யாம் சொன்னதைப் பதிவு செய்து… “அதை எண்ணி எடுப்பவர்களுக்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கும்…”

யாம் சொன்னதைப் பதிவு செய்து… “அதை எண்ணி எடுப்பவர்களுக்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கும்…”

 

புதிதாக வாங்கும் போது ஓரு பாத்திரம் அழகாக இருக்கின்றது. ஆனால் அதிலே அழுக்குகள் படிந்து விட்டால் இருண்டு விடுகின்றது. அப்போது அந்தப் பாத்திரத்தை பார்த்தால் எப்படி இருக்கும்…? நன்றாக இருக்காது.

பாத்திரத்தில் அழுக்குப் படும்போது அவ்வப்பொழுது அதைத் துடைத்துக் கொண்டு அல்லது தூய்மைப்படுத்திக் கொண்டு வந்தால் அது “பளிச்…” என்று இருக்கும்.

ஆனால்
1.அழுக்குகள் ஏறிய பின் தேய்த்துப் பார்த்தால் போகாது… களிம்பு ஏறி இருக்கும்
2.அதிகமான களிம்பு ஏறிவிட்டால் சொர சொரப்பு அதிகமாகிவிடும்
3.மீண்டும் அதைச் சுரண்டி அல்லது சாணை பிடித்துத் தான் சரி செய்ய முடியும்.

இது போன்றுதான் இயற்கையின் நிலைகளில் நாம் சுவாசிக்கும் உணர்வுகளில் நம்மை அறியாது ஆன்மாவில் அழுக்குகள் சேர்கிறது. அதைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் பாத்திரத்தில் களிம்பு ஏறியது போல் தீயவினைகளாக உடலில் சேர்ந்து அதனால் பல பல தொல்லைகள் வந்து சேர்கிறது.

ஆகவே ஆன்மாவை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்திலும் சரி… மற்ற கூட்டுத் தியானத்திலும் சரி… உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொண்டவர்கள் நீங்கள் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தை மறவாது பயன்படுத்துங்கள்.

தீமைகளைச் சந்திக்கும் போதெல்லாம் அல்லது நுகரும் பொழுதெல்லாம்… அல்லது எதிர்பாராது தீமைகள் வந்து மோதும் போதெல்லாம்… அதை மாற்றிக் கொண்டே வாருங்கள்.

1.எத்தனையோ வகைகளில் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றோம்.
3.அந்தச் சக்தி உங்களுக்குள் வந்து கொண்டு இருக்கின்றது… வலுவும் கூடுகிறது.
4.நினைத்தவர்களுக்குத் தான்…!

நினைக்காதவர்களுக்கு இல்லை… காரணம் உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் தானே உள்ளே போகும்.

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! வீட்டிலே டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த ஸ்டேஷனில் இருந்து ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் காற்றிலிருந்து அதை இழுத்து நாம் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

ஆனால் நீங்கள் உங்கள் எண்ணத்திற்குள் எத்தனை ஸ்டேஷனை வைத்திருக்கிறீர்கள்…?

சண்டை போட்டவன் ஏமாற்றியவன் கேலி செய்தவன் திட்டியவன் கொலை செய்ய வந்தவன் என்று இப்படி எல்லா ஸ்டேஷனும் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

இப்படிப்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் போது என்ன செய்கிறது…?

சிரமமான நேரத்தில் அவர்களை எண்ணும் பொழுது அந்த ஸ்டேஷனுக்குள் இணைந்த பின் அடுத்து நமக்குள் நல்ல சிந்தனைகள் வருவதில்லை.
1.என்னை இப்படி ஏமாற்றினார்களே… அவர்களை என்ன செய்யலாம்…?
2.என்னைஇப்படித் திட்டினார்களே… அவர்களைச் சும்மா விடுவதா… இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று
3.இத்தகைய உணர்வு தான் மனதில் ஓடிக்கொண்டிருக்குமே (டி.வி.யில் படம் ஓடுவது போல்) தவிர நல்ல உணர்வுகள் வருவதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் செயல்படுத்த வேண்டியது எது…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.வரக்கூடிய தீமைகளை மறக்க இதை நாம் எடுத்தால் அதனுடைய வலு குறைகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது
3.ஆகவே இந்த ஸ்டேஷனைத் தான் நாம் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply