
ஆன்மாவைத் தூய்மை செய்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுப்பது
ஒருத்தர் என்னைத் திட்டினார் என்று எண்ணப்படும் பொழுது அவன் நினைவே நமக்குள் வருகின்றது. அவன் நினைவு வரப்படும் பொழுது அவன் உணர்வைத் தான் நமக்குள் வளர்க்கின்றோமே தவிர நல்ல குணங்களை நாம் பாதுகாக்கின்றோமா என்றால் இல்லை.
பையன் மேல் பிரியமாக இருக்கின்றோம். அவன் நஷ்டம் ஆகிவிட்டான் என்று எண்ணப்படும் பொழுது அவன் நஷ்டத்தைப் பற்றித் தான் சிந்தித்து
1.“இப்படியே ஆகிக் கொண்டிருக்கின்றதே…” என்று நஷ்டத்தை நமக்குள் வளர்த்து நமக்குள் நோய் ஆக்குகின்றோம்.
2.நமக்குள் விளைந்ததை நம் பையனைப் பற்றித் திரும்ப “இப்படியே செய்து கொண்டிருக்கின்றானே…” என்று எண்ணும் போது
3.அவனும் கஷ்டமும் நஷ்டமும் தான் படுவானே தவிர அவனை மீட்டவும் வழியில்லை… நமக்குள் மீளவும் வழியில்லை.
இப்படித்தான் நமக்குள் அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது. நாம் இதைப் போக்க வேண்டுமா இல்லையா…?
அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதற்கு உங்களுக்குள் பதிவாக்குவது. இதை நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.
அதற்குத்தான் உங்களை ஆயுட்கால மெம்பராகச் சேரச் சொல்வது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் எடுத்து இந்த ஆயுள் முழுவதற்கும்
2.இந்த வாழ்க்கையில் எப்போது துயரங்கள் வருகின்றதோ சங்கடங்கள் வருதோ சலிப்புகள் வருதோ படிக்க முடியாமல் ஞாபக சக்தி குறைகின்றதோ
3.அப்பொழுதெல்லாம் அதை மாற்றிக் கொள்ள முடியும்.
பிறருடைய நிலைகளில் தவறு செய்பவரைப் பார்த்தவுடனே அந்த வேதனை என்ற உணர்வாகப் படும்பொழுது பாலில் விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாதது போல நாம் நுகர்ந்த வேதனை என்ற உணர்வு நம்மைச் சிந்தனையற்ற நிலைகளும் மறதிகளும் வந்து விடுகின்றது. படிக்கிற குழந்தைகளுக்குப். பிறர் செய்யும் தவறுகளை நுகரப்படும் பொழுது அந்த வழியில் சென்றவுடன் அவர்கள் ஞாபக சக்தி இழக்கப்படுகிறது.
இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுது மீண்டும் அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம். இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாமோ எப்படி ரேடியோ டிவிகளில் ஒலிபரப்பாகும் பொழுது எங்கிருந்து ஒலிபரப்பாகின்றதோ எந்த ஸ்டேஷனோ அந்த ஸ்டேஷனில் வைக்கின்றோம். அப்பொழுது அந்த அலைவரிசையில் நாம் பார்க்கின்றோம்.
இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் நமக்கு எப்போது துன்பங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் நமக்குள் தாக்கி இயக்குகின்றதோ அப்பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
2.அதன் உணர்வலைகள் நமக்குள் சென்று நமக்குள் தீமையின் நிலைகளை மாற்றிவிடும்..
ஆக இப்படி நமது வாழ்க்கை முழுவதுமே கஷ்டம் சங்கடம் நோய் இதைப்போல எத்தகைய விதமான உணர்வுகள் தாக்கினாலும் அது நமக்குள் இயங்காது தடுக்கும் வேண்டும்.
இப்பொழுது நமக்கு ஒருவர் தொல்லை கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்காவில் இருக்கின்றார். அவரை நினைக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது நம் காரியம் இங்கேயும் கெடுகின்றது… அங்கேயும் தாக்கப்படுகின்றது.
அவனுடைய நிலைகளில் சாப்பிடும் பொழுது பேசினால் புரை ஓடுகின்றது. இதைப்போல பல நிலைகளில் நம்மைத் தொடர்ந்து இயக்கும் இந்த நிலைகளில் இருந்து மீட்டிக் கொள்ளத் தான் உங்களை ஆயுள் காலம் மெம்பராக சேர்த்தது.
1.என்னை குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராகச் சேர்த்தாரோ
2.அவர் பெற்று உணர்ந்த உணர்வுகள் கொண்டு அகண்ட அண்டத்தை அறியச் செய்தாரோ
3.அதையெல்லாம் உங்களுக்குள் ஒவ்வொரு உபதேச காலங்களில் பதிவாக்குகின்றோம்.
4.அதை வளர்க்க உங்கள் நினைவு தான் முக்கியமாகத் தேவை.
ஆக ஒவ்வொரு நிமிடமும் துயரமான உணர்வைக் கேட்டறியும் பொழுது அதை மறக்கச் செய்ய ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இதைச் சேர்த்து அதைத் தூய்மையாக்கப்படும் பொழுது அந்த இரத்த நாளங்களிலே கலந்த பின்… எப்படி தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகின்றதோ… இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏங்கி நம் இரத்த நாளங்களில் அதிகமாகக் கலக்கச் செய்யும் பொழுது இப்பொழுது நமது அணுக்களில் அதைக் குறைக்க உதவும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.