தீமைகள் நமக்குள் புகும் வழியும்… அதைத் தடைப்படுத்தும் வழியும்…

தீமைகள் நமக்குள் புகும் வழியும்… அதைத் தடைப்படுத்தும் வழியும்…

 

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… சொல்வதைக் கேட்காமல் இருக்க முடியாது… அதை நுகராமல் இருக்க முடியாது… எல்லாம் தெரிந்த பின் உதவி செய்யாமலும் இருக்க முடியாது.

ஆனால் அப்படிக் கேட்டு உணர்ந்தாலும் இந்த உணர்வுகள் நம் உடலிலே இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

முதலிலே உணர்ந்தோம்… மேலும் அதிகமாகப் போகாதபடி தடுத்தல் வேண்டும். தடுக்க வேண்டும் என்றால் எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று நமது கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கரு விழி அங்கிருந்து வரும் சக்தியைக் கவர்கின்றது.
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் உடனே அந்த வீரிய சக்தியை உண்டாக்குகிறது.
3.கரு விழியுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்தப் பூமியில் படர்ந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து
4.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

டி.வி.க்கு எப்படி ஆண்டனா முக்கியமோ இதே மாதிரி நம் உடலுக்கு கண் ஆண்டனாவாக இருக்கிறது. அதிலே (கருமணிகளில்) ரெக்கார்ட் செய்தாலும் அதை ஆண்டெனா வழி அறியக்கூடிய சக்தியும் கிடைக்கிறது.

நமக்கு நமது கண் ஆண்டெனா. அதிலே எந்த உணர்வினை நினைவினைச் செலுத்துகின்றோமோ நம் உடல் உறுப்புகள் அனைத்திலும் வீரிய உணர்வைச் செலுத்தியபின் இந்தக் காற்றிலிருந்து இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

அதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை நாம் உள் முகமாக உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் அது வலுப்பெறத் தொடங்குகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணப்படும் பொழுது நமக்குள் தீமைகள் புகாது தடுக்கபப்டுகின்றது.

காரணம்… இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட முந்திய தீய வினைகளுக்கு இந்த மூக்கு வழிதான் அந்த உயிர் வழி தான் உணர்ச்சிகள் சென்று ஆகாரமாகப் போகிறது.

ஏற்கனவே எடுத்த உணர்வு அதிலே சென்ற இயக்க அணு அதை வளர்ப்பதற்கு உதவும். அதைப் போன்ற தீமைகளை உட்புகாது முதலிலே தடைப்படுத்த வேண்டும்.
1.அதாவது அந்த இயக்க அணுக்கள் நம் இரத்தத்திலே ஜீவ அணுவாகப் போவதற்கு முன்
2.அதைத் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும் (இது முக்கியம்).
3.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.உடலுக்குள் புகாது முகப்பிலே தடைப்படுத்துகின்றோம் (உயிர் வழி எடுக்கும் போது முக்கு வழி தடைப்படுத்தப்படுகிறது).

விஷத்தை அகற்றி… அந்த விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுவோம் என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி… என்றும் பிறவியில்லா நிலை என்ற… ஒளி உடலைப் பெற முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply