உயர்ந்த சக்தி பெற்ற மகரிஷிகள் மனிதரைத் தேடி வருவதன் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

cosmic relativity

உயர்ந்த சக்தி பெற்ற மகரிஷிகள் மனிதரைத் தேடி வருவதன் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி: பிரகாசமாக சூரிய வட்டம் தெரிந்து பல ரிஷிகளின் உருவமும் அவர்களின் செயல் முறையும் தெரிகின்றது. உருவம் தெரிந்து அவ்வுருவம் அப்படியே பிரிந்து… ஒளியாக ஒரு உருவம் பிரிந்த பிறகு… மீண்டும் பல உருவங்களாகவும் தெரிகின்றது.

பல கோடி ரிஷிகள் உள்ள பொழுது இப்பூமியில் இன்று தன்னைத் தானே உணர முடியாமல் வாழ்கின்ற மனிதனின் மேல்
1.அவர்கள் வளரத் தன் சக்தியை ஏன் உபயோகித்துச் செயல்பட வேண்டும்…?
2.சிருஷ்டியின் தன்மையையே சிருஷ்டிக்கும் ரிஷிகள்
3.மனிதனின் உணர்வுடன் ஒட்டிச் செயல்படும் நிலைகள் எதற்கு…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனும் பூமியும் ஒன்றின் ஈர்ப்புத் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் தொடர்ந்து ஓடிக் கொண்டே செயல்படுகின்றது. ஈர்ப்பின் பிடிப்பில் இருந்து எந்த மண்டலமும் தனித்த ஒன்றாகச் சுழன்று செயல்பட முடியாது.

1.ஒன்றின் தொடர்பு பெற்று…
2.ஒன்று ஓடும் ஜீவ வளர்ச்சி ஏற்படும் தொடரில் தான்
3.எல்லா மண்டலங்களின் சுழற்சியும் உள்ளது.

இச்சுழற்சியின் மையக் கருவாக ஈர்க்கப்படும் சக்தியின் தொடர் வளர்ச்சியுற்றுக் கொண்டே… அத்தொடரின் வலுக்கொண்டு வளரும் தொடரில் தான்… மண்டலங்களும் அதில் வளரும் தொடரும் செயல் கொள்கின்றது.

அதைப் போன்று தான் சகல சித்து நிலையின் படைப்பின் படைப்பையே படைக்கவல்ல “ரிஷிகளின் தொடர்பிற்கு…” உணர்வின் எண்ணம் கொண்ட ஜீவ காந்த ஒலி சரீரத் தொடர்பின் எண்ணம் கொண்டுதான் அந்த ரிஷி சக்திகளின் மூலக்கருவே செயல் கொள்கின்றது.

1.தன்னுடைய வலுவின் தொடர் வலுவில் வளர்ப்பை வளர்க்கவல்ல நிலைக்கு…
2.ஜீவ காந்த உணர்வு எண்ண செயல் சக்தியைக் கொண்டு…
3.ரிஷிகளின் தொடர்புடன் மனித எண்ணத்தின் தொடர்பு சுழற்சி வலுப் பெறப் பெற…
4.ரிஷிகளைக் காட்டிலும் மனித உணர்வால் ஜீவ செயலில் உபதேசிக்கும் உண்மை உயர் ஞானத் தத்துவ ஈர்ப்பினால்…
5.மனித உணர்வின் அன்பைப் பெற்றானானால்…
6.மனிதச் சரீரத்தில் இருந்தே பலரின் அன்பான அலையின் வலுவைக் கொண்டு…
7.இச்சரீர ஆத்மாவிற்கு உயர்ந்த முலாமை வளர்த்துக் கொண்டு…
8.இச்சரீரத்தில் இருந்தே அஷ்டமாசித்தின் ஒளி சக்தி பெற்று உயர்வு நிலை பெற…
9.இச்சரீரத்தின் எண்ணத்தின் உயர்வில் வலு நிலை கூடுகின்றது.

Leave a Reply