எம்முடைய (ஞானகுரு) நோக்கம் என்ன…?

எம்முடைய (ஞானகுரு) நோக்கம் என்ன…?

 

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் சிலருக்கு வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் முன்ன்னாடி உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு அல்லது பல முறை உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு
1.அந்த உபதேசத்தின் வாயிலாக உடலிலே உருவான அணுக்களுக்கு
2.இப்பொழுது கொடுக்கும் உபதேச உணர்வுகள் மூலம் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உணவாகக் கிடைக்கும்.

பல முறைகளில் பல கோணங்களில் அந்த உணர்வின் சத்தை உங்கள் உடலில் விளைந்த அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுப்பதற்குத் தான் இந்த உபதேசங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் புதிதாகக் கேட்பவர்களுக்கு அருள் ஞான வித்தாக உருவாக்கப்படுகின்றது. வித்தாக ஊன்றிய பின்
1.இதை நீங்கள் மீண்டும் தொடர்ந்து எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அது கருவாகி உருவாகி அந்த அருள் ஞானத்தைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

சிலர் எண்ணலாம்… ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே என்று. உங்களுக்கு அர்த்தமாகாது…!
1.ஆனால் பேசிய உணர்வு பின்னர் கருவாகும்… பின் அது உருவாகும்.
2.பின் அதனின் உணர்வுகள் உங்களுக்குள் தெளிவாகும்

அதனால் தான்
கருவாய்…
உருவாய்…
வருவாய்…
முருகா…
குருவாய்…! என்று
1.எதனை நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை கருவாகி உருவாகி உங்களுக்குள் குருவாக வரும்.
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் அது தெளிவாக உருவாக்கும் என்பது அது தான்.

நாடாக்களில் படமோ பாடலோ பதிவு செய்துவிட்டால் திருப்பி அதைப் போட்டுப் பார்க்கும் பொழுது மீண்டும் அந்தப் பாடலைக் கேட்க முடிகின்றது.
1..இதைப் போல் தான் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிவிடும்
2.உடலில் அணுவாகவும் உருவாகிவிடும்.

அந்த அணுக்களுக்குச் சிறிது காலம் உணவைக் கொடுத்தால் அது மீண்டும் வளர்ச்சியாகித் “தன்னிச்சையாக…” அதனின் உணவை எடுத்துக் கொள்ள அந்த வளர்ச்சிகள் பெறும்.

முந்திய நிலையில் உபதேசங்களைக் கேட்டவர்களுக்கு… உடலில் விளைந்த அணுக்களுக்கு உயர்ந்த ஞான உணவாக இப்பொழுது கொடுக்கப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி பெற இது உதவும்.

அதே சமயத்தில் புதிதாகக் கேட்பவர்களுக்கு ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்கப்படுகிறது. ஊன்றிய வித்து உருவாகிக் கருவாக வேண்டுமென்றால்
1.உங்கள் நினைவினைக் கூட்டினால் அது உருவாகும்
2.அந்த உணர்வின் தன்மை அது உருவாகும் பொழுது குருவாகும்
3.நல்வழியையும் காட்டும்…. அதே உணர்வை உணவாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்.
4.இந்த உணர்வை ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுது அருள் ஞானம் தன்னிச்சையாக வளரும்.

அதனால் தான் சாமி சொல்வது எனக்குப் புரியவில்லையே என்று எண்ண வேண்டாம் என்று திரும்பத் திரும்பச் சொல்வது.

குருநாதர் எனக்குள் எப்படி ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கச் செய்து… இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தாரோ… உங்களிடம் அதைப் பெறச் செய்து… உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடும் நிலைக்கே இது உருவாக்கப்படுகின்றது.

அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் வலுப்பெற… உணவாகக் கிடைக்கச் செய்வதற்கே தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

பொதுவாக உபதேசம் சொல்லும் போது
1.முதலிலே மெதுவாக சொல்ல முற்பட்டேன்
2.இரண்டாவது சிறிது வேகமாகச் சொன்னேன்
3.மூன்றாவது அதை காட்டிலும் வேகமாகச் சொல்லும் நிலை வந்தது.
4.(எம்முடைய உபதேச ஒலிகளைக் கேட்டவர்களுக்கு இது தெரியும்)

காரணம்… இந்த உணர்வின் ஈர்ப்புகள் உங்களுக்குள் பதிய வேண்டும் என்பதற்குத் தான்.

அந்த உணர்வின் ஆற்றல் ஆழமாகப் பதிந்தால்…
1.அப்போதுதான் சாமி என்ன சொன்னார்…? என்று ஏக்கமாக இருப்பீர்கள்.
2.அப்போது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.
3
பின் அதனுடைய நிலைகள் உருவாக இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும். – இது புதிதாக வந்தவர்களுக்கு.

ஏற்கனவே கேட்டவர்களுக்கு அந்த அருள் உணர்வின் சக்தி உணவாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
1.அருள் ஞானம் பெருகிக் கொண்டே இருக்கும்
2.மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறும் வலிமையும் பெருகிக் கொண்டே வரும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply