தினசரி செய்ய வேண்டிய ஈஸ்வர தியானம்…!

Treasure hunt for soul

தினசரி செய்ய வேண்டிய ஈஸ்வர தியானம்…!

 

உங்கள் நினைவைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியரின் பால் செலுத்துங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…!

அவரிடம் இருந்து வெளிப்பட்ட அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் உடலுக்குள் அதன் உணர்வின் சக்தியை உணரலாம்.

1.ஆகவே தியானிக்கும் பொழுது
2.அந்த அகஸ்தியரின் அரும் பெரும் சக்தி
3.“மனப்பூர்வமாக எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்…” என்று ஏங்கிப் பெறவேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.“ஈஸ்வரா…” என்று சொல்லும் பொழுது
2.உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…!
1.எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட என்று சொல்லும் பொழுது இரத்தத்திற்குள் நினைவைச் செலுத்துங்கள்.
2.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது உங்கள் புருவ மத்தியில் உயிரிடம் நினைவைக் கொண்டு போங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று குழந்தைகள் (திருமணம் ஆகாதவர்கள்) ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
துருவ மகரிஷியாக ஆன பின் அவர் பெற்ற உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதை நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த அரும் பெரும் சக்தி உங்கள் இரத்தநாளங்களில் கலக்கும்.
2.சர்வ பிணிகளையும் போக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.அங்கிருந்து துருவப் பகுதியின் வழியாக வரும் அருள் சக்தியை நுகர்ந்து
2.எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளையும் துருவ மகரிஷிகளையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணி இவ்வாறு தியானிப்பதால்
1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.
2.அதே சமயத்தில் நம் உடலில் அறியாது சேர்ந்த
3.தீய வினைகள்ளோ சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகலும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று… அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து… தெரிந்து… வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பால் நினைவைச் செலுத்துங்கள்.

சப்தரிஷி மண்டலங்களிண் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியை இபப்டி எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் நம்முடைய முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்த பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து நேரே அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்…

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

இதைப் போன்ற தியானம் தினசரி நாம் செய்தல் வேண்டும்.

Leave a Reply