சப்தரிஷிகளின் செயல் நிலை

சப்தரிஷிகளின் செயல் நிலை

 

ஆதி சக்தியின் ஜீவ சக்தி தான் அனத்துமே. அஜ்ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி வளர விடுகின்றாள். அவ்வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருள் சக்தியின் அச்சக்தியுடனே ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.

இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கொருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பு அல்ல,
2.அவரவர் எடுத்து சுவாச நிலை ஒன்று அமையப்பெற்றது.

நல்லவரின் எண்ணத்தை அச்சக்தியின் நிலையுடன் சக்தியை ஈர்த்து அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி அதன் வழித் தொடரிலேயே ஆத்மாவிற்கு நற்சக்தி கூடி பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்றவனாய் ஆண்டவனாய் இன்று சப்தரிஷி நிலை பெற்ற பக்குவம் பெற்ற மகான்கள்.

இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெற்று நல் ஆத்மாக்களாக தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக மனித ஆத்மாக்களின் அவ்ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து மற்ற மனித ஆன்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி நல் உணர்வுகளைப் பக்தி என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.

அந்நிலை பெற்று வழி வந்த பல மனித ஆன்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு செயல்படுகின்றன…?

முந்தைய பாடங்களில்
1.இயேசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் பக்தி கொண்டு வெளி வந்தவர்களின் நிலை எல்லாம் உணர்ச்சி வந்தேன்.
2.இவர்களின் உடலை ஒரு சப்தரிஷி கொண்ட முனிவரின் ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.

பிற உடலில் அவ்ஆதி சக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால் இவ்வுலகிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி அருள் புரிந்த பிறகு அந்த உடலின் ஆத்மாவின் நிலை என்ன…?

ஒவ்வொரு உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில உடல்களை அவ்உடலில் இருந்து அந்த உயிராத்மா பிரிந்த பிறகு கட்டையான ஜீவனற்ற உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.

உயிராத்மாவுடன் உள்ள உடலில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில் அந்த உடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?

இராமகிருஷ்ண பரமஹம்சர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்கு உகந்த ஆத்மாவாகத் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?

அதற்குப் பிறகு இவரின் உயிர் ஆத்மாவின் நிலை என்ன…?

இவரின் உடலில் இருந்து அந்த உடல்நிலை கெட்ட பிறகு அந்த உடலில் இருந்து கொண்டு அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர் சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்ஆத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை அந்த உயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்திற்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல அந்த ரிஷி வேற இல்லை என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல்நிலை கொள்கின்றது.

இப்படித்தான் இச்சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன் வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்

போகருக்குக் குருவாக அருள் பெற்ற காளிங்கராயச் சித்தரின் நிலையும் இன்று அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாகக் கலக்க போகருக்கு தீட்சை தந்து அவர் நிலையில் முருகா என்ற மந்திரத்துடன் அவருடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளிவட்டமாகத் தனதாகப் பல சக்தியை ஈர்த்து “இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக்கதிர்களைச் சேமித்து செயல் கொண்டு வருகின்றார்…”

மனித ஆத்மாக்களில் மட்டும் எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை.
1.சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலை உண்டு.
2.ஆனால் அவர்களின் நிலையில் நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல்படுகின்றது.

மனித ஆத்மாக்களுக்குத் தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத் தெரியவில்லை. நல் உணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசை இல்லை. அன்பென்னும் நிலையைச் சிதற விட்டு வாழுகின்றனர்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply