நல்லதாகிப் போகும்… நலமாகும் போ…!

நல்லதாகிப் போகும்… நலமாகும் போ…!

 

தீமைகளை வென்றது துருவ நட்சத்திரம் அதனை நீங்கள் கவரும் வழிக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்கள் உடலுக்குள் கலவை ஆக்கிக் கொண்டு வரும் பொழுது தீமையை வென்றிடும் சக்திகள் உங்களுக்குள்ளும் விளையும். ஒளியாக மாற்றிடும் திறனும் பெறுவீர்கள்.

அகஸ்தியன் தாய் கருவிலேயே விஷத்தை வென்றிடும் சக்திகளைப் பெற்றவன். அவன் பிறந்த பின் அவன் பார்வையிலே மற்றவர்கள் நோய்கள் நீங்கியது.

அவனுடைய வளர்ச்சியில் விஷத்தை வடிகட்டும் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்ற பின் தன் உடலில் வந்த விஷத்தின் தன்மைகளை… நாகம் எப்படிப் பல விஷங்களைச் சேர்த்து வைரமாக மாற்றுகின்றதோ அதைப் போன்று ஒளியின் தன்மையாக மாற்றும் தன்மை பெற்றவன்… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளான்.

பாம்பு பல விஷத்தின் தன்மைகளைக் கவர்ந்து கொண்டு உயிரணுவினை ஜீவ அணுவாக மாற்றும்.
1.அந்த விஷம் உறையும் போது வைரமாகி இயற்கையிலே நாகரத்தினமாக மாறுகிறது.
2,அதற்கு ஜீவன் இல்லை… ஆனால் “இருளில் ஒளி…!” என்ற நிலை தான் அதற்கு உண்டு.

இப்பொழுது நாம் சில வகையான பெயின்ட்டுகளைத் (FLOURESCENT PAINT) தயார் செய்கின்றோம்.
1.வெளிச்சம் பட்ட பின் அதனுடைய எதிர் ஒளிகளைக் நமக்குக் கொடுக்கின்றது.
2.பகலிலே சூரியனுடைய ஒளி பட்டால் அது சாதாரண பெயின்டாகத் தெரிகின்றது.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…! இதே மாதிரித் தான் இந்த இயற்கையின் நியதிகள். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.”புரியாததைச் சாமி சொல்கின்றார்” என்று நினைத்து விடாதீர்கள்.
2.முதலிலே பதிந்த பின்பு… அடுத்து எண்ணினால் புரிகின்றது.

ஆக… புரிய வைப்பது தான் எப்படி…?

ஒன்றும் தெரியாத குழந்தை ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்திற்குச் சென்று எழுத்துக்களைப் பார்த்தால் அந்த எழுத்து என்ன…? என்று சொல்லத் தெரியாது. அ… உ… எ… என்று சப்தத்தை எழுப்புவதற்கு “எழுத்தைச் சொல்லி” ஆசிரியர் சொல்லிக் கொடுக்கின்றார்.

உ என்று சொல்வதை அ என்று சொன்னால் எழுத்திற்கும் அதற்கும் வித்தியாசமாகிவிடும் அல்லவா.

அதே மாதிரி எந்த மொழிகளை எடுத்தாலும்
1.முதலில் ஒலியின் சப்தங்களைக் கூட்டி
2.அடுத்த சப்தங்களைக் கூட்டும் பொழுது சொல்லின் வன்மைகள் எப்படி இயங்குகின்றது…?
3.அதாவது சொல்லால் சொன்ன பின் புரிந்து கொள்ளும் நிலை வருகின்றது என்று
4.இது அன்று தத்துவ ஞானிகள் எழுத்து வடிவினை இப்படிக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இயற்கையின் நியதிகளை அகஸ்தியன் கண்ட உணர்வினைத் திருப்பிப் பார்ப்பதற்கு அன்று எழுத்து வடிவு இல்லை.

1.அவன் காலத்தில் உணர்வின் ஒலியைப் பதிவாக்கி மற்றவர்களை ஈர்க்கச் செய்து
2.இது நலமாகும் போ…! என்று அவர்கள் சொல்லப்படும் போது அவன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பதிவான பின்
3.அது நல்லதாகிப் போகும் என்று அந்த விஷத்தின் தன்மை முறித்த நிலைகளை
4.”அந்தச் சொல்” அவனுக்குள் சென்று நோயை நீக்கும் வல்லமை பெறுகின்றது.

ஏனென்றால்
1.அவன் சொல்லைக் கேட்டுணர்ந்து இருந்தால் தான் அது வருகின்றது…
2.நஞ்சை வெல்லும் உணர்வுகள் அங்கே வருகின்றது.

எழுத்துக்களை உருவாக்கிய பின் மொழியின் உணர்வின் நாதங்களை மற்றவர்கள் எழுப்புகின்றனர். அதன் உணர்வு பதிவான பின் அந்த நாதத்தில் கூறிய உணர்வின் தன்மையை அறிகின்றனர்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply