகிழச் செய்யும் பொழுது அந்த ஆண்டவன் அருளை நாம் பெற முடியும்.
3.அதன் வழியில் அனைவரும் மகிழ வேண்டும் என்று நாம் எண்ணினால் அது தவம்.
4.அந்த மகிழ்ச்சி நமக்குள் போற்றும் நிலையாக வந்தால் அந்தத் தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம்.

ஆலயத்தில் இந்த முறைப்படி நீங்கள் செயல்படுத்துங்கள். ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம். காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவோம்.

நமக்குள் உள்ள அறியாது புகுந்த நஞ்சின் தன்மையை வளராது தடுப்போம்… உலக மக்களைக் காப்போம்…!

1.அடுத்து வரும் சந்ததியினரின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அருள் ஞானிகள் உணர்வைப் போதிப்போம்.
2.அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்… பிறந்த பின் உலகைக் காக்கும் ஞானிகளாக வளர்ப்போம்.

இதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். அதே போல நாம் பார்ப்பவருக்கெல்லாம் அதைப் பெற வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு இதைச் செயலாக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முதலிலே மூதாதையர்கள் மனிதனாகப் பிறந்தார்கள். தாய் தந்தையரை உருவாக்கினார்கள். தாய் தந்தையர் நம்மை உருவாக்கினார்கள். அந்தக் குல வழியில் தான் நாம் இன்று வந்துள்ளோம்.

நம் உயிர் ஒளியாக ஆனது. நுகரும் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற மனித உடலைப் பெற்ற நாம் நம் மூன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தச் சூட்சமச் சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். இது தலையாயக் கடமை…!

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள். ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல அருள் ஒளியுடன் ஒன்றி வாழச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்திட நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருந்திடல் வேண்டும்.

உதாரணமாகச் சிலர் எண்ணலாம். இது எப்படிச் சாத்தியப்படும் என்று…!

இன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டரில் அதில் உள்ள நாடாக்களில் எதெனெதன் உணர்வைப் பதிவு செய்கின்றோமோ அதை எல்லாம் சீராக இயக்கிக் காட்டுகின்றது. மற்ற இயந்திரங்களையும் இயக்கும் ஆணைகளையும் அது இடுகிறது. இதை ஒரு இராக்கெட்டில் உள்ள செயற்கைக் கோளுடன் பொருத்திவிடுகின்றனர்.

உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் அல்லது நட்சத்திரம் இருக்கிறது என்றால் எதன் திசைப் பக்கம் இந்தச் செயற்கைக் கோள் அது செல்ல வேண்டுமோ அந்த நாடாக்களில் இங்கே பதிவு செய்துவிடுகின்றனர்.

அந்த நாடாக்களில் பதிவு செய்து இயந்திரத்தில் போட்ட பின் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.எத்திசையின் தன்மை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ
2.அந்தத் திசையில் உள்ள கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகள் இதற்குள் பட்ட பின்
3.அதன் பாதையிலே அது அமைத்து அந்தக் கோளைச் சென்றடைகின்றது இவர்கள் இராக்கெட் மூலம் அனுப்பும் செயற்கைக் கோள்.

அங்கே வட்டமிட்டு அந்தக் கோளின் உணர்வுகளை நுகர்ந்தறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் அந்த நாடாவின் மூலமாக
1.தரையிலிருப்போர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து இங்கே பதியச் செய்து
2.அதனின் பாதையைச் சீராக அமைத்து உருவாக்குகின்றார்கள்.
3.இப்படித்தான் விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்களைச் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களுக்கும் அனுப்புகிறார்கள்.

இதைப் போன்று தான் நம் மூதாதையர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதனின் துணை கொண்டு அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

அந்த அருள் ஞானியின் சக்திகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “உந்தித் தள்ளி…!” இணையச் செய்ய வேண்டும்.

அங்கே சென்ற பின் இந்த உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. வழி காட்டிடும் அறிவின் ஒளியாக நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.

1.அதன் வழி கொண்டு அதன் வழியில் நம் முன்னோர்கள் அங்கே வளர
2.அவர்களின் உணர்வுகளை நமக்குள் பெருக்க
3.அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க நமக்கு உதவுவார்கள்.

இதற்கு முன் நாம் செய்யத் தவறிய நிலைகள் இருந்தாலும் பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் அந்த உயிரான்மாக்கள் புகுந்து இருப்பினும் அதனை நாம் இந்த வழியில்..
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.நமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அது கிடைக்கின்றது.
4.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளிச் சுடராக நம்மையும் வாழச் செய்யும்.
5.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு கொண்டு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.நாமும் அந்த வழியிலேயே சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் தருணம் பெறுகின்றோம்.

இதிலே சொன்ன முறைப்படி செய்வோர் நிச்சயம் இதனை உணரும் பருவம் பெறுவார்கள்.

“நம் குருநாதர் காட்டிய கலாச்சாரத்தை” நாம் உருவாக்க வேண்டும்

 

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் எத்தனையோ பேரைப் பார்க்க நேருகின்றது… சந்திக்க நேர்கிறது. “அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று நாம் தவம் இருக்க வேண்டும்.

“என்னைப் பார்ப்போருக்கெல்லாம்… நான் பார்ப்போருக்கெல்லாம்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

என் பையன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில்
1.கஷ்டத்தை நினைத்துச் சொன்னீர்கள் என்றால் முதலில் இந்தக் கஷ்டம் வரும்.
2.இது கலந்த உடனே மீண்டும் அந்த நினைவைத் தான் தூண்டும்.

ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார் என்றால்…
1.அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.விஷத்துடன் கலந்து மீண்டும் அவன் செய்தது தான் நினைவுக்கு வரும்.

ஆகவே அதை நாம் மறக்க…
1.மகரிஷிகள் அருள் சக்திகளை முதலிலே எண்ணி எடுத்து
2.நாம் பார்ப்போருக்கெல்லாம் என்னைப் பார்ப்போருக்கெல்லாம்
3.நான் நினைப்பவர்களுக்கெல்லாம் என்னை நினைப்பவர்களுக்கெல்லாம்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

எனக்கு எந்தெந்த சக்திகளைக் குருநாதர் எப்படிக் கொடுத்தாரோ அந்த முறைப்படித் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

முன்பெல்லாம் சிறுகச் சிறுகச் சொல்லி நினைவாற்றலை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது
1.அது அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒருமித்த நிலைகளாக நினைவாற்றல் கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் குரு அருளால் மகரிஷியின் அருள் ஒளியைப் பெற்று இருளைப் போக்கி
3.மெய்ப்பொருள் காணும் நிலைகளாக அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆலயத்திற்குச் சென்றாலும் அல்லது மற்ற குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அங்கே நாம் களைத்துப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போய் அமர்ந்த உடனே அந்தக் களைப்பால் “உஸ்ஸ்ஸ்… அப்பா…!” என்ற பெருமூச்சாகச் சோர்வின் தன்மையை வெளிவிடுகின்றோம்.

அப்பொழுது அந்த நேரத்தில் அந்த இடத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து
2.இந்த இடம் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்.
3.இந்தக் குடும்பங்கள் முழுவதும் மகிழ்ச்சி படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எந்த நோயாளியைப் பார்க்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுதும் மற்ற அலுவல்களுக்குச் செல்லும் பொழுதும் தொழில் செய்யும் பொழுதும் இரவு படுக்கப் போகும் முன்பும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அங்கே மகிழ்ந்த நிலை உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள். எந்தத் தொழில் செய்தாலும் இதைப் போல் நினைவில் கொள்ளுங்கள்.

1.உணவு உட்கொள்ளும் பொழுதும் அந்த உணவுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி படர்ந்து
2.அந்த உணவு எனக்குள் “உடல் நலம் பெறும் சக்தியாகப் பெருக வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கேட்க நேர்ந்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.நம்மை யார் துன்புறுத்தினாலும் அவர்களுடைய உணர்வு நமக்குள் பதிவாகாதபடி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு
3.என்னைப் பார்ப்பவருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்
4.என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்
5.எல்லோரும் போற்றும் நிலையாக அவர் வளர வேண்டும் என்று எண்ணத்தைப் பரப்புங்கள்.

உடலில் உபாதைகள் எது இருந்தாலும் அந்த உபாதைகளை எல்லாம் மறந்து விடுங்கள்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.புருவ மத்தியில் எண்ணி உணர்வுகளை உடலுக்குள் கொண்டு போங்கள்.
2.உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

நம் இன்னொன்றையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து குடும்பத்தில் கர்ப்பமற்றிருக்கும் காலங்களில் தத்துவங்களைப் போதித்தும்
1.விண்ணுலக ஆற்றலை… அந்த அகஸ்தியன் கண்டறிந்த உணர்வைச் சிலரும்
2.வியாசகர் காட்டிய தன்மையைச் சிலரும் “கருவிலே வளரும் குழந்தையிடத்தில் உருவாக்கினார்கள்…”

பண்டைய காலத்தில் இவ்வாறு வளர்ந்தவர்கள் அனைவரும் “தவயோகிகளாகவும் பெரும் ரிஷிகளாகவும் உருவாக்கப்பட்டு…” அந்தக் குழந்தைகள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அதை வளர்த்த தாய் தந்தையர் பிறவா நிலை அடையவும் அதுவே காரணமாக அமைந்தது.

தன்னால் முடியவில்லை என்றாலும் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட சக்தியை அன்று உருவாக்கினார்கள்.

1.இதைப் போன்ற கலாச்சாரத்தை நாமும் நம் குடும்பத்தில் கொண்டு வந்து
2.அருள் ஞானிகளை உருவாக்கி அவர்கள் துணையால் நாமும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
3.இனி வரக்கூடிய எதிர்கால சந்ததியினரும் அந்த வழியிலேயே வளரும்படி நாம் செய்தல் வேண்டும்.

ஆகவே
1.நம் குரு காட்டிய வழிகளில் அவர் ஆற்றலை நமக்குள் பெற்று
2.எல்லோருக்கும் மகிழ்ந்திடும் நிலைகள் பெற நாம் தியானிப்போம்
3.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தவமிருப்போம்.

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படிப் பெற்றான்…?

 

ஆதியிலே அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் விஷ ஜந்துக்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷ முறிவு வேர்களையும் அரைத்து உடலில் பூசுகின்றார்கள்.

சந்தர்ப்பத்தால் கருவுறும் பொழுது அந்த விஷ முறிவு வேர்களின் மணங்கள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகச் சேர்கின்றது.

பிறந்த பின் அவனுடைய வளர்ச்சி வர வர இவனைக் கண்டாலே மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகிறது.

அதே சமயத்தில் கடும் விஷத்தன்மை கொண்ட தாவர இனங்களை அவன் தாய் தந்தையர் நுகரும் பொழுது அந்த அதிகமான விஷம் கலந்து உடல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் மடிகின்றனர்.

1.கருவிலே வளரும் சிசுவிற்கு இந்த உணர்வின் தன்மை கலந்த நிலைகள் வளர்ச்சியின் தன்மை பெறுகின்றது.
2.ஆனால் தாய் தந்தையருக்கோ… மனிதனாக உருப்பெற்ற முழுமையான நிலைகள் விஷத்தன்மை ஆன பின் செல்கள் குறைகின்றது… மடிகிறது.
3.அகஸ்தியனுக்கு ஐந்து வயதாகும் போது அவர்கள் இருவருமே இறந்து விடுகின்றார்கள்.

தாய் தந்தையரை அகஸ்தியன் ஏக்கத்துடன் எண்ணுகின்றான். அவர்களோ இப்படி ஆகிவிட்டது… குழந்தை தனித்து இருப்பானே…! என்ற எண்ணத்தில் அந்த இரண்டு ஆன்மாக்களும் இவன் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

ஏக காலத்தில் இறந்து இரண்டு ஆன்மாக்களும் பிள்ளை மீது இருக்கும் பற்றால் காத்திடும் உணர்வு கொண்டு இங்கே வந்து விடுகின்றது. அதன் வழி தான் அகஸ்தியன் விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கின்றான்.

உதாரணமாக…
1.மிளகாய்த்தூளை (நெடி) சில பேய் பிடித்தவர்களுக்கு முன் போட்டு… உற்றுப் பார்க்கச் சொல்லுங்கள்… அது தும்மாது.
2.அதே போல் விஷமான பொருள்களை நுகரச் செய்தாலும் அதற்கு ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் அது விஷத்தைக் குடித்து அதனால் இறந்து இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தால் “இந்த விஷத்தைக் காண்பித்தால் அதற்கு ஆனந்தமாக இருக்கும்…”

இதைப் போன்று தான்
1.அகஸ்தியன் உடலில் இந்த இரு ஆன்மாக்கள் இருக்கப்படும் பொழுது தான் விண்ணின் ஆற்றலை அவன் பருகுகின்றான்.
2.சூரியனைப் பார்க்கும்போது அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு டேப்பிலே பதிவு ஆவது போன்று அவனுக்குள் பதிவாகின்றது.

அதிலிருந்து பரவும் நிலைகளையும்… அதன் தொடர் வரிசை நிலைகளில்… இந்தப் பிரஞ்சத்தையே உற்றுப் பார்க்கும் உணர்வின் ஆற்றல் முதல் மனிதன் அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது.

அதனால் தான் “அணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன்…” என்று சொல்வது. அவன் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அனைத்துமே இந்தப் பூமியிலே பரவி உள்ளது

அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிகின்றான்.
1.விண்ணை நோக்கி ஏகும் பொழுது நம் பூமி விண்ணிலிருந்து துருவத்தின் வழி கவரும் சக்தியைப் பூமியிலிருந்து உற்றுப் பார்க்கின்றான்.
2.அது கவரப்பட்டுப் பூமிக்குள் பரவுவதையும் காண்கின்றான்… ஆனால் அதை இவன் நுகர்கின்றான்.
3.அதன் உணர்வை அறிவாக அறிகின்றான்… அந்த உணர்வின் அணுக்கள் அவனிலே விளைகிறது.

அத்தகைய விண்ணின் ஆற்றல் வலுப்பெற்ற பின் அதே உணர்வுகள் இவனை அறியாமலேயே “நஞ்சின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாறும் நிலை வருகின்றது…”

காரணம்… தாயின் கருவிலேயே நஞ்சினை தன்மை அடக்கும் தன்மை வந்ததால் அந்த உணர்வு வரப்படும் பொழுது தாய் தந்தையரே இவனுக்குக் கடவுள் ஆகின்றார்கள்.

இதன் வழி கொண்டு தான் அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்று இவன் துருவ மகரிஷியாகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெற்று… இந்த உயிரான்மா அது வலுப் பெற்ற பின் அங்கே போகின்றது.

அகஸ்தியன் தாய் தந்தையரோ குழந்தை மீது பாசமாக வரும் பொழுது குழந்தையின் உடலுக்குள் வருகின்றது.
1.பின் இவன் விண்ணுக்குச் செல்லப்படும் பொழுது தன் தாய் தந்தையை விண்ணுக்கே அழைத்துச் செல்கின்றான்.
2.இது இயற்கையின் இயக்கம் என்று குருநாதர் காட்டினார்.

ஆகவே… மனிதர்களாக இருக்கும் நாம் இப்பொழுது எதைச் செய்ய வேண்டும்…? என்பது தான் முக்கியம்.

பக்தி கொண்டு நல்லவர்களாக இருப்பினும் பிறருடைய கஷ்டங்களை அதிகமாகக் கேட்டுணர்ந்தால் நம் நல்லது மறைகின்றது. கஷ்டம் அதிகமாக வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் மாற்றமாகின்றது.

இப்படி… சந்தர்ப்பத்தால் தீமைகள் நம் உடலுக்குள் புகுந்து அது விளைந்து நோயாக எப்படி மாறுகின்றதோ இதைப் போன்று ஒரு அழுக்குத் தண்ணீரில் நன்னீரை விடும் பொழுது அழுக்கு நீர் குறைகின்றது.

பல காலம் நம் வாழ்க்கையில் பலருடைய கஷ்டங்களைக் கேட்டு வந்த நாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் அந்தத் தீமை சிறுகச் சிறுகக் குறையும்.
2.பின் அது வலுப்பெற தீமையை நீக்கிடும் ஆற்றலே நமக்குள் பெருகுகின்றது.

வராகன் சாக்கடையைப் பிளந்து தன் வாழ்க்கையில் நல்லதை நுகர்ந்து நுகர்ந்து… தீமையைப் பிளந்திடும் உடலாக மனிதனாக வளர்ச்சி பெற்றது.

இதைப் போல… தீமைகளைப் பிளந்த அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அதை எல்லையாக வைத்து அங்கே துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அதனைப் பின்பற்றியவர்கள் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

அதனைப் பின்பற்றினால் அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நாமும் செல்கின்றோம். உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.

ஏனென்றால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலிலே நீடித்த நாள் நாம் இருக்கப் போவதில்லை. ஆகவே… எது நிலையானது…? அந்த மகரிஷிகளின் அருள் ஒளி தான்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எப்படியும் பெற வேண்டும். அவர்களைப் பின்பற்றி நீங்கள் செல்ல வேண்டும்.

காரணம்…
1.வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படியெல்லாம் மாற்றுகின்றது…?
2.உயர்ந்த நிலைகள் பெறுவதை எப்படி அது மாற்றியமைக்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் அந்த அருள் வழியில் என்றும் வாழ வேண்டும் என்பதற்கே தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு பக்கம் காற்று மண்டலத்தில் ஒரு விஷம் கலந்த பொருளை விஞ்ஞானத்தால் உருவாக்குகின்றனர்.

ஒரு பேட்டரி செல் தனக்குள் காந்தத்தை உருவாக்கும் சக்தி பெற்றது. அதை எலெக்ட்ரான் (மின்சாரம்) ஆக மாற்றக்கூடிய சக்தி பெற்றது. அதிலே கலந்த இந்த விஷத் தன்மை கொண்ட பொருளை நீக்குவதற்காக நெருப்பிலே இட்டுப் புகையாக மாற்றுகின்றார்கள்.

இந்தப் புகையின் தன்மை வெளி வரும் பொழுது சூரியனின் காந்தப் புலன் அறிவு அதைக் கவர்கின்றது.
1.அது எந்தத் திசை நோக்கிச் செல்கிறதோ அந்தத் திசையில் நாம் செல்வோம் என்றால்
2.அந்த உணர்வை நாம் சுவாசிக்கப்படும் பொழுது நம் சுவாசப் பைக்குள் சென்று
3.அந்தக் கெமிக்கல் நமக்குள் இருக்கும் உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது.
4.அப்படி மடிந்து விட்டால் அந்த உறுப்புகளின் திறன் இழக்கப்படுகின்றது.

இது நம்மை அறியாமலேயே சுவாசத்தின் வழி வரக்கூடிய தீமைகள்.

நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் நமக்குள் மூச்சுத் திணறலும் கடும் நோய்களும் உருவாகின்றது.

ஆனால் நாம் சுவாசித்த கெமிக்கலின் உணர்வுகள் இரத்த நாளங்களுக்குள் சென்று இரத்தத்தில் கலந்து விட்டால்
1.இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னிக்குள் இந்த இரத்தம் புகுந்து வடிகட்டப்படும் பொழுது
2.அதிலிருந்து வெளியே வரும் பொழுது அந்த வடிகட்டும் திறன் இழந்து கிட்னியைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது
3.நாம் சந்தர்ப்பத்தால் சுவாசித்த கெமிக்கல்.

இப்படி இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை தவறி விட்டால் நம் இரத்த நாளங்களில் தெளிவாக்கும் நிலைகள் இழந்து விடுகின்றது. இதைப் போல் நம் உடலில் நம்மை அறியாமலே வாழ்க்கையில் நுகரும் சக்திகளால் தீமைகள் உருவாகின்றது.

நமக்குள் உருவான இந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது இது நம் சிறு மூளை பாகம் வரையிலும் சுழன்று கொண்டேயிருக்கும்.

இதனின் உணர்வின் தன்மை வளர்ச்சி அடைந்த பின் இந்த வளர்ச்சி நம் உடல்களிலே ஒவ்வொரு நிமிடமும் தன் பசிக்காக ஏங்கும்.. எப்படி ஒரு கோழி கருவுற்ற பின் கேறுகின்றதோ இதைப் போல தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

ஒரு மனிதன் தனக்கு வேண்டிய காரியம் நடக்கவில்லை என்றால் திரும்பத் திரும்ப அந்த வேதனை உணர்வுகளை நுகர்கின்றார். இந்த உணர்வின் தன்மை 48 நாள் ஆகிவிட்டால்
1.கோழி கருவுற்று தனக்குள் முட்டையாக மாறுவது போல்
2.நாம் நுகர்ந்த உணர்வு கருவுற்று அதனின் முட்டையாக உடலுக்குள் மாறுகின்றது.

முட்டையாக ஆன பின் அதனின் செயலாக்கங்கள் அது உள்ளுக்கே அடைபட்டிருக்கின்றது. நம் இரத்த நாளங்களிலே அது சுழலப்படும் பொழுது அது சிறுகச் சிறுக நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஊடுருவி இரத்தத்தின் வழியாக எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கும் நிலை பெறுகின்றது.

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அது இரத்த நாளங்களில் செல்லும் பொழுது நல்ல அணுக்கள் இதை ஏற்க மறுக்கின்றது. அதனின் வட்டத்தில் சென்ற பின் நல்ல அணுக்களும் சோர்வடைகின்றது.
1.அவ்வாறு சோர்வடையத் தொடங்கிவிட்டால்
2.நம் உடலும் சோர்வடைகின்றது… நம் எண்ண வலுவும் குறைந்து விடுகின்றது.

எதனைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அந்த உணர்வை நுகர முடியாது சென்று விட்டால்… உடலுக்குள் நல்ல உணர்வுகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

சோர்வடைந்தால் மீண்டும் அது நலிவடைந்து கொண்டேயிருக்கும்.

சிலரை நீங்கள் பார்க்கலாம். சாப்பாடு நிறையச் சாப்பிடுவார்கள். இருந்தாலும் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது உறுப்புகளில் அஜீரணச் சக்தி ஏற்படும்.
1.இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உடல் நலியும் தன்மையே வரும்.
2.ஏனென்றால் நல்ல அணு செல்கள் அது வாடும் தன்மை வருகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள்.

ஆகவே இதைப் போன்று நாம் எடுக்கும் இந்த உணர்வுகள் அது வந்த பின் இது இடைமறித்துச் செல்லும் பொழுது நம் இருதய வாயில்களில் இது ஊடுருவுகிறது.

நம் இருதயமோ மற்ற இடங்களுக்கெல்லாம் அழுத்தம் கொடுத்து எல்லா உறுப்புகளுக்கும் இரத்தங்களை அனுப்புகின்றது.

1.வெறுப்படையும் உணர்வைக் கொண்ட ஒரு அணுக் கரு
2.அந்த இருதயத் துடிப்பிற்குள் சென்று அதனின் நுழைவாயிலில் அது புகுந்து விட்டால் போதும்.
3.அணுவாக மாறிய நிலையில் வெறுப்பான உணர்ச்சிகளை அதன் வழி கொண்டு பரப்பிக் கொண்டேயிருக்கும்.

இப்படிப் பரப்பும் பொழுது
1.சிறுமூளைக்குள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.தூண்டும் பொழுது (அந்த உணர்ச்சி) உயிரான காந்தப் புலன்களுக்குள் அந்த அறிவின் தன்மையை இயக்குகின்றது.
3.பின் கண்… காது… மூக்கு… உடல்.. என்ற நிலைகளில் இந்த உணர்ச்சிகளை நம் உயிர் ஒலி அலைகளாக மாற்றுகின்றது.

அதன் வழிக் கொண்டு நாம் இதை மூச்சாக வெளியிட்ட சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அதே இனமான சக்திகளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

ஆன்மாவாக மாற்றிய நிலைகளிலிருந்து எப்படி ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சுகளாக வந்த பின் அதற்குக் கூவி இரையை எடுக்கும்படிக் கற்றுக் கொடுக்கின்றதோ அதே போல்
1.நமக்குள் உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது
2.நம் உயிர் அதற்கு உணவை ஊட்டிச் சாந்தப்படுத்துகின்றது.

உதாரணமாக நாம் வேதனை கொண்ட உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்ட பின் நீங்கள் “இதெல்லாம் வேண்டாம்… மகிழ்ச்சி கொண்ட நிலைகள் பெறவேண்டும்…! என்று எண்ணினாலும் அதன் உணர்வின் தன்மை வேகத் துடிப்பு கூடும்.
1.அந்த வேதனை உணர்வின் வேகம் அதிகரிக்கும்.
2.எந்தப் பாகத்தில் அந்த உறுப்புகளுக்குள் அது தேங்குகின்றதோ
3.அந்த உறுப்புகளில் வேதனையான ஒலிகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.
4.அதனால் நாம் சிந்தனையும் இழந்துவிடுவோம்.
5.அங்கங்களை இயக்கக்கூடிய சக்தியும் குறைந்து விடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நாம் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து சுவாசிக்கும் உணர்வுகள் இப்படிப் பல நிலைகளையும் நோய்களையும் உருவாக்கிவிடுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டுமா இல்லையா…?

வள்ளி திருமணத்தில் உள்ள முக்கியமான தத்துவம்

 

சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகச் சாஸ்திரங்களிலே “வள்ளி திருமணத்தைக் காட்டுகிறார்கள்…”

வள்ளி திணைக் காட்டினைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாள். தான் விளைய வைத்த பொருளை பறவைகள் கொத்தித் திங்காதபடி பாதுகாப்புக்காகக் காவல் புரிகின்றாள்.

அவள் யார்…? வேடுவனின் மகள்.
1.நாம் பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி… அதில் விளைந்த சக்தி தான் மனித உடலிலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி வள்ளி
2.வல்லவன்… வல்லவி – வல்லி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள் வள்ளி என்று.

அதைத் தனித்துப் பிரித்துக் காட்டி வள்ளி திருமணம் என்ற காவியமாகப் படைத்து “எது தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்…?” என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் நினைப்பது அது காவியம் என்று…! ஆனால் சாதாரண மக்களுக்கும் புரியும் தன்மைக்குத் தான் அதைக் காட்டுகின்றார்கள்.

வேடுவன் என்றால் பல கோடிச் சரீரங்களில் நாம் வேட்டையாடி அதிலே விளைந்த சக்தி தான் உடலில் உருப் பெற்ற ஆறாவது அறிவு. அது தான் வள்ளி.

திணைக்காட்டிலே காவல் இருக்கின்றது. தான் விளைய வைத்த பொருளை மற்ற உயிரினங்கள் எடுத்துச் செல்லாது பாதுகாக்கின்றது. வெகு தூரத்திலிருந்து கவண் கொண்டு வீசுகின்றது.

நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாக்கும் நிலை வள்ளி.
1.அந்த வள்ளியை முருகன் காதலிக்கின்றான்…
2.அதாவது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வலிமைமிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகு. நாம் மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள். அதைத் தான் முருகன் என்றும்
1.தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.
2.தன்னைப் பாதுகாக்கும் உணர்வை நேசித்தோம் என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

திணைக்காட்டில் குருவியை விட்டு விட்டோம் என்றால் அதிலே விளைவதைத் தின்றுவிடும். அது போல் நம்மை ஏசுவோரையோ மற்றவர்களையோ நாம் எண்ணுகிறோம் என்றால் அந்த உணர்வுகள் நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.

நாம் வேதனைப்படும்படியான சொல்லை ஒருவன் சொல்லிவிட்டால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து… நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.

வேதனை என்று எடுத்துக் கொண்டால் உடலில் டி.பி.நோய் வருகின்றது நல்ல அணுக்களை அது தின்று விடுகிறது.

அதனால் தான் வள்ளி…!
1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை நாம் நேசித்தால் உடலுக்குள் சென்ற பின்… உயிர் அதைத் தெய்வ ஆணையாக
2.நமக்குள் அந்தக் காத்திடும் உணர்வின் செயலாக இந்த உடலை இயக்குகின்றது… அது தான் தெய்வானை.

இச்சா சக்தி…! தன்னைப் பாதுகாக்கும் நிலைகளை இச்சைப்படும் பொழுது இந்த உணர்வு நம் உடலுக்குள் சென்று கிரியை. எதன் எண்ணத்தால் நாம் இச்சைப்படுகின்றோமோ அதன் ஞானமாக இந்த உடலை இயக்கும்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று தெளிவாக நமக்குச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

என்னை இப்படிப் பேசி விட்டானே என்னைக் கேவலப்படுத்துகின்றானே என்ற நிலையில் அதை நாம் இச்சை பட்டால் அவனை விடுவேனா என்ற நிலைகள் அதைக் கூட்டும் பொழுது உடலுக்குள் இது தெய்வ ஆணையாகச் சென்று விடுகின்றது.

அவன் எந்தெந்தக் கெடுதல் செய்தானோ அது நமக்குள் புகுந்து அதன் வழி நம்மை இயக்குகின்றது அதன் ஞானமாக நம் செயலும் உணர்வும் அணுக்களும் உடல் உறுப்புகளும் விளைகின்றது.

நாம் வள்ளி திருமணத்தைச் சாதாரணமாகப் பார்த்துச் சிரிப்பதிலும் கைதட்டுவதிலும் தான் இருக்கின்றோமே தவிர சாதாரண மக்களும் உள்பொருளைப் புரிந்து வாழ்க்கையில் நீ எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உண்மையைக் காட்டக்கூடிய காவியத் தொகுப்பு தான் அது.

ஆகவே நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

1.ஆறாவது அறிவின் வலிமையால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இச்சை அது மேலே பட வேண்டும்.
2.அந்த உணர்வின் சக்தி நமக்குள் இருக்கும் பொழுது தெய்வ ஆணையாக நமக்குள் செயல்படும் சக்தியாக வரும்
3.அதன் ஞானமாக அந்த உணர்வுகள் இந்த உடலில் இயக்கப்பட்டு அந்தப் பண்பு கொண்ட நம்மை அந்த வழியிலே அது அழைத்துச் செல்லும்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி…! சொல் அது மூன்று தான் ஆனால் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அதன் செயலாகக் கிரியை ஆகி அதன் ஞானமாக நம்மை வளர்க்கும் என்ற பொதுச் சொல்லாகக் காட்டினார்கள்.

ஆகவே… எதிலேயும்… நாம் எதை இச்சைப்பட வேண்டும்…? என்ற தத்துவம் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தன்னைக் காக்கும் வழிமுறை எது…? என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.

ஆலயத்திற்கு சென்று நம் குறைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் அங்கே சொல்லி அதை வளர்க்கக்கூடாது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு… இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்… அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நாம் யாரையோ குறை கூறுகின்றோம்
2.எவரையோ குறை கூறுகின்றோம் என்று இருக்கலாம்.
3.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவாக அந்தக் குறையான உணர்வுகளை நம் உடலில் உயிர் உருவாக்கிவிடும்.

யாரைக் குறையாக எண்ணினோமோ அந்தக் குறை உணர்வின் அணுக்களாக மாறுகின்றது. அது நாளடைவில் நம் இரத்தத்தில் கருவின் முட்டையாக மாறுகின்றது.

அது முட்டையாக மாறி…
1.எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
2.அதனின்றே உணர்வின் தன்மை இது இருப்பிடமாக வைத்து
3.அதன் துணை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி இந்த இரத்தநாளங்களின் வழியாக உயிருக்கு அனுப்புகின்றது.

உயிருக்குள் தூவப்படும் பொழுது நாம் யாரைக் குறையாக எண்ணினோமோ அவை அனைத்தையும் உணவாகக் கொடுத்து இந்த உடலின் உறுப்புகளைக் குறையாக மாற்றி நம்மை வேதனைப்படச் செய்யும்.

பின் அந்த வேதனையிலிருந்து நாம் தப்புவதே மிகவும் கடினம். ஆகவே தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஒருவரைப் பற்றி அந்தக் குறையின் உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையிலேயும் ஒரு தொழில் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நிலைகளிலோ மேல் வலி… நோய்… மற்ற குறை… எல்லாமே இருக்கும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது.

அவரைக் குறையாக எண்ணிக் கொண்டிருந்தால் அந்தக் குறையைத்தான் இதிலிருந்து நாம் நுகர முடியும். அவர் முதலில் நம்முடன் அன்பு கொண்டு பாசம் கொண்டு பழகியிருந்தால் அந்தக் குறைகளை வேகமாக இழுத்துவிடும்.

ரேடியோ டி.வி.க்களில் ஒலி, ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது அதிலே எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்த ஸ்டேசனைத் தான் எடுக்கும்.

அதைப் போல் தான் ஒருவருடன் நாம் பழகப்படும் பொழுது அந்தப் பதிவின் துணை கொண்டு நமக்குள் அவருடைய உணர்வுகள் எளிதாக வந்துவிடும்.

சுவை மிக்க பாலாக இருந்தாலும் அதற்குள் விஷத்தைக் கலந்து விட்டால் குடித்தால் அந்தப் பாலுக்கு வலு ஏது…? அந்த விஷத்தின் தன்மை போல் தான் உணர்வின் எண்ணங்கள் தூவப்பட்டு அங்கே விஷத் தன்மையை வளர்த்துவிடும்.

இன்றைய செயல் நாளைய சரீரமாகிவிடும். அதைத் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாக்குகின்றார்கள்.

நாம் எடுக்கும் உணர்வுகள் அணுவின் தன்மை அடைந்து விட்டால் தன் உணவின் தன்மையை அது எடுத்துத் தன் இனத்தின் தன்மையைப் பெருக்கப்படும் பொழுது அதன் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் அதிகரித்து நமக்குள் உருப்பெறும் உணர்வுகளை அது உருவாக்கி
1.நாம் எதை எண்ணினோமோ
2.அந்த எண்ணத்தின் வழியாகவே… அடுத்த சரீரத்தைப் பெறச் செய்யும்.

ஆகையினால் பிறரைப் பற்றிக் நாம் குறை கூறும் நிலையோ பிறருடைய நிலைகளை எடுத்து கொண்டால் “தான் உயர்ந்தவன்…!” (நல்லவன்) என்ற நிலைகள் இருப்பினும் அதை மாற்றிவிடும். அதாவது
1.பாதாம் உயர்ந்ததாக இருப்பினும்
2.அதை விஷத்தில் துவட்டி உணவாக உட்கொண்டால்
3.நம்மை மடியச் செய்துவிடும்… பாதாமிற்குச் சக்தியில்லை.
4.ஏனென்றால் விஷத்தின் தன்மையே ஆற்றல் கொண்டது.
5.ஒரு விஷத்தின் இயக்கமே உலகத்தின் இயக்கம்.

சூரியன் விஷத்தின் நிலையால் சுழற்சியின் வேகம் கூடினாலும் அதிலே உருவாகும் உணர்வுகள் நஞ்சினைப் பிரித்திடும் நிலை வருகின்றது.

சூரியன் தன் சுழற்சியால் ஏற்படும் உணர்வுகள் கொண்டு அந்த நஞ்சின் மேல் மோதப்பட்டு வெப்பத்தின் தணல் கூடப்படும் பொழுது விஷத்தைப் பிரித்து விடுகின்றது. (சூரியன் என்றால் நாராயணன்)

விஷத்தைப் பிரித்த பின் அது சிதறி ஓடினாலும் இந்த வெப்பத்தால் உருவான நிலைகள் “ஈர்க்கும் காந்தம்…” என்ற நிலைகள் வருகின்றது. அந்தக் காந்தத்திற்குப் பெயர் லட்சுமி.

காந்தமாகப்படும் பொழுது நகர்ந்து சென்று கோள்களின் விஷத் தன்மையைத் தனக்குள் (லட்சுமி) கவர்ந்து கொண்டாலும் விஷத்தை இந்தக் காந்தம் கவர்ந்து கொண்டால் அது “இலட்சுமணா…”. அது தான் ஒரு அணுவிற்குள் இருக்கும் இயக்கச் சக்தி…!

காந்தத்தால் கவர்ந்து கொண்ட நிலையாக இவ்வாறு ஒரு அணுவின் இயக்கமாகச் சூரியனிலிருந்து வெளிப்படுவதை (நாராயணன்) இந்த உலகத்தில் தன் ஒளியை அனுப்பிக் கொண்டேயிருக்கின்றது.

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்றால் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் சீதாலட்சுமியாக மாறுகின்றது. விஷம் அந்தச் சத்தின் (நாம் பேசியதை) மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அது ஞானமாகின்றது. அந்த ஞானத்தின் வழி கொண்டு தான் அந்த அணுவின் இயக்கம் இருக்கும்.

எதன் வழி கொண்டு எதனில் உருவானதோ அதன் வழி கொண்ட ஈர்ப்புக்குள் சென்று அதை வளர்க்கும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் போல் தான் நாம் எண்ணும் எண்ணங்கள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.வேதனை என்ற உணர்வுகளோ
2.ஒருவரை வேதனைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு தன்னை மறந்து அதைச் சொன்னோம் என்றால்
3.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி இரத்த நாளங்களில் சுழலச் செய்கின்றது.

அதே போல்..
1.பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணங்களோ
2.பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களோ
3.பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணங்களை எவர் எடுத்தாலும் சரி
4.நானே பெரிய சக்தி பெற்றவனாக இருந்தாலும் அந்த விஷத்தை உருவாக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது
5.எனக்குள் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும் நிலைகளே வரும்.

நல்லவைகள் எதைச் செய்தாலும் விஷத்தின் ஈர்ப்புக்குள் சென்று அந்த அணுக்களும் (விஷத்தை) உட்கொள்ளா நிலைகள் மறுத்து அந்த அணுக்கள் சோர்வடையத் தொடங்கிவிடும்.

அது சோர்வடைந்து விஷத்தின் தன்மை ஆட்கொண்டால் அனைத்தும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. விஷத் தன்மையாக மாறிய பின் நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் விஷமான உயிரினங்களாகத் தான் பிறக்க நேரும்.

அதைப் போன்ற நிலைகள் ஆகாது தடுக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.விஷத்தை ஒடுக்கிய… நஞ்சினை வென்ற…
2.அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.உங்களுக்குள் மீண்டும்… மீண்டும்… மீண்டும்… மீண்டும்… ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி எடுத்து உங்களுக்குள் சேர்த்து உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.
1.இது ஒன்றும் கஷ்டமில்லை.
2.சிறிது நாள் பழகி விட்டால் பின் தன்னாலேயே இது வரும்.

அகஸ்தியன் உணர்வுகள் மீண்டும் இந்தத் தென்னாட்டிலே தழைக்கின்றது

 

மனிதருக்குள் பதிவான அசுரத் தன்மைகளை மாற்றுவதற்குக் குருநாதர் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும்… நமது நாட்டில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தான். உணர்வின் தன்மை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.
1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றும் அவன் வாழ்வது போன்று நம் தென்னாட்டிலே மீண்டும் இது தழைக்கின்றது.
2.மற்ற நாடுகளில் இல்லை… தென்னாட்டில் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கலந்த இந்தக் கலாச்சாரங்கள் விளைகின்றது.
3.அதன் அடிப்படையில் தான் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அந்த அகஸ்தியன் உணர்வை உணர்த்துவதும்… உணரச் செய்வதும்.
4.அவர்கள் வளர்ந்தால் அந்த மெய்ப் பொருளின் நிலைகளில் அவருடைய வளர்ச்சியில் நாமும் பெறலாம்.
5.அந்த உணர்வுகளை இங்கே படரச் செய்யவும் முடியும்…. ஆகவே அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்தில் தொடர்பு கொண்டாலும் அங்கே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவில் உருவாகும் அந்தக் குழந்தைகள் “அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

அழகான சாமி படங்கள் எத்தனையோ இருக்கின்றது. அது போன்ற அழகான குழந்தையாக வளர வேண்டும். மகாலட்சுமி போன்று… மகா சரஸ்வதி போன்று சர்வ ஞானம் பெற வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மை பெற்ற நிலையில் இருளைப் போக்கும் மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லி அந்த ஞானிகள் காட்டிய வழியினைச் சொல்லுங்கள்.

குடும்பத்தில் மகரிஷிகள் உணர்வுகள் படர வேண்டும். குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவில் வளரும் இந்தக் குழந்தை பெற வேண்டும். உலகில் ஒன்றி வாழும் இந்த உணர்வின் சக்தி அந்த குழந்தையின் கருவிலே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

1.அந்தக் குழந்தை வளர வளர வளர தென்னாட்டில் வளரும் அத்தகைய குழந்தைகள் எந்நாட்டவரையும் காக்கும் சக்தியாக வரும்.
2.அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தது போல எந்நாட்டவரும் அந்த ஆற்றலைப் பெறும் தன்மையும்
3.அதன் வழியில் மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
4.நாம் முன் செல்கிறோம்… பின் வருவோரின் நிலைகளூம் அதே வழியில் செல்லும்.
5.ஏனென்றால் இனம் இனத்தைத் தான் வளர்க்கும்.

எதிலே எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கின்றது. தன் இனத்தின் சத்தை தன் வித்திற்கே உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போல தான் தீமைகள் மனிதனுக்குள் விளைந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதையே உணவாக ஊட்டி தீமையின் விளைவாகவே இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எல்லோரையும் மீட்க வேண்டும். பன் மடங்கு ஞானிகளை உருவாக்க வேண்டும். உங்கள் சொல்லால் செயலால் இதை வழிப்படுத்துங்கள்.

இரவிலே தூங்கும் போது ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு
1.முடிந்த மட்டும் இந்த உலகம் அந்த அகஸ்தியன் சென்ற அருள் வழியில் இப்படித்தான் வரவேண்டும் என்று தியானியுங்கள்.
2.தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று யாம் சொன்ன இந்த உபதேசத்தின் உணர்வைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அந்த நினைவினை எண்ணி வளர்த்துக் கொள்ளுங்கள். இது எல்லோராலும் சாத்தியமானது தான்.
1.சிறிது நாளைக்குச் சொல்லிப் பாருங்கள் தன்னாலே வந்துவிடும்.
2.அப்பொழுது உங்கள் உணர்வுகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் உலாவலாம்.

“இந்த அற்புதங்களை…” மற்றவர்களுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்டு மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.

1.சாமி மட்டும் பார்த்தேன் என்ற நிலைகளை…
2.சாமி பார்த்ததை எங்களாலும் பார்க்க முடியும்.
3.சாமி பார்வையால் தீமைகள் போகும்… “சாமி சொன்ன வழியில் என் பார்வையால் தீமைகள் போகும்…” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

அந்த வளர்ச்சியை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

உங்கள் மூச்சு சாதாரணமானதல்ல…! அந்த உணர்வுகள் இந்த உலகில் படரும்.
1.நீங்கள் ஒவ்வொருவரும் தவக்கோலம் பூண்டு உலக மக்கள் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இதைப் பதிவு செய்யுங்கள்.
2.அவர்களுக்குள்ளும் அது விளைகின்றது… அவர்களுக்குள் விளைய வேண்டும் என்ற எண்ண அலைகள் இங்கே பரவும்.
3.இதனுடைய பெருக்கம் கூடக் கூட உலகில் எதிர்காலத்தில் வரும் தீமைகள் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து விலகும்.

நமக்குள் முந்திய உணர்வின் தன்மை ஒடுங்கும்… எது நமக்குள் சேர்ந்திருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கும்.

இதை எல்லாம் நிச்சயம் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் நீங்கள் செய்ய வேண்டும். குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆடு மாடு மற்றவைகள் எல்லாம் தனக்குள் உருவாகும் விஷத்தின் தன்மை கொண்டு கடினமான தட்டைகளை (தாவர இனங்களை) தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மை அதை அடிமைப்படுத்தி பிஸ்கெட் போலக் கரைத்து உணவாக்கிக் கொள்கின்றது.

கரைத்துத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் கலந்த உணர்வின் சத்தையும் தனக்குள் எடுத்து
1.வலுவான உடலாகத் தன் உடலை மாற்றுகின்றது.
2.ஆனால் அதே சமயத்தில் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாணம் நல்லவைகளாக இருக்கின்றது.

பல பல விஷ மூலிகைகளையும் ஆடு உணவாக உட்கொள்கின்றது. பின் அந்தச் சாணத்தை அது வெளியிடும் பொழுது எடுத்து நாம் நுகர்ந்து பார்த்தால் நமக்குள் இருக்கும் நஞ்சுகளை அது முறித்து அதை அடக்கிடும் அந்தச் சக்தி பெறுகின்றது.

1.அந்தச் சாணத்தில் வெளிப்படும் மணத்தை நாம் நுகரப்படும் பொழுது
2.நம் இரத்தங்களிலே இது கலக்கப்பட்டு
3.நம்முடைய சுவாசப்பைகளிலேயோ மற்ற உறுப்புகளிலேயோ இருக்கும் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

இதை நீங்கள் பார்க்கலாம்.

அதே சமயத்தில் அந்தச் சாணத்தை வைத்து நம் வீட்டை மெழுகும் பொழுது புவியின் வெக்கையால் அலைகள் வெளிப்படும். அதன் மீது நடந்தால்
1.வீட்டில் இருக்கும் துன்பமான உணர்வுகளை
2.நம் பாதத்தால் கவரப்படும் இந்த உணர்வுகளை அடக்கும் சக்தி பெறுகின்றது.
3.அதனுடைய மணங்களுக்குத் தீமைகளை அடக்கும் சக்தி வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் மனித உடலிலோ நாம் சுவைமிக்க உணவை உணவாக உட்கொண்டாலும் நம் உடலுக்குள் சென்ற பின் நம் உடலின் தன்மையோ நஞ்சைப் பிரித்துவிட்டு நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

அப்படி நல்ல அணுக்களாக மாற்றப்படும் பொழுது தான் நாம் எதனையும் நிதானித்து தெரிந்து கொள்ளும் தன்மையை அடைகின்றோம்.

ஒரு விளக்கு அது எரியப்படும் பொழுது வெளிச்சமாக இருக்கின்றது. அதன் மீது ஒரு கருப்பான பொருளை ஒட்டிவிட்டால் கருப்பின் நிறமே வருகிறது. சிவப்பான பொருளை ஒட்டிவிட்டால் சிவப்பின் நிறமே வருகின்றது.

இதைப் போல் தான் நம் கண்களின் வழியாக வேதனை என்ற உணர்வின் தன்மையைக் கவர்ந்து விட்டால் இந்தக் கண்கள் அந்த வேதனையைத் தான் கவரும் திறன் பெறுகின்றது. அதன் உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அது வருகின்றது.

வேதனை என்ற நிலைகளை நீக்க விஷத்தை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிருடன் வேண்டி அந்த உணர்வை ஏங்கப்படும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஒளியின் அறிவாக நமக்குள் கண்கள் காட்டுகின்றது.

அந்தக் கண்ணின் நிலைகளில் கொண்டு நாம் எந்தத் தீமையை வென்ற உணர்வை எண்ணுகின்றோமோ இந்தக் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் நஞ்சினை மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை ஒளியாக மாற்றும் அந்தப் பருவம் பெறுதல் வேண்டும்.

இனி வரக்கூடிய காலங்களில் “எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வை…” நமக்குள் வளர்க்க வேண்டும்

 

ஒவ்வொரு குடும்பத்திலும்
1.அவர்களுடைய கஷ்டங்களைப் பார்த்தால் தியானிக்க வேண்டும்…
2.அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தவம் இருக்க வேண்டும்.
3.நலமாக வேண்டும் நலமாக வேண்டும் என்ற இந்தத் தவம் அது நமக்குள் நல்லதாக்குகின்றது.

ஆகவே சரியாக்க வேண்டும் என்று தான் நாம் எண்ணுகின்றோம். கெட்டுப் போய்விட்டது கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல வேண்டியதில்லை

வியாபாரம் குறைவாக இருந்தாலும் எப்படியும் அதைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தி அதன் மேல் நாட்டத்தைச் செலுத்தினால் அதைச் சீர்படுத்த முடியும்.

உடலிலே நோய் வந்து விட்டால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற வகையில் எண்ண வேண்டும்.
2.”நோயைப் பற்றி எண்ணக்கூடாது…”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

வியாபாரத்தில் பணம் வரவில்லை என்றால் மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தொழில் வருமானம் வர வேண்டும்… நமக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இதை நாம் பெருக்கிக் கொண்டு வர வேண்டும்.

பணம் வரவில்லையே…! என்று எண்ணினால் அந்த உணர்வு என்ன செய்யும்…? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
1.இந்த எண்ணத்தை அங்கே பாய்ச்சினால்
2.ரிமோட் கண்ட்ரோல் போன்று பணம் வரவு வருவதைத் தடுத்துவிடும்.

நண்பர்களுக்குள் நன்மை என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் புரையோடுகின்றது. பாசத்திலே பையனை எண்ணி அவனுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்று எண்ணினால் அதே உணர்ச்சிகள் தூண்டி அவன் முன்னாடி பாதை தெரியாதபடி பள்ளத்திலே காலை வைத்து அடிபடுகின்ரான்.
1.பாசத்தாலும் இயக்குகின்றது… வெறுப்பாலும் இயக்குகின்றது.
2.இந்த மாதிரி நாம் வெகு தூரத்தில் இருந்தாலும் நம்முடைய உணர்வுகள் இப்படி எல்லாம் இயக்கத் தான் செய்கின்றது.

பணம் ஒருவர் தரவில்லை என்றால் அவர் தரவில்லை என்று சொல்லாதீர்கள். அவருக்கு வரவு வர வேண்டும் நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த உணர்வுகளை உந்திப் பாருங்கள் நாளடைவில் அவருக்கும் வருமானம் வரும்… நமக்குப் பணத்தையும் திரும்பக் கொடுப்பார்கள்.

ஆகவே
1.சந்தர்ப்பத்தால் ஏற்படும் குறைகளை நிவர்த்திக்கும் நிலைக்குத் தான் நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டு வர வேண்டுமே தவிர
2.”கஷ்டம்…” என்று எண்ணி… “அதை மீண்டும் உருவாக்கக் கூடாது…”

எங்கள் தொழில் வளர வேண்டும்… வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஒரு கெட்டவனே நம்மிடம் வந்து வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் திருடனாக இருக்கின்றான் என்றால் “அவன் திருடன்… திருடன்…” என்று சொல்ல வேண்டியதில்லை.

நீ எங்கேயாவது சென்று நல்லவனாய் இரு… நல்லது செய்…! என்று அவனைப் போகச் சொல்லி விட வேண்டும்.

அவன் திருடுவதைப் பார்த்து விட்டோம்.
1.பின் அந்த உணர்வே வளர்ந்து கொண்டிருக்கும்.
2.அடுத்தவரிடம் நாம் இவன் மோசமானவன் என்று சொல்வோம்.
3.இவன் செய்ததை பின் அவனும் செய்யத் தொடங்குவான்.

ஆகவே… நாம் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.

நீ செய்வது தவறு என்று தெரிகின்றது… தவறைத் திருத்திக் கொள்…! நல்லபடி நடந்து கொள்… எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நல்வழியைக் காட்டிச் செயல்படுத்துங்கள்.

1.அதிலே அவன் திருந்தவில்லை என்றால்
2.நீ எங்கேயாவது சென்று நல்லவனாக இரு…! என்று அவனை அனுப்பி வைத்து விட வேண்டும்.

கட்டுச் சோற்றுக்குள் எலியைக் கட்டி வைத்தால் என்ன செய்யும்…? அந்தச் சோறையெல்லாம் அது தின்றுவிடும்.

அது போல் அவனைத் திருடன் திருடன் என்று சொல்லும் போதெல்லாம் நம் நல்ல குணங்களை எல்லாம் அது தின்று கொண்டே இருக்கும். நம்முடைய செயலும் அதுவாக மாறிவிடும்.

இந்த வாழ்க்கையில் ஒருவருக்கு நோய் என்று வந்தாலும் அல்லது தெரிந்தாலும்
1.நோய் போக வேண்டும் என்று நினைக்காதீர்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இது வளர அது போகும்.

நல்ல தண்ணீரை ஊற்றினோம் என்றால் அங்கிருக்கும் அழுக்கு அகலத்தான் செய்யும். ஆகவே ஞானியின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது தீமையின் நிலைகள் அகலுகின்றது.

இந்தப் பழக்கத்திற்கு நாம் வந்து விட வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் குருநாதர் எனக்கு எப்படி ஞானத்தைப் போதித்தாரோ அதை உங்களுக்கும் போதிக்கின்றோம்… அந்த மகரிஷிகள் உணர்வு கலந்து.

வாழ்க்கையில் அந்த மாதிரி நேரங்களில் இதுவே நல்ல வழியைக் காட்டும். அருள் ஞானத்தைப் பெறச் செய்யும். இருளைப் பிளக்கச் செய்யும் பொருளைக் காணச் செய்யும்.

ஒரு தவறு நடந்தது என்றால் அதில் உள்ள பொருளை நாம் காண முடியும். அந்த இருளைப் பிளந்து விடும். அந்த உணர்வுகளை நாம் அறிய முடிகின்றது.

நம் ஆன்மாவில் மறைத்துக் கொண்டிருக்கும் தீமைகளை இது பிளந்து விடும். பொருளைக் காணும் திறன் நான் பெறுகின்றோம். வாழ்க்கையில் சிறிது காலம் இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.

காற்று மண்டலம் நச்சுத்தன்மையாக இருக்கின்றது என்று அதைப் போன்ற நிலைகளைப் பதிவு செய்துவிட்டால் அதைச் சீக்கிரம் இழுக்கும்.
1.ஐயோ நச்சுத் தன்மையாக இருக்கின்றதே என்று பதிவு செய்துவிட்டால்
2.அடுத்து நச்சுத்தன்மைகள் நம் உடலுக்குள் வந்து சேரும்.

அப்படி எண்ணாது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்
2.எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று
3.அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்று இதை எண்ணி இந்தக் காற்று மண்டலத்தில் பரப்புங்கள்.

நச்சுத்தன்மை என்று எண்ணினால் அந்த உணர்வை இழுக்கின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது. நம்மை அது மாற்றுகின்றது. இது போன்ற நிலையிலிருந்து விடுபட்டு “மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு…” நீங்கள் வரவேண்டும்.

குரு அருளை உங்களுக்குள் திரு அருளாக மாற்றும் நிலைக்கே இதை யாம் உபதேசித்தது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் வாழ்க்கைக்காகத் தொழில் செய்கின்றேன்… அதிலே எனக்கு இலாபம் இல்லை… நஷ்டமாகிறது…! என்ற வேதனையை எடுத்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை நஷ்டப்படச் செய்து இந்த உடல் உறுப்புகளும் நலிகின்றது.
1.வேதனை என்ற இருள் சூழும் பொழுது நம் சிந்திக்கும் திறனும் குறைகின்றது.
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுக்கும் தன்மை வருகின்றது.
3.தற்கொலை செய்யும் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
4.இந்த உடலை உருவாக்கிய உயிரை மதிக்காது உடலை அழித்துவிடும் எண்ணங்கள் வருகின்றது.

எதன் பால் இந்த உணர்வின் தன்மை பற்றாகியதோ தன்னால் முடியவில்லையே…! என்று எண்ணத்திலேயே வேதனையுடன் இறந்தால்
1.அவருடன் பழகியவர்கள் “அடடா…! நன்றாக இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணினால்
2.எண்ணியவர் உடலுக்குள் அவர் ஆன்மா சென்று பேயாக ஆட்டிப் படைத்து
3.நன்றாக இருப்பவரையும் மடியச் செய்யும். அதற்குத்தான் இது உதவும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மாறுதல் வேண்டும். நமக்கு எந்த ஆசை வேண்டும்…? பேய் மனம் இல்லாது அருள் மணம் நமக்குள் வர வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளை உணர்துவதற்குத்தான் அன்று பல்லாங்குழி விளையாடுவார்கள். அந்த விளையாட்டை அமைத்ததின் நோக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

1.தனக்குள் கூட்டிப் பெருக்கும் உணர்வு கொண்டு
2.தன் வாழ்க்கையில் எப்படி வளர வேண்டும்…? என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான் அந்த விளையாட்டை உருவாக்கினார்கள்.

அதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தனக்குள் இலாபத்தை ஏற்றிக் கொள்ளும் நிலை வருகின்றது.

வாழ்க்கையின் நிலையில்…
1.சந்தர்ப்பத்தால் ஒருவர் “நான் தோற்றுவிட்டேன்…” என்ற நிலைகள் வரும் பொழுது
2.”உன்னைத் தோற்கச் செய்கிறேன் பார்…!” என்ற நிலைகள் இருக்கக் கூடாது.

அதாவது அவனும் வளர வேண்டும்… அவன் சிந்தனையும் வளர வேண்டும்…! என்ற நல்ல எண்ணத்தில் பல்லாங்குழி விளையாண்டால் அந்தக் குழந்தை நன்றாக இருக்கும்.

ஆனால் பல்லாங்குழி விளையாடும் பொழுது நான் ஜெயித்து விட்டேன் என்று சொன்னவுடனே அடுத்தவர் தோற்றுவிட்டால் “நம்மைக் கேவலமாக நினைப்பார்களே…!” என்று முகம் வாடும்.

குழந்தையாக இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை அந்த விளையும் பருவத்தில் வரப்படும் பொழுது தோல்வியைச் சந்தித்த பின் வெறுப்பின் தன்மை வரும்.

1.ஆனால் ஞானிகள்… மனோதத்துவரீதியில்
2.மனிதன் தன்னைத் தான் எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்று தான் இதைக் கொண்டு வந்தார்கள்.

நாம் தொழிலைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் உணர்வுகளை வலிமையாக எடுத்துக் கொண்டு
1.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
2.நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்டோர் நலம் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது. மாறாக எண்ணங்களை மாற்றி விடுகின்றனர்.

ஆனால் நாம் நுகர்ந்ததை எல்லாம் நம் உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது. அதை மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது உருவான அந்த அணுவின் தன்மை தன் இனத்தைப் பெருக்கி விடுகின்றது.
1.இது தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…
2.மூஷிகவாகனா…! நாம் சுவாசித்தது எதுவோ (நம் மூச்சு) அதன்படித் தான் இந்த வாழ்க்கையில் நடக்கின்றது.

ஒருவரை நாம் அடிக்கடி வேதனைப்படும்படிச் செய்து அதைப் பார்த்து ரசித்தால்… நமக்குள் அந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி… நமக்கும் அதே வேதனையை உருவாக்கிவிடும். தப்ப முடியாது.

நாம் நினைக்கின்றோம் தப்பிவிட்டோம் என்று. இந்த உடலில் கடும் நோய்களாகும் பொழுது அது முன் சேர்த்துக் கொண்ட வினை…!

அந்த வினைகள் இருப்பினும் நாம் அதைக் கடந்து அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இருளை மாற்றும் திறனைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைக் கூட்டினால் பழைய தீய வினைகள் அனைத்தும் அகன்று அது சுத்தமாகின்றது.

கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்

 

திடீர் சாமிகள் (தெய்வங்கள்) இன்று உருவாவதைப் பார்க்கலாம்.

தனக்குப் பணம் வேண்டும் என்று சொன்னால் எதையாவது ஒரு சிலையை அவர் ஆற்றுக்குள் புதைத்து வைத்து விடுவார். பின்பு… இரவு கனவிலே வந்து ஆண்டவன் கோவில் கட்டச் சொன்னார் என்று ஒரு நாலைந்து பேரிடம் சொல்வார்கள். இதைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உருவாக்கிய பின் “என்னால் இம்சை தாள முடியவில்லைங்க…!” என்று இவர் சொல்வார்.

நாலைந்து பேருக்குச் சொன்ன நிலைகள் பின் ஊரில் உள்ளவருக்கெல்லாம் சொல்லி
1.எப்படியோ பார்க்க வேண்டும் என்று சொல்லி… “தெரியாத மாதிரி… அலைகிற மாதிரியே…” செய்து கொண்டே இருப்பார்.
2.அப்புறம் கண்டுபிடித்துப் போகிற மாதிரி இந்த இடத்தில் இருக்கின்றது அந்த இடத்தில் இருக்கின்றது சொல்வார்கள்.
3.அப்படிச் செய்யும் போது ஆஹா… வந்தாயிற்று…! கனவில் சொன்ன மாதிரியே சிலை கிடைத்து விட்டது…!

இந்தச் சிலையை எடுத்துக் கோவிலைக் கட்டி அங்கே பிரதிஷ்டை செய்தால் செய்தால் உனக்கு இன்னென்னது கிடைக்கும் என்று இவர் எதைச் சொல்கின்றாரோ அது நடக்கும்.

இவர் சொன்ன ஆசைகளை வைத்து அந்த முருகனுக்குக் கோலாகலமாக விசேஷங்கள் நடக்கும். அப்போது யார் இதைச் சொன்னார்களோ அவர்களுக்குப் பணம் கிடைக்கும்.
1.எண்ணிய ஆசைகள் இங்கே வளரும்.
2.பின் சிறிது நாள் சென்று விட்டால் அந்தச் சாமியும் போய்விடும்.

இது நடந்த நிகழ்ச்சி. சில இடங்களில் இப்படியும் நடக்கிறது.

இதே மாதிரி எந்த ஆசையை உருவாக்கிப் பிறரிடத்தில் பதிவு செய்கின்றோமோ அந்த உணர்வு தான் வருகின்றது.

ஒரு இடத்திலே… “கற்பூரத்தைக் கொளுத்தி ஆயிரம் ஆடுகளை வெட்டுகிறார்கள்…!” என்று சொன்னவுடன் அங்கே கூட்டம் போய்க்கொண்டே இருக்கின்றது.

மனிதனுடைய ஆசை எப்படி இருக்கின்றது…?

எனக்கு என் காரியம் ஜெயித்தது…! அவன் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கின்றான். அவனை மடக்க ஆயிரம் ஆடுகளை நான் வெட்டுகின்றேன் என்று இப்படிச் செய்கின்றார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பின் வேடிக்கை பார்க்க அங்கே கூட்டம் அதிகமாகின்றது.
1.காரியமில்லாமலா அங்கு செல்கின்றார்கள்…! என்று இந்த உணர்வு பதிவான பின்
2.நான்கு ஆண்டு மூன்று ஆடு அவரவர்கள் வசதிக்குத் தக்கவாறு அங்கே வெட்டுகின்றார்கள்.

மனிதன் தனக்குள் உருவாக்கக்கூடிய உணர்வுகள் இப்படி வந்த பின் இது எல்லாமே நடக்கின்றது.

அதே சமயத்தில் அந்த இடத்திலே அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் யார் கடை வைத்தது வியாபாரம் செய்தாலும் அவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டும்.

கற்பூரம் இந்த இடத்தில் தான் வாங்க வேண்டும் என்பார்கள். இவர்கள் வாங்கி அதைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி அதற்கு மேல் வைத்து விற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த இடத்தில் இல்லாதபடி சிறு தூரத்தில் கடை இருந்தாலும் கூட அவர்களுக்கு நன்றாக வியாபாரம் நடந்தால் எங்களுக்கு நீங்கள் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள்.

1.ஏனென்றால் நான் வைத்திருக்கும் சாமியைப் பார்க்கத்தான் இந்தக் கூட்டம் வருகின்றது
2.அந்தக் கூட்டத்தால் தானே உனக்கு வியாபாரம் ஆகிறது.
3.ஆகையினால் எனக்குப் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றார்.
4.இப்படித் தெய்வங்களை உருவாக்குபவர்கள் ஏராளம்.
5.மனிதனுடைய ஆசைகள் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி கடவுளை உருவாக்கி
6.கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்.

ஆகையால் இது போன்ற இடங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும்.

இரவு கனவிலே வந்தார்… விநாயகர் சிலையை இங்கே வைக்கச் சொன்னார். இன்ன இடத்தில் இருக்கிறது என்று காட்டினார்.

நான் திருடிக் கொண்டு வந்து வைத்தேன். அதற்கு மாலை எல்லாம் போட்டுப் பூஜை செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னார். இதே போன்று அதை வணங்குபவர்களுக்கு இன்னதெல்லாம் கிடைக்கும் என்று சொன்னார் என்று இப்படிப் பதிவு செய்து விடுகின்றார்கள்

இந்த அடிப்படையில் தான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று நாம் பக்தியில் வணங்கிக் கொண்டுள்ளோம்.

“இந்தச் சாமியினால்…” தனக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா…? என்ற இந்த நிலைகளுக்கு வந்து விட்டார்கள்.
1.நம்மால் பிறருக்கு நன்மை கிடைக்குமா…? என்ற
2.நல்ல சிந்தனைகள் அனைத்தும் காலத்தால் அறவே மறைந்து விட்டது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் செய்து முடிந்த பிற்பாடு “நாம் தான் தியானம் செய்துவிட்டோம் அல்லவா…!” என்று இருக்கக் கூடாது.

வாழ்க்கையில் எந்த நேரமாக இருந்தாலும் சரி…
1.சங்கடமோ சலிப்போ கோபமோ வெறுப்போ தொழிலில் சோர்வோ இதைப் போல் வந்தால்
2.அது நம்மை இயக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் (இது மிகவும் முக்கியமானது).

அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை நினைத்து ஒரு நிமிடம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களில் ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்த வேண்டும்.

இப்படி எடுத்துக் கொண்டால் பிறருடைய சங்கடமோ கோபமோ வெறுப்போ பிறருடைய நோயோ நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
1.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று எண்ணி வந்தாலே போதும்.

இது தான் ஆத்ம சுத்தி…!

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த “நீங்கள் எண்ணியவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கும்…!”

எப்படி…?

1.ஒருவன் நம்மைத் திட்டினான் என்று நமக்குள் பதிவாக்கிய பின்
2.அவனை நினைக்கும் பொழுதெல்லாம் அந்தத் திட்டிய உணர்வுகள் வருகிறது அல்லவா…!
3.பாவி எனக்குத் துரோகம் செய்தான்..! என்று எண்ணிக் கொண்டிருந்தால் அன்றையக் காரியங்கள் கெடுகிறது.
4.நமக்கும் கெடுகிறது… அவனுக்கும் கெடுகிறது…!

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் சிந்தித்து நீங்கள் தெளிந்து அந்த அருளைப் பெற்றிடும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.

1.பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து
2.இப்படிச் செய்கிறார்களே…! என்று எப்பொழுதும் எண்ணவே வேண்டாம்…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்தங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மாறாக “இப்படிச் செய்கிறார்களே…!” என்று எண்ணினால் அந்தத் தீமைகள் நமக்குள் வந்துவிடும். “நம் வாழ்க்கையும் அது கெடுக்கும்…!” (இது முக்கியம்)

அது நமக்குள் வராதபடி இந்த மாதிரித் தடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்.. பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது.

சண்டை போடுகிறார்கள் என்று பார்க்கின்றீர்களா…! உடனே இந்த மாதிரி சுத்தப்படுத்திவிட்டு அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும்.. இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…! என்று எண்ணிவிட்டு வந்துவிடுங்கள்.

1.ஏன் இப்படிச் செய்கிறார்கள்…? என்று அதையே அழுத்தமாக எண்ணினால்
2.அவர்கள் உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போடும் உணர்வுகளே விளையும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏனென்றால் இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்துவிடுகிறது. அதை மாற்றுவதற்கு இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானம்…!

கையில் அழுக்குப் பட்டால் உடனே கழுவி விடுகின்றோம் அல்லவா…! உடுத்தியிருக்கும் துணியில் ஏதாவது கொஞ்சம் அசிங்கமானால் உடனே கழுவுகிறோம் அல்லவா…!

இதே மாதிரி அவ்வப்பொழுது தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஜோதிடம் தேவையில்லை.. ஜாதகம் தேவையில்லை… மந்திரமோ மாயமோ எதுவுமே தேவையில்லை..! எல்லாமே உங்களால் மாற்றியமைக்க முடியும்.

எந்தத் தொழில் செய்தாலும் அல்லது வியாபாரம் செய்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.சரக்கு வாங்குபவர்களுக்கு இந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.இங்கே நம் குடும்பத்திற்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிப் பாருங்கள்.

உங்கள் தொழிலும் வியாபாரமும் பெருகும்… குடும்பத்தில் மகிழ்ச்சி என்றுமே இருக்கும்.

அரச உணர்வு நம்மை இயக்கக் கூடாது… ஞானிகள் உணர்வே நம்மை இயக்க வேண்டும்

 

அரசர்களைத் தழுவிய நிலைகள் தான் காவியப் படைப்புகள் வந்தது. அதன் வழியில் தான் உலக மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்திருக்கின்றோம்.
1.மகரிஷிகள் ஞானிகள் கொடுத்த தத்துவங்களை
2.அரசன் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டான்.

இன்று உலகிலே எந்த அரச சபைக்குச் சென்றாலும் அரசனைப் புகழ் பாடும் புலவர்களுக்குத் தான் மதிப்பு. அரசன் செயலைச் சிறிது குறை கூறினாலும் அவன் சிரசு இல்லை.

தர்மத்தையும் நியாயத்தையும் அந்த அரசனைத் தழுவிய நிலைகள் கொண்டுதான் புலமைகள் பாடிப் பொருள்களைத் தேடினார்கள். புலமை அவனுக்கு உதவியதே தவிர அரசனைக் காக்க உதவியதே தவிர மக்களுக்கு அது உதவவில்லை.

இந்த அடிப்படையிலே தான் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்ற நிலையில் காவியங்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை.

சோழ மன்னனை எடுத்துக் கொண்டால் “நீதிப்படி அவன் நடந்தான்…” என்று காட்டுவார்கள். தன் மகனே என்றாலும் தன் சொல்லுக்குக் கட்டுப்படவில்லை என்றால் “தன் புகழுக்காக”
1.அவன் தவறு செய்தானா…? இல்லையா…? என்று சிந்திப்பதற்கு இல்லாதபடி
2.தன் மகனையே தேரை ஓட்டிக் கொன்றான் என்று நீதிகள் சொல்லப்படுகின்றது.

அரசனுடைய மகன் தேரை ஓட்டிச் செல்கின்றான். ஒரு கன்று தவறிப் போய் ஊடே வந்து விடுகின்றது… அடிபட்டு இறந்தது. மனிதனாக இருக்கின்றாய்… மற்ற உயிரினத்தை நீ கொன்றாய் என்று நீதி சொல்லப்படும் பொழுது அவனைக் கொன்று விடுகின்றான்.

ஆனால் பாதையில் புழுவோ பூச்சியோ மற்றவைகளோ வந்தால் அதன் மீது தேர் போகாதா…?

அரசன் என்ற நிலையில் இருந்தாலும் தன் மகனையே அதே போன்று தேரை ஓட்டச் செய்து அவனைக் கொன்று நீதியை நிலை நாட்டினான் என்று பெருமை பேசுகிறார்கள்.

இதே நீதி கொண்டவர்கள் மாற்று அரசனிடம் என்ன செய்கிறார்கள்…?

இவர்கள் செல்லும் பொழுது அவருடைய மகளையோ அவன் விரும்பிய இடத்தையோ கேட்டு அனுப்புகின்றான். இவனை மதித்து அதைத் தருகிறேன் என்று சொன்னால் அவனை மெச்சி மகிழ்கின்றான்.

இல்லையென்றால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
1.இரு நான் உன்னை அழிக்கிறேன்… என்ற நீதிகள் தான் அங்கே பேசுகின்றது. ஆக… அரசினுடைய நீதி எது…?
2.நான் யாரிடம் எதைக் கேட்டாலும் மதிக்க வேண்டும்… மதிக்கவில்லை என்றால் போரிட்டு உன்னை அடக்கி மதிக்கும்படிச் செய்வேன்.

இது தான் அன்றைய அரசு நீதி…!

இந்தப் போர் முறைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அமெரிக்கா என்ன செய்கின்றது…?

அவன் அணு குண்டுகளைச் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் அவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் உன்னை அழித்து விடுவேன் என்று அவன் மிரட்டுவான்.

இன்று ஜனநாயகம் என்று இருந்தாலும் அதிலே தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளும் அதே அரசு நீதியைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். எந்த அரசு இதைக் கடைப்பிடித்ததோ அதன் வழியாகத் தான் ஆட்சி செய்கின்றார்கள்.
1.ஆக அரசர்களுடைய நீதி அவனைக் காக்கத் தான் வருகின்றதே தவிர
2.மக்களைக் காக்க என்று அல்ல.

அவனுடைய செயல் மாறிவிட்டால் தன் மக்களை.. தன்னை விசுவாசிப்பவர்களை ஏவல் செய்து பலிகடாக்களாக ஆக்குகின்றார்கள்… தன் கௌரவத்தைக் காக்க.

மேலை நாடுகளில் எடுத்துக் கொண்டாலும் ஒருவனுக்கு எத்தனையோ மனைவி என்று வைத்துக் கொள்கின்றார்கள். அதில் எந்த மனைவியின் பக்கம் தன் சார்பு உள்ளதோ அந்த மைந்தன் சொல்வது தான் நியாயம் என்று சொல்வார்கள்.

அதில் பிடிக்காத மனைவியின் மகன் என்று ஆகிவிட்டால் அவனைக் குற்றவாளியாக்கி அரச நீதியில் பொதுமக்கள் மத்தியில் அவன் சிரசை வாங்குகின்றார்கள் முஸ்லீம் நாடுகளில்.

இது என்னுடைய நீதி…!
1.எனது மகனாக இருந்தாலும் தன் மதத்திற்கும் கடவுளுக்கும் அவன் துரோகம் செய்தான்.
2.எனது பிள்ளையாக இருந்தாலும் இந்தத் தவறை எவரும் செய்யக்கூடாது என்று மக்களுக்கு உணர்த்தவே
3.மக்களுக்கு மத்தியில் நீதியை இப்படி நிலைநாட்டுகிறோம் என்பார்கள்.
4.கடவுளின் ஆணைப்படித் தான் இதைச் செய்கிறேன் என்று அரசு நீதி இதைச் செய்கின்றது.

அரசனுக்குக் கீழ் குடிமக்கள் கட்டுப்பட வேண்டும். மாற்று அரசர்களும் இவனை மதிக்க வேண்டும். மதிக்கவில்லை என்றால் அவனை அடக்க வேண்டும்… என்ற அதே நீதி தான் இன்று “மக்கள் மத்தியிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது…”

ஓரளவுக்கு வலுகொண்டவனாக இருக்கின்றேன். நான் கேட்ட உடனே நீ உதவி செய்ய வேண்டும். உதவி செய்யவில்லை என்றால் என்ன தொல்லை கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுப்பேன்.

வழி வழியாக இவ்வாறு தான்… மனிதன் தன் உடல் இச்சைக்குத் தான் அரசர் வழிகளில் வந்து கொண்டிருக்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய வழி செல்லவில்லை.

ஏனென்றால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் பார்த்தோம் என்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே அவ்வாறு இயக்குகிறது.

அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள்…
1.எதிர்பாராதது சந்தர்ப்பத்தால் ஒரு தவறினை நாம் நுகர்ந்து விட்டால்
2.அதனால் உடலில் உருப்பெறும் தீமையான அணுக்களின் தன்மையை தனக்குள் எதிரியாக்காதபடி
3.அந்தத் தவறு எனக்குள் இயக்காதபடி தவறை அழித்த ஞானியின் உணர்வைத் தனக்குள் புகுத்தி
4.தவறின் செயலாக்கங்களை நீக்குதல் வேண்டும் என்பதுதான் விநாயகர் தத்துவம்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவன் மகரிஷி. ஆறாவது நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றவன் சப்தரிஷி.

அந்த நிலையைத் தான் நாம் அனைவரும் அடைய வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் ஆரம்பிக்கும் பொழுது முதலில் தாய் தந்தையரின் அருளையும் குருவின் அருளையும் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் அம்மா அப்பா தான் நமக்குக் கடவுள். நாம் நன்றாக இருக்க வேண்டும்…! என்ற நிலையில் குருவாக இருந்து நம்மைத் தெய்வமாகக் காத்தவர்கள் அவர்கள் தான்..!

தியானத்திற்கு மட்டுமல்ல…! எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். ஏனென்றால் அவருடைய துணை கொண்டு தான் விண்ணுலக ஆற்றலை நாம் பெற முடியும்.

குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1). உயிர் வழி சுவாசம்
“ஈஸ்வரா..!” என்று சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்த வேண்டும்.

தியானத்தின் மூலம் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்..! என்ற ஏக்கத்தை
1.உங்கள் கண்ணின் கருமணிக்குக் கொண்டு வாருங்கள்
2,உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.இப்பொழுது உங்கள் கண்கள் ஒருவிதமான கனமாக இருக்கும்.
4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்… பின் உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி உங்கள் நினைவனைத்தையும் “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து இழுக்கும்.
2.புருவ மத்தியில் கொஞ்சம் கனமாக இருக்கும்… இழுக்கும் பொழுது…!
3.துருவ நட்சத்திர அலைகள் உயிரில் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கும் போது உங்கள் உயிரிலே அந்த அருள் சக்திகள் மோதும். அப்பொழுது அந்த உணர்வுகள் வலுவாகின்றது.

இப்பொழுது சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் போன்ற எத்தனையோவிதமான குணங்கள் உடலுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.

இப்படி எண்ணும் பொழுது தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது. இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் உயிரிலே வலுப் பெறுகின்றது.

2). இரத்த நாளங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்துங்கள்.

ஏனென்றால் நாம் கேட்டது பார்த்தது இது அத்தனையும் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. வேதனைப்பட்ட உணர்வுகள் யாராவது ஜாஸ்தி பட்டிருந்தால் அவர்கள் மீது நாம் பாசமாக எண்ணியிருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும். அப்படி வந்து விட்டால் அந்த ஜீவ ஆன்மா அதனால் மாற்ற முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்தத்தில் கலக்கச் செய்து அந்த ஜீவ ஆன்மாக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்கள் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் இரத்தத்தில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் பாயும். உங்களால் அதை உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் படர்ந்து எங்கள் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் உடல் முழுவதற்கும் இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

உங்கள் உடல் முழுவதற்கும் ஒருவிதமான புது உணர்ச்சிகள் ஏற்படும்.

3). சிறு குடல் பெரும் குடல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை குடலுக்குள் பாய்ச்சுங்கள்.

1.இப்பொழுது உங்கள் குடலில் ஒரு வித்தியாசமான உணர்வுகள் தூண்டுவதை நீங்கள் உணரலாம்.
2.ஏனென்றால் அந்த அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றுகின்றோம்.
3.இந்த மாதிரிச் செய்தால் உங்கள் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

4). கணையங்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

நாம் உட்கொண்ட உணவிலிருந்து ஆவியாக வருவதை அது இரசாயணமாகப் பிரித்து எடுக்கும். அந்தக் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் நல்ல சக்தியாக இப்பொழுது பெறும்.

அப்படிப் பெறவேண்டும் என்பது தான் இதன் நோக்கம். எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

5). கல்லீரல் மண்ணீரல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரலை மணணீரலை உருவாக்கிய அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். கண்ணின் நினைவைக் கல்லீரலிலும் மண்ணீரலிலும் செலுத்துங்கள்.

கல்லீரலைப் பார்க்கவில்லை என்றாலும் இப்பொழுது அந்த உணர்வுகள் பாயும் பொழுது அந்த உணர்ச்சிகளை ஊட்டுவதை உணரலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்வதை நீங்கள் உணரலாம்.

6). நுரையீரல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுரையீரலில் ஆஸ்த்மா சளி டி.பி. போன்ற நோய்கள் இருந்தால் அது குறையும். மூச்சுத் திணறல் இருந்தால் அதுவும் குறையும். அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் அந்த நுரையீரல் நல்ல வீரியமடைந்து மன வலிமையையும் கொடுக்கும்.

7). சிறுநீரகங்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.சிறுநீரகத்தில் வரும் விஷத்தைப் பிரித்து நீராக மாற்றிவிட்டு
2.நல்ல இரத்தமாக மாற்றும் திறன் கொண்டது அந்த உறுப்பு.

8). இருதயம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணின் நினைவை இருதயத்தில் செலுத்துங்கள்.

இருதயத்தில் இப்பொழுது வலி இருந்தாலும் இருதயத்தில் அசுத்தமான நிலை இருந்தாலும் அது மாறி நல்ல உற்சாகமான இருதயமாக மாறும்.

9). கண்ணின் கருமணிகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் கண்ணிலே பாய்ச்சுங்கள்.

கருமணியில் படர்ந்துள்ள வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற விஷத் தன்மைகள் இப்பொழுது அகலும். கருமணியில் இப்பொழுது நல்ல வெளிச்சங்கள் வரும். கருமணி தூய்மையாகும்.
1.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
2.அந்தப் பேரருளும் பேரொளியும் உங்கள் கருமணியில் பட்டு அந்த உணர்வுகள் உங்கள் நரம்பு மண்டலங்கள் வழி செலுத்தி
3.உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் அந்தத் தூய்மையின் உணர்வை உணர்த்தும்.

10). நரம்பு மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

11). எலும்பு மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை எலும்பு மண்டலத்தில் சேர்த்து ஏங்கித் தியானியுங்கள்.

12). நெஞ்சின் பாகம் உள்ள ஊன்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சு எலும்புக்குள் ஊனாக உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை நெஞ்சுக்குள் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நெஞ்சின் பாகம் முன்னாடி அந்த வெளிச்சம் வரும்.
2.ஏனென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குவிக்கப்படும் பொழுது அந்த வெளிச்சமான உணர்வுகள் தெரிய வரும்.

13). தசை மண்டலம்.. தோல் மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தசை மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தோல் மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி இந்தத் தோல் மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகப் பதிவாக்கி விட்டால்
1.காற்றிலிருந்து வரும் கெட்டதை நம் உடலுக்குள் ஈர்க்காது தடைப்படுத்த இது உதவும்.
2.காற்றிலிருந்து வரும் தீமையான உணர்வுகளை அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

14). தவம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

தாய் தந்தையரின் உணர்வு தான் நம் உடல். தாய் தந்தையரின் உணர்வால் தான் இந்த உடல் வளர்க்கப்பட்டது. தாய் தந்தையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது.

தாய் தந்தையர் நம்மை வளர்ப்பதற்காக எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் இருப்பினும் அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இவ்வாறு தியானிப்பதால்
1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.
2.அதே சமயத்தில் அவர்கள் உடலில் உள்ள தீய வினைகளும் அகலும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று… அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து… தெரிந்து… வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.

15). குலதெய்வங்கள்
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

16). மழை வேண்டித் தியானம்
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

விண்ணிலே தோன்றிய நாம்… மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்

 

ஞானிகள் காட்டியது போல தீப ஒளித் திருநாள் அன்று தனக்குள் வரும் இருளை நீக்கி ஒளி பெறுவோம் என்று நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

உயிர் விண்ணிலே தோன்றியது ஒளியின் சுடராக…! அந்தத் தீப வழிப்படி நாம் விண் செல்லும் நிலையாக
1.இந்த உடலான ஆறாவது அறிவிலிருந்து மெய் ஒளியுடன் ஒளியாக
2.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சுடராக இணைத்து
3.ஒளிச் சரீரமாக உயிருடன் இணைந்து விஜயதசமி… பத்தாவது அவதார நிலையை நாம் பெறுகின்றோம்.

ஏழாவது என்பது ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன்.

ஒருவன் திட்டி விட்டால்… அவன் இடைஞ்சல் செய்கின்றான் என்று எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்சை எல்லாம் நாமும் பேசுகின்றோம்.

அந்தப் பேச்சு தனக்குள் இயங்காத வண்ணம் தடைப்படுத்துவதற்குத் தான் நாம் தியான வலுக் கொண்டவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கின்றோம்.

அப்பொழுது…
1.இடைஞ்சல் செய்தான் என்ற உணர்வுகள் தன்னை இயக்காதபடி தடுத்து நிறுத்தி
2.“சிந்திக்கச் செய்யும் நிலையை…” அது செயல்படுத்தும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் சேர்த்து விளையச் செய்யும் பொழுது எட்டாவது நிலை ஆகிறது. அது உயிருடன் இணைக்கப்படும் பொழுது ஒன்பதாவது நிலை ஆகிறது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லாவற்றிலும் இணைக்கப்படும் பொழுது இருளைத் தடைப்படுத்தி அதை ஞானமாக்கி ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

உயிர் ஒளியாக இருக்கின்றது. உணர்வுகள் ஒளியாகி இந்த உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது தசமி.

மனிதனாக இருக்கும் நாம் இப்பொழுது செடி கொடி தாவர இனங்களில் விளைந்தவற்றை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

ஆனால் இந்தப் பூமியில் இருந்து விண் செல்லும் நிலையில் பல பேரண்டங்களிலிருந்து வரக்கூடிய சக்திகளைப் பெறும் தன்மையாக… இந்தச் சூரிய குடும்பமான… பிரபஞ்சத்திற்கு வெளியே தான் இந்த உயிரான்மா ஒளியாகச் செல்கிறது.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியிலே சென்று
1.மற்ற பேரண்டங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்தப் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சக்தி பெற்றோமோ அங்கே இந்த உயர்ந்த சக்திகளை அனுப்பி
3.இந்தச் சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
4.அதே சமயம் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகளை ஒளியாக மாற்றி
5.பேரண்டத்திற்கே வழிகாட்டும் உணர்வின் அலைகளாக அதைச் சேர்க்கும் நிலைகள் பெற்றது தான் மனிதனின் கடைசி நிலை.
6.”தீப ஒளி…” என்ற அத்தகைய வழிகளில் நாம் செல்வோமேயானால் விண்ணிலே தோன்றிய நாம் மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து உன் குறைகளை எல்லாம் சொன்னால் அவன் தீர்த்துத் தருவான்…
2.அதற்காக வேண்டி நீ காணிக்கை போடு… அதைப் போடு இதைப் போடு..
3.நேர்த்திக் கடனைச் செய் அதைச் செய்…! என்று சொல்லி விட்டார்கள்
4.பழனிக்குப் போனாலும் இது தான்… திருப்பதிக்குப் போனாலும் அது தான்.

ஆனால் அந்தக் கோவிலின் பண்புகளை நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை.

“ஏழு கொண்டலவாடா…” என்று தெலுங்கில் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக “ஒளியாக மாற்ற வேண்டும்” என்று பொருள்.
1.ஏனென்றால் இந்த ஆறாவது அறிவை இயக்குவது உயிர்
2.ஆக இந்த உடலை ஆள்வது “பெருமாள்…”

திருவேங்கடாசலபதி…! இங்கே இந்த உடலில் இருப்பது எல்லாவற்றையும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

அதை நாம் யாராவது புரிந்து கொண்டோமோ…? என்றால் இல்லை. தத்துவத்தை நமக்குத் தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்… யாரும் அதை மதிப்பதில்லை.

இங்கிருந்து அங்கே திருப்பதிக்குப் போய்க் காணிக்கையைப் போட்டால் “அவன் நமக்கு எல்லாம் செய்வான்…!” என்ற நம்பிக்கை தான்.
1.சாமிக்கு விலங்கு போட்டால் ஐய்யய்யோ…! என்பார்கள்
2.காசு குறைவாக இருப்பதால் விலங்கு போட்டுவிட்டு அப்புறம் சாமியை ஜெயிலிருந்து மீட்டுகிறார்களாம்…!

இப்படி நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள்…!

இங்கே உபதேசத்தை நீங்கள் கேட்கிறீர்கள்…! எப்பொழுது உங்களுக்குள் என்ன நடக்கிறது…?

“அரங்கநாதன்…” நல்ல (ஞானிகளின்) உணர்வுகளை நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் உடலான அரங்கத்திற்குள் உயிர் என்ன செய்கிறது…? நாதங்களாக வெளிப்படுத்துகிறது. (அரங்கம் + நாதம்)

அந்த நாதங்கள் என்ன செய்கிறது..? சந்தோஷமான உணர்ச்சிகளை ஊட்டுகிறது. அது தான் அரங்கநாதன்,

அரங்கநாதனின் மனைவி யார்…? ஆண்டாள். அந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆள்கிறது. ஆண்டாள்…! என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

கோபமான உணர்வை நுகர்ந்தால் அரங்கநாதன் என்ன செய்கிறது…? அந்தக் கோபமான உணர்ச்சி தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

ஆனால் எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சுவாசித்தால் அரங்கநாதன். இந்த அரங்கத்திற்குள் மகிழ்ந்து வாழும் அந்த உணர்வுகள் நம்மை ஆளும்.

1.காரணப் பெயரை வைத்துத் தெய்வங்களை உருவச் சிலைகளாக வைத்து
2.நாம் நம்மை அறிந்து வாழ்வதற்கு ஞானிகள் எவ்வளவு பெரிய சக்தியை ஊட்டியிருக்கின்றார்கள்…?
3.அதை நாம் உணர வேண்டுமல்லவா…!

ஏனென்றால் இந்த உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழ்கிறோம். சிறிது காலமே வாழும் இந்த மனித வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வாழ்க்கையில் வரும் பகைமைகளை எல்லாம் அகற்றிடல் வேண்டும்.

எந்தப் பகைமையையும் நாம் இழுக்காதபடி வாழ்ந்து வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போய்ச் சேர்கின்றோம். இராமலிங்கமாக ஆனது தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அங்கே சென்றால் பிறவியில்லா நிலை அடைகின்றோம். அந்தப் பிறவியில்லா நிலை அடையக்கூடிய சக்தியைத் தான் ஞானிகள் நமக்குக் கோவிலில் காட்டியிருக்கின்றார்கள்.

தீப ஒளித் திருநாள்

 

ஒரு ரைஸ் மில் இருக்கிறது என்றால் நெல்லை அதிலே அதிகமாகப் போட்டுவிட்டால் “லோடு தாங்காது…” அதை இழுத்து இயக்கக்கூடிய மோட்டாரில் உள்ள காந்தம் குறைந்து விடுகிறது.

இப்படிச் சிறுகச் சிறுக அது தேய்மானம் ஆகிவிட்டால் சிறிதளவு நெல்லைப் போட்டாலும் கூட அரைக்க முடியாத நிலை ஆகி விடுகிறது.

இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்திகள் அனைத்தும்
1.கோபம் வெறுப்பு வேதனை போன்ற குணங்களை அதிகமாக எடுக்கப்படும் பொழுது
2.அதைச் சரியான முறையில் ஜீரணிக்கக் கூடிய திறன் இழந்து விடுகிறது.

அதனால்… அந்தக் கோபம் வேதனை போன்ற உணர்வுகள் அனைத்தும் நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் அது விஷம் கலந்ததாக மாறிவிடுகிறது.
1.அந்த விஷங்கள் கலந்த பின்
2.அடுத்து மகிழ்ச்சியைப் பற்றி எண்ணவே முடிவதில்லை.

ஆனால் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் இருக்கக்கூடிய விஷத்தை இந்த உடல் மலமாக மாற்றி விட்டு உடலை நல்லதாக ஆக்கச் செய்கின்றது… உடலிலிருந்து வெளிப்படக்கூடிய மணம் ஆறாவது அறிவு.

உதாரணமாக கருணைக்கிழங்கில் விஷம் இருக்கிறது என்றால் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அதை நீக்கிவிட்டுச் சுவையாகச் சாப்பிடக்கூடிய நிலை வருகிறது.

அதே சமயம் ஒருவன் தவறு செய்கின்றான் என்று கண்ணிலே பார்த்த பின் எரிச்சல் ஆகிறது. அவனால் பொருள் விரயம் ஆகின்றது என்கிற பொழுது வேதனையாகின்றது.

இந்த இரண்டையும் நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வான சத்துக்கள்… எரிச்சலும் வேதனையும் நமக்குள் வடிக்கப்பட்டு ஆகாரத்துடன் 1.
இது இரண்டும் உயிரில் சேர்க்கப்படும் பொழுது இதற்குப் பெயர் காளி…
2.மிகவும் துரித நிலைகள் கொண்டு செயல்படும் தன்மை வந்து விடுகிறது.

அவ்வளவு சக்திகள் நமக்குள் தோன்றிய பின் அதைக் கழிக்கும் திறனை இழக்கச் செய்து விடுகிறது. விஷம் இவ்வாறு கலந்த பின் சிந்திக்கும் திறன் (ஆறாவது அறிவின் தன்மை) இழந்து விடுகின்றது.

கருணைக்கிழங்கில் உள்ள விஷத்தை எப்படி வேக வைத்து நீக்குகின்றோமோ அந்த நீக்கும் எண்ணம் இருந்தாலும்… வாழ்க்கையில் ஒருவன் தவறு செய்வதிலிருந்து இந்த வேகங்கள் நமக்குள் ஆக்கிரமித்துக் கொண்டால் அதை நாம் கழிக்க முடியாத நிலையாகி உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.

நமது உயிர் ஒளியாக இருக்கின்றது. உடல் பெற்ற பின் அறிய வேண்டும் என்று எண்ணி கண் தெரிந்து… கெட்டது என்ற நிலை வந்தாலும் அதைச் சுவாசித்த பின் உடலுக்குள் அது வந்து… விஷத்தை ஊட்டிவிடுகிறது.

சிந்தனையைக் குலைக்கச் செய்யும் அந்த உணர்விலிருந்து மீட்டிக் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஆறாவது அறிவை அப்போது அது செயலிழக்கச் செய்துவிடுகின்றது.

இப்படி விஷங்கள் கலந்து சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது இதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…? என்ற இந்த உண்மையை உணர்த்துவதற்குத் தான் அன்று சூரசம்காரத்தைக் காட்டித் தீய சக்திகளில் இருந்து மீட்கப்பட வேண்டும்…! என்று காட்டினார்கள்.

ஏனென்றால் தவறு செய்பவன் அவனாக இருக்கின்றான். ஆனால் பொருள் போய்விட்டதே என்று நாம் வேதனைப்படும் பொழுது விஷமாகி விடுகின்றது. தவறு செய்தவனைப் பார்த்த உடனே எரிச்சலாகின்றது. இந்த உணர்வை நாம் சுவாசித்து விட்டால் உடலில் நோயாக மாறுகின்றது.

ஆரம்பத்தில் கண்ணில்லாத புழுவாக இருக்கும் போது அது பசியின் ஏக்கத்தில் இருந்தது. நகர்ந்து சென்று வேதனையான பின் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்… பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளைச் சுவாசித்தது.

அதற்குப்பின் கண் தெரிந்தது.

அப்பொழுது கெட்டதை நீக்கி நல்லது எது என்று அறிந்துணர்ந்து செயல்படும் அந்த வழியில் நாம் வளர்ச்சி அடைந்து வந்த பின் கெட்டது என்று தெரிகின்றது… கருணைக்கிழங்கில் புறநிலையில் இருப்பதை விஷத்தை வேக வைத்து நீக்குகின்றோம்.

அதே சமயம் ஒருவன் தவறு செய்கின்றான் என்று அறிய உதவுகின்றது. பொருள் சேதமாகிவிட்டால் எவ்வளவு நஷ்டம் ஆகி விடுமே என்ற நிலையில் வேதனை அடையச் செய்து சிந்தனையை இழக்கும்படி செய்கின்றது.

அத்தகைய வேதனை உணர்ச்சிகள் தோன்றி அது செயலாக்கிய பின் இந்த உணர்வுகள் நம் ஆகாரத்துடன் சேர்ந்து விடுகின்றது.
1.இப்படிச் சிறுகச் சிறுக நமக்குள் அந்த விஷம் உருப்பெறுகின்றது.
2.அதைத் தடைப்படுத்துவது எப்படி…?
3.தீமை அணுகாத நிலைகள் கொண்டு எப்படி மீட்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத் தான் சூரசம்காரம் என்று காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் அதன் வழி சென்றவர்கள் மெய்ஞானிகள். அவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்று இருக்கின்றார்கள். நம் பூமிக்குள் அங்கிருந்து பல ஆற்றல்மிக்க சக்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட மூச்சலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமிக்குள் சுழன்று கொண்டிருக்கிறது.

அதே போல வெறுப்பு வேதனையுடன் நாம் பேசிய எண்ண அலைகளும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதுவும் காற்றிலே மிதந்து கொண்டுள்ளது.

விஞ்ஞான அறிவால்… ஒன்றும் அறியாத நாடாக்களில் பூசப்பட்ட உலோக முலாமுக்குள் பதிவு செய்து அதை மீண்டும் ஒரு இயந்திரத்தில் போட்டு அந்த உணர்வின் ஒலியைப் பரப்பச் செய்யும் பொழுது காந்தப் புலன்கள் தனக்குள் கவர்ந்து அலைகளாக அனுப்புகின்றது.
1.டிவியில் அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது
2.காற்றுக்குள் மறைந்திருக்கக்கூடிய நுண்ணிய அலைகளைக் குவித்த பின் அங்கே எந்தப் புகைப்படத்தைப் பதிவு செய்தார்களோ அதை ஈர்க்கின்றது.
3.டிவியைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாதனம் சரியாக இருந்தால் அந்தப் படத்தை ஒழுங்காகக் காட்டுகிறது,

இதே போன்று தான் நம்மை அறியாதபடி சலிப்பு சஞ்சலம் வேதனை போன்ற உணர்வுகள் நம் நல்ல குணங்களுக்குள் கலந்த பின்… “நல்லதை எண்ணி இழுக்கும் திறன் இழந்து விடுகின்றோம்…!”

பாலுக்குள் காரத்தைக் கலந்தால் அதைக் குடிக்கும் பொழுது வெறுக்கச் செய்கின்றது. இதைப் போல நம் நல்ல மனம் கொண்டு நாளுக்கு நாள் ஒவ்வொன்றையும் பார்க்கப்படும் பொழுது
1.பிறர் தவறு செய்வதை நுகர நேருகின்றது அந்த உணர்வை அறிந்து கொள்கின்றோம்…
2.ஆனால் அவை நமக்குள் தீங்கு விளைவிக்கும் சக்திகளாக மாறுகின்றது.

அந்த சமயம் அந்தச் செயலை நீக்கிவிட்டாலும்… உடலுக்குள் சேர்ந்த அந்த விஷமான சத்தை நீக்கும் திறன் இழந்து இருக்கின்றோம். அதைத் கழிப்பதற்குத் தான் தீபாவளி திருநாளை வைத்தார்கள்.

மனிதனான நாம் அனைத்தும் அறியக்கூடிய வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் ஞானிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான் “தீபாவளி நாள்…”

ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த தீய சக்திகளை எல்லாம் மாற்றி உணர்வை ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டு ஜீவன் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
1.அவர்கள் பேசிய உணர்வலைகளை நாம் நுகர்ந்து
2.அவர்கள் எந்த வழிகளில் விண் சென்றார்களோ அந்த நிலையை நாமும் பெறுதல் வேண்டும்.

உயிர் ஒளியாகத் தோன்றியது… உணர்வை ஒளியாக மாற்றினார்கள். அந்த வழியிலே ஒளியாக இன்றும் வாழ்கின்றார்கள்.

இதைத்தான் ஓர் உயிர் ஒளியாகத் தோன்றி பூமிக்குள் விஜயம் செய்து நவராத்திரி என்று காட்டுகிறார்கள். அதாவது… பல உணர்வின் சக்திகள் உடலுக்குள் கொலு வீற்றிருந்து… இருளுக்குள் நின்று ஒளியை அறிந்து… தனக்குள் வழியறிந்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள் சப்தரிஷிகள்.

1.அந்த மகரிஷிகள் காட்டி அருள் வழிப்படி நாம் அனைவரும் ஒளியின் உணர்வாக உருப் பெறுவோம்
2.அந்தத் தகுதியை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் தான் தீப ஒளித் திருநாள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புதிதாகக் கட்டிய வீட்டில் குடி புகும் முன் யாகத்தை வளர்த்துத் தீயைப் போட்டு மந்திரத்தைச் சொல்லி காசை வாங்கிக் கொண்டு செய்கிறார்கள். யாகம் நடத்துபவரிடம் காணிக்கை கொடுத்து அவரிடம் பொட்டு வைத்துக் கொண்டு செல்வார்கள்.

புகையைப் போட்டு அங்கே சுற்றிக் கொண்டு இருந்தால் புது வீட்டில் உள்ள தோஷம் நீங்கிப் போகும்…! என்று அவர்கள் சொல்லி விட்டுப் போவார்கள். தோஷம் எப்படிப் போகும்…?

அந்தப் புகையைப் போடும் பொழுது உங்கள் மனது எப்படி இருக்கிறது…?
1.கண்ணிலே தண்ணீர் வருகிறது.
2.அப்பொழுது வெறுப்பான உணர்வைத் தான் செலுத்துகின்றீர்கள்.
3.நல்ல உணர்வைச் செலுத்துகின்றீர்களா…?

ஏனென்றால் நெருப்பில் போட்டால் இது எல்ல்லாம் நீங்கிப் போகும் என்று “சாங்கிய சாஸ்திரங்களைத்தான்…” கொண்டு வருகின்றார்களே தவிர உண்மையான சாஸ்திரம் இல்லை.

எல்லோரும் தியானத்தில் அமர்ந்து
1.இந்த வீட்டிற்குள் வரும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
3.அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி அந்த ஒலி அலைகளைப் பரப்பினால் எப்படி இருக்கும்…?

ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு இந்த உயிரிலே பட்ட உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படுகிறது. நம் உடலுக்குள் விளைந்து அது மூச்சாக வெளிப்படுகிறது.

நாம் இப்படித் தியானித்து வீட்டிலுள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து இந்த மூச்சின் தன்மை வெளிப்படுத்தி அருள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்யப்படும் பொழுது வீட்டிற்குள் வந்தாலே சந்தோஷமாக இருக்கும்.

அப்பொழுது தான் வீடு கட்டும் போது பதிவான தோஷங்கள் அகலும்.

ஆனால் வழக்கில்… புது வீட்டில் யாகம் செய்தார்களே… அதற்கு என்ன சீர் செய்தார்கள்…? எதைச் செய்தார்கள்..? என்ன சாங்கியம் செய்தார்கள்..? இதை எல்லாம் கேட்டுத் துருவுவார்கள்.

1.அவர்கள் யாகம் செய்வது புறத் தீ…!
2.ஆனால் நாம் செய்வது அகத்திற்குள் இருக்கக்கூடிய தீ..!
3.அக உணர்வைச் செலுத்தி இருளைப் போக்கக்கூடிய நிலைகளுக்கு நாம் சொல்கிறோம்.
4.நாம் செய்யக்கூடிய இந்தத் தியானம் உண்மையான யாகமாகிறது.
5.இந்தத் தீயை அவர்கள் உணரவில்லை… இந்தத் தியானமோ உணர்வின் இயக்கமாக இருக்கிறது.
6.அது விகார உணர்வைத் தோற்றுவிக்கிறது… உங்களுக்குக் கண் எரிச்சலும் இருமலும் அது தான் வரும்.

யாகம் வளர்க்கிற வீட்டிலே பாருங்கள். எத்தனை சங்கடப்படுகிறார்கள்…? வருகிறதா… இல்லையா..? புறத்தால் சாங்கியத்தைச் செய்து எந்தத் தோஷத்தையும் போக்க முடியாது. மனத் திருப்திக்குத் தான் அது உதவும்.

மனிதனுக்குள் அகத்தீக்குள் (உயிருக்குள்) அந்த வலிமையான ஞானிகளின் உணர்வைப் படைத்து அந்த உணர்வின் நினைவலைகளைப் பரப்பினால்
1.வீட்டில் உள்ள தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகிறது.
2.நமக்குள்ளும் ஆழமாகப் பதிவாகிறது.
3.வீட்டிற்கு வருபவர்களுக்கும் நல்ல உணர்வு கிடைக்கிறது.

ஏனென்றால் அதிலுள்ள மேக்னட் இதைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும்.

சில பேர் அவர்கள் வீட்டில் உள்ள சங்கடத்தையும் கஷ்டங்களையும் சொல்வார்கள். நீங்கள் “உம்…” கொடுத்துக் கேட்டால் போதும். அவர்கள் வீட்டுக் கஷ்டத்தை எல்லாம் இங்கே ஓடி ஓடி வந்து சொல்வார்கள்.

அதை எங்கே உட்கார்ந்து கேட்கின்றீர்களோ அந்த வீட்டில் படரும்.
1.அடுத்தாற்போல் நீங்கள் சந்தோஷமாக இருந்த இடத்தில் என்ன ஆகும்…?
2.ஒரு இனம் தெரியாதபடி எங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோமோ…
3.”அங்கேயே…” இழுத்துக் கொண்டு வந்து உட்கார வைக்கும்.

அப்பொழுது இனம் புரியாமல் கவலைப்படுவீர்கள். ஏன் கவலைப்படுகிறோம்..? எதற்காக வேண்டிக் கவலைப்படுகின்றோம்…? என்பது தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள்..! நாம் தவறு செய்யவில்லை. நாம் அதைப் புரிந்து கொள்வதில்லை.

புரியாத நிலைகளில் சாமி காப்பாற்றும்… சாமியார் காப்பாற்றுவார்… ஜோதிடம் காப்பாற்றும்… மந்திரம் காப்பாற்றும்… வாஸ்து சாஸ்திரம் காப்பாற்றும்…! என்று சொல்லிக் கொண்டு இப்படித் திசை திருப்பி விட்டார்கள்.

ஆனால் நாம் எந்த உயர்ந்த எண்ணத்தை எண்ணுகின்றோமோ இந்த உணர்வு நம்மையும் காக்கும்.. நம்முடைய எண்ணம் மற்றவரையும் காக்கும் இந்த உடலில் நல்ல உணர்வுகளையும் ஊட்டும். என்றைக்கு இந்த நிலையை மனிதன் நம்புகிறானோ அது வரையிலும் இது வரும்.

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? புதுப் புது உயிரினங்களை உருவாக்குகிறார்கள். புதுப் புதுத் தாவர இனங்களை உருவாக்குகிறார்கள். நாம் பார்க்கின்றோம் அல்லவா..!

அன்றைக்கு மெய் ஞானி என்ன சொன்னான்…?
1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் வந்தால்
2.தீமையை நீக்கிய உணர்வுகளை உனக்குள் நுகர்ந்து நல்ல அணுக்களை உருவாக்கு…! என்று தெளிவாகச் சொன்னான்.

கோவிலுக்குப் போய் ஞானிகள் காட்டிய வழியில் அந்த உயர்ந்த எண்ணங்களை எடுத்தால் நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்குகின்றது. அதே மாதிரி…
1.நம் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அந்த நல்ல எண்ணங்களை எண்ணி உருவாக்கினால் எப்படி இருக்கும்..?
2.உருவாக்க முடியுமல்லவா…! உங்களை நீங்கள் நம்புங்கள்…!

எதிரி எங்கே இருக்கின்றான்…?

 

ஒவ்வொரு மனிதனும் தான் தவறே செய்யவில்லை என்றாலும் திடீரென்று மற்றவர்கள் எதையாவது சொல்லிவிட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது… அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு…!

அப்படிப் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… என்னை இப்படிச் சொன்னானே…!” என்ற உணர்வுகள்
1.நமக்குள் அது எதிரியை வளர்த்துக் கொண்டே வருகின்றது.
2.நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை.
3.நல்ல குணங்கள் வலு இழக்க நாமே காரணமாகின்றோம்.

ஆகவே அந்த நல்லதைக் காப்பதற்குத்தான் தத்துவ ஞானிகள் சாதாரண நிலையிலும் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தார்கள். இது அகஸ்தியனால் காட்டப்பட்டது.

1.அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் பெறுவதற்காக இம்முறையை வகுத்தான்.
2.அவன் துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
3.எத்தகைய தீமையைக் கண்டுணர்ந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவர் திட்டி விடுகின்றார் என்றால்… இதே உயிர் தான் இழுத்து இந்த உணர்வினை உணர்ச்சிகளாக இயக்கி… செயலுக்குக் கொண்டு வருகின்றது. இதே உயிர் தான் அதை அணுவாகவும் மாற்றி விடுகின்றது.

அவன் எவ்வளவு வேதனைப் படும்படிச் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது. இது தான் விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… விஷ்ணுவுக்கு பிறந்த பிரம்மா அதை உருவாக்குகின்றார். அதாவது வேதனை என்ற விஷத்தின் தன்மை உருவாகி விடுகின்றது. அது தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்த வேதனையை உருவாக்கும்படிச் சொன்னானோ அதனால் உருவான உணர்வுகள் பிரம்மனாக தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றதனால் “அந்த ஞானத்தின் வழிகளில் செயல்படும்…!”

இயற்கையின் உண்மை நிலைகளை நாம் கண்டு கொள்ள இவ்வளவு கருத்துடன் இதைக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஒரு விஷச் செடி காற்றிலிருந்து தன் இனமான விஷத்தையே நுகர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.

அதைப் போல் உடலில் உருவான அந்த வேதனைப்படச் செய்யும் அணு…
1.எந்த மனிதன் வேதனைப்படச் செய்தானோ அவனின்று வரும் இந்த உணர்வை நமக்குள் அதைக் கிளர்ந்து சுவாசித்து
2.அதனுடைய மலத்தை நம் உடலிலே இடும்பொழுது தான் நல்ல அணுக்களுக்கும் அது வேதனை தாங்காது
3.அதனுடைய செயலைக் குறைக்கச் செய்து உடலிலே நோயாக வருகிறது.

என்னை வேதனைப்படச் செய்கின்றான்… அவனை விடுவேனா…? என்று கோபத்துடன் பதிலுக்குச் செய்தாலும் விஷத்தன்மையான அணுக்கள் மீண்டும் அவர்களை எண்ண எண்ண நோயாகவே விளைகின்றது.

அப்பொழுது எதிரி எங்கே இருக்கின்றான்…?
1.நமக்குள் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோம்…
2.நம்மை மறந்து விட்டோம் என்ற நிலை தான் வருகின்றது.

குருநாதர் எனக்கு இதை அனுபவபூர்வமாகக் கொடுத்ததனால் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் அதன் வழி தியானித்தல் வேண்டும்.
1.எத்தகைய வேதனைப்படும் நிலைகள் வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

அதன் பின் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வராது நாம் இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நம்மைப் பெற்றெடுத்த தாயை… அந்தக் காப்பாற்றிய தெய்வத்தை மறந்தால்
2.நமக்கு நல்ல வழியைக் காட்டிய குருவை மறந்தால் எங்கே சென்றாலும் நல்லதை எடுக்க முடியாது.
3.“இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்…!”

தாய் தந்தையர் இன்று எத்தனை பேர் என்ன செய்கிறார்கள்…? வளர்ந்து சம்பாதித்துச் சொத்தைச் சேர்த்த பின் அனாதை இல்லத்தில் தான் இருக்கின்றர்கள்,

அங்கே இருந்தாலும் கூட பென்சன் (PENSION) வாங்கப் போனால் உனக்கு எதற்கு இவ்வளவு காசு…? ஐநூறு அறுநூறு பத்தாதா..? என்று சொல்லி அந்தப் பணத்தையும் தட்டிப் பறிப்பதற்குத் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள்.

உழைத்தேன்… பிள்ளைகளை வளர்த்தேன்… படிக்கச் செய்தேன் என்று தாய் தகப்பன் இருந்தாலும் இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது.

நான் ஆடம்பரமாக வாழ வேண்டும்.. உனக்கு என்ன வேலை…? என் பிள்ளைகளை வளர்க்கப் பணம் வேண்டியிருக்கிறது உனக்கு எதற்குப் பணம்..? என்று கேட்பார்கள்… கொடுக்கவில்லை என்றால் உதைப்பதற்கு வந்துவிடுவார்கள்.

ஒரு தகப்பன் பணத்தைச் சம்பாரித்துப் போட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டு கொடுத்த பிற்பாடு மூன்று இலட்சம் பணம் அவர் கையில் இருக்கிறது…!

அந்தப் பணத்தால் உனக்கென்ன வேலை..? உனக்கு மாதம் தர வேண்டிய பணத்தை நான் தருகிறேன். ஆகையினால் அதைக் கொடுத்துவிடு என்று கேட்கிறது பிள்ளை.

கொடுத்தால் அதற்கப்புறம் அவருக்குச் சோறு போடுவார்களா…? இந்த மாதிரியே சொல்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி. இது எல்லாம் இன்று கொடுமையிலும் கொடுமை…!

ஏனென்றால் இந்த அரக்க உணர்வுகள் தாய் தந்தையை மறக்கச் செய்கிறது.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தாய் தந்தையரை வணங்கி எண்ணினால் ஒரு காட்டுக்குள்ளேயே சென்றாலும் புலியே தாக்க வந்தாலும் அம்மா…மா…! என்று சொன்னால் போதும். அந்தப் புலி உங்களைத் தாக்காது… அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல..! நீங்கள் இருக்கும் தெருவுக்குள் ஒரு நாயே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐய்யய்யோ ஐய்யயோ முருகா…! என்று சொன்னாலும் கூட “லபக்” என்று பிடிக்கும்.

நாய் கடிக்க வரும் பொழுது அம்மா…! என்று சொல்லுங்கள். உங்களைக் கடிக்கிறதா…? என்று பாருங்கள். பரிசீலித்துப் பாருங்கள். யானையே வந்தாலும் சரி…!
1.அந்தத் தாயின் பாச உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கிறது.
2.உடனே குவித்து உங்களுக்கு முன்னாடி வரும்.
3.யானை அந்தத் தாய்ப் பாசம் கொண்டது..
4.இந்த உணர்வுகளின் மணம் பட்டவுடன் உங்களைத் தாக்காது.

உங்கள் தொழிலிலே பெரும் சங்கடமாக இருந்தால் எந்தச் சாமியாரையோ நினைப்பதைக் காட்டிலும் யாம் சொன்ன முறைப்படி உங்கள் தாயை வணங்கினால்…
1.அம்மா…மா…! என்று சொல்லி ஏங்கி
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபடும் வலிமையும் அந்தச் சிந்திக்கும் ஆற்றலும் கிடைக்க வேண்டும் என்று உங்கள் தாயை எண்ணிப் பாருங்கள்.
3.அந்தத் தாயின் உணர்வுகள் உங்களுக்குள் எவ்வளவு வேலை செய்யும் என்று நீங்கள் காணலாம்.
4.தாயைப் பேணிக் காக்கும் முறைகளைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்படி ஞானிகள் சொல்லியிருந்தாலும் அதை எல்லாம் மறந்தே தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கோவிலுக்கு வாப்பா…! என்று சொன்னாலும் “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது… நீ போ…!” என்று சொல்லக்கூடிய காலமாக இன்று உள்ளது.

அரக்க உணர்வு மனிதரிலிருந்து தாயையே இரக்கமற்றுக் கொல்லும் நிலை வருகிறது. இரக்கமற்றுத் துன்புறுத்தும் தன்மை வருகிறது… இதை எல்லாம் நாம் பார்த்துக் கண்ணீர் விடும் நிலை இருக்கின்றது.

ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது எத்தனை அவஸ்தைப்படுகிறது..? பிறந்த பின் அந்தக் குழந்தையை வளர்க்க எத்தனை அவஸ்தை…? வளர்ந்து வரும் நிலையில் அவனைக் காக்க எத்தனை அவஸ்தை..? பிள்ளை கல்வி கற்க எத்தனையோ கடனை வாங்கிச் சிரமப்பட்டுப் படிக்க வைக்கின்றார்கள்… அதில் எத்தனை அவஸ்தை…?

இருந்தாலும் தன் பையன் கற்ற பின் அவனுடைய நிலைகளைப் பார்க்கும் பொழுது அந்தத் தாயின் நிலைகள்… கண் கொள்ளாத நிலைகள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைத் தவிர்த்ததனால் இன்று இதிலே படக்கூடிய வேதனைகள் ஏராளம்… ஏராளம்…!

என் (ஞானகுரு) அம்மாவைப் பற்றி நான் நினைக்கும் பொழுது எனக்கு (ஞானகுரு) அழுகை வந்துவிடும். காரணம்…
1.அந்தத் தாய் என்னைக் காத்த நிலைகள் கொண்டுதான்
2.இதை எல்லாம் (அத்தனை மெய் ஞானிகளையும்) அறிய முடிந்தது,
3.தாயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டதனால் தான் வருகிறது.

என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் பெண் பிள்ளை மாதிரி நான் தான் சமைத்துக் கொடுப்பேன். எதுவாக இருந்தாலும் என் தாயுடன் ஒட்டியே இருப்பேன்.

என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் (அப்பாவைப் பெற்றவர்) சண்டை வந்துவிடும். என் பாட்டி அம்மாவைக் கண்டபடி பேசும். ஒரு சமயம் என் அம்மா அதைக் கேட்டுக் கோபித்துக் கொண்டு கிணற்றில் விழுந்துவிட்டது.

எனக்கு ஒன்பது வயது இருக்கும். ஓடிப் போய்க் கிணற்றில் குதித்து என் அம்மாவைக் காப்பாற்றித் தூக்கிக் கொண்டு வந்தேன். அதற்கப்புறம் என் அம்மாவை நான் பிரிந்திருக்கவில்லை. ஏனென்றால் ஏதாவது சொன்னால் மறுபடியும் விழுந்துவிடுமே என்று…! தாயின் பாசத்தை தாய் எனக்கு உணர்த்தியிருக்கின்றது.

அந்த உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது ஒவ்வொருவரும் கடவுளைத் தேட வேண்டியதில்லை.
1.நம்மை உருவாக்கிய தாய் தான் கடவுள்…!
2.நம்மைத் தெய்வமாகக் காத்தது இந்தத் தாய் தான்…!
3.குருவாக இருந்ததும் தாய் தான்.

அதனால் இதை எல்லாம் நீங்கள் மனதில் வைத்து இன்று விஞ்ஞான உலகம் அஞ்ஞான வாழ்க்கையில் போய்க் கொண்டிருக்கும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு தாயின் பேரன்பு கொண்டு அதை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள்.

எதிலேயும் எந்த நிலையானாலும் அம்மா அப்பா அருளால் இந்தச் செயல் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து செய்து வாருங்கள்.
1.சிக்கல் வரும் பொழுது அம்மாவை எண்ணுங்கள்
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபட எனக்கு ஒரு நல்ல உபாயம் வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்தத் தாயின் உணர்வு இருப்பதால் அதே உணர்வு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்
1.தாய் நம்மைப் பேணிக் காத்த உணர்வு நமக்கு ஞானத்தை ஊட்டி
2.தப்பிக்கும் உபாயத்தையும் மார்க்கத்தையும் காட்டும்.

யாராவது நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்றால் இதே உணர்வு வந்து ஊக்கம் ஊட்டி நம்மை அவர்கள் தாக்காதபடி காக்கவும் செய்யும். எதிரிகள் எத்தனையோ நிலைகள் இருந்தாலும் தாய் எண்ணியிருந்தால் தாக்கக்கூடிய உணர்வையே மறைக்கக்கூடிய சக்தி இருக்கின்றது.

அதே போல் தாய்மார்களும் என்ன செய்ய வேண்டும்…?

குழந்தைகளுக்கு ஞானத்தை ஊட்ட வேண்டும். ஏனென்றால் பிள்ளைகள் தவறி விடுகிறது. அதை எல்லாம் எண்ணியபின்
1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று கோவிலில் போய் வேதனையைத் தான் படுகின்றோம்.
2.அவனை எண்ணி வேதனையைத் தான் வளர்க்கிறோம்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் மாற்றி என் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று.. கல்வியில் சிறந்த ஞானம் பெற்று… உலக ஞானம் பெற்று… “உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும்…” என்று இன்று விஞ்ஞான உலகிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம் இந்த முறைப்படி அவசியம் எண்ணித் தான் ஆக வேண்டும்.

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி

 

நாம் கெட வேண்டும் என்று யார் எண்ணினார்களோ அவர்களை நாம் எதிரியாகக் கருதும் பொழுது “எதிரியைத்தான்…” உடலுக்குள் வளர்க்கின்றோம்.

இதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் காட்டிய விநாயகர் தத்துவத்தின்படி
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நல்ல குணங்களுக்கு ஊக்கச் சக்தியைக் கொடுப்பதும்
2அவர்கள் தீமையான உணர்வுகளைச் சொல்லும்போது மகரிஷிகள் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும் என்றும் சொல்வது.

காரணம் கண்களிலே பார்த்தது நமது ஆன்மாவாகின்றது. சுவாசித்த பின் உயிரிலே படுகின்றது… அந்த உணர்வு இயக்கப்படும் பொழுது ஜீவணுவாக மாறுகின்றது.

முதல் அணு உருவாகி விட்டாலும் அடுத்த நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

ஏனென்றால்
1.கண் இப்படி முன்னாடி வருவதை எடுத்து அதன் வழி நேரடியாகப் பேசுகின்றது.
2.ஆனால் கண்களால் மகரிஷிகள் உணர்வை எண்ணி அதை எடுத்து இடைமறித்து உயிரிலே (புருவ மத்தியிலே) இணைக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். காரணம் என்ன என்றால் மறந்து விட்டுத் தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று தெரியவில்லை என்று திரும்பக் கேட்பாரும் உண்டு.

அதனால்தான் ஞாபகப்படுத்துவது…!

வாழ்க்கையில் வரும் தீமைகளை இடைமறித்து அருள் ஞானிகள் உணர்வை உள்ளே செலுத்தப்படும் பொழுது தீமைகளை அகற்ற முடிகின்றது.

தங்க நகைகளைச் செய்கின்றோம்… செம்பு வெள்ளியை அதனுடன் இணைத்துத்தான் செய்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோம்.

1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிய “அந்த வலுப்பெற்ற உணர்வுகள் மகரிஷிகளுடையது…”
2.அதை நாம் நுகர்வதற்குத் தான்… பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் “தியானம்…”

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இது தியானம். மகரிஷிகள் அருள் சக்திகளை உடலுக்குள் செலுத்தச் செலுத்த உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது உரம் ஆகின்றது.

1.பிறர் செய்த தீமைகள் நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்பு அந்த மகரிஷியின் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.தீமையான அணுவாக அது வளர்வதற்கு முன் “அந்த அணுவையே…” நமக்குச் சாதகமான நிலைகளாக மாற்றிவிடும்.
3.தீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்யும் பொழுது “ஒவ்வொன்றிலும் நமக்கு வலுப்பெறுகின்றது…”

இரண்டு தரம் கெட்டதைக் கேட்டோம் அல்லது சொன்னோம் என்றால் நல்லது செய்வதை அது தடைப்படுத்துகின்றது. ஆனால் அதே சமயத்தில் அது போல் ஆன பின் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை இணைத்து விட்டால்
1.அந்த அணு நம் வழிக்கே இணைந்து வருகின்றது.
2.அப்பொழுது நம்மைக் காக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அதற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் நமக்குள் எதை வினையாக்க வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இயக்க வேண்டும்…? என்று கேள்விக்குறி போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

உதாரணமாக… வேதனைப்படும் நிலையாகி விட்டால் அது வேதனையை அதிபதியாக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது. அந்த அணுவின் செயலாக்கங்களையே கொண்டு வருகின்றது.

அதே சமயம் இதை அடக்கிய மகரிஷிகள் உணர்வை அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அந்த அணுவிற்குள் ஞானியின் உணர்வுகள் அதிபதியாகத் தொடங்கி விடுகின்றது.
2.பின் ஒளியான அணுக்களாகவே உருப்பெறத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் நாம் அந்த மெய்ஞானியின் உணர்வை வினையாக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
1.நாம் யாரையுமே எதிரியாக ஆக்குவதில்லை.
2.நமக்குள் எதிர்மறையான அணுக்களும் உருவாகாது
3.ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் உருவாகின்றது… மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வீட்டில் பையன் குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கின்றான்.. சொன்னபடி கேட்கவில்லை… சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான்…! என்றால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை அதிகமாகின்றது.

அப்பொழுது சிந்தனை இழந்து கோபமாகி குடும்பத்திலும் கலவரங்கள் வருகின்றது. அப்புறம் யாரிட்ட சாபமோ…? யார் என்ன செய்தார்களோ…? என்று இப்படிப் பல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது.
1.நம்மை அறியாமல் இயக்குகிறது என்று தெரிகிறது.
2.அதை உடனே போக்க வேண்டுமல்லவா…! அதற்கு வழி..?

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வெல்லாம் வினையாகின்றது (வினை என்றால் வித்து – உடலுக்குள் அணுவாகின்றது). அது வினைக்கு நாயகனாக நம்மை இயக்கத் தொடங்குகிறது.

ஒரு பருப்பை நாம் வேக வைத்தால் முளைக்குமா…? முளைக்காது. அதைப் போல் நமக்குள் வந்த வினையை வேக வைக்க வேண்டும். அதற்காக வேண்டித்தான் விநாயகரை வட மேற்கிலே வைத்து வடகிழக்கிலே பார்த்து நம்மை வணங்கும்படிச் சொல்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரம் வடகிழக்கிலிருக்கின்றது. துருவ நட்சத்திரம் காலை நான்கு மணிக்கு உதயமாகி அதிலிருந்து அலைகள் வருகிறது.
1.அந்த நேரத்தில் நாம் முழித்து “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி
2.அப்பா அம்மாவை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று
3.நம் உடலுக்குள் பதிவு செய்து பழகிக் கொள்ள வேண்டும்.
4.அப்படிப் பதிவு செய்து பழகுவதற்குத்தான் விநாயகரை வட மேற்கிலே வைத்துள்ளார்கள்.

ஆக வடகிழக்கில் துருவ நட்சத்திரம் உள்ளது. நாம் விநாயகரைப் பார்க்கும் நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.தன்னிச்சையாகப் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

விநாயகருக்கு முன்னாடி என்ன வைத்துள்ளார்கள்..?

புல்லைத் தின்றோம்… தழைத் தாம்புகளைத் தின்றோம்.. கனிகளைத் தின்றோம்…! இன்று மனிதனாக ஆன பின் இன்று சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம் என்று கொழுக்கட்டையை வைத்துக் காண்பித்து
1.இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று
2.கேள்விக் குறியே போட்டுச் சொல்கிறார்கள்.

ஆனால் நாம் அந்தக் கேள்விக் குறியைப் போட்டுக் கணக்கு எழுதுவதும்.. வீட்டு வரவு செலவு கணக்குப் பார்ப்பதும்… நல்ல நேரம் பார்ப்பதும்.. அதற்காக வேண்டித் தான் அதைப் போட்டு ஆரம்பிக்கின்றோம். வேறு எதுவும் இல்லை.

ஆகவே மனிதனான பின் வேக வைத்துச் சாப்பிடுகிறோம். வேக வைத்தால் அது மீண்டும் முளைக்காது. இதே போல் பையன் அறியாத நிலைகளில் செயல்படுகிறான்… என்றால் அந்த வேதனை என்ற விஷம் நமக்குள் முளைக்காது தடுக்க வேண்டும்.

பையன் அறியாது செயல்படுத்தக் கூடிய அந்த வேதனையான உணர்வு நம் உயிரிலே மோதியவுடனே அது தீய வினையாக நமக்குள் சேர்கிறது. ஏன்…?
1.பல கோடிச் சரீரங்களில் முதலில் தீய வினைகளை நீக்கித் தான் மனிதனாக வந்தோம்.
2.இப்பொழுது இது தீய வினைகளாக நமக்குள் மாறுகின்றது
3.அப்படி மாறுவதைத் தடுக்க வேண்டுமல்லவா…!

இதைத்தான் இராமாயணத்தில் வாலி என்று காட்டுகின்றனர். அவனுடைய தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது “வாலி” வலிமையாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி விடுகின்றது.

அவனுடைய தவறான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது. அவன் எந்தத் தவறு செய்தானோ அதே தவறை நம்மைச் செய்யும்படித் தூண்டுகிறது. அவன் செய்த தவறையே நம்மைச் செய்யும்படித் தூண்டுகிறது.

1.அவன் தவறு செய்துவிட்டான் என்று நாம் நினைக்கின்றோம்.
2.அவன் ஒரு மடங்கு தவறு செய்தான் என்றால் அதற்குப் பதில்
3.பல மடங்கு அவனைக் கோபித்துத் திட்டுகிறோம்… அடிக்கப் போகிறோம்… தள்ளி விடுகிறோம்.

நம் பையன் என்று தெரிகிறது. அவனுக்குப் புத்திமதி சொல்ல முடிகிறதா…? அது அதிபதியாகி விடுகின்றது. அதன் வழி தான் நாம் நடக்கின்றோமே தவிர நம் நல்ல குணத்தைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடிகிறதா…? முடிவதில்லை.

பையன் குறும்புத்தனம் செய்தால் “காலையில் எடுத்துப் பதிவாக்கிப் பழகிய…” நல் வினையானை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணினோம் வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கும் உணர்வுகள் நமக்குள் வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து விட்டால் உள்ளுக்குள் போவதில்லை.

“உயிரிலே பட்டால் தான் இந்த உணர்வுகள் வரும்…!” (இது முக்கியம்). கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி இழுத்துப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும்.

1.அந்த உணர்வைச் சேர்த்தவுடனே
2.எதை வலு கொண்டு கண்ணிலே பார்க்கிறோமோ…
3.உயிரிலே… அதை இழுக்க ஆரம்பித்துவிடுகிறது.
4.அப்படி இழுக்க ஆரம்பித்தவுடனே குறும்பு செய்தான் அல்லவா…
5.அந்த உணர்வை உள்ளுக்குள் போகவிடாமல் தடுக்கிறது.

இப்படித் தடுத்து… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும் என்று முதலிலேயே அனுப்புகின்றோம்.

ஏனென்றால் அவன் செய்த வேதனை என்ற உணர்வுகள் சாப்பாட்டுடன் கலந்து அப்புறம் தான் இரத்தமாக மாறும். இரத்தத்தில் கலந்த பின் அணுவாக மாறும்.
1.அப்படிக் கலந்து வருவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்… இரத்தங்களில் கலக்க வேண்டும்…! என்று செலுத்திவிடுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி விடுகின்றோம்.

இப்படிச் செலுத்திப் பழக வேண்டும். இப்படிப் பழகிக் கொண்டால் பையனால் நமக்குள் வேதனையோ கோபமோ ஆத்திரமோ வெறுப்போ வராது. மாறாக அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல சிந்தனை வருகிறது.

அதன்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உனக்குக் கிடைக்கும்.. நீ தெளிவாக வருவாய்… உன் செயல்கள் எல்லோருக்கும் நல்லதாகும்…! என்ற நல்ல வாக்கினை பையனுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த உணர்வுகள் அவனுக்குள் சிறுகச் சிறுகச் செல்ல அவனை அறியாது இயக்கிய குறும்புத்தனங்கள் மாறி நம் சொல்லைக் கேட்கும் தன்மைக்கு வருவான்.

செய்து பாருங்கள்…!

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற வேதனைப்படக் கூடாது

 

1.எக்காரணத்தைக் கொண்டும்… இந்த வாழ்க்கையில் எத்தகைய அச்சுறுத்தும் உணர்வுகள் வந்தாலும்…
2.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை வளர்க்கப்படும் பொழுது
3.நம்மை அச்சுறுத்தும் அந்த உணர்வுகள் ஒடுங்கும்.
4.மகரிஷிகள் உணர்வுகள் அதை அச்சுறுத்தும்…!

ஆகவே… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வாழும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும்… தெருவில் இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும்…! என்ற தவத்தை மேற்கொள்ளுங்கள்.

நண்பர்களாக இருக்கின்றோம். சந்தர்ப்பத்தால் அந்தக் குடும்பத்தில் இன்னல்கள் படுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானியுங்கள்.

அந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் அந்தக் குடும்பத்தில் உள்ளோர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… குடும்பம் நலமாக இருக்க வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்று இந்தத் தவத்தை எடுங்கள்.

இது உண்மையான தவம் ஆகிறது.

1.இதைச் செயல்படுத்தினீர்கள் என்றால் நமது குரு அருளை உங்களுக்குள் காணலாம்
2.பேரண்டத்தின் நிலைகளையும் உங்களுக்குள் காண முடியும்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

யார் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டாலும் கூட உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். உடலுக்குள் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நினையுங்கள். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற தவத்தை எடுங்கள்.

இதைப் பெருக்குங்கள். இதையெல்லாம் நீங்கள் செய்து பழக வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருங்கள். அனைவரது குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தவம் இருங்கள்.
1.எல்லோரும் அப்படிச் சொல்லி… அதைப் பெற வேண்டும் பெற வேண்டும் என்று
2.எல்லோருடைய தவமும் ஒன்று சேரும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதனை வரிசைப்படுத்தி நாம் கொண்டு வருதல் வேண்டும்.

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற நிலைகளை எடுக்கக் கூடாது. தொழில் செய்யும் இடங்களிலும் இதைச் செய்து பழகிக் கொள்ளுங்கள். இந்தத் தவத்தை மேற்கொள்ளும் பொழுது அங்கே தவறுகள் மறையும்.

ஏனென்றால் இந்தத் தவறை வளர்த்துக் கொண்டால் நமக்குள்ளும் தவறுகள் விளையும். அந்த உணர்வே மீண்டும் இயக்கச் சக்தியாக வரும்.

தவறு செய்கின்றான்… தவறு செய்கின்றான்..! என்று தவறு செய்தவனைச் சொல்லிக் கொண்டிருந்தால் இது எங்கெல்லாம் சொல்கின்றோமோ இந்த உணர்வு அங்கே விளைந்து எல்லோரையும் இந்தத் தவறையே செய்ய வைத்துவிடும்.

பின்… “எங்கே பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றது…” என்று மீண்டும் அதைத்தான் வளர்க்க ஆரம்பித்து விடுவோம்.

1.குருநாதர் எந்த வகையிலெல்லாம் எனக்குக் கொடுத்தாரோ
2.அதையெல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
3.அதன் வழியில் ஒவ்வொரு நிமிடமும் தியானித்துப் பழகுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நம் குடும்பத்தில் எல்லோரும் பெற வேண்டும் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற இந்தப் பழக்கத்திற்கு நாம் அனைவருமே வந்துவிட வேண்டும்.

குரு வழியில் இப்படிச் செயல்படுத்தினால் இந்த உலகையும் காக்கின்றோம்… நம்மையும் காக்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்தக் கஷ்டமான அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருக்கின்றது.

அதை மாற்றக் கூட்டுத் தியானங்களிலிருந்து எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஞானிகள் உணர்வு இங்கே வரப்படும் பொழுது தீமைகள் ஒடுங்குகின்றது.

நம்முடைய எண்ணங்கள் அதிகமாக இதைப் பிரதிபலிக்கும் பொழுது காற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மையை ஈர்க்கும் நிலை இழக்கப்பட்டு அந்த உணர்வுகள் அகன்று சென்று விடுகிறது.

நாம் வசிக்கும் தெருவிலே இது போன்ற அலைகளைப் பாய்ச்சப்படும் பொழுது அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குக் கிடைக்கின்றது.

1.குரு அருளை நமக்குள் வளர்த்து… நாம் எல்லாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த உலகைக் காக்கும் சக்தியாக வர வேண்டும்.
2.எல்லா இடங்களிலும் இதைப் பரப்பி பழகுதல் வேண்டும்.
3.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் இதைச் செயல் வடிவுக்கு கொண்டு வந்தால் போதும்.

“சிரமம்…” என்ற அந்தச் சொல்லே நமக்கு வேண்டியதில்லை. உடனுக்குடன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். இந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தவமிருந்தால் “அந்தத் தவம்…” நமக்குள் வளர்கின்றது.

அதே சமயத்தில் குடும்பம் நன்றாக வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் போது “அந்தக் குடும்பங்களின் கஷ்டங்கள் நம்மைச் சாடாது…”

1.இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நாம் பார்க்க விரும்பிய சப்தரிஷி மண்டலமும்
2.எப்படியெல்லாம் அந்த ஞானிகள் உணர்வை ஒளியாக மாற்றி உருபெற்றார்களோ அதையும் நீங்கள் பார்க்கலாம்.
3.நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்… நீங்களும் பார்க்கலாம்.

சில பேருக்கு இப்பொழுதும் தெரிகின்றது. தெரிந்தாலும் நிஜமா… பொய்யா..? என்று சந்தேகம் உள்ளுக்குள் மாற்றிக் கொண்டே இருக்கும். நாம் பார்ப்பது நிஜமா…? என் எண்ணம் தான் இவ்வாறு இயக்குகின்றதா…? என்ற இந்த வினாக்கள் இருக்கும்.

உதாரணமாக… அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்கப்படும் பொழுது இரவிலே தூங்கும் பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ… அதே போன்று மெய்ஞானிகள் உணர்வை நாம் எடுக்கப்படும் பொழுது அந்த அச்சுறுத்தும் உணர்வை அடக்கி அந்த ஞானி உணர்வுகளை நாம் காண முடியும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகள் தெரிவது போல் தான்
2.மெய் ஞானிகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

யாரும் தவறு செய்யவில்லை. தெரிந்து யாரும் ஞானியாக ஆகவில்லை நான் ஞானியாக வேண்டும் என்று “தெரிந்து… அப்படி ஆகவில்லை…”

1.மற்றவர்கள் நலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது தான் ஞானி ஆகின்றார்கள்.
2.பிறர் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் போது தான் ஞானியாக முடிகின்றது.

ஞானிகளைப் போன்று நாமும் வாழ்க்கையில் அதைக் கடைபிடித்துச் செயல்படும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.

அந்த உயர்வான நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று உங்கள் எண்ணத்தை உயர்த்தி… எல்லோரையும் அந்த உயர்ந்த நிலையை நீங்கள் பெறச் செய்ய முடியும்
1.உங்கள் பார்வையால் உலகில் உள்ள நஞ்சின் தன்மையை மாற்ற முடியும்.
2.இங்கே 50 பேர் தான் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ண வேண்டாம்… இது ஐம்பது இலட்சமாகவும் ஐம்பது கோடியாகவும் மாறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு பயந்தவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் என்ன ஆகும்…? அதாவது இந்த இடத்தில் தான் கோரமான விபத்து ஆனது… அதை நான் நேரடியாகப் பார்த்தேன்… பயந்து விட்டேன்…! என்று அவர் சொன்னால் போதும்.

நீங்கள் அந்த இடத்திற்குப் போனால் தன்னாலே அந்தப் பய உணர்வுகள் தூண்டும். அந்த உணர்வு வந்தவுடனே உங்களை அறியமலே கிடு..கிடு…கிடு…! என்று நடுங்கச் செய்யும்.

இந்த உணர்வுகள் இயங்குவதைப் போல் தான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றேன். ஏனென்றால்
1.குருநாதர் எனக்குத் தெரியாமல் தான்
2.எனக்குள் (ஞானகுரு) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அறிமுகப்படுத்தினார்
3.அதைப் போல் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சகதிகளை “நீங்களும் பெற வேண்டும்…” என்ற ஆசையில்
4.தொடர்ந்து இதைக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆக… இனம் இனத்தைத் தான் பெருக்கும். அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளிலே எல்லோரும் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகையினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்கு ஊட்டிய அருள் உணர்வுகளை எல்லாம் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் ஒன்றாக இணைய வேண்டும் என்று
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரை ஈசனாக மதித்து
2.உங்களுக்குள்… உங்கள் உணர்வுக்குள் தொட்டுக் காட்டுகின்றோம்.

இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் சொல்வார்கள்…. தன் ஆசையின் நிலை கொண்டு என்ன செய்கிறார்கள்…? இங்கே “தட்டி” அதை எண்ணியவுடன் அவர்கள் உணர்வுகள் எல்லாம் இங்கே வந்துவிடும்.

அந்த ஆசையின் உணர்வுகள் வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். அந்த மந்திரத்தின் உணர்வுகள் வந்த பின்
1.இங்கே பார் வந்துவிட்டது… என்று
2.ஆக்கினையைத் தொடு…! என்று காட்டுவார்கள்.

அவர் ஆசையின் உணர்வுகள் இந்த உடலிலும் இயக்கும். இதே போல் சில மனிதரின் உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும். தொட்டவுடன் அவர்களுக்குக் “கிர்…ர்ர்ர்…!” என்று வரும்.

இபப்டித் தொட்டுக் காட்டிவிட்டால் அவர்களுக்கு அந்த உணர்வே தான் பழக்கம் வரும். “கிர்…ர்ர்ர்…!” என்று நெற்றி வலிக்க ஆரம்பித்துவிடும். பல நிலைகள் எல்லாம் ஆரம்பித்துவிடும். இது அல்ல..!

சாதாரணமாக ஒரு சிறிய பையனைத் தொட்டு “உனக்குள் இப்பொழுது மின்சாரம் பாய்கிறதா பார்…!” என்றால் அந்த உடலில் இருப்பதெல்லாம் இங்கே வரும்.

இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் நிலையும் ஆகும். அதைப் போன்ற நிலைகளில் எல்லாம் யாரும் சிக்காதீர்கள்…!

ஆனால் நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காண்பிப்பது என்பது எப்படி…?

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் அந்த உணர்வுகளை இணைக்கும் நிலையாக
1.இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது (படிக்கும் போது)
2.அது எப்படி ஆனது என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் உடல் அணுக்கள் அனைத்துக்கும் இது தொட்டுக் காட்டுவதாகும்.

நான் பேசுவது இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாய்கிறது. அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “உங்கள் எண்ணத்தாலேயே…” நீங்கள் அந்தத் துருவ நடசத்திரத்தின் அருள் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை நீங்கள் எண்ணி வளர்க்க வளர்க்க உங்களுக்குள் பேரொளியாக மாறும். நீங்களே அதை உணர முடியும்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பண்புள்ள மனிதன் அதைப் பார்க்கும் நிலையில் அந்த வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இவனுடைய உணர்வுகளும் இருன்டுவிடுகிறது.
1.அவனைக் காக்க எண்ணுகின்றான்
2.ஆனால் அதே உணர்வு இங்கே இருண்டு விடுகின்றது.
3.அந்த உண்மையை அறிய முடியாத நிலைகளில் இவன் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஊடுருவி விடுகின்றது.

ஆனால் பலருக்கும் இதைப் போல உதவி செய்யும் நிலையில் பிறருடைய துயரங்களை எண்ணி ஏங்கும் பொழுது அவர்கள் படும் துயரமெல்லாம் இங்கே வந்து இவன் சிந்திக்கும் தன்மையும் குறையத் தொடங்குகிறது.

ஏற்கனவே நல்லது செய்திருந்தாலும் அதைச் செய்ய முடியாத நிலைகளில் “எல்லோருக்கும் நல்லது செய்தேன்… என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று சொல்லிக் கொண்டு அவன் நல்லதைச் செய்வதையே மறக்கின்றான்.

எதைச் செய்து என்ன புண்ணியம்..? அப்படியே நாசமாகப் போகட்டும்..! அவன் கடைசி உணர்வாக இதை எடுத்துக் கொள்கின்றான்.

ஆகவே இதைப் போன்ற உணர்வு வரப்படும் பொழுது எந்த நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்களோ பிறருடைய வேதனைப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் மடிந்து விடுகின்றது.

பின் அவனைப் போல் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமக்குள் நோயாகும் நிலையும் தவறு செய்பவனாகவும் மாற்றிக் கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமல்லவா..!

இதை எல்லாம் மாற்றி அமைத்தவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வை எடுத்து நம் உடலிலே அடிக்கடி பெருக்குதல் வேண்டும்.

கடும நோயாக இருந்தாலும் இப்பொழுது பதிவு செய்த இந்த உணர்வின் வலு கொண்டு இந்தக் காற்றிலுள்ள நல்ல மணத்தை நுகரலாம்.

செடி கொடிகள் எந்த உணர்வின் சத்தைப் பெற்றதோ அந்த உணர்வின் துணை கொண்டு அந்தத் தாய்ச் செடியின் மணத்தைக் காற்றில் கலந்திருப்பதனால் அதிலே விளைந்த வித்து புவியின் துணை கொண்டு அது கவர்ந்து அதே உணர்வுகள் அதே மணம் அதே குணமாக வளர்க்கின்றது.

இதைப் போல…
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உடலிலே பல பச்சிலை மூலிகைகளை எடுத்து
2.அவன் உடலிலே விளைய வைத்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் படர்ந்துள்ளது
3.அதை எல்லோரும் பெற முடியும்… அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு உங்கள் நினைவைக் கூட்டினால் அகஸ்தியன் பல நோய்களைப் போக்கிய உணர்வை இந்தக் காற்றிலிருந்து நீங்களும் பெற முடியும்.
1.அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால்
2.அதிசயக்கத் தக்க நிலைகளில் உடல் உறுப்புகளை மாற்றமடையச் செய்யும்…
3.அறியாது வந்த நோய்களையும் மாற்றியமைக்கலாம்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் ஒளியின் சரீரமும் பெறலாம்.

அதே சமயத்தில் உடலில் சில உபாதைகள் இருக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ண முடியாது போய்விடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் வரும் பொழுது தீய அணுக்களைத் தான் நமக்குள் வளர்க்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட இப்பொழுது அந்த அகஸ்தியனின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… பயிற்சியும் கொடுக்கின்றோம்.

இங்கே சொல்லும் நிலைகளில் நீங்கள் பெற்றதை
1.ஞானகுரு நமக்குச் சொன்ன வழியில் நாம் இதைப் பெற்றோம்…
2.தீமைகளையும் நோய்களையும் நீக்கிடும் அந்த வலிமை பெற்றோம்…
3.அருளைப் பெற்றோம் இருளை நீக்க முடியும்…
4.பிறவியில்லா நிலையை அடைய முடியும்…! என்று உங்கள் ஊக்கமான உணர்வுகளை
5.உங்கள் நண்பர்களிடத்திலேயோ சொந்தபந்தங்களிடத்திலோ அவர்களுக்குள்ளும் பதிவு செய்யுங்கள்.
6.அந்த நினைவு அவர்களுக்கும் வரட்டும்… அவர்களும் அந்த உயர்ந்த நிலைகளை பெறட்டும்.

இதை எல்லாம் நீங்கள் பழக வேண்டும். ஏனென்றால் இன்று உலகம் முழுவதுமே விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த விஷத் தன்மைக்குள் மறைந்து தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இருக்கின்றது. அதைப் பிரித்து எடுப்பதற்குத்தான் உங்களுக்கு இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

எத்தனை விதமான உணர்வுகள் இருந்தாலும் ரோஜாப்பூ தன் நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றது. எத்தனை விதமாக இருந்தாலும் கருகப்பிள்ளைச் செடி தான் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப அது காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கருகப்பிள்ளைச் செடியாக மாறுகிறது.

இப்படி ஒவ்வொரு தாவர இனங்களும் அது அது தன் தன் சத்தைப் பெறுவது போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் அருள் உணர்வைப் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மையைத் தடுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்.

நீங்கள் இதைப் பழகிக் கொண்டால் உங்கள் ஆன்மாவில் இதைப் பெருக்கப்படும் பொழுது “ரிமோட்…!” உள்ளுக்குள் புகாதபடி செய்யும்.

ஈஸ்வரா…! என்று எண்ணினால் இதன் வழி உள்ளுக்குள் போகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வலுக் கொண்டதாக நிற்கும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். நமக்குள் நல்ல உணர்வை நாம் பெருக்க முடியும்.

கொஞ்ச நாள் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் பெறலாம். இந்த உடல் வாழ்க்கைக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடையலாம்.

இந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்களுக்கு உபதேசித்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உங்களுக்கு அனுபவரீதியில் கொண்டு வந்தது.

இதை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண்களை விழித்தவுடனே (குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) உங்கள் ஆன்மாவில் உள்ள நாற்றத்தை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே சேர்த்தால் உங்கள் ஆன்மா தூய்மையாகின்றது. நல்ல நறுமணங்களும் மகிழ்ச்சியும் வரும்.

இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்தப் “பச்சிலை மூலிகைகள்” அவனில் விளைந்து அந்த அருள் சக்தி படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்தியன் பெற்ற விஷத்தை நீக்கிய அந்தப் “பச்சிலைகளின் மணங்கள்” நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சிறிது நேரம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிருடன் ஒன்றி ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் பெற்ற அவன் அறிந்துணர்ந்த அந்தப் “பச்சிலை மணங்கள்” நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது…
1.அந்தப் பச்சிலையின் மணங்கள் வரும்…
2.உங்களால் நுகர முடியும்… நுகர முடிகிறது என்றால்
3.உங்கள் வாயிலே உமிழ் நீராக மாறும் பொழுது உணர முடியும்…!

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் நமக்கு முன் படர்ந்துள்ளது. அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்துள்ளோம். அதனின் நினைவு கொண்டு இதனைப் பிரித்து எடுங்கள்.

ரேடியோ டி.வி அலைகள் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ… அதைப் பிரித்து எடுக்கிறது. அதைப் போல் அகஸ்தியனின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ளது.

அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள். அவன் நுகர்ந்த பச்சிலையின் மணங்களை நுகர்ந்து எப்படி இருளை அகற்றினானோ அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்கு மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

1.அகஸ்தியன் கண்டுணர்ந்த பல பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள்… அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அகஸ்தியன் தனக்குள் இருளை அகற்றிடும் உணர்வை விளைய வைத்து… அவனின்று வெளிப்பட்ட அந்த உணர்வுகளையும்
3,நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
4.இப்பொழுது அந்தப் பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும்.
5.நுகர்ந்த அந்த மணங்கள் உங்களுக்குள் உமிழ் நீராக மாறும்… வாயிலே அந்தச் சுவைகளை உணரலாம்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு). எல்லோரும் பெற வேண்டும் என்று உங்களுக்குள் அந்த ஆசையைத் தூண்டுகின்றேன்.

நம் பூமியிலே எத்தனையோ வகையான மலர்கள் உண்டு. மனிதர்களின் பிணியைப் போக்கக்கூடிய மலர்களும்… மகிழ்ந்து வாழச் செய்யும் மலர்களும் உண்டு.

அதிலிருந்து வளர்ந்த உணர்வினை நறுமணங்களை சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. ஆகவே அந்த மலர்களின் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் ஈசனிடம் ஏங்கிக் கண்களை மூடித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு…
1.மல்லிகை மணமோ
2.மனோரஞ்சித மணமோ
3.ரோஜாவின் மணமோ
4.தாமரையின் மணமோ கிடைக்கும்.

மலரைப் போல் மணம் பெற வேண்டும்… அந்த மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கித் தியானியுங்கள். இப்பொழுது…
1.மருக்கொழுந்தின் வாசனையும் சந்தனத்தின் நறுமணமும் கிடைக்கும்.
2.அதே சமயத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகவும்
3.அந்தந்த மலரின் சத்தும் சுவையாகக் கிடைக்கும்.

இதை எல்லாம் இந்தக் காற்றிலிருப்பதை நாம் ஈர்க்கும் தன்மை அது கிடைக்கின்றது. இதை எல்லாம் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில்
1.அவ்வப்பொழுது நறுமணங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்தால்
2.அந்த நேரத்தில் எல்லாம் உடனே கிடைக்கும்.

சிலருக்குச் சங்கடமும் சலிப்பும் இருந்தால் அவர்களுக்கு இதைத் தடைப்படுத்தும். அதை எல்லாம் மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும் அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெற வேண்டும் அந்த மலர்களின் மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதனின் உணர்வை அடிக்கடி பெருக்கிப் பழக வேண்டும்.
1.காற்றில் இருப்பதை நாம் நுகர்ந்து
2.நம் உடலிலுள்ள இரத்த நாளங்களிலே கலந்து பழக வேண்டும்.

கனி வகைகளில் வெளிப்பட்ட மணங்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. கனியின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்குள்
1,மாம்பழங்களின் மணமும்
2.கொய்யாவின் மணமும்
3.பலாப்பழத்தின் மணமும் வந்து கொண்டே இருக்கும்.

இந்தக் காற்றிலே பலவிதமான கனிகளின் மணங்கள் படர்ந்துள்ளது. அந்தக் கனிகளின் மணங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இதன் மூலம் கனிகளின் மணங்களையும் நாம் நுகர முடியும்.

ஏனென்றால் இந்தக் கனி வர்க்கங்களையும் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்தவர்கள் தான் பல நிலைகளில். அதனால் வந்த அணுக்களும் நமக்குள் உண்டு.

அதனின் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது இப்பொழுது மனிதனாக ஆன பின் அந்த உணர்வை நுகர்ந்தறிய முடியும். இந்தப் பிறபஞ்சத்தின் உண்மையையும் உணர முடியும்.. அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அறிய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் காட்டினார். அதன் வழிகளிலேயே தான் உங்களுக்கும் பெறச் செய்கின்றோம்.

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”

 

நம் இந்திய நாட்டிலே அரசர்கள் ஆட்சி செய்யும் பொழுது எத்தனையோ போர் முறைகள் ஏற்பட்டது. அதிலே மதப் போர்களும் இனப் போர்களும் நடந்தது.
1.அதனால் எண்ணிலடங்காத கொலைகளும் தகாத செயல்களும் நடந்தது.
2.இது எல்லாமே அந்தந்த இடங்களிலே பதிவாகியுள்ளது
3.எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டது… எரிந்த உணர்வின் அலைகளும் ஆங்காங்கு பதிவாகி உள்ளது.

மெய் ஞானத்தால் அந்த அணுக்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் உயிரினங்களில் ஜீவணுக்களாக வளர்ந்து விடுகின்றது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரானிக் என்ற முறைப்படி (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) அந்த அலைகளைக் கவர முடியும்.
1.விஞ்ஞான அறிவால் அதை எல்லாம் அறிய முடிந்தாலும் அதனால் அவர்களுக்குப் பயனில்லை.
2.காரணம் அத்தகைய நிலை வருவதற்கு முன்னாடி… கண்டுபிடிக்கக் கூடியவர்கள் அழிந்து விடுவார்கள்.

விஞ்ஞான அறிவுகள் (எலக்ட்ரானிக்) அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது.

இதைப் போன்று தான்
1.நமது உயிரும் எலக்ட்ரானிக்காக இருந்து ஒவ்வொரு நிலைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.
2.கரண்டை உற்பத்தி செய்கிறது… எடுத்துக் கொண்ட உணர்வுகளை அலைகளாக இயக்குகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் காடு மேடேல்லாம் எம்மை அலைய வைத்தார்.

அக்காலங்களில் தவம் இருக்கச் சென்றவர்களும்
1.அகஸ்தியன் எவ்வாறு எல்லாம் தாவர இன மூலிகைகளைத் தனக்குள் நுகர்ந்தறிந்தான்…? என்ற நிலையும்
2.அதே வழியில் போகர் எவ்வாறு எடுத்தார்…? என்ற நிலைகளையும்
3.அவர்களைப் பின்பற்றிக் காட்டுப் பகுதியில் அரசர்கள் சென்ற நிலைகளையும்
4.அது எல்லாம் எப்படி ரெக்கார்டு (பதிவு) ஆகி இருக்கின்றது…? என்பதைக் காட்டுகின்றார்.
5.அந்த அலைகளை எடுத்துத்தான் எனக்கு அதையெல்லாம் குருநாதர் உணர்த்துகின்றார்.
5.அதை எல்லாம் தெரிந்து தான் உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் தெரிந்த மாதிரி நீங்களும் தெரிய வேண்டும் என்றால் சிறிது நாளாகும். ஆனால் தெரிய முடியும்…!
1.தெரிந்தாலும் நமது வாழ்க்கைக்கு இதை விலக்கி விட்டு
2.மெய் ஞானிகள் உணர்வைப் பெறுவதாகவும் அதை வளர்ப்பதாகவும் வர வேண்டும்.

தெரிந்து கொண்டேன் என்ற நிலையில் “ஆசை…” உடலின் இச்சைக்கு அதிகமாகி இதிலே சிக்கிவிட்டால் “நான் பெரிய மகான்…!” என்ற நிலையில் உடல் பற்றுக்கே அழைத்து விடும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை நீங்கள் பெற்று வளர்த்துக் கொண்டால் அங்கே செல்லலாம். காரணம் இதையெல்லாம் கண்டுபிடிக்கலாம் என்று வந்து விட்டால் இந்த உலக ஆசைகள் வளர்ந்து விடும்.

அன்றைக்கு காந்திஜி அவர் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும் போது “முதலில் அவரை உள்ளே விடமாட்டேன்…” என்கின்றார்கள்

இந்தியாவைப் பற்றிப் பேசப் போகும்போது “அரை வேஷ்டியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்…” என்று உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க முடியும்

ஆனால்… காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார் அப்பொழுது அங்கே அவர் பேசும் பொழுது அவருக்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.

இருந்தாலும் அவர்கள் ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்…? ஒரு டெலஸ்கோப்பைக் கையில் கொடுத்தார்கள்

இது எனக்குத் தெரியாது. ஆனால்… குருநாதர் இதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றார்.

மாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பிக் கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்துக் கடலுக்குள் பார்க்கிறார் காந்திஜி.

அப்பொழுது ஆழ் கடலில் உள்ளுக்குள் மீன்கள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. “ஆ…! அந்த மீன் போகிறது பார். ஆகா… இங்கே இந்த மீன் போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.

இப்படிச் சொன்னவுடனே காந்திஜி கூட வந்த தேசாய் காந்தி… அபுல்கலாம் ஆசாத்… இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே “எனக்குக் கொடு… உனக்குக் கொடு…” என்று வாங்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

கடலுக்குள் இருக்கும் அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் “வெடுக்…” என்று அதை வாங்குவது – தான் பார்ப்பது என்று… கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும் அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது

காந்திஜி ஒரு மகான்…! எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும்… அப்பொழுது அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.

அப்பொழுது அவர் என்ன செய்தார்…?

இப்படிப்பட்ட ஆசைகள் உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால்
1.நாம் மூன்று பேரும் நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.
2.”பகைமையாகி விலகி விடுவோம்…” என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
3.இது நமக்கு வேண்டாம்…! என்று இப்படிச் செய்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

காங்கிரஸில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால் குருநாதர் இதைக் காண்பிக்கின்றார். அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.

குருநாதர் இதைத் தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால்
1.இயற்கையின் பேருண்மை நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.
2.நான் உனக்குக் காண்பித்த நிலைகளை “மற்றவர்களுக்கும் நீ சொல்வாய்…”
3.எல்லோரும் “பார்க்க வேண்டும்…” என்று ஆசைப்படுவார்கள் என்று இதை எச்சரிக்கை செய்கிறார்

பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையில் “எல்லாம் தெரிய ஆரம்பித்தவுடன்…”
1.அவர்கள் அதிலேயே ஆசைப்பட்டு “இந்தப் பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும்…” என்று எண்ணுவார்கள்.
2.வந்தவர்கள் அனைவரும் இந்தப் புவியின் பற்றின் உணர்வைப் பெருக்கி விட்டார்கள் என்றால்
3.அப்புறம் – நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு அவர்கள் போக மாட்டார்கள்.

நான் அதைப் பார்த்தேன்…! இதைப் பார்த்தேன்…! என்ற இந்த உணர்வு ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.

ஆகவே அதை விடுத்து விட்டு…
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால்… உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்
1.இந்த உடல் பற்றை அகற்றி உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
2.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழ வேண்டும்
3.அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.

குருநாதர் இப்படித்தான் அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.

சிதம்பரத்தில் வைத்து… யாம் உபதேசித்ததன் நோக்கம்

 

1.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
2.எப்பொழுதுமே நம் நினைவைப் புருவ மத்திக்கே கொண்டு போய்ப் பழக வேண்டும்.

நம் உயிரே குருவாகவும் நாம் எண்ணியது ஈசனாகவும் அது உருவாக்கக்கூடிய நிலையை நாம் உணர முடியும். இந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “எதை எண்ணுகின்றோமோ…” உடலுக்குள் இந்த உணர்வுகள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.

சாதாரணமாக மூக்கின் வழி கூடித்தான் சுவாசிக்கின்றோம். கண்கள் பார்க்கின்றது… மற்ற உணர்வுகளை எடுக்கின்றோம் ஆன்மாவாக மாறுகின்றது. மூக்கு வழி கூடிச் சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளைப் பின்னாடி அறிகின்றோம்.

நாம் ஓம் ஈஸ்வரா என்று அடிக்கடி சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணிப் புருவ மத்தி வழி கூடி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் வழி கூடித் தான் நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி… மூக்கு வழி சுவாசிப்பதும் என்று அதை அறிந்து கொண்டாலும் கூட
1.தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
2.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.

நாம் எவ்வளவு நல்லதைப் பேசினாலும் கூட பிறிதொருவருடைய நிலைகள்… குடும்பக் கஷ்டமோ அல்லது நோயோ அதனுடன் கலந்த சொல்லாக வெளி வரும்.

அவரைக் கண்ணுற்றுப் பார்த்துக் கவரும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசிக்க நேரும். எனக்கு இந்த மாதிரிக் கஷ்டமாக இருக்கின்றது என்று சொல்லும் பொழுது இந்த உணர்வு கலந்து விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் வந்தாலும் கூட
1.ஈஸ்வரா…! என்று இடைமறித்து அதைப் பலவீனப்படுத்தி
2.மகரிஷியின் உணர்வுகளை உயிர் வழி கூடி எடுத்து வலுப்பெறும் போது அவரிடமிருந்து கேட்டறிந்த தீமையை மாற்றுகின்றது.

அவர் பலவீனமான நிலையில் வெளிப்படுத்தும் போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்… அவர் நலம் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுக்க வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் சமைத்து அதற்கப்புறம் அதை எடுத்துப் போட்டால் தான் ருசியாக இருக்கும்.

அதைப் போல மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்ற நாம் எண்ணினால் அதைத்தான் சமைத்து அதையே தான் அவர்களுக்கு மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம்.
1.ஆகவே இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2.அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதைக் கலந்து தான் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

தியானத்தில் 27 நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… நவக் கோள்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்று சொல்கின்றோம்.

ஏன்…?

அவைகளில் இருந்து விளைந்தது… அந்தச் சக்திகளை எல்லாம் நாம் பெற்றவர்கள்.

27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் எல்லாவற்றிலும் உண்டு. அதில் எந்த நட்சத்திரத்தினுடைய சக்தி கூட்டல் கழித்தல் என்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளைத் தூண்டுவதும்… எண்ணங்கள் இயக்குவதும் எல்லாமே அமைந்திருக்கின்றது.

1.எல்லாவற்றையும் நாம் ஐக்கியப்படுத்தி நமக்குள் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது பிரிவு இல்லை.
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

ஆக… நமது குருநாதர் காட்டிய வழியில் தியானத்தில் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

1.முதலில் அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
2.எல்லோருடைய எண்ணங்கள் நமக்குள் பிரதிபலித்து “ஒன்றாகிறது…”

அடுத்து… நவக்கோளின் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதனுடன் சப்தரிஷி மண்டலங்கள்… மனிதனான அந்த உணர்வுகளை இதனுடன் கலக்கின்றோம். பார்வையால் எடுக்கின்றோம்… எண்ணத்தால் எடுத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

நம் ஆன்மாவிலே அதைக் கலந்து கொண்டே வருகின்றோம். சப்தரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம். இது எல்லாமே கலக்கின்றது.

அவர்கள் உடலில் விளைந்ததும் கோள்தான்… அவர்கள் எண்ணமும் நட்சத்திரம்தான்.
1.முதலிலே… அவர்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெறும் தகுதி பெற்ற உணர்வுகள் உண்டு.
2.இதை எல்லாம் ஐக்கியப்படுத்தித் தான் அந்த உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்காக… 27 நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்வது.

குருநாதர் இதையெல்லாம் காண்பித்தார். அதைப் பதிவு செய்யும்போது அந்த எண்ணங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தியானிக்கும் போது இந்த எண்ண அலைகள் பரவும்.

அப்பொழுது ஐக்கிய உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

இதற்கு முன்பும் இதைப் பற்றிச் சொல்லி இருக்கின்றேன். ஆனால் அர்த்தங்கள் உங்களுக்குச் சரியாக ஆகியிருக்காது. இப்பொழுது அதை விளக்கிக் கொடுக்கின்றேன்.

27 நட்சத்திரத்தின் நிலைகள் அது எது எதில் கலந்திருக்கின்றதோ செடியில் கலந்தாலும் அந்தச் சக்தி கலக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்குத் தக்கவாறு தாவர இனத்தை உருவாக்குகின்றது.

பூமியில் செடி கொடிகள் இருந்த இடத்திலிருந்து எப்படி அதனுடைய சக்திகளைப் பெறுகின்றதோ இதே போன்று நாம் சுவாசித்து உடலில் உருபெற்ற அணுக்கள் அந்தந்த இடத்திலிருந்து விளைகின்றது.

உதாரணமாக மலைப் பகுதியில் விளையும் செடிகள் கீழே தரையில் விளைவது இல்லை. அதே போல் தரையில் விளைவதை மலையில் வைத்தால் அங்கே அது விளைவது இல்லை.

இதைப் போன்று தான் நம் உடலில் அந்தந்தக் காலப் பருவம் அதனுடைய நிலைகள் வரப்படும் பொழுது அணுக்கள் விளைகின்றது. அது அது அதற்குத் தக்கவாறு சுவாசத்தை எடுத்து வளர்கின்றது. இருந்த இடத்திலிருந்தே அது பெறுகிறது.
1.இத்தனைக்கும் சாப்பாடு கொடுப்பது நமது உயிர் தான்… உருவாக்குவதும் உயிர் தான்.
2.பிரபஞ்சத்தில் சூரியனும் இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு வித்தை உருவாக்குகின்றது.

விளைந்த பின் எதை எதை எடுத்து அது வித்தாக உருப்பெற்றதோ புவியின் ஈர்ப்பின் துணையை வைத்து அதற்குண்டான சத்தைக் கொடுத்து அதைச் செடியாக வளர்க்கின்றது. அது சந்தர்ப்பம்.

நாம் நல்ல குணங்களுடன் இருந்தாலும் பிறருடைய உணர்வுகளைக் கவர்ந்து அவர்களுக்கு உதவி செய்கின்றோம். அவர்கள் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு நம்முடைய எண்ணங்களுடன் கலந்து உயிரணுக்களாக மாறும் பொழுது புதுப் புது குணங்களாக உருவாகின்றது.

ஒருவரைப் பார்த்து… இவர் நேற்று நன்றாகப் பேசினார் இன்று மோசமாகப் பேசுகின்றார் என்போம். அதே போல்… நேற்று மோசமாக இருந்தார்… இன்று நன்றாகப் பேசுகிறார் என்று சொல்வோம்.

ஏனென்றால் அவர் அடிக்கடி யாரிடத்தில் அதிகமாகப் பழகுகின்றாரோ அந்த உணர்வின் இயக்கங்கள் அவருக்குள் வளர்ச்சி பெறுகின்றது. அத்தகைய அணுக்கள் வளரப்படும் போது அதற்குத் தக்கவாறு தான் அவருடைய மணங்கள் மாறிச் சொல்களும் வெளி வருகின்றது.

ஆரம்பத்தில் எல்லாவற்றையும் யாம் பொதுவாகச் சொல்லிக் கொண்டு வந்திருந்தாலும்
1.அதை எப்படி உங்களுக்குள் இணைத்துக் கொடுப்பது…? என்கிற வகையில் முதலிலே சொல்லவில்லை.
2.பொது இடத்திலே (PUBLIC) அதைப் பெற முடியாது… அப்படிக் கொடுக்க முடியாது.
3.குருநாதர் உடலில் விளைந்த அந்த அருள் உணர்வுகள் எனக்குள் இருக்கிறது.
4.அதைப் பெற்று விளைவித்து உங்களிடம் திரும்பச் சொல்லும் போது உங்களுக்குள் அதை இணைத்துக் கொண்டு வர முடிகிறது.
5.அதற்குத் தான் இங்கே சிதம்பரத்திற்கு உங்களை எல்லாம் வரச் சொல்லித் தெளிவாக்குகிறோம்.

அப்பொழுது… குருவால் பெற்ற உணர்வுகள் எனக்குள் விளைவதும்… அடுத்து அது உங்களுக்குள்ளும் விளையத் தொடங்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரோட்டிலே போகிறோம். நம் சந்தர்ப்பம் ஒரு தீமையான உணர்வை உற்றுப் பார்க்க நேர்கிறது…! என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன செய்ய வேண்டும்..?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அப்படிப் பாய்ச்சிய இரத்தம் நம் உடல் முழுவதும் படர்கின்றது. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று முன்னாடியே அந்த வலுவைப் பாய்ச்சி விடுகிறோம்.

அதாவது அந்த முகப்பில் இருக்கக்கூடிய காந்தப் புலன் எப்படி அந்தத் தீமை செய்பவரை உற்றுப் பார்த்து எண்ணினோமோ அவரால் வந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கிறது.

இதன் துணை கொண்டு…
1.அநதத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணப்படும் பொழுது
2.அந்த இரத்தத்தின் வழி எல்லா அணுக்களும் உள்ளுக்குள் அந்த அருள் உணர்வுகள் சாப்பாடாகக் கிடைக்கிறது.

அதாவது… இந்தக் காற்றிலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறதோ இதே மாதிரி நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அந்த இரத்தமாக மாறுவதிலிருந்து… இரத்தத்திலிருந்து தான் சாப்பாடு எடுத்துக் கொள்கிறது.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதே மாதிரி எடுத்து உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி முன்னக்கூடியே (முதலில்) செலுத்திவிட வேண்டும்.

முதலில் சிறிதளவு தான் நாம் பார்த்த அந்தத் தீமை போயிருக்கும்.

ஆனால் யாம் இப்பொழுது சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்த பின் அந்த் இரத்தம் இந்த மாதிரி எல்லா இடங்களுக்கும் போனவுடனே என்ன ஆகிறது…?
1.அந்தச் சிறிதளவு போன தீமையை இங்கேயே தடுத்து விடுகிறோம்…!
2.சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அதே சமயத்தில் நம் கண்ணில் இருக்கக்கூடிய கருவிழியில் இருக்கக்கூடிய அந்த கண்மணி… அந்த கண்ணின் மணியிலிருந்து தான் நாம் பார்க்கும் படங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறோம்.

அதிலே அந்தக் கண் மணிகளிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும். ஏனென்றால்…
1.அந்தக் கருமணி வழிக்கூடித் தான்…
2.கண்ணுடன் சேர்ந்த நரம்பு மண்டலம் வழியாக
3.உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் நாம் பார்த்த… கேட்ட.. நுகர்ந்த… உணர்வுகளைப் பரவச் செய்கிறது.

அந்தக் கண்ணை இணைத்த நரம்பு மண்டலம் வழி உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று செல்கிறது.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படர்கிறது. நல்ல உணர்வுகள் வலிமையாகின்றது. தீமைகள் சிறுத்துவிடுகிறது.

இந்த முறைப்படி எல்லோரும் இதை எடுத்து உடனுக்குடன் தூய்மைப்படுத்தலாம்… இதில் ஒன்றும் சிரமமில்லை…!

திட்டியவனைத் திரும்ப எண்ணுகிறோம்… அடுத்த கணம் அது நமக்குள் வராமல் இப்படித் தடுத்துக் கொள்கிறோம். இதை நீங்கள் செய்து பழக வேண்டும்.

எங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று நினைவைக் கொண்டு வர வேண்டும்.

1.ஆக… ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வினையாகிறது.
2.அந்தத் தீய வினைகள் நமக்குள் சேராதபடி இப்படித் தடுக்க வேண்டும்.
3.தீமைகளைத் தடுத்து அதை நிறுத்திப் பழக வேண்டும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி…!

ஆதிசங்கரர்

 

காசி கங்கைக் கரையின் எதிர்த் திசையில் இருக்கும் கரைக்கு குருநாதர் என்னைப் போகச் சொன்னார். அங்கிருக்கக்கூடிய அரண்மனைக்கு அருகில் தான் ஆதிசங்கரருக்கும் துவைதவாதிகளுக்கும் அத்வைதத்திற்கும் வாக்குவாதம் நடந்தது.

ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து வயிற்று வலியை வரவழைத்தார்கள். யாக வேள்விகளை எல்லாம் செய்தால்தான் இந்த வயிற்று வலி போகும்… நீ அதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

ஆதிசங்கரர் அதற்கு விளக்கம் கொடுத்து
1.மெய் ஞானிகள் காட்டிய உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் உயிரான நெருப்பிலே இட்டு இந்த உணர்வினைப் பரப்பி
2.நீ ஏவல் செய்ததை என்னால் சுட முடியும் என்று அதை எடுத்துச் சேர்த்துத் தன் வயிற்று வலியை நீக்குகின்றார்.

ஏவல் செய்ததை நீக்கிய பின்பு தான் இவரை இப்படியே விட்டு விட்டால் மீண்டும் நமக்குத் தொல்லைகள் வரும் என்று எண்ணி… ஆதிசங்கரரை ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விடுகிறோம் என்று படகிலே அழைத்துச் செல்லும் பொழுது கங்கையிலே கவிழ்த்து அவரை நீர் சமாதி வைத்து விடுகின்றார்கள்.

அதிலிருந்து ஆதிசங்கரருடைய (சரித்திரம்) உண்மை நிலைகள் தெரியாது. போனார்… வந்தார்… என்று இருக்கும். சங்கரர் உடலை விட்டு எப்படிப் பிரிந்தார்…? என்று இருக்காது.

இந்த உண்மையைச் சொல்லி அவர் எடுத்துக் கொண்ட ஆற்றலை எனக்கு உணர்த்துகிறார் குருநாதர்.

சாங்கிய சாஸ்திரத்திலே மூழ்கிய நிலைகள் கொண்டு துவைதத்தின் படி உருவத்தைக் காட்டிச் சாங்கியம் செய்து கடவுளிடம் வரம் கேட்பதும் அத்வைதப்படி உண்மையின் உணர்வின் சக்தியை நினைவில் கொண்டு கவர்ந்து தனக்குள் அந்த உணர்வின் தன்மை உறையச் செய்வதும் உணர்வின் நினைவாற்றல் நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்ற அந்த வாக்குவாதத்தன்மை அங்கே நடந்ததைக் குருநாதர் உணர்த்துகின்றார்.

அத்வைதம் துவைதம் என்று சொல்கிற பொழுது
1.சூட்சம நிலைகளில் நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை உடலாக்குகின்றது.
2.அந்த உணர்வின் அணுவாக இயக்கப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.தனக்குள் இந்த உணர்வின் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு இந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்று…!

ஆனால் ஆதிசங்கரருக்கு ஏன் கடைசியில் அந்தக் கதி…? என்று வரும் பொழுது
1.அவருக்கு உடல் பற்று இல்லை… விண்ணின் பற்றைத் தன் குருவான கோலமாமகரிஷியின் உணர்வுகளைப் பெற்றவர்.
2.அவரோ கோள்களின் தன்மைகளை அறிந்தவர்.
3.அதை உணர்ந்த நிலையில் தனக்குள் விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணியவர்.
4.இந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கியவர்.
5.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையை உணர்ந்தவர்.
6.விண்வெளியின் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைப் பற்றுடன் பற்றியவர் என்று
7.அந்த இடத்திலே வைத்து குருநாதர் எனக்கு இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றார்கள்.

கோலமாமகரிஷி… தான் வாழ்ந்த காலத்தில் அவர் பெற முடியாத இந்தச் சக்தியை ஆதிசங்கரர் உடலுக்குள் புகுந்து அத்வைதத்தின் தத்துவத்தைப் பரப்பியவர். அதன் வழி தனக்குள் விண்ண்ணின் ஆற்றலைப் பெருக்கியவர். அதன் துணை கொண்டு ஆதிசங்கரருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்தவர்.

ஆதிசங்கரர் என்ன செய்தார்…? கோலமாமகரிஷி என்ன செய்தார்…? என்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். இந்த உண்மைகளை எல்லாம் அங்கே குரு உணர்த்துகின்றார்.

அவர் உடலைப் பற்றவில்லை. அந்த அருள் ஞான உணர்வை எடுத்து ஏவலால் உண்டான வயிற்று வலியை நீக்குகின்றார். பின் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் செல்கிறார்.
1.அவர்கள் இருவருமே சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆதிசங்கரருடைய அருள் உணர்வுகளை நாமும் பெற முடியும்.
3.அவர் கண்ட மெய் ஒளியையும் நாம் பெற முடியும்.

தாய் வழியில் தான் அவருக்கு அந்தச் சக்தி கிடைத்தது. கங்கைக் கரையில் வைத்து குருநாதர் இதை எல்லாம் எனக்கு உணர்த்துகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோடிப் பணம் இருந்தாலும் கோடி… கோடி… செல்வங்கள் இருந்தாலும்…
1.நமது வாழ்க்கையில் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்
2.கடும் நோய்களாக நமக்குள் உருவாகிவிட்டால் இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை.

கோடிக்கணக்கில் செலவழித்து பங்களாவை அமைத்தாலும் இந்த உயிர் இந்த உடலை விட்டுச் சென்றபின் இந்த உடலிலே எதைச் சேர்த்துக் கொண்டதோ அதன் நிலை கொண்டு அடுத்த உடலுக்குள் தான் செல்கின்றது.
1.ஆக இந்தச் சொத்து எதுவும் நமக்குப் பயன்படுவதில்லை.
2.நமது பிள்ளைகளும் அதை பெறப் போவதில்லை.

அதற்காக இந்த சொத்திற்கும் மற்றவற்றிற்கும் போர்முறைகள் வைத்து வேதனை வெறுப்பு இதைப் போன்ற நிலைகள் நம் உடலில் உருவாக்காதபடி அதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்குப் பெரும் சொத்து… அழியாச் சொத்து… என்றும் நிலையான சொத்து எது…?

நாம் காலை துருவ தியானத்தில் எடுக்கும் (துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும்) பேரின்பப் பெருவாழ்வு என்று சொத்தும்… பிறவியில்லா நிலைகள் அடையும் சொத்துமே ஆகும். மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை பிறவியில்லா நிலை தான்.

1.பிறவியில்லா நிலைகள் அடைந்து…
2.அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

ஆறாவது அறிவு ஏழாவது நிலையாகத் தனக்குள் சிருஷ்டிக்கும் உணர்வின் வளர்ச்சியின் பாதையில் சென்று நாம் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே “கடைசி நிலை…”

நமது சூரியக் குடும்பத்தில் நம் சூரியன் செயலிழக்கும் தருணம் வந்து விட்டது. அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் கோள்களும் மறைந்துவிடும்.

ஏனென்றால்… சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் சூரியனைப் போன்றே அது ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் சென்று கொண்டிருக்கின்றது.

கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் இப்படிச் சில சில நட்சத்திரங்கள் சூரியக் குடும்பம் போல மாறுவதனால் நமது சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றன.

இப்பொழுது, நமது வாழ்க்கையில் நமக்குக் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்கள் ஒரு தனிக் குடும்பமாகப் பிரிந்து செல்கின்றனர்,

அவர்கள் பிரிந்து செல்லப்படும்பொழுது நாம் பலவீனமடைகின்றோம். நாம் பலவீனமடையும் பொழுது நம் குழந்தைகளிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்க முடிவதில்லை.

இதைப் போன்று தான் இந்தச் சூரியன் அழியலாம். ஆனால்
1.இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர் (நாம்)
2.அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த வழியில் நாம் செல்வோம் என்றால் “என்றும் வேகா நிலை…”

இப்பொழுது நெருப்பில் இட்டால் நமது உயிர் வேகுவது இல்லை. நமது உணர்வின் அணுக்கள் வெந்து விடுகின்றது. ஆகவே
1.வேகா நிலை என்ற நிலையை நாம் உருவாக்கி
2.அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலையை நாம் பெறுதல் வேண்டும்.

இது தான் பிறவியில்லா நிலை.

இந்த உடலில் இப்பொழுது நாம் இதை உருவாக்கத் தவறினால் “அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுதோ…?” என்று நமக்குத் தெரியாது.

புழுவாக பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய உயிரை, உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்டபின்… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் சென்றோமென்றால்… அதன் எல்லையில் நாம் என்றும் நிலையாக வாழலாம்… பிறவில்லா நிலைகள் அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்…
1.எதனின் சேர்க்கையில் இன்று இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் அகண்ட அண்டத்தில் நாம் சுழன்று சென்று,
3.வரும் உணர்வுகளை உணவாக மாற்றி ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

அகண்ட அண்டத்தில் “என்றும் பதினாறு…” என்று சிறிதாகவே நாம் இருப்போம். என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ச்சியின் பருவத்திலே பல கோடி ஆண்டுகள் வாழும் நிலைகள் வருகின்றது.

இந்த அண்டமே ஒளியின் சரீரமாக முழுமையாக அடைய… அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றது.

அகண்ட அண்டத்தில் எத்தனையோ கோடி சூரியன்கள் உண்டு… எத்தனையோ கோடி கோள்கள் உண்டு…! இப்படி எண்ணிலடங்காத நிலைகள் இருக்கும் பொழுது அதன் உணர்வுகளை நாம் நுகர்ந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.

மாறிய நிலைகளில்… நமக்குள் உருவாகும் அந்த உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது
1.அதைப் பல சூரியன்கள் எத்தனையோ கவர்கின்றன
2.அந்தச் சூரியக் குடும்பங்களை உருவாக்கும் மனித இனங்கள் உண்டு.
3.அவைகளுக்கு நம் உணர்வுகள் பயன்படும்… அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.
4.நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்.

ஒன்றுக்குள் ஒன்று சென்றிடும் நிலையாக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் சென்ற பின்… நமக்குள் தீமையை வென்றிடும் அருள் சக்தியான கடவுளாக நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

நாம் எண்ணியதை… அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நமது உயிர் அமைகின்றது.
1.நமது உயிர் அப்படி அமைவது போல
2.நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழிகளிலே என்றும் ஒளியின் சரீரமாக
3.நமக்குள் உருவாக்கும் கடவுளாக ஈசனாக உருபெறச் செய்கின்றது.

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்

 

1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் “தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது…”
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும்…! என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.

அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் “அந்த வலிமையான உடலுக்குள் சென்று… பரிணாம வளர்ச்சி அடைகின்றது…”

ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்…
1.தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி…
2.அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது… உணர்வின் சத்தைத் தனக்குள் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது.

அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!

1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும்…? இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…!
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நாம் எண்ணியதை உயிர் அணுக்களாக மாற்றும் பொழுது
1.அதைக் காக்கும் காவல்காரனாக இருப்பதும் உயிரே…
2.அந்த உணர்வுக்கு உணவு கொடுப்பதும் உயிரே…
3.அந்த உணர்வை இயக்கிக் கொண்டிருப்பதும் உயிர்தான்…!

ஆறாவது அறிவு கொண்டவர்கள் நாம் இதைத் தெரிந்து கொள்கின்றோம். அந்த மெய்ஞானிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது அதையும் காப்பது ஆண்டவனாக இருப்பதும் உயிர் தான்.

ஆகவே…
1.எண்ணியதை இறையாக்கி இறைவனாக இருப்பதும் உயிரே.
2.இறையின் உணர்வே செயலாக்கும் பொழுது தெய்வமாக ஆக்கிக் கொண்டிருப்பதும் உயிரே.
3.ஆண்டவனாக இருப்பதும்… ஈசனாக இருப்பதும் உயிரே.

இதனால் தான்
1.முதலிலேயே… உயிரே கடவுள் என்பதைச் சுருக்கமாகக் காட்டி உணர்வின் செயலாக்கங்களை
2.உயிரே கடவுள்…! என்ற நிலைகளைக் குருநாதர் எம்மிடம் சொல்லி வந்தது.

உயிர் கடவுளாக இருக்கின்றான்… ஆண்டவனாக இருக்கின்றான்… எண்ணியதை இறையாக்குகின்றான்… இறையின் உணர்வைச் செயலாக்கும் பொழுது தெய்வமாக இருக்கின்றான்.

உறையும் உணர்வின் தன்மையைச் சிவமாக உடலாக்குகின்றான். எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை வினையாக்கி
1.வினைக்கு நாயகனாக இயக்கிக் கொண்டிருக்கின்றான்… அது தான் விநாயகா…!
2.இவ்வளவு பெரிய பேருண்மையை நமது குருநாதர் அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வை நேரடி அனுபவத்தில் எனக்குக் கொடுத்துக் காட்டினார்.

ஆனால் இதை எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன்… அதைப் பெற்றேன்.

நம் குருநாதர் அவர் உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரம் பெற்றார். இருந்தாலும் அவர் உடலில் விளைந்த உணர்வலைகள் எப்படி இருக்கின்றது…? அவர் எதை எதை எல்லாம் தன் உடலில் விளைவித்தாரோ இந்த உணர்வலைகள் அனைத்துமே இங்கே உண்டு.

ஏனென்றால்… சில பேருக்குக் காட்சிகள் கிடைத்த உடனே “குருநாதர் எனக்கு வந்து சொல்கின்றார்…” என்று சொல்வார்கள். உனக்கு இதையெல்லாம் செய்கின்றேன்… எனக்கு இதைக் கொடு…! என்று சிலர் கேட்கின்றார்கள்.

அந்த ஆசையால் நுகர முடிகிறது. அவர் உருவத்தைக் காண முடிகிறது. அவர் பைத்தியக்காரராக எப்படிச் செயல்பட்டாரோ இந்த உணர்வுகளை எல்லாம் அது இயக்கும். அதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்று சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்.
1.அதாவது… உடலிலே உணர்வை ஒளியாக மாற்றி உணர்வின் அறிவாக மாற்றிய அலைகளும் உண்டு.
2.நாம் இதைத் தான் பிரித்து எடுக்க வேண்டும்…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நம்மிடம் ஒருவர் சண்டையிடுகிறார்… திட்டுகிறார்..! என்றால் அதற்குப் பின் நாம் தியானத்தில் அமர்ந்தால் “அந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்…!” அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அதைச் சுவாசியுங்கள்.

இந்த உணர்வுகளைச் சுவாசித்துக் கண்களை மூடுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வுகள் உந்தப்பட்டு நாம் தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிடுங்கள்.

அப்பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும். அதாவது எப்படிச் செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு இவ்வாறு சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாற்றவில்லை என்றால்..
1.அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து..
2.அந்த அணுக்கள் – சண்டையிட்ட அவர் திட்டிய அந்த உணர்ச்சியை உந்தித் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் நீங்கள் தியானத்தில் அமர்ந்தாலே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்… இப்படிச் செய்தார்கள்…! என்ற எண்ணங்கள் அதிகமாகி குறையாகப் பேசிய அணுக்கள் அதிகமாகி நம் நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.

1.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம்… மன நோய்… போன்ற நிலைகள் எல்லாம் வரும்.
2.பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
3.ஆக நமக்குள் மனிதன் என்ற ஆறாவது அறிவின் நிலைக்கே எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போவோம்.

இதை எல்லாம் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நம் வாழ்க்கையே இப்படித் தியானமாக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதலில் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பழகிய பின் அடுத்து மணிக்கணக்கில் உட்கார்ந்து தியானத்தில் நான் சக்தி பெறுவேன் என்றால் அடுத்த கணம் நாம் வாழ்க்கையில் செல்லும் பொழுது முதலில் சொன்ன மாதிரி வரும்.

ஏனென்றால் இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையோ பிறர்படும் கஷ்டங்களையோ இப்படி எத்தனையோ நாம் கேட்கிறோம். காணாததற்கு பத்திரிக்கையும் டி.வி.யும் பார்க்கின்றோம்.

அதைப் பார்க்கும் பொழுது அரசியலில் பற்று இருந்தால் இப்படிச் செய்கிறார்கள்..! என்று வெறுப்படைவோம்.

இதை எல்லாம் பேசிக் கலந்து உரையாடினாலும் அடுத்த கணம் இந்த உணர்வுகள் மாறாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நாம் எதைக் கேட்டோமோ அதெல்லாம் நலம் பெற வேண்டும்…
2.நாடு நலம் பெற வேண்டும்…
3.அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…
4.தெளிந்த மனம் பெற வேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் இப்படி வந்தாலும் நமக்குள் அது வளராது மாற்றியமைத்து இப்படி நல்ல அணுக்களை நாம் பெருக்கலாம்.

அந்த அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் பொழுது இது சிறுத்து விடுகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகி விடுகிறது…! அப்பொழுது அது நமக்குள் அடங்கி வந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் வந்துவிடும். ஒரு விபத்து நடந்து விட்டது…! என்று ஓடி வந்து ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆ…! என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.

1.இந்த உணர்வுகள் நமக்குள் பட்ட பின்
2.அவர் எந்த வகையில் விபத்தில் சிக்கினார்…! என்று சொன்னாரோ அதே உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டு
3.நாம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தால் ஓரத்தில் போகவிடாமல்
4.நம்மை அறியாமலே நடு ரோட்டுக்கு அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலே இவ்வாறு அழைத்துச் செல்லும். ஆகவே இந்த மாதிரி “விபத்து மற்ற அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட்டால்…” அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தை எண்ணி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்,

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் அது பெற வேண்டும் என்ற எண்ணங்களை நாம் நமக்குள் அதை உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அதை எல்லாம் நாம் நல்ல குணங்களுடன் பார்க்கும் பொழுது… பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் ஆகி… எப்படி வாழ்வது…? என்ற நம் நிலையாகிப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு அதன் ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் நாம் பற்றற்றதாக மாற்றுகின்றோம். இது ஒரு பழக்கத்திற்கு வந்து… அந்த அணுக்கள் நமக்குள் பெருகி விட்டது என்றால் நம்மை அறியாமலே அந்த நல்ல சொல்கள் வந்துவிடும்.

ஒரு பாடலைப் பாடுகிறோம் என்றால் அது பதிவாகி விட்டது என்றால் அந்தப் பாடல் சீராக வரிசையாக வரும்.

ஆனால் பாடல் முழுவதுமாகப் பாடுகின்றார்கள் என்றாலும் இடைமறித்து ஒரு வரியை மட்டும் தனித்துச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவுக்கு வராது. மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டே வர வேண்டும்.
1.அந்த வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது நமக்குள் அதனின் தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கி விட்டால் நமக்கு அந்த நினைவு வராது.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அதன் அடுத்தடுத்து அடுக்குகளில் வருகின்றது.

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்… தீமைகள் புகாதபடி விழித்திருந்து பழக வேண்டும்…! என்று சொல்வது.

சிவன் இராத்திரி அன்று விழித்திரு…! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்தே இது தான்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

 

உங்கள் எல்லோருக்கும் சக்தி கொடுத்திருக்கின்றேன். ஓரளவுக்கு அதை எல்லாம் செய்து வந்தாலும்… வீட்டிலேயோ நண்பர்கள் மத்தியிலோ தொழில் செய்யும் இடத்திலோ சிறிதளவு சோர்வு வந்தால் இதை விட்டு விடுகின்றீர்கள்.

அப்புறம் என்ன செய்கின்றீர்கள்…?

1.சோர்வான அணுக்களாக விளைந்த பின் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு ஆன்மாவிலே அதிகமான பின்
2.மகரிஷிகள் அருள் சக்திகளை எடுப்பதை இது தடைப்படுத்துகின்றது.

அதனால்தான் அடிக்கடி ஆத்ம சக்தி செய்ய வேண்டும் என்று சொல்லித் துரிதமாக உங்களுக்கு அதற்குப் பயிற்சி கொடுப்பது.

1.வாழ்க்கையில் எது வந்தாலும் அல்லது எதைக் கேட்டாலும்
2.ஒரு நிமிடம் ஆத்ம சுத்தி செய்வதற்குண்டான நேரத்தை ஒதுக்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

கையிலே மண்ணை எடுத்து வேலை செய்கின்றோம். ஆனால் அடுத்து உணவு உட்கொள்ளச் செல்கிறோம் என்றால் கை கழுவாமல் செல்வோமா…?

அல்லது கையிலே அழுக்குப் பட்டு விட்டது. ஒரு நோட்டில் எழுத வேண்டி இருக்கின்றது என்றால் கையைக் கழுவாமல் நோட்டில் எழுதுவோமா…? தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தினாலும் கையைத் துணியில் துடைத்து விட்டுத் தானே எழுதுகின்றோம். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஆகிறதல்லவா…!

அந்த மாதிரி… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெற்ற பின் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய நிலைகளைப் பார்த்தாலும் கூட… கேட்டு நுகர்ந்தாலும் கூட
1.அதற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து
2.அந்தத் தீமையின் உணர்வுகளை அடக்கும் உணர்வோடு நமக்குள் கலக்க வேண்டும். கலந்தால் தான் அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்… எப்படித்தான் இருந்தாலும் வாழ்க்கையில் பிறிதொரு தீமையை நீங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா.

நானே இருக்கின்றேன்… எல்லோருக்கும் நல்லதைச் செய்கிறேன். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் எனக்கு உடல் முடியவில்லை என்றால் “சாமிக்கு என்ன ஆனது…?” என்று தான் மிகவும் ஆர்வமாகக் கேட்பீர்கள்.

எனக்குள் விளைந்தது பல நிலைகள் அந்த வேதனை. என் மீது உள்ள பாசத்தில் எடுக்கப்படும் பொழுது வேதனையைத்தான் நுகர்வீர்கள். வேதனை நீங்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

சாமி சொன்ன வாக்கு உங்களுக்கு நல்லதாகின்றது ஆனால் சாமிக்குள் பல நிலைகள் சந்தர்ப்பத்திலே அது முந்தைய நிலைகள் விளைந்து வந்தாலும் இந்த உடலின் கடைசி முடிவு அது தான்.
1.அந்தக் கடைசி முடிவு வரப்படும் பொழுது பாசத்தால் வேதனையை நுகர்ந்து விடக்கூடாது.
2.நுகர்ந்தால் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து…
3.சாமிக்கும் அந்த மகரிஷியின் அருள் உணர்வு வளர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார். நாம் எப்படி அவருக்குச் சொல்வது…? என்று எண்ணக்கூடாது.

தபோவனத்தில் இப்பொழுது தைலம் காய்ச்சிக் கொடுக்கின்றோம். ஆரம்பத்தில் எல்லாம் நான் என்ன செய்வேன்…?

உடலில் குறைபாடுகளைச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தால்… அந்தத் தைல பாட்டிலை அவருக்குக் கொடுப்பேன். அதற்குள் குருநாதர் இருப்பார்.

பாட்டிலில் யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்பேன். குருநாதர் இருக்கின்றார் என்பார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்…? காளி வந்திருக்கின்றார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்கள்…? முருகன் வந்திருக்கின்றார்.

1.போ…! உன்னிடம் இருக்கும் கெட்டது எல்லாம் காளி மாய்த்து விடும்
2.குரு அருளால் எல்லாம் நல்லதாகிவிடும் என்று சொல்லிக் கொடுப்பேன்.
3.முந்தி அனைவருக்கும் இப்படித்தான் கொடுத்தேன். வாங்கிச் செல்வார்கள் எல்லாம் நன்றாகிவிடும்.

வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கோ இரத்தக் கட்டுகளுக்கோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் இதைக் கொடுத்து யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்று காண்பிப்பேன். பாட்டிலில் எல்லாமே தெரியும்.

இப்பொழுதும் அப்படிக் காண்பிக்க முடியும். ஆனால் அந்த ஆசையைத் தூண்டி விட்டால் எல்லாம் போய்விடும். உங்கள் எண்ணம் எல்லாம் “உடல் பற்றுக்கு வந்துவிடும்…”

ஆகையினால் இப்பொழுது அதை எல்லாம் சுத்தமாக நிறுத்தி விட்டேன்.

1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
3.இந்த உணர்வை மட்டும் எடுத்து நீங்கள் ஆத்ம சக்தி செய்து கொண்டே வந்தால் போதுமானது. எல்லாம் நன்றாகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது (ரோட்டின் ஓரமாக) வயல்களிலே ஒரு வயரை இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்குண்டான ஆயுதங்களையும் இயந்திரங்களையும் வைத்து மண்ணைத் தோண்டி உள்ளே அதைப் பதிக்கிறார்கள்.

சில இடங்களில் கடும்பாறைகள் வந்துவிடுகிறது.
1.பாறையாக இருக்கிறது என்று விட்டு விடுகிறார்களா…?
2.விடுவதில்லை… அதை வெடிக்க வைத்து எடுக்கின்றார்கள்.

அதே மாதிரி புதிதாக ஒரு ரோடு போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு இடத்தில்
1.சதுப்பு நிலமாக இருக்கின்றது. அதை அப்படியே விட்டு விடுகிறார்களா…?
2.இல்லை… அதற்கு வேண்டிய கருங்கல்களைப் போட்டு அந்தச் சதுப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு ரோடு போடுகிறார்கள்.

இதைப் போலத்தான் நமக்குள் எத்தனையோ “மேடு பள்ளங்கள்” உண்டு.

காடுகளில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு ஒன்றை ஒன்று கொன்று புசிக்கின்றதோ அதைப் போல இத்தனை மிருகங்களாக இருந்து வந்தவர்கள்தான் நாம்.

ஒன்றை ஒன்று கொன்று புசித்து அதனின் நிலைகளில் வலு கொண்டு நாம் மனிதனாக இன்று வந்துள்ளோம். அதே மாதிரி நாம் பல கோடித் தாவர இனச் சத்தை உணவாக உட்கொண்டுள்ளோம்.

அந்தத் தாவர இனச் சத்துக்கள் அனைத்தும் நமக்குள் பெரும் காடாக இருக்கிறது. அதிலே…
1.புலியும் யானையும் பாம்பும் பூனையும் இருக்கிறது என்ற நிலையில்
2.அந்தக் குணங்கள் நமக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவை அனைத்தும் நமக்குள் நின்றே தீமைகளை விளைவிக்கிறது. இதெல்லாம் கடும் சாபங்கள். இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.

நரி தன் இரையைப் பிடிக்க வேண்டும் என்றால் தந்திரமாக வேலை செய்யும். அதாவது
1.தன் வாலை உள்ளே விட்டுவிடும்.
2.வங்கிற்குள் உள்ள நண்டு அதைக் கடித்தவுடன் வெளியே எடுத்துப் போட்டு நரி அதைச் சாப்பிடும்.

அதே மாதிரி, நாம் எங்கிருந்தாலும் சாப அலைகள் நம்மை அறியாதபடி அந்தப் பழி தீர்க்கும் உணர்வாக இயங்கிக் கொண்டிருக்கும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

1.நான் தியானத்திற்கு வந்தேன்…. இதெல்லாம் செய்தேன்
2.ஆனால் எனக்கு இப்படியெல்லாம் ஆகிறதே… போகிறதே…! என்று விட்டு விட்டீர்கள் என்றால் அது வலு கொண்டுவிடும்.

சாப அலையின் வலு கூடிவிட்டால் ஆத்ம சுத்தியைச் செய்யவிடாத நிலைகள் ஆகிவிடும். அப்படி ஆத்ம சுத்தி உங்களால் செய்ய முடியவில்லை என்றால்
1.நீங்கள் கண்டிப்பான முறையில் கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
2.தியானம் செய்கின்ற நண்பர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் இதைச் சொல்லி
3.எங்களை அறியாது இயக்கும் சாப அலைகள் நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

உங்கள் உடலில் பதிந்த அந்த சாப அலைகளின் உணர்வுகள் வீட்டிலும் பதிந்திருக்கும். தியானமிருக்கும் நண்பர்களை வீட்டுக்குக் கூட்டி வந்து கூட்டுத் தியானமிருக்கச் செய்யுங்கள்.

இந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும். இந்த வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். இங்கிருக்கும் சாப அலைகள் அனைத்தும் அகல வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும் என்று நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

உதாரணமாக ஒரு கல்லை நாம் தூக்க முடியவில்லை என்றால் பலரும் சேர்ந்து அதைத் தூக்குகிறோம்.

அதைப் போன்று உங்களால் அந்தத் தீமைகளைத் தாங்க முடியாத நிலைகள் இருப்பினும்
1.கூட்டமைப்பை உருவாக்கிக் கூட்டுத் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி
2.உங்கள் வாழ்க்கையில் இடர்படும் எத்தகைய தீமைகளையும் அகற்றிக் கொள்ளுங்கள்.

இங்கிருந்து எங்கேயோ போய் யாகத்தைச் செய்வதற்கும் மந்திரத்தைச் செய்வதற்கும், எந்திரம் செய்வதற்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கிறீர்கள் அல்லவா.

இங்கே தியான வழியில் உள்ள உங்கள் நண்பர்களைக் கூட்டி
1.எங்கள் குடும்பத்தில் உள்ள சிரமங்கள் நீங்க வேண்டும்,
2.எங்கள் தொழில்கள் சிறக்க வேண்டும்
3.எங்கள் அறியாது சேரும் இருள்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் சாப அலைகள் நீங்க வேண்டும்
5.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
6.எங்கள் குடும்பத்தில் ஒன்று சேர்ந்து நாங்கள் வாழ வேண்டும்
7.கணவன் மனைவி ஒற்றுமையுடன் நாங்கள் வாழ வேண்டும்
8.அதற்காக எங்கள் வீட்டிற்கு வந்து தியானமிருங்கள் என்று அழைக்க வேண்டும்.

இத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்க வேண்டும். இந்தச் சக்திகள் உங்களுக்குள் விளையும். உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நீங்கள் விடும் மூச்சலைகளும் உங்கள் குடும்பத்தில் நன்மை செய்விக்கும் சக்தியாகப் பெருகுகிறது.

ஆகவே… சாப அலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட “கூட்டுத் தியானம் செய்யுங்கள்…” தீமைகளை அகற்றும் அருள் சக்தியைப் பெறுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து வாழுங்கள்.

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

 

எனக்குக் காட்சி கொடுத்தார்… வந்தார்… நல்லதானது…! என்று சொல்வார்கள். காட்சி கொடுத்தார் நல்லதாகும் என்ற நிலை அது சில நாளைக்குத் தான் இருக்கும். மீண்டும் காட்சி கொடுத்தார் என்று நிறையப் பேர் சொல்லலாம்.

நானும் ஆரம்பத்தில் இவ்வாறு தான் நிறையக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
1.இவைகள் எல்லாம் கூடாது…! என்று நிறுத்தி விட்டேன்
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர இந்த உடலில் விளைந்த உணர்வை நீங்கள் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நமது குருநாதர் காட்டிய வழிகளை எடுத்து இங்கே வளர வேண்டுமே தவிர இந்த உடல் என்றுமே மடிவது என்று அறிதல் வேண்டும்.

இந்த உடலில்… மெய் ஞானியின் உணர்வைப் பெற்றதை வலுப்படுத்தி அதை எடுக்கத் தொடர வேண்டுமே தவிர… “இவர் தான்…” என்ற நிலைகளுக்கு இந்த உடலின் உணர்வை எடுக்கக் கூடாது. இந்த உடலில் வரக்கூடியது அனைத்துமே வரும்… புவியின் ஆசைதான் வரும்.

உருவங்களைக் காட்சியாகக் கொடுத்தாலும்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்
2.அந்த ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்று அந்த மெய் ஒளியுடன் இணைத்து அந்த வலுவைப் பெற வேண்டுமே தவிர
3.சாமி வந்தார்… எனக்குக் காட்சி கொடுத்தார்…!
4.எனக்கு உடல் நலமானது… அது நல்லதானது… இது நல்லதானது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாகக் கண்டிப்பது. அந்த நிலையில் இருந்து நாம் மாறுபட வேண்டும். அந்த மெய் ஒளியை நாம் பெற வேண்டும். நம்முடைய பார்வையால் மற்றவர்கள் தீமைகள் நீங்க வேண்டும்.

சாமி செய்தார்…! என்பதற்குப் பதில்
1.சாமி பார்வை பிறருக்குப் பட்டு மற்றவருடைய தீமைகள் எப்படி அகன்றதோ…?
2.அதே உணர்வு உங்களால்… நீங்கள் அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக பெற வேண்டும்.
3.அதைப் பெற்றால் தான் சாமி சக்தி பெற்றதாக அர்த்தம்…!
4.இல்லை என்றால் அதில் அர்த்தமே இல்லை. அந்த வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

ஏனென்றால் அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமைகளை அது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் அவருக்குள் நுழையப்படும் பொழுது அவருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நமது வாழ்க்கையில் பிறர்படும் துயரத்தைக் கேட்கும் பொழுது நமக்குள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதைத்தான் நாம் உருவாக்குகின்றோம்.

ஆனால் எதை உருவாக்க வேண்டும்…?

பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகள்… நாம் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வுகள் நம் பார்வையால் அங்கே வித்தாகப் பதிய வேண்டும்.

யாராவது தீமைகளைச் செய்தார்கள் என்றால் அதை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே… ஈஸ்வரா என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.
1.என் பார்வை அவரைத் தீமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.
2.அவர்களும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் படைத்து அங்கே அனுப்ப வேண்டும்.
3.நமக்குள் அது வராதபடி அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்தந்த நிமிடத்தில் எந்தத் தீமை வந்தாலும் அது வேலை செய்யாது. இந்த உணர்வை நம் பார்வையால் அங்கே செலுத்தும் பொழுது
1.நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

இந்த இரு நிலையும் வேண்டும்.

துப்பாக்கியை எடுத்து அதிலே மருந்தினைக் கெட்டிக்கப்படும் பொழுது எங்கேயாவது உராய்ந்து விட்டால் வெடித்து விடும். அப்போது யார் அதைச் செய்கின்றாரோ அவரை அல்லவா அது காலி செய்து விடும்.

அப்பொழுது அதைப் பாதுகாப்பாகச் செயல்படுத்திக் குறி வைத்துத் தாக்கும் போது அங்கே வெடிக்கும் நிலை கொண்டாருகின்றார்கள்.

அதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.நம்முடைய எண்ணப் பார்வையில் அவருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்.
2.அவர்களைக் காக்கும் உணர்வு தான் நமக்குள் விளைய வேண்டும்.

நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் விளைந்தால் அவர்களைக் காக்கும் உணர்வு நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வு நமக்குள் வளரும்.

ஒவ்வொரு நொடியிலும் இதை நாம் செய்தாக வேண்டும்…!

கடலில் போகிறோம் என்றால் எத்தனையோ அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. நாம் எந்தத் தீவுக்குப் போக வேண்டுமா அதை எல்லையாக வைக்கின்றோம்.

இடைப்பட்ட அலைகள் அனைத்தையும் விலக்குகின்றோம். பெரிய அலை சிறிய அலை இதையெல்லாம் விலக்கிச் சென்று தான் அந்த எல்லையை அடைகின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நமது எல்லை எது…?

1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான எல்லை தான்… முடிவான நிலைகள் பேரானந்தப் பெரு நிலையான எல்லை.
2.அதை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையிலே பாச அலை வருகின்றது… வெறுப்பு அலை வந்து மோதுகிறது… கோப அலைகள் வருகிறது… பகைமை அலைகள் வந்து தாக்குகிறது. இப்படி எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது.

இந்த மோதலில் பாசத்தினால் நாளைக்கு என் பையன் என்ன செய்யப் போகிறான்…? என்ற இந்த உணர்வு வந்தால் இந்த அலையிலேயே மூழ்கி விடுகின்றோம்.

பையனின் நினைவாற்றலே வருகின்றது. அவனுக்குள் சென்று விடுகின்றோம்.

ஒருவன் மீது வெறுப்படைந்து… எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்… அவனை அப்படியே விடலாமா…? என்று எண்ணினால் நாம் போக வேண்டிய எல்லையை மறந்து விடுகின்றோம்.

இப்படியே இடைஞ்சல் செய்கின்றான் என்று அவனுடைய எண்ணத்திலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
1.அவனைத் திருத்தும் நிலைகளுக்கு நாம் அங்கே சென்றுவிட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்
2.அவனுடைய உணர்வு வளர்ந்த பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்கிறோம்.

வாழ்க்கையில் பல விதமான அலைகளில் சிக்குண்டு மீள முடியாத நிலை வருகிறது. ஆகவே அந்த அலைகள் வரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுத்து அந்த அலைகளைப் பிளக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும். அவன் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும்.. அவன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது அவன் பாச அலையைப் பிளக்கிறது.
1.இந்தப் பாசம் அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
2.உயர்ந்த எண்ணம் கொண்டு கண்ணிலே நாம் பார்க்கும் போது அவனை ஒழுக்கமாக்குகிறது.

இதைப் போல் பலர் பகைமை கொண்டு பேசுவார்கள். நாம் நல்லதைச் செய்தாலும் இன்னொரு கெடுதல் செய்த ஆவி அந்த உடலுக்குள் இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது. நம்மைக் கண்டாலே எதிரியாகக் கருதி இல்லாததை எல்லாம் சொல்வார்கள்.

தியானம் செய்கிறீர்கள்…! என்றாலே “என்னை ஏதோ செய்கிறான்…!” என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் ஒன்றுமே சொல்லவில்லை… என்னை இப்படிச் சொல்கிறான்…! என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஒரு உடலுக்குள் ஆவி இருக்கப்படும் போது அது செயல்பட்டால்
1.நான் எதுவுமே சொல்லாதபடி “என்னைக் குறையாகச் சொல்கிறான் பாவிப்பயல்…” என்ற இந்த அலையில் சிக்கிவிடுகிறோம்.
2.அந்த அலைகளிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.அவனுக்குள் இருக்கும் ஆவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அங்கிருந்தே நன்மை செய்யும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதிலே நமக்குத் துணிவு வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்பது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா. அந்த இடத்தில் துணிவு இருந்தால் தான் செய்ய முடியும்.

குருநாதர் கொடுத்த நிலைகளில் ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்.
1.நன்மை செய்ய வேண்டும்
2.நன்மைகள் வளர வேண்டும் என்றால் “அதற்குத் துணிவு வேண்டும்…”

நன்மைகள் செய்யப் போகும் நிலையில் அவருக்கு (உடலில் ஆவி உள்ளவருக்கு) உதவி செய்ய வேண்டும் என்று செல்லும் பொழுது… ஐய்யய்யோ…! பாவிப் பயல் எனக்கு ஏதோ செய்கின்றான் மருந்து வைக்கின்றான் விஷம் வைக்கின்றான்…! என்று சொல்வார்கள் பார்க்கலாம்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அவர் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவருக்குள் இருந்தே நன்மைகள் செய்யும் நிலை வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

நல்லது செய்கின்றோம்… ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலிலே இன்னொரு ஆன்மா இருக்கும்.

ஆன்மா இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நம்மைக் கண்டவுடனே வெறுப்பாக இருக்கும். உடலிலே எரிச்சல் ஆகும்.

சிலருடைய வீடுகளுக்குள் சென்றால் அந்த எதிர்ப்பு நிலைகள் வரும். நம்முடைய மணம் பட்ட உடனே அங்கே எதிரியாக மாறுகின்றது.
1.அதற்குக் காரணம் அந்த மனிதன் அல்ல.
2.அந்த மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு இதைக் கண்ட பின் எரிச்சல் ஆகிறது.

நாம் இவ்வளவு தியானம் செய்கின்றோம்… நம்மை ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள்…? என்று நினைக்கின்றோம்.

அந்த இடத்தில் தான் நமக்குத் துணிவு வேண்டும் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வினை அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால்
1.அவர் செயலைப் பார்த்த பின் இது வளர்ந்து விடுகின்றது.
2.ஆன்மாவிலே அது முன்னாடி அதிகமாகப் பெருகி விடும்.
3.இது பெருகி விட்டால் இதைச் சுவாசித்து அந்த உணர்வு இயக்க ஆரம்பித்து விடும்.

உயிரிலே பட்டவுடன் அதை வெளிப்படுத்துவது இந்த உயிர் தான். அது போன்ற நிலைகள் வந்தாலும்… “இடைமறித்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று இங்கே கொண்டு வர வேண்டும்.

எங்கே…?

1.நம் கண்ணின் நினைவைப் பல முறை உயிருடன் ஒன்றச் செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா… என்று இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் இருக்கக்கூடிய ஆன்மாவிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைத்து அவர்களுக்கு அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும். இந்த இடத்திலே இதைச் செய்ய துணிவு ஜாஸ்தி வேண்டி இருக்கின்றது.

ஆனால் நாம் என்ன நினைப்போம்…? சாதாரணமாக நாம் ஒன்றுமே செய்யவில்லை…! ஆனால் நம்மை கண்டாலே அவர்களுக்கு எப்படித் தான் இருக்குமோ…? ஏன்னை இந்த மாதிரி எல்லாம் சொல்கின்றார்களே…!

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாமலே அது இயக்கும்.

இந்தத் தியான வழியில் நாம் செல்லும் பொழுது இதையெல்லாம் தெரிந்து கொண்டால் தான்… அவ்வப்போது கொடுத்த இந்தச் சக்திகளை வலுப்பெறச் பயன்ன்படுத்த முடியும்.

1.நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் இருக்கிறது… அதனால் உருவான அணுக்களும் இருக்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்களுக்கு ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து விட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் செலுத்தினோம் என்றால் அதைத் தடைப்படுத்திவிடும். வளர்ந்த பின் இதை நீக்கிவிடும். அதற்குச் சத்து கிடைக்காதபடி மகரிஷிகள் உணர்வு வலுப்பெற்ற பின் தீமைகளைக் குறைக்கும்.

உங்கள் அனுபவத்தில் நன்றாக இதைத் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்.

1.முதலில் சிரமமாகத் தெரியும்… சிறிது நாள் சென்றால் அதை நீக்கிவிடும்.
2.இப்படி நாம் வளர்க்க வளர்க்க நம்முடைய பார்வையே பிறருடைய தீமைகளை நீக்கும் சக்தியாக வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் ஒரு தனி நட்சத்திரம் அல்ல…!

ஜோதிடம் பார்ப்பவர்கள்… உதாரணமாக நீ கார்த்திகை நட்சத்திரக்காரர்…! என்று “ஒரு” நட்சத்திரத்தைச் சொல்வார்கள். அது பிழை.

ரேவதி நட்சத்திரத்துடன் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ஆண் பெண் என்ற நிலைகளில் கலந்தால் தான் உயிரணு தனக்குள் ஒன்றை நுகர்ந்து உருவாக்க முடியும்.

நட்சத்திரங்கள் ஆண் பெண் என்று ஒன்றுடன் ஒன்று மோதித் துகள்களாக மாறும் பொழுது நம் பூமிக்குள் அவைகள் வரும் பொழுது அதிலே
1.ஆண் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் பாறைகள் அங்கே ஜாஸ்தி “வலுப் பெற்றதாக…!” இருக்கும்.
2.பெண் பால் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் அந்தப் பாறை அங்கே வேகமாக வளரும்… அது “தன் இனத்தைப் பெருக்கும்…!”

இதைப் போல் தான் செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்று உண்டு. ஆண் செடிகள் இல்லை என்றால் பெண் செடிகளில் இராசி பலன் இல்லை.

நெற் பயிர்களில் பார்த்தோம் என்றால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருந்தால் அங்கே பலன் இருக்காது… நல்ல மகசூல் காண முடியாது.

மரங்களிலும் அதே போல் தான். பனை மரங்களிலும் ஆண் பெண் என்று உண்டு. பப்பாளி மரத்திலும் ஆண் பெண் உண்டு. ஆண் பப்பாளி மரம் இல்லை என்றால் பெண் பப்பாளியில் கருவுறாது… பலன் கிடைக்காது.

ஆகவே இதைப் போல் ஆண் பெண் என்ற நிலையில் தான் எல்லாமே வருகின்றது. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தவன் அகஸ்தியன்.

1.கணவனும் மனைவி இருவரும் தனித்து இருந்தாலும் ஒன்றாக இணைக்கும் பருவம்
2.மனிதனான பின் இதைச் செயல்படுத்த முடியும் என்று உணர்ந்தவன் அகஸ்தியன்.

மற்ற மிருகங்கள் தான் தப்பி வாழத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்துப் பரிணாம வளர்ச்சியில் வருகின்றது,

மனிதனாக ஆனபின் கணவன் மனைவி இரண்டு உயிரின் நட்சத்திரங்களும் வேறு வேறு ஆக இருந்தாலும்… இந்த நட்சத்திரங்கள் சேர்க்கப்படும் பொழுது ஒரு உருப்பெறும் தன்மை வருகின்றது.

ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்திற்கு ரேவதி நட்சத்திரம் என்ற பெண் பால் நட்சத்திரம் இருந்தாலும் இதே மாதிரிப் பெண்களுக்கு ஆண் பால் நட்சத்திரத்தின் உணர்வும்
1.இப்படி நான்கு நிலை வரப்படும் பொழுது தான் பிரம்மம் என்ற நிலையே உருவாகின்றது.
2.இந்த நான்கு நட்சத்திரங்களும் இரண்டு உயிருடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.எதைக் கவர்ந்தனரோ… அந்த ஒளியின் கற்றையாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்த நிலைகளில் தான் நட்சத்திரங்களின் விஷத் தன்மைகளை முறிக்கும் தன்மை பெற்ற அகஸ்தியன்
1.”மின்னல்களைக் கண்ட பின் ஆனந்தமான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்டான்…”
2.அந்த உணர்வின் தன்மையை எடுத்து உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் மாற்றிக் கொண்டான்
3.அதாவது உயிரைப் போலவே (நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளாக) மாற்றினான்.

இதை வைத்துத் தான் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) என்னிடம் சொன்னார். ஏய்.. மின்னல் பாய்வதைப் பாருடா…! என்பார். அப்பொழுது எங்கள் இரண்டு பேருக்கும் சண்டை வரும்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்க்கும் பொழுது என் கண்கள் போனால் யார் சாமி கொடுக்கிறது..? நாம் பிள்ளை குட்டிக்காரன்..! என்பேன்.

அவர் என்ன சொல்வார்…? நான் சொல்வதை எல்லாம் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…!

சாமி… நான் கண் இல்லாமல் போனால் என்ன செய்வேன்…? என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும்.

அந்த மின்னலின் இயக்கங்கள் வரப்படும் பொழுது அந்தத் துகள் என்ன ஆகின்றது..?
1.நான் இருக்கிறேன் அல்லவா…
2.நான் உன்னைத் தொடுகிறேன் அல்லவா…! என்பார் குருநாதர்.

அதாவது.. அவர் கையால் என்னைத் தொட்டு எர்த் செய்து (ELECTRICAL WIRE EARTH போல) “இப்பொழுது மின்னலைப் பாருடா…!” என்கிறார் குருநாதர்.

அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் இது எந்த நட்சத்திரத்திலிருந்து வந்தது…? இது எதனுடன் மோதும் பொழுது இந்த மின் கதிர்கள் எப்படி மாறுகிறது…? என்பதையெல்லாம் காட்டுகின்றார்.

அதற்குப் பின் தான் நான் துணிந்து பார்க்க ஆரம்பித்தேன்…!

குருநாதர் என்னைத் தொட்டுக் காண்பித்தது போல் தான் அந்த உணர்வுகளை எல்லாம் உங்கள் எல்லோரிடமும் உணர்வால் தொட்டுக் காண்பிக்கின்றேன்.

இந்த உணர்வுகள் தொடும் பொழுது உங்கள் உடலுக்குள் என்ன செய்கிறது…? ஊடுருவுகிறது…! ஒளியாக மாற்றும் பருவம் பெறுகின்றீர்கள்..!
1.நீங்களும் அந்த உணர்வினைக் கவர்ந்து ஒவ்வொரு அணுக்களையும்
2.இந்த உயிரைப் போல ஆகும் அந்தத் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கிறேன்.

யாகத்தைச் செய்… கண ஹோமம் செய்…! என்று சொல்கின்றார்கள்… கண ஹோமம் என்றால் என்ன…?

 

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எல்லாம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் அபிஷேகம். பொருள்களை நெருப்பிலே போட்டு எரிக்கின்றோம் இது யாகம்.

கனிகள் மற்றவைகளை எல்லாம் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து சந்தனத்தையும் பன்னீரையும் ஊற்றுவார்கள்.
1.சந்தனத்தைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும்
3.பன்னீரைப் போன்று எனக்குள் நறுமணங்கள் பெற வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று இப்படி எண்ணினால் இது அபிஷேகம்.

ஆனால் அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து யாகக் குண்டத்திலே நெருப்பிலே போட்டால் “கண ஹோமம்…!” அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்…? என்று வேண்டுமல்லவா…!

யாரையும் நான் தவறாகச் சொல்ல வரவில்லை. காலத்தால் மாற்றப்பட்ட நிலைகள் தான் இவையெல்லாம். நம்மை அறியாமலே நம்மை அழித்துக் கொண்டிருக்கும் இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

காரணம்
1.யாகக் குண்டம் என்றால் நம் உயிர் ஒரு நெருப்பு… இது ஒரு குண்டம்.
2.நாம் எந்த மெய்ஞானியின் உணர்வை உயிரிலே போடுகின்றோமோ அது அபிஷேகம் ஆகின்றது.
3.அதில் இருக்கக்கூடிய வெப்பத் தணல்கள் ஆவியாக அலையாக உடலுக்குள் மாறி
4.ஒவ்வொரு அணுவிலும் இணைந்து நறுமணமாக வீசச் செய்கின்றது. இதுதான் கண ஹோமம் என்பது… கணபதி ஹோமம்..!

எத்தனையோ பொருள்கள் பால் தயிர் மற்ற கனிவர்க்கங்கள் அதை எல்லாம் தீயிலே போட்டு எரித்து… கடைசியில் நெய்யை ஊற்றி இப்படித்தான் காசைக் கொடுத்து யாகம் நடத்துகின்றோம்.

அப்போது நல்லதை எண்ணுகின்றோமா…? நல்லதை எண்ணி எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமா…?

அந்த உயர்ந்த சக்தியை உயிரான யாகக் குண்டத்திலே போட்டு அந்தச் சத்தின் தன்மை உயர்ந்த உணர்வின் தன்மையை உனக்குள் உருவாக்கு… இது தான் ஹோமம் என்பது. இப்படி யாரும் செய்வதில்லை.

1.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று யாராவது எண்ணி எடுக்கின்றார்களா…?
2.யாகத்தில் அமர்ந்து சொல்பவரும் நினைப்பதில்லை…! மற்றவர்களை அப்படி நினைக்க விடுவதுமில்லை.

ஜாதகக்காரன் சொன்ன குறிப்பை ஏற்றுக் கொண்டு அதற்குப் பரிகாரம் செய்வதற்காக இப்படிக் கண ஹோமம் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று காசுக்காகத் தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

கோயிலுக்குள் செல்லும் பொழுது விநாயகரை உற்றுப் பார்த்து அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துச் சுத்தப்படுத்திவிட்டு ஆலயத்திற்குள் சென்று
1.அங்கே சாத்தியிருக்கும் மலரை பார்த்து மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.அந்தச் சந்தனத்தைப் போல மணம் பெற வேண்டும் என்று நம் உயிரான நெருப்பிலே போட்டால்
4.அது கண ஹோமமாக மாறுகிறதா இல்லையா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்… மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும்.

கோவில் என்றால் அதன் தத்துவம் என்ன…? என்று சுருக்கமாகவும் காட்டுகின்றார்கள். சிறிய சிலையை வைத்து நமக்குள் உள் நின்று இயக்கும் உயிரைப் பற்றிய இயக்கத்தையும் காட்டியுள்ளார்கள்.
1.பெரிய தேரை வைத்திருக்கின்றார்கள்
2.அதிலே இந்தச் சிறிய சிலையை வைத்து… எல்லோரும் சேர்த்து வடம் பிடித்து இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள்.

ஆனால் அந்தத் தேரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு இழுத்தால் என்ன ஆகும்…? தேர் எல்லை வந்து சேருமா…?

கோவிலில் இத்தகைய சிலையை வைத்து அங்கே செல்பவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
1.இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்
2.என் பேச்சும் மூச்சும் அனைவரையும் நலமாக்க வேண்டும்
3.நான் தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று
4.எல்லோரும் இப்படி போற்றக்கூடிய நிலையாக ஒன்று போல் இந்த ஆலயத்திற்கு வந்து சொல்லப்படும் பொழுது
5.இந்த உணர்வின் சக்தி அந்தக் கோவிலில் அலை அலையாக நல்ல குணங்களாகப் படர்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் என்னிடம் வெறுப்போ வேதனையோ இருக்கின்றது என்றால் இங்கே ஆலயத்திற்குள் வரப்படும் போது
1.எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது
3.அந்த எல்லோருடைய வலுவான சக்தியால் அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நாம் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும் போது தான் தேரை எல்லை சேர்க்க முடிகின்றது. அதைப் போன்று நல்ல குணங்கள் கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து… “அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று எல்லோருடைய ஆசியும் பெற்று… ஒன்று சேர்ப்பதற்குக் கோயிலை வைத்தார்கள் ஞானிகள்.

அவ்வளவு பெரிய தேரை இழுப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் தேரை இழுக்கின்றோம். ஞானிகள் நமக்கு உணர்த்திய இந்த உண்மைகளை யாராவது நினைக்கின்றோமா…? அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட நிலைகளைச் செயல்படுத்துகின்றோமா…?

காரணம்… ஒரு சிறிய சிலையைத் தான் அவ்வளவு பெரிய தேரில் வைத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்தில் இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள். அந்தத் தேரை வைத்து இழுப்பதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டோமா…?

அந்தக் கடினமான தேரை அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படி இழுக்கின்றோமோ அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் வாய்ந்த உணர்வுகளை எல்லோரும் சேர்த்து எண்ணி எடுக்க வேண்டும்.

1.எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோருடைய உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.இந்தத் தெய்வ நிலைகள் அனைவரும் பெற வேண்டும்.
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று அனைவரையும் எண்ணும்படி
5.இதையெல்லாம் ஆலயத்திலே புறத்திலே துவைதமாகக் காட்டி
6.அகத்திற்குள்… ஒவ்வொருவருக்குள்ளும் சேர்க்கப்பட வேண்டிய உயர்ந்த உணர்வுகளை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய மனித வாழ்க்கையில் ஆசை என்று வரும் பொழுது “ஒன்றைப் பெற வேண்டும்…!” என்று எத்தனையோ வழிகளில் நாம் எப்படி எப்படியோ செல்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் தப்புவதற்காக… குருநாதர் எனக்கு அனுபவரீதியில் தான் எல்லாமே கொடுத்தார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் சுற்றும் பொழுது எனக்கு ஒரு கஷ்டமும் தெரியவில்லை. அப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

ஆனால் இங்கே நாட்டுக்குள்ளும் நகருக்குள்ளும் வந்து “நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும்…! என்று நான் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது…?”

எல்லோரும் பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அப்பொழுது ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் அவர்கள் அந்தப் பண்பினைப் பெற முடியாத நிலை ஆகும் பொழுது “வருத்தமாகின்றது…!”

தியானத்திற்கு வந்து எல்லாமும் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று அந்த உணர்வை மாற்றிக் கொண்ட பின்னாடி
2.அதைக் கேள்விப்பட்டவுடன் நமக்கு மனக் கஷ்டமாக இருக்கும்.
3.ஏனென்றால் அந்த உணர்வு நாம் எண்ணிய ஆசைகள்…
4.அங்கே அவர்களுக்குள் விளைந்த வேறு விதமான உணர்வு நம்மைத் தாக்கும் பொழுது நமக்கு இந்த நிலை மாறுகின்றது.

அதனால் தான் இதை எல்லாம்
1.சந்தர்ப்பத்திலே எப்படி வரும்…?
2.அதை நீ எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்று
3.குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார்.
4.அவர்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ எண்ணு.
5.அவர்களை அறியாது இயக்கும் அந்தத் தீமை “உனக்குள் ஒட்டக் கூடாது…” என்பார்.

உதாரணமாக நாம் தோசை சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடுப்பிலே தணல் அதிகமாகி விட்டால் என்ன ஆகின்றது…? ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது.

கருகியவுடன் நாம் தோசையை எடுக்க வேண்டும் என்றாலும் கைக்கு வராது.
1.மறுபடியும் எண்ணையையும் தண்ணீரையும் போட்டு சமமாக்கிய பின்
2.அடுத்து மாவை ஊற்றினால் சட்டியில் தோசை ஒட்டாமல் சீராக வரும்.
3.இதை நாம் ஒரு முயற்சியாக எடுத்துச் செய்கின்றோம் அல்லவா…!

இதே மாதிரித் தான் பல தீமையின் உணர்வுகள் வந்தாலும் “அது நம்மிடம் ஒட்டாமல் இருப்பதற்காக…” நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமல்லவா…!

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ இதைப் போன்ற நிலைகளை நாம் பார்க்கப்படும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வினை வலுப் பெறச் செய்து கொள்ள வேண்டும்.

நம் பையனோ பிள்ளையோ சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் பெற வேண்டும். கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் அருள் ஆற்றலும் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தாலும் அந்த அருள் சக்தியை எடுத்து நமக்குள் பெருக்கி அவர்களுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும். இப்படிப் பெருகி வந்தால் அந்த நோயோ வேதனையோ நமக்குள் வளராது.

இதை எல்லாம் நாம் பழகிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது…!

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்

 

1.பிற மண்டலங்களிலிருந்து (2000 சூரியக் குடும்பம்) வரும் சக்திகளை நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள் தான் கவருவதும்
2.நட்சத்திரங்களிலிருந்து துகள்களாக மாறுவதும் பிரபஞ்சத்தில் பரவுவதும் கோள்கள் கவர்வதும் அதிலிருந்து வருவதைச் சூரியன் ஈர்ப்பதும்
3.வான்வீதியின் உணர்வுகளை வான மண்டலத்தின் அதிசயங்களை உங்களுக்குள் நுகரும் ஆற்றலாக அறிந்து
4.இதைப் புலனறிவுகளில் காட்சிகளாகக் காண முடியும்.

அதிலிருந்து வரும் பல வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல வகையாக அவை மாறிக் கொண்டே இருப்பதையும் காணலாம்.

கேது:-
நட்சத்திரத்திங்களுக்கு அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை எவ்வாறு கவர்கின்றது…? என்பதையும் விஷமான அணுக்கள் மோதும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் ஊடுருவி… மின்னல்கள் தாக்குவது போன்று ஒளிக் கதிர்களாக ஊடுருவிப் பாய்வதைக் காணலாம்.

இராகு:-
கேதுவின் அருகிலே இருக்கும் ராகுக் கோள் இந்த விஷத்தின் தன்மை வான் வீதியின் ஒளித் தன்மையைத் தனக்குள் கவர்ந்தாலும் அந்த விஷத் தன்மை தாக்கப்படும் போது “கரும் நீலமாக…” இது உருமாறுவதைக் காணலாம்.

சனி:-
இதனின் தாக்குதலில் மற்ற நட்சத்திரங்களில் வரும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று பல பொறிகளாக மாறி மோதலில் ஆவியாக மாறுவதும் எடையற்ற நிலையில் மாறுவதை உறை பனியாக… சனிக்கோள் தனக்குள் எடுத்து உறை வட்டங்களாக மாற்றிக் கொள்கின்றது.

எப்படி மலைப் பிரதேசங்களில் உறை பனியாக மாற்றுவது போன்று தன்னுடைய சுழற்சி வட்டத்தில் உறைவிடமாக மாறுகின்றது… அது தான் “சனியின் வளையங்கள்…” என்று சொல்வது. அவைகள் மீண்டும் கரைந்து இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது

வியாழன்:-
மின் அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து அதைச் சனிக்கோள் தனக்குள் எடுத்தாலும் அதிலிருந்து வரக்கூடியதையும் மற்ற விஷத்தின் தன்மை தனக்குள் கவர்வதும் அதை வியாழன் கோள் கவர்ந்து அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்வதும் “மின்னலின் கதிர்களைக் கதிரியக்கப் பொறியாக…” வியாழன் மாற்றுவதையும் காணலாம்.

வெள்ளி:-
மின் அணுவின் தன்மை தனித்தன்மையாக ஆன பின் அந்த ஒளி அலைகளை வெள்ளிக் கோள் தனக்குள் கவர்ந்து “மிகச் சக்தி வாய்ந்த ஒளியின் சுடர்களாக…” வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம்.

புதன்:-
சூரியன் அருகில் இருக்கும் புதன் கோள் சூரியனின் எதிர்நிலை கொண்ட தாக்குதலால் அதைக் கவரும் புதன் கோள் ஒரு பகுதி வெப்பமும்… தான் பிரபஞ்சத்தில் ஈர்க்கும் மற்ற நிலையில்… “உலோகத் தன்மையாக மாற்றிக் கொண்டிருப்பதையும்…” காணலாம்.

செவ்வாய்:-
உலோகத் தன்மை வாய்ந்த்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் வரப்படும் பொழுது அதனின் காந்தப்புலனறிவு இதனுடன் மோதுண்டு பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும் அதைச் செவ்வாய்க் கோள் கவர்ந்து “ஓசைகள்…” வருவதைக் காணலாம்.

அதனுடன் மோதப்படும் பொழுது அந்த ஒலிகள் எழுப்புவதைக் காணலாம். ஒன்றுடன் ஒன்று மோதும் போது “சிகப்பு நிறமாக…” அந்தக் கோள் காணப்படும். ஒன்றுடன் ஒன்று மாறி புகை மண்டலமாகவும் மற்ற நிலை வரும் போது ஒளியின் தன்மைக்குள் சிகப்பு நிறமாகத் தோற்றுவிக்கும்.

திங்கள்:-
இவை பிரபஞ்சத்தில் கலந்து பரவிக் கொண்டிருப்பதை நமது பூமி தனது ஈர்ப்பில் வரப்படும் பொழுது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் திங்கள் தனக்குள் கவர்ந்து கொண்டிருப்பதையும் அதிலே மிதப்பதையும் அது கவரப்படும் பொழுது திங்கள் கோளில் தூசிகளாகப் படர்வதைக் காணலாம்.

பூமி:-
மற்றவை அனைத்தும் பூமியின் துருவப் பகுதியில் கவர்ந்து உள்ளே ஈர்க்கும் பொழுது… கோழி முட்டை வடிவில் உருண்ட நிலையாகவும் நீண்ட நிலைகளாக “நம் பூமி சுழல்வதைக் காணலாம்…”
1.துருவப் பகுதியில் ஈர்க்கும் தன்மையை
2.நாம் இருக்கும் எல்லையிலிருந்தே அதைக் காண முடியும்.

வியாழன் கோள் தான் பெருகுவதற்கு அதன் உபகோள்கள் அது எவ்வாறு கவருகின்றது…? அதிலிருந்து உமிழ்த்தும் தூசிகள் வியாழன் கோளைச் சுற்றிப் படர்வதும் அது நுகர்வதும் தனக்குள் மாற்றம் ஆவதும்… அந்த அற்புத நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம்.

அதே போல் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்கள் வளர்வதும் அது கவர்ந்து தூசிகளாக வெளிப்படுவதை… அவை உமிழ்த்தும் உணர்வுகளைச் செவ்வாய்க் கோள் தனக்குள் எடுத்து மற்ற கலர்கள் ஆவதையும் காணலாம்.

வான மண்டலத்தில் பல பல நிறங்களும் அணுக்கள் மாற்றமாகி அகண்டு செல்வதும் அது ஒவ்வொன்றும் பரவி அந்த நிறங்கள் மாறிக் கொண்டே செல்வதைக் காணலாம்.

1.நம் பூமியின் துருவத்தின் வழி வரக்கூடியதைத்
2.துருவ நட்சத்திரம் கவர்ந்து “ஒளி அலைகளாக மாற்றுவதைக் காணலாம்…”

நம் பூமிக்குள் பரவி வருவதை பூமியின் பரப்புகளில் தூசிகளாகப் பரவுவதும் பூமிக்குள் ஊடுருவி பூமியின் வெப்பத் தணல் கூடுவதும் கலர்கள் மாற்றமடைவதையும்
1.அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளை உங்கள் நினைவாற்றல் கொண்டு பூமியின் “நடு மையத்தையும்…” நீங்கள் உணரலாம்.
2.அங்கே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.

அண்டத்தில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் இந்தப் பிண்டத்திற்குள் உணர்வின் நிறங்கள் மாறிச் சுவாசத்திற்குள் சென்று ஒவ்வொரு உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் பரவி… அதன் நிலைகள் பூமிக்குள் எவ்வாறு மாற்றம் அடைகின்றதோ உடலுக்குள்ளும் அந்த அணுக்கள் கவர்ந்து அதன் வளர்ச்சியின் தன்மை எதுவோ… உடலுக்குள் “பல வர்ணங்கள் மாறுவதும்… பல வண்ணம் கொண்ட உணர்வுகளை எடுப்பதையும்…” காணலாம்.

1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்வதைப் பார்க்கலாம்.
2.அந்த உணர்ச்சிகள்… உதாரணமாக குருவிக் குஞ்சுகள் அது எப்படி உணவுக்காக ஏங்குகின்றதோ…?
3.அதனுடைய துடிப்பின் உணர்வுகள் எப்படி வருகின்றதோ அதைப் போன்று
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டி
4.அது பெறும் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்படும் பொழுது “மெர்குரி போன்று…” உங்கள் உணர்வுகள் மகிழ்ச்சி பொங்கும் தன்மையை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் ஒளியின் தன்மை அடைவதை உணரலாம்.

ஒவ்வொரு அணுக்களிலும் இதனுடைய மாற்றங்கள் ஆவதை நீங்கள் காணலாம்.

இப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் இணைக்கப்படும் பொழுது
1.உங்களை அறியாது சேர்ந்த விஷத்தன்மை கொண்ட அணுத்தன்மைகள் மறைவதும்
2.உடல் நோய்… அந்த விஷத்தன்மை ஆவியாக மாறுவதையும்… உடல் இலகுவாகுவதையும் உணரலாம்.

இப்பொழுது உங்கள் நினைவினைப் பிற மண்டலங்களிலிருந்து கவரும் 27 நட்சத்திரங்களுடன் இணைத்து… “அங்கே உங்கள் நினைவாற்றலைச் செலுத்துங்கள்…”

வான மண்டலத்தில் பல வர்ணங்கள் மாறி மாறி மாற்றம் அடைந்து கொண்டிருப்பதை நீங்கள் காண்கின்றீர்கள்.
1.அவை நம் துருவப் பகுதிக்கு வரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரம் அதைக் கவர்ந்து அதை எவ்வாறு ஒளியாக மாற்றுகிறது…? என்ற நிலையினை உங்களால் உணர முடியும்
3.அதிலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதையும் காணலாம்.

இவை அனைத்தையும்
1.உங்கள் புருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி அதன் வழி தான் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புதல் வேண்டும்.
2.அதன் வழி தான் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற வேண்டும்.

நம் பூமிக்கு வருவதை இடைமறித்து…
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதனுடைய மாற்றங்களை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது…? என்ற நிலையை நீங்களும் உணர்ந்து
2.உங்கள் உடலுக்குள் அதைப் பெறும் சந்தர்ப்பமும் இப்பொழுது கிடைக்கின்றது.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி “ஒவ்வொரு அணுக்களிலும் அது படர்ந்து… மகரிஷிகளின் அருள் ஒளியைக் காணும் திறன் பெறுவீர்கள்…” இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வுகள் உங்கள் உடலிலே விளையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.

உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே உயிரை ஈசனாக எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் மனிதனான பின்…
1.இந்த இயற்கையின் உண்மைகளை வானஇயல் புவியியல் உயிரியல் தத்துவப்படி அறிந்தான்.
2.நஞ்சினை வென்றான்.. இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான்…!
3.அவனில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் படர்ந்துள்ளது.
4.அந்த அகஸ்தியன் உணர்வைத் தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

அந்த அகஸ்தியன் நஞ்கினை வென்று இருளை அகற்றி மெய்ப் பொருள் கண்ட அந்த உணர்வுகளை நாம் பெற இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டிக் கண்ணை மூடி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் வேண்டி ஏங்கிக் கேளுங்கள். இப்பொழுது அந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்கின்றீர்கள்.

அப்படி நுகரும் உணர்வுகளை…
1.அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் உணர்வை உங்கள் உயிர்
2.உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.
4.“ஓ…” என்று ஜீவ அணுவாக உருவாகும் கருத் தன்மை அடையச் செய்யும்,

நம் உடலிலே அந்தக் கருக்கள் பெருகி அணுவாக ஆன பின் அந்த அகஸ்தியன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்ச்சியை உந்தும்.

அப்படி உந்தி அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகளையும்… மற்ற நஞ்சுகளையும் நீக்கிடும் ஆற்றலையும்… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியைப் பெறும் தகுதியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி உடல் முழுவதும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருளைப் பரவச் செய்யுங்கள்.
1.அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள் உங்கள் இரத்தங்களிலே கலந்து உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவுகிறது
2.அதை நீங்களும் உணரலாம்… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அது வரும்.

திருமணமான பின் அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்றுத் துருவ மகரிஷியாக ஆனார்கள். அந்தத் துருவ மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்படுத்திய அந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

1.இவை அனைத்தும் புருவ மத்தியிலேயே எண்ணி ஏங்குங்கள்.
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி இப்பொழுது உங்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும்.
3.உடல் முழுவதும் புதுவிதமான உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகியிருப்பதனால் நீங்கள் சுவாசிக்கும் பொழுது…
1.பேரின்பம் பெறும் அருள் மணங்கள் கலக்கப்பட்டு
2.பெரும் மகிழ்ச்சியின் உணர்வின் தன்மையாக உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.பற்பலவிதமான நறுமணங்கள் வரும்.
4.நஞ்சினை வென்றிடும் அருள் மணங்கள் கிடைக்கும்.
5.அருளானந்தம் பெறும் அருள் சக்தியும் உங்கள் சுவாசத்தில் கிடைக்கும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரிடம் வேண்டுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்குங்கள்.

இப்பொழுது…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் புருவ மத்தியில் மோதி
2.பேரொளி என்ற நிலைகளாகக உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.உங்கள் உடலில் உள்ள ஆன்மாவும் இதைப் போல இருளை வென்றிடும் அருள் ஒளியாகப் பெருகும்.

உங்கள் உயிருடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதும் பொழுது.. அருள் ஒளி உங்கள் புருவ மத்தியில் தோன்றும். நீங்கள் இதற்கு முன் சுவாசித்த தீமை என்ற நிலைகளைப் புக விடாது அதை வெளிக் கடத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த பேரருளைப் பெறும் அருள் உலகமாக…
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
2.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளை உங்கள் புருவ மத்தியில் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.

1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் பொழுது
2.மின்னல்கள் எப்படி மின்கற்றைகளாக வருகின்றதோ
3.இதைப் போல் உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி
3.இருளை அகற்றி உங்கள் உடலுக்குள் ஒளியாக உருவாகும்.

உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுத்து இருளை அகற்றிடும் அருள் ஒளி என்ற உணர்வுகளாக உங்கள் ஆன்மாவில் பெருக்கும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கணவன் தன் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதே போல அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி தன் கணவன் உடல் முழுவதும் படர்ந்து கணவனின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் எண்ணி இரு மனமும் ஒன்றி அந்தப் பேரருள் உணர்வினை உருவாக்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து தாய் தந்தையர் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவு அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து
2.அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.சப்தரிஷி மண்டல அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள்…
1.உங்கள் நினைவுக்கு எத்தனை பேர் வருகின்றனரோ…
2.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
3.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “உந்தித் தள்ளுங்கள்…”

உங்கள் குலதெய்வங்களின் உணர்வுகள் உங்கள் உடலிலே இருப்பதனால்… நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றதனால்… அதனின் வலுவின் துணை கொண்டு உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.

இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தாலும்… இன்னொரு உடலுக்குள் அவர்கள் ஆன்மாக்கள் சென்றிருந்தாலும்… இந்த உணர்வுகளை நாம் பாய்ச்சப் பாய்ச்ச… அந்த உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் ஊடுருவி.. அந்த உடல் மடிந்த பின் உடலை விட்டு வெளியில் வரும் ஆன்மாவை.. தினமும் செய்யும் துருவ தியானத்தின் மூலம் விண் செலுத்தி விடலாம்… அவர்கள் பிறவி இல்லா நிலை அடைவார்கள்…!

நாம் இந்த மாதிரிச் செய்தோம் என்றால் மூதாதைகள் ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் சாப அலைகளோ மற்றதுகள் விடுத்திருந்தாலும்
1.அந்த மரபு அணுக்கள் நம்மை அறியாது நம் உடலுக்குள் இருந்தாலும்
2.அந்த மரபு அணுக்களை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் பெருக்க முடியும்
3.பரம்பரை நோயை அகற்ற முடியும்.

இருளை அகற்றி விட்டுப் பேரருள் என்ற… அருள் ஒளி என்றுமே வளர்ந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வை அவர்களையும் பெறச் செய்யலாம்.

இவ்வாறு செய்து வந்தால்…
1.உங்கள் குடும்பத்தில் சமீப காலத்தில் உடலை விட்டு யார் பிரிந்திருந்தாலும்…
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.

துருவன் கண்டுணர்ந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்

 

அகஸ்தியர் ஐந்து வயதாகும் பொழுது நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றதால் துருவன் என்ற காரணப் பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.

அதன் வழிப்படி
1.தனது 5 வயது முதலே விண்ணுலகில் என்ன அதிசயங்கள் நடக்கின்றது…? என்ற நிலையை
2.சிறுகச் சிறுக அதன் உணர்வின் வளர்ச்சியைத் தனக்குள் கண்டுணர்ந்து நமது பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

பிரபஞ்சம் என்று சொல்லும் பொழுது 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படிக் கவர்கிறது…? என்பதை அறிகிறார்.

ஒரு நூலாம்படைப் பூச்சி வலை விரித்து… மற்ற ஈயோ வண்டுகளோ அதிலே சிக்கும் போது தன்னுடைய மூக்கின் நுனி கொண்டு இஞ்செக்சன் போன்று அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாகக் குடித்து விடுகின்றது.

பின் தன் இனவிருத்திக்காக மற்ற ஈக்கள் கிடைத்தால் தனக்குள் உருவாகும் சில அமிலம் கலந்த மலத்தை வெளியாக்கி அந்த ஈயைக் காற்றுப் புகாதபடி முழுமைக்கும் சுற்றித் தன் உடலில் ஊறும் உணர்வின் சத்தை அந்த ஈக்குள் பாய்ச்சப்படும் பொழுது
1.ஈக்குள் இருக்கும் ஈயை உருவாக்கும் அணுக்களில் இது படர்ந்து
2.நூலாம்படைப் பூச்சி போன்ற உணர்வுகள் அங்கே வளர்ந்து… தன் இனத்தையே உருவாக்குகின்றது.

அதே போன்று… குளவி ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த விஷத்தன்மை அதற்குள் இணைந்த பின் புழுவின் துடிப்பைக் குறைக்கச் செய்து உமிழ் நீரால் மண்ணை உருட்டி கூடைக் கட்டி அந்தக் கூட்டிற்குள் இந்தப் புழுவைச் செலுத்தி “நூலாம் படைப் பூச்சி போன்றே…” தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை அதற்குள் பாய்ச்சி அந்தக் கூட்டை மூடி விடுகின்றது.

இந்த விஷத்தின் தாக்குதலால் புழுவின் உடல் தோல் சருகு போன்று ஆகிவிடும். அவ்வாறான பின் உடலை உருவாக்கிய அணுக்கள் நூலாம்படைப் பூச்சி தன் அமிலங்களால் ஈயைத் தன் இனமாக எப்படி மாற்றியதோ அதே போன்று புழுவை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் கூழ் போல் ஆகி விடுகின்றது.

புழுவின் உயிர் குளவியின் உமிழ்நீரால் கட்டப்பட்ட அந்தக் கூட்டின் வழி கூடி புறத்தில் இருக்கும் சூரியனின் காந்தப் புலனறிவைத் தனக்குள் எடுத்துக் கோழி தன் முட்டையை எப்படி அடைகாக்கின்றதோ இதைப் போல
1.குளவியின் உணர்வுகள் அதற்குள் பாய்ச்சப்பட்டு சிறுகச் சிறுக புழுவின் உடல்
2.அந்த அணுக்கள் மாற்றமடைந்து புழு குளவியின் ரூபமாக மாறுகிறது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்.

இவ்வாறு வளர்ச்சி பெற்றது போன்று தான் பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றித் தூசியாக மாறுவதை உணவாக எடுத்துக் கொள்வதும் தூசியாக வருவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

இப்படி இந்த 27 நட்சத்திரங்களும் இடைவெளி விட்டு பிற மண்டலங்களிலிருந்து எடுத்ததைப் பால் வெளி மண்டலங்களாக அமைக்கப்படும் பொழுது ஒரு கூட்டமைப்பு போன்று ஆகி
1.பூமிக்கு “ஓசோன் திரை” எவ்வாறு முக்கியமாக இருக்கின்றதோ
2.சூரியனுக்கு இந்தப் “பால்வெளி மண்டலம்” பிற மண்டலங்களிலிந்து வருவதைக் கவர்ந்து தன் சக்தியை எடுத்துக் கொள்கின்றது.

இவ்வாறு அந்த 27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற நிலையில் அது உருப்பெறுவதை ஐந்தாவது வயதில் துருவன் சூரியக் குடும்பத்தின் முக்கிய நிலைகளைக் காணுகின்றான்.

நாம் எப்படிக் கண்களிலே ஒன்றைப் பார்க்கின்றோமோ இதைப் போல அந்த உணர்வின் தன்மை தன் உயிரில் நுகர்ந்து
1.அந்த உணர்வின் வலிமைகளை அணுக்களாகப் பார்க்கும் தன்மையும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? எப்படி வளர்கின்றது…? எப்படி வாழ்கின்றது…? என்ற நிலையை அவன் பார்க்கின்றான்.

உங்களுக்குள் இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம். அடுத்து நீங்களும் இதைக் காண முடியும். அவன் கண்டதை நீங்களும் காணும் நிலை வரும்.

டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதன் அலை வரிசைகளில் ஒளிபரப்பாவது காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து நமக்கு அது படமாகக் காட்டுகின்றது.

இதைப் போல் விஞ்ஞானிகள் கருவிகளை வான மண்டலத்தில் அனுப்பி அங்கிருப்பதைப் படமாக்கி… அந்த உணர்வின் அணுக்களைப் பல மடங்கு பெரிதாக்கி மனிதன் தனக்குகந்த அந்த உணர்வின் தன்மை எதுவோ அதைக் கண்டறிகின்றான்.

ஆனால்… “தன் தாயின் கருவிலே இருக்கும் போது வளர்ந்த ஆந்த உணர்வுகள்…” விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை அகஸ்தியனுக்கு ஏற்படுத்தியதால் அதனுடைய வளர்ச்சியால் சூரியக் குடும்பத்தின் உண்மைகளைத் தனக்குள் கவர்ந்து… அதை அறியும் ஆற்றலும்… அதன் இயக்கச் சக்தியைக் காணும் சந்தர்ப்பமும் அந்தத் துருவனுக்குக் கிடைக்கின்றது.
1.ஏனென்றால் துருவத்தின் வழி தான் இதையெல்லாம் பார்க்கின்றான்.
2.நம் பூமிக்குள் வருவதை… அந்தத் துருவத்தின் எல்லைப் பகுதியிலிருந்து
3.எப்படி… எங்கிருந்து… எதற்குள் கலக்கின்றது…? என்ற அதிசயங்களைப் பார்க்கின்றான்.
4.தனக்குள் நுகர்ந்து அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.

பால்வெளி மண்டலங்களிலிருந்து தூசிகளாக வருவதை நட்சத்திரங்கள் உணவாக உட்கொள்கின்றது. அதனுடன் இணைந்த நிலைகள் சேர்ந்து சுழலும் பரிமாணம் உள்ள துகளாக ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.

பின் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழற்சி பெற்று அந்த நட்சத்திரம் முதலிலே கோளாக இருந்து எப்படி நட்சத்திரமானதோ இதன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களாக வளர்ச்சி பெறுகின்றது.

இதன் வரிசையில் அகண்ட வெளியில் மற்ற நிலைகள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் அது எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ஒவ்வொரு உணர்வு கொண்ட நிலையாக மாறுகின்றது.

பிரபஞ்சத்தில் எப்படிச் சூரிய குடும்பத்திற்குப் பல விதமான கோள்களும் 27 நட்சத்திரங்கள் வருகின்றதோ இதைப் போல அங்கேயும் அமைப்புகள் உருப் பெறுகின்றது.

1.இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வரும் பொழுது அதனதன் வளர்ச்சிகள் அது வருவதும்
2.அது வளர்ந்து உமிழ்த்தும் நிலைகள் துகள்களாகத் தூசிகளாக வருவதும்
3.சூரியன் அதைத் தனக்குள் எடுக்கும் பொழுது மற்ற கோள்கள் இடைமறித்துத் துருவத்தின் வழி கவர்வதும்
4.இவை அனைத்தும் ஆண்பால் பெண்பால் என்ற நட்சத்திரங்கள் உணர்த்துவதை அது எதனுடன் எது இணைக்கின்றதோ
5.அதனதன் உணர்வு கொண்டு அணுக்களின் தன்மை மாற்றம் அடைவதும்
6.ஒன்றுடன் கலந்து அதே இனத்தைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது… பாறையானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்.

பிரபஞ்சத்தில் உருவாகும் இந்த நிலையை துருவன் ஊடுருவிப் பார்க்கின்றான். நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றது…? என்பதைப் பார்த்தாலும் சூரியக் குடும்பத்தில் கோள்கள் இயங்கி வருவதையும் நட்சத்திரங்கள் தன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களை எப்படி வளர்க்கின்றது…? என்பதையும் அதன் வரிசையில் நட்சத்திரங்கள் எப்படி வளர்ச்சி அடைகிறது…? என்பதையும் காணுகின்றான்.

ஒரு குடும்பத்தில் குழந்தைகள் உருவாகி அது வளர்ச்சி பெற்று வரும் பொழுது திருமணம் ஆகித் தன் இனத்தின் நிலைகளை உருவாக்குவது போன்று இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் கோள்கள் உருவாகி நட்சத்திரங்களாக வளர்ச்சி அடையும் பொழுது இதைப்போல ஒரு குடும்பமாக அந்த உணர்வின் சக்தி பெறப்படும் போது தனிப் பிரபஞ்சமாக ஒரு சூரியக் குடும்பமாகப் பிரிந்து சென்றுவிடும்.

பேரண்டத்தில் ஒன்று சேர்த்து வாழ்ந்தாலும் அகண்டு செல்லப்படும் பொழுது… முதலில் உள்ள சூரியக் குடும்பம் அதனதன் வளர்ச்சியின் தன்மையைத் தானே எடுத்து வளரப்படும் பொழுது முதலில் உருவான சூரியன் செயலிழந்து மங்க நேரும்.

பின் அது திசை மாறி ஓடும் நிலையில் கரைவதும் மற்றொன்றுடன் மோதுவதும் அதனுடைய சுழற்சி மையங்கள் மீண்டும் கரைந்து மற்றவைகளுக்கு இரையாகின்றது.

மனிதன் உருப் பெற்று வாழ்ந்த பின் அவர்கள் மடிந்தார்கள் என்றால் தன் இனங்கள் தான் விருத்தி ஆகின்றது, இவர்கள் மடியப்படும் பொழுது அந்தச் சரீரம் கரைக்கப்படுகின்றது. அதைப் போன்று தான்
1.சூரியன் அழிந்தாலும் அது கரைந்து விடுகின்றது,
2.இவ்வாறு பேரண்டத்தில் உள்ள சூரியக் குடும்பங்கள் அனைத்தும் தன் இனங்கள் நட்சத்திரங்கள் உருப் பெற்று
3.அவைகள் பிரபஞ்சமாகத் தனித்துத் தனித்து உருவாகத் தொடங்கினால்
4.முதலில் உருவான சூரியநுக்குக் கிடைக்கும் அந்தப் பங்கு கிடைக்கவில்லை என்றால் அது செயலை இழந்து விடுகின்றது.

இதை ஐந்தாவது வயதிலிருந்து துருவன் நுகர்ந்து தனக்குள் அது விளைந்து தன் எண்ணத்தால் வெளிப்படுத்திய… அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் படர்ந்துள்ளது… அழியவில்லை…!

இதைத்தான் நமது குருநாதரும் நுகர்ந்தார்.
1.அவர் பெற்ற உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்து அதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையில்
2.நீ எண்ணி ஏங்கி அதை எடுக்கப்படும் பொழுது… நீ நுகரும் பொழுது உன் உயிரிலே அது உராயப்பட்டு
3.அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எப்படி அந்த உண்மைகளை உணர்த்துகின்றது…?
4.அதன் தொடர் கொண்டு நீ எப்படி அறிகின்றாயோ அதே போல்
5.மற்றவர்களுக்கு நீ இதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களுக்கும் அறியும் ஆற்றல் வருகிறது.

உதாரணமாக… கோபம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விட்டால் அதைச் சொல்லாக மற்றவரிடத்தில் பதிவு செய்யும் பொழுது கோபமாக சொன்னவரைத் திரும்ப எண்ணும் பொழுது இந்த உணர்வு எப்படி அவர்கள் உடலில் வளர்ச்சி பெறுகின்றதோ இதைப் போன்று தான் துருவன் கண்ட உணர்வுகள் அவன் வளர்ச்சியில் வளர படும்பொழுது அதை நீ நுகருகின்றாய் உனக்குள்ளும் இது விளைகின்றது.

அந்த உணர்வின் சொல்லாக நீ சொல்லப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை கேட்போருக்குள்ளும் பதிவாகி அவர் இதை நினைவு கொண்டு எடுப்பார்கள் என்றால் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வுகளை அவர்களும் அறிகின்றார்கள்.

மனிதனாக இருக்கும் பொழுது பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்ற நிலையில்
1,ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெருக்கப்படும் பொழுது
2.தனக்குள் புது உருவாக உருவாக்குகின்றார்கள் என்று பொருள்படும்படிச் சொல்கின்றார் குருநாதர்.

அதை எல்லாம் மனிதர்கள் நாம் தான் எண்ணத்தால் எடுக்க முடியும். மற்ற உயிரினங்கள் அதைக் கவர்ந்து எடுப்பதற்குண்டான வாய்ப்புகள் இல்லை.

தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட மிருகங்களைப் பார்க்கப்படும் பொழுது அதன் வலிமையை நுகர்ந்து பதிவாக்கி அந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வை நுகரப்படும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இந்த உடல் மடிந்தபின் உயிரான்மா வெளி சென்று அதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று அந்த மிருகத்தின் உணர்வைக் கலந்து அதன் ரூபமாக மாறுகின்றது.

இப்படித்தான் நாம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம் என்ற உண்மையைத் தெளிவாக்கிப் பிரபஞ்சத்தின் இயக்கங்களும் நட்சத்திரங்களுடைய மாற்றங்களும் அதை இளமைப் பருவத்திலிருந்து கண்டுணர்ந்த துருவன் அவன் எவ்வாறு பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
1.தியானத்தில் இதையெல்லாம் நீங்கள் காணப் போகின்றீர்கள்
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்க்கப் போகின்றீர்கள்.

அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டாயிரம் சூரிய குடும்பங்களில் துருவ நட்சத்திரங்கள் உண்டு. அதன் வளர்ச்சியில் சப்தரிஷி மண்டலங்களில்… அதில் குறைவாக இருப்பவர்களும் உண்டு. நம் பிரபஞ்சத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக உண்டு.

ஆனால் இதிலும் இந்த மூவாயிரம் ஆண்டுகளுக்குப்பின் நம் சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக யாரும் விண் செல்லவில்லை.
1.இப்போது நாம் அதற்கு வேண்டிய உணர்வை எடுத்து ஆன்மாக்களை விண்ணுக்கு அனுப்புவதனால்
2.இதன் நிலையில் கொஞ்சம் இப்போது சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.

நம் உடலில் இருக்கும் என்பது உயிரான்மா “ஊசி முனையின் அளவு” எவ்வளவோ அந்த அளவுதான்.

இங்கிருந்து இன்றைக்கு விண்ணுக்குச் செல்லக் கூடியவர்களுக்கு இந்த உணர்வின் தன்மை வளர்த்து அதனுடைய வளர்ச்சி வரப்படும் போது ஊசி முனை அளவுதான்.

அது மின் அணுவின் தன்மை வரும் பொழுது, ஒளியாக வரும். அது எடுத்துக் கொண்ட ஆன்மா நிலைகள் உடல் கருகிய நிலை கொண்டு ஒளி தான் இருக்கும். அது ஓரளவுக்குக் கொஞ்சம் விரிவடைந்திருக்கும்.

இப்பொழுது ஒரு கடுகை எடுத்து கொண்டால் இதில் மூன்றில் ஒரு பாகத்தைப் பிரித்தால் எப்படி ஒரு பாகம் ஊசி முனை போல் இருக்குமோ…
1.உயிரின் உணர்வின் அலைகள் கொஞ்சம் அதனுடைய அலைகளை வீசும்.
2.இது அதற்குப் பின் அதனுடைய வளர்ச்சிகள் இருக்கும்.

ஆனால்… சிவசக்தியாக கணவன் மனைவியாக அவர்கள் இணைந்திருந்தால் அதனுடைய வளர்ச்சி வேகமாக வளரும். அது, தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி.

1.அப்படி அல்லாதவர்கள் மின் அணு போன்றுதான்.
2.மனைவி அவர்களோடு இணைந்தால் அது நன்றாக வளர்ச்சி பெறும்.

பெண்களை அங்கு அனுப்பியிருந்தால் அதில் ஆண்களுடைய உணர்வு இணைந்தால்தான் இரண்டு உணர்வும் சேர்ந்து உணர்வைத் தனக்குள் எடுத்து வளரும் பருவம் அடையும்.

இதில் இத்தனை பக்குவம் இருக்கிறது, ஒன்று, இரண்டு அல்ல.

அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள். நாம் அவர்களுடைய உணர்வில் தொடர்பு கொண்டு இருக்கிறோம். நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணும் போது, நமக்கு அந்த அலைகள் கிடைக்க முடிகிறது.
1.நம் முன்னோர்கள் முன் சென்றால் பின் நமக்கு அந்த அலைகள் கிடைக்கிறது.
2.அந்த மாதிரி அனுப்பினால்தான் கிடைக்கும்… இல்லை என்றால், நாம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அலைகளை எடுக்க முடியாது.

நாம் அதைப் பெறுவதற்குத் தான் நமது குருநாதர் கொடுத்த “அந்த நட்சத்திரத்தின் உணர்வை” உங்கள் உணர்வின் நினைவுகளில் கொடுக்கின்றோம்.

அதே மாதிரி…
1.இந்த உடலை விட்டுச் சென்ற “அந்த ஆன்மாக்களின் முகப்புகளில்…”
2.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வைச் சேர்த்து விடுகின்றோம்.
3.இந்த ஆன்மா மேலே போனால் அந்தத் திசையின் கோடியில் இழுத்துக் கொண்டு போகும்.
4.அங்கே சென்ற உடன் உடல் பெறும் உணர்வுகள் கருகி விடும்.
5.ஒளி பெறும் அறிவு நிலைத்திருக்கும்.

இப்பொழுது, ராக்கெட்டை இங்கிருந்து ஏவுகிறார்கள். அப்படி ஏவும் பொழுது, அதில் இந்த இடத்திற்குப் போக வேண்டும் என்கிறார்கள்.
1.அதில் வைத்திருக்கக்கூடிய செயற்கைக் கோள்,
2.அந்தக் கம்ப்யூட்டரில் இந்தக் கோளின் நிலையைப் பதிவு செய்திருந்தால் அந்தப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
3.இல்லையென்றால்… கோளின் அடையாளம் தெரியாது.

ஆகவே அதே மாதிரித்தான் உங்களுக்குள் இந்த நிலையைப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஊனில் பதிவு செய்யும் நிலைகள் கொண்டு
1.எந்த ஞானத்தின் முகப்பை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ இதன் நினைவு கொண்டு உங்கள் நினைவாற்றல் வரும்.
2.அப்பொழுது அந்த ஆன்மாவின் முகப்பில் அது இணைந்தது என்றால்
3.விண் சென்றபின் அந்தச் சப்தரிஷி மண்டல அலைக்கு அது செல்லும்.
4.இல்லை என்றால் வான் வீதியில் வீசி விடும். எங்கு போகும் என்றே தெரியாது…!
5.ஆகவே அதற்கு வழி தெரிய வேண்டும்.

இல்லையென்றால் அத்தனை சாதாரணமாக அனுப்ப முடியாது. இதையெல்லாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞான அறிவில் எப்படி “டெக்னிக்கல்…” இருக்கிறன்தோ இந்த மெய்ஞான அறிவில் இதைத் அறிந்து கொள்ள வேண்டும்.

1.சாதாரணமாக வாயிலே சொல்லிவிட்டு விண்ணுக்கு அனுப்பி விடலாம் என்று சொன்னால்
2.அதுவெல்லாம் ஒன்றும் நடக்காது… அத்தனை சிரமம் இருக்கின்றது.

ஆனால் அவர்கள் வாயில் சொல்வதில்… அதைப் பெறுவதற்கு யாம் சொல்லும் இந்தத் திசைகள்… இந்த உணர்வுகள்… எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

 

இந்த வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட நிலையில் எப்படியும் பொறாமை வெறுப்பு வேதனை அன்பால் பண்பால் கவர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருப்பினும்
1.அந்தப் பதிவுகள் நமக்குள் நிலைக்காது அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்து
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் வெளிப்படுத்தும் போது
3.எத்தனை பேரின் உணர்வுகளை நாம் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ
4.அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது… அந்த மனிதரின் உணர்வை சந்தர்ப்பத்தால் நாம் சேர்த்த…
5.நமக்குள் உருப்பெற்ற அந்த அணுக்களுக்குள் மகரிஷிகள் உணர்வை இணைத்துப் பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுவது தான் தியானம்.

ஒரு மனிதன் நோயாக இருக்கின்றான் என்றால் அந்த நோயைக் கவர்ந்த பின் நல்ல உணர்வுடன் அது கலந்து நல்ல உணர்வுகளால் உருப்பெற்ற அணுக்கள் மாற்றமடைகின்றது.

நல்ல உணர்ச்சியை வளர்க்கும் அந்த அணுக்கள் குன்றும் பொழுது நல்ல உடலை உருவாக்கிய அணுவின் தன்மை பலவீனம் அடைகின்றது.

பலவீனமடையாது காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்கள்… அதாவது எத்தனை பேரை நாம் எண்ணினோமோ அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எத்தனை பேருடைய நல்லதை எண்ணி அவர்களின் வேதனையை கவர்ந்தோமோ… அது நம் நல்ல உணர்வுடன் கலந்து நம் நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்துவதை
1.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் எண்ணி அந்த உணர்வினை நமக்குள் இணைக்கப்படும் பொழுது
2.இன்னொரு மனிதனில் விளைந்த தீமையின் உணர்வு “நமக்குள் விளையாது” அதை குறைக்கச் செய்யும்.

அதைத் தான் இந்நேரம் வரை உங்களுக்குள் உபதேசித்து அருள் மகரிஷிகள் உணர்வைச் சிறுகச் சிறுக அவர்கள் வளர்ச்சி பெற்றதை உங்களுக்குள்ளும் சேர்ப்பிக்கச் செய்த்து.

1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்திலிருந்து வளர்ச்சி பெற்ற உணர்வை
2.அந்தக் காலப்பருவத்தின் வயதை (துருவன் – ஒரு வயதிலிருந்து ஐந்தாவது வயது வரை பெற்றதை) உங்களுக்குள் சொல்லி
3.அவர் உடலில் விளைந்த உணவுகள் இங்கே பரவி இருப்பதை
4.அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும்5. வானியல் தத்துவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும் உங்களுக்குள் இணைத்து உபதேசித்து
5.இந்த உணர்வின் ஆற்றலை ஈர்க்கும் தன்மையாக தியானிக்கப் போகின்றோம்.

அந்த வானியல் உணர்வுகள் தனக்குள் அறிவாக எப்படி அகஸ்தியனுக்குள் இணைந்ததோ… துருவத்தை நுகர்ந்தறிந்து ஒளியின் சிகரமாக எப்படி மாற்றி அமைத்தாரோ…
1.அந்தத் துருவனின் வளர்ச்சியின் தன்மையை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்குத் தியானிப்போம்.
2.குருநாதர் எனக்குள் படிப்படியாக அதை எப்படிக் கொண்டு வந்தாரோ…
3.அதை வைத்து நீங்கள் தியானிக்கும் போதெல்லாம் அந்தச் சக்தி உங்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

உங்கள் கண்ணின் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்துங்கள்.
1.நம் பூமி “துருவத்தில் கவரும் அந்தச் சக்தி” நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது உங்களுக்குள் மிதக்கின்ற மாதிரி அந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து துருவ நிலைகள் ஈர்க்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி “ஏங்கிச் சுவாசியுங்கள்…”

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று “உங்களை மிதக்கும்படி செய்யும்…” உடல்கள் இலகுவாகும்.
1.துருவத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் பொழுது… “இது அதிகமாக அதிகமாக…”
2.இந்த உணர்வுகள் வலுப்பெற்றால் “புவியின் ஈர்ப்புக்குள் வராது…”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்.
4.அந்த ஈர்ப்பு வட்டத்தில் விளைந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணையச் செய்யும்.

ஏனென்றால் மனிதர்களாக இங்கே வாழ்ந்தவர்கள் தான் அங்கே சென்றது. அதனால் “இடைமறித்து அந்த உணர்வுகளை உங்களுக்குக் கொடுத்து” அதைப் பெறும்படி செய்தது.

1.துரித நிலையில் அந்தச் சக்திகளை எல்லாம் உங்களைப் பெறச் செய்வதற்கும்
2.அதன் மூலம் நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் நல்லதைச் செய்வேன்… அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்…! என்று சொல்லி நாம் நல்லதையே எண்ணுவோம்…! இருந்தாலும்
1.ஒருவர் வேதனைப்படும் பொழுது அந்த ரெக்கத்தில் நாம் பரிபக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
2.நம் சொல்லைச் சொல்லும் பொழுது பிறரை வேதனைப்படும் நிலைக்கு உருவாக்காதபடி அதிலே பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

நோயுடன் ஒருவர் மிகவும் சிரமப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்தப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் வலுக் கூட்டி எடுத்துக் கொண்டு
1.அந்த அருள் ஒளி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால் இது “பரிபக்குவம்…!”

வடையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் சரியாகச் சூடு ஆகாதபடி மாவைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்..? எண்ணையைப் பூராம் குடித்துவிட்டு வடையின் ருசி கெட்டுப் போகும்.

இதைப் போல் தான் நாம் நல்ல மனம் கொண்டு ஒரு மனிதன் நோயால் வாடுகின்றான் என்று உதவி செய்தாலும் அவரின் வேதனையைப் பக்குவம் தவறி நாம் கேட்டுணர்ந்தால்
1,அந்த உணர்வுகள் நமக்குள் சென்று நம் உடலுக்குள்ளும் நோயைத் தான் உருவாக்கும்.
2.நம் நல்ல மனமும் சுவை கெட்டுப் போகும்.
3.நல்ல குணத்தின் இயக்கமும் கெட்டுவிடும்.

ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்..?

காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டு உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று இந்த உணர்வைக் கூட்டி அதைச் சுவாசித்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் அவருடைய வேதனையை நாம் முதலில் கேட்டறிந்தோம். இந்த உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த வலுவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும்…! என்றால் இது பக்குவ நிலை கொண்டு அவருடைய மனதைத் திருத்தவும் நமக்குள் அந்தச் சுவை மிக்க உணர்வை நமக்குள் உருவாக்கவும் உதவும்.

வாழ்க்கையில் அதைச் (நல்லதை எல்லாம்) செய்வேன்…! சொல்லி விட்டுத் திடீரென்று என்ன செய்வார்கள்…? எல்லாம் செய்து கொண்டே இருப்பார்கள். கடைசியில்…
1.நான் எல்லா நன்மையும் அவனுக்குச் செய்தேன்…
2.ஆனால் பதிலுக்கு இப்படிச் செய்கிறான் பார்…! என்று நாம் கோபமாக மாறும் பொழுது
3.இது எல்லாமே போய்விடுகின்றது… இருள் சூழ்ந்துவிடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை வராதபடி இந்த வாழ்க்கையிலே நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதாவது “நல்லதைத் தான் செய்வேன்…!” என்ற பாட்டைப் பாடிவிட்டு மற்றவர்களின் குறைகளையும் வேதனைகளையும் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ளும் அந்தப் பரிபக்குவ நிலையை எனக்கு அருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டிக் கேட்க வேண்டும்… அந்த அருளைப் பெற்றுப் பழக வேண்டும்.

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…!

அதாவது…
1.நாம் இந்த வாழ்க்கையில் அதைச் செய்ய வேண்டும்… இதைச் செய்ய வேண்டும்… அப்படிச் செய்ய வேண்டும்… என்றெல்லாம் விரும்புவோம்
2.அந்த ஆசையினால் நாம் என்ன செய்கிறோம்..?
3.நமக்குள் தீமை என்ற உணர்வுகளும் வந்து சேர்ந்து விடுகின்றது.

தீமை என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகின்றோம்…
1.இந்த உடலின் ஆசை தான் நமக்குள் வருகின்றது.
2.நமக்குள் உயிரான ஈசன் இருக்கின்றான்..! என்ற நிலையையே மறந்து விடுகின்றோம்.

வேதனை என்ற உணர்வை எடுக்கும் பொழுது அந்தச் சிவனாக உருவாக்கிய இந்த உடலில் கடும் வேதனையை உருவாக்குகின்றது.

ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற கோவிலில் அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர
1.அந்த ஈசனான நிலைகளை நாம் வணங்க மறுக்கின்றோம்.
2.அவன் அறிவை எடுத்து நாம் தெளிவாகும் நிலையை இழந்து விடுகின்றோம்.

ஆகவே நாம் இந்த உடலின் இச்சைக்கு வாழாதபடி
1.இருளை அகற்றும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும் என்றும்
3.உயிர் எவ்வாறோ… நீ எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… என் உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளிமயமாக மாறுதல் வேண்டும் என்றும்
4.உயிருடன் ஒன்றிடும் நிலையாக நம்முடைய வாழ்க்கையை அமைத்து
5.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டிக் கேட்க வேண்டும்.

துருவன்… துருவத்தின் ஆற்றலை ஜீரணித்து ஒளியானவன்

 

அகஸ்தியன் துருவத்தின் வழி வானுலக ஆற்றலைத் துருவத்தின் வழி நம் பூமி பெறுவதை இடைமறித்து அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தறிந்தான்.

அந்த உணர்வுகளை நாமும் பெற…
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
2.அந்த துருவத்தினை எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
3.நமது பூமி சுழல்வதும்
4.பிரபஞ்சத்தில் உருவாகும் நிலைகள் பூமி செல்லும் பாதையில் அணுக்களாக இருப்பதை
5.துருவப் பகுதியில் அதை ஈர்க்கும் சக்தியாக வருவது உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
6.கண் வழி தான் இந்த நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றச் செய்து
7.அகக்கண் வழிகொண்டு நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

புறக்கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்த்தன் துணை கொண்டு
1.உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து நினைவினைப் பூமியின் துருவப் பகுதிக்குச் செலுத்தினால்
2.துருவப் பகுதியில் கவரும் அந்த நிலையை பூமி சுழன்று கொண்டிருப்பதையும்
3.இந்த எல்லையிலிருந்து வானுலக ஆற்றலின் சத்து அந்தத் துருவப் பகுதி வழியாக எப்படி வருகிறது…? என்பதும் காட்சியாகத் தெரியும்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன் அதன் உணர்வே ஒளியாக மாறும் நிலை அவனுக்கு வருகின்றது.

பூமி தான் சுழலும் பாதையில்… நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தக் கூடிய உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்குப் பரவி வருவதையும்… மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவத்தின் ஈர்ப்பிற்குள் வருவதையும் உங்களால் கவர முடியும்.
1.நுகரும் பொழுது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலில் பரவும்.
2.சிறிது நேரத்தில் நெடி கலந்த நிலைகளும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும் நறுமணம் கொண்ட உணர்வுகளும் வந்து கொண்டே இருக்கும்.

உணர்வுகள் உயிருடன் ஒன்றி உடலுக்குள் சென்று நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணங்களிலும் அது மோதும் பொழுது
1.உடலுக்குள் பல அதிசயங்களாக… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
2.ஒரு ஆனந்தமான ஒளி வெளிச்சமாக நமக்குள் வந்து கொண்டிருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.

சாதாரண எண்ணெயில் ஒரு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினோம் என்றால் அதிலே ஒரு எரிச்சல் கலந்த நிலையாகத் தெரியும். ஒரு பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது எண்ணெயின் சக்தியை ஆவியாக மாற்றி அது குளிர்ந்த ஒளியாக மாற்றும்.

அதைப் போல
1.இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள் துருவ மகரிஷியின் அருள் உணர்வுடன் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றி விட்டுக் குளிர்ந்த ஒளியாகக் காணுவது போன்று
3.உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் ஒளியின் தொடராகப் பரவும்.

உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களில் மீது மோதும் பொழுது
1.அந்த ஞானியின் உணர்வு உங்கள் உடலுக்குள் பளீர்…ர் பளீர்…ர் என்று மகிழ்ச்சி பெறும் உணர்வாகத் தோற்றுவித்துக் கொண்டே வரும்.
2.உடலில் மாற்றங்கள் பெறுவதைக் காணலாம்

வெல்டிங் வைக்கப்படும் பொழுது பளீர்…ர் என்று மின் ஒளிகள் வரும். அது எரிச்சல் கலந்ததாக இருக்கும் ஆனால் பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது அது எப்படிக் குளிர்ந்ததாகக் கண்ணுக்குப் புலப்படுகின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் அருள் மகரிஷிகள் உணர்வுகள் கலந்து மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக
2.நம் உடலில் ஒளித்தன்மை படர்வதைக் காணலாம்… உணரலாம்.
3.ஒரு சுவை மிக்கதாக மாறி வரும்.

புருவ மத்தியில் எண்ணி நினைவினைத் துருவ மகரிஷிகள் பால் செலுத்தி துருவ மகரிஷியின் ஆற்றல் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தப்படும் பொழுது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டி அதன் மூலம் உட்பொருளைக் காணுவது போன்று உங்கள் உடலுக்குள் வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
2.ஒவ்வொரு உணர்வின் அலைகள் மோதும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்களுக்குள் தோன்றுவதையும்
3.ஒளி கண்ட பின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஆற்றல்மிக்க சக்தியாக இது இணையும்.
4.துருவ மகரிஷியின் உணர்வுகள் உயிருடன் மோதும் பொழுது மெர்குரி போன்று உயிரிலே வெளிச்சம் வரும்.
5.இளம் நீலமாக ஒளி அலைகள் புருவ மத்தியில் கண்களுக்குப் புலப்படும்.

இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவைச் செலுத்தப்படும் பொழுது உடலில் மகிழ்ச்சி பெறும் நிலை உருவாகும்.

1.இதற்கு முன்பு அறியாது சேர்ந்த பல தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க இது உதவும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து மன பலம் பெற இது உதவும்.

விண்ணுலக ஆற்றல் பூமியின் ஈர்ப்பால் துருவத்தின் வழியாகக் கவரப்பட்டு நடு மையத்திற்குச் சென்று எப்படி அடைகின்றது…? அதனின் அடர்த்தி மின் அணுக்களாக பூமிக்குள் சென்று குவித்தவுடன் ஒன்றுக்கொன்று மோதும் பொழுது கொதிகலன் எப்படி உண்டாகின்றது…? அதிகமான வெப்பம் அங்கே எப்படி உண்டாகிறது…? என்று குருநாதர் காட்டுகிறார்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு அணுகுண்டைப் போட்ட பின் அணுக்கதிரியக்கங்கள் மற்ற பொருள்களுடன் தன் இனமான நிலைகளுடன் மோதி… இது வளர்த்துக் கொண்ட உலோகமானாலும் கல்லானாலும் மண்ணானாலும் அதை ஆவியாக மாற்றி ஒரு புகை மண்டலமாக மாறுகின்றது. மற்றொன்றை அழித்துத் தன் இனமாகப் பெருக்கி அதன்பின் அது மடிந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் பூமிக்குள் வளர்ச்சிகள் அடைகின்றது என்ற நிலையைக் குருநாதர் காட்டுகின்றார்.

இது அனைத்தையுமே… வானுலக ஆற்றலைத் தன் உடலுக்குள் காணுவது போல தன் உடலுக்குள் இருந்த உணர்வை இந்த மண்ணுலகிலும் (புவியியல்) ஊடுருவிச் செலுத்தித் துருவன் காணுகின்றான். அதிலே தாவர இனங்களின் வளர்ச்சியையும் காணுகின்றான்.

உயிரணுக்கள் நீர் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உருவாக்கப்பட்டு அதனின் கருமுட்டைகள் புயல் காற்றிலே சிக்கப்பட்டு மேக மண்டலத்துடன் கூடி நிலப்பரப்பில் விழுகப்படும் பொழுது… எதன் எதன் கலவைகள் அதற்குள் கலந்திருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு இங்கே தரைவாழ் உயிரினங்களாக உருவாகின்றது.

ஏனென்றால் இதையெல்லாம் தனித்துத் தனித்துப் பிரித்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆயுளும் பத்தாது… நேரமும் பத்தாது…! சுருக்கமான நிலைகளில் அவர்கள் கண்ட உணர்வினை குருநாதர் காணும்படிச் செய்தார். நீங்களும் அதைக் காணும் நிலைகள் வரும்.

துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலையில்… அதனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக எப்படி அழியாது பேரின்பம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாம் அனைவரும் அந்த அழியா நிலைகள் பெறலாம்.

இந்த உயிரில் எது இணை சேர்த்து வளர்க்கப்படுகின்றதோ அதை உயிர் அணுத்தன்மையாக மாற்றுகின்றது என்ற நிலையை அறியச் செய்வதற்குத் தான்
1.நம் குருநாதர் கொடுத்த இந்தச் சக்தியை நீங்களும் பெற்று உடலுக்குள் வளர்ச்சியாகி
2.அந்த அணுத் தன்மையாக வளர்த்து அதையே நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

ஆனால் அகஸ்தியன் தன் தாய் கருவிலே இருக்கும் போது விஷத்தன்மையை அடக்கி… அதன் வலுவின் தன்மைகொண்டு மற்றதை அறியும் ஆற்றல் அவனுக்கு வந்தது போன்று…
1.எல்லோருக்கும் அந்தச் சந்தர்ப்பம் வருவதில்லை.
2.ஒருவரால் உருவாக்கப்பட்டு அதிலே விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டு
3.அதே இன மக்களால் சந்தர்ப்பத்தால் கவரப்பட்டு வெளிவருவது தான்… எல்லோரும் அந்த வழியில் செய்ய முடியாது.

குருநாதர் எத்தனையோ தவத்தைச் செய்தார். அதன் வழியில் நானும் சென்றேன். அவர் பதிவு செய்த நிலைகளை அறிவதற்காக காடு மேடு அனைத்தும் அலைந்தேன். உண்மையை உணரும்படி செய்தார். எனக்குள் வளரும் நிலையை உருவாக்கினார்.

அதே போன்று நீங்கள் எல்லோரும் காட்டிற்குள் சென்றால்… தொழில் செய்வது எங்கே…? சாப்பிடுவது எங்கே…? குடும்பம் எங்கே அப்படி இருக்க முடியும்…? முடியாது…!

“யாராவது ஒருவர் விளைய வைக்கும் நிலையில் தான் செயல்படுத்த வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்… அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ…? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.

அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.

ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.

ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.

ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன…?
முதலிலே சூரியன்…
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்…
நான்காவது கண்கள் கண்ணன்.

துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்

ஆறாவது நிலை – வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது…?

1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது… பரசுராம்…! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.

பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து நரசிம்மா… (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.

தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,

ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது… பறந்து செல்கிறது…
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது…? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.

இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்…!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது…? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.

இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி… பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இது தான் ஏகாதசி பத்தாவது நிலை என்பது.

தாய் கருவிலே… குழந்தைகள் பெறும் பூர்வ புண்ணியம் பற்றிய உண்மைகள்

 

1.பூமி தன் துருவப் பகுதி வழியாக விண்ணிலிருந்து கவர்ந்து வருவதைத் தன் ஐந்தாவது வயதில் துருவன் கண்டுணர்ந்து
2.வானஇயல் தத்துவம் புவிஇயலாக மாறுவதைத் தன் தாய் தந்தையரிடம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றான்.

அந்தக் கால பாஷையில் அவன் வெளிப்படுத்தும் போது… அதற்காக வேண்டி ஒவ்வொன்றையும் பொருள்களை ஜாடையில் காட்டி அதைச் சொல்கின்றான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே வருகின்றது.

இருந்தாலும் ஐந்து வயது நிரம்பும் போது தன் குழந்தையின் அறிவைக் கண்டு தாய் தந்தையர் மிகவும் ஆனந்தப்படுகின்றார்கள்.

ஆனந்தப்பட்டாலும்… அவர்கள் பூசிக் கொண்ட விஷத்தன்மையான மூலிகைகளினால் உடலில் அணுக்கள் உருவாகி… அது வளர்ச்சி பெற்று விஷத்தின் தன்மையாக நுகரப்படும் பொழுது அவர்கள் உடலில் நோயாக மாறுகின்றது.

அகஸ்தியன் தாய் தந்தையர் உடலில் அந்த விஷத்தன்மைகள் பெருகி மனிதனாக உருவாக்கிய அணுக்களுக்கு எதிர்நிலையாக ஆகிறது. கடும் வியாதியாக மாறி அவர்கள் மரணம் அடைகின்றார்கள்.

ஆனால் தாய் கருவிலிருக்கப்படும் பொழுது
1.அகஸ்தியனுக்கு விஷத்தின் ஆற்றலை மாற்றிடும் அணுக்கள் வளர்ச்சி பெற்று
2.விஷத்தை அடக்கிடும் சக்தியாகப் பூர்வ புண்ணியமாக அவனுக்குக் கிடைக்கின்றது.

தாய் தந்தையருக்கோ… அவர்கள் உடலில் வளர்ச்சி பெற்ற… மனிதனைத் தெளிவாகும் அத்தகைய அணுக்களில்
1.விஷத் தாவர இனங்களை ஆவியாக மாற்றிச் சுவாசிக்கப்படும் பொழுது அவர்கள் உடலில் பரவி
2.மிருகங்கள் இந்த வாசனையை நுகர்ந்தபின் அஞ்சி ஓடியது போல்
3.இவர்கள் உடலில் அந்த வாசனைகள் சிறுகச் சிறுகப் புகுந்து நோயாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தாய் கெமிக்கல்களை வைத்துத் தொழில் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். வேலை செய்யும் போது அங்கிருக்கக்கூடிய விஷத்தன்மைகளைத் தாய் நுகர்கிறது.
1.கருவிலிருக்கும் குழந்தையும் அதை நுகரப்படும் பொழுது
2.அந்தக் குழந்தை “விஷத்தன்மையைத் தாங்கும் சக்தியாக” வளர்கிறது.

ஆனால் தாய் நுகர்ந்த கெமிக்கல் உடலுக்குள் சென்ற பின் தாய்க்குக் கடும் நோயாக ஆகி அது மடியும் தன்மை வருகிறது.

அதே சமயம் தந்தை… இந்தக் கெமிக்கலின் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து அதிலே உருப்பெறும் கருவின் தன்மை பெண்பால் நிலைகள் கொண்ட சுக்கிலத்துடன் கலக்கப்படும் பொழுது… ஆணில் விளைந்த விஷத்தின் தன்மை அது இரண்டும் கலந்து கரு முட்டையுடன் இணைக்கப்படும் பொழுது
1.கருவிலே உருப்பெரும் குழந்தை உடலில் விஷத் தன்மை பெருகி
2.அதற்குக் “கடும் நோயாக இது உருவாகிவிடுகிறது…”

ஏனென்றால் இதனுடன் இணைந்த உணர்வுகள் கருவாக வளர்க்கப்படுவதற்கு “அந்தக் கெமிக்கல்” உணவு கொடுக்கின்றது… உடலை உருவாக்குகின்றது. ஆக அந்த விஷத்தன்மை திடப்பொருளாக உடலாக மாற்றப்படும் பொழுது நோயாகி விடுகின்றது.

தாய் அந்தக் கெமிக்கல் கலந்த உணர்வைத் தான் சுவாசிக்கப்படும் பொழுது அது தாய் உடலில் நோயாகிறது. கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வு பட்டபின் நோயாக அது மாறுவதில்லை.

அதே சமயம் ஒரு நோயுற்ற குழந்தை வேதனைப்படுவதைத் தாய் உற்று நோக்கி அந்த உருவத்தினை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணையப்படும் பொழுது அந்த நோயுற்ற உடலில் விளைந்த உணர்வுகள் சுவாசிக்கப்படும் பொழுது… கருவிலிருக்கும் குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

1.அந்தக் குழந்தை உடலில் எந்த நோய் உருவானதோ
2.அதே நோய் கருவிலே உருவாகும் குழந்தைக்கும் வந்து விடுகின்றது.

ஏனென்றால் இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களுக்குச் சொல்கிறேன்.

மற்ற விஷத் தன்மைகளைப் பார்க்கும் பொழுது தான் சுவாசித்த உணர்வுகள் இந்த அணுக்களில் வளரப்பட்டு தாய் கருவிலே விளையப்படும் பொழுது விஷத்தை வெல்லும் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது தேள் கொட்டி விட்டால் அந்த விஷத்தன்மை கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் ஊடுருவி விடுகின்றது. குழந்தை பிறந்த பின் தேளை வைத்திருந்தாலும் “அந்தத் தேளின் விஷம் குழந்தையைப் பாதிப்பதில்லை…”

அதே போல ஒரு விஷமான பாம்பு தாயைத் தீண்டிவிட்டால் மருத்துவரிடம் சென்று அந்தத் தாய் பிழைத்து விட்டால் பாம்பினுடைய விஷம் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குள் ஊடுருவி… “அந்த விஷத்தை வெல்லும் சக்தியாக அந்தக் குழந்தை பெறுகின்றது பூர்வ புண்ணியமாக…!”
1.பல விதமான நிலைகள் கொண்டு
2.கருவில் உருவாகும் சிசுக்களுக்கு இப்படி உருவாகின்றது.

பரிணாம வளர்ச்சியில் வளரக்கூடியது மற்ற உயிரினங்கள். பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த மனிதனின் உணர்வுக்குள் விளைந்தது… இன்னொரு உடலுக்குள் புகுந்த பின் வளர்ச்சி அடைந்த நிலையில் “மீண்டும் அது வளர்ச்சியடையும் தொடருக்கு வருகின்றது… விஷத்தின் தன்மை…”

இந்த இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லது.

ஏனென்றால் ஒரு சிலர் குழந்தையைப் பார்த்த பின் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தாய் உற்றுப் பார்க்கப்படும் பொழுது தனக்குள் இது ஊழ்வினையாக மாறுகின்றது… அணுக்களாக மாறுகின்றது.

அந்த அணுவின் தன்மை மாற்றப்படும் பொழுது அதன் உணர்வு அதிகமாக விளைந்து கருவில் விளையும் குழந்தைக்கு வித்தாக மாறுகின்றது. ஆனால் கண் கொண்டு எந்த மனிதனைத் தாய் உற்றுப் பார்த்ததோ அங்கே விளையும் நோயின் அணுக்கள் தாயின் உடலில் விளையும்.

தாயின் கருவில் விளையும் சிசுவிற்கு இந்த விஷத் தன்மை வளரப்படும் பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் இங்கே வீரியமடைந்து அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே கருவில் வளரப்படும் பொழுது அந்தத் தாய் உயர்ந்த ஞானத்தை எடுத்துக் கொண்டால் உதாரணமாக…
1.யாம் இப்பொழுது போதிக்கும் உணர்வுகள் அகஸ்தியன் கண்டுணர்ந்த விண்ணின் ஆற்றலை
2.பிரபஞ்சத்தை உற்று நோக்கி அவன் பெற்ற சக்திகளை
3.தன் கருவிலிருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று கருவிலே நினைவைச் செலுத்தினால்
4.அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் கருவில் விளையும் சிசுவிற்குக் கிடைக்கிறது.

அகஸ்தியன் உடலில் உருப்பெற்ற உணர்வுகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டே உள்ளது. அகஸ்தியன் ஒரு உணர்வினை நுகர்ந்த பின் இந்த உணர்வின் எண்ணங்கள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தாயிடம் சொல்கின்றான்.

தான் கற்றுணர்ந்ததைத் தன் அருகிலிருக்கும் சகாக்களுக்கும் சொல்லப்படும் பொழுது அவர்கள் செவிகளில் இது படுகின்றது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்.

1.அப்படிக் கேட்டுணர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைகின்றது… நேருக்கு நேர் விளைகின்றது.
2.அக்காலத்தில் அகஸ்தியனைச் சூழ்ந்து வாழ்ந்தவர்களும் இதே சக்தியைப் பெறுகின்றார்கள்.

நம் தெருவிலே ஒரு போக்கிரிப் பையன் இருந்தால் அவன் செய்யும் சேட்டை எல்லாம் அவனுடன் பழகக் கூடிய மற்ற பையன்களுக்கும் இணைந்து… அவர்களும் போக்கிரியாக மாறுவார்கள். ஒரு பையன் கூட நல்ல பையனாக வரமாட்டான்.

குழந்தைப் பருவத்தில் நல்லவனாக இருந்தாலும் ஒருவன் ரொம்ப சேட்டை செய்கிறான் என்று அதை உற்றுப் பார்த்தால் அவன் செய்யக்கூடிய உணர்வுகளை எல்லாம் நுகரப்படும் போது இங்கேயும் மாற்றங்கள் ஏற்படும்.

அக்காலங்களில் அகஸ்தியன் வாழ்ந்த தென்னாடு எல்லாம் கடலுக்குள் சென்று விட்டது. அகஸ்தியன் உருபெற்ற அந்த மலை எல்லாம் கடலுக்குள் தான் இருக்கின்றது… மேவி விட்ட்து.

அதற்குப் பின் வெளிவந்த பூமி தான் இப்பொழுது நாம் கண்ணிலே காணக்கூடிய நிலை எல்லாம். அக்காலங்களில் மலைப்பகுதிகளுக்கும் பல காட்டுப் பகுதிகளுக்கும் வந்துள்ளான்.

1.வானுலக ஆற்றலைத் தனக்குள் அவன் எடுத்ததால்
2.தனக்கு நீர் வேண்டும் நினைக்கும் பொழுது எப்பகுதியில் இருந்து எந்தெந்த உணர்வுகளைச் சுவாசித்தானோ
3.இந்த உணர்வுகள் அந்தப் பாறையில் படுகின்றது… அங்கே நீர் உருவாகின்றது.

மலைப்பகுதியில் சில பாறைகள் இருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் மேகமூட்டமாக மாற்றி அந்த மலைப்பகுதியில் நீராக மாற்றும் சக்தி வரும்.

சில இடங்களில் மலை உச்சியில் பார்த்தோம் ஒன்றுமே இருக்காது… நீர் ஊற்றாக அங்கு வந்து கொண்டிருக்கும். ஆனால் கீழே தரையிலே சமமான இடத்திலே நீர் இருக்காது.

சில இடங்களில் மேலே வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் காந்தப் புலனறிவு சூரியனுடைய கதிரியக்கங்களை அதிகமாகக் கூட்டினால் அதிலிருந்து எக்கோ வரும். எக்கோ வரக்கூடிய இடங்களில் மேகங்களை இழுக்காது… கலைத்து விட்டு விடும். அங்கே நீர் இருக்காது.

ஏனென்றால் அந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மைப் போகும்படிச் சொல்லி
1.வானஇயல் ஆற்றல்கள் புவிஇயலுக்கு மாறும் பொழுது
2.மனிதனான பின் மனித நிலையிலிருந்து பதிந்த அந்தக் காந்தப்புலன் எப்படிப் படுகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோலமாமகரிஷி “ரிஷி நிலையை” எப்படிப் பெற்றார் என்று உணர்வதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் (ஞானகுரு) ஆறு வருடம் தியானமிருந்து வந்தோம். மழைக் காலம் வரும் பொழுதெல்லாம் அங்கே செல்வோம்.

கோள்களின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அதனால் தான் அவரைக் கோலமாமகரிஷி என்பது. அவர் கண்டறிந்த உண்மைகளை அறிவதற்காக குருநாதர் அங்கே என்னை அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் அந்தக் கோள்களின் இயக்கங்களை அங்கிருந்து தியானித்தேன்.

இதை எல்லாம் பார்த்து அறிந்து உணர்வதற்காக வேண்டி மங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பேன். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள்.

இரண்டு பேரும் இறந்தவுடன் பையனுடைய பாட்டி என்ன செய்கிறது…? நீ பிறந்ததும் அப்பாவையும் அம்மாவையும் தூக்கி விழுங்கி விட்டாய்… நாசமாகப் போகிறவனே…! எங்கேயாவது தொலைந்து போடா…! என்று அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பையனுடைய அக்காவோ… ஏன் பாட்டி…! பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன தெரியும்…? அதற்காக வேண்டி அவனைத் திட்டுகிறாயே,..! என்று சொல்கிறது.

உனக்கு ஒன்றும் தெரியாது. இவன் பிறந்த நேரத்தில் தான் எல்லோரையும் விழுங்கி விட்டான்… இந்தக் கழுதையை எங்கேயாவது குப்பையில் போடு..! என்று பாட்டி பேசிக் கொண்டே உள்ளது.

இதெல்லாம் நடக்கும் பொழுது நான் அவர்கள் வீட்டிலே போய் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே என்ன… ஏது… அது எப்படி நடக்கின்றது…? என்பதை அறிந்து கொள்வதற்காக குருநாதர் சொன்ன வழியில் அங்கே சென்று கொண்டிருக்கின்றேன்.

அங்கே சென்று அவர்களுடன் பழகிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பையன் பேசுவதும்… அந்தப் பாட்டி பேசுவதும்… இப்படியே போராடிக் கொண்டே இருந்தார்கள்.

அந்தப் பாட்டி இறந்தது. ஆனால் தன் பேத்தி மீது பற்றாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பாட்டி தான் குடும்பத்தை முழுவதுமாக ஆதரித்து வந்தது.
1.தன் பேத்தி மீது மிகவும் பிரியமாக இருந்ததால்
2.இறந்த பின் பாட்டியின் உயிராத்மா பேத்தியின் உடலுக்குள் வந்து விட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் அக்காவும் பேசத் தொடங்கினார்கள்.

தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில் தம்பியைப் பார்த்து, “தொலைந்து போகிறவனே.. எல்லோரையும் தூக்கி வாரி விட்டாய்… நாசமாகப் போடா…!” என்று சொன்னாள். அதன்படியே தம்பியை விரட்டி விட்டாள்.

இது நடந்த நிகழ்ச்சி…!

1.ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்குள் சென்ற பின் அது எப்படி இயக்குகிறது…?
2.உடலுடன் இருக்கும் பொழுது இந்த உணர்வுகள் மாறியதும்
3.அவர்கள் எப்படி இயங்குகின்றனர்…? என்பதை அனுபவபூர்வமாக என்னால் அங்கே அறிய முடிந்தது.

இந்த மாதிரி குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு இதை எல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை எடுப்பது மாதிரி வேஷ்டியும் துண்டும் மட்டும் தான் போட்டுக் கொண்டு போவேன்.
1.அங்கங்கே என்ன நடக்கிறது…
2.அந்த உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…?
3.சாப அலைகள் என்ன செய்கிறது…?
4.நோயின் உணர்வுகள் எப்படி வருகிறது…? இறக்கச் செய்கிறது…? என்று
5.எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குத்தான் காட்டிற்குள்ளும் நகரத்திற்குள்ளும் குருநாதர் அனுப்பினார்.

பாட்டி இறந்த பின் அந்தப் பெண் குழந்தையிடம் நான் சொன்னேன்…!

ஏம்மா…! பாட்டி தான் உன் தம்பியைத் திட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுது நீ உன் தம்பியைத் திட்டுகிறாயே…! என்றேன்.

அட… நீ… போய்யா….! என்று இப்படி என்னைச் சொல்கிறது.

அந்தப் பாட்டி எப்படிச் சொல்லுமோ அதே மாதிரி என்னிடமும் “அட போய்யா…!” என்கிறது.

கூட வந்த நண்பர் அந்தப் பெண்ணிடம் “சாமியை நீ இப்படிப் பேசலாமா…?” என்று கேட்டார்.

சாமியாவது… பூதமாவது…? என்று இப்படியே “வெடுக்..” என்று பேசுகிறது. அந்த உணர்வுகள் அதே மாதிரி வேலை செய்கிறது.

ஏனென்றால் ஒரு உடலுக்குள் இந்த உணர்வுகள் எதை வளர்த்ததோ அதே உணர்வின் செயலாக எப்படிச் செயலாக்குகிறது என்பதை யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை அந்த வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… இதனுடைய நிலைகளை நீ பார்…! என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.

உங்கள் உடலை உருவாக்கிய “ஒவ்வொரு அணுவிலும்…” அகஸ்தியன் உணர்வுகள் இணையும்

 

அகஸ்தியன் பிறந்தபின் குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது விண்ணைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.

அவருடைய தாய் தந்தையர் எதையெல்லாம் எண்ணிப் பெற்றார்களோ அவை அனைத்துமே கருவிலேயே வளர்ச்சி பெற்றதும் பல விஷ அணுக்கள் தன்னை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை உடலில் பூசிக்கொண்டு அந்த மணத்தை வெளிப்படுத்தும் பொழுது நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுக்களோ விஷ ஜந்துக்களோ இவை அனைத்துமே அவரை அணுகாது இருந்தது.

சூரியனை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.சூரியனின் முகப்பில் தன் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்கள் பிரிக்கப்பட்டு
2.அந்த உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒளிக்கதிர்களாக வீசிக் கொண்டிருப்பதும்
3.சூரியனின் முகப்பில் பிரிக்கப்பட்ட அந்த விஷத்தன்மை பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும்
4.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் விஷத்தை வென்றிடும் முலாம்களை உடலில் பூசியதனால் அதைக் காணுகின்றார்கள்.

அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடலில் பதிவானாலும் கருவிலே வளரும் அந்தச் சிசுவுக்குத் தாய் ரூபத்தில் பதிவாகின்றது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ… பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் பொழுது அந்தச் சூரியனின் இயக்கங்களைக் காணுகின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வெளிப்பட்டதைக் கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து முகப்பிலே அதைப் பிரித்து விட்டு தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றி அமைப்பதை
1.இந்தக் குழந்தையும் பார்க்கின்றது. ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை.
2.தான் கவர்ந்ததைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்.

அதே சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்த பின் தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை. இவன் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் பொழுது அந்த வண்டுகள் மயங்கி விடுகின்றது. விஷ ஜந்துக்களோ இதற்கு அப்பால் விலகிச் சென்று விடுகின்றது.

சூரியன் எப்படி தன் ஒளிக்கதிர்களால் அதில் விளைந்த உணர்வுகள் கொண்டு மோதும் பொழுது விஷத்தைப் பிரித்து விட்டு வெப்ப அலைகள் உருவாகின்றது என்ற நிலையை அகஸ்தியனின் தாய் தந்தையர் முதலில் காணவில்லை. ஆனால் இந்தக் குழந்தை “ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருகின்றது சொல்ல முடியாத நிலையில்…”

மற்ற உயிரினங்களையோ மிருகங்களையோ கூசாது பார்க்கின்றது. ஆனால் அந்த உயிரினங்கள் இவனைக் கண்டால் மயங்கி விடுகின்றது. மயக்கத்திற்கு அஞ்சி ஓடி விடுகின்றது.

இப்படித்தான் அந்த இளம் பருவத்தில் வரும் பொழுது தாய் தந்தையர்கள் தன் குழந்தை உடலிலிருந்து வெளிப்படக்கூடிய இந்த ஆற்றல்களைப் பார்த்த பின் “கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…” என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். அக்காலத்தில் அதைத்தான் அவர்களால் எண்ண முடியும்.

ஏனென்றால் இப்பொழுது உங்கள் எல்லோரையும் அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் அங்கே அழைத்துச் செல்கின்றேன்.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும். இந்த நினைவுகள் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்ட உணர்வுகளை… பூமியில் பரவி உள்ளதை நுகரப்படும் பொழுது அதைக் காண முடியும். அந்த உணர்வின் தன்மையை வளர்க்க இது உதவும்.

அதற்குத்தான் இதைப் பதிவாக்குவது.

1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப்போல இதை உங்களுக்குள் பதிவாக்கி
2.இதை நீங்கள் நினைவாக்கும் பொழுது அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மையை நாமும் கண்டுணர்ந்து
3.இந்த மனித உடலில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு வேகாநிலை அடைந்து
4.இன்றும் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் உணர்வை நாமும் எளிதில் பெற முடியும்.

அந்த வளர்ச்சியை நாம் இப்பொழுது… “இந்த வாழ்க்கையிலேயே அடைய முடியும்” என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருவது.

பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளை… 27 நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதை இந்தப் பிஞ்சு உள்ளம் பார்க்கின்றது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

உதாரணமாக… பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது ஜீனியைப் போட்டு அந்த இயந்திரத்தைச் சுழற்றிய பின் வெப்பத்தால் அது பஞ்சு போல் உருவாவது போன்று
1.இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் மணங்கள் பிற மண்டலத்தில் இருந்து வரும் சக்திகளை இணைத்து
2.ஒரு நூலாம்படை போலக் கவர்ந்து உறைந்து விடுகிறது.

உறைந்த பின் இந்த நட்சத்திரம் சுழலும் பொழுது இதனுடன் சேர்ந்து சுழலப்படும் பொழுது தூசிகளாக மாறுகிறது.

அதே சமயம் சூரியனுடைய காந்த சக்திகள் கவரப்படும் பொழுதும் இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுதும் அந்தத் தூசிகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்வதும் அதிலிருந்து மீண்டும் வலை விரித்து மற்றதைச் சேர்த்துக் கொண்டும் வருகின்றது.

உதாரணமாக… ஒரு நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் வலையை விரித்து வைக்கின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கி விட்டால் அதை உணவாக எடுப்பதற்குத் தன் மூக்கின் நுனி கொண்டு ஈயின் உடலுக்குள் ஊடுருவச் செய்து அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாக உட்கொள்கின்றது. ஆனால் ஈயின் உடல் அப்படியே இருக்கும் முழுதாக.

அதே சமயம் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்றால்… “அந்த உணர்ச்சியால் உருவாகும் அமிலத்தை” இன்னொரு ஈயைக் காற்று புகாது சுற்றிவிட்டு அதன் உடலுக்குள் அதைச் செலுத்தி விடுகின்றது.

உடலுக்குள் இது சேர்த்த பின்…
1.அந்த ஈயின் உயிரான்மா வெளியே செல்ல முடியாதபடி
2.அந்த ஈயை உருவாக்கிய அணுக்கள் பூராமே இது கலந்த பின் எண்ணிலடங்காத நூலாம்படைப் பூச்சிகளாக அது உருமாறுகின்றது.

இன்று விஞ்ஞானிகள் ஆண்களைப் பெண் உறுப்பு கொண்டவர்களாக மாற்றுவதற்காக “ஹார்மோன்களை” ஆண் உடலில் செலுத்துகின்றார்கள். பெண்கள் போலவே அந்த உறுப்புகள் மாறி உருவாகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு மனிதனுக்குள் சேர்க்கும் இந்த உணர்வு போலத் தான் ஈயின் உடலில் சேர்க்கப்பட்ட அமிலத்தால் அதனின் கருத்தன்மை உருமாறி… தன் இனம் எதுவோ அந்த உணர்வுகள் மாறி… நூலாம் படைப் பூச்சியின் ரூபமாக அது மாறிவிடுகின்றது.

அது போல நட்சத்திரங்கள் தூசிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் அதை “உணவாக உட்கொண்டாலும்…” இதனுடன் சேர்த்துக் கொண்ட இதனின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்ந்து சுழலும் அந்தப் பால்வெளி மண்டலத்தில் சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து… அந்த அமிலத்தைத் தனக்குள் சேர்த்துச் சேர்ந்து சுற்றும் நிலை வரப்படும் பொழுது… சூரியனுக்கு அருகில் கோள்களாகவும் வெகு தூரத்தில் நட்சத்திரங்களாக இருப்பது போலவும்… ஒவ்வொரு நட்சத்திரமும் தான் உமிழ்த்தும் பால்வெளி மண்டலத்தில் இதைப் போன்ற உணர்வுகளைச் சேர்த்து விடுகிறது.

அதனுடைய வளர்ச்சியில் நட்சத்திரங்கள் உருப்பெற்று விட்டால் மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை இது சுவாசித்து நட்சத்திரங்களாக அமைந்து அதன் வளர்ச்சி பெற்று… அதனுடன் இணைந்த நட்சத்திரங்களுக்கு இது உணவாகச் சேர்ந்து… அந்த உணர்வை இது எடுத்து இப்படி வளர்ச்சிகள் பெற்றுக் கொண்டே வருகின்றது.

நட்சத்திரங்கள் இப்படி 27 நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலையில் அது எடுக்கும் துகள்களும்… அல்லது தூசிகள் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது… “கரு இரண்டற உருவாகி ஒரு பொருளை உருவாக்கும் தன்மை அடைகின்றது…”

இதைப் பிஞ்சு உள்ளமாக இருக்கும் அகஸ்தியன் ஒன்றாவது வயது கடந்து இரண்டாவது வயதில் காணத் தொடங்குகின்றான்.
1.அதை உணர்ந்து அவனால் சில சொற்களைச் சொல்லும் நிலை வருகின்றது.
2.இந்த உணர்வின் எதிரொலி எக்கோ வருகின்றது… அதை குருநாதர் காட்டுகின்றார்.

தான் காணும் உணர்வுகளையெல்லாம் தன் தாய் தந்தையருக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றான். அவன் உடலில் விளைந்த உணர்வின் எண்ணங்களைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்திருக்கின்றது என்பதை
1.குருநாதர் சுட்டிக்காட்டி இந்த உணர்வைப் பதிவு செய்து எடுக்கும்படி சொல்கின்றார்.
2.அப்பொழுது அந்தக் குழந்தைப் பருவத்தில் அவன் சொல்லும் மழலைச் சொல்லுக்குள்
3.அந்த உண்மையின் தன்மை எப்படி உருவாகிறது என்பதை எனக்குள் கவர்கின்றேன்.

மீண்டும் அதை நினைவு கொள்ளும் பொழுது
1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்தில் எப்படிக் கண்டுணர்ந்தானோ அதை நானும் காண முடிகின்றது.
2.ஏனென்றால் நானும் அந்த இளம் பிஞ்சு வயது தான் “புதிதாகத் தெரிய வரும் பொழுது…”

இப்பொழுது காட்சி தெரிந்தால் “என்ன…? ஏது…?” என்று திண்டாடுகிறோம் அல்லவா. அது வழியில் தெரிந்தாலும் கூட… “என்னமோ ஏதோ…” என்று சொல்வது போல அன்றைக்கு அகஸ்தியன் தனக்குக் கிடைத்ததைத் தன் தாய் தந்தைக்குச் சொல்கின்றான்.

1.அவனிடமிருந்து சொல்கள் வெளி வருகிறது… அதே உணர்வுகளை உனக்குள் பதிவு செய்கிறேன்.
2.நினைவு கொண்டு அவன் எதைப் பார்த்தான்…? எதைச் சொன்னான்…? என்ற நிலையை நீயும் பார்…! என்றார் குருநாதர்.
4.உங்களுக்குள் இப்பொழுது அதைத் தான் பதிவு செய்கின்றேன். அதை நினைவு கொள்ளுங்கள்.

அதை இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

அகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் அது கவர்ந்த உணர்வுகளௌயும்… அதே போல் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும்… அது எவ்வாறு இயங்குகின்றது…? என்ற இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை தியானத்தின் மூலம் நாம் பார்ப்போம்.
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட “ஞான ஒளி” நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம் இருங்கள்.

இப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும் போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும்… பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது நினைவாக்குவதற்கும்… கவர்வதற்கும்… எளிதாக இருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எப்படி இந்த நிலையைப் பார்க்கச் சொன்னாரோ அதே போல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி… அதனின் துணை கொண்டு
1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை
2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

கண்களை மூடி… “அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை இப்போது நீங்களும் நுகருங்கள்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம் சூரியனைச் சுழன்று… பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை… ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள் தெரியும்.

அதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.

அகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.

நட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது பல வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.

அப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள் பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

கேதுக் கோள்:-
நட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப் பார்க்கலாம்.

இராகுக் கோள்:-
நட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.

சனிக் கோள்:-
மேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

சனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள் மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.

அந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப் பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக இருக்கும்.

வெள்ளிக் கோள்:-
இதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக் கதிர்கள் பாயுமோ அதைப் போன்று
2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித் தன்மையாகத் தெரியும்.

வியாழன் கோள்:-
இவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.

வியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள் சுற்றிவரும்.
1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் போன்று
2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.

புதன் கோள்;-
சூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.

செவ்வாய்க் கோள்;-
இப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்கள் வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.

இவ்வகையில் கலவைகளாகிப் பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின் நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.

நமது பூமி:-
துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும் சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.

சந்திரன்:-
பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).

இவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக் கண்டுணர்ந்த உண்மைகளை அது
1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்
2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக
3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.

நமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும் அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்
2.இதைப் போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக் காணுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால் செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்
1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி
2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.

வான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
1.அகஸ்தியன் உணர்வுகள் இணையும்.
2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு சமயம் ஒரு வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

குருநாதர் சொன்னபடி அங்கே அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவர் “எனக்கு இப்படிச் செய்கிறார்களே… இந்தப் பாவிகள்…!” என்று சொல்லிச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோய் தாங்காதபடி அவர் சொல்கிறார். ஏனென்றால்
1.அவர் நினைக்கிறபடி அந்த வீட்டில் உள்ளவர்கள்
2.அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை…! என்று சாபமிட்டுக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால் அந்தக் குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம் தான்…! இவருடைய சாப அலைகள் இந்தக் குடும்பத்தில் சேர்ந்து பின் விளைவுகளுக்கு வந்து அவர் இறந்த பிற்பாடு… அந்தக் குடும்பமே அப்படியே மொத்தமாக நொறுங்கிப் போனது…!

அவர் உடலுடன் இருக்கும் வரை ஓரளவுக்கு ஒருவிதமாக இருந்தனர். ஆனால்
1.அவர் இறந்த பிற்பாடு என்ன ஆகிறது…? என்கிற வகையில்
2.அந்த உண்மைகளை எல்லாம் காண்பதற்காகத்தான் குருநாதர் அங்கே பார்க்கச் சொன்னார்.

பல அனுபவங்கள் பெறுவதற்காக வேண்டி குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அப்பொழுது எனக்குச் சரியான சாப்பாடு இல்லை.

வெறும் பேரீட்சம்பழம் தான் எனக்குச் சாப்பாடு. ஒரு நான்கு பழத்தைச் சாப்பிட வேண்டியது. தண்ணீரை வயிறு நிறையக் குடிக்க வேண்டியது.
1.குருநாதர் சொன்னபடி சில சுவாசங்களை எடுத்துக் கொள்வது.
2.வயிறு கம்…! என்று இருக்கும்… வேறு எண்ணமே வராது.
3.நான்கு பழத்தை உறித்துப் போட்டுத் தண்ணீரைக் குடித்தோம் என்றால் நன்றாக இருக்கும்… ஒன்றும் செய்யாது.

எனக்கு வேறு ஒரு உணவும் கிடையாது.

இதெல்லாம் குருநாதர் யாம் ஒவ்வொன்றையும் அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்காகப் பல இடங்களுக்கு என்னைச் சென்றுவரச் செய்தார்.

குருநாதர் இப்படிப் போகச் சொன்ன பக்கம் ஒரு இடத்திற்குப் போனால் அங்கே (ஏற்கனவே) யாரோ ஒருவரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

அவரின் இரத்தங்கள் அங்கே மண்ணில் பதிவாகி இருக்கின்றது. அதே மண்ணில் அவருடைய உணர்வுகளும் பதிந்திருக்கின்றது.

ஆனால் குறித்த நேரம்…
1.அதாவது அவர் எந்த நேரம் கொல்லப்பட்டாரோ…
2.அந்தக் கொல்லும் பொழுது எந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ..
3.அதே நேரத்தில் என்னைப் போகச் சொன்னார்,

யாம் போன சமயம் “அடப் பாவிகளா…! என்னைக் கொல்கின்றீர்களேயடா… என்னைக் கொல்கின்றீர்களேயடா…!” என்று சப்தம் போடுகிறது.

அங்கே போனவுடன் இறக்கும் பொழுது சொன்ன அதே உணர்வு வருகிறது.
1.அந்த ஒலி அலைகள் மண்ணில் பட்டவுடன் இந்த உணர்வுகள் எப்படி உராய்கின்றது…?
2.இது எந்தெந்த நிலையைச் செய்கின்றது…?
3.உடலில் விளைந்த உணர்வுகள் இறந்த பின் அங்கே எப்படிப் பதிவாகிறது..? என்று அதை எல்லாம் பார்க்கும்படிச் செய்தார் குருநாதர்.

அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்து கொள்ளும்படிச் செய்தார் குருநாதர்.

ஒரு மனிதரின் ஆவி இன்னொரு உடலிற்குள் எப்படிச் செல்கிறது…? சென்றபின்… புகுந்து கொண்ட உடலில் எப்படிப்பட்ட அணுக்கள் உருவாகின்றது…? இது போன்ற உணர்வுகள் என்னவாகும்…? என்பதையெல்லாம் குருநாதர் பல இடங்களுக்கு எம்மைச் சென்றுவரச் செய்து… பல இன்னல்களைச் சந்திக்கச் செய்து… அதிலிருந்து தெரிந்து கொள்ளும்படி செய்தார்.

அவ்வாறு பெற்ற அனுபவங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன்.

“அகஸ்தியனாக நீங்கள் மாறுவதற்கு” முதல் நிலையாக உங்களுக்கு இதைக் கொடுக்கின்றேன்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
1.வெறும் சொல்லாக இல்லாது உயிருடன் ஒன்றி ஒலிகளை எழுப்ப வேண்டும்
2.நமது நினைவை “உயிருக்குள் செலுத்தி” அதை ஏங்குதல் வேண்டும்.

யாம் உபதேசிப்பதைக் கூர்மையாக நீங்கள் கேட்கின்றீர்கள்… பதிவாகின்றது. அதை உடலுக்குள் உருவாக்க… தனக்குள் இயக்கச் சக்தியாக மாற்ற… ஓ…ம் ஈஸ்வரா என்று நாம் உயிரோடு ஒன்றி அதைக் கவர்தல் வேண்டும்.

ஓ…ம் ஈஸ்வரா என்றால் அது நமக்குள் இயங்குகிறது என்று பொருள். என்னை ஜீவனுள்ளவனாக இயக்கிக் கொண்டுள்ளாய்… நான் எண்ணுவதை எனக்குள் இயக்குகின்றாய் எனக்குள் உருவாக்குகின்றாய்…! என்பது.

குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் “புருவ மத்தியிலே… துடிப்பின் நிலைகள் வலு அதிகமாகும்…”

ஆகையினால் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிருடன் நினைவைச் செலுத்தி இந்தக் குரலை நாம் எழுப்புதல் வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்த நினைவோடு நாம் அருள் சக்திகளை எண்ணி எடுக்க வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வின் ஒலி அலையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது “அந்த அதிர்வின் நிலைகள்” செயலாகும்.

எத்தனை பேர் சேர்ந்து நாம் இதைச் சேர்ந்து சொல்கின்றோமோ எத்தனை வகையான குணங்கள் இருந்தாலும்… நம்முடைய நினைவில் இந்த ஆற்றல் பெருகும்.

அகஸ்தியன் தாய் கருவிலே உருப்பெற்ற உணர்வுகளையும் குழந்தைப் பருவத்திலே பெற்ற உணர்வுகளையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.அதை நினைவாக்கி மீண்டும் சுவாசிப்பதற்கு முதல் படியாக இதைக் கொண்டு வருகின்றோம்.
2.இதற்கு முன் பரவலாகச் சொல்லி இருந்தாலும் அந்த உண்மை உணர்வுகளைச் சொல்லி
3.இதிலிருந்து உங்களை வளர்ச்சி பெறச் செய்வதற்கே இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

அணுவின் ஆற்றலை அறிந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அகஸ்தியர் தாய் கருவிலே பெற்ற சக்தியும் பிறந்த பின் அவர் பெற்ற உணர்வலைகளையும்
2.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாக தனக்குள் உருப்பெற்றதையும்
3.நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகித் தன் உணர்வலைகளை தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த “அந்த முதல் நிலையை…”
4.புருவ மத்தியில் எண்ணி ஏங்கிப் பெறுங்கள்.

அகஸ்திய மாமகரிஷி முதல் நிலைகளில் குழந்தைப் பருவத்தில் தாய் கருவில் பெற்ற உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கிப் பார்க்கும் பொழுது… சூரியனை உற்றுப் பார்த்து அதன் இயக்கத்தைக் காணுகின்றார்… உணர்கின்றார்.
1.அதை நாம் பார்க்க வேண்டும்… உணர வேண்டும்… நுகர வேண்டும்
2.அகஸ்தியன் கண்ட சூரியனின் செயலாக்கங்களைக் காண வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் புருவ மத்தியில் சூரியனின் மின் அணுக்களின் கதிர்களைப் பார்க்கலாம். உயிரிலே மோதும் பொழுது புருவ மத்தியிலே கனமும்… அந்த ஒளிக்கதிர்களும்… அதை உணரும் சக்தியும் கிடைக்கும்.

நமது பிரபஞ்சத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மற்ற இருண்ட கோள்களின் மீது பட்டு அந்தக் கோள்களும் மின்னணுக்களைப் போன்று தோன்றுவதைக் காணலாம்.

உங்கள் நினைவின் ஆற்றல் இப்போது விண்ணிலே இருக்கின்றது. வானத்தில் நாம் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம் அல்லவா. அதைப் போன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் கோள்களில் தாக்கப்படும் பொழுது அது மின் அணுக்களாக உங்களுக்குத் தோற்றமளிக்கும்.
1.அன்று அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணை நோக்கிப் பார்த்தான் அல்லவா…
2.அதே உணர்வுகள் உங்களில் இப்பொழுது தெரியும்.

மறந்திடாது உங்கள் உயிருடன் ஒன்றி… உயிர் வழியாக விண்ணிலே நினைவைச் செலுத்தி… வான் வீதியிலே பரவி வரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் தாக்கி அது மின்னுவதை… இப்பொழுது உங்கள் உடலுக்குள்… நினைவுக்குள்… அந்த உணர்வின் அலைகள் பாயும் பொழுது “காட்சிகளாக…” அதை உணரலாம்.

இரவிலே நட்சத்திரங்கள் வான மண்டலத்தில் எப்படி மின்னுகின்றதோ அதே உணர்வுகள் உங்களுக்குக் காட்சிகளாக அந்த மின்னணுவின் தன்மையைக் காண முடியும்.

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு
1.அவன் தனக்குள் பெற்ற மகிழ்ச்சி பெறும் உணர்வுகள்
2.உங்கள் உடலுக்குள் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று மகிழ்ச்சியான உணர்வுகள் தோன்றும்
3.உங்கள் உடல்களில் ஊடுருவி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகத் தோன்றும்.
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.

இப்பொழுது அகண்ட வெளியைப் பார்த்தது போன்று உங்கள் உடலுக்குள் இந்த உணர்வலைகள் படர்ந்து வருவதை உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் ஒளியின் சுடராக ஊடுருவதை உணர முடியும்.

சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் எப்படி மற்ற கோள்களில் படும் பொழுது அது மின்னுகின்றதோ உங்கள் உயிரின் உணர்வுகள் இதன் வழி கொண்டு உங்கள் உடலுக்குள் அது மின்னுவதைக் காண முடியும். உங்கள் உடலுக்குள் அந்த ஒளியின் சுடர் தெரியும்.

இப்பொழுது
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… தனக்குள் விளையச் செய்து அந்த உணர்வின் அலையை எமக்குள் பாயச் செய்து
2.நம் குருவின் உணர்வலைகள் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருப்பதை
3.குரு அருளின் துணையால் அகஸ்தியன் உணர்வுகளைப் பெறும் அந்த தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அந்த உணர்வின் அறிவு உங்கள் உடலுக்குள் பதிவாகி அதனின் நினைவாக
1.நீங்கள் எண்ணும் போதெல்லாம் மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் உடலுக்குள் பரவுவதை உணர முடியும்… ஒளியின் சரீரம் ஆவது போன்று…!

அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் பொழுது தாய் தந்தையரைப் பார்த்து நுகர்ந்த…
1.அவர்கள் உடல்களிலிருந்து வெளி வந்த அந்த பச்சிலை வாசனைகளை இப்பொழுது நீங்கள் நுகர்வீர்கள்… நுகரும் ஆற்றல் பெறுவீர்கள்.
2.இது உங்கள் உடலில் உள்ள பல பிணிகளைப் போக்க உதவும்.

அகஸ்தியன் தன் நினைவினைத் தாய் தந்தையர் பால் செலுத்தும் பொழுது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் பொழுது
1.அவன் மகிழ்ச்சி பெற்ற உணர்வுகள் அது எவ்வாறோ அதைப் போன்று
2.அந்த மணங்கள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று “கடும் தீமைகளை அடக்கி…”
3.மகிழ்ச்சி பொங்கும் உணர்வாக… அந்த மகிழ்ச்சியின் பெருக்காகப் பெருகுவதை உணரலாம்.

நாம் மலைப் பகுதிகளுக்குச் சென்றால் ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை நுகர்வது போன்று
1.நம்முடைய சுவாசத்தில் நம் உடலுக்குள் இப்பொழுது அந்த நஞ்சை வெல்லக்கூடிய மூலிகை மணங்கள் சென்று
2.பல அற்புத மணங்களாக உங்கள் உடல் முழுவதும் படரும்
3.உங்கள் நினைவுகள் அனைத்து மகிழ்ச்சி பெறும்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த அண்டத்தினை… அதன் அறிவின் தொடராக அறிந்துணரும் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ளோர் அனைவரும் பெற்று… அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

இது அனைத்துமே முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்பட்டது…! பதிவாக்கி இருக்கின்றேன்…! ஈர்க்கும் சக்தி வரும் பொழுது நினைவுபடுத்தி அதை ஏங்கிப் பெறுகின்றீர்கள்… அதை உணர்கின்றீர்கள்.

பாடநூல்களைப் படித்த பின் இன்னதுதான் என்ற நிலையில் ஒரு பொருளை இணைத்து விஞ்ஞான அறிவில் காண்பது போன்று
1.அகஸ்தியன் கண்டதை எல்லாம் நீங்கள் காணும் நிலை பெறுகின்றீர்கள்.
2.அந்தச் சக்தியாக நீங்கள் மாறுகின்றீர்கள்… மாறுவதற்குத் தான் முதல் நிலையாக இதை உங்களுக்குள் கொடுக்கின்றேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என்னைக் (ஞானகுரு) காசிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சொன்னார் குருநாதர். மோட்சம் கொடுக்கும் இடம் என்று சொல்வார்கள். ஆனால் பார்த்தால் நரகத்தைச் சிருஷ்டிக்கும் இடம் என்று சொல்லலாம்.

கங்கையில் காலையில் பார்த்தோம் என்றால் தலை ஒன்று கால் ஒன்று இதெல்லாம் பாதையில் இழுத்துக் கிடக்கும்.

நாற்பத்து எட்டு நாள் அங்கே இருக்க வேண்டும் என்றும்… அங்கு நடப்பதை எல்லாம் நீ பார்க்க வேண்டும் என்றும் குருநாதர் சொல்லி விட்டார்.

அங்கே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் என்ன…? என்கிற பொழுது காசிக்கு வருபவர்கள் “இறந்தவர்களை மோட்சத்திற்கு அனுப்ப வேண்டும்..!” என்று பிண்டங்களை வைத்துச் சாங்கியம் செய்கிறார்கள்.

அங்கே பூராம் பண்டாக்கள் இருக்கிறார்கள்… எல்லாம் தாதாக்கள் தான். உதவி செய்பவர்கள் ஈசனுக்கு நைவைத்தியம் செய்யக் கூடியவர்கள்

ஈசன் பிறந்த இடம் என்கிற வகையில் எல்லோருக்கும் மோட்சத்தைக் கொடுக்கின்றான்…! என்று சொல்லி எல்லாம் நடக்கிறது.

காசி விஸ்வநாதன் கோவிலுக்கு முன்னாடி கீழே சுரங்கம் மாதிரிப் போகிறது (UNDER GROUND). நான் போன நேரத்தில் உள்ளே பார்த்தால் பிரேதம் மிதந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றது. தண்ணீர் அதிலே அடித்து மேலே பொங்கிக் கொண்டு வருகிறது.

பார்த்தால் இன்னொரு மடத்திலிருந்து பிரேதத்தைத் தண்ணீரில் தள்ளி விட்டிருக்கின்றார்கள். இங்கே வந்து பாதையில் அடைத்துக் கிடக்கின்றது. அப்புறம் அதை எடுக்கின்றார்கள்.

இதே மாதிரி மடங்களில் இருந்தாலும் அங்கே தள்ளிய பின் கங்கைக்கு வந்து விடுகின்றது. இப்படி எல்லாம் தவறுகள் செய்யக்கூடிய சொர்க்க பூமியாக இருக்கின்றது.

இரவிலே என்ன செய்கிறார்கள்…? என்றால் சிவன் உடுக்கையை வைத்து ஆடினான் என்று சொல்லி ஊ…ம் ஊ….ம் ஊ…ம்..! என்று சிவ பூஜை செய்கிறார்கள்,

உடுக்கையை அடித்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சுகின்றார்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்..? என்ற வகையில் அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்…?

தண்ணீரை எடுத்து வந்து சிவலிங்கத்தில் ஊற்றிய பின் பதார்த்தங்களைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அது எல்லாம் பின்னாடி மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது,

அதே மாதிரி சிவனுக்கு ஆராதனைக்காகப் போடப்படும் பூக்களும் மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது. இப்படி எல்லாம் அங்கே தவறுகள் நடக்கின்றது.

சிவன் எப்படி இருக்கின்றான்…? என்று தெரியாது. சொர்க்கத்திற்குப் பதில் நரகமே நடக்கின்றது. பல விபரீத நிலைகள் நடக்கிறது.

நான் (ஞானகுரு) முதலிலே இரயிலில் இங்கிருந்து செல்லப்படும் பொழுது காசியில் காலடி எடுத்து வைத்தவுடனே தமிழிலேயே பேசுகிறான் சாப்பிட வாருங்கள்…! வெறும் எட்டணா தான்…! என்கிறான்.

பரவாயில்லையே… இந்த ஊரில் எட்டணாவிற்குச் சாப்பாடு போடுகிறானே…! என்று நினைத்தேன். ஊரெல்லாம் சுற்றிக் காட்ட என்று என் கூட இரயிலில் ஒருவர் வந்திருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து அங்கே போனோம்.

சாப்பிட ஆரம்பித்தோம். டால் (பருப்பு) என்று எல்லாம் வைத்தான். பில்லைக் கொடுத்தான். சாப்பாடு எட்டணா…! காய் பருப்பு எல்லாம் வைத்தது என்று சொல்லி முப்பது நாற்பது ரூபாய் என்று பில் போட்டான்,

கடைசியில் பில் முந்நூறு ரூபாய். “எட்டணா சாப்பாடு” என்று சொல்லி இப்படிப் போட்டான். எனக்கு முந்நூறு கூட வந்த ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் பில். நான் முழித்துப் பார்த்தேன்.

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் இதே மாதிரி ஒருவன் பில் அதிகம்…! என்று கேட்கிறான். அவனை அடிக்கிறான்.

நீ சாப்பிடுவதற்கு முன்னாடி அல்லவா கேட்க வேண்டும்… சாப்பிட்டு விட்டுக் கேட்கிறாயே…! என்று சொல்லி அந்த ஓட்டல்காரன் அவனை அடிக்கிறான்.

இதைப் பார்த்ததும் நாம் ஏதாவது கேட்டால் நம்மையும் உதைத்து விடுவான் போல… என்ற எண்ணம் வருகிறது. பேசாமல் உட்ககார்ந்திருந்தேன்.

மற்றவர்கள் எல்லாம் பயப்படுகின்றார்கள்.. கேட்ட காசை அப்படி அப்பபடியே கொடுக்கின்றார்கள்.

நான் வந்தேன்… இந்தக் காசை வைத்துக் கொள்..! என்றேன். உன் சாப்பாட்டைப் பார்… எடுத்துச் சாப்பிட்டுப் பார் என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

எல்லாச் சாப்பாட்டையும் சாப்பிட்டுப் பார்…! என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

“கசப்பாக இருப்பதற்கு” நான் எவ்வளவு ரூபாய் கொடுப்பது…! என்று கேட்டேன். அது போக அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் “எல்லாம் கசக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் கசக்கிறது… கசக்கிறது… என்று சொன்னவுடனே இந்தக் காசை வைத்துக் கொள் நான் போகிறேன்…! என்று சொல்லிக் கிளம்பினேன்.

பாபுஜி மாப் கரோஜி…! பாபுஜி மாப் கரோஜி…! (மன்னிப்பு) என்று தன் காதுகளைப் பிடித்துச் சொல்லிக் கொண்டே என் பின்னாடியே ஓட்டல்காரன் வருகின்றான்.

விஸ்வநாதனிடம் போய்ச் சொல்…! நான் அவனைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன் அவன் தான் உனக்கு ஏதோ செய்திருக்கின்றான் ஆகையால் அவனைப் போய்க் கேட்டுக் கொள்..! என்றேன்.

நான் போகும் பொழுதே அவன் (அந்த ஓட்டல்காரன்) பின்னாடியே வந்தான். அங்கே இருப்பவன் என்ன சொல்கிறான்…?

உஸ்ஸ்க்…! உன் கழுத்தை அறுத்துப் போடுவான்… அவன் பின்னாடி போகாதே… என்கிறான்.

கங்கை எங்கே இருக்கிறது…? என்று கேட்டேன். சொன்னான்…! அங்கே போய்க் குளித்தேன். குளித்த பின்னாடி விஸ்வநாதன் எங்கே இருக்கிறான்…? என்றேன்.

இந்தப் பக்கம் இருக்கிறது என்று சந்துக்குள் கூட்டிக் கொண்டு போனான். பாபுஜி மாப் கரோஜி…! என்று சொல்லிக் கொண்டே வந்தான். கசப்பாக இருப்பதை எல்லாம் மாற்றிக் கொடுங்கள்…! என்று கேட்டுக் கொண்டே வருகின்றான்.

நீ வா… விஸ்வநாதனிடம் போய்க் கேட்கலாம்…! என்றேன். அங்கே போனதும் நீ “பேடா” வாங்கிக் கொண்டு வா..! என்றேன்.

பேடாவை விஸ்வநாதனுக்குக் கொடு… நீ சாப்பிட்டுப் பார்… எப்பொழுது இனிப்பு வருகிறதோ அப்பொழுது நீ போகலாம்…! என்றேன்.

அங்கே ஓட்டலில் ஏமாற்றிக் காசு எவ்வளவு வாங்கினானோ அதுவரையிலும் பேடாவை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டே இருந்தான்.

போட்டால் அந்தச் சாமியார் வாங்க மாட்டேன் என்கிறான். இது எதற்குடா வம்பு..? என்று தூக்கித் தூக்கி எறிகிறான். அங்கே இருக்கும் பண்டாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.

திருப்பித் திருப்பி திருப்பி வைத்துக் கடைசியில் நன்றாக ஆனது. சரி விஸ்வநாதன் மன்னிப்புக் கொடுத்தான். நீ இனிமேல் யாரிடமும் ஏமாற்றிக் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டுப் போ….! என்றேன்.

யாரையாவது நீ உதைத்துத் தப்பான வழிகளில் காசு சம்பாரித்தாய் என்றால் உன் வியாபாரமே போய்விடும்..! என்றேன்.

இனிமேல் இந்த மாதிரிச் செய்ய மாட்டேன்…! என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். இது காசியில் நடந்த சமாச்சாரம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply