ஒவ்வொரு உயிராத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் மெய் ஞானியாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு உயிராத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் மெய் ஞானியாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தின் மூலமாக உணர்வின் எண்ண அலையை இங்கே சுட்டிக் காட்டிய வழிமுறைப்படி எண்ணத்தில் ஓடக்கூடிய உணர்வுகளை மின்காந்த வீரியத் தன்மை உயிராத்மாவில் எடுக்கும் பொழுது சூரியனுடன் மற்றக் கோள்களின் சந்திப்பின் அமில ஈர்ப்பு மோதும் பொழுது சூரியன் அதை எடுத்துச் சமைத்துத் தன் ஒளியைக் கக்குவதைப் போன்று இவ்வாத்மாவில் உணர்வின் எண்ணத்தை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஒலியை மனித ஞானத்தில் வளர வளர மெய் ஞான உண்மைகளைச் சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் செயல் ஒன்றினால்தான் ஆத்மாவின் ஒளித் தன்மையை மெய் ஞானத்தின் ஒளியறியும் ஆத்மாவாக செயலாக்கும் நிலை பெற முடியும்.

வாழ்க்கையில் எண்ணத்தின் சிந்தனை குடும்பம் உடல் ஆரோக்கியம் தொழில் மற்ற எதுவாயினும் அதே தொடரில் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வளர்ந்த வாழ்க்கை ஓட்டத்தில்… இவ்வுடல் உள்ள வரை வாழ்ந்தாலும்
1.இஜ்ஜீவித உடலில் எண்ணத்தின் செயல் வேட்கைக்குத்தான் ஆத்மாவின் பிடிப்பு செயல்படும் இறுக்கத்தால்
2.ஆத்மா முன்னேறாத .நிலை ஆகி
3.எல்லா நிலைகளையும் அறியத்தக்க எண்ணம் கொண்ட மனிதனின் செயல்
4.மிருக நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடனே சிக்கிவிடும்.

யானை காட்டில் பிறப்பெடுத்து வாழ்ந்தாலும் அதனுடைய செயலுக்கொப்ப வாழ்ந்து மடியும் யானையும்… அதே யானையை அரசர்கள் பட்டத்து யானையாக உபயோகப்படுத்தும் பொழுது அரசனுக்கொப்ப அவ் யானைக்கு மரியாதையும்… வித்தகனிடம் சிக்கும் யானை வித்தகன் பழக்கப்படுத்தும் (சர்க்கஸ்) வித்தையை அறிந்து வித்தை காட்டும் யானையாகவும்… பல வேலைகளைச் செய்ய யானைகளைப் பழக்கப்படுத்தும் யானை எதைப் பழக்கப்படுத்தி செய்விக்கும் செயலறிந்து உழைப்பைத் தருகின்றதோ அந்நிலைக்கு யானையின் செயலை உபயோகப்படுத்திக் கொள்கின்றான் மனிதன் தன் செயலுக்காக.

இதைப் போன்று சில மிருகங்கள் மனிதன் பழக்கப்படுத்தக் கூடிய வளர்ப்பு நிலை கொண்டு செயல்படுகின்றதல்லவா…?

அதைப் போன்றே மனிதனும்…
1.இவ்வுடல் என்ற பிம்பத்தின் வாழ்க்கைக்காக மட்டும் தன் தேவை அனைத்தையும் செயல்படுத்தி வாழும் போது…
2.உடலுடன் மடியும் நிலை ஆகி முழுமை இல்லாது போகிறது.

ஆகவே ஆன்மாவின் மெய்யறிய வேண்டும் என்றால்
1.மனித உணர்வின் அலையை வாழ்க்கையின் ஈர்ப்பின் எண்ணத்தின் பதிவாய் மட்டும் வாழாமல்
2.உணர்வின் எண்ணத்தில் பகுத்தறிவு – வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று
3.எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்.

புதிய கண்டுபிடிப்புகளை அறியக் கூடிய விஞ்ஞானிகளையும் வான சாஸ்திரத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் அறிந்தவர்களையும் ஊன்றிப் பார்த்தால் அவர்களின் எண்ண சிந்தனை அமைதியான ஓட்டத்தில்தான் செயல்படுவதைக் காணலாம்.

எண்ணத்தின் சிந்தனையை ஓர் தொடரில் செலுத்தி “அமைதிப்படுத்தும் ஞானி…” மெய் ஞானியாகலாம். எண்ணத்தின் உணர்வை அமைதியாக்கும் தியானமே முதலில் செயலாக்கிடல் வேண்டும்.

மனித உணர்வில் இருக்கக்கூடிய ஒலியின் தொடர் மனித ஒலியின் எதிர்ப்பில் மோதும் பொழுது எடுக்கும் ஒலியின் மின் காந்தத்தின் வீரியத்தை ஞானத்தின் மெய்யறிய முதலில் பக்குவப்படுத்தல் வேண்டும்.

மெய் ஞானத்தின் ஒலி பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் சத்தியமே ஆத்மாவின் அழிவில்லா வளர்ச்சி ஒளி நிலை.

வாழ்க்கையில் எதிர் மோதல் யாவையுமே… உணர்வின் வீரியத்தின் விபரீதமாய் எண்ணத்தைக் காரமாக்கும் செயல்படுத்தும் ஒலியால்..
1.மனித உணர்விலிருந்து பெற்ற மெய்யொலி விரயமான விபரீதச் செயலே
2.மனித வாழ்க்கையிலும் ஞானியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்ததனால்தான்
3.இப்பூமியில் பல கோடி ஞானிகளும் தத்துவச் செயலுக்காகச் சக்தியை வளர்க்க முடியாமல்
4.விரக்தியையும் சலிப்பையும் வளர்த்து… இன்று இப்பூமியில் மனிதச் செயல் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.

மனித உணர்வில் எடுக்கக்கூடிய மெய் ஒலியை இங்கே கொடுக்கும் போதனை வழியில் உணர்வை ஒட்டி இதன் தொடர்பலையின் உண்மைத் தத்துவத்தை… ஆத்ம ஞானமாய்… ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும் வழியறிந்து… வழி தந்த முறைப்படி ஒவ்வொருவருமே இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிலிருந்து இப்பூமிக்கோளின் முதிர்வின் ஒலியாய்… பல கோடி தேவரிஷிகளின் ஒளி சக்தியுடன் ஒளிரும் ஒளி ஆத்மாவாகும்… மெய் ஒளி மெய் ஞானியாய் வளர முடியும்.

வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களின் உண்மையை தியானத்தின் சூட்சுமத்தில் முன் கூட்டி அறியக்கூடிய பக்குவங்களை இச்சரீர பிம்பச் சொந்த பந்தச் செயல்பாட்டுக்கு விரயமாக்காதீர்கள்.

பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் நிலைக்கும்… உணர்வுடன் உடல் சொந்தம்… மற்றச் சொந்தங்களுக்கும் செயலாக்கும் முறையையும்… சூட்சுமத்தில் நம் அகத்தில் அறிந்து மகிழும் ஆத்மாவின் சொத்தாய்ப் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை… ஒவ்வொருவரும் உண்மைத் தன்மையில் பயன்படுத்துங்கள்.

1.வெறும் புகழுக்காகவும் பாசத்திற்காகவும் சக்தியை விரயப்படுத்தாமல் “ஆத்மாவின் சொத்தாக”
2.மெய் ஞானத்தின் ஒளியைக் குற்றம் குறைகளைக் குணத்தில் நீக்கி
3.உயர்ந்த மெய் ஞானியின் ஒளியை அகத்தில் ஏற்று
4.ஞானத்தின் ஒளியை மெய் ஞானத்தின் தத்துவத்தின் மூச்சின் மூச்சாய்
5.மூவுலகின் சக்தியையும் உடல் கோளத்தில் ஆக்கப்பெறும் ஆத்மாவின் ஒளிக் கோளத்தை
6.ரிஷிகளுக்குச் சொந்தமாக்கும் செயலாகப் பொதுத் தன்மைக்கு
7.ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் புனித ஆத்ம ஒளியை மெய் ஞானியாய் ஆக்குங்கள்.

மெய ஞானமாய்த் தரும் சகல ரிஷிகளின் சக்தி ஒளியாய் ஒளி பெறுவீர்.

Leave a Reply