May 2023 உபதேசம்

ஞானக்கனி

 

நாரதர் சிவனிடம் வருகின்றார்… கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.

முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.

ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தே… அதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

இருந்தாலும்… இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).

விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.

உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்… என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.

ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே “உயிரான அந்தச் சத்து…!”

இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு… இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.

மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது… அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதை “நாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”

ஏனென்றால் அது “விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானது… இனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு… சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான்… அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் “அது கனியாகும்…!”

காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது… இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.

தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி… அந்தப் பாசத்துடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி… அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.

1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள்… கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.

மோதலினால் ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை”

 

ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது. சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்… “அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…
1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீரத்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச்சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வலு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பக்தி கொண்டு சிலையைப் பார்த்து இதுதான் முருகன் என்றோ மற்றதென்றோ நாம் மந்திரத்தைச் சொல்லி அதன் உணர்வைச் ஜெபித்து “அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில்…” நாம் உணர்வினைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

திரும்பத் திரும்ப அப்படிப் பதிவாக்கிவிட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின் கடைசியில் நாம் இறந்துவிடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தத் தெய்வத்தை எதன் ரூபத்தில் காட்டினரோ (காட்டுகின்றார்களோ) அதன் உணர்வின் அலையாக
2.உடலுடன் இருக்கும் பக்தி கொண்ட ஆன்மாக்களுக்கு (நாமே) தெய்வமாகக் “காட்சி கொடுக்கும் நிலை” வரும்.

காரணம்… நம் ஆசையைக் கூட்டி “இன்ன மந்திரத்தைச் சொன்னால் அதனால் உனக்கு இன்ன பலன் கிடைக்கும்…” என்று கூறுகின்றார்கள். நாமும் அதை நம்பி மந்திரங்களை ஜெபிக்கத் தொடங்குகின்றோம்.

எந்தச் சிலையைப் பார்த்து மந்திரங்களைச் சொல்லி இந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்துக் கொண்டோமோ… இந்த உடலை விட்டுச் சென்றபின் எதன் உணர்வின் அலைகள் நமக்குள் பதிவானதோ அது நம் ஆன்மாவில் பதிவாகியிருக்கும்.

உதாரணமாக…
1.பட உருவை கேமராக்களில் எடுத்து அதை அலைகளாக மாற்றி
2.மீண்டும் திரைகளில் காணும் பொழுது அதே உருவத்தைக் காட்டுவார்கள்.
3.நாம் அதைப் பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான் நாம் பக்தி மார்க்கங்களில் எதன் வழி பட்டு எதனின் உணர்வை எந்தெந்த ஆசைகளை எண்ணி அந்த உணர்வின் வழி பெறுகின்றோமோ அது எல்லாம் பதிவாகிவிடும்.

அந்தச் சிலைக்கு என்னென்னெ புஷ்பங்களைப் போடுகின்றோமோ என்னென்ன நிறங்களில் உடைகளை உடுத்துகின்றோமோ அவைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது.

நம்முடைய கண்கள் உற்று நோக்கி அந்த உணர்வைப் பதிவாக்குகின்றது. நுகர்ந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அந்த உடல் முழுவதும் அந்த உணர்வின் அலைகள் படர்கின்றது.

“நாம் ஆசையின் நிமித்தம்… அந்தத் தெய்வத்தை வழிப்பட்டு” அதன் வழிகளில் நாம் பெருகி வந்தாலும் இந்த உடலை விட்டு ஆன்மா செல்லும் பொழுது இன்னனோரு பக்தி கொண்ட ஆன்மா இதே போல செய்தால் இந்த ஆன்மா அங்கே சென்று “அருளாடும்…!”

நீங்கள் பார்க்கலாம். அந்தத் தெய்வம் வந்தது… இந்தத் தெய்வம் வந்தது…! என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் சில மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்..?

1.இன்னென்ன மந்திரம் கொண்டு ஜெபித்தால்
2.நீ “இந்தத் தெய்வத்தைக் கைவல்யப்படுத்திக் கொள்ளலாம்…” என்று மந்திர ஒலிகளை எழுப்புவார்கள்.

அப்படி அவர்கள் ஜெபித்தார்கள் என்றால் நாமே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் வளர்த்துக் கொண்ட நிலைகள் கொண்டு நம் உயிரான்மா அவன் கையில் சிக்கும்.

அவன் கையில் சிக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்கு மாற்றாக மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்வார்கள்.

அற்புதக் காட்சிகளாகக் காட்டுவதும் பல தீய வினைகளைச் செய்வதும் பல பொருள்களை வரவழைப்பதும் காட்சியாகவும் உங்கள் முன்னாடியே காண்பிப்பார்கள்… வெளிப்படுத்துவார்கள்.

உதாரணமாக… ஒரு மனித உடலில் உருவான உணர்வினை ஒரு தாவர இனத்திற்குள் அதைப் பதிவாக்கிவிட்டால் மீண்டும் அதை எண்ணத்தில் செயலாக்கினால்… “ஒரு இலை அப்படியே நகர்ந்து வரும்…”

ஒரு தேங்காயை வைத்து இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிய பின் இந்த உணர்வின் தன்மையை அதில் ஏற்றி அதை எண்ணத்தால் சுழலச் செய்யவேண்டும் என்றால்.., “அந்தத் தேங்காயே சுழலும்”.

இதைப் பார்ப்போர்கள் எல்லோரும் அதனைக் கண்டு வியந்து “அவரிடம் அபூர்வமான சக்தி இருக்கிறது…” என்று செல்லத் தொடங்குவார்கள்.

1.அவன் சொல்லைக் கேட்டால் அந்தத் தெய்வ சக்தி பெறுவோம்
2.அதன் வழியில் செல்வத்தைத் தேடுவோம், சுகத்தைத் தேடுவோம் என்ற உணர்வுகளைத்தான்
3.இன்று “நூற்றுக்குத் தொண்ணூறு மக்கள்.., வாழ்ந்து கொண்டுள்ளார்கள்…”

இதையெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டிய நிலைகள்.

உபதேசக் கருத்துக்களை (வாக்கு) அழுத்தமாகச் சொல்வதன் காரணம் என்ன…?

 

இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய ஞானிகளின் அருள் வித்துக்களைப் பெறச் செய்வதற்குத் தான் உபதேசத்தின் வாயிலாக வாக்குகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

விஞ்ஞான அறிவு கொண்டு வாழ்க்கைக்காக வேண்டி ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டுப் பதிவாக்கி… புத்தக வாயிலாகப் படித்து… பின் அதை எல்லாம் நினைவு கொண்டு பரீட்சை எழுதி அதில் தேர்ச்சி பெறுவது போன்று
1.மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை உங்களுக்குள் கொடுத்து
2.துன்பத்தை நீக்கிடும் மெய் ஒளியின் தன்மையாக மெய் ஞானத்தின் அருளாற்றலைப் பெறச் செய்து
3.உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருள் சூழும் நிலைகளை நீக்கிடும் சக்தி பெற வேண்டும் என்பதற்காக
4.குருநாதர் காட்டிய அருள் வழியிலே வாக்கின் வன்மையாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

ஆகையினால் தான்… “இதை உங்களிடம் அழுத்தமாகச் சொல்வது…!”

“திட்டியவனை” எண்ணியவுடன் எவ்வளவு வேகமாக அந்த உணர்ச்சியின் வேகங்கள் கிளம்புகின்றதோ அதே மாதிரி
1.அந்த அருள் ஞானிகளைப் பற்றி உங்களுக்குள் “அழுத்தமாக” உபதேசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் உந்தும்
2.அப்பொழுது உங்களைச் சார்ந்தவர்களோ மற்றவர்களோ யாராவது சாபங்கள் இட்டிருந்தால்
3.உங்கள் உடலுக்குள் அது இருந்தால் அதை உணரச் செய்யும்… அதே சமயத்தில் எரிச்சலாகிப் பல நிலைகள் ஆகும்.

ஆனால் எரிச்சலாகும் பொழுது…
1.என்னடா சாமி இப்படிச் சொல்கிறார்…! என்று எழுந்து சென்று விட்டால் “யாம் சொல்வது எல்லாம் போய் விட்டது”
2.எப்படியும் இந்த உபதேசத்தைக் கேட்டு எனக்குள் இருக்கும் பாவ நிலைகளும் சாப நிலைகளும் தீர வேண்டும் என்று எண்ணினால் “பாவங்கள் போய்விடும்”
3.இல்லை என்றால் “நல்ல சக்திகளைப் பெறுவது போய்விடும்…”

குருநாதர் காட்டிய வழியிலே எப்படியும் அந்த உயர்ந்த சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… நல்லது நடக்க வேண்டும்… என்பதற்குத்தான் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் தெரிந்து எதுவும் முடிவதில்லை
2.தெரிந்து யாரும் அவ்வாறு செயல்படுத்த முடியாது
3.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாக்கின் வன்மையும் தான் இயக்குகின்றது.

“ஏனென்றால் அது பிரணவம்…!”

“உயர்ந்த எண்ணத்தைத் தனக்குள் சிருஷ்டிக்க வேண்டும்” என்ற உணர்வின் ஏக்கத்தைத் தூண்டச் செய்து அந்த உணர்வுக்குள் பல நிலைகளை உங்களைப் பழக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உங்கள் உடலுக்குள் இவ்வாறு தியானித்து அந்தச் சக்தியை ஏற்றிக் கொள்ளுங்கள்.

திரும்ப அதே உணர்வுடன் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒருவன் நம்மைத் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் மீண்டும் நினைத்து அப்படிப் பேசினான்… பேசினான்… என்று அந்த வேகங்களைக் கூட்டிக் கொள்கின்றோம் அல்லவா…! மீண்டும் மீண்டும் அவனைப் பற்றி பேசுகிறோம் அல்லவா…!

அதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வினைத் திணிக்கச் செய்கின்றேன். இந்த உணர்வுகள் உள்ளே செல்லச் செல்ல துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் அது விலகும்.

அழுக்கு நீரில் நல்ல நீரை ஊற்ற ஊற்ற… அழுக்கு நீர் குறைந்து நல்ல நீர் பெருகி வரும். அது போன்று தான்
1.உங்களுக்குள் இருக்கக்கூடிய சங்கட அலைகள் அது படிப்படியாகக் குறையச் செய்வதற்கு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
3.ஒவ்வொரு நிமிடமும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப அந்த உணர்வுகளை ஏங்கிச் சுவாசியுங்கள். அதை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உயிர் வழி இந்த உணர்வுகளை உள்ளே செலுத்தப்படும் பொழுது உங்கள் துன்பங்கள் நீங்குகிறது.

கலி என்றாலே… பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு

 

நடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..!

இந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.

கல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று
ஒலி…
ஒளி…
நீர்…
தாவரம்…
ஜீவ சக்தி… (உயிரினங்கள்)
ஞான சக்தி (தற்போதைய மனிதன்)
இத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.

அத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பிறகு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.

பூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…
1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த
2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா
3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.

ஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.

“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்
1.இக்கலியையே செயற்கைக் கலியாக்கி
2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே
3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.

ஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஞானிகள் பெற்ற தீமையை வென்று நஞ்சினை ஒளியாக்கிய ஞானவித்துகளை நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் தொடர்ந்து உபதேசித்து வருகின்றோம்.

உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே வெளிப்படுத்துகின்றோம்.
1.கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
2.அவ்வாறு கூர்மையாகப் பதிவு செய்த அருள் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்று
3.பேரின்பப் பெருவாழ்வாக அந்த அருள் சக்தி பெறும் நிலையாக வாழுங்கள்.

கூர்மை என்பது கண்கள் தோன்றிய பின் நல்லவை கெட்டவை என்று நுகரச் செய்கின்றது… அறியச் செய்கின்றது. ஆகவே
1.தீமை என்று உணர்ந்த பின் தீமை புகாது தடுக்கும் நிலையாக
2.இதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று
3.உயிரான ஈசனிடம் வேண்டும் பொழுது அங்கே தடைப்படுத்தி நம்மைக் காக்கின்றது.

நல்ல உணர்வினை உருவாக்கும் நாம் நுகரும் உணர்வுகள் எவையோ அதனை உயிரான ஈசன் அதனை அணுக்கருவாக மாற்றிவிடுகின்றது.

நாம் நுகர்ந்த பிறிதொரு தீமையின் உணர்வுகள் அடுத்து அது அணுத் தன்மை பெறாத நிலைகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

பெண்களுக்கு அதீதமான சக்திகள் உண்டு. குடும்பத்தில் பெண்களை உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று மதித்தல் வேண்டும்.

1.“பெண்கள் என்ற நிலைகளில்…. அவர்களை எவ்வளவு உயர்த்துகின்றோமோ…
2.அவர்கள் அருள் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு எண்ணுகின்றோமோ…
3.அதன் வைழ்யில் அருள் உணர்வு பெறவேண்டும் என்று பெண்கள் அக மகிழ்ந்தால்…
4.அந்தக் கணவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் நல்லது”.

குடும்பத்தில் பெண்களை அழுக வைத்தால் அங்கே இருள் சூழும் நிலை வரும். “யாருக்கும்… நிம்மதி இல்லை…!” என்ற நிலைகள் வரும்.

இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டால் ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும், அவர்கள் உடல் முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி எங்கள் குடும்பத்தில் வளர வேண்டும்.
1.“பெண்கள் மகாலட்சுமியாக இருக்க வேண்டும்” என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
2.அதே போல நாங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று பெண்களும் எண்ணுதல் வேண்டும்.

தன் குடும்பத்தை உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஒவ்வொரு பெண்களும் சிந்தனையுடன் நீங்கள் செயல்படுத்தினால்
1.குடும்பத்தில் வரும் சிக்கல்கள் மறைகின்றது.
2.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் வருகின்றது
3.மனிதன் என்ற முழுமை அடைய முடிகின்றது.

உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைய முடிகின்றது.

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

 

உடனுக்குடன் தீமைகளை நீக்குவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும் ஏனென்றால் முந்தி ஆரம்பத்திலே யாம் (ஞானகுரு) போட்ட வித்து அது…!

உதாரணமாக வயலிலே களைகள் முளைக்கிறது என்று அவைகள் எல்லாவற்றையும் பிடுங்கிச் சுத்தம் செய்கிறோம். ஆனால் மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றது. மற்றதை விளைய விடுவதில்லை.

இது போன்று தான்
1.நம் உடலுக்குள் முந்தி விளைந்ததெல்லாம் இருக்கின்றது.
2.இருந்தாலும் அவைகள் மீண்டும் முளைத்து விடாமல் நாம் கொஞ்சம் தடுத்துக் கொண்டே வர வேண்டும்.
3.அருள் ஞான உணர்வை எடுத்து நல்ல பயிரை நாம் வளர்ப்பதற்கு முற்பட வேண்டும்
4.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அந்தத் துன்பங்களை மறைப்பதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும்..

ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்திக் கொண்டே வாருங்கள்

“என்னத்தை… ஆத்ம சுத்தி செய்து…?” என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கின்றோம். புல்லை நோண்டி அப்புறப்படுத்துவதற்கு அதைக் கொடுத்திருக்கின்றோம்.

கையிலே தான் புடுங்க முடியவில்லை. இந்த ஆத்ம சக்தி என்று ஆயுதத்தை வைத்து அதை எடுத்து விடலாம் அல்லவா. வாக்கால் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

1.நான் (ஞானகுரு) பேசுவது அனைத்துமே வெறும் பேச்சு அல்ல
2.எல்லாவற்றையும் வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன்
3.பதிவு செய்து எப்படியும் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீள வேண்டும்
4.உங்கள் மூச்சு உங்கள் துன்பத்தை நீக்க வேண்டும்
5.உங்கள் பேச்சு மூச்சும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அவ்வாறு செய்கின்றேன்

இதைத்தான் அன்று கந்த புராணத்தில் நாரதன் சொல்வதாக அன்னை தந்தையின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

தாய் உன்னைக் கருவில் வைத்து வளர்த்தது. அந்தத் தாய் தந்தையரின் ஆன்மாக்கள் பிரிந்த பிற்பாடு அதற்கு நல்ல ஆகாரமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நாம் அதன்படி செய்கிறோமா…?

தாய் தந்தையர் இறந்து விட்டார்கள் என்பதற்காக சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கவும் கடலில் கரைக்கவும் எங்கெங்கோ இடத்தைத் தேடிச் செல்கிறோம். இது சாங்கிய சாஸ்திரம்.

தண்ணீரே ஓடவில்லை என்றாலும் ஒரு குழியைத் தோண்டி அதில் தண்ணீரை ஊற்றிக் கரைக்க வேண்டும் என்று எத்தனை வழியில் செயல்படுத்துகின்றார்கள்.

ஏனென்றால் மழை பெய்து நாளைக்கு வெள்ளம் வந்தால் அது கடலில் சேர்த்துவிடும் என்று இப்படி ஒரு நம்பிக்கை. ஆனால்
1.தாய் தந்தையருடைய ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக்கடலிலே
2.உந்தித் தள்ளி இணைக்க வேண்டும் என்று தான் அன்று சொன்னார்கள்
3.அதை யாரும் செய்யத் தயாராக இல்லை.

பணத்தைச் செலவழித்துச் சாங்கியத்தை செய்து உணவு படைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். காரணம் பாவ நிலைகளை நீக்குவதற்கு இப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

அதே சமயத்தில் துணிமணிகளை எடுத்து மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தால் ஒட்டி இருக்கும் பாவங்கள் போய்விடும்… தோஷங்கள் போய்விடும் என்று
1.அப்பா பேரைச் சொல்லித் தானம் செய்வதும்
2.அம்மா பேரைச் சொல்லித் தானம் செய்வதும் என்று இப்படித்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தானம் செய்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
1.நாம் அங்கே ஒன்றி இருத்தல் வேண்டும்.
2.அவ்வாறு செய்தால் தான் அந்த ஒளிகள் நம்முடன் இணையும்
3.இல்லையென்றால் அந்த ஒளிகள் ஒன்றும் செய்யாது.

சமமான சாந்த குண ஈர்ப்பு தான் நம்முடைய வளர்ச்சிக்கு உதவும்

 

உருக்கொண்ட உயிரணு வளர்ச்சி யாவையுமே… அவை அவை எடுத்த சுவை கொண்டு வளர்ச்சி பெற்ற வலுவின் செயல் கொண்டு… செயல் வழி குண நிலை தொடர் கொண்டு வளருகின்ற தொடர் வளர்ப்பில்… சரீர எண்ண குண வாழ்க்கையில்… சுவையும் காம இச்சையும் கொண்ட தொடர் வாழ்க்கையில் மனித எண்ண வழித் தொடர் கொண்ட வாழ்க்கை அமைந்துள்ளது

இச்சரீர ஈர்ப்பில்… சரீர உணர்வில் வளர்த்துக் கொண்ட குண நிலையை… உணர்வின் உந்தலை… எவ்விச்சையையும் “ஆவேச உணர்வு ஈர்ப்பில் செலுத்தாமல்… சமம் கொண்ட சாந்த குண ஈர்ப்பினாலேயே” செலுத்த வேண்டும்.

இவ்வுடலில் காந்த மின் அணு வலுவைக் கூட்டிய ஆத்ம பலத்தை
1.ஆண் பெண் என்ற தாம்பத்ய இணைப்பு ரிஷித் தொடர்பில்
2.இரண்டு ஆத்மாவும் ஒரு நிலை கொண்டு
3.ஓர் ஆத்மாவாக ஈருயிர் ஓர் ஆத்மாவாக வலுக் கொண்ட தொடரில் சென்றால்
4.ரிஷி சக்தி (சிவ சக்தி) கொண்ட வலுக் கூடும்.

அதன் மூலம் வளர்ச்சி கொண்ட ஜீவ வளர்ச்சி வளரத் தக்க வழித் தொடர்பிற்கு… சிவ சக்தி நிலை கொண்ட ஆத்ம ஜெபம் பெற்ற இந்த ஆத்மாக்கள் இரண்டாயிரம் சூரியக் குடும்ப இயக்க ஓட்டத்தில் எம்மண்டலத்தையும் தம் மண்டலமாக்கிட முடியும்.

மண்டல வளர்ப்பிற்கு… மனித அலை உயர் தெய்வ குண எண்ண பகுத்தறியும் ஆற்றல் கொண்ட வித்துத் தொடரை சிவ சக்தியின் செயல் கொண்டு தான் வளர்க்க முடியும்.

வளர்க்க வேண்டிய வளர் சக்தி கொண்ட “தெய்வ நிலை” மனித எண்ணத்திற்கு மட்டும் தான் உண்டு.

ஆகவே…
1.உண்டு கழித்து உறங்கும் இயந்திர பூமியின் பிடிப்பில் சுழலும் மனித ஆத்மாக்களே…
2.உங்களுக்குகந்த அறிவு ஞானத்தை இவ்வுடல் ஒன்று பெற
3.இம்மனிதச் செயல் செயல் கொள்ள
4.இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் தொடர்புடன் பல காலமாக வளர்ச்சி கொண்டு
5.வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி பெற்ற இம்மனித உயர் ஞான எண்ண உணர்வு கொண்ட இச்சரீரத்தை
6.மீண்டும் இச்சரீரக் கோளத்தின் சத்தையே எடுத்து எடுத்து
7.தன் ஆத்மாவின் வித்தை – தன்னைத் தான் உணராத நிலையில் விரயப்படுத்தி உழலும் இத்தொடரை விடுத்து விட்டு
8.உயரும் வழித் தொடரின் வழியறிந்தே நீங்கள் செல்லுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று கணவன் மனைவியாக வாழ்பவர்களில் எந்த அளவிற்கு ஒன்றுபட்டு வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

குடும்பங்களில் எடுத்துக் கொண்டால்
1.சில நேரங்களில் கணவரை எதிர்த்துப் பேசும் நிலைகளும்
2.சில நேரங்களில் மனைவியை அடிமையாக்கும் உணர்வுகளும் தான் “பெரும் பகுதி” இன்று வருகின்றது.

கணவன் மனைவியை அடிமையாக்கும் இந்த உணர்வின் தன்மை வந்துவிட்டால் “வெகுண்டெழுந்து… சீறிப்பாயும் உணர்வுகள்… பெண்கள் மத்தியில் உருவாக்கிவிடுகின்றது…!”

இதைப் போன்ற “சீறி பாயும் உணர்வுகள்” பெரும்பகுதி வீடுகளிலும் சரி சொந்தபந்தங்களிலும் சரி இதைப் போன்ற எத்தனையோ இடங்களிலும் சரி கடுமையான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் உள்ளது.

இத்தகைய விஷமான உணர்வலைகள் சூரியனின் காந்தப்புலனறிவினால் கவரப்பட்டு காற்றிலே அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது.
1.அத்தகைய கருக்கள் அதிகமாகிவிட்டால் அந்தக் குடும்பத்திலேயே விஷத் தன்மைகள் பரவி
2.சிந்தித்துச் செயல்படும் செயல்களையே இழக்கச் செய்துவிடுகின்றது.
3.ஒன்றி வாழும் நிலையை இழக்கச் செய்கின்றது… மன அமைதியைக் குலைக்கின்றது.

நம்மை அறியாமல் குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொண்டாலும் இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது அங்கிருப்போர் அனைவருக்கும் வெறுப்பின் உணர்வுகளும் வெறியான உணர்வுகளுமே உடலுக்குள் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

அதே சமயத்தில் வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் பொழுது
1.“சண்டையிட்ட உணர்வுகளும்… வெறுப்புடன் பேசிய உணர்வுகளும்”
2.வீட்டில் உள்ள தரைகளிலும் சுவர்களிலும் மற்ற இடங்களிலும் “பதிவாகிவிடுகின்றது…”

இவ்வாறு ஒருவருக்கொருவர் வெறுப்பான செயல்களைச் செய்யப்படும் பொழுது கடைசியில் வேதனை அதிகமாகி விடுகின்றது.

வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது “கடும் வாத நோய்களை” உருவாக்கி விடுகின்றது. மனிதனின் உறுப்புக்களைச் சீர் குலையச் செய்து சிந்திக்கும் தன்மை அனைத்தும் இழந்து “ஏங்கித் தவிக்கும் நிலையே” உருவாகிவிடுகின்றது.

கை கால் அங்கங்கள் செயல்படவில்லை என்றால்…
1.“யார் கொடுப்பார்..,? எவர் கொடுப்பார்..,? யார் நமக்கு உதவி செய்வார்கள்..,? என்ற உணர்வினை ஏங்கிப் பெறும் நிலையே வருகின்றது.
2.ஏங்கிப் பெறும் நிலைகள் வந்தாலும்.., “ஏங்கும் பொழுது கிடைக்கவில்லை என்றால்..”
3.மீண்டும் எல்லை கடந்த வேதனையாக வருகின்றது.
4.இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமா வேண்டாமா…? கணவன் மனைவியாக வாழ்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கணவன் மனைவி நாங்கள் இருவருமே வசிஷ்டரும் அருந்ததியும் போன்று ஒரு மனமும் ஒரு மனமாகி நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்ற உணர்வை இழுத்துச் சுவாசியுங்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொண்டால்
1.“அது எப்படி.., ஏகாந்த நிலைகள் கொண்டு… எதிர்ப்பே இல்லாது…” வளர்ந்து கொண்டுள்ளதோ
2.இதைப் போல கணவன் மனைவி இருவரும் “அந்த வளர்ச்சி” பெற முடியும்.

அந்தத் துருவ மகரிஷி எப்படிக் கணவனும் மனைவியும் இணைந்து வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தனரோ அதே போல நாமும் இந்த வாழ்க்கையில் நிச்சயம் வாழ முடியும்.

இந்த உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் நாம் சிக்காது “ஏகாந்த நிலைகள் கொண்டு..,” பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

உங்களால் நிச்சயம் முடியும், உங்களை நம்புங்கள். மகிழ்ந்து மகிழ்ந்து வாழுங்கள்… பேரானந்த நிலையை அடையுங்கள்.

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

 

மனித வாழ்க்கை என்று இருந்தாலும் இந்த உடலை விட்டு நமது ஆன்மா ஒரு நாள் பிரியத் தான் செய்யும். அது சமயம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி தியானம் இருக்கும் போதெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து உந்தி விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகள் இந்த உயிரான்மாவில் பட்டபின்
2.இன்னொரு உடல் பெறும் உணர்வின் சத்தை அது பஸ்பமாக்கிவிட்டு உணர்வின் ஒளி சுடராக அந்த உயிரான்மா வளரும்

எத்தனையோ மனிதர்களை விஞ்ஞான அறிவு கொண்டு இராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அந்த இராக்கெட் விபத்தாகி வெடித்து விட்டால் இறந்த ஆன்மா அங்கே விண்ணிலே தான் மிதந்து கொண்டிருக்கும்.

அப்படி மிதந்தாலும் அங்கிருக்கக்கூடிய மற்ற கதிரியக்க சக்திகள் அதிலே படப்படும் பொழுது
1.அந்த உயிராத்மா அது உயர்ந்த நிலை பெற முடியாது ஒளிச் சரீரமும் பெற முடியாது
2.வானில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மிதந்தாலும் அது செயலற்றதாகத் தான் மாறும்.

ஆனால் இங்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் இங்கிருந்து சப்தரிஷி மண்டலத்திற்குக் கூட்டமைப்பாக விண் செலுத்தும்படி செய்கின்றோம்.

அப்போது அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வலைகள் இந்த உயிர் ஆத்மாவிலே கலக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒளியாகச் செயல்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தாலும் விபத்தாகி இறந்தால் நச்சுத்தன்மை கொண்ட உயிரான்மாவாகத் தான் விளைகின்றது.

விண்ணிலே சுழன்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திலே மற்ற கோளின் ஈர்ப்புக்குள் வந்தால்
1.உடல் பெறும் தன்மையற்று விஷத்தின் ஆற்றல் கொண்ட குறுகிய உடல்களால
2.புழு போன்ற உயிரினங்களாகத் தான் உடல் பெற முடியும்.
3.அல்லது அப்படியே மனித உணர்வு கொண்ட உடல் பெற்றாலும் கூட
4.சிந்தனை இழந்து வேதனைப்பட்டு விஷத்தின் தன்மையைத் தான் வளர்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லப்படும் பொழுது சுலப நிலைகளில் விண் செல்ல முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.விண் செல்லும் பாதையை “எந்த மகரிஷி நமக்குக் காட்டினாரோ”
2.அவரின் உணர்வின் ஆற்றலை இங்கே தொடர்புகளாக உங்களுக்கு ஏற்படுத்தி
3.அதைத் தொடர் வரிசையாக உங்களுக்குள் பதிவு செய்து
4.அந்த ஆற்றலை ஓங்கி வளர்க்கும்படி செய்து இந்த உணர்வின் புலனறிவை
5.சப்தரிஷி மண்டலத்துடன் (உங்களை) இணைக்கச் செய்யப்படுகின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்டோமானால் உடலை விட்டுப் பிரியும் போது அனைவரும் சேர்ந்து ஏக காலத்தில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “உந்தி அங்கே செலுத்தப்படும் பொழுது…” சுலப நிலைகள் அங்கே இணையச் செய்ய முடியும்… நாமும் அங்கே இணைய முடியும்.

இதைப் போல் உந்தச் செய்வதற்குத் தான் அன்று ஒவ்வொரு ஞானியும் சாதாரண மனிதனைத் தேடி வந்தார்கள்.

அந்த ஞானிகள் பூமியிலே வாழும் காலத்தில்… எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க சக்திகளை அவர்கள் பெற்றிருந்தாலும்
1.மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய துன்பத்தைப் போக்க செய்து
2.அந்தப் பாச உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து… நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து
3.தன் மீது அந்த எண்ணத்தை வளர்க்கும்படி செய்து
4.தன் சிஷ்யர்கள் சிலரிடம் சொல்லி… இன்ன உணர்வு கொண்டு என்னை விண்ணிலே உந்திச் செலுத்து என்று
5.உந்திச் செலுத்தும்படி செய்து அவ்வாறு விண் சென்றவர்களே பலர்…!

அதனால் தான் ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.அவர்களை விண் செலுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.சப்தரிஷி மண்டல நினைவுகள் உங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

அதைத் தான் பயிற்சியாக யாம் (ஞானகுரு- கொடுக்கின்றோம்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரிந்த… எடையற்ற அந்த உயிரான்மாவை இயக்க வல்ல உணர்வின் ஆற்றலை
2.மனித உடலுக்குள் இருந்த நினைவின் அலைகளைக் கூட்டி… அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு
3.சப்தரிஷி மண்டலத்திலே அங்கே செலுத்த முடியும்.

அத்தகைய விண் செல்லும் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்தினால்… நாமும் சரி… நமக்குப் பின் செல்பவர்களுக்கும் அதே நிலை இயக்கப்படுகின்றது

ஆனால் இதை அறியாதவர்கள் அல்லது இந்த முறைப்படி தியானம் செய்யாதவர்களை அங்கே விண் செலுத்த வேண்டும் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவர்கள் தாய் தந்தையருடன் ஒன்று சேர்த்து
2.அந்த உணர்வுடன் இயக்கச் செய்து அவருடைய துணை கொண்டு அங்கே அனுப்ப முடியும்.
3.இந்த வழி தெரியாதவர்களை அப்படித் தான் விண் செலுத்த முடியும்.

உயிரான்மா எப்படி இயங்குகிறது… இயக்குகிறது… வலுக் கூ(ட்)டுகின்றது…?

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுக்கும் பலதரப்பட்ட குணங்களில் புளிப்பு இனிப்பு துவர்ப்பு கரிப்பு கசப்பு எரிப்பு போன்ற ஆறு வகைச் சுவையை உடல் சமைக்கும் ஏழாம் சுவை அமில வளர்ப்பைக் கொண்டு… உடல் அணுக்கள் வளர்ச்சியில் வளரும் வலுவை… உடலை இயக்கும் ஆத்மாவானது அச்சுவையின் அலையை எடுத்து இயங்குகிறது… இயக்குகிறது… வலுப் பெறுகின்றது.

அலை என்பது… என்ன…?

1.உடல் சமைக்கும் ஆவி உணர்வை ஆத்மா இழுத்து ஆத்மாவின் உடல் இயக்க உயிர் செயல் கொள்ள
2.நாம் எடுத்த உணர்வு நிலைக்கொப்ப… உடல் என்ற சட்டியில் அது சமைக்கப்பட்டு… உடல் வெளிப்படுத்தும் வெக்கை நிலைக்கொப்ப
3.எச்சுவையின் வார்ப்பகத் தன்மையில் இந்த உடலின் இயக்கம் செயல் கொள்கின்றதோ
4.அதற்குகந்த அலை காற்றுடன் கலந்துள்ள அமிலம் காந்த ஜீவத் துடிப்பு கொண்ட ஆத்ம ஈர்ப்பிற்கு வலுக்கூட்டி
5.எச்சுவையின் தன்மையை உடலின் இயக்கம் அதிகப்படுத்தி (முன்னணியில் உள்ள குணம்) வளர்ச்சி கொள்கின்றதோ
6.அத்தொடருக்குகந்த வலுத் தொடரைத் தான்
7.உடல் வளர்க்கும் அணு வளர்ச்சியின் ஈர்ப்பிற்கு இந்தக் காற்றலையின் தொடரிலிருந்தும் பெறுகின்றோம்.

உதாரணமாக மிளகாய்ச் செடியின் வித்து நீர் சக்தியைக் கொண்டு உயிர் சக்தி ஜீவ வளர்ப்பு சக்தியை எப்படிப் பெற்றதோ… அத் தொடரின் வலுவைக் கூட்டி அச்செடி வளர்ந்து… அது எடுத்த கார உணர்வின் வளர்ப்பு நிலை கூடி… வித்து நிலையில் காரமுடன் கூடிய “மிளகாயின் பலன்” கிடைக்கின்றது.

இதைப் போன்று…
1.எந்தச் சுவையில் எந்த உயிரணு ஜீவன் கொண்டதோ…
2.அதற்குகந்த வளர்ப்புத் தொடரில் பல மாற்றத்திற்குப் பிறகு
3.வலுக்கூடிய வளர்ச்சி உன்னத உயிர் ஆத்ம நிலையில்
4.எண்ண உணர்வுடன் இயங்கக்கூடிய இவ்வுடல் கோளத்தின் சமைப்பில்
5.குணங்களைக் கொண்ட உணர்வு… உணர்வுக்குகந்த சுவை… சுவைக்குகந்த செயலாக… மனித வாழ்க்கை நிலை ஓடும் வழித் தொடரை…
6.நம் எண்ணத்தால் குண நிலையை நல்வழிப்படுத்தி
7.சாந்தமுடன் கூடிய வீரமான ஞானத்தைக் கொண்டு
8.இதுகாறும் இந்த உடல் இயக்கத்தில் நம்மை அறியாமல் நாம் வளர்த்துக் கொண்ட
9.குணமும் சுவையும் செயலும் வழித் தொடர் கொள்ளும் வழி நிலையைச் சமமான குணம் கொண்டு
10.நமக்கு மேல் வலுவாகத் தெய்வ நிலை பெற்ற… தெய்வ சக்தி பெற்ற “மகரிஷிகளின் தொடர்புடன்”
11.மேல் நோக்கிய காந்த மின் அலைத் தொடர்பினை நம் சுவாசத்தால் எடுக்க
12.நாம் இந்த உடலின் இயக்கத்தை உட்படுத்தினோம் என்றால்
13.மனித சக்தியின் உயர்ந்த உன்னத சக்தியை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமேஸ்வரத்தில் இராமன் செல்லப்படும் பொழுது சிவலிங்கத்தைப் பூஜிக்க லிங்கத்தை எடுத்து வருவதற்கு ஆஞ்சநேயனை அனுப்பினான்.

1.ஆனால் அவன் வரக் காலதாமதமாகி விட்டது
2.ஆகவே “இராமன் மணலைக் குவித்தான்…”
3.அதைச் சிவலிங்கமாக வைத்து வணங்கினான் என்று காட்டுகின்றார்கள்.
4.இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் உட்பொருள் என்ன?

இராமன் என்றால் நம் எண்ணங்கள். எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமேஸ்வரம். நம் மனதைக் குவிக்கும் இடம்தான் “இராமேஸ்வரம்…”

கடைசியில் “நேரமாகிவிட்டது…” என்று இராமன் என்ன செய்கின்றான்…? மணலைக் குவித்து பூஜித்தான்.

எல்லோரும் அன்போடு இருக்க வேண்டும் என்று (நம் எண்ணங்களை) நம் மனதைக் குவித்துப் பழக வேண்டும். மனதைக் குவிக்கவில்லை என்றால் என்னவாகும்…?

இரண்டும் சேர்த்து சண்டைப் போட்டுக் கொள்ளும்.

1.“சிறிது காலமே.., இந்த மனித உடலில் வாழ்கின்றோம்..!”
2.அதற்குள் இந்த மனித உடலில் மனதைக் குவித்தல் வேண்டும்.
3.அதாவது எல்லாக் குடும்பங்களும் நல்லது பெற வேண்டும் என்று மனதில் எண்ண வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கின்றார்கள்…?

விஷ்ணு பக்தர்கள் சிவனை வணங்க மறுக்கின்றனர். சிவனை வணங்குவோர் இராமனை வணங்கினால் அது பாபம் என்றும் இராமனை வணங்குவோர் சிவனை வணங்கினால் அது தோஷம் என்றும் இப்படியெல்லாம் நம்மைப் பிரித்து விட்டனர்.

மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உண்மைகளின் இயக்கத்தை நாம் அறிய முடியாது அரசர்கள் ஆண்ட நிலையில் காலத்தால் தடைப்படுத்தப்பட்டுள்ளது.

ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை நாம் அறிய முடியாதவண்ணம் காலத்தால் அழிந்தே போய்விட்டது.

இன்று அதை யாம் வெளிப்படுத்தினால்…
1.இது என்ன…? “புதிதாக இருக்கின்றது…!”
2.இவர் கடவுளே இல்லை.., என்று சொல்கிறாரே…! என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமேஸ்வரத்தில் “மனிதனுடைய பொக்கிஷம்” அத்தனையும் உண்டு.

இராமாயணத்தில் “இராமேஸ்வரம்…” எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின்…
1.“பூஜைக்கு நேரமாகிவிட்டது…” என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.
2.“நேரமாகிவிட்டது…” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர்.
3.ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது…” என்பது தான் அதனுடைய பொருள்.

நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து) சிவ பூஜை செய்தார். சிவலிங்கத்தை பூஜித்தார்… சிவலிங்கமாக மாற்றினார்… என்று காண்பித்தார்கள்.

எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

1.நாம் எண்ணத்தால் பல தீமைகளை அகற்றி உணர்வின் எண்ணங்களைக் குவித்தால்
2.அத்தகைய எண்ணங்களால் உருவானது தான் “உயிரின் ஒளிகள்..,” என்பதை
3.“இராமலிங்கம்..,” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

எதனின் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றதோ அதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை அணுவாகி அந்த உணர்ச்சியின் செயலாக நாம் செயலாக்கி அந்த “உணர்ச்சிக்கொப்ப உடலின் ரூபங்கள் ஆனது…” என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

 

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.

மனிதன்… வழி தெரியாமல் சென்றதன் விளைவுகளைக் காணும் நேரம் வந்து விட்டது

 

மனித ஞானம் பெற்றுள்ள இன்றைய வளர் நிலைத் தொடர் நிலையையும்… மனிதன் தன் உயர்வின் வழி தெரியாமல் வாழ்க்கை ஓட்ட உருவ பிம்ப சரீர இச்சைக்கொப்ப மனிதனின் ஞானம் செயல் வழி சென்றதன் விளைவுகளையும்… காணும் நிலை வந்து விட்டது.

விஞ்ஞான விபரீதத்தால் அணுக் கதிர் இயக்க வீச்சின் விஷத் தன்மை அதிக அளவில் பரவியதால் இக்கலிக்குப் பிறகு பூமியின் பிரளய மாற்றமும் அதற்குப் பின் அடுத்த இன வளர்ச்சி நிலை… மனித வித்தின் ஞானம் செயல்படா வண்ணம்… செயலின் தொடரே மாறப் போகின்றது.

எந்த வளர்ச்சியில் மனிதக் கரு பல ஆயிரம் வருடங்களாக வளர்ச்சியுற்று வளர்ந்ததுவோ… அவ்வளர்ச்சியின் தொடர் வலுத் தன்மை வளரக் கூடிய வளர்ச்சி நிலை… பூமியின் விஷ அலையினால் மாற்றமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே மாறப் போகும் இத்தருணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உயர்வின் ஞானத்திற்கு உணர்வின் எண்ணத்தை உயிரின் ஆத்மாவிற்கு வலுக்கூட்டிக் கொள்வதே நல்லது.

வரப் போகும் விஷ அலையின் மாற்றத்திலிருந்து…
1.மனிதன் பெற்ற உயர்ந்த சக்தி நிலையான
2.பகுத்தறியும் ஞான வளர்ச்சி… செயல் திறமை… சொல்லாற்றலின் செயல் நிலை… யாவற்றையும்
3.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு சமமான சாந்த குணத்தால்
4.உடலில் உருவாகும் உயிரணு யாவற்றையும் உயர் ஞான அணுக்களாக
5.உயிர் ஆத்மாவின் வலுவுடன் வலுச் சேர்க்கும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செலுத்த வேண்டும்.

அதற்கு… மெய் ஞானிகளின் அலைத் தொடர்பைப் பெற்று இச்சரீர இயக்க ஓட்டத்தில் எண்ணத்தால் எடுக்கக்கூடிய வலுவைக் கொண்டு உயிர் ஆத்மாவின் வலுச் சக்தியைக் கூட்ட வேண்டும்.

காந்த மின் அணுக்கள் தன் இனமுடன் இனத்தை எப்படிச் சேர்த்துக் கொள்கின்றதோ அதைப் போன்று இச்சரீர இயக்கத்தில் ஓடும் அணுத் தன்மை யாவையும் மெய் ஞானிகளின் உயர் காந்த மின் அலையை ஜெபதபத்தினால் எடுத்துப் பழக வேண்டும்.

1.அதனின் வளர்ச்சி கொண்டு இயக்கப்படும் இணைப்பைக் கொண்டு
2.உயிராத்மாவின் வலுக்கூடக் கூட
3.இந்த உடல் என்ற கோளத்தின் உருண்டோடும் அணுவின் வளர்ச்சியில் இருந்து
4.ஆத்ம உயிரின் கன நிலை கூடிக் கொண்டே செயல் கொள்கின்றது.

சூரியன் தான் வளர்க்கும் கோளத்திலிருந்து… சூரியனின் தொடர்பு கொண்டு ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வலுக் கூடி வளர்ந்து கொண்டே உள்ளதோ அதைப் போன்று இச் சரீரத்தின் ஆத்ம உயிரின் வலுவும் வளர்கின்றது.

ஓர் உயிராத்மா பிறப்பெடுத்து வளர்ச்சி நிலை குறிப்பிட்ட வயது வரம்புடன் ஆத்ம வித்து வலுக் கொண்ட தன்மை கொண்டு உருவக வளர்ச்சி நின்று விடுகின்றது.

இந்தப் பூமி வளர்க்கும் ஜீவ சரீர இயக்கமும் தாவர வளர்ச்சியும் அவை எடுத்த வித்தின் உயிர் ஆத்ம வலுவின் நிலைக்கொப்ப வளர்ச்சி நிலை வாழும் காலம் மாறி மாறிச் செல்கிறது.

மாறி மாறி என்பது…
1.விதை ஒன்று போட்டு
2.அவ்விதையில் மரம் வளர்ந்து பலன் தந்து
3.அதன் சத்து நிலை உள்ள காலங்கள் வரை சததெடுத்து வளர்ந்து
4.பலன் தந்து கடைசியில் பட்டுவிடுகின்றது.

அதே சமயத்தில் இந்தப் பூமியின் உள் பகுதியில் உள்ள நீர்… மண் வளம்… கனி வளம்… இவற்றின் வளர்ப்பு நிலை கூடிக் கொண்டே உள்ளது. ஆக… உருவகத்தில் கனத்துக் கொண்டே “பூமி வளர்க்கும் உயிர் வளர்ப்பு யாவையும்” குறிப்பிட்ட சத்து நிலைக்கொப்ப தாவரமும் ஜீவராசிகளும் வாழ்ந்து மடிகின்றன.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற தொடர்புடனேயே மீண்டும் மீண்டும் சுழல விடாமல் உடல் கோளத்தின் உயிராத்மாவை என்றும் அழியா நிலைக்கு உயர்த்த வேண்டும்.

சூரியனுக்கும் பூமிக்கும் மற்றெந்தக் கோளத்திற்கும் இல்லா உயர் செயலை… நம் ஆத்ம உயிர் வலுவைக் கொண்டு
1.இன்றெப்படி சுவை எண்ணம் உணர்வு செயல் ஞானம் எல்லா இன்ப நிலைகளில் உடலில் பெறுகின்றோமோ
2.அதைக் காட்டிலும் இந்த உடலில் உள்ள எதிரிகளின் எதிர்ப்பு நிலையற்று மகிழ்ந்து வாழலாம்.

எதிரி என்பது இந்த உடல் அவயங்களில் ஏற்படக்கூடிய சோர்வு… பிணி… பசி… தூக்கம்… இத்தகைய எதிரிகளின் நிலையுமன்றி ஆத்ம வலுவின் வலுவைக் கூட்டி வலுவாக்கிக் கொண்டோமானால் வளர் தொடர் வளர்ச்சியின் வலுவாக நம் இயக்கச் செயல் “பிறவா நித்திய நிலையாகச் செயல் கொள்ளும்…!”

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எல்லாப் பொருத்தமும் பார்த்துத் தான் இன்று திருமணம் செய்கிறார்கள். அப்படிச் செய்தாலும் குடும்பத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் பகைமை உணர்வு வளர்ந்து விட்டால் கடைசியில் அதனால் பல நோய்களும் வந்துவிடுகின்றது.

ஒருவருக்கொருவர் வெறுத்துப் பேசும் பொழுது
1.வெறுப்பான உணர்வு வீட்டிற்குள் பரவப்படும் பொழுது
2.“பாவி மகள் என் வீட்டிற்குள் வந்தாள்… எல்லோருக்கும் நோய் வந்துவிட்டது” என்பார்கள்.

இவர்கள் பண்படுத்தும் உணர்வைத் தவறியதனால் வெறுப்பின் உணர்வைத் தனக்குள் வளர்த்ததால் அந்த உணர்வால் இவர்களுக்குள் நோயாகி விடுகின்றது.

ஆனால்…
1.“மருமகள் வந்தாள்…! அதனால்தான் என் குடும்பம் சிதைந்து விட்டது…” என்று
2.இவர்கள் செய்யும் தவறை விடுத்து… வந்த மருமகள் மேல் பழியைப் போட்டு
3.“மீண்டும்.. குடும்பத்தில் சிக்கல்களையே ஏற்படுத்துகின்றனர்…”

ஜாதகம் ஜோதிடம் பார்த்துத்தான் திருமணத்தைச் செய்து வருகின்றனர். ஆனால், மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தே விடுகின்றது.

அப்பொழுது துயர்படும் உணர்வுகள் வரும்பொழுது விஷத் தன்மையான உணர்வுகள் ஆகிவிடுகின்றது.
1.அப்பொழுது இவர்கள் பார்த்த ஜோதிடம் எங்கே போய்விட்டது..?
2.இவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்னவாகிவிட்டது?

முதலில் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்காக தெய்வத்தின் மேல் பூவை வைத்துக் கேட்பார்கள். இந்தக் கலர் பூ வந்தால்… “எனக்கு நல்லது” என்றும் எண்ணுவார்கள்.

சிலை மீது அந்தப் பூவை வைத்தபின் இவர்கள் எண்ணம் எப்படியோ அப்படித்தான் பூ விழுகும்.

கலக்கமான எண்ணத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுடன் கண்ணின் பார்வை அங்கே பட்டால் உணர்வுகளுக்குள் உணர்வுகள் மோதப்படும் பொழுது அன்று அதன் வழி தான் நடக்கும்.

உதாரணமாக… அன்று வேதனையை அதிகமாக எடுத்திருந்தால் வேதனை வரும்.

1.“எப்படியும்.., இன்று நல்லதாக வேண்டும்…” என்று எண்ணியிருந்தால் அதற்குத்தக்க நல்ல பூ வரும்.
2.நல்ல பூ விழுந்த பின்… “எல்லாத் தெய்வமும் ஒத்து வந்துவிட்டது
3.ஜாதகமும் ஒன்றி வந்துவிட்டது… திருமணத்தை நடத்தலாம் என்று வருகின்றனர்.

அத்தகைய நிலைகளில் பார்த்தாலும் திருமணமாகி வந்தபின் இவர்கள் எண்ணிய நிலைகள் கொண்டு அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் வரப்படும் பொழுது வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது. ஒன்றுபட்டு வாழும் நிலைகள் மாறிவிடுகின்றது. பகைமை ஆகிவிடுகின்றது.
1.அப்பொழுது அந்த ஜாதகம் காக்கின்றதா..,?
2.பூ வைத்துக் கேட்ட அந்தத் தெய்வம் காக்கின்றதா..,?

ஆக “உங்களுடைய எண்ணங்களை (எந்தக் குணமோ) உயர்த்தி வரப்படும் பொழுது… அதுவே தெய்வமாகின்றது”.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் மனிதனுக்கு ஜாதகமே இல்லை.

தாவர இனங்களுக்கு உண்டு…! “கிரேதா…” என்ற நிலையில் செடி கொடி இவைகளுக்கும் சூரியன் மற்ற கோள்களுக்கும் ஜாதகம் உண்டு.

தனக்குள் கிரகித்து உணர்வின் தன்மை சேர்த்துக் கொள்ளும் நிலைகளுக்கு அது உண்டு. அது எந்த உணர்வு கொண்டு உடல் பெற்று அதன் உணர்வின் மணத்தால் நுகர்ந்து செல்லும் மற்ற உயிரினங்களுக்கும் ஜாதகம் உண்டு.

ஆனால்
1.மனிதனோ தீமைகளை அகற்றிவிட்டு
2.உணர்வினை ஒளியாக மாற்றும் இந்தச் சக்தி பெற்றவனுக்கு ஜாதகம் என்பது இல்லை.

இன்று இருப்பவர்கள் “நியுமராலஜி” என்று இந்தப் பெயரை இப்படி மாற்றி வைக்க வேண்டும் அப்படி வைக்க வேண்டும் என்றும் அதனால் நன்மை கிடைக்கும் என்று “தாய் தந்தை வைத்த நல்ல பெயரை மாற்றிக் கொள்கின்றார்கள்…!”

அதே சமயத்தில் வாஸ்து சாஸ்திரம் என்ற நிலைகளில் வீட்டில் வாசலையோ சுவரையோ இப்படி மாற்றினால் சரியாக வரும் என்று அதற்காக “கட்டிய வீட்டை இடித்து மாற்றவும் செய்கின்றார்கள்…!”

பணத்தைச் செலவழித்து மாற்றியமைத்துச் சிறிது காலம் நன்றாக இருந்தாலும் அடுத்த கணம் சொந்தத்தில் பிரியப்பட்டவர் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி இறந்து விட்டால் என்ன செய்வார்கள்?

“அடப் பாவி மகனே…” எப்படி இருந்தான்…? இப்படிப் போய்விட்டானே…” என்ற வேதனை உணர்வை அதிகமாகத் தனக்குள் எடுத்துக் கொள்வார்கள்.

எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்துவிட்டு அதன்படி கட்டினார்களோ அந்த வீட்டிற்குள் இத்தனை வேதனை உணர்வுகள் பரவப்படும் பொழுது தன் உடலுக்குள்ளும் பெருகி விடுகின்றது.
1.அடுத்து இதே உணர்வின் வேதனை தொழிலிலும் பரவிவிட்டால்
2.வாஸ்து சாஸ்திரம் வந்து காக்குமா..? காக்க முடியாது…!

ஆகவே அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்த்துத் தீமையான உணர்வுகளை நமக்குள் வராதபடி தடுத்தால் முடியும். ஆனால் “இந்த நிலைக்குச் செல்வார் யாரும் இல்லை…!”

வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்துச் சில கட்டிடங்கள் கட்டி அவருக்குக் கூலி இவருக்குக் கூலி என்று எல்லோருக்கும் கொடுத்துச் செலவழித்த பின் “இதிலே எதாவது நன்மை வருமா…?” என்று இப்படி நாம் சுற்றிக் கொண்டுள்ளோம்.
1.இந்த உடலின் இச்சைக்குப் பொருளைத் தேடி மீண்டும் பொருளைச் சேமிக்கலாம் என்ற நிலைக்குத்தான் செல்கின்றனர்
2.ஜாதகம் ஜோதிடம் பார்த்து அதன் வழியில் நன்மை கிடைக்கும் என்ற “அந்த ஆசையிலேயே தான்” செல்கின்றனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கும். அதன் வழியில் தீமைகளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை உருவாக்க முடியும்.

1.இந்த உடலில் வாழும் பொழுது பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது
2,அந்தத் துருவ நட்சத்திரத்தின் பற்றை நாம் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிட்டால்
4.இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி நாம் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.

அகஸ்தியன் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆன பின் அவனைப் பின்பற்றிச் சென்ற ஞானிகள் எத்தனையோ பேர் உண்டு.

அவர்கள் அனைவருமே இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர்.

நம்முடைய எல்லை அது தான்…!

துன்பம் வரும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்

 

உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் துன்பத்தைத் துடைக்கத் தான் அருள் ஞானிகளுடைய சக்திகளை வாக்காகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

திட்டியவர்களையோ குறை சொல்பவர்களையோ நீங்கள் எண்ணும் பொழுது துன்பங்கள் எப்படி உண்டாகின்றதோ… அந்தத் துன்பம் உண்டாகும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.உங்கள் துன்பங்கள் உங்களை விட்டு அகலும்.

ஏனென்றால் வான்மீகியோ வியாசரோ “எல்லாம் தெரிந்து” அவர்கள் அந்த நிலை பெறவில்லை.
1.சமைத்து வைத்தது… “சப்தரிஷி மண்டலத்தில் இருக்கக்கூடிய மெய் ஞானிகள்”
2.அந்த உணர்வின் மணம் அங்கிருந்து வெளிப்பட்டது.
3.வெளிப்பட்டதை அந்த சந்தர்ப்பம் யாரெல்லாம் எடுக்கின்றார்களோ அவர்கள் ஞானியாகின்றார்கள்.

அது போன்று தான் இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கும்…! எண்ணி எடுக்கப்படும் பொழுது நீங்களும் அந்த ஞானியாக முடியும் அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய ஆசை…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவேன்
2.என் பேச்சால் மூச்சா’ல் உலகம் நன்மை பெறச் செய்வேன்
3.இந்த உடலை விட்டுச் சென்றால் விண்ணின் நிலைகளை நான் அடைவேன்.
4.எந்த மகரிஷி வழி காட்டினானோ அவன் வழியிலே செல்வேன்
5.மெய் வழியிலே நான் செல்வேன்… மெய் ஒளி பெறுவேன்…!

உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றியது… பூமிக்குள் விஜயம் செய்து உடல் பெற்றது… மனித உடல் பெற்ற நிலையில்
1.உணர்வுகள் அனைத்தையும் “உயிரைப் போன்ற ஒளியாக மாற்றி விண் செல்வேன்…” என்ற
2.இந்த உணர்வுகளை உங்களுக்குள் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

எது நிறைவேற வேண்டும் என்று நான் (ஞானகுரு) ஆசைப்பட்டேனோ அதற்காக வேண்டி குருநாதர் காட்டிய வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உங்கள் உடலை ஆலயம் என்று மதிக்கின்றேன்… உங்களுக்குள் இருக்கக்கூடிய குணங்களைத் தெய்வங்களாக மதிக்கின்றேன்…!

நீங்களும் இதே போன்று உயிரைக் கடவுளாக வைத்து உடலை ஆலயமாக மதித்துப் பிறரிடமிருந்து தீய உணர்வுகள் வந்தாலும்… அவர்கள் தீமையாகப் பேசினாலும்… உங்கள் உடலுக்குள் சேராதபடி மாற்றிக் கொள்ளுங்கள்.

பிறருடைய உணர்வுகளை நாம் சேர்க்க வேண்டியது இல்லை. உயிரான ஈசனிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிப் பிற உணர்வுகள் உள்ளே புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி “அவரின் துணை கொண்டு”
2.மெய் அறிவின் ஆற்றலைப் பெறும் தகுதியின் வித்தை செம்மையானபடி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துன்பப்படும் நேரங்களில் எல்லாம் “மகரிஷிகளின் அருளைப் பெறுவேன்…” என்று எண்ணுங்கள்… தீமைகள் புகாது தடுக்க இது உதவும்…!

மனித வாழ்க்கையில் எவ்வளவு கௌரவமாக வாழ்ந்தாலும் உடலை விட்டு உயிர் சென்று விட்டால்… அடுத்து இந்த உடலைத் தூக்கி எறியத்தான் செய்கின்றார்கள்.

எவ்வளவு கோடிப் பணம் சம்பாதித்தாலும் அவர்களுக்கும் இந்த நிலைதான்…! அவர் இறந்த பின் செல்வத்தை மற்றவர்கள் எப்படிப் பங்கிட்டு கொள்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படிச் சாடிக் கொள்கிறார்கள்…? எப்படி வெறுக்கும் நிலை வருகிறது…? என்பதையும் பார்க்கலாம்.

ஆகவே அது போன்ற நிலையில் சிக்காதபடி இந்த மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்களைப் பார்க்கும் போது அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அவர்களுக்குள் வர வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று உங்கள் மூதாதையரின் உயிரான்மாக்கள் விண் சென்று… விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இருளை நீக்கி ஒளியின் தன்மையாக “நீங்கள் விண் செல்லும் நிலைக்கே இதை உபதேசிப்பது…”

நீங்கள் வளர்ச்சியாவது போன்று உங்கள் குடும்பத்தில் குழந்தைகளையும் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகளை வளர்த்திடும் சக்தியாக பிஞ்சு உள்ளங்களிலும் வேரூன்றி வளரட்டும்.

சூரியனின் ஈர்ப்பில் கோள்கள் விளைவது போன்று
1.குழந்தைகள் உங்களுடன் இணைந்து செயல்பட்டுப் பிரகாசிக்கும் சொல் தொடராக அவர்கள் வெளிப்படுத்தி
2.வீட்டுக்குள் நீங்கள் தெய்வமாகவும் வீட்டிற்குள் சுடர் விளக்காகவும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு இருளை நீக்கிடும் நல்ல உணர்வாகப் படர வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன் (ஞானகுரு).

நிகழ்ந்து கொண்டிருக்கும் உலக மாற்றத்திற்குப் பின் மனித உரு என்ன ஆகும்…?

 

இன்றைய மனிதக் கரு ஜீவ சக்திகளும்… இப்பூமியில் பிறப்பெடுத்து உடலற்ற ஆத்ம உயிர்களும்…
1.இன்றுள்ள விஷ நிலையான எண்ண வளர்ச்சித் தொடர்பலையினால்
2.இன்றைய அறிவு… ஞான செயல்… திறமை… உருவ அழகு… இவற்றின் நிலை யாவையுமே
3.இனி நிகழப் போகும் பிரளய காலத்திற்குப் பிறகு மாறப் போகின்றன.

மனித உணர்வின் எண்ணமே விஞ்ஞான அணுக் கதிரியக்கச் செயற்கைப் பூகம்ப நிலையாலும்.. லேசர் இயக்கச் செயலுக்காக சூரிய அலையில் பூமிக்கு எவ்வலையை பூமி சமைத்து வடிகட்டிப் பூமி வளர்ந்து வாழுகின்றதோ சூரிய சக்தியிலிருந்து அதைப் பிரித்ததாலும் பல பல மாற்றங்கள் ஆகிவிட்டது.

(அந்த அமில வண்ணம் (ULTRA VIOLET) பிரகாசமான VIOLETt கலர் காட்சியாகத் தெரிகிறது)

இப்படி அந்த அணுக் கதிர்களை விஞ்ஞானச் செயலுக்காகச் சில நாடுகள் பூமி எதைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்காமல் பூமியின் சுழற்சியில் வடிகட்டி (FILTER செய்து) தன் வளர்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளதோ அதையே மனித விஞ்ஞானம் தனித்துப் பிரித்து விட்டது… அதனால் விஷம் கொண்ட காற்றாக இன்று மாறி விட்டது.

ஆத்ம ஜீவ வாழ்க்கை சக்தியின் உன்னத ஞான வாழ்க்கையை உணர்ந்து வாழாமல்… செயற்கை வாழ்க்கை விஞ்ஞானச் செயலுக்காக… மனிதனின் தன் நிலை மறந்த “போதை” உணர்வு வலு நிலைக்கு உணவு நிலையாக… விஞ்ஞான அணுக் கதிர்களை உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர்.

நிகரில்லா நிலை பெற்ற.. நித்தியமான நிலையில் வளரும் மனித ஞான வளர்ச்சியையே குரோத வஞ்சனை வெறி தேச மத உணர்வு நிலையில் ஒருவரை ஒருவர் அழிக்க வந்துவிட்டனர்.

தன்னுடைய பேராசையாலும் குரோதத்தாலும் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு இவ் அணு சக்தியை சூரியனிலிருந்து பிரித்தெடுத்து
1.அழிவுச் சக்திக்காகப் பயன்படுத்துகின்றோம்…! என்ற உண்மையை மறைத்து
2.திரை போட்டு ஆக்கச் சக்தியென்ற வழியைச் சொல்லி
3.மனித விஞ்ஞானம் இன்று வளர்ந்துள்ளது.

அதனால் இன்றைய மனித உணர்வின் எண்ணச் சிதறல்களும் தன்னைத் தான் உணராத நிலையும் ஏற்பட்டு விட்டது.

இத்தகைய தருணத்தில் தனக்குள் உள்ள இறை நிலையை உணர்ந்து… தான் உடல் பெற்று… உணர்வு பெற்று… சுவையும் குணமும் பெற்று… சரீர ஞானச் செயல் கொண்ட மனித வாழ்க்கை உன்னதச் செயலில் இருந்து உயர்வு நிலை கொள்ளும் வழித் தொடரை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊசி முனைக்கு மேல் உருவத்தில் ஆயிரம் மடங்கு சிறிதாயுள்ள உயிராத்மா உருவக சரீர ஜெட ஜீவச் செயல் பெற்றுச் செயல் புரியும் உயிராத்மாவை நல்லுணர்வின் ஞான ஜெபத்தால் வளர்த்திட வேண்டும்.

இச்சரீர அணு அனைத்தையுமே உயர் ஞான உணர்வு எண்ணம் கொண்டு செயல்பட்டு ஜோதி நிலையான ஒளி நிலைக்கு ஆத்ம உயிரின் வலுவைக் கூட்ட வேண்டும்.

தெய்வம் என்பது நம் உயிரே நமக்குத் தெய்வம் தான் என்று உணர வேண்டும். ஆகவே… நமக்குள் உள்ள தெய்வ உயிரைப் பிறிதொரு ஈர்ப்புப் பிடியில் தன் உணர்வற்ற இன்பம் என்ற உணரும் சுவை ஈர்ப்பில் சிக்க விடக் கூடாது.

போதை… காமம்… அதி விரைவு… வெறியான சுவை உணவின் இச்சை… போன்ற இவ் இன்ப உணர்வின் தொடர்பிலெல்லாம் எண்ணத்தின் வலுவைச் செலுத்தாமல்
1.தன்னுள் உள்ள இறை உயிர் ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ள
2.உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையுமே
3.உயர்வு ஞான நற் குண ஜெப நிலையினாலும்
4.சம நிலைகொண்ட சாந்த உணர்வு வலுத் தொடரினாலும் உயர்த்திட வேண்டும்.

ஏனென்றால்… இன்றுள்ள தன்மை பிரளய மாற்றத்திற்குப் பிறகு பூமியின் மாற்றுச் சக்தியால் பூமி வளர்த்த அணு யாவையும் எப்படி நெற் செடியில் அதற்குகந்த ஆகார நிலை கிடைக்கவில்லை என்றால் “பதர் அரிசி மணி” வளர்கின்றதோ அதைப் போன்று மனித ஆத்ம உயிர்கள் ஜீவ உயிர்கள் யாவையுமே பிறப்புப் பெற்றாலும் சரீரம் எண்ணம் செயல் ஒலி ஒளி ஆகிய எவையுமே இன்றுள்ள நிலை பெற முடியாது…!

தனக்குகந்த ஆகார சக்தி கிடைக்கா விட்டால் காய்கறி கனிகளில் கரடு நிலை தட்டிய காய் கனிகள் வளருவதைப் போன்று தான் வரும்.
1.சில பிராணிகள் ஜீவ சக்தி பெற்றிருந்தாலும் “தேவாங்கு” போன்று
2.அமர்ந்தது அமர்ந்த நிலையிலேயே பிறப்பெடுத்து வாழ்ந்து மடிகின்றதோ
3.அதைப் போன்ற பிறப்பு நிலைதான் பிரளய நிலைக்குப் பின் வரும்.

பிறப்பு நிலை இன்றைய நிலை போல் மீண்டும் வளராது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவாசித்தால் என்ன ஆகும்…?

ஆகவே தவறான செயல்களை உற்றுப் பார்த்த அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் சுழலச் செய்து
2.அந்தத் தீய செயலின் உணர்வு உங்களுக்குள் அது வளராது அதனுடைய உணர்வைச் சமப்படுத்துதல் வேண்டும்.

ஆனால் சமப்படுத்திச் சென்றாலும் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது அங்கே தொழில் சம்பந்தமாக மற்றவர்களைச் சந்திக்கும் பொழுதும் இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.எங்கள் செயல் அனைத்தும் நலம் பெற வேண்டும்
2.நாங்கள் உருவாக்கும் உற்பத்தி செய்யும் பொருள்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
3.அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று
4.கண் கொண்டு அந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அடுத்து எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெற வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மலரைப் போன்ற மணங்கள் பெருக வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணி எடுக்கும் உணர்வின் செயலாக்கங்கள் அங்கே கூடினால்
1.தொழில் செய்யும் இடத்தில் உள்ள தொழிலாளியிடமோ அல்லது மேலதிகாரியிடமோ பேசும் பொழுது
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இணைந்து வாழச் செய்யும்.

ஆனால் வேதனையான உணர்வைச் சுவாசித்துவிட்டுச் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…?
1.தொழிலில் ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் தவறான நிலைகளில் அது செயலுக்கு வரலாம்
2.அது தவறான நிலைகளில் இயக்கப்படும் பொழுது பழுதாகி தடையாகவும் ஆகலாம்.

அதனால் நண்பரிடத்தில் அல்லது மேலதிகாரியிடத்தில் பகைமை ஊட்டும் நிலை வரும். ஏனென்றால்
1.நம் உடலுக்குள் வந்த… அந்தத் தீமையான உணர்வுகள் நல்ல நண்பர்களையே பகைமையாக்கிவிடும்.
2.அதனால் தொழிலையும் வெறுக்கும் நிலை வரும்.

இதைப் போன்று நம்மையறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நிமிடத்திலும்
1.வெளியிலே செல்லும் பொழுதும் தொழிலுக்குச் செல்லும் பொழுதும்
2.தொழிலுக்குச் சென்று தொழில் ஆரம்பிக்கும் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்திப் பாருங்கள்.

மன உறுதி கிடைக்கும். நம் சொல் மற்றவர்களை இணைந்து வாழச் செய்யும். உங்களுக்கு உதவியும் தேடி வரும். அன்பு வளரும். பண்பும் வளரும்.

அருள் ஒளி பெற்றால் இருளை அடக்கிடும் ஞானமும் வரும். தெளிந்த மனதுடன் வாழவும் முடியும். ஆகவே, இதை நீங்கள் எண்ணி எடுத்துப் பழகுங்கள்.

இதனால் உங்கள் தொழிலும் விருத்தியாகும்… செல்வமும் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் “உங்களால்… ஒரு மன நிம்மதி கிடைக்கும்…”

வெப்பத்தைக் கூட்டிக் காந்த சக்தியைக் கூட்டினால் “மகரிஷிகள் உணர்வினைக் கவரும் தகுதி பெறலாம்”

 

காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்திகள் இருக்கின்றது. அந்த அருள் ஞான வித்துக்களை நீங்கள் பெறுவதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

உதாரணமாக பலகாரம் சுட வேண்டும்… அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அது கரண்டியை எடுத்துக் காய வைத்துக் கொள்கின்றார்கள் அதற்குப்பின் அதிலே மாவை ஒட்ட வைத்துச் சுடுகின்றார்கள்.

ஆனால் அந்த கரண்டியை காய வைக்காதபடி அதைச் செயல்படுத்த முடியுமா…?

அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அந்த இரும்பு கரண்டியை முதலிலேயே அது சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
1.அது சூடான பிற்பாடு மாவிலே முக்கினால் சொய்ங்… என்று ஓட்டிக் கொள்கிறது
2.அதற்குப் பின் எண்ணைய்ச் சட்டியிலே அதைச் சுட்டால் முறுக்கு சீராக வரும்… கரண்டியிலிருந்து அச்சு முருக்கு அழகாக விழுகும்.

பக்குவம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள்…!.

அச்சு முறுக்கு அவர்கள் சுடுகிறார்கள் என்று நாம் கரண்டியைக் “காய வைக்காதபடி… பச்சையாக வைத்தால்” என்ன ஆகும்…? மாவு ஒட்ட மாட்டேன் என்கிறது கரண்டி சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா…?
1.அந்தக் கரண்டி சூடாகி
2.மாவை இழுக்கக்கூடிய அந்தப் பவர் (சக்தி) வேண்டும்.

அதே போன்றுதான் நம்மிடம் எத்தனையோ குணங்கள் இருக்கின்றது சொன்ன முறைப்படி தான் நான் தியானம் செய்கின்றேன் என்று “காந்த சக்தியை எடுக்காதபடி…” தியானம் செய்தால் எப்படிச் சரியாக வரும்…?

1.காந்த சக்தியை எடுத்து நமக்குள் சூட்டை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
2.ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் பரிபூரணமாக
2.அந்த உணர்வோடு புருவ மத்தியில் எண்ண வேண்டும்… இது முக்கியம்…!

(“ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…” என்று சும்மா வெறுமனே சொல்வதனால் பயன் இல்லை)

1.ஓ…ம் ஈஸ்வரா என்கிற போது நாம் எண்ணியது பிரணவமாகின்றது
2.உணர்வுடன் நினைவை அங்கே செலுத்தப்படும் பொழுது காந்த சக்தி ஓடுகின்றது… இழுக்கக்கூடிய திறனும் கூடுகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது பிரணவமாகின்றது. எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டு ஜீவன் பெறும் போது பிரணவம். அதற்குப் பெயர் தான் ஓ…!

ஓ…! என்று சப்தமாகி ம்… உடலுக்குள் சென்று அந்த உணர்வின் சத்து அடங்குகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது நம் உடலாக மாறுகின்றது ஆகையினால் ஈஸ்வரா என்று எண்ணும் போது அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் “அயோக்கியப் பயல்…!” என்று ஒருவனை எண்ணும் பொழுது அவனை நினைத்தாலே எரிச்சல் ஆகின்றது.

அதை மாற்றி அமைக்க… “ஈஸ்வரா…!” என் சொல் பேச்சு அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம்மைக் கெடுதலாக நினைத்தார்கள் என்றால் என் பேச்சு அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இந்த எண்ணத்தை நாம் எண்ணினாலே போதுமானது.
1.காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது
2.இந்த நல்ல உணர்வின் சக்தி நமக்குள் கூடுகின்றது.

யாருடனாவது சண்டை போட்ட பின்பு பாருங்கள் உங்கள் நெஞ்சுப் பகுதியில் படபட… படபட… என்று துடிப்பலைகள் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லட்டும். இந்த நேரத்திற்கு வந்து சொல்கின்றான் பார்…! என்று வெறுப்பு தான் வரும். நல்லதைச் சொன்னாலும் கூட சனியன் எப்படியோ போகுது போ…! என்ற எண்ணம் தான் வரும்.

வீட்டிலே பையன் நம்மிடம் சண்டை போட்டு விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் தொழிலில் வேலை செய்வோர் நம்மிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் லாபம் வருகிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்…?

சந்தோஷமான செய்தியாக அவர் சொன்னாலும் கூட என்னத்தைச் சம்பாரித்து வைத்து என்னத்தைப் பண்ணப் போகின்றோம்…? போய்யா நீ…! என்ற சொல் தான் வரும்.

பத்தாயிரம் ரூபாய் பணம் லாபம் வருகிறது என்று அந்த நேரத்தில் சந்தோஷப்பட முடியுமா…? முடியாது.

ஏனென்றால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பையன் மீது வெறுப்பாக இருக்கின்றோம் காரணம் நாம் சொன்னபடி அவன் கேட்கவில்லை… நம்மை எதிர்க்கின்றான்… முறைக்கின்றான்…! என்றால் உடனே வெறுப்பாகி விடுகிறது.

அப்போது இங்கே வியாபாரத்தில்
1.லாபம் அதிகமாக வருகிறது சரக்கு எல்லாம் நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னாலும் கூட
2.இந்த அளவுக்குப் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னாலும் கூட
3.எனக்கு இந்த அளவுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்தால் கூட போதும் என்று அவர் நம்மிடம் விவரங்களை எல்லாம் சொன்னாலும் கூட
4.எனக்கு எல்லாம் தெரியும்… நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா…! என்று
5.பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்று சந்தோஷப்பட முடியாதபடி உதறித் தள்ளும் உணர்வு தான் வரும்.

ஏனென்றால் பையன் மீது இருக்கும் வெறுப்பு நம்மை இவ்வாறு இயக்கி விடுகின்றது. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தையும் அடுத்து மாற்றுகிறது.

இது எல்லாம் நடைமுறையில் ஒவ்வொருவரும் செய்வதைத் தான் சொல்கின்றேன்.. நான் புதிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. இதைத் தான் அனுபவம் என்று சொல்வது.

உங்களுக்கும் இப்போது தெரிகின்றது இதை மற்றவர்களுக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.

இதிலிருக்கும் உண்மைகள் இன்னென்ன மாதிரி இருக்கின்றது என்று பிறருக்குச் சொல்லிச் சொல்லி… ஞானிகள் காட்டிய வழியில் திரும்பத் திரும்ப நாம் செயல்படுத்தினோம் என்றால் “அந்த ஞானம் நமக்குள் தன்னிச்சையாக வரும்…”

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துக் கொண்டே வந்தால்
1.அந்த ஞானிகள் உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சியில் தூண்டப்பட்டு அந்த ஞானத்தின் தொடராக அது வரும்
3.மற்றவர்களுக்கு தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையாக வரும்.

தொடர்ந்து இதைச் செய்தால் உயர்ந்த சத்தாகவும் உங்களுக்குக் கிடைக்கின்றது உங்கள் சொல் அனைவரையும் காக்கக் கூடிய சக்தியாகவும் வரும்…!

எங்கள் சாமி (ஞானகுரு) பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொல்வதை விடுத்து விட்டு சாந்தமான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்து… எல்லோரையும் பெறச் செய்யும் அந்தப் பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் பகுத்தறிந்து வளர்ச்சியாக்கும் விஞ்ஞானம் மனிதனுக்கு அடுத்த வளர்ச்சி நிலைக்கு ஏன் செல்லவில்லை…?

 

பக்தி மார்க்கத்தில்… ஜெப நிலையில்… மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எத்தனையோ காலங்களாகத் தெய்வ சக்தி கிட்டும் என்ற எண்ணத் தொடரில் சுழற்சி வட்டத் தொடரில் ஜெப மந்திரங்களை ஓதி யோக நிலை பக்தி நிலை என்ற நிலையில் எல்லாம் கால நிலையைக் கடத்தி ஆழ் நிலையில் இச்சரீரத்தையே பயிற்சி செயலில் ஆரோக்கிய நிலையில் செயலாக்கி இருந்தாலும் காணப் போகும் பலன் என்ன…?

1.எண்ண நிலையைக் கொண்டு அறியும் ஞான வழியின்
2.காந்த மின் நுண் அலை கூடிய வலுவாகிய உடல் சமைப்பின் ஆத்ம உயிரின் வலு நிலை பெற்றால் தான்
3.பக்தி மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் மற்ற எந்த விஞ்ஞான மார்க்கமானாலும்
4.இத்தொடர் நிலையை மனித ஆத்மா பெற்றதென்றால்தான்
5.மனித சக்தியின் தெய்வ சக்தியை இவ்வுடல் சமைக்கும் உணர்வின் எண்ணத்தை – அறியும் ஞான ஆற்றலை
6.அறிந்தோரின் ரிஷி சமைப்பின் அலைத் தொடரை உணர்வின் எண்ணத்தில் அறிந்து உயர்வு நிலையை நாம் பெற முடியும்.

இப்பூமி சமைக்கும் வழித் தொடரில் சுழலும் எண்ண நிலையை இப்பூமியையே இயக்கவல்ல உயர் வழியை அறிய இவ்வண்ணத்தைக் கொண்டு அறியும் நிலை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டி இச்சரீரக் கோளத்தின் அணுக்கோடிகளுக்கெல்லாம் ரிஷித் தொடர்பை ஏற்படுத்தி உயர் ஞானம் அறிந்த அந்தச் சமைப்பு நிலை கொண்டு
1.இச்சரீரத்தைக் கொண்டே உயர்வு நிலை பெறவல்ல செயலுக்கு
2.நம் உணர்வின் எண்ணம் அறியும் தன்மை கொண்டு
3.நம் தியான நிலை செயல்பட வேண்டும்.

பொருள் சேர்க்கையும்… சரீர பிம்பத்தைக் காக்கும் வழி முறையும்… இத்தொடரில் வாழ்க்கை நிலையில் மோதப்படும் வழி முறைக்கு மட்டும்… எண்ணத்தின் உணர்வைச் செலுத்திச் சுழல் வட்டத்தில் சுழலும் வாழ்க்கையில்…
1.பிறப்பும் இறப்பும் இயற்கை நிலை என்று எண்ணத்தைச் செலுத்தி விடாமல்
2.எண்ணத்தின் ஞானத்தைக் கொண்டுதான் இயற்கை நிலையே உருப்பெறுகின்றது…! என்பதை மனிதன் உணரல் வேண்டும்.

ஆதிசக்தியின் அமில சக்தி உருவாகிப் பல கோடி மாற்றங்களில் சுழலுகின்ற சுழல் வட்டத்தில்… மனித எண்ணத்தைக் கொண்டு அறியும் வழித் தொடரில் உருவாகும் உயர்வு நிலை சமைப்பு தன்மை மாறவே… ஒன்றில் இருந்து ஒன்று மாற “இவ்வெண்ண நிலையின் தொடர் நிலை உருவாக்கித் தந்த உரு நிலை தான் இப்பூமியின் நிலை…!”

பிறப்பு இறப்பு இயற்கை என்றால்…!
1.இயற்கையாக வாழ்க்கை நிலையை மனிதன் ஏன் ஒன்றி விடாமல்
2.ஒவ்வொரு செயலையும் பக்குவம் கொண்டு பகுத்தறிவினால் செயல்படுத்துகின்றான்…?

விஞ்ஞானம்… மருத்துவம்… விவசாயம்… போன்ற எல்லா துறைகளையும் மனிதனின் எண்ணம் பகுத்தறியும் நிலைக்குச் செல்லும் பொழுது
1.மனித சரீரத்திற்கு அடுத்த உயர்வு நிலைக்கு
2.தன் பகுத்தறிவின் ஞானத்தை ஏன் செலுத்தவில்லை…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனை என்ற உணர்வை இன்றைய நிகழ் காலத்தில் உருவாக்கிவிட்டால் எதிர் காலத்தில் வேதனையின் தன்மை தான் நம்மைச் செயல்படுத்துகின்றது. வேதனைப்படும் நிலைக்குத்தான் அழைத்துச் செல்லும். ஆகவே,
1.கடந்த காலத்தை மறந்து
2.நாம் நிகழ்காலத்தைச் சீராக வைத்து
3.எதிர்காலத்தின் உணர்வை உருவாக்குவோம்.

அனைவரும் எதிர்காலத்தில் அருள் ஞானிகளாவர். அவர்களுடைய அருள் ஞானம் மக்களை அரவணைக்கச் செய்யும் என்ற இந்த உணர்வின் தன்மையை ஒளியாக்குவோம்.

என்றும் பிறவியில்லா நிலை அடைவார்கள் என்ற இந்த உணர்வுடன் வாழ்வோம். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம். அருள் ஞானத்துடன் திகழ்வோம். அருள் உணர்வுடன் வாழ்வோம். இந்த உலகையே… “ஒளி மயமாக்குவோம்”.

இந்த உணர்வின் தன்மை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் விடும் மூச்சலைகள் இங்கே பரவப் பரவ ஒவ்வொரு மனிதனும் தெளிவாகும் நிலை வரும்.

1.மக்கள் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபடுவர்… விஞ்ஞான வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுபடுவர்.
2.உணர்வின் தன்மை பிறவியில்லா நிலை அடைவர்.
3.இந்த உறுதி கொண்டு இந்த வாழ்க்கையின் பயணத்தை நாம் மேற்கொள்வோம்.
4.குரு வழியில் செல்வோம். அருள் வழி செல்வோம். அருள் வழி வாழ்க்கை வாழ்வோம்.

ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு உடலிலும் “ஒளி பெறும் உணர்வை.., ஈசனாக…” உருவாக்குங்கள்.

ஒவ்வொருவருக்கும் இந்தத் துணிவு வேண்டும்.

மற்றவர்கள் இழித்துப் பேசும் உணர்வுகளைக் கண்டு பணிந்திட வேண்டாம்.

1.அவர்கள் அறியாது இருள்களிலிருந்து மீண்டிட வேண்டும் என்ற உணர்வினை வலுப்படுத்துங்கள்
2.அவர்களை மெய் வழியில் அழைத்துச் செல்லுங்கள்.
3.அவர்கள் மெய் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாறாக அவர்களின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துவிட வேண்டாம்…!

இந்த மனித உடலின் வாழ்க்கையின் நிலைகளில் “மகரிஷிகளின் அருள் வட்டத்தில்… என்றுமே நிரந்தரமாக நாம் வாழ்ந்திட வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம். பக்தி என்ற நிலையிலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம். அரசியல் என்ற நிலைகளிலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

இந்த அஞ்ஞான வாழ்க்கையில் ஒருவன் தவறு செய்யும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அந்தத் தவறை நமக்குள் உருவாக்காமல் தடுக்க வேண்டுமென்றால் “மெய் ஞானிகளின் உணர்வை” நமக்குள் சேர்க்க வேண்டும்.
1.மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து நம்மை அறியாமல் அது இயக்கும் அதைத் தடைப்படுத்த வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைத்து அந்த வீரியத்தின் தன்மையை நமக்குள் புகுத்தினால் அஞ்ஞானத்தை மாற்றிட முடியும்.

மக்களை மீட்க வேண்டும் என்ற உணர்வுகளை நமக்குள் வளர்த்து அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் மெய் ஞானத்தின் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே நாம் வாழ முடியும்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

அத்தகைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி இந்த உடலை விட்டு எந்த நேரம் பிரிந்தாலும் என்றுமே அழியா உடலாக “அகண்ட அண்டத்தில்… எங்கும் செல்லலாம்”.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் பிறவியில்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் அடக்கி அழியாத நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை நாம் சென்றடைய வேண்டும்.

1.எதுவுமே தனித்து இயக்குவதில்லை. “ஒருவனே கடவுள்…” என்ற நிலை இல்லை.
2.மூன்று உணர்வுகள் சேர்த்து ஒன்றைக் கவர்ந்து ஒன்றுக்குள் சென்றால் தான்
3.“நான்காவது நிலையாக… பிரம்மம்…” என்று அடைய முடியும்.

மூன்று நிலைகள் கொண்டு ஒன்றைக் கவர்ந்து ஒன்றைக் கவர்ந்த பின்
1.ஒன்றுக்குள் நுழைந்து “உள் நின்று… அந்த உணர்வை இயக்கச் செய்வது தான் கடவுள்..”
2.ஒன்றென்ற நிலைகள் இங்கில்லை.
3.“வெப்பம் காந்தம் விஷம்…” என்ற மூன்றும் ஒரு பொருளை நுகரப்படும் பொழுது மணம் என்ற நிலையில் ஞானம்.
4.இதனுடன் சேர்ந்து உருப்பெறும் சக்தியாக உருவாகின்றது… அது தான் “பரப்பிரம்மம்”.

அந்த உணர்வின் தன்மை எதை நுகர்ந்து கொண்டதோ ஒரு பொருளுடன் இணைந்து அந்த “உணர்ச்சியை” ஊட்டும் பொழுது பிரம்மவின் மனைவி “சரஸ்வதி”.

அந்த ஞானத்தின் துணை கொண்டு அதனுடன் இயங்கி இதனின் வலிமையை உருவாக்கும். இதைப் போல வலுக் கொண்ட உணர்வுகளை எடுத்துக் கொண்டால் “அது எடுத்துக் கொண்டாலும்… பரப்பிரம்மம் தான்”.

அந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் இணைந்து தன் வலிமை கொண்டால் இதை அடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு “அதனின் வளர்ச்சியைக் கூட்டும்…”

1.உலகின் இயக்கம் இவ்வாறு தான் இருக்கும் என்று காட்டிய அருள் ஞானிகளின் உணர்வலைகளை நாம் நுகர்ந்து
2.நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை நீக்க வேண்டும்.
3.அருள் ஞானத்தை நமக்குள் வளர்ப்போம்.

நதி மூலமும் அகஸ்தியன் தான்… ரிஷி மூலமும் அந்த அகஸ்தியன் தான்…!

 

அகஸ்திய மாமகரிஷி அவர் வாழ்ந்த காலத்தில் இந்தப் பூமியில் உள்ள மலைப்பகுதிகளில் எல்லாம் சுழன்று வந்து பல பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டறிந்த விண்ணின் ஆற்றல்மிக்க உணர்வின் தன்மையை
2.இங்கே பாபநாசம் மலைப் பகுதியில் நாம் அமர்ந்து மீண்டும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.இங்கே மீண்டும் அது ஜீவன் பெறுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அதை நினைவுபடுத்தும் போது அந்த உணர்ச்சியின் வேகம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை உங்களுக்குள் தூண்டும்படி செய்கிறோம்.

இங்கே படர்ந்துள்ள பதிந்துள்ள அந்த அகஸ்தியன் உணர்வுகளுடன்… குரு உணர்வுகளைக் கலந்து அதனுடன் இணைக்கச் செய்து தான் யாம் (ஞானகுரு) உபதேசிக்கின்றோம்.

எம்முடைய உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கப்படும் போது
1.உங்கள் எண்ணங்கள் அந்த மகரிஷியின் உணர்வுகளை ஈர்க்கும் தன்மையாக
2.அதை நுகரும் நிலையும் கவரும் நிலையும் வருகின்றது.

அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த அருள் சக்திகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதியச் செய்யும் நிலைக்குத்தான் இங்கே பாபநாசத்திற்கு அழைத்து வந்தது.

காரணம்…
1.அன்று அகஸ்தியன் அவன் தனக்குள் விளைய வைத்த சக்தி வாய்ந்த ஆற்றல்கள்
2.இந்த இடத்தில் (பாபநாசம் மலை) இருக்கும் பாறைகளுக்குள் காந்தப் புலனால் கவரப்பட்டுப் பதிவாகியுள்ளது.

அந்த மகா ஞானி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவன் உடலில் தாவர இனங்களின் சத்துக்களை நுகர்ந்தறிந்தான். அறிந்த நிலைகள் கொண்டு மற்ற தாவர இனங்களை அதனுடன் இணை சேர்த்து “மகா சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” (புதிதாக) உருவாக்கினான்.

அதாவது இன்று விஞ்ஞானிகள் மற்ற மற்ற தாவர இன செல்களை இணைத்து எப்படிப் புதிய தாவர இனங்களை உருவாக்குகின்றார்களோ அது போன்ற சக்தி வாய்ந்த தாவர இனங்களின் சத்துக்களை இணைத்து “மிக மிக சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” அகஸ்தியன் உருவாக்கினான்.

1.அந்தத் தாவர இனச் சத்துக்களை மனிதர்கள் நுகர்ந்தால்
2.அவர்கள் உடலில் அறியாது சேர்த்ததீய வினைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்தியாக ஆது பெருகுகின்றது.
3.அதற்கே அகஸ்தியன் அதை எல்லாம் உருவாக்கினான்.

பிற்காலத்தில் வந்தவர்கள் அனைவரும் அத்தகைய தாவரங்களைப் பயன்படுத்தி வேருடன் அறுத்து அழித்து விட்டார்கள். அவைகள் அதற்குப்பின் வளர்ச்சி இல்லாது அதை வளர்த்திடவும் அதைக் காத்திடவும் நிலையில்லாது சென்று விட்டது. அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட பல தாவர இனங்கள் காலத்தால் இப்படி அழிந்துவிட்டது.

இந்த மலைப்பாங்குகளில் அன்று அகஸ்தியன் தன் உணர்வின் ஆற்றலால்… அவன் எண்ணத்தால் சுவாசித்து… பல பல தாவர இனங்களின் சத்துக்களை அவன் இணை சேர்த்துச் சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்தான்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் சென்ற அனைத்து மலைப்பகுதிகளிலும்… இப்படிப் பதியச் செய்தான்.

வானில் மேகங்கள் கூடி வந்தாலும் மலைப் பாங்குகளில் வரும் பொழுது
1.அங்கே அகஸ்தியனின் உணர்வலைகள் பதிந்து இருப்பதனால்
2.தாவரங்கள் அந்த மேகங்களைக் கவர்ந்து அழைத்து வரப்படும் போது
3.பாறைகளுக்குள் அகஸ்தியனின் உணர்வுகள் பட்டதைக் கவர்ந்து “ஜீவ நீராக… ஜீவ நதியாக உருவாகின்றது…”

அப்படி உருவாகும் ஜீவித நீரால் அப்பகுதியில் மற்ற தாவர இனங்கள் புதிதாக ஜீவன் பெறும் நிலையும் வந்தது. அதே சமயத்தில் அகஸ்தியன் எந்தெந்தத் தாவர இனங்களை உருப்பெறச் செய்தானோ அதற்கு நீரே இல்லை என்றாலும் மேகங்களைக் கூடச் செய்து ஜீவித நீர் கிடைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டதாக அவன் உருவாக்கினான்.

1.வெறும் கற்பாறைகளாக இருந்தாலும் அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்ந்து நீராக வடிக்கச் செய்கின்றது
2.தான் உருவாக்கிய அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த தாவர இனங்களை வளர்த்திடுவதற்காக
3.அவ்வாறு செய்தான் அன்றைய முதல் மெய் ஞானியான அகஸ்தியன்…!

புலனை அடக்கும் ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைக்கும்… “உயர்வு கிடைக்காது…!

 

உதாரணமாக நத்தையை ஒத்த பல பிராணிகள் உருவ நிலைக்குகந்த உணர்வு நிலையிலேயே அதன் உருவத்திலேயே “பாதுகாப்பபு நிலை கொண்டு” (ஓடு) அறிவின் எண்ண நிலை பெறுகின்றது.

எப்படிப் பாலை உஷ்ணப்படுத்திய பின் அதன் ஆவி நிலை வெளிப்பட்டு ஏடு (ஆடை) நிலை அடைகின்றதோ அந்நிலையின் தொடர் போன்று
1.தாய் எடுக்கும் சுவாசத்தில்
2.தாயின் உடல் நிலையின் உதிரத் தொடர்புடன் உருக்கொள்ளும் கர்ப்ப சிசு
3.உதிரத்தின் தொடர்பு உஷ்ண நிலை பெற்று
4.அதனுடைய அமில நிலைக்கொப்ப உராய்வு நிலை கொண்டு உருவ நிலை (மனித உடல்) பெறுகிறது.

அதனின் வளர்ச்சி நிலை முற்றிய தன்மையில் உணரும் நிலையும் எண்ண நிலையும் பெறுகின்றது. “எண்ண நிலை” என்பது அதனுடைய ஆவி (ஆத்ம) நிலையிலேயே அதற்குத்தக்க எண்ண நிலையில் தான் தாய் உடலில் புகுந்து பிறப்பிற்கே வருகின்றது.

பிறப்புத் தொடரில்… ஜீவ சக்தி கொண்ட சரீர நிலை முற்றிய நிலையின் பிறப்பு நிலை கொண்ட பிறகு தான் சரீர மனித நிலை செயல் நிலை யாவும் “பகுத்தறிந்து…” செயல் கொள்கின்றன.

1.இதற்குப் பின் வளரும் நிலைக்கும்…
2.வழி கொள்ளும் வளர்ச்சி நிலைக்கு வழி காட்டும் நிலைக்காகவும் தான்
3.இயற்கை நிலையையும் இயற்கைத் தொடர்பு நிலையையும்
4.அதில் வளர்ச்சி கொண்டு மாற்றப்படும் தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன் (ஈஸ்வரபட்டர்).

ஆனால் தான் வளர்ந்த தொடரிலேயே பகுத்தறியும் அறிவு நிலை கொண்ட மனித ஆத்மாவும் “இயற்கை” என்ற பிடிப்பிலேயே சிக்குண்டு வாழ்ந்து விட்டால் “பிறப்பின் பலன்” இல்லாது போகின்றது.

ஏனென்றால் எண்ணத்தின் தொடர்பைக் கொண்டு உருவாக்கும் ஆதி சக்தியின் அகில சக்தியுடன் தெய்வ சக்தி கொண்டு படைப்பு நிலையைப் படைக்கவல்ல சக்தி கொண்ட பகுத்தறியும் எண்ணத்தால் உயரவல்ல நிலையை அடைய வேண்டும்.

இயற்கை என்ற சுழற்சியிலேயே சுழன்று… தன் சக்தியை உணராமல்… முக்தி நிலை பெறும் மார்க்க நிலைக்குச் சிலரின் உபதேச நிலைகளைக் கேட்டு… ஐம்புலனை அடக்கி ஆழ்நிலையில் உயர்வு நிலை பெறலாம்…! என்ற வழி காட்டும் தொடரில் சென்றால்… சரீர வாழ்க்கை நிலையில் மட்டும் தான் ஆரோக்கிய நிலையும் அமைதியும் கிட்டும்.

உயர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால்
1.உணர்வின் எண்ணம் பகுத்தறியும் எண்ணத்தால்
2.அறியும் ஞான வழியில் தான் உயர்வு நிலை கொள்ள முடியும்.

ரோட்டில் செல்லும் போதெல்லாம் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

 

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் எண்ணும் போதெல்லாம் அதைப் பெறக்கூடிய தகுதியாக இது அமைகின்றது.

நீங்கள் எங்கே வெளியே சென்றாலும்
1.பஸ்ஸிலே சென்றாலும்… மற்ற வாகனத்தில் சென்றாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்லுங்கள்
3.ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்…
4.வாகனத்தில் செல்வோர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லுங்கள்.

ஏனென்றால் ரோட்டிலே வாகனத்தில் செல்லும் நிலையில் எத்தனையோ விபத்துக்களும் சேதாரங்களும் ஆகிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு நாம் எந்த வாகனத்தில் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்ல வேண்டும்.

பஸ்ஸிலே பயணம் செய்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நாம் வாகனத்தில் போகும் பொழுது…
1.ரோட்டிலே “பாதசாரிகள்” நடந்து செல்பவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
3.உங்கள் எண்ணம் உங்களையும் காக்கின்றது… பஸ்ஸிலே பயணம் செல்வோரையும் காக்கின்றது… ரோட்டில் செல்வோரையும் காக்கின்றது.

அதே போன்று பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தாலும் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின் மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்களுக்குக் கிடைக்க வேண்டும். உலகில் அறியாது சேரும் இருள்கள் நீங்க வேண்டும். உலக மக்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… மன பேதமின்றி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்ந்திடும் அந்த சக்தி உலக மக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்பொழுது நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்…!

இது போன்ற உணர்வுகளை நாம் பெருக்கப் பெருக்க உலகம் எங்கிலும் இந்த அருள் உணர்வுகள் பெருகும். காற்று மண்டலத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி அதிகமாகப் பெருகும்.

1.நமது நினைவுகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் இணையும்.
2.அந்த உடலை விட்டு அகன்றால் வாழ்க்கையில் வரும் எந்தத் துயரங்களும் நம்மைப் பற்றி விடாது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.
3.ஆகவே அந்த மகரிஷிகளுடனே ஒன்றி வாழுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கப் பெருக இந்தப் பூமியின் பிடிப்பு குறைந்து மிதப்பது போன்று அந்த உணர்வு கிடைத்திருக்கும்… பூமியின் ஈர்ப்பு குறைந்திருக்கும்.

உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்றால் எப்பொழுதுமே அதைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள். யாருடைய உணர்வும் இழுத்து விடாதபடி தடுத்துக் கொள்ள முடியும்
1.இதை ஒரு பழக்கமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…
2.“குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்…”

மாறி மாறி ஏற்படும் “வெப்பத்தினாலும்… குளிர்ச்சியினாலும் தான்…” சிருஷ்டியே நடக்கின்றது

 

அண்ட கோளத்தில் அமில சுழற்சியில் சுழன்று கொண்டே மிதந்து கொண்டுள்ள அமில நிலைகள் அவை அவை சுழற்சி ஓட்டத்தில் சந்திக்கின்ற சீதோஷ்ண நிலையின் தொடர்பு நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகளை ஏற்படுத்தி சீதோஷ்ண நிலை மோதலின் தொடரைக் கொண்டு அதனுடைய குணத் தன்மையில் வலுத்தன்மை பெறுகின்றது.

உதாரணமாக நாம் பால்… காபி… கஞ்சி… போன்ற வஸ்துக்களைச் சமைத்து வைத்துள்ள நிலையில் அதைக் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தில் அதைக் காய்ச்சி அப்படியே வைத்தவுடன்
1.அதிலுள்ள ஆவி நிலை வெளிப்பட்டு மேல் நிலையில் “ஆடையாக” திடம் கொண்டு படிந்து விடுகின்றது.
2.உஷ்ணம் உள்ள வரை பாலில் ஆடை கட்டுவதில்லை
3.குளிர்ந்த நிலையிலும் அதே தன்மையில் அது உள்ளது.

ஆனால் உஷ்ணப்படுத்தி ஆறிய நிலையில் அதன் குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு அதன் நிலையில் புளிப்பு நிலை கொண்டு மாற்று நிலை ஏற்பட்டு அதை எடுக்காமல் அப்ப்டியே வைத்து விட்டால் என்ன நடக்கின்றது…?

அதில் இரண்டு மூன்று நாட்களில் பூமியின் உஷ்ண நிலைக்கொப்ப புழுக்கள் வளர்கின்றன. அந்தப் புழுக்கள் வளரும் நிலையில் அதையும் அப்படியே விட்டு விட்டால் மேலும் என்ன நடக்கின்றது…?

அதுவே பாலில் அதிகமாக வளர்ந்த புழு ஒன்றை ஒன்று உட்கொண்டு… அதற்குகந்த ஆகாரம் வேண்டி நிலையில் ஒன்றுக்கொன்று உட்கொண்ட நிலையில் பெரும் புழுக்களாகின்றது.

1.பின் ஆகாரம் கிடைக்காத நிலையில் அதனுடைய ஜீவ நிலை பிரிந்து
2.நீர் சக்தி வெளியாகி படிம நிலைக்கு அந்தப் புழு உட்படுகின்றது.
3.இதற்குப் பிறகும் அத்தொடரில் பல நிலைகள் மாறு கொள்கின்றன.

இத்தொடரைப் போன்றே அண்டத்தின் அமிலத் தொடரும் உஷ்ண நிலைக்கொப்பவும் குளிர் நிலைக்கொப்பவும் அமில நிலைச் சேர்க்கைக்குச் சமைப்பு நிலையில் “பல பல உருக்கள்…” உருப்பெறுகின்றன.

சூரியன் சமைத்த ஆறு வகைக் குணத்தின் வண்ண நிலை பூமி சமைக்கும் ஏழாம் வண்ணமாகி மோதலுடன் தொடர்பெடுத்து பூமியின் ஈர்ப்பு நிலைக்கு பூமித் தொடர்பு கொண்ட பூமி சுழற்சியுடன் சுழலுகின்ற அமிலச் சமைப்பில் தொடர் வளர்ச்சியின் தன்மையைத்தான் “இயற்கை” என்றுணர்த்துகிறோம்.

1.இதிலே மாற்ற நிலைகள் பலவாக உருப்பெற்று மாறி மாறித் தொடர்கின்ற நிலையினில்
2.ஜீவ சக்தி கொண்டு உயிரணுத் தன்மை உருவான நிலையில்
3.உணர்வுத் தன்மை வளர்கின்ற இயற்கைத் தாவர நிலை மாறி
4.சரீர நிலை உணர்வு கொள்ளும் பொழுது அறிவு நிலை கொண்ட எண்ண நிலையும் உருவாகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது சகஜ வாழ்க்கையில் ஒரு அச்சுறுத்தும் உணர்வையோ, அல்லது கடுமையான பகைமைகளாகி அதனால் ஆத்திரம் வேதனைகளையோ நுகர நுகர உடலிலே தீராத நோயாகி விடுகின்றது.

1.நோயாகி விட்டால் இந்தப் பொருள் எதற்கு…? இந்த உடை எதற்கு…? இந்த நிலம் எதற்கு…? என்று ஒதுக்கும் தன்மை வரும்.
2.“ஆண்டவன்…” எப்பொழுது என்னை இந்த உடலை விட்டு அழைத்துக் கொள்வான்…? என்று கேட்பார்கள்.

இதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இன்று பார்க்கலாம். பெரும் செல்வந்தர்களாகக்கூட இருப்பார்கள். ஆனால் கடும் வேதனையால் வாடிக் கொண்டிருப்பவர்கள் தன் இம்சை தாளாது
1.தன் செல்வத்தைப் பார்க்கின்றனரா…? உடலைப் பார்க்கின்றனரா…?
2.இந்த உடலை விட்டு “எப்பொழுது… இந்த உயிர் வெளியேறும்…?” என்று நினைக்கின்றார்கள்.

இருப்பினும் இவர்கள் தப்ப முடியாது.

“எந்த வேதனை… இந்த உடலில் உருவாகியதோ…” இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கும். அதை உயிர் உணர்த்திக் கொண்டேயிருக்கும்.
1.“உடல் இல்லை.. என்றாலும்…” வேதனையை உணர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும்
2.அதிலிருந்து தப்ப முடியாது.

வேதனைகள் தாளாது இந்த உடலை விட்டுச் சீக்கிரம் செல்வதற்காகத் “தற்கொலை செய்து கொள்வேன்” என்று செய்வார்கள். தன்னை எரித்துக் கொள்கிறார்கள்…! என்று வைத்துக் கொள்வோம்.

அப்படித் தற்கொலை செய்தாலும் எதன் உணர்வு கொண்டு தற்கொலை செய்தார்களோ இந்த உடலை விட்டு வெளியில் வந்தபின் யார் மேலாவது இவர் பற்று கொண்டிருந்தார் என்றால் என்ன ஆகும்…?

“நல்ல மனிதர் இவர்… இப்படித் தற்கொலை செய்து கொண்டாரே…” என்று இந்த உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உடலுக்குள் சென்று இவர் பட்ட வேதனையை வெளிப்படுவதைக் காணலாம்.

பேய் மணம் என்று உடலுக்குள் சென்றபின் “ஆவி பிடித்துவிட்டது…” என்றெல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இது தனித்து ஒரு உடலுக்குள் புகவில்லை என்றாலும் “எரித்த உணர்வு” கொண்டு எரிந்து கொண்டேயிருக்கும். நரக வேதனையிலிருந்து தப்பவே முடியாது.

“ஈசனாக இருந்து உருவாக்கிய அவனை மறந்து” மனிதனான பின் தவறு செய்வோம் என்றால் நரக வேதனையும் நரகலோகத்தையும் தான் சந்திக்க முடியும். ஆகவே
1.நாம் வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக வேண்டும்;
2.மனதைத் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்
3.மனத் தூய்மை தேவை என்றால் அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவப் பிரகாரம்
4.காலையில் கண் விழித்தவுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
5.அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உலகில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என்று தவமிருங்கள். பிறருடைய தீமைகளோ பகைமைகளோ உங்களுக்குள் வராது.

இதைத் தான் ஏகாதசி விரதம் என்பது.

தனித்து யாரும் விண் செல்ல முடியாது…!

 

இன்று தன் கணவன் என்று இருக்கும்… ஆனால் கணவனுக்கோ தொழில் நிமித்தம் வேலை பார்க்கும் இடங்களில் அவருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்திருப்பார்கள்.

1.“உன்னை விட்டேனா பார்…?” என்ற நிலைகளில் கோபமாகச் சண்டை இட்டிருந்தால்
2.கடைசியில் உடலை விட்டுச் சென்ற பின் அந்த உடலுக்குள் கணவனுடைய ஆன்மா சென்று விடும்…
3.அவருடைய எண்ணமே எமனாக மாறிவிடும்.

அந்த எண்ணத்தின் வழி மற்றவர் உடலுக்குள் கணவன் சென்று விட்டால் அடுத்து… “தன் கணவன்…” என்று சொல்வதற்கு என்ன இருக்கின்றது…?

அதே போன்று தொழிலில் நஷ்டம் என்று வரும் பொழுது ஒருவர் கணவனுக்கு உதவி செய்கின்றார். இருந்தாலும் வாழ்க்கையின் கடைசியில் உடல் பலவீனமாகும் பொழுது… நன்றிக்காக வேண்டித் தனக்கு உதவி செய்தவரின் எண்ணம் தான் வரும்.

அந்த எண்ணம் வந்து உடலை விட்டுச் சென்று விட்டால் அவர் உடலுக்குள் தான் கணவனின் ஆன்மா செல்லும்.
1.இங்கே இவருக்குக் கணவன்… பிள்ளைகளுக்கோ தந்தை…
2.உடலை விட்டுச் சென்று இன்னொரு உடலுக்குள் போனால் பேய்…!
3.அந்த உடலில் இருந்தும் வெளியே சென்ற பின் மாடோ ஆடோ தான்…!
4.ஆட்டிலோ மாட்டிலோ அங்கே உரு பெற்ற பின் அதன் இனமாக வளர்ந்தது இதற்குத் தாயாக மாறுகின்றது.

அப்போது இங்கே இந்த மனைவிக்குக் கணவன் எங்கே…? மற்றொன்றுக்குத் தான் கணவனாக மாறுகின்றது.

ஆகவே தான் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டது.

ஆனால்… சாங்கியப்படி என்ன செய்கிறோம்…? கணவன் இறந்து விட்டால் தாலியை நீக்கிவிடுகின்றோம். ஏனென்றால் கணவனை இழந்தவர் என்று மற்றவர்களுக்குத் தெரிவதற்காக அவ்வாறு செய்து வேதனையைத் தான் உருவாக்குகின்றோம்.

வேதனையை உருவாக்கினால்… கணவனை மனைவி எங்கே மீட்டுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

பல இலட்சம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இன்று பெரும் பகுதியானோர்…
1.தனித்த ஆளாக நான் கடும் தவம் இருந்து விண்ணுலகம் சென்று விடுவேன்…
2.பிறவா நிலை அடைந்து விடுவேன்…! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.முடியாது…! முனி(வனாக)யாகத் தான் மாற முடிமே தவிர உணர்வின் தன்மை “ஒளியாக மாற்றும் திறன் இருக்காது…”

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி “அந்த உணர்வுகள் உராய்ந்து குழந்தைகள் எப்படி ஜெனிக்கின்றதோ” அதே போன்று இந்த உடலை விட்டு அகன்ற பின் கணவன் மனைவி எவர் முன் பின் சென்றாலும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஐக்கியமாகி… ஒரு உணர்வாகும்.
1.என்றுமே ஒளியின் கருவின் அணுவினை உருவாக்கிக் கொண்டே
2.வளர்ந்து கொண்டே செல்லும்…! (துருவ நட்சத்திரம் – சப்தரிஷி மண்டலம்)

தாவர இனங்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு. ஆண்பால் வீசும் உணர்வினைப் பெண்பால் கொண்ட செடி கொடிகள் கலந்தால் தான் அதிலே மற்ற வித்துக்கள் உருவாகும். இல்லையென்றால் வித்துக்களைக் காண முடியாது.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் திருமணம் செய்துதான் மனைவியை அரவணைத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அகஸ்தியன் என்று (சொல்) தனித்துச் சொன்னாலும்
1.அவன் உருவாக்கிய உணர்வின் தன்மை கொண்டு தன் மனைவியைத் தன்னுடன் அழைத்தே சென்றான்.
2.அதைத்தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று…” என்று சொல்வது

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இரு மனமும் ஒன்றாக இயக்கி… குறைகள் இருப்பினும் அதை நீக்கி… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் குறைகளைக் களைந்து… அந்த ஞானிகள் உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையிலே ஒன்று சேர்த்து வாழ வேண்டும்

இதற்குப் பெயர் நளாயினி…!ஆகவே என்றுமே இணை பிரியாது ஒருவருக்கொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது.

1.குடும்பத்திலே கணவன் மனைவிக்குள் குறைகள் வரும்
2.உடலில் அழகான துணிகளை நாம் அணிந்திருந்தாலும் அதிலே அழுக்குப் படியத்தான் செய்யும்
3.அதை மீண்டும் மீண்டும் நாம் தூய்மைப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் சில சந்தர்ப்பம் வெறுப்பின் நிலைகள் வரும். அதைக் களையும் தன்மையாக “மகரிஷியின் அருள் சக்தி கொண்டு இணைத்து” அதை மாற்றுதல் வேண்டும்.

கணவன் மனைவியின் உணர்வுகளை மதித்து… அதே போல் கணவன் சொல்வதை மனைவி மதித்து… இரு உணர்வு ஒன்றாகும் போது தான்
1.மகிழ்ச்சி என்ற உணர்வும்.. இருளைப் போக்கும் அருள் சக்தியும் கிடைக்கின்றது.
2.காவியத்திலே காட்டப்பட்ட இந்த உண்மைகளை நமக்கு யாரும் தெளிவாகச் சொல்லவே இல்லை.

“மனைவி மட்டும் தான்” என்று ஒருதலைப் பட்சமாக நளாயினி முடவனான கணவனைச் சுமந்து சென்றாள்…! என்று திரிபு செய்துவிட்டனர்.

கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்தக் குறைகள் இருப்பினும் ஒருவரை ஒருவர் மதித்து அந்தக் குறைகளைக் களைந்து மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்…!

அப்படி உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே சமப்படுத்தி இணைத்து… விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தவர் எவரோ… அவர்கள் தான் அங்கே இருக்கின்றார்கள்…”

அவர்களை எண்ணிக் குறைகளைக் களைய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்து இருள்களை மாய்த்து “ஒன்று சேர்ந்து விண் செல்ல வேண்டும்…!” என்பதுதான் தத்துவம்.

மனதில் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்”

 

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில் கர்ப்பக் காலத்தில் இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் – நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில் “பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில் ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் எடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையைத்
1.தெளிந்த நிலைகள் கொண்டு நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…?
2.பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்…? என்றும்
3.பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் அறிதல் வேண்டும்.

உங்களுக்குள் போற்றித் துதித்துவிட்டு அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகப் போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு. இப்படி நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு.

ஆனால் அவர் எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும் என்று போற்றும் நிலைகள் வேறு.

இதைப் போன்ற நிலைகள் “ஏமாற்றும் அல்லது ஏமாறும் நிலைகள் அல்லாது… போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது
1.அவர் உணர்வால் நாம் அதைப் பற்றி நமக்குள் போற்றிக் கொள்ள வேண்டும்.
2.“அவர் உயர்ந்தார்…” என்று அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
3.“அவருக்குள் வளரும் உணர்வுகள்… நமக்குள் நின்று நாமும் வளர்வோம்…”

ஆனால் எல்லா உதவியும் செய்வார்கள்.

உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்… “பார்.., அன்றைக்கு எல்லா உதவியும் நான்தான் செய்தேன்…” இன்றைக்கு என்னைச் “சிறிதளவாவது அவன் மதிக்கின்றனா…? பார்…” என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.

ஆக… செய்த நன்மையை மறைத்துத் “தனக்குள் கௌரவம்” என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
1.“தன்னை மதிக்கவில்லையே…” என்ற உணர்வு கொண்டு
2.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும். ஆக…
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் இத்தகையை நிலைகளில் பகைமையை வளர்த்துக் கொண்டு நமக்குள் நல்ல அணுக்கள் வளராது தடைப்படுத்திடும் இந்த நிலைகளிலிருந்து மீட்டிடத்தான் “விழித்திரு…” என்று காட்டினார்கள் ஞானிகள்.

காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து…
1.தாய் தந்தையரை எண்ணி ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த உணர்வுகளை எங்கிப் பெறுதல் வேண்டும்.
4.உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து… நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த வேதனையோ மற்றவர்கள் மேல் உள்ள பகைமைகளயோ நமக்குள் வளராமல் மாற்றிடலாம்.

நாம் செய்த நன்மை நமக்கும் பயனளிக்கும். பிறரின் உணர்வுகள் நம்மை இயக்காது. அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம் நினைவுகள் செல்லும் பொழுது இந்தப் புவியின் பற்று நமக்குள் வராது.

என்றுமே ஏகாந்த நிலை என்ற பேரானந்தப் பெரு வாழ்வு வாழ முடியும்.

விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை

 

உயிர்:-
நாம் எண்ணியதை நமக்குள் பதிவு செய்வதும் மீண்டும் நினைவுபடுத்தும் போது அதை இயக்குவதும் உயிருடைய வேலை.

கண்;-
நாம் எண்ணியது எதுவோ நமது கண் இந்த உயிரின் இயக்கத்தின் ஓட்டத்தை அது வழிகாட்டுகின்றது நல்லவை கெட்டவை என்று கவர்ந்து உயிருடன் இணைத்து உடலாக மாற்றுகின்றது.

உடல்:-
எது இயக்கியதோ அதைத் தன்னுடன் வரவேற்று அணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை. ஆகவே சிவன் அனைத்தையும் சிவமாக்கித் தனக்குள் சக்தியாக இயக்கச் செய்வது தான்.

எல்லாவற்றையும் இயக்குவதும் உருவாக்குவதும் தான் உயிரின் வேலை.
1.அதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான் பிரம்மாவோ உருவாக்குகின்றான் என்று சொல்வது.
2.நாம் எண்ணியதை நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி
3.ஜீவ அணுவாக ஆனபின்… எந்த எண்ணமோ அதை மீண்டும் உருவாக்குவது தான் பிரம்மாவின் வேலை.

நாம் எண்ணியது அனைத்தையும் தனக்குள் ஜீவ அணுவாக மாற்றுவது தான் உயிரின் வேலை. நாம் எண்ணியதைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை.

ஒருவர் நல்ல சொல்லைச் சொல்கின்றார். அதை நாம் கேட்கும் பொழுது உடனே உயிர் ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

மீண்டும் அந்தச் சொன்னவரை நாம் நினைக்கின்றோம்
1.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட அலைகள் இங்கே உண்டு
2.அதை மீண்டும் கவர்ந்து நாம் சுவாசித்து “உயிரின் வழி தான்” அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் (முடியும்).
3.உயிர் அதை இயக்கிக் காட்டி இந்த உணர்வினை உடலுக்குள் பரப்புகின்றது.
4.அவர் சொன்னது உடலில் ஜீவ அணுவாக இருக்கும் பொழுது அந்த நல்ல அணுக்களுக்கு இது உணவாகப் போய்ச் சேர்கின்றது
5.அந்த நல்ல அணுக்கள் விளையத் தொடங்குகிறது.

உயிரின் வேலையையும் அதனின் இயக்கத்தையும்… உடலின் வேலையையும் உடலாக ஆவதைப் பற்றியும்… அறிந்து கொள்வதற்கே இதை உணர்த்துகின்றோம்.

ஆதியிலே இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அந்த அகஸ்தியன்… அவன் வாழ்க்கையில் தான் கண்டறிந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் விண்ணிலே மின்னிக் கொண்டிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்ற அனைவருமே பிறவி இல்லா நிலை அடைந்து பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டே உள்ளார்கள். இந்தப் பேரண்டத்தில் மனிதனாகி ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் என்றுமே அதற்கு அழிவில்லை.

சூரியன் அழியும்… மற்ற பேரண்டங்கள் எவையாக இருப்பினும் அவைகளும் அழிந்து விடும். ஆனால்
1.உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி… ஒளியின் சரீரமாக மாறிவிட்டால் அதற்கப்புறம் பிறவி இல்லை… அழிவே இல்லை…!
2.அதிலிருந்து உருப்பெரும் உணர்வுகள் உயிரணுக்களுக்கு வழிகாட்டியாக அமைந்து
3.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளில் ஒளியாக உருவாக்கிக் கொண்டே இருக்கும்

விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒளி கொண்டு திக்கெட்டும் பாயட்டும் உயர் ஞான ஒலிகளாக…!

 

நம் செவியில் படும் ஒலி நாதத்தின் ஈர்ப்பிற்கொப்ப… எண்ண உணர்வு சமைக்கப்படும் அணு வளர்ச்சி கொண்டு தான் “உடல் வாழ்க்கை” நடக்கின்றது.

உடலின் இயக்கத்தால் எடுக்கக்கூடிய நம் எண்ண நிலையின் செயல் உணர்வு நிலைக்கொப்ப அணு வளர்ப்பின் முலாமைத் தான் (ஆத்மாவில்) நாம் பெறுகின்றோம்.

அதனால் வாழ்க்கையுடன் ஒன்றிய ஈர்ப்பு வட்டத்தில் ஒலி கொண்டு ஒலி பெறும் இச் சரீர இயக்கத்தை
1.உயர் நாத விந்து வளர்ப்பு நிலை பெறத்தக்க
2.ஒலி நிலை கொண்ட ஒளி பெறும் (மகரிஷிகளின் அருள் சக்தி)
3.காந்த மின் அலைத்தொடர் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

உயர் ஞான சக்திகளின் வளர்ப்பாக உடலில் ஒளியான அணுக்களை உருவாக்கி… அதன் மூலம் உடலின் எலும்புகளின் ஊன்களை உறுதியாக்கும் தன்மை பெற்றால் நம் ஆத்மாவே ஒளி நிலை கொண்ட “ஜோதி நிலை” அடைகின்றது.

1.எதனின் ஈர்ப்புப் பிடியிலும் சிக்காத இந்த ஆத்மாவின் ஒளிப் படர்வின் செயலினால்
2.ஒளி பெற்ற ஆத்ம சரீர அலையிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகள்
3.ஒளி கொண்டு திக்கெட்டும் பாயும் உயர் ஞான ஒலிகளாக…!

ஒலி பாய்ச்சி ஒளி கொண்டு எத்தொடரில் உயர் ஞான சக்தியினால் எடுக்கப்பட்ட சொல் நாதம் ஒலிக்கின்றதோ அச்சொல்லின் செயல் “வாக்காகச் செயல் கொள்ளும்…”

“சொல் வாக்குப் பெற்ற சக்தி நிலை” என்பது
1.விழி கொண்டு பாய்ச்சப்படும் ஒளியின் கூர்மை கொண்டு…
2.ஒளி வழித் தொடர் அலையின் உயர்வு நிலை…
3.“ஒளி பட்ட இடத்திலேயே செயலாக்கம் ஆகும்…”

அதாவது… எரியும் பொருள்களில் சிறு நெருப்புப் பொறி பட்டவுடன் சிறு நெருப்புப் பொறியானது பெரும் நெருப்பாகச் சகலத்தையும் பஸ்பமாக்குகின்றது.

அதைப் போன்று இவ்வொளியைப் பாய்ச்சி உயரக்கூடிய வழி நிலைக்கும்
1.ஒலி கொண்டு ஒளி பெற்ற “விழி ஒளியின் கூர்மை கொண்டு”
2.எந்த அலைத் தொடரையும் மாற்றவல்ல “ஒளி நிலை பெறலாம்” இந்த ஒளி நிலை ஞானத்தால்.

சரீரத்தின் எண்ண உணர்வைச் செலுத்தப்படும் செயல் கொண்டு
1.செயலின் வழி ஞானம் மிகவும் கூர் பாய்ச்சிய தன்மையில்
2.வாழ்க்கை வழி முறையில் அதை மிகவும் சாந்தத் தன்மையில் செயல்படுத்த வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் திருமூலர்.

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த வான இயல் தத்துவத்தைக் பின் வந்த திருமூலர் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

“தில்லை…” என்பது ஒரு எல்லை. எல்லை இல்லாத உலகில் தில்லை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் ஒரு கோள் என்ற நிலைகள் வருகின்றது. பரம் என்ற நிலையும் பரம்பொருள் என்ற நிலைகள் உருவாகின்றது.

“தில்லை நடராஜா…” என்று நம் பூமியின் செயலுக்குக் காரணப் பெயரை வைத்தார். நம் பூமி “நிற்காமல்… சுழன்று கொண்டேயிருக்கின்றது” என்பதைத் தில்லை நடராஜா என்று பெயரை வைத்தான்.

அது உருவமில்லாத நிலைகள் கொண்டு அருவம் என்ற நிலைகள் உணர்த்தப்படும் பொழுது
1.“திரு ஆவடையச் சுழலச் செய்து…” மனித உருவைப் போட்டு இவனே சிவன் என்றும்
2.இயக்கத்தின் நிலைகளில் “நடனமாடுகின்றான்…” என்றும் காட்டினார் திருமூலர்.

அந்த உணர்வின் தன்மை உராயப்படும் பொழுது உணர்வுக்கொப்ப இங்கே உருமாறுவதும் உணர்ச்சிகள் எவ்வாறு வருகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார்.

திருமூலர் கூறியது… “நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது”.

ஆதியிலே ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது அது ஆவியாக மாறி எடையற்றதாக மாறி நாளடைவில் விஷமாக மாறி நெடி கலந்த உணர்வாக மாறி நெடியின் தன்மை வரப்படும் பொழுது புதிதாக உருவாவதை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது “நெருப்பு” உண்டாகின்றது.

நெருப்பாகும் பொழுது உணர்வின் தன்மை தாக்குண்டு நகர்ந்து ஓடும் பொழுது அங்கே ஈர்க்கும் “காந்தம்” வருகின்றது.

ஓடும் நிலைகளில் தாக்கும் நிலையில் வெப்பமாகும் பொழுது பராசக்தி என்றும் தாக்குதலால் நகர்ந்து ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தாக்குதலால் இயக்கச் செய்த விஷத்தை ஆதிசக்தி என்றும் கண்டுர்ந்தார் திருமூலர்

1.“கருமாரி…” (கருமாரி – உருமாறி) ஒன்றுக்குள் ஒன்று உருவாகி
2.அது மாற்றலான நிலைகளைச் செய்கின்றது என்றும் கருமாரி என்று திருமூலர் பெயர் வைக்கின்றார்.

ஆதி இலட்சுமி பெண்பால் தான். ஆதிபராசக்தி வெப்பம். கருமாரி என்பது
1.ஒரு விஷத்தின் தன்மை ஒன்றுக்குள் சென்றபின்
2.அது “மாற்றமடைந்து… மாற்றமான” நிலைகளைச் செயல்படுத்தும்.

தாக்குதலால் வெப்பமானது.. ஈர்க்கும் காந்தமானது…! ஆனால் ஈர்க்கும் காந்தமான பின் அது எதனைக் கவர்கின்றதோ அந்த மணத்தை இந்த “விஷம் இயக்கிக் காட்டும்.. கருமாரி…”
1.அது எதனுள்ளும்… “ஊடுருவி” அது மாற்றலான உணர்வை
2.அது இயக்கிக் காட்டும் என்பதைக் காரணப் பெயராக வைத்தார் திருமூலர்.

இதைப் போன்று மோதுண்டு மோதுண்டு ஆவியாக மாறி இணைந்து கொண்டு இணைந்து கொண்ட அணுக்களின் உருமாற்றமாகி மோதலில் வெப்பமாகிக் கவர்ந்து கொண்ட உணர்வு ஆவியாகி மேகமாக மாறி மேகக் கூட்டத்திற்குள் அணுக்கள் மோதும் பொழுது நீராகி நீருக்குள் அணுக்கள் சிக்குண்டு ஓர் பரம்பொருளாகி “இப்படித்தான்… உலகம் பிறந்தது…” என்று திருமூலர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆனால் திருமூலரின் தத்துவத்தை இன்று அதைத் “திருமூல மந்திரம்” என்று பறைசாற்றி மாற்றி விட்டனர்.

திருமூலர் இந்த இயக்கத்தின் உண்மையை உணர்ந்து தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…! என்று பெயர் வைக்கின்றார்.

தில்லை நடராஜா என்பது பூமி. தில்லை அம்பலம் என்பது நம் உடல். ஒரு எல்லையாக வாழ்கின்றது.

இந்த உணர்வின் தன்மை எதுவோ…
1.அதற்கொப்ப இந்த உடலின் அமைப்பும்
2.இந்த உடலுக்கொப்ப மனிதனின் இயக்கமும்
3.இந்த உடலுக்கொப்ப அந்தச் செயலும்
4.இந்த உணர்வுக்கொப்ப செயலும்
5.உணர்வுக்கொப்ப உடலும் என்ற நிலையைத் திருமூலர்
6.“தன் இன மக்கள் அறிய வேண்டும்” என்பதற்காகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதை யாராவது தெரிந்திருக்கின்றோமா…? உணர்ந்திருக்கின்றோமா…?” என்றால் தில்லையம்பதியில் வாழ்பவர்களுக்கே தெரியவில்லை.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய இயற்கையின் பேருண்மையின் நிலைகளை
2.“எல்லோரும் அறிய வேண்டும்.. அறிய முடியும்” என்ற நோக்கில் தான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழுங்கள்.

அருள் ஞான வளைய(ம்)ல்

 

குடும்பத்திலே தாய் கர்ப்பமாக இருக்கிறது என்று தெரிந்து விட்டால் தயவு செய்து வீட்டிலே யாரும் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்.

ஒருவருக்கொருவர் மாறுபட்ட எண்ணங்கள் உணர்வுகள் வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும்… ஒழுக்க நிலைகள் பெற வேண்டும்
2.கருவில் வளரும் சிசு ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டே வாருங்கள்.

அக்கம்பக்கத்தில் புறநிலைகளில் வரக்கூடிய குறைகளையும் துன்பங்களையும் உற்று நோக்கி அதை மனதில் எண்ணி வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

ஆகவே அது போன்ற சந்தர்ப்பங்கள் வந்தால் அந்தப் பத்து மாதங்களிலும் ஒரு கடுமையான விரதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் கருவில் வளரும் சிசு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள் கருவுற்றிருக்கும் அந்த தாய்க்கு அந்த உணர்வுகளை செலுத்துங்கள்.

இது தான் “வளைகாப்பு…” என்பது.

ஏழு எட்டு வகையான உணவு வகைகளைப் போட்டு… போட்ட பின் அதைச் சரியாகச் செய்யவில்லை. தங்கத்திலே வளையல் செய்து போட்டார்களா…? என்கிற வகையில்
1.கர்ப்பத்தில் இருக்கக்கூடிய தாய்க்கும் சரி… அந்தக் குடும்பத்தாருக்கும் சரி… வேதனையை உருவாக்கி
2.இது போன்ற சாங்கியத்தால் கருவில் வளரும் குழந்தை ஞானக் குழந்தையாக வளர்வதற்கு மாறாக நஞ்சை வளர்த்து விடுகின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் விடுபட்டு “உதறித் தள்ளுங்கள்…” நமக்கு வேண்டியது என்ன…?

தாய் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்று இப்படி எல்லோரும் எண்ணினால்
1.அந்தக் குழந்தை நோயற்ற குழந்தையாக உருவாகும்… உலக ஞானம் பெறும்
2.பிறந்து வாழ்க்கையில் அது வளரும் பொழுதே அந்தக் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்
3.மெய்ப்பொருளைக் காணக்கூடிய சக்தியும் பெறும்.

ஆகவே குழந்தைகளை அரும் பெரும் ஞானிகளாக ஆக்குங்கள். கருவிலே வளரும் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் எண்ணினால்
1.நீங்களும் ஞானியாகின்றீர்கள்
2.உங்கள் குழந்தைகளும் ஞானியாகின்றார்கள்.

பத்து மாதங்கள் இவ்வாறு எண்ணிக் கருவிலேயே குழந்தையை ஞானியாக உருவாக்கி விட்டால்
1.குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் இருந்தாலும் அது ஓடிப் போய்விடும்…
2.எந்தத் தொல்லையும் அங்கே நிற்காது.

ஆகவே வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்றாவது ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானம் செய்ய வேண்டும்.

டிவி பார்ப்பதற்கோ சினிமாவிற்குச் செல்வதற்கோ குடும்பத்தில் அனைவரும் ஒன்றாகச் சேர்கின்றோம். டிவியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது… வீட்டின் பின் கதவைத் திறந்து திருடன் பொருளை அபகரித்துச் சென்றாலும் உள்ளே இருப்பவருக்கு ஒன்றும் தெரிவதில்லை.

இப்படித்தான் நாம் இருக்கின்றோம்…!

டிவி பார்க்க வேண்டாம்… பார்க்கக் கூடாது…! என்று சொன்னாலும் நீங்கள் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. அப்படியே பார்த்தாலும் ஒரு பத்து நிமிடமாவது எல்லோரும் அமர்ந்து கூட்டுத் தியானமிருந்து
1.எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உலக ஞானம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்
4.அந்தக் குழந்தைகளுக்கு இதையே ஆசிர்வாதமாகக் கொடுத்துப் பாருங்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு “வளைகாப்பு” என்று பல வகை உணவுகளைப் போட்டு எல்லோரும் வளையலைப் போடுவது போல்
1.அருள் ஞான உணர்வுகளை காப்பாக வளையலாக இதைப் போட்டுக் கொள்ளுங்கள்
2.இது அருள் ஞான வளையல்…!

புறத்தில் வளையலைப் போடுவதைக் காட்டிலும்… அருள் ஞானக் காப்பாக “மகரிஷிகளின் அருள் சக்தியை வளையலாகக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும்… அந்தத் தாய்க்கும்… வீட்டில் உள்ள அனைவரும் போட்டுப் பாருங்கள்…”

பிறக்கக்கூடிய குழந்தை “ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்… ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்…!” என்று எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்.

உங்கள் அனைவருக்கும் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்கள் பார்க்க முடியும். பிறந்த பின் அந்தக் குழந்தை
1.ஞானத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றும்
2.குடும்பத்தில் எவ்வளவு செழிப்பு வருகிறது என்றும்
3.அப்பொழுதாவது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்… இது உங்கள் அனுபவத்தில் காண முடியும்.

எங்கெங்கோ சென்று எது எதற்கோ நேரத்தைச் செலவிடுகிறோம். மணிக்கணக்காக டி.வி பார்க்கிறோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தத் தியானத்தை தினமும் எடுத்துப் பாருங்கள்..

1.தொடர்ந்து அதைச் செய்ய செய்ய டிவி பார்க்கும் அந்த மோகம் போய்விடும்
2.டிவியைப் பார்த்து நுகர்ந்த தீய அலைகளும் ஒடுங்கிவிடும்.
3.அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க டிவியில் பார்த்த (படமாக) மாதிரி
4.உலக ஞானத்தையும் உங்கள் மனக்கண்ணால் பார்க்க முடியும்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைவதையும் பார்க்கலாம். உங்கள் நினைவுகள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் இணைந்து… உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும்.

நல்லதை உருவாக்க சகுணத்தைக் காட்டினால் அதை “நல்ல சகுணம்… கெட்ட சகுணம்” என்று பிரித்து விட்டார்கள்

 

கழுதையின் சரீரச் செயலே பல சுமைகளைச் சுமக்கவல்ல ஜட உணர்வு கொண்ட அமைப்பில் உள்ளது. கழுதை அதன் கூட்டமைப்பு உருவம் பெற்ற ஜெனிப்புத் தன்மைக்கொப்ப அதனுடைய ஒலித் தன்மை “விகார நிலையில் ஒலிக்கின்றது…!”

இதனை நம் முன்னோர்கள் ஒலியின் விகாரத்தை மனித உணர்வு பெற்றால் என்ன நடக்கும்…! என்று உணர்த்தினார்கள்.

ஒரு விகாரமான ஒலித் தன்மையை செவி நிலை பெற்று அதன் மூலம் அமையும் சுவாசத்தின் அணு வளர்ப்பு வளர்க்கும் நிலைக்கொப்ப எண்ணத்தின் உணர்வு செயல்படுவதை அன்றே நம் முன்னோர்கள் காட்டினார்கள்.

அதாவது மனித வாழ்க்கைக்கு… பூமி சுழற்சியில் பிறப்பெடுத்த ஜீவ ஜெந்துக்களின் தொடர்புடன் வாழ்க்கை நிலை ஒன்றியதனை
1.ஒலியின் நாதத்தால் மனித உணர்வு ஞானம் வழித் தொடர் அமையவல்ல நிலையை
2.நன்மை தீமை என்ற சகுணங்களை அடிப்படைக் குணமாகக் காட்டி
3.கழுதை கத்தும் ஒலியையே நன்மை என்ற சகுண நிலையைக் காட்டி
4.நல்லது நடக்க கழுதையின் கத்தல் உகந்தது…! என்று உணர்த்தினார்கள்.

மனித வாழ்க்கை அமைப்பில் மோதுண்டு சுழலுகின்ற ஜீவ ஜெந்துக்களின் தொடர்பில் இருந்தெல்லாம் மனித ஒலி ஒளி சமைப்பு நிலைக்கொப்பத் தான் மனிதனின் எண்ண உணர்வு செயல்முறை எண்ண வளர்ச்சி ஆகியன வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் தான் இதை இப்படி வழிப்படுத்தினர்.

இன்றல்ல நேற்றல்ல…! பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
1.ஒளியின் ஒலி நாதம் கொண்டு
2.உயருகின்ற உயர்வு நிலைக்காக வழியமைத்துக் காட்டினார்கள்.

ஒலி கொண்டு சேமிக்கப்பட்ட அமில உணர்வு எண்ண நிலைக்கொப்ப அதனதன் அணு வளர்ந்து… அந்த அணுவிற்குகந்த அமில முலாமின் கரைசலை ஜீவ சரீரங்கள் பெற்று… வளருகின்ற வளர்ச்சி நிலை ஒவ்வொன்றின் தொடரும் “ஒலி கொண்டு ஒளிரும் நிலை பெற்றது தான்…!”

அந்தந்தச் சரீரக்கூறின் அமிலச் சேர்க்கைக்கு ஒப்பத்தான் ஒலித் தன்மை ஒலிக்கின்றது.

கழுதை கத்தும் தருணத்தில்… அதனுடைய உணர்வின் சந்தோஷ மிகுதி உந்தும் வேளையில் அதன் கத்தும் ஒலியானது ஜீவ உணர்வுடன் தான் வெளிப்படுகிறது. அதை நாம் கேட்கும் பொழுது
1.அதனுடைய (சந்தோஷ) இனிமை உணர்வுக்கொப்ப இனிமை பெற்று
2.இனிய நற்காரியங்கள் நடைபெறுவதை உணர்த்தியது
3.நம் முன்னோர் காலத்திலிருந்தே வழி வழியாக வந்தது தான்.

ஒலிக்கும் ஒலியைக் கொண்டு… அவ்வொலியை நாம் ஈர்க்கும் நிலைக்கொப்ப…
1.நம் எண்ணத்தின் உணர்வு எடுக்கும் அலைத் தொடரைக் கொண்டு
2.மனித வாழ்க்கையில் செயல் கொள்ளகூடிய செயல் முறை உந்தல் நடைபெறுகின்றது என்று தெளிவாக்கினார்கள் முன்னோர்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது ஒரு கீரியும் நல்ல பாம்பும் போர் செய்து கொண்டிருக்கின்றது.

இது அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால் அது இதைத் தாக்க எண்ணுகின்றது.

பாம்பு சீறித் தாக்கினாலும் கீரி அதனிடம் சிக்குவதில்லை. கீரி தாவிச் சென்று அந்தப் பாம்பைத் தான் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று அதனின் விஷத்தன்மையைப் பாய்ச்சுகின்றது.

ஒரு மணி நேரம் போர் முறையாக இருக்கின்றது. நின்று பார்க்கும்படிச் சொல்கின்றார் குருநாதர். ஆனால் மனிதன் அருகே நிற்கின்றான்… “தன்னைத் தாக்கிவிடுவான்” என்று இல்லை.

“எதிரியை வீழ்த்திவிட வேண்டும்..,” என்ற உணர்வுகளில் தான் இரண்டும் போர் செய்கின்றது.

அங்கே நின்று வேடிக்கை பார்க்கின்றேன். பாம்பு மனிதனைக் கண்டால் சீறித் தாக்கும் அல்லவா..,? இல்லை…! எதனின் நிலைகளில் தன் எதிரியைத் தாக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அதிலேயே தான் இருக்கின்றது.

“அருகில் சென்று நில்…!” என்கிறார் குருநாதர். அதனுடைய போர் முறையில் தான் இருக்குமே தவிர உன்னைத் தாக்காது… என்று அருகில் சென்றே பார்க்கும்படி செய்கின்றார் குருநாதர்.

போர் செய்யும் பொழுது தவறி அந்தப் பாம்பின் விஷத்தன்மை கீரியின் உடலில் தாக்கிவிடுகின்றது.

1.விஷத்தின் தன்மை ஆனபின்… கீரி “கிறு..கிறு…” என்று சுழல்கின்றது.
2.சுழன்று சுற்றி வரப்படும் பொழுது “விஷத்திலிருந்து விடுபடும் அந்த மணத்தை எப்படி நுகர்கின்றது…?” என்று உணர்த்துகின்றார் குரு.

அந்த மணத்தை நுகரப்படும் பொழுது விஷத்தை முறிக்கும் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் இருக்கும் “அந்தத் திசையை நோக்கிப் போகின்றது…”
1.கீரியின் மேல் விஷம் தாக்கப்பட்ட பின்… “முதலில் முடியாது” இருக்கின்றது
2.அந்த விடுபடும் மணத்தை நுகர்ந்து… “போகப் போக… வேகம்…” அதிகமாகின்றது.

அதைப் பின் தொடர்ந்து “போய்ப் பார்…!” என்று சொன்னார் குருநாதர்.

கீரியின் பின்னால் நான் சென்றேன்.

முதலில் மெதுவாகப் போனது… அந்தச் செடியின் அருகிலே செல்லும் பொழுது ரொம்பவும் வேகமாகப் போனது. போய் அந்தச் செடியின் மீது பிரள்கின்றது.

பிரன்டபின் அதற்குள் இருக்கும் நஞ்சின் உணர்வுகள் மாறுகின்றது. நான் கீரி எந்தச் செடியின் மீது பிரள்கின்றது…? என்று பார்ப்பதற்கு முன்னாடி “திருப்பி ஓடி வருகின்றது…”

ஓடி வந்த பின் மீண்டும் அந்தப் பாம்பைத் துரத்தி இரண்டும் சண்டையிடுகின்றது. பழி தீர்க்கும் உணர்வாக அது செயல்படுத்துகின்றது. பாம்பை இரண்டாகக் கத்திரித்து விட்டது.

1.பாம்பு சீறித் தாக்கினாலும் தன்னைப் பாதுகாத்திடும் சக்தியாக இந்த உயிரினங்கள் எப்படி உருவாகின்றது…?
2.அதிலிருந்து ஒவ்வொன்றும் எப்படி படிப்படியாகத் தன் வளர்ச்சியில் வருகின்றது…?
3.விஷத்தை முறிக்கும் அந்த ஞானம் எப்படி வந்தது…? இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

அந்த விஷத்தின் தன்மை அதன் உணர்வுக்குள் பட்டபின் அதிலிருந்து தப்பிக்கும் அந்த உணர்வின் ஞானம் கீரிக்கு வருகின்றது.

இப்படித்தான் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றும் நுகர்ந்து கொண்ட பின் தீமைகளைப் போக்கி தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து “இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது….!” என்பதை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

அதே சமயத்தில்
1.இத்தகைய விஷத் தன்மை கொண்ட நிலைகளிலிருந்து மீட்டிடும் உணர்வுகள் அதனுடன் இணைந்து
2.அத்தகைய “விஷத்தை முறித்திடும் தாவர இனங்கள்… எப்படி உருவானது…?” என்ற நிலையையும் காட்டுகின்றார்.

குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டி இப்படி அறிந்து வந்த உண்மையைத்தான் உங்களுக்குள்ளும் இதை உருவாக்குகின்றோம்.

சந்தர்ப்பத்தில் நீங்கள் செல்லப்படும் பொழுது மணத்தால் நுகர்ந்து இந்தச் செடியின் தன்மையை அறியும் பருவம் உங்களுக்குள்ளும் வரும்.

இதைப் போல உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் பெருகும். நீங்கள் வைத்தியமாகவும் பார்க்கலாம்.

இப்பொழுது உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவான பின் இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து
1.நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
2.பெருக்கிக் கொண்டால் ஒரு விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை
3.“உங்கள் பார்வையால் அது போக வேண்டும்…” என்றால் அந்த விஷத்தின் தன்மை இறங்குவதையும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நீங்கள் நண்பர்களாகப் பழகுகின்றீர்கள். “வெகு தொலைவில்…” இருந்தாலும் நண்பருக்கு நோய் என்று சொன்னால் அந்த நோய் நீங்க வேண்டும் என்று “உணர்வைச் செலுத்தினால்” அங்கே விஷத்தன்மைகள் குறைவதைப் பார்க்கலாம்.

இதைப் பரீட்சித்துப் பாருங்கள்.

உங்களுக்குள் இதனின் ஞானத்தின் வழி கொண்டு “தீமைகளை அடக்கிடும்… தீமைகளைப் போக்கிடும்… மெய்ப்பொருளை உணர்ந்திடும் அந்த ஆற்றலை…” உங்களுக்குள் பெருக்க முடியும்.

உங்களை நம்புங்கள்.

துன்பம் வரும் பொழுதெல்லாம் உபதேச வாயிலாகக் கேட்டுணர்ந்த உணர்வுகள் கொண்டு
1.உங்கள் எண்ணத்தை “விண்ணிலே செலுத்துங்கள்…”
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நுகருங்கள்
3.துன்பங்கள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்… அதன் வலிமையைக் குறைக்கச் செய்யுங்கள்.

வலிமையைப் பெருக்கிய அந்த அணுவின் தன்மை வளரத் தொடங்கினால் நாளடைவில் தீமைகள் வந்தால் அந்த விஷத் தன்மைகளை வலுவிழக்கச் செய்யும்.

நம் உடல் எவ்வாறு உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றுகின்றதோ அதைப் போல நஞ்சின் தன்மை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.

இதை “எல்லோரும் பெறுவீர்கள்” என்ற நம்பிக்கையில் தான் இதைப் பாய்ச்சுகின்றேன். குரு அருளைத் திரு அருளாக மாற்றி “அனைவரும் அருள் பெறும் மக்களாக” நீங்கள் உருவாக வேண்டும்.

உங்கள் பார்வையில் இருளைப் போக்க வேண்டும்.
உங்கள் பார்வையில் துன்பங்கள் போக்க வேண்டும்.
உங்கள் பார்வையில் பிணிகள் போக வேண்டும்.
உங்கள் சொல்லில் பிறருடைய இன்னல்கள் நீங்க வேண்டும்.
உங்கள் செயல்கள் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்.
உங்கள் செயல்கள் மற்றவர்களை உயர்த்தும் நிலைகள் வரவேண்டும்.

அந்த வளர்ச்சியை நீங்கள் எல்லாம் பெற வேண்டும் என்று “குரு அருள்… எமக்கு உபதேசித்த உணர்வை” உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

குடும்பங்களில் “கொடி போல் வரிசையாகப் படர்ந்து வரும்” சாப அலைகளின் இயக்கங்கள்

 

ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ வகையான சாப அலைகள் சாடி உள்ளது (நமக்குத் தெரியாமலே…!)
1.நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அதில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றீர்கள்
2.நல்லவர்களாக வேண்டும் என்று முயற்சித்தாலும் சாப வினைகள் கலந்து
3.வாயிலே விஷம் கலந்தது போன்று வாழ்க்கையில் ஈடேற முடியாத நிலைகளில் சாப வினைகள் தடுத்துக் கொண்டுள்ளது.

சாப வினைகளையும் பாப வினைகளையும் சுட்டுப் பொசுக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளோர் வலுவாக எண்ணினால் அவைகள் நீங்கும்.

இன்று பார்க்கலாம்…! ஒன்றுமறியாத இளம் குழந்தைகளாக இருந்தாலும் கூட சாப அலைகளால் கை கால் முடமாகி… நாளுக்கு நாள் குறுகி எத்தனையோ அவஸ்தைகள் படுகின்றது.

ஒரு குடும்பத்தில் செழித்த நிலைகள் செல்வங்கள் இருப்பினும் எனக்கு எப்படி இந்தக் கதியானதோ… உன் குடும்பமும் இப்படித்தான் போகும்…! என்று யாரோ சாபமிட்ருப்பார்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய் இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் போதும்.
1.சாபம் இட்ட உணர்வின் வீரிய சக்தி அந்தக் குடும்பத்தில் வாழும் பெண் கொடி வழியில் அது படர்ந்து வந்து
2.அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் கெடுத்து… அவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் படுவதைப் பார்க்கலாம்.

எல்லோருக்கும் நல்லது தான் செய்வார்கள்… நல்ல குணங்கள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் கொடி வழி வந்த அந்தச் சாப வினைகள் அவர்களை ஈடேற விடுவதில்லை.

அதே சமயத்தில் எல்லோருக்கும் பரிபக்குவ நிலைகளை நாம் செய்திருப்பினும்… அன்புடன் பண்புடன் பழகி மற்றவருக்கு உதவி செய்வோராக நாம் இருந்தாலும்…
1.ஒரு ட்ரெயினிலே போகும் பொழுது சாதாரணமாக ஒருவருடன் பழகி இருப்போம்… உதவி செய்திருப்போம்
2.ஏனென்றால் கஷ்டமாக அவர் இருந்திருப்பார்… நாம் உதவி செய்த உணர்வோ ஆழமாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

கஷ்டங்களைப் பட்டவராக இருப்பதால் “அவருடைய சந்தர்ப்பம்” அவர் வீட்டுக்குச் சென்ற பின் ஹார்ட் அட்டாக் வந்தோ அல்லது திடீரென்று அதிர்ச்சியினாலோ இறந்து விடுகிறார்…! என்று வைத்துக் கொள்வோம்.

அவர் உயிர் பிரியும் நேரம்… உதவி செய்த நம் மீது தான் அவருடைய எண்ணம் வரும்.
1.காரணம் அவருக்கு நாம் உதவி செய்த நன்றிக் கடனாக நம்மை எண்ணுவார்.
2.ஆக… ஹார்ட் அட்டாக்கில் இறந்த அந்த உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும்
3.வந்த பின்… அவருக்கு எப்படி அந்தப் பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலை இங்கேயும் வருகின்றது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் அவ்வாறுதான் செயல்படுகின்றது. இதை யாரும் குறையாகச் சொல்வதற்கு இல்லை…!

ஆனால் இது போன்ற நிலைகள் வராது தடுக்க வேண்டுமா இல்லையா…!

ஆறாவது அறிவு துணை கொண்டு விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்திக் கொண்டால் மனிதன் முழுமையாகின்றான்.

இல்லை என்றால் மீண்டும் நரகலோகம் தான்…! (மீண்டும் பிறவி நிலை) என்று சாஸ்திரங்களில் தெளிவாகத் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

தேளுக்குக் கொடுக்கிலே விஷம் இருக்கின்றது ஆனால் உணவு உட்கொள்ளும் போது எத்தனையோ வேதனைப்படுகின்றது. மற்ற எதிரிகளிடமிருந்து தப்பித்து வாழ “அஞ்சியே வாழ்கின்றது…”

இது போன்று ஒவ்வொரு உயிரினங்களும் எத்தனையோ வகையில் அல்லல்படுகின்றது… நரக வேதனைப்படுகின்றது இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

1.அது போன்ற வேதனைப்படும் உயிரினங்களாக மீண்டும் பிறவிக்கு வந்து
2.இன்னொரு இழி நிலையான சரீரத்திற்குள்ளே சென்று விடாதபடி
3.இந்த மனித வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் ஆற்றல்களைப் பெற்றுத் தீமைகளை அகற்றி
4.நம்மை அறியாது சேர்ந்த சாப வினைகளையோ பாவ வினைகளையோ நீக்கி
5.வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்து வாழும் அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டும்.

இந்த உடலை விட்டு அகன்றால் நம் எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்…! அந்த எல்லையை அடிப்படையாக வைத்து வாழ்க்கை வழி நடத்தினால் தான் அது சரியாக இருக்கும்.
1.யாரும் என்னை மதிக்கவில்லை… எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்…! என்ற
2.பிறருடைய எண்ணங்களோ அல்லது அது போன்ற உணர்வின் இயக்கமோ நம்மைக் கீழே இழுத்து விடாது…!

ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக நாம் வளர்க்க வேண்டியது எதை…?

 

சப்த கோடிகளே….
சகல நாத விந்துக்களே…
மணமாகி ஒளியாகி நீராகி நிகழுகின்ற உருக்கோல ஜீவ திட சக்தி தொடர் நிலைகளே…
“கல்கி நிலை உருவாக உருத்தாருங்கள்…!”

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலிக்கின்ற “ஓ…ம்” என்ற இப்பூமியின் நாத சுழற்சியில்… ஓ…ம்ம்ம்ம்… என்ற நாதத்தில் தான் நம் பூமி ஜெனித்து ஓடிக் கொண்டுள்ளது.

பூமியின் நாதத்தில் வளர்கின்ற பல கோடி நாதத் தொடர்பால் ஒலி கொண்டு ஒளி பெற்ற இச்சரீர (நம் உடல்) கோள நாதமாக
1.ஓமுக்குள் ஒமாக… நாதத்திலிருந்து நாதமாக
2.நம் நாத ஒலி சுழற்சியில் ஓம் என்ற கோளமாக
3.பிறிதொரு கோளத்தை உருவாக்கும் நாத விந்து வளர்ச்சியை நாம் பெற வேண்டும். (அது தான் மண்டலப் படைப்பு)

அதைப் பெற்றோமானால் ஓ…ம் என்ற நாதத்துடன் உருளுகின்ற உலகைப் போல் இம்மனித சரீர பிம்பத்தில் ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி சுவாச நாதம் வளர்க்கும் விந்துவின் இந்திரிய வலுவைக் கொண்டு உடலை இயக்கும் ஆத்மாவின் ஈர்ப்பு வட்டத்தில் ஜோதி நிலை (ஓளி நிலை) அடையலாம்.

சூரியன் தன் ஒளியின் நாத சுழற்சியைக் கொண்டு சூரிய வட்டத்தில் உள்ள பல கோள்களுக்கும் “ஒளி தந்து…” ஒலி பெற்று… தன் சுழற்சியின் கூட்டமைப்பின் சக்தியுடன் ஒன்றித் தானும் வளர்கின்றது.

அதே போல் நம் பூமியும் ஓ…ம் என்ற நாதத்துடன் “ஒளி பெற்று” ஒளியாக்கிச் சுழலும் தொடர்பைப் போன்று தான் மனித சரீரம் பல கோடி ஒலித் தொடர்புடன் ஒளி பெற்றுள்ளது.

அவ்வாறு உருவான இந்த ஆத்மாவிற்கு வலு கூட்டிக் கொள்ள சூரியனின் நிலையை ஒத்த குண சமைப்பைப் போன்று சரீர உணர்வின் எண்ண சமைப்பு பிறிதொரு ஆத்மாவின் மேல் “ஒளி பாய்ச்சி” ஒலி பெற்று வலுக் கூட்ட வேண்டும்.

“ஒளி பாய்ச்சி” என்பது என்ன…?

இந்தப் பூமியின் சுழற்சியில் திடம் பெற்ற பல கோடிச் சரீரங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை. இருந்தாலும்… ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்தி நிலை “உயர்வு” கொண்டு இயங்குகிறது.

அவ்வாறு இயங்கக்கூடிய ஒலி… ஒளி… ஞானம்… செயல் திறன்… பொருந்திய சரீர உணர்வு கொண்ட எண்ண உணர்வுடன் தான் நாம் மனிதர்கள் செயல் கொள்கிறோம்.

சரீரத் தொடர்புடன் நம்முடைய உணர்வின் எண்ணம் செலுத்தும் வழிதனில்…
1.ஒருவரை நாம் பார்க்கும்… ஒளி பாய்ச்சும் நிலையிலேயே…
2.விழி படமெடுத்து…
3.நாசி சுவாசம் எடுத்து
4.ஒளியின் ஒலியாக நாத விந்துக்கள் உடலின் இந்திரிய அணு வளர்ப்பாக வளர்ந்து விடுகிறது.

இப்படி… “ஒளி பாய்ச்சி” ஒலி பெறும் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சரீர சமைப்பு சுழற்சி சுழன்று கொண்டேயுள்ள இத்தொடரில்
1.நம்முடைய உணர்வின் எண்ணத்தைப் பிறிதொரு ஈர்ப்பில் சிக்காமல்
2.நம் ஆன்ம வளர்ப்பு நிலையின் வலுத்தன்மை கொண்டு
3.ஞான குண ஒளி பாய்ச்சும் தன்மையினால்
4.எந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு பிறிதொருவரின் மேல் நாம் ஒளி பாய்ச்சுகின்றோமோ
5.அதன் தொடர் காந்த மின் அலை ஒளி ஈர்ப்புடன்
6.இச்சரீர ஈர்ப்பிற்கு சுவாச ஒலி எடுத்து… வித்துக்கள் வளர்ந்து
7.”ஆத்மாவின் வலு” ஒலி “ஒளியாகப் பதிவு கொள்கின்றது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அனுபவங்கள் பெறுவதற்காகக் காடு மலை மேடெல்லாம் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்றார் குருநாதர்.

காட்டுக்குள் உன்னை அழைத்துச் சென்றதும்
1.உனக்குள் துன்பப்படுத்தும் உணர்வுகள் ஏன் வருகின்றது…? என்று தெளிவுபடுத்தினார் குருநாதர்.
2,நானும் இதைத்தான் பெற்றேன்… “துன்பத்தில்தான்.., இன்பத்தைக் கண்டேன்”
3.துன்பத்திலிருந்துதான் இன்பத்தைப் பெறும் அணுக்களை நீ உருவாக்குகின்றாய் என்றார்.

நீங்கள் இந்த உபதேசங்களைக் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் வீட்டில் சங்கடமென்றோ வெறுப்பென்றோ அதன் மேல் நினைவினைச் செலுத்திடாது அருள் ஒளியின் உணர்வினை நீங்கள் பெறுங்கள்.

அப்படிப் பெற்றால்
1.துன்பத்தை நீக்கிடும் அருள் ஒளியின் உணர்வுகளை உங்கள் உயிர் “அந்த உயிரான ஈசன்… கருவாக உருவாக்கி”
2.அருள் உணர்வினை வளர்க்கச் செய்யும் சக்தி பெறுகின்றது.

இப்பொழுது உடலில் “கால் வலியாக இருப்பினும் சரி… மேல் வலியாக இருப்பினும் சரி… அல்லது எத்தகைய நோய் கொண்டவராக இருப்பினும் சரி… சிறிது நேரம் இதைக் கூர்ந்து பதிவாக்குங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் பெற்ற அந்த உணர்வை நுகர்ந்து உணர்வினை யாம் வெளிப்படுத்துகின்றோம்.
1.அந்த உணர்வுகளை உந்தச் செய்யும்போது அதனின் நினைவின் ஆற்றல் கண்ணுக்கு வந்து
2.ஞானிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அதன் வழி உங்கள் உடலில் தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வுகள் படர்ந்து அதை அடக்கிடும் நிலை வரும் பொழுது… அதை அடக்கிடும் அணுக்களாக உங்களுக்குள் பெருகும்.

இதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று தான் மணிக்கணக்கில் செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

உங்களுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நுகரச் செய்யவும் அணுக்களாக உருப்பெறச் செய்யவும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால்…
1.உங்கள் மனம் மாறும் பொழுதெல்லாம் இந்த அருள் உணர்வுகளை ஊட்டும்படிச் செய்கின்றோம்
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் இரண்டறக் கலக்கச் செய்கின்றோம்.

துன்பப்படுத்தும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க உணர்வுகளைச் செலுத்தும் பொழுது அது ஒடுங்கிவிடும். துன்பத்திலிருந்து மீண்டிடும்… “உபாயமும் ஞானமும்…” தக்க தருணத்தில் உங்களுக்கு உதயமாகும்.

அதன் வழி நீங்கள் செயல்படுத்தும்போது துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள். துன்பத்திலிருந்து மீட்டிக் கொள்ளும் ஆற்றல்கள் பெருகும்.

துன்பத்திலிருந்து மீட்டிய உணர்வுகள் உங்களிடமிருந்து மூச்சலைகளாக வெளிப்படும் பொழுது மற்றவர்களுக்கும் நல்ல உணர்வாகப் படரும். அதைச் சுவாசிக்கும் பொழுது துன்பத்திலிருந்து அவர்களும் விடுபடுவர்.

அறியாமல் வரும் துன்பங்களிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறும் நிலைக்குத்தான் எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில்… “ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்…”.

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரமாக “யாரோ செய்வார்…” என்ற நிலையில் தான் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

1.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்குகின்றது… நம் உடலாக மாற்றுகின்றது.
2.உடலுக்குள் உருவான அனைத்தையும் நம் உயிரே குருவாக நின்று இயக்குகின்றது என்பது தான் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்கள்.

ஆகவே துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே… இப்படி ஆகிவிட்டதே…” என்பதை எண்ணாமல்
1.அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற வேண்டும்” என்று இச்சைப்பட்டால்
2.துன்பங்கள் நீங்கி அங்கே மகிழ்ச்சி நிச்சயம் உருவாகும்.
3.எண்ணியதை… எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்… நம் உயிர் தான்…” நம் உயிர் அதை உருவாக்கிக் கொடுக்கும்.

நீங்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.

இரவு தூங்கும் முன்னும்… காலையில் கண் விழித்தவுடனும் “நாம் கட்டாயப்படுத்தி எண்ண வேண்டியது”

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியையும் அனைவரும் பெறும் பாக்கியத்தை ஏற்படுத்தியது. ஆகவே…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வின் துணை கொண்டு
2.நம் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நிலையில்
3.எத்தகைய இருளானாலும் எத்தகைய வேதனையானாலும்
4.அதை வென்றிடும் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.

இரவு தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்றுப் படுக்கும் பொழுதெல்லாம் இந்த முறைப்படி எண்ண வேண்டும்.

அடுத்து…
1.எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்து நோய்கள் நீங்க வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
6.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
7.உலக மக்கள் இன பேதம் இன்றி மன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி வாழ்ந்திடும் திறன் பெற வேண்டும் என்று அவசியம் படுக்கையில் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அதுவாக நீங்கள் மாறுகின்றீர்கள்…!

காரணம்… ஒருவருக்கொருவர் வரும் பேதங்களை எல்லாம் தவிர்த்தால் தான் “மனிதன்… மனிதனாக இன்று நாம் வாழ முடியும்…!” இந்தக் காற்று மண்டலத்தில் படர்ந்திருக்கும் பகைமை உணர்வுகள் அகல வேண்டும் என்றால் மேசே சொன்ன தியானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

இதை இப்போது பதிவு செய்து கொண்ட நீங்கள்
1.ஆங்காங்கு எந்த ஊர்களில் எந்த இடங்களில் இருந்தாலும்
2.இரவிலே இது போன்று அவரவர்கள் வீட்டில் இதைச் செய்து
3.அந்த அலைகளைப் பரப்பபடும் போது இந்தக் காற்று மண்டலத்தில் இது பரவுகின்றது

காலையில் எழுந்திருக்கும் பொழுது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானித்து விட்டு எங்கள் குடும்பம் முழுவதும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெற வேண்டும்… எங்களைப் பார்ப்போருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள்.

1.இவ்வாறு செயல்பட்டால் அந்தச் சக்தியை முதலில் நீங்கள் பெறுகின்றீர்கள்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்தில் எந்த நிலை வந்தாலும்… அதில் உள்ள இருளை நீக்கிப் பொருள் காணும் திறன் பெற்று… மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

“குறிக்கோளுடன் தான்…” நாம் தியானம் செய்ய வேண்டும்

 

இன்றைய மனித வாழ்க்கையில் பக்தி வழியில் நந்நெறியில் வாழ வேண்டும் என்று எண்ணி நடந்தாலும் நம் வாழ்க்கை நாம் எண்ணியபடி அமைவதில்லை.
1.அதற்கு ஊழ்வினை காரணம் என்று சொல்லப்படுகின்றது.
2,அதாவது விதி வழித்தான் எல்லாமே நடக்கும் என நம்புகின்றோம்.

துன்பங்களிலிருந்து மீளத் தெய்வ வழிபாடு முதலியன செய்கின்றோம். இருந்தாலும் முழுப் பயன் எவருக்கும் கிட்டுவதில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களும் மகரிஷிகளும் மனிதன் மெய் ஞானம் கொண்டு “விதியை மதியால் வெல்லலாம்…!” என்று சொல்லியுள்ளார்கள்.

“அந்த வழியில் மனித இனம் இது வரையிலும் கவனம் செலுத்தவில்லை…!” ஆனால்…
1.இன்றைய நிலை முழுக்க முழுக்க விஞ்ஞானத்தைப் போற்றும் நிலைக்கும்
2.விக்ஞான வாழ்க்கைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கும் வந்துள்ளோம்.

ஏனென்றால் விஞ்ஞான முன்னேற்ற வசதிகள் எல்லாம் இந்த உடல் வாழ்க்கைக்குத் தான் பயன்படும். இன்னும் சொல்லப் போனால் இன்று இந்த விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக “சகல ஜீவராசிகளும் மடிந்து போகும் தருணம்” வந்து விட்டது என்று உலகமே நடுங்கும் நிலைக்கு வந்து விட்டது.

இங்கே பாரத புண்ணிய பூமியில் ஞானிகள் சொன்னதெல்லாம் மறந்து விட்டோம். ஆனால் விஞ்ஞானியால் எதைச் செய்ய முடியுமோ அதை விட அதி அற்புத சக்தி வாய்ந்த எந்தச் செயலையும் மெய் ஞானிகளால் செய்ய முடியும்… அடைய முடியும்.

இப்படி இந்த உலகமே கேள்விக்குறியில் நிற்கும் இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன…?

மாமகரிஷிகள் மனித இனம் உய்ய மெய் வழியைக் காட்டுகின்றார்கள். அதன் வழியில் நடந்திட வேண்டும்.

1.முதலில் தாய் தந்தையரை தெய்வமாக வணங்கி
2.உயிரான ஈஸ்வரனைப் புருவ மத்தியில் எண்ணி வணங்கி
3.உணர்வுடன் கூடிய தியானத்தில் மகரிஷிகளை எண்ணி
4.அனு தினமும் தியானிப்பதன் மூலம் நம் உடலில் உயர் காந்த மின் நுண் அலைகள் பதிவாகும்
5.அதன் வளர்ச்சியைப் பொருத்து நம் ஊழ்வினையான தீய வினைகளைச் சக்தி இழக்கச் செய்ய முடியும்.

முருக குணங்களான அன்பு… பரிவு… பாசம்… வீரம்… ஞானம்… சாந்தம்.. மூலம் உயரிய சக்திகளைப் பெற்று… அதன் மூலம் நம் உயிராத்மாவிற்கு வலுக் கூட்டி… நாம் எண்ணியபடி வாழ்வை அமைத்துக் கொள்ள “மகரிஷிகள் தியானம்” ஒன்றே வழி.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தியானிப்பதன் மூலம்
1.நம்மை விட மேம்பட்ட சக்திகளான
2.மாமகரிஷிகளின் நேரடித் தொடர்பு கிடைக்கும்
3.அவர்கள் துணையும் கிடைக்கும்.

ஆனால் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமம் “எந்தக் குறிக்கோளுடன் தியானம் செய்வது என்பது தான்…!” நம் ஆத்மாவுக்கு வலுக்கூட்டிப் பிறவா நிலை என்னும் “தெய்வ சக்தி” நிலையைப் பெறுவது தான் நம் குறிகோள்.
1.அதற்கு நம் எண்ணம் பரிசுத்தமாக வேண்டும்
2.தியானத்தின் மூலம் எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்த முடியும்.
3.இத்தகைய முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மகரிஷிகளின் துணை எளிதில் கிடைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது என்று அறிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.

மேலும்…
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்
2.எப்பகுதியில் எந்தெந்த இடங்களில் அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ
3.அங்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்றார்.
4.அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை அறியச் செய்தார்
5.அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.

அறிந்து கொண்ட பின் எனக்குள் (ஞானகுரு) மட்டும் அது வளர்ந்தால் போதுமா…? இதைப் படிப்போர் “நீங்களும்… அதைப் பெற வேண்டும் அல்லவா…!”

ஆகவே “எல்லோரையும்… அதைப் பெறச் செய்…!” என்றார் குருநாதர்.
1.நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்… “நான் பெரிய மகான்…”
2.நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… என்று உனது பெருமையைக் காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.
3.ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்தும்படி…” நீ இதைப் பெறச் செய்தால்
4.நீ உயர்கின்றாய்.., அவர்களையும் உயர்த்துகின்றாய்… அந்த உயர்ந்த நிலைகளை நீ நுகர்கின்றாய்.
5.அவர்களும் உயர்கின்றனர்… அப்பொழுது நீயும் உயர்கின்றாய்..!

இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.

நீ இத்தனையும் கற்றுணர்ந்து எல்லாம் செய்த பின்… “நான் தான் இதையெல்லாம் செய்தேன்…” என்ற “அகம்” எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.

1.“ஒருவர் உயர வேண்டும்” என்ற உணர்வினை எப்பொழுது நீ ஊட்டுகின்றாயோ
2.“அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்” என்று எப்போது நீ ஆசைப்படுகின்றாயோ
3.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ
4.உருவான அந்த உணர்வு “உன்னை வலுவாக்கும்”.

அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையும் அவர்களையும் காக்கும் நிலையும் வருகின்றது.

ஆகவே நீ இதை எவ்வாறு செய்யப் போகின்றாய்…? எவ்வாறு வெளிப்படுத்தப் போகின்றாய்…? கடும் தீமைகள் எதிர்த்துத் தாக்கும் உணர்வின் உலகில் நீ வாழ்கின்றாய். இதிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…?

இப்படி அடிக்கடி எனக்குள் வினாக்களை எழுப்பி அந்த உண்மைகளை எல்லாம் உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். குருநாதர் எம்மை நெற்ப்படுத்தியதைத் தான் உங்களுக்கும் அப்படியே சொல்கிறோம்.

அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது

 

பாசத்தால் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு என்று எவ்வளவோ செய்வோம் “என் பையன் எப்படி வருவான் தெரியுமா…? என்று…!”

ஆனால் அவனுடைய சந்தர்ப்பம் கெட்டவர்களோடு பழக நேரும் பொழுது அவர்கள் உணர்வெல்லாம் சேர்ந்தபின் சில தவறான வேலைகளை அவன் செய்ய ஆரம்பிப்பான்.

1.சில வீடுகளில் பார்த்தால் ஒரே பிள்ளை என்று வைத்திருப்பார்கள்.
2.ஆனால்… அவனுடைய செயலைப் பார்த்தாலே தெரியும்… அவன் இஷ்டத்திற்குச் செயல்பட்டுக் கொண்டிருப்பான்.

டேய் கண்ணு இப்படிச் செய்யடா… அப்படிச் செய்யாதடா…! என்று அவனை மிகவும் கெஞ்சுவார்கள்… எதுவாக இருந்தாலும் அதை நயமாகத்தான் சொல்வார்கள்.

அவனும் உம்.. உம்.. சரி… சரி…! என்றே சொல்வான்.

ஆனால் அடுத்து அவனுக்குள் அந்த விஷத்தின் தன்மை அவனுடைய சேர்க்கையால் (அவனுடன் பழகுபவர்கள்) வந்து விட்டால் மீண்டும் தவறைத் தான் செய்வான். இதைத் தெரிந்து ரொம்ப ஏதாவது ஆகிவிட்டால் உடனே வீட்டிலே கோபித்துக் கொண்டு வெளியே சென்று விடுவான்.

அது போன்ற சந்தர்ப்பத்திலே நல்ல வழிகளை அவனுக்குச் சொல்லக்கூடிய நிலை இல்லாது போய் விடுகின்றது. அவன் கோபித்து வெளியே சென்ற பின் இவர்கள் தாய் தந்தையர்கள் மிகவும் வேதனைப்படுவார்கள்.

செல்வங்கள் கோடி இருப்பினும் அவர்களால் அடுத்து அந்தச் செல்வத்தை நாட முடியாது. குழந்தையோ விலகிப் போய்க் கொண்டிருப்பான். என் தாய் தந்தை என் மீது கோபித்து விட்டார்கள்… என்னை மறுத்து விட்டார்கள்… என்று சோறும் தண்ணீரும் இல்லாமல் வாடிக் கொண்டிருப்பான்.

செல்லமாகக் குழந்தைகளை வளர்க்கக்கூடிய குடும்பத்தில் இதைப் பார்க்கலாம்…!

இதை மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…?

செல்வத்தையே (எண்ணிக் கொண்டிருப்பதை) மறந்து
1.எதுவாக இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.அருள் ஞானச் செல்வம் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மை கூட்டி விட்டால்
3.அந்தக் குழந்தையை நாம் சீர்படுத்த முடியும் (வீட்டை விட்டு வெளியில் செல்ல மாட்டான்).
4.அவனும் செல்வத்தை மறப்பான்… அருள் ஞானச் செல்வத்தை வளர்த்திடும் நிலையாக வருவான்.
5.ஏனென்றால் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

என்னமோ சாமி சொல்கின்றார்… ஏதோ கேட்டோம்… சாமி நன்றாகச் சொன்னார்…! என்று சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்…!

மற்றவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுப் பதிவாக்கிக் கொண்ட பின் எல்லோரும் சொல்வது மாதிரித் தான் “இந்தச் சாமியும் சொல்கின்றார்…” என்று சொல்லி வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

யாம் சொல்லக்கூடியதை ஆர்வமாகக் கேட்டாலும் அதில் உள்ள தத்துவங்களை எண்ணினாலும் அடுத்தாற்போல் பிறரின் உணர்வுகளைக் கலந்து கொண்ட பின் அவர் சொல்லும் குறையை வளர்த்து “இப்படிச் சொல்லி விட்டாரே…!” என்று எண்ணினால் அதைத் தான் வளர்க்க முடியும்.
1.அந்த வேதனைகள் வளர்ந்து விட்டால்
2.நான் கொடுத்த ஞான சக்தி அந்த நஞ்சுக்குள் மறைந்து விடுகின்றது

ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் மன உறுதி கொண்டு வேதனையை எடுக்காது மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று தானும் பெற வேண்டும்… தன்னைச் சார்ந்தவர்களும் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

“இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் குடும்பம் முழுவதும் அது படர வேண்டும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பெற வேண்டும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணி “அந்த உணர்வோடு நாம் உறங்கச் செல்ல வேண்டும்…”

மற்றவர்களுக்கு நீங்கள் ஆர்வத்தில் நல்லதைச் சொன்னாலும் கூட மற்றவர்கள் கேட்கவில்லை என்றால் அந்த உணர்வு மாறத்தான் செய்யும் அந்தச் சந்தர்ப்பத்தில் குறையைத் தான் வளர்த்துக் கொள்வோம்.

நல்லதைச் சொல்ல வேண்டும் என்று நினைப்போம்… ஆனால் அந்த எண்ணத்திற்கு மாறாக வேதனையை எடுத்த பின் நல்ல குணங்கள் இங்கே மறையத் தொடங்குகிறது.

1.இப்படி ஒரு நான்கு பேரிடம் சொல்லிவிட்டு எதிர்மறையானால் நமக்குள்ளேயே அந்தக் கலக்கம் வந்து விடுகின்றது.
2.சாமி ஆத்ம சுத்தி செய்யச் சொன்னார் என்பதையே விட்டுவிடுவீர்கள்
3.என்ன வாழ்க்கை…? என்ன நல்லதைச் சொன்னாலும் இப்படித்தான் இருக்கின்றது என்று
4.தனக்குள்ளேயே எதிரிகளை தேடிக் கொள்வார்கள்…!

இப்படித் தான் நாம் இருக்கின்றோம்.

இதைப் போன்று வராது தடுக்க வேண்டும் என்றால் நமது வாழ்க்கையில் எப்போதுமே…
1.அன்றாடம் நாம் சந்தித்தோர் அனைவருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
3.இரவில் உறங்கும் முன்னும் சரி… காலையில் எழுந்தவுடனும் சரி… இது போன்று எண்ணிக் கொண்டு வாருங்கள்.
4.வேறு எதுவும் எண்ண முடியவில்லை என்றாலும் இதை நீங்கள் ஒரு சுருக்கமாக வைத்துக் கொண்டாலே போதுமானது
5.இந்த நினைவினை அதிகமாக வளர்த்துக் கொண்டால் ஆன்மாவிலே இது உணர்வு வலுவாகும்
6.நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த எண்ணம் உங்களைக் காக்கும்.

நம் வாழ்க்கையில் உங்களுக்கு வேண்டாதவர்களோ எதிரிகளோ இருந்தால் அவர்கள் சிரமப்பட்டால் “அப்படித்தான் வேண்டும்…” என்று அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதீர்கள்.

அதே போன்று உங்கள் வேண்டியவர்களுக்கு ஏதாவது கெடுதல் ஆகிவிட்டால் “ஐயோ கஷ்டம் வந்துவிட்டதே… என்று வேதனைப்படாதீர்கள்…!” தன் பிள்ளை “சொன்னபடி கேட்கவில்லையே…” என்று வேதனைப்படாதீர்கள்…!

இதெல்லாம் மிகவும் முக்கியமானது…!

எனென்றால் வேதனை என்றாலே நஞ்சு…! எவ்வளவு சுவை மிக்க ஒரு சத்துள்ள பதார்த்தமாக நாம் உருவாக்கினாலும் அதிலே ஒரு துளி நஞ்சு பட்டால்… அதை உட்கொண்டால் நம்மை மயங்கச் செய்து நினைவை இழக்கச் செய்து விடுகிறது.

அது போலத் தான்
1.தன் பிள்ளைகளோ உறவினர்களோ அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்துத் தானும் வேதனைப்படுவதோ…
2.தனக்கு வேண்டாதவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு அதை ரசிப்பதோ…
3.இவையெல்லாம் நம் நல்ல குணங்களை முழுமையாக விழுங்கிவிடும்
4.பின் நல்லதைத் தேடிப் பிடிப்பதே மிகவும் கஷ்டமாகிவிடும்.

அதற்குத்தான் தீமை என்று தெரிந்தாலே “அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்…” என்று சொல்கிறோம். ஆத்ம சுத்தியின் மூலம் எடுத்துக் கொண்ட வலுவான உணர்வு கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள முடியும்…!

“செயற்கை அறிவு” கொண்ட மனிதர்களாகவே இன்று மாறி விட்டனர்

 

இக்கலியின் கடைசிக் காலத்தில் மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித் தொடர் அற்று மனித எண்ணங்களும் ஆவி உலகில் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களும் செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தியே இன்று இயங்கி வருகின்றது.

ஆகையினால் இன்றைய மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒளி ஈர்ப்பில் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக் கதிர்களாகத் தான் சுவாசத்திலிருந்து வெளி வந்து கொண்டுள்ளது.

இப்படி…
1.அன்றைய இயற்கைத் தாவர நறுமண மூலிகைகளின் தொடர்பற்ற நிலையில்
2.இயந்திர ஓட்டச் செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக் கதிர்களிலிருந்து
3.அதிலிருந்து வளரவல்ல உயிரணுக்களே கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த
4.புதிய புதிய குறுகிய எண்ண ஆசைகள் கொண்ட ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
5.தற்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்…!

இந்தத் தொடரிலேயே செல்லும் நிலை தான் இன்றைய காலமும்… இனி வரும் காலமும்…!

பல நூறாண்டுகளுக்கு முன்… மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயணக் காவியத்தில் வான்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்தக் குணத்திற்கொப்ப எண்ணத்தில் குறுகியவருக்குக் “கூனி” என்றும் “சகுனி” என்றும் (வியாசர்) காட்டினார்கள்.

எண்ணத்தில் உயர்ந்தவருக்கு அவரின் உருவ அழகை இராமனாகச் சித்தரித்துக் காட்டினார் வான்மீகியார்.

ஆனால் இன்றைய கலி ஓட்டத்தில் “இயந்திரத் தொடர்பு கொண்ட… செயற்கை ஒலி ஈர்ப்பில்…” வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வுகள் தான் அதிகமாகச் சுழன்று கொண்டுள்ளது.

இதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித் தொடர் வளர்ச்சியின் வழி முறையில் எந்தச் செயற்கை ஒலியை அதிகமாகக் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொண்டு மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது…
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட மக்கள் பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த கலி மக்கள் தான்
4.இனி வருங்காலப் பிறப்புகளும்… கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும் இருக்கும்.

அன்றைய காலங்களில் “ஆயகலைகள் அறுபத்தி நான்கு” என்று பிறக்கும் மக்களுக்குப் பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இருந்தது.

இன்றைய செயற்கைப் போதனையோ… தன்னைத் தான் நம்பாமல் செயற்கைப் பிடியில் நம்பிக்கை கொண்டு அந்தச் சுழற்சி ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலே சிக்குண்டு அந்த ஏக்கமுடனே இன்பத்தின் எல்லை எது…? என்று அறியாதபடி… வாழ்க்கையின் வேட்கையில் சுழன்றிடும் தன்மையை மாற்றி
1.ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு
2.ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும் இன்ப நிலையின் வழித் தொடரை
3.இங்கே உபதேச போதனையாக உயரும் வழியைக் காட்டி
4.ஒவ்வொரு ஆத்மாவும் மனிதனுக்கடுத்த நிலையான “தெய்வ நிலை” பெறவல்ல வழித் தொடருக்கு வழி காட்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எங்கேயோ ஆக்சிடென்ட் ஆகிறது. பல இடங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சிலர் அந்தச் சிதைந்த சரீரத்தை உற்றுப் பார்த்தபின்… “அஞ்சிவிடுவார்கள்…”

அவ்வாறு அஞ்சி எண்ணுபவர்களுடைய உணர்வுகள்
1.“பயமாகி விட்டது…” என்று அவர் பார்த்த உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது.
2.பதிவானாலும் “ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம்” என்று பயந்த உணர்வினைத் தன் உடலுக்குள் அணுக்களாக்கிய பின்
3.இந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.

பின் பலரிடம் அந்த உணர்வைப் பதிவாக்கி விட்டால்
1.எங்கே சிதைந்த உடல் இருக்கின்றதோ அங்கே அந்த உணர்வுகள் பரவியிருப்பதை இவர்களும் நுகர நேருகின்றது.
2.அப்பொழுது அதனால் இவர்களை அறியாமலே அந்த வேதனையும் “அச்சுறுத்தும் உணர்வுகளும்” வந்துவிடுகின்றது
3.அடுத்து அவர்கள் எந்தச் செயலையும் மன உறுதியுடன் செயல்படுத்த முடியாத பலவீனம் ஏற்படுகின்றது.

பயத்தால் சிந்தனை குறைதலும்… “எதைக் கேட்டாலும் நடுக்கமும்…” கடைசியில் கடுமையான நடுக்க வாதமாகவும் மாறுகின்றது.

அதே சமயத்தில் விபத்தில் இறந்த மனிதனின் சிதைந்த உறுப்புகளை உற்றுப் பார்த்து ஆழமாகப் பதிவாக்கி இருந்தால்
1.அந்த உறுப்பு எப்படிச் சிதைந்திருந்ததோ அதே நிலையை அதே உறுப்பில்
2.இவர்களுக்குள் சிதையும் அணுக்களாக மாறி உடல் நலிவடையத் தொடங்கும்.

ஏனென்றால் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ இதை நம் உயிர் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது.

பார்த்தது வேடிக்கை தான்…! ஆனால், நாம் இதைச் சுத்தப்படுத்துகின்றோமோ…? தீமைகளை நீக்குகின்றோமோ…? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். இதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகளும் வரவேண்டும்.

அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து விடுபடும் அந்த உணர்வின் சக்தியைப் பெறுவதற்கு
1.ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி பெற வேண்டும்.
2.அந்தத் தகுதி பெறும் தன்மைக்கே இப்பொழுது உங்களுக்குள் உபதேசிப்பது.

உபதேசித்த உணர்வுகளின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் எப்படிப் பெற வேண்டும்…?

உயிரணுவின் தோற்றமும் பிரபஞ்சத்தின் தோற்றமும் உயிரணுவின் வளர்ச்சியும் வளர்ச்சி அடைந்த மனிதரில் அகஸ்தியன் துருவ மகரிஷியாக எவ்வாறு உருவானாரோ அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம்.

இதைப் பதிவாக்கிய நினைவு கொண்டு உங்களுக்குள் அதை உருவாக்க அதிகாலையில் நான்கிலிருந்து அந்தச் சக்திகளைப் பெற ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உட்புகுத்துதல் வேண்டும்.

அவ்வாறு செய்தால்
1.தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் வெள்ளியும் ஆவியாகி தங்கம் பரிசுத்தமாவது போல்
2.நமக்குள் இருக்கும் தீமை செய்யும் நிலைகளை ஆவியாக மாற்றி நம்மைத் தூய்மைப்படுத்தும்.
3.நம் ஆன்மாவும் தூய்மை அடையும். பிறிதொரு தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் வராது “பாதுகாப்புக் கவசமாக…” அமையும்.

ஆன்மாவிற்குள் கவர்ந்து (இழுத்து) கொண்டு வர வேண்டிய உயர்ந்த சக்தி

 

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம். அகஸ்திய மாமகரிஷி கண்டுணர்ந்த உணர்வுகளையும் இதில் கலந்தே உங்களுக்குள் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்..

யாம் (ஞானகுரு) உபதேசித்ததை எண்ணித் தியானிக்கும் போது
1.மகரிஷிகள் கண்டதை எல்லாம் உணரும் பருவம் நீங்க பெறலாம்…
2.அதைக் காட்சியாகவும் தெரியலாம்… நறுமணங்களாகவும் உங்களுக்குள் வரும்…!
3.அவரவர்கள் இந்த உபதேசத்தைக் கேட்டுப் பதிவு செய்த நிலைகள் கொண்டு நிச்சயம் உணர முடியும்… மணத்தால் உணர முடியும்
4.கடந்த காலக் காட்சிகளை குருநாதர் எனக்கு எந்தெந்த இடத்திலே வைத்து எப்படிக் காட்டினாரோ
5.அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் உணர முடியும்… புது உணர்வுகளாக உங்களுக்குத் தோன்றும்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகள் நமக்கு முன் இந்தக் காற்றிலே படர்ந்து இருந்தாலும் அதைக் கவரக்கூடிய வலிமை நமக்கு வேண்டும்.

ஆயிரம் பேர் சேர்ந்து தான் ஆலயத்தில் இருக்கும் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனால் அந்தத் தேரை இழுக்க முடியாது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.மகரிஷிகள் அனைவரும் இந்தப் புவியின் ஈர்ப்பின் பிடிப்பை அறுத்து
2.அந்த அறுத்த உணர்வுகளை அவர்களுக்குள் விளைய வைத்து
3.எந்த மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் தான் சிக்காதபடி
4.இன்னொரு உடல் பெறாதபடி சப்தரிஷி மண்டலங்களாக விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இருந்தாலும்…
1.புவியின் ஈர்ப்பின் பற்று கொண்ட நாம்
2.உடலின் உணர்ச்சிகளுக்கு அடிமையான நாம்…
3.எண்ணத்தால் அந்த மகா ஞானிகளின் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
4.நமக்கு அந்தத் திறன் நிச்சயம் தேவை.

அந்தத் திறனைப் பெறுவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அருள் வழிப்படி மகா ஞானிகளின் ஆற்றல்மிக்க உணர்வின் எண்ணங்களை
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்து
2.அந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து
3.அனைவரும் சேர்ந்து ஏங்கிப் பெறும்படி செய்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகமாக நீங்கள் ஏங்கினால் ஆயிரம் பேர் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுப்பது போன்று அந்த மாமகரிஷிகளின் சக்திகளை நமக்கு முன் கொண்டு வர முடியும்

1.அவரவர்கள் எந்தெந்த விகிதாச்சாரப்படி எண்ண வலு கொண்டு
2.எண்ணி ஏங்குகின்றீர்களோ அவரின் ஆன்மாக்களிலே அது கவரப்படும்.
3.ஆன்மாவில் கலந்து சுவாசித்து அந்த அருள் ஞான சக்தியைப் பெறும் தகுதி பெற்று
4.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக அதை விளைய வைக்க முடியும்

அதைத்தான் இப்பொழுது குரு வழியிலே யாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

தியானிக்கும் போது அவரவர்கள் எண்ண வலுவுக்கு ஏற்றார் போல் மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் ஆன்மாவில் கலப்பதை உணரலாம். எந்த அளவுக்கு உயர்த்தி எண்ணுகின்றீர்களோ நிச்சயம் உணரலாம்… அதை நுகர முடியும்.

அந்த அறிவின் தன்மை தான் உங்களுக்குள் இப்போது படைக்கப்படுகின்றது. யாம் உபதேசிப்பதை ஆழப் பதிவு செய்து கொண்டால் உங்களில் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும். அறியாது வந்த சாப நிலைகளை பாவ நிலைகளை மாற்ற முடியும்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளைக் கூட்டமைப்பாக இழுத்துக் கவர்ந்து…
1.எல்லோரும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்கே யாம் சொல்லும் இந்தத் தியானம்.
2.ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வலுக் கொண்டு தியானித்து நாம் அனைவரும் பெறுவோம்.

பேராற்றல் கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

 

சொந்தபந்தம்…
தொழில்…
சுற்றுப்புறம்…
விஞ்ஞானம்…
வியாபாரம்…
மருத்துவம்…
இதிலே ஏதாவது ஒன்றிலே இன்றைய மனித வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

இந்த வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த வாழ்க்கைப் பிடிப்பைத் தான்
1.மனிதனின் முற்றிய நிலை என்று இன்பத்தைக் கொள்ளாமல்
2.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

இதைத் தொடர்ந்து படிப்போர் பதிவாக்கி அதைச் செயலாக்கி வரும் நிலையில் “இதில் உணர்த்தப்படாத பல உண்மைகளும் உண்டு…!”

நேரடியாக உணர்த்தப்படாத அவைகளைத் தங்களின் ஞானத்தைக் கொண்டு உணர்ந்து உயரக் கூடிய நிலைகளுக்குத் தான் அவ்வாறு விடப்பட்டுள்ளது.

இனி வரப் போகும் கால நிலையில் துர்மார்க்க… அச்சம் கொள்ளும் அலை உணர்வு தான்… காற்றலையில் நச்சுத் தன்மையாக வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

இதிலே மனிதன் தன்னைத் தான் உணர்ந்து
1.தன் ஆத்ம வலுவைக் கூட்டி
2.பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்
3.உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு
4.வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களான சகல சக்திகளையும் சமைக்கவல்ல
5.பேராற்றல் கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆகவே… உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உயர்ந்தே செல்லும் வழி முறைக்காக
1.இங்கே வழி காட்டும் உண்மையை ஏற்று
2.ஞான விளக்கப் போதனைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
3.மனித சக்திகளைத் “தெய்வச் சக்தியாக” உருவாக்குங்கள் ஒவ்வொருவருமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வினைக் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும். இதற்கு முன் உங்களுக்குள் பதிவான தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகளை அடக்குவதற்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிப்பது.

மைசூர்பாகு இனிப்பு கிளறுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சீராகக் கிளறவில்லை என்றால் அனைத்தும் ஒன்றாகிக் “கட்டி.. கட்டியாகிவிடும்…”

பின் சுவை ஏது…? வருமா…?”

ஒரே மாதிரி மாவையும் விட்டு நெய்யையும் விட்டுச் சீராகக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுது
1.அதில் விட்ட இனிப்புப் பாகும் நீரும் ஒன்றாகச் சேர்த்து
2.இந்த வெப்பத்தின் தணலால் நீர் ஆவியாகி
3.“நெய்யின் தன்மை அதற்குள் ஊடுருவும் பொழுது… அங்கே சுவை கொடுக்கும்…”

இதைப் போன்று தான் ஒரு மருந்தே காய்ச்ச வேண்டும் என்றால் அந்தப் பக்குவம் வேண்டும்.

உதாரணமாக குழம்பை வைக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அது வெந்து கொண்டிருக்கும் பொழுது பெண்களுக்குத் தெரியும்.

குழம்பு வெந்து கொண்டிருக்கும்பொழுது சில பக்கம் உறைந்தது இல்லாதபடி (கட்டியாக ஒன்றாக ஒட்டிக் கொள்ளாமல்) கரண்டியை அந்தந்தச் சமயங்களில் பக்குவமாகக் கிளறுவார்கள்.

அது சீராகச் செய்பவர்களுக்குத்தான் தெரியும்.

சமையல் செய்து கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்தச் “சரியான நேரம் வந்து… குழம்பைக் கிளறுவார்கள்”.

அப்படிக் கிளறும் பொழுது குழம்பின் சுவை “ருசியாக…” இருக்கும்.

அதே சமயத்தில் அடுப்பின் பக்கத்திலேயே அமர்ந்து சமையல் செய்து கொண்டிருப்பார்கள். அடுப்பு எரிவதை “அதிகமாக வைத்தால்…” குழம்பைச் சீக்கிரம் வைத்துவிடலாம் என்று செய்வார்கள்.

இந்தச் சூட்டின் தன்மை வரப்படும் பொழுது இதற்குள் என்ன செய்யும்?
1.மற்றதுடன் கலந்து கட்டி கட்டியாகச் சேர்த்து ஒன்றாக உறைந்துவிடும்.
2.குழம்பில் போடப்பட்டுள்ள “காய்க்குள்… உப்பின் தன்மை சேராது…”
3.இது எடுத்துக் கொண்ட சத்திற்குள் உப்பு உறைந்துவிடும்… இது தனித்துவிடும்.
4.அப்பொழுது காயில் பார்த்தால் உப்பு இருக்காது.
5.சில நேரங்களில் “காய்… உப்பை இழுத்துக் கொள்ளும்…” குழம்பின் சாறுகளில் உப்பின் தன்மை இருக்காது.
6.இதில் வேக வைக்கும் நெருப்பின் அந்தக் கொதிநிலைகள் எவ்வளவோ அதற்குத்தக்கதான் சுவை வரும்.

ஒரு சிலருக்கு அந்தப் பருவ நிலைகள் தனக்குள் பதிவு செய்து கொண்ட பின் தன்னை அறியாமலேயே அந்தக் “கூட்டுக் கலவையின் தன்மை வருவதற்காக…” சரியான நேரத்தில் சரியானபடி கிளறுவார்கள்.

அதன் தன்மை நன்றாக இருக்கும்.

அதே மாதிரி அவர்கள் சாதம் வைக்கின்றார்கள் என்றால் முதலில் அடுப்பின் வெப்பத்தைச் சீராக்குவார்கள். அந்த வெப்பத்திற்குத்தக்கவாறு சாதத்தைக் கிளறிவிடுவார்கள். சரியாக இருக்கும்.

ஆனால் அப்படிக் கிளறிவிடும் பருவத்தைத் தவறிவிட்டால் “நறுக் அரிசி” என்று சொல்வார்கள். அப்படி வந்துவிடும். அதாவது ஒரு பக்கம் வேகும். ஒரு பகுதி சுத்தமாக வெந்திருக்காது. சாப்பாடும் ருசி இருக்காது.

வீட்டில் கொஞ்சம் மனக் கலக்கம் உள்ளவரும் கொஞ்சம் வெறுப்பான நிலையில் உள்ளவரோ தன் குழந்தைகள் சேஷ்டை செய்கின்றானே என்று எண்ணுபவர்களோ அவர்கள் அந்த எண்ணத்துடன் சமையல் செய்வதைப் பாருங்கள்.

போட்டவுடன் இந்த அரிசியிலேயே வித்தியாசம் தெரியும்.

நல்ல அரிசியைப் போட்டிருப்பார்கள்.
1.இவர்களின் இந்த உணர்வுக்குத் தக்கவாறு நெருப்பு எரிப்பார்கள்.
2.அடுத்துத் தண்ணீர் கொதித்து வருவதற்கு முன்னாடி அரிசியைப் போடுவார்கள்.
3.இந்த உணர்வுகள் பாய்ந்தபின் இந்த உணர்வில் எந்த அளவிற்கு மேக்னட் இருக்கின்றதோ
4.“நம் உடலில் உள்ள இந்த உணர்வுகள்” (அதாவது முதலில் சொன்ன மாறுபட்ட உணர்வுகள்) அந்த நீருக்குள் உள்ள காந்தப்புலனுடன் கலந்தபின்
5.“இந்த அரிசியையே… சுவை மாற்றும்”.

ஒரே கடையில் நீங்கள் அரிசி வாங்கிப் பாருங்கள். அந்த அரிசியை நான்கு பேரிடம் கொடுத்துச் சமைக்கச் சொல்லிப் பாருங்கள்.

“வெறும் சாதம் தான்… அதிலே வேறு ஒன்றுமே போட வேண்டாம்…” அவர்கள் சமையல் செய்து முடிக்கும் பொழுது “எப்படி இருக்கின்றது..,?” என்று பாருங்கள்.
1.நான்கு விதமாக இருக்கும்…
2.இதெல்லாம் காந்தப் புலனறிவால் இயக்கப்படக் கூடிய நிலைகள்.
3.ஆனால் நாம் சொல்வோம் அவர்கள் “கை ராசி…” என்று.

அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டு அது சமைக்கும் பக்குவத்தில் அதிலுள்ள காந்தப் புலனுடன் இணையும் பொழுது அதற்குத்தக்க தான் இயக்கமாகி அங்கே “சுவை வருவதும்… சுவை அற்ற நிலை” ஆக்குவதும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட ஒரு தீமையான உணர்வைச் சுத்தப்படுத்தாதடி அன்று சமையல் செய்தால் நிச்சயம் அங்கே குறைபாடுகள் வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

“சமையலுக்கு மட்டுமல்ல..,”
1.உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் ஆனாலும்
2.நாம் ஈர்த்து வெளிவிடும் உணர்வுகள் இணையும் தன்மை கொண்டு
3.அதற்குத்தக்கத் தான் காரியங்கள் நல்லதாவதும் கெட்டதாவதும்.

எனக்கு குருநாதர் எல்லாவற்றையும் அனுபவபூர்வமாகக் கொடுத்தார். குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வே அருள் வழியில் உங்களை அழைத்துச் செல்லும். இதில் ஒன்றும் சிரமமில்லை.

மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள். பேரானந்த நிலை பெறுவீர்கள்.

1008 உணர்வுகள் கொண்ட மூன்று இலட்சம் பேரைச் (மனிதர்களை) சந்திக்கும்படி செய்தார் குருநாதர்

 

இது எல்லாம் இமயமலையில் வைத்து குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மை நிலைகள்.

ஒருவர் பெரும் செல்வந்தராக இருக்கின்றார். ஆனால் கடைசியிலே வாத நோய் வந்து துடித்துக் கொண்டிருக்கிறார்… பேச முடியவில்லை. அவர் உடலில் இயற்கைக் கழிவு வெளியே வருகின்றது. அதை அவரால் சொல்ல முடியவில்லை. ஓ… என்று சத்தம் போடுகின்றார்.

ஆனால் கிரகம்…! இப்படிச் செய்கின்றாரே…! என்று அவரை கவனிப்பவர்கள் ஏசிப் பேசுகின்றார்கள். இதை எல்லாம் அப்படியே கண்ணில் காண்பிக்கின்றார் குருநாதர்.

“பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!”

1.சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும்… எல்லாம் மறைந்து போய் அவர் எந்த ஏக்கத்தில் இருக்கிறார்…?
2.ஆனால் இவர் விரும்பிய நிலைகளை அங்கே செயல்படுத்த முடியவில்லை…! என்று குருநாதர் காண்பிக்கின்றார்.

இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையிலும் நல்லதாக நடந்தால் “சாமி செய்து கொடுத்தார்…!” என்று சந்தோசப்படுவீர்கள். கஷ்டம் வந்து விட்டாலோ
1.கஷ்டத்தை எண்ணிய பின் “சாமி என்னத்தைச் செய்தார்…? என்று எண்ணம் வந்துவிடும்.
2.ஆக… பத்து தடவை உங்களுக்கு நல்லதாக நடந்து இருந்தாலும் கூட
3.மற்ற எண்ணங்கள் உங்களிடம் புகுந்து விட்டால் இது ஓங்கி வளர்ந்து அந்த நல்லதை மறந்து
4.“சாமி என்ன செய்தார்…?” என்று உணர்வுகளை மாற்றி உண்மையைப் பெற முடியாது தடைப்படுத்தி விடுகின்றது.

இதிலிருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் மனிதனுக்குள் விளைந்த 1008 உணர்வின் இயக்கங்களை உணர்த்தினார் குருநாதர். ஒரு மனிதப் பிறப்பில் இருக்கப்படும் பொழுது அவனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கிறது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

குடும்பத்தில் சம்பாதித்த சொத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றது… கூட்டுக் குடும்பமாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பபேதத்தால் ஒருவருக்கொருவர் பகைமை ஆகின்றது… சாபமிடுகின்றார்கள்.

சாபமிட்ட உணர்வுகள் உடலுக்குள் விளையப்படும் பொழுது இறந்த பின் சாபமிட்ட ஆன்மா யார் மேல் சாபம் இட்டதோ அந்த உடலுக்குள் சென்று
1.தீய விளைவுகளை அந்தக் குடும்பத்தில் எவ்வாறு பரப்புகின்றது…?
2.அந்தக் குடும்பங்கள் எப்படி அல்லல்படுகின்றது…?
3.செல்வங்கள் இருந்தாலும் எல்லாமே எப்படிச் சிதறிப் போகின்றது…?
4.இப்படி 1008 விதமான (மனிதனுடைய) எண்ணங்கள் உருவாகும் நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்

இப்படித் தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார் குருநாதர் அதிலே 1008 குணங்களாக இருந்தாலும்
1.மனிதப் பிறப்பின் தன்மை ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பங்கள் எவ்வாறு உருவாகின்றது…?
2.செல்வங்கள் சம்பாதித்தாலும் அதில் என்ன பாடுபட்டார்கள்…?
3.சம்பாதிக்கும் போது அதில் எத்தனை வேதனைப்படுகின்றார்கள்…?
4.சம்பாதித்த பின் தான் எண்ணியபடி குடும்பத்தார் நடக்கவில்லை என்றால் வேதனைகள் எவ்வாறு உருவாகின்றது…?
5.வேதனை வளர்ந்து நோயாக ஆனபின் எப்படி மரணமடையும் நிலை வருகிறது…?
6.இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றோமே… இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்…? என்ற எண்ணத்திலே உயிர் பிரியும் போது
7.யார் மீது நினைவுகள் அதிகமாகின்றதோ இந்த உயிரான்மா அங்கே அவருக்குள் சென்றுவிடுகிறது.
8.ஆன்மா அந்த உடலுக்குள் சென்ற பின் சம்பாதித்து வைத்த காசையே அது நிலைத்து இருக்காதபடி அந்தக் குடும்பங்கள் எப்படி இன்னல் படுகின்றது…?
9.பணமோ சேர்த்து வைத்த சொத்துகளோ இவர்களுக்கு உதவி செய்கிறதா…?

இல்லை.

அதே சமயத்தில் எத்தனையோ வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டினாலும் அவருடைய சந்ததிகள் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவருடைய சாப அலைகள் பின் தொடர்ந்து அவர்களை எவ்வாறு மடியச் செய்கின்றது…? என்று இதை எல்லாம் குருநாதர் காணும்படி செய்கின்றார்.

அதே சமயத்தில் ஒரு சிலர் போக்கிரித்தனங்கள் செய்து அந்த வலுவைக் கொண்டு செல்வங்களைச் சம்பாதிக்கின்றனர். அப்படிச் சம்பாதித்தாலும் போக்கிரித்தனமாகச் சேமித்த சொத்தை எல்லாம் அவருடைய சந்ததிகள் அழித்து விடுகின்றார்கள்.

போக்கிரியாகச் செயல்பட்டுச் சமுதாயத்தில் பிறரை வேதனைப்படுத்திய உணர்வுகள் நோயாக விளைந்து அந்த உடலில் தன் எண்ணத்தால் கவர்ந்த அந்த உணர்வுகள் அவன் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

1.இவன் செய்த நிலையால் குடும்பத்தார் வேதனை அனுபவிப்பதும்
2.மற்றவரை ஏசிச் பேசி வேதனைப்படுத்திய உணர்வுகள் உடலில் விளைந்து
3.அவனுடைய மறு பிறவி எங்கே எப்படிச் செல்கின்றது…?
4.மீண்டும் வேதனைகளை அனுபவிக்கும் சரீரமாக அடுத்து அது எப்படி உருவாக்குகின்றது…?

உடனடியாக எந்த உடலுக்குள்ளும் செல்வதில்லை…! இருந்தாலும் பிறரை எப்படி எல்லாம் வேதனைப்படுத்தியதோ அதிலே விளைந்தது உயிருடன் ஒன்றி அது எவ்வாறு இயங்குகின்றது…? என்று காணும்படிச் செய்தார் குருநாதர்.

இதைத்தான்
1.அன்றைய பெரியவர்கள் உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…!
2.என்று தெளிவாக நமக்கு உணர்த்தி உள்ளார்கள்.

இன்று ஒருவரை நாம் வேதனைப்படச் செய்தாலும் அதை ரசித்துக் கொண்டிருந்தால் அதை உயிர் அணுக்களாக உருவாக்கி உடலில் விளைய வைத்த உணர்வுகள் உயிருடன் இணைந்து அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்கும்படிச் செய்யும்.

மறு உடல் பெறும் வரை அதை அனுபவித்துக் கொண்டிருப்பதும் வேதனைக்குண்டான சரீரம் கிடைத்தபின் நஞ்சு கொண்ட சரீரமாக உயிர் உருவாக்கி விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று “நீ சென்று பார்…!” குருநாதர் எனக்கு இட்ட ஆணைப்படி உலகம் முழுவதும் நகர் பகுதிகளிலும் சிறு ஊர்களிலும் மற்ற கிராமத்துப் பகுதிகளிலும் எல்லா இடங்களுக்கும் யாம் (ஞானகுரு) சென்று வந்தது தான்.

ஒரு இடத்தில் மூலையிலே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் என்னென்ன நடக்கின்றதோ அதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்… பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பத்தில் இதற்கு முன்னாடி இறந்தவருடைய உணர்வுகள்
2.அந்த வீடுகளில் எப்படிப் படர்ந்திருக்கின்றது…? என்று குருநாதர் காட்டுவார்.

அதை எல்லாம் அறிந்து இப்படி 1008 பேரின் உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின் என்னை இமயமலைக்குச் செல்லும்படி சொன்னார். அங்கிருந்து கொண்டே உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் எந்த நிலை அடைகின்றது…? என்பதையும் அறியும்படி செய்தார்.

இமயமலையில் அமர்ந்து
1.விண்ணின் ஆற்றலை எவ்வளவு சுலப நிலையில் பெற வேண்டும்…?
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி தியானிக்கும் போது உயர்ந்த சக்திகளை அப்பொழுது நான் பெற முடிந்தது… நுகர முடிந்தது.

நாம் அறிய விரும்பும் உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் வழி

 

ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.

அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின் மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.

அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நமக்கு அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் கிடைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நாம் எதை எதை எப்படிச் செய்தாலும் “நம் உயிரிடமிருந்து மட்டும்…” யாரும் தப்பவே முடியாது.
2.நாம் எண்ணியது எதுவோ அதை ஒவ்வொரு நிமிடமும்
3.“ஓ..ம் நமசிவாய… ஓ..ம் நமச்சிவாய”…” என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எண்ணிய உணர்வுகள் “நல்லவை – கெட்டவை…” அனைத்தும் நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இதைத்தான் “ஓ..ம் நமச்சிவாய.., ஓ..ம் நமச்சிவாய”..,” என்பது. அப்படியென்றால் “நம் உடலைச் சதா சிவமாக்கிக் (சதாசிவம்) கொண்டயுள்ளோம்…”

எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த மணத்தின் தன்மை வருகின்றது. அந்தச் சொல்லின் தன்மை வரப்படும் பொழுதுதான் “சிவாய நம ஓம்…”

1.நாம் நுகர்ந்தது ஜீவனாகி நமக்குள் அணுவாகிச் சிவமாகின்றது. எது ஜீவனாகி அணுவாக சிவமாக ஆனதோ நமக்குள் இருந்து “அதனின் சொல்லாக செயலாக வெளிவரும்…” – “சிவாய நம ஓம்”

ஆகையினால்… வெறும் வாயில் “ஓ…ம் நமச்சிவாய… “ஓ…ம் நமச்சிவாய… என்றால் அதில் பொருள் இல்லை…! அது வெறும் சொல்லே.

“ஓ…ம் நமச்சிவாய…. என்று சொன்னால் அந்தச் சிவன் இறங்கி வந்து “என்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்…,” என்று எதையாவது ஓடி வந்து செய்வான்…! என்ற இந்த நம்பிக்கையைத்தான் ஊட்டியுள்ளார்கள்.

சாஸ்திர சாங்கியங்களின்படி “ஓம் என்றால்… பிரணவம்…” இப்படிச் சொல்லி அதையே ஜெபித்தால் எனக்குள் ஜீவன் வந்து விடும் இன்று தவறான வழிகளில் நாம் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.

1.மந்திரத்தை “ஜெபிக்கத்தான்..,” (ஒலியை எழுப்பத்தான்) சொல்லியிருக்கின்றார்களே தவிர
2.அந்த ஒலிக்குள் உள்ள மூலக் கூறை அறிந்து அந்த அருள் உணர்வைச் “சுவாசிக்கும்படி..,” யாரும் சொல்லவில்லை

வெறுமனே “ஓ…ம் நமச்சிவாய… “ஓ..,ம் நமச்சிவாய… என்றால் எதை நீ “ஓ…ம் நமச்சிவாய… ஆக்க வேண்டும்…? எதைச் “சிவாய நம ஓ..ம்” ஆக்க வேண்டும்…?

ஆகவே “நீ எதைச் சிவமாக (உன் உடலாக) உனக்குள் ஆக்க வேண்டும்…?” என்பதைத் தெளிவாக உபதேசித்தருளினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நாங்கள் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும். எங்களைப் பார்ப்போர் அனைவரும் உடல் நலம் பெற வேண்டும். எங்களைப் பார்ப்போர் தீமைகள் அகல வேண்டும்.

“இதை நமக்குள் வினையாக்கச் செய்ய வேண்டும்…” மூஷிகவாகனா.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைச் சுவாசித்து அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் கண்டுணர்ந்த மெய்ஞானிகளின் அருள் சக்தி திறன் அனைவரும் பெற வேண்டும். அனைவரும் பொருள் கண்டுணரும் திறன் பெற வேண்டும். அவர்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். அங்கே அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

“இப்படி எண்ணி… இதை வினையாக்கச் சொன்னார்கள்…” ஞானிகள்.

ஏனென்றால்
1.வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது “இப்படித் தவறு செய்கின்றானே…” என்று எண்ணுகின்றோம்.
2.ஆனால் அச்சமயம் அவன் அந்தத் தவறு செய்யும் நிலைகளிலிருந்து “மீள வேண்டும்…” என்று எண்ண முடியவில்லை.
3.அதற்காக வேண்டிச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

நாம் அன்றாட வாழ்க்கையில் “உடல் அழுக்கைப் போக்குவது போல” நாம் வாழ்க்கையில் கேட்டுணர்ந்த தீமையின் தன்மைகளைப் போக்கிட “வானை நோக்கி…” எண்ணும்படிச் செய்தார்கள்.

“விண்ணிலிருந்து வரும்” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி நாம் கேட்டறிந்த “தீமைகளைத் துடைக்கும்படி… நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும்படி…” செய்தனர்.

இதை வழிப்படுத்தி நம் வாழ்க்கையில் யாரை யாரையெல்லாம் சந்தித்தோமோ.., அவர்கள் எல்லாம் இத்தகைய நிலைகள் பெறும்படி “பல முறை செய்தல் வேண்டும்…”

அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை.
1.இருப்பினும் அவர்கள் “எல்லோரும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்”
2.அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்.
3.அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெற வேண்டும்
4.அவர்கள் குடும்பமெல்லாம் நலம் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று
5.நமக்குள் ஆண்டு கொண்டிருப்பவனிடம் இதைக் கேட்டால் அது “ஓ…ம் நமச்சிவாய… “ஓ…ம் நமச்சிவாய…”

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எத்தனை முறை எண்ணுகின்றோமோ அது “ஓ…ம் நமச்சிவாய…” உடலுக்குள் அந்தச் சக்தி கூடிக் கொண்டே வரும். நாம் அதுவாக ஆகின்றோம்.

காக்கும் சக்தியைப் பெறச் செய்வதற்குக் குருநாதர் தேர்ந்தெடுத்த இடம்

 

ஒரு சமயம் பழனியில் இருந்த என்னை (ஞானகுரு) திடீரென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலைப்பகுதியில் வெறும் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய ஒரு இடத்திலே குருநாதர் கொண்டு போய் நிறுத்தி வைத்து விட்டார்.

இதற்கு முன் அவர் எத்தனையோ உபதேசங்களை எனக்குக் கொடுத்திருந்தாலும்
1.அந்த இடத்திற்கு வந்த பின் எல்லாவற்றையும் காற்றிலே விட்டுவிட்டேன்.
2.அவர் போதித்ததையெல்லாம் விட்டுவிட்டுச் சிந்தனை இல்லாது இருக்கின்றேன்
3.கீழே பார்த்தால் கிறு கிறு என்று வருகின்றது… இந்தப் பக்கம் காலை வைப்பதற்கு இடமில்லை
4.நிமிர்ந்து பார்த்தால் கீழே சாய்ந்து விழுந்து விடுமோ என்ற எண்ணம் வருகின்றது.
5.குருநாதர் சொன்ன தத்துவங்களை நினைத்துப் பார்க்க நேரமில்லை…
6.குருவை மறந்து என் உடலைப் பற்றிய இச்சைக்கு வந்து விட்டேன்… என் குடும்பத்தை எண்ண ஆரம்பிக்கின்றேன்.

என் குழந்தை என்னுடைய மனைவி அவர்களுடைய சிந்தனை வந்தது. ஏனென்றால் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் அப்போது தான் எழுப்பி வைத்தார்.

அது மீண்டும் இறந்து விட்டால் யார் காப்பது…? பிள்ளைகள் அனைத்தும் சிறியவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யார் நல்லதைச் சொல்லிப் பாதுகாப்பது…? என்று இந்தப் புத்தி எனக்குள் வர ஆரம்பித்துவிட்டது

ஏனென்றால் அவர்கள் மீது வளர்த்துக் கொண்ட பாசம் உடலின் இச்சை வரப்படும் பொழுது தன் இனத்தை வளர்க்கும் நிலைக்காக எனக்குள் வந்துவிட்டது.

பதட்டம் ஆகின்றது… உடலில் வேர்வை அதிகமாகின்றது…! மேலே ஒரு குடம் நீரை ஊற்றிக் குளித்தால் எப்படி நீர் ஓடுமோ அப்படி வேர்வை வருகின்றது.

நான் இருந்த இடம் வழுக்குப் பாறை… செங்குத்தாக இருக்கின்றது அதில் தான் இரண்டு பாதம் மட்டும் இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன். கால் வழுக்கும் நிலையும் வருகின்றது.

எதையாவது பிடிக்க வேண்டும் என்றாலும்… வழுக்கி விட்டால் என்ன செய்வது…? நான் தொங்கத்தான் வேண்டும். தப்பித்துக் கீழே இறங்கும் பாதையும் இல்லை… குதித்தால்தான் இறங்க முடியும்…! என்று இப்படி என்னுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

என் வீட்டை நான் எப்பொழுது பார்ப்பது…? என் மனைவி பிள்ளைகளை எப்படிப் பார்ப்பது…? என்று இந்த சந்தேகம் வந்துவிட்டது. தவித்துக் கொண்டிருக்கிறேன்…!

இனி எத்தனை நாள் இப்படி வேதனைப்படப் போகின்றோமோ…? என்று உயிர் பிரியுமோ…? அது வரை இந்த வேதனையை அனுபவிக்கத் தான் வேண்டும் வெயில் அடிக்கின்றது… தண்ணீர் தாகமாக இருக்கிறது… உணவு இல்லை… இதிலே தான் இருக்கிறேன்…!

1.இப்படிப்பட்ட இம்சையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று தான்
2.பல உபதேசங்களையும் உண்மைகளையும் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

இந்த இடத்தில் இப்படி நிற்பதற்கு முன் மந்திரம் செய்வதைப் பற்றியும் மந்திரவாதிகளைப் பற்றியும் அப்பொழுது நிறைய சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

மந்திரவாதி எப்படியெல்லாம் ஆள்களை இன்னொரு பக்கம் மாற்றுவான்… பெரும் கல்களையும் பாறைகளையும் தூக்கி எறிவான்… எத்தனையோ அமானுஷ்யமான வேலைகளைச் செய்வான்…! என்பதை நேரடியாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் முதலில் சொல்லி இருந்ததால்
1.எவனோ ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி தான் நம்மை இப்படிச் சிக்க வைத்து விட்டான்
2.மந்திரவாதியிடம் சிக்கி விட்டோம் இது தெரியாமல் போய்விட்டதே.
3.மந்திரவாதிகளிடம் சிக்கினால் எப்படித் தப்புவது…? என்ன செய்ய வேண்டும்…! என்று
4.குருவிடம் கேட்க மறந்து விட்டோமே…! என்று அப்பொழுதுதான் குருவைப் பற்றி எண்ணமே வருகின்றது.

உடலில் கடும் அவஸ்தைகளைக் கண்ட பின் குருவிடம் கேட்காமல் விட்டு விட்டோமே…! என்று அப்பொழுதுதான் அந்த நினைவாற்றல் வருகின்றது

அப்பொழுதுதான் ஒரு பாடலும் வருகின்றது… குருவையும் நான் காண முடிகின்றது…!

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதை பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வருகின்றார்.

குருநாதரின் குரலைக் கேட்டு அவரை உற்றுப் பார்க்கும் போது என் முன்னே அலையாக வந்து நிற்கின்றார்… அப்போது சிரிக்கின்றார்…!
1.என்னை நீ நினைக்க மறந்து விட்டாய்…
2.நான் உபதேசித்ததை எல்லாம் தெருவிலே விட்டுவிட்டாய் காற்றிலே விட்டாய்.

இத்தகைய சந்தர்ப்பங்கள் வந்தால் உன்னை நீ காக்க முடியாது…
1.பிறரைக் காக்க வேண்டும் என்று நான் சொன்னேனே…!
2.அதை உன்னால் காக்க முடியுமா…? என்று இப்படி வினாக்களை எழுப்புகின்றார்.

குருநாதரிடம் விளைந்த அந்த உயர்ந்த சக்தியை வேண்டி ஏங்கிப் பெறுவோம் என்றால்
1.பதிந்த உணர்வுகளுக்கு ஊக்கமாகி உணர்வின் அலையாக அதைப் பருகி
2.தன்னைக் காத்திடும் நிலையும் பிறரைக் காத்திடும் உணர்வுகளும் அது வரும்…! என்று அங்கே வைத்துத்தான் உபதேசித்தார்.

ஆண் பாதி… பெண் பாதி…!

 

ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சக்தின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கைத் திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.

இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.

ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலையுடன் சுழற்சியுடன் இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளைச் சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று ஆத்மாவினால் ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞானச் சித்தால் “ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்.

ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!

பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத்தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் “இனி… நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று சிந்தித்தல் வேண்டும்.

இந்த உடலே நமக்குச் சதமில்லாத பொழுது…
1.தேடி வைத்த செல்வங்கள் நமக்குச் சதமாகுமா…?
2.நிலம் பூமி காடு கரை எல்லாம் சதமாகுமா…?

ஏனென்றால் அன்று வாழ்ந்த அரசர்கள் மற்ற நாட்டின் மீது போர் புரிந்து எத்தனையோ கொள்ளையடித்தார்கள். கொள்ளை அடித்த செல்வங்களை அவன் பித்ருக்கள் வைத்துள்ளார்களா..,? சந்ததிகள் வைத்துள்ளார்களா..,?

இல்லை… அனைத்தும் மடிந்துவிட்டது. கட்டிய கட்டடங்கள் நகரங்கள் அழிந்து விட்டது.

“எவரோ ஆண்டார் என்றும்… இதனை எக்காலத்தில் “எவன் ஆண்டான்…” என்றும் பூமிக்குள் பல இயற்கையின் நிலைகள் சீற்றமாகி அடக்கமில்லாத நிலை வரும் பொழுது நீர் நிலைகள் பரவப்பட்டு “நாட்டையே அழித்துச் சென்றபின்…” அந்த மண் மேட்டிற்குள் அனைத்தும் அடங்கி விடுகின்றது.

அவன் கலாச்சாரம்… அவன் செய்த நிலைகள் எல்லாம் மறைந்தது. அரசனும் மடிந்தான். அவன் மீண்டும் மிருக நிலையையே அடைந்தான்.

அதைப் போன்ற நிலைகள் “மனிதனுக்குள் தீவிரவாதம்..,” என்ற நிலைகளில் அதீதமாக வளர்ந்து இன்றும் மனிதன் சிந்தனை இழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளான்.

கடும் விஷத் தன்மைகளைப் பரவச் செய்துள்ளார்கள். அந்த விஷத் தன்மைகள் அனைத்தும் நம் பூமியின் மையப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
1.அதனால் நம் பூமி கூடிய சீக்கிரம் நீர் நிலை அடையப் போகின்றது.
2.நீர் நிலை அடைந்தால் நாம் மீனின் நிலை தான் அடைவோம்.
3.பூமி சூரியனைக் கடந்து செல்லப்படும் பொழுது வியாழன் கோளைப் போன்று பனிப் பாறைகளாகி
4.பூமி நகர்ந்து சென்றாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விஷத்தன்மைகள் சூரியனுக்குள் சென்று “சூரியனே மடியப் போகின்றது…”
5.அதிலே கதிரியக்கப் பொறிகள் வரப்படும் பொழுது சூரியனுக்குள் கொதிகலனாகின்றது.
6.பூமிக்குள் எரிமலை கக்குவது போல சூரியன் செயலிழக்கும் தன்மை வந்து கொண்டே இருக்கின்றது.
7.இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் பிரபஞ்சத்தில் பரவப்படும் பொழுது மற்ற கோள்களுக்குள்ளும் செல்கின்றது.
8.இந்தச் சுழற்சி போய் விட்டால் இனி மனிதன் வாழும் இன்னொரு பூமிக்குள் சிக்கி
9.அங்கே மனிதனான பின் தான் அதிலிருந்து மீண்டிட முடியும்.
10.ஆனால் அது வரையில் வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க நேரும்.

இதிலிருந்து சிறிதளவேனும் காக்க வேண்டும்.

ஆகவே இன்று மனிதனாக வாழும் நிலையில்
1.“நினைவு இருக்கும் பொழுதே” அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
2.உடலை விட்டுச் செல்லும்போது அந்த ஞானிகளின் உணர்வுடன்
3.“என்றும் ஏகாந்த நிலை பெற முடியும்..” என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே வாழ வேண்டும் என்று அந்த எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடருங்கள்.

யாருடைய துன்பத்தின் நிலைகளைக் கேட்டறிந்தாலும் உடனே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நோயால் வேதனைப்படுபவர்களைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று “அவர்களை எண்ணச் செய்யுங்கள்…” மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று நீங்கள் நலமடைவீர்கள் என்று “செவி வழி… இந்த உணர்வை ஓதுங்கள்…”

நினைவாற்றலை இதே போல அவரை எண்ணச் செய்யுங்கள்.

அதன் வழி வந்தால் அவர்களுக்குள் வரும் பகைமைகள் மறையும். அவர்கள் நினைவாற்றல் அந்த மகரிஷிகளின் பால் செல்லும். அதே சமயத்தில் அவரின் நோயின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகாது.

1.அந்த அருள் ஒளியின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது
2.அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது தீமைகள் அடங்கி விடுகின்றது.
3.அப்பொழுது அருள் ஒளியின் தன்மையே நமக்குள் வளர்கின்றது.
4.அவர் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… அவர் உடலில் வந்த நோய் நமக்குள் வருவதில்லை.

இதை நாம் அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் ஆக்சிடென்ட் ஆகின்றான்… பார்க்கின்றோம். “இப்படி ஆகிவிட்டதே…” என்று நாம் வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது “ஓ..ம் நமச்சிவாய…”
1.பய உணர்வுடன் எடுக்கும் பொழுது நம் உடலாக சிவமாக ஆகின்றது
2.அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது.

ஏன்… அவ்வாறு ஏற்படுகின்றது…? நாம் தவறு செய்யவில்லை.

நம்முடைய உயிர் எவ்வாறு உடலாக மாற்றுகின்றது..?

1.கண்கள் அவன் செயலை உற்றுப் பார்க்கச் செய்கின்றது.
2.கண்ணின் கருவிழியோ படமாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உணர்வின் அலையைக் கவரச் செய்கின்றது.
3.உயிரோ “ஓ…” என்று பிரணவமாக்குகின்றது
4.அடிபட்டான்…! என்ற உணர்வினை உணர்த்துகின்றது.
5.அந்த உணர்வின் தன்மை உடலாக உறையச் செய்கின்றது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

இங்கே யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒரு ஆக்சிடென்ட் ஆகின்றது என்றால் “வேண்டும் என்றே விழுகின்றார்களா…?” இல்லையே…!

அவனுடைய வாழ்க்கைக்காகச் சென்றான். எதிர்பாராது ஒரு வண்டி மோதுகின்றது. அடிபட்டு அவன் துடிக்கின்றான். அவன் உடலிலிருந்து துடிக்கும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது.

சூரியனின் காந்தப் புலனறிவோ அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. கண்களோ துடித்தவணின் உணர்வை உற்றுப் பார்க்கின்றது… உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்குகின்றது.

ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்ட அலைகளைக் கண்ணின் காந்தப் புலனறிவு தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. நம் உயிரோ அதை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உணர்த்துகின்றது. ஜீவ ஆன்மாவாக மாற்றுகின்றது.

யாரும் தவறு செய்யவில்லை.
1.நமக்குள் இருக்கும் புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது
2.அந்தத் தீமை என்ற நிலையை அந்தந்தச் சந்தர்ப்பங்களில் உணர்த்துகின்றது.
3.ஆனால் தீமையிலிருந்து விடுபடும் ஆறாவது அறிவு கொண்டு நாம் விடுபட வேண்டுமே..,!

விடுபட வேண்டும் என்றால் விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளைச் சுவாசித்தல் வேண்டும்.

அப்படிச் சுவாசித்தால் “ஓ..ம் நமச்சிவாய…” “ஓ..ம் நமச்சிவாய…”

ஏனென்றால் அந்த மகரிஷிகள் தீமையை அகற்றியவர்கள்… நஞ்சை வென்றவர்கள். உணர்வை ஒளியாக மாற்றியவர்கள்.

“சிவாய நம ஓ..ம்..” “சிவாய நம ஓ..ம்…”
1.நான் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
5.அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான அறிவால் வளர்த்துக் கொண்ட நிலைகளில் பல நஞ்சான உணர்வுகள் பரவிக் கொண்டுள்ளது. உலகில் நடக்கும் பல கொடுமையான நிலைகள் இன்டெர்னெட் மூலமும் டி.வி. மூலமும் பத்திரிக்கை மூலமும் வந்து கொண்டே இருக்கின்றது.

அதில் எதையெல்லாம் மனித உடலில் படைத்தோமோ அவையெல்லாம்
1.“சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது…”
2.அதை நுகர்ந்தால் நம்மை அறியாமலே பல தீமைகளை உருவாக்கும் நிலைகள் உருவாகின்றது.

“வேடிக்கைதான்…” பார்க்கின்றோம். ஆனால் உற்றுப் பார்க்கும் உணர்வுகள் நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது. அதைத் தடுக்க வேண்டும்… சுத்தப்படுத்த வேண்டும்.

“சந்தேக உணர்வுடன் பதிவாக்கினால்…” மெய் ஞானிகள் கண்டதை அறிய முடியாது… உணரவும் முடியாது

 

ஒரு மந்திரவாதி அவன் இறந்து விட்டால் அவனுடைய மந்திரத்தை இன்னொருவன் கேட்டுணர்ந்து அதன் துணை கொண்டு செயல்பட்டால்
1.அந்த மந்திரவாதி உடலில் விளைந்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்த பின்
2.அதே ஆவியின் தன்மை இங்கே வந்து பல பல நிலைகளைச் செயல்படுத்தும் “அவனை அறியாமலே…!”
(இது எல்லாம் படித்துத் தெரிந்து கற்று வருவதல்ல – மனிதனுக்குள் விளைந்தது)

மந்திரவாதி எந்தெந்தச் சக்திகளைச் செய்தானோ இந்த உணர்வின் தன்மை அவனுடன் பற்று கொண்டு அவன் செயலாக்கும் தன்மையை இங்கே உருவாக்கும்.

ஆனால் அதனால் விளைந்த உணர்வின் வினைகள் அங்கே விளையும் பின் இவனின் (உடலுடன் உள்ளவன்) காலத்தில் இவனின் இச்சைகள் கூடி நஞ்சின் தன்மை கொண்டு அது மறையும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்Rறைய மெய் ஞானியான அகஸ்தியனுக்கு எப்படிப் பேராற்றல் கிடைத்தது…? அவன் எவ்வாறு வளர்ச்சி பெற்றான்…? என்ற உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குத் தான்.

அன்று அவன் பெற்றாலும்
1.இன்றைய நிலைகளில் நடைமுறை சாத்தியத்திற்கு… நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
2.விண்ணுலக ஆற்றலை அன்று அகஸ்தியன் ஐந்து வயதில் அந்தப் பிஞ்சு உள்ளத்திலே எப்படிக் கற்றுணர்ந்தான்…? என்ற நிலைகளை
3.உங்களுக்குள் நினைவு கொள்ள இது உதவும்…!

குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகளை நீங்களும் தெளிந்திடும் உணர்வாகத் தெரிந்திட வேண்டும்.
1அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற உண்மையின் சக்தியை
2.இன்றைய நடைமுறைக்கு நீங்கள் உணர இது உதவும்… அது உணர்ந்தால் தான் வரும்.

ஏனென்றால்…
1.சாமி சொல்கிறார் நிஜமாக இருக்குமோ…! அல்லது பொய்யாக இருக்குமோ…? என்று எண்ணினால் அங்கே வீழ்ந்து விட்டது
2.சந்தேக உணர்வு கொண்டால் மெய் உணர்வின் தன்மை பெறும் தகுதியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

ஒரு இயந்திரத்தைக் கட்டுப்படுத்த கம்ப்யூட்டரில் ஆணையிட்டு வைக்கின்றனர். வெப்பத்தின் நிலைகள் வரும் போது அந்த அலைகளைக் கொண்டு அளந்தறிந்து (SENSOR)
1.இத்தனை டிகிரியில் அது இயங்க வேண்டும் என்று வைத்து விட்டால்
2.அதே டிகிரி வெப்பம் வந்தபின் அந்தக் கம்ப்யூட்டர் சமநிலைப்படுத்தி இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.

இதை போன்று தான் அருள் ஞானியின் உணர்வை நீங்கள் எண்ணி வரப்படும் பொழுது
1.உங்கள் டிகிரியை சந்தேக உணர்வு கொண்டு வந்து விட்டால் கீழே இழுத்து விடும்.
2.நான் கொடுக்கும் பதிவின் தன்மையை மாற்றிவிடும்.
3.மாறாது இருப்பதற்கே இடைமறித்து இடைமறித்து உங்களுக்குள் ஒவ்வொரு ஞானத்தின் நிலைகளையும் உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு உணர்வின் இயக்கங்களும் அது எவ்வாறு இயங்குகின்றது…? என்பதைத் தெளிந்து கொண்டால் இந்த மனித வாழ்க்கையில் விஞ்ஞான உலகில் உடலை விட்டு நாம் அகன்றாலும் மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளிச் சரீரத்தைப் பெற முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இப்பொழுது இழந்து விட்டால் மீண்டும் தேய்பிறையாக விஞ்ஞான அறிவினால் நஞ்சுக்குள் சிக்கப்பட்டு வேதனை கொண்ட சரீரங்களுக்கே நம்மை உயிர் கொண்டு சென்றுவிடும்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனுக்குள் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் படர்ந்து கொண்டுள்ளது. அதை நாமும் பெற முடியும்.

ஆரம்பத்திலே குருநாதர் என்னைப் பழனியிலே மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறுவதற்கு விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்து இந்த உயர்ந்த உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வுகளை எனக்குள் தூண்டச் செய்து அதை நான் நுகர்ந்தறியும் பொழுது அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இன்று நாம் டிவிக்களில் பார்ப்பது போன்று உருவமாகக் காண முடிந்தது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு சேட்டிலைட்டை (செயற்கைக் கோள்) பூமிக்கு வெளியியே அனுப்பி ஒளி/ஒலியலைகளைப் பதிவு செய்து
1.பூமிக்குள் நடக்கும் பூகம்பமும்
2.பூமிக்கு அடியில் இருக்கும் நீர் நிலைகளையும்
3.பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணை வளங்களையும்
4.பூமிக்கு அடியில் இருக்கும் உலோகத் தன்மைகளையும் எப்படி அறிகின்றார்களோ
5.அதைப் போன்று தான் என்னுடைய எண்ணத்தை ஊடுருவச் செய்து
6.“நினைவை அண்டத்திலே பாய்ச்சிப்பார்…! என்ற குருவின் வாக்குப்படி அவரின் துணை கொண்டு
7.அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

அகஸ்தியன் கண்டதை நீயும் காண முடியும். அவனுடைய அறிவின் தன்மையை நீ உனக்குள் பெற்று அதை முழுமையாக அறிய முடியும் என்று எனக்குள் ஆழமாகப் பதிவாகும்படி உபதேசித்தார் குருநாதர்.

அதே வழியில் இப்பொழுது உங்களுக்கும் அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இரு நிலையாகவோ… பல நிலையாகவோ… இருந்தாலும் அதை நல்நிலைப்படுத்த வேண்டும்

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாக காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் ஆக்சிடென்ட் ஆகின்றான்… பார்க்கின்றோம். “இப்படி ஆகிவிட்டதே…” என்று நாம் வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது “ஓ..ம் நமச்சிவாய…”
1.பய உணர்வுடன் எடுக்கும் பொழுது நம் உடலாக சிவமாக ஆகின்றது
2.அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது.

ஏன்.., அவ்வாறு ஏற்படுகின்றது…? நாம் தவறு செய்யவில்லை.

நம்முடைய உயிர் எவ்வாறு உடலாக மாற்றுகின்றது..?

1.கண்கள் அவன் செயலை உற்றுப் பார்க்கச் செய்கின்றது.
2.கண்ணின் கருவிழியோ படமாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உணர்வின் அலையைக் கவரச் செய்கின்றது.
3.உயிரோ “ஓ…” என்று பிரணவமாக்குகின்றது
4.அடிபட்டான் என்ற உணர்வினை உணர்த்துகின்றது.
5.அந்த உணர்வின் தன்மை உடலாக உறையச் செய்கின்றது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

இங்கே யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒரு ஆக்சிடென்ட் ஆகின்றது என்றால் “வேண்டும் என்றே விழுகின்றார்களா…?” இல்லையே.

அவனுடைய வாழ்க்கைக்காகச் சென்றான். எதிர்பாராது ஒரு வண்டி மோதுகின்றது. அடிபட்டு அவன் துடிக்கின்றான். அவன் உடலிலிருந்து துடிக்கும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது.

சூரியனின் காந்தப் புலனறிவோ அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. கண்களோ துடித்தவணின் உணர்வை உற்றுப் பார்க்கின்றது… உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்குகின்றது.

ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்ட அலைகளைக் கண்ணின் காந்தப் புலனறிவு தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. நம் உயிரோ அதை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உணர்த்துகின்றது. ஜீவ ஆன்மாவாக மாற்றுகின்றது.

யாரும் தவறு செய்யவில்லை.
1.நமக்குள் இருக்கும் புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது
2.அந்தத் தீமை என்ற நிலையை அந்தந்தச் சந்தர்ப்பங்களில் உணர்த்துகின்றது.
3.ஆனால் தீமையிலிருந்து விடுபடும் ஆறாவது அறிவு கொண்டு நாம் விடுபட வேண்டுமே..,!

இதற்குத்தான் இந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளைச் சுவாசித்தல் வேண்டும்.

அப்படிச் சுவாசித்தால் “ஓ..ம் நமச்சிவாய…” “ஓ..ம் நமச்சிவாய…”

ஏனென்றால் அந்த மகரிஷிகள் தீமையை அகற்றியவர்கள்… நஞ்சை வென்றவர்கள். உணர்வை ஒளியாக மாற்றியவர்கள்.

“சிவாய நம ஓ..ம்..” “சிவாய நம ஓ..ம்…” – நான் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும். அவர்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்சுதல் வேண்டும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான அறிவால் வளர்த்துக் கொண்ட நிலைகளில் பல நஞ்சான உணர்வுகள் பரவிக் கொண்டுள்ளது. உலகில் நடக்கும் பல கொடுமையான நிலைகள் இன்டெர்னெட் மூலமும் டி.வி. மூலமும் பத்திரிக்கை மூலமும் வந்து கொண்டே இருக்கின்றது.

அதில் எதையெல்லாம் மனித உடலில் படைத்தோமோ அவையெல்லாம்
1.“சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது…”
2.அதை நுகர்ந்தால் நம்மை அறியாமலே பல தீமைகளை உருவாக்கும் நிலைகள் உருவாகின்றது.

“வேடிக்கைதான்…” பார்க்கின்றோம். ஆனால் உற்றுப் பார்க்கும் உணர்வுகள் நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது. அதைத் தடுக்க வேண்டும்… சுத்தப்படுத்த வேண்டும்.

ஆகவே நாம் தவறு செய்யாமலே.., நம்மையறியாமல் வரும் பல கொடுமையான தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

குருவிடம் யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற “உயர்ந்த சக்தி”

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் அனுபவம் பெறுவதற்காக யாம் (ஞானகுரு) கன்னியாகுமரியில் இருந்து வடக்கே சைனா பார்டர் வரை சென்று வந்தது தான்.

என் கால்களிலே எத்தனையோ ஆணிகள் உண்டு. இமயமலையின் மீது செல்ல வேண்டுமென்றால் வெறும் கோவணத் துணியுடன் தான் செல்ல வேண்டும்.
1.குருநாதர் சொன்ன முறைப்படி அவர் எதை எண்ணும்படி சொன்னாரோ
2.அதை எண்ணிக் கொண்டுதான் அங்கே செல்ல வேண்டும்.

நடந்து செல்லும் வழியில் ஒரு சுடு தண்ணீர் குளம் இருந்தது. அங்கே சூடு கதகதப்பாக இருந்ததால் அந்த இடத்திலே அமர்ந்து குருநாதர் சொன்னதைச் செய்யலாம்…! என்று நினைக்கின்றேன்.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார். நீ இங்கே குளிர் காய வரவில்லை… குளிர் அடிக்கும் இடத்திலே போய் உட்கார்…! என்றார்.

விண்ணுலக ஆற்றல் அனைத்தையும் நினைவு கொண்டு எடுத்துக் கொண்டிருந்தேன்.
1.ஒரு முக்கியமான ஒன்றைச் சொன்னார்…
2.அதை நீ எண்ணும் போது இன்ன நிலை இருக்கும். உனக்குக் குளிர் வராது உன்னைப் பாதிக்காது
3.அதே சமயத்தில் உன் நினைவுகள் அனைத்தும் விண்ணை நோக்கிச் செல்லும்… துருவ நட்சத்திரத்துடன் உன்னை இணைக்கும்
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை ஒடுக்கினானோ அந்த சக்தி உனக்குள் பெருகும்
5.உன் உணர்வின் தன்மை உயர்த்த இது உதவும் என்று சில முறைகளைச் சொன்னார்.

அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்..!

ஆனால் முதலில் நடந்து செல்லும்போது அது சைனா பார்டராக இருப்பதால் அங்கு இருப்பவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்னென்னமோ சொல்கிறார்கள்…! எனக்கு ஒன்றும் புரியவில்லை… கண்களை இறுக்கி மூடி விட்டேன்.

நடந்து செல்லும் போது காலை வைத்தால் முழங்கால் வரை உள்ளே செல்கின்றது. பனி முழுமையாக உறையாமல் இறுகலாக இல்லாதபடி கால் உள்ளே செல்லும்படியாக பொல பொல என்று இருக்கின்றது. கால் எல்லாம் கடு..கடு.. என்று இருக்கின்றது.

1.அத்தகைய பனிக்குள் கால் அதிக நேரம் இருந்தால் உணர்ச்சியற்றுப் போகும்
2.உன் கால் அழுகிப் போய்விடும் என்று ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார்.

அங்கே எப்படிச் சென்றாலும் என் உணர்வு குரு கொடுத்த சக்தியை மறந்து செயல்படும் பொழுது கடுகடுப்பு அதிகம் ஆகிவிட்டது. கடுகடுப்பு அதிகமான பின் என் நினைவுகள் எப்படி வருகிறது…?

இப்படி ஆகிவிட்டதே… ஊரை விட்டு இங்கு வந்து விட்டோமே… என் பையன் அவன் என்ன செய்கிறானோ…? என்று நினைவு வந்து விட்டது. உடனே என் இருதயம் குளிரினால் கிர்… என்று இறைய ஆரம்பிக்கின்றது. சரி… இதோடு எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கின்றது என்ற எண்ணம் தான் வருகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது அந்த இடத்தில் இத்தனை இம்சைகளும் வருகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து காக்கப்பட வேண்டும் என்றால்
1.குரு சொன்ன நினைவை எடுக்க வேண்டும்
2.உன்னைக் காக்க வேண்டும் என்றால் நீ அந்த உயர்ந்த சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
3.உயர்ந்த சக்தியைப் பெற்றால் தான் உன் குழந்தையைக் காக்க முடியும்
4.உடலில் காக்கும் உணர்வு இருக்கின்றது… அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் உயர்ந்த சக்தி எடுக்க
5.இந்த உடல் தேவை…! என்று இப்படி உபதேசிக்கின்றார்.

குருவை எண்ணி அவர் கொடுத்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

உலக மக்கள் அனைவரும் எத்தனையோ வகையில் சிக்குண்டுள்ளனர்.. வேதனையில் உழன்று கொண்டுள்ளனர். அதிலிருந்து மீட்ட “அந்த அருள் ஞானிகள் உணர்வை எல்லோரும் பெற வேண்டும்…” என்று எண்ணும்படி சொன்னார்.

விண்ணை நோக்கி ஏங்கி அந்தச் சப்தரிஷி மண்டலங்களை ஊற்றுப் பார்த்து… இருளை மாய்த்து உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வை நுகரும் பொழுது இங்கே இருள் மறைகின்றது.

இந்த இடத்திலே
1.எல்லோருக்கும் சேர்த்து வேதனைப்படுவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
2.உன் பிள்ளைக்கு மட்டும் என்று தனித்துக் கேட்காதே…! என்று குருநாதர் சொன்னார்.

பாச உணர்வுகள் என்னை எப்படி இயக்குகிறது என்பதை உணர்த்துகின்றார். பழனியில் அங்கே காட்சி தெரிகின்றது வீட்டில் என் பையன் ரோட்டின் முச்சந்தியில் உட்கார்ந்து நானா… நானா… (நைனா) என்று என்னைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவனுக்கு மூலம்…! இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது இமயமலையில் இருந்து பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்…? குரு அனைத்தையும் குரு காண்பிக்கின்றார்.

ஆக அவன் வேதனைப்படுவதை எண்ணும் பொழுது தான் எனக்குள் இருள் சூழச் செய்கிறது… இருதயம் இறைய ஆரம்பித்தது. அப்போது என் பையனைக் காக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை.

அவனை எண்ணி வேதனைப்படும் நிலையில் அந்த வேதனை என்ற நஞ்சு உன்னை எப்படிச் செயலற்றதாக மாற்றுகின்றது…? ஆதை மாற்ற நீ என்ன செய்ய வேண்டும்…? இந்த உணர்வின் இயக்கங்களில் இருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்ற உண்மையை இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

உங்களிடம் இப்போது லேசாகச் சொல்லுகிறேன்… நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்கின்றீர்கள்.
1.ஆனால் இதைக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்ற பின் மறந்து விடுகின்றீர்கள்
2.சாமி என்ன சொன்னார் தெரியவில்லையே…! என்று விட்டு விடுகின்றீர்கள்.

குருநாதர் என்னைக் கடுமையான கஷ்டங்களுக்கு உள்ளாக்கித் தான் இந்தப் பேருண்மைகளை உணர்த்தினார்.
1.என்னால் மறக்காது…
2.குரு காண்பித்த அந்த உயர்ந்த சக்தியை எடுக்க முடிகின்றது.

கஷ்டப்பபட்டுப் பெற்ற அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன். ஆனாலும் சாமி பிரமாதமாகப் பேசுகிறார்… இதை என்ன என்று சொல்வது…! என்று பெருமை பேசி விட்டுச் சென்று விடுகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றால் அங்கிருக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் இவ்வாறு செய்கின்றார் என் அப்பா இப்படிச் சொல்கிறார்… என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… எனக்கு ஒரே கஷ்டமாக இருக்கிறது என்ற உணர்வுகள் தான் உங்களுக்குள் வருகின்றது.

அதை எல்லாம் மாற்றுவதற்கு தான் இந்த உண்மைகளை உங்களுக்கு தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். நீங்கள் எங்கு சென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் யாம் சொல்லிக் கொடுத்த பக்குவம் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.பார்க்கும் அனைவரையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வேன்
3.எங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
4.என்னை பார்க்கும் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ வேண்டும்
5.அவர்கள் குடும்பங்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
6.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினைக்கும் பொழுதும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
7.இப்படித்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அந்த பனிப்பாறைகளுக்கு மத்தியிலே எனக்கு குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

நீங்கள் இங்கிருந்தே அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும். குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களை அறியாத இருங்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
1.ஏகோபித்து நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.
2.குரு இட்ட ஆணைப்படி இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

ஆத்மாவிற்குக் கொடுக்க வேண்டிய உயர்ந்த பூச்சு

 

நீர்ச் சத்து நிறைந்த பொருளை உஷ்ணப்படுத்தி வேக விடும் தருணத்தில் நீர் சத்து சுண்டி அப்பொருளும் வெந்து விடுகின்றது.

அதையே இன்னும் அதிக உஷ்ணமுடன் வேக விட.. வேக விட… உஷ்ணத்தினால் எரிசக்தியின் காந்தலுக்குகந்த கருகும் நிலை கொண்டு எந்தப் பாத்திரத்தில் வேக விடுகின்றோமோ கருகிய நிலையுடன் அதிலே ஒட்டி உலர்ந்த பக்குவம் பெற்று விடுகின்றது.

அதுவே நீர் சக்தி இல்லாத எண்ணை வித்தை ஓர் வாணலியில் எண்ணை விட்டு அதைக் காய்ச்சும் பொழுது
1.எவ்வளவு நேரம் அந்த எண்ணை காய்ந்தாலும்
2.மெழுகு போல் திடம் கொண்டு… பிசின் போன்ற நிலை பெறுகின்றது.
3.உலர்ந்த தன்மை பெறுவது இல்லை.

இதைப் போன்றுதான் நம் உடலில்… ஜீவ உணர்வு எண்ண பூமி சமைப்பின்…
1.நீர் சக்தியுடன் நாம் எடுக்கும் சுவாச அலையானது…
2.பூமி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றிய சரீர இயக்க வலுத் தன்மையாக
3.இந்தப் பூமி சமைக்கும் நிலைக்கொப்ப ஒன்றிய உடல் வாழ்க்கையாக நிலை அமைகின்றது.

ஆனால் வலுக் கூடிய வளர்ச்சி கொண்ட… இந்தப் பூமியின் வலுப் பெற்ற… பிற மண்டலத்தில் இருந்து அகிலத்தையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட ரிஷிக் கோடிகளான தேவாதி தேவர்களின் சக்தியை நாம் பெற வேண்டும்.

அத்தகைய வலுக் கொண்டோரிடம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும் சுவாச வலுவால்
1.சரீர இயக்க வலுத்தன்மையும்
2.எலும்புகளின் உறுதி ஊட்டச் சத்தும்
3.உண்ணும் உணவைக் காட்டிலும் சத்தாக
4.எலும்புகளின் வளர்ச்சி முற்றி ஆத்ம வலு நிலை கொள்கின்றது.

நீரின் சத்தை எடுத்துத்தான் வித்தாகின்றன எண்ணைச் சத்து தரும் வித்துக்கள். அதைப் போன்று நம் ஆத்மாவை “சரீர ஜீவ நீர் சத்தைக் கொண்டு”
1.எலும்புகளை எல்லாம் எண்ணை வித்தின் வளர்ப்பு நிலை போன்று வலுவாக்கி
2.அந்த வலுவின் தொடரைக் கொண்டு ஆத்ம இயக்கம் செயல் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீர் சத்தால் துருப்பிடிக்கும் இரும்பு உலோகத்தை எண்ணைச் சத்தை இட்டு அதைத் துருப்பிடிக்காமல் செய்கின்றோம் அல்லவா…!

அந்த இரும்பைப் பாதுகாக்கும் செயல் தன்மை போன்று நம் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்.

அதாவது…
1.ஜீவ இயக்க எண்ண உணர்வானது இந்தப் பூமி சமைப்பின் உணர்வு எண்ண
2.கர்ம காரிய வாழ்க்கையுடன் சிக்கித் துருப்பிடிக்கும் கரையும் நிலை போன்ற நிலைப்படுத்தாமல்
3.எண்ணை வித்தைப் போன்று
4.சத்து நிலை பூண்ட… சத்து குண வலுக் கொண்டோரின் வலுவைப் பூசி
5.ஆத்ம உடலைப் பாதுகாத்திடல் வேண்டும்.

பல காலம் மறைத்து வைத்த உண்மை…!

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய நிலைகள்…
1.நான் சொன்ன முறைப்படி நீ அருள் ஞானிகள் உணர்வுகளை உனக்குள் எடுத்து அதை விளைய வைத்து
2அந்த உணர்வின் வித்தை மற்றவர்களுக்குள் நீ பதிவு செய்ய வேண்டும்.
3.யாரெல்லாம் கவர்ந்து அதைப் பதிவாக்குகின்றார்களோ… விளையும் பருவத்தை அவர்களுக்குள் ஊட்டி
4.ஞானியின் வித்து அங்கே விளையும்படி என்று நீ உருவாக்குகின்றாயோ
5.அந்த உணர்வின் துணை கொண்டே அவர்களுக்குள் “என்னை நீ காண முடியும்…!” என்றார்.

உங்களை எப்போது எங்கே பார்ப்பது…? என்று நான் (ஞானகுரு) வினா அவரிடம் எழுப்பும் போதெல்லாம்
1.எங்கும் எதிலும் என்னை நீ பார்க்கலாம்…
2.நான் கொடுத்த அருள் உணர்வின் தன்மை பிறரில் இயக்கச் செய்து
3.அதன் வழி தீமைகள் அகன்று எங்கெல்லாம் அது மகிழ்ந்த உணர்வாக வருகின்றதோ
4.அங்கே நான் வருவேன்…! என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உபதேசிப்பதை நினைவு கொண்டு யாரெல்லாம் அதன் படி செயல்படுத்துகின்றீர்களோ
1.உங்கள் பார்வையால் பிறருடைய கஷ்டங்களும் நோய்களும் என்று அது நீங்குகின்றதோ
2.நான் பார்த்தேன்… சொன்னேன்… அதன் வழி கடைப்பிடித்தார்கள்…
3.இப்போது நாங்கள் நலமாக இருக்கின்றோம் என்று மற்றவர் எப்பொழுது சொல்லுகின்றனரோ
4.அதிலே தான் என் குருவை உங்களில் நான் காண முடியும்.

மணிக்கணக்காக உங்களிடம் நான் பேசினாலும் உங்களில்… குருவைக் காணும் நிலையாக… உங்கள் மகிழ்ச்சியால் பேரானந்த நிலை பெறும் பாக்கியசாலியாக நான் ஆகின்றேன்.

1.உங்களிடம் இருந்து தான் அவரின் சக்தியை என்னைப் பெறும்படி செய்தாரே தவிர
2.தனித்து “நான் மகான் என்று காண்பித்து… மற்றதை அடக்கு…!” என்று அவர் சொல்லவில்லை.

ஆகவே குருநாதர் உணர்த்தியபடி ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம் என்றால்… உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு மனிதனில் முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி என்றும் நிலையான ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… தெரிந்து கொள்ளுங்கள்… அறிந்து கொள்ளுங்கள்…!
1.பல காலம் இதை மறைத்து வைத்திருந்தேன்.
2.விஞ்ஞான அழிவுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த உண்மையினுடைய நிலைகளை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டு உணர்ந்தோர் உங்களை அறியாத வந்த தீமைகள் நீங்க வேண்டும். தீமை உங்களை அணுகாது தடுக்கும் சக்தி பெற வேண்டும்.

1.தீமையை நீக்கிட்ட உங்கள் சொல்லின் உணர்வுகள் பிறரின் செவிகளில் உந்தப்பட்டு
2.உங்களை அவர்கள் உற்றுப் பார்க்கும் போது தீமையை அகற்றும் உணர்வுகள் அவர்களுக்குள் புகுந்து
3.அவரில் அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்…
4.அந்தச் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதை உபதேசிக்கின்றேன்.

உபதேசிக்கும் பொழுதெல்லாம் குருவின் நினைவு எனக்குள் வருகின்றது… அவரின் ஆற்றல் எனக்குள் பெருகுகின்றது… அவர் உணர்வின் அலைகள் இங்கே படர்கின்றது… கேட்டுணர்ந்தோர் உங்கள் உடலிலும் பதிவாகின்றது.

பதிந்த குருவின் ஆற்றல் உங்களுக்குள் நிச்சயம் செயல்படும்…! என்ற நம்பிக்கையிலே உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… மெய் உணர்வின் ஆற்றல் உங்களில் விளைய வேண்டும் என்ற ஆசையில் இதைச் செயல்படுத்துகின்றேன்.

அதன் வழி உங்களுக்குள் மகிழ்ச்சி பெருக வேண்டும். அதுவே எனக்குள் பேரானந்தப் பெரு நிலையை உருவாக்கும்.

தீமை அகற்றிடும் சக்தி பெற்றவரை நான் (ஞானகுரு) காணும் பொழுதெல்லாம்
1.எனக்குள் தீமை அகற்றிடும் சக்தியாக அது விளைந்து
2.குருவின் அருள் எனக்குள் விளைந்து அவருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.என்றும் நிலையான பிறவா நிலை வேகாநிலை என்ற நிலையை நான் உங்களிடமிருந்து பெற முடியும்.

அதைப் போன்று நீங்களும்… பிறருடைய தீமைகளைக் கண்டபின் அதை அவர்கள் நீக்கிடும் நிலையாக நீங்கள் செயல்பட்டு… அவர்கள் தீமைகளை நீக்கி மகிழும் போது… நீங்கள் அதைக் கண்டு பேரானந்த நிலை பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய இந்த வழியில் அனைவரும் செயல்பட வேண்டும் என்பற்கே இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உள் மனம்… வெளி மனம்…!

 

சில நேரங்களில் மனித உணர்வின் எண்ணம் செயல் கொள்ளும் காலங்களிலேயே “உள் மனம்… வெளி மனம்…” என்ற இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்டங்கள் உருவாவதை அறிகின்றோம்.

1.ஆத்ம இயக்கத்தின் சரீர உந்தலில் சரீரம் சமைக்கும் எண்ண உணர்வு
2.ஆத்மாவின் பதிவு – சரீர மோதலின் எண்ண உணர்வு என்ற
3.இந்த இரண்டு வகையான போராட்டக் காலங்களில் தான்
4.மனிதன் சொல்லும் உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலை கொண்ட எண்ணங்களே ஓடுகிறது.

சில ஆத்மாக்களுக்குச் சபல நிலையின் இரண்டு குண மோதலில்… வாழ்க்கை நிலை நடைபெறும் நிலையும் நிகழ்கின்றன.

1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து போன்றது
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.

நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் சக்தி வாய்ந்தது. ஆத்ம உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்… அதைக் காக்கும்…!

வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும்…. அல்லது வலிமை இருக்காது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று அறிந்து கொண்ட நிலையில்.. மேல் நோக்கிய சுவாசமாக எடுக்கும் ஞானியரின் உணர்வுகளை ஆழமாக நமக்குள் பதிவாக்கிடல் வேண்டும். அதை வலுக் கொண்ட பதிவாக நம் ஆத்மாவில் ஏற்றிடல் வேண்டும்.

1.ஆத்மாவின் அத்தகைய வலுவைக் கொண்டு சரீரத்தை மட்டுமல்ல…!
2.சகல சித்துக்களையும்… சகல நிலைகளையுமே… அந்த ஆத்ம வளர்ச்சியினால் மட்டும் தான் வலுப்படுத்திட முடியும்.

பக்தி கொண்டு வாழ்ந்து உடலை விட்டுப் பிரிவோரின் கடைசி நிலை

 

யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்த காலங்களில்
1.இறந்த பக்தி கொண்ட ஆன்மாக்கள் அதே போல் பக்தி கொண்டவர்கள் உடலுக்குள் புகுந்த பின்
2.எப்படி எல்லாம் அவர்கள் அவஸ்தைப் படுகின்றார்கள்…? அவருடைய எண்ணங்கள் எப்படி ஆகின்றது…? என்பதையெல்லாம்
3.குருநாதர் காட்டிய வழியில் அறிந்து கொண்டோம்.

கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.

என்னை அந்த அம்மா இருந்த வீட்டில் திண்ணையில் உட்காரச் சொன்னார் குருநாதர். அந்த அம்மாவால் எழுந்து நடக்க முடியாது.

அந்த அம்மாவிற்கு வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது.

என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, என்னை அநாதையாக்கி விட்டார்கள். செல்வமும் செருக்கும் உள்ள பொழுது என் மடி மேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா…!”

இப்பொழுது எங்கடா போனாய்…? செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா…? நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா…? நான் அநாதைதானா…? என்று புலம்பிக் கொண்டு உள்ளது.

ஆனால் உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து அசிங்கமாக வைத்திருந்தது.

அந்த அம்மா வீடு பெரியது… சொத்துக்களும் அதிகம். ஆனால் நோய்வாய்ப்பட்ட பின் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

“முருகா…!” நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய். நான் சொல்கின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய். எனக்கு நல்ல வழியும் காட்டினாய்.. என்னிடம் செல்வம் இல்லையென்று நீ கூட இப்போது வராமல் போய் விட்டாயேடா…! என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே… எனக்கு இப்படிச் செய்கின்றார்களே…! எனக்குச் சொத்து வேண்டாம்.. நீ இருந்தால் போதும் முருகா…!

என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்… நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன்… என்னைக் கவனிப்பதற்கு நீ கூட வரவில்லையே. இந்த அசிங்கத்தைப் பார்த்து நீ கூட விலகி விட்டாயா…?” என்று கேட்டுக் கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரம் அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். அந்த அம்மவைப் பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்துத் துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர், செய்தேன்.

பின்பு ஆசீர்வாதம் கொடுத்தேன். மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,

“முருகா…! நீ வந்துவிட்டாயா…?” “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே…” என்று அப்போதும் முருகனைத் தான் நினைக்கின்றது.

என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய். இப்பொழுது பெரிய ஆளாக வந்து இருக்கின்றாய்… “நீ திருடனப்பா…!” என்று சொல்கின்றது.
1.நான் முருகன் இல்லை… சாதாரண மனிதன் தான்…! என்று சொன்னேன்.
2.முதலில் முருகன் வந்தான் என்றால் இப்போது ஏன் வரவில்லை…? என்று கேட்டேன்.

இது எல்லாம் மந்திர வழியால் (மந்திர ஒலிகள்) எடுத்துக் கொண்ட உணவுகள் தனக்குள் சிக்கப்பட்டு இதே உணர்வு கொண்டு முருகன் மேல் பக்தியாகச் சென்ற ஆன்மாக்கள் இறந்த பின்
1.உடலுடன் உள்ளவர்கள் அதே பக்தியை யார் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் புகுந்து
2.அவர்கள் வாழ்ந்த காலத்திலே (இறந்தவர்) கடைசியிலே நோய்வாய்ப்படும் பொழுது அவர்களை எப்படிக் கவனிக்காமல் விட்டார்களோ
3.அதே ஆன்மா இங்கே “முருகனைப் போன்று காட்சி தருவதும்…” பல நிலைகளைச் செய்வதும்
4.ஆனால் நாளடைவில் அந்தக் காட்சியின் உணர்வுகள் விளைந்து இப்படிக் கடும் நோயாக மாறுகின்றது.

சமுதாயத்தில் அவர்கள் குடும்பத்திலே இந்த வயதான அம்மா மீது எப்படி வெறுப்படைந்தனாரோ அந்த வெறுப்பினால்… சேர்த்து வைத்த சொத்தைப் பறிக்கத்தான் முடிந்தது… முருகன் காக்கவில்லை…!

செல்வத்தைப் பெற்றோம்… சந்தோஷமாக இருப்போம் என்ற நிலை இல்லை. எப்பொழுது மடிவார்…! என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்… தொலைந்து விட்டால் தன் இஷ்டத்திற்குச் செய்துவிடலாம் அல்லவா…!

காரணம் என்ன என்றால்
1.உயிரோடு இருக்கும் பொழுது சொத்தை எல்லாம்
2.மற்றவர்களுக்கு உயிலாக எழுதி வைத்துவிட்டால் என்ன செய்வது…?

ஏனென்றால் ஒரு சிலர் உயில் எழுதி வைத்ததைத் தெரிந்து கொண்டால்
1.சொத்து தன் கைக்கு வராது… மற்றவர்களுக்குச் சேர்ந்து விடும் என்றால்
2.இப்படி எல்லாம் சில குடும்பங்களில் நடக்கிறது.

செல்வம் இருந்தாலும்… அதைக் கொடுத்துச் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நிலையில் இருந்தாலும்… அவர்களைக் காக்கும் நிலை கூட மாறி விடுகின்றது.

இந்த அம்மா “யாருக்கோ உயிலை எழுதி வைத்துவிட்டார்…” என்று சொன்னதற்காகறகக வேண்டி இவரைத் தொல்லைப்படுத்திச் சொத்தைப் பறித்து அனாதையாக இப்படி விட்டு விட்டார்கள்.

குடும்பத்தில் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

சொத்து என்று வந்து விட்டால் அம்மா அப்பா என்று கூடப் பார்ப்பதில்லை… சகோதரர்களுக்குள்ளும் பகைமை வருகின்றது…!

1.முருகனை பக்தி கொள்கின்றோம் சிவனை வணங்குகின்றோம் என்று எல்லாம் தான் சொல்கிறோம்.
2.அதே சமயத்தில் அம்மாவோ அப்பாவோ சகோதரர்களோ அவர்கள் எனக்குத் துரோகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்துடன்தான் தெய்வத்தை வணங்குகின்றோம்
3.மந்திரத்தைச் சொல்லி சகோதரன் சாக வேண்டும்.. அல்லது தந்தை சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் முருகனை வணங்குகின்றார்கள்
4.ஆக பக்தி எந்த அளவிலே இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
5.உடலின் மேல் இச்சை கொண்டு தெய்வத்தைச் சாட்சியாக வைத்துச் செய்யக்கூடிய செயல்கள் தான் இது.

ஆனால் நல்ல உணர்வுகளை எடுத்துத் தீமைகளை அகற்றும் அந்த உணர்வின் தன்மை பெற்றால் நமக்குள் “நாம் தெய்வமாகலாம்…”
1.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
2.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும்
3.தெய்வீகப் பண்புடன் இருக்க வேண்டும்
4.தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும்
5.பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்றும்
6.நாம் ஒவ்வொருவரும் எண்ணினால் பகைமை மாறிவிடும் என்பதற்காக
7.ஆலயங்களில் இதைச் சொல்லி இருந்தாலும் இதை யாரும் செயல்படுத்துவதில்லை.

பக்தி என்ற பேரில் ஆலயத்திற்குச் சென்றாலும் தன் ஆசையின் நிலைகள் கொண்டு சந்தர்ப்பவசத்தால் சாமி சிலையையோ அல்லது படத்தையோ திரும்பத் திரும்பப் பார்த்துப் பதிவாக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் “தெய்வமாகக் காட்சி தருவதும்… மற்ற நிலைகளும்…”

இப்படி மனிதனுடன் பழகிய நிலைகள் இந்த மனித வாழ்க்கைக்குத் தான் அது பயன்படுகிறது. தான் எண்ணியது கிடைக்கவில்லை அல்லது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.

வேதனைகள் அதிகமான பின் அடுத்து மற்ற தெய்வங்களை
1.காளிக்கோ அங்களேஸ்வரிக்கோ மாடசாமிக்கோ முனுசாமிக்கோ ஆடுகளையும் மற்றதையும் பலியிட்டு
2.அந்த இரத்தத்தை அபிஷேகித்து மகிழும் நிலையில் தான் இருக்கின்றது.

இப்படி எல்லாம் செய்தால் அந்தத் தெய்வம் நம் கஷ்டத்தை நீக்கும் என்று தவறான வழிகளைத் தான் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்த தவறின் நிலைகளில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்தால் அசுர உணர்வு உண்டு மாடனாகவும் முனியனாகவும் இன்னொரு உடலுக்குள் ஆவியாகச் சென்று ஆட்டிப்படைக்கும்.

ஆகவே நாம் வணங்கும் முறைகள் எதுவோ உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி வெளியே செல்லப்படும் பொழுது நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்த உணர்வு தான் அங்கே காட்சியாக… நோயாக மாறுகின்றது.

இது எல்லாம் மனிதனால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்ட நிலைகள்…!

கண் வழி கவர்வதும் செவி வழி கேட்பதும் தான் பெரும்பகுதி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது

 

ஒவ்வொரு நொடிப்பொழுதும்
1.ஒளி… ஒலி… மணம்… இவற்றின் மோதலின் உணர்வு கொண்ட…
2.எண்ண ஓட்டச் சரீர வாழ்க்கை வழி முறையில் தான் நாம் வாழுகின்றோம்.

இத்தகைய தொடர் நிலைக்கொப்ப வாழும் சுழற்சித் தொடர்பில் ஒன்றி அந்தந்த உணர்வைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளோம்.

இதனின் பிடிப்புச் சுழலில் சிக்குண்டு அந்த வழி நிலையிலேயே வாழுகின்றோமே அன்றி அதை மாற்றும் நிலையை நாம் மேற்கொள்வதில்லை.

ஒன்றைப் பார்த்தவுடன் ஒளியின் விழி நிலையின் உணர்வு நிலை செயல் கொள்கிறது. ஒளி கொண்டு காணக்கூடிய விழி நிலையின் ஒளி உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் எண்ணத்தின் உணர்வுடன் மோதிய அலை அணுக்களையே வளர்த்துக் கொள்கின்றது.
1.ஆனால் பார்வையில் எதிர்ப்படும் செயலில் ஏற்படும் நிலைக்கொப்ப
2.“மாற்றி அமைக்க வேண்டும்…” என்ற நிலை வருவதில்லை.

இப்படி… சாதாரண நடைமுறையில் பழக்கப்பட்ட விழி நிலையில் காணும் ஒளி அலை உணர்வு எண்ண வேட்கைக்கொப்ப அணு வளர்க்கும் வளர் தன்மை மிக அழுத்தமான இயக்கம் வந்தால் மாற்றமாகின்றது. எப்படி…?

அதிர்வு…
ஆனந்தம்…
இனிமை…
கடுமை…
இதைப் போன்ற குணம் கொண்ட ஒளியின் விழி ஊடுருவல் செயல்படும் தன்மையால் அதற்குகந்த உனர்வின் எண்ண நிலைக்கொப்ப அணுத்தன்மை இச்சரீரத்தின் (இயந்திர) செயல் மாறிச் செயல்படுகின்றது.

அதாவது ஒளியினால் காணும் விழி நிலையின் உணர்வுக்கொப்ப பல பல ஒலிகளை வெளிப்படுத்துகின்றோம்..

1.அதிர்வு நிலை ஏற்படத்தக்க காட்சிகளைக் காணும் பொழுது
2.நம்மை அறியாமலேயே காணும் காட்சிக்கொப்ப
3.ஆ… இ… இச்.. இச்…! என்ற ஒலிகளை எழுப்புகின்றோம்.
4.இனிமை கலந்த காட்சி நிலையைக் காணும் பொழுது அதற்குகந்த ஆனந்த ஒலியை
5.நம்மை அறியாமலே ஆஹா… ஓஹோ…! என்று இனிமையுடன் கூடிய ஒலியைச் சிரிப்பலையுடன் வெளிப்படுத்துகின்றோம்.

இதன் தொடரிலேயே ஒலி அலையை ஈர்க்கவல்ல… செவி ஈர்ப்பு.. ஒலி கேட்கும் மோதலின் ஈர்ப்புக்கொப்ப… எண்ணத்தின் உணர்வு செயல்படுகின்றது.

ஆக… தான் கேட்கும் ஒலி ஈர்ப்புக்கொப்ப உணர்வின் எண்ணச் சுவாசத்தால் உடலின் அணு வளர்ப்பு நிலையும் ஏற்றத் தாழ்வு பெறுகின்றது.

இதன் தொடர்பைப் போன்றே…
1.சுவாசத்தில் மோதும் மணமும்
2.சுவையில் உண்ணும் உணவும்
3.மனித உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் அந்தந்த குண நிலைக்கொப்ப
4.அமில உணர்வின்… அணு வளர்ப்பின்… இந்திரிய ஆவி நிலையின் உதிர ஓட்டமாக சரீரத்தின் செயல் நடைபெறுகிறது.

இத்தகைய வாழ்க்கைச் செயலில் வாழும் நாம் இவ்வாழ்க்கையின் ஜீவாதார குறுகிய ஆண்டுகளில் பிம்ப உடலில் சமைக்கும் அணு வளர்ப்பின் ஆவி நிலையின்… “ஆத்ம உயிரின் உண்மை நிலை” புரியாமலேயே வாழ்கின்றோம்.

ஏனென்றால் இந்த மனிதத் திட பிம்பத்தின் இயந்திர ஓட்டச் செயல் சமைப்பின் வலுவைக் கொண்டு தான் மனிதனின் ஆரோக்கிய நிலையும்… ஞானத்தின் வழியில் செல்லும் குணச் செயல் முறையும்… அமைகின்றன.

உணர்வின் இந்திரிய ஓட்டத்திற்கொப்ப ஒருவரின் செயல் திறன் ஞானம் வெளிப்படுகின்றது. அந்த ஞானத்திற்கொப்பத்தான் வாழ்க்கையின் மேம்பாட்டு நிலையும் செயல் கொள்கின்றது.

இத்தொடரின் வழி நிலை வாழ்க்கையில் எப்படி ஒன்றியுள்ளதோ அத்தொடரைக் காட்டிலும் மிகத் துரித நிலையில் உயர்வு நிலைக்குச் செல்லக்கூடிய ஞான மார்க்கம்… சித்து மார்க்கம்…! இவ்வழியில் எண்ணத்தின் உணர்வைச் செலுத்திடல் வேண்டும்.

1.விழி ஒளி
2.செவி ஒலி
3.சுவாச மணம்
4.வாயின் சுவை
5.இவ் அலை உணர்வு எண்ணத்தில்
6.உயர்வு வழித் தொடர் நிலையில் செல்லும் செயல் முறைக்கு
7.இவற்றின் செயலால் உந்தப்படும் வேட்கையின் வழி முறையை வழியமைக்கும்
8.ஞான ஒளியை நாம் அறிதல் வேண்டுமப்பா…!

எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ளத் தான் இந்தப் பயிற்சி

 

உங்கள் வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் மிகுந்த சிக்கல்கள் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்…?

1.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மூலிகைகளின் மணங்கள் நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.யாம் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து
4.அதை உங்களுக்குள் சேர்த்து உமிழ் நீருடன் கலந்து ஆகாரத்துடன் கலந்து இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். அகஸ்தியன் பெற்ற சர்வ தோஷங்களை நீக்கிடும்… சர்வ பிணிகளையும் நீக்கிடும்… அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானியுங்கள்.

அவ்வாறு தியானிக்கும் போது உடலிலே நோய் உள்ளவர்களுக்கு
1.இது எதிர்நிலையான பின் உடலில் வலி கூட அதிகமாகும்.
2.ஏனென்றால் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க விடாது அந்த அணுக்கள் தடுக்கும்.

ஆனாலும் மீண்டும் அதை எண்ணி ஏங்கி எங்கள் உடலில் அந்த அகஸ்தியன் பெற்ற நஞ்சை வெல்லக்கூடிய சக்தி படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படர வேண்டும் நல்ல அணுக்களாக மாற வேண்டும் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.எம்மா… எப்பா…! என்று வேதனையாக எண்ணுவதற்கு மாறாக
2.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

எப்படித் தான் வாழ்ந்தாலும் குறுகிய காலம் தான் நாம் வாழுகின்றோம். உடலில் சிறிது காலம் தான் நாம் இருக்க முடிகின்றது.

அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் அகஸ்தியன் பெற்ற தீமையை நீக்கிய உணர்வுகளையும் நமக்குள் சேர்த்துச் சேர்த்து… சேர்த்துச் சேர்த்து… இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அதற்குத்தான் இந்த மார்க்கத்தைத் தெளிவாக்குவது.

நான் சம்பாரித்தேன் எல்லாம் செய்தேன் என் குடும்பத்தில் என் பையன் நாளை என்ன செய்வான்…?

அதே போன்று தொழில் செய்யும் இடத்தில் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்… நாளை என்ன ஆகுமோ…? என்று அதை நமக்குள் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த ஏமாற்றும் உணர்வு நமக்குள் நோயாக மாறி
1.இறந்த பின் எவன் ஏமாற்றினானோ அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல முடியும்.
2.மீண்டும் உடலுக்குத் தான் நாம் வருகின்றோம்
3.விண் செல்லும் உணர்வுகளை இழந்து விடுகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் எப்போது சிரமம் என்று வந்தாலும் கொடுத்த பயிற்சிப் பிரகாரம் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளைப் பெற்றுப் பாருங்கள். எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

1.எதனையும் பற்றி “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற சிந்தனை செய்ய வேண்டியது இல்லை.
2.அருளைப் பெறுவேன்… இருளை நீக்குவேன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்…!
3.என் இரத்த நாளங்களிலே அந்தப் பேரருள் பேரொளியைக் கலக்கச் செய்வேன்
4.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்த அருள் சக்தியைப் பெறும்படி செய்வேன் என்று எண்ணுங்கள்.

அதே சமயத்தில் அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல விஷத் தன்மைகளை ஒடுக்கினான். அந்த உணர்வுகளைத் தனக்குள் வலிமை மிக்கதாக அவனுக்குள் உருவாக்கிக் கொண்டான்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகளும் இங்கே பரவி உள்ளது. உங்களுக்குள் பதிவு செய்ததை எண்ணத்தால் அதைக் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்றிட்ட அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து ஏங்குங்கள். உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்…!

இப்போது
1.உமிழ் நீர்கள் வாயிலே சுவை மிக்கதாக பச்சிலை மணம் கலந்ததாகச் சுரந்து உங்கள் உடலுக்குள் செல்லும்
2.உங்கள் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் விஷத்தன்மையை மாற்றும் சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.காற்றிலே இது உண்டு… உங்களால் அதை எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இந்தப் பயிற்சிகள் எல்லாம்…!

ஞானதிருஷ்டி…!

 

உயிரணு வளர்ச்சியில் பல நிலைகள் பல கோடி ஆண்டுகளுக்குப் பல மாற்ற நிலைகள் உருமாறி உருமாறி… வலுத் தன்மை கூடிக் கூடி… வளர் கொண்ட நிலை கொண்ட பிறகுதான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலு கூடப் பெறுகின்றது.

இப்படிப் பல முலாம் தன்மை கொண்டு உருவாகி உருவாகி உயர் கொண்ட வார்ப்பலையில்
நீர்…
நிலம்…
தாவர… தொடர் வளர்ச்சி நிலை
ஜீவ பிம்ப நிலை…
இப்படிப் பல முலாமில் வளரும் வளர்ச்சி நிலையில்
“ஒளி காணும் நிலை” தாவர வளர்ச்சி நிலைக்கும் இல்லை.

ஆரம்ப இனப் புழு வளர்ச்சிகளுக்கும் சுவாச நிலை மட்டும் கூடுகின்றது. ஒளி நிலை வருவதில்லை.

சுவாசத்தை எடுத்து மணம் தரும் வளர்ப்பு நிலை தாவர இன நிலையிலும் தாவர நிலைக்கு அடுத்த நிலையான தாவரத்திலிருந்து சத்தெடுத்து வளரும் ஜீவ உயிரணு புழு நிலைக்கு சுவாச நிலை எடுக்கும் வளர்ப்பு நிலை கூடுகின்றது.

அடுத்த வளர்ப்பின் வார்ப்பு நிலை வளர்ச்சியில் தான்
1.சரீர பிம்பத்தில் எலும்புகளின் வளர்ச்சி நிலையின் வலு கூடிய தன்மையிலிருந்து
2.ஒளி காணும் விழி அமைப்பு நிலை தான் சரீர ஜீவன்களின் வார்ப்பு நிலையாக வழி கொண்டுள்ளது.

இதற்கு அடுத்த நிலை யாது…?

விழி நிலையின் ஒளி காணும் வழி நிலைக்கே… பிம்பக் கூட்டின் “எலும்புகளின் ஊன் நிலை உயர்வின் நிலைக்கொப்ப…” விழியின் ஒளி நிலை அமைகின்றது.

சுவாசத்தால் உண்ணும் உணவின் சத்தெடுத்து ஆவியானது அமிலமாகி உதிரமாகின்றது.
1.அந்த உதிர ஓட்டத்தால் எலும்புகளின் சத்து நிலை
2.எலும்பின் உள் நிலையின் ஊன் நிலை உறுதியின் வலுவால்
3.எலும்புகளின் வளர்ச்சி முற்ற முற்ற
4.ஒளி நிலையின் பிரகாச கூர் நிலை… “ஊடுருவும்” வளர்ச்சி நிலை உருவாகின்றது.

சரீர பிம்ப வாழ்க்கையில் முன்னோக்கி ஒளி காணும் விழி நிலையின் அடுத்த நிலையான ஞான திருஷ்டி கொண்டு விழியை மூடிக் கொண்டே
1.முன்புறம் காணப்படும் எதிர் நிலையின் ஒளி ஈர்ப்பு மட்டுமின்றி
2.விழியை மூடிய தன்மையிலும் விழித்திருக்கும் தன்மையிலும்
3.பின்புறக் காட்சிகளையும் நம் கண்ணுக்கெட்டாத் தொலைவில்
4.இந்தப் பூமி மட்டுமல்லாமல் எந்தப் பூமியானாலும் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் வழி நிலையில்
5.அங்குள்ள எந்த நிலைகளையும் காணவல்ல உயர்வு நிலை பெறலாம்.

அந்த ஞானதிருஷ்டி என்ற நிலையை இச்சரீர பிம்ப இயக்கத்திலிருந்து தான் செயல்படுத்த முடியும். அதாவது ஜீவ சக்தியுடன் கூடிய இயக்க ஓட்டத்தில் மேல் நோக்கிச் செலுத்தி எடுக்கும் சூரிய அலையின் காந்த மின் அலைத் தொடர்புகளை ஆற்றலாக எடுத்து எலும்புகளை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வெலும்புகளின் வலுத் தன்மையில் எலும்பின் ஊன் வளர்ச்சி பெருகப் பெருக விழி நிலை கொண்டு எதிர் நிலையில் தெரியும் ஒளி நிலை பெற்ற மனித நிலை
1.அதற்கடுத்த நிலையான எங்குள்ளவற்றையும்
2.உள்ள நிலையிலிருந்தே ஞானதிருஷ்டி என்ற
3.ஊடுருவி ஒளி காணும் ஒளி ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற முடியும்.

இன்றைய விஞ்ஞான வைத்தியத்தால் உடல் உறுப்பின் உள் நிலை காணும் ஊடுருவல் புகைப்படப் பதிவு நிலை (எக்ஸ்ரே) செயல்படுவதைக் காட்டிலும் உயர்ந்த காந்த மின் அலைத் தொடர்பின் வார்ப்பக வளர்ச்சியை இச்சரீர இயக்கத்தில் பெற்ற ஆத்ம நிலையின் வலுத் தன்மையால் பெற்றிட முடியும்.

1.ஊடுருவிக் காணும் அந்த உயர் தன்மை கொண்ட விழித் தன்மையின் செயலை வைத்து
2.பூமியின் உள் நிலையில் உள்ள தன்மைகளையும் காணும் நிலை
3.இச்சரீர பிம்ப ஆத்மாவிலிருந்து ஒவ்வொரு மனிதனும் பெறலாம்.

ஆத்மீக வழித் தொடரினால் ஆத்ம வளர்ச்சியினால் அடையும் தன்மை யாது…? என்ற வினாவிற்கு இந்தப் போதனையிலிருந்து விடை காணலாம் பலரும்.

இச்சரீர பிம்ப ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ளும் ஆற்றலினால்
1.ஊடுருவிக் காணும் விழி ஞான ஒளித் தன்மையால்
2.விஞ்ஞானத்தில் வளர்ச்சி முற்றிய செயற்கைக் கோளினால் அறியும் வழியைக் காட்டிலும்
3.உயிராத்மாவின் ஊடுருவிக் காணும் ஒளி ஞான ஒளி அலையினால்
4.எத்தொடரையும் உயிராத்மா தொடர்பைக் கொண்டு
5.ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும் நிலைத் தொடர்பிலிருந்து நிலைப்படுத்தும் வழி முறையையும்
6.உருவாகும் ஊடுருவச் சேர்க்கையில் “நிகரில்லா நிலைதனைப் பெறலாம்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குடும்பத்தில் பையன் சீராக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் அவன் மற்றவருடன் பழகும் பொழுது அவனை அறியாது தீமைகள் இவனைச் சாடி அவனின் நற்குணத்தை அழித்து விடுகின்றது.

அப்பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

அதற்குத்தான் இந்த விநாயகர் ஆலயத்திற்குள் சென்றபின் எப்படி வணங்க வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற இன்று இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக விளைந்து ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும். பின்…
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப்பொருள் காணும் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
4.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லோரும் இனிமை பெற வேண்டும்
6.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும்
8.எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அகல வேண்டும்
9.சாப வினைகள் நீங்க வேண்டும் பாவ வினைகள் நீங்க வேண்டும்.
10.பூர்வ ஜென்ம வினைகள் நீங்க வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து தீமைகள் அகல வேண்டும்
12.எங்கள் குழந்தை பொருள் காணும் சக்தி பெற வேண்டும்.
13.எங்கL குழந்தை பொறுப்புணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
14.எங்கள் பார்வை குழந்தையை உயர்ந்தவனாக்க வேண்டும்.
15,எங்கள் சொல் அவனை உயர்ந்தவனாக்க வேண்டும் என்று இதைத் தனக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பின் இதே போல அந்தக் குழந்தையையும் விநாயகரை வணங்கச் செய்தல் வேண்டும். விநாயகர் தத்துவத்தை முறைப்படி அவன் எண்ணத்தால் எண்ணித் தியானிக்கும்படி செய்தல் வேண்டும்.
1.என் அன்னை தந்தையரின் அருளாசி பெற வேண்டும்
2.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று அவனும் இங்கே எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பொருளை மையமாக வைத்துத்தான்… குடும்பத்தில் தன்னை அறியாது சிக்கல் ஏற்படும் பொழுது… அதை ஆலயத்திற்குள் வந்து நிவர்த்தி செய்யும் நிலைக்காக விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆனால் நீங்கள் எண்ணுகின்ற மாதிரி அந்தக் கடவுள் செய்வார் என்றால் அது இல்லை.
1.சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். “உள் நின்று… இயக்குகின்றது.
2.நாம் எண்ணிய உணர்வின் சத்தை ‘ஓ…’ என்று ஜீவனாக்கி ‘ம்..,’ என்று உடலாகி நம்முள் நின்று
3.அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை
4.அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.

அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை நாம் நமக்குள் எடுத்தால் “நம் உயிர்…” தனக்குள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் செயலாக “நம்மை இயக்கும்…”

இதைத்தான் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எண்ணிய உணர்வின் தன்மை நமக்குள் ஆகி
1.“தீமைகள் அகற்றும் உணர்வின் செயலாக..”
2.“நாம் அதுவாக… மாறுகின்றோம்…”

இவ்வாறு மாற வேண்டும் என்பதற்குத்தான் ஆலயத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

உடலுக்குள் இரத்தம் செல்லும் இடங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தி துரிதமாகப் பரவும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆன அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இப்பொழுது தியானிப்போம்.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி… அதைப் பெற வேண்டும் என்று “கண்களைத் திறந்தே…” நாம் ஏங்கி தியானிப்போம்.

இப்பொழுது நாம் சுவாசிக்கும் அந்த துருவ நட்சத்திரத்தில் உணர்வுகள் நம் இரத்தங்களிலே ஒரு புது விதமான உணர்ச்சிகளாகத் தோன்றும்.

1.அன்று அகஸ்தியன் பல விதமான மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து
2.தனக்குள் வரும் விஷத்தன்மைகளை அடக்கி ஒளியாக எவ்வாறு மாற்றினானோ
3.அத்தகைய மூலிகை வாசனைகள் இப்பொழுது உங்கள் சுவாசத்திற்குள் வரும்.

அதை நுகரப்படும் பொழுது உடலுக்குள் ஏற்கனவே உள்ள தீய வினைகளை இது மாற்றும்… நல்ல உணர்வினை உருவாக்கும் அந்தச் சக்தியும் பெறுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தை எண்ணி அதைப் பெற வேண்டும் என்று நுகரப்படும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் இரத்தநாளங்களில் தோன்றும்.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அவன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதுமே பரவி உள்ளது. அதை நாம் எளிதில் கவரலாம்.

இப்பொழுது நினைவனைத்தையும் மேல் நோக்கிச் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது சுவைமிக்க உமிழ் நீர் வரும்… அறுசுவையாக அது வரும்
2.அகஸ்தியன் பெற்ற அந்த நறுமணங்கள் அனைத்தும் உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து அதை நீங்கள் சுவாசிக்க நேரும்.
3.நல்ல நறுமணங்களை நுகர்வீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்துங்கள்.

நண்பர்களாகப் பழகிய பின் அந்த நண்பனை எண்ணிய பின் அவனுடன் இணைந்து கொண்ட உணர்வு விக்கலாக எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று
1.எம்முடைய அருள் உபதேசங்களைப் பதிவாக்கி… அதை நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் இருப்பதனால்
2.கண்ணின் நினைவு கொண்டு உடலில் உள்ள அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உள்முகமாகச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறும் தகுதி எளிதில் கிடைக்கின்றது.
4.இப்பொழுது புது விதமான ஒளி… ஒரு வெளிச்சம் உங்கள் உடலிலே வரும்… அதை உணரலாம்.

உயிர் வழி நாம் ஏங்கித் தியானிக்கும் போது
1.மின்சாரம் பாய்வது போன்று
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு இரத்தத்திற்குள் “வீரிய உணர்வாக” வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு டாக்டர் ஊசி மூலம் மருந்தை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அது இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுழன்று விஷத்தன்மையான அணுக்களை வலுவிழக்கச் செய்கின்றது.

அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து இரத்தநாளங்களில் சேர்க்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் அந்த வீரிய சக்தியைப் பெறும் தகுதி இப்பொழுது பெறுகின்றது. இரத்தத்தில் உள்ள தீமைகள் இப்போது வலு இழக்கின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இரத்தங்களில் துரிதமாக உடல் முழுவதும் பரவும்.
2.இரத்தம் எங்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வேகமாகப் பரவும்.

அத்தகைய உணர்வை உங்கள் இந்த உடலிலே உணரலாம். உடலுக்குள் அந்த இயக்கம் எப்படி இயங்குகிறது…? என்பதையும் நீங்கள் உணரலாம்

துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள்
1.புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் ஊடுருவிச் செல்வதை
2.அந்த ஒளிமயமான உணர்வுகளைக் காணலாம்.

பேரானந்த நிலை பெறுவீர்கள்…!

ஜோதி நிலை

 

சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் சுவாச நிலை இல்லாததனால் அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது.

ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!

கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

 

நாம் தியானம் இருக்கும் போது
1.சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட
2.அது திசை மாறிச் சென்று விடும்.

இது எதனால் ஏற்படுகின்றது…?

நாம் இதற்கு முன் நம் உடலில் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது அதற்கு அந்த உணவு தேவை.

நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணினால்…
1.அது தனக்காக வேண்டி… எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.

எதனதன் வழிகளில் சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ எதன் மேல் பட்டோமோ அந்த உணர்வுகள் தான் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும். அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய அணுக்கள் அதனதன் உணர்வை எடுத்து வளரும்.

ஆக அதைத் தடுப்பதற்கு… உடனே கண்களைத் திறந்து நாம் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலிலிருக்கக் கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கட்டாயப்படுத்தி உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்குச் செலுத்தி
2.சிறிது நேரம் ஆன பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இதன் வழி புகாதபடி அடைத்து உயிர் வழி நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வது தான் இந்தப் பயிற்சி. அதாவது
1.நம் நெஞ்சுக்கு முன் இருக்கும் ஆன்மா வழியாக வராதபடி தடுத்து (மூக்கு வழி சுவாசம்)
2.புருவ மத்தி வழி கண்ணினின் நினைவு கொண்டு இழுக்கின்றோம்

ஏனென்றால் நம் உடலில் எத்தனையோ விதமான தீய அணுக்கள் இருப்பதால் அதனுடைய உணர்வுக்கு அதனுடைய வலுவைக் காட்டத்தான் செய்யும்.

அதை நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

இரத்தத்தின் வழி சுழன்று வரப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது.

ஆக கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

உதாரணமாக…
1.நாம் தவறு செய்தவனை கண்ணின் நினைவு கொண்டுதான் எண்ணுகின்றோம்
2.எண்ணியவுடன் அந்த “நிழல் படம்” (தவறு செய்தவன் முகம்) எவ்வாறு தெரிய வருகின்றதோ
3.அந்த நேரம் அவனைப் பற்றிய உணர்ச்சிகளும் பல விதமான வெறுப்புகளும் எப்படித் தோன்றுகிறதோ அதே போன்று…
4.நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் கண்களால் உற்றுப் பார்த்தது தான் நம் உடலுக்குள் அணுவின் தன்மை அடைந்தது. அதே மாதிரி
1.இந்தக் கண்ணின் வழி நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கு
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று உள் முகமாகச் செலுத்தினால் அதனுடைய உணர்வுகளை எடுத்து நாம் நுகர்ந்து
3.”இரத்தங்களிலே ஈர்க்கும் சக்தி பெருகி” உடலில் உள்ள தீய அணுக்களை எல்லாம் நல்லதாக மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது.

இது போன்ற ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுது நினைவுகள் எங்கெங்கோ அலைக்கழிக்கின்றது எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றது என்று சொல்ல வேண்டியதில்லை.

இதன் உணர்வை மாற்றி மாற்றி மாற்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் இரத்தத்தின் வழி செலுத்திப் பழக வேண்டும்… அதனின் வலுவைக் கூட்ட வேண்டும்…!

உறக்க நிலையில் வரும் கனவுகள்

 

விஞ்ஞானி ஓர் இடத்திலிருந்து வண்ண ஒளிக்காட்சிகளைப் படமாக அமிலமுடன் பதியச் செய்கின்றான். ஜீவனற்ற பொருள் நிலையை அந்தந்த வண்ண நிலையுடன் இவன் பூசிய முலாமின் பிடிப்பலையில் எடுக்கும் அந்தக் காட்சிகளைக் காற்றலையுடன் கலக்கச் செய்து பரப்புகின்றான்.

பரப்பிய அலைகளின் அதே தொடர்பலையைப் பல நூறு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அதற்கென்ற சாதனங்களை உருவாக்கி அதை கவரச் செய்கின்றான்.

இப்படி ஒரு நொடிக்குள் அந்த வண்ணக் காட்சிகளைப் பார்க்கும் நிலைக்கு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ளது.
1.ஒளி பாய்ச்சி ஒளி ஈர்க்கும்…
2.பார்வையால் படம் பிடிக்கும்…
3.ஒளி நிலை காணும்… விழி நிலையில் காணுகின்றோம்.

இதே போலத் தான் கனவுகளும் ஏற்படுகின்றன.

காற்றலையின் அமில ஈர்ப்பு இந்த உடலின் மீது மோதுண்டு… சுவாசத்தின் ஈர்ப்புடன் இவ்வுடலின் அமிலத்தின் மோதலான பின்… ஆத்மாவின் தொடர்புடன் உடல் உறங்கினாலும் இவாத்மாவுடன் அமிலங்கள் மோதுண்டு… அந்த மோதலினால் காட்சிகள் தெரிகின்றன.

உறக்கத்தில் விழி மூடிய நிலையில் எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்தாத அலை நிலையை உடல் சமைக்கும் அமில உராய்வின் காட்சி நிலைகள் கொண்டு… ஆத்மத் தொடர்புடன் செயல்படும் நிலைகளில் தான்… சம்பந்தம் இன்றிப் பல கனவுகள் வருகின்றது.

எண்ணம் கொண்டு செயல்படாத் தன்மையில் சுவாச அலையில் மோதும் அமிலத்தில் இவ்வுடல் எவ் அமிலச் சேர்க்கை எடுக்குமோ அதற்குகந்த ஈர்ப்பு அலைகள் சுவாச வட்டத்தில் மோதுண்ட பின் ஆத்மாவின் விழிப்பு நிலையில் அத்தகைய கனவுகளை எல்லாம் காணுகின்றோம்.

காட்சிகளைக் கண்ட நிலைகளில் சிலர் ஆவி பிடித்தது… அருளாடுகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்…! தனக்கே தெரியாதபடி பல மொழிகளீல் பேசுவோரும் உண்டு.

ஆவி நிலை உணர்வு என்பது… இன்று மருத்துவத்தில் மன நோய் என்று உணர்த்தும் ஒரு சாராரின் விஞ்ஞான நிலையும்… தெய்வத் தொடர்பு கொண்டு பக்தி மார்க்கத்தாரால் அருளாடும் நிலையில் முருகன் வந்தான்… காளி வந்தாள்… என்று உணர்த்தும் நிலைக்கும் உள்ளது.

பேய் பிசாசு என்று பேயைக் கண்டேன்… இரத்தக் காட்டேரி வருகிறது என்று பயந்த நிலையும் மக்களிடையே உள்ளது.

அதே போல் அன்பு பாசப் பிணைப்புடன்… குடும்பத்தில் பற்றுடன் பல காலம் வாழ்ந்த முன்னோர்கள்… அவர்கள் ஆத்மா பிரிந்தவுடன்
1.குடும்பத்துடன் உறவாடும் நிலையில்
2.இறந்த பின்னும் அவர்கள் வருவது போன்றும் பேசுவது போன்றும்
3.சில நேரங்களில் குடும்பங்களுக்கு வழிகாட்டும் நிலை ஏற்படுத்திச் செல்வதும் நடக்கின்றது.

இது எல்லாம் எத்தொடர்பலையில் மனித ஆத்மாவின் எண்ணம் செயல் கொள்கின்றதோ… ஏற்கனவே பூமியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த ஆத்மாக்களின் அலை எண்ணத்தில் ஒன்றுபட்டவுடன் அவைகள் இயக்கத் தொடங்கும்.

அதாவது உடலுடன் உள்ள மனிதனின் எண்ணம் எதிலே அதிக எண்ணத்தைச் செலுத்திச் செயல்படுகின்றதோ அவ்வலை ஈர்ப்பின் நிலைக்கொப்ப உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஜீவ சக்தி கொண்ட அமில உணர்வுகள்
1.ஜீவ சக்தி கொண்டவர்களுடன் அவ்வலை மோதி
2.ஹிஸ்டீரியா என்றுணர்த்தும் மன நோய்க்கும்
3.பல மொழிகளில் பேசி அருளாடும் தெய்வ நிலைக்கும்
4.பேயாடும் நிலைக்கும்
5.முன்னோர்களைக் காணும் பாசப் பிணைப்பினால் வழி நடத்திச் செல்லும் நிலைக்கும் இயக்கத் தொடங்கும்.

ஆனால் மகரிஷிகளின் அலைச் சக்தியுடன் தொடர்புடன் நம் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டால் எத்தன்மை கொண்ட வேட்கை அலையிலும் பிறரின் ஈர்ப்பின் சொல் செயல் எண்ணங்களிலும் நம் ஆத்மா சிக்காமல் சமநிலை கொண்ட நற்குண சாந்த ஞான வீரத்தால் இவ்வாத்மாவின் வலுக் கூடிய தன்மையைப் பெறலாம்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உலகில் நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உணர்த்துவதற்குத்தான் அதை நினைவாக்குவதற்காக விநாயகருக்கு அருகில் “அரச மரத்தை” வைத்தார்கள்.

நம் வாழ்க்கையில் எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றோமோ…
1.உடனே நாம் வானை நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் நினைவினைச் செலுத்த வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் உள் செலுத்தினால்
3.அது அரசாக இருந்து அதன் கீழ் உள்ளதை அடக்கும் வல்லமையாக
4.தீமைகளை வென்றிடும் சக்தியாக நமக்குள் உருப்பெறும்.

அதைத்தான் “அங்குசபாசவா…” என்று விநயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆழமாகவும் அழுத்தமாகவும் அந்த ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதியச் செய்கின்றோம்.

இதை எவரொருவர் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொள்கின்றார்களோ அவர் உடலில் இது பெருகும். அதன் நினைவு கொண்டு நீங்கள் தீமைகளை அகற்றும் வல்லமை பெறுகின்றீர்கள்.

யாம் சொல்வது “ஒன்றும் புரியவில்லை…” என்று எண்ணினால் இந்த உணர்வைக் கலக்கப்படும் பொழுது புரியாத நிலைதான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது “எலெக்ட்ரிக்கை வைத்து… எலலெக்ட்ரானிக்காக” மாற்றுகின்றார்கள்.

ஒரு தகட்டில் அல்லது நாடாவில் முலாமைப் பூசி உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகள் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதன் ஒலி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒலிப்பேழைகளில் (MEMORY CONTROL) மாற்றியமைத்து உள்முகமாகக் கூட்டுகின்றது.

ஆகவே இதிலே இடைமறித்து ஏதாவது தவறுதலாக (TYPING – COMMAND) ஒலி ஓசை மாறி விட்டால் உடனே அதன் அழுத்தங்கள் மாறி விடுகின்றது.

ஏனென்றால் ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றால் அதைத் தடைப்படுத்தவில்லை. இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது அது குறித்த நேரத்தில் (ALARM CONTROL) தாக்கி நிறுத்திவிடும்.

இப்படித்தான்
1.இயந்திரங்களை இயக்குவதும் விமானங்களை ஓட்டுவதும் இராக்கெட்டுகளை இயக்குவதும்
2.இது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று அங்கே பேழைகளில் வைத்து அதன் செயலாக்கங்கள் மூலம் இயக்குகின்றார்கள்.

பின் அதனில் ஒலி அதிர்வின் கதிர்களை இயக்கப்படும் பொழுது அந்த இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் இராக்கெட்டில் குறைகள் இருந்தாலும் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அது கட்டளையிடப்பட்டு அதைச் சீராக்குகின்றான் மனிதன். விஞ்ஞான அறிவு கொண்டு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் முறையில் இதை இவ்வாறு இயக்கச் செய்கின்றார்கள்.

இதைப் போன்றுதான் நமக்குள் நுகர்ந்த தீமையின் விளைவுகளை மாற்றியமைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.நம் எண்ணத்தை அருள் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றச் செய்ய வேண்டும்
2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.
3.பதிவாக்கிய அந்த எண்ணத்தை இங்கே இயக்கினால் நம்முள் செயல்படும் தீமைகளை எளிதில் மாற்றிட முடியும்
4.மகரிஷிகளின் உணர்வின் அழுத்தம் தீமைகளை ரிமோட் செய்துவிடும்.

ஆனால் மனித ஆசையின் உணர்வுகளை ஒவ்வொரு நிலைகளிலும் வளர்க்கப்படும் பொழுது இந்த உடலுக்கே அழிவாகி விடுகின்றது. உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அடுத்த உடலை மாற்றிவிடும் நம் உயிர்.

ஆகவே அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்றபின் அந்த மெய்ஞானியின் உணர்வுடன் ஒன்றச் செய்யும்.

ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக ஒளியின் நிலை பெறச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று உலகெங்கிலும் விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி.க்களில் ஒலி ஒளி பரப்பச் செய்யப்படும் பொழுது அந்த ஒலி ஒளி அலைகளை அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அங்கே நடக்கும் காட்சிகளைக் காணுகின்றோம்.

ஒரு பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே படமாக்கிப் பதிவாக்குகின்றார்கள். அதை அலை வரிசைகளாக அலைகளாக மாற்றுகின்றார்கள்.

இருக்கும் இடத்திலேயே அந்த உணர்வின் தன்மையை ஒலியைப் பதிவாக்குகின்றார்கள். அந்த உணர்வலைகளை உலகம் முழுவதும் எல்லோருக்கும் பரப்பச் செய்கின்றார்கள்.

உலகம் முழுவதும் பரவச் செய்யும் பொழுது இதன் அலைவரிசையில் இங்கே ஒலிபரப்பு செய்யப்படும் பொழுது அதே அலை வரிசையில் மற்றவர்கள் அவர்கள் இருப்பிடத்திலிருந்தே உற்றுப் பார்க்கும் நிலை வருகின்றது.

இன்றும் பார்க்கலாம்…
1.நண்பர்களுக்குள் பதிவாக்கிவிட்டால் நண்பனை எண்ணி அவனை நினைவு கொள்ளும் பொழுது
2.அவனின் உருவ நிலை உங்கள் முன் நிற்பதைக் காணலாம்.

ஆக இதைப் போல மனித உடலுக்குள் ஒன்றைப் பதிவாக்கிவிட்டால் அவனின்று வெளிப்படும் உணர்வின் அலைகள் இங்கே பதிவாகின்றது. அலைகளாக மாறுகின்றது.

1.பதிவான உணர்வினை நினைவு கொள்ளும் பொழுது குவித்து அந்த உணர்வின் தன்மைகளை அறிகின்றோம்
2.அவனிடம் எந்த உணர்வுடன் உறவாடினோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் நுகரப்படும் பொழுது
3.உணர்ச்சியின் தன்மையால் உடலை இயக்குகின்றது.

பண்பு கொண்டு பரிவு கொண்டான் என்றால் பண்புடன் எனக்கு உதவி செய்தான் உபகாரம் செய்தான் என்ற உணர்வை நுகரும் பொழுது நமக்குள் மகிழ்ச்சியான உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.

அப்பொழுது நண்பனின் நினைவாற்றல் நமக்குள் மகிழச் செய்யும் நிலைகளாக வருகின்றது.

ஆனால் பண்புடன் வாழ்ந்து பகைமை உணர்வை எடுத்துத் அவனால் தீமைகள் விளைந்தது என்ற உணர்வுகளை இருவரும் பதிவாக்கிக் கொண்டால் என்ன நடக்கின்றது…?

இங்கே தன் வாழ்க்கையில் “சிரமம்…” என்ற உணர்வுகள் உந்தப்படும் பொழுது “எனக்குத் துரோகம் செய்தான்…” என்ற உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது அவனில் உருவான இந்த உணர்வுகள் இவனின் உணர்வுகள் அங்கே பதிவானதால்
1.அந்த உணர்வுகள் இரண்டுக்கும் மோதலாகின்றது.
2.அப்படி மோதலாகி அங்கே பகைமை உணர்ச்சிகளைத் தூண்டி
3.அவன் உணவாக உட்கொள்ளும் நேரமாக இருந்தால் உள் இழுக்கும் செயல் இழந்துவிடுகின்றது.
4.அப்பொழுது “புரையோடுகின்றது”. புரையேறும் போது நுரையீரலுக்குள் (சாதம்) ஒரு பருக்கை போனால் மடிந்துவிடுவான்.

அல்லது ஒரு வாகனத்தை ஓட்டிச் செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். கண்ணுற்றுப் பார்த்து வாகனத்தை ஓட்டிச் செல்லும் நிலையில் அங்கிருந்து (அவனின் உணர்வுகள்) கவர்ந்து வாகனத்தைச் சீராக இயக்கவிடாது இடைமறிக்கும்.

வாகனம் ஓட்டும் பொழுது எதிரில் வரும் நிலைகளைக் கவர்ந்து அதற்குத்தக்க இவன் நிலைகள் கொண்டு சீராக இந்த வாகனத்தை ஓட்டினாலும் அவனின் உணர்வுகள் (புரை) இடைமறிக்கும்.

அப்படி இடைமறிக்கும் உணர்வால் அவனை இவன் எண்ணும் பொழுது அவனுக்குள் இருக்கும் உணர்வுகள் இயக்கப்பட்டு எதிர்மறை கொண்டு தாக்கப்படும் பொழுது “ஒரு நொடி..,” அவன் சிந்திக்கும் நிலை இழந்தால் “ஆக்சிடென்ட்…!”

இதே போல மனிதனுக்கு மனிதன் வாழும் பொழுது பகைமை உணர்வு கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் தொழில் செய்யும் பொழுது இத்தகைய நிலை ஆனால் புரையினால் அவன் மரணமடையும் நிலையும் வருகின்றது.

இதைப் போல ஒரு எலெக்ட்ரிக்கில் வேலை செய்கின்றான் என்றால் இதைப் போல் புரை ஆகி தன்னுடைய வேகத்தின் உணர்வைக் கூட்டினால் சிந்திக்கும் திறன் இழந்துவிடுகின்றான்.

தான் சிந்திக்கும் செயலிழந்து அங்கே மின்சாரம் பாயும் கம்பியில் கையை வைத்து இவன் மடிந்து விடுகின்றான். இதைப் போன்று நாம் பல நிலைகளில் செல்லும் பொழுது
1.“ஒரு நொடி தவறினால்… மனிதனை வீழ்த்திவிடுகின்றது…”
2.“மனிதனுக்கு மனிதன் தொடர்பு இல்லாதவர்.., எவருமே இல்லை”.
3.பகைமை கொண்டாலும் உணர்வுகள் தொடர்பு உண்டு. மகிழ்ந்தாலும் நமக்குள் தொடர்புண்டு.

மனிதர்கள் எவரும் பிரிந்து வாழ்ந்ததில்லை. பிரிந்து வாழ்கின்றோம் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் நமக்குள் அங்கே பிரிவின் எண்ணங்கள் நுகரப்படும் பொழுது நம் உடலுக்குள் “அந்தப் பகைமையான உணர்வின் அணுக்களும்… இந்தப் பண்புடன் வளர்த்த இந்த உடலுக்குள் இருக்கும் அணுக்களும்…” அதுவும் இதுவும் போர் முறையாக மாறிவிடுகின்றது.

ஒன்றை ஒன்று உணர்ச்சிகளால் தாக்கப்படும் பொழுது நம் உடலில் மேல் வலியும் கை கால் குடைச்சலும் குத்தலும் ஏற்படுகின்றது.

சில பேர் சொல்வார்கள்…
1.உடலில் “பளீர்…” என்று ஊசி குத்துவது போல் இருக்கின்றது என்பார்கள்
2.பகைமை உணர்ச்சிகள் கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
3.அந்த உணர்ச்சியின் தன்மை நம் உடலுக்குள் வேதனையைக் கொடுக்கும் நிலையாக வருகின்றது.

இதைப் போன்று நாம் “எங்கேயோ… பகைமை உணர்வைப் பெற்றோம்… அவனின்று விடுபட்டிருக்கிறோம்” என்று நினைக்கின்றோம்.

ஆனால் “அவனின்று நுகர்ந்த உணர்வு… நமக்குள் நின்று அதனின் வீரியத்தை ஊட்டும் பொழுது… நல் உணர்வை ஊட்டிய அணுக்கள் இங்கே அஞ்சி நடுங்குகின்றது…”

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இதனால் உடலில் ஏற்பட்ட உணர்வுகள் சிந்திக்கும் திறன் இழக்கின்றது.

ஒரு செயலின் தன்மை சீராக நடக்காது குறையப்படும் பொழுது வேதனைப்படுகின்றோம். வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

1.“நினைத்த காரியம் நடக்கவில்லை” என்றால் உணர்வுகள் உந்தப்பட்டு கோபத்தின் உணர்ச்சிகள் ஏறுகின்றது
2.தன்னையே அழித்திடும் நிலைகள் வருகின்றது.
3.அல்லது தன்னுடைய சார்புடையோர்கள் இதன் வழி நடக்கவில்லை என்றால்
4.அவர்களைக் கொன்றுவிடும் உணர்ச்சிகளையே தூண்டுகின்றது.

ஆகவே இத்தகைய உணர்வுகளிலிருந்து நாம் தப்புதல் வேண்டும்.

நாம் இயற்கையான அழகைப் பெற வேண்டும்

 

இன்று நாம் அணியும் ஆடைகளில் விஞ்ஞான அறிவால் எடுத்துக் கொண்ட நிலைகளில் கடும் விஷம் கொண்ட கெமிக்கல் தான் சாயங்களாகப் பூசப்படுகிறது அதிலிருந்து.

அதிலிருந்து வெளிப்படும் விஷமான ஆவியைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. அதே சமயத்தில் நாம் அந்த ஆடைகளை அணிந்திருக்கும் போது
1.எந்த விஷத்தின் தன்மை அதிலே சாயமாக உருவாக்கப்பட்டதோ
2.நமக்குள் இருக்கும் காந்தப்புலன் அதன் மணத்தை நுகர்ந்து சுவாசிக்கும்படி செய்து
3.உடலுக்குள் அந்த விஷத்தை ஊட்டி விடுகின்றது.

ஆனால் அன்று அகஸ்தியன் காலத்தில் விஷத்தை முறித்திடும் தாவர இனங்களை எடுத்து மற்ற மற்ற தாவரங்களுடன் அது கலக்கப்பட்டு அதைத் தான் சாயங்களாக பல நிறங்களில் உருவாக்கினார்கள்.

அத்தகைய சாயங்களை ஆடைகளிலே பூசி பின் அதை அணிந்து கொண்டால் விஷத் தன்மை புகாதபடி பாதுகாக்கும் சக்தியாக வந்தது… அக்காலங்களில்…!

பல தாவர இனங்களின் தன்மையை ஆடைகளாக உருவாக்கப்பட்டு தீமை உடலுக்குள் புகாதபடி அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் பெரும்பகுதி அப்படித் தான் தடுத்துக் கொண்டனர்.

1.தாவரங்களின் பட்டைகளைத் தட்டி ஆடைகளாக நெய்து பல பச்சிலை மூலிகைகளை இந்த நாருடன் கலக்கப்பட்டு
2.பிற விஷங்கள் தங்களைத் தாக்காதபடி பாதுகாப்பாக உருவாக்கிக் கொண்டனர்
3.அன்று அகஸ்தியன் காலத்தில் வாழ்ந்த புலஸ்தியர்கள் என்று சொல்லும் மக்கள் அனைவரும்.

ஆனால் இன்று நாம் அழகுபடுத்த என்ன செய்கின்றோம்…?

முகத்தில் பூசுவதற்கு என்றே எத்தனையோ பவுடர்களை இன்று கெமிக்கல் கலந்து உருவாக்கி வைத்துள்ளார்கள். கெமிக்கல் கலந்த பவுடர்களை நாம் பூசிக் கொண்ட பின் என்ன நடக்கிறது…?

முதலிலே முகம் மிக அழகாகத் தோன்றுகின்றது. ஆனால் பின்னாடி முகத்தில் உள்ள தோல்கள் எல்லாம் சுருங்கி விடுகின்றது நாளடைவில் பார்க்கப்படும் பொழுது “வயதானவர்…” போன்றே தோற்றம் அளிக்கின்றது.

ஆனால் மீண்டும் அந்தச் சாயங்களைப் பூசினால் தான் அழகுபடுத்த முடிகின்றது அதே சமயத்தில் அந்த விஷத்தின் தன்மை சுவாசிக்கப்படும் பொழுது இயற்கையின் அழகையும் கெடுத்து விடுகின்றது…!

குறிப்பாக பெண்களுக்கு என்று எத்தனையோ அழகு சாதன பொருட்களை கெமிக்கல் கலந்த நிலையில் உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

சினிமாவில் நடிக்கக் கூடியவர்கள் அதைப் பூசிக் கொள்கின்றார்கள். அப்படிப்பட்ட அலங்காரம் செய்வதற்கு என்று தனி நபர்களும் இருக்கின்றார்கள் காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

ஆக உள் அழகைப் போக்கிவிட்டு விஷத்தின் தன்மை நாளடைவில் கவரப்படுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

இயற்கையான அழகை நாம் பெற வேண்டும் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து பாருங்கள்… முகங்களில் எவ்வளவு அழகு வருகின்றது என்று…!
2.அருள் உணர்வுகளைப் பெருக்கினால் இயற்கை அழகை நாம் பெருக்கிக் கொள்ள முடியும்.

வேறு ஒன்றுமே வேண்டியதில்லை…! ஒரு தாய் கருவுற்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் மகாலட்சுமி படமோ சரஸ்வதி படமோ எத்தனையோ அழகான தெய்வப் படங்கள் இருக்கின்றது. அழகாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதை உற்றுப் பார்த்து அந்த அழாகன வடிவில் என் குழந்தை உருவாக வேண்டும்… வளர வேண்டும்… அழகாக வர வேண்டும்… என்று எண்ணினால் அந்தக் குழந்தை நிச்சயம் அழகாக வரும்.

அதே போன்று தான் உயர்ந்த உணர்வுகளை நுகர்ந்து என் முகம் அழகாக வேண்டும் என்று எண்ணினால் முகம் செழிப்பாக வரும்.

சங்கடமாக இருக்கும் போது முகம் சுருங்கி விடுகின்றது… இருளாகின்றது…! ஆனால்
1.அருளைப் பெற வேண்டும் இருளை அகற்ற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துப் பாருங்கள்.
2.முகத்தில் நல்ல மறுமலர்ச்சி ஏற்படும். மகிழ்ச்சி தோன்றும்… நம்மைப் பார்ப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்றும்.

ஆகவே அன்றைய மெய் ஞானிகள் காட்டிய வழியிலே உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் தகுதியை நாம் பெற வேண்டும்.

இன்று எல்லாவற்றையும் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டோம். இது போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்

நாம் வளர்ந்து… மற்றவருக்கும் வழி காட்டி… அந்தத் தொடர்பை மகரிஷிகளுக்குத் தர வேண்டும்

 

1.ஜீவ சக்தி கொண்ட காந்த ஈர்ப்பு அணு வளர்க்கும்…
2.வளர்ச்சியின் வித்தான சரீரச் செயலின் ஜீவனுக்கு…
3.ஜீவாதார முக்கிய நிலையான “உணர்வு…” இல்லை என்றால் ஞானச் செயல் செயல்படாது.

உணர்வின் சமைப்பினால்தான் எச்செயலுக்கும் எண்ணத்தைச் செலுத்திட முடியும். எண்ணத்துடன் மோதும் அலையின் ஈர்ப்பிற்கு காந்த மின் தொடர் அலைகள் மோதுண்டு… அதன் பதிவு கொண்டு தான்… “ஆத்மா” ஜீவ சக்தியிலிருந்து தனக்கு வேண்டிய வலுவைப் பெறுகின்றது.

ரிஷிகளின் வளர்ப்பலையுடன் வளரும் சக்தியில்… “உயர்ந்த ஆதி சக்தியின் படைப்பு சக்தியைப் பெற்ற…” அவர்கள் படைப்பின் தொடரை நாம் முதலில் பெற்றுப் பழக வேண்டும்.

அடுத்து நாம் பெற்ற அந்தத் தொடர் அலையை நம்முடைய வளர்ப்பைக் கொண்டு வளரும் ஆத்மாக்களுக்கு நல் வழி காட்டிடல் வேண்டும். அவ்வலையின் தொடரை நாம் எடுத்து அந்தத் (நம்) தொடர்பின் அலையை ரிஷித் தொடர்பிற்குத் தந்திட வேண்டும்.

அதன் மூலம்… அந்த ரிஷி வளர்ப்பின் ஆதி சக்தியின் அனைத்து சக்திகளிலிருந்து வளரும் சக்தியை அவர்கள் பெற்றுச் சுழலும் சுழற்சி ஓட்ட அலையில்
1.உயர்ந்த ஒளி வட்டமுடன் கலந்து அந்த ஞான சக்தியைக் கொண்டு
2.தன்னுள் உள்ள இறை சக்தியை… இறை ஆத்மாவாக… ஆத்மலிங்க ஜோதியாக… அடையும் வழியை நாம் பெற வேண்டும்.

அதை அடைய வேண்டும் என்றால் இந்த வாழ்க்கையில் மோதும் எண்ண உணர்வை நாம் எடுக்கும் சமைப்பு பிறரின் ஈர்ப்பில் சிக்காமல் இருத்தல் வேண்டும். ஏனென்றால்
1.பிறர் செய்யும் தவறில் நாம் தண்டனை பெறுவது போன்று நம் உணர்வுகளை மாற்றிடாமல்
2.அவர்கள் செய்த நிலைக்கு நாம் தண்டனை பெற்றுச் செல்லும் நிலையிலிருந்து மீள வேண்டியது மிகவும் அவசியம்.

அத்தகைய நிலை பெற்று… நம் அலைச் சக்தியின் உயர்வலைகளைப் பிறர் மேல் செலுத்தி… மேல் நோக்கிய ஈர்ப்பில் ரிஷிகளின் சக்தியை நாம் வளர்த்தால்… நம் ஒளி ஈர்ப்பிலிருந்தும் சொல் ஆலையிலிருந்தும் வெளிப்படும் உயர்ந்த உணர்வலைகள் அங்கே பதிந்து… அவர்களும் வளர்வார்கள். பிறரின் சங்கட சோர்வும் எத்தன்மை கொண்ட மற்ற வழித் தொடரும் நம்மைப் பாதிக்காது.

எப்படித் திரவகத்தில் போடப்படும் பித்தளை செம்பு போன்ற மற்ற உலோகங்கள் எல்லாமே கரைந்தாலும் தங்கத்தின் நிலை கரைக்கப்படுவதில்லையோ அதைப் போன்று
1.இவ் ஆத்மாவின் வலுவைக் கொண்டு
2.ஞானத்தால் பயம் என்ற அச்ச உணர்வை நீக்கி
3.சாந்தத்தை ஞானம் கொண்டு வீரத்தால் செலுத்தும் எண்ணத்தின் சரீர உணர்வலையின் ஈர்ப்பு வழித் தொடரில்
4.காந்த மின் அலையின் தொடர்பலையை ரிஷிகளின் சத்தலையுடன் செலுத்தி
5.அவர்கள் வளர்க்கும் ஒளி நிலைத் தொடருடன் நாமும் ஐக்கியமாகலாம்.

எலெக்ட்ரிக் மீன்

 

27 நட்சத்திரங்களின் சக்திகளும் கடுமையான விஷத்தன்மை கொண்டது ஏனென்றால் அது பிற மண்டலங்களிலிருந்து எடுத்துக் கொண்டது.
1.நம் பூமிக்குள் வரும் பொழுது மின்னலாக மாறுகின்றது.
2.கடலிலே தாக்கப்படும் பொழுது மணலாக மாறுகின்றது
3.விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் எதிர்மறையாக பொழுது மரம் கருகுகின்றது
4.இதன் உணர்வின் ஈர்ப்பு பூமிக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது.
5.பாறைகள் உருகிய பின் நிலநடுக்கம் ஆகின்றது.

இது எல்லாம் 27 நட்சத்திரங்களின் மின்னலால் ஏற்படும் நிலைகள்.

ஆனால் இத்தகைய நஞ்சையும் அடக்கிப் பழகியவன் அகஸ்தியன். தாய் கருவிலிருக்கும் போது பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்தியால் அவனுக்கு அந்த ஆற்றல் கிடைக்கிறது.

மின்னலிலிருந்து வரக்கூடிய ஆற்றல்களை வெள்ளிக் கோள் அந்த ஒளிக்கற்றைகளை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ… அதைப் போல் அகஸ்தியன் தன் உடலுக்குள் அதைப் பெருக்கி… உயிரைப் போன்ற உணர்வின் அறிவாக “ஒளியாக மாற்றிக் கொள்கின்றான்…”

மின்னல் தாக்கப்படும் பொழுது கடலிலே விழுந்தால் ஒரு பக்கம் மணலாக மாறினாலும்… அந்த மணலுக்கடியில் சந்தர்ப்பத்திலே ஒரு மீன் சென்றால் அதன் மீது மின்னல் தாக்கப்பட்டால் அது “எலக்ட்ரிக் மீனாக…” மாறுகின்றது.

1.எப்படி மின்னல் தாக்கும் பொழுது “ஒளிக்கற்றைகள்…” உருவாகின்றதோ
2.இந்த உணர்வின் தன்மை மீன் இனங்களுக்குள் சென்ற பின்
3.உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகிறது.

இயற்கையின் நிலையில் இவ்வாறு தான் மாற்றங்களாகின்றது என்று அகஸ்தியன் கண்டு கொள்கின்றான்.

அகஸ்தியன் துருவனாகி அவன் பதினாறாவது வயதில் திருமணமான பின் அவன் கண்ட இயற்கையின் உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குச் சொல்கிறான்.

அகஸ்தியனின் மனைவி தன் உடலுக்குள் அதைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்ட பின் “தன் கணவன் உயர வேண்டும்…” என்று எண்ணுகின்றது இப்படி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் உயர்த்திடும் உணர்வு கொண்டு
1.துருவ ரிஷியாக (துருவ மகரிஷி) மாறுகின்றனர்.
2.கணவன் மனைவி ஒன்றிணைந்து ரிஷித் தன்மை பெறுகின்றனர்
3.இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாகின்றனர்.

தாவரங்களோ உயிரினங்களோ எதுவாக இருந்தாலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் அதனுடைய இன வித்துக்களை உருவாக்க முடியும்.

ஆகையினால் தான் கணவன் மனைவியாக இந்த அருள் சக்திகளைப் பெறும்படி சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவன் தன் மனவி பெற வேண்டும் என்றும்… மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்திவாய்ந்த உணர்வுகள் உடலுக்குள் செல்லப்படும் பொழுது “ஒரு மின்சாரம் பாய்வது போன்று…” உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.

இப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது
1.உங்கள் புருவ மத்தியிலே மின் அணுக்கள் உருவாகும்
2.உயிர் வழி நுகர்ந்து உடலுக்குள் செல்லும் பொழுது உடலுக்குள் ஒளி மயமான உணர்வுகள் தோன்றும்
3.உடலிலிருந்து வெளிச்சமும் வெளிப்படும்… மகிழ்ச்சியான உணர்வுகளையும் ஊட்டும்.

இதை எல்லாம் தியானத்தில் நீங்கள் காணலாம்… உணரலாம்…!

பிறர் உணர்வு நம்மை இயக்குகிறது… ஆனால் ஞானிகள் உணர்வு நம்மை இயக்கும்படி நாம் செய்ய வேண்டும்

 

1.ஒருவர் நீர் அருந்தும் பொழுது நாம் பார்த்தால் நமக்கும் தாக நிலை ஏற்படுகின்றது.
2.ஒருவர் கொட்டாவி விட்டால் அதே நிலை நமக்கும் ஏற்படுகின்றது,

ஜீவ சக்தியில் சரீர பிம்ப வாழ்க்கை நிலையில்.. உணர்வுடன் கூடிய எண்ணத்தில் செயல்படும் வழிமுறை ஆற்றல்… மனிதச் சக்திக்கே ஒருவருடன் ஒருவர் கூடி வாழும் வாழ்க்கையில்… இவ்வீர்ப்பின் தொடர்பில் “ஒருவரை ஒத்து” ஒருவரை இப்படித்தான் சாடுகின்றது.

இதே போல் தான் ஆத்ம இயக்கத்தின் தொடர்பிலும் உண்டு. தாம்பத்ய எண்ண வாழ்க்கையில் ஆண் பெண் ஒத்த இல்லற உணர்வால் ஒருவரின் அலைத் தொடர்பைப் பிறிதொருவர் அதிவிரைவில் எடுக்கும் வல்லமை கூடிய இல்லற எண்ண ஒற்றுமைகள் நடைபெறுகின்றன.

1.உயர் அலையின் தொடர்பலையால்
2.காந்த மின் அலையின் வீரிய உயர் குண வழித் தொடரில்
3.ஜெபம் கொண்ட சக்திமிக்க வாழ்க்கை நிலை ஏற்படும் பொழுது
4.இரண்டு எண்ணங்களின் ஒருமித்த கூட்டு ஐக்கிய குண நிலை அமையும் பொழுது
5.அத்தொடரினால் பெறப்படும் உயிராத்மாவின் வலுவில் கூட்டு ஐக்கியம் கொண்டு
6.சிவசக்தி… என்ற “ரிஷிபத்தினி” நிலையைப் பெற முடியும்.

அந்நிலையின் வழித் தொடரில் தனித்த அலைத் தொடர்பைக் காட்டிலும் வளர்க்கும் தன்மைக்கு வளர்ச்சி பெறும் ஜீவ சக்தியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் நிலை பெற முடியும்.

மனித ஆத்மாவின் அலைச் சக்தி எண்ணத்தின் ஆவி நிலையின் பதிவு நிலை… பூமி இழுத்து வெளிப்படுத்தும் அலையுடன் ஒன்றிய வாழ்க்கை நிலையில்… இவ்வுணர்வின் எண்ணத்தின் சரீர அலைத் தொடர்பு இந்த உடல் செல்லும் இடங்களில் எல்லாம் “பூமியின் ஈர்ப்பில் பதிந்து கொண்டே உள்ளது…!”

அதைப் போன்றே…. ஒத்த நிலையிலோ மாற்று நிலையிலோ உள்ளவர்களுடன் கூடிய எண்ண உறவாட்டத்தில்… பிறரின் அலை உணர்வை… நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கத்தான் செய்கின்றோம்.

எப்படி தாகம் எடுப்பதும் கொட்டாவி விடுவதும் பிறரின் தொடர்பு கொண்டு உள்ளது போன்றே
1.பிறர் வளர்த்த அலைத் தொடர்பை
2.ஒளி பாய்ச்சி உணர்வும் எண்ணமும் ஈர்க்கும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.பிறரின் சோகத்தையும் சஞ்சலம் சந்தோஷம் எதுவாகிலும் எடுக்கும் நிலையில் தான்
4.இன்றைய வாழ்க்கை நடைமுறையில் நாம் உள்ளோம்.

அதை மாற்றி… எண்ணத்தால் எடுக்கும் ஞான உணர்வின் வழி முறையில் உயர்ந்த ரிஷித் தொடர்புடன் செயல்படும் வாழ்க்கை வழி முறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி அமைத்துக் கொண்டோமானால்
1.இவ்வாத்ம அலையை ஒளிரும் சக்தியில் வலுக் கொண்டு இயங்க
2.நாம் வளர்த்த உயர் தொடர்பின் வலுத் தன்மையுடன்
3.மாற்று நிலை கொண்ட பிறருடன் கலந்துறவாடும் எண்ண நிலை ஏற்பட்டாலும்
4.தணலில் போடும் பொருளைப் போன்று அவை நம்மைச் சாடாமல் பஸ்பமாக்கும் தன்மைக்கு
5.நம் ஆத்ம அலையின் வலு நிலை கூடிவிடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் ஒரு பெண்ணுக்குச் சோக நீர் போன்று உடலில் வந்ததும் வயிறு உப்புசமாகி விட்டது. உடலில் எந்த நோயும் இல்லை.

ஒரு ஆன்மா அந்த உடலுக்குள் ஆனபின் அந்த உடலில் எப்படி வயிற்றுக்குள் பொறுமலானதோ அதே உணர்வுகள் இந்தப் பெண்ணுக்கு இங்கே வருகின்றது.

ஆனால் அவர்கள் எல்லா வைத்தியமும் பார்த்துவிட்டு “ஒன்றும் முடியவில்லை…” என்று கைவிட்டார்கள்.

என்னிடம் (ஞானகுரு) வந்து கேட்டார்கள்.

1.இன்னொரு ஆன்மா இங்கே இருக்கின்றது
2.அந்த ஆன்மாவின் வலுவைக் குறைக்க வேண்டுமென்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.நீங்கள் அனைவரும் எண்ணி அதன் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை ஊட்டும்படிச் செய்தேன்.

ஆக குணமாகி நல்ல நிலைகள் வந்தது.

ஓரளவிற்கு வலிமை பெறும் பொழுது
1.குடும்ப வாழ்க்கையில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…
2.நான் என்ன பாவம் செய்தேன்…?” என்ற உணர்வை “மீண்டும்” அந்தப் பெண் நினைவாக்குகின்றது.

குணமாகி வந்த நிலைகளில் “எனக்கெல்லாம்.., இப்படிப்பட்ட அவஸ்தைகள் வந்துவிட்டதே…” என்ற உணர்வை எண்ணும் பொழுது மறுபடியும் பதிந்த உணர்வுகள் கிளர்ந்துவிட்டது.

1.மண்ணுக்கள் மறைந்த வித்து மழை நீரைக் கண்டபின் கிளர்ந்தெழுவது போல்
2.இந்த உணர்வின் எண்ணங்கள் வரும் பொழுது உணர்வைக் குவித்தபின்
3.ன் செயலே இல்லாதபடி அந்தப் பெண் மயங்கிவிட்டது.

டாக்டர்களிடம் சென்று பார்க்கப்படும் பொழுது “இது.., விசித்திர நோயாக இருக்கின்றது.., என்ன செய்வது…?” என்று தெரியவில்லை என்கிறார்கள்.

தன்னுடைய நிலைகளில் செயலிழந்து பேச்சு மூச்சோ எழுந்து நடக்கும் நிலைகளோ அங்கங்கள் அனைத்தும் விரிந்த நிலையில் கிடக்கின்றது.

“என்ன செய்வது…?” என்று மற்றவர்கள் துடிக்கின்றனர்.

டாக்டர்கள் கைவிட்டபின் அங்கிருந்து கொண்டே எனக்குப் ஃபோன் செய்தார்கள்.

ஃபோனை அந்தப் பெண்ணின் செவிகளில் வையுங்கள் என்று சொன்னேன். அருள் மகரிஷிகளின் உணர்வைச் சொல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் செவிகளில் விழுந்தபின் அந்த உணர்வு கொண்டு “ஓ…ம்…” என்று சொல்லத் தொடங்கியது.

அங்கே அந்த டாக்டரும் இருக்கின்றார்.

இதுவரையிலும் பேச வைக்க முடியவில்லை. ஆனால், (ஃபோன் மூலம்) இந்த ஒலியைக் கேட்டபின் பேசுகின்றது, “என்ன… விசித்திரமாக இருக்கின்றது…!” என்கிறார்.

பிறகு சிறிது நேரம் பொறுத்திருங்கள். அதற்கு முழுச் சுய நினைவு வரட்டும். வந்தபின் அந்தப் பெண்ணையே ஃபோன் செய்யச் சொல்லுங்கள் என்று சொன்னேன்.

அதே மாதிரி அந்தப் பெண் எழுந்து வந்து பேசுகின்றது.

என் நினைவினை இழக்கும் நிலைகள் எது..,? என்றே எனக்குத் தெரியவில்லை என்னை இயக்கிவிட்டது. ஆக “நான் மரணமடைவேன்..,” என்ற உணர்வு மட்டும் தோன்றுகின்றது.

ஏனென்றால்
1.மடிந்த உணர்வின் தன்மை இது மடியச் செய்யும் உணர்ச்சிகளை
2.அந்தப் பெண்ணுக்குள் தூண்டுகின்றது என்ற நிலையை அங்கே தெளிவுபடுத்தினேன்.

பின் இதிலிருந்தது விடுபடும் என்ற நிலையை எல்லோருக்கும் சொல்லி அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெறும்படிச் செய்தபின் அந்தப் பெண் தப்பித்தது.

இது நடந்த நிகழ்ச்சி.

இவ்வாறு தவறு நாம் செய்யாமலேயே பண்பால் அன்பால் நாம் மனித வாழ்க்கையில் அன்பு கொண்டு வாழ்ந்தாலும் மற்றவர்கள் உடலில் சில நோய்கள் உருவாக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே இங்கே நமக்குள் பதிவாகி விடுகின்றது.

நாம் அவர்களுக்கு உதவி செய்தாலும் நல்லதானதும் அடுத்து
1.“மகராசி… எனக்கு நல்ல உதவி செய்தாள்…!” என்ற இந்த எண்ணம் வரும் பொழுது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வந்து விடுகின்றது.
2.அந்த உடலில் “எந்த நோய்” இருந்ததோ அந்த நோயின் தன்மை இந்த உடலிலும் உருவாகின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைக்க ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு நிமிடம் செய்தபின் யாரைப் பற்றிக் கேட்டுணர்ந்தீர்களோ அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் வேதனைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் உணர்வைப் பாய்ச்சுங்கள்.

1.“மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணுங்கள்… உங்கள் உடல் நலமாகும்” என்று சொல்லுங்கள்.
2.அதைப் போல அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் வேதனைகளும் அகலும்.. அவர்களும் உடல் நலம் பெறுவார்கள்.
3.அதே சமயத்தில் அவர்கள் வேதனை உணர்வுகள் உங்களுக்குள் வராது.. “உங்களை இயக்காது…”
4.உங்கள் ஆன்மாவும் உடலும் தூய்மை ஆகும்.

இதற்குப் பெயர் தான் பிரதோஷம் என்பது.

தியானம் செய்ய முடியவில்லை… செய்தாலும் சக்தி பெற முடியவில்லை… என்பவர்களுக்கு ஒரு பயிற்சி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அந்தச் சக்திகளை பெற்றுக் கொண்டே வருகின்றோம்.

1.புதிதாக இந்தத் தியானம் செய்வோரும் சரி…
2.ஏற்கனவே செய்து பழகியோரும் சரி…
3.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்றும்
4.அதை எப்படிப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்…? என்பதையும் உணர்ந்து கொள்வது நல்லது.

தியானத்தில் எடுக்கும் பொழுது துருவ நட்சத்திரம் என்று எண்ணினாலும் அது துருவ நட்சத்திரம் என்று தெரியாது. ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள் நம் உடலுக்குள் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.
2.அங்கே மட்டுமல்ல… நம் உடலுக்குள்ளும் ஒரு விதமான அலைகள் வரும்
3.உடலுக்குள் அந்த உணர்வலைகள் அலை அலையாகப் படர்ந்து அது வெளியேறும் (சீராகத் தியானம் செய்வோர் இதைப் பார்த்திருக்கலாம்)

ஏனென்றால் புதிதாக இருப்பதால் சிலர் இதைப் பார்க்க முடியவில்லை அல்லது தெரிய முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எடுத்துப் பழகுதல் வேண்டும்.

காரணம்… இந்த வாழ்க்கையில் நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் குரோதம் பயம் அதிகமாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

இதை நாம் அமைதிப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஆரம்பத்திலே நாம் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும்
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவிலே முன்னாடி இருப்பதால்
2.அதைப் பிளந்து விட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசித்து எடுக்க முடியாது.

தியானத்தில் கண்களை மூடி இருக்கும் போது அப்போது என்ன நடக்கிறது…?

யார் யாரிடம் சண்டையிட்டோமோ அல்லது கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் ஏற்பட்டதோ… குடும்பத்தில் பையன் சொன்னபடி கேட்கவில்லை அவன் சரியாகப் படிப்பதில்லை ஏதாவது சொன்னால் அவன் அடிக்கடி முறைத்துப் பார்க்கின்றான்… திட்டுகிறான்… சாபமிடுகின்றான்…! என்று இது போன்று எத்தனையோ உணர்வுகள் வரும்.

என்னால் தியானத்தில் அமர முடியவில்லை… ஒருநிலைப்படுத்த முடியவில்லை (CONCENTRATION) என்ற நிலை வரும் இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும் அல்லவா.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம்
1.உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
3.எங்கள் உடல் முழுவதும் அது படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
4.கண்களைத் திறந்து இப்படி எடுத்துச் செலுத்தி வலுப்பெற்ற பின் குறுக்கே வரும் சங்கட அலைகளை மற்ற நினைவுகளை விலக்கிச் செல்லும்.
5.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அமைதி கொண்டு நாம் பெற முடியும்.

ஆனால் அதே சமயத்தில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சங்கடமும் மற்ற நிலைகளும் குறுக்கே வந்து கவரும். மீண்டும் அவ்வாறு சிந்தனை இல்லாது வந்தாலும் “உடனே கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்த வேண்டும்…!”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிச் சுவாசித்து எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கக் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளைச் சேர்த்து அடிக்கடி சுத்தப்படுத்திக் கொண்டு வந்தால்
1.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும் சிறுகச் சிறுக இந்த வலு ஏற்றப்பட்டு
2.தீமை வராதபடி… பிற உணர்வுகள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

சோப்புப் போட்டு துணியில் உள்ள அழுக்கை நீக்குவது போன்று… ஒரு தடவை செய்து சரியாக வரவில்லை என்றால் இரண்டாவது தடவை மீண்டும் அந்தச் சோப்பைப் போட்டு நீக்குவது போல்… ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் ஆன்மாவை அது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

இது தான் தியானப் பயிற்சி…!

தியானம் இருந்தேன்… எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எங்கே உட்கார்ந்தாலும் எழுந்து செல்லும்படி செய்கின்றது எனக்கு ஒரு எதிரி இருக்கின்றான் அவனை நினைத்தவுடன் தியானம் செய்ய முடியவில்லை என்று அதையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அதே போல் வியாபாரத்திலோ மற்ற வகைகளிலோ கொடுக்கல் வாங்கலில் சண்டையிட்டிருந்தால் நினைவுகளைத் தூண்டி “அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்…!” என்றெல்லாம் சிலருக்கு தியானத்தில் அமரும் பொழுது அந்த உணர்வுகள் வரும்.

அப்பொழுதெல்லாம் உடனடியாகக் கண்களைத் திறந்து “ஈஸ்வரா…!” என்று ஊயிரை எண்ணி நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இப்படிச் செலுத்தினால் முன் நின்று சுவாசித்து (துருவ நட்சத்திரத்தின் சக்தியை)
2.உடலில் அந்த தீமை செய்யும் உணர்ச்சிகளை மாற்றிடும் சக்தி நமக்குள் உருவாகின்றது.

பின்.. யார் நமக்குத் தொல்லை கொடுத்தார்களோ… அறியாது செய்யும் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… பிறருக்கு நல்லது செய்யும் அந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோற்றுவிக்க வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.

பையன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்த்துப் பேசுகிறான் என்றால் அந்த உணர்வுகள் தியானத்தை எடுக்க விடாதபடி தடுக்கும்.

அந்த நேரத்தில் உடனே கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு… என் பையன் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்திக்கக்கூடிய ஆற்றல் வரவேண்டும்… உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்று இந்த உணர்வை அங்கே “அவன் மீது பாய்ச்ச வேண்டும்….”

இப்படி எண்ணி எடுத்தால் அவன் உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க முடியும். அதே சமயத்தில் அவனைப் பற்றி உயர்ந்த எண்ணங்களைச் சிந்திக்கும் ஆற்றல் நமக்குள் வலுவான நிலைகளாக உருவாகிறது.

இப்படி எடுத்துப் பழகினால் தான் “தியானத்தில் அந்தச் சக்தி நமக்குள் வளர்ந்து கொண்டே வரும்…”

எடுத்தவுடனே முழுமையாக அந்தச் சக்தியைக் கொண்டு வரமுடியாது.

உடலில் எத்தனையோ வகையான உணர்வுகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருப்பதால் அதை மாற்றிட
1.கண்களைத் திறந்து மீண்டும் மூடி
2.திரும்பக் கண்களைத் திறந்து மூடி…
3.இப்படி நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கும் ஒரு பழக்கமாக
4.துருவ நட்சத்திரத்தினை இணைத்துக் கலவையாக மாற்றி
5.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுக்கக்கூடிய ஒரு பயிற்சியாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

“மூன்றாவது கண்…” மூலமாகக் காணும் ஆற்றல்

 

சகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.

அதன் வளர்ச்சி நிலையில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.

சரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு
2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து
3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.

ஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.

ஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி
3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்
4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..?

ஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.

ஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…
1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு
2.ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை
3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்று விட்டால்
4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

அத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.

அப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…
1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு
2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே…!

ஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.

விஞ்ஞான அறிவால் சாதாரண இரும்பை வலுக் கொண்டதாக (HARDENING) மாற்றுவது போல் நம் எண்ணங்களையும் உறுதியாக்க முடியும்

 

ஒரு மனிதன் தீமையால் வாடுகின்றான் என்று நாம் பார்க்கின்றோம். அப்போது அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்

உதவி செய்ய வேண்டும் என்றால் அவன் படும் தீமை நமக்குள் வராது தடுப்பது எப்படி…?

பார்த்து நுகர்ந்து “அவன் அவதிப்படுகிறான்…” என்று தெரிந்து கொள்கின்றோம் ஆனால் அந்தத் தீமை தனக்குள் வளராதபடி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் எண்ணி உள்முகமாக உடலுக்குள் செலுத்தப்படும் போது அது தடுக்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள்ளே வலுவாக்கினால் இந்த சக்தி உள் நின்று அந்தத் தீமையை வெளியே தள்ளிவிடும்.

அந்த வலிமையான உணர்வுகள் நமக்குள் சுவாசமாகி தீமை புகாதபடி தடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாகக் கொடுக்கின்றது. இப்படி நாம் கொடுத்துப் பழகுதல் வேண்டும்.

சாதாரணமாக இரும்பை எத்தனையோ வகைகளில் காய்ச்சி உருக்கி உருவாக்குகின்றார்கள் அதில் திரவங்களை ஊற்றப்படும் போது பல வகைகளிலும் வலு கொண்டதாக மாறுகின்றது.

வலு கொண்ட இரும்பாக ஆன பின் மற்றது இதைத் தேய்க்க முடியாது ஆனால் இது மற்றதை அறுத்துவிடும். மனிதர்கள் இரும்புக்குள் பல திரவங்களை சேர்த்து எப்படி அதை உறுதியாக்குகின்றார்களோ

உதாரணமாக… இரும்பை நன்றாகப் பழுக்க அதைச் சூடாக்கிய பின் தண்ணீரிலே போட்டால் அது இணைந்து கொண்ட பின் அந்த இரும்பு ஒடியும் தன்மை வருகின்றது… உடைந்து விடுகின்றது.

ஏனென்றால்
1.அதிகமான காய்ச்சலாகும் பொழுது பருவம் தவறினால் தட்டியவுடன் அது உடைந்து விடுகிறது
2.ஆனால் பருவத்துடன் இரும்பைக் காய்ச்சி பக்குவமாகத் தண்ணீரில் விட்டால்
3.அது மற்றதைக் காட்டிலும் வலுக்கொண்டதாக மாறுகிறது.

ஆகவே பருவம் தவறினால் அதனின் வலு மாறிவிடுகிறது.

இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை மனிதன் தன் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்ட பின்
1.இது எல்லாம் மனிதனுக்கு எவ்வாறு…? என்ற நிலை வருவதனால்
2.இந்த மனித வாழ்க்கையிலிருந்து பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
3.பிறவி இல்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்குத் தான் அதிகாலையிலே துருவ தியானமாகக் கொடுத்துள்ளோம்.

வாழ்க்கையில் எப்பொழுது சங்கடமோ சலிப்போ வேதனையோ துன்பமோ வருகின்றதோ அந்த உணர்ச்சிகள் நமக்குள் தூண்டி விடாதபடி ஈஸ்வரா என்று தடைப்படுத்திடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வலுவாக்கி உடலுக்குள் அதை உள்முகமாகச் செலுத்தப்படும் பொழுது தீமையை செய்யும் உணர்வுகளை அது உள்ளே புகாது தடுத்து விடுகின்றது

ரிஷித் தன்மை பெறுவதற்கு “மேல் நோக்கிய சுவாசம்” மிகவும் அவசியம்

 

நீரை உண்டு பூமியின் சத்தெடுத்துத் தாவரம் வளர்ந்து அந்தத் தாவரங்களில் புழு பூச்சிகள் உண்டாகின்றது. அத் தாவரத்தில் பூக்கள் பூத்து பூக்களின் சுவையை அத்தாவரத்தில் வளர்ந்த வண்டுகளே அதற்குகந்த சுவை சத்தான தேனை புஷ்பங்களிலிருந்து பெற்று தேன் என்ற சுவை கொண்ட திரவகம் கிடைக்கின்றது.

இதைப் போன்று இதை ஒத்த ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்ட நீரைக் கொண்டு அதனதன் வளர்ப்புப் பலன் பெறுகின்றது.

இப்படி இக்காற்று அமிலத்தில் பூமி சுழற்சி காற்று மண்டலத்தில் இந்தப் பூமி சமைத்த அமிலக்கூறுகளின் வளர்ப்பு நிலைக்கொப்ப பூமியின் சத்து நிலை ஒன்றின் தொடர்பு கொண்டு ஒன்றொன்றும் அதன் தொடர்ச்சியில் மாற்றுத் தன்மைகள் பெறுகிறது.

மாற்றங்கள் பெற்றாலும்…
1.இந்தப் பூமியின் அமிலக்கூறே இப்பூமியின் ஈர்ப்புக்குகந்த பூமியுடன் தொடர்பு கொண்ட மற்றக் கோள்களின் சத்தெடுத்து
2.அச்சத்துத் தன்மையை பூமி சமைத்து ஆவியாக்கி அமிலமாக்கி நீராக்கி
3.பூமி வளரும் வளர்ப்பிற்கு தன் சமைப்பின் சத்தைக் கொண்டு பூமி வளர்ந்து
4.பலதையும் கொண்டு அவை அவை வாழ்கிறது.

அதைப் போல் இச்சரீரக் கோளத்தில் எண்ணத்தின் ஞானம் கொண்டு சுவாசத்தால் பெறும் சத்துத் தன்மையைக் கொண்டு
1.தனக்கு வேண்டிய உயர்ந்த சத்துக் குணத்தை எத்தன்மையில் பெற முடியும்…? என்று
2.ஞான சக்தியைக் கொண்டு உணரும் ஆற்றல் தொடர்பினால் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
3.உடலை விட்டுப் பிரிந்த முன்னோர் தொடர்பும் ஞானிகள் சித்தர்கள் சப்தரிஷிகள் வளர்ந்த வளரும் சூரியக் குடும்பங்களின் தொடர்பையும் பெறலாம்.

இந்தப் பால்வெளி அண்டசராசரங்கள் எதுவாகிலும்… எண்ணத்தால் அவற்றுடன் நம் உணர்வின் தொடர்பைச் செலுத்தி.. ஞானத்தின் செயல் அலைக்குச் சுவாசத்தால் இந்த உடலின் அணுத் தன்மையை நாம் எண்ணும் நிலைக்கொப்பச் சத்தாக்கிக் கொள்ளலாம்.

அச்சத்தின் பலனால் ஆத்ம வளர்ப்பை நாம் வளர்க்க சுவாசத்தின் மோதலினால்
1.கவன நரம்பின் காந்த ஈர்ப்புச் சக்தியைக் கொண்டு
2.அவை மோதி வளரும் வளர்ச்சியால்..
3.இந்த எலும்புக்கூடு கூறு அனைத்திற்குமே வலுவாக்கிட முடியும்.

அதிலே… முதலில் இச்சிரசு பாகம் காந்த மின் சக்தியின் வளர்ச்சியைக் கொண்டு மேல் நோக்கி நேராக எடுக்கும் சுவாசத்தால் நாம் பதிய வைக்கும் அலைத் தொடர்பு அனைத்துமே சுவாசத்தின் உணர்வால் சரீர எலும்புகளின் வளர்ச்சி அடையும்.

அந்தச் சத்தின் பலனாக ஆத்ம உயிர் வலு சரீர இயக்கத்தால் எண்ணத்தின் தொடர்புடனே ஆரம்பத்தில் எடுத்த சுவாச அலையின் வளர்ப்புத் தன்மையில் வலுக் கொண்ட அடுத்த வளர்ச்சியாக ஆத்மாவின் இயக்கத்தைத் தனித்து இயங்கவல்ல இயக்கத் தொடர்பிற்குச் செயலாக்க முடியும்.

தனித்து இயங்கும் நிலை பெற்று ஒவ்வொன்றையும் சித்தின் தன்மை கொண்டு ரிஷித் தொடர்பில் வளர்ச்சியாகி… ரிஷித் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையில் வாழும் தொடர்பிலேயே அதைப் பெறுதல் வேண்டும்.

ஆனால் காட்டிலிருந்தும்… ஜடா முடி தரித்தும்… சாமியார்கள் என்ற காஷாயம் பூண்டு… ஜெப மந்திரம் ஓதி பகவானின் அடிமையாக அடி பணிந்து அடைவதல்ல ரிஷித் தன்மை…!

ஞானத்தின் தொடர்பலையால் சுவாசத்தால் பெறும் உயர் காந்த சக்தியின் தொடர்பை
1.இச்சரீரம் எடுத்துச் சமைக்கும் காலங்களில் அடையக்கூடிய இன்பமும் உடல் ஆரோக்கியத் தன்மையும்
2.இனிமை கலந்த உயர் அலையின் சுழற்சியாக
3.தாம்பத்ய வாழ்க்கை இனிய அன்பு நற்குணத் தொடர்பால் பெறவல்ல இனிய சக்தியைக் கொண்டே
4.உலக சிருஷ்டியை சிருஷ்டிக்கும் ஆற்றல் மனித எண்ண உணர்வு செயலுக்குத்தான் உண்டு.

உலோகக் கலவை கொண்டு வலுவான இயந்திரத்தை இஞ்சினியர் உருவாக்குவது போல் நம் எண்ணங்களை வலுவாக்க முடியும்

 

ஒரு இன்ஜினியர் இயந்திரத்தை உருவாக்கப்படும் பொழுது அந்த இயந்திரம் கடினமான பளு கொண்ட வேலை செய்ய வேண்டி இருக்கின்றது என்றால்
1.அந்த இயக்கத்தின் தன்மைக்கு எந்த உலோகத்தைச் சேர்த்தால் அது வலு கொண்டு தாங்கும் என்று
2.அதற்குண்டான உலோகக் கலவைகளைச் சேர்த்து வலுப்பெறும் தன்மை கொண்டு வருகின்றார்.

ஏனென்றால் பளு அதிகமாகி… அழுத்தம் அதிகமாகும் பொழுது இந்த உலோகம் அதனுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தேய்மானம் இல்லாதபடி அது இயங்க வேண்டும்.

1.தேய்மானம் இல்லாது செயல்படுத்த வேண்டுமென்றால் அதிலே “வழுவழுப்பின் தன்மை” கொண்டு வர வேண்டும்
2.அதற்கு மாறாகச் சொர சொரப்பை உண்டாக்கி விட்டால்… அதனுட உராயும் பொருளை அது சீக்கிரம் தேய்த்து விடும்… இயந்திரம் இயங்காது.

இது எல்லாம் விஞ்ஞான அறிவு கொண்டு கொண்டு இயக்கும் நிலைகள்.

இதைப் போன்று தான் நம் உடலில் “மனிதனின் உணர்வுகளின் இயக்கத்தை எப்படிச் சீராக இயக்க வேண்டும்…?” என்ற பயிற்சியை இந்த உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

1.சந்தர்ப்பவசத்தால் நாம் எடுத்துக் கொண்ட பிறிதொரு உணர்வுகள் ஒன்றுக்கொன்று மோதலாகும் போது
2.நம் நல்ல குணங்களை அது எவ்வாறு செயலற்றதாக மாற்றுகின்றது…? (இயந்திரம் தேய்மானம் ஆவது போல்) என்பதை “நமக்கு நாமே அறிந்து”
3.நுகர்ந்த உணர்வு நமக்குத் தீமை செய்கிறது என்றால் அதை நாம் உடனே துடைத்துப் பழகுதல் வேண்டும்
4.அதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைத் தெளிவாக உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

தீமையான உணர்வுகளை எப்போது நுகர நேர்ந்தாலும் அல்லது பார்க்க நேர்ந்தாலும் “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…. எங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… அந்த உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது இது வலுவாகிவிடுகிறது.
1.வேதனையோ சலிப்போ சங்கடமோ எதுவாக இருந்தாலும் உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தி விடுகின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க
3.தீமை செய்யும் உணர்வுகள் நம் ஈர்ப்பைக் கடந்து… ஆன்மாவிலிருந்து அகன்று சென்று விடுகின்றது.

ஒருவன் வேதனைப்படுகிறான் என்று முதலில் தெரிந்து கொள்கின்றோம். அதே சமயத்தில் நம் உடலுக்குள் வேதனையான உணர்வு அணுவாக உருவாகாதபடி தடுத்து நிறுத்துதல் வேண்டும்.

அதற்குத் தான் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலுக்குள் பாய்ச்சும்படி சொல்கிறோம். அப்போது துருவ நட்சத்திரத்தின் சக்தி வலிமை பெறுகின்றது. முதலில் தெரிந்து கொண்ட வேதனையின் வலு குறைகிறது.

நண்பர்களாகப் பழகுகின்றோம்… சந்தர்ப்பத்தில் பகைமையாகி விட்டால் துரோகம் செய்தான் பாவி…! என்று எண்ணினால் அந்த நண்பன் அமெரிக்காவில் இருந்தாலும் அது உடனே அங்கே இயக்குகின்றது… அவனுக்குத் தீமையாகின்றது.

அதே போன்று அவனை நாம் எண்ணும் போது அந்தத் தீமையின் அணுக்கள் நமக்குள்ளும் விளையத் தொடங்குகிறது.

அத்தகைய நேரத்தில் எல்லாம்
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் கவர்ந்தோம் என்றால் அது “வசிஷ்டர்”
2.நம் இரத்தநாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்க்கப்படும் பொழுது கருவுற்றுப் பிரம்மமாக மாறுகின்றது.

இப்படி இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அணுவின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். “மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…”

அதை நீங்கள் எளிதில் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் பயிற்சி முகாமாக அமைத்துத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

மறைக்கப்பட்ட பல உண்மைகளை அறியலாம்

 

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்தில் உள்ள இந்தப் பூமியின் எண்ண உணர்வு
1.செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்
2.விஞ்ஞானத்தை நம்பி வாழும் உரு நிலை பெறாமலும் இருந்திருந்தால்
4.வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித் தொடரினால்
5.நம் அனைவரது ஞானமும் உயரும் நிலை பெற்றிருந்திருக்கும்.

அப்படிப் பெற்றிருந்தது என்றால்.. இந்தப் பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே “மிகவும் உன்னத சக்தியாக…” இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களை வளர்த்து… மிக உயர்ந்த குணச் சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட… இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையாகப் பெற்றிருக்கும்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு மனிதனை மனிதனே அழித்திடும் தன்மைக்கு வந்து விட்டான்,

அழித்து என்பதன் பொருள்…
1.இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்களுக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வரவிடாமல்
3.பல காலமாகச் சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
4.இந்த மனிதனே அந்த மனிதக் கருவை அழித்து (கருத்தடை)
5.அதனை ஞானம் வளரவிடாமல் இழி நிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

மேலும்… தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில்…
1.இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும்
2.துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் தான்
3.எண்ணத்தில் கொண்டு வாழுகின்றர்கள் இன்றைய மனிதர்கள்.

இப்படிப்பட்ட வாழும் ஓட்ட நிலையினால்… எண்ணத்தில் ஏக்கமுடனும்… பேராசை எதிர் நிலையிலும் தான்… மக்களை வழி நடத்திச் செல்லும் “மத வழி போதனைகளும்… அரசியல் சுழற்சிகளும்…” சுழன்று கொண்டுள்ளன.

ஆனால் தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு உலகையே சிருஷ்டிக்க வல்ல “ஆதி முதலாம்… விநாயக சக்தி கொண்ட…” சொல் செயல் ஞானம் கொண்டவர்கள் தான் மனித ஆத்மாக்கள்.

பூமியில் இந்தச் சரீர வாழ்க்கையிலிருந்தே தன் ஆத்ம ஞானத்தை வளர்க்கும் தகுதி கொண்டவர்கள் தான்…!

எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் சேர்க்கையில் கருவாகி சரீரம் பெற்று வாழ்க்கை வழித் தொடருக்கு வந்தோமோ அதே தொடரில் ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும்
1.தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
2.உடல் இயக்க உறவு நிலையில் கரு தோன்றி வளர்வதைப் போல்
3.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையிலிருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு
4.ஞான வட்டமாக அவ்வலைத் தொடரை எந்த மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ
5.அந்த மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்…
6.ஜீவ சக்தியை வளர்க்கவல்ல வழி முறை ஆத்ம சக்தியை…
7.”ஆத்மச் சேர்க்கையைக் கொண்டு” செயல்படுத்த முடியும்…!

இதைத் தான் அன்றைய இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வான்மீகி மகரிஷியால் சூட்சமத்தால் லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தப்பட்டது.

அதே போல் காந்தர்வன் என்றும்… கன்னி என்றும்… கன்னி நீரில் வாழும் பொழுது மேகக் கூட்டத்தில் இருந்து விந்துகள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞானத் தெய்வக் குழந்தை பிறந்தது என்றும் அன்றைய சித்தர்களால் காட்டப்பட்டது.

கார்த்திகைப் பெண்கள் தான் முருகனை வளர்த்தனர் என்ற கதையில் சொல்லப்பட்ட உண்மைதனை…
1.ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சமத்தை உணர்ந்தீர்கள் என்றால்
2.சிவ சக்தி கருத்தரிக்கவில்லை… சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
3.மறைக்கப்பட்ட பல உண்மைகளை எல்லாம் அறியலாம்… உணரலாம்.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்தி தான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ணம் தான் உலாவிக் கொண்டுள்ளதேயன்றி இன்று நடப்பவையும் அத்தன்மை தான் என்று அறிய வேண்டும்.

ஏனென்றால் ஜீவக் கரு எத்தனை கோடி ஆண்டுகள் எந்த மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும்… இங்கே உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்று தான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால் தான்
2.ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும் ரிஷித் தன்மையும் கொண்ட
3.ரிஷிபத்தினி… ரிஷித் தன்மையைக் கொண்டு தான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவ வித்து விருட்சகம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆலயங்களில் சாமி மேல் மலரைப் போடுகின்றார்கள். சாமிக்கு மேல் அது ஆடையாகின்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் நம் உடலிலே அந்தக் குணங்களானால் அந்த மலரைப் போல மணம் பெறும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நாம் அனைவரும் அந்த நிலை அடைகின்றோம்.

நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்.

இப்படி எண்ணி நமக்குள் இத்தகைய உணர்வுகளைச் சேர்க்க வேண்டும். சேர்த்து நமக்குள் வரும் பகைமை உணர்வுகளை அழித்திடல் வேண்டும்.

நாம் அனைவரும் கல்யாணராமனாக மாற வேண்டும்.

1.சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தில் உருவாகும் “நஞ்சினை அரவணைத்து… ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ” இதைப் போல
2.மனிதன் மற்றவர்களுடைய உணர்வுகளை மாற்றித் தீமைகளயும் பகைமைகளையும் மாற்றி
3.அந்த உணர்வுகளை ஒளியாக்கும் பொழுது அருள் ஒளி பெற்று “உயிருடன் ஒன்றி… ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்…”

இது நமது சாஸ்திரங்களில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாரும் இதைச் சிந்திக்கின்றோமா…?

தெய்வத்திற்கு மலர்களையும் மாலைகளையும் அணிவிக்கும் பொழுது அந்த அருள் உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்று சாஸ்திரப்படி எண்ணிச் சுவாசிக்கின்றோமா..,?

அன்றைய ஞானிகள் சொன்ன பேருண்மைகளைத்தான் இங்கே சொல்லி வருகின்றோம்.

ஆனால் யாம் இப்பொழுது சொன்னாலும் கேட்பவர்கள், “சாமி.., அற்புதமாகப் பேசுகின்றார்… நம்மால் இது முடியுமா…?” என்று வினாக்களை எழுப்பிச் சோர்வடையும் நிலைக்குத்தான் கொண்டு செல்கின்றார்கள்.

1.“நீங்கள் எல்லோரும் அருள் உணர்வைப் பெற வேண்டும்
2.அருள் ஞானிகளாக வேண்டும்” என்ற ஆசையில் தான் யாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

“என்னாலே முடியுமா..,?” “நானே…” (சாமிகள் சொல்வதை) இதைப் பெற முடியவில்லை. “ஒன்றும் தெரியாத மற்றவர்கள்..,” எப்படி பெறப் போகின்றார்கள்…? என்று தானும் பெறாது மற்றவர்களையும் பெற விடாதபடி செய்து கொண்டிருப்பார்கள்.

சாமி உயர்ந்த உணர்வுகளைச் சொல்கிறார். அதை “என்னாலேயே…” பெற முடியவில்லை. “நீங்கள் எப்படிப் பெறப் போகின்றீர்கள்…?” என்று சொல்லி இதைப் பெறுபவர்களையும் கெடுத்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் ஒரு சாக்கடைக்குள் நல்ல நீரை ஊற்றினால் உடனே என்ன ஆகும்..,? அதுவும் நாற்றமாகும். ஆனால், நல்ல நீர் அதிகரித்து விட்டால் அது ஓடிவிடும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் அருள் ஒளியை நமக்குள் “கூட்டினால்…” நம்மையறியாது இயக்கும் இருளை அகற்றிடும் ஆற்றல் பெறுவோம்.
1.இதைக் காட்டுவதற்குத்தான்;
2.அந்த அருள் சக்திகளைப் பெறத்தான்;
3.அனைத்து மக்களும் அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காகத்தான்;
4.பெற்று மகிழ்ந்து வாழச் செய்வற்காகத்தான் “ஆலயத்தை” உருவாக்கினார்கள் ஞானிகள்

ஆகவே… இந்த மனித வாழ்க்கையில் “நாம் எதைப் பெற வேண்டும்…?” என்று தெளிவாக்கப்பட்டது.

ஞானிகள் உருவாக்கிய ஆலயங்கள் சாதாரணமானதல்ல. அவை அருள் ஞானத்தை நமக்குக் கொடுக்கும் ஞானப் பொக்கிஷங்கள்.

இனியாவது ஆலயத்திற்குச் செல்வோர் அந்த “ஞானிகள் சொன்ன முறைப்படி…” அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள். ஆலயம் வருவோர் அனைவரும் அந்த தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

மக்கள் அனைவரும் “ஒன்றுபட்டு வாழ வேண்டும்…” என்று தவமிருங்கள்.

உண்மையை உணர்ந்து கொண்டால் ஒவ்வொருவரும் உருவாக்கிடலாம் “உலக சிருஷ்டியையே…”

 

பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள்… அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப… ஒன்றுடன் ஒன்று உராய்ந்து… தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாக உருவாகின்றது.

அப்படி உருவான மண்டலங்கள்… கோள்கள்… நட்சத்திரங்கள்… சூரியன்கள்… அதனதன் ஈர்ப்புச் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே… வழி கொள்ளும் வளர் முறைக்கு வருகின்றது.

இந்தப் பூமியில் மணல் உண்டு.. நீர் உண்டு… சுண்ணாம்பும் உண்டு… இப்படி மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அவை எல்லாற்றையும் நாம் எடுத்து நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக வீடுகளாகக் கட்டிப் பாதுகாப்பு இடமாகத் தேடி அமைத்து வாழ்கின்றோம்.

1.எப்படி வீட்டை அமைக்கப் பல பொருள்களை எடுத்துப் பக்குவப்படுத்திக் கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்று
2.பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில்
3.தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து
4.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு… எண்ணத்தின் ஞானம் கொண்டு…
5.உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்பு நிலை உருவகங்கள் தான்
6.ஆதி சக்தியின் வழி வந்த மகரிஷிகளின் வழி மண்டல அமைப்பின்
7.ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வருகின்றது.

அது அது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப… வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும் தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உருப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்…
3.உண்மையின் உன்னத சக்தியினை உணர்த்தினால்… உருவாக்கினால்…
4.ஒவ்வொருவரும் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!

இந்தப் பூமிக்கு “மனிதக் கரு வர” ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித் தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இந்தப் பூமியின் சிவ சக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?

இந்தப் பூமியில் மட்டுமல்ல…
1.நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்
2.நம் சூரியக் குடும்பமல்லா மண்டலங்களில் ஜீவிக்கின்றார்கள்.

ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்… மற்ற எல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.

அவர்களின் கூட்டுச் செயல் தான் ஆதி சக்தியின் இயக்கமே…!

இறந்த பின் எங்கே… எந்த நிலை அடைகின்றோம்…? என்ற உண்மையை உணர்ந்தால் யாரும் தீங்கிழைக்க மாட்டோம்

 

கோபப்படுபவனைப் பார்த்து இரக்கமற்றுக் கொல்பவனை நாம் பார்க்க நேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு உணர்வின் கருத்தன்மை அடைகின்றது நம் இரத்தங்களிலே. ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ஆக… இப்படித் தவறு செய்கின்றானே…! மற்றவனைத் துன்பப்படுத்துகின்றானே… கொல்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் பெருகி “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது. நல்ல உடலை உருவாக்கிய அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆக…
1.எப்படி எல்லாம் உணர்வுகளை இந்த உயிர் இயக்குகிறது…?
2.எத்தனை விதமான உணர்வுகளை நுகருகின்றோமோ உயிர் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதை அறிவதற்குத்தான்
3.நகருக்குள்ளும் நாட்டுக்குள்ளும் காட்டுக்குள்ளும் எம்மைச் செல்லும்படி செய்து
4.அந்த இயற்கையின் உண்மையின் உணர்வலைகள் எப்படி இயங்குகின்றது…?
5.அதிலிருந்தெல்லாம் நீ எப்படி மீள போகின்றாய்…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

இரவிலே சுற்றும்படி செய்து ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கும்படி செய்வார்.
1.அந்தக் குடும்பத்தில் சாபமிட்டவர் எத்தனையோ பேர்கள்.. தொல்லைப்படுத்துவோர் எத்தனையோ பேர்கள்…
2.தொல்லைப்படுத்துவோர் இறந்தபின் அவர்கள் குடும்பத்தில் என்ன ஆகின்றது…?
3.ஆவியாக பின் அதே பற்றுடன் இன்னொரு உடலுக்குள் சென்று பேயாக அது எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?

அவர்கள் செல்வந்தராக இருந்தாலும் உடலுக்குள் சென்று அந்தச் செல்வத்தைக் காப்பதற்கு மாறாக தவறின் நிலைகள் இழைக்கப்பட்டு… அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கடும் நோயாக உருவாக்கப்பட்டு… தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடியாத நிலையும்… தன் உடலில் கடும் நோயாக அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றார்கள்…? என்பதையும் ஒவ்வொரு வீட்டிலும் இரவிலே அதைப் பார்ப்பதற்காகச் சுற்றி வரும்படி செய்வார் குருநாதர்.

அவர்கள் வீட்டிற்கு நேராக சில இடத்தில் அமரும்படி செய்து அதைச் செயல்படுத்துவார். ஆனால் இதை உள்ளூரிலே செயல்படுத்துவதில்லை. ஏனென்றால் “என்னை யார்…?” என்று தெரிந்து கொள்வார்கள் அல்லவா…!

ஆகையினால் வெளியூர்லேதான் இதையெல்லாம் அமர்ந்து பார்க்கும்படி சுற்றிப் பார்க்கும்படி செய்வார். தெரியாத இடத்திலே “ஒரு பிச்சைக்காரன்…” போன்று அமர்ந்து அதைப் பார்க்கும்படி சொல்வார்.

இறந்த ஆன்மாக்கள் பழி தீர்க்கும் உணர்வுடன் அந்தக் குடும்பத்திற்குள் சென்றது. அந்த உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? அந்த உணர்வுகளை நுகரச் செய்வார்.

1.உடலுடன் இருக்கும் பொழுது “பாவிப்பயல்…!” இப்படியெல்லாம் என்னை மோசம் செய்கின்றான்…! என்று எண்ணிய உணர்வுகள்
2.“ஆக இப்படியா…!” என்று இவருக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே விளைந்து அது எப்படிக் கடும் நோயாக மாறுகின்றது…?
3.உறுப்புகள் சிதைந்து போகச் செய்து நல்ல உறுப்புகளை எப்படிப் பாழ்படுத்துகிறது
4.கை கால் அங்கங்கள் வராதபடி எப்படிச் செயல்படுத்துகின்றது…?

இதனின் உணர்வுகள் வளரும் பொழுது…
1.இனம் புரியாதபடி விபத்துகள் ஏற்படுவதும்
2.முந்திய வினைகள் அந்த உணர்வின் வளர்ச்சி பருவம் வரும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனையும்
3.இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படிச் செய்தார்.

ஏனென்றால்
1.உண்மையின் உணர்வின் இயக்கங்களைப் பற்றி நீ நேரடியாகத் தெரிந்து கொண்டால் தவிர மற்றதை நீ உணர முடியாது
2.காரணம்… உன்னுடைய உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் நீ செல்வாய்.
3.பிறிதொரு உணர்வின் இயக்கம் மனிதனை எப்படி மாற்றுகின்றது…? என்பதனை நீ அறியவில்லை என்றால்
4.உன்னால் உனக்குள் புகும் தீமைகளை நீ மாற்றி அமைக்க முடியாது.

ஆகவே மனித வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை மாற்றி அமைத்த அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெறக்கூடிய தகுதி நீ எப்படிப் பெற வேண்டும்…? என்று இப்படித்தான் எனக்கு உணர்த்திக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் பிறருடைய தீமைகளைக் கேட்டுணர்ந்து அவர்களுக்கு நாம் நன்மை செய்திருப்போம்.
1.ஆனால் அவர்கள் நாம் செய்த நன்மையைக்கூட மறந்து
2.நமக்கே தீமை செய்யக்கூடிய நிலைக்கு வருவார்கள்.

அப்பொழுது நாம்… “இவ்வளவு உதவிகள் செய்தேனே… என்னை இப்படித் துன்புறுத்துகின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்களே…” என்ற உணர்வுகளை எண்ணினால் அந்த உணர்வுகள் வளரப்படும் பொழுது அதைப் “பிடிவாதமாகப்…” பிடித்துக் கொள்வோம்.

அவன் செயலை நமக்குள் உருவாக்கினால் அவன் தீமையின் உணர்வே நமக்குள் வந்து “உடலுக்குள் தீமைகள் விளைந்து விடுகின்றது…” என்பதை நாம் மறந்திருக்கின்றோம்.

“அவன் தீமை செய்கின்றான்…” என்பதை உணர்கின்றோம்.

ஆனால், “இப்படிச் செய்கின்றானே…” என்று தொடர் வரிசையில் அதைச் செயல்படும் பொழுது அவன் உணர்வுகள் நமக்குள் வந்து… தீமையின் அணுக்களை நமக்குள் உருவாக்கி நம் உடலையே நசியச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கம் என்ன…?

வியாசக பகவான் காட்டிய நிலைகளில்
1.“அதோ வருகின்றான் நாரதன்…” என்ற நிலையில்
2.கண்ணன் கூறியடி கண்கள் கூறிய நிலைகள் கொண்டு
3.“நாம் உற்று நோக்கி…” வானை நோக்கி நினைவினைச் செலுத்துதல் வேண்டும்.

ரிஷியின் மகன் நாரதன்… “நாராயணனின் அபிமான புத்திரன்” அவன். அவனிடம் கேட்டால் “பிடிவாதமாக… நமக்குள் இயக்கும்” நிலைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை விளக்கிச் சொல்வான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று நம் உயிரை வேண்டி இந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வருவதைத்தான் நாரதனாகக் காட்டினார்கள்.

அவனோ “கலகப்பிரியன்…!” கலகமோ நன்மையில் முடியும்.
1.நாம் பிடிவாதமாகப் பிடித்திருக்கும் தீமையின் அணுக்களுக்குள் கலகமாகி
2.அதை நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றும் என்பதை வியாசக பகவான் தெளிவாக உணர்த்தி உள்ளார்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிட ஒளியின் சரீரமாக மாற “நம் உயிரே.. சொர்க்கவாசலாக” அமைகின்றது.

1.எதனைக் கூர்மையாக எண்ணி அனு தினமும் வளர்க்கின்றோமோ
2.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து “சொர்க்கலோகம்” அடைகின்றோம்.

இதையெல்லாம் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரங்கள்.

வாழ்க்கையில் பெறக் கூடாதது “மனிதனின் ஆசை…!”

 

ஒருவன் தீமை செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்… ஆகவே அவனை விடுவேனா பார்…?” என்று எண்ணினால் என்ன ஆகும்…?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

1.எந்த எண்ணத்தால் “அவனை அழித்திட வேண்டும்…” என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ
2.அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி வேதனைப்படுகின்றாரே…” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம்
1.அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்து விடுகிறது.
2.அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது
1.அவர்களைப் படமெடுத்து
2.அவர்களில் உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை
3.“எவ்வளவு நேரம் எண்ணுகின்றோமோ… எவ்வளவு நேரம் அறிகின்றோமோ…?”
4.அந்தக் கணக்குகள் கூடிவிடும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் பெறப்படாதது… பெறக் கூடாதது… “மனிதனின் ஆசை…!”

சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா…” என்று இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நந்தீஸ்வரன் என்றால் நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

1.நாம் சுவாசிக்கும் உணர்வின் கணக்குகள்… நம் உடலுக்குள் கூடும் பொழுது
2.அதில் எது அதிகமோ அடுத்த நிலை அடைவாய்…! என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே அந்த நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்…?

நம்மைப் போன்று இந்தப் பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றினார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி (அணுகி) நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ… அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

காலை 4 மணிக்கு இதை எடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெற வேண்டும் என்று
1.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவரின் துணை கொண்டு அதனை நாம் பெறுதல் வேண்டும்.

ஆகவே நாம் பெற வேண்டியது இதைத் தான்…!

Leave a Reply