
விஷத்தின் இயக்கமும்… விஷத்தை முறிக்கும் அதனின் சில செயலாக்கங்களும்
மாமரத்தின் சத்தும் ரோஜாப் பூவின் சத்தும் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பவசத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலவையாகி… புவியின் ஈர்ப்பிற்குள் சிக்கப்பட்டுக் கருவுற்றுச் செடியாக விளையப்படும் பொழுது அரளிச் செடியாக மாறுகின்றது. அந்த மூன்றும் ஒன்றாக இணைந்து அரளிச் செடியாக மாறுகின்றது.
அரளிச் செடியாக மாறும் பொழுது
1.மாமரம் போல் இலைகள் இருந்தாலும் அதிலே சில வித்தியாசங்களும்
2.ரோஜாப் பூவைப் போன்று இருப்பினும் மணமும் கொண்டாலும்
3.விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது அந்தச் செடி விஷத்தன்மை கொண்டதாகி விடுகிறது.
விஷச் செடியின் சத்து பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்து மூன்று சதவீதம் மாமரத்தின் சத்து பத்து சதவீதம் கவரப்பட்டு இந்த உணர்வுகள் ஒன்றாக இணைந்து ஒரு வித்தாக பூமியிலே பதியும் பொழுது “அதனதன் சதவீதம்” காற்றிலிருந்து இழுத்து அரளிச் செடியாக விளைகின்றது.
செடி உருவான பின் அந்த அரளிப் பூவில் ரோஜாப்பூ போன்ற மணங்கள் வரும்.
1.அரளிப் பூவைச் சாப்பிட்டால் மயக்கம் வரும்
2.அரளி விதையை உட்கொண்டால் மனிதனை மாய்த்துவிடும்.
3.ஆனால் அரளிச் செடியின் மணத்தை நுகர்ந்தால் “நம் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களைக் கொன்று விடும்…”
இதிலே இத்தனை வித்தியாசங்கள் உண்டு…!
அந்த அரளிப்பூக்களை எடுத்து சூரிய புடமாக்கி… தேங்காய் எண்ணெயில் கலந்து அதைக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிலருக்குக் கால்கள் வீக்கமாகி நீர் வடியும்…
1.அந்த இடங்களில் காய்ச்சிய இந்த எண்ணையைத் தடவினால் அரிப்பு நின்றுவிடு.ம்
2.நீராக வடியும் அந்த இடத்திலிருக்கக்கூடிய விஷத்தன்மைகளும் மடிந்து… அந்தத் தோல் நன்றாக ஆகிவிடும்.
அந்த அரளியிலேயே ஓரடுக்கு அரளி… பல அடுக்கு அரளி என்றெல்லாம் உண்டு.
நம்மை அறியாது தோலில் சேரும் சில விஷத்தன்மைகளால் இதனுடைய மணம் பட்ட பின் அது தோலை உருவக்கிய நல்ல அணுக்கள் மடிவதும்… அதனின் மலம் பட்டபின் தசைகள் குறைவதும் நீராக வடிவதும்… அந்த நீரையே உணவாக எடுத்து உட்கொள்ளும் நிலை பெறுகிறது (தோல் சம்பந்தப்பட்ட வியாதி).
அத்தகைய அணுக்கள் மடிந்தால் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொள்கிறது. பின் அந்த மனிதனுடன் யாரெல்லாம் தொடர் கொண்டு பேசுகின்றார்களோ அல்லது பழகுகின்றார்களோ
1.அவருடைய சுவாசத்திற்குள் அந்த விஷ அணுக்கள் சென்று உடலில் அரிப்புத் தன்மையாகி
2.சுவாசப் பைகளிலும் அரிப்பாகி… தன்னை அறியாது வேதனைப்படும் நிலை வரும்.
ஒரு மனிதனில் விளைந்த அந்த நோயின் உணர்வு இங்கே வந்து விடுகின்றது. ஏனென்றால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட அத்தகைய உணர்வுகளை நாம் நுகரப்படும் போது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது… நோயாக உருவாக்கி விடுகிறது.
இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய செயல்கள். இதையெல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.
குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.
1.வாக்குடன் கொடுக்கின்றேன்… புரிந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

சுவாசத்தின் மூலம் (காற்றிலிருந்து) உணவை எடுப்பதே பேரின்பச் சுவை
சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.
எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”
உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.
காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.
பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”
ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.
இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.
ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.
ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.
சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!
சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

இராவணன் + ஈஸ்வரன்… “இராவணேஸ்வரன்” என்பதன் உட்பொருள்
தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.
அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.
இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.
அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?
சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.
உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது
1.உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தையும் காட்டி
2.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
3.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்று தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.
இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள் பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.
உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.
தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.
ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.
அது மட்டுமல்ல…!
1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.
தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.
3.ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

நம்முடைய கடைசி எல்லை
மீண்டும் மீண்டும் யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை…
2.அவர்கள் வழியிலேயே அதை அறிந்து… நாம் எவ்வாறு வாழ வேண்டும்…?
3.இந்த வாழ்க்கையில் எவ்வாறு தெளிவுடன் செயல்பட வேண்டும்…?
4.இந்தப் பிறவிக்குப் பின் அடுத்து நாம் எந்த உடலைப் பெற வேண்டும் என்பதனைத் தான்…!
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… சந்தர்ப்பத்தால் அவனுக்குள் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்.
அந்த உணர்வின் துணை கொண்டு “வான இயலின்” ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து… அது “புவி இயலாக” மாறும் பொழுது தாவர இனங்களாக உருவாகுவதையும்… அந்தத் தாவர இனங்களின் சத்தினை உயிரணுக்கள் (உயிர்கள்) நுகர்ந்து தனக்குள் அணுக்களாக மாற்றி உடல்களாக உருவாகுவதையும்… “உயிரியலாக” மாறுவதையும் அறிந்துணர்ந்தான்.
அதே சமயத்தில்
1.உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்ற பின்
2.அதனுடைய கடைசி முடிவு… அதனுடைய கடைசி எல்லை எது…? என்பதனையும் அகஸ்தியன் அறிந்து கொண்டான்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி பேரருள் பேரொளியாக துருவ நட்சத்திரமாகி… துருவத்தை எல்லையாக வைத்து இன்றும் தனது வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டு… அகண்ட அண்டத்திலிருந்து வருவது அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக…!
அதாவது உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி… அதையே கடைசி எல்லையாகப் பிறவி இல்லா நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.
அவனின்று விளைந்த உணர்வுகளை… அவனுக்குப் பின் வந்த மக்கள் யார் யாரெல்லாம் அதை நுகர்ந்து கொண்டனரோ… ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக மாற்றும் திறன் கொண்டு… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர்.
ஆதியில் விண் சென்ற முதல் மனிதனான அகஸ்தியன்
1.அவன் வாழ்ந்த காலத்தில் தன் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்தினானோ அவன் வழிப்படி நாமும் சென்றால்
2.மனிதனின் கடைசி எல்லையான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடையலாம்
3.இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றும் நிலை கொண்டு வாழலாம்.
உயிரணு தோன்றி மனிதனான பின் உணர்வினை ஒளியாக மாற்றி அமைத்து உயிருடன் ஒன்றி வாழும் துருவ மகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து… நாம் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டதில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ முடியும்.

“மாயமான்” என்னும் உலக மாயை – ஆசை வழி இழுக்கும் உணர்வுகளின் உந்துதல்
இராமன் என்றும் லட்சுமணன் என்றும் சீதை என்றும் அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் (உபதேசம்) கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.
ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வந்ததும் எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் ஆசை நிலையைச் சித்தரிப்பதே “மாயமான்…!”
அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வேரூன்றி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை. “ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.
உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)
ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாகப் பொருள்படுத்தியது…!”
1.எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்
2.வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!.
3.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
4.அந்த உலகோதய ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
5.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.
ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.
அதாவது மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டித் தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி… ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் உலகோதய “அதி ஆசை நிலை…!”
4.இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”
மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி மாயமானாகிய அதி ஆசை நிலையைத் தான் தகர்க்கின்றது. ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தியூட்டியதாகச் சொல்லப்படுகிறது.
எப்படி…?
உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.
ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.
அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.
அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலகோதய ஆசை நிலையாகிய மாய மான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…! ஏன்…?
காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!
அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)
உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
1.மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக
2.தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும்
3.எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டி
4.உயிரான்மாக்கள் பெறும் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
5.மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…! என்று அருளியுள்ளார் அந்த வான்மீகி மாமகரிஷி…!

உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது… உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது
ஆற்றிலோ அல்லது ஒரு குளத்திலோ (நீருக்குள்) ஒரு கல்லினைப் போட்டால் அந்த இடத்தில் பளீர் என்று விலகிக் கொள்ளும். அடுத்து அது மூடிக்கொள்ளும்.
அது போன்று தான்
1.பக்தி மார்க்கத்தில் மூழ்கிய நிலைகள் கொண்டு உண்மைகளை மறைத்த நிலைகள் கொண்டு
2.அந்த ஞானிகள் உணர்த்திய உண்மைகளைச் சொல்லி அதற்குண்டான விளக்க உரைகளை இப்போது யாம் (ஞானகுரு) கொடுத்தாலும்
3.கேட்கும் பொழுது பளிச்… என்று அலைகள் உங்களுக்குள் படர்கிறது.
4.ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் மூடி சம நிலை அடைந்து விடுகின்றது.
நல்ல உணர்வுகள் மறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமையின் நிலைகள் வளராது உடனுக்குடன் அதைத் தடுப்பதற்குத் தான் இதனை உங்களுக்குள் அறிவிப்பது.
ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் எங்கு சென்றாலும் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து உள்முகமாகச் செலுத்தி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி ஐந்து முறை ஆறு முறை உள்ளே சக்கரம் போன்று சுழற்றுங்கள்.
3.உங்கள் ஜீவான்மாக்களைச் சுத்தப்படுத்துங்கள்… உங்களுக்கு முன் இருக்கக்கூடிய ஆன்மாவைச் சுத்தப்படுத்துங்கள்
தொழிலோ மற்ற எந்தக் காரியங்களோ அங்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
எங்களுடன் தொழில் செய்பவர்கள் எங்களிடம் வேலை செய்வோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிலை வளம் பெறச் செய்ய வேண்டும்… அறியாது சேர்ந்த இருளை நீக்கும் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்…! என்று ஆன்மாவை அடிக்கடி இப்படி எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கை வாழ்ந்தால் என்றுமே அது மகிழ்ந்து வாழும் சக்தியாக அமையும். வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிட முடியும்.
அதே போல் உங்கள் குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை நிவர்த்திக்கும் பழக்கம் வர வேண்டும்.
1.இந்த உடல் உங்களது அல்ல
2.எண்ணும் எண்ணம் உங்களது அல்ல
3.உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது
4.உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது
5.அறிவின் உணர்வாகத் தான் நம் உணர்வின் தன்மை செயல்படுகின்றது.
ஆகவே அந்த ஞானிகள் காட்டிய அருள் உணர்வுடன் ஒன்றுவோம் அருள் ஞானிகள் பெற்ற ஆற்றலை நாம் பெறுவோம். அறியாது வந்த தீமைகளை அகற்றுவோம்.
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தை எல்லையாகக் குறி வைத்து
2.இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.
அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட எமது குரு அருளும் எமது ஆசியும் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். உங்களை அறியாத வந்த தீமைகள் அகன்று… மெய் உணர்வுடன் ஒன்றி… பேரானந்தப் பெருநிலை பெறுவீர்கள் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு).

விஞ்ஞான உலகில் “நரகலோகத்தைச் சந்திக்கிறோம்” என்று கண்கூடாகவே பார்க்கின்றோம்
விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். உடல் பற்றுடன் இருப்போம் என்றால் மருத்துவமனைகளில் இன்று பார்க்கலாம்… ஒரு மனிதனுக்குக் கேன்சர் வந்து விட்டால் எத்தனை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்…?
நோயைக் கண்டுபிடிப்பதற்காக மனம் உவந்து
1.மூக்கிலும் வாயிலும் மற்ற இடங்களிலும் டியூபுகளைச் சொருகுவதும்
2.தலையோ மற்ற இடங்களில் உள்ள உறுப்புகளை அறுத்துப் பரீட்சிப்பதும்
3.சில நேரங்களில் அந்த உறுப்புகளை அகற்றி மாற்று உறுப்புகளையும் வைத்துச் செயல்படுத்துகின்றார்கள்.
4.எத்தகைய நரகலோகத்தைச் சந்திக்கிறோம் என்று பாருங்கள்.
இதை எல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆனால் ஞானிகள் அன்றே இதைக் காட்டினார்கள். சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று…!
கண்களால் பிறரை உற்றுப் பார்த்து பரிவுடன் அவர்கள் வேதனைகளைக் கேட்டறிந்தாலும்… கண்களால் பார்த்து நுகர்ந்த அவருக்குள் விளைந்த (வேதனை) உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது அது புத்திரனாக… அணுக்களாக இங்கே வந்துவிடுகிறது.
அவன் கஷ்டப்படுகிறான்… கஷ்டப்படுகிறான்… என்று
1.பாசத்தால் நாம் சொன்னால் பாசக் கயிறாக வழி தொடர்ந்து சிந்திக்கும் திறன் அனைத்தும் இழக்கப்பட்டு
2.எமன் எருமை மீது வாகனமாக வருவது போன்று சிந்தனையற்ற நிலைகள் ஆகி
3.தீய வினைகளாக நம் உடலில் அது விளைந்து உறுப்புகள் கெடுகிறது.
அந்த உறுப்புகளைச் சீர்படுத்த நாம் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்று அந்த எமலோகத்தைக் காட்டியிருப்பார்கள்.
அதாவது… நம் எண்ணமே தீமைகளை விளைய வைக்கும் உறைவிடமாக எமலோகமாக மாறி… நல்ல உணர்வுகளை அது எப்படி அழிக்கின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்காகக் காவியமாக எடுத்துரைத்துள்ளார்கள். நாம் எளிதாகப் புரிந்து கொள்வதற்குப் படங்களாகவும் வரைந்து காட்டி உள்ளார்கள்.
எமலோகத்தின் செயல்கள்…
1.எமன் அழைத்துச் சென்ற பின் எண்ணெய்க் கொப்பரையில் போட்டு ஆட்டுவதும்
2.மண்டையை ரம்பத்தை வைத்து அறுப்பதும் கை கால்களைத் துண்டிப்பதும்
3.தலைகீழாகத் தொங்க விடுவதும் நெருப்பிலே வைத்து எரிப்பதும் போன்ற எத்தனையோ நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்து எத்தனையோ நிலை நமக்குள் விளைந்தது… இந்த உடல் என்ற சொர்க்கலோகத்தில்… எண்ணத்தால் எமலோகத்திற்குள் சிக்கி அறியாமலே நம் உடலுக்குள் எத்தனை அறுவை சிகிச்சைகள் (ண்ஹரக வேதனைப்படும்படியாக) நடக்கிறது…? அன்று மெய் ஞானிகள் காட்டினார்கள்.
விஞ்ஞான அறிவால் கண்கூடாக நம் உடலுக்குள் அனுபவிக்கின்றோம்.
உடல் இந்த சொர்க்கலோகத்தை நாம் மறந்திடலாகாது. அதிலே நாம் எண்ணியது அனைத்தும் இந்திரலோகமாக மாறி உடலாக மாறிக் கொண்டுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.
1.மெய் உலகான அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நீங்கள் ஒன்றி வேகா நிலை என்ற முழுமை அடைந்திட
2.என் குருநாதர் காட்டிய நிலைகளை உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.
3.இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்தியை
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).
எல்லோரும் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தியை அவர்களுக்குள் விளைய வைத்து என்று நீ செயல்படுகின்றாயோ
1.அந்த உணர்வுகளால் நீயும் உயர்ந்த நிலை பெறுகின்றாய்
2.அவர்களும் உன்னுடன் ஒன்றி வருகின்றார்கள்.
3.அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் மகிழ்ந்து வாழும் நிலை பெற வேண்டும்.
இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார். அவர் காட்டிய நெறிகளைக் கடைப்பிடித்து… பத்தாவது நிலையான கல்கி என்ற “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது. நம் பூமி துருவத்தின் வழி அதை இழுத்துக் கவர்கிறது. “துருவத்தில் அந்த அடர்த்தியின் தன்மை அடைகிறது…!”
அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருள் பேரொளியை
1.அந்த நேரத்தில் நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.
நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் கணங்களுக்கு அதிபதி கணபதியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிபதியாக்கிடல் வேண்டும்.
அப்பொழுது நாம் சுவாசித்த உணர்வு நந்தீஸ்வரன் அதனின் உணர்வின் இயக்கமாகத் தீமையை நீக்கிடும் உணர்வாக நமக்குள் உருவாகிறது.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வது போல்
1.தீமையை நீக்கும் உணர்வின் கணக்குகள் கூடி
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்வோம்.
குருநாதர் காடு மலைகள் எல்லாம் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.
1.அதை நுகரும் போது உன் உடலுக்குள் மாறுபடும் உணர்வுகள் எப்படி வருகிறது…?
2.பயத்தின் எல்லை கடந்து செல்லும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி இயக்குகிறது…?
3.உன் உடலில் பதட்டங்கள் எப்படி வருகிறது…? சிந்தனைகள் எப்படிச் சிதறுகிறது…?
4.சிந்தனையில்லாத நிலையில் உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் வருகிறது…?
5.உடலில் இரத்த அழுத்தங்கள் (BLOOD PRESSURE) எப்படி அதிகமாகிறது…?
6.அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு எப்படி மாற்ற வேண்டும்…? என்று நேரடியாக அனுபவ வாயிலாகத் தெளிவாக்கினார்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். அது பதிவானால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் கூடும்.
1.நாம் தவறு செய்கின்றோமா…?
2.நாம் நுகர்ந்த உணர்வு தவறு செய்ய வைக்கிறதா…? என்று
3.நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஏனென்றால் ஞானத்தின் வழியில் நீங்கள் வழி நடந்து தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் எனக்குக் குருநாதர் எப்படி உபதேசித்தாரோ அதே உணர்வைப் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து பதிவாக்க வேண்டும்.
1.உங்கள் உயிர் கடவுள்
2.உங்கள் உடல் ஆலயம்
3.ஆண்டவன் வீற்றிருக்ககூடிய அந்த ஆலயத்தில் அருள் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது
4.இதை நீங்கள் உற்றுக் கேட்டு நுகர்ந்தால் தீமைகளை அகலச் செய்யும்…
5.உங்கள் உடலான ஆலயத்தைப் பரிசுத்தமாக்கும்.
அத்தகைய தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மை உங்களுக்குள் அணுக்களாக விளையும். பரிசுத்தமான எண்ணங்களை உங்களுக்குள் தோற்றுவிக்கும்.
ஆகவே உங்கள் உயிரான கடவுளை நீங்கள் மதிக்க வேண்டும்.
1.அவன் வழியே அவனுடன் சேர்த்து ஒளியின் உணர்வாக இருந்து
2.இருளை நீக்கிப் பொருளைக் காணும் செயல்படுத்திய அந்த உணர்வுடன்
3.நீங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.
நீங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) சொல்லும் பொழுது எனது ஈசனும் அதே வழியில் செயல்படுத்தும்.
எத்தனையோ பேரிடம் பழகினாலும் அவர்களும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… பொருள் காணும் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நான் என்னும் இந்த உணர்வுகளை உயிரான ஈசன் எனக்குள் இதை உருவாக்குகின்றான்.
அதே வழியில் நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள். பேரானந்த நிலை பெறுவீர்கள்.
இந்த உடல் நமக்குச் சதமல்ல… ஆனால் உயிர் அழியாதது….! அதைத் தான் நாம் சொந்தமாக்க வேண்டும். உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக்கி அதைச் சொந்தமாக்க வேண்டும்.
1.ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
2.நமக்குள் செருகேற்றிக் கொள்ள வேண்டும்… உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.


தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்
எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி…!”
கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?
சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.
பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்…!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது…! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)
அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)
வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.
ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.
உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.
மனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகியார் காட்டினார்.
அனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் ஒளி காந்தம். உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.
எண்ணங்களின் எதிர் மோதல்களிலிருந்து எப்படித் துன்பமுறா மனப்பாங்கு கொண்டு நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் அது…!”
1.மனிதன் பெறும் பெற வேண்டிய உயர் நிலை என்ன…? என்பது பற்றி
2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி)
3.ஓர் சல்லடையாகச் சலித்துப் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…!”
4.எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.
5.அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் வான் இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

நம்முடைய தினசரி தியானம் எந்த அடிப்படையில் இருக்கிறது…?
மனித வாழ்க்கையில் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அதனின் இயக்கச் சக்திகள் மறைந்து நஞ்சுக்குள் சிக்கித் தவிக்கும் நிலைகள் வந்து விடுகின்றது.
இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எத்தனையோ காவியங்களை ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.
ஆனால் ஆறாவது அறிவைப் பயன்படுத்த முடியாது அதை இழந்ததனால் இன்று எவரோ செய்வார்… தெய்வம் செய்யும்… ஜோதிடம் செய்யும்… காலங்கள் செய்யும்… யாகங்கள் செய்யும்… சாமியார் செய்வார்… மற்றவர்கள் செய்வார்கள்…! என்ற இத்தகைய எண்ணங்களைத் தான் பரப்பி வைத்திருக்கின்றோமே தவிர “தன்னை நம்பப் பழகவில்லை…”
ஏனென்றால் நாம் எத்தகைய உணர்வை நமக்குள் இணைக்கின்றோமோ நமது உயிர் அதை இயக்கி நமது உடலாக மாற்றி விடுகிறது. அதாவது
1.நாம் எண்ணிய உணர்வுகளை வித்தாக (வினையாக) மாற்றி அந்த வித்தின் நிலையை இயக்கி
2.நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி அதே உணர்வின் உடலாக இயக்கி
3.அந்த உணர்வின் சத்துக்களாக நமக்குள் எவ்வாறு விளைகிறது என்ற நிலையை
4.ஞானிகள் தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தாலும் அதனை அறியாது இன்றும் இருக்கின்றோம்.
மற்ற உயிரினங்கள் அதனுடைய (எண்ணத்தால்) தியானத்தால் மனிதனாக வளர்ச்சிக்கு வருகின்றது. அப்படித் தான் நாம் வந்துள்ளோம். ஆனால்
1.மனிதனான பின் தீமைகள் அகற்ற முடியும்
2.மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உயர்ந்த நிலைகளை உருவாக்க முடியும் என்று இருந்தாலும்
3.இப்போது நாம் எதைத் தியானிக்கிறோம்…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நமது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதே சமயம் குழந்தை நாம் எண்ணியபடி கல்வியில் சிறந்து வரவில்லை என்றால் அவனைக் கண்டு “இவன் இப்படி இருக்கின்றானே… அவன் எதிர்காலம் என்னவாகும்…?” என்று வேதனைப்படுகின்றோம்.
இந்த வேதனையை மீண்டும் மீண்டும் எடுத்து அவனிடம் கடிந்து இரண்டு தரம் அழுத்தமாகப் பேசும் பொழுது அவன் நம் மீது பாசமாக இருக்கும் உணர்வுகளுடன் கலந்து விடுகிறது.
1.நமக்குள் விளைய வைத்த வேதனையான நஞ்சை அவனுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.நம் சொல் கடினமாகி அவனுக்குள் அவன் அறியாது இயக்க நிலைகள் தடையாகி
3.உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்ற குறைபாடோ வந்து விடுகிறது.
ஆனால் அவன் தவறு செய்யவில்லை… நம்முடைய நிலைகள் இவ்வாறு ஆகிவிடுகிறது. இந்த மாதிரி நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆனால் என்ன செய்கின்றோம்…!
குழந்தையை எண்ணி எண்ணி இப்படி ஆகிவிட்டானே என்று வேதனையை பாய்ச்சியபின் அந்தக் காய்ச்சலாகும் போது நமக்குள் வேதனை இன்னும் அதிகரிக்கிறது.
அவனைக் காத்திடும் நிலை கொண்டு… “வேதனைகளையே” நமக்குள் சமைத்துச் சமைத்து அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம்.
அவன் காய்ச்சலாக இருக்கப்படும் பொழுது “டேய் கண்ணு… கொஞ்சம் சாப்பிடுடா…!” என்று சொல்கின்றோம்.
அந்த வேதனையால் அவனால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால்… “சாப்பிட வேண்டும்…” என்று அழுத்திச் சொல்லப்படும் போது இன்னும் கொஞ்சம் அவனுக்கு வேதனை அதிகமாகி “நீ போ…” என்று வேகமாகச் சொல்லி விடுகின்றான்.
நாம் அதைக் கேட்ட பின்… அடப் பாவமே… அவன் சாப்பிடவில்லையே இரண்டு நாட்களாகி விட்டது… மூன்று நாட்களாக ஆகிவிட்டதே…! என்ற தாய்ப் பாசத்தால் இந்த உணர்வை நுகர்ந்து
1.அங்கே விளையும் நஞ்சினை இங்கே வித்தாக விளைய வைத்து
2.அவனை எண்ணும்போதெல்லாம் இது ஒரு தியானம் தான்.
இப்படி இருக்கின்றானே…! அவன் என்ன ஆவான்…? என்ற இந்த வித்தினை உருவாக்கி… அந்த உணர்வின் சத்தை நமக்குள் கருவாக்கி… அவனின் நிலையைத் தியானித்து… அந்தத் தீய வினையே நமக்குள் உருவாகிவிடுகிறது.
நாம் தவறு செய்யவில்லை அவனும் தவறு செய்யவில்லை
1.அவன் உயர வேண்டும் என்ற எண்ணத்தை வைத்தோம்
2.உயர வேண்டும் என்ற “செயலை” நமக்குள் வைக்கவில்லை.
பால் சத்தாக இருந்தாலும் அதற்குள் நஞ்சினை விட்டால் அது அந்தப் பாலைச் செயலற்றதாக ஆக்குவது போன்று “நம்முடைய நல்ல உணர்வுகள்” நாம் நுகர்ந்த உணர்வுகளால் நஞ்சாகப் பாய்ந்து… நஞ்சின் செயலாகவே மாறி விடுகின்றது.
இப்படித்தான் இன்று
1.குறைகளை எண்ணி எண்ணி அதையே தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.
2.ஆகவே நாம் எதைத் தியானிக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

காமாட்சி
காமத்தின் அடியாகப் பிறக்கும் “மோகம்…” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளை தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.
1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் தொட்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் வழியமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட
5.சபலம் (மோகம்) தானே தன் வழி செல்லா நிலையில் மறைந்து விடும்.
குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் சபலத்தின் வழியில் சிக்காதபடி பயிற்சி வழி முறைகளைக் காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குண செயல்பாட்டையும் போதிப்பார்.
அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் காவியம் இராமாயணத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்…!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்…!” என்றும் காட்டுகிறார்கள்.
அதனின் உட் கருத்து
1.ரிஷித் தன்மை பெற வழி காட்டும் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி
2.ரிஷி பத்தினி சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.
விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.
ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்…” அதையே “காமாட்சி…” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமுமே.
ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்…?
அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.
அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைச் “சாப நீக்குப் படலம்…” என்று செயல்படுத்தி ரிஷி பத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.
கௌதம முனிவருக்குத் தன் நிலை உயர்த்த ரிஷி பத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனதால்
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்…! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!”
சபல குணம் என்று உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.
சபல குண வலையில் விழுந்ததால்… தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்… இந்திரனால்… “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்…” என்பது மோக குணத்தால் தான்…!
1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை…!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!
ரிஷி பத்தினி என்ற சிறப்பை
1.அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுது தான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்பதையும்
2.சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வான இயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி
3.உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.
இதே தொடர்பை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.
அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியூட்டித் தானும் அந்த முனிவனின் சக்தியுடன் ஒன்றுதல் என்பதே
1.பால்வெளி சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் தான் ரிஷி பத்தினிச் சக்தியாகக் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும் என்று காட்டுகின்றார்.
இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே… பலர் “சபல குணத்தை இந்திரன்…” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.
இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன…?
அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.ஜெபம் என்ற வழி முறையை… அந்த உயர்வைப் பெறும் வழியை…
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மேலை நாட்டில் இது நடந்த நிகழ்ச்சி…!
ஒரு சிறுவன் பாலத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்து விட்டான். கீழே விழுகும் பொழுது… “ஒரு கம்பியைப் பிடித்து” அனாதையாக மூன்று நாள் தொங்கிக் கொண்டே இருக்கின்றான்.
அதை விட்டு விட்டால் கடலில் தான் விழுக வேண்டும். ஆனால் விழுகாதபடி தொங்கிக் கொண்டே இருக்கின்றான். அவன் தொங்கிக் கொண்டிருக்கக்கூடிய இடத்திற்குப் போக முடியாத நிலை.
ஏனென்றால் அது ஒரு மலை உச்சி. அவனைக் காப்பாற்ற நான்கு நாள் ஆனது.
1.அது வரையிலும் அவன் மன உறுதி கொண்டு இறுக்கிப் பிடித்திருக்கின்றான்.
2.இப்படி எல்லாம் இயற்கையின் நியதிகள்… தன் மன வலுவால் தன்னைக் காக்கும் நிலை அவனுக்கு வருகிறது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய மன வலிமை எதிலே… எப்படி இருக்க வேண்டும்…?
அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற மன வலிமை எந்த நேரத்திலும் நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மன உறுதி இருந்தால்
1.சிந்தித்துச் செயல்படும் தன்மையையாக அது இயக்கச் செய்யும்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் அருள் உணர்வுகள் வளரும்.
அதற்குத்தான் தொடர்ந்து உங்களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு). இந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தச் சிந்தித்துச் செயல்படும் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.ஆக.. உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர
2.நான் (ஞானகுரு) காப்பாற்றுவேன்…! என்ற இந்த எண்ணத்தில் இருந்தால்
3.தான் எடுக்கக்கூடிய சக்தியை இழந்து விடுகின்றோம் என்று தான் பொருள்.
இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடுமையான விளைவுகள் வருகின்றது. அதிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
இந்த உபதேசத்தின் வாயிலாக அருளைப் பெருக்கும் நிலையை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதைப் பெருக்கும் அருள் ஞானம் உங்களுக்குள் வளரட்டும்.
அந்த ஞானம் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தூண்டுதலைக் கொடுத்து அதன் மூலம் ஞானிகளின் உணர்வை உங்களைச் சுவாசிக்கச் செய்கிறோம்.
ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது உங்கள் இரத்தங்களில் ஒரு புது விதமான ஓட்டங்கள் இருக்கும். அந்த உணர்வின் தன்மை பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் கருத்தன்மை (அணுவாக மாறும் தன்மை) உங்களிலே உருவாகின்றது. அதை வளர்த்துக் கொண்டால் அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீரபடுத்த “உங்கள் எண்ணம் உங்களுக்கு உதவும்…!”
காரணம்… அத்தகைய அணுக்கள் உருவாகி விட்டால் அந்த உணர்வின் தன்மை நுகரும் போது
1.உங்கள் உயிரிலே படுகின்றது… சிந்திக்கும் ஆற்றல் வருகிறது.
2.நல்ல உணர்வை நுகரச் செய்கிறது… நல்ல அணுக்கள் உடலில் விளைகிறது… அருளைப் பெருக்குகிறது.
3.இந்த உடலுக்குப் பின் ஞானிகளின் அருள் வட்டத்தில் நாம் செல்கிறோம்.
4.எந்த ஞானி இருளை நீக்கி ஒளியாக மாற்றினானோ அவன் ஈர்ப்பு வட்டத்திற்கே நாம் செல்ல முடியும்.
ஆகவே… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தைச் சென்றடைவதே மனிதனின் கடைசி எல்லை…!
உயிர் ஒளியானது… எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து தப்பிடும் உணர்வு பெற்றுத் தான் இந்த மனித உடலை அமைத்தது நம் உயிர்.
எல்லாத் தீமைகளையும் வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனவன் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எப்படியும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.


குல வழியில் வரும் சாப அலைகளின் தாக்கம்
நம்முடைய மூதாதையர்கள் பண்டைய காலங்களில் இரண்டு தலைமுறை அல்லது மூன்று தலைமுறை வரையிலும் ஒன்றாகச் சேர்த்து “ஒரு பெரிய குடும்பமாக” வாழ்ந்து வந்திருப்பார்கள்.
காலத்தால் சிறு வேதனைகள் வளர்ந்து மனஸ்தாபம் ஆகி ஒருவரை ஒருவர் பிரிய நேர்ந்தால் இவர்களுக்குள் சொத்து பாகங்கள் பிரிக்கப்படும் பொழுது சிறிதாகிவிடும்.
ஏகமாக இருக்கப்படும் பொழுது சொத்தின் பெருமான அளவு அது அதிகரித்திருக்கும். ஆனால் பிரித்து வரப்படும் பொழுது
1.அவர்கள் உழைப்புக்கொப்பத் தன் பங்காகத் தனக்கு நிறையக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்
2.அது குறைவாக வரப்படும் பொழுது “என்னை இப்படி மோசம் செய்து விட்டார்களே…” என்று சாப அலைகளை விடுவார்கள்.
நான் ஒன்றி வாழ்ந்தேன்… நம்பி இருந்தேன் என்னை மோசம் செய்து விட்டார்கள்…! என்ற இந்த உணர்வின் சக்தியை வளர்த்து விட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் காணும் போதெல்லாம் வெறுப்பின் தன்மை வரும். “இதுவும் தியானம் தான்…”
அந்த வெறுக்கும் தன்மை வளர்ந்து வளர்ந்து இவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வெறுப்பும்… அவரைப் பார்க்கும் பொழுது இவருக்கு வெறுப்பும் இப்படி வந்து விடுகிறது.
அதே சமயத்தில் இவரைச் சார்ந்தவர்கள் இரண்டு பேர் சாட்சியாக வருவார்கள் அதே மாதிரி அவர் பக்கம் ரெண்டு பேர் சாட்சியாக வருவார்கள்.
சார்ந்து பேசினாலும் இவர்கள் இடும் சாப அலைகள் அவருடன் இணைந்த மற்றவர்களுக்கும் இது இணைந்து விடும்.
எனக்கு மோசம் செய்தானே… இவன் எல்லாம் உருப்படுவானா…? அவன் குடும்பம் நன்றாக இருக்குமா…? என்று இப்படிச் சொல்லும் பொழுது இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?
நீ இப்படிச் சொல்லலாமா…? நீதான் அப்படி ஆவாய். அவனுக்குச் சாட்சியாக இருந்து அவனைக் கெடுத்தவனே நீ தான்…! என்று
1.நண்பனுக்காக அல்லது இவனைப் போற்றி வளர்க்கும் நிலைகள் சாட்சியாகச் சொல்லப்படும் பொழுது
2.கேட்டறிந்த உணர்வுகள் கடும் சாப வினைகளாக இப்படிச் சிக்கிக் கொள்கின்றார்கள்.
அடிக்கடி இப்படிப் பேசி வித்தாக ஆனபின் என்ன நடக்கிறது…?
ஒரு மரத்தில் விளைந்த வித்தை ஒரு இடத்தில் நாம் ஊன்றினால் அந்த உணர்வின் துணை கொண்டு… காற்றிலிருந்து தன் தாய் மரத்தின் சத்தை நுகர்ந்து அது அதே மரமாக விளைகின்றது.
அது போன்று
1.ஒருவன் சாபம் இட்ட உணர்வுகள் நாம் கேட்டறிந்த பின் அந்த வித்தாக நமக்குள் விளைந்து
2.அந்த வித்து தன் மணத்தை அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வை அதைக் கவரும் பொழுது
3.ஆன்மாவாகச் சேர்த்து நம் உணர்வுடன் சேர்க்கப்படும் பொழுது
4.”அந்தச் சாபமிட்ட நிலைகள்” அடுத்து நாம் எந்தக் காரியம் செய்தாலும் அதைத் தடைப்படுத்துவதாக இது வந்து கொண்டேயிருக்கும்.
பாலில் பாதாமைப் போட்டு எவ்வளவு சுவையாக வைத்திருந்தாலும் அதிலே ஒரு மிளகாய் பட்டு விட்டால் அந்தக் காரத்தின் சுவை முன்னணியில் இருந்து அதை ரசிக்க விடாது செய்யும்.
இதைப் போன்று தான் சாபத்தின் நிலைகள்
1.உயர்ந்த குணங்கள் கொண்டு இருந்தாலும்… நல்லதைச் செய்தாலும் நல்ல பெயர் வாங்க முடியாது
2.இவர் என்ன பெரிதாகச் செய்தார்…? என்று எதிர்மறையான கேள்வியைக் கேட்டு விடுவார்கள்.
3.அவர் சொன்ன அந்தச் சொல்லையே நாம் திரும்பத் திரும்ப எண்ணி இதுவே நஞ்சாகி… கடுமையான வினைகளாக நமக்குள் விளைந்து விடும்.
அந்தச் சாப அலையின் தொடர் குடும்பத்தில் பாய்ந்து தாய்மார்கள் கர்ப்பமுற்றார்கள் என்றால்… இத்தகைய உணர்வுகளைக் கேள்விப்பட்டு அதைக் கவர நேர்ந்தால் கருவிலிருக்கும் குழந்தைகளுக்கும் குல வழியில் சாப அலைகள் தொடர்ந்து விடுகிறது.
குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அந்தக் குடும்பத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தன்னை அறியாமலே சில தவறான நிலைகளும்… பல பல நோய்களும் உருவாகி விடுகின்றது.
ஆக… கருவில் இருக்கும் போது சாபங்களைக் கேட்டு நுகர்ந்தறிந்தால் தான் அது பதிந்து அந்த நிலை வருகின்றது
1.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால் எல்லோருக்கும் அந்த சாப அலைகள் சாடுவதில்லை.
2.சாபமிட்டதைப் பற்றிப் பேசி… சாபமிட்ட குடும்பத்தைப் பற்றிப் பேசி இருந்தால்
2.கருவற்றிருக்கும் குழந்தைகளில் அது வித்தாகி… அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.
சாப அலைகள் “குல வழியில்” இப்படித்தான் வருகிறது…!
இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்… சந்தர்ப்பத்தால் எதனை உற்றுக் கேட்டு அதைக் கவர்ந்தனரோ வந்து இவ்வாறு இயக்கிவிடுகிறது.
இதையெல்லாம் துடைப்பதற்காக எத்தனையோ வழிகளை மகா ஞானிகள் கண்டுணர்ந்தார்கள். அதைத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

பூமியின் சுவாச அலையில் சிக்காது… “மெய் ஞானிகளின் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும்…”
எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்தச் சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…!” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.
பூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.
1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெற வேண்டும்.
வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…!” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.
சங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.
ஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்
1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை
2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…!”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.
“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.
அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.
இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.
இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.

இரு நிலை கொண்ட இயக்கத்தை ஒரு நிலையாக்க வேண்டும்
பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில் மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையை வங்கிட்டு… அதை மறைத்து விட்டு… ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.
அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி… அழியா ஒளி நிலை பெற நமக்கு வழிகாட்டுவது தான் “விநாயகர் தத்துவம்…”
அதற்காகத் தான் இந்தப் பிள்ளையார்…? என்று கேள்விக்குறி இட்டு நம்மைச் சிந்திக்கும்படி வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.
உயர்ந்த ஒளியின் உணர்வாகத் தனக்குள் அரசாட்சி புரிந்து வருவது அனைத்தையும் மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தோம் என்றால் “அவனுடன் ஒன்றிய அவனாக” நாம் மாறுகின்றோம்.
1.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் “நான்” என்றாலும் தனித்த நிலைகள் கொண்டு உயிரே இயக்குகின்றது
2.அதிலே நாம் எண்ணிய உணர்வுகள் எது எதுவோ… அதனுடன் இணைந்து செயல்படும் பொழுது தானாகின்றது.
3.ஆனாலும் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது
4.அது தான் “நான் தானாகி – தான் நானாகின்றது.
உயிர் ஒளியின் தன்மையாக இருந்தாலும்… நுகரும் உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி மறைத்தாலும்
1.”தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதே”
2.பின் உணர்வின் ஒளியாக மாறிய பின் – மீண்டும் “ஒளி சிகரமாக மாறிய பின் நானாகின்றது…”
நான் தானாகி… தான் நானாகின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
ஆகவே இந்தப் பிள்ளை யார்…? என்று நினைவுபடுத்தி நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகப் பயன்படுத்தி விண் செல்ல வேண்டும் என்பதை ஞானிகள் காட்டினார்கள்.
ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தியவர்கள் ஏழாவதாக ஒளி என்ற நிலை அடைந்து என்றும் பதினாறாக விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சை அடக்கும் சக்தி பெற்ற சூரியனோ அது கொதிகலனாகும் போது நஞ்சினைப் பிரித்தாலும்
1.அதிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனறிவுகள் அதே நஞ்சினைக் கவர்ந்து ஓர் இயக்கச் சக்தியின் நிலையாகப் படர்கின்றது.
2.இருப்பினும் இந்தச் சூரியன் அது அழிந்திடும் நிலை தான்.
ஆனால் அதனின்று விளைய வைத்த உயிரின் ஒளி நிலைகள் தான் கவர்ந்த உணர்வை ஒளியாக மாற்றிவிட்டால் பின் எதிலுமே அது வேகுவதில்லை.
1.அத்தகைய வேகா நிலை பெற்றது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்
2.அந்த நிலையை நாமும் அடைதல் வேண்டும்.

“நக்கீரனை எண்ணி…” சங்கின் குணத்தைப் பெற வேண்டும்
உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பல வித உயிர் சக்திகள் உருவாகும் செயல் நிலையில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.
1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக…!” கடலிலே உருப்பெறுகின்றது.
“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள். அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.
அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும்.
நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையா சிறப்பு ஒன்று தான்.
1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு – நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.
நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…! சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.
வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…?
வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி… ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி… நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட… சங்கு நீர் அமில குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்…! சூட்சமப் பொருளை மனதில் கொள்க…!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

அடிக்கடி நினைத்து ஜெபிக்க வேண்டிய ஜெபம்
அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்தால் தான் யாம் கொடுக்கக்கூடிய வாக்குகள் உங்களுக்குள் நல்ல முறையில் வேலை செய்யும்.
காரணம்…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுகளைத் தூண்டி
2.அந்த ஏக்க உணர்வுகளின் அடிப்படையில் தான் பதிவு செய்கின்றேன்.
அதே சமயத்தில் எப்போதுமே அன்னை தந்தையரை வணங்கிப் பழகுங்கள். அவர்களுடைய அருளாசியால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இது மிகவும் முக்கியம்.
யாம் கொடுக்கும் இந்த உபதேச வாக்குகளைச் சீராக உற்று நோக்கி அதைப் பதிவு செய்தால் ஞான வித்தாக வளர்ந்து
1.நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.
2.ஆத்ம சக்தி செய்யும் போது அந்த நேரத்தில் உடனுக்குடன் சிரமங்களைப் போக்க அது வழிகாட்டும்
ஆக… நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உணர்வுகள் உடலைத் தனக்குள் அணைத்துக் காட்டும். எண்ணிய உணர்வின் ஞானமாக உணர்த்தும்.
அதன் வழியில் உங்களைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
ஆகையினால் யாம் உபதேசிக்கும் பொழுது கூர்ந்து கவனித்து இந்த வாக்குகள் பதிவாக்க வேண்டும் என்று அந்த எண்ணத்துடன் இருங்கள்.
1.எந்த நல்லது பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வந்தீர்களோ
2.நல்ல முறையில் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று எங்கள் உடலில் அறியாது வந்த நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இப்பொழுது கிடைக்கும்…”
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் நான் பார்ப்பதெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போர் எல்லாம் நலம்பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் சொல்லிலே இனிமை பெற்று என் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
12.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்
13.பல உயர்ந்த உணர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும்
14.உங்கள் உடலை எத்தகைய பிணிகள் இருந்தாலும் நீங்கும்… வலியோ வேதனையோ இருந்தால் குறையும்
15.தீமைகள் உங்களை விட்டு அகலும்… உங்கள் உணர்வுகளால் அறிய முடியும்.
ஆகவே யாம் கொடுக்கும் இந்த (மகரிஷிகள்) அருள் வாக்குகளை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நினைவு கொண்டால் நீங்கள் ஏங்கும் போதெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கும்.
ஒரு நாளைக்கு ஆயிரம் முறை நீங்கள் சொல்லிப் பாருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் இப்படி சொல்லிக் கொண்டே இருங்கள்
பாலோ தண்ணீரோ அல்லது பதார்த்தங்களையோ வைத்து இவ்வாறு ஜெபித்து அதற்கு அப்புறம் அதை எடுத்து உட்கொண்டு வாருங்கள். நல் மருந்தாக அமையும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.
எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

வடக்கு திசையின் முக்கியத்துவம்
மகரிஷிகளின் ஒளி காந்த சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்ம சக்தியை வலுக் கொள்ள அந்த வீரிய எண்ணச் செயல் மூலம் வளர்வதற்கே வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.
ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிராத்ம சக்தியுடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம் அதாவது…
1.காமதேனு என்று சூட்சமமாக மகரிஷிகள் உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொண்டிட வேண்டும் என்றால் பரவெளியில் உலவிடும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலைப் (ஆகாரமாக) பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய ரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும் என்றும் காட்டினார்கள்.
இதையே தான் “உலக வழக்கப்படி” நாம் நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்ற சித்தின் செயல்பாட்டினுள் சித்தனே மறைந்துள்ளான்.
விசுவாத்திர மாமகரிஷிக்கு “
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.
தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.
1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம் என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் என சித்தர்களால் காட்டப்பட்டது.
சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?
1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்திடும் தொடர்பில்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
4.அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்ற இந்த மனித உடலில் பிறருடைய குறை உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் என்ன ஆகும்…?
1.நம் காரியங்கள் அனைத்தும் செயலற்றதாக ஆகிவிடுகிறது.
2.நமக்குள் குழப்ப நிலைகளை உருவாக்கிச் சிந்தித்துச் செயல்படுத்தும் சக்தியையும் இழக்கின்றோம்
3,துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியையும் இழந்து விடுகின்றோம்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு) ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகிறேன். குரு காட்டிய அருள் வழியில் அந்த வித்தினை உங்களுக்குள் பெருக்க வேண்டும்.
1.இந்த வாழ்க்கையில் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைவேன்.
2.அரும் பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்…
3.அருள் வழியில் இந்த வாழ்க்கையை வாழ்வேன்…
4.என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற
5.இந்த உறுதி கொண்ட உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்
6.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
ஆனால் மற்ற எந்த ஆசை கொண்டு எண்ணி எடுத்தாலும் அத்தகைய ஆசைகளால் செல்வங்கள் நிலைப்பதில்லை.
செல்வம் இருப்பினும் இந்த உடல் உபாதையான காலங்களில் கூட அது செலவழிக்கப் போதுமானதாக இருப்பதில்லை. பணம் அதிகமாக இருப்பினும் உடல் நலிவுற்ற நேரங்களில் நல்ல உணவையும் உட்கொள்ள முடிவதில்லை.
இது போன்ற நிலைகளில் விடுபட்டு பிறவி என்ற இந்தக் கடனைக் கடந்து பிறவி இல்லா நிலை அடையும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்.
கீதையிலே சொல்வது… நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.நமது வாழ்க்கையில் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நினைத்தால்
2.அருள் ஒளியின் சக்திகளை வளர்க்கின்றோம்… அதுவாக ஒளியாகின்றோம்.
அது இல்லாது இவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி…! என்ற நிலைகளில்
1.பார்க்கும் அனைவருக்குள் இருக்கும் குறைகளையும் கண்டு… அதையே கூறிக் கொண்டிருந்தால்
2.குறையின் உணர்வுகள் வளர்ச்சியாகி நோயின் தன்மையாகி இது நமக்குள் அதுவாகவே ஆகின்றது.
நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும் போது நம் தொழிலே குந்தகமாகின்றது. இது போன்ற எதிர்க்கும் உணர்வை வளர்த்து வளர்த்து… நமக்குள்ளேயே எதிரியை உருவாக்கி.. அடுத்து மனிதனல்லாத உருவை உருவாக்கும் தன்மை வந்துவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற மறவாது இருக்க வேண்டும்.
அதற்குத் தகுதியான நேரம் இந்த அதிகாலை துருவ தியான நேரமே…! நான்கிலிருந்து ஆறுக்குள் விழித்த உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம். நம்மைப் பார்க்கும் அனைவரது தீமைகளும் அகலட்டும்.
அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.


விண்ணுக்குச் செல்லும் “உந்து விசை”
உந்து விசை கொண்டு புவியின் ஈர்ப்பைக் கடந்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றனர். புவியில் விளைந்த எரிபொருளின் துணை கொண்டு அதை இயந்திரத்தில் அடக்கி அழுத்தத்தால் உந்தி விண்வெளியில் வீசுகின்றனர்.
இராக்கெட்டை விண்ணிலே பறக்கும்படி செய்து. விண்ணிலிருக்கும் பல நிலைகளை எளிதில் கவர்ந்து அதை அறிகின்றனர். உடல் வாழ்க்கைக்காக (சுகத்திற்காக) விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.
மெய் ஞானிகளோ விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதனின் வலு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆனார்கள்
1.ஆதியில் அகஸ்தியன் இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்தாலும் தன் அருகில் உள்ள சீடர்களுக்கு இதனை உபதேசித்தருளி
2.அதனின் நினைவு கொண்டு நீங்கள் உடலை விட்டு அகலும் போது “உந்து விசையால்… என்னை உந்தித் தள்ளுங்கள்…!” என்றான்
3.முதல் முதலிலே அகஸ்தியன் அவ்வாறு விண்ணுலகம் சென்றான்.
4.அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் விண்ணுலகில் ஏழாவது அறிவாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக விளைந்தார்கள்.
அக்காலங்களில் எழுத்தறிவு இல்லாததால் “உடலில் விளைய வைத்த உணர்வின் தன்மை கொண்டு பிறருக்குள் பதிவு செய்து…” அந்தப் பதிவின் நினைவின் ஆற்றலால் அவர்கள் வாழ்க்கையை இயக்கி… அவ்வாறு ஆரம்ப நிலையில் வளர்ந்தவர்கள் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
பிற்காலங்களில் மனிதனின் அறிவின் ஞானம் வளர… மனிதனின் உடலுக்கு இச்சைகள் சேர… இதுவே சொர்க்கம் என்ற நிலையில் அரசர்கள் சென்று விட்டார்கள்.
அரசனும் சரி… அவன் காட்டிய வழியில் சிக்கியவர்களும் சரி… அனைவரும் விண் செல்லாது அவர்கள் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் பேயாகச் சுழன்று… பேயின் உணர்வு கொண்டு தாக்கும் நிலைகளும்… பின் மிருக நிலைகளுக்கே சென்றனர். அரசன் வழியில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம் (ஞானகுரு).
1.அருள் வழியில் உங்கள் உணர்வுகளை உந்தச் செய்து… உணர்ச்சிகளைச் தூண்டும்படி செய்து
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நினைவு கொண்டு உங்களைத் தியானிக்கும்படி சொல்கிறோம்.
ஆகவே வேகா நிலை பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வினை நமக்குள் வினையாகச் சேர்த்து அதை நாயகனாக ஆக்க வேண்டும்.
வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் நம்மைச் சாடுகின்றதோ அத்தருணத்தில் “ஈஸ்வரா…” என்று அந்த மகரிஷிகளை எண்ணி அந்தச் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று உள் செலுத்தி நாம் கேட்டறிந்த தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.
அதே சமயத்தில் தீமை செய்தவர்களுக்கும்… அதிலிருந்து அவரை மீட்டிட மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் பாய்ச்ச வேண்டும்.
இது தான் அன்றைய மகரிஷிகள் செய்த நிலைகள். அதனை நீங்கள் அனைவரும் பற்றிட முடியும் சாதாரண மக்களும் விண்ணின் ஆற்றலைப் பெரும் வண்ணம் தான் எளிதாகக் கொடுத்துள்ளார்கள் நமது தத்துவ ஞானிகள்.

தாமரை மலர்
பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.
1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.முன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.
(வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பலவிதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்)
அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது. அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.
அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.
அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது. (இந்தத் தொடர் காலம் காலமாக நடக்கின்றது)
நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.
அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூல சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.
நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.
சரீரம் என்ற குகைக்குள்… உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம் சக்தியாகச் செயல் கொள்வது என்பது சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.
அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.
பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”
தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…? சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.
ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும் பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும் பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”
தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.
அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.
இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால்
1.வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் (நிறம் குணம் அமிலம்) நறுமணமாக
2.அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த உபதேசத்தைப் பதிவாக்குவோர் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் அகஸ்தியனின் அருளாற்றலைப் பெற்றுச் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறலாம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை நமக்குள் பெருக்கி நம் உடலில் உள்ள அணுக்களை உயிருடன் ஒன்றாக்கப்படும் போது ஒளியின் உடலின் உணர்வாக மாறுகின்றது.
இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் இதைச் சேர்க்க முடியும்.
1.இதிலே நாம் சற்று சலிப்படைந்தாலோ அல்லது சிறிது தடையானாலோ
2.இந்த மனிதனின் வாழ்க்கையில் விஷத் தன்மைகள் நம்மை ஆட்கொண்டுவிடும்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஞான வித்தைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). இதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கவரப் பழகிக் கொள்ளுங்கள்.
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருள் ஞானத்துடன் நீங்கள் வாழ்ந்து
2.இல்லற வாழ்க்கையிலும் சரி… தொழில் வழியிலும் சரி… மற்ற நிலைகளிலும் சரி…
3.தீமைகளை அகற்றும் வல்லுநராக நாம் ஆக வேண்டும்.
தீமையை அகற்றும் வல்லுநராக ஆக வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிக் கவர்ந்தே ஆக வேண்டும்.
2.உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பரப்பியே ஆக வேண்டும்.
இத்தகைய நிலைகளில் வாழ்க்கையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்றால் இந்த உயிர் மனித உடலை உருவாக்கிய நிலை கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை பெறலாம் அது தான் “விஜய தசமி…”
நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பத்தாம் நிலை என்ற நிலை அடைந்து… “ஏகாதசி…” என்றுமே அழியாத தன்மையாக அந்த ஒளியான நிலைகளை நாம் முழுமை அடையும் தன்மை பெறுகின்றோம்.
எதை வைத்து…?
இந்த ஆறாவது அறிவை வைத்துத் தான்…! அதனால் சற்று சிந்தித்து இந்த மனித வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வது.
ஏனென்றால்
1.சர்க்கஸில் விளையாடுவது போல்
2.“கரணம் தப்பினால் மரணம்…!” என்ற நிலையில் தான் இன்றைய மனித வாழ்க்கை நிலை உள்ளது.
நாம் எத்தகைய நல்ல மனிதராக இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பேதங்கள் வரும் பொழுது நம் நல்ல சிந்தனை இழந்து தவறு செய்வோனாகவே மாறுகின்றோம்.
நல்ல பண்புள்ளவராக இருப்பினும் பிறர் செய்யும் தவறுகள் நமக்குள் வந்தால் நம் குணங்களும் மாறுபட்டு நாமும் தவறு உள்ளவர்களாக மாறுகின்றோம்.
தவறு செய்தே வாழும் தன்மை வரப்படும் பொழுது இந்த உடலுக்குப் பின் மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல முடிகின்றது. இந்த உடலில் எத்தகைய உணர்வை நுகர்ந்தோமோ அதற்குத் தக்க தான் இந்த உடலை மாற்றுகின்றது உயிர்.
ஆகவே தினமும் காலை துருவ தியானத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை ஏங்கித் தியானித்து
2.இந்த உடலில் பதிவாக்கி அதன் உணர்வைச் சுவாசமாக்கி எடுத்துக் கொண்டால்
3.தீமையை நீக்கிடும்… நஞ்சினை வென்றிடும்… நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தியை நாம் பெறுகின்றோம்.


“நம்மைக் காத்திட்ட… அரும் பெரும் சக்திகள்” நமக்கு முன் காற்றிலே இருப்பதை எடுக்கப் பழக வேண்டும்
மனிதனின் வாழ்க்கையில் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்து வரும் நஞ்சினை ஆறாவது அறிவு பெற்ற இந்த மனித உடல் மலமாக மாற்றி விடுகின்றது.
ஆறாவது அறிவின் தன்மையால் “இயக்கும் சக்தி” நமக்குக் கிடைக்கின்றது. அதாவது நஞ்சு கொண்ட உணர்வினை நீக்கித் தெளிந்த உணர்வு கொண்டு விளைந்திட்ட அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகளை அகற்ற வேண்டும்.
அதை அகற்றவில்லை என்றால் நஞ்சு கலந்து… பின் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது.
உடலில் அழுக்குப் பட்டால் குளிக்கின்றோம். வேலை செய்யும் போது கையில் அழுக்குப் பட்டால் சுத்தப்படுத்தி அதற்குப் பின் உணவை உட்கொள்கிறோம்.
நாம் அணியும் ஆடைகளில் அழுக்கு அதிகரித்து விட்டால் சோப்பைப் போட்டு நுரையேற்றித் துணியுடன் இரண்டறக் கலந்த அழுக்கினைப் போக்குகின்றோம். மனிதனின் ஆறாவது அறிவினுடைய செயல்கள் தான் இது எல்லாம்.
ஆனால் ஆறாவது அறிவை ஞானிகள் எப்படிப் பயன்படுத்தினார்கள்…?
1.அன்றைய மகரிஷிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி
2.”சக்தி வாய்ந்த உணர்வைத் தனக்குள் நுகர்ந்து”
3.தன்னை அறியாது புகுந்த உணர்வினை ஆறாவது அறிவால் நீக்கி
4.தன் எண்ணத்தைத் தெளிவாக்கித் தெளிந்த உணர்வு கொண்டு வாழ்க்கை வாழ்ந்து
5.அருள் ஒளியின் சொத்தாகத் தன் உயிருடன் ஒன்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அவரில் விளைந்த உணர்வின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது காற்று மண்டலத்தில்… அதாவது பூமிக்குள் பரமாத்மாவாவிலே கலந்துள்ளது.
இதைப்போல மற்ற தாவரங்கள் உமிழ்த்தும் “அதனதன் உணர்வும்… அதனதன் மணமும்… அதனதன் குணமும்…” வெளிப்பட்டு வருவதை இதே சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாவிலே சுழன்று கொண்டு தான் உள்ளது.
மனிதருக்குள் எத்தகைய நோய்களாக விளைந்ததோ அவர்களிடமிருந்து வெளிப்பட்ட நோயின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமாத்மாவில் கலந்துள்ளது.
பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆவதற்கு முன் நாம் உயிரினங்களாக வாழும் பொழுது
1.அந்தந்தச் சரீரத்தில் தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு விளைந்த உணர்வுகள் இதே பரமாத்மாவில் தான் உண்டு.
2.ஒவ்வொரு சரீரத்திலும் காத்திடும் உணர்வை ஊழ்வினையாகப் பதிவு செய்து அந்த வித்தின் தன்மையாக
3.அந்தந்த உடலிலே காத்திட்ட உணர்வுகளும் இந்தப் பரமாத்மாவிலே கலந்துள்ளது.
இவ்வாறு “எத்தனை சரீரங்களில் நம்மைக் காத்திடும் உணர்வாக எடுத்துக் கொண்டோமோ” அது அனைத்தும் நமக்குள் வித்தாக இருப்பினும்
1.அதில் விளைந்த உணர்வுகள் அலைகளாகப் படர்ந்து இந்த பூமியிலே பரமாத்மாவிலே படர்ந்துள்ளது.
2.அத்தகைய நல் உணர்வுகளைக் கவர்ந்து நமக்குள் வளர்த்திடும் நிலையாக வர வேண்டும்.
ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலையை உணர்ந்து… நம்மை அறியாது மூடி மறைக்கும் தீமைகளை ஆறாவது அறிவு கொண்டு நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றப் பழகிடல் வேண்டும்.

கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் அது விலகாது
மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.
மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.
ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?
உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?
1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.
அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அழித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?
நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.
மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.
மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?
உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.
ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.
மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.
“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

சாப வினை எப்படி வருகிறது…?
கடந்த காலங்களில் குடும்பத்தில் பற்றும் பாசத்துடன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதில் கொடுக்கல் வாங்கலிலோ… உணவாக உட்கொள்ளும் நிலைகளிலோ… அல்லது விசேஷங்களுக்குச் செல்லும் பொழுதோ அந்தச் சந்தர்ப்பம்… ஒருவர் அதிகமாகச் செலவழித்து ஒருவருக்கு அதைக் கொடுக்காத நிலை ஏற்பட்டால் பேதங்கள் வருகிறது.
1.அவர் போகும் போது தனக்கு வேண்டியதை மட்டும் சௌகரியமாக எடுத்துக் கொண்டு செல்கின்றார்
2.நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார் என்ற இந்தப் பகைமை உணர்வுகள் விளைந்து விடும்.
பொறுத்திருந்து… அவர் போகும் போது கொடுத்திருக்கலாம் என்றாலும் அது வரை பொறுக்காது கோபம் மேலிட்டு… வெறுப்பு வந்துவிடுகிறது. அந்த வெறுப்பு ஊழ்வினை என்று வித்தாக ஆழமாகப் பதிவாகி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவர்களுக்குள் வெறுப்பு வளரத் தொடங்கி விடுகிறது.
அது பரவி வர வர அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு. வெறுப்பான உணர்வு கொண்டு அடுத்து சுடு சொல்லாகத்தான் வரும். பெரியவர்களாக இருந்தால் மதிக்கச் சொல்லாது.
ஆகவே… மதிப்பற்ற நிலைகள் நம் சொல் வெளிப்பட்டு நம்மைப் பார்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவில் சேர்த்த வெறுப்பான உணர்வுகளும் அவர்கள் சுவாசித்து நம் மீது வெறுப்படையும் தன்மையாக விளைந்து விடுகின்றது.
1.மூதாதையர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழும் பொழுது
2.நாளுக்கு நாள் பகைமைகள் உருவாகி இத்தகைய இடையூறுகள் வந்துவிடுகிறது.
அடுத்து பாகப்பிரிவினை வரும் பொழுது எனக்கு இவ்வளவு தான் கொடுத்தார்கள் அவனுக்கு நிறையக் கொடுத்தார்கள் என்று பாசத்துடன் ஒன்றி வாழ்ந்த நிலைகளில் இதைப் போன்ற நிலைகள் தடைப்படுகிறது.
தடைப்பட்ட பின் ஒன்றுபட்ட குடும்பமாக வாழ்ந்தாலும்… மூத்தவராக இருக்கப்படும் பொழுது அவர்கள் பிள்ளைக்குத் தனியாகச் சலுகை செய்கின்றார்கள்… என் பிள்ளைக்கு ஒன்றும் கொடுக்கவில்லை…! என்ற இந்த உணர்வு நஞ்சின் தன்மையாக விளைந்து விளைந்து “நாளடைவில் விஷத்தின் தன்மையாக விளைந்துவிடுகிறது…”
பின் யார் மீது இந்த வெறுப்பு அதிகமாக விளைந்ததோ “அடப்பாவி இப்படிச் செய்கின்றாயே… இப்படிச் செய்கின்றாயே…” என்ற நிலைகள் இந்த உடலில் அதிகமாக விளையப்பட்டு “வெளிப்படும் மூச்சுகள்…” அந்தக் குடும்பம் முழுவதும் படர்கின்றது.
ஒருவருக்கொருவர் வெறுப்பானாலும் வெறுப்பற்றவர்களோ…
1.எதற்காக நீங்கள் ஒருவர் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றீர்கள் என்ற உணர்வுடன்
2.ஒன்று சேர்ந்து வாழ நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும்
3.பாகப்பிரிவினையால் விளைந்த பேத உணர்வுகள் அங்கேயும் சேர்த்து அறியாதபடி… அவர்களுக்குள்ளும் வெறுப்பின் உணர்வுகளே விளையும்.
எனக்கு இப்படிச் செய்தானே… அவன் குடும்பம் உருப்படியாகுமா…? என்ற இந்த உணர்வுகள் அதிகரித்து விடுகிறது. இது போன்ற சாப உணர்வுகளை வெளியிட்டால்… வெளியிட்ட அந்த அலைகள் அவர்கள் உடலில் மறைந்து “வித்தாக” விளைந்து வரத்தொடங்கும்.
இரண்டு தலைமுறைக்குப் பின் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் கரு உருவாகிக் குழந்தைகள் பிறந்த பின்…
1.அதே சாப அலைகள் தொடரப்பட்டு
2.மூதாதையர்கள் உடலில் விளைந்த உணர்வின் உமிழ் நீர் (அமிலங்கள்) கூடி… அந்த உணர்வின் சத்து வித்தாக மலர்ந்தது
3.இங்கே சொல் வடிவில் இணை பிரியாது வந்து கொண்டே இருக்கும்.
4.சாப அலைகளாக குடும்பங்களில் அது இயக்குவதை இன்றும் பார்க்கலாம்… நம்மை அறியாமலே மறைமுகமாக வந்து விடுகின்றது.
மனிதனாக வருவதற்கு முன் எத்தனை இன்னல்கள் பட்டோமோ… மனிதனான பின்னும் இப்படிப்பட்ட தீமைகளில் சிக்குண்டு… தீமைகளை அகற்ற முடியாத நிலைகள் தான் நாம் சுழன்று கொண்டுள்ளோம்.
மூதாதையர்கள் குடும்பத்திற்குள் இட்ட சாப அலைகள் பதிந்து அவருக்குள் விளைந்தது அலைகளாகப் பரவி உள்ளது. அதிலே ஒருவருக்கொருவர் தான் எண்ணியதற்குத் தடை வரும் போது பகைமையாகி அதனால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அடுத்தவருக்குப் பல இன்னல்களை ஏற்படுத்தி… அதைக் கண்டு ரசித்து மடிந்தவர்களும் பலர் உண்டு.
வேதனைப்பட்டவர்களைக் கண்டு ரசித்த உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது குடும்ப குடும்பத்தின் சந்ததியினருக்கும் இது வருகின்றது. உடல்களில் இருந்து குல வழியில் இது வருகின்றது.
1.உதாரணமாக ஆஸ்த்மா போன்ற நோய்கள் எல்லாம் மூதாதையர்களால் விளைந்தது தான்
2.ஒருவருக்கொருவர் இன்னல் படும் பொழுது “தான் என்ன செய்வது…?” என்று பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
3.அதே சமயத்தில் வேதனைப்பட்ட உணர்வுகளால் உறுப்புகள் சீராக இயங்காது
4.உமிழ் நீர்கள் சுரக்கப்படும் பொழுது உறைந்து அது நெஞ்சுச் சளியாக உருவாகின்றது.
விஷத்தன்மை கொண்டு அங்கே உருவான அத்தகைய உணர்வுகள் அணுவாக மலர்ந்து வித்தாக உருப் பெற்று வருகின்றது. அதன் வழிகளிலும் குல வழிகளில் பின் தொடர்ந்து வருகின்றது.
தனித்த மனிதர் நம்மிடமிருந்து இப்போது அந்த நோய் வரவில்லை. முந்தி எத்தனையோ நிலைகள் விளைந்தது… குல வழியில் நமக்குள் பின் தொடர்ந்து வருகின்றது.
ஒருவருக்கொருவர் பேசிய அந்த சாப அலைகள் கொடூரத் தன்மை கொண்டது.
1.கொடூரத் தன்மை கொண்டு நமக்கு கிடைக்கும் நல்ல நிலைகளை அது கிடைக்க விடாதபடி தடுத்து
2.இருள் சூழ்ந்த நிலையாக்கி மனிதனுக்குள் எதிர்நிலையாக வருகிறது.
நாம் தவறு செய்யவில்லை. ஆனால் வாழ்க்கையில் இது போன்ற நிலை வருகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக தன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். யார் மீது அவர் பற்று கொண்டு வாழ்ந்தாரோ அவர் தற்கொலை செய்ததைக் கேள்விப்பட்டு ஆ…! என்று அதிர்ச்சி அடைந்தால் போதும். அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.
இப்படி இந்த உடலுக்குள் வந்த பின் அந்தப் பேய் மனம் கொண்ட உணர்வுகளையே இந்த உடலுக்குள் தூண்டும். ஆனால் புகுந்த உடலில் எந்த எரிச்சல் இல்லை என்றாலும் இது (புகுந்த ஆன்மா) “எரியுதே… எரியுதே…!” என்று எரிச்சலை ஊட்டும்.
இந்த உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் மடியத் தொடங்கும்.
1.இத்தகைய நிலைகள் ஆன பின் தாங்காது
2.இதுவும் அதே வேலையைச் செய்யும்.
இதிலிருந்து நாம் எப்படி மீள்வது..?
ஆனால் பக்தியின் தன்மையில் நாம் இதற்கு என்ன செய்கிறோம்…? கோவிலில் போய் அர்ச்சனை செய்தால் இந்தக் கஷ்டம் தீரும்… அதற்கும் முடியவில்லை என்றால் யாகத்தை வளர்த்துப் பாவத்தைப் போக்கிக் கொள்…! என்று சொல்கிறார்கள்.
யாகத்திலே அவர்கள் சொல்லும் மந்திரத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்கிறோம்.
1.இன்ன மந்திரத்தையே நீ சொல்லிக் கொண்டிருந்தால் உனக்குத் தொந்திரவு இல்லை
2.காளி உன்னைக் காப்பாற்றும்…! என்று எந்தக் காளியை அவர் வணங்குகின்றாரோ இவ்வாறு சொல்வார்கள்.
உதாரணமாக புலியைக் கண்ட பின் மற்ற மிருகங்கள் எல்லாம் அஞ்சத் தான் செய்யும். பொதுவாகக் “கோப உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள்…” அந்தக் காளியை வணங்கத் தான் நேரும்.
அந்த மந்திரத்தைச் சொல்லியே வாழ்ந்து கடைசியில் அந்த ஆன்மா வெளியிலே வந்தது என்றால் அதே மந்திரத்தைச் சொல்லும் போது “காளியை (ஆனால் அது ஆவி) நான் வசியம் செய்துவிட்டேன்…!” என்பார்கள்.
இதற்குள் ஒரு உணர்வினைச் செலுத்தி கரு மையாக்கி உடலிலே ஒரு இரட்சையாகப் (தாயத்து) போட்டுவிடுவார்கள்.
போட்ட பின் புலியைக் கண்டு எப்படி மற்ற மிருகங்கள் அஞ்சி ஓடுகின்றதோ இதே போல் அந்த இரட்சையைத் தொட்ட பின் உடலில் இருக்கும் அந்த ஆன்மா (முதலில் புகுந்தது) பயந்து ஓடும்.
பின்… இதே உணர்வின் தன்மையைச் சில காலம் சுவாசித்தால் போதும். தாயத்து கட்டி இருப்பவர்கள் பெரும்பகுதியானோர் உடலில் எல்லாம் பார்க்கலாம். கை கால் குடைச்சல் இருந்து கொண்டே இருக்கும்…! (தாயத்தில் இருக்கும் பிறிதொரு ஆன்மாவின் இயக்கம்)
இந்த உணர்வுகள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எதிர்நிலையாகி இடையூறு ஊட்டும்.
1.இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசித்தால் அப்புறம் இன்னொருத்தரிடம் போய் தாயத்தைக் கட்டச் சொல்லும்.
2.இன்ன இடத்தில் போய்த் தாயத்தைக் கட்டினால் நன்றாகும் என்று கேள்விப்பட்டவுடனே அங்கே போவோம்.
3.இப்படி ஒவ்வொரு மந்திரக்காரர்களிடம் நாம் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டியது தான்…!
நாம் இறந்த பின் என்ன நடக்கும்…? இதே மந்திரத்தைச் சொல்லி நம் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான் “இன்னொரு மந்திரவாதி…”
முதல் மந்திரக்காரன் என்ன வேலை செய்தானோ அதே வேலைக்கு நம்மை இவனும் பயன்படுத்துவான். யானை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி ஆக வேண்டியது தான்…!
நாம் நினைக்கின்றோம் உடலில் இருக்கும் பொழுது பல தொல்லைகள் என்று…! ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த நிலை ஆகின்றோம்…! என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).
ஆனால் விஞ்ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்கள். ஒரு தாய் கருவுற்ற பத்து நாளிலேயே அந்தக் கருவில் வளரும் சிசுவை ஒரு காந்த ஊசி கொண்டு (கதிர்கள் மூலமாக) இலேசாக எடுத்து மோதச் செய்கிறார்கள். அப்பொழுது அந்தச் சிசு வேதனையால் துடி துடிக்கின்றது…!
இதை எல்லாம் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர். ஏனென்றால் அன்றைய ஞானிகள் இதை எல்லாம் மிகவும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள்.
1.கருவுற்ற தாய் ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்துப் பயந்து அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது
2.கருவில் வளரும் உயிருக்கும் இந்த உணர்வுகள் பாய்ச்சப்பட்டு
3.தாய் பயப்படுவது போன்றே அந்தக் குழந்தையும் பயப்படுகிறது.
நாம் துடிப்பதைப் போன்றே கருவில் இருக்கும் குழந்தையும் துடிக்கின்றது. இதுகள் எல்லாம் கருவில் வளரும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.


“நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியமானது…” என்று தெரிந்து கொள்ள வேண்டும்
சில செடி கொடிகளை (வாசனையை) நாம் நுகர்ந்தால் மகிழ்ச்சியும் சில செடிகளை நுகர்ந்தால் மயக்கமும் வரும். அது போல்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை “எது அதிகமாக வருகின்றதோ” அதுவே நம் உடலில் மணமாக (ஆன்மா – மனம்) மாறும்.
2.இந்த மனம் அதிகமாகப் படும் பொழுது ஆன்மாவிலிருந்து சுவாசிக்கும் பொழுது சிறுகச் சிறுகக் கலந்து
3.அதனின் வலு குறையாது அந்த மண(ன)த்தை வளர்த்துக் கொண்டே இருக்கும்.
ஏனென்றால் நஞ்சுக்கு வீரிய சக்தி ஜாஸ்தி. காரணம் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் ஆகும் பொழுது என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது ரோட்டிலே ஒரு பிச்சைக்காரன் நம்மிடம் வந்து மீண்டும் மீண்டும் “ஐயா…ஐயா…” என்று திரும்பத் திரும்ப கேட்டது நமக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.
காசை எடுத்துக் கொடுப்பதற்கு முன்… “இத்தனை தரம் கேட்கின்றானே…” என்று அந்த நேரத்தில் அவனை எப்படி வெறுத்தோமோ வீட்டிற்குள் வந்த பின் பையன் மீது வெறுப்படைவோம்.
பிச்சைக்காரன் இரண்டாவது தரம் மூன்றாவது தரம் எப்படிக் கேட்டானோ அதே போன்று நாமும் பையனிடம் திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பிப்போம். பையன் நம் மீது வெறுப்படைவான். வீட்டில் பெண்களிடம் சொன்னாலும் இனம் புரியாது அவர்களும் வெறுப்பார்கள்.
இதைப் போய் ஜோசியக்காரனிடம் சென்று இப்படி இருக்கிறது என்று சொல்லிக் கேட்டால்
1.உங்களுக்குக் கெட்ட காலம்… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கின்றான்…
2.உங்கள் நட்சத்திரப் பிரகாரம் இப்படித்தான் இருக்கிறது என்று அவன் சொல்வான்… உறுதிப்படுத்திவிடுவான்.
இதுகள் எல்லாம் நம்மை அறியாது உடலுக்குள் விளைந்த உணர்வுகளின் இயக்கம் தான். ரோட்டிலே ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டான்.. நம்மை அவன் முறைத்து முறத்துப் பார்த்தான் நாம் பதிலுக்குப் பேசினோம் என்று இருப்போம்.
ஒரு பாலிலே பாதாமைப் போட்டாலும் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டால் யார் குடித்தாலும் காரமாகத்தான் இருக்கும். நல்ல சுவையை அது இயக்க விடுமா…?
நான் நல்லவன்… எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன் என்று சொன்னாலும் அவர் அந்தப் பாலைக் குடித்தாலும் இந்தக் காரம் தான் முன்னாடி வரும்.
நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த உணர்வு நமக்குள் இயங்கப்பட்டுக் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்… இனம் புரியாத வெறுப்பு…! தனக்கு முதியவர்கள் இருந்தாலும் இதே நிலைகள் உருவாக்கப்பட்டு வீட்டில் கலக்கங்கள் வந்துவிடும்.
ஏனென்றால்
1.எந்தப் பிச்சைக்காரன் உடலில் அந்த உணர்வுகள் விளைந்ததோ
2.“ஐயா……” என்ற இந்த சோகமான உணர்வு அவன் எப்படி வேதனைப்பட்டானோ
3.அது நமக்குள் ஆகி நம் உயிரிலே பட்டு இயக்கங்கள் ஆகும் போது அந்த உணர்ச்சிகள்
4.நம்மை… நம் குடும்பத்தை… மற்றவர்களை… எப்படி இயக்குகிறது…? என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நமக்குள் அது வித்தாகி அதன் வளர்ச்சிக்கு வரும் பொழுது இந்த நிலையைத் தான் செயல்படுத்தும். இதெல்லாம் இயற்கையினுடைய சில செயல்கள்.
தொழில் செய்யும் இடத்திலும்… நான் முதலாளியாக இருக்கின்றேன்…. நிர்வாக நிமித்தமாகச் சுற்றிப் பார்க்க வருகின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.
இதே உணர்வின் வேகங்கள் அங்கேயும் சொல்லாக வரும். வேலை செய்யும் அந்தத் தொழிலாளி செவிகளில் இது பட்டபின் நம்மை உற்றுப் பார்ப்பான்.
பார்க்கப்படும் பொழுது பிச்சைக்காரனிடம் எந்த வெறுப்படைந்தோமோ அவன் மீது பட்டு முதலாளி என்று அச்ச உணர்வுகள் இருப்பினும் அவனை பலவீனப்படுத்தும் நிலையே அங்கே வரும்.
முதலாளி வந்தார் பார்த்தார் என்று சென்றாலும்… அடுத்த கணம் அகன்ற பின் அந்த வெறுப்படைந்த உணர்வுகள் அவன் இயந்திரத்திலோ மற்ற நிலையில் அவன் வேலை செய்யப்படும் பொழுது அல்லது கணக்குகளை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.இவன் உணர்வுக்கொப்ப கண்ணின் புலனறிவு ஓடும்.
2.ஒரு இயந்திரத்தை அவன் இயக்குகிறான் என்றால் இயந்திரத்திற்குள் இந்த உணர்வலைகள் பட்டு
3.அந்த காந்தப் புலனறிவால் துரித நிலையில் இயக்கப்பட்டு அதனுடைய ஈர்ப்புத் தன்மை மாறி
4.நாம் எந்த வெறுத்த உணர்வு கொண்டு உற்று நோக்கினோமோ அது இயக்கப்பட்டு (ஏனென்றால் எல்லாவற்றிலும் காந்தப்புலன் உண்டு)
5.அந்த இயந்திரம் சீரற்ற நிலையாகி… “உற்பத்தியாகும் பொருள் தரமில்லாது பாதிப்படைந்து விடும்…”
ஆக முதலாளி பார்த்தார் என்றாலும் வேலை செய்கின்றவரின் உணர்வுக்குள் அது ஊடுருவி அங்கே தவறுகளை உண்டாக்கி விடும் நம்முடைய சோர்வான உணர்வு மற்றவர்களின் செயல்களுக்குள் ஊடுருவி அதற்குத் தக்கவாறு நம் தொழிலையும் அது பாதிக்கும்.
தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தால் நமக்குள் விளைந்த வெறுப்படைந்த உணர்வுகள் “அங்கே மற்றவர்களுக்குள் கலந்து கலந்து…” நம்மை உற்று நோக்கி எதிர்பார்ப்பவரின் உணர்வுக்குள் இயங்கி… “நமக்கே எதிரியாக்கிவிடும்…”
அதே சமயம் அந்த உணர்வு கொண்டு வீட்டிற்குள் நாம் அமரும் இடத்திலும் இது அதிகமாகப் பதிவாகின்றது.
1.அதிலே சூரியனின் காந்த சக்தி (வெப்பம்) படரப்படும் போது அது அலைகளாக் கிளர்ந்து அங்கே (வீட்டிற்குள்) பரவத் தொடங்கும்.
2.ஆன்மாவில் அது கலந்து அதிகமாக அதையே நினைவு கூறும் தன்மை வந்துவிடும்.
தொழிலில் கஷ்டமும் நஷ்டமும் எடுத்துக் கொண்ட பின்… எதை எதை எல்லாம் உடலில் விளைவிக்கின்றோமோ… அந்த உணர்வுகள் வீட்டிலே அமர்ந்திருக்கும் போது ஆழமாக அங்கே (தரைகளிலும் சுவர்களிலும்) பதிந்து
1.அதுவே மீண்டும் மீண்டும் நினைவாற்றலாக வரும்… சங்கடத்தையும் சலிப்பையும் உண்டாக்கும்.
2.இதையெல்லாம் நீக்க வேண்டுமா இல்லையா…! இதை யார் நீக்குவது…?
சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே… ஒளி நிலை பெறும் மார்க்கம்”
விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.
ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து… அதன் வழி நடந்து… அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக… கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.
இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்…!
பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.
கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்…!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.
1.தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான்
2.”மாமகரிஷியாக நம்மை ஆக்கும்…” என்ற உண்மையை உணர்ந்தார்.
அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் “ஐயப்பனாக… ஐயப்ப முனிவராக…! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்…”
அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா…!).
1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.
(நான்.. நான்…! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்…!” என்று நம்பிக் கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது… அதைக் காக்காது… மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே… இருளுக்குள் சென்று விடுகின்றோம்)
உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் தன்னைத் தயாராக்க வேண்டும் என்றார்.
1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்…!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே சரணம் என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.
ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.
அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.
தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி… அதை வைத்து இந்த உடலை நாம் அழகு படுத்தினாலும் சரி…
1.இந்த உடலை நாம் காக்கப் போவதில்லை… இது நிலைத்திருக்கப் போவதும் இல்லை… இது நிலையானதும் இல்லை.
2.நிலையாக இல்லாத இந்த உடலுக்கும் நிலையற்ற சொத்துக்கும் தான் அது பயன்படுகிறது.
இதைக் காக்க எவரால் முடியும்…!
1.சொத்தை வைத்து என் பிள்ளையைக் காப்பேன்…! என்று யாராலும் உறுதி கூற முடியுமா..?
2.தேடிய சொத்தை என் பையன் வைத்துக் காப்பான் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா…?
அப்படி வைத்திருந்தாலும் வேதனையை உருவாக்கும் நிலை தான் வருகின்றது. செல்வத்தைத் தேடினாலும் பையன் குறும்புத்தனம் செய்தான் என்றால் “இப்படிச் செய்கிறானே…!” என்ற வேதனையை உங்களுக்குள் வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் அவன் உடலுக்குள் சென்று அவனை அழிக்கத்தான் முடியுமே தவிர… அவனைக் காக்க முடியாது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மனிதன் விடுபட வேண்டும் என்பதற்குத் தான் முன்னோர்களை விண் செலுத்தும் தத்துவத்தைத் தெளிவாகக் கொடுத்தார்கள் ஞானிகள்.
ஆகவே… நம்மைச் சார்ந்த முன்னோர் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுக்குச் செலுத்தி அவர்களை முதலில் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
ஒரு தேரை இழுக்கிறோம் என்றால் ஒருவரால் இழுக்க முடியாது. பலரும் சேர்ந்து தான் அந்தத் தேரை இழுக்க வேண்டும்.
1.கூட்டுத் தியானத்தின் மூலம் பலரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் சக்தியை நுகர்ந்து வலுவாக்கிக் கொண்டு
2.நம் மூதாதையர்கள் ஆன்மாக்களை (இதற்கு முன் நம் செய்யத் தவறியதை) முறைப்படி நாம் விண் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலமே விஷத் தன்மையாகி விட்டது. அதை நுகரும் போது விஷ அணுக்கள் நமக்குள் உருவாக்கப்பட்டு… சிந்தித்துச் செயல்படும் திறன் இழக்கப்பட்டு… அசுர உணர்வு கொண்ட கொடூர செயல்களைச் செய்யும் தன்மை இன்று உருப்பெற்று வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.
உயிர் மனிதனாக நம்மை உருவாக்கிய பின்… பௌர்ணமி எப்படி ஒளியாக… முழுமையாகப் பிரகாசிக்கின்றதோ அதைப் போல் அறிந்திடும் அறிவாற்றல் பெற்றவர்கள் தான் நாம்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒளியின் சரீரமான அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… நினைவு கொண்டு நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீங்களே அகற்றும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
1.அந்த நிலை பெறச் செய்வதற்கே “எமது குருநாதர்” காட்டிய அருள் வழியில்…
2,இல்லை… நமது குரு…!
3.ஏனென்றால் அவர் காட்டிய அருள் வழியை நீங்கள் ஏற்றுக் கொண்டால் “நமது” என்று வருகின்றது.
4.ஆனால் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இல்லை என்றால் “எனது குரு…” என்று தான் வருகிறது.
அவர் காட்டிய முறைப்படி அந்த அண்டத்தின் சக்தியை இந்தப் பிண்டத்தில் சேர்த்து உணர்வின் சக்தி ஒளியாக ஆக்கும் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கிறேன் (ஞானகுரு).


களி நடனம்…!
ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு… விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்…!”
அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் காரண காரியங்கள் செயலாகின்றன.
அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்கு வருகின்றது.
அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்…” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.
யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.
நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திகள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக – நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.
சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.
கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து அதன் பிண்ணனியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.
பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை… விளக்கவொண்ணா அந்த அதி அற்புதமான உயிரியல் தத்துவத்தை… “நடராஜராக…” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.
எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகா மகான்கள் தந்தனரோ அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி… வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு… பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் நடராஜரின் விந்தையே…!
பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் – சிதம்பர இரகசியம்…!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெற வேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.
அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.
இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. ஜெபத்தால் ஞானத்தைப் பெற வேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை…” என்ற சுவாசம் பெற வேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.
சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்… ஜோதியில் ஒடுங்கும்…!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.
சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும் சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்…!” (சரீர ரகசியம்). இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்…!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.

“உயிரை ஒட்டி” நம் ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்
பூரண நிலவாக இருக்கப்படும் போது சந்திரன் முழுமையான வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. காரணம் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை எந்தக் கோளும் இடைமறிப்பதில்லை…. நேரடியாகச் சந்திரனுக்கு வருகின்றது.
பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசிக்கின்றது. இருந்தாலும் அடுத்த நாளை எடுத்துக் கொண்டால் மற்ற கோள்கள் இடைமறிக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக பதினைந்து நாட்களில் தேய்பிறையாக மாறிவிடுகின்றது அதனுடைய ஒளி மங்கிக் கொண்டே வருகின்றது.
சூரியனிலிருந்து வரக்கூடிய அந்த ஒளிக்கதிர்களை மற்ற கோள்கள் தடைப்படுத்துவதனால் இருளடைந்து அதனுடைய முடிவுக்கு வருகின்றது… முழுமையாக மறைந்து விட்டால் அமாவாசை.
அதே போல் அது சமயம்
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை மறு பிரதி பிம்பமாக (கண்ணாடி போல்) வெளிப்படுத்தும் சக்தி
2.சந்திரனிலிருந்து வருவது நம் பூமிக்கும் கிடைப்பது தடைப்படுகின்றது.
(பௌர்ணமி முழுமையாக இருந்தால் பூமியில் இரவிலும் அந்த வெளிச்சம் தெரியும்)
ஆனால்
1.அமாவாசைக்குப் பின் வெள்ளிக் கோள் அதன் அருகில் வந்து ஒளிக்ற்றைகளை எடுத்துக் கொடுக்கின்றது
2.சிறுகச் சிறுக சூரியனின் ஒளியைப் பெறப் பெற… சந்திரன் மறுபடியும் பூரண நிலவாக “பௌர்ணமியாக” வருகின்றது.
உயிரணு தோன்றி எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்று நம்மை மனிதனாக உருவாக்கியது நமது உயிர். முழு நிலா எப்படி இருக்கின்றதோ இதைப் போல்
1.மனிதன் இயன்றவரை அனைத்து நிலைகளையும் அறிந்து…
2.தீமைகளை அகற்றி வாழக்கூடிய உணர்வின் உணர்ச்சிகளை எழுப்பும் மனித உடலாக அமைக்கின்றது நமது உயிர்.
இப்படித் தெரிந்து கொள்ளும் சக்தியைக் கார்த்திகேயா என்று காட்டுகின்றார்கள். அதாவது நமது ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
மனித வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிந்து கொண்டு பிறிதொரு மனிதர்களைப் பார்க்கின்றோம். ஒருவன் அவனுக்கு ஆகாதவனை வெறுத்துக் கோபமாகப் பேசுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவனின் சிந்திக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.
கோபமாக நிந்தித்துக் கொண்டிருக்கும் அந்தச் செயலினை நாம் பார்த்தால்…
1.நமக்குள்ளும் கோபத்தின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
2.சிந்திக்கும் தன்மை இழந்து நிந்திக்கும் உணர்வு நமக்குள்ளும் வந்து விடுகின்றது.
மனிதனாக வருவதற்கு முன் புழுவிலிருந்து எத்தனையோ கோடி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சி பெற்ற நிலையில்
1.தன்னைக் காட்டிலும் வலிமையான உயிரினங்களிடம் சிக்கி
2.அது துன்புறுத்தி உணவாக உட்கொள்ளும் போது அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில்
3.உணவுக்காக அந்த மிருகம் இதைக் கொன்று தசைகளைத் தின்றாலும்
4.அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுவாகி
5.இந்த உயிரான்மா அந்த உடலுக்குள் சென்று அதனுடைய உணர்வை எடுத்து அதே உடலாக மாறுகின்றது.
6.அதனுடைய குட்டியாகும் போது அது இதைப் பாதுகாக்கிறது.
இதே மாதிரி ஒவ்வொரு உடலிலும் “தான் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… நம்மை மனிதனாக உருவாக்கிய “உயிரான ஈசனை நாம் மதித்து நடக்க வேண்டும்…”
வீட்டை அழகாகக் கட்டி வைத்திருந்தாலும் எப்படியும் அதில் தூசிகள் படுகின்றது… நூலாம்படைகளும் வருகிறது. அதை எல்லாம் துடைக்கத் தவறினால் தூசிகள் அதிகமாகி நெடி வந்துவிடும்.
அந்த வீட்டில் அடுத்து நாம் அமர முடியாது… குடியிருக்க முடியாது
அது போல் பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ தீமைகளைச் சந்தித்திருந்தாலும் அதை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய உடல் அமைப்பைக் கொடுத்தது நமது உயிர்.
சிந்தித்துச் செயல்படும் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி இந்த உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள் தான் மனிதர்களான நாம்.
உடல் என்பது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடல் ஒரு ஆலயம்… இது ஒரு கோட்டை.
ஆறாவது அறிவைக் கொண்டு தூய்மையான உணர்வுகளை இந்த உடலுக்குள் பெருக்கி… உயிருடன் ஒன்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடையும் பருவம் பெற்றது…
1.இதே உயிர் தான்…! அவனை ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி
2.வாழ்க்கையில் வரும் தீமைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தவறினால் அழுக்குகள் அடைந்து ஒவ்வொரு குணமும் பாழ்பட்டுவிடும்..
எப்படிப் பூரண நிலா கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து முழுவதுமாக இருள் அடைவது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருளடைந்து… உயிர் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு வெளியே சென்றுவிடும்.
வெளியில் சென்றாலும் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்ட மிருக இனங்களாகத்தான் அடுத்துப் பிறக்க வேண்டி வரும். மனிதனல்லாத உருவாகத் தான் பிறக்க நேரும்.
அதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் தீமைகள் உங்களுக்குள் வரும் பொழுதெல்லாம்
1.வெள்ளிக் கோள் தன் ஒளிக்கற்றைகளால் சந்திரனுக்கு (அமாவசைக்குப் பின்) ஜீவன் ஊட்டியது போல்
2.அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
3.அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகப் பெருக இருளகன்று என்றுமே ஒளியின் அறிவாக நிலைத்திருக்க முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பாம்பு மிரட்டி நரி மிரட்டி புலி மிரட்டி யானை மிரட்டி என்றெல்லாம் சில தாவர இனங்களைச் சொல்வார்கள். அதிலே ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் தேள் கொட்டாது.
உதாரணமாக ஈயம் பூசும் நமச்சாரத்தைச் சுண்ணாம்புடன் கலந்தால் கேஸ் (GAS) உண்டாகும். தேள் கொட்டியது என்றால் அபப்டியே நசுக்கி மோந்து பார்த்தால் விஷம் மேலே ஏறாதபடி கீழே இறக்கிவிடும்.
அதே சமயத்தில் கொடுக்கு பட்ட நரம்பில் அந்த விஷம் இருந்தால் கடு கடு என்று இருக்கும். அதிலே சுண்ணாம்புடன் சேர்த்த நமச்சாரத்தைப் போட்டு விட்டால் கடு கடுப்பு இருக்காது. சிறிது நேரம் தான் இருக்கும்.
இப்படி விஷத்தைத் தணியச் செய்யும் பல பல பச்சிலைகள் உண்டு.
“சிரியா நங்கை” என்ற பச்சிலையை வாயிலே போட்டு மென்றால் கசப்பாக இருக்கும். ஆனால் விஷம் இருந்தால் கசக்காது. அதை அதிகமாக மென்று தின்று விட்டு கசக்கி நன்றாக மோந்து பார்த்தால் உடனே விஷம் குறையும்.
1.சுண்ணாம்பில் இதை நசுக்கி கொஞ்ச நேரம் நுகர்ந்து பார்த்தால் மூளை பாகம் வரை இது சென்று
2.மேலே செல்லும் விஷத்தை இது தடுத்து நிறுத்திக் கீழே இறக்கி விட்டு விடும்.
3.சிரியா நங்கைக்கு அந்தச் சக்தி உண்டு.
இந்த மாதிரி ஒவ்வொரு பச்சிலைகளுக்கும் ஒவ்வொரு விதமான விஷத் தன்மைகளைப் முறிக்கக்கூடிய சக்தி உண்டு.
பாம்பு ஒரு மனிதனைக் கடித்ததும் ஐய்யய்யோ…! பாம்பு கடித்துவிட்டதே…! என்று பதறினால் அந்த விஷம் உடலில் ஏறி உயிர் வெளியில் வந்த பின் பாம்பின் நினைவு கொண்டு பாம்பின் உடலுக்குள் சென்று அடுத்தாற்போல் துரிதமாகப் பாம்பாகப் பிறக்கச் செய்யும்.
1.ஆனால் இது போன்ற விஷங்களை எல்லாம் முறிக்கக்கூடிய வல்லமை
2.மனிதனின் ஆறாவது அறிவுக்கு உண்டு என்று கண்டுணர்ந்த ஞானி இதைச் சொல்லியுள்ளான்
3.காலத்தால் அது மறைந்து விட்டது.
விஷத் தன்மையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வு கொண்டு இருப்பினும் அதைச் சீராகப் பயன்படுத்தாது வைத்திய ரீதியிலும் தவறான ரீதியில் கொண்டு சென்று விட்டார்கள்.
1.எனக்குத் தெரிந்த உண்மை அடுத்தவருக்குத் தெரியக் கூடாது என்று சுத்தமாகவே மறைத்து விட்டார்கள்
2.காலப் போக்கில் இன்று முழுவதும் மறைந்து கொண்டிருக்கிறது.
அக்காலத்தில் “பாட்டி வைத்தியம்…” என்று சொல்வார்கள்.
கைக் குழந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லை என்றால் குழந்தை வெளிப்படுத்தும் மலத்தை வாயில் வைத்துப் பார்த்து… அதனின் தன்மையை அறிந்து “அதற்குண்டான இன்ன மருந்தைக் கொடுத்தால் சரியாகும்…” என்று முந்தைய காலத்தில் செய்வார்கள்.
ஏனென்றால் கைக் குழந்தையால் ஒன்றும் சொல்ல முடியாது…
1.தன் உணர்வால் நுகர்ந்து
2.அந்த உடலில் வரக்கூடிய மலத்தை வைத்து
3.எந்த வகையான மலமாக அது இருக்கிறது (இன்று விஞ்ஞான முறையில் பரிசோதனை செய்வது போல்) என்று காண்பார்கள்.
4.கொடிய நோயாக இருந்தாலும் அவர்கள் ஒரு பச்சிலையை அரைத்துக் கொடுப்பார்கள்… அந்த நோய் சரியாகிவிடும்.
காமாலை நோய் என்று இருந்தால் அதற்கு என்று ஒரு பச்சிலையை அரைத்து மோந்து பார்க்கச் செய்வார்கள். அல்லது உள்ளங்கையில் அதைத் தேய்த்து விடுவார்கள். அது வழியாக ஊடுருவிய பின் அந்த நோய் குறையும்.
அந்தக் காலத்தில் இது போன்ற பச்சிலைகள் ஏராளம் உண்டு. குப்பை மேட்டில் எல்லாம் இருக்கும். இப்பொழுது அந்தப் பச்சிலைகளைக் காணவே முடியவில்லை.
அக்காலத்தில் இருந்த பெரியோர்கள் அதைச் சீராகப் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது இருப்பவர்கள் விஞ்ஞான மருத்துவம் வந்த பின் எல்லாம் மறந்து விட்டார்கள். என்னிடம் (ஞானகுரு) வந்து கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
பேதிக்கே போக வேண்டும் என்றால் அதற்கு ஒரு பச்சிலை உண்டு. எடுத்து உள்ளங்கையில் தேய்த்துவிட்டார்கள் என்றால் முகர்ந்தால் உடனே பேதியாகும். மருந்தே சாப்பிட வேண்டியதில்லை.
ஏனென்றால் பச்சிலைகளுக்கு இவ்வளவு சக்திகள் உண்டு. காலத்தால் இவை எல்லாம் மறைந்தே போய்விட்டது.


“உலகோதய நான்… பரப்பிரம்மமாகிய நான்” ஆக வேண்டும்
தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட சரீரம் கிடைக்கப் பெற்ற இந்தக் கால கட்டத்தில் உண்மையை நாம் உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலை பெறும் வழி அறிந்திட வேண்டும்.
தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே சக்தி பெறச் செய்யும் மார்க்கம் அறிந்து அந்த எண்ண வழித் தொடரில் “பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..?” என்ற கேள்வி எழுந்து பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான் “கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.
கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக உணர்த்தினார் வியாசகர்.
1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.சரீர உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.அதற்கும் “காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6.இந்த ஜெப வழித் தொடர் வலுப் பெற்றுவிட்டால்
7.சரீரம் தனக்குகந்த பக்குவத்திற்கு உயரிய ஒளிக் காந்த சக்தியின் சக்தி வலுக்கூட்டும் செயல் தன்மையும்
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டிடவே
9.அதைக் காவியமாக்கிச் சொல்லாமல் சொல்வித்து
10.”உயிர் ஒளி சக்தி பெற்றுக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”
ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் ஜெபமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதனுள் வளரும் சக்தி நிலைப்படுத்திட “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”
அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெற வேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் பசுக்களாகிய உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!
தன் உயிர் சக்தியை ஒளி காந்த சக்தியாக உயர்த்துவதோடல்லாமல் முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் நிலை நின்ற “அத்தனை உயிரணுக்களையுமே” என்பது மறை பொருள்.
திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தச் சுவை குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு உணர்வுகளின் வழிதான் எண்ணம் என்ற நிலைப்படுத்திவிடும்.
உயர்ந்த எண்ணங்களின் வழியில் தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரியும் உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்தப்பட வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.
உணர்வுகளின் வழிக்கெல்லாம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே. கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்பட்டதாகவும் உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி
1.“தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக என்பதன்
2.கருப் பொருள் உணர்ந்து கொள்வதே நல்லது.
ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரம் உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் ஒளி பெறும் தன்மைக்கு வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து எவ்வாறு செயல்பட வேண்டும்…?
நம் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… சரியாகப் படிக்கவில்லை… அவன் மீது கவலையும் வெறுப்பும் கோபமும் வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
அந்த நிமிடமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரிலே அதை மோதவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்து
3.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று “நாம் முந்திக் கொள்ள வேண்டும்…”
அந்த வலிமையைச் சேர்க்க சேர்க்கத் தவறான உணர்வுகளிலிருந்து மீட்டிடும் சக்தியாக அது வரும்.
பின் பையனைப் பார்த்து…
1.சிந்தித்து செயல்படும் சக்தி பெற்று நீ ஞானி ஆக வேண்டும்
2.தெளிந்தவனாக வரவேண்டும் தெளிவானவனாக நீ வரவேண்டும்
3.தெளிந்த நிலையில் நீ நிச்சயம் வருவாய்…! என்று இதை நாம் சொல்லிப் பழகுதல் வேண்டும்.
இப்படிச் செய்தால் அவன் குறைகளை நீங்கள் நுகர்வது இல்லை. அவன் குறை உணர்வு இங்கே வந்து அவனைக் குற்றவாளியாக்கும் உணர்வுகளிலிருந்து நீங்கள் தப்பலாம். இல்லையென்றால் பாசத்தால் குழந்தையை வளர்த்த நிலையில் அவனைக் காக்கும் நிலை வராது
அதே போன்று தொழில் செய்யும் இடங்களிலும் எத்தனையோ இன்னல்கள் வருகின்றது.
நமக்குக் கடன் கொடுத்தவன் நாளைக்கு வந்து கேட்டால் நாம் கொடுக்க வேண்டுமே…! என்ன செய்வது என்று தெரியவில்லையே…? என்று எண்ணினால்
1.அந்த உணர்வு மூலத்தில் (உயிரில்) மோதுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் அது கனலாக எழும்புகின்றது
3.என்ன செய்வது…? ஏது செய்வது…? என்ற பதட்டங்கள் வருகின்றது
மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை… உணர்ச்சிகள் இப்படி வரப்படும் பொழுது “உங்கள் எண்ணங்கள் நலமாக சீராக இருக்கின்றதா…? இல்லை…! பலவீனம் அடைகின்றது…”
அப்போது என்ன செய்ய வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான மூலத்தில் மோதச் செய்து… மோதிய உணர்ச்சிகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று..
1.துரிதமாக இந்த உணர்வினைச் செலுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செலுத்தி விட்டால் அடுத்து நல்ல சிந்தனைகள் வரும்
3.ஏன்…? எதனால்…? என்ற கேள்விக் குறி வரும்.
4.அப்படி அந்தக் கேள்விக்குறி வைக்கப்படும் பொழுது சிந்தனை சீராகி அதை நிவர்த்திக்கும் “உபாயம்” வரும்.
நிவர்த்திக்கும் உபாயங்கள் வந்த பின் நண்பரிடத்திலே சென்று இதை இப்படிச் செய்ய வேண்டும்… இப்படிச் செய்தால் நிச்சயம் நலமாக இருக்கும்… “அதற்கு உன்னுடைய உதவி வேண்டும்…” என்று சொன்னால் நீங்கள் எண்ணிய வலுவாந உணர்வுகள் நண்பனுக்குள் ஊடுருவி… உதவி செய்யும் பண்பு வரும்.
ஆனால் அப்படி எண்ணாதபடி இங்கிருந்து போகும் பொழுதே… நான் கடன் வாங்கினேன் கொடுக்க முடியாதபடி சந்தர்ப்பம் விரயமாகி விட்டது என்ற வேதனை வந்தால் என்ன ஆகும்…?
1.மூலாதாரத்தில் வேதனைகள் மோதி
2.மூண்டெழும் கனலாக அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பரவி
3.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பலவீனமடைந்து நண்பரிடத்தில் கஷ்டத்தைச் சொல்வோம்.
அவர் செவிகளிலே படுகின்றது. நம் கஷ்டத்தை எல்லாம் கேட்கப்படும் பொழுது அவருக்கு அந்த சந்தேகம் தோன்றுகிறது. பணம் கொடுத்தால் மீண்டும் வருமா…? என்ற சலனங்கள் அங்கே தோன்றி கேள்விக்குறியாக எழும்பிவிடும்.
“நம்முடைய மனமே” அவர் நமக்குக் கொடுத்து உதவும் அந்தப் பண்பை இழக்கச் செய்து விடுகிறது. அதனால்தான் இதை மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறிந்து செயல்படும் அந்தச் சக்தி வேண்டும் என்று சொல்வது.
ஆகவே… அப்போது அந்தக் கருத்தை அறிந்திடும் நிலையாக…
1.அது எப்படி வருகின்றது…? எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று
2.மனவலிமையை நமக்குள் கொண்டு வர வேண்டும்.
அப்படி மன வலிமையைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதிகாலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பதிவு செய்து வலு சேர்க்க வேண்டும்.
ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலே நினைவினைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.அந்த மூலாதாரத்தில் இந்த அருள் உணர்வுகளைக் கனலாக நாம் மூண்டெழச் செய்தல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.
3.கண்ணின் நினைவுகளை உடலுக்குள் செலுத்தி சோர்வை அகற்றி
4.வீரிய உணர்வாக எடுத்து நமக்குள் உற்சாகப்படுத்தி… மன வலிமையைக் கொண்டு வருதல் வேண்டும்.
தொழிலை எப்படிச் சீராக நடத்த வேண்டும்…? என்று அதற்குண்டான தெளிவான சிந்தனைகள் வரும். எல்லோரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாக வரும்.

மூலச்சக்கரம்
மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து செயல் கொள்கிறது.
தீய எண்ணங்களின் குணங்களும் நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும் வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச் செயல் கொள்ளும் காலத்தில் மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!
எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால் ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும் இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.
கோலமாமகரிஷி தீய குணங்களின் செயலையே மாற்றித் தாய் சக்தியின் அருளாசி பெற்றுத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்ட உயர் ஞான வளர்ப்பினை
1.மூகமாகச் செயல்படும் திறத்தை… அந்த இரகசியத்தை
2.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
3.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது கோடி காட்டுகின்றோம்.
கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு ஜெப ஆகாரம் ஊட்டிட்டாரப்பா..!
4.இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின் கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!
பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும் உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டே உணர்ந்து கொண்டதிலும் தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலையுயர்த்தக் கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.
சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும் அதைப் பெற்றிட வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார் ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.
அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால் மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி” என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
பின் அந்த அமைப்பையே கவர்ந்து சென்றிடும் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல் அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள் பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.
மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால் அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!
அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும் இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.
மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக் கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம் இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.
லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உயிரணுவாகத் தோன்றிப் பல கோடிச் சரீரங்கள் பெற்று மனிதனான பின்… அகஸ்தியன் உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளான்.
அவன் வழியைப் பின்பற்றியோர் அனைவரும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றனர்.
1.பிறவி இல்லா நிலை அடைந்து என்றும் நிலை கொண்டுள்ளனர்
2.எதிரியே இல்லாத நிலைகள் கொண்டு…!
அதாவது…
1.எந்த விஷத்தின் தன்மை கொண்டு இயக்கும்
2.எந்த உணர்வுடன் கலந்து ஒரு இயக்கமாக அது இயக்குகின்றதோ
3.அதே இயக்கத்தின் மோதலில் (வெப்பம்) ஒளியாக மாற்றி
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுகின்றான்.
ஒரு நஞ்சு கொண்ட பாம்பினம் மற்ற உயிரினங்களில் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அங்கே இருள் சூழச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்கிறது.
இப்படி வளரும் நாகப் பாம்பு தனக்குள் அந்த விஷத்தின் தன்மை வளர்க்க வளர்க்க
1.அந்த விஷப் பையே ஒளியின் சுடராக மாறிவிடுகின்றது…
2.”நாகரத்தினமாக” மாறுகின்றது…!
பாம்பினம் விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை அடைகின்றது. ஆனால் விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுத்துத் தான் அந்த உணர்வின் தன்மை பெறுகின்றது.
நாகம் மட்டுமல்ல… மற்ற பாம்பினங்களும் தனது விஷத்தைப் பாய்ச்சிப் பிற உயிரினங்களை இரையாக்கினாலும் விஷங்கள் வடிக்கப்பட்டு விஷம் அதிகரித்து உறையும் பொழுது அதனின் ஒளிச் சுடர் வரும்.
இதைப் போல் மனிதனின் நிலைகளிலும்…
1.உயிர் வாழும் (இருக்கும்) இடங்களில் இந்த உணர்வின் தன்மை கொண்டு “முத்தாக” விளையும்
2.முத்தாக விளையும் தன்மை வரப்படும் பொழுது உடல் மடியும்.
3.உடலில் வளர்த்த மற்ற உணர்வுகள் அலைகளாக மாறும்…. முத்தாக ஆன பின் செயலற்றதாக ஆகும்.
மனிதனின் இச்சைக்குள் பல காலம் வாழ்ந்தால்… 120 வருடத்திற்கு மேல் வளர்ந்தால் அந்த உடலிலேயே ஒரு அணுவின் தன்மை முத்தாக விளையும்.
யானைக்கும் அதுவே… மற்ற உயிரினங்களுக்கும் மற்றது சாடாத நிலைகள் வரும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டு அதிலே விளையும்.
ஆனால் உணர்வின் அணுக்களை ஒளியான ஜீவனுள்ள அணுவாக மாற்றிடும் தன்மை பெற்றவன் அகஸ்தியன்.
1.அவன் ஒளியின் சுடராக உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக
2.பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் மகிழ்ச்சியாகப் பேரானந்தப் பெரு நிலையுடன் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.
அவன் உணர்வைக் கருவாக்கி உருவாக்கி அந்த உணர்வின் தன்மையை ஒளியின் சுடராக மாற்றும் வல்லமை நம் அனைவருக்கும் உண்டு.


மனதை ஒன்றாக்க வேண்டிய அவசியம்
இந்த உலகம் விஷத்தன்மை வாய்ந்ததாகப் போய்க் கொண்டிருப்பதால்… எத்தகைய துயரமோ சங்கடமோ சலிப்போ பயமோ போன்ற நிலைகளைப் பார்க்க நேர்ந்தால்… அதை நுகர நேர்ந்தால்… அடுத்த கணம்
1.யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வின்படி ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்.
2.அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.உங்கள் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்யுங்கள்
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
4.கவலையோ மற்ற எதுவாக இருந்தாலும் அதை மாற்றிப் பழகுங்கள்.
அங்குசபாசவா…! மனிதனான பின் இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றுகிறது. நஞ்சைக் கழிக்கும் சக்தியான கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வலுப்பெற்றால் நம் எண்ணங்கள் அனைத்தும் பழுதாகிவிடும்… நம் உடலும் பழுதாகிவிடும்… நம் செயலும் பழுதாகிவிடும். அவ்வாறு பழுதாகாதபடி அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
காரணம் சிறிது காலம் தான் இந்த உடலில் நாம் வாழுகின்றோம். அதற்குள் நல் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும். அதற்காகத் தான் இராமேஸ்வரத்தில் “இராமன் மனதைக் குவித்து ஒன்றாக்கினான்…” என்று ஞானிகளால் உணர்த்தப்பட்டது.
வாழும் காலத்தில்…
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…
2.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
3.தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
4.பிறர் மேல் இருக்கும் பகைமைகளை மறந்து ஒன்றாக்கினால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றுகின்றது.
ஆனால் எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்களே… சும்மா விடுவதா…? என்று எண்ணினால் மனம் இருண்டு விடுகின்றது. மீண்டும் புவியின் பற்றுக்குத் தான் வந்து விடுகின்றோம்.
ஆகவே வாழக்கூடிய குறுகிய காலத்தில் பகைமைகளை மறந்து அருள் ஞானத்தைப் பெருக்கி எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வினைக் கொண்டு வர வேண்டும்.
இதற்குத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் குவித்தான் என்று காட்டினார்கள். ஆனால் அந்த உண்மையின் இயக்கங்களை அறிய முடியாதபடி போய்விட்டது.
ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற பேரருளும் அவன் துருவனாகித் துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
1.ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்
2.அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை உங்கள் இருப்பிடமாக்க வேண்டும்..

தாய் சக்தி
தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட… தீதெண்ணச் செயலுக்குச் சென்றிடாவண்ணம் ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திட பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே ஜெபத்தில் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.
அன்பென்னும் வசமாக… பரிவு என்ற இரக்க குணம் காட்டி… பாசம் கொண்ட செயல் மூலம்…!
1.உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்…!”
தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.
அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.
அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.
ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..!
அதாவது
1.POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்…!
பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்…?
தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால்
1.போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை…”
2.மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.
அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் “தாய் சக்தியையும் இழந்து…” அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான்.
இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.
ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.
ஆனால் உயர் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்…! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெற வேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.
பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.
ஆகவே சிவ சக்தி என்ற குணங்களால் தான்… நல்லெண்ணம் கொண்ட… நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.
ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால் மௌனம் கொண்டு
1.ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை படரப்பட்டு நல்ல அணுக்களை வீழ்த்திவிடுகிறது.
இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
“ஆதி மூலம் என்ற உயிர் தான்…” மிருக நிலையிலிருந்து தீமைகளை நீக்கிட வேண்டும்… நீக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை வலு சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சியாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது
நம் உயிரை ஈசனாகவும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக சிவமாகவும் இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வு வினைக்கு நாயகனாகவும் இயங்குகிறது என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர் ஞானிகள்.
உடல் சிவம் என்றாலும் அதிலே நாம் சேர்த்துக் கொண்ட பல கோடி வினைகளுக்கொப்ப நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது…
1.இந்தக் கணங்களை எல்லாம் உருவாக்கியது உயிர் என்று அந்த உயிரை எண்ணி
2.இந்த கணங்களுக்கெல்லாம் ஈசா… “கணேசா…” என்று உயிரை வணங்கும்படி செய்கின்றனர்.
தீமைகளை நீக்கிக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி “கணபதி…”
1.நல்ல உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.அது தீமையை அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது என்ற நிலையை உணர்த்துவதற்காக
3.அங்குசபாசவா…! என்று விநாயகர் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.
உடல் வலு பெற்றுப் பெற்றுத் தான் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தோம் என்று யானையின் சிரசை மனித உடலில் பொருத்திக் காட்டுகின்றனர். ஆனாலும் எண்ணத்தின் வலுக் கொண்டவன் தான் மனிதன்
பல கோடி உடல்களிலே புலிக்கும் வலு அதிகம்… மானுக்கும் வலு அதிகம்… புழுவிற்கும் வலு அதிகம்… ஒரு எறும்புக்கும் வலு அதிகம்…! ஏனென்றால் விஷத்தின் தன்மை அந்த உடலிலே அதிகமாக இருப்பதால் தான் தன் சக்திக்கு மீறிய எடை உள்ள பொருளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது ஒரு எறும்பு. ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை எதற்குள் அதிகம் இருக்கின்றதோ
2.அதிலே வலுவின் தன்மையும் அதிகம் இருக்கின்றது.
இப்படி உருவான இந்த நிலை தான் நாம் பல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி இந்த மனித உடல் பெற்ற நிலை. இருந்தாலும் மனிதனாக ஆன பின் நஞ்சை நீக்கும் அருள் சக்தி பெற்ற நாம்
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
துருவ நட்சத்திரம் மனிதாக இருந்து (அகஸ்தியன்) எப்படிப் பேரொளியாக மாறியதோ அந்த உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து அதனின் உணர்வை நம் உடலில் பெருக்கினால் அதன் உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பிறவி இல்லா நிலைகள் அடைவோம்.
இந்தப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத்தான் விநாயகரை வடமேற்காக வைத்து வடகிழக்காக நம்மை வணங்கும்படிச் செய்தார்கள். வடகிழக்காகத் தான் துருவ நட்சத்திரம் இருக்கின்றது. விநாயகருக்குப் பின்னாடி வேப்ப மரமும் அரச மரமும் வைத்தார்கள்.
மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கசந்த உணர்வைக் காட்ட வேப்ப மரத்தைக் காட்டினார்கள். அதே சமயத்தில்
1.இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையாக (துருவ நட்சத்திரம்)
2.இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் திறன் பெற்றதை அரசு என்றும்
3.அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.
பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உணர்வும் எதனின் நிலை கொண்டு செயல்படுகின்றதோ அதைத்தான் அங்கே வைத்துக் காட்டுகின்றார்கள்.
புராணத்தில் காட்டியபடி பார்த்தோம் என்றால் முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது என்று சொல்வார்கள். போர் நடக்கும் பொழுது கடைசியில் அசுரனை முருகன் கொல்கிறான்.
அந்தத் தருணத்தில் அசுரன் முருகனிடம் சொல்கிறான்…
1.நான் தோற்றுவிட்டேன்…
2.உன் காலடியிலேயே நான் இருக்கின்றேன் என்று வரம் கேட்கிறான்.
ஆகையினால் அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்துத் தன் காலடியிலே முருகன் வைத்துக் கொண்டான் என்று இப்படிக் கதைகளைச் சொல்கிறார்கள்.
1.விஷம் என்ற நிலைகளை அடக்கும் சக்தி பெற்றதை உணர்த்தாதபடி
2.இப்படிப்பட்ட காரணங்களை இடையிலே இணைத்து விட்டார்கள்.
மயில் விஷத்தை உணவாக உட்கொண்டாலும் நஞ்சை அது அடக்கி ஆட்சி புரிகிறது என்று உணர்த்துவதற்காக மயிலின் காலடியில் விஷப் பாம்பைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.மனிதனான பின் இந்த உடலை நாம் எப்படிக் காக்க வேண்டும்…?
2.உயிரான ஈசன் துணை கொண்டு நாம் எதனை உருவாக்க வேண்டும்…? என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து அதை நமக்குள் உருவாக்குதல் வேண்டும். அந்த அருள் ஒளி பெறும் தன்மையே உணர்த்துவதற்கே ஆலயம்.
நம் உடலே ஆலயம். நம் உணர்வே தெய்வம்…! எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப செயலாகின்றது.
கோபமாக இருந்தால் காளி… சலிப்பும் சஞ்சலம் கொண்டால் வெறுப்பும் வேதனையும் கொண்டு இதைப் போல் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயரை வைத்து ஆலயத்தில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
நாம் நுகர்ந்த அந்தந்த உணர்வே உடலை இயக்கினாலும் அதில் தீமை என்று வந்தால் அதை நீக்க அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுவதற்கு
1.நாம் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று
2.ஆலயத்திலே ஒவ்வொருவரையும் இப்படி எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள்.
ஏனென்றால் இந்த உடலுக்குள் (அதாவது) உடலான குடும்பத்திற்குள் எல்லோரும் ஒன்றியே வாழுகின்றனர். எல்லோர் உணர்வுகளும் இங்கே உண்டு.
ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் ஐயா…! என்று கேட்கும் பொழுது அந்த உணர்வு உடலுக்குள் அது ஒன்றிவிடுகின்றது.
1.ஒருவனுக்குக் காசு கொடுத்தாலும் அடுத்து ஒருவன் மீண்டும் ஐயா… என்பான்.
2.அவனுக்கும் காசைக் கொடுப்போம்
3.இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் அவர்கள் உடலில் எந்தத் தரித்திரம் ஆனதோ
4.அது எல்லாம் உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
நான் எல்லோருக்கும் தர்மத்தைக் கொடுத்தேன்… கடைசியில் ஆண்டவன் என்னை ஓட்டாண்டியாக ஆக்கிவிட்டான்…! நான் இல்லை என்று யாருக்குமே சொல்லவில்லை… ஆனால் என்னை ஆண்டவன் இப்படிச் செய்துவிட்டானே…! என்று தான் வேதனைப்படுகின்றோம்.
எல்லா ஆலயங்களுக்குச் செல்வோரும்… எல்லா மதத்திலேயும்… இப்படித்தான் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்று புலம்புகின்றனர்.
ஆகவே ஆண்டவன் யார்…?
1.நாம் எண்ணியதையெல்லாம் உருவாக்குவது நம் உயிரே… அதை ஆள்பவனும் உயிரே.
2.எண்ணியதை இறையாக்குகின்றான்… உணர்வின் செயலாக உடலாக்குகின்றான்.
3.அந்த உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தும் பொழுது அதே வழியிலே நம்மை நடத்துகின்றான் என்ற நிலைகளை மறந்து விட்டோம்.
ஆக… ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று பார்த்து நாம் உதவி செய்தாலும் அவனின் வேதனை உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க என்ன வழி…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று முந்தியே டெலிஃபோன் செய்துவிட வேண்டும்.
எப்படி…?
1.தீமை என்ற உணர்வு வராது…
2.அதை நுகர்ந்து விடாதே…! என்று நம் உயிரான ஈசனிடம் சொல்லி விட வேண்டும்.
பின் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த வேதனைப்பட்டோர் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கை உயர்ந்திட வேண்டும் அந்த அருள் வழி அவர்கள் பெற வேண்டும் என்று இந்த மாதிரி எண்ணி விட்டு அதற்ப்புறம் காசைக் கொடுத்தோ அல்லது மற்ற உதவிகளைச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகிறது… அவர்கள் வேதனை நமக்குள்ளும் வராது தடுத்துக் கொள்கிறோம்.
இப்படி எண்ணச் செய்வதற்குத்தான் ஆலயங்கள்…!


“மூகம்…” (ஃ) என்ற உயிரின் சக்தி
ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?
1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ…ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லு(ள்ளு)ம்…!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.
நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்… ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்…!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்…!
மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொண்டிடும் பகுப்பாற்றல் (பிரித்து அறியும்) செயல் கொண்டான்…” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்…! என்று அர்த்தமாகும்.
அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக… மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.
தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது…?
1.தீதெண்ணப் (தீமையான எண்ணம்) பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.
இதையே தத்துவப் பொருளாக… அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட
1.மூகம்… என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!
2.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
3.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு (ஃ).
4.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்…! என்பதே
5.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்
பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனிதச் சரீரம்” என்று செப்பி அந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதம்… அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.
உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட… “மனித குலம்…”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன…? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குலச் சிந்தனையைச் சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்…!”
அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு…!

புனித தேசத்தை உருவாக்குங்கள்
வீட்டில் கர்ப்பமுற்றார்கள் என்று தெரிந்தால் அந்தக் கருவில் வளரும் குழந்தை அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அந்த அகஸ்தியன் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று தியானித்து… உருவாகும் குழந்தைகளை ஞானிகளாக உருவாக்க வேண்டும்.
அந்தப் பத்து மாதம் இவ்வாறு நீங்கள் ஒத்துழைத்து ஞானிகளைக் கருவிலேயே உருவாக்குங்கள். விஞ்ஞான அறிவால் இனி வரக்கூடிய பேரழிவுகளில் இருந்து உங்களைக் காக்கத் தாய் கருவில் வளரும் அந்த ஞானிகள் உதவுவார்கள்..
1.ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செயல்படுத்த முடியும்
2.நம்மைக் காப்பது அவனாகத்தான் இருக்க முடியுமே தவிர “வேறு எந்தக் கடவுளும் நம்மை காக்கப் போவதில்லை… முடியாது…”
3.ஆகவே நாமே கடவுளாக இருந்து… ஞானக் குழந்தைகளைக் கருவிலேயே உருவாக்கிடல் வேண்டும்.
ஆனால் கர்ப்பமுற்றிருக்கும் தாய்… சந்தர்ப்பத்தால் நடக்கக்கூடிய சில தவறான செயல்களைப் பார்த்துவிட்டு… “இவன் திருட்டுப் பயலாக இருக்கின்றான்…” என்று திருடனைப் பார்த்து அவன் செயலை நுகர்ந்தால் கருவிலே வளரக்கூடிய குழந்தை “திருடனாகத்தான் பிறப்பான்…”
உலகில் எங்கு பார்த்தாலும் அநியாயம் நடக்கிறது… கொள்ளை அடிக்கின்றார்கள்… வெட்டுகின்றார்கள்… குத்துகின்றார்கள்… கொலை செய்கின்றார்கள்… என்ற அந்த உணர்வை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வு பெருகி… பிறந்த பின் “அந்த வேலையைத்தான் அவன் செய்வான்…”
ஓரு மனிதன் வெட்டப்பட்டுப் துடிதுடித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை கர்ப்பிணித்தாய் நுகர்ந்தால் அந்தக் குழந்தை உடலில் உள்ள உறுப்புகளும் அது போல் “சிதைந்து விடுகின்றது…”
ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்…!
சில வீடுகளில் பார்த்தால் ஒருவருக்கொருவர் தாக்குவதும்… கலவரம் செய்வதும்… குழந்தை கை கால்கள் ஊனமாவதும் அங்கங்கள் குறைவதும் இது எல்லாம் வருவதற்குக் காரணம்…
1.அந்த கர்ப்பிணித்தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது தான்… அதனால் வரக்கூடிய தீயவினைகள் தான்.
2.யாரையும் நாம் தவறாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.
கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்கள் எடுக்கும் உணர்வுகள் தான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகிறது. நீங்கள் தான் அந்தக் கடவுளாக இருக்கின்றீர்கள்.
1.கருவிலே வளரக்கூடிய குழந்தைகளை ஞானிகளாகவும் உருவாக்க முடியும்… நோயற்றதாகவும் மாற்ற முடியும்
2.உலக ஞானம் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தி “உங்கள் கையிலே உண்டு…”
அந்த பத்து மாதம் எத்தகைய தீமையும் வராதபடி
1.உங்கள் முகத்தையே நீங்கள் உற்றுப் பார்த்துக் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.கருவில் இருக்கும் குழந்தை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.
4.அவன் உங்களைக் காப்பான்… புழு பூச்சியாக உங்களை மாற விட மாட்டான்.
அவன் வளர வளர உங்கள் தெருவிலோ ஊரிலோ தோஷங்களோ தீயவினைகளோ எது இருந்தாலும் அது மாறும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
குடும்ப வம்சத்தையே அருள் வழியில் அழைத்துச் செல்லும் “பெரும் மகரிஷியாகின்றான்…!”
அவன் வளர வளர நீங்கள் அவனைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்… அந்த அருள் உணர்வு உங்களுக்குள் சேரத்தான் போகின்றது. அதன் வழி உங்களை அவன் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்வான்.
இதன்படி செய்து
1.புனித தேசமாக உருவாக்குங்கள்
2.இந்தக் காற்று மண்டலத்தையும் புனிதமாக்குங்கள்
3.அத்தகைய ஞானிகளை உருவாக்குங்கள்…!
இதைத் தவிர இனி வேறு வழியில்லை.
ஆனால் இன்றைய நடைமுறையில் அசுர உணர்வு கொண்டு எத்தனையோ செயல் நடந்து கொண்டுள்ளது. குடும்பத்தில் கருவுற்ற பின் “அது பெண் குழந்தை என்று தெரிந்தால்… எனக்கு வேண்டாம்…” என்று சொல்லி ஈவு இரக்கமற்றுக் கொல்கின்றார்கள். குழந்தையை உருவாக்கிய தாயே இதைச் செயல்படுத்துகின்றது
கரு உருவாவதற்கு முன்னே தடைப்படுத்தினால் கூட ஒன்றும் இல்லை.
1.கருவுற்ற பின் அதைக் கொல்வது மிகவும் தவறு.
2.ஏனென்றால் அவ்வாறு கருச்சிதைவு (ABORTION) செய்யப்படும் பொழுது அந்தச் சிசு எத்தனை வேதனைப்படுகிறதோ
3.அந்தத் தாய் நிச்சயம் அது அவஸ்தைப்பட்டே தீரும்… அந்தக் குடும்பமும் அதே நிலையில் சிதைவுண்டு போகும்.
நிறைய இடங்களில் வறுமையும் கொடுமையும் மற்ற நிலைகளும் சேர்ந்து இத்தகைய அசுர உணர்வுகள்… சமுதாயத்தை எங்கோ அழைத்துச் சென்று கொண்டுள்ளது.
இதிலிருந்து எல்லாம் மக்கள் அவசியம் மீள வேண்டும்.

தியானம் செய்வது என்பது சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!
உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடையும் பருவம் பெற்றவர்கள் தான் நாம்… இதே உயிர் தான்…!
1.அந்த உயிருடன் ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தினால்
2.இந்த வாழ்க்கையில் கண்டறிந்த தீமையான உணர்வுகளை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்த முடியும்.
ஆனால் தூய்மைப்படுத்தத் தவறினால் ஒவ்வொரு குணத்திலும் அழுக்குகள் சேர்ந்து… பூரண நிலா அது பௌர்ணமிக்கு பின் எப்படிச் சிறுகச் சிறுகக் குறைந்து… கடைசியில் முழுமையாக இருட்டாவது போன்று நம் உடலில் அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருள் அடைந்து விடுகின்றது.
இருளடைந்து விட்டால் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு இந்த உயிர் வெளியே சென்று விடுகின்றது. அந்த அடிப்படையில் உயிர் வெளியே சென்றால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு… அதற்குத் தகுந்த உடலாக… “மனிதனல்லாத உடலை” இந்த உயிர் உருவாக்கி விடும்.
மனிதனல்லாத உடலை உருவாக்கி விட்டால் மீண்டும் அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் பெற்றுத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உடலிந் உணர்வுக்கே செல்லும். ஆனால் மனிதனாக வர முடியாது.
நம் பையனை (குழந்தைகளை) நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் நாம் எண்ணியபடி குழந்தைகள் சரியாக வரவில்லை என்றால்
1.தவறு செய்கின்றான் என்று ஆவேசமான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது பேய் மனமாக மாறுகின்றது.
முதலில் நல்ல முறையில் வளர்க்கத் துடித்தோம். ஆனால் தவறு செய்கிறான் என்று தெரிந்த பின் பேயைப் போல அவனைத் தாக்கவும்… அறிவை இழக்கச் செய்வதும்… இதைப் போன்ற நிலைகள் வந்து விடுகின்றது.
நமக்குள் வளர்ந்த அறிவினை… “நாமும் நல்ல முறையில் வளர்க்க முடியாது” தடைப்படுத்தும் நிலையாக ஆகிவிடுகின்றது.
பூரண நிலா சிறுகச் சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போல் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றி வரக்கூடிய நிலையாகி விடுகின்றது அப்படிச் செயலற்றதாக ஆகிவிட்டால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.
ஆகவே… இந்த உடலில் முழுமையான ஒளியாக மாற்றும் நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குப் பயிற்சி கொடுத்து… மகரிஷிகள் ஆற்றலை அருள் வாக்குகளாகக் கொடுக்கின்றோம்
பூரண நிலா போன்று நமது உயிர் என்றும் பரிபூரண நிலையை அடைவதே மனிதனின் முதிர்வு நிலை.
1.இந்தச் சந்தர்ப்பதை இழந்தால்
2.இந்த உடலில் படும் துன்பத்தைக் காட்டிலும் எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்துவிடும்.
ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி… நல் உணர்வுகளை உயர்வாக்கி… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்
1.அதற்குத்தான் நமது தியானமே தவிர
2.சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.
3.அருள் ஞான சொத்தை அந்தப் பேரின்பச் சொத்தைத் தான் நாம் தேட வேண்டும்.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது… அதைப் பயன்படுத்தும் முறை முக்கியமானது
மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.
சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திட யாம் கூறிடும் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டிட்டால்
1.ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக வளர்ப்பவனின் செயலில் நாம் பேரருளை வளர்க்க முடியும்.
இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.
அப்படிக் கற்பித்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தில் திணித்துக் கொண்டிட்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா…!
வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! (இது மிகவும் முக்கியமானது)
சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கட வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொண்டிடும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…!
“இராமபாணம்…” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது என்ற தத்துவ உண்மை உண்டு…!
அதைப் போல் சமமான உணர்வாக… நல்லெண்ணச் சுவாசமாக… உயிரான ஈசனுடன் ஒன்றி… ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே…
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் “அருமருந்து….”
(ஏனென்றால் நடக்காத… முடியாத… நடைபெறாத ஆசைகளை… முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்…!” என்று முயற்சி செய்து முயற்சி செய்து அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை… நடக்க வேண்டியதை… எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)
நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை…!”
1.வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது…
2.விவேகமும் ஞானமும் சாந்தமும் அவசியம் தேவை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக வேதனைப்படுவோரை அதிகமாக நாம் உற்று நோக்கிப் பார்ப்போம் என்றால் வேதனை அணுக்கள் உடலிலே உருவாக்கி விடுகின்றது,
இதனின் அளவுகோல் அதிகமாகி விஷத் தன்மைகள் பெருக்கமாகும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் நலிவடையும் தன்மை ஏற்படுகிறது.
உதாரணமாக… சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற புலனறிவுகள் நாம் சொல்லும் (வெளிப்படுத்தும்) உணர்வுகளை அது நுகர்கின்றது.
பின் அந்த உணர்வின் சத்து தன்னுடன் இணைந்து அதன் மணம் விஷத்தின் தன்மையால் வெளிப்படுத்துகின்றது. ஆகவே புலனறிவு ஐந்து.
ஒரு மனிதன் வேதனைப்பட்டால்…
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் அவன் வேதனையும் கூடும் பொழுது
2.நமக்குள் இருக்கும் விஷம் அந்த வேதனை உணர்வுடன் இணைந்து விடுகின்றது.
ஏனென்றால் நம் உடலில் நல்ல குணங்களை அதே புலனறிவு தான் (வெப்பம் காந்தம் விஷம்) இயக்குகின்றது.
ஆக அதன் வழி நல்ல குணங்களை நல்ல உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது நல்ல அணுக்களாக மாறுகின்றது. ஆனால் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் விஷத்தின் அளவுகோல் அதிகமாகின்றது… கேன்சராக மாறுகின்றது.
அந்த விஷத்தின் தன்மை அதிகமானால் நம் நரம்பு மண்டலம் வழி கூடி உடல் முழுவதும் விழுதுகளைப் பாய்ச்சி நோயாக (நமக்குத் தெரியாமல்) உருவாகின்றது.
நீரே இல்லாத இடத்திலும்… ஒரு அரச மரம் காற்றில் உள்ள நீர் சத்தைக் கவர்ந்து தன் விழுதுகளைப் பரப்பி நீர் உள்ள பக்கம் விழுதுகளை அனுப்பித் தனக்குள் அந்தச் சக்திகளை எடுத்துக் கவர்ந்து ஓங்கி வளர்கின்றது.
இதைப் போன்று தான் விஷத்தின் தன்மை ஊடுருவி உடலுக்குள் வளர்கிறது. எல்லா அணுக்களிலும் இயக்கச் சக்தியாக இந்த விஷத் தன்மை உண்டு. அதை எடுத்து அது வளரத் தொடங்கும்.
உதாரணமாக…
1.நமக்கு வேண்டாதவர்களாக இருந்தால் “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று
2.அந்த வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.
3.வேதனைப்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வோம்… அதைக் கண்டு ரசிப்போம்.
இத்தகைய நிலைகள் நமக்குள் நுகர அந்த வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் கேன்சர் என்ற நிலை வரும் போது அந்த அணுத் தன்மை இந்த உடல் முழுவதும் நரம்புகள் வழி பாய்ச்சி மற்ற அணுக்களுக்குச் செல்லும் விஷத்தை அது கவர்ந்து விடுகிறது.
அவ்வாறு அந்த விஷத்தின் தன்மை கவர்ந்தால் நல்ல அணுக்களுக்குச் செல்லும் விஷத் தன்மையை இது கவர்ந்து கொண்டால் நல்ல அணுக்கள் இயங்க விஷத்தின் தன்மை இல்லை என்றால் இயக்கம் இல்லாது பலவீனமான நிலைகள் அடைந்து விடுகின்றது.
தேவாங்கு போன்ற சில உயிரினங்களுக்கு விஷத்தின் துடிப்பு குறைவாக இருப்பதனால் அந்த உயிரினத்தின் வேகத் துடிப்பு குறைவாக இருக்கும்.
இதே மாதிரி சில உயிரினங்களுக்கு விஷத்தின் தன்மை குறைவாக இருக்கும் நிலைகள் அது வேகத்தின் நிலைகள் குறைவாக இருக்கும்… சிந்திக்கும் தன்மைகளும் குறைவாகவே இருக்கும்.
இதைப் போன்று தான் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டும் போது நாம் சுவாசிக்கும் உணர்வே விஷம் கலந்ததாக மாறி நமக்குள் கேன்சர் நோய் பரவுகின்றது.
அந்தக் கேன்சரை நீக்க வேண்டும் என்றால் அதைக் கொல்ல கடுமையான மருந்துகளை… அதாவது அதைக் காட்டிலும் விஷமான மருந்துகளைத் தான் அந்த மருந்துக்குள் விஷத்தைக் கூட்டி அதனின் வேகத்தைக் கூட்டுதல் வேண்டும்.
1.ஆனால் அந்த விஷத்தைக் கூட்டினால்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களும் மடிந்துவிடும்
அதே போல் வைத்தியரீதியிலும் விஞ்ஞானரீதியிலும் அது செயலற்றதாக மாற்றிட உடலில் எந்தப் பாகத்தில் அந்த விஷத்தின் தன்மை கூடுகின்றதோ எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் (கரெண்ட் ஷாக்) என்ற முறை கொண்டு அந்தக் குறித்த பாகத்தில் வெப்பத்தின் தணல் கூடி அந்த அணுக்களை மடியும்படி செய்கின்றனர்.
1.அவ்வாறு மடியும்படி செய்தாலும் இந்தத் தசைகளில் உள்ள
2.மற்ற நல்ல செல்கள் அது வளரும் தன்மையைக் குறைத்து விடுகின்றது.
பின் அதற்குள் இந்த விஷத்தின் தன்மை பரவும் தன்மை தான் இருக்கின்றதே தவிர மாற்றும் தன்மை இல்லை.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு வேதனைகளை நமக்குள் வளர்க்காது பிறர் படும் வேதனைகளை ரசிக்காது அருள் ஒளி கொண்டு அகற்றி மற்றவர்களும் அந்த அருள் ஒளி பெற்று வேதனையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணினால் இது போன்ற கொடுமையான விளைவுகளிலிருந்து தப்பலாம்…!


பிடர்தல்
தியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு…” வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
1.நமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
2.வேகம் என்ற சொல்லில் – “அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்”
3.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு – “உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்…!’
“பிடர்தல்…” என்ற எண்ண உந்து சக்தியின் துணையால் இலட்சியம் கொண்டு பயணமாகும் மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து ஆக்கம் கொண்டிடும் செயல் முறைகளில் செயல்படுத்துதல் வேண்டும்.
சிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமியின் ஊடே செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது
4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.
சரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடம் நீர் சக்தி உள்ள இடமோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
இதைப் போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை
2.ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால்
3.அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்.
குழந்தைகள் படங்களைப் பார்த்த அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல்… நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும் கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.
அந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.
இந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடர் தன்னுள் வலுக் கொள்ள…
1.காந்த அமில குண வீரியத் தாய் சக்தியும் ரிஷிபத்தினி சக்தியும் சேர்த்துச்
2.சிவசக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.
அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித்தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.
1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

பௌர்ணமி தியானத்தின் முக்கியத்துவம்
உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் ஆன்மாக்களையும் நண்பர்கள் உறவினர்கள் ஆன்மாக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் கவர்ந்து அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.
1.காரணம் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால்
2.அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ள முடியும்.
சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளி அலைகள் நிலைத்திருக்கும்.
நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா. கார்த்திகேயா என்றாலே ஒளி… அனைத்தையும் அறிந்து கொண்ட நிலை. பல கோடிச்ச் சரீரங்களில் வந்த தீமைகளை நீக்கி மனித உடல் பெற்றது.
அத்தகைய ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளினை மாற்றி உணர்வினை ஒளியாகப் பெறச் செய்யும் முறைதான் இப்பொழுது துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி.
மூதாதையர்கள் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தால் அவருடைய உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலையாக நிற்கும்.
அவர்கள் சப்தரிஷி மண்டலம் அடைந்து விட்டால்
1.அவர்கள் விண் சென்ற உணர்வை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது
2.அவர் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் பதிவான சில தீமையான உணர்வுகளை மாற்றி விடலாம்.
அதாவது… அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட
1.வேதனையோ வெறுப்போ மற்ற நோய்களோ அதிகமாக இருப்பினும்
2.அதன் தொடர் வரிசையில் நமக்குள் வந்திருக்கும் இந்த நோய்களை மாற்றிவிடலாம்.
அல்லது அவர்கள் வாழ்க்கையில் சாப அலைகள் விடப்பட்டிருந்து… அந்த அலைகள் உடலில் இருந்தால் அந்த சாபச் அலைகள் நம்மையும் சாடும். ஆனால் அவர்களை விண் செலுத்தி விட்டால் அதன் உணர்வின் துணை கொண்டு அவர் வழியில் வந்த சாப உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கலாம்.
ஆகவே… யார் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த ஆன்மாக்களை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். விண் செலுத்தி அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அவர் உடலில் உள்ள நோய்களோ மற்றதுகளோ நமக்குள் வளராது தடுக்க முடியும்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… எப்படியும் நாம் பிறருடன் பழகத் தான் செய்கின்றோம். அவருடைய உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமலே வளர்ந்து விடுகின்றது.
அதை எல்லாம் கரைப்பதற்கு… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பௌர்ணமி அன்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்து உடல் பெறற நஞ்சுகளைக் கரைக்கப் பழகிக் கொடுக்கின்றோம்.
அப்படிச் செய்து பழகிவிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் முறைப்படி செய்யப்படும் பொழுது
1.இந்த உடலுக்குப் பின் நாம் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடையலாம்.
2.இல்லையென்றால் மற்றவருடைய பழகிய உணர்வுகளில் புவியின் ஈர்ப்புக்குள் நம்மை அழைத்து வந்துவிடும்
இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்வதற்குப் “பௌர்ணமி தியானத்தைச் சீராக நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்…”

“எம்முடைய உபதேசத்தைக் கேட்க விரும்புவோருக்கு” அதனின் பலன் நிச்சயம் கிடைக்கும்
ஒவ்வொரு நாளும் அந்தத துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பெறுகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் மீது நாட்டம் செலுத்தினால்
2.அந்தப் பேரருள் உணர்வுகள் நம் உயிரிலே அரங்கநாதனாக மாறி
3.அதன் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்ச்சிகளாகப் பரவி அந்த உணர்வே நம்மை ஆளும்… ஆண்டாள்…!
இதை அறிந்து கொண்ட நிலையில் நாம் அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்.
ஆனால் தீமை என்ற உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அது அரங்கநாதனாக இயக்கி அடுத்துத் தீமையின் நிலையாகத்தான் நம்மை ஆளும் ஆண்டாள்.
தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் பெருக்கினால்
1.தீமையை நீக்கும் உணர்ச்சிகள் நம்மை ஆளும்… ஆண்டாளாக மாற்றி அமைக்கும்
2.இவ்வாறு நாம் வாழ்ந்தால் நமக்குள் ஆழ்வார் என்ற நல்ல உணர்வின் தன்மை அணுக்கள் உருவாகினால்
3.நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும்… நம் உடலும் தெளிந்த நிலைகள் பெறும்.
உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உடலில் விளைந்த சூட்சம சரீரம் (உயிராத்மா) துருவ நட்சத்திரத்தின் இணைப்பில் பிறவியில்லா நிலை அடையும் தன்மை வரும்.
எத்தகைய விஞ்ஞான அறிவு கொண்டாலும் இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற பகைமை உணர்வுகள் நம் உடலில் விளையப்படும் பொழுது (மாற்றியமைக்கவில்லை என்றால்) அது நாளடைவில் கேன்சர் டி பி. ஆஸ்த்மா சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு இருதய நோய் போன்ற நோய்களாக நமக்குள் விளைந்துவிடும்.
உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை மாற்றித் தீய உணர்வின் தன்மையாகி நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளை அழித்து விடுகின்றது.
ஆடு மாடு மான் போன்ற உயிரினங்களை சாந்தம் கொண்டு அவைகள் தன் உடலை வளர்த்தாலும் புலியோ மற்ற மிருகங்களோ அவைகளை அடித்துக் கொல்லும் போது அந்த உடல்கள் அழிந்து விடுகிறது.
அதைப் போன்று தான்… நாம் சந்தர்ப்பத்தால் நுகர நேரும் வேதனை வெறுப்பு கோபம் பயம் போன்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடல் உறுப்புகளைக் கொன்று புசித்துவிடும்.
இது போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து நாம் மீள்வதற்கு நம் முன்னோர்கள் மூதாதையர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் நாம் அங்கிருந்து எளிதில் சக்தி பெற முடியும்.
அதன் மூலம் நமக்குள் அறியாது வரக்கூடிய தீமைகளை எல்லாம் மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாமும் அடைய வேண்டும்.
1.கோடிச் செல்வம் தேடினும் அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை
2.இந்த உடலும் நம்முடன் கூட வருவதில்லை
ஆகவே பேரருள் என்ற உணர்வின் தன்மையைக் கூட்டக் கூட்ட அந்த உணர்வின் ஒளியாக பிறவியில்லா நிலை நிச்சயம் அடையலாம்.
1.இதை விரும்புவோர் தான் இதைச் செயல்படுத்த முடியும்
2.உடலின் இச்சை கொண்டால் பலன் இல்லை…!
அருள் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் எடுத்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தேடிய செல்வத்தைக் காக்கும் சக்தியும் கிடைக்கும்.
இந்த உடலையும் சீராக வைக்கும். சிந்தித்துச் செயல்படும் தன்மையையும் செல்வத்தை நாம் தேடாது செல்வமே நமக்குள் வந்து குவியும் தன்மையும் வரும்.
1.ஆனால் “செல்வம் குவிகிறது…” என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால்
2.நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் இந்த உடலின் பற்றுக்கே வந்துவிடுகிறது.
ஆகவே நாம் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று இருளை அகற்றி அருள் வழியில் வளர்ந்து நாம் மெய்ப் பொருளைக் காண்போம்.

ஏழுமலையான்
1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை.
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கிவிடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.
இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.
ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.
அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.
ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகாதேவன்.
இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழுமலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களாப்பா.
நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழுமலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்குத் தெரிந்துவிடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.
இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்செங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.
அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித்தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.
1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.
அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்.
ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.
கடவுள் எங்குள்ளான்… என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள்.
கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பூமிக்குள் ஏற்படும் உணர்வுகள் (கல் மண் தாவரம் உயிரினங்கள் வெளிப்படுத்துவது) சூரியனால் கவரப்படும் பொழுது அது பிராணாயாமம்.
மற்ற உயிரணுக்கள் அல்லது உயிரினங்கள் இந்த உணர்வை நுகர்ந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதன் உணர்வின் வழியிலேயே அதை இயக்கத் தொடங்குகின்றது.
உதாரணமாக ஒரு வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே அது பட்டால் பிராணாயாமம். அதாவது
1.நமக்குள் இப்படி எந்தெந்த உணர்வு வருகின்றதோ “பிராணன்…!”
2.அதை ஜீவனுள்ளதாக இயக்குகின்றது என்பதனை அவ்வாறு காட்டுகின்றனர்
ஆனால் இங்கே “பிராணாயாமம்” என்று சொல்லி…
1.மூச்சை (காற்றை) இழுத்து உடலுக்குள் அதிகமாகச் செலுத்தப்படும் பொழுது
2.நம் உடலில் “எதன் வேக உணர்வுகள் அதிகமோ” அதைக் கவர்ந்து விடுகிறது.
இயற்கையாகவே… சுவாசிக்கும் உணர்வுகளை எல்லாம் உயிரிலே ஃபில்டர் செய்யக் கூடிய “சளி” இதை வடிகட்டிவிடும். அதிகமானால் வெளித் தள்ளிவிடும். இப்படி வடிகட்டிய நிலைகள் கொண்டு தான் சுவாசம் உள்ளே போகிறது.
ஆனால்… உணர்வின் தன்மை உந்து விசை அதிகரிக்கப்படும் பொழுது காற்றை இழுத்துச் சுவாசிக்கும் போது
1.நம் உடலில் உள்ள சுவாசப்பைகளில் அதிகமாகச் சென்று விட்டால்
2.நாளடைவில் அந்த உறுப்புகளில் பல விதமான இருமல்கள் வரும்.
இதே உணர்வுகள் நுரையீரலில் அழுத்தப்பட்டு உடல் முழுவதற்கும் இந்த வாயுவை உந்தப்படும் பொழுது அந்த வாயு மண்டலத்தை இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்களுக்குள் சென்றுவிடும்.
அப்படிச் சென்றவுடன் இது எதை எடுத்தார்களோ அதனின் உணர்வின் தன்மை விஷத் தன்மையாகி கடு…கடு என்று கிடு…கிடு என்கிறது என்றெல்லாம் “மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் பெரும்பகுதி கடைசியில் கேட்டால் இதைத் தான் சொல்வார்கள்…!”
இன்று இவர்கள் மூச்சை இழுத்து பின் வெளி விட்டு… இதை எல்லாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் வேதனைப்படுகிறான் என்ற நிலைகளில்… அவன் என்ன செய்கிறான்…? என்று எடுத்துச் சுவாசிக்கலாம். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரும் பொழுது வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மையாக வரும்.
பிராணாயாமம் என்று இதை எடுத்துக் கொண்டு முதல் நிலையானாலும்
1.பிறருடைய உணர்வுகளைச் சுவாசித்துப் பார்த்தால் “சரம்”
2.அவன் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன மோதுகின்றது…?
3.அவன் என்ன நினைக்கின்றான்…? அவன் உடலில் என்ன இருக்கின்றது…? என்ற நிலையை
4.பிராணாயாமம் – சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளை உணர்ந்தாலும்
5.பிறருடைய எண்ணங்களையும் அவரவர் குணத்தின் எண்ணங்களைக் கவரத் தொடங்கி விடுகின்றது.
கவர்ந்த இந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் சென்றால் வாயு மண்டலங்களில் விஷத் தன்மையாகிக் “கை கால் குடைச்சல்” என்ற நிலைகள் உருவாகிவிடும்.
ஏனென்றால் அந்த உணர்வுகளை நேரடியாகச் செலுத்தி இரத்த நாளங்களில் கலப்பதற்கு முன் வாய்வால் (காற்றாக) இது சுவாசப் பைகளில் சென்று உடலில் விஷத் தன்மைகளைப் பரப்புவதால் அந்த நிலை ஏற்பட்டு விடுகிறது.
வட கிளை தென் கிளை என்று சுவாசித்து… வடிகட்டும் திறனை இழந்து… இயல்பாக இருப்பதை மூக்கை அடைத்து இதைச் செயல்படுத்துவது என்பது இவர்கள் சொல்வது.
ஏனென்றால் இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்… அதைத் தான் உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).
1.நேரடியாகச் சுவாசித்து (அந்தந்தக் குணத்தின் உணர்வுகள்) உயிரிலே பட்டு வாயிலே உமிழ் நீராகி…
2.அந்த உமிழ் நீர் உணவுடன் கலந்து அந்த உணர்வுக்குள் உயர்ந்த நிலை ஆன பின் இது இரத்தமாக மாறும் பொழுது…
3.நாம் எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அதன் உணர்வு கொண்டு பிராணாயாமம்.
அருள் உணர்வுகளைப் “பிராணன்…” உருவாக்கி இதன் வழி நமக்குள் உருவாக்குதல் வேண்டும் என்பது தான் ஞானிகள் காட்டியது.


நமக்குத் தெரியாமலே நம்மை இயக்கும் சில சக்திகள்
உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைப் படிக்கின்றோம் ஒரு அதிர்ச்சியான செயலை… “ஓடும் ரயிலிலே கொள்ளையடித்தான்…” என்று கேள்விப்படுகிறோம். அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகி விடுகின்றது.
அந்தப் பதிவு என்ன செய்கின்றது…?
அடுத்து ஒரு சந்தர்ப்பம் நாம் ரயிலில் பயணம் செய்கிறோம் என்றால்… நாம் பதிவு செய்த்து அதிர்வின் தன்மை ஆன உடனே அச்சுறுத்தும் உணர்வாக வருகிறது.
“கொள்ளையன் இங்கே வந்து விடுவானோ…!” என்ற இந்த உணர்வு அச்சுறுத்தினால்… (கொள்ளையடிப்பவன் மற்ற பெட்டிகளுக்கு அநேகமாகச் செல்லவில்லை என்றாலும்)
1.இங்கிருந்து வெளிப்படும் அச்சுறுத்தும் உணர்வலைகள் படரப்படும் போது
2.கொள்ளை அடிப்பவன் இந்தப் பெட்டியிலேயே வந்து கொள்ளையடிப்பான்… இதைப் பார்க்கலாம்.
இதே போன்று பேருந்துகளில் பயணம் செய்யப்படும் பொழுது “விபத்தில் சிக்கி விடுவோமோ…” என்று அதிர்ச்சி ஆகி அந்தப் பேருந்தின் டிரைவரை எண்ணினால்
1.இந்த உணர்வலைகள் ஊடுருவி அதற்குத் தக்கவாறு அவன் வண்டியைத் திருப்பி அங்கே விபத்து ஆகும்.
2.இவன் எண்ணியபடி அந்த வண்டியை அணைத்து… இவன் வண்டிக்குள் இருந்தாலும் இவனை உராய்ந்து அடிபடும் நிலை வரும்.
3.ஆனால் மற்றவர்களுக்கு ஒன்றும் ஆகாது.
4.இவன் எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப டிரைவரையும் இயக்குகின்றது தன்னையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றது.
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… நம்மை அறியாது இயக்கும் உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
ஒரு கம்ப்யூட்டரில் ரிமோட் செய்து… அதிலே ஆணையிடும் அழுத்தத்திற்கொப்ப இயக்கச் சக்தியாக எப்படிக் கொண்டு வருகின்றார்களோ அது போன்று
1.நமது உயிரும் ஒரு எலக்ட்ரிக்காக இருக்கின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை (அழுத்தத்திற்கொப்ப) அது எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
3.அதன் வழி தான் இந்த உடலையே அது இயக்குகின்றது என்பதை
4.இன்று நாம் விஞ்ஞான அறிவில் இருப்பதால் அந்த வழிப்படி உணர்ந்து கொள்வது மிகவும் நல்லது.
நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? நம்மை அறியாது தவறுகள் எப்படி வருகிறது…? நுகர்ந்த உணர்வு நம்மை எப்படி நோய்க்கு அழைத்துச் செல்கின்றது…? நோயின் தன்மை இந்த உடலை எப்படி நலியச் செய்கின்றது…? என்ற நிலைகளை மெய்ஞானிகள் தெளிவாக்குகின்றார்கள்.
தெளிவாக்கினாலும் அஞ்ஞான வாழ்க்கையே இன்று வாழ்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களும் அருள் ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வை நுகராது அதை வளர்த்திடாது தணியப்படும் போது… அஞ்ஞான வாழ்க்கையே பக்தி மார்க்கத்திலும் வளர்கின்றது.
ஆலயத்திற்குள் சென்றால் அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது நாம் எண்ண வேண்டியது எது…?
தீபத்தால் வெளிச்சத்தைக் காட்டிய பின்…
1.பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பம் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.தொழில் செய்யும் இடங்களில் உள்ளோர் அனவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
காரணம்… அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது மறைந்திருக்கும் பொருள்கள் தெரிகின்றது. அந்த வெளிச்சத்திலே தெய்வத்தைப் பார்க்கின்றோம். “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்” என்று காட்டப்படுகிறது… இது துவைதம்.
தெய்வச் சிலைகலாக உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாகப் படிக்கும் போது (மேலே சொன்ன மாதிரி) பத்திரிக்கையில் படிக்கும் பொழுது அந்த அசம்பாவிதங்களைக் கண்ட பின்… “உணர்ச்சிகள் எப்படித் தூண்டப்படுகின்றதோ… அதே போல் அருள் உணர்வுகளை நமக்குள் நம்மை அறியாமலே தூண்டச் செய்வதற்கு” அன்றைய ஞானிகள் இவ்வாறு வழி காட்டிச் சென்றார்கள்.
கொள்ளையர்கள் வந்துவிடுவார்களோ என்ற உணர்ச்சியின் தன்மை “நாளை என்ன செய்வது…?” என்ற அச்சுறுத்தும் உணர்வுகளைத் தூண்டுகின்றது. அப்பொழுது நாம் பயந்தே வாழும் நிலை வருகின்றது.
வாகனங்களில் செல்லப்படும் பொழுது இந்த உணர்வுகளே அதிகமாகத் தோன்றி நாம் நுகரும் உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அது வீரிய உணர்வாக உணவாக ஊட்டி… அச்சுறுத்தும் அணுக்களாக நமக்குள் விளைந்து விடுகிறது.
அதனால் இந்த உடலை நலியச் செய்யும் உணர்வுகளாக ஆகி நல்ல உணர்வுகளை நாம் பறிகொடுத்து விடுகின்றோம். அவன் அங்கே பொருளைப் பறிகொடுத்தான்..
1.ஆனால் பத்திரிக்கையைப் படித்த பின் நுகர்ந்த உணர்வோ இங்கே நமக்குள் நோயாகி
2.இந்த உடலையே பறிகொடுக்கும் நிலையாக வந்து விடுகிறது
இதையெல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டி அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் உணர்வின் துணை கொண்டு… பத்திரிக்கையைப் படித்த அடுத்த கணமே அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவாந்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.
பின்… நாளை நடப்பதெல்லாம் மகரிஷிகள் காட்டிய வழியில் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணி “அதிர்ச்சியான உணர்வுகள் நமக்குள் புகாதபடி” தடுத்துப் பழகுதல் வேண்டும்.
இந்தத் தியானப் பயிற்சியைச் சீராகப் பயன்படுத்தி அருள் வழியில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றித் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றினால் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.
தீமை என்ற உணர்வுகள் அதிகமாகப் பற்றிவிட்டால் அந்தப் பற்றின் தன்மை கொண்டு மீண்டும் பிறவியின் நிலைக்கே வருகின்றோம். நோயின் உணர்வுகளை நுகர்ந்தால் இந்த மனித உருவை அழிக்கத் தான் அது உதவும்.
ஆகவே…
1.மகரிஷிகளின் ஆற்றலை உங்களில் பெருக்கி… அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை அகற்றி அருள் ஞானத்துடன் நீங்கள் வளர்ந்து
3.வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி…
4.அருள் உணர்வைப் பற்றுடன் பற்ற வேண்டும் என்று உங்களை வேண்டிப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

சித்தாதி சித்தன்
சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே… காப்பவளும் அவளே… அழிப்பவளும் அவளே…!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கிக் காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்… சக்தியின் சுயநிலை… அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்…!”
அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.
அவ்வழியின் அருளைப் பெறப் பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி… காத்து.. அழிக்கும்… நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.
சக்தியின் நிலை என்னப்பா…?
1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்…?
2.தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா… அந்த நிலையைப் பெற்றார்கள்…?
இல்லையப்பா…!
அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து… தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.
ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா…?
1.தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும்
2.தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.
அதாவது… “கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும்” என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல்
1.மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள
2.தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.
அந்த நிலையில் அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம்… அவர்கள் பெற்ற அருள் எல்லாம்… “ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ… அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்….”
இத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.
அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது… அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.
அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்…!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.
அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.
அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த மனித வாழ்க்கையில்…
1.அன்றாடம் நாம் எத்தனை பேரைச் சந்திக்கின்றோமோ
2.எத்தனை பேர் துயரங்களைக் கேட்டோமோ
3.அவர்களுக்கெல்லாம் நாம் உதவி செய்தாலும் அந்த உணர்வுகள் (துயரம்) எல்லாம் நமக்குள் இயக்கமாகிறது.
4.நமக்குள்ளும் அந்தத் தீமையின் உணர்வுகளாக விளைந்து விடுகிறது.
ஆகவே நம் உடலான ஆலயத்திற்குள் எதைச் சேர்க்க வேண்டும்…?
எத்தனையோ உணர்வுகளை நாம் நுகர்ந்தோம். அதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும்
2.அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும். என்று
4.இந்த உணர்வுகளை உட்செலுத்தி வலுவாக்கிக் கொள்ள வேண்டும்,
பின்… எங்கள் வாழ்க்கையில் எத்தனை பேரைச் சந்தித்தோமோ பார்த்தோமோ… அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் வளம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கை எல்லாம் வளம் பெற வேண்டும்… அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்று எண்ணி எல்லோரையும் (எல்லா உணர்வுகளையும்) ஒன்று சேர்க்க வேண்டும்.
எல்லோரும் ஒன்றாக ஆன பின் என்ன ஆகிறது…?
1.ஒரு வேம்பின் உணர்வைக் கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் எப்படி ஓடுகின்றதோ
2.ஒரு விஷமான செடியின் மணத்தின் தன்மை கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் சுழற்சி ஆகின்றதோ
3.இதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்கும் பொழுது
4.தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவிலிருந்து அகன்று ஓடிவிடும்.
ஒவ்வொருவரும் இதே போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டு எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு இப்படி வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள் எல்லாம் அலைகளாக மாறினால் நமக்கு முன் இருக்கும் மற்ற நஞ்சான தீமை செய்யும் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளிவிடும்… பரமாத்மா (காற்று மண்டலம்) தூயமையாகும்..!
இந்தப் பூமியின் நிலைகளை மாற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் ஞானிகள் இதைச் செய்தார்கள்.
ஆகவே தீமையை நீக்கிய உணர்வை இந்த முறைப்படி வினைக்கு நாயகனாக ஆக்கப்படும் பொழுது இது நமக்குள் இணைந்து வலிமை மிக்க சக்தியாக மாறுகின்றது.
இதே உணர்வை வைத்து…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று உயிரிலே மோதச் செய்தால்
2.அது எப்படித் தீமைகளை நீக்கியதோ அந்த உணர்வுகள் தெய்வ ஆணை…! தீமையை நீக்கிய அந்த எண்ணங்கள் நமக்குள் வருகிறது
3.அந்த ஆணைப்படி செய்தால் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி.
நம் ஞானிகள் மிகவும் அற்புதமாக சாதாரண மனிதனும் புரிந்து தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்ற இவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.
இதை நாம் அன்றாடம் செய்கின்றோமா…? இல்லை…! ஞானிகள் சொன்ன முறைகளுக்கு மாறான நிலைகளைத்தான் நம் வாழ்க்கையில் அமைத்துக் கொள்கிறோம்.


இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும்… உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா…!
இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.
1.விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
3.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!
பிறப்பும் இறப்பும் “இறைவன் இட்ட பிச்சை” என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.
எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.
கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.
உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.
மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக… பூச்சியாக… மீனாக… நண்டாக…!
ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.
மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.
3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.
இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.
இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.
ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.
இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.
உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.
இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் சுற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே.
பாட நிலை புரிந்ததா…?

பிறர்படும் வேதனையை நுகரவே கூடாது… அதைக் கண்டு ரசிக்கவும் கூடாது
மற்றவர்கள் வேதனைப்படுவதை நுகர்ந்து “அவர்களுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசித்து அத்தகைய உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து விட்டால்… அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
தன் குடும்பத்திற்குள் பண்பு கொண்ட நிலைகள் என்று இருப்பினும்… வேதனையை ரசித்த உணர்வுகளை… அந்த விஷத்தன்மையை இங்கே கொண்டு வரப்படும் பொழுது… அவர்களும் சிந்திக்கும் திறன் இழக்கின்றனர்.
சிந்திக்கும் திறன் இழக்கப்படும் பொழுது…
1.பாசத்தால் தன் பையனை இதைச் செய்… அதை செய்… இப்படியெல்லாம் நீ இருக்க வேண்டும்…! என்று அடிக்கடி சொல்வார்.
2.அவர் சொல்லச் சொல்ல இவருக்கு சும்மா இதே தான் வேலையாகிப் போய்விட்டது என்று
3.வெறுத்திடும் உணர்வாக… வெறுப்பை ஊட்டும் அணுக்கள் இங்கே விளையத் தொடங்குகிறது.
அடுத்தவர்கள் துயரைப்படுவதைக் கண்டு அந்த வேதனைகளை ரசித்து நுகர்ந்ததன் நிலையில்… தன் குழந்தை க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று இவர் வெளிப்படுத்தும் உணர்வு
1.“தன்னுடன் இணைந்த மக்களைப் பிரித்து விடுகின்றது….”
2.அதே சமயத்தில் தன்னுடன் இணைந்து வாழும் தன் சமூகத்தினருடனும் “வெறுப்படையும் தன்மையை” உருவாக்குகின்றது.
இந்த உணர்ச்சியின் வேகங்கள் கூடும் பொழுது… விஷம் கலந்த உணர்வின் சொல்லாக மற்றவர் செவிகளில் கேட்கப்படும் பொழுது… தன்னை அறியாமலே நண்பனையும் (மறைமுகமாக) எதிரியாக உருவாக்கி விடுகின்றது…
ஆதே விஷம் கொண்ட உணர்வுகளைத் தன் வியாபாரத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொழுது… அதாவது சொல்லால் பொருளின் தரங்களைப் பற்றிப் பேசப்படும் பொழுது… தன்னை அறியாது அங்கே “உணர்ச்சிகள் மாறுகிறது…”
நல்ல பொருளுக்குள் விஷத்தின் தன்மை பட்டால் அதன் வேகத் துடிப்பு கொண்டு அதனைப் பயன்படுத்துவோரை எப்படி அது மயங்கச் செய்கின்றதோ இதைப்போல கேட்பவரின் சிந்தனையைக் குறைக்கச் செய்து விஷத்தின் துடிப்பால் வாடும் பொழுது… “நல்ல சொல்களைச் சொன்னால் கேட்க முடியாது…”
அடிக்கடி பிறருடைய வேதனையைக் கண்டு ரசித்த அவர்கள்…
1.தன் இன மக்களிடமோ நண்பர்களிடமோ பேசும் பொழுதெல்லாம் விஷம் கலந்த உணர்வுகள் தோன்றி
2.அவருடன் பற்று கொள்ளும் பொழுது விஷ அணுக்களை உருவாக்கி
3.நாளடைவில் இவர் உணர்வே பகைமையாக்கிவிடும்… இவரை வெறுக்கும் உணர்வே அங்கே வளர்கின்றது.
இதையெல்லாம் யார் செய்வது…? இதைத் தான் “கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…” என்று சொல்வது.
ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அவனுக்குள் இருக்கும் வேதனை (வேதனை என்பதே நஞ்சு) என்ற வலிமை கொண்ட உணர்வுகளை நுகர்ந்தறியப்படும் போது அது தனக்குள் வளர்ச்சியாகி அது நம்மை நலியச் செய்கின்றது வலு இழக்கச் செய்கின்றது நல்ல குணத்தை.
இதை எதைக் கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்…?
வெப்பத்தின் தணல் கொண்டு உலோகத்தினை உருக்கி இளகச் செய்து நமக்கு உபயோகமாகக் கூடிய ஒரு பொருளாக அதை மாற்றுகின்றோம்.
அப்படி மாற்றுவதற்கு என்ன செய்கிறோம்…?
நெருப்பிலே அந்த உலோகத்தைன் வைத்து அது சிவந்த பின் ஒரு இடுக்கி கொண்டு அதை நகர்த்தி… சம்மட்டி கொண்டு அடித்து வேண்டிய உருவாக மாற்றுகின்றனர்.
அதே போல் அந்த உலோகத்தை உலையில் வைத்து தண்ணீர் போல் உருகச் செய்து
1.தனக்குத் தேவையான உருவத்திற்கு மோல்டுகளை (MOULDING) வைத்து அதிலே உருக்கிய உலோகத்தை ஊற்றப்படும் போது
2.மோல்டிற்குள் இருக்கும் சந்து இடங்களில் நுழைந்து (FILLING)… எண்ணிய உருவமாக உருவாக்குகின்றார்கள்.
3.உறைந்து ஆறிய பின் எடுத்து… அதில் பிசிறுகள் இருந்தால் அகற்றித் தூய்மையாக்குகின்றனர்.
இப்படித்தான் பல பொருள்களையும் இயந்திரங்களையும் மோல்டுகளாகச் செய்து உருவாக்குகின்றார்கள் மனிதன் தன் அறிவாற்றல் கொண்டு.
இதைப் போன்று தான் நாம் பிறருடைய குறைகளையும் துயரங்களையும் வேதனைகளையும் கேட்டறிந்தால்
1.அந்த விஷத்தின் தன்மைகளை உருவாக்கும்… “நமக்குள் உருப்பெறும் உறைவிடமாக” அது மாற்றி விடுகின்றது.
2.நல்ல குணங்களுடன் இது கலந்து செல்லப்படும் பொழுது அதைச் செயலற்றதாக (தீமையின் உணர்வுகள் கலந்து மோல்ட் போன்று) ஆக்கி விடுகின்றது.
3.நன்மை செய்யும் உணர்வுகள் குறைந்து தீய விளைவுகளை உருவாக்கச் செய்கிறது.
இதை மாற்ற வேண்டும் அல்லவா…! நம்மை நாம் எப்படிக் காப்பது…?
மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றவன் துருவன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன். விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் வலிமை கொண்டு வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன்.
தான் பெற்ற சக்தியை… தான் கண்டுணர்ந்த பேராற்றல்களை… திருமணமான பின் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.
1.அகண்ட அண்டத்தில் உருவாகும் நிலையும்… அணுக்களின் தன்மையும்
2.”தீமைகளைப் பிளக்கும் நட்சத்திரங்களின் இயக்கமும்”
3.இதைப் போன்று அவன் கண்டுணர்ந்த உணர்வுகளை எல்லாம் தன் மனைவியின் செவிகளில் ஓதுகின்றான்.
4.இவன் சொல்வதை மனைவி “கண் கொண்டு கூர்ந்து உற்றுப் பார்க்கின்றது…”
5.இவனின்று வரும் உணர்வினை அது நுகரும்படி செய்கிறது
6.உயிரிலே இந்த உணர்வுகள் பட்ட பின் அறியும் ஆற்றல்மிக்க அணுக்களாக விளைகிறது.
இருவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து… இரு உயிரும் ஒன்றாக இணைந்து உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக… அழியாத நிலையாக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெற்றால் அவர்களைப் போன்றே நாமும் நஞ்சினை அடக்க முடியும்… “உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்…” மகிழ்ந்து வாழ முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையவும் முடியும்.

உடல் வலு… உயிரான்ம வலு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்
மனிதன் “செயற்கையாக” வலுக்கொண்ட உணர்வுகளைச் சுவாசிப்பதற்காகத் தன் உடல் தசைகளை இயக்குகின்றான். எப்படியும் உடலில் வலுவைச் சேர்க்க வேண்டும் என்று அந்த உணர்வின் தன்மை கொண்டு “கை கால் அங்கங்களை மூட்டையைக் கட்டி அடிப்பதும்… கை கால்களை ஓங்கி அசைப்பதும்…” இந்த உணர்வின் தன்மை சிறுகச் சிறுக எடுக்கப்படும் பொழுது… தசைகளில் வலுவின் தன்மை வருகின்றது.
வலுவான நிலையினை உருவாக்கும் நிலையாகப் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கின்றது. இப்படிச் சுரக்கப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கிறது…?
1.சாதாரண மனிதன் கால் கிலோ கறியைச் சாப்பிடுவதே சிரமம்.
2.ஆனால் இவன் பத்துக் கோழியைச் சிறுகச் சிறுக ஒவ்வொன்றாக கூட்டி தன் உணவாக உட்கொண்டு தன் உடலிலே (தசைகளில்) வலு சேர்ப்பான்.
மிருகத்தின் விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை இவனுக்குள் சேர்க்கச் சேர்க்க பித்த சுரப்பிகளும் அதிகமாகச் சுரக்கப்பட்டு… மிருகங்களுக்கு எப்படி வலு இருக்கின்றதோ அதைப் போல் அவன் உடலில் தசைகளில் வலு உருவாகி… “சாதாரண மனிதனைக் காட்டிலும் மிருக பலம் கொண்டிருப்பான்…”
சாதாரணமாக… இரண்டு இன்ச் (2”) கனமுள்ள ஒரு கம்பியை வலுவான கருவி கொண்டு தான் வளைக்க முடியும். ஆனால் இவனோ தன் கையிலேயே ஒரு முறுக்கைச் சுழட்டுவது போன்று சுற்றி வளைத்து விடுவான்.
யானைக்கு எந்த வலு உண்டோ… அது போல பல மிருகங்களின் உணவை உட்கொள்ளும் பொழுது அவனின் உழைப்பும் இந்த உணர்வின் தன்மை நினைவும்… இவனுக்குள் வலு சேர்க்கும் உணர்வாக வளர்கின்றது.
இப்படி வளர்ச்சி அடைந்தவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் வலுக்கொண்டவன் ஆகிவிடுன்றான். ஆனால் அனேகமாக அவனுக்கு நோயே அதிகமாக வருவதில்லை…!
கடுமையான விஷம் இருக்கும் பொழுது மிருகங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகி முதிர்வடையப்படும் பொழுது மிருகங்கள் அதனுடைய வளர்ச்சியின் தன்மை வாழும் காலம் குறுகியதாக இருக்கின்றது…. அதற்குள் மடிந்து விடுகின்றது
அதே போன்று ஒரு மனிதன் இப்படி விஷத்தன்மையைத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டாலும்…
1.விஷத்தின் தன்மை உடலில் அதிகரிக்கப்படும் பொழுது
2.இருதய வாயில்களிலோ சிறு மூளை பாகங்களிலோ உடனடியாகத் தெறித்து இரத்தக் கசிவாகி
3.நோய்வாய்ப் படாதபடி அவன் மடிந்து விடுவான்.
ஆக… அசுர உணர்வு கொண்டு மனித உடலை விட்டுச் சென்றால் எந்தக் கோழிகளை அதிகமாக உட்கொண்டானோ இறந்த பின் உயிரான்மா கோழியின் ஈர்ப்புக்குள் தான் செல்லும்.
பெரும்பகுதி பயில்வானாக இருப்பவர்கள் அனைவருமே கோழியைத்தான் அதிகமாக உட்கொள்வார்கள். மற்ற பறவை இனங்களையும் உட்கொள்வார்கள் பறவை இனங்கள் அனைத்தும் விஷத்தன்மைகளை அதிகமாக உட்கொண்டாலும் அதை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பெற்றது.
ஆகவே அந்த உடல் உறுப்புகளை இவன் உணவாக உட்கொள்ளும் பொழுது அது எப்படி விஷத்தினை அதனின் உணர்வு கொண்டு தனக்குள் வலுவானதோ இதைப் போன்று இவனுக்குள் உணவாக உட்கொள்ளும் ரசங்கள் பித்த சுரப்பிகளின் வளர்ச்சி அதிகமாகின்றது.
அதன் வழி கொண்டு அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷத்தன்மையாக வருகின்றது. யானைக்கு எப்படி வலுவோ புலிக்கு எப்படி வலுவோ மற்ற மிருகங்களுக்கு எப்படி வலு வருகிறதோ இதைப்போல இவனுக்குள் வலு வருகின்றது.
1.ஆனால் இவன் மிருக குணம் கொண்டு தான் இருப்பான்
2.அவனிடம் யாராவது சாந்தமாகப் பேச முடியுமா என்றால் இல்லை.
3.அசுர உணர்வு கொண்டு பேசுவதும்… அவனை எதிர்த்துக் குறையாகப் பேசும் நிலை வந்தால்… அவனைத் தாக்கும் நிலையில் தான் வருவான்.
ஆகவே… அவனை மதித்து நடக்க வேண்டும். குத்துச்சண்டை வீரர்களிடம் நாம் அணுகினால் அசுர உணர்வைத் தான் அவன் காட்டுவான் மனித உடலிலேயே மிருகமாக மாற்றிக் கொள்கின்றனர்.
மற்றவர்கள் தன்னைப் போற்ற வேண்டும் என்று எண்ணுகின்றான். கோழி மற்ற பறவைகள்… விஷத்தை முறிக்கும் உணர்வுகள் அவன் உடலில் விளைந்ததால்… விஷத்தன்மையை ஒடுக்கும் தன்மை வருகிறது. வலுக் கொண்டவனாக இருக்கின்றான்.
ஆனாலும் விஷத்தை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது “அடுத்த பிறவி எது…?” என்றால் கோழியாகத்தான் பிறப்பான்.
1.இன்று ரசித்து அதை உணவாக உட்கொள்கின்றான்.
2.எதை ரசித்து உட்கொண்டானோ உடலில் விளைய வைத்த அந்த உணர்வுகள் உயிருடன் சேர்த்து ஆன்மாவாக மாறும்.
3.எந்த மணத்தின் தன்மை ஆன்மாவிலே பெருகியதோ உடலை விட்டுச் சென்ற பின் அங்கே கோழிக்குள் தான் செல்வான்.

“ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை
விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது “மனிதனின் விதி முறை…!”
வினையின் எண்ணத்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.
அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது… வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள “ஒரு உடலை” எடுக்கின்றான்.
வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.
ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை “எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா….”
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்…
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது… என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)
வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்
நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.
விதி என்பது எதப்பா…?
விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.
வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.
எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!
வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.
வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.
நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.
பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?
சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”
அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில்… “ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.
வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.
அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

அறியாது நமக்குள் வரும் தீமைகளையும் வேதனைகளையும் “நாம் துடைக்க மறுக்கக்கூடாது”
மனிதன் பல கோடிச் சரீரங்களில் தேர்ந்தெடுத்த ஆறாவது அறிவாகப் பெற்ற நிலையில் பிறிதொரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல அறிவை அப்போதே அது மறைத்து விடுகின்றது.
1.அந்த வேதனையை நாம் துடைக்க மறுத்து விட்டால்… துடைக்கத் தவறிவிட்டால்…
2.அது சிறுகச் சிறுக நமக்குள் வளரத் தொடங்கி தேய்பிறையாக
3.அமாவாசைக்கு பின் சந்திரன் குறைவது போன்று குறைந்துவிடும் (கண்ணுக்கு புலப்படாது.
ஆகவே உயிரின் தன்மை கொண்டு ஒளி ஒடுங்கி விடுகின்றது மீண்டும் நல்ல உணர்வை நுகர்ந்தால் தான் நல்ல அறிவாகக் (பிரகாசத்தை) காண முடியும்.
உயிரணு தோன்றிய பின் மனிதனாக வரும் பொழுது பூரண சந்திரனைப் போன்று அனைத்தையும் அறிந்திடும் அறிவாகப் பெறுகின்றோம். ஆனாலும்
1.அந்த அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு பிறிதொரு கஷ்டங்களைக் கேட்டறிந்தால்
2.சிறுகச் சிறுக நம்முடைய நல்ல குணங்கள் அனைத்தும் நஞ்சு கலந்து நாம் தேய்பிறையாக மாறிவிடுகின்றோம்.
அதை மாற்ற வேண்டுமல்லவா…!
பௌர்ணமியைப் போன்று பூரண ஒளி பெற்ற துருவ நட்சத்திரம் பேரருள் பேரொளியாக நம் துருவப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பதும் அதைப் பின்பற்றிய அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைப் பெறக்கூடிய தகுதிக்கே உங்களுக்குள் இப்போது உபதேசிக்கப்படுகின்றது. உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோம்.
1.யாரெல்லாம் இதை மீண்டும் “கூர்மையாக நினைவுக்குக் கொண்டு வருகின்றார்களோ”
2.”துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்கின்றார்களோ…” அவர்களே அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.
3.அவ்வாறு தகுதி பெற்ற பின்… தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்கும் அதே போன்று கணவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று
4..யாரெல்லாம் இருவரும் ஒன்றிச் செயல்படுகின்றனரோ அவரே தீமைகளை வெல்லும் அருள் சக்தி பெற்றவர்களாகின்றார்கள்.
5.விண்ணின் நிலைகளை யாரெல்லாம் கூர்மையாகப் பார்க்கின்றார்களோ அவரே பிறவில்லா நிலை அடைகின்றனர்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்காகத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நாம் கிழக்கே பார்த்து அதை விண்ணை நோக்கி எடுக்கும்படி வைத்தனர் அன்றைய ஞானியர்.
இன்று நாம் மனிதச் சரீரம் பெற்ற நிலையில் பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி அடைந்து வந்திருந்தாலும் அன்பு பரிவு பாசம் என்று பேரன்பு கொண்ட நிலையில்… பிறருடைய துயரத்தைக் கவர்ந்த பின் அதைத் துடைக்கத் தவறினால்… துடைக்க மறுத்தால்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் தீயவினைகளாகச் சேர்ந்து விடுகின்றது.
1.ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால் “அதை நாம் துடைக்க மறுத்து விடுவோம்…” இருக்கட்டும்… அவனை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்போம்.
2,ஒருவர் மீது பாசமாக இருந்து ஏதாவது ஆகிவிட்டால்… அவன் படும் வேதனையைப் பார்த்து
3.அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே… ஆகிவிட்டதே… என்று தான் சொல்வார்கள்… “வேதனைப்பட்டதைத் துடைக்க மறுப்பார்கள்…”
அவரிடம் நீங்கள் சொல்லிப் பாருங்கள் அதைத் துடைக்க மறுப்பார்கள்…!
1.மறுத்து விட்டால் அல்லது மறந்து விட்டால் அது தீமையின் உணர்வாக விளையத் தொடங்கும்
2.மனிதனின் வளர்ச்சியைத் நம்மைத் தேய்பிறையாக மாற்றிவிடும்.
இதை உணர்த்துவதற்குத்தான் அங்கே விநாயகருக்கு அருகில் வேம்பை வைத்துக் காட்டினார்கள். அதன் அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள்.
இந்த பிரபஞ்சத்தில் உருவான நஞ்சினை அடக்கி ஒளியாக மாற்றியவன் துருவ மகரிஷி… அரசைப் போன்று அவன் ஓங்கி வளர்ந்தவன்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்
1.ஆகவே அதனின்று வரும் அருள் ஒளியின் தன்மை எடுத்தால் எத்தகைய நஞ்சின் தன்மையையும் அது பிளந்து விடும்
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் தகுதி நாம் பெறுகின்றோம்.
கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான உணர்வை இருவருமே எடுத்து இணைத்துக் கொண்டால்… ஒளியின் அணுக்களாக மாற்றி விட்டால்… நஞ்சினை வென்றிடும் அணுவாக அது விளைகிறது.
அந்த உணர்வின் ஒளியைப் பெருக்க முடியும் அந்தத் தகுதியை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவதற்கு தான் விநாயகர் தத்துவமாகக் கொடுத்தது.
அந்தத் தத்துவப் பிராகரம்… சாதாரண மனிதனும் தன் வாழ்க்கையில் தன்னை அறிதல் என்ற நிலைக்குத் தனக்குள் வரும் தீமைகளை… மேல் அழுக்கைப் போக்குவது போல ஆன்மாவில் படும் அழுக்கைப் போக்கி… தன் உடலுக்குள் ஜீவான்மாவை மறைத்திருக்கும் தீமையின் அழுக்குகளையும் நீக்க முடியும்.
ஆகவே அருவ நிலைகள் செயல்படுவதை அறிந்து கொள்ள விநாயகரை உற்றுப் பார்க்கப்படும் போது (அது துவைதம்) ஞானிகள் காட்டிய காவியத்தின் பிரகாரம் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அங்கே காட்டப்பட்டிருக்கும் உண்மைப் பொருள்களை நாம் உணர்ந்து அதன் வழியில் நாம் நுகர்ந்தால் அத்வைதம்
2.இந்த உணர்வுகள் உயிரிலே பட்டு உடலில் விளைந்து மீண்டும் நுகந்தறியப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.அந்த உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அதன் வழி நாம் விண் சொல்லும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைய அது உதவும்.

“தாய் சக்தி.. மனைவி சக்தி…” என்ற ரிஷிபத்தினி சக்தியின் கலப்பு
கொங்கணர் ஞானம் பெற்ற நிலைகளை விவரிக்கத் தொடங்கினால் அது எந்த வகை என்றுரைக்க நினைப்பதற்கு அடங்கிடுமோ..?
“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்…!” என்ற வகை உண்மை நிலையில் இவர் வேறு… அவர் வேறு…! என்று பிரித்துச் சொல்லும் வகையில் “கோடி வீட்டுப் புருஷார்த்த புருஷனே கொங்கணர்…!” என்றாலும் அவர் எடுத்த அவதார நிலைகளே பாலாஜி… வெங்கடேஸ்வரன்… ஸ்ரீனிவாசன்…!
இருந்தாலும் பின் அவரே மாடி வீட்டு அரசன் ஆக ஆன செயலில் இரு வகைச் சூட்சமங்கள் பெற்ற அவதாரமே ஸ்ரீனிவாசன் என்னும் வெங்கடேசக் கொங்கண மாமகரிஷி.
ரிஷி மூலம் பார்க்காதே… நதி மூலம் பார்க்காதே…! என்று அக்காலங்களில் சொல்வார்கள். அதனின் வகையில்
1.மெய்ப் பொருளைக் கண்டறிந்த அந்த மாமகரிஷிகள் பெற்ற ஞானத்தை மட்டும் நாம் அறிந்து
2.அதைப் பெறுகின்ற ஞானத்தின் வளர்ச்சிக்கு முயல்வோம்.
அறிவின் வளர்ச்சிக்கு வளச்சியூட்டும் செயலாக அந்தக் கொங்கணர் பெற்ற சூட்சமத்தின் தொடர் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி… சித்தன் முனிவனாகி… பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.
தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் ஜெப நிலையும் தியான நிலையும்.
அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய… வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.
எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ அவர்களுக்கெல்லாம்
1.தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில் அதாவது நமது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்குத் தானே ஆகாரமாகி
4.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.
உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே.
நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து… நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.
கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற… பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.
ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.
தாய் சக்தி.. மனைவி சக்தி… என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!

சைவ சித்தாந்தம்… வேதாந்தம்
இயற்கையின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைச் சைவ சித்தாந்தங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
ஒவ்வொரு உணர்வும் அது இணைந்து கொண்ட பின்
1.உணர்ச்சியின் வேகங்கள் எவ்வாறு சூரியனால் மாற்றப்படுகின்றது…?
2.நுகர்ந்த உணர்வின் ஆற்றலை எவ்வாறு மாற்றுகின்றது…? என்ற நிலையை
3.தாவர இனச்சத்தைக் கவர்ந்த சூரியனின் காந்தப்புலன்கள் தாவர இனங்களுக்கு இரையானாலும்
4.அதே உணர்வுகளை உயிரணு நுகரப்படும் போது – “சைவ சித்தாந்தமாக இருந்து… வேதாந்தமாக” அது மாறுகின்றது.
உணர்வின் ஒலியின் தன்மை கொண்டு உணர்வின் ஒலிகளை எழுப்பி அந்த உணர்வுக்கொப்ப உடல் மாறி… சைவம் அசைவமாக எவ்வாறு மாறுகின்றது…? அசைவத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது உணர்வின் அணுக்கள் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்பதைச் சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.
“சைவ சித்தாந்தம்” – தாவர இனங்களில் மாற்றம்… செடி கொடிகள் அது உருமாறுவதும் அதனுடைய உணர்ச்சிகளைக் கூட்டுவது.
“வேதாந்தம்” – உயிர் அணுக்கள் உருவான பிற்பாடு அதனின் உணர்ச்சியின் தன்மை கொண்டு இயக்கச் சக்தி என்று “உடல் பெற்ற அசைவம்” என்ற நிலை தான்.
ஆனால் சைவ சித்தாந்தம் படித்தவர்கள் வேதாந்தத்தைக் கண்டபின் அவர்கள்ள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்வார்கள். நீ பெரிதா…? நான் பெரிதா…? நீ படித்தது இவ்வளவுதான்… நான் படித்தது இவ்வளவு…! என்று வாதித்துக் கொண்டு கற்றுக் கொண்ட உணர்வுகளை முழுமையைத் தெரிவதில்லை.
ஒருவருக்கொருவர் “நான் தெரிந்து கொண்டேன்… என்னால் அனைத்தும் முடியும்…!” என்று அகம் கொண்டு செயல்படுவார்கள்.
உதாரணமாக மிளகாயை எடுத்துக் கொண்டால் காற்றிலிருந்து காரத்தின் சத்தை எடுத்துத் தான் அந்த கார குணம் கொண்ட மிளகாயாக வளரும்.
இதைப் போன்று… “படித்துணர்ந்தவர்கள்” எதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டனரோ அதனின் இயக்கமாக… அதனின் நிலையிலேயே… மற்ற உண்மைகளை அறியாதபடி… எதன் வலிமை பெற்றார்களோ அதன் நிலைகளிலே சென்று அடைகின்றார்.
சைவ சித்தாந்தத்தின் உண்மை இன்று தலை கீழாக மாறிவிட்டது.
காரணம் அரசர்கள் போர் முறை கொண்டு வரப்படும் பொழுது இந்த உண்மையின் இயக்கங்களை அறியாது… காலத்தால் மாற்று அரசர்கள் வரும் பொழுது…
1.அன்று தத்துவஞானிகள் கொடுத்ததைத் தனக்குச் சொந்தம் என்று
2.தனக்குகந்த சட்டங்களாக இயற்றப்பட்டுக் காவியமாகப் படைக்கப்பட்டு
3.அதைத் தன் மக்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது “இதுவே அவர்களுக்குள் கடவுளாகிறது…”
கடவுளுக்கு இன்னென்ன சாங்கியங்களைச் செய்தால் போதும்… அதன் உணர்வின் செயல்கள் இப்படி இருக்கும்…! என்று இவ்வாறு அரசர்களால் உருமாற்றப்பட்டு “அசைவம்…” (என்றால் என்ன…?) என்ற நிலைகளை அறிய முடியாத நிலைகளாகக் காலத்தால் மறைந்து விட்டது.
இப்படி ஒவ்வொரு அரசனும் தான் கண்டறிந்தது மாற்று அரசர்கள் கண்டால் உண்மையின் இயக்கங்கள் அது போய்விடும்… மற்றவர்களுக்கு அது தெரியக் கூடாது என்று மறைத்து விட்டார்கள்.
1.அப்படி மறைக்கப்பட்ட உண்மைகளைத் தான் இன்று இதுவா… அதுவா…? என்று ஊசலாடிக் கொண்டு
2.கடவுளை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்…!
வேதாந்தங்கள் என்பது வேதங்களாக மாற்றப்பட்டு விட்டது தமிழ் மொழியின் இசை (ஒலி) வேதங்களில் உண்டு. சில ஒலிகள் அதனுடைய இசை தான் மாற்றப்பட்டுள்ளது.
தமிழில் இருந்து தான் வேதங்கள் உருவானதா…? வேதத்திலிருந்து தமிழ் உருவானதா…? என்றும் போர் முறை கொண்டு உண்மைகளை அலசி ஆராய்ந்து… தேடிக் கொண்டுள்ளோம்.
இதுதான் உண்மை… அது பொய்…! என்று போர் முறை கொண்டு மொழி அடிப்படையில் ஒருவருக்கொருவர் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளத்தான் முடிகின்றது.
உண்மையின் இயக்கங்களை நாம் அறிய முடியாதபடி
1.குறுகிய கால வாழ்க்கையில் நம்மை அறியாதபடி குறைகளை வளர்த்துக் கொள்வதும்
2.நிறைவு பெறும் நிலைகளை இழந்து நற்செயல்கள் இழக்கப்பட்டு
3.மனிதனல்லாத உருவை உருவாக்கும் உணர்வையே மனிதர்கள் இன்று வளர்த்திடும் நிலையாக வந்து விட்டது.

உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…
உலகோதய வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டுவிட… எட்டிவிட நினைக்கின்றது. ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது “எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி…”
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும் என்று கரை சேரலாம் என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் “தன் முயற்சி கொண்டு” கரை காண்பதும் உண்டு.
அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும் தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும்
1.பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் போதினியைத் (குரு) தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.
உலகோதய வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்துவிட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.
இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலகோதய ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் அன்றோ..!
அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.
தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.
அந்தப் பக்குவத்தை முயற்சி செய்து பெறுவதற்காகத் தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”
தன்னிடம் குருகுல வாசம் செய்ய வரும் சீடர்களுக்கும் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை.
“தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கும் மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.
அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்
“காரணம் உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!
குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம். நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”
உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.
மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலகோதய ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.
அடுத்துப் படிக்கும் மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழிதனின் ஏகிவிடுவர்.
இதில் எல்லாம் தெளிந்து
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலகோதய ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
4.அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள்.
அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!
தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.
1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.
அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.
சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது. வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”
உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்துத்
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.
ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலகோதய ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்.
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா…. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் அனைவரது உடல்களிலும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.
கூட்டுத் தியானங்களில் இப்படி எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அந்த உயர்ந்த உணர்வைச் சுவாசிக்கும் தகுதி பெறுகின்றோம். சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.
அதனின் வலுக் கொண்டு கை கால் குடைச்சலோ அசதியோ தலை வலியோ உடலில் நீர்ப் பிடிப்போ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ இருதய வலியோ இது போன்ற நோய்களை அகற்ற முடியும்.
1.“துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.இந்தச் சுவாசத்தை எடுக்க எடுக்க உங்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்கும்.
3.உங்கள் உடலில் உள்ள வலிகள் குறையும்… அதை நீங்கள் உணரலாம்.
இடுப்பு வலியுடனோ கால் வலியுடனோ தலை வலியுடனோ வயிற்று வலியுடனோ வேறு எந்த வலியுடன் இருந்தாலும் அந்த வலி நீங்க வேண்டும் என்ற நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் உடலில் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்று “எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா…!” என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போல் பாயும்
2.நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலந்து
3.உங்கள் உடலில் உள்ள விஷத் தன்மைள் கலைந்து செல்லும்
4.உங்கள் உடலில் உள்ள நோய்கள் அகலும்.
அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த தீமைகள் அகற்றிய அருள் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவும்.
1.சர்வ பிணிகளும் நீங்கும்… இருதயம் சீராக இயங்கும்.
2.எத்தகைய நோயாக இருப்பினும் அது எல்லாம் குறையும்
3.உடலில் உள்ள சிக்கல்கள் நீங்கி உடல் நலம் பெறும் சக்தியாக மாறும்
4.குடலில் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.
புத்திர பாக்கியம் வேண்டுவோர்
1.தன் உடலில் புத்திர பாக்கியம் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
2.அதே போல் என் கணவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பெண்கள் எண்ண வேண்டும்.
3.ஆண்களும் தன் மனைவிக்கு புத்திர பாக்கியம் பெறும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணி
4.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
புத்திர பாக்கியம் பெறும் அருள் உணர்ச்சிகள் உங்கள் உடலிலே உருவாவதைக் காணலாம்.
உங்கள் இரத்த நாளங்களில் புது விதமான உணர்ச்சிகள் தூண்டி
1.கருப்பைகளில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும்
2.கரு விந்துகளிலும் இதன் உனர்வுகள் உணர்ச்சிகள் கூடி
3.குழந்தைகள் பெறும் உணர்வின் அணுக்கள் வளர்ச்சி அடையும்.
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து
5.மேலே சொன்ன உணர்வுகளை எல்லாம் பாய்ச்சுதல் வேண்டும்.
சீக்கிரமே கரு உருவாகி ஞானக் குழந்தையாக உருப்பெறச் செய்யும் சக்தி பெறுவீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
1.தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்…
2.துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றி அனுப்பும் அதன் உணர்வுடன் நாமும் சேர்ந்து விட்டால்
3.துருவ நட்சத்திரத்தைப் போன்றே இந்தப் பிரபஞ்சத்தில் எந்தக் கோணத்தில் எந்த அகண்ட அண்டத்திலிருந்து வருவதையும்
4.ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நாமும் பெற்று ஒளியின் உடலாகப் பிறவியில்லா நிலை அடைவோம்.
5.இது தான் மனிதனின் கடைசி நிலை… இந்தச் சூரியனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை…!
சூரியனால் உருவாக்கப்பட்டது தான். ஆனால் இந்த உயிர் இந்த உணர்வின் துணை கொண்டு தனித்தன்மை வாய்ந்ததாகப் பிற மண்டலங்களிலிருந்து வருவதை ஒளியின் உடலாக மாற்றிக் கொள்கின்றார்கள் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.
அதாவது… இந்தப் பிரபஞ்சத்தில் அகண்ட அண்டத்தில் “சூரியனாக…” அது எப்படி உருவானதோ அதே போல் இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி இந்த உணர்வுகள் முழுவதையும் ஒளியாக மாற்றித் தனித்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது.
இதை எல்லாம் குருநாதர் இந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகள் எப்படி இயங்குகிறது…? கடவுள் யார்..? என்று தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்.
1.ஓர் சாந்தமான உணர்வுக்குள் ஒரு வலிமையான உணர்வு இணைந்தால்
2.அது உள் நின்று அந்தச் சாந்தத்தை மாற்றித் தன் வழிக்கே அது அழைத்துச் செல்கிறது.
இதைப் போலத் தான்
1.நாம் அந்த ஒளியின் உடல் பெற்ற உணர்வினை நமக்குள் எடுத்தால்
2.உள் நின்று இருளை நீக்கி ஒளி என்ற உணர்வினை மாற்றுகின்றது.
பல கோடி உடல்களில் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல் உணர்வினை உடலாக ஆக்கி எல்லாவற்றையும் அறிந்திடும் கார்த்திகேயனாக வருகின்றது.
ஆகவே தீமை என்று தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
தீமையை நீக்கிய உணர்வு பெற்ற அகஸ்தியன் உணர்வுகளை நாம் கவர்ந்து நமக்குள் அதை எடுத்து விளையச் செய்தால் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்று
1.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடையும் அந்தப் பேரானந்த நிலை பெற்று
2.என்றுமே ஒளி உடலாகப் பெறும் அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.
3.இதுவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையும் மார்க்கம்.
அருள் ஒளியின் உணர்வை நமக்குள் வலிமை ஆக்கிக் கொண்டால் தீமைகளை எளிமையாக்கி இந்த வாழ்க்கையில் புனிதம் என்ற நிலைகளை நாம் ஒவ்வொருவரும் அடைய முடியும்.
ஆக.. பகைமையற்ற நிலையை உருவாக்கி மனிதர்கள் ஏகாந்தமாக விண் செல்ல வேண்டும் என்பதே ஞானிகள் நமக்குக் கொடுத்த பேருண்மைகள்.


பிறரின் வேதனைகளை “இரக்கப்பட்டுக் கேட்டறிந்தால்” வரும் தீய விளைவுகள்
உதாரணமாக கோழியோ பாம்போ கருவுற்றால் அவைகள் கேறும். குருவி மற்ற அதைப் போன்ற முட்டையிடும் சில இனங்கள் அனைத்துமே கேறத்தான் செய்யும்.
மனிதனின் வாழ்க்கையில் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து (சுவாசித்து) விட்டால் அது இரத்தத்தில் கலந்துவிடுகிறது. பின் கருத்தன்மை அடைகின்றது.
1.மீண்டும் மீண்டும் அவரின் வேதனையை எண்ணி நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் இந்த உணர்வுகள் முழுமை அடைந்தால்
2.எந்த உடலிலே அந்த வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்ததோ
3.அதே மாதிரி நம் இரத்த நாளங்களிலும் அந்த அணுவை உருவாக்கும் “கரு முட்டைகளாக” மாறி விடுகின்றது.
அவ்வாறு கரு முட்டைகள் ஆகும் பொழுது அந்த இரத்தம் இரத்தநாளங்கள் வழியாகச் சுழலும் போது அந்தக் குறித்த காலம் வரும் பொழுது என்ன நடக்கின்றது…?
வேதனைப்படுவோரை… “அடப்பாவமே… நல்ல மனிதன் இப்படி அவதிப்படுகின்றானே…!” என்று தான் அவர்கள் நோயாக அல்லது துன்பத்தில் வாடுவதை நாம் எண்ணுகின்றோம்.
கோழி எப்படிக் கருவுற்ற பின் அது கேறுகின்றதோ அதைப்போல நுகர்ந்த உணர்வுகளை “மீண்டும் மீண்டும் திரும்ப எண்ணும் பொழுது” அது கோழி கேறுதல் போன்று ஆகிவிடுகிறது
அவர் உடலிலே நோயாக உருவாக்கிய அணுவின் தன்மை நம் இரத்தங்களிலே கருவுற்று முட்டையாக மாறுகின்றது.
1.அந்த முட்டை இரத்தத்தில் சுழன்று வரும் பொழுது உடலுக்குள் சிறு மூளை பாகம் வரை செல்லும்… மற்ற எல்லா பாகங்களுக்கும் சென்று வரும்.
2.முட்டையாக இருக்கும் பொழுது முதலில் அந்த வேதனை நமக்குத் தெரியாது.
ஆனால் இரத்த நாளங்கள் வழியாக நம் உடல் உறுப்புகளுக்குள் சுழன்று வரும் பொழுது… இருதய வாயில்களில் இரத்தங்களை வடிகட்டி வரும் அந்த இடத்தில் இந்த முட்டை சென்றால்… இது வடிகட்டும் திறன் கொண்டு இழுத்து அனுப்பப்படும் பொழுது துடிப்பின் தன்மை அழுத்தமாகும் பொழுது அந்த முட்டை வெடித்து விட்டால் போதும்.
வேதனையை உருவாக்கும் அந்த விஷமான அணு அந்த இருதய பாகத்தில் சேர்ந்து விடுகிறது. சேர்ந்த பின்
1.அந்த மனிதன் எப்படி வேதனைப்பட்டானோ அதே வேதனை உணர்வுகள் இருதய வாயிலே தோன்றி
2.பளீர்… பளீர்… என்று மின்னும்… ஊசி குத்துவது போல் இருக்கும்.
3.நெஞ்சு வலிக்கின்றது… எப்படியோ எனக்கு மயக்கமாக வருகிறது என்று சொல்லத் தொடங்குவோம்.
நெஞ்சு வலிக்கின்றது என்று ஒரு அணுத்தன்மையாக முதலில் அடைந்தாலும்… முட்டை வெடித்து முட்டையை விட்டு வெளிவந்த குஞ்சுகள் தன் இரைக்காக (வேதனைப்படும்) உணர்ச்சிகளை உந்தும்.
கோழி முட்டைகள் பொரிந்த பின் வெளி வந்த குஞ்சுகள் கத்தும். அப்போது தாய்க்கோழி கூவி இரையைத் தேடித் தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றது.
அதைப் போல நமது உயிர் நாம் எண்ணியதை அணுக்களாக உருவாக்கிய பின் உணவு கொடுக்கும்.
1.இருதய வாயிலில் உருப்பெற்ற அணுக்களுக்கு… அந்தக் குஞ்சுகள் இரைக்காக உணர்ச்சியைத் தூண்டும்.
2.அப்போது வலி வரும்… மீண்டும் வலிக்கின்றதே வலிக்கின்றதே என்று எண்ணும் போதெல்லாம்
3.அந்த வலியின் உணர்வை எடுத்து அந்த அணு தன் இனத்தையே பெருக்கத் தொடங்கும்.
முதலிலே லேசாகத்தான் நெஞ்சுவலி இருந்தது பின் அது அதிகரித்து அணுக்களின் தன்மை தன் இனத்தைப் பெருக்க ஆரம்பிக்கும் பொழுது “இருதய வால்வுகள்” விஷத்தன்மையான நிலைகள் கொண்டு “அது விரிவடையும்… அல்லது ஒடுங்கி நிற்கும்….”
விஷ வாயுவின் தன்மை உற்பத்தியாகத் தொடங்கினால் அதனுடைய முடிவு… தாங்காதபடி அந்த ரத்த நாளங்கள் வெடித்து விடும். வெடித்தால் ஒன்றும் செய்ய முடியாது… இது ஒரு பக்கம்.
ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்…. திடீரென்று இயக்கச் சக்தி குறைவு.
ஆனால் அவர் ,மீது பற்று கொண்ட ஒருவர் அவர் மீது நினைவாற்றலைச் செலுத்தி… “திடீரென்று இறந்து விட்டாரே…” என்று அடிக்கடி இந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் இந்த அணுத்தன்மை சிறு மூளை பாகம் செல்லும் பொழுது அங்கே வெடித்து விட்டால் இந்த உணர்வின் தன்மை கூடும்.
அது உயிர் பாகம் வரும் பொழுது… நமது உயிரோ கண் காது மூக்கு உடலுக்கு ஆணையிடும். எந்த மனித உடலிலிருந்து இந்த விஷத்தன்மை நுகரப்பட்டு அணுவானதோ அதைக் கவர்ந்து அதே உணர்வின் தன்மையை இங்கே நமக்குள் உருவாக்கும்.
பின்…
1.சிறு மூளை பாகங்களில் இருதயத்தை இயக்கக்கூடிய அந்த நரம்புகளில் தொடர்பு இழந்து விட்டால்
2.இருதயம் இயங்காதபடி ஒரு நொடிக்குள் நாளை மாய்த்து விடும்.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே… எத்தகைய தீமைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் பார்க்க… கேட்க… நுகர நேர்ந்தால் அதை மாற்றிட நமது குருநாதர் காட்டிய வழியில்
1.உடனுக்குடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
2.இரத்தத்தில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை இணைத்து.
3.தீமைகள் இரத்தத்தில் கருத்தன்மையாக உருவாகதபடி தடுத்து நம் வாழ்க்கைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு தான் உணர்வின் இயக்கங்களை உங்களுக்குள் தெளிவாக்கி வேதனைகளை மாற்றி அமைக்கும் உபாயங்களைச் சொல்லி… அருள் வழியில் இந்த வாழ்க்கை வாழ்ந்திட… “அதற்குண்டான ஒரு பழக்கமாக… ஒரு பயிற்சியாக… இதைக் கொடுக்கின்றோம்…”

“வாயு ஸ்தம்பம்…”
உயிரான்மத் தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான்
1.“உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் “மேலிருந்து கீழுமாக… கீழிருந்து மேலுமாக…”
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!
இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”
அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.
தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.
உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.
1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.
உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.
விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?
அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?
நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!
அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.
அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.

அறுபது வயதை “முதுமை” என்று ஏன் சொல்கிறோம்…?
நமது உயிர் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை நுகர்ந்து உடல் பெறுகின்றது. அவ்வாறு உடல் பெற்ற நாள் தான் “சிவன்ராத்திரி…” உயிரோ ஈசனாகின்றது… உணர்வு இயக்கும் சக்தியாகின்றது நுகர்ந்த உணர்வு சத்தாக உயிருடன் ஒன்றப்படும்பொழுது உடலாகின்றது… சிவம் ஆகின்றது.
நமது உயிர் வான் வீதியில்…
1.அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் உயிராக உருப்பெற்ற நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்று
2.இந்த ஆறுபது ஆண்டுகளில் நமது உயிர் உருப்பெற்ற நாளாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
பொதுவாக உயிரணுக்கள் வான்வீதியில் உருப் பெற்ற நாளை நினைவுபடுத்தும் நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்பது. உயிரின் இயக்கச் சக்தியை ஈசன் (ஈஸ்வரன்) என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.
சூரியனோ… மற்ற தாவர இனங்களின் சத்துக்களை எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
தாவர இனத்தில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் போடும்போது… நிலத்தின் ஈர்ப்புத் தன்மை கொண்டு தன் தாய்ச் செடி உணர்வின் சத்தை நுகர்ந்து அந்த இனத்தின் செடியாக அது உருப்பெறுகின்றது.
ஆனால் உயிரோ… எந்தச் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கியதோ இதற்குப் பெயர் “ஈசன்…” இந்த உணர்வின் சத்து நம் பூமிக்குள் வந்து இந்த உணர்வின் சத்து உயிருடன் ஒன்றி உடலாக்கப்படும் பொழுது “சிவம்…”
1.ஈசனான உயிர் இல்லை என்றால் உடலான சிவம் சவம் தான்.
2.ஆகவே “அவனின்றி அணுவும் அசையாது” என்று சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.
ஈஸ்வர ஆண்டு என்று ஆரம்பித்து… இதனுடைய சுழற்சி அறுபது ஆண்டுகள் முடிவடையும் தருணம்… மீண்டும் ஈஸ்வர ஆண்டு என்று வரும்.
இது எல்லாம்… மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் அறுபது ஆண்டு நிறைவடையப்படும் பொழுது அந்த அறுபது ஆண்டுக்குள் பெற்ற சக்திகள் வேறு. அடுத்த அறுபது என்பது வேறு…!
அந்த அறுபதைக் கடந்து செல்லப்படும் பொழுது
1.மறுபடியும் பிரபஞ்சத்தில் சூரியனின் காந்தப் புலனறிவு மற்ற கோள்களின் திசை மாற்றங்கள் வரும்
2.இந்த அறுபது ஆண்டில் மற்ற கோள்கள் திசை மாறும் பொழுது நட்சத்திரங்களின் இயல்புகளும் மாறுகின்றது.
அவ்வாறு மாற்றி வரப்படும் பொழுது அறுபது வருடத்திற்குள் இருந்த நிலை வேறு… அதற்குப்பின் உருமாற்றங்கள் வேறு…!
1.முதுமை அடைகின்றது… உணர்வுகள் சோர்வடைகின்றது.
2.சோர்வின் பால் “மற்ற உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது” உணர்வின் தன்மை உடலைக் குறையச் செய்கின்றது.
அடுத்த அறுபதுக்குள் இந்த உடலில் விளைய வைத்த உணர்வினை இதே உயிர் இந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலாக உருமாற்றி அதனின் செயலாக்கத்திற்குக் கொண்டு வருகிறது.

விஷ வைத்திய சாஸ்திரம்
இயற்கையுடன் ஒன்றி வளரும் தாவர இனங்களின் ஓர்மித்த சுவாச அலை ஈர்ப்பில் அதனதன் அமில குணத் தன்மைகளின் பாகுபாட்டையும் அதனின் சூட்சமங்களையும் அறிந்தவர்கள் தான் அன்றைய ஞானிகள்.
அவர்கள் பெற்ற உயர் ஞான வலுவின் மூலம் “இயற்கை மூலிகை ஔஷத இரகசியங்களை அறிந்து…” அதனின் வளர்ச்சியில் வளர்ச்சியுற்ற நிலை தான் விஷ வைத்திய சாஸ்திரம் பிறந்ததன் காரணம்.
தீமையானதையும் நல்லவைகளாக மாற்றித் தரும் மகான்கள் இந்த உலகத்தில் உள்ளோர் நல் வாழ்வு வாழ்ந்திட அளித்த வைத்திய பொக்கிஷங்களை எல்லாம் மறை பொருளாக்கப்பட்டதன் காரணம் என்ன என்றால் நன்மைகளையே எதிர்மறைகளாக உணர்ந்து தீய எண்ணத்தை வலுவாக்கிக் கொண்ட “இன்றைய மனித குலத்தின் நஞ்சான எண்ணத்தால் தான்…!”
போகர் பெற்ற அனுபவ ஞானத்தால் கசாங் என்ற பெயர் நாம சித்தனாக உலகிற்கு நன்மைகள் புரிய முனைந்த பொழுது அன்றைய அரசாங்கமே அதை எல்லாம் மக்களுக்குக் கிடைத்திடாத வண்ணம் தடுத்து கசாங் சித்தரையே அழித்துவிட முனைந்தது.
அவர்கள் எய்த விஷ அம்பு சரீரத்தில் தைத்துவிட்ட கோலத்தில் அடர்ந்த கானகத்துக்குள் தப்பி ஓடினார். காட்டில் பைராகிகள் தொடர்பு ஏற்பட்டு திட வைராக்கிய சிந்தனை கொண்டு எவ்வளவு எதிர்ப்பு நிலை இருந்த போதிலும்
1.உலகு உய்ய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தின் பாங்கில்
2.தன்னை மாமகரிஷியாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
3.அந்த போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமப்பா..!
அன்று பைராகிகளின் உதவியுடன் விஷ வைத்திய முறைகளைக் கற்றுணர்ந்தார் போகர். அதே தொடரில் விஷ மூலிகைகளைப் பக்குவப்படுத்தும் முறை கொண்டு விண்ணிலே பறந்தும் காட்டினார் போகர்.
அதன் பிறகு தியான ஈர்ப்பின் செயல் மூலம் “இந்தச் சரீரத்தையே மிதக்கச் செய்யும் செயலாகக் காட்டியது…” காளாஞ்சி நாதரின் (காலிங்கநாதர்) தொடர்புக்குப் பின் தான். அதுவே “வாயு ஸ்தம்பம்…!”
(மகரிஷிகள் பெற்ற அனுபவ ஞானங்களை வெளியிடுவது கூட அவர்களின் சம்மதம் என்ற அருளாசி பெற்றுத்தான் சொல்லுக்கே கொண்டு வந்திட முடியும். போகர் அளித்திட்ட சம்மதத்துடன் அவருடைய அருளாசியுடன் கூறுவதில் இனி தடை ஏதுமில்லை)
போகநாதர் பெற்ற ஞான வளர்ச்சியை இதைப் படிப்போர் அனைவரும் பெற எமது அருளாசிகள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு விஷம் கொண்ட பாம்பு அது தன்னைப் பாதுகாக்க மற்றதைத் தீண்டும். பாம்பு மனிதனைத் தீண்டி விட்டாலோ அந்த மனிதனின் நினைவு பூராமே பாம்பின் பால் வந்துவிடும்.
ஆனால் பாம்பு தீண்டுவதற்கு முன் மனிதன் அதை அடித்துக் கொன்று விட்டால் பாம்பின் உயிர் அடித்தவர் உடலில் வந்துவிடும்.
இதைப் போல் நான் (ஞானகுரு) பரிணாம வளர்ச்சியில் மற்ற எந்தெந்த உடலைப் பெற்றிருந்தேனோ
1.என் தாய் வழி அல்லது என் தந்தை வழி அடிக்கப்பட்டு
2.இந்த உயிர் அவர்கள் உடலில் சென்று சிக்கி
3.எனது உயிர் அவர்களுக்குள் ஈர்க்கப்பட்டு
4.அதன் வழி என்னை மனிதனாக உருவாக்கக் காரணமாக இருந்தார்கள் “என் அன்னை தந்தை தான்…”
ஆகவே மற்ற உடலிலிருந்த என்னை மனிதனாக உருவாக்கிய என் தாய் தந்தை தான் எனக்குக் கடவுள். என்னை மனிதனாக்கிய தாய் தந்தை தான் எனக்குக் கடவுள்.
மனிதனாக உருவாக்கினாலும் அதே சமயத்தில்
1.என் தாய் எப்பொழுதுமே எனக்கு நல் வழி காட்டி
2.நல் வழி நான் வாழ வேண்டும் என்று உபதேசித்த முதல் குருவும் அது தான்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பறிந்து என்னைத் தாலாட்டிச் சீராட்டி இன்று இத்தகைய ஞானத்தைப் பேசும் உணர்வுக்கு என்னை ஆளாக்கியது என் தாய் தான் அந்தத் தெய்வம்…!
இத்தகைய நிலைகளுக்கு என்னை ஆளாக்கிய என் தாய் தந்தையைக் கடவுளாக வணங்குகிறேன்.
1.என்னை மனிதனாக உருவாக்கிய கடவுளை
2.என்னை மனிதனாக்கித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த என் அன்னை தந்தையை
3.என்றுமே என் வாழ்வில் கடவுளாக வணங்குகிறேன்.
உங்கள் ஒவ்வொருவரையும் மனிதனாக உருவாக்கிய உங்கள் உயிர் கடவுள் என்றும் அவனால் உருவாக்கப்பட்ட உங்கள் உடல் ஆலயம் என்பதை எமது குரு எனக்கு உபதேசித்த அருள் வழிப்படி வணங்குகிறேன்.
நீங்கள் செவி கொண்டு என்னுடைய உபதேசங்களைக் கேட்டாலும் கண் கொண்டு பார்த்து மூக்கு வழி சுவாசித்து ஞானிகளின் உணர்வைக் கவரப்படும் பொழுது அது உங்கள் உயிரிலே பட்டு அந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாகி உங்கள் உடலில் இது ஐக்கியமாகின்றது.
உங்கள் கண்ணின் கருவிழி உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ நான் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்கின்றது. உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது.
நான் பேசும் போது வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்தப்புலன்கள் கவர்ந்து வான்வீதியில் பரமாக இருக்கும் பரமாத்மாவாக மாற்றுகின்றது.
ஆகவே… உங்கள் கருவிழி என்னைப் பதிவாக்கிய பின் நான் வெளிவிடும் உணர்வை உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது. அதிலிருந்து உங்கள் உயிரின் காந்தப் புலன் கவர்கிறது… உயிரிலே மோதுகின்றது. மோதிய பின் உணர்ச்சிகளாக ஒலிகளாக எழும்புகிறது. உடல் முழுவதும் அதைப் பரவச் செய்கிறது.
அதை தான் நாம் அறிவதற்காக
1.சப்தத்திற்குச் சங்கு என்றும்
2.எந்த உணர்வுகளை நுகர்கின்றோமோ அதன் உணர்வுப்படி இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் சுழல்வதைச் சக்கரம் என்றும்
3.அதன் வழிப்படி தான் எண்ணம் சொல் செயல் கொண்டு நாம் செயல்படுகின்றோம் என்று
4.ஞானிகள் காரணப் பெயர் வைத்து “சங்கு சக்கரதாரி” என்று நமக்குக் காட்டுகின்றார்கள்.
5.நம் உயிரை விஷ்ணு என்று காரணப் பெயர் வைக்கின்றனர்.
நமக்குள் இயக்கச் சக்தியாக இருக்கும் உயிரை நாம் புரிந்து கொள்வதற்குத் தான் உருவக வழிப்படுத்தி அதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவினார்கள் மகரிஷிகள்.
1.இயக்கம் ஈசன் என்றும்
2.அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்
3.ஈர்க்கும் காந்தம் இலட்சுமி என்றும்
4.இந்த முறையில் மூன்று நிலைகளில் நம் உயிர் வேலை செய்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நான் நல்லதைத் தான் செய்கிறேன்… என் பையனுக்கு எத்தனையோ நல்லதைச் செய்தேன் ஆனால் என் பையன் சொன்னபடி கேட்கவே மாட்டேன் என்கிறான்…! என்று தாய் தந்தையர் சொல்வார்கள்.
முதலில் அவனைப் பற்றி உயர்வாகப் போற்றித் தான் பேசுகிறோம். ஆனால் சிறு தவறுகள் நடந்த பின் “நான் நல்லதைச் சொன்னேன் கேட்க மாட்டேன் என்கிறான்…!” என்ற நிலையில் பக்குவம் தவறி நாம் என்ன செய்கிறோம்…!
அவனைக் குறை கூறும் உணர்வு வந்து விடுகிறது. குறை கூறும் நிலை வரப்படும் பொழுது அந்தக் குறை நமக்குள்ளும் வந்து நம்மையும் குறை உள்ளவனாக மாற்றுகிறது.
1.ஆனால் குறை காணும் பொழுதெல்லாம் அவனுக்கு ஞானிகள் காட்டும் அருள் வழியைக் காட்டினால் அது நன்மை பயக்கும்
2.சிறிது பொறுமையுடன் இருந்து அந்த மகரிஷிகளின் உணர்வை ஊட்டினால் அவன் ஞானியாக ஆவான்.
தொழில் செய்கிறோம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் வருகிறது.
1.அன்றைக்குக் கொடுத்தேன்… ஏண்டா திரும்பக் கொடுக்கவில்லை…? என்று சொல்லி அதட்டிக் கேட்கும் பொழுது
2.அங்கே அந்தப் பக்குவம் தவறுகிறது… வெறுப்பின் தன்மை அதிகமாகி கொடுத்த பணமும் வராது போகிறது.
இதே போல் நம் வாழ்க்கையில் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தப் பக்குவம் தவறிவிட்டால் மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் மாற்றித் தீய உணர்வுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.
இதைப் போல் நம் வாழ்க்கை முழுவதற்கும்… ஒவ்வொரு நொடியிலும் நாம் சந்திக்கும் இடங்களில் குடும்பத்திலும் சரி… மற்ற எந்த இடத்திலும் சரி… சில தவறுகளும் ஏற்பட்டாலும் பக்குவப்படுத்தும் முறை கொண்டு நாம் நடக்க வேண்டும்.
மருமகள் வீட்டில் கூட்டிக் கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
மாமியார் பார்த்து.. வீட்டைப் பெருக்கி இருப்பதைப் பார்…! அன்று மருமகளிடம் சொல்லும். இப்படிக் குறையாகச் சொல்லும் பொழுது மாமியார் மீது மருமகளுக்குக் கோபம் வருகிறது.
உடனே போய் தன் வீட்டுக்காரரிடம் சொல்கிறது… நான் எந்த வேலையைச் செய்தாலும் உங்கள் அம்மா இப்படிக் குறை சொல்கிறார்கள் என்று…!
ஆனால் இதை மாமியார் காதிலே கேட்டால் “நான் என்னத்தைச் சொன்னேன்..? நீ என்னைக் குற்றம் சொல்கிறாய்…!” என்று இந்தப் பகைமை வரும்.
இந்த மாதிரி நேரங்களிலும் நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கை என்றாலும் குறைகள் வரும். அது வளராதபடி உடனுக்குடன் துடைத்துப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால்…
1.சந்தர்ப்பம் இது போன்ற தீமைகளை நமக்குள் வளர்க்கும்
2.நாம் அருள் ஒளி கொண்டு எடுத்துத் தூய்மையாக்கிடல் வேண்டும்.
இதே மாதிரித் தான் பள்ளியில் படிக்கும் குழந்தைகளாக இருந்தாலும் ஏதோ சந்தர்ப்பம் படிப்பில் குறைவாக இருந்தால் ஆசிரியர்கள் கோபமாகத் திட்டுவார்கள் அல்லது அடிப்பார்கள்.
ஆனால் திட்டுவதனாலேயோ ஏசுவதனாலேயோ மிரட்டுவதனாலேயோ அந்தக் குழந்தையின் கல்வியின் தரம் உயராது.
பக்குவப்படுத்தி உண்மையை உணர்த்தினால் தான் அந்தக் குழ்ந்தைகளை ஞானிகளாக மாற்ற முடியும். இதைச் செய்யத் தவறினால் நாம் கற்றுணர்ந்தும் பயனற்ற நிலை ஆகிறது.
1.ஏனென்றால் பள்ளிக் குழந்தைகளிடம் எது பதிவாகின்றதோ
2.ஒரு தரம் மிரட்டி விட்டால் ஆசிரியரைப் பார்த்தாலே வெறுப்பு வரும் பயமும் வரும்…
3.பயத்தால் சிந்தனை குறையும்… சிந்தனை குறைந்தால் பாடத்தை எப்படிச் சரியாகப் படிப்பான்…?
இதைப் போன்ற நிலைகளில் ஆசிரியர்களும் ஞானிகளை உருவாக்க வேண்டும் என்றால் அந்தப் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.
பள்ளியில் படிப்பவர்களைப் பற்றி நிறைய உயர்வாகச் சொன்னாலும் இது போன்று பக்குவம் தவறி குறைகள் வளர்ந்து விட்டால் குழந்தைகளை உயர்த்துவதற்கு மாறாக வெறுப்பின் உணர்வை வளர்த்து விடுகின்றது.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு நாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கூட்டி அந்தப் பரிபக்குவ நிலை கொண்டு சிந்தித்துச் செயல்படும் பழக்கம் வர வேண்டும்.
ஒவ்வொரு உயிரும் கடவுள்… ஈசன் வீற்றிருக்கும் அந்த உடல் ஆலயம்.. அங்கே அறியாமல் சில செயல்களும் சில சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.
இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.
அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டும்படி சொல்கிறோம்.


எதை நினைக்கின்றாயோ… அதுவாக நீ ஆகின்றாய்…!
நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்… உதவி செய்கின்றோம். ஆனால் அவன் மீது சிறிது வெறுப்பாகி விட்டால் “எனக்குத் தீங்கு செய்கின்றான்… இவனுக்கு எப்படி நன்மை செய்வது…?” என்ற எண்ணம் வருகின்றது.
அப்பொழுது நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை தான் செய்வோம். தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த தீமையை விளைவிக்கும் அணுக்களே நமக்குள் உருவாகின்றது.
நண்பன் தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும்
2.தீமையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்”
3.தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வின் அணுக்கள் உடலிலே உருவாகி
4.நமக்குள் “தீமையை நீக்கும் சக்தியாக” உருவாகின்றது (இது முக்கியம்)
கோபமாக இருக்கும் பொழுது ஒரு பொருளின் தரத்தை நம்மால் சரியாகக் காண முடிகின்றதா…! ஒரு நூலையோ துணியையோ அல்லது மற்ற பொருள்களையோ பதார்த்தத்தையோ காண முடிகின்றதா…? கோபமாக இருக்கும் போது தரத்தை நிர்ணயிக்க முடியாது.
நண்பனாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் அவனைப் பார்க்கப்படும் பொழுது அவன் ஒரு நல்லதைச் சொன்னால் இந்த நேரத்தில் நீ ஏனய்யா இங்கே வந்து வம்பு செய்து கொண்டிருக்கின்றாய்…? என்று அவரிடம் நாம் கோபமாகத்தான் பேச ஆரம்பிப்போம்.
அவர் நல்லதைச் சொல்லும் போது “நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ…! ஏன் வம்பு செய்கின்றாய்…?” என்று தான் சொல்வோம்.
1.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் அதுவாகின்றோம்
2.கீதாச்சாரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணியதை உயிர் தான் உருவாக்குகின்றது… உடலாக்குகின்றது. மீண்டும் நினைவாக்கும் பொழுது அதனைச் செயலாற்றுகின்றது அந்த நினைவுகள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்.
1.இந்தப் பேருண்மையை நீங்கள் நினைவாக்கிக் கொண்டால்
2.உங்களை அறியாது வரும் இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.அதை பெற வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றேன்.
ஆகவே… இயற்கையின் இயக்க நிலைகளைத் தெளிவாக்குவதற்காக ஞானிகள் எத்தனையோ காவியங்களைக் கொடுத்துள்ளார்கள். காவியமாகப் படைத்து அந்தக் கருத்தினை நான் நுகரப்படும் பொழுது அந்தக் கருத்தே நம் உடலில் உணர்வின் சக்தியாக நமக்குள் விளையத் தொடங்குகின்றது.
உதாரணமாக… தமாசுக்காக ஒருவரைக் கேலி செய்து பாருங்கள்… இந்த உணர்வுகள் விளைந்து கொண்டேயிருக்கும். ஆனால் இவர் சும்மா தமாசு செய்து கொண்டே இருக்கின்றார்…! என்று அவர் நினைப்பார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவர் நம் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு வருவார். ஒரு நாள் என்ன ஆகும்…? நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்… பொறுத்துக் கொண்டேயிருக்கின்றேன்… “இரு உன்னை என்ன செய்கின்றேன் பார்…!” என்று பகைமை ஆகிவிடும்.
விளையாட்டாகத் தானே…! என்று நாம் நினைப்போம் ஆனால் கடும் விளைவுகளை உண்டாக்கிவிடும். இதனுடைய வளர்ச்சி முதுமைக்கு வரும் பொழுது இப்படித்தான் வரும்.
இரண்டு பேர் சண்டை போடுவதை (அடிக்கடி) வேடிக்கையாகப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாளடைவில் இவன் மோசமான ஆள் என்று அடுத்தவரிடம் சொல்ல ஆரம்பிப்போம்… திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்போம்
2.இந்த உணர்வுகள் அடுத்து “நம்மையே மோசமான ஆளாக” மாற்றக்கூடிய அளவுக்கு அணுக்களாக விளையத் தொடங்கும்
3.எதை “மோசம்” என்று சொன்னோமோ அதுவே இங்கு வேலை செய்யத் தொடங்கிவிடும்.
இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
2.நல்லதை நுகரும் சக்தி அவர்களுக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
முதலில் அவர் செய்யும் தீமையைக் கண்ணின் கருவிழி பதிவாக்கி உயிரிலே பட்டு நுகரும் போது தான் அதை அறிகின்றோம். ஆனால்
1.அதற்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்து விட்டால் அது அடங்குகின்றது
2.நமக்குள் தீமையை வளர்க்கும் தன்மையைக் குறைக்கின்றது.
இவையெல்லாம் ஆலயத்தின் பண்புகளாக ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டப்பட்ட நிலைகள்.
அகண்ட உலகில் உருவாகும் உணர்வினைச் சூரியன் நுகர்கின்றது… பிரபஞ்சமாக உருவக்கி வாழ்க்கையைத் தொடங்குகிறது… உயிரணுக்களை உருவாக்குகின்றது.
உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாக்குகின்றது உயிர். தீமைகளை மாற்றி விட்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி மனிதனுக்குத் தான் உண்டு.
மிருக நிலையில் இருந்து வளர்ச்சியாகி மனிதன் ஆன நிலையில் ஆதிமூலம் என்றும் விநாயகர் என்றும் உயிரால் உருவாக்கப்பட்ட நிலையை விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டுகின்றது. ஆக மனிதனாக உருவானபின் அவனே முழு முதல் கடவுள்.
அதே சமயத்தில் இந்த மனித உடல் பெற்ற நிலையில்
1.உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக உருவாக்கவில்லை என்றால்
2.அடுத்து நாம் தேய்பிறை தான்… வளர்ச்சி குன்றுகிறது (மனிதனல்லாத உருவாகப் பிறக்க வேண்டி வரும்).
மனிதனைக் காட்டிலும் மற்ற உயிரினங்கள் எப்படி எல்லாம் வேதனைப்படுகிறது என்று பார்க்கின்றோம் அல்லவா. நாம் இன்று மனிதனாக இருக்கலாம். சந்தர்ப்பத்தால் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து விட்டால் விஷம் கொண்ட ஜந்துக்களாக உயிர் மாற்றிவிடும்.
காரணம் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் வளர்ந்து விட்டால் உடலை உருவாக்கிய அணுக்களை அது உணவாக உட்கொள்ளும் டிபி போன்ற எத்தனையோ கொடிய நோய்களாக வந்து கடுமையான விளைவுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது.
அப்போது உணர்வுகள் குறைந்து விட்டால் உடலும் சுருங்கிவிடும். உடலில் வேதனை அதிகரிக்கும் பொழுது எவ்வளவு வலுக் கொண்டவர்களாக இருந்தாலும் சுருங்கி விடுகின்றது. இதெல்லாம் இயற்கையினுடைய சில நியதிகள்.
1.ஆனால் அருள் ஒளியின் உணர்வை நாம் கூட்டக் கூட்ட
2.“என்றும் ஒளியின் சுடராகப் பரவுகின்றது… இருளை மாய்க்கின்றது…”
இருளை மாய்த்து ஒளியின் உணர்வின் சக்தியைப் பெற வேண்டும் அதற்குத்தான் இந்தப் பயிற்சியை உங்களுக்கு திரும்பத் திரும்ப கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
ஆகவே நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான். பேரின்பப் பெரு வாழ்வு என்றும் பெருவீடு பெரு நிலை என்றும் அது வளர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும்.

ஆங்காரத்தை ஓங்காரமாக்கினால் “உலகோதயம் நம் காலடியில்…!”
மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.
1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.
இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.
மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.
சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்…?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்… என்று
2.சித்தன் காட்டிய வழியில் உன்னை உணர்ந்து பாரப்பா…!
காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்…!”
மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்…! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல…!
அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.
அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்… சுந்தரம்… என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.
அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்… சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக… ஜோதியின் சக்தியே பிரகாசமாக… பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக… “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்…!”
சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போகநாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது… மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால் தான்…!
முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா…? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!
விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.
வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா…! நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?
உயிரின் மூலமாகிய “சிவ சக்தி…!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்… சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.
(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி…!”)
அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு… போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய…” வழி பிறக்கும்.
இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டிச் சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி “மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி” வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்.
கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.
கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி. கோபத் தன்மை இருந்தால் மும்மலங்களும் தீய வினைகளுக்கு அடிகோலும்.
ஆணவம்.. மோகம்… உலக மயக்கம் என்னும் மாயை…! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது…! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.
முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்… மோக குணத்தை வென்றிட்டார்… உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்… என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப்பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்…!”
மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்…! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.
ஆகவே ஆணவ மலத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி…!”
அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.”மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது…?” என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.
மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது…? என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாக சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்…!” என்ற பொருளை உணரலாம்.

அபிஷேகம்
உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… அதனால் ஏற்படும் காந்தம் லட்சுமி… நாம் சுவாசிப்பதை இழுத்துத் தனக்குள் உருவாக்கும் நிலை வரும் பொழுது “பிரம்மமாகின்றது…”
சுவாசித்த உணர்வு எதுவோ அதனின் ஞானப்படி மணமாக நுகர்ந்து “அணுவாக உருவாக்கப்படும் பொழுது” அதன் செயலாக நம்மை இயக்குகின்றது.
1.வேதங்கள் இதைத்தான் கூறுகின்றது
2.சைவ சித்தாந்தமும் இதைத்தான் கூறுகின்றது.
நாம் நுகரும் சத்து சைவம். அந்த உணர்வின் சக்தியை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும் உணர்வின் தன்மை மறைமுகமாக நமக்குள் இயக்குகின்றது.
நுகர்ந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்… அது அணுவாகி நம் உடலாகின்றது… அது (திடமாகும் போது) துவைதம்.
இதை எல்லாம் ஆலயத்தின் பண்புகளாகக் காட்டினார்கள் ஞானிகள். ஆலயங்களில் பக்தி கொண்டு நல்ல உணர்வுகளை நாம் பெற வேண்டும்.
தீப ஆராதனை காட்டும் போது அங்கே பொருள் தெரிகின்றது. அதைப்போல பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நுகர்ந்து அதை நமக்குள் அணுவாக மாற்ற வேண்டும்.
1.தீபத்தின் ஒளி எப்படி மற்ற இருளை விலக்குகின்றதோ…
2.மறைந்த பொருளை அதனால் எப்படிக் காண முடிகின்றதோ
3.நமது நினைவாற்றல் தீமையின் உணர்வுகளை உள் புகுந்து அதை நீக்கிடும் அறிவின் ஒளியாகப் பெற வேண்டும்
4.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்படி வைத்தார்கள் ஆலயங்களில்.
அதே சமயத்தில் தீபத்தால் அங்கிருக்கும் (தெய்வ) உருவங்களைக் காட்டப்படும் பொழுது துவைதம். சிலையாக வடித்து வைத்தாலும் அந்தத் தெய்வ குணத்தின் தன்மை காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது.
அந்தக் காவியப்படி…
1.தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்.
5.ஆலயம் வரும் குடும்பம் முழுவதும் தெய்வ நிலை பெற வேண்டும்
6.அவர் உடல் முழுவதும் இந்த தெய்வ நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இது பக்தி…!
அதே சமயத்தில் அபிஷேகம் செய்கிறோம் என்றால் அந்தக் கல் சிலைக்கு அல்ல…! அங்கே அபிஷேகம் செய்யும்போது அதை உற்றுப் பார்த்து அந்த உணர்வை நாம் சுவாசித்தோம் என்றால் உயிரிலே பட்டு இந்த உணர்வுகள் உடல் முழுவதும் அபிஷேகம் ஆகிறது. நல்ல குணங்களுக்கு அது அமுதாகக் கிடைக்கிறது.
உதாரணமாக… பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம்… அவர் படும் வேதனைகளைச் சுவாசிக்கப்படும் பொழுது நஞ்சு கலந்ததாக நம் உடலுக்குள் பரவி விடுகின்றது.
குளவி ஒரு புழுவைக் கொட்டி விட்டால் புழுவின் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் விஷத்தன்மைகள் பாய்ந்த பின் அதைத் தாங்காதபடி புழு குளவியையே நினைத்துத் துடிக்கின்றது. குளவியின் விஷத்தின் தன்மை ஊடுருவி… புழு – குளவியாக மாறுகின்றது.
அதே போன்றுதான்
1.வேதனைப்பட்ட ஒரு மனிதன் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை அபிஷேகமாகி
2.விஷத்தன்மை உடலுக்குள் பரவி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷமாக மாறுகின்றது
3.விஷம் என்ற அந்த வேதனையை நுகரச் செய்கின்றது… அதன் வளர்ச்சி பெறுகின்றது
4.வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வேதனையை உருவாக்கும் அணுக்களாக மாறுகின்றது
5.பின் நோயாகி மீண்டும் வேதனையைத் தான் நாம் அனுபவிக்க வேண்டி வருகின்றது.
ஆகவே வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் அது நம் உயிரிலே பட்டு… அந்த உணர்வு உடல் முழுவதும் விஷ அணுக்களாகப் பரவுகிறது… அது துடிக்கின்றது பதறுகின்றது மயக்கம் அடைகின்றது.
ஆகவே அபிஷேகிக்க வேண்டியது எது…?
1.வேதனையை அல்ல.
2.அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
3.இந்த உணர்வை உடலுக்குள் பரப்புதல் வேண்டும்… அபிஷேகித்தல் வேண்டும்.

தன்னைத் தான் உணர வேண்டியது மிகவும் முக்கியமானது
சொல்லாக எழுத்து வடிவில் எத்தனையோ சூட்சமங்களை “ஈஸ்வரபட்டனாகிய யான்” இங்கே வெளிப்படுத்தி வரும் நிலையில் நீங்கள் இதைக் கேட்டுப் படித்து அதைச் செயல்படுத்துவது என்பது மேன்மை தான்,
ஆனாலும் சொல்லப்பட்ட சூட்சமங்களைத் தன்னுடைய சிந்தனைத் திறனால் தன்னில் அறிந்துணர்ந்து தெளிதலே அதிமேன்மையாகும்.
1.”வாயு ஸ்தம்பம்…!” என்றிட்ட
2.ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.
பைராகிகளின் தொடர்பால் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை அறிய முற்பட்டார். பல கோடித் தாவரங்களின் சத்துக்களைப் பற்றியும் அதனின் இயல்புகளையும் அறிந்து கொண்டார்.
அது எல்லாவற்றையும் அறிந்த பின் அனுபோக முறை (தனக்குள் அனுபவபூர்வமாக உணர்ந்து) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,
மூலிகைகளின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளையும் பதப்படுத்திப் பக்குவமாக இணைத்து திரியைப் போட்டு தீபமாக ஏற்றப்படும் பொழுது அந்தத் தீபத்திலிருந்து புகை வெளி வருகின்றது. (இன்று இராக்கெட்டில் வெளி வரும் அடர்த்தியான புகை போல)
காற்றின் அடர்வைக் காட்டிலும் மெலிதான அந்தப் புகை மேல் நோக்கிக் கிளம்பும் சூட்சமத்தை உணர்ந்து உலோகக் கூண்டுகளில் உள்ளே நிரப்புகின்றார்கள்.
நிரப்பிய அந்தக் கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்யும் செயலாக அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தார்கள் “அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும்…”
இன்று பூமியில் உள்ள கனி வளங்களை எடுத்து அதை எரி பொருளாக எரித்து இராகெட் மூலம் செயற்கைக் கோள்களை அனுப்புவது போல்
1.ஞானிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் அடிப்படையில் இயற்கை முறையில் செய்வித்தார்கள்.
2.அதாவது பூமித் தாயின் இயற்கைச் சக்தியை “இன்றைய விஞ்ஞானம் நச்சாக மாற்றிக் கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்…”
3.தன்னுடைய அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல்படுத்தினார்கள்.
அவர்கள் வெளிப்படுத்திய சூட்சமங்களையே இன்றைய விஞ்ஞானிகள் நுகர்ந்து தங்களுடைய கண்டுபிடிப்புகளாக உருவாக்குகின்றார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு மூலமே அன்றைய சித்தர்களின் மெய் ஞானம் தான்.
மெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைக்கும் செயலாக
1.சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து
2.சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து
3.அதனுள் அதுவாகத் தான் ஒன்றி “தான் வேறல்ல… ஈசன் வேறல்ல…!” என்ற மனப்பக்குவம் கொள்வதே
4.அகத்தின் பொருளை… அந்தப் பரம் பொருளை அறியும் மார்க்கம் ஆகும்.
இதைச் சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது…!
1.அறிந்ததை உனர்ந்து கொண்டு
2.தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் “பிரம்ம சாயுஜ்யம்…!” பெறும்
3.ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு ஒவ்வொருவரும் வலுக் கூட்ட வேண்டும்.
(சாயுஜ்யம் என்றால் உயிருக்குள் (ஈசனுக்குள்) புகுந்து அவனை ஆகர்ஷிப்பது)
மிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனும் உண்டு.
1.ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதனோ
2.பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற மிகுந்த திறன் உடையவன்.
இயற்கை ஞானத்தை மெய் ஞானமாக வளர்க்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை மூலச் சக்தியை அறிந்து கொள்ளும் செயலுக்கு ஒவ்வொரு மனிதனும் முற்பட வேண்டும்.
அந்த நிலையை அடைவதற்கு மகரிஷிகள் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை உடல் என்ற இந்தப் பிண்டத்தில் பக்குவமாக ஒவ்வொரு நாளும் விளைய வைக்க வேண்டும்.
எப்படி…?
1.உலகோதய ஆசை என்ற வலைக்குள் சிக்காமல்
2.அகத்தின் (தனக்குள்) எண்ணச் செயலில் தூய்மையும் சொல்லிலே அன்பும் கனிவும் கொண்டு
3.பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியத்தைப் பெற்றிடும் பாக்கியமாகத் தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
மூல சக்தி… அது ஆட்டுவிக்கும் மூவுலகம்…!” என்ற செயலை உணரும் பக்குவம்… தன்னைத்தான் உணரும் செயலில் தான் (அது யாராக இருந்தாலும் சரி) அறிந்து கொள்ள முடியும்.

நீல வண்ண குணத் தன்மை
போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.
உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”
நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தித் தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.
வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.
வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் “முருகா…” என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!
உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.
உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”
விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.
ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?
1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.
அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.
நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.
அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.
ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.
3.மூல சக்தி செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் உணர்ந்து அறிதலே சிறப்பு.
4.அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்ட சில நிகழ்வுகள்
பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் கதிரியக்கச் சக்திகளை ஒலிப்பேழைகளிலே விஞ்ஞானிகள் கவர்கின்றார்கள். அதே அலைவரிசையில் அனுப்பி 27 நட்சத்திரங்களின் நிலைகளை
1.இராணுவ ரகசியமாகவும் அந்த நாட்டினுடைய ரகசியமாகவும் வைத்துக் கொண்டுள்ளார்கள் விஞ்ஞான அறிவால்.
2.இதையெல்லாம் பத்திரிக்கை வாயிலாக நீங்கள் காண்பது மிகவும் கடினம்.
ஏற்கனவே இத்தகைய கதிரியக்கச் சக்திகளை நட்சத்திரத்திலிருந்து கவர்ந்து கொண்டுள்ளார்கள் என்று பல முறை சொல்லியும்… அதை ஏற்றுக் கொள்வார்கள் இல்லை.
ரஷ்யாவில் மனிதனின் உணர்வுக்குள் இயந்திரத்தினைப் பதிவு செய்து அந்த உணர்வின் ஓட்டத்தால் மனிதனின் கண்ணின் நிலைகள் கொண்டு விண்ணிலே பறந்து செல்லும் ராக்கெட்டினை அன்று வீழ்த்தினார்கள்.
ஆரம்பத்தில் அமெரிக்கா ராக்கெட்டுகளை விண்ணிலே ஏவும் போது அது மேலே சென்று கீழே இறங்கி வரும் நிலைகளில்
1.உடலில் பதிந்து கொண்ட உணர்வின் துணைகொண்டு மனித உணர்வால் பாய்ச்சப்பட்டு
2.அந்த ராக்கெட்டைச் செயலிழக்கச் செய்தார்கள்…. இவ்வாறு தான் வீழ்ச்சி அடைந்தது
முதலிலே வெற்றிகரமாக ஏவினார்கள்… அதைக் கொண்டாடவும் செய்தார்கள் அதற்கு அடுத்து இரண்டாவது ஏவப்படும் பொழுது அதை வீழ்ச்சி அடையச் செய்தார்கள் அதற்கடுத்து செலுத்தப்பட்டதும் வீழ்ந்தது… வெற்றி பெற முடியவில்லை.
முதலில் வெற்றி பெற்ற இயந்திரம் பழுதடைந்த பின் தான் சிந்திக்கத் அமெரிக்கா தொடங்கினான். அந்த நுண்ணிய அலைகளை… கதிரியக்க சக்தியால் கண்டறிந்த பின் ரஷ்யாவில் அணு உலைகள் வைத்திருக்கும் இடங்களை லேசர் கதிரியக்கங்களைப் பாய்ச்சி… அந்த அணு உலைகளை இவர்கள் தகர்த்தார்கள்.
அது வெடித்தபின் அதிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கங்கள் பூமிக்குள் பரவி… அதிக நிலநடுக்கங்கள் உருவாகி அந்த நகரமே குலுங்கி கட்டிடங்களும் சிதைவுண்டது… அந்த நாடே மிகவும் அல்லல்பட்டது.
இதைப் போன்று ஒன்றல்ல… இரண்டாவது அணு உலை அங்கே சிதறப்பட்ட பின்பு தான் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஏனென்றால்…
1.“நட்சத்திரப் போர்…” உருவாகி அணு உலைகள் வெடிக்குமேயானால்
2.அந்த கதிரியக்கத் துகள்களால் மொத்த நாடே அழிந்துவிடும் என்ற நிலையில்
3.இவர்களுக்குள் கம்யூனிசமா சோசியலிசமா போர் முறைகள் ஓய்ந்து சமாதான முறைகளுக்கு வந்தார்கள்.
இப்படிப்பட்ட யுத்தங்கள் தன் நாட்டைக் காக்க மதத்தின் அடிப்படையில் இயக்கப்பட்டது.
அதே சமயத்தில் முகமதியர்களும் போர் செய்து உலகம் முழுவதும் மதப்போராகி ஒவ்வொரு நாட்டையும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மக்களை தன் இனத்தில் சேர்த்துக் கொண்டால் கடவுள் உனக்கு எல்லாம் தருவார் என்று உலகம் முழுவதும் பரப்பி இந்த நிலையை உருவாக்கினார்கள்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் “எங்கள் கடவுள் உங்களுக்கு இன்னது செய்வார்…” என்று அவர்களும் இப்படிப் பறைசாற்றினார்கள். யூத மதத்தைச் சேர்ந்தவர்களும் மந்திரத்தின் நிலைகள் கொண்டு “கடவுள் உங்களுக்கு இதைச் செய்வார்…” என்று அவர்களும் செயல்படுத்தினார்கள்.
யூத மதத்திலிருந்து வந்ததுதான் முகமது மதமும் கிறிஸ்தவ மதமும் இப்படிப் பிரிக்கப்பட்டு உலகம் முழுவதும் மதப் போராக மாறி இந்தியாவுக்குள்ளும் பரவியது.
முகமதியர்கள் முதலில் இங்கே ஆட்சி செய்ய வந்தார்கள் அது உருவானாலும் அதற்கடுத்து வந்த கிறிஸ்தவ மதம் ரோமானிய மதம் என்று உலகம் முழுவதும் அப்படிப் பரவும் நிலை வந்தது. இஸ்ரேல் நாடும் ரோமானியர்களுக்கு அடிமைப்பட்டுத் தான் இருந்தது.
அரசர்களால் உலகம் முழுவதும் இப்படி ஏற்பட்ட நிலைகள் தான்… மதத்திற்குள் புகுந்த கடவுளும்… எல்லாமே.
அரசர்கள் மதத்தை உருவாக்கி கடவுள் என்று பெயரில் சட்ட நீதிகளையும் ஒழுக்க நெறிகளையும்
1.அந்த நாட்டு அரசனுக்கு ஏற்றவாறு இதைப் பதிவு செய்து அவர்கள் உடல்களிலே பதிவான பின்
2.யார் யாரெல்லாம் இதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கினார்களோ
3.ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.
அதாவது… “ஓ” என்று பிரணவமாக்கி அவர்கள் கூறிய உணர்வின் சத்தை “ம்” என்று உடலாக்கி… இந்த உடலிலிருந்து மீண்டும் நினைவைக் கூட்டும் போது அது இயக்கி… அந்த மதத்தின் அடிப்படையில் அவனைக் காத்திடும் உணர்வு வருகிறது.
அதையே கடவுளாக மதித்துக் கொண்ட பின்…
1.மற்றவர்கள் சொல்வதை எதிர்நிலை கொண்டு மற்ற மதங்களைச் சாடுவதும் தாக்குவதும் அழிப்பதும் தான்
2.அன்றைய அரசர்களால் உருவாக்கப்பட்டது… உலகம் முழுவதும் பரவி வந்தது.
இன்றைய படித்த விஞ்ஞானிகளாக இருந்தாலும் சாஸ்திரங்கள் தெரிந்த சாஸ்திரவாதிகளாக இருந்தாலும் அனைவருக்கும் இது தெரியும் ஆனால் இதனுடைய உண்மைகளை வெளிப்படுத்த முடியவில்லை.
விஞ்ஞான அறிவில் கற்று வளர்ச்சி அடைந்து இருந்தாலும்… மதத்தைச் சார்ந்த நிலையில்
1.தன் மதமே பெரிது என்றும் எங்களுடைய சாஸ்திரங்களே பெரிது என்றும்
2.மதத்தின் அடிப்படையில் தான் இன்று உலகம் முழுவதும் பரவி… அதுவே ஓங்கி வளர்ந்து கொண்டுள்ளது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.