விஞ்ஞானத்தின் அறியாமையினால் மனித இனம் உருவாவதே குறைந்து கொண்டு வருகிறது

விஞ்ஞானத்தின் அறியாமையினால் மனித இனம் உருவாவதே குறைந்து கொண்டு வருகிறது

 

இன்று உணவுக்காக என்று சொல்லிக் கொண்டு கோழி முட்டைகளை நிறைய உருவாக்குகின்றார்கள். அதாவது…
1.ஆண் இணைப்பு இல்லாதபடி கருவுறச் செய்கிறார்கள்…
2.கோழி முட்டை இடுகின்றது… ஆனால் அதிலே குஞ்சுகள் பொரிப்பதில்லை.

ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை வரும்

செடி கொடிகளில் எடுத்துக் கொண்டாலும் ஆண் இனம் இல்லாதபடி உரம் கொடுத்து செடிகளை விஞ்ஞானிகள் வளர்க்கின்றார்கள்.

ஆண் இணைப்பு இல்லாது இருந்தாலும் அது ஒரு சீராக வளரும். ஆனால்
1.அதை உணவாக உட்கொள்ளும் நிலையில் மனிதரோ அல்லது மற்ற எந்த உயிரினமாக இருந்தாலும்
2.அதனின் அணுக்கருக்கள் இணைத்துத் தன் இனத்தைப் பெருக்கும் நிலைகள் உருவாகாது.

ஆக விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் உருவாக்கும் அது போன்ற உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்று உலகெங்கிலும் சரி… பெரும்பாலானோருக்குத் தன் இனக் குழந்தைகளை உருவாக்கும் சக்திகள் அந்த ஆற்றல்கள் குறைந்து விடுகின்றது.

1.இப்படி விஞ்ஞான அறிவால் கற்றுணர்ந்த உணர்வுகள்… நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம்மை அறியாதபடி எத்தனையோ வகைகளில் நமக்குள் தீமைகளாக வந்து சேருகின்றது.

குழந்தை இல்லை என்றால்… எனக்குக் குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே…! என்ற வேதனை உணர்வுகளைச் சுவாசித்து அவர்கள் அதை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

“இல்லையே…” என்று வேதனை உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது உடல்களிலே விஷம் கொண்ட அணுக்கள் வளர்ந்து விடுகிறது. இந்த விஷம் கொண்ட அணுக்கள் கூடும் பொழுது இன விருத்தியும் இல்லாது போய் விடுகின்றது.

ஏக்கத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை மரணம் அடையும் அளவுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. எனக்குக் குழந்தை இல்லை…! அதனால் நான்கு பேர் என்னை அவமானமாகப் பேசுகின்றார்கள்… என்ன வாழ்க்கை…? என்று வெறுத்துத் தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

தன்னை ஏளனமாகப் பேசுகிறார்கள் என்ற அந்த எண்ணத்தில் மரண பயம் ஏற்படும் போது நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலில் விளைந்து விடுகிறது.

1.எத்தனையோ கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில்
2.இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் தாக்கப்பட்டு மரண பயத்திற்கு அழைத்துச் சென்று
3.மனித உடலை அழித்திடும் உணர்வுகள் இங்கே விளைகின்றது.

இதைப் போன்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும்.

அந்த அருள் ஞானிகள் உணர்வை எடுத்து அருள் ஞானத்தை வளர்க்கும் நிலையும் எத்தகைய நஞ்சினையும் மாற்றிடும் உணர்வுகளையும் உங்களுக்குள் வளர்த்திடல் வேண்டும்.

தீமைகளை அகற்றிடும் மெய் ஞானிகள் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து “விதியை அந்த மதி கொண்டு வெல்ல வேண்டும்.

குழந்தை இல்லையே என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இது விதி ஆகிறது. இதை மாற்றி அமைக்க
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவேன்
2.என் உடலுக்குள் அந்த வலு கொண்ட அணுக்கள் வளரும்…
3.குழந்தையை உருவாக்கும் அணுக்கள் உருவாகும் என்று உங்கள் எண்ணத்தினால் நீங்கள் இதை எண்ணிப் பாருங்கள்.

இப்பொழுது உபதேசிக்கும் இந்த உணர்வுகள் வாயிலாக அதை நுகர்ந்தறியும் போது உங்கள் உடலில் அருள் ஞான உணர்வாகப் பெற்று… தன் இனத்தின் தன்மை கருவாக உருவாக்கும் அந்த ஆற்றல் பெறுகின்றீர்கள்

மகரிஷிகளை அருள் சக்தி பெறுவேன்… என் உடல் முழுவதும் அது படரும்… என்னை அறியாத இருள் நீங்கும். மகரிஷிகளின் அருள் உணர்வால் புத்திர பாக்கியம் பெறும் சக்தி கிடைக்கும்.

கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை
1.தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.தன் மனைவிக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இருவருமே இதை எண்ணி ஏங்கினால்
3.நிச்சயம் அந்த அணுக்கருக்கள் உடலில் கூடும்
4.குழந்தையும் உருவாகும் உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply