குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொன்னதன் உட்பொருள்

lightning

குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொன்னதன் உட்பொருள்

ஒரு சமயம் குருநாதர் என்னை (ஞானகுரு) “மின்னலைப் பார்…!” என்றார்.

மின்னலைப் பார்த்தால்… “என் கண்கள் குருடாகிவிடும் சாமி…!” என்று சொன்னேன்.

நான் சொல்கின்றேன்… நீ மின்னலைப் பார்…! என்று மீண்டும் குருநாதர் சொன்ன பின் மின்னலைப் பார்த்தேன்.

ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அணுக் கதிரின் புலன் இயக்கங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து எதிர்மறையாக மோதப்படும்போது
1.அது எப்படி மின்னல்களாக உருப் பெறுகின்றது…?
2.மற்றதை எப்படி மாய்க்கின்றது…?
3.மற்றொன்றோடு எப்படி இணைகின்றது…?
4.அணுக்களோடு எப்படி இணைகின்றது…?
5.இணைந்த பின் அந்த இசைந்த ஓசைகள் எவ்வாறு மாறுபடுகின்றது…? என்று
6.இதை எல்லாம் தெளிவாக்குவதற்குத் தான் மின்னலைக் காட்டுகின்றார் குருநாதர்.

உயிரே கடவுள் என்ற புத்தகத்தில் மின்னலைக் கண்ட அனுபவத்தை முதலில் எழுதியுள்ளேன். ஆனால் அன்று விளக்கவுரையை முழுவதும் கொடுக்கவில்லை. இன்று அந்த விளக்கவுரைக் கொடுக்கின்றேன்.

உண்மையின் நிலைகளை ஒரு முறை காட்டும் சில விதிமுறைகளைத் தான் அதிலே அங்கே வெளிப்படுத்தியது. ஏனென்றால் அதை ஒவ்வொரு தருணத்திற்குத் தக்கவாறுதான் வெளிப்படுத்த முடியும்.

1.ஒரு உணர்வில் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.உணர்வின் இயக்க இசைகள் மாறுவதும்
3.மணங்கள் மாறுவதும்
4.உணர்ச்சிகள் தூண்டுவதும்
5.உணர்ச்சிகள் ஒதுங்குவதும் என்ற நிலைகள் எல்லாம்
6.வேதங்களில் உள்ள உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுளது.

எதை எதனுடன் சேர்த்து… எதனின் உணர்வு கொண்டு அது உருப்பெறுகின்றதோ… அதை ரிக் என்றும் அதனின்று வெளிப்படும் உணர்வின் சத்தை சாம என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

உதாரணமாக ஒரு பூனை தன் கடுமையான உணர்வின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி தனக்குள் இரையாக்கிய உணர்வின் இசையாக அதிலிருந்து வெளி வருகின்றது.

அதே சமயத்தில் அந்தப் பூனையை உற்றுப் பார்க்கும் ஒரு எலியோ…
1.நுண்ணிய அலைகள் கொண்டு தன் செவிகளை ஒவ்வொரு திசையிலும் திருப்புகின்றது.
2.அந்தத் திசை திருப்பும் நிலைகள் வரும்போதுதான்
3.தன் செவிகளைக் கொண்டு இசைகள் ஒலிப்பதை நுகர்கின்றது.

அப்பொழுது சுருதிகள் (பூனையின் ஒலி ஓசைகள்) அதிகமாகும் போது எலிக்குள் இருக்கும் அதனின் உணர்வின் தன்மையை அது அடக்குகின்றது.

இந்த ஓசையின் உணர்வுகள் எலி உடலை உருவாக்கிய அணுக்களில் இணைந்தபின் அது ஒடுங்கி விடுகின்றது. இப்படி அது அடக்கும் நிலைகள் பெறுவதைத்தான் “அதர்வண” என்று பிருகு அன்று இதைச் சொல்லுகின்றார்.

ஏனென்றால் நட்சத்திர இனங்கள்…. ஒளி அலைகளை ஒளி பரப்பும் அந்த உணர்வின் அணுக்கள்… மற்றொன்றோடு சேர்த்து அதனை இணைத்து… இணையும் உணர்வாக மாற்றும் உணர்வு கொண்டது.

இப்போது லேசாக உங்களிடம் பதிய வைத்து விடுகின்றேன். இதனின் உணர்வின் நிலைகளை நீங்கள்
1.உங்களுக்குள் ஞானத்தால் பெருக்கிக் கொள்ளவும்
2.தீமைகளை அடக்கிடவும் அந்த மெய் ஞானியின் உணர்வை நீங்கள் பெறவும் இது உதவும்.

மனிதனாகப் பிறந்த நாம் நமக்குள் ஏற்படும் தீமைகளை அடக்கி… உணர்வினை அறிவின் ஒளியாக மாற்றி… ஒளியுடன் ஒன்றி “ஒளியின் சரீரமாக…” நிலை கொள்ள இது உதவும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply