தவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…?

தவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…?

 

உதாரணமாக ரோட்டில் செல்லும் போது விபத்துக்களைப் பார்க்க நேர்கிறது. அடிபட்டவர்கள் அவர்கள் வெளிப்படுத்தும் வேதனை உணர்வுகள் பூமியில் படர்கிறது.

நம் கண் பார்த்து அந்த விபத்தான உணர்வுகளை… அந்த உடலைப் பதிவாக்கிய பின் அந்த உணர்வுகள் அலைகளாக வெளி வருகிறது.
1.அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் அது விளைந்து
2.அந்த உடல் சிதைந்திருந்தால் அதே உடலிலிருந்து உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் உடலையும் சிதையச் செய்துவிடும்.

இல்லை என்றால் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாகி அவர்களைப் போல் நம்மையும் விபத்துக்குள்ளாக்கும் செயல்களை உண்டாக்கிவிடும்.

ஒரு பேருந்திலேயே பிரயாணம் செய்கிறோம் என்றாலும்… ஒரு விபத்தைக் கண் கொண்டு பார்த்த உணர்வின் எண்ணம் நமக்குள் பயத்தை ஏற்படுத்தி நாம் செல்லும் வண்டியின் ஓட்டுநரை அந்த உணர்வுடன் பார்த்தால் போதும்.

இந்த உணர்வுகள் அவரை இயக்கச் செய்து அவரின் சிந்தனைகள் குறைக்கப்பட்டு தன்னை அறியாமலே எதிரில் வரும் வாகனத்தைக் கண்டு மாற்றி அமைத்தால்… ஒரு மனிதனோ மாடோ குறுக்கே வந்தால் வண்டியை ஓரமாக ஒதுக்கினால்… அருகில் உள்ள மரத்தில் மோதி நாம் உட்கார்ந்திருக்கும் அந்தத் திக்கிலேயே உராயும் தன்மை வரும்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்புகள்.

விமானத்தில் அல்லது இராக்கெட்டுகளில் ஒரு ரிமோட் என்ற உணர்வின் தன்மையை வைத்து விஞ்ஞான அறிவு கொண்டு எப்படி இயக்குகின்றனரோ… இங்கிருந்து ஆணையிடும் அந்த ரிமோட் அதிலே எதைப் பதிவு செய்திருக்கின்றனரோ… அதே உணர்வின் அழுத்தத்தை இங்கே இயக்கும் போது அந்த விமானங்களையும் இராக்கெட்டுகளையும் திசை மாற்றுகின்றனர்.

இதே போல் தான் மனிதனுக்குள் விளைந்த (முதலிலே சொன்ன) உணர்வுகள் இதைப் போன்ற எண்ணங்கள் கொண்டு
1.தன்னுடைய எண்ணமே அது ரிமோட் ஆகி
2.யாரைப் பார்க்கின்றோமோ அந்த ஓட்டுநரையே திசை திருப்பச் செய்து விடுகிறது.

இதே போல் தான் நம்முடைய நண்பர்கள் என்று எண்ணும் போது… நட்பின் தன்மை கொண்டு “உதவி செய்தார்…” என்று மற்றொரு நண்பரிடம் புகழ் பாடும் போது அந்த உணர்வுகள் அங்கே விக்கலாகி அவருடைய குடும்பங்களோ தொழிலோ நலமாகின்றது.

ஆனால் பகைமை உணர்வு கொண்டு “எனக்குத் துரோகம் செய்தான் பாவி…” என்று எண்ணி விட்டால்… ஒரு காரையே அந்தச் சமயம் ஓட்டிக் கொண்டிருந்தால் அல்லது வியாபாரம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தால் அல்லது அதனின் பலன்களை எண்ணிப் பார்க்கும் பொழுது அந்த நேரத்தில் பார்த்தால் புரையோடும்.

புரை என்றால்… எனக்குத் துரோகம் செய்தவன் எங்கே சென்றாலும் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வுகளைச் சொல்லும் போது அவர் உடலில் பதிந்தது ரிமோட் செய்து அந்த வியாபாரத்தையே தடை செய்துவிடும்.

அதே சமயத்தில் தான் ரோட்டில் செல்லும் போது தான் இதைப் போல் புரையோடினால் சிந்தனை குறையப்பட்டு வாகனங்களை அது திசை திருப்ப அது ஒரு நொடி கவனம் மாறினாலும் மரத்திலோ அல்லது எதிரில் செல்லும் ஒரு மனிதன் மீது மோதி விபத்துக்குள்ளாக்கும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் பதிவு செய்த உணர்வுகள் நம்மை இப்படியெல்லாம் ரிமோட் செய்து கொண்டிருக்கும்.
1.இது இயற்கையின் நிலைகள் (தவறில்லாது இயக்குகிறது)
2,இதை விதி என்றும் சொல்லலாம்.

ஏனெனன்றால் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மை வலு கொண்டது.

உதாரணமாக தாய் கருவிலே விளையப்படும் போது கருவின் சிசுவிலே இதைப் போன்ற உணர்வு பதிவானால் எந்த வயதில் அவர்கள் விபத்துக்குள்ளானார்களோ அதே உணர்வு பதிவாக்கப்படும் பொழுது அதே உணர்வுகள் அந்த உணர்வு வரப்படும் பொழுது அந்தக் கால நிலையில் இப்படி ரிமோட் செய்துவிடும்… விபத்தாகிவிடும்.

நாம் தவறு செய்யாமலே…
1.தாய் கருவில் இருக்கப்படும் பொழுதே இத்தகைய பதிவுகள் ஆகி விட்டால்
2.நம்மை அறியாமலே இது இயக்கி… விபத்துக்களும் பல தீமைகளும் உருவாகும் சந்தர்ப்பமாகிவிடுகிறது.

உயிரின் இயக்கம் எலெக்ட்ரிக் என்றாலும் நுகர்ந்ததை எலெக்ட்ரானிக்காக அந்த உணர்ச்சியாக இயக்கிவிடுகிறது. எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கி விடுகிறது.

அதனின் விளைவுகளாகத் தான் இயக்கமாகிறது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தீமையின் விளைவுகளிலிருந்து தப்ப அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அவ்வப் பொழுது (விபத்தாகும் போதும் எதிர்பாராத இயக்கங்கள் நடை பெறும் போதும்) ஆத்ம சுத்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply