நமது எல்லை எது…?

eternal-light-destinations 1

நமது எல்லை எது…?

 

மதத்தின் அடிப்படையில் காட்டப்பட்ட சாஸ்திரங்களையும் கோட்பாடுகளையும் அதிலே வடித்துக் கொண்ட வேதங்களையும் மீண்டும் மீண்டும்… படித்துப் படித்துப் படித்து… அதனை உருவாக்கிவிட்டால் அந்த மதத்தின் பிடிப்பிலிருந்து எவரும் விலகுவதில்லை.

மதத்தின் பிடிப்பிலே போகும்போது அதிலே நஞ்சின் தன்மை வரப்படும்போதுதான் அந்த மதத்தை விட்டு விட்டு அடுத்த மதத்திற்குத் தாவி… “எனக்கு இந்தக் கடவுள் செய்வாரா…?” என்ற நிலைகளில் பிரிந்து செல்லும் நிலைகள் வருகின்றது.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வேத சாஸ்திரங்கள் உண்டு. அந்த வேதத்தின் தன்மையைத் தன் மதத்தின் அடிப்படையில் அவர்கள் கொடுக்கப்பட்டு அந்த மதத்திற்கு என்று அரசனாக்கி அந்த அரசனின் வழியிலேயே அந்தந்த நாட்டின் தன்மைகள் உள்ளது.

அதிலே விளைந்த உணார்வின் தன்மைகள் தான் இன்று நமக்குள்ளும் விளையப்பட்டு
1.அவர்கள் செருகிய வித்தின் உணர்வு கொண்டு
2.நாம் அதிலிருந்து மீள முடியாத உணர்வுகளாக இன்றும் இயக்கிக் கொண்டேயுள்ளோம்.

ஒவ்வொரு மதத்திற்கும் மந்திர ஒலிகள் உண்டு. அந்த மந்திர ஒலிகளின் தன்மை பெருகப்பட்ட உணர்வு கொண்டுதான் அதனதன் மதத்தைப் இறுக்கிப் பிடித்து… மற்ற மதத்தைப் பழித்துப் பேசுகின்றது.

ஒரு தாவர இனம் தன் மணத்தின் தன்மை கொண்டு மற்றதைத் தனக்குள் வராதபடி… “தன் சத்தை மட்டும்” காற்றிலிருந்து கவர்ந்து கொள்கின்றது. தன் உணர்வால் கவர்ந்து கொள்கின்றது.

இதைப் போன்று தான் மதத்தால் கொடுக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் தன் எண்ணத்தால் கவர்ந்து கொண்டாலும் அதிலே ஏற்பட்ட மணம் தான் அது…!
1.மற்றவர்கள் எதைச் சொன்னாலும் அந்த மணம் தடுக்கதான் செய்யும்.
2.மற்ற மதங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது.
3.மற்ற இனங்களிலும் இதே போன்றுதான்…!

இனத்தின் தன்மை மந்திரத்தால் உருவாக்கிப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை மணத்தால் அதிகமாகின்றது. உணர்வின் தன்மை கொண்டு அது உணவாக எடுத்துக் கொண்டு விளைகின்றது.

இதைப் போன்றுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி
1.மீண்டும் மீண்டும் அந்த விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலை
3.உங்களுக்குள் உரமாக ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.
4.வீணான பேச்சு இல்லை…. விரயம் ஆக்கும் தன்மை இல்லை…!

அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தார்களோ… அந்த மகரிஷியின் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் இணைத்து… இணைத்து… இணைத்து… இந்த இணைப்பின் வலு கொண்டு… உங்களுக்குள் உரமாக்கி விட்டால்… இந்த எண்ணத்தால் நீங்கள் வளரும் பருவம் பெறுகின்றீர்கள்.

அது வந்து விட்டால்…
1.உங்கள் நினைவின் ஆற்றல் மகரிஷிகள் வாழும் இடத்திற்கே வருகின்றது.
2.அந்தப் பேரானந்தச் பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்திட இது உதவும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பினும் பதிவான மகரிஷிகளின் உணர்வை உந்தச் செய்து அந்த மகரிஷிகளின் சக்திகளை ஏங்கிப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

கடந்த கால வாழ்க்கையில் வந்த தீமைகளையும்… மதத்தால் ஏற்பட்ட உணர்வுகளையும் மாற்றி… நம்மைக் காத்திடும் உணர்வாக மகரிஷிகளின் அருள் உணர்வை அதனுள் இணைக்க வேண்டும்.. அந்த அருள் உணர்வுகளை விளைய வைக்க வேண்டும்.

அதற்குத்தான் யாம் தொடர்ந்து… தொடந்து சொல்வது மகரிஷிகள் காட்டிய உணர்வை இணைத்துக் கொண்ட பின் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கின்றது.

அன்றைய அருள் ஞானிகள் மதத்தால் வந்த தீமைகளை எப்படிப் பிளந்தார்களோ… தீமைகளைப் பிளந்திடும் உணர்வை அவர்களுக்குள் எப்படி விளைய வைத்தாரோ… அதை எல்லாம் நுகரும் சக்தியும் கவர்ந்திடும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் இதை நம் நினைவில் கொண்டு நமது எல்லை எது…? இன்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு ஒளியான நிலைகள் கொண்டு எந்த எல்லையாக அடைந்தனரோ…
2.ஒளீயான குழுமைக் கூட்டமாக இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றனரோ…
3.அதைத்தான் நமது எல்லையாக வைக்க வேண்டும்…!

Leave a Reply