
துருவ நட்சத்திரத்தின் இனமாக நாம் மாற வேண்டும்
ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உருவாக்கி ஞானிகள் அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகிறோம்.
கூர்ந்து கவனித்துப் பதிவானால் அடுத்து அதை வளர்த்துக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் பொழுது உங்கள் நினைவைக் கூட்டினால் நிச்சயம் அதைப் பெறுகின்றீர்கள்.
திட்டியவனை எண்ணியவுடன் என்ன செய்கிறது…? இருக்கட்டும்… அவனைப் பார்த்துக் கொள்கிறேன்…! என்று நினைத்தால் அவனும் கெடுகின்றான் நாமும் கெடுகின்றோம்… பகைமை உணர்வு தான் வளர்கின்றது.
இதைப் போன்ற உணர்வுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
உங்கள் உணர்வின் குணங்களுக்கெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருளையும் ஞானிகள் பெற்ற நிலைகளையும் கலந்து சொல்லாக யாம் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொழுது
1.உங்கள் செவி அதைக் கவர்கின்றது
2.உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது
3.சுவாசித்த பின் உயிரில் படுகின்றது.
4.உயிரின் இயக்கம்… கண் அதைக் கவர்ந்து இந்த உணர்ச்சிகளை உடலுக்குள் சேர்க்கின்றது
5.கருவிழி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்கிறது… அந்த உணர்ச்சிகளை இரத்தங்களிலே அது பரப்புகின்றது.
6.மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் அணுவின் தன்மை கருத்தன்மை அடைகின்றது.
7.இதை வளர்த்துக் கொண்டே வந்தால் பிரம்மமாகின்றது
8.பிரம்மானது கருவாகி உருவாகும்போது துருவ நட்சத்திரத்தின் இனமாக (அணுவாக) உங்கள் இரத்தத்தில் பெருக்கிக் கொள்ள உதவும்
மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் என்ன செய்கின்றார்கள்…? 1500 ஆண்டு காலம் மனிதனை வாழ வைக்கலாம் கண்டுபிடித்துள்ளார்கள். ஒவ்வொரு மருந்தினையும் உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்து மாற்றிக் கொண்டே வந்தால் 1500 வருடம் மனிதனை வாழ வைக்கலாம் என்று செய்கிறார்கள்.
1.1500 ஆண்டுகள் வாழ்ந்தால் மனிதனுடைய நிலைகள் என்ன ஆகின்றது…?
2.உறவினர்களோ சொந்த பந்தங்களோ யாருமே அறிந்து (அடையாளம்) கொள்ள முடியாதபடி இந்த ஊரே பிடிக்காது போய்விடும்.
காரணம் 50 கோடி மக்கள் தொகை இருந்தது இன்றைக்கு 700-800 கோடியாக மாறிவிட்டது 100 வருடத்தில் இதே மாதிரி மக்கள் தொகை கூடக் கூட உணவுக்கு எங்கே செல்வது…?
மனிதன் வளர மனிதனை அடித்து உணவாக உட்கொள்ள வேண்டியதுதான். இன்று அது தான் நடந்து கொண்டுள்ளது.
வளர்ச்சி அடைந்த நாடுகளாக இருந்தாலும் சரி வளர்ச்சியே இல்லாத நீக்ரோ நாடுகளாக இருந்தாலும் சரி… கையில் பணம் இல்லை… உணவுக்கு இல்லை என்கிற பொழுது மனிதனை அழித்து அந்த மாமிசத்தை உட்கொள்ளலாம் என்று “விஞ்ஞான உலகத்திலே இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது…!”
அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.புலஸ்தியர் வம்சத்தில் வந்த அகஸ்தியன் அருளைப் பெறுவோம் இருளை அகற்றுவோம்
2.கல்கி என்ற முழுமை அடைவோம்… பிறவியில்லா நிலை அடைவோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.