அழுக்குச் சட்டையை மாற்றித் தூய்மையான ஆடை அணிவது போல் அருள் ஞானியின் உணர்வை நம் ஆன்மாவாக்க வேண்டும்

அழுக்குச் சட்டையை மாற்றித் தூய்மையான ஆடை அணிவது போல் அருள் ஞானியின் உணர்வை நம் ஆன்மாவாக்க வேண்டும்

 

உதாரணமாக நம் மீது தெரிந்தோ தெரியாமலோ சாக்கடையைப் பூசிக்கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்தால் யாராக இருந்தாலும் விலகித் தான் சென்று கொண்டிருப்பார்கள.

அதைப் போல் சங்கடத்தையும் வெறுப்பையும் எடுத்து அடுத்தவரிடம் அதே எண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தால் நம் மீது அவர்களுக்கு “வெறுப்பு” தான் வரும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் புத்தாடையாக அணியும் பழக்கத்திற்கு வரவேண்டும்…
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்ற வேண்டும் அது தான் தீப வழி (தீபாவளி).

ஒருவர் மட்டும் செய்வதல்ல. எல்லோரும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பழக்கம் வரவேண்டும்.

அதிகாலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணி எடுக்க வேண்டும்.

அடுத்து வெளியில் எங்கே சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்… நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அவசியம் எண்ண வேண்டும்.

வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்… எங்கள் வியாபாரம் செழிக்க வேண்டும் என்று இப்படி எண்ணி நாம் செயல்பட வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் அழுக்குத் துணியை மாற்றி விட்டு நல்ல உடையை மாற்றுக் கொள்கிறோம் அல்லவா. அது போல் நம் ஆன்மாவில் படும் அழுக்கைத் துடைக்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

உதாரணமாக மான் இருக்கின்றது. புலியைப் பார்த்தபின் தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை நுகர்ந்தபின் உடலை விட்டுச் சென்ற பின் அடுத்துப் புலியாகப் பிறக்கின்றது.

மான் என்ற அந்தச் சட்டையைக் கழட்டிவிட்டு புலியின் உணர்வை ஆடையாக மாற்றுகிறது… புலியாக மாறுகிறது.

அது போல் ஒவ்வொரு நிமிடமும்…
1.நமக்குள் அந்த அருள் சக்தியைப் பெருக்கினால் இருளை நீக்கும் அணுக்கள் உடலிலே விளைகின்றது.
2.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்த்தால் அதை நுகர்ந்தால் நம் உணர்வுகள் அழுக்காகி விடுகின்றது. சாக்கடை நம் ஆடையில் பட்டு விட்டால் உடனே அந்தச் சட்டையை கழட்டி விடுகின்றோம் அல்லவா.

அழுக்கான அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் போடுவோமா…?

அதைப் போன்று தான் பிறிதொருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அடுத்த கணம்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்துத் தூய்மைபபடுத்தி
2.சட்டையை மாற்றுவது போன்று உடனே அந்த அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி மாற்றினாலும் கூட மீண்டும் அழுக்கு சேரத்தான் செய்யும்.
1.தினமும் எப்படி அழுக்குச் சட்டையை கழட்டிவிட்டுத் தூய்மையான ஆடையாக மாற்றிக் கொண்டிருக்கின்றோமோ
2.அதே போன்று நம் வாழ்க்கையில எத்தகைய தீமை வந்தாலும்
3.உடனுக்குடன் நாம் மாற்றிக் கொண்டே இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவது தான் தீபாவளி வேதனைப்படுகிறேன் என்று தெரிகின்றது

உதாரணமாக வேதனைப்படுகிறார்கள் என்றும் தெரிகின்றது வேதனைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிகிறது.
1.வேதனைப்படுபவர்கள் வேதனைப்படுத்துபவர்கள் இரண்டு பேர் உணர்வையும் நாம் நுகர்கின்றோம்
2.வேதனைப்படுபவர் மீது நான் பிரியமாக இருந்தால் இப்படிச் செய்கிறான் பார்… என்று அவரின் வேதனையை நுகர்கின்றோம்
3.வேதனைப்படுத்துவோரைப் பார்த்தபின் உலகத்திற்கே தீங்கு விளைவிக்கின்றான் என்று
4.இந்த இரண்டையுமே நமக்குள் வளர்க்கின்றோம்.

இரண்டையும் நுகர்ந்து நம் எண்ணத்துடன் சேர்த்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது இது ஒரு பகுதியில் வளரும் அது ஒரு பகுதியில் வளரும்.

அவர்களுக்குள் அங்கே எப்படிப் பகைமையானதோ அதே போன்று பகைமை ஊட்டும் அணுக்களே நம் உடலில் விளையும். எதிரிகளைப் போன்று உடலுக்குள் அந்த இரண்டும் சண்டை போட ஆரம்பிக்கும்.

1.வீட்டிற்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா…? சமையல் செய்ய முடியுமா…?
2.வேறு எந்த வேலையையும் சீராகச் செய்ய முடியுமா…?
3.அந்த மாதிரி நம் உடலுக்குள் சண்டை நடக்கும்.

இப்படி எல்லாம் ஆனால் நமக்குள் வேதனையும் நோயும் வருகின்றது என்று தெரிகிறது. இத்தகைய இருளை எல்லாம் நீக்கியது அந்தத் துருவ நட்சத்திரம். அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply