
காந்திஜி லண்டனிலிருந்து கப்பலில் வரும் பொழுது “அதிசயம்…!” என்று எதைச் சொன்னார்…?
ஒரு சமயம் காந்திஜியும் புலாபாய் தேசாயும் மற்ற நண்பர்கள் எல்லோரும் லண்டன் வட்ட மேஜை மகாநாடுக்குப் போய்விட்டு வரும் சமயம் கப்பலில் வந்து கொண்டிருந்தார்கள்.
ஆங்கிலேயர்கள் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை எப்படி இருக்கும் என்று பரிசோதிப்பதற்காக டெலஸ்கோப் ஒன்றையும் கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.
உயர்ந்த சக்தி வாய்ந்த கண்ணாடி பொருத்தப்பட்ட அந்தக் கண்ணாடி மூலம் கடலுக்கு அடியில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களை எல்லாம் பார்க்க முடியும்.
அதாவது பல நூறு அடிகளுக்கு அடியில் நடக்கும் அதிசயங்களையும் ஊடுருவிப் பார்க்கும் திறன் வாய்ந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்ட ஒரு டெலஸ்கோப் அது. அதை வைத்துப் பார்க்கப்படும் போது கடலுக்குள் நடக்கும் அதிசயங்கள் எல்லாம் தெரிகின்றது.
பார்த்தவுடனே… ஆஹா…! பெரிய மீன் வருகின்றது.. சிறிய மீன் வருகின்றது… நத்தைகள் ஓடுகின்றது… அதிசயமான நிறங்களில் பல பல மீன்கள் ஓடுகின்றது…! என்றெல்லாம் சொல்லச் சொல்ல
1.அருகிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் “எங்கே பார்க்கலாம்…! என்று
2.அந்த டெலஸ்கோப்பை ஒருவருக்கு ஒருவர் பறிக்கும் நிலை வருகின்றது.
3.ஒருவர் பார்த்து முடிக்கும் முன்னால் அடுத்தவர் பறிக்கின்றார்.
4.இப்படி மாறி மாறிச் செயல்படுத்தும் பொழுது அங்கே பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்கள் வருகின்றது.
அப்போது தான் காந்திஜி சிந்திக்கின்றார்.
நம்முடைய ஆர்வ உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…? நாம் எதற்காக லண்டனுக்கு வந்தோம்…? எதை அறிய விரும்பினோம்….? பகைமை உணர்வுகளை அகற்றிச் சகோதர உணர்வை வளர்க்கும் தன்மையா அறிந்துணர்ந்து செயல்படுவதற்காக வந்தோம்.
ஆனால் டெலஸ்கோப்பை வைத்து பொருளைக் காணும் ஆசையில் நான்கு பேருமே ஒன்றாக எண்ணும் போது அதிலே பகைமைகள் எவ்வாறு உருவாகின்றது…?
பார்க்க வேண்டும்… என்ற அவசர உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வரும் பொழுது அடுத்தவர் பறிக்கும் நிலையில் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர் “இப்படிப் பறிக்கின்றார் பார்…!” என்ற வெறுப்புகள் அவருக்குள் எப்படித் தோன்றுகின்றது.
அந்த வெறுப்பும்… வெறுப்பால் பகைமையும்… எப்படித் தோன்றுகிறது…? என்ற நிலையை அங்கே அப்பொழுது விளக்க உரையாகக் காந்திஜி கொடுக்கின்றார்.
உலகம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் வந்தாலும் இதைப் போன்ற நிலைகள் மீண்டும் மனிதனுக்குள் வந்து அந்த உணர்வின் இயக்கமாக “எதிரியாக எப்படி மாற்றுகின்றது…?” என்று உணர்த்துகின்றார்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு பகைமை உணர்வு உருவாக்கும்படியாக அறிவிலிகளாக நம்மை மாற்றுகின்றார்கள். அறிவு இழந்தவர்களாக மாற்றுகின்றார்கள். நம்முடைய ஒற்றுமையின் தன்மையை இழக்கச் செய்கின்றார்கள்.
இதிலிருந்து விடுபட நாம் என்ன செய்வது…? என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்…! என்று காந்திஜி அங்கே உபதேசிக்கின்றார்.
ஆகவே நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பகைமை ஊட்டும் நிலைகளில் இத்தகைய அதிசயத்தைப் பார்க்க வேண்டாம்.
1.”தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை…!” ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விளைய வேண்டும் என்று
2.இந்த அதிசய உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம்.
3.பகைமையை அகற்றும் உணர்வின் தன்மையை நாம் வளர்ப்போம் என்று அதே கப்பலில் உபதேசிக்கின்றார்.
ஒவ்வொருவரும் அருள் சக்தியைப் பெற்று ஆற்றலை வளர்ப்போம். அந்த ஆற்றல் ஒவ்வொருவரிடம் வளர்வதைக் கண்டு அதிசயப்படுவோம். அந்த அதிசயத்தைப் பார்க்க விரும்புவோம்.
விஞ்ஞான அறிவால் கண்ட உணர்வை வெறுப்போம். மெய் ஞானத்தால் வளர்ந்த உணர்வை நமக்குள் வளர்ப்போம்.
மெய்ப் பொருளைக் காணும் நிலையில் மனித உடலுக்குள் மறைந்து இயக்கிக் கொண்டிருக்கும் தீமையில் இருந்து விடுபட நாம் அனைவரும் செயல்படுவோம்.
இத்தனை உபதேசங்களும் காந்திஜி கொடுத்தார். ஆனால் அதெல்லாம் வெளியில் வரவில்லை. ஏனென்றால் அரசியல் வாழ்க்கையில் காந்திஜி இருந்தாலும் ஒரு இயந்திரக் கண்ணாடியை வைத்து அங்கே தத்துவ ஞானத்தைத் தான் புகட்டினார்.
அவர் காட்டிய அறநெறியை உங்களுக்குள் இப்பொழுது பரப்புகிறோம் என்றால் பகைமையிலிருந்து மீட்டுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகள் இன்று உண்டு, உங்களுக்குள் இதை பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் உங்களை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள இந்த நினைவாற்றல் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.