கர்ப்பிணியான சீதாவை இராமன் காட்டிற்குள் விடச் சொல்கிறான்… வான்மீகியோ ஞானத்தைப் போதிக்கின்றான் ஏன்…?

Valmiki

கர்ப்பிணியான சீதாவை இராமன் காட்டிற்குள் விடச் சொல்கிறான்… வான்மீகியோ ஞானத்தைப் போதிக்கின்றான் ஏன்…?

 

இராமன் சீதாவை இராவணனிடமிருந்து மீட்டு அரண்மனைக்குக் கூட்டி வருகின்றான். சிறிது நாள் கழித்து சீதா கரப்பமாகிறது. மக்கள் எல்லாம் கூடி இராவணனிடம் இருந்து சீதா வந்ததால் அந்தக் கரு தான் உருவாகியிருக்கும் என்று சொல்கின்றனர்.

மக்களை ஆட்சி புரிகின்றான்.. இருந்தாலும் இதைக் கேள்விப்பட்டவுடன் மக்கள் எல்லாம் இப்படிப் பேசுகின்றார்களே..! என்று வேதனைப்படுகின்றான் இராமன்.

சுவை (சீதா) என்ற உணர்வுகள் இராமனை ஆட்சி புரிந்தாலும் அதே சமயத்தில் “மக்களின் வலு வரப்படும் பொழுது” உண்மையை அறிய முடியாதபடி… சீதாவைக் காட்டுக்கு அனுப்புகின்றான்.

கர்ப்பமாக இருக்கும் சீதாவைக் காட்டில் அனாதையாக விட்டு விடுகின்றான். அங்கே ஒரு பெண் இதைப் பார்த்து… “கர்ப்பமாக இருக்கிறது… தனியாக இருக்கிறதே…!” என்று அருகில் இருக்கும் வான்மீகியிடம் கொண்டு விடுகிறது.

வான்மீகி தான் இந்தக் காவியத்தைப் படைத்தவன். இயற்கையின் உணர்வுகள் உணர்ச்சிகள் எப்படி வருகிறது…? நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாக எப்படித் தோன்றுகின்றான்…? என்ற மூலக் கூறுகளை எல்லாம் கூறியவன் இந்த வான்மீகி தான்.

அதன் உணர்வின் தன்மை
1.எது சுவையைக் கவர்ந்து கொள்கிறதோ சூரியன்
2.அது உடலுக்குள் சென்ற பின் அதனின் உணர்ச்சியின் இயக்கமாக
3.இந்தச் சுவை எதுவோ உணர்ச்சியின் எண்ணங்களாக இதே சூரியன் ஒரு உடலை இயக்குகின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றான் அந்த வான்மீகி.

நன்றாக யோசனை செய்து பாருங்கள். அவ்வளவு மூலங்களும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இவ்வளவு தெளிவாகக் கூறியிருந்தாலும் இன்று அவரவர்கள் இஷ்டத்திற்கு இராமாயணத்தை அப்படியே பகுந்து பார்க்கின்றார்கள்.

அனாதையாக இருக்கும் சீதா கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்கிறான் வான்மீகி.
1.வெறுக்கும் நிலை இங்கே வந்தால் – அதே உணர்வை இந்தத் தாய் நுகர்ந்தால்
2.இராமனைப் பழி தீர்க்கும் உணர்வாகத் தான் வரும் என்பதை வான்மீகி அறிந்து கொள்கின்றான்.

அன்றைய அரசர்கள் என்ன செய்வார்கள்…?

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது எதிரி நாட்டு அரசன் இந்த மாதிரிச் செய்கின்றான்..! என்று போதிப்பான். குருகுலம் என்ற நிலைகளை வைத்து அடுத்த அரசன் இப்படிச் செய்கிறான்.. நம் நாட்டுக்கு இதைச் செய்கிறான்… நம் மக்களுக்கு இதைச் செய்கிறான்… அவனை இப்படி அடக்க வேண்டும்…! என்று கர்ப்பிணியை உட்கார வைத்தத் தன் அரச சபையின் நிலைகளை எல்லாம் எடுத்து ஓதுவான்.

அந்தத் தாய் இதை எல்லாம் கேட்ட பின் கருவிலிருக்கக்கூடிய தன் குழந்தைக்கு
1.இந்த நாட்டை எப்படி ஆட்சி புரிவது…?
2.எதிரியை எப்படி வீழ்த்துவது..? என்று அந்த இளமைப் பருவம் வரும் பொழுதே
3.வில் வித்தைகளை எடுக்கும் பொழுதே எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வை வளர்ப்பார்கள்.

இதனின் வலிமையின் தன்மை கொண்டு அவன் எதிரியை வீழ்த்தச் செல்வான். “சத்ரிய தர்மம்” என்பது அரசர்கள் பிறரை வீழ்த்தித் தான் வாழத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தான்.

நம் உடலுக்குள் ஒரு தீமை வந்துவிட்டால் அது அந்த உணர்வின் தன்மையை வீழ்த்தினால் தான் நல்ல குணங்கள் நிலைத்திருக்கும். எப்படியோ மருந்தைக் குடித்துத் தானே நம் நோய்களை எல்லாம் போக்குகின்றோம்.

இந்த உணர்வின் தன்மையை இயக்குவது யார்…? பத்தாவது நிலையை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்தி “நம் உயிர் தான்…!”

ஒரு கசப்பான உணவாக இருந்தாலும் சகித்துக் கொண்டு சாப்பிடுகின்றோம் அல்லவா..! அதே சமயத்தில் உடலில் வேதனை என்ற உணர்வுகள் நோயாக வந்த பின்
1.அடுத்து நம் உடலில் ஊசியைக் கொண்டு குத்தினாலும்
2.கசப்பான மருந்தை மருத்துவர் கொடுத்தாலும்
3.”எப்படியோ சாப்பிட்டு அந்த நோயைப் போக்க வேண்டும்…: என்று நினைக்கின்றோம் அல்லவா…!

இதைத் தான் அங்கே வான்மீகி காட்டுகின்றான்…!

கர்ப்பமாக இருக்கப்படும் பொழுது…
1.மக்களின் உணர்ச்சியால் உந்தப்பட்டு உண்மையின் உணர்வை அறியாதபடி
2.தனக்குள் சீதா என்ற சுவையைப் புண்படும்படிச் செய்து விட்டனர்.
3.ஆனால்… அதிலே வரும் கருவை அதை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக
4.சீதாவின் மனதை மாற்றி அருள் உணர்வைச் செவி வழி ஊட்டி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கூட்டி
4.கருவிலே வளரும் குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுகின்றான் வான்மீகி.

இந்த ஞானத்தை ஊட்டிய பின் லவா.. குசா.. என்று பிறக்கின்றனர். இராமனின் செயலும்… சீதாவின் செயலும்… இயற்கையின் செயலைப் பற்றியும்…! அவர்கள் இருவரும் பாடல்களாகப் பாட்டுகின்றனர்.

இராமன் இதைக் கேட்கின்றான்.

மக்களின் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு “இந்தத் தப்பைச் செய்தேனே…!” என்று உண்மையை உணர்கின்றான்.

ஆகவே சீதாராமா…!
1.எதன் உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ
2.நம் வாயிலிருந்து சொல்லாக வந்தாலும் அதையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
3.அதே உணர்வின் நினைவு வந்து… உணர்வின் தன்மை உயிரில் உணர்ச்சிகள் பட்டு
4.அந்தச் செயல்கள்தான் படுகின்றது..!

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

Leave a Reply