ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்யக் காரணம் என்ன…?

ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்யக் காரணம் என்ன…?

 

ஆடி மாதக் காலங்களில் காற்று அதிகமாக அடிக்கிறது. காரணம்…
1.வறட்சியாக இருக்கும் பொழுது மனிதர்கள் நாம் நீரைத் தேடி அலைவது போல
2.முதலில் வெப்பத்தால் ஆன அணுக்கள் மேகம் ஆகும் பொழுது
3.சனிக்கோள் உமிழ்த்திய நிலைகள் வந்தவுடனே பெரும் ஆவி மண்டலமாக மாறும்.

நாம் அடுப்பில் பொருளை வைத்து வேக வைத்தால் எப்படி ஒவ்வொரு அணுக்களிலும் பட்டுப் புயல் போல (கொதிப்பாகி) மாறுகிறதோ அது போல் தான் பூமியில் காற்றலைகள் அதிகமாக வரும்…!

அதைத் தான் ஆடிப்பெருக்கு…! என்று சொல்வது.

ஒவ்வொன்றும் அசைந்து ஒவ்வொன்றுடன் இசைந்து இதனின் நிலைகள் மேகமாக மாறி ஆடி மாதம் மேகங்களாகக் கூடி மழை பெய்யும் நிலையாக வருகிறது.

அதாவது வெயில் காலம் முடிந்து மழைக்காக வேண்டி காய்ந்து கருவாடான நிலையில் அந்த வெப்பத்தின் தன்மை பூமிக்குள் அதிகமாகி அதில் இருக்கும் நீர் எல்லாம் ஆவியாக மாறி விண்ணைச் சென்றடைகின்றது.

மேலே மேகங்களாகச் சென்றடையப் படும்போது இன்றைய விஞ்ஞான உலகில் வெளிப்படுத்தும்
1.லேசர் ஒளிக் கற்றைகளும்
2.ரேடியோ அலைகளும் டிவி அலைகளும்
3.எலக்ட்ரானிக் அலைகளும் அதிக அளவில் பரவி அந்த அலைகளும் அதனுடன் கலக்கின்றது.
4.கலந்தபின் எதிர்நிலையாகி நஞ்சின் தன்மை அடைந்து மேகங்கள் நீராக வடியும் தன்மை குறைகின்றது.

ஆனால் அதே சமயத்தில் விஞ்ஞானத்தின் வீரிய அலைகள் கலந்தவுடனே நீர் மேகங்கள் அனைத்தும் ஒரு பக்கம் அஞ்சி ஒதுங்குகிறது.

இப்படி மற்ற பக்கம் ஒதுங்கினாலும்
1.இந்த நிலைகள் ஒன்றுக்கொன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று உராய்ந்து
2.அங்கே மழை கொட்டு கொட்டென்று கொட்டி கடும் சேதத்தை விளைவித்து
3.யாருக்கும் பயனற்றதாகப் பெய்து நாட்டைக் கெடுக்கின்றது.

பெரும்பகுதி இன்று உலகெங்கிலும் இதைப் பார்க்கலாம். மழை பெய்து ஒரு பக்கம் கெடும். இன்னொரு பக்கம் இந்த உணர்வலைகள் பட்டு மழையே சுத்தமாக இல்லாது கடும் வறட்சியாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான அறிவு பல வகையிலும் வளர்ச்சிக்கு வந்தாலும் அதனால் இத்தகைய கடுமையான விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

இது மட்டுமல்ல…! இன்று வாழும் மனிதர்களும் தன் வேக நிலைகள் கொண்டு வேலைக்கோ மற்ற அலுவல் காரணமாக வெளியிலே செல்கிறனர். வெண்மையான ஆடைகளையும் உடுத்திச் செல்கிறனர்.

அப்போது இரண்டு மழைத்துளி விழுந்து விட்டால் போதும்…
1.சனியன்… தொலைந்துபோன மழை இந்த நேரத்துக்கிறாக வரவேண்டும் என்று திட்டத் தொடங்குகின்றனர்.
2.தொலைந்து போகும் மழை என்ற உணர்வைத் தான் நமக்குள் படைத்து அதையே வெளிப்படுத்துகின்றோம்.

பூமியில் உருப்பெற்ற உருக்களிலே மனிதனின் எண்ணம் மிகவும் ஆற்றல் கொண்டது.

1.மழையைத் திட்டிய உணர்வுகள் விஷ வித்துக்களாக மாறி
2.இந்த உணர்வுகள் சிறுகச் சிறுகக் கூடி மழையைப் பொய்த்துப் போகும்படி செய்கிறது.

அல்லது அனைவருக்கும் பலனில்லாது கொட்டு கொட்டு என்று ஊரையே நாசமாக்கும் தன்மையாகப் பெய்கிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடிக்க வேண்டும். நம் பேச்சால் மூச்சால் பார்வையால் உலகைக் காக்கும் சக்தியாக நாம் வளர வேண்டும்.

Leave a Reply