யுத்தங்களைப் பற்றிய செய்திகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றது…?

யுத்தங்களைப் பற்றிய செய்திகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றது…?

 

இன்று நடக்கக்கூடிய யுத்தங்கள் அனைத்தும் எனக்கா… உனக்கா…? என்று போர் முறை வருகின்றது. போர் முறை வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு நாடும் விஷமான குண்டுகளைக் கையில வைத்துள்ளது.
2.எந்த நிமிடமும் அது வெடிக்கலாம்…!

அதனால் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறி அதைச் சுவாசித்தவர் அனைவரது உடலுக்குள்ளும் அது அணுக்களாகும் பொழுது இன்று மனிதனாக இருக்கும் நாம் அடுத்து எங்கே போகின்றோம்…?

விஷத் தன்மை அதிகரித்தால் பாம்பினங்களாகத் தான் பிறக்க நேரும்.

மதத்தின் பால்… இனத்தின் பால்… தெய்வீக பண்பு என்ற நிலைகள் கொண்டு இருந்தாலும்
1.இந்த இடம் எங்களுக்குத்தான்… இது எங்கள் புண்ணிய பூமி…! என்ற உணர்வு கொண்டு
2.விஷத்தின் தன்மை உலகமெங்கும் பரவப்பட்டு தீமையின் விளைவுகள் உலகம் முழுவதும் இன்று பரவிக் கொண்டுள்ளது.

மற்ற நாடுகளை அடக்குவதற்காகப் பல அணு ஆயுதங்களைத் தயார் செய்து அத்தகைய விஷ குண்டுகளின் வீரியத்தைக் கண்டுணர்வதற்காக அடிக்கடி பரீட்சித்துப் பார்க்கின்றார்கள். அதன் மூலம் விஷ அலைகள் பூமியிலே பரவுகின்றது… பரவிக் கொண்டே உள்ளது.

யுத்தத்தைப் பற்றிய செய்திகளைப் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். டி.வி. வாயிலாகவும் நேரடியாகக் காணுகின்றோம். அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவான பின் அதே ஆவேச எண்ணங்களைத் தூண்டுகின்றது… அங்கிருந்து பரவும் உணர்வின் தன்மைகளை நேரடியாக நுகர நேருகின்றது.

1.அப்போது நம்மை அறியாதபடியே சிறுகச் சிறுக அந்த விஷத்தன்மை உடலுக்குள் செல்கிறது
2.நம் நல்ல குணங்களை அது மாற்றிக் கொண்டு இருக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

எத்தகைய விஷத்தன்மைகள் வருகிறதோ உடலுக்குள் பரவி விளைந்த பின் உயிரிலே அது இணைந்து விடுகிறது. உயிரான்மாவில் இணைந்த மணத்திற்கொப்பத் தான் உயிர் அடுத்த உடலை உருவாக்கும் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில் அகஸ்தியன் சென்ற பாதையினைக் கைப்பற்ற வேண்டும்.

1.அவன் தாய் கருவிலே எத்தகைய நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றானோ
2.அகண்ட அண்டத்தை எப்படி அறிந்தானோ
3.அறிந்த உணர்வைத் தனக்குள் பெற்றானோ
4.இருண்ட உலகை எப்படி அகற்றினானோ
5.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றானோ
6.முதல் மனிதன் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து வரும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கின்றது.

அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத் தான் இதைப் பதிவாக்குகிறேன் (ஞானகுரு). துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் எத்தகைய நஞ்சினையும் வெல்ல முடியும். உணர்வுகளை ஒளியாக மாற்றவும் முடியும்.

இன்றைய கடுமையான சூழ்நிலையிலிருந்து தப்ப முடியும்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply