ஆத்மாவிற்குக் கொடுக்க வேண்டிய உயர்ந்த பூச்சு

ஆத்மாவிற்குக் கொடுக்க வேண்டிய உயர்ந்த பூச்சு

 

நீர்ச் சத்து நிறைந்த பொருளை உஷ்ணப்படுத்தி வேக விடும் தருணத்தில் நீர் சத்து சுண்டி அப்பொருளும் வெந்து விடுகின்றது.

அதையே இன்னும் அதிக உஷ்ணமுடன் வேக விட.. வேக விட… உஷ்ணத்தினால் எரிசக்தியின் காந்தலுக்குகந்த கருகும் நிலை கொண்டு எந்தப் பாத்திரத்தில் வேக விடுகின்றோமோ கருகிய நிலையுடன் அதிலே ஒட்டி உலர்ந்த பக்குவம் பெற்று விடுகின்றது.

அதுவே நீர் சக்தி இல்லாத எண்ணை வித்தை ஓர் வாணலியில் எண்ணை விட்டு அதைக் காய்ச்சும் பொழுது
1.எவ்வளவு நேரம் அந்த எண்ணை காய்ந்தாலும்
2.மெழுகு போல் திடம் கொண்டு… பிசின் போன்ற நிலை பெறுகின்றது.
3.உலர்ந்த தன்மை பெறுவது இல்லை.

இதைப் போன்றுதான் நம் உடலில்… ஜீவ உணர்வு எண்ண பூமி சமைப்பின்…
1.நீர் சக்தியுடன் நாம் எடுக்கும் சுவாச அலையானது…
2.பூமி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றிய சரீர இயக்க வலுத் தன்மையாக
3.இந்தப் பூமி சமைக்கும் நிலைக்கொப்ப ஒன்றிய உடல் வாழ்க்கையாக நிலை அமைகின்றது.

ஆனால் வலுக் கூடிய வளர்ச்சி கொண்ட… இந்தப் பூமியின் வலுப் பெற்ற… பிற மண்டலத்தில் இருந்து அகிலத்தையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட ரிஷிக் கோடிகளான தேவாதி தேவர்களின் சக்தியை நாம் பெற வேண்டும்.

அத்தகைய வலுக் கொண்டோரிடம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும் சுவாச வலுவால்
1.சரீர இயக்க வலுத்தன்மையும்
2.எலும்புகளின் உறுதி ஊட்டச் சத்தும்
3.உண்ணும் உணவைக் காட்டிலும் சத்தாக
4.எலும்புகளின் வளர்ச்சி முற்றி ஆத்ம வலு நிலை கொள்கின்றது.

நீரின் சத்தை எடுத்துத்தான் வித்தாகின்றன எண்ணைச் சத்து தரும் வித்துக்கள். அதைப் போன்று நம் ஆத்மாவை “சரீர ஜீவ நீர் சத்தைக் கொண்டு”
1.எலும்புகளை எல்லாம் எண்ணை வித்தின் வளர்ப்பு நிலை போன்று வலுவாக்கி
2.அந்த வலுவின் தொடரைக் கொண்டு ஆத்ம இயக்கம் செயல் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீர் சத்தால் துருப்பிடிக்கும் இரும்பு உலோகத்தை எண்ணைச் சத்தை இட்டு அதைத் துருப்பிடிக்காமல் செய்கின்றோம் அல்லவா…!

அந்த இரும்பைப் பாதுகாக்கும் செயல் தன்மை போன்று நம் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்.

அதாவது…
1.ஜீவ இயக்க எண்ண உணர்வானது இந்தப் பூமி சமைப்பின் உணர்வு எண்ண
2.கர்ம காரிய வாழ்க்கையுடன் சிக்கித் துருப்பிடிக்கும் கரையும் நிலை போன்ற நிலைப்படுத்தாமல்
3.எண்ணை வித்தைப் போன்று
4.சத்து நிலை பூண்ட… சத்து குண வலுக் கொண்டோரின் வலுவைப் பூசி
5.ஆத்ம உடலைப் பாதுகாத்திடல் வேண்டும்.

Leave a Reply